Archive for the ‘கம்பராமாயணம்’ Category

ஸ்ரீ வால்மீகி மற்றும் சில ராமாயணங்கள் 

March 19, 2024

கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

———-

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் 

வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது

கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை.

————

ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் இவையிரண்டில் மட்டிலும் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார். இரண்டாம் காண்டம் முதல் ஆறாம் காண்டம் வரை பொதுவிலே தீரம் மிக்க கதாநாயகனாகவும் மனிதனாகவுமே ராமபிரான் காட்டப்படுகிறார். இந்தப் பகுதிகளிலும் சில இடங்களில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார் என்பது வாஸ்தவம் தான்

—————-

மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் ராமகதை சொல்லப்படுகிறது

  1. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ராமோபாக்யானம் (ராமகதை)
  2. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ஹனுமத் – பீம சம்வாதம் (உரையாடல்)
  3. த்ரோண பர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம் ( பதினாறு ராஜாக்களைப் பற்றிய கதைகள்)
  4. சாந்திபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம்

வனவாசத்தில் இருக்கும் தர்மபுத்ரருக்கு ராமகதை சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகவும் கஷ்டதசையில் இருப்பவர்கள் அது போன்று கஷ்டம் அனுபவித்த வேறு மாந்தர்கள் சுகத்தையும் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என நம்பிக்கை தரும்படிக்காக இந்த சூழ்நிலையில் ராமகதை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கு சொல்லப்படும் ராமகதை ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. ஆயினும் விஷ்ணுவின் அவதாரமாக ராமபிரான் தேவர்கள் துயர்நீக்க அவதரிப்பது சித்தரிக்கப்படுவதும் ராக்ஷஸர்களின் பூர்வ சரித்ரம் சொல்லப்படுவதும் ராமாயண காவ்யத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்ட பகுதிகளை உள்வாங்கியமையை துலக்குகிறது. இந்த மஹாபாரதமென்னும் இதிஹாசத்தைப் படைத்தவருக்கு, அந்த இதிஹாசம் படைத்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ராமகதை உள்ளது உள்ள படிக்கு விபரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.

பீம ஹனுமத் சம்வாதத்தில் ஹனுமான் ராமபிரானிடம் ராமகதை புழக்கத்தில் உள்ள வரை ராமபிரான் புவியில் வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக்கொள்வது உத்தரகாண்டத்தில் வரும் நிகழ்வை படம் பிடிக்கிறது.

யாவத்3ராம கதா2வீர ப4வேத் லோகேஷு சத்ருஹன்
தாவஜ்ஜீவேயமித்யேவம் ததாஸ்த்விதி ச ஸோ(s)ப்3ரவீத்
(மஹாபாரதம் – III – 147/37)

யாவத்3ராமகதா2ம்வீர ச்ரோஸ்யே(s)ஹம் ப்ருத்வீதலே
தாவச்சரீரே வத்ஸ்யந்து மம ப்ராணா ந சம்சயா
: (ராமாயணம் – உத்தரகாண்டம் – 39/16) – (கோரக்பூர் பதிப்பின்படி சர்க்கம் ஒத்துப்போகவில்லை)

சாந்திபர்வத்து ஷோடசராஜோபாக்யானம் ராமபிரான் பதினோராயிரம் வருஷம் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறது.

த3சவர்ஷஸஹஸ்ராணி த3சவர்ஷசதானி ச
ராஜ்யம் காரிதவான் ராமஸ்ததஸ்து த்ரிதிவம் க3த:
(ம.பா XII – 29-54)

தசவர்ஷஸஹஸ்ராணி தசவர்ஷசதானி ச
ராமோ ராஜ்யமுபாஸீத்வா ப்3ரம்ஹலோகம் க3மிஷ்யதி
( ராமாயணம் – உ.கா – 1/76)

த்ரோணபர்வத்து ஷோடசராஜோபாக்யானத்தில் ராமபிரான் தனது தேசத்தை எட்டு பாகங்களாக விபாகம் செய்து அதனை தன் மகன்களான குச லவர்களுக்கும் தன் தம்பி மார்களுடைய மகன் களிடையேயும் ஒப்படைக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.

இவையாவும் ராமாயண காவ்யத்தில் உத்தர காண்டத்தில் சொல்லப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

——————

ரங்கநாத ராமாயணம்

ரங்கநாத ராமாயணம் என்பது தெலுங்கு மொழியில் கிபி 1300 முதல் கிபி 1310 வரையிலான காலகட்டத்தில் கோனா புத்தா ரெட்டி என்றும் அழைக்கப்படும் கவிஞர் ரங்கநாதரால் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தின் பிரபலமான தழுவலாகும். தெலுங்கில் உள்ள ராமாயணத்தின் நான்கு பதிப்புகளில் இது ராமாயணத்தின் முழு கருப்பொருளையும் உள்ளடக்கியது. ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட அணிலின் கட்டுக்கதையை பெரும்பாலான மக்கள் கேட்டிருப்பார்கள். ரங்கநாத ராமாயணத்தில் தான் இந்தக் கட்டுக்கதை உருவானது. 

ராமரின் வானவர் சேனை இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டும் போது, ​​அவர்களின் முயற்சிக்கு ஒரு அணிலும் தன் பங்களிப்பை அளித்தது. நன்றியின் அடையாளமாக, ராமர் தனது விரல்களால் அதன் முதுகில் மூன்று கோடுகளை வரைந்து அதை ஆசீர்வதித்தார். இந்த பதிப்பு 17,290 வசனங்களைக் கொண்டுள்ளது மற்றும் அறிஞர்கள் மற்றும் பொது மக்களால் போற்றப்படுகிறது.

————-

காகவின் ராமாயணம்

இது அசல் ராமாயணத்தின் பழைய ஜாவானிய கவிதை விளக்கமாகும் மற்றும் ஜாவானிய மக்களால் இந்தோனேசியாவில் கலை வெளிப்பாட்டின் உச்சமாக அறியப்படுகிறது. காகவின் என்பது இந்து சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட மீட்டர்களைக் கொண்ட ‘காவ்யா’வின் ஜாவானிய பதிப்பாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடாங் வம்சத்தின் ஆட்சியின் போது இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மூலம் அதன் பிரபலத்தை அளவிட முடியும். அசல் ராமாயணத்தைப் போலல்லாமல், இந்தோனேசியப் பதிப்பில், ஹனுமான் வானரர்களின் ராஜாவாகப் போற்றப்படுகிறார், பாலி அல்லது சுக்ரீவ் அல்ல. 

———————

ரீம்கர்

ரீம்கர் என்பது காவியமான ராமாயணத்தின் கம்போடிய பதிப்பு. ரீம்கர் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் “ராமின் மகிமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரீம்கர் என்பது கம்போடியாவின் தேசிய காவியம் மற்றும் அதன் பழமையான குறிப்பு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜாதகாவின் கதைகளின் அடிப்படையில் பாறைக் கல்வெட்டுகளின் வடிவத்தில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அசல் ராமாயணத்தைப் போலவே, இது அதே கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றின் கம்போடிய பெயர்களுடன்: ஃபிரே ராமா, நியாங் சேடா மற்றும் க்ராங் ரீப், முறையே ராம், சீதா மற்றும் ராவணனைக் குறிக்கிறது. இது வால்மீகியின் ராமாயணம் போன்ற நீதி மற்றும் விசுவாசத்தின் உலகளாவிய கருப்பொருளைக் கையாள்கிறது. இருப்பினும், ரீம்கரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், ஹனுமான் தனது பயணத்தின் போது சந்திக்கும் தேவதையான சோவன்னா மச்சா போன்ற சில புதிய கதாபாத்திரங்களைச் சேர்ப்பதாகும். 

உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றான அங்கோர் வாட்டில் ரீம்கரின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இந்த முக்கிய கம்போடிய காவியம் அதன் உரை வடிவத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் நடனம்-நாடகம், இசை மற்றும் சிற்பங்கள் போன்ற கலையின் பிற பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளது.

———-

ராமாயணத்தின் பிராந்திய பதிப்புகள்

மேற்கூறிய பதிப்புகளைத் தவிர, இந்தியாவில் காவியமான ராமாயணத்தின் சில முக்கிய பிராந்திய பதிப்புகளும் உள்ளன. கிருட்டிவாசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பெங்காலி பதிப்பு 15 ஆம் நூற்றாண்டில் கிருட்டிபாஸ் ஓஜாவால் இயற்றப்பட்டது. இதேபோல், சப்தகண்ட ராமாயணம் எனப்படும் அசாமிய பதிப்பு 14 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலியால் இயற்றப்பட்டது. கேரளாவில், 12 ஆம் நூற்றாண்டில் சீராமனால் ராமசரிதம் என்றழைக்கப்படும் நீடித்த மலையாளக் கவிதைப் பதிப்பு எழுதப்பட்டது.

 இந்த பதிப்புகளின் உள்ளார்ந்த கதைக்களம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் அதே வேளையில், எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் ராமரின் புகழ்பெற்ற கதையை தங்கள் மொழியில் மொழிபெயர்ப்பதை விட, அவர்களின் கலாச்சார சுழற்சியைக் கொடுத்து மறுபரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் தனித்துவமான நுண்ணறிவுகளைச் சேர்த்துள்ளனர், இது இந்த காவியப் படைப்பை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவியது

———-

ஜைன ராமாயணங்கள் :-

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாக டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய நூலின் வாயிலாகத் தெரிகிறது. மூன்று ஆசிரியர்களின் வெவ்வேறு கதைகளை ஒட்டி இவை சமைக்கப்படதாக ஸ்ரீ ஜேக்கபி கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி, ஸ்ரீ குணபத்ரர் என்ற இருவரின் வெவ்வேறான கதைகள் ஆனாலும் அவையல்லாமல் ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனருடைய வேறான மூன்றாவது கதைகள் ஜின ராமாயணக் கதைகள் .

ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனர் இருவருடைய ராமாயணக் கதைகள் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணக் கதைகளை பெரும்பாலும் ஒட்டியவை என்றும் மற்ற இருவருடைய கதைகளும் ஆதிகாவ்யமான ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுவதாகவும் கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி மற்றும் பிந்தையவர்களது ராமாயணம் ப்ராக்ருதத்திலும் குணபத்ரருடைய ராமாயணம் சம்ஸ்க்ருதத்திலும் இயற்றப்பட்டுள்ளது.

ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ர்வர்த்திகள், 9 பலபத்ரர்கள், 9 வாஸுதேவர்கள் மற்றும் 9 ப்ரதிவாஸுதேவர்கள் என்று அறுபத்துமூவர் காலசக்ரத்தில் திரும்பத் திரும்பத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவர் என்பது ஜைனக்கோட்பாடு. வாஸுதேவர்கள் ப்ரதி வாஸுதேவர்களை அழிப்பவர் என்பதும் ஜைனக்கோட்பாடு.

ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். சீதை ராவணனுக்கு மகளாகப் பிறந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு என்பதால் ராவணன் பிறந்ததுமே அவளை அப்புறப்படுத்தி விடுகிறான். பின்னாளில் தன் மகள் தான் அவள் என்று அறியாது சீதையைக் கவர்ந்த ராவணனுடன் யுத்தம் நிகழ்கிறது.

ப்ரதி வாஸுதேவனாகிய ராவணன் லக்ஷ்மணன் மீது சக்ராயுதத்தை வீசுகிறான். ஆனால் லஷ்மணன் வாஸுதேவனானதால் அது அவனைத் தாக்கவில்லையாம். வீசப்பட்ட ஆயுதம் அவனைத் தாக்காது அவன் வசமகிறதாம். வாஸுதேவனாகிய லக்ஷ்மணன் தன்னுடைய ஆயுதத்தால் தாக்குவதன் மூலம் அழிக்கப்படவேண்டிய ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் அழிக்கப்படுகிறான். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ……..ஜைன சமயம் விதந்தோதும் நற்பண்புகளின் இருப்பிடமாகிய……. பலபத்ரனான ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான்.

மற்ற ஜைன புராணங்களைப் போன்று இந்த ஜின ராமாயணமும் ஒரு ப்ரதி புராணம் ( Anti – Counter – Purana) என்று ஸ்ரீ ராமானுஜன் கருத்துப் பகிர்கிறார். வைதிக சமயத்தில் படைக்கப்பட்ட ராமாயணத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவுக்கு முரணான கருத்துக்களை மறுதலித்துச் சமைக்கப்பட்டது ஜின ராமாயணம் என்று வ்யாசமும் பவுமசரிஅ என்ற நூலின் விவரணைகளும் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தையதாகிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாததான பற்பல நிகழ்வுகளையும் விவரணைகளையும் உடையதாகவும் அவற்றையெல்லாம் துலக்கி பகுத்தறிவின் பாற்பட்டு சமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ஜைனராமாயணம்.

லங்காபுரியின் மக்கள் நரமாமிசம் உண்ணும் ராக்ஷசர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அதே போல குரங்கினத்தவர்களாக வானரர்களும் சித்தரிக்கப்படுவதில்லை. இவர்கள் மனிதர்களும் இல்லாது தேவர்களும் இல்லாத வித்யாதரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த ராமாயணத்திலும் கூட விவரிக்கப்படும் சாஹசம் மிகுந்த நிகழ்வுகளின் பாற்பட்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யமான சக்திகளை தம் வசம் உடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். (Courtesy : Dr.Jacobi’s work…….. Chapter 15………Vanaras in reality are a race of Vidyadharas. A class of beings endowed with many supernatural qualities, if not human beings in the correct sense of the term) ஸ்வர்க்கம், நரகம், மறுபிறவி, மோக்ஷம் போன்ற கருத்தாக்கங்கள் இந்த ஜைன ராமாயணத்தில் காணக்கிட்டுகின்றன. பற்பல மொழிகளில் ஆன வைதிக சமய ராமாயணங்களில் விதந்தோதப்படுவதான ஏகபத்னீவ்ரதன் என்ற ராமனுக்கு எதிரான ஒரு கருத்தாக்கமாக ராமனுக்கு 8000 மனைவிகள் இருந்ததாகவும் லக்ஷ்மணனுக்கு 16000 மனைவிகள் இருந்ததாகவும் இவர்களுடையே வம்ச மூத்தவர்களாகிய சகரன் மற்றும் ஹரிஸேனர்களுக்கு தலா 64000 மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

———-

தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய தேசங்களின் ராமாயணங்கள்:

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் என்று இந்த வ்யாசம் சொல்லுகிறது.

தாய்லாந்து தேசத்திய ராமகதை கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் என்ற கதையிலிருந்து கரந்துரையப்படுவதை ராமானுஜன் வ்யாசம் பகிருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்கள். வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது ஒரு காட்டு. மானுட, ராக்ஷஸ, குரங்கின என்ற படிக்கு ராமகீர்த்தியில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன என்று வ்யாசம் பகிருகிறது. கதைக்களனைப் பார்க்கையில் ராம ஜனனம் துவங்கி, சீதாராம விவாஹம், வனவாஸம், சீதையை ராவணன் அபகரித்து லங்காபுரிக்கு எடுத்துச் செல்லுவது, ராமராவண யுத்தம், ராமபிரான் அயோத்திக்கு திரும்பி அரசாளுவது, உத்தரராமாயண நிகழ்வுகள் என்று தாய்லாந்திய ராமாயணங்களின் நிகழ்வுப் பட்டியல் நீளுகிறது.

வைதிக சமயத்தைச் சார்ந்த ராமாயணங்கள் விஸ்தாரமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லும் நிகழ்வுகளாகிய திவ்ய தம்பதிகளின் பிரிவு அதையொட்டிய சம்பவங்கள் பின்னர் அவர்கள் ஒன்றிணைவது என்ற நிகழ்வுகள் தாய்லாந்திய ராமாயணத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களல்ல. மாறாக தாய்லாந்து ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் அதையடுத்து நிகழும் யுத்தம் போன்றவை மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுவதாக வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள், யுத்தத்தில் கையாளப்படும் யுக்திகள் அதில் கையாளப்பட்ட அதிசயத்தக்க யுத்த தளவாடங்கள் போன்றவை தாய்லாந்திய ராமாயணத்தில் வெகு விஸ்தாரமாகச் சொல்லப்படுவதாக ராமானுஜனுடைய வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள் தாய்லாந்திய ராமாயணத்தில் விஸ்தாராமாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஸ்ரீ சந்தோஷ் தேசாய் அவர்கள் குறிப்பிடுவதை ராமானுஜனின் வ்யாசம் தெரிவிக்கிறது. முற்காலத்திய தாயாலாந்திய சரித்ரம் யுத்தங்களால் வடிக்கப்படும் ஒரு சரித்ரம் என்பது கவனிக்கத் தக்கது. யுத்தங்களுக்கிடையே பிழைத்து வாழ்தல் என்பது அவர்களுடைய அக்கலத்திய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது.

கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ராமரை விட ஹனுமான் என்றும் தாய்லாந்திய ஹனுமான் உறுதியான ப்ரம்மசாரி இல்லையென்றும் பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது. லங்காபுரிவாசிகளின் படுக்கையறைகளுக்குச் சென்று அங்கு துயிலும் தையலார்களைக் கண்ணுறுவதை கம்பநாட்டாழ்வாரோ வால்மீகியோ காட்டும்படிக்கு அல்லாமல் ……… அதார்மிகமாக தாய்லாந்திய ஹனுமான் கருதாதவாறு…….. தாய்லாந்திய ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று வ்யாசம் தெரிவிக்கிறது.

வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது.

அவை என்னென்ன?

1. தாய்லாந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பது ராமனின் கதாபாத்திரம் அல்ல மாறாக ஹனுமனின் கதாபாத்திரம் என்று வ்யாசம் சொல்லுகிறது. தாய்லாந்திய ராமனின் பாத்திரப்படைப்பு வ்யாசத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு வெகுஜன மக்கள் திரளின் தலைவனாக சதாப்தங்களாக தாய்லாந்தினை ஆளும் அரசர்களின் பெயர்களில் ஏன் **ஹனுமன்** என்ற விகுதி காணப்படாது **ராம** என்ற விகுதி காணப்படுகிறது என்று சம்சயம் எழுகிறது.

2. ஒரு புறம் தாய்லாந்திய ராமகீர்த்தி மானுட, ராக்ஷஸ மற்றும் குரங்கின என்ற படிக்கு மூன்று கதாபாத்திரங்கள் தாய்லாந்திய ராமாயணத்தில் காணக்கிட்டுவதைக் கவனமாக வகை தொகை சார்ந்து வ்யாசம் பகிருகையில் ஹனுமனை பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று வ்யாசம் சுட்ட விழைவதை கவனிக்காது போக முடியவில்லை. இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் கற்பிக்கலாம் அல்லது சால்ஜாப்பு சொல்லலாம் தான். பின்னிட்டும் ஒரு குரங்கினத்தவன் ladies man என்று சுட்டப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆயினும் ஒரு முழுமையான சித்திரம் தாய்லாந்திய ராமாயணங்களிலிருந்து காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரப்படுவது முறையாகும்.

3. பெயர்களைக் கையாளுதல் என்ற படிக்கு கம்பராமாயணத்திலிருந்து பெரும்பாலும் கரந்துரையப்பட்டது தாய்லாந்திய ராமாயணம் என்று வ்யாசத்தில் ஒரு புறம் பகிரப்படுகையில்……….. கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை. வ்யாசத்தின் சித்தரிப்பினைச் சார்ந்து தாய்லாந்திய ராமாயணம் பெயர்களைக் கையாள்வதில் கம்பநாட்டாழ்வாரைக் கைக்கொள்வதை ஒரு புறம் அவதானிக்கையிலேயே மறுபுறம் நிகழ்வுப் பட்டியலைப் பார்க்கையில் ஆதிகாவ்யமான மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் அடியொற்றுவது தெளிவாகத் தெரிகிறது. சித்தரிப்பு ஒருவைகயாக இருக்கையில் பகிரப்படும் முடிபுகள் வேறாகக் காணப்படுவது வ்யாசத்தின் சித்தரிப்பு காய்த்தல் உவத்தல் கொண்டதோ என்று சம்சயம் ஒரு புறம் எழுகிறது.

————–

4. கோரக்பூர் கீதாப்ரஸ் என்ற ஸ்தாபனத்தினால் பதிக்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் பதிப்பின் ஏழாவது பதிப்பின் பாற்பட்டு ஒவ்வொரு காண்டமும் அதில் காணப்படும் ஸர்க்கங்களின் (அத்யாயம்) எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-

1. பாலகாண்டம் ………………………77
2. அயோத்யாகாண்டம்…………….119
3.ஆரண்யகாண்டம்…………………75
4.கிஷ்கிந்தாகாண்டம்……………..67
5.ஸுந்தரகாண்டம்………………..68
6.யுத்தகாண்டம்…………………….128
7.உத்தரகாண்டம்……………………111  (பிற்சேர்க்கை என்று 2 அதிகப்படி ஸர்க்கங்கள் தனி)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண யுத்தகாண்டத்து விவரணைகளை முழுதாக வாசிக்கையில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் யுத்த களமும், யுக்திகளும் அதில் உபயோகிக்கப்பட்ட யுத்த தளவாடங்களும் அஸ்த்ர சஸ்த்ரங்களும் வெகு விஸ்தாரமாக ஆதிகவி வால்மீகி முனிவரால் சொல்லப்பட்டிருப்பது துலங்குகிறது. தாய்லாந்திய ராமாயணத்தின் மாறுபாடான கதையம்சமாக வ்யாசம் சுட்டப்படும் கருத்து அப்படி அந்த வாசிப்புக்கேயான ஒரு மாறுபாடான அம்சம் இல்லை என்பது இதன் மூலம் துலங்குகிறது.

இவை மேம்போக்காகத் தோன்றும் சம்சயங்கள் தான். முழுமையான சித்தரிப்பு மற்றும் முழுமையான புரிதல் தாய்லாந்திய ராமாயணத்தை முழுமையாக வாசித்து அறிவதன் மூலம் மட்டிலும் தான் கிட்டும் என்பது திண்ணம்.

தக்ஷிண பாரதத்து நாட்டார் வழக்கியலில் காணப்படும் ராமாயணக் கதைகளில் சில ஆதிகாவ்யத்தை ஒத்தும் சில அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. சில கதைகளில் ஆதிகாவ்யத்துக்கு மாறாக கதாபாத்ரங்கள் தாறுமாறாக சித்தரிக்கப்படுவதும் புலனாகிறது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -8–

March 18, 2024
ஸ்ரீராமர் இராவணனைச் சம்மதி கேட்குதல் 


அறங்கடந்தவர் செயலிதென்று உலகெலாம் ஆர்ப்ப 
நிறங்கரிந்திட நிலம்விரல் கிளைத்திட நின்றான் 
றங்கு கண்ணினன் எல்லழிமுகத்தினன் தலையன் 
வெறுங்கை நாற்றினன் விழுதுடை ஆலன்னமெய்யன் 

நின்றவன்நிலை நோக்கிய நெடுந்தகை இவனைக் 
கொன்றல் உன்னிலன் வெறுங்கை நின்றான் எனக்கொள்ளா 
ன்றவிந்தது போலும் உன் தீமை என்றிசையோடு 
ஒன்றவந்தன வாசகம் இனையன உரைத்தான் 

சிறையில் வைத்தவள் தன்னை விட்டு உலகினில் தேவர் 
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் 
றையில் வைத்து அவற்கு ஏவல் செய்திருத்தியேல் இன்னும் 
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து 

ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த 
பூளையாயின கண்டனை இன்று போய் போர்க்கு 
நாளை வா என நல்கினன் நாகிளங் கமுகின் 
வாளைதாவுறு கோசலை நாடுடைவள்ளல் 
( முதற்போர்புரிபடலம் 249,240 , 253 , 255 ] 


இராவணன் மாலியவானோடு அமர்க்களம் கூறல் 

வாரணம் பொருதமார்பும் வலியகுன் றெடுத்ததோளும் 
நாரத முனிவற்கன்று நயம்பட உரைத்தநாவும் 
தாரணி மவுலிபத்தும் சங்கரன் கொடுத்தவாளும் 
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையா மீண்டுபோனான் 


மாதிரம் எவையும் நோக்கான் வளநகர் நோக்கான் வந்த 
காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ்சேனை நோக்கான் 
தாதவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்கத்தான் அப் 
பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப்புக்கான் 


வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் மணிவயிரத் தோளான் 
நான் நகு பகைவர் எல்லாம் நகுவர் என்று அதற்குநாணான் 
வேல் நகு நெடுங்கண் செய்வாய் மெல்லியல் மிதிலைவந்த 
சானகி நகுவள் என்றே நாணத்தாற் சாம்புகின்றான்  


ஆங்கவன் தன் மூதாதை ஆகியமூப்பின் யாக்கை 
வாங்கிய வரிவில்லென்ன மாலிய வானென்றோதும் 
பூங்கழல் அரக்கன் வந்து பொலங்கழல் இலங்கை வேந்தைத் 
தாங்கிய அமளிமாட்டு ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான் 


சங்கம் வந்துற்ற கொற்றத் தாபதர் தம்மோடெம்மோடு 
அங்கம் வந்துற்றதாக அமரர்வந் துற்றாரன்றே 
கங்கம் வந்துற்ற செய்யகளத்து நம்குலத்துக் கொவ்வாப் 
பங்கம் வந்துற்ற தொன்றோபழியும் வந்துற்ற தென்றான் 


முளையமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வராகக் 
கிளையமை புவனம்மூன்றும் வந்துடன் கிடைத்தவேனும் 
வளையமை வரிவில்வாளி மெய்யுற வழங்குமாயின் 
ளையவன் தனக்கும் ஆற்றாது என்பெருஞ்சேனை நம்ப 


எறிந்தபோர் அரக்கர் ஆவி எண்ணிலா வெள்ளம் எஞ்சப் 
பறித்தபோ தென்னை அந்தப் பரிபவம் முதுகில்பற்றப் 
பொறித்த போது அன்னான் அந்தக் கூனிகூன் போக வுண்டை 
தெறித்தபோ தொத்ததன்றிச் சினம்உண்மை தெரிந்ததில்லை 


வரிசிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் 
தெரிகிலர் அமரரேயும் ஆரவன் செய்கை தேர்வார் 
பொருசினத் தரக்கர் ஆவிபோக்கிய போகஎன்று 
கருதவே உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டுமன்றே 


நல்லியல் கவிஞர் நாவில் பொருள் குறித் தமர்ந்த நாமச் 
சொல்எனச் செய்யுள் கொண்ட தொடை எனத் தொடையை நீக்கி 
எல்லையில் சென்று தீரா இசைஎனப் பழுதிலாத 
பல்லலங் காரப்பண்பே காகுத்தன் பகழிமாதோ 


வாசவன்மாயன் மற்றை மலருளோன் மழுவாளங்கை 
ஈசன் என்றி னையதன்மை இனிவரும் இவராலன்றி 
நாசம் வந்துற்ற போது நல்லதோர் பகையைப் பெற்றேன் 
பூசல்வண்டுறையும் தாராய் இது இங்குப் புகுந்ததென்றான் 

( கும்பகர்ணன் வதைப்படலம் 1 , 3 , 11 , 15 17 , 22 , 31 ] 

மாலியவான் புத்தியை ராவணன் கேட்காமல் மகோதரன் கலைத்தல் 


முன்னுரைத்தேனை வாளா முனிந்தனை முனியஉம்பி 
இன்னுரைப் பொருளும் கேளாய் ஏதுவுண் டெனினும் ஓராய் 
நின்னுரைக் குரைவேறுண்டோ நெருப்புரைத்தாலும் நீண்ட 
மின்உரைத்தாலும் ஒவ் வாவிளங்கொளி அலங்கல் வேலோய் 


ஆயவன் உரைத்தலோடும் அப்புறத்திருந்த ஆன்ற 
மாயைகள் பலவும்வல்ல மகோதரன் கடிதின்வந்து 
தீயெழ நோக்கி என் இச் சிறுமை நீ செப்பிற்றென்னா 
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாதபேர் உறுதி சொன்னான் 


திரிபுரம் எரிய ஆங்கோர் தனிச்சரம் துரந்தசெல்வன் 
ஒருவன் இப்புவனம் மூன்றும் ஓரடிஒடுக்கிக் கொண்டோன் 
பொருதுனக் குடைந்துபோனார் மானிடர் பொருத போர்க்கு 
வெருவுதி போலும்மன்ன கயிலையை வெருவல் கண்டாய் 


தவியை விடுதியாயின் திறலது தீருமன்றே 
ஆவியை விடுதலன்றி அல்லதொன்றாவதுண்டோ 
தாவரும் பெருமையம்மா நீயினித்தாழ்த்த தென்னே 
காவல விடுதி இன்றிக் கையறு கவலைநொய்தின் 


முன்உனக்கு இறைவராய மூவரும் தோற்றார்தேவர் 
பின்உனக்கு ஏவல் செய்ய உலகொரு மூன்றும் பெற்றாய் 
புல் நுனைப் பனிநீர் அன்ன மனிசரைப் பொருளென்றுன்னி 
என்உனக்கு ளையகும்பகருணனை இகழ்ந்த தெந்தாய் 

( கும்பகர்ணன் வதைப்படலம் 32 , 34 , 36 , 38 , 40 ] 


கிங்கரர் கும்பகருணனை எழுப்பவும் அவன்தூங்குதல் 


நன் றிது கருமம்என்னா நம்பியை நணுகஓடிச் 
சென்றிவன் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் 
தென்றிசைக் கிழவன் தூதர் தேடினர் செல்வர் என்னக் 
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில்புக்கார்  


ஓதநீர்விரிந்த தென்ன உறங்குவான் நாசிக்காற்றால் 
கோதிலா மலைகள் கூடி வருவது போவதாக 
ஈதெலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் 
போதுவான் அருகு செல்லப் பயந்தனர் பொறிகொள் கண்ணார் 


என்றலுமே அடியிறைஞ்சி ஈறைஞ்தூற்றி ராக்கதர்கள் 
வன்றொழிலாற் றுயில்கின்ற மன்னவன் தன் மாடணுகி 
நின்றிரண்டு கதுப்புமுற நெடுமுசலம் கொண்டடிப்பப் 
பொன்றினவன் எழுந்தாற்போல் புடைபெயர்ந்தங் கெழுந்திருந்தான் 

( கும்பகர்ணன் வதைப்படலம் 43 , 4 


கும்பகர்ணன் ராவணனுக்குப் புத்திகூறுதல் 

உறக்கம் அவ்வழி நீங்கி உணத்தகும் 
வறைக் கமைந்தன ஊனொடு வாக்கிய 
நறைக் குடங்கள் பெறான் கடைநக்குவான் 
இறக்கநீன்ற முகத்தினை எய்துவான் 


ஆறு நூறு சகடத்து அடிசிலும் 
நூறு நூறு குடங்களும் நுங்கினான் 
ஏறுகின்ற பசியை எழுப்பினான் 
சீறுகின்ற முகத்திரு செங்கணான் 


எருமை ஏற்றை ஓர்இரு நூற்றையும் 
அருமை இன்றியே தின்றிறை ஆறினான் 
பெருமை ஏற்றது கோடும் என்றேபிறங்கு 
உருமை ஏற்றைப் பிசைந்தெரி ஊதுவான் 


கூயினன் நும்முன் என்று அவர் கூறலும் 
போயினன் நகர்பொம் மென்றிரைத்தெழ 
வாயிலில் வல்லை நுழைந்து மதிதொடும் 
கோயில் எய்தினன் குன்றன கொள்கையான் 


வன் துணைப் பெரும் தம்பி வணங்கலும் 
தன் திரண்டதோள் ஆரத் தழுவினான் 
நின்ற குன்றொன்று நீள்நெடுங்காலொடும் 
சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான் 


வானரப் பெரும் தானையர் மானிடர் 
கோநகர்ப் புறம் சுற்றினர் கொற்றமும் 
ஏனைஉற்றனர் நீயவர் இன்னுயிர் 
போனகத் தொழில் முற்றுதி போய் என்றான் 


ஆனதோ வெஞ்சமம் அலகில் கற்புடைச் 
சானகி துயர் இனம் தவர்ந்த தில்லையோ 
வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் 
போனதே புகுந்ததோ பொன்றும் காலமே 


கிட்டிய தோசெரு , கிளர்பொன் சீதையை 
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால் 
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை 
விட்டிலையோ இதுவிதியின் வன்மையே 


கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும் 
சொல்லலாம் பெருவலி இராமன் தோள்களை 
வெல்லலாம் என்பது சீதை மேனியைப் 
புல்லலாம் என்பது போலுமால் ஐயா 


புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு 
குலத்தியல் பழிந்தது கொற்றம் முற்றுமோ 
வலத்தியல் அழிவதற் கேதுமையறு 
நிலத்தியல் நீரியல் என்னும் நீரதால் 


காலினிற் கருங்கடல் கடந்து காற்றது 
போல்வன குரங்குள , சீதை போகிலள் 
வாலியை உரங்கிழித் தேகவல்லன 
கோலுள யாமுளேம். குறைஉண்டாகுமோ 


என்று கொண்டினைய இயம்பி யானுனக்கு 
ஒன்றுளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் 
நன்றது நாயக நயக்கிலாய் எனின் 
பொன்றினை யாகவேகோடி போக்கிலாய்  


தையலை விட்டவன் சரணம் தாழ்ந்து நின் 
ஐயறு தம்பியோ டளவளாவுதல் 
உய்திறம் அன்றெனின் உளது வேறும் ஓர் 
செய்திறம் அன்னது தெரியக் கேட்டியால் 

பந்தியில் பந்தியில் படையை விட்ட வை 
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் 
மந்திரம் அன்று நம் வலியெலாம் உடன் 
உந்துதல் கருமம் என்றுணரக் கூறினான் 

( கும்பகர்ணன் வதைப்படலம் 54 , 55 , 56 , 65 , 67 , 73 77 , 81 84 ] 


விபீஷணர் ஸ்ரீராமருக்குக் கும்பகர்ணன் வரலாறு கூறுதல் 

மானிடர் இருவரை வணங்கி மற்றுமக் 
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டுய்தொழில் 
தானுடை உம்பிக்கும் உனக்குமே கடன் 
யானது புரிகிறேன் எழுகபோக என்றான் 

அன்னது கண்டவன் தம்பி யானவன் 
பொன்னடி வணங்கி நீ பொறுத்தியால் என 
வன்னெடும் சூலத்தை வலத்து வாங்கினான் 
இன்னம் ஒன்றுரையுளது என்னக் கூறினான் 


என்னை வென் றுளர் எனின் இலங்கை காவல 
உன்னைவென் றுலருதல் உண்மை யாதலால் 
பின்னைநின் றெண்ணுதல் பிழையப் பெய்வளை 
தன்னை நன் களிப்பது தவத்தின் பாலதே 


இற்றைநாள் வரைமுதல் யான்முன் செய்.தன 
குற்றமும் உளவெனிற் பொறுத்தி கொற்றவ ! 
அற்றதால் முகத்தினி விழித்தல் ஆரிய 
பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான் 


அரக்கன் அவ் உருவொழித் தரியின் சேனையை 
வெருக்கொளத் தோற்றுவான் கொண்ட வேடமே 
தெரிக்கிலேன் இவ்வுருத் தெரியும் வண்ணம் நீ 
பொருக்கென வீடண புகறியால் என்றான்  


ரியன் அனையகூற அடியிணை இறைஞ்சிஐய 
பேரியல் லங்கை வேந்தன்பின்னவள் எனக்கு முன்னோன் 
காரியல் காலன் அன்னகழல் கும்ப கருணன் என்னும் 
கூரிய சூலத்தான் என் றவன் நிலை கூறலுற்றான் 


தவனுணங் கியரும்வேதத் தலைவரும் உணரும் தன்மைச் 
சிவனுணர்ந் தலரின் மேலைத் திசைமுகன் உணரும்தேவன் 
அவனுணர்ந் தெழுந்த காலத்து அரக்கர்கள் படுவதெல்லாம் 
வனுணர்ந் தெழுந்த காலத்திமையவர் படுவர் எந்தாய் 

ஆழி யாயிவன் ஆகுவான் 
ஏழை வாழ்வுடை எம்முனோன் 
தாழ்விலா ஒரு தம்பியோன் 
ஊழிநாளும் உறங்குவான் 


கழிந்த தீயொடு காலையும் 
பிழிந்து சாறுகொள் பெற்றியான் 
அழிந்து மீனுக ஆழிநீர் 
இழிந்து காலினின் ஏற்றுவான் 


திறங்கொள் சாரி திரிந்த நாள் 
கறங்க லாது கணக்கிலான் 
இறங்கு தாரவன் இன்றுகாறு 
உறங்க லால்உலகு உய்ந்ததால் 


சூலம் உண்டது சூருளோர் 
காலம் உண்டது கைக்கொள்வான் 
ஆலம் உண்டவன் ஆழிவாய் 
ஞாலம் உண்டவ ! நல்கினான் 


தருவ மன்றிது தானிதால் 
வரும் நமக்குயிர் மாய் வெனா 
உருமின் வெய்யவ னுக்குரை 
இருமை மேலும் இயம்பினான் 


நன்றி தன்று நமக்கெனா 
ஒன்று நீதி உணர்த்தினான் 
 இன்று காலன் முன் எய்தினான் 
என்று சொல்லி இறைஞ்சினான் 
( கும்பகர்னன் வதைப்படலம் 87 , 89 , 91 , 93 , 108 - 111 , 114 , 116 , 

117 , 119 , 121 ] 


கும்பகர்னன் தன்னையழைத்த விபீஷணனுக்குப் புத்திகூறல் 


ஏகுதற் குரியார்யாரே என்றலும் இலங்கைவேந்தன் 
ஆகின்மற் றடியேன் சென்று அறிவினால் அவனைஉள்ளம் 
சேகறத் தெருட்டி ஈண்டுச் சேருமேல் சேர்ப்பென் என்றான் 
மேகம் ஒப்பானும் நன்று போகென்று விடையும் ஈந்தான் 


தந்திரக் கடலை நீந்தித் தன்பெரும் படையைச் சார்ந்தான் 
வெந்திற லவனுக்கைய ! வீடணன் விரைவில்உன்பால் 
வந்தனன் என்னச்சொன்னார் வரம்பிலா உவகைகூர்ந்து 
சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்த்தான் 


முந்திவந் திறைஞ்சினானை மோந்துயிர் மூழ்கப்புல்லி 
உய்ந்தனை ஒருவைபோனாய் என மனம் உவக் கின்றேன் தன் 
சிந்தனை முழுதும் இந்தத் தெளிவிலார் போலமீள 
வந்ததென் தனியே என்றான் மழையின் நீர் வழங்குகண்ணான் 


அவயம்நீ பெற்றவாறும் அமரரும் பெறுதலாற்றா 
உவயலோ கத்தினுள்ள சிறப்பும் கேட்டுவந்தேன் உள்ளம் 
கவிஞரின் அறிவுமிக்காய் காலன்வாய்க் களிக்கின்றேம்பால் 
நவையுற வந்ததென்நீ அமுதுண்பாய் நஞ்சுண்பாயோ 

குலத்தியல் பழிந்ததேனும் குமரமற்றுன்னைக் கொண்டே 
புலத்தியன் மரபுமாயாப் புண்ணியம் பொருந்திற் றென்ன 
வலத்தியல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்னவாயை 
உலத்தினை திரியவந்தாய் உளைக்கின்ற துள்ளம் அந்தோ 

ஐயநீ அயோத்தி வேந்தற் கடைக்கலம் ஆகி அங்கே 
உய்கிலை என்னின் மற்றிவ் அறக்கராய் உள்ளோம் எல்லாம் 
எய்கணை மாரியாலே இறந்துபாழ் முழுதும்பட்டால் 
கையினால் எள் நீர் நல்கிக் கடன்கழிப்பாரைக் காட்டாய் 

( கும்பகருணன் வதைப்படலம் 123 127 , 132 ] 


கும்பகர்னனுக்கு விபீஷணன் நீதிகூறல் 


இருளுறு சிந்தையேற்கும் இன்னருள் சுரந்தவீரன் 
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி 
மருளுறு பிறவி நோய்க்கு மருந்துமாம் மாறிச்செல்லும் 
உருளுறு சகடவாழ்க்கை ஓழித்து வீடளிக்கும் அன்றே 


எனக்கவன் தந்த செல்வத் திலங்கையும் அரசும் எல்லாம் 
நினக்குயான் தருவேன் தந்துன் ஏவலின் நெடிது நிற்பேன் 
உனக்கிதின் உறுதியில்லை உத்தமஉன்பின் வந்தேன் 
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்குவாழி 


தீயவை செய்வராகின் சிறந்தவர் பிறந்தஉற்றார் 
தாயவை தந்தைமாரென்று உணர்வரோ தருமம்பார்ப்பார் 
நீயவை அறிதியன்றோ நினக்குயான் உரைப்ப தென்னோ 
தூயவை துணிந்தபோது பழிவந்து தொடர்வதுண்டோ 


தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கிலாதோர் 
வீவினைஉறுதல் ஐயமேன்மையோ கீழ்மைதானோ 
ஆய்வினை உடையை அன்றே அறத்தினை நோக்கியீன்ற 
தாய்வினை செய்ய அன்றோகொன்றனன் தவத்தின் மிக்கான் 


கண்ணுதல் , தீமை செய்ய கமலத்து முளைத்ததாதை 
அண்ணல் தன் தலையின் ஒன்றை அறுக்க அன்ற மைந்தானன்றே 
புண்ணுறு புலவுவேலோய் பழியொடும் பொருந்திப்பின்னை 
எண்ணுறு நரகின்வீழ்வது அறிஞறும் இயற்றுவாரோ 


உடலிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றிச் 
சுடலுறச் சுட்டுவேறோர் மருந்தினால் துயரம் தீர்வர் 
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமமன்றால் 
மடலுடை அலங்கல் மார்பமதியுடை யவர்க்கு மன்னோ 


வேதநாயகனே உன்னைக் கருணையால் வேண்டிவிட்டான் 
காதலால் என்மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே  
ஆதலால் அவனைக்காண அறத்தொடும் திறம்பாதைய 
போதுவாய் நீயே என்னப் பொன்னடி இரண்டும் பூண்டான் 

( கும்பகருணன் வதைப்கடலம் 134 , 135 , 137 , 139-141 . 14 


விபீஷணன் மீண்டபின் இருபடைகளும் போர்களத்தல் 

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப்பின்னைப் 
போர்க்கோலம் செய்து விட்டாற்கு உபிர்கொடா தங்குப்போகேன் 
தார்க்கோல மேனிமைந்த என் துயர் தவர்த்தியாகின் 
கார்க்கோல மேனியானைக் கூடுதிகடிதின் ஏகி 


எனஇனிதுசைக்கும் வேலைஇராக்கதர் சேனை என்னும் 
கனைகடல் கவியின் தானைக்கடலினை வளைந்து கட்டி 
முனை தொழில் முயன்றதாக மூவகை உலகும் முற்றத் 
தனிநெடுந்தூளி ஆர்க்க ஆர்த்தில பரவை தள்ளி 


ஓடினபுரவி வேழம் ஓடினஉருளைத் திண்தேர் 
ஓடின மலைகள் ஓட ஓடின உதிரப்பேர் ஆறு 
ஆடினகவந்த பந்தம் ஆடின அலகைமேன்மேல் 
ஆடினபதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா 


குன்றின்மீ தெறியும் பாரில் புடைக்கும்வெங் குரங்கைப்பற்றி 
ஒன்றுகொண் டொன்றை எற்றும்உதைக்கும் விட்டுழக்கும் வாரித் 
தின்றுதின்றுமிழும் பற்றிச்சிரங்களைத் திருகும் தேய்கும் 
மென்று மென்றுமிழும் விண்ணில் வீசும்மேற் பிசைந்துபூசும் 


மூலமே மண்ணில்மூழ்கிக் கிடந்ததோர் பொருப்பை முற்றும் 
காலமேல் எழுந்தகால் போல் கையினாற் கடிதின் வாங்கி 
நீலன்மேல் நிமிர்ந்த தாங்கோர் நெருப்பெனத் திரித்து விட்டான் 
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்றநின்றான் 


ஆண்டது நோக்கிநின்ற அங்கதன் ஆண்டுச்சால 
நீண்டதோர் நெடுந்தின் குன்றம் நிலமுதுகாற்ற வாங்கி 
மாண்ட.னன் அரக்கன் தம்பி என்றுலகேழும் வாழ்த்தத் 
தூண்டினன் அதனை அன்னான் ஒருதனித்தோளில் ஏற்றான் 


நின்றவன் தன்னையன்னான் நெருப்பெழ நிமிரநோக்கிப் 
பொன்ற வந்தடைந்ததானைப் புரவலன் ஒருவன் தானோ 
அன்றவன் மகனோ எம்மூர் அனல்மடுத் தரக்கர்தம்மை 
வென்றவன் தானோயாரோ விளம்புதி விரைவினென்றான் 


நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி 
மும்முனை நெடுவேலண்ணல் முளரியம் சரணம்தாழ்ந்த 
வெம்முனை வீரன்மைந்தன் நின்னைஎன் வாலின் வீக்கித் 
தெம்முனை இராமன்பாதம் வணங்கிடச் செல்வென் என்றா 


தண்டிறத் தடக்கை ஓச்சித்தழுவியத் தறுகணானைக் 
கொண்டிறப் புறுவென் என்னா தலையுறக் குனிக்குங்காலைப் 
புண்திறப் புறவலாளன் கையினால் புகைந்துகுத்த 
மண்திறப் பெய்தவீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் 


இலக்குவன் கடிதேவின இறைபெறா திரைப்பச் 
சிலைக்க டுங்கணை நெடுங்கணம் சிறையுடன் செல்வ 
உலைக் கொடுங்கனல் வெதும்பிட வாயெரிந்தோடி 
குலக் கயங்களின் குளித்தன குடித்தன குருதி 


வேனிலான் அன்ன இலக்குவன் கருங்கணை விலக்க 
மானவெள் ளெயிற்றரக்கர்தம் படைக்கல வாரி 
போன போனவன் திசை தொறும் பொறிக்குலம் பொடிப்ப 
மீனெலாம் உடன்விசும்பினின்று உதிர்ந்தென வீழ்ந்த 


செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த 
வரிவில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் 
திரிபுரம் செற்றதேவனும் இவனுமே செருவின் 
ஒருவிலாளரென் றாயிரம் காலெடுத் துரைத்தான் 


ராமன் தம்பி நீ ராவணன் தம்பி நான் இருவேம் 
பொராநின் றேமிது காணியவந்தனர் புலவோர் 
பராவு தொல்செருமுறை வலிக்குரியன பகர்ந்து 
விராவு நல்லமர் விளைக்குதும் யாமெனவிளம்பா 


ஆறிரண்டு வெங்கடுங்கணை அனுமன்மேல் ஏற்றி 
ஏறுவெஞ்சரம் இரண்டு இளங்குமரன் மேல் ஏற்றி 
நூறும் ஐம்பதும் ஒருதொடை தொடுத்து ஒருநொடியில் 
கூறுதிக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் 


மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றித் 
துறைத் தலந்தொறும் தலந்தொறும் நின்று தேர்சுமக்கும் 
பொறைக் கமைந்த வெங்கரி பரியாளி மாப்பூதம் 
திறத்திறம் படத்துணித்து அவன் தேரையும் சிதைதான் 


ஈண்டுவெஞ்செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும் 
நீண்டவெள் ளெயிற்றரக்கன் மற்றொரு திசைநின்றான் 
பூண்டவெஞ்சிலை இரவிகால் முனையொடு பொருதன் 
காண் தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் 


செல்வெனோ நெடுங்கிரி இன்னும் தேர்ந்தெனா 
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வவையின் 
கொல் என எறிந்தனன் குறைவில் நோன்பினோர் 
சொல் எனப் பிழைப்பிலாச் சூலம் சோர்விலான் 


பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர் 
விட்டுலம் பிடநெடு விசும்பிற் சேறலும் 
எட்டினன் அதுபிடித்து இறுத்து நீங்கினான் 
ஓட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் 


ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர் 
நாயகர் எமக்கினி யாவர் நாட்டினில் 
காய்கதிர்ப் புதல்வனனப் பிணித்த கையினான் 
போயினன் அரக்கன் என்றிசை பூசலார் 


உடைப்பெருந் துணைவனை உயிரின் கொண்டு போய் 
கிடைப்பரும் கொடிநகர் அடையின் கேடெனத் 
தொடைப் பெரும்பகழியின் மாரிதூர்த்திறை 
அடைப்ப னென்று அடைத்தனன் விசும்பின் ஆறெலாம் 


ஏதிவெந் திறலினோய் இமைப்பி லார் எதிர் 
பேதுறு குரங்கையான் பிணித்த கைப்பிணி 
கோதைவெஞ் சிலையினால் கோடிவீடெனின் 
சீதையும் பெயர்ந்தனள் சிறைநின்றாம் என்றான் 


மீட்டவன் சரங்களாம் விலங்கல் ஆரையை 
மூட்டற நீக்குவான் முயலும் வேளையில் 
வாட்டலை விடர்த் தலை வயங்கு வாளிகள் 
சேட்டகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் 


குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்திழி 
புன்றலைக் குருதிநீர் முகத்தைப் போர்த்தலும் 
இன் துயில் உணர்ந்தென உணர்ச்சி எய்தினான் 
வன்றிறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் 


கண்டனன் நாயகன் தன்னைக் கண்ணுறாத் 
தண்டலில் மானமும்நாணும் தாங்கினான் 
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும் 
கொண்டனன் எழுந்துபோய்த் தமரைக் கூடினான் 
( கும்பகருணன் வதைப்படலம் 150 166 , 168 , 173 , 179 , 182 , 186 , 187 , 191 , 
205 , 216 , 223 , 229 , 236 , 237 , 249 , 254 , 255 , 269 , 271 , 280 , 282 , 284,286 ] 


ஸ்ரீராமருக்கும் கும்பகர்னனுக்கும் யுத்தம் 


எண்ணுடைத் தன்மையன் இனைய எண்ணிலாப் 
பெண்ணுடைத் தன்மைய தாய பீடையால் 
புண்ணுடைச் செவியொடு மூக்கும் போனவால் 
கண்ணுடைச் சுழிகளும் குருதிகால்வன 


என் முகம் காண்பதன் முன்னம் யானவன் 
தன் முகம் காண்பது சரதம் தான் என 
பொன்முகம் காண்பதோர் தோலும் போரிடை 
வன் முகம் காண்பதோர் வாளும் வாங்கினான் 

ஏறுபட்டதும் இடைஎழுந் துளோரெல்லாம் 
கூறுபட்டதும் கொழுங்குருதி கோத்திழிந்து 
ஆறுபட்டதும் நிலஅனந்தன் உச்சியும் 
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் 


ஆறினோ ஏழுகோல் அசனி ஏறென 
ஈறிலா விசையன இராமன் எய்தனன் 
பாறுகு சிறையென விசும்பில் பாறிட 
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் 


சிறுத்ததோர் முறுவலும் தெரியச் செங்கணான் 
மறித்தொரு வடிக்கணை தொடுக்க மற்றவன் 
ஒறுத்தொளிர் வாளெனும் உரவுநாகத்தை 
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே 


அற்றது தடக்கைவாள் அற்ற தில்லென 
மற்றொரு வைரவாள் கடிதின் வாங்கினான் 
முற்றினென் முற்றினென் என்று முன்புவந்து 
உற்றனன் ஊழித்தீ அவிய ஊதுவான் 


அந்நெடு வாளையும் துணித்த ஆண்டகை 
பொன்னெடும் கேடகம் புரட்டிப் போர்த்ததோர் 
நன்னெடுங் கவசத்து நாமவெங்கணை 
மின்னோடு நிகர்ப்பன பலவும் வீசினான் 


அலக்க ணுற்றது தீவினை , நல்வினை ஆர்த்தெழுந்தது வேர்த்துக் 
கலக்க முற்றனர் இராக்கதர் காலவெங் கருங்கடல் திரை போலும் 
வலக்கை அற்றது வாளொடும் கோளுடை வானமாமதி போலும் 
இலக்கை யற்றது அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்றெழுந் தோடி 


மற்றும் வீரர்கள் உளர் எனற் கெளிதரோ மறத்தொழில் இவன்மாடு 
பெற்று நீங்கினர் ஆமெனினல்லது பேரெழில் தோளோடும் 
அற்று வீழ்ந்தது அறாத வெங்கையினால் எடுத்தவன் ஆர்த்தோடி 
எற்ற வீழ்ந்தன எயிறிளித்து ஓடின வானரக்குலம் எல்லாம் 


பந்திடந்தியின் பகற்குலம் மீன்குலம் பாகுபாடுறப் பாகத்து 
இந்து வெள்ளெயிறு இமைத்திடக் குருதியாறு ஒழுக்கல் கொண்டெழ செக்கர் 
அந்தி வந்தென அகல்நெடு வாய்விரித்து அடியொன்று கடிதோட்டிக் 
குந்திவந்தனன் நெடுநிலம் குழிபடக் குரைகடல் கோத்தேற 


கையிரண்டொடு கால்களும் துணிந்தன கருவரை பொருவும்தன் 
மெய்யிரண்டு நூறாயிரம் பகழியால் வெரிநுறத் தொளைபோன 
செய்ய கண்பொழி தீச்சிகை இருமடி சிந்தின தெழிப்போடும் 
பெய்யும் வானிடை இடியினும் பெருத்தது வளர்ந்த பெருஞ்சீற்றம் 
( கும்பகருணன் வதைப்படலம் 292 , 294 , 299 , 302 , 304 - 306 , 333 , 334 . 

342 , 344 ) 


கும்பகர்னன் ஸ்ரீராமனரத் துதித்து வரங்கொள்ளுதல் 


ஐயன் விற்றொழிற் காயிரம் ராவணர் அமைவிலர் அந்தோயான் 
கையும் கால்களும் இழந்தனென் வேறினி உதவலாம் துணைகாணேன் 
மையல் நோய் கொடு முடிந்தவாதான் என்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு 
உய்யுமா றரிதென்றும் தன்உள்ளத்தின் உணர்ந்தொரு துயருற்றான்  


சிந்துரச் செம்பசுங்குருதி திசைகள் தொறும் திசை ஆறா 
எந்திரத்தேர் கரிபரி ஆள் ஈர்த்தோடப் பார்த்திருந்த 
சுந்தரப்பொன் கிரியாண்மைக் களிறணையான் கண்ணின் 
சுந்தரப்பொற் றோளானை முகம் நோக்கி இவை சொன்னான் 

புக்கடைந்த புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க 
மைக்கடங்கார் மதயானை வாள் வேந்தன் வழிவந்தீர் 
க்கடன்கள் உடையீர்நீர் எம்வினைதீர்த் தும்முடைய 
கைக்கடைந்தான் உயிர்காக்கக் கடவீர் எங்களைக்கட்டால் 


நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால் 
சாதியால் வந்தசிறு நெறியான் என் தம்பி 
ஆதியாய் உனைபடைந்தான் அரசருருக் கொண்டமைந்த 
வேதியா இன்னமுனக் கடைக்கலம் யான் வேண்டினேன் 


தம்பியென நினைந்திரங்கித் தவிரான் அத் தகவில்லான் 
நம்பியிவன் தனைக்காணின் கொல்லும் இறைநல்கானால் 
உம்பியைத்தா உன்னைத்தான் அனுமனைத்தான் ஒருபொழுதும் 
எம்பிபிரியானாக அருளுதி யான் வேண்டினேன் 


மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும் 
நோக்குவார் நோக்காமை நுன்கணையால் என்கழுத்னத 
நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள் 
போக்குவாய் இதுநின்னை வேண்டுகின்ற பொருளென்றான் 

( கும்பகருணன் வதைப்படலம் 347 - 350 , 352. 353 ) 


ஸ்ரீராமர் கும்பகர்னன் தலையைக்கடலில் விழுத்தல் 

பரங்கொண்டான் இனிமறுத்தல் வழக்கன்றென் றொருவாளி 
உரங்கொண்ட தடஞ்சிலையின் உயர் நெடுநாண் உட்கொளுவா 
சிரங்கொண்டான் கொண்டதனை திண்காற்றின் கடும்படையால் 
அரங்கொண்ட கருங்கடலின் அழுவத்துள் அழுத்தினான் 

( கும்பகருணன் வதைப்படலம் 354 ]  


ஸ்ரீதேவியின் பக்கம் வந்து ராவணன் கெஞ்சுதல் 


உணர்த்துவென் இன்றே நன்றோர் உபாயத்தின் உறுதிமாயை 
புணர்த்து வென் சீதைதானே புணர்வதோர் வினையம் போற்றிக் 
கணத்துவன் சனகன் தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் 
மணத்தொழில் புரியுமன்றே மருத்தனை உருவம் மாற்றி 


மின்னொளிர் மகுட கோடி இளவெயில் விரித்து வீச 
துன்னிருள் இருந்துதோற்பச் சுடர்மணித் தோளில்தோன்றும் 
பொன்னரிமாலை நீள்வரையின்வீழ் அருவி பொற்ப 
நன்னெடும் களிமால்யானை நாணுற நடந்து வந்தான் 


விளக்கொரு விளக்கந்தாங்கி மின்னணி அரவின் சுற்றி 
ளைப்புறும் மருங்குல் நோவ முலைசுமந்தியங்கும் என்ன 
முளைப்பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும்பின்னும் 
வளைத்தனர் வந்து சூழ வந்தி கர்வாழ்த்த வந்தான் 


என்றுதான் அடியேனுக்கு இரங்குவது இந்து என்பான் என்று 
கறுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவதென்பால் 
என்றுதான் அணங்க வாளிக்கிலக்கலா திருக்கலாவது 
என்றுதான் உற்றதெல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான் 


வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட 
நஞ்சுதோய் அமுதம் உண்பான் நச்சி -னன் நாளும் தேய்ந்த 
நெஞ்சுநேரான தும்மைநினைப்பு விட்டாவி நீக்க 
அஞ்சினேன் அடியேன் நும் அடைக்கலம் அமுதின்வந்தீர் 


தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற 
வேர்ப்பித்தீர் வயிரத்தோளை மெலிவித்தீர் வேனில்வேளை 
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் 
தீர்ப்பித்தீர் இன்னம் என்னென் செய்வித்துத் தீர்திர் அம்மா 

ஈசனே முதலாம் மற்ற மானிடர் இறுதியாகக் 
கூசமூன்றுலகும் காக்கும் கொற்றத்தேன் வீரக்கோட்டி 
பேசுவார் ஒருவற்காவி தோற்றிலேன் பெண்பால்வைத்த 
ஆசைநோய் கொன்ற தென்றால் ஆண்மைதான் மாசுணாதோ  


நோயினை நுகரவேயும் நுணங்கி நின்றுணங்கும் ஆவி 
நாயுயிர் ஆகும் அன்றே நாள்பல கழிந்தகாலை 
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்துப் பகுத்தபத்தி 
ஆயிரம் அல்லபோன ஐஇரண்டென்பர் பொய்யே 

( மாயாசனகப்படலம் 3 , 5 , 6 , 9-11 , 13 , 14 ) 


சீதாதேவி இராவணனை இடித்தல் 

வல்லியம் மருங்கு கண்டமான் என மறுக்கமுற்று 
மெல்லியள் யாக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் 
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னாப் 
புல்லிய கிடந்த ஒன்றை நோக்கினள் புகல்வதானாள் 


பழியிது பாவம் என்று பார்க்கிலை பகரத்தக்க 
மொழியிவை அல்லதென்ப துணர்கிலை முறைமை நோக்காய் 
கிழிகிலை நெஞ்சம் வஞ்சக் கிளையொடும் இன்று காறும் 
அழிகிலை என்ற போதென் கற்பென்னாம் அறந்தான் என்னாம் 


வாசவன் மலரின் மேலான் மருவலான் மைந்தன் மற்றைக் 
கேசவன் சிவனென் றிந்தத்தன்மை யோர்தன்மை கேளாய் 
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போதென் 
ஆசையின் கனியைக் கண்ணிற் கண்டிலை போலும் அஞ்சி 


ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாதுன்முன் 
நாணிலா திருந்தேனல்லேன் நவையறு குணங்கள் என்னும் 
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக் 
காணலாம் இன்னும் என்னும் காதலான் இருந்தேன் கண்டாய் 


எனக்குயிர் பிறிதும் ஒன்றுண்டு என்றிரேல் இரக்கம் அல்லால் 
தனக்குயிர் வேறின்றாகித் தாமரைக் கண்ணதாகிக் 
கனக்கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் 
மனக்கினிதாகி நிற்கும் அஃதன்றி வரம்பிலா தாய் 

[ மாயா சனகப்படலம் 18 , 19 , 21 , 22 , 24 ] 


மாயா சனகனைச் சீதை கண்டு தகப்பனென்று புலம்பல்  


ஆபதோர் காலத் தாங்கண் மருத்தனைச் சனகனாக்கி 
வாய்திறந் தரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து 
காயெரி அனையாள் முன்னர்க் காட்டினன் வணங்கக் கண்டாள் 
தாய் எரி வீழக்கண்ட பார்ப்பெனத் தரிக்கிலாதாள் 


எந்தையே எந்தையே என் பொருட்டினால் உனக்கும் இக்கோள் 
வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவா றிதுவோ மண்ணோர் 
தந்தையே தாயே செய்த தருமமோ தவமே என்னும் 
வெந்துயிர் வீங்கித் தீவீழ் விறகென வெந்து வீழ்வாள் 


வன்சிறைப் பறவை ஊரும் வானவன் வரம்பில் மாயப் 
புன்சிறைப் பொறையைத் தீர்ப்பான் ஊனெனப் புலவர் நின்றார் 
என்சிறை நீக்குவாரைக் காண்கிலேன் என்னில் வந்த 
உன்சிறை விடுக்கவல்லார் யாருளர் உலகத்துள்ளார் 


கொல்லெனக் கணவற் காங்கோர் கொடும்பகை கொடுத்தேன் எந்தை 
கல்லெனத் திரண்டதோளைப் பாசத்தாற் கட்டக் கண்டேன் 
இல்லெனச் சிறந்து நின்ற ரண்டுக்கும் இன்னல் ன்னல் சூழ்ந்தேன் 
அல்லெனோ எளியெனோயான் அளியத்தேன் இறக்கலாதேன் 


மேருவின் உம்பர்ச் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும் 
நீருடைக் காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்றன்றால் 
போரிடைக் கொண்டாரேனும் வஞ்சனைப் புணர்த்தாரேனும் 
ஆருமக் கறையற்பாலார் அனுமனும் உளனோ நும்பால் 

( மாயா சனகப்படலம் 31 , 34 , 38 , 45 ] 


கும்பகர்னன் மரணத்தைக் கேட்டு ராவணன் புலம்பல் 


பூவின்மேல் இருந்தத் தெய்வத்தையலும் பொதுமை உற்றாள் 
பாவியான் பயந்த நங்கை நின்பொருட் டாகப்பட்டேன் 
ஆவிபோய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசனாவான் 
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய் 


என்னைஎன் குலத்தினோடும் இன்னுயிர் தாங்கி ஈண்டு 
நன்னெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கிநாளும் 
உன்னைவெஞ் சிறையின் நீக்கி இன்பதுள் உய்ப்பாய் என்னா 
பொன்னடி மருங்கு வீழ்ந்தான் உயிருகப் பொருமுகின்றான் 


அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் 
வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது 
இல்லையேல் இறந்து தீர்தி இதுவலால் இயம்பலாகாச் 
சொல்லையே உரைத்தாய் என்றும் பழிகொண்டாய் என்னச் சொன்னாள் 


புறந்தரு சேனை முந்நீர் அருஞ்சிறை போக்கிப் போதப் 
பறந்தனர் அனைய தூதர் செவிமருங் கெய்திப் பைய 
திறந்திற மாகநின்ற கவிப்பெருங் கடலைச் சிந்தி 
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் 


ஊரொடும் பொருந்தித் தோன்றும் ஒளியவன் என்ன ஒண்பொன் 
தாரொடும் புனைந்த மௌலீ தரையொடும் பொருந்தத் தள்ளிப் 
பாரொடும் பொருந்திநின் மராமரம் பணைகளோடும் 
வேரொடும் பறிந்து மண்மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் 

தம்பியோ ! வானவர்தம் தாமரையின் காடுழக்கும் 
தும்பியோ ! நான் முகத்தோன் தொல்மரபின் தோன் 
நம்பியோ ! இந்திரனை நாமப்பொறி துடைத்த 
எம்பியோ நான்உன்னை இவ்வுரையும் கேட்டேனோ 


கல்லன்றோ நீராடும் காலத்துன் கால்தேய்க்கும் 
மல்லொன்று தோளாய் வட்டமேரு மானுடவன் 
வில்லொன்று நின்னை விளித்துளது என்னும் 
சொல்லன்றோ என்னைச் சுடுகின்றது தோன்றால் 


நோக்கறவும் எம்பியர்கள் மாளவும் இந்நொய் திலங்கை 
போக்கறவும் மாதுலனார் பொன்றவும் என்பிறந்தாள் 
மூக்கறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலைகிடந்த 
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனையிழந்தும் 


ஏழைமகளிர் அடிவருட ஈர்ந் தென்றல் 
வாழும் மணியரங்கில் பூம்பள்ளி வைகுவாய் 
சூழும் அலகை துணங்கை பறை துவைப்பப் 
பூழி அணைமேல் துயின்ற னையோ போர்க்களத்தே 

( மாயா சனகப்படலம் 62 , 63 , 69 , 75 , 76 , 78 , 81 , 83 , 85 ] 


அதிகாயன் வரலாறு விபீஷணன் கூற ஸ்ரீராமர் தப்பியைப் புகழ்தல் 
 
நதிகாய் நெடுமானமும் நாணும் உறா 
மதிகாய் குடை மன்னனை வைதுரையா 
விதிகாயினும் வீரம் வெலற்கரியான் 
அதிகாயன் எனும் பெய ரான் அறைவான் 


கிட்டிப் பொருதக் கிளைசே னையெலாம் 
மட்டித்துயர் வானரர் வன் தலையை 
வெட்டித் தரையிட்டிரு வில்லினரை 
கட்டித் தருவென் இது காணுதியால் 


எல்லாம் உடன் எய்திய பின் இவனே 
வில்லானொடு போர் செய வேண்டுமெனா 
நல்லாறுடை வீடணன் நாரணன்முன் 
சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால் 


மதுகைடவர் என்பவர் வானவர் தம் 
பதிகைகொடு கட்டவர் பண்டொருநாள் 
அதிகைதவர் ஆழி அனந்தனையும் 
விதிகைம்மிக முட்டினர் வெம்மையினார் 

விதியாலிவ் வுலகந்தனில் மெய்வலியால் 
மதுவானவன் என்முன் மடிந்தனனால் 
கதிர்தான் நிகர் கைடவன் இக்கதிர்வேல் 
அதிகாயன் இதுவாக அறைந்தனெனால் 


வானென்பது என் வையகம் என்பது என்மால் 
தானென்பது என்வேறு தனிச்சிலை யோர் 
யானென்பது என் ஈசன் என் வானவர்தம் 
கோனென்பது என்எம்பி கொதித்திடுமேல் 


ஏகாய் உடன் நீயும் எதிர்ந்து ளனாம் 
மாகாயன் நெடுந்தலை வாளியொடும் 
ஆகாயம் அளந்து விழுந்த தனைக் 
காகாதிகள் நுங்குதல் காணுதியால் 

[ அதிகாயன் வதைப்படலம் 7 , 12,54 , 65,74,77,80 ] 


இருபடைகளும் கைகலக்க ஆனைப்படையை அனுமார் அடித்தல் 

அத்துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சலென்று 
எத்துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் 
கைத்துணை வில்லிதனக் காலன் வாழ்வினை 
மொய்த்தெழு நாணொலி முழங்கத் தாக்கினால் 


அப்படை அனைத்தையும் அறுத்து வீழ்த்தவர் 
துப்புடைத் தடக்கைகள் துணித்துச் சுற்றிய 
முப்புடை மதமலைக் குலத்தை முட்டினான் 
எப்புடை மருங்கினும் எரியும் வாளியான் 


குன்றன மதகரி கொம்பொடு கரம் அற 
வன் தலை துமிதர மஞ்சென மறிவன 
ஒன்றல ஒருபதும் ஒன்பதும் ஒருகணை 
சென்றரிதர மழைசிந்துவ மதமலை 


கால்சில துணிவன கரம் அறுவனகதழ் 
வால்சில துணிவன வயிறுகள் வெளிபட 
நால்வன குடர்சில நகழ்வன சிலவரு 
தோல்சில கணைபல சொரிவன மழையென 


உலகத்துள மலையெத்தனை அவையத்தனை உடனே 
கொலநிற்பன பொருகிற்பன புடைசுற்றின குழு வாய் 
அலகற்றன சினம்முற்றிய அனல் ஒப்பன அவையும் 
தலையற்றன கரமற்றன தனிவிற்றொழில் அதனால் 


ஒற்றைச் சரம் அதனோடொரு கரிபட்டுக ஒளிர்வாய் 
வெற்றிக்கணை உருமொப்பன வெயிலொப்பன அயில்போல் 
வற்றக்கடல் சுடுநிற்பன மழைஒப்பன பொழியும் 
கொற்றக்கரி பதினா/பிரம் ஒருபத்தியிற் கொல்வான் 


இவ்வேலையின் அனுமான் முதல் எழுவேலையும் அனையார் 
வெவ்வேலவர் செலஏவிய கொலையானையின் மிகையைச் 
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் 
தவ்வேலென வந்தான் அவன் தனிவேலெனத் தகையான் 


மிதியால்பல விசையால்பல மிடலால் பலஇடறும் 
கதியால்பல தெழியால்பல காலால்பல வாலின் 
நுதியால்பல நுதலால்பல நொடியால்பல பயிலும் 
குதியால் பல குமையால்பல கொன்றான் அறம் நின்றான் 


வாரிக் குரைகடலிற்புக எறியும் நெடுமரத்தால் 
சாரித்தலைத் துருட்டும் நெடுந்தலத்திற் படுத்தரைக்கும் 
பாரில் பிடித்தெற்றும் குடர்பறிக்கும் படர்விசும்பின் 
ஊரில் செல ஏறியும் மிதித்துழக்கும் முகத்துதைக்கும் 


வாலால்வர வளைக்கும்நெடு மலைப்பாம்பென வளையா 
மேலாளொடு மிடையும் முழு மலைமேல் செலவீசும் 
ஆலாலம்உண் டவனே என அகல்வாயினிட் டதுக்கும் 
தோலாயிரம் இமைப்போதினில் அரியேறெனத் தொலைக்கும் 


ரிந்தார்திசை திசை எங்கணும் யானைப்பிணம் எற்ற 
நெரிந்தார்களும் நெரியா துயிர் நிலைத்தார்களும் நெருக்கால் 
எரிந்தார் நெடும் தடந்தேர் இழிந் தெல்லாரும் முன் செல்லத் 
திரிந்தான் ஒரு தனியே நெடுந்தேவாந்தகன் சினந்தான் 


சூலப்படை தொடுவான் தனை மையாதமுன் தொடர்ந்தான் 
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந் தடர்த்தான் 
காலத்திற்கிரு கண்ணான் தன கையாலவன் கதுப்பின் 
மூலத்திடை புடைத்தான் உயிர்முடித்தான் சிரம்மடித்தான் 


தேர்மேல் செலக்குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால் 
கார்மேல் துயில்மலை போலியைக் கரத்தால் பிடித் தெடுத்தான் 
பார்மேல் படுத்தரைத்தான் அவன்பழி மேற்படப் படுத்தான் 
போர்மேல் திசைநெடுவாயிலின் உளதாம் எனப் போனான் 
( அதிகாயன் வதைப்படலம் 100 , 127 , 128 , 134 , 135 , 148. 151 , 154 , 157 , 

158 160 162 169. 1761 


676 


அதிகாயனுக்கும் லட்கமணனுக்கும் யுத்தம் 

பூணிப்பொன் றுடையானாகிப் புகுந்த நான் புறத்துநின்று 
பாணித்தல் வீரமன்றால் பருவலிபடைத் தோர்க்கெல்லாம் 
ஆணிப்பொன் அனையான் தன்னைப்பின்னுங் கண்டறிவென் என்னா 
தூணிப்பொன் புறத்தான் திண்தேர் இளவல்மேல் தூண்டச்சொன்னான் 


ஆமென அமலன் தம்பி அங்கதன் அலங்கள் தோள் மேல் 
தாமரைச்சரணம் வைத்தான் கலுழனின் தாங்கிநின்ற 
கோமகன் ஆற்றல் நோக்கிக் குளிர்கின்ற மனத்தராகிப் 
பூமழை பொலியவாழ்த்திப் புகழ்ந்தனர் புலவர் எல்லாம் 


மன்னவன் தம்பி மற்றவ் இராவணன் மகனைநோக்கி 
என்னுனக் கிச்சை நின்ற எறிபடைச் சேனை எல்லாம் 
சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே 
நன் னெடுஞ் செருச்செய்வாயோ சொல்லுதி நயந்ததென்றான் 


அன்னது கேட்டமைந்தன் அரும்பியல் முறுவல் தோன்றச் 
சொன்னவர் வாரார்யானே தோற்கினும் தோற்கத் தக்கேன் 
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா 
மின்னினும் மிளிர்வதாங்கோர் வெஞ்சரம் கோத்துவிட்டான் 


விட்டவெம் பகழிதன்னை வெற்பினை வெதுப்பும் தோளான் 
சுட்டதோர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி 
எட்டினோ டெட்டுவாளி இலக்குவ நீக்காய் என்னா 
திட்டியின் விடத்துநாகம் அனையனசிந்தி ஆர்த்தான் 


அங்கதன் நெற்றிமேலும் தோளினும் ஆகத்துள்ளும் 
புங்கமும் தோன்றாவண்ணம் பொருசர் பலவும்போக்கி 
வெங்கணை ரண்டு ர் ஒன்றும் வீரன்மேல் ஏவிமேகச் 
சங்கமும் ஊதிவிண்ணோர் தலைபொ திர்எறிய ஆர்த்தான் 


வாலிசேய் மேனிமேலும் மழைபொரு குருதிவாரி 
காலுயர் வரையின் செங்கேழ் அருவிபோல் ஒழுகக்கண்டான் 
கோலொரு பத்து நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து 
மேலவன் சிரத்தைச்சிந்தி வில்லையும் துணித்தான்வீரன்  


கோல்முகத் தள்ளி அள்ளிக் கொடுஞ்சிலை நாணிற்கோத்து 
கால்முகம் குழையவாங்கிச் சொரிகின்ற காளை வீரன் 
பால் முகம் தோன்றநின்று காற்றினுக் கரசன் பண்டை 
நான்முகன் படையாலன்றிச் சாகிலன் நம்ப என்றான் 


நன்றென உவந்து வீரன் நான்முகன் படையை வாங்கி 
மின் தனி திரண்ட தென்னச் சரத்தொடும் கூட்டிவிட்டான் 
ன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டவ்வாளி 
சென்றது விசும்பினூடு தேவரும் தெரியக்கண்டார் 


தேரிடை நின்று கண்கள் தீயுகச் சீற்றம் பொங்கப் 
பாரிடைக் கிழியப் பாய்ந்து பகலிடைப் பரிதி என்பான் 
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒருகை தோன்ற 
நீருடை முகிலின் மின்போல் வாளொடு நிமிரவந்தான் 

மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய்மடித் துருத்து வள்ளல் 
சரம் ஒன்றிற் கடிது சென்று தாக்கினான் தாக்கினான் தன் 
கரம் ஒன்றின் திரிவதாரும் காண்கிலா ததனைத் தன்கை 
அரம் ஒன்று வைரவாளால் ஆயிரம் கண்டம் கண்டான் 


கூர்மத்தின் வெரிநின்வைத்து வானவர் அமுதங் கொண்ட 
நீர்மத்தின் நிமிர்ந்த தோளான் நிறைமத்த மதுவைத் தேக்கி 
ஊர்மத்தம் உண்டாலன்ன மயக்கத்தால் உருமைத் தின்பான் 
போர்மத்தன் என்பான் வந்தான் புகர்மத்தப் பூட்கை வேலான் 


தன்கரி தானே கொன்று தடக்கையால் படுத்து வீழ்த்தும் 
மின்கரி தென்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கிப் 
பொன்கரி தென்னும் கண்கள் பொரியுக நீலன் புக்கான் 
வன்கரம் முறுக்கி மார்பில் குத்தினள் மத்தன் மாண்டான் 


உன்மத்தன் வயிரமார்பின் உருமொத்த தாம்சென்றுற்ற 
வன்மத்தைக் கண்டும் மாண்ட மதமத்த மலையைப் பார்த்தும் 
சன்மத்தின் தன்மை யானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த 
கன்மத்தின் கடைக் கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் 

அல்லினைத் தழுவிநின்ற பகலென அரக்கன் தன்னை 
கல்லினும் வலியதோளால் கட்டியிட்டிறுக்கும் காலை 
பல்லுடைப் பிலவாயூடு பசும்பெருங் குருதிபாய 
வில்லுடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல 


குரங்கினுக் காசும் வென்றிக் கும்பனும் குறித்த வெம்போர் 
அரங்கினுக் கழகுசெய்ய ஆயிரம் சாரி போந்தார் 
மாங்கொழுந் தண்டுகொண்டும் மலைஎன மலையா நின்றார் 
சிரங்களும் கரமுமெல்லாம் குலைந்தனர் கண்டதேவர் 


நிலையில் சுடரோன் மகன்வன் கைநெருங்கக் 
கலையில் படுகம்மியர் கூடம் அலைப்ப 
உலையிற்படு இரும்பென வன்மை ஒடுங்க 
மலையிற் பிளவுற்றது தீயவன் மார்பம் 


அக்காலை நிகும்பன் அனல்சொரி கண்ணன் 
புக்கான் இனிஎங்கு அடப்போவது என்னா 
மிக்கா னெதிர் அங்கதன் உற்று வெகுண்டான் 
எக்காலமும் இல்லதோர் பூசல் இழைத்தார் 


எறிவான் உயர்சூலம் எடுத்தலின் இன்னே 
முறிவான் இகலங்கதன் என்பதன் முன்னே 
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் 
பொறிவான் உகுதீயென வந்து புகுந்தான் 


தடையேதுமில் சூலம் முனிந்து சலத்தால் 
விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை 
இடையே தடைகொண்டு தன்ஏடவிழ் அங்கை 
புடையே கொடுகொன்று அடல்மாருதி போனான் 
[ அதிகாயன் வதைப்படலம் 178. 181 , 186 , 189 , 190 , 19 , 199 , 203 , 

204 , 207,210 , 213 , 225. 226 , 234 , 235 , 244 , 246 , 248 , 249 , ] 
அதிகாயனுக்காகப் புலம்பின ராவணன் முன்னே 

தானிய மாலை புலம்புதல் 

நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்மின் என்றான் 
போக்கிய சேனை தன்னில் புகுந்துள இறையும் போதா 
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வராய 
கோக்குலக் குமரரெல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் 


திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த 
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றிப் 
பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை 
நடையிடைக் கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் 


ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் 
வெருவரும் தகையராகி விம்மினர் இருந்த வேலை 
தருவனம் அனைய தோளான் தன் எதிர் தானிமாலி 
இரியலிட்டு அலறி ஓயாப் பூசலிட்டு ஏங்கி வந்தாள் 


வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல் மென்மைத்தோள் நிலத்தை மேவப் 
போழ்ந்தனள் பெரும்பாம் பென்னப் புரண்டனள் பொருமிப் பொங்கிச் 
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்தருந் துயர வெள்ளத்து 
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழக்கண்டும் அறிந்திலாதாள் 


ந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாளென்று 
அந்தரத்துள் வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் 
மந்தரத்தோள் என்மகனை மாட்டா மனிதன்தன் 
உந்துசிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தாயே 


அக்கன் உலந்தான் அதிகாயன் தான்பட்டான் 
மிக்கதிறத் துள்ளார்கள் எல்லாரும் வீடினார் 
மக்களினி நின்று நான் மண்டோ தரிமகனே 
திக்கு விசயம் இனியொருகால் செய்யாயோ 


ஏதையா சிந்தித் திருக்கின்றாய் எண்ணிறந்த 
கோதையார் வேலரக்கர் பட்டாரைக் கூவாயோ 
பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ 
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ 


உம்பி உணர்வுடையான் சொன்ன உரைகேளாய் 
நம்பி குலக்கிழவன் கூறும் நலம் ஓராய் 
கும்ப கருணனையும் கொல்வித்தென் கோமகனை 
அம்புக் கிரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா 

[ அதிகாயன் வதைப்படலம் 260 , 262 , 264 , 256 , 268--272 ] 


இந்திரசித்து சண்டைக்கு வந்து அனுமாரை இகழ அவர் அவனை இகழ்தல் 


குழுமிக் கொலைவாட்கண் அரக்கியர் கூந்தல் தாழ 
தழுவித் தலைப்பெய்து தன்கைகொடு மார்பில் ஏற்றி 
அழுமித் தொழில்யாது கொல் என்றோர் அயிர்ப்புமுற்றான் 
எழிலித் தனியேறென இந்திரசத்து எழுந்தான் 

கேட்டான் இடை உற்றதென் என்று கிளத்தல் யாரும் 
மட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் 
ஓட்டா நெடுந்தேர் கடிதோட்டி இமைப்பின் உற்றான் 
காட்டாதன காட்டிய தந்தையைச் சென்று கண்டான் 


கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி 
உண்டாயதென் இவ்வுழி என்றலும் உம்பிமாரைக் 
கொண்டான் உயிர்காலனும் கும்ப நிகும்பரோடும் 
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான் 


மகுந்தே நிகர் எம்பியின் ஆருயிர் வவ்வினானை 
விருந்தேஎன அந்தகற் கீகிலன் வில்லும் ஏந்திப் 
பொருந் தேவர்குழாம் நகைத்திடப் போந்து பாரின் 
இருந்தேன் எனின்யான் அவ்இராவணி அல்லென் என்றான் 


பல்லாயிர கோடி படைக்கலம் பண்டு தேவர் 
எல்லாரும் முனைத்தன்ல யாவரும் ஈந்தமேரு 
வில்லாளன் கெடுத்த, விரஞ்சன் அளித்த வெம்மை 
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் 

தேராயிரம் கோடி தன்மாடு செல்லப் 
போரானை புறத்தின் அவற்றின் இரட்டி போதத் 
தாரார் புரவிக்கடல் பின்செலத் தானைவீரப் 
பேராழி முகம் செலச் சென்றனன் பேர்ச்சியில்லான் 


நில்லடா சிறிது நில்லடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் 
வில்லெடாது நின தாண்மைபேசி உயி ரோடு நின்றுவிளை யாடினாய். 
கல்லடா நெடு மரங்களோவரு கருத்தினேன் வலிகடப்பவோ 
சொல்லடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் 


வில்லெடுக்க உரியார்கள் வெய்யசில வீரர் இங்குமுளர் மெல்லியோய் 
கல்லெடுக்க உரியானும் நின்றனன் அதின்று நாளையிடை காணலாம் 
எல்லெடுத்தபடை இந்திராதியர் உனக்கு இடைந் துயிர்கொடு ஏகுவார் 
புல்லெடுத்தவர்கள் அல்லம் வேறுசில போர் எடுத்தெதிர் புகுந்துளோம் 


யாரும் என்படைஞர் எய்தலின் றி அயல் ஏகயானும் இகல் வில்லுமோர் 
தேரின் நின்றுமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணாமால் 
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வரச்சொலும் 
போரும் இன்றொரு பகற்கணே பொருது வெல்வென் வென்றலது போகலேன் 


என்று வெம்பகழி ஏழுநூறு மிகு நூறும் வெஞ்சிலை கொடு ஏவினான் 
குன்று நின்றனைய வீரமா ருதிதன் மேனிமேலவை குழுக்களாய்ச் 
சென்று சென்றுருவலோடும் வாளெயிறு தின்று சீறிஒரு சேமவன் 
கு.மறு நின்றது பறித்தெடுத் தவனை எய்தி நொய்தின் இது கூறினான் 


தும்பி என்றுலகின் உள்ள யாவை அவை ஆயிரத் தொகுதியாயினும் 
வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின்வலி தன்னைநின் றெளிதின் வெல்லுமோ 
நம்பிதம்பி எனதெம்பி ரான்வரு துணைத் தரிக்கிலை நலித்தியேல் 
அம்பின் முந்திஉன தாவி உண்ணுமிது கா அடா சிலைவல் லாண்மையால் 

செருப்பயிற்றிய தடக்கை ஆளிசெல விட்டகுன்று திசையானையின் 
மருப்பை உற்றதிரள் தோள் இராவணன் மகன் தன் மார்பில் நெடுவச்சிரப் 
பொருப்பை உற்றதோர் பொருப்பெனக் கடிது ஒடிந்திடிந்து திசைபோனதால் 
நெருப்பை உற்றதோர் இரும்பு கூடமுற நீறுபட்டது நிகர்த்ததால் 

[ நாகபாசப்படலம் 1 , 3 , 4 , 13 , 18. 26,73 , 74 , 77-80 


வானவீரர்களை மாட்டின இந்திரசித்துக்கும் இளையவருக்கும் யுத்தம் 

விலங்கல் மேல்வரு விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேளையில் 
சலங்கை மேல்நிமிர வெஞ்சினந்திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் 
வலங்கொள் பேருலகம் மேருவோடுடன் மறிக்கும் மாருதிதன் வாசம் நூறு 
அலங்கள் மார்பும் உயர்தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் 

மற்றை வீரர்கள் தம் மார்பின் மேலும் உயர் தோளின் மேலும் மழை மாரிபோல் 
கொற்ற வெங்கணை உலக்க எய்தவை குளிப்ப நின்றுடல் குலுங்கினார் 
இற்றவிந்தன பெரும்பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்ததுப் 
பெற்றிகண்டு இளையவள் ளல்ஒள் எரி பிறந்த கண்ணனிவை பேசினான் 

என்பது சொல்லக்கேட்ட இந்திர வில்லினோடும் 
பொன்புரை மேகம் ஒன்று வருவதுபோல் கின்றானை 
முன்பனை முன்புநோக்கி இவன்கொலாம் பரதன் முன்னோன் 
தன்பெருந் தம்பி என்றான் ஆம்எனச் சாரன் சொன்னான் 


கோடி நூறமைந்த கூட்டத்திரரக்கதர் கொடித்திண் தேரும் 
ஆடல்மாக்களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி 
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை 
சூடினான் இராமன்பாதம் சூடிய தோன்றல் தம்பி 


வற்றிய சடலுள் நின்ற மலையென மருங்கின்யாரும் 
சுற்றினர் இன்றித்தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளித் 
தெற்றின புருவத்தோன் தன் மனம் எனச் செல்லும்தேரான் 
உற்றனன் இளையகோவை அனுமனும் உடன் வந்துற்றான் 


தோளின் மேல் ஆதிஐய என்றடி தொழுது நின்றான் 
ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினான் அமரர் ஆர்த்தார் 
காளியே அனையகாலன் கொலையனக் கனலின்வெய்ய 
வாளிமேல் வாளிதூர்த்தார் மழையின் மேன் மழைவந்தன்னார் 


அம்பினோடம் பொன்றொன்றை அறுக்கமற் றறுக்கிலாத 
வெம்பொறி கதுவவிண்ணில் வெந்தனகரிந்து வீழ்ந்த 
உம்பரும் உணர்வுசிந்தி ஒடுங்கினார் உலகம்யாவும் 
கம்பமுற்றுலந்த வேலைக்கலமெனக் கலங்கிற்றண்டம் 


கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன் கோத்தான் 
கோரையின் தலையகோடி தொடுத்தவை இளவல் கொய்தான் 
பாரையின் தலையகோடி பரப்பினான் இளவல் பல்கால் 
பாரையின தலையகோடி அரக்கனும் பதைக்க எய்தான் 


வச்சிரப் பகழிகோடி வளை எயிற்றரக்கன் எய்தான் 
வச்சிரப் பகழிகோடி துரந்தமை அனகன் மாய்த்தான் 
முச்சிரப் பகழிகோடி இலக்குவன் முடுகவிட்டான் 
முச்சிரப் பகழிகோடி தொடுத்தவை தடுத்தான் முன்பன் 

சீறும் நூல் தெரிந்தசிந்தை இலக்குவன் சிலைக்கைவாளி 
நூறு நூறேவி வெய்தின் நுடங்குளை மடங்கள் யாவும் 
உழைத்துயிர் விடுவதல்லால் இனிச்செயல் ஒன்றோ என்னா 
வேறுவேறியற்றி வீரக்கொடியையும் அறுத்து வீழ்த்தி 
ஆறுநூறம்பு செம்போன் கவசம்புக்கழுந்த எய்தான் 

வாயிடை நெருப்புக்கால உடல்நெடுங் குருதிவாரத் 
தீயிடை நெய்வார்த் தன்னவெகுளியான் உயிர்தீர்ந்தாலும் 
ஓய்விடம் இல்லான்வல்லை ஓரிமை ஒடுங்கா முன்னம் 
ஆயிரம் புரவிபூண்ட ஆழியந் தேரினானான் 

புதையும் நன்மணிப் பொன்னுருள் அச்சொடும் 
சிதைய ஆயிரம் பாய்பரி சிந்திட 
வதையின் மற்றொரு கூற்றென மாருதி 
உதையினால் அவன் தேரைஉருட்டினான் 

வந்தணைந்ததோர் வாளரி வாவுதேர் 
ந்திரன் தனை வென்றவன் ஏறினான் 
சிந்தினன் சரமாரி திசைதிசை 
அந்தி வண்ணனும் அம்பின் அகற்றினான் 

வாலிமைந்தன் ஓர்மால்வரை வாங்கினான் 
காலின் வந்த அரக்கனைக் கா 
போலும் உன்னுயிர் உண்பது புக்கெனா 
மேல் நிமிர்ந்து நெருப்புக வீசினான் 

நொய்தினின் சென்றுகூடி இராவணி உளைவைநோக்கி 
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பதோர் வெகுளிவீங்கிப் 
பெய்துழில் பெய்யும்மாரி அனையவன் பிணங்கு கூற்றின் 
கையினின் பெரிய அம்பால் கவசத்தைக் கழித்து வீழ்த்தான் 

அத்தனை வீரர் மேலும் ஆண்தனக அனுமன்மேலும் 
எத்தனை கோடிவாளி மழைஎன எய்யா நின்ற 
வித்தசு வில்லினானைக் கொல்வது விரும்பிவீரன் 
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்ந்தான் 

அழித்ததேர் அழுந்தா முன்னம் அம்பொடுகிடந்து வெம்பி 
பிழைத்திவர் போகாவண்ணம் பாசத்தால் பிணிப் பெனென்னா 
விழித்திமை யா தமுன்னம் வில்லொடும் விசும்பிற் சென்றான் 

வாங்கினான் மலரின்மேல ன் வானகமணி நீர்க்கங்கை 
தாங்கினான் உலகந்தாங்கும் சக்கரத்தவன் என்றாலும் 
வீங்குவான் தோளை வீக்கி வீழ்த்தலால் மீள்கிலாத 
ஓங்குவாள ரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி 


விட்டனன் அரக்கன் வெய்யபடையினை விடுத்தலோடும் 
எட்டினோ டிரண்டு திக்கும் இருள் திரிந் திரிய ஓடிக் 
கட்டின தென்பமன்னோ காகுத்தற் கிளையகாளை 
வட்டவான் வயிரத்திண்டோள் மலைகளை உளையவாங்கி 


இருகுறப் பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும் 
மருகுறக் கடவானல்லன் மாயமென்றுணர் வானல்லன் 
உறுகுறைத் துன்பமில்லான் ஒடுங்கினான் செய்வதோரான் 
அறுகுறைக் களத்தை நோக்கும் அந்தரமதனை நோக்கும் 


காலுடைச்சிறுவன் மாயக்கள்வினைக் கணத்தின் காலை 
மேல்விசைத் தெழுந்துநாடிப் பிடிப்பெனென்று றுறுக்கும்வேலை 
ஏற்புடைப் பாசம் மேல்நாள் இராவணன் புயத்தைவாலி 
வால்பிணித் தென்னச்சுற்றிப் பிணைத்தது வயரத்தோளை 


வீடணன் மூகத்தைநோக்கி வினைஉண்டோ இதனுக்கென்பார் 
மூடிய கங்குல்மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் 
எடுறத் தக்கபோலாம் நம்மெதிர் என்னா ஏந்தல் 
ஆடகத் தோளை நோக்கி நொந்து நொந் தமுங்கிநைவார் 


ஆரிது தீர்க்கவல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் 
மாருதி பிழைத்தான் கொல்லோ என்றனர் மறுகி நோக்கி 
வீரனைக் கண்டுபட்டது இது கொலாம் என்றுவிம்மி 
வார்கழல் தம்பிதன்மை காணுமோ வள்ளல் என்பார் 

நாகபாசப்படலம் 81 , 87 , 90 , 92 , 100 , 101 , 103 , 110. 112 , 117 , 
121 , 127 , 135 , 147 , 170. 181 , 182 , 186 , 189 , 190 , 192 , 194 , 195 ] 


தாகபாசத்தால் லட்சுமணர் கட்டுண்டதற்காக விபீஷணர் புலம்பல் 

இத்தலை இன்னலுற்ற வீடணன் இழைப்ப தோரான் 
மத்துறு தயிரின்உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் 
அத்தலைக் கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் 
செத்திலேன் வலியென் நின்றேன் என்று போய் வையம்சேர்ந்தான் 


பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியைக்கண்டு 
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் நானொரு தமியென்நின்றேன் 
தேசத்தார் என்னைஎன்னே சிந்திப்பார் என்றுநையும் 
வாசத்தார் மாலைமார்பன் வாய்திறந் தரற்றலுற்றான் 


கொல்வித்தான் உடனே நின்றங்கு என்பரோ கொண்டு போனான் 
வெல்வித்தான் மகனைஎன்று பகர்வரோ விளைவிற்கெல்லாம் 
நல்வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தம் தம் 
கல்வித்தாம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரைக்கண்போல் 


போரவன் புரிந்தபோதே பொருவறு வயிரத்தண்டால் 
தேரொடும் புரண்டு வீழச் சிந்தி என்சிந்தை செப்பும் 
வீரமும் தெரித்தென் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று 
ஆருறவாகத்தேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் 


ஒத்தலைத் தொக்க ஓடி உய்யினும் உய்ந்தென் உள்ளம் 
கைத்தலை நெல்லியன்னக் காட்டிலேன் கழிந்துமில்லேன் 
அத்தலைக் கல்லேன்யான் ஈண்டு அபயமென்ற டைந்து நின்ற 
இத்தலைக் கல்லேன் அல்லேன் இருதலைச் சூலம்போல்வேன் 

( நாகபாசப்படலம் 208 - 212 ] 


இளையவர் நாகபாசத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் 


நீயிவண் இருத்தியான் போய் நெடியவற்குரைப் போன் என்னா 
போயினன் அனலன்போய் அப்புண்ணியன் போலன் கொள்பாதம் 
மேயினன் வணங்கிஉற்ற வினையெலாம் விளங்கச்சொன்னான் 
ஆயிரம் பெயரினானும் அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான் 


விம்மினன் வெதும்பிவெய்துற்று ஏங்கினன் இருந்தவீரன் 
இம்முறை இருந்து செய்வது யாவதுமில் என் றெண்ணிப் 
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின்போனான் 
தெம்முறை துறந்து வென்ற செங்கள மருங்கிற் சேர்ந்தான் 


ஐயன்தான் அவன் மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பிற்புல்வி 
உய்யலன் என்ன ஆவி உயிர்த் துயிர்த்து உருகுகின்றான் 
பெய்யீரு தாரைக்கண்ணீர்ப் பெருந்துளி பிறங்கவானின் 
வெய்யவன் தன்னைச்சேர்ந்த நீல் நிறமேகம் ஒத்தான் 


வீரரை எல்லாம் நோக்கும் விதியினைப் பார்க்கும் வீரப் 
பாரவெஞ்சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் 
யாரிதுபட்டார் என்போல் எளிவந்தவண்ணம் என்னும் 
நேரிது பெரிதென்றோதும் அளவையின் நிமிரநின்றான் 


எம்பியே இறக்கும் என்னில் எனக்கினிஇலங்கை வேந்தன் 
தம்பியே புகழ்தான் என்னை ? பழி என்னை அறந்தான் என்னை 
நம்பியே என்னைச்சேர்ந்த நண்பரின் நல்லவாமே 
உம்பரும் உலகத்துள்ள உயிர்களும் உதவிபார்த்தால் 

மீட்டு வந் திளையவீரன் வெற்பன்ன விசயத்தோளைப் 
பூட்டுறு பாசந்தன்னைப் பலமுறை புரிந்து நோக்கி 
வீட்டியதென்னின் பின்னைவீரவன் என்றெண்ணும் வேதத் 
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானையன்னான் 

( நாகபாசப்படலம் 214,216,221 , 225 , 140 , 242 ] 


கெருடபகவான் வருதலும் நாகபாசமறுதலும் 

இத்தன்மை எய்தும் அளவின் கண்நின்ற இமையோர்கள் அஞ்சி இதுபோய் 
எத்தன்மை எய்திமுடியுங்கொல் என்று குலைகின்ற எல்லை இதன் வாய் 
அத்தன்மை கண்டு புடைநின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் 
சித்தம் கலங்கும் இது தீரமெள்ள இருளூடுவந்து தெரிவான் 


அசையாத சிந்தை அரவால் அனுங்க ழியாத உள்ளம் அழிவான் 
சையா இலங்கை அரசோடும் அண்ணல் ருளின்மை கண்டு நயவான் 
விசையால் அனுங்க வடமேருவையம் ஒளியால் விளங்க இமையாத் 
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க நிறைசால் வழங்கு சிறையான் 

அல்லைச்சுருட்டி வெயிலைப்பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா 
வில்லைச்செலுத்தி நிலவைத்திரட்டி விரிகின்ற சோதிமிளிர 
எல்லைக்குயிற்றி எரிகின்ற போலி டைநின்றமேரு எனும் அத் 
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மைசுடர 


நன்பால் விளங்கு மணி கோடியோடு நளிர்போது செம்பொன் முதலாத் 
தன்பால் இயைந்த நிழல் கொண்டமைந்த தழுவாது வந்து தழுவ 
மின்பாலியன்றது ஒருகுன்றம் வானின் மிளிர்கின்ற தென்ன வெயிலோன் 
தென்பால் எழுந்து வடபால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய 


பன்னாகர் செல்னி மணிகோடி கோடி பலகொண்டு செய்தவகையால் 
மின்னாலியன்ற தெனலாய் விளங்கு மிளிர்பூண் வயங்க வெயில் கால் 
பொன்னாலியன்ற நகைஓடை பொங்க : வனமாலை மார்புபுரளத் 
தொன்னாள் பிரிந்ததுயர் தீர அண்ணல் திருமேனி கண்டுதொழுவான் 


முடிமேல் நிமிர்ந்த முகிழேறுகையன் முகில்மேல் நிமிர்ந்த ஒளியான் 
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலைஉன்னி உன்னி அழிவான் 
கொடிமேல் இருந்திவ் வுலகேழொடேழு தொழநின்ற கோளும் இலனாய்ப் 
படிமேல் எழுந்து வருவான் விரைந்து பலகால் நினைந்து பணிவான் 

[ நாகபாசப்படலம் 243 , 244 , 246--249 ] 


வாசங்கலந்த மரைநாள நூலின் வகை என்ப தென்னை மழைஎன்று 
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் ரராமன் வெண்ணெய் அணுகும் 
தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர் 
பாசங்கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம் 

பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்துபடர்கால் 
செல்லா நிலத்தின் இருளாதல் செல்ல உடல்நின்ற வாளிசிதறுற்று 
எல்லாவிதத்தும் உணர்வோடு நண்ணி இவனே பிழைக்கும் எனவோர் 
வல்லான் ஒருவன் இடையேபடுத்த வடுவான மேனிவடுவும் 


தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவிப் புணர்ந்த தகையால் 
உரும்ஒத்த வெங்கண் வினை தீய வஞ்சர் உடலுய்ந்த தில்லை உலகின் 
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர் மேல் அவ்வள்ளல் கடைநாள் 
நிருமித்த என்ன உயிரோ டெழுந்து நிலை நின்ற தெய்வநெறியால் 


[ நாகபாசப்படலம் 263-2651 



கெருடபகவான் ஸ்ரீராமரைத் துதித்தல் 


வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்மேல் அயன் தன் முதலோர் 
தந்தாதை தாதைஇறைவா பிறந்து விளையாடு கின்ற தனியோய் 
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்னசெயலோ 
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் எனஇன்ன பன்னி மொழிவான் 


எழுவாய் எவர்க்கும் முதலாகி ஈறொடு டையாகி எங்கும் உளையாய் 
வழுவா தெவர்க்கும் வரம் ஈயவல்லை அவரால் வரங்கள் பெறுவாய் 
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் 
அழுவாய் ஒருத்தன் உளைபோலும் ஆர்இவ் அதிரேக மாயை அறிவார் 


தானந்தம் இல்லை பலஎன்னும் ஒன்று தனிஎன்னும் ஒன்று தவிரா 
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனந் தொடர்ந்த ஒளியால் 
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது 
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் 


மீளா.தவேதம் முடிவின்கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் 
கேளாத என்று பிறவென்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவால் 
மாளாதநீதி இகவாமை நின்கண் அபிமானம் இல்லை வறியோர் 
ஆளாயும் வாழ்த்தி அரசாள்தி ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் 


ரோயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்தோறும் நிற்றி பிரியாய் 
தீராய் பிரிந்து திரிவாய் திறம்தொறு அவை தேறும் என்று தெளியாய் 
கூராழி அங்கை உடையாய் திரண்டொர் உருவாதி கோடல் உரிபோல் 
ஆராயின் ஏதும் இலையாதி ஆரிவ் அதிரேக மாயை அறிவார்  


ஐயநீ யாரை எங்கள் அருந்தவப் பயத்தின் வந்திங்கு 
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் 
கையுறை கோடற்கொத்த காட்சியை அல்லைமீட்சி 
செய்திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்கொணாதான் 

[ நாகபாசப்படலம் 250, 252 , 255 , 256, 261 , 267 ] 


இராத்திரியில் மகாராட்சத வீரர்கள்வதை 

பறவை பின் குலங்கள் காக்கும் பாவகன் பழையநின்னோடு 
உறவுள்தன்மை யெல்லாம் உணர்த்துவென் அரக்கனோடம் 
மறவினை முடித்தபின்னர் வளவன் என்று ணர்த்திமாயப் 
பிறவியின் பகைஞ! நல்குவிடையெனப் பெயர்ந்து போனான் 


சிங்கஏறு அசனி ஏறு கேட்டலும் சீற்றச்சேனை 
பொங்கிய தென்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் 
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா 
அங்கையோடங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் 

என்பது சொல்லிப் பள்ளிச்சேக்கை நின்றிழிந்து வேந்தன் 
ஒன்பது கோடி வாட்கை அரக்கர் வந்துழைபின்சுற்றப் 
பொன்பொதி விளக்கங்கோடிப் பூங்குழை மகளிர் ஏந்தத் 
தன் பெருங்சோயில் நின்றும்மசன் தனிக்கோயில் புக்கான் 
 


எழுந்தடிவணங்க லாற்றான்இருகையும் அரிதின் ஏற்றித் 
தொழும் தொழிலானை நோக்கித்துணுக்குற்ற மனத்தன் தோன்றல் ! 
அழுங்கினை வந்ததென்னை அடுத்தது என்றெடுத்துக் கேட்டான் 
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் 

ஐயவெம் பாசந்தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்னப் 
பெய்யும் வெஞ்சரத்தால்மேனி பிளப்புண்டார் உணர்வுபோந்தார் 
உய்யுநர் என்றுரைத்தது உண்மையோ ஒழிக்கொன்றோ ? 
செய்வம் எண்றெண்ணின் தெய்வச்செயல் ஒன்றாம் தெரியினென்றா ன் 


ஈண்டிது கிடக்கமேன்மேல் இயைந்த வாறியைகஎஞ்சி 
மீண்டவர் தம்மைக்கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே 
ஆண்டகை நீயே இன்னும் ஆற்றுதி அருமைப்போர்கள் 
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தைச் சொன்னான் 


இன்றொரு பொழுது தாழ்த்து என் இகல்பெருஞ் சிரமம் நீக்கிச் 
சென்றொரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ 
வென்றிவெம் படையினால்உன் மனத்துயர் மீட்பென் என்றான் 
நன்றென அரக்கன் போய் தன் நளிர்மணிக் கோயில் புக்கான் 

[ நாகபாசப்படலம் 270 , 276 , 279 , 286 , 292 , 299 , 300 


ஆர்த்தெழும் ஓசைகேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்பப் 
போர்த்தொழில் வேட்கைபூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் 
தார்த்தட மார்பன் தன்னைத் தாராடை என்னச்சார்ந்தார் 
பார்த்தனன் அரக்கர்கோனும் போம் எனப்ப கருங்காலை 


பிச்சரின் திகைத்தன பெற்றிப் பேச்சினான் 
முச்சிரத் தயிலினான் மூரித்தேரினான் 
இச்சிரம் உம்மதே எனவந்தெய்தினான் 
வச்சிரத் தெயிற்றவன் மலையின் மேனியான் 


காலையும் மனத்தையும் பிறகு காண்பதோர் 
வாலுளைப் புரவியின் மடித்த வாயினான் 
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் 
லம் ஒன்றுடையவன் பிசாசன் தோன்றுவான் 


சூரியன் பகைஞன் அச்சுடர் பொன்தேரினன் 
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான் 
ஆரிய வேள்வியின் பகைஞனாம் அரோ 
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் 

சாலிவண் கதிர்நிகர் புரவித்தானையான் 
மூலவெங் கொடுமையின் தவத்தின் முற்றினான் 
சூலியும் வெருக்கொளத் தேரில் தோன்றுவான் 
மாலி என்றடிமுறை வணங்கிக் கூறினான் 

ஆர்த்தெதிர் நடந்த தவ் அரியின் ஆர்கலி 
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் 
போர்த்தொழில் புரிந்தன புலவர் போக்கிலார் 
வேர்த்துயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே 


ரியன் பெரும்பகைஞனும் சூரியன் மகனும் 
நேர் எதிர்ந்தனர் நெருப்புடைவேள் வியின்பகையும் 
ஆரியன் தனித்தம்பியும் எதிர் எதிர் அடர்ந்தார் 
வீரவச்சிரத் தெயிற்றனும் இடபனும் மிடைந்தார் 

தூமக்கண்ணனும் அனுமனும் எதிர் எதிர் தொடர்ந்தார் 
தாமத்தங்கதன் மாபெரும் பக்கனைத் தடுத்தான் 
சேமத்திண்சிலை மாலியும் நீலனும் செறுத்தார் 
வாமப்போர் வயப்பிசாசனும் பனசனும் மலைந்தார் 


வகைநின்ற உயர்தோள் நெடுமாருதியும் 
புகைவெங் கண்ணனும் பொருவார் பொரவே 
மிகை சென்றிலர் பின்றிலர் வென்றிலரால் 
சிகை சென்று நிரம்பிய தீஉமிழ்வார் 

மலையிற் பெரியான் உடல் மண்ணிடையிட்டு 
உலையக் கடல் தாவி கால்கொடு உதைத்து 
அலையத் திருகிப் பகுவாய் அனல்கால் 
தலைகைக்கொடு வறிந்து தணிந்தனனால் 


மாபக்கனும் அங்கதனும் மலைவார் 
தீபத்தின் எரிந்தெழு செங்கணினார் 
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார் 
தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால்  


உளந்தான் நினையாதமுன் உய்த்து உகவாக் 
கிளர்ந்தானை இரண்டு கிழித்துணையாய்ப் 
பிளந்தான் உலகேழினோ சேழுபெயர்ந்து 
அளந்தான் வலிநன்றென அங்கதனே 


வேள்விப் பகையொடு வெகுண்டு அடரும் 
தோள்வித்தகன் அங்கோர் சுடர்க்கணையால் 
வாழ்வித்தனை என்று அவன் மார்பகலம் 
போழ்வித்தனன் ஆருயிர் போயினனால் 


தன் தாதையை முன்பு தடுத்தொருநாள் 
வென்றானை விலங்கலின் மேனியனைப் 
பின்றாத வலத்துயர் பெற்றியனைக் 
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் 

தோற்றும் உருவொன் றெனவே துணியா 
கூற்றின் கொலையால் உழல்கொள்கையனை 
ஏற்றும் சிலையாண்மை இலக்குவன் வெங் 
காற்றின் படைகொண்டு கடந்தனனால் 
[ படைத்தலைவர் வதைப்படலம் 1 , 32-36 , 49 , 50, 68 , 72, 73 , 

78 , 79 , 85 , 87,99 ) 
வண்டுலாம் அலங்கல்மார்பன் மகராக்கன் மனழ ஏறென்னத் 
திண்டிறல் அரக்கன் கொற்றப் பொற்றடஞ்சில்லித் தேரைத் 
தண்டலை மருதவைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக் 
கொண்டல்மேல் ஓட்டிச்சென்றான் குரங்கினப் படையைக் கொன்றான் 

சொரிந்தன பகழியெல்லாம் சுடர்க்கடுங் கணைகள் தூவி 
அரிந்தனன் அகற்றிமற்றை ஆண்டகை அலங்கல் ஆகத்து 
எரிந்தொரு பகழிபாய எய்தனன் இராமன் ஏவ 
நெரிந்தெழு புருவத்தான் தன் நிறத்துற நின்றதன்றே 

அத்துணை அரக்கன் நோக்கி அந்தரவான மெல்லாம் 
ஒத்ததன் உருவே ஆக்கித் தான்மறைந் தொளித்துச் சூலப் 
பத்திகள் கோடி கோடி பரப்பினன் அதனைப்பார்த்த 
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்றினைய சொன்னான் 


அம்பின் வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருளில்யாக்கை 
உம்பரில் பரப்பித்தான்வேறு ஒளித்தனன் என்னஓர்வான் 
செம்புனல் சுவடுநோக்கி இதுநெறி என்றுதேவர் 
தம்பிரான் பகழி தூண்டத் தலையற்றுத் தலத்தன் ஆனான் 

[ மகரக்கண்ணன் வதைப்படலம் 15 , 20 , 28 , 30 ] 


லட்சுமணருக்கும் இந்திரசித்துக்கும் இரண்டாம்முறை யுத்தம் 


கரன்மகன்பட்ட வாறும் குருதியின்கண்ணன் காலின் 
சிரன் தெரிந்துக்கவாறும் சிங்கனது ஈறும்சேனைப் 
பரம் இனிஉலகுக் காவாது என்பதும் பகரக்கேட்டான் 
வரன்முறை தவிர்ந்தான் வல்லைத் தருதிர் என்மகனை என்றான் 


கூயினன் நுந்தை என்றார் குன்றெனக்குவிந்த தோளான் 
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் 
ஏயினபின்னை மீள்வார் நீயலாது யாவர் என்னா 
மேயது சொன்னார் தூதர் தாதைபால் விரைவின்வந்தான் 


நாற்கடல் அனையதானை நடந்திடக் கிடந்தபாரின் 
மேற்கடுத் தெழுந்த தூளி விசும்பின் மேல் தொடர்ந்து வீச 
மால்கடல் சேனை காணும் வானவர் மகளிர் மானப் 
பாற்கடல் அனையவாட்கண் பனிக்கடல் படைத்ததன்றே 


ஆயிரகோடித் திண்தேர் அமரர்கோன் நகரம் என்ன 
மேயின் சுற்றத்தான்ஓர் கொற்றப்பொன் தேரின் மேலான் 
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் 
நாயகப்பரிதி போன்றான் தேவரை நடுக்கங்கண்டான் 


சங்கத்தின் முழக்கங்கேட்ட கவிப்பெருந் தானையானை 
சிங்கத்தின் முழக்கங்கேட்ட தொத்தது விரிந்து சிந்தி 
எங்குற்ற என்னாவண்ணம் இரிந்தது ஈதன்றி ஏழைப் 
பங்கத்தின் மலைவில் அன்னசிலை ஒலிபரப்பி ஆர்த்தான் 


செங்கதிர்ச் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன் தானும் 
அங்கதப் பெயரினானும் அண்ணலும் இளையகோவும் 
வெங்கதிர் மௌலிச் செங்கண் வீடணன் முதலாம்வீரர் 
ங்கிவர் நின்றாரல்லது இரிந்தது சேனை எல்லாம்  


மாருதி அலங்கல்மாலை மணியணி வயிரத் தோள்மேல் 
வீரனும் வாலிசேய்தன் விறல் கெழு சிகரத் தோள் மேல் 
ஆரியற் கிளையகோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி 
வேரியம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் 


தேரின்மேல் சிலையில் நின்ற இந்திர சித்தென்றோதும் 
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும் 
பாரின்மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் 
போரின்மேல் நோக்கிலாத இருவரும் பொருதபூசல் 


செய்கின்றார் இருவர் வெம்போர் சிதைகின்ற சேனை நோக்கின் 
ஐயந்தான் இல்லாவெள்ளம் அறுபதும் அவிகஎன்று 
வைகின்றார் அல்லாக வரிசிலை வளத்தால்மாள 
எய்கின்றார் அல்லர் ஈதென் இந்திரசாலம் என்றான் 


ஆயிர கோடித்தேரும் அரக்கரும் ஒழியவல்ல 
மாயிருஞ் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை 
போயின குரக்குத்தானை புகுந்திலதன்றே பொன் தேர்த் 
தீயவன் தன்மேல் உள்ள பயத்தினால் கலக்கந்தீரா 


இந்திரன் பகைஎனும் இவனை என்சரம் 
அந்தரத் தருந்தலை அறுக்க லாதெனின் 
வெந்தொழிற் செய்கையன் விருந்து மாய்நெடு 
மைந்தரின் கடையெனப் படுவென் வாழியாய் 


முறுவல் வாள் முகத்தினன் முளரிக்கண்ணனும் 
அறிவென் நீ அடுவல் என்று அமைதியாம் எனின் 
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் 
வெறுவியர் வேறினி விளைவது யாதென்றான் 


அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறென 
மங்குல் நின்றதிர்ந்தன வயவன்தேர் புனை 
சிங்கமும் நடுக்குறத் திருவின் நாயகன் 
சங்கமொன் றொலித்தனன் கடலும் தள்ளுற 

ஆனகாலையில் இராமனும் அயில் முகப்பழி 
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனைத் தூண்டி  
வானமானங்கள் மறிந்தெனத் தேரெலாத் மடியத் 
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் 

இருவிர் என்னொடு பொருதிரோ அன்றெனின் ஏற்ற 
ஒருவிர் வந்துயிர் தருதிரோ உம்படையோடும் 
பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும் 
தருவென் இன்றுமக் கேற்றது யான் எனச் சலித்தான் 


வாளின் திண்சிலைத் தொழிலினின் மல்லினின் மற்றை 
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் 
கோளுற்று உன்னொடு குறித்து அமர்செய்து உயிர்கொள்வான் 
சூளுற்றேன் இதுசரதம் என்று இலக்குவன் சொன்னான் 


இலக்குவன் எனும்பெயர் உனக்கியைவதே என்ன 
இலக்கு வன்கணைக்கு ஆக்குவேன் இதுபுகுந்திடையே 
விலக்குவென் எனவிடையவன் விலக்கினும் வீரம் 
கலக்குவென் இதுகாணும் உன் தமையனும் கண்ணால் 

கும்பகர்னன் என்றொருவன் நீர் அம்பிடைக் குறைத்த 
தம்பியல்லன் யான் இராவணன் மகன் ஒரு தமியேன் 
எம்பிமாருக்கும் என்சிறு தாதைக்கும் இருவர் 
செம்புண்ணீர் கொடுகடன் கழிப்பேன் என்று தெரித்தான் 


அரக்கர் என்பதோர் பெயர்படைத்தவர்க் கெலாம் அடுத்த 
புரக்கும் தன்கடன் செயவுளன் வீடணன் போந்தான் 
கரக்கும் நுந்தைக்கு நீ செய்யக் கடவன கடன்கள் 
இரக்கம் உற்று உனக்கவன் செய்யும் என்றனன் இளையோன் 


இளையமைந்தன் மேல் இராமன்மேல் இராவணி இகலி 
விளையும் வன்திறல் வானரவீரர்மேல் மெய்யுற்று 
உளையும் வெஞ்சரம் சொரிந்தனன் நாழிகைஒன்று 
வளையும் மண்டலப்பிறை எனநின்றது அவ்வரிவில் 


படங்கொள் பாம்பணை துறந்தவற்கு இளையவன்பகழி 
விடங்கொள் வெள்ளத்தின்மேல் - அவன் விடுவன விலக்கி 
இடங்கர் ஏறன எறுழ்வலியரக்கன் தேர்ஈர்க்கும் 
மடங்கல் ஐயிருநூற்றையும் கூற்றின் வாய்மடுத்தான் 


கண்ணிமைப்பதன் முன்புபோய் விசும்பிடைக் கரந்தான் 
அண்ணல் மற்றவன் ஆக்கைகண்டறிகிலன் ஆகிப் 
பண்ணவற்கு இவன்பிழைக்குமேல் படுக்கும் நம்படையை 
எண்ணம் மற்றிலை அயன்படை தொடுப்பென் என்றிசைந்தான் 


ஆன்றவன் அதுபகர்தலும் அறநிலை வழா தாய் 
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கின் இவ்வுலகம் 
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிக்கலது என்றான் 
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடைத்தம்பி 


மறைந்து போய்நின்றவஞ்சனும் அவருடை மனத்தை 
அறிந்து தெய்வவான்படைக்கலம் தொடுப்பதற் கமைந்தான் 
பிறிந்து போவதேகருமம் இப்பொழுது எனப்பெயர்ந்தான் 
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் 
[ பிரம்மாத்திரப்படலம் 1 , 2 , 3 , 9 , 10 , 13 , 15 , 17 , 22 , 24 , 32 , 39 . 

43 , 45 , 57 , 59 , 60 , 62 , 64 , 65 , 68 , 73 , 78 , 79 , 80 ] 


அனுமாருக்கும் அகப்பனுக்கும் யுத்தம் 


எற்கொள் நான்முகன் படைக்கலம் இவர் என் மேல் விடாமுன் 
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறைமுறை மொழிந்த 
சொற்கொள் வேள்விபோய்த் தொடங்குவான் அமைந்தவன்துணிவை 
மற்கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் 


னுமன் அங்கதன் தோள் நின்று இழிந்தனராகித் 
தனுவும் வெங்கணைப் புட்டிலும்கவசமும் தடக்கைக்கு 
இனிய கோதையும் துறந்தனர் இருவரும் மையோர் 
பனிமலர் பொழிந்தார்த்தனர் வாழ்த்தினர் பல்கால் 


இரவும் நண்பகலும் பெருநெடுஞ் செருவியற்றி 
உரவு நம் படைமெலிந்துளது அருந்துதற் குணவு 
வரவு தாழ்த்தது வீடணவல்லையின் ஏகித் 
தரவு வேண்டினென் என்றனன் தாமரைக் கண்ணன் 


தெய்வவான் பெரும்படைகட்கு வரன்முறை திருந்து 
மெய்கொள் பூசனைஇயற்றினம் விடும் இதுவிதியால் 
ஐய ! நான் ஆற்றினென் வருவதோர் அளவும் 
கைகொள் சேனையைக் காவெனப் போர்க்களங்கடந்தான் 
 


வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனையைவீர 
அள்ளிலைப்படை அகம்பனே முதலிய அரக்கர் 
எள்ளில் எண்ணிலர் தம்மொடு விரைந்தனை ஏகிக் 
பொள்ளை வெஞ்செரு இயற்றுதி மனிதரைக் குறுகி 


படைக்கலங்களும் பருமணிப் பூண்களும் பகுவாய் 
டைக்கலந்த பேரெயிற்று இளம்பிறைகளும் எறிப்பப் 
புடைப் பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள 
விடைக்குலங் கள் போல் இராக்கதப் பதாதியும் மிடைந்த 


தொடும்படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவி 
நகம்படையாகக் கொள்ளும் நரசிங்கம் நடந்ததென்ன 
மிகும்படைக் கடலுள் செல்லும் மாருதி வீரவாழ்க்கை 
அகம்பனைக் கண்டான் தண்டால் அரக்ரை அரைக்குங் கையான் 


எற்றின எறிந்த வல்லை ஏயின எய்தப்பெய்த 
முற்றின படைகள் யாவும் முறைமுறை முறிந்துசிந்தச் 
சுற்றின வயிரத்தண்டால் துகைத்தனன் அமரர் துள்ளக் 
கற்றிலன் இன்று கற்றான் கதையினால் வதையின் கல்வி 


அகம்பனும் காணக்காண ஐயிருகோடிக் கைம்மா 
முகம்பயில் கலினப்பாய்மா முளையெயிற் றரக்கர்மூரி 
நுகம்பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான் 
உகம்பெயர் ஊழிக்காற்றின் உலைவிலாமேரு ஒப்பான் 


வில்லினால் இவனை வெல்லல் அரிதெனாநிருதன் வெய்ய 
மல்லினான் இயன்ற தோளான் வலியினால் வானத்தச்சன் 
கொல்லினால் இயன்ற தாங்கோர் கொடுமுளைத்தண்டு கொண்டான் 
அல்லினால் வகுத்ததன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் 


தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும் 
கிட்டினார் கிடைத்தார் வீசிப்புடைத்தனர் கீழும்மேலும் 
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவுகண்ணுற்று 
ஒட்டினார் மாறிவட்டம் ஓடினார் சாரிபோனார் 


அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறனைய தண்டு 
பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்றென்னா 
மடித்துவாய் இடத்துக்கையால் மார்பிடைக்குத்த வாயால் 
குடித்து நின்றுமிழ் வான் என்னக் கக்கினன் குருதி வெள்ளம் 


மீட்டுமக் கையால்வீசிச் செவித்தலத்து எற்ற வீழ்ந்தான் 
கூட்டினான் உயிரைவிண்ணோர் குழாத்திடை அரக்கர்கூட்டம் 
காட்டில் வாழ் விலங்குமாக்கள் கோளரி கண்ட என்ன 
ஈட்டமுற்று எதிர்ந்த வெல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் 
[ பிரம்மாத்திரப்படலம் 83 , 84 , 86 , 88 , 93 , 97 , 1.0 , 125 , 126 , 131 , 

133 , 136 , 137 ] 


இளையவர் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் 

ஆர்த்த பேரமலைகேளா அனுகினன் அனுமன் எல்லா 
வார்த்தையும் கேட்கலாகும் என்றதும் மகிழ்ந்து வள்ளல் 
பார்த்தனன் பாராமுன்னம் பணிந்தனன் விசயப்பாவை 
தூர்த்தனை ளையவீரன் தழுவினன் இனைய சொன்னான் 


தேவர் தம் படையை விட்டான் என்பதுசிந்தை செய்யா 
மாபெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப்போனான் 
ஏவரும் இரிந்தார் எல்லாம் இனமழைஎன்ன ஆர்த்துக் 
கோவிளங் களிற்றைவந்து கூடினார் ஆடல் கொண்டார் 


காலம் ஈதெனக்கருதிய இராவணன் காதல் 
ஆலமா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் 
மூலவேள்விக்கு வேண்டிய கலப்பைகள் முறையால் 
கூலம் நீங்கிய இராக்கதப்பூசுரர் கொணர்ந்தார் 


இன்னகாலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான் 
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் 
பொன்னின் மால்வரைக் குரீஇனம் மொய்ப்பதைப்போல 
பன்னலாம் தரமல்லன சுடர்க்கணை பாய்ந்த 


கோடி கோடி நூறாயரம் கொடுங்கணைக் குழாங்கள் 
மூடிமேனியை முற்றுறச் சுற்றின மூழ்க 
ஊடுசெய் வதொன்றுணர்ந்திலன் உணர்வுழக் கொடுங்க 
ஆடல்மாக்கரி சேவகம் அமைந்தென அயர்ந்தான் 


உடலிடைத் தொடர்பகழியின் ஒளிக்கதிர்க்கற்றைச் 
சுடருடைப் பெருங்குருதியில் பாம்பெனச்சுமந்த 
மிடலுடைப் பிணமீமிசைத்தான் பண்டைவெள்ளக் 
கடலிடைத் துயில்வானன்ன தம்பியைக் கண்டான் 

உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்ந்திலன் ஒன்றும் 
வியர்த்திலன் உடல்விழித்திலன் கண்ணிணை விண்னோர் 
அயர்த்தனன் கொல் என்று அஞ்சினர் தங்கையும் தாளும் 
பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையாற் பிறந்தான் 

எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகெல்லாம் 
தந்தனென் என்னும் கொள்கைதவிர்ந்தேன் தனி அல்லேன் 
உய்ந்தும் இருந்தாய் நீயென நின்றேன் உரைகாணேன் 
வந்தனென் ஐயாவந்தனென் ஐயா இனிவாழேன் 

தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே 
சேயோ நீயே தம்பியும் நீயே திருநீயே 
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ்பாராய் 
நீயோநானே நின்றனென் நெஞ்சம் வலியேனால் 


ஊறாநின்ற புண்ணுடையாய்ப்பால் உயிர்காணேன் 
ஆறாநின்றேன் ஆவிசுமந்தேன் அழிகின்றேன் 
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இருகூறாக் 
கீறாநெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே 


பயிலும் காலம் பத்தொடு நாலும் படர்கானத்து 
அயில்கின் றேனுக்கு ஆவனறல்கி அயிலாதாய் 
வெயிலென் றுன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவெய்தித் 
துயில்கின்றாயோ இன்றிவ்வுறக்கம் துறவாயோ 


அயிராநெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச்சொல் 
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவுண்டோ 
செயிரே . r இல்லா உன்னையிழந்தும் திரிகின்றேன் 
உயிரோ நானோயாவர் உனக்கிங் குறவம்மா 


மாண்டாய் நீயோ யானொருபோதும் உயிர்வாழேன் 
ஆண்டானல்லன் நானிலம் அந்தோ பரதன்தான் 
பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றார் 
வேண்டாவோ நான் நல்லறம் அஞ்சி மெலிவுற்றால் 


அறம் தாய்தந்தை சுற்றமும் மற்றும் எனையல்லால் 
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணைவந்து 
பிறந்தாய் என்னைப் பின்புதொடர்ந்தாய் பிரிவற்றாய் 
இறந்தாய் என்னைக்கண்டும் இருந்தேன் எளியேனோ 


கொடுத்தேனன்றே வீடணனுக்குக் குலம் ஆள 
முடித்தோர் செல்வம்யான் முடியாதே முடிக்கின்றேன் 
படித்தேனன்றே பொய்ம்மை குடிக்குப் பழிபெற்றேன் 
ஒடித்தேன் அன்றே என்புகழ் நானே உணர்வற்றேன் 
[ பிரம்மாத்திரப்படலம் 149 , 155 , 159 , 167 , 168 , 194 , 196 , 202 -206 , 

209 , 210 , 216 


ஸ்ரீராமரை ஆகாசத்தில் சகலதேவதைகளும் தோத்தரித்தல் 

கண்டார் விண்ணோர் . கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் 
கொண்டார் துன்பம் என் முடிவென்னக் குலைகின்றார் 
அண்டா அய்யா எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் 
உண்டோ உன்பால்துன்பு என அன்போ டுரைசெய்தார் 


உன்னைஉள்ள படியறியோம் உலகைஉள்ள திறம் உள்ளோம் 
பின்னை யறியோம் முன்னறியோம் இடையும் அறியோம் பிறழாமல் 
நின்னை வணங்கி நீவகுத்தநெறியில் நிற்கும் இதுவல்லால் 
என்னை அடியோம் செயற்பால இன்பதுன்பம் இல்லோனே 


அண்டம்பலவும் அனைத்துயிரும் அகத்தும் புறத்தும் உளவாக்கி 
உண்டும் உமிழ்ந்தும் அளந்திடந்தும் உள்ளும்புறத்தும் உளையாகி 
கொண்டுசிலம்பி தன்வாயில் கூர் நூல் இயையக் கூடியற்றிப் 
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி 


துன்பவிளையாட்டிது வேயும் நின்னைத் துன்பம் தொடர்பின்மை 
இன்பவிளையாட்டாம் எனினும் அறியாதோருக் கிடருறுமால் 
அன்பின்விளைவும் அருள்விளைவும் அறிவின்விளைவு மவையெல்லாம் 
முன்புபின்பு நடுவில்லாய் முடித்தாலன்றி முடியாவே 


அம்பரீடற் கருளியதும் அயனார் மகனுக் களித்ததுவும் 
எம்பிரானே எமக்கின்று பயந்தாய் என்றே ஏமுறுவேம் 
வெம்புதுயரம் நீயுழக்க வெளிகாணாது மெலிகின்றாய் 
தம்பிதுணைவா நீயிதனைத் தவிர்த்தெம் உணர்வைத் தாராயோ 

[ பிரமாத்திரப்படலம் 218 , 219 , 222 , 223 , 225 [ 
703 


ஸ்ரீராமலட்சுமணருக்குச் சீதாதேவி இரங்கல் 


என்வந்தது நீரென்றரக்கர்க் கிறைவன் இயம்ப எறி செருவில் 
நின்மைத்தன் நெடுஞ்சரத்தால் துவணவரெல்லாம் நிலஞ்சேரப் 
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால் 
முன்வந்தவனும் முடிந்தான்உன் பகைபோய் முடிந்ததென மொழிந்தார் 

[ பிரமாத்திரப்படலம் 227 ] 
தெய்வமானத் திடையேற்றி மனிதர்க் குற்ற செயலெல்லாம் 
தையல்காணக் காட்டுமின்கள் கண்டாலன்றித் தனதுளத்து 
ஐயம் நீங்காள் என்றுரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி 
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க்களத்தின் மிசைஉய்தார் 


கண்டாள் கண்ணால் கணவன் உ அன்றி ஒன்றும் காணாதாள் 
உண்டாள் விடத்தை என உ ..- லும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் 
தண்டா மரைப்பூ நெருப்புற்ற தன்மையுற்றாள் தரியாதாள் 
பெண்தான் உற்ற பெரும்பிழை உலகுக்கெல்லாம் பெரிதன்பேறோ 


விழுந்தாள் புரண்டாள் உடல் முழுதும் வியர்த்தாள் அயர்த்தாள் வெதும்பினாள் 
எழுந்தாள் இருந்தாள் தளிர்க்கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் 
கொழுந்தா என்றாள் , அயோத்தியார்தம் கோவே என்றாள் எவ்வுலகும் 
தொழுந்தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள் 


கொடியேன் இவைகாண்கிலேன் என் உயிர் கோள் 
முடியாய் நமனே முறையோ முறையோ 
விடியா இருள்வாய் எனை வீசினையே 
அடியேன் உயிரே அருள் நாயகனே 


மேவிக் கனல் முன் மிதிலைப் பதி என் 
பாவிக் கைபிடித்தது பண்ணவநின் 
ஆவிக் கொரு கோள் வரவோ அலர்வாழ் 
தேவிக்கமுதே பறையின் தெளிவே 


உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு 
ஐயா இளையோர் அவர் வாழ் கிலரால் 
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடுங் 
கைகேசி கருத்திதுவோ களிறே 


தகைவான் நகர் நீ தவிர்வாய் எனவும் 
வகையாது தொடர்ந்தொரு மான் முதலாப் 
புகையாடிய காடுபுகுந்து டனே 
பகையாடியவா பரிவேதும் இலேன் 


நெய்யார் பெருவேள்வி நிரப்பி நெடும் 
செய்யார் புனல் நாடுதிருத்துதியால் 
மெய்யாகிய வாசகமும் விதியும் 
பொய்யான என்மேனி பொருந்துதலால் 


மேதா இளையோய் விதியார் விளைவால் 
போதா நெறிஎம்மொடு போதுறு நாள் 
மூதானவன் முன்னம் முடிந்திடுஎனும் 
மாதா உரையின் வழிநின் றனையோ 


பூவுந்தளிரும் தொகுபொங் கணைமேல் 
கோவுந் துயலத் துயிலாய் கொடியார் 
ஏவுன் தலை வந்தஇருங் கணையால் 
மேவும் குளிர் மெல்லணை மேவினையோ 

[சீதைகளங்காண்படலம் 3 , 4 , 9 , 12 , 14 -- 16 , 18--20 ] 
திரிசடையம்மாள் சீதாதேவியைத் தேற்றுதல் 

மழுவாள் உறினும் பிளவாமனனோடு 
அழுவேன் இனியென் இடர் ஆறிட நான் 
விழுவேன் அவன்மேனியின் மீதில் எனா 
எழுவாளை விலக்கி இயம் பினளால் ( திரிசடை ) 

மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் 
போய நான் நாகபாசம் பிணித்தது போனவாறும் 
நீயமா நினையாய் , மாள நினைத்தியோ நெறியிலாரால் 
ஆயமாமாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் 


கண்ட அக்கனவும் பெற்ற நிமித்தமும் நினதுகற்பும் 
தண்டவா ளரக்கர் பாவச் செய்கையும் தருமம் தாங்கும் 
அண்டர் நாயகன் தன் வீரத் தன்மையும் அயர்த்தாய் போலும் 
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இப்புலையர்க்கல்லால் 


ஆழியான் ஆக்கை தன்னில் அம்பொன்றும் உறுகிலாமை 
ஏழைநீ காண்டியன் றே இளையவன் வதனம் இன்னும் 
ஊழிநாள் இரவியென்ன ஒளிர்கின்றது உயிருக்கின்னல் 
வாழியார்க்கில்லை வாளாமயங்கலை மண்ணில் வந்தாய் 


ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகமோரேழும் ஏழும் 
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என்னாம் 
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிரெலாம் வெருவல் அன்னை 
ஆய்ந்தவை உள்ளபோதே அவர்உளர் அறமும் உண்டால் 


மாருதிக்கில்லையன்றே மங்கைநின் மரத்தினாலே 
ஆருயிர் நீங்கள் நின்பால் கற்புக்கும் அழிவுண்டாமே ? 
சீரியதன்று இதொன்றும் திசைமுகன் படையின் செய்கை 
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பதுண்டோ 


தேவரைக் கண்டேன் பைம் பொன் செங்கரம் சிரத்தில் ஏத்தி 
மூவரைக் கண்டாலென்ன இருவரை முறையின் நோக்கி 
ஆவலிப் பெய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை 
கூவலில் புக்குவேலை கோட்படும் என்று கொள்ளேல் 


மங்கலம் நீங்கினாரை ஆருயிர் வாங்கினாரை 
நங்கை இக்கடவுள் மானம் தாங்குறும் நவையிற்றன்றால் 
இங்கிவை அளவையாக இடர்க்கடல் கடத்தி என் 
சங்கையள் ஆயதையல் சிறிதுயிர் தரிப்பதானாள் 

[ சீதைகளங்காண்படலம் 21 , 23-27 ] 


அனுமார் சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வருதல் 

அந்தணன் படையால் வந்த தென்பதும் ஆற்றல் சான்ற 
இந்திர சித்தே எய்தான் என்பதும் இளவற்காக 
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கிச் 
சிந்தையின் உணர எண்ணித் தீர்வதோர் உபாயம் தேர்வான் ( வீடணன் ) 


வாய்மடித் திரண்டுகையும் முறுக்கித்தன் வயிரச்செங்கண் 
தீயுகக் கனகக்குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட 
ஆயிர கோடியானைப் பெரும்பிணத் தமளிமேலான் 
காய்சினத் தனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான் ( இருவரும் ) 


அன்னவன் தன்னைக் கண்டால் ஆணையே அரக்கர்க்கெல்லாம் 
மன்னவ நம்மையீண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் 
என்னலும் உய்ந்தேம் அய்ய ஏகுதும் விரைவின் என்றான் 
மின்எரி ஒளியிற் சென்றார் சாம்பனைவிரைவிற் கண்டார் 


மேருவினைக் கடந்தப்பால் ஒன்பதினாயிரம் உளஓசனையை விட்டால் 
நேரணுகும் நீலகிரிதானிரண்டா யிரம்உள ஓசனையின் நிற்கும் 
மாருதி ! மற்றதற்கப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்துவைகும் 
கார்வரையைக் காணுதிமற்று அதுகாண இத்துயர்க்குக் கரையும் காண்டி 


மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும் மெய்வேறு வகிர்களாகக் 
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒருமருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பதொன்றும் 
மீண்டேயும் தம்முருவை அருளுவது ஓர்மெய்ம் மருந்து உள நீவீர 
ஆண்டேகித் கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின்மிக்கான் 
 


ஈங்கிதுவே பணியாகில் இறந்தாரும் பிறந்தாரே எம்கோக்குயாதும் 
தீங்கிடையூ றெய்தாமல் தெருட்டுதிர்போய் எனச்சொல்லி அவரைத்தீர்ந்தான் 
ஓங்கினன் வான் நெடுமுகட்டை உற்றனன் பொன் தோள்இரண்டும் திசையோபெடாக்க 
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே எனவளர்ந்தான் வேதம் போல்வான் 


வால்விசைத்துக் கைந்நிமிர்த்து வாயினையும் சிறிதகல வகுத்து மான 
கால்நிலத்தின் இடைஊன்றி உரம்விரித்துக் கழுத்தினையும் சுரித்துத் தூண்டித் 
தோல் மயிர்க்குந் தளம் சிலிர்ப்ப விசைத் தெழுந்தான் அவ்விலங்கைத் துலங்கிச் சூழ்ந்த 
வேலையில்புக் கழுந்தியதோர் மரக்கலம் போல் சுரித்துலைய விசையத் தோளான் 


இமயமால் வரையை உற்றான் ஆங்குள இமைப்பி லோரும் 
கமையுடை முனிவர் மற்றும் அறனெறி கலந்தோ ரெல்லாம் 
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கப்பால் 
உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு வகையுற்றான் 


நாமயோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவுநீங்கி 
ஏமகூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல் 
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டங்கண்டான் 
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றியுற்றான் 


அற்குன்ற அலங்கு சோதி அம்மலை யகலப் போனான் 
பொற்குன்றம் அனையதோளான் நோக்கினான் புலவன் சொன்ன 
நற்குன்றம தனைக் கண்டான் உணர்ந்தனன் நரகம் முற்ற 
எற்குன்ற எரியும் தெய்வ மருந்தடையாளம் என்ன 


இங்குநின் றின்னை மருந்தென் றெண்ணினால் 
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் 
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் 
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான்  


ஆயிரம் யோசனை அகன்று மீயுயர்ந்து 
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம்மலை 
ஏ எனும் மாத்திரத்து ஒருகை ஏந்தினான் 
தாயினன் உலகெலாம் தவழ்ந்த கீர்த்தியான் 

( மருத்துமலைப்படலம் 6-10 , 16 , 26 , 27 , 30 , 32 , 43 , 46 , 60 , 63 , 64 ] 


ஸ்ரீராமர் லட்சுமணருக்காகப் பின்னும் இரங்கல் 


ஏவியகாரியம் இயற்றி எய்தினை 
நோவிலை வீடணா என்றுநோக்கிப்பின் 
தாவரும் பெரும்புகழ்ச் சாம்பன் தன்னையும் 
ஆவிவந்தனை கொல் என்றருளினானரோ 


ஐயன்மீர் நம்குலத்து அழிவிதாதலின் 
செய்வகை பிறிதிலை உயிரின் தீர்த்தவர் 
உய்கிலர் இனிச்செயற்கு உரியது உண்டெனின் 
பொய்யீலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் 

சீதைஎன் றொருத்தியால் உள்ளம் தேம்பிய 
பேதையேன் சிறுமையால் உற்றபெற்றியை 
யாதென உனர்த்துகேன் உலகொடு இவ்வுறாக் 
காதைவன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன் 


மாயை இம்மான் எம்பிவாய்மையாள் 
தூயன உறுதிகள் சொன்ன சொல்கொளேன் 
போயினன் பெண்ணுரை மறாது போனதால் 
ஆயதிப் பழியுடை மரணம் அன்பினீர் 


கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால் 
மண்டமர் புரிந்தனென் வலியின் ஆருயிர் 
கொண்டிலென் உறவெலாம் கொடுத்து மாள நான் 
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால் 


தேவர் தம் படைக்கலம் தொடுத்துத் தீயவன் 
சாவது காண்டுமென் றிளவல சாற்றவும் 
ஆவதை இசைந்திலென் அழிவதென்வயின் 
மேவுதல் உறுவதோர் விதியின் வென் றியால்  


எம்பியைத் துணைவரை இழந்தயானினி 
வெம்புயோ ரக்கரை முருக்கி வேரறுத்து 
அம்பினின் இராவணன் ஆவிபாழ்படுத்து 
உம்பருக் குதவி மேல் உறுவது என்னரோ 


இளையவன் இறந்தபின் எவ்வம் என் எனக்கு 
அளவறு சீர்த்தியென் அறன் என் ஆண்மை என் 
கிளையுறு சுற்றமென் அரசுஎன் கேண்மை என் 
விளைவு தான் என் மறை விதியென் மெய்ம்மை என் 


தாதையை இழந்தபின் சடாயுஇற்றபின் 
காதலின் துணைவரும் மடியக் காத்துழல் 
கோதறு தம்பியும் விளியக் கோள் இலன் 
சீதையை உவந்து நன் என்பர் சீரியோர் 


வென்றனென் அரக்கரை வேரும் வியந்து அறக் 
கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்து 
இ ன் துணைத் தம்பியை இன்றியான் உளேன் 
நன்று அரசாளும் அவ்வரசும் நன்றரோ 

( மருத்துமலைப்படலம் 68-73 . 76 , 77 , 79 , 80 ] 


தம்பிக்காக இரங்கின ஸ்ரீராமரை சாம்புவன் தேற்றுதல் 

படியின் மேற் காதலின் யாதும் பார்க்கிலென் 
முடிகுவென் உடன் என முடியக்கூறலும் 
அடியிணை வணங்கிய சாம்பன் ஆழியாய் 
நொடிகுவது உளதென நுவல்வதாயினான் 


உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை 
முன்னமே அறிகுவென் மொழிதல் தீதது 
என்னெனில் இமையவர் கண்ணுக்கு ஈனமாம் 
பின்னரே தெரிகுதி தெரிவில் பெற்றியோய் 


அன்னவன் படைக்கலம் அமரர்தானவர் 
தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர 
உன்னை யொன்றிழைத்திலது ஒழித்து நீங்கியது 
இன்னமும் உவகையொறென்ண்ண வேண்டுமோ  


பெருந்திறல் அனுமன் ஈண்டுஉணர்வு பெற்றுளான் 
அருந்துயர் அளவிலாது அரற்றுவானை யான் 
மருந்திறைப் பொழுதினில் கொணர்குவாய் எனப் 
பொருந்தினென் வடதிசைக் கடிதுபோயினான் 


பனிவரை கடந்தனன் பருப்பதங்களின் 
தனியர சின்புறம் தவிரச் சார்ந்துளன் 
இனியொரு கணத்தின் வந்தெய்தும் ஈண்டுறும் 
துனிவரும் துன்பம் நீ துறத்தி தொல்லை யோய் 

யானலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் 
தானலால் சிவனலால் நேமி தாங்கிய 
கோனலால் எனைவரும் உணரும் கோளிலர் 
வேனிலான் மேனியாய் மருந்தை மெய்யுற 


தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில 
ஆன்ற பேரண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் 
மூன்றென ஒன்றிய உலகம் முன்னை நாள் 
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் 


வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி 
தருநெறி தருமமே காட்டத் தாழ்க்கிலன் 
அருமைய தன்று எனா அடி வணங்கினான் 
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் 

[ மருத்துமலைப் படலம் 81 , 82 , 84 , 87 , 89 , 91 } 
தம்பிமுதலானோர் எழுந்ததற்காக ஸ்ரீராமர் அனுமாரைப் புகழ்தல் 


தோன்றினன் என்பதோர் சொல்லின் முன்னம் வந்து 
ஊன்றினன் நிலத்தடி கடவுள் ஓங்கல் தான் 
வான்தனில் நின்றது வஞ்சர் ஊர்வர 
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் 


கழன்றன நெடுங்கணை கரந்தபுண் , கடுத்து 
அழன் றில குளிர்ந்தன அங்கம் செங்கண்கள் 
சுழன்றில உலகெலாம் தொழுத தொங்கலின் 
குழன்றபூங் குஞ்சியான் உணர்வு கூடினான்  


யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல் 
தாழ்வரும் பேரொலி செவியில் சார்தலும் 
தேவர்கள் வாழ்த்தொலி கேட்ட செங்கணான் 
யோகம் நீங்கினனென இளவல் ஓங்கினான் 


ஓங்கிய தம்பியை உயிர்வந்துள்ளுற 
வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர் 
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில 
தீங்குள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் 


எழுது குங்குமத் திருவின் ஏந்துகோடு 
உழுத மார்பினான் உருகி உள்ளுறத் 
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாளுறத் 
தொழுத மாருதிக்கு இனையசொல்லுவான் 


முன்னின் தோன்றினோர் இறையின் நீங்கலாது 
என்னின் தோன்றிய துயரின் ஈறுசேர் 
மன்னின் தோன்றினோம் முன்னம் , மாண்டுளோம் 
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் 


அழியுங்கால் தரும் உதவிக் கையனே 
மொழியுங்கால் தரும் உயிரும் முற்றுமோ 
பழியும் காத்து அரும்பகையும் காத்து எமை 
வழியும் காத்து நம் மரபும் காத்தனை 


தாழ்வும் ஈங்கிறைப் பொழுது தக்கதே 
வாழிஎம்பிமேல் அன்பு மாட்டலால் 
ஏழும் வீயும் என்பகர்வது எல்லைவாய் 
ஊழி காணும் நீ உதவினாய் அரோ 


இன்று வீகலாது எவரும் எம்மொடு 
நின்று வாழுமா நெடிது நல்கினாய் 
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ 
என்றும் வாழ்தியால் இனிதென் ஏவலால் 

( மருத்துமலைப்படலம் 99 , 102-104 , 190 --113 ] 


இலங்கையில் வானரர் நெருப்பிட்டுக் கெர்ச்சனை இடுதல் 


எண்ணில கோடிப்பல்படை யாவும் 
மண்ணுறு காவல் திண்மதில் வாயில் 
வெண்ணிற மேகம் மின்னினம் வீசி 
நண்ணின போல்வ தொல் நகர் நாண 


ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி 
மாசறுதானை மர்க்கட வெள்ளம் 
நாசமிவ் ஊருக்கு உண்டென நாளின் 
வீசின வானின் மீன் விழும் என்ன 


பரல்துறு தொல்பருவத்து எரிபற்ற 
நிரல்துறு பல்பறவைக்குலம் நீளம் 
உரற்றின விண்ணின் ஒலித்தெழும் வண்ணம் 
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை 

[ மாயாசீதைப்படலம் 20 , 21 , 24 } 
இந்திரசித்து மாய சீதையை அனுமார் முன கொண்டு வருதல் 
இத்தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை 
கைத்தலை யிற்கொடு காலின் எழுந்தான் 
உய்த்த பெருங்கிரி மேருவின் உப்பால் 
வைத்து நெடுந்தகை மாருதி வந்தான் 


சானகி யாம்வகை கொண்டு சமைத்த 
மானனை யாளை வடிக்குழல் பற்றா 
ஊனகு வாளொரு கைக்கொடு உருத்தான் 
அனவன் இன்னன சொற்கள் அறைந்தான் 


வந்திவள் காரணமாக மலைந்தீர் 
எந்தை இகழ்ந்தனன் யானவள் ஆவி 
சிந்துவென் என்று செறுத்துரை செய்தான் 
அந்தமில் மாருதி அஞ்சி அயர்ந்தான்  


யாதும் இனிச்சொல் இல் என எண்ணா 
நீதி உரைப்பது நேர் என ஓரா 
கோதில் குலத்தொரு நீகுணம் மிக்காய் 
மாதை ஒறுத்தல் வசைத்திற மன்றோ 


போமின் அடாவினை போயது போலாம் 
ஆமெனில் இன்னும் அயோத்தியை அண்மி 
காமின் அது இன்று கனல் எரியாக 
வேமது செய்துஇனி மீள்குவென் என்றான் 


ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று 
ஏழை வழங்குறு சொல்லின் ரங்கான் 
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் 
நீளுறு சேனையினோடு நிமிர்ந்தான் 

( மாயாசீதைப் படலம் 26 , 29 , 30 , 32 , 37 , 40 ] 


இந்திரசித்து வெட்டின சீதைக்காக அனுமார் புலம்பல் 


தென்திசை நின்று வடாது திசைக்கண் 
பொன் திகழ் புட்பகம் மேற்கொடு போனான் 
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் 
வென்றி நெடுங்கிரி போலவிழுந்தான் 


அன்னமே என்னும் பெண்ணின் அருங்குலக் கலமே என்னும் 
என்னமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் 
சின்னமே செய்யக்கண்டும் தீவினை நெஞ்சம்ஆவி 
பின்னமே ஆயதில்லை என்னும் போர் ஆற்றல் பேர்ந்தான் 


கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதனாகிச் 
சொல்விக்க வந்துபோனேன் நோவுறு துயர்செய்தாரை 
வெல்விக்க வந்துநின்னை மீட்பிக்க அன்று வெய்தின் 
கொல்விக்க வந்தேன் உன்னைக் கொடும்பழி கூட்டிக் கொண்டேன் 


வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன 
செஞ்சிலை உரவோன் தேடித்திரிகின்றான் உள்ளந்தேற 
அஞ்சொலாள் இருந்தாள் கண்டேன் என்றயான் அரக்கன் கொல்ல 
துஞ்சினாள் என்று சொல்லத் தோன்றினேன் தோற்றம் ஈதால் 

அருங்கடல் கடந்திவ்வூரை அள்ளெரி மடுத்து வெள்ளக் 
கருங்கடல் கட்டிமேருக் கடந்து ஒருமருந்து காட்டிக் 
குரங்கினி உன்னோ டொப்பார் இல் எனக்களிப்புக் கொண்டேன் 
பெருங்கடல் கோட்டம் தேய்ந்ததாயது என் அடிமைப் பெற்றி 

( மாயாசீதைப் படலம் 41 , 43 , 48-50 ] 


சீதைக்காக இரங்குகிற ஸ்ரீராமனர லட்சுமணர் முடுக்குதல் 


சிங்கஏறனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான் 
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் 
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடும் புரத்தைப் போரப்பா 
வெங்கண்ணீர் அருவீசோர மால்வரை என்னவீழ்ந்தான் 


வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்பு கென்னா 
தாழ்ந்திரு தடக்கைபற்றி எடுக்கவும் தரிக்கிலா தான் 
ஆழ்ந்தெழு துன்பத்தாளை அரக்கனின் றயில்கொள் வாளால் 
போழ்ந்தனன் என்னக்கூறிப் புரண்டனன் பொருமுகின்றான் 


சித்திரத் தன்மையுற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் 
மித்திரர் வதனம் நோக்கான் ளையவன் வினவப் பேசான் 
பித்தரும் இறைபொறாத பேரபிமானம் என்னும் 
சத்திரம் மார்பில் தைக்க உயிர் இலன் என்னச் சாய்ந்தான் 


நாயகன் தன்மை கண்டும் தமக்குற்ற நாணம் பார்த்தும் 
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும் 
வாயொடு மனமும் கண்ணும் யாக்னகயும் உயர்ந்து சாம்பித் 
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தனானான் 


ஊற்றுவார் கண்ணீரோடும் உள்ளழிந்துற்ற தெண்ணி 
ஆற்றுவா னல்லனாகி அயர்கின் றான் எனினும் ஐயன் 
மாற்றுவான் அல்லன் பானம் உயிர்உக வருந்தும் என்னா 
தேற்றுவான் நினைந்து தம்பி இவையிவை செப்பலுற்றான்  


முடியும்நாள் தா னேவந்து முற்றினால் துன்பமுந்நீர் 
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கிது பழியிற்றாமால் 
குடியும்மா சுண்டதென்னின் அறத்தொடும் உலகைக் கொன்று 
கடியுமாறன்றிச் சோர்ந்து கழிதியோ கருத்திலார் போல் 


புக்கிவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிப்படுத்து அரக்கன் போன 
திக்கெலாம் சுட்டுவானோர் உலகெலாம் தீய்த்துத் தீர்க்கத் 
தக்கநாம் கண்ணீர் ஆற்றித்தலை சுமந்திருகை நாற்றித் 
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றுமன்றே 


அங்குமிவ் அறமே நோக்கி அரசிழந் தடவி எய்தி 
மங்கையை வஞ்சன்பற்ற வரம்பழியாது வாழ்தோம் 
இங்கும் இத்துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கிப் 
பொங்குவன் தளையிற்பூட்டி ஆட்செய்யப் புகல்வரன்றே 


மன்றலம் கோதையாளைத் தம்மெதிர் கொணர்ந்து வாளின் 
கொன்றவர் தம்மைக் கொல்லும் கோளிலர் நாணங்கூரப் 
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் 
அன்றிது கருமம்என்நீ அயர்கின்ற தறிவிலார்போல் 

( மாயாசீதைப்படலம் 54 , 55 , 58 , 59. 62 , 63 , 67 , 68 , 69 ] 


ராமரை அனுமார் முடுக்குதல் 


[ இப்பகுதி கம்பராமாயணத்தில் சுக்கிரீவன் கூற்றாக அமைந்துள்ளது ] 


அனையன இளவல் கூற அருக்கன்சேய் அயர்கின்றான் ஓர் 
கனவுகண்டனனே என்னக்கதுமென எழுந்து காணும் 
வினையினி உண்டோவல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன 
மனையுறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்மின் என்றான் 

இலங்கையை இடந்து வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப் 
பொலங்குழை மகளிரோடும் பால்நுகர் புதல்வரோடும் 
குலங்களோ டடங்கக்கொன்று கொடுந்தொழில் குறித்து நம்மேல் 
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் 

அறங்கெடச் செய்துமென்றே அமைந்தனம் ஆகின் ஐய 
புறங்கிடந் துழைப்பதென் இப்பொழுதிறை புவனம்மூன்றும் 
கறங்கெனத் திரிந்துதேவர் குலங்களைக் கட்டும் என்னா 
மறங்கிளர் வயிரத்தோளான் இலங்கைமேல் வாவலுற்றாலை 

( மாயாசீதைப்படலம் 70-72 ] 
சீதையின் இருப்பைக் கண்டுவந்து விபீஷணர் ஸ்ரீராமருக்கு அறிவித்தல் 


ஏறுதும் என்னாவீரர் எழுதலும் இறைஞ்சிஈண்டுக் 
கூறுவது உளது துன்பம் கோளுறக் குலுங்கிஉள்ளம் 
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் 
ஆறினென் அதனைஐய மாயம் என்ற யிர்க்கின்றேனால் 


பத்தினி தன்னைத் தீண்டிப் பாதகன் படுத்தபோது 
முத்திறத் துலகும் வெந்து சாம்பராய் முடியுமன்றே 
அத்திறம் ஆனதேனும் அயோத்திமேல் போனவார்த்தை 
சித்திரம் இதனையெல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் 

இமையிடையாக யான் போய் ஏந்திழை இருக்கை எய்தி 
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந் தறைந்த பின்னர் 
சமைவது செய்வதென்று வீடணன் விளம்பத் தக்கது 
அமைக என்றவனும் சொன்னான் அந்தரத்தவனும் சென்றான் 


வண்டினது உருவங் கொண்டான் மானவன் மனத்திற் போனான் 
தண்டலை இருக்கை தன்னைப் பொருக்கெனச் சார்ந்துதானே 
கண்டனன் என்பமன்னோ கண்களால் கருத்தில் ஆவி 
உண்டிலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை 

வஞ்சனை என்பதுன்னி வானுயர் உவகை வைகும் 
நெஞ்சினன் ஆகியுள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான் 
வெஞ்சிலை மைந்தன் போனாள் நிகும்பலை வேள்வியானென்று 
எஞ்சலில் அரக்கர் சேனை எழுந்தெழுந் தேகக்கண்டான் 


இருந்தனள் தேவியானே எதிர்ந்தனென் கண்களால்நம் 
அருந்ததிக் கற்பினாளுக் கழிவுண்டோ அரக்கன் நம்மை 
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்குபுக்கான் 
முருங்கழல் வேள்விமுற்றி முதலற முடிக்கமூண்டான்  


என்றலும் உலகம் ஏழும் ஏழுமாத்தீவும் எல்லை 
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங் கெழுந் தார்க்கும் ஓதை 
அன்றென ஆகும் என்ன அமரரும் உயிர்க்க ஆர்த்துக் 
குன்றினம் இதயத்துள்ளி ஆடின குரங்கின் கூட்டம் 

மாயாசீதைப் படலம் 87-90 , 92 , 94 , 951 


ஸ்ரீராமர் லட்சுமணருக்கு யுத்த தந்திரம் கற்பித்தல் 

வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன் தன்னை மெய்யோடு 
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி ஐய 
தீர்வது பொருளோ துன்பம் நீஉளை தெய்வம்உண்டு 
மாருதி உளன் நாம் செய்ததவம் உண்டுவலியும் உண்டால் 


என்றலும் இறைஞ்சி யாகம்முடியுமேல் யாரும் வெல்லார் 
வென்றியும் அரக்கர் மேற்றே விடையருள் இளவலோடும் 
சென்றவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பேன் என்றான் 
நன்றது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் 


தம்பியைத் தழுவி ஐயன் தாமரைத் தவிசின் மேலான் 
வெம்படை தொடுக்குமாயின் விலக்கும் அது வன்றிவீர 
அம்புநீ துரப்பாயல்லை அனையது துரந்தகாலை 
உம்பரும் உலகும் எல்லாம்விளியும் அஃது ஒழிதி என்றான் 


முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் மூனின்ன்று 
ஒக்கவே விடுமேவிட்டால் அவற்றையும் அவற்றின்ஓயத் 
தக்கவாறியற்றி மற்றுன்சிலை வலித்தருக்கினாலே 
புக்கவன் ஆவி கொண்டு போதுதிபுகழின் மிக்கோய் 


வல்லன மாயவிஞ்சை வகுத்தன அறிந்துமாளக் 
கல்லுதி தருமம் என்னும் கண்ணகன் கருத்தைக்கண்டு 
பல்பெரும் போரும் செய்து வருந்தின அற்றம்பார்த்துக் 
கொல்லுதி அமரர் தங்கள் கூற்றினைக் கூற்றம் ஒப்பாய் 


இச்சிலை இயற்கைமேனாள் தமிழ்முனி இயம்பிற்றெல்லாம் 
அச்செனக் கேட்டாய் அன்றே ஆயிரமமௌலி அண்ணல் 
மெய்ச்சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டுப்பெற்ற 
கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் 


ஆணி இவ் வுலகுக்கான ஆழியான் புறத்தில் ஆர்த்த 
தூணியும் கொடுத்து மற்றும்உறுதிகள் பலவும் சொல்லித் 
தாணுவின் தோற்றத்தானைத் தழுவினன் தழுவலோடும் 
சேணுயர் விசும்பில் தேவர் தீர்ந்ததெம் சிறுமை என்றார் 

( நிகும்பலையாகப்படலம் - 5 , 9 , 10 ] 


இந்திரசித்தை அனுமார் பழித்தல் 


சேனாபதியே முதல் சேவகர் தாம் 
ஆனார் நிமிர்கொள்ளி கொள் அங்கையினார் 
கானார் நெறியும் மலையும் கழியாப் 
போனார்கள் நிகும்பலை புக்கனரால் 


வென்றிச்சிலை வீரனை வீடணன் நீ 
நின்றிக் கடைதாழுதல் நீதியதோ 
சென்றிக் கடிவேள்வி சிதைத்திலையேல் 
என்றிக் கடல்வெல்குதும் யாம் எனலும் 


வாரணம் அனையவன் துணிப்ப வான்படர் 
தாரணி முடிப்பெரும் தலைகள் தாக்கலால் 
ஆரண மந்திரம் அமைய ஓதிய 
பூரண மணிக்குடம் உடைந்து போயதால் 


ஓமவெங் கனலவிந்து உழைக்கலப்பையும் 
காமர்வண் தகுப்பையும் பிறவும் கட்டற 
வாமமந்திரத் தொழில்மறந்து மற்றவன் 
தூமவெங் கனலெனப் பொலிந்து தோன்றினன் 



திரைக்கடல் பெரும்படை இரிந்துசிந்திட 
மரத்தினின் புடைத்தடர்த்து உகுத்தமாருதி 
அரக்கனுக் கணித்தென அணுகி அன்னவன் 
வரக்கதம் சிறப்பன மாற்றங் கூறுவாள் 
 


தடந்திரைப் பாவையன்ன சக்கரயூகம் புக்குக் 
ந்தது கண்டதுண்டோ நாணொலி கேட்டிலோமே 
தொடர்ந்து போய் அயோத்தி தன்னைக் கிளையொடும் துணிய நூறி 
நடந்த தெப்பொழுது வேள்விமுடிந்ததே கருமம் நன்றே 


ஏந்தகல் ஞாலமெல்லாம் இனிதுறைந் தியற்கை தாங்கும் 
பாந்தளின் பெரியதிண்தோள் பரதனைப் பழியின் தீர்ந்த 
வேந்தனைக் கண்டு நீரின் வில்வலம் காட்டிமீண்டு 
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமையன்றே 


தீயொத்த வயிரவாளி உடலுறச் சிவந்தசோரி 
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் 
பாயப்போய் இலங்கைபுக்கு வஞ்சனை பரப்பச்செய்யும் 
மாயப்போ ராற்றலெல்லாம் இன்றொடு மாளு மன்றே 


வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் 
பரங்கொள் வானவரின் தெய்வப்படைக்கலம் படைத்தவாறும் 
உரங்களும் நின்றதன்றே உம்மை நாம் உயிரினோடும் 
சிரங்களைத் துணித்தும் என்னக்கண்டது திறம்பினோமோ 


கொல்வென் என்றுன்னைத் தானே குறித்தொரு சூளும் கொண்ட 
வில்லிவந் தருகுசார்ந்துன் சேனையை முழுதும்வீட்டி 
வல்லை நீ பொருவாய் என்றுவிளிக்கின்றான் வரிவில்நாணின் 
ஒல்லொலி ஐயசெய்யும் ஓமத்துக்கு உறுப்பொன்றாமோ 

நிகும்பலையாகப்படலம் 15 , 27 , 45 , 57 , 69 , 70 , 71 , 73 , 75,77 ] 


இத்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் மூன்றாம் முறையுத்தம் 


நின்மின்கள் நின்மின் என்னா நெருப்பெழ விழித்துநீண்ட 
மின் மின்கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணிவீரப் 
பொன்மின்கொள் காதைகையில் பூட்டினான் பொறுத்தான் போர்வில் 
எல்மின்கொள் வயிரத்திண்தேர் ஏறினான் எறிந்தான் நாணி 


படைப்பெருந் தலைவர் நின்றார் அல்லவர் இறுதிபற்றும் 
அடைப்பருங்காலக் காற்றால் ஆற்றலது ஆகிக்கீறிப் 
புடைத்திரிந் தோடும் வேலைப் புனல் என இரியலுற்றார் 
கிடைத்தபேர் அனுமன் ஆண்டோர் நெடுங்கிரி கிழித்துக்கொண்டான் 


 

மனிதருக் கடிமையாய்நீ இராவணன் செல்வம் ஆள்வாய் 
இனிஉனக்கென்னோ மானம் எங்களோ டடங்கிற்றன்றே 


சொல்வித்தும் பழித்தும் நுங்கைமூக்கினைத் துணிந்தோராலே 
எல்வித்தும் படைக்கைஉங்கள் தமையனை எங்களோடும் 
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் 
வெல்வித்தும் வாழும்வாழ்வின் வெறுமையே வீழுமி தன்றோ 


ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர்வந்தெய்தும் 
மானிடர் இலங்கை வேந்தைக் கொல்வரே நீயும் அன்னான் 
தானுடைச் செல்வம் துய்க்கத்தகுதியே சரத்தினோடும் 
வானிடைப் புகுதியன்றே யான்பழி மறுக்கில் என்றான் 

[ நிகும்பலையாகப்படலம் 162 , 163 , 165 , 167 , 168 , 170 ] 


விபீஷணர் இந்திரசித்துக்கு எதிர்மொழிதல் 


அறந்துணை யாவதல்லால் அருநரகமைய நல்கும் 
மறந்துணை யாகமாயாப் பழியொடும் வாழமாட்டேன் 
துறந்திலேன் மெய்ம்மை , பொய்ம்மை உம்மையே துறப்பதல்லால் 
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்தபோதே 


உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் 
சொண்டிலென் மாயவஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் 
கண்டிலர் என்பால்உண்டே நீயிரும் காண்டிர் அன்றே 
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்றாமோ 


மூவகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த 
தேவர் தம் தேவன்தேவி கற்பினிற் சிறந்துளாளை 
நோவன செய்தல் தீதென்று உரைப்பநின் தாதைசீறிப் 
போஎன உரைக்கப் போந்தேன் நரகத்தில் பொருந்து வேனோ 


அறத்தினைப் பாவம்வெல்லாது என்னுமது அறிந்தஞானத் 
திறத்தினும் உறும் என்றெண்ணித் தேவர்க்கும் தேவைச்சேர்ந்தேன் 
புறத்தினில் புகழேயாக பழியொடும் புணர்கபோகச் 
சிறப்பினிப் பெறுகதீர்க என்றனன் சீற்றம் இல்லான் 

[ நிகும்பலையாகப்படலம் 172 , 173 , 174 , 176 ] 


இந்திரசித்து தகப்பனுடன் முறைப்படுதல் 

பெறும்சிறப்பெல்லாம் என்கைப் பிறை முகப்பகழி பெற்றால் 
இறும் சிறப்பல்லால் அப்பால் எங்கினிப் போவது என்னாத் 
தெறுஞ்சிறைக்கலுழன் அன்ன ஒருகணை தெரிந்து செம்பொன் 
உறுஞ்சுடர்க் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின்வெய்யோன் 

அக்கணை அசனிஎன்ன அனல் என்ன ஆலப் உண்ட 
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி 
இக்கணத்திற்றான் இற்றான் என்கின்ற இமையோர் நாண 
கைக்கணை ஒன்றால்வள்ளல் அக்கணை கண்டம் கண்டான் 


கோலொன்று துணிதலோடும் கூற்றுக்குக் கூற்றம் அனைான் 
வேலொன்று வாங்கியிட்டான் வெயிலொன்று விழுவதென்ன 
நாலொன்றும் மூன்றுமான புவனங்கள் நீடுங்கலோடும் 
தூலொன்று வரிவிலானும் அதனையும் நுறுக்கிவீழ்த்தான் 


வேல்கொடு நம்மேல் எய்தான் என்றொரு வெகுளிபொங்கக் 
கால்கொடு காலின்கூடிக் கைதொடர் கனகத்தண்டால் 
கோல்கொளும் ஒருவனோடும் கொடித்தடத் தேரில் பூண்ட 
பால்கொளும் புரவியெல்லாம் படுத்தினாள் படியின் மேலே 


ஆர்த்தவன் அனையபோதின் அழிவிலாத் தேர்கொண்டன்றிப் 
போர்த்தொழில் புரியலாகாது என்பதோர் யொருவின் மன்னிப் 
பார்த்தவர் இமையாமுன்னம் விசும்பிடைப் படர்ந்தான் என்னும் 
வார்த்தையை நிறுத்திப் போனான் இராவணன் மருங்கு சென்றாள் 

[ நிகும்பலையாகப் படலம் 177- 180 , 182 ] 


விண்ணிடைக் காத்தான் என்ன வஞ்சனை விளைக்கும் என்பார் 
கண்ணிடைக் கலக்கநோக்கி ஐயுறவு வழக்குங்காலை 
புண்ணிடை யாக்கைச் செந்நர் இழிதரப் புக்கு நின்ற 
எண்ணிடை மகனைநோக்கி இராவணின் இனைய சொன்னான் 


தொடங்கிய வேள்விமுற்றுப் பெற்றிலாத் தொழில் நின்தோள் மேல் 
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது கழிவில்யாக்கை 
நடுங்கினை போலக்சாலத் தளர்ந்தனை கலுழன் நண்ணப் 
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றதுபகர்தி என்றான் 


சூழ்வினை மாயமெல்லாம் . உம்பியே துடைக்கச்சுற்றி 
வேள்வியைச் சிதைய நூறி வெகுளியாய் எழுந்துவீங்கி 
ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த்தொழில் தொடங்கி ஆர்க்கும் 
தாழ்விலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்துவிட்டான் 


நிலம்செய்து விசும்பும் செய்து நெடியமால் படைநின்றானை 
வலம் செய்து போயிற்றென்றால் மற்றினி வலியதுண்டோ 
குலம் செய்த பாவத்தாலே கொடும்பகை தேடிக்கொண்டாய் 
சலஞ்செயின உலகம்மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே 


முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்மேம் 
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் 
கிட்டியபோதும் காத்தான் இன்னமும் கிளரவல்லான் 
சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான் 


ஆதலால் அஞ்சினேனென்று அருளலை ஆசைதான் அச் 
சீதைபால் விடுதியா பின் அனையவர் சீற்றம் தீர்வர் 
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல் 
காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கிவென்றான் 

( இந்திரசித்துவதைப்படலம் 1-6) 


இந்திரசித்தை ராவணன் உதாசனித்தல் 


இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்றிள நிலவு தோன்றப் 
புயங்களும் குலுங்கநக்குப் போர்க்கினி ஒழிநீபோத 
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய 
சயங்கொடு தருவென் இன்றே மனிதரைத் தனுஒன்றாலே 


முன்னையோர் இறந்தோரெல்லாம் இப்பகைமுடிப்பர் என்றும் 
பின்னையோர் நின்றோரெல்லாம் வென்றவர்பெயர் வன்றும் 
உன்னைநீ அவரைவென்று தருதி என்றுணர்ந்தும் அன்றால் 
என்னையே நோக்கியான் இந்நெடும்பகை தேடிக்கொண்டேன்  


பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகெலாம் பெயரப் பேராக் 
காதை என் புகழினோடுநிவை பெற அமரர்காண 
மீதெழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவதல்லால் 
சீதையை விடுவதுண்டோ இருபது திரள் தோள்உண்டால் 


வென்றிலென் என்றபோதும் வேதம்உள்ளளவும் யானும் 
நின்றுளென் அன்றோமற்று இவ் இராமன்பேர் நிற்குமாயின் 
பொன்றுதல் ஒருகாலத்துத் தவிருமோபொது மைத்தன்றோ 
இன்றுளார் நாளைமாள்வார் புகழுக்கும் இறுதிஉண்டோ 


விட்டனென் சீதை தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி 
கட்டுவதல்லால் என்னையானெனக் கருதுவாரோ 
பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன்யான் 
எட்டினோ டிரண்டுமான திசைகளை எறிந்து கொண்டேன் 


சொல்லி என்பலவும் நீநின் இருக்கையைத் தொடர்ந்து தோளில் 
புல்லிய பகழிவாங்கிப் போர்த்தொழில் சிரமம்போக்கி 
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ்வாய் 
வல்லியம் முனிந்தாலன்னான் வருகதேர் தருக என்றான் 

[ இந்திர சித்து வதைப் படலம் 7- 12 ] 


நாலாம் முறை யுத்தத்தில் இந்திரசித்தன் வதை 


எழுந்தவன் தன்னை நோக்கி இணையடி இறைஞ்சி எந்தாய் 
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியைப் பொறுத்தி யான்போய்க் 
கழிந்தனென் என்றபின்னர் நல்லவாகாண்டி என்னா 
மொழிந்து தன் தெய்வத்தேர் மேல்ஏறினான் முடியலுற்றான் 


இலங்கையின் நிருதரெல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி 
விலங்கலம் தோளாய் நின்னைப் பிரிகலம் விளிதும் என்று 
வலங்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனைக் காமின்யாதும் 
கலங்கலிர் இன்றே சென்று மனிதரைக் கடப்பென் என்றான் 


ஆர்த்தது நிருதர் தம் அனிகமுடன் அமரரும் வெருவினர் கவிகுலமும் 
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடுகணை சிதறினன் அடுதொழிலோன் 
தீர்த்தனும் அவனெதிர் முடுகி நெடும் திசை செவி டெதிர்தர விசைகெழுதிண் 
போர்த்தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகையனல் பொதுளியதால் 


வில்லினின் வலிதர அரிதெனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில்விரைவில் 
செல்என மிடல் கொடு கடவினன் மற்று அதுதிசை முகன்மகன் உதவியதால் 
எல்லினும் வெளிபட வருவதுகண்டு இளையவன் எழுவகை முனிவர்கள் தம் 
சொல்லினும் வலியதோர் சுடுகணையால் நடுவிரு துணிபட உரறினனால் 


தேர்உளதெனின் இவன்வலி தொலையான் எனுமது தெரிவுற உணர்ந்துறுவான் 
போர்உறு புரவிகள் படுகிலவால் புணைபிணி துணிகில பொருகணையால் 
சீரிது பெரிதிதன் நிலைமை எனத் தெரிபவன் ஒருசுடு தெறுகணையால் 
சாரதிமலை புரை தலையை நெடுந் தரையிடை இடுதலும் முறைதிரிய 


தேரினைக் கடாவிவானில் செல்லினும் செல்லும் செய்யும் 
போரினைக் கடந்துமாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அக் 
காரினைக் கடந்துவஞ்சம் கருதினும் கருதும் காண்டி 
வீரமெய் பகலினல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் 


பச்சைவெம் புரவிவீயாப் பாலியச் சில்லிபாரில் 
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் 
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரமிட்ட 
அச்சினோ டாணிவெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி  


சிலையறாதெனினும் மற்றத் திண்ணியோன் திரண்டதோளாம் 
மலையறா தொழியாதென்னா வரிசிலை ஒன்றுவாங்கிக் 
கலையறாத் திங்கள் அன்ன வாளியால் கையைக்கொய்தான் 
விலையறா மணிப்பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ 


காற்றென உருமேறென்னக் கனலெனக் கடைநாள் உற்ற 
கூற்றம் ஓர்சூலம் கொண்டு குறுகியது என்னக் கொல்வான் 
தோற்றினான் அதனைக்காணா இனித்தலை துணிக்கும்காலம் 
ஏற்றதென்றயோத்தி வேந்தற்கிளையவன் இதனைச் செய்தான் 


நேமியும் குளிசவேலும் நெற்றியும் நெருப்புக்கண்ணான் 
நாமவேல்தானும் மற்றைநான் முகன்படையும் நாணத் 
தீமுகம் கதுவ ஓடிச்சென்று அவன் சிரத்தைத் தள்ளிப் 
பூமழை வானோர் சிந்தப் பொலிந்தது அப்பகழிப்புத்தேன் 


விண் தலத் திலங்கு திங்கள் இரண்டொடு மின்னும் வீசும் 
குண்டலத் துணைகளோடும் கொந்தளக்குஞ்சி செங்கேழ்ச் 
சண்டவெங் கதிரின்கற்றைத் தழையொடும் இரவிதான் அம் 
மண்டலம் வீழ்ந்ததென்ன வீழ்ந்தது தலையும் மண் மேல் 

( இந்திரசித்துவதைப்படலம் 13 , 15 , 20 , 27 , 39 , 37 , 43 , 50 , 52 , 54 ) 
4 


இந்திரசித்துவதை ராவணன் கேட்ட இடத்திலே புலப் பல் 


அறந்தலை நின்றார்க்கில்லை அழிவுஎனும் அறிஞர்வார்த்தை 
சிறந்தது சரங்கள் பாயச்சிந்திய சிரத்தவாகிப் 
பறந்தலை யதனில் மற்று அப்பாதக அரக்கன் கொல்ல 
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த 


ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் செந்தலையை அங்கை 
தூக்கினன் உள்ளங்கூர்ந்த வாலிசேய் தூசி செல்ல 
மேக்குயர்ந் தமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் 
பூக்கிளர் பந்தர் நீழல் அனுமன்மேல் இளவல்போனான் 


விழுந்தழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க 
எழுந்தெதிர் வந்தவீரன் இணையடிமுன்னர் இட்டான் 
கொழுந்தெழும் செக்கர்க் கற்றைவெயில் விட எயிற்றின் கூட்டம் 
அழுந்துற மடித்தயேழ் வாய்த்தலை அடியுறை ஒன்றாக 


ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் 
சேடனால் அன்று வேறோர் தெய்வத்தின் சிறப்புமன்று 
வீடணன் தந்தவெற்றியீது என விளம்பி மெய்ம்மை 
ஏடவிழ் அலங்கல்மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் 

( இந்திரசித்துவதைப்படலம் 58 , 59 , 65. 69 ) 


பல்லும் வாயும் மனமும் தம்பாதமும் 
நல்லுயிர்ப் பொறையோடு நடுங்குவார் 
இல்லையாயினன் உன் மகன் இன்று எனச் 
சொல்லினார் பயம்சுற்ற துளங்குவார் 


சுடர்க்கொழும்புனக தீவிழி தூண்டிட 
தடற்று வாளுருவித்தரு தூதரை 
மிடற்று வீசலுறா விழுந்தானரோ 
கடற்பெருந் திரைபோல் கரம்சோரவே 


திருகு வெஞ்சினத் தீநிகர் சீற்றமும் 
பெருகுகாதலும் துன்பும் பிறழ்ந்திட 
இருபது என்னும் எரிபுரை கண்களும் 
உருகு செம்பென ஓடியது ஊற்றுநீர் 


மைந்தவோ எனும் மாமகனே எனும் 
எந்தையோ எனும் என்னுயிரே எனும் 
உந்தினேன் உனைநானுளனே எனும் 
வெந்தபுண்ணிடை வேல்பட்ட வெம்மையான் 


ஐயனே என்னும் ஓர் தலை யான்இனம் 
செய்வெனே அரசெனும் அங்குஓர் தலை 
கையனேன் உனைக்காட்டிக் கொடுத்தநான் 
உய்வெனே என்றுரைக்கு மங் கோர் தலை 


எழுவின் கோலம் எழுதிய தோள்களால் 
கழுவிக் கொள் கலையோ எனும்ஓர் தலை 
உழுவைப் போத்தை உழைஉயிர் உண்பதே 
செழுவில் சேவகனே எனும் ஓர் தலை 


நீலங்காட்டிய கண்டனும் நேமியும் 
ஏலும் காட்டின் எறிந்த படைக்கெலாம் 
தோலும் காட்டித் துரந்தனை மீண்டும் நின் 
ஓலம் காட்டிலையோ எனும்ஓர்தலை 


துஞ்சும்போது துணைபுரிந்தேன் எனும் 
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் 
நெஞ்சுநோவ நெடுந்தனியே கிடந்து 
அஞ்சினேன் என்று அங்கரற்றும் ஓர்தலை 


காகம் ஆடுகளத்திடைக் காண்பெனோ 
பாகசாதனன் மௌலியொடும் பறித்து 
ஓகைமாதவர் உச்சியில் வைத்தநின் 
வாகைநாண் மலர் என்னும் மற்றோர்தலை 


சேலியற்கண் இயக்கர் தம் தேவிமார் 
மேலினித் தவிர்நிற்பர் கொல்வீரநின் 
கோலவிற் குரல் கேட்டுக் குலுங்கித்தம் 
தாலியைத் தொடல் எனும் மற்றுமோர்தலை 


கூற்றம் உன்னெதிர்வந்து உயிர்கொள்வதோர் 
ஊற்றந்தான் உடைத்தன்று எனையும் ஒளித்து 
ஏற்ற எவ்வுல குற்றனை எல்லையில் 
ஆற்றலாய் என்றுரைக்கும் அங்கோர்தலை 

( இராவணன் சோகப்படலம் 3 , 5 , 8 , 10 , 16 - 22 ] 


இந்திரசித்துக்காக ராவணன் களத்திலே புலம்பல் 
 
ன்னவா றழைத்து ஏங்குகின்றான் எழுந்து 
உன்னும் மாத்திரத்து ஓடினான் ஊழிநாள் 
பொன்னின் வானன்ன போர்க்களம் புக்கனன் 
நன்மகன் தனது ஆக்கையை நாடுவான் 


மெய்கிடந்த விழிவழி நீர் உக 
நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான் 
மொய்கிடந்த சிலையொடு மூரிமாக் 
கைகிடந்தது கண்டனன் கண்களால்


கைகண்டான் பின்கருங்கடல் கண்டென 
மெய்கண்டான் அதன்மேல் விழுந்தானரோ 
பெய்கண்தாரை அருவிப் பெருந்திரை 
மொய்கண்டார் திரைவேலையை மூடவே 


அப்புமாரி அழுந்திய மார்பைத்தன் 
அப்புமாரி அழுதிழி யாக்கையான் 
அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால் 
அப்புமான் உற்றது ஆர்உற்றாரரோ 


கண்டிலன் தலை காந்தி அம்மானிடன் 
கொண்டிறந்தனன் என்பது கொண்டவன் 
புண்திறந்தன நெஞ்சன் பொருமலன் 
விண்திறந்திட விம்மி அரற்றினான் 

நிலையின் மாதிரத்து நின்றயானையும் நெற்றிக்கண்ணன் 
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறுவில்மைந்தன் 
தலையும் ஆருயிரும் கொண்டார் அவர் உடலொடுந்தங்கப் 
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் 

சினத்தொடும் கொற்றம்முற்ற இந்திரன் செல்வம்மேவ 
நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால் 
எனக்கு நீ செய்யத்தக்க கடனெலாம் ஏங்கி ஏங்கி 
உனக்கு நான் செய்வதானேன் என்னின்யார் உலகத்துள்ளார் 

( இராவணன் சோகப்படலம் 23 , 27 , 30 , 31 , 34 , 35 391 


இந்திரசித்துக்காக மண்டோதரி புலம்பல் 

மாதிரங் கடந்த திண்தோள் மைந்தன் தன் மகுடச்சென்னி 
போதலைப் புரிந்தயாக்கை பொறுத்தனன் புகுதக்கண்டார் 
ஓதநீர் வேலையன்ன கண்களால் உகுத்தவெள்ளக் 
காதல் நீர் ஓடி ஆடல் கருங்கடல் மடுத்ததன்றே 


சருங்குழல் கற்றைப்பாரம் கால் தொடக் கமலப்பூவால் 
குரும்பையைப் புடைக்கின்றாள் போல்கைகளால் முலைமேல் கொட்டி 
அருங்கலச் சும்மைதாங்க அகலல்குல் அன்றிச்சற்றே 
மருங்குலும் உண்டுண்டென்ன மயன் மகள் மறுகிவந்தாள் 


மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் ? வானமேரு 


தலையின் மேல் சுமந்தகையள் தழலின் மேல் மிதிக்கின்றாள் போல் 
நிலையின் மேல் மிதிக்கும் தாளன்ஏக்கத்தால் நிறைந்தநெஞ்சன் 
கொலையின்மேல் குறித்தவேடன் கூர்ங்கணை உயிரைக்கொள்ள 
மலையின்மேல் மயில்வீழ்ந்தென்ன மைந்தன் மேல் மறுகிவீழ்ந்தான் 

உயிர்த்திலள் உணர்வுமில்லள் உயிரிலள் கொல்லோ என்னப் 
பெயர்திலள் யாக்கைஒன்றும் பேசலள் அல்லதுயாதும் 
வியர்த்திலள் நெடிதுபோது விம்மலள் மெல்ல மெல்ல 
அயர்த்தனள் அரிதின்தேறி வாய்திறந்த ரற்றலுற்றாள் 

கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தேஉன் 
சிலையினால் அரியைவெல்லக் காண்பதோர் தவம்மூன் செய்தேன் 
தலையிலா ஆக்கை காண எத்தவம் செய்தேன் அந்தோ 
நிலையிலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவிலாதேன் 

ஐயனே அழகனே என் அரும்பெறலமிழ் தே ஆழிக் 
கையனே மழுவனே என்று இவர்வலி கடந்தகால 
மொய்யனே முளரியன்ன நின்முகம் கண்டிலாதேன் 
உய்வெனோ உலகம்மூன்றுக் கொருவனே செருவலோனே 

தாளரிச் சதங்கைஆர்ப்பத் தவழ்கின்ற பருவந்தன்னில் 
கோளரி இரண்டுபற்றிக் கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் 
மூளுறப்பொருத்தி மாடமுன்றிலில் முறையினோடு 
மீளரு விளையாட்டின்னம் காண்பெனோ விதியிலாதேன் 

அம்புலி அம்மவா என்று அழைத்தலும் அவிர்வெண்திங்கள் 
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண 
வம்புறும் மறுவைப்பற்றி முயல் என வாங்கும் வண்ணம் 
எம்பெருங் களிறேகாண ஏசற்றேன் எழிந்திராயோ 

யக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழைமார்கள் 
முயல்கறைப் பயிலாத்திங்கள் முகத்தியர் முழுதும் நின்னை 
மயக்கிய முயக்கந்தன்னால் மலரணை அமளிமீதே 
அயர்த்தனை உறங்குவாயோ அமர்பொரு தலசினாயோ 

முக்கணான் முதலினோரை உலகொரு மூன்றினோடும் 
புக்கபோர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் 
உக்கிட அணுவொன்றோடி உதைத்தது போலும் அம்மா


பஞ்செரி உற்றதென்ன அரக்கர் தம் பரவை எல்லாம் 
வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டதில்லை 
அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்று அமுதாற்செய்த 
நஞ்சினால் இலங்கைவேத்தன் நாளையித் தகையனன்றோ . 

( இராவணன் சோகப்படலம் 42 , 44-5 . ] 


சீதையை வெட்டநடந்த ராவணனை மகோதரன் தடுத்தல் 

என்றழைத்திரங்கி ஏங்கஇத்துயர் நமர்கட்கெல்லாம் 
பொன் தழைத் தனைய அல்குல் சீதையால் புகுந்ததென்ன 
வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் 
கொன்றிழைத் திடுவேன் என்னா ஓடினன் அரக்கர்கோமான் 

ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சிச் 
சூடுகின்றான் என்றஞ்சி மகோதரன் துணிந்தநெஞ்சன் 
மாடு சென்றடியில் வீழ்ந்துவணங்கி நின்புகழ்க்கு மன்னா 
கேடுவந் தடுத்ததென்னா இனையன கிளத்தலுற்றான் 

நீருளதனைழம் சூழ்ந்த நெருப்புளதனையும் நீண்ட 
பாருளதனையும் வானப்பரபுளதனையும் காலின் 
பேருள தனையும் பேராப் பெரும்பழி பிடித்திபோலாம் 
போருளதனையும் வென்று புகழுளதனையும் உள்ளாய் 


தெள்ளருங் காலகேயர் சிரத்தொடும் திசைக்கண்யானை 
வெள்ளிய மருப்புச்சிந்த வீசியவிசயத் தொள்வாள் 
வள்ளயம் மருங்குற் செவ்வாய் மாதர்மேல் வைத்தபோது 
கொள்ளுமே ஆவிதானே நாணத்தால் குறைவதல்லால் 

மங்கையைக் குலத்துளாளை தவத்தியை முனிந்துவாளால் 
சங்கைஒன் றின்றிக்கொன்றால் குலத்துக்கேதக் கான் என்று 
கங்கையம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் 
செங்கையும் கொட்டிஉன்னைச் சிரிப்பரால் சிறியன் என்னா 

நிலத்தியல் பன்றுவானின் நெறியன்று நீதியன்று 
தலத்தியல் பன்றுமேலோர் தருமமேல் அதுவுமன்று 
புலத்தியன் மரபின்வந்து புண்ணியமரபு பூண்டாய் 
வலத்தியல் பன்றுமாயாப் பழிகொள மறுகுவாயோ 

இன்று நீ வளைவாளால் எறிந்தனை இராமன் தன்னை 
வென்று மீண்டிலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ 
பொன்றினள் சீதைஇன்றே புரவலபுதல்வன் தன்னனக் 
கொன்றவர் தம்மைக்கொல்லக் கூசினைகொள்க என்றான் 

[ இராவணன் சோகப்படலம் 54 - 60 ] 


தூதர் ராவணனுக்கு மூலபலத்தை விவரித்தல் 

என்னலும் எடுத்தகூர்வாள் இருநிலத் திட்டுமீண்டு 
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலர்வலிதின் கொண்ட 
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டன்றிச் சேர்கேன் 
தொன்னெறி தயிலத்தோணி வளர்த்துமின் என்னச்சொன்னான் 

[இராவணன் சோகப்படலம் 61 ] 
அத்தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்துத்திக்கும் 
பொத்திய நிருதர்தானை கொணரிய போய தூதர் 
ஒத்தனர் அணுகிவந்து வணங்கினர் இலங்கை உன்ஊர்ப் 
பத்தியின் அடைந்ததானைக் கிடமிலைபணி என் என்றார் 

அப்பொழு தரக்கர்கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்திப் 
பொதுவுற நோக்கலுற்றான் ஒருநெறி போகப்போக 
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலைஏழும் 
கதுமென ஒருங்குநோக்கும் பேதையின் காதல் கொண்டான் 


மாதிரம் ஒன்றின் நின்று மாறொருதிசை மேல்மண்டி 
ஓதநீர் செல்வதன்ன தானையை உணர்வு கூட்ட 
வேதவே தாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்போல் 
தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சொல்வார் 


சாரத்தீவினின் உறைபவர் தானவர் சமைத்த 
யாரத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம் 
மோகத்தில் படமுடித்தவர் மாயையின் முதல்வர் 
மேகத்தைத் தொடும்மெய்யினர் இவர் என விரித்தார் 


குசையின் தீவினின்உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் 
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வானநாட்டுறைவார் 
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்து இங்கிவரால் 
விசையம் தாம் என நிற்பவர் இவர் நெடுவிறலோய் 


இலவத்தீவினில் உறைபவர் இவர்கள் பண்டு இமையாப் 
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப்பொருதார் 
நிலவைச்செஞ் சடைவைத்தவன் வரம்தர நிமிர்ந்தார் 
உலவைக்காடுறு தீயெனவெகுளி பெற்றுடையார் 


அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு 
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வடமேருக் 
குன்றைக் கொண்டுபோய் குரைகடல்இட அறக்குலைந்தோர் 
சென்றித் தன்மையைத் தவிரும்என்று இரந்திடத் தீர்ந்தோர் 


பவளக்குன்றினின் உறைபவர் வெள்ளிபண் பழிந்தோர் 
குவளைக் கண்ணி அங்கு இராக்கதக் கன்னியைக்கூட 
அவளின் தோன்றினர் ஐயிரு கோடியர் நொய்தின் 
திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர் சிலநாள் 


கந்தமாதானம் என்பது இக்கருங் கடற்கப்பால் 
மந்தமாருதம் ஊர்வதோர் கிரி அதில் வாழ்வோர் 
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர் 
இந்தவாளெயிற் றரக்கர் எண் அறிந்திலம் இறைவ 


மலயம் என்பது பொதியமாமலை அதில்மறவோர் 
நிலயம் அன்னது சாகரத்தீவிடை நிற்கும் 
குலையுமிவ் உலகெனக்கொண்டு நான்முகன்கூறி 
உலைவிலீர் இதில்உறையும் என்றிரந்திட உறைந்தார் 


மூக்கரக்கையர் மூவிலைவேலினர் முசுண்டி 
சக்கரத்தினர் சாபத்தர் எனநின்ற தலைவர் 
நக்கரக்கடல் நால்ஒரு மூன்றுக்கும் நாதர் 
புக்கரப் பெரும் தீவிடை உறைபவர் புகழோய் 


மறலியைப் பண்டுதம் பெருந்தாய் சொல்வலியால் 
புறநிலைப் பெரும்சக்கர மால்வரைப் பொருப்பின் 
விறல் கெடச் சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர் 
இறலிஅப் பெருந்தீவிடை உறைபவர் இவர்கள் 

ஒருவரே சென்று அவ்உறுதிறல் குரங்கையும் உரவோர் 
இருவர் என்றவர் தம்மையும் ஒருகையோடு ஏற்றி 
வருவர் மற்றினிப் பகர்வதென் வானவர்க்கரிய 
நிருபர் என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் 

[ படைக்காட்சிப் படலம் 1 , 8-18 , 29 ] 


சமர்த்துப் பேசிய வன்னியை மாலியவான் இடித்தல் 

என்னகை யெறிந்து இடி உரும் ஏறெனநக்கு 
மின்னும் வாளெயிற் றரக்கரை அங்கையால் விலக்கி 
வன்னி என்பவன் புட்கரத்தீவிற்கு மன்னன் 
அன்னதோர் நார்வலியர் என்றே அவர்க் கறைந்தான் 


மற்ற வாசகம் கேட்டலும் மாலியவான்வந்து 
உற்றதன்மையும் மனிதரது ஊற்றமும் உடனாம் 
கொற்ற வானரத்தலைவர் தம் தகைமையும் கூறக் 
கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் 


பரியதோளுடை விராதன் மாரீசனும் பட்டார் 
கரியமால் வரை நிகர் கரதூடணர் கதிர்வேல் 
திரிசிரா அவர்திரைக் கடல் அன பெருஞ்சேனை 
ஒருவிலால் ஒருநாழிகைப் பொழுதினில் உலந்தார் 


ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றேகடல் அனைத்தும் 
ஊழிக்கால் எனக்கடப்பயன் வாலிஎன் போனை 
ஏழுகுன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இந்நாள் 
பாழிமார்பகம் பிய்த்து உயிர்குடித்தது ஓர்பகழி 


இங்குவந்து நீர்வினாயது என் எறி திரைப் பரவை 
அங்குவெந்தில தோசிறிது அறிந்ததும் இலிரோ 
கங்கைசூடிதன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம் 
உங்கள் வான்செவி புகுந்திலதோ முழங்குாதை 


ஆயிரம் பெருவெள்ள முண்டு இலங்கையின் அளவில் 
தீயின் வெய்ய போர் அரக்கர் தம் சேனை அச்சேனை 
போயது அந்தகன் புரம்புக நிறைந்தது போலாம் 
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்தவில் இரண்டால்  


கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும் நுங்கள் கோமான் 
பெற்றமைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும் 
மற்றை வீரரும் இந்திர சித்தொடு மடிந்தார் 
இற்றை நாள் வரை யானும்மற்றி வருமே இருந்தோம் 


மூலத்தானை என்றுண்டு அதுமும்மை நூறமைந்த 
கூலச் சேனையின் வெள்ளம் மற்றதற்கு இன்று குறித்த 
காலச் செய்கைநீர் வந்துளீர் இனித்தக்க கழலோர் 
சீலச் செய்கையும் சேனையின் செய்கையும் தெரிக்கில் 


ஒருகுரங்குவந்து இலங்கையின் மலங்கெரியூட்டித் 
திருகுவெஞ் சினத்து அரக்கனை நிலத்தொடும் தேய்த்துப் 
பொருது தூதுரைத் தேகியது அரக்கியர் புலம்பக் 
கருதுசேனையும் கொன்றுமாக் கடலையும்கடந்து 


கண்டிலிர் கொலாம் கடலினை மலைகொண்டுகட்டி 
மண்டுபோர் செயவானவர் இயற்றிய மார்க்கம் 
உண்டுவெள்ள மோர் எழுபது மருத்தொரு நொடியில் 
கொண்டுவந்தது மேருவுக்கு அப்புறம் குதித்து 

இது இயற்கை ஓர்சீதை என்றிருந்தவத் தியைந்தான் 
பொது இயற்கை தீர்கற்புடைப் பத்தினி பொருட்டால் 
விதிவிளைந்தது அவ்வில்லியர் வெல்க நீர்வெல்க 
முதுமொழிப் பதம்சொல்லினேன் என்றுரை முடித்தான் 

( படைக்காட்சிப் படலம் 38 48 ] 


மூலபலம் கண்டு ஓடின சாம்புவான் முதலோரை மறித்த அங்கதனுக்கு அவன் கூறுதல் 

மூதுணர்ந்த இம் முதுமகன் கூறிய முயற்சி 
சீதை என்பவள் தனைவிட்டு அம்மனிதரைச் சேர்தல் 
ஆதியின் தலை செய்த்தக்கது இனிச்செயல் அழிவால் 
காதல் இந்திர சித்தையும் மாய்வித்தல் கண்டும் 


எனஉரைத்தலும் எழுந்து தம் இரதமேல் ஏறிக் 
கனைதிரைக் கடல்சேனையைக் கலந்ததுகாணா 
வினையம் மற்றிலை மூலமாத்தானையை விரைவோடு 
னையர்முன் செலஏவுக என்று இராவணன் இசைத்தான் 


நீண்ட தோள்களால் வேலையைப் புறஞ்செல நீக்கி 
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கித் 
தூண்டுவான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி 
மூண்டவான் மழைஉரித்துடுத்து உலாவரும் மூர்க்கர் 


உண்ணும் தன்மைய ஊன்முறை தப்பிடின் உடனே 
மண்ணில் நின்றமால் யானையை வாயிடும் பசியார் 
தண்ணின் நீர்முறை தப்பிடின் தடக்கையால் தடவி 
விண்ணின் மேகத்தை வாரிவாய் பிழிந்திடும் விடாயர் 


புற்றினின்று வல்லரவினம் புறப்படப் பொருமி 
இற்றதெம் வலி என விரைந்து இரிதரும் எலிபோல் 
மற்றை வானரப் பெருங்கடல் பயங்கொண்டு மறுகிக் 
கொற்ற வீரரைப் பார்த்திலது இரிந்தது குலைவால் 


அடைத்த போணை அளித்தது நமக்குயிர் அடைய 
உடைத்துப் போதுமால் அவர் தொடராமல் என்றுரைத்த 
புடைத்துச் செல்குவர் விசும்பினும் என்றன போதோன் 
படைத்த திக்கெலாம் பரந்தனர் என்றன பயத்தால் 


கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும்கிளரக் 
காட்டுகின் றனென்காணுதி ஒருகணத்து என்னா 
ஓட்டின் மேற் கொண்டதானையை பயந்துடைத்து உரவோய் - 
மீட்டி கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் 


மீண்டுவே லையின்வடகரை ஆண்டொரு வெற்பின் 
ஈண்டினார்களை என் குறித் திரிவுற்றது என்றான் 
ஆண்டநாயக கண்டிலைபோலும் நீ அவரை 
மாண்டு செய்வது என் என்றுரை கூறினர் மறுப்பார் 


என் அப்பா மற்று இவ் எழுபது வெள்ளமும் ஒருவன் 
தின்னப் போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் 
முன் இப் பாரெலாம் படைத்தவன் நாளெலாம் முறைநின்று 
உன்னிப் பார்த்துநின்று உரையிடப் போதுமோயூகம் 


நாயகன் தலை பத்துளகையும் நாலைந்தென்று 
ஓயும்உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்திங்குற்றார் 
ஆயிரந்தலை அதற்கு இரட்டிக் கையர் ஐயா 
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் 


அனுமன் ஆற்றலும் அரசன தாற்றலும் இருவர் 
தனுவின் ஆற்றலும் தம்முயிர் தாங்கவும் சாலா 
கனியும் காய்களும் உணவுள முழையுளகாக்க 
மனிதர் ஆளின் என் இராக்கதர் ஆளின் என் வையம் 


தாம்உளார் அலரேபுகழ் திருவொடும் தரிப்பார் 
யாம்உளோம் எனின்எம்கிளை உள்ளது எம்பெரும் 
போமின் நீர் என்றுவிடைதரத் தக்கனை புரப்போய் 
சாமின்நீர் என்றல் தருமமன்று என்றனர் தளர்ந்தார் 

( மூலபலவதைப் படலம் 2 , 7 , 9 , 27 , 29 , 34 , 36 , 40 , 41 , 43 , 44 ] 


அங்கதன் சாம்புவனை இடித்தல் 


சாம்பனை வதனம்நோக்கி வாலிசேய் அறிவுசான்றோய் 
பாம்பணை அமலனே மற்று இராமன் என்றெ மக்குப்பண்டே 
ஏம்பல் வந்தெய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ நீ 
ஆம்பலம் பகைஞன் தன்னோடு அயிந்திரம் அமைந்தோன் அன்னாய் 

தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இத்தெருளிலோரை 
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி 
போற்றுவாய் என்றபோது புகழென்னாம் புலமை என்னாம் 
கூற்றின்வாய் உற்றால்வீரம் குறைவரே இறைமை கொண்டார் 


அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம்புவியாண்டும் ஆவி 
துஞ்சுமாறன்றி வாழ ஒண்ணுமோ நாள்மேல் தோன்றின் 
நஞ்சுவாய் இட்டாலன்ன அமுதன்றோ நம்மையம்மா 
தஞ்சம் என்றணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றோ 


தானவரோடும் மற்றைச் சக்கரத் தலைவனோடும் 
வானவர் கடையமாட்டா மறிகடல் கடைந்தவாலி 
ஆனவன் அம்பொன்றாலே உலந்தமை அயர்த்ததென்நீ 
மீனலர் வேலைப்பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் 

எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டில்லை அன்றே 
அத்தனை அறத்தை வெல்லும்பாவ மென்றறிந்த துண்டோ 
பித்தரைப் போல நீயும் இவருடன் பெயர்ந்ததன்மை 
ஒத்திலது என்னச்சொன்னான் அவன் இவை உரைப்பதானான் 


எடுத்தலும் சாய்தல் தானும் எதிர்த்தாலும் எதிர்த்தோர் தம்மைப் 
படுத்தலும் வீரவாழ்க்கை பற்றினர்க்குற்ற மேல்நாள் 
அடுத்ததே அஃதுநிற்க அன்றியும் ஒன்று கூறற்கு 
எடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துளீர் ஏதுநோக்கின் 


ஒன்றும்நீர் அஞ்சல்ஐய யாமெலாம் ஒருங்கே சென்று 
நின்றும் ஒன்றியற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து 
கொன்று போர் கடக்குமாயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் 
பொன்றுதும் அவனோடென்றான் போதலே அழகிற்றென்றான் 

( மூலபலவதைப் படலம் ( 5 - 49 , 55 , 56 ) 


மூலபலசண்டை 

ஈண்டிய தானைநீங்க நிற்பதென் யாமே சென்று 
பூண்டவெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா 
மீண்டனர் தலைவரெல்லாம் அங்கதனோடு வீரன் 
மூண்டவெம் படையை நோக்கித் தம்பிக்கு மொழிவதானான் 


மாருதியோடு நீயும் வானரக் கோனும்வல்லே 
பேருதிர் சேனைகாக்க என்னுடைத் தனிமைபேணிச் 
சோருதிர் என்னின் வெம்போர் தோற்றும் நாம் என்னச்சொன்னான் 
வீரன் மற்றதனைக்கேட்ட இளையவன் விளம்பலுற்றான் 


ஐயநிற் கியலாதுண்டோ இராவணன் அயலேவந்துற்று 
எய்யும்விற் கரத்துவீரன் இலக்குவன் தன்னோடேற்றால் 
மொய்யமர் களத்தின் உன்னைத் துணைபெறான் என்னின் முன்ப 
செய்யும்மா வெற்றியுண்டோ சேனையும் சிதையும் அன்றே 


வீடண நீயும் மற்றும் தம்பியோடேகி வெம்மை 
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறிக்கொற்றம் 
நீடுறுதானை தன்னைத் தாங்கினை நில்லாய் என்னின் 
கேடுளதாகும் என்றான் அவனது கேட்பதானான் 


சூரியன் சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் 
பூரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல 
காரியம் என்னக் கொண்டார் கடற்படை காத்து நின்றார் 
வீரியன் பின்னர்ச்செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் 


ஓசனை நூற்றின்வட்டம் இடைவிடாதுறைந்த சேனைத் 
தூசிவந்து அண்ணல் தன்னைப் போக்கற வளைத்துச்சுற்றி 
வீசின படையும் அம்பும்மிடைதலும் விண்ணோர் ஆக்கை 
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோ மகூடம் 


இந்நிமித்தம் இப்படைக்கு இடைந்து வந்தடுத்ததோர் 
துன்னிமித்தம் - என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் 
அந்நிமித்தம் உற்றபோது அரக்கர்கண் அரங்கமேல் 
மின்னிமிர்ந்த தன்னவாளி வேதநாதன் வீசினான் 


ஆளிமேலும் ஆளின் மேலும் ஆனைமேலும் ஆடல்மா 
மீனிமேலும் வீரர்மேலும் வீரர் தேரின் மீதினும் 
வாளிமேலும் வில்லின் மேலும் மண்ணின்மேல் வளர்ந்தமாத் 
தூளிமேலும் ஏற ஏற வீரன்வாளி தூவினான் 


விழித்தகண்கள் கைகள் மெய்கள் வேறலைக் கழுத்தினில் 
தெழித்தவாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினைப் 
பழித்தவாளி சிந்தநின்று பட்ட அன்றி வட்டகோல் 
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்ததில்லை கண்டதே 


குரந்துணிந்து கண்சிதைந்து பல்லணம் குலைந்து பேர் 
உரந்துணிந்து வீழ்வதன்றி ஆவி ஓட ஒண்ணுமோ 
சரந்துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் 
வரந்துணிந்த வீரர்போரின் முந்தஉந்து வாசியே 


கொடிக்குலங்கள் தேரின்மேல யானைமேல கோடைநாள் 
இடிக்குலங்கள் வீழவெந்த காடுபோல் எரிந்தவால் 
முடிக்குலங்கள் கோடிகோடி சிந்தவேகம் முற்றுறா 
வடிக்குலங்கள் வாளிஓட வாயினூடு தீயினால்  


தெய்வ நெடும் படைக்கலங்கள் விடுவர் சிலர் சுடுகணைகள் சிலையிற் கோலி 
எய்வர் சிலர் எறிவர்சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் யாவும் ஏந்திப் 
பெய்வர்சிலர் பிடித்தும் எனக்கடுத்துறுவர் படைக் கலங்கள் பெறாதுவாயால் 
வைவர்சிலர் தெழிப்பர்சிலர் வருவர்சிலர் திரிவர்சிலர் வயவர் மன்னோ 


மழுவற்றுகும் மலையற்றுகும் வளையற்றுகும் வயிரத்து 
ஏழுவற்றுகும் எயிறற்றுகும் இலையற்றுகும் எறிவேல் 
பழுவற்றுகும் மதவெங்கரி பற்றற்றுகும் இரதக் 
குழுவற்றுகும் ஒரு வெங்கணை தொடைபெற்ற தொர்குறியால் 

தீஒத்தன உருமொத்தமர் சரம்சிந்திடச் சிரம்போய் 
மாயத்தவர் மடிகின்றனர் எனவும் மறங்குறையா 
காயத்திடை உயிர்உண்டிட உடன் மொய்த் தெழுகளியால் 
ஈயொத்தன நிருதக்குலம் நறவொத்தனன் இறைவன் 


மொய்தாரையொர் இமைப்பின் தலை முடுகத்தொடு சிலையால் 
தைத்தானவன் கழல்திண் பசுங்காய் ஒத்தனர் சரத்தால் 
கைத்தார் கடுங்களிறும் கனத்தேரும் களத்தழுந்தக் 
குத்தான் அழிகுழம்பாம் வகைவழுவாச் சரக்குழுவால் 


பிரிந்தார்பலர் இரிந்தார்பலர் பிழைத்தார்பலர் உழைத்தார் 
புரிந்தார்பலர் நெரிந்தார்பலர் புரண்டார்பலர் உருண்டார் 
எரிந்தார்பலர் கரிந்தார்பலர் எழுந்தார்பலர் விழுந்தார் 
சொரிந்தார் குடலர் துமிந்தார் தலைகிடந்தார் எதிர்தொடர்ந்தார் 

ஒல்வதே இவ் வொருவன் இவ்ஊகத்தைக் 
கொல்வதே நின்று குன்று அனயாம் எலாம் 
வெல்வது ஏதும் இலர்மையின் வெண்பலை 
வெல்வதேயென வன்னி விளம்பினான் 


ஊன்தரு வடிக்கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவைக் 
கானகம் நிகர்த்தனர் அரக்கர்மலை ஒத்தன கலித்தமதமா 
மானவன் வயப்பகழி வீசுவலை ஒத்தன வலைக்குள் உளவாம் 
மீனகுலம் ஒத்தன கடற்படை  விளிந்திறுதலால் 


மூலமுதலாய் இடையுமாய் இறுதி ஆய்எவையும் முற்றும்முயலும் 
காலமெனல் ஆயினன் இராமன் அவ் அரக்கர் கடைநாளில் விளியும் 
கூலமில் சராசரம் அனைத்தினையும் , ஒத்தனர் குரைகடல்ஏழும் 
ஆலமென லாயினன் இராமன் அவர் மீனமென லாயினர்களால் 


தேரும்மத மாயும்வரை ஆளியொடு வாசிமிகு சீயம்முதலா 
ஊருமவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் 
காரும் உருமேறும் எரிஏறும் நிகர் வெம்படையொடு அம்புகடிதின் 
தூரும்வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் 


எய்தகணை எய்துவதன் முன்பு இடை அறுந்திவர்கள் ஏழுலகமும் 
மொய்கொள் கணைமாமுகில் எனும்படி வளைத்தனர் முனிந்தனர்களால் 
வைதுகொலின் அல்லது மறப்படை கொடிப்படை கடக்கும் வலிதான் 
செய்யதிரு மாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் 

உலகு செவிடுபட மழைகள் உதிரஉயர் 
அலகில் மலைகுலைய அமரர் தலையதிர 
இலகு தொடுபடைகள் இடியொ டுருமனைய 
விலகியது திமிலம் விளையும் வகைவிளைய 


எய்யும் ஒருபகழி ஏழுகடலும் இடு 
வெய்ய களிறுபரி யாளொடு இரதம்விழ 
ஒய்ய ஒருகதியின் ஓடஉணர் அமரர் 
கைகள் என அவுணர் கால்கள் கதிகுலைவ 


அண்ணல் விடுபகழி யானை இரதம் அயல் 
பண்ணு புரவிபடை வீரர் தொகுபகுதி 
புண்ணினொடு குறிகள் புள்ளி என விரைவின் 
எண்ணுவன அனைய எல்லையில நுழைவ 


ஆயிரம் வெள்ளம் உண்டொருவர் ஆழிசூழ் " 
மாயிரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் 
மேயின் பெரும்படை இதனை ஓர்விலால் 
ஏஎனும் மாத்திரத்து எய்து கொன்றனன் 


கொன்றனன் இனிஒரு கோடிகோடி மேற்று 
அன்றெனின பதுமமேற்று ஆகில் வெள்ளம் ஆய் 
நின்றது நின்றதினி நினைவ தென்பெற 
ஒன்றென உணர்கென வன்னி ஓதினான் 


விழித்துமோ ராவணன் முகத்து மீண்டும் யாம் 
பழித்துமோ நம்மை நாம் படுவதஞ்சினால் 
அழித்தும் ஓர் பிறப்புறா நெறிசென் றண்மயாம் 
கழித்தும் இவ்வாக்கையைய் புகழைக் கண்ணுற 


மழுஎழு தண்டுகோல் வலயம் நாஞ்சில்வாள் 
எழுஅயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் 
கழுஇகல் கப்பணம் முதலகைப்படை 
தொழுவினில் புலியனான் உடலில் தூவினார் 


ஐயிரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் 
மொய்வலி வீரர்கள் ஒழிய முற்றுற 
எய் எனும் மாத்திரத்த விந்தது என்பரால் 
செய்தவத் திராவணன் மூலச்சேனையே 


எல்லோம் எல்லோம் ஒன்றிவளைந்திந் நெடியோனை 
வல்லே வல்லயோர் வலிமுற்றி மலையோமேல் 
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் 
தொல்லோன் சொல்லே நன்றென அஃதே துணிவுற்றார் 


ஊழிக்கனல் போல்பவர் உந்தின போர் 
ஆழிப்படை அம்பொடும் அற்றகலப் 
பாழிக் கடைநாள் விடுபல்மழைபோல் 
வாழிச் சுடர்வாளி வழங்கினனால் 


ஒருவன் எனஉன்னும் உணர்ச்சியிலார் 
இரவன் றிதுஓர்பகல் என்பர்களால் 
தரவன்றிது ராமர் கணக்கிலரால் 
பரவை மணலின் பலர் என்பர்களால் 


தேர்மேல் உளர்மாவொடு செந்தறுகண் 
கார்மேல் உளர்மாகடல் மேல்உளர் இப் 
பார்மேல் உளர்உம்பர் பரந்துளரால் 
போர்மேலும் இராமர் புகுந்தடர்வார் 


என்னும்படி எங்கணும் எங்கணுமாய்த் 
துன்னும் சுழலும் திரியும் சுடரும் 
பின்னும் அருகும் உடலும் பிரியான் 
மன்னன் மகன்வீரர் மயங்கினரால் 


கோடி ஐயிரண்டு தொக்கபடைக்கல மன்னர்கூவி 
ஓடி ஓர் பக்கமாக உயிரிழந் துலத்தலோடும் 
வீடிநின் றழிவதென்னே விண்ணவர் படைகள் வீசி 
மூடுதும் இவனை என்று யாவரும்மூண்டு மொய்த்தார் 


விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படையீறாகக் 
கொண்டொருங் குடனே விட்டார் குலங்கியதமரர் கூட்டம் 
அண்டமும் கீழ்மேலாக ஆகியத்தனை அண்ணல் 
கண்டொரு முறுவல்காட்டி அவற்றினை அவற்றாற் காத்தான் 


ஆயிர வெள்ளத்தோடும் அடுகளத்தவிந்து வீழ்ந்தார் 
மாயிரு ஞாலத்தாள் தன் வன்பொறைப் பாரம் நீங்கி 
மீஉயர்ந் தெழுந்தாள் அன்றேவீங்கொலி வேலைநின்றும் 
போயொருங் கண்டத்தோடும் கோடியோ சனைகள் பொங்கி 


தீமொய்த்த அனையசெங்கண் அரக்கரை முழுதும்சிந்திப் 
பூமொய்த்த கரத்தாகி விண்ணவர் போற்றநின்றான் 
பேய்மொய்த்து நரிகள்ஈண்டிப் பெரும்பிணம் பிறங்கித் தோன்றும் 
ஈமத்துள் தமியன் நின்ற கறைமிடற் றிறைவன் ஒத்தான் 

( மூலபல வதைப்படலம் 57 , 61 , 64 , 67 , 68 , 70 , 79 , 80 , 83 , 85. 89 , 97 , 
105 , 109-111 , 128 , 136 , 140 , 142 , 146 , 150 , 159 , 166 , 167, 172 , 175 , 

176 , 179 , 182, 186 , 195 , 210, 212 , 213 , 223 , 224, 226, 229 ] 


லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் 

விருத்தம் - 89 தரு - 73 
சில்லி ஆபிரம் சில்உளைப் பரியொடும் சேர்ந்த 
எல்லவ ன்கதிர்மண்டிலம் மாறுகொண் டிமைக்கும் 
செல்லும் தேர்மிசைச் சென்றனன் தேவரைத் தொலைத்த 
வில்லும் வெங்கணைப் புட்டிலும் கொற்றமும் விளங்க 


நூறு கோடிதேர் நொறில்பரி நூற்றிரு கோடி 
ஆறுபோல் மதமாகரி ஐயிருகோடி 
ஏறுகோளுறு பதாதியும் இவற்றிவற்றிரட்டி 
சீறுகோளரி யேறனானுடன் அன்று சென்ற 


ஏழும் ஏழும் என்றுரைக்கின்ற உலகங்கள் யாவும் 
ஊழி பேர்வதே ஒப்பதோர் உலைவுற உடற்றும் 
நூழில் வெஞ்சமம் நோக்கி அவ் இராவணன் நுவன்றான் 
தாழில் என்படைத் தருக்கறும் என்பதோர் தன்மை 


இரில் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி 
அரிகள் அஞ்சன்மின் அஞ்சன்மின் என்றருள்வழங்கித் 
திரியும்மாருதி தோளெனும் தேர்மிசைச் சென்றான் 
எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர்புகுந் தேற்றான் 

ஏற்றுக் கோடலும் இராவணன் எரிமுகப்பகழி 
நூற்றுக் கோடியின் மேற்செலச் சிலைகொடு நூக்கக் 
காற்றுக் கோடியபஞ்செனத் திசைதொறும் கரக்க 
வேற்றுக்கோல் கொடுவிலக்கினன் இலக்குவன் விசையால் 

காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பனகணைகள் 
நூக்கினான்கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் 
ஆக்கும் வெஞ்சமத்து அரிது இவன் தனை வெல்வது அம்மா 
நீக்கி என் இனிச்செய்வது என்று இராவணன் நினைந்தான் 
 


மோகமாப்படை ஒன்றுளது அயன் முதல் வகுத்தது 
ஆகமற்றது கொற்றமும் சிவன் தனை அழிப்பது 
ஏகமுற்றிய விஞ்சையை இவன்வயின்ஏவி 
காகம் உற்றுழல் களத்தினில் கிடத்து வென் கடிதின் 


என்பதுன்னி அவ்விஞ்சையை மனத்திடை எண்ணி 
முன்பன்மேல் வரத்துறந்தனன் அதுகண்டு முடுகி 
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி 
என்பதோதினன் இலக்குவன் அது தொடுத் தெய்தான் 


வீடணன் சொல விண்டுவின் படைக்கலம் விட்டான் 
மூடுவெஞ்சின மோகத்தை நீக்கலும் மூனிந்தான் 
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திடவந்த 
கேடுநம்தமக் கென்பது மனங்கொண்டு கிளர்ந்தான் 


மயன் கொடுத்தது மகளொடு வயங்கனல் வேள்வி 
அயன்படைத்துளது ஆழியுல் குலிசமும் அனையது 
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் 
சயந்தனைப் பொருந்தம்பியை உயிர்கொளச் சமைந்தான் 


விட்டபோதினில் ஒருவனை வீட்டியே மீளும் 
பட்டபோதவன் நான் முகனாயினும் படுக்கும் 
வட்டவேலது வலங்கொடு வாங்கினன் வணங்கி 
எட்டநிற் கலாத்தம்பிமேல் வல்விசைத் தெறிந்தான் 


தோற்பென் என்னினும் புகழ்நிற்கும் தருமமும் தொடரும் 
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழியப் 
பார்ப்பதென் நெடும்பழிவந்து தொடர்வதன் முன்னம் 
ஏற்பென் என் தனி மார்பின் என்றிலக்குவன் எதிர்ந்தான் 


இலக்குவற்குமுன் வீடணன் புகும் இருவரையும் 
விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி 
கலக்கும் வானரக்காவலன் அனுமன் முன் கடுகும் 
அஃக்கண் அன்னதை ன்னதென்றுரை செயலாமோ 


முன்னின் றாரெலாம் பின்னுறக் காலினும்முடுகி 
நின்மின் யானிது விலக்குவென் என்றுரை நேரா 
மின்னும் வேலினை விண்ணவர் கண்புடைத் திரங்கப் 
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடைப்போக 

எங்கு நீங்குதி நீயென வீடணன் எழுந்தான் 
சிங்க ஏறன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் 
பொங்குபாய்பரி சாரதியொடும் படப்புடைத்தான் 
சங்கவானவர் தலையெடுத்திட நெடுந்தண்டால் 


சேய்விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன்சீறி 
பாய்கடுங்கணை பத்தவன் உடல்புகப் பாய்ச்சி 
ஆயிரம்சரம் அனுமன் தன் உடலினில் அழுத்திப் 
போயினன் செருமுடிந்த தென்றிலங்கையூர் புகுந்தான் 

அரக்கன் ஏகினன் வீடணன் வாய்திறந் தரற்றி 
இரக்கந் தான் என இலக்குவன் இணையடித் தலத்தில் 
கரக்கலாகலாக் காதலின் வீழ்ந்தனன் கழலுந்தான் 
குரக்கு வெள்ளமும் தலைவகும் துயரிடைக் குளித்தார் 


மருத்தின் காதலன் மார்பிடை அம்பெலாம் வாங்கி 
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் 
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் 
கருத்தைஉன்னி அம்மாருதி உலகெலாம் கடந்தான் 


தந்தனன் மருந்து தன்னைத் தாக்குதல் முன் னேயோகம் 
வந்தது மாண்டார்க் கெல்லாம் உயிர் தரும் வலத்ததென்றால் 
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிதன்றோ நொடித்தல் முன்னே 
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளையவீரன் 

எழுந்துநின் றனுமன் தன்னை இருகையால் தழுவி எந்தாய் 
விழுந்திலன் அன்றோ மற்றவ்வீடணன் என்றுவிம்மித் 
தொழுந் துணையவனை நோக்கித் துணுக்கமும் துயரும் நீக்கிக் 
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று வகை கொண்டான் 

உற்றது முழுதும் நோக்கி ஒழிவற உணர்வுள்ளூறச் 
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனைத் தொடரப்புல்லி 
பெற்றனென் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் 
அற்றிடையூறு செல்லாஆயுளை ஆதி என்றான் 
( வேலேற்றபடலம் 2 , 3 , 11 , 18 , 19 , 21 , 23 27 , 30 34 , 37 , 40 , 42 , 

43 , 46 |  


மூலபலப் படுகளக்காட்சி 


மூண்டெழு சேனை வெள்ளம் உலகொரு மூன்றின் மேலும் 
நீண்டுள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்னத் 
தூண்திரண்டனைய திண்டோள் சூரியன்புதல்வன் சொல்லக் 
காண்டிநீ அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் 

[ வேலேற்றப்படலம் 52 ) 


ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கோர் அளவிற்றன்றால் 
மேயினதுறைகள் தோறும் விம்மினார் நிற்பதல்லால் 
பாய்திரைப் பரவைஏழும் காண்குறும் பதகர் என்ன 
நீயிருந் துரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் 

காகப்பந்தர் செங்களம் எங்கும் செறிகால 
ஓகத்தம்பின் பொன்றின வேனும் உடல் ஒன்றி 
மேகச்சங்கம் தொக்கன வீழும்வெளியின்றி 
நாகக் குன்றின் நின்றன காண்மின் நமரங்காள் 


ஒழுகிப்பாயும் மும்மதவேழம் உயிரோடும் 
எழுகிற் கில்லாச் செம்புனல் வெள்ளத் திடையிற்ற 
பழகிற்றல்லாப் பல்திரை தூங்கும் படர்வேலை 
முழுகித் தோன்றும் மீனரசொக்கும் முறைநோக்கீர் 


பூவாய் வாளிச் செல்எறிகாலைப் பரிபொன்றக் 
கோவார் விண்வாய் வெண்கொடி திண்பாயொடுகூட 
மாவார் திண்டேர் மண்டுதலால் நீர்மறிவேலை 
நாவாய் மானச்செல்வன காண்மின் நமரங்காள் 


கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவிதேரும் 
துடியின்பாதக் குன்றின்மிசை தோல் விசியின் கட்டு 
ஒடியும்வெய்யோர் கண்எரிசெல்ல உடன் வெந்த 
தடியுண்டாடிக் கூளிநடிக் கின்றனகாணீர் 


விண்ணில் பட்டார் வெற்புறழ் காயம் பலமேன்மேல் 
மண்ணில் செல்வார் மேனியின் வீழமடிவுற்றார் 
எண்ணின் தீரா அன்னவை தீரும்மிடல் இல்லாக் 
கண்ணில் தீயார் விம்மிஉளைக்கும் படிகாணீர் 


என்று காணினும் காட்டினும் ஈதிறைக் 
குன்று காணினும் கோளிலது ஆதலால் 
நின்று காணுதும் நேமியினானுழைச் 
சென்று காண்டும் என்றேகினர் செவ்வியோர் 

( வானரர்களங்காண்படலம் 3 , 4 , 7 , 8 , 15 , 17 , 33 ] 


ஸ்ரீராமரை மாலியவான் கொண்டாடல் 


இன்னதன்மை அமைந்த இராக்கதர் 
மன்னன் மாடுவந்தெய்தி வணங்கினார் 
அன்ன சேனைகளம்பட்ட வாறெலாம் 
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார் 


என்னினும் வலியரான இராக்கதர்யாண்டும் வீயார் 
உன்னினும் உலப்பிலாதார் உவரியின் மணலின் மேலார் 
பின்னொரு பெயருமின்றி மாண்டனர் என்று சொன்ன 
இந்நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் 


கேட்டய லிருந்தமாலி ஈதொரு கிழமைத்தாமோ 
ஓட்டுறு தூதர்பொய்யே உரைப்பரோ உலகம்யாவும் 
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கெரி விரித்த எல்லாம் 
மாட்டுவன் ஒருவனன்றே இறுதியில் மனத்தான் என்றான் 


அளப்பரும் உலகம்யாவும் அளித்துக்காத் தழிக்கின் 

தழிக்கின்றான் தன் 
உளப்பெருந் தகைமைதன்னால் ஒருவனென் றுண்மைவேதம் 
கிளப்பது கேட்டுமன்றே அரவின்மேல் கிடந்தமேல்நாள் 
முளைத்தபேர் இராமன் என்ற வீடணன் மொழிபொய்த்தாமோ 


ஒன்றிடின் அதனைஉண்ணும் உலகத்தின் உயிர்க்கொன்றாத 
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் யாண்டும் 
குன்றொடு மரனும்புல்லும் பல்லுயிர்க் குழுவும் கொல்லும் 
வன்திறல் காற்றும் காண்டும் வலிக்கொரு வரம்பும் உண்டோ  


பட்டதும் உண்டேஉன்னை இந்திரன் செல்வம்பற்று 
விட்டது மெய்ம்மை ஐயமீட்டொரு வினையம் இல்லை 
கெட்டதுன் பொருட்டினாலே நின்னுடைக்கேளி ரெல்லாம் 
சிட்டது செய்தி என்றான் அதற்கவன் சீற்றம் செய்தான் 


இலக்குவன் தன்னைவேலால் எறிந்துயிர் கூற்றுக்கீந்தேன் 
அலக்கணில் தலைவரெல்லாம் அழுந்தினர் அதனைக் கண்டால் 
உலக்குமால் இராமன்பின்னர் உயிர்ப்பொறை உகவான் உற்ற 
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்ததென்றா ன் 


ஆண்டது கண்டு நின்ற தூதுவர் ஐயமெய்யே 
மீண்டதவ் வளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் 
தீண்டவும் தாழ்த்ததில்லை யாருமச் செங்கணானைப் 
பூண்டனர் தழுவிப்புக்கார் காணுதி போதிஎன்றார் 

(ராவணன்களங்காண்படலம் 7 , 12--13 ) 


மூலபலப் படுகளத்தை இராவணன் கண்டது 

தேறிலன் ஆதலானே மறுகுறு சிந்தைதேற 
ஏறினன் கனகத்து ஆரைக் கோபுரத்தும் பர் எய்தி 
ஊறின சேனை வெள்ளம் உலந்தபே பேருண்மை எல்லாம் 
காறின உள்ளம் கோவக்கண்களால் தெரியக்கண்டான் 


கொய்தலைப் பூசல்பட்டோர் குலத்தியர் குவளைதோற்று 
நெய்தலை வென்றவாட்கண் குமுதத்தின் நீர்மைகாட்டக் 
கைதலை வைத்தபூசல் கடலொடு நிமிருங்காலைச் 
செய்தலை உற்றஓசைச் செயலதும் செவியின் கேட்டான் 


எண்ணும் நீர் சடந்த யானைப்பெரும் பிணம் ஏந்தியாணர் 
மண்ணின் நீர் அளவும் சல்லிரெடு மலை பறித்து மண்டும் 
புண்ணின் நீர் ஆறும் பல் பேய்ப் புதுப்புனல் ஆடும் பொம்மல் 
கண்ணின் நீர் ஆறும் மாறாக்கருங்கடல் மடுப்பக்கண்டான் 


குமிழிநீரோடும் சோரிக்கனலொடும் கொழிக்கும் கண்ணான் 
தமிழ்நெறி வழக்கமன்ன தனிச்சிலை வழங்கச் சாய்ந்தார் 
அமிழ்பெருங் குருதிவெள்ளம் ஆற்றுவாய் முகத்தின்தேக்கி 
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம்வந்து உடற்றக்கண்டான் 


விண்களிற் செறன்வன்தோள் கணவரை அலகை வெய்ய 
புண்களின் கைகள் நீட்டிப் புதுநிணம் கவர்வநோக்கி 
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்தவள் வளுகிரின்மானக் 
கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் 

( இராவணன்களங்கான்படலம் 19-23 ] 


இராவணன் தேர் ஏறுதல் 


விண்பிளந் தொல்கஆர்த்த வானரர் வீக்கங்கண்டான் 
மண்பிளந் தழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கங்கண்டான் 
கண்பிளந் தகலநோக்கும் வானவர் களிப்பும் கண்டான் 
புண்பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்திழிந்து போந்தான் 

( இராவணன் களங்காண்படலம் 24 ] 


பூதரம் அனையமேனிப் புகைநிறப் புருவச்செந்தீ 
மோதரன் என்னும் நாமத் தொருவனை முறையின் நோக்கி 
ஏதுளது இறந்திலாதது இலங்கையுள் இருந்தசேனை 
யாதையும் எழுகஎன்றான் மணிமுரசுஎற்றுக என்றான் 


அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் 
உருவினோடும் வந்துதித்தனர் ஆம்என ஒளிரக் 
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டிச் 
செருவில் இந்திரன் தந்தபொன் கவசமும் சேர்த்தான் 


நாலஞ்சுஆகிய கரங்களில் நனந்தலை அனந்தன் 
ஆலஞ்சார் மிடற்று அருங்கறை கிடந்தென இலங்கும் 
கோலஞ்சர் நெடுங்கோதையும் புட்டிலும் கட்டித் 
தாலஞ்சார்ந்த மாசுணம் எனக் கங்கணங்தழுவ 


நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த 
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர்முன பணித்த 
வாகை மாலையும் மருங்குற வரிவண்டொடு அளவித் 
தோகையன்னவர் விழிதொடர் தும்பையும் சூட்டி 


வருகதேர் என வந்தது வையமும் வானும் உரகதேயமும் 
ஒருங்குடன் ஏறினும் உச்சிச் போரில் செல்வது 
சொருகு பூவன்ன சுமையது துரகம் இன்றெனினும் 
நிருதர் கோமகன் நினைத்துழிச் செல்வது ஓர் நினைப்பில் 
பாரில் செல்வது விசும்பிடைச் செல்வது பரந்த 
நீரில் செல்வது நெருப்பிடைச் செல்வது நிமிர்ந்த 
ஊரில் செல்வது எவ்வுலகினும் செல்வதுஓர் இமைப்பின் 

ஏறினான் தொழுது இந்திரன் முதலிய இமையோர் 
தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார் 
வேறுதாம் செயும்வினையிலை மெய்யின் ஐம்புலனும் 
ஆறினார்களும் அஞ்சினார் உலகெலாம் அனுங்க 

மன்றலம் குழற்சனகிதன் மலர்க்கையான் வயிறு 
கொன்று அலந்தலை கொடு நெடுந்துயரிடைக் குளித்தல் 
அன்றிதென்றிடின் மயன் மகள் அத்தொழில் உறுதல் 
இன்று இரண்டின் ஒன்றாக்குவென் தலைப்படின் என்றான் 

( இராவணன் தேர் ஏறுபடலம் 1 , 4 , 9 , 18 , 20 , 25 , 26 ] 


இராவணன் அவசகுனம் காணுதல் 

அடல்வலி அரக்கற்கு அதுபோழ்து அண்டங்கள் அழுந்தமண்டும் 
கடல்களும் வற்ற வெற்றிக் கால்கிளர்ந்து உடற்றுங்காலை 
வடவரை முதலவான மலைக்குலம் சலிப்பபோன்று 
சுடர்மணி வலயம்சிந்தத் துடித்தன இடத்தபொற்றோள் 


உதிரமாரி சொரிந்தது உலகெலாம் 
அதிரவானம் இடிந்தது அருவரை 
பிதிர வீழ்ந்தது அசனி ஒளிபெறாக் 
கதிரவன் தனை ஊரும் கலந்ததால் 


வரவும் வாசிகள் தூங்கின வாங்கலில் 
ஏவும் வெஞ்சிலை நாண் இடை இற்றன 
நாவும் வாயும் உலர்ந்தன நாள்மலர்ப் 
பூவின் மாலைபுலால் வெறிபூத்ததால் 

எழுது வீணைகொடு ஏந்து பதாகைமேல் 
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் 
ஒழுகுகின்றன ஓடுஇகல் அடல்மா 
தொழுவில் நின்றன போன்றன சூழிமா 


இன்னவாகி இமையவர்க் கின்பம் செய் 
துன்னி மித்தங்கள் தோன்றின தோன்றவும் 
அன்ன தொன்றும் நினைந்திலன் ஆற்றுமோ 
என்னை வெல்ல மனித்தன் என்றெண்ணுவான் 

( இராவணன்வதைப்படலம் 18-22 ] 


ஸ்ரீராமர் தேர் ஏறுதல் 

தொழும் கையொடு வாய்குழறி மெய்ம்முறை துளங்கி 
விழுந்து கவிசேனை யிடுபூசல் மிகவிண்ணோர் 
அழுந்து பணிமீதமளி அஞ்சல் என அந்நாள் 
எழுந்தபடி யேகடிது எழுந்தனன் இராமன் 

மாதலி கொணர்ந்தனன் மகோத்தி வளாவும் 
பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தோ 
சீதமதி மண்டலமும் ஏனையுளவும் திண் 
பாதம் என நின்றது படிந்தது விசும்பில் 


என்னையிது நம்மையிடை எய்தல் என எண்ணா 
மன்னவர்தம் மன்னன் மகன் மாதலியை , வந்தாய் 
பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு ஆர்புகல என்றான் 
அன்னவனும் அன்னதனை ஆகஉரை செய்தான் 


முப்புரம் எரித்தவனும் நான்முகனும் முன் நாள் 
அப்பகல் இயற்றியுளது ஆயிரம் அருக்கர்க்கு 
ஒப்புடையது ஊழிதிரி நாளும் உலைவில்லா 
இப்பொருவில் தேர்வருவது இந்திரனது எந்தாய் 

இல்லையினி ஐயம் என எண்ணிய இராமன் 
நல்லவனை நீயுனது நாமம் நவில்க என்ன 
வல் இதனை ஊர்வது ஒருமாதலி எனப்பேர் 
சொல்லுவர் எனத்தொழுது நெஞ்சினொடு சொன்னான் 


விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்பத் 
தொழுந்தகை நல்வினை களிப்பினொடு துள்ள 
அழுந்து துயரத்தமரர் அந்தணர்கை முந்துற்று 
எழுந்து தலையேற இனிது ஏறினன் இராமன் 

[ இராமன் தேரேறுபடலம் 1 , 7 , 18 , 19 , 25 , 27 ] 


மகோதரன் வதை 

தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரகத்தேர்மேல் 
ஏன்றிருவருக்கும் வெம்போர் எய்தியது இடையேயானோர் 
சான்றென நிற்றல் குற்றம் தருதியால் விடையீண்டென்றான் 
வான்தொடர் குன்றமன்ன மகோதரன் இலங்கைமன்னை 


மீண்டவன் இளவல்நின்ற பாணியின் விலங்கா முன்னம் 
ஆண் தகை தெய்வத்தின் தேர் அணுகியது அணுகாமுன்னம் 
மூண்டெழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்டத் 
தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் 


எண்ணருங்கோடி வெங்கண் இராவணரேயும் இன்று 
நண்ணிய பொழுதுமீண்டு நடப்பரோ கிடப்பதல்லால் 
அண்ணல் தம்தோற்றங் கண்டால் ஐயநீ கமலமன்ன 
கண்ணனை ஒழிய அப்பால் செல்வதே கருமம் என்றான் 


என்றலும் எயிற்றுப்பேழ் வாய்மடித்து அடடா எடுத்து நின்னைத் 
தின்றனென் எனினும் உடாம்ண்பழி எனச்சீற்றம் சிந்தும் 
குன்றன தோற்றத்தான் தன் கொடி நெடுந்தேரின் நேரே 
சென்றதவ் இராமன் திண்தேர் . விளைந்தது திமிலத் திண்போர் 


பொன் தடந் தேரும்மாவும் பூட்கையும் புலவுண்வாட்கைக் 
கற்றடந் திண்தோள் ஆளும்நெருங்கிய கடல்களெல்லாம் 
வற்றின இராமன்வாளி வடவனல் பருகவன் தாள் 
ஒற்றைவன் தடந்தேரோடும் மகோதரன் ஒருவன் சென்றான் 


அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின் மேல் அரவத் தேர்மேல் 
குசையுறு பாகன் தன்மேல் கொற்றவன் குவவுத் தோள் மேல் 
விசையுறு பகழிமாரி வித்திணான் விண்ணினோடும் 
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல செய்தான் 



வில்ஒன்றால் கவசம் ஒன்றால் விறலுடைக்கரம் ஓரொன்றால் 
கல்லொன்று தோளும் ஒன்றால் கழுத்தொன்றால் கடிதின்வாங்கிச் 
செல் ஒன்று கணைகள் ஐயன்சிந்தினான் செப்பிவந்த 
சொல் ஒன்றாய்ச் செய்கைஒன்றாய்த் துணிந்தனன் அரக்கன் அஞ்சி 

( இராவணன் வதைப்படலம் 8 , 10-15 ] 


கடைசி நாளில் இராவண யுத்தம் 

மோதரன் முடிந்தவண்ணம் மூவகை உலகத்தோடும் 
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் 
சேதனை உண்ணக்கண்டான் செலவிடு செலவிடென்றான் 
சூதனும் முடுகித் தூண்டச் சென்றது துரகத் திண்தேர் 


பனிப்படா நின்றதென்னப் பாக்கின்ற சேனைபாறித் 
தனிப்படானாகின் இன்னம் தாழ்கிலன் என்றும் தன்மை 
நுனிப்பாடா நின்றவீரன் அவன் ஒன்று நோக்காவண்ணம் 
குனிப்படா நின்றவில்லால் ஒல்லையின் நூறிக் கொன்றான் 


கண்ட சங்கரன் நான்முகன் கைத்தலம் 
விண்டசங்கத் தொல் அண்டம் வெடித்திட 
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பெலாம் 
உண்ட சங்கம் ராவணன் ஊதினான் 


ஆசையும் விசும்பும் அலையாழியும் 
தேசமும் மலையும் நெடுந்தேவரும் 
கூச அண்டங்குலுங்கக் குலங்கொள் தார் 
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் 


உரும்ஒப்பன கனல் ஒப்பன ஊற்றந்தரு கூற்றான் 
மருமத்தினும் நுழைகிற்பன மழைஒப்பன வானோர் 
நிருமித்தன படைபற்றற நிமிர்உற்றன அமிழ்தப் 
பெருமத்தினை முறை சுற்றிய பெரும்பாம்பினும் பெரிய 


துண்டப்படு நெடுமேருவைத் தொளைத்துள்ளுறை தொங்காது 
அண்டத்தையும் பொதுத்தேகு மென்றிமையோர்சளும் அயிர்த்தார் 
சண்டத்தெறு கணைக்காற்றிணைக் கருணைக்கடல் கனகச் 
சண்டச்சர மழைகொண்டு அவையிடையே அறத்தடுத்தான் 


உடையான் முயன்றுறுகாரியம் உறுதீவினை உடற்ற 
இடையூறு சிதைந்தாங்கெனச் சரம்சிந்தின விறலும் 
தொடையூறிய கணைமாரிகள் தொகைதீர்த்த வைதுரந்தான் 
கடைஊறுறு கணமாமழை கால் வீழ்ந்தெனக் கடியான் 


விண்போர்த்தன திசைபோர்த்தன மலைபோர்த்தன விசையோர் 
கண்போர்த்தன கடல்போர்த்தன படிபோர்த்தன கலையோர் 
எண்போர்த்தன எரிபோர்த்தன இருள்போர்த்தன என்னே 
திண்போர்த் தொழில் என்றாணையின் உரிபோர்த்தவன் திகைத்தான் 


நூறாயிரம் வெடிவெங்கணை நொடிஒன்றினில் விடுவான் 
ஆறாவிறல் மறவோன் அவைதனிநாகன் அறுப்பான் 
கூறாயின கனல்சிந்துவ குடிக்கப்புனல் குறுகிச் 
சேறாயின பொடியாயின திடராயின கடலும் 


வில்லால் சரம்துரக்கின்ற வற்குடனே மிடல் வெம்போர் 
வல்லான் எழுமழுதோ மரம் மணித்தண்டிருப் புலக்கை 
தொல்லார் மிடல்வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து 
எல்லாம் நெடுங்கரத்தால் எடுத்தெறிந்தான் செரு அறிந்தான் 


ஒத்துச்செரு விளைக்கின்றதொர் அளவின் தலையுடனே 
பத்துச்சிலை எடுத்தான் கணைதொடுத்தான் பலமுகில் போல் 
தொத்துப்படு நெடுந்தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான் 
குத்துக்கொடு நெடுங்கோல்படு களிறாம் எனக் கொதித்தான் 


முழவிடு தோளொடு முடியும் பல் தலை 
விழவிடுவேன் இவிசும்பு சேமமோ 
மழவிடையனைய நம்படைஞர் மாண்டனர் 
எழவிடுதேரை என்று இராமன் கூறினான் 


ஒறுத்துல கனைத்தையும் உழலும் ஓட்டிடை 
இறுத்தில இராவணன் எறிந்த எய்தன 
அறுத்ததும் தடுத்ததுமன்றி ஆரியன் 
செறுத்தொரு தொழிடை செய்ததில்லையால்  


எய்தன சரமெலாம் இமைப்பின் முந்துறக் 
கொய்தனன் அகற்றி வெம் கோலின் கோவையால் 
நொய்தென அரக்கனை நெருங்க நொந்தன 
செய்தனன் இராகவன் அமரர்தேறினார் 


ஆயதோர் அமைதியின் அறிவினின் அமைவான் 
நாயகன் ஒருவனை நலிகிலதுணர் வான் 
ஏயினன் இருளுறு தாமதம் எனும் அத் 
தீவீனைதருபடை தெறுதொழில் மறவோன் 


கண்ணுதல் ஒருவனது அடுபடைகருதி 
பண்ணவன் விடுதலும் அதுநனிபருக 
எண்ணுறு கனவினொடு உணர்வென இமையில் 
ண்ணெனும் நிலையினின்று எறிபடை தொலைய 


ஆசுரப்பெரும் படைக்கலம் அமரரை அமரின் 
ஏசுவிப்பதெவ் உலகமும் எவரையும் வென்று 
வீசுவெற்பிறத் துரந்தவெங்கணையது விசையின் 
பூசுரர்க் கொருகடவுள் மேல்சென்றது போலாம் 


நுங்குகின்றதிவ் வுலகைஓர் நொடிவரை என்ன 
எங்கும் நின்றுநின்றலமரும் அமரர்கண்டிரைப்ப 
மங்குல்வல் உருமேற்றின் மேல் எரிமடுத்தென்ன 
அங்கிதன் நெடும்படை தொடுத்து இராகவன் அறுத்தான் 


அயன்படைத்த பேரண்டத்தில் அருந்தவம் ஆற்றிப் 
பயன்படைத்தவர் யாரினும் படைத்தவன் பல்போர் 
வியன்படைக்கலம் தொடுப்பென்யான் இனிஎனவிரைந்தான் 
மயன்படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன் மேல் 


பாந்தள் பல் தலைப் பரப்பு அகன்புவியிடைப் பயிலும் 
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வென வருகின்ற அதனைக் 
காந்தர்ப்பம் என்னும் கடுங்கொடும் கணை பினாற் கடிந்தான் 
ஏந்தல் பல்பணி எறுழ் வலித்திரள்புயத்து இராமன் 

பண்டு நான்முகன் படைத்தது கனகன் இப்பாரை 
தொண்டு தொட்டது மது எனும் அவுணன் முன்பு தொட்டது 
 உண்டிங் கென்வயின் அதுதுரந்து உயிர்உண்பென் எனாத் 
தண்டுகொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடைத்தலையாள் 


கண்டு தாமரைக்கடவுள் மாப்படை எனக்கழறா 
அண்டர் நாயகன் ஆயிரத்தளவினும் அடங்காப் 
புண்டரீகத்தின் மொட்டென்ன புகர்முகக்கணையால் 
உண்டை நூறுடை நூறுபட்டுளது எனஉதிர்த்தான் 


வென்றானென்றே உள்ளம் வெயர்த்தான் விடுசூலம் 
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் 
ஒன்றாம் உங்காரத்திடை உக்குஓடுதல் காணா 
நின்றான் அந்நாள் வீடணனார் சொல்நினைவுற்றான் 


அவ்வாறுற்ற ஆடரவம் தன் அகல் வாயால் 
கவ்வாநின்ற மால்வரை முற்றும் அவை கண்டான் 
எவ்வாய் தோறும் எய்தின என்னா எதிர்எய்தான் 
தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால் 


ஒக்கநின்று எதிர் அமர் உடற்றுங் காலையில் 
முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு 
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன 
மிக்கன இராமற்கு வலியும் வீரமும் 


வேதியர் வேதத்துமெய்யன் வெய்யவற்கு 
ஆதியின் அணுகிய அற்றம் நோக்கினான் 
சாதியின் நிமிர்ந்த தோர் தலையைத் தள்ளினான் 
பாதியின் மதிமுகம் பகழி ஒன்றினால் 


மேருவின் கொடுமுடி வீசுகால்எறி 
போரிடை ஒடிந்து போய் புணரிபுக்கென 
ஆரியன் சரம்பட அரக்கன் வன் தலை 
நீடிடை விழுந்தது நொருப்பொடன்று போய் 


இறந்ததோர் உயிருடன் கருமத்து ஈட்டினால் 
பிறந்துள தாம் எனல் பெயர்த்தும் அத்தலை 
மறந்திலது எழுந்தது மடித்தவாயது 
சிறந்தது தவமலால் செயலுண்டாகுமோ  


தலையரின் தருவதோர் தவமும் உண்டென 
நிலையுறு நேமியான் அறிந்து நீசனைக் 
கலையுறு திங்களின் வடிவுகாட்டிய 
சிலையுறு கையையும் நிலத்திற்சேர்த்தினான் 


கொற்ற வெஞ்சரம்படக் குறைந்து போனகை 
பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற 
மற்றொர்கை பிடித்தது போலவவ்வியது 
அற்றகை பிறந்தகை யாரதுஓர்குவார் 


ஓய்வகன்றது ஒருதலை நூறுறப் 
போய் அகன்று புரளப்பொருகணை 
ஆயிரம் தொடுத்தான் அறிவின்தனி 
நாயகன் கைக்கடுமை நடத்தியே 


நீர்த்தரங் கங்கள்தோறும் நிலந்தொறும் 
சீர்த்தமால் வரைதோறும் திசைதொறும் 
பார்த்த பார்த்த இடந்தொறும் பல் தலை 
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்தென 


கூற்றின் வெங்கணை கோடியின் கோடிகள் 
தூற்றினான் வலிமும்மடி தோற்றினான் 
வேற்றொர் வாளரக்கன் எனவெம்மையால் 
ஆற்றினான் செருகண்டவர் அஞ்சினார் 


மாறிமாறி வரிசிலை வாங்கினான் 
நூறு நூறினொடு ஐயிருநூறவை 
வேறுவேறு திசையுற வெங்கணை 
நூறி நூறி இராமன் நுறுக்கினான் 


காலும் வெங்கனலும் கடைகாண்கிலா 
மாலும் கொண்ட வடிக்கணை மாமுகம் 
நாலும் கொண்டு நடந்தது நான்முகன் 
மூலமந்திரம் தன்னொடு மூட்டலால் 


அக்கணத்தின் அயன்படை ஆண்டகை 
சக்கரப்படை யொடும் தழீ இச்சென்று 
புக்கதக் கொடியோன் உரம்பூமியும் 
திக்கனைத்தும் விசும்பும் திரிந்தவே 


முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன் நாள் 
எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் 
திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் 
புக்கோடி உயிர்பருகிப்புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி 


| [ இராவணன் வதைப்படலம் 16, 17 , 24, 28 , 31 , 47 , -50, 53 , 54 , 55 , 

60 , 71 , 78 , 89 , 94 , 97 , 98 , 102 , 104 , 105. 108 , 134 , 141 , 147 , 148 , 
149 , 151 , 155 , 156 , 161 , 162 , 183 , 187 , 194 , 196 , 197 ] 


இராமபாணத்தால் இராவணன் இறந்தது 

கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ எனதிணிதோட் காட்டினின்றும் 
தார்நின்ற மலைநின்றும் பணிக்குலமும் மணிக்குலமும் தளர்ந்து சிந்தப் 
போர்நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்கத் 
தேர் நின்று நெடுநிலத்துச் சிகரமும் கீழ்ப் படவிழுந்தான் சிகரம் போல்வான் 

வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க மனமடங்க வினையம் வீயத் 
தெவ்மடங்கப் பொருதடக்கைச் செயலடங்க மயல் அடங்க ஆற்றல்தேயத் 
தம்மடங்கு முனிவரையும் தலையடங்கா நிலையடங்கச் சாய்ந்த நாளின் 
மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர்துறந்த முகங்களம்மா 

( இராவணனவதைப்படலம் 199 , 2001 

அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் 

வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும் 
பொன்றினான் என்று தோளைப் பொதுவற நோக்கும் பொற்புக் 
குன்றி ஆசுற்றதன்றே இவன் எதிர்குறித்த போரில் 
பின்றியான் முதுகிற்பட்ட பிழம்புள தழும்பின் அம்மா 


கார்த்த வீரியன் என்பனால் கட்டுண்டான் என்னக்கற்கும் 
வார்த்தை உண்டு அதனைக்கேட்டு நாணுறு மனத்தினேற்குப் 
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம் 
நேர்ந்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க 


மாண்டொழிந் துலகில் நிற்கும் வயங்கிசை முயங்கமாட்டாது 
ஊண்தொழி லுகந்து தெவ்வர் முறுவல் என்புகழை உண்ணப் 
பூண்தொழில் உடைய மார்பா போர்ப்புறம் கொடுத்தோர்ப் போன்ற 
ஆண்தொழி லோரிற் பெற்ற வெற்றியும் அழகிற்றென்றான் 


அவ்வுரைக் கிறுதி நோக்கி வீடணன் அருவிக்கண்ணன் 
வெவ்வுயிர்ப்போடு நீண்டவிம்மலன் வெதும்பும் நெஞ்சன் 
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா 
எவ்வுயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்றினைய சொன்னான் 


ஆயிரந் தோளினானும் வாலியும் அரிதின் ஐய 
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த - மெய்ம்மை 
தாயினும் தொழத்தக்காள்மேல் தங்கிய காதல் , தன்மை 
நோயும் நின் முனிவுமல்லால் வெல்வரோ நுவலற் பாலார் 


நாடுளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல் 
பீடுள குன்றம் போலும் பெருந்திசை எல்லையானைக் 
கோடுள தனையும் புக்குக் கொடும்புறத் தெழுந்த புண்கோள் 
பாடுள தன்றித் தெவ்வர் படைக்கலம் பட்டென் செய்யும் 


அப்பணை அனைத்தும் மார்பிற் கணியெனக் கிடந்த வீரக் 
கைப்பணை முழங்க மேல்நாள் அமரிடைக் கிடைத்த காலன் 
துப்பணை வயிரவாளி விசையினும் காலின் தோன்றல் 
வெப்பணை குத்தினாலும் வெரிநிடைப் போய அன்றே  


அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித் 
தன்னதோள் இளையை நோக்கி வீடணா தக்கதன்றால் 
என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்டச் 
சொன்னதோர் விதியினாலே கடன் சொத் துணிதி என்றான் 

[ இராவணன் வதைப் படலம் 206-213 , 215 ] 


போழ்ந்தென அரக்கன் செய்த புள் தொழில் பொறையிற்றாமால் 
வாழ்ந்தநீ இவனுக்கேற்ற வழிக்கடன் வகுத்தி என்னத் 
தாழ்ந்ததோர் கருணை தன்னால் தலைமகன் அருளத்தள்ளி 
வீழ்ந்தனன் அவன்மேல் வீழ்ந்த மலை பின்மேல் மலைவீழ்ந்தென்ன 


உண்ணாதே உயிர்உண்ணாது ஒருநஞ்சு சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக் 
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் , நீயும் களப்பட்டாயே 
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் 
எண்ணுதியோ எண்ணில் ஆற்றல் அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள் தம் 

பிரளயமே அமரர் கூற்றே ஓராதே ஒருவன் தன் உயிராசைக் குலமகள் மேல் உற்றகாதல் 
தீராத வசையென்றேன் எனைமுனிந்த முனிவு ஆறித் தேறினாயோ 
போராசைப் பட்டெழுந்த குலம் முற்றும் பொன்றவும் தான் பொங்கிநின்ற 
பேராசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசைக் கரியிரியப் புருவம் பேர்த்தாய்
அன்றெரியில் விழுவேத வதிஇவள்காண் உலகுக்கோர் அன்னையென் 
குன்றனைய நெடுந்தோளாய் கூறினேன் அதுமனத்துள் பொள்ளாதேபோய் 
உன்றனது குலமடங்க உருத்தமரில் படக்கண்டும் உறவாகாதே 
பான்றினையே இராகவனார் புயவலியை இன்றறிந்து போயினாயே 


மன்எறல்மா மலரோனும் வடிமழுவாள் படையோனும் வரங்கள் ஈந்த 
ஒன்றலா தனஉடைய முடியோடும் பொடியாகி உதிர்ந்துபோன 
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற 
ன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவனாதல் 


வீரநா டுற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் 
பேரன் நாடுற்றாயோ பிறைசூடும் பிஞ்ஞகன் தன்புரம் பெற்றாயோ 
ஆர் அணா உன்உயிரை அஞ்சாதே கொண்டகன்றார் அதெலாம் நிற்க 
மாரனார் வலியாட்டம் அவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் 


கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து 
பல்லாலே இதழதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பழி தீர்த்தாளோ 
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் தம்பி தம்மோடு 
எல்லாரும் பகைஞரே யார்முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் 

போர்மகளைக் கலைமகளைப் புகழ்மகளைத் தழுவியகை பொறாமை கூரச் 
சீர்மகளைத் திருமகளை தேவர்க்கும் தம்மோயை தெய்வக்கற்பின் 
பேர்மகளைத் தழுவுவான் உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தா பின்னைப் 
பார்மகளைத் தழுவினையோ திசையானை மருப்பு இறுத்த பணைத்த மார்பால் 

( மண்டோதரி புலம்புறு படலம் 2 , 4-10 ] 

மண்டோதரி புலம்பல் 

என்றேங்கி அரற்றுவான் தனையெடுத்துச் சாம்பவனாம் எண்கின் வேந்தன் 
குன்றோங்கு நெடுந்தோளாய் விதிநிலையை மதியாத கொள்கைத்தாகிச் 
சென்றோங்கும் உணர்வினர்போல் தேறாது வருந்துதியோ என்னத்தேறி 
நின்றான் அப்புறத்தரக்கன் நிலை கேட்டாள் மயன்பயந்த நெடுங்கண் பாவை 


அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார் 
புனைந்தபூங் குழல்விரித்து அரற்றும் பூசலார் 
இனந்தொடர்ந் துடன்வர ஏகினாள் என்ப 
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் 


தரங்கநீர் வேலையில் தடித்து வீழ்ந்தென 
உரங்கிளர் மதுகையான் உரத்தில் வீழ்ந்தனள் 
மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து 
இரங்கினள் மயன்மகள் னைய பன்னினாள் 


அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறரக்கர் வேந்தன் 
பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்ததுவும் பிடித்திலேனோ 
முன்னேயோ விழுந்ததுவும் முடித்தலையோ படித்தலைய முகங்கள் தானோ 
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்தபரிசு இதுவோ பாவம் 


வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருத்தோளும் மேலும் கீழும் 
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ 
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் 
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவீனவோ ஒருவன்வாளி 


ஆரம்போர் திருமார்பை அகல் முழைகள் எனத்திறந்திவ் உலகுக்கப்பால் 
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று 
வீரம் போய் உரங்குறைந்து வரங்குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் 
ஓரம் போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ 


பேரழகு காந்தையருக் கணியனைய சானகியார் 
அவர்தம் கற்பும் ஏந்து புயத் திராவணனார் காதலும் அச் 
சூர்ப்பணகை இழந்த மூக்கும் வேந்தர்பிரான் தயரதனார் பணி தன்னால் 
வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் 

பெருந்தவமாப் போயிற்றம்மா 


தேவர்க்கும் திசைக்கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செங்கண் மாற்கும் 
ஏவர்க்கும் வலியானுக்கு என்றுண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் 
ஆவற்கண் நீயுழந்த அருந்தவத்தின் பெருங்கடற்கும் வரம் என்றான்ற 
காவற்கும் வலியானோர் மானுடவன் உளன் என்னக் கருதினே னோ 


அரை கடையிட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு ( ள் ) பேரறிஞர்க் கேயும் 
உரைகடையிட்டளப்பரிய பேராற்றல் தோளாற்றற்கு உலப்போ ல்லை 
திரைகடையிட்டளப்பரிய அரியவரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் 
பிரைகடையிட் டழிப்பதனை அறிந்தேனோ தவப்பயனின் பெருமை பார்ப்பேன்  


ஆரானார் உலகியற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் 
வீரனார் உடல் துறந்து விண்புக்கார் கண்புக்க வேழவில்லால் 
நாரநாள் மலர்க்கணையால் நாளெல்லாம் தோளெல்லாம் நைய எய்யும் 
மாரனார் தனியிலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே 


என்றழைத்தனள் ஏங்கி எழுந்தவன் 
பொன் தழைத்த பொருவரு மார்பினைத் 
தன் தழைக் கைகளால் தழுவித்தனி 
நின்றழைத் துயிர்த்தாள் உயிர் நீங்கினாள் 

[ மண்டோதரி புலம்புறு படலம் 11 , 12 , 21-29 ] 


சீதாதேவிக்கு அனுமார் ஜெய சேதி கூறுதல் 

பின்னர் வீடணன் பேரெழில் தம்முனை 
வன்னிகூவி வான் முறையால் மறை 
சொன்ன ஈமவிதி முறையால் தொகுத்து 
இன்னல் நெஞ்சினோ டிந்தனத் தேற்றினான் 


கடன்கள் செய்து முடித்துக் கணவனோடு 
உடைந்து போன மயன் மகளோடுடன் 
அடங்க வெங்கனலுக்கு ஆவியாக்கினான் 
குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான் 

( மண்டோதரி புலம்புறு படலம் 31-32 ] 


சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று 
ஏதில் வானர வீரரோடு ஏகிநீ 
ஆதிநாயகன் ஆக்கிய நூல் முறை 
நீதியானை நெடுமுடி சூட்டுவாய் 


மெய்கொள் வேத விதிமுறை விண்ணுளோர் 
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட 
ஐயன் ஆணையினால் இளங்கோளரி 
கையினால் மகுடம் கவித்தானரோ 

( வீடணன் முடிசூட்டுப் படலம் 2 , 6 ] 
இப்புறத்து இனஎய்துறு காலையில் 
அப்புறத்தை உன்னி அனுமனை 
துப்புறச் செய்யவாய் மணித் தோகைபால் 
செப்புறு இப்படிப்போய் எனச் செப்பினான் 


ஏழை சோபனம் ஏந்திழை சோபனம் 
வாழி சோபனம் மங்கல சோபனம் 
ஆழியான அரக்கனை ஆரியச் 
சூழியானை துகைத்தது சோபனம் 


பாடினான் திரு நாமங்கள் பலமுறை 
கூடு சாரியிற் குப்புற்றுக் கூத்து நின்று 
ஆடி அங்கை இரண்டும் அலங்குறச் 
சூடி நின்றனன் குன்றன்ன தோளினான் 


தலை கிடந்தன தாரணி தாங்கிய 
மலை கிடந்தன போல் மணித் தோள் நிரை 
அலை கிடந்தென ஆழி கிடந்தன 
தலைகிடந்த உடல் நிலத்தே என்றான் 

எனஉரைத்துத் திரிசடையாள் எம்மோய் 
மனவினில் சுடர்மாமுக மாட்சியாள் 
தனையொழித்து இவ்வரக்கியர் தங்களை 
வினையினிற் சுடவேண்டு வென்யானென்றான் 

[ பிராட்டி திருவடி தொழுத படலம் 1. 3-5 , IT 


சீதாதேவி அனுமாரை உபசரித்தல் 


ஒருகலைத்தனி ஒண்மதி நாளொடும் 
வருகலைக்குள் வளர்வது மானுறப் 
பொருகலைக் குலம் பூத்தது போன்றனள் 
பருகலுற்ற அமுது பயந்தநாள் 


768 


ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திடத் 
தேம்பும் நுண்ணிடை தேயத்திரள் முலை 
ஏம்பலாசைக்கு இரட்டி வந்தெய்தினாள் 
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் 


மேக்கு நீங்கிய வெள்ள உவகையால் 
ஏக்க முற்றொன்று இயம்புவது யாது என 
நோக்கி நோக்கி அரிதென நொந்துளேன் 
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ 


முன்னை நீக்குவென் மொய்சிறை என்றநீ 
பின்னை நீக்கி உவகையும் பேசினை 
என்ன பேற்றினை ஈகுவது என்பதை 
உன்னி நோக்கி உரைமறந் தோவினேன் 


உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி 
விலையிலாமையும் உன்னினேன் மேலவை 
நிலையிலாமை நினைந்தனென் நின்னை என் 
தலையினால் தொழவே தகும் தன்மை யோய் 


யானிழைத்த வினையினின் இவ்விடர் 
தானடுத்தது தாயினும் அன்பினோய் 
கூனியின் கொடியார் அலரே இவர் 
போன அப்பொருள் போற்றலை புந்தியோய் 


எனக்கு நீயருள் இவ்வரம் தீவினை 
தனக்கு வாழ்விடமாகிய சழக்கியர் 
மனக்கு நோய்செயல் ! என்றனள் மாமதி 
தனக்கு மாமறுத் தந்த முகத்தினாள் 

[ பிராட்டி திருவடி தொழுத படலம் 7 , 8 , 13 , 14 , 15 , 22. 2 


சீதாதேவி அக்கினியில் குளித்தெழுந்தது 

என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான் 
தன் துணைப் பெருந்தேவி தயா எனா 
நின்றகாலை நெடியவன் வீடண 
சென்று தா நம தேவியைச் சீரொடும் 


மானமீது அரம்பையர் சூழ வந்துளாள் 
போன பேருயிரினைக் கண்ட பொய்உடல் 
தானது கவர் உறும் தன்மைத் தாம் எனல் 
ன்னம் காட்டுற அவனி எய்தினாள் 


பிறப்பினும் துணைவனைப் பிறவிப் பேரிடர் 
துறப்பினும் துணைவனைத் தொழுது நான் இனி 
மறப்பினும் நன்று இனிமாறு வேறு வீழ்ந்து 
இறப்பினும் நன்றென ஏக்கம் நீங்கினாள் 


கற்பினுக் கரசினைப் பெண்மைக் காப்பினை 
பொற்பினுக் கழகினைப் புகழின் வாழ்க்கையைத் 
தற்பிரிந் தருள்புர் தருமம் போலியை 
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான் 


அடைப்பர் ஐம்புலன்களை ஒழுக்கம் ஆணியாச் 
சடைப்பரம் புணைந்தொளிர் தகையின் மாதவம் 
படைப்பர் வந்திடையொரு பழிவந்தாலது 
துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் 


ஆதலின் புறத்தினி யாருக்காக என் 
கோதறு தவத்தினைக் கூறிக் சாட்டுகேன் 
சாதலின் சிறந்ததொன்றில்லை தக்கதே 
வேத ! நின் பணியது விதியும் என்றனள் 


இளையவன் தனையழைத்து இடுதி தீஎன 
வளை ஒலி முன்கையாள் வாயின் கூறினாள் 
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் 
களைகணைத் தொழ அவன் கண்ணிற்கூறினான் 


ஏங்கிய பொருமலின் இழிகண்ணீரினன் 
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் 
ஆங்கெரி விதிமுறை அமைவித்தான் அதன் 
பாங்குற நடந்தனள் பதுமப் போதினாள் 


கனத்தினால் கடந்த பூண்முலைய கைவளை 
மனத்தினான் வாக்கினான் மறுவுற்றேன் எனின் 
சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா என்றாள் 
புனத்துழாய் கணவற்கு வணக்கம் போக்கினாள் 


நீத்தரும் புனலிடை நிவந்த தாமரை 
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப் 
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்செனத் 
தீர்ந்தது அவ்எரி அவள் கற்பின் தீயினால் 


அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து 
எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான் 
தொழுங்கரத் துணையினன் சுருதி ஞானத்தின் 
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான் 

[ பிராட்டி திருவடி தொழுத படலம் 24 , 45-47 , 54 , 64-66 , 71-74 ]
அக்கினி பகவான் முறையிடல் 

கனிந்துயர் கற்பெனும் கடவுள் தீயினால் 
நினைந்திலை என்வலி நீக்கினாய் என 
அநிந்தனை அங்கிநீ அயர்வில் என்னையும் 
முனிந்தனை ஆம்என முறையிட்டானரோ 


இன்னதோர் காலையில் இராமன் யாரைநீ 
என்னை நீஇயம்பியது எரியுள் தோன்றி இப் 
புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய் 
அன்னது ஆர் சொல்ல ஈதறைதீயால் என்றான் 


அங்கியான் என்னை இவ் அன்னை கற்பெனும் 
பொங்கு வெந்தீச்சுடப் பொறுக்கிலாமையால் 
இங்கணைந்தேன் எனதியற்கை நோக்கியும் 
சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் 

வேட்பதும் மங்கையர் விலங்கினார் எனின் 
கேட்பதும் பல்பொருட்டு ஐயம் கேடற 
மீட்பதும் என் வயின் என்றும் மெய்ப்பொருள் 
வாட் பெருந் தோளினாய் மறைகள் சொல்லுமால் 


சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய்த்துணிவு 

 
ஐயறு பொருள்களை ஆசில் மாசொரீ இக் 
கையுறு நெல்லியங் கனியின் காட்டும் என 
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ 
பொய்யுறா மாருதி உரையும் போற்றலாய் 

தேவரும் முனிவரும் திரிய நிற்பவும் 
மூவகை உலகமும் கண்கள் மோதிநின்று 
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு 
ஏவமென்றொரு பொருள் யாண்டுக் கொண்டியோ 

பெய்யுமே மழை ? புவிபிளப்பதன்றியே 
செய்யுமே பொறையறம் நெறியிற் செல்லுமே ? 
உய்யுமே உலகிவள் உணர்வு சீறினால் ? 
வையுமேல் மலர்மிசை அயனும் மாயுமே 

பாடுபன்மொழி இனைய பன்னிநின்று 
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்தெழச் 
சூடுறும் மேனிய அலரித் தோகையை 
மாடுறக் கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் 

அழிப்பில சான்று நீ உலகுக் காதலால் 
இழிப்பில சொல்லி நீ இவளை யாதும்ஓர் 
பழிப்பிலள் என்றனை பழியும் இன்றினிக் 
கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான் 

[ பிராட்டி திருவடி தொழுத படலம் 76-84 
பிரம்மதேவர் ஸ்ரீராமனரத் தோத்திரம் செய்தல் 

உணர்த்துவாய் உண்மை ஒழிவின்றுகாலம் வந்துளதால் 
பணர்த்தும் மாயையில் பொதுவுற நின்றவை உணரா 
இணர்த்துழாய்த் தொங்கல் இராமற்கு என்றிமையவர் இசைப்பத் 
தணப்பில் தாமரைச்சதுமுகன் உரைசெயச் சமைந்தான் 

மன்னர் தொல்குலத் தவதரித்தனை ஒருமனிதன் 
என்ன உன்னலை உன்னை நீ இராமகேள் இதனைச் 
நின்னலா தில்லை நின்னின் வேறுளதிலை நெடியோய் 
 


பகுதி என்றுளது யாதினும் பழையது பயந்த 
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்குமேல் நின்ற 
புகுதியாவர்க்கும் அரிய அப்புருடனும் நீ இம் 
மிகுதி உன்பெரு மாயையினால் வந்த வீக்கம் 


முன்பு பின்பு இருபுடையெனும் குணிப்பரு முறைமைத் 
தன்பெரும் தன்மைதாம் தெரிமறை களின் தலைகள் 
மன்பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் 
அன்புநின் னையல்லால் மற்று இங்கு யாரையும் அறையா 


ஐயைஞ் சாகியதத்துவம் தெரிந்தறிந் தவற்றின் 
மெய்எஞ்சா வகைமேல் நின்ற நினக்குமேல் யாதும் 
பொய்எஞ்சா இலது என்னும் ஈது அருமறை புகலும் 
வையம் சான்று இனிச் சான்றுக்குச் சான்றிலை வழக்கால் 


அளவையால் அளந்து ஆம் அன்றென்று அறிவுறும் அமைதி 
உளவை யாவையும் உனக்கில்லை உபநிடத்துனது 
களவை ஆய்ந்துறந் தெளிந்திலது ஆயினும் கண்ணால் 
துளவை ஆய்முடியாய் உளைநீஎனத் துணியும் 


அரணம் என்றுளது உன்னைவந்து அறிவுகாணாமல் 
கரணம் அவ்அறிவைக் கடந்து அகல்வரிதாக 
மரணம் தோற்றம் என்றிவற்றிடை மயங்குப அவர்க்குன் 
சரணம் அல்லதோர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் 


தோற்றம் என்பதொன்று னக்கில்லை நின்கணே தோற்றும் 
ஆற்றல்சால் முதற்பகுதி மற்று அதனுளாம் பண்பால் 
காற்றை முன்னுடைப் பூதங்கள் அவை சென்று கடைக்கால் 
வீற்று வீற்றுற்று வீவுறும் நீ என்றும் விளியாய் 


மின்னைக் காட்டுதல் போல் வந்துவிளியும் இவ்வுலகம் 
தன்னைக் காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே 
என்னைக் காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் 
உன்னைக் காட்டலை ஒளிக்கின்றும்இலை மறை உரையால் 


ஓங்காரப் பொருள் தேருவோர் தாம் உனை உணர்வோர் 
ஓங்காரப் பொருள் என்றுணர்ந்து இருவினை உகுப்போர் 
ஓங்காரம் பொருள்ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் 
ஓங்காரப் பொருளே பொருள்என்கா உரவோர் வாளா 


னைய தாகலின் எமையும் மூன்றுலகையும் ஈன்று 
மனையின் மாட்சியை வளர்த்த எம்மோயினை 
முனையல் என்றது முடித்தனன் முந்து நீர் முளைத்த 
சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன் 

[ பிராட்டிதிருவடி தொழுதபடலம் 85-88 , 91-95 , 97 , 98 ] 


மக்களையும் மருமகளையும் சக்கரவர்த்தி புகழ்தல் 


பின்னும் நோக்கினான் பெருந்தகைப் புதல்வனைப் பிரிந்த 
ன்னலால் உயிர் துறந்து இருந்துறக்கத்துள் இருந்த 
மன்னவற் சென்றுகண்டு நின்மைந்தனைத் தெருட்டி 
முன்னை வான் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் 


ஆதியான் பணியருள் பெற்ற அரசருக் கரசன் 
காதல் மைந்தனைக் காணிய உவந்ததோர் கருத்தால் 
பூதலத்திடைப் புக்கனன் புகுதலும் பொருவில் 
வேதவேந்தனும் அவன் மலர்த்தாள் மிசைவிழுந்தான் 


வீழ்ந்த மைந்தனை எடுத்துத்தன் விலங்கல் ஆகத்தின் 
ஆழ்ந்தழுந்திடத் தழுவி கண்ணருவி நீராட்டி 
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் 
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்றிவை புகன்றான் 

அன்று கேகயன் மகள் கொண்ட வரம் என்னும் அயில்வேல் 
இன்றுகாறும் என்இதயத் திடைநின்றது என்னைக் 
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றதுன் குலப்பூண் 
மன்றல் ஆகமாம் காந்தமாமணி இன்று வாங்க 


மைந்தரைப் பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார் 
சுந்தரப் பெருந்தோளினாய் என் துணைத் தாளின் 
பைந்துகளும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய் 
உய்ந்தவர்க்கு அரும்துறக்கமும் புகழும் பெற்றுயர்ந்தேன் 


என்று மைந்தனை எடுத்தெடுத் திறுகுறத்தழுவிக் 
குன்று போன்றுள தோளினான் சீதையைக் குறுகத் 
தன் துணைக் கழல் வணங்கலும் கருணையால் தழுவி 
நின்று மற்றிவை நிகழ்த்தினான் நிகழ்த்தரும் புகழோன் 


நங்கை மற்றுநின் கற்பினை உலகுக்குக் காட்ட 
அங்கி புக்கிடு என உணர்த்தியது மனத்தடையேல் 
சங்கை உற்றவர் தேறுவதுண்டு அது சரதம் 
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக்கருதேல் 


பொன்னைத் தீயிடைப்பெய்வது அப்பொன்னுடைத் தூய்மை 
தன்னைக் காட்டு தற்கென்பது மனக்கொளல் தகுதி 
உன்னைக் காட்டினன் கற்பினுக்கரசி என்றுலகில் 
பின்னைக் காட்டுவது அரியது என்றெண்ணி இப்பெரியோன் 


பெண்பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை 
பண்பிறந்தவர்க்கு அருங்கலம் ஆகியபாவாய் 
மண்பிறந்தகம் உனக்கு நீ வானின்றும் வந்தாய் 
எண்பிறந்த நின்குணங் களுக்கு இனி இழுக்கிலையால் 


என்று பின்னரும் இராமனை யான் உனக்கீவது 
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் எனஉனையான் 
சென்று வானிடைக் கண்டுஇடர் தீர்வென் என்றிருந்தேன் 
இன்று காணப்பெற்றேன் இனிப்பெறுவ தென்என்றான் 


ஆயினும் உனக்கமைந்தது ஒன்றுரை என் அழகன் 
தீயள் என்று நீ துறந்தஎன் தெய்வமும் மகனும் 
தாயும் தம்பியும் ஆம்வரம் தருக எனத்தாழ்ந்தான் 
வாய்திறந் தெழுந்தார்த்தன உயிரெலாம் வழுத்தி 


வரம் இரண்டளித்து அழகனை இளவலை மலர் மேல் 
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே 
உரவுமான மீதேகினன் உம்பரும் உலகும் 
டரவும் மெய்யினுக்கு உயிரளித்து றுபுகழ்படைத்தோன் 

( பிராட்டிதிருவடி தொழுதபடலம் 101-105 , 107- 110 , 114 , 115 , 119 ] 

அனுமார் வசந்தனைக் கொண்டுவருதல் 


அனைய புட்பகவிமானம் வந்து அவனியை அணுக 
இனிய சிந்தனை இராகவன் உவகையொடு இனிநம் 
னயம் முற்றியதென்று கொண்டு ஏறினன் விண்ணோர் 
புனைமலர் சொரிந்தார்த்தனர் ஆசிகள் புகன்றே 


வணங்கு நுண்ணிடைத் திரிசடை வணங்கவான் கற்பிற்கு 
இணங்கர் இன்மையால் நோக்கி ஓரிடரின்றி இலங்கைக்கு 
அணங்குதான் என இருத்தி என்று ஐயன் மாட்டணைந்தாள் 
மணங்கொள் வேல் இளங் கோளரிமானம் மீப்படர்ந்தான் 

[ மீட்சிப்படலம் 4 , 5 ] 
[ மிகைப்பாடல்கள் - மீட்சிப்படலம் ] 


வரிசிலை இராமன் ஓலைமறம்புரி மறலி காண்க 
எரிகொளும் இலங்கைப் போரில் இன்னுயிர் துறந்து போந்த 
குரிசிலை வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க அன்றேல் 
உரியதன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்றெழுதிவிட்டான் 


அக்கணத் தருகுநின்ற அனுமன் கைத்திரு முகத்தைத் 
தக்கவன் நீட்டவாங்கித் தன்தலை மிசையில் சூடி 
இக்கணம் வருவேன் வாழி இராம என் றிருதோள் கொட்டி 
மிக்கமா மடங்கல் போல விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான் 

துளங்கி அந்தகன் வந்து அடிதொழுதலும் தோலா 
வளங்கொல் மாருதி வசந்தனைக் காட்டு என அவனும் 
உளங்கலங்கி உன்நாயகன் அடியர் இங்குறார்கள் 
விளங்கு கீர்த்தியாய் தேடுவிண்ணவர் புரத்தென்றான் 


சொன்ன கூற்றுவன் தன்னைத்தன் வாலிடைத் துவக்கிப் 
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப்புகலும் 
முன்னைவந்து கண்டிந்திரன் முனிவு எனோ என்ன 
மன்ன ஏகுவென் வயந்தனைக் காட்டுதி என்றான் 


சிந்தை தூயவன் செல உளந்துளங்கு நான்முகனும் 
வந்த காரியம் எது வென வயந்தனைப் பார்த்துச் 
சுந்தரத் தடந்தோள் வில்லிநின்றனன் அவன் தான் 
உந்தன் நீள்பதத் துளானெனின் காட்டென உணர்த்தும் 



என்னுடைப் பெரும்பதத்தின் மேலாகிய எந்தை 
தன்னுடைப் பெருஞ்சோதியின் கீழதாய்த் தழைத்த 
மின்னும் நீடொளி விண்டுவின் பதத்துளான் வீறலோய் 
அன்னவன் தனைக்கொணருதி ஆங்கணைந் தென்றான் 


என்ற நான்முகன் தனையும் இந்திரன் யமனோடு 
ஒன்ற வால் கொடு துவக்கினன் ஒருகுதி கொண்டான் 
மின் திகழ்ந் தொளிவிளங்கிடும் விண்டுவின் பதத்தில் 
சென்று கண்டுகொண் டிழிந்தான் திசைமுகன் பதியில் 


மலரின் மேல் அயன் வசந்தற்கு முன்உரு வழங்க 
குலவு வாசவன்யமனை விட்டு இருநிலம் குறுகி 
அலகில் வீரன் தன் அடியிணை அவனொடும் வணங்கிச் 
சலமும் தீர்ந்தனன் படையையும் ஏற்றினன் தேர்மேல் 


ஸ்ரீராமர் இலங்கையில் பலர்பட்ட இடங்களைக் காட்டுதல் 

வரந்தரும் முதல்மழுவலான மூனிவரர் வானோர் 
புரந்தாரதி மற்றேனை யோர் தனித் தனிப்புகழ்ந்தாங்கு 
அரந்தை வெம்பிறப்பறுக்கும் நாயக நினதருளால் 
குரங்கினம் பெறுகஎன்றனர் உள்ளமும் குளிர்ப்பார் 


முந்தை நாள் முதல் கடை முறையளவையும் முடிந்த 
அந்தவானரம் அடங்கலும் எழுந்து உடனார்த்துச் 
சிந்தையோடு கண்களிப்புறச் செருவெலாம் நினையா 
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின மகிழ்ந்து 

[ பிராட்டி திருவடி தொழுதபடலம் 122 , 12 :) 
அனையவாகிய சேனையோடு அரசன் அனிலன் 
தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை 
வளையும் வார்கழல் இலங்கையர்மன்னை வந்திங்கு 
இனிதின் ஏறுகமின் விமானம் என்று இராகவன் இசைத்தான் 

( மீட்சிப்படலம் 15 ] 


[ மீட்சிப்படலம் மிகைப்பாடல்கள் ) 
வென்றிவேல் கருங்கண்மானே என்னொடும் இகலிவெய்ய 
வன்றிறல் அரக்கன் ஏற்ற வடதிசை வாயில் நோக்காய் 
கன்றிய அரக்கன்சேனை காவலன் தன்னை நீலன் 
கொன்றுயிர் கூற்றுக் கீந்த குணதிசைவாயில் நோக்காய் 


மறத்திறல் வாலிமைந்தன் வச்சிரத்தெயிற் றோன் தன்னை 
செறுத்துயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் 
அறத்தினுக் கலக்கண்செய்யும் அகம்பன் தன்உடலை ஆவி 
வெறுத்தெதிர் அனுமன் நின்ற மேற்றிசைவாயில் நோக்காய் 


கருங்கடல் நிகர்ப்பவான அகழிஓர் மூன்றும் காணாய் 
மருங்கடர் களபக்கொங்கை மதிநுதல் மிதிலைவல்லி 
இருங்கட முகத்தயானை இவுளிதேர் காலாள் துஞ்சி 
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய் 

கொடிமதில் இலங்கைவேந்தன் கோபுரத்தும்பர் தோன்ற 
அடுதிறல் பருதிமைந்தன் அவன்நிலை குலையத் தாக்கிச் 
சுடர்முடி பறித்த அந்நாள் அன்னவன் தொல்லை வெம் போர்ப் 
படியினை நோக்கி நின்ற சுவேலமால் வரையைப்பாராய் 
 


குடதிசை வாயில்ஏகக் குன்றரிந்தவனை வென்ற 
விடநிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்த தென்முன் 
வடதிசை வாயில்மேவ . இராவணன் மவுலிபத்தும் 
உடலமும் இழந்ததிங்கென் றுணர்த்திவேறு ரைக்கலுற்றான்  


ஸ்ரீராமர் சீதைக்குச் சேதுவைக்காட்டி அதின் மகிமை கூறல் 

கங்கையொடு யமுன கோதாவரி நருமதைகாவேரி 
பொங்குநீர் நதிகள் யாவும் டிந்தலால் புன்மை போகா 
சங்கெறி தரங்கவேலை நட் - இச் சேது என்னும் 
இங்கிதின் எதிர்ந்தோர் புன்மையாவையும் நீக்குங்கண்டாய் 


நெற்றியின் அழலும் செங்கண் நீறணிகடவுள் நீடு 
கற்றையம் சடைமேல் மேவுகங்கையும் சேதுவாகப் 
பெற்றிலம் என்று கொண்டே பெருந்தவம் புரிகின்றாளால் 
மற்றி தன் தூய்மை எவ்வாறுரைப்பது மலர்க்கண் வந்தாய் 

[ மீட்சிப்படலம் 22 , 23 ] 
[ மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ] 


மற்றிதன் தூய்மை எண்ணின் மலரயன் தனக்கும் எட்டா 
பொன்தொடித் தெரிவையான் என்புகலுகேன் நேட்டி அன்பால் 
பெற்றதாய் தந்தையோடு தேசிகர்ப் பிழைத்துச் சூழ்ந்த 
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்களாவார் 


ஆவினைக் குாவரோடும் அருமறை முனிவர் தம்மைப் 
பாவையர் குழுவை இன்சொல் பாலரைப் பயந்து தம்மில் 
மேவின அவரைச் செற்றோர் விரிகடல் சேதுவந்து 
தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர்தொழும் சுரர்களாவார் 
 


அந்தணர் தம்மைக் கொன்றோர் அருந்தவர்க் கிடுக்கண் செய்தோர் 
செந்தழல் வேள்விசெற்றோர் தீமனையிடுவோர் தம்பால் 
வந்திரந்தவர்க் கொன்றீயா வைக்கும் வன்நெஞ்சர் பெற்ற 
தந்தையைத் தாயைப் பேணாத்தறுகணர் பசுவைச்செற்றோர் 23 - 2 


குருநக்களை இகழ்வோர் கொண்டகுலமகள் ஒழியத்தங்கள் 
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர் உயிர்கொல் தீம்பர் 
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர் ஊன்கள் தின்று 
பெருக்கிய உடலர்பொய்ம்மை பிதற்றுவோர் பீடைசெய்வோர்  


வெய்யவன் உச்சிசேர மிகவழி நடந்து போவோர் 
மையறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள் 
கையுற முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கொன்று ஈயார் 
துய் அன சொற்கள் சொல்வோர் சோம்பரைச் சுளித்துக்கொள்வோர் 


ஊரது முனியவாழ்வோர் உண்ணும்போது உண்ணவந்தோர்க்கு 
ஆர்வமொடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணேசென்று 
நீரினில் இழிவோர் பாவநெறிகளில் முயல்வோர் சான்றோர் 
தாரமது அணைவோர் மூத்தோர்தமை இகழ் அறிவிலா தோர் 

கண்டிலாது ஒன்றுகண்டோம் என்று கைக்கூலி கொள்வோர் 
மண்டலாதிபர் முன் சென்று வாழ்குடிக்கு அழிவு செய்வோர் 
மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை 
உண்டிருந் தவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் 


பின்னைவா தருவென் என்று பேசித்தட்டுவிக்கும் பேதை 
கன்னியைக் கலக்கும்புல்லோர் காதலால் கள்ளும் மாந்தர் 
துன்னிய கலைவல்லோரைச் சுளிந்துரைத் திகழ்வோர் சுற்றம் 
ன்னலுற்றிடத் தாம்வாழ்வோர் எளியரை இன்னல் செய்வோர் 


ஆண்டவன் படவும் தங்கள் ஆருயிர் கொண்டு மீண்டோர் 
நாண்துறந் துழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை 
வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர் 
பூண்டுமேல் வந்த பேதை அடைக்கலம் போக்கிவாழ்வோர்  


கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர் தங்கள் 
வயிற்றீடைக் கருவைத்தா மேவதைப்பவர் மாற்றார் தம்மைச் 
செயிர்க்குவதன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர் 
மயிர்க்குருள் ஒழியப்பெற்றம் வௌவுவோர் வாய்மை இல்லோர் 



கொண்டவன் தன்னைப் பேணாக்குல மகள் கோயிலுள்ளே 
பெண்டிரைச் சேர்வோர் தங்கள் பிதிர்களை இகழும் பேதை 
உண்டலே தருமம் என்போர் உடைப் பொருள் உலோபர் ஊரைத் 
தண்டமே இடுவோர் மன்று பறித்துண்ணும் தறுகண்ணாளர்  


தேவதானங்கள் மாற்றித் தேவர்கள் தனங்கள் வௌவும் 
பாவகாரியர்கள் நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து 
காஎனா அபயம் என்று கழலடைந்தோரை விட்டோர் 
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர் பொய்ச்சான்று போயார் 


முறையது மயங்கி வாழ்வோர் மூங்கை அந்தகர்க்குத் தீயோர் 
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் 
கறைபடு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும் 
பறவைகள் மிருகம் பற்றிப் பஞ்சரத்தடைக்கும் பாவர் 


கார்க்கன வரை சேர்கானில் கடுங்குழி கல்லும் கட்டர் 
நீர்க்கரை யதனில்ஓட்டி நெடுங்கலை முயல்மான் கொல்வோர் 
ஊர்க்கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப்பசு எடாது போவோர் 
வார்க்கெழு தனமின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் 


வழியடித் துண்போர் கேட்டால் வழிசொல்லாதவர்கள் வைப்பைப் 
பொழிவிருள் களவு காண்போர் பொய் சொல்லிப் பண்டம் விற்போர் 
அழிவிலா வாய்ம்மை கொன்றோர் அடைந்தது தெரிசிக்கத் தீர்க என்றான் 


ஆதியர் மூவர்க்கந்நாள் அருமறை அறைந்த அந்த 
நீதியாம் புராணந்தன்னை இகழ்பவர் நிறையக் கேளார் 
பாதியில் விட்டுவைப்போர் படித்தவர்ப் பிரியப்படுத்தார் 
போதம் இலாதார் மற்றச் சமயம் பொல்லாததென்பார் 


என்றிவர் முதலாமற்றும் எழுநர கடையும் பாவம் 
ஒன்றினர் நன்றி தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் 
துன்றிய வினைகள் எல்லாம் சுடர் கண்ட இருளேபோலத் 
தென்திசை வந்து சேதுத் தெரிசிக்கத் தீரும் என்றான்  


ஸ்ரீராமர் சீதைக்கு வந்தவழி அடையாளங்கூறல் 


போதா விசும்பில் திகழ் புட்பகம் போ த லோடும் 
சூதார்முலைத் தோகையை நோக்கி முன்தோன்று சூழல் 
கோதவரி மற்றதன் மாடுயர் குன்று நின்னைப் 
பேதாய் பிரிவுத்துயர் பிழை பிணித்ததென்றான் 


சிரத்து வாசவண்டு அலம்பிடு தெரிவை கேள் இதுநீள 
தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் 
வரத்துவாசன் வணங்கிடு சித்திரகூடம் 
பரத்து வாசவன் உறைவிடம் இது எனப்பகர்ந்தான் ( மீட்சிப்படம் 31 , 32 ] 


[ மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ) 
கடிகமழ் குழலினாளே கார்காலம் யாங்கள்வைகும் 
வடிவுடைச் சிகரம்ஓங்கும் மாலியவானை நோக்காய் 
அடுதிறல் பருதிமைந்தன் நகரதன் அழகுபாராய் 
எடிவுடை மலை ஏழன்ன மராமரம் ஏழும் நோக்காய்  


கனிவளர் பவளச் செவ்வாய் கனங்குழை நின்னைக்காணாத் 
துனிவளர் துன்பம் நீங்கத் தோழமை நாங்கள் கொண்ட 
பனிவளர் இருளை மாற்றும் பகலவன் சேயும் யாமும் 
நனிவளர் நட்புக்கொண்ட நலந்தரு நாகம்நோக்காய்  


மாழை ஒண்கண்ணாய் உன்னைப்பிரிந்து யான்வருந்தும் நாளில் 
தாழ்விலாத் துயரம் நீங்கத்தாமரை உந்தியான்கை 
ஆழியாம் ஆற்றலானை அனுமனை அரக்கர் அஞ்சும் 
பாழியான் தன்னைக் கண்டபம்பை யாறதனைப் பாராய்  


சவரியது இருக்கைதானும் கவந்தனைத் தடிந்தகானும் 
இவர் செய எழுந்த ஆற்றல் கான்உயிர் இழந்தபாரும் 
சவையுறு சுகுட்டன்மைந்தன் சரவங்கன் முதலோர்காதல் 
கவையறு முனிவர் தங்கள் இடங்களும் கருதிநோக்காய் 


விரைகமழ் ஓதிமாதே விராதன்வந் தெதிர்ந்து போர் செய் 
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடுவரை அதனை நோக்காய் 
சரதன் நான் அரசுவேண்டேன் தடமுடிசூடுக என்று 
பரதன்வந்தழுது வேண்டும் பருவரை அதனைப்பாராய் 


ஸ்ரீ ராமர் வரவில்லை என்று பரதர் புலம்பல் 


கருகும் வார்குழல் சனகியோடு இளவல் கைதொழுதே 
அருகுசார்தர அருந்தவன் ஆசிகள் வழங்கி 
உருகு சாதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை 
பருகு மாரமிழ் தொத்து உளங்களித்தனன் பரிவால் 


இன்று நாம் பதிபோகலம் மாருதி ஈண்டச் 
சென்று தீதின்மை செப்பி அத்தீமையும் விலக்கி 
நின்ற காலையில் வருதும் என்றேயினன் நெடியோன் 
நன்றெனா அவன் மோதிரம் கைக்கொடு நடந்தான் 


நந்தியம் பதியின் தலைநாள் தொறும் 
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் 
பந்தி அம்கழல்பாதம் அருச்சியா 
இந்தியங்களை வென்றிருந்தானரோ 


அனைய னாய பரதன் அலங்கலின் 
புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை 
நினையும் காலை நினைந்தனனாம் அரோ 
மனையின் வந்தவன் எய்த மதித்த நாள் 


மீட்டெழுந்து விரிந்த செந்தாமரைக் 
காட்டை வென்றெழு கண் கலுழிப்புனல் 
ஓட்டம் உள்ளம் உயிரினை ஊசல்நின்று 
ஆட்டவும் அவலத் தழிந்தானரோ 


என க்கியம்பிய நாளும் என் இன்னலும் 
தனைப்பயந்தவன் துன்பமும் தாங்கி அவ் 
வனத்து வைகல் செய்யான் வந்தடுத்த தோர் 
வினைக் கொடும்பகை உண்டு என விம்மினான் 


அனைத்தில் அங்கொன்றும் ஆயினும் ஆகுக 
வனத்திருக்க இவ்வையம் புகுதுக 
நினைத்திருந்து நெடுந்துயர் மூழ்கிலேன் 
மனத்து மாசென் உயிரொடும் வாங்குவேன் 

[ மீட்சிப் படலம் 38 , 43 , 46 , 51 , 54. 55 , 58 


சத்துருக்கன் அரசாட்சிக்கு உடன்படாமை 

என்னப் பன்னி இளவலை என்னுழைத் 
துன்னச் சொல்லுதிர் என்னலும் தூதா போய் 
உன்னைக் கூயினன் உம்முன் எனாமுனம் 
முன்னர்ச் சென்றனன் மூவர்க்கும் பின்னுளான் 


தொழுது நின்றதன் தம்பியை நோய்சணீர் 
எழுது மார்பத்து இறுகத் தழுவினான் 
அழுது வேண்டுவதுண்டு ஐய அவ்வரம் 
பழுதில் வாய்மையினாய் தரற்பாற்று என்றான் 


என்னவாகும் கொல் அவ்வரம் என்றியேல் 
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் 
மின்னு தீயிடை யானினி வீடுவேன் 
மன்னன் ஆதி என் சொல்லை மறாதென்றான்  


கேட்ட தோன்றல் கிளர் தடக்கைகளால் 
தோட்ட தன்செவி பொத்தித் துணுக்குறா 
ஊட்டுநஞ்சம் உண்டான் ஒத்துயங்கினான் 
நாட்டமும் மனமும் தடுங்கா நின்றான் 


விழுந்து மேக்குயர் விம்மலன் வெய்துயிர்த்து 
எழுந்து நானுக்கு என்ன பிழைத்துளேன் 
அழுந்து துன்பத்தினாய் என்றரற்றினான் 
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான் 


கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப்பின்பு 
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வருமவதி போயிற்றேன்னா 
அனாது உயிர்விடவென்ற மைவானும் ஒரு தம்பி அயலேநாணாது 
யானாமிவ் வரசாள்வென் என்னே இவ்வரசாட்சி இனிதே அம்மா 


மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் 
சொல் நிற்கும் என்றஞ்சிப் புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கினாயே 
என்னின்பின் இவன் உளனாம் என்றே உன் அடிமையுனக்கிருந்ததேனும் 
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக் கீழ் இருப்பதுவும் ஒக்குமென்றான் 

[ மீட்சிப்படலம் 59-65 ) 


அக்கினியில் விழும் படிதரைக் கௌசலை அம்மன் தடுத்துக் கூறல் 

முத்துருக் கொண்டமைந்தனைய முழு வெள்ளிக் கொழுநிறத்து முளரச் செங்கண் 
சத்துருக்கன் அஃதுரைப்ப அவனிங்குத் தாழ்க்கின்ற தன்மை யானிங்கு 
ஓத்திருக்க லாலன்றே உலந்ததன்பின் இவ்வுலகை உலையொட்டான் 
அத்திருக்கும் கெடும் உடனே புகுந்தாளும் அரசு எரியோய் அமைக்க என்றான் 


அப்பொழுதின் அவ்வுரைசென்ற யோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற 
ஒப்பெழுத ஒண்ணாத கற்புடையாள் வயிறுபுடைத் தலமந்தேங்கி 
இப்பொழுதே உலகிறக்கும் யாக்கையினை முடித்தொழிந்தால் மகனே என்னா 
வெப்பெழுதி னாலனைய மெலிவுடையாள் கடிதோடி விலக்க வந்தாள் 

விரியமைத்த நெடுவேணி புறத்தசைந்து வீழ்ந்தொசிய மேனிதள்ள 
எரியமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து 
சொரிவமைப்ப தரிதாய மழைக்கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா 
பரிவமைத்த திருமனத்தான் அடிதொழுதான் அவள் புகுந்து பற்றிக் கொண்டாள் 


மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் 
முன்இழைத்த விதியின் முயற்சியால் 
பின்இழைத்ததும் எண்ணின் அப்பெற்றியால் 
என் இழைத்தனை என்மகனே என்றாள் 


நீயிது எண்ணினையேல் நெடுநாடு எரி 
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் 
தாயர் எம்மளவன்று தனியறம் 
தீயின் வீழும்உலகும் திரியுமால் 


தரும் நீதியின் தன்பயன் ஆவதுன் 
கருமமே யன்றிக் கண்டிலம் கண்களான் 
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐயநின் 
பெருமை ஊழி திரியினும் பேருமோ 


எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் 
அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ 
புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால் 
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ 


இன்று வந்தில னேயெனின் நாளையே 
ஒன்றும் வந்து உனைஉன்னி உரைத்தசொல் 
பின்றும் என்றுணரேல் பிழைத்தான் எனின் 
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் 

ஒருவன் மாண்டனன் என்று கொண்டூழி வாழ் 
பெருநிலத்துப் பெறலரும் இன்னுயிர்க் 
கருவும் மாண்டறக் காணுதி யோகலைத் 
தருமம் நீயலது இல்எனும் தன்மையோய் 


இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால் 
பிறக்கையும் கடன் என்று பின்பாசத்தை 
மறக்கை காண்மகனே வலியாவதென் 
துறக்கை தானும் என்றாள் மனந் தூய்மையாள் 

[ மீட்சிப்படலம் 66 , 67 , 69-76 ) 


பரதர் கௌசலை அம்மனோடு முறையிட்டு இரங்கல் 


மைந்தன் என்னை மறுத்துரைத்தான் எனல் 
எந்தை மெய்ம்மையும் இக்குலச் செய்கையும் 
தைந்து போக உயிர்நிலை நச்சிலேன் 
முத்து செய்த சபதம் முடிப்பெனால் 


யானும் மெய்யினுக்கு இன்னுயிர் ஈந்துபோய் 
வாத்துள் எய்திய மன்னவன் மைந்தனால் 
காதுள் எய்திய காகுத்தற்கே கடன் 
ஏனையோர்க்கும் இது இழுக்கில் வழக்கன்றோ 


தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் 
பாசத்து அன்பினைப் பற்றற நீக்கலும் 
ஈசற்கே கடன் யானஃதிழைக்கிலேன் 
மாசற்றே னிதுகாட்டுவென் மாண்டென்றான் 

[ மீட்சிப் படலம் -77.79 ) 


ஸ்ரீராமர் வரவை அனுமார் பரதருக்குக் கூறல் 

விருத்தம் - 114 தரு - 92 
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் 
மெய்யின் மெய்யன்ன நின்உயிர் வீடினால் 
உய்யுமே அவன் என்றுரைத் துள்புகாக் 
கையினால் எரியைக் கரியாக்கினான் 


ஆக்கி மற்றவன் ஆய்மலர்த் தாள்களைத் 
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கிக்கை 
வாக்கின் கூடப்புதைத்து ஒருமாற்றம் நீ 
தூக்கிக் கொள்ளத்தகும் எனக்கூறினான் 


இன்னம் நாழிகை எண்ணைந்துள ஐய 
உன்னை முன்னம் வந்தெய்த உரைத்தநாள் 
இன்னதில்லை யெனின் அடி நாயினேன் 
முன்னம் வீழ்ந்திவ் எரியில் முடிவெனால் 


ஒன்று தான் உளது உன் அடியேன் சொலால் 
நின்று தாழ்த்தருள் நேமிச்சுடர் நெடும் 
குன்று தாழ்வளவும் இதுகுன்று மேல் 
பொன்றும் நீயும் உலகமும் பொய்யிலாய் 


எங்கள் நாயகற்கு இன்னமு தீகுவான் 
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால் 
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ 
இங்கண் நல்ல தொன்றுஇன்ன மூம்கேட்டியால் 

( மீட்சிப்படலம் 81-85 } 
பரதருக்கு அனுமார் சங்கிரகராமாயணம் கூறல் 

அண்டர் நாயகன் அருளி அளித்துள்ளது 
உண்டொர் பேரடையாளம் உனக்கது 
கொண்டு வந்தனென் கோதறு சிந்தையாய் 
கண்டு கொண்டருள் வாய் எனக் காட்டினான் 


காட்டிய மோதிரம் கண்ணிற் காண்டலும் 
மூட்டுதீ வல்விடம் உற்று முற்று வார்க்கு 
ஊட்டிய நல்மருந்து ஒத்ததா மரோ 
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் 


மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து 
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா 
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும் 
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்  


வேதியர் தமைத்தொழும் வேந்தரைத் தொழும் 
தாதியர் தமைத்தொழும் தன்னைத் தான் தொழும் 
ஏதும் ஒன்றுணர்குறாது இருக்கும் நிற்குமால் 
காதல் என்றதுவும் ஓர்கள்ளின் தோன்றிற்றே 


அத்திறத் தாண் தகை அனுமன் தன்னை நீ 
எத்திறத்தாய் எமக்கியம்பி ஈதியால் 
முத்திறத் தவருளே ஒருவன் மூர்த்திவேறு 
ஓத்திருந் தாய் என உணர்கின்றேன் என்றான் 


காற்றினுக் கரசன்பால் கவிக்குலத்தினுள் 
நோற்றனள் வயிற்றின் வந்துதித்து நும் முனோற்கு 
ஏற்றிலா அடித்தொழில் ஏவலாளனேன் 
மாற்றினேன் உரு ஒரு குரங்கு மன்னயான் 


அடித்தொழில் நாயினேன் அருப்பயாக்கையைக் 
கடித்தடத் தாமரைக் கண்ணின் நோக்கெனா 
பிடித்த பொய்யுருவினைப் பெயர்த்து நீக்கினான் 
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் 


அன்னதோர் அளவையின் விசும்பின் ஆயிரம் 
துன்னிருங் கதிரவற்றோன்றி னாரெனப் 
பொன்னணி புட்பகப் பொருவில் மானமும் 
மன்னவர்க் கரசனும்வந்து தோன்றினார் 

[ மீட்சிப்படலம் 86 , 87 , 89 , 94 , 95 , 97 , 98 , 103 ] 


ஸ்ரீராமர் அனுமாரை உடனுண்ண வேண்டுதல் 


( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ] 
உருப்பவிர் கனலிடை ஒளிக்க லுற்ற அப் 
பொருப்பவிர் தோளனைப் பொருந்தி நாயினேன் 
திருப்பொலி மார்பநின் வரவு செப்பினேன் 
இருப்பன ஆயின உலகம் யாவையும் 

தீவினையாம் பலசெய்யத் தீர்விலா 
வீவினை முறைமுறை விளைவ மெய்ம்மையாய் 
நீயவை துடைத்து நின்று அழிக்கநேர்ந்தனை 
ஆயினும் அன்பினால் யாம்செய் மாதவம் 


என்றுரைத் தனுமனை இறுகப் புல்லினான் 
ஒன்றுரைத் திருப்பதென் உனக்கும் எந்தைக்கும் 
இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும் என்றனன் 
குன்றிணைத்தன உயர் குவவுத் தோளினான் 

இரவி காதலன் இலங்கையர் கோன் இவர் உதவி 
அரசின் ஆசையது எனலாம் அனுமனே என்பால் 
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு 
தருவதொன்றிலை உடன்உணும் தரமது அல்லால் 


ஸ்ரீராமர் பரத்துவாசர் செய்த விருந்துண்ணல் 

( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ) 


கொற்றவன் உடன்உண்ணுமோ கோதில் மாதவனே 
வெற்றிவீரனே என அஞ்சி நின்றனன் விமலன் 
மற்றப் போனகம் ஒருகைவாய் வைத்தபின் வாராப் 
பற்றி அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான்  


அன்னகாலையில் போனகம் அமரர்செய் பொற்கலத்தே 
முன்னம் போல்படைத்துத் திருமுன்பு வைத்தனரால் 
உன்னும் பேருலகனைத்தும் உண்டும் பசிதீரா 
மன்னன் மாமுனி விருந்துண்டு அகம்மகிழ்ந்தனனால்  


பான நல்ல முதுடன் கருப்பூரமும் பலவும் 
னைவானவர் மகளிர்கள் ஏந்தி முன் நிற்பத் 
தான மெய்ப் படைத்தம்முடைப் போகத்துள் தந்த 
ஆனகற்பக நாட்டமிழ்து என்பதும் அயின்றான் 

பரத்துவாசர் முதலானோர்க்கு ஸ்ரீராமர் ராட்சதர் மாண்டவகை கூறல் 


( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ] 
பரிகலத் தமுது ஏந்தியே பந்திகள் தோறும் 
இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு 
உரிய வீரர்கட்களித்துத் தானவர்களோ பாதி 
வரிசையால் உண்ணமாமுனி விருந்தும் உண்டனரால் 

( சங்கிரகராமாயணம் 102 -33 to 102 - 62 வரை உளது கண்டு கொள்க ) 


குகன் ஸ்ரீராமர் வரவில்லை என்று வருந்துதல் 

( மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம் ) 


மான்நேர் விழியாளுடனே வனம்முன் 
போனான் ஒருநாள் வரும் நாள் இலதோ 
தேனே அமுதே தெளிவே தெளிவின் 
ஊனே உயிரே உலகாளுடையாய்  


அம்பவளச் செவ்வாய் அனிகடகச் சேவகன் 
வம்பவிழும் சோலைக் கோசலை நாடுடைவள்ளல் 
எம்பெருமான் என்னை , இழிகுலத்து நாயேனைத் 
தம்பி எனஉரைத்த தரசரதி தோன்றானோ  


வாழிமலைத் திண்டோள் சனகன் தன் மாமயிலை 
ஏழுல தம் ஆளும்இறைவன் மருமகளைத் 
தாழ்வில் பெருங்குணத்தாள் தான்உன் கொழுந்திநீ 
தோழன் எனஉரைத்த தோன்றலார் தோன்றாரோ  


துங்க விற்கரத் தோளினார் சொன்ன நாள் 
இங்கு வந்திலர் யானிறப்பேன் எனா 
மங்கை மாரும் படையும் வன் சுற்றமும் 
அங்குநீர்க் கங்கையின் அம்பியில் ஏற்றினான்  


வேதநாதனும் வில்லியும் விரைமலர்த்திருவும் 
ஏதுசெய்யினும் என்னுயிர் முடிப்பென் எண்றெண்ணி 
ஓதநீரிடை ஓடம் உடைத்து உயிர்விடுவான் 
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான் 

கண்ணும் தோளும் வலம்துடிக்கும் கரை 
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே 
எண்ணும் காலையிலே ஏழில்மாருதி 
அண்ணல் வந்தனன் என்றுரையாடினான் 

பரதருக்கு ஸ்ரீராமர் காட்சி கொடுத்தல் 

அண்ணலே காண்டியால் அலர்ந்ததாமரைக் 
கண்ணனும் வானரக்கடலும் கற்புடைப் 
பெண்ணருங் கலமும் நின்பின் தோன்றிய 
வண்ண விற்குமரனும் வருகின்றார்களை 


ஊனுடை யாக்கைவிட்டு உண்மை வேண்டிய 
வானுடைத் தந்தையார் வரவு கண்டெனக் 
கானிடைப் போகிய கமலக் கண்ணனை 
தானுடை உயிரினைத் தம்பிநோக்கினான் 


காட்டினன் மாருதிகண்ணிற் கண்ட அத் 
தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் 
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் 
கூட்டுருக் கண்டன்ன தன்மை கூடினான் 


ஆனதோர் அளவையின் அமரர் கோனொடும் 
வானவர் திருநகர் வருவதாம்என 
மேல்நிறை வானவர் வீசுப் பூவொடும் 
தானுயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால் 


தாயருக் கன்று சார்ந்த கன்றெனும் தகையனானான் 
மாயையின் பிறந்தார்க்கெல்லாம் மனோலயம் வந்ததொத்தான் 
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடிடும்பாவை யானான் 
ஓய்வுறுத் துலர்ந்தயாக்கைக்கு உ பிர்புகுந்தனைய தொத்தான் 

[ மீட்சிப்படம் 104, 107, 110 - 112 ) 


(விருத்தத்திற் காணும் குகன் பற்றிய நிகழ்ச்சி 
மிகைப்பாடல் மீட்சிப்படலத்துள் பின்வருமாறு ) 
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுதினிது அளிப்பஐயன் 
கருந்தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும் 
விருந்தினிது அருந்தி நின்ற வேலையின் வேலைபோலும் 
பெருந்தடந் தானையோடும் கிராதர் கோன்பெயர்ந்து வந்தான் 


தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன் சூழஓடி 
அழுதனன் கமலம் அன்ன அடித்தலம் அதனில் வீழ்ந்தான் 
தழுவினன் எடுத்து மார்பின் தம்பியைத் தழுவுமாபோல் 
வழுவிலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் 


பரதர் ஸ்ரீராமர் திருவடிகளிலே வணங்குதல் 

சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி 
பூவடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமிவிம்மி 
நாவிடை உரைப்பதொன்றும் உணர்ந்திலன் நின்றநம்பி 
ஆவியும் உடலும் ஒன்றத்தழுவினன் அழுதுசோர்வான் 


தழுவினன் நின்றகாலை தத்திவீழ் அருவிசாலும் 
விழுமலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி 
வழுவுறப் பின்னிமூசி மாசுண்ட சடையின் மாலை 
கழுவினன் உச்சிமோந்து கன்றுகாண் கறவையன்னான் 

( மீட்சிப்படலம் 116 , 117 ] 


நகரியையும் ஸ்ரீராமரையும் சீரைபையும் அலங்கரித்தல் 

னையதோர் காலத்தம் பொன் சடைமுடியடிய தாகக் 
கனைகழல் அமரர் கோ மாற் கட்டவன் படுத்தகாளை 
துணைபரி கரிதேர் ஊர்தி என்றிவை பிறவும் தோலின் 
வினையுறு செருப்புக் கீந்தான் விரைமலர்த் தாளில் வீழ்ந்தான் 


பின்இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால் வாங்கிவீங்கும் 
தன்இணைத் தோள்களாரத் தழுவி அத்தம்பி மாருக்கு 
இன்னுயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான் இருவர் தாளும் 
மன்னுயிர்க் குவமைகூறவந்தவர் வணக்கம் செய்தாா 

( மீட்சிப்படலம் 118 , 119 ] 


நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி 
வம்பலர் சடையும் மாற்றி மயிர்வினை முற்றிமற்றைத் 
தம்பியரோடு தானும் தண்புனல் படிந்தபின்னர் 
உம்பரும் உவகைகூர ஒப்பனை ஒப்பச் செய்தார் 


ஊழியின் இறுதிகாணும் வலியினது உயர் பொற்றேரின் 
ஏழுயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்தப் 
பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் கவரியற்றப் 
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன்கோல் கொள்ளப் போனார் 


தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள்சிந்த 
ஓவலில் மாரிஏய்ப்ப எங்கணும் உதிர்ந்துவீங்கிக் 
கேவல மலராய் வேறோர் இடமின்றிக் கிடந்த ஆற்றால் 
பூஎனும் நாமம் இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்றன்றே 

( திருமுடி சூட்டுபடலம் 1-3 ) 


பட்டாபிஷேக மண்டபம் பரதர் சோடித்தல் 

நான்முகத் தொருவன் ஏவ நயனறி மயனென்றோதும் 
நூன்முகத்து ஓங்குகேள்வி நுணங்கியோன் வணங்குநெஞ்சன் 
கோல் முகத்தளந்து குற்றம் செற்றுல கெல்லாம் கொள்ளும் 
மான் முகத் தொருவன் நன்னாள் மண்டபம் வயங்கக்கண்டான் 

( திருமுடி சூட்டுபடலம் 13 ] 


ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் 


இந்திரகுருவும் அன்னார் எனையவர் என்னநின்ற 
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்துவிட்டார் 
சந்திர கவிகை ஓங்கும் தயாதராமன் தாமச் 
சுந்தர மவுலிசூடும் ஒரையும் நாளும் தூக்கி 


அடுக்கிய உலகம்மூன்றும் ஆதரத்தூதர் கூற 
இடுக்கொரு பேருமின்றி அயோத்திவந் திருந்தார் என்றால் 
தொடுக்குறு கவியால்மற்றைத் தொகையினை முடிவுதோன்ற 
ஒடுக்குறுத் துரைக்குந்தன்மை நான்முகத் தொருவற்குண்டோ 


சூழ்கடல் நான்கின் தேரயம் எழுவகையாகச் சொன்ன 
ஆழ்திரை ஆற்றின் நீரோடு அமைத்திஇன்று என்னாம் என்று 
ஊழயின் இறுதி செல்லும் தாதையின் உலவி அன்றே 
ஏழ்திரை நீரும் தந்தான் இடர்கெடமருந்து தந்தான் 


தெய்வ நீராடற் கொத்த செய்வினை வசிட்டன் செய்ய 
ஐயமில சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும் 
நொய்தினின் இயற்ற நோன்பின்மாதவர் நுனித்துக்காட்ட 
எய்தின இயன்றபல்வேறு இந்திரற்கியன்ற என்ன 


அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் 
பரதன்வெண் குடைகவிக்க இருவரும் கவரிபற்ற 
விரிகடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன்சடையன் வண்மை 
மரபுளோன் கொடுக்கவாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி 


வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதிமுறை மெய்யின்கொண்ட 
ஒள்ளிய நாளின் நல்லஓரையின் உலகம்மூன்றும் 
துள்ளின் களிப்ப மோலி சூடினான் கடலின்வந்த 
தெள்ளிய திருவும் தெய்வப்பூமியும் சேரும் தோளான் 

( திருமுடி சூட்டுபடலம் 11 , 12 , 14 , 15 , 16 , 17 ] 


ஸ்ரீராமர் அரசியல் 

விரத நூல் முனிவன் சொன்ன விதிநெறி வழாமை நோக்கி 
வரதனும் இளைஞற்கு ஆங்கன் மாமணி மகுடம் சூட்டிப் 
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து நாளும் 
கரை தெளிவிலாத போகக்களிப்பினுள் இருந்தான் மன்னோ 

உம்பரோ டிம்பர்காறும் உலகம்ஓர் ஏழும் ஏழும் 
எம் பெருமா னென்றேத்தி இறைஞ்சி நிேைறவல் செய்யத்தம் 
தம்பிய ரோடும் தானும் தருமமும் தரணிகாத்தான் 
அம்பரத் தனந்தர் நீங்கி அயோத்தியில் வந்தவள்ளல் 

( திருமுடி சூட்டுப்படலம் 20 , 21 ] 


வாழி 


வாழிய சீர்இராமன் வாழியசீதை கோமான் 
வாழிய கௌசலேசை மணிவயிற்றுதித்த வள்ளல் 
வாழிய வாலிமார்பும் மரா மரம் ஏழும் சாய 
வாழியகணை ஒன்றேவும் தசரதன் மதலை வாழி -மிகைப்பாடல் 21-3 


இராவணன் தன்னை வீட்டிஇராமனாய் வந்து தோன்றித் 
தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப் 
பராபரம் ஆகிநின்ற பண்பினைப் பகருவார்கள் 
தராபதியாகிப்பின் னும் நமனையும் வெல்லுவாரே மிகைப்பாடல் 21. 4 

--------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -7–

March 18, 2024
பல்லவி 
சோபனம் சொல்லவந்தேன் உன் தன் 
தொண்டன் அனு மந்தன் 

அதுபல்லவி 

சோபனம் சானகித்தாயே 
சுவாமி ராம 
முந்த முந்த 
செயம் அந்த 
காரியமே 
( சோப ) 


சரணங்கள் 


1. ராமசாமிவிடும் ஒருகணைபட்டு ராவணன் உயிர் விட்டு - ஒரு 
மாமலைபோல் தரையின் மேல் வீழ்ந்தானே வைகுந்தம் சேர்ந்தானே 
இந்த ( சோப ) 

2. தேவர் முனிவர்சிறை நீங்கிமுன் போலே செழிப்பாய் உன்னாலே 
பொல்லாப் 
பாவியரக்கன் பயங்கரம் விண்டாரே பதவிகள் கொண்டாரே இந்த 
( சோப ) 

3. இங்கேமுன் மோதிரம் தந்துதானே இரு என்று சொன்னேனே இப்போது 
அங்கேநீ எழுந்தருள எம்மானே அனுக்கிரகம் செய்தானே 
இந்த 
( சோப ) 
4. சந்திரன் இந்திரன் தேவர்க்குஸ்தாபனம் சகலர்க்கும் சோபனம் ஆகும் 
இந்த அரக்கியரை நான் கொல்லவேணும் எனக்கிது சோபனம் காணும் 
- இந்த ( சோப ) 


சீதாதேவி அனுமாரை உபசரித்தல் 

கனம் மலர்ந்த ராமதூ துவனிது சோபனஞ் சொலக் காதிற் கொண்டாள் 
தினம்மலர்ந்த சாமிதிரு வடிமலரைத் திசை நோக்கித் தெண்டனிட்டாள் 
தனம்மலர்ந்தாள் அகம்மலர்ந்தாள் முகம்மலர்ந்தாள் என் அன்னை சனகி 
முன்னாள் 
மனமலர்ந்த குறையெல்லாம் மாற்றினாள் அனுமானை வாழ்த்தினாளே . 

பல்லவி 
எந்நாளும் வாழிநீ தானே என் தெய்வம் 
உன்னைப்போல் உண்டோ அனுமானே . 
( எந்நா ) 

அநுபல்லவி 
தென்னிலங்கை அரக்கன் தன்னைப்பட்சித் தாயே 
பின்னை மங்களம் சொல்லி என்னை ரட்சித் தாயே 
( எந்நா ) 

சரணங்கள் 
1. இருக்கும்சிறை மீட்பேன் என்ற வாக்கியம் 
என்முன் 
உரைத்தபடி செய்தாயே என் 
பாக்கியம் 
அப்பாஉன் 
கருத்தில் நீ பிடித்ததேவை 
ராக்கியம் 
உனக்குப் 
பெருத்த மூவுலகும் கொடுத்தென்னசி லாக்கியம் 
சிரத்தினால் வணக்கம் செய்வதே யோக்கியம் 
( எந்நா ) 

2. மனத்தில் அடங்கா 
எனக்கிது நீதந்த 
னிச்சொல்வ தென்ன 
தனித்த சாமிக்கும் செய்தாயே 
உனக்கு நானென்ன செய்வேன் 
3. இதமாம் என் சொல்லொன்றும் 
இவ்வரக் கியர்மேல் 
உதவி செய் யும்செய்கை 
எதுவும் தந் தேன் நீ இனிபயப் 
முதல்வர் மூவருக்கும் முதுகு 
விசாரம் நீக்கி 
சரீரம் - அய்யா 
உபசாரம் - அங்கே 
ஆதாரம் 
உபகாரம் 
( எந்நா ) 
தடாதே 
கோபம் 
எடாதே இன்னம் 
விடாதே 
வரங்கள் 
படாதே 
கொடாதே 
( எந்நா ) 


சீதாதேவி அக்கினியில் குளித்து எழுந்தது 

செவிக்கே சுபம்சொல் அனுமானைத் தேவி இவ்வாழிகள் சொன்னாள் 
தீரவிபீஷணனும் சென்றான் திருச்சேவைக்குச் சமயமென்றா 
புவிக்கோர் தாயே வருகென்றான் பூவைபழங்கோலங் கொண்டாள் 
பூவாகனமேற் சென்றையன் புனை தாள் அம்மை பணித்து நின்றாள் 
தவத்தோர்க் கருளும்சீராமன் தனது குறிப்பு வேறாகச் 
சாமி அடியேன் செய்தபிழை சகிப்பாய் என்றாள் தலைமேற்கை 
குவித்தாள் முக்கால் வலம் வந்தாள் கொழுந்தன் வளர்த்த செழுந்தணலிற் 
குதித்தாள் அப்போ தெழுந்தமருக் கொழுந்தாய் சீதை எழுந்தாளே . 


பல்லவி 
எழுந்தாளே பூங்கோதை எழுந்தாளே சீதை 
( எழுந் ) 
அநுபல்லவி 
கொழுந்து போல் ஒளிஓங்கி குதித்த செந்தணல் நீங்கி 
( எழுந் ) 
சரணங்கள் 
பூமேல் ஆரணன் வாணி 
1. புரந்தரன் இந்திராணி 
பூதேசன் சர்வாணி 
அருந்தவன் உடன் கூட 
அமரர் சோபனம்பாட 
அருந்ததியும் கொண்டாட 
பூமலர் போட ( எழு ) 
செழுமஞ்சள் ஒளிமின்ன 

2. திருமேனி தனில்வன்ன 
திசையெங் கும்பளபளென்ன 
தருமம் புகழ்ந்து துள்ள 
சகலசேனையும் மெள்ள 
தழைக்கும் எழுபது வெள்ள 
கவலை தள்ள ( எழு ) 

3 மணிக்கூறை மசங்காமல் 
மலரடி கசங்காமல் 
மாலைவண்டசங்காமல் 
கலவைஈரம் வாங்காமல் 
கண்டோர்கள் ஏங்காமல் 
கனிவாய் நகை நீங்காமல் 
க்ஷணம் தாங்காமல் ( எழு ) 
குழல் மேல்வை மலராமல் 


4. குங்குமம் புலராமல் 
கூந்தற்பூ உலராமல் 
அங்கே ராமன் முன்னாலே 
அலர்ந்த தாமரைப் போலே 
அக்கினிதேவன் கைமேலே 
மின்னலை 
போலே ( எழு ) 

அக்கினி பகவான் முறையிடல் 

எழுந்ததோர் சீதைதன்னை ஏந்திய அக்கினிதேவன் 
செழுந்துழாய் மாலை ராமன் திருமுன்னே வைத்து வீழ்ந்தான் 
புழுங்கினேன் சாமி இந்த பூவைகற் பென்னும் தீயால் 
அமுங்கினேன் எனத்தன வாய்மேல் அறையிட்டான் முறையிட்டானே .. 


பல்லவி 

என்ன பிழை செய்தேன் சாமிநான் அக்கினிதேவன் 
. ஏது பிழைகள் செய்தேன் சாமி 
( என் ) 

அநுபல்லவி 
பன்னிச் சீதைதன்னை 
பதிவிராதாக் கினியாலே 
என்னில் இடுவித்தாயே 
என்னைச் சுடுவித்தாயே 
( என் ) 

சரணங்கள் 
1. எந்தப் பொருளையும் 
என்னையும் சுட்டதிந்த 
சுடுவதெனது 
சென்மம் 
அன்னைபத்தினி தன்மம் 
வேதத்திலும் எனையல்லால் 
உண்டோ ஒரு 
கன்மம் 
மெய்யாய் விளங்குமென்மேல் செய்யலாமோ வன்மம் 
( என் ) 
தாமோ 
ஆமோ 
2. பாலும் பதக்கு மோரும் பதக்கென்றெண்ணப் போமோ 
பைந்தொடி சீதைக்கிணை எந்தப் பெண்கள் 
நாலும் தெரிந்தும் இந்தக் கோலம் செய்யல் 
நங்கை வளாலே என் 
அங்கம் இப்படி வேமோ ( என் ) 
3 , நீதி அனுமான் சொன்ன 
சேதிக்கும் உண்டோ லோபம் 
நினைப்பறிந்தும் சோதித்தாய் உனக்கிதில் என்ன லாபம் 
சோதி அருந்ததிக்கும் 
சீதைக்குண்டு பிர தாபம் 
சொன்னேன் சத்தியம் இதற்கென்மேல் என்ன கோபம் ( என் ) 


ஸ்ரீ ராமர் சீதாதேவியை அங்கீகரித்தல் 

மாட்சி இவ்வாறு சொல் அக்கினிதேவனை வள்ளல் கண்டான் 
சாட்சி எல்லாருக்கும் நீயே சனகிக்கும் சத்தியம் சொன்னாய் 
மீட்சி செய்வார் என்றுவிட்டான் அப்போது மிதிலைவல்லி 
காட்சி செய்ராகவன்முன்னே யிருந்து களித்தனளே . 


பிரம்மதேவர் ஸ்ரீராமரைத் தோத்திரம் செய்தல் 

அனம்போல் இவ்வா றெழுந்தாளை அருளால் நோக்கி ராகவனும் 
கனம்சேர் கென்றான் சனகிகுணம் கண்டு துதித்தான் பிரம்மாவும் 
நினைந்தான் சாமிநின்மகிமை நீயே அறிவாய் சீதையின் மேல் 
சினந்தான் ஏதென்றவள் பெருமை தெரிப்பான் புகழ்ந்து விரிப்பானே . 

கண்ணிகள் 

1. பரராமா ரவி குலராமா புச 
பலரா 
மாகோ சலராமா 
சரராமா மனோ கரராமா சௌந் 
தரராமா ஆ யிரநாமா 
ராமராமா 


2 . பள்ளமாயை இதற்குள்ளே புகுந்தெவர்க்கும் 
பரமபதந்தருவாய் 
என் கோவே 
கள்ளனுமாய் நின்று விளக்கும் பிடிக்கிறாய் உன் 
கபட்டை ஆரறிவார் என் கர்த்தாவே ராமராமா 

3. முக்காடிட்டபிள்ளை முன்னின்ற பிள்ளையல்லால் 
முதற்குட்டின பிள்ளையை அறியாதே 
இக்காரியம் போல ஒன்றையொன்றெதிர் காட்டி 
இடைநின்ற உனைக்காண்ப தெப்போதே - ராமராமா 


4. நீதியா நாலாறு பேருக்குள் ஒருவனை 
நீக்கி அருளும் வித்தை 
பூண்டாயே 
ஆதி மூலம் என்ற நாதத்திற் பதம் வைக்க 
ஆனைக்கு முன்னேவந் 
தாண்டாயே 
ராமராமா 

5. கயிற்றைப் பாம்பென்றெண்ணி கலங்கும் வண்ணம் ஒரு 
கருக்கல் உண்டாகிய 
வகைபோலே 
மயக்கத்திலே நாங்கள் மயங்கும் வண்ணமிந்த 
மயக்கங் காட்டலாமோ 
நெடுமாலே ராமராமா 
6. ஞாலம் தண்ணீர் அனல் வளிவெளி இவற்றைந்து 
நாலும் மூன்றிரண்டொன்றாம் அதிகாரா 
கோலம் மானிடங்காட்டி ஆளுக்குள்ளே ஆளாய் 
குறுகுறுக்கிறதென்ன 
ரகுவீரா ராமராமா 
7 . மாயைதனைப் படைப்பாய் மாயையும் துடைப்பாய்உன் 
வல்லமை அறியாதல் 
லோ பூமி 
மாயைக்குள் திரும்பவும் மயக்கங் காட்டினால் உன் 
மகிமையை அறிவதெப் 
படிசாமி ராமராமா 
8. நீயும் சீதையும்பெற்ற தாயும் தந்தையும் என்றே 
நினைக்கிறோம் நாங்கள் ச 
தாகாலம் 
தாயிவள் மகிமையைப் புவிக்குக் காட்ட வேண்டிச் 
சாமிநீ செய்தாயோ 
இக்கோலம் 
ராமராமா 
9. கனிவினாலே எந்த உயிரும் உயிருக்குள்ளே 
கருத்தும் நீ தெரிவாயே 
பெரியோனே 
சனகி கருத்து மாத்திரம் தெரியாது போலிந்திர 
சாலம் செய்யலாமோ 
நீதானே 
ராமராமா 

10. அக்கினியையும் சுடும் அக்கினி சீதை என்று 
அக்கினி அறிந்ததே 
இவள் சூட்சி 
இக்கோலம் ராவணன் தீண்டாமல் நிலத்தோடே 
எடுத்தானே இதைவிட 
என்சாட்சி 
ராமராமா 

11. தீயையும் பிழைசொன்ன வாயையும் வடவைச் செந் 
தீயையும் சுடுமிவள் 
பிரதாபம் 
வாய்புளித் ததோமாங் காய்புளித்ததோ என்று 
மனதில் எண்ணினாலும் 
வெகுபாபம் ராமராமா 

12. எள்ளுக்குள் எண்ணெய்போல் இருக்கிற நீசீதை 
இடத்தில் இருக்கலையோ 
பர்த்தாவே 
உள்ளக் கருத்தை வள்ளல் அறியும் என்ற வார்த்தை 
உனையல்லவோ சொல்லாய் கர்த்தாவே ராமராமா 
13. எதிரரக் கரைக்கொன்றாய் பதியில் எங்களை வைத்தாய் 
இந்தத் தயவுனக் செங்கே 
போச்சோ 
மிதிலை வல்லியை இங்கே சோதித்தாய் எங்களை 
விருந்திட்டுப் பகைகாண 
மனதாச்சோ 
ராமராமா 
14. இழுக்காகிய பொன்னைப் புடத்தில்வைத் தெடுப்பார்கள் 
வளுக் குண்டோ சொல்லாய் விதியாசம் 
அழுக்கில் லாத்தங்கத்தைப் புடத்தில் வைத்தெடுத்தாயே 
ஐயா உனக்கு முண்டோ 
மதிமோசம் 
ராமராமா 

மக்களையும் மருமகளையும் சக்கிரவர்த்தி புகழ்தல் 

ஆராத பிரமனிவ்வா றுரைக்கத் தேவர் 
அனுமதியாற் றசரதன்தேர் நிலமேற் கொண்டான் 
காராரும் குழற்சீதைக் குபசரித்தான் 
கற்பகமே வாழி என்றான் இளையோன் தன்னைச் 
சோராமல் அண்ணன் தாட் புண்ணும் இந்திரன் 
தோட்புண்ணும் துடைத்தனையே என்றான் கண்ட 
மாராபி ராமனைத்தன் மார்பில் கட்டி 
மகிழுவான் அவன் குணத்தைப் புகழுவானே . 


பல்லவி 


ஐயனே இன்றுன்னைக் கண்டேன் ஆனந்தங் கொண்டேன் 
( ஐய ) 


அநுபல்லவி 

வையம் ஆள் தசரதனாம் என்னை மலடுநீக்கிவிட்டபிள்ளை 
வானவருக்கும் அந்த நான் முகனுக்கும் எட்டா 
மாயவன் உலகத்திலேஇரு என்றென்னை வைத்த ( ஐயா ) 

சரணங்கள் 

தாளிலே 

1. மல்லிகைப்பூ மிதித்தாலும் வருந்தும் உன் தன் 
வனத்தில் உள்ள கல்லும் முள்ளும் பொறுத்தாய் இந்த நாளிலே 
எல்லாரும் காணக் கைகேசி சண்டாளி என் 
தோளிலே 
இருந்து செவியைக் கடித்தாற்போல் உன்னைப் பிரித்தாளே ஒரு 
கோளிலே 
செல்லும் தரித்திரனுக்குத் திரவியம் கண்டெடுத்தாற்போல் 
சென்மக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற்போல் ( ஐய ) 
2. கைகேசி சொல்லம்புக் காயம் கொஞ்சத்திலே 
மாறுமோ 
கட்டிக்கொண்டாறின தல்லால் பின்னை ஒன்றால் ஆறுமோ 
அய்யாஉன் வாய்முத்தம்போல் அமுர்தமும்சுவை 
ஊறுமோ 
ஆர் முகமும் உன்முகம்போல் ஆகுமோ மனம் தேறுமோ 
கையும்மெய்யும் என் தன் கண்கள் 
தெரிசித்தது 
கண்கள் படைத்த பலன் இன்றல்லோ லபித்தது 
( ஐய ) 
3. பரதனையும் கூட்டிக்கொள்ள வேணுமோ 
உற் றுரிமைக்கு 
பாருள்ளோருனக்கொப்பாரோ என் அப்பா உன் தன் அருமைக்கு 
துருவமாம் அருந்ததி கூட நிகரோ 
சீதை பெருமைக்கு 
சோதிக்க வேணுமோ என்ன சொல்வேன் உன் தன் ஒருமைக்கு 
திருக்கண்ட கண்ணுக்குத் தீங்குண்டோ மென்மேலே 
தேவாதி தேவர்க்கும் சிறந்தேனே உன்னாலே 
( ஐயா ) 

அனுமார் வசந்தனைக் கொண்டு வருதல் 
முடிபுனை யுந்தச ரதனுரை இங்கிது முழுதும் மொழிந்துடனே 
முதல்வர் வரந்தனில் அனைவர் களும்பழ முறையின் எழுந்தபினே 
இடர்பெரு கும்பர தனையரு ளும்படி வடதிசைப் புட்பகமேல் 
இரகுபதி யும்சன கியும் ஒரு தம்பியும் எவரும் நிறைந்திடுமுன் - மறு 
படியும்வசந் தனையொரு நிமிஷம் கொடு வருகென எம்பெருமான் 
வரை நிரு பந்தனை முடிமிசை கொண்டொரு மறலியின் மண்டலமும் 
அடுகளி றிந்திரன் உறைதரு மண்டலம் அயனுறை மண்டலமும் 
அதிரதி ரும்படி விசையனுமந் தனவ் வளவில் கிளம்பினனே . 


பல்லவி 

தாவி அனுமன் வந்தானே வசந்தனை ராம 
சாமிமுன் கொண்டோடிப் பாய்ந்தானே 
( தாவி ) 

அநுபல்லவி 

காவல் வசந்தனைமுன் போலை காட்டென்று செங்கை ஓலை 
காகுத்தன் எழதிட எமபுரத் திசைகண்டு 
வேகத்துடனே அரை நொடியின் விசைகொண்டு ( தாவி ) 

சரணங்கள் 

1. துருவி எமலோகத்தை 
வாட்டி வசந்தனில்லாமல் 
சொல்லி அரிகரி என்றுபா ராட்டி காலில் விழுந்த 
நரகவாசரை அப்பால் 
ஓட்டி 
காட்டடா என்று 
நமனை வாலிற் சுருக்கி மாட்டி எங்கெங்கும் தேடி 
கெருடவேக . மொடு 
கந்தர்வ லோகமும் 
இருகண்ணும் சிமிட்டா முன் 
இந்திர லோகமும் ( தாவி ) 
2 ஐந்தாரு நீழல் எங்கும் 
பயந்துவந்த 
அந்தத் தேவரோடுரை யாடி 
சொர்க்கலோகத்தில் 
சந்தேகம் உண்டென்றதை 
நாடி அந்த லோகத்தில் 
சற்று நேரத்தில் போய்க் கூடி அதற்கப்புறம் 
பந்துபோல் எழும்பிப் 
பணைத்தவால் பெருக்கி 
அந்தக னுடனே 
ந்திரனையும் சுருக்கி ( தாவி ) 
தேடி 
கவலையா பிரம்ம லோகம் நோக்கி வசந்தனை இங்கே 
காட்டென்று பிரம்மாவுடன் தாக்கி இந்திரன் ஏமனோ 
டவனையும் வாலிற் கட்டித் தூக்கி சரசரென்று 
அந்த உலகைவிட்டுப் போக்கி 
மிகவும் நல்ல 
தவமிகுந்த பெரும் 
சத்திய முனிவர் கிட்டும் 
விவர முத்திதரும் 
விஷ்ணு பதவி மட்டும் ( தாவி ) 


ஸ்ரீராமர் இலங்கையில் பலர்பட்ட இடங்களைக் காட்டுதல் 

ஓகையுட னே அனுமான் இவ் வாறுவசந்தனைத்தான் 
உடனே கொண்டான் 
ஆகமது மிகக்களித்தார் வானரர்கள் மானிடர்கள் 
ஆனார் இப்பால் 
வாகைபெறு தம்பியுந்தா னும்பழைய புஷ்பகமேல் 
மகிழ்ந்த ராமன் 
தோகையெனும் சீதையுடன் சொல்லுவான் இவையிவைகள் 
சொல்லுவானே . 

கண்ணிகள் 

1 . கன்னிகையே அந்த சனகன் வேள்வியில் வந்த 
கற்புள்ள 
மடமானே 
உன்னிமித்தத்தில் இந்த தென்னிலங்கை போனதை 
உற்றுப்பார் 
நீதானே 
2. வடிக்கணை ஒன்றாலே நான் ராவணன் உயிர்கொண்ட 
வடக்கு வாசலைப் 
பாராய் 
கெடிபெறும் நீலனந்த பிரகஸ்தன் உயிர்பறித்த 
கிழக்கு வாசலைப் 
பாராய் 

3. தீரன் அங்கதன் . அந்த வச்சிரத ந்தனைக் கொன்ற 
தெற்கு வாசலைப் 
பாராய் 
வீரன் உன் மைத்துனன் இந்திரசித்தனைக் கொன்ற 
மேற்கு வாசலைப் 
பாராய் 

4. உறுதி சொல் கும்பகர்ணன் அதிகாயன் முதலானோர் 
உருண்ட களத்தைப் 
பாராய் 
பிறகு மூலபலங்கள் கால்மாடு தலைமாடாய் 
பிரண்ட களத்தைப் 
பாராய் 

5. அடுபோரில் நமைக் காத்த அனுமான் அகம்பனை அன் 
றடுகளத்தைப் 
பாராய் 
படுபாவி அம்மகோ தரன் என்தன் கையிற்பட்ட 
படுகளத்தைப் 
பாராய் 
வேலை 

6. வடிவான பாண்டம் கொட்டித் தட்டிச் செய்யும் குச 
வனுக்குப் பலநாள் 
தடிகாரனுக் கரை க்ஷணம் போல் அரக்கர் என்னால் 
சமைந்ததைப் பார்கண் 
ணாலை 
பாராய் 

7. இந்திர சந்திர சூரியர் எட்டிப் பார்க்கக் கூடாத 
ஏழுமதில்கள் 
அந்தமாம் பாதாள லோகத்தின் கீழும்போல் 
அகழிகை 
வை 
பாராய் 

8 . பாராய் 
சுக்கிரீவன் தங்கிநின்று ராவணன் மேற்பாய்ந்த 
சுவேலை மலையைப் 
க்கடல் சேனைப்பட்ட ரத்தக்கடலைக் கொண்ட 
இந்தக் கடலைப் 
பாராய் 

ஸ்ரீராமர் சீதைக்குச் சேதுவைக் காட்டி அதின் மகிமை கூறல் 

நிறமென் கூந்தற் சானகியே நின்னை அனுமான் கண்டு வந்த 
பிறகு கவிகள் 
ஒருநளனால் பெருக்கச் செயும்பே ரணைபாராய் 
உறுதியாக இதன் மகிமை உரைக்கமுடியா தானாலும் 
சிறிதுமொழிவேன் எனராமன் செல்வான் எடுத்துச் சொல்வானே . 

பல்லவி 

இந்த சேதுவைக் கண்டாற் போமே 
இகபர சித்தி 
சனகன் பெண்ணே 
( இந்த ) 
ஆமே 

அநு பல்லவி 

சந்ததமும் மனத்திற் பிரியாதே 
பத்தினிகளும் தொழவரும் மாதே 
( இந்த ) 

சரணங்கள் 

பசு 
1. தந்தை தாயுடனே குருதெய்வ நிந்தனையும் கதிநீஎன்று 
தஞ்சம் அடைந்தவரைக் கெஞ்ச அடிக்கும் சற்பனையும் - அகதிகளை 
அந்தணரைப் பசுவை மைந்தரைக் கொல்லும் வேதனையும் 
பஞ்சகாலத்தில் 
அன்னமிட்டவரைக் கன்னமிட்டிடும் வஞ்சனையும் - பயப்படாமல் 
நிந்தையான கள்ளைக் 
குடிப்பதும் 
மந்தை உறிஞ்சுகல்லை 
இடிப்பதும் - நடுச் 
சந்தி விருட்சங்களை 
ஒடிப்பதும் பிறர் 
சொந்தப் பெண்களைக் கை 
பிடிப்பதும் 
நொந்தபேர் பொருளைக் கொண்ட தோஷமும் 
நோன்புகளை நடுவில் விண்ட தோஷமும் 
வந்தபேர் பசிக்க 
உண்ட தோஷமும் 
மடிநழுவும் பெண்களைக் கண்ட தோஷமும் 
( இந்த ) 
2. கேடுசெய்பவ ரோடுறவாகிய நிலையும் -- வயிற்றினிற்ப 
கீர் என்றிட வழக்கோரம் சொல்லிய கெடுதலையும் -- பா திசாமத்தில் 
வீடுகளில் மறைந்தோடி நெருப்பிடும் புலையும் கண்ணிகள் குத்தி 
விலங்கும் பறவைகளும் கலங்கிடவே செய்யும் கொலையும் 
ஆணும் பெண்ணும் 

வழி 
கூடும் கூட்டுறவைப் 
பாடுதம்பி நடக்கக் 
காடுகளிலே வெட்டிப் 
யாடும் பிள்ளைக் சழுத்தை 
நடுக் 
பிரிப்பதும் 
குறிப்பதும் 
பறிப்பதும் 
முறிப்பதும் 
விளை 
நாடிக் கொடுப்பவரைத் 
தடுக்கும் பாவமும் 
நாணிழந்த பெண்ணுடன் படுக்கும் பாவமும் 
கோடைக்குளத்தைத் துத்து விடுக்கும் பாவமும் 
கோட்சொல்லிக் குடிகளைக் கெடுக்கும் பாவமும் 
( இந்த ) 


3-மாலையிட்டவனை இகழ்ந்து சொல்லும் பாதகமும் வேறொருவனை 
மருவியதனில்வந்த கருவை யழிக்கும் தோதகமும் - பாலும்தேனும் 
போல இருப்பவரைக் கலைக்கும் மித்திர பேதகமும் - மாதவிடாய் 
பூத்த மங்கையரைச் சேர்த்தணைத்த சூதகமும் தருவேன் என்று 
மேலவர்களை அலைக் 
கழிப்பதும் - வழிச் 
சாலைசத்திரங்களை 
அழிப்பதும் - செய்யும் 
கால செபதபத்தை 
ஒழிப்பதும் - இடும் 
பாலே கவீசரைப் 
பழிப்பதும் 
தின்ற 
ஏலும் இறைச்சிகளைத் 
இருட்டினில் இடமில்லை என்ற 
ஆலயங்களிற் புணர் 
ஆற்றில் அம்மணத்துடன் சென்ற 
கின்ற 
தோஷமும் 
தோஷமும் 
தோஷமும் 
தோஷமும் 
( இந்த ) 

ஸ்ரீராமர் சீதைக்கு வந்தவழி அடையாளம் கூறல் 

திருவணைப் பலன் ஈதென்று சிலையினாற்பகுத்த ராமன் 
தருமலர்க் குழலியான சானகி வதனம் நோக்கிப் 
பொருமதில் அயோத்தி விட்டுப் புறப்பட்ட நான் முன்தொட்டு 
வரும்வழி அடையா ளங்கள் வகுத்திட்டான் தொகுத்திட்டானே . 

பல்லவி 
( சன ) 
சனகன்மாதே பாராய் - சனகன்மாதே 

அநுபல்லவி 
நினைவினுடன் மனம் மகிழப்பாராய்ப் பெண்ணே 
( சன ) 
சரணங்கள் 

1 --இலங்கைநகர் மேலே முந்நாள் எழுந்தனுமான் பாயவே 
இடந்தரும் மயேந்திரம் இது 
தலம்புகழ வேஎன்னை வருணன் அடைக்கலம் என்று 
சரண்புகுந்த தானம் இது 
பெண்ணே ( சன ) 
தானே 
தானே 


2 மதிகதிர் உள்ளளவும் போம் பொதியமலை இது திவ்ய 
மகத்துவமுள்ள அகஸ்திய முனி 
கெதியில் எதிரேநின்ற மலையிது சுக்கிரீவன்வாழ் 
கிஷ்கிந்தை அவனுக்கா 
தீனம் - பெண்ணே 
தானம் 
(சன ) 

3. சந்திரனை நட்சத்திரம்போல் உன் தனை ணங்கவே 
சகி செனங்கள் ஆகஒருக் 
இந்தமலை நின்றும் வா னரமாதர் உருமாறி 
இதோ வருகின்றார்பார் கண் 
ணாலே - பெண்ணே ( சன ) 
காலே 

4. கிளைக்கும் என் அம்பினாலே ஏழுமரங்களும் வீழ்ந்து 
கிடக்கிறதைப் பார் நமக்கு 
நேராய் 
வளைக்கும் மழைக்காலத்தில் தம்பியுடன் நானிருந்த 
மாலிய வந்தமலை இதனைப் 
பாராய் - பெண்ணே ( சன ) 

5. துதிசெய்துன் பணிகளைச் சுக்கிரீவன் காட்ட நான் 
துயருற்ற மதங்கஅடி 
வாரம் 
அதிக பயபக்தியா என்னையும் உன்னையும் காத்த 
அனுமன் கண்டதிவிடம்பம்பை 
ஓரம் - பெண்ணே 
( சன ) 


6 -சாலை 
தயவாக மனந்தேற்றிப் பசியாற்றி எனைப் போற்றி 
சபரி முத்திபெற்ற திந்த 
உயிர்போலும் உனைத்தேடி வாடும் வழிமேற்க வந்தன் 
உயிர்கொண்ட மூலையிந்த 
மூலை -பெண்ணே 
( சன ) 


7 . எதிர் தரும் ராவணன் கையில் பழமை பாராட்டி உன்னால் 
இறந்த தந்தைக் கிங்கே சமஸ் 
காரம் 
சதிர் செய்மூன்று வருஷமும் நாமிருக்கத் தம்பி செய்த 
சாலையிது பஞ்சவடி 
தீரம் - பெண்ணே 
( சன ) 


8 -இவிடம் மாரீசன்பட்ட திவிடம் சூர்பநகி கெட்ட 
திவிடம் கரதூஷணர் 
வி நாசம் 
இவிடம் கோதாவிரி அன்னை இவிடம் தம்பி கண்டதென்னை 
இவிடம் உன்னைராவணன் செய் மோசம் - பெண்ணே ( சன ) 

9. தனித்து நீ புலம்பும் நாள் உன்னிமித்தம் உயிர்விடும் 
சடாயுவனம் இது அவன்என் 
சாமி 
அநித்தியம் இல்லா அகஸ்திய முனி எனக்குப் படைகொடுத்த இடம் 
அறிவையே ஈதல்லோ புண்ணிய 
பூமி - பெண்ணே ( சன ) 
10. இது சுதிஷ்ட முனிவனது இது தண்டகாரணியம் 
இதுவே முனிவர்கட்கு 
வாசம் 
இது சரபங்கமுனி தேவியுடன் முத்திபெற்ற 
டமிது அதிகப்பிர 
காசம்- பெண்ணே ( சன ) 
11. இங்கே விராதனைக் கொல்ல தேவனாகி எனைப் போற்றி 
ஏகினான் அல்லவோ வானின் 
தங்கப் பணிஉனக்கு அது சூசைதர எனை அத்திரி 
தயவோ டாதரித்த ஸ்தலம் 
ஈதே - பெண்ணே ( சன ) 
12. கன்று பிரிந்தபசுப் போல் நான்பிரியப் பரதன்வந்து 
கண்டமலை இது சித்திரக் 
கூடம் 
அன்றி ளையவன் தள்ள ஏறிவந்த யமுனை இதுக் 
கடையாளம் பார் மூங்கிலாற் சய் ஓடம் - பெண்ணே 
( சன ) 

மீதே 
காணி 
13. ஈரேழு வருஷமும் நம்மைவரு வழி நோக்கி 
இருக்கும் பரத்துவனுக் கிது 
காரெழு குகன் காக்கும் கங்கையிது நம்மை முன்னாள் 
கரை ஏற்றி விட்டதிந்த 
தோணி - பெண்ணே ( சன ) 

14. சீலமுள்ள தந்தையார்க்கு எள்ளும் நீரும் நான்இறைத்த 
தீர்த்தமிது கங்கைநதி 
நேத்தி 
மூலமுதற் பொருளிருக்கும் ஆலிலையைப் போல் இதோ 
முன்காணும் நகரம் அ 
யோத்தி - பெண்ணே ( சன ) 

ஸ்ரீராமர் வரவில்லையே என்று பரதர் புலம்பல் 

உரத்தாலே இந்தவிதம் உரைத்த ராமன் 
உடன் வரும் சேனையுந்தானும் பரத்து வாசன் 
வரச்சாலை யினிற்புகுந்தான் அயோத்தி தன்னில் 
மாருதியை அனுப்பஅவன் வரும்போ திங்கே 
தரத்தாலே எனக்குரைத்த நாளாச் சையோ 
சாமிவரு வானோவா ரானோ இன்னம் 
வரக்காணேன் என் ஆவி வைக்கேன் என்று 
வாடுவான் பரதன் நொந்து தேடு வானே . 

கண்ணிகள் 

1. பதினாலு வருஷம் போய்ப் பரதா நான் வருகிறேன் 
பாரடா என்றாய் இந்தப் 
பூமி 
பதினாலு வருஷத்துக் குள்ளோ வருவது 
பதினாலும் போயோ என் 
சாமி - ராமராமா 
தானோ 

2 உண்டான ராமவாக் கொன்றோ ரண்டோ என் தன் 
ஊழ்வினைப் பயன் இது 
மண்டையிலே எழுதி மயிரால் மறைத்துவைத்த 
மலரயன் கபடறி 
வேனோ ராமராமா 

3. முக்கிய பாதுகையே எல்லாத் தெய்வமுமென்று 
முன்னாளிற் கட்டளையிட் 
டாயே 
தெற்குத் திசையே எல்லாத் திசையுமாம் என்றென்னைத் 
தினம் பார்த்துத் திகைக்கவிட் டாயே 

4. வருவான் என் சாமி என்னைப் பிரியாதே என்று நெஞ்சை 
மடக்க மடக்க மடங் 
காதே 
இருபாதம் என்று சொல்லும் கரைகண்டாலல்லாமல் 
என் கண்ணீர் வெள்ளம் அடங் 
காதே - ராமராமா 

5. உருகிற தாய்மார்க்கும் ஊர்க்கும் எனக்குஞ் சொன்ன 
ஒருவனைக் காணேன் கண் 
மீதே 
வரும்விதி வந்ததென்றால் படும்விதி படவேணும் 
மாட்டோம் என்றாலும் வி டாதே - ராமராமா 
றானே 

6. அண்னானும் என் சொல்லைச் சத்துருக்கனும் கேளாமல் 
அரசாள மனம்மங்கி 
அண்ணன் அழைத்துப் போன லட்சுமணன்போல் என்னையும் 
அழைத்துப் போ கூட என்கி 
றானே - ராமராமா 
7. பூமிநெருப்பில் விழும் விழவேண்டாம் என்றொரு 
புத்திமதி சொல்லநில் 
லாபயா 
சாமிபின் போனநெஞ்சே வருவானோ வாரானோ 
சற்றே நீவந்து சொல் 
லாயோ - ராமராமா 

8. பொடித்தவனந்தனிலே எவருடன் சண்டையோ 
புரோகிதரே சொல்லொ 
ணா தோ 
நடுப்படையிற் போனாலும் வடுப்படாமல் திரும்பும் 
நாயகன் வரத்தடை 
ஏதோ - ராமராமா 

9. பருவங்கள் பதினாலும் தவம்செய்தென்ன கண்டேன் 
படைத்தேனே இந்த அப 
வாதம் 
பெருமாள் சென்றவழியில் புல்லாய் முளைத்தாலும் 
பெறலாமே ஆண்டவன் 
பாதம் -ராமராமா 

10. அரசனையும் காணேன் அரசுக்கரசாய் நின்ற 
அண்ணனையும் காணேன் நான்எம் மாத்திரம் 
பரதன் என்ற பேரை பதர் என்று சொல்லலாம் 
பாவி நான் அதற்கல்லோ 
பாத்திரம் - ராமராமா 

சத்துருக்கன் அரசாட்சிக்கு உடன்படாமை 

பரதனிந்த விதம்புலம்பிச் சாமிதெரிசனங்காணாப் பாவி நானே 
சரதமினித் தீப்பாய் வேன் உலகாள்வாய் சத்துருக்கா தம்பி என்றான் 
விரவியகா திலதுபோய் நெருப்பாகச் சுட அவனும் வீழ்ந்து சோர்ந்தான் 
நரகமன்றோ உனக்குப்பின் நிலமென்றான் எனகென்ன நலம் என்றானே 

பல்லவி 
இதற்கோநான் ஆளானேன் இதற்கோ அண்ணாவே 

அநுபல்லவி 

சதிக்குள் சத்துருக்கனா 
சாமிபரதா என்னைக் 
வாயென்றழைத்திட்டாயே 
கைநழுவ 
விட்டாயே 
(இத ) 

சரணங் 
1. பூமி ஆளச்சொல்லி என் 
னைத்தானே 
விட்டுப் 
போனால் என்னாகுமோ 
(கோமானே 
ராமன் முகமும் உன்முகமும் 
கண்டுநானே 
இரண்டாட்டில் ஊட்டின குட்டிபோல் ஆனேனே ( இதற் ) 
2. ஒருவன் கானகத்தில் 
ஏகவும் அவன் 
உடனொரு தம்பிதுணை 
போகவும் 
ஒரு தம்பி யான நீ நெருப்பிலே 
மூழ்கவும் 
ஒரு தம்பி எனதுயிர்வல்லுயி 
ராகவும் 
( இதற் ) 

எனக்கு மாத்திரம் உடல் 
இருந்துல காளாவிட்டால் 
உனக்குப்பின் வாராமல் எனக்கொரு 
உன்னுயிரிலும் என் தன் உயிர்கருப் 
கெட்டியோ உன்பின் 
நஷ்டியோ 
வெட்டியோ 
பட்டியோ ( இதற் ) 


அக்கினியில் விழும் பரதனரக் கௌசலை அம்மன் தடுத்துக் கூறுதல் 
வாடியிவ்வா றழுததம்பிக் கிரங்கான் நான்போய் 
மாள்வனெனின் இவண்புவியை ஆள்வன் என்று 
கூடிய மந்திரிமாரும் ஊர்உள் ளாரும் 
குலைந் தலறப்பரதன் தீ வளர்க்கச் சொன்னான் 
நாடியதோர் கௌசலையும் கேட்டு வந்தாள் 
நன்மகனே மகனேஎன் செய்வேன் என்று 
ஓடியவன் கையிணையைப் பிடித்தாள் புத்தி 
உரைக் கின்றாள் மகன் மனதைக் கரைக்கின் 
றாளே 
பல்லவி 
என்ன நினைந்தாய் 
பரதா 
என்ன நினைந்தாயே 
( என் ) 
அநுபல்லவி 
அன்னை என்னும் கௌசலையை 
அகலவிட்டிட நீயே 
( என் ) 

சரணங்கள் 

1. முன்மகன் ஆகியராமன் முகம்பாராக் கவலையெல்லாம் 
உன் முகத்தைக் கண்டு நீங்கி உளங்குளிர்ந்தேன் மகனே 
நின்முகம் காட்டாமல் 
நெருப்பின் முகம் நீபார்த்தால் 
என் முகத்தைப் பார்க்கும் முகம் எந்தமுகம் 
மகனே 
( என் ) 

2 . எத்தனை ராமரும்உனக் கிணையாவாரோ நீபோனால் 
செத்துலகம் போம் எனது சீவனும்போம் 
மகனே 
பெற்றமனம் பித்தென்றும் பிள்ளைமனம்கல் என்றும் 
சுற்றிலும் சொல்லுகிறபடி துணிந்தாயோடா மகனே 
( என் ) 
3. இதங்கொண்ட ராமன்வர விதோ அதோ என்றிருக்கநீ 
மதங்கொண்டாற்போலுயிரை மாய்க்கல் ஆமோமகனே 
சுதந்தரமாத் தவஞ்செய்தும் ககம் தக்கினது மல்ல 
விரதம் தக்கினதுமல்ல 
வேண்டாம் அடா மகனே ( என் ) 


பரதர் கௌசலை அம்மனோடு இரங்கல் 

பன்னியிது தாய் சொல்லப் பரதனீரேழ் ஆண்டுமண்ணன் 
சொன்னபடி காத்திருந்தும் சுவாமி தெரி சனம் காணேன் 
பின்னைஎனக் கார் இருந்தென் ஆர்போய்என் பெருந்தீயில் 
என்னுயிரை விடுவேனென் றெழுவான் சொல்லி மொழிவானே 

பல்லவி 

இனிநான் 
இருக்கலாமோ 
தாயே 
( இனி ) 

அநுபல்லவி 

அனியாயத்தில் அய்யனுக் காகாமற்போய் 
( இனி ) 

சரணங்கள் 

நானே 
1. மறுவில்லா வரங்கொண்டேன் 
அண்ணன் 
வழிபார்த்துப் பார்த்தென் தன் விழியும்பூத் தேனே 
சிறுபிள்ளைப் பருவம் நான் 
இதிலே 
சிறகுபறிகொடுத்த பறவையாய்ப் போ னேனே 
தானே 
தஞ்சம் 

2. வருத்தம் அறியான்சாமி 
கொஞ்சம் அறிந்தால் 
வாராமல் இருப்பானோ எனக்குண்டோ 
நெருக்குதே கவலைப்பிர 
பஞ்சம் - 
என்னை 
நெருப்பிலே போட்டாலும் வேமோஎன் நெஞ்சம் 
(இனி ) 
( இனி ) 

3. அரசனுக் குதவாமல் 
கெடுத்தேன் அண்ணன் 
அருமந்த முடிக்கும்நான் சடைமுடி சொடுத்தேன் 
தருமத் துரையைக் காட்டில் 
விடுத்தேன் 
பரதன் 
சாமித்துரோகி என்றே எங்கும் பேர் எடுத்தேன் 
4. அய்யர் அன்னை சொல்லை நோ காமல் கேட்க 
அளிக்கத்தக்கவன் திருவுளத்துக்கா காமல் 
செய்தேன்வெகு குற்றம்போ காமல் 
தீட்டுக்கு முழுக்கொன்றா நெருப்பில் மூழ் காமல் 
( இனி ) 
பல 


ஸ்ரீராமர் வரவை அனுமார் பரதருக்குக் கூறல் 

தந்தாய் கௌசலை வந்தா ளொடுபர தன்பா டுகளிவை முன்கூறி 
நொந்தார் அனலை வலஞ்சுழ் பொழுது குழந்தாய் குழியில் அமிழ்ந்தாதே 
அந்தோ பொறுபொறு மைந்தா பொறு பொறு அன்பாய் உனதுமுகந்தேடி 
வந்தான் ரகுபதி வந்தான்என அனுமன் தான் இஃதுரை தந்தானே 

பல்லவி 
ரகுராமன் 
வந்தான் வந்தான் பரதா 
வந்தான் வந்தான் பரதா 
( வந் ) 

அநுபல்லவி 

வந்தான் வந்தான் மோதிரம் 
இந்தா இந்தா தீயினில் 
தந்தான் தந்தான் கைமேல் 
முந்தா தேமுந் தாதே ( வந் ) 

சரணங்கள் 

1. நாயகன் சொல் மறந்தாய் அண்ணா என்று பேயனைப்போல் பறந்தாய் 
தாய ையும் துறந்தாய் பழிபோட நீயிதற்கோ 
பிறந்தாய் 
சேயின் முகம்பார்க்கும் 
தாயின் 
முகம் போலே 
காயும் புழுவுக்குச் 
சாயும் நிழல்போலே 
தீயும் பயிருக்கும் 
பேயும் மழைபோலே 
மாயன் கஜேந்திரனுக் 
காய்வந் தது போலே 
( வந் ) 

2. பொருந்தாத புத்தி தந்தாய் அலைவாயிற் கரும்புபோல் மெத்த நைந்தாய் 
துறும்புபோல் வற்றி நொந்தாய் வீழ்வேன் என்று பெருந்தீயைச் சுற்றி 
வந்தாய் 
அரும்பதினாலாண்டு ஆச்சென்றதி 
வருந்தும் தம்பிமடிவான் என்றொருக் காலே 
பரிந்திதோ சித்திர கூடத்துக்கிப் 
பாலே 
பிரிந்த கன்றைத் தேடித் திரும்பும் பசுவைப் போலே 
னாலே 
( வந்த 


3. தீமைவினைகள் மண்டு ராவணப் பாமரன் ஆவி உண்டு 
சேம வெஞ்சேனை கொண்டு பரத்துவாச மாமுனி பூசைகண்டு 
சாமி ரகுகுல 
சோமன் இதோ வந்தான் 
பூமகள் சானகி 
வாமன் இதோவந்தான் 
ஓமென்னும் ஆயிர 
இதோ வந்தான் 
நீமறவரகு 
ராமன் 
இதோ வந்தான் 
நாமன் 
( வந் 

பரதருக்கு அனுமான் சங்கிரக ராமாயணம் கூறல் 

இந்த வாறனு மந்தன் ஓதி இடுங்கை மோதிரம் ஈந்துடன் 
சந்த மா முடி கொண்ட தோர்பர தன்கணார வளர்ந்தனன் 
உந்த னோடு பிரிந்து ராமன்ஓ ழிந்ததும்பின் நடந்ததும் 
வந்த வாறும் அறிந்தி டென்றுரு மாறினான் வை கூறினான் 

பல்லவி 

ராமன் செய்தி 
பரதமகா ராசனே கேளாய் 
பரதமகா ராசனே கேளாம் 
( பர ) 

அநுபல்லவி 

இரமுலா வியசித்திர 
திருவடிகள் நீகொண்டு 
இரகுபதி தண்டகவ 
ராட்சதவி ராதனை உ 
கூடத்திலே முன்னே 
போகியதின் பின்னே 
னத்திலடி நீட்டினான் 
பேட்சையற மாட்டினான் ( பர ) 

சரணங்கள் 

அவன் 
நாளிலே 
1 அந்தமுனி வர்க்கபயம் 
ஈந்தான் 
பிறகு 
அகஸ்தியமுனி ஆசிரமம் 
சேர்ந்தான் 
தந்தபடை முழுவதும் 
கொண்டான் வந்து 
சனகியொடு பஞ்சவடி 
கண்டான் 
வந்தசூர்ப நகியவள் வாதாடும் 
வள்ளல் இளையவனங்கை மீதாடும் வாளிலே 
கந்தமுலை யும்செவியும் நாசியும் நறுக்கினான் 
கர்தூஷணரையும் அவ ளாலே நொறுக்கினான் 
2. பின்னாக மானைவர 
விடவே 
அதின் 
பிறகுகணை ஒன்றிலது 
படவே 
ஒரு 
சந்நியாசி ராவணன் 
அடுத்தான் 
தன்னை நில மங்கையோ 
டெடுத்தான் 
அந்நிலையி லேவருச டாயுவை 
வருத்தினான் 
அம்மை அசோகவனக் காவலில் இருத்தினான் 
(பரதி ) 

சீதை 
மீளவும் 
வெகு 
கன்னிகை தனைச்சாமி தேடி மன தேங்கினான் 
கழுகரசனைக் கண்டுக வந்தனுயிர் வாங்கினான் 
( பரத ) 
3. சவரிசொல் லியவழி 
நடந்தான் - என் 
தனை அடி மையாகவே 
தொடர்ந்தாள் - பின் 
கவடுளி மரங்கள் துணி 
செய்தான் - அந்த 
காலன்வாலி யையும்விழ 
எய்தான் 
அவனியை சுக்கிரீவ னுக்குதவி 
அடியேன் அறிந்தம்மை நிலைகண்டு மீளவும் 
தவமுள்ள விபீஷணர்க் கபயம்கொ 
டுத்தனன் 
சாமிதிரு அணையொன்று கடல் மேலெடுத்தனன் 
( பரத ) 
4. பண்டைலங்கை யின் பதில் 
பிடித்தான் எழு 
பதுவெள்ள மும் கொண் 
டடித்தான் 
கண்டக அரக்கரை 
மடுத்தான் பயிர்க் 
களை எடு ததுபோல் 
எடுத்தான் 
அண்டர்பணி தம்பியும்நெடுங்கணைகள் தாக்கினான் 
அதிகாய னையும் இந்திர சித்தையும்மண் ணாக்கினான் 
கொண்டல்மணி வண்ணனும் சிலகணை முடுக்கினான் 
கும்பகர்ன னையும்ராவ ணனையும் 
ஒடுக்கினான் 
( பரத ) 
5. மதிநுதல் சீதைதனை 
உற்றான் அங்கே 
வந்ததச ரதன்வரம் 
பெற்றான் தனது 
பதியில் வரவேஉளம் 
மதித்தான் - புஷ் 
பகமீதில் சேவடி 
பதித்தான் 
எதிர்படும் காடும் நாடும் 
கண்டு 
தாண்டினான் 
இமையவர் புரந்தரா திகள் புகழ் வேண்டினான் 
திமுனி பரத்துவாசன் ஆசிரமம் 
மேவினான் 
அதற்குமுன் உன்னைக்காண அடியேனை ஏவினான் 
( பரத ) 


ஸ்ரீராமர் அனுமானை உடன் உண்ண வேண்டுதல் 

நீதமுடன் அனுமனிது சொன்னான் இந்த 
நிமிஷம்லந்து சாமி உனக் கருள்வான் என்றான் 
போதரவாய் பரத்துவாசன் மடத்திற் பூர்வ 
போசன வேளையிற்போய் ராகவனைக் கண்டான் 
பாதமலர் வணங்கினான் பரதன் தன்னை 
பார்த்ததும் காத் ததும் சொன்னான் அப்போ தையன் 
காதலனே அனுமானே நீயே என் தன் 
கண் என்றான் என்னுடன்வா உண் என்றானே 

பல்லவி 

என்னுடன் உண்ண 
வா வா அனுமானே 
வாவா சீமானே 
( வாவா ) 

அநுபல்லவி 

ஜீவபயம் ல்லாமல் பரதனையும் தேறத் 
தேற்றி எனக்குவந்து சொன்னவுன் இளைப்பாற 
( வாவா ) 


சரணங்கள் 

1. அங்கே பிரம்மாஸ்திரத்தால் விழுந்த தம்பி பிழைக்க 
அமுர்த மருந்து தேடிக் 
கொடுத்தாயே 
இங்கே அக்கினியில் வீழும் தம்பி பிழைக்க 
என்வரவைச் சொல்லித் தூக்கி 
எடுத்தாயே 
சங்கட வேதனைகள் ஏதேது வந்தாலும் 
தலையிட்டுக் கொண்டு தீர்க்கத் 
தொடுத்தாயே 
பொங்கும் இருப்புக்கோட் டையும்கற் கதவுமே 
போல எங்களைக்காக்க 
வாலாயம் 
எடுத்தாயே ( வாவா ) 

2. பூட்டிய தூது நீபோய் அரக்கரைக் கொன்ற ரத்தம் 
போச்சிலையே இன்னும் லங்கை 
யில் ஈரம் 
வாட்டம் இல்லாமற்சீதை தனையும் தந்தாய் நல்ல 
வாழ்வும் தந்தாய் எனக் 
கூட்டத்தி னால் என்ன படையிலும் ஒருத்தன் 
கொடையிலும் ஒருத்தன் உன்ன 
தேவீரம் 
தாட்டிகத் தம்பிமார்க்கும் தாய்மார்க்கும் எனனப் பெற்றோன் 
தனக்கும் உனக்கும் தான் சொல்வதேன் உபசாரம் 
குபகாரம் 
( வாவா ) 

3. சுக்கிரீவனுக்கும்வி பீஷணனுக்குந்தங்கள் 
துரைத்தனம் மேலாசை 
எந்தாயே 
எக்கால மும்உன்தன் ஆசைஎன் காரியத்தில் 
எங்கெங்கும் போய்ச்சுற்றி 
நொந்தாயே 
விக்கிரயம் நீ செய்து வருகையாலே நாங்கள் 
விருந்தமு திருந்துண்ணத் 
தந்தாயே 
சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தாற்போல் 
சந்தோஷ வார்த்தைகொண்டு சமயத்தில் வந்தாயே 
( வாவா ) 


ஸ்ரீராமர் பரத்துவாசர் செய்த விருந்துண்ணல் 
சுந்தரனும் ராமச்சந்தரன் இந்தவிதம் உபசாரம் சொல்லச்சொல்ல 
வந்த அனு மான் ஒடுங்கி வணங்கி நின்றான் எல்லாரும் மகிழ்ந்தே உண்ணப் 
பர்தியிருந்தார் அனுமான் பரதனையே அடிக்கடிக்குப் படித்துப்பேச 
அந்தஉரை செவிக்கமுதா விருந்தமுது திருந்தினான் அருந்தினானே 

பல்லவி 
உண்டானே ராமன் பரத்துவாசன் செய்தவிருந் 
துண்டே ஆனந்தம் கொண்டானே 
( உண் ) 

அநுபல்லவி 

சூரனும் 
வண்டார் குழற்சீதை 
வானரே சனும் வி 
கெண்டு டனே அருந்த 
அண்டமெலாம் இருந்த 
யும் இளஞ் 
பீஷண 
கண்டுமனந் 
பண்டியிலே 
வீரனும் 
திருந்த 
பொருந்த (உன் ) 

சரணங்கள் 

1. ஓங்கிய பொன்னுல கத்தினுள் பெண்கள் 
ஓடிக் கொண்டுவந்து 
நான்கு திசையிலும் உள்ள முனிவர்கள் 
நாடிக் கொண்டுவந்த 
வழங்கமுதும் 
கிழங்கமுதும் 
மாங்கனியும் கதலிப் பூங்கனியும் பனசத் 
தேங்கனியும் பலவி ளாங்கனியும் திருத்திப் 
பாங்காகவே மென்மே லேபடையும் தானும் அன்பாலே 
( உண் ) 

2. நானி லந்தனில் மாந் லந்தரும் 
நானாவித முள்ள 
சூட்டும் 
வான மங்கையர் தானு கந்தமும் 
வகைவகை யான அ 
பூபமும் 
தேனும் கறிவகைகள் தானும் குளிர்ந்த நல்ல 
பானகமு சமைத்த போனகமும் கொண்டு 
சேனை ஆரவாரிக்கத் திருமேனியும் பூரிக்க 
(உண் ) 

3. பவ்விய மான அனு மானைக் கடை க்கண்ணாலே 
பார்த்துப் பார்த்து மனம் 
களிப்பூற 
செவ்வையானதை வேத்தியம் செயக்கண்டு 
தேவரெல்லாம் சோப 
னங்கூற 
இவ்வுல கத்தினிலும் அவ்வுல கத்தினிலும் 
எவ்வுல கத்தினிலும் அவ்வவ் விடத்திலுள்ள 
திவ்விய சாரங்கள் பெற்றுச் செவ்வாய்மலரில் வைத்து 
( க.ண் ) 

பரத்துவாசர் முதலானோர்க்கு ஸ்ரீராமர்  ராக்ஷதர் மாண்டவகை கூறல் 

உண்டபின்பு பரிகலத்தை அனுமான் கொண்டான் 
ஒருசுக்ரீ வனுக்கும்விபீ ஷணர்க்கும் ஈந்தான் 
கண்டபடை களுக்குமிட்டான் தானும் பாதி 
கைக்கொண்டான் அவனை அயோத்தியிலே ஏசு 
அண்டர்பிரான் அனுப்பினனே கடலைத் தாண்டி 
அரக்கர்குலம் அடியோடே அழிய வில்லால் 
மண்டமரில் வென்றதெலாம் ராமச்சந்திரன் 
வகைசொல்வான் முனிவருக்குத் தொகைசொல்வானே 

பல்லவி 

இங்கே நாங்கள் லங்கையை வென்றகதை 
இவ்வாறு காண் முனிவர்களே 
( இங்கே ) 

அநுபல்லவி 

விடிந்தது 
தங்கும் குரங்கெல்லாம் அணுப்போல் எதிர்தர 
சண்டைசெயும் அரக்கர் மலைபோல் 
வரவர 
அங்கே நீங்கள் முன் 
ஆசிர்வா தம்செய்ய 
அணுவும்மலை யாச்சந்த மலையும் அனுவாச்சையா ( இங்கே ) 

சரணங்கள் 
1. வானரத்தால் அரக்கர் 
படையெல்லாம் மடிந்தது 
மாயை எல்லாம் விபீ ஷணனால் 
ஆனதம்பிமேல் ஒரு 
நாகாஸ்திரம் 
படிந்தது 
அதுவும் கருடனாலே பொடியாப் பொடிந்தது ( இங் ) 
2. அந்தப் பிரமாஸ்திரத்தை அரக்கன் விடுத்து மொய்த்தான் 
அமுர்த மருந்தை அனு 
மான்கொண்டுவந்து வைத்தான் 
இந்த அனுமானாலே 
இளையவன் உயிர் 
பெற்றான் 
ளைய வன்கை அம்பாலே இந்திர சித்தனும் செத்தான் (இங் ) 
3. மூலபலம் ராவணன் 
கும்பகர்ணன் 
சென்மம் 
முடியவே முடிந்தது 
ராமபாணி 
வன்மம் 
ஏலவே தொலைந்தது 
எங்களைத் தொட்ட கன்மம் 
எங்களால் ஒன்றுமில்லை எல்லாம் உங்கள் தன்மம் ( இங் ) 


குகன் ஸ்ரீராமர் வரவில்லையே என்று வருந்துதல் 
கரக்காமல் இவ்வாறு சொன்ன ராமன் 
கானமுனி வரை நிறுத்தி ஆசி கொண்டு 
பரப்பாம்புஷ் பகங் கொண்டு கங்மை ஆற்றின் 
பக்கல்வரும் முன்னம்முன்னேவிபரி னோடு 
தரத்தாலே எனக்குரைத்த நாளும் கண்டேன் 
சகுனமும் கண்டேன் இன்னம் சாமிஇங்கே 
வரக்காணேன் என்னாவி வைக்கேன் என்று 
வாடுவான் குகன் வருந்தித் தேடு வானே .  


கண்ணிகள் 


1 , ஆண்டுபதி , னாலும் போய் வருகிறோம் என்ற 
ஐயன் வரவு கா ணேனே 
நீண்ட பனை மரம் போல் வளர்ந்தேனே 
நிலத்தில் இருக்க நான் 
ஏனே 

2. சாமியும் உன்தாயும் தம்பியும் உன்னைத் 
தவிக்க விட்டு மறந் 
பூமியில் தங்களுடன் வாராக்குகன் 
புலையன் என்று துறந் 
தரேரா 
தாரோ 

3. இச்சையா லேநான் என்ன பினழ செய்தாலும் 
ஏழைஎன் றென்னையறி 
யரேரா 
நச்சுமா மரமானாலும் வைச்சவர் 
நன்மரம் என்று குறி 
யாரோ 
4. உண்டாற் பசி தீருமென்றே இந்த 
உலகம் சொல்லிய மாண் 
பேனோ 
கண்டாற் பசிதீரும் என்சாமி முகக் 
கமலத்தை என்று காண் 
பேனோ 
5. சோராத ஒருதோழன் என்றவர் 
சொல்லிய சொல் லென்ன 
பெய்ாயோ 
கார்மேனியும் கோதண்டமும் என்றன் 
கண்ணெதிரே நிற்கு 
தையோ 
6. அங்கேமுன் பழகின ஊனர 
நினைக்காரோ பக 
வானே 
எங்கே இருந்தாலும் ராமர் இருந்த 
இடம் அயோத்தி 
தானே 

7. வலக்கண்ணும் வலத்தோளும் துடிதுடித்து 
வருகின்ற தென்ன இது 
கெலிக்கும் ராகவன் தரிசனம் கிடைத்தாலும் 
கிடைக்குமோ என்ன அறி 
யேனே 
தானே 
நானே 

8. இனிமேல் ஒரு தெய்வம் தன்னைக்கை 
எடுப்பேனோ சற்றும் 
தனியே ஆனை தழுவும் கையாலே ஆடு 
தழுவுமோ என் கை 
தானே 
பரதருக்கு ஸ்ரீராமர் காட்சி கொடுத்தல் 
நையுமிந்தக் குகன்பணியச் சாமி வந்தான் 
நம்பிபர தனும் நீயும் சுகமோ என்றான் 
துய்ய குகன் சனகிவிபீ ஷணன்சுக் ரீவன் 
துனணவனொடு புஷ்பகமேல் அயோத்தி சேர்முன் 
செய்யவசிஷ் டனும்பலபேர் களும் தாய் மாரும் 
திரண்டுவரும் பரதனுக்குக் கையாலேஉன் 
அய்யன்வந்தான் என்றனுமான் காட்டக் காட்சி 
அருளினான் ராமன் எழுந்தருளினானே . 

பல்லவி 
சீதா 
ராமன் எழுந்தருளினான் பர தன்முன் 
ராமன் எழுந்தருளினான் 
( ராம ) 
அநு பல்லவி 
ஆமெனும் தேவர்களுக் 
கமுதம் தந்தாற்போல 
பூமியில் உள்ளோர்க்கெல்லாம் போனபொருள் வந்தாற்போல (ராம ) 

சரணங்கள் 
போல 
1. தூயவர்க் கெல்லாம் முத்தித் 
ஓயும் உடலோர்க்கெல்லாம் 
துறைகள் சித்தித்தாற் 
உயிர்புகுத்துற்றாற் 
போல 
நேய மாதர்க்கெலாம் கண் 
தாயர்க்கெல்லாம் அப்போது 
நிழல்வந்துதித்தாற் 
போல 
தான்பிள்ளைப் பெற்றாற்போல ( ராம ) 


2 மயமாக 
கயமாக 
உத்தமர்கள் நாவுக்கெல்லாம் ஊறும்தேன் 
மற்றவர்கண் வண்டுக்கெல்லாம் மலர்ந்தபங் 
அஸ்தசெந்தா மரைக்கெல்லாம் அருஞ்சந்திரோ 
புத்திரர்க்கெல்லாம் தாயைப் போலே 
தயமாக 
வசியமாக ( ராம ) 

3 -சரியும் மரவுரியும் சடையும் 
வருகிற தம்பிவந்த 
உருகி உருகியவன் 
திருவும் தம்பியும் கவிச் 
நடையும் 
சோர 
வரவுகண்டு 
கண்ணார 
உடைய குறைகள் 
சேனையம் தானும் சேர ( ராம ) 

பரதர் ஸ்ரீராமர் திருவடிகளிலே வணங்குதல் 

யல்புடனிப் படிராமன் வந்த போதில் 
இதோவந்தான் சாமியென அனுமன் காட்ட 
வியனுறு தாய்மாரும்ஊராரும் பார்க்க 
மிடியனுக்குக் கனகமலை கிடைத்தாற் போலத் 
தயவுளதாய் முகங்கணாம் சவலை போலச் 
சாமிமுகம் ளையவனும் தானும் கண்டான் 
உயிர் உருக உளமுருகத் திருத்தாள் மேலே 
வணங்கினான் பரதன் வந்து வணங்கினானே , 

பல்லவி 
வணங்கி நின்றானே பரதன் - சாமி சேவைக்கு 
இணங்கி நின்றானே பரதன் 
( வண ) 
அநுபல்லவி 
சணங்கு லாவுதச 
கண்டசீ ரென்னக் கண்டு 
ரதன் தன்னை எதிர்ப்பட்டு 
தெண்டனிட்டு 
( வண ) 

சரணங்கள் 

1. அதிகானம் போய் வாழ்ந்தவன் உடம்பும் போற்றி என்றவன் 
அடிமேல் போய் வீழ்ந்தவன் உடம்பும் கட்டிக்கொள் போதில் 
அதுவோ அல்லதிதுவோ பின்னை எதுவோ உடல்பொதுவோ என்ன 
அணைத்து அணைத்து ராமன் கண்ணீர் துள்ளத்துள்ள 
அய்யனே மகனே 
என்றுகட்டிக் கொள்ள 
( வண ) 


2. அடியேன்மேல் திருவுள்ளம் உதித்ததோ அடிமை படைத்தால் 
ஆளக்கடன் என்பது 
மதித்தோ - தரிசனம் தந் 
தாயே தந்தை தாயென்ன நீ வளர்த்தாயே இப்போ 
சவித்த பயிறு முளைக் கத்தந்தகதை போலே 
ஆவி நீ தந்தாயே என் றொருக் 
( வண ) 

காலே 


3 என்னோடே நீபிறந்த தெல்லாம் - நான்பதராகி 
இருந்தேனே நீ வாரா நாள் எல்லாம் 
நானிருந்தாலும் 
இறந்தேன் இன்றுபிறந்தேன் கண்டுசிறந்தேன் குறை மறந்தேன் - இங்கே 
இருந்தநாள் இருந்தேனே நிலம் கெல்லி 
இன்றல்லோ பிழைத்தேன் என்று சொல்லிச் சொல்லி 

( வண ) 


நகரியையும் ஸ்ரீராமரையும் சீதையையும் அலங்கரித்தல் 

வந்ததம்பி இந்தவகை பணிந்தான்ராமன் 
மாதாக்கள் மூவரையும் பணிந்தான் பின்னே 
அந்தலட்சு மணன் பரதன் பதம்பணிந்தான் 
அவன் பதத்தில் சத்துருக்கன் பணிந்தான் இப்பால் 
பந்தமுள்ள சீதைநின்ற திசையை நோக்கிப் 
பரதனும் தம்பியும் பணிந்தார் சமந்திரன் சொல்லால் 
விந்தை விந்தையா யெவரும் நானா 
விதம் செய்தார் அயோத்தி அலங் கிருதம் செய்தார் . 

கண்ணிகள் 

1. தேச தேச மகராசனுக்குத் 
திருமுடி 
அபிஷேகம் - செய்ய 
ராசராசர்கள் எல்லாரும் முறைமுறையா 
எடுத்தனர் 
வைபோகம் 

2. சேனை சேனைமக ராசராசர்களும் 
திரிந்தனர் 
ஆனைமேலே நெடு வானமும் அதிர 
அடித்தனர் 
சாரியைகள் 
மகபேரிகைகள் 
இனி 


3. சோதி மணிநேடு வீதியில்மகர 
தோரணம் 
தூக்கினார் 
மீதினிலே பிச காமல் நாலிரு 
மேருவுண் 
டாக்கினார் 
4. காரும் படிந்திடச் சூரியன் வெயில் மறையக் 
காவணப் பந்தல் 
படுத்தார் 
ஆரும் இங்ஙனே வாரும் என்றழைக்கப் பொன் 
ஆலவட்டங்கள் 
தொடுத்தார் 
5. முத்துக்குடை பவளச் சித்திரக் குடைகளெங்கும் 
முறைமுறையா 
நிரைத்தார் அப்புறம் 
சுற்றுக்குச் சுற்றிலே வானவர்கள் உள்ள 
சொர்ண மலர்கள் 
விரித்தார் 
6 . கோலப் பதுமை இந்திர சாலப் பதுமைகட்டிக் 
கூந்தற் கமுகு 
நட்டார் 
சுற்றிலும் 
மேலுக்கும் கீழுக்கும் கோலக்கண் ணாடிகள் 
விதம் விதமாக 
இட்டார் 
7 . சூடகவால் வளை கோதையர் கீதங்கள் 
சோபன முடன் 
அமைத்தார் அபிநய 
நாடகசாலையும் பாடக சாலையும் 
நாலு முகமும் 
சமைத்தார் 
8. முத்தா லாத்தியும் பவளா லாத்தியும் 
முகந்தோறும் 
காட்டினார் நல்ல 
விஸ்தாரத்தெரு வீதியெல்லாம் பனிநீர் 
வெள்ளங்களாக 
ஆட்டினார் 

9. பூந்துகில் கரித்து மாந்தழை விரித்துப் 
பூரண கும்பம் 
பதித்தார் - புவி 
வேந்தரும் பலமாந்தரும் ஆனந்தம் 
மேற்கொண்டு குதி 
குதித்தார் 

10. ஆணிமுத்துப்பவளம் மாணிக்கத்தாற் செய்த 
ஆபரணம் 
திருத்தினார் - சோபனம் 
பாணிக்கும் நவரத்தின பாலிகை எங்கெங்கும் 
பளபளென 
இருத்தினார் 


11 கலவைப் பொடி கதம்பப்பொடி குங்குமப்பொடி 
கடைத்தலை எங்கும் 
கொட்டினார் மெத்த 
விலைபெற்ற பொன்னெழுத்து விசித்திரம் விசித்திரமான 
மேற்கட்டியும் 
கட்டினார் 
அதிலே 


12. சந்தனச் சேற்றிலும் அகிற்சேற்றிலும் போவோர் 
சறுக்கிச் சறுக்கி 
விழுந்தார் 
கெந்தப் பொடியிறைத்துக் கெட்டியாக்கிமெள்ளக் 
கிளம்பிக் கிளம்பி 
எழுந்தார் 


13 . மாலையும் சொர்ண வர்ணச்சேலையும் பந்தலும் 
வாசற்கு வாசல் 
விரித்தார் - தெய்வ 
ஆலயங்களும் மலர்சோலையும் சாலையும் 
அணிபெற அலங் 
கரித்தார் 


14 . வெகு 
கொதிகொளும் கதிரவன் மறைபட மாணிக்க 
கொடிகளாலே 
மறைத்தார் 
விதவிதமாகிய முத்துப்பவளங்களும் 
வெள்ளியும் பொன்னும் 
இறைத்தார் 
நல்ல 
15. செப்பமுள்ள பளிங்கில் ஒப்பனை செய்கனகத் 
திண்ணையிற் கோலம் 
புனைந்தார் 
முப்பழக் குலைகட்டி அப்புறம் கனிவகை 
முறைமுறையா 
வனைந்தார் 
இதை 


16. ஆனநற் சதுரங்க சேனையும் சிவிகையும் 
அலங்கரித் தேறி 
வருவார் 
மாநிலதானமும் கன்னிகாதானமும் 
வகை வகையாத் 
தருவார் 

17. யாழும் வீணைகளு , கின்னரிகளும் கொண்டு 
ராக கீதம் 
படித்தார் - அலை 
ஆழிபோற் குமுற மேளதாளங்களை 
அதிர அதிர 
அடித்தாற் 


18. சடைமுடி வள்ளலுக்குக் குடைமுடி தரித்திடத் 
தக்க அலங்கிருதம் 
செய்தார் - எங்கும் 
புடைவரும் தேவரும் மூவரும் யாவரும் 
புஷ்ப வருஷங்களைப் 
பெய்தார் 


19. மாமன் சனகனும் தாய்மாருங் கண்டு 
மகிழ்ச்சிக் கண்ணீர் 
துளித்தார் .. பின்னும் 
நாமிங்கே செய்த தவமே தவமென்று 
நகருள்ளோரும் 
களித்தார் 
மிகு 

20. கற்பனை கடந்த எம் அப்பனைராமனை 
சாவலர் ஒப்பனை 
செய்தார் 
பொற்புள கோதை எம் தாயார் சீதையைப் 
பூவையர் ஒப்பனை 
செய்தார் 
கூட் 

21. சந்திரகுலத்தில் வந்த சீதைக்கு நாத னென் 
சந்திரன் 
புகழ்ந்தானே 
இந்தவை போகத்தை ஆயிரங் கண்ணிற்கண்டு 
இந்திரன் 
மகிழ்ந்தானே 

பட்டாபிஷேக மண்டபம் பரதர் சோடித்தல் 

இங்கிப் படியே அயோத்தியும் சீராமன் தானும் சானகியும் 
பொங்கத் துடனே சிங்காரம் புனைகின்றளவிற் பரதாழ்வான் 
அங்கப் போது சாமிமுடிக் கபிஷேகம் செய் மண்டபந்தான் 
தங்கத் தாலும் மணியாலும் சமைத்தான் நன்றாய் அமைத்தானே 

பல்லவி 

சிங்காரம் செய்தானே பரதன் அபிஷேக மண்டபம் 
சிங்காரம் செய்தானே பரதன் 
( சிங் ) 

அநுபல்லவி 

துங்க நவமணிகள் 
சூரியப் பிரபைகள் மேலே 
இங்குள்ள பேருடன் 
ரகுராமனுக்குத் துய்ய 
எங்கும் இருந்து வெய்ய 
வாரிப்பிரபைகள் பெய்ய 
அங்குள்ள பேரும் உய்ய 
மகுடாபிஷேகம் செய்ய 
(சிங் ) 

சரணங்கள் 


1 விவர நீலத்திலும் கோமேதகத்திலும் 
வேதிகையும் சிறந்த போதிகையும் அடுக்கி 
குவியும் உபானமும் பதுமமும் யாளமும் 
கோமளத்தால் 
அடுக்கி 
தவளப் பளிங்குத் தள வரிசை வகுத்ததின் மேலே 
சாதிமாணிக்கச் சிங்காதனம் பதித்தொழுங் காலே 
பவளத் தூண்கள் நட்டு மதலை செய் தொரு 
தகாலே 
பதம்விரும்பும் தொண்டர் இதயகமலம் போலே 
(சிங் ) 

2. துய்ய மருமலர்ச் சரங்களை நிரைநிரை 
தூக்கி வகையாய்மேற் கட்டிகள் திருத்தி 
பையக் கவரிகள் கையினாலசைக்கும் 
பதுமைகள் சுற்றும் 
இருத்தி 
எய்தும் அவர் மனதில் ஐயம் சொல்லச்சொல்ல 
இதுவோ அயோத்திநகர் இதுவோ அல்ல அல்ல 
ஐயா இது அந்த வைகுந்தம் என்று சொல்ல 
ஆணிப்பொன்னாலே எங்கும் வாணித்து நல்லநல்ல 
(சிங் ) 

3. தேடிஉலகங்கள் நாடிக் கும்பிடும் 
சிகரகும் பங்கள்பல தகதகென்று மின்னவே 
ஈடுள்ள புவிக்குக்கண் ணாடிபோற் செய்தானே 
எங்கும் நிகநிக 
என்னவே 
பாடிக்கொள் வேதமோ ஆயிரந்தலை நாகப் 
பாம்பணையோ கடலோ அந்த நாகரிக 
வேடிக்கை நான் சொல்லக் கூடுமோ தேவலோக 
விசுவுகர்மாவினாலே உசிதம் உசிதமாக 


ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் 

சித்திரமண் டபத்தினிலே உள்ளங்கொண்டு 
தேவர்கள்மா னிடர்கள் செய்யும் சேவை கொண்டு 
சுத்திபெறு குகன்விபீ ஷணன் சுக்கிரீவன் 
துணைவர்பணி கொண்டுசிங்கா தனமேற்கொண்டு 
சத்தியமும் நீதியும்மேற் கொண்டு துள்ளச் 
சகலமும்கைக் கொண்டு செங்கோல் கொண்டராமன் 
பத்தினிசா னகியுடனே உலகை ஆளும் 
படிகொண்டான் அபிஷேக முடி கொண்டானே 

பல்லவி 

ஸ்ரீராமச்சந்திரன் 
மகுடாபி ஷேகம்கொண்டானே 
மகுடாபி ஷேகம் கொண்டானே 
( மகு ) 

அநுபல்லவி 

சகல ராசர்களும் 
சகல வேதியரும் 
சகல மந்திரிகளும் 
சகல முனிவர்களும் 
சகல தேசர்களும் 
சகல சாதியரும் 
சகல தந்திரிகளும் 
சகல மனிதர்களும் 
இந்திராதி தேவர்சளும் 
சிங்கா தனத்திருந்து 
சந்திராதி மூவர்களும் 
சந்தோஷ மாப்பொருந்து 
( மகு ) 

சரணங்கள் 


1 . மாதவ முனிவர்கள் புடைகூட பலவேதியர்கள் மறைபாட 
வானவரானவர் மலர் போட ரம்பை மேனகைர் வசி நடமாட 
மா தலத்தில் உள்ளதீர்த்தமும் 
வரிசையுடன் அனுமான் 
சோதிமிக்க ஆலாத்தி 
சோபனஞ் சொல்லிக் 
வானகத்தில் அமுர்தத்தை 
மகிழ்ந்து மகிழ்ந்தாசிகள் 
ஞானமிக்க நாரதர் 
நானா விதம்பாடிக் 
ஓதுசமுத்திர தீர்த்தமும் 
கொண்டு வர 
மீதில் லட்சுமிப்பெண்கள் 
கொண்டுவர 
மானமிகு முனிவர்கள் 
விண்டுவர 
கானமிக்க வித்தைமுறை 
கண்டுவர 
மகதர் குருதர்பலர் 
வடுகர் குடகர்பலர் 
வங்கர் கங்கர் பலர் 
மாளவர் சாளவர்பலர் 
கவுடயவனர்பலர் 
துளுவர் சளுவர்பலர் 
கொங்கணர் தெங்கணர்பலர் 
லாடர்கள் மாராடர்பலர் 
வங்கா ளம்பப் பரத்து ளோர்பலர் கொங்கீழங்குச்சரத்து ளோர்பலர் 
வந்தே சந்தித் திறைஞ்சி முடிபணி யுந்தோறும் பட்டுதிர்ந்த பொடிமணி 
வைத்த பதத்தில் உறுத்தி மற்றவர் சுற்றிலும் ஒற்றி வரச்சில 
கொற்றவர் 
மட்டுவ குத்துவ ரச்சில கட்டியம் உரைத்திடுபட்டர் செலச்செல 
வாமப ராக்கு வெகு 
நாமய ராக்கு ரண 
வீமர்ப ராக்கு ரகு 
ராமர் ராக்கு என 
வாசவர்க்கும் 
கேசவர்க்கும் 
ஈசுரர்க்கும் 
மீசுரர்க்கும் 
வல்லோர் எனப்பிதிர்கள் பல்லோர்சளும் துதிக்க 
நல்லோர் களும்கதிக்க 
எல்லோர்சளும் துதிக்க ( மகு ) 

மிகு 
வாசன் 
2. பூசுர வசிட்டன் நிசு 
வாசன் 
கேசவன் குறுமுனிவன் பரத்து 
வாசன் 
பூசுத கௌத மனுடன்வி 
யாசன் 
காசிபன் கோசிகன் துரு 
பூந்துகில் சுற்றி நல் 
மாந்தழைவைத்ததிவ்ய 
பூரணகும்பம் அவரவரி 
கொடுக்க 
ஏந்து நெய்யும் பொரியும் 
மாந்தி அக்கினிதேவன் 
எழும்பி எழும்பி வரக்கொழுந் 
தெடுக்க 
போந்த முகுர்த்தம்வந்து 
நேர்ந்ததெனத்திரண்டு 
புண்ணிய புரோகிதர் கடு 
கடுக்க 
சூழ்ந்து பலமுனிவர் 
சுபந்தரு நவக்கிரக செபம் 
பாந்திமந்திரஞ்சொல்லி 
கொடுக்க 
பூசுரர் உடைகளை வேசியர்கள் 
உடுக்க 
வேசியர் உடைகளை பூசுரர்கள் 
உடுக்க 
பூசிய பொடிவகை வேசியர் 
இறைக்க 
வேசியர் மிசையதை வேதியர்கள் 
இறைக்க 
பொன் போலும் சட்டமிட்ட 
மாலிகை 
மின் போலும் சுற்றில் வைத்த 
பாலிகை 
பொங்காரம் சுற்றிலும் 
பளபளன் 
எங்கேயும் சித்திரம் 
தளதளென 
புத்தமு தத்தினை நிகர்த்த 
மொழிச்சியர் 
அத்திர சாத்திகள் ஒத்த 
விழிச்சியர் 
பொற்கடகக்கையில் அப்பி 
அடிக்கடி 
கற்பகப் புட்பம் இறைத்து 
சதிப்படி 
போராட வேகுயில்கள் 
நேர்பாடவே மயில்கள் 
போலாடவே தகவும் 
கோலாடவே மிகவும் 
பூமிகளும் பாமிகளும் 
காமிகளு மேமகிழப் 
பூதாதி தரும் போக 
வேதாவுடனே லோக 
மாதா எனும் வைபோக 
சீதாசமேதனாக 
( மகு ) 


3. வீச 
அங்கதன் அருகிலுடை 
வாள்பிடிக்க 
சுக்ரீவன் கைலாகு தந்து 
தோள்பிடிக்க 
அஞ்சி அனுமான் சாமி 
தாள்பிடிக்க 
வந்தடைப்பம் சுமந்துமத 
வேள்பிடிக்க 
அட்சய விவேகி எனும் 
லட்சுமணன் சத்துருக்கன் 
அருகினில் நின்று 
கவரிகள் 
பட்டமுள்ள சுமந்திரன் 
எச்சரிக்கை என்று சொல்ல 
பரதன் குடைபிடித்து 
நயம் 
பேச 
அற்புதக்கு பேரன்வந்து 
பொற்பணி திருத்த மணி 
அணிபணி கண்டுசூரியன் 
கற்பனை கடந்தராமன் 
ஒப்பனை செய்திருமார்பில் 
களபச் சந்தனங்கள் சந்திரன் 
அருள் முகக் கமலமும் அதிலிரு கமலமும் 
இருகர கமலமும் இருபத கமலமும் 
கூச 
அனமிசை வருகிற 
வனிதை சனகி திரு 
அயன்வரு கமலமும் 
மலர்முக கமலமும் 
பேரிதை 
அன்பூறும் பச்செனும் சொ ரூபமும் 
முன்காணும் கைப்பிரசண்ட 
சாபமும் 
அங்கேகண் கொண்டுகண்ட 
இங்கே என் சொல் வோமென வேயதை 
அந்தர துந்துபி தும்தும் தும்மென 
முந்திய சங்குகள் பம்பம் பம்மென 
அந்தைகள் பம்பைகள் திம் திம் திம்மென 
மொந்தை அதிர்ந்தது தொம் தொம் தொம் மென 
ஆதாளி கொண்டுவிரி 
பாதாளமும் திசையும் 
ஆலோலம் மண்டுகடல் 
போலே முழங்கிவிட 
அந்த லோகமும் இந்தலோகமும் எந்தலோகமும் திரியும் 
அனைத்துயிர் களும் ஒக்க 
மலர்க்கை குவித்து நிற்க 
அதிஷ்டம் அயோத்தி தக்க வதிஷ்டமுனிவன் வைக்க ( மகுட ) 


ஸ்ரீராமர் அரசியல் 

திருமுடிமேல் மகுடாபி ஷேகம் கொண்டு 
சீதையுடன் ரத்தின சிம்மா சனமேற்கொண்டு 
தருமநிலை வசிஷ்டமுனி உரைக்கக் கொண்டு 
தம்பியர்மன் னவர்வணங்கச் செங்கோல் கொண்டு 
வருமறையோர் தம்மாசீர் வாதங் கொண்டு 
மன்னுயிரைத் தன்னுயிர் போல் மனத்துட்கொண்டு 
கருமுகில் நேர் மேனிரகு ராமன் பூமி 
காத்திட்டான் ஒருகுடைக்கீழ்ச் சேர்த்திட்டானே 

பல்லவி
காட்சியுடனே ராமன் தாழ்ச்சியில்லாமல் 
சாட்சி செய் திருந்தானே 
( காட் ) 

அநுபல்லவி 
மீட்சிசெய்த சீதாச 
வீறும் சிங்காசனமேல் 
மாட்சிபெறும் சடையன் 
மணிமகுடத்தை ஞான 
மேதனாகவே ஓங்கி 
மேவிக்கருணை தேங்கி 
மரபோர் கொடுக்கவாங்கி 
வசிஷ்டர் தரிக்கத்தாங்கி 
( காட் ) 


சரணங்கள் 

பகை 
1. ஏற்கும் பசுவும் அதைத் 
இசைந்திருக்கவே 
ஆர்க்கும் அடங்காததுன் 
அடையலர் படைகளைப் 
சேர்க்கும் குடிகள் ஆறில் 
செழித்திடவே செல்வம் 
பார்க்குள் உறுதுயரை 
பரதனை இளவர 
தார்ப்புயன் லட்சுமணன் 
சத்துருக்கன் ஞாயாதிபதி 
கார்க்கடல் வண்ணன்தேவர் 
கலைவல்ல பலபல ரிஷிகள் 
தாக்கும் வேங்கையும் ஒன்றா 
நீக்கி 
மார்க்கம் உடைய பொல்லா 
போக்கி 
ஒருகடமை கொடுத்துச் 
தேக்கி 
நீக்கி அருளவல்ல 
சாக்கி 
வீற 
வேற 
சேனாதிபதியாகி 
ஆய்நீதி நிறை 
கண்டுகளிப் 
பல்லாண்டு 
பூற 
கூற 
( காட் ) 


2 மல்லார் புயச்சுக்கிரீவன் முதலாம் வானரருக்கு 
மாமணிப் பணிகளும் 
பாய்ந்து 
கல்லார்சஞ் சீவி மலை கொண்டுவந்த அனுமார் 
களிக்கப் பிரமபட்டமும் 
ஈந்து 
சொல்லார் விபீஷணனுக் கரங்க விமானந்தந்து 
துதிகுகன் சாம்பு வந்தனுக் 
காய்ந்து 
எல்லார் பலமணிகள் கோர்வை செய்திட்ட கண்டி 
எழில் பெறக் கழுத்தினில் 
வேய்ந்து 
சல்லாப மாகஅவர் தமையும் அனுப்பி விட்டு 
சாதிசனங்களுடனே எப்பொழுதும் நட்டு 
வல்லாளன் ஆய்க்கொடுங் கோல் மன்னவரை அட்டு 
வடிவழகிய மலர்க்கையாற் செங்கோலைத் தொட்டு 
( காட் ) 

3. நேசமிந்தபரந் 
திய சூரிசளும்பிர 
தாமத்திலிருக்கும் நித் 
காச 
ராமராச்சியத்துக்கிணை ஆமோ எந்த லோகமும் 
நாமும் அங்கேபோவோமென் 
பேச 
சாம பேத்தான 
தண்டம் அறிந்தராச 
சமுகங்கள் எங்கும் வந்து 
மூச 
காமராசனும் அந்த 
திவ்விய மங்கள விக்கிர 
கத்தைக் கண்டுகண்கள் 
நேமப்படியே மந்திரி 
பிரதானிகளும் துய்ய 
நெறியார் மனுவின்படி உரிய அரசு செய்ய 
ஏமம் பெற மாதமும் 
மாரி எங்கெங்கும் பெய்ய 
இகத்தினில் உள்ளசர் வசீவரத்து மாக்களும் உய்ய 
கூச 
( காட் ) 

சமாப்தியில் மங்களம் 
பாயிரத்தில் உள்ள மங்களத்தை அவ்விருத்தத்தோடு இங்கே பாடிக்கொள்க 

சமாப்கியில் சோபனம் 
பாலகாண்டத்தில் உள்ள சோபனத்தைமட்டும் இங்கே பாடிக்கொள்க 

வாழி 
இரவிகுலம் வாழி Y தாராமர் வாழி 
ளையவர்மூ வரும் வாழி இவர்பெண்டிர் வாழி 
குருவசிஷ்டர் சுமந்திரர் அனுமார் சுக்கிரீவர்வாழி 
குருவாழி குகர்விபீ ஷணர்வாழி இந்தப் 
பரவியபார் கார்வாழி மும்மூர்த்தி வாழி 
பல அமரர் முனிவர் மதிகதிர்கள் வாழி 
தருவளர் காழிஅருணா சலகவி சொல்லியகீர்த் 
தனைப்படிப் போர் கேட்போரும் வாழி வாழி ! 

நூற்பயன் 

ஞானநா யகனாம் ராமன் நாடகம் இசையாற் சொல்லும் 
கானபா கவதர்உள்ளம் களித்திட இதனைக் கேட்போர் 
தானமாம் உலகில் உள்ள சௌபாக்கிய மும் பெற்றேநல் 
வானநாட் டரசனாக வசிகரம் பெறுவர் தாமே . 

யுத்த காண்டம் முற்றியது 
சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் 
இராம நாடகம் முற்றிற்று 


-----------------------


ஸ்ரீராமஜெயம் 

யுத்தகாண்டம் 

( கம்பராமாயண ஒப்புமைப் பகுதி ) 
அனுமார் மீண்டபின் ராவணன் கேட்க மந்திரிகள் ஆலோசனை கூறல்


பூவரும் அயனோடும் புகுந்து பொன்னகர் 
மூவகை உலகினும் அழகு முற்றுற 
எவின் இயற்றினன் கணத்தின் என்பரால் 
தேவரும் மருள் கொளத் தெய்வத் தச்சனே 


பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை 
நன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான் 
முன்னையின் அழகுடைத்து என்று மொய்கழல் 
மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான் 


தாழ்ச்சிஇங் கிதனின்மேல் தருவது என்இனி 
மாட்சிஓர் குரங்கினால் மறுகி மாண்டதால் 
ஆட்சியும் அரசும்என் அமைவும் நன்றுஎனா 
சூழ்ச்சியின் இழவரை நோக்கிச் சொல்லுவான் 


சுட்டது குாங்கெரி சூறை யாடிடக் 
கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும் 
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும் 
இட்டஇவ் அரியணை இருந்தது என் உடல் 


என்றவன் இயம்பலும் எழுந்திறைஞ்சினான் 
கன்றிய கருங்கழற் சேனை காவலன் 
ஒன்றுளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா 
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் 


வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் 
பஞ்சன மெல்லடி மயிலைப் பற்றுதல் 
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது 
தஞ்சென உணர்ந்திலை உணரும் தன்மையோய் 


போயின குரங்கினைத் தொடர்ந்து போய் இவண் 
ஏயினர் உயிர்குடித் தெவ்வம் தீர்கிலம் 
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் 
ஓயும் நம் வலியென உணரக் கூறினான் 


மற்றவன் பின்னுறு மகோ தரப்பெயர்க் 
கற்றடந் தோளினான் எரியும் கண்ணினால் 
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் 
கொற்றவ கேள் என இனைய கூறினான் 


இடுக்கிவண் இயம்புவ தென்னை ஈண்டெனை 
விடுக்குவை யாமெனின் குரங்கை வேரறுத்து 
ஒடுக்கரும் மனிதரை உயிருண்டு உன்பகை 
முடிக்குவென் யான் என முடியக் கூறினான் 


இச்சிரத் தவன்உரைத் திறுக்கும் எல்லையில் 
வச்சிரத் தெயிற்றவன் வல்லை கூறுவான் 
அச்சிரத்தைக் கொருபொருளன்று என்றனன் 
பச்சிரத் தம்பொழி பருதிக் கண்ணினான் 


நில் நில் என்றவன் தனை விலக்கி நீயிவண் 
என்முனும் எளியைபோல் இருந்தியோ எனா 
மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் 
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் 

ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் 
வெல்வது விரும்பினும் விளைவு வேண்டினும் 
செல்வதங் கவருழைச் சென்று தீர்ந்தறக் 
கொல்வது கருமம் என்று உணரக் கூறினான் 


காவலன் கண்ணெதிர் அவனைக் கைகவித்து 
யாவதுண் டினி நமக்கு என்னச் சொல்லினான் 
கோவமும் வன்மையும் குரங்குக் கேயெனா 
மாபெரும் பக்கன் என் றொருவன் வன்மையான் 

மானுடர் ஏவுவார் குரங்குவந் திவ்வூர் 
தானெரி மடுப்பது நிருதர் தானவர் 
ஆனவர் அதுகுறித்து அழுங்குவார் எனின் 
மேல் நிகழ் தக்கன விளம்ப வேண்டுமோ 


திசாதிசை போதும் நாம் அரசன் செய்வினை 
உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வென்றான் 
பிசாசன் என் றொரு பெயர் பெற்ற பெய்கழல் 
நிசாசரன் உருப்புணர் நெருப்பின் நீர்மையான் 


ஆரியன் தன்மையீ தாயின் ஆய்வுறு 
காரியம் ஈதெனின் கண்ட வாற்றினான் 
சீரியர் மனிதரே சிறியம் யாம்எனா 
சூரியன் பகைஞன் என்றொருவன் சொல்லினான் 


ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் 
தாழ்வினை இதனின் மேல் பகரத் தக்கதோ 
சூழ்வினை மனிதரால் தோன்றிற் றாம் எனா 
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் 


தொகைநிலைக் குரங்குடை . மனிதர்ச் சொல்லி என் 
சிகைநிறச் சூலிதன் திறத்தின் செல்லினும் 
நகையுடைத் தாமமர் செய்தல் நன்றெனாப் 
புகைநிறக் கண்ணனும் புகன்று பொங்கினான் 
( இராவணன் மந்திரப்படலம் 1 , 2 , 11 -13 , 15 , 16 , 21 , 22 , 27 , 28 , 31 , 37 , 

38 , 40, 42-45 ) 


கும்பகர்னன் ராவணனுக்கு ஆலோசனை கூறல் 


வெம்பிகல் அரக்கரை விலக்கி வினைதேரா 
நம்பியர் இருக்கஎன நாயகனை முன்னா 
எம்பி என கிற்கில் உரை செய்வல் இதம் என்னா 
கும்பகருணப் பெயரினானிவை குறித்தான் 


நீ அயன் முதற்குலம் இதற்கொருவன் நின்றாய் 
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவமைந்தாய் 
தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய் 
ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ 


ஓவியம் அமைந்தநகர் தீயுண உளைந்தாய் 
கோ இயல் அழிந்ததென வேறொரு குலத்தான் 
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ 
பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ 


நன்னகர் அழிந்ததென நாணினை நயத்தால் 
உன்னுயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல் 
மன்னகை தரத்தா ஒருத்தன் மனையுற்றான் 
பொன்னடி தொழத் தொழ மறுத்தல் புகழ் போலாம் 


என்றொருவன் இல்லுறை தவத்தியை இரங்காய் 
வன்றொழிலி னாய்மறை துறந்து சிறைவைத்தாய் 
அன்றொழிவ தாயின் அரக்கர் புகழ் ஐய 
புன்றொழி னாரிசை பொறுத்தல் புல மைத்தோ 


ஆசில்பர தாரமவை அஞ்சிறை யடைப்போம் 
மாசில் புகழ்காத லுறுவேம் வளமை கூரப் 
பேசுவது மானம் இடை பேணுவது பேணுவது காமம் 
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் 

சிட்டர்செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய் 
மட்டவிழ் மலர்க்குழலினாளை இனி மன்னா 
விட்டிடுது மேல் எளியம் ஆதும் அவர் வெல்லட் 
பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழியன்றால் 


மரம்படர் வனத்தொழுவனே சிலை வலத்தால் 
கரன்படை படுத்தவனை வென்று களைகட்டான் 
நிரம்பிடுவ தன்றதுவும் நின்றதினி நம்பால் 
உரம்படுவ தே இதனின் மேல் உறுதி உண்டோ 


வென்றிடுவர் மானுடவரேனும் அவர் தம்மேல் 
நின்றிடை விடாது நெறிசென்றுற நெருக்இத் 
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் 
ஒன்றிடுவர் தேவர் உல கேழும் உடன் ஒன்றாம் 


ஊறுபடை ஊறுவதன் முன்னம் ஒருநாளே 
ஏறுகடல் ஏறிநரர் வானரரை எல்லாம் 
வேறுபெய ராதவகை வேரொடும் அடங்க 
அறறுவது வேகருமம் என்பது நுவன்றான் 

( இராவணன் மந்திரப் படலம் 47 - 56 ] 


விபீஷணர் இந்திரசித்தை விலக்கி ராவணனுக்கு புத்திகூறல் 


என்றவன் இ பம்பியிடும் எல்லையினில் வல்லே 
சென்று படை யோடுசிறு மானுடர் சினப்போர் 
வென்று பெயர்வாய் அரசநீகொல் எனவீரம் 
நன்று பெரி தென்றுமகன் நக்கிவை நவின்றான் 


நீரும் நிலனும் நெடியகாலும் நிமிர்வானும் 
பேருலகில் யாவுமொரு நாள்புடை பெயர்த்தே 
யாரும் ஒழியாமை நரர்வானரரை எல்லாம் 
வேரும் ஒழியாதவகை வென்றலது மீளேன் 

என்றடி இறைஞ்சினன் எழுந்துவிடை ஈமோ 
வன் திறலினாய் எனலும் வாளெயிறு வாயில் 
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் 
வென்றவரின் நன்றுணரும் வீடணன் விளம்பும் 


பிள்ளைமை விளம்பினை பேதைநீஎன 
ஒள்ளிய புதல்வனை உரப்பி என்உரை 
எள்ளலை யாமெனின் இயம்பல் ஆற்றுவென் 
தெள்ளிய பொருளென அரசற் செப்பினான் 


கோ நகர் முழுவதும் நினது கொற்றமும் 
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை 
ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர் 
வானரம் சுட்டதென்று ணர்தல் மாட்சியோ 


மீனுடை நெடுங்கடல் இலங்கை வேந்தென்பான் 
தானுடை நெடுந்தவம் தளர்ந்து சாய்வது ஓர் 
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி 
தேனுடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ 


தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள் 
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ 
நோயுனக்கு யான் என நுவன்றுளாள் அவள் 
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்  


பொய்யுரைத் துலகினில் சினவினார் குலம் அறப்பொருது தன் மேல் 
நெய்யுரைத் துறையிலிட்டு அறம் வளர்த் தொருவனாய் நெறியில் நின்றான் 
மையுரைத் துலவுகண் மனைவிபால் வரம் அளித்து அவைமறாதே 
மெய்யுரைத் துயிர்கொடுத்து அமரரும் பெறுகலா வீடுபெற்றான் 

அனையவன் சிறுவர் எம்பெரும உன்பகைஞரால் அவரை அம்மா 
இனையர் என்றுணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிரிலாதார் 
முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும் 
நினைவருந் தகையர் நம்வினையினால் மனிதராய் எளிது நின்றார் 


உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியதுமார்பு உலகை மூடும் 
மரம் ஒருங்கிய காரதியார் விராதனது மால்வரைகள் மானும் 
சிரம் ஒருங்கிய இனிச்செரு ஒருங்கியதெனின் தேவர் என்பார் 
பரம் ஒருங்குவதலால் பிறிதொருங் காததோர் பகையுமுண்டோ 


இந்தமாநகரைச் செருமுருக்கிய கான் கதிரிசிரத் தோன் 
முந்தமானாயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் 
அந்தமான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும் ஐயா 
இந்த மானிடவராம் இருவரோ டெண்ணலாம் ஒருவர் யாரே ? 


ன்னம் ஒன்றுரை செய்கேன் இனிதுகேள் எம்பிரான் இருவராய 
அன்னவர் தம்மொடும் வானரத்தலைவராய் அணுகி நின்றார் 
மன்னனும் நம்பகைஞராம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் 
கன்மம் அன்றிது நமக்கு றுதி என்றுணர்தலும் கருமம் அன்றால் 


இசையும் செல்வமும் உயர் குலத்தியற்கையும் எஞ்ச 
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது 
அசைவில் கற்பினவ் அணங்கை விட்டருளுதி அதன்மேல் 
விசையம் இல்லெனச் சொல்லினன் அறி.ஞரின் மிக்கான் 
( இராவணன் மந்திரப்படலம் 58 , 64 , 65,72.75 , 77.81 , 84 , 85 , 90 . 

97 , 98,9 ) . ) 


விபீஷணரை ராவணன் சீறிக்கூறல் 
 
இச்சை அல்லன உறுதிகள் உ.ரைக்குவென் என்றாய் 
பிச்சர் சொல்லுவ சொல்லினை என்பெரு விறலைக் 
கொச்சைமா னுடர்வெல்குவர் என்றனை குறித்தது 
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா 


ஈங்கு மானுடப் புழுக்களுக்கு இலைவரம் என்றாய் 
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் 
தாங்கும் யானையைத் தள்ளி அத்தழல் நிறத்தவனை 
ஓங்கல் ஒன்றொடும் எடுக்க முன்வரங் கொண்டதுண்டோ 

சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பலமுறை தோற்று 
வெல்லும் ஆற்றலும் ஒருமுறை பெறுகதாம் விண்ணைக் 
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் 
கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கோளே ? 

அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் 
இரங்கி யான் நிற்ப என்வலி அவன்வயின் எய்த 
வரங் கொள் வாலியால் தோற்றனென் மற்றும் வேறுள்ள 
குரங்கெலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி 

நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் 
ஏலும் அன்ன வருடை வலி அவன் வயின்எய்தும் 
சாலஅன்னது நினைந்து அவன் எதிர்செலல் தவிர்ந்து 
வாலிதன்னை அம்மனிதனும் மறைந்து நின்றெய்தான் 


ஊனவில் இறுத்து ஓட்டைமா மரத்துள் அம்புஓட்டி 
கூனிசூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி 
யான் இழைத்திட இல்லிழந்து உயிர்சுமந்திருந்த 
மானுடன் வலி நீயலாது யார் உளர் மதித்தார் 

இந்திரன் தனை இருஞ்சிறை இட்டநாள் இமையோர் 
தந்தி கோடிறத் தகர்த்த நாள் தன்னையான் முன்னம் 
வந்தபோர் தொறும் துரந்தநாள் வானவர் உலகைச் 
சிந்தவென்றநாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் ! 

( இராவணன் மந்திரப் படலம் 101 , 102 , 104 , 107 , 108 , 1-9 , 113 ] 
இரணியன் என்பவன் எம்மனோரினும் 
முரணியன் அவன் தலை முருக்கி முற்றினான் 
அரணியன் என்றவற்கு அன்புபூண்டவனை 
மரணம்என் றொரு பொருள் மாற்றும் வன்மையோய் 

ஆயவன் வளர்த்ததன் தாதை யாக்கையை 
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் 
ஏயும் நம் பகைஞனுக் கினிய நண்பு செய் 
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ 


டாழீசால் இரணியன் புதல்வன் பண்பென 
சூழ்வினை முற்றியான் அவர்க்குத் தோற்றபின் 
ஏழை நீ என்பெரும் செல்வம் எய்திப்பின் 
வாழவோ கருத்தது வரவற்றாகுமோ 


பழியினை உணர்ந்தியான் படுக்கிலேன் உனை 
ஒழிகிலை புகலுதல் ஒல்லை நீங்குதி 
விழிஎதிர் நிற்றியேல் விளிதி என்றனன் 
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் 

[ வீடணன் அடைக்கலப் படலம் 2,3,4.8 ] 


சரணம் அடைந்த விபீஷணரைக் குறித்து ஸ்ரீ ராமருக்கு அனுமார் கூறுதல் 

வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக 
ஊழிகாண் குறுநினது உயிரை ஓர்கிலாய் 
கீழ்மை யோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ 
வாழ்மைதான் அறம்பிழைத்தவர்க்கு வாய்க்குமோ 

எத்துணை வகையினும் உறுதி எய்தின 
ஒத்தன உணர்த்தினேன் உணர கிற்றிலை 
அத்தஎன் பிழைபொறுத் தருளுவாய் என 
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான் 

தூயவர் துணிதிறன் நன்று தூயதே 
ஆயினும் ஒருபொருள் உரைப்பென் ஆழியாய் 
தீயன் என் றிவனையான் அயிர்த்தல் செய்கிலேன் 
மேயின சிலபொருள் விளம்பக் கேட்டியால் 

வாலிவிண்பெற அரசு இளையவன்பெற 
கோலிய வரிசிலை வலியும் கொற்றமும் 
சீலமும் உணர்ந்து நிற் சேர்ந்து தெள்ளிதின் 
மேலரசு எய்துவான் விரும்பி மேயினான் 

கொல்லுமின் இவனை என் வனைஎன் றரக்கன் கூறிய 
எல்லையில் , தூதரை எறிதல் என்பது 
புல்லிது பழியொடும் புணரும் , போர்த்தொழில் 
வெல்லலாம் பின்னர் என்று இடைவிலக்கினான் 
 


மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய 
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும் 
தூதரைக் கோறலும் தூய்தன் றாம் என 
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான் 


அன்னவன் தனிமகள் அலரின் மேலயன் 
சொன்னதோர் சாபமுண்டு உன்னைத் துன்மதி , 
நன்னுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என 
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் 


தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதேவர் 
மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டுநின்றாய் 
ஆவத்தின் வந்தபயம் என்றானை அயிர்த்த கல விடுதியாயின் 
கூவத்தின் சிறுபுனலை கடலயிர்த்தது ஒவ்வாதோ கொற்றவேந்தே 

ஆதலால் இவன்வரவு நல்வரவே என்றுணர்ந்தேன் அடியேன் உன்றன் 
வேத நூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பறியேன் என்று விட்டான் 
காதல் நான் முகனாலும் கணிப் பரிய கலையனைத்தும் கதிரோன் முன்சென்று 
ஓதினான் ஓதநீர் கடந்து பகைகடிந்து உலகை உய்யச் செய்தான் 

( வீடணன் அடைக்கலப் படலம் 10 , 12 , 86 , 89 , 94 , 95 , 98 , 100 , 102 ] 


விபீஷணர் சரணாகதத்தைக் குறித்து ஸ்ரீராமர் கூறல் 

மற்றினி உரைப்ப தென்னோ மாருதி வடித்துச் சொன்ன 
பெற்றியே பெற்றி அன்ன தன்றெனின் பிறிதொன்றானும் 
வெற்றியே பெறுக தோற்க வீகவீயாது வாழ்க 
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை 

பிறந்தநாள் தொடங்கியாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி 
மறந்தநாள் உண்டோ என்னைச் சரண் என வாழ்கின்றானை 
துறந்தநாள் இறந்தநாளாம் துன்னினான் சூழ்ச்சியாலே 
இறந்தநா ளன்றோ என்றும் இருந்தநாள் ஆவ தென்றான் 

போதகம் ஒன்றுகன்றி இடங்கர்மாப் பொருத போரின் 
ஆதியம் பரமேயான் உன் அபயம் என்றழைத்த அந்நாள் 
வேதமும் முடிவு காணாமெய்ப் பொருள் வெளிவந்தெய்தி 
மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்  


ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம் 
ஈதலே கடப்பா டென்பது இயம்பினீர் என்பால்வைத்த 
காதலான் இனிவேறெண்ணக் கடவதென் கதிரோன்மைந்த 
கோதிலா தவனைநீயே என்வயின் கொணர்தி என்றான் 

[ வீடணன் அடைக்கலப்படலம் 105 , 107 , 110 , 117 ] 


சுக்கிரீவன் அழைத்தபோது விபீஷணர் சொல்லிக் கொண்டுவருதல் 


தழுவினர் நின்ற காலைத் தாமரைக் கண்ணன் தங்கள் 
முழுமுதற் குலத்திற்கேற்ற முறைமையால் உவகைமூள 
வழுவலில் அபயம் நின்பால் வழங்கினன் அவன் பொற்பாதம் 
தொழுதியால் ளிரைவின் என்று கதிரவன்சிறுவன் சொன்னான் 


சிங்கஏறனையான் சொன்ன வாசகம் செவிபுகா முன் 
கங்குலின் நிறத்தினான் தன் கண்மழைத் தாரைகான்ற 
அங்கமும் மனமதென்னக் குளிர்ந்ததவ் அகத்தை மிக்குப் 
பொங்கிய உவகைஎன்னப் பொடித்தன உரோமப்புள்ளி 


பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்தபாவி 
வஞ்சனுக் கிளைய என்னை வருக என்றருள் செய்தானோ 
தஞ்செனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட 
நஞ்செனச் சிறந்தேனன்றோ நாயகன் அருளின் நாயேன் 


துறவியின் உறவுபூண்ட தூயவர் துணைவன் என்னை 
உறஉவந்தருளி மீளா அடைக்கலம் உதவினானே 
அறவினை இறையும் இல்லா அறிவிலா அரக்கன் என்னும் 
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினிற் பிழைப்பதானேன் 

( வீடணன் அடைக்கலப்படலம் 121 - 123 , 126 } 


விபீஷணர் ஸ்ரீராமருடைய தெரிசனம் செய்தல் 
 
மார்க்கடம் சூழ்ந்தவைப்பின் இளையவன் மருங்குகாப்ப 
நாற்கடல் உடுத்தபாரின் நாயகன் புதல்வன் நாமப் 
பாற்கடல் சுற்றவிற்கை வடவரைபாங்கு நிற்பக் 
கார்க்கடல் கமலம் பூத்ததெனப் பொலிவானைக் கண்டான் 


அள்ளிமீதுல்கை வீசும் அரிக்குலச் சேனைநாப்பண் 
தெள்ளுகன் திரையிற்றாகிப் பிறிதொரு திறனும் சாரா 
வெள்ளிவெண்கடலுள் மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்டப் 
பள்ளிதீர்ந் திருந்தானென்னப் பொலிதரு பண்பினானை 


படர்மழை சுமந்தகாயம் பகர்வரும் அமரர் கோமான் 
அடர்சிலை துறந்த தென்ன ஆரந்தீர் மார்பினானைக் 
கடர் கடைமத்தின் பாம்பு கழற்றிய தேன்னிக் காசின் 
சுடர்ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை 


கற்றைவெண் நிலவுநீங்கக் கருணையாம் அமிழ்தம் காலும் 
முற்றுறு கலையிற்றாய முழுமதி முகத்தினானைப் 
பெற்றவன் அளித்தமோலி இளையவன் பெறத்தான் பெற்ற 
சிற்றவை பணித்தமோலி பொலிகின்ற சென்னியானை 


வீரனை நோக்கி அங்கம் மெய்ம் மயிர்சிலிர்ப்பக் கண்ணீர் 
வார நெஞ்சுருகிச் செங்கண் அஞ்சன மலையன்றாகின் 
கார்முகில் கமலம் பூத்தது அன்றிவன் கண்ணன் கொல்லாம் 
ஆரருள் சுரக்கும் நீதி அறநிறம் கரிதோ என்றான் 


கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன்கல்லும் 
மரங்களும் உருகநோக்கும் காதலன் கருணைவள்ளல் 
இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத்திறைஞ்சு கின்றான் 
வரங்களின் வாரியன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் 

[ வீடணன் அடைக்கலப்படலம் 129, 130 , 132 , 133 , 134 , 137 ] 


விபீஷணர் ஸ்ரீராமரை சரணடைதல் 
 
அழிந்தது பிறவி என்னும் அகத்தியல் முகத்துக்காட்ட 
வழிந்த சண்ணீரின் மண்ணில் மார்புற வணங்கினானை 
பொழிந்ததோர் கருணை தன்னால் புல்லினன் என்று தோன்ற 
எழுந்தினிது இருத்தி என்னா மலர்க்கையால் இருக்கை ஈந்தான் 

[ வீடணன் அடைக்கலப்படலம் 138 }  


ஸ்ரீராமர் விபீஷ னருக்கு அபயமும் அரசும் கொடுத்தல் 


ஆழியான் அவனை நோக்கி அருள்சுரந் துவகை கூர்ந்தே 
ஏழினோ டேழாய் நின்றஉலகும் என்பெயரும் எந்நாள் 
வாழும் நாள் அன்று காறும் வாளெயிற்றரக்கர் வைகும் 
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான் 


உய்ஞ்சனென் அடியேன் என்று ஊழ்முறை வணங்கிநின்ற 
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கித் 
தஞ்ச நல் துணைவனான தவறிலாப் புகழான் தன்னைத் 
துஞ்சலில் நயனத்தைய சூட்டுதிமகுடம் என்றான் 


விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா 
அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய 
களவியல் அரக்கன்பின்னே தோன்றிய கடமைதீர 
இளையவற் களித்தமோலி என்னையும் கவித்தி என்றான் 


குகனொடும் ஐவரானேம் முன்புபின் குன்று சூழ்வான் 
மகனொடும் அறுவரானேம் எம்முழை அன் பின்வந்த 
அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவரானேம் 
புகலருங் கானந்தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை 

[ வீடணன் அடைக்கலப்படலம் 139 , 141 - 143 ] 


விபீஷணர் ஸ்ரீராமருக்கு ராவணன் பெருமைகூறல் 


ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி 
வார்கெழு கனைகழல் அரக்கர் வன்மையும் 
தார்கெழு தானையின் அளவும் தன்மையும் 
நீர்கெழு தன்மையாய் நிகழ்த்து வாய்என்றான் 

நிலையுடை வடவரைகுலைய நேர்ந்து அதன் 
தலைஎன விளங்கிய தமனியப் பெரு 
மலையினை மும்முடி வாங்கி ஓங்குநீர் 
அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே 


ஏழு நூறு யோசனை அகலம் இட்டகீழ் 
ஆழம் நூறுயோசனை ஆழிமால் வரை 
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே 
சூழும்மாமதில் அது சுடர்க்கும் மேலதால் 

மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும் 
இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால் 
சுருங்கிடும் என்பல சொல்லி சுற்றிய 
கருங்கடல் அகழது நீரும் காண்டிரால் 


வடதிசை வயங்கொளி வாயில் வைகுவோர் 
இடையிலர் எண்ணிரு கோடி என்பரால் 
கடையுக முடிவினில் காலன் என்பதென் 
விடைவரு பாகனைப் பொருவும் மேன்மையார் 


இப்படி மதிலொரு மூன்றும் வேறினி 
ஒப்பரும் பெருமையும் உரைக்கவேண்டுமோ 
மெய்ப் பெருந்திருநகர் காக்கும் வெய்யவர் 
முப்பது கோடியின் மும்மை முற்றினார் 

தேர்பதினாயிரம் பதுமம் , செம்முகக் 
கார்வரை அவற்றினுக் கிரட்டி , கால்வயத்து 
ஊர்பரி அவற்றுனுக் கிரட்டி ஒட்டகம் 
தார்வரு புரவியும் இரட்டி சாலுமே 


உகம்பல் காலமும் தவம் செய்து பெருவசம் உடையான் 
சுகம்பல் போரலால் வேறிலன் பொருபடைத் தொகையான் 
நகம்பல் என்றிவை யில்லதுஓர் நரசிங்கம் அனையான் 
அகம்பன் என்றுளன் அலைகடல் பருகவும் அமைவான் 

பொருப்பை மீதிடும் புரவியும் பூட்கையும் தேரும் 
உருப்ப விற்படை ஒன்பது கோடியும் உடையான் 
செருப்பெய் வானிடைச் சினைக்கிடாய் கடாய்வந்து செறுத்த 
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்றுளன் ஒருநெடியோன் 

தும்பியீட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த 
அம்பொன் மாப்படை ஐயிருகோடி கொண்டமைந்தான் 
செம்பொன் நாட்டுடைச் சித்தரை சிறையிடவைத்தான் 
கும்பன் என்றுளன் ஊழிவெங்கதிரினும் கொடியான்  


பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது 
ஆயதேர்ப்படை ஐயிரு கோடி கொண்ட மைந்தான் 
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா 
மாயையான் உளன் மகோதரன் என்றொரு மறவோன் 

குன்றில் வாழ்பவர் கோடி நாலைந்தினுக்கு இறைவன் 
இன்றுளார் பினை நாளையிலார் என எயிற்றால் 
தின்றுளான் நெடும் பல்முறை தேவரைச் செருவின் 
வென்றுளான் உளன்வேள்வியின் பகைஞன் ஓர்வெய்யோன் 


மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் வகுத்தால் 
உண்ணும் நாளொருநாளின் என்றொளிர் படைத்தானை 
எண்ணின் நாலிரு கோடியன் எரிஅஞ்ச விழிக்கும் 
கண்ணினான் உளன் சூரியன்பகை என்றோர் கழலான் 


தேவரும் தக்கமுனிவரும் திசைமுகன் முதலா 
மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான் 
தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன் 
மாபெரும் பக்கன் என்றுளன் குன்றினும் வலியான் 


உச்சிரத் தெரிகதிர் என உருத்தெரி முகத்தன் 
நச்சிரப்படை நாலிரு கோடிக்கு நாதன் 
முச்சிரத்தையில் தலைவற்கும் வெலற்கரு மொய்ம்பன் 
வச்சிரத்து எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் 


அசஞ்சலப்படை ஐயிருகோடியான் அமரின் 
வசஞ் செயாதவன் தானன்றிப் பிறரிலா வலியான் 
இசைந்த வெஞ்சமத் தியக்கரை வேரொடும் முன்நாள் 
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்றுளன் ஒருபித்தன் 


சில்லிமாப் பெருந்தேரோடும் கரிபரிசிறந்த 
வில்லின் மாப்படை ஏழிரு கோடிக்கு வேந்தன் 
கல்லிமாப்படி கலக்குவான் கனல் எனக் காந்திச் 
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்றறம் துறந்தோன் 


லங்கை நாட்டினன் எறிகடல் தீவிடை உறையும் 
அலங்கல் வேற்படை ஐயிருகோடிக்கும் அரசன் 
வலங்கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும்புகழ் மறைத்தான் 
விலங்கு நாட்டத்தன் என்றுளன் வெயில்உக விழிப்பான்  


நாமம் நாட்டிய சவம் எனின் நாள்தொறும் ஒருவர் 
ஈமநாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் 
தாமம் நாட்டிய கொடிப்படைப் பதுமத்தின் தலைவன் 
தூம நாட்டத்தன் என்றுளன் தேவரைத் துரந்தான் 

போரின் மத்தனும் பொருவய மத்தனும் புலவர் 
நீரின் மத்தெனும் பெருமையர் நெடுங்கடற்படையார் 
ஆரும் அத்தனை வலியுடையாரிலை அமரில் 
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் 


தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் 
கும்ப மாக்கிரிகோடு இருகைகளால் கழற்றிச் 
செம்பொன் மால்வரை மதம்பட்டதாம் எனத் திரிந்தான் 
கும்பகன்னன் என்றுளன் பண்டுதேவரைக் குமைத்தான் 


கோளிரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக்குமரன் 
மூளு ம் வெஞ்சினத்து இந்திரசித்து என மொழிவர் 
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னைத் 
தாளும் மார்பினும் தோளினும் உளஇனம் தழும்பு 


தன்னையும் தெறும் தருமம் என்றிறை மனம் தாழான் 
முன்னவன் தரப் பெற்றதோர் முழுவலிச் சிலையான் 
அன்னவன் தனக் கிளையவன் அப்பெயர் ஒழிந்தான் 
பின்ஓர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் 


தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும் 
மூவராம் தகைமுதல்வராம் தலைவரும் முனையின் 
போவராம் தகை அழிவராம் எனத் தனிப் பொருவார் 
ஆவராம் இராவணற்கு அரும்பெரும் புதல்வர் 


னையதன்மையர் வலியிவை இராவணன் என்னும் 
அனையவன் திறம்யான் அறியளவு எலாம் அறைவென் 
தனையன் நான்முகன் தகைமகன் சிறுவற்குத் தவத்தால் 
முனைவர் கோன்வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் 


என்னில் ஐம்பெரும் பூதமும் யாவையும் உடைய 
புள்ளிமான் உரிஉடையன் உமையொடும் பொருந்தும் 
வெள்ளியம் பெருங்கிரியினை வெரொடும் வாங்கி 
அள்ளி விண்தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க  


குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்துறை குபேரன் 
திரண்ட மாடும் தன்திருவொடு நிதியமும் இழந்து 
புரண்டுமான் திரள் புலி கண்டதாம் எனப்போனான் 
ரண்டு மானமும் இலங்கைமா நகரமும் இழந்து 


என்றுலப்புறச் சொல்லுகேன் இராவணன் என்னு ம் 
குன்றுலப்பினும் உலப்பிலாத் தோளினான் கொற்றம் 
இன்றுலப்பினும் நாளையே உலப்பினும் சிலநாள் 
சென்றுலப்பினும் நினக்கன்றிப் பிறர்க் கென்றும் தீரான் 

( ஒன்னார் வலியறிபடம் 15 , 17 - 20 , 26 , 30 , 33 - 45 , 48 - 53 , 56 , 59 ] 


ஸ்ரீராமர்முன் விபீஷணர் அனுமாரைத் துதித்தல் 


ஈடுபட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால் 
பாடுபட்டவர் படுகடல் மண்லினும் பலரால் 
சூடுபட்டது தொல்நகர் அடுபுலி துரந்த 
ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் 


எம்குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர் 
கிங்கரப் பெயர் கிரியன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் 
வெங்கரத்தினும் காலினும் வாலினும் வீக்கச் 
சங்கரற்கழி முப்புரத்தவர் எனச் சமைந்தார் 


வெம்புமாக்கடற் சேனைகொண்டு எதிர்பொர வெகுண்டான் 
அம்பும் ஆயிரத்தாயிரம் இவன் புயத்தழுத்தி 
உம்பர் வானகத்து ஒருதனி நமனைச் சென்றுற்றான் 
சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு ; தலைவ 


சேனைக்காவலர் ஓர் ஐவர் உளர் பண்டுதேவர் 
வானைக்காவலும் மானமும் மாற்றிய மறவர் 
தானைக் கார்க்கருங் கடலொடும் தமரொடும் தாமும் 
யானைக் கால்பட்ட செல்லென ஒல்லையின் அவிந்தார் 


காய்த்த அக்கணத்து அரக்கர் தம் உடல்உகு கறைத்தோல் 
நீத்த எக்கரின் நிறைந்துள கருங்கடல் நெருப்பின் 
வாய்த்த அக்கனை வரிசிலை மலையொடும் வாங்கித் 
தேய்த்த அக்குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவி


சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச் 
சின்னம் ஆனவர்கணக்கிலர் யாவரே தெரிப்பார் 
இன்னர் ஆர்உளர் வீரர் மற்றிவன் சுட எரித்த 
அன்ன மா நகர் அவிந்தது அக்குருதியால் அன்று 


விலங்கல் வெந்தவா வேறினி விளம்புவ தெவனோ 
அலங்கள் மாலையும் சாந்தமும் அன்றுதான் அணிந்த 
கலங்க ளோடும் அச்சாத்திய துசிலொடும் கதிர்வாள் 
இலங்கை வேந்தனும் ஏழுநாள் விசும்பிடையிருந்தான் 


காந்தும் வாளியின் கான் முதல் வீரரும் கவியின் 
வேந்தும் அன்றிவர் விளிந்தவா கேட்டன்றிவ் விலங்கை 
தீந்தவா கண்டும் அரக்கரைச் செருவிடை முருக்கிப் 
போந்தவா கண்டும் நான் இங்குப் புகுந்தது புகழோய் 

[ ஒன்னார் வலியறிபடலம் 60-66 , 68 ] 


ஸ்ரீராமர் வருணன்பேரில் அம்புதொடுத்தல்  


தருணமங்கையை மீட்பதோர் நெறிதருக என்னும் 
பொருள் நயந்து நன்னூல் நெறி அடுக்கிய புல்லில் 
கருணையங் கடல்கிடந்தது கருங்கடல் நோக்கி 
வருணமந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி 

பூழி சென்று தன் திருவுருப் பொருந்தவும் பொறைதீர் 
வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும் வளர்ந்தான் 
ஊழிசென்றன ஒப்பன ஒருபல் அவைஓர் 
ஏழுசென்றன வந்திலன் எறிகட்கு இறைவன் 


ஊற்றம் மீக்கொண்ட வேலையான் உண்டுஇல்லை என்னும் 
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்எனும் மனத்தால் 
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரிமுளைத்தென்னச் 
சீற்றம் மீக்கொண்டு சிவந்தன தாமரைச் செங்கண் 


வாங்கி வெஞ்சிலை வாளிபெய் புட்டிலும் மலைபோல் 
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் 
தாங்கி நாணினைத் தாக்கினன் தாக்கிய தமரம் 
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல் 


பெரிய மால்வரை ஏழினும்பெரு வலிபெற்ற 
வரிகொள் வெஞ்சிலைவளர் பிறையாம் எனவணங்கித் 
திரிவன நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் 
எரியின் மும்முடி கொடியன சுடுசரம் எய்தான் 


மீனும் நாகமும் விண்தொடும் மலைகளும் விறகா 
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த 
பேன நீர் நெடு நெய்யெனப் பெய்கணை நெருப்பால் 
கூனை அங்கியின் குண்டடம் ஒத்தது கடற்குட்டம் 


பாழி வல்நெடும் கொடுஞ்சிலை வழங்கி பகழி 
ஏழுவேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி 
ஊழி வெங்கனல் கொழுந்துகள் உருத்தெழுந்தோடி 
ஆழிமால் வரைக்கு அப்புறத்து இருளையும் அவித்த 


மருமதாரையின் ஏரியுண்ட மகரங்கள் மயங்கிச் 
செருமவானிடைக் கற்பக மரங்களும் தீய 
நிருமியா விட்டநெடுங் கணைபாய்தலின் நெருப்போடு 
உருமு வீழ்ந்தெனச் சென்றன கடல்துளி உம்பர் 


கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் தொடர்ந்தெனக் கொளுந்த 
ஓடும் மேகங்கள் பொரிந்திடை உதிர்ந்தன உம்பர் 
ஆடும் மங்கையர் கருங்குழல் விளர்த்தன அளக்கர்க் 
கோடு தீந்தெழக் கொழும் புகைப்பிழம்பு மீக்கொள்ள 


நிமிர்ந்த செஞ்சரம் நிறந்தொறும் படுதலும் நெய்த்தோர் 
உழிழ்ந் துலந்தன மகரங்கள் உலப்பில உருவத் 
துமிந்த துண்டமும் பலப்படத் துரந்தன தொடர்ந்து 
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி 


சிந்திஓடிய குருதி வெங்கனலொடு செறிய 
அந்தி வானகம் கடுத்தது அவ் அளப்பரும் அளக்கர் 
பந்தி பந்திகளாய் நெடும் கடுங்கணை படர 
வெந்து தீர்ந்தன பொரிந்தன சிலமீன்கள்  


அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்றடர்ந்து எரிஉய்ப்ப 
வெதிரின் வல்நெடும் கான் என வெந்தன மீனம் 
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த 
உதிரமும் கடல்திரைகளும் பொருவன ஒருபால் 


தெய்வ நாயகன் தெரிகணை திசைமுகத் தொருவன் 
வைவுஇது ஆம் என பிழைப்பில் மனத்தினும் கடுக 
வெய்யவல் நெருப்பிடை இடைபொறித் தெழவெறிநீர்ப் 
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது புணரி 

செப்பின் மேலவர் சீறினும் அதுசிறப்பாதல் 
தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா 
உப்பு வேலை என்றுலகுறு பெரும்பழி நீங்கி 
அப்புவேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் 


ஆழியின் புனலற மணிகள் அட்டிய 
பேழையிற் பொலிந்தன பரவை பேர்வறப் 
பூழையின் பொருகணை உருவப்புக்ககன 
மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை 


இடுக்கின எண்ணுவதில்லை ஈண்டினி 
முடுக்குவென் வருணனை என்ன மூண்டெதிர் 
தடுக்கரும் வெகுளியான் சதுமுகன்படை 
தொடுத்தனன் அமரரும் துணுக்கம் எய்தினார் 


அண்ட மூலத்துக்கப்பால் ஆழியும் கொதித்தது ஏழு 
தெண்திரைக் கடலின் செய்கை செப்பிஎன் தேவன் சென்னி 
பண்டைநாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் 
குண்டிகை இருந்த நீரும்குளுகுளு கொதித்ததன்றே 

கடல்சீறியபடலம் 2 , 3 , 4 , 13 , 15-20 , 23 , 27 , 29 , 30 , 49 , 56 , 581 


ஸ்ரீராமரை வருணன் சரணடைதல் 


வந்தனன் என்பமன்னோ மறிகடற் கிறைவன் வாயில் 
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத் நெஞ்சன் 
வெந்தழித் துருகும் மெய்யன் விழுப்புகைப் படலம் விம்ம 
அந்தரின் அலமந்தஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் 


நவையறு உலகிற்கெல்லாம் நாயக நீயேசீறின் 
கவயம் நின் சரணம் அல்லால் பிறிதொன்று சுண்டதுண்டோ 
வையுனக் கரியவோதான் எனக்கென வலிவேறுண்டோ 
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத் தரற்றுகின்றான் 


ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே 
ஊழிநீ உலகும் நீயே அவற்றுறை உயிரும் நீயே 
யாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்குசெந்தீச் 
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதிமூர்த்தி 


அன்னை நீ அத்தன் நீயே அல்லனவ எல்லாம் நீயே 
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே 
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய 
உன்னைநீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை 


பாயிருள் சீய்க்கும் தெய்வப் பகுதியைப் பழிக்கும் மாலை 
மாயிரும் கரத்தால் மண்மேல் அடியுறை யாகவைத்துத் 
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை 
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்றடியில் வீழ்ந்தான் 


பார்த்தனில் பொறை பின் மிக்க பத்தினிக் குற்ற பண்பு 
வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன் நான் 
தீர்த்தநின் ஆணைஏழாம் செறிதிரைக் கடலில்மினின் 
போர்த்தொழில் விலக்கப் போனேன் அறிந்திலேன் புகுந்ததொன்றும் 


கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உ பிர்கள் எல்லாம் 
ஒல்லையின் உலந்து வீயும் இட்டதொன் றொழுகா வண்ணம் 
எல்லையில் காலமெல்லாம் ஏந்து வென் இனிதின் எந்தாய் 
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றிஎன் சிரத்தின் மேலாம் 

[ வருணன் அடைக்கலப்படலம் 3- 5 , 9 , 10 , 13 , 20 ] 


வானரவீரர்கள் சேதுபந்தனம் பண்ணுதல் 


என்றலும் இரங்கிஐயன் இத்திறம் நிற்கஇந்தப் 
பொன் றலில் பகழிக் கப்பால் இலக்கம் என்புகறி என்ன 
நன்றென வருணன் தானும் உலகத்து நலிவு தீரக் 
குன்றென உயர்ந்த தோளாய் கூறுவல் உன்று கூறும் 

மன்னவ மருகாந்தாரம் என்பதோர் தீவின்வாழ்வார் 
அன்னவர் சதகோடிக்கு மேலுளார் அவுணர் ஆயோர் 
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் 
மின்னுமிழ் கணையை வெய்யோர் மேற்செலவிடுதி என்றான் 

மொழி உனக்கபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன் 
பழி எனக் காகும்என்று பாதகர் பரவை என்னும் 
குழியினைக் கருதிச்செய்த குமண்டையைக் குறித்து நீங்க 
வழியினைத் தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் 

[ வருணன் அடைக்கலப்படலம் 14 , 15 , 19 ] 


கருவரை காதங்கள் கணக்கிலா தன 
இருகையில் தோள்களில் சென்னி எந்தின 
ஒருகடல் அடைக்கமற்று ஒழிந்த வேலைகள் 
வருவனவாம் என வந்தவானரம் 

பேர்த்தன சிலமலை பேர்க்கப் பேர்க்க நின்று 
ஈர்த்தன சிலசில சென்னி ஏந்தின 
தூர்த்தன சிலசில தூர்க்கத் தூர்க்கநின்று 
ஆர்த்தன சிலசில ஆடிப்பாடின 


காலிடை ஒருமலையுருட்டிக் கைகளின் 
மேலிடை ஒருமலை வாங்கி விண்தொடும் 
சூலுடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய 
வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால் 


முடுகினன் தருகென மூன்று கோடியர் 
எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு 
அடுக்கினம் தன்வலி காட்டி ஆழியை 
நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான் 


மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு 
எஞ்சுறக் கடித்தெடுத் தெறியவே நளன் 
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் 
தஞ்சம் என்றோர் களைத்தாங்கும் தன்மை போல் 


வேரொடும் நெடுங்கிரி தலைவர் வீசின 
ஓரிடத் தொன்றின் மேல் ஒன்று சென்றுற 
நீரிடை நிமிர்போறி பிறக்க நீண்டாது 
ஆருடை நெருப்புஎன வருணன் அஞ்சினான் 

சிந்துரத் தடவரை எறியச் சேணிடை 
முந்துறத் தெறித்தெழு முத்தம் தொத்தலால் 
அந்தரத் தெழுமுகில் ஆடையா அசன் 
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே 


நீலனிட்ட நெடுவரை நீந்நில 
மூலம் முட்டலின் மொய்புனல் கைம்மிக 
கூலம் இட்டிய ஆர்கலி கோத்தலால் 
ஓலமிட் டெழுந்து ஓடி உலகெலாம் 


குமுதன் இட்ட குலவரை கூத்தரின் 
திமிதம் இட்டுத் திரியும் திரைக்கடல் 
துமிதம் ஆர்புக வானவர் துள்ளினார் 
அமுதம் இன்னும் எழுவெனும் ஆசையால் 


ஆர ஆயிர யோசனை ஆழமும் 
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் 
பார மால்வரை ஏறப் பதைத்துடல் 
பேரவே குன்றும் வேலையுல் போர்ந்த வால் 


உற்றதால் அணை ஓங்கல் லங்கையை 
முற்றமூன்று பகலிடை முற்றலும் 
பெற்ற ஆர்பு விசும்பு பிளந்ததால் 
மற்றிவ் வானம் பிறிதொரு வான்கொலோ 


நாடுகின்ற தென்வேறொன்று நாயகன் 
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் 
ஓடும் என்முதுகிட்டென ஓங்கியே 
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே 

[ சேதுபந்தனப்படலம் 5-9 , 11 , 13 , 38 , 42 , 45 , 65 , 66 ] 


ஸ்ரீராமர் சுகசாரணரோடு கூறுதல் 


ஊழிமுதல் நாயகன் வியப்பினொடு வந்தான் 
ஆழியன தாழம் உரை செய்யும் அளவன்றே 
வாழிஇவ் இலங்கை நெடுவன் திசைய தாமேல் 
ஏழுகடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் 


நீலனை இனிதுநோக்கி நேமியோன் விரைய நீநம் 
பால்வரு சேனைக்கெல்லாம் பாடிவீடமைத்தீ என்னக் 
கால்மிசை வணங்கிப் போனான் கல்லினால் கடலைக்கட்டி 
நூல்வரை வழி செய்தானுக் கந்நிலை நொய்தின் சொன்னான் 


வில்லினாற் கிருக்கை செய்யும் விரும்பினால் பொருப்பின் வீங்கும் 
கல்லினால் கல்லைஒக்கக் கடாவினான் கழைகளான 
நெல்லினால் அளக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் 
புல்லினால் தொடுத்து வாசப்பூவினால் வேய்ந்துவிட்டான் 


இற்றிது காலமாக இலங்கையர் வேந்தன் ஏவ 
ஓற்றர்வந் தளவுநோக்கி குரங்கென உழல்கின்றாரைப் 
பற்றினன் என்பமன்னோ பண்டு தான் பலநாள் செய்த 
நற்றவப் பயன் தந்துய்ப்ப முந்துறப் போந்ததம்பி 


அகனுறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுதகண்ணன் 
நகம்நிறை கானில்வைகும் நம்மினத்தவரும் அல்லர் 
தகைநிறை வில்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் 
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரியச்சொன்னான் 


எல்லையில் இலங்கைச் செல்வம் இளையவற் கீந்த தன்மை 
சொல்லுதிர் மகரவேலைக் கவிச்குல வீரர் தூர்த்துக் 
கல்லினிற் கடந்தவாறும் கழறுதிர் காலந்தாழ்த்த 
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர்  


கொத்துறு தலையான் வைகும் குறும்புடை இலங்கைக் குன்றம் 
தத்துற தடநீர் வேலை தனில் ஒரு சிறையிற்றாதல் 
ஒத்துற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் 
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் 


சண்டங்கொள் வேகமாரும் தனிவிடை உவணம் தாங்கும் 
துண்டங்கொள் பிறையான் மௌலித் துளவினோடும் தொல்லை 
அண்டங்கள் எவையும் தாங்கிக் காப்பினும் அறம் இலாதாற் 
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் 


தீட்டிய மழுவாள் வீரன் தாதையைச் செற்றான் சுற்றம் 
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் 
வீட்டி என் தாதைக்காக மெய்ப்பலி விசும்புளோரை 
ஊட்டுவென் உயிர்கொண்டென்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் 

தாழ்விலாத் தவத்தோர் தையல் தனித்தொரு சிறையில் தங்கச் 
சூழ்விலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத்தன் சுற்றத்தோடும் 
வாழ்வெலாம் தம்பி கொள்ள வயங்கெரி நாகம் என்னும் 
மீள்விலாச் சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் 


நோக்கினிர் தானை எங்கும் நுழைந்து நீர்இனி வேறொன்றும் 
ஆக்குவ தில்லையாயின் அஞ்சல் என்று அவரை ஐயன் 
வாக்கினின் மனத்தின் கையின் மற்றிவர் நலியாவண்ணம் 
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் 

( ஒற்றுக் கேள்விப்படலம் 4 , 14 , 16 , 23 , 23 , 33 38 ] 


ராவணனுக்கு மாலியவான் புத்தி கூறல் 


வெள்ளவாரி விரிவொடு அவ்வீடணத் 
தள்ளவாரி நிலைமையும் தாபதர் 
உள்ளவாறும் உரைமின் என்றான் உயிர் 
கொள்ளவாய் வெருவும் கொடுங் கூற்றனான் 

அடியம் அந்நெடுஞ் சேனைனய ஆசையால் 
முடிய நோக்கலுற்றேம் முதுவேலையின் 
படியை நோக்கி எப்பாலும் படர்குறும் 
கடிய வேகக் கழுலனின் கண்டிலம்  


தார் உலாம் பணிமார்ப நின் தம்பியே 
தேர்உலாவு கதிரும் திருந்து தன் 
பேர்உலாவும் அளவினும் பெற்றனன் 
நீர் உலாவும் இலங்கை நெடுந்திரு 


சேதுபந்தனம் செய்தனன் என்றதிப் 
போதுவந்த புதுவலியோ ஒரு 
தூது வந்தவன் தோள்வலி சொல்லிய 
ஏது அந்தம் லாதிருக்கவே 


சரங்கள் இங்கிவற்றால் பண்டுதானுடை 
வரங்கள் சிந்து வென் என்றனன் மற்றெமைக் 
குரங்கலாமை தெரிந்தும் அக்கொற்றவன் 
இரங்க உய்ந்தனம் ஈதெங்கள் ஒற்றென்றார் 


மதிநெறி அறிவுசான்ற மாலியவான் நல்வாய்மை 
பொதுநெறி நிலைய தாகப்புணர்த்துதல் புலமைத்தென்னா 
விதிநெறி நிலையதாக விளம்புகின்றோரும் மீண்டு 
செதுநெறி நிலையினாரே என்பது தெரியச்செப்பும் 

பூசற்கு முயன்று நம்பால் பொருதிரைப் புணரிவேலித் 
தேசத்திறைவனான தெசரதன் சிறுவனாக 
மாசற்ற சோதிவெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் 
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தையிட்டார் 


அன்னவற்கிளவல் தன்னை அருமறை பரம் என்றோதும் 
நன்னிலை நின்று தீர்ந்து நவையறு பொருள்கள் தோறும் 
தென்னிலைப் பிரிந்தான் என்னப்பலவகை நின்றதூயோன் 
இன்னணை என்னயாரும் இயம்புவர் ஏதுயாதோ 

அவ்வவர்க் கமைந்த வில்லும் குலவரை அவற்றின் ஆன்ற 
வெவ்வலி வேறுவாங்கி விரிஞ்சனே விதித்தமேல் நாள் 
செவ்வழி நாணும் சேடன் , தெரிகணை ஆகச் சேர்த்திக் 
கவ்வு அயில் காலநேமிக் கணக்கையும் கடந்ததென்பார் 

வாலிமாமகன் வந்தானை வானவர்க் கிறைவன் என்றார் 
நீலனை உலகம் உண்ணும் நெருப் பினுக் கரசன் என்றார் 
காலனை ஒக்கும் தூதன் காற்றெனும் கடவுள் என்றார் 
மேலும் ஒன்றுரைத்தார் அன்னான் விரிஞ்சனாம் இனிமேல் என்றார் 


அப்பதம் அவனுக்கீந்தான் அரக்கர்வேர் அறுப்பதாக 
இப்பதி எய்திநின்ற ராமன் என்றெவரும் சொன்னார் 
ஒப்பினாள் உரைக்கின்றாரோ உண்மையே உனர்த்தினாரோ 
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனித் தேவர் என்றார் 


ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் 
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா 
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றாத் 
தாயவள் உலகுக்கெல்லாம் என்பதும் சாற்றுகின்றார் 


கானிடை வந்ததேயும் வானவர்கடாவ வேயாம் 
மீனுடை அகழிவேலை விலங்கல்மேல் இலங்கை வேந்தன் 
தானுடை வரத்தை எண்ணித் தருமத்தின் தலைவர் தாமே 
மானுட வடிவங்கொண்டார் என்பதோர் வார்த்தை இட்டார் 

ஆயிரம் உற்பாதங்கள் ஈங்குவந்து அடுத்தவென்றார் 
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறியத்தக்கோன் 
ஏயின தூதன் ஏற்றப்பற்று விட்டிலங்கைத் தெய்வம் 
போயின தென்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் 

அம்பினுக் இலக்கமாவார் அரசொடும் அரக்கர் என்ன 
நம்பரத் தடங்கும் மெய்யன் நாவினிற் பொய்யிலாதான் 
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒருமுழம் உயர்ந்த ஞானத் 
தம்பியே சாற்றிப் போனான் என்பதும் சமையச் சொன்னார் 

ஈதெலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதிஉற்றது 
ஆதியின் இவனால் என்றும் உன்றன்மேல் அன்பினாலும் 
வேதனை நெஞ் சின் எய்த வெம்பியான் விளைவ சொன்னேன் 
சீதையை விடுதியாயின் தீரும் இத்தீமை என்றான் 

ஒற்றுக் கேள்விப்படலம் 56 , 57 , 60 , 61 , 64 , 7 - 811 


மாலியவானை ராவணன நிந்தித்தல் 


மற்றெலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் 
இற்றைநா ளளவும் நின்ற இமையவர் என்னும் தன்
சாற்றவா றன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் 
கற்றவா நன்று போஎன்று னையன கழறலுற்றான் 


பேதைமா னிடவரோடு குரங்கல பிறவேயாக 
பூதல வரைப்பின் நாகர்புரத்தின் அப்புறத்ததாக 
காது வெஞ் செரு வேட்டென்னைக் காந்தினர் கலந்தபோதும் 
சீதை தன் திறத்தின் ஆயின் அமர்த்தொழில் திறம்புவேனோ 


ஒன்றல பகழி என் கைக்குரியன உலகமெல்லாம் 
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலியவெம்போர் 
முன் தருக என்றுதேவர் முதுகுழ்க் கமரின் முன்னம் 
சென்றன இன்றுவந்த குரங்கின்மேல் செல்கலாவோ 


சூலம் ஏய் தடக்கை அண்ணல் தானும் ஓர் குரங்காய்த் தோன்றி 
ஏலுமேல் இடைவதல்லால் என்செய வல்லான் என்னை 
வேலை நீர் கடைந்த மேனாள் உலகெலாம் வெருவவந்த 
ஆலமோ விழுங்க என்கை அயில்முகப் பகழி அம்மா 


அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சிப்போன 
எறிசுடர் நேமியான்வந் தெதிர்ப்பினும் என்கைவாளி 
பொறிபடச் சுடர்கள் தீயப்போவன போழ்ந்து முன்நாள் 
மறிகடல் கடைய வந்த மணிகொலாம் மார்பிற் பூண ? 


கொற்றவன் இமையோர் கோமான் குரங்கின துருவம் கொண்டால் 
அற்றை நாள் அவன் தான் விட்ட அயிற்படை அறுத்துமாற்ற 
இற்றவான் சிறைய ஆகிவிழுந்து மேல் எழுந்து வீங்காப் 
பொற்றைமால் வரைகளோ என்புயநெடும் பொருப்பும் அம்மா 

( ஒற்றுக் கேள்விப்படலம் 82-87 ] 


சாரன் ராவணனுக்கு ஸ்ரீராமர் முதலோரைக் காட்டல்  


ஆக ராகவனை அவ்வழி கண்டான் 
மாகராக நிறை வாளொளி யோனை 
எகராசியினின் எய்தி எதிர்க்கும் 
வேகராகு எனவெம்பி வெகுண்டான்  


ஏனையோன் இவன்ராமன் எனத்தன் 
மேனியே உரை செய்கின்றது வேறு இச் 
சேனையோரை அடையத் தெரிஎன்னத் 
தான்வினாவ எதிர் சாரன் விளம்பும் 


ங்கிவன் , படை இலங்கையர் மன்னன் 
தங்கை என்றலும் முதிர்ந்த சலத்தால் 
அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும் 
கொங்கை நாசிசெவி கொய்து குறைத்தான் 


கையவன் தொட அமைந்த கரத்தான் 
ஐய வாலியொடு இவ்வண்டம் நடுங்கச் 
செய்தவன் செருவினின் திகழ்கின்றான் 
வெய்யவன் புதல்வன் யாரினும் வெய்யான் 


நீலன் நின்றவன் நெருப்பின் மகன்திண் 
சூலமும் கயிறும் இன்மை துணிந்தும் 
ஆலம் என்னும் நிறமின்மை யறிந்தும் 
காலன் என்பர் இவனைக் கருதாதார் 


வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் 
ஏறாவருணன் வழிதந்திலன் என்று இராமன் 
சீறாத உள்ளத்தெழும் சீற்றம் உகுத்த செந்தீ 
ஆறாதமுன்னம் அகன் வேலையை ஆறுசெய்தான் 


முக்காலமும் மெய்ம்மதியால் முறையின் உணர்வான் 
புக்கு ஆலம் எனப்புணரிப் புலவோர் கலக்கும் 
அக்காலன் உள்ளான் கரடிக்கு அரசாகிநின்றான் 
க்காலம் நின்றும் உலகேழும் எடுக்கவல்லான் 


உவன்காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கவன்காண் 
இவன்காண் கவயன் கவயாக்கனும் ஊங்கிவன்காண் 
சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன் 
அவன்காண் நெடுங்கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் 


மூரபன் நகுதோளவன் மூரிமடங்கல் என்னக் 
கரபல்நகம் அன்னவை மின்உகக் காந்துகின்றான் 
வரபல் நகந்தன்னையும் வேரொடுவேண்டின் வாங்கும் 
சரபன் அவன் இவன் சதவலியாய தக்கோன் 


வெதிர் கொள் குன்றெலாம் வேரொடும் வாங்கி மேதினியை 
முதுநொய்தெனச் செய்தவன் கனலையும் முனிவோன் 
கதிரவன் மகற்கு இடமருங்கே நின்றகாளை 
ததிமுகன் அவன் சங்கன் என்றுரைக்கின்ற சிங்கம் 
( இராவணன் வானரத்தானை காண்படலம் 19 , 20 , 21 , 23 , 

26-28 , 30 , 31 , 331 


சுக்கிரீவனுக்கும் ராவணனுக்கும் மல்லுத்தம்


என்னும் வேலையின் இராவணற்கிளவலை இராமன் 
கன்னி மாமதில் நகர்நின்று நம்பலம் காண்பான் 
முன்னிவானினும் மூடி நின்றார்களை முறையால் 
இன்ன நாமத்தர் இனையர் என்றியம்பு என்றான் 


நாறுதன் குலக்கிளையெலாம் நரகத்து நடுவான் 
சேறுசெய்தவன் , உருப்பசிதிலோத் தமை முதலாக் 
கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து 
ஏறிநின்றவன் புன் தொழில் இராவணன் என்றான் 


கருதிமன்றொன்று கழறுதன் முன்னம் விழிக் கனல்கள் 
பொருது புக்கன முந்துறச் சூரியன் புதல
தி அன்னதாய் சிவந்தநற்கனி என்று சொல்லப் 
பருதிமேல் பண்டு பாய்ந்தவனாம் எனப்பாய்ந்தான் 


கால இருள் சிந்துகதி ரோன் மதலை கண்ணுற்று 
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி 
நீலமலை முன் கயிலை நின்றதென நின்றான் 
ஆலவிட மன்றிவர நின்ற சிவன் அன்னான் 


இத்திசையில் வந்தபொருள் என் என இயம்பான் 
தத்தி எதிர் சென்று திசை வென்றுயர் தடந்தோள் 
பத்தினொடு பத்துடையவன் உடல்பதைப்பக் 
குத்தினன் உரத்தில் நிமிர்கைத் துணைகுளிப்ப  


திருகிய சினத்தொடு செறுத்தெதிர் விழித்தான் 
ஒருபது திசைக்கணும் ஒலித்தொலி ஒப்பத் 
தருவனம் எனப்புடை தழைத்துயர் தடக்கை 
இருபதும் எடுத்து உரும் இடித்தென அடித்தான் 


அடித்த விரல்பட்ட உடலத்துழி இரத்தம் 
பொடித்தெழ உறுக்கி எதிர்புக் குடல் பொருந்தி 
கடுத்த விசையின் கடிதெழுந்து கதிர்வேலான் 
முடித்தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் 


உதைத்தவன் அடித்துணை பிடித்து ஒருகணத்தில் 
பதைத்து லைவுறப்பல விதத்திகல் பரப்பி 
மதக்கரியை உற்று அரிநெரித்தென மயக்கிச் 
சுதைத் தவனிடைகடிது அடிக்கொடு துகைத்தான் 


துகைத்தவன் உடற்பொறை சுறுக்கொள இறுக்கித் 
தகைப்பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி 
வகைப்பிறை நிறத்து எயிறுடைப் பெரியவாய் அம் 
குகைப்பொழி புதுக்குறுதி கைக்கொடு குடித்தான் 


கைக்கொடு குடித்தவள் உடல்கனக வெற்பைப் 
பைக்கொடு வடத்தரவு எனப்பல கைப்பற்றி 
மைக்கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் 
திக்கொடு பொருப்புற நெருப்பொடு திரித்தான் 


திரித்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகைகுத்திப் 
பெருத்துயர் தடக்கைகொடு அடுத்திடை பிடித்துக் 
கருத்தழிவுறத் திரிதிறத்து எயில் கணத்தன்று 
எரித்தவனை ஒத்தவன் எடுத்தகழி பட்டான் 

இட்டவனை இட்டகழில் கடிதின் இட்டான் 
தட்ட உயரத்தினில் உறும் தச முகத்தான் 
உடனே அவனும் வந்து இவனை உற்றான் 
விட்டிலர் புரண்டிருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் 

அந்தர அருக்கன் மகன் ஆழியகழாகச் 
சுந்தர முடைக்கரம் வலிக்கயிற தொப்ப 
எந்திரம் எனத்திரி இரக்கமில் அரக்கன் 
மந்தரம் எனக்கடையும் வாலியையும் ஒத்தான்  


ஒன்றுற விழுந்த உருமைத் தொடரஓடா 
மின்தெரி எ பிற்றின் ஒரு மேகம் விழும் என்னத் 
தின்றிடுவென் என்றெழு சினத்திறல் அரக்கன் 
பின்தொடர வந்து இரு கரத்துணை பிடிந்தான் 


வந்தவனை நின்றவன் வலிந்தெதிர் மலைந்தான் 
அந்தகனும் அஞ்சிட நிறத்திடை அறைந்தான் 
எந்திரம் எனக்கடிது எடுத்தவன் எறிந்தான் 
கந்துகம் எனக்கடிது எழுந்தெதிர் கலந்தான் 


செறிந்துழல் கறங்கனையர் மேனிநிலை தோரர் 
பிறிந்தனர் பொருந்தினர் எனத்தெரிதல் பேணார் 
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன்னின்று 
அறிந்திலர் அரக்கரும் அமர்த்தொழில் அயர்ந்தார் 


என்றவன் இரங்குங் காலத்து இருவரும் ஒருவர்தம்மின் 
வென்றிலர் தோற்றிலாராய் வெஞ்சமம் விளைக்கும் வேலை 
வன்றிறல் அரக்கன் மேளலி மணிகளை வலியான் வாங்கிப் 
பொன்றினன் ஆகின் நன்று என்றவன் வெள்கஇவனும் போந்தான் 

( மகுடபங்கப்படலம் 1-3 , 7-15 , 17 , 2 , 23 , 25 , 32 ] 


ஸ்ரீராமர் சுக்கிரீவன் பிறிவைப்பற்றி அவனோடு முறையிடல்  


இன்னதோர் தன்மை எய்தும் அளவையின் எழிலிவண்ணன் 
மன்னுயிர் அனையகாதல் துணைவனை வரவு காணான் 
உன்னிய கருமமெல்லாம் என்னோடு முடிந்த என்னா 
தன்னுணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் 


ஒன்றிய உணர்வேயாய ஒருயிர்த்துணைவ நின்னை 
இன்றியான் உளெனாய் நின்று ஒன்றியற்றுவது இயைவதன்றால் 
அன்றியும் துயரத்திட்டாய் அமரரை அரக்கர்க் கெல்லாம் 
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்ததுன் வெகுளி என்றான் 


தெய்வவெம் படையும் தீராமாயமும் வல்லதீயோன் 
கையிடைப் புக்காய் நீ வேறு வவ் வணம் கடத்திகாவல் 
வையம்ஓர் ஏழும்பெற்றால் வாழ்வனே வாராயாகில் 
உய்வனே தமியனேனுக்கு உயிர்தந்த உதவியோனே  


ஒன்றாகநினைய ஒன்றாய் விளைந்தது என்கருமம் அந்தோ 
றானும் யானோ வாழேன் நீஇலைஎனவும் கேளேன் 
றாய பழியும் நிற்கநெடுஞ் செருக்களத்தில் என்னைக் 
கொன்றாயும் நீயே உன்னைக் கொல்லுமேல் குணங்கள் தீயோன் 


இறந்தனை என்றபோதும் இருந்துயான் அரக்கர் என்பார் 
திறந்தனை உலகின் நீக்கிப்பின் உயிர் தீர் வென் என்றால் 
புறந்தரு பண்பினாய உயிரொடும் பொருந்தினானை 
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் 


அழிவது செய்தாய்ஐய அன்பினால் , அளியத்தேனுக் 
ஒழிவரும் உதவி செய்த உன்னையான் ஒழிய வாழேன் 
எழுபது வெள்ளந்தன்னுள் ஈண்டு ஓர்பேர் எஞ்சாதேகிச் 
செழுநகர் அடைந்த போழ்தும் இத்துயர் தீர்வதுண்டோ 


கொழுமணிமுடிகள் தோறும் கொண்டநல் மணியின்கூட்டம் 
அழுதயர்கின்ற அண்ணல் அடித்தலத் தமரச்சூட்டி 
தொழுதயல் நாணி நின்றான் தூயவர் இருவ ரோடும் 
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர்உயிர் எய்திற்றன்றே 


கல்லினும் வலியதோளாய் நின்னையக் கருணை இல்லோன் 
கொல்லுதல் செய்தானாகின் கொடுமையால் கொற்றம்பேணி 
பல்பெரும் பகழிமாரி வேரொடும் பறிய நூறி 
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலா தேன் 

பெருமையும் வண்மைதானும் பேரெழில் ஆண்மைதானும் 
ஒருமையும் உணரநோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே 
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் 
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந் தென் செய்தாய்நீ 


வென்றியன் றென்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க 
நன்றியன் றென்றும் அன்று நானிலம் எயிற்றிற் கொண்ட 
பன்றியன் றாகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா 
இன்றிது வென்றி என்றென்று இராமனும் இரங்கிச் சொன்னான் 

( மகுடபங்கப்படலம் 26-31 , 33 , 36 , 37 , 48 ]  


ஸ்ரீராமர் வான வீரரோடு இலங்கையை வளைத்தல் 
 


ன்னனலவும்பன்னி இறைஞ்சிய முடியன் நாணி 
மன்னவர் மன்னன் முன்னர் வானர மன்னன் நிற்ப 
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக 
மின் என விளங்கும் பைம்பூண் வீடணன் விளம்பலுற்றான்  


தொடிமணி மைக்குந் தோளாய் சொல்லிதின் வேறும் உண்டோ 
வடிமணி வயிரவென்வாள் சிவன்வயின் வாங்கிக் கொண்டான் 
முடிமணி பறித்திட்டாயோ இவன்இனி முடிக்கும் வென்றிக்கு 
அடிமணி இட்டாய் அன்றே அரிக்குலத்து அரச என்றான் 

( மகுடபங்கப்படலம் 43 , 47 ] 


உளைப்புறும் ஓதவேலை ஓங்கலை ஒடுங்கத் தூர்ப்ப 
அளப்பரும் தூளிச்சுண்ணம் ஆசைகள் அலைக்கப்பூசல் 
இளைப்பரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலைமுற்றும் 
வளைத்தனர் விடியத்தத்தம் வாயில்கள் தோறும் வந்து 


லகிலா அரக்கன்சேனை அகப்பட அரியின் தானை 
வலைகொலாம் என்னச்சுற்றி வளைத்ததற் குவமை கூறின் 
கலைகுலாம் பரனை ஏழும் கால்கிளர்ந் தெழுந்தகாலத்து 
உலகெலாம் ஒருங்குகூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் 

[ அணிவகுப்புப்படலம் 25 , 28 ] 


இராவணன் இலங்கைக்கு காவல்வகுத்தல்  


காட்டிய காலகேயர் கொழுநிணக் கற்றைகாலத் 
தீட்டிய படைக்கை வீரச்சேனையின் தலைவ , தெள்ளி 
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளங்கொண்டு 
கீட்டிசை வாயில் நிற்றி நின்பெருங் கிளைகளோடும் 

காலன் தன் களிப்புத்தீர்த்த மகோதர காலையே யோய் 
மாலொன்றும் மனத்து வீரன் மாபெரும் பக்கனோடும் 
கூலம் கொள் குரங்கை யெல்லாம் கொல்லுதி வெள்ளமான 
நாலைம்ப தோடும் சென்று நமன்திசை வாயில் நண்ணி  


ஏற்றம் என் சொல்லின் என்பால் இந்திரன் பகைஞ! அந்நாள் 
காற்றினுக் கரசன்மைந்தன் கடுமை நீ கண்ட தன்றோ 
நூற்றிரண்டாய வெள்ள நுன் பெரும்படைஞர் சுற்ற 
மேற்றிசை வாயில் சேர்தி - விடிவதன் முன்னம் வீர 


இந்நெடுங் காலமெல்லாம் இமையவர்க் கிறுதிகண்டாய் 
புன்னெடும் குரங்கிற்சேரல் புல்லிது புகழும் அன்றால் 
அந்நெடும் மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் 
தொன்னெடு நகரிகாக்க விருபாக்க என்னச் சொன்னான் 


கடகரிபுரவி ஆள்தேர் கமலத்தோன் உலகிக்கிப்பால் 
புடைஉள பொருது கொண்டு போர் பெறாப் பொங்குகின்ற 
டையிடை மிடைந்தசேனை இருநூறு வெள்ளங்கொண்டு 
வடதிசை வாயில் காப்பேன் யான் எனவகுத்து விட்டான் 

[ அணிவகுப்புப்படலம் 18 -22 ] 


அங்கதன் தூதுபோக அவனோடுராவணன் சொல்லுதல் 

நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணிக் 
கடுங்கனல் விடமும் கூற்றும் கரந்துகால் கரமும்காட்டி 
விடுஞ்சுடர் மகுடம்மின்ன விரிகடல் இருந்ததென்ன 
கொடுந்தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் 

நின்றவன் தன்னை அன்னான் நெருப்பெழ நிமிரப்பார்த்து இங்கு 
இன்றிவண் வந்த நீயார் எய்தியகருமம் என்னை 
கொன்றிவர் தின்னாமுன்னம் கூறுதிதெரிய என்றா 
வன்றிறல் வாலிசேயும் வாளெயிறு இலங்கநக்கான் 

பூதநாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இப்பூமேல் 
சீதைநாயகன் வேறுள்ள தெய்வநாயகன் நீ செப்பும் 
வேதநாயகன் மேல்நின்ற விதிக்குநாயகன் தான் விட்ட 
தூதன்யான் பணித்தமாற்றம் சொல்லியவந்தேன் என்றான் 

இந்திரன் செம்மல் பண்டுஓர் இராவணன் என்பான் தன்னை 
சுந்தரத் தோள்களோடும் வாலிடை தூங்கச் சுற்றிச் 
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண 
மந்தரப் பொருப்பால் வேலைகலக்கினான் மைந்தன் என்றான்  


உந்தைஎன் துணைவன் அன்றேஓங்கறச் சான்றும் உண்டால் 
நிந்தனை இதன்மேல் உண்டோ நீயவன் தூதன் ஆதல் 
தந்தனென் நினக்குநானே வானரத் தலைமை தாழா 
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் 


தாதையைக் கொன்றான் பின்னே தலைசுமந் திருகைநாற்றிப் 
பேதையன் என்னவாழ்ந்தான் என்பதோர் பிழையும் தீர்ந்தாய் 
சீதையைப் பெற்றேன் உன்னைச்சிறு வனுமாகப் பெற்றேன் 
ஏதெனக் கரியதென்றான் இறுதியின் எல்லை கண்டான் 


அந்நரர் இன்றுநாளை அழிவதற் கையம் இல்லை 
உன்னரசு உன்க்குத் தந்தேன் ஆளுதி ஊழிக்காலம் 
பொன்ன ரி சுமந்தபீடத்து இமையவர் போற்றி செய்ய 
மன்னவனாகயானே சூட்டுவென் மகுடம் என்றான் 

[ அங்கதன் தூதுப்படலம் 19 , 20 , 21- 25 , 27 ] 


அங்கதன் ராவணனுக்கு மறுமொழி உரைத்தல்  


அங்கதன் அதனைக் கேளா அங்கையோ டங்கைதாக்கித் 
துங்கவன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்கநக்கான் 
இங்கு நின் றார்கட்கெல்லாம் இறுதியே என்பதுன்னி 
உங்கள் பால் நின்றும் எம்பால் போந்தனன் நும்பி என்றான் 


வாய்தரத்தக்க சொல்லி உன்னை என் வசஞ்செய்வாயேல் 
ஆய்தரத்தக்க தன்றோ தூதுவந்தரச தாள்கை 
நீதரக் கொள்வென் யானே இதற்கிது நிகர் வேறெண்ணின் 
நாய்தரக் கொள்ளும் சீயம்நல்லரசு என்று நக்கான் 


கூவிஇன்றென்னை நீபோய்த்தன் குலம் முழுதும் கொல்லும் 
பாவியை அமருக்கஞ்சி அரண்புக்குப் பதுங்கினானைத் 
தேவியை விடுக அன்றேல் செருக்களத் தெதிர்ந்து தன் கண் 
ஆவியை விடுகஎன்றான் அருள் இனம் விடுகிலாதான் 


பருந்துணப் பாட்டியாக்கை படுத்த நாள் படைஞரோடும் 
மருந்தினும் இனியமாமன் மடிந்தநாள் வனத்துள்வைகி 
இருந்துழி வந்ததங்கை மூக்கும்வெம் முலையும் எம்பி 
அரிந்தநாள் வந்திலா தான் இனிச்செய்யும் ஆண்மையுண்டோ 


நீரிலேபட்ட சூழ்ந்த நெருப்பிலேபட்ட நீண்ட 
பாரிலேபட்ட வானப்பரப்பிலே பட்ட எல்லாம் 
போரிலே பட்டுவீழப் பொருத நீ ஒளித்துப்புக்குன் 
ஊரிலே பட்டாய் என்றால் பழிஎன உளையச் சொன்னான் 

[ அங்கதன் தூதுப்படலம் 28 , 29 , 31 , 32 , 


அங்கதன் மீண்டு போர்கலக்கஎன்ன இருபடை களும் கைகாத்சல்  


சொற்ற வார்த்தையைக் கேட்டலும் தொல்லுயிர் 
முற்றும் உண்பது போலும் முனிவினான் 
பற்றுமின் கடிதின் நெடும் பாரிடை 
எற்றுமின் என நால்வரை ஏவினான் 


ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத் 
தாவினான் அவர் தலை போய் அறக் 
கூவினான் அவன் கோபுர வாயிலில் 
தூவினான் துகைத்தான் இவைசொல்லினான் 


அந்தரத்திடை ஆர்த்தெழுந்தான் அவர் 
சிந்துரத்தம் துதைந்தெழும் செச்சையான் 
ந்துவின் நின்று இழிந்துளதாம் என 
வந்து வீரன் அடியில் வணங்கினான் 


உற்றபோதவன் உள்ளக் கருத்தெலாம் 
கொற்றவீரன் உணர்த்தென்று கூறலும் 
முற்ற ஓதியென் மூர்க்கன் முடித்தலை 
அற்ற போதன்றி ஆசையறான் என்றான் 

[ அங்கதன் தூதுப்படலம் 39 , 40 , 42 , 


பூசலே பிறிது இல்லை எனப்புறத்து 
ஆசை தோறும் முரசம் அறையுமின் 
பாசறைப் படையின்னிடம் பற்றிய 
வாசல் தோறும் முறையின் வகுத்திரால்  


மற்றும் நின்ற மலையும் மரங்களும் 
பற்றி வீரர் பரவையின் மும்முறை 
கற்ற கைகளினால் கடிமாநகர் 
சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால் 


இடு மின் பல்மரம் எங்கும் இயக்கறத் 
தடுமின் போர்க்கு வருகஎனச் சாற்றுமின் 
கடுமின் இப்பொழுதே கதிர்மீச் செலாக் 
கொடுமதிற் குடுமித்தலைக் கொள்க என்றான் 


தடங்கொள் குன்றும் மரங்களும் தாங்கியே 
மடங்கலன்ன அவ்வானாமாப் படை 
இடங்கர்மா இரியப் புனலேறிட 
தொடங்கி வேலை அகழியைத் தூர்த்ததால் 


அரக்கர் தொல்குலம் வேரற அல்லவர் 
வருத்தும் யாவையும் வாழ்வுற வந்ததோர் 
கருக்கொள் காலம் விதிகொடு காட்டிடத் 
தடுக்கி உற்றெதிர் தாக்கின தானையே 


நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால் 
குரக்கினப் பெருந்தானை குலைந்து போய் 
அருக்கன் மாமகன் ஆரமர் ஆசையால் 
செருக்கி நின்றவன் நின்று ழிச் சென்றவால் 


களிறும் மாவு மாவும் நிருதரும் காலற 
ஒளிறு மாமணித் தேரும் உருட்டி வெங் 
குளிறு சோரி ஒழுக கொதித்திடை 
வெளிறிலா மரமே கொண்டு வீசினான் 


நோக்கி வஞ்சன் நொறில் வயமாப்பரி 
வீக்கு தேரினின் மீதெழப்பாய்ந்து தோள் 
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்தவன் 
யாக்கையும் சிதைத்திட்டு எழுந்தேகினான் 

எரியின் மைந்தன் இருநிலம் கீழுற 
விரியநின்ற மராமரம் வேரொடும் 
திரியவாங்கி நிருதர்வெம் சேனை போய் 
நெரிய ஊழி நெருப்பென வீசினான் 


அரக்கர் சேனை அடுகளம் பாழ்பட 
வெருக்கொண் டோடிட வெம்படைக் காவலர் 
நெருக்க நேர்ந்து கும்பானும் நெடுஞ்சரம் 
துரக்க வானரச் சேனை துணிந்தவே 


கடித்தலத்திரு காலுறக் கைகளால் 
பிடித்து தோளைப் பிறங்கலின் கோடு நேர் 
முடித்தலத்தினில் எற்றிட மூளைகள் 
வெடித்திழிந்திட வீந்தனனாம் அரோ 


தன்படைத் தலைவன் படத்தன்னெதிர் 
துன்படைத்த மனத்தன் சுமாலிசேய் 
முன்படைத்த முகில் அன்ன காட்சியன் 
வன்படைத்த வரிசிலை வாங்கினான் 


நூறும் ஆயிரமும் கணைநொய்தினின் 
வேறுவேறு படுதலின் வெம்பியே 
ஈறில் வானரமாப்படை எங்கணும் 
பாறநீலன் வெகுண்டெதிர் பார்ப்புறா 


குருதிலாய்நின் றொழுகவும் கூசலன் 
நிருதன் , நீலன் நெடுவரை மார்பினும் 
நெற்றி மேலும் நெடுங்கரத் தெற்றலும் 
இற்று மால்வரை என்ன விழுந்தனன் 


இறந்து வீழ்ந்தனன் பிரகத்தன் என்று 
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் 
வெறித்த செம்மயிர் வெள்ளெயிற் றாடவர் 
முறிந்து தம் தம் முதுநகர் நோக்கினார் 


தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் 
மற்குலாவு வயப் புயத்து அங்கதன் 
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் 
பொற்குலாவு சுபாரிசன் பொன்றவே  


நூற்றிரண் டெனும் வெள்ளமும் நோன்கழல் 
ஆற்றல் சால்துன் முகனும் ஆங்கார்த்தெழ 
மேற்றின் வாயிலில் மேவினர் வீடினார் 
காற்றின் மாமகன் கையெனும் காலனால் 


ஒதருங் கருங்கடற் கொத்த தானையான் 
தீதுறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் 
போதுறு பெருங்களம் புகுந்துளான் எனத் 
தூதுவர் நாயகற் கறிய சொல்லினார் 


அவ்வழி இராவணன் அமரர் அஞ்சத்தன் 
வெவ்விழி நெருப்புக வில்லின் நாணினைச் 
செவ்வழிக் கோதையின் தெறிக்கச் சிந்தி ஆங்கு 
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் 


வீடணன் ஒருவனும் இளைய வீரனும் 
கோடணை குரங்கினுக் கரசும் கொள்கையால் 
நாடினர் நின்றனர் நாலுதிக்கிலும் 
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே 


ஏந்திய சிகரம் ஒன்றங்கு இந்திரன் குலிசம் என்னக் 
காந்திய உருமின் விட்டான் கவிக்குலத்தரசன் அக்கல் 
நீந்தரு நெருப்புச்சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கெல்லாம் 
வேந்தனும் பகழி ஒன்றால் வெறுந்துகளாக்கி வீழ்த் தான் 


கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள்உற்ற 
அலக்கணும் தலைவர்செய்த தன்மையும் அமையக் கண்டான் 
லக்குவன் என்கைவாளிக் கிலக்கிவன் இவனைஇன்று 
விலக்குவன் என்னவந்தான் வில்லுடை மேருவென்ன 


காற்றுறழ் கலின மான்தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று 
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரிவிழித்து இராமன் தம்பி 
கூற்றுமால் கொண்ட தென்னக் கொள்கின்றான் குறுகச் சென்றான் 
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் 


எய்தான் சரம் எய்தா வகை இற்றீக என இடையே 
வை தாலென் ஐதாயின வடிவாளியின் அறுத்தான் 
ஐது ஆதலின் அறுத்தாய் இனிஅறுப்பாய் என அழிகார் 
பெய்தாலெனச் சரமாரிகள் சொரிந்தான் துயில்பிரிந்தான்  


ஆம்குஞ்சரம் அனையான்விடும் அயில்வாளிகள் அவைதாம் 
வீங்கும்சர பருவத்தழி மழைபோல் வனவிலக்கா 
தூங்கும் சர நெடும்புட்டிலின் சுடர்வேலவற் கிளையான் 
வாங்கும் சரம் வாங்காவகை அறுத்தான் அறம் மறுத்தான் 

( முதற்போர் புரிபடலம் 1-4 , 18 , 42 , 45 , 54 , 60 , 62 , 63 , 67, 
68 , 70 , 77-81 , 107, 123,126 , 128.141 , 158 , 158 , 159 ) 


அனுமாரும் இராவணனும் கைக்குத்துக்கு நிற்குதல்  


பரக்கப்பல உரைத்தென் படர்கயிலைப் பெருவரைக்கும் 
அரக்குற் றெரிபொறிக் கண்திசைக் கரிக்கும் சிறிதணுங்கா 
உரக்குப்பையின் உயர்தோள்பல உடையாய் இனிஉடையாக் 
குரக்குத் தனிக்கரத்தின் தொடப்பொறை யாற்றுவை கொல்லாம் 


என் தோள் வலி அதனால் எடுத்துயான் ஏற்றவும் இறவா 
நின்றாய் எனின் நீபின் எனை நின்கைத்தல நிரையால் 
குன்றே புரைதோளாய் மிடல் கொடு குத்துதிகுத்தப் 
பொன்றேன் எனின் நின்னோ டெதிர்பொருகின்றி லென் என்றான் 


முத்தேவர்கள் முதலாயினர் முழுமூன் றுலகிடையே 
எத்தேவர்கள் எத்தானவர் எதிர்வார் இகல் என்றே 
பித்தேறினர் அல்லால் இடைபேராது எதிர்மார்பில் 
குத்தே என நின்றாய் இதுகூறும் தரம் அன்றால
றோர் 


பூணித்திவை உரைசெய்தனை அதனால் உரைபொதுவே 
பாணித்தது பிறிதென்சில பகர் நின்றது பழியால 
நாணித்தலை இடு இன்றிலென் நனிவந்துல கெவையும் 
காணக்கடி தெதிர்குத்துதி என்றான் வினைகடியான் 


வீரத்திறம் இதுநன்றென வியவா மிகவிளியா 
தேரின் கடிதிவரா முழுவிழியின் பொறிசிதறா 
ஆரத்தொடு கவசத்துடல் பொடிபட்டுக அவன்மா 
மார்பிற் கடிது எதிர்குத்தினன் வயிரக்கரம் அதனால் 

( முதற்போர்புரிபடலம் 165, 166 , 169 , 172 , 173 ]  


ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் முதல் உயுத்தம்  


கைக்குத்தது படலும் கழல்நிருதர்க்கிறை கறைதீர் 
மைக்குப்பையின் எழில் கொண்டொளிர் வயிரத்தடமார்பில் 
திக்கில் சிலமதயானைகள் வயவெம்பணை செருவில் 
புக்கிற்றன போகாதன புறம்உக்கன புகழின் 


வலிஎன்பதும் உளதே அது நின்பாலது மறவோய் 
அலி என்பவர் புறம் நின்றவர் உலகேழையும் அடர்த்தாய் 
சலி என்றெதிர் மலரோன் உரை தந்தால் இறைசலியேன் 
மெலிவென்பதும் உணர்ந்தேன் எனைவென்றாய் இனிவிறலோய் 


ஒன்றுண்டு இனிஉரைநேர்குவது உன்மார்பின் என் ஒருகை 
குன்றின் மிசை கடைநாள் விழும்உரும் ஏறெனக்குத்த 
நன்றிந்நிலை தருவாய்எனின் நின்நேர்பிறர் உளரோ 
ன்றும் உளை என்றும் உளை இலைஓர் பகை என்றான் 


உறுக்கித்தனி எதிர்நின்றவன் உரத்தில் தனது ஒளிர்பல் 
இறுக்கிப் பலநெடுவாய் மடித்து எரி கண்தொறும் இழிய 
முறுக்கிப் பொதிநிமிர்பல்விரல் நெரியத் திசைமுரியக் 
குறுக்கிக் கரம்நெடுந்தோள் உறநிரைகைக் கொடுகுத்து 


பள்ளக்கடல் கொள்ளப்படர்படி பேரினும் பதையா 
வள்ளல் பெரும்வெள்ளத்தெறுழ் வலியாரினும் வலியான் 
கள்ளக்கறை உள்ளத்ததிர் ( ழல்வெய்யவன் கரத்தால் 
தள்ளத்தளிர் வெள்ளிப்பெருங் கிரி ஆம் எனச் சலித்தான் 


அண்ணல் அஞ்சனவண்ணனும் அமர்குறித் தமைந்தான் 
எண்ணரும் பெரும் தனிவலிச் சிலையை நாண் எறிந்தான் 
மண்னும் வானமும் மற்றைய பிறவும் தன்வாய் பெய்து 
எண்ணும் காலத்தவ் உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை 


வாழி வெங்கனல் ஒப்பன துப்பன உருவ 
ஆழிநீரையும் குடிப்பன திசைகளை அளப்ப 
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப 
ஏழுவெஞ்சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான்  


ஒன்று நூற்றினொடு ஆயிரங் கொடுந்தலை உருட்டிச் 
சென்று தீர்விலஎனப் பலகோடியும் சிந்தி 
நின்ற தேரொடு இராவணன் ஒருவனும் நிற்கக் 
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் 


தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றிப் 
பேரும் ஓரிடம் இன்றெனத்திசை தொறும் பிறங்கிக் 
காரும் வானமும் தொடுவன பிணக்குவை கண்டான் 
மூரிவெஞ்சிலை ராவணன் அராஎன முனிந்தான்
முரண்தொகும் சிலைஇமைப்பினில் முறையுற வாங்கிப் 
புரண்டு தோளுறப்பொலன் கொள் நாண் வலம்படப் போக்கித் 
திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து 
இரண்டு தோளினும் இரண்டுபுக் கழுந்திட எய்தான் 


முறுவல் எய்திய முகத்தினனன் முளரியங் கண்ணன் 
மறுவிலாததோர் வடிக்கணை தொடுத்துறவாங்கி 
இறுதி எய்தும் நாள் கால் பொரமந்தரம் இடையிட்டு 
அறுவதாம் என இராவணன் சிலையினை அறுத்தான் 


மாற்றுத் தேரவன் வந்தனவந்தன வாரா 
வீற்று வீற்றுக வெயிலுமிழ் கடுங்கணைவிட்டான் 
சேற்றுச் செம்புனல் படுகளப்பரப்பிடைச் செங்கண் 
கூற்றும் கையெடுத்தாடிட இராவணன் கொதித்தான் 

மின்னும் பன்மணி மௌலிமேல் ஒருகணைவிட்டான் 
அன்ன காய்கதிர் இரவிமேல் பாய்ந்தபோர் அனுமன் 
என்னலாயதோர் விசையினின் சென்று அவன் தலையில் 
பொன்னின் மாமணி மகுடத்தைப் புணரியில் வீழ்த்த 
( முதற்போர் புரிபடலம் 176 , 181 , 182 , 184 , 185 , 224 , 226 , 

227 , 237-240 , 243 , 244 }

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


									

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -6–

March 17, 2024
இளையவர் நாகபாசத்தால் கட்டுண்டதற்காக 
ஸ்ரீராமர் இரங்கல் 

விநய விபீஷணன் இவ்வா றழுதுவாடும் 
வேளையில் இராமச்சந்திரன் இடத்தில்மேவி 
அனலன் எனும் மந்திரி சொல்லச் சுடர் அம்பேந்தி 
அவ்விருளைத் துரத்தி ஐயன் களத்தில் வந்தான் 
முனை பெறுசுக் ரீவனை அங்க தனைக்கண்டான் 
முசித்தபடை களைக்கண்டான் மூர்ச்சையான 
தனியனுமா னையும் கண்டான் சாமிகோபம் 
தாங்கினான் தம்பியைப் பார்த்து ஏங்கினானே 

பல்லவி 
என்னதான் செய்வேன் அடா லட்சுமணா 
என்னதான் செய்வேன் 
நான் 
( என் ) 

அநுபல்லவி 

உன்னைப் பாசங்கட்ட உன் பாசம் என்னைக்கட்ட 
ஒருத்தன் நான் தவிப்பேனடா 
லட்சுமணா 
( என் ) 

சரணங்கள் 

1 --சனகி பிரிந்தகுறை மறக்கவோ நீவந்து 
தந்தாய் இந்தத் 
தொல்லையே 
லட்சுமணா 
நினைவின்படி நான்கீறும் கோட்டைக் கடந்தொருவர் 
நில்லென்றாலும் 
நில்லையே லட்சுமணா 
எனது கண்ணே நானும் உனதுபின் வருகிறேன் 
ஏதுக் கெடுத்தேன் 
வில்லையே லட்சுமணா 
உன துயிர் போனால் என் உயிரும்போம் அப்புறம் 
ஒருகவலையும் 
இல்லையே 
லட்சுமணா ( என் ) 

2. எடுத்தென் பசியறிந்து அருங்கனி தருங்கையை 
எப்படிப் பிடிப் 
பித்தாயோ 
லட்சுமணா 
பகுத்தறியாத நான் களத்தில் தூங்கிறேன் நீ 
பார்என்றுவரு 
வித்தாயோ லட்சுமணா 
அடுத்த தகப்பன் போலே நீயும் போய் என்னையிங்கே 
அவத்திலே சோ 
தித்தாயோ 
லட்சுமணா 
பிடித்த கொம்பையும் விட்டு மிதித்த கொர்பையும் விட்டுப் 
பேய்போல் அவை 
வைத்தாயோ -லட்சுமணா ( என் ) 

3. பெண்ணுக்காய் மான்பின்னே நடக்கச்சே தடுத்தஉன் 
பேச்சையும் 
கடந்தேனே 
லட்சுமணா 
மண்ணும் வரும் உன்னாலே மனைவியும் வரும் என்று 
மனமகிழ்ச்சி 
அடைந்தேனே - லட்சுமணா 
கண்ணைக் கொண்டு நடக்கும் அவர்போலே நானும் 
உன்னைக் கொண்டு 
நடந்தேனே 
லட்சுமணா 
எண்ணின எண்ணமும்போய் எதிரிக் கிளக்காரமா 
ஏழையாய்க் 
கிடந்தேனே - லட்சுமணா ( என் ) 

செருட பகவான் வருதலும் நாகபாச பறுதலும் 

அதிபதி ரகுபதி துணைவனொ டுருகிற அறையிருளின் போதில் 
உதறிட அரியதோர் தசமுகன் மகன்விடும் உரசநெடும் பாசம் 
சிதறிட இளையவன் எழுதர அமரர்கள் திசைதிசை நின்றாடக் 
கதிரவ னவனலன் 
னவனலன் இவனென விசையொடு கெருடனும் வந்தானே 

பல்லவி 

தெய்வக் 
கெருட பகவானும் வந்தானே 
கெருட பகவானும் வந்தானே 

அநு பல்லவி 

கெருட பகவான் வந்தான் கிளம்பிப் பெருங்காற்றினை 
இருசிறைகளும் சாடவே அஷ்டமா நாக 
அரசனும்பயந் தோடவே 
ராமனைக் 
கண்டு 
உருகி மனது வாடவே 
வனமலைபோல் 
உரகபூஷணம் அந்நேரமே 
( கெரு ) 
ஆடவே 

சரணங்கள் 
1. முந்தி ஆனையினால் என் முதுகேறி முதலைமேல் 
அந்தச் சக்கரம் விட்டாயே 
அந்தச் சக்கரத்தைவிட் டம்பும் வில்லுங்கொண்ட 
செந்தா மரைப்பூங் 
கையனே - எவர்களுக்கும் 
சந்தோஷம் தரும் மெய்யனே அமியார்போல 
நொந்தா லெப்படி துய்யனே அடியேனிதோ 
வந்தேன் வந்தேன் அய்யனே என்றுசொல்லி 
( கெரு ) 

2. விரிசிறகால் மண்ணும் விண்ணும் மூடிக்கொண்டு 
ஒரு மலையெனத் தாவியே 
ஒரு மலைமேற் சூரியன் உதித்தாற்போல் தலைமேலே 
பருமுடி ஒளி 
விரிய - காதங்கள் கோடி 
இருகண் பார்வையும் தெரிய - சாமி கைவிட்ட 
பிரிவாலேமனம் 
பரிய பரவசம் ஆய் 
உருகிக் கண்ணீர் 
சொரிய , வேகமதாக 
( செரு ) 

3. திடத்துடனே தெற்குத் திசையில் இருந்து பாய்ந்து 
வடக்குத் திசையை நாடியே 
வடக்குத்திசையில் ஐயன் மலர்ப்பாதம் கண்டுகை 
எடுத்து வணக்கம் 
குறிக்க - கழுத்தில் வெள்ளை 
துடிப்பா வெண்ணில 
வெறிக்க - ராகுகேதுவும் 
திடுக்கென் றுடலை முறிக்க - நாகபாசமும் 
பொடிப் பொடியாய்த் தெறிக்க - அன்பினுடன் 
( கெரு ) 

4. கிழிந்துபா தாளத்தில் கிடக்கும் பாம்புகளும் கண் 
சுழன்று தத்தளித் திடவே 
சுழன்று நாகபாசம் தொடுக்கும் இந்திர சித்தாலே 
விழுந்தோர் மெள்ள 
மெள்ளவே - நித்திரை நீங்கி 
எழுந்தவர் போலத் 
அழுந்தத் தழுவித் 
ஒழிந்து கவலை 
துள்ளவே 
தம்பியைராமன் 
கொள்ளவே தேவர்கள் பயம் 
தள்ளவே 
அவர்கள் வேண்ட ( கெரு ) 


கெருட பகவான் ஸ்ரீராமரைத் துதித்தல் 
மதஞ்சேர்நாக பாசமிந்த வகையால் தெறிக்க ராமச்சந்திரன் 
இதஞ்சேர்லட்சு மணன்முதலோர் எழுதல்கண்டான் அதிசயிக்கும் 
விதம்சேர் நீயார் எனக்கேட்டான் விரித்துரைப்பேன் பிறகென்று 
பதம் சேவித்தான் மனத்தன்பு பதித்தான் கெருடன் துதித்தானே 

பல்லவி 
அய்யனேஉன் மேன்மையை அறிந்து சொல்ல மேணுமென்றால் 
ஆதிசேஷனுக்கும் வருமோ 
( அய் ) 

அநுபல்லவி 

துய்யனே காத்தருள்செய் மெய்யனே எனத்தேவர் 
தோத்திரம் செய்திடஅ யோத்திநகரில் வந்த 
( அய் ) 

சரணங்கள் 
1. பிரமாதி தேவர்களைப் பெறுவானும் நீ அவர்க்குப் 
பெருரானும் நீஉனக்கு ஒருவர் நேரா 
தருமாதிபதவிகளைத் தருவானும் நீடனக்குத் 
தரவேண தென்னகோ சலைகுமாரா எங்கள் 
( அய் ) 
2. உலகெல்லாம் உன்வயிற்றில் ஒடுக்குவாய் விடுப்பாய்பின் 
ஒருவருக்கும் உண்டோ இந்தப் பெரியதிராணி 
தலைவனே உனக்கொருவர் பலம் வேணும் என்பதென்னோ 
சத்தியமோ நித்தியகோ 
தண்டபாணி - எங்கள் ( அய் ) 
3. ஆதிநடு முடிவாகி எள்ளும் எண்ணெயும் போலே 
அங்கங்கும் நிறைந்தாயே 
நீயிப்போது 
மேதினியிலே உனக்கும் எதிர் ஒருவர் உண்டென்எறு 
வில் எடுத்து விளையாட 
வந்ததேது - எங்கள் ( அய் ) 
4 . ஆரணங்கள் கூடவுன்றன் காரணங்களறியாமல் 
அரளிக்கையால் அகில 
லோகமித்திரனே 
நாரணனே அகண்டபரி பூரணனே உன்கீர்த்தி 
நானுரைக்க முடியுமோ 
ராமபத்திரனே 
எங்கள் ( அய் ) 
5. முத்தொழிலும் முக்குணமும் முச்சுடரும் முப்பொழுதும் 
முப்பொருளும் ஆகிநின்ற 
மூர்த்திராமா 
பத்தர் ஆசாபாசம் தொலைக்கும் உனக்கொருநாக 
பாசம் தொலைத்திடுவது பிர 
யா சமாமோ 
எங்கள் ( அய் ) 

இராத்திரியில் மகாராட்சத வீரர்கள்வதை 

கெடிக்கருடன் விடைகொண்டான் அப்புறம்வா னரரும் 
கெர்ச்சித்தார் கெருடன் வந்த வகையை இரா வணன் முன் 
துடித்திடத்தூதுவர் சொன்னார் அவனும்மக னிடம் போய்ச் 
சொன்னான் இந்திரசித்தும் ஒருபிர்மாஸ் திரத்தால் 
அடித்திடுவேன் நாளைப்போய் நரர்பொல்லார் இன்றைக் 
காகாது மிகநொந்தேன் அப்பப்பா என்றான் 
முடித்தலைபத் துள்ளவனும் படைத்தலைவ ரோடே 
முறைப்பட்டான் அங்கவரும் புறப்பட்டார் தாமே  

கண்ணிகள் 
1. விக்கிரம ராவணன் அனுப்பவேவெகு 
வேகமாப்படை 
அக்கினிகேது முதற்படை வீரர்கள் 
அனேகரும் களம் 
2. நீலன் முதற் படைத்தலைவர்கள் இதுகண்டு 
நேருக்கு நேரேபோய்க் 
ஆலகாலமும் வடவாக்கினியும் போல் 
அவரும் இவரும்போர் 
3. சரத்தாலே ராட்சதர் வானரத் தளங்களைத் 
தரையிலே விழ 
அடுத்தாரே 
குதித்தாரே 
எதிர்த்தாரே 
முடித்தாரே 
மரத்தாலே வானரர் அரக்கர் படைகளை 
மண்டைகள் பிளந்திட 
அடித்தாரே 

4. வில்லும் சரமும் கொண்டுராட் சதர்வானர 
வீரர்கள் அணிகளை 
கல்லும் மரமும் கொண்டு ராட்சத சேனையைக் 
கவிப்படைத் தலைவர்கள் 
உடைத்தாரே 
புடைத்தாரே 

5 சுக்கிரீவன் வந்த சூரியகேதுவை 
துண்டம் துண்டமாக 
வைக்காமல் அப்போ தங்கதன் பாய்ந்ததொரு 
மாபெரும் பக்கனுயிர் 
முறித்தானே 
பறித்தானே 
வென்றானே 

6. தூமக்கண்ண னைராம தூதன் எம 
தூதனைப் போலவே 
மாமுஷ்கர முள்ள நீலன் மலைகொண்டு 
மலைபோன்ற மாலினியைக் 
கொன்றானே 

7. இடபன் போய்ப் பொல்லா வச்சிரதந்தனை 
ஏற்றி அவன் கழுத்தை 
உடனே பனசன் பிசாசனைக் கண்டோடி 
உதைத்து மிதித்துக் கையால் 
ஒடித்தானே 
அடித்தானே 
நடந்தானே 

8. இளையோன் மேலே அக்கினி கேதுவும் 
ஈரிரு வெள்ளங்கொண்டு 
கிளைபோய்ச் சேனையும் போய் அக்கினி 
கேதுவும் பட்டுக் 
கிடந்தானே 
கவிந்தாரே 

9. விரிவாகவே ஸ்ரீராமனை ஓராறு 
வெள்ளம் அரக்கர் போய்க் 
ஒருவாளியினாலே ஈசல்போக்குப் போல 
உடனே அவர்மண்ணில் 
அவிந்தாரே 

10. நாயும் நரியும் கழுகுகளும் வந்து 
நாலுதிக்கிலும் குதி 
பேயும் ரணபத்ர காளியும் கூனியும் 
பிணங்களைத் தின்று சதை 
குதித்தவே 
உதித்தவே 

11. இரணசுக்கிரன் புறப்பட்ட கண்ணிலே 
கண்டை முள்ளுதைத்த 
மரணம் கொடுத்திடும் ராவணன் இந்த 
வார்த்தையைக் கேட்டான் 
தைப்போலே 
அப்பாலே 
நின்றானே 

12. குனித்தே மகரக் கண்ணன் படைகளஞ்சு 
கோடி கொண் டரக்கன் முன் 
வனத்தேஎன் அப்பனைக் கொன்ற பழிக்குப்பழி 
மனிதரை வாங்குவேன் 
என்றானே 
தின்னவே 

13. வெறுவா யைத்தின்னு கின்ற அவனுக்கு 
வெள்ளவல் கிடைத்தது 
குறியா அரக்கனும் இருபது வெள்ளம் 
கூட்டினானே துணை 
என்ன 
வே 
வோர்கூட 

14. சிங்கமுகனும் ரத்தாட்சனும் என்னும் 
சேனைத் தலைவர் இரு 
இங்கே அந்தமக ராட்சதன் வந்தானே 
ராமச்சந்திரனுடன் 
போராட 
எய்தானே 

15. ஓராயிரம் அம்பு மகரக்கண்ணன் 
ஒருதொடை யாகவே 
ஓராயிரம் அம்பாலே அய்யனதை 
ஒருநொடியிற் பொடி 
செய்தானே 
அழிந்ததே 

16. பின்னும் ராகவன் அம்பாலே அவன் 
பெருந்தேரும் பரியும் 
மன்னும் ஒருகணையாலே அந்த 
மகராட்சதன் தலை 
விழுந்ததே 

17 -கண்டானே 
நளனாலே ரத்தாட்சனும் அந்த 
நமனார் உலகத்தைக் 
ளையாத பனசனாலே அந்த 
இகற் சிங்கமுகனுயிர் 
விண்டானே 


18 வில்லாலும் கல்லாலும் இருபது 
வெள்ளம் படைகளும் போய் 
சொல்லானது ராவணன் செவியிலே 
சுட்டாற் போலே போய்ப் 
இறந்ததே 
பிறந்ததே 

லட்சுமணருக்கும் இந்திரசித்துக்கும் இரண்டாம் முறை யுத்தம் 

அதையறிந்தான் இராவணன் என் மகன் தன்னை இங்கே 
அழையுங்கள் எனத் தூதர் அவன்பக்கல் சென்றார் 
வதைபடையின் கதைகேட்டான் தந்தையிடம் வந்தான் 
வணங்கி மக்கள் இறந்ததற்கு வருந்தாதே நான்போய்ச் 
சிதைய அந்தஇருமனிதர் சவம் சீதை கண்டும் 
சிறுகுரங்கின் பிணக்குவையத் தேவதைகள் கண்டும் 
பதைபதைத்தல் நீ காண்பாய் என்றிந்திந்திரசித்தன் 
பதிவிட்டான் தம்பியவன் எதிரிட்டானே 

பல்லவி 
லட்சுமணன் செய்த 
பெருஞ்சண்டை கேளீர் 
பெருஞ் சண்டைகேளீர் 

அநுபல்லவி 
பெருஞ்சண்டை கேளீர்கள் 
அருஞ்சண்டயாளிகள் 
தருந்திண்டேர் யானைகள் 
கருந்துண்ட சேனைகள் 
பருஞ்சண்ட மாருதம்போல் நெருங்குண்ட வாசிகள் 
மருங்கண்டவே தந்திரத்தொடு வருங்கண்டக இந்திரசித்தொடு 
( பெரு ) 
சரணங்கள் 
1. சிரத்தில் மணிமகுடம் 
தரித்து மார்பிற்கவசம் 
பரித்துப் பணிகள் அலங் 
கரித்து வலியப்பெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்ரனைப் போலார்ப் பரித்து விக்கிரமத்துடன் 
துங்கத்தைக் கோறி - ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி - அலைஎறியும் 
சீர்கொள் ஏழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூரர்கள் விடவிடென 
ஊர்கொள் பருதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையும்மணித் தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித் தரவே 
அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே உயர்ந்த அண்ட 
கோளம் கனத்த சக்கிர 
வாளம் பருத்தபுவி 
நீளந்தன் னொடுபாள 
பாளங்க ளாவெடிக்க 
மேளங்கள் அடிக்கக்கைத் 
தாளங்கள் துடிக்க எக் 
காளங்கள் தொனிக்கக்கத்தி காளங்க யானைகள் 
வீறிட்டுக் கதறத் - திக்குபாலர்ப 
கீரிட்டுப் பதறக் களத்தில் வந்து 
துன்று சமர் விளைக்க 
அன்றில் அணிவகுத்து 
இன்று மனிதர்களை 
வென்று பகைமுடிப்பென் 
என்று சங்கம் பூரித்து 
ஒன்றத் தனு வளைத்துக் 
குன்று வந்ததென - எத்துடனே - நின்ற இந்திரசித்துடனே ( பெரு ) 

2-வீரன் இந்திரசித்தன் 
போரில் நின்றவுடனே 
காரெனவே ஆர 
வாரம் செய்ய அதி 
தீரன் சுக்கிரீவனை 
சேரும் வானரர் எல் 
லாரும் சிங்கத்தைக் கண்டு பேரும் யானைக் குலம்போல் 
நடுக்கங்கொண் டோட 
அரக்கரவர் 
இடுக்கம் கண் டா 
அனுமசுக்கிரீ 
வனும் அங்கதனும் ஸ்ரீரா மனும் சாம்பவனும் லட்சும 
ணனும் உக்கிரம் உளவீரர் 
எனும் சிலவரும் அஞ்சா 
தினும் முந்தி வரும் ராட்ச 
தனும் இந்தப் போரினில் 
தனுவிந்தையா வளைத்து 
மனுமந்திர வாளிள் 
தொடுப்பதும் ஏற்போம் --- நம்மைக் கெலித்து 
விடுப்பதும் பார்ப்போம் - எனவே நிற்க 
தீதும் அதனில் மிக்க 
சூதும் உள்ள அரக்கர் 
வாது செய்ய நினைத்துப் 
போது படைகளைக் கொண் 
டீதததிசயம் இனி 
ஏது விளையுமோ என் 
றோதி அமரர் வெட்க 
மோதி அமர் விளைக்க 
அதை அய்யன் கண்டு லட்சுமணா நீ 
வதை செய்வில் கொண்டு என்று சொல்லி 
அனுமார் அங்கதன் தோளில் தனுவார் ராமலட்சுமணர் 
எனும் ஓர் இருவர் கேச 
வனும் ருத்திரனும் மிகு 
கனமர் புள் ஏற்றின் மீ 
தினில் ஏறினாற்போல 
மனமகிழ்ந்திட ஏறி - அன்றவன் சினம் மிகுந்திடவீறி- நின்றபின் ( பெரு ) 
3. திடத்த நீலன்மூதற் 
படைத்தலைவர் எல்லாம் 
கிடைத்த மலைகளைக் கீண் டெடுத்து மரங்களும் கொண் 
டடித்துப் போர்புரியத் 
துடித்துப் போமளவில் 
அடுத்த ராமச்சந்திரன் 
தடுத்தென் தம்பிசெயும் 
சண்டையை இன்று நீங்கள் பார்த்துக் 
கொண்டிரும் என்று 
சொல்லியேறும் 
பெருமானும் தம்பியும் 
ஸ்திரமாக வேநின்று 
உரமா வில்லை வளைத்துச் சரமாரிகள் பொழிய 
அரனால் அன்றுதிரி 
புரம் நீறெழுந்தாற்போல் 
வரம் ஆரும் வெள்ளம் ஓர் 
இருமுப்பதும் மடிந்து 
விழுந்ததைக் கண்டு இந்திரசித்தன் 
அழுதுள்ளம் விண்டு அமர்க்களத்தில் 
பெருநதியைப்போல் உ 
திரவெள்ளம் ஓடவே 
வரும் ஆனைசேனை கு 
திரையாவையும் மடியவே 
ஒருநிமி ஷத்திலே 
ருவோ ருமாவட்ட 
சரவேகமும் இவர்கள் 
கரவேகமும் சொல்ல 
எந்தன்னால் 
ஆதிசேஷ 
னும் சொல்லப் போமோ 
மடிந்தசேனை 
ஞாலத்தில் இத்தவக் 
கோலத்தர் விடும் ஆல 
காலத்தை நிகர்மாண 
சாலத்திலோ எந்த 
காலத்திலோ இந்திர 
சாலத்திலோ எந்த 
காலத்திலும் கண்டிலேன் வென்ற மூலத்தை நான் கண்டிலேன் என்ற 
( பெரு ) 
4. இன்று போரில் நமக் 
கென்று ராமலட்சுமணர் 
துன்றும் அரக்கர் தமைக் 
கொன்று விருந்து செய்தார் 
நன்று நன்றெனவே 
சென்று சென்று பல்லால் 
மென்று மென்று சுவைத்துத் 
தின்று தின்று கொழுத்துக் 
கூளிகள் 
ரணபத்திர 
காளிகள் ஆட 
அதனைக்கண்டு 
துங்க மாக முன்னம் 
பொங்கும் இந்திரசித்தன் 
மங்கியே பிரமித்து 
இங்குவந் தமர்செய் 
ஆமோ 
சிங்க ஏறனைய 
அங்கதன் அனுமனை 
இங்கு ரைக்கிலனேகர் 
எங்கும் மனிதர் என 
ஆச்சரியம் கொண்டு முன்னிருந்த 
மாச்சரியம் விண்டு இருந்தபோதா 
காசம் ஆருந்தேவர் 
வாசமலர்கள் கொண்டு 
நேசமா இருவர் மேல் 
வீச அதையும் கண்டு 
பூசலிலே அரக்கர் 
நாசமாகவே இவர்க் 
கேசல் ஆச்சுதேநம்பிர 
காசம் போச்சுதே என்று 
மனந்திடுக் கிட்டான் பெருமூச்சுகள் 
அனந்தமா இட்டான் அந்தவேளையில் 
முக்கியமான எட்டுத் 
திக்குகளும் அதிர 
மக்கி நட்சத்திரங்கள் 
மிக்கிடவே உதிர 
சக்கிரம் ஏந்தும் திரி 
விக்கிரமன் நேர் அனுமான் 
உக்கிரமுடன் இருதோளும் கொட்டிய நெக்கிடும் ஒலி ஆகாசம் முட்டிய 
( பெரு ) 

5. மாருதி தோள்கொட்டி ஆரவாரம் செய்யவே 
ஊரும் ஆயிரங்கோடி 
தேர்களிலே யிருந்து 
வீரரெல்லாம் நடுங்கி 
பாரில் விழுந்தார்லங்கை 
ஊரில் இருந்த பெரும் 
காரரக்கரும் ரத்தம் 
தனைக்கக்கி னார்கள் - சில அரக்கர் 
நினைத்துட்கி னார்கள் மேகநாதன்கண் 
டோர் குரங்கார்ப்புக்கு 
நீர் நடுங்கின போதே 
பார்மீதிலே செத்த 
பேர் நீங்களே என்று 
கார்வண்ண ராமன்போல் 
நேர்வண்ண லட்சுமணன் 
போர்மன்னிய முகத்தில் 
நேர்வந்தெதிர்ந்தபோதா 
யிரங்கோடி உரவே கத்தேரவர் 
மருங்கோடி வரவே லட்சுமணன் கண்டு 
துஷ்டஇந்திர சித்தன் முன் விட்ட நாகபாசக் 
கட்டினாலே தோற்று 
விட்டானென் றுலகத்தோர் 
சட்டமா எனைச் சொல்வார் வெட்டி அவன் 
தலை உன் 
கிட்டவைக் காவிட்டால் 
இஷ்ட அடிமையல்லேன் 
எனக் கண்ணன் முன்னே - சிலசபதம் 
தனைப் பண்ணப் பின்னே சாமியும் மெய்க்க 
ஆலமுண்ட பிரளய 
காலருத்திரனைப் போல 
சீலலட்சுமணன் பாண 
சாலத் தாயிரங்கோடி 
கோலத் தேரை அழித்து மேலிட்ட அரக்கரைக் 
காலன் வெருவிட அன்றகன்றிடும் ஞாலம் மருவிடநின்று கொன்றிடும் 
( பெரு ) 

6 . தனித்திந்திர சித்தன்வில் 
குனித்து லட்சுமணாநான் 
உனைக் கொன்றுன் அண்ணன்உன் தனக்குற் றுரிமை செய்ய 
நினைத்தேன் முடிக்காவிட்டால் அனைத்துலகையும் ஆளும் 
கனத்தராவணன் மகன் 
எனப்பேர் படைத்தும் ஒரு 
நலனில்லை இன்று வில் எடுத்ததால் 
பலனில்லை என்று - சொல்ல லட்சுமணன் 
நல்ல வார்த்தை சொன்னாய் செல்வம் சொல்லுக்கஞ்சுமா 
மல்லார் போரினில் வந்தால் 
எல்லாம் அப்போ தெரியும் 
பொல்லா உன் தனையே நான் கொல்வேன் உனக்குன் அப்பன் 
கல்லார் கடன் கழிப்ப 
தெல்லாரும் காண்பார்வா 
வா என்று சொல்ல இந்திரசித்துஆ 
ஆ என்று வெல்ல பிரளயகாலத் 
திடிபோலே ஆர்ப்பரித் 
துடனே கடோரமாம் 
வடவாக் கினியைப் போலும் திடவானிகள் அனேகம் 
படபடென அங்கதன் 
உடலில் ஆயிரம்பாணம் 
கடல் தாவும் அனுமான்மேல் அடல்சேர் பாணம் ரண்டா 
யிரம் விட்டுத் தடுக்க தேவர்கள் கண்டு 
உரங்கெட்டு நடுக்க ராமானுஜன் 
இடிஉற்றெழுந்து கார்கற் கடகச்சந்திர யோகத்தில் 
படியிற் பொழிந்தாற் போல் வடியிட்ட சரமாரி 
நொடியிற் பொழிய நீசன் கொடிய பகழி எல்லாம் 
பொடிப்பட்ட அன்று கெட்டவன் கெடிவிட்டிட நின்று விட்டபின் 
( பெரும் 
7 , லோகநாதன் தம்பியும் 
மேகநாதனும் எய்யும் 
வேகமாகிய பாணத் 
தீகள் எழுந்ததனால் 
சாகரங்களின் நீரும் 
மேகநீரும் வற்றிப் 
போகக் காடுகள் பற்றி 
வேகஅதனை ராமா 
நுடன் கண்டு கடுகி - சரங்கள் பல 
துஜம் கொண்டு முடுகி 
விடவே இந்திர 
சித்தன் தேரில் கட்டும் 
பத்து நூறென்னும் சிங் 
கத்திரள் யாவையும் 
செத்துப் போக அந்த 
எத்தன் இந்திரசித்தனைச் சுற்றி வந்திடும்சே 
மத்தேர் இல்லாமையால் 
மத்தியான சூரியன் 
பரிவேஷம் நீங்கி - நின்றாற் போல்நின் 
றொரு சோஷம் ஓங்கி - செய்து குரங்கின் 
சேனைமேலே பெருஞ் 
சோணை மழைபோற் கூர்மை 
ஆன சரங்கள் கையில் 
ஆனமட்டும் எய்து 
மான அங் கதன்மேலும் 
சேனைசரங்கள்விட்டு 
வானின் மீ திடித்துச்ச 
மானமாகச் சங்க 
நாதத்தைப் பண்ணி மகிழஓர்வி 
காதத்தை 
எண்ணி லட்சுமணன்பத்து 
தேட்டமான பாணம் 
போட்டுமேக நாதன் 
மாட்டி வந்தகவச 
மூட்டுகளைக் கழற்றி 
கோட்டுவிற் குணத்தொனி காட்டிநின்றி டச்சுவாமி 
கேட்டுமா நலம் என்று மகிழ்ந்திடும் கூட்டவானரர் நின்று புகழ்ந்திடும் 
பெரு ) 

அ . மண்டுபோர் ளையான்பிர 
சண்டவில் குணத்தொனி 
கண்டு மணமகிழ்ந்து 
கொண்டல் வண்ணராமன் 
அண்டம் உண்டவாயால் 
விண்டு சொல்ல வானரர் 
எண்டிசை களும் அதிர் 
கொண்டிடவே அட்ட 
சுாசத்தைப் பண்ணி 
கெர்ச்சித்தார் துஷ்ட 
நாசத்னத எண்ணி அந்தவேளையில் 
ஈசர்க்கும் எண்டிசை 
வாசர்க்கும் உலகர்க்கும் 
பேசற்கரிய பிரம 
பாசத்தை விடுவதில் 
மாசத்துவம் உடைய 
நீசன் இந்திர சித்தன் 
மோசத்தை எண்ணி ஆ 
காசத்திலே போய்த்தன் 
உடலத்தை மறைத்தான் வானரர் என்னும் 
கடல்வற்றக் குறைத்தான் அதனைக்கண்டு 
நாமாறி லாப்பரந் 
தாமா ஸ்ரீராமா நாம் 
ஏமாறி 
பறி இருந்தால் என் ஆமோ இந்திரசித்தன் 
சாமாறு பிரமாஸ்திரம் 
நாமேவிட்டிட வேணும் 
நேமம் அருள்வாயென்று 
ராமானுஜன் சொல்ல 
அதைராமன் தடுக்க செயிக்கும் வேளை 
இது அன்றென்றெடுக்க - உறவே இந்திர 
சித்தன் மனதில் வெகு 
சத்தியுள்ள பிரம 
அஸ்திரத்தை விட்டு 
வெற்றிபெறவோரு 
உத்தி செய்துலங்கை 
அத்தினான் இதுகண்டு 
சுற்றும் வானரர் ஆரவாரித்த சத்தியவானவர் நேரேபூரித்த 
( பெரு ) 

அனுமாருக்கும் அகம்பனுக்கும் யுத்தம் 
 
நலிஇந்திர சித்திலங்கை நகர்புகுகக் கீழே 
லட்சுமண னோடிறங்கிக் கவசமுதல் நீக்கி 
மெலிசேனை உணவுக்கா வீடணனைப் போக்கி 
வீரன் ஆயுதபூசை விதிசெய்யப் போனான் 
கிலிகொள் மகன் சத்தியினால் அவரை ஏமாற்றக் 
கிளர் இரா வணன்விடம் கோதரனோடகம்பன் 
வலியவந்தான் அவனையும் சேனைகளையும் பாய்ந்தனுமான் 
வாட்டினான் தெண்டு கொண்டு மாட்டினானே 

பல்லவி 

சாடினானே 
அனுமான் 
சாடினானே 
( சாடி ) 
அ
இளையவர் நாகபாசத்தால் கட்டுண்டதற்காக 
ஸ்ரீராமர் இரங்கல் 

விநய விபீஷணன் இவ்வா றழுதுவாடும் 
வேளையில் இராமச்சந்திரன் இடத்தில்மேவி 
அனலன் எனும் மந்திரி சொல்லச் சுடர் அம்பேந்தி 
அவ்விருளைத் துரத்தி ஐயன் களத்தில் வந்தான் 
முனை பெறுசுக் ரீவனை அங்க தனைக்கண்டான் 
முசித்தபடை களைக்கண்டான் மூர்ச்சையான 
தனியனுமா னையும் கண்டான் சாமிகோபம் 
தாங்கினான் தம்பியைப் பார்த்து ஏங்கினானே 

பல்லவி 
என்னதான் செய்வேன் அடா லட்சுமணா 
என்னதான் செய்வேன் 
நான் 
( என் ) 

அநுபல்லவி 

உன்னைப் பாசங்கட்ட உன் பாசம் என்னைக்கட்ட 
ஒருத்தன் நான் தவிப்பேனடா 
லட்சுமணா 
( என் ) 

சரணங்கள் 

1 --சனகி பிரிந்தகுறை மறக்கவோ நீவந்து 
தந்தாய் இந்தத் 
தொல்லையே 
லட்சுமணா 
நினைவின்படி நான்கீறும் கோட்டைக் கடந்தொருவர் 
நில்லென்றாலும் 
நில்லையே லட்சுமணா 
எனது கண்ணே நானும் உனதுபின் வருகிறேன் 
ஏதுக் கெடுத்தேன் 
வில்லையே லட்சுமணா 
உன துயிர் போனால் என் உயிரும்போம் அப்புறம் 
ஒருகவலையும் 
இல்லையே 
லட்சுமணா ( என் ) 

2. எடுத்தென் பசியறிந்து அருங்கனி தருங்கையை 
எப்படிப் பிடிப் 
பித்தாயோ 
லட்சுமணா 
பகுத்தறியாத நான் களத்தில் தூங்கிறேன் நீ 
பார்என்றுவரு 
வித்தாயோ லட்சுமணா 
அடுத்த தகப்பன் போலே நீயும் போய் என்னையிங்கே 
அவத்திலே சோ 
தித்தாயோ 
லட்சுமணா 
பிடித்த கொம்பையும் விட்டு மிதித்த கொர்பையும் விட்டுப் 
பேய்போல் அவை 
வைத்தாயோ -லட்சுமணா ( என் ) 

3. பெண்ணுக்காய் மான்பின்னே நடக்கச்சே தடுத்தஉன் 
பேச்சையும் 
கடந்தேனே 
லட்சுமணா 
மண்ணும் வரும் உன்னாலே மனைவியும் வரும் என்று 
மனமகிழ்ச்சி 
அடைந்தேனே - லட்சுமணா 
கண்ணைக் கொண்டு நடக்கும் அவர்போலே நானும் 
உன்னைக் கொண்டு 
நடந்தேனே 
லட்சுமணா 
எண்ணின எண்ணமும்போய் எதிரிக் கிளக்காரமா 
ஏழையாய்க் 
கிடந்தேனே - லட்சுமணா ( என் ) 

செருட பகவான் வருதலும் நாகபாச பறுதலும் 

அதிபதி ரகுபதி துணைவனொ டுருகிற அறையிருளின் போதில் 
உதறிட அரியதோர் தசமுகன் மகன்விடும் உரசநெடும் பாசம் 
சிதறிட இளையவன் எழுதர அமரர்கள் திசைதிசை நின்றாடக் 
கதிரவ னவனலன் 
னவனலன் இவனென விசையொடு கெருடனும் வந்தானே 

பல்லவி 

தெய்வக் 
கெருட பகவானும் வந்தானே 
கெருட பகவானும் வந்தானே 

அநு பல்லவி 

கெருட பகவான் வந்தான் கிளம்பிப் பெருங்காற்றினை 
இருசிறைகளும் சாடவே அஷ்டமா நாக 
அரசனும்பயந் தோடவே 
ராமனைக் 
கண்டு 
உருகி மனது வாடவே 
வனமலைபோல் 
உரகபூஷணம் அந்நேரமே 
( கெரு ) 
ஆடவே 

சரணங்கள் 
1. முந்தி ஆனையினால் என் முதுகேறி முதலைமேல் 
அந்தச் சக்கரம் விட்டாயே 
அந்தச் சக்கரத்தைவிட் டம்பும் வில்லுங்கொண்ட 
செந்தா மரைப்பூங் 
கையனே - எவர்களுக்கும் 
சந்தோஷம் தரும் மெய்யனே அமியார்போல 
நொந்தா லெப்படி துய்யனே அடியேனிதோ 
வந்தேன் வந்தேன் அய்யனே என்றுசொல்லி 
( கெரு ) 

2. விரிசிறகால் மண்ணும் விண்ணும் மூடிக்கொண்டு 
ஒரு மலையெனத் தாவியே 
ஒரு மலைமேற் சூரியன் உதித்தாற்போல் தலைமேலே 
பருமுடி ஒளி 
விரிய - காதங்கள் கோடி 
இருகண் பார்வையும் தெரிய - சாமி கைவிட்ட 
பிரிவாலேமனம் 
பரிய பரவசம் ஆய் 
உருகிக் கண்ணீர் 
சொரிய , வேகமதாக 
( செரு ) 

3. திடத்துடனே தெற்குத் திசையில் இருந்து பாய்ந்து 
வடக்குத் திசையை நாடியே 
வடக்குத்திசையில் ஐயன் மலர்ப்பாதம் கண்டுகை 
எடுத்து வணக்கம் 
குறிக்க - கழுத்தில் வெள்ளை 
துடிப்பா வெண்ணில 
வெறிக்க - ராகுகேதுவும் 
திடுக்கென் றுடலை முறிக்க - நாகபாசமும் 
பொடிப் பொடியாய்த் தெறிக்க - அன்பினுடன் 
( கெரு ) 

4. கிழிந்துபா தாளத்தில் கிடக்கும் பாம்புகளும் கண் 
சுழன்று தத்தளித் திடவே 
சுழன்று நாகபாசம் தொடுக்கும் இந்திர சித்தாலே 
விழுந்தோர் மெள்ள 
மெள்ளவே - நித்திரை நீங்கி 
எழுந்தவர் போலத் 
அழுந்தத் தழுவித் 
ஒழிந்து கவலை 
துள்ளவே 
தம்பியைராமன் 
கொள்ளவே தேவர்கள் பயம் 
தள்ளவே 
அவர்கள் வேண்ட ( கெரு ) 


கெருட பகவான் ஸ்ரீராமரைத் துதித்தல் 
மதஞ்சேர்நாக பாசமிந்த வகையால் தெறிக்க ராமச்சந்திரன் 
இதஞ்சேர்லட்சு மணன்முதலோர் எழுதல்கண்டான் அதிசயிக்கும் 
விதம்சேர் நீயார் எனக்கேட்டான் விரித்துரைப்பேன் பிறகென்று 
பதம் சேவித்தான் மனத்தன்பு பதித்தான் கெருடன் துதித்தானே 

பல்லவி 
அய்யனேஉன் மேன்மையை அறிந்து சொல்ல மேணுமென்றால் 
ஆதிசேஷனுக்கும் வருமோ 
( அய் ) 

அநுபல்லவி 

துய்யனே காத்தருள்செய் மெய்யனே எனத்தேவர் 
தோத்திரம் செய்திடஅ யோத்திநகரில் வந்த 
( அய் ) 

சரணங்கள் 
1. பிரமாதி தேவர்களைப் பெறுவானும் நீ அவர்க்குப் 
பெருரானும் நீஉனக்கு ஒருவர் நேரா 
தருமாதிபதவிகளைத் தருவானும் நீடனக்குத் 
தரவேண தென்னகோ சலைகுமாரா எங்கள் 
( அய் ) 
2. உலகெல்லாம் உன்வயிற்றில் ஒடுக்குவாய் விடுப்பாய்பின் 
ஒருவருக்கும் உண்டோ இந்தப் பெரியதிராணி 
தலைவனே உனக்கொருவர் பலம் வேணும் என்பதென்னோ 
சத்தியமோ நித்தியகோ 
தண்டபாணி - எங்கள் ( அய் ) 
3. ஆதிநடு முடிவாகி எள்ளும் எண்ணெயும் போலே 
அங்கங்கும் நிறைந்தாயே 
நீயிப்போது 
மேதினியிலே உனக்கும் எதிர் ஒருவர் உண்டென்எறு 
வில் எடுத்து விளையாட 
வந்ததேது - எங்கள் ( அய் ) 
4 . ஆரணங்கள் கூடவுன்றன் காரணங்களறியாமல் 
அரளிக்கையால் அகில 
லோகமித்திரனே 
நாரணனே அகண்டபரி பூரணனே உன்கீர்த்தி 
நானுரைக்க முடியுமோ 
ராமபத்திரனே 
எங்கள் ( அய் ) 
5. முத்தொழிலும் முக்குணமும் முச்சுடரும் முப்பொழுதும் 
முப்பொருளும் ஆகிநின்ற 
மூர்த்திராமா 
பத்தர் ஆசாபாசம் தொலைக்கும் உனக்கொருநாக 
பாசம் தொலைத்திடுவது பிர 
யா சமாமோ 
எங்கள் ( அய் ) 

இராத்திரியில் மகாராட்சத வீரர்கள்வதை 

கெடிக்கருடன் விடைகொண்டான் அப்புறம்வா னரரும் 
கெர்ச்சித்தார் கெருடன் வந்த வகையை இரா வணன் முன் 
துடித்திடத்தூதுவர் சொன்னார் அவனும்மக னிடம் போய்ச் 
சொன்னான் இந்திரசித்தும் ஒருபிர்மாஸ் திரத்தால் 
அடித்திடுவேன் நாளைப்போய் நரர்பொல்லார் இன்றைக் 
காகாது மிகநொந்தேன் அப்பப்பா என்றான் 
முடித்தலைபத் துள்ளவனும் படைத்தலைவ ரோடே 
முறைப்பட்டான் அங்கவரும் புறப்பட்டார் தாமே  

கண்ணிகள் 
1. விக்கிரம ராவணன் அனுப்பவேவெகு 
வேகமாப்படை 
அக்கினிகேது முதற்படை வீரர்கள் 
அனேகரும் களம் 
2. நீலன் முதற் படைத்தலைவர்கள் இதுகண்டு 
நேருக்கு நேரேபோய்க் 
ஆலகாலமும் வடவாக்கினியும் போல் 
அவரும் இவரும்போர் 
3. சரத்தாலே ராட்சதர் வானரத் தளங்களைத் 
தரையிலே விழ 
அடுத்தாரே 
குதித்தாரே 
எதிர்த்தாரே 
முடித்தாரே 
மரத்தாலே வானரர் அரக்கர் படைகளை 
மண்டைகள் பிளந்திட 
அடித்தாரே 

4. வில்லும் சரமும் கொண்டுராட் சதர்வானர 
வீரர்கள் அணிகளை 
கல்லும் மரமும் கொண்டு ராட்சத சேனையைக் 
கவிப்படைத் தலைவர்கள் 
உடைத்தாரே 
புடைத்தாரே 

5 சுக்கிரீவன் வந்த சூரியகேதுவை 
துண்டம் துண்டமாக 
வைக்காமல் அப்போ தங்கதன் பாய்ந்ததொரு 
மாபெரும் பக்கனுயிர் 
முறித்தானே 
பறித்தானே 
வென்றானே 

6. தூமக்கண்ண னைராம தூதன் எம 
தூதனைப் போலவே 
மாமுஷ்கர முள்ள நீலன் மலைகொண்டு 
மலைபோன்ற மாலினியைக் 
கொன்றானே 

7. இடபன் போய்ப் பொல்லா வச்சிரதந்தனை 
ஏற்றி அவன் கழுத்தை 
உடனே பனசன் பிசாசனைக் கண்டோடி 
உதைத்து மிதித்துக் கையால் 
ஒடித்தானே 
அடித்தானே 
நடந்தானே 

8. இளையோன் மேலே அக்கினி கேதுவும் 
ஈரிரு வெள்ளங்கொண்டு 
கிளைபோய்ச் சேனையும் போய் அக்கினி 
கேதுவும் பட்டுக் 
கிடந்தானே 
கவிந்தாரே 

9. விரிவாகவே ஸ்ரீராமனை ஓராறு 
வெள்ளம் அரக்கர் போய்க் 
ஒருவாளியினாலே ஈசல்போக்குப் போல 
உடனே அவர்மண்ணில் 
அவிந்தாரே 

10. நாயும் நரியும் கழுகுகளும் வந்து 
நாலுதிக்கிலும் குதி 
பேயும் ரணபத்ர காளியும் கூனியும் 
பிணங்களைத் தின்று சதை 
குதித்தவே 
உதித்தவே 

11. இரணசுக்கிரன் புறப்பட்ட கண்ணிலே 
கண்டை முள்ளுதைத்த 
மரணம் கொடுத்திடும் ராவணன் இந்த 
வார்த்தையைக் கேட்டான் 
தைப்போலே 
அப்பாலே 
நின்றானே 

12. குனித்தே மகரக் கண்ணன் படைகளஞ்சு 
கோடி கொண் டரக்கன் முன் 
வனத்தேஎன் அப்பனைக் கொன்ற பழிக்குப்பழி 
மனிதரை வாங்குவேன் 
என்றானே 
தின்னவே 

13. வெறுவா யைத்தின்னு கின்ற அவனுக்கு 
வெள்ளவல் கிடைத்தது 
குறியா அரக்கனும் இருபது வெள்ளம் 
கூட்டினானே துணை 
என்ன 
வே 
வோர்கூட 

14. சிங்கமுகனும் ரத்தாட்சனும் என்னும் 
சேனைத் தலைவர் இரு 
இங்கே அந்தமக ராட்சதன் வந்தானே 
ராமச்சந்திரனுடன் 
போராட 
எய்தானே 

15. ஓராயிரம் அம்பு மகரக்கண்ணன் 
ஒருதொடை யாகவே 
ஓராயிரம் அம்பாலே அய்யனதை 
ஒருநொடியிற் பொடி 
செய்தானே 
அழிந்ததே 

16. பின்னும் ராகவன் அம்பாலே அவன் 
பெருந்தேரும் பரியும் 
மன்னும் ஒருகணையாலே அந்த 
மகராட்சதன் தலை 
விழுந்ததே 

17 -கண்டானே 
நளனாலே ரத்தாட்சனும் அந்த 
நமனார் உலகத்தைக் 
ளையாத பனசனாலே அந்த 
இகற் சிங்கமுகனுயிர் 
விண்டானே 


18 வில்லாலும் கல்லாலும் இருபது 
வெள்ளம் படைகளும் போய் 
சொல்லானது ராவணன் செவியிலே 
சுட்டாற் போலே போய்ப் 
இறந்ததே 
பிறந்ததே 

லட்சுமணருக்கும் இந்திரசித்துக்கும் இரண்டாம் முறை யுத்தம் 

அதையறிந்தான் இராவணன் என் மகன் தன்னை இங்கே 
அழையுங்கள் எனத் தூதர் அவன்பக்கல் சென்றார் 
வதைபடையின் கதைகேட்டான் தந்தையிடம் வந்தான் 
வணங்கி மக்கள் இறந்ததற்கு வருந்தாதே நான்போய்ச் 
சிதைய அந்தஇருமனிதர் சவம் சீதை கண்டும் 
சிறுகுரங்கின் பிணக்குவையத் தேவதைகள் கண்டும் 
பதைபதைத்தல் நீ காண்பாய் என்றிந்திந்திரசித்தன் 
பதிவிட்டான் தம்பியவன் எதிரிட்டானே 

பல்லவி 
லட்சுமணன் செய்த 
பெருஞ்சண்டை கேளீர் 
பெருஞ் சண்டைகேளீர் 

அநுபல்லவி 
பெருஞ்சண்டை கேளீர்கள் 
அருஞ்சண்டயாளிகள் 
தருந்திண்டேர் யானைகள் 
கருந்துண்ட சேனைகள் 
பருஞ்சண்ட மாருதம்போல் நெருங்குண்ட வாசிகள் 
மருங்கண்டவே தந்திரத்தொடு வருங்கண்டக இந்திரசித்தொடு 
( பெரு ) 
சரணங்கள் 
1. சிரத்தில் மணிமகுடம் 
தரித்து மார்பிற்கவசம் 
பரித்துப் பணிகள் அலங் 
கரித்து வலியப்பெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்ரனைப் போலார்ப் பரித்து விக்கிரமத்துடன் 
துங்கத்தைக் கோறி - ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி - அலைஎறியும் 
சீர்கொள் ஏழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூரர்கள் விடவிடென 
ஊர்கொள் பருதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையும்மணித் தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித் தரவே 
அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே உயர்ந்த அண்ட 
கோளம் கனத்த சக்கிர 
வாளம் பருத்தபுவி 
நீளந்தன் னொடுபாள 
பாளங்க ளாவெடிக்க 
மேளங்கள் அடிக்கக்கைத் 
தாளங்கள் துடிக்க எக் 
காளங்கள் தொனிக்கக்கத்தி காளங்க யானைகள் 
வீறிட்டுக் கதறத் - திக்குபாலர்ப 
கீரிட்டுப் பதறக் களத்தில் வந்து 
துன்று சமர் விளைக்க 
அன்றில் அணிவகுத்து 
இன்று மனிதர்களை 
வென்று பகைமுடிப்பென் 
என்று சங்கம் பூரித்து 
ஒன்றத் தனு வளைத்துக் 
குன்று வந்ததென - எத்துடனே - நின்ற இந்திரசித்துடனே ( பெரு ) 

2-வீரன் இந்திரசித்தன் 
போரில் நின்றவுடனே 
காரெனவே ஆர 
வாரம் செய்ய அதி 
தீரன் சுக்கிரீவனை 
சேரும் வானரர் எல் 
லாரும் சிங்கத்தைக் கண்டு பேரும் யானைக் குலம்போல் 
நடுக்கங்கொண் டோட 
அரக்கரவர் 
இடுக்கம் கண் டா 
அனுமசுக்கிரீ 
வனும் அங்கதனும் ஸ்ரீரா மனும் சாம்பவனும் லட்சும 
ணனும் உக்கிரம் உளவீரர் 
எனும் சிலவரும் அஞ்சா 
தினும் முந்தி வரும் ராட்ச 
தனும் இந்தப் போரினில் 
தனுவிந்தையா வளைத்து 
மனுமந்திர வாளிள் 
தொடுப்பதும் ஏற்போம் --- நம்மைக் கெலித்து 
விடுப்பதும் பார்ப்போம் - எனவே நிற்க 
தீதும் அதனில் மிக்க 
சூதும் உள்ள அரக்கர் 
வாது செய்ய நினைத்துப் 
போது படைகளைக் கொண் 
டீதததிசயம் இனி 
ஏது விளையுமோ என் 
றோதி அமரர் வெட்க 
மோதி அமர் விளைக்க 
அதை அய்யன் கண்டு லட்சுமணா நீ 
வதை செய்வில் கொண்டு என்று சொல்லி 
அனுமார் அங்கதன் தோளில் தனுவார் ராமலட்சுமணர் 
எனும் ஓர் இருவர் கேச 
வனும் ருத்திரனும் மிகு 
கனமர் புள் ஏற்றின் மீ 
தினில் ஏறினாற்போல 
மனமகிழ்ந்திட ஏறி - அன்றவன் சினம் மிகுந்திடவீறி- நின்றபின் ( பெரு ) 
3. திடத்த நீலன்மூதற் 
படைத்தலைவர் எல்லாம் 
கிடைத்த மலைகளைக் கீண் டெடுத்து மரங்களும் கொண் 
டடித்துப் போர்புரியத் 
துடித்துப் போமளவில் 
அடுத்த ராமச்சந்திரன் 
தடுத்தென் தம்பிசெயும் 
சண்டையை இன்று நீங்கள் பார்த்துக் 
கொண்டிரும் என்று 
சொல்லியேறும் 
பெருமானும் தம்பியும் 
ஸ்திரமாக வேநின்று 
உரமா வில்லை வளைத்துச் சரமாரிகள் பொழிய 
அரனால் அன்றுதிரி 
புரம் நீறெழுந்தாற்போல் 
வரம் ஆரும் வெள்ளம் ஓர் 
இருமுப்பதும் மடிந்து 
விழுந்ததைக் கண்டு இந்திரசித்தன் 
அழுதுள்ளம் விண்டு அமர்க்களத்தில் 
பெருநதியைப்போல் உ 
திரவெள்ளம் ஓடவே 
வரும் ஆனைசேனை கு 
திரையாவையும் மடியவே 
ஒருநிமி ஷத்திலே 
ருவோ ருமாவட்ட 
சரவேகமும் இவர்கள் 
கரவேகமும் சொல்ல 
எந்தன்னால் 
ஆதிசேஷ 
னும் சொல்லப் போமோ 
மடிந்தசேனை 
ஞாலத்தில் இத்தவக் 
கோலத்தர் விடும் ஆல 
காலத்தை நிகர்மாண 
சாலத்திலோ எந்த 
காலத்திலோ இந்திர 
சாலத்திலோ எந்த 
காலத்திலும் கண்டிலேன் வென்ற மூலத்தை நான் கண்டிலேன் என்ற 
( பெரு ) 
4. இன்று போரில் நமக் 
கென்று ராமலட்சுமணர் 
துன்றும் அரக்கர் தமைக் 
கொன்று விருந்து செய்தார் 
நன்று நன்றெனவே 
சென்று சென்று பல்லால் 
மென்று மென்று சுவைத்துத் 
தின்று தின்று கொழுத்துக் 
கூளிகள் 
ரணபத்திர 
காளிகள் ஆட 
அதனைக்கண்டு 
துங்க மாக முன்னம் 
பொங்கும் இந்திரசித்தன் 
மங்கியே பிரமித்து 
இங்குவந் தமர்செய் 
ஆமோ 
சிங்க ஏறனைய 
அங்கதன் அனுமனை 
இங்கு ரைக்கிலனேகர் 
எங்கும் மனிதர் என 
ஆச்சரியம் கொண்டு முன்னிருந்த 
மாச்சரியம் விண்டு இருந்தபோதா 
காசம் ஆருந்தேவர் 
வாசமலர்கள் கொண்டு 
நேசமா இருவர் மேல் 
வீச அதையும் கண்டு 
பூசலிலே அரக்கர் 
நாசமாகவே இவர்க் 
கேசல் ஆச்சுதேநம்பிர 
காசம் போச்சுதே என்று 
மனந்திடுக் கிட்டான் பெருமூச்சுகள் 
அனந்தமா இட்டான் அந்தவேளையில் 
முக்கியமான எட்டுத் 
திக்குகளும் அதிர 
மக்கி நட்சத்திரங்கள் 
மிக்கிடவே உதிர 
சக்கிரம் ஏந்தும் திரி 
விக்கிரமன் நேர் அனுமான் 
உக்கிரமுடன் இருதோளும் கொட்டிய நெக்கிடும் ஒலி ஆகாசம் முட்டிய 
( பெரு ) 

5. மாருதி தோள்கொட்டி ஆரவாரம் செய்யவே 
ஊரும் ஆயிரங்கோடி 
தேர்களிலே யிருந்து 
வீரரெல்லாம் நடுங்கி 
பாரில் விழுந்தார்லங்கை 
ஊரில் இருந்த பெரும் 
காரரக்கரும் ரத்தம் 
தனைக்கக்கி னார்கள் - சில அரக்கர் 
நினைத்துட்கி னார்கள் மேகநாதன்கண் 
டோர் குரங்கார்ப்புக்கு 
நீர் நடுங்கின போதே 
பார்மீதிலே செத்த 
பேர் நீங்களே என்று 
கார்வண்ண ராமன்போல் 
நேர்வண்ண லட்சுமணன் 
போர்மன்னிய முகத்தில் 
நேர்வந்தெதிர்ந்தபோதா 
யிரங்கோடி உரவே கத்தேரவர் 
மருங்கோடி வரவே லட்சுமணன் கண்டு 
துஷ்டஇந்திர சித்தன் முன் விட்ட நாகபாசக் 
கட்டினாலே தோற்று 
விட்டானென் றுலகத்தோர் 
சட்டமா எனைச் சொல்வார் வெட்டி அவன் 
தலை உன் 
கிட்டவைக் காவிட்டால் 
இஷ்ட அடிமையல்லேன் 
எனக் கண்ணன் முன்னே - சிலசபதம் 
தனைப் பண்ணப் பின்னே சாமியும் மெய்க்க 
ஆலமுண்ட பிரளய 
காலருத்திரனைப் போல 
சீலலட்சுமணன் பாண 
சாலத் தாயிரங்கோடி 
கோலத் தேரை அழித்து மேலிட்ட அரக்கரைக் 
காலன் வெருவிட அன்றகன்றிடும் ஞாலம் மருவிடநின்று கொன்றிடும் 
( பெரு ) 

6 . தனித்திந்திர சித்தன்வில் 
குனித்து லட்சுமணாநான் 
உனைக் கொன்றுன் அண்ணன்உன் தனக்குற் றுரிமை செய்ய 
நினைத்தேன் முடிக்காவிட்டால் அனைத்துலகையும் ஆளும் 
கனத்தராவணன் மகன் 
எனப்பேர் படைத்தும் ஒரு 
நலனில்லை இன்று வில் எடுத்ததால் 
பலனில்லை என்று - சொல்ல லட்சுமணன் 
நல்ல வார்த்தை சொன்னாய் செல்வம் சொல்லுக்கஞ்சுமா 
மல்லார் போரினில் வந்தால் 
எல்லாம் அப்போ தெரியும் 
பொல்லா உன் தனையே நான் கொல்வேன் உனக்குன் அப்பன் 
கல்லார் கடன் கழிப்ப 
தெல்லாரும் காண்பார்வா 
வா என்று சொல்ல இந்திரசித்துஆ 
ஆ என்று வெல்ல பிரளயகாலத் 
திடிபோலே ஆர்ப்பரித் 
துடனே கடோரமாம் 
வடவாக் கினியைப் போலும் திடவானிகள் அனேகம் 
படபடென அங்கதன் 
உடலில் ஆயிரம்பாணம் 
கடல் தாவும் அனுமான்மேல் அடல்சேர் பாணம் ரண்டா 
யிரம் விட்டுத் தடுக்க தேவர்கள் கண்டு 
உரங்கெட்டு நடுக்க ராமானுஜன் 
இடிஉற்றெழுந்து கார்கற் கடகச்சந்திர யோகத்தில் 
படியிற் பொழிந்தாற் போல் வடியிட்ட சரமாரி 
நொடியிற் பொழிய நீசன் கொடிய பகழி எல்லாம் 
பொடிப்பட்ட அன்று கெட்டவன் கெடிவிட்டிட நின்று விட்டபின் 
( பெரும் 
7 , லோகநாதன் தம்பியும் 
மேகநாதனும் எய்யும் 
வேகமாகிய பாணத் 
தீகள் எழுந்ததனால் 
சாகரங்களின் நீரும் 
மேகநீரும் வற்றிப் 
போகக் காடுகள் பற்றி 
வேகஅதனை ராமா 
நுடன் கண்டு கடுகி - சரங்கள் பல 
துஜம் கொண்டு முடுகி 
விடவே இந்திர 
சித்தன் தேரில் கட்டும் 
பத்து நூறென்னும் சிங் 
கத்திரள் யாவையும் 
செத்துப் போக அந்த 
எத்தன் இந்திரசித்தனைச் சுற்றி வந்திடும்சே 
மத்தேர் இல்லாமையால் 
மத்தியான சூரியன் 
பரிவேஷம் நீங்கி - நின்றாற் போல்நின் 
றொரு சோஷம் ஓங்கி - செய்து குரங்கின் 
சேனைமேலே பெருஞ் 
சோணை மழைபோற் கூர்மை 
ஆன சரங்கள் கையில் 
ஆனமட்டும் எய்து 
மான அங் கதன்மேலும் 
சேனைசரங்கள்விட்டு 
வானின் மீ திடித்துச்ச 
மானமாகச் சங்க 
நாதத்தைப் பண்ணி மகிழஓர்வி 
காதத்தை 
எண்ணி லட்சுமணன்பத்து 
தேட்டமான பாணம் 
போட்டுமேக நாதன் 
மாட்டி வந்தகவச 
மூட்டுகளைக் கழற்றி 
கோட்டுவிற் குணத்தொனி காட்டிநின்றி டச்சுவாமி 
கேட்டுமா நலம் என்று மகிழ்ந்திடும் கூட்டவானரர் நின்று புகழ்ந்திடும் 
பெரு ) 

அ . மண்டுபோர் ளையான்பிர 
சண்டவில் குணத்தொனி 
கண்டு மணமகிழ்ந்து 
கொண்டல் வண்ணராமன் 
அண்டம் உண்டவாயால் 
விண்டு சொல்ல வானரர் 
எண்டிசை களும் அதிர் 
கொண்டிடவே அட்ட 
சுாசத்தைப் பண்ணி 
கெர்ச்சித்தார் துஷ்ட 
நாசத்னத எண்ணி அந்தவேளையில் 
ஈசர்க்கும் எண்டிசை 
வாசர்க்கும் உலகர்க்கும் 
பேசற்கரிய பிரம 
பாசத்தை விடுவதில் 
மாசத்துவம் உடைய 
நீசன் இந்திர சித்தன் 
மோசத்தை எண்ணி ஆ 
காசத்திலே போய்த்தன் 
உடலத்தை மறைத்தான் வானரர் என்னும் 
கடல்வற்றக் குறைத்தான் அதனைக்கண்டு 
நாமாறி லாப்பரந் 
தாமா ஸ்ரீராமா நாம் 
ஏமாறி 
பறி இருந்தால் என் ஆமோ இந்திரசித்தன் 
சாமாறு பிரமாஸ்திரம் 
நாமேவிட்டிட வேணும் 
நேமம் அருள்வாயென்று 
ராமானுஜன் சொல்ல 
அதைராமன் தடுக்க செயிக்கும் வேளை 
இது அன்றென்றெடுக்க - உறவே இந்திர 
சித்தன் மனதில் வெகு 
சத்தியுள்ள பிரம 
அஸ்திரத்தை விட்டு 
வெற்றிபெறவோரு 
உத்தி செய்துலங்கை 
அத்தினான் இதுகண்டு 
சுற்றும் வானரர் ஆரவாரித்த சத்தியவானவர் நேரேபூரித்த 
( பெரு ) 

அனுமாருக்கும் அகம்பனுக்கும் யுத்தம் 
 
நலிஇந்திர சித்திலங்கை நகர்புகுகக் கீழே 
லட்சுமண னோடிறங்கிக் கவசமுதல் நீக்கி 
மெலிசேனை உணவுக்கா வீடணனைப் போக்கி 
வீரன் ஆயுதபூசை விதிசெய்யப் போனான் 
கிலிகொள் மகன் சத்தியினால் அவரை ஏமாற்றக் 
கிளர் இரா வணன்விடம் கோதரனோடகம்பன் 
வலியவந்தான் அவனையும் சேனைகளையும் பாய்ந்தனுமான் 
வாட்டினான் தெண்டு கொண்டு மாட்டினானே 

பல்லவி 

சாடினானே 
அனுமான் 
சாடினானே 
( சாடி ) 
அநு பல்லவி 
சாடிக்கும்ப கர்னன் முன்னே 
நாடியகம்பன் படையில் 
போடுமந்தத் தெண்டினாலே 
ஆடுகளில் வேங்கைபோலே ( சாடி )  

1. வாரும் வாரும் ராட்சதரே 
வாரி அந்தலங்கை 
சாரிசாரி யாகவொரு 
தானொருத்தனுமேருத்திர 
வாருமென்று கூவினான் 
ஊரில் விழத் தூவினான் 
கேசரிபோல் தாவினான் 
சாமிபோல் உலாவினான் 
ஆரநெருங்கிய குதிரைகள் சருகென ஓட்டி - பிணம்பிணமா 
ஆனைகள் பூனைகளாக விழும்படி வாட்டி - தேங்காய் போல் தள்ளி 
தேர்தனையே விடுசாரதி தலைகளை மூட்டி - மென்மேலும் வந்த 
சேனையை வீசி அதோ கதியாகவே மாட்டி - திசாதிசையில் 
வீரிட்டரக்கியர் கிழ - ஓரிக்குரல் போலே யழ 
நேரிட்ட ராட்சதர் வீடு 
ழப்பீரிட்ட இரத்தம் எழ ( சாடி ) 

சனை 
ஒருகாலே 
2. கோடிபேர்க்கொரு குத்தாகப் 
போடுவான் 
ஒருபுறம் 
கொக்கரித்து ராமனைக் கொண் டாடுவான் ஒருபுறம் 
ஆடுவான் வாலாலே சுற்றி 
மூடுவான் 
ஒருபுறம் 
ஆரடா சேவகன் என்று 
தேடுவான் 
ஒருபுறம் 
மூடன் நிகும்பனவ் வேளையிலே அனுமானே உன்னைதான் கொன்று 
போடுவேன் என்றொரு சூலம் எடுத் தெறிவானைப் பொருந்தி அவன் 
தாடையில் ஓரடி போட முழங்கிய சோனை 
போலவே ரத்தம் 
டமடிந்தனன் மேலும் மகாபல 
சுற்றியபோது
சாடிசட்டி 
மூடியிட்ட சூளைபோலே 
கோடையிடி விழுந்தாற் போலே ஓடிஓடித்தெண்டினாலே ( சாடி ) 
3. அகந்தையா லொருதெண்டு கொண்டு ஆயிரங்கழுதைத் தேரிலே 
அகம்பன் வந்தடித்தான் முன்னே புகுந்தனுமான் மார்பிலே 
கழ்ந்த அனுமானும் தெண்டால் 
தட்டினான் அந்நேரிலே 
தெண்டுங் கொண்டையும் பிண்டு உருண்ட அந்தப் பாரிலே 
புகுந்தவன்தன திடக்கையால் அனுமானை 
அடித்தான் அடிக்க அய்யன் 
பொட்டெனவே அந்தத் துட்டனைக் கையானே 
பிடித்தான் - பிடித்துமார்பில் 
பருந்து குபீரென ரத்தம் இறங்கிட இடித்தான் இடித்தபின்னும் 
பார்த்தவனாவியைக் கூற்றுவனாமெனக் குடித்தான் 
முத்திஐயையோ 
புதைந்து ராவணன் தள்ள உகந்துவரும் நூறு வெள்ளம் 
மிகும்படையைக் காலன்கொள்ள அகம்பனுயிர் துள்ளத்துள்ள (சாடி ) 

இளையவர் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் 

அகம்பனங்கே படஅனுமான் முதலோர்கள் இருளில் 
அகன்று தனித் தனுப்போர்செய் திளையவன்பால் அடைந்தார் 
புகைந்த இரா வினில் மகோ தரன் தேவேந் திரன் போல் 
போர் செய்தான் இளையவனும் திகைத்தானப் போது 
முகிந்தபிர மாஸ் திரமிந்திரசித்து விட்டான் தம்பி 
முதலானோர் படுத்துவிட்டார் அதையறிந்து ராமன் 
மிகுந்துயரால் வந்துலைவாய் மெழுகுபோல் உருகி 
விழுகின்றான் துணைவனைப்பார்த் தழுகின்றானே 

கண்ணிகள் 

1. அப்பனே அய்யனே அரும்பிறவியே என் தன் 
அரசே கண்மணியே 
லட்சுமணா 
எப்படிநானுனை மறப்பேன் எப்போதுன்னுடன் பிறப்பேன் 
னி என் மனம் துணியேன் 
லட்சுமணா 

2. வன்னமாம் பிரம்மாஸ்திரம் கொடுத்த பிரம்மாவைப்பழி 
லட்சுமணா 
வாங்கநீ தொடர்ந்தாயோ 
என்னுடன் பிறந்தகுறை உசரப்போய் தசரதற்கு 
லட்சுமணா 
யம்பநீ நடந்தாயோ 
3. தந்தையையும் சடாயுவையும் கொடுத்ததும் போதாமல்உன் 
லட்சுமணா 
தனையும் பறிகொடுத்தேனே 
இந்தவயதினில் இந்தக்கண் காட்சிகாணநா 
லட்சுமணா 
என்னஉடம் பெடுத்தேன் 
லட்சுமணா 

4. அந்தோநான் களையாகித் தண்ணீர் விடாயெடுத்தால் 
ஆர்முகத்தைப் பார்ப்பேன் 
ந்தாரும் காய்கனிகள் அண்ணா என்றழைக்கும்உன் 
இன்சொல் தான் என்று கேட்பேன் 
லட்சுமணா 

5. நேரமறிந் தென்வயிற்றில் காய்கனியை இட்டநீ 
நெருப்பை இட்டாயோ நீ 
லட்சுமணா 
ஆரையும்விட்டென்னை விடேன் என்றாயே என்னைக்கூட 
அகல விட்டாயோ நீ 
லட்சுமணா 

6. சோற்றிலேகல் லெடுக்கறியேன் முகவணைக்கல் எடுப்பேனென்ற 
சொல்லையோ நான் எடுத்தேன் 
லட்சுமணா 
ஆற்றி நான் முடிபெறுமுன் வந்தவிபீஷணற்கு லங்கை 
ஆள முடி கொடுத்தேன் 
லட்சுமணா 
7. படிக்கும் உன்புத்திதள்ளி உனக்கும் வானரங்களுக்கும் 
பழிகாரன் ஆனேனே 
லட்சுமணா 
பிடித்ததே பிடியாகப் பெண்வார்த்தை கொண்டுநான் 
பிழைமோசம் போனேனே 
லட்சுமணா 
8. நீமாள என்னுயிர் போம் பரதற்கு இதுகேட்கில் 
நிமிஷத்தில் உயிர்போமே 
லட்சுமணா 
தாய்மார்க்கும் உயிர்போமே நான் பிறக்கச் சூரியகுலம் 
தான் துளக்கம் ஆச்சே 
லட்சுமணா 

ஸ்ரீராமரை ஆகாசத்தில் சகலதேவதைகளும் தோத்தரித்தல் 

இந்தா வந்தேன் வந்தேனென் றிளையபெருமாள் முகம்நோக்கி 
நொந்தாயாசம் பெறமலிந்து நோக்கும் பெரிபெருமாள் முன் 
அந்தோ உனக்கும் கவலையுண்டோ ஐயாஎன்றே அந்தரத்தில் 
வந்தார் தேவர் சாமிமுகம் மதித்தார் இறங்கித் துதித்தாரே 

பல்லவி 
( உன் ) 
உன்னது மகிமையை இன்னதென்றே வாராலும் 
உரைக்கல் ஆமோ ராமா 

அநுபல்லவி 
நின்னோடு நாபியில் பிரமா ஒருத்தனாலே 
நிகரில் சார சரங்கள் சகலமும் தரலாலே 
நன்னி அரக்கருக்கு நீபயப்படுவது 
நாயமோ சாமிஉன் தன் மாயமோ புவிமேலே 
( உன் ) 
சரணங்கள் 

ஆவாயே 
1. முப்பரம் பொருளுமாய் 
முப்பரம் பொருளுக்குள் 
மூலமுதற் பொருளும் 
அப்பனும் அன்னையும் 
தம்பியும் உனக்குண்டோ 
அவர்கள் வருத்தங்கண்டு 
நோவாயே 
இப்படி உன்சரித்திரம் 
இதுவே நிலைவரம் 
என்றால் அத்தையும்கூடக் 
கடந்தாயே 
செப்பிலும் இல்லை பந்திலும் இல்லை உன் செயல் 
சீமையிலே தகப்பன் சாமி என் 
பது நீயே 
2. அத்தி மரத்தினிலே தொத்திய கனிபோலே 
அண்டம் என்னும் கனிகள் 
உன் மேலே 
தொத்தி இருப்பவற்றுள் ஒருகனியிற் செனித்த 
துஷ்ட அரக்கர் என்னும் 
புழுவாலே 
கஸ்தி அடையலாமோ சிற்றூரில் செல்வக்கூத்து 
கட்டுகிறாய் என்ன 
உத்தமனே உன்கீர்த்தி எத்தனைபேர் சொன்னாலும் 
ஊசிக் கண்ணாலே ஆகாசம் பார்க்கிறாப் போலே 
( உன் ) 
ஒருகாலே 
( உன் ) 
ரகநாட்டம் 
மாறாட்டம் 

3. அம்பரீஷன் பிரகலாதன் முதலோருக் 
அருளிச்செய்தாயே அவனுக்கி 
நம்பின எங்களைஇந்த அரக்கருக்கு 
நடுங்கச் செய்ததென்ன 
தம்பியும் பிழைக்கின்றான் உன்தனக் கிவர் என்ன 
சண்டமா ருதத்தின்முன் 
எம்பிரானே நீநொந்தால் எங்களுக்கொருகதி 
இருக்குமோ தேவர் என்றும் தரிக்குமோஎங் 
சருகோட்டம் 
கள் கூட்டம் ( உன் ) 

ராமலட்சுமணருக்கு சீதாதேவி இரங்கல் 

வானவர் இப் படித்துதிக்கத் தூதர் சென்று 
மன்னவனே உன்மகனால் மனிதச் சாதி 
ஆனவரும் குரங்குகளும் முடிந்தார் என்றார் 
அவனுமங்கே புஷ்பகவி மானத் தேற்றிச் 
சானகிக்குக் காட்டுமென்றான் கண்டாள் சீதை 
தணல் அடுத்த வெண்ணெய் போல் உருகிவாழ 
நானொரு பெண் பிறக்க இவ்வா றாச்சோ என்று 
நலிகின்றாள் நொந்துநொந்து மெலிகின்றாளே 

கண்ணிகள் 

1 என்னசெய்வேன் சாமிநான் என்னசெய்வேன் சாமிநான் 
இந்தக் கோலம் காட்டவோ 
வந்தீர் 
துன்னிக்கைக் கொட்டினது வாய்க்கெட்டாமலே போக 
தோதகம் ஏன் ஒருமிக்கத் 
தந்தீர் 

2 . கண்ணே அமுதே கருணாகரரே என் மனக் 
காவலோடே இத்தனை 
மண்ணில் இருந்ததுயிர் மறைந்த திருமேனியை 
மார்பில் அணைப்பதற்கோ 
நாளா 
வாளா 
தானோ 

3. நகரில் இருஎன்ற உம்மை அகலேன் என் றோர் பிடியா 
நான் தொடர்ந்த திதற்குத் 
பகைவர் இலங்கையிலே நீர்மடிந்தபிறகும் 
பாவி நான் உயிர் தரிப் 
பேனோ 
4. ஏகபோக மாகவே இருந்த என் பிராணேசரை 
இழந்த உயிர் எமன் 
கொண்டு 
போகமாட்டாமல் இந்தப் பொல்லாத் துயர் கடலில் 
போட்டுவிட்டானே என்னைக் 
கண்டு 
5. ஊர்மனிதர்க் கன்றுநீர் பதினாலு வருஷம்போய் 
உடன்வருவேன் என்றதும் 
தப்போ 
ஏர்பிடித்தோன் என் செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் 
என்பார் அதுவோ தான் 
ஒப்போ 
6 . ஆசைமான் பின்போ என்றாள் காரண காட்சிக்கெல்லாம் 
அடிவேர் இவள் என்றறி 
வீரே 
மோசம் செய்தாளிவளை முகம்பார்க்கல் ஆகாதென்று 
மூடிக்கொண்டீ ரோகண்ணை 
நீரே 
ஏனோ 

7. வீட்டில் என் சாமி அன்னை வார்த்தை தட்டாமல் வந்து 
விரதங் கொண்டார் என்பதெல்லாம் 
காட்டில் எரித்த நிலா கானலில் மழையாச்சே 
கைகண்ட பலன் இது 
தானோ 

8 போமோ 
அருமையா கிய ஓர் பெண் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் 
அரக்கர் செயம் பொருந்தப் 
தருமமே செயம் பெரு மாளேதுணை என்றும் என் 
சாமிக்கப செயம்வரல் 
ஆமோ 

9 காதக இந்திரசித்தன் சூதோ அன்றி இதென்ன 
காரணமோ நான் முன் செய்த 
சதியோ 
ஆதிமறை பொய்த்தாலும் பொய்யாப் பிராண நாதரை 
அலையக் காண்பதும் பாழ்த்த 
விதியோ 
10. அய்யோலட் சுமணாநீ என்சிறை மீட்கும் முன்னே 
ஆவிஉனக்கு சும்மாப் 
போச்சே 
கையாலே நான் பாவி உன் அண்ணன் கைப்பிடித்த 
காலபலம் அப்படி 
ஆச்சோ 
11 . ஓதும் டேச் ஈம்காணேன் மூச்சும் காணேனேசாமிக் 
குயிர் உண்டோ இல்லையோ சொல் 
மகனே 
ஏதும் அசைவும் காணேன் இருவர்க்கும் ஓரெழுத்தா 
எழுதி வைத்தானோ சதுர் 
முகனே 
12 . மையான காட்டில் அண்ணன் மெய்வருந்தாமல் தூங்க 
மலர் கொய்து மெத்தையிட்ட 
நீயே 
வெய்யராட்சதநீசர் எய்யும் அம்புகள் என்னும் 
மெத்தை மேலே கிடக்கி 
றாயே 
13 மெய்காணும் சாமிக்கும் உனக்கும் பழிகாரி நான் 
ழுந்தாலும் என்பாரல்லலோ 
நீலி 
கைகேசி மகராசி கறுவிக் கறுவி எல்லாம் 
கட்டிக் கொண்டாளே பாக்கிய 
சாலி 
14. தாய்பகை வந்தபோது நீயிருந்தண்ணனைக் 
காட்டிக் கொடாதே என்று 
தனியே 
தாய்சுமித் திரை சொன்னாளே அதுக்கோ நீ அண்ணன் முன்னே 
சாய்ந்து கிடக்கிறாய் பிள்ளைக் 
கனியே 
பொய்யோ 

15. புத்திரனே கண்மணியே கைத்துணையான உன்னைப் 
போக்கடித்தேன் நான் பாவி 
வற்றி வடகமாயும் இத்தனைப் பாடுங்காண 
வைத்ததே பாவி தெய்வம் 
அய்யோ 

16. எப்போதும் போலேசாமி செயிப்பார் என்றிருந்தேனே 
இங்கே கண்டேனே அலங் 
கோலம் 
குப்பை உயர்ந்தென்ன கோபுரம் தாழ்ந்தென்ன 
கூடிச்சோ நீசருடன் 
காலம் 
17. தாய்மார்கள் இருவரும் பரதனும் இதுகேட்கத் 
தரிக்குமோ அவரவர் 
தேகம் 
கேவலம் பழிகொண்டேன் எனக்கினி ஒருக்காலும் 
கிடைக்குமோ நல்லபடி 
லோகம் 

திரிசடையம்மாள் சீதாதேவியைத் தேற்றுதல் 

பரிந்திந்த வகையழுது சாமிமேலே 
பதைத்துவிழ எழுந்தவளைக் கட்டிக்கொண்டு 
விரிந்திடும் கண் ணீர் துடைத்துப் பிறர் கேளாமல் 
மிகப்பசித்தேர் களைத்தேற்றும் அமுதுபோல 
சரிந்த பயிர் களைதேற்றும் மழையைப் போல 
சவலைதனைத் தேற்றுகின்ற தாயைப் போல 
தெரிந்ததிரி சடைஎன்பாள் சீதைதன்னைத் 
தேற்றுவாள் மனக்குறையை ஆற்றுவாளே 


பல்லவி 
ஏதுக்கு வருந்துகிறாய் அம்மா 
ஏதுக்குவருந்து கிறாய் சும்மா 
( ஏது ) 

அநுபல்லவி 

கேதப்படாதே தெய்வம் 
கிணறு தப்பி என்ன 
பொது என்பதழிந்ததோ 
துர விலே விழுந்ததோ 
( ஏது ) 

சரணங்கள் 

1 -உன்னண்டை 
மாயமான் என்றும் சனகராசன் என்றும் 
மயக்கங் காட்டினான் 
மற்றை நாள் வெளியாச்சது போல் இந்திர 
சித்தும் செய்கிறான் 
சிலசண்டை 
ஓயவேபெரும் பேயும் நாயும்தின்ன 
உருளுது பாரிவன் 
தலைமண்டை 
உத்தமராமனை அரகர் கெலிக்கும்போது 
உள்ளங்கையினில் முடிக்கிறேன்பார் ஒன்பது கொண்டை ( ஏது ) 
2. அனுமான் என்பவன் தனதாகவே வந்து 
அடிமைக் கடிமையாகி 
உழைக்கிறான் 
அவனாலேயே உன் கணவன் தம்பியுடனே 
தவறாதபடி 
பிழைக்கிறான் 
நினைவேதோ லட்சுமணன் இளஞ்சூரியன் 
எனவே முகத்தொளி 
தழைக்கிறான் 
நிமிஷத்திலே ராவணனையும் படையையும் 
நமனும் வந்து தன் உலகத்துக் 
கழைக்கிறான் ( ஏது ) 
நீங்குமோ 

3. சொப்பனமும் உன் தன் கற்பும் சகுனமும் 
சுப பலன் கொடுக்காமல் 
சொல்வாய் மங்கலம் இல்லார்களை இந்த 
தூய விமானமது 
தாங்குமோ 
வாங்குமோ 
ஒப்பில்லா ராகவன் இந்த ராட்சத 
அற்பருக்குப்பின் 
ஒருக்காலே பயந்திருக்கிறாயே என்ன 
ஒருகுளப் படிகண்டு திரைகடல் 
ஏங்குமோ ( ஏது ) 

அனுமார் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுவருதல் 

திரிசடை சொல்லாற் சீதை தேறிப்போனாள் 
சிலைவீரர் பாடும் சேனைகளின் பாடும் 
கருதிவிபீஷணன் சொல்ல அனுமான் சாம்பன் 
கட்டுரையால் சஞ்சீவி மலையை நாடி 
இருபுயமும் தூக்கியண்ட கோள மட்டும் 
எட்டும் விஸ்வரூபங் கொண்டினிமேல் நீங்கள் 
வெருவிடவேண் டாம்நான்போய் வருவேன் என்று 
விளம்பினான் அனுமந்தன் கிளம்பினானே 


பல்லவி 
( பாய் ) 
பாய்ந்தானே அனுமந்தன் பாய்ந்தானே 
பர்வதத்தைக் கொண்டு வந்தானே 

அநுபல்லவி 
சேர்ந்தசாம்புவன் உரைக்கையாலே திரிவிக்கிர சாமிபோலே 
தேவர்மகிழ மூவர் புகழ 
திசையுள நீளங் கண்டு விஸ்வரூபங் கொண்டு 
( பாய் ) 


சரணங்கள் 

1. தெற்கிலே நின்று வடக்கை நோக்கி விஸ்வரூபத்தைப் 
பெருக்கி - நட்சத் 
திரமண்டலமும் கிழித்தே அண்டகோளத்தை முட்டி. 
நெருக்கி - ஒண்டி 
நிற்கப்போர்த் திசைஎட்டினும் டமில்லாமலே 
அடுக்கி - பெரு 
நிலத்தை உதைத்து விசைத்துக்கிளம்பி நெடியகழுத்தைச் 
சுருக்கி - ஒரு 
கைக்குக்கை ஓராயிரம்யோ சனைமட்டும் நீட்டி - நிமிர்ந்து 
கணகணெனவே வீரவாலின் மனிதனை ஆட்டி தனது 
விக்கிரமபுசபல பாரக்கிரமம் அடங்கலும் காட்டி 
விசையிலும் அதிவேக மாகிய விசையை முன் 
ஒட்டி -- எங்கும் 
தகப்பன் 
விளங்கும் 
மக்கிமலைகள் வேர் அறுந்தாட மரங்கள் செடிகள் பிடுங்குண்டோட 
சொர்க்கத்தவரும் பதற 
பக்கக் கடலும் கொதற 
திக்குத் திசையும் கதற 
சக்கிரக் கிரியும் சிதற ( பாய் ) 
2. இலங்கைவிட் டொன்பதாயிரம் யோசனை மயகிரியில் 
தாண்டி 
அந்த 
மயம்விட் டொன்பதாயிரம் யோசனை ஏமகூடத்தில் 
தாண்டி அப்பால் 
சலங் கொண்டெண்பதினாயிரம் யோசனை நிஷதகிரியில் 
தாண்டி - நிஷதமும் 
விட்டெண்பதினாயிரம் யோசனை தங்கப்பெருமலை 
தாண்டி - 
அங்கே 
துலங்கும் வெள்ளியங் கயிலை ஈசன் உமைக்குக் 
கையாலே 
வாயுவின் 
சுதன் இவன் என்று காட்ட அவனைத் துதி செய் 
தப்பாலே 
அலங்கலின் மாயவனைப் பணிந்து தா வி விண்மேலே போகையில் 
அருக்கணைக்கண்டு விடிந்து போச்சென்று திகைத் 
தொரு சாலே 
நிலந்தனிலே அங்கே பகலென்றறிந்து நீலமலை கண்டப்பாற் பறிந்து 
விலங்கிப்புயல் விண்டொழிய தொலைந் தெட்டரவும் கழிய 
குலுங்கித் தறையும் குழிய கலங்கித் திசையும் கிழிய ( பாய் ) 
3 அரிய மருந்தைக் காக்கும் தெய்வங்கள் அடங்கலும் வந்து 
தடுக்கி 
ஆரடா என்று கேட்க ராமதூதன் நான் என்று கடுக்கி 
ஒரு 
பெரிய சக்கரம் சுழன்று வந்தது போமட்டும் நெஞ்சை 
ஒடுக்கி 
பெலத்தங்கிருந்த காவற்பேரையும் பின்னிட்டோடவே 
முடுக்கி - அங்கே 
தரையிலே ஆயிரம்யோசனை தாழ்ந்துவே 
ரோடி - மேலே 
தலை எடுத்தாயிரம் யோசனை மட்டும் 
சூடி - ஆர்க்கும் 
தெரியவே ஓராயிரம் யோசனையொடு 
மூடி - நின்ற 
தீர்க்க மலையை ஒருகையாலே தூக்கிப்பந் தாடி - திரும்பி 
வருகையில் அந்தவாடை சுழன்று வஞ்சகன் பிரம்மாஸ்திரம் கழன்று 
ஒருலட்சுமணன் தேற - பெருகிப் புவனம்தேற 
தருமப்பயிரும் தேற -- திருலட்சுமியும் தேற 
( பாய் ) 

பின்னும் 
கிட்டி 
ஸ்ரீராமர் லட்சுமணருக்காகப் பின்னும் இரங்கல் 
மறம்மிகும் அனுமான்பாய்ந்து வருமுன்னே சாம்புவ : னும் 
திறல் விபீஷணனும் தேறத் தேற்றுவார் தம்மை நோக்கிக் 
கறவைதன் கன்றைத் தேடி கரைகிறாற் போல ராமன் 
பிறவியை எண்ணிவேதை பெருகுவான் உருகுவானே 

பல்லவி 
ஆனாலும் என்னைப் போல்இனி ஆர்க்குண்டிந்த அநியாயம் ( ஆ ) 

அநுபல்லவி 

மானாகரன் தசரதன் 
வருந்தையிலே இப்படி 
பிள்ளைத் தவம் 
இருந்ததோ காரணம் 
( ஆனா ) 

1. ஆரார்க்கென்ன செய்யினும் தம்பிபோல 
அதுவந்தென் அவதி 
துடைக்குமோ 
நேரே ராவணனைக் கண்டுவிட்டு 
நெஞ்கிடந்து புடை 
புடைக்குமோ 
தீராஎன் காலப்பிழை வெண்ணெய் 
திரண்டு வரச்சேதாழி 
உடைக்குமோ 
தாரம் தேடக்கிடை யாதோ என் 
தம்பியைப் போல் எங்குந்தேடக் 
கிடைக்குமோ ( ஆனா ) 
2. சற்றும் தம்பி வார்த்தையை எண்ணாமல் 
தயங்கிய மானின் பின்னே 
போனேனே 
கத்திக் கொண்டுங்களைத் தேற்றிவந்து 
கழுத்தறுத் தேனே 
நான்தானே 
உற்ற தகப்பனும் சடாயுவும் 
ஒருபிற வியும் 
இழந்தேனே 
பெற்றாரையும் பிறந்தாரையும் கொன்றேன் 
பெண்ணாசை கொண்டபித்தன் என் பதுநானே 
( ஆனா ) 
3 சதிகார ராட்சதப் பையல்கைக்கு 
தாழுவதென் தம்பிக் 
கையோ 
பொய்யோ 
மதிமோசமா அய்யனைக் கொண்டுவந்து 
மடிப்பாகக் கொடுத்தேன் 
இதவாக தருமமே செயிக்கும் என் 
றிருந்த எனக்கது 
கதையோ கரும்புக் குழுதபுழுதி 
காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆமோ 
மெய்யோ 
அய்யோ 
( ஆனா ) 

தம்பிக்காக இரங்கின ஸ்ரீராமரை சாம்புவன் தேற்றுதல் 

இளையவனை நினைந்திப்படிக்கு ராகவன் புலம்ப எழுந்தான் சாம்பன் 
வளையும் வகைவணங்கிநின்றான் சாமிநீ நொடிப் போதும்வருந்த வேண்டாம் 
விளையுமுயிர் தருமருந்து கொண்டுவருவான் அனுமான்விழுந்தோர்க்கெல்லாம் 
களையகலும் அது செய்யும் குணம் என்பான் காண்பாயிக்கணம் என்பானே 

பல்லவி 
இந்தவேதை நீகொண்டால் சாமி - இனி 
எந்தவிதம் பிழைக்கும் பூமி 
( இந்த ) 
அநுபல்லவி  
சந்ததம் உனது தர்மத்தாலே தழைப்போம் 
தம்பியும் நீயும் எல்லாரும் 
பிழைப்போம் ராமா 
( இந்த ) 
சரணங்கள் 
1. அளந்துள்னை நானறிவேன் உனக்கொன்றும் குறையில்லை 
அலைகடல் கடையச்சே 
நாலுமருந்தன்று 
வளர்ந்து வடகுருவில் 
ருந்ததைக் கொண்டுவர 
மாருதி கிளம்பினான் 
பாய்ந்து சென்று 
பிளந்தது கூட்டும் ஒன்று 
படைகரைப்ப தொன்று 
பிராணன் கொடுப்பதொன்று பெலன்கொடுக் கிறதொன்று 
களங்கமில் லாமல் வரும் 
அதுமுன்னாகமலை 
கலங்கினாலும் மனம் 
கலங்கா தவனே இன்று ( இ ) 
2 தன்னைப் படைத்த பிரம் மாவையும் பிரம்மாஸ்திரம் 
சாடும் உயிர் குடித்துப் போடும் 
அதன் கடூரம் 

3 -பின்னும் பிரம்மாஸ்திரமும் அந்த மருந்தைக் கண்டால் 
மெய்யை விட்டுக்கழன்று செய்யுமே நமஸ்காரம் 
பின்னைத் தம்பிகையாலே அரக்கர்படு வதெல்லாம் 
பெருக்கத் தெரியும் சற்றே பொறுபொ றென்னவிசாரம் 
பன்னிச்சொல் வதென்ன முன்னாள் சண்டையொரு 
பாக்கும் இனிமேற் சண்டை தோப்பும் ஆகுமிந் நேரம் ( இந்த ) 
ஆரும் அறியார் அந்த மருந்திருக்கும் இடத்தை 
அடையாளம் சொன்னேன் விஷணுசக்கரம் காவலுண்டு 
பேரும் ஊரும் அறிய அத்தை இந்தமட்டுக்கும் 
பிடுங்கிக் கொண்டுபோன பேர்களும் இல்லைபண்டு 
சாகும்வாயு வேகம் மனவேகமா அனுமான் 
தருவான் நொடிக்குள் இங்கே வருவான் அதனைக் கொண்டு 
நேரும் உன் காரியம் உனக்கேசெயம் அய்யா 
நெருப்பு மெழுகுபோலே அடிக்கடி 
மணம்பிண்டு ( இந்த ) 

தம்பிமுதலானோர் எழுந்ததற்காக ஸ்ரீராமர் அனுமாரைப் புகழ்தல் 

வெம்பியிந்த விதம்சாம்பன் தேற்றும் போது 
விக்கிரம மாருதி மலை சஞ்சீவி தன்னை 
பின்புகளத் தினில் வைத்தான் ஒருபிர்மாஸ்திரம் 
பிரிந்திடவே பரிபூர்ணச் சந்திரன் போலே 
இம்பர் இளையவனும் வெள்ளம் ஏழுபத்தும் 
எழுந்திடப் பூ மலர்தேவர் பொழிந்து வாழ்த்தத் 
தம்பியைப்போல் எழுந்த இராகவன் விசாரம் 
சாடினான் அனுமனைக்கொண் டாடினானே


பல்லவி 

அனுமானே 
நீயே - கனவானே 
( அனு ) 

அநுபல்லவி 

தனதா எங்கட்குப் பிராண தாரைநீ வார்த்தாயே 
( அனு ) 

தாமே 
நாமே 

சரணங்கள் 
1. நமது துணைவரும்வா னரர்களும் 
நிமிஷத்துன்னால் உயிர் நிலைபிடித் தோமே 
சுமதலை உனக்கென்றே துணிந்தோம் 
எமலோக பரியந்தம் இனி சாதிக்க 
லாமே 
( அனு ) 
2 . ஒன்றும் அசைவில்லாமல் உடம்பையும் மறந்தோம் 
கொன்ற உயிர்களை நீ கொடுக்கவே சிறந்தோம் 
அன்று தசரதன் பெற் 
றாருயிர் 
இறந்தோம் 
இன்றுனது வயிற்றில் இருவரும் பிறந்தோம் ( அன்று ) 
3 விழிபோலும் என் தம்பி மெய்யுயிர் போயே 
முழுகாதபடி காத்தாய் 
முழுதுங்காப் 
பழிகாரன் முன் இந்தப் பயம் தீர்த் 
அழியாத சீரஞ்சீவி 
ஆயிருப் 
பாயே 
( அனு ) 

பாயே 
தாயே 
இலங்கையில் வானரர் நெருப்பிட்டுக் கெர்சனை செய்தல் 

கட்டி உவந்தனு மத்துதி ராகவகர்த்தன் உரைத்தளவில் 
தட்டற அண்டர் இறைத்தனர் பூமலர் தத்தையர் நிர்த்தமிட 
மட்டற வெந்து பொடிப்பொடி யாகவளைத்து நெருப்பதனைக் 
கிட்டி. இலங்கையில் இட்டனர் வானரர் கெர்ச்சனை இட்டனரே 


இந்திரசித்து மாயாசீதையை அனுமார் முன் கொண்டு வருதல் 

இத்தலையில் இவரார வாரங் கேட்டான் 
இலங்கேசன் உள்ளுடைந்தான் உடனே இந்திர 
சித்தெழுந்தான் சஞ்சீவி மலையை முன்போல் 
செலுத்திய மாருதியும் வந்தான் எதிர்த்துக் கொண்டான் 
விந்தையினால் ஒருத்தனை அந்நேரந் தன்னில் 
மெய்ச்சீதை வடிவாக்கி வெட்டுவேன் என் 
றத் தலையில் கைத்தாலத்தில் வாளொன் றேந்தி 
ஆட்டினான் மாயையினாற் காட்டினானே 
( மாய ) 
பல்லவி 
மாயச்சீதை கொண்டிந்திர சித்தனு 
மான்முன் வந்தானே 

அநுபல்லவி 
தீயலங்கை மேலைவாசலிலே 
மந் 
திரத்தாலே தந்திரத்தாலே செய்த 
( மாய ) 

சரணங்கள் 

அதிரவே 
மெலிந்து 
கலை 

1. அளப்பில்லா வெகு களத்தோடே பேரிகை 
அடித்துக்கொண்டு 
விளைத்த சண்டைகள் வீணாச்சே என்று 
விகடங்கள் 
படித்துக்கொண்டு உடல் 
நெளிக்க மயிர்தொட் டிழிந்திப்பல்லை நெற 
நெற என்று 
கடித்துக்கொண்டு மண்டை 
பிளக்க வெட்டுகிறேன் பார் எனவேகத்தி 
பிடித்து கொண்டுதுடி துடித்துக்கொண்டு 
ஒரு ( மாய ) 
2. வீரமாம்புலி வாய்மான் போலவள் 
குறைந்து கொள்ள - மழைத் 
தாரையா விட்டழுத கண்ணீர் முலைத் 
தடங்களில் 
நின்றைந்து கொள்ள 
சோரவே புரண்டறுந்த உடைமைகள் 
சுற்றிலும் 
இறைந்து கொள்ள அய்யா 
மாருதியே முறையோ என்றவள் வெட்கம் 
மறைந்து கொள்ளக் கண்ணில் அறைந்து கொள்ள 
3. நேசமுள்ள அனுமானே இங்கேசற்றே 
நில்லடா 
சொல்லுகிறேன் 
வாள் 
வீசிநான் இந்தச் சீதை தன்னை உன் தன் 
விழிமுன்னே 
கொல்லுகிறேன் 
மறு 
யோத்திக்கும் 
செல்லுகிறேன் 
கேசிபரதன் எல் லாரையும் வேருடன் 
கொல்லுகிறேன் உன்னை வெல்லுகிறேன் - என்று 
( மாய ) 

ஒரு ( மாய ) 


இந்திரசித்து வெட்டின சீதைக்காக அனுமார் புலம்பல் 

வந்தபாதகன் இந்திரசித்தென்பான் மாயா சீதையை வளாலே 
விந்தை மாருதி நல்ல வார்த்தை சொலவும் துணியாவீசிப் போட்டான் 
பந்தமாம் அயோத்தி மேலே போக்குக் காட்டி நிகும் பலையிற்சேர்ந்தான் 
சிந்தை மாருதிகண்டு சோம்பினான் அழுதழுது தேம்பினானே
பல்லவி  
இதுக்கோ நான்பட்டது சும்மா பாவி அனுமான் 
னிமேல் நான் என்ன செய்வேன் அம்மா 
( இது ) 

அநுபல்லவி 
விதிக்கும் என் எண்ணம் போச்சே 
விழலுக் கிறைத்தநீர் ஆச்சே 
( இது ) 

சரணங்கள் 

1. ஓம் என்று முன் தூது வந்தேன் உன்உயிர்க்குக்கேடு தந்தேன் 
ஆம்என் றெப்படி செல்வேன் ஐயனுக்கெப்படி சொல்வேன் 
சாமி என்னென்று கேட்பான் தாய் நீ இருந்தாலல்லோ மீட்பான் 
தீமைதானேமே லிட்டதோ தெய்வமும் தான்கண் கெட்டதோ ( இது ) 


2. அன்னமே தாயே என் தன்னை அறிந்தும் இந்திரசித் துன்னை 
பின்னமே செய்திட நானே பிரதேம் போலிருந் தேனே 
சொன்னசஞ் சீவிக்கா தாண்டி சுருக்காகநான் உன்னை வேண்டி 
என்னென்ன செய்தாலும் அங்கே இப்படி ஆச்சுதே இங்கே 


3. அருந்ததி தொழும் பெண்ணே அனைவருக்கும் இரு கண்ணே 

விரும்பும் உயிர்க்குயிர் ஆயே விளங்குகின்ற என் 
கரைந்து நானுன்னைத் தேடி கண்டேன் என்று முன் ஓடி 
இருந்தாள் என்றவா யாலே இறந்தாள் என்னவோ மேலே 

தாயே 
சீதைக்காக இரங்குகிற ஸ்ரீராமரை லட்சுமணர் முடுக்குதல் 
அஞ்சனைபா லகனிந்தப் படிக்கு நொந்தான் 
ஐயன் இரா மனுக்குப்போய் அறிக்கையிட்டான் 
செஞ்சிலை வீரனுமறிந்தான் எறிந்தான் வில்லைத் 
தேடினான் வாடினான் தியக்கத் கொண்டான் 
தன் செயலா னதுமறந்தான் அந்த வேளை 
தம்பியும் அப் படிதளர்ந்தான் இனிமேற்சாமி 
என் செயலா வது நமக்கும் இருப்பே தென்றே 
என சொல்வான் லட்சுமணன் சினம்சொல்வானே . 


பல்லவி 
தேவிபோனபின் 
இனிமேல் யோசனை ஏதைய்யா 
இரங்கினால் அகா தையா 
( இனி ) 

அநு பல்லவி 
உனது கவலை சொன்னால் ஊரார்க்கென்ன நஷ்டியோ 
சினம் எங்கே போச்சுதையோ சீவன் கருப்பட்டியோ 

சரணங்கள் 

1. இலங்கை உள்ளாரும் தேவர் எவரையும் இப்போது நேரே 
குலங்களோடும் கொல்லாவிட்டால் கொஞ்சம் சொல்லி நகைப்பாரே 
புலம்பல் ஆமோ இன்னம் சற்றே பொறுத்தால் எதிர்த்த பேரை 
விலங்கிலும் போடுவார் அடிமை வேலை செய்யச் சொல்லுவாரே ( இனி ) 
2. விலக்கவும் சீதையைப் பாவி வீசினான் என்றனுமான் சொன்ன 
கலக்கம் கொண்டாய் தர்மத்துக்கிது காலமோ அல்லவோ சின்ன 
கொலைத் தொழில் செய்தப் பாலெங்கும் கொளுத்துவாய் நெருப்பாய் 
மின்ன 
தலைக்குமேல் ஓடியவெள்ளம் சாண் ஓடிஎன்ன முழம்ஓடி என்ன ( இனி ) 
3. நாட்டிலரசும் போச்சுதுன்னுடைய நன்மையாலே வந்ததெண்டம் 
காட்டிலும் வந் திந்தக் கொள்ளை கட்டிக்கொண்டோ மேதினகண்டம் 
பூட்டிநீ வில்லை வளைத்தால் பொடிப்பொடியாமேமூ 
தண்டம் 
ஆட்டங் காட்டலாமோசாமி அடியேன் சொன்னபடி எடுநீ கோதண்டம் 
( இனி ) 

ஸ்ரீ ராமரை அனுமார் முடுக்குதல் 

சினமா இப்படி இளையோன் உரைக்க இந்திர 
சித்தயோத்தி யின்மேலே போன போக்கை 
அனுமானும் சாமியுடன் சொன்னான் சாமி 
ஆவிதடு மாறினான் அந்த வேளை 
புனைவீரப் படைகளையும் உமையும் கொண்டு 
போய் அரக்கன் முன்குதிப்பேன் அல்ல என்றால் 
முனையாதா னேபொருதிக் கொல்வேன் என்று 
முடுகுவான் மாருதியும் கடுகுவானே 

பல்லவி 
அனுமான் நானிருக்க 
இதுக்கோ இந்தயோசனை சாமி 
இதுக்கோ இந்தயோசனை சாமி 
( இது ) 


அநுபல்லவி 

பதைக்கிறேன் இந்திரசித்தை உதைக்கிறேன் அவனைநான் 
வதைக்கிறேன் அயோத்தியில் புதைக்கிறேன் அதுக்கென்ன ( இது ) 

சரணங்கள் 
நீட்டி - ராவணன்தன்னை 
1. சுற்றிய மதில் ஏழும் 
எற்றி ஊரிலே கையை 
கொத்துப் பனங்காய் போலே 
பத்துத்தலையும் பிடித் 
சித்தே என்றவனங்கே 
கத்தி அலறும்படி 
தாட்டி 
மகனே இந்திர 
மாட்டி - ஆட்டுக்குட்டி போல 

ஊட்டி 
மொய்த்த அரக்கர்களைக் 
குத்திக் கழுகுக்கிரை 
பாராய்என்சாமி 
சுற்றிலே லங்கை நகரத்தைப் பிடுங்கி ஒரு 
பந்தைப் போல் தூக்கியங் கெத்துகிறேன் அடியேன் 
( இது ) 

2. துடுக்காய் என் தாய் முன் கத்தி 
எடுத்தான் அவனுக்கிந்த 
மிண்டேன் - கொல்லாதே என்று 
படித்துப் படித்துச் சொல்லி 
அடிக்கடி வேண்டிவேண்டிக் கொண்டேன் -- கேளாமற்பாவி 
முடுக்கி வீசக்கண்டு 
துடித்துத் துடித்து மனம் 
விண்டேன் - பரதன்மேலே 
வடக்குத் திசையை நோக்கி 
நடக்க என் கண்ணாரக் 
கண்டேன் 
உத்தாரந்தந்தால் 
பிடிப்பேன் ஒருகடியாக் கடிப்பேன் அவன் உயிரைக் 
குடிப்பேன் பழிக்குப்பழி முடிப்பேன் என்னலா காதோ 
( இது ) 

3. பூத்தபுவனமெல்லாம் 
காத்திட வந்த பரந் 
தாமா - உன்வில்லுக்குமும் 
மூர்த்திகளாகிலும் 
பாத்திரரோ ரகு 
ரமா தர்மம் செயம் என்ற 
சாத்திரமும் உனது 
தோத்திரமும் தப்பிப் 
போமா நம்பினதேவர் 
பேய்த்தனம் கொள்ள என்ன 
கூத்திது நீவருந்தல் 
ஆமா 
சேனையும் தோளில் 
ஏற்றி உம்மையும் நொடி மாத்திரத்துக்குள்ளாக 
நேத்தியாக் கொண்டுபோய் அயோத்தியிற் குதிக்கிறேன் 
( இது ) 

சீதையின் இருட்பைக் கண்டுவந்த விபீஷணர் 
ஸ்ரீராமருக்கு அறிவித்தல் 
அளப்பரிய அனுமன் இதுசொல்ல விபீஷணன் அதனை 
அறிந்தான் நான் போய் 
வளப்பமெலாம் கண்டுவந்து சொல்வேன் என்றிலங்கையிலோர் 
வண்டாய்ப் போனான் 
களங்கமிலாச் சீதையையும் நிகும்பலையை அரக்கன் செய் 
கவடும் கண்டான் 
உளக்கவலை கடல் கடக்கக் கரை செய்வான் சாமிமுன்னே 
உரைசெய் வானே . 


பல்லவி 

இருக்கின்றாள் தாய் அசோக வனத்தினில் 
ருக்கின்றாள் சாமி 
( இருக் ) 

அநுபல்லவி 
இருக்கிறாள் நமக்கொரு 
ராவணன் குடிக்கொரு 
பாக்கியம் உற்றாற்போல 
சூனியம் வைத்தாற்போல ( இரு 

சரணங்கள் 

என்று 
1. மோதுவேன் என்றும் இடிக்கிறேன் என்றும் 
மிண்டு 
முறைமுறையே 
சொல்லும் 
வாதரக்கியர்முன் புலிக்கூட்டத்தில் ஒரு 
மான்போல் மனம் 
பிண்டு 
தீதிலாஒரு ராமா மிர்தமே 
சீவனமாக 
உண்டு - ரகு 
நாதனே உன்கைவில் ஓசையும் வா 
கண்டு 
னரஓசையும் 
பரிபூரணம் 
கொண்டு 


2 நல்லது 
சொன்ன முறைபிசகிச் சிஷ்டர் எண்ணமழிந்து 
துஷ்டர் எண்ணமுமே 
முற்றுமோ 
தர்மமே செயம் 
என்னநாலு வேதங்களும் ஆறு 
சாஸ்திரங்களும் வீண் 
கத்துமோ 
ன்னதே மெய்யானால் சந்திர சூரியகதி 
இரண்டும் இங்கே 
சுற்றுமோ 
என் தன் 
அன்னையைத் தொட்டாலவன் இன்னமும் இருப்பானோ 
அருக்களிப் பேதுக்கையோ 
நெருப்பைப் புழு பற்றுமோ 

3. அந்த நிகும்பலை யாகம் செய்யப் போனான் 
அறிந்தேன் அவன் 
சூதை 
சாமி 
உன் தன் அயோத்திக்கவன் ஓரடிவைத்ததில்லை 
உனக்கேன் மன 
வேதை - சீதை 
சிந்தை தேற்றுவாள் அடியேன் விபீஷணன் பெண் 
திரிசடை எனும் 
மந்திரி அனுமான் முன்னே இந்திரசித்துக் கொன்றது 

மாயாசீதை அது தாயார் எனும் சீதை 
பேதை 
( இருக் ) 

ஸ்ரீ ராமர் லட்சுமணருக்கு யுத்த தந்திரம் கற்பித்தல் 

கலக்கம் அறஇப்படி சொல்லிக் காட்டி அந்த விபீஷணன் பின் 
விலக்க வேணும் நிகும்பலையின் வேள்வி முடியா முன்என்றான் 
பெலத்த படையும் தம்பியுமென் பின்கூட்டென்றான் சாமியுமுட்கொண் 
டிலக்குமணனை அழைத்துறுதி எடுத்தான் சொல்லத் தொடுத்தானே 

பல்லவி 
தம்பீ லட்சுமணா இந்திரசித்தன் 
தலைகொண்டுவா போடா 
( தம்பீ ) 

நம்பி உன்னோடேயாவர் 
நானறியேனோஉன் 
ஆனதுவே உப 

எதிர்ப்பார்கள் 
வீரம் - சத்தியம் 
காரம் உனக் 
தாரம் 
நேரம் - அடா 
கேனினி சொல்லவிஸ் 
இதுவோபாரம் 
( தம்பி ) 

சரணங்கள் 

1. முதற்சண்டை போல்மறு சண்டைபோற் சேனையை 
மோசப் படுத்தாமல் 
தேக்கி - நின்று 
பதைத் தவன் அம்புக் கெதிரம்பு போட்டுப் 
படுதுக ளாகவே 
நாலு 
விதத்திலும் போர் செய்து கைமெய் சலித்தவன் 
மெலிவான வேளையை 
நோக்கி மார்பிற் 
பதித்த கவசமும் வில்லையும் போக்குவாய் 
பார்த்திடுவார் தேவர் 
சாக்கி 
கூற்றுவன் போலம்பு 
எல்லாம் 
தோற்றிடவே ஒண்டி 
உயிரைப் போக்கி வெட்டித் 
ஆக 
தாக்கி 
ஆக்கி 
தூக்கி 
( தம்பி ) 


2 -ஆசைநிகும்பலை வேள்வி முடிந்தாற்பின் 
ஆராலும் வெல்லக்கூ 
டாதே ஒரு 
கேசரிபோற் படையோடும் போய் அத்தைக் 
செடுத்திடுவாய் வேளை 
ஈதே 
அந்த 
நீசனானவன்பிர் மா ஸ்திரம் தொட்டால் 
நீயும்பிர் மாஸ்திரம் தொ 
டாதே 
கயிலை 
வாசன் சூலமும் சக்கரமும் இவை 
ரண்டையும் போடதின் 
மீதே 
துண்டுது ண்டாகும் தப் 
பாதே 
அவன் 
சண்டை எல்லாம் வெறும் 
மலைக்காதே இப் 
போதே 
அடா 
சூதே 
( தம்பி ) 

தீங்கு - பார் 
லாங்கு 
என்று 
3. மந்திர வாளந்த இந்திரன் கையினில் 
வச்சிரத்தையும் செய்யும் 
இந்தவில் அந்த மாயவன் வில்இத்தை 
எதுவும் செய்யாது பொல் 
அந்த நாளிற்கும்ப முனிசொல்ல 
அறிந்தாய் நீ அல்லவோ 
வந்து நமக்குத் தருமம் தானேபிர 
மாணம் என்று கையில் 
பூணும் கவசத்தைத் 
தூணி யிந்தாபிடித் 
வென்று நீங்கு இதே 
ஆங்கு 

இனி 
நான் 
வாங்கு 
தாங்கு 
அம்பறாத் 
தோங்கு 
பாங்கு அடா ( தம்பீ ) 


இந்திரசித்தை அனுமார் பழித்தல் 

படித்தார் ராமன் சொன்னபடி பாய்ந்தார் லட்சுமணன் முதலோர் 
அடித்தார் பிடித்தார் கரிபரித்தேர் அழித்தார் கழித்தார் அரக்கருயிர் 
குடித்தார் கடித்தார் யாகத்தைக் குலைத்தார் கலைத்தார் கொக்கரித்தார் 
இடித்தார் வடிவில் இந்திரசித்தை இழுப்பான் அனுமான் பழிப்பானே 

பல்லவி 
இந்திர சித்தேஉன் தந்திரவித்தைகள் 
எல்லாம் ஏன்டா புறப்பட்டா 
( இந் ) 

அநுபல்லவி 
உன் தன் நிகும்பனலயில் ஒளித்துச் செய்கிறாய்பூசை 
ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏண்டாமீசை 
( இந் ) 
சரணங்கள் 
1. முந்தஎன் தாயைப்போல் ஒருத்தியைக் 
கொன்றாயே 
முடுக்கா அயோத்திமேல் நடக்கிறேன் என்றாயே 
பந்தல் அலைந்தவனே நீயும் 
சென்றாயோ 
பரதனை 
வென்றாயோ 
அந்தரா வணனுக்கு வந்த லச்சை 
அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலசொணாதோ 
வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ 
வாணாள்வைக்க வேணுமோ சாணல்லவோ 
ஈதோ 
கயிறு 
வயிறு 
முனைவே 
லாயுதம் 
லாயுதம் 

2. விடுக்கும் வச்சிராயுதம் 
விஷ்ணு சக்கராயுதம் சிவன் சூ 
எடுக்கும் நாகாஸ்திரம் பிரம்மாஸ்திரத் 
எதைவேணும் அதைப் 
திடுக்கிட வினைசெய்யும் உங்களுக்கே 
செத்தவனே எங்களுக் குண்டோடா 
அடுக்களை பூனை போலே இடுக்கிலே 
ஆடெடுத்த கள்ளன் போலே 
தோடு 
போடு 
நாசம் 
மோசம் 
சுழிக்கிறாய் 
முழிக்கிறாய் 
( இந்த ) 

மேலே 
ணாலே 
போச்சே 
3. நிறை கடல் போலஉன் சேனைகள் கள 
நேராக விழுந்தத்தைப் பாரடாகண் 
பரபரப்பிலே நிகும் பலையாகமும் 
பாழும் சுடலை 
கறுவி நமனும் வந்து குறுகிக் கொண்டான் 
காலம் முடிந்ததினி மேலே என்னடா 
சிறைபட்ட இந்திரனும் குறைவிட்டுத் 
செல்வ லட்சுமணனிதோ கொல்லவந் 
உன்னை 
முன்னை 
தழைக்கிறான் 
தழைக்கிறான் 
( இந்த ) 

இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் மூன்றாம் முறை யுத்தம் 

மாருதி வ்வா றோத வளைந்தராட் சதரும்சேனை 
வீரவா னரரும் சண்டை . வித்திட்டார் இந்திரசித்தன் 
தேரினில் ஏறிக் கொண்டான் சிலை கொண்டான் தம்பிதானும் 
மாருதி மேற்கொண்டம்பு வருஷித்தான் கருசித்தானே 

பல்லவி 
அஸ்திர வருஷம் தம்பி பொழிந்தானே 
சித்தன் படைகள் போய் ஒழிந்தானே 
நிகும்பலையிலே இந்திர 
( அஸ் ) 

அநுபல்லவி 
வைத்த சமித்தும் பிணமும் எரிபட மந்திரபூரண கும்பம் நெரிபட 
எத்தி அதிலெழும் தேரும் சிதைபட - எருமையின் கூட்டங்கள் எல்லாம் 
வதைபட 
ரத்தம் எழுந்திட சுற்றம்விழுந்திட - யாகம் கலைந்திட யூகம்குலைந்திட ( அஸ் ) 

சரணங்கள் 

1. தேரில் அரக்கன் ஏறி அனுமானை 
சிலகணையாற்களை 
செய்தான் 
நேரில் எழுந்த அனுமன் புயந்தம்பி 
நின்று கணைசில 
பெய்தான் 
கூரிய வாளிகளால் அரக்கன் அந்த 
குரங்குப் படைசிந்த 
அடித்தான் 
வாரி அம்பால் தம்பி அரக்கன் சேனையை 
மண்ணோடு மண்ணாக 
மடித்தான் 
தேர் 
வலங்கொண்டு சுற்ற அனுமான் இடங்கொண்டு தந்த அவன்தேர் 
வானில் உலாவ அனுமான் விடேன் என்று தாவ இருவர்கை 
வாழி நெடுங்கணை 
எங்கும் 
நிறைந்திட 
மலைகளெல்லாம் வெந்து நீறாய் இறைந்திட 
எழுகடல்நீரும் 
வற்றிக் குறைந்திட 
எட்டுத்திக்கும் தெரி யாமல் மறைந்திட 
எங்கும் புகை முட்ட எங்கும் தணல் கொட்ட 
இரவுபகலாக நிருதன் மனம் நோக 
( அஸ் ) 

அவன் 
2. இளையான் மேற்பின்னும் அரக்கன் சீறி 
இருபத்தைந்து கணை 
விடுத்தான் 
தொளையா அவன்மார்பும் கவசமும் தம்பி 
தொளைத் தோட ஓர் கணை 
தொடுத்தான் 
களையாய் அவன் அனுமான் மேல்ரத்தம் 
காணச் சிலகணை 
விதைத்தான் 
வளையாவரும் அனுமான் அவன் தேரினை 
மளுக்கென் றொடியவே 
உதைத்தான் - 
மற்றொன்றில் ஏறிஐயன்மேலே பத்தம்பைத் தூறிவிடத்தம்பி 
வடிக்கணை சிந்தி அவன் அதைத்தடுக்காமல் முந்தி- போட்ட அவன் 
மந்தரத் தோளை ஓர் அம்பால் 
தொளை செய்ய 
மற்றோர் அம்பாலவன் 
தேரைவிழச் செய்ய 
நொந்தரக்கன் ரத்தம் கக்கி 
அவசத்தில் 
நூறுபத் தம்பெய்யத் 
தம்பி 
கவசத்தில் 
நுழையாம லேவிண்டு பழுதாய் விழக்சுண்டு 
நுங்கிய வன்பிந்த எங்கும் தன்கை முந்த 
( அஸ் ) 

3. சிந்தச்சிலகணை அரக்கன் பின்னுமந்தச் 
சேவகன் மார்பினில் 
புந்திமகிழ்தம்பி அரக்கன் மணிநெற்றி 
புதையச் சிலகணை 
தூற்றினான் 
ஏற்றினான் 

அவன் 
இந்தவில் அந்தமாயவன் வில் இவன் 
ஈசனும் என்றவன் 
கூசினான் 
அந்தவேளையில் விபீஷணன் தம்பியை 
அரக்கன் மேல்முடுகென்று 
பேசினான் 
அவன் 
அக்கினி அஸ்திரம் வித்தம்பி அக்கினி அஸ்திரம் விட்டே 
ஆதித்தன் அஸ்திரம் விடத்தம்பி ஆதித்தன் அஸ்திரம் விட்டேவிசை 
ஆகப்பின்னும்சில அம்பைப் பொழிந்திட 
அணி அணியாய் நின்றதேர்கள் அழிந்திட 
ஏகத்தில் வந்த கெசங்கள் 
படிந்திட 
இராட்சத வீரர்கள் ஆரும் மடிந்திட 
இற்ற துண்டங்களும் அற்றமுண்டங்களும் 
லங்கையிற் போய்விழ மங்கையர் கண்டழ 
( அஸ் ) 
கொய்தான் 

தன் 
4. ஆரணன் அஸ்திரம் அவன்விடச்சிவன்ஆயுதத்தால் தம்பி 
காரணன் சூலத்தை அவன்விடத்தம்பி 
கைச்சூலத்தாற் பொடி 
சய்தான் 
நாரணன் அஸ்திரம் தொட்டரக்கன் எங்கும் 
நடுங்கிடவேஎய் 
தோக்கினான் 
போரினில் தம்பியை அதுவலஞ்செய்து 
போகக் கண்டேபயம் 
தேக்கினான் 
புத்தியும் கெட்டான் தனக்குள்ள சத்தியும் விட்டான் தம்பி செய்த 
போரையும் பார்த்தான் ஓடி ஒளிக்க ஊரையும் பார்த்தான் - அதுக்கும் 
போக்கிடம் இல்லாது பார்த்து 
மெலிபட்ட 
போதினிலே அந்தப் பாதகன் மேற்போட்ட 
வாக்கிஐயன் அம்பு போடக் களைப்பட்டு 
மார்பும் கரங்களும் தோளும் தொளைபட்டு 
வல்லரக்கன் பக்கம் எல்லாம் ஒருலட்சம் 
சல்லடைக் கண்ணாகச் சில்லிகளாய்ப் போக 
( அஸ் ) 
இந்திரசித்து விபீஷணனர வயிற்றெரிச்சலாலே ஏசுதல் 
சில்லிகளாய்ப்போன இந்திரசித்தனவன் அழிந்ததொரு தேர் மேல் நின்று 
கல்லின் மழையென அம்பு பொழிந்தங்கே வீடணனைக் கண்டான் எம்மைக் 
கொல்ல நிகும்பலை கெடுத்தாய் அரக்கர் குலத்தையும் கெடுத்தாய் 
கோளினாலே 
எல்லவரையும் கெடுத்தாய் என்று வசை பேசுவான் ஏசுவானே 

பல்லவி 
சிற்றப்பா நீதான் இத்தனை அபகீர்த்தி 
பெற்றதே போதும் அடா 
( சிற் ) 

அநுபல்லவி 
சத்திய விபீஷணன் என் 
றெடுந்தாயே 
பேர்நான் 
சமைத்த நிகும்பலையும் 
கெடுத்தாயே 
வற்றல் மனிதர்க் காளாய் 
போனாயே ஐயோ 
வளர்த்த கிடாக்கையில் பாய்ந்தாற்போல் 
(சிற் ) 
ஆனாயே 

சரணங்கள் 
1. விநயம் சொல்லிமாயப் பூனைவேஷம் கொண்டாய் 
வேருடனே எங்களைக் 
கெல்லவோ - நாங்கள் 
அனைவரும் இறந்தபின் ஓராண்காணியா 
அரசாள லங்கையிற் 
செல்லவோ 
தினமும் ஒருகலத்தில் உண்டும் இப்படிசதி 
செய்தாய் பாவந்தீரச் 
சொல்லவோ அற்ப 
மனிதர்க்குப் பஞ்சையாய்ப் பணியும் செய்கிறாய்உயிர் 
வைத்திருக்கிறதிலும் செத்தாற்குணம் அல்லவோ 
( சிற் ) 

2 --மாடுமேய்க்கிறாய்ப் போலே தடிகொண்டு திரிகிறாய் 
மானமும் லச்சையும் 
துறந்தாயே னி 
சூடும்முடி பெற்றாலும் சின்னமனிதர்க்கு நீ 
தொண்டன் அல்ல என்ன 
சிறந்தாயோ 
தேடி நம்மை வணங்கும் பேரை நாம் வணங்கினால் 
சின்னத்தனம் என்பதை 
மறந்தாயோ - உன்னுடன் 
கூடப்பிறந்தவனைக் கொல்லென்று கோட்சொல்லி 
குடிகெடுக்க வென்றிந்தக் குலத்தினில் பிறந்தாயோ ( சிற் ) 
பாரளலாம் என்று மனப்பால் குடிக்கிறாய் 
பஞ்சை உன்னால் அது 
தள்ளுமோ 
இந்த 
ஊரில் வாராதுக்கு வழிஇட்டாயோ உனக் 
ஒருக்காலும் வசையிது 
விள்ளுமோ 
நீருள்ள மட்டுக்கும் மீனும் துள்ளும் அந்த 
நீரேபோனால் மீனென்ன 
துள்ளுமோ 
பேராம் ராட்சத ரெல்லாம் போய் நீ ஒருத்தனும் 
பிணந்தின்னும் பூச்சி போல் இருந்தால் கனம்கொள் 
வெகு 
மோ 
( சிற் ) 

விபீஷணர் இந்திரசித்துக்கு எதிர்மொழிதல் 

ல்லாம் மூடன் இந்திரசித்தன் இவ்வாறுரைக்க உரைத்ததெல்லாம் 
செல்லா தடடா தருமமும்சத் தியமும் நானே கைக்கொண்டேன் 
பொல்லாப் பாவம் கைக்கொண்டாய் போவாய் உருண்டுபோ வாய்என் 
றல்லார்மேனி விபீஷணன்எச் சரிப்பான் மறுசொல் உரைப்பானே 

பல்லவி 
துஷ்டப்பயலே இந்திரசித்தே என்ன 
சொன்னாய் அடாபயலே 
( துஷ் )
அநுபல்லவி 
இஷ்டமாம் எனக்கு 
ராமன்பதமே சொந்தம் 
எனக்கும் உங்களுக்கும் இனிமேலே என்னடா தொந்தம் ( து 

சரணங்கள் 

மன்னராகி முன்பின் தர்மம் துணையில்லாமல் 
வாழ்ந்தவர் 
எவர்தாமோ 
தன்னிலே குதிக்கிறாய் பாவம் சாம் அல்லாமல் 
தருமம் என் 
பது சாமோ 

சிந்தை வஞ்சனை செய்யேன் புலைசெய்யேன் கொலைசெய்யேன் 
தெய்வம் என்னை 
ஒறுக்குமோ 
அந்தபுத்தி உங்களுக் கிருந்தால் வரவர 
ஆதிக்கமும் 
சிறுக்குமோ 
என்தாய் சீதைமேல் ஆசையுன் அப்பனுக்கு 
இன்னந்தான் 
வெறுக்குமோ 
இந்தப் புத்தியினாலே இலங்கைச் செல்வமெல்லாம் 
இழக்கலாச்சே நாய்க்கு முழுத்தேங்காய் பொறுக்குமோ ( துஷ் ) 

3. கொடும்பாவம் என்னசெய்தே னோ நானுங்கள் 
குலத்தில் வந்துடம் 
பெடுத்தேன் 
கடந்து போகவேண்டி உங்களைக் கடலிலே 
கையைக் கழுவி 
விடுத்தேன் 
மடங்க ராவணனுக்கு எத்தனை புத்திகள் 
வகை மணியாத் 
தொடுத்தேன் 
அடங்காப் பாம்புக்கு ராசா மூங்கில் தடி 
மென்ற வனைவிட்டு ராமன் தனை அடுத்தேன் 
( துஷ்) 


இந்திரசித்து தகப்பனுடன் முறையிடுதல் 

எதிர்கொண்டிவ் வார்த்தை சொன்ன வீடணன் 
மேல் 
அம்பொன்றை எய்தான் அத்தைக் 
கதிகொண்ட தம்பிகொய்தான் வேலெய்தான் 
அத்தையும் அக் கணத்திற் கொய்தான் 
முதிகொண்ட கோபமுடன் சொர்ச்சனையிட் 
டொளிந்திலங்கை மூதூர் சேர்ந்தான் 
குதிகொண்டான் அப்பன் முன்னே முறைபட்டான் 
இந்திரசித்தன் குறைபட்டானே 


பல்லவி 
அய்யா ராவணா என்னால் சண்டை 
ஆகா தாகாதையா 
( அய் ) 
அநுபல்லவி 
நொய்யாம் மனிதர்கை அம்புகளாலே 
நொந்தேன் ஒளிந்தோடி வந்தேன் இனிமேலே 
( அய் ) 
சரணங்கள் 
1 . வட்டவார் உலகினில் தம்பி 
பிறக்கத்தறை 
மட்டம் ஆச்சுதென்பார் உனக்கே அந்தக்கறை 
கிட்டியுன் தம்பி என் வேள்வியைத் 
தடுத்தானே 
கெடுத்தான் 
கெடுத்தானே 
திட்டமானதொரு பிரம்மாஸ் 
திரம்போட்டும் 
சிவன்படை யுடனேகே சவன்படை தன்னைவிட்டு 
குட்டிக் கரணம் போட்டென்னாலே ஆனமட்டும் 
குதித்தும் குடத்திலிட்ட விளக்காச்சே என்னப்பட்டும் ( அய் ) 
2. ஆரும் அறிவாரே என் 
கைவில்லை 
ஆண்டவன் காரியத்தில் சற்றுவஞ் சனையில்லை 
தாராளமா அடிக் டி போய் 
நின்றேன் 
சகல பேரையும் 
கொன்றேன் 
வாராஉயிர் வந்து வந்து 
கிளைக்கிறார் 
வறுத்த பயிர்எழுந்து முளைத்தாற் போல் முளைக்கிறார் 
தீராப்பழி கொண்டோம் ஆரைவிட் டதுசனி 
தெய்வபலமும் இல்லை செய்வதுண் டோஇனி 
( அய் ) 
3 நீதி யாகநாம் ஏன் செல்வம் 
செருக்கிறோம் 
நீயும் நானுமல்லவோ தப்பி 
இருக்கிறோம் 
ஏதோபலம் வரவர 
அடங்குதே 
எடுத்த அடி 
மடங்குதே 
ஆதலால் அவர் முன் என் சூதெல்லாம் விட்டுப்போட்டேன் 
அங்கே இன்னம் போனால் இங்கே வரமாட்டேன் 
சீதையை விடுவது காரியம் 
அப்பாலுன்றன் 
சித்தத்துக்குச் சரிபோன 
படி என்றன் 
( அய் )

இந்திரசித்தை இராவணன் உதாசனித்தல் 

னங் கொண்டிப்படி தன் பிள்ளை இசைத்திட இலங்கை வேந்தன் 
கனங் கொண்ட தணல்வாய் நெய்யைக் கவிழ்த்தது போலே கொண்டான் 
மனங்கொண்ட பயத்தாற் சொன்னாய் மனிதரோர் பொருட்டோ என்ன 
சினங்கொண்டே இந்திரசித்தைச் சீறுவான் கூறுவானே . 

பல்லவி 
என்னபுத்தி சொன்னாய் அடா இந்திரசித்தேநீ 
என்னபுத்தி சொன்னாய் அடா 
( என் ) 

அநு பல்லவி 

என்னபுத்தி சொன்னாய்நீ சின்ன மனிதர்க்கஞ்சி 
என்னுடனே முறையிட் 
பட்டாயே நீ கெட்டாயே 
டாயே 
பயப் 
( என் ) 

சரணங்கள் 
1. ஆனாலும் உவமையவள் கோனாளும் கயிலையை 
மேனாளில் எடுத்த னகத் 
தலம் போச்சேரி 
நானே செய்ததற்கு நீதானோ பயலே நீ 
போனாலும் என்னஎன் 
குலம் போச்சோ 
படைக்கலம் போச்சோ . மூலபலம் 
போச்சோ ( என் ) 
2- சோருவேனோ மனிதர் ஈருயிரையும் அடி . 
வேருடனோ கல்லிப் 
பறியாமல் 
தீரும்போதும் ராமன் பேரும் என் பேரும் எல் 
லாரும் சொல்லிக் கொள்வாரே 
பிறியாமல் 
இத்தை அறியாமல் முன்பின் 
குறியாமல் ( என் ) 
3. செயமான கீர்த்தியை முயலாமல் மனிதர்க்குப் 
பயமாய் அபகீர்த்தியைத் 
தொடுவேனோ 
கையாலகாதவன் போலே மயில்போலும் சீதையை 
உயிரோடே நான் இனி 
விடுவேனோ 
முதுகிடுவேனோ சும்மா 
படுவேனோ ( என் ) 

நாலாம் முறை யுத்தத்தில் இந்திரசித்தன் வதை 

தவறுபடா திடிக்கும் ஒரு தலைவ லிக்குத் 
தலையணையை மாற்றிப்போட் டாற்போமோ என் 
உவமையிது என்மகன்வார்த் தையைக் கேளாமல் 
உறுமும் இராவணனை விட்டான் ஊரைவிட்டான் 
கவனமொடா யிரங்குதிரை கொண்ட தேர்மேல் 
கடற்படையும் தானும் போர்க் களத்தில் வந்தா ன் 
பவனெனும் லட்சுமணன் அம்பு பாயப்பாயப் 
பாய்ந்திட்டான் இந்திரசித்து மாய்ந்திட்டானே 

பல்லவி 
விழுந்தானே இந்திரசித்தன் 
ஒழிந்தானே மண்மேல் 
( விழு ) 

அநுபல்லவி 

இழந்திட்டோம் இலங்கையை எனமனம் 
அழுந்தத் தழுவி அப்பன் ஆசையை 
எழும்பிப் பரிகளாயிரம் கொண்டதேர் 
குழைந்த தம்பிகை அம்பாற் கிழிந்திட்டு 
பிண்டுபிண்டு 
விண்டுவிண்டு 
மேற்கொண்டு 
வதையுண்டு 
( விழு ) 

சரணங்கள் 

1 -நிறையக் கணைதொடுத்தார் இரண்டுபேர்களும் 
நெறநெறென்று சொரி 
மழை போலே 
பிறகவன் தேரையும் சாரதி தலையையும் 
பிளந்தானே தம்பி 
அதன் மேலே 
உறுதியா அரக்கன் கல்லின் மழைபொழிய 
உருண்டதே குரங்குகள் 
ஒருகாலே 
கறுவி இளையவன் ஒருகணை விட அந்தக் 
கணைவந் தரக்கன்மேற் 
படலாலே 
மறையும் கவசம்பிளந் துடம்படங்கலும் தைத்து 
வடிக்கணை ஒன்றாலவன் விடும்சிவன் சூலம் இற்று 
பிறையைப் பாம்பு தொட்டுத் தறையில் விழுவதொத்து 
பிடித்த வில்லுடனவன் இடக்கையும் கூட அற்று 
( விழு ) 

வடிக்க 
அடிக்க 
வளர்த்த தாயாரும் பெண்களும் இலங்கையில் 
வாய்விட் டழுதுகண்ணீர் 
ளைப்பிலா இரை வந்ததென்று பேய் 
எழும்பி எழும்பிக் கொண்டான் 
ஒளித்ததிருட்டரக்கன் வருகிறான் என்றுதேர் 
ஓசைகொண்டு தேவர்கிலி 
கிளைத்த மலைபோலே ஆகாசத்தில்வந்து 
கெர்ச்சித்தானே அண்டமும் 
செளைப்பில்லா மல்வரும் சேனை 
திக்கிலும் லட்சுமணன் கைக்கிரை 
குளத்தைக் குழப்பியங்கே பருந்துக் 
கொடுத்தாற்போல ரக்கரைக் குரங்குக்கே 
பிடிக்க 
வெடிக்க 
களைஎட்டு 
ஆகவீட்டுக் 
கிரையிட்டுக் 
இட்டுபட்டு 
( விழு ) 

3 நித்தியமாவது வேதவிதிவச 
னத்திலே சொல்லும் 
பொருளொன்று 
சித்தியாவது வேதியரைத் தெரி 
சித்து வருகிற 
தேதென்று 
கர்த்தனும் ரகுராமனேபர 
தத்துவ மாய் அவன் 
சத்தியம் எனில் இந்திர சித்தன் தலைநிமி 
ஷத்திலே கொண்டு 
வாவென்று 
அர்த்தசந்திர பாணம் அய்யன் தொடுத்தாற் போலே 
அற்றதே அவன் தலை ., எற்றி விடுத்தாற் போலே 
தத்துவமுனி வர்க்கெல்லாம் வெற்றிதொடுத்தாற் போலே 
தளரும் ந்திராதியர்க்குக் களைஎடுத்தாற் போலே 
வேறன்று 
( விழு ) 

இந்திரசித்து வதை ராவணன் கேட்ட இடத்திலே புலம்பல் 
 
இந்திரசித்தன் இந்தவிதம் விழுந்தான் தேவர் 
இரக்கத்தால் குரங்கினத்தார் எழுந்தார் தம்பி 
வந்தனு மானுடன் போனான் சாமிகாலில் 
வல்லரக்கன் தலை தன்னை அங்கதனும் வைத்தான் 
தொந்த விபீஷணனை ஐயன் மகிழ்ந்தான் அப்பால் 
தூதர் இராவணற்குப் போய்ச் சொன்னார் சொல்லப் 
பந்தம் எரிந்தாற் போலே மகனை எண்ணிப் 
பத்துவாயா லுமவன் கத்துவானே 

கண்ணிகள் 

ஒருவாயால் 
1. மந்திரியே என் துரையே மகனே 
மகனே என்பான் 
இந்திரசித்தே இந்திரசித்தே என்று 
இரைந்தழுவான் 
ஒருவாயால் 
ஒருவாயால் 
ஒருவாயால் 

2. இகத்தில் என்னைத் தவிக்கவிட்டு நீயும் 
இறந்தாயோ என்பான் 
முகத்தை இனிக்காண்ப தெப்போதே 
என்று முறையிடுவான் 
3. பனிவாழைக் கனிதனிலே முள்ளு 
பாய்ந்தது போலே 
மனிதன் அம்புகள் பாய்ந்த தோ உன்றன் 
மார்பில் என்பான் 
மகனே 
ஒருவாயால் 
மணிமாலை 

4. பரஞ்சேர் இந்திரன் முடிமேல்மகனே 
பறித் தணிந்த 
நரன் காலில் விழ ஆச்சே இந்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 

5. துள்ளும் முசலாலே சிங்கம் பெரும் 
துரவில் விழுந் 
பிள்ளை மனிதன்கை அம்பாற்பட்டுப் 
பிரண்டாயோ என்பான் 
ததுபோலே 
ஒருவாயால் 


6 னைக்கால 
ஈசன் முதலார் படைகளும் உமி 
எனப்போ மேஉன் 
பாசமது தீண்டிடுமோ இப்போ 
பதறி என்பான் 
ஒருவாயால் 
யும் வென்று 
அரனையும் மாயனையும் வென்றுதிக்கில் 
அஷ்டகெ சங்களை 
நரனுக்குத் தோற்றிட லாச்சோ இத்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 
மன 
யேமகனே 
மலைகலங்கினாலும் சற்றே உன்றன் 
து 
கலங்கா 
நிலை கலங்கி விழுந்தாயே இந்த 
நிலத்தில் என்பான் 
ஒருவாயால் 

இந்திரசித்துக்காக ராவணன் களத்திலே புலம்பல் 

என்றழுது களம்பார்க்க நடந்தான் பிள்ளை 
இடதுகையும் வில்லுமற்றுக் கிடக்கக்கண்டான் 
சென்றெடுத்தான் முண்டமாம் உடம்பைக் கண்டான் 
சிரங்காணான் இரங்கினான் உலகம் மூன்றும் 
வென்றநான் இந்த அலங் கோலம் பார்க்க 
விதித்தாயோ என்மகனே மகனே என்று 
கன்றிழந்த பசுப்போல வாயை விட்டுக் 
கதறினான் ராவணனும் பதறி நானே 

பல்லவி 

மசனே இந்திரசித்தே நான் 
மனதெப்படித் துணிவேன் 
( மக ) 

அநு பல்லவி 

இகம்பேமல் நானொரு பெண்ணா சையைத்தொட்டு 
என்னுயிர்க் குயிரான உன்னை இழந்துவிட்டு 
( மக ) 

1. வனமான் ஒருபுலியை அடித்தாற்போல 
மனிதன் உன்னை அடிக்க 
விடுத்தேனே 
கனமும் துரைத்தனமும் தரும் உன்னை என் இரு 
கண்பறி கொடுத்தாற்போற் 
மனிதன் நாளச் சண்டையினில் என்னை 
மயங்கிய நமனும்கைச் சங்கிலி 
னிமேல் இந்திரனும் என்னை நாப்புக் 
இலங்கையிற் சூரியன் தேரை கலங்காமல் 
கொடுத்தேனே 
மாட்டு வானே 
ஆட்டுவானே 
காட்டுவானே 
ஓட்டு வானே ( மக ) 

2 . நாற்றிசையிலும் உன்றன் கூத்திமார் அழக் கண்டு 
நானும் அழுதுதத் 
தளிப்பேனோ 
சீர்த்தியாம் சிவனுக்கும் மாயனுக்கும் பயந்து 
திருடன் போலே இனி 
ஒளிப்பேனோ 
பார்த்தால் இனியிந்த லங்கைத் 
தெருவாரே 
பரியாசம்செய் தென்னைத்துரை என்று 
மருவாரே 
போர்த்தெவரும் வசை வார்த்தைகள் 
தருவாரே 
பெண்டுகள் கூட இனிச் சண்டைக்கு 
வருவாரே ( மக ) 
3. பயமாம் குரங்கினில் ஒன்றும் செத்ததில்லையே 
படுகளத்தினில் நீயே 
செத்தாயே 
நயமா எனக்கு நீ செய்யும் உற்றுரிமையை 
நானே உனக்குச் செய்ய 
வைத்தாயே 
உயிரேேேட மனிதன் கையில் விழுந்த 
பேச்சே 
உலகம் உள்ளமட்டுக்கும் தொலையுமோ இது ஏச்சே 
வயிறும் குடலும்பற்றி மண்டி எரியல் 
வல்லமையும் செல்வமுமெல்லாம் உன்னோடே 
போச்சே 
( மக ) 
ஆச்சே 

இந்திரசித்துக்காக மண்டோதரி புலம்பல் 

எடுத்திந்த வண்ணம் போர்க் களத்தினுள்ளே 
ராவணனும் அழுதுமகன் உடலைக் கொண்டு 
தடுக்கரிய அரண்மனையில் வந்து சேர்ந்தான் 
தாய்மண்டோதரியறிந்தாள் அவன் கால் வீழ்ந்து 
கெடுத்தாயே மகனை என்றொப் பாரி சொன்னாள் 
கெடகெடென்று பிரண்டாள் பின் மகன் மேல் வீழ்ந்தாள் 
அடுத்தமகன் உடலைத்தன் கண்ணீராலே 
அலம்பினாள் பதைபதைத்துப் புலம்பினாளே 

பல்லவி 
ஐயையோ மகனே இனி என் செய்வேன் 
ஐயையோ மகனே . 

சரணங்கள் 

1. கையிரு பதுள்ளஉன்தன் ஐயனைப்போல் மூவுலகும் 
மெய்ம்மை யாகநீயரசு செய்குவை என்றிருந்தேனே 
( ஐ ) 
( ஐ ) 

2. குழந்தைப் பிறந்த அன்றுன் அழுங்குரல் கேட்டிம்மேகம் 
மழுங்கியே நடுங்கிமண் மேல் விழுந்தகீர்த்தியும் பாழாச்சே 
3. தன்னிகர் ஒன்றுமில்லாத உன்னை இவ் உலகத்தில்ஓர் 
சின்னமனிதன் கொல்லவே என்னபாவம் பண்ணினேனோ 
( ஐ ) 

4. அம்புலிவா என்னவந்து கும்பிட்டவன் . மேல்மறுவை 
வம்பிதென் றுரைக்கும் உன்றன் தெம்பை நான் என்றுகாண்பேனோ ( ஐ ) 
5 . கண்னேஎன் கருவூலமே மண்ணோடே மண்ணானாயோ 
பெண்ணாலே கெட்டகுடியாப் பண்ணிவிட்டானே உன் அப்பன் ( ஐ ) 


6 காட்டுச்சிங்கக் குட்டிகளைக் கூட்டி நீபிடித்துச் சண்டை 
மூட்டும் உன்னுடைவிளை யாட்டை என்றைக்குக் காண்பேனோ 
( ஐ ) 

7. சின்னஞ்சிறு வயதினில் இன்னபடி ஆவாய் என்று 
என்னமா பாவிப்பிரமன் தன்கைஎழுத்தை இட்டானோ 
8. அந்தரங் கிட்டியே அந்த இந்திரனைக் கட்டியே அன்றுன் 
தந்தைமுன் விட்டையேயின்று என் தனைத் தெருவில் விட்டையே ( ஐ ) 

9. கோளும்குண் டுணிப்பேச்சும் நாளும் சொல்லியுன் அத்தை 
ஆளும்பிள்ளையைக் கொல்ல மூளுவித்தாளே யோர்பாவி 
0. இரக்கமாய் உன்தேவியராம் அரக்கியர் கூடிவந்திங்கே 
உரக்க அழுதும் உன் முகம் பரக்கநீ காட்டாதேனோ 
( ஐ ) 
( ஐ ) 

11. ஒக்கலையும் மக்களையும் தக்காமலே செய்தெந்நாளும் 
மக்கிமனம் குலைந்து நான் வெட்கவைத்தானே உன் அப்பன் 
( ஐ ) 

12. இச்சகம் பேசுவோர் வார்த்தை மெச்சி உன் அப்பன் என்றன் 
மச்சினர் சொன்ன வார்த்தையைச் துச்சமாக மதித்தானே 
( ஐ ) 


13 -வீரியம் இல்லாமனிதன் செய் போரில் நீ வீழ்ந்து மக 
மேருவும் வாயுவினாலே வேரற்று வீழ்ந்தாற் போலாச்சே 
( ஐ ) 


14 --துதி செய்து சீதையைவிடத் ததியிதென்று நீ சொல்லியும் 
வீதிவழியிலே உன் அப்பன் மதிபோச்சுதே என்செய்வேன் 
( ஐ ) 

15. ஒப்பில்லாச் சீதையால் நீ இப்படி மடிந்த போதுன் 
அப்பனார் உயிரும் நாளை எப்படி ஆமோ அறியேன் 
( ஐ ) 


16 -பெருகும் உன் துயரும் நாளை வருதுயர் தனையும் எண்ணி 
வருதலைக் கொள்ளியள் எறும்பு புகுதல் போல ஆனேனே 
( ஐ ) 

சீதையை வெட்ட நடந்த ராவணனை மகோதரன் தடுத்தல் 

தொடுத்து மண்டோ தரிபுலம்பும் வாக்கியம் எல்லாம் 
சுறுக்கென்று சுட்டிடலும் திடுக்கென்றங்கே 
அடுத்திருந்த அரக்கன் மனம் கலங்கி மக்கள் 
அனைவர்களும் அரக்கர்களும் மாண்டார் ஆசை 
விடுத்தனென்சீ தையைஇனிமேற் கொல்வேனென்று 
வெகுண்டு நடந் தானந்த வேளை இந்த 
துடுக்காமோ ராவணனே இதுபெண் பாவம் 
சொல் என்றா 
றான் மகோதரனும் நில்ஏன்றானே . 

பல்லவி 

 இந்தச் சனகிதன்னைக் கண்டிக்க நடக்கிறாய் 
ஏதையா ராவ ணேஸ்வர . T 
( இந்த ) 

அநுபல்லவி 

சொந்த மகன் தலையைப் 
துஷ்டமனிதர் தம்மை 
பந்துபோற் கொண்டு போன 
விட்டுவிட்டேழையான ( இந்த ) 

சரணங்கள் 

1. பொட்டான தேவர்களும் 
நெட்டாங்க மடிப்பாரே 
புலத்தியன் குலத்திற்கோர் பழிகாட்டி இடிப்பாரே 
அட்ட கெசமும் புத்தி 
கெட்டான் என்றெண்ணாதோ 
அரனார் கயிலாசமும் 
பரியாசம் பண்ணாதோ 
சட்டான காலகேயர் 
மேலே எறிந்தவாளை 
கன்னி மேலெறிந்தால் 
குன்னஞ் சொல்லாரோ நாளை 
முட்டாளும் கூட உன்னைச் 
சட்டைதான் செய்வானோ 
மூன்று லோகமும் கட்டி ஆண்டதிப்படி தானோ ( இந்த ) 
2. முடுக்கில் இருந்து கொண்டு 
துடிக்கிறாய் என்ன சாரம் 
முன்கொன்ற மனிதரை 
முனைகொண்டாலல்லோ வீரம் 
அடுத்தாரைக் கெடுக்கிறாய் 
உன்னைப்போல் உண்டோ ஏழை 
ஆயிரம் வேதம் கற்றும் 
நீயே கற்றறி 
பிடித்த கத்தி உறையில் 
அடக்கவேணும் என்சாமி 
பெண்பழி கொண்டால் முனைபங்கம் சொல்லாதோ 
எடுப்பான பேருக் கெல்லர்ம் எடுப்பான நீஉன் மேலே 
எய்தவனை நோகாமல் அம்பை நொந்தது போலே ( இந்த ) 

மோழை 
பூமி 

3. அரியாப் பிர்மாதிகள் 
ஆகிய உனக்கிது 
பெருமையோ சிறுமையோ 
பெண்மேற் கத்தி எடுத்த 
தரும் ஒரு கோபம்வந்து 
சந்தோஷம் வந்தாலும் 
நரரைக் கெலிப் பாய்நாளை 
நகரில் வருவாய்பிற 
யாவர்க்கும் முதல் மூர்த்தி 
ஆகுமோ அபகீர்த்தி 
பாராய் எனது 
சொல்லை 
மன்னவர் எங்கும் இல்லை 
கிணற்றில் விழுந்தா லாயிரம் 
எழும்பப் போமோ சரீரம் 
விருதுகளும் பூணுவாய் 
கிவளை எங்கே காணுவாய் ( இந்த ) 


தூதர் இராவணனுக்கு மூலபலத்தை அறிவித்தல் 

அருந்துணை மந்திரிஇந்த வாறுசொல்ல 
அரக்கனும் வாள்விட்டெறிந்தான் மகன் உடம்பை 
பெருந்தயிலத் தோணியிட்டான் அழைக்கப்போன 
பெருமூல பலசேனை வரவுகேட்டான் 
விரிந்தது அணியணியா புகட்டும் என்றான் 
மென்மேலும் அதுபோக வந்த தூதர் 
தெரிந்தது சொல் வோம்சாமி காதுக்குள்ளே 
சேரென்றார் வகைவகையாப் பாரென்றாரே . 


கண்ணிகள் 


1. தீரா ராவணவீரா விசயம் சேர்இருபது 
தோளாய் 
ஆராகிலும் சொல்லா மூலபலம் இதை அறிந்தது சொல்லக் கேளாய் 
2. சாகத்தீவினில் உறைவார் இவர் வேகத்தை எவர் மொழிவார் 
மேகத்தைக்கூட தாகத்தினாலே நோகக் கைக்கொண்டு பிழிவார் 
3. குசைஎனும் பெருந்தீவோர் இவர் விசயங்கேள் 
ஒரு 
பேச்சு 
வசனம் சொல்லவே இசையும் தேவர்க்கும் அசையுமோ ஒரு மூச்சு 
4. இறலித் தீவினில் உறைவோர் உன் தன் முறைதப்பாமலே திரிவோர் 
திறம்மிக்கோர் இந்தத் தறை முற்றும் சுற்றிமறலிக்கும் கொலை புரிவோர் 

5 பவளத்தீவினை விட்டோர் இவர் கவனத்தால் 
புறப்பட்டோர் 
அவனிக்கே பெரும் திவலைப் பாற்கடல் சுவறக்காலடி இட்டோர் 

6 . மலையமாமலைத் தீவோர் இவர் தொலைவிலே நின்று வந்தோர் 
சிலையினால் இந்திரன் நிலையும் குலைகுலையவே வசை தந்தோர் 
இவர்கள் கிரவுஞ்சத்தீவோர் இவர் எவரிலும் பிரதாபர் 
அவரிவர் என்றும் பார்த்தாயே ஆகிலும் கொல்லும் கோபர் 


7 


8. கந்தமாதானத் கோளர் இவர் சொந்தமாம் படையாளர் 
அந்தகனுக்கும் அந்தகன் என்ன வந்த பாவ சண்டாளர் 


9. புட்கரப் பெருந்தீவோர் இவர் விக்கிரமம் என்ன செய்யார் 
திக்கசங்களை மற் கொடுங்கையால் வைக்கிறவர் இவர் அய்யார் 


10 .லவமாம ரத்தீவோர் இவர் கலகமே கற்றுப்படித்தோர் 
மலையையும் கடலலையும் சேடன் தலையையும் தூக்கிப் பிடித்தோர் 
சமர்த்துப் பேசிய வன்னியை மாலியவான் இடித்தல் 
மதியுடனிப் படிமூல பலத்தின் சேதி 
வந்ததூ துவர்சொன்னார் அரக்கன் கேட்பின் 
அதிலொருவன் வன்னி என்பான் சீதையாலே 
அடைந்த தெல்லாம் அறிந்தவர் ஆர் வலிஎன்என்ன 
பதறியழும் நோயாளி முகத்தின் முன்னே 
பரிகாரி தலைமாட்டில் அழுகின்றாற்போல் 
எதிர் இருந்த மாலியவான் வன்னிதன்னை 
இடிக்கின்றான் பழமை சொல்லிப் படிக்கின்றானே 

பல்லவி 
வன்னியோசனை செய்வதேதடா அந்த 
மானிடரை வெல்லப் போகாதடா 
( வன் ) 
அநுபல்லவி 
உன்னுட கெருவத்தாலே ஓதுகிறாய் சூதும் வாதும் 
தென்னிலங்கை பட்டபாடு சென்மசென் மத்துக்கும் போதும் 
( வன் ) 

சென்று 
1. கோலமாரீசனும் மானைப்போலவே 
கெட்டான் 
சாலவே கரனும் நொடிவேலை 
யினிலே பட்டான் 
வாலியும் அவர்கை அம்பினாலே 
உயிரை விட்டான் 
நீலவருணனும் ரெத்தினமாலை 
தந்துக்கும் பிட்டான் 
மேலென்ன சானகி என்னும் விஷத்தில் நாம்தப்ப லாமோ 
காலிலே சுற்றிய பாம்பு கடித்தாலல்லது ஒழியப் போமோ ( வன் ) 

2. பண்டு கும்ப கர்னனையும் 
அண்டு அதிகாயன்முடி 
கண்டகன் இந்திரசித்தன் 
ஒண்டி ஒழிந்தோரை நமன் 
மண்டு கடல் வெந்ததங்கே 
மிண்டராம் அரக்கர்க்கினி 
கண்டதுண்ட 
பிண்டுவீழத் 
மண்டைவிழத் 
அண்டையிலே 
வந்ததில்லையோ 
மேலே என்ன 
மாக்கினார் 
தாக்கினார் 
தூக்கினார் 
போக்கினார் 
நெருப்பு 
இருப்பு 
( வன் ) 

பேரடா 
ஊரடா 
பாரடா 
3. முத்தன்வில் ஒடித்தேபிர 
தத்தி ஒரு குரங்கு கொ 
மற்றது சஞ்சீவிதந்த 
செத்தவர் பிழைத்தாலினி 
இத்தலை ஆயிரவெள்ளம் 
புத்தில் ஈசல்போல் மடிந்து 
சித்தமான 
(ளுத்தியதிவ் 
வித்தைஎன்ன 
வெற்றிகொள்வ 
ராட்சதரும் 
போனபிற 
தாரடா 
அவராலே 
கினிமேலே 
( வன் ) 

மூலபாம் கண்டு ஓடின சாம்பவான் முதலோரை 
மறித்த அங்கதனுக்கு அவன் கூறுதல் 
அரக்கன் இந்தப்படிபாட்டன் வன்னிக் கோத 
அதை மறுத்தான் மூலபலம் தன்னை விட்டான் 
தரைக் கடங்கா ததுவரக்கண்டஞ்சி ஏங்கிச் 
சாம்பன்முத லனைவரும்சா மியைவிட் டப்பால் 
கரக்கநினைந் தலைகடலைத் தாண்டிப் போனார் 
காகுத்தன் அருளாலே அப்போ தந்த 
குரக்கினத்தை அங்கதன் போய் மறிப்பே னென்று 
கூடினான் சாம்பன்உரை யாடினானே . 

பல்லவி 
எங்களால் ஆகாதையா 
மூலபலத்தின் 
எதிர்நிற்கப் போகாதையா 
( எங் ) 
அநுபல்லவி 
அங்கதா உன் தர்மம் எங்கள் மேலேயோ வர்மம் 
அரக்கர்க் கெங்களைக் கொடுக்கத் துடிக்கிறாய் 
( எங் ) 
சரணங்கள் 
1. வினைக்குள் இந்திரசித்தம்பால் பட்ட புண்கள் ஆறி 
வேறே ரத்தம் இன்னம் ஊறவும் இலையே 
அனர்த்த காலம் போற் கங்குகனரகாணாச் சேனைமேல் 
அஞ்சாதே அழைக்கிறாய் 
என்செய்வோம் கொலை யே 
தனுக்கையர் இருவரும் அனுமானும் இவர் முன்னே 
தரிக்கொள்வதே மெத்தப் 
பெரிதவர் 
நிலையே 
பனித்த பஞ்சினிற் பாயும் கனல்போல் எங்களையவர் 
பாய்ந்து கொல்வாரென்றா ராய்ந்துபார்க் கலையே 
கனத்தகும் பகர்னனைத் தின்பானொரு 
அரக்கன் பொறிக்கறி 
போலும் 
கணிதம் இவர்களுக் குண்டோ பெருங்கடல் 
மணலையே எண்ணி 
னாலும் 
உனக்கென் சிறுபிள்ளை ஆலோ 
சனைக்குத் தெரியுமோ 
நாலும் 
ஒட்டும் பாஷையும் இட்டுத்தலை தொட்டென் 
உயிர்க்குப் பிணை நீசொன் னாலும் 
( எங்க ) 
போரோ 
வாரோ 
பாரோ 
ஆகிய 
பேரோ 
2. ஆனரா வணன் தலை பத்து இவர்க்காயிரம் 
ஐந்நூறு தலைகண்டோம் என்னென்ன 
போனவாலியும் கால நேமியும் மாலியும் 
பூச்சிப்போல் இவர்க்கொரு மூச்சுக்கா 
ஈனராகும் இவரை மூவரும் தூர நின் 
றெட்டிப் பார்ப்பாரல்லாமல் கிட்டிப்பார் 
தீனராகிய கொஞ்சம் வானரர் நாமந்த 
தேவர்களிலும் பலம் 
ஊனமா இந்தச் சேனைமுன் விடுத் 
தேன்குழைக்கறிபோல் 
குழைக்கிறாய் 
உற்றபேர்களை கெடுக்கவோ உன் தன் 
சிற்றப்பனோடு நீ 
பிழைக்கிறாய் 
ஆனமட்டும் பார்த்தோமே துரையே 
ஏனோ வீணிலே 
உழைக்கிறாய் 
அறமுறுக்கு கொண்ட புரிபோல் அற்றுவிட 
அறியாப் புத்தியினாலே 
அழைக்கிறாய் 
( எங்க 

3. இனித்தான் அவர்எங்களைத் தொடராமல் அணையைப் போய் 
இடிக்கிறோம் இதற்கு நீ 
தடுத்துக் சொல்லாதே 
சினத்த எருதும் எருதும் போராடி நடுப்புல்லை 
தேய்த்தாற்போல் எங்களை 
ஏய்துக் கொல்லாதே 
னத்தோடே நாங்கள் எல்லோரும் போய் அவர் கையில் 
இறக்கும்மட்டும் உனது 
பறப்பு நில்லாதே 
தனித்துத் தாய் வயிற்றினில் செனிக்கையிலே இவர் 
சதியும் மாயமும் கற்றோர் 
அதுவுமல்லாதே 
பனிப் பெருக்கிலே கப்பலோட்டிட 
நினைக்கிறாய் நீ 
சொன்ன 
படிக்கு நடக்குமே குரங்குப்பிடியே 
பிடிக்கிறாய் பன்னப் 
பன்ன 
அனுப்பினால்எழு பதுவெள்ளமும் ஒரு 
வனுக்குப் போதுமோ 
தின்ன 
அருந்தத் தழையுண்டு உறங்க முழையுண்டு 
அரக்கர் ஆண்டென்ன மனிதராண் 
டென்ன 
( எங்க ) 

அங்கதன் சாம்புவந்தனை இடித்தல் 

இரங்கிச்சாம்பன் முதலானோர் இவ்வாறுரைக்க நீங்களென்ன 
உரங்கெட்டீரோ படைக்கஞ்சி ஓடல் ஆமோ சூரனுக்குத் 
துரும்பத்தனையே சீவன் எனச் சொல்வாரிலையோ வாருமென்று 
பரிந்தப்போ தங்கதன் நீதி படிப்பான்சொல்லி இடிப்பானே . 


பல்லவி  
என்னகாரியம் எண்ணினீர் சாம்பவரே - நீர் 
என்ன காரியம் பண்ணினீர் 
( என் ) 
அநுபல்லவி 
ஆச்சே 
தன்னவர் என்றும்மைச் சாமி சொன்னதும் 
போச்சே 
சாமித்துரோ கி என்று பூமிக்கும் பேர் 
பனும் அங்கதன் என்சொல் எண்ணாமல் 
ஒதுங்கிறீர் 
படைக்குப் பயந்திப்போது செடிக்குள்ளே பதுங்கிறீர் ( என் ) 

சரணங்கள் 
1. பேய்த்தனமாகவே இகத்துக்கும் பரத்துக்கும் 
பிரட்டன் என்று சொல்லக் 
கேட்டீரே 
பிராணன் போனாலென்ன மானம் போகலாமோ நம் 
பினபேரைப் போரிற்கை 
விட்டீரே 
ஏற்றராமன் ஆதிமூர்த்தி என்றீரே 
இங்கே ஒளிக்கத் தலைப் 
பட்டீரே 
இளந்தை அல்லவோ நீர் எல்லாம் தெரிந்திருந்தும் 
காடிப்பானையிற் கையை 
இட்டீரே 
ஆத்திரமோ அவர்க்கென்ன உங்களைத் 
தொட்டு 
அழித்தவாலி ஓர் அம்பால் விழுந்தானே தலை நட்டு 
சாத்திரமோ ஓடல் ஆமோ முது 
கிட்டு 
சாகிறபேருக்குச் சமுத்திரம் முழங்கால் 
மட்டு . 
( என் ) 

2. திடுக்கென்று போமிந்த பாழும் சரீரத்தை 
ஸ்திரமென்றங்கே எண்ணம் 
பெற்றீரே 
சீவன் போனாலென்ன கீர்த்தியும் உடன் போமோ 
தெரியாமல் நினைவெல்லாம் 
செத்தீரே 
அடுத்தபேரைக் கொல்லும் விஷமான நீங்களும் 
அமுதம்போற் சாமியை 
உற்றீரே 
அன்பெல்லாம் வெளியாச்சே மண்குதிரையை நம்பி 
ஆற்றில் இறங்கச் சொல்லி 
வைத்தீரே 
முடுக்கி வாரும் உயிர் கொடு துப் பழி 
ஒழிப்பீர் 
முன்னொன்றும் பின்னொன்றும் செய்தவசை கழிப்பீர் 
நடுக்கிஓடி நற்பேர் எடுத்தெப்படி 
செழிப்பீர் 
நாயகன் முகத்தினிமேல் எப்படி 
முழிப்பீர் ( என் ) 

3. நால்வரும்போற் சண்டை பார்ப்பதல்லால் உண்டோ 
நம்மாலே சாமிக்கு 
லவலேசம் 
நமக்குத்தான் அபகீர்த்தி சுமக்க நாயமோ னி 
நாளைக்கெப்படி செல்லும் 
விசுவாசம் 
மேல்கீழ் ஆனாலும் ஐயன்வில் இருக்க 
மிஞ்சி நமக்குவரு 
மோ மோசம் 
வீரர் என்று சும்மா பேர் கொண்டீரே ஐயோ 
வேண்டாமோ அணுவாகி 
லும்ரோஷம் 
சாலம்செய் தோடினால் நம்மைத் தடுப்ப 
தாரோ 
சதி செய்யும் பேருக்கு சமர்த்தன் என்றும் 
பேரோ 
நீல அரக்கர் கெடுங்காலம் என் 
யீரோ 
நில்லாது வாருங்கள் நிலைகடந்துபாய் 
வாரோ 
( என் ) 

மூலபலச் சண்டை 
ஓதியிவ்வா றங்கதன்சொல் உரைக்குச் சாம்பன் 
உடன்பட்டான் அங்கு தம்பி முதலானோர்கள் 
நாதனுரையா லவரைக் கூடப் போனார் 
நாலுசமுத்திரமும் ஒன்றாய் வளைத்தாற்போலத் 
தீதுசெய்யும் மூலபலம் எதிர்க்கக் கண்டான் 
சீராமன் கோதண்டத்தினை நாணேற்றிக் 
காதளவும் வாங்கி இதெம் மாத்திரம் என்று 
கருசித்தான் சரமாரி வருஷித்தானே . 

பல்லவி
மூலபல சண்டையைக் கேளும் - ஸ்ரீராமன் செய்த 
மூலபல சண்டையைக் கேளும் 
( மூல ) 

அநுபல்லவி 

மூலபல : சண்டைகேளும் 
மூடன் ராவணன்குடி 
முவ்வுலகக் கிளைஞர்க்கும் 
முந்த உபசாரம் பண்ணிப் 
முன்னரக்கர் நம்பினோர் 
முக்கிய தேவாந்தகன் 
முடிபெறும் சூரியகேது 
முனைபெற்ற சம்பு மன்னன் 
முதுபோர் இடும்பன் அகம்பன் 
முச்சிரத்தரக் கன்சங்கன் 
முகை கும் பருதிக் கண்ணன் 
முதல் வீரர் முடிந்தனர் 
முழுதும் நெஞ்சு காய்ந்தது 
முற்றுயிர் கொடுக்கும் பேர்கள் 
முடவர் முதலாக இன்று 
மூயவிட்ட தூதர் செல்லப் 
வேலைசூழ் இலங்கை ஆளும் 
கேடன் ராவணன்கெடி 
எவ்வுலகத்த வுணர்க்கும் 
பிந்திட விசாரம் எண்ணி 
தன்னொடத்த தம்பிமார் 
உக்கிர நாராந்தகன் 
கெடிபெறும் யாககேது 
ரணமஸ்தன் கும்பகர்னன் 
அதிகாயன் கும்பன் நிகும்பன் 
வச்சிரத் தெயிற்றன் வங்கன் 
புகைக்கும் குருதிக் கண்ணன் 
சதிமாரும் மடிந்தனர் 
பழுதுவந்து நேர்ந்தது 
கத்தி என்றெடுக்கும் பேர்கள் 
கடுகிவர வேணுமென்று 
போஎவர்க்கும் சேதி சொல்ல 
முந்தி லங்கையை நாடி 
வந்து துக்கங்கொண்டாடி 
முண்டாக்கன் தன்னைத் தேற்றி சண்டையை உட்கொண்டு தோற்றி 
மூளும்கனல் போலேபற்றி 
ஆளும்கள மேலேசுற்றி 
மூடவும் பூமியசைந்தாடவும் தேவர் அஞ்சி 
வாடவும் வானரர்கண் டோடவும் தேடிவந்த 
( மூலபல ) 

சரணங்கள் 
1. அஞ்சு முகங்கள் ஈர் 
ஐம்பது தலைகள் ஈர் 
ஐந்நூறு முடிகள் ஈர் 
ஆயிரம் சிரங்கள் இரண் 
அங்கம்மிகு காத்திரங்கள் 
அலைபோலும் நாக்குகள் 
ஆவெனத்திறந்த வாய்கள் 
ஆகாசம் தொட்டகைகள் 
அடரக்கறு சுறுத்தும் 
அண்டத்தில் உள்ளோர் நவ 
அஞ்சுனக வெற்பங்கள் 
ஐம்பது புசமலைகள் 
ஐந்நூறு தோள் அடிகள் 
டாயிரம் கரங்களுடன் 
பொங்கும் பொறி நேத்திரங்கள் 
மலைபோலும் மூக்குகள் 
தாவெனப்புகுந்த ஈய்கள் 
ஏகாசம் இட்டமெய்கள் 
படையைக் குறிகுறித்து 
கண்டத்திலுள் ளோரெல்லாம் 
அடியோ டெழும்பி அந்தக் 
அரும்பார்க்குள் நிறைபட்டாற் 
பெரும் போர்க்குப் புறப்பட்டாற் 
கடல் ஏழும் பொங்கி இந்த 
போல் 
புற்றினில் ஈசல் 
போல் மலைமலைகள் 
ஆனபெரு ராட்சதர்கள் 
அனைய பெருமத்த கெசங்கர் 
தனி விருது பெற்ற துசங்கள் 
மானமளவா நிறைந்து 
தேவரைவென்று 
- கணக்கில்லாத 
அண்டபகி ரண்டமுட்டும் 
அளவும் காத்திர ரதங்கள் 
வளரும் போர்த்துர கதங்கள் 
எண்டிசை அகன்றமட்டும் 
கண்களிற்பொறி 
முறைமுறையா 
ஆற்று மணல் அளவிட்டே நட் 
அதிகக் குதிரைக் கூட்டம் 
பதறிக் கொள் ஆட்ட பாட்டம் 
சேத்திரம் அளவிட்டாலும் 
திக்குகளெல்லாம் 
கைக்கடங்கள் 
ஆகம் அணிபதக்கங்கள் தோள் 
வளைகள் கால்வளைகள் 
அக்குமணிக் குண்டலங்கள் 
மணியிழைத்த 
பொற்கொலுசு வெண்டையங்கள் வெற்றிக்கொடிகள் 
ஆலவட்டம் தாலவட்டம் 
அவுதாக்கள் முத்துக் குடைகள் 
கவிகைகள் சித்திரக் குடைகள் 
சாமரங்கள் சுருட்டிகள் 
- பீலிக்குடைகள் 
- வெயில் மறைக்க 
அதிவித நாதசுரம் தவிலொடு 
தாரை சின்னம் 
அறைந்த சங்குகள் எக்காளங்கள் 
கர்னாவொடு 
சிறந்த கொம்புகள் கைத்தாளங்கள்- துத்தாரிகள் 
ஆகுளிகள் மேளங்கள் 
ஐந்துவித பேரிகைகள் 
பம்பையொடு பூரிகைகள் 
காகளம் டமாரங்கள் 
வீராணங்கள் 
முழங்கிவர 
அங்குசங்கள் பரிசைகள் 
அஸ்திரம் வேலா யுதங்கள் 
சஸ்திரம் சூலா யுதங்கள் 
சங்கிலியின் வரிசைகள் 
-வல்உலக்கைகள் 
- இப்படிக்கொத்த 
ஆயுதத்தின் பேதங்கள் 
அங்கைகொண்டு சூழ்ந்துவர 
கங்கு கங்காப் பாய்ந்து வர 
கோடிகோடி பூதங்கள் 
பேய்களும் கொண்டு 
புலி இறைச்சி 
ஆட்டிறைச்சி மானிறைச்சி 
அலகைகள் கொடுத்துவர 
பலபேய்கள் எடுத்துவர 
மாட்டிறைச்சி நாயிறைச்சி 
மதுக்குடங்கள் 
கெக்கலிகொட்டி 
அண்டமும் அகன்ற நவ 
கண்டமும் கிடுகிடென்ன 
ஆர்ப்பரித்துத் தொடைகள் தட்டி விழிகள் எல்லாம் 
தீப்பறக்கப் பொறிகள் 
கொட்டி ராவணன் சொன்னது 
ஆரடா மனிதனவன் 
ஆரடா என்றே கத்திகள் 
அடங்கலும் வீசிக் 
கொண்டு ராமன் எங்கே என் 
றிடும்புகள் பேசிக் 
கொண்டு விதம் விதமா 
ஆளிபுலி கரடிகள் 
அரக்கர் மெத்தப் பாய்கு வாரும் 
ரைச்சலிட்டுச் சாய்கு வாரும் 
ஞாளி கழுதைகள் மேலே 
சிங்கத்தில் ஏறி 
சில அரக்கர் 
ஆகத்தினில் அடங்காத 
அங்கையாற் பிடிப் 
செங்கையாற் குடிப் 
பாரும் 
பாரும் 
தாகத்தாலே மேகங்களை 
சலம் பிழிந்து 
அதுக்கிஷ்டயாம் 
ஆரும் வேசாறி அந்த 
அலைகடலை அள்ளு 
சலசலெனக் கொள்ளுநீரும் அகப்படாமல் 
வாரும் பெருவாயால் 
வாரும் - கைகளை நீட்டி 
அஷ்டகெசங்களைக் கூடச் 
சுட்டெடுத்துத் தின்னவந்த 
அனல்போற் 
சொறிவரும் 
மரங்களாலே 
தினவுகளைச் சொறிவாரும் - பிறைகள் போலே 

அக்கிரமம் மிகுந்தபல 
ஆவென்று 
கூவென்று 
திறப்பாரும் 
பறப்பாரும் 
உக்கிர தந்தங்களைக் காட்டி 
பசிக்குதையோ 
கழுதைமுகம் 
ஆனைமுகம் புலிமுகம் 
ஆகும் அரக்கர் 
வேகும் அரக்கர் 
அனந்தம் 
அனந்தம் 
பூனை முகம் பரிமுகம் 
கண்கள் நெருப்பா 
சற்றாகிலும் 
அஸ்தத்தில் விரல் இல்லாமல் 
ஆன அரக்கர் 
போன அரக்கர் 
கோடி 
கோடி 
ஒற்றைக்கையும் ஒற்றைக்காலும் 
சொரூபம் கெட்டுப் 
வரைக் கண்ட 
அண்டர்கள் எல்லாரும் நீல 
அய்யா என்றே ஒடுங்கியே 
வையாமலே 
நடுங்கியே 
கண்டனிடம் போய் எப்படி 
உயிர்மேல் ஆசை 
சிவனே இந்த 
அம்புவியற் கடல்களும் 
அரக்கராய் வந்தன 
குரக்கினம் நொந்தன 
பம்புசரா சரங்களும் 
என்று - ஓடி ஒளித்துக் 
நாங்களும் இனி 
இன்று 
அம்பரத்திருக்கும் இந்த 
உம்பருலகத்தை விட்டு 
அப்பாலே செல்லுவோம் என்றார் இருந்தால் இவர் 
தப்பாமல் கொல்லுவார் என்றார் - என்னவே அரன் 
அந்தராமன் சரத்தாலே 
அதமாகிப் போவார் 
சதமாகி வாழ்வீர் 
ன்னய் 
இந்த அரக்கர் எல்லாம் 
நீங்கள் எல்லாரும் 
கேட்டு அமரர்கள் 
என்ன 
அகத்தினிலே முன்னம் 
அகற்றிப் பயங்கரம் விண்டார் 
கித்துத் தயிரியம் 
கொண்டார் 
மிகுந்த துயர்களெல்லாம் 
ராட்சதர் கோரம் 
முனிவரெல்லாம் 
அண்டநிழல் இல்லையென்று 
தண்டு கமண்டலங்கள் விட்டு 
அலங்கோலமாய் வெதும்பினார் தாமரை இலைச் 
சலம் போலவே ததும்பினார் - 
சித்தர்கள் எல்லாம் 
அனந்தம் அரக்கர்க்கொரு 
அளவிடத் தள்ளா தென்பார் 
களமிடம் கொள்ளா தென்பார் 
குரங்கை உரையிட்டாலும் 
இந்த சேனைக்கு 
சாத்தியர் எல்லாம் 
அத்தனை இத்தனை அல்ல 
இத்தனைப் பேர் தலைகளை 
அய்யன் அம்பு கொய்யுமோ என்பார் 
நமது பங்கில் 
தெய்வம் என்ன செய்யுமோ என்பார் வித்தியாதரர்கள் 
ஆயிரங்கோடி அந்தகர் 
ஆகிலும் வரைக் கொல்ல 
அனந்தம் நாள் வேணும் 
என்பார் -- உலகழிக்க 
நினைந்ததோ காணும் என்பார் - கந்தருவர்கள் 
ஆனையும் சேஷனும் இத்தப் 
அங்கத்தைச் சுமந்ததோ 
எங்கிட்டுச் சமைந்ததோ 
என்பார் 
என்பார் 
பூமியும் எப்படி இவர் 
இத்தனை பேரும் 
இவர்கள் இந்த 
ஆச்சரியம் கொள்ளவெகு 
மாச்சரியம் கொண்ட ரக்கர் 
அஷ்ட திசைமேலும் மேவினார் 
- ஆகாசம் என்னும் 
வெட்ட வெளிமேலும் தாவினார் இவரைக் கண்டு 
ஆர்வமுள்ள பதினெட்டு 
வீரரொடு சாம்புவனும் 
அரண்டங் கேநாட்டங் கொள்ளவே நடுநடுங்கிக் 
குரங்கெல்லாம் ஓட்டம் கொள்ளவே இவ்வகை நீசர் 
அடர்ந்து மலையும் குன்றும் 
படர்ந்து ராகவன் முன்னே 
கடந்து நாலு திக்கிலும் 
தொடர்ந்து தொடர்ந்து வந்த ( மூல ) 

2. எட்டி வருவார் சிலர் 
ஈண்டு வருவார் சில . 
ஏறி வருவார் சிலர் 
இரைந்து வருவார் சிலர் 
இடத்தில் வருவார் சிலர் 
எடுக்க வருவார் 
சிலர் 
இடிஇடி என்பார் சிலர் 
கிட்டி வருவார் சிலர் 
தாண்டி வருவார் சிலர் 
சீறி வருவார் 
சிலர் 
விரைந்து வருவார் சிலர் 
வலத்தில் வருவார் சிலர் 
முடுக்க வருவார் சிலர் 
பிடிபிடி என்பார் சிலர் 

எற்றும் எற்றும் என்பார் சிலர் குத்தும் குந்தும் என்பார் சிலர் 
எட்டும் எட்டும் என்பார் சிலர் வெட்டும் வெட்டும் என்பார் சிலர் 
எதிர் எதிர் என்பார் சிலர் மிதி மிதி என்பார் 
சிலர் 
இந்த வகை ராமனை 
வந்து வந்து மென்மேலும் 
ஈய்கள் மொய்துக் கொண்டவகைபோல் பெரும்புலியை 
நாய்கள் சுற்றிக் கொண்ட வகைபோல் சுற்றயில் அய்யன் 
என் சமர்த்தும் ராவணன் 
தன் சமர்த்தும் வந்தபடை 
யின் சமர்த்தும் பார்ப்போம் என்றே - நினைந்து மெள்ள 
புன்சிரிப்புக் கொண்டு கொண்டே நிற்க ராட்சதர் 
எல்லாரும் இவன் ஒரு 
திருக்கும் செருக்கே 
பெருக்க வேணுமோ 
வல்லாள கண்டன் தனித் 
போதும் 
இதிலும் செயம் 
ஓதும் என முதுகில் 
எத்தேச காலமும் 
வற்றாப் பெரும் சமுத்திரம் 
என்ற அம்பறாத்தூணி சாத்தி 
பிரசண்டகோ 
தண்டவில்லை நாணி 
ஏற்றி குணத்தொணிசெய் 
திட்ட போது மும்மதமும் 
ணிருண்ட சிலயானை 
வறண்ட சில யானைகளுக்குச் 
பொட்டெனவே வறண்டுகண் 
களுக்கு தொண்டையும் கூட 
சில யானைமேல் 
இருந்த பாகரைத் தள்ளி 
எடுத்துப் பிடித்தது ஓட்டம் 
விடுத்தது தேவர் கூட்டம் 
வருந்த வதைத்துக் கையை 
பயத்தை யெல்லாம் 
வல்லரக்கர்கள் 
ஏறி வந்த புரவிகள் 
இளைத்துத் தள் ளாடினவே 
உளைத்துள்ளம் வாடினவே 
வீறி வந்த கதிமாறி 
ராட்சதருக்கு 
பின்சாமி முனைந் 
திணையில்லா வெகுசூடு 
எவரும் இறக்க 
அவரும் பறக்க 
கணை ஏவி நின்றவர்கள் 
அடித்தான் 
அப்பாலே நின்ற 
முடித்தான் முடிக்கவே நாம் 
இருநூறு வெள்ளமிவன் 
எனத்திரும்பிக் கூடிக் 
பனிக்குலம் போல் மூடிக் 
ஒரு மானிடன் போகாதீர் 
கொண்டார் சூரியன் முன்னே 
கொண்டார் இவரே நமக் 
கீடெனச் சினந்து காற் 
றாடிபோற் சுழலும் கணை 
இலக்கமற்ற கணை 
தாக்கினான் 
தாக்கி அவரைத் 
தொலைத்து வெட்ட வெளி யாக்கினான் பின்னும் அரக்கர் 
இருநூறு வெள்ளமுடன் 
ஒரு நூறு வெள்ளங்கொண்டு 
ஏகோபித்து முளைத்துக் 
கொண்டார் நெருங்கி வந்து 
மாகோபத்தில் வளைத்துக் கொண்டார் அவரவருக்கு 
ஏறும் வழிமாற வெகு 
நூறுகணை தூறிமுது 
கிட்டோடத் தறித்து 
நின்றான் சிலரைத் தரி 
கெட்டோட முறித்து நின்றான் 
விடவிடவே 
இப்படி அந்நூறு வெள்ளம் 
டெசமானன் வன்னி 
வசமாகியே 
தப்பற முடிந்தது கண் 
என்பவன் மிகவும்பர 
புலம்புவன் அரக்கர் இன்று 
இறந்தனர் எல்லோரும் 
றேக்கமாய்க் கவலை 
மூக்கிலே விரலை 
பறந்தனர் ஐயோ என் 
பெற்று 
குறுகுறுத்து 
வைத்து இனி எப்படி 
ராவணன் முகம் முன் நிற்கப் 
லச்சைக் கேடென்று 
அச்சத்தோடன்று 
போகுவோம் இதென்ன மெத்த 
விளம்பி விளம்பியபின் 
கிளம்பி 
பலதிசையின் 
இரைச்சலை மாற்றி நின்ற 
ஈடழிந்து நொந்த 
ஓடி இங்கேவந்த 
அரக்கரைப் பார்த்து நீங்கள் 
தென்றும் மனிதற்கஞ்சி 
தென்றும் தேவர்கண்டால் 
ஏச்சாகும் இது கொஞ்சப் 
ஏசிடா ஏச்சை 
ரோஷமா வார்ந்தை 
பேச்சாகும் என்றவரை 
ஏசி - சீசீ எனவே 
பேசி அரக்கர் எல்லாம் 
இரைத் தோங்கியே ஒரு 
பெரும்பரம்பைத் தேரைகள் 
இளப்பம் என்று சுற்றிக் கொண்டாற்போல் - விட்டிற் பூச்சிகள் 
விளக்கை வந்து மொய்த்துக் கொண்டாற்போல் - மொய்க்க மனிதன் 
எம்மாத்திரம் என்றுதானே 
ஏகமாய்க் கடுக 
வேகமாய் முடுக 
ஐந்நூறு வெள்ளம் சேனை 
விட்டான் - அம்பிலும் அதி 
விட்டான் - விடுத்த பின்னை 
இளைத்தவன் போல் அவர் தன்னை வளைத்திடும் படிக்குச் சற்றே 
இடங்கொடுத்துப் பின் வாங்கினான் 
எவரும் கைக்குள் 
அடங்கவிட்டு முன் 
ஓங்கினான் வந்த அரக்கர் 
எறிநேசம் கட்டாரி 
இலக்காக மீதில் 
நொக்காக ராமன் 
தறி தோமரங்கள் வாரி 
சொரிந்தார் - அதுகள் நொக்கு 
அரிந்தான் - பின்னும் நெருங்கி 
புரவி ஓர் பக்கத்தில் விட்டும் 
விட்டும் 
அணி அணியா 
விட்டும் நிரை நிரையா 
ரதம் ஓர்பக்கத்தில் விட்டும் 
யானைஓர் பக்கத்தில் 
சேனைஓர் பக்கத்தில் 
இருப்புலக்கை பிண்டிபாலம் 
என்னும் படைவாங்கி 
பின்னும் கணை ஓங்கித் 
பெருத்தகத்தி தண்டு சூலம் 
விடுத்தார் - விடுத்தே அதின் 
தொடுத்தார் - அவரவரும் 
எத்தனைகை எத்தனைவில் 
டெப்படி ஒருவன் 
எப்படித்தான் போர் 
எத்தனை அம்பெத்தனை தண் 
தடுப்பான் அவர்மேல் ஐயன் 
தொடுப்பான் பெருமழைபோல் 
எடுத்துவிட்டான் படையெல்லாம் தடுத்துவிட்டான் என்று வாயால் 
எட்டிக் கடிக்க 
மேவினார் - கைப்பிடியாக 
கட்டிப் பிடிக்கத் 
தாவினார் 
ஆகாசத்தினில் 
நீசனார் நிருதர்கள் 
எல்லோர்க்கும் மனம் 
உல்லாசமாக 
நாசமாப் போவார் என்று 
தேற்றினார் சாமியைத் தேவர் 
வாழ்த்தினார் அந்த வேளையில் 
எப்புறத்தும் ராட்சதர்கள் 
கிரையாகத் தொகுத்துக் 
சரக்கூடம் வகுத்துக் 
அப்புறம் போகாமல் வாளிக் 
கொண்டான் 
- சுற்றிலும் போட்ட 
கொண்டான் - வகுத்த பின்பு 
ரதங்கள் யானைகள் துர 
கதங்கள் சேனைகள் பட 
எவரையும் மண்ணிற் 
சதித்தான் பிடித்தவில்லோ 
டவரவர் முன்னிற் 
குதித்தான் தனித்தனியே 
இந்திரவாணம் மோக வாணம் 
சந்திரவாணம் நாகவாணம் 
எரிவாணம் 
வாயுவாணம் 
ஹரிவாணம் 
மாயவாணம் குபேரவாணம் 
விஜயமுர 
மையாத வருணன் வாணம் 
நமன்வாணம் அருணன் வாணம் 
இடிவாணமாக 
நொடித்தான் அரக்கர் தம்மை 
யோடே சாக அடித்தான் 
- பின்னையுமவர் 
எண்ணிறந்த சேனை சண்டை பண்ணி முடியா தென்றெண்ணி 
ஏகமாகக்கடு 
கடுத்தான் மந்திரம் சொல்லி 
மோகனாஸ்திரம் 
தொடுத்தான் தொடுத்த போதில் 

இங்கும் ராமன் அங்கும் ராமன் அங்கும் ராமன் இங்கும் ராமன் 
எங்கும் ராமனாகத் தோன்றினான் அவருக்கவர் 
தங்களாலேசாக 
மாற்றினான் இந்த வகையா 
ஈனராம் ஆயிரம் வெள்ளம் 
சேனையும் முகூர்த்தந்தன்னில் 
இறும்படியாகப் 
புடைத்தான் 
ரணக்களத்தை 
வெறுங்களமாகத் 
துடைத்தான் 
அனந்தங்கோடி 
எரிவாளிகள் பிறந்த கருமேகம்போற் சிறந்த 
ஒருராமனால் இறந்த சருகுகள் போற் பறந்த 
( மூலால ) 


3. தோள்கள் அறுந்த 
தாடைகள் இடிந்த 
தொந்திகள் 
சரிந்த 
துணைக் கைகள்இற்ற 
தொண்டைகள் தறிந்த 
துண்டம் துண்டமான 
தூணிகள் இழந்த 
துரகம் உலைந்த 
தோரணங்கள் கெட்ட 
தோமரம் பறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
தாள்கள் முறிந்த 
டைகள் ஒடிந்த 
சந்துகள் முறிந்த 
கணைக் கால்களற்ற 
மண்டைகள் திறந்த 
கண்டம் கண்டமான 
நாணிகள் இழந்த 
இரதம் கலைந்த 
வாரணங்கள் விட்ட 
சாமரம் எறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 

தொட்டெடுத்த வாள் கெட்டு நட்ட கட்டை போல்பட்டு 
துள்ளித் துள்ளி நெளிப்பாரும் 
பிணங்கள் தம்மேல் 
தள்ளித் தள்ளி ஒளிப்பாரும் 
பலபலவா 
துண்டங்கள் ஆம் உடம்புகள் 
இண்டங்கொடி போலே அம்பு 
துறுபட்டு 
மாய்வாரும் 
குறைத்தலையாய் 
அறுபட்டுச் 
சாய்வாரும் இவ்வள வென்று 
சொல்ல இடம் இல்லாத பேரும் சல்லடைக்கண்போல் உடம்பு 
தொளைபட்டு 
வீழ்வாரும் விடாய் எடுத்துக் 
களைபட்டுச் 
சாய்வாரும் 
போடப் போடவும் 
தொலையா அம்புகளாலே தலைபோய்ப் பம்பரம்போலே 
சுற்றிச் சுற்றி 
மடிவாரும் முண்டங்களாகித் 
தத்தித் தத்திப் படிவாரும் நிலை கலங்கித் 
தோளென்றும் தாளென்றும் வாளென்றும் அடையாளம் 
தோற்றாமற் 
கெட்ட பேரும் 
காயங்களாலே 
ஆற்றாமற் 
பட்ட பேரும் தலைகள் அற்றுத் 
தும்பிமேலே நின்றபடி 
தொப்பெனவே 
குப்புறவே 
தொம்பர் போலலாகு கொண்டு 
வீழ்வாரும் - மண்ணைக்கடித்துக் 
தாழ்வாரும் - அம்புகள் எங்கும் 
சொருகி உயிர்விடச்சே 
சுருட்டிக் கொண்டு 
திருட்டிஉயிர் 
மரணவலிப்பெடுத்துச் 
படுப்பாரும் - கண்பூச்சிபறந் 
விடுப்பாரும் - கைகால்கள் அற்றுச் 
சுருங்காமலே அடிக்கும் 
சோலைபோலே 
மாலைபோலே 
பெருங்காற்றில் கொம்பு போன 
காணுவாரும் தங்கள் குடலை 
பூணுவாரும் - அடுத்தடுத்துத் 
தொண்ணூறு தரம் ஐயோ தண்ணீர் தண்ணீர் என்று 
துடிதுடித்து 
ஓய்வாரும் - ரத்தத்தை அள்ளிக் 
குடிகுடித்துச் 
சாய்வாரும் - மனிதன் என்று 
துடுக்குச் சொல்லிய வாயின் இடுக்குக் காரியம் அம்பு 
சொரிபட்டு 
வதைவாரும் - சின்னபின்னமா 
அரிபட்டுச் 
சிதைவாரும் - கழுக்கள் கொத்த 
தொங்கிய பனங்காயிலே 
பொங்கும் விழுந்தலை 
பொங்கி விழுந்தலை 
நுங்கு போலக் கண்களும் போய் 
அனந்தம் 
ரத்தம் பெருகிப் 
அனந்தம் கழுத்து கள் போய்த் 
தூரத் தொலையில் விழப் 
தூறும் தலைகள் 
ஏறும் தலைகள் 
பீறிட்டு ரத்தம் எழத் 
அனந்தம் 
ஒன்றின் மேல் லொன்றா 
அனந்தம் அந்தத் தலையைத் 
தொந்தமிடும் பே பினங்கள் 
சுற்றிலும் வீழ்தலை 
முற்றிலும் வீழ்தலை 
பந்துபோல் எடுத்தாடச் 
அனந்தம் 
கடலின் கரை 
அனந்தம் 
சுவாமி அம்பாலே 
சொர்க்கம் உண்டெங்களுக்கென்று கொக்கரித்துக் கொக்கரித்துத் 
துடித்து விழும் தலை அனந்தம் 
ஓன்றோடொன்றாக 
அடித்து விழும் தலை அனந்தம் 
அம்புபட்டிரு 
துண்டாய்ச் சிலைகள் விழ 
சுழலும் கவந்தம் 
உழலும் கவந்தம் 
ரண்டாய்த் தலைகள் எழச் 
அனந்தம் 
பிணங்களோடே 
அனந்தம் முடித் தலைகள் 
துண்டித்து விழவும் தேகம் 
சோரும் கவந்தம் 
சேரும் கவந்தம் 
அனந்தம் 
அனந்தம் 
கொண்டெட்டி நடந்தப்பாலே 
எதிர் எதிரா 
அம்புபட்டிரு 
துருவிட்ட கணைபட்டு 
சுருளும் கவந்தம் 
உருளும் கவந்தம் 
மரவட்டை உருவிட்டுச் 
அனந்தம் ஈரம்பிசிக்க 
அனந்தம் - நட்சத்திரம் போலத் 
தொடுத்தமணி குண்டலத்தை அடுத்தடுத்தும் மாலை போடத் 
தொட்டாடும் சில பேய்கள் கவந்தத்தோடு 
முட்டாடும் சில 
பேய்கள் - ரத்தத்தில் ஆனைத் 
தோட்டியினிற் பிணங்களை 
மாட்டிவிளை யாட்டுக்காகத் 
தூண்டிலிடும் சில 
பேய்கள் - அதைப்பறிக்கத் 
தாண்டிவிழும் சில 
பேய்கள் - தின்று கொழுத்துச் 
சுயம்கொண்டு ராமனுக்குச் 
செயம் செயம் என்று சொல்லித் 
துதித்தாடும் சில 
பேய்கள் - பிணமலைமேல் 
குதித்தாடும் சில 
பேய்கள் 
ஆனைமணியைச் 
சோடன தாளமாக்கி 
ஆடி கொண்டு ராகவற்கு 
தோத்திரம் சொல்லும் சில பேய்கள் - சண்டை உண்டென்று 
சாத்திரம் சொல்லும் சில பேய்கள் - ராட்சதர்வாயில் 
சுரைவிரை போன்ற பல்லைப் 
தூவியிடும் சில 
கூவியிடும் சில 
பொரி என்றுவாயில் கவ்வித் 
நாய்கள் - லங்கையைப் பார்ம்துக் 
நாய்கள் - ஈரலை எல்லாம் 

தோண்டித் தோண்டிப் பிடுங்கித் 
தாண்டித்தாண்டிப் பசியை 
தொலைத்திடும் சில 
நாய்கள் 
களத்தில் எங்கும் 
குலைத்திடும் சில 
நாய்கள் - பெருகும் ரத்தச் 
சுனைக்குள் விழும்பிணத்தை 
உனக்கெனக் கென்றுசண்டை . 
தொடுத்திடும் சில 
நரிகள் - குட்டிக்கிரையாக் 
கொடுத்திடும் சில 
நரிகள் - இழுத்திழுத்துத் 
துணுக்குத்துணுக்காகக் கொத்தி பிணத்தைப் பெரும்பசியாம் 
சூளையிடும் சில 
தரிகள் - இலங்கையைப் பார்த்து 
ஊளையிடும் சில 
நரிகள் - எலும்புகளும் 
தொண்டைகளும் மண்டைகளும் கொண்டுபோய் இலங்கையிலே 
தூற்றும் சில 
பருந்துகள் - வீடுகள்மேலே 
ஏற்றும் சில 
பருந்துகள் - மூக்குகளாலே 
தொப்புளின் நரம்புகளை 
முப்புரிகொள்வது போலச் 
சுருட்டும் சில 
கழுகுகள் - தலை தலையாய் 
உருட்டும் சில 
கழுகுகள் - பிணமலைமேல் 
தொத்தித் தொத்தி மண்டைகளை கொத்திக் கொத்தி மூக்கினாலே 
தூக்கும் சில 
கழுகுகள் - 
ஓர் இடத்திலே 
சேர்க்கும் சில 
கழுகுகள் - கைஒழியாமல் 
துரத்தித் துரத்தி அந்த 
தூதரும் 
நாதரும் 
அரக்கரைப் பிடித்தெம் 
சலித்தாரே - எட்டுத்திசைக்கும் 
கெலித்தாரே - பிணங்கள் மேலே 
சோரும் அரக்கியர் கண் 
தொண்டுபண்ணும் சில 
உண்டுபண்ணும் 
கூளி 
ணீரிற்குளித்து பூசைத் 
அதற்குப்பலன் 
ரணகாளி - சம்மோகனச் 
சுடுகணை ஒன்றாலே 
தொலைந்த தென்றார் 
குலைந்ததென்றார் 
விடுமூல பலமெல்லாம் 
சிலதேவர் - ராவணன் கொட்டம் 
சிலதேவர் - இந்தக் கணையைத் 
தாடுக்கிற வித்னதராக 
தோணுமென்றார் 
காணும் என்றார் 
வனுக்கும் சிவனுக்கும் 
சிலதேவர் - பின் ஆர் அறிவார் 
சிலதேவர் - ராகவன் மேலே 
சொர்க்கத் தலத்தில் உள்ள 
தூறினார் சில 
கூறினார் சில 
கற்பகமலர் பறித்துத் 
தேவர் - செயமங்களம் 
தேவர் - இப்படிக் கொத்த 
துரைராமன் முன் நடந்து - திரையாழி போற்படர்ந்து 
வரையான கோதண்டத்துக் கிரையாக வே மடிந்த 
( மூலபல ) 


லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் 

பெருமூல பலமெல்லாம் இவ்வாறு சாமிகையாற் 
வ்வாறு சாமிகையாற் போனபின்னை 
வருபோரில் ராவணனும் தேர்கொண்டான் பத்துவில்லும் வாங்கிக் 
கொண்டான் 
ஒரு நூறு கோடி தேர் நானூறு கோடி பரிஓங்கும் யானை 
இருநூறு கோடியுடன் குதித்திட்டான் இளையவன்வந் தெதிர்த்திட்டானே . 
தரு 

பல்லவி 
லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் நேர்ந்ததே சண்டை 
( லட் ) 
அநுபல்லவி 
அட்சயமான மூலபலம் 
தன்னை 
அந்தக் கோதண்டம் உண்டுவிட்ட பின்னை 
கட்சி அரக்கனும் தேரில் 
துள்ள 
காவலிளையவன் அனுமான்மேற் கொள்ள 

சரணங்கள் 

1. குரக்கு வெள்ளத் தாரும் அரக்கர் வெள்ளத்தாரும் 
கூடித் தொந்த யுத்தம் 
ஆடினார் 
குன்றும் மரங்களும் தெண்டும் சரங்களும் 
கொண்டு ஒன்றை ஒன்றாற் 
சாடினார் 
செருக்களத்தினில் அரக்கன் நொடிக்குள்ளே 
சில நூறு கோடியம் 
பேவினான் 
திரும்பத் தம்பியும் அதுக்கதையை விட்டுத் 
தெள்ளும் தவிடு போலத் 
துரத்திப் பத்தம்பை அரக்கன் 
சுவாமி அதைக்கூடத் தூளி 
அரக்கன் மோகன அஸ்திரம் 
அய்யன் நாரணன் அம்பால் 
தூவினான் 
எய்யவும் 
செய்யவும் 
தெறிக்கவும் 
முறிக்கவும் 
( லட் ) 

2. வெஞ்சத் தனம்பண்ணி அரக்கன் வீடணன் 
மேலே மயன் வேலைத் 
தூண்டினான் 
குறுக்கேதம் பிக்குமுன்னே அங்கதனோடு 
அனுமான் அதுக் கெதிர் 
தாண்டினான் 
தஞ்சம் என்ற விபீஷணனுக்காகத் தம்பி 
இருவரையும் தள்ளி 
ஓங்கினான் 
சகல பேர்களும் உருக்கவே அந்த 
வேலை மார்பினில் 
வாங்கினான் 
அஞ்சி விபீஷணன் பயந்து 
வாடவும் 
அரக்கன் கெலித்தோ மென்று ஊரில் ஓடவும் 
சஞ்சீவியைக் கொண்டு அனுமான் 
அழைக்கவும் 
தம்பியும் சேனை களும் 
பிழைக்கவும் 
( லட் ) 

3. பிழைத்த தம்பி விபீஷணன் சுகமோ 
சுகமோ என்று 
கிளம்பினான் 
பின்பு சாம்பவன் ராமன்சேவடி 
முன்பின் உள்ளது 
விளம்பினான் 
தழைத்த ராகவன் உனைப்போல் ஆர் என்று 
தம்பிதன் புகழ் 
பாடினான் 
தந்தனம் சிரஞ்சீவி என்றனு 
மந்தனையும் கொண் 
டாடினான் 
அழைத்து வானர வெள்ளம் 
கெர்ச்சிக்க 
ஆசை முனிவர்கள் பேசி 
அர்ச்சிக்க 
மழைக்கு நிகர்மலர் தேவர் 
தூற்றிட 
வாழி இளையன் என்று 
வாழ்த்திட 
( லட் ) 

மூலப்பலப் படுகளக்காட்சி 

சீலமுள்ள ராகவனும் இளையோன் தன்னைத் 
தேற்றினான் பிறகுவிபீ ஷணனும் அங்கே 
கோலமுள்ள சுக்கிரீவன் அனுமான் சாம்பன் 
குமுதன்முத லோரை எல்லாம் கூட்டிக்கொண்டான் 
நாலுதிக்கும் சூரியன் முன் பனியைப் போல 
நாயான்கைக் கோதண்டம் ஒன்றினாலே 
மூலபலப் படுகளத்தைப் பாரீர் என்று 
மூட்டினான் வகைவகையாக் காட்டினானே 

கண்ணிகள் 

1. வெற்றி கொள்ளவந்த மூலபலம் மாள 
வேதண்டமாம் வீரகோதண்டம் செய்ததைச் 
சுற்றிய சேனை படைத்தலை வருடன் 
சுக்கிரீவரே வாரும் சுவாமிசெய்த விக்கிரமத்தைப் பாரும் 


2. சண்டப் பிரசண்டப் பெருங்காற்றிலே வெகு 
தாகத்தினால் விழும் மேகக் குலம் போலே 
அண்டர் பெருமான் ராமன் கையால் வீழ்ந்த 
ஆனைகளைப் பாரும் கிடக்கிற சேனைகளைப்பாரும் 

3. துண்ணெனப் பொங்கிய ரத்தக்கடல் மேலே 
சுவாமி யம்பாலே செந் தாமரைப் பூப்போலே 
வண்ணம் செவந்து மிதந்து வருமுக 
மண்டலத்தைப் பாரும் சிதறிய குண்டலத்தைப்பாரும் 

4. சீராம் பெரும்பாய்கள் கட்டும் கொடியாகச் 
செத்த களத்திலே ரத்தக் குளத்திலே 
ஓராயிரம் கோடி கப்பலைப் போலவே 
ஓடும் தேரைப்பாரும் விசையறுந் தாடுந்தேரைப் பாரும் 

5. கடலிலேபல பகரமீன் போலே 
கண்டித்த யானையும் துண்டித்த யானையும் 
எடலமாகிய ரத்தக்கடல் மேலே 
எழுகிறதைப் பாரும் அழுந்தி முழுகிறதைப் பாரும் 

6. கூத்தினில் நட்டுவன் பாத்திரம் என்றேத்தக் 
குண்டலங்கள் குறைத் துண்டங்க ளாய் எங்கும் 
பேர்த்துப் பேர்த்துநொண்டிக் கூத்தினைப் போலாடும் 
பிரேதங்களைப் பாரும்கைகள் கொட்டும் பூதங்களைப்பாரும் 

7. பண்டு பட்டயானை வால்புறத்தே அறுப் 
புண்டு சட்டயானையின் தலைகாணவே 
ரண்டுபக்கமும் தலயுள்ள யானை போலும் 
லட்சணத்தைப் பாரும் பேய்கள் தின்னும் பட்சணத்தைப்பாரும் 

8. அந்தரத்தக் கடலுக்குள்ளே மத 
யானைக் கொம்பு அந்திவானத்திலே இளஞ் 
சந்திரனைப் போல் மிதந்து மிதந்து 
தளும்புவதைப் பாரும் அங்கங்கே கிளம்புவதைப் பாரும் 

9. அத்திக் கொம்பால் தந்த சுத்தி செய்துரத்தம் 
அப்பி அப்பி வாயைக் கொப்பளித்து வீழ்ந்த 
கத்திகளைக் கொண்டு நாக்கு வழிக்கிற 
காளிகளைப் பாரும் சுற்றிவரும் கூளிகளைப்பாரும் 
10. யுத்தகளம் என்னும் ரத்த வயல்மேலே 
ஏற்றசதை என்னும் சேற்றினிடத்திலே 
அஸ்திரங்கள் பயிர் ஒத்துக் கிடக்கிற 
அற்புதத்தைப் பாரும் ரத்தம்தனில் புற்புதத்தைப்பாரும் 
11. கொண்ட கணவன் எனும் பிணத்தைக் கையில் 
கொண்டெழும்பும் பேயைக் கண்ட அரக்கியர் 
அண்டம் மட்டும் அதை எட்டிப் பிடிக்கிற 
ஆச்சரியத்தைப்பாரும் அவருடைய மாச்சரியத்தைப்பாரும் 
12. தும்பிமுகத்திலே ராட்சதர் மீசையைத் 
துள்ளறு கரச்சாத்திப் பிள்ளையார் என்றேத்திக் 
கொம்பில் அவர்மண்டைத் தேங்காய் உடைக்கிற 
குட்டிப் பேயைப்பாரும் குதிக்கிற மட்டிப் பேயைப்பாரும் 

13. பேய்முகம் நாய்முகம் ஆகியராட்சதப் 
பெண்டுகள் அந்தப்பிணம் பிடுங்கவந்த 
பேய் முகம் நாய்முகம் கொண்டே அடையாளம் 
பிடிக்கிறத்தைப் பாரும் நல்வார்த்தைப் படிக்கிறதைப்பாரும் 
14. பெண் அரம்பைக் கூத்துப் பார்க்கிற தெல்லாம் போய் 
பேய்க்கூத் தாச்சுதோ என்று முறைப்பட்டு 
பண்ணுடனே கிழப் பெண்கள் ஒப்பாரி 
பாடுவதைப் பாரும் தலைவிரித் தாடுவதைப்பாரும் 

15. இந்திர லோகமும் சந்திரலோகமும் 
எட்டுத்திக்கும் கொள்ளை இட்டுச் சிறைவைத்து 
கந்த அரக்கரை ராமன் வில்லுக்கிரை 
கற்பித்ததைப்பாரும் இராவணன் ஒப்பித்ததைப்பாரும் 
16. எள்ளிடவும் இடம் இல்லாமல் மண்டிய 
இத்தனைச் சேனையும் கைத்தனு ஒன்றாலே 
வள்ளல் இராமன் முதர்த்தத்தில் கொன்றுயிர் 
வாங்கினதைப் பாரும் பூமிபாரம் நீங்கினதைப்பாரும் 


ஸ்ரீராமரை மாலியவான் கொண்டாடல் 

நீதன்கை வீச்சர மாரிபட வேபடை . 
பாடுண்டு போனதை விபீஷணனா டேவிழி 
நேர்கண் டெ போர்களும் இராகவனை மேவினர் 
அதன்மேலே 
ஓதும்பி ராணியுடன் ஓடியத் சான்னன் 
மூதண்ட கோடியுள தேவர்கள் பகீரிட 
ஊரெங்கும் வேண்களி யாடல்வினையாடல் கள் செய் - கிறபோமே 
கோதண்ட வாளியினில் மூலபல சேனையை 
நாசஞ்செய் தானெனவே ஓடிவரு தூதர்கள் 
கூறும் சொல் லாலிதென மானிட வனாலவர் 
- படுவா ரா ஏதென்று ராவணன் விசாரமிட மாலிய 
வானவந்து காதுகளி லேசுறீல் சுறீலென 
ராமன் பிராதப செயராமன் இசையானது 
- புகழ்வானே 

பல்லவி 
ராமனுக்கு நிகராக ராவணா பூமியில் வேறுண்டோ 
( ராம ) 

அநுபல்லவி 
மாமூல பல மெல்லாம் 
ஒருத்தன் கொன்றதெந்த 
வகையென்று தூதரைப் பகையா தெழுந்து முந்த 
ஆமவன் கோதண்டம் 
வளைத்தானோ படைசிந்த 
அரையம்பு காலம்பு தெறித்தானோ ஏதோ அந்த ( ராம ) 

சரணங்கள் 

1 பின்னும் சொல்லுகிறேன் அவனுக் குனதுசண்டை 
பிள்ளைவிளை யாட்டல்லோ 
அத்தாட்சி 
மன்னும் மரமும் புல்லும் கல்லும் ஒரு சரத்தால் 
மண்ணோடே மண்ணாமே 
கண்காட்சி 
சின்ன மனிதன் என்றும் ஒருத்தனென்றும் எண்ணாதே 
தேவர்க்கும் தேவனவ 
னே சூட்சி 
உன்னைக் கட்டினவாலி தன்னைக் கொன்றானே இது 
உன்னண்டையில் இருக்க இன்னும் என்ன டாசாட்சி 
(ராம ) 

2. திண்டும் மிண்டும் செல்லாதே தர்மம் சேருமிடத்தில் 
செயமும் சேரும் அட 
நிர்மூட 
சண்டை உன்னாலாகாது செத்தவர்க்கெல்லாம்தில 
தர்ப்பணம் செய்யடா 
பெண்டுகளே யல்லாமல் லங்கையை விட்டுனக்குப் 
பின்பனட வருவதுண் 
டோகூட 
அண்டர் நாயகனை ஒருத்தன் ஒருத்தன் என்றாய் 
அண்டம் அழிக்கும் தேவர் ரண்டு பேர் உண் டோடா 
குடிகேட் 
( ராம ) 
தந்தாயே 
வீரவேல் விட்டேனென்றும் லட்சுமணன் பட்டான் என்றும் 
வீம்புவார்த்தைகள் இங்கே 
மாருதி மருந்தாலே அவன் எழுந்தானே இந்த 
மதிமோசத்தால் அல்லவோ 
வெந்தாயே 
காரியம் தெரிந்த விபீஷணன் சொல்லும் கும்ப 
கர்ணன் சொல்லும் கேட்க 
நொந்தாயே 
வீரியத்தால் ஐயோ காடுவாவா என்ன 
வீடுபோ போ என்ன வினைகொண்டு 
வந்தாயே 
( ராம ) 

மூலபலப்படுகளத்தை ராவணன் கண்டது 

வல்லாண்மை பேசியரா வணன் முன் இந்த 
வகைவகையாய் மாலியவான் சொல்லிச் சொல்லிப் 
பொல்லாத புண்ணிலேகோ லிட்டாற் போலப் 
புடைபுடைத்தான் மூலபலம் மடிந்த வாறும் 
சொல்லாலே தூதர் சொன்ன சொல்லும் உன் தன் 
சொல்லும்நிலை வரமோ என் றரக்கன் பொங்கி 
எல்லாம்பார்ப் போமெனக்கோ புரத்தின்மேலே 
ஏறினான் படுகளங்கண் டாறினானே 

பல்லவி 
மூலபலப்படு 
கண்டானே ராவணன் மேன்மேலே 
களத்தை 
இருபது கண்களாலே 
( கண் ) 

அதுபல்லவி 
மிண்டாம் தூதர்சொல் இன்று மெய்யோ பொய்யோ என்று 
மெத்தவிசாரப் பட்டக்கணம் சென்றுஉத்தர கோபுர உச்சியிலேநின்று 
( கண் 

1. போன முகந்தோறும் மலைமலையாப் பிணம் குவிய - இதுவே 
வே நல்ல 
தானமா மென்று மேகங்கள் வந்து கவிய 
ராகவன்விட்ட 

2 மானக் கணைகள் பட்ட 
பாணத் தளவும்முட்ட 
வானத்திலும் அட்ட 
கோணத்திலும் எட்ட 
சோனைப் பெரியமலை 
தானொத் தெழுந்த கொலை 
ஆனைப் பிணங்களையும் 
சேனைப் பிணங்களையும் ( கண் ) 
சீலமுனிவர்கள் கண்டுடனே நடுநடுங்க - சீறிய ஆல 
காலமரம் எனும் கண்களை நாய்நரி பிடுங்க வீரகோதண்டம் 
காலமாரி மழை 
போலே கணைசொரிய 
நாலுதிசையும் வளைந் 
தோலமிடும் பெரிய 
மூலபலப் படையைக் 
கோலிவேர் அரிய 
மூலைக்குமூலை அலங் கோலமாய்த் தெரிய 
( கண் ) 

3. பெருகவேகளம் எங்கெங்கும் கவந்தங்கள் ஆட நட்டுவன் போல 
அருகிலே நின்று பேய்கள் தாளங்கள் போட - ராமன்பிடித்த 
ஒரு சிலை அதனாலே 
வரவர ஒருகாலே 
விடு கணை அறுபட 
நிருதர் முடிகள் கெட 
ஒரு பெருமலை மேலே 
வரும் அருவியைப் போல 
குருதிநீர் துள்ளத்துள்ள குருவிகள் கொள்ளக் கொள்ள ( கண் ) 
4. மங்கைமீர் அந்தவானரப் பூச்சிகளை புடைத்து - நிமிஷத்திலே 
உங்கள் முன் வருவேன் என்று கண்களைத் துடைத்துத் துடுக்காவந்த 
தங்கள் கணவன் கிடை 
அங்கெதிர்கண்டு கடைக் 
கண்களில் நீர் பெருகி 
அங்கமெல்லாம் உருகிப் 
பெண்கள் திரண்டு மொய்த்துச் செங்கை தலையில்வைத்து 
எங்கும் பதறி அழ 
எங்குங் கதறி அழ ( கண் ) 
5. பெரியவில்லுடன் அறுபட்ட கைகளும் விரலும் கண்டு கண்கள் நீர் 
சொரிய அரக்கியர் அடித்துக்கொண்டழும் கூக்குரலும் கண்டம்கண்ட 
ஒருவன்குடல் சரிய 
ஒருவன் உடல் எரிய 
ஒருவன் தலை மடிய 
ஒருவன் சிலை ஒடிய 
ஒருவன் தொடைபறிய ஒருவன் குடைமுறிய 
ஒருவன் உயிர் வதை 
ஒருகணை செய்ததை ( கண் ) 

இராவணன் தேர் ஏறுதல் 

மூலபலப் படுகளம் இவ் வாறு கண்டான் 
முடிபுனைகோபுரம் இறங்கிக் கோவில் சேர்ந்தான் 
காலம் எனும் முக்கோடி வயசும் ஈசன் 
கைவரமும் தொலைக்க ராவணன் முன்னாளில் 
மாலெனும் ராகவன் கொடுத்த வரத்தினாலே 
மதியும் அது விதியும் அது எனலால் துவார 
பாலன் எனமுன் போல் வைகுந்த வாசற் 
படி கொள்வான் தேரேறத் துடி கொள்வானே


பல்லவி 
தேர்மேற் கொண்டானே - ராவணன் 
போர்மேற் கொண்டானே 
( தேர் ) 

அநுபல்லவி 
பார்மேலும் திசை மேலும் 
பாயும் திரைகடல் மேலும் 
ஆயிரம் புரவிகளும் 
மலைமேலும் 
முட்டிய 
கட்டிய 
( தேர் ) 

சரணங்கள் 

1 -னத்தோடே வரச்சொல்லி 
இருந்தோரில் நூறு வெள்ளம் 
தொனித்துக் கையோடு கையை 
தூணியும் கவசமும் 
உறுக்கினான் - தப்பி 
பொறுக்கினான் - சங்கம் 
முறுக்கினான் 
இறுக்கினான் 
கனத்தபூமியும் மலையும் 
முனைத்த பேரிகை குமுறி 
சினத்தினால் முக வேர்வை 
தனக்கும் சீதைக்கும் இடக்கண் 
வெடித்திட 
இடித்திட 
பொடித்திட 
துடித்திட 
( தேர் 

2. பத்து முடியும் தரித் 
பத்தும் வெட்டியவாளை 
தோங்கினான் - 
திசை 
தாங்கினான் கோ 
நீங்கினான் - ஒரு 
வாங்கினான் 
பத்தால் அரண்மனையை 
பத்து வில்லையும் கையில் 
செத்தபேர்களை எண்ணி 
சத்தமே சங்கள் போலே 
கைத்தலத்திலும் வாரிக் 
சுற்றி அர்ச்சனை செய்ய 
மனம்நொந்து 
நாலைந்து 
கொடைதந்து 
வலம்வந்து 
( தேர் ) 

மாட்டினான் - காதில் 
பூட்டினான்- தும்பை 
சூட்டினான் - கண்கள் 
காட்டினான் 

3. இருபதுகையும் வளை 
இருபது குழைகளும் 
இருபது தோளிலும் 
இருபதும் நெருப்புப்போல் 
வருபெண் சானகி 
பதறு 
ஒருமண் டோதரி 
கதறு 
விருதெல்லார்களும் பார்க்க 
இருவகையில் ஒன் றாக்கு 
கிறதொன்று 
கிறதொன்று 
வே இன்று 
வேன் என்று 
( தேர் ) 


ராவணன் அவசகுனங்கள் காணுதல் 
கதிர்விடு குண்டலம் மணிமகுடம்பல கடகம் அலங்கிருதம் 
மென்போர்வை கவசம் நெடுஞ்சரம் அரைவடம் அந்தைகள் 
கலகலெனும் பணி --- யின்கோவை 
இதுமுதல் கொண்டொரு பதுகையில் வெஞ்சிலை இருபது செங்கையி 
லும்பாணம் - எரிவிழசிந்திய கருமலை என்றென எவரும் நடுங்க 
நெடுந்தேர் மேல் 
மதிகரிசிந்திட உடுநிறை சிந்திட மலைகள் அதிர்ந்திட - மண்பூமி 
மறுகிட எண்டிசை முருகிதியங்கிட மனிதன் எனும் சொல் 
இடும்பாலே 
அதிரணமண்டலம் அதிரரதம் தனை அதிரவிடென்று - இலங்கேசன் 
அருகினில் எங்கணும் இருபது கண்களில் அவசகுனம் பல 
கண்டானே


பல்லவி 
இப்படியா அவசகுனம் கண்டானே கண்டராவணன் 
இடும்பாலே எண்ணாமற் சென்றானே 

அதுபல்லவி 

கைப்படை ஆனதைச் 
சேகரம் பண்ணி 
காகுத்தன் சரத்துக்குக் கொடுத்திட எண்ணி 
அப்படி வந்தா 
ராமன்மேலே 
அறிந்திருந்தும் புத்தி கெட்டவன் போலே 
னே 
( இப் ) 

சரணங்கள் 

1. ஆனைகளும் குதிரைகளும் பின்னுக்கு வாங்கி டக்கால் பதறவும் 
அறுந்த கொடிமேல் பகுந்து விழவும் அங்கே ரத்தத்துளி சிதறவும் 
சேனைகாவலர் வாயெலாம் வெறும் பானை போல் வறண் டுதறவும் 
சேரநாய்களும் பேய்களும் அழச் சூரியனைப் பார்த்தோர் கதறவும் 
( இப் ) 
2. தோள்வளைசரிய மாலைகள்கரிய இடப்புறக்கண்கள் 
துடிக்கவும் 
தோகைமாரழக் காகம்மேல்விழ ஆகாவாய்ச்சொல் படிக்கவும் 
வாளின்வாய்முனை மடங்கவும் கருந்தூளி ஆனது 
பிடிக்கவும் 
வானின் மேற் கருமேகம் இல்லாமல் வல்லிடி இடிக்கவும் கொள்ளிகள் 
பிடிக்கவும் ( இப் ) 
3 . முறை முறையாத் தேரிலே கட்டும் 
விருதுகேதனம் அழியவும் 
முரசம் பேரியம் டமாரமும் சருகுபோலே 
இழியவும் 
மறவர்கள் பூசும் சந்தனம்வறவ றென்றுபோய்க் கழியவும் 
மண்மாரிகள் ஆனவை பொழியவும் பெண்ஆனையிலேமதம் வழியவும் 
( இப் ) 


ஸ்ரீராமர் தேர் ஏறுதல் 

ஆசைகள் அதிர இவரவ சகுனம் இராவணன் எதிர்படப் தேர்விடலால் 
ஆண்மைகள் பெருகிய நீமறுபடி அனுமான் மிசைவருதல் ஒணாது முனே 
மாசறு சதுமுகன் நேசமொடு தவிய வாசவன் விடுகிற தேரிதன் மேல் 
மாருதிபுசமென ஏறுதி எனவரு மாதலிஉரைசெய ஆதரவாய் 
ஏசறுமுதுமறை ஏறிடவிதிநிலை ஏறிடமுனிவர்கள் தேவர்கள் ஈ 
டேறிட மகம் நிறை வேறிட அவரவர் ஏறிய பதவியில் ஏறிடவே 
வீசிடமழைபொழி கார்முகிலொளிவிடு மேருவென் மலைமிசை ஏறுதல்போல் 
வீரன் இரவிகுலசூரன் அதுலரகுவீரன் இரதமிசை ஏறினனே 

பல்லவி 
தேர்ஏறினானே - ராமச்சந்திரன் - தேர் ஏறினானே 
(நேர் ) 
அநுபல்லவி 
பார்மேலே வைப்பது நேரல்ல அரவிந்த 
பாதம்வைப் பாயென்று மாதலி கொடுவந்த 
( தேர் ) 

சரணங்கள் 

1. சோதி மதிநுதலில் 
திருநாமம் அணிந்திட்டு 
துலங்கும் அம்பறாத்தூணி வலப்புறத் தினிலிட்டு 
காதல் செய்யுந்தும்பை மாலைதோள் மேலிட்டு 
கச்சைகட் டியமார்பில் வச்சிர 
கவசந்தொட்டு 
குரோதம் செய்யும் இள நகை 
விடுத்துக்கொண்டு 
பாதம் தன்னில்மிதி 
யடி 
தொடுத்துக்கொண்டு 
கோதண்டம் ஒருகை 
யினில் 
எடுத்துக்கொண்டு 
தாய்தந்த மரவுரி 
யினை 
உடுத்திக்கொண்டு ( தேர் ) 
2. ஆரவா ரம் செய்யும் வீர வண்டையம் 
சாத்தி 
அங்கைத் தலத்துக்கு முன்கை கட்டியும் ஏற்றி 
தாரணி உள்ளோரும் வானவரும் 
தான் சொல்லவே லட்சுமிகாந்தனென்றே தோற்றி 
வீரபட்டம் விசாலம் 
நெற்றி 
நேரில் இட்டதி காரம் உள்ள 
கத்தி 
ஓர்வலப்புறம் மீதினில் 
சுற்றி 
ஆரும் ஒப்பிடொ ணாதொரு 
வெற்றி ( தேர் ) 
போற்றி 
உள்ள 

பாட 
3. தேவர் மடந்தையர் 
சீதை மனத்தில் 
தூவும் மலர்க்கை 
சூரியன் தேர் ஓட்ட 
சோபனங்கள் 
நினைந்ததுகை 
முனிவர்கள்கூத் 
லங்கைமேற்கண் 
தாட 
போட 
யாவரும் 
பாவிகள் 
தேவருக் 
ராவணன் 
கண்கண்டு 
சந்தங்கள் 
கானந்தம் 
வைகுந்தம் 
தேறவும் 
மாறவும் 
உறவும் 
ஏறவும் 
( தேர் ) 

மகோதரன் வதை 

திருத்தேர் ஏறி ராகவனும் சென்றான் போர்க்கும கோதரனும் 
தரிக்கா தெழுந்து ராவணன் பால் சார்ந்து போர்க்கு விடைகொடெனச் 
செருத்தான் செய்து லட்சுமணனை செயித்து வாவென் ற னுப்பவந்து 
கருத்தா வானரா கவனைக் கடிந்தான் அவனால் மடிந்தானே 

பல்லவி 
ராமன்கை அம்பால் 
மடிந்தானே மகோதரன் 
படிந்தானே மண்மேல் 
( மடி ) 

அநுபல்லவி 
கடிந்து ராவணனால் லட்சு 
கடுகி ஓடியவன் 
தொடர்ந்து ராமன் மீத 
சூதும்வாதும் சுவாமி 
மணன் மீது விடப்பட்டு 
மீதிற்போரினை விட்டு 
னேகசரங்கள் தொட்டு 
தொடுங்கணையாற் கெட்டு ( மடி ) 

சரணங்கள் 

1. அனு கூலச் சத்துராதி ஆகியிருந்துரா 
வணன் குடியினைக் 
கெடுத்து 
தன்னுடைய 
அகத்தில் எண்ணமெல்லாம் 
முடித்து லங்கையின்மேதே 
ஆசையினையும் விடுத்து - இணையில்லாரா 
மனுக்குர தம் அனுப்பும் தேவர்களையும்மக 
வானையும் கடு 
கடுத்து 
லட்சுமணனை மடித்துவரு வேனென்று வீரம் பேசிக்கையில் 
வலிய தனுவை 
எடுத்து அதிக்கடுஞ் 
சினத்தி னோடு பெரும் தேரை 
ஓட்டிக்கொண்டு 
சேனைகளை எல்லாம் தன் பின்னே கூட்டிக்கொண்டு 
கனத்த வில்லை வளைத்து நாணைப் பூட்டிக்கொண்டு 
கணைகள் எய்து ராமன்கையில் மாட்டிக்கொண்டு ( மடிந் ) 
2. போர்களத்தினில் வந்து அட்டகா சஞ்செய்து 
புவியெங்கும் கிடுகி 
டென்ன லட்சுமணன் மீதில் 
போகவிட்டிடுந் தேரை மறித்து ராமன்மீதிற் 
போகட்டும் , விடுவி 
டென்ன சாரதிஇந்தப் 
பார்க்குள் ராமனை வெல்லக் கூடாதென்று சொல்ல 
பற்களை நெடநெ 
டென்ன - வேகடித்து 
பாரடா உன்னை விழுங்குவேன் 
என்ன சாரதி 
பயந்துடல் விடுவி 
டென்ன 
நடுநடுங்கி 
கார்க்கடல் :வண்ணன்ரா 
மன்மீதில் தேர்விட 
கலங்காமலே மகோ 
தரன் நின்று போரிட 
ஆர்க்கும் சேனைராமன் 
அம்பினாற் பேர் கெட 
அதமாக அவன் மார்பில் 
ஓரம்பின் கூர்பட ( மடிந் ) 
மாலியவான் சொல்லால் சீதையை விடவே , சம் 
மதித்த ராவணனை 
அன்று - தடுக்கப் பெரு 
வயிற்றைச் சாய்த்துக்கொண்டு குடுகு டென்றேஓடி 
வஞ்சனை எண்ணி 
நின்று - அதிகபல 
சாலியானரா வணனே மூவுலகமும் 
சௌரியத் துடனே 
இன்றுமனம் 
தளர்ந்திந்த சனகியை விடலாமோ போபோஉன் 
தனக்கிது சரியோ 
சொல்லிய சொல்லும் 
காலனைப்போலவன் 
பாலிலே இருந்து 
கழுவாக்கரைத்து நாளும் கலகம் செய்து திரிந்து 
சீலராமன் கணைக்குத் தன்சேனையை விருந்து 
செய்வித்தோர் கணையால் தன் பெருவயிறும் சரிந்து 
( மடிந் ) 

வென்று 
என்று 
கடைசிநாளில் இராம இராவண யுத்தம் 
திடுதிடென ஓடிமகோதரனும் சென்ற 
சேனைகளும் சாமிகையில் மடிந்த பின்பு 
முடுகி இரு வரும் தேரில் ஏறிக்கொண்டு 
மூதண்ட கோடிகளும் நடுங்கவிட்டே 
கடுகிமலை யோடுமலை எதிர்த்தாற்போல 
கடலினொடு கடல் எதிர்த்தாற் போல் விற்கொண்டு 
அடும் இரா கவனும் இரா வணனும் அங்கே 
அடுத்திட்டார் சண்டைசெய்யத் தொடுத்திட்டாரே 


பல்லவி 
( ராக ) 
ராகவனுக்கும் ராவணனுக்கும் 
நடந்ததே சண்டை தொடர்ந்ததே 

அநுபல்லவி 
மேகத்தைப் போலவே 
அய்யன் கணைகள் சாட 
மேலத்தைக் காணாமல் 
வெய்யன் கணைகள் மூட 
வாகொத்த தேர்மேலே 
இருவரும் கதித்தாரே 
வானமும் பூமியும் 
ஒன்றாக மதித்தாரே 

வான வெள்ளம் கடல்போலே களத்தைப்போய் 
ஈனர்விடும்கைச் சரத்தாலே நெளித்துப்போய் 
வா ரிவிடும்கற் பெருக்காலே அரக்கர்க்காவி 
வீரர் விடும்கைத் தடிக்குச் சூழ் குரக்குச்சேனை 
வளைக்கவும் 
ளைக்கவும் 
துள்ளவும் 
விள்ளவும் 
வடவையொடுபொரு 
டெவை எனநிலை 
மலையினொடுபொரு 
மலைய தென அலை 
கடலி னொடுபொரு 
கடலதென விரி 
ககனமொடுபொரு 
ககணம் என அரி 

சரணங்கள் 
அரக்கன் ராவணன் 
சிலகணைகள் 
அதைக் கண்டேராமன் தவிடுபொடிகள் 
( ராக ) 


1 எய்தான் 
செய்தான் 
அரக்கன் நூறு நூறா 
அதைக்கண்டே ராமன் 
யிரமம்பு 
தூற்றினான் 
நொடியொன்றில் மாற்றினான் 
அரக்கன் ஆயிரமாயிரம் 
ஆயுதம் 
அதைக்கண்டே ராமன் தூளிகள் தூளிகள் 
அரக்கன் தேரைஆ 
காசத்திற் 
அதுக்கும் சாமிதேர் 
மேலாகத் 
தொட்டான் 
இட்டான 
போக்கினான் 
தூக்கினான் 

ஆதிநெடுஞ் சேஷனும்பட்சீ சனம் பொற்றூ 
ணிடத்தேகன 
காசுரனும் சிங்கமும்தப்பா தடுத்துப்போர் தொடுத்தால் என 
ஆனதுரங்கம் திருப்பிக்கோல் பிடித்துத்தேர் விடுத்தேவரும் 
மாதலிசங்கம் தொனிக்கச்சே பயப்பட்டார் முடித்தேவரும் 
அக்கணம் இருதேரும் 
திக்குத்திசை களும் போய் 
அப்புறம் மலைதாவும் 
இப்புறம் செவிதாவும் 
தடந்தத்தும் 
இடஞ்சுற்றும் 
அலைதாவும் 
புவிதாவும் 
நிலந்தத்தும் 
வலம் சுற்றும் 
கடல் தாவும் 
கெவிதாவும் 
கட.கட 
பயந்து 
நடுங்கி 
அன்று முனிவர் 
என்று பதறி 
அண்டமுகடு 
மண்டலமும்மிசை 
பிளந்து 
விண்டு 
விடவிட 
நிலைகெட 
தலைகெட 
அதிர மலைகளும் 
அதிரவெகு திசை 
அதிரஉத்திகள் 
அதிரஉடுவினம் 
அதிரநிலைகளும் 
அதிரமலையிடி 
அதிரமதிகதிர் 
அதிரஇப்படி 
( ராக ) 


2 -வட திசைமுதல் 
கடலிலும் போவார் 
மனது வேகமோ 
கனக லோகமோ 
நாலு திசையும் 
கடல் அப்புறமும் 
வாயு வேகமோ 
கீழ் உலகமோ 
போவார் 
போவார் 
என்ன 
என்ன 
வருவர் ஓடுவர் 
பொருவர் சேருவர் 
வசன மாகஉரை 
குசவனானவன் 
கூடு வர்இரு 
நேருவர் இதை 
யார் சொல் வாரொருக் 
விடுதிகிரியைப் 
தேரும் 
ஆரும் 
காலே 
போலே 

தானே 
தானே 
மாரிவழங்கும் பிரசண்டக்கொண் டலைப்போல இடித்தார் பலர் 
தீவும் விசும்பும் குலுங்கச்செஞ் சாக்காடா முடித்தார்சிலர் 
மாதலி அங்கம் தொலைத்துப்பாய் பரிக்குக்கோல் விடுத்தான் ஒரு 
சாமி நெடுந்தேர் மறைத்தங்கே துசத்தைக்கீழ்ப் படுத்தான் அவன் 
வளையராகவன் தேரை நிருதன் 
மூட 
லாலே 
இளையவன் முதலானோர் களையானார் அதன் மேலே 
மணவாள ராகவன் 
பனிபோல 
ஒத் 
கணையெல்லாம் அறுத்தவன் கொடியையும் அறுத் 
மால்ஒத்தவன் படை 
மாரி 
பெய்திட 
சூலப்படை கொடு 
சுவாமி கொய்திட 
வன்னி வாளியை 
அவன் 
விடுத்திட 
அன்னதே கொடு 
சாமி 
தடுத்திட 
மாமயன் படை 
அரக்கன் 
தொடுக்கவும் 
சாமிகந்தரு 
வஸ்திரம் எடுக்கவும் 
நாக லோகமும் 
புவியும் பொடிப்பொடி 
ஆகவே கள 
மீதில் அடிக்கடி 
( ராக ) 
3. சாமிமேல் ஒரு 
தெண்டவன் 
விடுத்திட 
சாமி ஓரம்பு 
கொண்டதைத் 
தடுத்திட 
சாமிமேல் அவன் 
மாயாஸ் 
திரம்போட 
சாமிதான் ஞானாஸ் திரந்தொடுத் 
ததைச்சாட 
சாமிமேல் சூலம் 
அவன் விடச் 
சினங்கொண்டு 
சாமி ஓங்காரம் 
விழக்கண்டு 
சாமி மூவரும் 
இவனென்னும் 
விவகாரம் 
தம்பி சொன்னதை 
நினைந்தெண்ண அந்நேரம் 
தாகருடன் செஞ்சரத்தைக் கைப்பிடித்துச் சாமிதொட்டே அவன் 
நாகமெனும் செஞ்சரத்தைக் கொத்தவிட்டுத் தூளியிட்டான் 
ஒரு 
சாமிதிரும் பத்தொடுத்துப் பொற்பிறைக் கொக்கும் சரத்தால்வரு 
ராவணன் நெஞ்சைத் தொலைத்தொற்றைச் சிரத்தைத் துண்டம் 
இட்டான் 
செய்தது 
தறிபடு சிரம் 
அவனுக்கு 
சரிசரி அரியவே 
வரவரக் 
தறிபடுகையால் மாதலி 
மார்பைக் 
அவன் விடு தோ மரத்தையும் அய்யன் 
முளைத்திட 
கிளைத்திட 
கலக்கினான் 
விலக்கினான் 
( ராக ) 


தறித்திவன் சரீ 
ரம் நிறைந்திட 
மயிர்க்கோர் அம்பது 
ஆய் மறைந்திட 
சலித்தவன்களை 
ஆய்விழுந்திட 
உணர்ச்சி கொண்டுட 
னே எழுந்திட 
சரமும் விடுவிடு 
படையும் பொடிபட 
சகலரதக்ச 
தளமும் அடிபட 
இருவர் மனதிலும் 
வளர முழுபகை 
எவரும் உடல்விட 
விடென இவ்வகை 
4. எடுத்து ராவணன் 
வளைத்த சிலை 
தன்னை 
ஒடித்து நாணியை அறுத்தும் இப்படிப் 
பின்னை 
இடக்கை யோடவன் வலக்னகயும்விழ 
துடித்து ராகவன் முடுக்கினான்கணை 
ஒன்று 
இழுத்துத் தேர்வரு பரியும் பாகனும் 
அழுத்தத் தூணியும் குடையும் படையும் போக 
எதிர்த்த ராவணன் 
ஒருபதுமுடி 
மேலே 
பதைத்து மாமலை 
யினில் விழும் இடி 
போலே 
ராமன் விடுசெஞ் சரத்திற் கொத்துடைப் பத்துப் பனங்காய் என 
நாய்நரி மண்டிக் கடிக்கக் கொக்கரித்து சுற்றிலும் போய்விழ 
ராகவன் இப்படித் தொடுத்துக்கத் தரிக்கத்கத் தரிக்கத்தலை 
ராவணனுக்குச் சரிகட்டிச் சரிக்கட்டிக் கிளைத்துக்கொள 
என்று 
சாக 
ன 
இப்புறம் ராமன் அரக்கன் மாளும் வனக என்ன 
அப்புறம் விபீஷணன் உபாயம் . 
முறை 
பன் 
லட்சுமி சீதையும் காவல் கொண்ட சிறை தீர 
தட்சண சூரியன் தேரும் லங்கை வழி சேர 
ணக்கிடும் காதண்ட 
வணக்கிடும் கோதண்ட 
பட்டு கைபிரமாஸ்தி 
விட்டிடத்தனி ராட்ச 
மனுமதி 
நடுவதில் 
ரம்தனை 
தன் புனை 
ரத்தின மணிமருமத்தின் 
வைத்த அமுர்த கடத்தில் 
மத்தன் விடுகிற சித்திர 
பத்து மணிமுடி தத்தி 
இடையிட்டு 
அடிபட்டு 
ரதம் விட்டுப் 
விழும் மட்டும் 
( ராது ) 


இராம பாணத்தால் இராவணன் இறந்தது 

தூவி முடிக்கயி லாசம் எடுத்திரு நாலுமதக்கரி யைச்சாடி 
சூரியனைத்திசை மாறவிடுத்தொரு சூறையடித்த மிடுக்காலே 
பூவுலகத்தவர் கீழுலகத்தவர் மேலுலகத்தவர் தப்பாதே 
பூசைசெலுத்திட ஆண்மை செலுத்துபு யாசலமிக்க தசக்ரீவன் 
ஆவல்மிகுந்தொரு சீதைபொருட்டினில் வீரமும் வெற்றியும் முக்கோடி 
ஆயுசும்மட்டி டொ ணாத அரக்கரும் ஆடலம் ஒக்க விடுத்தேபின் 
யாவரும் இக்கதை ஆரமுதொப்பென வேதினம் உத்தமர் கற்றோத 
ராமசரத்தினில் மாமலை ஒத்த இ ராவணனிப்படிப் பட்டானே 
அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் 
நிருதனிவ் வாறழிந்தபின்பு சாமிதேரில் 
நின்றிறங்கி இவன் முதுகில்வடு வேதென்றான் 
வரும் முதல் நாள் அனுமான்கைக் குத்தால் வந்த 
வடுஎனவீடணன் சொல்ல மகிழ்த்தானிப்பால் 
அருளும் ஐயன் ஏவலினால் இவனும் போனான் 
அண்ணா அண்ணா என்றே அண்ணன் மேலே 
ஒருமலைமேல் ஒருமலைபோல் வீழ்ந்து கண்ணீர் 
ஒழுகின்றான் பழமை சொல்லி அழுகின்றானே 

கண்ணிகள் 
1-உண்டாற் கொல்லும் விஷம் உலகத்தில் எங்கெங்கும் 
உண்டே 
அண்ணாவே - சீதை என்ற 
கண்டாற் கொல்லும் விஷம் உன்னிடத்திலே மாத்திரம் 
கண்டேன் 
அண்ணாவே 

2. இந்த அநியாயத்தை பிரம்மாவிடம் சொல்ல 
இறந்தாயோ 
அண்ணாவே 
பந்தித்த ஆசையும் உயிரோடேகொண்டு 
பறந்தாயோ 

அண்ணாவே 
3. உள்ளதோ சீதையைத் திருடுவதென்ற என்னை 
ஓட்டினாய் 
அண்ணாவே உலகிலே 
கள்ளனுக்குக் கூவென் றவன்மேல் பகைபோலக் 
காட்டினாய் 
அண்ணாவே 
4. அடி நாளை சாபத்தீடு சீதையாய் வந்ததென்றேன் 
அலைந்தாயே 
அண்ணாவே உடம்பெங்கும் 
சுடுகிற செந்தணலை மடிமேலே கட்டித் 
தொலைந்தா யே 
அண்ணாவே 
5. நினையாதே சீதையைக் குலையும் வாழ்வென்ற சொல் 
நிறைந்ததோ 
அண்ணாவே 
ராமனை 
மனிதன் மனிதன் என்ற வாயும் துடுக்கும் எங்கே 
மறைந்தாயோ 
அண்ணாவே 
6. வள்ளல் கும்பகர்ணன் மாலியவான் சொல்லியும் 
மருண்டாயே 
அண்ணாவே அடங்காமல் 
துள்ளின மாடுபொதி சுமக்கும் என்றாற்போலே பட்டுச் 
சுருண்டாயே 
அண்ணாவே 

7. சுற்றமும் சேனையும் உன் பத்து முடியும் முதல் நாள் 
சோர்ந்தாயே 
அண்ணாவே --- எல்லாரும் 
செத்தபிற காகிலும் ராமனை தெய்வமென்று 
தேர்ந்தாயே 
அண்ணாவே 
பரந்த கயிலாசமும் உன்னுடைய தோளுக்கு 
பற்றுமோ 
அண்ணாவே தோள்மேலே 
சுரந்து குரங்குக் கூட்டம் இப்போ தணியணியா 
தொத்துமோ 
அண்ணாவே 
9. விரிந்த தேவர்க்கெல்லாம் கடைக்கண் கொடாமல் வெடு 
வெடுத்தாயே 
அண்ணாவே 
களத்திலே 
பருந்தும் கழுகும் கொத்த முழுமுழுக் கண்கொடுத்துப் 
படுத்தாயே 
அண்ணாவே 
10. பூமலர் அம்புகளைக் காமன்கை எய்தெய்து 
பொழிந்ததே 
அண்ணாவே இப்போதிந்த 
ராமன் எய்தபிறகு காமன் எய்கிறதெல்லாம் 
இழிந்ததே 

அண்ணாவே 
11. சிறுமதி கொண்டல்லவோ மறுபெண்கள் மேலாசை 
திரண்டாயே 
அண்ணாவே 
அவரவர் 
பொறுமை இடித்தல்லவோ மண்ணென்கிற பெண்மேலே 
புரண்டாயே 
அண்ணாவே
ன்றைக்கெம் 

12. பிரமாதி தேவர்கள் தந்தவரங்கள் எங்கே 
பிரிந்ததோ 
அண்ணாவே 
தருமரா சனுக்கும் உன்னைத் தின்று தொந்தி 
சரிந்ததோ 
அண்ணாவே 

மண்டோதரி புலம்பல் 

நாடிவிபீ ஷணன்இவ்வா றழுதபோது 
நல்லசாம்புவன் தேற்றத் தெளிந்தான் இப்பால் 
பாடல் செய்யும் மடமாதர் அரக்கர் மாதர் 
பாதாள மாதர் முதற் பலரும் சேர்ந்து 
கூடமண்டோ தரியங்கே கொள்கொம் பில்லாக் 
கொடிபோல ராவணன் பேருடல்மேல் வீழ்ந்து 
தேடரிய துணையிழந்த கிளிபோல் வாயைத் 
திறக்கின்றாள் அழுதழுது பறக்கின்றாளே 

கண்ணிகள் 

1. என்னசெய்வேன் என்னசெய்வேன் மைந்நாத் மேைபா லுன்னை 

இங்கேகண்டு நொந்தோன் நொந்தேன் லங்கைமன்னவா - ஐயோ 
உன்னுயிரைக் கொன்றநமன் என்னுயிரும் கைகொள்ளானோ 
ஓடியிதோ வந்தேன் வந்தேன் 
லங்கைமன்னவா 
2 . கண்ணான பேர்களையெல்லாம் புண்ணாக்கி வீடணனென்னும் 
கரும்பையும் வேம்பாக்கிவிட்டாய் லங்கைமன்னவா -- ஐயோ 
பெண்ணான சீதைபிறக்க லங்கை அழிந்துபோம் என்ற 
பேச்சையே மெய்யாக்கியே விட்டாய் 
லங்கைமன்னவா 
3. தினம் இந்த லோகத்திலே நீ தேவராலும் சாகாய் என் 
று 
சிந்தை மகிழ்ச்சி ஆனேனே 
லங்கைமன்னவா - 
வினைபோலிந்த நானிலொரு மனிதனாலேசாவாயென்று 
விதியறியமாற் போனேனே 
லங்கைமன்னவா 
ஐயோ 
ஐயோ 

4. சீதை ஆசையை வெளியில் ஓதாமல் அடக்கிக்கொண்டு 
செருக்களத்தில் தூங்கிறாயோ 
லங்கைமன்னவா ஐயோ 
ஏதையா சொர்க்கலோகத்து மா தருக்குள் உனக்கேற்க 
எந்தப் பெண்ணைக் காண்கிறாயோ லங்கைமன்னவா 
5. எட்டானைக் கொப்பு பிடுங்க ஒட்டாமற் கெட்டியாகக் கட்டி 
இருக்கின்ற மணிமார்பாச்சே லங்கை மன்னவா 
சட்டமாக ராமன் அம்பு பட்டாடைமேல் ஊசிபோலத் 
தட்டாமல் உருவிப்போச்சோ லங்கை மன்னவா 
6 . ஊரிலே சீதைமேல் வைத்த ஆசையிந்த மட்டும் எங்கே 
ஒளித்திருந்து வாதிச்சதே 
லங்கை மன்னவா ரகு 
வீரன்பாணம் உன்உடம்பை எலிவெட்டிச் சோதிக்கிறா போலே 
வெட்டியின்று சோதிச்சதே லங்கை மன்னவா 
7. அனர்த்தமா விளையும் அய்யோ நினைக்காதே சீதையைான்றேன் 
அன்று கேளாமல் வைதாய் லங்கை மன்னவா 
உனக்கு முந்திக் கொள்ளாதமுன் எனக்கு நீமுந்திக்கொண்டாயே 
ஓரவஞ்சகம் செய்தாயே 

லங்கை மன்னவா 
8. நங்கைசூர்ப் பநகிதனான் நங்கையை எடுக்கச்சொல்லி 
நமன் போல் வந்து நின்றாளே லங்கைமன்னவா - ஐயோ 
என்கழுத்தும் பாவியவள் தன் கழுத்தைப் போலே ஆக்க 
எண்ணியே உன்னைக் கொன்றாளே லங்கைமன்னவா
9. அந்தமரம் சீதையை ஆரும் வந்தனை செய்யும் தெய்வத்தை 
ஆரோபோல் ஆசைப்பட்டாயே லங்கைமன்னவா 
இந்தமரத்தை வெட்டினால் இந்தஇடத்திற் சாயுமென் 
றெண்ணாமல் புத்திகெட்டாயே 

லங்கைமன்னவய 
10. வேதன்முதலோர் வரப்பிர சாதத்தால் மூவுலகுக்கும் 
வேந்தன் என வாழ்ந்திட்டாயே லங்கைமன்னவா ஐயோ 
நான் 
ஐபோ 
சீதையாம் புரைமோரிட்டு வாழ்வாம்பாற் கடல் கெடுத்துத் 
தெருவிலே என்னை விட்டாயே லங்கைமன்னவா 

சீதாதேவிக்கு அனுமான் ஜெயசேதி கூறுதல் 
ஆனமண்டோ தரியிவ்வா றழுது சோர்ந்தாள் 
அரக்கனுக்குக் கடன் விபீஷணனும் செய்தான் 
வானரவேந் தனும் தம்பி தானும் செம்பொன் 
மௌலிவைக்க இலங்கையபி ஷேகம் கொண்டான் 
மானவனும் மாருதியை ஏவத் தான் போய் 
வாடியதோர் பயிர்க்குமழை பொழிந்தாற் போல 
சானகிதன் காதில் இரா வணன் போய் வீழ்ந்ததனம் சொல்வான் மகிழ்ந்துசோ பனம் சொல்வானே
பல்லவி 
சாடிக்கும்ப கர்னன் முன்னே 
நாடியகம்பன் படையில் 
போடுமந்தத் தெண்டினாலே ஆடுகளில் வேங்கைபோலே ( சா 1. 
வாரும் வாரும் ராட்சதரே வாரி அந்தலங்கை சாரிசாரி யாகவொரு தானொருத்தனுமேருத்திர வாருமென்று கூவினான் ஊரில் விழத் தூவினான் கேசரிபோல் தாவினான் சாமிபோல் உலாவினான் ஆரநெருங்கிய குதிரைகள் சருகென ஓட்டி - பிணம்பிணமா ஆனைகள் பூனைகளாக விழும்படி வாட்டி - தேங்காய் போல் தள்ளி தேர்தனையே விடுசாரதி தலைகளை மூட்டி - மென்மேலும் வந்த சேனையை வீசி அதோ கதியாகவே மாட்டி - திசாதிசையில் வீரிட்டரக்கியர் கிழ - ஓரிக்குரல் போலே யழ நேரிட்ட ராட்சதர் வீடு ழப் பீரிட்ட இரத்தம் எழ ( சாடி ) - 

சனை -- ஒருகாலே கோடிபேர்க்கொரு குத்தாகப் போடுவான் ஒருபுறம் கொக்கரித்து ராமனைக் கொண் டாடுவான் ஒருபுறம் ஆடுவான் வாலாலே சுற்றி மூடுவான் ஒருபுறம் ஆரடா சேவகன் என்று தேடுவான் ஒருபுறம் மூடன் நிகும்பனவ் வேளையிலே அனுமானே உன்னைதான் கொன்று போடுவேன் என்றொரு சூலம் எடுத் தெறிவானைப் பொருந்தி அவன் தாடையில் ஓரடி போட முழங்கிய சோனை போலவே ரத்தம் டமடிந்தனன் மேலும் மகாபல சுற்றியபோது சாடிசட்டி மூடியிட்ட சூளைபோலே கோடையிடி விழுந்தாற் போலே ஓடிஓடித்தெண்டினாலே ( சாடி )  

அகந்தையா லொருதெண்டு கொண்டு ஆயிரங்கழுதைத் தேரிலே அகம்பன் வந்தடித்தான் முன்னே புகுந்தனுமான் மார்பிலே கழ்ந்த அனுமானும் தெண்டால் தட்டினான் அந்நேரிலே தெண்டுங் கொண்டையும் பிண்டு உருண்ட அந்தப் பாரிலே புகுந்தவன்தன திடக்கையால் அனுமானை அடித்தான் அடிக்க அய்யன் பொட்டெனவே அந்தத் துட்டனைக் கையானே பிடித்தான் - பிடித்துமார்பில் பருந்து குபீரென ரத்தம் இறங்கிட இடித்தான் இடித்தபின்னும் பார்த்தவனாவியைக் கூற்றுவனாமெனக் குடித்தான் முத்திஐயையோ புதைந்து ராவணன் தள்ள உகந்துவரும் நூறு வெள்ளம் மிகும்படையைக் காலன்கொள்ள அகம்பனுயிர் துள்ளத்துள்ள (சாடி ) 

இளையவர் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் 
அகம்பனங்கே படஅனுமான் முதலோர்கள் இருளில் அகன்று தனித் தனுப்போர்செய் திளையவன்பால் அடைந்தார் புகைந்த இரா வினில் மகோ தரன் தேவேந் திரன் போல் போர் செய்தான் இளையவனும் திகைத்தானப் போது முகிந்தபிர மாஸ் திரமிந்திரசித்து விட்டான் தம்பி முதலானோர் படுத்துவிட்டார் அதையறிந்து ராமன் மிகுந்துயரால் வந்துலைவாய் மெழுகுபோல் உருகி விழுகின்றான் துணைவனைப்பார்த் தழுகின்றானே 

கண்ணிகள் 
1. அப்பனே அய்யனே அரும்பிறவியே என் தன் அரசே கண்மணியே லட்சுமணா எப்படிநானுனை மறப்பேன் எப்போதுன்னுடன் பிறப்பேன் னி என் மனம் துணியேன் லட்சுமணா 
2. வன்னமாம் பிரம்மாஸ்திரம் கொடுத்த பிரம்மாவைப்பழி லட்சுமணா வாங்கநீ தொடர்ந்தாயோ என்னுடன் பிறந்தகுறை உசரப்போய் தசரதற்கு லட்சுமணா யம்பநீ நடந்தாயோ 
3. தந்தையையும் சடாயுவையும் கொடுத்ததும் போதாமல்உன் லட்சுமணா தனையும் பறிகொடுத்தேனே இந்தவயதினில் இந்தக்கண் காட்சிகாணநா லட்சுமணா என்னஉடம் பெடுத்தேன் லட்சுமணா 
4. அந்தோநான் களையாகித் தண்ணீர் விடாயெடுத்தால் ஆர்முகத்தைப் பார்ப்பேன் ந்தாரும் காய்கனிகள் அண்ணா என்றழைக்கும்உன் இன்சொல் தான் என்று கேட்பேன் லட்சுமணா 
5. நேரமறிந் தென்வயிற்றில் காய்கனியை இட்டநீ நெருப்பை இட்டாயோ நீ லட்சுமணா ஆரையும்விட்டென்னை விடேன் என்றாயே என்னைக்கூட அகல விட்டாயோ நீ லட்சுமணா 
6. சோற்றிலேகல் லெடுக்கறியேன் முகவணைக்கல் எடுப்பேனென்ற சொல்லையோ நான் எடுத்தேன் லட்சுமணா ஆற்றி நான் முடிபெறுமுன் வந்தவிபீஷணற்கு லங்கை ஆள முடி கொடுத்தேன் லட்சுமணா 7. படிக்கும் உன்புத்திதள்ளி உனக்கும் வானரங்களுக்கும் பழிகாரன் ஆனேனே லட்சுமணா பிடித்ததே பிடியாகப் பெண்வார்த்தை கொண்டுநான் பிழைமோசம் போனேனே லட்சுமணா 
8. நீமாள என்னுயிர் போம் பரதற்கு இதுகேட்கில் நிமிஷத்தில் உயிர்போமே லட்சுமணா தாய்மார்க்கும் உயிர்போமே நான் பிறக்கச் சூரியகுலம் தான் துளக்கம் ஆச்சே லட்சுமணா ஸ்ரீராமரை ஆகாசத்தில் சகலதேவதைகளும் தோத்தரித்தல
9 இந்தா வந்தேன் வந்தேனென் றிளையபெருமாள் முகம்நோக்கி நொந்தாயாசம் பெறமலிந்து நோக்கும் பெரிபெருமாள் முன் அந்தோ உனக்கும் கவலையுண்டோ ஐயாஎன்றே அந்தரத்தில் வந்தார் தேவர் சாமிமுகம் மதித்தார் இறங்கித் துதித்தாரே 

( உன் ) உன்னது மகிமையை இன்னதென்றே வாராலும் உரைக்கல் ஆமோ ராமா 
அநுபல்லவி நின்னோடு நாபியில் பிரமா ஒருத்தனாலே நிகரில் சார சரங்கள் சகலமும் தரலாலே நன்னி அரக்கருக்கு நீபயப்படுவது நாயமோ சாமிஉன் தன் மாயமோ புவிமேலே ( உன் ) 
சாணங்கள் ஆவாயே 
1. முப்பரம் பொருளுமாய் முப்பரம் பொருளுக்குள் மூலமுதற் பொருளும் அப்பனும் அன்னையும் தம்பியும் உனக்குண்டோ அவர்கள் வருத்தங்கண்டு நோவாயே இப்படி உன்சரித்திரம் இதுவே நிலைவரம் என்றால் அத்தையும்கூடக் கடந்தாயே செப்பிலும் இல்லை பந்திலும் இல்லை உன் செயல் சீமையிலே தகப்பன் சாமி என் பது நீயே 
2. அத்தி மரத்தினிலே தொத்திய கனிபோலே அண்டம் என்னும் கனிகள் உன் மேலே தொத்தி இருப்பவற்றுள் ஒருகனியிற் செனித்த துஷ்ட அரக்கர் என்னும் புழுவாலே கஸ்தி அடையலாமோ சிற்றூரில் செல்வக்கூத்து கட்டுகிறாய் என்ன உத்தமனே உன்கீர்த்தி எத்தனைபேர் சொன்னாலும் ஊசிக் கண்ணாலே ஆகாசம் பார்க்கிறாப் போலே ( உன் ) ஒருகாலே ( உன் ) ரகநாட்டம் மாறாட்டம் 
3. அம்பரீஷன் பிரகலாதன் முதலோருக் அருளிச்செய்தாயே அவனுக்கி நம்பின எங்களைஇந்த அரக்கருக்கு நடுங்கச் செய்ததென்ன தம்பியும் பிழைக்கின்றான் உன்தனக் கிவர் என்ன சண்டமா ருதத்தின்முன் எம்பிரானே நீநொந்தால் எங்களுக்கொருகதி இருக்குமோ தேவர் என்றும் தரிக்குமோஎங் சருகோட்டம் கள் கூட்டம் ( உன் ) 

ராமலட்சுமணருக்கு சீதாதேவி இரங்கல் 
வானவர் இப் படித்துதிக்கத் தூதர் சென்று மன்னவனே உன்மகனால் மனிதச் சாதி ஆனவரும் குரங்குகளும் முடிந்தார் என்றார் அவனுமங்கே புஷ்பகவி மானத் தேற்றிச் சானகிக்குக் காட்டுமென்றான் கண்டாள் சீதை தணல் அடுத்த வெண்ணெய் போல் உருகிவாழ நானொரு பெண் பிறக்க இவ்வா றாச்சோ என்று நலிகின்றாள் நொந்துநொந்து மெலிகின்றாளே 

கண்ணிகள் 
1 . என்னசெய்வேன் சாமிநான் என்னசெய்வேன் சாமிநான் இந்தக் கோலம் காட்டவோ வந்தீர் துன்னிக்கைக் கொட்டினது வாய்க்கெட்டாமலே போக தோதகம் ஏன் ஒருமிக்கத் தந்தீர் 
2 . கண்ணே அமுதே கருணாகரரே என் மனக் காவலோடே இத்தனை மண்ணில் இருந்ததுயிர் மறைந்த திருமேனியை மார்பில் அணைப்பதற்கோ நாளா வாளா தானோ 
3. நகரில் இருஎன்ற உம்மை அகலேன் என் றோர் பிடியா நான் தொடர்ந்த திதற்குத் பகைவர் இலங்கையிலே நீர்மடிந்தபிறகும் பாவி நான் உயிர் தரிப் பேனோ 
4. ஏகபோக மாகவே இருந்த என் பிராணேசரை இழந்த உயிர் எமன் கொண்டு போகமாட்டாமல் இந்தப் பொல்லாத் துயர் கடலில் போட்டுவிட்டானே என்னைக் கண்டு 

5. ஊர்மனிதர்க் கன்றுநீர் பதினாலு வருஷம்போய் உடன்வருவேன் என்றதும் தப்போ ஏர்பிடித்தோன் என் செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் என்பார் அதுவோ தான் ஒப்போ 
6 . ஆசைமான் பின்போ என்றாள் காரண காட்சிக்கெல்லாம் அடிவேர் இவள் என்றறி வீரே  மோசம் செய்தாளிவளை முகம்பார்க்கல் ஆகாதென்று மூடிக்கொண்டீ ரோகண்ணை நீரே ஏனோ 
7. வீட்டில் என் சாமி அன்னை வார்த்தை தட்டாமல் வந்து விரதங் கொண்டார் என்பதெல்லாம் காட்டில் எரித்த நிலா கானலில் மழையாச்சே கைகண்ட பலன் இது தானோ 
8 . போமோ அருமையா கிய ஓர் பெண் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் அரக்கர் செயம் பொருந்தப் தருமமே செயம் பெரு மாளேதுணை என்றும் என் சாமிக்கப செயம்வரல் ஆமோ 

9 . காதக இந்திரசித்தன் சூதோ அன்றி இதென்ன காரணமோ நான் முன் செய்த சதியோ ஆதிமறை பொய்த்தாலும் பொய்யாப் பிராண நாதரை அலையக் காண்பதும் பாழ்த்த விதியோ 
10. அய்யோலட் சுமணாநீ என்சிறை மீட்கும் முன்னே ஆவிஉனக்கு சும்மாப் போச்சே கையாலே நான் பாவி உன் அண்ணன் கைப்பிடித்த காலபலம் அப்படி ஆச்சோ 
11 . ஓதும் டேச் ஈம்காணேன் மூச்சும் காணேனேசாமிக் குயிர் உண்டோ இல்லையோ சொல் மகனே ஏதும் அசைவும் காணேன் இருவர்க்கும் ஓரெழுத்தா எழுதி வைத்தானோ சதுர் முகனே 
12 . மையான காட்டில் அண்ணன் மெய்வருந்தாமல் தூங்க மலர் கொய்து மெத்தையிட்ட நீயே வெய்யராட்சதநீசர் எய்யும் அம்புகள் என்னும் மெத்தை மேலே கிடக்கி றாயே 
13 மெய்காணும் சாமிக்கும் உனக்கும் பழிகாரி நான் ழுந்தாலும் என்பாரல்லலோ நீலி கைகேசி மகராசி கறுவிக் கறுவி எல்லாம் கட்டிக் கொண்டாளே பாக்கிய சாலி 
14. தாய்பகை வந்தபோது நீயிருந்தண்ணனைக் காட்டிக் கொடாதே என்று தனியே 496 தாய்சுமித் திரை சொன்னாளே அதுக்கோ நீ அண்ணன் முன்னே சாய்ந்து கிடக்கிறாய் பிள்ளைக் கனியே பொய்யோ 
15. புத்திரனே கண்மணியே கைத்துணையான உன்னைப் போக்கடித்தேன் நான் பாவி வற்றி வடகமாயும் இத்தனைப் பாடுங்காண வைத்ததே பாவி தெய்வம் அய்யோ 
16. எப்போதும் போலேசாமி செயிப்பார் என்றிருந்தேனே இங்கே கண்டேனே அலங் கோலம் குப்பை உயர்ந்தென்ன கோபுரம் தாழ்ந்தென்ன கூடிச்சோ நீசருடன் காலம் 
17. தாய்மார்கள் இருவரும் பரதனும் இதுகேட்கத் தரிக்குமோ அவரவர் தேகம் கேவலம் பழிகொண்டேன் எனக்கினி ஒருக்காலும் கிடைக்குமோ நல்லபடி லோகம் 

திரிசடையம்மாள் சீதாதேவியைத் தேற்றுதல் 
பரிந்திந்த வகையழுது சாமிமேலே பதைத்துவிழ எழுந்தவளைக் கட்டிக்கொண்டு விரிந்திடும் கண் ணீர் துடைத்துப் பிறர் கேளாமல் மிகப்பசித்தேர் களைத்தேற்றும் அமுதுபோல சரிந்த பயிர் களைதேற்றும் மழையைப் போல சவலைதனைத் தேற்றுகின்ற தாயைப் போல தெரிந்ததிரி சடைஎன்பாள் சீதைதன்னைத் தேற்றுவாள் மனக்குறையை ஆற்றுவாளே  

பல்லவி ஏதுக்கு வருந்துகிறாய் அம்மா ஏதுக்குவருந்து கிறாய் சும்மா ( ஏது ) 

அநுபல்லவி கேதப்படாதே தெய்வம் கிணறு தப்பி என்ன பொது என்பதழிந்ததோ துர விலே விழுந்ததோ ( ஏது ) 
சரணங்கள் 
1 . உன்னண்டை மாயமான் என்றும் சனகராசன் என்றும் மயக்கங் காட்டினான் மற்றை நாள் வெளியாச்சது போல் இந்திர சித்தும் செய்கிறான் சிலசண்டை ஓயவேபெரும் பேயும் நாயும்தின்ன உருளுது பாரிவன் தலைமண்டை உத்தமராமனை அரகர் கெலிக்கும்போது உள்ளங்கையினில் முடிக்கிறேன்பார் ஒன்பது கொண்டை ( ஏது ) 
2. அனுமான் என்பவன் தனதாகவே வந்து அடிமைக் கடிமையாகி உழைக்கிறான் அவனாலேயே உன் கணவன் தம்பியுடனே தவறாதபடி பிழைக்கிறான் நினைவேதோ லட்சுமணன் இளஞ்சூரியன் எனவே முகத்தொளி தழைக்கிறான் நிமிஷத்திலே ராவணனையும் படையையும் நமனும் வந்து தன் உலகத்துக் கழைக்கிறான் ( ஏது ) நீங்குமோ 
3. சொப்பனமும் உன் தன் கற்பும் சகுனமும் சுப பலன் கொடுக்காமல் சொல்வாய் மங்கலம் இல்லார்களை இந்த தூய விமானமது தாங்குமோ வாங்குமோ ஒப்பில்லா ராகவன் இந்த ராட்சத அற்பருக்குப்பின் ஒருக்காலே பயந்திருக்கிறாயே என்ன ஒருகுளப் படிகண்டு திரைகடல் ஏங்குமோ ( ஏது ) 

அனுமார் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுவருதல் 
திரிசடை சொல்லாற் சீதை தேறிப்போனாள் சிலைவீரர் பாடும் சேனைகளின் பாடும் கருதிவிபீஷணன் சொல்ல அனுமான் சாம்பன் கட்டுரையால் சஞ்சீவி மலையை நாடி இருபுயமும் தூக்கியண்ட கோள மட்டும் எட்டும் விஸ்வரூபங் கொண்டினிமேல் நீங்கள் வெருவிடவேண் டாம்நான்போய் வருவேன் என்று விளம்பினான் அனுமந்தன் கிளம்பினானே  

பல்லவி சஞ்வி ( பாய் ) பாய்ந்தானே அனுமந்தன் பாய்ந்தானே பர்வதத்தைக் கொண்டு வந்தானே 

அநுபல்லவி சேர்ந்தசாம்புவன் உரைக்கையாலே திரிவிக்கிர சாமிபோலே தேவர்மகிழ மூவர் புகழ திசையுள நீளங் கண்டு விஸ்வரூபங் கொண்டு ( பாய் ) 

சரணங்கள் 
1. தெற்கிலே நின்று வடக்கை நோக்கி விஸ்வரூபத்தைப் பெருக்கி - நட்சத் திரமண்டலமும் கிழித்தே அண்டகோளத்தை முட்டி. நெருக்கி - ஒண்டி நிற்கப்போர்த் திசைஎட்டினும் டமில்லாமலே அடுக்கி - பெரு நிலத்தை உதைத்து விசைத்துக்கிளம்பி நெடியகழுத்தைச் சுருக்கி - ஒரு கைக்குக்கை ஓராயிரம்யோ சனைமட்டும் நீட்டி - நிமிர்ந்து கணகணெனவே வீரவாலின் மனிதனை ஆட்டி தனது விக்கிரமபுசபல பாரக்கிரமம் அடங்கலும் காட்டி விசையிலும் அதிவேக மாகிய விசையை முன் ஒட்டி -- எங்கும் - தகப்பன்  - -- விளங்கும் மக்கிமலைகள் வேர் அறுந்தாட மரங்கள் செடிகள் பிடுங்குண்டோட சொர்க்கத்தவரும் பதற பக்கக் கடலும் கொதற திக்குத் திசையும் கதற சக்கிரக் கிரியும் சிதற ( பாய் ) 

2. இலங்கைவிட் டொன்பதாயிரம் யோசனை மயகிரியில் தாண்டி அந்த மயம்விட் டொன்பதாயிரம் யோசனை ஏமகூடத்தில் தாண்டி அப்பால் சலங் கொண்டெண்பதினாயிரம் யோசனை நிஷதகிரியில் தாண்டி - நிஷதமும் விட்டெண்பதினாயிரம் யோசனை தங்கப்பெருமலை தாண்டி - அங்கே துலங்கும் வெள்ளியங் கயிலை ஈசன் உமைக்குக் கையாலே வாயுவின் சுதன் இவன் என்று காட்ட அவனைத் துதி செய் தப்பாலே அலங்கலின் மாயவனைப் பணிந்து தா வி விண்மேலே போகையில் அருக்கணைக்கண்டு விடிந்து போச்சென்று திகைத் தொரு சாலே நிலந்தனிலே அங்கே பகலென்றறிந்து நீலமலை கண்டப்பாற் பறிந்து விலங்கிப்புயல் விண்டொழிய தொலைந் தெட்டரவும் கழிய குலுங்கித் தறையும் குழிய கலங்கித் திசையும் கிழிய ( பாய் ) 

3 அரிய மருந்தைக் காக்கும் தெய்வங்கள் அடங்கலும் வந்து தடுக்கி ஆரடா என்று கேட்க ராமதூதன் நான் என்று கடுக்கி ஒரு பெரிய சக்கரம் சுழன்று வந்தது போமட்டும் நெஞ்சை ஒடுக்கி பெலத்தங்கிருந்த காவற்பேரையும் பின்னிட்டோடவே முடுக்கி - அங்கே தரையிலே ஆயிரம்யோசனை தாழ்ந்துவே ரோடி - மேலே தலை எடுத்தாயிரம் யோசனை மட்டும் சூடி - ஆர்க்கும் தெரியவே ஓராயிரம் யோசனையொடு மூடி - நின்ற தீர்க்க மலையை ஒருகையாலே தூக்கிப்பந் தாடி - திரும்பி வருகையில் அந்தவாடை சுழன்று வஞ்சகன் பிரம்மாஸ்திரம் கழன்று ஒருலட்சுமணன் தேற - பெருகிப் புவனம்தேற தருமப்பயிரும் தேற -- திருலட்சுமியும் தேற ( பாய் ) பின்னும் - கிட்டி 

ஸ்ரீராமர் லட்சுமணருக்காகப் பின்னும் இரங்கல் 
மறம்மிகும் அனுமான்பாய்ந்து வருமுன்னே சாம்புவ : னும் திறல் விபீஷணனும் தேறத் தேற்றுவார் தம்மை நோக்கிக் கறவைதன் கன்றைத் தேடி கரைகிறாற் போல ராமன் பிறவியை எண்ணிவேதை பெருகுவான் உருகுவானே 

ஆனாலும் என்னைப் போல்இனி ஆர்க்குண்டிந்த அநியாயம் ( ஆ ) 
அநுபல்லவி மானாகரன் தசரதன் வருந்தையிலே இப்படி பிள்ளைத் தவம் இருந்ததோ காரணம் ( ஆனா ) 
1. ஆரார்க்கென்ன செய்யினும் தம்பிபோல அதுவந்தென் அவதி துடைக்குமோ நேரே ராவணனைக் கண்டுவிட்டு நெஞ்கிடந்து புடை புடைக்குமோ தீராஎன் காலப்பிழை வெண்ணெய் திரண்டு வரச்சேதாழி உடைக்குமோ தாரம் தேடக்கிடை யாதோ என் தம்பியைப் போல் எங்குந்தேடக் கிடைக்குமோ ( ஆனா ) 2. சற்றும் தம்பி வார்த்தையை எண்ணாமல் தயங்கிய மானின் பின்னே போனேனே கத்திக் கொண்டுங்களைத் தேற்றிவந்து கழுத்தறுத் தேனே நான்தானே உற்ற தகப்பனும் சடாயுவும் ஒருபிற வியும் இழந்தேனே பெற்றாரையும் பிறந்தாரையும் கொன்றேன் பெண்ணாசை கொண்டபித்தன் என் பதுநானே ( ஆனா ) 
3 சதிகார ராட்சதப் பையல்கைக்கு தாழுவதென் தம்பிக் கையோ 501 பொய்யோ மதிமோசமா அய்யனைக் கொண்டுவந்து மடிப்பாகக் கொடுத்தேன் இதவாக தருமமே செயிக்கும் என் றிருந்த எனக்கது கதையோ கரும்புக் குழுதபுழுதி காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆமோ மெய்யோ அய்யோ ( ஆனா ) 

தம்பிக்காக இரங்கின ஸ்ரீராமரை சாம்புவன் தேற்றுதல் 
இளையவனை நினைந்திப்படிக்கு ராகவன் புலம்ப எழுந்தான் சாம்பன் வளையும் வகைவணங்கிநின்றான் சாமிநீ நொடிப் போதும்வருந்த வேண்டாம் விளையுமுயிர் தருமருந்து கொண்டுவருவான் அனுமான்விழுந்தோர்க்கெல்லாம் களையகலும் அது செய்யும் குணம் என்பான் காண்பாயிக்கணம் என்பானே 

பல்லவி இந்தவேதை நீகொண்டால் சாமி - இனி எந்தவிதம் பிழைக்கும் பூமி ( இந்த ) 
அநுபல்லவி சந்ததம் உனது தர்மத்தாலே தழைப்போம் தம்பியும் நீயும் எல்லாரும் பிழைப்போம் ராமா ( இந்த ) 
சரணங்கள் . 
1-அளந்துள்னை நானறிவேன் உனக்கொன்றும் குறையில்லை அலைகடல் கடையச்சே நாலுமருந்தன்று வளர்ந்து வடகுருவில் ருந்ததைக் கொண்டுவர மாருதி கிளம்பினான் பாய்ந்து சென்று பிளந்தது கூட்டும் ஒன்று படைகரைப்ப தொன்று பிராணன் கொடுப்பதொன்று பெலன்கொடுக் கிறதொன்று களங்கமில் லாமல் வரும் அதுமுன்னாகமலை கலங்கினாலும் மனம் கலங்கா தவனே இன்று ( இ ) 

2 தன்னைப் படைத்த பிரம் மாவையும் பிரம்மாஸ்திரம் சாடும் உயிர் குடித்துப் போடும் அதன் கடூரம்  
3 . பின்னும் பிரம்மாஸ்திரமும் அந்த மருந்தைக் கண்டால் மெய்யை விட்டுக்கழன்று செய்யுமே நமஸ்காரம் பின்னைத் தம்பிகையாலே அரக்கர்படு வதெல்லாம் பெருக்கத் தெரியும் சற்றே பொறுபொ றென்னவிசாரம் பன்னிச்சொல் வதென்ன முன்னாள் சண்டையொரு பாக்கும் இனிமேற் சண்டை தோப்பும் ஆகுமிந் நேரம் ( இந்த ) 
ஆரும் அறியார் அந்த மருந்திருக்கும் இடத்தை அடையாளம் சொன்னேன் விஷணுசக்கரம் காவலுண்டு பேரும் ஊரும் அறிய அத்தை இந்தமட்டுக்கும் பிடுங்கிக் கொண்டுபோன பேர்களும் இல்லைபண்டு சாகும்வாயு வேகம் மனவேகமா அனுமான் தருவான் நொடிக்குள் இங்கே வருவான் அதனைக் கொண்டு நேரும் உன் காரியம் உனக்கேசெயம் அய்யா நெருப்பு மெழுகுபோலே அடிக்கடி மணம்பிண்டு ( இந்த ) 

தம்பிமுதலானோர் எழுந்ததற்காக ஸ்ரீராமர் அனுமாரைப் புகழ்தல் 
வெம்பியிந்த விதம்சாம்பன் தேற்றும் போது விக்கிரம மாருதி மலை சஞ்சீவி தன்னை பின்புகளத் தினில் வைத்தான் ஒருபிர்மாஸ்திரம் பிரிந்திடவே பரிபூர்ணச் சந்திரன் போலே இம்பர் இளையவனும் வெள்ளம் ஏழுபத்தும் எழுந்திடப் பூ மலர்தேவர் பொழிந்து வாழ்த்தத் தம்பியைப்போல் எழுந்த இராகவன் விசாரம் சாடினான் அனுமனைக்கொண் டாடினானே  

பல்லவி அனுமானே நீயே - கனவானே ( அனு ) 
அநுபல்லவி தனதா எங்கட்குப் பிராண தாரைநீ வார்த்தாயே ( அனு ) 

தாமே நாமே சரணங்கள் 
1. நமது துணைவரும்வா னரர்களும் நிமிஷத்துன்னால் உயிர் நிலைபிடித் தோமே சுமதலை உனக்கென்றே துணிந்தோம் எமலோக பரியந்தம் இனி சாதிக்க லாமே ( அனு ) 

2 . ஒன்றும் அசைவில்லாமல் உடம்பையும் மறந்தோம் கொன்ற உயிர்களை நீ கொடுக்கவே சிறந்தோம் அன்று தசரதன் பெற் றாருயிர் இறந்தோம் இன்றுனது வயிற்றில் இருவரும் பிறந்தோம் ( அன்று ) 
3 விழிபோலும் என் தம்பி மெய்யுயிர் போயே முழுகாதபடி காத்தாய் முழுதுங்காப் பழிகாரன் முன் இந்தப் பயம் தீர்த் அழியாத சீரஞ்சீவி ஆயிருப் பாயே ( அனு ) பாயே தாயே இலங்கையில் வானரர் நெருப்பிட்டுக் கெர்சனை செய்தல் 
கட்டி உவந்தனு மத்துதி ராகவகர்த்தன் உரைத்தளவில் தட்டற அண்டர் இறைத்தனர் பூமலர் தத்தையர் நிர்த்தமிட மட்டற வெந்து பொடிப்பொடி யாகவளைத்து நெருப்பதனைக் கிட்டி. இலங்கையில் இட்டனர் வானரர் கெர்ச்சனை இட்டனரே 

இந்திரசித்து மாயாசீதையை அனுமார் முன் கொண்டு வருதல் 
இத்தலையில் இவரார வாரங் கேட்டான் இலங்கேசன் உள்ளுடைந்தான் உடனே இந்திர சித்தெழுந்தான் சஞ்சீவி மலையை முன்போல் செலுத்திய மாருதியும் வந்தான் எதிர்த்துக் கொண்டான் விந்தையினால் ஒருத்தனை அந்நேரந் தன்னில் மெய்ச்சீதை வடிவாக்கி வெட்டுவேன் என் றத் தலையில் கைத்தாலத்தில் வாளொன் றேந்தி ஆட்டினான் மாயையினாற் காட்டினானே 
( மாய ) 
பல்லவி 
மாயச்சீதை கொண்டிந்திர சித்தனு மான்முன் வந்தானே அநுபல்லவி தீயலங்கை மேலைவாசலிலே மந் திரத்தாலே தந்திரத்தாலே செய்த -- ( மாய ) 
சரணங்கள் - 
அதிரவே மெலிந்து கலை 
1. அளப்பில்லா வெகு களத்தோடே பேரிகை அடித்துக்கொண்டு விளைத்த சண்டைகள் வீணாச்சே என்று விகடங்கள் படித்துக்கொண்டு உடல் நெளிக்க மயிர்தொட் டிழிந்திப்பல்லை நெற நெற என்று கடித்துக்கொண்டு மண்டை பிளக்க வெட்டுகிறேன் பார் எனவேகத்தி பிடித்து கொண்டுதுடி துடித்துக்கொண்டு ஒரு ( மாய ) 
2. வீரமாம்புலி வாய்மான் போலவள் குறைந்து கொள்ள - மழைத் தாரையா விட்டழுத கண்ணீர் முலைத் தடங்களில் நின்றைந்து கொள்ள சோரவே புரண்டறுந்த உடைமைகள் சுற்றிலும் இறைந்து கொள்ள அய்யா மாருதியே முறையோ என்றவள் வெட்கம் மறைந்து கொள்ளக் கண்ணில் அறைந்து கொள்ள 
3. நேசமுள்ள அனுமானே இங்கேசற்றே நில்லடா சொல்லுகிறேன் வாள் வீசிநான் இந்தச் சீதை தன்னை உன் தன் விழிமுன்னே கொல்லுகிறேன் மறு ே யோத்திக்கும் செல்லுகிறேன் கேசிபரதன் எல் லாரையும் வேருடன் கொல்லுகிறேன் உன்னை வெல்லுகிறேன் - என்று ( மாய ) ஒரு ( மாய ) - - 

இந்திரசித்து வெட்டின சீதைக்காக அனுமார் புலம்பல் 
வந்தபாதகன் இந்திரசித்தென்பான் மாயா சீதையை வளாலே விந்தை மாருதி நல்ல வார்த்தை சொலவும் துணியாவீசிப் போட்டான் பந்தமாம் அயோத்தி மேலே போக்குக் காட்டி நிகபலையிற்சேர்ந்தான் சிந்தை மாருதிகண்டு சோம்பினான் அழுதழுது தேம்பினானே 
எது தலகாம்போதிராகம் ஆதிதாளம் บอล இதுக்கோ நான்பட்டது சும்மா பாவி அனுமான் னிமேல் நான் என்ன செய்வேன் அம்மா ( இது ) 
அநுபல்லவி விதிக்கும் என் எண்ணம் போச்சே விழலுக் கிறைத்தநீர் ஆச்சே ( இது ) 
சரணங்கள் 
1. ஓம் என்று முன் தூது வந்தேன் உன்உயிர்க்குக்கேடு தந்தேன் ஆம்என் றெப்படி செல்வேன் ஐயனுக்கெப்படி சொல்வேன் சாமி என்னென்று கேட்பான் தாய் நீ இருந்தாலல்லோ மீட்பான் தீமைதானேமே லிட்டதோ தெய்வமும் தான்கண் கெட்டதோ ( இது ) 
2. அன்னமே தாயே என் தன்னை அறிந்தும் இந்திரசித் துன்னை பின்னமே செய்திட நானே பிரதேம் போலிருந் தேனே சொன்னசஞ் சீவிக்கா தாண்டி சுருக்காகநான் உன்னை வேண்டி என்னென்ன செய்தாலும் அங்கே இப்படி ஆச்சுதே இங்கே 
3. அருந்ததி தொழும் பெண்ணே அனைவருக்கும் இரு கண்ணே விரும்பும் உயிர்க்குயிர் ஆயே விளங்குகின்ற என் கரைந்து நானுன்னைத் தேடி கண்டேன் என்று முன் ஓடி இருந்தாள் என்றவா யாலே இறந்தாள் என்னவோ மேலே தாயே --- 

சீதைக்காக இரங்குகிற ஸ்ரீராமரை லட்சுமணர் முடுக்குதல் 
அஞ்சனைபா லகனிந்தப் படிக்கு நொந்தான் ஐயன் இரா மனுக்குப்போய் அறிக்கையிட்டான் செஞ்சிலை வீரனுமறிந்தான் எறிந்தான் வில்லைத் தேடினான் வாடினான் தியக்கத் கொண்டான் தன் செயலா னதுமறந்தான் அந்த வேளை தம்பியும் அப் படிதளர்ந்தான் இனிமேற்சாமி என் செயலா வது நமக்கும் இருப்பே தென்றே என சொல்வான் லட்சுமணன் சினம்சொல்வானே . 

 
பல்லவி தேவிபோனபின் 
இனிமேல் யோசனை ஏதைய்யா இரங்கினால் அகா தையா ( இனி ) 
அநு பல்லவி 
உனது கவலை சொன்னால் ஊரார்க்கென்ன நஷ்டியோ சினம் எங்கே போச்சுதையோ சீவன் கருப்பட்டியோ 
சரணங்கள் 
1. இலங்கை உள்ளாரும் தேவர் எவரையும் இப்போது நேரே குலங்களோடும் கொல்லாவிட்டால் கொஞ்சம் சொல்லி நகைப்பாரே புலம்பல் ஆமோ இன்னம் சற்றே பொறுத்தால் எதிர்த்த பேரை விலங்கிலும் போடுவார் அடிமை வேலை செய்யச் சொல்லுவாரே ( இனி ) 
2. விலக்கவும் சீதையைப் பாவி வீசினான் என்றனுமான் சொன்ன கலக்கம் கொண்டாய் தர்மத்துக்கிது காலமோ அல்லவோ சின்ன கொலைத் தொழில் செய்தப் பாலெங்கும் கொளுத்துவாய் நெருப்பாய் மின்ன தலைக்குமேல் ஓடியவெள்ளம் சாண் ஓடிஎன்ன முழம்ஓடி என்ன ( இனி ) 
3. நாட்டிலரசும் போச்சுதுன்னுடைய நன்மையாலே வந்ததெண்டம் காட்டிலும் வந் திந்தக் கொள்ளை கட்டிக்கொண்டோ மேதினகண்டம் 
பூட்டிநீ வில்லை வளைத்தால் பொடிப்பொடியாமேமூ தண்டம் ஆட்டங் காட்டலாமோசாமி அடியேன் சொன்னபடி எடுநீ கோதண்டம் ( இனி ) 

ஸ்ரீ ராமரை அனுமார் முடுக்குதல் 
சினமா இப்படி இளையோன் உரைக்க இந்திர சித்தயோத்தி யின்மேலே போன போக்கை அனுமானும் சாமியுடன் சொன்னான் சாமி ஆவிதடு மாறினான் அந்த வேளை புனைவீரப் படைகளையும் உமையும் கொண்டு போய் அரக்கன் முன்குதிப்பேன் அல்ல என்றால் முனையாதா னேபொருதிக் கொல்வேன் என்று முடுகுவான் மாருதியும் கடுகுவானே 

பல்லவி 
அனுமான் நானிருக்க இதுக்கோ இந்தயோசனை சாமி இதுக்கோ இந்தயோசனை சாமி ( இது ) 
அநு பல்லவி 
பதைக்கிறேன் இந்திரசித்தை உதைக்கிறேன் அவனைநான் வதைக்கிறேன் அயோத்தியில் புதைக்கிறேன் அதுக்கென்ன ( இது ) 
சரணங்கள் நீட்டி - ராவணன்தன்னை
1. சுற்றிய மதில் ஏழும் எற்றி ஊரிலே கையை கொத்துப் பனங்காய் போலே பத்துத்தலையும் பிடித் சித்தே என்றவனங்கே கத்தி அலறும்படி தாட்டி மகனே இந்திர மாட்டி - ஆட்டுக்குட்டி போல 508 ஊட்டி மொய்த்த அரக்கர்களைக் குத்திக் கழுகுக்கிரை பாராய்என்சாமி சுற்றிலே லங்கை நகரத்தைப் பிடுங்கி ஒரு பந்தைப் போல் தூக்கியங் கெத்துகிறேன் அடியேன் ( இது ) 
2. துடுக்காய் என் தாய் முன் கத்தி எடுத்தான் அவனுக்கிந்த மிண்டேன் - கொல்லாதே என்று படித்துப் படித்துச் சொல்லி அடிக்கடி வேண்டிவேண்டிக் கொண்டேன் -- கேளாமற்பாவி முடுக்கி வீசக்கண்டு துடித்துத் துடித்து மனம் விண்டேன் - பரதன்மேலே வடக்குத் திசையை நோக்கி நடக்க என் கண்ணாரக் கண்டேன் உத்தாரந்தந்தால் பிடிப்பேன் ஒருகடியாக் கடிப்பேன் அவன் உயிரைக் குடிப்பேன் பழிக்குப்பழி முடிப்பேன் என்னலா காதோ ( இது ) 
3. பூத்தபுவனமெல்லாம் காத்திட வந்த பரந் தாமா - உன்வில்லுக்குமும் மூர்த்திகளாகிலும் பாத்திரரோ ரகு ரமா தர்மம் செயம் என்ற சாத்திரமும் உனது தோத்திரமும் தப்பிப் போமா நம்பினதேவர் பேய்த்தனம் கொள்ள என்ன கூத்திது நீவருந்தல் ஆமா சேனையும் தோளில் ஏற்றி உம்மையும் நொடி மாத்திரத்துக்குள்ளாக நேத்தியாக் கொண்டுபோய் அயோத்தியிற் குதிக்கிறேன் - ( இது ) --- 

சீதையின் இருட்பைக் கண்டுவந்த விபீஷணர் ஸ்ரீராமருக்கு அறிவித்தல் 
அளப்பரிய அனுமன் இதுசொல்ல விபீஷணன் அதனை அறிந்தான் நான் போய் வளப்பமெலாம் கண்டுவந்து சொல்வேன் என்றிலங்கையிலோர் வண்டாய்ப் போனான் 
களங்கமிலாச் சீதையையும் நிகும்பலையை அரக்கன் செய் கவடும் கண்டான் உளக்கவலை கடல் கடக்கக் கரை செய்வான் சாமிமுன்னே உரைசெய் வானே . 

பல்லவி 
இருக்கின்றாள் தாய் அசோக வனத்தினில் ருக்கின்றாள் சாமி ( இருக் ) 
அநுபல்லவி 
இருக்கிறாள் நமக்கொரு ராவணன் குடிக்கொரு பாக்கியம் உற்றாற்போல சூனியம் வைத்தாற்போல ( இரு) 

சரணங்கள் - என்று 
1. மோதுவேன் என்றும் இடிக்கிறேன் என்றும் மிண்டு முறைமுறையே சொல்லும் வாதரக்கியர்முன் புலிக்கூட்டத்தில் ஒரு மான்போல் மனம் பிண்டு தீதிலாஒரு ராமா மிர்தமே சீவனமாக உண்டு - ரகு நாதனே உன்கைவில் ஓசையும் வா கண்டு னரஓசையும் பரிபூரணம் கொண்டு 
2 . -- நல்லது சொன்ன முறைபிசகிச் சிஷ்டர் எண்ணமழிந்து துஷ்டர் எண்ணமுமே முற்றுமோ தர்மமே செயம் என்னநாலு வேதங்களும் ஆறு சாஸ்திரங்களும் வீண் கத்துமோ ன்னதே மெய்யானால் சந்திர சூரியகதி இரண்டும் இங்கே சுற்றுமோ என் தன் அன்னையைத் தொட்டாலவன் இன்னமும் இருப்பானோ அருக்களிப் பேதுக்கையோ நெருப்பைப் புழு பற்றுமோ 
3. அந்த நிகும்பலை யாகம் செய்யப் போனான் அறிந்தேன் அவன் சூதை சாமி உன் தன் அயோத்திக்கவன் ஓரடிவைத்ததில்லை உனக்கேன் மன வேதை - சீதை சிந்தை தேற்றுவாள் அடியேன் விபீஷணன் பெண் திரிசடை எனும் மந்திரி அனுமான் முன்னே இந்திரசித்துக் கொன்றது மாயாசீதை அது தாயார் எனும் சீதை பேதை - ( இருக் ) 

ஸ்ரீ ராமர் லட்சுமணருக்கு யுத்த தந்திரம் கற்பித்தல் 
கலக்கம் அறஇப்படி சொல்லிக் காட்டி அந்த விபீஷணன் பின் விலக்க வேணும் நிகும்பலையின் வேள்வி முடியா முன்என்றான் பெலத்த படையும் தம்பியுமென் பின்கூட்டென்றான் சாமியுமுட்கொண் டிலக்குமணனை அழைத்துறுதி எடுத்தான் சொல்லத் தொடுத்தானே 

பல்லவி 
தம்பீ லட்சுமணா இந்திரசித்தன் தலைகொண்டுவா போடா ( தம்பீ ) 
அநு பல்லவி
நம்பி உன்னோடேயாவர் நானறியேனோஉன் ஆனதுவே உப எதிர்ப்பார்கள் வீரம் - சத்தியம் காரம் உனக் தாரம் நேரம் - அடா - கேனினி சொல்லவிஸ் இதுவோபாரம் ( தம்பி ) 
சரணங்கள் 
1. முதற்சண்டை போல்மறு சண்டைபோற் சேனையை மோசப் படுத்தாமல் தேக்கி - நின்று  - பதைத் தவன் அம்புக் கெதிரம்பு போட்டுப் படுதுக ளாகவே நாலு விதத்திலும் போர் செய்து கைமெய் சலித்தவன் மெலிவான வேளையை நோக்கி மார்பிற் பதித்த கவசமும் வில்லையும் போக்குவாய் பார்த்திடுவார் தேவர் சாக்கி கூற்றுவன் போலம்பு எல்லாம் தோற்றிடவே ஒண்டி உயிரைப் போக்கி வெட்டித் ஆக தாக்கி ஆக்கி தூக்கி - ( தம்பி ) 
2 - - --- ஆசைநிகும்பலை வேள்வி முடிந்தாற்பின் ஆராலும் வெல்லக்கூ டாதே ஒரு கேசரிபோற் படையோடும் போய் அத்தைக் செடுத்திடுவாய் வேளை ஈதே அந்த நீசனானவன்பிர் மா ஸ்திரம் தொட்டால் நீயும்பிர் மாஸ்திரம் தொ டாதே கயிலை வாசன் சூலமும் சக்கரமும் இவை ரண்டையும் போடதின் மீதே துண்டுது ண்டாகும் தப் பாதே அவன் சண்டை எல்லாம் வெறும் மலைக்காதே இப் போதே அடா சூதே - ( தம்பி ) 
தீங்கு - பார் லாங்கு என்று - 3. மந்திர வாளந்த இந்திரன் கையினில் வச்சிரத்தையும் செய்யும் இந்தவில் அந்த மாயவன் வில்இத்தை எதுவும் செய்யாது பொல் அந்த நாளிற்கும்ப முனிசொல்ல அறிந்தாய் நீ அல்லவோ வந்து நமக்குத் தருமம் தானேபிர மாணம் என்று கையில் பூணும் கவசத்தைத் தூணி யிந்தாபிடித் வென்று நீங்கு இதே ஆங்கு -- இனி நான் வாங்கு தாங்கு அம்பறாத் தோங்கு பாங்கு அடா ( தம்பீ ) 

இந்திரசித்தை அனுமார் பழித்தல் 
படித்தார் ராமன் சொன்னபடி பாய்ந்தார் லட்சுமணன் முதலோர் அடித்தார் பிடித்தார் கரிபரித்தேர் அழித்தார் கழித்தார் அரக்கருயிர் குடித்தார் கடித்தார் யாகத்தைக் குலைத்தார் கலைத்தார் கொக்கரித்தார் இடித்தார் வடிவில் இந்திரசித்தை இழுப்பான் அனுமான் பழிப்பானே 
பல்லவி 
இந்திர சித்தேஉன் தந்திரவித்தைகள் எல்லாம் ஏன்டா புறப்பட்டா ( இந் ) 
அநு பல்லவி 
உன் தன் நிகும்பனலயில் ஒளித்துச் செய்கிறாய்பூசை ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏண்டாமீசை ( இந் ) 
சரணங்கள் 
1. முந்தஎன் தாயைப்போல் ஒருத்தியைக் கொன்றாயே முடுக்கா அயோத்திமேல் நடக்கிறேன் என்றாயே பந்தல் அலைந்தவனே நீயும் சென்றாயோ பரதனை வென்றாயோ அந்தரா வணனுக்கு வந்த லச்சை அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலசொணாதோ வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ வாணாள்வைக்க வேணுமோ சாணல்லவோ ஈதோ கயிறு வயிறு முனைவே லாயுதம் லாயுதம் 
2. விடுக்கும் வச்சிராயுதம் விஷ்ணு சக்கராயுதம் சிவன் சூ எடுக்கும் நாகாஸ்திரம் பிரம்மாஸ்திரத் எதைவேணும் அதைப் திடுக்கிட வினைசெய்யும் உங்களுக்கே செத்தவனே எங்களுக் குண்டோடா அடுக்களை பூனை போலே இடுக்கிலே ஆடெடுத்த கள்ளன் போலே தோடு போடு நாசம் மோசம் சுழிக்கிறாய் முழிக்கிறாய் ( இந்த ) 
மேலே ணாலே போச்சே 3. நிறை கடல் போலஉன் சேனைகள் கள நேராக விழுந்தத்தைப் பாரடாகண் பரபரப்பிலே நிகும் பலையாகமும் பாழும் சுடலை கறுவி நமனும் வந்து குறுகிக் கொண்டான் காலம் முடிந்ததினி மேலே என்னடா சிறைபட்ட இந்திரனும் குறைவிட்டுத் செல்வ லட்சுமணனிதோ கொல்லவந் உன்னை முன்னை தழைக்கிறான் தழைக்கிறான் ( இந்த ) 

இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் மூன்றாம் முறை யுத்தம் 
மாருதி வ்வா றோத வளைந்தராட் சதரும்சேனை வீரவா னரரும் சண்டை . வித்திட்டார் இந்திரசித்தன் தேரினில் ஏறிக் கொண்டான் சிலை கொண்டான் தம்பிதானும் மாருதி மேற்கொண்டம்பு வருஷித்தான் கருசித்தானே 

பல்லவி 
அஸ்திர வருஷம் தம்பி பொழிந்தானே சித்தன் படைகள் போய் ஒழிந்தானே நிகும்பலையிலே இந்திர ( அஸ் ) 
அநுபல்லவி 
வைத்த சமித்தும் பிணமும் எரிபட மந்திரபூரண கும்பம் நெரிபட எத்தி அதிலெழும் தேரும் சிதைபட - எருமையின் கூட்டங்கள் எல்லாம் வதைபட ரத்தம் எழுந்திட சுற்றம்விழுந்திட - யாகம் கலைந்திட யூகம்குலைந்திட ( அஸ் ) 
சரணங்கள
1. தேரில் அரக்கன் ஏறி அனுமானை சிலகணையாற்களை செய்தான் நேரில் எழுந்த அனுமன் புயந்தம்பி நின்று கணைசில பெய்தான் கூரிய வாளிகளால் அரக்கன் அந்த குரங்குப் படைசிந்த அடித்தான் வாரி அம்பால் தம்பி அரக்கன் சேனையை மண்ணோடு மண்ணாக மடித்தான் தேர் வலங்கொண்டு சுற்ற அனுமான் இடங்கொண்டு தந்த அவன்தேர் வானில் உலாவ அனுமான் விடேன் என்று தாவ இருவர்கை வாழி நெடுங்கணை எங்கும் நிறைந்திட மலைகளெல்லாம் வெந்து நீறாய் இறைந்திட எழுகடல்நீரும் வற்றிக் குறைந்திட எட்டுத்திக்கும் தெரி யாமல் மறைந்திட எங்கும் புகை முட்ட எங்கும் தணல் கொட்ட இரவுபகலாக நிருதன் மனம் நோக ( அஸ் ) - 

அவன் 2. இளையான் மேற்பின்னும் அரக்கன் சீறி இருபத்தைந்து கணை விடுத்தான் தொளையா அவன்மார்பும் கவசமும் தம்பி தொளைத் தோட ஓர் கணை தொடுத்தான் களையாய் அவன் அனுமான் மேல்ரத்தம் காணச் சிலகணை விதைத்தான் வளையாவரும் அனுமான் அவன் தேரினை மளுக்கென் றொடியவே உதைத்தான் - மற்றொன்றில் ஏறிஐயன்மேலே பத்தம்பைத் தூறிவிடத்தம்பி வடிக்கணை சிந்தி அவன் அதைத்தடுக்காமல் முந்தி- போட்ட அவன் மந்தரத் தோளை ஓர் அம்பால் தொளை செய்ய மற்றோர் அம்பாலவன் தேரைவிழச் செய்ய நொந்தரக்கன் ரத்தம் கக்கி அவசத்தில் நூறுபத் தம்பெய்யத் தம்பி கவசத்தில் நுழையாம லேவிண்டு பழுதாய் விழக்சுண்டு நுங்கிய வன்பிந்த எங்கும் தன்கை முந்த ( அஸ் ) 
3. சிந்தச்சிலகணை அரக்கன் பின்னுமந்தச் சேவகன் மார்பினில் புந்திமகிழ்தம்பி அரக்கன் மணிநெற்றி புதையச் சிலகணை தூற்றினான் ஏற்றினான் அவன் இந்தவில் அந்தமாயவன் வில் இவன் ஈசனும் என்றவன் கூசினான் அந்தவேளையில் விபீஷணன் தம்பியை அரக்கன் மேல்முடுகென்று பேசினான் அவன் அக்கினி அஸ்திரம் வித்தம்பி அக்கினி அஸ்திரம் விட்டே ஆதித்தன் அஸ்திரம் விடத்தம்பி ஆதித்தன் அஸ்திரம் விட்டேவிசை ஆகப்பின்னும்சில அம்பைப் பொழிந்திட அணி அணியாய் நின்றதேர்கள் அழிந்திட ஏகத்தில் வந்த கெசங்கள் படிந்திட இராட்சத வீரர்கள் ஆரும் மடிந்திட இற்ற துண்டங்களும் அற்றமுண்டங்களும் லங்கையிற் போய்விழ மங்கையர் கண்டழ ( அஸ் ) 

கொய்தான் தன் 4. ஆரணன் அஸ்திரம் அவன்விடச்சிவன்ஆயுதத்தால் தம்பி 
காரணன் சூலத்தை அவன்விடத்தம்பி 
கைச்சூலத்தாற் பொடி 
செய்தான் 
நாரணன் அஸ்திரம் தொட்டரக்கன் எங்கும் 
நடுங்கிடவேஎய் 
தோக்கினான் 
போரினில் தம்பியை அதுவலஞ்செய்து 
போகக் கண்டேபயம் 
தேக்கினான் 
புத்தியும் கெட்டான் தனக்குள்ள சத்தியும் விட்டான் தம்பி செய்த 
போரையும் பார்த்தான் ஓடி ஒளிக்க ஊரையும் பார்த்தான் - அதுக்கும் 
போக்கிடம் இல்லாது பார்த்து 
மெலிபட்ட 
போதினிலே அந்தப் பாதகன் மேற்போட்ட 
வாக்கிஐயன் அம்பு போடக் களைப்பட்டு 
மார்பும் கரங்களும் தோளும் தொளைபட்டு 
வல்லரக்கன் பக்கம் எல்லாம் ஒருலட்சம் 
சல்லடைக் கண்ணாகச் சில்லிகளாய்ப் போக 
( அஸ் ) 

இந்திரசித்து விபீஷணனர வயிற்றெரிச்சலாலே ஏசுதல் 
சில்லிகளாய்ப்போன இந்திரசித்தனவன் அழிந்ததொரு தேர் மேல் நின்று 
கல்லின் மழையென அம்பு பொழிந்தங்கே வீடணனைக் கண்டான் எம்மைக் 
கொல்ல நிகும்பலை கெடுத்தாய் அரக்கர் குலத்தையும் கெடுத்தாய் 
கோளினாலே 
எல்லவரையும் கெடுத்தாய் என்று வசை பேசுவான் ஏசுவானே  


பல்லவி 
சிற்றப்பா நீதான் இத்தனை அபகீர்த்தி 
பெற்றதே போதும் அடா 
( சிற் ) 

அநுபல்லவி 
சத்திய விபீஷணன் என் 
றெடுந்தாயே 
பேர்நான் 
சமைத்த நிகும்பலையும் 
கெடுத்தாயே 
வற்றல் மனிதர்க் காளாய் 
போனாயே ஐயோ 
வளர்த்த கிடாக்கையில் பாய்ந்தாற்போல் 
(சிற் ) 
ஆனாயே 

சரணங்கள் 

1. விநயம் சொல்லிமாயப் பூனைவேஷம் கொண்டாய் 
வேருடனே எங்களைக் 
கெல்லவோ - நாங்கள் 
அனைவரும் இறந்தபின் ஓராண்காணியா 
அரசாள லங்கையிற் 
செல்லவோ 
தினமும் ஒருகலத்தில் உண்டும் இப்படிசதி 
செய்தாய் பாவந்தீரச் 
சொல்லவோ அற்ப 
மனிதர்க்குப் பஞ்சையாய்ப் பணியும் செய்கிறாய்உயிர் 
வைத்திருக்கிறதிலும் செத்தாற்குணம் அல்லவோ 
( சிற் ) 


2 மாடுமேய்க்கிறாய்ப் போலே தடிகொண்டு திரிகிறாய் 
மானமும் லச்சையும் 
துறந்தாயே னி 
சூடும்முடி பெற்றாலும் சின்னமனிதர்க்கு நீ 
தொண்டன் அல்ல என்ன 
சிறந்தாயோ 
தேடி நம்மை வணங்கும் பேரை நாம் வணங்கினால் 
சின்னத்தனம் என்பதை 
மறந்தாயோ - உன்னுடன் 
கூடப்பிறந்தவனைக் கொல்லென்று கோட்சொல்லி 
குடிகெடுக்க வென்றிந்தக் குலத்தினில் பிறந்தாயோ ( சிற் ) 

3 பாரளலாம் என்று மனப்பால் குடிக்கிறாய் 
பஞ்சை உன்னால் அது 
தள்ளுமோ 
இந்த 
ஊரில் வாராதுக்கு வழிஇட்டாயோ உனக் 
ஒருக்காலும் வசையிது 
விள்ளுமோ 
நீருள்ள மட்டுக்கும் மீனும் துள்ளும் அந்த 
நீரேபோனால் மீனென்ன 
துள்ளுமோ 
பேராம் ராட்சத ரெல்லாம் போய் நீ ஒருத்தனும் 
பிணந்தின்னும் பூச்சி போல் இருந்தால் கனம்கொள் 
வெகு 
மோ 
( சிற் ) 

விபீஷணர் இந்திரசித்துக்கு எதிர்மொழிதல் 

ல்லாம் மூடன் இந்திரசித்தன் இவ்வாறுரைக்க உரைத்ததெல்லாம் 
செல்லா தடடா தருமமும்சத் தியமும் நானே கைக்கொண்டேன் 
பொல்லாப் பாவம் கைக்கொண்டாய் போவாய் உருண்டுபோ வாய்என் 
றல்லார்மேனி விபீஷணன்எச் சரிப்பான் மறுசொல் உரைப்பானே 

பல்லவி
துஷ்டப்பயலே இந்திரசித்தே என்ன 
சொன்னாய் அடாபயலே 
( துஷ்) 
அநுபல்லவி 
இஷ்டமாம் எனக்கு 
ராமன்பதமே சொந்தம் 
எனக்கும் உங்களுக்கும் இனிமேலே என்னடா தொந்தம் ( துஷ்)  

சரணங்கள் 
மன்னராகி முன்பின் தர்மம் துணையில்லாமல் 
வாழ்ந்தவர் 
எவர்தாமோ 
தன்னிலே குதிக்கிறாய் பாவம் சாம் அல்லாமல் 
தருமம் என் 
பது சாமோ 

2 சிந்தை வஞ்சனை செய்யேன் புலைசெய்யேன் கொலைசெய்யேன் 
தெய்வம் என்னை 
ஒறுக்குமோ 
அந்தபுத்தி உங்களுக் கிருந்தால் வரவர 
ஆதிக்கமும் 
சிறுக்குமோ 
என்தாய் சீதைமேல் ஆசையுன் அப்பனுக்கு 
இன்னந்தான் 
வெறுக்குமோ 
இந்தப் புத்தியினாலே இலங்கைச் செல்வமெல்லாம் 
இழக்கலாச்சே நாய்க்கு முழுத்தேங்காய் பொறுக்குமோ ( துஷ் ) 


3. கொடும்பாவம் என்னசெய்தே னோ நானுங்கள் 
குலத்தில் வந்துடம் 
பெடுத்தேன் 
கடந்து போகவேண்டி உங்களைக் கடலிலே 
கையைக் கழுவி 
விடுத்தேன் 
மடங்க ராவணனுக்கு எத்தனை புத்திகள் 
வகை மணியாத் 
தொடுத்தேன் 
அடங்காப் பாம்புக்கு ராசா மூங்கில் தடி 
மென்ற வனைவிட்டு ராமன் தனை அடுத்தேன் 
( துஷ்) 

இந்திரசித்து தகப்பனுடன் முறையிடுதல் 
எதிர்கொண்டிவ் வார்த்தை சொன்ன வீடணன் 
மேல் 
அம்பொன்றை எய்தான் அத்தைக் 
கதிகொண்ட தம்பிகொய்தான் வேலெய்தான் 
அத்தையும் அக் கணத்திற் கொய்தான் 
முதிகொண்ட கோபமுடன் சொர்ச்சனையிட் 
டொளிந்திலங்கை மூதூர் சேர்ந்தான் 
குதிகொண்டான் அப்பன் முன்னே முறைபட்டான் 
இந்திரசித்தன் குறைபட்டானே 


பல்லவி 
அய்யா ராவணா என்னால் சண்டை 
ஆகா தாகாதையா 
( அய் ) 
அநுபல்லவி 
நொய்யாம் மனிதர்கை அம்புகளாலே 
நொந்தேன் ஒளிந்தோடி வந்தேன் இனிமேலே 
( அய் ) 
சரணங்கள் 
1 . வட்டவார் உலகினில் தம்பி 
பிறக்கத்தறை 
மட்டம் ஆச்சுதென்பார் உனக்கே அந்தக்கறை 
கிட்டியுன் தம்பி என் வேள்வியைத் 
தடுத்தானே 
கெடுத்தான் 
கெடுத்தானே 
திட்டமானதொரு பிரம்மாஸ் 
திரம்போட்டும் 
சிவன்படை யுடனேகே சவன்படை தன்னைவிட்டு 
குட்டிக் கரணம் போட்டென்னாலே ஆனமட்டும் 
குதித்தும் குடத்திலிட்ட விளக்காச்சே என்னப்பட்டும் ( அய் ) 
2. ஆரும் அறிவாரே என் 
கைவில்லை 
ஆண்டவன் காரியத்தில் சற்றுவஞ் சனையில்லை 
தாராளமா அடிக் டி போய் 
நின்றேன் 
சகல பேரையும் 
கொன்றேன் 
வாராஉயிர் வந்து வந்து 
கிளைக்கிறார் 
வறுத்த பயிர்எழுந்து முளைத்தாற் போல் முளைக்கிறார் 
தீராப்பழி கொண்டோம் ஆரைவிட் டதுசனி 
தெய்வபலமும் இல்லை செய்வதுண் டோஇனி 
( அய் ) 
3 நீதி யாகநாம் ஏன் செல்வம் 
செருக்கிறோம் 
நீயும் நானுமல்லவோ தப்பி 
இருக்கிறோம் 
ஏதோபலம் வரவர 
அடங்குதே 
எடுத்த அடி 
மடங்குதே 
ஆதலால் அவர் முன் என் சூதெல்லாம் விட்டுப்போட்டேன் 
அங்கே இன்னம் போனால் இங்கே வரமாட்டேன் 
சீதையை விடுவது காரியம் 
அப்பாலுன்றன் 
சித்தத்துக்குச் சரிபோன 
படி என்றன் 
( அய் 


இந்திரசித்தை இராவணன் உதாசனித்தல் 

னங் கொண்டிப்படி தன் பிள்ளை இசைத்திட இலங்கை வேந்தன் 
கனங் கொண்ட தணல்வாய் நெய்யைக் கவிழ்த்தது போலே கொண்டான் 
மனங்கொண்ட பயத்தாற் சொன்னாய் மனிதரோர் பொருட்டோ என்ன 
சினங்கொண்டே இந்திரசித்தைச் சீறுவான் கூறுவானே . 

பல்லவி 
என்னபுத்தி சொன்னாய் அடா இந்திரசித்தேநீ 
என்னபுத்தி சொன்னாய் அடா 
( என் ) 
அநு பல்லவி 
என்னபுத்தி சொன்னாய்நீ சின்ன மனிதர்க்கஞ்சி 
என்னுடனே முறையிட் 
பட்டாயே நீ கெட்டாயே 
பயப்டாயே 
( என் ) 


சரணங்கள் 

1. ஆனாலும் உவமையவள் கோனாளும் கயிலையை 
மேனாளில் எடுத்த னகத் 
தலம் போச்சேரி 
நானே செய்ததற்கு நீதானோ பயலே நீ 
போனாலும் என்னஎன் 
குலம் போச்சோ 
படைக்கலம் போச்சோ . மூலபலம் 
போச்சோ ( என் ) 
2- சோருவேனோ மனிதர் ஈருயிரையும் அடி . 
வேருடனோ கல்லிப் 
பறியாமல் 
தீரும்போதும் ராமன் பேரும் என் பேரும் எல் 
லாரும் சொல்லிக் கொள்வாரே 
பிறியாமல் 
இத்தை அறியாமல் முன்பின் 
குறியாமல் ( என் ) 
3. செயமான கீர்த்தியை முயலாமல் மனிதர்க்குப் 
பயமாய் அபகீர்த்தியைத் 
தொடுவேனோ 
கையாலகாதவன் போலே மயில்போலும் சீதையை 
உயிரோடே நான் இனி 
விடுவேனோ 
முதுகிடுவேனோ சும்மா 
படுவேனோ ( என் ) 


நாலாம் முறை யுத்தத்தில் இந்திரசித்தன் வதை 

தவறுபடா திடிக்கும் ஒரு தலைவ லிக்குத் 
தலையணையை மாற்றிப்போட் டாற்போமோ என் 
உவமையிது என்மகன்வார்த் தையைக் கேளாமல் 
உறுமும் இராவணனை விட்டான் ஊரைவிட்டான் 
கவனமொடா யிரங்குதிரை கொண்ட தேர்மேல் 
கடற்படையும் தானும் போர்க் களத்தில் வந்தா ன் 
பவனெனும் லட்சுமணன் அம்பு பாயப்பாயப் 
பாய்ந்திட்டான் இந்திரசித்து மாய்ந்திட்டானே 

பல்லவி
விழுந்தானே இந்திரசித்தன் 
ஒழிந்தானே மண்மேல் 
( விழு ) 
அநுபல்லவி 
இழந்திட்டோம் இலங்கையை எனமனம் 
அழுந்தத் தழுவி அப்பன் ஆசையை 
எழும்பிப் பரிகளாயிரம் கொண்டதேர் 
குழைந்த தம்பிகை அம்பாற் கிழிந்திட்டு 
பிண்டுபிண்டு 
விண்டுவிண்டு 
மேற்கொண்டு 
வதையுண்டு 
( விழு ) 


சரணங்கள் 

1 நிறையக் கணைதொடுத்தார் இரண்டுபேர்களும் 
நெறநெறென்று சொரி 
மழை போலே 
பிறகவன் தேரையும் சாரதி தலையையும் 
பிளந்தானே தம்பி 
அதன் மேலே 
உறுதியா அரக்கன் கல்லின் மழைபொழிய 
உருண்டதே குரங்குகள் 
ஒருகாலே 
கறுவி இளையவன் ஒருகணை விட அந்தக் 
கணைவந் தரக்கன்மேற் 
படலாலே 
மறையும் கவசம்பிளந் துடம்படங்கலும் தைத்து 
வடிக்கணை ஒன்றாலவன் விடும்சிவன் சூலம் இற்று 
பிறையைப் பாம்பு தொட்டுத் தறையில் விழுவதொத்து 
பிடித்த வில்லுடனவன் இடக்கையும் கூட அற்று 
( விழு ) 
2 வடிக்க 
அடிக்க 
வளர்த்த தாயாரும் பெண்களும் இலங்கையில் 
வாய்விட் டழுதுகண்ணீர் 
ளைப்பிலா இரை வந்ததென்று பேய் 
எழும்பி எழும்பிக் கொண்டான் 
ஒளித்ததிருட்டரக்கன் வருகிறான் என்றுதேர் 
ஓசைகொண்டு தேவர்கிலி 
கிளைத்த மலைபோலே ஆகாசத்தில்வந்து 
கெர்ச்சித்தானே அண்டமும் 
செளைப்பில்லா மல்வரும் சேனை 
திக்கிலும் லட்சுமணன் கைக்கிரை 
குளத்தைக் குழப்பியங்கே பருந்துக் 
கொடுத்தாற்போல ரக்கரைக் குரங்குக்கே 
பிடிக்க 
வெடிக்க 
களைஎட்டு 
ஆகவீட்டுக் 
கிரையிட்டுக் 
இட்டுபட்டு 
( விழு ) 

3 நித்தியமாவது வேதவிதிவச 
னத்திலே சொல்லும் 
பொருளொன்று 
சித்தியாவது வேதியரைத் தெரி 
சித்து வருகிற 
தேதென்று 
கர்த்தனும் ரகுராமனேபர 
தத்துவ மாய் அவன் 
சத்தியம் எனில் இந்திர சித்தன் தலைநிமி 
ஷத்திலே கொண்டு 
வாவென்று 
அர்த்தசந்திர பாணம் அய்யன் தொடுத்தாற் போலே 
அற்றதே அவன் தலை ., எற்றி விடுத்தாற் போலே 
தத்துவமுனி வர்க்கெல்லாம் வெற்றிதொடுத்தாற் போலே 
தளரும் ந்திராதியர்க்குக் களைஎடுத்தாற் போலே 
வேறன்று 
( விழு ) 


இந்திரசித்து வதை ராவணன் கேட்ட இடத்திலே புலம்பல் 

இந்திரசித்தன் இந்தவிதம் விழுந்தான் தேவர் 
இரக்கத்தால் குரங்கினத்தார் எழுந்தார் தம்பி 
வந்தனு மானுடன் போனான் சாமிகாலில் 
வல்லரக்கன் தலை தன்னை அங்கதனும் வைத்தான் 
தொந்த விபீஷணனை ஐயன் மகிழ்ந்தான் அப்பால் 
தூதர் இராவணற்குப் போய்ச் சொன்னார் சொல்லப் 
பந்தம் எரிந்தாற் போலே மகனை எண்ணிப் 
பத்துவாயா லுமவன் கத்துவானே 


கண்ணிகள் 
ஒருவாயால் 
1. மந்திரியே என் துரையே மகனே 
மகனே என்பான் 
இந்திரசித்தே இந்திரசித்தே என்று 
இரைந்தழுவான் 
ஒருவாயால் 
ஒருவாயால் 
ஒருவாயால் 

2. இகத்தில் என்னைத் தவிக்கவிட்டு நீயும் 
இறந்தாயோ என்பான் 
முகத்தை இனிக்காண்ப தெப்போதே 
என்று முறையிடுவான் 
3. பனிவாழைக் கனிதனிலே முள்ளு 
பாய்ந்தது போலே 
மனிதன் அம்புகள் பாய்ந்த தோ உன்றன் 
மார்பில் என்பான் 
மகனே 
ஒருவாயால் 
மணிமாலை 

4. பரஞ்சேர் இந்திரன் முடிமேல்மகனே 
பறித் தணிந்த 
நரன் காலில் விழ ஆச்சே இந்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 

5. துள்ளும் முசலாலே சிங்கம் பெரும் 
துரவில் விழுந் 
பிள்ளை மனிதன்கை அம்பாற்பட்டுப் 
பிரண்டாயோ என்பான் 
ததுபோலே 
ஒருவாயால் 

6 . னைக்கால 
ஈசன் முதலார் படைகளும் உமி 
எனப்போ மேஉன் 
பாசமது தீண்டிடுமோ இப்போ 
பதறி என்பான் 
ஒருவாயால் 

7 . யும் வென்று 
அரனையும் மாயனையும் வென்றுதிக்கில் 
அஷ்டகெ சங்களை 
நரனுக்குத் தோற்றிட லாச்சோ இத்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 

8 . மன 
யேமகனே 
மலைகலங்கினாலும் சற்றே உன்றன்து 
கலங்கா 
நிலை கலங்கி விழுந்தாயே இந்த 
நிலத்தில் என்பான் 
ஒருவாயால் 


இந்திரசித்துக்காக ராவணன் களத்திலே புலம்பல் 

என்றழுது களம்பார்க்க நடந்தான் பிள்ளை 
இடதுகையும் வில்லுமற்றுக் கிடக்கக்கண்டான் 
சென்றெடுத்தான் முண்டமாம் உடம்பைக் கண்டான் 
சிரங்காணான் இரங்கினான் உலகம் மூன்றும் 
வென்றநான் இந்த அலங் கோலம் பார்க்க 
விதித்தாயோ என்மகனே மகனே என்று 
கன்றிழந்த பசுப்போல வாயை விட்டுக் 
கதறினான் ராவணனும் பதறி நானே 


பல்லவி 
மசனே இந்திரசித்தே நான் 
மனதெப்படித் துணிவேன் 
( மக ) 

அநுபல்லவி 
இகம்பேமல் நானொரு பெண்ணா சையைத்தொட்டு 
என்னுயிர்க் குயிரான உன்னை இழந்துவிட்டு 
( மக ) 

1. வனமான் ஒருபுலியை அடித்தாற்போல 
மனிதன் உன்னை அடிக்க 
விடுத்தேனே 
கனமும் துரைத்தனமும் தரும் உன்னை என் இரு 
கண்பறி கொடுத்தாற்போற் 
மனிதன் நாளச் சண்டையினில் என்னை 
மயங்கிய நமனும்கைச் சங்கிலி 
னிமேல் இந்திரனும் என்னை நாப்புக் 
இலங்கையிற் சூரியன் தேரை கலங்காமல் 
கொடுத்தேனே 
மாட்டு வானே 
ஆட்டுவானே 
காட்டுவானே 
ஓட்டு வானே ( மக ) 

2 . நாற்றிசையிலும் உன்றன் கூத்திமார் அழக் கண்டு 
நானும் அழுதுதத் 
தளிப்பேனோ 
சீர்த்தியாம் சிவனுக்கும் மாயனுக்கும் பயந்து 
திருடன் போலே இனி 
ஒளிப்பேனோ 
பார்த்தால் இனியிந்த லங்கைத் 
தெருவாரே 
பரியாசம்செய் தென்னைத்துரை என்று 
மருவாரே 
போர்த்தெவரும் வசை வார்த்தைகள் 
தருவாரே 
பெண்டுகள் கூட இனிச் சண்டைக்கு 
வருவாரே ( மக ) 
3. பயமாம் குரங்கினில் ஒன்றும் செத்ததில்லையே 
படுகளத்தினில் நீயே 
செத்தாயே 
நயமா எனக்கு நீ செய்யும் உற்றுரிமையை 
நானே உனக்குச் செய்ய 
வைத்தாயே 
உயிரேேேட மனிதன் கையில் விழுந்த 
பேச்சே 
உலகம் உள்ளமட்டுக்கும் தொலையுமோ இது ஏச்சே 
வயிறும் குடலும்பற்றி மண்டி எரியல் 
வல்லமையும் செல்வமுமெல்லாம் உன்னோடே 
போச்சே 
( மக ) 
ஆச்சே 


இந்திரசித்துக்காக மண்டோதரி புலம்பல் 

எடுத்திந்த வண்ணம் போர்க் களத்தினுள்ளே 
ராவணனும் அழுதுமகன் உடலைக் கொண்டு 
தடுக்கரிய அரண்மனையில் வந்து சேர்ந்தான் 
தாய்மண்டோதரியறிந்தாள் அவன் கால் வீழ்ந்து 
கெடுத்தாயே மகனை என்றொப் பாரி சொன்னாள் 
கெடகெடென்று பிரண்டாள் பின் மகன் மேல் வீழ்ந்தாள் 
அடுத்தமகன் உடலைத்தன் கண்ணீராலே 
அலம்பினாள் பதைபதைத்துப் புலம்பினாளே 

பல்லவி 
ஐயையோ மகனே இனி என் செய்வேன் 
ஐயையோ மகனே . 


சரணங்கள் 

1. கையிரு பதுள்ளஉன்தன் ஐயனைப்போல் மூவுலகும் 
மெய்ம்மை யாகநீயரசு செய்குவை என்றிருந்தேனே 
( ஐ ) 
( ஐ ) 

2. குழந்தைப் பிறந்த அன்றுன் அழுங்குரல் கேட்டிம்மேகம் 
மழுங்கியே நடுங்கிமண் மேல் விழுந்தகீர்த்தியும் பாழாச்சே 
3. தன்னிகர் ஒன்றுமில்லாத உன்னை இவ் உலகத்தில்ஓர் 
சின்னமனிதன் கொல்லவே என்னபாவம் பண்ணினேனோ 
( ஐ ) 

4. அம்புலிவா என்னவந்து கும்பிட்டவன் . மேல்மறுவை 
வம்பிதென் றுரைக்கும் உன்றன் தெம்பை நான் என்றுகாண்பேனோ ( ஐ ) 
5 . கண்னேஎன் கருவூலமே மண்ணோடே மண்ணானாயோ 
பெண்ணாலே கெட்டகுடியாப் பண்ணிவிட்டானே உன் அப்பன் ( ஐ ) 


6 . காட்டுச்சிங்கக் குட்டிகளைக் கூட்டி நீபிடித்துச் சண்டை 
மூட்டும் உன்னுடைவிளை யாட்டை என்றைக்குக் காண்பேனோ 


( ஐ ) 


7. சின்னஞ்சிறு வயதினில் இன்னபடி ஆவாய் என்று 
என்னமா பாவிப்பிரமன் தன்கைஎழுத்தை இட்டானோ 
8. அந்தரங் கிட்டியே அந்த இந்திரனைக் கட்டியே அன்றுன் 
தந்தைமுன் விட்டையேயின்று என் தனைத் தெருவில் விட்டையே ( ஐ ) 


9. கோளும்குண் டுணிப்பேச்சும் நாளும் சொல்லியுன் அத்தை 
ஆளும்பிள்ளையைக் கொல்ல மூளுவித்தாளே யோர்பாவி 
0. இரக்கமாய் உன்தேவியராம் அரக்கியர் கூடிவந்திங்கே 
உரக்க அழுதும் உன் முகம் பரக்கநீ காட்டாதேனோ 

( ஐ ) 

( ஐ ) 


11. ஒக்கலையும் மக்களையும் தக்காமலே செய்தெந்நாளும் 
மக்கிமனம் குலைந்து நான் வெட்கவைத்தானே உன் அப்பன் 
( ஐ ) 

12. இச்சகம் பேசுவோர் வார்த்தை மெச்சி உன் அப்பன் என்றன் 
மச்சினர் சொன்ன வார்த்தையைச் துச்சமாக மதித்தானே 
( ஐ ) 


13 . வீரியம் இல்லாமனிதன் செய் போரில் நீ வீழ்ந்து மக 
மேருவும் வாயுவினாலே வேரற்று வீழ்ந்தாற் போலாச்சே 
( ஐ ) 


14 . துதி செய்து சீதையைவிடத் ததியிதென்று நீ சொல்லியும் 
வீதிவழியிலே உன் அப்பன் மதிபோச்சுதே என்செய்வேன் 
( ஐ ) 


15. ஒப்பில்லாச் சீதையால் நீ இப்படி மடிந்த போதுன் 
அப்பனார் உயிரும் நாளை எப்படி ஆமோ அறியேன் 
( ஐ ) 


16 பெருகும் உன் துயரும் நாளை வருதுயர் தனையும் எண்ணி 
வருதலைக் கொள்ளியள் எறும்பு புகுதல் போல ஆனேனே 
( ஐ ) 


சீதையை வெட்ட நடந்த ராவணனை மகோதரன் தடுத்தல் 

தொடுத்து மண்டோ தரிபுலம்பும் வாக்கியம் எல்லாம் 
சுறுக்கென்று சுட்டிடலும் திடுக்கென்றங்கே 
அடுத்திருந்த அரக்கன் மனம் கலங்கி மக்கள் 
அனைவர்களும் அரக்கர்களும் மாண்டார் ஆசை 
விடுத்தனென்சீ தையைஇனிமேற் கொல்வேனென்று 
வெகுண்டு நடந் தானந்த வேளை இந்த 
துடுக்காமோ ராவணனே இதுபெண் பாவம் 
சொல் என்றா 
றான் மகோதரனும் நில்ஏன்றானே . 

பல்லவி 
இந்தச் சனகிதன்னைக் கண்டிக்க நடக்கிறாய் 
ஏதையா ராவ ணேஸ்வர . T 
( இந்த ) 

அநுபல்லவி 
சொந்த மகன் தலையைப் 
துஷ்டமனிதர் தம்மை 
பந்துபோற் கொண்டு போன 
விட்டுவிட்டேழையான ( இந்த ) 

சரணங்கள் 

1. பொட்டான தேவர்களும் 
நெட்டாங்க மடிப்பாரே 
புலத்தியன் குலத்திற்கோர் பழிகாட்டி இடிப்பாரே 
அட்ட கெசமும் புத்தி 
கெட்டான் என்றெண்ணாதோ 
அரனார் கயிலாசமும் 
பரியாசம் பண்ணாதோ 
சட்டான காலகேயர் 
மேலே எறிந்தவாளை 
கன்னி மேலெறிந்தால் 
குன்னஞ் சொல்லாரோ நாளை 
முட்டாளும் கூட உன்னைச் 
சட்டைதான் செய்வானோ 
மூன்று லோகமும் கட்டி ஆண்டதிப்படி தானோ ( இந்த ) 
2. முடுக்கில் இருந்து கொண்டு 
துடிக்கிறாய் என்ன சாரம் 
முன்கொன்ற மனிதரை 
முனைகொண்டாலல்லோ வீரம் 
அடுத்தாரைக் கெடுக்கிறாய் 
உன்னைப்போல் உண்டோ ஏழை 
ஆயிரம் வேதம் கற்றும் 
நீயே கற்றறி 
பிடித்த கத்தி உறையில் 
அடக்கவேணும் என்சாமி 
பெண்பழி கொண்டால் முனைபங்கம் சொல்லாதோ 
எடுப்பான பேருக் கெல்லர்ம் எடுப்பான நீஉன் மேலே 
எய்தவனை நோகாமல் அம்பை நொந்தது போலே ( இந்த ) 
மோழை 
பூமி 
3. அரியாப் பிர்மாதிகள் 
ஆகிய உனக்கிது 
பெருமையோ சிறுமையோ 
பெண்மேற் கத்தி எடுத்த 
தரும் ஒரு கோபம்வந்து 
சந்தோஷம் வந்தாலும் 
நரரைக் கெலிப் பாய்நாளை 
நகரில் வருவாய்பிற 
யாவர்க்கும் முதல் மூர்த்தி 
ஆகுமோ அபகீர்த்தி 
பாராய் எனது 
சொல்லை 
மன்னவர் எங்கும் இல்லை 
கிணற்றில் விழுந்தா லாயிரம் 
எழும்பப் போமோ சரீரம் 
விருதுகளும் பூணுவாய் 
கிவளை எங்கே காணுவாய் ( இந்த ) 


தூதர் இராவணனுக்கு மூலபலத்தை அறிவித்தல் 

அருந்துணை மந்திரிஇந்த வாறுசொல்ல 
அரக்கனும் வாள்விட்டெறிந்தான் மகன் உடம்பை 
பெருந்தயிலத் தோணியிட்டான் அழைக்கப்போன 
பெருமூல பலசேனை வரவுகேட்டான் 
விரிந்தது அணியணியா புகட்டும் என்றான் 
மென்மேலும் அதுபோக வந்த தூதர் 
தெரிந்தது சொல் வோம்சாமி காதுக்குள்ளே 
சேரென்றார் வகைவகையாப் பாரென்றாரே . 

கண்ணிகள் 
1. தீரா ராவணவீரா விசயம் சேர்இருபது 
தோளாய் 
ஆராகிலும் சொல்லா மூலபலம் இதை அறிந்தது சொல்லக் கேளாய் 
2. சாகத்தீவினில் உறைவார் இவர் வேகத்தை எவர் மொழிவார் 
மேகத்தைக்கூட தாகத்தினாலே நோகக் கைக்கொண்டு பிழிவார் 
3. குசைஎனும் பெருந்தீவோர் இவர் விசயங்கேள் 
ஒரு 
பேச்சு 
வசனம் சொல்லவே இசையும் தேவர்க்கும் அசையுமோ ஒரு மூச்சு 
4. இறலித் தீவினில் உறைவோர் உன் தன் முறைதப்பாமலே திரிவோர் 
திறம்மிக்கோர் இந்தத் தறை முற்றும் சுற்றிமறலிக்கும் கொலை புரிவோர் 


5 . பவளத்தீவினை விட்டோர் இவர் கவனத்தால் 
புறப்பட்டோர் 
அவனிக்கே பெரும் திவலைப் பாற்கடல் சுவறக்காலடி இட்டோர் 


6 . மலையமாமலைத் தீவோர் இவர் தொலைவிலே நின்று வந்தோர் 
சிலையினால் இந்திரன் நிலையும் குலைகுலையவே வசை தந்தோர் 
இவர்கள் கிரவுஞ்சத்தீவோர் இவர் எவரிலும் பிரதாபர் 
அவரிவர் என்றும் பார்த்தாயே ஆகிலும் கொல்லும் கோபர் 


7 


8. கந்தமாதானத் கோளர் இவர் சொந்தமாம் படையாளர் 
அந்தகனுக்கும் அந்தகன் என்ன வந்த பாவ சண்டாளர் 


9. புட்கரப் பெருந்தீவோர் இவர் விக்கிரமம் என்ன செய்யார் 
திக்கசங்களை மற் கொடுங்கையால் வைக்கிறவர் இவர் அய்யார் 


10 . லவமாம ரத்தீவோர் இவர் கலகமே கற்றுப்படித்தோர் 
மலையையும் கடலலையும் சேடன் தலையையும் தூக்கிப் பிடித்தோர் 

சமர்த்துப் பேசிய வன்னியை மாலியவான் இடித்தல் 

மதியுடனிப் படிமூல பலத்தின் சேதி 
வந்ததூ துவர்சொன்னார் அரக்கன் கேட்பின் 
அதிலொருவன் வன்னி என்பான் சீதையாலே 
அடைந்த தெல்லாம் அறிந்தவர் ஆர் வலிஎன்என்ன 
பதறியழும் நோயாளி முகத்தின் முன்னே 
பரிகாரி தலைமாட்டில் அழுகின்றாற்போல் 
எதிர் இருந்த மாலியவான் வன்னிதன்னை 
இடிக்கின்றான் பழமை சொல்லிப் படிக்கின்றானே 


பல்லவி 

வன்னியோசனை செய்வதேதடா அந்த 
மானிடரை வெல்லப் போகாதடா 
( வன் ) 


அநுபல்லவி 

உன்னுட கெருவத்தாலே ஓதுகிறாய் சூதும் வாதும் 
தென்னிலங்கை பட்டபாடு சென்மசென் மத்துக்கும் போதும் 
( வன் ) 

சென்று 
1. கோலமாரீசனும் மானைப்போலவே 
கெட்டான் 
சாலவே கரனும் நொடிவேலை 
யினிலே பட்டான் 
வாலியும் அவர்கை அம்பினாலே 
உயிரை விட்டான் 
நீலவருணனும் ரெத்தினமாலை 
தந்துக்கும் பிட்டான் 
மேலென்ன சானகி என்னும் விஷத்தில் நாம்தப்ப லாமோ 
காலிலே சுற்றிய பாம்பு கடித்தாலல்லது ஒழியப் போமோ ( வன் ) 

2. பண்டு கும்ப கர்னனையும் 
அண்டு அதிகாயன்முடி 
கண்டகன் இந்திரசித்தன் 
ஒண்டி ஒழிந்தோரை நமன் 
மண்டு கடல் வெந்ததங்கே 
மிண்டராம் அரக்கர்க்கினி 
கண்டதுண்ட 
பிண்டுவீழத் 
மண்டைவிழத் 
அண்டையிலே 
வந்ததில்லையோ 
மேலே என்ன 
மாக்கினார் 
தாக்கினார் 
தூக்கினார் 
போக்கினார் 
நெருப்பு 
இருப்பு 
( வன் ) 

பேரடா 
ஊரடா 
பாரடா 

3. முத்தன்வில் ஒடித்தேபிர 
தத்தி ஒரு குரங்கு கொ 
மற்றது சஞ்சீவிதந்த 
செத்தவர் பிழைத்தாலினி 
இத்தலை ஆயிரவெள்ளம் 
புத்தில் ஈசல்போல் மடிந்து 
சித்தமான 
(ளுத்தியதிவ் 
வித்தைஎன்ன 
வெற்றிகொள்வ 
ராட்சதரும் 
போனபிற 
தாரடா 
அவராலே 
கினிமேலே 
( வன் ) 


மூலபாம் கண்டு ஓடின சாம்பவான் முதலோரை மறித்த அங்கதனுக்கு அவன் கூறுதல் 

அரக்கன் இந்தப்படிபாட்டன் வன்னிக் கோத 
அதை மறுத்தான் மூலபலம் தன்னை விட்டான் 
தரைக் கடங்கா ததுவரக்கண்டஞ்சி ஏங்கிச் 
சாம்பன்முத லனைவரும்சா மியைவிட் டப்பால் 
கரக்கநினைந் தலைகடலைத் தாண்டிப் போனார் 
காகுத்தன் அருளாலே அப்போ தந்த 
குரக்கினத்தை அங்கதன் போய் மறிப்பே னென்று 
கூடினான் சாம்பன்உரை யாடினானே . 


பல்லவி 

எங்களால் ஆகாதையா 
மூலபலத்தின் 
எதிர்நிற்கப் போகாதையா 
( எங் ) 

அநுபல்லவி 

அங்கதா உன் தர்மம் எங்கள் மேலேயோ வர்மம் 
அரக்கர்க் கெங்களைக் கொடுக்கத் துடிக்கிறாய் 
( எங் ) 


சரணங்கள் 

1. வினைக்குள் இந்திரசித்தம்பால் பட்ட புண்கள் ஆறி 
வேறே ரத்தம் இன்னம் ஊறவும் இலையே 
அனர்த்த காலம் போற் கங்குகனரகாணாச் சேனைமேல் 
அஞ்சாதே அழைக்கிறாய் 
என்செய்வோம் கொலை யே 
தனுக்கையர் இருவரும் அனுமானும் இவர் முன்னே 
தரிக்கொள்வதே மெத்தப் 
பெரிதவர் 
நிலையே 
பனித்த பஞ்சினிற் பாயும் கனல்போல் எங்களையவர் 
பாய்ந்து கொல்வாரென்றா ராய்ந்துபார்க் கலையே 
கனத்தகும் பகர்னனைத் தின்பானொரு 
அரக்கன் பொறிக்கறி 
போலும் 
கணிதம் இவர்களுக் குண்டோ பெருங்கடல் 
மணலையே எண்ணி 
னாலும் 
உனக்கென் சிறுபிள்ளை ஆலோ 
சனைக்குத் தெரியுமோ 
நாலும் 
ஒட்டும் பாஷையும் இட்டுத்தலை தொட்டென் 
உயிர்க்குப் பிணை நீசொன் னாலும் 
( எங்க ) 

போரோ 
வாரோ 
பாரோ 
ஆகிய 
பேரோ 
2. ஆனரா வணன் தலை பத்து இவர்க்காயிரம் 
ஐந்நூறு தலைகண்டோம் என்னென்ன 
போனவாலியும் கால நேமியும் மாலியும் 
பூச்சிப்போல் இவர்க்கொரு மூச்சுக்கா 
ஈனராகும் இவரை மூவரும் தூர நின் 
றெட்டிப் பார்ப்பாரல்லாமல் கிட்டிப்பார் 
தீனராகிய கொஞ்சம் வானரர் நாமந்த 
தேவர்களிலும் பலம் 
ஊனமா இந்தச் சேனைமுன் விடுத் 
தேன்குழைக்கறிபோல் 
குழைக்கிறாய் 
உற்றபேர்களை கெடுக்கவோ உன் தன் 
சிற்றப்பனோடு நீ 
பிழைக்கிறாய் 
ஆனமட்டும் பார்த்தோமே துரையே 
ஏனோ வீணிலே 
உழைக்கிறாய் 
அறமுறுக்கு கொண்ட புரிபோல் அற்றுவிட 
அறியாப் புத்தியினாலே 
அழைக்கிறாய் 
( எங்க 


3. இனித்தான் அவர்எங்களைத் தொடராமல் அணையைப் போய் 
இடிக்கிறோம் இதற்கு நீ 
தடுத்துக் சொல்லாதே 
சினத்த எருதும் எருதும் போராடி நடுப்புல்லை 
தேய்த்தாற்போல் எங்களை 
ஏய்துக் கொல்லாதே 
னத்தோடே நாங்கள் எல்லோரும் போய் அவர் கையில் 
இறக்கும்மட்டும் உனது 
பறப்பு நில்லாதே 
தனித்துத் தாய் வயிற்றினில் செனிக்கையிலே இவர் 
சதியும் மாயமும் கற்றோர் 
அதுவுமல்லாதே 
பனிப் பெருக்கிலே கப்பலோட்டிட 
நினைக்கிறாய் நீ 
சொன்ன 
படிக்கு நடக்குமே குரங்குப்பிடியே 
பிடிக்கிறாய் பன்னப் 
பன்ன 
அனுப்பினால்எழு பதுவெள்ளமும் ஒரு 
வனுக்குப் போதுமோ 
தின்ன 
அருந்தத் தழையுண்டு உறங்க முழையுண்டு 
அரக்கர் ஆண்டென்ன மனிதராண் 
டென்ன 
( எங்க ) 


அங்கதன் சாம்புவந்தனை இடித்தல் 

இரங்கிச்சாம்பன் முதலானோர் இவ்வாறுரைக்க நீங்களென்ன 
உரங்கெட்டீரோ படைக்கஞ்சி ஓடல் ஆமோ சூரனுக்குத் 
துரும்பத்தனையே சீவன் எனச் சொல்வாரிலையோ வாருமென்று 
பரிந்தப்போ தங்கதன் நீதி படிப்பான்சொல்லி இடிப்பானே . 

பல்லவி 
என்னகாரியம் எண்ணினீர் சாம்பவரே - நீர் 
என்ன காரியம் பண்ணினீர் ( என் ) 
அநுபல்லவி 
ஆச்சே 
தன்னவர் என்றும்மைச் சாமி சொன்னதும் 
போச்சே 
சாமித்துரோ கி என்று பூமிக்கும் பேர் 
பனும் அங்கதன் என்சொல் எண்ணாமல் 
ஒதுங்கிறீர் 
படைக்குப் பயந்திப்போது செடிக்குள்ளே பதுங்கிறீர் ( என் ) 


சரணங்கள் 

1. பேய்த்தனமாகவே இகத்துக்கும் பரத்துக்கும் 
பிரட்டன் என்று சொல்லக் 
கேட்டீரே 
பிராணன் போனாலென்ன மானம் போகலாமோ நம் 
பினபேரைப் போரிற்கை 
விட்டீரே 
ஏற்றராமன் ஆதிமூர்த்தி என்றீரே 
இங்கே ஒளிக்கத் தலைப் 
பட்டீரே 
இளந்தை அல்லவோ நீர் எல்லாம் தெரிந்திருந்தும் 
காடிப்பானையிற் கையை 
இட்டீரே 
ஆத்திரமோ அவர்க்கென்ன உங்களைத் 
தொட்டு 
அழித்தவாலி ஓர் அம்பால் விழுந்தானே தலை நட்டு 
சாத்திரமோ ஓடல் ஆமோ முது 
கிட்டு 
சாகிறபேருக்குச் சமுத்திரம் முழங்கால் 
மட்டு . 
( என் ) 

2. திடுக்கென்று போமிந்த பாழும் சரீரத்தை 
ஸ்திரமென்றங்கே எண்ணம் 
பெற்றீரே 
சீவன் போனாலென்ன கீர்த்தியும் உடன் போமோ 
தெரியாமல் நினைவெல்லாம் 
செத்தீரே 
அடுத்தபேரைக் கொல்லும் விஷமான நீங்களும் 
அமுதம்போற் சாமியை 
உற்றீரே 
அன்பெல்லாம் வெளியாச்சே மண்குதிரையை நம்பி 
ஆற்றில் இறங்கச் சொல்லி 
வைத்தீரே 
முடுக்கி வாரும் உயிர் கொடு துப் பழி 
ஒழிப்பீர் 
முன்னொன்றும் பின்னொன்றும் செய்தவசை கழிப்பீர் 
நடுக்கிஓடி நற்பேர் எடுத்தெப்படி 
செழிப்பீர் 
நாயகன் முகத்தினிமேல் எப்படி 
முழிப்பீர் ( என் ) 

3. நால்வரும்போற் சண்டை பார்ப்பதல்லால் உண்டோ 
நம்மாலே சாமிக்கு 
லவலேசம் 
நமக்குத்தான் அபகீர்த்தி சுமக்க நாயமோ னி 
நாளைக்கெப்படி செல்லும் 
விசுவாசம் 
மேல்கீழ் ஆனாலும் ஐயன்வில் இருக்க 
மிஞ்சி நமக்குவரு 
மோ மோசம் 
வீரர் என்று சும்மா பேர் கொண்டீரே ஐயோ 
வேண்டாமோ அணுவாகி 
லும்ரோஷம் 
சாலம்செய் தோடினால் நம்மைத் தடுப்ப 
தாரோ 
சதி செய்யும் பேருக்கு சமர்த்தன் என்றும் 
பேரோ 
நீல அரக்கர் கெடுங்காலம் என் 
யீரோ 
நில்லாது வாருங்கள் நிலைகடந்துபாய் 
வாரோ 
( என் ) 
ற்றி 
மூலபலச் சண்டை 
ஓதியிவ்வா றங்கதன்சொல் உரைக்குச் சாம்பன் 
உடன்பட்டான் அங்கு தம்பி முதலானோர்கள் 
நாதனுரையா லவரைக் கூடப் போனார் 
நாலுசமுத்திரமும் ஒன்றாய் வளைத்தாற்போலத் 
தீதுசெய்யும் மூலபலம் எதிர்க்கக் கண்டான் 
சீராமன் கோதண்டத்தினை நாணேற்றிக் 
காதளவும் வாங்கி இதெம் மாத்திரம் என்று 
கருசித்தான் சரமாரி வருஷித்தானே . 

பல்லவி
மூலபல சண்டையைக் கேளும் - ஸ்ரீராமன் செய்த 
மூலபல சண்டையைக் கேளும் 
( மூல ) 
அநுபல்லவி 
மூலபல : சண்டைகேளும் 
மூடன் ராவணன்குடி 
முவ்வுலகக் கிளைஞர்க்கும் 
முந்த உபசாரம் பண்ணிப் 
முன்னரக்கர் நம்பினோர் 
முக்கிய தேவாந்தகன் 
முடிபெறும் சூரியகேது 
முனைபெற்ற சம்பு மன்னன் 
முதுபோர் இடும்பன் அகம்பன் 
முச்சிரத்தரக் கன்சங்கன் 
முகை கும் பருதிக் கண்ணன் 
முதல் வீரர் முடிந்தனர் 
முழுதும் நெஞ்சு காய்ந்தது 
முற்றுயிர் கொடுக்கும் பேர்கள் 
முடவர் முதலாக இன்று 
மூயவிட்ட தூதர் செல்லப் 
வேலைசூழ் இலங்கை ஆளும் 
கேடன் ராவணன்கெடி 
எவ்வுலகத்த வுணர்க்கும் 
பிந்திட விசாரம் எண்ணி 
தன்னொடத்த தம்பிமார் 
உக்கிர நாராந்தகன் 
கெடிபெறும் யாககேது 
ரணமஸ்தன் கும்பகர்னன் 
அதிகாயன் கும்பன் நிகும்பன் 
வச்சிரத் தெயிற்றன் வங்கன் 
புகைக்கும் குருதிக் கண்ணன் 
சதிமாரும் மடிந்தனர் 
பழுதுவந்து நேர்ந்தது 
கத்தி என்றெடுக்கும் பேர்கள் 
கடுகிவர வேணுமென்று 
போஎவர்க்கும் சேதி சொல்ல 
முந்தி லங்கையை நாடி 
வந்து துக்கங்கொண்டாடி 
முண்டாக்கன் தன்னைத் தேற்றி சண்டையை உட்கொண்டு தோற்றி 
மூளும்கனல் போலேபற்றி 
ஆளும்கள மேலேசுற்றி 
மூடவும் பூமியசைந்தாடவும் தேவர் அஞ்சி 
வாடவும் வானரர்கண் டோடவும் தேடிவந்த 
( மூலபல ) 

சரணங்கள் 

1. அஞ்சு முகங்கள் ஈர் 
ஐம்பது தலைகள் ஈர் 
ஐந்நூறு முடிகள் ஈர் 
ஆயிரம் சிரங்கள் இரண் 
அங்கம்மிகு காத்திரங்கள் 
அலைபோலும் நாக்குகள் 
ஆவெனத்திறந்த வாய்கள் 
ஆகாசம் தொட்டகைகள் 
அடரக்கறு சுறுத்தும் 
அண்டத்தில் உள்ளோர் நவ 
அஞ்சுனக வெற்பங்கள் 
ஐம்பது புசமலைகள் 
ஐந்நூறு தோள் அடிகள் 
டாயிரம் கரங்களுடன் 
பொங்கும் பொறி நேத்திரங்கள் 
மலைபோலும் மூக்குகள் 
தாவெனப்புகுந்த ஈய்கள் 
ஏகாசம் இட்டமெய்கள் 
படையைக் குறிகுறித்து 
கண்டத்திலுள் ளோரெல்லாம் 
அடியோ டெழும்பி அந்தக் 
அரும்பார்க்குள் நிறைபட்டாற் 
பெரும் போர்க்குப் புறப்பட்டாற் 
கடல் ஏழும் பொங்கி இந்த 
போல் 
புற்றினில் ஈசல் 
போல் மலைமலைகள் 
ஆனபெரு ராட்சதர்கள் 
அனைய பெருமத்த கெசங்கர் 
தனி விருது பெற்ற துசங்கள் 
மானமளவா நிறைந்து 
தேவரைவென்று 
- கணக்கில்லாத 
அண்டபகி ரண்டமுட்டும் 
அளவும் காத்திர ரதங்கள் 
வளரும் போர்த்துர கதங்கள் 
எண்டிசை அகன்றமட்டும் 
கண்களிற்பொறி 
முறைமுறையா 
ஆற்று மணல் அளவிட்டே நட் 
அதிகக் குதிரைக் கூட்டம் 
பதறிக் கொள் ஆட்ட பாட்டம் 
சேத்திரம் அளவிட்டாலும் 
திக்குகளெல்லாம் 
கைக்கடங்கள் 
ஆகம் அணிபதக்கங்கள் தோள் 
வளைகள் கால்வளைகள் 
அக்குமணிக் குண்டலங்கள் 
மணியிழைத்த 
பொற்கொலுசு வெண்டையங்கள் வெற்றிக்கொடிகள் 
ஆலவட்டம் தாலவட்டம் 
அவுதாக்கள் முத்துக் குடைகள் 
கவிகைகள் சித்திரக் குடைகள் 
சாமரங்கள் சுருட்டிகள் 
- பீலிக்குடைகள் 
- வெயில் மறைக்க 
அதிவித நாதசுரம் தவிலொடு 
தாரை சின்னம் 
அறைந்த சங்குகள் எக்காளங்கள் 
கர்னாவொடு 
சிறந்த கொம்புகள் கைத்தாளங்கள்- துத்தாரிகள் 
ஆகுளிகள் மேளங்கள் 
ஐந்துவித பேரிகைகள் 
பம்பையொடு பூரிகைகள் 
காகளம் டமாரங்கள் 
வீராணங்கள் 
முழங்கிவர 
அங்குசங்கள் பரிசைகள் 
அஸ்திரம் வேலா யுதங்கள் 
சஸ்திரம் சூலா யுதங்கள் 
சங்கிலியின் வரிசைகள் 
-வல்உலக்கைகள் 
- இப்படிக்கொத்த 
ஆயுதத்தின் பேதங்கள் 
அங்கைகொண்டு சூழ்ந்துவர 
கங்கு கங்காப் பாய்ந்து வர 
கோடிகோடி பூதங்கள் 
பேய்களும் கொண்டு 
புலி இறைச்சி 
ஆட்டிறைச்சி மானிறைச்சி 
அலகைகள் கொடுத்துவர 
பலபேய்கள் எடுத்துவர 
மாட்டிறைச்சி நாயிறைச்சி 
மதுக்குடங்கள் 
கெக்கலிகொட்டி 
அண்டமும் அகன்ற நவ 
கண்டமும் கிடுகிடென்ன 
ஆர்ப்பரித்துத் தொடைகள் தட்டி விழிகள் எல்லாம் 
தீப்பறக்கப் பொறிகள் 
கொட்டி ராவணன் சொன்னது 
ஆரடா மனிதனவன் 
ஆரடா என்றே கத்திகள் 
அடங்கலும் வீசிக் 
கொண்டு ராமன் எங்கே என் 
றிடும்புகள் பேசிக் 
கொண்டு விதம் விதமா 
ஆளிபுலி கரடிகள் 
அரக்கர் மெத்தப் பாய்கு வாரும் 
ரைச்சலிட்டுச் சாய்கு வாரும் 
ஞாளி கழுதைகள் மேலே 
சிங்கத்தில் ஏறி 
சில அரக்கர் 
ஆகத்தினில் அடங்காத 
அங்கையாற் பிடிப் 
செங்கையாற் குடிப் 
பாரும் 
பாரும் 
தாகத்தாலே மேகங்களை 
சலம் பிழிந்து 
அதுக்கிஷ்டயாம் 
ஆரும் வேசாறி அந்த 
அலைகடலை அள்ளு 
சலசலெனக் கொள்ளு 
நீரும் அகப்படாமல் 
வாரும் பெருவாயால் 
வாரும் - கைகளை நீட்டி 
அஷ்டகெசங்களைக் கூடச் 
சுட்டெடுத்துத் தின்னவந்த 
அனல்போற் 
சொறிவரும் 
மரங்களாலே 
தினவுகளைச் சொறிவாரும் - பிறைகள் போலே 
அக்கிரமம் மிகுந்தபல 
ஆவென்று 
கூவென்று 
திறப்பாரும் 
பறப்பாரும் 
உக்கிர தந்தங்களைக் காட்டி 
பசிக்குதையோ 
கழுதைமுகம் 
ஆனைமுகம் புலிமுகம் 
ஆகும் அரக்கர் 
வேகும் அரக்கர் 
அனந்தம் 
அனந்தம் 
பூனை முகம் பரிமுகம் 
கண்கள் நெருப்பா 
சற்றாகிலும் 
அஸ்தத்தில் விரல் இல்லாமல் 
ஆன அரக்கர் 
போன அரக்கர் 
கோடி 
கோடி 
ஒற்றைக்கையும் ஒற்றைக்காலும் 
சொரூபம் கெட்டுப் 
வரைக் கண்ட 
அண்டர்கள் எல்லாரும் நீல 
அய்யா என்றே ஒடுங்கியே 
வையாமலே 
நடுங்கியே 
கண்டனிடம் போய் எப்படி 
உயிர்மேல் ஆசை 
சிவனே இந்த 
அம்புவியற் கடல்களும் 
அரக்கராய் வந்தன 
குரக்கினம் நொந்தன 
பம்புசரா சரங்களும் 
என்று - ஓடி ஒளித்துக் 
நாங்களும் இனி 
இன்று 
அம்பரத்திருக்கும் இந்த 
உம்பருலகத்தை விட்டு 
அப்பாலே செல்லுவோம் என்றார் இருந்தால் இவர் 
தப்பாமல் கொல்லுவார் என்றார் - என்னவே அரன் 
அந்தராமன் சரத்தாலே 
அதமாகிப் போவார் 
சதமாகி வாழ்வீர் 
ன்னய் 
இந்த அரக்கர் எல்லாம் 
நீங்கள் எல்லாரும் 
கேட்டு அமரர்கள் 
என்ன 
அகத்தினிலே முன்னம் 
அகற்றிப் பயங்கரம் விண்டார் 
கித்துத் தயிரியம் 
கொண்டார் 
மிகுந்த துயர்களெல்லாம் 
ராட்சதர் கோரம் 
முனிவரெல்லாம் 
அண்டநிழல் இல்லையென்று 
தண்டு கமண்டலங்கள் விட்டு 
அலங்கோலமாய் வெதும்பினார் தாமரை இலைச் 
சலம் போலவே ததும்பினார் - 
சித்தர்கள் எல்லாம் 
அனந்தம் அரக்கர்க்கொரு 
அளவிடத் தள்ளா தென்பார் 
களமிடம் கொள்ளா தென்பார் 
குரங்கை உரையிட்டாலும் 
இந்த சேனைக்கு 
சாத்தியர் எல்லாம் 
அத்தனை இத்தனை அல்ல 
இத்தனைப் பேர் தலைகளை 
அய்யன் அம்பு கொய்யுமோ என்பார் 
நமது பங்கில் 
தெய்வம் என்ன செய்யுமோ என்பார் வித்தியாதரர்கள் 
ஆயிரங்கோடி அந்தகர் 
ஆகிலும் வரைக் கொல்ல 
அனந்தம் நாள் வேணும் 
என்பார் -- உலகழிக்க 
நினைந்ததோ காணும் என்பார் - கந்தருவர்கள் 
ஆனையும் சேஷனும் இத்தப் 
அங்கத்தைச் சுமந்ததோ 
எங்கிட்டுச் சமைந்ததோ 
என்பார் 
என்பார் 
பூமியும் எப்படி இவர் 
இத்தனை பேரும் 
இவர்கள் இந்த 
ஆச்சரியம் கொள்ளவெகு 
மாச்சரியம் கொண்ட ரக்கர் 
அஷ்ட திசைமேலும் மேவினார் 
- ஆகாசம் என்னும் 
வெட்ட வெளிமேலும் தாவினார் இவரைக் கண்டு 
ஆர்வமுள்ள பதினெட்டு 
வீரரொடு சாம்புவனும் 
அரண்டங் கேநாட்டங் கொள்ளவே நடுநடுங்கிக் 
குரங்கெல்லாம் ஓட்டம் கொள்ளவே இவ்வகை நீசர் 
அடர்ந்து மலையும் குன்றும் 
படர்ந்து ராகவன் முன்னே 
கடந்து நாலு திக்கிலும் 
தொடர்ந்து தொடர்ந்து வந்த ( மூல ) 

2. எட்டி வருவார் சிலர் 
ஈண்டு வருவார் சில . 
ஏறி வருவார் சிலர் 
இரைந்து வருவார் சிலர் 
இடத்தில் வருவார் சிலர் 
எடுக்க வருவார் 
சிலர் 
இடிஇடி என்பார் சிலர் 
கிட்டி வருவார் சிலர் 
தாண்டி வருவார் சிலர் 
சீறி வருவார் 
சிலர் 
விரைந்து வருவார் சிலர் 
வலத்தில் வருவார் சிலர் 
முடுக்க வருவார் சிலர் 
பிடிபிடி என்பார் சிலர் 

எற்றும் எற்றும் என்பார் சிலர் குத்தும் குந்தும் என்பார் சிலர் 
எட்டும் எட்டும் என்பார் சிலர் வெட்டும் வெட்டும் என்பார் சிலர் 
எதிர் எதிர் என்பார் சிலர் மிதி மிதி என்பார் 
சிலர் 
இந்த வகை ராமனை 
வந்து வந்து மென்மேலும் 
ஈய்கள் மொய்துக் கொண்டவகைபோல் பெரும்புலியை 
நாய்கள் சுற்றிக் கொண்ட வகைபோல் சுற்றயில் அய்யன் 
என் சமர்த்தும் ராவணன் 
தன் சமர்த்தும் வந்தபடை 
யின் சமர்த்தும் பார்ப்போம் என்றே - நினைந்து மெள்ள 
புன்சிரிப்புக் கொண்டு கொண்டே நிற்க ராட்சதர் 
எல்லாரும் இவன் ஒரு 
திருக்கும் செருக்கே 
பெருக்க வேணுமோ 
வல்லாள கண்டன் தனித் 
போதும் 
இதிலும் செயம் 
ஓதும் என முதுகில் 
எத்தேச காலமும் 
வற்றாப் பெரும் சமுத்திரம் 
என்ற அம்பறாத்தூணி சாத்தி 
பிரசண்டகோ 
தண்டவில்லை நாணி 
ஏற்றி குணத்தொணிசெய் 
திட்ட போது மும்மதமும் 
ணிருண்ட சிலயானை 
வறண்ட சில யானைகளுக்குச் 
பொட்டெனவே வறண்டுகண் 
களுக்கு தொண்டையும் கூட 
சில யானைமேல் 
இருந்த பாகரைத் தள்ளி 
எடுத்துப் பிடித்தது ஓட்டம் 
விடுத்தது தேவர் கூட்டம் 
வருந்த வதைத்துக் கையை 
பயத்தை யெல்லாம் 
வல்லரக்கர்கள் 
ஏறி வந்த புரவிகள் 
இளைத்துத் தள் ளாடினவே 
உளைத்துள்ளம் வாடினவே 
வீறி வந்த கதிமாறி 
ராட்சதருக்கு 
பின்சாமி முனைந் 
திணையில்லா வெகுசூடு 
எவரும் இறக்க 
அவரும் பறக்க 
கணை ஏவி நின்றவர்கள் 
அடித்தான் 
அப்பாலே நின்ற 
முடித்தான் முடிக்கவே நாம் 
இருநூறு வெள்ளமிவன் 
எனத்திரும்பிக் கூடிக் 
பனிக்குலம் போல் மூடிக் 
ஒரு மானிடன் போகாதீர் 
கொண்டார் சூரியன் முன்னே 
கொண்டார் இவரே நமக் 
கீடெனச் சினந்து காற் 
றாடிபோற் சுழலும் கணை 
இலக்கமற்ற கணை 
தாக்கினான் 
தாக்கி அவரைத் 
தொலைத்து வெட்ட வெளி யாக்கினான் பின்னும் அரக்கர் 
இருநூறு வெள்ளமுடன் 
ஒரு நூறு வெள்ளங்கொண்டு 
ஏகோபித்து முளைத்துக் 
கொண்டார் நெருங்கி வந்து 
மாகோபத்தில் வளைத்துக் கொண்டார் அவரவருக்கு 
ஏறும் வழிமாற வெகு 
நூறுகணை தூறிமுது 
கிட்டோடத் தறித்து 
நின்றான் சிலரைத் தரி 
கெட்டோட முறித்து நின்றான் 
விடவிடவே 
இப்படி அந்நூறு வெள்ளம் 
டெசமானன் வன்னி 
வசமாகியே 
தப்பற முடிந்தது கண் 
என்பவன் மிகவும்பர 
புலம்புவன் அரக்கர் இன்று 
இறந்தனர் எல்லோரும் 
றேக்கமாய்க் கவலை 
மூக்கிலே விரலை 
பறந்தனர் ஐயோ என் 
பெற்று 
குறுகுறுத்து 
வைத்து இனி எப்படி 
ராவணன் முகம் முன் நிற்கப் 
லச்சைக் கேடென்று 
அச்சத்தோடன்று 
போகுவோம் இதென்ன மெத்த 
விளம்பி விளம்பியபின் 
கிளம்பி 
பலதிசையின் 
இரைச்சலை மாற்றி நின்ற 
ஈடழிந்து நொந்த 
ஓடி இங்கேவந்த 
அரக்கரைப் பார்த்து நீங்கள் 
தென்றும் மனிதற்கஞ்சி 
தென்றும் தேவர்கண்டால் 
ஏச்சாகும் இது கொஞ்சப் 
ஏசிடா ஏச்சை 
ரோஷமா வார்ந்தை 
பேச்சாகும் என்றவரை 
ஏசி - சீசீ எனவே 
பேசி அரக்கர் எல்லாம் 
இரைத் தோங்கியே ஒரு 
பெரும்பரம்பைத் தேரைகள் 
இளப்பம் என்று சுற்றிக் கொண்டாற்போல் - விட்டிற் பூச்சிகள் 
விளக்கை வந்து மொய்த்துக் கொண்டாற்போல் - மொய்க்க மனிதன் 
எம்மாத்திரம் என்றுதானே 
ஏகமாய்க் கடுக 
வேகமாய் முடுக 
ஐந்நூறு வெள்ளம் சேனை 
விட்டான் - அம்பிலும் அதி 
விட்டான் - விடுத்த பின்னை 

இளைத்தவன் போல் அவர் தன்னை வளைத்திடும் படிக்குச் சற்றே 
இடங்கொடுத்துப் பின் வாங்கினான் 
எவரும் கைக்குள் 
அடங்கவிட்டு முன் 
ஓங்கினான் வந்த அரக்கர் 
எறிநேசம் கட்டாரி 
இலக்காக மீதில் 
நொக்காக ராமன் 
தறி தோமரங்கள் வாரி 
சொரிந்தார் - அதுகள் நொக்கு 
அரிந்தான் - பின்னும் நெருங்கி 
புரவி ஓர் பக்கத்தில் விட்டும் 
விட்டும் 
அணி அணியா 
விட்டும் நிரை நிரையா 
ரதம் ஓர்பக்கத்தில் விட்டும் 
யானைஓர் பக்கத்தில் 
சேனைஓர் பக்கத்தில் 
இருப்புலக்கை பிண்டிபாலம் 
என்னும் படைவாங்கி 
பின்னும் கணை ஓங்கித் 
பெருத்தகத்தி தண்டு சூலம் 
விடுத்தார் - விடுத்தே அதின் 
தொடுத்தார் - அவரவரும் 
எத்தனைகை எத்தனைவில் 
டெப்படி ஒருவன் 
எப்படித்தான் போர் 
எத்தனை அம்பெத்தனை தண் 
தடுப்பான் அவர்மேல் ஐயன் 
தொடுப்பான் பெருமழைபோல் 
எடுத்துவிட்டான் படையெல்லாம் தடுத்துவிட்டான் என்று வாயால் 
எட்டிக் கடிக்க 
மேவினார் - கைப்பிடியாக 
கட்டிப் பிடிக்கத் 
தாவினார் 
ஆகாசத்தினில் 
நீசனார் நிருதர்கள் 
எல்லோர்க்கும் மனம் 
உல்லாசமாக 
நாசமாப் போவார் என்று 
தேற்றினார் சாமியைத் தேவர் 
வாழ்த்தினார் அந்த வேளையில் 
எப்புறத்தும் ராட்சதர்கள் 
கிரையாகத் தொகுத்துக் 
சரக்கூடம் வகுத்துக் 
அப்புறம் போகாமல் வாளிக் 
கொண்டான் 
- சுற்றிலும் போட்ட 
கொண்டான் - வகுத்த பின்பு 
ரதங்கள் யானைகள் துர 
கதங்கள் சேனைகள் பட 
எவரையும் மண்ணிற்
சதித்தான் பிடித்தவில்லோ 
டவரவர் முன்னிற் 
குதித்தான் தனித்தனியே 
இந்திரவாணம் மோக வாணம் 
சந்திரவாணம் நாகவாணம் 
எரிவாணம் 
வாயுவாணம் 
ஹரிவாணம் 
மாயவாணம் குபேரவாணம் 
விஜயமுர 
மையாத வருணன் வாணம் 
நமன்வாணம் அருணன் வாணம் 
இடிவாணமாக 
நொடித்தான் அரக்கர் தம்மை 
யோடே சாக அடித்தான் 
- பின்னையுமவர் 

எண்ணிறந்த சேனை சண்டை பண்ணி முடியா தென்றெண்ணி 
ஏகமாகக்கடு 
கடுத்தான் மந்திரம் சொல்லி 
மோகனாஸ்திரம் 
தொடுத்தான் தொடுத்த போதில் 
இங்கும் ராமன் அங்கும் ராமன் அங்கும் ராமன் இங்கும் ராமன் 
எங்கும் ராமனாகத் தோன்றினான் அவருக்கவர் 
தங்களாலேசாக 
மாற்றினான் இந்த வகையா 
ஈனராம் ஆயிரம் வெள்ளம் 
சேனையும் முகூர்த்தந்தன்னில் 
இறும்படியாகப் 
புடைத்தான் 
ரணக்களத்தை 
வெறுங்களமாகத் 
துடைத்தான் 
அனந்தங்கோடி 
எரிவாளிகள் பிறந்த கருமேகம்போற் சிறந்த 
ஒருராமனால் இறந்த சருகுகள் போற் பறந்த 
( மூலால ) 


3. தோள்கள் அறுந்த 
தாடைகள் இடிந்த 
தொந்திகள் 
சரிந்த 
துணைக் கைகள்இற்ற 
தொண்டைகள் தறிந்த 
துண்டம் துண்டமான 
தூணிகள் இழந்த 
துரகம் உலைந்த 
தோரணங்கள் கெட்ட 
தோமரம் பறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
தாள்கள் முறிந்த 
டைகள் ஒடிந்த 
சந்துகள் முறிந்த 
கணைக் கால்களற்ற 
மண்டைகள் திறந்த 
கண்டம் கண்டமான 
நாணிகள் இழந்த 
இரதம் கலைந்த 
வாரணங்கள் விட்ட 
சாமரம் எறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
தொட்டெடுத்த வாள் கெட்டு நட்ட கட்டை போல்பட்டு 
துள்ளித் துள்ளி நெளிப்பாரும் 
பிணங்கள் தம்மேல் 
தள்ளித் தள்ளி ஒளிப்பாரும் 
பலபலவா 
துண்டங்கள் ஆம் உடம்புகள் 
இண்டங்கொடி போலே அம்பு 
துறுபட்டு 
மாய்வாரும் 
குறைத்தலையாய் 
அறுபட்டுச் 
சாய்வாரும் இவ்வள வென்று 
சொல்ல இடம் இல்லாத பேரும் சல்லடைக்கண்போல் உடம்பு 
தொளைபட்டு 
வீழ்வாரும் விடாய் எடுத்துக் 
களைபட்டுச் 
சாய்வாரும் 
போடப் போடவும் 
தொலையா அம்புகளாலே தலைபோய்ப் பம்பரம்போலே 
சுற்றிச் சுற்றி 
மடிவாரும் முண்டங்களாகித் 
தத்தித் தத்திப் படிவாரும் நிலை கலங்கித் 
தோளென்றும் தாளென்றும் வாளென்றும் அடையாளம் 
தோற்றாமற் 
கெட்ட பேரும் 
காயங்களாலே 
ஆற்றாமற் 
பட்ட பேரும் தலைகள் அற்றுத் 
தும்பிமேலே நின்றபடி 
தொப்பெனவே 
குப்புறவே 
தொம்பர் போலலாகு கொண்டு 
வீழ்வாரும் - மண்ணைக்கடித்துக் 
தாழ்வாரும் - அம்புகள் எங்கும் 
சொருகி உயிர்விடச்சே 
சுருட்டிக் கொண்டு 
திருட்டிஉயிர் 
ணவலிப்பெடுத்துச் 
படுப்பாரும் - கண்பூச்சிபறந் 
விடுப்பாரும் - கைகால்கள் அற்றுச் 
சுருங்காமலே அடிக்கும் 
சோலைபோலே 
மாலைபோலே 
பெருங்காற்றில் கொம்பு போன 
காணுவாரும் தங்கள் குடலை 
பூணுவாரும் - அடுத்தடுத்துத் 
தொண்ணூறு தரம் ஐயோ தண்ணீர் தண்ணீர் என்று 
துடிதுடித்து 
ஓய்வாரும் - ரத்தத்தை அள்ளிக் 
குடிகுடித்துச் 
சாய்வாரும் - மனிதன் என்று 
துடுக்குச் சொல்லிய வாயின் இடுக்குக் காரியம் அம்பு 
சொரிபட்டு 
வதைவாரும் - சின்னபின்னமா 
அரிபட்டுச் 
சிதைவாரும் - கழுக்கள் கொத்த 
தொங்கிய பனங்காயிலே 
பொங்கும் விழுந்தலை 
பொங்கி விழுந்தலை 
நுங்கு போலக் கண்களும் போய் 
அனந்தம் 
ரத்தம் பெருகிப் 
அனந்தம் கழுத்து கள் போய்த் 
தூரத் தொலையில் விழப் 
தூறும் தலைகள் 
ஏறும் தலைகள் 
பீறிட்டு ரத்தம் எழத் 
அனந்தம் 
ஒன்றின் மேல் லொன்றா 
அனந்தம் அந்தத் தலையைத் 
தொந்தமிடும் பே பினங்கள் 
சுற்றிலும் வீழ்தலை 
முற்றிலும் வீழ்தலை 
பந்துபோல் எடுத்தாடச் 
அனந்தம் 
கடலின் கரை 
அனந்தம் 
சுவாமி அம்பாலே 
சொர்க்கம் உண்டெங்களுக்கென்று கொக்கரித்துக் கொக்கரித்துத் 
துடித்து விழும் தலை அனந்தம் 
ஓன்றோடொன்றாக 
அடித்து விழும் தலை அனந்தம் 
அம்புபட்டிரு 
துண்டாய்ச் சிலைகள் விழ 
சுழலும் கவந்தம் 
உழலும் கவந்தம் 
ரண்டாய்த் தலைகள் எழச் 
அனந்தம் 
பிணங்களோடே 
அனந்தம் முடித் தலைகள் 
துண்டித்து விழவும் தேகம் 
சோரும் கவந்தம் 
சேரும் கவந்தம் 
அனந்தம் 
அனந்தம் 
கொண்டெட்டி நடந்தப்பாலே 
எதிர் எதிரா 
அம்புபட்டிரு 
துருவிட்ட கணைபட்டு 
சுருளும் கவந்தம் 
உருளும் கவந்தம் 
மரவட்டை உருவிட்டுச் 
அனந்தம் ஈரம்பிசிக்க 
அனந்தம் - நட்சத்திரம் போலத் 
தொடுத்தமணி குண்டலத்தை அடுத்தடுத்தும் மாலை போடத் 
தொட்டாடும் சில பேய்கள் கவந்தத்தோடு 
முட்டாடும் சில 
பேய்கள் - ரத்தத்தில் ஆனைத் 
தோட்டியினிற் பிணங்களை 
மாட்டிவிளை யாட்டுக்காகத் 
தூண்டிலிடும் சில 
பேய்கள் - அதைப்பறிக்கத் 
தாண்டிவிழும் சில 
பேய்கள் - தின்று கொழுத்துச் 
சுயம்கொண்டு ராமனுக்குச் 
செயம் செயம் என்று சொல்லித் 
துதித்தாடும் சில 
பேய்கள் - பிணமலைமேல் 
குதித்தாடும் சில 
பேய்கள் 
ஆனைமணியைச் 
சோடன தாளமாக்கி 
ஆடி கொண்டு ராகவற்கு 
தோத்திரம் சொல்லும் சில பேய்கள் - சண்டை உண்டென்று 
சாத்திரம் சொல்லும் சில பேய்கள் - ராட்சதர்வாயில் 
சுரைவிரை போன்ற பல்லைப் 
தூவியிடும் சில 
கூவியிடும் சில 
பொரி என்றுவாயில் கவ்வித் 
நாய்கள் - லங்கையைப் பார்ம்துக் 
நாய்கள் - ஈரலை எல்லாம் 
தோண்டித் தோண்டிப் பிடுங்கித் 
தாண்டித்தாண்டிப் பசியை 
தொலைத்திடும் சில 
நாய்கள் 
களத்தில் எங்கும் 
குலைத்திடும் சில 
நாய்கள் - பெருகும் ரத்தச் 
சுனைக்குள் விழும்பிணத்தை 
உனக்கெனக் கென்றுசண்டை . 
தொடுத்திடும் சில 
நரிகள் - குட்டிக்கிரையாக் 
கொடுத்திடும் சில 
நரிகள் - இழுத்திழுத்துத் 
துணுக்குத்துணுக்காகக் கொத்தி பிணத்தைப் பெரும்பசியாம் 
சூளையிடும் சில 
தரிகள் - இலங்கையைப் பார்த்து 
ஊளையிடும் சில 
நரிகள் - எலும்புகளும் 
தொண்டைகளும் மண்டைகளும் கொண்டுபோய் இலங்கையிலே 
தூற்றும் சில 
பருந்துகள் - வீடுகள்மேலே 
ஏற்றும் சில 
பருந்துகள் - மூக்குகளாலே 
தொப்புளின் நரம்புகளை 
முப்புரிகொள்வது போலச் 
சுருட்டும் சில 
கழுகுகள் - தலை தலையாய் 
உருட்டும் சில 
கழுகுகள் - பிணமலைமேல் 
தொத்தித் தொத்தி மண்டைகளை கொத்திக் கொத்தி மூக்கினாலே 
தூக்கும் சில 
கழுகுகள் - 
ஓர் இடத்திலே 
சேர்க்கும் சில 
கழுகுகள் - கைஒழியாமல் 
துரத்தித் துரத்தி அந்த 
தூதரும் 
நாதரும் 
அரக்கரைப் பிடித்தெம் 
சலித்தாரே - எட்டுத்திசைக்கும் 
கெலித்தாரே - பிணங்கள் மேலே 
சோரும் அரக்கியர் கண் 
தொண்டுபண்ணும் சில 
உண்டுபண்ணும் 
கூளி ணீரிற்குளித்து பூசைத் 
அதற்குப்பலன் 
ரணகாளி - சம்மோகனச் 
சுடுகணை ஒன்றாலே 
தொலைந்த தென்றார் 
குலைந்ததென்றார் 
விடுமூல பலமெல்லாம் 
சிலதேவர் - ராவணன் கொட்டம் 
சிலதேவர் - இந்தக் கணையைத் 
தாடுக்கிற வித்னதராக 
தோணுமென்றார் 
காணும் என்றார் 
வனுக்கும் சிவனுக்கும் 
சிலதேவர் - பின் ஆர் அறிவார் 
சிலதேவர் - ராகவன் மேலே 
சொர்க்கத் தலத்தில் உள்ள 
தூறினார் சில 
கூறினார் சில 
கற்பகமலர் பறித்துத் 
தேவர் - செயமங்களம் 
தேவர் - இப்படிக் கொத்த 
துரைராமன் முன் நடந்து - திரையாழி போற்படர்ந்து 
வரையான கோதண்டத்துக் கிரையாக வே மடிந்த 
( மூலபல ) 

லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் 

பெருமூல பலமெல்லாம் இவ்வாறு சாமிகையாற் 
வ்வாறு சாமிகையாற் போனபின்னை 
வருபோரில் ராவணனும் தேர்கொண்டான் பத்துவில்லும் வாங்கிக் 
கொண்டான் 
ஒரு நூறு கோடி தேர் நானூறு கோடி பரிஓங்கும் யானை 
இருநூறு கோடியுடன் குதித்திட்டான் இளையவன்வந் தெதிர்த்திட்டானே . 


பல்லவி 
லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் நேர்ந்ததே சண்டை
( லட் ) 
அநுபல்லவி 
அட்சயமான மூலபலம் 
தன்னை 
அந்தக் கோதண்டம் உண்டுவிட்ட பின்னை 
கட்சி அரக்கனும் தேரில் 
துள்ள 
காவலிளையவன் அனுமான்மேற் கொள்ள 

சரணங்கள் 

1. குரக்கு வெள்ளத் தாரும் அரக்கர் வெள்ளத்தாரும் 
கூடித் தொந்த யுத்தம் 
ஆடினார் 
குன்றும் மரங்களும் தெண்டும் சரங்களும் 
கொண்டு ஒன்றை ஒன்றாற் 
சாடினார் 
செருக்களத்தினில் அரக்கன் நொடிக்குள்ளே 
சில நூறு கோடியம் 
பேவினான் 
திரும்பத் தம்பியும் அதுக்கதையை விட்டுத் 
தெள்ளும் தவிடு போலத் 
துரத்திப் பத்தம்பை அரக்கன் 
சுவாமி அதைக்கூடத் தூளி 
அரக்கன் மோகன அஸ்திரம் 
அய்யன் நாரணன் அம்பால் 
தூவினான் 
எய்யவும் 
செய்யவும் 
தெறிக்கவும் 
முறிக்கவும் 
( லட் ) 


2. வெஞ்சத் தனம்பண்ணி அரக்கன் வீடணன் 
மேலே மயன் வேலைத் 
தூண்டினான் 
குறுக்கேதம் பிக்குமுன்னே அங்கதனோடு 
அனுமான் அதுக் கெதிர் 
தாண்டினான் 
தஞ்சம் என்ற விபீஷணனுக்காகத் தம்பி 
இருவரையும் தள்ளி 
ஓங்கினான் 
சகல பேர்களும் உருக்கவே அந்த 
வேலை மார்பினில் 
வாங்கினான் 
அஞ்சி விபீஷணன் பயந்து 
வாடவும் 
அரக்கன் கெலித்தோ மென்று ஊரில் ஓடவும் 
சஞ்சீவியைக் கொண்டு அனுமான் 
அழைக்கவும் 
தம்பியும் சேனை களும் 
பிழைக்கவும் 
( லட் ) 

3. பிழைத்த தம்பி விபீஷணன் சுகமோ 
சுகமோ என்று 
கிளம்பினான் 
பின்பு சாம்பவன் ராமன்சேவடி 
முன்பின் உள்ளது 
விளம்பினான் 
தழைத்த ராகவன் உனைப்போல் ஆர் என்று 
தம்பிதன் புகழ் 
பாடினான் 
தந்தனம் சிரஞ்சீவி என்றனு 
மந்தனையும் கொண் 
டாடினான் 
அழைத்து வானர வெள்ளம் 
கெர்ச்சிக்க 
ஆசை முனிவர்கள் பேசி 
அர்ச்சிக்க 
மழைக்கு நிகர்மலர் தேவர் 
தூற்றிட 
வாழி இளையன் என்று 
வாழ்த்திட 
( லட் ) 

மூலப்பலப் படுகளக்காட்சி 
சீலமுள்ள ராகவனும் இளையோன் தன்னைத் 
தேற்றினான் பிறகுவிபீ ஷணனும் அங்கே 
கோலமுள்ள சுக்கிரீவன் அனுமான் சாம்பன் 
குமுதன்முத லோரை எல்லாம் கூட்டிக்கொண்டான் 
நாலுதிக்கும் சூரியன் முன் பனியைப் போல 
நாயான்கைக் கோதண்டம் ஒன்றினாலே 
மூலபலப் படுகளத்தைப் பாரீர் என்று 
மூட்டினான் வகைவகையாக் காட்டினானே 


கண்ணிகள் 

1. வெற்றி கொள்ளவந்த மூலபலம் மாள 
வேதண்டமாம் வீரகோதண்டம் செய்ததைச் 
சுற்றிய சேனை படைத்தலை வருடன் 
சுக்கிரீவரே வாரும் சுவாமிசெய்த விக்கிரமத்தைப் பாரும் 

2. சண்டப் பிரசண்டப் பெருங்காற்றிலே வெகு 
தாகத்தினால் விழும் மேகக் குலம் போலே 
அண்டர் பெருமான் ராமன் கையால் வீழ்ந்த 
ஆனைகளைப் பாரும் கிடக்கிற சேனைகளைப்பாரும் 

3. துண்ணெனப் பொங்கிய ரத்தக்கடல் மேலே 
சுவாமி யம்பாலே செந் தாமரைப் பூப்போலே 
வண்ணம் செவந்து மிதந்து வருமுக 
மண்டலத்தைப் பாரும் சிதறிய குண்டலத்தைப்பாரும் 

4. சீராம் பெரும்பாய்கள் கட்டும் கொடியாகச் 
செத்த களத்திலே ரத்தக் குளத்திலே 
ஓராயிரம் கோடி கப்பலைப் போலவே 
ஓடும் தேரைப்பாரும் விசையறுந் தாடுந்தேரைப் பாரும் 

5. கடலிலேபல பகரமீன் போலே 
கண்டித்த யானையும் துண்டித்த யானையும் 
எடலமாகிய ரத்தக்கடல் மேலே 
எழுகிறதைப் பாரும் அழுந்தி முழுகிறதைப் பாரும் 

6. கூத்தினில் நட்டுவன் பாத்திரம் என்றேத்தக் 
குண்டலங்கள் குறைத் துண்டங்க ளாய் எங்கும் 
பேர்த்துப் பேர்த்துநொண்டிக் கூத்தினைப் போலாடும் 
பிரேதங்களைப் பாரும்கைகள் கொட்டும் பூதங்களைப்பாரும் 

7. பண்டு பட்டயானை வால்புறத்தே அறுப் 
புண்டு சட்டயானையின் தலைகாணவே 
ரண்டுபக்கமும் தலயுள்ள யானை போலும் 
லட்சணத்தைப் பாரும் பேய்கள் தின்னும் பட்சணத்தைப்பாரும் 

8. அந்தரத்தக் கடலுக்குள்ளே மத 
யானைக் கொம்பு அந்திவானத்திலே இளஞ் 
சந்திரனைப் போல் மிதந்து மிதந்து 
தளும்புவதைப் பாரும் அங்கங்கே கிளம்புவதைப் பாரும் 

9. அத்திக் கொம்பால் தந்த சுத்தி செய்துரத்தம் 
அப்பி அப்பி வாயைக் கொப்பளித்து வீழ்ந்த 
கத்திகளைக் கொண்டு நாக்கு வழிக்கிற 
காளிகளைப் பாரும் சுற்றிவரும் கூளிகளைப்பாரும் 
10. யுத்தகளம் என்னும் ரத்த வயல்மேலே 
ஏற்றசதை என்னும் சேற்றினிடத்திலே 
அஸ்திரங்கள் பயிர் ஒத்துக் கிடக்கிற 
அற்புதத்தைப் பாரும் ரத்தம்தனில் புற்புதத்தைப்பாரும் 
11. கொண்ட கணவன் எனும் பிணத்தைக் கையில் 
கொண்டெழும்பும் பேயைக் கண்ட அரக்கியர் 
அண்டம் மட்டும் அதை எட்டிப் பிடிக்கிற 
ஆச்சரியத்தைப்பாரும் அவருடைய மாச்சரியத்தைப்பாரும் 
12. தும்பிமுகத்திலே ராட்சதர் மீசையைத் 
துள்ளறு கரச்சாத்திப் பிள்ளையார் என்றேத்திக் 
கொம்பில் அவர்மண்டைத் தேங்காய் உடைக்கிற 
குட்டிப் பேயைப்பாரும் குதிக்கிற மட்டிப் பேயைப்பாரும் 
13. பேய்முகம் நாய்முகம் ஆகியராட்சதப் 
பெண்டுகள் அந்தப்பிணம் பிடுங்கவந்த 
பேய் முகம் நாய்முகம் கொண்டே அடையாளம் 
பிடிக்கிறத்தைப் பாரும் நல்வார்த்தைப் படிக்கிறதைப்பாரும் 
14. பெண் அரம்பைக் கூத்துப் பார்க்கிற தெல்லாம் போய் 
பேய்க்கூத் தாச்சுதோ என்று முறைப்பட்டு 
பண்ணுடனே கிழப் பெண்கள் ஒப்பாரி 
பாடுவதைப் பாரும் தலைவிரித் தாடுவதைப்பாரும் 
15. இந்திர லோகமும் சந்திரலோகமும் 
எட்டுத்திக்கும் கொள்ளை இட்டுச் சிறைவைத்து 
கந்த அரக்கரை ராமன் வில்லுக்கிரை 
கற்பித்ததைப்பாரும் இராவணன் ஒப்பித்ததைப்பாரும் 
16. எள்ளிடவும் இடம் இல்லாமல் மண்டிய 
இத்தனைச் சேனையும் கைத்தனு ஒன்றாலே 
வள்ளல் இராமன் முதர்த்தத்தில் கொன்றுயிர் 
வாங்கினதைப் பாரும் பூமிபாரம் நீங்கினதைப்பாரும் 


ஸ்ரீராமரை மாலியவான் கொண்டாடல் 

நீதன்கை வீச்சர மாரிபட வேபடை . 
பாடுண்டு போனதை விபீஷணனா டேவிழி 
நேர்கண் டெ போர்களும் இராகவனை மேவினர் 
அதன்மேலே 
ஓதும்பி ராணியுடன் ஓடியத் சான்னன் 
மூதண்ட கோடியுள தேவர்கள் பகீரிட 
ஊரெங்கும் வேண்களி யாடல்வினையாடல் கள் செய் - கிறபோமே 
கோதண்ட வாளியினில் மூலபல சேனையை 
நாசஞ்செய் தானெனவே ஓடிவரு தூதர்கள் 
கூறும் சொல் லாலிதென மானிட வனாலவர் 
- படுவா ரா 
ஏதென்று ராவணன் விசாரமிட மாலிய 
வானவந்து காதுகளி லேசுறீல் சுறீலென 
ராமன் பிராதப செயராமன் இசையானது 
- புகழ்வானே 

பல்லவி 
ராமனுக்கு நிகராக ராவணா பூமியில் வேறுண்டோ 
( ராம ) 

அநுபல்லவி 
மாமூல பல மெல்லாம் 
ஒருத்தன் கொன்றதெந்த 
வகையென்று தூதரைப் பகையா தெழுந்து முந்த 
ஆமவன் கோதண்டம் 
வளைத்தானோ படைசிந்த 
அரையம்பு காலம்பு தெறித்தானோ ஏதோ அந்த ( ராம ) 


சரணங்கள் 


1 பின்னும் சொல்லுகிறேன் அவனுக் குனதுசண்டை 
பிள்ளைவிளை யாட்டல்லோ 
அத்தாட்சி 
மன்னும் மரமும் புல்லும் கல்லும் ஒரு சரத்தால் 
மண்ணோடே மண்ணாமே 
கண்காட்சி 
சின்ன மனிதன் என்றும் ஒருத்தனென்றும் எண்ணாதே 
தேவர்க்கும் தேவனவ 
னே சூட்சி 
உன்னைக் கட்டினவாலி தன்னைக் கொன்றானே இது 
உன்னண்டையில் இருக்க இன்னும் என்ன டாசாட்சி 
(ராம ) 

2. திண்டும் மிண்டும் செல்லாதே தர்மம் சேருமிடத்தில் 
செயமும் சேரும் அட 
நிர்மூட 
சண்டை உன்னாலாகாது செத்தவர்க்கெல்லாம்தில 
தர்ப்பணம் செய்யடா 
பெண்டுகளே யல்லாமல் லங்கையை விட்டுனக்குப் 
பின்பனட வருவதுண் 
டோகூட 
அண்டர் நாயகனை ஒருத்தன் ஒருத்தன் என்றாய் 
அண்டம் அழிக்கும் தேவர் ரண்டு பேர் உண் டோடா 
குடிகேட் 
( ராம ) 

தந்தாயே 
வீரவேல் விட்டேனென்றும் லட்சுமணன் பட்டான் என்றும் 
வீம்புவார்த்தைகள் இங்கே 
மாருதி மருந்தாலே அவன் எழுந்தானே இந்த 
மதிமோசத்தால் அல்லவோ 
வெந்தாயே 
காரியம் தெரிந்த விபீஷணன் சொல்லும் கும்ப 
கர்ணன் சொல்லும் கேட்க 
நொந்தாயே 
வீரியத்தால் ஐயோ காடுவாவா என்ன 
வீடுபோ போ என்ன வினைகொண்டு 
வந்தாயே 
( ராம ) 


மூலபலப்படுகளத்தை ராவணன் கண்டது 

வல்லாண்மை பேசியரா வணன் முன் இந்த 
வகைவகையாய் மாலியவான் சொல்லிச் சொல்லிப் 
பொல்லாத புண்ணிலேகோ லிட்டாற் போலப் 
புடைபுடைத்தான் மூலபலம் மடிந்த வாறும் 
சொல்லாலே தூதர் சொன்ன சொல்லும் உன் தன் 
சொல்லும்நிலை வரமோ என் றரக்கன் பொங்கி 
எல்லாம்பார்ப் போமெனக்கோ புரத்தின்மேலே 
ஏறினான் படுகளங்கண் டாறினானே

பல்லவி 
மூலபலப்படு 
கண்டானே ராவணன் மேன்மேலே 
களத்தை 
இருபது கண்களாலே 
( கண் ) 
அநுபல்லவி 
மிண்டாம் தூதர்சொல் இன்று மெய்யோ பொய்யோ என்று 
மெத்தவிசாரப் பட்டக்கணம் சென்றுஉத்தர கோபுர உச்சியிலேநின்று 
( கண் )

1. போன முகந்தோறும் மலைமலையாப் பிணம் குவிய - இதுவே 
வே நல்ல 
தானமா மென்று மேகங்கள் வந்து கவிய 
ராகவன்விட்ட 

2 மானக் கணைகள் பட்ட 
பாணத் தளவும்முட்ட 
வானத்திலும் அட்ட 
கோணத்திலும் எட்ட 
சோனைப் பெரியமலை 
தானொத் தெழுந்த கொலை 
ஆனைப் பிணங்களையும் 
சேனைப் பிணங்களையும் ( கண் ) 
சீலமுனிவர்கள் கண்டுடனே நடுநடுங்க - சீறிய ஆல 
காலமரம் எனும் கண்களை நாய்நரி பிடுங்க வீரகோதண்டம் 
காலமாரி மழை 
போலே கணைசொரிய 
நாலுதிசையும் வளைந் 
தோலமிடும் பெரிய 
மூலபலப் படையைக் 
கோலிவேர் அரிய 
மூலைக்குமூலை அலங் கோலமாய்த் தெரிய 
( கண் ) 

3. பெருகவேகளம் எங்கெங்கும் கவந்தங்கள் ஆட நட்டுவன் போல 
அருகிலே நின்று பேய்கள் தாளங்கள் போட - ராமன்பிடித்த 
ஒரு சிலை அதனாலே 
வரவர ஒருகாலே 
விடு கணை அறுபட 
நிருதர் முடிகள் கெட 
ஒரு பெருமலை மேலே 
வரும் அருவியைப் போல 
குருதிநீர் துள்ளத்துள்ள குருவிகள் கொள்ளக் கொள்ள ( கண் ) 
4. மங்கைமீர் அந்தவானரப் பூச்சிகளை புடைத்து - நிமிஷத்திலே 
உங்கள் முன் வருவேன் என்று கண்களைத் துடைத்துத் துடுக்காவந்த 
தங்கள் கணவன் கிடை 
அங்கெதிர்கண்டு கடைக் 
கண்களில் நீர் பெருகி 
அங்கமெல்லாம் உருகிப் 
பெண்கள் திரண்டு மொய்த்துச் செங்கை தலையில்வைத்து 
எங்கும் பதறி அழ 
எங்குங் கதறி அழ ( கண் ) 
5. பெரியவில்லுடன் அறுபட்ட கைகளும் விரலும் கண்டு கண்கள் நீர் 
சொரிய அரக்கியர் அடித்துக்கொண்டழும் கூக்குரலும் கண்டம்கண்ட 
ஒருவன்குடல் சரிய 
ஒருவன் உடல் எரிய 
ஒருவன் தலை மடிய 
ஒருவன் சிலை ஒடிய 
ஒருவன் தொடைபறிய ஒருவன் குடைமுறிய 
ஒருவன் உயிர் வதை 
ஒருகணை செய்ததை ( கண் ) 

இராவணன் தேர் ஏறுதல் 

மூலபலப் படுகளம் இவ் வாறு கண்டான் 
முடிபுனைகோபுரம் இறங்கிக் கோவில் சேர்ந்தான் 
காலம் எனும் முக்கோடி வயசும் ஈசன் 
கைவரமும் தொலைக்க ராவணன் முன்னாளில் 
மாலெனும் ராகவன் கொடுத்த வரத்தினாலே 
மதியும் அது விதியும் அது எனலால் துவார 
பாலன் எனமுன் போல் வைகுந்த வாசற் 
படி கொள்வான் தேரேறத் துடி கொள்வானே 


பல்லவி 
தேர்மேற் கொண்டானே - ராவணன் 
போர்மேற் கொண்டானே 
( தேர் ) 

அநுபல்லவி 
பார்மேலும் திசை மேலும் 
பாயும் திரைகடல் மேலும் 
ஆயிரம் புரவிகளும் 
மலைமேலும் 
முட்டிய 
கட்டிய 
( தேர் ) 


சரணங்கள் 


1 னத்தோடே வரச்சொல்லி 
இருந்தோரில் நூறு வெள்ளம் 
தொனித்துக் கையோடு கையை 
தூணியும் கவசமும் 
உறுக்கினான் - தப்பி 
பொறுக்கினான் - சங்கம் 
முறுக்கினான் 
இறுக்கினான் 
கனத்தபூமியும் மலையும் 
முனைத்த பேரிகை குமுறி 
சினத்தினால் முக வேர்வை 
தனக்கும் சீதைக்கும் இடக்கண் 
வெடித்திட 
இடித்திட 
பொடித்திட 
துடித்திட 
( தேர் 

2. பத்து முடியும் தரித் 
பத்தும் வெட்டியவாளை 
தோங்கினான் - 
திசை 
தாங்கினான் கோ 
நீங்கினான் - ஒரு 
வாங்கினான் 
பத்தால் அரண்மனையை 
பத்து வில்லையும் கையில் 
செத்தபேர்களை எண்ணி 
சத்தமே சங்கள் போலே 
கைத்தலத்திலும் வாரிக் 
சுற்றி அர்ச்சனை செய்ய 
மனம்நொந்து 
நாலைந்து 
கொடைதந்து 
வலம்வந்து 
( தேர் ) 
மாட்டினான் - காதில் 
பூட்டினான்- தும்பை 
சூட்டினான் - கண்கள் 
காட்டினான் 

3. இருபதுகையும் வளை இருபது குழைகளும் 
இருபது தோளிலும் இருபதும் நெருப்புப்போல் 
வருபெண் சானகி 
பதறு 
ஒருமண் டோதரி 
கதறு 
விருதெல்லார்களும் பார்க்க 
இருவகையில் ஒன் றாக்கு 
கிறதொன்று 
கிறதொன்று 
வே இன்று 
வேன் என்று 
( தேர் ) 


ராவணன் அவசகுனங்கள் காணுதல் 
கதிர்விடு குண்டலம் மணிமகுடம்பல கடகம் அலங்கிருதம் 
மென்போர்வை கவசம் நெடுஞ்சரம் அரைவடம் அந்தைகள் 
கலகலெனும் பணி --- யின்கோவை 
இதுமுதல் கொண்டொரு பதுகையில் வெஞ்சிலை இருபது செங்கையி 
லும்பாணம் - எரிவிழசிந்திய கருமலை என்றென எவரும் நடுங்க 
நெடுந்தேர் மேல் 
மதிகரிசிந்திட உடுநிறை சிந்திட மலைகள் அதிர்ந்திட - மண்பூமி 
மறுகிட எண்டிசை முருகிதியங்கிட மனிதன் எனும் சொல் 
இடும்பாலே 
அதிரணமண்டலம் அதிரரதம் தனை அதிரவிடென்று - இலங்கேசன் 
அருகினில் எங்கணும் இருபது கண்களில் அவசகுனம் பல 
கண்டானே 

பல்லவி 

இப்படியா அவசகுனம் கண்டானே கண்டராவணன் 
இடும்பாலே எண்ணாமற் சென்றானே 
அதுபல்லவி 
கைப்படை ஆனதைச் 
சேகரம் பண்ணி 
காகுத்தன் சரத்துக்குக் கொடுத்திட எண்ணி 
அப்படி வந்தா 
ராமன்மேலே 
அறிந்திருந்தும் புத்தி கெட்டவன் போலே 
னே 
( இப் ) 


சரணங்கள் 

1. ஆனைகளும் குதிரைகளும் பின்னுக்கு வாங்கி டக்கால் பதறவும் 
அறுந்த கொடிமேல் பகுந்து விழவும் அங்கே ரத்தத்துளி சிதறவும் 
சேனைகாவலர் வாயெலாம் வெறும் பானை போல் வறண் டுதறவும் 
சேரநாய்களும் பேய்களும் அழச் சூரியனைப் பார்த்தோர் கதறவும் 
( இப் ) 
2. தோள்வளைசரிய மாலைகள்கரிய இடப்புறக்கண்கள் 
துடிக்கவும் 
தோகைமாரழக் காகம்மேல்விழ ஆகாவாய்ச்சொல் படிக்கவும் 
வாளின்வாய்முனை மடங்கவும் கருந்தூளி ஆனது 
பிடிக்கவும் 
வானின் மேற் கருமேகம் இல்லாமல் வல்லிடி இடிக்கவும் கொள்ளிகள் 
பிடிக்கவும் ( இப் ) 
3 . முறை முறையாத் தேரிலே கட்டும் 
விருதுகேதனம் அழியவும் 
முரசம் பேரியம் டமாரமும் சருகுபோலே 
இழியவும் 
மறவர்கள் பூசும் சந்தனம்வறவ றென்றுபோய்க் கழியவும் 
மண்மாரிகள் ஆனவை பொழியவும் பெண்ஆனையிலேமதம் வழியவும் 
( இப் ) 


ஸ்ரீராமர் தேர் ஏறுதல் 

ஆசைகள் அதிர இவரவ சகுனம் இராவணன் எதிர்படப் தேர்விடலால் 
ஆண்மைகள் பெருகிய நீமறுபடி அனுமான் மிசைவருதல் ஒணாது முனே 
மாசறு சதுமுகன் நேசமொடு தவிய வாசவன் விடுகிற தேரிதன் மேல் 
மாருதிபுசமென ஏறுதி எனவரு மாதலிஉரைசெய ஆதரவாய் 
ஏசறுமுதுமறை ஏறிடவிதிநிலை ஏறிடமுனிவர்கள் தேவர்கள் ஈ 
டேறிட மகம் நிறை வேறிட அவரவர் ஏறிய பதவியில் ஏறிடவே 
வீசிடமழைபொழி கார்முகிலொளிவிடு மேருவென் மலைமிசை ஏறுதல்போல் 
வீரன் இரவிகுலசூரன் அதுலரகுவீரன் இரதமிசை ஏறினனே 

பல்லவி 
தேர்ஏறினானே - ராமச்சந்திரன் - தேர் ஏறினானே 
(தேர் ) 
அநுபல்லவி 
பார்மேலே வைப்பது நேரல்ல அரவிந்த 
பாதம்வைப் பாயென்று மாதலி கொடுவந்த 
( தேர் ) 


சரணங்கள் 

1. சோதி மதிநுதலில் 
திருநாமம் அணிந்திட்டு 
துலங்கும் அம்பறாத்தூணி வலப்புறத் தினிலிட்டு 
காதல் செய்யுந்தும்பை மாலைதோள் மேலிட்டு 
கச்சைகட் டியமார்பில் வச்சிர 
கவசந்தொட்டு 
குரோதம் செய்யும் இள நகை 
விடுத்துக்கொண்டு 
பாதம் தன்னில்மிதி 
யடி 
தொடுத்துக்கொண்டு 
கோதண்டம் ஒருகை 
யினில் 
எடுத்துக்கொண்டு 
தாய்தந்த மரவுரி 
யினை 
உடுத்திக்கொண்டு ( தேர் ) 
2. ஆரவா ரம் செய்யும் வீர வண்டையம் 
சாத்தி 
அங்கைத் தலத்துக்கு முன்கை கட்டியும் ஏற்றி 
தாரணி உள்ளோரும் வானவரும் 
தான் சொல்லவே லட்சுமிகாந்தனென்றே தோற்றி 
வீரபட்டம் விசாலம் 
நெற்றி 
நேரில் இட்டதி காரம் உள்ள 
கத்தி 
ஓர்வலப்புறம் மீதினில் 
சுற்றி 
ஆரும் ஒப்பிடொ ணாதொரு 
வெற்றி ( தேர் ) 

போற்றி 
உள்ள 
பாட 
3. தேவர் மடந்தையர் 
சீதை மனத்தில் 
தூவும் மலர்க்கை 
சூரியன் தேர் ஓட்ட 
சோபனங்கள் 
நினைந்ததுகை 
முனிவர்கள்கூத் 
லங்கைமேற்கண் 
தாட 
போட 
யாவரும் 
பாவிகள் 
தேவருக் 
ராவணன் 
கண்கண்டு 
சந்தங்கள் 
கானந்தம் 
வைகுந்தம் 
தேறவும் 
மாறவும் 
உறவும் 
ஏறவும் 
ஊ 
( தேர் ) 


மகோதரன் வதை 

திருத்தேர் ஏறி ராகவனும் சென்றான் போர்க்கும கோதரனும் 
தரிக்கா தெழுந்து ராவணன் பால் சார்ந்து போர்க்கு விடைகொடெனச் 
செருத்தான் செய்து லட்சுமணனை செயித்து வாவென் ற னுப்பவந்து 
கருத்தா வானரா கவனைக் கடிந்தான் அவனால் மடிந்தானே 


பல்லவி 

ராமன்கை அம்பால் 
மடிந்தானே மகோதரன் 
படிந்தானே மண்மேல் 
( மடி ) 

அநுபல்லவி 
கடிந்து ராவணனால் லட்சு 
கடுகி ஓடியவன் 
தொடர்ந்து ராமன் மீத 
சூதும்வாதும் சுவாமி 
மணன் மீது விடப்பட்டு 
மீதிற்போரினை விட்டு 
னேகசரங்கள் தொட்டு 
தொடுங்கணையாற் கெட்டு ( மடி ) 

சரணங்கள் 


1. அனு கூலச் சத்துராதி ஆகியிருந்துரா 
வணன் குடியினைக் 
கெடுத்துதன்னுடைய 
அகத்தில் எண்ணமெல்லாம் 
முடித்து லங்கையின்மேதே 
ஆசையினையும் விடுத்து - இணையில்லாரா 
மனுக்குர தம் அனுப்பும் தேவர்களையும்மக 
வானையும் கடு 
கடுத்து 
லட்சுமணனை 
மடித்துவரு வேனென்று வீரம் பேசிக்கையில் 
வலிய தனுவை 
எடுத்து அதிக்கடுஞ் 
சினத்தி னோடு பெரும் தேரை 
ஓட்டிக்கொண்டு 
சேனைகளை எல்லாம் தன் பின்னே கூட்டிக்கொண்டு 
கனத்த வில்லை வளைத்து நாணைப் பூட்டிக்கொண்டு 
கணைகள் எய்து ராமன்கையில் மாட்டிக்கொண்டு ( மடிந் ) 
2. போர்களத்தினில் வந்து அட்டகா சஞ்செய்து 
புவியெங்கும் கிடுகி 
டென்ன லட்சுமணன் மீதில் 
போகவிட்டிடுந் தேரை மறித்து ராமன்மீதிற் 
போகட்டும் , விடுவி 
டென்ன சாரதிஇந்தப் 
பார்க்குள் ராமனை வெல்லக் கூடாதென்று சொல்ல 
பற்களை நெடநெ 
டென்ன - வேகடித்து 
பாரடா உன்னை விழுங்குவேன் 
என்ன சாரதி 
பயந்துடல் விடுவி 
டென்ன 
நடுநடுங்கி 
கார்க்கடல் :வண்ணன்ரா 
மன்மீதில் தேர்விட 
கலங்காமலே மகோ 
தரன் நின்று போரிட 
ஆர்க்கும் சேனைராமன் 
அம்பினாற் பேர் கெட 
அதமாக அவன் மார்பில் 
ஓரம்பின் கூர்பட ( மடிந் ) 
மாலியவான் சொல்லால் சீதையை விடவே , சம் 
மதித்த ராவணனை 
அன்று - தடுக்கப் பெரு 
வயிற்றைச் சாய்த்துக்கொண்டு குடுகு டென்றேஓடி 
வஞ்சனை எண்ணி 
நின்று - அதிகபல 
சாலியானரா வணனே மூவுலகமும் 
சௌரியத் துடனே 
இன்றுமனம் 
தளர்ந்திந்த சனகியை விடலாமோ போபோஉன் 
தனக்கிது சரியோ 
சொல்லிய சொல்லும் 
காலனைப்போலவன் 
பாலிலே இருந்து 
கழுவாக்கரைத்து நாளும் கலகம் செய்து திரிந்து 
சீலராமன் கணைக்குத் தன்சேனையை விருந்து 
செய்வித்தோர் கணையால் தன் பெருவயிறும் சரிந்து 
( மடிந் ) 

வென்று 
என்று 
கடைசிநாளில் இராம இராவண யுத்தம் 
திடுதிடென ஓடிமகோதரனும் சென்
சேனைகளும் சாமிகையில் மடிந்த பின்பு 
முடுகி இரு வரும் தேரில் ஏறிக்கொண்டு 
மூதண்ட கோடிகளும் நடுங்கவிட்டே 
கடுகிமலை யோடுமலை எதிர்த்தாற்போல 
கடலினொடு கடல் எதிர்த்தாற் போல் விற்கொண்டு 
அடும் இரா கவனும் இரா வணனும் அங்கே 
அடுத்திட்டார் சண்டைசெய்யத் தொடுத்திட்டாரே 

பல்லவி 
( ராக ) 
ராகவனுக்கும் ராவணனுக்கும் 
நடந்ததே சண்டை தொடர்ந்ததே 

அநுபல்லவி 
மேகத்தைப் போலவே 
அய்யன் கணைகள் சாட 
மேலத்தைக் காணாமல் 
வெய்யன் கணைகள் மூட 
வாகொத்த தேர்மேலே 
இருவரும் கதித்தாரே 
வானமும் பூமியும் 
ஒன்றாக மதித்தாரே 

வான வெள்ளம் கடல்போலே களத்தைப்போய் 
ஈனர்விடும்கைச் சரத்தாலே நெளித்துப்போய் 
வா ரிவிடும்கற் பெருக்காலே அரக்கர்க்காவி 
வீரர் விடும்கைத் தடிக்குச் சூழ் குரக்குச்சேனை 
வளைக்கவும் 
ளைக்கவும் 
துள்ளவும் 
விள்ளவும் 


வடவையொடுபொரு
டெவை எனநிலை
மலையினொடுபொரு 
மலைய தென அலை 
கடலி னொடுபொரு 
கடலதென விரி 
ககனமொடுபொரு 
ககணம் என அரி 

சரணங்கள் 
அரக்கன் ராவணன் 
சிலகணைகள் 
அதைக் கண்டேராமன் தவிடுபொடிகள் 
( ராக ) 


1 . எய்தான் செய்தான் 
அரக்கன் நூறு நூறா 
அதைக்கண்டே ராமன் 
யிரமம்பு 
தூற்றினான் 
நொடியொன்றில் மாற்றினான் 
அரக்கன் ஆயிரமாயிரம் 
ஆயுதம் 
அதைக்கண்டே ராமன் தூளிகள் தூளிகள் 
அரக்கன் தேரைஆ 
காசத்திற் 
அதுக்கும் சாமிதேர் 
மேலாகத் 
தொட்டான் 
இட்டான 
போக்கினான் 
தூக்கினான் 
ஆதிநெடுஞ் சேஷனும்பட்சீ சனம் பொற்றூ 
ணிடத்தேகன 
காசுரனும் சிங்கமும்தப்பா தடுத்துப்போர் தொடுத்தால் என 
ஆனதுரங்கம் திருப்பிக்கோல் பிடித்துத்தேர் விடுத்தேவரும் 
மாதலிசங்கம் தொனிக்கச்சே பயப்பட்டார் முடித்தேவரும் 
அக்கணம் இருதேரும் 
திக்குத்திசை களும் போய் 
அப்புறம் மலைதாவும் 
இப்புறம் செவிதாவும் 
தடந்தத்தும் 
இடஞ்சுற்றும் 
அலைதாவும் 
புவிதாவும் 
நிலந்தத்தும் 
வலம் சுற்றும் 
கடல் தாவும் 
கெவிதாவும் 
கட.கட 
பயந்து 
நடுங்கி 
அன்று முனிவர் 
என்று பதறி 
அண்டமுகடு 
மண்டலமும்மிசை 
பிளந்து 
விண்டு 
விடவிட 
நிலைகெட 
தலைகெட 
அதிர மலைகளும் 
அதிரவெகு திசை 
அதிரஉத்திகள் 
அதிரஉடுவினம் 
அதிரநிலைகளும் 
அதிரமலையிடி 
அதிரமதிகதிர் 
அதிரஇப்படி 
( ராக ) 


2 . வட திசைமுதல் 
கடலிலும் போவார் 
மனது வேகமோ 
கனக லோகமோ 
நாலு திசையும் 
கடல் அப்புறமும் 
வாயு வேகமோ 
கீழ் உலகமோ 
போவார் 
போவார் 
என்ன 
என்ன 
வருவர் ஓடுவர் 
பொருவர் சேருவர் 
வசன மாகஉரை 
குசவனானவன் 
கூடு வர்இரு 
நேருவர் இதை 
யார் சொல் வாரொருக் 
விடுதிகிரியைப் 
தேரும் 
ஆரும் 
காலே 
போலே 
தானே 
தானே 

மாரிவழங்கும் பிரசண்டக்கொண் டலைப்போல இடித்தார் பலர் 
தீவும் விசும்பும் குலுங்கச்செஞ் சாக்காடா முடித்தார்சிலர் 
மாதலி அங்கம் தொலைத்துப்பாய் பரிக்குக்கோல் விடுத்தான் ஒரு 
சாமி நெடுந்தேர் மறைத்தங்கே துசத்தைக்கீழ்ப் படுத்தான் அவன் 
வளையராகவன் தேரை நிருதன் 
மூட 
லாலே 
இளையவன் முதலானோர் களையானார் அதன் மேலே 
மணவாள ராகவன் 
பனிபோல 
ஒத் 
கணையெல்லாம் அறுத்தவன் கொடியையும் அறுத் 
மால்ஒத்தவன் படை 
மாரி 
பெய்திட 
சூலப்படை கொடு 
சுவாமி கொய்திட 
வன்னி வாளியை 
அவன் 
விடுத்திட 
அன்னதே கொடு 
சாமி 
தடுத்திட 
மாமயன் படை 
அரக்கன் 
தொடுக்கவும் 
சாமிகந்தரு 
வஸ்திரம் எடுக்கவும் 
நாக லோகமும் 
புவியும் பொடிப்பொடி 
ஆகவே கள 
மீதில் அடிக்கடி 
( ராக ) 
3. சாமிமேல் ஒரு 
தெண்டவன் 
விடுத்திட 
சாமி ஓரம்பு 
கொண்டதைத் 
தடுத்திட 
சாமிமேல் அவன் 
மாயாஸ் 
திரம்போட 
சாமிதான் ஞானாஸ் திரந்தொடுத் 
ததைச்சாட 
சாமிமேல் சூலம் 
அவன் விடச் 
சினங்கொண்டு 
சாமி ஓங்காரம் 
விழக்கண்டு 
சாமி மூவரும் 
இவனென்னும் 
விவகாரம் 
தம்பி சொன்னதை 
நினைந்தெண்ண அந்நேரம் 
தாகருடன் செஞ்சரத்தைக் கைப்பிடித்துச் சாமிதொட்டே அவன் 
நாகமெனும் செஞ்சரத்தைக் கொத்தவிட்டுத் தூளியிட்டான் 
ஒரு 
சாமிதிரும் பத்தொடுத்துப் பொற்பிறைக் கொக்கும் சரத்தால்வரு 
ராவணன் நெஞ்சைத் தொலைத்தொற்றைச் சிரத்தைத் துண்டம் 
இட்டான் 
செய்தது 
தறிபடு சிரம் 
அவனுக்கு 
சரிசரி அரியவே 
வரவரக் 
தறிபடுகையால் மாதலி 
மார்பைக் 
அவன் விடு தோ மரத்தையும் அய்யன் 
முளைத்திட 
கிளைத்திட 
கலக்கினான் 
விலக்கினான் 
( ராக ) 


தறித்திவன் சரீ 
ரம் நிறைந்திட 
மயிர்க்கோர் அம்பது 
ஆய் மறைந்திட 
சலித்தவன்களை 
ஆய்விழுந்திட 
உணர்ச்சி கொண்டுட 
னே எழுந்திட 
சரமும் விடுவிடு 
படையும் பொடிபட 
சகலரதக்ச 
தளமும் அடிபட 
இருவர் மனதிலும் 
வளர முழுபகை 
எவரும் உடல்விட 
விடென இவ்வகை 
4. எடுத்து ராவணன் 
வளைத்த சிலை 
தன்னை 
ஒடித்து நாணியை அறுத்தும் இப்படிப் 
பின்னை 
இடக்கை யோடவன் வலக்னகயும்விழ 
துடித்து ராகவன் முடுக்கினான்கணை 
ஒன்று 
இழுத்துத் தேர்வரு பரியும் பாகனும் 
அழுத்தத் தூணியும் குடையும் படையும் போக 
எதிர்த்த ராவணன் 
ஒருபதுமுடி 
மேலே 
பதைத்து மாமலை 
யினில் விழும் இடி 
போலே 
ராமன் விடுசெஞ் சரத்திற் கொத்துடைப் பத்துப் பனங்காய் என 
நாய்நரி மண்டிக் கடிக்கக் கொக்கரித்து சுற்றிலும் போய்விழ 
ராகவன் இப்படித் தொடுத்துக்கத் தரிக்கத்கத் தரிக்கத்தலை 
ராவணனுக்குச் சரிகட்டிச் சரிக்கட்டிக் கிளைத்துக்கொள 
என்று 
சாக 
ன 
இப்புறம் ராமன் அரக்கன் மாளும் வனக என்ன 
அப்புறம் விபீஷணன் உபாயம் . 
முறை 
பன் 
லட்சுமி சீதையும் காவல் கொண்ட சிறை தீர 
தட்சண சூரியன் தேரும் லங்கை வழி சேர 
ணக்கிடும் காதண்ட 
வணக்கிடும் கோதண்ட 
பட்டு கைபிரமாஸ்தி 
விட்டிடத்தனி ராட்ச 
மனுமதி 
நடுவதில் 
ரம்தனை 
தன் புனை 
ரத்தின மணிமருமத்தின் 
வைத்த அமுர்த கடத்தில் 
மத்தன் விடுகிற சித்திர 
பத்து மணிமுடி தத்தி 
இடையிட்டு 
அடிபட்டு 
ரதம் விட்டுப் 
விழும் மட்டும் 
( ராது ) 

இராம பாணத்தால் இராவணன் இறந்தது 

தூவி முடிக்கயி லாசம் எடுத்திரு நாலுமதக்கரி யைச்சாடி 
சூரியனைத்திசை மாறவிடுத்தொரு சூறையடித்த மிடுக்காலே 
பூவுலகத்தவர் கீழுலகத்தவர் மேலுலகத்தவர் தப்பாதே 
பூசைசெலுத்திட ஆண்மை செலுத்துபு யாசலமிக்க தசக்ரீவன் 
ஆவல்மிகுந்தொரு சீதைபொருட்டினில் வீரமும் வெற்றியும் முக்கோடி 
ஆயுசும்மட்டி டொ ணாத அரக்கரும் ஆடலம் ஒக்க விடுத்தேபின் 
யாவரும் இக்கதை ஆரமுதொப்பென வேதினம் உத்தமர் கற்றோத 
ராமசரத்தினில் மாமலை ஒத்த இ ராவணனிப்படிப் பட்டானே 


அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் 

நிருதனிவ் வாறழிந்தபின்பு சாமிதேரில் 
நின்றிறங்கி இவன் முதுகில்வடு வேதென்றான் 
வரும் முதல் நாள் அனுமான்கைக் குத்தால் வந்த 
வடுஎனவீடணன் சொல்ல மகிழ்த்தானிப்பால் 
அருளும் ஐயன் ஏவலினால் இவனும் போனான் 
அண்ணா அண்ணா என்றே அண்ணன் மேலே 
ஒருமலைமேல் ஒருமலைபோல் வீழ்ந்து கண்ணீர் 
ஒழுகின்றான் பழமை சொல்லி அழுகின்றானே 

கண்ணிகள் 

1-உண்டாற் கொல்லும் விஷம் உலகத்தில் எங்கெங்கும் 
உண்டே 
அண்ணாவே - சீதை என்ற 
கண்டாற் கொல்லும் விஷம் உன்னிடத்திலே மாத்திரம் 
கண்டேன் 
அண்ணாவே 

2. இந்த அநியாயத்தை பிரம்மாவிடம் சொல்ல 
இறந்தாயோ 
அண்ணாவே 
பந்தித்த ஆசையும் உயிரோடேகொண்டு 
பறந்தாயோ 

அண்ணாவே 
3. உள்ளதோ சீதையைத் திருடுவதென்ற என்னை 
ஓட்டினாய் 
அண்ணாவே உலகிலே 
கள்ளனுக்குக் கூவென் றவன்மேல் பகைபோலக் 
காட்டினாய் 
அண்ணாவே 
4. அடி நாளை சாபத்தீடு சீதையாய் வந்ததென்றேன் 
அலைந்தாயே 
அண்ணாவே உடம்பெங்கும் 
சுடுகிற செந்தணலை மடிமேலே கட்டித் 
தொலைந்தா யே 
அண்ணாவே 
5. நினையாதே சீதையைக் குலையும் வாழ்வென்ற சொல் 
நிறைந்ததோ 
அண்ணாவே 
ராமனை 
மனிதன் மனிதன் என்ற வாயும் துடுக்கும் எங்கே 
மறைந்தாயோ 
அண்ணாவே 
6. வள்ளல் கும்பகர்ணன் மாலியவான் சொல்லியும் 
மருண்டாயே 
அண்ணாவே அடங்காமல் 
துள்ளின மாடுபொதி சுமக்கும் என்றாற்போலே பட்டுச் 
சுருண்டாயே 
அண்ணாவே 

7. சுற்றமும் சேனையும் உன் பத்து முடியும் முதல் நாள் 
சோர்ந்தாயே 
அண்ணாவே --- எல்லாரும் 
செத்தபிற காகிலும் ராமனை தெய்வமென்று 
தேர்ந்தாயே 
அண்ணாவே 
பரந்த கயிலாசமும் உன்னுடைய தோளுக்கு 
பற்றுமோ 
அண்ணாவே தோள்மேலே 
சுரந்து குரங்குக் கூட்டம் இப்போ தணியணியா 
தொத்துமோ 
அண்ணாவே 
9. விரிந்த தேவர்க்கெல்லாம் கடைக்கண் கொடாமல் வெடு 
வெடுத்தாயே 
அண்ணாவே 
களத்திலே 
பருந்தும் கழுகும் கொத்த முழுமுழுக் கண்கொடுத்துப் 
படுத்தாயே 
அண்ணாவே 
10. பூமலர் அம்புகளைக் காமன்கை எய்தெய்து 
பொழிந்ததே 
அண்ணாவே இப்போதிந்த 
ராமன் எய்தபிறகு காமன் எய்கிறதெல்லாம் 
இழிந்ததே 

அண்ணாவே 
11. சிறுமதி கொண்டல்லவோ மறுபெண்கள் மேலாசை 
திரண்டாயே 
அண்ணாவே 
அவரவர் 
பொறுமை இடித்தல்லவோ மண்ணென்கிற பெண்மேலே 
புரண்டாயே 
அண்ணாவே
ன்றைக்கெம் 

12. பிரமாதி தேவர்கள் தந்தவரங்கள் எங்கே 
பிரிந்ததோ 
அண்ணாவே 
தருமரா சனுக்கும் உன்னைத் தின்று தொந்தி 
சரிந்ததோ 
அண்ணாவே 

மண்டோதரி புலம்பல் 

நாடிவிபீ ஷணன்இவ்வா றழுதபோது 
நல்லசாம்புவன் தேற்றத் தெளிந்தான் இப்பால் 
பாடல் செய்யும் மடமாதர் அரக்கர் மாதர் 
பாதாள மாதர் முதற் பலரும் சேர்ந்து 
கூடமண்டோ தரியங்கே கொள்கொம் பில்லாக் 
கொடிபோல ராவணன் பேருடல்மேல் வீழ்ந்து 
தேடரிய துணையிழந்த கிளிபோல் வாயைத் 
திறக்கின்றாள் அழுதழுது பறக்கின்றாளே 

கண்ணிகள் 

1. என்னசெய்வேன் என்னசெய்வேன் மைந்நாத் மேைபா லுன்னை 

இங்கேகண்டு நொந்தோன் நொந்தேன் லங்கைமன்னவா - ஐயோ 
உன்னுயிரைக் கொன்றநமன் என்னுயிரும் கைகொள்ளானோ 
ஓடியிதோ வந்தேன் வந்தேன் 
லங்கைமன்னவா 
2 . கண்ணான பேர்களையெல்லாம் புண்ணாக்கி வீடணனென்னும் 
கரும்பையும் வேம்பாக்கிவிட்டாய் லங்கைமன்னவா -- ஐயோ 
பெண்ணான சீதைபிறக்க லங்கை அழிந்துபோம் என்ற 
பேச்சையே மெய்யாக்கியே விட்டாய் 
லங்கைமன்னவா 
3. தினம் இந்த லோகத்திலே நீ தேவராலும் சாகாய் என் 
று 
சிந்தை மகிழ்ச்சி ஆனேனே 
லங்கைமன்னவா - 
வினைபோலிந்த நானிலொரு மனிதனாலேசாவாயென்று 
விதியறியமாற் போனேனே 
லங்கைமன்னவா 
ஐயோ 
ஐயோ 

4. சீதை ஆசையை வெளியில் ஓதாமல் அடக்கிக்கொண்டு 
செருக்களத்தில் தூங்கிறாயோ 
லங்கைமன்னவா ஐயோ 
ஏதையா சொர்க்கலோகத்து மா தருக்குள் உனக்கேற்க 
எந்தப் பெண்ணைக் காண்கிறாயோ லங்கைமன்னவா 
5. எட்டானைக் கொப்பு பிடுங்க ஒட்டாமற் கெட்டியாகக் கட்டி 
இருக்கின்ற மணிமார்பாச்சே லங்கை மன்னவா 
சட்டமாக ராமன் அம்பு பட்டாடைமேல் ஊசிபோலத் 
தட்டாமல் உருவிப்போச்சோ லங்கை மன்னவா 
6 . ஊரிலே சீதைமேல் வைத்த ஆசையிந்த மட்டும் எங்கே 
ஒளித்திருந்து வாதிச்சதே 
லங்கை மன்னவா ரகு 
வீரன்பாணம் உன்உடம்பை எலிவெட்டிச் சோதிக்கிறா போலே 
வெட்டியின்று சோதிச்சதே லங்கை மன்னவா 
7. அனர்த்தமா விளையும் அய்யோ நினைக்காதே சீதையைான்றேன் 
அன்று கேளாமல் வைதாய் லங்கை மன்னவா 
உனக்கு முந்திக் கொள்ளாதமுன் எனக்கு நீமுந்திக்கொண்டாயே 
ஓரவஞ்சகம் செய்தாயே 

லங்கை மன்னவா 
8. நங்கைசூர்ப் பநகிதனான் நங்கையை எடுக்கச்சொல்லி 
நமன் போல் வந்து நின்றாளே லங்கைமன்னவா - ஐயோ 
என்கழுத்தும் பாவியவள் தன் கழுத்தைப் போலே ஆக்க 
எண்ணியே உன்னைக் கொன்றாளே லங்கைமன்னவா
9. அந்தமரம் சீதையை ஆரும் வந்தனை செய்யும் தெய்வத்தை 
ஆரோபோல் ஆசைப்பட்டாயே லங்கைமன்னவா 
இந்தமரத்தை வெட்டினால் இந்தஇடத்திற் சாயுமென் 
றெண்ணாமல் புத்திகெட்டாயே 

லங்கைமன்னவய 
10. வேதன்முதலோர் வரப்பிர சாதத்தால் மூவுலகுக்கும் 
வேந்தன் என வாழ்ந்திட்டாயே லங்கைமன்னவா ஐயோ 
நான் 
ஐபோ 
சீதையாம் புரைமோரிட்டு வாழ்வாம்பாற் கடல் கெடுத்துத் 
தெருவிலே என்னை விட்டாயே லங்கைமன்னவா 

சீதாதேவிக்கு அனுமான் ஜெயசேதி கூறுதல் 
ஆனமண்டோ தரியிவ்வா றழுது சோர்ந்தாள் 
அரக்கனுக்குக் கடன் விபீஷணனும் செய்தான் 
வானரவேந் தனும் தம்பி தானும் செம்பொன் 
மௌலிவைக்க இலங்கையபி ஷேகம் கொண்டான் 
மானவனும் மாருதியை ஏவத் தான் போய் 
வாடியதோர் பயிர்க்குமழை பொழிந்தாற் போல 
சானகிதன் காதில் இரா வணன் போய் வீழ்ந்ததனம் சொல்வான் மகிழ்ந்துசோ பனம் சொல்வானே

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


									

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -5–

March 15, 2024

ஸ்ரீராமஜெயம் 


ஆறாவது யுத்தகாண்டம் 


அனுமார் மீண்டபின் ராவணன் கேட்க மந்திரிகள் ஆலோசனை கூறல் 

ஆலிலைமேற் பள்ளிவிடுத் தயோத்தி வந்தோன் 
அருங்கடல் வாய்ப் பெருங்கவிகள் உடனிருந்தான் 
மூலஇலங் கையை முன்போல் விசுவகர்மா 
முடிக்க அந்தப்படிக்குரா வணனும் கண்டான் 
வாலிலும் காலிலும் அனுமான் இடுந்தீயாலும் 
மாண்டரா  தர்போக அந்த ஊரில் 
லுளரா க்ஷதருக்கும் அரக்கன் பொல்லா 
வினை செய் வான் மந்திராலோ சனை செய் வானே . 

கண்ணிகள் 

1 வாரும் வாரும் பாரும்பிரிய 
பாருப் பாரும் ராவணன் எனைப் 
மதிமந்திரிமாரே 
பார்த்தென்ன சொல்வீரே 

2 . அரிஅயன்கூடப் பயப்படும் இலங் 
கரிகரியாக் குவியக்குவிய 
3. இங்கே சுட்ட சூடாறவில்லையே 
நங்கையர் கொண்டைவெந்திடச்சுறு 
காபுரித் தெருமேலே 
கண்டோமே குரங்காலே 
லங்கையில் நாலுசாரும் 
நாறுகின்ற துபாரும் 

4. மனிதர் அனுப்பக் குரங்கிக்கேவர 
இனிஎன்ன வெற்றி இனியென்னசத்தி 
மாண்டதரக்கர் கூட்டம் 
னியென்ன கொண்டாட்டம் 

5. என்ன ராவணன் சொல்லச் சீறி 
நன்னிக்குரங்கும் கொசுகும்பகையோ 
6. ஒருவர் ஏதுக்கு நானே லட்சுமணன் 
ருவர் தலையும் கொண்டுவருவேன் 
எழுந்தானே உன்மத்தன் 
நமக்கென்றானே பிரகத்தன் 
உடனே அவன் அண்ணன் 
என்றானே புகைக்கண்ணன் 

7. நரரையும் வானரரையும் கொல்ல நானல்லோ அனுபந்தன் 
துரிதமா என்னைப் போகச்சொல் என்று சொன்னானே வச்சிரதந்தன் 

8. இவன்மனிதருக்கிவன் குரங்குக்கென்று ஏவினான் என் கோனே 
அவனவன்பலந் தெரியலாகும் என்றான் மகோதரன் தானே 

9. நாமேதின்கின்ற நரரும் குரங்கும் 
மாமோசம் இதுவென்று துன்முகன் 
நம்மை எதிர்க்க ஆச்சே 
வகுத்தானே தன்பேச்சே 

10 முட்டனுக்குத் தன்புத்தி நூலிலும் 
துட்ட மந்திரிகள் வாயில்வந்தது 
முற்றிலும் செம்மை போலே 
சொன்னாரே ஒருக்காலே 

11 சூரியகேது பிசாசன் முதலோர் 
காரியமல்ல வென்றுறுக் கினான்கும்ப 
சொல்லிடும் அந்தவேளை 
கர்னனெனும் அக்காளை 

கும்பகர்ணன் ராவணனுக்கு ஆலோசனை கூறல் 

படபடென மந்திரிகள் இந்தவிதம் சொன்னதெல்லாம் 
பரிந்து கேட்டே 
உடல்மறந்தே ராவணனும் சிறியார்கைச் செம்பொன்போல் 
உற்சாகத்தால் 
கடல்கடந்து போராட நினைந்தளவில் அமைச்சர்களைக் 
காய்ந்து பின்பு 
திடமுடைய கும்பகர்ணன் கூறுவான் அண்ணன் முன்னே 
சீறுவானே 

பல்லவவி  
நேத்தியிது நேத்தியடா அண்ணேன் 
நேத்தியிது நேத்தியடா அண்ணேன் 
மந்திரா லோசனை 
( நேத் ) 
அநு பல்லவி 

ஏற்கும் கும்பகர்ணன் என்சொல்லை வீழ்க்கிறாய் 
எடுப்பான கீர்த்தியைத் துடுக்காலே தாழ்க்கிறாய் 
சூத்தில் அடிக்கவே வாயிற்பல் போச்சு தென்ற 
சொல்லைப் போலே இந்தத் தூர்த்தர்சொல் கேட்கிறாய் ( நேத் ) 

சரணங்கள் 

1. தேட்டமாம் அசோகவனம் அழிபட்டபோதே 
தேவருக்கும் உனது 
பயம் போச்சே 
நாட்டமாம் அரக்கர் தலைகள் உன்னாலே தெரு 
நாலுபுறமும் உருண் 
டிடல் ஆச்சே 
வீட்டுப் பெண்கள் நகைக்க ஒருத்தி காலடியினில் 
வீழ்கிறாய் இதிலும் உண் 
டோ ஏச்சு 
கோட்டை முழுதும்கரிக் கோட்டை செய்தகருங் 
குரங்குக்கும் மனிதர்க்கும் பயந்தோமே எனும் பேச்சு 

2 விதவிதமாய்ப் பெற்ற விசயசரம் ஐயய்யோ 
விரகாக் கினியாலே 
கருக்கிறாய் 
மதிமோசம் உன் தன் விதிவசமோ சொன்னால் 
மனது கொள்ளாமல் அரு 
வருக்கிறாய் 
அதிக வேதங்கள் ஓர் ஆயிரமும் தெரிந்தும் 
அறியாமலே செல்வம் 
செருக்கிறாய் 
மிதிலைப் பெண் கற்பால் இந்த பதிவெந்த தல்லாமல் 
வேறொன்றால் வந்த தென்றோநீ எண்ணி இருக்கிறாய் 
டோவீரம் 
ஆரவாரம் 

3. கருமலைபோல் இந்த நிருதரைக் கண்டால் அந்த 
காலருத்திரனுக்கும் உண் 
இருஇரு நான்இதோ புறப்படுகிறேன் என்முன் 
எவ்வளவவரிட 
மருவுடன் சீதையை விடுவதே நல்ல 
மார்க்கம் இல்லா விட்டால் 
ஒருமிக்க வேபோய் உனக்காச்சு எனக்காச்சென்று 
ஒருகை பாராமல் இங்கே குறுகுறுக்கும் 
இந்நேரம் 

விபீஷணர் இந்திரசித்தை விலக்கி ராவணனுக்குப் புத்திகூறல் 

கும்பகர்ணன் இந்தமொழி சொன்ன பின்பு 
குதித்திந்திர சித்தெழுந்தான் என துகையில் 
வெம்பும் பிரமாஸ்திரமும் நரகபாசமும் தானும் 
வீண்போமாயின் அதை நீ காண்பாய் என்றான் 
வம்பு சொன்னாய் பயலே நீ போடா நாளை 
வருங்காரியம் அறியாய் என்று அவனைத் தள்ளி 
தம்பிவிபீ ஷணன் அண்ணேன் உனக்கிதெல்லாம் 
சதி என்றான் கேட்பாய் என் மதி என்றானே 

பல்லவி 
ராகவன்பகை ராவணா ஒருக்காலும் நமக்காமோ 
அண்ணேன் பழி சுமக்காதே 
( ராக ) 

அநுபல்லவி 
ஏகனாய் அந்த மூவரும் தசரத ராமன் என்று வந்தாரே 
நாமெங்கே போவோம் 
( ராக ) 


சரணங்கள் 
1. அலைகடல்சூழ் இலங் காபுரிமேலே - வந்தொருக்காலே 
அளவறு ராட்சதர் மலைகளைப்போலவே 
மண்டினத்தாலே 
அலைந்தோம் - மெத்த உலைந்தோம் மேனி 
குலைந்தோம் - நிலை கலைந்தோம் என்றுதேவர் 
காலமே ஓலமே செயஆதி 
மூலமே கோலமே ஆகிவந்து 
கிளையும் விளையும் முளையும் களையவே 
வலக்கை தந்து நிலத்தில் வந் தவதரித்த 
( ராக ) 

2. பாதகி தங்கையால் சீதையை வினைமூளா அடசண்டாளா 
பன்னகசாலை யோடுன் இருபது தோள்களால் -- பாவத்துக்காளா 
எடுத்தாய் 
ஆசை 
விடுத்தாய் குடி 
தாய் அடா 
தீஅடா 
எத்தாய் வைத்தாய் 
சனகி அல்ல உனையே 
தொடுத்தாய் நன்மை 
கெடுத்தாய் அவள் ஒரு 
தாய் அடா நமக்கொரு 
தீஅடா - சிறைமேல் 
பித்தா செத்தாய் 
கொல்ல வந்தவள் 
( ராக ) 


3. மேதகுகார்த்த வீரியன் முன் எதிரிட்டாய் - விருதுவிட்டாய் 
வேதவதி சொன்ன சாபத்தில் அகப்பட்டாய் பிழைக்க ஒட்டாய் 
மதமோ உனக்கு அதமோ எந்த 
விதமோ லங்கை சதமோ த்தனை 
சூரரும் வீரரும் உனதுகு 
மாரரும் பேரரும் உன்னுடைய 
முடியும் கொடியும் நொடியும் மடியும்முன் 
சீதைபேர வாதைதீரும் உள்ளது 
( ராக ) 


விபீஷணரை ராவணன் சீறிக்கூறல் 

உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்கும் மின்மினியோ லல்லால் 
கொதிக்கின்ற என் முன் அந்தக் குரங்கொடு நரர் என் செய்வார் 
எதிர்க்கின்ற சொல் என் சொன்னாய் எனவிபீஷணனை பார்த்துக் 
கதிக்கின்ற அரக்கன் பல்லைக் கடிக்கின்றான் படிக்கின்றானே 

பல்லவி 
போதும் போதும் இந்த புத்திவிபீஷணா 
போதும் போதும் சொன்னது போதுமடா 
( போது ) 

அநுபல்லவி 

ஏதடா நான்பயப் 
பட்டு 
எலியைக் கண்டுபூனை 
ஏங்கிக் 
நாதன் ஆன நானோ உன்சொல்லைக் 
நரிவாலைக் கொண்டோ கடல் ஆழம் 
நடுக்குமோ 
கிடக்குமோ 
கேட்பது 
பார்ப்பது 
( போ ) 

சரணங்கள் 

1. உலகும் அரசும் போய் 
வெள்ளாட்டியால் காட்டில் 
ஒதுக்குண்டராமன் என்னோ டெதிர்ப்பானோ அவன் 
விலகிடமாயம் செய்து 
குலமங்கையை எடுத்து 
மேடுங்காடும் திரிய 
விட்டேனே எங்கும் 
பலருக்குத் தெய்வம் என்றாய் இந்திரன் சிறைப்பட்ட நாள் 
பாலனோ இவன் என்னோ டேலாதோசண்டை 
போட 
காலை செய்யும் அரக்கரை மனிதன் கொலை செய்வானோ 
கொல்லத் தெருவில்ஊசி  
விற்றால் விலைபோ 
மோடா ( போ ) 
2. துப்பான வாலி முன்னே 
எதிர்த்தவர் பலம் போமே 
தோல்வையோ ஆர்க்குமது சாபம் என்றறி யோமோ 
இப்போதும் மானிடர் முன் 
எனக்குப் பலம் இல்லையோ 
ஈசனையும் மலையோடு 
எடுத்ததென்ன பொய் போமோ 
அப்பா நான் இருக்கவும் 
என்னோடே நீபிறந்தும் 
அந்தநரர்க் சஞ்சியுன் 
சிந்தை இப்படி வேமோ 
குப்பைக் கீரை கிளைத்துக் 
கப்பும் கவடுமாகி 
கொழுத்தாலும் கப்பலுக்குப் பொருந்தப்பாய் 
மரமாமோ 
( போ ) 


3. அரன் அயன் தந்தவரம் 
என்றாய் அவனாக்கூட 
அடிக்க எனக்குவரம் 
கொடுத்தார் பொய் சொல்லாதே 
பரிவோ படைமிகுந்தால் 
அரண் நிற்குமோ இந்தப் 
பஞ்சை வரர்த்தை விட்டா என் தன் கோபம் பொல்லாதே 
அருகே கள்ளனுமாகி 
விளக்கும் பிடித்தாயே ஊர் 
அழித்த குரங்னக விடென் 
றுரைத்தாய் அதுவல்லதே 
இரணியன் மகன் அந்த 
இரணியனைக் கொன்றாற்போல் 
என்னைக் கொல்ல நினைத்தாய் இனிஎன் முன்நில்லாதே ( போது ) 


சரணம் அடைந்த விபீஷணரைக் குறித்து ஸ்ரீராமருக்கு அனுமார் கூறல் 

என்றுராவணன் இந்த வார்த்தை சொல்ல 
இரங்கிவி பீஷணன் அண்ணேன் என துவார்த்தை 
ஒன்றுமே பிசகாதென் றெழுந் தவ்வூரை 
ஒழிந்து வானரச்சேனைக் கொழுந்தின் முன்னே 
சென்றுரா கவசரனம் என்ற வார்த்தை 
சீராமன் கேட்க மயிந்தனும் போய்ச் சொன்னான் 
அன்று ராகவன் பலர் யோசனையும் கண்டான் 
அது போதில் அனுமந்தன் இது சொல் வானே 

பல்லவி 

இந்தவி பீஷணன் மீது - நமக்கு 
இத்தனை யோசனை ஏது 
( இந்த ) 

அநுபல்லவி 

அந்தஇலங்கையிலே அறிந்தேதன் இவனை முன்னே 
சந்தேகம் இல்லைசாமி தாசன் அனுமான் சொன்னேன் 
( இந்த ) 

சரணங்கள் 
பல 
( இந்த ) 
இவன் 
1. சொல்லும் புராண வேத 
சாத்திரம் இவன் 
செய்வது தேவதா 
தோத்திரம் 
கல்வி கேள்விக்கெல்லாம் 
பாத்திரம் - கள்ளம் 
கபடமறியான் அணு 
மாத்திரம் - இது 
அல்லாமல் அவன் வீட்டில் அடுத்த போதில் அனேகம் 
நல்ல நல்ல சகுனம் நான் கண்டேன் அனுபோகம் 
2. ஊத்தையான அள்ளும் 
கள்ளும் 
உண்கின்றான் என்பதைத் தள்ளும் கண்டால் 
ஏற்றவன் என்று நீர் 
கொள்ளும் நல்ல 
ங்கி தவான் எவர்க் 
குள்ளும் 
நேற்று ராவணன் என்மேல் நீட்டிய கத்தி வெட்டை 
தீர்த்து விட்டே எனக்குச் செய்தான் பிராணபிரதிஷ்டை 
3. மூவர்க்கும் கூடாத 
வெற்றி 
முடிப்பதல்லோ உன் தன் 
சத்தி - சிறு 
கூவத்தைக் கண்டு கடல் 
ஒற்றிப் 
போன 
கொள்கை போலாச்சே இந்தப் 
பெற்றி - சாமி 
இவன் 
(இந்த ) 

தேவிக்கும் பெண்ணைக் கொண்டு தேற்றச்சொல்லி அகன்றான் 
ஆவத்தை வனாலேவந் தபயம் அபயம் என்றான் 
( இந்த ) 


விபீஷணர் சரணாகதத்தைக் குறித்து ஸ்ரீராமர் கூறல் 

தொடரா அனுமான் இந்த வண்ணம் 
சொன்ன மொழியும் கவித்தலைவர் 
இடரா உரைத்த வாய்மொழியும் 
இரண்டு மொழியும் மனங்கொண்டான் 
உடனே அபயம் என்றவருக்கு 
உயிர் ஆனாலும் கொடுப்பதுவே 
கடனாம் என எல்லார்க்கும் மனம் 
கரைப்பான் ராமன் உரைப்பானே 

சரணம் சரணம் என்றானே காவாதேவிட்டால் 
திரணம் அல்லவோ நான் தானே 
( சர் ) 
அநு பல்லவி  
அரியவிபீ ஷணன் அங்கே அரக்கனானாலும் இங்கே 
இருசெவி கேட்க வாய்விட்டு ராகவா என்று கூப்பிட்டு 
( சர ) 

சரணங்கள் 

1. ரவிகுலத்தில் வந்தேனே 
தண்டகாரணிய 
தவசிகட் குரைதந்தேனே 
சிவிராசன் புறவாலே 
தேகம் ஈந்தானே மண்மேலே 
கவலையால் இவன் ஏதோ நொந்து கதறிக் கொண்டிங்கே வந்து ( சர ) 
2. பெற்ற சடாயுவும் பாய்ந்தானே 
மருமகட்காய் 
உற்ற போரில் ஓடிமர்ய்ந்தானே 
கத்தும் யானைஓசை கண்டு 
சத்துரு ராவணன் தம்பி 
காத்தானே மாயன்பண்டு 
தானானாலும் என்னை நம்பி ( சர ) 
சங்கரா அபயம் என்றானே 
மார்க்கண்டன் அவன் 
பொங்கிய காலனை வென் 
வங்கையோ ஈதென்ன வீரியம் 
மாருதி சொன்னதே காரியம் 
அங்கவன் வந்தென்னை மேவ அழைத்து வாநீ சுக்கிரீவா 
( சர ) 

கக்கிரீவன் அழைத்தபோது விபீஷணர் சொல்லிக் கொண்டு வருதல் 

என்னரகுராமன் உரைப்படி வாரும்சாமியிடம் எனச்சுக்கிரீவன் 
சொன்னதை வீடணன் கேட்டுப்புளகித்தான் கண்களில் நீர் சொரியநின்றான் 
பின்னைஎனும் சீதைதனைப் பிரிவித்தபாவியுடன் பிறந்தபாவி 
என்னையும் வா என்றாரோ சாமி என்றே தொழுகின்றான் எழுகின்றானே 

பல்லவி 
என்னையும் வரச்சொன்னாரோ - 
ரகுநாயகர் 
என்னையும் ராட்சதன் என்றுன்னாரே 
( என் ) 

அநுபல்லவி 
அன்னையாம் சீதா தேவியைக் 
தன்னுடனே பிறந்த 
காண்டுபோனபாவி 
சண்டாளனாகிவந்த 
( என் ) 

சரணங்கள் 
1. நெஞ்சிற்கிருபை 
இதுதானோ 
சாமி எண்ணின 
நிணறு நான் 
அறிவேனோ 
பாவங்களுக்கு 
அஞ்சினான் என்ற சொல் உண்டோ 
அடிமை கொள்ளல் 
ஆம் என மனது 
கொண்டோ - பாதகங்களுக்கு 
தஞ்சம் 
என எண்ணினாரோ ராவணன் செய்த 
வஞ்சம் 
என எண்ணினாரோ சிவனார்உண்ட 
நஞ்கம் 
எனஎண்ணினாரோ இவன் எம்மாத்திரம் 
கொஞ்சம் என எண்ணினாரோ 
( என் ) 

2. மந்தர 
வானோர்க்சமுதம் 
தந்ததே 
சகிப்பார் நல்லோர் 
கிரியாலே - குழம்புங்கடல் 
முன்னாலே - சந்தோஷமாகத் 
ஒருகாலே - என்ன செய்தாலும் 
இதுபோலே ஆகையினாலே 
தீரும் இலங்கையிலே 
தேரும் அரக்கருக்கு 
சேரும் நிலவரமா 
பாரும் 

என் தன் பிறவியும் 
வந்திடுமே சூரியன் 
அந்தம் முத்தியும் 
சந்தேகம் இல்லை இது 
( என் ) 


3. கண்ணீர் ஆறாய்ப் 
காதில் இன்பம் 
வெண்ணெய் போலே 
மேனிபுளாகம் 
பெருகுதே சாமிசொற்கொண்ட.- 
வருகுதே நெஞ்சும் உடம்பும் 
உருகுதே - மயிர்க்கூச்சிட்டு 
தருகுதே தாயை விடென்று 
விசாரம் 
எண்ணாமல் அவன் 
ஒட்டாரம் அதனால் இந்தப் 
இந்நேரம் - இது எனக்கு 
உபகாரம் 
( என் ) 

எண்ணினான் சொன்ன 
பண்ணிணானே 
புண்ணியனைக் கண்டேன் 
அண்ணன் செய்த 

விபீஷணர் ஸ்ரீராமருடைய தெரிசனம் செய்தல் 

பத்திவிபீஷணன் இவ்வாறுருகி அடிக்கடி மண்மேற் படிந்துவந்தான் 
அத்திமுன்னே கூவவந்த ஆதிமூலப்பரனே அமரர்கூவ 
நித்தியகோதண்ட பதி எனவந்தான் என் குறையும் நீக்க வந்தான் 
சத்தியமாம் எனத்தேறி மனங்கொண்டான் ராமதரிசனங் கண்டானே 

பல்லவி 

ராமனைக்கண் ணாரக்கண்டானே - விபீஷணன்னக 
மாமுடிமேல் வைத்துக் கொண்டானே 
( ராம ) 

அநு பல்லவி  

காமனும் செங்கமலப் 
தாமனை ஆயிர 
பூமனும் பணிபரந் 
நாமனைக் கோதண்ட ( ராம ) 

சரணங்கள் 

1 --வெள்ளமான வானர 
வர்க்க 
நடுவே தம்பி 
மேருமலைபோல் அருகே நிற்க பூணில்லாமார்பம் 
புள்ளிவில் போடாதமேகம் ஒக்கத் - தோள்வளை நீக்கிப் 
பூட்டில்லா மந்தரம்போல் சோபிக்க மூன்றுலோகமும் 
கள்ள அரக்கர் தினம் 
கிள்ளிக் கிள்ளி அருந்தக் 
காள்ளை கொடுத்தமரர் துள்ளித்துள்ளி வருந்த 
வள்ளலாகி முறை 
உள்ளபடி திருந்தப் 
பள்ளி அரவணையைத் 
தள்ளி எழுந்திருந்த 
( ராம ) 

2. தருமம் ஆகரூபி 

கரித்தானைப் பிரசண்டகோ 
தண்டமும் அண்டமும் பரித்தானைத் தாமரைபூத்த 
கருமுகில் போல் அவ தரித்தானே 
மரவுரியைக் 
கச்சை போலவச்சு வரித்தானைச் சனகன் கன்னி 
இருவிழியி லுமுள்ள கருமணி எனவந்த 
திருவுருவினில் ஒளி பெருகிடத் தாய்முந்த 
விரதம் கொடுத்த முடி 
சிரசினில் கொண்டு சொந்த 
அரசன் கொடுத்தமுடி பரதனுக் கன்றுதந்த 
( ராம ) 


வீழ்ந்து 
சூரியனைக் கண்ட 
சூழ்ந்து 
ராக்ஷதகுல 
தாழ்ந்து சாமிகடைக்கண் 
ஆழ்ந்து - சுந்தரம் உள்ள 


3. பூமிதனில் அடிக்கடி 
பூமலர்போல் முகப்பிரபை 
ஆண்மை எல்லாம் வரவரத் 
ஆனந்த சமுத்திரந்தன்னில் 
உதவிய 
தாமனைத் திருமுகச் 
வீமனைச் சானகி 
ஆமனை வரும்பணி 
காமனை 
மாமனைத் துளசியந் 
சோமனைப் புசபல 
வாமனைத் தேவர்கள் 
பூமனைத் தசரத 
( ராம ) 


விபீஷணர் ஸ்ரீராமரைச் சரணடைதல் 

வசமுடன் இப்படிகண்டு நால்வரான 
மந்திரிகள் வரவிபீஷணனும் வந்தான் 
நிசமுடன் ராமச்சந்திரன் சந்நிதிக்கு 
நேராக வரவரக் கண்ணீராருகி 
அசையும் உடல் ஒடுக்கி அய்யன் பதத்தில் வீழ்ந்தான் 
அயோத்தி ராமாசரணம் என்னைக் காப்பாய் 
தெசரதராமா சரணம் சரண்என்றே தோத் 
திரஞ்சொல் வான் அதிலே உத்தரஞ் சொல்வானே 

பல்லவி 
ராகவனே சரணம்ரகு 
நம்பினேன் விபீஷணன்உன் 
ராமா உன் சரணம் 
செம்பொன் ஆனசரணம் 
( ரா ) 


அநுபல்லவி 
ஆகாதான் உடன் பிறந்த 
அபயம் உனக்கபயம் என்னை 
பாவந்தீர்த்திந்நேரம் 
ஆள்வது நின்பாரம் 


சரணங்கள் 

1 --பணத்துக்கொரு அம்பு கொண்டு பாழில் எய்தாற்போலே 
வணக்கம் சொன்னேன் என்புத்தியை எறிந்து விட்டான் சாமி 
குணக்கெடுக்க நாய்வாலைக் 
கூடுமோ கூடாததனால் 
துணித்து விட்டுன் தனைய டைந்தேன் 
ரதனைய டைந்தேன் சாமிசித்தம் என்பாக்கியம் ( ரா ) 

2. பாம்புக்குப் பால்வார்க்க வார்க்கப் படுவிஷத்தைக் கொடுப்பதுபோல் 
ஆம்புத்திநான் சொல்லச் சொல்ல அகற்றிவிட்டான் சாமி 
வீம்புக்காரன் அவனுக்கினி மேலல்லவோ தெரியும் உன்னைக் 
காண்பித்துக் கொண்டேனே முற்றிலும் காப்பாற்ற உன்தனக்கே 
கடன் ( ரா ) 

3. நாடறியச் சீதை தன்னை 
தேடிக்கொண்டாய் என்றடிக்கடி 
கேடுவரும் முன்னேமதி 
மூடனானான் அவன்தனைநான் 
நம்குடிக்கோர் நெருப்பாகத் 
தெரியச்சொன்னேன் சாமி 
கெட்டுவரும் என்பதனால் 
முழுதுந்துறந்துனையடைந்தேன் 
( ரா ) 

4. வானவர் ஆகியபயிர்க்கு 
ஈனமறப் பிடுங்கவந்தான் 
வளர்ந்திடும் ராட்சதக் களையை 
ராமன் என்றேன் சாமி 
சானகியால் ஒருபத்துத் 
மாநிலத்தில் விழுவானை 
தலையும் பனங்குலை போல 
மறந்துவிட்டுன் தனை அடைந்தேன் ( ரா ) 

ஸ்ரீராமர் விபீஷணருக்கு அபயமும் அரசும் கொடுத்தல் 

கலங்கிப் பணிந்த விபீஷணன் மேல் கருணை பொழிந்து தம்பியினால் 
துலங்கும் துணைப் பாதுகை மகுடம் சூட்டி என்பேர் உள்ளளவும் 
தலங்கள் பதினால் உள்ளளவும் சந்திராதித்தர் உள்ளளவும் 
இலங்கை உனக்கே எனச்சொல்லி எடுத்தான் வலக்கை கொடுத்தானே 

பல்லவி 
இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம் 
( இந்தா ) 
அநுபல்லவி 
இந்திராதி தேவர்கள் உள்ளநாள் வரைக்கும் 
( இந்தா ) 

சரணங்கள் 

1. வேதமுள்ளளவும் வேத - கீதமுள்ளளவும் 
பாரி 
சாதம் உள்ளளவும் - பஞ்ச - பூதம் உள்ளளவும் 
இந்தா இந்தா இந்தா இந்தா 
(இந்தா ) 
2. கார் உள்ளளவும் கடல் - நீர்உள்ளளவும் ஈரேழ் 
பார் உள்ளளவும் - என்தன் - பேர்உள்ளளவும் 
தந்தேன் தந்தேன் தந்தேன் தந்தேன் 
( இந்தா ) 
3. கேள்வியும் நீயே - பிர தாவியும் நீயே என் 
ஆவியும் நீயே - சிரஞ் - சீவியும் நீயே 
சொன்னேன் - சொன்னேன் - சொன்னேன் - சொன்னேன் ( இந்தா ) 

விபீஷணர் ஸ்ரீராமருக்கு ராவணன் பெருமைகூறல் 

வந்தவிபீ ஷணர்க்கிவ்வா றரசுதந்து 
வரிசையுள்ள துணைவனைப்போல் பரிவினாலே 
சந்ததமும் வாழியென்ற ராமச்சந்திரன் 
தழைத்தருளால் அவனை வரவழைத்துன் வாக்கால் 
அந்தராவணன் புரமும் உரமும் கோட்டை 
அரணமும் மக்களும் அமைச்சரானபேரும் 
தொந்தமுள சேனைசளும் தெரிய நீதான் 
சொல்என விபீஷணனும் சொல்லுவானே 

பல்லவி 
அந்தராவணன் பெருமை ஒருவகை 
அறிந்ததைச் சொல்லக்கேளாய் சாமி 
( அந்த ) 

அநுபல்லவி 

இந்தக் கடலுலகில் 
எழுந்தவ தாரஞ்செய்த 
பிந்தியோ முந்தியோ 
பெலவீமாரவி 
அந்தக்கடலை நீங்கி 
செழுங்கருணைக்கடலே 
என்றளவி டாதபுச் 
குலசோமா நான் 
( அந்த ) 

சரணங்கள் 

போச்சுது 
சாச்சுது 
1. கோட்டைக் காற்றடிக்க ஆதியில் மேருமலைச் 
சிகரம் மூன்று பறி 
ஓட்டமா அந்தவிசை கடலில் எழுநூறு 
யோசனை அகலமாச் 
நாட்டமாமதில் ஏழுசுற்றுடைலங்கை 
நகர் என்றதற்கொருபேர் 
ஆச்சுது 
கோட்டை வாசல் ஒவ்வொன்றுக்கும் பதினாறு 
கோடிசேனை காவல் 
ஆச்சுது 

ட்டமில் மதில் காவல் 
அரக்கர் ஆயிரம்கோடி 
அரண்மனை காக்கின்றபேர் அறுபத்து நாலுகோடி 
மேட்டுப்பட்டணங்காவல் 
அரக்கர் முப்பது கோடி 
விழித்து விண்ணில் நிற்பவர் கொழுத்த நாலெட்டுக்கோடி ( அந் ) 
2. சிந்திய புகைக்கண்ணன் கும்பன் நிகும்பன் வச்சிர 
தெந்தன் மகாபாரிசன் 
அதிகாயன் 
பந்திபந்தியாயிவர் கோடானுகோடி சேனைப் 
படைத்தோர் இன்னமும் ஒரு 
வன்பேயன் 
தந்திவெள்ளா னையைசுழற்றி அடித்தானவன் 
தம்பி கும்பகர்ணன் 
பெருவாயன் 
மந்திரிகள் வெகுபேரில் அவனைக் கெடுக்க வந்த 
மந்திரி மகோதரன்உண் 
டொரு தீயன் 
சந்திரலோ கத்தைக் கொள்ளைகொண்டானே ரணமஸ்தன் 
சதுரான சேனைக்கெல்லாம் அதிபதியாம் 
பிரகஸ்தன் 
இந்திரனையும் சிறையில் இட்டானே இந்திர சித்தன் 
இவர்க்கும் ஆயிரவெள்ளத்தவர்க்கும் அவனே கர்த்தன் ( அந் ) 
3. போதவே வருணன் பாசத்தையும் குபேரன் 
புஷ்பகத்தையும் கூடப் 
பறித்தானே 
ஏதோபோல் வெள்ளிமலையைப் பிடுங்கிமார்பால் 
எட்டானைக் கொம்புகளும் 
முறித்தானே 
வேதனை செய் தந்த தெய்வப் பெண்களை வீட்டில் 
வெள்ளாட்டி வேலை செய்ய 
மறித்தானே 
ஆதிசிவன் கொடுத்த வாள் கொண்ட பலத்தினால் 
ஆரையும் மசகமாகக் 
குறித்தானே 
வதை செய்யும் மூலபலம் உண்டின்னும் உபரி 
மண்டலத்தில் அவனுக்கு ண்டோவேறு எதிரி 
சீதரனே உன்கைக் கோதண்டம் ஆனவரி 
சிலைக்கும் கணைக்குவன் தலைக்கும் கணக்குச்சரி 
( அந் ) 


ஸ்ரீராமர்முன் விபீஷணர் அனுமாரைத் துதித்தல் 

மானவிபீஷணன் இந்த வாறு சொல்லி 
மரம் ஏழும் கரனையும் வாலியையும் கொன்றாய் 
ஆனது.கண் டிங்குவந்தேன் அல்லகண்டாய் 
அய்யாஉன் தூதுவன் அன்றரக்கன் விட்ட 
சேனைகளை மடித்திலங்கை கொளுத்தி உன்பால் 
சேர்ந்தது கண்டினி நீயே திக்கென்றெண்ணி 
நானுமிங்கே சேர்ந்தேன் என்றனுமான் தன்னை 
நாடினான் சாமிமுன் கொண் டாடினானே 

பல்லவி 

இந்த அனுமான் இலங்கையிற் போர்செய்த 
விந்தையை என்ன சொல்வேன் 
( இந்த ) 

அநுபல்லவி 
வந்தனை செய்தந்த 
மதத்தாலே எங்கும் 
சீதையைக்கண்டு 
குதித்து குதித்துக்கொண்டு 
( இந்த ) 

சரணங்கள் 

1. சாமி நீ தந்த அடையாளம் தந்தம்மை 
தந்த அடையாளம் 
அந்தமாக் கைப்பற்றி 
மேன்மை அசோகவனத்து மரங்களை 
வேரோடும் தூரோடும் 
வீசிவிழச்சுழற்றி 
சேமிக்கும் அந்த வனகிங்கரர்களைத் 
திசைக்கும் அப்பாலே 
தெறிக்கும் படிஎற்றி 
ஆமென்னும் பஞ்சசேனா திபரைக்கையால் 
ஆறிடவே ரத்தம் 
பீறிடவேகுற்றி 
அங்கவர் சேனை 
நடுங்கிடவாரி 
அடங்கலும் வீசி 
பிணங்கள் அவரவர் 
மங்கையர் முன்விழத் தங்கள் பிணமென்று 
மங்கியே கண்டு 
பிணங்களின் மேல்விழ 
மடித்தவாய்த்தலை 
ஓரிசிதறிட 
வாய்களைக் கவ்வி 
நாய்கள்உதறிட 
பிடித்திடும் கால 
தூதர்பதறிடப் 
பெண்கள் கூடிக்கொண் டெங்குங்கதறிட 
( இந்த ) 

நோரண கம்பத்தின் மேற்கொண்ட பின்னும் 
தொடர்ந்து வரும் அக்ஷ 
யன்படைபார்த்து 
பாரினில் பாய்ந்து கைக் குத்திலும் எத்திலும் 
பல்லாலும் கல்லாலும் 
செல்லுகள் போல்மாய்த்து 
வீரியம் பேசிய அக்ஷயனைத் தூக்கி 
மேலும் கீழும் போட்டுக் 
காலினாலே தேய்த்து 
தீரும் சரீரத்து ரத்தத்தை நெற்றிக்கு 
சிங்காரமாகிய சிந்துரமாச் 
சித்திரவில் இந்திரச் 
சித்தன் விடும்படை 
முற்றிலும் காலால் உதைத்து விழக்கொன்று 
மற்றவன் பின் சென்று கொற்ற அரக்கன்முன் 
சுற்றியவால் கோட்டை வைத்ததின் மேல் நின்று 
சேர்த்து 
தணல் 
மாயத்தினால் அழியாதடா 
மார்க்சம் அல்ல அடா 
என்றே ஏசிஏசி 
வாயில் வராஇடும்பாலே 
பேசிப்பேசி 
வாலில் அவனிட்ட தீயை வீசிவீசி 
( இந்த ) 
3. சுந்தரமாடங்கள் கூடங்கள் பீடங்கள் 
துர்க்கம் எல்லாம் தணல் 
பக்கமெல்லாம் 
சந்திகள் பந்திகள் மேடைகள் ஓடைகள் 
சாலையெல்லாம் தணல் 
சோலையெல்லாம் தணல் 
முந்திய கோட்டைகள் கொம்மைகள் பொம்மைகள் 
முற்றம் எல்லாம் தணல் சுற்றும் எல்லாம் தணல் 
விந்தையாகிய துங்க அரங்கமும் 
வீதியெல்லாம் தணல் 
வேதியெல்லாம் தணல் 
விலகி வெந்தோர் சிலர் 
அலறிவெந்தோர் சிலர் 
மெலிய வெந்தோர் சிலர் நலியவெந்தோர் சிலர் 
தலைகள் வெந்தோர்சிலர் 
முலைகள் வெந்தோர்சிலர் 
கலைகள் வெந்தோர்சிலர் நிலைகள் வெந்தோர்சிலர் 
தாழும் பிணத்தால் 
அவனி நெளிக்கவே 
சானகி வாழ்மரம் 
ஒன்றும் தளிர்க்கவே 
ஏழு தினம் பட்ட 
ணம் தத்தளிக்கவே 
ராவணனும் பயந் தோடி ஒளிக்கவே 
( இந்த ) 

ஸ்ரீராமர் வருணன் பேரில் அம்புதொடுத்தல் 

அறியும்விபீ ஷணன்சொல்ல அனுமான் வெற்றி 
அறிந்தவனுக் குகந்து சிரஞ்சீவியாக 
மறுவில்வர மது கொடுத்தான் கடலைத்தாண்ட 
வருணமந் திரஞ்செபித்து விரிதருப்பைமேலே 
பெறுதினம்ஓர் ஏழும்போய் ராமச்சந்திரன் 
பின்னும் வருணனைக் காணான் தம்பிக்கோதி 
எறிகடல் மேற்சினந்து கோதண்டம் நா ணி 
ஏற்றினான் சரமாரி தூற்றினானே 

பல்லவி 

தொடுத்தானே சாதாரை 
தரைக்குராமன் 
கொடுத்தானே கடல் நீரை 
( தொடு ) 

அநு பல்லவி 

தொடுத்தானே ஏழுநாள் படுத்தானே அதைக்கூடத் 
தடுத்தானே வருணனென்று எடுத்தானே கோதண்டம் 
( தொடு ) 

1. கனல் கனலா எங்கும் 
பாய்ந்ததே பிரம்ம 
கமண்டல சுலங்சளும் தீய்ந்ததே - மலையிற் 
சுனையும் தரையாவற்றிக் காய்ந்ததே 
புகையால் 
சூரியன் பரியும் நடை ஓய்ந்ததே 
புனலிலே செங்கமல மலர் என் 
விரிகொழுஞ்சுடர் தழைய 
வனதிமிங்கில திமிங்கில 
மசுரமீன்கள் குரைய 
அனல் எழும் பொறிச்சிதற வெகுவெகு கனணகளோடுகணை இழைய 
இனிஎங்கே இடமென்று வடவாக்கினியும் போய் மறுகடலில் நுழைய 
( தொடு ) 
2. சிட்ட முனிவர் தவம் 
சிறக்கவே - நீரில் 
செழிக்கும் ராட்சதரும் போய் இறக்கவே 
அவர் 
பட்ட உதிரம் எங்கும் 
பறக்கவே - கடல் 
பாய்ந்து செவசெவன்று நிறக்கவே 
கெசங்களும் தேவரும்பயப் பட்டுக்கண்விழி 
பிதுங்க 
மட்டிலா அனல் வெட்டையால் சுருண் டெட்டுநரகமும் அதுங்க 
பட்டமாம் கவிப்படை எல்லாம் திகிலிட்டுச் செடிதொறும் ஒதுங்கமுன் 
சுட்ட தூதன் வந்தானோ எனலங்கைப் பட்டணமும் திடுக்கிட்டுப் பதுங்க 
( தொடு ) 
3. தெரிந்து பாதாளமும் 
கண்டதே 
சேஷன் முடியும் சாய்ந்து கொண்டதே - வானிற் 
பிரிந்து வைக்கிரமும் 
விண்டதே அந்த 
பிரம லோகமும்புகை உண்டதே 
பொருந்தவிடும் ஒரு தொடைக்கு நூறாயிரம் சரங்களாகப் பெருக 
விரிந்த கடலினில் இருந்த மலைகளும் எரிந்துகள் 
கரியாக் 
கருக 
பரிந்து சதிமடவார்கள் கண்ணீர் சொரிந்து சாமிமுன் 
உருக 
வருந்தவருந்த வராதவருணனும் பொரிந்து பொரிந்து கடல்கரிந்துவருக 
( தொடு ) 

ஸ்ரீராமரை வருணன் சரணடைதல் 

பெருமான் பிறகக்கினிவாளி பிடிக்கவருணன் துடித்துவந்து 
பருமாமணி ஆயிரமாலை பாதகாணிக்கை யாகவைத்து 
நிருபா சரணம் பிழைபொறுப்பாய் நீயேசரணம் என தாவி 
தருவாய் சரணம் என் முன்னே தாழ்ந்தான் அடிக்கீழ் வீழ்ந்தானே 

பல்லவி 
நீ என்னை 
சரணம் சரணம் ரகுராமா 
தற்காத் தருள் பரந்தாமா 
( சர) 

அநுபல்லவி 

விரிகடல் வேந்தன்உன் 
மேல் என்ன உபசாரம் 
திருவடி சேர்ந்தனென் 
ஆயிரம் நமஸ்காரம் 

சரணங்கள் 
பூணும் 
1. மட்டிமீன் ஒன்றோடொன்று மல்லாடி அமர் 
வழக்குத் தீர்க்கப் போனேன் இதுக்கோ உன்மனம் கோணும் 
எட்டுரண்டும் தெரியா 
எனக்கித் தனையோ 
காணும் 
என்ன பிழை செய்தாலும் நீயே பொறுக்க வேணும் 
( சர ) 
2. ஏதும் பலமில்லாத 
நீ ஒருமானுடன் 
என்று நினைத்தால் நான் வீழ்வேன் நரகத்துடன் 
தீது நல்லதென்று 
அறியாதநான் அசடன் 
சிறியோர் செய்தபினழயைப் பெரியோர் பொறுத்தல் அடன் 
{ சர ) 

3. திக்குவேறில்லை உன்தன் 
சேதுபந்தனம் செய்ய 
அக்கினிகணை விடவேண்டாம் 
அலைகடல் துயின்றோனே 
பாதத்திலே புகுந்தேன் 
என்முது கிடந்தந்தேன் 
நான் மிகநொந்தேன் 
நான்உன்னை நம்பிவந்தேன் ( சர ) 

வானர வீரர்கள் சேதுபந்தனம் பண்ணுதல் 

இரக்கமாய் வருணனிந்த வாறுபோற்ற 
இராகவனும் கருணைசெய்து வருகாந்தார் 
அரக்கர்மேல் அக்கணையை விடுத்தான் அப்பால் 
அபயதானம் கொடுத்தே வழிகாட்டென்றான் 
பரத்தினால் அவனும் என்மேல் அணைசெய்துன் தன் 
படை எல்லாம் நடத் தென்றான் கூடிக்கூடிக் 
குரக்கு வீரர்கள் மலைமேல் மலையா வீசிக் 
கொட்டினார் கடலில் அணை கட்டினாரே 

பல்லவி 

சேதுபந்தனம் செய்தாரே தேவர் 
சிதமலர் மழை பெய்தாரே 
( சேது ) 

அநு பல்லவி 
நாத்னும் கவிக்கெல்லாம் நாதனும் இலங்கைக்கு 
நாதனும் அல்லாமல் ஓதும் வானரர் எல்லாம் 
( சேது ) 

1. முந்து நான் முகன் மகன் 
சுந்தர ததிமுகன் 
மந்தன் குமுதன் 
சந்தன் முதலோர்கூடி 
இந்திரன் மகன் மகன் 
கந்தமா தானன் அணு 
மயிந்தன் துமிந்தன்வ 
அந்தமலை உனக்கு 
இந்தமலை எனக்கென்று 
எந்த மலையும் ஓங்கித் 
தந்தம் கைகளால் வாங்கித் 
தொந்தராகவன் முன்னே தந்தமொழிப்படிக்கு 
வந்தத் துறையிற்கி 
டந்தவருணன் மேலே ( சேது ) 
2. கடுத்து முகங்கள் சிடு 
சிடுத்து ராட்சதர் தம்மை 
செடுத்து வேரோடே கீண் 
டெடுத்தெறிகுவது போலே 
அடுத்த மலைகளைக்கண் 
டெடுத்தொருவர்க்கொருவர் 
சடுத்தம் பேசிப்பேசி 
மடுத்து வாலினிற்சில 
தொடுத்த தோளினிற்சில 
படுத்துச் சிலமலையை 
எடுத்துத் தலையில் வைத்து 
விடுத்து நளன்கையிலே 
கொடுத்துப் பெருங்கடலின் 
நடுத்திடல் ஆம்படித் 
தடுத்து வகைவகையாச் ( சேது ) 
3 , மேட்டின் மலைகளோடு 
நாட்டின் மலைபிடுங்கி 
ஓட்டி எறிய அலை 
ஆட்டிய துளிதெய்வ 
நாட்டின் மங்கையரிடை 
பூட்டிய துகில் குளிப் 
பாட்டி வெட்கம் ஊட்டி 
தாட்டிக முடன்வகு 
போட்டி போட்டிகளாகப் 
பாட்டில் அடுக்கிச்சந்து 
மூட்டி மூன்று நாளையில் 
நாட்டி யோசனை பத்து 
கூட்டி அகலம் செய்து 
நீட்டி நூறுயோசனை 
காட்டி இலங்கைமட்டும் ( சேது ) 

ஸ்ரீராமர் சுகசாரணரோடு கூறுதல் 

வளமான அணைகண்டு மகிழ்ந்து ராமன் 
மலைஎனும்சு வேலையிலேறிச் சகலபேர்க்கும் 
நளனாலே வீடமைத் திங்கிருந்த போது 
நல்லசுக சாரணர் ராவணனால் வந்து 
தளமீது திரிதல் கண்டு பிடித்துக்கட்டித் 
தந்து விபீஷணன் காட்டச் சாமிகண்டான் 
களவாளன் அரக்கன் ஐயோ இனி ஈடேறக் 
கரைசொல்வீர் என்றவரோடுரை சொல்வானே 

பல்லவி 

சொன்னான் ஸ்ரீராமனென்று ராவணன் முன்னே சென்று 
சொல்லுவீர் சுகசாரணரே 
( சொ ) 

அநுபல்லவி 

செந்நெல் வளர் அயோத்தி 
தீட்சணம் உள்ள பாலன் 
தெசரதமகாராசன் 
ராட்சதகுலகாலன் 

சரணங்கள் 
( சொ ) 1 நாயெனவே நுழைந்து 
தாயை அருங்கொடிய 
பேயனை நரகத்தில் 
மாயமான் பின்னேவந்து 
சேய அருந்ததிக்கும் 
தீயச் சிறையிலிட்ட 
ஏய இடுவேன் என்றும் 
தூய முனிவர் கண்டு 
சாயும் பனங் குலையின் 
வாயும் தலையும் சுற்றிப் 
பாயும் என்கணை என்றும் 
மண்டல அரசரும் 
அண்டரும் முனிவரும் 
கொண்டல் வண்ணனும் நீல 
அண்டையில் இருந்தாலும் 
ஏயே என்று சிரிக்க 
காயென விழப்பத்து 
பேயும் கழுகும் கொத்தப் 
ஆயிரம் தரமாக ( சொ ) 
எண்டிசை அதிபரும் 
புண்டரீகனும் அந்தக் 
கண்டனும் அவனுடை 


2 மண்டு களரியிடு 
சண்ட விசயகோ 
அண்டின படையும் தன் 
கண்டங் கண்டங்களாகத் 
சண்டையிலே எனது 
தண்டம் விடுங்கணையால் 
மண்டைகளும் உருளக் 
துண்டம் இடுவேனென்று ( சொ ) 
வாய்த்த மகனும் கும்ப 
கோத்திரமும் குலமும் 
காற்றில் இலவம்பஞ்சாய்த் 

3. மூத்த மகனும் பின்பு 
சோத்திரனும் படையும் 
கூற்று வன்கைக்கொளவே 
தூற்றி விடுவேனென்றும் 
வேற்றொரு மங்கையரைப் 
நாற்றம் எழும்ப நரி 
நாற்றிசையிலும் அப 
தூர்த்தனை எமனுல 
பார்த்த விழிகளெல்லாம் 
கோத்து வளைத்திருக்க 
கீர்த்தி உண்டானபடு 
கேற்றி விடுவேன் என்றும் ( சொ ) 

ராவணனுக்கு மாலியவான் புத்தி கூறல் 

வள்ளல் எனும் இராமனுரை தலைமேற்கொண்டு 
வந்தசுக சாரணர்கள் போனார் சேர்ந்த 
பிள்ளை விபீஷணன் செயலும் இலங்கைப் பட்டம் 
பெற்றதுவும் திருவணையும் சுவேலை மேலே 
கொள்ள நெடுஞ் சேனையிறங்கினதும் எல்லாம் 
கூறினார் புண்ணிற் கோலிட்டாற் போலத் 
துள்ளி இராவணள் வெகுண்டான் அதுக்கு நீதி 
சொல்லுவான் மாலியவான் சொல்லுவானே . 

பல்லவி 
கேளடா ராவணனே நான் சொன்னபுத்தி 
கேளடா கண்மணியே 
( கே ) 


அநுபல்லவி 
நாளைத் தெரியும் அடா 
மாலியவான் பேச்சு 
ராமன் பேர் சொல்லச் சொல்ல எடுக்குதே பெருமூச்சு 
( கே ) 


சரணங்கள் 
1. முற்றிலும் தானே அந்த ராமாவதாரம் தன்னை 
மூவரும் ஓர் உருவா எடுத்தார் என்றாரே 
அப்பால் 
சற்றும் அறிந்திலையோ தேவர் எல்லாம் குரங்காய்ச் 
சமைந்தார் என்றாரே 
ப்பால் 
ஒற்றிவெள்ளம் வருமுன் அணைகோலிக்கொள்ளவேணும் 
ஊரிற்கிட்டி வந்தாரே செய்வதுண்டோ 
இனிமேல் 
பித்துப் பிடித்தாற்போலப் பிடித்ததைப் பிடியாதே 
பேதை சீதையைவிடு பிழைக்கிறது 
மெய்யானால் ( கேள் ) 
2. பண்டிவன் கையாலேநான் பட்டபாடு கொஞ்சமோ 
பழம்புண்ணாளி பரி காரி என்பது 
பொய்யோ 
மிண்டுபண்ணாதே கூத்தாடி சிலம்பம்படை 
வெட்டுக்காவது 
மெய்யோ 
உண்டான வார்த்தை சொன்னேன் கடுகெண்டைக்காக ஏரி 
உடையாதோ ராமன் சேனைக்கு உன் சேனைமா வோ நொய்யோ 
துண்டாக புத்தி வேண்டாம் அடா உனக்கு 
சுயபுத்தி போனாலும் என் சொல்புத்தி வேணும் ஐயா ( கே ) 
3. வரவர விபரீதம் கண்டல்லோ சொல்லவந்தேன் 
வலியத் தேடிச் சொல்ல வந்தேனே உன் தன் அண்டை 
கிரியை அறிந்துவந்து தூதர் சொன்னால் ஏன் , டா 
கிழித்துக் கொள்ளுகிறாய் 
தொண்டை 
ஒருகுரங்கின் கையாலே படுபாதி சேனையும் போய் 
ஊரில் மூலைக்கு மூலை உருளுதே 
தலைமண்டை 
இருமனதா எண்ணாதே எல்லாக்குரங்கும் வந்தால் 
லங்கைமட்டிலே போமோ எப்படியாமோ 
சண்டை ( கே ) 


மாலியவானை ராவணன் நீந்சித்தல் 

மீட்டாங் குரைக்கும் செயலுண்டோ 
விடியும் தனையும் மழை பெயினும் 
ஓட்டாங் கிச்சில் கரைவதுண்டோ 
ஒருமா லியவான் உரைத்தா தல்லாம் 
கேட்டான் எனது செவிக்காகாக் 
கேள்வி நீ சொன் னதுபோதும் 
பாட்டா கேளாய் என அரக்கன் 
பழிப்பான் சொல்லி ஒழிப்பானே . 

பல்லவி 
எங்கே வைத்திருந்தாய் இந்த ஏழைமதி 
என் மாலியவானே 
( எங்கே ) 
அநுபல்லவி 
அங்கே போன 
விபீஷணன் போலே 
ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கின்றாய் ஒருகாலே ( எங்கே ) 

சரணங்கள் 
1. ஆயிரம் வெள்ளம் சேனை உண்டிதை 
அறியாதவர் இங்கே 
எவர்தாமோ 
அல்லதொரு சிறுமுள்ளுக் குத்தினால் 
அது கொண்டென்ன பெரு 
மலைநோமோ 
மாயமோ இந்தக் காட்டுப் பூச்சிகள் 
வல்லரக்கர் படைக் 
கெதிராமோ 
வாயை மூடடா பேயா உனக்கென்ன 
வயது செல்லச்செல்ல மதிதான் 
கெட்டுப்போமோ ( எங் ) 
2. வழக்கமோ மாயனுக்கும் என்கணை 
மணியோ மார்பிலிடும் 
சவ்வாதோ 
மதித்தகைலாசம் எடுத்தநான் இந்த 
மனிதரைப் பொருதச் சஞ் 
சலமேதோ 
உழக்கிலே கிழக்கும் மேற்குங் காட்டி 
உறுக்கிறாய் ஈ 
தென்னசூதோ 
உடற்குள்ளே நாவழிக்கிறாய் விரல் 
உரலானால் உரல் எப்படி 
ஆகாதோ ( எங் ) 
3. அதஞ்செய்யேனோ சீதையால் இளைத்தால் நீ 
அழையைய்யா என்னைப் 
பேர்மாற்றி 
ஆலகால விஷமோ சிவனுக்கும் என் 
அம்பை விழுங்கப் போமோ 
களையாற்றி 
பதுங்கி ராட்சதர் முன் பயப்படும் நரருக்குப் 
பயப்படச் சொன்னாய் பயங் 
கரம் ஏற்றி 
பயப்படும் நரர் கிழே பயப்படும் குரங்குக்கும் 
பயப்படச் சொன்னாய் இது 
வெகுநேர்த்தி - ( எங் ) 

சாரணன் ராவணனுக்கு ஸ்ரீராமர் முதலியோரைக் காட்டல் 

என்று சொன்ன பாட்டனைஇவ் வாறுதள்ளி 
அந்நேரம் கன்னியர்கள் ஆடப் பாடத் 
துன்றுமணிஉத்தர கோபுரத்தில் ஏறிச் 
சூரியனைக் கண்டதொரு ராகுபோலக் 
கன்றி இராமனையும் சேனையையும் கண்டு 
காய்ந்த ராவணனுக்குச் சுவேலை மேலே 
நின்றவர் இன்னார் இன்னார் என்றே கையை நீட்டினான் சாரன் எதிர் காட்டினானே . 

பல்லவி 
பாரும்பாரும் சுவாமி ராவணேஸ்வரரே 
பாரும்பாரும் சுவாமி 
( பா ) 

அநுபல்லவி 
நேரும் கவிகள் எல் 
லாரும் கும்பிட 
நீலமலை போலே சுவேலை மலைமேலே 
ஏர்வையா எதிர் 
சேவை தரும் ராமன் 
இவனே ஆரிலும் திராணி இவனே கோதண்டபாணி 
( பா ) 


சரணங்கள் 

1. துடுக்கன் அந்த லட்சுமணன் செவிகளும் மூக்கும் 
சூர்பநகையைக் கொய்து 
விட்டவன் 
அடுத்து ராமனுக்குக் கைகொடுக்கின்றான் இதோ 
ஆதித்தனுக்குப் பிறந் 
திட்டவன் 
2 . முந்தக் கடல்கடைந்த வாலி மகன் அவன் 
மூர்க்கன் அங்கதன் வெகு 
தாக்கன் 
இந்தப்பெரு அணையைக் கட்டியநளன் அவன் 
இவர்கள் குமுதன் குமு 
கெந்தமா தானனவன் சதவலி இவன் அவன் 
கேசரி இவன் கவ 
யாக்கன் 
தாக்கன் 
ஈதே விந்தைக் கரடிக்கு நாதன் சாம்புவன் அவன் 
வெகுநாள் ஆயுசுள்ள 
தீர்க்கன் 
உற்றுப் ( பாரு ) 
3. வாய்ச்ச நீலன் முதல் தலைவரும் மனிதரும் 
வானரச் சேனைகூட 
பூச்சிக் கூட்டம் இதுதேவரீர் உடன் 
போராடுமோ களம் 
நீச்சுக் கடலிலே குரங்கிட்டமலை யெல்லாம் 
நெட்டிப் போலே மிதந்த 
ஆச்சுதென்ன இனிக்காலானு கூலம் 
அவர்க்கோ உமக்கோ தெரியாதே கண்ணாலே உற்று ( பாரு ) 
மீதே 
போதே 

சுக்கிரீவனுக்கும் ராவணனுக்கும் மல்லுயுத்தம் 

சாரன் இது சொல்லிய போதுதள்ளி அரக்கன் சொல்விட்டான் 
வீரம் உடடளே சுவேலைமலை மேலே நின்ற ராகவன்முன் 
ஈரம் அசன்ற ராவணன்இங் கிவனேஎன வீடணன் காட்ட 
வாரம்உள சுக்கிரீவன் அதைமதித்தான் அவன் மேற் குதித்தானே 

பல்லவி 
( சுக் ) 
சுக்கிரீவனுக்கும் தசக்கிரீவனுக்கும் 
தொடர்ந்ததே மல்லுயுத்தம் 
அநுபல்லவி 
கைக்குள் விபீஷணன் காட்டுமுன் 
கருமலை மேலொரு பெருமலை போற் 
சாய்ந்த 
பாய்ந்த 
( சுக் ) 

சரணங்கள் 
அடித்தான் 
1. கருகிய மேனி அரக்கன் முன்பாய்ந்திவன் 
கையாற் கன்னத்தில் 
இருபது கைகளும் ஓங்கியே அவன் 
வன்மேல் இடிபோல 
இடித்தான் 
ஒரு நிமிஷத்தில் இவன் அவன்மார்பில் 
உதைத்தான் அவன் கட்டிப் 
பிடித்தான் 
குருமணி மேடையில் தேய்த்தான் இவன் அவனைக் 
குத்தி இரத்தத்தைக் 
குடித்தான் 
ஒருவர் கைகளை ஒருவர் 
பின்னவே 
ஒருவரைக் கடித்தொருவர் 
தின்னவே 
இருவர் கண்ணிகளும் பொறிகள் 
மின்னவே 
இலங்கை நகர் எங்கும் கிடுகிடு 
என்னவே 
( சுக் ) 

தாடினான் 
2. விறுவிறெனச் சுற்றி வானவீரனை 
மேல் அரக்கன் எறிந் 
பிறகிவன் அந்த அரக்கனைப் பாய்ந்து 
பிடித்து நிலத்தோடே 
பொறி அரவம் கதிரோனை மூடினாற் போல் 
அரக்கன் பின்னும் 
கறுவிக் கிளம்பிக் கவிமன்ன வன் அந்தக் 
கண்டக னோடேகை 
சாடினான் 
மூடினான் 
கூடினான் 
உறுமி விழுந்தந்த அகழி 
ஒருவர்க்கொருவர் தம் தலைகள் 
மறுபடியும் தொடர்ந்த ரக்கன் 
வாலிபோலே இவன் அவனைக் 
அடையவும் 
உடையவும் 
இடையவும் 
கடையவும் 
( சுக் ) 

துதிர 
3. தானம் பிசகாமல் எட்டானைகளும் இந்தச் 
சண்டையினாற் கண்கள் 
கானக்குரங்கரும் அரக்கரும் என்னமாக் 
காணுவோம் என்று நெஞ் 
ஆனால் அரக்கன் மணியும் பணியும் 
அலங்கோலமா அறுந் 
வானளவும் அதுகள் பாய இருவர்க்கும் 
வரவரக் கோபமும் 
முதிர 
ஈன நிருதனும் இவனும் 
அடிக்கடி 
எதிர்த்துப் போர்செய்யும் வேலை 
வான ரேசுரன் அரக்கன் 
பத்து முடி 
மணியும் பறித்தெழுந் திடவே 
ப்படி 
யினிற் செடி 
( சுக் ) 

ஸ்ரீராமர் சுக்கிரீவன் பிரிவைப்பற்றி அவனோடு முறையிடல் 

பறித்தமா மணியைச்சாமி பாதத்தில் வைத்து வீழ்ந்தான் 
எரிக்குமா கீர்த்தியீதே எனவிபீஷணனும் சொன்னான் 
அறிக்கையா கியசீராமன் அவனைமுன் பிரிகையாலே 
குறித்தசுக் கிரீவனோடே குறைசொல்வான் முறை சொல்வானே 

1. அம்புபோல் பறந்தாயே எங்கேபறந்தாய் அடாசுக்கிரீவா 
நம்பின என்னை எப்படிமறந்தாய் 
2. சீதையைத் தம்பியை வேண்டிவருந்தேன் 
அடாசுக்கிரீவா 
நீதுணை என்றல்லோ நம்பியிருந்தேன் 
3. எழுபதுவெள்ளம் சேனைக்கும் எனக்கும் 
நீயல்லோசீவன் 
முழுமதி மோசம் போச்சுதே உனக்கும் 
4. கைப்பிடித்த என்னை ஏன்டா சதித்தாய் 
தன்னந்தனியே 
எப்படி ராவணன் மேலே குதித்தாய் 
5. அந்தராவணனாலுன் உயிர்போமானால் 
என் அம்பாலே 
எந்த லோகமும் நீறுநீறாமே 
6. உன்னைக் கொன்றானைக் கொன்றாலும் ஆற்றேன் - அவன் குலத்தை 
பின்னைக் கொன்றாலும் நானல்லோ தோற்றேன் 
7. என்னிடம் சொல்லாத தென்ன முண்டோ 
கோபம் வந்தாலும் 
தன்னை அறியாச் சன்ன தமும் உண்டோ 
8. சிந்த அரக்கன் முடியைக் கொள்ளை 
நான் கொள்ளுமுன்னே 
முந்திக் கொண்டாயே நீயே ஆண்பிள்ளை 

ஸ்ரீராமர் வானவீரர்களோடு இலங்கையை வளைத்தல் 

எடுத்திந்தப் படியிரங்கச் சுக்கிரீவன் தன்னை 
இசையவிபீ ஷணன்புகழ அறிந்து மறுநாள்வாய் 
வடக்கினில் சுக்கிரீவன் மேற்கில் அனுமான் தெற்கு 
வாசலில் அங்கதன் கிழக்கு வாசலிலே நீலன் 
படைத்தொகை ஒவ்வொருவருக்குப் பதினேழு வெள்ளம் 
பழங்கனி காய்களுக்கு இரண்டு வெள்ளம் எனபகுத்தே 
விடுத்த பின்பு வடக்கினில் தம்பியுடன் கோதண்ட 
விற்கொண்டாள் ஸ்ரீராமன் நிற்கின்றான் 
தானே 


இராவணன் இலங்கைக்குக் காவல் வகுத்தல் 

கோலமணி முடியிழந்து வெட்கி இராவணன் போனான் கோட்டைவாசல் 
நாலிலும் வானரப்படைகள் வளைத்ததனை சார்தூலனாலே கேட்டான் 
மூலவட வாசல் தனை நான்காப்பேன் நீர்வாசல் மூன்று காப்பீர் 
சாலுமென அவரவரைத் தேற்றுவான் நகர்காக்கச் சாற்றுவானே 

பல்லவி 

இலங்கைப் 
பட்டணம் பதனம் 
பட்டணம் பதனம் 
( பட் ) 

அநுபல்லவி 

அட்டதிக்கெல்லாம் செயித்தோம் என்றெண்ணி 
அசட்டுக் குரங்கென் றகந்தையே 
பண்ணி 
நெட்டது செய்யல் 
ஆகாது 
காணும் 
நெருஞ்சிமுள் தைத்தாலும் குனிஞ்சிப்பிடுங்க வேணும் 
( பட் ) 


1. ஆச்சரியம் பதினேழு வெள்ளத்துடன் 
அனுமந்தன் மேலைக்கோட்டை வாசலில் 
பூச்சிக்குள் பெரும்பூச்சி போல் வந்து 
புறம்வளைத்தானாம் 
பேச்சுக்குள் இந்திரசித்தே அவனனப் 
பிடியடா இருநூறு வெள்ளங்கொண்டு 
தேய்ச்சுவிட்டால் உன்கையாலே 
தின்னடா தடை - என்னடா இந்த 
( பட் ) 
2. அப்பனைக் கொன்ற மனிதருக்காக 
அங்கதன் பதினேழு வெள்ளத்துடன் 
துப்புள்ள தெற்கு வாசலில்வந்து 
சூழ்ந்து கொண்டானாம் 
ஒப்பிலாதான் பெரும் பாக்கனுடன் 
மகோதரா இருவீரும் சென்று 
கைப்படைக்குள்ளே அவன் படையெல்லாம் 
கரையுங்கள் மண்மேல் 
அரையுங்கள் இந்த 
3. சுற்றிய வெள்ளம் பதினேழுடன் 
தொத்தும் குரங்குகளுக் கெல்லாம் தள 
கர்த்தன் நீலன்கிழக்கு வாசலைக் 
கட்டிக் கொண்டானாம் 
பெற்றியுள்ள பிரகஸ்தனே உன்தன் 
பேர்சொன்னால் அந்தக் காலனும் தலை 
வைத்துப் படான் இரு நூறு வெள்ளங் கொண்டு 
மசகம்போல் கையால் 
பிசையடா 
( பட் ) 
( பட் ) 
4. திடத்துடன் வானரரும் நரரும் 
சிங்கத்தின் காட்டைக் கரிவளைத்தாற் போலே 
வடக்கு வாசலைக் சுக்கிரீவனுடன் 
வளைத்துக் கொண்டாராம் 
நடக்கிறேன் இருநூறு வெள்ளங் கொண்டோர் 
நாழிக்குள் ளே அவர் எல்லாரையும் 
கெடுக்கிறேன் வீடுபற்றும் முன்னமே 
கிணறு வெட்ட வேணும் நிணறு சொன்னேன் இந்த 
( பட் ) 

அங்கதன் தூதுபோக அவனோடு ராவணன் சொல்லுதல் 

அரக்கன் இவ்வாறிலங்கையுள்ளே காத்துக் கொண்டான் 
அடல்குரங்கு வீரர் வெளி வளைத்துக் கொண்டார் 
உரைக்கும் அனுமனை நிகர் அங் கதன்சீராமன் 
உத்தரங் கொண்டிலங்கை நகரத்தில் போனான் 
இரைச்சல் அவ்வூர் எடுத்திடரா வணனைக் கண்டான் 
இராகவன் தூ துவன் நான் அங்கதனாம் என்பேர் 
திருத்தமுள்ள வாலிமைந்தன் என்றான் கேட்டுச் 
சீறறுவான் அரக்கன் இது கூறுவானே 

பல்லவி 
கேளடா அங்கதா எனது வார்த்தை 
கேளடாநீ அங்கதா 
( கேள ) 
அநுபல்லவி 
கேளடா நரர்கொஞ்ச 
மீளடா அவர்க்கென்கை 
நாளடா நீபழி 
வாளடா இருக்குது 
( கேள ) 

சரணங்கள் 

1. தகப்பனைக் கொன்றவன் தூதரகப் பாராட்டி 
தள்ளிவந் தாய்சிறு பிள்ளை என் 
பதுகாட்டி 
செகத்தந்த வசைகூடப் போகநான் உனைநாட்டி 
சிங்கா தனத்தில் வைப்பேன் சிங்கார 
முடிசூட்டி ( கேள ) 
2. நீடச்சானகியென்ற பெண்ணொன்று 
நின்னைப் பிள்ளையாக என்புண்ணியமே 
தேடப்போன மருந்து காலில் அகப் 
தெய்வமே உனைஎன் தன் கையில் கூட்டி 
( கேள் ) 
3. நெருங்கிய துணையாம்உன் தகப்பன் மனிதன் 
அம்பில் 
நெருக்குண்டா ளென்னும் வார்த்தை உருக்குதேஎன்னை வெம்பி 
திரும்பப் பழிமீட்காமல் இருந்த தென்னடா 
நம்பி 
செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ 
தம்பி ( கே ) 
கிட்டுது 
டுது 
பட்டுது 
விட்டுது 

அங்கதன் ராவணனுக்கு மறுமொழி உரைத்தல் 
தூவிய எள் ளுங்கரும்பும் நசுக்கியுண்டால் பலன் என்னும் 
சொல்லே யல்லால் 
பாவியிவன் இணங்கிவரான் எனத்துரை அங்கதன் நீதான் 
படித்த தெல்லாம் 
ஏவிய என் காது கொள்ளா அரக்கா நான் வந்தகா 
ரியங்கேள் சீதா 
தேவிதனை விடுத்தடுத்தால் ஆவிதனை விடு என்றே 
செப்பு வானே 

பல்லவி 
அடடா வெளியே புறப்பட்டா - இல்லை 
யாகில் சீதையை விட்டுவிடடா 
( அட ) 

அநுபல்லவி 

தொடரும் வீண் பழிதேடிக் 
கொண்டாயே முன்னொரு 
தூதன் வந்து செய்ததைக் கண்டாயே - நானும் 
செயவீரராம் அந்த ரகு வீரர் 
விடவந்த 
தூதன் தூதன் தூதன் வெட்கம் உண்டானால் 
( அட) 

சரணங்கள் 

1. நினைவு வேறாய் வர்மம் 
நீ ஆர் என்றாய் உன்னைப் 
தனது வாலிற் கட்டிச் 
தரணியெல்லாம் தாவி 
சினவாலி வரபுத்திரன் 
சேதி சொல் வதற்காகவந் 
சீராமர் தேவியைச் சூதாகக் 
திருடா திருடா திருடா 
முற்றியே 
என்னை 
பற்றியே -- ஒட்டத் 
சுற்றியே - இந்தத் 
வெற்றியே - கொண்ட 
நானடா - உனக்கோர் 
தேனடா - எங்கள் 
கொண்டுவந்தாயே 
ரோஷம் உண்டானால் 
( அட ) 

1. துடிக்கத் தாடகைஉயிர் 
சூர்ப்பநகியை மூளி 
எடுத்த கரனைவிழத் 
இலையே நீ அவர் உயிர் 
தடுக்கவே அது தப்பிப் 
சமுத்திரம் அடைத்தபோ 
தளத்தோடும் வாராமல் ஒளித்த 
சண்டி சண்டி சண்டி மானம் 
போக்கவும் தங்கை 
யாக்கவும் 
தாக்கவும் வந்தாய் 
காக்கவும் நல்லது 
போனாலும் - நாங்கள் 
தானாலும் 
- உன் தன் 
தேதடா 
உண்டானால் 
( அட ) 

3. அரசும்உன் கொலுத்திருச் 
சட்டமும் 
நாளை 
அழியப்போகுதே உன்தன் 
கொட்டமும் 
இதிலே 
தருவேன் என்றாய் எனக் 
கிஷ்டமும் 
தரக்கொள்ளுமோ சிங்கம் 
பட்டமும் 
எங்கள் 
துரைசுக்கி ரீவனொடும் 
கிட்டியே ராமர் 
சூழ்ந்து வடக்குவாசல் 
கட்டியே 
தலை 
துணிப்பேன் என்றுவில்லை 
வணக்கி நின்றுவரச் 
சொன்னார் சொன்னார் சொன்னார் - சேவகனானால் ( அட ) 

அங்கதன் மீண்டு போர்கலக்க என்ன இருபடைகளும் கைகலத்தல் 

அங்கதன் இப் படிச்சொல்ல அரக்கன் இவனைப்பிடியும் 
அடியும் என்றான் 
கிங்கரர் தொட் டவரையெல்லாம் தலைசிதறக் உதறிவிட்டுக் 
கிளம்பி வந்தான் 
செங்கண் இரா கவசரணம் போய்வந்தேன் வல்லரக்கன் 
சிந்தை கண்டேன் 
வெங்கண் இராவணனைப்போர் இடுகென்றான் தயவைஇனி 
விடுகென்றானே 


கண்ணிகள் 

1. என்றான் அங்கதனங்கே நின்ற வானரர் எல்லாம் 
ராமசாமி மனது 
தான்மொய்க்கவே 
சென்றாரே எதிர்த்தாரே கொன்றாரே ராட்சதர்கள் 
திரும்பித் திரும்பிவந்து 
தான்மொய்க்கவே 

2. கல்லும் பெருமலையும் கெல்லும் பெருமரமும் 
கைக்கொண்டு வானரர்கள் விட்டுநிறைத்தார் 
வில்லும் வாளும் கொண்டு வெட்டி வெட்டி அரக்கர் 
மேலும் கீழும் அம்புக 
லாலேமறைத்தார் 

3. வாலும்காலும் தறிந்து மேலும்தோலும் பறிந்து 
மாய்ந்த அனேகங்கோடி 
வானரங்கள் 
மேலும் திசைகள் ஒரு நாலும்ரத்த வெள்ளமாய் 
வீழ்ந்த அரக்கர் முடி 
யொடுசிரங்கள் 

4 அடுத்த ராட்சத்ச்சண்டை வானரச்சண்டையினில் 
அலங்கோலம் ஆச்சுலங்கை 
ஊரினிலே 
எடுத்த பிணங்குவிந்து கடலும் திடலாகவே 
எழுந்தது ரத்தம் அந்தப் 
போரினிலே 

5. தட்டிமலைபிடிங்கி விட்டெறிந்து சுக்கிரீவன் 
தலைதலையா அரக்கர் 
தம்மைப்படுத்தான் 
எட்டி எதிர்த்த வச்சிரமுஷ்டி தலையும் அவன் 
எமதூதர் கையில் 
ரை 
யாகக் கொடுத்தான் 
6. தேக்கும் அனுமான் கையால் மேற்குவாசலில் வந்த 
சேனையோடு துன்முகனும் தானுயிர் விட்டான் 
தாக்கும் அங்கதன் கையால் தெற்குவாசலில் வந்த 
தளத்தோடே மண்டுசுபா ரிசனும்பட்டான் 
7. நீலன்கையாலே கீழ்வாசலிலே பிரகஸ் தன் 
நீண்ட சேனையும் தானும் மாண்டுபறந்தான் 
கோலும் இடும்பன் குத்தகும்பானு என்பவனும் 
குடலும் உடலும் தள்ளி 
ஆவியிறந்தான் 
8. அந்தச் சேதியறிந்து சிந்தித்த ராவணனும் 
ஆயிரம் பரித்தேரை வரக்கூவினான் 
பந்தித் தேர்கள் இரண்டாயிரம் சுற்றிவரத்தானும் 
பத்துத் தலைமலை போல் களம் ஏறினான் 
9. ஏறியம்பு மழையாத்தூறிச் சுக்கிரீவன்படை 
எல்லாம் படுத்தவனை மூர்ச்சையாக்கினான் 
சீறிவரும் மாருதி விட்டமலைகள் எல்லாம் 
சிந்தை அரக்கன் கணை கொண்டு தாக்கினான் 
10. மாருதி வல்லரக்கன் தேரில் இருந்தபேரும் 
சாரதி தலைமலை 
யாலேமுறித்தான் 
வீரராவணன் ஒரு நூறம்பினால் அனுமான் 
மெய்யும் கையும் தள ரவேதெறித்தான் 
11. இளையான் இதையறிந்து வளைவாம் அரக்கர்படை 
எல்லாம் இமைப்பொழுதில் செல்லஒறுத்தான் 
ராவணன் மேல் வெகுவாகச் சண்டைசெய்து 
ஓரம் பால் அவன் சரக் 
கூடும் அறுத்தான் 
12. தளராமல் லட்சுமணன் விளையாடக் கண்டரக்கன் 
சமர்த்தன் நீ என்று துதி 
தான்விளம்பினான் 
வளமான மாருதியும் களை ஆறியே அவ்வேளை 
மகமேரு கிரியென 
வேகிளம்பினான 


அனுமாரும் இராவணனும் கைக்குத்துக்கு நிற்குதல் 

கிளம்பிய மாருதியுமிரா வணனை நேரே 
கிட்டிமணித் தோளிரண்டும் தட்டிக்கேளாய் 
விளம்புகிறேன் வெறுங்னகயிரண் டுடையேன் நானோ 
வீரத்தால் இருபதுகை உடையை நீயோ 
அளந்த வில்லும் அம்பு மெடுத்த்தட்டவந்தாய் 
அதிலே ஆள் பலந்தெரியல் ஆமோ இந்தத் 
தளந்தனில் உன் பலமுமென்றன் பலமும் காண்போம் 
சற்றென்றான் கொடடானகக் குத்தென்றானே 

பல்லவி 

குத்துக்கு வாடா - ராவணாைகக் 
குத்துக்கு நீவாடா 
( குத் ) 

அநு பல்லவி 

பத்துத் தலையும் இரு 
பலமும் குரங்கினிட 
பதுகையும் ராக்ஷத 
பலமும் தெரியவேணும் ( குத் ) 

சரணங்கள்  
1. எட்டானைக் கொம்பும் மொட்டைக் கிடாப்போல 
ஒடித்தேன் 
என்றும் அந்த 
ஈசன்சயிலையை ஊசிவேரோ டே நான் 
எடுத்துப் 
பிடித்தேன் 
என்றும் 
ஒட்ட 
சட்டம் சட்டமாப் 
பேசிக் 
சமர்த்தன் சமர்த்தன் நான் என்று 
விட்டுக்கட்டடா ஏதுக்கு வீணும் 
வீரம் எல்லாம் இன்றைக்கு வெளிச்ம் 
கொள்ளுவதும் 
துள்ளுவதும் 
சரணும் 
ஆகவேணும் 
( குத் ) 

2. நான் உன்னைக் குத்துவேன் அந்தக் குத்துனக்குத் 
தானே பெருந் தத்தடா பிழைத்தால் 
நாலைந்து கைகளும் ஓங்கியே 
என்மேலே நீ குத்தடா 
ஏனென்னைக் குத்தினாய் என்று கோபிக்கவில்லை 
இதுவே நம்பிக்கை தேறிக்கொள் என்சொல்லை 
ஆனமட்டுக்கும்பார் வஞ்சனை பண்ணாதே 
ஆள்பகட்டால் மிரட்டலா மென்றெண்ணாதே 
3. ஓதிபருத்தால் என்ன தூணாகுமோ சற்றும் 
ஒதுங்காதே நில்லடா கையைக்கையை 
ஓங்கினேன் குத்து வருகுது வருகுது 
தாங்க உன்வசம் அல்லடா 
சதியினா லே எங்கள் சீதாக் கனி தன்னைத் 
தம்பிபிரிந்துபோன பின்பும் திருடும் உன்னை 
எதிரிலே கண்டு சினமிகப் பெருகுதடா 
எனது வலக்கைக்குத் தினவு தின்கு தடா குத்து 
( குத் ) 

ஸ்ரீராமருக்கும் இராவணனுக்கும் முதல் யுத்தம் 

அனுமான் இப் படிக்குத்த அரக்கன் சாய்ந்தான் 
அரக்கன் மறுபடி குத்த அனுமான் சாய்ந்தான் 
தனிவேல் ஒன்றரக்கன் விட்டான் இளையோன் சாய்ந்தான் 
சாய்ந்தவனை எடுத்தரக்கன் ஓய்ந்து நின்றான் 
முனையால்மா ருதி இளையோ னைக்கைக் கொண்டான் 
முடித்தேர் கொண்டிராவணன் போர்தொடுக்க வந்தான் 
மனு நாதர் எதிரே அனுமான் மேற்கொண்டு 
வளைத்திட்டார் இருவரும் போர் விளைத்திட்டாரே 

பல்லவி 

ராகவனுக்கும் ராவணனுக்கும் நடந்ததே சண்டை 
( ரா ) 

அநுபல்லவி 

ஏககோ தண்டத்தில் 
ஈரைந்து கையாலும் 
இவன் கணை 
அவனம்பு 
எய்யவும் 
பெய்யவும் 
( ரா ) 


சரணங்கள் 

சேர்த்து 
1. அரக்கன் தேர்மேல் 
தா வினான் 
சாமி அனுமான் 
பெருத்த தோள்களில் 
மேவினான் சாமிமேல் ஏழு 
சரத்னத ராவணன் 
தாக்கினான் ஏழையும் ஏழு 
சரத்தால் ஐயனும் 
போக்கினான் பின் 
கருத்தன் ஓர் ஐந்தம்பு 
தூவினான் 
மாற்றிக் 
கண்டகன் பத்தம்பை ஏவினான் - அனதத் 
துரத்தி ராகவன் வெற்றி கொண்டான் - வந்து 
சுற்றிய சேனையைக் கண்டான் 
ஒருத்தற் கொவ்வொருகனை தவறாமலே உந்தி 
ஊழியழையைப்போலே 
தலை தலையாச் சிந்தி 
கரிக்கூட்டம் பரிக்கூட்டம் தேர்க்கூட்டங்களைச் 
கால்மாடு தலைமாடாக் களத்தை எல்லாம் தூர்த்து 
கரைக்குள் அடங்கா ரத்த 
வெள்ளக் 
கடலிலே கவந்தங்கள் பேய்கள் துள்ள 
இரைக்கு வருகிற பேய்கள் 
சவிய 
எங்கும் ராட்சதப் பிணங்கள் குவிய 
( ராக ) 
2. நெருங்கும் ராட்சதரைக் 
கொன்று தனதுசேனை 
குரங்கைத் தற்காத்து 
நின்று - பொருதும்வேளை 
தெரிந்து ராவணன் 
அடுத்தான் - சாமிதோளினில் 
இரண்டம்பு அழுந்த 
விடுத்தான் பின் 
பிரிந்தொரு கணைராமன் 
தெறித்தான் அவன் 
பத்துகை வில்லையும் 
முறித்தான் - நொடியில் 
திரும்பச் சாரதிதலை 
கொய்தான் - பரியும் 
தேரும் கொடியும் பொடி செய்தான் - 
மணிமுடி 
ஆலின் 
வரங் கொள் ஆயுதமெல்லாம் அவன் தொடத்தொட 
வெட்டி 
மறுதேரும் சேனையும் வாராமல் வழி 
கட்டி 
உரங் கொண்டு ராகவன் முனைந்து நின்றது 
கண்டு 
ஒண்டியாய்த் தேர்விட்டுக் குதித்துயோசனை கொண்டு 
உலையின் மெழுகாய் நின்று 
தேய 
ஒருகணைவந்து தலையிற் 
குலைகள் உதிர்ந்தாற் போல 
ஈரைந்தும் கிடந்துருள 
இப்படி ( ராக ) 
3. தொடுத்த கவசம் 
நீங்கி - கிரிதொட்டு 
விடுத்த பாம்பு போல் ஏங்கி - 
நாரதர்க்கெதிர் 
படித்தநாக்குகள் 
காய்ந்து - ஓரம் சொன்னவன் 
குடித்தனம் போல் 
தேய்ந்து 
டைக்கிடை விழுதுபோற் காட்டும் கைகள் 
இருப்பதையும் தொங்கப் போட்டும் தன் 
மிடுக்செல்லாம் போய் மெலி 
தோளில் 
வீரலட்சுமி அப்பாற் 
போக 
அடிக்கடி குரங்குகள் மலைபோடக் 
களைபட்டு 
அனுமந்தன் கைக்குத்தால் முதுகெல்லாம் தொளைபட்டு 
படைக்கலம் விடவிடப் பொடிப்பொடியா 
பாலலக்ஷமணன் அலங்கோலம் செய்திடக் கண்டு 
பார்த்த முகமெல்லாம் 
வேற்று முகமாய் 
பத்து முகத்துள்ள பவி செல்லாம் 
போய் 
தோற்று ராவணன் மனது 
கொதிக்கவும் 
சுவாமிகீர்த்தியைத்தேவர் 
துதிக்கவும் ( ராக ) 

வாக 
விண்டு 

ஸ்ரீராமர் இராவணனைச் சம்மதி கேட்குதல் 
வண்ணம் வாடி இளைத்திந்த வகைவல் லரக்கன் நின்றளவில் 
அண்ணல் எனும்ரா கவன்கண்டான் ஐயோகைஆயுதமற்றாய் 
எண்ணில் அருஞ்சேனையுமற்றாய் இளைத்தாய் இனிஉன் நினைப்பேது 
திண்ணம் ஆகநானறியத் தெரிப்பாய் எனச்சொல் விரிப்பானே 

பல்லவி 
ஏதடா ராவணாசன் சம்மதி 
என்னடாஉன் சம்மதி 
( ஏத ) 

அநுபல்லவி 

ஆதிமுதல் முதல்சண்டைக்கு வந்தாயே நீ 
அலங்கோலமாய் ஒண்டியாசி நிலங்கீறி நின்றாயே துரோகி 

1. பெருமகுடமும் வில்லும் படைகளும்போய்ப் பேனதப் பெண்ணாலே 
இருபதுகையும் வெறுங்கையாய் நின்றாயே எய்யும் என் அம்பினாலே 
இருநூறு வெள்ளமும் 
பெருங்காற்றிலே பூளை 
ஈட்டம்போல் மாளக் கண்டு போட்டாயேகை வாளை 
சரணம் புகுதல் என்றால் இதுவே நல்ல வேளை 
சண்டைக்குன்னால் ஆகாதினி இன்றைக்குப் போய்வாடா நாளை 
( ஏத ) 
2. பருத்தி பொதிக்கொரு நெருப்புப்போலே பற்றுமுன்னே அட்டா 
தரைக்குள் அறியாமல் சிறைக்குள் ளேனவத்த சனகியைவிட்டு விட்டா 
நெருக்கம் செய்யாதே 
தேவரைமுன் போலும் 
நிலைக்குள் ளேனவத்து மகுடமும் செங் கோலும் 
துரைத்தனமும் உன் தன் 
தம்பிக்குத் தந்து மேலும் 
சொல்லுமவ்ன் ஏவல்கேட்டால் கொல்லேனுன்னை ஒருக்காலும் 
( ஏ த ) 
1. மயக்கமாய் மறுமாதனரத் தொடர்ந்தவன் வாழ்வு நில்லா தடடா 
பயித்தியம் கொண்டலைகிறாய் தர்மத்தைப் பாவம்வெல்லா தட்டா 
செயிக்கமாட்டாய் கடியடா 
இளம்புல்லு 
தீயருக்கென்றல்லவோ பிடித்தேன் 
இந்தவில்லு 
பயப்படாதேநீ சும்மா 
நில்லுநில்லு 
பத்துவாயும் போச்சுதோ ஓர் உத்திரமாகிலும் சொல்லு 
( ஏத ) 

ராவணன் மாலியவானோடு அமர்க்களம் கூறல் 
சம்மதி ஏதென்ற ராகவனோடே உத் 
தரம் ஒன்றும் சொல்லாதே மகுடம் பத்தும் 
செம்மிய மார்பிலணி எட்டானைக் கொம்பும் 
சிவன் கொடுத்த வாளும் போட்டமாரெல்லாம் 
மெய்ம்மகிழ மங்களழப் பெண்கள் கூவ 
வெறுங்கையாய் நிலம்பார்த்தவ் விலங்கை சேர்ந்தான் 
அம்மதி சொல் லியபாட்டனுடனே சொல்லி 
அழிகுவான் அமர்க்களத்தை மொழிகுவானே . 

பல்லவி 
அந்த மானிடன் சண்டையில் நான்பட்ட 
நிந்தையை என்ன சொல்வேன் 
( அந்த ) 

அநு பல்லவி 

கந்தமூலம் தின்னும் அவன்கையில் அம்புக்கும் 
காலனுக்கும் என்ன 
கூட்டா - சண்டைக் 
கோலம் சொல்லல் விளை 
யாட்டா 
அடா 
மாலிய வானே என் 
பாட்டா 
( அந்த ) 

சரணங்கள் 

தனோ 
மேற்கு 
தேனோ 
வக்கணைப் பேச்சல்ல கோதண்டம் ஏந்த 
மலர்க்கையிலே பிடித் 
தெற்குவடக்கு கிழக்கினில் நான் எந்த 
திக்கினிலே இருந் 
உக்கிரமாம் அனலோ அவன் வாகனம் 
ஊழிக் காற்றோ அனு 
திக்குத் திசைதெரியாமல் நின்றேன் கண்டு 
கெக்கலி கொட்டினார் 
வெட்கத்துக் காள்இனி 
விக்கிரமம் என்ன சொல் 
மானோ 
ஒன்றும் 
வானோர் 
அந்த 
நானோ 
அவன் 
வேனோ ( அந்த ) 

போடும் 
2 : விடுமவன், வாளிஎன் கைக்கணையும் திக்கு 
வேழத்தையும் கூடச் 
சாடும் - எழுந் 
திடறி அனேகம் அரக்கர் சிரங்களை 
இலங்சைத் தெருவெங்கும் 
இன்னம் 
உடலோ டுயிர்தப்பி இருக்சின்ற ராட்சதர் 
உண்டோ என்றண்டத்தைத் 
தேடும் 
அடவி எல்லாம் சுட்டு விண்ணும் மண்ணும் பறந் 
திடமலையும் கிழித் 
தோடும் கடல் 
வடவையுடனே போ 
ராடும் அவன் 
விடும் அம்பு கூட்டிற்பின் 
கூடும் ( அந்த ) 
சேர்த்தேன் 
3. எறிதரு பாசங்கொண்டிந்திரனைச் சந்திரனை 
எல்லாரையும் கட்டிச் 
சீறி 
முறைமுறையே சென்று சண்டை தொடுத்தந்த 
மூவர் சமர்தீனதயும் 
பார்த்தேன் - ஆரும் 
அறியவட கயிலாசத்தை வேரொடும் 
அங்கையினாற் கட்டிப் 
பேர்த்தேன் 
கரிலம் 
விறுதா பெரும்பழி 
ஏற்றேன் என் தன் 
கெருவம் எல்லாம் அங்கே 
தோற்றேன் ( அந்த ) 

4. தக்கவன் தம்பி இலக்குவன் சண்னடக்கென் 
சண்டை வெய்யில் மஞ்சள் 
பூச்சே - மெத்த 
எக்களிப் பாய் அவன் பக்கற் குரிங்குக்கும் 
என்னோ டெதிர்க்கலும் 
ஆச்சே - நேற்று 
மிக்கவன் நானென்று சீனதக்குச் சொல்லிய 
வீம்பெல்லாம் வெறும் 
பேச்சே எட்டுத் 
திக்காணைக் கொம்பும் என்மார்பிற் குரங்கொரு 
கைக்குத்திலே சிந்திப் 
போச்சே சொன்னால் 
ஒக்கவரும் பெரு 
மூச்சே 
ருக்கும் இது மெத்த 
( அந்த ) 

எவ 
மாலியவான் புத்தியை தாவணன் கேட்காமல் 
மகோதரன் கலைத்தல் 
அடலரக்கன் இவ்வாறு முதனாட்போரில் 
பட்ட அவத்தை எல்லாம் 
திடமுள மாலியவான் முன் சொன்னான் 
அங்கவனும் அப்பா சீதை தன்னை 
விடஇதுவே சமயமென்றான் பாவி மகோதரன் 
அதனை விலக்கி வெள்ளக் 
கடல் எனும் ராட்சத குலத்தை தொலைக்கின்றான் 
ராவணனைக் கலைக்கின்றானே 


பல்லவி 

ஏன் ஜயா 
- மாலியவான்சொல் 
இந்த யோசனை 
எல்லாம் அவலம் தான் ஐயா 
( இந்த ) 

அநுபல்லவி 

விந்தைமின் மினிப்பூச்சி வெளிச்சத்திற் கிருள் 
அந்த மானிடர்க்கும் வானரர்க்கும் பயந்து 
போமோ 
நாமோ ( இந்த ) 

சரணங்கள் 

குடியோ 
1 மெத்த பயந்த 
ஐயையோஎலி 
வேட்டைக் குந்தவில் அடியோ 
பற்றிக் கயிலையை நீ பறித்தெடுத்ததும் பொய்யோ 
கர்த்தர் மூவரும் இன்னம் கலங்கிறார் உனக்கையோ 
( இந்த ) 
2. தளர்ச்சி சொல்வதோ வீரம் - ஒன்றைப் பிடித்தால் 
சாதிப்பதல்லோ பாரம் 
இளக்காரம் கண்டால் உன்னை எங்கெங்கும் பழிக் காதோ 
நுளைக் குரங் கிலங்கையை நொடிக்குள் அழிக் காதோ ( இந்த ) 
3. கெம்பீரம் தன்னில் 
மீசரா 
மூன்றுலோகமும் 
கெடிபெற்ற ராவ ணேஸ்வரா 
கும்பல் மனிதர் என்றும் குரங்கென்றும் பேர் எடாமல் 
தம்பிகும்ப கர்ணாநீ சதை என்று சொல் லிடாமல் 
( இத்த ) 

கிங்கரர் கும்பகர்ணனை எழுப்பவும் அவன் தூங்குதல் 

விளைவதறி யாதம கோ தரன் உரையால் அரக்கன் மனம் வேறாய் இங்கே 
வளைதருவா ரனங்களையும் மனிதரையும் உயிர் குடிக்க வல்லோனான 
ளையவனை எழுப்பு மெஈறான் அப்போது கும்பகர்ணன் இரண்டு மூக்கின் 
துளைதிறந்து தன்னறிவு நீங்கினான் பிணம்போலத் தூங்கினானே . 

பல்லவி 
கும்பகர்னன் 
தூங்கினான் தூங்கினானே 
தூங்கினான் தூங்கினானே 
( தூ } 


அநு பல்லவி 

தூங்கினான் ராவணன் ஏவல் தாங்கிய நாலு கிங்கரர் 
வாங்கி இருப் புலக்கைகொண் டோங்கி அடிக்கடிக்க 
( தூ ) 

சரணங்கள் 

1. தேவரும் திசையில் உள்ள யாவரும் இவன் மூச்சாலே 
திடுக்கென்று மெய் களைக் வும் கோட்டைவாசல் போல 
வாய்வழி ஓடிய சுவாச 
வாயுவும் உகாந்த கால 
வாயுவைப் போல் வளைக்கவும் சூலத்தைக் கொண்டு 
ராவணன் தூதுவர் காலன் 
ஏவிய தூதரைப்போல 
இருகாதிலும் துளைக்கவும் எழுப்ப வேண்டி 
பாவி அரக்கர் கையால் 
ஆவதெல்லாம் செய்து செய்து 
பார்த்தவர்கள் கை ளைக்கவும் எழுந்திராமல் ( தூங் ) 

2. எட்டுமலை யும்பிடுங்க 
ளந்தென்றல் போலே 
கட்டி கட்டியாக வடி 
கண்களினிற் பீளை 
விட்ட பெருமூச்சில் அகப் 
முட்டிடு காற்றிவன் மேலே 
படிய 
இருபக்கமும் 
இட்டி சுண்ணாம்பு போலே 
பெருங்காற்றென்ன 
பட்டவர் பம்பரம் போலே 
இடிய 
விசைகொண் டுருண்டு மடிய 
மழுக்களாலே 
கொட்டுவதெல்லாம் குறங்கு தட்டுவது போற்சுகமாக் 
கோட்டுவாய் ஓடி 
வடிய 
குறட்டைவிட்டு ( தூங் ) 
3. தாக்கிய பூரிபேரிகை 
கூக்குரலெல்லாம் செவியில் 
சற்றும் ஏறாமல் 
விடுக்க 
தளந்தளமா 
மேற் கொளும் யானை சேனைகள் மார்க்குளும் தோளிலும் ஏறி 
மிதித்து மிதித்து 
முடுக்க 
தணலிற்காய்ச்சிப் 
போக்கிய உலக்கைகளால் 
மூக்குமயிர் வெந்திலங்கா 
புரியெங்கும் நாற்றம் எடுக்க 
ஆக்கிய வேதனைகள் சி 
லாக்கியமாக மென்மேலும் 
அதிக நித்திரை 
கொடுக்க சுரணைகெட்டு ( தூங் ) 
பலவிதமா 
கும்பகர்ணன் இராவணனுக்குப் புத்தி கூறுதல்  
தூங்கியதோர் கும்பகர்னன் வருத்தத்தாலே 
துயில் எழுந்தான் அறுநூறு சகடச் சோறும் 
ஓங்குபதி னாயிரம் சாடியிலே கள்ளும் 
உண்டான் பின் அண்ணன் முகம் கண்டான் தந்த 
பூங்கவசம் முதல் எல்லாம் பெற்றான் அவ்வூர்ப் 
புறத்தில் வானரர் ஆரவாரம் கேட்டான் 
ஈங்கிதென்ன புதுமை என்றான் அவனும் சொன்னான் 
இடிக்கின்றான் புத்திசொல்லித் துடிக்கின்றானே . 

பல்லவி 
( வந் ) 
வந்ததோ தீமை இலங்கைக்கு வந்ததோ தீமை 

அதுபல்லவி 
வந்ததோ சீதைப்பெண் நொந்ததோ நகர் எங்கும் 
வெந்ததோ கலகம் மி 
குந்ததோ உன்னாலே 
( வந் ) 

சரணங்கன் 
1. புலத்தியன் குலம் 
தலத்தில் இருப்பு 
கெட்டதோ 
விட்டதோ 
நமக்கிந்த 
விலக்காத பழி 
மூண்டதோ மூவுலகமும் 
செலுத்தும் செங்கோல் மாண்டதோ 
கலைப்பவர் சொற்கொண்டு கலங்கிறாய்நீ குட்டி 
குலைத்துத்தாய் மேல்வைத்த கொள்கை போலே கிட்டி 
( வந்த ) 

2. தாய்வரம் பிடித்தானே அம்பால் வாலி 
சீவனைக் குடித்தானே 
தேவர்க்கும் தேவனவன் ராமன் முன்பாகப் 
போய் வென்று பிழைப்பதெவன் 
நீவெல்வேன் என்பதும் நினைந்த சனகிப் பெண்ண 
மேவுவேன் என்பதும் விருதாயோசனை அண்ணேன் 
( வந்த ) 

3. அம்புராகவன் தொடுக்க வருணன் வந்து 
கும்பிட்டுவழி 
கொடுக்க 
கெம்பீர அணை படுத்து வந்த மனிதன் 
முன்பு போய்ப்படை எடுத்து 
கும்பலாய் ஒரு மிக்கக் கூடிச்சண்டை காடாமல் 
தம்பி சொற்படி சீதை தனையும் விட்டு விடாமல் 
( வந்த ) 

4. முழுதும் லட்சுமணன் 
அம்பாலே 
இந்திரசித்து 
வி எழுவான் பாரினி 
மண்மேலே 
எழுதும் எழுத்தின் 
ராமனம்பாலே 
விழும் என் தன் மணி 
பிழைபொறு சீதையை பிறகாகிலும் விடு 
ஒழிவாயானால் உன் தன் உயிரும் போம்படுபடு 
படியே 
முடியே 
( வந்த ) 

விபீஷணர் ஸ்ரீராமருக்குக் கும்பகர்ணன் வரலாறு கூறுதல் 

கும்பகர்னன் இது சொன்னான் அரக்கன்சீறிக் 
குரங்கையும் மானிடரையும் சம்பிடு போ என்றான் 
தம்பியது பொறாமல் ஆயிரம் பேப் பூண்ட 
தடந்தேர் மேல்ஏறி நெடுஞ் சூலங் கொண்டான் 
வெம்பரக்கர் புடைசூழ இலங்கைவிட்டு 
வெளிவந்தான் அதுகண்டான் வீரராமன் 
நம்பி இதேதென்ன , விபீஷணனும் அங்கே 
நாடினான் வணங்கி உரை யாடினானே . 

பல்லவி 
கும்பகர்னன் இவன் ஐயா 
எனக்கு மூத்தவன் ஐயா 
நான் தம்பி 
( கும் ) 

அநுபல்லவி 

எம் பெருமானே உன் 
நம்பும் விபீஷணன் 
இணையடிக்காளாய் 
நான் சொல்லக் கேளாய் 
( கும் ) 

சரணங்கள் 

வந்து 
1. ஞாலத்திலே வெகு நாளா கத்தவஞ்செய்து 
சூலத்தைச் சிவன் கையிற் 
பற்றினான் 
மேலிட்டு இந்திரனைக் 
குத்தினான் 
காலிட் டலைகடலை 
எத்தினான் 
ஆலத்தைப் போலே தேவர்களைப் போய் பிடிப்பான் 
நூலுக்கும் சரட்டுக்கும் அகாமல் 
அடிப்பான் 
ஒரு 
இவன் 
( கும்ப ) 


2 . பகரமா ஒருகையாற் பந்துபோல் எடுத்தந்த 
மகமேருவையும் தோளில் 
தாங்குவான் எங்கும் 
புகை புறப்பட மூச்சை 
வாங்குவான் 
யுகம் ஒரு நாளாகத் 
தூங்குவான் 
இவன் 
சுகமாக சிலநாள் 
தூங்கையாற் பூமி 
சகலரும் உயிர் தப்பிப் பிழைத்தார் என் 
( கும்ப ) 

சாமி 
3. தெரிந்து ராவணனுக்குச் சீதையை விடச்சொல்லி 
வருந்தி வருந்தி மெத்த 
முறைப்பட்டான் 
அவன் 
இரங்காமையால் இவன் 
குறைப்பட்டான் - காலம் 
புரிந்ததென்றே எண்ணிப் 
புறப்பட்டான் - உன் 
சரண் புகுந்திடுவானோ 
தமையன் தன் சொல்லால் 
சிரந் துணிபடுவானோ தேவாஉன் வீல்லால் 
( கும்ப ) 

கும்பகர்ணன் தன்னை அழைத்த விபீஷணனுக்குப் புத்தி கூறல் 

சத்தியவிபீ ஷணன் இவ்வா றுரைக்கச் சாமி 
சண்டையிட வருமிவனை உன் முன்னாகச் 
சித்திரவதை செய்திடில் உன்மனம் ஏதாமோ 
தெரிந்துவா அவன் மனதை என்னச்சொன்னான் 
அத்திசையில் அரக்கர்படைக் கடலுக்குள்ளே 

அண்ணன் அடிமேற் பணிந்தான் பணிந்தபோது 
புத்தியுள்ள கும்பகர்ணன் தம்பிதன்னைப் 
புல்லினான் புத்திசில சொல்லினானே
ஏன்வந்தாய் தம்பிவிபீஷணா 
- நல்லோர் 
எவர்க்கும் அதிககுண பூஷணா 
( ஏன் ) 

அநுபல்லவி 
ஆனந்தராமனை அடுத்தாய் வினை கெடுத்தாய் 
அமிர்தம் உண்கிறவாயால் விஷமுண்பார்களோபோய் ( ஏன் ) 

சரணங்கள் 

1. அங்கேநீ போனதும் அபயம்பெற்றதும் லங்கை 
அரசுபெற்றதும் கண்டு 
வருந்தேனே 
வங்கிசமும் புலத்தியன் பேரும்விளங்கும் உன்னால் 
வந்து கெடுத்தாய் என்று 
பொருந்தேனே 
தங்கும் என்குலத்திலே ராமன் அம்புக்கொருவர் 
தப்புவார் என்றெண்ணத் 
திருந்தேனே 
இங்கே இறந்தவர்கள் எல்லாரும் கரை ஏற 
எள்ளும் தண்ணீரும் நீ இறைப்பாய்என் றிருந்தேனே 
( ஏன் ) 

2. நாலுபதமும் கொண்டாய் சிரஞ்சீவீயும் கொண்டாய் 
நாங்கள் நரகங் கொண்டோம் 
மேலே கூற்றுவன் நின்றான்ராமனும் எதிர்நின்றான் 
வீதியும் நின்றதுகால 
ஒருகாலே 
முடிவாலே 
( ஏன் ) 

சீலமுள்ள வரவர் தங்கள் உயிர் விட்டாலும் 
தெறிக்க விடார் உன்னைப் 
புவிமேலே 
காலன் ஊர் எமக்குண்டு இலங்கையூர் உனக்குண்டு 
கனியைத் தின்பதைவிட்டுக் காயைத்தின் பதுபோலே 
3. அம்பு போல் சுருக்கா நீ அவரைச் சேர்வதே காரியம் 
அழைக்கிறாய் சம்மதி 
படுவேனோ 
தம்பியும் ராமனும் நிற்கக் குரங்கை எல்லாம் 
சதையாமல் வதையாமல் 
விடுவேனோ 
வம்புக் கிடமாஎன்னை வளர்த்தானைக் கைவிட்டங்கே 
வந்து அபகீர்த்தியைத் 
தொடுவேனோ 
நம்பும் தமையனோடே நானும் இறப்பதல்லால் 
நாலுபேரும் நகைக்க நரரைக்கும் பிடுவேனோ 
( ஏன் ) 

கும்பகர்ணனுக்கு விபீஷணன் நீதிகூறல்
மொழியிதனைக் கும்பகர்னன் சொல்ல விபீஷணன் அண்ணேன் 
முறைதப்பான 
வழியிது நீக் கிடவேணும் வந்து நீசாமிபதம் வணங்க வேணும் 
வழிபடும்ரா வணனுடனே இறப்பது நீ கருமமல்ல பரிந்தென்பின்னே 
எழுவதுவே கருமம் என்ன அசைக்கின்றான் உறுதிமொழி இசைக்கின்றானே 


பல்லவி 
( என் ) 
என்வார்த்தை தன்னைக்கேள் அண்ணேன் கும்பகர்னாநீ 
ராமரைச் சேர்ந்துவாழ் அண்ணேன் 

அநுபல்லவி 
உன்வார்த்தை கேட்கமுன்னை உகந்தனுப்பினார் என்னை 
உண்மைபார் ஆனமட்டும் தர்மமே தலைக்கட்டும் 
( என் ) 

சரணங்கள் 

வாதகம் 
1. மனத்துக் காகாதராவணனை ஒழிக்கவேணும் 
வளருதே அப 
அனர்த்தமாம் பரதாரத் துரோகியுடன் சேர்ந்தால் 
அதைவிட உண்டோ 
பாதகம் 
செனித்த நமது வேதகுலமும் பலமும் போகச் 
சிந்திப்ப தென்ன 
தோதகம் 
கனத்தராமர் படைக்குமுன் நமது படை வெல்லுமோ 
கடலிலே பெருங்காயம் கரைத்தாலுண்டோ சாதகம் ( என் ) 

2 --அடைவான தாய்தலைனப பிழையாமல் பரசுராமன் 
அரிந்தானே 
பரிகாரம் 
திடமாம் பிதாவைக்கூட பிழைகண்டு சிவன்பண்டு 
சிரங்கொய்த்தல் 
லோ வீரம் 
நடவா நடைநடந்தால் அண்ணன் தம்பியைக்கூட 
நறுக்கவேணும் 
அந்நேரம் 
உடலிற் புரைகழலை அறுத்தெறிவாரைப் போல 
ஒழிக்கவேணுமல்லாமல் உயிர்கொடுத்தென்ன சாரம் ( என் ) 

3. உனக்குள்ள காலமெல்லாம் உறங்கிக் கிடந்தால் இந்த 
உலகமும் இனிமேற் 
கட்டாதே 
தனித்த கோதண்டமுன்னே அண்ணனும் நீயுமெங்கே 
தலைவிதி தப்ப 
ஒட்டாதே 
வினைப்பிறவியும் தீரும்வந்தால் முத்தியும் சேரும் 
வேளை இதுபோல் 
கிட்டாதே 
எனக்குத்தந்த லங்கையை உனக்குத்தந்து நீ சொன்ன 
ஏவலும் கேட்கிறேன் நான் இனியா 
னியாகிலும் தட்டாதே ( என் ) 


விபீஷணன் மீண்டபின் இருபடைகளும் போர்கலத்தல் 
மந்திரி எனும் தம்பியிந்த வாறுசொல்ல 
மறுத்துவிட்டான் கும்பகர்ணன் சாமி அன்னான் 
சிந்தை இது என்ன விபீஷணனும் சொன்னான் 
செயராமன் சண்டையே செய்யும் என்றாள் 
பந்தமுள்ள சுக்ரீவன் முதலா உள்ள 
பலபலவா னரப்படைஞர் தொகையில்லாத 
நிந்தை இராக் கதர் படைஞர் கடல்போற் பொங்கி 
நேரிட்டார் அதிகமுள்ள போரிட்டாரே 


கண்ணிகள் 


வீரர் 
1. கோலா கலமாகக் கடல்போல் வளைந்தாரே 
கும்பகர்ணன் படை 
மேலே பெருங்கடல் போலே வளைந்து 
மிதித்தாரே வானர 
சூரர் 
டாட்டம் 

2. எங்கும் பரிக்குலம் எங்கும் கரிக்குலம் 
எங்கும் அரக்கர்கொண் 
எங்கெங்கும் மந்திகள் எங்கெங்கும் பல்லூகம் 
எங்கெங்கும் வானரக் 
கூட்டம் 
டிக்க 

3. சங்குகள் கொம்புகள் தாளங்கள் மேளங்கள் 
சாகரம் போலவே 
அங்கங்கே குரங்கு நெருங்கிச் செய்கர்ச்சனை 
அண்டக டாகமும் 
வெடிக்க 

உடலை 
4. எத்திப் பிடிப்பார் அடிப்பார் ஓடிப்பார் 
இராக்கதர் வானரர் 
குத்தும் குதிக்கும் மிதிக்கும் வதைக்கும் 
குரங்குகள் ராட்சதக் 
கடலை 
பிணங்கள் 
நிணங்கள் 

5. அள்ளும் குருதியில் துள்ளும் மகரம்போல் 
ஆடுமே ராட்சதப் 
விள்ளும் கவசங்கள் தெள்ளும் துவசங்கள் 
விள்ளும் தலைமண்டை 
6. மெத்தமலையும் சிலையும் கவிக்குல 
வீரர் எதிர் எதிர் 
அத்திர சத்திர தோமரத்தால் எறிந் 
தரக்கர் அவையெல்லாம் 
விடுத்தார் 
தடுத்தார் 
தாக்கினார் 

7. வேலாயுதத்தாலும் சூலாயுதத்தாலும் 
மெத்த இராக்கதர் 
காலாலும் கையாலும் வானரவீரர்கள் 
காணாதவை பொடி 
யாக்கினார் 
8. தோளும் சிரங்களும் தாளும்கரங்களும் 
துண்டா அரக்கர்கள் 
மாளும் தலைவிதி தான்வந்தனேக 
வானர வீரர்கள் 
மடிந்தார் 
வெள்ளம் 
9. தேய்த்ததெறிந்த திவ்வாறு கும்பர்கர்னின் 
சேனையென்னும் பெரு 
சாய்த்த துதிரம் படிந்து செவந்து 
தனிந்த தல்லோ கடற் 
பள்ளம் 
மன்னன் 

10. வேளையதிலொரு நாலு வெள்ளம்படை 
வீரன் வசந்தன்ஓர் 
தோளில் ஒருமலை போடப் பொடியாசத் 
தொலைத்தானே கும்ப 
கர்னன் 
காலன் 

11. குத்தி உடனே அவனனப் பிடித்தந்த 
கும்பகர்னன் எனும் 
நெற்றித் திலகமா இட்டான் அதைக்கண்டு 
நேரிட்டானே வந்து 
நீலன் 
நகைத்தான் 

12. நீலன் எறிந்த மலைனியக் கும்பகர்னன் 
நீறுநீறாச் செய்து 
மேலவன் பாய்ந்து துடித்தான் இவன் குத்த 
வேசாறி நீலனும் 
தினகத்தான் 
பேசினான் 

13. அங்க தனைக் கண்ட அங்கதன் ஓர்மலை 
அங்கையாற் போட்டுரம் 
செங்கற் பொடிபோல் நுறுக்கி கும்பகர்னன் 
தெண்டொன் றவன் மேலே 
வீசினான் 
போட்டான் 

14. விட்டகெதை தன்னை அங்கதன் தன்கையால் 
வெடுக்கென் றொடித்து முன் 
குட்டிக் குரங்கேநீ ஆரவன் சொல்என்றே 
கும்பகர்னன் பின்பு 
கேட்டான் 

15. கேட்டாய் உன் 
அண்ணனை வாலாலேகட்டிக் 
கிளம்பினவன் மகன் 
தானடா 
மீட்டி அவனைப்போல் உன்னையும் வாலால் 
வளைக்கிற அங்கதன் 
நானடா 
என்று சொல் அங்கதன் தன்னைக் கும்பகர்னன் 
எற்ற அவினங்கே 
கன்றுகண் டோடி வரும் பசுப்போல 
கணத்தில் அனுமந்தன் 
சாய்ந்தான் 
பாய்ந்தான் 

17. பாய்ந்து அவன் மேலே ஒருமலை தன்னைப் 
பறித்தே அனுமந்தன் 
சாய்ந்திடக் கண்டான் இவன் தன்னை ராம 
சரங்கொல்லும் என்றப்பால் 
எறிந்தான் 
பரிந்தான் 

18. பரியக்கண்டே கும்பகர்னன் அந்தப்படை 
பகுபாதி யாம்படித் 
அறியும் இளையான் அனுமான் மேல் ஏறிநின் 
றஸ்திரம் மழைபோலச் 
தேய்த்தான் 
சாய்த்தான் 

19. தேரைப் பரியைக் கரியைத் தொலைத்தவன் 
செங்கைச் சிலையையும் 
ஒடித்தான் 
போரைக் கண்டோர் சூலம் கும்பகர்ணன் தம்பிமேல் 
போட என்றே எண்ணம் 
பிடித்தான் 
20. பிடிக்கும் முன்னே வெறும்கையன் என்றேதம்பி 
பேர்த்தொரு திக்கினில் 
மேவினான் 
துடித்தெதிரே வந்தசுக்ரீவன் மேலொரு 
சூலம் கும்பகர்னன் 
ஏவினான் 

21. ஏவிய சூலத்தைப் பாய்ந்தனுமான்கை 
இரண்டாலும் தூளா 
தாவிய சுக்கிரீவனைக் கும்பகர்ணன் 
தடங்கையாற் கட்டி 
நொறுக்கினான் 
இறுக்கினான் 

22. சாமி அதையறிந் தம்புகள் போடத் 
தயங்கிக் கும்பகர்னன் 
ஆமவன் காதையும் மூக்கையும் பிச்சுக்கொன் 
டப்புறம் சுக்கிரீவன் 
ஒய்ந்தான் 
பாய்ந்தான் 

23 , பாய்ந்தபின் தங்கச்சி மூக்குப்போல் தன்மூக்கும் 

பழுதாகவே வெட்கம் 
காய்ந்த சினத்தோடும் ராகவன்மேற் கும்ப 
கர்னனும் சண்டைக்கு 
பூண்டான் 
மீண்டான் 

ஸ்ரீராமருக்கும் கும்பகர்ணனுக்கும் யுத்தம் 

மீண்டவன் நான் மூக்கிழந்தேன் தங்கை மூக்கும் 
வீணிலே உங்களால் இழந்தாள் இங்கே 
ஈண்ட இருவோரும்மூக் கிழந்த போதே 
இனிஇலங்கை வேந்தனும் மூக்கிழந்தான் கண்டாய் 
ஆண்டகைமை போகுமுன் உங்களை வாளாலே 
அறுத்தறுத்துத் தெறிப்பேனென் றொருவாளேந்திப் 
பூண்ட செய ராகவன்ழுன் கும்பகர்ணன் 
போர் செய்தான் இப்படிப் போர் ஆர் செய்தாரே 

பல்லவி 

ஸ்ரீராகவனும் கும்பகர்ணனும் செய்தாரே சண்டை 
( ஸ்ரீ ) 

அநு பல்லவி  

வீரன் பதின்மூன்று 
வெற்றப் பரிசையால் 
நாரசிங்கமும் இர 
நாகரும் தேவரும் 
கணை தொடுத்தான் 
அவன் தடுத்தான் 
ணிய னும்போலே 
காணமண்மேலே 
( ஸ்ரீ ) 

சரணங்கள் 

1. விக்கிரம னாம்கும்பக கருணனும் இராகவன் 
மேலொரு பத்தம்பால் 
தாக்கினான் 
கைக்கணையால் சாமி அவன்னகயின் வில்லையும் 
கவசத்தையும் துண்டம் 
ஆக்கினான் 
அக்கணத்தேதடி கொண்டவன் 
மீள 
அடித்தானே வெகுகுரங்குகள் 
தைக்கும் அம்பால் அந்தத் தடியையும் 
தறித்தானே ஐயன் இப்படி 
மாள் 
போகத் 
மாக 
( ஸ்ரீ ) 

2. மடித்த வாயோடும் கும்பகர்னன் வேறே 
வாளும் பரிசையும் 
எடுத்தான் 
தொடுத்து ராகவன் அவன்வலக் கையைத் 
துணித்து மண்ணில் விழ 
விடுத்தான் 
பிடித்த வாளொடும் கைவிழ 
மெய்யைப் 
பேர்த்திடாமல் நின்றே அந்தக் 
எடுத்துக் கொண்டடித்தே சண்டை 
தந்த 
இடக்கையும் கொய்தானிப்படி அந்த 
கைபை 
( ஸ்ரீ ) 

எய்தான் 
வழுவாமலே ஒரு கையாற்கும் பகர்னன் 
வலது காலைவிழ 
அழிய இடதுகாலால் குந்திக்குந்தி வர 
அந்தக்காலும் துணி 
எழும் வகை இல்லாமல் அண்ணனை 
ஏங்கி னான் அழுதான் மனம் 
முழுதும் தொளைபட் டரக்கன் 
முண்டமாக் கிடந்துருள 
செய்தான் 
நாடி 
வாடி 
சரீரம் 
அந்நேரம் 
( ஸ்ரீ ) 

கும்பகர்ணன் ஸ்ரீராமரைத் துதித்து வரங்கொள்ளுதல் 
 
முன்புமா ரீசனொடு கரனும் பட்டான் 
மொய்குழல் சீதையும் சிறையில் பட்டாள் அண்ணேன் 
உன் குலமும் நீயும் போய்ப் படுவாய் என்றே 
உரைத்துவி பீஷணன் அவனால் ஒதுக்கப்பட்டான் 
என்பலம் போய் நான்பட்டேன் உன் அம்பாலே 
இராவணனும் இனிப்படுவான் என்று சொல்லி 
அன்பினொடு கும்பகர்னன் ராமன்பாதம் 
அகங்கொள்வான் பின்னொரு வாசகம் விள்வானே 

கண்ணிகள் 

1. சாமி நமஸ்காரம் சாமி நமஸ்காரம் சத்திய ராகவனே இந்தப் 
பூமியில் உத்தம வானே நமஸ்காரம் புண்ணிய ராகவனே 
2 நீயே சாமிஉன் னகக்கும் வில்லுக்கும் இந்நேரம் ராகவனே ஓர் 
ஆயிரம் ராவணர் வந்தெதிர்ந்தாலும் 
பற்றாது ராகவனே 
3. தோளும் துணிந்தேனே தாளும் துணிந்தேனேசாமி ராகவனே - இந்த 
வேளையில் நான்உன்னைக் கேட்கும் வரந்தர வேணும் ராகவனே 
4. வந்தபுறாவிற்கு உடலைக் கொடுத்தவன் வங்கிச ராகவனே 
இந்தவிபீ ஷணனைக்கை விடாமலே ரஷிநீராகவனே 
5. அந்தராவணன் உடன்பிறந்தவனென்று குறியானே ராகவனே - இவனை 
எந்தவேளையில் வந்தென் செய்வானோ எச் சரிக்னக ராகவனே 
6. விளையாட்டல்ல இவன் உன்னருகே நிற்க வேணும் ராகவனே 
தப்பின் 
இளையவன் அனு மானைப் பிரியாமல் 
இருத்து ராகவனே 
7. என்னைக் கொன்றபோதென் அண்ணனையும் கொல்வாய் ராகவனே 
தன்னைக் கண்டபேர்கள் நனகயாதபடி செய்வாய் சரணம் ராகவனே 
8. தங்கைமூக்குப் போல் என் மூக்கும் போச்சுதே சாமிராசுவனே தேவர் 
பங்கம் சொல்லா முன்னே என் தலை மறைப்பதுன் பாரம் ராகவனே , 

இராமபாணம் கும்பகர்ணன் தலையைக் கடலில் விழுத்தல் 
 
அன்பினுடன் இந்தவாக யும்தொகையும் விண்டளவில் 
அம்புயம் எனும்கண் உடையான் 
செம்பதுமம் என்றமுக மண்டலம் மலர்ந்ததொரு 
செழுஞ்சிலையில் அம்பு தொடவே 
அம்பது பறந்தவன் நெடுந்தலை விழும்படி 
அரிந்தெறிய அந்த விசையால் 
கும்பகருணன் சிரசு பொங்கிய தடங்கடல் 
குவிந்திட விழுந்ததவமே 

சீதாதேவியின் பக்கல் வந்து இராவணன் கெஞ்சுதல் 

ன்னவகை கும்பகர்ணன் இறந்தான் அப்பால் 
இராவணனும் மருத்தனை ஓர் சனகன் ஆக்கிப் 
பொன் அனையாள் முன்பு மகோதரனைச் கொண்டு 
போவெனவே ஏவிவிட்டுத் தானும் முன்னே 
மின்னனையார் நடமாடக் கீதம்பாட 
வில்மதனன் கணைசாட மெலிந்துவாடி 
அன்னையெனும் சீதைமுன்னே வந்தான் கிட்ட 
அஞ்சுவான் ஏதேதோ கெஞ்சுவானே . 

கண்ணிகள் 

1. இன்னந்தான் என்னவர்மமோ என்னை இடியச் செய்வது தர்மமோ 
இன்னம் மன்மத வாதையே பட என்னாலாகுமோ சீதையே 
2. குறித்து மூவரையும் வீசினேன் காமக் கோட்டியால் மனம் கூசினேன் 
றக்கவே மனம் பொங்கினேன் உன்னை எண்ணியல்லோ இங்கே 
தங்கினேன் 
3. மெத்தமெத்தத் துவண்டேனே உன்னை விஷமதாத் தேடிக் 
கொண்டேனே 
பத்தென்பார் காம அவஸ்தையே நான் படுவதாயிரம் அவஸ்தையே 
4. தென்றல் வந்தென்னைப் பாயுதே இந்தத் திங்களும் தணலாய்க் காயுதே 
என்றன்மேற் கிருபை ஆகியே மனம் இரங்குவாய் வைதேகியே 


சீதாதேவி இராவணனை இடித்தல் 
விரும்பிய அரக்கன் இந்த விதம் சொல்லிப் பதங்கள் முன்னே 
பரிந்து தலை பத்தும் மண்மேல் படியவே வந்து வீழ்ந்தான் 
திரும்பினாள் முகம்பாராமல் சீதையும் அவனைத் தானோர் 
துரும்பென்றாள் துரும்பைப் பார்த்துத் தூறுவாள் கூறுவாளே 

பல்லவி 
கெட்டுப்போக வேணுமோ கேளடா 
கெட்டுப்போக வேணுமோ கேளடா 
அட ராவணத் துரும்பே நீ 
( கெட் ) 

அநுபல்லவி 
துட்டத்தனமெல்லாம் விட்டுவிட்டா என் 
சுவாமி கோதண்ட வில்லின் அம்பால் 
போமே உன் குலம் 
கெல்லி 
துடுக்குச் சொல்லி 
( கெட் ) 

சரணங்கள் 

1. தூண்டா விளக்கைத் தீண்டவரும் பூச்சி 
மாண்டாற்போல் மாளுவாய் 
நீயே துள்ள 
வேண்டாமடா கெடு 
ஏண்டா 
வாயே 
( கெட் ) 
( கெட் ) 
2. ஆக்ரம சிங்கத்தைப் பார்க்கிற பெண் சிங்கம் 
சாக்கடைக்குள் நரிக் 
குட்டி -- தன்னைப் 
பார்க்குமோ கண்ணாலே எட்டி 
ஏண்டா 
மட்டி 
3. பாருக்குள்ளே ரகு வீரர்க்கல்லால் மற்ற 
பேருக்கு நான் பச்ச 
ஆருக்குப் போக்கிறாய் 
ஆவி 
அய்யோ 
பாவி 
நாவி 
( கெட் ) 

4. பத்துள வாயாலும் கத்துகிறாயே உன் 

சுற்றமும் வாழ்வும் நில் 
பத்தினி வாக்குப் பொல் 
ஏண்டா 
லாது 
லாது 
வாது 
( கெட் ) 

5. வாய்த்த கொழுந்தனால் மூத்த மகன்பட்ட 
வார்த்தைநீ கேட்ட ழும் 
ஓசை - காதில் 
ஏர்த்திட வேணும் என் 
ஏண்டாபி 
சர்சை 
ஆசை 
( கெட் ) 

மாயா சனகனைக் கண்டு சீதை தகப்பன் என்று புலம்பல் 

நெறியால் இந்தப் படியுரைக்க நீசன் அரக்கன் ஏவலினால் 
பொறியார் மருத்தன் தனைச் சனகன் போலே செய்து மகோதரன் தான் 
மறியா இழுத்து வர அவனும் மகளே மகளே என்றிரைந்தான் 
அறியாள் சீதை தகப்பன் என்றே அழுவாள் அழுதுவிழுவாளே 

பல்லவி 
அய்யா சனகா அய்யா எனைப் பெற்று 
அனுப வித்ததிதுவோ 
( அய் ) 
அநுபல்லவி 
கையும் கயிறுமாக் கண்முன்னே என் முன்னே 
கட்டுப்பட்டாய் என்னைத் தொட்டுப் பட்டாய் அல்லோ 
( அய் ) 
சரணங்கள் 
1. பஞ்சாசதகோடி பூமண்டலத்திலே 
பல வேள்வியும் செய்து 
நிறைப்பட்டாய் 
அஞ்சா எவரையும் கட்டுகிற நீயிந்த 
அரக்கராற் கட்டுண்டு 
குறைப்பட்டாய் 
செஞ்சொல் அயோத்தியில் காணாமல் நீ என்னை 
சிறையிலே காணவோ 
புறப்பட்டாய் 
எஞ்சிறை நீங்காமல் தவிக்கிறேன் அப்பா 
இதுவும் போதாதென்றோ நீயும் சிறைப்பட்டாய் 
( அய் ) 
2. சுற்றத்தாரே தாய்மாரே தங்கைமாரே 
சொல்வார் ஆர் இந்தப் 
பெருஞ்சோலி 
அத்தலத்திலே பாய்ந்துங்களுக்கறிவிக்க 
அனுமானும் இல்லையே புண் 
ணியசாலி 
வெற்றி அயோத்தி ராசர் கீர்த்திகளை 
வெட்டி அழிக்க நானே 
சோடாலி 
பெற்ற வீட்டைவந்து புகுந்த வீட்டையும் நல்ல 
பேரழிக்கவென்று பிறந்தேனே 
பெண் நீலி 

3. கர்த்தன் ஆக்கிக் கொண்ட கணவனைக் கொல்லென் 
பெரும்பழி தேடிக்கொண் 
டேன் முன்னம் 
பற்றுப்பற் றாத்துக்கும் தந்தைக்கும் வினை செய்தேன் 
பண்ணினேனோ கள 
வுகள் கன்னம் 
உற்றார் நகை செய்யப் பத்துமாதம் இங்கே 
ஒருத்தி நானிருந்ததே 
பெருங்குன்னம் 
இத்தனை பாடும் என்னாலே வரக்கண்டும் 
இங்கே சீவன் கொண்டிருக்கிதுற 
னே இன்னும் 
( அய் ) 

கும்பகர்னன் மரணத்தைக் கேட்டு இராவணன் புலப் பல் 

உத்தமிசா னகியிந்த வாறழுதாள் சனகனென 
உருவம் கொண்ட 
பித்தனும்ஆ காதவார்த்தை சொன்னான் அன் னையும் ஏச்சும் 
பேச்சும் சொன்னாள் 
மத்தனிரா வணன் கொதித்தான் அப்போது கும்பகர்னன் 
மரணம் கேட்டான் 
சொதனதமரம் போல் விழுந்தான் முடங்கினான் அரக்கனழத் 
தொடங்கினானே . 

பல்லவி 
அப்பா கும்பகர்ணா - உனைப் பிரிந்து 
எப்படி நான் பிழைப்பேன் 
( அப்பா ) 
அநுபல்லவி 
எப்பிறப்பிலே உன் முகம்பார்ப்பேன் 
நான் 
எந்தவிதத்தில் என் உயிர் காப்பேன் 
செப்பும் முன்னமேபோய்ப் பட்டாயே - என்னைத் 
தெருவில் பரதேசியாக்கி விட்டாயே - என் 
( அப்பா ) 

சரணங்கள் 

போவானே 
தான் தானே 
தேன் நானே 
ஆனேனே - என் 
( அப் ) 
1 . இனிமேல் என் சிறைதள்ளி வானவரோ 
டிந்திரனும் நிலையிலே 
தனியே என் குடிக்கொரு மூக்கறுப்பாத் 
தங்கையும் மூக்கறுத்தாள் 
அநியாயத்தினிற் கான் மாரீசன்என் 
றவரையும் போக்கடித் 
சனியா கும் இந்த மோகத்தினா லல்லோ 
சருகுதிர்ந்த மரம் 
2. வாயும் முனையும் நான் படைக்கவே 
வளர்ந்தாயே குலக் 
ஓயும் என் குறைகண்டும் சுருக்கிலே 
உறக்கம் விட்டு மலைபோல் 
மாயன் முதலோர் ஆயுதத்தினால் 
மயிர்முனையும் உடம்பில் 
ஈயும் எறும்பும் போலிருக்கின்ற 
இந்த மனிதன் அம்பால் 
கொழுந்தாயே 
எழுந்தாயே 
அழுந்தாயே 
விழுந்தாயே என் ( அப் ) 


3. மயில்போல் பெண்களால் பிடிக்க மெத்தையில் 
வளர்ந்த உன் நித்திரை கண்டு 
பயந்தேனே 
கையிலே பேய்கள் கால்பிடிக்கக் களத்தில் 
கவிழ்ந்தாய் என்று சொல்ல 
நொந்தேனே 
நயமோ சொல்லும் எமனுக்கும் உனைக்கிட்ட 
நானே இளக்காரம் 
தந்தேனே 
உயிர்போல் உன்னைக்கொ டுத்தும் துணிவேனோ 
உன்பிறகே இதோ 
வந்தேனே - என் 
( அப் ) 


அதிகாயன் வரலாறு விபீஷணன் கூற ஸ்ரீராமர் தம்பியைப் புகழ்தல் 

அரக்கன் ராவணன் இவ்வாறழுதான் பின்னே 
அதிகாயன் படை எழுந்தான் ராமன் கண்டான் 
விரித்து விபீஷணன் சொல்வான் சாமி முன்நாள் 
விழுந்தமது கயிடவராம் இரண்டு பேர்க்குள் 
ஒரூத்தன்மது கும்பகர்ணன் உன்னாற் போனான் 
ஒழிந்த கயிடவன் இவன்போம் வகையாதென்றான் 
திருத்திய ராகவனிதற்குத் தம்பி போதும் 
சேர்என்றான் கண்டை யினிப் பார் என்றானே . 
இருபடைகளும் கலக்க ஆனனப்படையை அனுமார் அடித்தல் 
பார்எனவா னரச்சேனை அரக்கர் சேனை 
பலசண்டை ட இளையோன் விடும் அம்பாலே 
கார் எனவே கண்டகண்ட துண்டமாகிக் 
கால்மாடு தலைமாடாய் அரக்கர் வீழ்ந்தார் 
கோரனதி காயன் விடும் யானைக்கூட்டம் 
குமுறிவெகு வெகுவாக வரக்கண்டோங்கி 
மாருதிஓர் மரம்பிடுங்கி நடுவே பாய்ந்து 
மாட்டினான் பிணமலையாக் காட்டினானே . 


பல்லவி 
நடுங்கி 
மாமரத்தாலே 
அதிகாயன் படைமத வேழங்களை 
அடித்தானே அனுமான் 
( அதி ) 
அநுபல்லவி 
விதியாகப் பல பேர்களும் 
விடவிடவென்றதிரவே வேரொடும் 
சதிராகப் பிடித்தொரு 
சடைகொண்ட இலுப்பையை தடிகொண்டடித்தாற் போலே 
( அதி ) 
சரணங்கள் 
1. கடியாற் சிலயானை உதையாற் 
சிலயானை 
கதையாற் சிலயானை மாய்ந்தவே 
அடியாற் சிலயானை 
விதியாற் 
சிலயானை 
அதிராற் 
சிலயானை சாய்ந்தவே 
இடியாற் 
சிலயானை 
எறியாற் 
சிலயானை 
பிடியாற் 
சிலயானை 
பிசைவாற் சிலயானை 
அடியற்ற மரம்போலப் 
அலறிக்கைகால் ஒடிந்து 
நெடுகக் கலங்கி உயிர் 
தெளிவுற்றலைந்துநிலை 
நெறிப்பட்ட யானை சில 
நெக்கிட்டு விக்கிட்டுச் சூழ 
அறையாற் 
சிலயானை 
ஒய்ந்தவே 
விசையாற் 
சிலயானை 
தேய்ந்தவே 
படும்சில யானைகள் 
விழும்சில யானைகள் 
விடும் சில யானைகள் 
கெடும் சில யானைகள் 
முறிபட்ட யானைசில 
திக்குக்குத்திக்குப்போய் வீழ ( அ ) 


யானையை 
யானையை 
2. எடுத்தான் 
சிலசில 
குறைத்தான் சிலசில 
றைத்தான் சிலசில 
கெடுத்தான் சிலசில 
குழைத்தான் 
சிலசில 
கிழித்தான் சிலசில 
தடுத்தான் சிலசில 
தெறித்தான் சிலசில 
தறித்தான் சிலசில 
யானையை 
கடுத்தான் சிலசில 
அழித்தான் சிலசில 
கழித்தான் சிலசில 
யானையை 
படிப்படி யாகக்கடல் 
ஓரமெங்கும் யானைகள் 
பருத்தமலைகள் அடி 
வாரமெங்கும் யானைகள் 
துடிப்புடனே விசிறும் 
தூரமெங்கும் யானைகள் 
சுழற்றிய வால்படுவில் தாரமெங்கும் யானைகள் 
சுற்றி எங்கும் யானைவிழ ரத்தவெள்ளம் ஆகியெழத் 
தோகை மரமே கைத்தடி யாகவே கொண்டிருந்தப்படி ( அதி ) 
3. கைக்கே பலகெசம் 
வாலாற் பலகெசம் 
காலாற் பலகெசம் 
சாடவும் 
மிக்காம் பசிவிண்டு 
பூதாதி 
களுடன் 
ளங்கள் நட 
மாடவும் 
திக்கே முனிவர்கள் 
கைக்கே 
அலர்கொண்டு 
செயசோ பனமிசை 
பாடவும் 
அக்காலை யினில்மிகப் 
போர்க்களம் எங்கும் 
ஆனையின் வெடிநாற்றம் மூடவும் 
சுக்கிற்றாற் போல் தலைகள் கீழேவிழ 
நாட்டியும் 
தும்பிக்கை யைப்பிடித்துப் பம்பரம் போல் ஆட்டியும் 
வேதா 
திக்குகெ சங்களுக்கு 
வெட்கம்வர 
ஓட்டியும் 
சேரச்சே ரப்பிடித்து 
வாரிவாரி 
மாட்டியும் 
சிதறச் சிதறத் தூக்கிப் பதறப் பதறத் தாக்கிச் 
சேனைத் தளங்கள் சாக ஆணைப்பிணங்கள் 
ஆக 
( அதி ) 

அதிகாயனுக்கும் லட்சுமணனுக்கும் யுத்தம் 

குதித்தே இந்தப் படி அரக்கர் குலமும் கோடி யானைகளும் 
கதிப்பா விழக்கண் டதிகாயன் கனகமணித்தேர் மேற்கொண்டான் 
துதித்தே வருமங் கதகுமரன் தோளில் இளையோன் மேற்கொண்டான் 
எதிர்த்தார் இரண்டு பேரும்வில்லை எடுத்தார் சண்டை தொடுத்தாரே 


பல்லவி 

லட்சுமணனுக்கும் அதிகாயனுக்கும் 
நேர்ந்ததே சண்டை 
( லட் ) 

அநு பல்லவி 

அட்சயத் தம்பி அங்கதன் தோளில் வீறினான் 
ஆயிரம் பரித்தேர் மேலதி காயன் 
ஏறினான் 
கட்சியாக இருபடைகளும் 
மென்மேலே 
கலந்து சண்டைசெயக் கடலும் மலையும் போலே 
( லட் ) 

சரணங்கள் 

1. முந்தி அரக்கன் ஒரு 
கணைதொட்டான் தம்பி 
முறித்தந்தக் கணைதன்னைக் கூறிட்டான் - அவன் 
பந்தியாய்ப் பதினாறு 
கணை எய்தான் - தம்பி 
பதினாறு கணையையும் பொடி செய்தான் 
பின்னும் 
வந்தவன் கவசத்தை நூறம்பாற் 
கீறினான் 
வருமரக் கர்படையைச் சுறுக்கெனத் தூறினான் 
பிந்தித்தேர்க்குதிரைஆ யிரத்தையும் அவன் செங்கை 
பிடித்தவில்லையும் ஒடித்தானே இப்படி 
அங்கே ( லட் ) 


2 அனலாஸ் திரம் அரக்கன் 
ஏற்றினான் தம்பி 
அதுக்கதை யேவிட்டு 
மாற்றினான் தம்பி 
கனகமாம்பிர மாஸ்திரத்தை 
ஏவினான் 
காயன் எமபுரத்தை 
மேவினான் பின் 
நினையும் அங்கதனால் நராந்தகன் இடியவும் 
நீலனாலே ரணமஸ்தன் 
முடியவும் 
னமாம் சுக்கிரீவற்குக் கும்பன்போய்ப் படியவும் 
டபனாலே அந்தவய மத்தன் மடியவும் 
( லட் ) 


3 . போராடி 
வல்லரக்கர் மூவா 
யிரங்கோடி 
லட்சு 
மணன் அம்பால் மடிந்தாரே 
அங்கே 
கொல்லும் திரிசிரன் தேவாந்த 
தகன் கூடி 
அனுமான் 
குத்தப்போய் விழுந்தாரே உயிர்ஓடி - பின்பு 
சில்லறைச் சில்லறை ஆகி 
மெள்ள மெள்ள 
தெறித்தாற் அரக்கர் நடை இடறித் தள்ளத் தள்ள 
எல்லா முனிவர்களும் எழுந்து 
துள்ளத்துள்ள 
இராட்சதர் அடங்கிராமர் 
செயம்கொள்ள 
( லட் ) 


அதிகாயனுக்குப் புலம்பின ராவணன் முன்னே தானிய மாலை புலம்புதல் 
 
முனைபோய் இந்தப் படிதோற்றே மூர்க்கன் அதிகா யன்பட்டான் 
அனலா வந்து தூதர்சொல்ல அதைரா வணனும் அறிந்தழுதான் 
தனை நேர் பெறுந்தா னியமாலை தானும் கேட்டுத்தலை விரித்தே 
பனைபோல் அரக்கன் முன்வீழ்ந்து படுத்தாள் புலம்பத் தொடுத்தாளே . 


கண்ணிகள் 

1-என்னசெய்வேன் இலங்கேசா நான் 
என்ன செய்வேன் வெறி 
மன்மதன் போல் அதி காயன் தன்னை 
மானிடனாலே போக் 
பிடித்தாயே 
கடித்தாயே 
என்றாயே 

2. மாமகள் ஆம்சீதை தன்னைவிட 
மாட்டேன் மாட்டேன் 
காமம் உன்னைக் கொல்லுகையால் அதி 
காயனை நீயல்லோ 
கொன்றாயோ 
வாரணமோ 

3. கரன் முத லாக்கும்ப கர்னன் அ . 
காயன் இவருடன் நி 
இருமனிதர் கையாலே இன்னம் 
எவர்கள் தலைஉருளக் 
காரணமோ 
தொலைத்தாயே 

4. சின்ன மனிதர்கள் என்று வெகு 
சேனைகள் எல்லாம் 
தன்னை அமிழ்தினது மெத்தநீ சமுத்திரம் 
என்றெண்ணி வாழ்னவக் 
கலைத்தாயே 
தடுத்தாயே 

5. மலைபோலே ஒத்ததம்பி சொல்லும் இந்த 
மாலியவான் சொல்லும் 
தனலமேலே இடித்த பின்னுமய்யோ 
சற்றும் குனியாமலே 
கெடுத்தாயே 
கண்டாயே 

6. கொலைகாரி சூர்ப்பநகை சொன்ன 
கோளால் இந்தப்பலன் 
நிலைவரமாத்தலை சொரியக் கொள்ளி 
நீதானே தேடிக் 
கொண்டாயே 
கெடுத்தாயே 

7. பக்கக் கிளை ஒடி மரம்போல் என் 
பாலன் அதிகாயனைக் 
திக்குச் செயம்செய்தது போய் உன்னைத் 
தேவர் நகைக்க உடம் 
பெடுத்தாயே 
கிடந்தாயோ 

8. பருங்கிரிபோலே சாய்ந்துமகனே 
படுகளத்திலே மாண்டு 
அருங்களிறே அதிகாயா என்னை 
அகல வீட்டெப்படி 
நடந்தாயோ  


இத்திரசித்து சண்டைக்கு வந்து அனுயாரை இகழ அவர் அவனை இகழதல் 

வாரேறு பூண்முலைதா னிய மாலை இந்த 
வகையழரா வணன் சொல்லால் இந்திரசித்துக் கேட்டான் 
தேரேறி நாகபாசமும் பிரமாஸ்திரமும் 
சேமத்தேர் ஆயிரமும் சேனையும் கொண்டெழுந்தான் 
போரெறி ஒருவெள்ளம் குரங்குகளைக் கொன்றான் 
போரெதிரே மாருதியைக் கல்லெடுக்க அறிவாய் 
நேரேவில் எடுக்கறியாய் போடாபோ என்று 
நீக்கினான் அனுமான்வந்து தாக்கினானே , 

பல்லவி 
இந்திரசித்தே - சேவகம் 
- ஏதடா சற்றே 
( இந் ) 

அநு பல்லவி 
உன் துணைஅ 
காயனைக் கொன்றவி 
உன்னையும் கொல்லவந் திருக்கின்றான் 
லட்சுமணன் 
லட்கமணன் 
நாணுமோ 
காணுமேர் 
1. என்னோடே... எதிர்க்கல் ! ஆகுமோ 
ளையவன் அம்பென்ன உன்னை 
உன்னிராம னுடனே எதிர்க்க என்றால் 
உனக் கவ்வளவு பலன் 
என்னடா உன்தன் அத்தைமூக் கறுந்தும் 
இன்னம் இடக்குச் சொல்ல 
குன்னமாயச் சந்திரனைப் பார்த்து நாய் 
குலைத்தால் என்ன அதன் மகிமை 
வேணுமோ 
கோணுமோ 
( R ) 

நில்லடா 
அந்த நாள் உங்கள் ஊரைக் கொளுத்தின் 
தறியாயோ சற்றே 
மூந்தி அம்பாலே கும்பகர்னனும் முண்ட 
கண்டனுமானான் 
அல்லடர் 
புல்லடா 
இந்திராதிகளை மிரட்டுவாய் நீ 
எங்கள் சாமிக்கொரு 
மந்திரத்திலே மாங்காய் விழுமோடா 
மழைக்கோகுடை இடிக்கோகுடை 
சொல்டா 
தேதடா 

3. வில்லெடுக்க அறிவேன் - என்றாய் 
வில்லாளி அல்ல நீ 
தானடா 
கல்லெடுக்க அறிவாய் என்றென்னை நீ 
கடக்கப் போகச்சொன்ன 
வில்லெடுக்க உங்கள் அப்பனைக் கொல்லும் ரகு 
வீரனே எச 
மானடா 
எல்லவர்க்கும் கல் எடுக்க விபீஷணன் 
எப்போ தென்று காத்திருக்கி 
றானடா 


வானர வீரர்களை மாட்டின இந்திரசித்துக்கும் இளையவருக்கும் யுத்தம் 

அந்தஅனு மான் சொல்ல அரக்கன்சீறி 
ஆயிரம் அம்பால் அவனைக் களைக்க வைத்தான் 
பந்தமுள்ள சுக்ரீவன் நீலன் சாம்பன் 
பனசன் முதல் தலைவர்களும் படையும் சாய்ந்தார் 
சிந்தை தெளிந்தெழுந்த அனுமான் மேற்கொண்டும் 
சிங்கம் ஆயிரம் பூண்டதேர் மேற்கொண்டும் 
வந்தலட் சுமணனும் இந்திர சித்தும்வில்லை 
வாங்கினார் சண்டையிலே ஓங்கினாரே 

பல்லவி 
லட்சுமணனுக்கும் இந்திரசித்துக்கும் தேர்ந்ததே சண்டை 
( லட் ) 

அநுபல்லவி 
கட்சியாகத்தம்பி அனுமான் மேற்கொண்டு 
கார்முகம் கொண்டு சரமாரி நிறைக்கவும் 
பட்சணசிங்கம் ஆயிரம் கொண்டதேரிலே 
பாவி அரக்கனவன் தாவி அம் பிறைக்கவும் 
( லட் ) 

சரணங்கள் 

1. அரக்கன் ஆயிரங்கோடி அம்புமுன் எய்தான் 
அத்தை லட்சுமணன் 
துரத்தி ஆயிரங்கோடி அம்பாற்பொடி 
செய்தான் 
தம்பி பின்னோடே 
நெருக்கி அர்த்த சத்திரம் ஒருகோடி 
பெய்தான் 
அது கண்டவனும் 
திருப்பி அர்த்தசத்திரம் ஒருகோடி விட்டுக் கொய்தான் 
கங்க மந்திரம் 
கோடி அரக்கன் விடக் கோடி ளையனும் விடுத்தான் 
வச்சிர முகாஸ்திரம் 
கோடி நிருதன் எய்யக் கோடி தம்பியுமெதிர் தொடுத்தான் 
கெசகர்னாஸ்திரம் 
கோடி இவன் பொழியக் கோடி அவன் பொழிந்து கெடுத்தான் 
திவ்ய நாகாஸ்திரம் 
நிருதன் கோடி எய்ய நிமலனும் கோடியால் மறித்தான் 
திரிமுகாஸ்திரம் 
வரதன் கோடிஎய்ய வஞ்சனும் கோடியால் மூறித்தான் 
பஞ்ச முகாஸ்திரம் 
திருடன் கோடிஎய்யத் திலகனும் கோடியால் துறுத்தான் 
பத்மமுகாஸ்திரம் 
குரூரன் கோடி எய்ய குரிசிலும் கோடியால் தெறித்தான் 
இந்தவகையால் 
கடலும் காடு மலைகளும் 
பற்றி வேகக் 
காணும் தேவர் முனிவரர் சிந்தை நோக் 
டமில்லாமல் இந்த உல 
கந்த லோகம் 
எங்கும் இவர்கள் விடும் 
சரமழை ஆக 
( லட் ) 

2. சீறி அரக்கன்பின் வானரப்ப டைகளை 
இளையோன் மார்பில் 
ஏறு கவசத்தில் ஈரேழு நூறம்பால் 
அனுமான் உடல் 
கீறி நுழைய ஓர் ஆயிரம் வடிக்கணை 
தேக்கிப் 
பெருங்குருதி 
ஆறுசெய் தத்தைத் தம்பியும் விழிகொண்டு நோக்கி 
தேவர் மகிழ 
ஒருபதினாயிரங் கணை ஒருநொடியினிற் 
பூட்டி 
அரக்கன் தேரும் 
விருதுக்கொடியும் சிங்கத்திரளும் புரண்டுவிழ மாட்டி 
அவன் பொன்மார்பை 
உருவி நுழையும் வகை மூவிருநூறம்பை 
ஓட்டி 
சுற்றிலும் நின்று 
பொருதும் வீரர்களை ஒருகணையால் விழக் காட்டி 
நிற்கக் கண்டவன் 
சகஸ்திர கோடிகணை ஒருமிக்கமழை எனத் துளித்தான் 
அதெல்லாம் நீக்கி 
சகஸ்திர வாளிதம்பி விட அவன் மெலிந்துதத் தளித்தான் 
தம்பி நெற்றிமேல் 
பகுத்து நூறம்புகள் பாதகன் சடுதியில் 
தெளித்தான் 
அவன் மேல் தம்பி 
தொகுத்து நூறம்பெய்ய மார்பிளந் துதிரம்கொப் புளித்தான் 
சிலையை ஊன்றி 
ஊரும் தேரின் மேல் அவன் இளைப் 
உதைத்த னுமானந்தத் தேரையும் பீற 
தேரொன் றூர்ந்தவன் ஐம்பதுகணை 
தூற 
தேரும் அழிந்து மறுதேரவன் 
ஏற 
( லட் ) 

பாற 
தேரை 
தோனிரி 
3. ஏறஏற இப்படி அவன் ஆயிரம் 
ளையோன் சீறி 
ஆறுகோடி அம்பால் அழித்தான் எதிர்த் 
அனுமான் கையால் 
தாறுமாறுமாக் கிழித்தெறிந்தான் சில 
உடல் வெவ்வேறாக் 
கூறுகூறு செய்தான் குவித்தான் பிணப் 
ஆயிரந்தேரை 
பேரை 
போரை 
சாய்த்தான் 
தேய்த்தான் 
மார்த்தான் 
மாய்த்தான் 
வாய்த்தான் 
தழித்தான் 
ஒருகையி னாலப்பி உயர் கடலினில் விழச் 
லட்சம் யானையை 
இருகையி னால்பற்றி ஈயும் எறும்பும் எனத் 
கோடி சேனையை 
வரிதருவால் கொண்டுவாரி அடித்தடித்து 
அந்த வேளையில் 
கருநமன் போலங்கதன் அந்த நிருதன்முன் 
பேய்கள் ஆயிரம் 
பூண்டதேரை நெடுமலை ஒன்றினால் எறிந் 
அடாஉன் சேனை 
மாண்டு கிடந்ததனை பார்க்கலை யோஎன்று 
அவனும் போரில் 
மூண்டு தேரில் நின்று முறைமுறை வெகுகணை 
அவனைத்தம்பி 
மீண்டும் தேரழித்து மார்பினிற் கவசமும் 
மனங்கலங்கி 
நைந்துவாடி யவன் ஏறவும் 
ரதம் இல்லாமல் வெறும் குருதி வெள் 
சிந்தி ஓடக்கையில் பிடித்திடும் 
சிலையும் அவனுமே தனிக்கஇவ் 
பழித்தான் 
கொழித்தான் 
கழித்தான் 
வேறு 
ளாறு 
வீறு 
வாறு 
( லட் ) 
இறக்க 
பறக்க 
பிறக்க 
நிறக்க 
அரக்கனுடன்வரு நாற்பது வெள்ளமும் 
அத்தோடே கூடிக் 
குரக்கு வெள்ளங்கள் நாற்பதும் அப்படிப் 
வானரங்களுள் 
பெருத்த பேர்சில பேர்களும் உயிர்வந்து 
சமுத்திரம் போலே 
இரத்த வெள்ளங்களே செவேல் என்று 
வெள்ளத்தின் மேலே 
வாலும் ராட்சதர் காலும் குவியும் ஓ 
கொடுமுடிகள் 
போலும் படுகளம் கோலும் ராட்சதர் 
மண்டைபிளந்து 
சாலும் தயிருமாய் மூளைபெருகிய 
கோடானுகோடி 
ரண்டை 
மண்டை 
உண்டை 
சண்டை 
முரிய 
அரிய 
மேலும் தொகையிலை நாலுதிசையிலும் 
விடும் அம்பாலே 
கவிகை சிவிகையோடு கொடிகள் தடிகள் பல 
கண்டங் கண்டமாத் 
துவசகவசம் அறகரிகள் பரிகள் குடல் 
தொந்தயுத்தத்தால் 
அவரை இவர் அறைய இவர் அவர் தலைகளை 
ஆனந்தங்கொண்டு 
தவசிகள் இருடிகள் முனிவர்கள் மலர்மழை 
தம்பிதொடுக்கும் 
தெய்வ பாணம்பட ராட்தசன் 
தேரும் நூறு பொடி யாகவெவ் 
எவ்வடங்களிலும் ரத்தவெள் 
எடுக்க எடுக்க இளையாமல் இவ் 
சொரிய 
வேறு 
ளாறு 
வாறு 
- ( லட் ) 


தொட்டும் 
மட்டும் 
பட்டும் 
கட்டும் 
தொடுத்தான் 

5. பத்தியாக இருவரும் கணைமுறை முறை 
சூரியபகவான் 
அஸ்தமானத்தை அடைந்திருள் வளைகிற 
போராடஇந்திர 
சித்தன் ஆயிரம் தேர்களும் முறிமுறி 
மாயையினாலே 
சத்தியாக லட்சுமணன் முதலோர்களைக் 
உபாயந்தேடி 
நாகபாசத்தை வேகமதாகவே 
தொடுக்கையாலே 
ஆகமானது கட்டுண்டு தம்பியும் 
அனுமான் அப்பால் 
வேகமாகவே இருக்குண்ட சுருக்கெல்லாம் 
சுக்கிரீவன் முதல் 
ஆகவீரர்கள் அனைவரையும் அரக்கன் 
தாறுமாறாகக் 
கதறிவிழுவார் சிலர் கருவி விழுவார்சில 
வாலையடித்து 
உதறிவிழுவார்சிலர் உறுமிவிழுவார் சில 
சாமிகண்டாக்கால் 
இதிலே விதனம்வரும் எனமறுகுவார் சில 
படுத்தான் 
விடுத்தான் 
தடுத்தான் 
பேர்கள் 
பேர்கள் 
பேர்கள் 
பேர்கள் 
அனுமான் உண்டு 
சிதறுமோ நமதுயிர் எனமகிழுவார்சில 
சேனை சேனையா 
கவலையாகி இப்படி வெகு 
கவிகள் பயந்து மனம் தவிடென்னத் 
எவரும் இறந்தனர் என்றரக்கனும் 
எழும்பவிபீஷணனும் பயம் 
வெள்ளக் 
தள்ள 
மெள்ள 
கொள்ள 
( லட் ) 

நாகபாசத்தால் லட்சுமணர் கட்டுண்டதற்காக விபீஷணர் புலம்பல் 
மையிருளில் இந்தவகை மறைந்திந்திர சித்துவிட வந்த நாகக் 
கைவளர்பா சந்தன்னால் லட்சுமணன் முதலானோர் களத்திற் சாய்ந்தார் 
அவ்வழியே வீடணனும் ஓடிவந்தான் லட்சுமணன் அவதி கண்டான் 
எவ்வகையும் செயமாட்டான் எண்ணாதெல்லாமெண்ணி இரங்குவானே 


பல்லவி
இந்தவினைக் கென்ன செய்வேன் லட்சுமணா 
இந்தவினைக் கென்ன செய்வேன் ( இந் ) 

அநு பல்லவி 

( இந் ) 
வந்தானே எசமானன் மகன்பா சத்துக்குநேரே 
தந்தானே விபீஷணன் சதிகாரன் என்பாரே 

சாணங்கள் 
1. போரில் ஓடி இளைத்தானே ராட்சதன்ராவில் 
சோரன் போல வளைத்தானே 
யாரென்ன சொல்வாரோ எவர்க்கென்மேலே முண்டோ 
ஊரைவாய் மூடவும் உலைமூடிதான் 
உண்டோ 
2. பதர்போல் ஆனான் என்பாரோ வஞ்சனைக்கெல்லாம் 
முதற்பாதம் நான் என்பாரோ 
பதைப்பா அழைத்துவந்தான் பழிஏற்றான் என்பாரோ 
கொதிப்பாத் தீட்டினமரத்தில் கூர்பார்த்தான் என்பாரோ


3. சங்கை போய் 
அடுத்தேனே - காத்தசாமியை 
வங்கை போற் கெடுத்தேனே 
அங்கவர்க் கானேனோ அபயம் என்றுற வாகி 
இங்கிவர்க் கானேனோ என்போல் உண்டோ துரோகி 
( இந் )

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -4–

March 14, 2024
ஸ்ரீராமஜெயம் 


நான்காவது -கிஷ்கிந்தாகாண்டம் 


அனுமார் மறைந்து நின்று யோசித்தல் 

சவாரி சொன்ன வழிபிடித்து ராமனும் தம்பியும் நடக்கத் 
தான்கண் டேகிக் 
கவலைகொண்டு சுக்ரீவன் விட அனுமான் மறைந்துநின்று 
கருதிப்பார்த்தான் 

தவவடிவர் வரிசிலையர் புரிசடையர் இளங்குமரர் 
தருமசீலர் 
இவர் எவரோ என்று சொல்லிக் கண்ணுவான் யோசனையால் 
எண்ணுவானே 

கண்ணிகள் 

1. இன்னார் இனியார் என்று என்னசெய்தேன் இவர்கள் 
தெரியேனே - புண்ணியம் 
வரத்தானே 
வந்து 
2. இங்கே என் கண்ணின் முன்னே 
கங்கை உதித்தாற்போலே 
உதித்தாரே 
குதித்தாரே 
3 காளைப் பருவத்திந்த 
வேளைக்குத் தக்கவேஷம் 
காட்சிதந்தாரே 
கொண்டுவந்தாரே 
இவர் 

4. தேவர்க்கும் தேவர் இவர் 
மூவர் இவர் இரண்டு 
என்று சொல்லவோ அவர் 
பேர்கள் அல்லவோ 
சிலாக்கிய வான்கள் 
இவர் 
5. அசங்காத பலர்உள்ள 
பசும்புல் தேயநடவா 
பாக்கியவான்கள் 

6. எல்லா வல்லமையும் 
கல்லாக் கலைகளெல்லாம் 
தங்கள் 
செய்யஉரியோர் இவர் 
சற்றபெரியோர் 
ஒன்றை விடுத்தார் 
இங்கே அடுத்தார் 
பூணுகிறாரே 
காணுகிறாரே 
இவர் 
கொண்டயடையோர் 
எண்ணம்உடையோர் 

7. பிராண சஞ்சீவி போலே 
திராணியால் அதைத் தேடி 
8. அடைவான மூப்பிளமை 
உடலும் நிழலும் போலக் 
9 . வளைத்த வில்லும் அம்பும்கைக் 
ளைத்த பேர்களைக் கைதூக்கும் 
10. கல்லும் முள்ளும் மல்லிகை 
செல்லக் குளிருதையோ 
11. குவடும் காடும் செடிக 
இவரைக் கண்டுபேயும் கண் 
12. பறவைகளும் கரைந்து 
சிறகை விரித்து மேலே 
மலர்போலே 
இவர் 
விழிமேலே 
ளும்புரியுதே - அய்யோ 
சொரியுதே 
முகம் வாடுதே - இவர்க்கு 
பந்தல்போடுதே 

அனுமார் ஸ்ரீராமருக்கு வரலாறு கூறுதல் 

மாசகல இந்தவண்ணம் எண்ணிச்சின்ன 
வன்னிவடி வுடன் நின்றான் நீஆர்பிள்ளாய் 
பேசெனவே வாயுமகன் அனுமான் என்பேர் 
பெருமலையில் வாலியினால் சுக்கிரீவன் 
ஆசகல ஒளிந்திருப்பான் தேவரீரை 
அறிந்துவர என்னைவிட்டான் வந்தேன் என்னத் 
தாசரதி சுக்ரீவன் எங்கே என்று 
தான் சொல்ல வணங்கி அனுமான் சொல்வானே 

பல்லவி 
அவன் 
சுக்ரீவன் பேர் நீ சொன்ன போதே 
சகுர்தம் அல்லவோ சுகுர்தம் ( சுக்) 

அநுபல்லவி 

தற்காலத்திலே பாலால் முலைவிம்மத் 
தாயானவள் பிள்ளை பேர் சொல்லி அழைத்தாற்போல் ( சுக் ) 

சரணங்கள் 
1 . பட்ட மரந்துளிர்க்கும் உங்கள் வச னத்தாலே 
பரிந்தீரோ அவனுக்குப் பயம்உண்டோ 
னிமேலே 
வெட்டுணி வாலி என்னும் கோடைகொண் 
டொருக்காலே 
வெதும்பிய பயிர்க்கொரு மேகம் இறைத் தாற்போலே ( சுக் ) 
2. படைத்த புவியும் சொந்தமனைவி தன்னையும் 
பதைக்கிறான் செடியில்லா கொடிபோலவே துவண்டு 
அடைக்கலம் தந்தால்உமக் கனந்தம் பலன்கள் உண்டு 
ஆர்க்குக் கிடைக்கும் உங்கள் அருமைக் கனிவாய் கொண்டு ( சுக் ) 
3. பலமிக்க வாலியெனும் தறிதும்புக் 
காளையிலே 
பருத்தி பட்டபாடெல்லாம் பட்டோமோ நீளையிலே 
மலையிற்று மயிரிலே தொங்குகிற 
வேளையிலே 
வந்திரே என்ன தவம் செய்தோம் முன் 
நாளையிலே ( சுக் ) 
4. கோரவாலி விடுக்க வந்தீர் இன் 
கொண்ட எங்களை ஆண்டுகொள்வ 
ஆரென்று கேட்கிலுமை என்ன சொல் 
அடியேனும் அவனாலே அனுப்பவந் 
றென்னசங்கை 
துமதுபங்கு 
வேனங்கே 
தேனே இங்கே ( சுக் ) 

அனுமார் தேற்றச் சுக்கிரீவன் சரணடைதல் 

அனுமான் இப்படிச்சொல்ல அயோத்தி தன்னில் 
அய்யன் உதித்தது முதலாச் சீதைபோன 
மனவேதை கடைசியா நடந்தவாறே 
வருந்தி யிளையோன் சொல்ல அறிந்து கொண்டான் 
கனமான விசுவரூபங் காண்பித்தான் 
கவிக்குலவேந் தனனயும் காண்பிப்பேன் என்று 
தனதாம் தன் அரசனுடனேபோய் எல்லாம் 
சாற்றினான் அவன் கவலை மாற்றினானே 

கண்ணிகள் 
ராமலட்சு 
அவர் தம்மை 
மறுசுகந்தேடுமோ 
பிரியவும் கூடுமோ 
1. குணசம்பிரம தீரர் 
மணர் என்றிருவீரர் 
மணமா அடுத்தவர்க்கு 
க்ஷணமாகிலும் விட்டுப் 
2 . கண்டேன் கண்டேனே 
கொண்டேன் கொண்டேனே 
புண்டரீகக் கண்ணனே 
மண்டலீ தனவனே 
ஆனந்தம் 
நல்ல 
அந்தமூர்த்தி 
தம்பிவாய்த்தவன் 
3. சத்துரு என்பது துடைத்தோர் 
மித்திரன் கையம்பு 
வெற்றி மருவு கீர்த்தி 
சித்தி பெறும் அயோத்தி 
விசுவா 
படைத்தோர் வெகு 
மேவியகுணசீலர் 
தெசரதராசன்பாலர் 
அம்புபோட 
விழுந்தாளே 
அகலிகை எழுந்தாள் 
சாபமும் ஒழிந்தாளே 
4. குடிலத்தாடகை மேலே 
ஒடிப்பட்ட மரம்போலே 
அடிபட்டவுடன் அந்த 
சடிதிக்குள் கௌதமர் 
5. ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் 
அடக்கப்போமோ என்னாலும் 
மிடுக்குடன் உருத்திர 
எடுத்தாற்போல் எடுத்தானே 
ராமன் கீர்த்தியை 
மிதிலையில் 
தடக்கைவில்லறிந்தானே 
ஒடித்துவிட்டெறிந்தானே 

6 மாமணம் நிறை வேற்றி 
ராமன் கெருவம்மாற்றி 
கோமுடி தன்னைராமன் 
நாமெல்லாம் ஈடேற 
7. முன்னே விராதன்மடிந்தான் 
பின்னே கரனும் முடிந்தான் 
வன்மாரீசனுக்கும் 
பொன்மான் செத்த இடம் 
பரசு 
அயோத்தி 
கொடுத்தானே தம்பிக்கங் 
நடந்து வந்தானே இங்கே 
ராமன் அம்பாலே 
இதுவல்லாமல் 
வாளிதொடுக்கலாச்சே 
புல்லுமுளைத்துப் போச்சே 
கவந்தனை 
இவரே 
அமுதம் எழுந்தாற்போலே 
கிடைக்குமோ இதுபோலே 
8. எடுப்புள்ள பெரியோரே 
அடித்தாரே எதிர் நேரே 
அடுக்களை கிணற்றிலே 
கிடைத்தாரே ஒருவர்க்குக் 
9. அலைவாய்த் துரும்பெனவே 
மலைபோல் விசாரம்தின்னவே 
பலநாளிலும் பட்ட 
நலமாக வாலிக்கொரு 
நித்தம் நித்தம் 
மெத்த மெத்த 
பாடெல்லாம் விண்டோமே 
நமனையும் கண்டோமே 
10. ராசன் மகனே ஏன்டா 
யோசனை பண்ண வேண்டா 
ஈசுரன் உன்பங்கில் 
பூசைசெய்தாய் என்றிப் 
வரந்தரும் 
இருந்தானே இருந்தானே 
போதல்லோ தெரிந்தேனே 
11. சுகம் கண்டு மேவலாமே 
முகங்கண்டாற் பாவம்போமே 
புகுந்தவர் சேவைகாணப் 
இகபரம் இரண்டிலும் 
அவர்மலர் 
சுக்கிரீவா 
புத்திமுத்தியும் தரும் 
எதுநினைந்தாலும் வரும் 


12-க்கதை அன்று வீறி 
சிக்கீரீவன் மனந்தேறிப் 
அக்கணம் ஒருமனதாகவே 
மைக்கடல் வண்ணன் ராமனை 
அனுமான் சொல்ல 
புறப்பட்ட 
துணிந்தானே 
வந்துபணிந்தானே 

13. பணிந்தவன் தன்னைப்பார்த்து 
ரகுநாயகன் 
அணிந்த கண்கிருபை பூத்துச் சுக்கிரீவா 
பிணங்கும் வாலிக்கு வில்லும் 
பிடித்தேன் என்றெடுத்தேனே 
இணங்கும் உன்னைரட்சிப்பேன் என்றுனக கொடுத்தேனே 

ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரணை சொல்லல் 

சரணமென இப்படியே சுக்ரீவன் சொல்லச் 
சாமி அபயங்கொடுத்தான் அனுமான் தானும் 
முரணுள வாலிக்கும்ஓர் அரக்கனுக்கும் 
முன்புசண்டை வரலாலே தம்பி தன்னை 
உரனழித்து மண்ணையும் பெண்ணையும் கைக்கொண்டே 
ஓட்டிவிட்டான் இவனிங்கே ஒதுங்கினான்உன் 
பரமெனவே தாரம் எடுத்ததையே எண்ணிப் 
பாவிப்பான் ரகுராமன் கோவீப்பானே 

கண்ணிகள் 

1. சுக்கிரீவா உன் மனக்கிலேசங்கள் 
எனக்கே ஆம் அது 
தீரடா 
க்காலத்தில் முடுக்காம் வாலியை 
வதைக்க நீயது 
பாரடா 
2. பெருவாலிக்குள் தலைசாயக்கணை 
பிசகாதப்படி 
தொடுக்கிறேன் 
அரைநாழிக்குள்ளே முடிசூடிப்புவி 
அரசாளக்குடை 
கொடுக்கிறேன் 

3. துடுக்கா மனைவியை எடுத்தான் எனஉரை 
கொடுத்தாய் அவனை இந் நேரமே 
கெடுத்தேன் அவன் முடி பொடிக்காவிடில் வில்லை 
எடுத்தாள்வதில் என்ன 
சாரமே 

4 -உடைந்தே சரண் என அடைந்தோர்களை முற்றும் 
தொடர்ந்தா தரித்திட வேணுமே 
கடும்போரினிலே கைவிடும் போதினில் இந்த 
உடம்பால் என்பயன் 
காணுமே 


சீதை ஆபரணங்களைக் கண்டு ஸ்ரீராமர் இரங்கல் 

அண்ணல் ராகவன் சுக்கிரீவனுக் கிவ்வாறே 
அனுக்கிரகித்து வாலி சோதனைக்கு வேண்டி 
வண்ணமரா மரம் ஏழும் அம்பால் எய்து 
வழியிலே துந்துபிதன் எலும்பைக் கண்டு 
திண்ணன்எனும் தம்பியினால் கிளப்பி விட்டுத் 
தேரினிலே போம் சீதை முடிந்து போட்ட 
துண்ணெனும் ஆபரணங்கள் காட்டக்கண்டு 
துடிக்கின்றான் சாமிகுறை படிக்கின்றானே 

கண்ணிகள் 
1. நின்று தெரிந்து குலமடந்தையர் 
தக்களைக் 
கொண்டீரோ - இல்லையோ 
கணவன் இருந்தும் உடைமை எறிந்த 
பெண்களைக் 
கண்டரோ 

2 அரசிலே மணிமுடி சுமந்துஉல கங்கொள் 
சிரசிலே முடி சுமந்தொரு பெண்பழி 
நாடினேனே -- ஐயையோ 
சூடினேனே மரபில் 

3. தசரதன் தபசுகள் புரிந்துவ 
ரும்பாலன் 
ஆனேனே 
ஐயையோ 
மிசைபடும் சுவையுள கரும்பில் 
வெறும்பூ 
ஆனேனே 
4. வாரிதி தந்தவர் கங்கை அழைத்தவர் 
வந்தேனே ஐயையோ 
பாரியை ஆனாலும் ரட்சணை செய்யப் 
படாமல் 
மெலிந்தேனே 
5. மங்னக எனைப் பார்க்க நான் முகச் சோடைக்கு 
மாற்றிட்டுத் 
தீர்ப்பேனோ - ஐயையோ 
அங்கிங்கும் பார்த்தேன் வனம் பார்த்தேன் இனி 
ஆர் முகம் 
பார்ப்பேனோ 
6. வீண்பணிதி ஏதுக்கார் என்னைமீட்பவர் 
மேல்என் 
றறிந்தாளோ 
ஐயையோ 
ஆண்பிள்னை அல்லநான் பெண்பிள்ளை என்றெண்ணி 
அணியை 
எறிந்தாளோ 

7. அவளுக்கு நானும் எனக்கவளும் பூட்டும் 
பூண்பேனோ - ஐயோ அவள் 
பவளக் கனிவாயும் முத்து நகையும் நான் 
பரிந்தென்று 
காண்பேனோ 
ஆரங்கள் 

8. ப்ணிதி இங்கிது சனகி அங்கம் நி 
றைந்திடச் 
சேர்வேனேர் 
குணசௌந்தரிய மலர்முகங் கண்டு 
கண்களி 
கூர்வேனேர் 
ஐயோ அவள் 

9. குலந்தரும் கொடியுடன் தவஞ்செய்து 
போந்தேன் 
என்பேனோ 
லங்கையில் விட்டு வெறுங்கையாய் வந்து 
சேர்ந்தேன் 
என்பேனோ ஐயையோ 
10 . இல்லாளை விட்டு வல்லாண்மை பேசி 
இன்னம் 
இருந்தேனே - ஐயையோ 
புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் 
போலே 
இருந்தேனே 


ஸ்ரீராமனுக்குச் சுக்கிரீவன் துணிவு கூறல் 

இந்தவித மாக ராமச் 
சந்திரன் மனம் நோகும் வேளை 
தொந்தம் உளசுக்கிரீவ 
னுந்துணிவு செப்பு வானே 

பல்லவி 
எதுக்கு இந்தவி சாரம் 
எதுக்கித்தனை தூரம் ( ஏது ) 


அநுபல்லவி 

போதும் பிரமாண்டம் அப் 
சீதையைக் கொண்டுவந்து 
புறம் போய் வருகிறேன் 
செணத்தில் தருகிறேன் ( ஏது ) 

சரணங்கள் 

1. தருமராமரம் எய்தாய் துந்துமி எலும்பை 
தம்பியாலே 
எறிந்தாய் சாமி 
கருதினது தருவேன் என் பலன் உன்பலன் 
களும் நீயே 
அறிந்தாய் ராவணன் 
ஒருபது தலைகளும் உன் கணைபோலத் 
தருகிறேன் தருகிறேன் தேவியைக்கைமேலே 
2. மின்பணி காட்டி உனக்கு நான் இந்த 
வேதனை 
காட்டினேன் - சாமி 
நின் பெருங் கவலையை நீக்க வேணும்சும்மா 
நேரம்பா 
ராட்டினேன் - சாமி 
என்குறை முடிக்கிற தென்ன இதற்குமுன்னே 
உன்குறை முடிக்கிறேன் ஒருநிமிஷத்திற் சொன்னேன் ( ஏது ) 

3. சுத்தர் ஆகிய மூவர்க்கும் தேவர்க்கும் 
சூழுமோ படைக் 
என்படை 
மெத்த உண்டுவரும் வெற்றியும் தரும் இனி 
மேலென்னமுக 
வாட்டம் 
உற்றசீதையை உதவுகிறேன் இது நிதானம் 
கற்றுக்கற்றுச் சொல்லி என் காரியமல்லவோ பிரதானம் ( ஏது ) 


ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல் 

ராமனை இந்தப்படி சுக்கிரீவன் தேற்ற 
நல்லனுமான் வாலியைக் கொன்றிப்போதிந்தக் 
கோமகன் சுக்கிரீவன்மு + சூட்டிஎல்லாம் 
கூடும் என்றான் சுவாமியுமங் கிசைந்தான் அப்பால் 
பூமகன்வா லியும் தம்பி தானும் சண்டை 
போடயிலே அய்யன் அம்பு போடச்சாய்ந்து 
பேய்முகனாய் வாயில் வந்த தெல்லாம் வாலி 
பேசுவான் ராகவனை ஏசுவானே 

பல்லவி 
ஏனிந்த மதிகுறித்தாய் 
எடுத்தென்மேல் 
மறைந்துவாளி 
ஏன் தெறித்தாய் ( ஏனி ) 

அநுபல்லவி 

மானபூஷணனான 
தசரதன் உன்னைப்பெற்று 
வரங்கள் தந்தது 
நல்லாய் 
குரங் கைக்கொல்லவோ சொல்லாய் ( ஏனி ) 


சரணங்கள் 

1. நரர்க்கும் வானவர்க்கும் 
உண்டோதொந்தம் - முன்பின் 
ஞாதி வழக்குண்டோ சொல் அநு பந்தம் 
அரக்கன் அழிவு செய்தால் பல 
வந்தம் 
ஆயுதம் இல்லாரை அடிப்பதோஉன் சந்தம் 
அதுவுமல்லாமல் ஆண்மை 
சொல்லாமல் 
எதிரில் நில்லாமல் என்னை 
வெல்லாமல் 
( ஏனி ) 
2. வலிய மரங்கள் ஏழும் 
தொளைத்தாயே - அந்த 
வலிமையிருந்தும் எனக் 
கிளைத்தாயே 
கலிராசன் போல் வந்து 
முளைத்தாயே 
காட்டில் மறைந்து வில்லைகாணாமல் வளைத்தாயே 
காரியம் இதுசுத்தக் கபடம் 
உனைப்பெற்ற 
சூரியகுலம் மெத்தத் 
துலங்கும் அடபித்த ( ஏனி ) 
3. தன்மம் வளர்க்கவந்த 
ரகுராமா - பரதன் 
தனக்கு மூத்தபிள்ளை 
நீயாமா 
உன்மனது தான் என்ன 
மிகநோமா - வாலி 
உயிரைக்கொண்டால் சீதை 
ஒழிந்த துயரம்போமா 
உனக்கு ஞாயமோ 
என்உபாயமோ 
எனக்கபாயமோ 
என்னமாயமோ ( ஏனி ) 

வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல் 

இன்னை வாலி சொல்ல இராகவன் அவனை நோக்கி 
மின்னையும் கொண்டாய்தம்பி மேதினி தனையும் கொண்டாய் 
பின்னையும் கொல்லவர்மம் பிடித்திட்டாய் அதனைக் கொண்டே 
உன்னைநான் கொல்லொணாதோ உரை என்றான் உரை என்றானே 

பல்லவி 

வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக்கொள்ளாதே 
வாயை மூடடா ஏண்டா துள்ளாதே 
அடா வாலி உன் 
( வடி ) 


அநுபல்லவவி  

கடத்தடா ஈதெல்லாம் 
பணம் அடா கடை 
ஆயிரங்கால் அரைக்கால் 
கட்டடா ( வடி ) 

சரணங்கள் 

1. பிலந்தனிலே நீ புகுந்த போதில்உன் 
பின்பல னாமிவன் 
தொடர்ந்ததும் 
பேய் அறைகின் றாற்போலே நீ அரைய இவன் 
பின்வாங்கிக் கொண் 
டிடைந்ததும் 
தலந்தனிலே அபவாதமாகத்தம்பி 
தாரத்துக்கும் உனக்கும் 
நடந்ததும் 
சாபத்தாலே நீ ஏறாமலைமேலே 
தப்பித் தவறியிவன் அடைந்ததும் 
சொல்லாமல் 
( வடி ) 
2. வார்த்தைக்கு மாத்திரம் குரங்குரூபம் நீதி 
வகையும் தொகையும் சொல்லி 
நிறைக்கிறாய் 
மனதாரச்செய்த வினைபோமோ வீண் 
வார்த்தைகள் ஏன் சொல்லி 
இறைக்கிறாய் 
மூத்தவன் தம்பி தாரம் என்றறிந்தும் 
முறைபிசகி நிறை 
குறைக்கிறாய் 
மூடன் போலே வாயாடுகிறாயடா 
முழுப்பூ சனிக்காயும் சோற்றிலே மறைக்கிறாய் ( வடி ) 

3. அம்பும் கையுமாய் எதிர் நின்றால் உன் தன் 
அபயம் என்று வருவாய் என் 
ஆராகிலும் நொந்த பேராகிலும் அடுத் 
தாரைக் கெடுக்கல் ஆமோஎன் 
குடிக்கு 
தம்பித் துரோகி உன்னைச் சித்திரவதை செய்யத் 
தகுமே நான் பிடித்த 
பிடிக்கு 
தர்மத்துக் குள்ளும் பாவத்துக்குப் புறம்புமாய் 
சரத்தாலே கொல்லத் தொடுத்தேன் இந்தப் படிக்கு 
( வடி ) 


ஸ்ரீராமரை வாலி வரங்கேட்டுக் கொள்ளல் 

மழைநிறத்து ராமனிந்த வாறு சொல்ல வாலியும்சம் 
மதித்தான் இப்பால் 
பழையதொரு நினைவு கொண்டான் அறிந்துமறி யாமலும் நான் 
பதறிச் சொன்னேன் 
தழையும்மகன் சுக்கிரீவன் அனுமன் உனதடைக்கலம் என் 
சாமி என் தன் 
பிழை பொறுப்பாய் எனச்சொல்லிக் கூசுவான் மனுவொன்று 
பேசுவானே 

பல்லவி 

சாமி ரகுராமா 
இவர்கள்உள் 
தஞ்சம் ரகுராமா ( சாமி ) 

அநுபல்லவி 

ஆம் இவாரல் என்னகாணும் ஆகிலும் ராசாங்கம் வேணும் 
நீமாத்திரம் வெல்ல நினைத்தாற் காரியம் அல்ல ( சாமி ) 

சரணங்கள் 
1. எனது மகன் அங்கதன் தான் உனதுபகையை 
வாட்டுவான் 
ராட்சத குலங்களை உபேட்சை இல்லாமல் 
மாட்டுவான் 
அனுமந்தன் உன் தன் கோதண்டம் எனவிசயங்கள் 
காட்டுவான் 
அந்தராவணனை என்போல் தொம்தொம் தொம் 
என்றாட்டுவான் 
( சாமி ) 

2. அந்தத்தில் உன் தனைக்காணத் தந்தானே இது 
அல்லாதே 
அநித்தியம் தனக்கும் நித்தியம் எனக்கும் தந்தானே இப்போதே 
என் தம்பி சுக்கிரீவன் பிழைதந்தாலும் கிருபை 
என்மேல் தொடுத்த அம்பை எடுத்தவன் மேலே 
விடாதே 
தொடாதே 
( சாமி ) 

3. நெடுந்தவம் ஏதோ என் சீவன் விடும்போது கண்டேன்உன் காட்சி 
நினைக்கொணாப் பரமபதம் எனக்கல்லவோ காணி யாட்சி 
அடங்கலும் ரட்சிக்கவந்து தொடங்கின நீசர்வ 
சாட்சி 
ஆளில்லாப்படை வெட்டுமோ ஐயா உணக்குண்டோ தாட்சி ( சாமி ) 

வாலி சுக்கிரீவனுக்கு மதிசொல்லுதல் 

இன்னவாறு சாமிதன்னை இரங்கி வரங்கொண் டிடும் வாலி 
பின்னை இளைய சுக்கிரீவன் பெருமான் முகத்தை மிகநோக்கிச் 
சொன்னேன் இதுநீ கேளென்றான் சுவாமிராமன் இவன் பணியை 
எந்நேரமும் செய்என அவனை இரந்தான் தனக்கோர் வரந்தந்தான் 


பல்லவி 

ஆதிதேவனே ஸ்ரீராமன் என்று 
அறிசுக்கி ரீவனே 
( ஆதி ) 

அநுபல்லவி 

வேதசாஸ்திர புராணம் எல்லாம் கூடி 
விரிப்பதும் இவனே 
சொல்லத் 
தரிப்பதும் இவனே நல்ல ( ஆதி ) 

சரணங்கள் 

1. அடைவுடன் இவன்கையில் விழமுத்தி 
நித்தியம் பணி 
விடை செய்தாற் குறைவுண்டோ உனக்கிது 
வேயல்லோ 
பத்தியம் 
வேறே 
தொடரும் தெய்வங்கள் என்பதெல்லாம் சும்மா 
சொல்வதேநி 
மித்தியம் ஒன்றும் 
தடையில்லாப் பிரம்மாதிக் கிர்த்தியம் எல்லாம் 
தப்பாதிவன் கிர்த்தியம் அப்பா சொன்னேன்சத்தியம் (ஆதி ) 

2 -எங்கும் ஐயன் மதி அரசு கொண்டதில் மதங்கொண்டு 
மயக்கம் 
பண்ணாதே 
எதிர் இல்லா என்னைக் கொன்றான் இவன்போலே 
நண்ணாதே 
உதவியை அடிக்கடி எண்ண வேணும் 
ஒழிக்க 
ஒண்ணாதே 
சிதறி இவன் ஓர் மனிதன் ஆம் என்று 
திருக்கான புத்தியை ஒருக்காலும் எண்ணாதே 
நன்றி ( ஆதி ) 

3. அகலாமல் அணுகாமல் சாமியை 
அனுதினமும் 
சுற்றி - இவன் 
மகிழ்வாக இட்ட வேலைகள் செய்து 
வருவதே 
இதைத் 
இகழாது கொண்டால் இதுவேசித்தி 
இது வல்லோ 
வெற்றி சொல்லி 
உருகுவ தேன் இனி சகல பாக்கியமும் 
உருவாய் பரமபதமும் பெறுவாய் இதுவே புத்தி 
( ஆதி ) 

வாலி இறந்தபின் தாரை புலம்பல் 

வாலி இந்த வரங்கொண்டு வளர்வை குந்த பதம்சேர்ந்தான் 
வேலின் நெடுங்கண் உளதாரை மின்னற்கொடிபோ லேகணவன் 
பாலில் விழுந்தாள் வானரபூ பதியே கெதியார் எனக்கென்று 
மேலில் விழுந்தாள் நெடுமூச்சு விடுத்தாள் புலம்பத் தொடுத்தாளே 

கண்ணிகள் 
1. மன்னவனே எங்கள் வாலியே நல்ல வானர 
இன்னவேளை இந்தமரணம் உனக்கென்று இருந்ததோ தலைவிதியே 
2. இறவாமருந்தையும் தருவாயே நீ எப்படி 
இறந்தாயோ 
மறவாதேசிவ பூசைசெய்கின்ற வழிபாடு 
மறந்தாயோ 
3. ஆனைக்கும் அடிசருக்கும் துள்ளிவிழல் ஆகா 
தென்றேனே 
சேனைத்துரையே நான்உன்னைக் கொடுத்திங்கே தெருவிலே நின்றேனே 
பூபதியே 

4. என்னுயிர் நீ ஆனால்உன்மேலே பாய்ந்தகணை என்மேலே பாயாதோ 
உன்னுயிர் நான் ஆனால் உன்னுயிரோ டென்னுயிர் கூட மாயாதோ 
5. விந்தைமனிதன் கைக்கு நீயும் விழுவாயோ வேறொருவாலி உண்டோ 
என் தன் உயிர் இன்னம் இருக்குதே ஐயோ என்னைப் போல் நீலி 
உண்டோ 

6. மறைந்துராமன் கணைதொடுக்காமல் உன்மேல்வழக்குத் தொடுத்தாலே 
குறைந்திடாக்கடல் கடைந்த முதமும் நீ கொடுப்பாயே கைமேலே 

7. செய்நன் றியரோ கால தூதர் என்னதேவரோ 
மறுபேரோ 
ஐயையோ அவர்க்கமுதமும் உன்னைப்போல் யார் இனித் தருவாரோ 

8. நான் அடி உன் தன் பிராணநாதன் என்ற நம்பிக்கை பொய் போமோ 
வானரம்பையர் மேலாசை கொண்டெனைமறந்து விட்டோடல் 
ஆமோ 
9. வன்னமேருமுதல் மலையில் உன் கால் வைத்த வடுவுகள்இனிப் 
போச்சே 
நின்னை மறைந்தம்பு போட்டராகவன் நீதிக்குவடு வாச்சே 
10. மருந்தமுதுதந்த சாமிவந்தான் என்று மகிழ்ந்துதேவர் கண்டாரோ 
விருந்தமுது செய்யாய் என்றே உன்னைவேண்டி எதிர் கொண்டாரோ 

ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ராஜநீதி கூறுதல் 

கொம்பனையாள் தாரைஇவ்வா றகன்றாள் அங் கதன் 
ஐயன் 
கூர்வாட் கொண்டான் 
தம்பிஇளை யவன்கையால் முடிசூட்டச் சுக்கிரீவன் 
தரித்துக் கொண்டான் 
பின்புரகு ராமனிரு பதத்தினில்வந் தவன்பணிந்தான் 
பிறகு சாமி 
அம்புவியை ஆளும்வகை தெருளுவான் புத்தி சொல்லி 
அருளு வானே 

பல்லவி 
( அர ) 
அரசுசெய் வதென்ன எறிந்துபோட்ட தல்லடா சுக்ரீவா 

அநுபல்லவி 
நிருபன் என்றே போதே கெர்வம் மெத் தகாணும் 
நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா 
நடக்கவேணும் ( அர ) 

1. கோல மன்னவருக்குச் 
சதுரங்கம் - செங் 
கோலைப் போலத்தருமோ 
உத்துங்கம் 
நாலு திசைக்குள்ள 
ஆதங்கம் - தீர்த்து 
நடத்தவல்லவன் அல்லோ 
துரைசிங்கம் 
ஆலகால துஷ்டர் உறவென்று 
துள்ளாதே 
அனுமானைப் போல் ஒத்த அமைச்சரை 
விள்ளாதே 
காலந்தெரிந்த பெரியோர்களைத் 
தள்ளாதே 
கால்போகா இடத்திலே தலையிட்டுக் 
கொள்ளாதே ( அர ) 
2. மங்கையர் களுடனே 
சூட்சி 
கொண்ட 
மன்னவர்க் கவமானம் காணி 
யாட்சி 
எங்கள் இடத்தில் அந்த 
அத்தாட்சி 
இதைவிட இனிவே 
றேன்சாட்சி 
உங்கள் வாலியும் மங்கைய ரால்முனை 
சிந்த 
உருண்டானே அறிந்தாயே முந்த முந்த 
செங்கோல் கோணினால் எங்கும்கோணும் அந்த 
தேசத்து நன்மைதுன்மை ராசருக்கல்லோ இந்த 
( அர ) 
3. பண்ணிய தீமையி னால் ஒரு 
கூனி என்னைப் 
பரதேசி ஆக்கினாளே அவ 
எண்ணி எளியவரை அது 
சரியா 
எதிரிட்டுக் கொண்டால் அதுவே 
உண்மையாக இன்னம் உறிதி சொல்வேன் 
இப்போது 
ஒருத்தர் செய்தஉதவியை மறக்கில் அதுவே தீது 
மண்ணில் இருந்து வழக்கோரம் சொல் 
மயிரைப் பிளந்து விவகாரங்களை 
( அர ) 


தானி 
போல் நீ 
ஆனி 
லொண்ணாது 

ஸ்ரீராமர் கார்காலம் சீதையை நினைந்து இரங்கல் 

மாமகுடம் புனைந்தசுக்கிரீ வனுக்கிவ் வாறே 
மதி சொல்லி மதங்கமுனி மலையின்மேலே 
ஏமமழைக் காலமெல்லாம் இருந்துசீதை 
எண்ணத்தால் ரகுராமன் வண்ணம் மாறிக் 
காமலர்ச்சோ லையைமயிலைக் குயிலை மானைக் 
கானகத்தைப் பார்த்து விரகாக்கினி யாலே 
வேமுருகும் வெண்ணெயைப் போல் கரைந்துசிந்தை 
விலங்குவான் தனியேதான் கலங்குவானே 

கண்ணிகள் 

1 . மான்கள் பழிகொண்டீர் 
பொன் 
மான் 
உருவாய் என்னைவந்து கெடுத்தீர் 
நான் அறியாத விதனங்கள் கொடுத்தீர் 
கான்காள் வழிசொல்வீர் 
இரு 
கண்ணை விட்டுத் திரிவார் உண்டுயிர்போலப் 
பெண்ணைவிட்டுப் பிரிவார்களு முண்டோ 
2. மயில்காள் ஒன்று சொல்வீர் 
சொல்ல 
வாயில்லையோ உங்கள் சாயலை நேர்தரு 
சேயினழ யானவள் போயதெவ்வாறோ 
குயில்காள் ஒன்று கூறீர் 
சொன்னால் 
குற்றமுண்டோ என துத்தமியாகிய 
பத்தினி சானகி எத்திசைபோனாள் 

3. கிளிகாள் உரையீரோ 
ஒரு 
கேள்வி கேளீர் படுபாவிகளே என 
தாவியை நேர் தரு தேவிவராளோ 
அளிகாள் கிருபை இலையோ 
உவந் 
தாடுகிறீர் உயிரோடுயிரானவள் 
ஓடுகையாள் உயிர் வாடுகிறேனே 

4. காலமே அவ காலமே 
என் தன் 
காதலியாகிய சீதை பிரிந்திட 
நீதுணையாகிய தோதகம் ஏதோ 
கோலமே என்ன கோலமே 
வெகு 
கொச்சையும் ஆய்மிகு லச்சையுமாய் உயிர் 
வைச்சிடவோ இனி லட்சுமணாசொல் 


ஸ்ரீராமரை லட்சுமணர் தேற்றல் 

வெம்பியே ராமன் இந்த விதம் சொல்லி இரங்கும் போதில் 
எம்பிரானே ஈதென்ன ஈதென்ன கோலம் சாமி 
உம் பெருமையைநீ காணாய் உருகிறாய் என்று சொல்லித் 
தம்பிதான் துன்பமெல்லாம் தணிவிப்பான் துணிவிப்பானே 

பல்லவி 
சாமி ஏதையா 
இந்தவேதை 
சாமி ஏதையா 
( சாமி ) 

சரணங்கள் 
ராமா 
ஆமர் 
( சாமி ) 

வேறேது 
தாதோ 
(சாமி ) 

அடு 
நாடு 
( சாமி ) 

1. பூமி உள் ளோர்க்கெல்லாம் ஆதார 
நீமனதில் இப்படி நினைத்திடல் 
2. சங்கை ஏன்உனக்குச் சமானம் 
உன்கையில் கோதண்டம் ஒன்றுபோ 
3. அடிப்பாரோ ராட்சதர் அதிகமோ 
கடிக்கும் என்று ஏறிக்கலங்குமோ 
4. உன்மகிமை அறியாய் உருகிறாய் 
பிர்ம்மாதி தேவர்க்கும் பிழைப்பினி 
5. உதவி செய் வோர்க்கிடை யூறுண்டோ 
பதறாதிருந்தல்லோ படுத்திட 
6. அனுமாதிகள்பல அறியாயோ 
நினைவு கலங்கினால் நிற்குமோ 
இங்கே 
எங்கே 
( சாமி ) 
( சாமி ) 
காணும் 
வேணும் 
*சாமி 
பூமி 
7 . சொன்னேன் குறையில்லை சுகம்இனி 
மீதே 
அன்னை சீதையும் வரல் ஆச்சுதிப் 
போதே 
(சாமி ) 
சுக்கிரீவன் தாமசங்கண்டு ஸ்ரீராமர் கோபித்தல் 
மதிமானான தம்பியிந்த வகையே சொல்ல ராமச்சந்திரன் 
இதிலே தெளிந்தே சானகிபோய் இருக்கும் இடமெவ் விடங்காணேன் 
சதியால் நமது சுக்ரீவன் சரற்காலமும் போய் வரக்காணேன் 
விதியால் அவனை அழையென்றே விடுத்தான் கோபம் எடுத்தானே 

பல்லவி
வருகிறானோ வாரானோ சுக்கிரீவன் 
மனதை அறிந்து வாராய் தம்பி 

அதுபல்லவி 
திருகுசொன்னால் அவன் குலம் ஒன்றும் வெட்டுவேனே 
சித்திரத்தினும் குரங்கை வைத்தெழுத ஒட்டுவேனோ 
( வரு ) 
1. தருணத்தில் உதவியை மறந்தானே 
மதங்கொண்டு 
தண்ணீரும் முக்காற்பிழை பொறுக்கும் அல்லவோ கண்டு 
மரபுக்குச் சற்றே இன்னம் பார்க்க வேணுமே பண்டு 
வாலியைக்கொன்ற அம்புபோல் ஆயிரம் அம்புகள் உண்டு 
2. கரத்தாலே அபயம் கொடுத்தவன் தன்னை 
வன்னம் 
கனகசிங் காதனத்தில் வைத்தோமே 
மின்ன 
சரற்காலம் போனவுடன் வருகிறேன் என்று 
சொன்ன 
சத்தியம் மறந்தவனைச் சித்திரவதை செய்தால் என்ன ( வரு ) 
3. அரிய மராமரங்கள் தொளைத்த 
ராமன்வில்லை 
அறிவாயோ அறியாயோ என்று கேள் 
ஒருமசகம் இவனை அடிப்பதற் 
கென்ன தொல்லை 
உண்மையாக எனக்கவன் சம்மதி 
தெரிய இல்லை 
( வரு ) 

ஒரு சொல்லை 

சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல்

சாமிஇந்தப் படியுரைக்கத் தம்பியும் கிஷ்கிந்தையிற் போய் 
ஆமனுமான் தாரையைக் கண்டது சொன்னான் அவராலே 
கோமகன் சுக்ரீவன் இளங்குமரன் வரவறிந்து கெட்டேன் 
மாமதுஉண் டென்றுரைவான் சொல்லிக் கரைவானே 

பல்லவி 
மதுவே 
உன்னாற்கெட்ட திதுவே 
( மது ) 
அநுபல்லவி 

புதுமை நான்பாவ சுக்கிரீவன் எய்த 
பூமிதந்தானுக்குச் சாமிதுரோகம் செய்த 
( மது ) 

சரணங்கள் 
( மது ) 
( மது ) 
1. சாமி என்றங்கதன் கூவி எனைத் 
தட்ட 
தொட்டதும் விட்டதும் நானறியேன் முட்ட 
பாமரனாய் உன்னைக் குடித்தேனே பொட்ட 
பஞ்சமா பாதகன் ஆனேன் கடை கெட்ட 
2. பித்தாம் உடம்புக்கு மத்தும் 
புறப்படும் 
பெண் என்றும் தாயென்றும் தெரியாம லேவிடும் 
குத்திரம் ஆம் நரகத்தினி 
லேயிடும் 
சூடித்தவன் அடுத்தவன் எடுத்தவனும் கெடும் 
3. குன்றாத வாலியை வென்று 
பிறந்தேனே 
கோதண்ட தீக்ஷாகுருவாற் சிறந்தேனே 
ஒன்றா அவன் செய்த நன்றி 
துறந்தேனே 
உன்னைக் குடித்தேனே என்னை மறந்தேனே 
4. வையகம் தந்து மதிதந் 
தெனையாள 
வைத்தானை எண்ணாமல் வைத்தாய் பழிமூள 
ஐயையோ நான் சொன் காலஞ்சற் றேநீள 
ஆகாமற் போனேனே ஓகோ சண்டாள 

லட்சுமணர் சுக்கிரீவனை இடித்தல் 

மன்னனாம் சுக்கிரீவன் மதுவினால் மயங்கிவிட்டேன் 
என்னவே சுருக்காய்வந்தான் எதிர்கண்டதம்பி சொல்வான் 
சொன்ன நாள் தவறி இந்த துடுக்குநீர் செய்தீர் சிந்தை 
இன்னம் ஏதென்று கோபம் எழுகின்றான் மொழிகின்றானே 

பல்லவி 
சுக்கிரீவரேநான் 
வந்தகாரியம் இதுகாண் 
வந்த காரியம் 
இதுகாண் 
( வந்த ) 

அநுபல்லவி 

வந்த காரியம் இது வாலியைக் கொன்ற அப்போது வருவேனென்று 
வணங்கி ராகவனுக்கன்று மழைநாட்போய் 
தந்துரை ஆடி அகந்தைகள் மூடி 
இருந்ததை நாடி அறிந்திட ஓடி 
( வந்த ) 
சரணங்கள் 
1. அங்கென்சாமி நொந்திருக்க அதுகண் டென் நெஞ்சை உருக்க 
அலைந்தலைந் தென்கால் பெருக்க அசந்துங்கள் ஊரை நெருக்க 
வங்குவாசலைப் பிடித்தேன் அடைத்தகல்லைத் 
துங்கிசமாக இடித்தேன் வானரங்களை 
அங்கங்கோட அடித்தேன் தாயைக்கண்டு 
உங்காரவார்த்தை படித்தேன் அவள் சொன்னது 
இங்கிதோ வருவார் ஏன்இனிஇந்த விசாரம் என்றாள்பிறகே 
தங்கியவாள் அனுமானும் வந்தான் அந்தநேரம் யாம்உம்மடிமை 
உங்கள்உதவி மறவோம் என்றான் உபசாரம் நீரும் மெய்போலே 
எங்கோமான் மலர்க்னக தொட்டீர் இருமாசம் தவணை இட்டீர் 
ஏன்காணும் வாராமல் விட்டீர் எப்புடிநினைவு கெட்டீர் 
இங்கிதமாகிய வங்கம்முறிய 
விங்களம் நீர் செய்த சங்கையை அறிய 
(வந்த ) 

2. அஷ்டலெட்சுமிக்கும் அன்னை ஆகிய சனகிமுன்னை 
அகலவிட்ட சாமி தன்னை அறிந்தும் அவனாலே பின்னை 
விட்டூரம் சூழ வைத்தீரே சொன்னநாளில்வந் 
தெட்டாமல் தாழ வைத்தீரே ராட்சதர் இன்னும் 
நெட்டாகவாழ வைத்தீரே தேவரை எல்லாம் 
பொட்டாகவீழ வைத்தீரே இந்தசாமிக்கும் 
எட்டிய பலசாலிகள் இருந்தால் அங்கேசேரும் பிரம்மாதிதேவர் 
மட்டிலும் ஓர்திசை எட்டினில் வீரர் எல்லாரும் வரட்டும் சிங்கக் 
குட்டிகள் முன்னே நரிக்குட்டிகள் ஆக்குவேன் பாரும் பிறகாகிலும் 
சட்டமான தளத்துடனே நீர்வாரும் அணுகெட்டாமல் 
அட்டி செய்வாலியை முட்ட அடித்து வெகு ராச்சியம்கட்ட 
அரசு மணிமுடியிட்ட ஆண்டவன் உரைக்கப்பட்ட 
கட்டளை என்கிற மட்டுகள் தாண்டி 
தட்டிய உங்களை வெட்டிட வேண்டி 
( வந்த ) 

3. கர்த்தன் உண்டபின் உச்சிட்டங் கொண்டுண்பதே என் அதிருஷ்டம் 
காய்கனி நீர் தந்தால் இஷ்டம் காணுமோ இதென்ன கஷ்டம் 
புத்திதான் எங்கே போச்சோ ஐயனைப் பசியில் 
வைத்தும்நான் உண்ப தாச்சோ ஐயையோ உங்கள் 
பத்தி எல்லாம் மேற் பூச்சோ சகாயத்துரோகம் 
கற் ) வர்க் கித்தனை பேச்சோ என் அண்ணனான 
உத்தமனுக்குத்துணை மற்றுண்டோ ஒருவரைக் கொண்டு கோதண்டம் 
தன்னை 
றேவளைக்குமுன் செத்தானே வாலியும் பண்டு அவனைக் கொன்ற 
அஸ்திரம் போல் இன்னம் அஸ்திரம் அனேகங்கள் உண்டு தெரிந்திருந்தும் 
இத்தனை நீர் செய்ததென்ன இளக்காரம் கண்டுகாரியங் கொள்ளச் 
சுற்றி நீரே பிரியாமல் துரோகபுத்தி அறியாமல் 
சொன்ன நாளைக் குறியாமல் தோஷம் என்று அறியாமல் 
சத்தியமோ சொல் அசத்தியமே தான் 
முற்றிலும் நாடி இடத்தனி யே நான் 
( வந்த ) 

சற்டே 
வானரப்படைத் தலைவர்களும் படைத் தொகையும் 
அடல்சேர் தம்பி இது சொல்ல அறிந்தேன் அடியேன் புத்தியென்று 
உடனே சுக்கிரீவன் சாமி உபயபாதம் வந்து கண்டான் 
விடவே போன தூதர்களில் வீரர் சேர அணி அணியாக் 
கடல்போல் வந்து ராகவனைக் கண்டார் சேனவ கொண்டாரே 

கண்ணிகள் 
1. சதவலி படைகள் ஒரு 
பத்துகோடி 
- சுசே 
ஷணன்படைகள் பத்து நூறா யிரங்கோடி 
பதுமமுகன் பதினால் நூறா 
யிரங்கோடி - தீர்க்க 
பரதன் இட பன்ஓரா 
யிரங்கோடி 
2 . பனசன படைகள் பன்னீரா 
யிரங்கோடி - நீலன் 
படைகளும் பதினையா 
யிரங் கோடி 
அனுமன் இருப்பத்தையா 
யிரங்கோடி போரில் 
அட்சயன் படைமுப்பத்தையா யிரங் கோடி 
3. தசமுகன் படைமுப்பதா 
யிரங்கோடி 
நல்ல 
சாம்புவன் ஆயிரத்தறு 
நூறு கோடி 
மதிது மிந்தன் நூறு நூறா 
யிரங்கோடி அந்த 
மயிந்தன் இருபதா 
யிரங்கோடி 
4. கேசரிபடை ஐம்பதா 
யிரங்கோடி மிக்க 
கெவையாட்சன் படை ஆ 
யிரங்கோடி 
வீசுதுன் முகன் இருநூறா 
யிரங்கோடி 
வந்த 
விருபாக்ஷன் ஒன்பதா 
யிரங்கோடி 
5. குமுதன் படை நாற்பத்தெண்ணா 
யிரங்கோடி 
கூட்டும் படைகள் நூறா 
யிரங்கோடி 
சமுகப்படை இந்தப்படி 
கூடிக்கூடி வரச் 
சாமிகண்டு மகிழ்ந்தானே 
கொண்டாடி 
சாப் புவந்தன் அனுமானரத் துதித்தல் 
மிக்கான கவி ஏழு பத்து வெள்ளம் 
வீரரொடு சாமிகண்டான் சுக்ரீவன் தான் 
தெற்கான வழி சொல்ல ராமன் தானும் 
சீனதஉருச் சொல்லிதருமோ திரமும் பெற்றான் 
பிக்கான மலைகளும்நா டுகளும் தேடிப் 
பிலம்புகுந்து கடந்துசம்பா தியின் . சொல்லாலே 
நளன் 
கைக்கான மயேந்திரம் சேர் அனுமான் தன்னைக் 
கதி செய்வான் சாம்புவனும் துதிசெய்வானே 

கண்ணிகள் 

1. ஏதுகாணும் சும்மா அறிந்தும் அறியார் போல் 
இருக்கிறீர் ஆஞ்ச 
ஓது மேன் வெண்ணெய் இருக்க நெய்தேடு 
வோமோ வாத்ராசன் 
சேயரே 
போலவே 
சாலவே 

2 . காதலால் நல்ல காலம் பிறந்தது 
காணாது கண்டவர் 
சீதை சேதிசம் பாதி வாயினால் 
தெரிந்து கொண்டோ மே 
3. துணியுமேன் உமக்கிலங்கை தான் என்ன 
தூரமோ கடல் 
அணுவும் மகமேரு ஆகும் மேருவும் 
அணுவாம் உமக் கென்ன 
தூரமோ 
பாரமோ 
செல்லுமே 

4 , வருத்தம் ஏன் இலங்கையும் உம்முடவாலால் 
மாட்டி இழுத்தாலும் 
திருத்தம் என்னபேச்சு விளக்கிருக்கத் தீ 
தேடுவோமோ நாங்கள் 
சொல்லுமே 
மேவினீர் 

5. ஒருத்தராய்ப் பிரம்ம தேவன் பட்டமும் 
உமக்கென்றே புகழ் 
குருத்துக் குழந்தையில் சூரியன் தேர் நிலை 
குலைய எதிர்கொண்டு 
6 . வாசவன் கைவச்சி ராயுதத்தால் ஓர்பால் 
மயிரும் உதிராத 
தேசம்மேல் எந்த ஆயுதங்களாலும் 
சிந்தை கலங்காத 
7. இயற்கையால் எந்த வேஷம் எடுக்கினும் 
எடுக்கவே வல்ல 
வீரரே 
சூரரே 
தேவரே 

செயித்திடாதபஞ் சேந்திரியங்களையும் 
செயித்திடும் மானு  பாவரே 

8-நாளையே 
ஓதும் சுக்ரீவன் ஆக்கினை தெரியுமே 
உயிரை வைப்பானோ 
காதுக்கிடுவது முகத்துக் கழகெங் 
களைரட்சிப்பீர் இந்த 
வேளையே 
கூடுவீர் 

9. எட்டுத்திக்கின் அப்புறத்தினிலே கங்கை 
இருக்கினும் பாய்ந்து 
கொட்டைப் பாக்குப் போல் எட்டுமலையையும் 
தொட்டெ டுத்துவிளை 
யாடுவீர் 
10. அமைத்த சாமிமோ திரத்தைப் பிடித்தீரே 
ஆர்க்குண்டிந்த அதி 
உமக்கில்லாப் பொறி எமக்கு வந்ததோ 
உரைப்ப தேன் உப 
காரமே 
சாரமே 

அனுமார் கடல் தாண்ட இசைதல் 

பாட்டில் உரைக்கும் அங்கதன் முன் படித்துச்சாம்பன் துதி செய்யக் 
கேட்ட அனுமான் மிசுநாணிக் கேளீர் அடியேன் தனைப் பொருட்டாக் 
கூட்டிநீர் எவு தலாலே எங் கோமான் அருளும் உமதருளும் 
ஈட்டும் சிறையால் சுடல்கடப்பேன் என்றான்புலனை வென் னே 

கிஷ்கிந்தாகாண்டம் முற்றிற்று . 

சக்கரவர்த்தித்திருமகனார் திருவடிகளே சரணம் . 

---------------------

நான்காவது கிஷ்கிந்தா காண்டம் ( கம்பராமாயணம் ஒப்புமைப் பகுதி ) 


அனுமார் மறைந்து நின்று யோசித்தல் 
 
எய்தினார் சவரி நெடிதேய மால்வரை எளிதின் 
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மைசால் கவியரசு 
செய்வதோர்கிலன் அனையர் தெவ்வராம் எனவெருவி 
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் 

அஞ்சனைக்கொரு சிறுவன் அஞ்சனக்சிரி அனைய 
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு 
வெஞ்சமத் தொழிலர் தவமெய்யர் கைச்சிலையர் என 
நெஞ்சயிர்த்து அயல்மனறய நின்று கற்பினின் நினையும் 

தேவருக்கொரு தலைவர் ஆம்முதல் தேவர் எனின் 
மூவர்மற்றிவர் இருவர் மூரிவில் கார் இவரை 
யாவர் ஒப்பவர் உலகில் யாதிவர்க் கரியபொருள் 
கேவலத் திவர் நிலைமை தேர்வது எக்கிழமை கொடு 

சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் தெருமரலின் 
நொந்தயர்த்தவர் அனையர் நோவறச் சிறியர் அலர் 
மந்தரத்து அமரர் அலர் மானிடப் படிவர்மயர் 
சிந்தனைக்குரிய பொருள் தேடுதற்கு உறுநிலையர் 

தருமமும் தகவும் இவர்தனம் எனும் தகையர்வரு 
கருமமும் பிறிதோர் பொருள்கருதியன்று அதுகருதின் 
அருமருந் தனையது இடைஅழிவு வந்துளது அதனை 
இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் 

கதம்எனும் பொருண்மையிலர் கருணையின் கடலனையர் 
இதமெனும் பொருளலதுஓர் இயல்புணர்ந்திலர் இவர்கள் 
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் 
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் 

என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி 
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத் தோரை 
முன்பிரிந் தனையர் தம்மை முன்னினான் என்னநின்றான் 
தன்பெருங் குணத்தால் தன்னைத் தானலது ஒப்பிலாதான் 

[ அனுமப்படலம் 1 , 4 9 ] 


அனுமார் ஸ்ரீ ராமருக்கு வரலாறு கூறுதல் 
 
இவ்வகை எண்ணி ஆண்டவ் இருவரும் எய்த லோடும் 
செவ்வழி உள்ளத்தானும் தெளிவுற எதிர்சென் றெய்தி 
கவ்வையின் றாக நுங்கள் வரவு எனக் கருணையோனும் 
வெவ்வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் 

மஞ்செனத் திரண்ட கோலமேனிய மகளிர்க் கெல்லாம் 
நஞ்செனத் தகையதாகி நளிர் இரும் பணிக்குத் தேம்பாக் 
கஞ்சமொத் தலர்ந்த செய்ய கண்ணயான் காற்றின் வேந்தற்கு 
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் 

இம்மனல இருந்து வாழும் ஏரிகதிர்ப்பருதிச் செல்வன் 
செம்மலுக் கேவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி 
விம்மலுற் றனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் 
எம்மலைக் குலமும் தாழ இசைசுமந் தெழுந்த தோளான் 

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத் திறைவன் யாங்கள் 
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுசு வந்தேம் 
இவ்வழி நின்னை உற்ற எமக்குநீ இன்று சொன்ன 
செவ்வழி உள்ளத்தானைக் காட்டுதி தெரிய என்றான் 


இரவிதன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் 
பரிவிலன் சீறப்போந்து பருவரற்கு ஒருவனாகி 
அருவியங் குன்றில் என்னோ டிருந்தனன் அவன்பால் செல்வம் 
வருவதோர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் 


ஒடுங்கலிவ் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி 
தொடங்கினர் முற்றும் முற்றத் தொல்லறம் துணிவர் சான்றோர் 
கொடுங்குலப் பகைஞனாகிக் கொல்லிய வந்த கூற்றை 
நடுங்கினர்க் கபயம் நல்கும் அதனினும் நல்லதுண்டோ 


எம்மையே காத்திர் என்றற் கெளிதரோ இமைப்பிலாதோர் 
தம்மையே முதலிட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் 
மும்மை ஏழ்உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகற்செவ்வி 
உம்மையே புகல்புக்கேமுக் கிதின்வரும் உறுதியுண்டோ 


யாரென விளம்புகேன் நான் எங்குலத் தலைவற்கும்மை 
வீரநீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலிபோல்வான் 
வார்கழல் இளையவீரன் மரபுளி வாய்மை யாதும் 
சோர்விலன் நிலைமை எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான் 

[ அனுமப்படலம் 14-16 , 20 , 22 -25 ] 


அனுமார் தேற்றச் சுக்கிரீவன் சரணடைதல் 

சூரியன் மரபிற் றோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட 
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவியுண்ட 
வீரியன் வேள்வி செய்து விண்உலகோடும் ஆண்ட 
காரியல் கருணை அன்ன கண்ணகன் கவிகைமன்னன் 


புயல் தரு மதத்தின் கோட்டுப்புகர்மலைக் கிறையை ஊர்ந்து 
மயல் தரும் அமரர்யாரும் மடி.தர வரிவிற் கொண்ட 
இயல் தரும் புலமைச் செங்கோல் மனுமுதல் எவரும் ஒவ்வாத் 
தயரதன் கனகமாடத் தடமதில் அயோத்தி வேந்தன் 


அன்னவன் சிறுவனால் இவ் ஆண்டகை அன்னை ஏவ 
தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி 
நன்னெடுங் கானஞ் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் 
ந்நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே 

[ அனுமப்படலம் 26-28 ] 


மேலவன் திருமகற் குரைசெய்தான் விரைசெய்தார் 
வாலிஎன் றளவிலா வலியினான் உயிர்தெறக் 
காலன் வந்தனன் இடர்க் கடல் கடந்தனம் எனா 
ஆலம் உண்டவனின்று அருநடம் புரிகுவன் 

வேலிகல் சினவு தாடகை விளிந்துருள வில் 
கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்று தன் 
காலியல் பொடியினால் நெடியகற்படி வமாம் 
ஆலிகைக் கரியபேர் உருவளித் தருளினான் 


நல்லுறுப் பமையும் நம்பியரில் முன்னவன் நயந்து 
எல்லுறுப் பிரியபேர் எழுசுடர்க் கடவுள் தன் 
பல்லிறுத்தவன் வலிக்கு அமைதியம்பகம் எனும் 
வில்லிறுத் தருளினான் மிதிலைபுக் கனையநாள் 


தெவ்விரா வகைநெடுஞ் சிகைவிரா மழுவினான் 
அவ்விரா மனையும் மாவலி தொலைத் தருளினான் 
இவ்விரா கவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் 
அவ்விரா தனை இராவகை துடைத்தருளினான் 


ஆயமா நாகர் வாழ் ஆழியானே அலால் 
காயமான் ஆயினான் அவனோ காவலா 
நீயமான் நேர்தியால் நிருதமாரீசனாம் 
மாயமா னாயினான் மாயமானாயினான் 


முனைவரும் பிறரும் மேல் முடி வரும் பகலெலாம் 
னையர்வந் துறுவர் என்று இயல்தவம் புரிகுவார் 
வினையெனும் சிறைதுறந்து உயர்பதம் விரவினார் 
எனையர் என்றுரைசெய்கேன் இரவிதன் சிறுவனே 


மாயையால் மதியிலா நிருதர்கோன் மனைவியைத் 
தீயகான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் 
நீஐயா தவமினழத் துடைமையால் நெடுமனம் 
தூயையா உடையையால் உறலினைத் துணிகுவார் 

[ நட்புக்கோட்படலம் 2 , 6 , 7, 9 , 11 , 13 , 14 ) 
ஸ்ரீராமர் சுக்கிரீவனுக்கு ஆதரனண சொல்லல் 

எனநினைந் தினைய எண்ணி இவர்கின்ற காதல் ஓதக் 
கனைகடல் கரை நின்றேறாக் கண்ணிணை களிப்பநோக்கி 
அனகனைக் குறுகினான் அவ் அண்ணலும் அருத்திகூரப் 
புனைமலர்த் தடக்கை நீட்டிப் போந்தினி திருத்தி என்றான் 

ஆயதோர் அவதியின் கண் அருக்கன் சேய் அரசைநோக்கித் 
தீவினை தீயநோற்றார் என்னின் யார் செல்வ நின்னை 
நாயகம் உலகுக்கெல்லாம் என்னலாம் நலமிக்கோயை 
மேயினென் விதியே நல்கின் மேவலாகாதென் என்றான் 

முரணுடைத் தடக்கை ஒச்சி முன்னவன் பின்வந்தேனை 
இருள் நிறப் புறத்தின் காறும் உலகெங்கும் தொடராகிக் குன்று 
அரணுடைத் தாகி உய்ந்தேன் ஆருயிர் துறக்கலாற்றேன் 
சரணுனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் என்றான் 

நாலு வேதமாம் நவையில் சாலியின் 
வேலி யன்னவன் மலையின் மேலுளான் 
சூலி தன்னருள் துறையின் முற்றினான் 
வாலி என்றுளான் வரம்பில் ஆற்றலான் 

கழறு தேவரோடு அவுணர் கண்ணினின்று 
உழலும் மந்தரத்து உருவு தேயமுன் 
அழலும் கோள் அரா அகடு தேய்விடச் 
சுழலும் வேலையைக் கடையும் தோளினான் 

நிழலும் நீருமாய் நெருப்பும் காற்றுமென்று 
உலைவில் பூதம்நான் குடைய ஆற்றலான் 
அலையின் வேலைசூழ் கிடந்த ஆழிமா 
மலையின் நின்றும் இம்மலையின் வாவுவான் 

கிட்டுவார் பொரக் கிடைக்கின் அன்னவர் 
பட்ட நல்வலம் பாகம் எய்துவான் 
எட்டு மாத்திரத்து இறுதி நாளும் உற்று 
அட்ட மூர்த்திதாள் பணியும் ஆற்றலான் 

மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன் 
தொக்க தோளுறத் தொடர்ப் படுத்த நாள் 
புக்கி லாதவும் பொழி அரத்த நீர் 
உக்கி லாதவும் உலகம் யாவதோ 

அன்னவன் எமக்கு அரசனாக என்று 
இன்னவன் இளம்பதம் இயற்றுநாள் 
முன்னவன் குலப்பகைஞன் முட்டினான் 
மின்னெயிற்றுவாள் அவுணன் வெம்மையான் 

முட்டி நின்றவன் முரண் உரத்தின் நேர் 
ஒட்ட அஞ்சி நெஞ்சுலைய ஓடினான் 
வட்ட மண்டலத்து அரிதுவாழ் வெனாப் 
எட்டரும் பெரும்பிலனும் எய்தினான் 

எய்துகாலை அப்பிலனுள் எய்தி யான் 
நொய்தின் அங்கவற் கொணர்வென் , நோன்மையோய் 
செய்தி காவல்நீ சிறிது போழ் தெனா 
வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான் 

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து 
இன்ன வாயினூடு எய்தும் என்னயாம் 
பொன்னின் மால் வரைப் பொருப் பொழித்து வேறு 
உன்னு குன்றமெலாம் அடுக்கினேம் 

ஒளித்த வன்உயிர்க் கள்ளை உண்டுளம் 
களித்த வாலியும் கடிதின் எய்தினான் 
விளித்து நின்றுவே றுரைபென்றா இருந்து : 
அளித்த வாறு நன்று இளவலார் எனா 

பற்றி அஞ்சலன் பழியின் வெஞ்சினம் 
முற்றி நின்ற தன் முரண்வலிக் கையால் 
எற்றுவான் எடுத்தெழுதலும் பிழைத்து 
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் 

உருமை என்றிவற் குரியதாரமாம் 
அருமருந்தையும் அவன் விரும்பினான் 
இருமையும் துறந்து இவன் இருந்தனன் 
கருமம் ஈங்கிது எம்கடவுள் என்றனன் 

ஈரம் நீங்கிய சிற்றனவ சொற்றனள் என்ன 
ஆரம் வீங்குதோள் தம்பிக்குத் தன் அரசுரிமைப் 
பாரம் ஈந்தவன் பரிவிலன் ஒருவன் தன் இளையோன் 
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமா றுளதோ 

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி 
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டித் 
தலைமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவென் 
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் 
[ நட்புக்கோட்படலம் 20 , 23 , 25 , 37 40 , 48 , 50 - 52 , 57 , 59 , 64 , 67 , 
69 , 71 , 72 ] 


சீதை ஆபரணங்களைக்கண்டு ஸ்ரீராமர் இரங்கல் 

ஏகவேண்டும் இந்நெறி என இனிது கொண்டேகி 
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் 
ஆகஐந்தினோ டிரண்டின் ஒன்றுருவநின் அம்பு 
போகவே என் தன் மனத்திடர் போம் எனப்புகன்றான் 

ஆயமாமரம் அனைத்தையும் நோக்கிநின்றமலன் 
தூய வார்கணை துரப்பதோர் ஆதரம் தோன்ற 
சேய வானமும் திசைகளும் செவிடுறத் தேவர்க்கு 
ஏய்வினாத தோர் பயம்வர சிலையில்நாண் எறிந்தான் 

ஏழுமாமரம் உருவிக்கீழ் உலகம் என்றிசைக்கும் 
ஏழும் உண்டுபுக்குருவிப்பின் உடனடுத்தியன்ற 
ஏழிலா மையால் மீண்டதவ் இராகவன் பகழி 
ஏழுகண்டபின் உருவுமால் ஒழிவதன் றின்னும் 

[ மராமரப்படலம் 1 , 12 , 16 ) 
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப் 
பண்டு வெந்தன நெடும்பசை வறந்திடினும் வான் 
மண்டலம் தொடுவது அம்மலையின்மேல் மலை எனக் 
கண்டனன் துந்துபிகடலனான் உடலரோ 

முட்டிவான் முகடு சென்றளவி இம்முடையுடல் 
கட்டிமால் வரையை வந்துறுதலும் கருணையான் 
இட்டசாபமும் எனக்குதவும் என்று இயல்பினின் 
பட்டவா முழுதும் பரிவினால் உரை செய்தான் 

கேட்டனன் அமலனும் கிளந்த வாறெலாம் 
வாட்டொழில் இளவலை இதனை மைந்த நீ 
ஓட்டென அவன்கழல் விரலின் உந்தினான் 
மீட்டது விரிஞ்சன் நாடுற்று மீண்டதே 


[ துந்துபிப்படலம் 1 , 14 , 15 ] 

உழையரின் உணர்த்துவதுளது என்றுன்னியோ 
குழைபொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் 
மழைபொரு கண்ணிணை வாரியோடுதன் 
இழைபொதிந் திட்டனள் யாங்கள் ஏற்றனம் 

தெரிவுற நோக்கினன் தெரிவை மெய்யணி 
எரிகனல் எய்திய மெழுகின் யாக்கை போல் 
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றமாய்ப் 
பருகினன் என்கிலம் பகர்வதென் கொல்யாம் 

நல்குவது என் இனி நங்கை கொங்கையைப் 
புல்கிய பூணுமக் கொங்கை போன்றன 
அல்குலின் அணிகளும் அல்கு லாயின 
பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே 

விட்டபேர் உணர்வினை விளித்த என் கெனோ 
அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனோ 
கொட்டின சாந்தெனக் குளிர்ந்த என்கெனோ 
சுட்டன என்கெனோ யாது சொல்லுகேன் 

மோந்திட நறுமலர் ஆன மொய்ம்பினில் 
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன 
சாந்தமு மாய் ஒளிதழுவப் போர்த்தலால் 
பூந்துகி லாய அப்பூவை பூண்களே 

ஈர்த்தன செங்கண்நீர் வெள்ளம் யாவையும் 
போர்த்தன மயிர்ப்புறம் புளகம் , பொங்குதோள் 
வேர்த்தன என்கெனோ வெதும்பினான் என்கோ 
தீர்த்தனை அவ்வழி யாது செப்புகேன் 

விலங்கெழில் தோளினாய் வினையினேனும் இவ் 
இலங்குவில் கரத்திலும் இருக்கவே அவள் 
கலன்கழித் தனள் இது கற்பு மேவிய 
பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார் 

வாள்நெடுங் கண்ணிஎன் வரவு நோக்கயான் 
தாள் நெடுங் கிரியோடும் தடங்கள் தம்மொடும் 
பூணொடும் புலம்பினென் பொழுது போக்கி இந் 
நாண்நெடும் சிலைசுமந்து உழல்வென் நாணிலேன் 

விரும்பெழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் 
வரும்பழி என்றுயான் மகுடம் சூடலேன் 
கரும்பழி சொல்லியைப் பகைவன் கைக்கொள் 
பெரும்பழி சூடினென் பிழைத்தது என்னரோ 

கலன் காண்படலம் 3-9 , 20 , 21 , 25 ] 


ஸ்ரீராமருக்குச் சுக்கிரீவன் துணிவுகூறுதல் 

தாங்கினேன் இருத்தி இத் துயரம் தாங்கலா 
ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் 
வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர் 
வாங்கினென் இவ்வணி வருவித்தே எனா 

அயனுடை அண்டத்தின் அப்புறத்தையும் 
மயர்வற நாடி.என் வலியும் காட்டியுன் 
உயர்புகழ்த் தேவியை உதவற் பாலெனால் 
துயருழந்தயர்தியோ சுருதி நூல்வலாய் 

திருமகள் அனைய அத்தெய்வக் கற்பினாள் 
வெருவரச் செய்துள வெய்யவன் புயம் 
இருபதும் ஈர் ஐந்து தலையும் நிற்கஉன் 
ஒருகணைக் காற்றுமோ உலகம் ஏழுமே 

ஈண்டுநீ இருந்தருள் ஏழொடு ஏழ்எனாப் 
பூண்டபேர் உலகங்கள் வலியின் புக்கு இடை 
தேண்டி அவ்வரக்கனைத் திருகித் தேவியைக் 
காண்டியான் இவ்வழிக் கொணர்வல் காவலோய் 

என்னுடைச் சிறுகுறை முடித்தல் ஈண்டொரீஇப் 
பின்னுடைத் தாயினும் ஆக பேதுறும் 
மின்னிடைச் சனகியை மீட்டு மீள் துமால் 
பொன்னுடைச் சிலையினாய் விரைந்து போய் என்றான் 

[ கலன் காண்படலம் 11-14 , 18 

ஸ்ரீராமரை வாலி நிந்தித்தல் 

அவ்விடத்து ராமன் நீ அழைத்து வாலி ஆனதோர் 
வெவ்விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வைவேறு நின்று 
எவ்விடத்துணிந் தமைந்ததென் கருத்து இதுஎன்றனன் 
தெவ்வடக்கும் வென்றியானும் நன்று இதென்று சிந்தியா 

எடுத்துப்பாரிடை எற்று வென் பற்றி என்றிளவல் 
கடித்தலத்தினும் கழுத்தினும் தன்னிரு கரங்கள் 
மடுத்து மீக்கொண்ட வாலிமேல் கோலொன்று வாங்கித் 
தொடுத்து நாணொடு தோளுறுத்து இராகவன் துரந்தான் 

கார்உண் வார்சுவைக் கதலியின் கணியினைக் கழியச் 
சேரும் ஊசியின் சென்றது நின்றதென் செப்ப 
நீரும் நீர் தரும் நெருப்பும் வன்காற்றும் கீழ் நிவந்த 
பாரும் சார்வலிபடைத்தவன் உரத்தை அப்பகழி 

கண்ணுற்றான் வாலிநீலக் கார்முகில் கமலம் பூத்து 
மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை 
புண்ணுற்றது அனையசோரி பொறியொடும் பொடிப்ப நோக்கி 
எண்ணுற்றாய் என் செய்தாய் என்றேசுவான் இயம்பலுற்றான் 

வாய்மையும் மரபும் காத்து மன்உயிர் துறந்த வள்ளல் 
தூயவன் மைந்தனேநீ பரதன் முன் தோன்றினாயே 
தீமைதான் பிறரைக் காத்துத்தான் செய்தால் தீங்கன்றா மோ 
தாய்மையும் அன்றி நட்பும் - தருமமும் தழுவி நின்றாய் 

கோவியல் தருமம் உங்கள் குலத்துதித்தோர் கட்கெல்லாம் 
ஓவியத் தெழு தொண்ணா உருவத்தாய் உடைமையன்றோ 
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த 
தேவியைப் பிரிந்தபின்னை திகைத்தனை போலும் செய்கை 

அரக்கர் ஓர் அழிவு செய்து சுழிவரேல் அதற்கு வேறோர் 
குரக்கினத் தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ 
இரக்க மெங் குகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாயப்பா 
பரக்கழி இது நீபூண்டால் புகனழயார் பரிக்கற் பாலார் 

கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவ பெற்ற தாதை 
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்குக் கொடுத்துப் போந்து 
நாட்டொரு கருமம் செய்தாய் எம்பிக்கில் வரசைநல்கிக் 
காட்டொரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன் மேலுண்டோ 

அறைகழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவதாண்மை 
துறை என லாயிற்றன்றே தொன்மையின் நன்னூற்கெல்லாம் 
இறைவநீ என்னைச் செய்த தீதெனின் இலங்கை வேந்தன் 
முறையல செய்தா னென்று முனிதியோ முனிவிலா தாய் 

இருவர் போர் எதிருங்காலை இருவரும் நல்லுற்றாரே 
ஒருவர் மேல் கருணை தூண்டி ஒருவர் மேல் ஒளிந்து நின்று 
வரிசிலை குழைய வாங்கி வாயம்பு மருமத் தெய்தல் 
தருமமோ பிறிதொன்றாமோ தக்கிலது என்னும் பக்கம் 


வீரம் அன்று விதியன்று மெய்ம்மையின் 
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் 
பாரம் அன்று பகையன்று பண்பழிந்து 
ஈரம் இன்றி இதுஎன் செய்த வாறரோ 


நூலியற்கையும் நுங்குலத் துந்தையர் 
போலியற்கையும் சீலமும் போற்றலை 
வாலியைப் படுத்தாய் அலை மன் அற 
வேலியைப் பிரித்தாய் விறல் வீரனே 


தாரம் மற்றொருவன் கொளத்தன் கையில் 
பார வெஞ்சிலை வீரம் பழுதுற 
நேரும் அன்று மறைந்துநி ராயுதன் 
மார்பின் எய்யவோ வில்லிகல் வல்லதே 

( வாலி வதைப்படலம் 10 , 63 , 64, 81 , 82 , 84 , 85 , 87-90 , 95 , 96 ] 


வாலி குற்றங்களை அவனுக்கு ஸ்ரீராமர் விரித்தல் 

பிலம்புக்காய் நெடுநாள் பெயராய் எனப் 
புலம்புற் றுன்வழிப் போதலுற்றான் தனை 
குலம்புக்கு ஆன்றமுதியர் குறிக்கொள் நீ 
அலம்பொன் தாரவனே அரசு என்றலும் 

பற்றி ஆன்ற படைத்தலை வீரரும் 
முற்றுணர்ந்த முதியரும் முன்பரும் 
எற்றும் நும்மரசு எய்துவையாம் எனக் 
பொற்ற நன் முடி கொண்டதிக் கோதிலான் 


கொல்ல லுற்றனை உம்பியைக் கோதவற்கு 
இல்லை என்பதுணர்ந்தும் இரங்கலை 
அல்லல் செய்யல் உனக்கபயம் பிழை 
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் 


அன்ன தன்மை அறிந்தும் அருளலை 
பின்னவன் இவன் என்பதும் பேணலை 
வன்னிதான் இடும் சாப வரம்புனடப் 
பொன்மலைக்கவன் நண்ணினான் போகலை 


ஈரம் ஆவதும் இற்பிறப் பாவதும் 
வீரம் ஆவதும் கல்வியின் மெய்ந்நெறி 
வாரம் ஆவதும் மற்றொருவன் புணர் 
தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கதோ 


தருமம் அன் றிது எனும் தனகத்தன்மையும் 
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் 
அருமை உம்பி தன் ஆருயிர்த் தேவியை 
பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ 


தக்க இன்ன தகாதன இன்னவென்று 
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள 
மக்களும் விலங்கே மனுவின் நெறி 
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே 


மூன்புநின் தம்பிவந்து சரண்புக முறையிலோயைத் 
தென்புலத் துய்ப்பென் என்று செப்பி னன் செருவில் நீயும் 
அன்பினை உயிருக்காகி அடைக்கலம் யானும் என்றி 
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்றெய்த தென் றான் 

( வாலி வதைப்படலம் 98 , 100 , 102 , 104 , 105 , 107 , 118 , 123 ) 


ஸ்ரீராமரை வாலி வரங்கேட்டுக் கொள்ளல் 

கவிகுலத் தரசுமன்னன் கட்டுரை கருத்துட் கொண்டான் 
அவியுறு மனத்தனாகி அறத்திறன் அழியச் செய்யான் 
புவியிடை அண்ணல் எண்பதெண்ணினில் பொருந்த முன்னே 
செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சிச் சொன்னான் 

தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும் 
நீயென நின்றநம்பி நெறியினின் நோக்கும் நேர்மை 
நாயென நின்றஎம்பால் நவையற உணர லாமே 
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தி யாதான் 


ரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக் 
குரங்கெனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல் 
அறந்தைவெம் பிறவி நோய்க்கும் அருமருந் தனைய அய்யா 
வரந்தரும் வள்ளால் ஒன்று கேளென மறித்தும் சொல்வான் 

மற்றின உதவி யுண்டோ வானினும் உயர்ந்த மானக் 
கொற்றவ நின்னை என்னைக் கொல்லிய கொணர்ந்து தொல்லைச் 
சிற்றினக் குரங்கி னோடும் தெரிவுறச் செய்த செய்கை 
வெற்றரசு எய்தி எம்பி வீட்டரசு எனக்கு விட்டான் 

ஓவிய உருவ நாயேன் உளதொன்று பெறுவ துன்பால் 
பூவியல் நறவம் மாந்தி புந்திவே றுற்ற போழ்தில் 
தீவினை இயற்று மேனும் எம்பிமேல் சீறி என் மேல் 
ஏவிய பகழி என்னும் கூற்றினை எவல் என்றான் 


அனுமன் என்பவனை ஆழி ஐய நின்செய்ய செங்கைத் 
தனுவென நினைதி மற்று என் தம்பி நின் தம்பி யாக 
நினைதிஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டவ் 
வனிதையை நாடிக் கோடி வானினும் உயர்ந்த தோளாய் 

(வாலிவதைப்படலம் 124-126 , 131 , 132 , 135 
வாலி சுக்கிரீவனுக்கு மதிசொல்லுதல் 

என்றவற்கியம்பிப் பின்னர் இருந்தனன் இளவல் தன்னை 
வன்றுணைத் தடக்கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த 
ஒன்றுனக் குரைப்ப துண்டால் உறுதியஃதுணர்ந்து கோடி 
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்றுகூறும் 


நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்க ளெல்லாம் 
கற்கின்ற இவன் தன் நாமம் கருதுவ இவனைக் கண்டாய் 
பொற்குன்ற மனனய தோளாய் பொதுநி.அற தலைமை நோக்கின் 
ஏற்கொன்ற வலியே சாலும் இதற்கொன்றும் ஏது வேண்டா 


மதவியல் குரங்குச் செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் 
உதவியை உன்னி ஆவி உற்றிடத் துதவு கிற்றி 
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் 
சிதைவில செய்து நொய்தின் தீவரும் பிறவி தீர்தி 


அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை சுழாது ஐயன் 
மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் 
எரிஎரனற் குரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் 
புரிதி சிற்றடினமக்குற்றம் பொறுப்பர் என்றெண்ண வேண்டா 


பாலமை தவி i நீ என் சொல் பற்றுதி யாயின் தன்னின் 
மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் 
கால் தரை தேயநின்று கட்புலக் குற்றதம்மா 
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என் வணங்கு மைந்த 


என்னுயிர்க் குறுதி செய்தான் என்பதைஇன்றயும் எண்ணாது 
உன்னுயிர்க் கிறுதி செய்தி இவற்கமர் உற்ற துண்டேல் 
பொன்னுயிர்த் தொளிரும் பூணாய் போதுதி நிலைனம நோக்கி 
மன்னுயிர்க் குறுதி செய்வான் மலாடி சுமந்து வாழ்தி 

( வாலிவதைப்படலம் 136 , 138 , 141 , 142 , 153 , 1541 


வாலி இறந்தபின் தாரை புலம்பல் 

வாலியும் ஏக யார்க்கும் வரபிலா உலகில் இன்பம் 
பாலியா முன்னர் நின்ற பருதிசெய் செங்னக பற்றி 
ஆவிலைப் பள்ளி யானும் அங்கத னோடும் போனான் 
வேல்விழி தாரை கேட்டு வந்தவன் மெய்யில் வீழ்ந்தாள் 

வரைசேர் தோளிடை நாளும் வைகுவேன் 
கரைசோர் இடர் வேலை கண்டிலேன் 
சேர் ஆருயிரே என்உள்ளமே 
அரைசே யானிது காண அஞ்சினேன் 

நறிதம் நல்லமிழ் துண்ண நல்கலின் 
பிறியா இன்னுயிர் பெற்ற பெற்றிநாம் 
அறியாரோ நமனார் அது அன்றெனின் 
சிறியாரோ உபகாரம் சிந்தியார் 


அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று 
உணங்கா நாள் மலர் தூய் உள்ளன்பினால் 
ணங்காக் காலம் இரண்டொடு ஒன்றினும் 
வணங்காது . இத்துணை வைகவல்லையோ 


நையா நின்றனென் யானிருந்து இங்ஙன் 
மெய்வா னோர் திரு நாடுமேவினாய் 
ஐயா நீஎனது ஆவி என்பதும் 
பொய்யோ பொய் உரையாத புண்ணியா 


எந்தாய்நீ அமிழ்தீய யாமெலாம் 
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் 
நந்தா நாள்மலர்சிந்தி நண்பொடு 
வந்தாரோ எதிர் வானுளோர் எலாம் 


சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய் 
அற்றான் அன்னது செய்கலான் எனா 
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ 
இற்றாய் யானுனை என்று காண்கெனோ 


நீரும் மேருவும் நீ நெருங்கினால் 
மாறோர் வாளியுன் மார்பை ஈர்வதோ 
தேறேன் யானிது தேவர் மாயமோ 
வேறோர் வாலி கொலாம் விளிந்துளான் 


அருமைந் தற்றம் அகற்றும் வில்லியார் 
ஒருமைந் தற்கும் அடாதது உன்னினார் 
தருமம் பற்றிய தக்கவர்க் கெலாம் 
கருமம் கட்டளை என்றல் கட்டதோ . 

( தாரை புலம்புறு படலம் 1 , 4 , 6 , 7 , 9 , 11 , 13 , 14 , 16 ) 


ஸ்ரீ ராமர் சுக்கிரீவனுக்கு ராஜநீதி கூறுதல் 

பொன்மா மௌலி புனைந்து பொய்யிலான் 
தன்மானக் கழல் தாழும் வேலையில் 
நன்மார்பிற் றழுவுற்று நாயகன் 
சொன்னான் சொல்லின் முற்றிய எல்லையான் 

வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் 
தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் 
தூய்மைசால் புணர்ச்சி பேணித்துகளறு தொழிலையா 
சேய்மையோ டணிமையின்றித் தேவரின் தெரியநிற்றி 


புகையுடைத் தென்னின் உண்டு பொங்கனல் அங்கென்றுன்னும் 
மிகையுடைத்துலகம் நூலோர் வினையமும் வேண்டற் பாற்றே 
பகையுடைச் சிந்தை யார்க்கும் பயனுறு பண்பின் தீரா 
நகையுடை முகத்தையாகி இன்னுரை நல்குநாவால் 


தேவரும் வெஃகற் கொத்த செயிரறு செல்வம் அஃதுன் 
காவலுக்குரிய தென்றால் அன்னது கருதிக் காண்டி 
மேவரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்றிம் 
மூவகை இயல்பினார்க்கும் முனைவர்க்கும் முயல்க முன்னே 


செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை 
வைவன வந்தபோதும் வசையில் இனிய கூறல் 
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்னம 
உய்வன வாகித்தம் மோடு உயர்வன உவந்து செய்வாய் 

சிறியர் என் நிகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இந் 
நெறியிகழ்த் தியானோர் தீனம இழைத்தலால் உணர்ச்சி நீண்டு 
குறியதாம் மேனியாய கூனியால் (தவவுத்தோளாய் 
வெறியன எய்தி நொய்தின் வெந்துயர்க்கடலில் வீழ்ந்தேன் 

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றால் 
சங்னசுயின்றுணர்தி வாலி செய்னகயால் சாலும் இன்னும் 
அங்கவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் 
எங்களிற் காண்டியன்றே இதற்குவேறுவ னமயுண்டோ 

நாயகன் அல்லன் நும்மை நனிபயந்து எடுத்து நல்கும் 
தாய் என இனிது பேணித் தாங்குதி தாங்குவாரை 
ஆயது தன்மையெனும் அறவரம்பு இகவாவண்ணம் 
தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை 


இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் யாண்டும் 
திறத்தினி நோக்கின் செய்தவினைதரத் தெரிந்த அன்றே 
புறத்தினி உரைப்பதென்னே பூவின்மேல் புனிதற்கேனும் 
அறத்தினது இறுதி வாழ்நாட் கிறுதி அஃது அறிதி அன்ப 

( அரசியற்படலம் 6 , 8-15 ] 
ஸ்ரீராமர் கார்காலம் கண்டு சீதையை நினைந்து இரங்கல் 

தன்னகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல் 
மன்மதன் மலர்க்கணை எய்தினான் என 
பொன்னெடுங் குன்றின் மேல் பொழிந்த தாரைகள் 
மின்னொடும் துவன்றின மேகராசியே 


வாரேர் முலையாளை மறைக்குநர்வாழ் 
ஊரே அறியேன் உயிரோ டுழல்வேன் 
நீரே உடையாய் அருள்நின் இலையோ 
காரே எனதாவி கலக்குதியோ 


வெப்பார் நெடுமின்னின் எயிற்றை வெகுண்டு 
எப்பாலும் விசும்பின் இருண் டெழுவாய் 
அப்பாதக வஞ்ச அரக்கரையே 
ஒப்பாய் உயிர்கொண்டாவது ஓவலையோ 


அயில்ஏய் விழியார் விளைஆர் அமுதின் 
குயிலேய் மொழியார்க் கொணராய் , கொடியாய் 
துயிலேன் ஒருவேன் உயிர்சோர்வு உணர்வாய் 
மயிலே எனை நீவலியா டுதியோ 

மழை வாடையொடு ஆடி வலிந்துயிர்மேல் 
நுழைவாய் மலர்வாய் நொடியாய் , கொடியே 
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே 
குழைவாய் எனது ஆவி குழைக்குதியே 

விழையேன் விழைவானவை மேன்மையில் நின்று 
இழையேன் உணர்வு என்வயின் இன்மையினால் 
பிழையேன் உயிரோடு பிரிந்தன ரால் 
உழையே அவர்எவ் உழையார் உரையாய் 

பயில்பாடக மெல்லடி பஞ்சனையார் 
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ 
அயிராது உடனே அகல்வாய் அலையோ 
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ 

அருவினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் 
வெருவர முழங்குகின்ற மேகமே மின்னுகின்றாய் 
தருவல் என்றிரங்கினாயோ தாமரை மறந்த தையல் 
உருவினைக் காட்டிக் காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் 

[ கார்காலப் படலம் 14 , 51-56 , 60 ] 


ஸ்ரீ ராமரை லெட்சுமணர் தேற்றுதல் 

காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ 
நீலமேனி அரக்கர் வீரம் நினைந்த ழுங்கிய நீர்மையோ 
வாலிசேனை மடந்தை வைகிடம் நாடவாரல் இலாமையோ 
சாலும் நூலுணர் கேள்விவீர தளர்ந்த தென்னை தவத்தினோய் 

மறை துளங்கினும் மதிதுளங்கினும் வானும் ஆழ்கடல் வையமும் 
நிறைதுளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்வயின் நிற்குமோ 
பிறைதுளங்குவ அனையபேரெயிறு உடையபேதையர் பெருமைநின் 
இறைதுளங்குறு புருவவெஞ்சிலை இடைதுளங்குற இசையுமோ 

மறையறிந்தவர் வரவுகண்டுமை வலியும் வஞ்சகர் வழியொடும் 
குறையவென்றிடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால் 
இறைவ அங்கவர் இறுதிகண்டினிது இசைபுனைந் திமையவர் கள்தாம் 
உறையும் உம்பரும் உதவிநின்றருள் உணர்வழிந்திடல் உறுதியோ 

காது கொற்றம் நினக்கலாது பிறர்க்கெவ்வாறு கலக்குமோ 
வேதனைக் கிடமாதல் வீரதையன்று பேதைமையாம் அரோ 
போது பிற்படல் உண்டிதோர்பொருள் அன்று நின்று புணர்த்தியேல் 
யாதுனக் பலாதது எந்தைவருந்தல் என்று இயம்பினான் 

பைந்தொடிக்கு இடர்களை பருவம் பையவே 
வந்தடுத்துளதினி வருத்தம் நீங்குவாய் 
அந்தணர்க் காம் அறம் அரக்கர்க் காகுமோ 
சுந்தரத் தனுவலாய் சொல்லு நீ என்றான் 

( கார்காலப்படலம் 64 , 65 , 67 , 68 , 101 ) 

சுக்கிரீவன் தாமசம் கண்டு ஸ்ரீராமர் கோபித்தல் 

அன்ன காலம் அகலும் அறவினில் 
முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய் 
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினான் 
மன்னன் வந்திலன் என் செய்த வாரரோ 

பெறலருந் திருப்பெற்று தவிப் பெருந் 
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் 
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் 
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் 

நன்றி கொன்று அருநட்பினை நார் அறுத்து 
ஒன்றும் மென்மை சிதைத்து உரைபொய்த்துளார்க் 
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ 
சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய் 

வெம்பு கண்டகர் விண்புக வேரறுத்து 
இம்பர் நல்லறம் செய்ய எடுத்தவில் 
கொம்பும் உண்டு அருங் கூற்றமும் உண்டுங்கள் 
அம்பும் உண்டு என்று சொல்லுநம் ஆணையே 

நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது 
வஞ்சம் அன்று மனுவழக் காதலால் 
அஞ்சில் அம்பதில் ஒன்றறி யாதவன் 
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் 

ஊரும் ஆளும் அசும் உம் சுற்றமும் 
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் 
வரும் வாரலிரே எனின் வானரப் 
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் 

இன்னும் நாடுதும் இங்கிவர்க்கும் வலி 
துன்னினாரை எனத் துணிந்தார் எனின் 
உன்னை வெல்ல உலகொரு மூன்றினும் 
நின்னலாற் பிறர் இன்மை நிகழ்த்துவாய் 

நீதியாதி நிகழ்த்தினை நின்றது 
வேதியாத போது வைகுண்டவன் 
சாதியா தவர் சொல் தரத் தக்கனை 
போதியாதி என்றான் புகழ்ப் பூணினான் 

( கிட்கிந்தைப்படலம் 1 8 ] 


சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல் 

நளன் இயற்றிய நாயகக் கோயிலுள் 
தளமலர்த் தகைப்பள்ளியில் தாழ்குழல் 
இளமுலைச்சியர் ஏந்தடி தைவர 
விளைதுயிற்கு விருந்து விரும்புவான் 

உறவுண்ட சிந்தையானும் உரை செய்வான் ஒருவற்கின்னம் 
பெறலுண்டே அவரால் ஈண்டு யான் பெற்றபேருதவி உற்றது 
இறலுண்டே எண்ணின் தீர்வான் இருந்தபேரிடரை எல்லாம் 
நறவுண்டு மறந்தேன்காண நாணுவல் மைந்தஎன் றான் 

ஏயின நறவலால்மற்று ஏழைமைப் பாலதென்னோ 
தாயிவள் மனைவி என்னும் தெளிவின்றேல் தருமம் என்னாம் 
தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா 
மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம் 

அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவின்மூழ்கிக் 
குளித்தவர் இன்பதுன்பம் குறைத்தவர் அன்றி வேரி 
ஒளித்தவர் உண்டுமீண்டு இவ்வுலகெலாம் உணரஓடிக் 
களித்தவர் எய்திநின்ற கதி ஒன்று கண்டதுண்டோ 

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில்கொட்பும் 
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் 
கஞ்சமெல் லணங்குந்தீரும் கள்ளினால் அருந்தினாரை 
நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே 

ஐயநான் அஞ்சினேன் இந்நறவினின் அரியகேடு 
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் 
வெய்யதாம் மதுவையின்னம் விரும்பினேன் என்னின் வீரன் 
செய்யதாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என் 

[ கிட்கிந்தைப்படலம் 18 , 88 , 89 , 92 , 94 , 96 ] 
லட்சுமணர் சுக்கிரீவனை இடித்தல் 

கோளுறுத்தற்கு அரிய குரக்கினம் 
நீள் எழுத் தொடரும் நெடுவாயிலை 
தாளுறுத்தித் தடவரை தந்தன 
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால் 

காவல் மாமதிலும் கதவும்கடி 
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் 
தேவு சேவடி தீண்டலும் தீண்டரும் 
பாவமாம் எனப் பற்றழிந் திற்றவால் 

நீரெலாம் அயல் நீங்குமின் நேர்ந்து யான் 
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும் 
பேரநின்றனர் யாவரும் போர்கலாத் 
தாரை சென்றனள் தார்குழலா ரொடும் 

தாமரை வதனம் சாய்த்துத் தனு நெடுந் தரையில் ஊன்றி 
மாமியர் குழுவின் வந்தான் ஆம்என மைந்தன் நிற்ப 
பூமியில் அணங்கனார் தம் பொது விடைப் புகுந்து பொற்றோள் 
தூமன நெடுங்கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் 


ஆர்கொலோ உரை செய்தார் என்று அருள்வரச் சீற்றம் அஃகப் 
பார்குலாம் முழுவெண்டிங்கள் பகல் வந்த படிவம்போலும் 
ஏர்குலாம் முகத்தினாளை இறைமுகம் எடுத்து நோக்கித் 
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைத்து நைந்தான் 


சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் என்று 
மானவற் குரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் 
ஆனவன் அமைதிவல்லை அறிஎன அருளில் வந்தேன் 
மேனிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புகென்றான் 


வந்தடி வணங்கிநின்ற மாருதி வதனம் நோக்தி 
அந்தமில் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகுமன்றே 
முந்தின செய்கை என்றான் முனிவனும் முளைக்கும் அன்பான் 
எந்தை கேட்டருள்க என்ன இயம்பினன் இயம்ப வல்லான் 

மறந்திலன் கவியின் வேந்தன் வயப்படை வருவிப்பாரைத் 
திறந்திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்துத் தாழ்ந்தான் 
அறந்துணை நுமக்குத்தான் தன் வாய்மையை அழிக்குமாயின் 
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பதன்றால் 


மாருதி மாற்றம் கேட்ட வரைபுரை வயிறத் தோளான் 
தீர்விடைனை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செம்தான் 
ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன் வந்தடுத்தசெல்வம் 
பேர்வரிதாகச் செய்த சிறுமையான் என்னும் பெற்றி 

ஒன்றுமோ அரணம் அன்று இவ் வுலகமும் பதினால்உள்ள 
வென்றிமா மலையும் ஏழேழ் வேலையும் எண்ணவேயாய் 
நின்றதோர் அண்டத்துள்ளே எனினது நெடிய தன்றோ 
அன்று நீர் சொன்னமாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் 

தாழ்வித்தீர் அல்லீர் பன்னாள் தருக்கிய அரக்கர் தம்மை 
வாழ்வித்தீர் இமையோர்க் இன்னல் வருவித்தீர் மரபின் தீராக் 
கேள்வித்தீ யாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவந்தன்னை 
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் 

இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி 
வியந்தனை உதவிகொன்றாய் மெய்யிலை , என்னவீங்கி 
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்யத் தீர்ந்து 
நயந்தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் 

( கிட்கிந்தைப்படலம் 32 , 35 , 42 , 47 , 50 , 53 , 60 , 64. 67 , 72 , 73 , 80 ] 


வானரப் படைத்தலைவர்களும் படைத்தொகையும் 

ஆனை ஆயிரம் ஆயிரத் தெறுழ் வலியமைந்த 
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த 
கூனல்மாக் குரங்கு ஐயிரண் டாயிரகோடித் 
தனையோடும் அச்சதவலி என்பவன் வந்தான் 

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினிக்குரிய 
தேன் தெரிந்துண்டு நெளிவுறு வானரச்சேனை 
ஆன்றபத்து நூறாயிரகோடி யோடமையத் 
தோன்றினான் வந்து அசேடணன் எனும் பெயர்த்தோன்றல் 

ஈறில் வேலையை இமைப்புறும் அளவினிற் கலக்கிச் 
சேறுகாண்குறும் திறல் கெழு வானரச்சேனை 
ஆறெண்ணாயிரகோடி அது உடன்வர அமிழ்தம் 
மாறிலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான் 

ஐம்பதாய நூறாயிர கோடி எண்ணமைந்த 
மொய்ம்பு மால்வரை புரை நெடுவானம் மொய்ப்ப 
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய கீர்த்தி 
நம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான் 

மண்கொள் வாளெயிற்று ஏனத்தின் வலியின வயிரத் 
திண்கொள் மால்வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட 
கண்கொள் ஆயிரகோடியின் இரட்டியின் கணித்த 
எண்கின் ஈட்டங் கொண்டு எறுழ் வலித்தூமிரன் இறுத்தான் 

முனியுமாம் எனின் அருக்கனை முரணற முறுக்கும் 
தனிமை தாங்கிய உலகையும் சலம்வரின் குமைக்கும் 
இனைய மாக்குரங்கு ஈரிரண் டாயிர கோடி 
அனிகம் முன்வர ஆன் பெயர்க் கண்ணன் வந்தடைந்தான் 

தனிவரும் தடங்கிரி எனப் பெரியவன் சலத்தால் 
நினையும் நெஞ்சிற உரும் என உருக்குறு நிலையன் 
பனசன் என்பவன் பன்னிரண்டாயிர கோடிப் 
புனித வெஞ்சின வானரப் படைகொடு புகுந்தான் 

இடியும் மாக்கடல் முழக்கமும் வெருக்கொள இசைக்கும் 
முடிவில் பேருறுக்குடையன விசையன , முரண 
கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி 
நெடிய வானரப் படை கொண்டு புகுந்தனன் நீலன் 

மாகரத்தன உரத்தன வலியன நிலைய 
வேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின் 
ஆகரத்தினும் பெரியன ஆறைந்து கோடி 
சாகரத் தொடும் தரீ முகன் என்பவன் சார்ந்தான் 

தளைத்து வேறொரு மாநிலம் வேண்டுமென்றி ரங்க 
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும் 
விளைத்த வெஞ்சினத்து அரியினம் வெருவுற விரிந்த 
அளக்க ரோடும் அக்கவலன் என்பவனும் வந்தடைந்தான் 

ஆயிரத் தறுநூறு கோடியின் கடை அமைந்த 
பாயிரப் பெரும்படை கொண்டு பாவையின் திரையின் 
தாயுருத் துடனே வரத் தடநெடு வரையை 
ஏய் உருப்புயச் சாம்பன் என் பனும் வந்திறுத்தான் 


வகுத்த தாமரை மலரயன் நிசிசரர் வாழ்நாள் 
உருத்த தீவினை பொருவதோர் பெருவலியுடையான் 
பருத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி 
தொகுத்த கோடி வெம்படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான் 

இயைந்த பத்து நூறாயிரப் பத்தெனும் கோடி 
உயர்ந்த வெஞ்சின வானரப் படையொடும் ஒருங்கே 
சயந்தனக் கொரு வடிவெனத் திறல் கொடு தழைத்த 
மயிந்தன் மல்கசகோ முகன் தன்னொடும் வந்தான் 

கோடி கோடி நூறாயிரம் எண் எனக் குவிந்த 
நீடுவெஞ்சினத் தரியினம் இருபுடை நெருங்க 
மூடும் உம்பரும் இம்பரும் பூமியில் மூழ்கத் 
தோடலர்ந்த தார்க்கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான் 


கறங்குபோல் வனகாற்றினும் கூற்றினும் கடிய 
பிறங்கு தெண்டிரைக்கடல் புடை பெயர்ந்தெனப் பெயர்வ 
மறங்கொள் வானம் ஒன்பது கோடி எண்வகுத்த 
திறங்கொள் வெஞ்சினப் படைகொடு குமுதனும் சேர்ந்தான் 


ஏழின் ஏழுநூறாயிர கோடி என்றிசைந்த 
பாழி நன்னெடுந் தோள்கிளர் படை கொண்டு பரவை 
ஊழி பேரினும் உலைவில உலகினில் உயர்ந்த 
பூழி விண்புகப் பதுமுகன் என்பவன் புகுந்தான் 

ஏழும் ஏழும் என்றுரைக்கின்ற உலகங்கள் எவையும் 
தாழும் காலத்தும் தாழ்விலாத் தடவரைக் குலங்கள் 
சூழும் தோற்றத்த வலிகொள் தொள்ளாயிர கோடிப் 
பாழி வெம்புயந்து அரியொடும் இடபனும் படர்ந்தான் 

தீர்க்கபரதனும் வினதனும் சரபனும் திரைக்கும் 
மால்கருங்கடற்கு உயர்ந்துள மைம் முகத்து அனிகம் 
ஆர்க்கும் எண்ணருங்கோடி கொண்டண்டமும் புறமும் 
போர்க்கும் பூழியில் மறைத முறையினின் புகுந்தார் 

கையஞ்சாயுதம் உடைய அக் கடவுளைக் கண்டு 
மெய்யஞ் சாதவன் மாதிரம் சிறிதென விரிந்த 
வையம் சாய்தரத் திரிதரும் வானரச்சேனை 
ஐயஞ்சாயிர கோடிகொண்டு அனுமன்வந் தடைந்தான் 


நொய்தின் கூடியசேனை நூறாயிரகோடி 
எய்ததேவரும் என் கொலோ முடிவு என்பது எண்ண 
மையல் சிந்தையால் அந்தகன்மறுக்குற்று மயங்க 
தெய்தச்சன் மெய்த்திருநெடுங் காதலன் சேர்ந்தான் 


கும்பனும் குலச் சங்கனும் முதலினர் குரங்கின் 
தம் பெரும்படைத் தலைவர்கள் தரவந்த தானை 
இம்பர் நி றவர்க் கெண்ணரிது இராகவன் ஆவத்து 
அம்பெனும் துணைக்குரிய மாறுரைப்பு அரிது அறவே 


இன்னசேனையை முடிவுற இருந்திவன் நோக்கிப் 
பின்னை காரியம் புரிதுமேல் நாள்பல பெயரும் 
உன்னி செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி 
வீரனைக்கை தொழுது ளையவன் செப்பும் என்ன , 


யாவது எவ்வுலகத்தினின் இங்கிவர்க் கியற்றல் 
ஆவது ஆகுவது அரியதொன்றுள தெனல் ஆமே ? 
தேவ , தேவியைத் தேடுவது என்பதுசிறிதால் 
பாவம் தோற்றது தருமமேவென்றது இப்படையால் 

( தானைகான்படலம் 2 22 , 37 , 30 

சாம்புவந்தன் அனுமாரைத் துதித்தல் 

அவனும் . அண்ணல் அனுமனை ஐயநீ 
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்குழல் 
தவன வேகத்தை ஓர்கிலை தாழ்ந்தனை 
கவனமாக் குரங்கின் செயல் காண்டியோ 

தென் திசைக்கண் இராவணன் சேண் நகர் 
என்றிசைக் கின்றதென் அறிவு இன்னணம் 
வன் திசைக்கு இனி மாருதி நீயலால் 
வென்றிசைக் குரியார் பிறர் வேண்டுமோ 

( நாடவிட்டபடலம் 5 , 7 ] 

மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர் 
நூலை நயந்து நுண்ணி துணர்ந்தீர் நுவல் தக்கீர் 
காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர் கடன்நின்றீர் 
ஆலம் நுகர்ந்தான் என்ன வயப்போர் அடர்சிற்பீர் 

வெப்புறு செந்தீநீர் வளியாலும் விளியாதீர் 
செப்புறு தெய்வப் பல்படையாலும் சிதையாதீர் 
ஒப்புறின் ஒப்பார் நின் அலதில்வீர் ஒருகாலே 
குப்புறின் அண்டத்தப்புற மேயும் குதிகொள்வீர் 

நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவைதீரச் 
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் 
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே 
கொல்லவும் வல்லீர் தோள்வலி என்றும் குறையா தீர் 

மேருகிரிக்கும் மீதுறநிற்கும் பெருமெய்யீர் 
மாரிதுளிக்கும் தாரையிடுக்கும் வரவல்லீர் 
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழியற்றீர் 
சூரியனைச் சென்றொண்கையகத்தும் தொடவல்லீர் 

அறிந்திறத்தா றெண்ணி அறத்து ஆறு அழியாமை 
மறிந்துருளப் போர் வாலியை வெல்லும் மதிவல்லீர் 
பொறிந்திமை யோர்கோன் வச்சிரபாணம் புகமூழ்க 
எறிந்துழி மற்றோர் புன்மயிரேனும் இழவாதீர் 

போர்முன் எழுந்தால் மூவுலகேனும் பொருள் ஆகா 
ஓர்வில் வலங்கொண்டு ஒல்கலில் வீரத்துயர் தோளீர் 
பாருலகெங்கும் பேரிருள் சீக்கும் பகலோன்முன் 
தேர்முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் 

நீதியில் நின்றீர் வாய்மையமைந்தீர் நினைவாலும் 
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் 
ஓதி உணர்ந்தீர் ஊழி நடந்தீர் உலகீனும் 
ஆதியயன்தா னேஎன்யாரும் அறைகின்றார் 

அண்ணல் அம்மைந்தர்க் கன்புசிறந்தீர் அதனானே 
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்னத் 
திண்ணிதமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவின்றால் 
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் 

அடங்கவும் வல்லீர் காலமதன்றேல் , அமர்வந்தால் 
மடங்கல் முனிந்தா லன் னவலத்தீர் மதிநாடித் 
தொடங்கிய தொன்றோ முற்றும் முடிக்கும் தொழிலல்லால் 
டெங்கெட வெவ்வாய் ஊறுகிடைத்தால் இடையாதீர் 


மி ஏகி எம்பி நல்கி சைகொள்வீர் 
ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னல் குறைவில்லாச் 
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இக்கடல் தாவும் 
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் 

( மயேந்திரப்படலம் 9 - 17 , 19 ] 


அனுமார் கடல்தாண்ட இசைதல் 

நீயிரே நினைவின் முன்னம் நெடுந்திரைப் பரவை ஏழும் 
தாய்உலகனைத்தும் வென்று தையலைத்தருதற் கொத்தீர் 
போய் இது புரிதி என்று புலமைதீர் புன்மை காண்டற்கு 
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் 

முற்றும்நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் 
உற்றதே எனினும் அண்டம் உடைந்து போய் உயர்ந்ததேனும் 
இற்றைநும் அருளும், எம்கோன் ஏவலும் இரண்டுபாலும் 
கற்றை வார் சிறைகளாகக் கலுழனின் கடப்பல் காண்டீர் . 


கிஷ்கிந்தா காண்டம் முற்றிற்று . 

ஸ்ரீ ராமஜெயம் 

-----------------
ஐந்தாவது 
சுந்தர காண்டம் 


அனுபர் கடல் தாண்டப் பாய்தல் 

பாய்ந்திடு சிறுபிள்ளை ஆம்பொழு தொரு தினம் மாங்கனி ஆமெனவே 
சாய்ர் திடு கதிரெதிர் பாய்ந்தவன் நெடுகிய கடல்களும் நிலைபிசகித் 
தோய்த்திட வடவரை சாய்ந்திட விசுவசொரூபம் எடுத்தனுமான் 
நாம்துதி பேசும் யேந்திரம் ஏறியண் ணாந்தெதிர் பாய்ந்தனனே .
பல்லவி 
மயேந்திரம் ஏறிப் 
பாய்ந்தானே அனுமான் 
போந்தானே அனுமான் ( பாய்ந் ) 


அநு பல்லவி 

பாய்ந்தொரு மூவுல 
மாய்ந்திடமேவுகு 
கேந்தியராவணன் 
லாந்தகன் எனவே ( பாய் ) 


சரணங்கள் 
1. கேசவ ராகவ 
வாசக மானது 
மோச் நிசசார் 
வீசியவால் எம 
பூசித னே எனும் 
நேசம் விடாமல் 
நாசம தாய்விட 
பாசம் தாகப் 
முட்ட உரங்கிழி 
திட்டுகள் தெரிய 
எட்டு மறும் பொடி 
நட்டணை ஆகப் 

2. வட்ட நெடுங்கடல் 
பட்டு மறைந்திடு 
நெட்டை நெடுங்கிரி 
பட்டுதி ரும்ப்டி (பாய் ) 

3. எடுத்தொரு ராகவன் 
இடுக்கிய காதிலே 
மிடுக்குள ராட்சதர் 
இடிக்கிணை யாகவே 
கொடுத்தகை மோதிரம் 
மடற்குளே யடக்கி 
நடுத்தலை மேல் விழும் 
திடுக்கென ஓடிப் (பாய் ) 


4. அண்டர்கள் முனிவர்கள் 
மண்டிய மருமலர் 
விண்டல ரவி சசி 
குண்டலம் எனமுக 
கண்டதிசயமொடு 
கொண்டனர் பொழிய 
மண்டலம் இருசிறு 
மண்டலம் அசைய ( பாய் ) 


5. சுமந்திடு தாயுரை 
சுமந்து விசுவரூபம் 
அமிழ்ந்திய கடல்படு 
திமிங்கிலம் விசையினில் 
சுமந்தவன் ஈரடி 
சனமந்ததி னாலே 
திமிங்கில மொடுதிமி 
மிதந்திட மேலே 
( பாய் ) 


6. அந்தமலையில் உள் 
நொந்து திசைதிசைபி 
முந்து கொடி முடிபி 
இந்து ணையடிகள் 
தந்தி கரடிபுலி 
த்த அவை வெருள 
ளந்து பளபளென 
தைந்து கிளம்பி ( பாய் ) 


இலங்கணி வதை 
வாரவிஸ்வ ரூபமுடன் பாய்ந்தான் வார்த்தை 
மைநாகற் குனரத்தான் மத்தியில் அங்கார 
தாரை எனும் அரக்கி தடல் பிடுங்கிக் கொண்டான் 
தலங்கு லுங்க இலங்கை முன்னே குதித்தான் அங்கே 
காரமுள்ள அரக்கி இலங் கணிதான் ஆல 
காலம் என வடவாசற் காவற் காரி 
ஆரடா என் றதட்டி வந்தாள் அனுமான் கையால் 
அறை கொண்டாள் கொண்டளவே தரை கண்டாளே 

பல்லவி 

இலங்கணி மடிந்தாளே அனுமன் கையால் 
பலங்கெட முடிந்தாளே ( இலங் ) 


அநுபல்லவி 

சலங்கொள் ஈரிரண்டு தலையும் விரித்துக் கொண்டு 
அலங்கோல மாய்ப்புரண்டு அலறி உளறிப் பண்டு 
(இலங் ) 


சரணங்கள் 
1. பதைப்பி னாலே எட்டுக் 
பாரமலை போல் எழுந் 
அதட்டி அதட்டி ஆயுத 
அத்தனையும் பொடியா 
கையும் பறக்கவிட்டுப் 
தார் வாரமிட்டு 
மெல்லாம் தொட்டுத் தொட்டு 
அனுமான்கை அடிபட்டு ( இலங் ) 

2. பிடிபடாமல் இந்த 
பிரம்மா உரைத்தபடி 
அடிபட்டுக் கொண்டேன் 
ஆட்டுக் குட்டிகள் இந்த 
ஊர்காத்திருப்பேன் ஆதி 
ஆச்சுதே என் சேதி 
போகிறேன் உனக்கினிமீதி 
அரக்கர் படை என்றோதி 
(இலங் ) 


3. ஆரும் எதிர்ந்திடாத 
என்னை நொடிக்குட்சீறி 
அடித்தாயே உன்னை எதிர்ப் பாரில்லைமனந் 
தேறி 
மாருதியே நமஸ் 
காரம் என்று 
வணங்கி வடக்குக் கோட்டை வாசல் காவற் 
கூறி 
காரி ( இலங் ) 


அனுமார் இலங்கையில் சீதையைத் தேடுதல் 

மோதுமிலங் கணினியரா வணன்ப டைக்கு 
முதற்பலி யாகக்கொடுத்து முகுர்த்தங் கொண்டு 
மாதவனா கியராமன் பாதந் தன்னை 
மனங்கொண்டு ராட்சதர்மேல் சினங்கொண் டப்பால் 
தூதன் அனு மான்மாட கூடம் சோலை 
( இலங் ) 

சூளிகைமா ளிகையெல்லாம் சுற்றிச் சுற்றி 
நாதன்உளம் மகிழ்ந்தருளும் சீதைதன்னை 
நாடினான் இலங்கைஎங்கு தேடினானே . 

பல்லவி 

தேடித் திரிந்தானே சீதாதேவி 
தன்னை யனுமானே 
( தேடி ) 

அநுபல்லவி 

ஆடிப் பறக்கின்ற 
அலங்கக் கொத்தளம் தங்கும் 
காற்றும் நுழையாத 
இலங்கைப் பட்டணமெங்கும் 

சரணங்கள் 


1 -வாரரைச்சோலை மந்திரச்சாலையும் 
மலர்ச்சோலையும் சா 
வடிகளும் 
தோரண மேடையும் பூமலர் ஓடையும் 
துலைளும் தலை வாசற் 
படிகளும் 
தேரடி. சளும் சொர்ணப் போரடிகளும் செந்நெற் 
சேர் அடிசளும் மதில் 
அடிகளும் 
கீரைவிரை புகுதா வளைகளும் தொ ளைகளும் 
கெடிகளும் செடிகளும் 
காடிகளும் 
காரியர் காவல் இருக்கும் 
சிறைகளும் 
நாடகசாலையும் நவரத்ன 
அறைகளும் 
ஏராளமாக் கோலம் எழுதிய 
தறைகளும் 
ஏசாந்தஸ் தலமும் தண்ணீர்ப்படித் துறைகளும் 
இடுக்குகளும் இருட் டொடுக்குகளும் இருட்டுறி 
அடுக்குகளும் மூனல முடுக்குகளும் பாய்ந்து 
( தேடி ) 

2. மலை நிகராகிய உப்பரீகைகளும் 
மாடமும் கூடமும் 
பலபல புரவியின் வெள்ளமும் பள்ளமும் 
பாதாளம் செல்லும் 
புரைகளும் 
கொலைசெயும் அரக்கர் கிடைகளும் நடைகளும் 
குங்கும நீராற்றங் 

கரைகளும் நலமுள சந்தியும் பந்தியும் நாற்பத்து 
நாலுலட்சம் வீதி 
நிரைகளும் 
அலைகடலாகிய அகழியும் 
கேணியும் 
ஆயிரம் வெள்ள அரக்கர்தங் 
காணியும் 
தலைஎடுப்பாக உயர்ந்த அட் 
டாணியும் 
சத்திரச் சாலையும் ஒத்ததிட் 
டாணியும் 
தடத்திலும் முனிவர்கள் மடத்திலும் பெண்கள் செய் 
நடத்திலும் புகைபோகா இடத்திலும் போய்ப் பாய்ந்து 
( தேடி ) 

3. மைந்நாக மலைபோலே தூங்கும் கும்பகர்ணன் 
மனையிலும் சூழ்ந்த கொட் 
டகையிலும் 
பொன்னா ரணிமார்பன் இந்திரச் சித்திருக்கின்ற 
புதுமனையிலும் சூ 
ளிகையிலும் 
மெய்நாளும் பேசும் விபீஷணன் வீட்டிலும் 
வீட்டில் ஓமகுண்ட 
வகையிலும் 
பின் அதி காயன் அட் சயன் தேவாந்தகன் 
பேரான மாடமா 
ளிகையிலும் 
வண்ணக் கிளிகள் வளர் 
பஞ்சரத்திலும் 
வானவர்தானவர் பணி 
நகரத்திலும் 
அன்னை மண்டோதரி வாழும் 
தரத்திலும் 
அவளும் அரக்கனும் சேர் அந்தப் 
புரத்திலும் 
அணில் எனவே தொத்தி அணியணியாய் ஒற்றி 
அணைகளெல்லாம் தத்தி அணு அணுவாய்ச் சுற்றித் (தேடி ) 

அனுமார் இராவணனைக் கண்டு கோபித்தல் 

இலகும் அரக் கனையும் மண்டோதரியும் கண்டே 
இவளேசா னகி ஆவாள் எனஉள் ஏங்கி 
நிலைகலங்கி முகத்தொழுகு கோட்டு வாயும் 
நெடுமூச்சும் கண்டிவளோர் அரக்கி என்றே 

மலர்விழியில் அறைந்துகா தினிலே கையை 
வைத்துடனே அரிகரீ என்று சொல்லிப் 
பலபலயோ சனையனுமான் எண்ணி எண்ணிப் 
பாவிப்பான் ராவணன்மேல் கோவிப்பானே 

பல்லவி 

இந்த ராவணனைக் கண்டு சும்மா போனால் 
என்ன அனுமான் நானே 
( இந்த ) 

அநு பல்லவி 

அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ 
ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்க நான் அறியேனோ 


சரணங்கள் 

1. புவியடங்கலும் 
கிட்டவே மண்டோதரி 
புலம்பும் ஓனச 
முட்டவே கண்டவர்கள் 
எவரும் கெக்கலி 
கொட்டவே வாலினாலே 
இழுத்துப் பிடித்துப் பொட்டவே 
கட்டி 
இறுக்கிறேன் தோள் ஓடிய முறுக்கிறேன் தலைபத்தும் 
அறுக்கிறேன் தேங்காய்போல நொறுக்கிறேன் அல்லாமல் 
( இந்த ) 

2. பன்னக சாலை 
திருட்டுவேஷம் 
பண்ணி இலங்கை மட்டும் கொண்டு வந்தான் 
அன்னையைச் சிறையில் 
வைத்த பாவி 
அரக்கன்என் எதிர்ப் பட்டும் கன்னத்தில் 
அடிக்காமலும் கைகளை ஒடிக் காமலும் நெஞ்சிலே 
இடிக்காமலும் என் கோபம் முடிக்காமலும் போவேனோ 
( இந்த ) 


3. காலனுக்குப் 
களுக்கும் உண்டதி 
மேலினி ஏன் வி 
வேலைக் கிதுவே 
காரம் 
காரம் 
சாரம் 
ஆகுமேதேவர் 
விறுதாவாய் 
சாமி சொந்த 
நேரம் - இப்போது 
வல்லவேணும் இவனைக் கொல்லவேணும் என் பேரைச் 
சொல்லவேணும் பிறகு செல்லவேணும் அல்லாமல் 
( இந்த ) 


அனுமார் சீதையைக் காணாததால் இரங்குதல் 

மாதரசைத் தேடவென்று தூதனாக 
வந்த இடத்திந்தரா வணனைக் கொன்றால் 
பேதகமாம் இவனுயிரை வாங்க வீரன் 
பிரசண்டகோ தண்டமே தக்கதென்று 
போதுளதாம ரையிலைமேல் தண்ணீர்ப் போலும் 
புதையல் இழந் தவர்போல அனுமான் ஏங்கிச் 
சீதைதனைக் காணாமல் ராம மந்திரம் 
செபிக்கின்றான் வெளியில் வந்து தவிக்கின்றானே . 

கண்ணிகள் 

1. இந்த இலங்கைநகர் எழுநூறு யோசனை 
எங்கெங்கும் போய்த்தேடி 
கந்தமலர்க்குழ ளாள் என் தாய் சீதையைக் 
கண்ணிற் காணாமல் வாடி 
னேனே 

2. பாராத இடமில்லை தாயாம் சீதையைப் 
பாதகன் செய்ததென்ன 
தீராத நெஞ்சுக்குத் தெய்வமே துணை நான் 
செய்யும் வகைதானினி 
ஏதோ 
தானோ 

3. அற்பராகும் இந்த வஞ்சனை அரக்கர் செய் 
அதர்மம் தானே மெய் 
எப்படி யாகிலும் தர்மமே தலைகாக்கும் 
என்பதெல்லாம் பொய் 
தானோ 

4. நாடிச் சேதி கொண்டு வருவேன் என்றுசாமி 
ராமன் சொல்லுவான் என்றல் 
போச்சே 
தேடி வருவேன் என்று விருது கூறிவந்து 
செடியிலே நுழைந்தாற்போல் 
ஆச்சே 

5. மேட்டுக்குப்பையைப் போலே இலங்கைப் பட்டணம் எங்கும் 
வேருடனே கெல்லு 
வேனோ 
காட்டும் என் தாயை என்று ராட்சதப் பயல்களைக் 
கையாற் பிசைந்து கொல்லு 
வேனோ 
தேனே 

6. விலங்காமல் தவணை சொல்லிவந்த நாளெல்லாம் 
வீணே திரிந்து குறைத் 
சலந்தனிலோ இந்த நிலந்தனிலோ நாக 
தலந்தனிலோ மறைத் 
தானே 
வேதமே 

7. உலகில் எந்தக் காரியமும் ஒருதரம் ராமா என்றால் 
உடன்கூடும் என்றுமல்லோ 
பலதரம் ராமா என்றும் எனக்கிந்தக் காரியம் 
பலியாத தென்னவி 
னோதமே 
றாளோ 

8. ஆனை தன் பலந்தன்னை அறியாது போலே தேவி 
ஆராரைக் கைகுவிக்கி 
பூனைமுன் கிளிபோலே எவர்கள் முன்னே என் தாய் 
புலம்பிப் பரிதவிக்கி 
றாளோ 
சாடவோ 

9. வாதைப் பட்டரக்கர் முட்டைப்போலே நசுங்க 
மலைமலையாப் பிடுங்கிச் 
சீதையைக் காட்டும் மட்டும் கிட என்று ராவணனை 
வாலாலே மாட்டியிழுப் 
பாடவோ 

அனுமார் சீதையைக் காணுதல் 

கொண்டலெனும் அனுமான் இப் படி.கலங்கிக் 
கோலிழந்த குருடனென நின்றான் முன்னே 
மண்டியதோர் அசோசுவனம் கண்டான் தாவி 
வந்ததிலோர் மரத்திருந்தான் அந்த வேளை 
அண்டரிய ஒருமுலையர் பத்துக்கையர் 
அரிமுகத்தர் பரிமுகத்தர் அனேகம் பேர்கள் 
கண்டகவல் லரக்கியர்கள் நடுவிலே ஓர் 
கருக்கண்டான் சீதைதிரு உருக் கண்டானே . 

பல்லவி 

சீதையைக் கண்டானே 
அனுமான் 
செடிமேல் நின்று 
சேவையைக் கொண்டானே 
அனுமான் 
( சீதை ) 

அநுபல்லவி 

ஆதவன் காணாத இலங்கை மடுவிலே 
அரக்கியர் என்கின்ற புலிக்கூட்டம் நடுவிலே 
( சீதை ) 
சரணங்கள் 
1. தாயிவள் தாயிவள் 
நிலைவரமே சாமி 
தனக்கும் இவள் மெத்தம 
னோகரமே 
தீயையும் சுடுமிவள் 
சரித்திரமே தெய்வ 
தெய்வங்களுக்குமிவள் 
மீசரமே . 
சாயும் சந்திர சூரிய வம்மிசமும் பெருக்கும் 
தனியாம் தருமமும் இனிமேலல்லோ செருக்கும் 
ஏய அடையாளங் கண்டேன் அஞ்சேனொரு வருக்கும் 
என்று செல்லரித்தாலும் இருந்திடத்தே இருக்கும் (சீதை ) 
2. தேவிக்குத் தாயென்பர் 
அல்லோ 
பூமி - அவன் 
திடத்தையும் வென்றாள் இந்த அபி சாமி 
பாவி அரக்கர்க் 
கிவள் கால 
நேமி இதைப் 
பார்க்கப் பெற்றான் இலையே என் சாமி 
பூவிளந் துகில்மேல் 
அழுதழுதழுது மொய்த்த 
புனல் தானே முலைத்தட 
அனலாலே 
சேவலைத் தேடுமிளம் 
பெடைபோலே மெத்தத் 
திகைத்துத் திகைத்து வடமுகத்திலே முகம் வைத்த 
(சீதை ) 
3. இருஷிகட்கு மகிமை 
என்ன 
இவள் 
ரா ம - மூர்தசீ 
வனத்தைக் 
சா குபோலே வற்றிப் 
பொசிப்பை 
தான் செய்யும் தவமே மகிமை 
உண்டு 
வற்ற 
கண்டு 
கொண்டு 
விண்டு - அம்மை 
ஒரு சூரியன் முன்னே 
மதிபோலிந்த வல்லி 
உவமைகொண்டாள் அரக்கர் ஒழிய எவர்க்கும் நல்லி 
திருவே இவள் அந்த 
அரியகோதண்ட வில்லி 
செயமினி சாமிகாரியம் பயமில்லை என்று சொல்லி 
(சீதை ) 

சீதாதேவி திரிசடையோடு முறையிடல் 

அனுமனிந்தப் படிசீதை தனை மரத்தி லிருந்து கண்டான் 
அப்பால் அந்த 
வனிதையும் தாமரையிலைமேல் தண்ணீராய்த் திரிசடைதன் 
வதனம் பார்த்தாள் 
கனமுளஎன் சிறைநீக்கிச் சாமிமுகந் தனைக்காணக் 
கடவேனோ நான் 
உனதுமதி ஏதென்றே உருகுவாள் அமைசொல்லி 
உருகுவாளே 

கண்ணிகள் 

திரிசடையே 
1. ஐயோ நானொரு பெண்பிறந்த கதையை 
ஆருடனே சொல்லுவேன் 
தெய்வமும் நீ பெற்ற தாயும் நீ அல்லாமல் வேறு 
திக்குண்டோ கேளாயம்மா 
திரிசடையே 
திரிசடையே 


2. மங்கைமார் கொண்ட கணவனைப் பிரிந்தால் 
மனையிலும் இருப்பாரோ 
எங்கெங்கும் வசையாச்சே கேட்பவர் 
என்னென்று பழிப்பாரோ 
திரிசடையே 
திரிசடையே 

3. கடலிலே இந்த இலங்னக இருக்குதென்று 
காகுத்தர் அறியாரோ 
தொடரும் என் சேதி அவர்க்குச் சடாயுராசர் 
சொல்லாமல் இறந்தாரோ 
திரிசடையே 

4. துணையாக வேவைத்த கொழுந்தனை அவர் பின்னே 
தூரப் போகச் சொன்னேனே 
திரிசடையே 
கணவனார் மெத்த நீலிஇவள் என்றென்னைக் 
கை நழுவ விட்டாரோ 
திரிசடையே 
திரிசடையே 

5. சூத்திரம் செய்து ராட்சதன் இவன் என்னைக் 
கொண்டுவந் தானல்லோ 
இத்தனை நாளவன் தின்று விடுவானென்றே 
எண்ணித் திரும்பினாரோ 
திரிசடையே 
திரிசடையே 

6. அரசில்லா அந்த நாடு காடாச்சுதென்று 
ஆலோசனை செய்து 
பரதனும் தாய்மாரும் வந்து அழைக்க அவர் 
பதியிலே போய்விட்டாரோ 
திரிசடையே 

7. சனகராசன்வில் ஒடித்தவன் முன் எறிந்த 
தடந்தோளை என்று காண்பேன் 
திரிசடையே 
கனமுடனேப ரசுராமன் வில்லைப் பறித்த 
கைகளை என்று காண்பேன் 
திரிசடையே 
8 வைத்த போதிலும் கைகை பின்னே அந்த அரசை 
வாங்கிய போதிலும் 
திரிசடையே 
சித்திரச் செந்தாமரை மலரைப் போலே மலர்ந்த 
திருமுகம் என்று காண்பேன் 
திரிசடையே 
9. கொழுந்தி நான் என்றும் குசுனுக்குத்தாம் தோழரென்று 
கூறினதும் பொய்போமோ 
திரிசடையே 
எழுந்து செல்லும் விராதன் துதியை மனமகிழ்ந்த 
இரக்கமும் போய்விட்டதோ 
திரிசடையே 
10. கரதூஷணர் பதினாலாயிரந்தேரும் 
கணத்திற் பொடி செய்தாரே 
திரிசடையே 
சரவேகமும் கையும் மெய்யுமென்னிருவிழி 
தம்மில் நிற்கின்ற தையோ 
திரிசடையே 
திரிசடையே 

11. வல்லபேருக்குப் புல்லும் ஆயுதமென்ற 
வழக்கச் சொல்லைப் போலத் 
புல்லினாற் காக்கைக் கண்டோற் கண் கொடுத்த 
புண்ணியரைக் காண்பதென்றோ 
திரிசடையே 

12. சற்றும் வைத்துப் பாராமல் பாவிராவணன் வார்த்தை 
தணல் போல் இறைக்கிறானே 
திரிசடையே 
பத்துத்தலையும் பனங் காய்போல் விழுந்துருளப் 
பார்ப்பதெந் நாளோநான் 
திரிசடையே 

13. பாயும் கைகளும் என்னைப் பார்க்குங் கண்களு மிந்தப் 
பழிவார்த்தை சொல்லும் வாயும் 
திரிசடையே 
பேயும் பெருங்கழுகும் நாயும் நரியும் பிச்சுப் 
பிடுங்கித் தின்னக் காண்பேனோ 
திரிசடையே 
14 . குடிமகனிந்திரசித்தன் கொழுந்தனால் பட்டானென்ற 
கூக்குரல் என்று கேட்பேன் 
திரிசடையே 
அடியற்ற மரம் போல்மண் டோதரி ராவணன் முன் 
அலறி விழக்காண்பேனோ 
திரிசடையே 

15. பேயாம் அரக்கனையும் சேனைகளையும் என்றன் 
பிராணநாதர் கொல்வாரோ 
திரிசடையே 
தாயேஉன் அப்பன் வீடுபாற்கடல் போலே பொங்கித் 
தழைக்க நான் காண்பேனோ 
திரிசடையே 
16. இடதுகண் துடிப்பதும் இடதுதோள் துடிப்பதும் 
ஏதோ அறிகிலேனே 
திரிசடையே 
டது செவியிலொரு வண்டுவந்தூதக் கண்டேன் 
என்ன சொல்லடியம்மா 
திரிசடையே 
திரிசடையே 

17. வந்தசாமிமுன் மிதிலையில் என்கை தொட 
வரக்கண்ட குறியிவை 
அந்தநாளிற் குறி இந்தநாளிலும் கண்டேன் 
அதிசயம் ஏதோ அம்மா 
திரிசடையே 

சீதாதேவிக்குத் திரிசடை கனாநிலை உரைத்தல் 

கோதைமனம் தளர்ந்திந்தக் குறிகுணங்கள் சொன்னளவில் 
தூதுவன் இப்போதுனக் கோர் சுபாவத்தைச் சொல்லுவன்காண் 
காதலியே நானும் நல்ல கனவுகண்டேன் கேள் எனவே 
சீதைமனம் தேறியிடத் திரிசடையும் சொல்வாளே 

பல்லவி 

என்கனவைக் கேளாயம்மா 
- சானகியம்மா 
ஏனுனக்குக் கவலையம்மா 
( என் ) 

அநு பல்லவி 
மங்களம் உனக்குண்டாமே வல் அரக்கன் வாழ்வுபோமே 
( என் ) 

சரணங்கள் 
1. சுந்தரி மண்டோதரி வெறுந்தலையைச் சீவினாள் 
அந்திடத்திலே அவள் விழுந்தழுது கூவினாள் 
இந்தமன்னன் வீடுவிட் டெழுந் தொருபெண் 
தாவினாள் 
என் தகப்பன் வீட்டில் அவள் 
வந்து கந்து 
மேவினாள் ( என் ) 
2. பூவுகளெல்லாம் கரிக 
ளாக்கருகவும் கண்டேன் 
கோவில்களெல்லாம் மெழுகு போலுருகவும் கண்டேன் 
பேய்வகையும் ஓரிகளும் 
மேபெருகவுங் கண்டேன் 
ராவணன் எண்ணெய்த்தலை யோடேவருகவும் கண்டேன் ( என் ) 
3. பத்து முடி ராவணனைக் 
கொத்துட னே கொல்லவோ 
வைத்தசிறை விட்டமரர் சொஸ்தமொடு செல்லவோ 
உத்தமியுன் பத்தினி 
மகத்துவம் என்ன 
சொல்லவோ 
இத்தனையும் லங்கைக் கனர்த்தம் என்ப தல்லவோ ( என் ) 

சீதாதேவி பக்கல் ராவணன் குறையிரத்தல் 

திரிசடையிப் படி சொல்லச் சனகி கொஞ்சம் 
தெளிந்தளவில் இது நல்ல வேளை என்றே 
மரம்உறையும் அனுமானும் குறுகும் போதில் 
மகுடம் ஒருபத்தும் மின்ன மாதராட 
அருகினிற்கட் டியம்போட அந்த ராவில் 
அரக்கன்வந்தான் அருந்ததிக்கும் தெய்வமாகும் 
கருணைவல்ல சீதைமுன்னே தான்ஏ தோதோ 
கரைக்கின்றான் பல் கெஞ்சி உரைக்கின்றானே 

கண்ணிகள் 

1 .. என்ன செய்வேன் நான் என்ன செய்வேன் நான் 
என்னசெய் வேன் மிதிலை 
அன்னமே 
மன்மதன் கணையாலே பட்டுவிழுவேன் என்று 
மலரயன் வகுத்தானோ 
முன்னமே 
2. அங்கம் நையவும் விட்டுப் பெண்கள் வையவும் காமன் 
அம்பா லெய்யவும் சிந்தை 
நோகவோ 
திங்கள் சுடவும் பனை அன்றில் சுடவும் வீசும் 
தென்றல் சுடவும் வெந்து 
போகவோ 

3. ஆலைக்கரும்பு போலும் வேலைத்துரும்பு போலும் 
ஆசை வலையிற்சிக்கி 
மாயவேர் 
மாலைக்கும் காலைக்கும் ஊண்உறக்கம் இல்லாமல் 
வரவர நாளுக்குநாள் 
தேயவோ 
4. அந்தூதும் நெல்லானேனே நொந்து நொந்து போனேனே 
அனுக்கிரகம் நீ செய்ய 
வேணுமே 
சந்தோஷமாகப் பாராய் என் தன் கவலை தீராய் 
சாஷ்டாங்க தெண்டனிட்டேன் 
காணுமே 

5. மறக்குமோ உனதாசை வார்த்னதான்ற ருளாயோ 
வானோர் பழிக்சநின்று 
கூசவோ 
பிறக்கும் பிற குந்தலை முனறக்கெல்லாம் ராவணனோர் 
பெண்ணால் இறந்தானென்று 
பேசவோ 
6. பதியும் உனதெனது நீதியும் உனது சொன்னேன் 
வணங்குமென் கவலையைத் 
தீர்த்திடாய் 
நானே உன்னைப் பணிந்தால் பதினால் உலகுக்கும் நீ 
நாயகி ஆமல்லோ 
பார்த்திடாய் 
7. கண்ணும் கருத்தும் நீயே மன்மதன் செய்யும் போனரக் 
காட்டிலும் நல்லதெம் 
வானதயே 
எண்ணந்தப்பிப் போனேனே நாயிலும் பேயானேனே 
எனக்கொரு புத்தி சொல்லாய் 
சீதையே 

சீதாதேவி இராவணனை இடித்தல் 

மிண்டாளன் அரக்கனிந்த வீண்வார்த்தை சொல்லச் சொல்ல 
கண்டாளன் சனகியுமென்றன் காகுத்தன் சரத்தினாலே 
உண்டான தெல்லாம் தோற்க ஊழிவந் தடுத்ததையோ 
சண்டாளன் எனக் கோபித்துத் தள்ளுவாள் விள்ளுவாளே . 

பல்லவி 

ராட்சதப் பதரே துன்மார்க வார்த்தைகள் 
ஏற்குமோ போடா ராட்சதப்பதரே 
( ராட் ) 


அநு பல்லவி 

காட்சியா 
தாழ்ச்சி 
வாழ்ச்சி 
சாட்சி 
என்னைப் 
ஆம்பழி 
வீணிலே 
பார்க்காதே - இந்த 
ஏற்காதே உன் 
போக்காதே - அர 
தோற்காதே 
ஆனதைத் 
( ராட் ) 


சரணங்கள் 

1. கிளைக்கும் மூன்று லோகமும் செலுத்தும் உன்கோலும் உன் தன் 
கீர்த்தியும் ஏன் 
தொலைக்கிராய் - கெருவத்தாலே 
வெளிக்கப் கீர்த்தியாகப் பாவபுண்ணியமும் பாராமல் 
விருதாவிலே ஏன் 
குலைக்கிறாய் - ஆகாசமட்டும் 
அளக்கும் இருப்புத் தூணைச் செல்லரிக்குமோ இத்தை 
அறியாமல் ஏன் 
மலைக்கிறாய் அக்கினிதன்னில் 
குளித்துத் தவங்கள் செய்து பெற்றவரத்தை யெல்லாம் 
கொஞ்சத்தில் ஏன் 
கலைக்கிறாய் அடசண்டாளா 
வளர்த்திய வார்த்தைகள் படியாதே 
திணல் 
ஒளிக்கமுன் தானையில் முடியாதே -- 
என்னை 
இளக்கார மாக்கிடத் துணியாதே -எரி 
விளக்கினில் பூச்சிபோல் மடியாதே 
( ரா .. ) 

2. காயத்துடன் பிறந்த தங்கை மூக்கும் முலையும் 
காதும் அறுக்க 
விடுத்தாய் வெளி நில்லா தென் 
நாயகற் சஞ்சியந்த மாயமான் பின்னெதிரிட்டு 
நாய்போற் பதுங்கி அடுத்தாய் - நமன் போலும் உன் 
தீயரூபத்தைக் கண்டு மூர்ச்சையாய்ப் போன என்னை 
தீண்டாமல் மண்ணோ டெடுத்தாய் கொல்வேன் என்றுமேல் 
பாயும் சடாயுவாலே பூனைவாய் எலிபோல்உன் 
பவிஷெல்லாம் பறி 
கொடுத்தாய் - அடசண்டாளா 
தாயிவள் எனமனம் 
யேயே இம்மாத்திரம் 
தீயுரை சொன்ன நாக் 
வாயிலும் புழுவரச் 
அறியாதோ போட்டா 
தெரியாதோ என்னனத் 
கெரியாதோ 
சொரியாதோ 
பத்து( ராட் ) 

3. குதிக்கிறாய் சும்மாப் போமோ இப்பாவம் பின்னுக்கொன்று 
கோடியாய் வந்து 
வாய்க்குமே உன் செல்வமெல்லாம் 
செதுக்கிற அரம்போல் என் பொறுமை ஆகிறதர்ம 
தேவதை தானே 
தேய்க்குமே உன் குலந்தன்னை 
மதிக்கா எட்டினயக் கூடி இலவுந்தீபட்டாற் போலென் 
வயிற்றெரிச்சலே 
தீய்க்குமே என்பிராணநாதர் 
விதிக்கும் பாணம் உன் தன் தலையைப் பனங்குலை போல் 
வெட்டி வெளியிற் 
சாய்க்குமே அட சண்டாளா 
அதற்குள்ளே துள்ளிச் 
பனதப்பினால் ஒன்றும் 
மதத்தினால் கெட்டுப் 
கொதிக்கும் நரகத்தில் 
சாகாதே - இந்த 
ஆகாதே வாய் 
நாளைக் 
மூழ்காதே 
போகாதே 


சீதாதேவி தனியே புலம்பல் 

சானகி இப் படிவைய அரக்கன் சீறீத் 
தான்நடந்தான் அரக்கியரைக் கலைக்கச் சொன்னான் 
ஆன துகண் ட் - னுமானும் இவனை இங்கே 
அடிப்பெனென்று கையொடுகை பிசைந்தான் அப்பால் 
2 -தானொருமந் திரம் செபித்தான் மாதரெல்லாம் 
சவம்போல உறங்கிவிட்டார் அந்தவேளைக் 
கானகத்தில் இளங்குழந்தை போலே சீதை 
கரங்குவாள் தனியே தான் இரங்குவாளே , 

கண்னிகள் 
1. தேற்றுவாரில்லை ஆற்றுவா ரில்லை தெய்வமே என்ன செய்குவேன் 
ஏற்றும் அரக்கியர் வார்த்தை இடும்பைவிட்டு எந்தநாள் இனி உய்குவேன் 
அந்த வினைக்கிந்த இலங்கையிலே பொல்லா அருஞ்சிறையில் விழுந்தேனே 
3. தம்பிமார் அன்னைமார் எல்லாரையும் தவிக்கவிட்டு வந்தபோதே 
என்பொருட்டில் அவர்க்கிங்கே வரமனம் ஏன்வருமோ வாராதே 
4. நிறைதவ சுக்குக்குறை இவளென்று நினைந்துகை 
விடுவாரோ 
பறையர் ஊரிலே சிறையிருந்த என்னைப் பரிந்துகை தாடுவாரோ 
5. தாழ்வு செய்தேனோ தெய்வமே என்பதன் சாமிநெஞ்சை உருக்காயோ 
பாவி உயிரே என்சாமி திருமுகம் பார்க்கும் மட்டும் 
இருக்காயோ 

6. ஏதுகாண் இவர் அரக்கிமார்களோடே இந்தப் பேரிடுவான் ஏனோ 
நாதன்பிரியவும் இன்னம் இருந்தேனே நானல்லோ அரக்கிதானே 

7. தந்தை சனகனும் இந்த வினைகண்டு தன்னுயிரும் பிழைப்பானோ 
அந்த இளைய கொழுந்தனும் என்னை அருமைசொல்லி அழைப்பானோ 
8. புல்லும் பூமியும் உள்ளமட்டும் இந்த பொல்லாப்பழி சிறந்தேனே 
சொல்லுவார் சொல்லும் வசைக்கெல்லாம் ஒரு தோதகிபெண் 
பிறந்தேனே 

அனுமார் ஸ்ரீராமரை வருணித்தல் 
அன்னையெனும் சனகியிவ்வா றழுது வாடி 
ஆவி இனி வைத்திரேன் என்று பிராணன் 
தன்னைவிட நினைத்தொருபூஞ் செடிக்கீழ் வந்தாள் 
சாமி அனு மானுமுன்னே வணங்கிக் கொண்டு 
என்ன தசரதராமன் தூதன் நானே 
எங்கெங்கும் தேடினேன் அனுமான் என்பேர் 
சொன்னபடி சொல்லவந்தேன் சாமிரூபம் 
சொல்லுவேன் என்றெடுத்துச் சொல்லுவானே 

பல்லவி 
அந்தராம சவுந்தரியம் என்னால் 
அறிந்து சொல்லப் போமோ அம்மா 
( அந்த ) 

அநுபல்லவி 
கந்தம் மேவும் அர 
விந்தமலரும் அவர் 
காலுக்கு நிகராமோ கைக்குத்தான் சொல்லப்போமோ 
( அந்த ) 

சரணங்கள் 
1. உருண்ட மணிமுழங் காலுக்குவமையவர் 
உடைய அட்சய தூணி 
ஏற்குமே 
திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் 
திசையானை துதிக்கையும் 
தோற்குமே 
வரிந்தமர வுரிஇடையும் நடையுங்கண்டோர் 
மனதையெல்லாம் உருக்கி 
வார்க்குமே 
தரந்தர மாயுல கிருந்த வயிற்றுக்குச் 
சரிசொல்லக் கூடுமோ 
யார்க்குமே 
விரிந்தமார் புக்கினண பூமியகலங் 
காணும் 
விளங்கும் கழுத்துக்குநேர் இளங்கமுகே பூணும் 
பரந்த புசங்களுக்கு மேருமலையே 
நாணும் 
பார்க்கப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேணும் 
( அந்த ) 

2 . அதி செயமுடன் பளபளென்றில குகண் 
ணாடிநி கர்த்தக 
போலமும் 
மதிகள் ஒருசத கோடிக்கு மேலான 
மங்கள மலர்முகக் 
கோலமும் 
கதியென்றெடுத்தவர்க்கு பதியும் நிதியும் தரும் 
கருணா நயனவி 
சாலமும் 
குதிகொளும் பவளவாயும் சிறு நகையும் 
குருமந்தகாசவி 
லோலமும் 
புதுமலையினில் விழும் பொன்னருவி 
யைப்போலும் 
பூமணிமார்பினிற் புரளுமுப் 
புரிநூலும் 
எதிரில்லாதகோ தண்டமும் 
ஒருகாலும் 
எழுத வேண்டுமென்றால் ஆமோமன் 
மதனாலும் ( அந்த ) 
3. பெருத்த தாமரை இலைபோ லே ஒளி 
பெருகிய மேனிச்சிங் 
காரமும் 
வரித்த சிந்துர ரேகையும் புருவமும் 
வளர்ந்த நெற்றிவிஸ் 
தாரமும் 
பருத்த திருமுடி வேணியும் வேணியில் 
பசுந் துளவமலர் 
ஆரமும் 
தரித்த திருவாழி கொடுத்துன் சேதியை 
தனியே என்னுடன் சொன்ன 
சாரமும் 
திருத்திச் சொல்ல ஒருவாயில்லை 
தெரிந்தும் தெரியாமலும் சொன்னேன் நீ பொறுப்பாயே 
ஒருக்காலே உண்டவர் மகிமை நீ 
அறிவாயே 
உனக்குத் தெரியும் வேதம் தனக்குத் தெரியும்தாயே ( அந்த ) 

சீதாதேவி லட்சணியை தெரிசித்தல் 

நாட்டிலே இந்தவண்ணம் ராமர்க்குள்ள 
நற்குறியெல் லாம் சொன்னான் நாடுவிட்டுக் 
காட்டிலே நடந்ததுவும் சுருங்கச் சொன்னான் 
கரதலா கமலம்போல் அனுமான் பின் ன 
ஆட்டிடும் பசியாலே விழுந்தோர் கையில் 
அண்டர்உல கத்தமுதம் ஈந்தாற் போல 
நீட்டினான் திருவாழி அதனைக் கண்டாள் 
நிசங் கண்டாள் சீதைபர வசங் கொண்டாளே 
ஒருவாயே 

பல்லவி 

கொண்டாளே 
சாமிமோதிரம் 
கண்டாளே 
( கொ ) 

அநுபல்லவி 

எண்டிசை போற்றிய 
என் அனு மானிட 
இலங்கா புரத்திலே 
பொன்னிரு கரத்தாலே 
( கொ ) 


சரணங்கள் 

1. கந்தமலர்க்குழல் மேலே சூடி 
கண்ணுக் குக்கலத்தண் 
ணீர்விட்டு 
காணக் கிடைத்ததே கார்த்திகை பிறைபோலே 
கண்டேனே என்று 
முறைபட்டு 
அந்தராம மந்திரம் எழுதிய 
அடையாளமோ 
திரந்தொட்டு 
அணைத்து முலைமேல் இணைத்துடம் பிலே 
அடங்கா மகிழ் ச்சிகொண்டடிக்கடி முத்தமிட்டு ( கொ ) 
2. எரிந்தபசியால் வருந்தும் நாகம்முன் 
இழந்த மணிதனை 
அடுத்தாற்போல் 
ஏதினிமேல் வாராதென் றொழிந்தவர் 
எறிந்த உடைனமயைக் கண் 
டெடுத்தாற்போல் 
பெருந்தரையிலொரு கால்மேலே நின்று 
பிள்ளை பெற்று மலடி 
படுத்தாற்போல் 
பின்னும் முன்னும் தோன்றாமல் தவிக்கிற 
பிறவிக்குரு டனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற்போல் ( பொ ) 
3. சிந்தாகுலம் விண்டேன் உன் 
திருவாக் தால் என் 
குறையாற்றி 
தீயராவணப் பாவிஊரிதைத் 
தேடிவந்தா யே என் 
மனந்தேற்றி 
தந்தாயே என் சீவனை உனக்கினித் 
தருவதென் னஇதற் 
கெதிர்மாற்றி 
தாயும் தந்னதயும் குருவும் தெய்வமும் 
சகலமும் நீயே என் றனுமானை வாழ்த்தி 
( கொ ) 

அனுமார் சீதை பிரிந்தபின் நடந்த செய்திகளை அவளுக்கு விவரித்தல் 

கண்டுதிரு வாழியினால் மகிழ்ந்த சீதை 
கடல்பாய்ந்த விசுவரூபத்தைக் காட்டக் 
கொண்டு மகிழ்ந் தாள் பின்னும் அனுமா னேநான் 
கோணாமல் மானுக்காய் நெடுந்தூரத்தில் 
மண்டு ரகுவீரன்போய் மீண்ட வாறும் 
வந்திளையோ னுடன்கலந்த வாறும் நீதான் 
பண்டுபழகிய வாறும் சொல்வாய் என்னப் 
படிக்கின்றான் அவள் குறையை முடிக்கின்றானே 

பல்லவி 

( கேள ) 
கேளம்மா சொல்லுவேன் - முன் உள்ளதெல்லாம் 
கேளம்மா சொல்லுவேன் 

அநுபல்லவி 
நீளமான் அனமாரீசன் மறைந்து நின்றுடனே 
உயிர்க் கொன்றுடனே 
மீளவே ரகுவீரன் வந்து சேர்ந்தபின் 
( கேள ) 

சரணங்கள் 

வாடி 
தேடி 
1. இனம் பிரிந்த மான்போலே என் தாயே உன்னை 
நாடி 
உணும் கனிகாய்சளும்போய் உலைவாய் மெழுகாய் 
அனந்தம் காடும் மலையும் ஆறெங்கும் தேடித் 
தனந்தனியே புலம்பித் தம்பியாலுயிர் 
வனந்தனில் வந்து சடாயுவினால்மதி தேறவே ராவணன் 
முனைந்ததெல்லாம் சொல்லியவன் உயிர்வானம் ஏறவே அந்நேரம் 
சினந்து கவந்தனைக் கொன்று சவரிமொழி கூறவே 
உன் தன்னை 
நினைந்து நினைந்தறி வானது போய்த்தடு மாறவே நாயேனும் 
பணிந்திட வேதன தடியருள் 
பணிகளும் மணிகளும் வகைவகை நோக்கித் 
துணிந்திடும் வாலியை மாட்டினன் 
சுக்ரீவனை முடி சூட்டினன் 
பின்னே 
( கேள் ) 

ஆக்கிப் 
முன்னே 
2. அறிகிற தூதர் தம்மை அந்தந்தத் திசையில் 
ஏவி 
நெறியே தெற்குத் திசைக்கு நீபோ என்றென்னைக் கூவி 
பொறியே ஆரும் மோதிரம் கைபோட்டதுதந்து தேவி 
குறிகுணம் எல்லாம் சொல்லக் கொண்டு தென்திசை தாவி 
முறைமுறையே வெகு தேசமெல்லாம் அலைந் தெட்டினேன் - என்னோட 
பிறகு செல்வானர வாராதிரு மென்று தட்டினேன் - அந்நேரம் 
தரையிலிருந் தாகாசமளவும் போய் 
முட்டினேன் - மயேந்திர 
பருவதமேல் நின்று பாய்ந்திலங்காபுரி கிட்டினேன் - கோட்டைக்குள் 
குறுகுறென நடக்கிற வேளையிலெதிர் 
கொண்டிடும் லங்கணி தொண்டையும் மண்டையும் 
நெற நெறெனநெரிந் திடவே ஊர்விட்டு 
நீங்கினள் ஆவியை வாங்கினன் நானே 
( கேள ) 

3. அகழும் இலங்கை யெல்லாம் அணு அணுவாகச் சுற்றி 
தகைசேரும் மத்திட்ட தயிர் போலவே என் 
புத்தி 
நிகழும் வேளையில் ராமநேசம் வந்தது 
பற்றி 
மகிழவே நான் அசோக வனத்தில் வந்தேனே 
ஒற்றி 
வகையுடனே ராவணன் வந்துன் எதிர்படித்ததும் - சண்டாளா 
அகல நில்லடா என்று நீ வாய்மேல் அடித்ததும் அம்மாஉன் 
முகமலர்மேல் இருகண்ணால் முத்துகள் வடித்ததும் 
சகலமும் அறிவேன் உனதிடதுபுேறம் துடித்ததும் இதெல்லாம் 
பகலவன் முன்பனி ஆய்விடும் மெய்யே 
பாவி அரக்கர்கள் வாழ்வதும் பொய்யே 
செகமுழு திலும் ஒரு திருவுள மேபொது 
தேன்மொழியே அம்மா என்வரலாறிது 
( கேள ) 

அடியேன் 

அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல் 

சொல்லி இந்த வகையனுமான் பின்னும் என் தன் 
தோள்மேலே எழுந்தருள்வாய் அங்கே பாய்வேன் 
அல்லதிலங்கை யோடெடுப்பாய் எனினும் செய்வேன் 
அரக்கரை வேர்பிடுங்கெனினும் கணத்திற் செய்வேன் 
பல்லரக்கர் சிறையினிலே கண்டான் மீட்கப் 
பயப்பட்டான் உயிரைக் காப்பாற்றினான் என்று 
எல்லவரும் சொலப் போகேன் தாயேசீதை 
ஏதென்றான் இதற்குவகை ஓதென்றானே 

அனுமாருக்குச் சீதை மறுமொழி கூறுதல் 
எண்ணி அனுமானிந்த வார்த்தை சொல்ல 
எனை ஒருவரும் தொடப்போ காது கண்டாய் 
மண்ணதைத் தொட்டரக்கன் எனை எடுத்தான் கண்டாய் 
வலியகோதண்டபதி அவர்பேர் கண்டாய் 
நண்ணி என்றன் சிறை அவரே மீட்டிடாமல் 
நடைத் தூதன் மீட்டால் எப்படியாம் கண்டாய் 
கண்மணியே மகனே என்றவனை நெஞ்சம் 
கரைக்கின்றாள் சீதை கனிந்துரைக் கின்றாளே 

பல்லவி 

இம்மாத்திரம் செய்வாய் அனுமானே - என்னை வேண்டி நீ 
ம்மாத்திரம் செய்வாய் அனுமானே 

அநுபல்லவி 
சும்மாவிட்டு விட்டாலே தோஷம் உண்டு தன் மேலே 

சரணங்கள் 
1. வேடிக்கைக்கோ பிடித்தார் 
வில்லு - அவர்க்கிந்த ஊர் 
ஈடோ இதெல்லாம் ஒரு சில்லு - நான் சபித்தாலும் 
காடாகாதோ இலங்கைக் 
கல்லு - துணிந்தவர்க்குப் 
பாடோ பிராணன் என்ன ஓர் புல்லு - அந்தூதிப் போட்டுக் 
கூடுமாத்திரம் இருந்த 
நெல்லு - போலே ஆனேனே 
ஓடிப்போய் சாமி முன்னே நில்லு - அவருடனே 
கூடவே அயோத்திக்குச் 
செல்லு - என்னை எங்கென்று 
தேடும் மாமியார்க்கு நான் 
தெண்டனிட்டேன் என்று சொல்லு 
( இம்மா ) 

குருவார்த்தையாக உன்மேற் பாரம் - போட்டுச் சொல்கிறேன் 
ஒருமாதம் நிற்கும் என் சரீரம் - கல்யாணம் செய்த 
பெருநாளில் என்மனைவி 
சாரம் - அறிந்துகைமேல் 
பரவசம் சொன்னாரே விஸ் தாரம் - அத்தை நம்பி நான் 
வருவாரல்லோ இத்தனை 
தூரம் - என்றிருந்ததை 
தெரியாமல் ஊர்க்குப்போம் அந்நேரம் நீயும் கூடப்போய் 
அருகே நான்சொன்ன உப 
சாரம் சொன்னபின் கங்கைக் 
கரைக் கண்டால் சீதை கடனும் 
கழிக்கச் சொல்வாய் உப காரம் 
( இம்மா ) 

3. ஆதியில் பொன் மானுக்கா 
வாது 
சொன்ன துண்டந்த 
வேதைபொறுக்கச் சொல் என் மீது பெண்களுக்கெல்லாம் 
பேதைமை என்பதுவி 
டாது - அதுகொண்டென்ன 
வேதன் சொன்ன சாபம் பொல் லாது - என்னை ராவணப் 
பாதகன் அணுகக்கூ 
டாது - என்று திரிசடை 
மாதா உரைத்தாள் பயம் ஏது - என்றிருந்தாலும் 
மேதினிவாய் மூடப் போ 
காது - ஆகையினாலே 
சீதாராமன் தன் பேரைச் 
செலுத்தச் சொல்வாய் இப் போது 
( இம்மா ) 

அனுமார் சீதாதேவிக்குத் திடம்கூறல் 

வடித்துவடித் தன்னையிந்த வார்த்தை சொல்ல 
மாருதியும் நகைசெய்வான் விழல் கூளத்தை 
இடிப்பதுபோல் அரக்கர் தம்மை இடிக்கச் சேனை 
எழுபதுவெள்ளமும் சேரும் எனது தோள்மேல் 
அடித்தலம் கொண்டென்சாமி சேர்வார் தம்பி 
அங்கதன் தோள் மேற்சேர்வார் அவர் அம்பாலே 
பொடிப்பொடியாய் ராவணனும் தரையில் சேரும் 
போரும்வரும் பாரும் எனப் புகலுவானே 

பல்லவி 

எட்டு நாளையிலே பாரும் - அம்மா 
ராவணன் பேரும் இவன் ஊரும் 
( எட்டு ) 

அநு பல்லவி 
( எட்டு ) 

இஷ்ட காலம் வந்த திரங்க வேண்டாம் நீரே 
எப்போதும் போலே ராமர் இடத்தினிற் சேருவீரே 
முட்டாத வானரர்கை தொட்டே கல்லெறிந்து 
முட்டாள்கள் துஷ்டர்கள் 
கட்ட பலிஷ்டர்கள் 
இட்டிடுகட்டுகள் ஒட்டுகள் கெட்டபின் 
நெட்டுள்பட்டண மட்டி அரக்கியர் 
கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் 

சரணங்கள் 
1. மலர் தலை உலகெலாம் 
வாழ 
மண்மேல் 
மண்டோதரி அலறி 
எங்கும் 
அலகையும் நாயும் வந்து 
காவல் 
அரக்கியர் உனது வெள் 
ளாட்டிகள் போலே 
தாழ 
அந்தர துந்துமி இந்திரன் அறைந்திட 
என் தன் முகுந்தன் நெடுந்தளம் வந்தபின் 
உன் தன் வருந்திய சிந்தை மகிழ்ந்திட 
இந்த இலங்கை அழிந்திடும் விந்தையை 
வீழ 
( எட்டு ) 

மிதக்க 
2. ஆகா ராட்சதப் பிரேதம் 
மேலே 
ஆகுமே ரெத்தங்கடல் 
போலே 
அதில் 
காகங்கள் மூழ்கி ஒருக் 
காலே - மாதர் கண்ணீரால் அந்தரத்தம் 
கழுவிப் போமேஅப் 
பாலே 
கங்கிலும் வங்கிலும் நுங்கு தலங்களும் 
மங்கையர் தங்கி டங்கொள் அரங்கிலும் 
அங்கிலும் இங்கிலும் எங்கிலும் எங்கள் கு 
ரங்கு நெருங்கி இடுங்கல கங்களை 
( எட்டு ) 

3. ஆனை சேனைகளை நான் சாட குரங்கால் 
அரக்கர் தலையெல்லாம் பந்தாட ஒருவர் 
போனவழி போகாமல் 
ஓட இந்தப் 
பொல்லா ராவணன் வாழ்க்கை 
எல்லாம் தம்பியைக் கூட 
புத்திரர் மித்திர களத்திர இனத்தவர் 
சுற்றி வயிற்றில் அடித்து விழத்தலை 
பத்தும் நரித்திரள் தத்தி இழுத்திட 
வித்தகன் அஸ்திரம் அறுத்திடும் வெற்றியை 
( எட்டு ) 

சீதாதேவி அனுமாருக்கு அடையாளம் ஈதல் 

உன்னித்தான் அனுமன் இந்த உறுதிசொல்ல மனந்துணிந்தாள் 
வண்ணமுள்ள அணிசூடா மணிகொடுந்தாள் சாமி அவள் 
என்ன சொன்னாள் எனக்கேட்கில் ஏதுரைப்பாய் எனச் சீதை 
சொன்னபடி அடையாளம் சொல் என்று சொல்வாளே 

பல்லவி 
( அனு ) 
அனுமானே சாமிக்கிந்த 
அடையாளம் சொல் ஐயா 

அநுபல்லவி 
சனகி இலங்கைச் சிறையினில் தன்னுயிரைத்தானே தின்று 
மனதில் ராமாமுர்த சீவனம் செய்திருக்கிறாள் 
என்று 
( அனு ) 

1. உலகறிய நகரைவிட்டுக் கோட்டைவாசல் கடக்குமுன்னே 
ஓங்குவனம் எங்கே என்று நான் கேட்க - நேரே 
தாலை தூரம் வழிநடந்தாய் சமர்த்து நீ என்று சொல்லி 
துளிரான வாய்மலர்ந்து குளிரநகை செய்தாரே 
2. தாழ்வில்லா நகர்நீங்கி வருகிற பேர் எல்லோரும் 
தனித்தனியே துணிவு சொல்லி அனுப்பினார் பொய்யோ 
( அனு ) 

சூழும் அந்த வழிநடுவே வேள்வி செய்ய வேணுமென்று 
தொடங்கும் வேதியனாசை அடங்கப்பசு கொடுத்தார் ஐயோ ( அனு ) 
கனமான கங்கைக்கரை வன வேடன் முன் எங்களைக் 
காட்டியிவர் ஆரென்று நீ கேட்டாயே குகனே 
உனது தம்பி எனது தம்பி உன் கொழுத்தி இவள் நானும் 
உன் ஆசைத் தோழன் என்று சொன்னாரே மகனே ( அனு ) 
4. உளத்தில் மறுமாதர் குறிக்கேன் என்றந்தரங்கம் 
உரைத்தார் என் சாமிக்கது கருத்தில் உண்டுதானே 
வளர்த்த கிளியும் மானும் தளர்ச்சி இல்லாதபடி 
வைத்திருக்கச் சுமந்திரருடன் பத்திரமாகச் சொன்னேனே ( அனு ) 
5. ஒருநாள் என்மேற் பாய்ந்த காக்கைதனை நோக்கிப் புல்லால் 
ஒருகணை விட்டார்இதென்ன தெரியாது போச்சோ 
சரணம் என்றது வீழ இருவிழிக்கும் ஒரு மணியாய் 
தாமே கொடுத்தாரே அந்த மானமுந்தான் எங்கே போச்சோ ( அனு ) 


அனுமார் அசோகவனம் அழிக்குதல் 

முந்தித்தாய் சீதைசொன்ன அடையாளங்கள் 
முறைகொண்டான் அனுமந்தன் நிறை கொண்டங்கே 
சிந்தித்தான் ராமலட்சு மணரை எங்கள் 
சேனையுட னேகொண்டு வருவேன் வந்தால் 
பந்தித்த ராவணனும் படையும் காலன் 
படைக்காவார் தாயே நீ பாரென் றோதி 
வந்தித்தான் அச்சூடா மணியைக் கொண்டான் 
வழிக்கொண்டான் அசோகவனம் அழிக்கின்றா னே 

பல்லவி 
அடித்தானே அசோகவனம் தன்னை 
முடித்தானே அனுமான் 
( அடி ) 

அநுபல்லவி 

அடித்தானே அருங்காய் கனிகளை 
ஒடித்தானே அரை நொடிக்குள் விசுவரூபம் 
பிடித்தானே அந்த ராவணன் கீர்த்தியை 
குடித்தானே கையைக் கொட்டி தொடைதட்டிக் கொண்டு ( அடி ) 


சரணங்கள் 

சிலமரங்கள் 
கைகளை 
சிலமரங்கள் - வேர்பிடுங்கிச் 

1. ஆடச்சேயும் அசையச்சேயும் 
அறுந்தன 
மூடச்சேயும் முறுக்கச்சேயும் 
முறிந்தன 
சாடச்சேயும் தாவச்சேயும் 
தறிந்தன 
பாடச்சேயும் பாயச்சேயும் 
பறிந்தன 
சிலமரங்கள் - கொண்டாட்டம். 
சிலமரங்கள் 
வெகுவெகு 
கோடானு கோடிகளாக் கொம்பும் கொடியுமாகக் 
குறைத்தான் 
சிலமரத்தை பெருகிய 
நீடாழி முகட்டிலே அணைபோலே கிடக்க 
நிறைத்தான் 
சிலமரத்தை - தேவர்கள் 
வாடாமல் ராட்சதர்கள் பாராமல் வெளியெங்கும் 
மறைத்தான் 
சிலமரத்தை 
வாரிவாரி 
ஏடாகூட மாலங்கைத் தெருக்கள் தெருக்கள் எல்லாம் 
இறைத்தான் 
சிலமரத்தை இப்படி 
மேடென்றும் காடென்றும் தெரியாமல் முடிய 
விசைகொண் டெறிந்தமரம் திசைதிசை போய்ப்படிய 
மாடங்களும் அரக்கர் கூடங்களும் இடிய 
மதிள் இலங்கை வீடெல்லாம் சிதறிப் பொடி பொடிய 
( அடி ) 

2. அடிக்கடிமரம் ஒடிக்கும் ஓசையில் 
அண்டமும் 
வயிறுளைக்க அதுகண்டு 
எடுத்தராட்சதப் பெரும்படைக்கடல் 
எங்கெங்கும் 
ஓடிவளைக்க 
சினமுடன் 
கடுத்தரதகச துரகபதாதிகளை 
காலனும் 
கண்டுகளைக்கத் திசைதிசை 
பொடுக்கெனப் பள்ளத்திலே பிணம்பிணமா அடித்துப் 
திடுக்கெனக் கருந்தூளி செந்தூளியாக 
சேடனும் 
முடியிளைக்க வந்தளவில் 
தடுக்காமல் மரத்தின்மேல் மரங்களா வீட்டெறிந்து 
சதைத்தான் 
சிலபடையை - மரம்பிடுங்கிப் 
புதைத்தான் 
சிலபடையைத் தேர்களை 
ஒடுக்கி மளமளென் நொறுக்கி நொறுக்கிவிழ 
உதைத்தான் 
சிலபடையை - மீன்குலம் 
வெடுக்கென்வே பிடுங்கி நடுக்கடலிலே தூற்றி 
விதைத்தான் 
சிலபடையைக் - கையினாலே 
அடுத்தவர் ஆயுதத்தைப் பறித்துப் பற்றி பற்றி 
அழுகல் வெற்றிலைபோலே குழைய எற்றி எற்றி 
வடுப்பட வாலாலே சுருக்கிச் 
சுற்றி சுற்றி 
வயிற்றுக் குடல்களெல்லாம் வாயில் வரக் குத்தி குத்தி 
( அடி ) 


பறவைகள் 
அதுசமயத்துக்கு மரங்கள் வாய்த்ததே 
அய்யனுக்குக் 
கொண்டாட்டம் -- என் சொல்லப் 
பதியில் புகுந்ததே பருந்து காசும்முதல் 
ஆட்டபாட்டம் - மண்டைகளைச் 
சிதறுத் தேங்காய் போலே உடைத்தும் சாமிக் குண்டோ 
சிறிதாகிலும் 
வாட்டம் 
ராவணன் 
ததியில் அனுமானுக்கு உதவியா வளர்த்தானே 
தன்னுடைய பெருந் தோட்டம் அங்கங்கே 
குதிரைமேல் ஆனைவிழத் தேர்மலைபோல் விழக் 
குழிந்ததே பெரும் பள்ளம் பள்ளத்திலே 
எதிரிடும் ஆறுபோலே பெருகிக் கரைபுரளி 
எடுத்ததே ரத்த வெள்ளம் - 4 சிபோகக் 
கதியில்லா நரிகளும் நாயும் பேயும் உண்டு 
களித்ததே தங்கள் உள்ளம் - குரங்கென்று 
விதிமோசம் ஆகவந்தோம் நமக்கிவன் எமன் என்ன 
விட்ட தரக்கர் 
கள்ளம் - 
கிடைக்காத 
புதுவிருந் திதுவென்று மெத்த மெத்த 
பூதங்கள் நடமிடப் பிணநாற்றமும் 
வேதாள் 
மீள 
எதிர் எதிர் அரக்கியர் அழுகைக் குரல்கள் நீள 
எண்பதினாயிரம் கிங்கரர்களும் 
மாள் 
சம்புமாலிவதை 
கெடி கொண்ட வளமும் அந்தக் கிங்கரர் களும் போய் மாளி 
முடிகொண்ட அரக்கன் கோபம் மூண்டிட எழுந்த சேனை 
வடிகொண்ட கடல்போல் பட்டமண்கிடந்திடும் இருப்புத் 
தடிகொண்ட அனுமான் கையால் சம்புமா லியும்பட்டானே 

பல்லவி 
அனுமான் னகயால் 
மடிந்தானே சம்புமாலி 
முடிந்தானே சம்புமாலி 

அநுபல்லவி 

அடங்காத ரகுநாதன் விடும் குணமுள்ள தூதன் 
நெடுங்கிரி எனமண்டு தடங்கையால் அறை கொண்டு 
மடங்கிய வாயிலே முடங்கிய குடல் எழ 
தொடங்கிய உதிரமும் குடங்குட மாவீழ 
( படிநி ) 


சரணங்கள் 

1. நறுக்குவேன் இதுவொரு செருக்களத் தினிலேறி 
அரக்கர் படைக்கடலை 
இருப்புலக் கையினாலே 

2. நீலப் பெரிய கடல் 
மேலிட்ட நிருதிரை 
சோனலக் சுரும்புகளை 
வாலுக்கும் அனுமந்தன் 
குரங்கென எதிர்ப்பட்டு 
பெருக்கவே கணைதொட்டு 
நெருக்கி நெருக்கி யிட்டு 
அரைக்கச்கொடுத்து விட்டு ( மாடிந் ) 
போலத் திரண்டு மொய்த்து 
கோலிப்பொருத வைத்து 
ஆலைக்கிடுவ தொத்து 
காலுக்கும் ஒப்பு வித்து ( மாந் ) 
ஏதும் விடாமற் கொல்ல 
வீதியெங்கெங்கும் செல்ல 

5. மோதி வரும்படையை 
மாதர் அழுதழுது 
பர்திக் ராவணன் 
காதினில் இட வல்ல 
தூதர் குரங்கிது பொல் 
லாதென்றலறிச் சொல்ல ( மடிந் ) 
பஞ்சசேனாதிபதிகள் அட்சதன் இவர்கள் வதை 
பாய்ந்தசம் புமாலியிந்த விதத்திற்பட்டான் 
பஞ்சசேனாதியரும் படையும் மூண்டார் 
தோய்ந்தவர் தங்களையும் கணத்தினுள்ளே 
தோரணகம் பத்திலிருந் தனுமான் கொன்றான் 
காய்ந்தசினத் துடன்பன்னீ ராயிரம் பேர் 
காதகரும் நாலுலட்சம் காளை மாரும் 
ஏய்ந்தபடைகளும் கொண்டக்ஷதனும் தேர்மேல் 
ஏறினான் மாருதிமேற் சீறினானே 

பல்லவி 

வந்தானே ராவண்கா தகன் அனுப்ப அக்ஷதன் மிகுத்திடப்படை 
தந்தானே தோரணகாலிமுன் மிகச்சமுத்திரம் வளைத்த தொப்பென 
மதகரிகள் பரிகள் 
ரதநிரைகள் வரவும் 
வருக் வருகஎன 
நாகவதூதன் 
கண்டானே அண்டகடாகமும் வெடித்திடக் கடுகடுத்தகெர்ச்சனை 
கொண்டானே கொண்டிடிபோலவே குதித்தரக்கரை இருப்புலக்சையில் 
அடிகள் முடிகள் பல கொடிகள் தடிகள் பொடி 
பொடிகள்பட விசிறி வாலதை வீசி 
வளைத்தோடியும் வாரி அடித்தும் தெரித்தும் விக்கிட் முறித்தும் வீரர்கள் 
தலைக்கேதலை மோதி நெரித்தும் சரித்தும் டிஅப்படை தொடுக்கும் வாளிக 
தவிடு பொடிகள்பட உதறி உதறி எறி 
சருகும் உமியுமென 
ஊதிய போது 
காலால் உதைபட்ட பேர் சிலர் கடிக்குள்ளேசிலர் பிடிக்குள்ளே சிலர் 
தோள 
ளால் அரைபட்டபேர்சிலர் தொடைக்குள்ளேசிலர் இடைக்குள்ளேசிலர் 
கரம் அற்ற பேர்களும் சிரம் அற்ற பேர்களும் 
கதியற்ற பேர்சளும் ஆகியே விழ 
அறைவன்ஓர் அறைக்குளே பல கோடிவீரர்கள் வீரர்மேல்விழ 
எறிவான் ஓர் எறிக்குளேபல கோடிதேருதேரின் வீரர்மேல்விழ 
அதிரதர் மகரதர் சமரதர் சிதறிட 
அதலகுதல மொடு 
சேனைகள் மாளத் 
தெரிந்தானே அட்சதன்ஊதிய செம்புபோலவே ரண்டுகண்களும் 
எரிந்தானே அக்கணமே செல அம்புமாரி பிரசண்டமாகவே 
தெரித்தனுமனுடல் இருக்கும் மயிர் முனை 
முறுக்கில் மறையவும் அந்தமாருதி 
தலைமேலும் தோளிலும் மார்பிலும் முகத்திலும் கொலுவிருக்கும் தோரண 
நிலைமேலும் தாளிலும் வாளிகள் தொடுக்கவும் குலைகுலைந்து ராகவ 
சரணம் அதைமனதில் ஒருமையொடுகருதி 
விறுவிறென விசையில் 
ஓடிவந்தெதிர் 
அடுத்தானே அட்சதன் ஏறிய ஆயிரம்பரிரதத்தை ஓர்கையில் 
எடுத்தானே விட்டெறி போதினிலே இறங்கிமுன் எதிர்க்கவேபிறகு 
அவனை இவன் அறைய வனை அவன் அறைய 
அவனி டுகவசமும் 
வில்லும் வாளியும் 
ஒடித்தானே பல்லொடு குண்டலம் உதிர்ந்திடச் செவிகலங்க ஓரடி 
அடித்தானே கையினில் அங்கவன் நெடுங்கழுத்தினை மடங்க மாருதி 
உதறவருபடைகள் கதற நிருதன் முது 
குரைபட உரைபட ராசவீதியில் 
நிலத்தோடே தேய அரைத்துக் கரைக்க அட்சதன் மாயவே சிலர் 
தலத்தோடே ரூபம் மறைத்துப் பசுக்களாம் என மேய்குவார் சிலர் 
நிணத்திலே சிலர் பிணத்திலே சிலர் 
நெளித்தபேர்சிலர் 
ஒளித்த பேர்சிலர் 
வண்டாகி மறைந்தபேர் சிலர் மான்களென வெளிப்பாய்ந்த பேர்சிலர் 
மண்டோதரி முன்பினிலே அடி சாய்ந்தமர மென வீழ்ந்த பேர் சிலர் 
மலைந்த போரினில் ஒழிந்த தூதுவர் 
இலங்கை நாதன் முன் 
வீழ்ந்த பேர் சிலர் 


அனுமாரை இந்திரசித்து எதிர்த்தல் 

வீரராம் அரக்கரும் அட்சதனும் இந்த 
விதம் அனுமான் கையாலே அதமாய்ப் போனார் 
ஓரமாத் தூதரும் ராவணன் முன்ஓடி 
உன் மகனும் நமனுலகம் உற்றான் என்றார் 
நாரடா எனக் குரங்கைக் கிழிப்பேன் என்று 
நாற்பது வெள்ளம் சேனை யுடனே வந்தான் 
ஆரடா குரங்கேநீ ஆரடா என் 
றதிர் கண்டான் இந்திரசித் தெதிர் கொண்டானே 

அனுமார் இந்திரசித்தோடு பொருதல் 
எதிர்கொண்ட இந்திர சித்தோ டெழும்பின அரக்கர் சேனை 
கதி கொண்ட உகாந்தநாளில் கடல் எனவளைப்பக்கண்டான் 
மதிகொண்ட அனுமான் கையில் வல்லிருப் புலக்கை கொண்டு 
குதி கொண்டான் எமனைப்போலே கூடினான் சாடினானே 

பல்லவி 
அனுமந்தன் அடித்தானே - இந்திரசித்தன் 
மனம் நொந்து துடித்தானே 
( அனு ) 
அநு பல்லவி 
அனுமந்தன் அடித்தீர்னே முனை கொண்டு பிடித்தானே 
அரக்கர் படையைக் கண்டு இருப்புலக் எகயைக் கொண்டு ( அனு ) 

சரணங்கள் 
1. கட்டும் என்ற பேரையும் கிட்டுமென்ற பேரையும் 
கறுவிவந் தோரையும் 
மொறுவிவந் தோரையும் 
கைப்படை போய்மாள் 
உதைத்தான் சிலபேர்களைக் 
குப்பால் குப்பலாக 
வதைத்தான் ரைநிரையா 
கரிகள் மேற் பரிகளும் பரிகள் மேற் கரிகளும் 
கால்ள் மேல் தேராளும் தேராள்மேல் காலாளும் 
கண்பொறி கலங்க 
இறைத்தான் - சிலபேர்களை 
மண்களில் அழுந்த 
மறைத்தான் கடல் கடந்த 
காலால் அனேகம்பேரை வாலால் அனேகம்பேரை 
கையால் சிலபேர்களை 
மெய்யால் சிலபேர்களை 
கசக்கி மூளைகள் 
பொழிந்தான் - கரும்பு போலே 
நசுக்கிச் சாறுகள் 
பிழிந்தான் ரக்கியர்க்கு 
கணவனைக் குமரனைத் துணைவனைத் தெரியாமல் 
கதையில் அடித்துடலைச் சிதையப் பொடித்து பெருங் 
சாற்றில் பஞ்சென 
ஊதினான் - சிலரைத் தேங்காய்க் 
சீற்றுக் கீற்றாக 
மோதினான் எண்ணிறந்தோர்கள் 
கரம் அற்றும் சிரம் அற்றும் உரம் அற்றும் வரும்ரத்தம் 
கண்டிட மெல்லாம் புரள மண்டை மண்டை ஆய்உருள் ( அனு ) 
2. முட்டி வரும் தேரையும் கிட்டிவரும் தேரையும் 
முடுகிவரும் தேரையும் கடுகிவரும் தேரையும் 
முன்னசயால் வாரித் தூக்கினான் தறையில் மோதிச் 
செங்கற் பொடிபோல் 
ஆக்கினான் 
ஆனைப் படையை 
மொத்தியும் குத்தியும் வாலால் சுற்றியும் எற்றியும் வாரி 
மூட்டுப் பூச்சிபோஸ் மடித்துக் கூட்டங் கூட்டமா அடித்து 
முட்டு முட்டா 
அடுக்கினான் - கோட்டையும் லங்னகப் 
பட்டணமும் 
நடுக்கினான் - அந்நகர்வீதி 
முகப்பும் கோபுரங்களும் வகுப்பும் தாவரங்களும் 
முத்துமாட்டங்களும் தேய்ந்து சித்திர கூடங்களும் சாய்ந்து 
முடிய வீசி 
நொறுக்கினான் - கோடைக் காலத்தில் 
இடிபோலவே 
உருக்கினான் அடித்தடித்து 
மூலையும் குதிரைமலர்ச் சோலையும் குதிரை நடைச் 
சானலயும் குதிரையலை வேலையும் குதிரையாக 
முறை முறையாச்சாய்து விட்டான் - காலால் எற்றித் 
தரையிலே தேய்த்து விட்டான் அரக்கர்திலை 
மூளையும் சனதயும் வண்ணக் காளியும் கூளியும் உண்ண 
முழுதும் பேய்க்குலம் ஆ . கழுகும் காக்கையும் பாட 
( அனு ) 

அம்ரவே 

3. அங்குசமும் தோட்டியும் கங்கிலியும் ஈட்டியும் 
அஸ்திரமும்சூலாயுதமும் ஸ்திரமும் வேலாயுதமும் 
அரக்கர் விடுத்து 
மொய்க்கவே அதெல்லாம் அய்யன் 
பெருத்த புயத்தில் 
தைக்கவே 
தைத்தனவ எல்லாம் 
அழுந்தத் தோரணம் மேலே குழந்தைச் 
சூரியன் போலே 
அட்டகாச மதுபண்ணி இஷ்டராகவனை எண்ணி 
மதித்தானே பட்டவை எல்லாம் 
உமிபோலே 
உதிர்த்தானே ராவணன் மகன் 
அடுத்தபடைகளிலும் விடுத்தபடைகளிலும் 
தொடுத்தபடைகளிலும் பிடித்தவன்மேல்பட 
அள்ளியே 
தெறித்தானே சிலபடையைச் 
சுள்ளி போல் 
முறித்தானே அரக்கியர்கள் 
அழுவாரும் தெய்வத்தைத் தொழுவாரும் வீடுவிட் 
டெழுவாரும் அரக்கன் முன் முவாரும் தலைவிரித் 
தலங்கோலம் 
ஆனாரே 
எல்லாரும் பேய்க் 
குலம் போலே 
போனாரே - இந்தப்படியா 
அடிப்பாரும் குரங்கைக் கட்டிப் பிடிப்போம் என்ன வேகிட்டி 
ஆர்ப்பரவத்துடள் வந்த நாற்பது வெள்ளமும் சிந்த ( அனு ) 


அனுமார் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டல் 

அனுமான் பின்னையும் இந்திர சித்தம் பெல்லாம் 
அடித்து வில்லை ஒடித்துச்சா ரதியை மாட்டி 
மனமாம் தேரையும் வீசி மரத்தால் மோதி 
மண்டைகலங் கிடஅடித்தான் அரக்கன் அப்பால் 
சனமான் பிரம்மபா சத்தை வீசிக் 
கட்டினான் ஐம்பதினாயிரம்பி சாசர் 
இனமாக இழுக்க இலங்கையில் உள்ளோர்கண் 
டேசுவார் மாருதியைப் பேசுவாரே 

கண்னிகள் 

1. வந்தது குரங்கு வந்ததிந்திரசித்தன் 
வலையில் மாட்டி என்பார் 
சிலபேர் 
இந்த ஊருக் கெமனாகக் கோலங் கொண் 
டிருந்த குரங்கிது என்பார் 
சிலபேர் 

2. வினைக்குரங்கு வந்ததெனச் சொல்லி ராவணன்கை 
வெகுமானம் கொள்வார் 
சிலபேர் 
தனக்கென்றிருக்கை யாலே சமயத்துக் காய்ச்சுதிந்த 
சதுமுகாஸ் திரம் என்பார் 
சிலபேர் 

3. அந்தச் சிவனே சீதைக்காக இலங்கை தன்னை 
அழிக்கவந்தான் என்பார் 
சிலபேர் 
தந்தையை அண்ணனை மகனைக் கொன்ற பழி 
தந்து போடா என்பார் 
சிலபேர் 

4 . மணவாளனைக் கொன்ற இவனைக் கொன்றால் ஒழிய 
வர்ங்கோம் மங்கிலியம் என்பார் சிலபேர் 
கணையாம் பாசத்தால் முகத்தில் வாட்டமில்லை 
சபட்டுக் குரங்கி தென்பார் 
சிலபேர் 
5. அகப்பட்ட குரங்கிதை விட்டால் இலங்னக நகர்க் 
சனர்த்த காலம் என்பார் 
சிலபேர் 
நகத்தாற் கிள்ளுவதைக் கோடாலியால் வெட்ட 
நமக்கு முடியுமோர் என்பார் சிலபேர் 

6. இங்கே இர்திரசித்துப் பிடியா விட்டால் இன்னம் 
என்ன செய்யுமோ என்பார் சிலபேர் 
தங்னக மூக்கும் போன தகப்பனுக்கு மூக்கு 
தந்தானே மகன் என்பார் 
சிலபேர் 

இராவணன் கொலுவில் வீற்றிருத்தல் 

முனைசேர் அரக்கர் இவ்வாறு முறையிட்டலறச் சேனைசுற்றி 
இனமாய் வளைக்க மலைபோலே இலங்கை அழித்த குரங்கிதென்றே 
அனுமான் தனைக்கொண்டிந்திர சித்தன் அங்கேவிட எங்கேயென்று 
புனைமா முடிராவணன் கண்டு பொரிந்தான் கொலுவில் இருந்தானே 

பல்லவி 
வீரசூர ராவணன் கொலுவீற்றிருந்தானே 
( வீர ) 

அநு பல்லவி 

பேராத ரத்தின சிங்கா சனம் மேலே சொர்ண 
பீடத்தில் மைந்நாக மலைபோலே துன்ன 
என்ன 
சாருதயம் சேர்பத்து சூரியர்கள் 
தலைபத்திலும் பத்து மகுடங்கள் 
மின்ன 
( வீர ) 

சரணங்கள் 

1 . லாவ 
தாவ 
நடமாடும் ரம்பையும் ஊர்வசியும் அபி 
நயங்காட்டி மயில்போலு 
கடல்போலே மேளதாளங்கள் அண்ட 
கடாகம் மட்டும் சென்று 
அடடா இந்திராவாடா சந்திரா வாடா என் 
றவசரக் காரர்கள் 
வடவாக்கினியான விரகாக்கினிதீர 
வந்து மேகம் பனிநீர் 
கூவ 
தூவ 
சுடர்மணி மண்டபம் அண்டகூடமதைத் தொடவே 
தொடைநடுங்கி அமரரெல்லாம் நெடுமூச்சுவிடவே 
முடிகளொடு முடிமோதி அடியிணை புண்படவே 
மூவுலகத் துள்ளோரும் சேவடிக்கும் பிடவே 
( வீர ) 

2. எப்போதென்று முகம் திரும்பிய வர்க்கெல்லாம் 
ரிஷிகள் வந்து தலை 
நீட்ட 
தப்பா எட்டானைக் கொம்பொடித்தது பதினாறு 
சந்திரன் போல் மார்பிலே 
காட்ட 
வைப்பாகிய நாகராசாக்கள் மாணிக்க 
மாலை கொண்டடிமேலே 
வெப்பான துர்முகன் முதலான மந்திரிகள் 
விநய யோசனைகள்பா 
சூட்ட 
ராட்ட 
முப்பத்து முக்கோடி தேவரும் கொண் 
முதலான தும்புரு நாரதர்கீதம் 
பாட 
கற்பகம் மென்மலர்மாரி குப்பைகள் போலே 
போட 
கட்டியம் சொல்ஓசை திசை எட்டிலும் மேலே ஓட 
( வீர ) 

கூச 
3. இனமாம் மேகங்கள் புகைபோல் ஒதுங்கிக்கொண் 
டிரைச்சல் இடாமலே 
புனைமாமுக லட்சுமிகரந் துடைப்பார் போலப் 
பூவையர் கவரிகள் 
வீச 
எனைநாடினான் எனைப்பார்த்தான் வார்த்தை சொன்னான் 
என்றியக்கர் சந்தோஷம் 
பேச 
தினம் ஊழியத்துக்கு வரும் தெய்வப் பெண்களை 
சிறுக்கியர் போல் அரக்கியர்கள் 
ஏச 
முனை பெரும் அட்சதன் வீழ்ந்த மனவேனத 
கூடி 
மூத்தமகன் செயித்துவந்த கீர்த்தியைக் கொண்டாடி 
அனுமான் வருகிற வார்த்தை தனையே 
நாடி . 
அடிக்கடி சீதையை எண்ணி துடித்துடன் மனம் 
வாடி 
( வீரர் 


அனுமானை ராவணன் வினாவுதல் 

இருந்த ரா வணன் முன்பாக இருந்தமா ருதியை நோக்கி 
பெருங் குரங்குருவாய் வந்தாய் பிரமன்மால் சிவன் விட்டாரோ 
வருந்தி வானவர் விட்டாரோ மனத்துள கபட்டை எல்லாம் 
தெரிந்திட விட்டாஎன்று சீறுவான் கூறுவானே 

பல்லவி 
இங்கே வந்தநீ 
ஆரடா குரங்கே 
ஆரடா குரங்கே 
( ஆர ) 

அநுபல்லவி 

ஆரடா குரங்கே அறிவாயோ லங்கையை 
வாரசிங் காசனம்போல் - வால் இட் டென்னிலும் 
மேல் இட்டிருக்கிறாய் 
( ஆர ) 


சரணங்கள் 

1. அச்சம் இல்லாமல் அடங்கிச் சொல்லாமல் 
நிச்சய வனகிங்கிரர் நிறுத்தனில்லாமல் 
நிசாசரர்களும் 
அசோக வனமும் 
திசா திசையில் விழ வீசிஎறிந்தநீ 
( ஆர ) 
2 கம்பத்தின் மேலே 
காலனைப் போலே 
செம்பு மாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலே 
சிட்சைசெய் வேனென்று கட்சியுடனே வந்த 
அட்சதனைக் கூட பட்சணம் செய்தநீ 
( ஆர ) 
3. நிந்தனை சீச்சி 
நீயொரு பூச்சி 
இந்திரசித்தன் உன்னோ டெதிர்த்ததென்ன கண்காட்சி 
இடிக்கவோ கட்டி அடிக்கவோ 
பல்லாற் 
கடிக்கவோ ரத்தம் குடிக்கவோ நீ 
( ஆர ) 
4. மறைந் தொருகர்மம் வகுத்தஉன் மர்மம் 
அறிந்தல்லோ கொல்லவேணும் அதற்குள் கொல்லல் தர்மம் 
அல்லடா நெஞ்சு 
கல்லடா நிசம் 
சொல்லடா பொட்டெனச் சொல்லடாநீ 
( ஆர ) 


அனுமார் இராவணனுக்கு விடையும் மதியும் கூறல் 

அடல் இரா வணன் இந்த வார்த்தை சொல்ல 
அரன் அயன்மால் விடுக்க வந்தேன் அல்லகண்டாய் 
மடமயில் சீதையைத் தேடி வந்தேன் கண்டாய் 
வந்திடத்தில் உனைக்காண வேண்டி உன்ஊர் 
இடமுடைய அசோகவனம் அழித்தேன் கண்டாய் 
இராகவன் தூதுவன் நானே நீபிழைக்கக் 
கெடல்அரிய புத்திகேள் கண்டாய் என்றே 
கிளம்புவான் அனுமன் எதிர் விளம்புவானே 

பல்லவி 

ராமசாமி தூதன் நான் 
அடா - அட்டராவணா 
அனு மானடா 
( ராம ) 
நானடா என்பேர் 
அபயல்லம் 
மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும் 
மறைந்துநின்று தந்தநான் அல்லடா 
புறம்பே நின்று வந்த நான் அல்லடா 
( ராம ) 

சரணங்கள் 

1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய் 
குடிக்கும் பாலை ஐயையோ கமர் வெடிக்குளே ஏன் வார்க்கிறாய் 
துடுக்குடன் பரஸ்திரி செனங்களைத் தொடர்ந்தேன்பழி ஏற்கிறாய் 
தூக்கி ஏறவிட் டேணியை வாங்கும் தூர்த்தர் வார்த்தையைக் 
கேட்கிறாய் 

மீதே 
போதே 
சீதை 
( ராம ) 
தடைபடாமல்என் அய்யன்கால் 
சரண்என்றால் பிழைப்பாயே இப் 
அடக்கஉன் தரம் அல்லடா 
அவன் இவன்விட வந்தான் என் 
னாதே 
2. காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய் என்ன 
காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய் இது உ 
சாலமோ கேடு காலமோ அடாஉனக்கும் தெய்வச 
தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளா இது 
மாயமோ 
பாயமோ 
காயமோ 
ஞாயமோ 
வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த 
வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த 
சீலராகவன் அம்பால் அவன் 
சேதியை நீயறி யாயோடா 
செத்த 
பித்த 
( ராம ) 


3. கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதகங்களைச் சூழ்கிறாய் 
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில் மூழ்கிறாய் 
மாதர் மோகத்திலே துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய் 
மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலே ஏன் வீழ்கிறாய் 
ஆதிமூர்த்திதானே 
மாகவந்தான் அரக் 
சீதையை விட்டுப்பிழை 
சேதியைச் சொன்னேன் வீர 
உத்தண்ட 
கரைமண்ட 
அடாகண்ட 
கோதண்ட 
( ராம ) 

இதுவுமது 

பல்லவி 

பிழைக்க என்றால் வாடா - நான் சொன்ன 
பேச்சைக் கேளடா மூடா 
( பிழை ) 

அநுபல்லவி 

பழிக்கெல்லாம் நீதானே 
ஆளா 
படைத்துக் கொண்டாயோ சண் - 
டாளா 
( பிழை ) 

சரணங்கள் 

1. வேதன் முதல் விண்ணோர்கள் 
விஷ்ணுவே புவனமெல் 
கோதண்ட ராமன் எனும் 
குதித்தானே சரத்தால் உன் 
குறைநீங்க -- ஆதி 
லாம் தாங்க 
பேர்ஓங்க - வந்து 
உயிர்வாங்க 
ஆதவன் முன்இருள் 
வனுக்குக் கொம்புத்தேன் 
சீதையாம் தெய்வம் உனக் 
திருட்டுப் புத்தி தலைக் 
கிட்டுமோ முட 
எட்டுமோ அந்த 
கொட்டுமோ இந்தத் 
கட்டுமோ தப்பி ( பிழை ) 

2. வினை செய்வதற்கும் செய்யும் 
விடுங்கணை ஒன்றுனக்குப் 
இனிதா நான் சொல்லுவதெல் 
இணக்கம் இல்லாத உன் 
வகைஏதோ ராமன் 
போதாதோ 
மிக 
லாம் தீதோ - சற்றும் 
னுடன் வாதோ 
போய் அடா 
பாவி 
வாய் அடா 
அந்த 
தாய் அடா 
தீயடா 
அவள் 
தப்பி 
( பிழை ) 

உனது தங்கை கொங்கை 
உனக்கி தன் மேலென்ன 
சனகி உலகெல்லாம் தார் 
னே உன்குலம்சுடும் 
3. புவிமேல் உன்னை வென்ற 
புடைத்தானே பரசுராமன் 
தவனையும் வென்றரகு 
அவளை விட்டால் நீலங்கைக் 
தவறில்லாத வரத்தோ 
தந்தவில்லுக்குன் சேனை 
எவர்களுக்கும் ஏழை 
எனக்கு மிஞ்சும் வானரர் 
கார்த்தவீரன் விழப் 
எனும்சூரன் 
எதிர்த் 
குல தீரன் 
தேவி 
கதிகாரன் 
டகஸ்தியமுனி முன்னம் 
வெய்யிற்பனி அங்கே 
ஆனதனி 
நான் 
அனேகர் இனி 
தப்பி பிழை ) 

அனுமானரக் கொல்லாமல் ராவணனை விபீஷணர் விலக்குதல் 

போதரவா அனுமனிந்த புத்தி சொல்லப் 
பொங்கிய வாளரக்கண்விழிப் பொறிகள் சிந்தி 
நீதிவசனம் குரங்கே நீயோ சொல்வாய் 
நேத்தியிது நேத்தியிது என்று சீறிப் 
பாதகரால் இவனைவெட்டும் என்றான் ஆங்கே 
பணிந்துவிபீஷணன் அண்ணேன் பாவம் கண்டாய் 
தூதரைக்கொல் லுவதென்று ஞாயம் சொல்லித் 
துலக்குவான் ராவணனை விலக்குவானே 

பல்லவி 
இவனைக் கொல்லுவேன் என்று - நீ எழுந்தது மெத்த 
இகழ்ச்சிடா அண்ணேன் 
( இவ ) 

அநுபல்லவி 
( இவ ) 


1 -போதோ 
தவந்தானே மிகுந்த இலங்கேசனே அந்த 
சாதி மனிதன் சொந்தத் தூதுவன் என்றுவந்த 
துசங்கட்டும் கீர்த்திக்கு 
அழிவுவந்ததிப் 
தூதனைக் கொல்வேனென்று துடிக்கிறாய் என்ன 
சூதோ 
கொசுவைப் பொருட்டாஎண்ணி கருடன் எதிர்ப்ப 
குரங்கை நீ எதிரிட்டால் புறம்பெங்கும் நகை யாதோ 
தேதோ 
( இவ ) 


2 -தாமே 
அந்நாள் நம் தங்கையைக் கொல்லாமல் நரர் 
அவர்பலம் வெளியாக அனுப்பின தறிந் 
தோமே 
இந்நாள் நமதுபலம் வெளியாம் என்றெண்ணி 
இந்தக் குரங்கைக் கொன்றால் எங்கெங்கும் வசை ஆக 

நாமே 
ஆமே 
( இவ ) 


3 -பொறுக்காக் கோபம் வந்தாலும் குரங்கை கொல்வதோ சாத்தி 
புலிபசித் தாலும் என்ன புல்லைத்தின்னுமோ 
நத்தி 
அறிக்கை செய்தேன் இனி நீயே அறிவாய் 
புத்தி 
ஆக்கினை செய்தப்பாலிதை அகற்றுவதுவே வெற்றி 
( இவ ) 


அனுமார் வாலில் தீசுடாமல் அக்கினியை சீதை வேண்டல் 

தம்பிவி பீஷணன் சொல ராவணனும் கேட்டான் 
தையலார் தாலியிலே கயிறில் லாமல் 
வம்புபடு கயிறெல்லாம் முறுக்கிச் சுற்றி 
வாலிலே கிழிசுற்றித் தீயை இட்டான் 
முன்பிருநூ றாயிரம்பேர் இழுத்தோர் வீழ 
முனைத் தெழுந்த அனுமந்தன் தனைத்தொடாதே 
பொன்பொறிபோ லேயிருப்பாய் நெருப்பே என்று 
போற்றுவாள் சீதை சொல்லி ஆற்றுவாளே 

பல்லவி 

அக்கினி பகவானே - வருத்தாதே 
அனுமானை நீதானே 
( அக்கி ) 

அநு பல்லவி 

திக்கு வேறில்லை நீயே திக்கு , புடவை சோர்ந்தால் 
கைக்குண்டோ உபசாரம் காக்க உனது பாரம் 
( அக்கி ) 

சரணங்கள் 

1. இத்திசைவந்தானே என் பிராணேசன்கை முத்திரை தந்தானே 
சத்தியமாகச் சர்வ 
சாட்சிநீ தானே யானால் 
பத்தினி மார்க்குள் மேலாம் பத்தினிநானே ஆனால் 
( அக்கி ) 
2. விவரித்துள்ளது சொல்லவோ னதுமித்திரன் தவபுத்திரன் 
இவனல்லவோ 
கவலை அரக்கர் இரு கண்ணுக்கெல்லாம் நெருப்பாய் 
இவனுடைய வாலுக்குமாத்திரம் மலர்போல் இருப்பாய் ( அக்கி ) 
3. தன்மத்தைக் குறியாயோ ராமதூதன் என்றின்னமும் அறியாயோ 
முன்னாள் என்சாமிகையை உன்னால் அல்லவோ தொட்டேன் 
இந்நாளும் நான் அவர்கை இணங்க வைப்பாய் கும்பிட்டேன் ( அக்கி ) 


அனுமார் இலங்கையைக் கொளுத்துதல் 

கோடையிலே கசங்குகிற மலர்போற் சீதை 
குழைந்து குழைந்திவ்வாறு புலம்பி ஏங்கி 
வாடயிலே அக்கினியும் பயந்து செம்பொன் 
மலர் போல வேயிருந்தான் நாலுதிக்கும் 
ஆடரங்கும் சாலையும் மூலைகளும் தோப்பும் 
அரசிருப்பும் திண்ணைகளும் படுக்கை வீடும் 
மாடமும் கூடமும் இலங்கை எங்கும் வாலை 
வளர்த்தினான் அனுமந்தன் கொளுத்தினானே 

பல்லவி 

பற்றிக் கொண்டது 
சுற்றிக்கொண்டது 
அனுமான் இட்ட அனல் 
லங்கையை 
( பற்றி ) 

வெற்றிப்பெண் சானகி உறைமரம் ஒன்றும் 
விட்டுநீங்கித் திசை எட்டும் ஓங்கி முட்டி 
( பற்றி ) 

சரணங்கள் 
நாறவே 
1. எடுத்தபொற்கோ 
புரங்களும் மலர் 
படுத்த பூஞ்சப் 
பரங்களும் எரி 
அடுக்களையும் தா 
வரங்களும் சுவர் 
கொடுத்த மணியுத் 
தரங்களும் 
உன்னதஉப் 
பரிகையும் 
- தங்கத்தாலே 
மின்னிய கொடி 
வகையும் 
ஆனை சேனை 
மன்னும் விமானத் 
தொகையும் - நவரத்தினம் 
பொன்னறைகளும் 
குகையும் - திகுதிகென 
கொண்டல் கொண்டலாப் புகை ஏறவே - அத்தை 
கண்டவர் சீவன்வீட்டு 
மாறவே அவர் 
பெண்டுபிள்ளைகள் பழி 
கூறவே பெண்கள் 
கொண்டைகள் எல்லாம்சுறு 
உருவங்கள் தாறுமா றாப் பருவங்கள் வேறுவேறா 
அருசெங்கும் கீறுகீறாத் தெருவெங்கும் நீறுநீறாய் 
( பற்றி ) 
2. மூதெயில் வளைந்து 
சொலிக்கவே படும் 
வாதை கண்டமரர் 
சலிக்கவே - சொல்லும் 
வேதசாஸ்திரங்கள் 
கெலிக்கவே - எங்கள் 
சீதை சொன்னபடி 
பலிக்கவே 
சாகரங்களும் 
குறைய புகைப்படலம் 
ஆகாயம் மட்டும் 
நிறைய் 
பாதாளத்தில் 
நாகரும் கூட 
இறைய ராவணனும் 
மேகதலத்தில் 
மறைய லங்கையிலே 
கிணற்று நீரும் சுண்டி 
வற்றவே 
செத்த 
பிணத்தின் வெடிநாற்றங்கள் சுற்றவே வாலை 
வணங்கி எழுந்தெழுந்து 
மெத்தவே - செந் 
தணல் பொறியாக் அய்யன் ஏற்றவே 
புரவி எல்லாம் உவிய நிருதாரல்லாம் அவிய 
எரிஎரியாக் கவிய கரிகரியாக் குவிய 
( பர் ) 

புகைச் 
3. கைக்குழந்தைசளைப் 
போடுவார் -- பெற்ற 
மக்களை விட்டுவிட் 
டோடுவார் - 
சிக்கினிலே தள்ள 
மாடுவார் 
மிக்க அரக்கியர் 
வாடுவார் 
மலர்ச்சோலை பொரிந்த 
தென்பார் 
ராவணின் 
கொலுக் கூடம் எரிந்த 
தென்பார் வீட்டின் மேல்வீடா 
நிலத்தோடே சரிந்த 
தென்பார் வெட்டவெளியாத் 
தலைக்கடை தெரிந்த 
தென்பார் தவி தவித்து 
வேலைக்குள் ஓடி.விழச் 
சொல்லுவர் பெண்கள் 
மூலைக்கு மூலைவாயை 
மெல்லுவார் 
அனல் 
மேலிட்டி டாமற்குழி 
கெல்லுவார் 
அனுமான் 
வாலுக்குத் தெண்டனென்று சொல்லுவார் 
மாடகூடம் அனேக கோடி கோடி நீறாக 
மேடுமேடாகிப் போகக் காடுகாடாகி வேக 
(பற்றி ) 

வானர வீரர்கள் திருப்புகாலையில் மதுவனம் அழித்தல் 

அக்கினினிய இலங்கையில் இவ் வாறிட்டுச் சீதைநிலை 
அறிந்து போற்றி 
பைக்கட்டல், வாய் எடமநாசம் தனைக்கண்டான் சேனைகளை 
வணங்கிக் கொண்டான் 
புக்கது சொல் அனுடானும் அங்கத்தும் சேனைகளும் 
போய்ச் சுக்கிரீவன் 
தக்கமது : வனங்கண்டு நிலைப்பட்டார் மதுவை உண்ணத் 
தலைப்பட் டாரே 

பல்லவி 
வான வீரரெல்லாம் பாய்ந்தாரே 
- மது 
வனமெல்லாம் கொள்ளையிட்டு மேய்ந்தாரே 
( வான ) 
அநுபல்லவி 

வர்னும் சூரியபக 
தானத்தினில் மிகுந்த 
வானும் தெரியா அந்த 
தேனும் கனியும் சிந்த 
( வான ) 

கனியும் 
கனியும் 
தேன் 
கனியும் - சுவை 
கனியும் 
கையால் 
பறிக்கத் - திசைதிசை 
தெறிக்க வழிமேல் 
வந்தடைக்கவே 
மும் புடைக்கவே 
( வானர ) 


1. திரள்தான மாங் 
சினிப்ழுத்த தேங் 
உருகு கதலிப் பூங் 
ஒழிபடா விளாங் 
திருகித் திருகிப் 
பெருகிப் பெருகித் 
வரும் இளைப்பினால் 
இருவிலாப் புற 
2. வாயிலே அளிப்பார் 
வாயிலே தெளிப்பார் 
வாயிலே விளிப்பார் 
வாயிலே துளிப்பார் 
ஈக்கள் மொய்த்தாற் 
இரைச்ச லிட்டொருக் 
வாயிலே மதுவை வழியக் 
ஒயநின்றவரை உறுமி 
3. இந்திரன் வாலிக்கிட்ட 
இதிலே சுக்கிரீவர்க்கு 
வந்து புகுந்து கட்டல் 
மதுவை எல்லாம் குடித் 
அந்தவேளை ததிமுகன் 
அடித்தானே அங்கதன் 
எந்த ஆணை ஆக்கினைக்கும் 
தந்தம் இச்சையில் தடை 
சிலபேர் 
தேன் 
சிலபேர் 
அலபேர் கடை 
சிலபேர் 
போலே மொய்த்து 
காலே - பெரு 
கு தட்டிக் கொண்டு 
அதட்டிக் கொண்டு 
( வானர 
என்று 
தோட்டம் - இப்ப 
நாட்டம் 
ஒட்டம் 
- போலும் 
தாட்டம் செய்ய 
எதிர்க்க அவனை 
பதைக்க - சொல்லும் 
நில்லாமலே 
இல்லாமலே 
( வா: ) 

சீனதனயத் தேடப் போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல் 
இப்புறம் ராம சாமி 
தெற்கினில் போன பேரைர் 
எப்படிக் காணு 
வேனே 
எனக்குறை கூறு வானே 

கண்ணிகள் 
1. திக்குத் திக்காச் சீதையைத் தேடி. நெர்ந்தாரோ * எந்த 
திக்குக்களிலும் காணாமல் எங்கே வாடி . வந்தாரோ 
2. தெற்குத் திசையில் போனோரைக் காணேன் கண்ணாலே 
அடா 
சுக்கிரீவர்நான் ஏதுக்கின்னம் இருந்தேன் மண்மேலே 
3. கன்னி சீதை இறந்தாளே என்னப் 
என்ன சொல்வோம் என்றுசீவன் தன்னை 
பட்டாரோ இத்தை 
விட்டாரோ 
ஆனோரோ 
- உன் தன் 
போனாரோ 

4. நாள் கணக்கை எண்ணி எண்ணி ஏக்கம் 
ஆக்கினைக்குப் பயந்துதல * நோக்கிப் 
J. மற்றொரு லோகத்தைச் சுற்றித் தேடு 
வைத்த அரக்கரோ டேபோர் 
கின்றாரோ - சிறையில் 
கின்றாரோ 
செல்வாரோ இங்கே 
சொல்வாரோ 

6. தென்முமே முரமாக இன்னம் 
என் முகத்தில் சீதை சேதி என்ன 
7. தன்வரவு பார்க்கும் : என்னைத் தளரப் 
என் வயிற்றில் என்றுவந்து பாலை 
8. கவனல ஏன் அனுமனிருக்கக் காரியம் 
அவனா லாகாத காரியம்பின் ஆரால் 
பட்ர்ப்பானே 
வார்ப்பானோ 

அனுமான் 
போகுமோ 
அய்யோ 
ஆகுமோ 

ஸ்ரீராமருக்கு அனுமார் சீதையின் இருப்புக் கூறல் 

வண்டே போல் மனஞ்சுழல இந்த வண்ணம் 
மடலேபோல் சுக்கிரீவ னுடனே சொல்லிக் 
கொண்டே தென் முகத்தினிலே முகத்தை வைத்துக் 
குறித்து ராகவன் இருந்த சபைக்கு முன்னே 
பண்டே அங்கதன் முதற் சேனைகள்பின் செல்லப் 
பறந்து வந்து கரங் குவித்துப் பணிந்து கண்டேன் 
கண்டேன் சீதையை என்று கூவிக் கூவிக் 
கதிகொண்டான் அனுமன் வந்து 
அனுமன்வந்து குதி கொண்டானே 

( கண் ) 

( கண் ) 
கண்டேன் கண்டேன் சீதையைக் 
கண்டேன் ராகவா 

அனுபல்லவி 
அண்டருங் காணாத இலங்காபுரத்திலே 
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவை 

சரணங்கள் 
1. காவி விழிகளில் உன் 
உருவெளி மின்னக் 
கனிவாய் தனிலேஉன் திருநாமமே பன்ன 
ஆவித்துணையைப் 
பிரிந்த மட அன்னம் 
ஆனாள்நான் 
சொல்லுவ தென்ன 
பூவைத் திரிசடை 
தித்தம்ரித்தம் சொன்ன 
புத்திவழியே தன் 
புத்திநினல மன்னப் 
பாவி அரக்கியர் 
காவல் சிறைதுன்னப் 
பஞ்சு படிந்தப 
ழஞ்சித்திரம் என்ன 
2. பனிக்கால வாரிசம் 
போல நிறங்கூசிப் 
பகல் ஒரு யுகமாகக் 
கழித்தாளே பிரயாசி 
நினைத் தங்கே ராவணன் 
அந்நான் வரச் சீசி 
நில்லடா சன் 
டாளா என்றேசி 
தனித்துத்தன் உயிர் தன்னைத் தான்விட மகராசி 
சாரும்பொழுது காணும் சமய மிதுவே வாசி 
( கண் , 

னித்தா மதம் செய்யல் 
ஆகாதென்றிடர் வீசி 
ராமஎன்றெதிர் பேசி 
ராமராம ராமா 
( கண் ) 

3. அடல்சேரும் வாலியை 
வானுலகிலே கூட்டி 
அவனியைச் சுக்கிரீவன் 
ஆளமுடி சூட்டி 
உடனே நீ தூதுபோ 
என்றசொல் அமுதூட்டி 
உன் எழில் 
பாராட்டி 
விடவந்த அனுமந்தன் 
நான் என்று சீராட்டி 
விவரம் சொல்ல உயிர்கொண் டிருக்கிறாள் சீமாட்டி 
திடமா லட்சுமணன் செய்த பர்னசாலை வீட்டில் 
தேவாதி தேவா உன் திருவாழிதனைக் காட்டி 
(கண் ) 

ஸ்ரீராம சீதாதேவி சூடாமணி கண்டு மகிழ்தல் 

பணியனுமான் இது சொல்லிப் பாவை உத வியசூடா 
மணியடையா ளங்கொடுத்தான் வள்ளலிரா கவன் கண்டான் 
அணிஉடலம் புளகித்தான் அகங்குளிர்ந்தான் முகம் மலர்ந்தான் 
துணியும் அந்த மணிவாங்கித் துதித்தான்சம் மதித்தானே 
 
சூடாமணிகண் டபோதே - சாமிக்கு வந்த 
சுகமே அனந்த சுகம் 
( சூடா ) 

அநுபல்லவி 
வாடி அனுமான் சொல்ல ஆடி முட்டமுட்ட 
நாடிச் சீதையம்மை 
சூடி வரவிட்ட 
( சூடா ) 

1. அமல மாமணிதன்னை 
அமுர்த சஞ்சீவிபோல் 
கமலக் னகபோறிபிடித் 
கதிர்கண்ட பனிபோல் 
கண்ணிரண்டும் 
எண்ணங்களும் 
வாங்கினான் உயிர்செய் 
தாங்கினான் - 

சீதை 
தோங்கினான் கவலை 
நீங்கினான் - கண்டு 
குளிர்ந்தான் - மேல்வரும் 
தெளிந்தான் அத்த 
( சூடா ) 
மடித்து வாயிதழ் 
மயிர்ப் புளகம் 
பொடிக்கத்துடி 
புத்தி சொல்லிப் 
போர்க்குச் செல்லும் 
சேர்க்கச் சொல்லும் 
கடித்தான் - மேனி 
பொடித்தான் வேர்வை 
துடித்தான் 
அனுமான் 
படித்தான் 
சேனையை 
என்றான் அடிக்கடி 
என்றான் 
இப்படி 
( சூடா ) 
ஓடவே 
கீர்த்தி 

3. அரக்கராம் இருளெல்லாம் 
ஆனபயிர் வளர்ந்து 
விரித்தரம்பையர் கீதம் 
வீசும் பூமலர் எங்கும் 
மேனிபூ 
வானிபூ 
தர்மம் 
கூடவே 
பாடவே தேவர் 
மூடவே 
வரவர 
ரிக்கவே துர்க்காப 
ரிக்கவே அந்த 
( சூடா ) 

ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல் 

இந்தவண்ணம் சாமி மனம் மகிழ்ந்து தேறி 
இலங்கையைப் போய் வளைத்திடவே சேனைசூழ 
அந்த அனுமான் மேலேதானும் , தம்பி 
அங்கதன் தோள் மேலும் எழுந்தருளிச் சென்று 
தொந்தமுள்ள படைத்தலைவர் முன்னும் பின்னும் 
சூழ்ந்துவரச் சுக்கிரீவன் அருகேநின்று 
முந்திவழி காட்டியிட ராமச்சந்திரன் 
முறை கொண்டான் தென் கடலின் கறைகண்டானே 


சுந்தரகாண்டம் முற்றிற்று 

சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் . 
-------------

ஐந்தாவது 
சுந்தரகாண்டம் 
( கம்பராமாயண ஒப்புமைப் பகுதி ) 
அனுமார் கடல் தாண்டப் பாய்தல் 
 
ஆண்டகை ஆண்டவ் வானோர் துறக்கநா டருகிற் கண்டான் 
ஈண்டிது தான் கொல் வேலை இலங்கையென்று ஐயம் எய்தா 
வேண்டரு விண்ணா டென்னும் மெய்ம்மைகண் டுள்ளம் மீட்டான் 
காண்டரு கொள்கை உம்பர் இல்லெனக் கருத்துட் கொண்டான் 

மொய்யுறு செவிகள் தாவி முதுகுற முறைகால் தள்ள 
மையறுவிசும் பினூடு நிமிர்ந்தவா லதியமஞ்சின் 
மெய்யுறத் தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் 
மையுற மரங்கள் பற்றிப் பிளிறின களிநல் யானை 

பொன்பிறழ் சிமயக்கோடு பொடியுறப் பொடியும்சிந்த 
மின்பிறழ் குடுமிக் குன்றம் வெரிந்உற விரியும் வேலை 
புன்புற மயிரும் பூவாக் கண்புலம் புறத்து நாறா 
வன்பறழ் . வாயிற்கௌவி வல்லியம் இரிந்த மாதோ 


மாவொடு மானும் மண்னும் வல்லியும் மற்றும் எல்லாம் 
போவது புரியும் வீரன் விசையினாற் புணரி போர்க்கத் 
தூவின கீழும்மேலும் தூர்த்தன சுருதியன்ன 
சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ 


இடுக்குறு பொருள்கள் என்னாம் எண்டிசை சுமந்த யானை 
நடுக்குற விசும்பிற் செல்லும் நாயகன் தூதன் நாகம் 
ஒடுக்குறு காலை வன்காற்று அடியொடும் ஒடித்த அந்நாள் 
முடுக்குறக் கடலிற்செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான் 


கொட்புறு புரவித் தெய்வக் கூர்நுதி குலிசத்தாற்கும் 
கட்புலன் கதுவலாகா வேகத்தான் கடலும் மண்ணும் 
உட்படக் கூடிஅண்டம் உறஉள செவியின் ஒற்றைப் 
புட்பக விமானந்தானவ் இலங்கைமேல் போவதொத்தான் 

தடக்கைநா லைந்து பத்துத் தலைகளும் உடையான் தானே 
அடக்கிஐம் புலன்கள் வென்ற தவப்பயன் அறுதலோடும் 
கெடக்குறி யாகமாகம் கிழக்கெழு வழக்கு நீங்கி 
வடக்கெழுந் திலங்கை செல்லும் பருதிவானவனும்ஒத்தான் 

வெளித்துப்பின் வேலைதாவும் வீரன்வால் வேதம் ஏய்க்கும் 
அளித்துப்பின் அனுமன் என்றோர் அருந்துணை பெற்றதாயும் 
களித்துப்புன் தொழில்மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவரா மென்று 
ஒளித்துப்பின் செல்லும்கால பாசத்தை ஒத்ததன்றே 


ஓசனை உலப்பிலாத உடம்பமைந் துடைய என்னத் 
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கில கிலங்களோடும் 
ஆசையை உற்றவேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை 
வீசிய காலின்வீந்து மிதந்தன மீன்க ளெல்லாம் 

[ கடல் தாவுபடலம் 1 , 5 , 6 , 19 , 23 , 25 , 28 , 33 , 37 ] 
இலங்கணிவதை 


இந்நாகம் அன்னான் ஏறிக் கால்என ஏகும் வேலைத் 
திந்நாக மாவில்செறி கீழ்த்திசைக் காவல் செய்யும் 
கைந்நாகம் அந்நாள் கடல் வந்ததோர் காட்சிதோன்றக் 
கைந்நாகம் என்னும் மலை வானுற வந்ததன்றே 

நீர்மேற் படரா நெடுங்குன்று நிமிர்ந்து நிற்றல் 
சீர்மேற் படராதென சிந்தை உணர்ந்து செல்வான் 
வேர்மேற்பட வன் தலை கிழ்ப்பட தூக்கி விண்ணோர் 
ஊர்மேற் படரக் கடிது உம்பரின் மீதுயர்ந்தான் 


ஈண்டே கடிதேகி இலங்கை விலங்கல் எய்தி 
ஆண்டான் அடிமைத் தொழிலாற்றி என் ஆற்றல் கொண்டே 
மீண்டால் நுகர் வென் நின்விருந்து எனவேண்டி மெய்ம்மை 
பூண்டானவன் கட்புலம்பின்பட முன்புபோனான் 


வெங்கார் நிறப்புணரி வேறேயும் ஒன்று அப் 
பொங்கார் கலிப்புனல் தரப்பொலிவ தேபோல் 
ங்கார் கடத்திர்எனை என்னா எழுந்தாள் 
அங்கார தாரை பெரிது ஆலாலம் அன்னாள் 


திறந்தாள் எயிற்றையவள் அண்ணல் இடைசென்றான் 
அறந்தான் அரற்றியது அயர்த்தமரர் எய்த்தார் 
இறந்தான் எனக்கொடு ஓர் இமைப்பதனின் முன்னம் 
பிறந்தான் எனப் பெரிய கோளரி பெயர்ந்தான் 

( கடல்தாவுபடலம் 39 , 42. 51. 63 , 70 ) 


நாணாளும் தான் நல்கிய காவல் நனிமூதூர் 
வாணாள் அன்னாள் போவதின் மேலே வழிநின்றாள் 
தூணாம் என்னும் தோளுடையானைச் சுடரோனைக் 
காணாவந்த கட்செவி என்னக்கனல் கண்ணாள் 


எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் 
நல்லாள் அவ்வூர் வைகுறை ஒக்கும் நயனத்தாள் 
நில்லாய் நில்லாய் என்றுரை நேரா நினையாமுன் 
வல்லே சென்றாள் மாருதிகண்டான் வருகென்றான் 

கொல்வாம் அன்றேல் கோளுறும் இவ்வூர் எனல் கொண்டாள் 
வெல்வாய் நீயேல் வேறி எனத்தன் விழிதோறும் 
வல்வாய் தோறும் வெ நுகனல் பொங்க மதிவானில் 
செல்வாய் என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள் 


அடியா முன்னம் அங்கையனைத்தும் ஒருகையால் 
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா 
ஒடியா நெஞ்சத்து ஓரடிகொண்டான் உயிரோடும் 
இடியேறுண்ட மால்வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் 

ஐயகேள் வையம் நல்கும் அயனருள் அமைதியாக 
எய்தியிம் மூதூர் காப்பென் இங்கைமா தேவி என்பேர் 
செய்தொழில் இழுகினாலே திகைத்திந்தச் சிறுமை செய்தேன் 
உய்தி என்றளித்தியாயின் உணர்த்துவல் உண்மை என்றாள் 


எத்தனைக் காலம் காப்பல் யானிந்த மூதூர் என்று அம் 
முத்தனை வினவினேற்கு முரண்வலிக் குரங்கொன்றுன்னைக் 
கைத்தலம் அதனாற்றீண்டிக் காய்ந்த அன்றென்னைக் காண்டி 
சித்திர நகரம் பின்னைச் சிதைவது திண்ணம் என்றான் 


அன்னதே முடிந்ததைய அறம் வெல்லும் பாவம் தோற்கும் 
என்னும் தியம்பவேண்டும் தகையதோ இனிமற்றுன்னால் 
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாததுண்டோ 
பொன்னகர் புகுதி என்னாப் புகழ்ந்தவள் இறைஞ்சிப் போனாள் 

( ஊர்தேடுபடலம் 73 , 79 , 85 , 89 , 91 93 ] 
அனுமார் இலங்கையில் சீதையைத் தேடுதல் 

ஆத்துறு சாலைதோறும் ஆனையின் கூடந்தோறும் 
மாத்துறு மாடந்தோறும் வாசியின் பந்திதோறும் 
காத்துறு சோலைதோறும் கருங்கடல் கடந்த தாளான் 
பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டிற் போனான் 

யக்கியர் அரக்கிமார்கள் நரகியர் எஞ்சில் விஞ்சை 
முயல்கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை 
மயக்கற நாடியேகும் மாருதி மலையின் வைகும் 
கயக்கமில் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணிற்கண்டான் 


குறுகி நோக்கி மற்றவன் தலை ஒருபதும் குறித்த 
இறுகுதிண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா 
மறுகி ஏறிய முனிவெனும் வடவை வெங்கனலை 
அறிவெனும் பெரும்பரவை யம்புனலினால் அவித்தான் 

மாடகூடங்கள் மாளிகைஒளிகை மகளிர் 
ஆடரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் 
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல்பலவும் 
நாடிஏகினன் இராகவன் ராகவன் புகழ் எனும் நலத்தான் 


மணிகொள் வாயிலில் சாளரத் தளங்களில் மலரில் 
கணிகொள் நாளத்தில் காலெனப் புகையெனக் கலக்கும் 
நுணுகும் வீங்கும் மற்றவன் நிலை யாவரே நுவல்வார் 
அணுவில் மேருவில் ஆழியான் எனச்செலும் அனுமன் 


ஏந்தல் இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்திக் 
காந்தள் மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான் 
வேந்தர் வேதியர் மேலுளோர் கீழுளோர் விரும்பப் 
போந்தபுண்ணியன் கண்ணகன் கோயிலுட் புக்கான் 

பளிக்குவேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன் 
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால் 
வெளித்து வைகுதல் அரிதென அவர் உருமேவி 
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனையுற்றான் 


முந்தரம் பையர் முதலினர் முழுமதி முகத்துச் 
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து 
மந்திரம் பலகடந்து தன்மனத்தின் முன்செல்வான் 
இந்திரன் சிறையிருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் 

வளையும் வாளெயிற் றரக்கனோ கணிச்சியான் மகனோ 
அளையில் வாளரி யனையவன் யாவனோ அறியேன் 
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள் 
உளைய உள்ளபோர் இவனொடும் உளதுான உணர்ந்தான் 


இன்னராம் பெரும்படைத்தலைவர்கள் இருக்கைப் 
பொன்னின் மாளிகை ஆயிரகோடியும் புக்கான் 
கன்னிமாநகர்ப் புறத்து அகன்கரந்துறை காண்பான் 
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான் 

கரிய நாழிகை பாதியில் காலனும் 
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி 
ஒருவனே ஒரு பன்னிரு யோசனைத் 
தெருவு மும்மை நூ றாயிரம் தேடினான் 


ஆயபொழுதம் மதிலகத்து அரசர் வைகும் 
தூயதெரு ஒன்றோடு ஒருகோடி துருவிப்போய்த் 
தீயவன் இருக்கை அயல்செய்த அகழ் இஞ்சி 
மேயது கடந்தனன் வினைப்பகையை வென்றான் 

[ ஊர்தேடுபடலம் 99 , 119 , 129 , 131-134 , 136 , 139 , 143 , 155 , 


-அனுமார் இராவணனைக் கண்டு கோபித்தல் 

போரியற்னக இராவணன் பொன்மனை 
சீரியற்கை நிரம்பிய திங்களா 
தாரகைக் குழுவின் தழுவித் தொடர் 
நாரியர்க் குறைவாம் இடம் நண்ணினான் 

ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறிரண்டமைகோடித் 
தூயமாளிகை நெடுந்தெருத் துரூவிப்போய் தொலைவில் மூன்றுலகிற்கும் 
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் 
மாயநந்திய வாள்முகத் தொருதனி மயன்மகள் உறை மாடம் 


ன்ன தன்மையின் எழில்மணி விளக்கங்கள் 

எழில்கெடப் பொலிகின்ற தன்ன தின்னொளி 
தழைப்புறத் துயில்வுறு தைய லைத் தகைவில்லான் 
அன்னளாகிய சானகி இவள் என அயிர்த்து அகத்தெழு வெந்தீ 
துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவது ஓர் துயருழந்திவை சொன்னான் 

மானுயர்த் திருவடிவினள் அவள் , இவள் மாறுகொண்டனள் கூறின் 
தானியக்கியோ தானவர் தையலோ ஐயுறுந்தகையானாள் 
கானுயர்த்த தார் இராமன் மேல்நோக்கிய காதல் காரிகையார்க்கு 
மீனுயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் 

குழவி ஞாயிறு குன்றிவர்ந் தனையன குருமணி நெடுமோலி 
இழைகளோடு நின்றிள வெயில் ஏறித்திட இரவெனும் பெயர் வீய 
முழைகொள் மேருவின் முகட்டிடைக் கனகனை முறுக்கிய முரண்சீயம் 
தழைகொள் தோளொடு தலைபல பரப்பிமுன் துயில்வதோர் தகையானை 


கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் காலச்செந்தீ 
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும் 
கொண்டதோர் உருவம் மாயோன் குறளினும்குறுக நின்றான் 
திண்தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி 


தோளாற்றல் என்னாகும் மேல்நிற்கும் சொல் என்னாம் 
வாளாற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடியென் 
தாளாற்றலால் இடித்துத் தலைபத்தும் தகர்த்தின் றென் 
ஆளாற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே 


நடித்து வாழ் தகைமையதோ அடினமதான் நன்னுதலைப் 
பிடித்து வாழ் அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ 
ஒடித்துவான் தோளனைத்தும் தலைபத்தும் உதைத்துருட்டி 
முடித்திவ்வூர் முடித்தால் மேல்முடிவதெலாம் முடிந்தொழிக 


என்றூக்கி எயிறுகடித்து இருகரனும் பிசைந்தெழுந்து 
நிறூக்கி உணர்ந்துரைப்பான் நேமியோன் பணியன்றால் 
ஒன்றூக்கி ஒன்றிழைத்தல் உணர்வுடைமைக் குரித்தன்றால் 
பின் தூக்கின் இதுசாலப் பினழபயக்கும் எனப் பெயர்ந்தான் 

{ ஊர்தேடுபடலம் 165 , 193 , 197 , 199 , 205 , 216 , - 219 ] 
அனுமார் சீதையைக் காணாததால் இரங்குதல் 


ஆலம்பார்த் துண்டவன்போல் ஆற்றலமைந்துளர் எனினும் 
சீலம்பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ 
மூலம்பார்க்குறின் உலகைமுற்றுவிக்கும் முறைத்தெனினும் 
பாலம்பார்த் திறைவேலை கடவாத கடல்ஒத்தான் 

இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம் என்னோடு முடிந்திடுக 
கற்றைப் பூங்குழலாளைச் சிறைவைத்த கண்டகனை 
முற்றப்போர் முடித்தது ஒருகுரங்கென்றால் முனைவீரன் 
கொற்றப் போர்ச்சிலைத் தொழிற்குக் குறைவுண்டாம் எனக்குறைந்தான் 

என்றெண்ணி ஈண்டினியோர் பயனில்லை என நினையாக் 
நன்றன்ன தோளவன்றான் கோமனைபிற்படப் பெயர்ந்தான் 
இன்றெண்ணி உன்னுவான் அந்தோ இந்நெடுநகரில் 
பொன்துன்னும் மணிப்பூணாள் இலளென்ன பொருமுவான் 

கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கொடுந்தொழிலால் 
இன்றானோ எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியேன் 
ஒன்றானும் உணரகிலேன் மீண்டினிப்போய் என்னுரைக்கேன் 
பொன்றாத பொழுதெனக்கிக் கொடுந்துயரம் போகாதால் 


கண்டுவரும் என்றிருக்கும் காகுத்தன் கவிகுலக்கோன் 
கொண்டுவரும் என்றிருக்கும் யானிழைத்த கோளிதுவால் 
புண்டரிக நயனத்தான் பாலினியான் போவேனோ 
விண்டவரோடு உடன்வீயாது யான்வாளா விளிவேனோ 


கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனங்குழையை 
விண்ணடைதும் என்றாரை ஆண்டிறுத்தி விரைந்தயான் 
எண்ணியது முடிக்கிலேன் யான் முடியா திருப்பேனோ 
புண்ணியம் என்றொருபொருள் என்உழைநின்றும் போயதால் 


ஏழுநூறு ஓசனை சூழ்ந்து எயில்கிடந்த இவ்இலங்கை 
வாழுமா மன்னுயிர் யான்காணாத மற்றில்லை 
ஊழியான் பெருந்தேவி ஒருத்தியுமே யான்காணேன் 
ஆழிதாய் இடராழி இடையேவீழ்ந்து அழிவேனோ 


வல்லரக்கன் தனைப்பற்றி வாயாரக் குருதியுகக் 
கல்லரக்கும் கரதலத்தால் காட்டென்று காண்கேனோ 
எல்லரக்கும் அயில் நுதிவேல் இராவணனும் இவ்வீரும் 
மெல்லரக்கின் உருகி உக வெந்தழலான் வேய்கேனோ 


வடித்தாய்பூங் குழலாளை வானறிய மண்ணறிய 
பிடித்தான் இவ் அடலரக்கன் எனும்மாற்றம் பிழையாதால் 
எடுத்தாழி இலங்கையினை இருங்கடலிட் டின்றிவனை 
முடித்தாலே யான் முடிதல் முறைமன்ற என்றுணர்வான் 

( ஊர்தேடுபடலம் 220 , 221 , 223 228 , 231 ] 
அனுமார் சீதையைக் காணுதல் 

மாடுநின்ற அம்மணிமலர்ச் சோலையை மருவி 
தேடி இவ்வழிக் காண்பனேல் தீரும் என்சிறுமை 
ஊடுகண்டிலேன் எனின் பின்னர் உரியதொன்றில்லை 
வீடுவேன் மற்றிவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி 

அவ்வயின் அரக்கியர் அறிவுற் றம்மவோ 
செவ்வையில் துயில் நமைச் செகுத்ததீதென 
எவ்வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் 
வெவ்வயில் மழுஎழு சூலவெங்கையார் 


விரிமழைக் குலங்கிழித்து ஒளிரும் மின் எனக் 
கருநிறத் தரக்கியர் குழுவிற் கண்டனன் 
குருநிறத் தொருதனிக் கொண்டல் ஆம் எனத் 
திருவுருப் பொலியும் ஓர் செல்வன் தேவியை 


கடக்கரும் அரக்கியர் காவல் சுற்றுளாள் 
மடக்கொடி சீதையாம் மாதரே கொலாம் 
கடல்துணை நெடியதன் கண்ணின் நீர்ப்பெருந் 
தடத்திடை இருந்ததோர் அன்னத் தன்மையாள் 


என் அரும் உருவின் அவ் இலக்கணங்களும் 
வள்ளல் தன் உரையொடும் மாறுகொண்டில 
கள்ளவா ளரக்கள் அக்கமலக் கண்ணனார் 
உள்ளுறை உயிரினை ஒளித்து வைத்தவா 

மூவகை உலனகயும் முறையின் நீக்கிய பாவி
தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பிதால் 
ஆவதே ஐயம்இல் அரவீன் நீங்கிய 
தேவனே அவன் இவள் கமலச் செல்வியே 

வீடினதன்றறன் யானும் வீகலேன் 
தேடினென் கண்டனென் தேவியே எனா 
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து 
ஓடினன் உலாவினன் உவகைத் தேனுண்டான் 

[ காட்சிப்படலம் 1 , 55 , 59 - 63 ] 
சீதாதேவி திரிசடையோடு முறையிடல் 
 
அரிது போகவோ விதிவலி கடத்தல் என்றஞ்சிப் 
பரிதி வானவன் குலத்தையும் பழினயயும் பாரா 
சுருதிநாயகன் வரும்வரும் என்பதோர் துணிவால் 
ருதிமாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் 


ண்டிலன் கொலாம் இளவலும் கனைகடல் நடுவண் 
உண்டிலங்கை என்றுணர்ந்திலர் உலகெலாம் ஒருப்பான் 
கொண்டிறந்தமை அறிந்திலராம் எனக்குழையா 
புண்திறந்ததில் எரிநுழைந் தாலெனப் புகைவாள் 


மாண்டுபோயினன் எருவைகட் கரசன் மற்றுளரோ 
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இப்பிறப்பில் 
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் 
மீண்டுமீண்டுபுக் கெரிநுழைந்தா லென மெலிவால் 


என்னைநாயகன் இளவலை எண்ணலா வினையேன் 
சொன்ன வார்த்தைகேட் டறிவிலள் எனத் துறந்தானோ 
முன்னைஊழ்வினை முடிந்ததோ என்றென்று முறையால் 
பன்னிவாய் புலர்ந்துணர்வு தேய்ந்தாருயிர் பதைப்பாள் 


அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்றழுங்கும் 
விருந்து கண்டபோ தென்னுறுமோ என்று விம்மும் 
மருந்தும்உண்டுகொல் யானுற்ற நோய்க்கென்று மயங்கும் 
இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டெழாதாள் 


வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணைப் பகல்வையார் 
தின்பர் என் இனிச் செயத்தக்கது என்று தீர்ந்தானோ 
தன்குலப் பொறை தன்பொறை எனத் தண
என்கொல் எண்ணுவேன் என்றுடங் கிராப்பகலில்லாள் 

பெற்றதாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்தெய்திக் 
கொற்ற மாநகர்க் கொண்டிறந்தார்களோ குறித்துச் 
சொற்ற ஆண்டெலாம் நிறைந்தன்றி அந்நகர் துன்னான் 
உற்றதுண்டெனாப் படருழந்துறாதன உறுவாள் 


முரன் எனத்தகும் மொய்ம்பினோர் முன்பொருதவர்போல் 
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பில வல்லோர் 
பொரநிகழ்ந்ததோர் பூசலுண்டாம் ? எனப்பொருமா 
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் எனக் கவல்வாள் 


தெம்மடங்கிய சேணிலம் கேகயர் 
தம்மடந்தை உன் தம்பிய தாம்என 
மும்மடங்கு பொலிந்த முகத்தினன் 
வெம்மடங்கலை உன்னி வெதும்புவாள் 


மெய்திருப்பதம் மேத்வென்ற போதினும் 
இத்திருத்துறந் தேகு என்ற போதினும் 
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை 
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் 


தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான் 
வாங்குகோல வடவரை வார் சிலை 
ஏங்கு மாத்திரத் திற்றிரண்டாய்விழ 
வீங்கு தோளை நினைந்து மெலிந்துனாள் 


இன்னல் அம்பர வேந்தற்கியற்றிய 
பன்னலம் பதினாலாயிரம் படை 
கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை 
வில்நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள் 


ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய 
ஏழை வேடனுக் கெம்பிநின் தம்பிநீ 
தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன 
வாழி நண்பினை உன்னி மயங்குவாள் 


உரங்கொள் தேமலர்ச் சென்னி உரிமைசால் 
வரங்கொள் பொன்முடி தம்பி வனைந்திலன் 
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு 
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் 


பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள் 
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன் 
கருத்தின் ஆசை கரையினமை கண்டிறை 
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால் 

மழுவின் வாளினன் மன்னரை மூவெழு 
பொழுதின் நூறிப் புலவுறு புண்ணின் நீர் 
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரிவீல் 
தழுவும் மேன்மை நினைந்துயிர் சாம்புவாள் 

ஏகவாளி அவ்இந்திரன் செம்மல் மேல் 
போக ஏவி அதுகண்பொடித்த நாள் 
காகம் முற்றும் ஓர்கண்ணல வாகிய 
வேக வென்றியைத் தன் தலைமேற் கொள்வாள் 

வெவ்வி ராதனை மேவரும் தீவினை 
வவ்வி மாற்றரும் சாபமும் மாற்றிய 
அவ்இராமனை உன்னித் தன் ஆருயிர் 
செவ்விரா துணர் வோய்ந்துடல் தேம்புவாள் 


நலந் துடிக்கின்றதோ நான்செய்தீவினைச் 
சுலந் துடித்தின்னமும் தருவதுண்மையோ 
பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல் 
வலந்துடிக்கின்றில வருவதோர்கிலேன் 


முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள் 
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் 
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டென 
நனிதுடிக் கின்றன ஆய்ந்து நல்குவாய் 


மறந்தனென் இதுவுமோர் மாற்றங் கேட்டியால் 
அறந்தரு சிந்தைஎன் ஆவி நாயகன் 
பிறந்தபார் முழுவதும் தம்பி யேபெறத் 
துறந்து கான்புகுந்தநாள் வலந்துடித்ததே 


நஞ்சனையான் வனத்து இழைக்க நண்ணிய 
வஞ்சனைநாள் வலம் துடித்த வாய்மையால் 
எஞ்சல ஈண்டுதாம் இடந் துடிக்குமால் 
அஞ்சல் என்றிரங்குதற்கு அடுப்பதுயா தென்றாள் 

[ காட்சிப்படலம் 9 , 12 29 , 32 - 35 ] 


சீதாதேவிக்குத் திரிசடைகனா நிலையுரைத்தல் 


துயில் இலையாதலின் கனவு தோன்றல 
அயில்விழி ஒருகனவு அமைய நோக்கினேன் 
பயில்வன பழுதில பரிவின் ஆண்டன 
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால் 

எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறிலாத் 
திண்ணெடுங் கமுதை பேய்பூண்ட தேரின் மேல் 
அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன் 
நண்ணினன் தென்புலம் நவையில் கற்பினாய் 

மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும் 
புக்கனர் அப்புலம் போந்ததில் லையால் 
சிக்கற நோக்கினென் தீய இன்னமும் 
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள் 


ஆண்டகை இராவணன் வளர்க்கும் அவ்வனல் 
ஈண்டில பிறந்தவால் இனங்கொள் செஞ்சிதல் 
துண்டரு மணிவிழக்கழலும் தொல்மனை 
கீண்டதால் வான ஏறு எறியக் கீழைநாள் 


பிடிமதம் பிறந்தன பிறங்கு பேரியும் 
இடியென முழங்குமால் இரட்டல் இன்றியே 
துடியுடை முகிற்குலம் இன்றித் தாவில்வான் 
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம் 

விற்பகல் இன்றியே இரவு விண்டற 
எற்பகல் எறிந்துளது என்னத் தோன்றுமால் 
மற்பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய 
கற்பக மாலையும் புலவு நாறுமால் 


திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கெலாம் 
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும் 
தெரியுமால் மங்கல கலசம் சிந்தின 
விரியுமால் விளக்கினை விழுங்கு மாலிருள் 


தோரணம் முறியுமால் துளங்கிச் சூழிமால் 
வாரணம் முறியுமால் வளத்த வான்மருப்பு 
ஆரண மந்திரத்தறிஞர் நாட்டிய 
பூரண குடத்துநீர் நறவு நாறுமால் 


விண்தொடர் மதியினைப் பிளந்து மீனெழும் 
புண்தொடர் குருதியின் பொழியுமால் மழை 
தண்டொடு திகிரிவாள் தனுவென் றின்னன 
மண்டமர் புரியுமால் ஆழிமாறுற 

மங்கையர் மங்கலத்தாலி மற்றையோர் 
அங்கையின் வாங்குநர் எவரு மின்றியே 
கொங்கையின் வீழ்ந்தனகுறித்த ஆற்றினால் 
இங்கிதன் அற்புதம் இன்னும் கேட்டியால் 


மன்னவன் தேவி அம்மயன் மடந்தை தன் 
பின்னவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன 
துன்னரும் சுடர்சுடச் சுறுக்கென்று ஏறிற்றால் 
இன்னல் உண்டு எனுமிதற் ஏது என்பதே 


என்றனள் இயம்பிவேறு இன்னும் கேட்டியால் 
ன்றிவண் இப்பொழுது இயைந்ததோர் கனா 
வன்றுணைக் கோளரி இரண்டு மாறிலாக் 
குன்றிடை உழுவையம் குழுக்கொண்டீண்டியே 


உரம்பொரு மதகரி உறையும் அவ்வனம் 
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன 
வரம்பறு பிணம்படக் கொன்று மாறிலாப் 
புரம்புக இருந்ததோர் மயிலும் போயதால் 


ஆயிரம் திருவிளக் கமைய மாட்டிய 
சேயொளி விளக்கமொன் றேந்திச் செய்யவள் 
நாயகன் திருமனை நின்று நண்ணுதல் 
மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய் 


பொன்மனை புக்கஅப் பொருவில் போதினில் 
என்னை நீ உணர்த்தினை முடிந்ததில் என 
அன்னையே அதன்குறை காண்என் றாயிழை 
இன்னமும் துயில் கென இருகை கூப்பினாள் 


சீதாதேவிபக்கல் இராவணன் குறையிரத்தல் 
 
என்றிவை இனையன எண்ணி வண்ணவான் 
பொன்திணி நெடுமரப்பொதும்பர் புக்கு அவன் 
நின்றனன் அவ்வழி நிகழ்ந்தது என்எனின் 
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் தோன்றினான் 


தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிதச் சுதியின் 
முந்துறு குணிலொடு இயைவுறு குறட்டில் சில்லரிப் பாண்டிலில் முறையின் 
மந்தர கீதத்து இசைப்பதம் தொடர வகையுறு கட்டளை வழாமல் 
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகுவந் தாட 

ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறயல் அகல 
மேயினன் பெண்ணின் விளக்கெனத் தகையாள் இருந்துழி ஆண்டவள் வெருவிப் 
போயின உயிரளாம் எனநடுங்கிப் பொறிவரி எறுழ்வலி புகைக்கண் 
காய்ச்சின உழுவை தின்னிய வந்த கலையிளம் பிணைஎனக் கரைந்தாள் 

அவ்விடத்து அருகெய்தி அரக்கன் தான் 
எவ்விடத்து எனக்கின்னருள் ஈவது 
நொவ்விடைக் குயிலே நுவல்க என்றனன் 
வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான் 


ன்றிறந்தன நாளை இறந்தன 
என் திறம் தரும் தன்மையிதால் , எனைக் 
கொன்று இறந்தபின் கூடுதியோகுழை 
சென்றிறங்கி மறந்தரு செங்கணாய் 


உலகம்மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என் 
அலகில் செல்வத்து அரசியல் ஆணையில் 
திலகமே உன் திறத்து அனங்கன் தரு 
கலகமல்லது எளிமையும் காண்டியோ 


பூந்தண் வார்குழல் பொன் கொழுந்தே புகழ் 
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன்னுயிர்க் 
காந்தன் மாண்டிலன் காடுகடந்து போய் 
வாய்ந்து வாழ்வது மானுடவாழ்வன்றோ 

நோற்கின் றார்களும் நுண்பொருள் நுண்ணிதின் 
பார்க்கின் றாரும் பெறும்பயன் பார்த்தியேல் 
வார்க்குன்றாமுனல என்சொல் மவுலியால் 
ஏற்கின் றாரொடு உடன்உறை இன்பமால் 

பொருளும் யாழும் விளரியும் பூவையும் 
மருள நாளும் மழலை வழங்குவாய் 
தெருளும் நான்முகன் செய்தது உன்சிந்தையின் 
அருளும் மின் மருங்கும் அரிதாக்கியோ 


ஈண்டுநாளும் இளமையும் மீண்டில 
மாண்டு மாண்டு பிறிதுறும் மாலைய 
வேண்டுநாள் வெறிதே விளிந்தால்இனி 
யாண்டு வாழ்வது இடருழந்து ஆழ்தியோ 


மூவெனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக 
குழைமுகத்துநின் சிந்தனை கோடினால் 
பழகநிற்புறும் பண்பிவை காமத்தோடு 
அழகினுக்கு இனியாருளர் ஆவரே 


தேவர் தேவியர் சேவடிகை தொழும் 
தாவில் மூவுலகின் தனிநாயகம் 
மேவுகின்றது நுங்கண் விலக்கினை 
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கிழாய் 


குடிமை மூன்றுலகும் செய்யும் கொற்றத்து என் 
அடிமை கோடி அருளுதியால் எனா 
முடியின் மீது முகிழ்த்துயர் கையினன் 
படியின் மேல்விழுந்தான் பழிபார்க்கலான் 

[ காட்சிப்படலம் 73 , 86 , 94 , 97 , 99 105. 109 , 110 ] 
சீதாதேவி இராவணனை இடித்தல் 

காய்ந்தன சலாகையன்ன உரைவந்து கதுவா முன்னர் 
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி 
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு 
ஏய்ந்தன அல்லவெய்ய மாற்றங்கள் இனையசொன்னாள் 


மேருவை உருவல்வேண்டின் விண்பிளந்து ஏகல் வேண்டின் 
ஈரெழு புவனம்யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் 
ஆரியன் பகழிவல்லது அறிந்திருந்து அறிவிலாதாய் 
சீரிய அல்ல சொல்லித் தலைபத்தும் சிந்துவாயோ 

அஞ்சினை ஆதலான் அன்றுஆரியன் . அற்றம் நோக்கி 
வஞ்சனை மானொன்றேவி மாயையால் மறைந்து வந்தாய் 
உஞ்சனை போதியாயின் விடுதியுன் குலத் துக்கெல்லாம் 
நஞ்சினை எதிர்ந்தபோது நோக்குமே நினது நாட்டம் 


பத்துள தலையும் தோளும் பலபல பகழிதூவி 
வித்தகவில்லி னாற்கு திரு விளையாடற்கு ஏற்ற 
சித்திர இலக்கமாகும் அல்லது செருவில் ஏற்கும் 
சத்தியைப் போலும் மேனாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் 


தோற்றனை பறவைக்கன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி 
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்றெனின் இறத்தி யன்றே 
நோற்ற நோன்புடைய வாழ்நாள் வரமிவை நுனித்தவெல்லாம் 
கூற்றினுக் கன்றே வீரன் சரத்திற்கும் குறித்ததுண்டோ 


பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை வரனும் பின்னும் 
மற்றுடை எவையும் தந்த மலரயன் முதலோர் வார்த்தை 
விற்றொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண் டெல்லாம் 
இற்றிடைந் திறுதல் மெய்யே விளக்கின் முன் இருளுண்டாமோ 

குன்று நீ எடுத்தநாள் தன் சேவடிக் கொழுந்தால் உன்னை 
வென்றவன் புரங்கள் வேவத்தனிசரம் துரந்தமேரு 
என்றுணைக் கணவன் ஆற்றற்கு உரணிலாதிற்று வீழ்ந்த 
அன்றெழுந் துயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா 

மலைஎடுத் தெண்டிசை காக்கும் மாக்களை 
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ 
சிலைஎடுத் திளையவன் நிற்கச் சேர்ந்திலை 
தலை எடுத் தின்னமும் மகளிர்த் தாழ்தியோ 


ஏழைநின் ஒளிந்துரை இன்னதாம் என 
வாழிஎங் கோமகன் அறிய வந்தநாள் 
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ 
ஊழியும் திரியும் உன்னுயிரொடு ஓயுமோ 


வெஞ்சின அரக்கரை வீய்த்து வீயுமோ 
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தால் 
எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சுமென்று 
அஞ்சுகின் றேனிதற்கு அறனும் சான்றரோ 

அங்கண்மா ஞாலமும் விசும்பும் அஞ்சவாழ் 
வெங்கணாய் புன்தொழில் விலக்க உட்கொளாய் 
செங்கண்மால் நான் முகன் சிவன் என்றே கொலாம் 
எங்கள் நாயகனையும் நினைத்தது ஏழைநீ 


மானுயர் இவரென மனங்கொண் டாயெனின் 
கானுயர் வரை நிகர் கார்த்த வீரியன் 
தானொரு மனிதனால் தளர்ந்துளான் எனின் 
தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால் 


இருவர் என்றி கழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை 
ஒருவனன்றே உலகழிக்கும் ஊழியான் 
செருவரும் காலை என் மெய்ம்மை தேர்தியால் 
பொருவருந் திருவிழந்து அநாயம் பொன்றுவாய் 


கடிக்கும் வல்லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை 
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோ டறிவுகாட்டி 
இடிக்குநர் இல்லைஉள்ளார் எண்ணியது எண்ணி உன்னை 
முடிக்குநர் என்றபோது முடிவன்றி முடிவதுண்டோ 

[ காட்சிப்படலம் 111 , 113--124 , 132 ] 


சீதாதேவி தனியே புலம்பல் 

போயினன் அரக்கன் பின்னை பொங்கரா நுங்கிக்கான்ற 
தூயவெண் மதியம்ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றித் 
தீயவல்லரக்கி மார்கள் தெழித்திழித்து உரப்பிச்சிந்தை 
மேயினவண்ண மெல்லாம் விளம்புவான் உடன்றுமிக்கார் 

[ காட்சிப்படலம் 147 ] 


காண்டற் கொத்த காலமும் ஈதே தெறுகாவல் 
தூண்டற் கொத்த சிந்தையினாரும் துயில் கில்லார் 
வேண்டத்துஞ்சார் என்றொரு விஞ்சை வினை செய்தான் 
மாண்டற்குற் றாராம் என எல்லாம் மயர்வுற்றார் 


கருமேகம் நெடுங்கடல் கா அனையான் 
தருமே தமியேன் எனாருயிர்தான் 
உருமேறு உமிழ்வெஞ்கிலை நாண் ஒலிதான் 
வருமே ? உரையாய் வலியார் வலியே 


வாரா தொழியான் எனும் வன்மையினால் 
ஓராயிர கோடி இடர்க்கு உடையேன் 
தீராய் ஒரு நாள்வலி சேவகனே 
நாரா யணனே தனிநாயகனே 


தருவொன்றிய கானடைவாய் தவிர்நீ 
வருவென் சில நாளினில் மாநகர் வாய் 
இருவென்றனை இன்னருள் தான் இதுவோ 
ஒருவேன் தனி ஆவியை உண்ணுதியோ 


பேணும் உணர்வே உயிரே பெருநாள் 
நாணின் றுழல்வீர் தனிநாயகனைக் 
காணும் துணையும் கழிவீர் அலீர் நான் 
பூணும் பழியோடு பொருந்துவதோ 


பொறை இருந் தாற்றி என் உயிரும் போற்றினேன் 
அறையிருங் கழலவற் காணும் ஆசையால் 
நிறையிரும் பல்பகல் நிருதர் நீள் நிகர் 
சிறையிருந் தேனை அப் புனிதன் தீண்டுமோ 


பிறன்மனை எய்திய பெண்ணைப் பேணுதல் 
திறனலது என்றுயிர்க் கிறைவன் தீர்ந்தனன் 
புறனலர் அவனுறப் போது போக்கியான் 
அறனலது ஆற்றுவேன் என் கொண்டாற்றுகேன் 


வருந்தலில் மானமா அனையமாட்சியர் 
பெருந்தவம் மடந்தையர் முன்பு பேதையேன் 
கருந்தனி முகிலினைப் பிரிந்து கள்வரூர் 
இருந்தவள் இவள் என ஏசநிற்பெனோ 

[உருக்காட்டுப்படலம் 1 , 3 , 6-9 , 11 , 14 , 17 , 191 



அனுமார் ஸ்ரீராமரை வர்ணித்தல் 


ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறெனா 
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் 
ஈதலா திடமும் வேறில்லை என்றொரு 
போதுலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள் 


கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான் 
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்டக் கூசுவான் 
அண்டர் நாயகன் அருள் தூதன் யான்எனா 
தொண்டைவாய் மயிலினைத் தொழுது தோன்றினான் 


படி உரைத் தெடுத்துக்காட்டும் படித்தன்று படிவம் பண்பின் 
முடிவுள உவமமெல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் 
துடியிடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா 
அடிமுதல் முடியின் காறும் அறிவுற அனுமன் சொல்வான் 


சேயிழைத் தாமரை என்று சேண்உளோர் 
ஏயினர் அதன் துணை எளியதில்லையால 
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின் 
பாய்திரைப் பவளமும் குவளைப் பண்பிற்றால் 


தளங்கெழு கற்பகமுகிழும் தண்துறை 
இளங்கொடிப் பவளமும் கிடக்க என் அவை 
துளங்கொளி விரற்கெதிர் உதிக்கும் சூரியன் 
இளங்கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்திழாய் 


சிறியவும் பெரியவுமாகித் திங்களோ 
மறு இல பத்துள அல்ல மற்றினி 
எறிசுடர் வயிரமோ திரட்சி எய்தில 
அறிகிலென் உகிர்க்குயான் உவமமாவன 


பொருந்தில நிலனொடு போந்து கானிடை 
வருந்தின எனினது நூலை மாறுகொண்டு 
இருந்தது நின்றது புவனம் யாவையும் 
ஒருங்குடன் புணர அஃது உரைக்கற் பாலதோ 


தாங்கணைப் பணிலமும் வளையும் தாங்குநீர் 
வீங்கணை பணிமிசை மேகம் அன்னவன் 
பூங்கணைக் காற்கொரு பரிசுதான் பொரு 
ஆம்கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே 


அறங்கிளர் பறவையின் அரசன் ஆடெழில் 
பிறங் கெருத்தணைவன பெயரும் பொற்புடை 
மறங்கிளர் மதகரிக் கரமும் நாணின 
குறங்கினுக் குவமை இவ்வுலகில் கூடுமோ 

வலஞ்சுழித் தொழுகுநீர் வழங்கு கங்கையின் 
பொலஞ்சுழி என்றலும் புன்மை பூவொடு 
நிலஞ்சுழித் தெழுமணி உந்திநேர் இனி 
இலஞ்சியும் போலும் வேறுஉவமையாண்டரோ 


பொருவரு மரகதப் பொலன் கொள்மால்வரை 
வெருவுற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப் 
பிரிவற நோற்றனள் என்னின் பின்னை அத் 
திருவனின் திருவுளார் யாவர் தெய்வமே 


நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின் 
கோடுறு கரம்எனச் சிறிது கூறலாம் 
தோடுறு பலரெனச் சுரும்பு சுற்று அறாத் 
தாள்தொடு தடக்கைவே றுவமை சாலுபோ 

பச்சிலைத் தாமரை பகல்கண்டால் எனக் 
கைச் செறிமுகிழ் உகிர் கனகன் என்பவன் 
வச்சிரயாக் கையை வகிர்ந்தவன் தொழில் 
நிச்சயம் அன்றெனின் ஐயம் நீக்குமே 

திரண்டில ஒளியில் திருவின் சேர்வில 
முரண்டரு மேருவில் முரியமூரி நாண் 
புரண்டில புகழ் இல பொருப்பென்று ஒன்றுபோன்று 
இரண்டில் புயங்களுக்கு உவமம் ஏற்குமோ 


கடற்படு பனிலமும் கன்னிப் பூகமும் 
மிடற்றினுக் குவமை என்றுரைக்கும் வெள்ளியோர்க்கு 
உடன்பட ஒண்ணுமோ உரகப் பள்ளியான் 
இடத்துறு சங்கம் ஒன்றிருக்க எங்களால் 


அண்ணல் தன் திருமுகம் கமலம் ஆம் எனின் 
கண்ணினுக் குவமை வேறு யாது காட்டுகேன் 
தண்மதி ஆய்என உரைக்கத் தக்கதோ 
விண்ணுடல் பொலிந்தது மெலிந்து தேயுமால் 


ஆரமும் அகிலும் நீவி அகன்றதோள் அமலன் செவ்வாய் 
நாரம் உண்டலர்ந்த செங்கோள் நளினம் என்றுரைக்க நாணும் 
ஈரமுண்டமுதம் ஊறும் இன்னுரை இயம்பா தேனும் 
மூரல்வெண் முறுவல்பூவாப் பவள மோ மொழியற்பாற்றே ? 


முத்தங்கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோமுறை அமுதச் 
சொத்தின்துள்ளி வெள்ளியினம் தொடுத்த கொல்லோ துறையறத்தின் 
வித்து முளைத்த அங்குரங்கொல்வேறே சிலகொல்மெய்ம் முகிழ்த்த 
தொத்தின் தொகை கொல் யாதென்றுபல்லுக் குவமை சொல்லுகேன் 


எள்ளாநிலத் திந்திரநீலத் தெழுந்த கொழுந்து மரகதத்தின் 
வள்ளாமுழுமா நிழற்பிரம்பும் வேண்டவேண்டும் மேனியதோ 
தள்ளாஓதி கோபத்தைக் கௌவவந்து சார்ந்ததுவும் 
கொள்ளா வள்ளல்திரு மூக்கிற்கு உவமைபின்னும் குணிப்பாமோ 


பனிக்கச்சுரத்துக் கரன் முதலோர் கவந்தப்படையும் பல்பேயும் 
தனிக்கைச்சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தன அறனும் 
இனிக்கட்டழித்த தரக்கர் குலம் என்னும் சுருதிஈரிரண்டும் 
குனிக்கக் குனித்த புருவத்துக் குவமம் நீயே கோடியால் 


வருநாள் தோன்றும் தனிமறுவும் வளர்வும்தேய்வும் வாளரவம் 
ஒருநாள் கௌவும் உறுகோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் 
இருநாற் பகலின் இலங்குமதி அலங்கலிருளின் எழில்நிழற்கீழ்ப் 
பெருநாள் நிற்பின் அவன் நெற்றிப் பெற்றித்தாகப் பெறுமன்னோ 


நீண்டுகுழன்று நெய்த்திருண்டு நெறிந்து செறிந்து நெடுநீலம் 
பூண்டுபுரிந்து சரிந்துகடை சுருண்டு புகையும் , நறும்பூவும் 
வேண்டும் அல்ல எனத்தெய்வ வெறியேகமழும் நலுங்குஞ்சி 
ஈண்டுசடையாயின தென்றல் மழைஎன்றுரைத்தல் இழிவன்றோ 

புல்லல் ஏற்ற திருமகளும் பூவும்பொருந்தப் புவி ஏழும் 
எல்லையற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃதின்றி
அல்லல்ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான 
மல்லல் ஏற்றின் உளதென்றால் மத்தயானை வருந்தாதோ 
[உருக்காட்டுப்படலம் 21 , 22 , 38 58 ] 

சீதாதேவி லட்சணியைத் தரிசித்தல் 
மீட்டும் உணர வேண்டுவன இல்லை என மெய்ப்பேர் 
தீட்டியது தீட்டரிய கெய்கையது செவ்வே 
நீட்டிதென நேர்ந்தனன் எனா நெடியகையால் 
காட்டினன் ஓராழி அதுவாள் நுதலிகண்டாள் 

இறந்தவர் பிறந்த பயன் எய்தினர் கொல் என்கோ 
மறந்தவர் அறிந்துணர்வு வந்தனர் சொல் என்கோ 
துறந்த உயிர் வந்திடை தொடர்ந்தது கொல் என்கோ 
திறந்தெரிவ தென்னை கொல் இந்நன்னுதலி செய்கை 

இழந்தமணி புற்றரவு எதிர்ந்ததெனல் ஆனால் 
பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் 
குழந்தையை உயிர்த்த மலடிக்குவமை கொண்டாள் 
உழந்துவிழி பெற்றதோர் உயிர்ப்பொறையும் ஒத்தாள் 

வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தரல் 
தாங்கினள் மலர்க்கண்மிசை ஒற்றினள் தடந்தோள் 
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு 
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னதெனல் ஆமோ 

போக்கும் முலைவைத்துற முயங்கும் ஒளிர் நன்னீர் 
நீக்கிநிறை கண்ணிணை ததும்ப நெடுநீளம் 
நோக்கும் நுவலக்கருதும் ஒன்றும் நுவல் கில்லாள் 
மேக்கு நிமிர்விம்மலள் விழுங்கலுறுகின்றாள் 

நீண்டவிழி நேரிழைதன் மின்னின் நிறமெல்லாம் 
பூண்டதொளிர் பொன்னனைய பொம்மல்நிறம் மெய்யே 
ஆண்டகைதன் மோதிரம் அடுத்த பொருளெல்லாம் 
திண்டளவில் வேதிகை செய் தெய்வமணி கொல்லோ 

இருந்து பசியால் இடர் உழந் தவர்கள் எய்தும் 
அருந்தும் அமுதாகியது அறத்தவரை அண்மும் 
விருந்தும் எனல் ஆகியது வீயும்உயிர் மீளும் 
மருந்தும் எனலாகியது வாழி மணியாழி 

இத்தகைய ளாகி உயிர் ஏமுற விளங்கும் 
முத்தநகை யாள்விழியின் ஆலிமுலை முன்றில் 
தத்தியுக மென்கு தலை தள்ள உயிர் தந்தாய் 
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் தூதாய் 

மும்மையாம் உலகந்தந்த முதல்வற்கும் முதல் வன் 
செம்மையால் உயிர்தந்தாய்க்குச் செயல் என்னால் எளியதுண்டோ 
அம்மையாய் அப்பனாய அத்தனே அருளின் வாழ்வே 
ம்மையே மறுமைதானும் நல்கினை இசையோ டென்றாள் 

பாழிய பணைத்தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த 
வாழிய வள்ளலே யான் மறுவிலா மனத்தேன் என்னின் 
ஊழியோர் பகலாய் ஓதும் யாண்டெல்லாம் உலகம் ஏழும் 
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்றாள் [ உருக்காட்டுப்படலம் 68-72 ] 

அனுமர் சீதை பிரிந்தபின் நடந்த செய்திகள் அவளுக்கு விவரித்தல்
உழைக்குலத் தீயமாய உருவு கொண்டுறுதல் செய்தான் 
மழைக்கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் 
இழைத்தட மார்பத்தண்ணல் எய்யப்போய் வையம் சோர்வான் 
அழைத்தபொய்ச் குரலின் ஓசை மயக்கியது உன்னை அம்மா 

இக்குரல் இளவல் கேளாதொழிக எனஇறைவன் இட்டான் 
மெய்க்குரல் சாபம் பின்னைவிளைந்தது விதியின் வெம்மை 
பொய்க்குர லின்று பொல்லாப் பொருள் பின்பு மயக்கும் என்பான் 
கைக்குரல் வரிவில்லானும் இளையவன் வரவு கண்டான் 

கண்டபின் இளையவீரன் முகத்தினாற் கருத்தை ஓர்ந்த 
புண்டரிகக்கணானும் உற்றது புகலக்கேட்டான் 
வண்டுறை சாலைவந்தான் நின் திரு வடிவு காணான் 
உண்டுயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கேது ஒன்றோ - 

தேண்டிநேர் கண்டேன் வாழி தீதிலன் எங்கோன் ஆகம் 
பூண்டமெய் உயிரேபோகப் பொய்யுயிர் போல நின்ற 
ஆண்டகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவுண்டாமோ 
ஈண்டுநீ இருந்தாய் ஆண்டங்கு எவ்வுயிர் விடும் இராமன் 

அந்நிலை யாய அண்ணல் ஆண்டு நின்று அன்னைநின்னை 
துன்னிரும் காணும்யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி 
இன்னுயிரின்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான் 
தன்னுயிர் புகழ்க்குவிற்ற சடாயுவைவந்து சார்ந்தான் 

எவ்வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள்யாது 
செவ்வியோய் கூறுகென்னச் செப்புவாள் உற்ற செவ்வி 
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின்வேந்தன் 
எவ்விய வரிவிற் செய்கை இருவரும் இடரின் வீழ்ந்தார் 

அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச் 
செயத்தகு கடன்மை யாவும்தேவரும் மருளச் செய்தார் 
கயத்தொழில் அரக்கன் தன்னை நாடிநாம் காண்டும் என்னா 
புயல்தொடு குடுமிக்குன்றும் கானமும் கடிதுபோனார் 

கன்மத்தை ஞாலத்தவர் யார்உளரே கடப்பார் 
பொன்மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் 
நன்மத்தம் நரகத்தயல் சூடிய நம்பனேபோல் 
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலா தான் 

போதாயின போதுன் தண்புனல் ஆடல் பொய்யோ 
சீதாபவளக் கொடியன்னவள் தேடிஎன்கண் 
நீதாதருகிற் றிலையேல் நெருப்பாதி என்னா 
கோதாவரி யைச்சினங்கொண்டனன் கொண்டல் ஒப்பான் 

வந்தான் இளையானொடு வானுயர் தேரின்வைகும் 
நந்தாவிளக்கின் வரும் எம்குலநாதன் வாழும் 
சந்தார் தடங்குன்றினில் தன்னுயிர்க் காதலோனும் 
செந்தா மரைக்கண்ணனும் நட்டனர் தேவருய்ய 

உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் 
புண்தான் என நோயுற விம்முறு கின்றபோழ்தின் 
எண்தான் உழந்திட்டதும் ஏந்திழையாங் கள் காட்டக் 
கண்டான் உயர் போ தமும் பேதமும் காண்கிலா தான் 

அயர்வுற்று அரிதின் தெளிந்து அம்மலைக் கப்புறத்தோர் 
உயர்பொன்கிரி உற்றுளன் வாலி என்று ஓங்கல் ஒப்பாள் 
துயர்வுற்றவ் இராவணன் வாலிடைப் பண்டு தூங்க 
மயர்வுற்ற பொருப்பொடு மால் கடல் தாவிவந்தான் 

ஆயானைஓர் அம்பினால் ஆருயிர் வாங்கி அன்பின் 
தூயான் வயின் அவ்வரசு ஈந்தவன் சுற்று சேனை 
பேயாய் வருவாய் எனவிட்டனன் மேவுகாறும் 
ஏயான் இருந்தான் இடைத்திங்கள் இரண்டிரண்டும் 

பின்கூடியசேனை பெருந்திசை பின்னவாக விற்கூடு நுதல்திரு 
நின்னிடை மேவஏவித் தெற்கூடுருவக் கடிது ஏவினன் சேர்ந்தது 
என்ன முற்கூடிய கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் சுட்டினன் 
நின்றனன் தொழுதகையினன் விட்டுயர் தோளினன் 

விசும்பின் மேக்குயர் எட்டரு நெடுமுகடெய்த நீளு மேல் முட்டும் 
என்றுருவொடு வளைந்த மூர்த்தியான் முழுவதும் இவ்வுருக் காண 
முற்றிய குழுவிலது உலகுஇனிக் குறுகுவாய் என்றாள் எழுவினும் 
எழில்இலங்கு இராமன் தோள்களைத் தழுவின ளாம் எனத் தளிர்க்கும் சிந்தையாள் 

ஆண்டகை அனுமனும் அருளதாம் எனா 
மீண்டனன் விசும்பெனும் பதத்தை மீச்செல்வான் 
காண்டலுக் கெளியதோர் உருவு காட்டினான் 
தூண்டலில் விளக்கனாள் இனைய சொல்லினாள் 
[உருக்காட்டுப்படலம் 74-78 , 81 , 82 , 84 , 85 , 90 , 92- 94 , 99 , 107 , 108 

 அனுமார் சீதாதேவியை வரங்கேட்குதல் 

கேட்டியடியேனுரை முனிந்தருளல் ; கேளான் 
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினையன்றால் 
ஈட்டிஇனி என்பல இராமன் எதிர் நின்னைக் 
காட்டி அடிதாழ்வென் அதுகாண்டி இதுகாலம் 

பொன்திணி பொலங்கொடி என்மென்மயிர் பொருந்தித் 
துன்றிய புயத்தினிது இருக்க , துயர்விட்டாய் 
இன்றுயில் விளைக்க ஓர் இமைப்பின் இறைவைகும் 
குன்றிடை உனைக்கொடு குதிப்பென் இடைகொள்ளேன் 

அறிந்திடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் 
முறிந்து திர நூறி என் மனச்சினம் முடிப்பேன் 
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்பால் 
வெறுங்கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் 

லங்கையொடு ஏகுதிகொல் என்னினும் இடந்தென் 
வலங்கொள் ஒரு கைதலையில்வைத்து , எதிர் தடுப்பான் 
விலங்கினரை நூறிவரி வெஞ்சிலையினோர் தம் 
பொலங்கொள்கழல் தாழ்குவென் இது அன்னை பொருளன்றால் 

அருந்ததி உரைத்தி அழகற்கருகு சென்றுன் 
மருந்தனையதேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில் 
பெருந்துயரினோடும் ஒருவீடுபெறு கில்லாள் 
இருந்தனள் எனப்பகரின் என் அடிமை என்னாம் 

புண் தொடர் வகற்றிய புயத்தினொடு புக்கேன் 
விண்டவர் வலத்திதையும் விரித்துரை செய்கேனோ 
கொண்டுவரு கிற்றிலென் உயிர்க்குறுதி கொண்டேன் 
கண்டுவரு கிற்றிலென் எனக்கழறுவேனோ 

இருக்கும்மதில் சூழ்கடி இலங்கையை இமைப்பின் 
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா 
முருக்கி நிருதக்குலம் முடித்து வினைமுற்றிப் 
பொருக்க அகல்க எனனினும் அது இன்று புரிகின்றேன் 

இந்து நுதல் நின்னொடிவண் எய்தி இகல்வீரன் 
சிந்தையுறு வெந்துயர் தவிர்ந்து தெளிவோடும் 
அந்தமில் அரக்கர்குலம் அற்றவிய நூறி 
நந்தலில் புவிக்கண் இடர் பின்களை தல் நன்றால் 

வேறினி விளம்ப உளதன்று விதியால் இப் 
பேறு பெற என்கண் அருள் தந்தருளுபின் போய் 
ஆறுதுயர் அஞ்சொல் இளவஞ்சி அடியன்தோள் 
ஏறுகடி தென்று தொழுது இன்னடி பணிந்தான் ( சூடாமணிப் படலம் 2 10 ] 

சீதை அனுமாருக்கு மறுமொழி கூறல் 

அரியதன்றுநின் ஆற்றலுக் கேற்ரதே 
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே 
உரியதன்றென ஓர்கின்ற துண்டு அதுஎன் 
பெரிய பேதைமைச் சில்மதிப்பெண் மையால் 

வேலையின் இடையே வந்து வெய்யவர் 
கோலி நின்னோடு வெஞ்சரம் கோத்தபோது 
ஆலம் அன்னவர்க்கல்லை , ஏற்கு அல்லையால் 
சாலவும் தடுமாறும் தனிமையோய் 

அன்றியும் பிறிதுள்ள தொன்று ஆரியன் 
வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி 
நன்றி என்பது என்வஞ்சித்த நாய்களின் 
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ 

கொண்ட போரின் எம் கொற்றவன் விற்றொழில் 
அண்டர் ஏவரும் நோக்கஎன் ஆக்கையைக் 
கண்டவா ளரக்கன் விழி காகங்கள் 
உண்ட போதன் றியான் உளெனவனோ 

வெற்றிநாணுடை வில்லியர் விற்றொழில் 
முற்ற நாணில் அரக்கியர் மூக்கொடும் 
அற்ற நாணினர் ஆயின போதன்றிப் 
பெற்ற நாணமும் பெற்றியதாகுமோ 

பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர் 
என்பு மால்வரை ஆகிலதே எனின் 
இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கமில் கற்பும் 
யான்பிறர்க் கெங்ஙனம் காட்டுகேன் 

அல்லல் மாக்கள் இலங்கைய தாகுமோ 
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் 
சொல்லி னாற்சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றற்கு மாசென்று வீசினேன் 

ஏறு வேறும் உண்டுஉரை கேளதுமெய்ம் மையோய் 
சேவகன் மேனியல்லால் இடை ஆறும் 
ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறும் 
இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ 

தீண்டினான் எனின் இத்தனைச் சேண்பகல் 
ஈண்டுமோ உயிர்மெய்யின் இமைப்பின் முன் 
மாண்டு தீர்வென் என்றே நிலம்வன் கையால் 
கீண்டு சொண்டெழுந் தேகினான் கீழ்மையான் 

மேவுசிந்தையில் மாதரைமெய் தொடின் 
தேவு வன் தலை சிந்துகநீ எனப் 
பூவில் வந்த புராதனனே புசல் 
சாவம் உண்டென தாருயிர் தந்ததால் 

அன்ன சாவம் உளதென ஆண்மையான் 
மின்னும் மோலியன் மெய்ம்மையன் வீடணன் 
கன்னி என்வயின் வைத்த கருணையான் 
சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவான் 

ஆயதுண்மையின் யானும் அதன்றெனின் 
மாய்வென் மன்ற அறம்வழுவா தொறும் 
நாயகன்வலி எண்ணியும் நான்உடைத் 
தூய்மையும் காட்டவும் இத்துணை தூங்கினேன் 

ஆண்டுநின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு 
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய 
நீண்ட சாலையொடு நிலைநின்றது 
காண்டி ஐயநின் மெய்யுணர் கண்களால் தீர்விலேன் 

இது ஒருப கலும்சிலை வீரன் மேனியை மானும் 
இவ்வீங்குநீர் நார நாள்மலர்ப் பொய்கையை நண்ணுவேன் சோரும் 
ஆருயிர் காக்கும் துணிவினால் ஆதலான் அதுகாரியம் அன்று ஐய 
வேத நாயகன்பால் இனி மீண்டனை போதல் காரியம் என்றனள் பூவை அக் கோதி லானும் னையன கூறினான் ( சூடாமணிப் படலம் 12 26 )

அனுமார் சீதாதேவிக்குத் திடம் கூறல் 

சின்னாள் நீயிடர் தீராதாய் இன்னா வைகலின் எல்லோரும் 
நன்னாள் காணுதல் நன்றன்றோ 
உன்னால் நல்லறம் உண்டானால் புளிக்கும் கண்டகர் புண்ணீருள் குளிக்கும் பேய்குடையுந் தோறும் ஒளிக்கும் தேவர் உவந்துள்ளம் களிக்கும் நல்வினை காணாயோ ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென கேழ்கிளர் சுடுசுணை கிழித்த புண்பொழி தாழிருங் குருதியால் தரங்க வேலைகள் ஏழும் ஒன்றாக நின்று இரைப்பக் காண்டியால் சூலிரும் பெருவயிறு அலைத்துச் சோர்வுறும் ஆலியம் கண்ணியர் அறுத்து நீத்தன வாலியும் கடக்கரும் வனப்ப வானுயர் தாலியம் பெருமலை தயங்கக் காண்டியால் விண்ணின் நீடிய நெடுங்கழுதும் வெஞ்சிறை எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் புண்ணின் நீர்ப்புணரியில் படிந்து பூவையர் கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால் புரையுறு புன்தொழில் அரக்கர் புண்பொழி திரையுறு குறுதியாறு ஈர்ப்பச் செல்வன வரையுறு பிணம்பெரும் பிறக்கம் மண்டின கரையுறு நெடுங்கடல் தூர்ப்பக் காண்டியால் 378 வினையுடை அரக்கராம் இருந்தை வெந்துக சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் அனகன்கை அம்பெனும் அளவில் ஊதையால் கனகம் நீடிலங்சைநின் றுருகக் காண்டியால் தாக்கிகல் இராவணன் தலையில் தாவின பாக்கியம் அனையநின் பழிப்பில் மேனியை நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ணக்காண்டியால் மேலுற இராவணன் அழிந்து வெள்கிய நீலுறு திசைக்கரி திரிந்து நிற்பன வாலுற அனையவன் தலையை வௌவிவில் காலுறு கணைதடிந்து இடுவ காண்டியால் நீர்த்தெழு ( எணயழை எழங்க நீலவான் வேர்த்த தென்றி டைபிடை வீசும் தூசுபோல் போர்த்தெழு பொலங்கொடி இலங்னக பூழியொடு ஆர்த்தெழு கழுதிரைத்து ஆடக் காண்டியால் செப்புறல் என்பல தெய்வ வாளிகள் இப்புறத் தரக்கரை முருக்கி ஏகின முப்புறத்து உலகையும் முடிக்க மூட்டலால் அப்புறத்து அரக்கரும் அவியக் சாண்டியால் ஈண்டொரு திங்கள் இவ் இடரின் வைகுதல் வேண்டுவ தன்றுயான் விரைவின் வீரனைக் காண்டலே குறைபினும் காலம் வேண்டுமோ ஆண்டகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ சூடாமணிப்படலம் 52-56 , 58 63 , 65 , 661 

சீதாதேவி அனுமாருக்கு அடையாளம் ஈதல் 

சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம் 
வேறியான் இனி ஒன்று விளம்பு வென் கூறுகின்றன 
முன்குறியுற்றன கோமாற்கு ஏறும் 
என்றிவை சொல்லினள் ன்சொல் இசப்பாள் 

நாகம் ஒன்றிய நல்வரையின்தலை மேல்நாள் 
ஆகம் வந்தெனை வள்ளுகிர் வாளின் அளைந்த 
காகம் ஒன்றை முனிந்து அயல் கல்எழுபுல்லால் 
வேகவெம்படை விட்டது மெல்ல விரிப்பாய் 

என்னொரு இன்னுயிர் மென்கிளிக்கு யார் பெயர் ஈகேன் 
மன்ன என்றலும் மாசறு கேகயன்மாது என் 
அன்னை தன் பெயர் ஆக என அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதிமெய்ம்மை தொடர்ந்தோய் - 

சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள் 
ஆடையின்கண் இருந்தது பேரடையாளம் 
நாடிவந் தெனதின் னுயிர் நல்கினை நல்லோய் 
கோடி என் கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள் ( சூடாமணிப்படலம் 76-78 , 83 ] 

வந்தெனைக் கரம் பற்றிய வைகல்
வாய் ந்த இப்பிற விக்கிரு மாதரைச் 
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் 
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் ( சூடாமணிப்படலம் 34 ] 

அனுமார் அசோகவனம் அழிக்குதல் 

ஈனமுறு பற்றலரை எற்றி எயில் மூதூர் 
மீனநிலையத்தின் உறவீசி விழிமானை 
மானவன் மலர்க்கழலில் வைத்துமிலன் என்றால் 
ஆனபொழுது எப்பரிசின் நான் அடியன் ஆவேன் 

என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் 
குன்றம் இருதோளனைய தன்னுருவு கொண்டால் 
அன்றுலகு எயிற்றிடைகொள் ஏனம் எனலானான் 
துன்றுகடி காவினை அடிக்கொடு துகைத்தான் 

முடிந்தன பிளந்தன முரிந்தன 
நெரிந்த மடிந்தன 
பொடிந்தன மறிந்தன முறிந்த 
இடிந்தன தகர்ந்தன 

எரிந்தன கரிந்த ஒடிந்தன ஓசிந்தன  
உதிர்ந்தன பிதிர்ந்த வேரொடு மறிந்த சில 
வெந்த சில விண்ணில் காரொடு செறிந்தசில 
காலினொடு வேலைத் தூரொடு பறிந்தசில 

தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்தசில 
உக்கசில நெக்க அலைந்தன சுடல் திரை 
அரக்கர் அகல் மாடம் குலைந்துக டி -ந்தன 
குலக்கிரி ளோடு மலைந்து பொடி யுற்றன 

மயங்கி நெடுவானத்து உலைந்துவிழும் மீனினொடு 
வெண்மலர் உதிர்ந்த புள்ளினொடு வண்டும் ஞிமிறும் 
கடிகொள் பூவும் கள்ளும் முகையும் தளிர்களோடு 
இனியகாயும் வெள்ளநெடு வேலையிடை மீனம் என விழுங்கித் துள்ளின 

மரன்பட நெரிந்தன துடித்த வேனில்விளை யாடுசுடரோனின் ஒளிவிம்மும் 
வானினிடை வீசிய இரும்பணை மரத்தால் தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடியாய 
வான இடியால் ஒடியும் மால்வரைகன் மான வேங்கை செற்று மராமரம் வேர்பறித்து ஓங்கு கற்பகம் பூவொடு ஒடிந்துராய் பாங்கர் சண்பகப்பத்தி பறித்து அயல் மாங்கனிப் பணைமட்டித்து மாற்றியே 

சந்தனங்கள் தகர்ந்தன தாள்பட இந்தனங்களின் வெந்தெரி சிந்திட 
முந்தனகன் வசந்தன் முகங்கெட் நந்தனங்கள் கலங்கி நடுங்கவே 
காமரம் களிவண்டு கலங்கிட மாமரங்கள் மடிந்தன மண்ணொடு 
தாம் அரங்க அரங்கு தகர்ந்துக பூமரங்கள் எரிந்து பொரிந்தவே 

ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும் பானத் தானமும் பாய்பரிப் பந்தியும் 
ஏனைத்தார் அணி தேரொடும் இற்றன கானத் தார்தரு அண்ணல் கடாவவே 
பெரியமா மரமும் பெருங் குன்றமும் விரிய வீசலின் மி - னெடும் 
பொன்மதில் நெரிய மாடம் நெருப்பெழ நீறெழ இரியல் போன இலங்கையும் எங்கணும் என்றனர் 

அரக்கிமார்கள் வயிறலைத்து இரியல்போகி குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலையப் போனார் நின்றதோர் சயித்தங்கண்டான் நீக்குவல் இதனை என்னா தன் தடக் கைகள் நீட்டிப்பற்றினன் 

தாதைாப்பான் விட்டனன் இலங்கைதன் மேல் விண்ணுற விரிந்த மாடம் பட்டன கொடிகளான பகுத்தன பாங்குநின்ற சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர் அரக்கர் தாமும் கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ 

கேடு சூழ்ந்தார் சொல்லிட எளியதன்றால் சோலையைக் காலின்கையின் புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப் பொன்னால் வில்லிடு வேரம் தன்னை வேரொடு வாங்கிவீச சில்லிடம் ஒழியத் தெய்வ இலங்கையும் சிதைந்த தென்றார் ( பொழிலிறுத்தபடலம் 2 , 8 , 9 , 10 , 12 , 16 , 19 , 25 - 27 , 37 , 39 , 49 , 54-57 ] 

பனியுறு செயலைசிந்தி வேரமும் பறித்ததம்மா 
தனியொரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் 
இனியொரு பழிமற்றுண்டோ இதனின் என்று இரைத்துப் பொங்கி 
முனிவுறு மனத்தின் தாவி முந்துற முடுகுகின்றார் 

மழைகளும் மறிகடலும்போய் மதமற முரசும் அறைந்தார் 
முழைகளின் இதழ்கள் திறந்தார் முன்புகை கதுவ முனிந்தார் 
பிழையில படஅரவின் தோள் பிடர்உற அடியிடுகின்றார் 
கழைதொடர் வனம்ஏரியுண்டா லெனஎறி படைநர் கலந்தார் 

பறைபுரை விழிகள் பறிந்தார் படியிடை நெடிது படிந்தார் 
பிறைபுரை எயிறும் இழந்தார் பிடரொடுதலைகள் பிளந்தார் 
குறையுயிர் சிதறநெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார் 
முறைமுறை படைகள் எறிந்தார் முடையுடல் மறிய முறிந்தார் 

புடையொடு விடுகனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார் 
தொடையொடு முதுகு துணிந்தார் கழிபடுகுருதி சொரிந்தார் 
படையிடை ஒடிய நெடுந்தோள் பறிதரவயிறு திறந்தார் 
டையிடை மலையின் விழுந்தார் இகல்பொரமுடுகி எழுந்தார் 

புதைபடஇருளின் மிடைந்தார் பொடியிடை நெடிதுபுரண்டார் 
விதைபடும்உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இருந்தார் 
கதையொடும் முதிரமலைந்தார் கணையொழி சிலையர் கலந்தார் 
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதிஉமிழ்ந்தார் 

அயலயல் மலையொடறைந்தான் அடுபகை அளகை அடைந்தார் 
வியலிடம் மறையவிரிந்தார் மிசையுல கடைய மிடைந்தார் 
புயல் தொடு கடலின் விழுந்தார் புடைபுடை சிதைவொடு சென்றார் 
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் 

எடுத்த அரக்கரை எறிதலும் அவர்உடல் எற்றக் கொடித் திண்மாளிகை இடிந்தன மண்டபம்குலைந்த தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த பிடிக்குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய தத்தம் மாடங்கள் தம்உடலால் சிலர் தகர்த்தார் தத்தம் மாதரைத் தம்கழலாற் சிலசமைத்தார் தத்தம் மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார் எற்றி மாருதி தடக்கைகளால் விசைத்தெறிய 

வந்தகிங்கரர் ஏயெனும் மாத்திரை மடிந்தார் 
நந்த வானத்து நாயகர் ஓடினர் நடுங்கிப் 
பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின் 
உந்த ஆயிரம் பிணக்குவைமேல் விழுந்துளைவார் (கிங்கரர்வதைப்படலம் 11 , 23 , 26 , 27 , 28 , 29 , 41 , 42 , 551 

சம்புமாலி வதை - 
கூம்பின கையன் நின்ற குன்றெனக் குவவுத் திண்தோள் 
பாம்பிவர் தறுகண்சம்புமாலி என்பவனைப் பாரா 
வாம்பரித் தானையோடு வளைத்து அதன்மறனை மாற்றித் 
தாம்பினின் பற்றித்தந்து என் மனச்சினம் தணித்தி என்றான் 

ஆண்டுநின் றரக்கன் வெவ்வேறணி வகுத்து அனிகந்தன்னை 
மூண்டிரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவித் 
தூண்டினன் தானும்திண்டேர் தோரணத் திருந்த தோன்றல் 
வேண்டியது எதிர்த்தான் என்ன வீங்கினன் 

விசயத்திண் தோள் ஐயனும் அமைந்து நின்றான் 
ஆழியான் அளவில் ஆற்றல் நெய்சுடர் விளக்கின் தோன்றும் 
நெற்றியே நெற்றியாக மொய்மயிர்ச் சேனை பொங்க முரணயில் 
உகிர்வாள் மொய்த்த கைகளே கைகளாகக்கடைக் கூழை திருவாலாக எறிந்தன 

எய்தன இடிக்கும் உரும் என்னச் செறிந்தன படைக்கலம் இடக்கையின் சிதைத்தான் முறிந்தன தெறும்கரி முடிந்தன தடந்தேர் மறிந்தன பரிநிரை வலக்கையின் மலைந்தான் கரிகொடு கரிகளைக் களப்படப் புடைத்தான் பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான் வரிசிலை வயவனர வயவரின் மடித்தான் நிரைமணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான் 

கானேகாவல் வேழக்கணங்கள் கதவாள் அரிகொன்ற வானே எய்த தனியேநின்ற மதமால் வரைஒப்பான் தேனே புரைக்கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உகச்சாடி ஒலித்தார் 

அமரர் கண்டார் ஆர்ப்பத் தேரின் உள்புக் குக் கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக் கழுத்தினிடையிட்டு வலித்தான் பகுவாய் மடித்துமலைபோல் தலைமண்ணிடைவீழ புக்கார் 

அமரர்பொலந்தார் அரக்கன் பொருவில் பெருங்கோயில் விக்கா நின்றார் விளம்பல் ஆற்றார் வெருவி விம்முவார் நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐயநமரெல்லாம் உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றேகுரங் கென்றார் ( சம்புமாலிவதைப்படலம் 1 , 20 , 21 , 25 , 30 , 41 , 47 50 ) 384 

பஞ்சசேனாபதிகள் அட்சதன் இவர்கள் வதை 

கைபரந்தெழு சேனையும் கடலிடைக் கலந்தார் 
செய்கை தாம்வரும் தேரிடைக் கதிர்எனச் செல்வார் 
மெய்கலந்த மாநிகர்வரும் உவமையை வென்றார் 
ஐவரும் பெரும்பூதங்கள் ஐந்தும் ஒத்தமைந்தார் 

உற்றுடன் றரக்கரும் உருத்துடற்றினர் செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையார் 
மற்றையர் வரும்பரிசு இவரை வல்விரைந்து எற்றுவென் எனஎழு அனுமன் ஏந்தினான் உலந்தது தானை உவந்தனர் உம்பர் அலந்தலை யுற்றது அவ் ஆழி இலங்கை கலந்தது அழுங்குரலின் கடலின் ஓதை வலந்தரு தோளவர் ஐவரும் வந்தார் நெய்தலை உற்றவேற்கை நிருதர் அச் செருவில் நேர்ந்தார் உய்தலை உற்றுமீண்டார் ஒருவருமில்லை உள்ளார் கைதலைப் பூசல் பொங்கக் கடுகினர் காலன்உட்கும் ஐவரும் உலந்ததன்மை அனைவரும் அமையக் கண்டார் [பஞ்சசேனாபதி வதைப்படலம் 14 , 31 , 4 

உற்றான் இந்திர சித்துக்கிளையவன் ஒருநாளே பலர்உயிர் உண்ணக் கற்றானும் முகம் எதிர்வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் எற்றாம் மாருதிநிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறிதியாது எதிர் எதிர் செறிகின்றார் எய்தான் வாளிகள் எரிவாய் உமிழ்வன ஈரேழ் எதிரவை பார்சேரப் பொய்தான் மணி எழு ஒன்றால் அன்றது பொரியாய் உதிர்வுற வடிவாளி 385 வெய்தாயின பலவிட்டான் 

வீரனும் வேறோர் படையிலன் மாறாவெங் கைதானே பொருபடையாகத் தொடர் காலார் தேரதன் மேலானான் ஒருகையால் அவன் வயிரத்திண்சிலை உற்றுப் பற்றலும் உரவோனும் இருகையால் எதிர்வலியாமுன் அது இற்று ஓடியது இவர்பொன் தோளின் சுரிகையால் அவன் உருவிக் குத்தலும் அதனைச் சொல் கொடுவரு தூதன் பொருகையால் இடை பிதிர்வித்தான் முறி பொறி ஓடும்படி பறியாவே வாளாலே பொரலுற்றான் இற்று அது மண்சோரமுனம் வயிரத்தின் தோளாலே பொரமுடுகிப் புக்கு இடை தழுவிக் கோடலும் உடல் முற்றும் நீளார் அயில் என மயிர் தைத்திடமணி நெடுவால் அவன் உடல் நிமிர்வுற்று மீளாவகை புடைசுற்றிக் கொண்டது பற்றிக் கொண்டனன் மேலானான் பற்றிக் கொண்டவன் வடிவாள் எனஒளிர் பல்லிற்றுக நிமிர்படர் கையால் எற்றிக் கொண்டலின் எதிர்நின்று மிழ்சுடர் மின்னின் இனம் விழுவன என்ன முற்றிக் குண்டலம் முதலாம் மணிஉக முழைநால் அரவு இவர் குடர்நால கொற்றத் திண்சுவல் வயிரக் கையொடு குத்திப் புடைஒரு குதிகொண்டான் நீத்தாய் ஓடின உதிரப்பெருநதி நீராகச் சிலைபாராக போய்த்தாழ் செறிதசை அரிசிந்தினபடி பொங்கப் பொருஉயிர் போகாமுன் 386 மீத்தாம் நிமிர்சுடர் வயிரக் கைகொடு பிடியா விண்ணொடு மண்காணத் தேய்தான் ஊழியின் உலகேழ் தேயினும் ஒருதன் புகழ் இறை தேயாதான் புண்தாள் குருதியின் வெள்ளத் துயிர்கொடு புக்கார் சிலர் சிலர் பொதிபேயின் பண்டாரத் திடையிட்டார் தம்உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர் சென்றார் சிலர் சிலர் செலவற்றார் கண்டார் கண்டதொர் திசையே விசைகொடு கால்விட்டார் படைகை விட்டார் மீனாய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசுவாய் வழிதொறும் மேய்வுற்றார் ஊனார் பறவையின் வடிவானார் சிலர் சிலர் நான் மறையவர் உருவானார் மானார் கண் இள மடவாராயினர் முன்னே தங்குழல் வகிர்வுற்றார் ஆனார்சிலர் சிலர் ஐயா நின்சரண் என்றார் நின்றவர் அரி என்றார் [ அட்சயன்வதைப்படலம் 32 , 33 , 35 40 ] அனுமாரை இந்திரசித்து எதிர்த்தல் விருத்தம் - 20 அவ்வழி அவ்வுரை கேட்ட ஆண்டகை வெவ்விழி எரியுக வெகுளி வீங்கினான் எவ்வழி உலகமும் குலைய இந்திரத் தெவ்வழிதர உயர்விசயச் சீர்த்தியான் ஏறினன் விசும்பினுக் கெல்லை காட்டுவ ஆறிரு நூறுபேய் பூண்ட ஆழித்தேர் கூறின கூறின சொற்கள் கோத்தலால் மீறின நெடுந்திசை பிளந்த தண்டமே 331 வேல் திரண்டனவும் வில்லுமிடைந்தவும் வெற்பென்றாலும் கூறிரண்டாக்கும் வாள்கைக்குழுவையும் குணிக்கல் ஆற்றேம் சேறிரண் டருகுசெய்யும் செறிமதச்சிறு கண்யானை ஆறிரண் டஞ்சு நூற்றின் இரட்டித்தேர்த் தொகையும் அஃதே ( பாசப்படலம் 1 , 3 , 6 ] - 

அனுமார் இந்திரசித்தொடு பொருதல் 

ஈண்டிவை நிகழ்வுழி இரவிதேர் எனத் தூண்டுறு தேரின் மேல் தோன்றும் தோன்றலை மூண்டுமுப் புரம்சுட முடுகும் ஈசனின் ஆண்டகை வனைகழல் அனுமன் நோக்கினான் 

அக்காலை அரக்கரும் யானையும் தேரும்மாவும் 
முக்கால் உலகம் ஒருமூன்றையும் வென்றுமுற்றிப் 
புக்கானின் முன்புக்கு உயர் பூசல் பெருக்கும்வேலை 
மிக்கானும் வெகுண்டோர் மராமரம் கொண்டு மிக்கான் 

சிகை எழும் சுடர்வாளிகள் இராக்கதர் சேனை 
மிகைஎழும் சினத்து அனுமன்மேல் விட்டான் , வெந்து 
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத 
நகை எழுந்தன குளிர்ந்தன வானுளோர் நாட்டம் 

இச்சிரத்தையைத்தொலைப்பேன் என்று இந்திரன் பகைஞன் 
பச்சிரத்தம் வந்தொழுகிட வானவர் பதைப்ப 
வச்சிரத்தினும் வலியன வயிரவான் கணைகள் 
அச்சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமான் 

நீண்ட வீரனும் நெடுந்தடக் கைகளை நீட்டி 
ஈண்டு வெஞ்சரம் எய்தன எய்திடா வண்ணம் 
மீண்டு போய்விழ வீசிஆங்கவள் , மிடல் தடந்தேர் 
பூண்ட யேயொடு சாரதி தரைப்படப் புடைத்தான் 

ஊழிக்காற்றன்ன ஒருபரித்தேர் அவண் உதவ 
பாழித் தோளவன் அத்தடந்தேர் மிசைப் பாய்ந்தான் 
ஆழிப்பல்படை அனையன அளப்பருஞ் சரத்தால் 
வாழிப் போர்வலி மாருதி மேனியை மறைத்தான் 

உற்றவாளிகள் உரத்தடங்கின உகஉதறாக் 
கொற்ற மாருதி மற்றவன் தேர்மிசைக் குதித்துப் 
பற்றிவன் கையால் பறித்தெழுந்து உலகெலாம் பலகால் 
முற்றிவென்றபோர் மூரிவெஞ்சிலையினை முறித்தான் 

முறிந்த வில்லின் வல்லோசைபோய் முடிவதன் முன்னர் 
மறிந்து போரிடை வழிக்கொள்வான் வயிர வாட்படையால் 
செறிந்த வான்மலைகளைச் சிறகறச் செயிரா 
எறிந்த இந்திரன் இட்ட வான்சிலையினை எடுத்தான் 

நூறு நூறு போர்வாளி ஓர்தொடைகொடு நொய்தின் 
மாறில் வெஞ்சினத்து இராவணன் மகன்சிலை வளைத்தான் 
ஊறுதன் னெடுமேனியில் பலபடஒல்கி 
ஏறுசேவகன் தூதனும் சிறிதுபோ திருந்தான் 

உய்த்தவெஞ்சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப 
கைத்த சிந்தையன் மாருதி நனிதவக் கனன்றான் 
வித்தகன் சிலைவிடுகணை விசையினும் கடுகி 
அத்தடம்பெரும் தேரொடும் எடுத்தெறிந் தார்த்தான் 

கண்ணின் மீச்சென்ற மை இடைகலப்பதன் முன்னம் 
எண்ணின் மீச்சென்று ஏறுழ்வலித்திறலுடை இகலோன் 
புண்ணின் மீச்சென்று பொழிபுனல் பசும்புலால் பொடிப்ப 
விண்ணின் மீச்சென்று தேரொடும் பார்மிசை வீழ்ந்தான் 

விழுந்துபார் அடையாமுனம் மின்எனும் எயிற்றான் 
எழுந்து மாவீசும் பெய்தினன் இடையவன் படையில் 
செழுந்திண் மாமணித் தேர்க்குலம் யாவையும் சிதைய 
உழுந்து பேர்வதன் முன் நெடுமாருதி உதைத்தான் [ பாசப்படலம் 23 , 27 , 33 , 42 46 , 50 - 52 ] 

அனுமார் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டல் விருத்தம் - 

பூவும்பூநிற அயினியும் தீபமும் புகையும் தாவில் 
பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் 
தேவுயாவையும் உலகமும் திருந்திய 
தெய்வக் கோவில் நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான் 

தணிப்பரும் பெரும்படைக்கலம் தழல்உமிழ் தறுகண் 
பணிக்குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றித் 
துணிக்கஉற்று உயர் கலுழனும் துணுக்குறச் சுற்றிப் 
பிணித்தது அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க 

திண்ணென் யாக்கையைத் திசைமுகன்படை ‘ சென்றுதிருக 
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் 
சண்ணின் நீரொடும் கனகதோ ரணித் தொடும்கடைநாள் 
தண்ணென் மாமதி கோளொடும் சாய்ந்தெனச் சாய்ந்தான் 

குரக்கு நல்வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி 
இரைக்கும் மா நகர் எறிகடல் ஒத்தது எம்மருங்கும் 
திரைக்கும் மாசுணம் வாசுகிஒத்தது தேவர் 
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமான் 

வந்திரைத்தனர் மைந்தரும் மகளிரும் மழைபோல் 
அந்தரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார் 
முந்திஉற்ற பேர்உவகைக்கு ஓர்கரையிலை மொழியின் 
இந்திரன் பிணிப்புண்டநாள் ஒத்தது அவ் இலங்கை [ பாசப்படலம் 54 , 56 , 57 , 60 , 62 ) 

எய்யுமின் ஈருமின் எறிமின் போழுமின் 
கொய்யுமின் குடரினைக்கூறு கூறுகள் 
செய்யுமின் மண்ணிடைத் தேய்மின் தின்னுமின் 
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் 

நச்சடை படைகளால் நலியும் ஈட்டதோ 
வச்சிரஉடல் மறிகடலின் வாய்மடுத்து 
உச்சியின் அழுத்து மின் உருத்ததன்றெனின் 
குச்சிடை இடுமெனக் கிளக்கின்றார் சிலர் 

ஓங்கலம் பெருவலி உயிரின் அன்பரை 
நீங்கலம் இன்றொடு நீங்கினாம்பினி 
ஏங்கலம் இவன்சிரத்து இருந்தலால்திரு 
வாங்கலம் என்றழும் மாதரார்பலர் 

திண்டிறல் அரக்கர் தம் செருக்குச் சிந்துவான் 
தண்டலில் தன்னுருக் கரந்ததன் மையான் 
மண்டமர் தொடங்கினன் வானரத்து உருக் 
கொண்டனன் அந்தகன்சொல் என்றார்பலர் 

கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன் 
மயிலியல் சீனதயின் கற்பின் மாட்சியால் 
எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன் 
அயிலெயிற் றொருகுரங்காய் என்பார் பலர் ( பிணிவீட்டுபடலம் 1 , 3 , 5 , 13 , 15 ] 

இராவணன் கொலுவிற்றிருத்தல் 

தலங்கள் மூன்றிற்கும் பிறிதொருமதி தழைத்தென்ன 
அலங்கல் வெண்குடைத் தண்ணிழல் அவிர் ஒளிபரப்ப 
வலங்கொள் தோளினான் பண்ணின்றும் வானுற எடுத்த 
பொலங்கொள் மாமணி வெள்ளியங் குன்றெனப்பொலிய 

மரகதக் கொழுங்கதிரொடு மாணிக்க நெடுவாள் 
நரகதேயத்துள் நடுக்குரு இருளையும் நக்க 
சிரம் அனைத்தையும் திசைதொறும் திசைத்தொறும் செலுத்தி 
உரகர்கோன் இனிதரசு வீற்றிருந்தனன் ஒப்ப ஏகநாயகன் 

தேவியை எதிர்ந்ததன் பின்னை நாகர்வாழ் இடம் முதல் என நான்முகன் 
வைகும் மாகமஈல் விசும்பீறு எனநடுவண வரைப்பில் தோகை மாதர்கள் 
மைந்தரின் தோற்றினர் சுற்ற மாறளாவிய மகரந்த நறவுண்டு மகளிர் 
வீறளாவிய முகிழ்முலை மெழுகிய சாந்தின் சேறளாவிய 

சிறுநறுஞ் சீகரத் தென்றல் ஊறளாவிய கடுவென உடலிடை கடுவென உடலிடை நுழைய திங்கள் வாணுதல் மடந்தையர் சேயரிகிடந்த அங்கயத் தடந்தா மரைக்கு அலரியோன் ஆகி வெங்கண் வானவர் தானவர் என்றிலர் விரியாப் பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று 

இருந்த எண்டிசைக்கிழவனை மாருதி எதிர்ந்தான் 
கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் 
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி 
உருந்து நஞ்சு போல்பவன் வயின்பாய் வென் என்றுடன்றான் [பிணிவீட்டுப்படலம் 44 , 48 , 49 , 50 ] 

அனுமாரை ராவணன் வினாவுதல் 

நோக்கிய கண்களால் நொ றில் கனற்பொறி 
தூக்கிய அனுமன் மெய்ம் மயிர் சுறுக்கொள் 
தாக்கிய நகையொடும் தவழ்ந்த வெம்புகை 
வீக்கிய அவனுடல் விசித்த பாம்பினே அன்ன 

ஓர் வெகுளியன் அமரர் ஆதியர் துன்னிய துன்னலர் 
துணுக்கம் சுற்றுற என் இவண் வரவுநீ யாரை என்றவன் 
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் நேமியோ 
குலிசியோ நெடுங்கணிச்சியோ தாமரைக் கிழவனோ 
தறுகண் பல் தலைப் பூமிதாங் கொருவனோ பொருது 
முற்றுவான் நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் ( பிணிவீட்டுபடலம் 63-68 ) 

அனுமார் இராவணனுக்கு விடையும் மதியும் கூறல் 

சொல்லிய அனைவரும் அல்லன் சொன்ன அப் 
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் 
அல்லியங் கமலமே அனைய செங்கண் ஓர் 
வில்லிதன் தூதன்யான் இலங்கை மேயினேன் 

அனையவன் யாரென அறிதியாதியேல் 
முனைவரும் அமரரும் மூவர் தேவரும் 
எனையவர் எனையவர் யாவர் யாவையும் 
நினைவரும் அருவினை முடிக்க நின்றுளோன் 

மூலமும் நடுவும் ஏறும் இல்லதோர் மும்மைத் தாய 
காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி 
சூலமும்திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை 
ஆலமும் மலரும் வெள்ளிப்பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் 

அன்னவற் கடிமைசெய்வேன் நாமமும் அனுமன் என்பேன் 
நன்னுதல் தன்னைத்தேடி நாற்பெருந்திசையும் போந்த 
மன்னரில் தென்பால்வந்த தானைக்கு மன்னன் வாலி 
தன்மகன் அவன் தன் தூதன் வந்தனென் தமியேன் என்றான் 

அஞ்சலை அரக்க பார்விட்டந்தரம் அடைந்தான் அன்றே 
வெஞ்சினவாலி மீளான் வாலும் போய் விளிந்ததன்றே 
அஞ்சன மேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் 

தூது வந்தது சூரியன் கால்முளை 
ஏது ஒன்றிய நீதி இயைந்தன 
சாது என்றுணர் கிற்றியேல் தக்கன 
கோது இறந்தன நின்வயிற் கூறுவாம் 

போய்இற்றீர் நும்புலன் வென்று போற்றிய 
வாயில் தீர்வரிதாகிய மா தவம் 
காயின் தீர்வருங்கேடு அருங்கற்பினாள் 
தீயின் தூயவளைத் துயர் செய்ததால் 

திறம் திறம்பிய காமச் செருக்கினால் 
மறந்து தத்தம் மதியின் மயங்கியார் 
இறந்து இறந்து இழிந்து ஏறுவதேயலால் 
அறம் திறம்பினர் யாருளர் ஆயினார் . 

சை தன்மையினில் பிறர் இல்லினை நச்சி நாளும் நரையுற நாணிலன் 
பச்சைமேனி புலர்ந்து பழிப்படூஉம் கொச்சை ஆண்மையும் சீர்மையிற் கூடுமோ 

புரம்பிழைப்பருந் தீப்புகப் பொங்கியோன் 
நரம்பிழைத்த நின்பாடலின் நல்கிய 
வரம்பிழைக்கும் மறைபிழை யாதவன் 
சரம்பிழைக்கும் என்றெண்ணுதல் சாலுமோ 

ஈறில் நாண்உக எஞ்சலில் நற்றிரு 
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ 
வேறும் இன்னும் நகையாம் வினைத்தொழில் 
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய் 

ஆதலால் தன் அரும்பெரும் செல்வமும் 
ஓதுபல் கிளையும் உயிரும் பெறச் 
சீதையைத்தருக என்று எனச் செப்பினான் 
சோதியான் மகன் நிற்கெனச் சொல்லினான் [வீட்டுப்படலம் 86 , 88 , 91 , 94 , 98 , 99 , 101 ] 

அனு மானரக் கொல்லாமல் ராவணனை விபீஷணர் விலக்குதல் 

என்னும் மாத்திரத்து ஈண்டெரி நீண்டுக 
மின்னும் வாளெயிற்றன் சினம்வீங்கினான் 
கொல்மின் என்றனன் கொல்வியர் சேர்தலும் 
நில்மின் என்றனன் வீடணன் நீதியான் அந்தணன் 

உலகம்மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன் 
அன்புக்கான்ற தவநெறி உணர்ந்து தக்கோய் இந்திரன் 
கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது வந்தனென் 
என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லாய் 

பூதலப் பொருப்பின் அண்டப் பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர் 
வேதமுற்றியங்கு வைப்பின் வேறுவேறிடத்து வேந்தர் 
மாதரைக் கொலைசெய்தார்கள் உளர் எனவரினும் வந்த 
தூதரைக்கொன்று ளார்கள் யாவரே தொல்லை நல்லோர் 

பகைப்புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் 
மிகைப்புலன் அடக்கி மெய்மை விளம்புதல் விரதம் பூண்ட 
தகைப்புலக் கருமத்தோரைக் கோறலின் தக்கார் யார்க்கும் 
நகைப்புலன் பிறிதொன்றுண்டே நங்குலம் நவையின்றாமே 

முத்தலை எஃகன்மற்றை முராந்தகன் முனிவன் முன்னா 
அத்தலை நம்மைநோனா அமரர்க்கும் நகையிற்றாமால் 
எத்தலை உலகும் காக்கும் வேந்த நீவேற்றோர் ஏவ 
இத்தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம் இன்னும் 

இளையவள் தன்னைக் சொல்லாது இருசெவி மூக்கொடீர்ந்து 
விளைவுரை என்றுவிட்டார் வீரராய் மெய்ம்மை ஓர்வார் 
களைதியேல் ஆவிநம்பால் இவன்வந்து கண்ணின் கண்ட 
அளவுரை யாமல் செய்தியாதி என்று அமையச் சொன்னான் (பிணிவீட்டுப்படலம் 105 , 107-111 ] 

அனுமார் வாலில் தீசுடாமல் அக்கினியைச் சீதை வேண்டல் 

நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் 
கொல்லல் பழுதே போயவரைக் கூறிக் கொணர்தி கடிதென்னா 
தொல்லை வாலை மூலமறச் சுட்டுநகரைச் சூழ்போக்கி 
எல்லை கடக்க விடுமின்கள் என்றான் நின்றார் இரைத்தெழுந்தார் 

மண்ணிற்கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம்பெற்ற 
எண்ணற்கரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கியைந்த 
பெண்ணிற்கிசையும் மங்கலத்தில் பிணித்தகயிறே இடைபிழைத்த 
கண்ணிற் கண்டவன்பாசம் எல்லாம் இட்டுக்கட்டினார் 

வேந்தன் கோயில் வாயிலொடு விரைவிற்கடந்து வெள்ளிடையில் 
போந்து புறம் நின் றிறைக்கின்ற பொறைதீர் மறவர் புறஞ்சுற்ற 
ஏந்து நெடுவால் கிழிசுற்றி முற்றும்தோய்த்தார் இழுதெண்ணெய் 
காந்து கடுந்தீக் கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடிகலங்க 

ஆர்த்தார் அண்டத்தப் புறத்தும் அறிவிப்பார்போல் அங்கோடிங்கு 
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எம்மருங்கும் 
பார்த்தார் ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர்பதைத்தாள் 
வேர்த்தா லுலந்தாள் விம்மினாள் விழுந்தா ளழுதாள் 

வெய்து பிர்த்தாள் தாயே அனைய கருணையான் துணையை 
ஏதும் தகவில்லா நாயே அனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ 
நீயே உலகுக் கொருசான்று நிற்கேதெரியும் கற்பதனில் 
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரிபே அவனைச் சுடல் ! என்றாள் [ HE வீட்டுபடலம் 112 , 115 , 118 , 121 , 122 ] 

அனுமார் இலங்கையைக் கொளுத்துதல் 

மற்றினிப் பலஎன் வேலை வடஅனல்புவி அளாய 
கற்றைவெங் கனலிமற்றைக் காயத்தீ முனிவர்காக்கும் 
முற்றுறு மும்மைச் செந்தீ முப்புரம் முருங்கச் சுட்ட 
கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும் குளிர்ந்தவன்றே 

வெற்பினால் இயன்ற அன்ன வாலினை விழுங்கி 
வெந்தீ நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில்நோக்கி 
அற்பின்றார் அறாதசிந்தை அனுமனும் சனகன் பாவை 
கற்பினால் இயன்ற தென்னப் பெரியதோர் களிப்பன் ஆனான் 

துன்னலர் புரத்தை முற்றும் சுடு தொழில் தொல்லை யோனும் 
பன்னின பொருளும் நாணப் பாதகர் இருக்கை பற்ற 
மன்னனை வாழ்த்திப் பின்னை வயங்கெரி மடுப்பென் என்னா 
பொன்னகர் நேதன்போர் வாலினைப் போகவிட்டான் [ பிணிவீட்டுபடலம் 124, 126 , 130

கொடியைப் பற்றி விதானம் கொளுத்தியே 
நெடிய தூணைத் தழுவி நெடுஞ்சுவர் 
முடியச் சுற்றி முழுதும் முறுக்கிற்றால் 
கடிய மாமனை தோறும் கடுங்கனல் 

வாசல் இட்ட எரிமணி மாளிகை மூசமுட்டி முழுதும் முருக்கலால் 
ஊசலிட்டென ஓடி உலைந்துளை பூசலிட்ட இரியல் புரமெலாம் 
வானத்தை நெடும்புகை மாய்த்தலால் போனதிக் கறியாது புலம்பினார் 
தேனகத்த மலர்பல சிந்திய கானகத்து மயில் அன்ன காட்சியார் 

நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை மாலின் வெஞ்சின யானையை மானுவ 
மேல் விழுந்தெரி முற்றும் விழுங்கலால் தோலுரிந்து கழன்றன 
தோல் எலாம் பொடித் தெழுந்த பெரும்பொறி போலவன் இடிக் 
குலங்களின் வீழ்தலும் எங்கணும் வெடித்தவேலை வெதும்பிட 

மீன்குலம் துடித்து வெந்து புலர்ந்துயிர் சோர்ந்தவால் பருகுதீ மடுந் துள்ளுறப் பற்றலால் அருகு நீடிய ஆடகத் தாரைகள் கி வேலையின் ஊடுழக்குற்றன 
திருகு பொன்னெடுந் தண்டின் திரண்டவால் த பூக்கரிந்து முறிபொறியாய் அடை நாக்கரிந்து சினைநறும் சாம்பராய் மீக்கரிந்து நெடும்பணை வேர்உறக் காக்கரிந்து கருங்கரி யானவே 

தளைகொளுத்திய தாவெரி தாமணி முளைகொளுத்தி முகத்திடை மொய்த்தபேர் 
உளைகொளுத்த உலந்துலை வுற்றன வளைகுளப்பின் மணிநிற வாசியே 
எழுந்து பொற்றலத்து ஏறலின் நீள் புகைக் கொழுந்து சுற்ற உயிர்ப்பிலர் கோளுற 
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் விழுந்து முற்றினர் 

கூற்றை விழுங்குவார் கோசிகத் துகில் உற்ற கொழுங்கனல் தூசின் உத்தரி கத்தொடு சுற்றுரு வாசமைக்குழல் பற்ற மயங்கினார் பாசிழைப் பரவைப்படர் அல்குலார் பஞ்சரத்தொடு பசுங்கிளி வெந்துபதைப்ப அஞ்சனக் கண்ணின் அருவிநீர் முலைமுன்றில் அலைப்ப குஞ்சரத்தன்ன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால் மஞ்சிடைப் புகும்மின் னென புகையிடை மறைந்தார் 

அகருவும் நறுஞ்சாந்தமும் முதலிய அனேகம் புகரில் நல்மரத்து உறுவெறி உலகெலாம் போர்ப்பப் பகரும் ஊழியில் கால வெங்கடுங் கனல்பருகும் மகர வேலையின் வெந்தன நத்தன வனங்கள் கரிந்து சிந்திடக் கடுங்கனல் தொடர்ந்து உடல்கதுவ உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் 

விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும் எரிந்து வேகின்றது ஒத்தது எறிதிரைப் பரவை மருங்கின்மேல் ஒருமகவு கொண்டு ஒருதனிமகவை அருங்கையாற் பற்றி மற்றொருமகவு பின் அரற்ற நெருங்கி நீண்டிடு நெறிகுழல் சுறுக்கொள நீங்கிக் கருங்கடல் தலை வீழ்ந்தனர் 

அரக்கியர் கதறி வில்லும் வேலும் வெம்குந்தமும் முதலிய விறகாய் எல்லுடைச் சுடர் எனப் புகர் எஃகெலாம் உருகித் தொல்லை நன்னிலை தொடர்ந்த பேருணர் வன்ன தொழிலால் சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத் திரள்கள் நீரைவற்றிடப் பருகி மாநெடுநிலந் தடவித் தாருவைச் சுட்டு மலைகளைத்தழல் செய்து தனிமா மேருவைப்பற்றி எறிகின்ற கால வெங் கனல்போல் ஊரை முற்றுவித்து இராவணன் மனைபுக்கது உயர்தீ சூழும்வெஞ்சுடர் தொடர்ந்திட யாவரும் தொடரா ஆழிவெஞ்சினத்து ஆண்தொழில் இராவணன் மனையில் ஊழிவெங் கனல்உண்டிட உலகமென்றுயர்ந்த ஏழும் வெந்தென எரிந்தன நெடுநிலை ஏழும் அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் புனைமணிப்பொலி புட்பக விமானத்துப் போனார் நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் வினையிலா மையின் வெந்ததவ் விலங்கல் மேல் இலங்கை 
( இலங்கை எரியூட்டுபடலம் 1 , 2 , 5 , 8 , 10 , 11 , 16-19 , 21. 23 27, 28 , 29 , 32 , 35 , 37 ] 

வானரவீரர்கள் திரும்புகாலையில் மதுவனம் அழித்தல் -

மைந்நாகம் என்னநின்ற குன்றையும் மரபின் எய்தி 
கைந்நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை 
பைந்நாகம் நிகர்க்கும் வீரர்தன் நெடு வரவு பார்க்கும் 
கொய்ந்நாகம் நறந்தேன் சிந்தும் குன் றிடைக் குதியும் கொண்டான் 

தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின்தேடி 
மேல்முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி 
மானவாண் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் 
என்று தாம் நுகர் சாகமெல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் 

வாலிகாதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை 
காலுறப் பணிந்து பின்னை கடன் முறை கடவோர்க்கெல்லாம் 
ஏலுறஇயற்றி ஆங்கணிருந்து இவணிருந்தோர்க்கெல்லாம் 
ஞாலநாயகன் தேவி சொல்லினள் நன்மை என்றான் [ திருவடி தொழுத படலம் 2 , 5 , 7 ] 

அங்கதன் தன்னை அண்மி அனுமனும் இருகை கூப்பி 
கொங்கு தங்கு அலங்கள் மார்ப் நின்னுடை குரக்குச் சேனை 
வெங்கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி 
இங்கிதற் களித்தல் வேண்டும் இறாலுமிழ் பிரசம் என்றான் 

நன்றென அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்துச் 
சென்றுறு பிரசந்தூங்கும் செழுவனம் அதனினூடே 
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மேன்பிரசமெல்லாம் 
தின்றுதின் றுவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே 

முனியுமாம் எம்மை எங்கோன் என்றவர் மொழிந்து போந்து 
கனியும் மாமது வனத்தைக் கட்டழித் திட்டதின்று 
நனிதரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண 
இனிஎம்மால் செயலின் றென்னா ததிமுகற் கியம்பினாரே 

கேட்டவன் யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார் 
காட்டிர் என்றெழுந்தான் அன்னார் வாலிசேய் முதலகற்றோர் 
ஈட்டம் வந்திறுத்ததாக அங்கதன் ஏவல் தன்னால் 
மாட்டின கவியின் தானை மதுவளர் உலவை ஈட்டம் ( மிகைப்பாடல்கள் 11 - 3 , 4 , 7 , 8 ] 

சீதையைத் தேடப்போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல் 

குறித்தநாள் இகந்தன குன்றத் தென் திசை 
வெறிக்கருங் குழலியை நாடல் மேயினார் 
மறித்திவண் வந்திலர் மாண்டுளார் கொலோ 
பிறித்தவர்க் குற்றுள தென்னை பெற்றியோய் 

மாண்டனள் அவள் இவள்மாண்ட வார்த்தையை 
மீண்டவர்க் குரைத்தலின் விளிதல் நன்று எனாம் 
பூண்டதோர் துயர்கொடு பொன்றி னார்கொலோ 
தேண்டினர் இன்னமும் திரிகின் றார்கொலோ 

கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக 
மண்டமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால் 
விண்டலம் அதனில் மேயினர் கொல் வேறு இலாத் 
தண்டலில் நெடுஞ்சிறைத் தளைப்பட்டார் கொலோ 

கூறின நாளவர் இருக்கை கூடலம் 
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் 
ஆறினார் அருந்தவம் அயர்கின் றார்கொலோ 
வேறவர்க் குற்றதென் விளம்புவாய் என்றான் ( திருவடிதொழுதபடலம் 17 - 20 ] 

ஸ்ரீராமருக்கு அனுமார் சீதையின் இருப்புக் கூறல் 

என்புழி அனுமனும் இரவி என்பவன் 
தென்புறத் துளன் எனத் தெரிவ தாயினான் 
பொன்பொழி தடக்கையப் பொருவில் வீரனும் 
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் 

எய்தினன் அனுமன் எய்தி ஏந்தல் தன் 
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய 
தையலை நோக்கிய தலையன் கையினன் 
வையகம் தழீஇ நெடி திறைஞ்சி வாழ்த்தினான் 

கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால் 
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர் 
அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும் 
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான் 

உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற 
மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலைமன்னன் 
தள்பெருந்தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் 
என் பெருந் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் 

உன்குலம் உன்னதாக்கி உயர்புகழ்க் கொருத்தியாய 
தன்குலம் தன்னதாக்கித் தன்னைத் தனிமை செய்தான் 
வன்குலம் கூற்றுக் கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து 
என்குலம் எனக்குத் தந்தாள் என் இனிச் செய்வதெம் மோய் 

விற் பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை 
வெற்பில் நற்பெருந் தவந்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் 
இற்பிறப் பென்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும் 
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன் 

கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் 
எண்ணினும் உளைநீ கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது 
அண்ணல் வெங்காமன் எய்த அலரம்பு தொளைத்த ஆறாப் 
புண்ணினும் உளை நீ நின்னைப் பிரிந்தமை பொருந்திற்றாமோ 

வேலையுள் லங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய் 
காலையும் மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச் 
சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய 
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவமாம் 

தையல் தையலை வணங்கற் கொத்த இடைபெறும் தன்மை நோக்கி ஐய , 
யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் 
எய்தினன் இரந்துகூறி இறைஞ்சினன் இருந்த நங்கை 
வெய்துரை சொல்லச் சீறிக்கோறல் மேற்கொண்டு விட்டான் 

ஆயிடை அணங்கின் கற்பும் ஜயநின் அருளும் 
செய்ய தூய நல் லறனும் என்றிங்கினையன தொடர்ந்து காப்ப 
போயினன் அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்றாங் 
கேயினன் அவரெலாம் என்மந்திரத் துறங்கி யிற்றார் 

அன்னதோர் பொழுதில் நங்கை ஆருயிர் துறப்பதாக 
உன்னினள் கொடிஒன் றேந்திக் கொம்பொடும் உறைப்பச்சுற்றி 
தன்மணிக் கழுத்திற் சாத்தும் அளவையில் தடுத்துநாயேன் 
பொன்னடி வணங்கிநின்று உன்பெயர் புகன்ற போழ்தில் 

அறிவுறத் தெரியச்சொன்ன பேரடை யாளம் யாவும் 
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை 
முறிவற எண்ணி வண்ண மோதிரம் காட்டக் கண்டாள் 
இறுதியின் உயிர் தந்தீயும் மருந்தொத்தது அனையது எந்தாய் 

வாங்கிய ஆழிதன்னை வஞ்சர்ஊர் வந்ததாம் என்று 
ஆங்குயர் மழைக்கண்ணீரால் ஆயிரம் கலசம் ஆட்டி 
ஏங்கினள் இருந்ததல்லால் இயம்பலள் எய்த்தமேனி 
வீங்கினள் வியந்ததல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் ( திருவடிதொழுதபடலம் 21 , 22 , 25 , 26 , 28 , 29 , 30 , 31 , 32 , 37 , 38 , 39 , 41 , 4

ஸ்ரீராமர் சீதாதேவி சூடாமணி கண்டு மகிழ்தல் கொச்சகம் - 

பையயப் பயந்தகாமம் பரிணமித் துயர்ந்து பொங்கி 
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையைவிட்டான் 
ஐயனுக்கு அங்கிமுன்னர் அங்கையால் பற்றும் நங்கை 
கையெனல் ஆயிற்றன்றே கைபுக்க மணியின் காட்சி பொடித்தன 

உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கித் துடித்தன 
மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி மடித்தது 
மணிவாய் ஆவி வருவது போவதாகித் தடித்தது 
மேனிஎன்னே யார்உளர் தன்மைதேர்வார் ( திருவடிதொழுதபடலம் 47 , 48 )

ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல் 

எழுகவெம் படைகள் என்றான் ஏஎனும் அளவில் எங்கும் 
முழுமுரசு எற்றிக் கொற்ற வள்ளுவர் முடுக்கமுந்திப் 
பொழிதிரை அன்னவேலை புடைபரந்த தென்னப் பொங்கி 
வழுவலில் வெள்ளத்தானை தென்திசை வளர்ந்ததன்றே 

அந்நெறி நெடிது செல்ல அரிக்குலத் தரசனோடும் 
நல்நெறிக்குமரர் போகநயந்து டன் புணர்ந்த சேனை 
இந்நெடும் பழுவக் குன்றில் பகலெலாம் இறுத்த பின்னர்ப் 
பன்னிரு பகலிற்சென்று தென் திசைப் பரவை கண்டார் [ திருவடி தொழுதபடலம் 50 , 52 ] 

என்றுரைத் தெழுந்தவேலை மாருதி இருகை கூப்பிப் 
புன்தொழிற் குரங்கெனாது எள்தோளிடைப் புகுதி என்னா 
தன் தலைபடியிற் றாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான் 
வன் திறள் வாலிசேயும் இளவலை வணங்கிச் சொன்னான் 

நீ இனி என்றன் தோள்மேல் ஏறுதி நிமல என்ன 
வாய்புதைத் திறைஞ்சி நின்ற வாலிகா தலனைநோக்கி 
நாயகற் கிளையகோவும் நன்றென அவன்றன் தோள்மேல் 
பாய்தலும் தகைப்பில் தானை படர்நெறிப் படர்ந்ததன்றே [ மிகைப்பாடல்கள் 49 -- 2 , 3 ] 403

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


									

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -3-

March 12, 2024
( திருவடி சூட்டு படலம் 131 , 133 , 134 ] 

ஸ்ரீ ராமஜெயம் . 

மூன்றாவது ஆரணிய காண்டம் 

ஸ்ரீ ராமர் அத்திரியைக் கண்டு தண்டகம் ( சர்தல் " 

துதிபெறு தம்பியர் தாய்மார் மந்திரிமார்கள் 

தொல் முனிவர் புரசனங்கள் குகன் போனாலும் 
பதிவுறும் நம் இருப்பிடத்தைக் கண்டு கொண்டார் 

பரிவினால் வந்துதினம் சூழ்வார் என்று 
சதியெனும் சானகிபின்னும் தம்பி முன்னும் 

தான்வரச் சித்திரகூட மலைக்கப் பாலே 
உதயரவி முன்பனிபோல் முனிவர் துன்பம் 

ஒழிக்கின்றான் ஸ்ரீராமன் வழிக்கொண்டேனே 


கண்ணிகள் 

விண்டான் 
அந்த 
கண்டான் 
1. வழி சொண்டு ராகவன் 
வழியில் அத்திரி முனியைக் 
பொழியும் ஆசீர்வாதம் 
பூங்கனி கிழங்கமு 
முனி 
கொண்டான் 
தந்த துண்டான் . சாயை - 

2. அழுக்கில்லாத சொர்ணச் 
ஆடை பணிகள் வெகு 
செழிக்கும் சீதைக்கொரு 
செய்தாளே முன் அந வாயே 
அன்பு 
தாயைப் 
போலே 
சூயை . 


-- 


3. அது கொண்டு முனிவன் அவ் 
அனுமதி கொண்டு அவர் 
முதுதண்ட காரணியம் 
மூவரும் சென்றாரே 

அன்னை இடத்து 
முன்னே 
நல்ல 
தன்னைக் 
கண்டு 
பின்னே . 

விராதன் வதையும் துதியும் 
பொய்கலந்த விராதன் அந்த வனத்தே வந்தான் 
பூவைசன கியை எடுத்துக் கொண்டான் , ராமன் 
மெய்கலந்த தம்பியும் தா னும்போர் செய்தான் 
விட்டிலன் என்றவர்களையும் எடுத்துக் கொண்டான் 
மைகலந்த தோளையிரு வோரும் வெட்டி 
மாய்த்திட்டார் அதம்படலால் அரக்கன் ஆங்கே 
கைகலந்த திய்வதே கத்தைப் பெற்றான் 
கதிசொல்வான் ஞானமுள்ள துதிசொல்வானே .. 


பல்லவி 
அறிவார்யார் உன்னை - அறிவார்யார் 
( அறி ) 

அநு பல்லவி 
அறிவார் ஆர்மா னிடன்போலே குறியாவேஷம் கொண்டதாலே 
சிறியேன் செய்தபிழைதன்னைக் குறியாதேராக வா உன்னை ( அறி ) 

சரணங்கள் 
1. எடுப்பானும் எவர்க்கும் இன்பம் கொடுப்பானும் குட்சியினிலே 
விடுப்பானும் ஆலிலைமேலே படுப்பானும் நீஆகவே பா ராட்டுவாய் கதியைக் காட்டுவாய் 
சாட்டையில்லாப் பம்பரம் போல் ஆட்டுவாய் உன்மகிமையை ( அறி ) 

2. தாயறியும் பிள்ளை தன்னைத் தாயையும் பிள்ளை அறியும் 
நீயறியும் உயிர் உன்னை ஆரறியா தென்ன இந்திர 
சாலமோ இதென்ன 
கோலமோ - உனது 
காலாலே முடிந்ததனைக் கையாலே அவிழ்க்கப் போமோ 
( அறி ) 

3. அரவம் ஆகிமேல் உகந்தாய் ஒருகொம்பினாலே சுமந்தாய் 
சரணம் அதினால் அளந்தாய் பெருநில மங்கைமேல் வைத்த ளையாள் 
மேகாமோ -- உன் மார்பில் 
ஏகமாய் இருக்கின்றவள் வேகமேசெய் யாளோஉன்னை 
தாகமோ ( அறி ) 

4 உள்ள சராசரம் எல்லாம் வள்ளலேஉன் நாபிமலர்ப் 
பொள்ளலில் வந்தும் ஒருவர் பிள்ளை என நீவந்தது 
இதென்ன மாயமோ -- சேற்றிலே 
மேயும்பிள்ளை பூச்சிபோலே தோயவும் தோயாதஉன்னை ஞாயமோ ( அறி ) 

5. வேதத்தின் மேலே வேதாந்த நாதத்தின் மேலே ஞானிகள் 
போதத்தின் மேலே விளங்கும் பாதத்தை என்மேலே வைத்தாய் 
யோக்கியனோ 
சிலாக்கியனோ சுருதி சொல் 
வாக்கியனே சுவாமி எனது பாக்கியமே பாக்கியம் உன் தன்னை ( அறி ) 

அடியேன் 
6. பா கண்டு சொல்லாளை இந்த நாய் கண்டதென்று கொள்ளாதே 
தாய் கண்டு பொறுக்காதத்தை ஊரோசண்டு பொறுக்கும் மலர்த் 
பன்னிரு 
எவர்க்கும் 
வாமனே எனும் சீதாபி ராமனே உன்பெருமையை ( அறி ) 
தாமனே 
நாமனே 

தண்டகவனரிஷிகள் ஸ்ரீராமரோடு முறையிடல் 

துதிவிரா தன்வணங்கி உயரப் போனான் 
சுவாமிசர பங்கன் ஆசிரமத்தில் போனான் 
அதில் எதிர்கண் டிந்திரனும் போனான் ராமன் 
அருளமுனி தம்பதியோ டளவிப் போனான் 
கதி தருதண் டகவனத்து முனிவர் தம்மைக் 
கண்டுகனி யமுதையன் உண்டி ருந்தான் 
சதி செயும் ராக்ஷதராலே கொஞ்சச்சீவன் 
தரிக்கின்றார் அவர்கள் கையை விரிக்கின்றார் 

கண்ணியன்
1. ராமபத்திரா ராமச்சந்திரா ராமா ஆ 
பூமிச்சுமை கழிக்கும் தர்மபுத்திராஆ 
2. அரக்கர்கையால் நெருக்கியிட ஆலைக்கரும் 
நெருக்கிடையாய் வருந்தும் எம்மைநிலை நிறுத்தாய் 
பெனத்தானே 
எங்கோனே 

3. விழல் எனராட் சதநெருப்பால் வெதும்புகிறோம் 
மழைமுகம்கண்டிடும் பயிர்போல் மகிழ்ந்தோம் நீ 
ஒருகாலே 
வரலாலே 
போனோமே 

4. புரைசேரும் ராட்சதரால் பூனைகளாய்ப் 
அரைசேஉன் வரவுகண்டோம் ஆனைகள்போல் 
ஆனோமே 

5- வள்ளல் தச ரதன்மகனே மனக்கவலை 
எள்ளளவுன் கிருபைக் கண்ணால் எங்கள் முகம் 
தீராயோ 
பாராயோ 

6. பஞ்சுபறந்தாலும் அய்யா படியுமல்லோ 
நெஞ்சுபறந்திடு மதற்கு நிலைகாணோம் 
ஒருதேசம் 
லவலேசம் 

7 உத்தமனே அரக்கரை வேரொடும் பிடுங்கி 
இத்தனைபேர் செயுந்தவங்கள் எல்லாம் நீ 
பிறிவாயே 
பெறுவாயே 

8. புலிக்கூட்டம் திரிகாட்டில் புகுந்திடும்மான் 
என நாமே 
கலிக்கி ராட்ச : தர் திரியும் காட்டில் இருக் கின்றோமே 
9. இயற்கைகுலைந் தரக்கர்களால் இறந்து விட்ட்டாம் பேர் நாமம் 
வயிற்றினில் வாள் கட்டிக்கொண்டு மறந்து விட்டோம் செபஓமம் 

10. உங்காரம் செயில் அரக்கர் உலகில் என்ன 
இங்கேநீ இருக்கிலவர் எட்டியும் பார்த் 
படுவாரோ 
திடுவாரோ 


ஸ்ரீராமர் தண்ட கவன ரிஷிகளுக்கு அபயமீதல் 

தருக்களும் மலையும் : சூழ்ந்த தண்டக வனத்தோ ரிந்த 
வருத்தம் ஆம் மொழியைக் கேட்டான் வணங்கியே ராமன் நீங்கள் 
செருக்கியே தவங்கள் செய்வீர் தேவரீர்க் கேவ லாளாய் 
இருக்கிறேன் அரக்கர் துன்பம் இனிவிடும் எனச்சொல் வானே 

பல்லவி 

தண்டக 
அஞ்சா திருங்கள் சந்நியாசிகளே 
ஆரண்ய வாசிகளே ( அஞ்சா ) 

அநுபல்லவி 
அஞ்சா திருங்கள் உங்கள் ஆசீர்வா தந்துணை 
அப்புறம் ராட்டதர்க் குண்டென்கை யிலக்கனை 
செஞ்சா மாருதம் போலவே நொடிக்கிறேன் 
பஞ்சாகப் பறந்தோட அடிக்கிறேன் ( அந் ) 

கொல்லாமல் விட்டால் சொல்லாமல் 

1. கண்டோரைக் கொல்லுவேன் 
காகுத்தன் என்று நீர் 
மண்டி எதிர்த்து முன் 
வந்து வணங்கினார் காலில் 
நில்லாமல் 
அல்லாமல் 
எண்டிசைமேல் அவராலே 
ராட்சத சேனைகள் வந்து போ 
அண்டபகிரண்டம் ஆ 
அப்புறம் போனாலும் என்கணை 
ஆனமட்டும் 
ராடட்டும் 
யிரத்தெட்டும் 
யே எட்டும் ( அஞ் ) 


2. அந்தண ராலே 
ஆவி கொடுத்தவர் 
முந்திய தேவர்க்கும் 
மூர்த்திகள் ஆவார் 
பசுவாலே 
தங்கள் 
விண்மேலே 
அப்பாலே 
சொல்லும் 
அதனாலே 
இந்திரன் ஆன தேவன் வந்து 
என்றாலும் ராட்சதப் போரில் 
சுந்தர கோதண்ட வாளி 
சூரியனைக் கண்ட பனிபோல் 
தடுக்கிறேன் 
அடுக்கிறேன் 
விடுக்கிறேன் 
ஒடுக்கிறேன் 
( அஞ் ) 


முடி 
நிலங்கீற 
தடுமாற 


3. மங்கியே தாயார் 
மன்னன் உயிரும் 
எங்கள் பரதனும் 
ஏன்வந்தேன் என்சென்மம் 
வேசற 
ஈடேற 
நான் 
உங்கள் பணிவிடை நானே 
பொறுக்கிறேன் 
உக்கிர கோதண்டத் தில்நாணி இறுக்கிறேன் 
எங்கெங்கும் என்கணையாலே 
நொறுக்கிறேன் 
ராட்சதப் பூண்டெல்லாம் வேரோ டறுக்கிறேன் 
( அஞ் ) 

ஸ்ரீ ராமர் பஞ்சவடி தீரத்தைக் காணுதல் 

அருள்முனிவர்க் கிந்தவகை தேற்றித் தண்ட 
காரணியந் தனிற்பத்து வருஷம் நீக்கி 
வரும் வழியில் வதிஷ்டமுனி தவமும் கொண்டு 
வந்தகஸ்தி முனிவரனை வணங்கி அன்னான் 
தருசிலையும் புரமெரித்த கணையும் கூடும் 
சங்கையிலா தேதரித்த துங்க ராமன் 
பரிவுள தம்பியும் சனகிதானும் செல்லும் 
படிகொண்டான் பிறகுபஞ்ச வடிகண்டானே 

ஸ்ரீ ராமர் சடாயுவைக் கண்டு பஞ்சவடி தங்கல் 

அகஸ்திய முனியை அனுப்பிக்கொண் டந்தவ ழியிற் சடாயுவெனும் 
தகப்பன் உரைகொண்டவன் சாட்டத்தருநீர் கோதா விரிதாண்டி 
சகிக்கும் இளையோன் செய்தபர்ன ச்சாலை தனிலே சனகியுடன் 
மிகுத்தோர் பஞ்ச வடியிலுள்ளோர் விருந்தாய் ராமன் இருந்தானே 

பல்லவி 
இருந்தானே ராமச்சந்திரன் - பஞ்சவடியில் 
இருந்தானே ராமச் சந்திரன் ( இருந் ) 

சரணங்கள் 

1. இருந்தானே ராமச் சர்திரன் ரிஷிகளைக் காக்கும் தந்திரன் 
வருந்த ராட்சதர் கூடி - வரும் வழிதன்னை நாடி ( இரு ) 


2. நிருதர்கள் பசி பார்த்து -- நிரைநிரையாக்கை கோத்து 
வரும் விகாதத்தைத் தீர்த்து - மாமுனி வோரைக் காத்து 
3. அலைந்த முனிவர் சோகம் - ஆகுலமெல்லாம் போக 
இலங்கையில் அனுபோக - ராட்சதர்க் செமன் ஆக ( இரு ) 

4. பலத்த ராட்சதர் ஆட்ட பாட்டங்கள் எல்லாம் மாட்ட 
சலித்தபேர் துன்பம் ஓட்ட தர்மத்தை நிலைநாட்ட 

சூர்ப்பணகை ஸ்ரீ ராமனரக் கண்டு மோகித்தல் 

இருந்தரா கவன் பூமேனி எழில் எல்லாம் நோக்கி ஆசை 
புரிந்தசூர்ப் பணகை லங்கா புரிராவ ணற்குத் தங்கை 
அருந்தும்மோ கத்தால் ஐயன் அடிமுடி அளவும் கண்டு 
தெரிந்துள்ளே எண்ணி நெஞ்சம் திருகுவாள் உருகு வாளே 

கண்ணிகள் 
1. தேவனோ மனிதன் தானோ யாவனோ யௌனம் உள்ள 
சித்தனோ இவன் கர்த்தனோ பிரமன் 
பாவனையாற் கண்ட பெண்கள் -- ஆவியைக் கொள்ளை கொளென்று 
படைத்தானோ என்னை உடைத்தானோ 

2. எட்டானைக்கையும் இவன்கை - மட்டாமோ சொரசொரென்ன 
இருக்குமே - உள்ளே சுருக்குமே முன்னே 
பட்டமன்மதன் தவம்செய் - திட்டிந்த உருவாய்ப்புறப் பட்டானோ 
தவசு தொட்டானோ 

3. ஈசனுக்கு முக்கண் இந்திர ராசனுக்கோர் ஆயிரங்கண் 
எண் ஆச்சே இவற்கிரு கண் ஆச்சே இவனைப் 
பேசினால் என் சாமி இவன் கேசவன் தானோ நானொன்றும் 
பிறியேனே ஆரோ அறியேனே 

4. புந்திபவளத்தையிவன் செங்கனிவாய்க் கொப்புச் சொல்லப் 
போகுமோ நிகர் - ஆகுமோ ஐயோ 
அந்தவார்த்தையைத் துப்பென்ற - நிந்தையால் பவளம் துப்பென்று 
ஆச்சுதே 
போச்சுதே 
உவமை 
5. முடிவைத்த குழல் சடையா - முடியாவிட்டால் பெண்களெல்லாம் 
முடியாரோ 
மனம் 
மடியாரோ இவன் 
அடிவைத்த பூமிப்பெண் மேனி - புளகித்தாற் போலல்லோ புல்லை 
அரும்பினாள் 
மெத்த விரும்பினாள் 

6 -மரவுரிசேர் இடைபீதாம் பரமதைச் சேராதென்ன 
மாயமோ 
ஞாயமோ 
சந் திரன் இவன் முகமென்றாலும் வரவர அதுக்குங்கலை 
தேயுமே 
களங்கம் தோயுமே 

7. நவஞ்செய்த தாமரைப் பெண்ணும் செபம் செய்கிறாள் இவன்மார்பில் 
வந்து - கூடவோ - ஐயோ 
தவஞ்செய்ய வந்தானோ நான் முன் - தவம் செய்ததற்காகக் காட்சி 
தந்தானோ - தேடி - வந்தானோ 
நாடவோ 

8. ஏலும் இவன் இலக்கணம் - எல்லாம் செய்த அயனே மோசம் 
இட்டானோ - மதி - கெட்டானோ - இவன் 
காலின் தூளுக் கொவ்வா இந்திரன் மேலுலகை ஆள்வதென்ன 
கர்மமோ 
இது - தர்மமோ 

9 எடுத்திவன் சுந்தரத்துக்காம் - அடுக்கான பூஷணம் பூணா 
திருப்பான் என் - அரு - வருப்பான் என் - சும்மா 
விடுத்தவன் அல்லவோ பொன்னின் - குடத்துக்குப் பொட்டிட்டுப் பார்க்க 
வேணுமோ அதிகம் - காணுமோ 

10. தப்பிலா இவனைச் சேர - இப்படி பிர்ம்மா எனக்குத் 
தந்தானோ - இவனும் - வந்தானோ - ஓகோ 
எப்படி ஆனாலும் இவன் - பொற்புயம் தன்னைச் சேராமல் 
இருப்பேனோ - ஆவி - தரிப்பேனோ 

11. இந்தவிதம் எண்ணி மலர்ச் செந்திருப்போல் மாயவேஷம் 
இட்டாளே - மானம் விட்டாளே நல்ல 
பைந் தொடியாய்ச் சூர்பணகை - வந்து ராமச்சந்திரன் முன்னே 
படர்ந்தாளே - கிட்ட - நடந்தாளே 

ஸ்ரீராமர் பக்கல் சூர்ப்பணகை வருதல் 

அட்டி சொல்லா தன்னைஉரை கொண்ட ராமன் 
ஆனைவரு கிறவழியைப் பார்க்கும் சிங்கக் 
குட்டியைப்போல் அரக்கர்வரும் வழியைப் பார்த்துக் 
கொண்டிருந்தான் அவனிருந்த சாலை முன்னே 
கட்டியிடும் பிணியுள்ளே அடங்கி நாச 
காலம்வர வெளிவந்தாற் போலே பொல்லா 
மட்டிரா வணன் குடியை நாசம் செய்யும் 
வகைவந்தாள் எனச்சூர்ப்பணகைவந்தாளே

பல்லவி 
வந்தாளே 
சூர்ப்பணகை 
வந்தாளே ( வந் ) 

அநுபல்லவி 
வந்தாளே மன்மத சதகோடி வடிவுள்ள 
பந்து முலையை முடி 
பாவம் செய்யும் நிர்மூடி 
ராமன்மேல் மயல் மிகநாடி 
பஞ்சவடியைத்தேடி 
ராவணன்குடிகேடி ( வந் ) 

சரணங்கள்  
1. ராவணன் குபேரனுக்குத் 
தங்கை -- பசையில்லாத 
நன்மைத்துனர் கொண்டுவந்த 
நங்கை 
தேவரீருக்கிவள் பெண்டல்ல 
நீலி 
சீதைக்குத் தெரியுமோ ராட்சத சோலி 
ஏவலுக் கெளியவன் நான் அனு 
என்று சொல்லி அரக்கர் துடை 
காலி ( வந்தா ) 
2 -மானிடப் பெண்கொண்டீர் என்ன 
கண்டோ என்னுடன் 
மருவி வாழ்ந்தால் உமக்குப் பயம் உண்டோ 
ஆனாலும் என்னபாவி கருப்பு 
வில்லி 
ஐங்கணை பிளக்குதே என்உடல் செல்லி 
சேனைலீலை செய்வேன் நான் சாம 
வல்லி 
திரட்டுப்பால் குமட்டுதோ உமக்கென்று சொல்லி ( வந்தா )
3. எதிரிலே வந்ததே உமது 
ருவோரும் இசைந்ததே காந்தர்வ 
சதிசெய்யேன் எனக்கும் உமக்கும் ஏக 
சம்மதி ஆனதே நல்லமுகூர்த்த 
கதகதென் றெரியுதே காமாக்கினி 
கட்டிக்கொள்ளும் என்று தில்லுமுல்லும் 
வாசி 
வீசி 
பேசி ( வந்தா ) 

ஸ்ரீராமருக்கும் சூர்ப்பணகைக்கும் சம்வாதம் 

வத்தசூர்ப்பணகை தன்னை மதித்தரா கவனும் நோக்கி 
அந்தமா னிடவர் பெண்ணோ அரம்பையோ அறிவோம் என்றும் 
தொந்தமா தவத்தோர் காணச் சொல்லறிந் துரைப்பாள் என்றும் 
தந்தவார்த் தைக்கு வார்த்தை சரிசரி எதிர் சொல்வாளே 

1. செம்பவள வல்லி போல எங்கேவந்தாய் வந்த 
சேதி என்ன சொல்வாய் 
கும்பிடப் போன தெய்வம் எதிர்வந்த தென்றாசை 
கொண்டு காணவந்தேன் 
பெண்பாவாய் 
என்கோவே 
பெண்பாவாய் 
2. ஆசை வில்லின்மேலோ மரவுரிமேலோ தின்னும் 
அருங்கனி மேலோ சொல் 
ஆசைவில்லின் மேலில்லை மரவுரி மேலில்லைஉன் 
அதரக்கனிமேல் உண்டு 
என் கோவே 
பெண்பாவாய் 
3. அதரக் கனிகொடுக்க தவசிகட்கடுக்குமோ 
அடுக்காத வார்த்தை சொன்னாய் 
அதரக்கனி வதிஷ்டர் அருந்ததி கீகலையோ 
அவர் தவசியல்லவோ 
என்கோவே 
பெண்பாவாய் 
4. தவசியது செய்தாலும் பிரம்மகுலம் உன்குலம் 
க்ஷத்திரிய குலம் என்குலம் 
வையவை என்பதென்ன காமுகருக்குக் கண்ட 
டத்தில் என்பது பொய்யோ 
என்கோவே 
5. உன்வீட்டில் அண்ணனான ராவணன் அறியாமல் 
உன்கைப் பிடிக்கல் ஆமோ 
பெண்பாவாய் 
என்வீட்டில் அண்ணனும் நான் உன்னவள் ஆனபின்பு 
இசைவதற் கைய மில்லை 
என்கோவே 
6. தன்வீட்டு விளக்கென்று முத்தம் இடுவாருண்டோ 
தகுதியல்லவே யது 
பெண்பாவாய் 
என் வீட்டுக்காரனானால் அரக்கர் உறவு முண்டாம் 
இந்திரபட்டமும் ஈவேன் 
என்கோவே 
7. அரக்கர் உறவும் பெற்றேன் உன் போகமும் பெற்றேன் 
அருந்தவம் பலித்ததே 
பெண்பாவாய் 
பெருக்கம் என்னசொல்ல என்சுகம் பெற்றபின்பு 
பெரும்பாக்கியம் வேறுண்டோ 
என்கோவே 
8. தவசிகளுக்கிதெல்லாம் ஏதுக்குக் காட்டினில் 
தவசே பெரும்பாக்கியம் 
பெண்பாவாய் 
தவசி தவரி என்று மெள்ள மெள்ளச் சொல்லி 
தள்ளி விட்டிடல் ஆமோ 
என்கோவே 
பெண்பாவாய் 
9. தனியாக உன்னை நான் கைப்பிடித்தால் உன்தன் 
சாதியார் என்செய் வாரோ 
தனியாய் முருகன் வள்ளி கைப்பிடித்தானே அந்த 
சாதியார் என்ன செய்தார் 
என்கோவே 
10. அநியாய காரியத்தைப் பயம் இல்லாமல் செய்தால் 
ஆர்க்கும் சம்மதியாமோ 

பெண்பாவாய் 
னிஇரு வரும் ஒத்தால் ஒருவர்க்கும் பயமில்னல 
எவர்க்கும் சம்மதி ஆமே 
என்கோவே 
11. ஆனால் மனுஷகணம் ராட்சதகணத்தோடே 
ஆடுமோ கூடுமோ 
பெண்பாவாய் 
நானானால் எப்போதும் தேவருக்கேவல் செய்வேன் 
ராட்சத சங்கையில்லை 
என்கோவே 
12. சங்கைஏன் என்றாய்க்கு பேரனும் உனக்கொரு 
தமையன் என்றாய் அல்லோ 
பெண்பாவாய் 
தங்கை ஆனாலும் என்ன தமையன் ஆனாலும் என்ன 
சந்தோம் உனக்கென்ன 
என் கோவே 
13. அங்கவன் பகை வந்தால் சங்கரன் பகைவரும் 
எங்கும் பகையாகுமே 
பெண்பாவாய் 
திங்கள் சூடியும் மாலும் நான்முகனும் நீயென்றன் 
திருஷ்டிக்கி காணுகின்ற 
என்கோவே 
14. திருஷ்டிக்குக்கண்டாலும் ஒருத்தி இருக்கவேறே 
தேவை என்ன சொல்வாய் 
பெண்பாவாய் 
மட்டுச் சொல்லுகின்றாயோ பெருமரம் சுற்றிய 
வள்ளி விடுவதுண்டோ 
என்கோவே 
15. விட்டிடுமோ என்றாய் விளையாட் டுப்பூசலிது 
வினைப்பூசல் ஆகுமோ 
பெண்பாவாய் 
தட்டுதலைச் சொல்லி என்னைப்பயம் உறுத்தி 
தடுத்துவிட்டிடல் ஆமோ 
என்கோவே 
16. ஒட்டாரங் கட்டாதே ளையோன் அறியாமுன்னே 
ஓடிப்பிழைத்துப் போவாய் 
பெண்பாவாய் 
அட்டா துட்டிகள் பேசி அகற்றுகிறா யோ நல்ல 
தாகட்டும் பார்க்கிறேன் 
என்கோவே 

சூர்ப்பணகை தன் உறவை நினைந்து புலம்பல் 

வாதாடும் சூர்ப்பநகை தன்ளை நோக்கி 
மணிவண்ணன் எனக்கிந்த மனையாள் சீதை 
போதாதோ ஓர்உறையில் இரண்டு வாளோ 
புறங்க க்கும் தம்பிக்கு மனையாள் இல்லை 
நீதானோ போ என்வே சீதை மேலே 
நேர்வாளை லட்சுமணன் கூர்வா ளேந்திக் 
காதோடு மூக்கரிந்த பின்னும் பல்லுக் 
கருகுவாள் உறவை நினைந் துருகுவாள்

கண்ணிகள் 
1. அருமைப் பிறப்பே அண்ணேன் 
ராவணனே என்னை 
அருமைத் தங்கச்சி என்ற 
ராவணனே 
உன் தன் 
கருவிழி போலே காத்த 
கண்ராவி என்ன சொல்வேன் 
ராவணனே - என் தன் 
ராவணனே 
என்னை 

2. சிங்கம் இருக்கக்குட்டி 
செல்வத்தங்கை ஒருவர் 
அங்கப்பழுது மனிதன் 
அஞ்சா நெஞ்சு படைத்தும் 
வசமாமோ 
உன்தன் 
தொடப்போமோ 
செய்வானோ செய்தும் 
உய்வானோ 
3 -ஊர்க்குருவி உயரப் 
உயர்ந்த கருடன் ஆமோ 
பார்க்குள்ளே மனிதர் 
பாதத் தூளுக் கொப்பாரோ 
பறந்தாலும் 
ஒருக்காலும் 
மிகுந்தாலும் 
எக்காலும் 
அது 
இந்த 
உன்தன் மனிதன் 

4. எட்டுத் திக்கும் உன் பேரைப் 
பழித்தானே 
என்னையும் கொண்டையைப் பிடித் திழுத்தானே அய்யோ 
கிட்டிச் செவியரிந்து 
முனைந்தானே 
உன்னைக் 
கிள்ளுக் கீரையாகவே 
நினைந்தானே 

5--துணைகும்ப கர்ணா இங்கே 
தூக்கப் பேய்பிடித்த நீ 
பிணமே கரதூஷணா 
பெண்பிறந்து பட்டதைநீர் 
மேவாயோ என்றும் 
ஆவாயோ அடா 
வாரீரோ 
பாரீரோ 
நான் 
6. அத்தைமரு மகன் என்ப 
அஸ்திரம் விட்டால் மனிதன் 
சித்தே என் போல் உன்தன் 
திரனை செயித்த தெல்லாம் 
திதுதானோ 
பிரம்ம 
அழியானோ - இந்திர 
முனைபோச்சோ -- தேவேந் 
விழலாச்சே 

7. குட்டி மனிதன் என்னை 
குலை கலங்கிடவே போட் 
எட்டிப் பார்த்திவன் அண்ணன் 
ஏவிவிட்டறியான் போல் 
வதைத்தானே என்தன் 
டுதைத்தானே 
பிரிந்தானே - இவனை 
இருந்தானே 

8. இந்திர சந்திரா தியர்கள் 
எந்தெந்த வீரர்களும் 
பந்தியிருக்கும் உங்கள் 
பறிபோய் நான் வருவேனோ 
பணி கேட்க லகில் 
முடிதாழ்க்க - வந்து 
சபைநேரே மூக்கும் 
துரைமாரே 

சூர்ப்பணகை ஸ்ரீராமருக்கு மீளவும் இதவுரைத்தல் 

பேய்வடிவாம் அரக்கியிந்தப் படி அழுதாள் ராமனிடம் 
பின்னும் வந்தாள் 
தேவநீ அறியாதே இளையவன் இப்படி செய்தான் 
செய்தால் என்ன 
கோவமுள்ள இடத்தில் அல்லோ சந்தோஷம் உண்டென்னைக் 
கூட்டிக் கொண்டால் 
ஆவதுமெத் தவும்உண்டு கேள் என்பாள் மருவி என்னை 
ஆள் என் பாளே 


பல்லவி 
எனக் 
என்னுருவில் கொஞ்சம் கொய்தீர் 
கென்ன தாழ்ச்சிநீர் செய்தீர் ( என் ) 

அநுபல்லவி 
அன்னியள் ஆகஎன்னைப் பிரிய விடாமல் என் 
அழகுகண் டொருவர்கண் ஏறுபடாமல் ( என் ) 


சரணங்கள் 

1-நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் உம்மை 
நானே சுமந்து கொண் டெட்டவோ 
ஆரும் 
திடுக்கிடவே உம்மை எதிர்த்தபேர் தலைகளைத் 
திருகி மலைமலையாக் கொட்டவோ 
நல்ல 
குடித்தனத்துக்கிவள் ஆகும் ஆகாதென்று 
குறிப்பதின்னம் முட்ட முட்டவோ 
கேட்டால் 
இடுப்பு சீதைக்குக் கொஞ்சம் மூக்கிவளுக்குக் கொஞ்சம் 
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ எண்ணி ( என் ) 
குற்றம் போலே செய்து குணம் செய்தீர் என்னைக் கொட்டிக் 
கொள்ளும் காமப் பேயைக் 
கொல்லவோ- நல்ல 
பத்தினியாக நின்றிராமல் காய்கனிகளைப் 
பறித்துக் கொண்டுவரச் சொல்லவோ - உமது 

2 --அஸ்தம் பட்ட போதே சொந்தம் ஆனேன்இனி 
அரக்கரை வேரொடும் 
கெல்லவே 
நல்ல 
புத்தி பண்ணி வைத்துக் கொண்டீர் பொங்கியும் பால் 
புறம் போகல் ஆகாதென் 
றல்லவோ சாமி ( என் ) 

3. பதிக்குப் போகும் போது சீதைக்குமேலான 
பருவப்பெண் என் முன்னே 
நிற்கலாம் எம் 
கதிக்குப் பழுதுகண்டால் அடங்கா தவளை நாம் 
கண்டித்தோம் என்று ஒப் பிக்கலாம் - நல்ல 
துதிக்கென்ன காண் முட்ட நனைந்தார்க் கீரமில்லை 
எனக்கும் அப்படியே மெய்ப் பிக்கலாம் சாமி 
அதுக்கல்ல என்றாலும் அரக்கர் மாயைகள் அறிந் 
தவள் எனவே கிட்ட வைக்கலாம் என்றோ ( என் ) 

சூர்ப்பணகை கரனோடே முறையிடல் 

பன்னியசூர்ப் பணகையிந்தப் படிக்கே சொன்னாள் 
பாராமல் ஸ்ரீராமன் துரத்தி விட்டான் 
அந்நிலையே மூக்கறைச்சி மூளியாகி 
அரக்கிசென்றே அண்ணனுக்காப் பாடு பட்டேன் 
பின்னை ஒன்றால் பட்டதில்லை உங்க ளோடே 
பெண்பிறந்து பட்டபிழை இதுதான் என்று 
மின்னிலைவேல் கரன் காலில் மரம்போல் சாய்ந்து 
விழுந்திட்டாள் அவன் கேட்க மொழிந்திட்டாள் 

பல்லவி 
கரனே நான் 
பட்டபாடு கேளாய் 
பட்டபாடு கேளாய் ( பட்ட ) 


1. பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்தவாளாய் 
குட்டி மனிதன் என்னைக்- கட்டியிழுக்கப்பின்னை 
பெட்டிப் பாம்பு போலே - நட்டி அண்ணனாலே ( பட்ட ) 

2. ஏதற்கும் பெண்ணைக்கண்டே - அண்ணனுக்குண்டே - என்று கொண்டே 
தூக்கப் போனேன் பெண்டு - காக்கும் மனிதன் கண்டு 
மூக்குங் காதும் ரெண்டும் - போக்கடித்துக்கொண்டு ( பட்ட ) 
3. திருத்தமா னசூரர் - இரண்டு வீரர் - நராவதாரர் 
அரக்கர் வேர்களைந்து - நறுக்கவே நினைத்து 
இருக்கிறாரே வந்து - ஒருத்திபெண் பிறந்து (பட்ட ) 
4. பங்கம் இன்னம் வேணுமோ - காதுதோணுமோ - மூக்குநாணுமோ 
லங்கை ஆளும் வல்லி - தங்கையான செல்லி 
மங்கையர்க்குள் நல்லி - உங்கள் பேரைச்சொல்லி ( பட்ட ) 

கரதூஷணத் திரிசிரர்களின் வதை 
காதலிசூர்ப் ப நகியிந்தப் படிக் கோடாலிக் 
காம்புகுலத் துக்குக்கே டென்றாற் போலப் 
பாதகனாம் கரன் முதலா னவர்க்குச் சொல்லிப் 
படைக்கடலை மூட்டிவிட்டப் பாலே நின்றாள் 
சாதகனாம் ராமச்சந்திரன் சாலை நீங்கிச் 
சண்டகோ தண்டத்தை வளைத்தம் பாலே 
ஓதம் எனும் அரக்கருயிர் முகுர்த்தம் தன்னில் 
ஓட்டினான் தருமம் நிலை நரட்டி னானே 

பல்லவி 
அடித்தானே ரகுராமன் 
கோதண்டம்கை 
பிடித்தானே செயராமன் ( அடி ) 

அநுபல்லவி 
அடித்தானே ரகுராமன் 
முடுக்கானகரநாமன் 
அனுப்பின பதினான்கு 
முனைத்தலைவரை ஆங்கு 
அரக்கிக் கண்காட்டியே 
பொருக்கென மூட்டியே 
அப்புரத்திலே ஒண்டக் 
கைப்பிடித்த கோ தண்ட 
அய்யன் கைகளில் வாரி 
எய்கின்ற சரமாரி 
அதினால் உரைக்கரும் 
பதினால் அரக்கரும் 
அலைகடல் போல் எழத் 
தலை தலை யாய்விழ 
ஆனைப்பட முடியச் ( அடி ) 

சேனைக்கடல் வடிய 
கரிகள் பலவும் சுற்றப் 
கட்டிய தேர்களும் ஒத்த 
கருந்துக ளால் அளைந்து 
காகுத்தன் சாலையைப் பற்றி 
கங்குகங்காய் முனை தரப் 
கதிகாணா வரப் 
கனகத் தேரொடும் கூடி - 
பனிமொய்த்ததென மூடி 
பரிகள் அதிலும் மத்தக் 
நட்டணை வீரரும் மெத்த 
பெருங்கடல் போல் வளைந்து 
மேகத்தைப் போலவே கத்தி 
பொங்கி அங்கே வரவர 
பதினாலாயிரக் 
கதிரவனைப் 
ராமனை மொய்த்துக் 

1. கரனும் தூஷணன்திரி சிரனும்வர அரக்கி 
களிப்பாகக் காட்டினாளே - நமனும்பசி 
இளைப்பாற மூட்டினாளே 
அத்தை ராகவன் 
கண்டானே தம்பியைக் 
கொண்டானே ஒருமனு 
காத்திரு சனகிதன்னை - இந்தச் சண்டையைப் 
பார்த்திரு முனையும் என்னை - என் 
என்று நாணியை 
காதண்ட இழுத்துமுனைக் - கோதண்டம் வளைத்து மழைக் 
கற்கடகச்சந்தி ரன்போலே 
சரமாரிகள் 
உக்கிரங் கொண்டு விடலாலே 
வல்லரக்கர்கள் 
கரம் அறுந்தவர்களும் 
கண்டம் கண்டம் 
துண்டம் துண்டம் 
சிரம் அறுந்தவர்களும் 
ஆனபேரும் கட்டைகள் போலே 
ஆனபேரும் இறுக்கிக்கட்டும் 
கவசங்கள் கிழிந்தோரும் துவசங்கள் கிழிந்தோரும் 
கடைவாய் கிழிந்தோரும் - பிடித்து வந்த 
குடைபோய் அழிந்தோரும் கணைதொடுக்கும் 
கைச்சிலை யானதும் அற்று வச்ச ஆயுதமும் அற்றுக் 
கையைக் கையைப் 
பிசைவாரும் 
குற்றுயிராகிப் 
பையப் பைய அசைவாரும் நெற்றிப் பிளந்து 
கத்தும் பரிகளும் தலை சுற்றும்பரிகளும் ரத்தம் 
கக்கும் பரிகள் அனேகம் 
- குடல் அறுந்து 
முக்கும் பரிகள் 
அனேகம் - மதயானைகள் 
கைத்தலம் பிளந்து பெரு மத்தகம் பிளந்துவைத்த 
காத்திரங்களும் 
பிளந்து 
நெருப்புப்போலும் 
நேத்திரங்களும் 
மலைமலையாக் 
பிளந்து 
கதறுண்டு சிதறுண்டு மதகுஞ்சரம் உருண்டு 
காடுகளா விழுந்ததுகள் கண்ணுக்கெட்டாத 
மேடுகளா 
எழுந்ததுகள் இவையறிந்து 
கடித்தானே இரும் பல்லைப் பிடித்தானே ஒருவில்லை 
காய்ந்தானே திரிசிரசன் ராகவன்மேலே 
பாய்ந்தானே குணமுரசன் 
பாய்ந்தவன் 
துர கதத்தையும் ஏறிவந்த ரதத்தையும் அய்யனவன் 
கைச்சிலையும் முறித்து விட்டான் 
அவனுடைய 
முச்சிரமும் தறித்து 
விட்டான் அவன் பிறகே 
காத்திருந் தெதிராலே ஏற்றவர்களை மேலைக் 
காற்றில் பஞ்சு கள் போலே தூற்றிவிட்டொருக்காலே 

2. வெற்றிராமன் தொடத்தொட அஸ்திரங்கள் படப்பட 
வீட்டில் ஓடுவாரையும் காட்டில் ஓடுவாரையும் 
வில்லைவிட்டெறி வாரையும் 
கொல்லையிற் பரிவாரையும் 
விலக்கங் கொண்டவரையும் 
கலக்கங் கொண்டவரையும் 
விருத்தம் செய்தீர் என்றும் நரர்க்கஞ்சினீர் என்றும் 
விசை கொண்ட தூஷணன் வசைகொண்ட பாஷணன் 
விசயத்தேர் பூட்டினானே சக்கரம் போலே 
திசைஎட்டும் ஓட்டினானே ஓட்டி எதிர்த்து 
விட்ட கணைகளும் 
வெடிபட 
பொடிபொடி 
தொட்ட - தொட்டகணைகளும் 
நீக்கினானே ராமன் அம்பாலே 
ஆக்கினானே 
பிறகே வந்த 
மேற்படைகளும் புரண்டு நாற்படைகளுந்திரண்டு 
வெகுவாகக் குதித்தாரே - எல்லாரும் ஒரு 
முகமாக 
மிதித்தாரே மிதித்தவர்கள் 
வெட்டும் வெட்டும் என்பார்சிலர் கட்டும் கட்டும் என்பார்சிலர் 
மெல்லும் என்பார் சிலபேர் நரன் இவனைக் 
கொல்லும் என்பார் 
சிலபேர் அரக்கர்விட்ட 
வேல்ஒடிந்து கால்ஒடிந்து கோல் ஒடிந் துதிரப்பெரு 
வெள்ளத்தில் மிதப்பாரும் ஆனைவிழுந்த 
பள்ளத்தில் பதைப்பாரும் கதிகலங்கி 
மெத்த உள்ளம் கெடநொந்து ரத்தவெள்ளந் தனில் வந்து 
விழுந்தார் அனேகம் அரக்கர் ரத்த வெறியால் 
அழிந்தார் அனேகம் அரக்கர் 
தூஷணன் கண்டு 
விளைத்தானே செருவில்லை வளைத்தானே கணைசெல்ல 
விடுத்தானே மழைபோலே 
ராகவன் அதைத் 
தடுத்தானே கணையாலே 
அதின்பிறகு 
விடுகணை பொடிபட ஒருகணை சடுதியில் 
மெய் தமுனையோடு தொட்டானே 
சாமிக்கு நெற்றி 
மத்தியிலேபட 
விட்டானே 
ரகுநாயகன் 
மீறி அவன் ஏறிவரு தேரதிலே சாரதியை 
வெட்டினானே கணை எய்து குதிரைகளைக் 
கொட்டினானே தலைகள் கொய்து கொய்ததல்லாமல் 
வில்லுந் துணிந்திட அவன் சொல்லும் துணிந்திடத் தேரை 
வேறுவேறு நொறுக்கினானே - அவன்கைகாலை 
கூறுகூறா நறுக்கினானே - நறுக்கினபின் 
மின்னும் அவன் எதிராகப் பின்னும் ஒருகணைபோக 
விரல் ஒத்துத் தொடுத்தானே 
தூஷணனும் 
சிரம் அற்றுப் படுத்தானே 
அதனைக்கண்டு 
விண்ணுலகில் அனைவரும் மண்ணுலகில் முனிவரும் 
வெருள் துன்பம் பிரிந்தாரே வாழ்த்தொடு புஷ்ட 
வருஷங்கள் சொரிந்தாரே 
அரக்கர்பட்ட 
வெற்றிநல் லோர்தொடுக்க ரத்தவெள்ளாறெடுக்க 
விசையமங் களம்பாடத் திசையெங்குங் கொண்டாட ( அடி ) 


3-தத்திவரும் பரிகளும் சுற்றிவரும் கரிகளும் 
தாவிவரும் பெருந்தேரும் சேவகம் பேசியபேரும் 
தளகர்த்த வீரரும் வளம்மிக்க சூரரும் 
தண்டுடனே எதிர்வரும் மண்டியசேனாதிபரும் 
சாரிசாரி யாகவந்து போரிலே மிகமுனைந்து 
தம்பி தூஷணன் பட்ட புண்பாடது முட்ட 
தணல் போல நிவந்தானே - சாதிலிங்கம்போல் 
ணைக்கண்கள் செவந்தானே செவந்தபின்பு தாக்கிய புலியை ஒத்து மூக்கிலே விரலைவைத்துத் 
தாழ்ச்சி இதுவென நொந்தானே - நொந்து பொல்லாத 
ராட்சத கரனும் 
வந்தானே வந்து சுற்றிலும் 
சதுரங்கத் தளத்தோடே ரணரங்கம் அதைத்தேடி 
சாமிராகவனைக் 
கண்டான் - மனிதன் இவன் 
ஆமென மனதிற் 
கொண்டான் சேனைகள்விட்ட 
சக்கரம் இருப்புலக்கை கப்பணம் முசுண்டி பண்டி 
சஸ்திரம்வே 
லாயுதங்கள் குறித்துவிடும் 
அஸ்திரம்சூலாயுதங்கள் 
பொடிப்பொடியாத் 
தறிபட்டும் முறிபட்டும் விலகச்சிலை வளைத்துச் 
சாய்த்தானே சரதாரை - ரகுநாயகன் 
தேய்த்தானே வெகுபேரை வரும் அரக்கர் 
தலையைச் சிலையை ரத்தின முடியைக் கொடியை வெட்டிச் 
சரித்தானே 
சிலகணையால் அடிவயிற்றை 
எரித்தானே 
சிலகணையால் இரைக்குவந்த 
சாகினியும் டாகினியும் காளிகளும் கூளிகளும் 
சதுர் கூடிப் பார்த்தாடுமே - கவந்தமதுக் 
கெதிராகக் கூத்தாடுமே படைகளெல்லாம் 
சரியானது கண்டு கரனானவன் முண்டு 
சாகசங்கள் செய்தானே - ஒருநொடியில் 
ஆயிரம் அம் பெய்தானே எய்ததுகண்டு 
சற்றுநேரத்தில் அய்யன் அத்தனைக் கத்தனைவிட்டு 
தவிடாக ஊதினானே - பின்னையும்சில 
அவன் மேலே மோதினானே அரக்கன் அங்கே 
சாதித்த கணையாலே ஆதித்த குலநாதன் 
தனுவையும் ஒடித்தானே 
தவமுனிவர் 
மனதையும் மடித்தானே 
ராமனுக்குத் கொடுக்க ஒரு 
தடத்தில் பரசுராமன் இடத்திற் பறித்த வில்லைத் 
ததியினில் 
எடுத்தானே வருணன் அங்கே 
உதவியாக் 
கொடுத்தானே 
சரத்தாலே ரகுவீரன் வரத்தாரை பயமெல்லாம் 
தணுத்த னே 
உளந்தனிலே 
துணித்தானே களந்தனிலே - இப்படி அந்த 
சனஸ்தான வருக்கத்தில் முனைந்தாரை முகுர்த்தத்தில் 
தான் ஒருவனுமாக வானவர் துயர்போக 
( அடித்தானே ) 

சூர்ப்பணகை ராவணனோடே முறையிடல் 

முடிவரிய கரன்படையை முடித்த ராமன் 
முன்போலச் சாலையில்போய் இருந்தான் இப்பால் 
இடிகுரற் சூர்ப்பநகை சென்றாள் இலங்கை தன்னில் 
ஈயெறும்பும் அழுதிடராவணன் முன் வீழ்ந்தாள் 
அடிவரலா றுகள் என்ன உன்னை இந்த 
அவமானம் செய்ததென்ன அவர் ஆர் என்ன 
கெடியரக்கன் குலமுழுதும் வேரை வாங்கிக் 
கெடுக்கின்றாள் அரக்கி சொல்லத் தொடுக்கின் றாளே 

கண்ணிகள் 
வடியிலே யார்க்கும் 
படியிலே 
1 . கண்டேன் கண்டேன் அடா அண்ணேன் 
காட்டுகிறேன் பஞ்ச 
அண்டாநரர் இருக்கின்றார் அவர்க் 
சுவரேநிகர் இந்தப் 
2. தரும சீலராம் அயோத்தி 
தசரத மகாராசன் 
விருது கட்டி அரக்கர்தங்களை 
வேர் அறுக்கவந்த 
3. நீதம் தெரிந்தவராம் அவர்கைக்கு 
நேத்தியா இருவரிவில் 
பாலராம் 
அவர் 
காலராம் 
அமைந்ததாம் - அதில் 
சமைந்ததாம் 

4 கோ தண்டம் அரக்கர் சீவனைக் 
குடிக்கவேண்டுமென்று 
ராம லட்சுமணர் வடிவெலாம் என்னாலேசொல்லிமுடி 
காமராசன் வடிவும் அவர் காலின் தூளுக்கிணை 
போகுமோ 
அந்த 
ஆகுமோ 
நான் 

5. கிட்டிப் போய் என் சுகக் 
கேளியிலே மையல் 
கொண்டேனே அங்கே 
திருஷ்டிப் பிரியமான பெண்கள் 
சிகா மணி ஒருத்தியைக் கண்டேனே 
6. சுந்தரமும் அவள் சிகப்பும் 
தொட்டுக் கொள்ளலாம் 
அண்ணாவே 
இந்தவயதினிலே என் கண்ணால் 
எங்கும் கண்டதில்லை 
அண்ணாவே 
7 . மன்னா உன்னால் நான் அவளை 
வாய்க்கடங்காப் பிடியாப் 
பிடித்தேனே ஒரு 
சின்னமனிதன் கையால் என்றன் 
செவியும் மூக்கும் போக் 
கடித்தேனே 
8. அந்தோ என்னாலே பதினால் 
ஆயிரம் தேர்க்காரரும் 
மூண்டாரே 
எதிர் 
வந்தார் கரன் முதலானோர் அந்த 
மனிதனால் கால் 
மாண்டாரே 
9. செப்புச் சிலையுமல்ல அந்தப் பெண் 
செம்பொற்சிலை வார்த்தாற் போல் இருக்குதே - நான் 
ஒப்பெங்கும் காணேன் அவளே 
உனக்காம் என்மனம் 
உருக்குதே 
10 தாவிப்பிடித் தேனே எனக்கு மெள்ளத் 
தப்பி விட்டாள் வந் தெடுப்பாயே - அந்த 
தேவி இங்கே வந்தால் உன்னிட 
சீவனை யாகிலும் 
கொடுப்பாயே 

சூர்ப்பணகை ராவணன் முன் சீதையை வர்ணித்தல் 

கன்னம் அறுந்தது னக்கென்றும் கரனும் போனானென்று மிங்கே 
பன்னலாமோ விடுவிடு நீபார்த்தேனென்ற பெண்ணவளைச் 
சொன்ன வுடனே உயிர் கிடந்து துடிக்குதடியே சூர்ப்பநகி 
இன்னம் ஒருகால் சொல் என்றான் எடுத்தாள் சொல்லத் தொடுத்தாளே 

பல்லவி 

காணவேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன் 
காலுக்கு நிகரோ பெண்கள் ( காண ) 
அநுபல்லவி 
சேணுலகெங்கும் வாட்டித்திசை யெங்கும் கீர்த்தியை நாட்டித் 
திரியும் ராவணா உன்றன் இருபது சுண்போதுமோ ( காண ) 

1. குவளை விழி களே பாணம் அவள் தன்வார் தனத 
கொண்டால் அதுவே கல்யாணம் 
நவரத்தினத் தங்கத்தோடு நடையிலே அன்னப்பேடு 
அவனிமேல் இல்லை ஈடு அவளுக்கு அவளே சோடு ( காண ) 


2. தங்கக் கொடிபோல் இடையும் சீவிவகிர்ந்த 
சாய்ந்த பின்னலின் சடையும் 
இங்கிது மிருது வாக்கியம் இவளே தேவதா யோக்கியம் 
மங்கையர்க்குள்ளே சிலாக்கியம் வாய்சால் உன்னதே பாக்கியம் ( காண ) 


3. தவமுனி ஒருத்தன் பெண்டு அவனுக்கேற்ற 
தம்பி ஒருத்தன் அங்குண்டு 
அவளே நல்ல ஐஸ்வரியம் அவளே நல்ல காம்பீரியம் 
அவள்வந்தால் அல்லோவீரியம் அய்யோ முடியும் உன் காரியம் ( காண ) 

மாரீசன் ராவணனை இடித்தல் 
கடுத்த தங்கை இதுசொல்லச் சீதைமேலே 
கருத்தாடக் காமப்பேய் தலைசுற்றாட 
உடுப்பதுவும் உண்பதுவும் மறந்தான் சிந்தை 
உலைமெழு கானான் அரக்கன் அம்மானே நீ 
அடுத்தெனக்கு ராமன்மனை வியைத்தா என்றான் 
அது கேட்டவுடனே நாராசம் காய்ச்சி 
நடுச்செவியில் வைத்தாற்போ லேமாரீசன் 
நடுக்கின்றான் ராவணனைத் தடுக்கின்றானே 

பல்லவி 
என்ன புத்தி நினைத்தாயடா அடாராவணா 
என்ன புத்தி நினைத்தாயடா ( என் ) 


அநுபல்லவி 

பின்னொருத்தி அல்லராமன் மன்னவன் தேவியைச் சொல்ல 
அன்னவன் அம்பிங்கேசெல்ல உன் இனத்தையெல்லாம் கொல்ல ( 61 ) 


சரணங்கள் 
1. கள்ளிப் பொறிவர லாலே - மூங்கில் எரிந்து 
வெள்ளிச் சாம்பலானாற் போலே 
சொள்ளியாய் வந்தாள்உன் தங்கை அள்ளிராமனை இங்கே 
தள்ளிவிடும் முன்னே தலை துள்ளிவிடுமே நமக்கு ( என் ) 
2. இந்தமதி பண்ணல் ஆமோ - பரதாரத்தை 
சிந்தையிலும் எண்ணல் ஆமோ 
முந்தொருத்தி ஆசையிட்டான் சந்திரனும்பழிபட்டான் 
வந்தகலிகையைத் தொட்டான் இந்திரனும் மகிமை கெட்டான் ( என் ) 
3. உத்தம சீதையை உன்னாதே உன்னினால் அவன் 
சற்றிலே விடுவான் 
என்னாதே 
புத்திரர் தலையும் சேர்ந்த மித்திரர் தலையும் ராம 
பத்திரர் அம்பு கொய்யும் கொய்யும் சித்திரவதை செய்யும் செ யும் ( என் ) 
4. துப்புள்ள விராதன் இறந்தான் - ராமன் அம்பாலே 
அப்படிகரனும் பறந்தான் 
இப்படி வாராதே நாடித் தப்புவதல்லவோ மோடி 

செப்பினேன் உன்னது தேடிக் கைப்பொருட்கும் ஏன் கண்ணாடி ( என் ) 
5. வேலையில்லா வேலை எண்ணினாய் - சின்னஞ்சிறிய 
பாலகர் யோசனை பண்ணினாய் 
கோலமான சீதையென்று காலமாய் அடங்கி நின்று 
காலன் வந்ததைத் தேராமல் மூலகாரணம் பாராமல் 
6. வேதனையும் சூதும்வாதும் சொன்னாய் - இந்தப் 
பேதைமதி போதும் 
சீதைஎண்ணம் எண்ணத்தானே வாதையுண்டாம் சீமானே 
மாதுலன் உனக்கு நானே ஏது அறிந்து சொன்னேனே ( என் ) 
7. பைந்தொடி சீதைபேர் சொல்லாதே - சொல்லாதே அது 
எந்தவிதத்திலும் 
பொல்லாதே 
வந்திரு மேராம பாணம் என் தன் உரையே பிரமாணம் 
என் தலைக்கும் பாயும் பொய்யோ உன் தலைக்கும் பாயும் ஐயோ ( என் ) 
 

8. முன்னம் விஸ்வாமித்திர னாலே 
யாகசாலை 
தன்னுள் வந்து நமன் போலே 
அன்னையும் கொன்றான் சுவாகு தன்னையும் கொன்றான் அவனை 
உன்ன அதிர் எடுக்குதே ன்னம் நடுக்குதே ( என் ) 

லட்சுமணர் பொன்மானைப் பொய்மான் என்றல் 

சையமா ரீசன்இந்த வார்த்தை சொன்னான் 
ராவணனும் சீறினான் பொன்மா னாய்ப் போய் 
அசையாமல் சீதைவிழிக் கெதிரே நின்றான் 
அவளும் ராமனைப் பிடித்துத் தருவாய் என்றாள் 
பசையினால் லட்சுமணன் பொய்மான் என்றான் 
பாராமல் நான் இதனைப் பிடிப்பேன் என்று 
விசையரா கவன் நடந்தான் வாயை வாயை 
மெல்லுவான் தம்பிபின்னும் சொல்லு வானே 

கண்ணிகள் 

1-வர்ணமானுமல்ல சொர்ணமானும் அல்ல 
மர்மமான் என் 
பின்னைத் தெரியும் இது நம்மை மருட்டவந்த 
பெரிய கால 
தேமி 

2. பார்த்தமான் ஈதல்ல இந்தமான் மடிப்பு 
பண்ணவந்த 
மானே 
கூத்துப் பார்க்கப் போனஇடத்தில் பேய் பிடித்தாற்போல் 
குலையுதென்மனம் 
தானே 

3. ஊழியம் செய்கிறான் இந்தமான் சந்தேகமான் என் 
றுள்ளது சொன்னேன் 
அய்யனே 
ஏழைசொல் அம்பலம் ஏறுமோ கட்டளை 
இட்டபடியே 
செய்வனே 

4. மானோ மாயமிது தானோ அம்மைகைக்கு 
வந்தால் சொர்ண 
ஏனோ பிடித்துத்தா என்று சொல்லுகிறாளே 
என்ன காலப் 
மழையோ 
பிழையோ 

5. அந்த அன்னை சொல்லால் ஐயன் தசரதனும் 
அலங்கோலம் 
ந்த அன்னை சொல்லால் என்னமோ அண்ணனுக்கு 
ஈதென்று 
தெரியனே 
ஆனானே 

6. அப்போது வேள்வியில் வந்த மாரீசன் என்றே 
அயிர்க்கிறேன் 
தப்பிதம் சொல்லறியேன் அப்புறம் சித்தத்துக்கு 
சரிப் போனபடி 
நீ ஆராய் 
பாராய் 

லட்சுமணர் சீதாதேவியை தேற்றல் 
உறும் தரும தம்பியிந்த வண்ணம் சொன்னான் 
உத்தமராமனும் அந்த மான் பின் ஏகிக் 
குறுங்கணையால் எய்தான் மாரிசன் 
வீழ் போதில் 
கூக்குரலிட்டான் அதனைச் சீதை கேட்டாள் 
இறுங்கணவன் குரல் இதைப்போய் அறிநீ என்றாள் 
என்ன அன்னே அண்ணனை யென் சொன்னீர் இந்த 
வறுங்கவலை ஏன் என லட்சுமணன் துன்பம் 
விடச் சொல்வான் சீதையைத் தேறிடச் சொல்வானே 

பல்லவி 
ஆர் என்று ராகவனை எண்ணிநீ ரம்மா இத்னத 
அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா 
அநு பல்லவி 
ஏராவார்த்னதயிது வசையோ டொக்குமே போரில் 
எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் 
மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ ( ஆர் ) 

1. விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே 
மிஞ்சி ராட்தர் அண்ணன் தன்னன வளைத்தால் 
வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே 
மந்திரம் என்ன ஒரு 
தந்திரம் என்ன வானில் 
இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ ( ஆர் ) 
2. ஆதிருத்திரன் வில் ஒருவர் ஓடிக்கப்போமோ - அத்தை 
அறிந்தும் பெண்புத்தியால் என்சித்தம் நோமோ 
வேதையர் என்னனயும் சோதிக்கல் மோ 
நல்ல 
வேதண்டம் என்னப் பெறும் கோதண்டம் தன்னை 
அண்ணன் 
கரிதண்ட வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே ( ஆர் ) 

3 -பண்ணின . மாயையாலே அந்தமாரீசன் மாளும் 
பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன் 
எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் தாசன் 
அவனை 
எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக் 
கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல் - ( ஆர் ) 


சீதைக்கும் ராவண சந்நியாசிக்கும் சம்வாதம் 

மெள்ளவே இளையோன் இந்த 
இந்த விதம் சொல்லி நடந்தான் பின்னே 
கள்ளமாம் தவசியாகிக் கடுகிரா வணன் தான் வந்தான் 
வள்ளலே வாரும் என்றாள் வஞ்சனை அறியாள் சீதை 
உள்ளமா முனிவர் என்றே உரைக்குரை சொல்லு வாளே 

கண்ணிகள் 


1. வாரும் என்றவுடனே ராவண சந்நியாசி 
வந்து கண்டானே அந்த 
ஆரோநீர் என்று வஞ்சகன் கேட்கவே 
அன்னை எதிரே சொல்லு வாளே 

2. தசரதன் பாலன் தம்பியுடனே பெற்ற 
தாய் சொல்ல வந்தான் இந்த 
இசையும் சானகி என்பேர் காகுத்தன் மனைவி நான் 
இங்கே இருக்கிறான் என் 
பூமி 
சாமி 
ராயே 
நீயே 

3. இந்த வனத்தில் மெத்த பழுத்த பழம் போலவே 
எங்கே வந்தீர் தேவ 
வந்தது சொல்லுகிறேன் சந்தோஷம் ஆசுச்சற்றே 
மனது வைத்துக் கேளாய் 
4 . போரில் பெரியவன் ஆயிரம்வேதம் வந்தோன் 
பிரம தேவனுக்குக்கொட் 
ஆராலும் அசையாதகைலாசமலை தன்னை 
அசைத்துப் பிடுங்கின கெம் 
பேரன் 
பீரன் 

5. அமைந்த தேவரையும் அஷ்டதிக்குப் பாலனரயும் 
ஆக்கினையால் அந்தமகா 
சுமந்தகலையும் சும்மாடு மாத்திரிய 
துரைத்தனம் செய்யும் இலங் 
கேசன் 
மாதே 
6. நலங்களினாலே அந்த இலங்கைக்குச் சொர்க்கம் ஒரு 
நரகம் போலக் காணும் 
லங்கையை விடலாமோ என்ன காலமோ நான் 
இங்கே வந்தேனே இப் 
7. சினமித்த முனைவாளும் மிகுந்த நாளும் அந்தச் 
சிவன்கையில் வாங்கினவன் 
மனதுக்கினிய பெண்கள் மாணிக்கம் ஒன்று தேடி 
வருந்து கிறேன் திவ்ய 
தானே 
மானே 
ஆகன் 
8. வீராதி வீரன் அஷ்ட திக்கெச தந்தங்களை 
வெடுக் கென்று ஒடித்த வச்சிர 
ஓரான் காணியா மூன்றுலோக முங்காக்கும் 
ஒருத்தன் அரக்கன் கன 
யோகன் 
நாளை 

9. மூன்று லோகமும் காக்கும் அரக்கன் என்றீர் அவன் 
மூவேழுலகங்களும் 
கீண்டெறிய வந்தானே ரகுவீரன் என்று சொல்லக் 
சேளீரோ எங்கள் பெரு 
10. பெருமாள் பெருமாள் என்ற மனிதன்வந் தர்க்கரைப் 
பிடுங்கி எறிவான் என்றாய் 
பெண்ணே 
ஒருமுசல் குட்டிவந்து சிங்கந்தன்னை அடித்த 
உவமை போல் ஆச்சுது காணும் 
கண்ணே 
11 .. உவமை என்றீர் காணும் பதினாலாயிரவ்ரும் 
உருண்டாரே மனிதனால் 
அய்ய 
இவர் இராவணன் போல் இருபது தோளர் அல்லாமையால் 
இறந்தார் மனிதன் கொலை 

12. ஆயிரந்தோள் இருந்தும் கார்த்த வீரியன் தன்னை 
அடித்தான் மனிதன் அல்லோ 
தாயிது சொன்னவுடன் சந்யாசி வேஷம்விட்டுச் 
சண்டாளன் எழுந்தானே 
பின்னே 

13. தீமுகனாய் அரக்கன் ஆகாத வார்த்தைசொல்லி 
செவியில் கை வைத்தே அந்த 
ஓம்பிண்டத்தமுதை நாய் இச்சைப்பட்டது போல் 
உரைத்தாய் என்னடா அடா 
தேவி 
போல் 
பாவி 

14. நின்ற நிலைக்கே தப்பி ஓடி அப்புறம் போடா 
ரெகுவீரன் பிழைக்க வொட்டானே 
என்றவுடன் சீதையை நிலத்தோடே தூக்கி வஞ்சன் 
எடுத்துத் தேரினில் இட்டானே 

சடாயு ராவணனுக்கு புத்தி சொல்லுதல் 

தேரினில்இப் படிசீதை தனைக்கொண்டு போம் அளவில் சீறி வந்து 
போரினில் ராவணா பத்துமுடி யும்தெறிக்கப் புடைப்பேன்கண்டாய் 
பேரியல்சீ தையைவிட்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால் பிழையாய் என் 
வீரியமாய்ச் சடாயுவந்து கிளம்பினான் புத்திசில விளம்பி னானே  

பல்லவி 
விடுவிட்டா சீதையை விடுவிடடா 
விடுவிடடா சும்மா விடுவிட்டா 
ராவணா ( விடு ) 

அநு பல்லவி 
சுடுநெருப்பிவளாலே அடியோடே வேகாதே 
சுருபத்தைத் தெரியாமல் நகரத்தில் மூழ்காதே 
அடடாசொன்னேன் சொன்னேன் நடுவிலே சாகாதே 
ஆசையினாலே குல நாசமாய்ப் போகாதே ( விடு ) 

சரணங்கள் 
1. என் செய்தாய் இவள் நஞ்சம் என்றெண்ணாமல் 
ஏழை எளி மையாய்க் 
என் தாய் இவள் மனம் நொந்தாள் இருப்பாயோ 
என் தன் வார்த்தை கேள் 
குறியாதே 
முறியாதே 
கொஞ்ச அரக்கர் மான் குட்டி என்றும் ராமன் 
குட்டிச் சிங்கம் என்றும் 
அறியாதே 
குதிக்கிறாய் உங்களை வதைக்க வந்தானே அவன் 
கொல்லவரும் யானை முன்னே கல்லுகள்விட் டெறியாதே ( விடு ) 
2. கர்த்தர் மூவருக்கும் கர்த்தன் ஆகுமிந்தக் 
காகுத்தன் என்று கொண் டாடுவேன் 
கையாலே நீ எய்வதெல்லாம் சிறைக் 
காற்றிற் பஞ்சு பஞ்சாய்ச் சாடுவேன் 
பத்தினி தனையிங்கே வைத்துப் போடா அவன் 
பக்கத்தில் தானே கொண் டோடுவேன் 
பாரடா இல்லா விட்டால் கூரான நகத்தால் உன் 
பத்துத்தலைகளும் கிள்ளிப் பத்துத்திக்கிலும் போடுவேன் ( விடு ) 
3. கைக்குள்ளே அடக்கி இக்கணமே நான் ஒரு 
மிக்க உறிஞ்சு வேன் உன் 
தலைமூளை 
கருங்காக்கை களுக்கும் நமனுக்கும் உன்னை நல்ல 
விருந்தாக் குவேன் பாரடா 
இவ்வேளை 
முக்கணன் வரம்பெற்றும் அக்ரமம் செய்தாவது 
தக்குமோ கேடல்ல 
முனைகெட்டுப் போவாய்சீதை தனைவிட்டுப் போடாதேவர் 
முன் கொடுத்த வரமெல்லாம் ஏன் கெடுக்கின்றாய் முட்டாளே ( விடு ) 

சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம் 

பொறுத்தான் இந்தப் புத்தி சொல்ல பொல்லா அரக்கன் கொள்ளாமல் 
வெறுத்தான் அதற்கப் புறந்தேரை விடும் போதினிலே நெடுந்தூரம் 
குறித்தே போனகுமாரர் வந்து கூடுமளவும் இவனை இங்கே 
மறிப்பேன் என்று சடாயுவும் வாய்மடித்தான் சண்டைபிடித்தானே 

பல்லவி 

சடாயுராசன் 
கொத்திக் கொத்தி அடித்தானே இடித்தானே 
கொத்திக் கொத்தி அடித்தானே 

அநு பல்லவி 
 
பத்துச் சிரத்திலும் தாளிலும் தோளிலும் 
பற்றிக் கரத்திலும் மாரிலும் தேரிலும் 
தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால் 
குத்திக் குத்தி எங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால் ( கொத் ) 


சரணங்கள் 

1 . ஆலகாலம் போலே சீறி எதிர்த்தேறி உடம்பெங்கும் கீறிப்பறித்து 
கோலாகலத்தேரை மறித்து அச்சைமுறித்துப் பத்து முடியும் 
காலாலும் கையாலும் மேலே கிள்ளிக்கிள்ளி 
கண்டகண் நாலைந்து குண்டலமும் தள்ளி 
மேல்வரும் அம்பெல்லாம் வாலால் விழத்தட்டி 
வீணைக் கொடியையும் தூணியையும் வெட்டி ( கொத் ) 
2. ஈரேழுகணையவன் தொடுத்துவிடத் தடுத்துக் கவசத்தையும் கெடுத்து 
நேராக நூறம்பைப் பூட்டிவிட மாட்டிச்சிறகால் விழக்காட்டி 
போராடக் கொண்டொரு சூலம் அவன் போட 
புதையாமலே அது சிதறி அப்பால்ஓட 
கூரான மூக்காலே பாகனை மடித்து 
கொல்லுவேன் என்றவன் வில்லையும் ஒடித்து ( கொத் ) 

3. மோதும் அவன் தெண்டால் சாய்ந்து களைதீர்ந்து குதிரைகளைப் பாய்ந்து 
பாதகனை வீழத்தாக்கி களையாக்கி மணிரதத்தைப் போக்கி 
சூதிவன் செய்கிறான் என்றறியப்பட்டு 
தோழன் மருமகள் என்கிறதைத் தொட்டு 
காதகராவணன் மோதி அறவெட்டும் 
கத்தியினால் சிறகு அற்றுவிழும் மட்டும் ( கொத் ) 

சடாயு விழவே சீதை புலம்பல் 

அடித்தநம் சடாயு ராசன் அவனிமேல் வீழ்ந்தான் சீதை 
கொடிக்கொரு கொழுகொம் பில்லாக் கொள்கைபோல் ஆனாள் இந்த 
முடித்தலை பத்துள்ளானை முடிப்பதார் எனவே அச்சம் 
பிடித்தனள் வடித்த கண்ணீர் பெருகினாள் உருகினாளே 
பல்லவி 
என்ன செய்வேன் சீதை நானிமேல் 
என்ன செய்வேன் தெய்வமே ( என் ) 

அநுபல்லவி 
என்செய்வேன் மான்பின் போன 
வஞ்சக ராவணன் செய் 
இருவீரரும் வாரீரோ 
வகைமோசம் பாரீரோ ( என ) 

1. எய்தும் வீட்டினில் இருவென்று சாமிசொல்ல 
இருந்தேன் 
இல்லைநானே 
மைய லாஎன்னைப் பிரித்திடச் சனிபோல 
வந்ததே 
பாழ்மானே 
கையினால் பிடியும் என்றதல்லாமல் நான் 
கண்டேனோ 
பலன் தானே 
அய்யய்யோ உண்ணாமல் திண்ணாமல் ஊர் 
அம்பலம் 
ஆனேனே 
2 . ஈன ராவணன் கெலிக்கச் சடாயு மன்னன் 
இறந்தது என்ன 
தொல்லையே 
ஆனபோதிவன் குடிக்கென்ன காலமோ 
அறிவேனோ சாமி 
இல்லையே ( என் ) 

வானமே வனமே அவருக்குச் சொல்ல . 
மாட்டீரோ என் 
சொல்லையே 
ஏனென்று கேட்பார் இல்லையே என்னை 
எடுத்து விழிப்பார் இல்லையே ( என் ) 

3. பூட்டும் வில் இளை யோலன இடும்பு சொல்லிப் 
போப் போ 
என்றேனே 
தாட்டிக ராவண சந்நியாசிசெய்த 
சதிக் குள்ளாய் 
நின்றேனே 
வீட்டிலே புகுந் தேன் அந்தமாமனை 
விதிபோலே 
தின்றேனே 
காட்டிலே புகுந்தேன் இந்த மாமனைக் 
கண்முன்னே 
கொன்றேனே ( என் ) 

ஸ்ரீராமர் சீதைக்காகத் தம்பியோடிரங்கல் 

இஷ்டமுள்ள சடாயு வுக்கிவ் வாறு சொல்லி 
இரங்கஅவ ளுடன் அரக்கன் இலங்கை சேர்ந்தான் 
மொட்ட விழும் அசோகவனச் சிறையில் வைத்தான் 
முன்போன தம்பிதனை அண்ணன் கண்டான் 
பட்டபருவங் களெல்லாம் அறிந்தான் வத்து 
பன்னகசா லையையும் சீதையையுங் காணான் 
வட்டமலர் முகம் வாடித் தேடித் தேடி 
மயங்கினான் ஸ்ரீராமன் கலங்கினானே 

கண்ணிகள் 
1. உற்றசீதையைப் பிரிந்தேன் உனதுபுத்தியை எறிந்தேன் 
தத்துக்கள் எல்லாம் அறிந்தேன் தம்பீ லக்ஷ்மணா 
2. கட்டிவைத்த புதையலைக் கல்லி எதித்தவன் போலத் 
தட்டிக் கொண்டு போனான் ஐயோ தம்பீ லக்ஷ்மணா 
3. நன்மை செய்ய வந்தோமிது கன்மமாய் விளைந்தபோது 
தர்மம் என்ன தானம் என்ன 
தம்பீ லக்ஷ்மணா 

4. தேரோடே பாரோடே தூக்கி தீண்டாமல் தெற்குவழியே 
ஆரோ கொண்டு போறானித்தை அறிவாய் லக்ஷ்மணா 

5. நலம் உள்ளோர் கவலை தீர்க்க நாம் இந்தக் கவலை ஏற்கத் 
தலை எழுத்து வந்ததல்லோ 
தம்பீ லக்ஷ்மணா 
6. உண்டானால் இப்போதேநேரே ஒட்டமா ஓடினால் தேரை 
கண்ாடலும் காணலாம் வாஎன் கண்ணே லக்ஷ்மணா 

ஸ்ரீராமர் சடாயுவின் மேல் விழுந்து இரங்கல் 

இவர் இப்படியோ சனைபண்ணி இருயோசனை தூரம் போனார் 
எதிரேவில் ஒன்றது கண்டார் அற்றுக்கிடந்த தூணிகண்டார் 
கவசம்கிடந்த தொன்றுகண்டார் கண்டார்சூலம் கொடிகண்டார் 
கடுந்தேரோடு சாரதிமுடியை கண்டார் இந்தப்படிதோற்ற 
அவசம் பிறக்கராவணனை அடித்துத்துறத்தும் இடங்கண்டார் 
அவனாயுதங்கள் ஒடிந்ததெல்லாம் அங்கேகண்டார் பிறவற்றின் 
விவரங்கண்டார் ராமன்வந்து வீழ்ந்த சடாயுகிடைகண்டான் 
வெள்ளிமலைமேல் கருமலைபோல் விரைந்தான் விழுந்து கரைந்தானே 

பல்லவி 
இந்தவிதி காணவோ வந்தேன் - சடாயு அய்யா 
இதுக்கோ நான் பிள்ளை பிறந்தேன் 
( இந்த ) 

அநுபல்லவி 
தந்தை தகப்பனைக் கொல்லச் சமைந்தேன் அதென்ன சொல்ல 
இந்தநாள் உனையும் நல்ல எமன் போலே கொன்றேன் அல்லோ ( இந்த ) 

1. வண்ணமான் சீதையை நீக்கினேன் - நானும் ஒருசே 
வகன் போல வில்லும் தூக்கினேன் ஐயோ இப்போதென் 
கண்முன்னே உன் னையும் போக்கினேன் - மரமீதேறி 
கைவிட்டோன் போல் என்னை ஆக்கினேன் - நான் செய்வேன் 
எண்ணின எண்ணமெல்லாம் போய் இளக்காரமாய்த் தளர்ந்தேன் 
பெண்ணுமல்ல ஆணுமல்ல பெருமரம்போல் வளர்ந்தேன் 
( இந்த ) 
2. வையகம் தன்னையும் விடுத்தேன் வனத்தில் வந்து 
மலைபோலே உன்னை அடுத்தேன் - தம்பி சொன்னதை 
ஐயையோ கேளாமல் 
தடுத்தேன் 
என்புத்திதன்னை 
அநியாயத்திலே 
மடுத்தேன் - கபடஞ்செய்த 
பொய்யரக்கனைக் கொல்லாமல் புறம்போய் அல்லோ கெடுத்தேன் 
கையில் ஆகாதவன் போல் கண்டோர் பழிக்க உடம்பெடுத்தேன் ( இந்த ) 

கடிப்பேன் 
முடிப்பேன் 
இடிப்பேன் 
குடிப்பேன் 
என்னுயிரைப்போக் 
முனிவர்க்குநான் 
இசைந்ததெப்படி 
அண்டங்களெல்லாம் 
சின்ன பின்னமாக 
இது பார்த்திருந்த 
தேவரையும் ஆவி 
என்தனுடனே 
முன்நாள் நீ சொன்ன வீரம் முடித்தாய் அல்லோ இந்நேரம் 
என்னால் உண்டோ உபகாரம் ஏதுக்கெடுத்தேன்சரீரம் 
( இந்த ) 

ஸ்ரீராமர் கோபத்தைச் சடாயு ஆற்றுதல் 

மதிமுக ராகவன் இரங்கத் தம்பி வந்த 
வரலாறெல்லாம் சொல்ல மண்ணும் விண்ணும் 
கொதி எடுக்கச் சீதை தன்னை எடுத்தான் உன்னைக் 
கொலை செய்தான் அரக்கனவன் குலத்துவாசி 
அதுகிடக்க உன்கொலை பார்த்திருந்த தேவர் 
அனைவரையும் மடிப்பேன் என்று ராமன் சீ 
து உனக்கு முறைமையல்ல மகனே என்ன 
ஏற்றுவான் சடாயுமன்னன் ஆற்றுவானே . 

பல்லவி 
ராமா நீ இந்தக் கோபம் செய்யல் ஆமா 
இருந்தல்லோ படுக்கவேணும் ராமா 
( ராமா ) 
அநுபல்லவி 
பூமியுடன் சீதையை ராவணன் கொண்டு மிண்டாய் 
போகையில் சண்டைபோடப் போச்சுதென் சிறைரண்டாய் 
அவனைக் கொல்லாமல் நாம்விடு வோமோ கண்டாய் 
அதுக்கு முன் கிலேசத்தாலே பதட்டமாக ஒருக்காலே ( ராமா ) 

சரணங்கள் 
1. இன்பம் வருவதும் துன்பம் வருவதும் 
எடுத்த உடற்கு நில 
வரந்தானே 
சம்புவான சிவன் தானும் தலை ஓட்டைத் 
தன்கையில் ஏந்திக்கொண் டிரந்தானே 
அம்புவி படைத்த பிரம்ம தேவனும் 
அறுப்புண்டானே ஒரு சிரந்தானே 

2 -நம்பும் சந்திரனும் சூரியனும் பாம்பாலே 
நடுங்கிறார் இன்னம் நிரந் தரந்தானே 
உன்பிழையும் இந்தவகை ஒத்ததல்லோ ஆகையாலே 
அம்பினால் ராவணன் தலை அறுப்பாய் பனங்குலை போல 
தம்பிள்ளை பெண்டுகளோடே தாழ்ந்து நின்றொருகாலே 
வெம்பதராம் அரக்கர்க்கு வேலைசெய்யும் தேவர்மேலே ( ராமா ) 
சேனைஇந்திரனுக்கும் தேவர்க்கும் உயிர் நிலை 
செய்தது உனது தந்தை உபகாரம் 
ஆனை கெட்டவன் குடத்தில் தேடினாற் போல் 
அவரை வெறுத்தால் உண் டோசாரம் 
ஈனராவணன் சீதையைக் கொண்டுபோய் 
எவ்விடத் தில்வைத்தானோ இந்நேரம் 
போனதிசை தேடி அவனை வேர் அறுத்து 
புண்ணியத்தை நாட்டுவ துன்பாரம் 
மானினைத் தொடர்ந்து பின்னே ஃபானதென்ன அலங்கோலம் 
போனதனால் வந்ததிந்த சானகி பிரிந்த சிலம் 
சானகி பிரிவரக்கர் ஆனவர்க்கு நாச காலம் 
ஆனதனால் தேவருக்கு நீநினைப்பாய் அனு கூலம் 
( ராமா ) 

3. வெள்ளிவெண்பதி வளர்வதும் தேய்வதும் 
விதியின் பயன் அல்லவோ ஆமோ 
உள்ளதொரு வர்க்கு நிறைவதும் குறைவதும் 
ஊழின்படி என்பதறியோமோ 
தெள்ளித் தெளிந்த என் கண்ணே உனக்கினி 
தெரியச் சொல்லுவார் எவர் 
கிள்ளி எறிகுவாய் ராட்சதச் செடிகளை 
கேதங்கொண் டிப்படியுன்மனம் நோமோ 
துள்ளிசமுத்திரம் பொங்கினால் கொள்ளுமோகிணற நேகம் 
வள்ளலே உன் முன்னே லங்கை கள்ளர்கட் கெங்கே நிர்வாகம் 
எள்ளளவு நீமுனிந்தால் அள்ளுப் பொடியாமே லோகம் 
மெள்ள இருந்து பகையைத் தள்ளுவதால்லோ விவேகம் (ராமா ) 

சீதையின் பிரிவாற்றாமல் ஸ்ரீராமர் இரங்கல் 

பொறையடையத் தந்தையிந்தப் புத்தி சொல்லிப் பரமபதம் போகக்கண்டான் 
விறகுதம்பி இடக்கண்டான் சாமிசடாயுவுக்குள்ள விதியும் கண்டான் 
கறையிருளும் வரக்கண்டான் சீதைமுகக் கமலமொன்றும் காணானாகி 
மறைவு செய்தார் ஆர் என வேதியங்கினான் ஸ்ரீராமன் மயங்கினானே  சீதை 

1. நல்லோர் பெரியோர் என்னை வசையும் சொல்லல் ஆச்சே 
நடுக்காட்டில் என்னைத் தெய்வம் அகலக் கொண்டுபோச்சே 
பொல்லா ராவணனைக்கண்டு கலங்கினாளோ 
பேதை 
பூனைகண்ட கிளிபோலே புலம்பினாளோ 
2 ஆரும் இல்லாத காட்டில் அதட்டினானோ 
பாவி 
ஐயோ நினைக்க நினைக்கப் பதைக்குதே என் ஆவி 
வாரும் வாரும் என்றென்னைக் கூவி இரைந் 
தாளோ 
வழிமேலே கண்ணை வைத்துப் பார்த்துக்கரைத் தாளோ 
3. வீடே பர்ணசாலை என் றெண்ணி இருந் 
தேனே 
விதிமோசத்தாலேதம்பி விட்டுப்பிரிந் 
தானே 
காடே மலையே என் தன் கவலை தடுக் 
கீரோ 
கண்ணாட்டி போனவழி காட்டிக் கொடுக் 
கீரோ 
4. துளித்த மான்குட்டி வந்தென் முன்னே நின்ற போதே 
சொன்னானே தம்பியதை உண்மையென்றெண்ணாதே 
வெளுத்த தெல்லாம் பாலென்று எண்ணியடுத் தேனே 
வீட்டுவிளக்கை வெட்ட வெளியில்விடுத் தேனே 
5. அங்கலாய்ப் பாளேசிதை கண்ணை நனைப் 
பாளே 
அரக்கர்க்குப் பயந்தான் என்றென்னைநினைப் பாளே 
சிங்கார வேட்டையாட வீணேபோகி 
னேனே 
சிறகுபறிகொடுத்த பறவை ஆகி 
னேனே 
6. தணிக்கா நெருப்பைப் போலே மூளுதேவி 
சாரம் 
தாரத்தை ரட்சியாதான் வீரம் என்ன 
வீரம் 
அணைப்பானே சிறகால் என் றெண்ணம் எண்ணி னேனே 
அய்யோ சடாயுவுக்கும் பாவம்பண்ணி 
னேனே . 

கவந்தன் வதையும் துதியும் 

சானகியை இவ்வண்ணம் நினைந்து ராமன் 
ததும்பையிலே தம்பியுந் தண்ணீர்க்குப் போனான் 
போனவிடத் தசோமுகிமூக் கரிந்து மீண்டான் 
புனிதர் இருவரும் கவந்தன் கைக்குள் ஆனார் 
ஆனபிற கவன் உயிரை முடித்தார் அந்த 
அரக்கனும் அந்தரத்தினிலே தேவனாகி 
தீனமில்லாப் பரமபதம் தனிலே ஏறச் 
செல்லுவான் சாமிதுதி சொல்லுவானே 

கண்ணிகள் 
1. ஆதியும் ஆகி அநாதியுமாய் இந்த 
அகிலம் எங்கும் நிறைந் 
போதகம் இல்லாமல் ஆலந்தளிர் உள்ளே 
பிள்ளை யாகி உறைந் 
தாயே 

2 -உன்தன் பதத்னதவேண்டித் தவஞ்செய்வார்கள் இந்த 
உலகத்திலே உள்ள 
ஞாயம் 
எந்தப் பதத்னதவேண்டி நீதவம் செய்ய வந்தாய் 
ஈதென்ன கண்கட்கு 
மாயம் 

3. முலையானதும் இல்னல கெர்பக் குறியுமில்லை 
முளைத்தா யே ஒரு 
தூணில் 
மனலவாய் உலகத்தோர் இறந்தான் பிறந்தான் என்பார் 
வாய்க்குண்டோ என்வார்த்தை 
வீணில் 
வேனோ 

4. என்னை அறியாத அரக்கன் என்றாயேநீ 
இரண்டு செய்த பிறி 
உன்னை நீதானும் அறியாயே சாமிநான் 
உன்னை எப்படி அறி 
5. காட்டுவானும் நீயே காணுவானும் நீயே 
கற்றாயே இந்திர 
வேனேரி 
சாலம் 
போட்டுவிட்டுத் தேடித்தவிப்பார் போல் தவிக்கிறாய் 
போதும் போதும் இந்தக் 
கோலம் 

6-சூரிய காந்தத்தரும் தீபத்தைக் கொண்டந்த 
ரியனைப் பணிவது 
போலே 
ரியனே உன்தன் அனுக்கிரகம் கொண்டுநான் 
அறிந்ததைச் சொல்வேன் என் னாலே 

7. எனது சாபந்தீர்த்தாய் அதுபோலச் சவரிஇங் 
கிருக்கிற வளைக்காண 
வேணும் 
தனதவள் சொல்லுவாள் சும்மா இருந்தால் ஒன்றும் 
சாதிக்கல் ஆமோ சொல்லாய் 
காணும் 

8. திடமாய் அவள் சொன்னபடியே சுக்கிரீவனைச் 
சேரும் அவனுடனே 
கடல் போல் வானரங்கள் வருமே சனகியைக் 
கணத்தில் கொண்டுவரச் 
சொல்லு 

9 . தடுக்காமல் கேளாய் ஓர்சிற்றாள் எட்டாளுக்குச் 
சரியல்லோ அறியாயோ 
நீயே 
திடுக்கென்று செய்யல் ஆமோ பதராதே காரியம் 
சிதறாதென் வார்த்தை ஆ 
ராயோ 

ஸ்ரீராமர் சவரிக்கு முத்தியருளி அப்பால் ஏகல் 

பத்தியாய்க் கவந்தன் இந்தப் படிசொல்லிக் கதியிற் போனான் 
சத்திய ராமன் பின்னே சவரிஆசிரமத்தில் போனான் 
அத்திசை அமுது கொண்டான் அவள் உபசாரம் கொண்டான் 
மூத்தியும் கொடுத்தான் சொன்ன மொழிகொண்டான் வழிகொண்டானே 

ஆரணிய காண்டம் முற்றிற்று 

சக்கரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் . 


------------------------ 
மூன்றாவது 
ஆரணிய காண்டம் 
( கம்பராமாயணம் ஒப்புமைப் பகுதி ) 
ஸ்ரீ ராமர் அத்திரியைக் கண்டு தண்டகம் சேர்தல் 

திக்குறு செறிபரம் தணியநின்ற திரள்பொன் 
கைங்குறுங் கண்மலைபோல் குமரர்காமம் முதலாம் 
முக்குறும்பு அறஎறிந்த வினை வான் முனிவன் 
புக்கிறைஞ்சினர் அருந்தவன் உவந்து புகலும் 

குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ 
அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்தது அலவோ 
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் 
தமரெலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் 

அன்னமா முனியொடன்று அவண் உறைந்து அவன் அரும் 
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன் 
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன் 
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் 

[ விராதன் வதைப்படலம் 1 . 
விராதன் வதையும் துதியும் . 
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிதென்று 
ஓத்தாத்த உருவத்தன் உரும்ஒத்த குரலன் 
காதலித்து அயன் அளித்த கடையிட்ட கணிதப் 
பாதலக்கம் மதவெற்பவை படைத்த வலியான் 

சாரவந்துயல் வியங்கினன் மரங்கள் தரையில் 
பேரவன்கிரி பிளந்துக வளர்ந்து இகல்பெறா 
வீரவெஞ் சினலயினோர் எதிர் விராதன் என்னும் அக் 
கோர வெங்கண் உரும்ஏறு அனகொடுந் தொழிலினான் 

நில்லிம் நில்லும் எனவந்து நிணம்உண்ட நெடுவெண் 
பல்லும் வல்எயிறும் மின்னுபகுவாய் முழைதிறந்து 
தல்லிபுல்லு மலரன்ன மனையாளை ஒருகைச் 
சொல்லுமெல்லையின் முகந்துயாவிசும்பு தொடர 

காளை மைந்தரது கண்டு கதம்வந்து கதுவத் 
தோளில் வெஞ்சிலை யிடங்கொடு தொடர்ந்து சுடர்வாய் 
வாளி தங்கிய வலங்கையவர் வஞ்சனை அடா 
மீள்தி எங்கசல்தி என்பது விளம்ப அவனும் 

ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் 
ஏதி யாவதும் இன்றி உலகுயாவும் இகலின் 
சாதி யாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடடா 
போதிர் மாதிவளை உந்தி இனிதென்று புகல 

வீரனும் சிறிது மென்முறுவல் வெண்ணிலவுக 
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் 
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறுசிந்தை தெரிய 
பார வெஞ்சிலை நாண் ஒலி படைத்த பொழுதே 

இலைகொள்வேல் அடல்இராமன் எழுமேக உருவன் 
சிலை கொள் நாண் நெடிய கோெைதாலி ஏறுதிரை நீர் 
மலைகள் நீடுதலம் நகர்பிலம் வானம் முதலாம் 
உலகம் ஏழும் உருமேறு என ஒலித்தது உரறவே 

வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் மறுகும் 
பஞ்சரக் கிளியெனக் கதறு பாவையை விடா 
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா 
அஞ்சனக் கிரியனான் எதிர் அரக்கன் அழலா 

பேய்பூசப் பிணியற பகைஞர் பெட்பின் உதிரம் 
தோய் முகத்தது கனத்தது சுடர்க் குதிரையின் 
வாய் முகத்திடை நிமிர்ந்து வடவேலை பருகும் 
தீமுகத் திரிசிகைப்படை திரித்து எறியவே 

மொய்த்தமுள் தனது உடல் தலை தொளைப்ப முடுகி 
கைத்தவற்றின் நிமிரக் கடிது கன்றி விசிறும் 
மெய்த்தமெய்ப் பெரியகேழல் என எங்கும் விசையின் 
தைத்த அக் கணை தெறிப்ப மெய்சிலிர்த்து உதறவே 

மெய் வரத்தினன் மிடல் படை விடப் படுகிலன் 
செய்யும் மற்றிகல் என்று சினவாள் உருவி வன் 
கைதுணித்தும் என முந்து கடுகிப் படர்புயத்து 
எய்வில்மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் 

தோள் இரண்டும் வடிவாள் கொடு துணித்து விசையால் 
மொய்ம்பினர் குதித்தலும் வெகுண்டு புருவத் 
தேள் இரண்டும் நெளியச் சின செங்கண் அரவக் 
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் 

பட்டதன்னமயும் உணர்ந்து படர்சாபம் இடமுன் 
கட்டவன் பிறவிதந்த கடையான உடல்தான் 
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் எனஓர் 
முட்டைதந் ததனில் வந்த முதல் முன்ன வனினே 

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனநின் 
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ 
ஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ டொன் றொவ்வாப் 
பூதங்கள் தொறும் உனறந்தால் அனவ உன்னைப் பொறுக்குமோ 

பனிநின்ற பெரும்பிறவிக் கடல் கடக்கும் புனணபற்றி 
நனிநின்ற சமயத்தோர் எல்லாரும் நன் றென்ன 
தனி நின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகின் 
னிநின்ற முதல் தேவர் என்கொண்டென் செய்வாரே 

நீஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் 
ஆயாத சமயமும் நின் அடியவே அயல்இல்னல 
தீயாரின் ஒளித்தியால் வெளிநின்றால் தீங்குண்டோ 
வீயாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ 

பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் 
இருவினையும் உடையார் போல் இருந்தவம் நின்றியற்றுவாய் 
திருவுறையும் மணிமார்ப நினக்கு என்னை செயற்பாலா 
ஒருவினையும் இல்லார்போல் உறங்குதியால் உறங்காதாய் 

அரவாகிச் சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் 
ஒருவாயில் விழுங்குதியால் ஓரடியால் ஒளித்தியால் 
திருவான நிலமகளை இஃதறிந்தால் சீறாளோ 
மருவாரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் 

ஒப்பிறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்துறையும் 
அப்புறையுள் துறந்தடியேன் அருந்தவத்தால் அணுகு தலால் 
இப்பிறவிக் கடல் கடந்தேன் இனிப்பிறவேன் இருவினையும் 
துப்புறழும் நீர்த்தசுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ 
( விராதன் வதைப்படலம் 17-25 , 32 , 34 , 42 , 44 , 45 , 47 , 
51 , 53 , 56 , 57 , 60 ] 


தண்டகவன ரிஷிகள் ஸ்ரீ ராமரோடு முறையிடல் 

குரவம் குளிர் கோங்கு அலர் கொம்பினோடும் 
இரவங்கண் உறும் பொழுது எய்தினரால் 
சரவங்கன் இருந்து தவங்கருதும் 
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாசவனம் 

செவ்வேலவர் சென்றனர் சேறல்உறும் 
அவ்வேலையின் எய்தினன் ஆயிரமாம் 
தவ்வாது இரவும் பொலி தாமரையான் 
வேவ்றேலர் கண் ணினன்விண் ணவர்கோமான் 

நின்றான் எதிர்நின்ற நெடுந்தவனும் 
சென்றான் எதிர்கொண்டு சிறப்பமையா 
என் தான் இவண் எய்தியவாறு எனலும் 
பொன்றாத பொலன்கழலோன் புகலும் 

( சரவங்கன் பிறப்பு நீங்குபடலம் 1 , 2 , 14 ) 
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்துவந்து 
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் 
வையகம் கரவலன் மதலை வந்ததோர் 
வெய்ய வெங் கொடுந்தொழில் விளைவுகேள் எனா 

இரக்சம் என்றொரு பொருள் இலாத நெஞ்சினர் 
அரக்கர் என் றுளர் சிலர் அறத்தின் நீங்கினார் 
ரெருக்கவும் யாம்படர் நெறியலா நெறி 
துரக்சவும் அருந்தவத் துறையும் நீங்கினோம் 

வல்லியம் பல திசி - வனத்து மான் என் 
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் 
சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினேம் 
வில்லியல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ 

மாதவத் தொழுகலெம் மறைகள் யாவையும் 
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் 
மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கி னேம் 
ஆதலின் அந்தண ரேயும் ஆகிலேம் 

இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின 
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் 
எந்தை மற் றியாருளர் இடுக்கண் நீக்குவார் 
வந்தனை 4 ம் செய்த தவத்தின் மாட்சியால் 

உருளுனட நேமியான் உலகை ஓம்பிய 
பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா 
இருளுடை . னவசுலெம் இரவி தோன்றினாய் 
அருளுடை வீரநின் அபயம் யாம் என்றார் 

[ அகத்தியப் படலம் 11-161 

ஸ்ரீராமர் தண்டகவன ரிஷிகளுக்கு அட்யாதல் 

புகல்புகுந் திலரேல் புறத்தும் அண்டத்தின் 
அகல்வரேனும் என் அம்பொடு வீழ் வரால் 
தகவில் துன்பம் தவிருதிர் நீர் எனா 
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் 

வேந்தன் வீயவும் யாய்துயர் மேவவும் 
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் 
மாந்தர் வன் துயர் கூரவும் யான்வனம் 
போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்றான் 

திரந்த வேதியர் நீவிரும் தீயவர் 
கவந்த பந்தக் களிநடம் கண்டிட 
அமைந்தவில்லும் அருங்கணைத் தூணியும் 
சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும் 
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் 
ஆர் அறத்தினோ டன்றி நின்றார் அவர் 
வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றா ன் 
[ அகத்தியப் படலம் 17 , 18 , 20 , 22 ) 


--- 

ஸ்ரீராமர் பஞ்சவடி தீரத்தைக் காணுதல் 

கண்டனன் இராமனை வரக் கருணை கூரப் 
புண்டிரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் 
எண்டிசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக் 
குண்டிகை யினிற் பொருவில் காவிரி கொணர்ந்தான் 

தண்டக வனத்து உறைதி என்றுரைதரக் கொண்டு 
உண்டுவரவு இத்திசை எனப் பெரிதுவந்தேன் 
எண்டரு குணத்தினை எனக்கொடுயர் சென்னி 
துண்டமதி வைத்தவனை ஓத்தமுனி சொல்லும் 

விழுமியது சொற்றனை இவ் வில்லிது இவண்மேல்நாள் 
முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும் 
வழிபட இருப்பது இது தன்னைவடி வாளிக் 
குழுவழுவில் புட்டிலொடு கோடி என நல்கி 

இப்புவனம் முற்றுமொரு தட்டினிடையிட்டால் 
ஒப்புவர விற்றென உரைப்பரிய வாளும் 
வெப்புருவு பெற்ற அரன் மேருவரை வில்லாய் 
முப்புரம் எரித்ததனி மொய்க்கணையும் நல்கா 

ஓங்குமரனோங்கி மலை ஓங்கி மணல் ஓங்கிப் 
பூங்குலை குலாவுகுளிர் சோலை புடை விம்மி 
தூங்குதிரை ஆறு தவழ் சூழலதோர் குன்றின் 
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச 

ஏகியினி அவ்வயின் இருந்துறைமின் என்றான் 
மேகநிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் 
பாகனைய சொல்லியொடு தம்பி பிரிவின்பின் 
போகமுனி சிந்தை தொடரக் கடிது போனான் 

[ அகத்தியப் படலம் 46.51 , 55 , 56 , 57,59 ] 


ஸ்ரீராமர் சடாயுவைக் கண்டு பஞ்சவடி தங்கல் 

நடந்தனர் காவதம் பலவும் நல்நதி 
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின் 
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும் 
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே 

உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சிசேர் 
அருக்கன் இவ் அகலிடத்து அலங்கு திக்கெலாம் 
தெரிப்புறு செறிசுடர் சிகையினால் சிறை 
விரித்திருந் தனன் என விளங்குவான் தனை 

வினவிய காலையில் மெய்ம்மை அல்லது 
புனைமலர்த் தாரவர் புகல்கி லாமையால் 
கனைகடல் நெடுநிலம் கரவல் ஆழியான் 
வனைகழல் தயர தன்மைந்தர் யாமென்றான் 

உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை 
தந்த சொல்லைத் தலைக்கொண்டு தாரணி 
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே 
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா 

இறைவ ! எண்ணி அகத்தியன் ஈந்துளது 
அறையும் நன்மணி ஆற்றின் அகன்கரைத் 
துறையுள் உண்டொரு சூழல் அச்சூழல்புக்கு 
உறைதும் என்றனன் உள்ளத்துறை குவான் 

பெரிதும் நன்று அப்பெருந்துறை வைகி நீர் 
புரிதிர் மாதவம் போதுமின்யானது 
தெரிவு றுத்து வென் என்றவர் திண்சிறை 
விரியும் நீழலில் மேவவிண் சென்றனன் 

வார்ப்பொற் கொங்கை மருகியை மக்களை 
ஏற்பச் சிந்தனையிட் டவ்வரக்கர்தம் 
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் சேக்கையில் 
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் 

( சடாயு காண்படலம் 1 , 2 , 18 , 34 , 39 , 41 , 42 ] 

அனையதோர் தன்மையான அருவி நீர் ஆற்றின்பாங்கர் 
பனிதெரு தெய்வப் பஞ்சவடி எனும் பருவச்சோலை 
தனியிடம் அதனை நண்ணித் தம்பியால் சமைக்கப்பட்ட 
இனிய பூஞ்சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் 

(பஞ்சவடிப் படலம் 7 ] 


சூர்ப்பணகை ஸ்ரீ ராமரைக் கண்டு மோகித்தல் 

சிந்தையில் உறைபவற்கு உருவந் தீய்ந்ததால் 
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு 
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று நான்குதோள் 
ந்தியின் உலகளித்தாற்கு என்றுன்னுவாள் 

கற்றையம் சடையவன் கண்ணிற் காய்தலால் 
இற்றவன் அன்று தொட் டின்றுகாறும் , தான் 
நற்றவம் இயற்றி அவ் அனங்கன் நல்லுருப் 
பெற்றன னாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள் 

தரங்களின் அமைந்து தாழ்ந்து உயர்ந்த தாலமா 
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய 
உரங்களின் உயர்திசை ஓம்பும் யானையின் 
கரங்களே இவன்மணிக்கரம் என்றுன்னுவாள் 

வில்மலை வல்லவன் வீரத்தோ ளொடும் 
கல்மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் 
நல்மலை யல்லது நாம் மேருவும் 
பொன்மலை யாதலால் பொருவலா தென்பாள் 

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும் 
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன் 
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் 
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் 

அதிகம் நின் றொளிரும் இவ்வழகன் வாண்முகம் 
பொதியவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ 
கதிர்மதி யாமெனின் கலைகள் தேயும் அம் 
மதியெனின் அதற்குமோர் மறுவுண் டென்னுமால் 

எவன்செய இனிய இவ் அழகைஎய்தினான் 
அவம் செயத் திருவுடம்பு அலச நோற்கின்றான் 
நவம்செயத் தகைய இந் நளின நாட்டத்தான் 
தவம்செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள் 

உடுத்தநீ ராடையள் உருவச் செவ்வியள் 
பிடிதரு நடையினள் பெண்மை நன்று இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர் 
பொடித்தது போலும் இப்புல் என்றுன்னுவாள் 

வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியைக் 
காணலனே கொலாம் கதிரின் நாயகன் 
சேணெலாம் புல்லொளி செலுத்திச் சிந்தையில் 
நாணலன் மீமிசை நடக்கின்றான் என்றாள் 

குப்புறற்கு அரியமாக் குன்றை வென்றுயர் 
இப்பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பதோர் 
ஒப்பென உலகமே உரைக்க நண்ணுமோ 
துப்பினில் துப்புடையாதைச் சொல்லுகேன் 

நற்கலை மதியுற வயங்கும் நம்பிதன் 
எற்கலை திருவறை எய்தி ஏமுற 
வற்கலை நோற்றன மாசிலாமணி 
பொற்கலை நோற்றில போலுமால் என்றாள் 

தொடையமை நெடுமழைத் தொங்க லாமெனக் 
கடைகுழன் றிடைநெறி கரிய குஞ்சியைச் 
சடையெனப் புனைந்திலன் என்னின் தையலார் 
உடையுயிர் யாவையும் உடையுமால் என்றாள் 

நாறிய நகையணி நல்ல புல்லினால் 
ஏறிய செவ்விமேல் இயற்றுமோ எனா 
மாறகல் முழுமணிக்கு அரசின் மாட்சிதான் 
வேறொரு மணி.யினால் விளங்குமோ என்றாள் 

கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய 
பரந்தரு நான்முகன் பழிப்புற் றானரோ 
இரந்திவன் இணையடிப் பொடியும் ஏற்கலாம் 
புரந்தரன் உலகெலாம் புரக்கின்றான் என்றாள் 

[ சூர்ப்பணகைப் படலம் 5-18 ] 


ஸ்ரீராமர் பக்கல் சூர்ப்பணகை வருதல் 

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம் 
ஒன்றுவென் அன்றெனின் அமுதம் உண்ணினும் 
பொன்றுவென் போக்கினி அறிந்து போம் எனா 
சென்றெதிர் நிற்பதோர் செய்கை தேடுவாள் 

பஞ்சி யொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க 
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி 
அஞ்சொலிள மஞ்ஞையென் அன்னமென மின்னும் 
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் 

கானில்உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி 
மேனிநனி பெற்றுவிளை காமம் நிறை வாசத் 
தேனின் மொழியுற்று இனியசெவ்வி நனிபெற்றோர் 
மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள் 

நூபுரமும் மேகலையும் நூலும் அறல்ஓதிப் 
பூமுரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை 
தாமுரைசெய் கின்றதொரு தையல் வருமென்னா 
கோமகனும் அத்திசை குறித் தெதிர் விழித்தான் 

[ சூர்ப்பணகைப் படலம் 21 , 24 , 26 , 27 ] 

ஸ்ரீ ராமருக்கும் சூர்ப்பணகைக்கும் சம்வாதம் 

தீதில் வரவாக திரு நின்வரவு சேயோய் 
போதஉள தெம் முழைஓர் புண்ணியம் அதன்றோ 
ஏதுபதி ஏதுபெயர் யாவர்உற வென்றான் 
வேதமுதல் ; பேதையவள் தன்னிலை விரிப்பாள் 

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற 
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் 
மாவெலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்துலகம் மூன்றும் 
காவலோன் பின்னை காமவல்லியாம் கன்னி என்றாள் 

அவ்வுரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை 
செவ்விதன் றறிதலாகும் சிறிதின் என் றுணராச் செங்கண் 
வெவ்வுரு அமைந்தோன் ங்கை என்றது மெய்ம்மை ஆயின் 
இவ்வுரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் 

தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம் 
மாயவல் லரக்கரோடு வாழ்வினை மதிக்க லாதேன் 
ஆய்வுறு மனத்தேனாகி அறந்தலை நிற்பதானேன் 
தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்ற தென்றாள் 

தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்ப தென்பது 
ஆமெனல் ஆவதென்றால் அருங்குல மகளிர்க்கம்மா 
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய் கேன் யாரும் இல்லேன் 
காமனென் றொருவன் செய்யும் வன்மையைக் காத்தி என்றாள் 

நிந்தனை அரக்கிநீதி நிலையலாள் வினைமற் றெண்ணி 
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துட் கொண்டான் 
சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் துணிவிற் றன்றால் 
அந்தணர் பாவை நீயான் அரசரில் வந்தேன் என்றான் 

அருத்தியள் அனையகூற அகத்துறு நகையின் வெள்ளை 
குருத்தெழு கின்றநீலக் கொண்டல் உண் டாட்டம் கொண்டான் 
வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானிடர் மணத்தல் நங்கை 
பொருத்தம் அன்று என்று சாலப் புலமையோர் புகல்வர் என்றான் 

காந்தர்ப்பம் என்பதுண்டால் காதலின் கலந்த சிந்தை 
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் 
ஏந்தல் பொற் றோளினாய் ஈதியைந்த பின் எனக்கு மூத்த 
வேந்தர்க்கும் விருப்பிற்றாகும் வேறும் ஓர் உரையுண்டென்றாள் 

முனிவரோ டுடையர் முன்னே முதிர்பகை முறைமை நோக்கார் 
தனியை நீ ஆதலால்மற் றவரொடும் தழுவற் கொத்த 
வினையம் ஈதல்லதில்லை விண்ணும் நின் ஆட்சியாக்கி 
இனியராய் அன்னர்வந்துன் ஏவலின் நிற்பர் என்றாள் 

வளை எயிற் றவர்களோடும் வரும் விளையாட்டென்றாலும் 
விளைவின தீமையேயாம் என்பதை உணர்ந்து வீரன் 
உளைவன இயற்றல் ; ஒல்லைஉன் நிலை உணருமாகில் 
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் 

[ சூர்ப்பணகைப் படலம் 31-34 , 38 , 42 , 44 , 46-48 , 60 } 


சூர்ப்பணகை தன் உறவை நினைந்து புலம்பல் 

விடியல் காண்டலின் ஆண்டு தன் உயிர்கண்ட வெய்யாள் 
படியிலாள் மருங்குள்ளளவு எனையவன் பாரான் 
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லைக்கரந்தவள் காதல் 
வடிவினானுடன் வாழ்வதே வாழ்வு எனமதியா 

தனியிருந்தனள் சமைந்ததென் கருத்து எனத் தாழ்வுற்று 
இனியிருந் தெனக்கு எண்ணுவதில் என எண்ணா 
மனியிருந்த வல்மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் 
கனியிரும் பொழில் காத்தயல் இருந்தவன் கண்டான் 

நில் அடீ எனக் கடுகினன் பெண் என நினைந்தான் 
வில்எடாது அவள் வீங்கெரியாம் என விரிந்த 
சில்வல் ஓதியைச் செங்கையின் திருகுறப் பற்றி 
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளிகிளர் சுற்றுவாளு நவி 

ஊக்கித்தாக்கி விண்படர்வென் என்று உருத்தெழுவாளை 
நூக்கி நொய்தினில் வெய்திழையேல் என நுவலா 
மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால் 
போக்கிப் போக்கிய சினத் தொடும் புரிகுழல் விட்டான் 

உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும் 
அயரும் கைகுலைந்தலமரும் ஆருயிர் சோரும் 
பெயரும் பெண்பிறந்தேன் பட்டபிழை எனப்பிதற்றும் 
துயரும் அஞ்சிமுன் தொடர்ந்திலாத் தொல் குடிப்பிறந்தாள் 

ஊற்றும் மிக்கநீர் அருவியின் ஒழுகிய குருதிச் 
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய 
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயரெலாம் கூறி 
ஆற்று கிற்றிலள் பற்பல பன்னிநின் றழைத்தாள் 

நிலை எடுத்து நெடுநிலத்து நீயிருக்கத் தாபதர்கள் 
சிலை எடுத்துத் திரியுமது சிறிதன்றோ தேவர் எதிர் 
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே தழல் எடுத்தான் 
மலையெடுத்த தனிமலையே இவை காண வாராயோ 

புலிதானே புறத்தாகக் குட்டி கோட் படாதென்ன 
ஒலியாழி உலகுரைக்கும் உரைபொய்யோ ஊழியினும் 
சலியாத மூவருக்கும் தானவர்க்கும் வானவர்க்கும் 
வலியானே பான்பட்ட வலிகாண வாராயோ 

ஆர்த்தானைக் கரசுந்தி அமரர்கணத் தொடும் அடர்ந்த 
போர்த்தானை இந்திரனைப் பொருதவனைப் போர் தொலைத்து 
வேர்த்தானை உயிர்கொண்டு மீண்டானை வெரிந் பண்டு 
பார்த்தானே யான்பட்ட பழிவந்து பாராயோ 

மரனேயும் நெடுங்கானில் மறைந்துறையும் தாபதர்கள் 
உரனேயோ அடலரக்கர் ஓப்வேயோ உற்றெதிர்ந்தார் 
அரனே யோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் 
கரனே யோ யான்பட்ட கையறவு காணோயோ 

உரன்நெரிந்து விழஎன்னை உதைத்துருட்டி மூக்கரிந்த 
நரன் இருந்து தோள்பார்க்க நான் கிடந்து புலம்புவதோ 
கரன் இருந்த வனம் அன்றோ இவைப்படவும் கடவேனோ 
அரன் இருந்த மலையெடுத்த அண்ணாவோ அண்ணாவோ 

நசையாலே மூக்கிழந்து நாணமிலா நான்பட்ட 
வசையாலே நினதுபுகழ் மாசுண்ட தாகாதோ 
திசையானை விசைகலங்கச் செருச்செய்து மருப்பொசித்த 
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ 

ஒருசாலத் துலகேழும் உருத்தெதிரத்தனு ஒன்றால் 
திரு சாத சினம் திருகி திசையனைத்தும் செலநூறி 
இருகாலிற் புரந்தரனை இருந்தளையில் இடுவித்த 
மருகாவோ மானிடவர் வலிகாண வாராயோ 

கல்லீரும் படைத்தடக்கை அடல்கர தூடணர் முதலா 
அல்லீரும் சுடர்மணிப்பூண் அரக்கர் குலத்தவதரித்தீர் 
கொல்லீரும் படைக்கும்ப கருணனைப்போல் குவலயத்தில் 
எல்லீரும் உறங்குதிரோ யானழைத்தல் கேளீரே 
( சூர்ப்பணகைப் படலம் 82 , 84 , 85 , 86 , 90 , 92 95 , 99 , 
101 , 102 , 104 , 105 ) 


சூர்ப்பணகை ஸ்ரீ ராமருக்கு மீளவும் இதவுரைத்தல் 

என்றின்ன பலபன்னி இகலாக்கி அழுதிரங்கிப் 
பொன்துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து 
நின்றந்த நதியகத்து நிறைதவத்தின் துறைமுடித்து 
வன் திண்கைச் சிலெைநடுந்தோள் மரகதத்தின் மலை வந்தான் 

செங்கயல்போற் கருநெடுங்கண் தேமருதா மரையுறையும் 
நங்கையிவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன 
கொங்கைகளும் குழைகாதும் கொடிமூக்கும் குறைத்தழித்தால் 
அங்கணரசே ஒருவர்க் கழியரிதோ அழகென்றாள் 

மாப்போரில் புறங்காப்பேன் வான்சுமந்து செலவல்லேன் 
தூப்போலக் கனிபலவும் சுவையுடைய தரவல்லேன் 
காப்போரைக் கைத்தென் நீர் கருதியது தருவேன்இப் 
பூப்போலும் மெல்லியளால் பொருள் என்னோ புகல்வீரோ 

போக்கினீர் என் நாசி போய்த்தென்நீர் பொறுக்குவிரேல் 
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகமைவென் அருள்கூரும் 
பாக்கியம் உண்டெனின் அதனால் பெண்மைக்கோர் பழுதுண்டோ 
மேக்குயரும் நெடுமூக்கும் மடந்தையர்க்கு மிகையன்றோ 

பொன் னுருவப் பொருகழலீர் புழைகாண மூக்கரிவான் பொருள்வே ருண்டா 
இன்னுருவம் இதுகொண்டு இங் கிருந்தொழியும் தம்மருங்கே ஏகாள் அப்பால் 
பின்னிவளை அயலொருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ 
அன்னதனை அறிந்தன்றோ அன்புஇரட்டிப் பூண்டதுநான் அறிவிலேனோ 

காம்புறழும் தோளானளக் கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் 
ஆம்பொறியில் அடலரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீராயின் 
தாம்பொறியின் பலமாயம் தரும் பொறிகள் அறிந்தவற்றைத் தடுப்பேன் அன்றே 
பாம்பறியும் பாம்பின கால் எனமொழியும் பழமொழியும் பார்க்கி லீரோ . 

பெருங்குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உருப்பிடிப்பேன் அன்றேல்" 
அருங்கலாம் உற்றிருந்தான் என்னினும் ஆம் இளையவன் தான் அரிந்த நாசி 
ஒருங்கிலா இவளோடும் உறைவேனா என்பானேல் இறைவ ஒன்றும் 
மருங்கிலா தவளோடும் அன்றோ நீ நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய் 

சூர்ப்பணகைப் படலம் 106 , 111 , 120 , 122 , 125 , 111 , 11 } } 

சூர்ப்பணகை கரனோடு மூறை யிடல் 

இருந்த மாக்கரன் தாளிணையின் மிசை 
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பெனத் 
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர்மேல் 
விரிந்தபேகம் என விழுந்தாளரோ 

அமுங்குநாள் இதென்று அந்தகன் ஆணையால் 
தழங்கு டேரி எனத்தனித் தேங்குவாள் 
முழங்குமேகம் இடத்த வெந்தீயினால் 
புழுங்கு நாகம் எனப்புரண் டாளரோ 

இருவர் மானிடர் தாபதர் ஏந்திய 
வரிவில் வாள்கையர் மன்மதன் மேனியர் 
தரும நீரர் தயரதன் காதலர் 
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார் 

ஒன்றும் நோக்கலர் உன்வலி ஓங்கறன் 
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் 
வென்றி வேற்கை நிருதரை வேரறக் 
கொன்று நீக்குதும் என்றுணர் கொள்கையார் 

மண்ணில் நோக்க அருவானினில் மற்றினில் 
எண்ணி நோக்குறின் யாவரும் நோக்கிலாப் 
பெண்ணின் நோக்குடையாள் ஒருபேதைஎன் 
கண்ணின் நோக்கி உரைப்பருங் காட்சியாள் 

கண்டு நோக்கங் காரிகையாள் தனைக் 
கொண்டு போவல் இலங்கையர் கோக்கெனா 
விண்டுமேல் எழுந் தனை வெகுண்டு 
தண்டம் ஆக்கினர் மூக்கெனச் சொல்லினாள் 

(திருசிரா வதைப்படலம் 1 , 2 , 4-7 ] 
கர தூஷணத் திரிசிரர்களின் வதை 

துமிலப் போர்வல் லாக்கர்க்குச்சுட்டினாள் 
அமலத் தொல்பெயர் ஆயிரத் தாழியான் 
நிமலப் பாத நினைவில் இருந்த அக் 
கமலக் கண்ணனைக் கையினிற் காட்டினாள் 

"வாங்கி வாளரொடு வாளிபெய் புட்டிலும் 
தாங்கி தாமரைக் கண்ணன் அச்சாலையை 
நீங்கி இவ்வழி நேர்மின் அடாஎனா 
வீங்கு தோளன் மலைதலை மேவினான் 

மரங்கற் போல் நெடு வாளொடு தோள்வீழ 
உரங்களால் அடர்ந்தார் உரவோன் விடும் 
சரங்கள் ஓடின தைக்க அவர்கள் தம் 
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் 

ஒளிறு வேற்கரற்கு உற்றது உணர்த்தினாள் 
குளிறுகோப வெங்கோ ளரிமா அட 
களிறெலாம் படகைதலை மேலுற 
பிளிறி ஓடும் பிடியன்ன பெற்றியாள் 

அங்கரக்கர் அவிந்தழிந்தார் எனப் 
பொங்க ரத்தம் விழிவழிப் போந்துக 
வெங்கரப் பெயரோன் வெகுண் டான்விடைச் 
சங்கரற்கும் தடுப்பரும் தன்மையான் 

அழைஎன்தேர் எனக்கு ஆக்கு வெம்போர்ப்படை 
உழையர் ஓடி ஒரு நொடி உம்பல்மேல் 
மழையின் மாமுரசு எற்றுதிர் வல்லென்றான் 
முனழயின் வாளரி அஞ்ச முழங்குவான் 

சாடுதுன்றி விசும்பு கரந்தென 
நீடி எங்கும் நிமிர்ந்த நெடுங்கொடி 
ஒடும் எங்கள் பசி என்று வந்து எழுந்து 
ஆடுகின்ற அலகையின் ஆடவே 

ஆன்றமை எறிபடை அழுவத்தார்கலி 
வான்தொடர் மேருவை வளைத்த தாம்என 
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் 
தோன்றினன் கரன் நமன் துணுக்கம் எய்தவே 

மரம்படர் கானம் எங்கும் அதர்படவந்த சேனை 
கரன்படை என்ப தெண்ணிக் கருநிறக் கமலக்கண்ணன் 
சரன்பட்டர் புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான் தள்ளா 
உரன்படர் தோளில் மீளாக் கவசமிட் டுடைவா ளார்த்தான் 

மானிடன் ஒருவன் வந்தவலி கெழு சேனைக்கம்மா 
கானிடம் இல்லை என்னும் கட்டுரைகலந்த கானல 
யானுனட வென்றி என்னாம் யாவரும் கண்டுநிற்றீர் 
ஊனுடை இவனையானே உண்குவென் உயிரை என்றான் 

னுமாத்திரத்து எறிபடை இடியென இடியா 
மன்னர் மன்னவன் மதலையை வளைந்தன வனத்து 
மின்னும் வாலுளை மடடங்கலை முனிந்தன வேழம் 
துன்னி னாலெனக் கடுசினத்து அரக்கர் தம் தொகுதி 

வளைந்த காலத்தில் வளைந்தது அவ் இராமன் கைவரிவில் 
விளைந்த போரையும் ஆவதும் விளம்புதும் விசையால் 
புளைந்த பாய்பரி புரண்டன புகர் முகப்பூட்கை 
உளைந்த மால்வரை உரும் இடிபட ஒடிந்தென்ன 

சூலம் அற்றன அற்றன சுடர்மழு தொகைவாள் 
மூலம் அற்றன அற்றன முரண்தண்டு பிண்டி 
பாலம் அற்றன அற்றன பகழிவெம் பகுவாய் 
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் 

தொடிதுணிந்தன தோளொடு தோமரம் துணிந்த 
அடி துணிந்தன கடகளிறு அச்சொடு நெடுந்தேர் 
கொடிதுணிந்தன் குரகதம் துணிந்தன குலமா 
முடிதுணிந்தன துணிந்தன முளையொடு முசலம் 

ஒன்றுபத்து நூறாயிரம் கோடி என்றுணரா 
துன்றுபத்திய இராகவன் சுடுசரம் துரப்ப 
சென்று பத்திரத் தலையின் மலைதிரண்டென்ன 
கொன்று பத்தியிற் குவித்தன பிணப் பெருங்குன்றம் 

கைகள் வாளொடு களம்பட கழுத்தறக் கவச 
மெய்கள் போழ்பட தாள்விழ வெருவிட நிருதர் 
செய்ய மாத்தலை சிந்திட திசையுறச் சென்ற 
தையலார் நெடுவி.சியெனக் கொடியன சரங்கள் 

மாரி-ஆக்கிய வடிக்கணை வரைபுரை நிருதர் 
பேரியாக்கையின் பெருங்கரைவயின் தொறும் பிறங்க 
ஏரியாக்கின ஆறுகள் இயற்றின நிறையச் 
சோரியாக்கின போக்கின வனம் எனும் தொன்மை 

அலைமிதந்தன குருதியின் பெருங்கடல் அரக்கர் 
தலைமிதந்தன நெடுந்தடி மிதந்தன தடக்கைம் 
மலைமிதந்தன வாம்பரி மிதந்தன வயப்போர்ச் 
சிலைமிதந்தன மிதந்தன கொடியோடு தேர்கள் 

சொரிந்தபல் படை துணிபடத்துணிபட சரத்தால் 
புரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி 
தெரிந்து பார்மகள் நெளிவுற வனம் முற்றும் நிறைய 
விரிந்த செம்மயிர்க் கருந்தலை மலை என வீழ்ந்தான் 

கவந்த பந்தங்கள் களித்தன குளித்த கைம்மலைகள் 
சிவந்து பாய்த்த வெங்குருதியில் திருகிய சினத்தால் 
நிவந்த வெந்தொழில் நிருதர் தம் நெடுநிணம் தெவிட்டி 
உவந்த வன்கழுது உயிர்சுமந் துளுக்கியது உம்பர் 

மருள் தரும் சுளிவஞ்சனை வளை எயிற்றரக்கர் 
கருடன் அஞ்சுறு கண்மணி கரகமும் கவர்ந்த 
இருள் தரும் புறத்து இழுதையர் பழுது தறற்கு எளிதே 
அருந்தரும் திறத்து அறனன்றி வலியதுண்டாமோ 

எறிந்தார்என எய்தார் என நினைந்தார் எனஎறிய 
அறிந்தார் என அறியவகை அபில் வஈளிபின் அறுத்தான் 
செறிந்தானரயும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் 
மறிந்தானரயும் . வலித்தாரையும் மடித்தான் சிலைபிடித்தான் 

வானத்தன கடலின்புற வலயத்தன மதிசூழ் 
மீனத்தன மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெங் 
கானத்தன மலை பத்தன தினசசுற்றிய கரியின் 
தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே 

ஈரல்செறி கமலத்தன இரதத்திரள் புளினம் 
வீரக்கரி முதலைக்குலம் விடுபாய்டரி குரம்பாப் 
பாரக்குடர் In _ / T சன - படர்கின்றன பலவா 
மூரித்திரை உதிரக்குளம் முழுகிக் கழுதெழுமே 

அழைத்தார் சிலர் அயர்ந்தார்சியர் அறிந்தார் சிலர்கறிந்தார் 
உழைத்தார் சிலர் உ பிர்த்தார்சிலர் உருண்டார்சிலர் புரண்டார் 
குனழத்தரழ் தினரக்குருதிக் கடல் குளித்தார் சிலர் கொலைவாய் 
மனழத்தாரைகள் படப்பாரின- மடிந்தார்சிலர் உடைந்தார் 

எய்தார்பலர் எறிந்தார்பலர் மழஓச்சினர் எழுவால் 
பொய்தார்பலர் புடைத்தார்பலர் கிடைத்தார்பலர் பொருப்பால் 
பெய்தார்மழை பிதிர்த்தார் எரி பிறைவாள் எயிற்றரக்கர் 
னவதார் பலர் தெழித்தார்பலர் மலையாம் என வளைத்தார் 

தலைசிந்தின விழிசிந்தின தழல்சிந்தின தரைமேல் 
மலைசிந்தின படி சிந்தின வரிசித்துரம் மனழபோல் 
சினலரிந்தின கணைசிந்தின திசைசிந்தின திசையூடு 
லசிந்தின பொறிசிந்தின உயிர்சிந்தின் உடலம் 
இழிந்தனர் வரிசிலை எடுத்த கையினர் 
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் 

சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில் 
அற்றில் தலையெனும் ஆக்கை கண்டிலர் 
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் 
முற்றினர் இராமனை முடுகு தேரினார் 

அழிந்தன தேர் அவர் அவனி கீண்டுக 
ஒழிந்திலர் சரங்களை உருமின் ஏறெனப் 
பொழிந்தனர் பொழிகனல் பொடிக்கும் கண்ணினார் 

அத்தலைத் தானையன் அளவில் ஆற்றலான் 
முத்தலைக் குரிசில்பொன் முடியன் முக்கணான் 
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் 
வைத்தலைப் பகழியால் மழைசெய் வில்லினான் 

ஊன்றிய தேரினன் உருமின் வெங்கணை 
வான் தொடர் மழையென வாய்மை யாவர்க்கும் 
சான்றென நின்ற அத் தரும் மன்னவன் 
தோன்றல் தன் திருவுரு மறையத் தூவினான் 

தூவிய சாமெலாம் துணிய வெங்கணை 
ஏவினன் இராமனும் ஏவி ஏழிரு 
பூவியல் வாளியால் பொலங்கொள்தேர் அழித்து 
ஆவிவெம் பாகனை அழித்து மாற்றினான் 

அன்றியும் அக்கணத்து அமரர் ஆர்த்தெழப் 
பொன்தெரி வடிம்புடைப் பொருவில் வாளியால் 
வன்தொழில் தீயவன் மகுடமாத்தலை 
ஒன்றொழித் திரண்டையும் உருட்டினானரோ 

அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்கப் 
பொற்றை மாமுழைப் புலாலுடைவாயினின் புகுந்து 
கொற்ற வார்சரத்து ஒழிந்ததோர் சிரத்தையும் குறைத்தான் 

திரிசிராஎனும் சிகரம்மண்சேர்தலும் செறிந்த 
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார் 
பருதிவாளினர் கேடகத்தடக்கையர் பரந்த 
குருதிநீரிடை வார்கழல் கொழுங்குடர் தொடக்க 

கணத்தின் மேல்நின்றவானவர் கைபுடைத்து ஆர்ப்ப 
பணத்தின் மேல் நிலம் குழிறக் கால் கொடு பறப்பார் 
நிணத்தின் மேல்விழுந் தழுந்தினர் சிலர்சிலர் நிவந்த 
பிணத்தின் மேல்விழுந்து ருண்டனர் உயிர்கொடுபிழைப்பார் 

( திருசிராவதைப்படலம் 15 , 18 , 20 , 23 , 26 , 51 , 61 , 67 , 74-77 , 79 .. 
81 83 , 85 87 , 89 , 90 , 93 , 94 , 97 , 101 , 103 , 105. 106,112,127 , 129 , 134-136 ) 

அனையர் ஆகிய அரக்கரை ஆண்டொழிற் கமைந்த 
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின் என்ன 
நினையும் நான் உமக்குரைப்பதும் உண்டுஎன நின்றே 
துனையும் வாம்பரித் தேரினன் தூடணன் சொன்னான் 

என்று தானும் தன்எறிகடற் சேனையும் இறைநீர் 
நின்றுகாண்டிர் என்நெடுஞ்சிலை வலி என நேராச் 
சென்று தாக்கினன் தேவரும் மருள் கொண்டு திகைத்தார் 
நன்று காத்தி என்று இராமனும் எதிர்செல நடந்தான் 

தூடணன்விடு சுடுசரம் யாவையும் துணியா 
பாடுநின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா 
ஆடல் கொண்டனன் அளப்பரும் பெருவலியரக்கர் 
கூடிநின்ற அக்குரைகடல் வறள்படக் குறைத்தான் 

தேவர் ஆர்த்தெழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் 
ஓவில் வாழ்த்தொலி நாற்கடல் முழக்கென ஓங்க 
ச . அடா இதுவல்லையேல் நீஎனக் கணைஒன்று 
ஏவினான் அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான் 
( தூடணன்வதைப்படலம் 1 , 8 , 12 , 21 ] 

தம்பி தலையற்றபடியும் தசரதன் சேய் 
அம்பு படையைத் துணிபடுத்ததும் அறிந்தான் 
வெம்புபடை விற்கைவிசயக் கரன் வெகுண்டான் 
கொம்புதலைக் கட்டிய குலக்கரி கடுப்பான் 

அடங்கலில் கொடுந்தொழில் அரக்கர் அவ் அனந்தன் 
படங் கிழிதரப்படிதனில் பலவிதப் போர் 
டங்கலுழ் தடங்களிறு தேர்பரி தூவித் 
தொடங்கினர் நெடுந்தகையும் வெங்கணை துரந்தான் 

எந்திரத்தடந் தேரிழந்தான் இழந்து 
அந்தரத்திடை ஆர்த்தெழுந்து அம்பெலாம் 
சுந்தரத்தனி வில்லிதன் தோள் எனும் 
மந்தரத்தில் மழையின் வழங்கினான் 

வரம் அரக்கன் படைத்தலின் மாயையின் 
உர முடைத் தன்மையால் உலகு ஏழையும் 
பரம் முருக்கிய பாவத்தினால் வலக் 
கரம் எனக்கரன் கண்டமுற் றானரோ 
[ கான்வதைப்படலம் 1 , 2 , 20 , 24 ) 

சூர்ப்பணகை ராவணனோடே முறையிடல் 

இங்கு நின்றது உரைத்தும் இராவணன் 
தங்கை தன்கை வயிறு தகர்த்தனள் 
கங்குல் அன்ன கரனைத் தழீஇ நெடும் 
பொங்கு வெங்கு ருதிப்புரண் டாளரோ 

அலங்கல் வேற்கை அரக்கரை ஆசறக் 
குலங்கள் வேரறுப்பான் குறித் தாழ்கடல் 
கலங் குறைத்தெழு கால்எனக் காலினால் 
லங்கை மாநகர் நொய்தின் சென்றெய்தினாள் 
[கான்வதைப்படலம் 29 , 31 ] 

தங்கையும் அவ்வழித் தலையில் தாங்கிய 
செங்கையள் சோரியின் தாரை சேர்ந்திழி 
கொங்கையள் மூக்கிலள் குழையின் காதிலள் 
மங்குலின் ஒலிப்படத் திறந்த வாயினன் 

முடையுடை வாயினள் முறையிட் டார்த்தெழு 
கடையுகக் கடல்ஒலி காட்டிக் காந்துவாள் 
குடதிசைச் செக்கரின் சேர்ந்த கூந்தலாள் 
வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் 

மடித்தபில் வாய்கள் தொறும் வந்து புகைமுந்த 
துடித்ததொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப 
கடித்த கதிர் வாளெயிறு மின்கஞல மேகத்து 
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் 

கானிடை அடைந்து புவிகாவல் புரிகின்றார் 
மீனுடை நெடுங்கொடியினோன் அனையர் மேல்கீழ் 
ஊனுடை யுடம்புடைமை யோர்உவமை இல்லா 
மானிடர் தடிந்தனர்கள் வாள்உருவி என்றாள் 

வற்கலையர் வார்கழலர் மார்பின் அணிநூலார் 
விற்கலையர் வேதம் உறை நாவர் தனிமெய்யர் 
உற்கலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் 
சொற்கலை எனத்தொலைவில் தூணிகள் சுமந்தார் 

தராவலய நேமி உழவன் தயர தப்பேர் 
பராவ அருநலத்தொருவன் மைந்தர் பழி இல்லார் 
விராவ அருவனத்து அவன் விளம்ப உறைகின்றார் 
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் 
( இராவணன் அணங்குறுபடலம் 24 , 25 , 29 , 50 , 54 , 57 ] 


சூர்ப்பணகை ராவணன் முன் சீதையை வரூணித்தல் 

ஆரவள் என்னலோடும் அரக்கியும் ஐயஆழித் 
தேர் அவள் அல்குல் கொங்கை செம் பொன்செய் குலிகச்செப்பு 
பார் அவள் பாதம் தீண்டப்பாக்கியம் படைத்த தம்மா 
பேர் அவள்சீதை என்று வடிவெலாம் பேசலுற்றாள் 

காமரம் முரலும்பாடல் கள் எனக்கனிந்த இன்சொல் 
தேமலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்காம் என்னத் 
தாமரை இருந்ததையல் சேடியாம் தரமும் அல்லள் 
யாம் உரைவழங்கும் என்பது ஏழைமைப் பாலதன்றோ 

மஞ்சொக்கும் அளகொதி மழைஒக்கும் வடித்த கூந்தல் 
பஞ்சொக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய 
அஞ்சொற்கள் அமுதின் அள்ளிக் கொண்டவள் வதனம்மைதீர் 
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் 

ஈசனார் கண்ணின் வெந்தான் எனும் ஈதிழுதைச்சொல் இவ் 
வாசம் நாறோதியாளை கண்டனன் வௌவலாற்றான் 
பேசலாம் தகைமைத்தல்லாட் , பெரும்பிணிபிணிப்ப நீண்ட 
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கனவ் உருவமம்மா 

தோளையே சொல்லுகேனோ சுடர்முகத்து லவுகின்ற 
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ 
மீளவும் திகைப்பதல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் 
தாளையே சாண்டி அன்றேநானுக் குரைப்ப தென்னோ 

வில்லொக்கும் நுதல் என்றாலும் வேலொக்கும் விழி என்றாலும் 
பல்லொக்கும் முத்தென்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் 
சொல்லொக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லலாம் உவமையுண்டோ 
நெல்லொக்கும் புல்லென்றாலும் நேர்உரைத் தாகவற்றோ 

இந்திரன் சசியைப் பெற்றான் இருமூன்று வதனத்தோன்தன் 
தந்தையும் உமையைப் பெற்றான் தாமரைச் செங்கணானும் 
செந்திரு மகளைப் பெற்றான் சீதையைப் பெற்றாய் நீயும் 
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலைஉனக்கே ஐயா 

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத் திருந்தபொன்னை 
ஆகத்தில் ஒருவன்வைத்தான் அந்தணன் நாவில்வைத்தான் 
மேகத்திற் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை 
மாகத்தோள் வீரபெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்த்தி 

( இராவணன் அணங்குறுபடலம் 68 -71 , 73 - 76 ) 


மாரீசன் இராவணனை இடித்தல் 
கோபமும் மறனும் மானக்கொதிப்பும் என்றினைய வெல்லாம் 
பாபம் நின்ற இடத்து நில்லா தன்மம்போல் பற்றுவிட்ட 
தீபம் ஒன்று ஒன்றையுற்றால் என்னலாம் செயலின்புக்க 
தாபமும் காமநோயும் ஆருயிர் கலந்தவன்றே 

கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் 
உரனையும் மறந்தான் உற்றபழியையும் மறந்தான் , வெற்றி 
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னைப்பெற்ற 
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் 

தாவியது தீதெனாது தையலாளை மெய்யுறப் 
பாவியாத போதிலாத பாலிமாழை பானல்வாய் 
காவியான கண்ணிமேனி காணமூளும் ஆசையால் 
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் யினான் 

வந்தமந் திரிகளோடு மாசறமரபின் எண்ணி 
சிந்தையில் நினைந்தசெய்யும் செய்கையான் தெளிவில் நெஞ்சன் 
அந்தரம் செல்வதாண்டோர் விமானத்தில் ஆரும் இன்றி 
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் 

[ இராவணன் அணங்குறுபடலம் 82 , 83 , 92 , 170 ] 

மன்னா நீநின் வாழ்வை முடித்தாய் மதியற்றாய் 
உன்னால் அன்றீ தூழ்வினை என்றே உணர்கின்றேன் 
இன்னாவேனும் யானிது உரைப்பேன் இதம் என்னா 
சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவெல்லாம் 

அற்றகரத்தோடு உன் தலை நீயே அனல் முன்னில் 
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசிகூர 
உற்றுயிர் உள்ளே தேய உலந்தாய் பினையன்றோ 
பெற்றனை செல்வம் பின்னதிகழ்ந்தால் பெறலாமோ 

நாரம்கொண்டார் நாடு சுவர்ந்தார் நடையல்லா 
வாரம் கொண்டார் மற்றொரு வன்றன் மனைவாழும் 
தாரம்கொண்டார் என்றிவர் தம்மை தருமந்தான் 
ஈரும்கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா 

அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் 
ந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் 
செந்திரு ஒப்பார் எத்தனையோர் நின் திருவுண்பார் 
மந்திரம் அற்றார் உற்றதுரைத்தாய் மதியற்றாய் , 

செய்தா யேனும் தீவினையோடும் பழியல்லால் 
எய்தா தெய்தாதெய்தின் இராமன் உலகீன்றான் 
வைதால் அன்ன வாளிகள் கொண்டுன் வழியோடும் 
கொய்தான் அன்றே கொற்றம் முடித்துன் குழுவெல்லாம் 

வெய்யோர் யாரே வீரவிரா தன் துணை வெய்யோர் . 
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கவன் என் 
உய்வார் யாரேநம்மில் எனக்கொண்டுணர் தோறும் 
நையா நின்றேன் நீயிது உரைத்து நலிவாயோ 

நின்றும் சென்றும் வாழ்வன எல்லாம் நிலையாதால் 
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாம் புலையாடற்கு 
ஒன்றும் உன்னாய் என்னுரை கொள்ளாய் உயர்செல்வத்து 
என்றும் என்றும் வைகுதிஐயா இனி என்றான் 

உஞ்சுபிழையாய் உறவினொடும் எனஉன்னா 
நெஞ்சு பறைபோதும் அது நினைய இல்லாய் 
அஞ்சும் எனதாருயிர் அறிந்து அருகுநின்றார் 
நஞ்சு நுகர்வாரை இதுநன்று எனலும் நன்றோ 

வேதனை செய் காமவிடம் மேலிட மெலிந்தாய் 
தீதுரை செய்தாய் இனைய செய்கை சிதைவன்றோ 
மாதுலனும் ஆம் மரபின் முந்தை உறவந்தேன் 
ஈதுரைசெய் தேன தனை எந்தை தவிர்க என்றான் 

[ மாரீசன் வதைப்படலம் 8 , 9 , 11 , 12 , 15 , 18 , 24 , 26 ) 


லட்சுமணர் பொன்மானைப் பொய்மான் எனல் 

தன்மானம் இலாத தயங்கொளிசால் 
மின் வானமும் மண்ணும் விளங்குவதோர் 
பொன்மான் உருவங்கொடு போயினனால் 
நன்மான் அனையாள் தனை நாடுறுவான் 

நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும் 
முற்றிப் பொழிகா தலின் முந்துறுவாள் 
பற்றித்தருக என்பென் என நினையா 
வெற்றிச் சிலைவீரனை மேவினளால் 

ஆண்டங் கிளையான் உரையாடினனால் 
வேண்டும் எனலாம் விழைவன்றிது எனா 
பூண்துஞ்சு பொலங்கொடி யோய் அதுநாம் 
காண்டும் எனவள்ளல் கருத்துணர்வான் 

காயம் கனகம் மணிகால் செவிவால் 
பாயும் உருவோடிது பண்பல வால் 
மாயம் எனலன்றி மனக்கொளவே 
ஏயும் இறை மெய்யல என்றளவே 

ஐய நுண் மருங்குல் நங்கை அஃதுரை செய்ய ஐயன் 
செய்வென் என்றமைய நோக்கத் தெளிவுடைத் தம்பிசெப்பும் 
வெய்யவல் லரக்கர்வஞ்சம் விரும்பினார் வீனையின் செய்த 
கைதவமான் எண்றண்ணல் காணுதி கடையின் என்றான் 

( மாரீசன் வதைப்படலம் 43 , 48 , 50 , 51 , 61 ] 

லட்சுமணர் சீதாதேவியைத் தேற்றல் 

அக்கணத்தினில் ஐயனும் வெய்தன் 
சக்க ரத்தின் தகைவரி தாயதோர் 
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் 
புக்க தேயம்புக்கு இன்னுயிர் போக்கெனா 

நெட்டிலைச்சரம் வஞ்சனை நெஞ்சுறப் 
பட்ட தப்பொழுதே பகு வாயினால் 
அட்டதிக்கினும் அப்புறமும் புக 
விட்ட ழைத்தொரு குன்றென வீழ்ந்தனன் 

( மாரீசன் வதைப்படலம் 75 , 76 ) 

எயிறலைத்து முழைதிறந் தேங்கிய 
செயிர் தலைக்கொண்ட சொல்செவி சேர்தலும் 
குயில் தலத்திடை உற்றதோர் கொள்கை யாள் 
வயிறலைத்து விழுந்து மயங்கினாள் 

குற்றம் வீந்த குணத்தின் எங்கோமகன் 
மற்றவ் வாளரக்கன் புவி மாயையால் 
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் 
நிற்றியோ இளையோய் ஒருநீ என்றாள் 

எண்மையார் உலகினில் இராமற்கு ஏற்றம்ஓர் 
திண்மை யார்உளர் எனச் செப்பற் பாலதோ 
பெண்மையால் உரை செயப் பெறுதிரால் 
உண்மையான் அனையவட்கு உணரக்கூறினான் 

பார் எனக் கனல் எனப் புனல் எனப் பவனவான் 
பேர் எனைத் தவை அவன் முனியின் பேருமால் 
சார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை 
ஆர்எனக் கருதிஇவ் இடரின் ஆழ்கின்றீர் 

மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் 
போற்ற வன் திரிபுரம் எரித்தபுங்கவன் 
ஏற்றிநின் றெய் தவில் இற்றது எம்பிரான் 
ஆற்றலின் அமைவதோர் ஆற்றல் உண்மையோ 

பார்க்கஎன் பகர்வது பகழிப் பண்ணவன் 
துரக்க அங்கதுபட தொலைந்து சோர்கின்ற 
அரக்கன் அவ்வுரை எடுத் தரற்றினாள் அதற்கு 
ரக்கம் உற்றிரங்கலீர் இருத்திர் ஈண்டென்றான் 

[இராவணன் சூழ்ச்சிப்படலம் 2 , 4 , 5 , 7 , 9 , 11 ] 

சீதைக்கும் இராவண சந்நியாசிக்கும் சம்வாதம் 

இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற 
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் 
முளைவரித் தண்டொரு மூன்றும் முப்பகை 
தளையரி தவத்தவர் வடிவும் தாங்கினான் 

ஊண்: இல னாம்என உலர்ந்த மேனியன் 
சேண்நெறி வந்ததோர் வருத்தச் செய்கையான் 
பாணியின் உழந்திடைப் படிக்கின்றான் என 
வீணையின் இசைபட வேதம் பாடுவான் 

வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியான் 
அற்பின் நல் திரைபுரள் ஆசை வேலையன் 
பொற்பினுக் கணியினை புகழின் சேக்கையை 
கற்பினுக் கரசியை கண்ணின் நோக்கினான் 

இருந்தவன் யாவதிருக்கை இங்குறை 
அருந்தவன் யாவன் நீர்யாரை என்றலும் 
விருந்தினர் இவ்வழி விரகிலார் என 
பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள் 

தயரதன் தொல்குலத் தலைவன் . தம்பியோடு 
உயர்குலத் தன்னைசொல் உச்சி ஏந்தினான் 
அயர்விலன் இவ்வழி உறையும் அன்னவன் 
பெயரினைத் தெரிகுதிர் பெருமையீர் என்றாள் 

அனகமா நெறிபடர் அடிகள் நும் அலால் 
நினைவதோர் தெய்வம் வேறிலாத நெஞ்சினான் 
சனகன் மாமகள் பெயர் சனகி காகுத்தன் 
மனைவியான் என்றனள் மறுவில் கற்பினாள் 

சீதை வினவ ராவணன் கூறுதல் 

ஈசன் ஆண்டிருந்த இலங்குமால் வரை 
ஊசி வேரொடும் பறித்தெடுக்கும் ஊற்றத்தான் 
ஆசைகள் சுமந்தபேர் அமரி யானைகள் 
பூசல்செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான் 

வெம்மைதீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியான் 
செம்மையோன் மன்மதன் திசுைக்கும் செவ்வியான் 
எம்மனோர் அனைவரும் இறைவர் . றெணும் 
மும்மையோர் பெருமையும் முற்றும் வெற்றியான் 

அனைத்துலகினும் அழகனமந்த நங்கையர் 
எனைப்பலர் அவன் தனது அருளின் இச்சையோர் 
நினைத்து அவர்உருகவும் உதவ நேர்கிலன் 
மனக்கினியாள் ஒருமாதை நாடுவான் 

வேதமும் வேதியர் அருளும் வெஃகலா 
சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப் 
பாதக அரக்கர் தம் பதியின் வைகுதற்கு 
ஏது என் உடலமும் மிகை எ - றெண்ணுவீர் 

மங்கையஃதுரைத்தல் கேட்ட வரம்பிலான் மறுவின் தீர்ந்தார் 
வெங்கண் வாள் அரக்கர் என்ன வெருவலெம் மெய்ம்மை நோக்கி 
திங்கள் வாள்முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே 
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் 

திறந்தெரி வஞ்சன் அச்சொல் செப்பலும் செப்பம் மிக்காள் 
அறந்தருவள்ளல் ஈண்டிங் கருந்தவம் முயலும் நாளுள் 
மறந்தலை திரிந்தவாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் 
இறந்தனர் முடிவர் பின்னர் இடரிலைஉலகில் என்றாள் 

மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர் தம்மை 
மீனென மிளிரும் கண்ணாய் வேர் அறவெல்வர் என்னின் 
யானையின் இனத்தையெல்லாம் இளமுயல் கொல்லும் இன்னும் 
கூனுகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் 

மின் திரண்டனைய பங்கி விராதனும் வெகுளி பொங்கக் 
கன்றியமனத்து வென்றிக்கரன் முதல்கணக் கிலோரும் 
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர்போலும் என்றாள் 
அன்றவர்க் கடுத்ததுன்னி மழைக்கண்ணீர் ஆலி சோர்வாள் 

சீறினள் உரை செய்வான் அச்சிறுவலிப் புல்லியோர் கட்கு 
ஈறுஒருமனிதன் செய்தான் என்றெடுத் தியம்பின யேல் 
தேறுதி நாளையே அவ் இருபது திண்தோள் வாடை 
வீறிய பொழுது பூளைவீஎன வீவன் அன்றே 

மேருவைப் பறிக்கவேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின் 
நீரினைக் கலக்கவேண்டின் நெருப்பினை அவிக்கவேண்டின் 
பாரினை எடுக்கவேண்டின் பால் நிகர் செஞ்சொல் ஏழாய் 
யார் எனக்கருதிச் சொன்னாய் இராவணற் கரிதென் என்றான் 

அரண்தரு திரள்தோள் சால உளஎனின் ஆற்றல் உண்டோ 
கரண்டநீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன் 
திரண்டதோள் வனத்தை எல்லாம் சிறியதோர் பருவந்தன்னில் 
இரண்டுதோள் ஒருவனனறோ மழுவினால் எறிந்தான் என்றாள் 

என்றிவன் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் 
சென்றன திரள்தோள் வானம் திண்டினமகுடம் திண்கை 
ஒன்றோடு ஒன்றடித்த மேகத்து உரும் என எயிறுதம்மில் 
மென்றன வெகுளி பொங்க விட்டது மாயவேடம் 

செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள் 
கவினும் வெம்சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை 
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கெரி புனிதர் ஈயும் 
அவியை நாய் வேட்டதென்ன என் சொன்னாய் அரக்க என்னா 

புல் நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற 
என் உயிர்இழத்தல் அஞ்சி இற்பிறப் பழிதல் உண்டோ 
மின் உயிர்த்து உருமின்சீறும் வெங்கணை விரவா முன்னம் 
உன்உயிர்க் குறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி.என்றாள் 

அணங்கினுக் கணங்கனாளே ஆசைநோய் அகத்துப் பொங்க 
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர்க் 
கணங்குழை மகளிர்க்கெல்லாம் பெரும்பதம் கைக்கொள் கென்னா 
வணங்கினன் உலசுந்தாங்கும் மலையினும் வலியதோளான் 

வாக்கினான் அன்னான் சொல்ல மாயையால் வஞ்சமான் ஒன்று 
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றைப் 
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னன 
காக்குமா காண்டியாயின் கடவல் கடவல் உன்தேரை என்றாள் 

மீட்டும் ஒன்றுனர செய்வாள் நீவீரனேல் விரைவில் மற்றுன் 
கூட்டமாம் அரக்கர் தம்மை கொன்றுங்னக கொங்கை மூக்கும் 
வாட்டினார்வனத்தின் உள்ளார் மானிடர் என்றவார்த்தை 
கேட்டும் இம்மாயம் செய்தது அச்சத்தின்கிளர்ச்சி யன்றோ 
[ இராவணன் சூழ்ச்சிப்படலம் 20 , 21 , 26 , 36 , 39 , 42 , 46 , 47 , 49 , 51 
54 , 55 , 56 , 59 62 , 67 , 68 , 70 , 81 , $ 21 


சடாயு ராவணனுக்குப் புத்தி சொல்லுதல் 

வந்தனன் எருவையின் மன்னன் , மாண்பிலான் 
அந்திரத் தேர்செலவு ஒழிக்கும் எண்ணினான் 
சிந்துரக் கால்ரம் : செக்கர் சூடிய 
கந்தரம் கயிலையை நிகர்க்கும் காட்சியான் 

ஆண்டுற்று அவ்வணங்கினன அஞ்சல் எனா 
தீண்டிற்றிலன் என்றுணர் சிந்னதயினான் 
மூண்டுற்றெழும் வெங்கதம் முற்றிலனாய் 
மீண்டுற் றூறையாடலை மேவினனால் 

கெட்டாய் கிளையோடு நின் வாழ்வை எல்லாம் 
சுட்டாய் இதென்ன தொடங்கினை நீ 
பட்டாய் எனவே கொடுபத்தினினய 
வீட்டு ஏகுதியேல்விளி கின்றிலையால் 

பேதாய் பிழைசெய்தனை பேர் உலகின் 
மாதா அனையாளை மனக்கொடுநீ 
யாதாக நினைத்தனை எண்ணம் இலாய் 
ஆதாரம் நினக்கினி யார்உளரோ 

எல்லா உலகங்களும் இத்திரனும் 
அல்லாதவர் மூவரும் அந்தகனும் 
புல்வாய் புலிகண்டது போல்வரலால் 
வில்லாளனை வெல்லும் மிடுக்குளரோ 

இம்மைக் குறவோடும் இறந்தழியும் 
வெம்மைத் தொழில் இங்கிதன் மேலிலையால் 
அம்மைக்கு அருமா நரகம் தருமால் 
எம்மைக்கு தமாக எண்ணினை நீ 

முத்தேவரின் மூல முதற்பொருளாம் 
அத்தேவர்இம் மானிடர் ஆதலினால் 
எத்தேவரோ டெண்ணுவது எண்ணம் இலாய் 
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் 

புரம்பற்றிய போர்விடையான் அருளால் 
வரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும் 
சாம்பற்றிய சாபம் விடுந்தனையே 


வானாள் பவன்மைந்தன் வளைத்தவிலான் 
தானேவரின் நின்று தடுப்பரிதால் 
நானே அவண் உய்ப்பென் இந்நன்னு தலை 
போ நீ கடிதென்று புகன்றிடலும் 

( சடாயு உயிர்நீத்தபடலம் ( -9 , 12 - 16 ) 

சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம் 

கேட்டான் நிருதர்க்கிரை கேழ்கிளர் தன் 
வாள் தாரை நெருப்புக வாய்மடியா 
ஓட்டாய் இனிநீஉரை செய்கு நரை 
காட்டாய் கடிதென்று கனன்று ரையா 

அக்காலை அரக்கன் அரக்குருக்கு அன்ன கண்ணன் 
எக்காலமும் இன்னதோர் ஈடழிவுற்றிலாதான் 
நக்கான் உலகேழும் நடுங்கிட நாகமன்ன 
கைக்கார் முகத்தோடு கடைப்புருவம் குனித்தான் 

சண்டப்பிறை வாள் எயிற்றான் சரதாரைமாரி 
மண்டச்சிறகால் அடித்தான் சிலவள்ளுகிறால் 
கண்டப் படுத்தான் சில காலனும் காணஉட்கும் 
துண்டப்படையால் சிலைதுண்டதுண்டங்கள் கண்டான் 

மீட்டும் அணுகா நெடுவெங்கண் அனந்த நாகம் 
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின்மீதும் 
நீட்டும் நெடுமூக்கெனும் நேமியன் சேமவில்கால் 
கோட்டும் அளவில் மணிக் குண்டலம் கொண்டெழுந்தான் 

ஒத்தான் உடனே உயிர்த்தான் உகுத்தான் அவன் தோள் 
பத்தொடுபத்தின் நெடும்பத்தியில் தத்தி மூக்கால் 
கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா 
முத்தார மார்பின் கவசத்தையும் மூட்டறுத்தான் 

அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு 
செறித்தான் தடமார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி 
வெறித்தார் வெறியாமுன் இராவணன் வில்லைமூக்கால் 
பறித்தான் பறவைக்கிறை விண்ணவர் பண்ணையார்ப்ப 

வேகமுடன் வேலிழந்தான் படைவேறு எட்ாமுன் 
மாகம் மறையும்படி நீண்ட வயங்குமான் தேர்ப் 
பாகன் தலையைப் பறித்து படர்கற்பினாள்பால் 
மோசம் படைத்தான் , உளைவு எய்தமுகத்து எறிந்தான் 

பாய்ந்தான் அவன்பல் மணித்தண்டு பறித்தெறிந்தான் 
எய்ந்தார் கதித்தேர்பரி எட்டினொடு எட்டும் எஞ்சித் 
தீய்ந்தா சறவீசி அத்திண்டிறல் துண்ட வாளால் 
காய்ந்தான் கவர்ந்தான் உயிர்காலனும் கைவிதிர்த்தான் 

மாச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும் 
ஓச்சிச்சிறகால் புடைத்தான் உலையா விழுந்து 
மூர்க்சித்த ராவணனும் முடிசாய்ந் திருந்தான் 
போச்சு இத்தனைபோலும் நின் ஆற்றல் எனப்புகன்றான் 

அவ்வேலையினே முனிந்தான் முனிந்தரற்றலன் அவ் 
வெவ்வேலரக்கன் விடலாம்படை வேறுகாணான் 
இவ்வேலையினே இவன் இன்னுயிர் உண்பென் என்னா 
செவ்வேபிழையா நெடுவாள் உறைதீர்த் தெறிந்தான் 

வலியின் தலை தோற்றிலன் மாற்றருந் தெய்வவாளால் 
நலியும் தலை என்ற தன்றியும் வாழ்க்கை நாளும் 
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின்வேந்தன் 
குலிசம் எறியச்சிறையற்றது ஓர்குன்றின் வீழ்ந்தான் 
( சடாயுஉயிர்நீத்தபடலம் 17 , 22 , 23 , 24 , 27 , 28 , 34 , 38 , 40 42 

சடாயுவிழவே சீதைபுலம்பல் 

வெள்கும் அரக்கன் நெடுவிண்புக ஆர்த்து மிக்கான் 
தொள்கின் தலைஎய்திய மான்எனச் சோர்ந்து நைவாள் 
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒருசார்வு காணாள் 
கொள்கொம் பொடியக்கொடி வீழ்ந்ததுபோல் குலைந்தாள் 

வன்துணையுளன் எனவந்த மன்னனும் 
பொன்றினன் எனக்கினிப் புகல் என் என்கின்றாள் 
இன்துணைப் பிரிந்திரிந்து இன்னல் எய்திய 
அன்றிலம் படை என அரற்றினாள் அரோ 

அல்லல் உற்றேனைவந்து அஞ்சல் என்ற இந் 
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே 
(வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ 
ல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் 

நாணிலேன் உரை கொடு நடந்த நம்பிமீர் 
நீள்நிலை அறநெறி நின்றுளோர்க் கெலாம் 
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை 
காணிய வம்மெனக் கலங்கி விம்மினாள் 

கற்பழியாமை என் கடமை ஆயினும் 
பொற்பழியா வலம் பொருந்தும் போர்வலான் 
வில்பழியுண்டது வினையினேன் வந்த 
இல்பழியுண்டது என்றிரங்கி ஏங்கினாள் 

எல்லையில் விசும்பிடை இருந்த நேமியாய் 
சொல்லிய அறநெறி தொடர்ந்த தோழமை 
நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியைப் 
புல்லுதியோ எனப்பொருமிப் பொங்கினாள் 

( சடாயுஉயிர் நீத்தபடலம் 44. - 491 
ஸ்ரீராமர் சீதைக்காகத் தம்பியோடிரங்கல் 

ஏகினன் அரக்கனும் எருவைவேந்தனும் 
மோகவெந் துயர்சிறிதாறி முன்னியே 
மாகமே நோக்கினன் வஞ்சன் வல்லையில் 
போகுதல் கண்டகம் புலர்ந்து சொல்லுவான் 

வந்திலர் மைந்தர் நன்மருகி எய்திய 
வெந்துயர் துடைத்தனென் என்னும் மெய்ப்புகழ் 
தந்திலர் விதியினார் தருமவேலியைச் 
சிந்தினர் மேல்இனிச் செயல் என் ஆம்கொலோ 

வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் 
செஞ்செவே திருவுருத் தீண்ட அஞ்சுவான் 
நஞ்சியல் அரக்கியர் நடுவண் ஆயிடை 
சிஞ்சுப வனத்தினடச் சிறைவைத்தானரோ 

இந்நிலை இளையவன் செயல் இயம்பினாம் 
பொன்னிலை மானின்பின் தொடர்ந்து போகிய 
மன்னிலை அறிசுஎன மங்கை ஏவிய 
பின்னவன் தன்னிலை பேசுவாம் அரோ 

துண்ணெனும் அவ்வுனர தொடரத் தோனகயும் 
பெண் எனும் பேதைமை மயக்கப் பேதினால் 
உ.ள் நினற சோரும் என்று ஊசலாடும் அக் 
கண்ணனும் இளவலைக் கண்ணின் நோக்கினான் 

ஓட்டிவந்தனன் சாலையில் சோலையில் உதவும் 
தோடிவர்ந்த பூஞ்சுரி குழலாள் தனைக்காணான் 
கூடுதன் னுடையது பிரிந்து ஆருயிர் குறியா 
தேடிவந்தது கண்டிலதாம் என நின்றான் 

கைத்தசிந்தையன் கனங்குழை அணங்கினைக் காணான் 
உய்த்து வாழ்தர வேறொரு பொருள் இலான் , உதவ 
வைத்த மாநிதி மண்ணொடும் மறைத்தன வாங்கிப் 
பொய்த்துளோர் கொளத்திகைத்து நின்றானையும் போன்றான் 

மண்சுழன்றது மால்வரை சுழன்றது மதியோர் 
எண்சுழன்றது சுழன்ற அவ் எறிகடல் ஏழும் 
விண்சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன் 
கண்சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் 

தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சிப் 
பாரினோடு கொண்டகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று 
ஓரும் தன்மை யீ தென்பது உரன் இலாதவர்போல் 
தூரம் போதல்முன் தொடர்தும் என்றிளையவன் தொழலும் 

ஆமதேஇனி அமைவ தென்றமலனும் மெய்யில் 
தாம வார்கணைப் புட்டிலும் முதலிய தாங்கி 
வாம மால்வரை மரன் இவை மடிதர வயவர் 
பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுவழி போனார் 

( சடாயு உயிர்நீத்த படலம் 52 , 53 , 59 , 60 , 63 , 71 , 72 , 73 , 76 , 78 ] 


ஸ்ரீராமர் சடாயுவின் மேல் விழுந்து இரங்கல் 

நோக்கினால் ஐய நொய்தி வண் எய்திய நுந்தை 
மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின் 
தாக்கினான் நடுவடுத்தது தெரிகிலம் தமியன் 
யாக்கை தேம்பிடும் எண்ணரும் பருவங்கள் இறந்தான் 

சிலைகிடந்ததால் இலக்குவ தேவர் நீர்கடைந்த 
மலைகிடந்தென வலியதே வடிவினால் , மதியின் 
கலைகிடந்தன்ன காட்சியன் இது கடித்து ஒடித்தான் 
நிலைகிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் 

மடலுள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா 
மிடலுண் நாட்டங்கள் தீஉக நோக்கினன் விரைவான் 
உடலுள் நாட்டிய குருதியம் பாவையின் உம்பர் 
கடலுள் நாட்டிய வரையெனத் தாதையைக் கண்டான் 

துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய 
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர்த்தந்தை 
வள்ளியோன் திருமேனியில் தழல் நிற வண்ணன் 
வெள்ளி ஓங்கலில் அஞ்சனமலை என வீழ்ந்தான் 

தம்தாதையரைத் தனயர் கொலை நேர்ந்தார் 
முந்தாரே உள்ளார் முடிந்தானே முன்னொருவன் 
எந்தாயே எதற்காகநீயும் இறந்தனையால் 
அந்தோ வினையேன் அருங்கூற்றும் ஆனேனே 

பின்னுறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள் 
தன்னுறுவல் தீர்ப்பான் தனியுறுவது ஓராதே 
எனுறவு நீதீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் 
என்னுறுவான் வேண்டி இடருறுவேன் எந்தாயே 

மாண்டேனேயன்றோ மறையோர் குறைமுடிப்பான் 
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன் 
நீண்டேன் மரம் போல நின்றொழிந்த புன்தொழிலேன் 
வேண்டேன் இம்மாயப் புன்பிறவி வேண்டேனே 

என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை 
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீகிடந்தாய் 
வன்றாள் சிலையேந்தி வாளிக் கடல் சுமந்து 
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே 

வடுக்கண்வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் 
எடுத்தனன் ஏகுவானை எதிர்த்தெனது ஆற்றல் கொண்டு 
தடுத்தனென் ஆவதெல்லாம் தவத்து அரன் தந்த வாளால் 
படுத்தனன் இங்குவீழ்ந்தேன் இது இன்று பட்டதென்றான் 

பெண்தனி ஒருத்திதன்னைப் பேதைவாளரக்கன் பற்றிக் 
நொண்டனன் ஏகநீயிக் கோளுறக் குலுங்கள் செல்லா 
எண்டிசை இறுதியான உலகங்கள் இவற்றை இன்னே 
கண்ட வானவர்களோடும் களையுமாறின்று காண்டி 

( சடாயு உயிர்நீத்தபடலம் 82 , 83 , 85 , 92 , 93 , 95-98 , 113 , 1171 

ஸ்ரீராமர் கோபத்தைச் சடாயு ஆற்றுதல் 

இவ்வழிநிகழும் வேலை எருவைகட் இறைவன்யாதும் 
செவ்வியோய் முனியல்வாழி தேவரும் முனிவர் தாமும் 
வெவ்வலி வீரநின்னால் வேறும் என் றேமாக்கின்றார் 
எவ்வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் 

நாள் செய்த கமலத்தண்ணல் நல்கிய நவையில் ஆற்றல் 
தோள்செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ 
தாள் செய்ய கமலத்தானேமுதலினர் தலைபத்துள்ளாற்கு 
ஆட்செய்கின் றார்களன்றி அறஞ்செய்கின் றார்கள் யாரே 

தெண்திசை உலகந்தன்னில் செறுநர்மாட் டேவல் செய்து 
பெண்டிரின் வாழ்வர் அன்றே இதுவன்றோ தேவர்பெற்றி 
பண்டுல களந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அந்நாள் 
உண்டிலர் ஆகில் இந்நாள் அன்னவர்க்குய்தல் உண்டோ 

வம்பிழை கொங்கைவஞ்சி வனத்திடைத் தமியள்வைகக் 
கொம்பிழை மானின்பின்போய்க் குலப்பழி கூட்டிக்கொண்டீர் 
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை 
உம்பிழை என்பதல்லால் உலகம் செய்பிழையும் உண்டோ 

ஆதலால் முனிவாயல்ல அருந்ததி அனையகற்பின் 
காதலாள் துயரம் நீக்கி தேவர்தம் கருத்தும் முற்றி 
வேதநூல் முறையில்யாவும் விதியுளி நிறுவிவேறும் 
தீதுளதுடைத்தி என்றான் சேவடிக்கமலம் சேர்வான் 

புயல் நிறவண்ணன் ஆண்டுப் புண்ணியன் உரைத்த சொல்லைத் 
தயரதன் பணியீதென்னச் சிந்தையில் தழுவி நின்றான் 
அயல்இனி முனிவதென்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் 
செயல்இனிச் செயல் எனறெண்ணி கண்ணியசீற்றம் தீர்ந்தான் 

ஆயபின் அமலன் தானும் ஐயநீ அமைதி என்ன 
வாயிடை மொழிந்ததன்றி மற்றொரு செயலும் உண்டோ 
போயதவ் அரக்கன் எங்கே புகல் எனப் புள்ளின் வேந்தன் 
ஓய்வினன் உணர்வுதேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் 

( சடாயுஉயிர்நீத்தபடலம் 121-127 } 

சீதையின் பிரிவாற்றாமல் ஸ்ரீராமர் இரங்கல் 

இந்தனம் எனைய அன்ன காரகில் ஈட்டத்தோடும் 
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப்பூவும் 
சிந்தினன் மணலின் வேதி தீதற இயற்றித் தெண்ணீர் 
தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான் 

ஏந்தினன் இருகைதம் மால் ஏற்றினன் ஈமம் தன் மேல் 
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சார 
காந்தெரி கஞலமூட்டி கடன் முறை கடவாவண்ணம் 
நேர்ந்தனன் நிரப்பும் நன்னூல் மந்திர நெறியில் வல்லான் 

தளிர்த்தன அனைய மேனித்தாமரைக் கெழுமுசெந்தேன் 
துளித்தன போலநீங்காத் துள்ளிசேர் வெள்ளக்கண்ணன் 
குளித்தனன் கானயாற்றில் குளித்தபின் கொண்ட நல்நீர் 
அளித்தனன் அரக்கர் செற்றசீற்றத்தான் அவலந்தீர்ப்பான் 

( சடாயுஉயிர் நீத்தபடலம் 134 , 135 , 136 ] 
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் 
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் 
பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால்கரி 
ஒடித்த கொம்பனையாள் திறத்து உன்னுவான் 

வாங்குவில்லன் வரும் வரும் என்று இரு 
பாங்கரும் நீள்நெறி பார்த்தனளோ எனும் 
வீங்கும் வேலை விரிதிரையாம் என 
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் 

பூண்ட மானமும் போக்கருங் காதலும் 
தூண்ட நின்றிடை தோமுறும் ஆருயிர் 
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான் 
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்என்பான் 

கூதிர் வாடைவெங் கூற்றினை நோக்கினன் 
வேத வேள்வி விதிமுறை மேவிய 
அதை என் வயின் தீர்ந்தனளோ எனும் 
போதகம் எனப் பொம்என் உயிர்ப்பினான் 

நீண்ட மாலை மதியினை நித்தலும் 
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் 
பூண்ட பூணவள் வாள் முகம் போதர 
ஈண்டு சால விளங்கினை என்னுமால் 

மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவிவரப் 
பயிலும் பிடியும் கடகளிறும் வருவதிரிவ பார்க்கின்றான் 
குயிலும் கரும்பும் செழுந்தேனும் குழலும் யாழும் கொழும்பாகும் 
அயிலும் அமுதும் சுவை நீத்த மொழியைப்பிரிந்தால் அழியா னோ 

( அயோமுகிப்படலம் 9 -11 , 13 , 15 , 20 , 29 ] 
கவந்தன் வதையும் துதியும் 

அவ்விடை எய்திய அண்ணல் இராமன் 
வெவ்விடை போல் இளவீரனை வீர
( திருவடி சூட்டு படலம் 131 , 133 , 134 ] 

ஸ்ரீ ராமஜெயம் . 

மூன்றாவது ஆரணிய காண்டம் 

ஸ்ரீ ராமர் அத்திரியைக் கண்டு தண்டகம் ( சர்தல் " 

துதிபெறு தம்பியர் தாய்மார் மந்திரிமார்கள் 

தொல் முனிவர் புரசனங்கள் குகன் போனாலும் 
பதிவுறும் நம் இருப்பிடத்தைக் கண்டு கொண்டார் 

பரிவினால் வந்துதினம் சூழ்வார் என்று 
சதியெனும் சானகிபின்னும் தம்பி முன்னும் 

தான்வரச் சித்திரகூட மலைக்கப் பாலே 
உதயரவி முன்பனிபோல் முனிவர் துன்பம் 

ஒழிக்கின்றான் ஸ்ரீராமன் வழிக்கொண்டேனே 


கண்ணிகள் 

விண்டான் 
அந்த 
கண்டான் 
1. வழி சொண்டு ராகவன் 
வழியில் அத்திரி முனியைக் 
பொழியும் ஆசீர்வாதம் 
பூங்கனி கிழங்கமு 
முனி 
கொண்டான் 
தந்த துண்டான் . சாயை - 

2. அழுக்கில்லாத சொர்ணச் 
ஆடை பணிகள் வெகு 
செழிக்கும் சீதைக்கொரு 
செய்தாளே முன் அந வாயே 
அன்பு 
தாயைப் 
போலே 
சூயை . 


-- 


3. அது கொண்டு முனிவன் அவ் 
அனுமதி கொண்டு அவர் 
முதுதண்ட காரணியம் 
மூவரும் சென்றாரே 

அன்னை இடத்து 
முன்னே 
நல்ல 
தன்னைக் 
கண்டு 
பின்னே . 

விராதன் வதையும் துதியும் 
பொய்கலந்த விராதன் அந்த வனத்தே வந்தான் 
பூவைசன கியை எடுத்துக் கொண்டான் , ராமன் 
மெய்கலந்த தம்பியும் தா னும்போர் செய்தான் 
விட்டிலன் என்றவர்களையும் எடுத்துக் கொண்டான் 
மைகலந்த தோளையிரு வோரும் வெட்டி 
மாய்த்திட்டார் அதம்படலால் அரக்கன் ஆங்கே 
கைகலந்த திய்வதே கத்தைப் பெற்றான் 
கதிசொல்வான் ஞானமுள்ள துதிசொல்வானே .. 


பல்லவி 
அறிவார்யார் உன்னை - அறிவார்யார் 
( அறி ) 

அநு பல்லவி 
அறிவார் ஆர்மா னிடன்போலே குறியாவேஷம் கொண்டதாலே 
சிறியேன் செய்தபிழைதன்னைக் குறியாதேராக வா உன்னை ( அறி ) 

சரணங்கள் 
1. எடுப்பானும் எவர்க்கும் இன்பம் கொடுப்பானும் குட்சியினிலே 
விடுப்பானும் ஆலிலைமேலே படுப்பானும் நீஆகவே பா ராட்டுவாய் கதியைக் காட்டுவாய் 
சாட்டையில்லாப் பம்பரம் போல் ஆட்டுவாய் உன்மகிமையை ( அறி ) 

2. தாயறியும் பிள்ளை தன்னைத் தாயையும் பிள்ளை அறியும் 
நீயறியும் உயிர் உன்னை ஆரறியா தென்ன இந்திர 
சாலமோ இதென்ன 
கோலமோ - உனது 
காலாலே முடிந்ததனைக் கையாலே அவிழ்க்கப் போமோ 
( அறி ) 

3. அரவம் ஆகிமேல் உகந்தாய் ஒருகொம்பினாலே சுமந்தாய் 
சரணம் அதினால் அளந்தாய் பெருநில மங்கைமேல் வைத்த ளையாள் 
மேகாமோ -- உன் மார்பில் 
ஏகமாய் இருக்கின்றவள் வேகமேசெய் யாளோஉன்னை 
தாகமோ ( அறி ) 

4 உள்ள சராசரம் எல்லாம் வள்ளலேஉன் நாபிமலர்ப் 
பொள்ளலில் வந்தும் ஒருவர் பிள்ளை என நீவந்தது 
இதென்ன மாயமோ -- சேற்றிலே 
மேயும்பிள்ளை பூச்சிபோலே தோயவும் தோயாதஉன்னை ஞாயமோ ( அறி ) 

5. வேதத்தின் மேலே வேதாந்த நாதத்தின் மேலே ஞானிகள் 
போதத்தின் மேலே விளங்கும் பாதத்தை என்மேலே வைத்தாய் 
யோக்கியனோ 
சிலாக்கியனோ சுருதி சொல் 
வாக்கியனே சுவாமி எனது பாக்கியமே பாக்கியம் உன் தன்னை ( அறி ) 

அடியேன் 
6. பா கண்டு சொல்லாளை இந்த நாய் கண்டதென்று கொள்ளாதே 
தாய் கண்டு பொறுக்காதத்தை ஊரோசண்டு பொறுக்கும் மலர்த் 
பன்னிரு 
எவர்க்கும் 
வாமனே எனும் சீதாபி ராமனே உன்பெருமையை ( அறி ) 
தாமனே 
நாமனே 

தண்டகவனரிஷிகள் ஸ்ரீராமரோடு முறையிடல் 

துதிவிரா தன்வணங்கி உயரப் போனான் 
சுவாமிசர பங்கன் ஆசிரமத்தில் போனான் 
அதில் எதிர்கண் டிந்திரனும் போனான் ராமன் 
அருளமுனி தம்பதியோ டளவிப் போனான் 
கதி தருதண் டகவனத்து முனிவர் தம்மைக் 
கண்டுகனி யமுதையன் உண்டி ருந்தான் 
சதி செயும் ராக்ஷதராலே கொஞ்சச்சீவன் 
தரிக்கின்றார் அவர்கள் கையை விரிக்கின்றார் 

கண்ணியன்
1. ராமபத்திரா ராமச்சந்திரா ராமா ஆ 
பூமிச்சுமை கழிக்கும் தர்மபுத்திராஆ 
2. அரக்கர்கையால் நெருக்கியிட ஆலைக்கரும் 
நெருக்கிடையாய் வருந்தும் எம்மைநிலை நிறுத்தாய் 
பெனத்தானே 
எங்கோனே 

3. விழல் எனராட் சதநெருப்பால் வெதும்புகிறோம் 
மழைமுகம்கண்டிடும் பயிர்போல் மகிழ்ந்தோம் நீ 
ஒருகாலே 
வரலாலே 
போனோமே 

4. புரைசேரும் ராட்சதரால் பூனைகளாய்ப் 
அரைசேஉன் வரவுகண்டோம் ஆனைகள்போல் 
ஆனோமே 

5- வள்ளல் தச ரதன்மகனே மனக்கவலை 
எள்ளளவுன் கிருபைக் கண்ணால் எங்கள் முகம் 
தீராயோ 
பாராயோ 

6. பஞ்சுபறந்தாலும் அய்யா படியுமல்லோ 
நெஞ்சுபறந்திடு மதற்கு நிலைகாணோம் 
ஒருதேசம் 
லவலேசம் 

7 உத்தமனே அரக்கரை வேரொடும் பிடுங்கி 
இத்தனைபேர் செயுந்தவங்கள் எல்லாம் நீ 
பிறிவாயே 
பெறுவாயே 

8. புலிக்கூட்டம் திரிகாட்டில் புகுந்திடும்மான் 
என நாமே 
கலிக்கி ராட்ச : தர் திரியும் காட்டில் இருக் கின்றோமே 
9. இயற்கைகுலைந் தரக்கர்களால் இறந்து விட்ட்டாம் பேர் நாமம் 
வயிற்றினில் வாள் கட்டிக்கொண்டு மறந்து விட்டோம் செபஓமம் 

10. உங்காரம் செயில் அரக்கர் உலகில் என்ன 
இங்கேநீ இருக்கிலவர் எட்டியும் பார்த் 
படுவாரோ 
திடுவாரோ 


ஸ்ரீராமர் தண்ட கவன ரிஷிகளுக்கு அபயமீதல் 

தருக்களும் மலையும் : சூழ்ந்த தண்டக வனத்தோ ரிந்த 
வருத்தம் ஆம் மொழியைக் கேட்டான் வணங்கியே ராமன் நீங்கள் 
செருக்கியே தவங்கள் செய்வீர் தேவரீர்க் கேவ லாளாய் 
இருக்கிறேன் அரக்கர் துன்பம் இனிவிடும் எனச்சொல் வானே 

பல்லவி 

தண்டக 
அஞ்சா திருங்கள் சந்நியாசிகளே 
ஆரண்ய வாசிகளே ( அஞ்சா ) 

அநுபல்லவி 
அஞ்சா திருங்கள் உங்கள் ஆசீர்வா தந்துணை 
அப்புறம் ராட்டதர்க் குண்டென்கை யிலக்கனை 
செஞ்சா மாருதம் போலவே நொடிக்கிறேன் 
பஞ்சாகப் பறந்தோட அடிக்கிறேன் ( அந் ) 

கொல்லாமல் விட்டால் சொல்லாமல் 

1. கண்டோரைக் கொல்லுவேன் 
காகுத்தன் என்று நீர் 
மண்டி எதிர்த்து முன் 
வந்து வணங்கினார் காலில் 
நில்லாமல் 
அல்லாமல் 
எண்டிசைமேல் அவராலே 
ராட்சத சேனைகள் வந்து போ 
அண்டபகிரண்டம் ஆ 
அப்புறம் போனாலும் என்கணை 
ஆனமட்டும் 
ராடட்டும் 
யிரத்தெட்டும் 
யே எட்டும் ( அஞ் ) 


2. அந்தண ராலே 
ஆவி கொடுத்தவர் 
முந்திய தேவர்க்கும் 
மூர்த்திகள் ஆவார் 
பசுவாலே 
தங்கள் 
விண்மேலே 
அப்பாலே 
சொல்லும் 
அதனாலே 
இந்திரன் ஆன தேவன் வந்து 
என்றாலும் ராட்சதப் போரில் 
சுந்தர கோதண்ட வாளி 
சூரியனைக் கண்ட பனிபோல் 
தடுக்கிறேன் 
அடுக்கிறேன் 
விடுக்கிறேன் 
ஒடுக்கிறேன் 
( அஞ் ) 


முடி 
நிலங்கீற 
தடுமாற 


3. மங்கியே தாயார் 
மன்னன் உயிரும் 
எங்கள் பரதனும் 
ஏன்வந்தேன் என்சென்மம் 
வேசற 
ஈடேற 
நான் 
உங்கள் பணிவிடை நானே 
பொறுக்கிறேன் 
உக்கிர கோதண்டத் தில்நாணி இறுக்கிறேன் 
எங்கெங்கும் என்கணையாலே 
நொறுக்கிறேன் 
ராட்சதப் பூண்டெல்லாம் வேரோ டறுக்கிறேன் 
( அஞ் ) 

ஸ்ரீ ராமர் பஞ்சவடி தீரத்தைக் காணுதல் 

அருள்முனிவர்க் கிந்தவகை தேற்றித் தண்ட 
காரணியந் தனிற்பத்து வருஷம் நீக்கி 
வரும் வழியில் வதிஷ்டமுனி தவமும் கொண்டு 
வந்தகஸ்தி முனிவரனை வணங்கி அன்னான் 
தருசிலையும் புரமெரித்த கணையும் கூடும் 
சங்கையிலா தேதரித்த துங்க ராமன் 
பரிவுள தம்பியும் சனகிதானும் செல்லும் 
படிகொண்டான் பிறகுபஞ்ச வடிகண்டானே 

ஸ்ரீ ராமர் சடாயுவைக் கண்டு பஞ்சவடி தங்கல் 

அகஸ்திய முனியை அனுப்பிக்கொண் டந்தவ ழியிற் சடாயுவெனும் 
தகப்பன் உரைகொண்டவன் சாட்டத்தருநீர் கோதா விரிதாண்டி 
சகிக்கும் இளையோன் செய்தபர்ன ச்சாலை தனிலே சனகியுடன் 
மிகுத்தோர் பஞ்ச வடியிலுள்ளோர் விருந்தாய் ராமன் இருந்தானே 

பல்லவி 
இருந்தானே ராமச்சந்திரன் - பஞ்சவடியில் 
இருந்தானே ராமச் சந்திரன் ( இருந் ) 

சரணங்கள் 

1. இருந்தானே ராமச் சர்திரன் ரிஷிகளைக் காக்கும் தந்திரன் 
வருந்த ராட்சதர் கூடி - வரும் வழிதன்னை நாடி ( இரு ) 


2. நிருதர்கள் பசி பார்த்து -- நிரைநிரையாக்கை கோத்து 
வரும் விகாதத்தைத் தீர்த்து - மாமுனி வோரைக் காத்து 
3. அலைந்த முனிவர் சோகம் - ஆகுலமெல்லாம் போக 
இலங்கையில் அனுபோக - ராட்சதர்க் செமன் ஆக ( இரு ) 

4. பலத்த ராட்சதர் ஆட்ட பாட்டங்கள் எல்லாம் மாட்ட 
சலித்தபேர் துன்பம் ஓட்ட தர்மத்தை நிலைநாட்ட 

சூர்ப்பணகை ஸ்ரீ ராமனரக் கண்டு மோகித்தல் 

இருந்தரா கவன் பூமேனி எழில் எல்லாம் நோக்கி ஆசை 
புரிந்தசூர்ப் பணகை லங்கா புரிராவ ணற்குத் தங்கை 
அருந்தும்மோ கத்தால் ஐயன் அடிமுடி அளவும் கண்டு 
தெரிந்துள்ளே எண்ணி நெஞ்சம் திருகுவாள் உருகு வாளே 

கண்ணிகள் 
1. தேவனோ மனிதன் தானோ யாவனோ யௌனம் உள்ள 
சித்தனோ இவன் கர்த்தனோ பிரமன் 
பாவனையாற் கண்ட பெண்கள் -- ஆவியைக் கொள்ளை கொளென்று 
படைத்தானோ என்னை உடைத்தானோ 

2. எட்டானைக்கையும் இவன்கை - மட்டாமோ சொரசொரென்ன 
இருக்குமே - உள்ளே சுருக்குமே முன்னே 
பட்டமன்மதன் தவம்செய் - திட்டிந்த உருவாய்ப்புறப் பட்டானோ 
தவசு தொட்டானோ 

3. ஈசனுக்கு முக்கண் இந்திர ராசனுக்கோர் ஆயிரங்கண் 
எண் ஆச்சே இவற்கிரு கண் ஆச்சே இவனைப் 
பேசினால் என் சாமி இவன் கேசவன் தானோ நானொன்றும் 
பிறியேனே ஆரோ அறியேனே 

4. புந்திபவளத்தையிவன் செங்கனிவாய்க் கொப்புச் சொல்லப் 
போகுமோ நிகர் - ஆகுமோ ஐயோ 
அந்தவார்த்தையைத் துப்பென்ற - நிந்தையால் பவளம் துப்பென்று 
ஆச்சுதே 
போச்சுதே 
உவமை 
5. முடிவைத்த குழல் சடையா - முடியாவிட்டால் பெண்களெல்லாம் 
முடியாரோ 
மனம் 
மடியாரோ இவன் 
அடிவைத்த பூமிப்பெண் மேனி - புளகித்தாற் போலல்லோ புல்லை 
அரும்பினாள் 
மெத்த விரும்பினாள் 

6 -மரவுரிசேர் இடைபீதாம் பரமதைச் சேராதென்ன 
மாயமோ 
ஞாயமோ 
சந் திரன் இவன் முகமென்றாலும் வரவர அதுக்குங்கலை 
தேயுமே 
களங்கம் தோயுமே 

7. நவஞ்செய்த தாமரைப் பெண்ணும் செபம் செய்கிறாள் இவன்மார்பில் 
வந்து - கூடவோ - ஐயோ 
தவஞ்செய்ய வந்தானோ நான் முன் - தவம் செய்ததற்காகக் காட்சி 
தந்தானோ - தேடி - வந்தானோ 
நாடவோ 

8. ஏலும் இவன் இலக்கணம் - எல்லாம் செய்த அயனே மோசம் 
இட்டானோ - மதி - கெட்டானோ - இவன் 
காலின் தூளுக் கொவ்வா இந்திரன் மேலுலகை ஆள்வதென்ன 
கர்மமோ 
இது - தர்மமோ 

9 எடுத்திவன் சுந்தரத்துக்காம் - அடுக்கான பூஷணம் பூணா 
திருப்பான் என் - அரு - வருப்பான் என் - சும்மா 
விடுத்தவன் அல்லவோ பொன்னின் - குடத்துக்குப் பொட்டிட்டுப் பார்க்க 
வேணுமோ அதிகம் - காணுமோ 

10. தப்பிலா இவனைச் சேர - இப்படி பிர்ம்மா எனக்குத் 
தந்தானோ - இவனும் - வந்தானோ - ஓகோ 
எப்படி ஆனாலும் இவன் - பொற்புயம் தன்னைச் சேராமல் 
இருப்பேனோ - ஆவி - தரிப்பேனோ 

11. இந்தவிதம் எண்ணி மலர்ச் செந்திருப்போல் மாயவேஷம் 
இட்டாளே - மானம் விட்டாளே நல்ல 
பைந் தொடியாய்ச் சூர்பணகை - வந்து ராமச்சந்திரன் முன்னே 
படர்ந்தாளே - கிட்ட - நடந்தாளே 

ஸ்ரீராமர் பக்கல் சூர்ப்பணகை வருதல் 

அட்டி சொல்லா தன்னைஉரை கொண்ட ராமன் 
ஆனைவரு கிறவழியைப் பார்க்கும் சிங்கக் 
குட்டியைப்போல் அரக்கர்வரும் வழியைப் பார்த்துக் 
கொண்டிருந்தான் அவனிருந்த சாலை முன்னே 
கட்டியிடும் பிணியுள்ளே அடங்கி நாச 
காலம்வர வெளிவந்தாற் போலே பொல்லா 
மட்டிரா வணன் குடியை நாசம் செய்யும் 
வகைவந்தாள் எனச்சூர்ப்பணகைவந்தாளே

பல்லவி 
வந்தாளே 
சூர்ப்பணகை 
வந்தாளே ( வந் ) 

அநுபல்லவி 
வந்தாளே மன்மத சதகோடி வடிவுள்ள 
பந்து முலையை முடி 
பாவம் செய்யும் நிர்மூடி 
ராமன்மேல் மயல் மிகநாடி 
பஞ்சவடியைத்தேடி 
ராவணன்குடிகேடி ( வந் ) 

சரணங்கள்  
1. ராவணன் குபேரனுக்குத் 
தங்கை -- பசையில்லாத 
நன்மைத்துனர் கொண்டுவந்த 
நங்கை 
தேவரீருக்கிவள் பெண்டல்ல 
நீலி 
சீதைக்குத் தெரியுமோ ராட்சத சோலி 
ஏவலுக் கெளியவன் நான் அனு 
என்று சொல்லி அரக்கர் துடை 
காலி ( வந்தா ) 
2 -மானிடப் பெண்கொண்டீர் என்ன 
கண்டோ என்னுடன் 
மருவி வாழ்ந்தால் உமக்குப் பயம் உண்டோ 
ஆனாலும் என்னபாவி கருப்பு 
வில்லி 
ஐங்கணை பிளக்குதே என்உடல் செல்லி 
சேனைலீலை செய்வேன் நான் சாம 
வல்லி 
திரட்டுப்பால் குமட்டுதோ உமக்கென்று சொல்லி ( வந்தா )
3. எதிரிலே வந்ததே உமது 
ருவோரும் இசைந்ததே காந்தர்வ 
சதிசெய்யேன் எனக்கும் உமக்கும் ஏக 
சம்மதி ஆனதே நல்லமுகூர்த்த 
கதகதென் றெரியுதே காமாக்கினி 
கட்டிக்கொள்ளும் என்று தில்லுமுல்லும் 
வாசி 
வீசி 
பேசி ( வந்தா ) 

ஸ்ரீராமருக்கும் சூர்ப்பணகைக்கும் சம்வாதம் 

வத்தசூர்ப்பணகை தன்னை மதித்தரா கவனும் நோக்கி 
அந்தமா னிடவர் பெண்ணோ அரம்பையோ அறிவோம் என்றும் 
தொந்தமா தவத்தோர் காணச் சொல்லறிந் துரைப்பாள் என்றும் 
தந்தவார்த் தைக்கு வார்த்தை சரிசரி எதிர் சொல்வாளே 

1. செம்பவள வல்லி போல எங்கேவந்தாய் வந்த 
சேதி என்ன சொல்வாய் 
கும்பிடப் போன தெய்வம் எதிர்வந்த தென்றாசை 
கொண்டு காணவந்தேன் 
பெண்பாவாய் 
என்கோவே 
பெண்பாவாய் 
2. ஆசை வில்லின்மேலோ மரவுரிமேலோ தின்னும் 
அருங்கனி மேலோ சொல் 
ஆசைவில்லின் மேலில்லை மரவுரி மேலில்லைஉன் 
அதரக்கனிமேல் உண்டு 
என் கோவே 
பெண்பாவாய் 
3. அதரக் கனிகொடுக்க தவசிகட்கடுக்குமோ 
அடுக்காத வார்த்தை சொன்னாய் 
அதரக்கனி வதிஷ்டர் அருந்ததி கீகலையோ 
அவர் தவசியல்லவோ 
என்கோவே 
பெண்பாவாய் 
4. தவசியது செய்தாலும் பிரம்மகுலம் உன்குலம் 
க்ஷத்திரிய குலம் என்குலம் 
வையவை என்பதென்ன காமுகருக்குக் கண்ட 
டத்தில் என்பது பொய்யோ 
என்கோவே 
5. உன்வீட்டில் அண்ணனான ராவணன் அறியாமல் 
உன்கைப் பிடிக்கல் ஆமோ 
பெண்பாவாய் 
என்வீட்டில் அண்ணனும் நான் உன்னவள் ஆனபின்பு 
இசைவதற் கைய மில்லை 
என்கோவே 
6. தன்வீட்டு விளக்கென்று முத்தம் இடுவாருண்டோ 
தகுதியல்லவே யது 
பெண்பாவாய் 
என் வீட்டுக்காரனானால் அரக்கர் உறவு முண்டாம் 
இந்திரபட்டமும் ஈவேன் 
என்கோவே 
7. அரக்கர் உறவும் பெற்றேன் உன் போகமும் பெற்றேன் 
அருந்தவம் பலித்ததே 
பெண்பாவாய் 
பெருக்கம் என்னசொல்ல என்சுகம் பெற்றபின்பு 
பெரும்பாக்கியம் வேறுண்டோ 
என்கோவே 
8. தவசிகளுக்கிதெல்லாம் ஏதுக்குக் காட்டினில் 
தவசே பெரும்பாக்கியம் 
பெண்பாவாய் 
தவசி தவரி என்று மெள்ள மெள்ளச் சொல்லி 
தள்ளி விட்டிடல் ஆமோ 
என்கோவே 
பெண்பாவாய் 
9. தனியாக உன்னை நான் கைப்பிடித்தால் உன்தன் 
சாதியார் என்செய் வாரோ 
தனியாய் முருகன் வள்ளி கைப்பிடித்தானே அந்த 
சாதியார் என்ன செய்தார் 
என்கோவே 
10. அநியாய காரியத்தைப் பயம் இல்லாமல் செய்தால் 
ஆர்க்கும் சம்மதியாமோ 

பெண்பாவாய் 
னிஇரு வரும் ஒத்தால் ஒருவர்க்கும் பயமில்னல 
எவர்க்கும் சம்மதி ஆமே 
என்கோவே 
11. ஆனால் மனுஷகணம் ராட்சதகணத்தோடே 
ஆடுமோ கூடுமோ 
பெண்பாவாய் 
நானானால் எப்போதும் தேவருக்கேவல் செய்வேன் 
ராட்சத சங்கையில்லை 
என்கோவே 
12. சங்கைஏன் என்றாய்க்கு பேரனும் உனக்கொரு 
தமையன் என்றாய் அல்லோ 
பெண்பாவாய் 
தங்கை ஆனாலும் என்ன தமையன் ஆனாலும் என்ன 
சந்தோம் உனக்கென்ன 
என் கோவே 
13. அங்கவன் பகை வந்தால் சங்கரன் பகைவரும் 
எங்கும் பகையாகுமே 
பெண்பாவாய் 
திங்கள் சூடியும் மாலும் நான்முகனும் நீயென்றன் 
திருஷ்டிக்கி காணுகின்ற 
என்கோவே 
14. திருஷ்டிக்குக்கண்டாலும் ஒருத்தி இருக்கவேறே 
தேவை என்ன சொல்வாய் 
பெண்பாவாய் 
மட்டுச் சொல்லுகின்றாயோ பெருமரம் சுற்றிய 
வள்ளி விடுவதுண்டோ 
என்கோவே 
15. விட்டிடுமோ என்றாய் விளையாட் டுப்பூசலிது 
வினைப்பூசல் ஆகுமோ 
பெண்பாவாய் 
தட்டுதலைச் சொல்லி என்னைப்பயம் உறுத்தி 
தடுத்துவிட்டிடல் ஆமோ 
என்கோவே 
16. ஒட்டாரங் கட்டாதே ளையோன் அறியாமுன்னே 
ஓடிப்பிழைத்துப் போவாய் 
பெண்பாவாய் 
அட்டா துட்டிகள் பேசி அகற்றுகிறா யோ நல்ல 
தாகட்டும் பார்க்கிறேன் 
என்கோவே 

சூர்ப்பணகை தன் உறவை நினைந்து புலம்பல் 

வாதாடும் சூர்ப்பநகை தன்ளை நோக்கி 
மணிவண்ணன் எனக்கிந்த மனையாள் சீதை 
போதாதோ ஓர்உறையில் இரண்டு வாளோ 
புறங்க க்கும் தம்பிக்கு மனையாள் இல்லை 
நீதானோ போ என்வே சீதை மேலே 
நேர்வாளை லட்சுமணன் கூர்வா ளேந்திக் 
காதோடு மூக்கரிந்த பின்னும் பல்லுக் 
கருகுவாள் உறவை நினைந் துருகுவாள்

கண்ணிகள் 
1. அருமைப் பிறப்பே அண்ணேன் 
ராவணனே என்னை 
அருமைத் தங்கச்சி என்ற 
ராவணனே 
உன் தன் 
கருவிழி போலே காத்த 
கண்ராவி என்ன சொல்வேன் 
ராவணனே - என் தன் 
ராவணனே 
என்னை 

2. சிங்கம் இருக்கக்குட்டி 
செல்வத்தங்கை ஒருவர் 
அங்கப்பழுது மனிதன் 
அஞ்சா நெஞ்சு படைத்தும் 
வசமாமோ 
உன்தன் 
தொடப்போமோ 
செய்வானோ செய்தும் 
உய்வானோ 
3 -ஊர்க்குருவி உயரப் 
உயர்ந்த கருடன் ஆமோ 
பார்க்குள்ளே மனிதர் 
பாதத் தூளுக் கொப்பாரோ 
பறந்தாலும் 
ஒருக்காலும் 
மிகுந்தாலும் 
எக்காலும் 
அது 
இந்த 
உன்தன் மனிதன் 

4. எட்டுத் திக்கும் உன் பேரைப் 
பழித்தானே 
என்னையும் கொண்டையைப் பிடித் திழுத்தானே அய்யோ 
கிட்டிச் செவியரிந்து 
முனைந்தானே 
உன்னைக் 
கிள்ளுக் கீரையாகவே 
நினைந்தானே 

5--துணைகும்ப கர்ணா இங்கே 
தூக்கப் பேய்பிடித்த நீ 
பிணமே கரதூஷணா 
பெண்பிறந்து பட்டதைநீர் 
மேவாயோ என்றும் 
ஆவாயோ அடா 
வாரீரோ 
பாரீரோ 
நான் 
6. அத்தைமரு மகன் என்ப 
அஸ்திரம் விட்டால் மனிதன் 
சித்தே என் போல் உன்தன் 
திரனை செயித்த தெல்லாம் 
திதுதானோ 
பிரம்ம 
அழியானோ - இந்திர 
முனைபோச்சோ -- தேவேந் 
விழலாச்சே 

7. குட்டி மனிதன் என்னை 
குலை கலங்கிடவே போட் 
எட்டிப் பார்த்திவன் அண்ணன் 
ஏவிவிட்டறியான் போல் 
வதைத்தானே என்தன் 
டுதைத்தானே 
பிரிந்தானே - இவனை 
இருந்தானே 

8. இந்திர சந்திரா தியர்கள் 
எந்தெந்த வீரர்களும் 
பந்தியிருக்கும் உங்கள் 
பறிபோய் நான் வருவேனோ 
பணி கேட்க லகில் 
முடிதாழ்க்க - வந்து 
சபைநேரே மூக்கும் 
துரைமாரே 

சூர்ப்பணகை ஸ்ரீராமருக்கு மீளவும் இதவுரைத்தல் 

பேய்வடிவாம் அரக்கியிந்தப் படி அழுதாள் ராமனிடம் 
பின்னும் வந்தாள் 
தேவநீ அறியாதே இளையவன் இப்படி செய்தான் 
செய்தால் என்ன 
கோவமுள்ள இடத்தில் அல்லோ சந்தோஷம் உண்டென்னைக் 
கூட்டிக் கொண்டால் 
ஆவதுமெத் தவும்உண்டு கேள் என்பாள் மருவி என்னை 
ஆள் என் பாளே 


பல்லவி 
எனக் 
என்னுருவில் கொஞ்சம் கொய்தீர் 
கென்ன தாழ்ச்சிநீர் செய்தீர் ( என் ) 

அநுபல்லவி 
அன்னியள் ஆகஎன்னைப் பிரிய விடாமல் என் 
அழகுகண் டொருவர்கண் ஏறுபடாமல் ( என் ) 


சரணங்கள் 

1-நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் உம்மை 
நானே சுமந்து கொண் டெட்டவோ 
ஆரும் 
திடுக்கிடவே உம்மை எதிர்த்தபேர் தலைகளைத் 
திருகி மலைமலையாக் கொட்டவோ 
நல்ல 
குடித்தனத்துக்கிவள் ஆகும் ஆகாதென்று 
குறிப்பதின்னம் முட்ட முட்டவோ 
கேட்டால் 
இடுப்பு சீதைக்குக் கொஞ்சம் மூக்கிவளுக்குக் கொஞ்சம் 
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ எண்ணி ( என் ) 
குற்றம் போலே செய்து குணம் செய்தீர் என்னைக் கொட்டிக் 
கொள்ளும் காமப் பேயைக் 
கொல்லவோ- நல்ல 
பத்தினியாக நின்றிராமல் காய்கனிகளைப் 
பறித்துக் கொண்டுவரச் சொல்லவோ - உமது 

2 --அஸ்தம் பட்ட போதே சொந்தம் ஆனேன்இனி 
அரக்கரை வேரொடும் 
கெல்லவே 
நல்ல 
புத்தி பண்ணி வைத்துக் கொண்டீர் பொங்கியும் பால் 
புறம் போகல் ஆகாதென் 
றல்லவோ சாமி ( என் ) 

3. பதிக்குப் போகும் போது சீதைக்குமேலான 
பருவப்பெண் என் முன்னே 
நிற்கலாம் எம் 
கதிக்குப் பழுதுகண்டால் அடங்கா தவளை நாம் 
கண்டித்தோம் என்று ஒப் பிக்கலாம் - நல்ல 
துதிக்கென்ன காண் முட்ட நனைந்தார்க் கீரமில்லை 
எனக்கும் அப்படியே மெய்ப் பிக்கலாம் சாமி 
அதுக்கல்ல என்றாலும் அரக்கர் மாயைகள் அறிந் 
தவள் எனவே கிட்ட வைக்கலாம் என்றோ ( என் ) 

சூர்ப்பணகை கரனோடே முறையிடல் 

பன்னியசூர்ப் பணகையிந்தப் படிக்கே சொன்னாள் 
பாராமல் ஸ்ரீராமன் துரத்தி விட்டான் 
அந்நிலையே மூக்கறைச்சி மூளியாகி 
அரக்கிசென்றே அண்ணனுக்காப் பாடு பட்டேன் 
பின்னை ஒன்றால் பட்டதில்லை உங்க ளோடே 
பெண்பிறந்து பட்டபிழை இதுதான் என்று 
மின்னிலைவேல் கரன் காலில் மரம்போல் சாய்ந்து 
விழுந்திட்டாள் அவன் கேட்க மொழிந்திட்டாள் 

பல்லவி 
கரனே நான் 
பட்டபாடு கேளாய் 
பட்டபாடு கேளாய் ( பட்ட ) 


1. பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்தவாளாய் 
குட்டி மனிதன் என்னைக்- கட்டியிழுக்கப்பின்னை 
பெட்டிப் பாம்பு போலே - நட்டி அண்ணனாலே ( பட்ட ) 

2. ஏதற்கும் பெண்ணைக்கண்டே - அண்ணனுக்குண்டே - என்று கொண்டே 
தூக்கப் போனேன் பெண்டு - காக்கும் மனிதன் கண்டு 
மூக்குங் காதும் ரெண்டும் - போக்கடித்துக்கொண்டு ( பட்ட ) 
3. திருத்தமா னசூரர் - இரண்டு வீரர் - நராவதாரர் 
அரக்கர் வேர்களைந்து - நறுக்கவே நினைத்து 
இருக்கிறாரே வந்து - ஒருத்திபெண் பிறந்து (பட்ட ) 
4. பங்கம் இன்னம் வேணுமோ - காதுதோணுமோ - மூக்குநாணுமோ 
லங்கை ஆளும் வல்லி - தங்கையான செல்லி 
மங்கையர்க்குள் நல்லி - உங்கள் பேரைச்சொல்லி ( பட்ட ) 

கரதூஷணத் திரிசிரர்களின் வதை 
காதலிசூர்ப் ப நகியிந்தப் படிக் கோடாலிக் 
காம்புகுலத் துக்குக்கே டென்றாற் போலப் 
பாதகனாம் கரன் முதலா னவர்க்குச் சொல்லிப் 
படைக்கடலை மூட்டிவிட்டப் பாலே நின்றாள் 
சாதகனாம் ராமச்சந்திரன் சாலை நீங்கிச் 
சண்டகோ தண்டத்தை வளைத்தம் பாலே 
ஓதம் எனும் அரக்கருயிர் முகுர்த்தம் தன்னில் 
ஓட்டினான் தருமம் நிலை நரட்டி னானே 

பல்லவி 
அடித்தானே ரகுராமன் 
கோதண்டம்கை 
பிடித்தானே செயராமன் ( அடி ) 

அநுபல்லவி 
அடித்தானே ரகுராமன் 
முடுக்கானகரநாமன் 
அனுப்பின பதினான்கு 
முனைத்தலைவரை ஆங்கு 
அரக்கிக் கண்காட்டியே 
பொருக்கென மூட்டியே 
அப்புரத்திலே ஒண்டக் 
கைப்பிடித்த கோ தண்ட 
அய்யன் கைகளில் வாரி 
எய்கின்ற சரமாரி 
அதினால் உரைக்கரும் 
பதினால் அரக்கரும் 
அலைகடல் போல் எழத் 
தலை தலை யாய்விழ 
ஆனைப்பட முடியச் ( அடி ) 

சேனைக்கடல் வடிய 
கரிகள் பலவும் சுற்றப் 
கட்டிய தேர்களும் ஒத்த 
கருந்துக ளால் அளைந்து 
காகுத்தன் சாலையைப் பற்றி 
கங்குகங்காய் முனை தரப் 
கதிகாணா வரப் 
கனகத் தேரொடும் கூடி - 
பனிமொய்த்ததென மூடி 
பரிகள் அதிலும் மத்தக் 
நட்டணை வீரரும் மெத்த 
பெருங்கடல் போல் வளைந்து 
மேகத்தைப் போலவே கத்தி 
பொங்கி அங்கே வரவர 
பதினாலாயிரக் 
கதிரவனைப் 
ராமனை மொய்த்துக் 

1. கரனும் தூஷணன்திரி சிரனும்வர அரக்கி 
களிப்பாகக் காட்டினாளே - நமனும்பசி 
இளைப்பாற மூட்டினாளே 
அத்தை ராகவன் 
கண்டானே தம்பியைக் 
கொண்டானே ஒருமனு 
காத்திரு சனகிதன்னை - இந்தச் சண்டையைப் 
பார்த்திரு முனையும் என்னை - என் 
என்று நாணியை 
காதண்ட இழுத்துமுனைக் - கோதண்டம் வளைத்து மழைக் 
கற்கடகச்சந்தி ரன்போலே 
சரமாரிகள் 
உக்கிரங் கொண்டு விடலாலே 
வல்லரக்கர்கள் 
கரம் அறுந்தவர்களும் 
கண்டம் கண்டம் 
துண்டம் துண்டம் 
சிரம் அறுந்தவர்களும் 
ஆனபேரும் கட்டைகள் போலே 
ஆனபேரும் இறுக்கிக்கட்டும் 
கவசங்கள் கிழிந்தோரும் துவசங்கள் கிழிந்தோரும் 
கடைவாய் கிழிந்தோரும் - பிடித்து வந்த 
குடைபோய் அழிந்தோரும் கணைதொடுக்கும் 
கைச்சிலை யானதும் அற்று வச்ச ஆயுதமும் அற்றுக் 
கையைக் கையைப் 
பிசைவாரும் 
குற்றுயிராகிப் 
பையப் பைய அசைவாரும் நெற்றிப் பிளந்து 
கத்தும் பரிகளும் தலை சுற்றும்பரிகளும் ரத்தம் 
கக்கும் பரிகள் அனேகம் 
- குடல் அறுந்து 
முக்கும் பரிகள் 
அனேகம் - மதயானைகள் 
கைத்தலம் பிளந்து பெரு மத்தகம் பிளந்துவைத்த 
காத்திரங்களும் 
பிளந்து 
நெருப்புப்போலும் 
நேத்திரங்களும் 
மலைமலையாக் 
பிளந்து 
கதறுண்டு சிதறுண்டு மதகுஞ்சரம் உருண்டு 
காடுகளா விழுந்ததுகள் கண்ணுக்கெட்டாத 
மேடுகளா 
எழுந்ததுகள் இவையறிந்து 
கடித்தானே இரும் பல்லைப் பிடித்தானே ஒருவில்லை 
காய்ந்தானே திரிசிரசன் ராகவன்மேலே 
பாய்ந்தானே குணமுரசன் 
பாய்ந்தவன் 
துர கதத்தையும் ஏறிவந்த ரதத்தையும் அய்யனவன் 
கைச்சிலையும் முறித்து விட்டான் 
அவனுடைய 
முச்சிரமும் தறித்து 
விட்டான் அவன் பிறகே 
காத்திருந் தெதிராலே ஏற்றவர்களை மேலைக் 
காற்றில் பஞ்சு கள் போலே தூற்றிவிட்டொருக்காலே 

2. வெற்றிராமன் தொடத்தொட அஸ்திரங்கள் படப்பட 
வீட்டில் ஓடுவாரையும் காட்டில் ஓடுவாரையும் 
வில்லைவிட்டெறி வாரையும் 
கொல்லையிற் பரிவாரையும் 
விலக்கங் கொண்டவரையும் 
கலக்கங் கொண்டவரையும் 
விருத்தம் செய்தீர் என்றும் நரர்க்கஞ்சினீர் என்றும் 
விசை கொண்ட தூஷணன் வசைகொண்ட பாஷணன் 
விசயத்தேர் பூட்டினானே சக்கரம் போலே 
திசைஎட்டும் ஓட்டினானே ஓட்டி எதிர்த்து 
விட்ட கணைகளும் 
வெடிபட 
பொடிபொடி 
தொட்ட - தொட்டகணைகளும் 
நீக்கினானே ராமன் அம்பாலே 
ஆக்கினானே 
பிறகே வந்த 
மேற்படைகளும் புரண்டு நாற்படைகளுந்திரண்டு 
வெகுவாகக் குதித்தாரே - எல்லாரும் ஒரு 
முகமாக 
மிதித்தாரே மிதித்தவர்கள் 
வெட்டும் வெட்டும் என்பார்சிலர் கட்டும் கட்டும் என்பார்சிலர் 
மெல்லும் என்பார் சிலபேர் நரன் இவனைக் 
கொல்லும் என்பார் 
சிலபேர் அரக்கர்விட்ட 
வேல்ஒடிந்து கால்ஒடிந்து கோல் ஒடிந் துதிரப்பெரு 
வெள்ளத்தில் மிதப்பாரும் ஆனைவிழுந்த 
பள்ளத்தில் பதைப்பாரும் கதிகலங்கி 
மெத்த உள்ளம் கெடநொந்து ரத்தவெள்ளந் தனில் வந்து 
விழுந்தார் அனேகம் அரக்கர் ரத்த வெறியால் 
அழிந்தார் அனேகம் அரக்கர் 
தூஷணன் கண்டு 
விளைத்தானே செருவில்லை வளைத்தானே கணைசெல்ல 
விடுத்தானே மழைபோலே 
ராகவன் அதைத் 
தடுத்தானே கணையாலே 
அதின்பிறகு 
விடுகணை பொடிபட ஒருகணை சடுதியில் 
மெய் தமுனையோடு தொட்டானே 
சாமிக்கு நெற்றி 
மத்தியிலேபட 
விட்டானே 
ரகுநாயகன் 
மீறி அவன் ஏறிவரு தேரதிலே சாரதியை 
வெட்டினானே கணை எய்து குதிரைகளைக் 
கொட்டினானே தலைகள் கொய்து கொய்ததல்லாமல் 
வில்லுந் துணிந்திட அவன் சொல்லும் துணிந்திடத் தேரை 
வேறுவேறு நொறுக்கினானே - அவன்கைகாலை 
கூறுகூறா நறுக்கினானே - நறுக்கினபின் 
மின்னும் அவன் எதிராகப் பின்னும் ஒருகணைபோக 
விரல் ஒத்துத் தொடுத்தானே 
தூஷணனும் 
சிரம் அற்றுப் படுத்தானே 
அதனைக்கண்டு 
விண்ணுலகில் அனைவரும் மண்ணுலகில் முனிவரும் 
வெருள் துன்பம் பிரிந்தாரே வாழ்த்தொடு புஷ்ட 
வருஷங்கள் சொரிந்தாரே 
அரக்கர்பட்ட 
வெற்றிநல் லோர்தொடுக்க ரத்தவெள்ளாறெடுக்க 
விசையமங் களம்பாடத் திசையெங்குங் கொண்டாட ( அடி ) 


3-தத்திவரும் பரிகளும் சுற்றிவரும் கரிகளும் 
தாவிவரும் பெருந்தேரும் சேவகம் பேசியபேரும் 
தளகர்த்த வீரரும் வளம்மிக்க சூரரும் 
தண்டுடனே எதிர்வரும் மண்டியசேனாதிபரும் 
சாரிசாரி யாகவந்து போரிலே மிகமுனைந்து 
தம்பி தூஷணன் பட்ட புண்பாடது முட்ட 
தணல் போல நிவந்தானே - சாதிலிங்கம்போல் 
ணைக்கண்கள் செவந்தானே செவந்தபின்பு தாக்கிய புலியை ஒத்து மூக்கிலே விரலைவைத்துத் 
தாழ்ச்சி இதுவென நொந்தானே - நொந்து பொல்லாத 
ராட்சத கரனும் 
வந்தானே வந்து சுற்றிலும் 
சதுரங்கத் தளத்தோடே ரணரங்கம் அதைத்தேடி 
சாமிராகவனைக் 
கண்டான் - மனிதன் இவன் 
ஆமென மனதிற் 
கொண்டான் சேனைகள்விட்ட 
சக்கரம் இருப்புலக்கை கப்பணம் முசுண்டி பண்டி 
சஸ்திரம்வே 
லாயுதங்கள் குறித்துவிடும் 
அஸ்திரம்சூலாயுதங்கள் 
பொடிப்பொடியாத் 
தறிபட்டும் முறிபட்டும் விலகச்சிலை வளைத்துச் 
சாய்த்தானே சரதாரை - ரகுநாயகன் 
தேய்த்தானே வெகுபேரை வரும் அரக்கர் 
தலையைச் சிலையை ரத்தின முடியைக் கொடியை வெட்டிச் 
சரித்தானே 
சிலகணையால் அடிவயிற்றை 
எரித்தானே 
சிலகணையால் இரைக்குவந்த 
சாகினியும் டாகினியும் காளிகளும் கூளிகளும் 
சதுர் கூடிப் பார்த்தாடுமே - கவந்தமதுக் 
கெதிராகக் கூத்தாடுமே படைகளெல்லாம் 
சரியானது கண்டு கரனானவன் முண்டு 
சாகசங்கள் செய்தானே - ஒருநொடியில் 
ஆயிரம் அம் பெய்தானே எய்ததுகண்டு 
சற்றுநேரத்தில் அய்யன் அத்தனைக் கத்தனைவிட்டு 
தவிடாக ஊதினானே - பின்னையும்சில 
அவன் மேலே மோதினானே அரக்கன் அங்கே 
சாதித்த கணையாலே ஆதித்த குலநாதன் 
தனுவையும் ஒடித்தானே 
தவமுனிவர் 
மனதையும் மடித்தானே 
ராமனுக்குத் கொடுக்க ஒரு 
தடத்தில் பரசுராமன் இடத்திற் பறித்த வில்லைத் 
ததியினில் 
எடுத்தானே வருணன் அங்கே 
உதவியாக் 
கொடுத்தானே 
சரத்தாலே ரகுவீரன் வரத்தாரை பயமெல்லாம் 
தணுத்த னே 
உளந்தனிலே 
துணித்தானே களந்தனிலே - இப்படி அந்த 
சனஸ்தான வருக்கத்தில் முனைந்தாரை முகுர்த்தத்தில் 
தான் ஒருவனுமாக வானவர் துயர்போக 
( அடித்தானே ) 

சூர்ப்பணகை ராவணனோடே முறையிடல் 

முடிவரிய கரன்படையை முடித்த ராமன் 
முன்போலச் சாலையில்போய் இருந்தான் இப்பால் 
இடிகுரற் சூர்ப்பநகை சென்றாள் இலங்கை தன்னில் 
ஈயெறும்பும் அழுதிடராவணன் முன் வீழ்ந்தாள் 
அடிவரலா றுகள் என்ன உன்னை இந்த 
அவமானம் செய்ததென்ன அவர் ஆர் என்ன 
கெடியரக்கன் குலமுழுதும் வேரை வாங்கிக் 
கெடுக்கின்றாள் அரக்கி சொல்லத் தொடுக்கின் றாளே 

கண்ணிகள் 
வடியிலே யார்க்கும் 
படியிலே 
1 . கண்டேன் கண்டேன் அடா அண்ணேன் 
காட்டுகிறேன் பஞ்ச 
அண்டாநரர் இருக்கின்றார் அவர்க் 
சுவரேநிகர் இந்தப் 
2. தரும சீலராம் அயோத்தி 
தசரத மகாராசன் 
விருது கட்டி அரக்கர்தங்களை 
வேர் அறுக்கவந்த 
3. நீதம் தெரிந்தவராம் அவர்கைக்கு 
நேத்தியா இருவரிவில் 
பாலராம் 
அவர் 
காலராம் 
அமைந்ததாம் - அதில் 
சமைந்ததாம் 

4 கோ தண்டம் அரக்கர் சீவனைக் 
குடிக்கவேண்டுமென்று 
ராம லட்சுமணர் வடிவெலாம் என்னாலேசொல்லிமுடி 
காமராசன் வடிவும் அவர் காலின் தூளுக்கிணை 
போகுமோ 
அந்த 
ஆகுமோ 
நான் 

5. கிட்டிப் போய் என் சுகக் 
கேளியிலே மையல் 
கொண்டேனே அங்கே 
திருஷ்டிப் பிரியமான பெண்கள் 
சிகா மணி ஒருத்தியைக் கண்டேனே 
6. சுந்தரமும் அவள் சிகப்பும் 
தொட்டுக் கொள்ளலாம் 
அண்ணாவே 
இந்தவயதினிலே என் கண்ணால் 
எங்கும் கண்டதில்லை 
அண்ணாவே 
7 . மன்னா உன்னால் நான் அவளை 
வாய்க்கடங்காப் பிடியாப் 
பிடித்தேனே ஒரு 
சின்னமனிதன் கையால் என்றன் 
செவியும் மூக்கும் போக் 
கடித்தேனே 
8. அந்தோ என்னாலே பதினால் 
ஆயிரம் தேர்க்காரரும் 
மூண்டாரே 
எதிர் 
வந்தார் கரன் முதலானோர் அந்த 
மனிதனால் கால் 
மாண்டாரே 
9. செப்புச் சிலையுமல்ல அந்தப் பெண் 
செம்பொற்சிலை வார்த்தாற் போல் இருக்குதே - நான் 
ஒப்பெங்கும் காணேன் அவளே 
உனக்காம் என்மனம் 
உருக்குதே 
10 தாவிப்பிடித் தேனே எனக்கு மெள்ளத் 
தப்பி விட்டாள் வந் தெடுப்பாயே - அந்த 
தேவி இங்கே வந்தால் உன்னிட 
சீவனை யாகிலும் 
கொடுப்பாயே 

சூர்ப்பணகை ராவணன் முன் சீதையை வர்ணித்தல் 

கன்னம் அறுந்தது னக்கென்றும் கரனும் போனானென்று மிங்கே 
பன்னலாமோ விடுவிடு நீபார்த்தேனென்ற பெண்ணவளைச் 
சொன்ன வுடனே உயிர் கிடந்து துடிக்குதடியே சூர்ப்பநகி 
இன்னம் ஒருகால் சொல் என்றான் எடுத்தாள் சொல்லத் தொடுத்தாளே 

பல்லவி 

காணவேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன் 
காலுக்கு நிகரோ பெண்கள் ( காண ) 
அநுபல்லவி 
சேணுலகெங்கும் வாட்டித்திசை யெங்கும் கீர்த்தியை நாட்டித் 
திரியும் ராவணா உன்றன் இருபது சுண்போதுமோ ( காண ) 

1. குவளை விழி களே பாணம் அவள் தன்வார் தனத 
கொண்டால் அதுவே கல்யாணம் 
நவரத்தினத் தங்கத்தோடு நடையிலே அன்னப்பேடு 
அவனிமேல் இல்லை ஈடு அவளுக்கு அவளே சோடு ( காண ) 


2. தங்கக் கொடிபோல் இடையும் சீவிவகிர்ந்த 
சாய்ந்த பின்னலின் சடையும் 
இங்கிது மிருது வாக்கியம் இவளே தேவதா யோக்கியம் 
மங்கையர்க்குள்ளே சிலாக்கியம் வாய்சால் உன்னதே பாக்கியம் ( காண ) 


3. தவமுனி ஒருத்தன் பெண்டு அவனுக்கேற்ற 
தம்பி ஒருத்தன் அங்குண்டு 
அவளே நல்ல ஐஸ்வரியம் அவளே நல்ல காம்பீரியம் 
அவள்வந்தால் அல்லோவீரியம் அய்யோ முடியும் உன் காரியம் ( காண ) 

மாரீசன் ராவணனை இடித்தல் 
கடுத்த தங்கை இதுசொல்லச் சீதைமேலே 
கருத்தாடக் காமப்பேய் தலைசுற்றாட 
உடுப்பதுவும் உண்பதுவும் மறந்தான் சிந்தை 
உலைமெழு கானான் அரக்கன் அம்மானே நீ 
அடுத்தெனக்கு ராமன்மனை வியைத்தா என்றான் 
அது கேட்டவுடனே நாராசம் காய்ச்சி 
நடுச்செவியில் வைத்தாற்போ லேமாரீசன் 
நடுக்கின்றான் ராவணனைத் தடுக்கின்றானே 

பல்லவி 
என்ன புத்தி நினைத்தாயடா அடாராவணா 
என்ன புத்தி நினைத்தாயடா ( என் ) 


அநுபல்லவி 

பின்னொருத்தி அல்லராமன் மன்னவன் தேவியைச் சொல்ல 
அன்னவன் அம்பிங்கேசெல்ல உன் இனத்தையெல்லாம் கொல்ல ( 61 ) 


சரணங்கள் 
1. கள்ளிப் பொறிவர லாலே - மூங்கில் எரிந்து 
வெள்ளிச் சாம்பலானாற் போலே 
சொள்ளியாய் வந்தாள்உன் தங்கை அள்ளிராமனை இங்கே 
தள்ளிவிடும் முன்னே தலை துள்ளிவிடுமே நமக்கு ( என் ) 
2. இந்தமதி பண்ணல் ஆமோ - பரதாரத்தை 
சிந்தையிலும் எண்ணல் ஆமோ 
முந்தொருத்தி ஆசையிட்டான் சந்திரனும்பழிபட்டான் 
வந்தகலிகையைத் தொட்டான் இந்திரனும் மகிமை கெட்டான் ( என் ) 
3. உத்தம சீதையை உன்னாதே உன்னினால் அவன் 
சற்றிலே விடுவான் 
என்னாதே 
புத்திரர் தலையும் சேர்ந்த மித்திரர் தலையும் ராம 
பத்திரர் அம்பு கொய்யும் கொய்யும் சித்திரவதை செய்யும் செ யும் ( என் ) 
4. துப்புள்ள விராதன் இறந்தான் - ராமன் அம்பாலே 
அப்படிகரனும் பறந்தான் 
இப்படி வாராதே நாடித் தப்புவதல்லவோ மோடி 

செப்பினேன் உன்னது தேடிக் கைப்பொருட்கும் ஏன் கண்ணாடி ( என் ) 
5. வேலையில்லா வேலை எண்ணினாய் - சின்னஞ்சிறிய 
பாலகர் யோசனை பண்ணினாய் 
கோலமான சீதையென்று காலமாய் அடங்கி நின்று 
காலன் வந்ததைத் தேராமல் மூலகாரணம் பாராமல் 
6. வேதனையும் சூதும்வாதும் சொன்னாய் - இந்தப் 
பேதைமதி போதும் 
சீதைஎண்ணம் எண்ணத்தானே வாதையுண்டாம் சீமானே 
மாதுலன் உனக்கு நானே ஏது அறிந்து சொன்னேனே ( என் ) 
7. பைந்தொடி சீதைபேர் சொல்லாதே - சொல்லாதே அது 
எந்தவிதத்திலும் 
பொல்லாதே 
வந்திரு மேராம பாணம் என் தன் உரையே பிரமாணம் 
என் தலைக்கும் பாயும் பொய்யோ உன் தலைக்கும் பாயும் ஐயோ ( என் ) 
 

8. முன்னம் விஸ்வாமித்திர னாலே 
யாகசாலை 
தன்னுள் வந்து நமன் போலே 
அன்னையும் கொன்றான் சுவாகு தன்னையும் கொன்றான் அவனை 
உன்ன அதிர் எடுக்குதே ன்னம் நடுக்குதே ( என் ) 

லட்சுமணர் பொன்மானைப் பொய்மான் என்றல் 

சையமா ரீசன்இந்த வார்த்தை சொன்னான் 
ராவணனும் சீறினான் பொன்மா னாய்ப் போய் 
அசையாமல் சீதைவிழிக் கெதிரே நின்றான் 
அவளும் ராமனைப் பிடித்துத் தருவாய் என்றாள் 
பசையினால் லட்சுமணன் பொய்மான் என்றான் 
பாராமல் நான் இதனைப் பிடிப்பேன் என்று 
விசையரா கவன் நடந்தான் வாயை வாயை 
மெல்லுவான் தம்பிபின்னும் சொல்லு வானே 

கண்ணிகள் 

1-வர்ணமானுமல்ல சொர்ணமானும் அல்ல 
மர்மமான் என் 
பின்னைத் தெரியும் இது நம்மை மருட்டவந்த 
பெரிய கால 
தேமி 

2. பார்த்தமான் ஈதல்ல இந்தமான் மடிப்பு 
பண்ணவந்த 
மானே 
கூத்துப் பார்க்கப் போனஇடத்தில் பேய் பிடித்தாற்போல் 
குலையுதென்மனம் 
தானே 

3. ஊழியம் செய்கிறான் இந்தமான் சந்தேகமான் என் 
றுள்ளது சொன்னேன் 
அய்யனே 
ஏழைசொல் அம்பலம் ஏறுமோ கட்டளை 
இட்டபடியே 
செய்வனே 

4. மானோ மாயமிது தானோ அம்மைகைக்கு 
வந்தால் சொர்ண 
ஏனோ பிடித்துத்தா என்று சொல்லுகிறாளே 
என்ன காலப் 
மழையோ 
பிழையோ 

5. அந்த அன்னை சொல்லால் ஐயன் தசரதனும் 
அலங்கோலம் 
ந்த அன்னை சொல்லால் என்னமோ அண்ணனுக்கு 
ஈதென்று 
தெரியனே 
ஆனானே 

6. அப்போது வேள்வியில் வந்த மாரீசன் என்றே 
அயிர்க்கிறேன் 
தப்பிதம் சொல்லறியேன் அப்புறம் சித்தத்துக்கு 
சரிப் போனபடி 
நீ ஆராய் 
பாராய் 

லட்சுமணர் சீதாதேவியை தேற்றல் 
உறும் தரும தம்பியிந்த வண்ணம் சொன்னான் 
உத்தமராமனும் அந்த மான் பின் ஏகிக் 
குறுங்கணையால் எய்தான் மாரிசன் 
வீழ் போதில் 
கூக்குரலிட்டான் அதனைச் சீதை கேட்டாள் 
இறுங்கணவன் குரல் இதைப்போய் அறிநீ என்றாள் 
என்ன அன்னே அண்ணனை யென் சொன்னீர் இந்த 
வறுங்கவலை ஏன் என லட்சுமணன் துன்பம் 
விடச் சொல்வான் சீதையைத் தேறிடச் சொல்வானே 

பல்லவி 
ஆர் என்று ராகவனை எண்ணிநீ ரம்மா இத்னத 
அறிந்து சொன்னீரோ அறியீரோநீ ரம்மா 
அநு பல்லவி 
ஏராவார்த்னதயிது வசையோ டொக்குமே போரில் 
எண்டிசை அதிபரும் அண்டின படையுடன் 
மண்டினாலும் என் அண்ணன் சுண்டுவிரல் போதாதோ ( ஆர் ) 

1. விந்தையாக வெண்ணெய்க்குப் பல்லு முளைத்தாற்போலே 
மிஞ்சி ராட்தர் அண்ணன் தன்னன வளைத்தால் 
வந்தராமன் அதுகண்டு ஏங்கி இளைத்தால் வேறே 
மந்திரம் என்ன ஒரு 
தந்திரம் என்ன வானில் 
இந்திரன் கதிப்பானோ சந்திரன் உதிப்பானோ ( ஆர் ) 
2. ஆதிருத்திரன் வில் ஒருவர் ஓடிக்கப்போமோ - அத்தை 
அறிந்தும் பெண்புத்தியால் என்சித்தம் நோமோ 
வேதையர் என்னனயும் சோதிக்கல் மோ 
நல்ல 
வேதண்டம் என்னப் பெறும் கோதண்டம் தன்னை 
அண்ணன் 
கரிதண்ட வளைக்குமுன் மூதண்டம் பிளக்குமே ( ஆர் ) 

3 -பண்ணின . மாயையாலே அந்தமாரீசன் மாளும் 
பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன் 
எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் தாசன் 
அவனை 
எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக் 
கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல் - ( ஆர் ) 


சீதைக்கும் ராவண சந்நியாசிக்கும் சம்வாதம் 

மெள்ளவே இளையோன் இந்த 
இந்த விதம் சொல்லி நடந்தான் பின்னே 
கள்ளமாம் தவசியாகிக் கடுகிரா வணன் தான் வந்தான் 
வள்ளலே வாரும் என்றாள் வஞ்சனை அறியாள் சீதை 
உள்ளமா முனிவர் என்றே உரைக்குரை சொல்லு வாளே 

கண்ணிகள் 


1. வாரும் என்றவுடனே ராவண சந்நியாசி 
வந்து கண்டானே அந்த 
ஆரோநீர் என்று வஞ்சகன் கேட்கவே 
அன்னை எதிரே சொல்லு வாளே 

2. தசரதன் பாலன் தம்பியுடனே பெற்ற 
தாய் சொல்ல வந்தான் இந்த 
இசையும் சானகி என்பேர் காகுத்தன் மனைவி நான் 
இங்கே இருக்கிறான் என் 
பூமி 
சாமி 
ராயே 
நீயே 

3. இந்த வனத்தில் மெத்த பழுத்த பழம் போலவே 
எங்கே வந்தீர் தேவ 
வந்தது சொல்லுகிறேன் சந்தோஷம் ஆசுச்சற்றே 
மனது வைத்துக் கேளாய் 
4 . போரில் பெரியவன் ஆயிரம்வேதம் வந்தோன் 
பிரம தேவனுக்குக்கொட் 
ஆராலும் அசையாதகைலாசமலை தன்னை 
அசைத்துப் பிடுங்கின கெம் 
பேரன் 
பீரன் 

5. அமைந்த தேவரையும் அஷ்டதிக்குப் பாலனரயும் 
ஆக்கினையால் அந்தமகா 
சுமந்தகலையும் சும்மாடு மாத்திரிய 
துரைத்தனம் செய்யும் இலங் 
கேசன் 
மாதே 
6. நலங்களினாலே அந்த இலங்கைக்குச் சொர்க்கம் ஒரு 
நரகம் போலக் காணும் 
லங்கையை விடலாமோ என்ன காலமோ நான் 
இங்கே வந்தேனே இப் 
7. சினமித்த முனைவாளும் மிகுந்த நாளும் அந்தச் 
சிவன்கையில் வாங்கினவன் 
மனதுக்கினிய பெண்கள் மாணிக்கம் ஒன்று தேடி 
வருந்து கிறேன் திவ்ய 
தானே 
மானே 
ஆகன் 
8. வீராதி வீரன் அஷ்ட திக்கெச தந்தங்களை 
வெடுக் கென்று ஒடித்த வச்சிர 
ஓரான் காணியா மூன்றுலோக முங்காக்கும் 
ஒருத்தன் அரக்கன் கன 
யோகன் 
நாளை 

9. மூன்று லோகமும் காக்கும் அரக்கன் என்றீர் அவன் 
மூவேழுலகங்களும் 
கீண்டெறிய வந்தானே ரகுவீரன் என்று சொல்லக் 
சேளீரோ எங்கள் பெரு 
10. பெருமாள் பெருமாள் என்ற மனிதன்வந் தர்க்கரைப் 
பிடுங்கி எறிவான் என்றாய் 
பெண்ணே 
ஒருமுசல் குட்டிவந்து சிங்கந்தன்னை அடித்த 
உவமை போல் ஆச்சுது காணும் 
கண்ணே 
11 .. உவமை என்றீர் காணும் பதினாலாயிரவ்ரும் 
உருண்டாரே மனிதனால் 
அய்ய 
இவர் இராவணன் போல் இருபது தோளர் அல்லாமையால் 
இறந்தார் மனிதன் கொலை 

12. ஆயிரந்தோள் இருந்தும் கார்த்த வீரியன் தன்னை 
அடித்தான் மனிதன் அல்லோ 
தாயிது சொன்னவுடன் சந்யாசி வேஷம்விட்டுச் 
சண்டாளன் எழுந்தானே 
பின்னே 

13. தீமுகனாய் அரக்கன் ஆகாத வார்த்தைசொல்லி 
செவியில் கை வைத்தே அந்த 
ஓம்பிண்டத்தமுதை நாய் இச்சைப்பட்டது போல் 
உரைத்தாய் என்னடா அடா 
தேவி 
போல் 
பாவி 

14. நின்ற நிலைக்கே தப்பி ஓடி அப்புறம் போடா 
ரெகுவீரன் பிழைக்க வொட்டானே 
என்றவுடன் சீதையை நிலத்தோடே தூக்கி வஞ்சன் 
எடுத்துத் தேரினில் இட்டானே 

சடாயு ராவணனுக்கு புத்தி சொல்லுதல் 

தேரினில்இப் படிசீதை தனைக்கொண்டு போம் அளவில் சீறி வந்து 
போரினில் ராவணா பத்துமுடி யும்தெறிக்கப் புடைப்பேன்கண்டாய் 
பேரியல்சீ தையைவிட்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால் பிழையாய் என் 
வீரியமாய்ச் சடாயுவந்து கிளம்பினான் புத்திசில விளம்பி னானே  

பல்லவி 
விடுவிட்டா சீதையை விடுவிடடா 
விடுவிடடா சும்மா விடுவிட்டா 
ராவணா ( விடு ) 

அநு பல்லவி 
சுடுநெருப்பிவளாலே அடியோடே வேகாதே 
சுருபத்தைத் தெரியாமல் நகரத்தில் மூழ்காதே 
அடடாசொன்னேன் சொன்னேன் நடுவிலே சாகாதே 
ஆசையினாலே குல நாசமாய்ப் போகாதே ( விடு ) 

சரணங்கள் 
1. என் செய்தாய் இவள் நஞ்சம் என்றெண்ணாமல் 
ஏழை எளி மையாய்க் 
என் தாய் இவள் மனம் நொந்தாள் இருப்பாயோ 
என் தன் வார்த்தை கேள் 
குறியாதே 
முறியாதே 
கொஞ்ச அரக்கர் மான் குட்டி என்றும் ராமன் 
குட்டிச் சிங்கம் என்றும் 
அறியாதே 
குதிக்கிறாய் உங்களை வதைக்க வந்தானே அவன் 
கொல்லவரும் யானை முன்னே கல்லுகள்விட் டெறியாதே ( விடு ) 
2. கர்த்தர் மூவருக்கும் கர்த்தன் ஆகுமிந்தக் 
காகுத்தன் என்று கொண் டாடுவேன் 
கையாலே நீ எய்வதெல்லாம் சிறைக் 
காற்றிற் பஞ்சு பஞ்சாய்ச் சாடுவேன் 
பத்தினி தனையிங்கே வைத்துப் போடா அவன் 
பக்கத்தில் தானே கொண் டோடுவேன் 
பாரடா இல்லா விட்டால் கூரான நகத்தால் உன் 
பத்துத்தலைகளும் கிள்ளிப் பத்துத்திக்கிலும் போடுவேன் ( விடு ) 
3. கைக்குள்ளே அடக்கி இக்கணமே நான் ஒரு 
மிக்க உறிஞ்சு வேன் உன் 
தலைமூளை 
கருங்காக்கை களுக்கும் நமனுக்கும் உன்னை நல்ல 
விருந்தாக் குவேன் பாரடா 
இவ்வேளை 
முக்கணன் வரம்பெற்றும் அக்ரமம் செய்தாவது 
தக்குமோ கேடல்ல 
முனைகெட்டுப் போவாய்சீதை தனைவிட்டுப் போடாதேவர் 
முன் கொடுத்த வரமெல்லாம் ஏன் கெடுக்கின்றாய் முட்டாளே ( விடு ) 

சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம் 

பொறுத்தான் இந்தப் புத்தி சொல்ல பொல்லா அரக்கன் கொள்ளாமல் 
வெறுத்தான் அதற்கப் புறந்தேரை விடும் போதினிலே நெடுந்தூரம் 
குறித்தே போனகுமாரர் வந்து கூடுமளவும் இவனை இங்கே 
மறிப்பேன் என்று சடாயுவும் வாய்மடித்தான் சண்டைபிடித்தானே 

பல்லவி 

சடாயுராசன் 
கொத்திக் கொத்தி அடித்தானே இடித்தானே 
கொத்திக் கொத்தி அடித்தானே 

அநு பல்லவி 
 
பத்துச் சிரத்திலும் தாளிலும் தோளிலும் 
பற்றிக் கரத்திலும் மாரிலும் தேரிலும் 
தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால் 
குத்திக் குத்தி எங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால் ( கொத் ) 


சரணங்கள் 

1 . ஆலகாலம் போலே சீறி எதிர்த்தேறி உடம்பெங்கும் கீறிப்பறித்து 
கோலாகலத்தேரை மறித்து அச்சைமுறித்துப் பத்து முடியும் 
காலாலும் கையாலும் மேலே கிள்ளிக்கிள்ளி 
கண்டகண் நாலைந்து குண்டலமும் தள்ளி 
மேல்வரும் அம்பெல்லாம் வாலால் விழத்தட்டி 
வீணைக் கொடியையும் தூணியையும் வெட்டி ( கொத் ) 
2. ஈரேழுகணையவன் தொடுத்துவிடத் தடுத்துக் கவசத்தையும் கெடுத்து 
நேராக நூறம்பைப் பூட்டிவிட மாட்டிச்சிறகால் விழக்காட்டி 
போராடக் கொண்டொரு சூலம் அவன் போட 
புதையாமலே அது சிதறி அப்பால்ஓட 
கூரான மூக்காலே பாகனை மடித்து 
கொல்லுவேன் என்றவன் வில்லையும் ஒடித்து ( கொத் ) 

3. மோதும் அவன் தெண்டால் சாய்ந்து களைதீர்ந்து குதிரைகளைப் பாய்ந்து 
பாதகனை வீழத்தாக்கி களையாக்கி மணிரதத்தைப் போக்கி 
சூதிவன் செய்கிறான் என்றறியப்பட்டு 
தோழன் மருமகள் என்கிறதைத் தொட்டு 
காதகராவணன் மோதி அறவெட்டும் 
கத்தியினால் சிறகு அற்றுவிழும் மட்டும் ( கொத் ) 

சடாயு விழவே சீதை புலம்பல் 

அடித்தநம் சடாயு ராசன் அவனிமேல் வீழ்ந்தான் சீதை 
கொடிக்கொரு கொழுகொம் பில்லாக் கொள்கைபோல் ஆனாள் இந்த 
முடித்தலை பத்துள்ளானை முடிப்பதார் எனவே அச்சம் 
பிடித்தனள் வடித்த கண்ணீர் பெருகினாள் உருகினாளே 
பல்லவி 
என்ன செய்வேன் சீதை நானிமேல் 
என்ன செய்வேன் தெய்வமே ( என் ) 

அநுபல்லவி 
என்செய்வேன் மான்பின் போன 
வஞ்சக ராவணன் செய் 
இருவீரரும் வாரீரோ 
வகைமோசம் பாரீரோ ( என ) 

1. எய்தும் வீட்டினில் இருவென்று சாமிசொல்ல 
இருந்தேன் 
இல்லைநானே 
மைய லாஎன்னைப் பிரித்திடச் சனிபோல 
வந்ததே 
பாழ்மானே 
கையினால் பிடியும் என்றதல்லாமல் நான் 
கண்டேனோ 
பலன் தானே 
அய்யய்யோ உண்ணாமல் திண்ணாமல் ஊர் 
அம்பலம் 
ஆனேனே 
2 . ஈன ராவணன் கெலிக்கச் சடாயு மன்னன் 
இறந்தது என்ன 
தொல்லையே 
ஆனபோதிவன் குடிக்கென்ன காலமோ 
அறிவேனோ சாமி 
இல்லையே ( என் ) 

வானமே வனமே அவருக்குச் சொல்ல . 
மாட்டீரோ என் 
சொல்லையே 
ஏனென்று கேட்பார் இல்லையே என்னை 
எடுத்து விழிப்பார் இல்லையே ( என் ) 

3. பூட்டும் வில் இளை யோலன இடும்பு சொல்லிப் 
போப் போ 
என்றேனே 
தாட்டிக ராவண சந்நியாசிசெய்த 
சதிக் குள்ளாய் 
நின்றேனே 
வீட்டிலே புகுந் தேன் அந்தமாமனை 
விதிபோலே 
தின்றேனே 
காட்டிலே புகுந்தேன் இந்த மாமனைக் 
கண்முன்னே 
கொன்றேனே ( என் ) 

ஸ்ரீராமர் சீதைக்காகத் தம்பியோடிரங்கல் 

இஷ்டமுள்ள சடாயு வுக்கிவ் வாறு சொல்லி 
இரங்கஅவ ளுடன் அரக்கன் இலங்கை சேர்ந்தான் 
மொட்ட விழும் அசோகவனச் சிறையில் வைத்தான் 
முன்போன தம்பிதனை அண்ணன் கண்டான் 
பட்டபருவங் களெல்லாம் அறிந்தான் வத்து 
பன்னகசா லையையும் சீதையையுங் காணான் 
வட்டமலர் முகம் வாடித் தேடித் தேடி 
மயங்கினான் ஸ்ரீராமன் கலங்கினானே 

கண்ணிகள் 
1. உற்றசீதையைப் பிரிந்தேன் உனதுபுத்தியை எறிந்தேன் 
தத்துக்கள் எல்லாம் அறிந்தேன் தம்பீ லக்ஷ்மணா 
2. கட்டிவைத்த புதையலைக் கல்லி எதித்தவன் போலத் 
தட்டிக் கொண்டு போனான் ஐயோ தம்பீ லக்ஷ்மணா 
3. நன்மை செய்ய வந்தோமிது கன்மமாய் விளைந்தபோது 
தர்மம் என்ன தானம் என்ன 
தம்பீ லக்ஷ்மணா 

4. தேரோடே பாரோடே தூக்கி தீண்டாமல் தெற்குவழியே 
ஆரோ கொண்டு போறானித்தை அறிவாய் லக்ஷ்மணா 

5. நலம் உள்ளோர் கவலை தீர்க்க நாம் இந்தக் கவலை ஏற்கத் 
தலை எழுத்து வந்ததல்லோ 
தம்பீ லக்ஷ்மணா 
6. உண்டானால் இப்போதேநேரே ஒட்டமா ஓடினால் தேரை 
கண்ாடலும் காணலாம் வாஎன் கண்ணே லக்ஷ்மணா 

ஸ்ரீராமர் சடாயுவின் மேல் விழுந்து இரங்கல் 

இவர் இப்படியோ சனைபண்ணி இருயோசனை தூரம் போனார் 
எதிரேவில் ஒன்றது கண்டார் அற்றுக்கிடந்த தூணிகண்டார் 
கவசம்கிடந்த தொன்றுகண்டார் கண்டார்சூலம் கொடிகண்டார் 
கடுந்தேரோடு சாரதிமுடியை கண்டார் இந்தப்படிதோற்ற 
அவசம் பிறக்கராவணனை அடித்துத்துறத்தும் இடங்கண்டார் 
அவனாயுதங்கள் ஒடிந்ததெல்லாம் அங்கேகண்டார் பிறவற்றின் 
விவரங்கண்டார் ராமன்வந்து வீழ்ந்த சடாயுகிடைகண்டான் 
வெள்ளிமலைமேல் கருமலைபோல் விரைந்தான் விழுந்து கரைந்தானே 

பல்லவி 
இந்தவிதி காணவோ வந்தேன் - சடாயு அய்யா 
இதுக்கோ நான் பிள்ளை பிறந்தேன் 
( இந்த ) 

அநுபல்லவி 
தந்தை தகப்பனைக் கொல்லச் சமைந்தேன் அதென்ன சொல்ல 
இந்தநாள் உனையும் நல்ல எமன் போலே கொன்றேன் அல்லோ ( இந்த ) 

1. வண்ணமான் சீதையை நீக்கினேன் - நானும் ஒருசே 
வகன் போல வில்லும் தூக்கினேன் ஐயோ இப்போதென் 
கண்முன்னே உன் னையும் போக்கினேன் - மரமீதேறி 
கைவிட்டோன் போல் என்னை ஆக்கினேன் - நான் செய்வேன் 
எண்ணின எண்ணமெல்லாம் போய் இளக்காரமாய்த் தளர்ந்தேன் 
பெண்ணுமல்ல ஆணுமல்ல பெருமரம்போல் வளர்ந்தேன் 
( இந்த ) 
2. வையகம் தன்னையும் விடுத்தேன் வனத்தில் வந்து 
மலைபோலே உன்னை அடுத்தேன் - தம்பி சொன்னதை 
ஐயையோ கேளாமல் 
தடுத்தேன் 
என்புத்திதன்னை 
அநியாயத்திலே 
மடுத்தேன் - கபடஞ்செய்த 
பொய்யரக்கனைக் கொல்லாமல் புறம்போய் அல்லோ கெடுத்தேன் 
கையில் ஆகாதவன் போல் கண்டோர் பழிக்க உடம்பெடுத்தேன் ( இந்த ) 

கடிப்பேன் 
முடிப்பேன் 
இடிப்பேன் 
குடிப்பேன் 
என்னுயிரைப்போக் 
முனிவர்க்குநான் 
இசைந்ததெப்படி 
அண்டங்களெல்லாம் 
சின்ன பின்னமாக 
இது பார்த்திருந்த 
தேவரையும் ஆவி 
என்தனுடனே 
முன்நாள் நீ சொன்ன வீரம் முடித்தாய் அல்லோ இந்நேரம் 
என்னால் உண்டோ உபகாரம் ஏதுக்கெடுத்தேன்சரீரம் 
( இந்த ) 

ஸ்ரீராமர் கோபத்தைச் சடாயு ஆற்றுதல் 

மதிமுக ராகவன் இரங்கத் தம்பி வந்த 
வரலாறெல்லாம் சொல்ல மண்ணும் விண்ணும் 
கொதி எடுக்கச் சீதை தன்னை எடுத்தான் உன்னைக் 
கொலை செய்தான் அரக்கனவன் குலத்துவாசி 
அதுகிடக்க உன்கொலை பார்த்திருந்த தேவர் 
அனைவரையும் மடிப்பேன் என்று ராமன் சீ 
து உனக்கு முறைமையல்ல மகனே என்ன 
ஏற்றுவான் சடாயுமன்னன் ஆற்றுவானே . 

பல்லவி 
ராமா நீ இந்தக் கோபம் செய்யல் ஆமா 
இருந்தல்லோ படுக்கவேணும் ராமா 
( ராமா ) 
அநுபல்லவி 
பூமியுடன் சீதையை ராவணன் கொண்டு மிண்டாய் 
போகையில் சண்டைபோடப் போச்சுதென் சிறைரண்டாய் 
அவனைக் கொல்லாமல் நாம்விடு வோமோ கண்டாய் 
அதுக்கு முன் கிலேசத்தாலே பதட்டமாக ஒருக்காலே ( ராமா ) 

சரணங்கள் 
1. இன்பம் வருவதும் துன்பம் வருவதும் 
எடுத்த உடற்கு நில 
வரந்தானே 
சம்புவான சிவன் தானும் தலை ஓட்டைத் 
தன்கையில் ஏந்திக்கொண் டிரந்தானே 
அம்புவி படைத்த பிரம்ம தேவனும் 
அறுப்புண்டானே ஒரு சிரந்தானே 

2 -நம்பும் சந்திரனும் சூரியனும் பாம்பாலே 
நடுங்கிறார் இன்னம் நிரந் தரந்தானே 
உன்பிழையும் இந்தவகை ஒத்ததல்லோ ஆகையாலே 
அம்பினால் ராவணன் தலை அறுப்பாய் பனங்குலை போல 
தம்பிள்ளை பெண்டுகளோடே தாழ்ந்து நின்றொருகாலே 
வெம்பதராம் அரக்கர்க்கு வேலைசெய்யும் தேவர்மேலே ( ராமா ) 
சேனைஇந்திரனுக்கும் தேவர்க்கும் உயிர் நிலை 
செய்தது உனது தந்தை உபகாரம் 
ஆனை கெட்டவன் குடத்தில் தேடினாற் போல் 
அவரை வெறுத்தால் உண் டோசாரம் 
ஈனராவணன் சீதையைக் கொண்டுபோய் 
எவ்விடத் தில்வைத்தானோ இந்நேரம் 
போனதிசை தேடி அவனை வேர் அறுத்து 
புண்ணியத்தை நாட்டுவ துன்பாரம் 
மானினைத் தொடர்ந்து பின்னே ஃபானதென்ன அலங்கோலம் 
போனதனால் வந்ததிந்த சானகி பிரிந்த சிலம் 
சானகி பிரிவரக்கர் ஆனவர்க்கு நாச காலம் 
ஆனதனால் தேவருக்கு நீநினைப்பாய் அனு கூலம் 
( ராமா ) 

3. வெள்ளிவெண்பதி வளர்வதும் தேய்வதும் 
விதியின் பயன் அல்லவோ ஆமோ 
உள்ளதொரு வர்க்கு நிறைவதும் குறைவதும் 
ஊழின்படி என்பதறியோமோ 
தெள்ளித் தெளிந்த என் கண்ணே உனக்கினி 
தெரியச் சொல்லுவார் எவர் 
கிள்ளி எறிகுவாய் ராட்சதச் செடிகளை 
கேதங்கொண் டிப்படியுன்மனம் நோமோ 
துள்ளிசமுத்திரம் பொங்கினால் கொள்ளுமோகிணற நேகம் 
வள்ளலே உன் முன்னே லங்கை கள்ளர்கட் கெங்கே நிர்வாகம் 
எள்ளளவு நீமுனிந்தால் அள்ளுப் பொடியாமே லோகம் 
மெள்ள இருந்து பகையைத் தள்ளுவதால்லோ விவேகம் (ராமா ) 

சீதையின் பிரிவாற்றாமல் ஸ்ரீராமர் இரங்கல் 

பொறையடையத் தந்தையிந்தப் புத்தி சொல்லிப் பரமபதம் போகக்கண்டான் 
விறகுதம்பி இடக்கண்டான் சாமிசடாயுவுக்குள்ள விதியும் கண்டான் 
கறையிருளும் வரக்கண்டான் சீதைமுகக் கமலமொன்றும் காணானாகி 
மறைவு செய்தார் ஆர் என வேதியங்கினான் ஸ்ரீராமன் மயங்கினானே  சீதை 

1. நல்லோர் பெரியோர் என்னை வசையும் சொல்லல் ஆச்சே 
நடுக்காட்டில் என்னைத் தெய்வம் அகலக் கொண்டுபோச்சே 
பொல்லா ராவணனைக்கண்டு கலங்கினாளோ 
பேதை 
பூனைகண்ட கிளிபோலே புலம்பினாளோ 
2 ஆரும் இல்லாத காட்டில் அதட்டினானோ 
பாவி 
ஐயோ நினைக்க நினைக்கப் பதைக்குதே என் ஆவி 
வாரும் வாரும் என்றென்னைக் கூவி இரைந் 
தாளோ 
வழிமேலே கண்ணை வைத்துப் பார்த்துக்கரைத் தாளோ 
3. வீடே பர்ணசாலை என் றெண்ணி இருந் 
தேனே 
விதிமோசத்தாலேதம்பி விட்டுப்பிரிந் 
தானே 
காடே மலையே என் தன் கவலை தடுக் 
கீரோ 
கண்ணாட்டி போனவழி காட்டிக் கொடுக் 
கீரோ 
4. துளித்த மான்குட்டி வந்தென் முன்னே நின்ற போதே 
சொன்னானே தம்பியதை உண்மையென்றெண்ணாதே 
வெளுத்த தெல்லாம் பாலென்று எண்ணியடுத் தேனே 
வீட்டுவிளக்கை வெட்ட வெளியில்விடுத் தேனே 
5. அங்கலாய்ப் பாளேசிதை கண்ணை நனைப் 
பாளே 
அரக்கர்க்குப் பயந்தான் என்றென்னைநினைப் பாளே 
சிங்கார வேட்டையாட வீணேபோகி 
னேனே 
சிறகுபறிகொடுத்த பறவை ஆகி 
னேனே 
6. தணிக்கா நெருப்பைப் போலே மூளுதேவி 
சாரம் 
தாரத்தை ரட்சியாதான் வீரம் என்ன 
வீரம் 
அணைப்பானே சிறகால் என் றெண்ணம் எண்ணி னேனே 
அய்யோ சடாயுவுக்கும் பாவம்பண்ணி 
னேனே . 

கவந்தன் வதையும் துதியும் 

சானகியை இவ்வண்ணம் நினைந்து ராமன் 
ததும்பையிலே தம்பியுந் தண்ணீர்க்குப் போனான் 
போனவிடத் தசோமுகிமூக் கரிந்து மீண்டான் 
புனிதர் இருவரும் கவந்தன் கைக்குள் ஆனார் 
ஆனபிற கவன் உயிரை முடித்தார் அந்த 
அரக்கனும் அந்தரத்தினிலே தேவனாகி 
தீனமில்லாப் பரமபதம் தனிலே ஏறச் 
செல்லுவான் சாமிதுதி சொல்லுவானே 

கண்ணிகள் 
1. ஆதியும் ஆகி அநாதியுமாய் இந்த 
அகிலம் எங்கும் நிறைந் 
போதகம் இல்லாமல் ஆலந்தளிர் உள்ளே 
பிள்ளை யாகி உறைந் 
தாயே 

2 -உன்தன் பதத்னதவேண்டித் தவஞ்செய்வார்கள் இந்த 
உலகத்திலே உள்ள 
ஞாயம் 
எந்தப் பதத்னதவேண்டி நீதவம் செய்ய வந்தாய் 
ஈதென்ன கண்கட்கு 
மாயம் 

3. முலையானதும் இல்னல கெர்பக் குறியுமில்லை 
முளைத்தா யே ஒரு 
தூணில் 
மனலவாய் உலகத்தோர் இறந்தான் பிறந்தான் என்பார் 
வாய்க்குண்டோ என்வார்த்தை 
வீணில் 
வேனோ 

4. என்னை அறியாத அரக்கன் என்றாயேநீ 
இரண்டு செய்த பிறி 
உன்னை நீதானும் அறியாயே சாமிநான் 
உன்னை எப்படி அறி 
5. காட்டுவானும் நீயே காணுவானும் நீயே 
கற்றாயே இந்திர 
வேனேரி 
சாலம் 
போட்டுவிட்டுத் தேடித்தவிப்பார் போல் தவிக்கிறாய் 
போதும் போதும் இந்தக் 
கோலம் 

6-சூரிய காந்தத்தரும் தீபத்தைக் கொண்டந்த 
ரியனைப் பணிவது 
போலே 
ரியனே உன்தன் அனுக்கிரகம் கொண்டுநான் 
அறிந்ததைச் சொல்வேன் என் னாலே 

7. எனது சாபந்தீர்த்தாய் அதுபோலச் சவரிஇங் 
கிருக்கிற வளைக்காண 
வேணும் 
தனதவள் சொல்லுவாள் சும்மா இருந்தால் ஒன்றும் 
சாதிக்கல் ஆமோ சொல்லாய் 
காணும் 

8. திடமாய் அவள் சொன்னபடியே சுக்கிரீவனைச் 
சேரும் அவனுடனே 
கடல் போல் வானரங்கள் வருமே சனகியைக் 
கணத்தில் கொண்டுவரச் 
சொல்லு 

9 . தடுக்காமல் கேளாய் ஓர்சிற்றாள் எட்டாளுக்குச் 
சரியல்லோ அறியாயோ 
நீயே 
திடுக்கென்று செய்யல் ஆமோ பதராதே காரியம் 
சிதறாதென் வார்த்தை ஆ 
ராயோ 

ஸ்ரீராமர் சவரிக்கு முத்தியருளி அப்பால் ஏகல் 

பத்தியாய்க் கவந்தன் இந்தப் படிசொல்லிக் கதியிற் போனான் 
சத்திய ராமன் பின்னே சவரிஆசிரமத்தில் போனான் 
அத்திசை அமுது கொண்டான் அவள் உபசாரம் கொண்டான் 
மூத்தியும் கொடுத்தான் சொன்ன மொழிகொண்டான் வழிகொண்டானே 

ஆரணிய காண்டம் முற்றிற்று 

சக்கரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் . 


------------------------ 
மூன்றாவது 
ஆரணிய காண்டம் 
( கம்பராமாயணம் ஒப்புமைப் பகுதி ) 
ஸ்ரீ ராமர் அத்திரியைக் கண்டு தண்டகம் சேர்தல் 

திக்குறு செறிபரம் தணியநின்ற திரள்பொன் 
கைங்குறுங் கண்மலைபோல் குமரர்காமம் முதலாம் 
முக்குறும்பு அறஎறிந்த வினை வான் முனிவன் 
புக்கிறைஞ்சினர் அருந்தவன் உவந்து புகலும் 

குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ 
அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்தது அலவோ 
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் 
தமரெலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் 

அன்னமா முனியொடன்று அவண் உறைந்து அவன் அரும் 
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன் 
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன் 
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் 

[ விராதன் வதைப்படலம் 1 . 
விராதன் வதையும் துதியும் . 
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிதென்று 
ஓத்தாத்த உருவத்தன் உரும்ஒத்த குரலன் 
காதலித்து அயன் அளித்த கடையிட்ட கணிதப் 
பாதலக்கம் மதவெற்பவை படைத்த வலியான் 

சாரவந்துயல் வியங்கினன் மரங்கள் தரையில் 
பேரவன்கிரி பிளந்துக வளர்ந்து இகல்பெறா 
வீரவெஞ் சினலயினோர் எதிர் விராதன் என்னும் அக் 
கோர வெங்கண் உரும்ஏறு அனகொடுந் தொழிலினான் 

நில்லிம் நில்லும் எனவந்து நிணம்உண்ட நெடுவெண் 
பல்லும் வல்எயிறும் மின்னுபகுவாய் முழைதிறந்து 
தல்லிபுல்லு மலரன்ன மனையாளை ஒருகைச் 
சொல்லுமெல்லையின் முகந்துயாவிசும்பு தொடர 

காளை மைந்தரது கண்டு கதம்வந்து கதுவத் 
தோளில் வெஞ்சிலை யிடங்கொடு தொடர்ந்து சுடர்வாய் 
வாளி தங்கிய வலங்கையவர் வஞ்சனை அடா 
மீள்தி எங்கசல்தி என்பது விளம்ப அவனும் 

ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் 
ஏதி யாவதும் இன்றி உலகுயாவும் இகலின் 
சாதி யாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடடா 
போதிர் மாதிவளை உந்தி இனிதென்று புகல 

வீரனும் சிறிது மென்முறுவல் வெண்ணிலவுக 
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் 
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறுசிந்தை தெரிய 
பார வெஞ்சிலை நாண் ஒலி படைத்த பொழுதே 

இலைகொள்வேல் அடல்இராமன் எழுமேக உருவன் 
சிலை கொள் நாண் நெடிய கோெைதாலி ஏறுதிரை நீர் 
மலைகள் நீடுதலம் நகர்பிலம் வானம் முதலாம் 
உலகம் ஏழும் உருமேறு என ஒலித்தது உரறவே 

வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் மறுகும் 
பஞ்சரக் கிளியெனக் கதறு பாவையை விடா 
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா 
அஞ்சனக் கிரியனான் எதிர் அரக்கன் அழலா 

பேய்பூசப் பிணியற பகைஞர் பெட்பின் உதிரம் 
தோய் முகத்தது கனத்தது சுடர்க் குதிரையின் 
வாய் முகத்திடை நிமிர்ந்து வடவேலை பருகும் 
தீமுகத் திரிசிகைப்படை திரித்து எறியவே 

மொய்த்தமுள் தனது உடல் தலை தொளைப்ப முடுகி 
கைத்தவற்றின் நிமிரக் கடிது கன்றி விசிறும் 
மெய்த்தமெய்ப் பெரியகேழல் என எங்கும் விசையின் 
தைத்த அக் கணை தெறிப்ப மெய்சிலிர்த்து உதறவே 

மெய் வரத்தினன் மிடல் படை விடப் படுகிலன் 
செய்யும் மற்றிகல் என்று சினவாள் உருவி வன் 
கைதுணித்தும் என முந்து கடுகிப் படர்புயத்து 
எய்வில்மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் 

தோள் இரண்டும் வடிவாள் கொடு துணித்து விசையால் 
மொய்ம்பினர் குதித்தலும் வெகுண்டு புருவத் 
தேள் இரண்டும் நெளியச் சின செங்கண் அரவக் 
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் 

பட்டதன்னமயும் உணர்ந்து படர்சாபம் இடமுன் 
கட்டவன் பிறவிதந்த கடையான உடல்தான் 
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் எனஓர் 
முட்டைதந் ததனில் வந்த முதல் முன்ன வனினே 

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனநின் 
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ 
ஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ டொன் றொவ்வாப் 
பூதங்கள் தொறும் உனறந்தால் அனவ உன்னைப் பொறுக்குமோ 

பனிநின்ற பெரும்பிறவிக் கடல் கடக்கும் புனணபற்றி 
நனிநின்ற சமயத்தோர் எல்லாரும் நன் றென்ன 
தனி நின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகின் 
னிநின்ற முதல் தேவர் என்கொண்டென் செய்வாரே 

நீஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் 
ஆயாத சமயமும் நின் அடியவே அயல்இல்னல 
தீயாரின் ஒளித்தியால் வெளிநின்றால் தீங்குண்டோ 
வீயாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ 

பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் 
இருவினையும் உடையார் போல் இருந்தவம் நின்றியற்றுவாய் 
திருவுறையும் மணிமார்ப நினக்கு என்னை செயற்பாலா 
ஒருவினையும் இல்லார்போல் உறங்குதியால் உறங்காதாய் 

அரவாகிச் சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் 
ஒருவாயில் விழுங்குதியால் ஓரடியால் ஒளித்தியால் 
திருவான நிலமகளை இஃதறிந்தால் சீறாளோ 
மருவாரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள் 

ஒப்பிறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்துறையும் 
அப்புறையுள் துறந்தடியேன் அருந்தவத்தால் அணுகு தலால் 
இப்பிறவிக் கடல் கடந்தேன் இனிப்பிறவேன் இருவினையும் 
துப்புறழும் நீர்த்தசுடர்த் திருவடியால் துடைத்தாய் நீ 
( விராதன் வதைப்படலம் 17-25 , 32 , 34 , 42 , 44 , 45 , 47 , 
51 , 53 , 56 , 57 , 60 ] 


தண்டகவன ரிஷிகள் ஸ்ரீ ராமரோடு முறையிடல் 

குரவம் குளிர் கோங்கு அலர் கொம்பினோடும் 
இரவங்கண் உறும் பொழுது எய்தினரால் 
சரவங்கன் இருந்து தவங்கருதும் 
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாசவனம் 

செவ்வேலவர் சென்றனர் சேறல்உறும் 
அவ்வேலையின் எய்தினன் ஆயிரமாம் 
தவ்வாது இரவும் பொலி தாமரையான் 
வேவ்றேலர் கண் ணினன்விண் ணவர்கோமான் 

நின்றான் எதிர்நின்ற நெடுந்தவனும் 
சென்றான் எதிர்கொண்டு சிறப்பமையா 
என் தான் இவண் எய்தியவாறு எனலும் 
பொன்றாத பொலன்கழலோன் புகலும் 

( சரவங்கன் பிறப்பு நீங்குபடலம் 1 , 2 , 14 ) 
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்துவந்து 
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் 
வையகம் கரவலன் மதலை வந்ததோர் 
வெய்ய வெங் கொடுந்தொழில் விளைவுகேள் எனா 

இரக்சம் என்றொரு பொருள் இலாத நெஞ்சினர் 
அரக்கர் என் றுளர் சிலர் அறத்தின் நீங்கினார் 
ரெருக்கவும் யாம்படர் நெறியலா நெறி 
துரக்சவும் அருந்தவத் துறையும் நீங்கினோம் 

வல்லியம் பல திசி - வனத்து மான் என் 
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் 
சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினேம் 
வில்லியல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ 

மாதவத் தொழுகலெம் மறைகள் யாவையும் 
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் 
மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கி னேம் 
ஆதலின் அந்தண ரேயும் ஆகிலேம் 

இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின 
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் 
எந்தை மற் றியாருளர் இடுக்கண் நீக்குவார் 
வந்தனை 4 ம் செய்த தவத்தின் மாட்சியால் 

உருளுனட நேமியான் உலகை ஓம்பிய 
பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா 
இருளுடை . னவசுலெம் இரவி தோன்றினாய் 
அருளுடை வீரநின் அபயம் யாம் என்றார் 

[ அகத்தியப் படலம் 11-161 

ஸ்ரீராமர் தண்டகவன ரிஷிகளுக்கு அட்யாதல் 

புகல்புகுந் திலரேல் புறத்தும் அண்டத்தின் 
அகல்வரேனும் என் அம்பொடு வீழ் வரால் 
தகவில் துன்பம் தவிருதிர் நீர் எனா 
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் 

வேந்தன் வீயவும் யாய்துயர் மேவவும் 
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் 
மாந்தர் வன் துயர் கூரவும் யான்வனம் 
போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்றான் 

திரந்த வேதியர் நீவிரும் தீயவர் 
கவந்த பந்தக் களிநடம் கண்டிட 
அமைந்தவில்லும் அருங்கணைத் தூணியும் 
சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் 

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும் 
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் 
ஆர் அறத்தினோ டன்றி நின்றார் அவர் 
வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றா ன் 
[ அகத்தியப் படலம் 17 , 18 , 20 , 22 ) 


--- 

ஸ்ரீராமர் பஞ்சவடி தீரத்தைக் காணுதல் 

கண்டனன் இராமனை வரக் கருணை கூரப் 
புண்டிரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் 
எண்டிசையும் ஏழுலகும் எவ்வுயிரும் உய்யக் 
குண்டிகை யினிற் பொருவில் காவிரி கொணர்ந்தான் 

தண்டக வனத்து உறைதி என்றுரைதரக் கொண்டு 
உண்டுவரவு இத்திசை எனப் பெரிதுவந்தேன் 
எண்டரு குணத்தினை எனக்கொடுயர் சென்னி 
துண்டமதி வைத்தவனை ஓத்தமுனி சொல்லும் 

விழுமியது சொற்றனை இவ் வில்லிது இவண்மேல்நாள் 
முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும் 
வழிபட இருப்பது இது தன்னைவடி வாளிக் 
குழுவழுவில் புட்டிலொடு கோடி என நல்கி 

இப்புவனம் முற்றுமொரு தட்டினிடையிட்டால் 
ஒப்புவர விற்றென உரைப்பரிய வாளும் 
வெப்புருவு பெற்ற அரன் மேருவரை வில்லாய் 
முப்புரம் எரித்ததனி மொய்க்கணையும் நல்கா 

ஓங்குமரனோங்கி மலை ஓங்கி மணல் ஓங்கிப் 
பூங்குலை குலாவுகுளிர் சோலை புடை விம்மி 
தூங்குதிரை ஆறு தவழ் சூழலதோர் குன்றின் 
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச 

ஏகியினி அவ்வயின் இருந்துறைமின் என்றான் 
மேகநிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் 
பாகனைய சொல்லியொடு தம்பி பிரிவின்பின் 
போகமுனி சிந்தை தொடரக் கடிது போனான் 

[ அகத்தியப் படலம் 46.51 , 55 , 56 , 57,59 ] 


ஸ்ரீராமர் சடாயுவைக் கண்டு பஞ்சவடி தங்கல் 

நடந்தனர் காவதம் பலவும் நல்நதி 
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின் 
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும் 
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே 

உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சிசேர் 
அருக்கன் இவ் அகலிடத்து அலங்கு திக்கெலாம் 
தெரிப்புறு செறிசுடர் சிகையினால் சிறை 
விரித்திருந் தனன் என விளங்குவான் தனை 

வினவிய காலையில் மெய்ம்மை அல்லது 
புனைமலர்த் தாரவர் புகல்கி லாமையால் 
கனைகடல் நெடுநிலம் கரவல் ஆழியான் 
வனைகழல் தயர தன்மைந்தர் யாமென்றான் 

உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை 
தந்த சொல்லைத் தலைக்கொண்டு தாரணி 
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே 
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா 

இறைவ ! எண்ணி அகத்தியன் ஈந்துளது 
அறையும் நன்மணி ஆற்றின் அகன்கரைத் 
துறையுள் உண்டொரு சூழல் அச்சூழல்புக்கு 
உறைதும் என்றனன் உள்ளத்துறை குவான் 

பெரிதும் நன்று அப்பெருந்துறை வைகி நீர் 
புரிதிர் மாதவம் போதுமின்யானது 
தெரிவு றுத்து வென் என்றவர் திண்சிறை 
விரியும் நீழலில் மேவவிண் சென்றனன் 

வார்ப்பொற் கொங்கை மருகியை மக்களை 
ஏற்பச் சிந்தனையிட் டவ்வரக்கர்தம் 
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் சேக்கையில் 
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் 

( சடாயு காண்படலம் 1 , 2 , 18 , 34 , 39 , 41 , 42 ] 

அனையதோர் தன்மையான அருவி நீர் ஆற்றின்பாங்கர் 
பனிதெரு தெய்வப் பஞ்சவடி எனும் பருவச்சோலை 
தனியிடம் அதனை நண்ணித் தம்பியால் சமைக்கப்பட்ட 
இனிய பூஞ்சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் 

(பஞ்சவடிப் படலம் 7 ] 


சூர்ப்பணகை ஸ்ரீ ராமரைக் கண்டு மோகித்தல் 

சிந்தையில் உறைபவற்கு உருவந் தீய்ந்ததால் 
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு 
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று நான்குதோள் 
ந்தியின் உலகளித்தாற்கு என்றுன்னுவாள் 

கற்றையம் சடையவன் கண்ணிற் காய்தலால் 
இற்றவன் அன்று தொட் டின்றுகாறும் , தான் 
நற்றவம் இயற்றி அவ் அனங்கன் நல்லுருப் 
பெற்றன னாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள் 

தரங்களின் அமைந்து தாழ்ந்து உயர்ந்த தாலமா 
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய 
உரங்களின் உயர்திசை ஓம்பும் யானையின் 
கரங்களே இவன்மணிக்கரம் என்றுன்னுவாள் 

வில்மலை வல்லவன் வீரத்தோ ளொடும் 
கல்மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் 
நல்மலை யல்லது நாம் மேருவும் 
பொன்மலை யாதலால் பொருவலா தென்பாள் 

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும் 
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன் 
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின் 
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள் 

அதிகம் நின் றொளிரும் இவ்வழகன் வாண்முகம் 
பொதியவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ 
கதிர்மதி யாமெனின் கலைகள் தேயும் அம் 
மதியெனின் அதற்குமோர் மறுவுண் டென்னுமால் 

எவன்செய இனிய இவ் அழகைஎய்தினான் 
அவம் செயத் திருவுடம்பு அலச நோற்கின்றான் 
நவம்செயத் தகைய இந் நளின நாட்டத்தான் 
தவம்செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள் 

உடுத்தநீ ராடையள் உருவச் செவ்வியள் 
பிடிதரு நடையினள் பெண்மை நன்று இவன் 
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர் 
பொடித்தது போலும் இப்புல் என்றுன்னுவாள் 

வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியைக் 
காணலனே கொலாம் கதிரின் நாயகன் 
சேணெலாம் புல்லொளி செலுத்திச் சிந்தையில் 
நாணலன் மீமிசை நடக்கின்றான் என்றாள் 

குப்புறற்கு அரியமாக் குன்றை வென்றுயர் 
இப்பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பதோர் 
ஒப்பென உலகமே உரைக்க நண்ணுமோ 
துப்பினில் துப்புடையாதைச் சொல்லுகேன் 

நற்கலை மதியுற வயங்கும் நம்பிதன் 
எற்கலை திருவறை எய்தி ஏமுற 
வற்கலை நோற்றன மாசிலாமணி 
பொற்கலை நோற்றில போலுமால் என்றாள் 

தொடையமை நெடுமழைத் தொங்க லாமெனக் 
கடைகுழன் றிடைநெறி கரிய குஞ்சியைச் 
சடையெனப் புனைந்திலன் என்னின் தையலார் 
உடையுயிர் யாவையும் உடையுமால் என்றாள் 

நாறிய நகையணி நல்ல புல்லினால் 
ஏறிய செவ்விமேல் இயற்றுமோ எனா 
மாறகல் முழுமணிக்கு அரசின் மாட்சிதான் 
வேறொரு மணி.யினால் விளங்குமோ என்றாள் 

கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய 
பரந்தரு நான்முகன் பழிப்புற் றானரோ 
இரந்திவன் இணையடிப் பொடியும் ஏற்கலாம் 
புரந்தரன் உலகெலாம் புரக்கின்றான் என்றாள் 

[ சூர்ப்பணகைப் படலம் 5-18 ] 


ஸ்ரீராமர் பக்கல் சூர்ப்பணகை வருதல் 

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம் 
ஒன்றுவென் அன்றெனின் அமுதம் உண்ணினும் 
பொன்றுவென் போக்கினி அறிந்து போம் எனா 
சென்றெதிர் நிற்பதோர் செய்கை தேடுவாள் 

பஞ்சி யொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க 
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி 
அஞ்சொலிள மஞ்ஞையென் அன்னமென மின்னும் 
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் 

கானில்உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி 
மேனிநனி பெற்றுவிளை காமம் நிறை வாசத் 
தேனின் மொழியுற்று இனியசெவ்வி நனிபெற்றோர் 
மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள் 

நூபுரமும் மேகலையும் நூலும் அறல்ஓதிப் 
பூமுரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை 
தாமுரைசெய் கின்றதொரு தையல் வருமென்னா 
கோமகனும் அத்திசை குறித் தெதிர் விழித்தான் 

[ சூர்ப்பணகைப் படலம் 21 , 24 , 26 , 27 ] 

ஸ்ரீ ராமருக்கும் சூர்ப்பணகைக்கும் சம்வாதம் 

தீதில் வரவாக திரு நின்வரவு சேயோய் 
போதஉள தெம் முழைஓர் புண்ணியம் அதன்றோ 
ஏதுபதி ஏதுபெயர் யாவர்உற வென்றான் 
வேதமுதல் ; பேதையவள் தன்னிலை விரிப்பாள் 

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற 
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் 
மாவெலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்துலகம் மூன்றும் 
காவலோன் பின்னை காமவல்லியாம் கன்னி என்றாள் 

அவ்வுரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை 
செவ்விதன் றறிதலாகும் சிறிதின் என் றுணராச் செங்கண் 
வெவ்வுரு அமைந்தோன் ங்கை என்றது மெய்ம்மை ஆயின் 
இவ்வுரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் 

தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம் 
மாயவல் லரக்கரோடு வாழ்வினை மதிக்க லாதேன் 
ஆய்வுறு மனத்தேனாகி அறந்தலை நிற்பதானேன் 
தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்ற தென்றாள் 

தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்ப தென்பது 
ஆமெனல் ஆவதென்றால் அருங்குல மகளிர்க்கம்மா 
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய் கேன் யாரும் இல்லேன் 
காமனென் றொருவன் செய்யும் வன்மையைக் காத்தி என்றாள் 

நிந்தனை அரக்கிநீதி நிலையலாள் வினைமற் றெண்ணி 
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துட் கொண்டான் 
சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் துணிவிற் றன்றால் 
அந்தணர் பாவை நீயான் அரசரில் வந்தேன் என்றான் 

அருத்தியள் அனையகூற அகத்துறு நகையின் வெள்ளை 
குருத்தெழு கின்றநீலக் கொண்டல் உண் டாட்டம் கொண்டான் 
வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானிடர் மணத்தல் நங்கை 
பொருத்தம் அன்று என்று சாலப் புலமையோர் புகல்வர் என்றான் 

காந்தர்ப்பம் என்பதுண்டால் காதலின் கலந்த சிந்தை 
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் 
ஏந்தல் பொற் றோளினாய் ஈதியைந்த பின் எனக்கு மூத்த 
வேந்தர்க்கும் விருப்பிற்றாகும் வேறும் ஓர் உரையுண்டென்றாள் 

முனிவரோ டுடையர் முன்னே முதிர்பகை முறைமை நோக்கார் 
தனியை நீ ஆதலால்மற் றவரொடும் தழுவற் கொத்த 
வினையம் ஈதல்லதில்லை விண்ணும் நின் ஆட்சியாக்கி 
இனியராய் அன்னர்வந்துன் ஏவலின் நிற்பர் என்றாள் 

வளை எயிற் றவர்களோடும் வரும் விளையாட்டென்றாலும் 
விளைவின தீமையேயாம் என்பதை உணர்ந்து வீரன் 
உளைவன இயற்றல் ; ஒல்லைஉன் நிலை உணருமாகில் 
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் 

[ சூர்ப்பணகைப் படலம் 31-34 , 38 , 42 , 44 , 46-48 , 60 } 


சூர்ப்பணகை தன் உறவை நினைந்து புலம்பல் 

விடியல் காண்டலின் ஆண்டு தன் உயிர்கண்ட வெய்யாள் 
படியிலாள் மருங்குள்ளளவு எனையவன் பாரான் 
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லைக்கரந்தவள் காதல் 
வடிவினானுடன் வாழ்வதே வாழ்வு எனமதியா 

தனியிருந்தனள் சமைந்ததென் கருத்து எனத் தாழ்வுற்று 
இனியிருந் தெனக்கு எண்ணுவதில் என எண்ணா 
மனியிருந்த வல்மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் 
கனியிரும் பொழில் காத்தயல் இருந்தவன் கண்டான் 

நில் அடீ எனக் கடுகினன் பெண் என நினைந்தான் 
வில்எடாது அவள் வீங்கெரியாம் என விரிந்த 
சில்வல் ஓதியைச் செங்கையின் திருகுறப் பற்றி 
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளிகிளர் சுற்றுவாளு நவி 

ஊக்கித்தாக்கி விண்படர்வென் என்று உருத்தெழுவாளை 
நூக்கி நொய்தினில் வெய்திழையேல் என நுவலா 
மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால் 
போக்கிப் போக்கிய சினத் தொடும் புரிகுழல் விட்டான் 

உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும் 
அயரும் கைகுலைந்தலமரும் ஆருயிர் சோரும் 
பெயரும் பெண்பிறந்தேன் பட்டபிழை எனப்பிதற்றும் 
துயரும் அஞ்சிமுன் தொடர்ந்திலாத் தொல் குடிப்பிறந்தாள் 

ஊற்றும் மிக்கநீர் அருவியின் ஒழுகிய குருதிச் 
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய 
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயரெலாம் கூறி 
ஆற்று கிற்றிலள் பற்பல பன்னிநின் றழைத்தாள் 

நிலை எடுத்து நெடுநிலத்து நீயிருக்கத் தாபதர்கள் 
சிலை எடுத்துத் திரியுமது சிறிதன்றோ தேவர் எதிர் 
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே தழல் எடுத்தான் 
மலையெடுத்த தனிமலையே இவை காண வாராயோ 

புலிதானே புறத்தாகக் குட்டி கோட் படாதென்ன 
ஒலியாழி உலகுரைக்கும் உரைபொய்யோ ஊழியினும் 
சலியாத மூவருக்கும் தானவர்க்கும் வானவர்க்கும் 
வலியானே பான்பட்ட வலிகாண வாராயோ 

ஆர்த்தானைக் கரசுந்தி அமரர்கணத் தொடும் அடர்ந்த 
போர்த்தானை இந்திரனைப் பொருதவனைப் போர் தொலைத்து 
வேர்த்தானை உயிர்கொண்டு மீண்டானை வெரிந் பண்டு 
பார்த்தானே யான்பட்ட பழிவந்து பாராயோ 

மரனேயும் நெடுங்கானில் மறைந்துறையும் தாபதர்கள் 
உரனேயோ அடலரக்கர் ஓப்வேயோ உற்றெதிர்ந்தார் 
அரனே யோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் 
கரனே யோ யான்பட்ட கையறவு காணோயோ 

உரன்நெரிந்து விழஎன்னை உதைத்துருட்டி மூக்கரிந்த 
நரன் இருந்து தோள்பார்க்க நான் கிடந்து புலம்புவதோ 
கரன் இருந்த வனம் அன்றோ இவைப்படவும் கடவேனோ 
அரன் இருந்த மலையெடுத்த அண்ணாவோ அண்ணாவோ 

நசையாலே மூக்கிழந்து நாணமிலா நான்பட்ட 
வசையாலே நினதுபுகழ் மாசுண்ட தாகாதோ 
திசையானை விசைகலங்கச் செருச்செய்து மருப்பொசித்த 
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ 

ஒருசாலத் துலகேழும் உருத்தெதிரத்தனு ஒன்றால் 
திரு சாத சினம் திருகி திசையனைத்தும் செலநூறி 
இருகாலிற் புரந்தரனை இருந்தளையில் இடுவித்த 
மருகாவோ மானிடவர் வலிகாண வாராயோ 

கல்லீரும் படைத்தடக்கை அடல்கர தூடணர் முதலா 
அல்லீரும் சுடர்மணிப்பூண் அரக்கர் குலத்தவதரித்தீர் 
கொல்லீரும் படைக்கும்ப கருணனைப்போல் குவலயத்தில் 
எல்லீரும் உறங்குதிரோ யானழைத்தல் கேளீரே 
( சூர்ப்பணகைப் படலம் 82 , 84 , 85 , 86 , 90 , 92 95 , 99 , 
101 , 102 , 104 , 105 ) 


சூர்ப்பணகை ஸ்ரீ ராமருக்கு மீளவும் இதவுரைத்தல் 

என்றின்ன பலபன்னி இகலாக்கி அழுதிரங்கிப் 
பொன்துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து 
நின்றந்த நதியகத்து நிறைதவத்தின் துறைமுடித்து 
வன் திண்கைச் சிலெைநடுந்தோள் மரகதத்தின் மலை வந்தான் 

செங்கயல்போற் கருநெடுங்கண் தேமருதா மரையுறையும் 
நங்கையிவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன 
கொங்கைகளும் குழைகாதும் கொடிமூக்கும் குறைத்தழித்தால் 
அங்கணரசே ஒருவர்க் கழியரிதோ அழகென்றாள் 

மாப்போரில் புறங்காப்பேன் வான்சுமந்து செலவல்லேன் 
தூப்போலக் கனிபலவும் சுவையுடைய தரவல்லேன் 
காப்போரைக் கைத்தென் நீர் கருதியது தருவேன்இப் 
பூப்போலும் மெல்லியளால் பொருள் என்னோ புகல்வீரோ 

போக்கினீர் என் நாசி போய்த்தென்நீர் பொறுக்குவிரேல் 
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகமைவென் அருள்கூரும் 
பாக்கியம் உண்டெனின் அதனால் பெண்மைக்கோர் பழுதுண்டோ 
மேக்குயரும் நெடுமூக்கும் மடந்தையர்க்கு மிகையன்றோ 

பொன் னுருவப் பொருகழலீர் புழைகாண மூக்கரிவான் பொருள்வே ருண்டா 
இன்னுருவம் இதுகொண்டு இங் கிருந்தொழியும் தம்மருங்கே ஏகாள் அப்பால் 
பின்னிவளை அயலொருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ 
அன்னதனை அறிந்தன்றோ அன்புஇரட்டிப் பூண்டதுநான் அறிவிலேனோ 

காம்புறழும் தோளானளக் கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் 
ஆம்பொறியில் அடலரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீராயின் 
தாம்பொறியின் பலமாயம் தரும் பொறிகள் அறிந்தவற்றைத் தடுப்பேன் அன்றே 
பாம்பறியும் பாம்பின கால் எனமொழியும் பழமொழியும் பார்க்கி லீரோ . 

பெருங்குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உருப்பிடிப்பேன் அன்றேல்" 
அருங்கலாம் உற்றிருந்தான் என்னினும் ஆம் இளையவன் தான் அரிந்த நாசி 
ஒருங்கிலா இவளோடும் உறைவேனா என்பானேல் இறைவ ஒன்றும் 
மருங்கிலா தவளோடும் அன்றோ நீ நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய் 

சூர்ப்பணகைப் படலம் 106 , 111 , 120 , 122 , 125 , 111 , 11 } } 

சூர்ப்பணகை கரனோடு மூறை யிடல் 

இருந்த மாக்கரன் தாளிணையின் மிசை 
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பெனத் 
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர்மேல் 
விரிந்தபேகம் என விழுந்தாளரோ 

அமுங்குநாள் இதென்று அந்தகன் ஆணையால் 
தழங்கு டேரி எனத்தனித் தேங்குவாள் 
முழங்குமேகம் இடத்த வெந்தீயினால் 
புழுங்கு நாகம் எனப்புரண் டாளரோ 

இருவர் மானிடர் தாபதர் ஏந்திய 
வரிவில் வாள்கையர் மன்மதன் மேனியர் 
தரும நீரர் தயரதன் காதலர் 
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார் 

ஒன்றும் நோக்கலர் உன்வலி ஓங்கறன் 
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் 
வென்றி வேற்கை நிருதரை வேரறக் 
கொன்று நீக்குதும் என்றுணர் கொள்கையார் 

மண்ணில் நோக்க அருவானினில் மற்றினில் 
எண்ணி நோக்குறின் யாவரும் நோக்கிலாப் 
பெண்ணின் நோக்குடையாள் ஒருபேதைஎன் 
கண்ணின் நோக்கி உரைப்பருங் காட்சியாள் 

கண்டு நோக்கங் காரிகையாள் தனைக் 
கொண்டு போவல் இலங்கையர் கோக்கெனா 
விண்டுமேல் எழுந் தனை வெகுண்டு 
தண்டம் ஆக்கினர் மூக்கெனச் சொல்லினாள் 

(திருசிரா வதைப்படலம் 1 , 2 , 4-7 ] 
கர தூஷணத் திரிசிரர்களின் வதை 

துமிலப் போர்வல் லாக்கர்க்குச்சுட்டினாள் 
அமலத் தொல்பெயர் ஆயிரத் தாழியான் 
நிமலப் பாத நினைவில் இருந்த அக் 
கமலக் கண்ணனைக் கையினிற் காட்டினாள் 

"வாங்கி வாளரொடு வாளிபெய் புட்டிலும் 
தாங்கி தாமரைக் கண்ணன் அச்சாலையை 
நீங்கி இவ்வழி நேர்மின் அடாஎனா 
வீங்கு தோளன் மலைதலை மேவினான் 

மரங்கற் போல் நெடு வாளொடு தோள்வீழ 
உரங்களால் அடர்ந்தார் உரவோன் விடும் 
சரங்கள் ஓடின தைக்க அவர்கள் தம் 
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் 

ஒளிறு வேற்கரற்கு உற்றது உணர்த்தினாள் 
குளிறுகோப வெங்கோ ளரிமா அட 
களிறெலாம் படகைதலை மேலுற 
பிளிறி ஓடும் பிடியன்ன பெற்றியாள் 

அங்கரக்கர் அவிந்தழிந்தார் எனப் 
பொங்க ரத்தம் விழிவழிப் போந்துக 
வெங்கரப் பெயரோன் வெகுண் டான்விடைச் 
சங்கரற்கும் தடுப்பரும் தன்மையான் 

அழைஎன்தேர் எனக்கு ஆக்கு வெம்போர்ப்படை 
உழையர் ஓடி ஒரு நொடி உம்பல்மேல் 
மழையின் மாமுரசு எற்றுதிர் வல்லென்றான் 
முனழயின் வாளரி அஞ்ச முழங்குவான் 

சாடுதுன்றி விசும்பு கரந்தென 
நீடி எங்கும் நிமிர்ந்த நெடுங்கொடி 
ஒடும் எங்கள் பசி என்று வந்து எழுந்து 
ஆடுகின்ற அலகையின் ஆடவே 

ஆன்றமை எறிபடை அழுவத்தார்கலி 
வான்தொடர் மேருவை வளைத்த தாம்என 
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் 
தோன்றினன் கரன் நமன் துணுக்கம் எய்தவே 

மரம்படர் கானம் எங்கும் அதர்படவந்த சேனை 
கரன்படை என்ப தெண்ணிக் கருநிறக் கமலக்கண்ணன் 
சரன்பட்டர் புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான் தள்ளா 
உரன்படர் தோளில் மீளாக் கவசமிட் டுடைவா ளார்த்தான் 

மானிடன் ஒருவன் வந்தவலி கெழு சேனைக்கம்மா 
கானிடம் இல்லை என்னும் கட்டுரைகலந்த கானல 
யானுனட வென்றி என்னாம் யாவரும் கண்டுநிற்றீர் 
ஊனுடை இவனையானே உண்குவென் உயிரை என்றான் 

னுமாத்திரத்து எறிபடை இடியென இடியா 
மன்னர் மன்னவன் மதலையை வளைந்தன வனத்து 
மின்னும் வாலுளை மடடங்கலை முனிந்தன வேழம் 
துன்னி னாலெனக் கடுசினத்து அரக்கர் தம் தொகுதி 

வளைந்த காலத்தில் வளைந்தது அவ் இராமன் கைவரிவில் 
விளைந்த போரையும் ஆவதும் விளம்புதும் விசையால் 
புளைந்த பாய்பரி புரண்டன புகர் முகப்பூட்கை 
உளைந்த மால்வரை உரும் இடிபட ஒடிந்தென்ன 

சூலம் அற்றன அற்றன சுடர்மழு தொகைவாள் 
மூலம் அற்றன அற்றன முரண்தண்டு பிண்டி 
பாலம் அற்றன அற்றன பகழிவெம் பகுவாய் 
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் 

தொடிதுணிந்தன தோளொடு தோமரம் துணிந்த 
அடி துணிந்தன கடகளிறு அச்சொடு நெடுந்தேர் 
கொடிதுணிந்தன் குரகதம் துணிந்தன குலமா 
முடிதுணிந்தன துணிந்தன முளையொடு முசலம் 

ஒன்றுபத்து நூறாயிரம் கோடி என்றுணரா 
துன்றுபத்திய இராகவன் சுடுசரம் துரப்ப 
சென்று பத்திரத் தலையின் மலைதிரண்டென்ன 
கொன்று பத்தியிற் குவித்தன பிணப் பெருங்குன்றம் 

கைகள் வாளொடு களம்பட கழுத்தறக் கவச 
மெய்கள் போழ்பட தாள்விழ வெருவிட நிருதர் 
செய்ய மாத்தலை சிந்திட திசையுறச் சென்ற 
தையலார் நெடுவி.சியெனக் கொடியன சரங்கள் 

மாரி-ஆக்கிய வடிக்கணை வரைபுரை நிருதர் 
பேரியாக்கையின் பெருங்கரைவயின் தொறும் பிறங்க 
ஏரியாக்கின ஆறுகள் இயற்றின நிறையச் 
சோரியாக்கின போக்கின வனம் எனும் தொன்மை 

அலைமிதந்தன குருதியின் பெருங்கடல் அரக்கர் 
தலைமிதந்தன நெடுந்தடி மிதந்தன தடக்கைம் 
மலைமிதந்தன வாம்பரி மிதந்தன வயப்போர்ச் 
சிலைமிதந்தன மிதந்தன கொடியோடு தேர்கள் 

சொரிந்தபல் படை துணிபடத்துணிபட சரத்தால் 
புரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி 
தெரிந்து பார்மகள் நெளிவுற வனம் முற்றும் நிறைய 
விரிந்த செம்மயிர்க் கருந்தலை மலை என வீழ்ந்தான் 

கவந்த பந்தங்கள் களித்தன குளித்த கைம்மலைகள் 
சிவந்து பாய்த்த வெங்குருதியில் திருகிய சினத்தால் 
நிவந்த வெந்தொழில் நிருதர் தம் நெடுநிணம் தெவிட்டி 
உவந்த வன்கழுது உயிர்சுமந் துளுக்கியது உம்பர் 

மருள் தரும் சுளிவஞ்சனை வளை எயிற்றரக்கர் 
கருடன் அஞ்சுறு கண்மணி கரகமும் கவர்ந்த 
இருள் தரும் புறத்து இழுதையர் பழுது தறற்கு எளிதே 
அருந்தரும் திறத்து அறனன்றி வலியதுண்டாமோ 

எறிந்தார்என எய்தார் என நினைந்தார் எனஎறிய 
அறிந்தார் என அறியவகை அபில் வஈளிபின் அறுத்தான் 
செறிந்தானரயும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் 
மறிந்தானரயும் . வலித்தாரையும் மடித்தான் சிலைபிடித்தான் 

வானத்தன கடலின்புற வலயத்தன மதிசூழ் 
மீனத்தன மிளிர் குண்டல வதனத்தன மிடல் வெங் 
கானத்தன மலை பத்தன தினசசுற்றிய கரியின் 
தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே 

ஈரல்செறி கமலத்தன இரதத்திரள் புளினம் 
வீரக்கரி முதலைக்குலம் விடுபாய்டரி குரம்பாப் 
பாரக்குடர் In _ / T சன - படர்கின்றன பலவா 
மூரித்திரை உதிரக்குளம் முழுகிக் கழுதெழுமே 

அழைத்தார் சிலர் அயர்ந்தார்சியர் அறிந்தார் சிலர்கறிந்தார் 
உழைத்தார் சிலர் உ பிர்த்தார்சிலர் உருண்டார்சிலர் புரண்டார் 
குனழத்தரழ் தினரக்குருதிக் கடல் குளித்தார் சிலர் கொலைவாய் 
மனழத்தாரைகள் படப்பாரின- மடிந்தார்சிலர் உடைந்தார் 

எய்தார்பலர் எறிந்தார்பலர் மழஓச்சினர் எழுவால் 
பொய்தார்பலர் புடைத்தார்பலர் கிடைத்தார்பலர் பொருப்பால் 
பெய்தார்மழை பிதிர்த்தார் எரி பிறைவாள் எயிற்றரக்கர் 
னவதார் பலர் தெழித்தார்பலர் மலையாம் என வளைத்தார் 

தலைசிந்தின விழிசிந்தின தழல்சிந்தின தரைமேல் 
மலைசிந்தின படி சிந்தின வரிசித்துரம் மனழபோல் 
சினலரிந்தின கணைசிந்தின திசைசிந்தின திசையூடு 
லசிந்தின பொறிசிந்தின உயிர்சிந்தின் உடலம் 
இழிந்தனர் வரிசிலை எடுத்த கையினர் 
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் 

சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில் 
அற்றில் தலையெனும் ஆக்கை கண்டிலர் 
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் 
முற்றினர் இராமனை முடுகு தேரினார் 

அழிந்தன தேர் அவர் அவனி கீண்டுக 
ஒழிந்திலர் சரங்களை உருமின் ஏறெனப் 
பொழிந்தனர் பொழிகனல் பொடிக்கும் கண்ணினார் 

அத்தலைத் தானையன் அளவில் ஆற்றலான் 
முத்தலைக் குரிசில்பொன் முடியன் முக்கணான் 
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் 
வைத்தலைப் பகழியால் மழைசெய் வில்லினான் 

ஊன்றிய தேரினன் உருமின் வெங்கணை 
வான் தொடர் மழையென வாய்மை யாவர்க்கும் 
சான்றென நின்ற அத் தரும் மன்னவன் 
தோன்றல் தன் திருவுரு மறையத் தூவினான் 

தூவிய சாமெலாம் துணிய வெங்கணை 
ஏவினன் இராமனும் ஏவி ஏழிரு 
பூவியல் வாளியால் பொலங்கொள்தேர் அழித்து 
ஆவிவெம் பாகனை அழித்து மாற்றினான் 

அன்றியும் அக்கணத்து அமரர் ஆர்த்தெழப் 
பொன்தெரி வடிம்புடைப் பொருவில் வாளியால் 
வன்தொழில் தீயவன் மகுடமாத்தலை 
ஒன்றொழித் திரண்டையும் உருட்டினானரோ 

அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்கப் 
பொற்றை மாமுழைப் புலாலுடைவாயினின் புகுந்து 
கொற்ற வார்சரத்து ஒழிந்ததோர் சிரத்தையும் குறைத்தான் 

திரிசிராஎனும் சிகரம்மண்சேர்தலும் செறிந்த 
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார் 
பருதிவாளினர் கேடகத்தடக்கையர் பரந்த 
குருதிநீரிடை வார்கழல் கொழுங்குடர் தொடக்க 

கணத்தின் மேல்நின்றவானவர் கைபுடைத்து ஆர்ப்ப 
பணத்தின் மேல் நிலம் குழிறக் கால் கொடு பறப்பார் 
நிணத்தின் மேல்விழுந் தழுந்தினர் சிலர்சிலர் நிவந்த 
பிணத்தின் மேல்விழுந்து ருண்டனர் உயிர்கொடுபிழைப்பார் 

( திருசிராவதைப்படலம் 15 , 18 , 20 , 23 , 26 , 51 , 61 , 67 , 74-77 , 79 .. 
81 83 , 85 87 , 89 , 90 , 93 , 94 , 97 , 101 , 103 , 105. 106,112,127 , 129 , 134-136 ) 

அனையர் ஆகிய அரக்கரை ஆண்டொழிற் கமைந்த 
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்மின் என்ன 
நினையும் நான் உமக்குரைப்பதும் உண்டுஎன நின்றே 
துனையும் வாம்பரித் தேரினன் தூடணன் சொன்னான் 

என்று தானும் தன்எறிகடற் சேனையும் இறைநீர் 
நின்றுகாண்டிர் என்நெடுஞ்சிலை வலி என நேராச் 
சென்று தாக்கினன் தேவரும் மருள் கொண்டு திகைத்தார் 
நன்று காத்தி என்று இராமனும் எதிர்செல நடந்தான் 

தூடணன்விடு சுடுசரம் யாவையும் துணியா 
பாடுநின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா 
ஆடல் கொண்டனன் அளப்பரும் பெருவலியரக்கர் 
கூடிநின்ற அக்குரைகடல் வறள்படக் குறைத்தான் 

தேவர் ஆர்த்தெழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் 
ஓவில் வாழ்த்தொலி நாற்கடல் முழக்கென ஓங்க 
ச . அடா இதுவல்லையேல் நீஎனக் கணைஒன்று 
ஏவினான் அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான் 
( தூடணன்வதைப்படலம் 1 , 8 , 12 , 21 ] 

தம்பி தலையற்றபடியும் தசரதன் சேய் 
அம்பு படையைத் துணிபடுத்ததும் அறிந்தான் 
வெம்புபடை விற்கைவிசயக் கரன் வெகுண்டான் 
கொம்புதலைக் கட்டிய குலக்கரி கடுப்பான் 

அடங்கலில் கொடுந்தொழில் அரக்கர் அவ் அனந்தன் 
படங் கிழிதரப்படிதனில் பலவிதப் போர் 
டங்கலுழ் தடங்களிறு தேர்பரி தூவித் 
தொடங்கினர் நெடுந்தகையும் வெங்கணை துரந்தான் 

எந்திரத்தடந் தேரிழந்தான் இழந்து 
அந்தரத்திடை ஆர்த்தெழுந்து அம்பெலாம் 
சுந்தரத்தனி வில்லிதன் தோள் எனும் 
மந்தரத்தில் மழையின் வழங்கினான் 

வரம் அரக்கன் படைத்தலின் மாயையின் 
உர முடைத் தன்மையால் உலகு ஏழையும் 
பரம் முருக்கிய பாவத்தினால் வலக் 
கரம் எனக்கரன் கண்டமுற் றானரோ 
[ கான்வதைப்படலம் 1 , 2 , 20 , 24 ) 

சூர்ப்பணகை ராவணனோடே முறையிடல் 

இங்கு நின்றது உரைத்தும் இராவணன் 
தங்கை தன்கை வயிறு தகர்த்தனள் 
கங்குல் அன்ன கரனைத் தழீஇ நெடும் 
பொங்கு வெங்கு ருதிப்புரண் டாளரோ 

அலங்கல் வேற்கை அரக்கரை ஆசறக் 
குலங்கள் வேரறுப்பான் குறித் தாழ்கடல் 
கலங் குறைத்தெழு கால்எனக் காலினால் 
லங்கை மாநகர் நொய்தின் சென்றெய்தினாள் 
[கான்வதைப்படலம் 29 , 31 ] 

தங்கையும் அவ்வழித் தலையில் தாங்கிய 
செங்கையள் சோரியின் தாரை சேர்ந்திழி 
கொங்கையள் மூக்கிலள் குழையின் காதிலள் 
மங்குலின் ஒலிப்படத் திறந்த வாயினன் 

முடையுடை வாயினள் முறையிட் டார்த்தெழு 
கடையுகக் கடல்ஒலி காட்டிக் காந்துவாள் 
குடதிசைச் செக்கரின் சேர்ந்த கூந்தலாள் 
வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் 

மடித்தபில் வாய்கள் தொறும் வந்து புகைமுந்த 
துடித்ததொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப 
கடித்த கதிர் வாளெயிறு மின்கஞல மேகத்து 
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் 

கானிடை அடைந்து புவிகாவல் புரிகின்றார் 
மீனுடை நெடுங்கொடியினோன் அனையர் மேல்கீழ் 
ஊனுடை யுடம்புடைமை யோர்உவமை இல்லா 
மானிடர் தடிந்தனர்கள் வாள்உருவி என்றாள் 

வற்கலையர் வார்கழலர் மார்பின் அணிநூலார் 
விற்கலையர் வேதம் உறை நாவர் தனிமெய்யர் 
உற்கலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் 
சொற்கலை எனத்தொலைவில் தூணிகள் சுமந்தார் 

தராவலய நேமி உழவன் தயர தப்பேர் 
பராவ அருநலத்தொருவன் மைந்தர் பழி இல்லார் 
விராவ அருவனத்து அவன் விளம்ப உறைகின்றார் 
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் 
( இராவணன் அணங்குறுபடலம் 24 , 25 , 29 , 50 , 54 , 57 ] 


சூர்ப்பணகை ராவணன் முன் சீதையை வரூணித்தல் 

ஆரவள் என்னலோடும் அரக்கியும் ஐயஆழித் 
தேர் அவள் அல்குல் கொங்கை செம் பொன்செய் குலிகச்செப்பு 
பார் அவள் பாதம் தீண்டப்பாக்கியம் படைத்த தம்மா 
பேர் அவள்சீதை என்று வடிவெலாம் பேசலுற்றாள் 

காமரம் முரலும்பாடல் கள் எனக்கனிந்த இன்சொல் 
தேமலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்காம் என்னத் 
தாமரை இருந்ததையல் சேடியாம் தரமும் அல்லள் 
யாம் உரைவழங்கும் என்பது ஏழைமைப் பாலதன்றோ 

மஞ்சொக்கும் அளகொதி மழைஒக்கும் வடித்த கூந்தல் 
பஞ்சொக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய 
அஞ்சொற்கள் அமுதின் அள்ளிக் கொண்டவள் வதனம்மைதீர் 
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் 

ஈசனார் கண்ணின் வெந்தான் எனும் ஈதிழுதைச்சொல் இவ் 
வாசம் நாறோதியாளை கண்டனன் வௌவலாற்றான் 
பேசலாம் தகைமைத்தல்லாட் , பெரும்பிணிபிணிப்ப நீண்ட 
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கனவ் உருவமம்மா 

தோளையே சொல்லுகேனோ சுடர்முகத்து லவுகின்ற 
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ 
மீளவும் திகைப்பதல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் 
தாளையே சாண்டி அன்றேநானுக் குரைப்ப தென்னோ 

வில்லொக்கும் நுதல் என்றாலும் வேலொக்கும் விழி என்றாலும் 
பல்லொக்கும் முத்தென்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் 
சொல்லொக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லலாம் உவமையுண்டோ 
நெல்லொக்கும் புல்லென்றாலும் நேர்உரைத் தாகவற்றோ 

இந்திரன் சசியைப் பெற்றான் இருமூன்று வதனத்தோன்தன் 
தந்தையும் உமையைப் பெற்றான் தாமரைச் செங்கணானும் 
செந்திரு மகளைப் பெற்றான் சீதையைப் பெற்றாய் நீயும் 
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலைஉனக்கே ஐயா 

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத் திருந்தபொன்னை 
ஆகத்தில் ஒருவன்வைத்தான் அந்தணன் நாவில்வைத்தான் 
மேகத்திற் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை 
மாகத்தோள் வீரபெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்த்தி 

( இராவணன் அணங்குறுபடலம் 68 -71 , 73 - 76 ) 


மாரீசன் இராவணனை இடித்தல் 
கோபமும் மறனும் மானக்கொதிப்பும் என்றினைய வெல்லாம் 
பாபம் நின்ற இடத்து நில்லா தன்மம்போல் பற்றுவிட்ட 
தீபம் ஒன்று ஒன்றையுற்றால் என்னலாம் செயலின்புக்க 
தாபமும் காமநோயும் ஆருயிர் கலந்தவன்றே 

கரனையும் மறந்தான் தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் 
உரனையும் மறந்தான் உற்றபழியையும் மறந்தான் , வெற்றி 
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னைப்பெற்ற 
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் 

தாவியது தீதெனாது தையலாளை மெய்யுறப் 
பாவியாத போதிலாத பாலிமாழை பானல்வாய் 
காவியான கண்ணிமேனி காணமூளும் ஆசையால் 
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் யினான் 

வந்தமந் திரிகளோடு மாசறமரபின் எண்ணி 
சிந்தையில் நினைந்தசெய்யும் செய்கையான் தெளிவில் நெஞ்சன் 
அந்தரம் செல்வதாண்டோர் விமானத்தில் ஆரும் இன்றி 
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் 

[ இராவணன் அணங்குறுபடலம் 82 , 83 , 92 , 170 ] 

மன்னா நீநின் வாழ்வை முடித்தாய் மதியற்றாய் 
உன்னால் அன்றீ தூழ்வினை என்றே உணர்கின்றேன் 
இன்னாவேனும் யானிது உரைப்பேன் இதம் என்னா 
சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவெல்லாம் 

அற்றகரத்தோடு உன் தலை நீயே அனல் முன்னில் 
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசிகூர 
உற்றுயிர் உள்ளே தேய உலந்தாய் பினையன்றோ 
பெற்றனை செல்வம் பின்னதிகழ்ந்தால் பெறலாமோ 

நாரம்கொண்டார் நாடு சுவர்ந்தார் நடையல்லா 
வாரம் கொண்டார் மற்றொரு வன்றன் மனைவாழும் 
தாரம்கொண்டார் என்றிவர் தம்மை தருமந்தான் 
ஈரும்கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா 

அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் 
ந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் 
செந்திரு ஒப்பார் எத்தனையோர் நின் திருவுண்பார் 
மந்திரம் அற்றார் உற்றதுரைத்தாய் மதியற்றாய் , 

செய்தா யேனும் தீவினையோடும் பழியல்லால் 
எய்தா தெய்தாதெய்தின் இராமன் உலகீன்றான் 
வைதால் அன்ன வாளிகள் கொண்டுன் வழியோடும் 
கொய்தான் அன்றே கொற்றம் முடித்துன் குழுவெல்லாம் 

வெய்யோர் யாரே வீரவிரா தன் துணை வெய்யோர் . 
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கவன் என் 
உய்வார் யாரேநம்மில் எனக்கொண்டுணர் தோறும் 
நையா நின்றேன் நீயிது உரைத்து நலிவாயோ 

நின்றும் சென்றும் வாழ்வன எல்லாம் நிலையாதால் 
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாம் புலையாடற்கு 
ஒன்றும் உன்னாய் என்னுரை கொள்ளாய் உயர்செல்வத்து 
என்றும் என்றும் வைகுதிஐயா இனி என்றான் 

உஞ்சுபிழையாய் உறவினொடும் எனஉன்னா 
நெஞ்சு பறைபோதும் அது நினைய இல்லாய் 
அஞ்சும் எனதாருயிர் அறிந்து அருகுநின்றார் 
நஞ்சு நுகர்வாரை இதுநன்று எனலும் நன்றோ 

வேதனை செய் காமவிடம் மேலிட மெலிந்தாய் 
தீதுரை செய்தாய் இனைய செய்கை சிதைவன்றோ 
மாதுலனும் ஆம் மரபின் முந்தை உறவந்தேன் 
ஈதுரைசெய் தேன தனை எந்தை தவிர்க என்றான் 

[ மாரீசன் வதைப்படலம் 8 , 9 , 11 , 12 , 15 , 18 , 24 , 26 ) 


லட்சுமணர் பொன்மானைப் பொய்மான் எனல் 

தன்மானம் இலாத தயங்கொளிசால் 
மின் வானமும் மண்ணும் விளங்குவதோர் 
பொன்மான் உருவங்கொடு போயினனால் 
நன்மான் அனையாள் தனை நாடுறுவான் 

நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும் 
முற்றிப் பொழிகா தலின் முந்துறுவாள் 
பற்றித்தருக என்பென் என நினையா 
வெற்றிச் சிலைவீரனை மேவினளால் 

ஆண்டங் கிளையான் உரையாடினனால் 
வேண்டும் எனலாம் விழைவன்றிது எனா 
பூண்துஞ்சு பொலங்கொடி யோய் அதுநாம் 
காண்டும் எனவள்ளல் கருத்துணர்வான் 

காயம் கனகம் மணிகால் செவிவால் 
பாயும் உருவோடிது பண்பல வால் 
மாயம் எனலன்றி மனக்கொளவே 
ஏயும் இறை மெய்யல என்றளவே 

ஐய நுண் மருங்குல் நங்கை அஃதுரை செய்ய ஐயன் 
செய்வென் என்றமைய நோக்கத் தெளிவுடைத் தம்பிசெப்பும் 
வெய்யவல் லரக்கர்வஞ்சம் விரும்பினார் வீனையின் செய்த 
கைதவமான் எண்றண்ணல் காணுதி கடையின் என்றான் 

( மாரீசன் வதைப்படலம் 43 , 48 , 50 , 51 , 61 ] 

லட்சுமணர் சீதாதேவியைத் தேற்றல் 

அக்கணத்தினில் ஐயனும் வெய்தன் 
சக்க ரத்தின் தகைவரி தாயதோர் 
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் 
புக்க தேயம்புக்கு இன்னுயிர் போக்கெனா 

நெட்டிலைச்சரம் வஞ்சனை நெஞ்சுறப் 
பட்ட தப்பொழுதே பகு வாயினால் 
அட்டதிக்கினும் அப்புறமும் புக 
விட்ட ழைத்தொரு குன்றென வீழ்ந்தனன் 

( மாரீசன் வதைப்படலம் 75 , 76 ) 

எயிறலைத்து முழைதிறந் தேங்கிய 
செயிர் தலைக்கொண்ட சொல்செவி சேர்தலும் 
குயில் தலத்திடை உற்றதோர் கொள்கை யாள் 
வயிறலைத்து விழுந்து மயங்கினாள் 

குற்றம் வீந்த குணத்தின் எங்கோமகன் 
மற்றவ் வாளரக்கன் புவி மாயையால் 
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் 
நிற்றியோ இளையோய் ஒருநீ என்றாள் 

எண்மையார் உலகினில் இராமற்கு ஏற்றம்ஓர் 
திண்மை யார்உளர் எனச் செப்பற் பாலதோ 
பெண்மையால் உரை செயப் பெறுதிரால் 
உண்மையான் அனையவட்கு உணரக்கூறினான் 

பார் எனக் கனல் எனப் புனல் எனப் பவனவான் 
பேர் எனைத் தவை அவன் முனியின் பேருமால் 
சார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை 
ஆர்எனக் கருதிஇவ் இடரின் ஆழ்கின்றீர் 

மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் 
போற்ற வன் திரிபுரம் எரித்தபுங்கவன் 
ஏற்றிநின் றெய் தவில் இற்றது எம்பிரான் 
ஆற்றலின் அமைவதோர் ஆற்றல் உண்மையோ 

பார்க்கஎன் பகர்வது பகழிப் பண்ணவன் 
துரக்க அங்கதுபட தொலைந்து சோர்கின்ற 
அரக்கன் அவ்வுரை எடுத் தரற்றினாள் அதற்கு 
ரக்கம் உற்றிரங்கலீர் இருத்திர் ஈண்டென்றான் 

[இராவணன் சூழ்ச்சிப்படலம் 2 , 4 , 5 , 7 , 9 , 11 ] 

சீதைக்கும் இராவண சந்நியாசிக்கும் சம்வாதம் 

இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற 
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் 
முளைவரித் தண்டொரு மூன்றும் முப்பகை 
தளையரி தவத்தவர் வடிவும் தாங்கினான் 

ஊண்: இல னாம்என உலர்ந்த மேனியன் 
சேண்நெறி வந்ததோர் வருத்தச் செய்கையான் 
பாணியின் உழந்திடைப் படிக்கின்றான் என 
வீணையின் இசைபட வேதம் பாடுவான் 

வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியான் 
அற்பின் நல் திரைபுரள் ஆசை வேலையன் 
பொற்பினுக் கணியினை புகழின் சேக்கையை 
கற்பினுக் கரசியை கண்ணின் நோக்கினான் 

இருந்தவன் யாவதிருக்கை இங்குறை 
அருந்தவன் யாவன் நீர்யாரை என்றலும் 
விருந்தினர் இவ்வழி விரகிலார் என 
பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள் 

தயரதன் தொல்குலத் தலைவன் . தம்பியோடு 
உயர்குலத் தன்னைசொல் உச்சி ஏந்தினான் 
அயர்விலன் இவ்வழி உறையும் அன்னவன் 
பெயரினைத் தெரிகுதிர் பெருமையீர் என்றாள் 

அனகமா நெறிபடர் அடிகள் நும் அலால் 
நினைவதோர் தெய்வம் வேறிலாத நெஞ்சினான் 
சனகன் மாமகள் பெயர் சனகி காகுத்தன் 
மனைவியான் என்றனள் மறுவில் கற்பினாள் 

சீதை வினவ ராவணன் கூறுதல் 

ஈசன் ஆண்டிருந்த இலங்குமால் வரை 
ஊசி வேரொடும் பறித்தெடுக்கும் ஊற்றத்தான் 
ஆசைகள் சுமந்தபேர் அமரி யானைகள் 
பூசல்செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான் 

வெம்மைதீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியான் 
செம்மையோன் மன்மதன் திசுைக்கும் செவ்வியான் 
எம்மனோர் அனைவரும் இறைவர் . றெணும் 
மும்மையோர் பெருமையும் முற்றும் வெற்றியான் 

அனைத்துலகினும் அழகனமந்த நங்கையர் 
எனைப்பலர் அவன் தனது அருளின் இச்சையோர் 
நினைத்து அவர்உருகவும் உதவ நேர்கிலன் 
மனக்கினியாள் ஒருமாதை நாடுவான் 

வேதமும் வேதியர் அருளும் வெஃகலா 
சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப் 
பாதக அரக்கர் தம் பதியின் வைகுதற்கு 
ஏது என் உடலமும் மிகை எ - றெண்ணுவீர் 

மங்கையஃதுரைத்தல் கேட்ட வரம்பிலான் மறுவின் தீர்ந்தார் 
வெங்கண் வாள் அரக்கர் என்ன வெருவலெம் மெய்ம்மை நோக்கி 
திங்கள் வாள்முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே 
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் 

திறந்தெரி வஞ்சன் அச்சொல் செப்பலும் செப்பம் மிக்காள் 
அறந்தருவள்ளல் ஈண்டிங் கருந்தவம் முயலும் நாளுள் 
மறந்தலை திரிந்தவாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் 
இறந்தனர் முடிவர் பின்னர் இடரிலைஉலகில் என்றாள் 

மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர் தம்மை 
மீனென மிளிரும் கண்ணாய் வேர் அறவெல்வர் என்னின் 
யானையின் இனத்தையெல்லாம் இளமுயல் கொல்லும் இன்னும் 
கூனுகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் 

மின் திரண்டனைய பங்கி விராதனும் வெகுளி பொங்கக் 
கன்றியமனத்து வென்றிக்கரன் முதல்கணக் கிலோரும் 
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர்போலும் என்றாள் 
அன்றவர்க் கடுத்ததுன்னி மழைக்கண்ணீர் ஆலி சோர்வாள் 

சீறினள் உரை செய்வான் அச்சிறுவலிப் புல்லியோர் கட்கு 
ஈறுஒருமனிதன் செய்தான் என்றெடுத் தியம்பின யேல் 
தேறுதி நாளையே அவ் இருபது திண்தோள் வாடை 
வீறிய பொழுது பூளைவீஎன வீவன் அன்றே 

மேருவைப் பறிக்கவேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின் 
நீரினைக் கலக்கவேண்டின் நெருப்பினை அவிக்கவேண்டின் 
பாரினை எடுக்கவேண்டின் பால் நிகர் செஞ்சொல் ஏழாய் 
யார் எனக்கருதிச் சொன்னாய் இராவணற் கரிதென் என்றான் 

அரண்தரு திரள்தோள் சால உளஎனின் ஆற்றல் உண்டோ 
கரண்டநீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன் 
திரண்டதோள் வனத்தை எல்லாம் சிறியதோர் பருவந்தன்னில் 
இரண்டுதோள் ஒருவனனறோ மழுவினால் எறிந்தான் என்றாள் 

என்றிவன் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் 
சென்றன திரள்தோள் வானம் திண்டினமகுடம் திண்கை 
ஒன்றோடு ஒன்றடித்த மேகத்து உரும் என எயிறுதம்மில் 
மென்றன வெகுளி பொங்க விட்டது மாயவேடம் 

செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள் 
கவினும் வெம்சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை 
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கெரி புனிதர் ஈயும் 
அவியை நாய் வேட்டதென்ன என் சொன்னாய் அரக்க என்னா 

புல் நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற 
என் உயிர்இழத்தல் அஞ்சி இற்பிறப் பழிதல் உண்டோ 
மின் உயிர்த்து உருமின்சீறும் வெங்கணை விரவா முன்னம் 
உன்உயிர்க் குறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி.என்றாள் 

அணங்கினுக் கணங்கனாளே ஆசைநோய் அகத்துப் பொங்க 
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர்க் 
கணங்குழை மகளிர்க்கெல்லாம் பெரும்பதம் கைக்கொள் கென்னா 
வணங்கினன் உலசுந்தாங்கும் மலையினும் வலியதோளான் 

வாக்கினான் அன்னான் சொல்ல மாயையால் வஞ்சமான் ஒன்று 
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றைப் 
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னன 
காக்குமா காண்டியாயின் கடவல் கடவல் உன்தேரை என்றாள் 

மீட்டும் ஒன்றுனர செய்வாள் நீவீரனேல் விரைவில் மற்றுன் 
கூட்டமாம் அரக்கர் தம்மை கொன்றுங்னக கொங்கை மூக்கும் 
வாட்டினார்வனத்தின் உள்ளார் மானிடர் என்றவார்த்தை 
கேட்டும் இம்மாயம் செய்தது அச்சத்தின்கிளர்ச்சி யன்றோ 
[ இராவணன் சூழ்ச்சிப்படலம் 20 , 21 , 26 , 36 , 39 , 42 , 46 , 47 , 49 , 51 
54 , 55 , 56 , 59 62 , 67 , 68 , 70 , 81 , $ 21 


சடாயு ராவணனுக்குப் புத்தி சொல்லுதல் 

வந்தனன் எருவையின் மன்னன் , மாண்பிலான் 
அந்திரத் தேர்செலவு ஒழிக்கும் எண்ணினான் 
சிந்துரக் கால்ரம் : செக்கர் சூடிய 
கந்தரம் கயிலையை நிகர்க்கும் காட்சியான் 

ஆண்டுற்று அவ்வணங்கினன அஞ்சல் எனா 
தீண்டிற்றிலன் என்றுணர் சிந்னதயினான் 
மூண்டுற்றெழும் வெங்கதம் முற்றிலனாய் 
மீண்டுற் றூறையாடலை மேவினனால் 

கெட்டாய் கிளையோடு நின் வாழ்வை எல்லாம் 
சுட்டாய் இதென்ன தொடங்கினை நீ 
பட்டாய் எனவே கொடுபத்தினினய 
வீட்டு ஏகுதியேல்விளி கின்றிலையால் 

பேதாய் பிழைசெய்தனை பேர் உலகின் 
மாதா அனையாளை மனக்கொடுநீ 
யாதாக நினைத்தனை எண்ணம் இலாய் 
ஆதாரம் நினக்கினி யார்உளரோ 

எல்லா உலகங்களும் இத்திரனும் 
அல்லாதவர் மூவரும் அந்தகனும் 
புல்வாய் புலிகண்டது போல்வரலால் 
வில்லாளனை வெல்லும் மிடுக்குளரோ 

இம்மைக் குறவோடும் இறந்தழியும் 
வெம்மைத் தொழில் இங்கிதன் மேலிலையால் 
அம்மைக்கு அருமா நரகம் தருமால் 
எம்மைக்கு தமாக எண்ணினை நீ 

முத்தேவரின் மூல முதற்பொருளாம் 
அத்தேவர்இம் மானிடர் ஆதலினால் 
எத்தேவரோ டெண்ணுவது எண்ணம் இலாய் 
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் 

புரம்பற்றிய போர்விடையான் அருளால் 
வரம் பெற்றவும் மற்றுள விஞ்சைகளும் 
சாம்பற்றிய சாபம் விடுந்தனையே 


வானாள் பவன்மைந்தன் வளைத்தவிலான் 
தானேவரின் நின்று தடுப்பரிதால் 
நானே அவண் உய்ப்பென் இந்நன்னு தலை 
போ நீ கடிதென்று புகன்றிடலும் 

( சடாயு உயிர்நீத்தபடலம் ( -9 , 12 - 16 ) 

சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம் 

கேட்டான் நிருதர்க்கிரை கேழ்கிளர் தன் 
வாள் தாரை நெருப்புக வாய்மடியா 
ஓட்டாய் இனிநீஉரை செய்கு நரை 
காட்டாய் கடிதென்று கனன்று ரையா 

அக்காலை அரக்கன் அரக்குருக்கு அன்ன கண்ணன் 
எக்காலமும் இன்னதோர் ஈடழிவுற்றிலாதான் 
நக்கான் உலகேழும் நடுங்கிட நாகமன்ன 
கைக்கார் முகத்தோடு கடைப்புருவம் குனித்தான் 

சண்டப்பிறை வாள் எயிற்றான் சரதாரைமாரி 
மண்டச்சிறகால் அடித்தான் சிலவள்ளுகிறால் 
கண்டப் படுத்தான் சில காலனும் காணஉட்கும் 
துண்டப்படையால் சிலைதுண்டதுண்டங்கள் கண்டான் 

மீட்டும் அணுகா நெடுவெங்கண் அனந்த நாகம் 
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின்மீதும் 
நீட்டும் நெடுமூக்கெனும் நேமியன் சேமவில்கால் 
கோட்டும் அளவில் மணிக் குண்டலம் கொண்டெழுந்தான் 

ஒத்தான் உடனே உயிர்த்தான் உகுத்தான் அவன் தோள் 
பத்தொடுபத்தின் நெடும்பத்தியில் தத்தி மூக்கால் 
கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா 
முத்தார மார்பின் கவசத்தையும் மூட்டறுத்தான் 

அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு 
செறித்தான் தடமார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி 
வெறித்தார் வெறியாமுன் இராவணன் வில்லைமூக்கால் 
பறித்தான் பறவைக்கிறை விண்ணவர் பண்ணையார்ப்ப 

வேகமுடன் வேலிழந்தான் படைவேறு எட்ாமுன் 
மாகம் மறையும்படி நீண்ட வயங்குமான் தேர்ப் 
பாகன் தலையைப் பறித்து படர்கற்பினாள்பால் 
மோசம் படைத்தான் , உளைவு எய்தமுகத்து எறிந்தான் 

பாய்ந்தான் அவன்பல் மணித்தண்டு பறித்தெறிந்தான் 
எய்ந்தார் கதித்தேர்பரி எட்டினொடு எட்டும் எஞ்சித் 
தீய்ந்தா சறவீசி அத்திண்டிறல் துண்ட வாளால் 
காய்ந்தான் கவர்ந்தான் உயிர்காலனும் கைவிதிர்த்தான் 

மாச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும் 
ஓச்சிச்சிறகால் புடைத்தான் உலையா விழுந்து 
மூர்க்சித்த ராவணனும் முடிசாய்ந் திருந்தான் 
போச்சு இத்தனைபோலும் நின் ஆற்றல் எனப்புகன்றான் 

அவ்வேலையினே முனிந்தான் முனிந்தரற்றலன் அவ் 
வெவ்வேலரக்கன் விடலாம்படை வேறுகாணான் 
இவ்வேலையினே இவன் இன்னுயிர் உண்பென் என்னா 
செவ்வேபிழையா நெடுவாள் உறைதீர்த் தெறிந்தான் 

வலியின் தலை தோற்றிலன் மாற்றருந் தெய்வவாளால் 
நலியும் தலை என்ற தன்றியும் வாழ்க்கை நாளும் 
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின்வேந்தன் 
குலிசம் எறியச்சிறையற்றது ஓர்குன்றின் வீழ்ந்தான் 
( சடாயுஉயிர்நீத்தபடலம் 17 , 22 , 23 , 24 , 27 , 28 , 34 , 38 , 40 42 

சடாயுவிழவே சீதைபுலம்பல் 

வெள்கும் அரக்கன் நெடுவிண்புக ஆர்த்து மிக்கான் 
தொள்கின் தலைஎய்திய மான்எனச் சோர்ந்து நைவாள் 
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒருசார்வு காணாள் 
கொள்கொம் பொடியக்கொடி வீழ்ந்ததுபோல் குலைந்தாள் 

வன்துணையுளன் எனவந்த மன்னனும் 
பொன்றினன் எனக்கினிப் புகல் என் என்கின்றாள் 
இன்துணைப் பிரிந்திரிந்து இன்னல் எய்திய 
அன்றிலம் படை என அரற்றினாள் அரோ 

அல்லல் உற்றேனைவந்து அஞ்சல் என்ற இந் 
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே 
(வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ 
ல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் 

நாணிலேன் உரை கொடு நடந்த நம்பிமீர் 
நீள்நிலை அறநெறி நின்றுளோர்க் கெலாம் 
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை 
காணிய வம்மெனக் கலங்கி விம்மினாள் 

கற்பழியாமை என் கடமை ஆயினும் 
பொற்பழியா வலம் பொருந்தும் போர்வலான் 
வில்பழியுண்டது வினையினேன் வந்த 
இல்பழியுண்டது என்றிரங்கி ஏங்கினாள் 

எல்லையில் விசும்பிடை இருந்த நேமியாய் 
சொல்லிய அறநெறி தொடர்ந்த தோழமை 
நல்லியல் அருங்கடன் கழித்த நம்பியைப் 
புல்லுதியோ எனப்பொருமிப் பொங்கினாள் 

( சடாயுஉயிர் நீத்தபடலம் 44. - 491 
ஸ்ரீராமர் சீதைக்காகத் தம்பியோடிரங்கல் 

ஏகினன் அரக்கனும் எருவைவேந்தனும் 
மோகவெந் துயர்சிறிதாறி முன்னியே 
மாகமே நோக்கினன் வஞ்சன் வல்லையில் 
போகுதல் கண்டகம் புலர்ந்து சொல்லுவான் 

வந்திலர் மைந்தர் நன்மருகி எய்திய 
வெந்துயர் துடைத்தனென் என்னும் மெய்ப்புகழ் 
தந்திலர் விதியினார் தருமவேலியைச் 
சிந்தினர் மேல்இனிச் செயல் என் ஆம்கொலோ 

வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் 
செஞ்செவே திருவுருத் தீண்ட அஞ்சுவான் 
நஞ்சியல் அரக்கியர் நடுவண் ஆயிடை 
சிஞ்சுப வனத்தினடச் சிறைவைத்தானரோ 

இந்நிலை இளையவன் செயல் இயம்பினாம் 
பொன்னிலை மானின்பின் தொடர்ந்து போகிய 
மன்னிலை அறிசுஎன மங்கை ஏவிய 
பின்னவன் தன்னிலை பேசுவாம் அரோ 

துண்ணெனும் அவ்வுனர தொடரத் தோனகயும் 
பெண் எனும் பேதைமை மயக்கப் பேதினால் 
உ.ள் நினற சோரும் என்று ஊசலாடும் அக் 
கண்ணனும் இளவலைக் கண்ணின் நோக்கினான் 

ஓட்டிவந்தனன் சாலையில் சோலையில் உதவும் 
தோடிவர்ந்த பூஞ்சுரி குழலாள் தனைக்காணான் 
கூடுதன் னுடையது பிரிந்து ஆருயிர் குறியா 
தேடிவந்தது கண்டிலதாம் என நின்றான் 

கைத்தசிந்தையன் கனங்குழை அணங்கினைக் காணான் 
உய்த்து வாழ்தர வேறொரு பொருள் இலான் , உதவ 
வைத்த மாநிதி மண்ணொடும் மறைத்தன வாங்கிப் 
பொய்த்துளோர் கொளத்திகைத்து நின்றானையும் போன்றான் 

மண்சுழன்றது மால்வரை சுழன்றது மதியோர் 
எண்சுழன்றது சுழன்ற அவ் எறிகடல் ஏழும் 
விண்சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன் 
கண்சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் 

தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சிப் 
பாரினோடு கொண்டகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று 
ஓரும் தன்மை யீ தென்பது உரன் இலாதவர்போல் 
தூரம் போதல்முன் தொடர்தும் என்றிளையவன் தொழலும் 

ஆமதேஇனி அமைவ தென்றமலனும் மெய்யில் 
தாம வார்கணைப் புட்டிலும் முதலிய தாங்கி 
வாம மால்வரை மரன் இவை மடிதர வயவர் 
பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுவழி போனார் 

( சடாயு உயிர்நீத்த படலம் 52 , 53 , 59 , 60 , 63 , 71 , 72 , 73 , 76 , 78 ] 


ஸ்ரீராமர் சடாயுவின் மேல் விழுந்து இரங்கல் 

நோக்கினால் ஐய நொய்தி வண் எய்திய நுந்தை 
மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின் 
தாக்கினான் நடுவடுத்தது தெரிகிலம் தமியன் 
யாக்கை தேம்பிடும் எண்ணரும் பருவங்கள் இறந்தான் 

சிலைகிடந்ததால் இலக்குவ தேவர் நீர்கடைந்த 
மலைகிடந்தென வலியதே வடிவினால் , மதியின் 
கலைகிடந்தன்ன காட்சியன் இது கடித்து ஒடித்தான் 
நிலைகிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் 

மடலுள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா 
மிடலுண் நாட்டங்கள் தீஉக நோக்கினன் விரைவான் 
உடலுள் நாட்டிய குருதியம் பாவையின் உம்பர் 
கடலுள் நாட்டிய வரையெனத் தாதையைக் கண்டான் 

துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய 
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர்த்தந்தை 
வள்ளியோன் திருமேனியில் தழல் நிற வண்ணன் 
வெள்ளி ஓங்கலில் அஞ்சனமலை என வீழ்ந்தான் 

தம்தாதையரைத் தனயர் கொலை நேர்ந்தார் 
முந்தாரே உள்ளார் முடிந்தானே முன்னொருவன் 
எந்தாயே எதற்காகநீயும் இறந்தனையால் 
அந்தோ வினையேன் அருங்கூற்றும் ஆனேனே 

பின்னுறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள் 
தன்னுறுவல் தீர்ப்பான் தனியுறுவது ஓராதே 
எனுறவு நீதீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் 
என்னுறுவான் வேண்டி இடருறுவேன் எந்தாயே 

மாண்டேனேயன்றோ மறையோர் குறைமுடிப்பான் 
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன் 
நீண்டேன் மரம் போல நின்றொழிந்த புன்தொழிலேன் 
வேண்டேன் இம்மாயப் புன்பிறவி வேண்டேனே 

என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை 
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீகிடந்தாய் 
வன்றாள் சிலையேந்தி வாளிக் கடல் சுமந்து 
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே 

வடுக்கண்வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் 
எடுத்தனன் ஏகுவானை எதிர்த்தெனது ஆற்றல் கொண்டு 
தடுத்தனென் ஆவதெல்லாம் தவத்து அரன் தந்த வாளால் 
படுத்தனன் இங்குவீழ்ந்தேன் இது இன்று பட்டதென்றான் 

பெண்தனி ஒருத்திதன்னைப் பேதைவாளரக்கன் பற்றிக் 
நொண்டனன் ஏகநீயிக் கோளுறக் குலுங்கள் செல்லா 
எண்டிசை இறுதியான உலகங்கள் இவற்றை இன்னே 
கண்ட வானவர்களோடும் களையுமாறின்று காண்டி 

( சடாயு உயிர்நீத்தபடலம் 82 , 83 , 85 , 92 , 93 , 95-98 , 113 , 1171 

ஸ்ரீராமர் கோபத்தைச் சடாயு ஆற்றுதல் 

இவ்வழிநிகழும் வேலை எருவைகட் இறைவன்யாதும் 
செவ்வியோய் முனியல்வாழி தேவரும் முனிவர் தாமும் 
வெவ்வலி வீரநின்னால் வேறும் என் றேமாக்கின்றார் 
எவ்வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் 

நாள் செய்த கமலத்தண்ணல் நல்கிய நவையில் ஆற்றல் 
தோள்செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ 
தாள் செய்ய கமலத்தானேமுதலினர் தலைபத்துள்ளாற்கு 
ஆட்செய்கின் றார்களன்றி அறஞ்செய்கின் றார்கள் யாரே 

தெண்திசை உலகந்தன்னில் செறுநர்மாட் டேவல் செய்து 
பெண்டிரின் வாழ்வர் அன்றே இதுவன்றோ தேவர்பெற்றி 
பண்டுல களந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அந்நாள் 
உண்டிலர் ஆகில் இந்நாள் அன்னவர்க்குய்தல் உண்டோ 

வம்பிழை கொங்கைவஞ்சி வனத்திடைத் தமியள்வைகக் 
கொம்பிழை மானின்பின்போய்க் குலப்பழி கூட்டிக்கொண்டீர் 
அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை 
உம்பிழை என்பதல்லால் உலகம் செய்பிழையும் உண்டோ 

ஆதலால் முனிவாயல்ல அருந்ததி அனையகற்பின் 
காதலாள் துயரம் நீக்கி தேவர்தம் கருத்தும் முற்றி 
வேதநூல் முறையில்யாவும் விதியுளி நிறுவிவேறும் 
தீதுளதுடைத்தி என்றான் சேவடிக்கமலம் சேர்வான் 

புயல் நிறவண்ணன் ஆண்டுப் புண்ணியன் உரைத்த சொல்லைத் 
தயரதன் பணியீதென்னச் சிந்தையில் தழுவி நின்றான் 
அயல்இனி முனிவதென்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் 
செயல்இனிச் செயல் எனறெண்ணி கண்ணியசீற்றம் தீர்ந்தான் 

ஆயபின் அமலன் தானும் ஐயநீ அமைதி என்ன 
வாயிடை மொழிந்ததன்றி மற்றொரு செயலும் உண்டோ 
போயதவ் அரக்கன் எங்கே புகல் எனப் புள்ளின் வேந்தன் 
ஓய்வினன் உணர்வுதேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் 

( சடாயுஉயிர்நீத்தபடலம் 121-127 } 

சீதையின் பிரிவாற்றாமல் ஸ்ரீராமர் இரங்கல் 

இந்தனம் எனைய அன்ன காரகில் ஈட்டத்தோடும் 
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப்பூவும் 
சிந்தினன் மணலின் வேதி தீதற இயற்றித் தெண்ணீர் 
தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான் 

ஏந்தினன் இருகைதம் மால் ஏற்றினன் ஈமம் தன் மேல் 
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சார 
காந்தெரி கஞலமூட்டி கடன் முறை கடவாவண்ணம் 
நேர்ந்தனன் நிரப்பும் நன்னூல் மந்திர நெறியில் வல்லான் 

தளிர்த்தன அனைய மேனித்தாமரைக் கெழுமுசெந்தேன் 
துளித்தன போலநீங்காத் துள்ளிசேர் வெள்ளக்கண்ணன் 
குளித்தனன் கானயாற்றில் குளித்தபின் கொண்ட நல்நீர் 
அளித்தனன் அரக்கர் செற்றசீற்றத்தான் அவலந்தீர்ப்பான் 

( சடாயுஉயிர் நீத்தபடலம் 134 , 135 , 136 ] 
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் 
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் 
பொடித்த தண் தளிர்ப் பூவொடு மால்கரி 
ஒடித்த கொம்பனையாள் திறத்து உன்னுவான் 

வாங்குவில்லன் வரும் வரும் என்று இரு 
பாங்கரும் நீள்நெறி பார்த்தனளோ எனும் 
வீங்கும் வேலை விரிதிரையாம் என 
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் 

பூண்ட மானமும் போக்கருங் காதலும் 
தூண்ட நின்றிடை தோமுறும் ஆருயிர் 
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான் 
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்என்பான் 

கூதிர் வாடைவெங் கூற்றினை நோக்கினன் 
வேத வேள்வி விதிமுறை மேவிய 
அதை என் வயின் தீர்ந்தனளோ எனும் 
போதகம் எனப் பொம்என் உயிர்ப்பினான் 

நீண்ட மாலை மதியினை நித்தலும் 
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் 
பூண்ட பூணவள் வாள் முகம் போதர 
ஈண்டு சால விளங்கினை என்னுமால் 

மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவிவரப் 
பயிலும் பிடியும் கடகளிறும் வருவதிரிவ பார்க்கின்றான் 
குயிலும் கரும்பும் செழுந்தேனும் குழலும் யாழும் கொழும்பாகும் 
அயிலும் அமுதும் சுவை நீத்த மொழியைப்பிரிந்தால் அழியா னோ 

( அயோமுகிப்படலம் 9 -11 , 13 , 15 , 20 , 29 ] 
கவந்தன் வதையும் துதியும் 

அவ்விடை எய்திய அண்ணல் இராமன் 
வெவ்விடை போல் இளவீரனை வீர 
வவ்விடை நாடினை நீர்கொணர்க என்றான் 
தெவ்விடை வில்லவனும் தனிசென்றான் 

எங்கணும் நாடினன் நீரிடை காணான் 
சிங்கம் எனத் தமியன் திரிவானை 
அங்கவ் வனத்துள் அயோமுகி என்னும் 
வெங்கண் அரக்கி விரும்பினள் கண்டாள் 

மோகனை என்பது முந்தி முயன்றாள் 
மாகநெடுங்கிரி போலியை வவ்வா 
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகம் 
மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள் 

பேர்ந்தான் நெடு மாயையினிற் பிரியா 
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் 
சோர்ந்தாள் இடுபூசல் செவித்துளையில் 
சேர்ந்தார் தலுமே திருமால் தெருளா 

பரல்தரு கானகத்து அரக்கர் பல்கழல் 
முரற்றரு வெஞ்சமம் முயல்கின்றார் எதிர் 
உரற்றிய ஓசையன்று ஒருத்தி ஊறுபட்டு 
அரற்றிய குரல் அவள் அரக்கியே கொலாம் 

[ அயோமுகிப்படலம் 38 , 39 , 58 , 77 , 78 ) 


ஐந்தைந்தடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த 
வையந்திரிந்தார் , கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் 
எய்யும்சிலைக்கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எவ்வுயிரும் 
கையின் வளைத்து வயிற்றடக்கும் கவந்தன் வனத்தைக் கண்னுற்றார் 

நால்திசைப் பரவையும் இறுதி நாள்உறக் 
காற்றிசைத்து எழஎழுந்து உலகைக் கால்பரந்து 
ஏற்றிசைத்து உயர்த்துவந்து இடுங்கு கின்றன 
போல்திசை சுற்றிய கரத்தில் புக்குளார் 

முற்றிய உயிரெலாம் முருங்கவாரி தான் 
பற்றிய கரத்தினன் பணைத்த பண்ணையில் 
துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன் 
கொற்ற வாய்தல் செயல்குறித்த வாயினான் 

தணிக்கும் தன்மைத் தன்றெனின் இன்றித் தகைவாளால் 
கணிக்கும் தன்மைத் தன்று விடத்தின் கனல்பூதம் 
பினிக்கும் கையும் மெய்பில வாயும் பிழையாமல் 
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் 

இனையர் ஆகிய இருவரும் முகத்திரு கண்போல் 
கனையும் வார்கழல் வீரர் சென்றணுகலும் கவந்தன் 
வினையின் எய்திய வீரர்நீர் யாவர்கொல் என்ன 
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் 

அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்றழன்றான் 
பொழிந்த கோபத்தன் பொறிக்கனல் விழிதொறும் பொடிப்ப 
விழுங்குவேன் எனவீங்கலும் விண்ணுற வீரர் 
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் 

கைகள் அற்று வெங்குறுதியாறு ஒழுகிய கவந்தன் 
மெய்யின் பேற்கொடு கிழக்குறப் பெருந்தி விரவும் 
சையமா நெடுந் தாழ்தடத் தனிவரை தன்னோடு 
ஐயம் நீங்கிய பேரெழில் உவமையன் ஆனான் 

ஆளும் நாயகன் அம்கையின் தீண்டிய அதனான் 
மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான் 
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா , 
நீளம் நீங்கிய பறவையின் விண்உற நிமிர்ந்தான் 

ஈன்றவனோ எப்பொருளும் எல்லைதீர் நல்லறத்தின் 
சான்றவனோ தேவர் தவத்தின் தனிப்பயனோ 
மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ 
தோன்றி அருவினையேன் சாபத்துயர் துடைத்தாய் 

மூலமே இல்லாமுதல்வனே நீமுயலும் 
கோலமோ யார்க்கும் தெளிவரிய கொள்கைத்தால் 
ஆலின் அடையோ அடைக்கிடந்த 
பாலனோ வேலைப் பரப்போ பகராயே 

காண்பார்க்கும் காணப் படுபொருட்கும் கண்ணாகிப் 
பூண்பாய் போல் நிற்றியால் யாதொன்றும் பூணாதாய் 
மாண்பால் உலகை வயிற்றொளித்து வாங்குதியால் 
ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ 

ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ 
ஆதி எனும் பொருட்கு அப்பால் உண்டாகிலும் நீர் 
சோதி நீசோதிச் சுடர்ப்பிழம்பும் நீஎன்று 
வேதம் உரைசெய்தால் வெள்காரோ வேறுள்ளார் 

எண்டிசையும் திண்சுவரா ஏழேழ் நிலைவகுத்த 
அண்டப் பெருங்கோயிற்கு எல்லாம் அழகாய 
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத 
புண்டரிக மொட்டின் பொருட்டே புரையம்மா 

மண்பால் அமரர் வரம்பாரும் காணாத 
எண்பால் உயர்ந்த எரிஓங்கும் நல்வேள்வி 
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற 
பண்பார் அறிவார் பகராய்பரமேட்டி 

நிற்கும் நெடுநீத்த நீரில்முளைத் தெழுந்த 
மொக்குளே போல முகுளித்த அண்டங்கள் 
ஒக்கஉயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற 
பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே 

நின்செய்கை கண்டு நினைந்தன வோ நீள்மறைகள் 
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ 
என்செய்தேன் முன்னம் மறம்செய்கை எய்தினார் 
பின்செல் வதில்லாப் பெருஞ்செல்வம் நீதந்தாய் 

மாயப்பிறவி மயல்நீக்கி மாசிலாக் 
காயத்தை நல்கிதுயரின் கனரயேற்றி 
பேயொத்த பேதை பிணக்கறுத்த எம் பெருமான் 
நாயொத்தேன் என்ன நலனிழைத்தேன் நானென்றான் 

சந்தப்பூண் அலங்கல் வீரதனுவெனும் நாமத்தேன் ஓர் 
கந்தர்ப்பன் சாபத்தால் இக்கடைப்படு பிறவி கண்டேன் 
வந்துற்றீர் மலர்க்கை தீண்டமுன்னுடை வடிவம் பெற்றேன் 
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்மின் என்றான் 

பழிப்பறு நிலைமை ஆண்மை பகர்வதென் பதும பீடத்து 
உழிப்பெருத் தகைமைசான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் 
அழிப்பதற்கு ஒருவனான அண்ணலும் அறிதிர் அன்றே 
ஒழிப்பருந் திறல்பல்பூத கணத்தொடு உறையும் உண்மை 

ஆயது செய்கை என்பது அறத்துறை நெறியின் எண்ணி 
தீயவர்ச் சேர்கிலாது செவ்வியோர்ச் சேர்ந்து செய்தல் 
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட் டன்னாள் 
ஏயதோர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி 

கதிரவன் சிறுவனான கனகவாள் நிறத்தினானை 
எதிரெதிர் தழுவி நட்பின் இனிதமர்ந்து அவனின் ஈண்ட 
வெதிர்பெருந் தோளினாளை நாடுதல் விழுமிதென்றான் 
அதிர்கழல் வீரர் தாமும் அன்னதே அமைவதானார் 
( கவந்தன்வதைப்படலம் 1 , 5 , 17 , 33, 35 , 36 , 38 , 40-48, 51 , 53 55 ] 

ஸ்ரீராமர் சவரிக்கு முத்தியருளி அப்பால் ஏகல் 

அன்னதாம் இருக்கை நண்ணி ஆண்டு நின்றளவில் காலம் 
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் தலைப்பட் டன்னாட்கு 
இன்னுரை யருளித் தீதின்றிருந்தனை போலும் என்றான் 
முன்னிவற்கு இது என்றெண்ணல் ஆவதோர் மூலம் இல்லான் 

அனகனும் இளையகோவும் அன்றவண் உறைந்த பின்றை 
னையறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி 
துனைபரித் தேரோன்மைந்தன் இருந்த அத்துளக்கில் குன்றம் 
நினைவரி தாயற் கொத்த நெறியெலாம் நினைந்து சொன்னாள் 


பின்னவள் உழந்தபெற்ற யோகத்தின் பெற்றியாலே 
தன்னுடல் துறந்து தானத்தனிமையின் வீடுசேர்ந்தாள் 
அன்னது கண்டவீரர் அதிசயம் அளவின் எய்தி 
பொன்னடிக் கழல்கள் ஆர்ப்பப்புகன்ற மாநெறியிற் போனார் 

[ சவரிபிறப்பு நீங்குபடலம் 2 , 6 , 8 ] 


ஆரணியகாண்டம் முற்றிற்று . 

ஸ்ரீராமஜெயம் 

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -2-

March 11, 2024
அயோத்தியா காண்டம் 
சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீராமரை வேண்டுதல்


மணவாள வனிதை மணிச் சீதையுடன் அயோத்தி மேவி ராமன் என இருந்த நாளில் 
கனிவுபெறப் பரதனை சத்துருக்கனனோடே 
கைகயன் பால் விடுத்து சின்னாள் கழிந்த பின்பு 
இனிய தசரதன் வதிஷ்டன் மந்திரி மாரும் 

இசைந்தபடித் துறந்திட ராகவனைக் கூவித் 
தனி மகுடம் புனை யெனவே அவனுக் கன்பாய்ச் 
சாற்றுவான் தன் கவலை ஆற்றுவானே 


பல்லவி 
இந்த மனுத்தர வேணும் மகனே - ராமா 
இந்தமனுத்தர வேணும் மகனே 
( இந்த ) 

இந்த மனுத்தர் வேணும் 
* இந்திரனேபுவி ஆளத் தகும் நீஉத் மகனே - ராமச் தமனே 
( இந்த ) 

அறுபதி னாவிர வருஷ அதிலே காணாதெல்லாங் கண்டறிந்தேன் 
பருவதமோ என் காயஸ் பார்க்க வேணும் என் கண்ணார நீ பாராளும் 

காலம் -- வாழ்ந்தேன் 
இந்திர சாலம் தூலம் இனிப் கோலம் ( இந்த ) 
காரம் முடியாத மோகாந்த முதுமையிலும் துறவாமல் இருந்தென்ன 
சாரம் குடி தாங்கி எனக்கோர் உபகாரம் 
குவலயம் கைக் கொண்டு முத்தி கொடுப்பதுன்றன் பாரம் 
( இந்த ) 

ஒருவன் அறுபதினாயிரத் 
உதவி முத்தி கொடுத்தானே பகிரதன் முன் 
இருநிலத்தில் அது போல் உன் 
எனக்கு முத்திதந்தாள்வாய் இப் 
தோரை - கங்கை 
னோரை 
பேரை 
பாணர ( இந்த )  


உள்ளத்தை உன்னோடே சொன் 

ஊமைகண்ட கனவாய் உள்ளடக்கி 
பிள்ளைக்கலி தீர்த்த பெரு 

பெரும் புவி நீகொள்ள முத்திபெறவேணும் 


னேனே 

- முன்னாள் 
சீனனே 
மானே 
நானே 

( இந்த ) மலர்க்கையால் பிடிப்பாய் செங் கோலே - என் தன் 
வார்த்தை தடுக்காய் எனவே உரைத்தேன் ஒரு காலே 
தலைச்சுமை தந்தான் என்றென் 
மேலே 
தாழ்வாய் எண்ணாதே இனித் தாங்காதென் னாலே 
  
காலே 
வாழையடி வாழையென 
மண்டலத்தை ஆண்ட துண்டு மன்னர் ஒரு 
சூழ் மதில் அயோத்தியை அது 
சுமந்தாள வேணும் என் தன் சொல்வழியி 
நீயும் 
போலே 
னாலே 
( இந்த ) 


7. குலத்தில் உள்ள குறையெல்லாம் 
குணத்தாலே உலகெல்லாம் மென் மேலே 
மலைக்கு மலையல்லவோ 
மண்டலத்தை நீ தாங்கினால் என் கவலை 
வாங்கும் - உன் தன் 
ஓங்கும் 
தாங்கும் 
நீங்கும் ( இந்த ) 


ஐம்பத்தாறு தேசத்து ராஜர்கள் வருதல் 

ஈங்கிவை இப்படி மகனன இசையக் கூறி 
இனிய தசரதராசன் கணிதர் சொல்லப் 
பாங்கு பெறு தேசராசர்க்கு ராமன் 
பட்டாபி ஷேகம் இன்றைக் கறிவீர் என்றும் 
நீங்களெல்லாம் அயோத்தி நகர் வருவீர் என்றும் 
நினைப்பினால் தன் ஓலை அனுப்பி விட்டான 
ஆங்கவரும் மிக மிகச் சந் தோஷம் மீறி 
அந்தந்த தேசம் விட்டே அணு கினாரே 


பல்லவி 

வந்தனர் எங்கள் கலியாண - ராமச் 
சந்திரன் முடிகாண 
( வர் ) 

சரணங்கள் 
நாடும் 
வந்தனர் அந்தந்த தேசத்துள்ளோர் 
மன்னன் ராமனைச் சொர்ண முடி 
சந்திரிக ஓலையைக் கண்டெ திரே கொண்டு 
தம் தலை மேல் வைத்துக் கண்களிலே ஒற்றி 
( வந் ) 

சோனா 
வங்களர் சிங்களர் மாளவர் 
மராடர் கன்னாடர் மகதர் 
கொங்கணர் டங்கணர் குச்சரர் 
குலிங்கர் கலிங்கர் தெலுங்கர் 
குருதர்கள் 
மச்சர் 
முதலாக 
( வந் ) 

சேரலர் சாளுவர் உற்களர் 
பப்பரர் 
சேதிபர் குந்தளர் சித்தர் அவந்திகர் 
ஆரியர் சீனர் விதர்ப்பார் விதேநர்கள் 
ஒளட்டர் பராஷ்டிரர் சுராஷ்டிரர் முதலாக 

( வந் ) 
என்று 
புண்டரீகக் கண் ராமனுக்கு 
முடி 
பூணச் செய்தான் இது காணப்பெற்றோம் 
பண்டு ஐம் பத்தாறு தேசத்து ராசரும் 
மன்றாடி மன்றாடிக் கொண்டாடிக் கொண்டாடி 
( வந் ) 

திரு அயோத்தியை அலங்கரித்தல் 

தேசத்தில்வந்த ராசர் எல்லாம் 
தெசரதரா சனசமுகந் தனிலே கூடி 
நேசமுடன் ராமனுக்கு மகுடம் சூட்ட 
நினைந்தபடி செய்யெனவே மகிழ்ந்து கூற 
ஆசகலும் அயோத்திமா நகரில் வேந்தன் 
ஆனைமேல் துந்துமிகள் அடிப்பீர் என்னப் 
பூசுரரும் ராசர்களும் அறிந்து கொண்டு 
பூரிப்பார் நகரம் அலங் காரிப் பாரே 

விசைய துந்துபி 
அடித்தார் - நகர் எங்கும் 
தசரதன் அருளியமொழி 
படித்தார் 
திசைதிசை சொல்லி 
விடுத்தார் வாசலில் 
அசையும் விசைய கேதனம் 
எடுத்தார் பூரண கும்பம் அமைத்தார் தருவெங்கும் 
தோரணம் அழகுடனே சமைத்தாரி வாரணம் அலங் கரித்தார் 

முனிவர்கள் 
ஆரணம் முறை முறை ஆர்ப் பரித்தார் 
மாலிகை தொடுத்து வைத்தார் முத்து முளைப் 
பாலிகை பலபல படுத்து வைத்தார் 
ஆலயம் விளக்கு வித்தார் 
சோலையும் சாலையும் துலங்கு வித்தார் 
அத்திகள் 
துத்துக் குடை பிடித்து 
சித்திரம் 
கஸ்தூரி களபத்தால் 
சிந்தூரம் 
சந்தனத் தால் தரை 
பொருவாரும் - வெள்ளை வட்ட 
வருவாரும் 
புனைவாரும் சந்தன 
நனை வாரும் 
எழுதிடுவார் பரிமளச் 
மெழுகிடுவார் 
கந்தப் பொடிகள் 
இறைப்பார் மாவணப் 
பந்தலிட்டந் தரவெளி மறைப்பார் 
வானவர்கள் வந்து 
திரிவார் 
அடிக்கடி 
மேனகை ஊர்வசி நடம் 
புரிவார் 
கான வித்தைகள் 
படிப்பார் 
அதுக்கினம் 
ஆனகோகிலம் போலச்சதி பிடிப்பார் 
அங்கே எதிர் 
சொல்லுவார் இடங்காட்டி 
இங்கே இரும் இரும் எனச் சொல்லுவார் 
சிங்காசனம் அணிவார் 
ளசலை 
கண்காணவே இணையடி பணிவார் 
சடங்குகள் 
செய்வாரும் - சமித்துகள் 
இடம்படு தருப்பைகள் கொய்வாரும் 
உடந்தையாய்த் 
திரிவாரும் 
இடங்கண்டவர்க் கெலாம் சொரிவாரும் 
பொன் மழை 
ரம்பையர் 
தும்புரு நாரதர் 
செம்பொன் 
நடமாட 
வீணையில் இசைபாட 
மௌலிசூட - ராமற்குச் 
எழுந்தோட 
சம்பிரம் சொல்ல மன்னர் 
தாளம் 
துந்துமி 
மேளம் 
கோளம் - கிழிபட 
நீளம் 
சல்லரி பேரி 
மல்லரியொடு நரகெச 
சொல்லிய அண்ட 
எல்லையும் குமுறிடுமே 
இப்படிக் கொன் 
ஒப்பனை செய்வதேதென 
அப்போது தோய்ப் 
வெப்புடன் வந்தாளே குடி டாடி ராமனுக்கு 
நாடி 
பாடி - கூனியும் 
கேடி 


கூனி கைகேசியைக் கலைக்கவருதல் 
துதித்திடும் அயோத்தி ஆளும் சொர்ணமா முடிரா மற்கே 
பதித்திட வேணு மென்று பலரும் ஆர்ப் பரிப்பக் கண்டாள் 
இதைக்கலைத் திடுவேன் என்று ராமன்வில் உண்டை யாலே 
கொதித்திடும் மனத்தா ளான கூனியும் தான் வந் தாளே  


பல்லவி 
பொல்லாத 
கூனி வந்தா ளே 
கூனி வந்தா ளே 
( கூனி) 


அநுபல்லவி 
போனநாள் ராமன் செய்த பகையால் 
பூனைபோ லிருந்து புலி போலப் 
காய்ந்து 
பாய்ந்து 
( கூனி ) 


சரணங்கள் 
காலே 
மேலே 
அடுக்குமோ ராமனுக்கு அரசொருக் 
ஆர்கொடுக்கிறார் அத்தை அறிகிறேன் 
கெடுக்கிறேன் நான் என்று புறக்கடத் 
கிணறு வெட்டப்பூதம் புறப்பட்டாற் 
தாலே 
போலே 
(கூனி) 
உரைக்க 
கரைக்க 
பூமி பரதனுக்குத் தகும் என 
பூவை கைகேசிதன் மனமதைக் 
ராமன் பகையை நினைந்தடிவாய் 
நடுங்கிவிழுந் தலைந்து பெருமூச் 
நுரைக்க 
சிரைக்க 
( கூனி ) 
கொட்டிய பஞ்சுபோல் உடம்பெல்லாம் 
கூனிகுறு குறுத்து வில்லைப்போல் 
பட்டங்கட்ட ஒட்டுவேனோ நான் என் 
பழைய பகையை 
எண்ணிப் பழமுள்ளு 
தளர்ந்து 
வளைந்து 
றளைந்து 
களைந்து 
( கூனி ) 
சந்தானது போய் முடங்கிய 
சனைபோலே நரைத்துத் திரங்கிய 
இந்திராதி தேவருக்கு அனு 
இலங்கை ராட்சதர்கள் குடிக்கொரு 
காலி 
தோலி 
கூலி 
நீலி 
( கூனி ) 

கைகேசி கூனியைக் கோபித்தல் 
 
வந்ததொரு கூனிமன தெரிச்ச லாலே 
வல்லியெனும் கைகேசி தனை எழுப்பி 
இந்தமன்னன் ராமனுக்கு மகுடம் சூட்ட 
எண்ணினான் என்னுமொழி சொல்லு முன்னே 
விந்தைமுக மலர்ந்து நவ ரத்தின மாலை 
வெகுமானம் செய்திடவும் அவமா னித்துச் 
சிந்தைவஞ்சத் தொடுகலைத்த கூனி நாக்கைச் 
சேதிப்பேன் என்று கைகை போதிப் பாளே 


பல்லவி 
தாலே 
ராமனுக்கு மன்னன் முடி தரித் 
நன்மையுண் டொருக் 
காலே 
( ராம ) 

அநுபல்லவி 
பேச்சே 
பாமரமே உனக் கென்னடி 
பழம்ந ழுவிப் பாலில் விழுந்தாற்போ 
லாச்சே 
(ராம ) 

இந்தவார்த்தை சொன்னாய் எனக்கெவர் நேரடி 
பிர்ம்மாதியர்களும் வரு 
வாரடி 
இதுவே நல்ல 
வாயா டாதே 
பாரடி 
ஆரடி எனக்குச்சரி 
பரசுராமன் கெர்வம் தீர்த்தவன் டி 
நம்மை எல்லாம் காத்தவன் டி 
பட்டங்கட்ட 
ஏத்தவன் 
மூத்தவன் டி 
அவன் டி என் கண்மணி 
பரதன்பட்டம் கட்டாவிட்டால் 
நட்டியோ 
அவன் சர்க்கரைக் 
கட்டியோ 
நாலு பேரில் 
( ராம ) 

என்பிள்ளை ராமன் 
நான் தா னென்ன 
வெட்டிப் போடுவேன்உன்னை 
எட்டியோ 
மட்டியோ 
(ராம ) 


கைகேசியைக் கூனி கலைத்தல் 

துங்கமம் அயோத்தி ஆளச் சொல்லிய ராம னுக்கே 
தங்கமா முடிகொ டாமல் சடைமுடி கொடுப்பேன் என்று 
பங்கயார் கூனி முன்னாள் பகையினா லேகை கேசி 
மங்கையாள் எதிரே பின்னும் வார்த்தையால் கலைக்கின் றாளே . 

கண்ணிகள் 
ராமன் முடி சூடுமென்ற பேய்மதி உனக்குவந்தது 
ஏதம்மா - என்ன 
வாதம்மா அடி 
சீமாட்டி உன் பிள்ளை பர தன் காமாட்டி ஆனானே என்ன 
செய்கையே அம்பா கைகையே 

உன் மகன் ஊர்க்கில்லாவேளை தன்மகனை முடிசூட்ட 
உன்னினாள் கோசலை 
எண்ணினாள் அந்த 
மன்னவனும் அவள் சொன்ன வார்த்தை கடவாமலுன்னை 
வாதித்தான் 
போதித்தான் 

கண்ணுள்ள போதல்லவோ கண்காட்சி என்பதறியாயோ 
கன்னியே என்ன உன்னியேர்க்கும் 
பண்ணிய பயிரில் அல்லவோ புண்ணியம் தெரியுமடி 
பாவியே 
என் தன் ஆவியே 

ஓடம் விட்ட ஆறும் அடிச்சுடுமென்று சொல்லும் வார்த்தை 
உள்ளதோ 
பெண்ணே இல்லதோ அதுபோல் 
ஈடழிந்துன் தாய்தந்தைமார் உன்னைவந் தடைந்த போதில் 
என்செய்வாய் எவரைக் கெஞ்சுவாய் 

ஊருக்கோ பால் வார்த்துண்பது உடலுக்கோ பால்வார்த் துண்பது 
ஓதடி செய்வ 
அடி 
ஆருக்கும் பெண்ணே மண்பிள்ளையானாலும் தன் பிள்ளை என்பது 
அறியாயோ ஒன்றும் குறிய யோ 

கௌசலை பிள்ளைக்குப்பட்டம் கட்டினால் உன் பிள்ளைக்கென்ன 
கட்டுவாய் எவரைக் கிட்டுவாய் 
பரதன் 
தவசியாய் சந்நியாசியாகிப் பரதேசம் போவதே நல்ல 
சமர்த்தடி கோபத்தை அமர்த்தடி 

சீரான கோசலை வீட்டுச் சிறுக்கிக்கும் சிறுக்கியாக 
செகுத்தாயோ - என்னை வகுத்தாயோ - அடி 
யாரார்கையிலென்ன பட வேணுமோ அதெல்லாம் பட 
லபித்ததே - தெய்வம் சபித்ததே 

பலநாளும் உன்னோடே நான் தான் பாடுபட்டதெல்லாம் வீணே 
பாதகி அடி தோதகி ஐயோ 
இலவு காத்த கிளிபோலே போகவோ நான் உன்னை நம்பி 
எண்ணினேன் - வீம்பு பண்ணினேன் 

நண்ணும் தன்மகன் மேலேபோல் உன் மகள் மேலே கோசலை 
நைவாளோ - பட்சம் -- செய்வாளே . 
அடி 
கண்ணில் எண்ணெயே கரிக்கும் பிடரியில் எண்ணெய் தானென்ன 
கரிக்குமோ அன்பு - தரிக்குமோ 

நாயகன் கோசலை பிள்ளையாகில் உனக்கென்னவரும் 
கம் 
நன்மை யே - சொல்வாய் 
உண்மையே 
ஆர்க்கும் 
தாய்கையிற்பசும் பொன்னிலும் தன்கையில் தவிடேமேலாம் 
தையலே இதென்ன மையலே 

என்ன செய்வேன் என்கிறாய் நீ முன்னே கொண்ட வரம் இரண்டும் 
இல்லையோ தரச் சொல்லையோ அந்த 
மன்னவன் உனக்குச் சொன்ன வார்த்தைக் கிரண்டு சொல்வானோ 
வாங்கடி இதுவே - 
பாங்கடி 
ஒருவரம் பர தன் நாடாள 
ஓதடி 
சூதடி 
ஒருவரம் ராமன் காடாள 
இந்த 
இருவரமும் கொண்டால் உனக் கீடுசோடுண் டோடிமக 
என் தன் கை கேசியே 
ராசியே 

கைகேசிக்கும் சக்கிரவர்த்திக்கும் சம்வாதம் 
அந்தவகை கூனி சொல்ல மனது வேறாய் 
அப்படியே செய்வேனென மானம் செய்து 
கொந்தளகம் சோரவளை சோர மண்மேல் 
குப்புறவே கிடந்திடுகை கேசி தன்னை 
வந்ததச ரதராசன் கையால் தூக்கி 
மலர் மேனி துடைத்தெனது மானே தேனே 
பைந்தொடியே உன் குறையே தெனப் , பட்டோலை 
படிக்கின்றாள் தசரதனும் துடிக்கின்றானே . 

இந்த அலங் கோலமும் இந்தமனோ துக்கமும் 
ஏன் வந்ததோ கைகை 
மின்னரசே --உன்தன் 
சிந்தையில் நினைந்ததை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் 
தெரியச் சொல்லாய் கைகை 
மின்னரசே 
மன்னவரே - உந்தன் 

மருவும் மலரும் போலப் பாலும் நீரும்போல 
மானம் வைத்தாண்டீரே 
கருவிழி மணிபோலக் கரிசனம் ஆகஎன்னை 
கண்ணுண்டாய்க் காத்தீரே 
மன்னவரே 
காத்ததற் கென்ன குறை இப்போதும் என்ன உன்னைக் 
கைநழுவ விட்டேனோ 
மின்னரசே - நீ 
பார்த்தெது கேட்கிலும் எந்தவரமானாலும் 
பரிந்து தருகிறேன் காண் 
மின்னரசே 
மற்றொன்றும் இல்லைவரம் எனக்குமுன் நீர் கொடுத்த 
வரம் இரண்டும் கேட்கிறேன் 
மன்னவரே- என்றும் 
உற்றது சொன்னால் அல்லோ அற்றது பொருந்தும் நான் 
உள்ளது சொன்னேன் காணும் 
மன்னவரே 


உன் 
அந்தவரம் இரண்டும் தந்தேன் இனிஉனக்கு 
அட்டிசொல்வேனோ கைகை 
மின்னரசே 
மைந்தன் ராமன் ஆணை வார்த்தை பிரட்டறியேன் 
வாங்கிக் கொள்வாய் கைகை 
மின்னரசே 
மன்னவரே- அதின் 
முன் ஒருவரம் பர தன் நாடாள மாணிக்க 
முடிபெற வேணும் அய்யா 
பின் ஒருவரம் ராமன் காடாளச் சடைமுடி 
பெற வேணும் தாரும் அய்யா 
மன்னவரே 
மலைப்போல் ஒருவர் செய்த வஞ்சனையோ என்ன 
வார்த்தை சொன்னாய் கைகை 
மின்னரசே - அது 
கலைப்பார் கலைத்தாக்கால் கல்லும் கரையுமென்ற 
கதைபோல ஆச்சுது கைகை 
மின்னரசே 
கலைப்பாள் கௌசலை உமக்குண்டெனக் குவேறே 
கலைப்பார் ஒருவரில்லை 
மன்னவரே - நீர் 
சலத்தால் சொல்லுகிறீரோ சொன்னதே சொன்ன துநான் 
தடுமாறிச் சொல அறியேன் 
மன்னவரே 
மூத்தவனைத் தள்ளிவிட்டு இளையவனைப் பட்டங்கட்டல் 
முறைமை அல்லவே கைகை 
மின்னரசே - யாரும் 
ஏத்தும் மனுவிக்யான சாஸ்திரத்தினில் மூன்னம் 
இசைத்த படி இதுவே 
மின்னரசே 
மூத்தவன் இந்திரனோ உபேந்திரனோ அகிலாண்டம முழுதும் செலுத்துகிறான் 
மன்னவரே வெகு 
நேத்தியிது முன்சொன்ன வார்த்தையை விட்டுசாஸ்திர 
நெறிகள் போதிக்கல் ஆமோ 
மன்னவரே 
ஆனை இருந்து கொண்டு அரசாளும் மண்டபத்தில் 
அறியாப் பிள்ளை பரதன் 
மின்னரசே சிறு 
பூனை இருந்து கொண்டு புலம்புகிறது போலப் 
புலம்பல் ஆமோ கைகை 
மின்னரசே 
ஆனையும் பூனையும் நீர்பெற்ற பிள்ளையல்லால் 
அசலார் பெற்ற ள்ளையோ 
மன்வனரே - நீர் 
மானம் வைத்தால் போதும் அணுவும் மலையாம் அந்த 
வகையை நான் அறியேனோ 
மன்னவரே 
ஆயிரம் ஆனாலும் பெண் புத்தியை அறிய 
ஆராலும் முடியுமோ 
மின்னரசே - நல்லது 
போயினது போகட்டும் ராமனை ஊரை விட்டேன் 
போகச் சொல்கின்றாய் கைகை 
மின்னரசே 
எதுக்கு ராமனை ஊர் விட்டுப் போகச் சொல்லும் என்கிறாய் 
என்று கேட்கவந்தீரே 
மன்னவரே - நடுப் 
பாதிக்குள் பாதனை ஊரில் தங்க வொட்டாமல் 
பண்டேன் துரத்திவிட்டீர் 
மன்னவரே 
அவனும் சம்மதிக்கவே பாட்டனூர் போவென்றேன் 
அநியாயம் சொன்னேனோ 
மின்னரசே - உனக்கு 
கவனம் இல்லையோ என்ன 
என்ன காரணமோ இந்த 
கபடம் பேசாதே கைகை 
மின்னரசே 
கவனமும் உண்டு ஒரு காரணமும் இல்லை 
கபடமும் பேசவில்லை 
மன்னவரே - இன்று 
இவனும் சம்மதிக்கவே ஊர்விட்டுப் போச் சொல்லும் என்றேன் 
என்ன தப்பிதம் சொன்னேன் 
மன்னவரே 
பூமியும் தருகிறேன் பரதற்குப் பொன் முடியும் 
பூட்டுகிறேன் கைகை 
மின்னரசே- என் 
சாமியை என் உயிரை ராமனைப் பிரிந்தால் நான் 
தரிக்கரியேன் கைகை 

மின்னரசே 
என்னுயிர் அவன் போனால் தரிக்கறியா தென்றீர் 
என்ன சத்திய மிது 

மன்னவரே - அவனை 
சின்னஞ் சிறுவயதில் முனிபின் போகச் சொன்னீர் உம் 
சீவனுக் குண்டோ துன்பம் 

மன்னவரே 
கும்பிடுகிறேன் உன் தன் காலையும் பிடிக்கிறேன் 
கோபம் செய்யாதே கைகை 

மின்னரசே - நீ 
எம்பெருமானை என் தன் கண்மணிராமனை 
கிருக்கச் சொல் என்பாய் கைகை 

மின்னரசே தாரைநீர் ஏற்றபோதே என்சரீரம் உமது 
தம்சரீரம் அல்லவோ 

மன்னவரே - நீர் 
ஆரைக்கும் பிடுகிறீர் ஆர் காலில் விழுகிறீர் 
அசலார் என்றெண்ணலாமோ 

மன்னவரே 
21. அடியில் விழுவேன் என்றும் அடங்கி ஒடுங்கியே நான் 
அனந்தம் வார்த்தை சொல்லியும் 

மின்னரசே - சற்றும் 
இல்லாது போலே ஈரச்சீலையைப் போட்டு 
கழுத்தை அறுக்கலாமோ 

மின்னரசே 
கடினம் காட்டுப் புறாவுக்காகச் சதையரிந்த மன்னனை 
கதையிலும் கேட்டிலீரோ 

மன்னவரே - உந்தன் 
வீட்டுப்பெண் சாதிக்காக இத்தனை சாகசமும் 
வேணுமோ போதும் போதும் 

மன்னவரே : 
கண்ணும் கருத்தும் ராமன் கண்ணாளனும் ராமன் 
காப்பவனும் ராமனே 

மின்னரசே - நான் 
எண்ணும் தெய்வமும் அவன் அவன் போனால் என்உயிர்போம் 
இருக்கச்சொல் என்பாய் 

மின்னரசே 
கைகை 
எனக்குப்பொய் வாராது பொய்சொன்னால் தோஷமென்றீர் 
எந்த மதியாற் சொன்னீர் 

மன்னவரே -- நான் 
வனத்தில்போச் சொல்லும் என்ற சொல் திருப்பி விட்டாலது 
மகத்தான பொய்யல்லவோ 

மன்னவரே 
ஆனால் ராமனை வன 
வனத்திற் போகச் சொல்வதால் 
ஆவதுண்டோ கைகை 

மின்னரசே - அருங் 
கானிலே ராமனைப் போகச்சொல்வ திலும் என் 
கண் கேட்கிலும் தருவேன் 

மின்னரசே 
நானாகச் சொல்லவில்லை தெய்வம் சொல்லியத் துக்கு 
நான் என்ன செய்வேன் காணும் 

மன்னவரே - ராமன் 
போனாலும் கானகத்திலே அவனுக்கு வரும் 
பொல்லாங்கும் உண்டோ சொல்வீர் மன்னவரே 
போவென்று சொன்னவுடன் பொறி கலங்கி என் சீவன் 
போய்விடுமே கைகை 

சண்டாளி - நான் 
ஆஎன்று போனபின்னை அள்ளி இடுவார் உனக்கு 
ஆரடி கைகேசி 

சண்டாளி 
நீ ஒட்டாரம் கட்டுகிறாய் ராமன் போனால் என்சீவன் 
உடனே போமடி கைகை 

சண்டாளி - நீ 
கட்டியதாலிக் கயிற்றை உன் மகற்குப் பட்டங்கட்ட 
காப்புகட்ட்டி கைகை 

சண்டாளி 
தெய்வமே - அந்த 
வரதமுனிவனான வதிஷ்டமுனியே உன்னை 

வரம் கேட்கிறேன் தாராய் என் 
பரதன் வந்தால் அவன் உற்றுரிமை செய்யாமல் 
பத்து தரமாய் சொல் என் 
தெய்வமே 
தெய்வமே - தீமுன் 
அண்டர் முனிவர் அல்ல பகையாளிகள் அல்ல 
அசலார் ஒருவர் அல்ல 
காண்ட பெண் சாத்தானே தசரதன் ஆவிக்கு 
கூற்றுவன் ஆய்வந்தாளே 
தெய்வமே 
ஒளிவாய் இருந்து கொன்ற பிள்ளைப் பழிக்குமுனி 
உரைத்த சாபமிதுவோ 

தெய்வமே- உலகம் 
எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் கேட்கும் 
என்பதும் இதுதானோ 

தெய்வமே 
பண்ணிட்ட எறும்புக்கா புருஷனைக் கொல்ல வந்த 
பாவிதன் பெண் இவள் அல்லோ 

தெய்வமே இந்த 
மண்ணுக்குள் தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள் என்று சொல்லலும் 
வசனம் பிசக வருமோ 

தெய்வமே 
உதிக்கும் கண் போனாலென்ன உயிர் போனாலும் என் 
உத்தமன் ராமன் மாத்திரம் 

தெய்வமே - அயோத்தி 
பதிக்குப் பதியாகியே இருக்கிறான் என்றுசுணாப் 
பாவி நான் ஆயினேனே 

தெய்வமே 
கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல் 
கொன்றவன் போல் தசரதனிப் படிபு லம்பக் 
கூற்றுவன் போல் கைகேகி ராமன் தன்னை 
நின்றநிலைக் கழைத்துவர என்ன வந்து 
நெடுமனைவா சலுக்குள்ளே புகுந்த போதில் 
என்றும் அர சன் சொல்லான் நானே சொல்வேன் 
என்றீரேழ் வருஷம்ரா மா நீ காட்டில் 
சென்று தவம் செய்பர தன் உலகம் ஆள்வான் 
செல் என்றாள் இதுவேந்தன் சொல் என்றாளே 


ஸ்ரீ ராமர் வனம் ஏகக் கைகேசியின் விடை பெறல் 

உளம்மகிழ்ந் தொருகை கேசி உரைத்தவாய் மொழியைக் கேட்டுக் 
களங்கம் இல் லாத ராமன் கானகம் செல்ல நானே 
தெளிந்தபார் பரதன் ஆளச் செய்ததே மேன்மை 
தளர்ந்திடாத் தாயை வாழ்த்தித்தாழ்ந்து பின் விடை கொண்டானே . 
என்று 

பல்லவி 
என்பாக் கியமே பாக்கியம் 
எவர்க்குண்டிந்தசிலாக்கியம் 
( என் ) 
அநுபல்லவி 
அன்பாக வனம் போக அனுக்கிரகம் செய்தாயே 
( என் ) 

குழியிற் பயிர் தனை எடுத்துக் கூரைமேல் ஏற விட்டு 
வழுவான களைமாற்றி வளர்க்கி றதுபோலே 
சுழலும் இந்த ராச்சியத்துக்கு சூடுமணி முடிமாற்றித் 
தழுவும் முத்தி ராச்சியத்துக்குச் சடைமுடி தந்தாயே 
( என் ) 

கொக்கரித்த பேர் எல்லாம் கூடத்தீப் பாய்வாரோ 
பக்கமுள்ள பேர் என்னைக் காப்பாற்ற நினைப்பாரோ 
சிக்குமிந்த வலை நீக்கி தேடும்பர கதிசேரத் 
தக்கதவம் செய்யென்று நீ தயவு செய்தாயே 
( என் ) 

ஒருபிள்ளை ராமன்பர லோகசா தகம் செய்ய 
ஒருபிள்ளை பர தனிந்த உலகம் தன்னையாள 
இருபிள்ளை யாலும் கைகை இகபரம் பெற்றாள் என்ன 
வருசொல் உண்டாச்சு தென்ன மாதவம் செய்தேனோ 
( என் ) 


--- 


ஸ்ரீ ராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல் 

இப்படிச் சிறுதா யாரை இறைஞ்சியே அனுப்பிக் கொண்டு 
மைப்படி வண்ண ராமன் வந்துகோ சலையம் மைக்குத் 
தப்பிலா தவ்வா றெல்லாம் தான் சொல்லக் கன்றைத் தேடி 
வெப்புறும் பசுப்போல் அன்னை விழுகின்றாள் அழுகின் றாளே . 


1-அய்யைய்யோ ரகுராமா - வனம் போக - தெய்வ சம்மதியாமா -உனை நான் 
எவ்வகை பிறிவேனோ- நான் இனி செய்குவதறிவேனோ 

2-என்ஒரு தாயகமே - ரவிகுல - மன்னவர் நாயகமே- அரசன் 
உன்னையும் வெறுத்தானோ - வெறுத்தும் - தன்னுயிர் பொறுத்தானோ 


3 -சுடர் மணி முடிபோச்சோ- தலைமேல் -சடைமுடி வரலாச்சோ -கேட்க 
உடல்பதறு தேமகனே - மனம் விட - விட உ . தறுதே மகனே 


4--தாய்வரம் அதுகண்டு - பூமியை- காவல் பரதன் கொண்டு -ஆளட்டும் 
நீவனம் போவான் ஏன்- இப்படி -- தீவினை ஆவான் ஏன் 

5. கலியுகம் மேலிட்டதோ ரிய - குலமுறை போய்விட்டதோ - நீ இந்த 

நிலைமை விண்டிடலாமோ பரதன் - தலைமை கொண்டிடலாமோ 
6. எப்படி நான் சகிப்பேன் - உனைப்பிரிந்து எப்படி நிர்வகிப்பேன் - ராவினில் 
எப்படி கண் விழிப்பேன் 

யிர்கொண்டு 
எப்படி நான் கழிப்பேன் 

பொன் அடி கசங்காதோ - மேனியில் - வன்ன மும்மசங்காதோ - வெயில்பட்டால் 
என் என்று குதிப்பாயோ- கல்லும் முள்ளும் - என் என்று மிதிப்பாயோ 

நீசெலும் வனந்தானே - உன்னுட -னே செல்லுவேன்நானே என்னிட 
ஆசையெல்லாம் மறந்தேன் - இதுக்கோ - கோசலை பெண்பிறந்தேன் 


ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி வினட கொளல் 
 
தாய்வருந் திட இவ் வாறு தளருவாள் தன்னை நோக்கிப் 
பாய்வரும் பதினா லாண்டும் பதினாலு நாளே யம்மா 
நீவருந் திடுவ தேனோ நின்கிருபை யாலே கானில் 
போய்வரு வேன்கே ளென்று போற்றுவான் தேற்று வானே 


பல்லவி 

வனம்போய் வருகிறேன் அம்மா - கோசலை அ b மா 
வனம் போய் வருகிறேன் அம்மா 
(வனம் ) 


பெற்ற 
தானே 
வனம் போய் வருகிறேன் நானே 

மாதா பிதாவசனம் 
தனம் தனி மந்திரமும் 
சகல மந்திரமும் 
சத்தியமும் 
முத்தியும் 
பர் 
அது தானே 
( வனம் ) 
வேணும் 

கானம் நான் போக 
கணவனைக் காப்பாற்றும் 
நானிலம் பரதனுக்கு அல்ல என்னப் போமோ 
நானிருந்தரசனைப் 
பொய் சொல்லச் சொல்லல் 
ஆமோ 
( வனம் ) 


ஆதிகதை அறிவீர் 

நீரும் சகரர் 
அறுபதினாயிரம் பேரும் 
தாதைசொற்படிதங்கள் உயிர் கொடுத்தாரே 

தகப்பன் சொற்படிக்கு நான் தவஞ்செய்வதோ கடினம் 
முனம் 
ஈன்றவன் சொல் வேதம் தானே பரசுராமன் 
தாயை வெட்டி னானே 
ஆண்டுபதி னாலும் போய் வருவான் எனக்கண்டோ 
அரசன் எனைப் போவென்றால் திருவாக்கெதிர்வாக்குண்டோ ( வன ) 


ஸ்ரீராமர் வனம் ஏகலைப் பற்றி லெட்சுமணர் கோபம் கொளல் 

சிந்தையை கௌச லைக்குத் தேற்றிய ராமன் மீண்டு 
சுந்தரி சுமித்திரா தேவி துணையடி வணங்கும் போதில் 
இந்தமா மகுடம் சாமிக் கீகிறேன் இப்போ தென்ன 
அந்தமாம் லட்சும ணன்தான் ஆக்கிரகம் செய்கின் றானே 

பல்லவி 
நானே கொடுக்கிறேன் 
நானே லட்சுமணன் 
ராமனுக்கு மகுடம் 
( நானே ) 


அநீயல்லவி 
சேனைபேர் என்னோ டெதிர்க்கட்டும் குதிக்கட்டும் 
சித்திரக் கணையால் 
அத்தனைப் பேரையும் கொன்று 
வென்று 
(நானே ) 


சரணங்கள் 
குருடன் ராசமுழி முழிக்கிறாப் போலே பட்டம் 
கொள்ளுமோ பரதற்கு 
முடிசூட 
தரணியில் சர்க்கரையும் மாவும் சரியாயெண்ணும் 
தசரதனும் கிடந்து 
மனம்வாட 
இரவிமுன் பனிபோல என்னோ டெதிர்ந்த மன்னர் 
எவரும் பயந்துவிடு 
துகள் போட 
அரசிட்ட சாமிக்குத் தவசிட்ட நீலிமகன் 
ஆட்டுக்குட்டிபோலே ஓடக்கேட்டும் கைகையும் தள்ளாட ( நானே ) 

படமாட்டி 
கடல் மூட்டி 
தொகுத்த காளிநடிக்க கூளிதாளம் பிடிக்க 
துண்டங்கள் எதிராகப் 
பகைத்த ராசர் தலை பனங்குலை போல் உதிரப் 
படுகளம் எங்கும் ரத்தக் 
இகத்தில் நானே அடிமை ராமனே ஆண்டவன் 
என்ப தெல்லார்க்கும் தெரி 
வகுத்தபிர் மாதிதேவர் வந்தாலும் அவரவர் 
மர்மம் எல்லாத்தையும் ஓட்டி தர்மத்தை 
வுறக்காட்டி 
நிலைநாட்டி 
( நானே ) 

சுட்ட மண்ணும் பச்சைமண்ணும் ஒட்டுமோசாமி  துணையல்லால் எனக்குண்டோ 
உபகாரம் 
எட்டிப்பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் மோ 
இந்தப் பரதனுக்கேன் அதிகாரம் 
வெட்டித்தலை தலையாக் குவியா விட்டால் என்கை 
வில்லாலே ஆவதுண்டோ வீரம் 
பொட்டெனவே அயோத்திப் பட்டணம் எல்லாம்வந்து 
போர் தொடுத்தாலும் விட்டூரம் ஆர் தொடுத்தாலும் இந்நேரம் 


ஸ்ரீராமர் லட்சுமணர் கோபத்தைத் தணித்தல் 
 
சினங்கொண்ட இளையோன் இங்கே சீறியே சொல்லும் ஓசை 
களங்கொண்ட ராமச்சந்திரன் காதிலே விழக்கண் டோடி 
இனங்கொண்ட தந்தை வார்த்தைக் கெதிர் உண்டோ தம்பி என்று 
மனங்கொண்டு தேற்றிக் கோபம் மாற்றுவான் ஆற்று வானே 

பல்லவி 

இத்தனைக் கோபமும் நல்லாய் 
தம்பி இது சொல்லாய் 
வந்தது ஏதடா 
( இத்தனை ) 

அநு பல்லவி 
தத்துவம் ஆக உன்தன் 
தகப்பன் பேர் விளக்கிற 
புத்தியெல்லாம் வெள்ளை 
பிள்ளை அல்லோ பிள்ளை ( இத் ) 

சரணங்கள் 

இரும்போ தாய்மனம் காட்டிலே 
என்னவும் வாய்வருமோ நீ அத்தைப் 
கரும்பு கசப்ப தெல்லாம் வாய்க்குற்ற 
காலம் செய்த தல்லாமல் ஆர்செய்தார் 

போய்த்திரி 
பரிகரி 
மேசரி 
அரிகரி 
தி ) 

தகப்பனைச் சத்திய வாக்கியன் அல்லனென்று 
தாய்கொண்ட விரதத்தை முடியாமல் 
அகத்துணை ஆம்பரதன் செல்வத்தை 
அப்புறம் உனைக்கண்ட பேரெல்லாம் 
கழிக்கவோ 
அழிக்கவோ 
ஒழிக்கவோ 
பழிக்கவோ 

உரமாகும் தவஞ்செய்தால் உனக்கு நல்ல 
தோதீதோ 
ஒன்றும் பேசாதே கோட்டைக்குள்ளே படை வெட்டாதே 
அரசுபர தன் கொண்டால் நமக்கினிமேல் 
வாராதோ 
ஆக்கப்பொறுத்தநமக் காறும் மட்டும் 
பொறாதோ 

சுமித்திரை லட்சுமணருக்குப் புத்தி சொல்லல் 
ஏவ 
அற்புதத் தம்பி கோபம் ஆற்றியே ராமன் தாயார் 
பொற்பதம் வணங்கும் போது பூனவனக கேசி 
வற்கலை மா தர்காட்ட வாங்கிலட்சுமணா நீ என் 
சொற்படி கொடுபோ என்று சுமித்திரை கூறு வாளே 

கண்ணிகள் 

லட்சுமணா 
இந்தாமரவுரி அந்த வனத்தில் கொண் 
டேகுடன் ஈதென் வார்த்தை 
அந்த வார்த்தையே மந்திரமா அண்ணன் 
அடிபூசை செய்யடா 

லட்சுமணா 
அண்ணன் இவன்மணி வண்ணனே என்றெண்ணி 
அரைநொடி பிரியாதே 
கண்ணின் இமைபோலே எண்ணமெல்லாம் செய்து 
கட்டிக்காத்திருடா லட்சுமணா 

லட்சுமணா 
வெம்பிய காட்டினில் அரக்கர் வந்தால் அண்ணன் 
முன் போய்நீ நில்லாடா 
தம்பி உடையவன் படைக்கஞ்சான் என்னும் சொல் 
சாதித்துக் கொள் அடா லட்சுமணா 


லட்சுமணா 
அலையாழி புரண்டாலும் அண்ணன் இருக்கஉன்னை 
ஆரால் என்ன செய்யல் ஆம் 
மலைமீதில் இருப்பாரை பன்றி பாய்வதுண்டோ 
மயங்காதே தியங்காதே லட்சுமணா 


லட்சுமணா 
உளங்கொண்டு அண்ணன் எப்படிச் சொல்வானப்படி 
ஊழியங் கேளடா 
இளங்கன்று பயம் அறியா தென்றாற் போல நீ 
எதிர்த் தொன்றும் சொல்லாதே லட்சுமணா 


வட்சுமணா 
தாயே 
சீதைஉன் தகப்பன் ராமன் இந்த 
தலமே வனம் அடா 
ஆயாசம் பாராதே எள் என்னு முன் எண்ணெய் 
ஆகச் செய்துவாடா லட்சுமணா 

பின்னும் சடையும் மரவுரியும் காணவோ ராமன் 
பிறகே வந்தேன் என்று லட்சுமணா 
குன்னமா எண்ணாதே தெய்வம் பண்ணியதிருக் 
கூத்துக் கென்ன செய்யலாம் லட்சுமணா 

லட்சுமணா 
கர்த்தன் ஆனராமன் சித்தத்திலே எண்ணும் 
கட்டளைப் படிதானே 
புத்தியாகச் செய்தால் அப்போதல்லோ என்தன் 
புத்திரன் நீ போய்வாடா லட்சுமணா 


ஸ்ரீ ராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல் 

மண்ணும் இரங்க மரமிரங்க மறுதா யாரை அனுப்பிக்கொண் 
டெண்ணும் இரங்கும் லட்சுமணன் இசைந்து வரவே ரகுராமன் 
நண்ணும் சனகி தனைப்பார்த்து நான்போய் வருவேன் ஈரேழு 
பண்ணும் பருவம் வனமென்றான் பரந்தாள் சீதை கரைந்தாளே 

பல்லவி 
எப்படி மனந்து ணிந்ததோ சாமி வனம் போய் வருகிறேன் 
என்றால் இதை ஏற்குமோ பூமி
( எப்ப ) 

அநுபல்லவி 
எப்பிறப்பிலும் பிரிய விடேன் என்றுகை 
ஏழையான சீதையை நட்டாற்றிலே 
தொட்டாரே 
விட்டீரே 
( எப் ) 

சரணங்கள் 
கரும்பு முறித்தாற் போலே சொல்ல 
ஒருக் காலும் பிரியேன் என்று சொன்ன சொல் 
வருந்தி வருந்தித் தேவரீர் 
வார்த்னதயால் கொல்லாமல் 
இரும்பு மனது உண்டாச்சு 
என்னை விட்டுப் போகிறேன் என்று 
லாச்சுதோ 
போச்சுதோ 
கொல்ல 
தல்லோ 
சொல்ல 
( எப் ) 

அன்னை கொண்டவரம் என்னஎன்னைத் தள்ளவோ 
அழகுக் கோயில் எடுத்தது நிலம் ஊன்றிக் கொள்ளவோ 
குன்னமோ உனக்கென்னைத் 
கொடுத்தவன் மேலல்லோ 

நேரம் என்னை இட்டுக் கொண்டுபோவதோ 
பாரம் துவோ ஆண் பிள்ளைக்கு 
வீரம் 
தாரம் 
( எப் ) 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அத்தை 
நான் நினைத்துக் கொண்டிறந்தால் அங்கேபிறக்கலாம் காணும் 
காடு 
தாடு 
கூடி நாம் உகந்திருக்கும் 
குறைவில்லா என்மிதிலை 
காடு நீர் இல்லாத 
கால்வையும் தெரியும் என் 
வீடு 
பாடு 
( எப் ) 

ஸ்ரீராமர் வனம் ஏகலகல் புரசனங்கள் புலம்பல் 

ஆவ தனால் சீதைமன தறிந்த ராமன் 
அப்படியே வருகஎன்றான் வெளியே வந்தாள் 
தேவர்களும் முனிவர்களும் கலங்கி நின்றார் 
செயராமன் லட்சுமணன் சீதை என்னும் 
மூவர்களும் மரவுரியை உடுத்திக் கொண்டார் 
முறையாலே அயோத்தி நகர்த் தெருவின் மேலே 
போவது கண் டவ்வூரில் ஆணும் பெண்ணும் 
புலம்பினார் கண்ணீர்விட் டலம்பினாரே 


கண்ணிகள் 


1 -அரசுமணி முடியொடு ஆனைமேல் 
வருகிற திருக்காட்சியைக் காணாமல் 
அந்தத்தத் தெருவீதியிலே வந்து 
நொந்தார் சிலபேர்கள் 
மரவுரியும் சடைமுடியும் காணு 
வதற்கோ குதிகுதித்தோம் எனத்தங்கள் 
வாயோடுவாய் பேசாமலே மனம் 
மடிந்தார் சிலபேர்கள் 
தழுதார் சிலபேர்கள் 

2. அய்யோ இந்த அருமைத் திருமகன் 
மெய்யே வனம் போனால் நமக்கினி 
ஆறுதலை ஏதெனக் கண்பிசைந் 
செய்யாவினை செய்திடும் பாதகி 
கைகேசிக்கு இன்றைக்கு நெஞ்சுக்கல் 
திடுக்கெனவே விழுந்ததோ எனமனம் 
திகைத்தார் சிலபேர்கள் 


3 . கண்ணுக்குக்கண் அருகே எண்ணின 
எண்ணமெல்லாம் போச்சே நாம் அந்தக் 
காடே கதியாய்ப் போவோம் என்று கரைந்தார் சிலபேர்கள் 
பண்ணின தவம் இதுக்கோ தசரதன் 
புண்ணியவான் ஆனால் ஒருதரம் 
பழிகாரி சற்றழையாளோ என்று 
பதைத்தார் சிலபேர்கள் 


4 சொல்லிய வரம் தாவென்று கணவனைக் 
கொல்லவே வழிபார்த்தாள் அல்லாமல் 
தூரதிருஷ்டியாப் பார்த்தாளோ என்று துடித்தார் சிலபேர்கள் 
கல்உருகவும் புல்உருகவும் கண்ட 
கைகேசிக்குத் தன் மகன் மாத்திரம் 
கரும்போ இவன் வேம்போ எனமனம் 
கசிந்தார் சிலபேர்கள் 

5. முறையோ என்ன மூடப்பிள்ளையாகிலும் 
முந்தின பிள்ளை என்று சொல்லும்பழ 
மொழியாகிலும் ராமனுக் கில்லையோ என் றழுவார் சிலபேர்கள் 
குறையாமலே இருக்கின்ற சூரிய 
குலத்திலே நல்ல மரத்தில் புல்லுருவிபோல் 
குடிகேடி எங்கிருந்தாள் எனக்குலை குலைந்தார் சிலபேர்கள் 


6மையார் கண்ணி இளையவள் தோதக 
வலையிலே சிக்கித் தலைமகன் ராமனை 
மன்னவன் செய்ததென் சொல்லு வேமென்று வைதார் சிலபேர்கள் 
கைகேசியும் பிள்ளையும் கூனியும் 
கட்டாந்தரை அட்டையைப் போல் பண்ணைக் 
கட்டிக் கொண்டினிப் பரளட்டும் எனக்குடி கலைந்தார் சிலபேர்கள் 
சானகி எனும் லட்சுமி போனபின் 
மாநகரத்தில் ஆர் இருப்பார் அவள் 
தமக்கை யல்லவோ இருப்பாள் எனத்தவி , தவித்தார் சிலபேர்கள் 
கானகம் புகுவது முன்னே தசரதன் 
வானகம் புகுவது நிலைவரம் பென்று 
கரை காணாக் கப்பலோர் போலவே பரிவார் சிலபேர்கள் 


8--சத்திய ராமனை வரச் சொல்லி 
பற்றொரு வருக்கு முடி கொடுத்தான் இந்த 
தசரதன் மெத்த நல்லவனோ என்று 
தளர்ந்தார் சிலபேர்கள் 
எத்தனை பேர் சந்தைக்கு வந்தாலும் 
எல்லோரும் துணை ஆவாரோ ரரமனுக்கு 
இளையவனோ துணை இந்த ஊரில் என்று இடிந்தார் சிலபேர்கள் 


9 , மணிமுடி வரச் சொல்லிய முகுர்த்தத்தில் 
சடைமுடி வரச் சொன்னானே இந்த 
வசிஷ்டனை போல விசிஷ்டன் உண்டோ என்று வைதார் சிலபேர்கள் 
துணியுமோ மனம் அடடா உண்கிற 
சோற்றிலே நஞ்சு கலந்தார் போலவே 
தொடுத்தாள் பழிகொடுத்தாள் கைகை என்று சொன்னார் சிலபேர்கள் 
10. பாவமும் வரும் பழியும் மிக வரும் 

தீபமில்லா மனைபோலே இந்தப் 
பட்டணம் பறியே மே என்றுமண் படிந்தார் சிலபேர்கள் 
தாவரம் இல்லா இளங்கொடி போலவும் 
பாய்மரம் இல்லா மரக்கலம் போலவும் 
தாமரை இலைத் தண்ணீர் போலவும் தவித்தார் சிலபேர்கள் 

சுமந்திரன் புலம்பல் 

மா நகர் இப் படிபுலம்பத் தேர்மேற் கொண்டு 
வழியில் ஓரு சோலையிற்போய் பாதிச்சாமம் 
ஆனதிது வந்தவரோ உறங்கி விட்டார் 
அயோத்தியிலே அவர் போக வேணும் தேரைத் 
தானுருவ வடதிசையில் விட்டால் என்னைத் 
தான் மீண்டான் எனப்பலரும் அங்கே மீள்வார் 
ஏனித்தா மதமென்று ராமன் சொல்லி 
எழுகென்றான் சுமந்திரன் நொந் தெழுகின் றானே 

கண்ணிகள் 
என் தன் 
1. செகம் மகிழும் ராமச் 
திருப்பு வான் அல்லோ 
மகன் வருவானென் 
வாய்கொண்டுசொல்ல 
சந்திரன் போகாமல் தேரைத் 
சுமந்திரன் 
றிருப்பானே ராசனுக்கெந்த 
இருப்பேனே 


2 -ஊரில் என்னைக் கண்டபேர் சொல்ல - தசரதனுக் 
கோர் உடம்பீர் உடம்பாம் அல்லோ உன் பிள்ளைகளை 
தேரிறக்கி விட்டேன் என்பேனோ முகமறி யாத் 
தேசத்திலே விட்டேன் என் பேனோ 
3 தானே தானே மக்களைவிட் டோடிவந் 
மன்னவனும் உயிர்நைந் 
தெற்கிலே நின்றல்லோ 
சேவகன் போலல்லோ 
என்ற உடன் 
இப்போது நான் 
போகுவேன் எமன்விடுத்த 
ஆகுவென் 
கூவி 
மேவி 
இன்னம் உன்னைக் கூவிக் 
கிருக்குமே நல்லுயிர் 
சொன்னவுடன் போமே 
சுமக்கவோ நான் வந்தேன் 
தசரதனுகி 
நானிந்த வார்த்தை 
இந்தப்பழியை 
ஆவி 

ஸ்ரீ ராமர் சுமந்திரனுக்கு நீதி ஓதுதல் 

மந்திரி சுமந்திரன் இந்த வண்ணமே கூற ராமச் 
சந்திரன் அவனை நோக்கிச் சகலமும் தெரிந்த நீரே 
எந்தன் தாய் சொன்ன வார்த்தைக் கிரண்டு தான் செப்ப லாமோ 
சிந்தைஏன் இனிமே லென்று தெளிவிப்பான் தெரிவிப் பானே

பல்லவி 
சொல்லும் சொல்லும் - சுமந்திரரே 
நில்லும் நில்லும் ( சொல் ) 

அநுபல்லவி 
நல்ல ராத்திரி இதுபோல் இல்லை காணும் 
நகர் உள்ளோர்களும் நீரும் போக வேணும் 
அல்ல நீர் வேறே சொன்னால் விரும்புமோ 
அணை கடந்த வெள்ளம் அழைத்தால் திரும்புமோ 
( சொல் ) 


சாணங்கள் 


1.வீரம் பேசிக் கொண்டெழுந்த சேவகன் 
வெட்டுங் களம் கண்டு முதுகை இடல் ஆமோ 
ஆருங் காணவே தவசுக் கென்று வத்து 
அதுக்கெல்லாம் பயந்தச்சப் படல் ஆமோ 
வாருங்காணும் பெற்றதாய் சொல் விரதத்தை 
மறந்து பின்னை ஒரு விரதத்தைக் தொடல் ஆமோ 
சூரிய குலத்திலே பிறந்து முந்தி முந்தி 
தொடுத்த காரியத்தை நடுவே 
விடல் ஆமோ ( சொல் ) 


2 -தேன் என்றும் 
மன்னன் பரதற்கு நான் இருக்கிறேன் 
வருகிறேன் இளக்கரிப்ப 
பின்னும் அறிந்தறி யாததுக்கும் மன்னன் 
பெரிய உதவியே உதவி 
தான் என்றும் 
என் இடத்தில் வைத்த அன்பு போல் கைகை 
டத்தில் வைக்கா விட்டால் வனம்போ றேன் என்றும் 
அன்னைமார்க்கும் மன்னனுக்கும் பதினாலும் 
ஆண்டும் போய்வந்து வணங்குவேன் என்றும் 
( சொல் ) 


3. உலகிலே ஒரு நன்மை செய்ய இடை 
யூறுமெத்தவரும் ஆகை யால் அதை 
நிலையி தென்னலாமோ காலம் போம் வார்த்தை 
நிற்குமே பின்னை வேறே உண் 

டோவதை 
பலரும் தவிக்கிறார் என்று தாய்மொழி 
பழிக்கவோ நான் வந்தேன் 
என்ன கதை 
மலை விழுந்தாலும் தலையே தாங்க வேணும் 
மலைத்த வர்க்குப்பலன் பலிக்குமோ இதை 


ஸ்ரீ ராமரை நினைந்து சக்கிரவர்த்தி புலம்பல் 

வீரன் எனும் ராமனுரை சுமந்திரன் கொண்டான் 
மீண்ட தோர் வழிபலரும் மீண்டார் சேதி 
ஊரதிலே வசிஷ்டமுனி உடன் போய்ச் சீவன் 
ண்டிலை என் றிடும் வேந்த னுடனே சொன்னான் 
கூரெரியி லேவிழுந்த வெண்ணெய் போலும் 
கொதித்திடும் கொப்பரையில்விழும் புழுவைப் போலும் 
சீருளதன் மகனை நினைந் தேங்கிச் சிந்தை 
சிதறினான் தசரதனும் சுதறினானே 

கண்ணிகள் 

1. சின்னஞ்சிறு தாமரைபோல் பொன்னான பாதங்கள் நோவத் 
தேடிவனம் ஓடிவிட்டாய் ரகுராமா ராமா 
என்னை இந்தவேளை நடுத்தண்ணீரில் கைவிட்டாற்போலே 
எப்படித் துணிந்துவிட்டாய் 
ரகுராமா -ராமா 

2. முடிக்கும் குடஞ்சூட்டி முகம்பார்க்க இருந்தேனே 
மோசம் கைகேசி செய்தாள் 
ரகுராமா ராமா 
உடுத்த புடவைதரினே பாம்பாய்க் கடிக்குமென்னும் 
உளவறியாமற் போனேன் 
ரகுராமா ராமா 
3. மாலையிட்ட கைகேசிதான் காலனைப் போலே வந்தென் 
வாணாளைக் கொண்டாள் அய்யோ 
ரகுராமா ராமா 
வேலிக்கு முள்ளிடவே என் காலுக்கு முள் ஆகவந்து 
விளைந்ததென் விதிவசம் 
ரகுராமா 
4 . ஆனைமேல் பவனியாக அபிஷேக முடிசூடும் 
அலங்காரம் என்று காண்பேன் 
ரகுராமா ராமா 
நானொன்று நினைக்கத்தெய்வம் தானொன்று நினைத்ததையோ 
நான் செய்த பாவம் ஈதோ 
ரகுராமா
தாயும் நீ தந்தையும் நீ சற்புத்திர மாணிக்கமும் நீ 
சகல பாக்கிய மும் நீயே 
ரகுராமா 
நீயில்லஈ நாடிதெல்லாம் நிலவில்லா முற்றம் போலே 
நெடும்பாழ் அடைந்த தையோ 
ரகுராமா 
ராமா 

6. படித்துப் படித்துச் சொல்லிக் காலும் பிடித்துக்கொண்டேன் 
பாவிகை கேசி அய்யோ 
ரகுராமா 
அடிக்க அடிக்கப் பந்து விசை கொண்டெழுந்தாற்போல் 
ஆயுசுக்குலை வைத்தாளே 
ரகுராமா 
குடைமகு டந்தரித்துக் குலவியம் தன்னையாளும் 
கோலங் காணும் முன்னாக 
சடைமகுடந் தரித்துக் காட்டிலேபோ என்றேனே 
சண்டாளன் என்போல் உண்டோ 
ரகுராமா 
ரகுராமா 
ராமா 
ராமா 

8. தேறுதல் எங்குங் காணேன் திக்குத் திசையுங்காணேன் 
தெய்வமும் துணை காணேன் 
ரகுராமா 
ஆறுதல் எங்கும் காணேன் அந்தரத்தில் கோல்எறிந்த 
அந்தகன் போல் ஆனேன் அய்யோ 
ரகுராமா 

9. பாரெல்லாம் பரதன்கொள்ள உன்னையுமென் கண்ணின் முன்னே 
பறிகாட்டில் போ என்றாளே 
ரகுராமா 
கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே 
கெடுகாலி எங்கேவந்தாள் 
ரகுராமா 

10. சேனைசாவலர்கூட நான்கூடமுடிசூட்டி 
சிங்காசனம் வைக்கும் முன்னே 
ரகுராமா 
ஆனை நிழலைப் பார்க்க தவளை கலங்கினாற்போல் 
ஆனாளே கூனி அய்யோ 
ரகுராமா 

11. சற்றே பொறுத்துச் சென்றால் சகுனதோஷம் என்றோ நான் 
சாவேன் என்றறிவாயோ 
ரகுராமா 
சுற்றும் அழுகைக்குரல் கேட்கிறத்துக்குமுன்னே 
சுருக்கா நடந்துவிட்டாய் 
ரகுராமா 
ராமா 


- ராமா 


12. குலத்தை விளக்கவந்த மகனே உனக்குப்பட்டம் 
கொடுத்து வாங்கிக் கொண்டது 

ரகுராமா 
கலத்திலே சோற்றையிட்டு கைப்பிடித்தாற்போலாச்சே 
காலம் இப்படி ஆமா 

ரகுராமா - ராமா 


13. பாயும் அமுதமும்பொன் பள்ளயமும் இங்கிருக்க 
பறிகாட்டிலே நடந்து 
ரகுராமா 
காயும் கிழங்கும் தின்னல் ஆச்சோ தெய்வத்துக்கும் 
கண் இல்லையோ மகனே 
ரகுராமா 
14. வீசும்நெருப்பைப் போல கடுங்கோடையும் கானலும் 
வெய்யிலும் மேல் படுமே 
ரகுராமா 
காசாம் பூமேனியெல்லாம் வேர்வை முத்து முத்தாகக் 
காண்பாளோ கௌசலை 
ரகுராமா 
ராமா 

15. பூமேலே விழுந்தாலும் தழும்புபடுமே உன் தன் 
பொன் ஆன மேனி அய்யோ 
ரகுராமா ராமா 
மாமனலயும் கொடியும் செடியும் பொடியும் தாக்க 
வழிநடந்தறிவாயோ 
ரகுராமா 
16. முடிக்கபிஷேகம் செய்துன் அடிக்கீழே ஓடுந்தண்ணீர் 
முந்திக்கொண் டாரானாலும் 
ரகுராமா 
ராமா 
பிடித்தொரு படிதந்தால் குடிக்கேனோ குடித்தென்தன் 
பெருந்தாகந் தணியேனோ 
ரகுராமா-ரகுராமா 
ரகுராமா 

17. இழையாயிரம் பொன்பெற்ற பீதாம்பரம் உடுத்த 
இடைமீதிலே மகனே 
பழிகாரி தான் கொடுத்த மரஉரிதான் உடுக்கப் 
பார்த்தாரோ ஊர் உள்ளோர்கள் 
ரகுராமா 
ராமா 
ராமா 
18. பார்த்தாலும் பசிபோமே பால்வடியுமே உன் தன் 
பவளவாய் முகந்தன்னை 
ரகுராமா 
காற்றோட்ட மாகவந்து சற்றே நீகாட்டி என்னைக் 
கரையேற்றி விட ஒண்ணாதோ 
ரகுராமா 
ராமா 

19 -பிள்ளை தன் தொடைமேலே பெற்றவன் சீவன்விட்டால் 
பெருங்கதி உண்டென்பாரே 
ரகுராமா 
கள்ளக்கை கேசிகையில் காட்டிக் கொடுத்துவிட்டு 
கடக்கப்போய் நிற்கல் ஆமோ 
ரகுராமா 
ராமா 

20--கண்ணும் இருண்டதைய்யோ கருத்தும் அழிந்ததையோ 
கைகாலும் ஓய்ந்ததையோ 
ரகுராமா ராமா 
எண்ணம் குலைந்ததைய்யோ என்று நான் காண்பேன் உன் தன் 
எழுதரு முகந்தன்னை 
ரகுராமா ராமா 

ஸ்ரீ நாமரைக் குகன் தன் ஊரில் இருக்க வேண்டல் 
புலம்பியமன் னன் இவ்வா றிடிந்து சீவன் 
போயினான் வைகுண்ட புரத்தைச் சேர்ந்தான் 
பெலந்தரும் மன்னவர் அவனை எடுத்தார் எண்ணெய் 
பெருந்தோணி யில்இட்டார் , இப்பால் ராமன் 
நலந்தரும் லட்சுமணன் சீதையுடனே கங்கா 
நதியடைந்தான் முனிவரொடும் கலந்தான் அந்த 
சலந்தனையும் குசன்விடுத்த தோணியாலே 
தாண்டினான் அவனிருக்க வேண்டினானே . 

பல்லவி 
இங்கே இருங் காணும் - தரிசனம் தந் 
தென்னை ரட்சிக்க வேணும் 
( இங்கே ) 

அநுபல்லவி 
மங்கையாம் என் தாயும் ராமா நீயும் இந்த 
வரிசைத்தம்பியும் அய்ய 
ஒருபத்தன்குகன் உய்ய 
( இங்கே ) 


சரணங்கள் 
1 , பூவுண்டு கனியுண்டு ஊன்உண்டு தேன் உண்டு 
புதுமர உரிகளும் போர்வையும் உண்டு 
தாழ்வுண்டு தடம்உண்டு கங்காந்தி உண்டு 
தான்வேண பட்சணம் உண்டு நானே செய் ரட்சணம் உண்டு 

2. எட்டுத் திக்கிலும் செல்லுவேன் கிழங்குவகை கெல்லுவேன் 
எதிர்த்தவரை வெல்லுவேன் வழி சொல்லுவேன் 
கட்டிக்காத்து நானேகண் இமைபோலே 
காலாலே காட்டின தெல்லாம் கையாலே செய்கு வேனே ( இங் ) 
தானே 

3. நித்தியம் உம்மைப் பிரியேன் மற்றொன்றையும் 
நிணறு மறக்கறியேன் நான் 
முற்றிலும் நிறைதிங்கள் எனவே விளங்கும் 
முகங்கண்டாற் பரிபோமே முத்திமோட்சம் 
குறியேன் 
சிறியேன் 
உங்கள் 
உண்டோமே ( இங் ) 

ஸ்ரீ ராமர் குகனைச் சினேகங் கொள்ளல் 
தனது புகலும் குகனேசன் தம்பி உனது தம்பி கண்டாய் 
எனது துணைவன் நீகண்டாய் இச்சீனதயும் உன்மதனி கண்டாய் 
மனது பொருந்தத் தாய் சொன்ன வரத்தால் காட்டில் இருப்பதல்லால் 
உனது நாட்டில் இருப்பாமோ உனரப்பாய் இதையா தரிப்பாயே 

அடதாள் சாய காட்டில் இருக்கவந்து நாட்டுக் கருகான 
நாட்டில் இருக்கலாமோ 
பூட்டகமோ இது குளிக்கப்போயும் சேறு 
பூசிக் கொள்ளல் ஆமோ 
குகனே 
குகனே 
குகனே 
பதினாலு வருஷம்போய் நாமெல்லாம் ஒருமிக்க 
பதியில் இருக்கல் ஆமே 
மதிமோ சமோ ஆனை ஏறியும் திட்டி 
வாசலில் நுழைவான் ஏன் 
குகனே 


3 உன்பரிசனம் என்னது உன்ஊரும் என்னது உன் 
உறவும் என் உறவாச்சே 
என்பிறகே நீவந்தால் இந்த உறவைக்காக்க 
எவருண்டு நீ சொல்லுவாய் 
குகனே 
குகனே 

4. பொறுத்த எனது தவம் முடிக்க வேணும் அந்தப் 
பொறுப்பு உனக்கில்லையோ 
குறுக்கப் பேசாதேமுதல் கோணினால் முட்டக் 
கோணும் தடைசொல்லாதே 
குகனே 
குகனே 

5. ராமன் பரதன் லட்சு மணன்சத்து ருக்கன் என 
நால்வர் பிறந்திருந்தோம் 
ஆமுன் உடனே ஐந்து பேரானோம் சீரானோம் 
அதிக பலவான் ஆனோம் 
குகனே 
குகனே 

6. குருவியின் தலைமேலே பனங்காய்ப்போற் புவியாளக் 
குழந்தை பரதனடா 
அருகில் இருக்கிறாயே நான் இருக்கிறாப் போலே 
அடிக்கடி பார்த்துக் கொள்வாய் 
குகனே 
குகனே 

7 உடன் ஆன தம்பியிவன் உனது மதனி இவள் 
உனது துணைவன் நானே 
இடர் ஏன் படுகிறாய் நான் என்றும் நீ என்றும் 
ரண்டாக எண்ணாதே 
குகனே 
குகனே 

8. சற்றே காணும் முன்னே கங்கைக் கரை ஏற்றி என் 
தலையும் கரைஏற்றின 
சித்திர கூடத்துக்கு வழியெங்கே நீ இங்கே 
திரும்ப ஒன்றும் பேசாதே 
குகனே 
குகனே 

ஸ்ரீ ராமர் சீதைக்குச் சித்திரகூட வளங்காட்டல் 

வரதன் என்னும் ரகுராமன் குகனை இந்த 
வகைத் தேற்றி பரத்துவாசக் 
குரவன் அனுமதியாலே தம்பியும் 
சீதையும் தானும் கூடிப்போனான் 
பரமுள சித்திர கூடமலை சேர்ந்தான் 
முகமலர்ந்து பார்த்தான் அங்கே 
கரதலத்தைச் சீதை முன்னே நீட்டுவான் 
மலைவளங்கள் காட்டுவானே . 

அடதாள சாப்பு பல்லன் 
பாராய் பெண்ணே பாராய் பெண்ணே 
பாக்கிய சனகன் கண்ணே 
( பாரா ) 

அபயல்லவி 
சீராக நமக்குநேர் ஆகிற.இந்த 
சித்திர கூட. மலை ரத்தின பீடம்போலே 
( பாரா ) 


1. மாதவர் முனிவர் சொல் வேதங்களைக்கிளி 
வாடிக்கை யாற்கற்று வனமெங்கும் 
படிப்பதும் 
கோதும்தினைக் கொல்லையினிற் பம்பைகள் 
எடுத்துக் குரங்குகள் 
அடிப்பதும் 
ஆதவன் குதிரையைப் போல் பசும்பாறை ஒளிபாய்ந்த 
ஆடுகள் பசுமையாய கோடேறி 
நடிப்பதும் 
பேதகம் இல்லாமல் மேல்ஓடும் மேகத்தைப் 
பெண்யானை எனக்கையால் ஆண் யானை 
பிடிப்பதும் 
2. மூலமுனிவர்க்குமலை ஏறப் படிபோலே 
முடங்கி அடங்கிக்கொண்டு மலைநாகம் கிடப்பதும் 
காலில் அழுந்தாமல் புல் எல்லாம் கொம்பாலே 
கரும் பன்றிகள் 
இடப்பதும் 
( பா ) 

படப்பதும் 
கோல அயோத்தியில் இட்ட கொடி போலே 
கோல்மூங்கிலிற் பாம்புத் தோல்பட 
வாலைப் பிடிகொடுத்துக் குறுகுங்கண் முனிவர்க்கு 
மந்திகள் அங்கங்கே வழிகாட்டி 
நடப்பதும் 
( பா ) 

விடுப்பதும் 
கொடுப்பதும் 

3. அருவி நீரை மொண்டு துதிக்கையா லானைகள் 
அருந்தவர் பெருங்கமண்டலந் தனில் , 
குருவிகள் தினைக்கதிர் மூக்கினால் மடத்திற் 
கொண்டு போய்க் 
பரவும் ஓமக்குண்டத்தெரி வளர்ந்திட மயில் 
பசுமையாம் சிறகை விசிறிபோல் 
திருமா முனிவர்முப் புரிநூல் அணிவதற்குச் 
சிலந்தி நூல் கொண்டுபோய்க் குரங்குகள் 
எடுப்பதும் 
கொடுப்பதும் ( பா ) 

சக்கிரவர்த்தியைக் குறித்துப் பரதர் புலம்புதல் 

துய்யமலை வளங்களை இவ்வாறு காட்டித் 
தோகையுடன் சாமிலட்சுமணன் தான் செய்த 
செய்யபர்ண சாலையினில் இருந்தான் இப்பால் 
செயமுளகே கயநாட்டில் வதிஷ்டன் ஓலை 
பைய அறிந் துடன் மீண்டான் தாய்கை கேசி 
பதத்தினிற்சத் துருக்கனுடன் பரதன் வீழ்ந்தான் 
அய்யன் எனும் தசரதன்சீர் அறிந்தான் தேம்பி 
அழுகின்றான் அழுதழுது விழுகின் றானே 

கண்ணிகள் 
1 . அரசே எனதய்யனே எனதப்பனே எங்கே 
நடந்தாய் 
கரைசேரும் விண்ணவரோ டே நீ உற வாடவோ 
தொடர்ந்தாய் 
2. முறையும் உன் தன் நிறையும் எக்கிய துறையும் எல்லாம் 
பிறகே கொண்டுபோன தென் குறையோ அறியேனே 
தானே 

3. சத்தியமும் சுபகீர்த்தியமும் நித்தியமும் நித்தியம் அல்லோ சிறந்தாய் 
மித்திரனை தர்மபுத்திரனை ராமபத்திரனை எங்கே மறந்தாய் 


4 அழகா உன்னைத் தொழ ஆசை கொண்ட டுத்தேன் இது பொய்யோ 
எமுதாப் பொறிக் கழுதால் இதில் என்ன தான் வரும் அய்யோ 
முன்னே 

5. சீலராகவன் மேலே மாமுடி கோலிநீ வைக்கும் 
காலம் செய்திடும் கோலம் தன்னை என்னால் என்ன செய்யல் ஆம் மன்னே 


6-அம்பரந்தனில் சம்பராசுரன் துன்ப மேசெய்கி 
உன் பிராணனை ராமன் மேல் வைத்த அன் பெலாம் இது 
றானே 
தானோ 

7. அய்யன்முனி வசிஷ்டன் விட்டகை ஓலையின் 
மெய் யென்றிருந்தேனே நான் விழித்தேன் கனவாச்சே 


8 -எண்ணினால் என்ன அண்ணன்ராமன் இருக்கின்றானே 
புண்ணிய வானை என் கண்ணிற் காணவே போமே என்வி 
நேரம் 
சாரம் 


பரதர் னகேசினயக் கோபித்தல் 

வருதுயரம் ஒருவிதத்தால் பரதன் தேறி 
மன்னன் இறந் தாலுமென்ன அண்ணன் ராமன் 
திருமுகங்கண் டாற்போதும் எங்கே என்றான் 
தேசமெல்லாம் ஒருவரத்தால் உனக்கே சொன்னேன் 
ஒருவரத்தால் அவனைவனம் போகச் சொன்னேன் 
ள்ளபடி இதுமகனே பிள்ளை நீங்கப் 
பெரியமன்னன் இறந்தான் என் றுரைத்தாள் கண்ணீர் 
பெருகினான் கைகையை நொந் துருகினானே 

என்ன பாவிகைகேசி என்னடி செய்தாய்நீ 
என்னடீ பாவி கைகேசி -- என்னடி செய்தாய் 
( என் ) 
நாம் ஆமோடீ 


சரணங்கள் 
1 .. மன்னவனைக் கொன்று அண்ணன் வனம் போக விடுத்தாய் இன்னம் 
இன்னம் உண்டோபாவி என்னை ஏண்டி கெடுத்தாய் ( எ ) 
2. என்று பாவியுன் வயிற்றினில் 
வந்தேனே - நான் 
அன்றுதாயே அன்று பேய்என்று  நொந்தேனே ( எ ) 
3. அய்யன் ராமன் காய்கிழங்கு கிண்டல் 
ஆமோடி 
நெய்யும் பாலும் சோறும் வாரிமண்டல் ( எ ) 
4 . உன்னைக்கொன்று என்பழியைப் பின்னே தீர்க்கிறேன் 
எங்கள் 
மன்னவன் ராமன் வைவான் என்றெண்ணிப் பார்க்கிறேன் ( எ ) 
5. தின்றால் அல்லோ நஞ்சு கொல்லும் என்பது பொய்யோ 
ஒன்றும் அறியேன் இதுக்கென்ன செய்வேன் அய்யோ ( எ ) 
6. மன்னவன் பின்னோடே நீபோகல்லோ 
வேணும் - இனி 
என்னையும் கொன்றாகிலும் நீசாகல்லோ 
வேணும் ( எ ) 
7. தரமோ நான்புவி ஆளத்தரமோ கண்டாய் 
ரண்டு வரமோ கழுத்தறுக்க அரமோ கொண்டாய் ( எ ) 
8. நாயகன் ராமனுக் கிணை சொல்லப் போமோட் 
ஓர் ஆயிரம் நட்சத்திரம் ஒரு சந்திரன் 
ஆமோட் ( என் ) 

பாதர் கோசலாதேவிக்குச் சத்தியங் கூறுதல் 

கோவித்த பரதனந்த கைகை விட்டப்புறம் கோசலையைக் கண்டான் 
சேவித்தான் கைகை செய்த தறிந்திலையோ 
என்றந்தத் தேவி கேட்டாள் 
ஆவிக்கும் ஆவி அண்ணன் ராமனை வஞ்சித் 
தறியேன் அறிந்தேனாகில் 
பாவிக்கும் பாவியாய் விடுவன் என்று 
சத்தியங்கள் பண்ணுவானே . 

பல்லவி 
சேருங் கதியில் சேருவேன் அம்மா இந்த ராமத்துரோகம் 
தெரிந்தால் அனுபவிக்கிறேன் அம்மா ( சேரு ) 

அநுபல்லவி 
( சேரு ) தீராத நெஞ்சுக்குத் தெய்மே 
சாட்சி 
திரும்பத் திரும்ப என்னகண் காட்சி 
ஓரிபோற் பெரியோரை 
வைதவன் 
உண்டவீட்டுக்கு ரண்டகம் 
செய்தவன் 
1. அய்யம் இட்டு உண்ணாதவன் குடிகெடுத்தவன் அப் 
அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் செய்யும் துர்க்குண 
செய்த நன்றி விடுத்தவன் தீங்கெடுத்தவன் பிரம்ம 
செய்யும் அவரைக்குறுக்கே தடைசெய்தவன் கொலை 
ஐயம் தீர்த்து நெஞ்சை 
உறந்தவன் 
அசல் உடைமைக்குப் பேயாய்ப் 
பறந்தவன் 
கையடித்துக் கொண்டு ஆணை 
மறந்தவன் 
கன்றுக்குப் பாலை விடாமற் கறந்தவன் 
வாதகன் 
போதகன் 
காதகன் 
பாதகன் 
( சேரு ) 


2. தீர்த்தக்கரை பாவியும் கடுங்கோலியும் செனத்து 
ரோகியும் 
செபதப விரதஈனனும் பரஸ்திரீசென அனு 
போகியும் 
பூர்த்தியாம் மதுபாணியும் அக்கியானியும் அவி 
வேகியும் 
பூமிக்குச்சுமை யாகவந்தபுகழ் இல்லாத 
தேகியும் 
வார்த்தையாற் பிரட்டும் படு 
கோளனும் 
வழக்கழிவு சொல்லும் அசட் டாளனும் 
தூர்த்த விர்த்திவிடா மிண் (டாளனும் 
சோற்றிலே நஞ்சிடும் சண்டாளனும் ( சேரு ) 
3. ஆறுகுளத்தில் உடையில்லாமல் அம்மணத்துடன் 
நடந்தவன் 
அன்னைவார்த்தை தந்தை வார்த்தை குருவின் வார்த்தை கடந்தவன் 
தேறும் நல் லோர் பெரியோரைக்கண் டெழுந்திராமற் 
கிடந்தவன் 
திருடனுக் கிடங்கொடுத்தவன் இடங்கொடுத்தவன்பின்னே 
தொடர்ந்தவன் 
வேறில்லாரைப் பகைத்து 
வேட்டகந்தன்னிலே இருந் 
சீறும் படையைப் பயந்து 
செடியிலே தலை துறுத்துக் 
விண்டவன் 
துண்டவன் 
தண்டவன் 
கொண்ட்டவன் ( சேரும் ) 


குகன் பாதர் சேனையைக் கண்டு கோபித்தல் 

சத்தியஞ்செய் துடனேசத் துருக்கனோடே 
தசரதன்செய் கடன் முடித்து நானே ராம 
பத்திரனை அழைப்பேன் என் றெழுந்தூராரும் 
படைகளுந்தா யாரும்வதிஷ்ட முனியும் சூழச் 
சுற்று சடா முடிமுடிந்துப் பரதன் கங்கைத் 
துறைக்கு வட கரைக்கு வந்தான் வரக்கண்டாங்கே 
த்திசையில் ராமன் மேற் பகைகொண்டன்றோ 
ஏறினான் என்று குகன் சீறினானே 

என்னத்துக்குப் பரதன் படைவந்தது 
திராணி பாருங்கள் வேடரே ( என்ன ) 

அநுபல்லவி 

மன்னவனுக் கடிமை நானென்று தெரியாமல் 
வனத்தில் வந்தும் துரத்திப் பிடிக்க வந்தாரோ ( என்ன ) 

1. ஆழநெடுந்திரைக்கை ஆறுகடந்தாலும் என்ன 
தோழன் என்று ராமன் என்னைச் சொல்லியருளியதொரு 
சொல் லேனோ 
சொன்னபடிக்கு 
நில்லே னோ 
நான் பிடித்தகை 
வில்லே னோ 
இவரைக் 
கொல்லேனோ ( என்ன ) 

2. அடி ஓட்டின் மேற்கரணம் போடவந்தது போலே 
முடியத்துரத்தி என்ன மோசஞ்செய்ய வந்தாலும் 
முறியேனோ 
வளை தடி கொண் 
டெறியேனோ 
தலைதலையாப் 
பறியேனோ 
கொல்ல 
அறியேனோ  ( என்ன ) 
3. ஆனை கட்டச் சங்கிலிதான் எடுத்துக் கொடுத்தாற்போல் 
ஏனெதிர்த்துக் கொண்டாரென்னை இவரைப் பொடிபொடியா 
இடியேனோ 
வரவொட்டாமல் 
அடியேனோ 
வந்தமன்னரைப் 
பிடியேனோ 
என்சொல் 
முடியேனோ ( என்ன ) 


லட்சுமணர் பரதர் சேனையைக் கண்டு கோபித்தல் 

திடம் பெருகு குகன் இவ்வா றெண்ணி ஐயம் 
தெளிந்து தெரி சிக்கவந்தான் பரதன் அன்பால் 
நடந்ததெல்லாம் குகனுக்குச் சொன்னான் கங்கா 
நதிகடந்தான் சேனைகளைப் பரத்து வாசன் 
மடந்தனிலே இளைப்பாற்றிச் சித்திர கூட 
மருங்குவந்தான் அவனை லட்சு மணன் கண் டிங்கே 
தொடர்ந்து கொல்ல வருமிவனைக் கொல்வேன் என்று 
துடிக்கின்றான் ராமன் முன்னே படிக்கின்றானே 


ஒருமொழி மாத்திரம் தாரும் சாமி எனக்குத் தாரும்  
ஒருமொழி மாத்திரம் தாரும் சாமி 

அநுபல்லவி 
பரதன் சேனையிது நான்மரம் 
ஏறிப் 
பார்க்கத் தெரிந்த தைய்யா , பழி 
வரவிடுக்க வந்தான் நம்மைச் 
சீறி 
வரட்டும் ஒருகை பார்க்கிறேன் எனத் 
தேறி 

சரணங்கள் 
1. வஞ்சகம் பரதன் செய்த 
கோரம் தீர்த்தாலல்லாமல் 
வாங்குமோ என துவங்கை வாரம் தேவரீரிந்த 
வஞ்சியும் நீரும் போய்ச்சற்றே 
இருப்பீரிந்த 
மட்டு மே செய்திடும் உப காரம் 
கொஞ்ச நேரத்திலே என்சிலை 
பூட்டி குரைக்கும் நரிக்கு இரையாகவே 
மாட்டி பிஞ்சிடாமல் இந்தச் சேனையைக் 
பிரளய கால ருத்திரனைப் போல் மாட்டி 
நஞ்சுநஞ்சு பஞ்சு பஞ்சா 
எவர்களும் 
நெஞ்சிரங்க வெஞ்சரங்களைத் 
தொடுக்கிறேன் 
கூட்டி ( ஒரு ) 

அதிலே ரத்த எதிர்த்த மன்னர் பேயும் பூதமும் 

2. வண்டிலும் தேரும் கம்பல்போல் 
வாரிவெள்ளம் கரைபுரண் 
மண்டைகள் மலைமலையாப் போட 
மகிழ்ந்து கொண்டு தலைகள் பந்தாட. 
அண்டொணாத பெரும்படைகள் மென் 
ஆடிக்காற்றில் விழுஞ் சருகுகள் 
சண்டவார்கணைகள் தொடுக்கிற 
சரிந்து நிலை குலைந் தொரு 
விண்டு விண்டு பிண்டு பிண்டு 
கண்ட கண்ட துண்ட துண்டம் 
மேலே 
போலே 
தாலே 
காலே 
விழவிழ 
ஆக்கிறேன் ( ஒரு ) 


3 ஆள் அடிமை லட்சுமணன் 
தொட்ட அம்புகள் பாய்ந்து 
ஆனைமத்தகம் பிளந்து கொட்ட அதில் வந்த பேர் 
வாள் எல்லாம் மீன்போல் புகுந்து கிட்ட அந்தச் சேனையை 
வாரிக் கொண்டிரத்தம் கடல் முட்ட 
தோளும் தாளும் அறுந்துதுடி 
துள்ளித்துள்ளி சிலகவந்தங்கள் 
மூளைச் சேற்றில் விழுந்திடுப்புகள் வெடிக்க 
முகங்கண்டவர்க் கெல்லாம் குறளிகள் படிக்க 
வாளியாட கூளி ஆட 
கூளி ஆட தூளி ஆட அடிக்கிறேன் 
துடிக்க 
நடிக்க பலபல ( ஒரு ) 

ஸ்ரீ ராமர் சக்கிரவர்த்தியைக் குறித்துப் புலம்பல் 

இந்தவகை சொல்லத்தம்பீ உனக்கு லோகம் 
ஈரேழும் நேர் ஆமோ நமக்கு பூமி 
தந்திடவும் வணங்கிடவும் வந்தான் கண்டாய் 
தம்பிபர தனும் என்னை விரோதிப் பானோ 
அந்தமதி விடுவிடென்னப் படையை நீக்கி 
அண்ணன் முன்னே பரதன்வந்து பணிந்தபோது 
தந்தைஉளனோ இலனோ என்றான் கேட்டான் 
தயங்கினான் ரகுராமன் மயங்கினானே 

கண்ணிகள் 


1 -மெய்யை நிறுத்திஉன் மெய்யை விட்டுப் போனதென்ன 
மெய்த்தவனே என்னைப் - பெத்தவனே 
கையிலே வளர்ந்த என்னை இப்படிக்கண் கலக்கங்கள் 
கண்டாயோ என்னை 
விண்டாயோ 

2. வீட்டில் இருந்து முகத்தைக் காட்டுவாய் என்றிருந்தேனே 
வெறுத்தாயோ என்னை 
ஒறுத்தாயோ 
காட்டிலே போம் முன்னாக விண் நாட்டிலே நீபோ னதென்ன 
காரியமோ வீரியமோ 

3. தத்தளிக்கும் பரதற்குப் புத்திமதி யோசனனகள் 
சாற்றுவையே - பயம் - மாற்றுவையே 
எத்தனை காரியத்துக்கும் என் கர்த்தன் இருக்கிறான் என்றே 
எண்ணினேனே அவம் பண்ணினேனே 

4 -எண்ணும் என் உயிரிருக்க உன்உயிரை மாத்திரம் 
இறந்தாயோ - என்னைத் - துறந்தாயோ 
கண்ணுக் குற்றம் கண்ணுக்குத் தெரியா தென்று சொன்ன 
சுனதயாச்சே -- நல்ல - வதையாச்சே 

5. இந்திரன் பழைய போல வந்துனது முன்னே முறை 
இட்டானோ 
குறை - பட்டானோ 
அந்தரத்தி லேசென்றாலும் எந்தாய் இங்கே யிருக்க 
ஆர்படுவார் - 
தேர் 
யார்விடுவார் 

6. என்னிரண்டு கால்மிதித்த உன்னிட மார்பும் வயிறும் 
இருதாளும் -- உன் -- இருதோளும் 
வன்னிதின்னக் கண்டேனே என்னைப்போல் ஒரு பிள்ளை 
வாச்சுதல்லோ பேய் ஆச்சுதல்லோ 

7. தள்ளரிய தாறுவந்து தாய்வாழையைக் கெடுத்த 
சதிதானோ 
தலை விதிதானோ 
பிள்ளை என்று நான் பிறந்து பெற்றவனைக் கொன்றான் என்று 
பேர் எடுத்தேன் நல்ல சீர் எடுத்தேன் 

8 -கண்ணில் எண்ணெய்க் குத்தி என்னைக் காத்துக் கொண்டிருந்துபட்டடம் 
கட்டுமுன்னே - பலன் - கிட்டுமுன்னே 
வெண்ணெய் திரண்டு வரச்சே தாழி உடைந்தாற்போலே 
விடுத்தாயே - என்னைக் - கெடுத்தாயே 

9 -நாலுபேர் பிள்ளையிலும் என் மேல் உன் மானமெல்லாம் 
நாட்டினையே 
ராட்டினையே 
காலிலே தைத்தது உன் கண்ணிலே தைத்ததுபோலக் 
காத்தாயே 
இன்று - தீர்த்தாயே 

10. வெந்தவனம் கடந்துன் ஊரினில் வந்தார் முகத்தில் 
விழிப்பேனோ ஆரை அழைப்பேனோ 
என் தன் முகந்திருத்தி உச்சிமோந்து தழுவி 
எடுப்பார்ஆர் - முத்தம் - கொடுப்பார்ஆர் 

11. மாமந்திர சாலையும் சிங்காதனமும் ஒளி 
வாங்காதோ கண்டால் -- ஏங்காதோ 
பூமண்டலாதிபர்கள் தாம் வந்து பணியும் அம் 
புசபதனே அய்யோ 

ஸ்ரீ ராமனர வதிஷ்டர் தேற்றுதல் 
அரசனை எண்ணி இவ்வாறழும் இராகவனை நோக்கி 
வரமுனி வதிஷ்டன் அங்கே மலர்க்கையால் கண்ணீர்மாற்றி 
விரகினால் எவரானாலும் விதியினை வெல்வாருண்டோ 
புரவலா கேளாய் என்று போற்றுவான் தேற்றுவானே 

பல்லவி 
ராமா இப்படி நீ கிலேசிக்கல் 
ஆமா என் சாமீ ( ராமா ) 

அநு பல்லவி 
பூமான் என்னும் தசரதன் போ கையினாலே 
புலம்பிப் புலம்பிக்கொண்டு குழந்தைப் பிள்ளையைப் போலே ( ரா ) 


சரணங்கள் 
1. கனிந்து கண்ணீர் இறைத்தா வதுண் டோசாரம் 
கையால் எள்ளுந்தண்ணீரும் இறைச் கவேணும் இந்நேரம் 
நினைந்து பார்க்கில் இதுமகன் செய்யும் உபகாரம் 
நீயறியாத துண்டோ உனக்கேன் இந்த 
விசாரம் ( ராமா ) 

2. புண்ணிய பாவம் இரண்டும் மெய் யென்று 
பூட்டும் வாணாள் அதிற்போட்டு 
உண்ணும் இவ்விரண்டிலும் உயிர் விளக் 
இரண்டும் போனால் விளக்கிருக்குமோ 
மனஸ்கரி 
வைத்ததிரி 
கேசரி 
அரிகரி 
( ராமா ) 

3. பெறுதவன் முன் எவர்க்கும் அடிக்கடி 
மேதினி 
பிராணபயம் உண்டென்று சொல்லுமேபெ ருந்தொனி 
அறுபதாயிரம் ஆண்டு அரசிருந் தான் தனி 
அதுவும் போதாதென்று அழலாமோ அ வற்கினி ( ராமா ) 

ஸ்ரீ ராமர் மூன்னே பரதர் புலம்பல் 

அலகில்லாக் குறைநீக்கி வதிஷ்டன்தேற்ற 
அறிந்து கங்கா நதிமூழ்கித் தந்தைக்குள்ள 
குலவிதி எல் லாம்செய்தான் சீதை தானும் 
குளிர்ந்தகங்கா நதிமூழ்கித் தெளிந்தபோது 
தலம் முழுதும் ஆளும்முடி தரிக்காய்தம்பி 
சடைமுடி ஏன் தரித்தாய் என் றுரைக்கக்கண்ணீர் 
பலபலென உதிர்ந்திடத்தன் மனதில் உள்ள 
படிராமன் முன்பர தன் பகருவானே 

கன்னி 
1 . மன்னவன் தன்னையும் கொன்று உன்னையும் , இந்தப்படி 
வைத்தாள் வயிற்றுக்குள்ளே அவம் 
சென்மித்த நானல்லோ மா தவம் செய்ய வேணும் 
தேவா உனக்கேன் இந்த 
மாதவம் 
2. உறவுபோலே இருந்து குளவிபோலே கொட்டி 
உன்னையும் போகச் சொன்னாளே 
படுபாவி 
மறுபடியும் வந்து சந்தோஷம் சொன்னாளே 
வைத்திருக்க வேணுமோ 
என் ஆவி 
3. உடனாம் துணைபிரிக்க தந்தை உயிர்மரிக்க 
ஊரும் சிரிக்கவரம் 
கொண்டேனே 
இடறின காலிலே இடறும் என்ப தெல்லாம் 
என்னிடத்தில் தானே 
கண்டேனே 
4. அருந்துணையே எனது ஐயாவே என 
தரசே நீபர 
தேசியோ 
பிரிந்தென்னைப் போவென் றாய்பழிகார னோ நான் 
பிள்ளை பிறந்த நேர் 
வாசியோ 
5. உலகம் எல்லாத்தையும் நீயாள வேணும்பின் 
ஒருவர் ஆண்டு குறை 
வாங்குமோ 
மலை தாங்கும் பாரத்தை மலையே தாங்கவேணும் 
மண்ணாங் கட்டி என்ன 
தாங்குமோ 
கோலமோ 
காலமோ 

6. ஆனைமேல் இட்டபாரம்பூனைமேல் இட்டாற்பேேேல 
அரசாளுவதென்ன 
கானகம் நீயிருக்க நான்போய் அரசிருக்கல்கயையோ இது கலி 
7. தன் இனம் தன்னைக் காக்கும் வேலி பயிரைக்காக்கும் 
தப்பிதம் இல்லை இந்தப் 
உன் இனம் தன்னை நீயே வந்து காத்தருள் என்னால் 
ஒன்றும் ஆகாது சொன்னேன் 
8. தேவேந்திரனுக்கும் மகுடம் தரித்து வைத்த 
தெசரத மகாராசன் 
நீ வேறெண்ணலாமோ நீயே வரவேணும் 
நீ ஆள வேணும் என் படிதானே அடியேனே 
பூமியே 
சாமியே 

ஸ்ரீ ராமர் பரதருக்கு புத்தி சொல்லுதல் 

பரதன் இவ்வாறு கூறப் பரிந்துஸ்ரீ ராமன் தாயார் 
விரதன் ஏன் விட்டாய் இந்த விரதம் ஏன் கொண்டாய் நான்போய் 
-ரமுடன் பதினா லாண்டும் தவஞ்செய்ய வேணும் நீபோய்த் 
திரமுடன் புவி ஆள் என்று தெரிவிப்பான் விவரிப்பானே . 

பல்லவி 
இன்னஞ் சிறுபிள்ளை போ லே என்னை அழைக்கிறாய் 
உன்னை 
என்ன சொல்வேன் பரதாஎன் கண்ணின் மணியே ( இன் ) 
அநுபல்லவி 
அன்னை தந்த பணிவிடையே தன்மம் என்று மதித்தேனே 
அப்படி நீ மதிக்காமல் இப்படி வந்திதில் தானே (இன் ) 

1. வாய்த்தமழை விட்டுந்தூ வானவிட்டதில்லை ராமன் 
வனத்தில் வந்த பின்னும் என்ன 
சொல்லையா 
நேத்தியாய்ப் பதினாலு வருஷமட்டும் சொன்னபடி 
நில்லென்றால் நில்லாமல் என்ன 
தொல்லையா 

தகப்பன் சொன்ன வார்த்தைகொண்டு புவியாள 
இசைத்தேனே அந்தநாள் அறிந்தாய் 
அல்லையா 
மூத்தவனும் ஒருவிதத்தில் தகப்பன் ஆமே சொன்ன 
மொழிகொண்டு புவியா ளொணாதோ வல்லமை இல்லையா ( இன் ) 
2. மத்தர் போல் பொய்யுரைத்துத் தகப்பன்வினை கட்டிக்கொள்ள 
மகனிருந்து பட்டங்கட்டிக் 
கொள்ளலாமோ 
சத்தியமாய் வேதமெல்லாம் கண்கண்ட தெய்வம் என்னும் 
தாய்தகப்பன் உரைகடந்து 
துள்ளலாமோ 
பத்தியாத் தவம் எனக்கும் புவிஉனக்கும் பிரித்திருக்க 
பங்கல்லாப் பங்கை விழுந்து 
அள்ளலாமோ 
பித்தன் அல்லடா தம்பி நீ சமர்த்தன் என்றிருந்தேனே 
பேய் ஆகிலும் பெற்றதாய் வார்த்தை 
தள்ளலாமோ( இன் ) 
3. முன்னாக நான் கொண்டு பின்னாக அரசுனக்கு 
முறையாலே தந்தேன் என் உரை 
பொய்யாமல் 
உன்னாலும் என்னாலும் சொன்னபடி நடக்கும் என்று 
உசரப்போன தசரதற்கு வசை 
வையாமல் 
சின்னாபின்னங்களாய் பட்டணமும் பரிசனமும் 
சேற்றில் நட்ட கம்பம் போலே 
தொய்யாமல் 
என் ஆணை தம்பி நீ உன்நாட்டை ஆளடா 
எப்படி நான் சொன்னாலும் அப்படி நீ 
செய்யாமல் ( இன் ) 

பாதுகைக்குப் பரதர் பட்டாபிஷேகம் செய்தல் 

பதியெனும்ரா கவனிவ்வா றுரைக்கக்கேட்டான் 
பரதனும்சம் மதிகொண்டான் 
மதி கொண்டான் பதினால் ஆண்டாம் 
அதில்வாரா விடில் முடிவேன் என்று கொண்டான் 
அண்ணன்மிதி யடிகொண்டான் அனுப்பிக்கொண்டான் 
துதி அயோத் தியில் புகுந்தான் நந்திக் கிராமம் 
துன்னினான் சுமந்திரன் அதிகாரஞ் செய்ய 
மிதியடிக்கு முடிதரித்தான் தெற்கே நோக்கி 
விழிக்கின்றான் தன்பழியைக் கழிக்கின்றானே . 

அயோத்தியா காண்டம் முற்றிற்று . 

சக்கிரவர்த்தி திருமகனார் திருவடிகளே சரணம் . 

--------------

அயோத்தியா காண்டம் 
( கம்பராமாயண ஒப்புமைப் பகுதி ) 
சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீ ராமரை வேண்டுதல்
1-சந்திரற் குவமைசெய் தரள வெண்குடை 
அந்தரத் தளவும் நின் றளிக்கும் ஆணையான் 
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்ததன் 
மந்திரக் கிழவரை வருகென் றேவினான் 

கன்னியர்க் கமைவரும் கற்பின் மாநிலம் 
தன்னையித் தகையதாய்த் தருமம் கைதர 
மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன் 
என்னுயிர்க் குறுவதும் செய்ய எண்ணினேன் 

விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான் 
இரும்பியல் அநந்தனும் இசைந்த யானையும் 
பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய 
அரும்பொறை இனிச்சிறி தாற்ற ஆற்றலேன் 

புரசை மாக்கரி நிருபர்க்கும் புரத்துறை வோர்க்கும் 
உரைசெய் மந்திரக் கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் 
மு ) ச மார்ப்பநின் முதன் மணிப் புதல்வனை முறையால் 
அரசனாக்கிப்பின் அப்புறத் தடுத்தது புரிவாய் 

என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் 
நன்று சொல்லினை நம்பியை நளிமுடி சூட்டி 
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே 
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் 
ஐய சாலவும் அலசினென் அரும்பெரு மூப்பும் 
மெய்ய தாயது வியலிடப் பெரும்பரம் விசித்த 
தொய்யல் மாநிலச் சுமைஉறு சிறைதுறந் து இனியான் 
உய்ய லாவதோர் நெறிபுக உதவிட வேண்டும் 

ஒருத்தல் எட்டொடு திருத்தலை பன்மைசால் உரக 
எருத்தம் மேல்படி புயம் அறச் சுமந்து இடர் உழக்கும் 
வருத்தம் நீங்கியவ் வரம்பறு திருவினை மருவும் 
அருத்தியுண் டெனக்கு ஐய ஈதருளிட வேண்டும் 

அனைய தாதலின் அருந்துயர்ப் பெரும்பரம் அரசன் 
வினையின் என்வயின் வைத்தனன் எனக்கொள வேண்டா 
புனையும் மாமுடி புனைந்து இந்த நல்லறம் புரக்க 
நினையல் வேண்டும் யான் , நின்வயிற் பெறுவது ஈதென்றான் 

( மந்திரப்படலம் 3 , 14 , 15 , 46 , 47 , 61 , 65 , 68 ) 


ஐம்பத்தாறு தேசத்து ராஜர்களும் வருதல் 

வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த 
பொன் திணிந்த தோட் டரும்பெறல் இலச்சினை போக்கி 
நன்று சித்திர நளிர்முடி கவித்தற்கு நல்லோய் 
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப 

உரியமாதவன் ஒள்ளிதென்று வந்தனன் விரைந்தோர் 
பொருவில் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக 
நிருபர் கேண்மின்கள் இராமற்கு நெறிமுறை மையினால் 
திருவும் பூமியும் சீதையிற் சிறந்தன என்றான் 

இறைவன் சொல் எனும் இன்னறவு அருந்தினர் யாரும் 
முறையின் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி 
நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர 
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் 

ஒத்தசிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் 
தத்தமக்கு உற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர் 
முத்தவெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் 
அத்த நன்றென அன்பினோ டறிவிப்ப தானார் 

மூவெழு முறைமை எம் குலங்கள் முற்றுறப் 
பூவெழு மழுவினோன் பொருது போக்கிய 
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு 
ஆவ இவ்வுலகம் ஈது அறனென்றானரோ 


[ மந்திரப்படலம் 72 - 76 ] 

திரு அயோத்தினய அலங்கரித்தல் 

நிருப நின்குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப் 
பெருமை எய்தினர் யாவரே இராமனனப் பெற்றார் 
கரும் மும் இது கற்றுணர்ந்தோர்க்கு இனிக்கடவ 
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் (மந்திரப்படலம் 34 ] 

ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி 
நூற்றட மார்பனும் நொய்தின் எய்தப்போய் 
-ஆற்றல்சால் அரசனுக் கறிவித்தான் அவன் 
சாற்றுக நகரணி சமைக்க என்றனன் 

ஏவின வள்ளுவர் இராமன் நாளையே 
பூமகள் கொழுநனாய் புனையும் மௌலி இக் 
கோநகர் அணிகஎனக் கொட்டும் பேர் இயம் 
தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார் 

திணிசுடர் இரவியைத் திருத்துமாறு போல் 
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை. 
மணியினை வேகடம் வகுக்கு மாறுபோல் 
அணிநகர் அணிந்தனர் அருத்திமாக்களே 

மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள் 
அங்கவர் கழுத்தெனக் கமுகும் ஆர்த்தன 
தங்கொளி முறுவலின் தாமம் நான்றன 
கொங்கையின் நிறைந்த கனக கும்பமே 

துனியறு செம்மணித் தூணில் நீல்நிறம் 
வனிதையோர் கூற்றினன் வடிவு காட்டின 
புனை துகில் உறைதொறும் புனைந்து தோன்றின 
பனிபொதி கதிர் எனப் பவளத் தூண்களே 

முத்தினின் முழுநில வெறிப்ப மொய்ம்மணிப் 
பத்தியின் இளவெயில் பரப்ப நீலத்தின் 
தொத்தினம் இருள்வரத் தூண்ட சோதிட 
வித்தகர் விரித்தநாள் ஒத்த வீதியே 

( மந்தரைசூழ்ச்சிப்படலம் 32 , 33 , 15 , 37 , 39 , 401 

கூனி கைகேசியைக் கலைக்க வருதல் 

அந்நகர் அணிவுறும் அமலை வானவர் 
பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்வையில் 
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல் 
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள் 

தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் 
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள் 
கான்றெரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் 
மூன்றுல கினுக்குமோர் இடுக்கண் மூட்டுவாள் 

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில் மேல் 
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் 
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ் 
உண்டை உண்டதனைத்தன் உள்ளத் துன்னுவாள் 

( மந்தரைசூழ்ச்சிப்படலம் 46 , 47 , 48 ] 
கைகேசி கூனியைக் கோபித்தல் 
ஆயபே ரன்பெனும் அளக்கர் ஆர்த்தெழ 
தேய்விலா முகமதி விளங்கித் தேசுற 
தூயவள் உவகைபோய் மிகுசுடர்க் கெலாம் 
நாயகம் அனையதோர் மாலைநல் கினாள் 

வெயில் முறைக்குலக் கதிரவன் முதலிய மேலோர் 
உயிர்முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பா தோர் 
மயில்முறைக் குலத்துரிமையை மனுமுதல் மரபைச் 
செயிர்உறப் புலைச்சிந்தையால் என் சொனாய் தீயோய் 

எனக்கு நல்லையும் அல்லை நீ என்மகன் பரதன் 
தனக்கு நல்லையும் அல்லை நீ தரூமமே நோக்கின் 
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ் வினை தூண்ட 
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய் 

போதி என் எதிர் நின்றுநின் பொறி நாவைச் 
சேதியாதிது பொறுத்தனென் புறஞ்சிலர் அறியின் 
நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய் 
ஆதி யாதலின் அறிவிலி அடங்குதி என்றாள் 

( மந்தரைசூழ்ச்சிப்படலம் 59 , 71 , 72 , 74 ] 
இதுவும் கைகேசியைக் கூனி கலைத்தல் 


தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீயுக 
விழித்தனள் வைதனள் வெய்துயிர்த்தனள் 
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால் 
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே 

வேதனை கூனிபின் வெகுண்டு நோக்கியே 
பேதை நீ பித்திநிற் பிறந்த சேயொடும் 
மாதுயர் படுகநான் நெடிதுன் மாற்றவள் 
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றான் 

சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும் 
நிவந்த ஆசனத் தினிதிருப்ப , நின்மகன் 
அவந்தனாய் வெறிநிலத் திருக்கல் ஆனபோது 
உவந்தவாறென் இதற்கு உறுதியாதென்றாள் 

மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் 
சிறந்தனன் திருவினின் திருவின் நீங்கினான் 
இறந்திலன் இருந்தனன் என்செய் தாற்றுவான் 
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் 

சரதம் இப்புவியெலாம் தம்பியோடும் இவ் 
வரதனே காக்குமேல் வரம்பில் காலமும் 
பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய் 
விரதமா தவஞ்செய் விடுதல் நன்றென்றாள் 

பண்ணுறு கடகரிப் பரதன் பார்மகள் 
கண்ணுறு கவினராய் இனிது காத்த அம் 
மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் 
எண்ணுறப் பிறந்திலன் இறத்தல் நன்றென்றாள் 

அரசரில் பிறந்துபின் அரசரில் வளர்ந்து 
அரசரில் புகுந்துபே ரரசியான நீ 
கரைசெயற் கருந்து பார் கடலில் வீழ்கின்றாய் 
உரைசெயக் கேட்கிலை உணர்தியோ என்றாள் 

புரியும் தன்மகன் அரசெனின் பூதலம் எல்லாம் 
எரியும் சிந்தனைக் கோசலைக் குரிமையாம் எனறாள் 
பரியும் நின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார்மேல் 
உரியது என் அவள் உதவிய ஒருபொருள் அல்லால் 

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் 
ஈண்டு வந்துனை இரந்தவர்க்கு அவளை 
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் 
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி 

நாடி ஒன்றுனக் குரைசெய்வேன் நளிர்மணி நகையாய் 
தோடிவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை 
ஆடல் வென்றியான் அருளிய வரமவை இரண்டும் 
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் 

இருவரத்தினில் ஒன்றினால் அரசுகொண்டு இராமன் 
பெருவனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச்செய்தி ஒன்றினால் செழுநிலமெல்லாம் 
ஒருவழிப்படும் உன்மகற்கு உபாயம் ஈதென்றாள் 

( மந்தரைசூழ்ச்சிப்படலம் 60 , 65 , 68 , 78 , 79 , 88 , 89 ) 
கைகேசிக்கும் சக்கிரவர்த்திக்கும் சம்வாதம் 

அடைந்தவண் நோக்கி அரந்தை என்கொல் வந்து 
தொடர்ந்த தெனத்துயர் கொண்டு சோரும் நெஞ்சன் 
மடந்தையை மானை எடுக்கும் ஆனை யேபோல் 
தடங்கைகள் கொண்டு தழீ இஎடுக்க லுற்றான் 

நின்று தொடர்ந்த நெடுங்கைதமை நீக்கி 
மின்துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் 
ஒன்று மியம்பலள் நீடுயிர்க்க லுற்றாள் 
மன்றல் அருந்தொடை மன்னன் ஆவி அன்னாள் 

அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி 
என்னை நிகழ்ந்தது இவ் ஏழுஞாலம் - வாழ்வார் 
உன்னை இகழ்ந்தவர் மாள்வர்உற்ற தெல்லாம் 
சொன்னபின் என் செயல் காண்டி சொல்லிடென்றான் 

வண்டுளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை 
கொண்ட நெடுங்கணின் ஆலிகொங்கை கோப்ப 
உண்டுதொ லாம் அருள் என் கண் உன் கண் ஒக்கின் 
பண்டைய இன்று பரிந்தளித்தி என்றாள் 

கள்ளவிழ் கோதை கருத்துணராத மன்னன் 
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான் 
உள்ளம் உவந்தது செய்வென் ஒன்றும் உலோவேன் 
வள்ளல் இராமன்உன் மைந்தன் ஆணை என்றான் 

ஆன்றவன் அவ்வுரைகூற அன்னம் அன்னாள் . 
தோன்றிய பேரவலம் துடைத்தல் உண்டேல் 
சான்றிமையோர் குலம் ஆக மன்னநீ அன்று 
ஏன்றவரங்கள் இரண்டும் ஈதி என்றாள் 

வரங்கொள இத்துணைமம்மர் அல்லல் எய்தி 
இரங்கிட வேண்டுவ தில்லை ஈவென் என்பால் 
பரங்கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் 
உரங்கொள் மனத்தவன் வஞ்சம் ஓர்கிலாதான் 

ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என் 
சேய் உலகாள்வது சீதைகேள்வன் ஒன்றால் 
போய்வனம் ஆள்வது எனப்புகன்று நின்றாள் 
தீயவை யாவை யினும் சிறந்த தீயாள் 

இந்நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி 
நெய்ந்நிலை வேலவன் நீதிசைத்ததுண்டோ 
பொய்ந்நிலை யோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ 
அந்நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் 

திசைத்ததும் இல்லை எனக்குவந்து தீயோர் 
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இவ் வரங்கள் 
குசைப்பரி யோய்தரின் இன்று கொள்வென் அன்றேல் 
வசைத்திறன் நின்வ பின் நிற்கமாள்வென் என்றாள் 

கொள்ளான் நின்சேய் இவ்வர சன்னான் கொண்டாலும் 
நள்ளா திந்த நானிலம் ஞாலம் தனில் என்றும் 
உள்ளார் எல்லாம் ஓதஉவக்கும் புகழ்கொள்ளாய் 
எள்ளா நிற்கும் வன்பழி கொண் டென்பயன் என்றான் 

கண்ணே வேண்டும் என்னினும் ஈயக்கடவேன் என் 
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ 
பெண்ணே வண்மைக் கேகயன்மானே பெறுவாயேல் 
மண்ணே கொள்நீ மற்றைய தொன்றும் மறவென்றான் 

இன்னே இன்னே பன்னியிரந்தான் இகல்வேந்தன் 
தன்னே ரில்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள் 
முன்னே தந்தாய் இவ்வரம் நல்காய் முனிவாயேல் 
என்னே மன்னா யார்உளர் வாய்மைக் கினிஎன்றாள் 

நின்மகன் ஆள்வான் நீ இனிதாள்வாய் நிலமெல்லாம் 
உன்வயமாமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன் 
என்மகன் என் கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும் 
நன்மகன் இந்த நாடிறவாமை நயவென்றான் 

மெய்யே என்றன் வேர் அற நூறும் வினைநோக்கி 
நையா நின்றேன் நாவு முலர்ந்தேன் நளினம்போல் 
கையான் இன்றென் கண்ணெதிர் நின்றும் கழிவானேல் 
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் 

இரந்தான் சொல்லும் இன்னுரை கொள்ளாள் முனிவெஞ்சாள் 
மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வசைபாராள் 
சரந்தாழ் வில்லாய் தந்தவரத்தைத் தவிர்கஎன்றல் 
உரந்தான் அல்லால் நல்லற மாமோ உரை என்ன 

கொடியாள் கூறினள் கூறக் குலவேந்தன் 
முடிசூடா மல் வெம்பரல் மொய்கா னிடைமெய்யே 
நெடியான் நீங்க நீங்குவென் ஆவி இனி என்னா 
இடியேறுண்ட மால்வரைபோல் மண்ணிடை வீழ்ந்தான் 

ஒன்றா நின்ற அருயிரோடும் உயர்கேள்வர் 
பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழல்லால் 
இன்றோர் காறும் எல்வளையார்தம் இறையோ ரைக் 
கொன்றாரில்லை கொல்லுதியோ நீ கொடியாளே 

ஆழிப் பொற்றேர் மன்னவன் இவ்வாறயர் வெய்திப் 
பூழிப் பொற்றார் முழுதுமடங்கப் புரள் போதில் 
ஊழின் பெற்றாய் என்றுரை இன்றேல் உயிர் மாய்வென் 
பாழிப் பொற்றோள் மன்னவ என்றாள் பசையற்றாள் 

அரிந்தான் முன்னோர் மன்னவனன்றோ அருமேனி 
வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கிப் 
பரிந்தால் என்னாம் என்றனள் பாயும் கனலே போல் 
எரிந்தா றாதே இன்னுயிர் உண்ணும் எரியன்னாள் 

வீழ்ந்தாளே இவ்வெய்யவள் என்னா மிடல் வேந்தன் 
ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனம் ஆள 
மாய்ந்தே நான்போய் வானுல காள்வென்வசை வெள்ளம் 
நீந்தாய் நீந்தாய் நின்மகனோடும் நெடி தென்றான் 
( கைசேயி சூழ்வினைப்படலம் 7 , 14 , 22 , 23 , 30 , 32 , 34 , 

36 , 37 , 39 , 41 , 46 , 47 , 48 ) 


கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல் 

ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறாத் 
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி 
நாயகன் உரையான் வாயால் நானிது பகர்வென் என்னாத் 
தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 

வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி 
வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து மற்றைச் 
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் 
அந்தி வந்தடைந்ததாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான் 

நின்றவன் தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் 
கொன்றுறழ் கூற்றம் என்னும் பெயரின்றிக் கொடுமை பூண்டாள் 
இன்றுனக் குணர்த்தலாவது ஏயதே என்னின் ஆகும் 
ஒன்றுனக்கு உந்தை மைந்த உரைப்பதோர் உரையுண் டென்றாள் 

எந்தையே ஏவ நீரே உரைசெய இயைவதுண்டேல் 
உய்ந்தனென் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோவாழி 
வந்ததென் தவத்தினாய வருபயன் மற்றொன்றுண்டோ 
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணிமின் என்றான் 

ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய் 
தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு 
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய புனல்களாடி 
ஏழிரண் டாண்டில் வாஎன்றியம்பினன் அரசன் என்றாள் 

[ கைகேயி சூழ்வினைப்படலம் 107 - 111 ] 


ஸ்ரீ ராமர் வனம் ஏகக் கைகேசியின் விடைபெறல் 
தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி 
இருளுடை உலகந்தாங்கும் ன்னலுக்கியைந்து நின்றான் 
உரு ளுடைச் சகடம்பூண்- உடையவன் உய்த்தகார் ஏறு 
அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்த தொத்தான் 

மன்னவன் பணி அன்றாகின் நும்பணி மறுப்பெனோ என் 
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ 
என்னி உறுதி அப்பால் இப்பணிதலை மேற்கொண்டேன் 
மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் 

[ கைகேயி சூழ்வினைப் படலம் 113 , 114 ) 


ஸ்ரீ ராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல் 

ஆங்கவ் வாசசம் என்னும் அனல் குழை 
தூங்குதன் செவியில் தொடரா முனம் 
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் 
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ 

வஞ்ச மோமக னே உனை மாநிலம் 
தஞ்ச மாகநீ தாங்கென் வாசகம் 
நஞ்ச மோயினி நான் உயிர் வாழ்வெனோ 
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் 

கையைக் கையின் நெரிக்கும் தன் காதலன் 
வைகும் ஆலிலை அன்ன வயிற்றினை 
பெய்வளைத் தளிரால் பிசையும் புகை 
வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் 

நன்று மன்னன் கருணை எனாநகும் 
நின்ற மைந்தனை நோக்கி நெடுஞ் சுரத்து 
என்று போவது எனா எழும் இன்னுயிர் 
பொனறும் போதுற்றது உற்றனள் போலுமே 

அறம் எனக் கிலையோ எனும் ஆவிநைந்து 
இறவிடுத்ததென் தெய்வதம் காள் எனும் 
பிற உரைப்பதென் கன்று பிரிந்துழிக் 
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் 

( நகர் நீங்குபடலம் 8 , 11 , 13 ) 
ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி விடைகொளல் 

சிறந்த தம்பி திருவுற எந்தையை 
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை 
உறைந்து போகும் உறுதிபெற்றேன் இதின் 
பிறந்து யான் பெறும் பேறென்பதியா வதோ 

விண்ணும் மண்ணும் இவ் வேலையும் மற்றும் வேறு 
எண்ணும் பூதம் எலாம் அழிந் தேகினும் 
அண்டால் ஏவல்மறுக்க அடிய னேற்கு 
ஒண்ணு மோ இதற்கு உள்ளழியேல் என்றான் 

சித்தம் நீதிகைக் கின்றதேன் தேவரும் 
ஒத்த மாதவம் செய்துயர்ந்தார் அன்றே 
எத்தனைக் குள ஆண்டுகள் ஈண்டவை 
பத்து நாலு பகல் அலவோ என்றான் 

மகர வேலை மண் தொட்டவண் டாடுதார் 
சகரர் தாதை பணிதலை நின்றுதம் 
புகரில் யாக்கையின் இன்னுயிர் போக்கிய 
நிகரில் மாப்புகழ் நின்றதன்றோ எனா 

மான்மறிக் கரத்தான் மழு ஏந்துவான் 
தான் மறுத்திலன் தாதைசொல் , தாயையே 
ஊனறக் குறைத்தான் உரவோன் உரை 
யான் மறுப்ப தென்றெண்ணுவதோ என்றான் 

[ நகர் நீங்குபடலம் 16 , 17 , 21 , 24 , 251 

ஸ்ரீராமர் வனம் ஏகலைப்பற்றி லட்சுமணர் கோபம் கொளல் 

கண்ணின் கடைத்தீஉக நெற்றியில் கற்றைநாற 
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர்விரிப்ப 
உள்நிற்கும் உயிர்ப்பெனும் ஊதை பிறக்க நின்ற 
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் 

சிங்கக் குருளைக் கிடும் தீஞ்சுவை ஊனை நாயின் 
வெங்கண் சிறுகுட்டனுக் கூட்ட விரும் பினாளால் 
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்றிதென்னா 
கங்கைக் கிறைவன் கடகக்கைபுடைத்து , நக்கான் 

புவிப்பாவை பரங்கெடப் போரில் வந்தோரை எல்லாம் 
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்டம்முற்றக் 
குவிப்பானும் இன்றே என் கோவினைக் கொற்ற மௌலி 
கவிப்பானும் நின் றேன் இது காக்குநர் காமின் என்றாள் 

மெய்யைச் சிதைவித்து நின்மேல் முறை நீத்த நெஞ்சம் 
மை பின் கரியாள் எதிர்நின்னை அம்மௌலி சூட்டல் 
செய்யக்கருதி தடை செய்குநர் தேவரேனும் 
துய்யைச் சுடுவெங்கன லி சு சுடுவான் . துணிந்தேன் 

வலக்கார்முகம் என்கையதாக அவ்வானுளோரும் 
விலக்கார் அவர்வந்து விலக்கினும் என்கைவாளிக்கு 
இலக்கா எரிவித்து உலகேழினொடு ஏழும் மன்னர் 
குலக்காவலும் இன்று உனக்குயான் - தரக் கோடி என்றான் 

( நகர் நீங்குபடலம் 112 , 113 , 117 , 123 , 124 ] 

ஸ்ரீராமர் லட்சுமணர் கோபத்தைத் தனித்தல் 

மின்னொத்த சீற்றம் கனல் விட்டு விளங்கநின்ற 
பொன்னொத்த மேனி புயலொத்த தடக்கை யானை 
என் அத்த என் நீ இறையேனும் முனிந்தி லாதாய் 
சன்னத்த னாகித் தனுஏந்து தற்கு ஏது என்றான் 

பின் குற்றம் மண்ணும் பயக்கும் அரசு என்றல் பேணேன் 
முன் கொற்ற மன்னன் முடிகொள்க எனக் கொள்ள மூண்டது 
என்குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ 
மின்குற்று ஒளிரும் வெய்யில் தீக்கொடு அமைந்த வேலோய் 

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே 
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான் 
மதியின் பிழையன்று , மகன் பிழையன்று மைந்த 
விதியின் பிழை இதற்கு என்கொல் வெகுண்ட தென்றான் 

நற்றாதையும் நீ தனிநாய கன் நீ வயிற்றில் 
பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக் 
கற்றாய் இது காணுதி இன்று எனக் கைமறித்தான் 
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் 

வரதன் பகர்வான் வரம் பெற்றவள் தான் இவ்வையம் 
சரதம் உடையாள் அவள் என் தனித்தாதை செப்பப் 
பரதன் பெறுவான் இனியான படைக்கின்ற செல்வம் 
விரதம் இதின் நல்லது வேறினியாவது என்றான் 

[ நகர் நீங்குப்படலம் 122. 128 , 129 , 132 , 133 ] 

சுமித்திரை லட்சுமணருக்குப் புத்தி சொல்லல் 

அன்னான் அவர் தந்தன ஆதரத் தொடும் ஏந்தி 
இன்னா இடர்தீர்ந்து உடன் ஏகுஎன எம்பிராட்டி 
சொன்னால் அதுவே துணையாம் எனத்தூய நங்கை 
பொன்னார் அடிமேல் பணிந்தான் அவளும் புகல்வாள் 

ஆகாத தன்றால் உனக்கவ்வனம் இவ்வயோத்தி 
மாகாதல் இராமன் அம்மன்னவன் வையம் ஈந்தும் 
போகா உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீனத் என்றே 
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள் 

பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல்தம்பி 
என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய்தி 
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அதுவன்றேல் 
முன்னம் முடி என்றனள் வார்விழி சோர நின்றாள் 

( நகர் நீங்குபடலம் 145 , 147 ] 

ஸ்ரீராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல் 

பொருவில் எம்பி புவிபுரப் பான் புகழ் 
இருவர் ஆணையும் ஏந்தினென் - இன்றுபோய் 
கருவி மாமழைக் கற்றடம் கண்டு நான் 
வருவென் ஈண்டு வருந்தலை என்றான் 

நாய கன்வனம் நண்ணலுற் றான் என்றும் 
மேய மண் இழந் தான் என்றும் விம்மலள் 
நீவ ருந்தலை நீங்குவென் யான் என்ற 
தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள் 

வல்ல ரக்கரின் மால்வரை போய்விழுந்து 
அல்ல ரக்கின் உருக்கழல் காட்ட தர்க் 
கல்ல ரக்கும் கடுமைய அல்லநின் 
சில்ல ரக்குண்ட சேவடிப் போதென்றான் 

பரிவி கந்த மனத்தொரு பற்றிலாது 
ஒருவு கின்றனை ஊழி அருக்கனும் 
எரியும் என்பது யாண்டையது ஈண்டுநின் 
பிரிவி னும்சுடு மோபெருங் காடென்றாள் 

[ நகர்நீங்குப்படலம் 216 , 217 , 220 , 221 ] 


--- 


ஸ்ரீராமர் வனம் ஏகலால் புரசனங்கள் புலம்பல் 

சீரை சுற்றித் திருமகள் பின்செல 
மூரி விற்கை இளையவன் முன் செல 
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ் 
ஊரை உற்றது உணர்த்தவும் வேண்டுமோ 

ஆரும் பின்னர் அழுதவ லித்திலர் 
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் 
வீரன் முன்வனம் மேவுதும் யாம் எனா 
போரென்று ஒல்லொலி கைம்மிகப் பொம்மினார் 

[ நகர் நீங்குப்படலம் 228 , 229 ] 

குறிப்பு :- இராமன் காடு செல்வான் எனக் கேட்டோர் துயரம் நகரமாந்தர் புலம்பல் என்ற 
பகுதியில் உள்ள சில பாடல்களின் கருத்துக்கள் சில திபதையில் ஆளப் பட்டுள்ளன . 

சுமந்திரன் புலம்பல் 

செவ்விய குரிசில் கூறத் தேர்வலான் செப்புவான் அவ் 
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் 
இவ்வயின் நின்னை நீக்கி இன்னுயிர் தீர்ந்தே னல்லேன் 
அவ்வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றால் 

தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப் 
பூவியல் கானகம் புகஉய்த் தேன் என்கோ 
கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ 
யாவது கூறுவேன் இரும்பின் நெஞ்சினேன் 

தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா 
வாருடை முலையொடும் மதுகை மைந்தரைப் 
பாரிடைச் செலுத்தினேன் பழைய நண்பினேன் 
தேரிடை வந்தனென் தீதிலேன் என்கோ 

வன்புலக் கல்மன மதியில் வஞ்சனேன் 
என்புலப் புறஉடைந்து இரங்கும் மன்னன்பால் 
உன்புலக் குரியசொல் உணர்த்தச் செல்கெனோ 
தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ 

நாற்றிசை மாந்தரும் நகர மக்களும் 
தேற்றினர் கொணர்வர் என் சிறுவன் தன்னை என்று 
ஆற்றின அரசனை ஐய வெய்ய என் 
கூற்றுறழ் சொல்லினான் கொலைசெய் வேன் கொலோ 

அங்கிமேல் வேள்விசெய் தரிதின்பெற்றநின் 
சிங்கஏறு அகன்றது என்றுணர்த்தச் செல்கெனோ 
எங்கள்கோ மகற்கினி என்னின் கேகயன் 
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் 

( சுமந்திரன் மீட்சிப்படலம் 19-24) 


ஸ்ரீராமர் சுமந்திரனுக்கு நீதி ஓதுதல் 

பிறத்தல் என் றுற்றபின் பெறுவ யாவையும் 
திறத்துளி உணர்வதோர் செம்மை உள்ளத்தாய் 
புறத்துறு பெரும்பழி பொதுவின் றெய்தலும் 
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டெனா 

முன்பு நின் றிசை நிறீஇ முடிவு முற்றிய 
பின்பும் நின்று உறுதியைப் பயக்கும் பேரறம் 
இன்பம் வந்துறும் எனின் இனியதாய் இடைத் 
துன்பம் வந்துறும் எனின் துறக்கல் ஆகுமோ 

நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற 
மறப்பயன் விளைத்திடல் வன்மை யன்றரோ 
இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் 
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே 

கான் புறம் சேறலின் அருமை காண்டலால் 
வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம் 
யான்பிறந் தறத்தினின்று இழுக்கிற் றென்னவோ 
ஊன்திறந் துயிர்குடித் துழலும் வேலினாய் 

வினைக்கரு மெய்ம்மையின் வனத்துள் விட்டனன் 
மனக்கரும் புதல்வனை என்றல் மன்னவன் 
தனக்கருந் தவமது தலைக்கொண் டேகுதல் 
எனக்கருந் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ 

முனிவனை எம்பியை முறையில் நின்றரும் 
புனித வேதியர்க்கும் மேல்உறை புத்தேளிர்க்கும் 
இனியன இழைத்தி என் றியம்பி எற்பிரி 
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் 

முறைமையால் எற்பயந் தெடுத்த மூவர்க்கும் 
குறையிலா என்நெடும் வணக்கம் கூறிப்பின் 
இறைமகன் துயர் துடைத்து இருத்திமா டென்றான் 
மறைகளை மறந்துபோய் வனத்துள் வைகுவான் 

( சுமந்திரன் மீட்சிப்படலம் 27 – 31 , 33 - 37 ] 
ஸ்ரீராமரை நினைந்து சக்கிரவர்த்தி புலம்பல் 

இரதம்வந் துற்ற தென்றாங் கியாவரும் இயம்ப லோடும் 
வர தன்வந் துற்றான் என்ன மன்னனும் மயக்கந் தீர்ந்தான் 
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி 
வி ரதமா தவனைக் கண்டான் வீரன்வந் தனனோ என்றான் 

நாயகன் பின்னும் தன்தேர்ப் பாகனை நோக்கி நம்பி 
சேயனோ அணிய னோஎன் றுரைத்தலும் தேர்வ லானும் 
வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் 
போயினான் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் 

( தயரதன் மோட்சப் படலம் 
ஸ்ரீராமரைக் குகன் தன் ஊரில் இருக்கவேண்டல் 

பல் நந்துகு தாளம் தொகு படர்பங்கய நல்நீர் 
அன்னந்துயில் வதிதண்டலை அயல் நந்துறை புளினம் 
சின்னந்தரு மலர்சிந்திய செறிநந்தவனம் நன் 
பொன்னுந்திய நதிகண்டுளம் மகிழ்ந்தனர் போனார் 

கங்கை என்னும் கடவுள் திருந்தி 
தங்கி வைகும் தபோதனர் யாவரும் 
எங்கள் செல்கதி வந்ததென்று ஏமுறா 
அங்கண் நாயகற் காணவந்து அண்மினார் 

( கங்கைப்படல் 7 , 10 ] 
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும் 
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான் 
அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடை என்னா 
இந்துவின் ந தலாளொடு இளவலொடு இனிதுறா 

விடுநனி கடிதென்றான் மெய்யுயிர் அனையானும் 
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய் 
கடிதினின் மடஅன்னக் கதியது செல நின்றார் 
இடர்உற மறையோரும் எரிஉறு மெழுகானார் 

பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும் 
சேலுடை நெடுநன்னீர் சிந்தினர் விளையாட 
தோலுடை நிமிர்கோலின் துழவிய நெடுநாவாய் 
காலுடை நெடுஞெண்டின் சென்றது கடிதம்மா 

ஏவிய மொழிகேளா இழிபுனல் பொழிகண்ணான் 
ஆவியும் உலைகின்றான் அடியிணை பிரிகல்லான் 
காவியின் மலர்காசாக் கடல்மலை 
தேவியொடு அடிதாழாச் சிந்தனை உரைசெய்வான் யனையானை 

பொய்ம்முறை இலரேம்எம் புகலிடம் வனமேயால் 
கொய்ம்முறை உறுதாராய் குறைவிலெம் வலியேமால் 
செய்ம்முறை குற்றேவல் செய்குதும் அடியோமை 
இம்முறை உறவென்ன இனிதிரு நெடிதெம்மூர் 

தேன்உள தினைஉண்டால் தேவரும் நுகர்தற்காம் 
ஊன்உள துணை நாயேம் உயிர்உள விளையாட 
கான்உள புனலாடக் கங்கையும் உளதன்றே 
நான் உள தனையும்நீ இனிதிரு நடஎம்பால் 

தோல்உள துகில்போலும் சுவையுள தொடர்மஞ்சம் 
போல்உள பரண் வைகப் புரையுள கடிதோடும் 
கால்உள சிலைபூணும் கையுள கலிவானின் 
மேல்உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் 

[ குகப்படலம் 31 , 32 , 33 , 25 - 28 ) 
ஸ்ரீராமர் குகனைச் சினேகம் கொள்ளல் 

அன்னவன் உரைகேளா அமலனும் உரைநேர்வான் 
என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந் 
நன்னுதல வள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம் 
உன்னுடைய துநான்உன் உரிமையின் உளென் என்னா 

துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப் 
பின்புளது இடைமன்னும் பிரிவுளது எனஉன்னேல் 
முன்புளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா 
அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானேம் 

படருற உளன்உம்பி கான்உறை பகல் எல்லாம் 
இடர்உறு பகையா யோய் யான் என உரியாய்நீ 
சுடருறு வடிவேலோய் சொல்முறை கடவேன்யான் 
வடதிசை வரும் அந்நாள் நின்னுழை வருகின்றேன் 

அங்குள கிளை காவற்கு அமைதியின் உளன்உம்பி 
இங்குள கிளைகாவற்கு யாருளர் இசையாய் நீ 
உன்கிளை என தன்றோ உறுதுயர் உறல் ஆமோ 
என்கிளை இதுகாஎன் ஏவலின் இனிதென்றான் 

( குகப்படலம் 40 - 43 ] 

ஸ்ரீராமர் சீதைக்குச் சித்திரகூட வளங்காட்டல் 

வாளும் வேலும்விட் டளாயின அனையகண் மயிலே 
தாளின் ஏலமும் தமாலமும் தொடர் தரு சாரல் 
நீள மாலைய துயில்வன நீர்உண்ட கமஞ்சூல் 
காள மேகமும் நாகமும் தெரிகில காணாய் 

குருதி வாள் எனச் செவ்வரி பரந்தகண் குயிலே 
மருவி மால்வரை உம்பரில் குதிக்கின்ற வருடை 
சுருதி போல் தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்றப் 
பருதி வானவன் பசும்பரி புரைவன பாராய் 

வடங்கொள் பூண்முலை வனமயி லே மழைமதமா 
அடங்கு பேழ்வயிற் றரவுரி அமைதொறும் தொடக்கித் 
தடங்கள் தோறும் நின்றாடுவ தண்டலை அயோத்தி 
நுடங்கு மாளிகைத் துகிற் கொடி நிகர்ப்பன நோக்கோய் 

உவரி வாயன்றிப் பாற்கடல் உதவிய அமுதே 
துவரின் நீள்மணித் தடந்தொறும் இடந்தொறும் துவன்றிக் 
கவரி பால்நிற வால்புடை . பெயர்வன கடிதின் 
மால்வரை அருவியைப் பொருவன பாராய் பவள 

சலந்தலைக் கொண்ட சீயத்தால் தனிமதக் கதமா 
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் 
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில் 
கலந்த முத்தென வேழமுத் திமைப்பன காணாய் 

உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டோச்சி 
முருகு நாறு செந்தேனினை முழைநின்றும் வாங்கிப் 
பெருகு சூல் இளம்பிடிக்கு ஒரு பிறை மருப்புயானை 
பருக வாயினில் கையினின் றளிப்பது பாராய் 

ஆடு கின்றமா மயிலினும் அழகிய குயிலே 
கூடு கின்றிலர் கொடிச்சியர் தம்மனம் கொதிப்ப 
ஊடு கின்றனர் கொழுநருக் குருகினர் உவக்கப் 
பாடு கின்றன கின்னர மிதுனங்கள் பாராய் காணாய் 

ஒருவில் பெண்மை என் றுரைக்கின்ற உடலினுக் குயிரே 
மருவு காதலின் இனிதுடன் ஆடிய மந்தி 
அருவி நீர்கொடு வீசத்தான் அப்புறத் தேறிக் 
கருவி மாமழை உதிர்ப்பதோர் கடுவனைக் 

அறைகழற்சிலை குன்றவர் அகன்புனங் காவல் 
பறை எடுத்தொரு கடுவன் அடிப்பது பாராய் 
பிறையை ஏட்டினள் பிடித்து இதற்கிது பிழைஎன்னாக் 
கறைதுடைக்குறு பேதை ஓர் கொடிச்சியைக் காணாய் 

வடுவின் மாவகிர் இவையெனப் பொலிந்தகண் மயிலே 
இடுகு கண்ணினர் இடர்உறு மூப்பினர் ஏக 
நெடுகு கூனல்வால் நீட்டின உறுகுறு நெஞ்சக் 
கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணாய் 

பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்தபேர் அல்குல் ! 
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக் 
கூந்தல் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலி 
காந்து குண்டத்தில் அடங்கெரி எழுப்புவ காணாய் ! 

அலம்பு வார்குழல் ஆய்மயில் பெண்ணருங் கலமே 
நலம்பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடிச் 
சிலம்பி பஞ்சினில் சிக்கறத் தெரிந்த நூல் தேமாம் 
பலம்பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் 

தெரிவை மார்க்கொரு கட்டளை எனச்செய் திருவே 
பெரிய மாக்கனி பலாக்கனி பிறங்கிய வாழை 
அரிய மாக்கனி கடுவன்கள் அன்பு கொண் டளிப்பக் 
கரிய மாகிழங் ககழ்ந்தன கொணர்வன காணாய் 

இனைய யாவையும் ஏந்திழைக்கு இயைவன காட்டி 
அனைய மாதவர் அருந்தவர் எதிர்வர வணங்கி 
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் 
மனையில் மெய்யெனும் மாதவம் புரிந்தவன் மைந்தன் 

[சித்திரகூடப் படலம் 2 - 6 , 10 , 12 , 14 , 22 , 30-32 , 37 ] 
சக்கிரவர்த்தியைக் குறித்துப் பரதர் புலம்பல் 

மூண்டெழு காதலால் முளரித் தாள் தொழ 
வேண்டினன் எய்தினன் உள்ளம் விம்முமால் 
ஆண்டகை நெடுமுடி அரசர் கோமகன் 
யாண்டையான் பணித்திர் என்று இருகை கூப்பினான் 

ஆனவன் உரைசெய அழிவில் சிந்தையாள் 
தானவர் வலிதொலைத்து அவனி தாங்கிய 
தேனமர் தெரியலான் தேவர் கைதொழ 
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் 

எறிந்தன கடியசொல் செவியுள் எய்தலும் 
நெறிந்தலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் 
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் 
மறிந்துயர் மராமரம் மண்னுற் றென்னவே 

வாய்ஒளி மழுங்கதன் மலர்ந்த தாமரை 
ஆய்மலர் நயனங்கள் அருவி சோர்தரத் 
தீயெரி செவி யில்னவத் தனைய தீயசொல் 
நீயலது உரைசெய நினைப்பரோ என்றான் 

எழுந்தனன் ஏங்கினன் ஏங்கிப் பின்னரும் 
விழுந்தனன் விம்மினன் வெய்து யிர்த்தனன் 
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்ன 
மொழிந்தனன் பின்னரும் முகிலின் செவ்வியான் 

அறந்தனை வேர் அறுத் தருளைக் சொன்றுயர் 
சிறந்தநின் தண்ணளித் திருவை தேசழித்து 
இறந்தனை ஆம்எனின் இறைவ நீதினய 
மறந்தனை உனக்கிதன் மாசுமேல் உண்டோ 

சினக்குறும் பெறிந்துஎழு காமத் தீயவித்து 
இனக்குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் 
மனக்குறு நெறிசெலும் வள்ளியோய் மறந்து 
உனக்குறு நெறிசெலல் ஒழுங்கின் பாலதோ 

முதலவன் முதலிய முந்தையோர் பழங் 
கதையையும் புதுக்கிய தலைவன் கண்ணுடை 
நுதலவன் சிலைவிலின் நோன்மை நூறிய 
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் 

செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ 
எவ்வழி மருங்கினும் இரவ லாளர்தாம் 
இவ்வழி உலகினில் இன்மை நண்ணினோர் 
அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐய 

பல்பசல் நிழற்றும் நின் கவிகைப் பாய்நிழல் 
நிற்பன பல்லுயிர் உணங்க நீ நெடும் 
கற்பக நெடுநிழல் காத லித்தியோ 
மற்பக மலர்ந்ததோள் மன்னர் மன்னனே 

இம்பர் நின் றேகினை இருக்கும் சார்பிழந்து 
உம்பர்வந் துன்கழல் ஒதுங்கி னார்களோ 
சம்பரன் அனைய.அத் தானைத் தானவர் 
அம்பரத் தின்னமும் உளர் கொலாம் ஐய 

இயங்கெழு தானையர் இறுத்த மாத்திரை 
உயங்கலில் மறையவர்க் குதவி உம்பரின் 
அயங்கெழு வேள்வியோ டரசர்க் கோதிய 
வயங்கெரி வளர்க்கலை வைக வல்லையோ 

ஏழுயர் மதகளிற் றிறைவ ஏகினை 
வாழிய கரியவன் வறியன் கையெனப் 
பாழியம் புயத்து நின் பணியின் நீங்கலா 
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ 

பற்றுறு தவத்தினின் பயந்த மைந்தர்க்கு 
முற்றுல களித்து நீ முறையின் எய்திய 
கொற்ற நல் முடிமணக் கோலங் காணவும் 
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் 

( பள்ளிபடைப்படலம் 42 , 55 ] 


பரதர் கைகேசியைக் கோபித்தல் 

எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும் 
அந்தமில் பெருங்குணத்து இராமன் ஆதலால் 
வந்தனை அவன்கழல் வைத்த போதலால் 
சிந்தைவெங் கொடுந்துயர் தீர்கலா தென்றான் 

அவ்வுரை கேட்டலும் அசனிஏறென 
வெவ்வுரை வல்லவள் மீட்டும் கூறுவாள் 
தெவ்வடு சிலையினாய் தேவிதம்பி என்று 
இவ்விரு வோரொடும் கானத்தான் என்றாள் 

வனத்தினன் என்றவள் இசைத்த மாற்றத்தை 
நினைத்தனன் இருந்தனன் நெருப்புண் டான்என 
வினைத்திறம் யாதினி விளைப்பது இன்னமும் 
எனைத்துள கேட்பன துன்பம்யான் என்றான் 

வாக்கினால் வரம்தரக் கொண்டு மைந்தனைப் 
போக்கினேன் வனத்திடைப் போக்கி பார்உனக்கு 
ஆக்கினேன் அன்னது பொறுக்க லாமையால் 
நீக்கினான் தன்னுயிர் நேமிவேந் தென்றாள் 

மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் 
பூண்டனன் நின்கொடும் புணர்ப்பினால் என்றால் 
கீண்டிலன் வாய் அது கேட்டும் நின்றயான் 
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் 

நீயினம் இருந்தனை யானும் நின்றனென் 
ஏயெனும் மாத்திரத்து ஏற்று கிற்றிலேன் 
ஆயவன் முனியும் என்று அஞ்சினென் அல்லால் 
தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ 

மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால் 
மீளவும் உளன் ஒரு வீரன் மேயபார் 
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆகினால் 
கோளில் அறநெறி குறைவுண் டாகுமோ 

சுழியுடைத் தாய்சொலும் கொடிய சூழ்ச்சியால் 
வழியுடைத்தாய்வரும் மரபை மாய்த்து ஒரு 
பழி உடைத் தாக்கினன் பரதன் பண்டெனும் 
மொழி உடைத் தாக்கலின் முறைமை வேறுண்டோ 

நோயீர் அல்லீர் நுங்கண வன்றன் உயிர் உண்டீர் 
போயீரே நீர் இன்னம் இருக்கப் பெறு வீரே 
மாயீர் மாயா வன்பழி தந்தீர் , முலை தந்தீர் 
தாயீரே நீர் இன்னும் எனக்கென் தருவீரே 

ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் 
தின்றும் தீரா வன்பழி கொண்டீர் திரு எய்தி 
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏகக் 
கன்றும் தாயும் போல்வன கண்டு கழியீரே 

மாளும் என்றே தந்தையை உன்னான் வசைகொண்டாள் 
கோளும் என்னா லே எனல் கொண்டான் அதுவன்றேல் 
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகெல்லாம் 
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசாள்வான் 

உய்யா நின்றேன் இன்னமும் என் முன் உடன்வந்தோன் 
கையார் கல்லைப் புல்லட குண்ணக் கையேந்தி 
வெய்யோன் நான் சாலியின் வெண்சோறமுது என்ன 
நெய்யோ டுண்ண நின்றது நின்றார் நினையாரோ 

வில்லார் தோளான் மேவினன் வெங்கா னகம் என்ன 
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை 
கொல்லேன் மாயேன் வன்பழியாலே குறைவற்றேன் 
அல்லேனோயான் அன்புடையார் போல் அழுகின்றேன் 

ஏன்றுன் பாவிக் கும்பிவயிற்றின் இடைவைகித் 
தோன்றும் தீராப் பாதகம் அற்றென் துயர் தீரச் 
சான்றும் தானே நல்லறமாக தகைஞாலம் 
மூன்றும் காண மாதவம் யானே முயல்கின்றேன் 

[ பள்ளிபடைப்படலம் 57-59 , 64 , 70-75 , 77 , 79 , 80 , 84 ) 

பரதர் கோசலாதேவிக்குச் சத்தியம் கூறுதல் 

ஆண்தகை கோசலை அருகர் எய்தினன் 
மீண்டும் மண் இழிதர வீழ்ந்து கேழ்கிளர் 
காண்டகு தடக்கையின் கமலச் சீறடி 
பூண்டனன் கிடந்தனன் புலம்பி னானரோ 

எந்தை எவ் வுலகுளான் எம்முன் யாண்டையான் 
வந்தது தமியென் இவ் மறுக்கம் காணவோ 
சிந்தையின் உறுதுயர் தீர்த்திரால் எனும் 
அந்தரத் தமரரும் அழுது சோரவே 

அடித்தளம் கண்டிலன் யான் என் ஐயனைப் 
படித்தலங் காவலன் பெயரற் பாலனோ 
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் 
பொடித்தலம் தோளுறப் புரண்டு சோர்கின்றான் 

கொடியவர் யாவரும் குலங்கள் வேரற 
நொடி.குவென் யானது நுவல்வ தெங்ஙனம் 
கடியவள் வயிற்றினிற் பிறந்த கள்வனேன் 
முடிகுவென் அருந்துயர் முடிய என்னுமால் 

இரதம் ஒன் றூர்ந்துபார் இருளை நீக்குமவ் 
வரதனில் ஒளிபெற மலர்ந்த தொல் குலம் 
பரதனென் றொருபழி படைத்த தென்னுமால் 
மரகத மலையென வளர்ந்த தோளினான் 

மையறு மனத்தொரு மாசுளான் அலன் 
செய்யனே என்பது தேறும் சிந்தையாள் 
கைகயர் கோமகள் இழைத்த கைதவம் 
ஐநீ அறிந்திலை போலுமால் என்றாள் 

தாளுறு குரிசில் அத் தாய்சொல் கேட்டலும் 
கோளுறு மடங்கலின் குமுறி விம்முவான் 
நாளுறு நல்லறம் நடுங்க நாவினால் 
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் 

அறங்கெட முயன்றவன் அருளில் நெஞ்சினன் 
பிறன்கடை நின்றவன் பிறரைச் சீறினோன் 
மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் 
துறந்தமா தவர்க்கருந் துன்பம் சூழ்ந்துளோன் 

குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் 
புரவலன் தன்னொடும் அமரிற் புக்குடன் 
விரவலர் வெரிநிடை விழிக்க மீண்டுளோன் 
இரவலர் அருநிதி எறிந்து வௌவினோன் 

தாய்பசி உழந்துயிர் தளரத் தான் தனி 
பாய்பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் 
நாயகன் படநடந் தவனும் நண்ணுமத் 
தீயெரி நரகத்துக் கடிது செல்கயான் 

தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கொரு 
கோளுற அஞ்சினன் கொடுத்த பேதையும் 
நாளினும் அறம்மறந் தவனும் நண்ணுறும் 
மீளரு நரகிடைக் கடிது வீழ்கயான் 

அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் 
மைந்தரைக் கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் 
நிந்தனை தேவரை நிகழ்த்தி னோன் புகும் 
வெந்துயர் நரகத்து வீழ்க யானுமே 

கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்துபால் உண்டோன் 
மன்றிடைப் பிறர்பொருள் மறைத்து வௌவினோன் 
நன்றியை மறந்திடும் நயமில் நாவினோன் 
என்றிவர் உறு நாகு என்ன தாகவே 

ஆறுதன் னுடன் வரும் அஞ்சொல் மாதரை 
ஊறுகொண் டலைக்கதன் உயிர்கொண் டேகினோன் 
சோறுதன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன் 
ஏறும்அக் கதியிடை யானும் ஏறவே 

எஃகெறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு 
ஓஃகினன் உயிர் வளர்த்துண்ணும் ஆசையான் 
அஃகலில் அறநெறி யகற்றி ஒண்பொருள் 
வெஃகிய மன்னன் வீழ் நரகில் வீழ்கயான் 

அழிவரும் அரசியல் எய்தி ஆகுமென்று 
இழிவரு சிறுதொழில் இயற்றி ஆண்டு தன் 
வழிவரு தருமத்தை மறந்து மற்றொரு 
பழிவரு நெறிபடர் பதகன் ஆகயான் 

தஞ்சென ஒதுங்கினோர் தனது பார் உளோர் 
எஞ்சலில் மறுக்கினோடு இரியல் போயுற 
வஞ்சிசென் றிறுத்தவன் வாகை மீக்கொள 
அஞ்சின மன்னவன் ஆக யானுமே 

கன்னியை அழிசெயக் கருதி னோன்குரு 
பன்னியை நோக்னோன் பருகினோன் நறை 
பொன்னிகழ் களவினில் பொருந்தி னோன் எனும் 
இன்னவர் உறுகதி என்ன தாகவே 

ஊண் அல உண்வழி நாயின் உண்டவன் 
ஆண் அலன் பெண் அலன் ஆர்கொ லாம்என 
நாணலன் நரகம் உண்டெனும் நல்லுரை 
பேணலன் பிறர்பழி பிதற்றி யாகயான் 

மறுவில்தொல் குலங்களை மாசிட்டு ஏற்றினோன் 
சிறுவிலை எளியவர் உணவு சிந்தினோன் 
நறியன அயலவர் நாவில் நீர்வர 
உறுபதம் நுங்கிய ஒருவன் ஆகயான் 

சுரும்பலர் செந்நல்அம் கழனிக் கானநாடு 
அரும்பகை கவர்ந்துண ஆவி பேணினென் 
இரும்பலர் நெடுந்தளை ஈர்த்த காலொடும் 
விரும்பலர் முகத்தெதிர் விழித்து நிற்தயான் 

( பள்ளிபடைப்படலம் 27-91 , 94-97 , 99-109 , 113 ) 

குகன் பரதர் சேனையைக்கண்டு கோபித்தல் 

மூன்றுல கினுக்குமோர் முதல்வ னாய்முதல் 
தோன்றினன் இருக்கயான் மகுடம் சூடுதல் 
சான்றவர் உரைசெயத் தருமம் ஆயதேல் 
ஈன்றவள் செய்கையில் இழுக்குண் டாகுமோ 

நன்னெறி என்னினும் நான் இந் நானில் 
மன்னுயிர்ப் பொறைசுமந்து இருந்து வாழ்கிலேன் 
அன்னவன் தனைக்கொணர்ந்து அலங்கல் மாமுடி 
தொன்னெறி முறைமையின் சூட்டக் காண்டிரால் 

( ஆறு செல்படலம் 14 , 17 ) 
அப்படை கங்கையை அடைந்தது ஆயிடைத் 
துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை 
ஒப்புடை அண்ணலோ டுடற்றவே கொலாம் 
இப்படை எழுந்ததென்று எடுத்த சீற்றத்தான் 

குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான் 
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் 
நகைமிகக் கண்கள் தீ நாற நாசியில் 
புகையுறக் குனிப்புறும் புருவப் போர்விலான் 

அஞ்சன வண்ணன் என் உயிர் நாயகன் ஆளாமே 
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே 
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ 
உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ 

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ 
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ 
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ 
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ 

முன்னவன் என்று நினைந்திலன் மொய்புலி அன்னான் ஓர் 
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் 
என் இவன் என்னை இகழ்ந்தது இவ்வெல்லை கிடந்தன்றோ 
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும்சரம் வாயாவோ 

பாவமும் நின்ற பெரும்பழியும் பகை நண்போடும் 
ஏவமும் என்பவை மண்ணுல காள்பவர் எண்ணாரோ 
ஆவது போக என் அருயிர்த் தோழமை தந்தான் மேல் 
போவது சேனையும் ஆருயிரும் கொடு போயன்றோ 

அருந்தவம் என் துணை ஆள இவன்புவி ஆற்வானோ 
மருந்தெனின் அன்றுயிர் வண்புகழ் கொண்டுபின் மாயேனோ 
பொருந்திய கேண்மை உகந்தவர் தம்மொடும் போகாதே 
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே 

தும்பியும் மாவும் மிடைந்த பெறும்படை சூழ்வாரும் 
வம்பியல் தாரிவர் வாள்வலி கங்கை கடந்தன்றோ 
வெம்பிய வேடர் உளீர் துறைஓடம் விலக்கீரோ 
நம்பிமுன் னே இனிநம் உயிர் மாய்வது நன்றன்றோ 

போனபடைத்தலை வீரர்தமக்கிரை போதாதோ 
சேனைக் கிடைக்கிடு தேவர் வரின்சிலை மாமேகம் 
சோனை படக்குடர் சூறைபடச் சுடர் வாளோடும் 
தானை படத்தனி யானைபடத் திரள் சாயேனோ 

நின்ற கொடைக்கைஎன் அன்பன் உடுக்க நெடுஞ்சீரை 
அன்று கொடுத்தவன் மைந்தர்பலத் தை என் அம்பாலே 
கொன்று குவித்த நிணங்கொள் பிணக்குவை கொண்டோடித் 
துன்று திரைக்கடல் கங்கை மடுத்தினி தூராதோ 

ஆடு கொடிப்படை சாடிஅறத்தவ ரே ஆள 
வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீரோ 
நாடு கொடுத்த என் நாயக னுக்கிவர் , நாம் ஆளும் நம் 
காடு கொடுக்கில ராகி எடுத்தது காணிரோ 

மாமுனி வர்க்குற வாகி வனத்திடை யேவாழும் 
கோமுனி யத்தகும் என்று மனத்திறை கொள்ளாதே 
ஏமுனை உற்றிடில் ஏழுகடற் படைஎன்றாலும் 
ஆமுனை யிற்சிறுகூழ்என இப்பொழு தாகாதோ 

( கங்கைகாண்படலம் 6 , 7.1 

லட்சுமணர் பரதர் சேனையைக் கண்டுகோபித்தல் 

என்றெழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் 
குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி 
நின்றவனை நோக்கினான் திருமேனி நிலை உணர்ந்தான் 
துன்றுகரு நறுங்குஞ்சி எயினர்கோன் துண்ணென்றான் 

வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை 
நற்கலையில் மதியென்ன நகையிழந்த முகத்தானை 
கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் 
விற்கையினின் றிடைவீழ விம்முற்று நிற்கின்றான் 

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் 
தம்பியையும் ஒக்கின்றான் தவவேடம் தலைநின்றான் 
துன்பம் ஒரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான் 
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான் 

பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும்பேர் 
வரத்தின் மிக்குயர் மாதவன் வைகிடம் 
அருத்தி கூர அணுகினன் ஆண்டவன் 
விருத்தி வேதிய ரோடெதிர் மேவினான் 

( கங்கைகாண்படலம் 28 , ! 
ஆய காதலோடு ஐயனைக் கொண்டு தன் 
தூய சாலை உறைவிடம் துன்னினான் 
மேய சேனைக்கு அமைப்பென் விருந்தெனா 
தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான் 

எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம் 
கொழுந்துயர்ந் தனையதோர் நெடிய குன்றின்மேல் 
செழுந்திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் 
கழுந்துடை வரிசிலைக் கடலை நோக்கினான் 

பரதன் இப்படையொடு பார்கொண் டாள்மறம் 
கருதிஉட் கிடந்ததோர் கறுவு காந்தலால் 
விரதம்உற் றிருந்தவன் மேல்வந்தான் இது 
சரதம் மற்றிலது எனத் தழங்கு சீற்றத்தான் 

கட்டினன் சுரிகையும் கழலும் பல்கணைப் 
புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூண்டமைத்து 
இட்டனன் எடுத்தனன் வரிவில் , ஏந்தலைத் 
தொட்டடி வணங்கிநின்று இனைய சொல்லினான் 

இருமையும் இகழ்ந்த அப் பரதன் ஏந்துதோள் 
பருமையும் அன்னவன் படைத்த சேனையின் 
பெருமையும் நின்னொரு பின்புவந்த என் 
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ 

படர் எலாம் படப்படும் பரும யானையின் 
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன 
குடர்எலாம் திரைத்தன குருதி ஆறுகள் 
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் 

கருவியும் கைகளும் கவச மார்பமும் 
உருவின உயிரினோடு உதிரம் தோய்வில 
திரிவன சுடர்க்கணை திசைக்கை யானைகள் 
வெருவரச் செய்வன காண்டி வீரநீ 

பண்முதிர் களிற்றொடு பரந்த சேனையின் 
எண்முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் 
விண்முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் 
மண்முது காற்றவும் காண்டி வள்ளல் நீ 

நிவந்த வான்குருதி பின் நீத்தம் நீந்தி மெய் 
சிவந்த சாதகரொடு சிறுகண் கூளியும் 
கவந்தமும் உலகம் நின் கையதாயது என்று 
உவந்தன குனிப்பன காண்டி உம்பர்போல் 

சூழிவெங் கடகரி துரக ராசிகள் 
பாழிவன் புயத்திகல் வயவர் பட்டற 
ஆழிவெங் குருதியால் அலைந்து வேலைகள் 
ஏழும் ஒன் றாகிநின்று இரைப்பக் காண்டியால் 

ஒருமகள் காதலின் உலகை நோய் செய்த 
பெருமகன் ஏவலின் பரதன் தான்பெறும் 
இருநிலம் ஆள்கைவிட்டு இன்றென் ஏவலால் 
அருநர காள்வது காண்டி ஆழியாய் 

வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் 
எய்தியது உனக்கென நின்னை ஈன்றவள் 
நைதல்கண் டுவந்தவள் நவையின் ஓங்கிய 
கைகயன் மகள்விழுந்து அரற்றக் காண்டியால் 

அரம்சுட அழல்நிமிர் அலங்கல் வேலினாய் 
விரைஞ்சொரு நொடியில் இவ் அனிக வேலையை 
உரஞ்சுடு வெடிக்கணை ஒன்றில் வென்றுமுப் 
புரஞ்சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான் 

( திருவடி சூட்டுபடலம் 6 , 26-31 , 37-39 


ஸ்ரீராமர் சக்கிரவர்த்தியைக் குறித்துப் புலப்பல் 

இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும்நீ 
கலக்குவென் என்பது கருதினால் அது 
விலக்குவாரரிதது விளம்ப வேண்டுமோ 
புலக்குரித் தொருபொருள் புகலக் கேட்டியால் 

நங்குலத் துதித்தவர் நவையின் நீங்கினர் 
எங்குலப் புறுவர்கள் எண்ணில் யாவரே 
தங்குலத்து ஒருவு அரும் தருமம் நீங்கினர் 
பொங்குலத் திரளொடு பொருத தோளினாய் 

எனைத்துள மறையவை இயம்பற் பாலன 
பனைத்திரள் சுரக்கரி பரதன் செய்கையே 
அனைத்திறம் அல்லன அல்ல அன்னது 
நினைத்திலை என்வயின் நேய நெஞ்சினால் 

பெருமகன் என் வயின் பிறந்த காதலின் 
வரும் என நினைகையும் மண்ணை என்வயின் 
தரும் என நினைகையும் தவிரத் தானையால் 
பொரும் என நினைகையும் புலமைப் பாலதோ 

பொன்னொடும் பொருகழல் பரதன் போந்தனன் 
நன்னெடும் பெரும்படை நல்கல் அன்றியே 
என்னொடும் பொரும் என இயம்பற் பாலதோ 
மின்னொடும் பொருவுற விளங்கும் வேலினாய் 

சேணுயர் தருமத்தின் தேயை செம்மையின் 
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ 
பூணியல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டெனைக் 
காணிய நீயிது பின்னும் காண்டியால் 

கோதறத் தவஞ்செய்து குறிப்பின் எய்திய 
நாதனைப் பிரிந்தனள் நலத்தின் நீங்கினாள் 
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு 
தூதெனப் பரதனும் தொழுது தோன்றினான் 

அயாவுயிர்த் தழுகணீர் அருவி மார்பிடை 
உயாவுறத் திருவுளம் உருகப் புல்லினான் 
நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலைய மாயினான் 
தயாமுதல் அறத்தினைத் தழீஇய தென்னவே 

புல்லி நின்று அவன் புனைந்த வேடத்தைப் 
பல்முறை நோக்கினான் பலவும் உன்னினான் 
அல்லலின் அமுங்கினை ஐய ஆளுடை . 
மல்லுயர் தோளினான் வலியனோ என்றான் 

அரியவன் உரைசெய பரதன் ஐயநின் 
பிரிவெனும் பிணியினால் என்னைப் பெற்ற அக் 
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு 
உரியமெய்ந் நிறுவிப்போய் உம்பரான் என்றான் 

நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் 
தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே 
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே 
அந்தோ இனிவாய்மைக்கு ஆர்உளரே மற்றென்றான் 

சொற்பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி 
நற்பெற்ற வேள்வி நவைநீங்க நீ இயற்றி 
எற்பெற்று நீ பெற்றது இன்னுயிர் போய் நீங்கவோ 
கொற்பெற்ற வெற்றிக் கொலைபெற்ற கூர்வேலோய் 

மன்னுயிர்க்கு நல்லுரிமை மண்பாரம் நான் சுமக்க 
பொன்னுயிர்க்குந் தாரோய் பொறைஉயிர்த்தவாறிதுவோ 
உன்உயிர்க்குக் கூற்றாய் உலகாள உற்றேனோ 
மின்உயிர்க்கும் தீவாய் வெயிலுயிர்க்கும் வெள்வேலோய் 

எம்பரத்ததாக்கி அரசுரிமை இந்தியங்கள் 
தம்பரத்த வாக்கித் தவமிழைத்த வாறிதுவோ 
சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி சதமகற்கன்று 
அம்பரத்தின் நீங்கா அரசளித்த ஆழியாய் 

தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் 
கானடைந்தேன் என்னத் தரியாது காவலநீ 
வானடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வுகந்தே 
ஊனடைந்த தெவ்வ ருயிர் அடைத்த வெள்வே லோய் 

வண்மையும் மானமுமேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத் 
திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத 
உண்மையும் எல்லாம் உடனோகொண் டேகினையே 
தண்மை தகை மதிக்கும் ஈத்த தனிக்குடையோய் 

( திருமுடி சூட்டுபடலம் 40 45 , 50 , 53 , 54 , 58-61 , 63 , 64 ] 

ஸ்ரீ ராமரை வதிஷ்டர் தேற்றுதல் 
துறத்தலும் நல்லறத் துறையும் அல்லது 
புறத்தொரு துணையிலை பொருந்தும் மன்னுயிர்க்கு 
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை 
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீ 

பெறுவதன் முன்உயிர் பிரிதல் காண்டியால் 
மறுவறு கற்பினில் வையம் யாவையும் 
அறுபதி னாயிரம் ஆண்டும் ஆண்டவன் 
இறுவது கண்டவற்கு இரங்கல் வேண்டுமோ 

செய்த 
புண்ணிய நறு நெயில் பொருவில் காலமாம் 
திண்ணிய திரியினில் விதியென் தீயினில் 
எண்ணிய விளக்கவை இரண்டும் எஞ்சினால் 
அண்ணலே அவிவதற்கு ஐயம் ஆவதோ 

இவ்வுல கத்தினும் இடரினே கிடந்து 
அவ்வுல கத்தினும் நரகில் ஆழ்ந்துபின் 
வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள் 
எவ்வள வில் செல எண்ணல் ஆகுமோ 

( திருவடி சூட்டுபடலம் 68 , 70 , 73 , 74 ] 
ஸ்ரீ ராயர் முன்னே பரதர் புலம்பல் 

விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை 
எண்ணி நீ அழுங்குதல் இழுதைப் பாலதால் 
கண்ணின் நீர் உகுத்தலின் கண்ட தில்லை, போய் 
மண்ணு நீர் உகுத்திநீ மலர்க்கையால் என்றான் 

புக்கனன் புனலிடை மூழ்கிப் போந்தனன் 
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் 
முக்கையின் நீர்விதி முறையின் ஈந்தனன் 
ஒக்கநின் றுயிர்தொறும் உணர்வு நல்குவான் 

வரதன் துஞ்சினான் ; வையம் ஆணையால் 
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் 
விரத வேடம் நீ என் கொல் மேவினாய் 
பரத ! கூறெனாப் பரிந்து கூறினான் 

மனக்கொன் றாதன வரத்தின் நின்னையும் 
நினக்கொன் றாநிலை நிறுவி நேமியான் 
தனைக்கொன் றாள் தரும் தனையன் ஆதலால் 
எனக்கொன் றாத்தவம் அடுப்பது எண்ணெனால் 

பாவ காரியின் பிறந்த பாவியேன் 
சாவ தோர்கிலேன் தவம் செய் வேனலேன் 
யாவ னாகியிப் பழிநின் றேறுவேன் 

தொகையில் அன்பினால் இறைவன் துஞ்சநீ 
புகையும் வெஞ்சுரம் புகுத புந்தியால் 
வகையில் வஞ்சனாய் அரசு வவ்வயான் 
பகைவனே கொலாம் இறவு பார்க்கின்றேன் 

உந்தை தீமையும் உலகுறாத நோய் 
தந்த தீவினைத் தாய் செய் தீமையும் 
எந்தை நீங்க மீண் டரசு செய்கெனாச் 
சிந்தை யாவதும் தெரியக் கூறினான் 

[ திருவடிசூட்டுபடலம் 77 , 79 , 94 , 96 , 97 , 100 , 101 ] 
ஸ்ரீ ராமர் பரதருக்குப் புத்தி சொல்லுதல் 

சொற்ற வாசகம் துணிவு ணர்ந்தபின் 
இற்றதோ இவன் மனமென் றெண்ணுவான் 
வெற்றி வீரயான் விளம்பக் கேள் எனா 
முற்றும் நோக்கினான் மொழிதல் மேயினான் 

பரவு கேள்வியும் பழுதில் ஞானமும் 
விரவு சீலமும் வினையின் மேன்மையும் 
உரவிலோய் தொழற் குரிய தேவரும் 
குரவரே எனப் பெரிது கோடியால் 

தாய் வரங்கொளத் தந்தை ஏவலால் 
மேய நங்குலத் தருமம் மேவினேன் 
நீவரங் கொளத் தவிர்தல் மேன்மைபோ 
ஆய்வரும் புலத் தறிவு மேயினாய் 

தனைய ராயினும் தந்தை தாயரை 
வினையின் நல்லதோர் இசையை வேய்தலோ 
நினையல் ஓவிடா நெடிய வன்பழி 
புனைதலோ ஐய புதல்வர் ஆதல் தான் 

இம்மை பொய்உரைத்து இவறி எந்தையார் 
அம்மை வெம்மைசேர் நரகம் -ஆளயான் 
கொம்மை நல்நிதிக் குவையின் வைகிவாழ் 
செம்மை சேர்நிலத்து அரசு செய்வெனோ 

வரனில் உந்தைசொல் மரபினால் உடைத் 
தரணி நின்னது என் றியைந்த தன்மையால் 
உரனின் நீபிறந்து உரிமை யாதலால் 
அரசு நின்னதே ஆள்க என்னவே 

மன்னவன் இருக்க வேயும் மணியணி மகுடம் சூடுக 
என்னயான் இயைந்த தன்னான் ஏயது மறுக்க அஞ்சி 
அன்னது நினைந்தும் நீஎன் ஆணையை மறுக்க லாமோ 
சொன்னது செய்தி ஐய துயருழந்து அயரல் என்றான் 


( திருவடி சூட்டு படலம் 102 , 104 , 106-109 , 115 ] 


பாதுகைக்குப் பரதர் பட்டாபிஷேகம் செய்தல் 

ஆம் எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐயநீ 
நாம நீர் நெடுநகர் நண்ணி நானிலம் 
கோமுறை புரிகிலை என்னின் கூர்எரி 
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் 

விம்மினன் பரதனும் வேறு செய்வதொன்று 
இன்மையின் அரிதென எண்ணி ஏங்குவான் 
செம்மையின் திருவடித் தலம் தந்து ஈகென 
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் 

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் 
முடித்தலம் இவைஎன முறையின் சூடினான் 
படித்தலத் திறைஞ்சினன் பரதன் போயினான் 
பொடித் தலம் இலங்குறு பொலங்கொள் மேனியான்

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -1

February 11, 2024
இராமநாடக நூலாசிரியர் வரலாறு 

சோழ நாட்டின்கண் ஞானத்தின் திருவுருவாகவும் கானத்தின் ஏழுபிறப்பாகவும் வந்த 
திருஞானசம்பந்தப் பெருமான் தோன்றிய சீர்காழிப்பதியின் பால் உள்ள தில்லையாடி என்னும் 
சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் குடிப்பெருமகனார் நல்லதம்பிப் பிள்ளைக்கும் அவர்தம் 
அருமை மனைவி வள்ளியம்மைக்கும் தமிழும் இசையும் செய்ததவப் பயனாய் அவர்களுக்கு 
நான்காவது திருமகனாகத் தோன்றியவர் அருணாசலக்கவிராயர் . 

இவர் சாலிவாகனசகம் 1884 விஜய ஆண்டு ( கி பி . 1711 ) பிறந்தார் . இவருடைய 
முன்னோர் சைனசமயத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவர் என்பர்
ஏன்பள்ளி கொண்டீர் அய்யா  ஏன் பள்ளி கொண்டீர் அய்யா ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே 
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
கோசிகன் சொல் குலையில் அம்பு ஈசன் வில்லை ராமன் உரம் குளித்ததற்கோ - அரக்கிக் தெறித்தற்கோ முளித்ததற்கோ 
பரசு பறித்ததற்கோ மாசிலாதமிதி லேசன் பெண்ணுடனே வழிநடந்த களைப்போ 
தூசிலாதகுகன் ஓடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ மீசரமாம்சித்ர கூடச்சிகரக்கல் மிசைகடந்த இளைப்போ 
காசினிமேல் மாரீசன்ஓடிய கதிதொடர்ந்த இளைப்போ ஓடிக் களைத்தோ 
தேவியைத் தேடி இளைத்தோ மரங்கள் ஏழும் தொளைத்தோ கடலைக்கட்டி வளைத்தோ இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ 
ராவணாதிகளை அடித்த வருத்தமோ மதுரையி லேவரும் களையோ 
முதலை வாய்மகளைத் தரும் களையோ எதிர் எருதைப் பொரும் களையோ 
எடுத்தெறிந்த பெரும் களையோ கன்றை புதுவை ஆனமுலை உண்டுபேயினுபிர் போக்கி அலுத்தீரோ 
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாக்கி அலுத் தீரோ துதி செய் ஆயர்களைக் காக்க வேண்டிமலை தூக்கி அலுத்தீரோ 
சதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி அலுத்தீரோ மருதம் தாக்கி சாய்த்தோ மேய்த்தோ தேய்த்தோ மாய்த்தோ 
ஆடுமாடுகள் சகடுருளை கஞ்சன்உ பிரை அர்ச்சுனனுக்காச் சாரதியாய்த் தேர்விடுத்த போரிலே சக்கரம் எடுத்த 

( ஏன் )
படிதனிலே மெத்தவும் நானே - உம்மைப் பரமெனவே அடுத்தேனே 
அடிமை கொள்வீர் என்னைத் 
செம்பொன் அணியரங் கப்பெருமானே 
தடம் உறைந்தகரும் பாறை சாபமது தடுத்து 
ரட்சித்தீரே விட ஒணாதகாகா சூரனுக் கொருகண் ரட்சித்தீரே 
கொடுமை கொண்டழுந்துரோ பதைக்குத்துகில் கொடுத்து ரட்சித்தீரே 
மடுவில் ஆனைமுன் ஓடிமுதலையை மடித்து ரட்சித்தீரே 
துபோல விடுத்து 
வாரும் பாரும் தீரும் கிருபைக் கண்ணாலே மனக்கவலை நினைத்தவரம் தாரும் என்சாமி 
தாரும் வட்சழி மேவும்மக லட்சுமியுடன் பெரும் மட்ச மாகவென்னை ரட்சிக்க எழுந்திரும் 

( ஏன் )
இவ்வாறான கவிராயருடைய உருக்கமான வேண்டுகோளுக்குப் பெருமான் இரங்கி அவருடைய கனவில் தோன்றிக் கம்பர் சடகோடாழ்வாரைப் பாடிப் பெருமை செய்து பின் 
இராமாயணத்தை அரங்கேற்றியது போல நீரும் நம் பரிசனங்களைப் போற்றிப் பாடி உமது இராமாயணத்தை அரங்கேற்றுவீராக என்று அருளிச் செய்து அவ்வாறே ஸ்ரீவைஷ்ணவர் 
களின் கனவிலும் தோன்றி இராம நாடகத்தை நம்சந்நிதியில் அரங்கேற்றி உபசரியுங்கள என்று கூறியருளினார் . 

பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர் தங்கள் கனவில் பெருமானருளிச் செய்தவற்றைக் கலந்துரையாடி மகிழ்ந்தனர் . கவிராயரும் கெருடாழ்வாரையும் 
சேனைமுதலியாகிய விநாயகரையும் சடகோபரையும் பஞ்சாயுதங்களையும் போற்றித் 
தோடயத்தில் அமைத்துப்பாடி அரங்கேற்றினார் . கோவிலாரும் கவிராயரை கவுரவித்துப் பல பரிசுகளைத் தந்து போற்றினார் .
பன்னீராயிரம் பாடல்களால் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன்னூலை இயற்றியுள்ளார் . 
காப்பிய நயங்கள் சுவைகள் வருணனைகள் நிரம்பிய தன்னூலில் உவமமுதலாய அணி 
நயங்கள் , சொல்லணித் திறங்கள் சந்த நயங்கள் முதலியவற்றைக் கையாண்டுள்ளார் . 
அவையாவும் விளங்கக் கவிராயர் தருக்களும் திபதைகளுமாப் புனைந்த நூற்றுத் 
தொண்ணூற்றேழு கீர்த்தனைகளுள் அமைத்துள்ள திறன் போற்றத்தக்கதாகும்

சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான்.  “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்:

எப்படி மனம் துணிந்ததோ சாமி  வனம்போய் வருகிறேன்
என்றால் இதை ஏற்குமோ  பூமி        (எப்படி)

கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ
வருந்தி வருந்தி தேவரீர்             வெல்ல
வார்த்தையால் கொல்லாமல்         கொல்ல
இரும்பு  மனதுண்டாச்சு              தல்லோ
என்னை விட்டுப் போகிறேன் என்று  சொல்ல (எப்படி)

 
சித்திரகூடத்தின் வளத்தைச் சீதைக்கு இராமன் காட்டிக் கூறும் பாடலிற் சில அடிகள் 


“ பாராய் பெண்ணே பாராய் 
சீராக நமக்குநேர் ஆகிறசித்திர கூடமலை 
ரத்தினபீடம் போலே 
மாதவர் முனிவர்சொல் வேதங்களைக் கிளி 
வாடிக்கையாற் கற்று வனமெங்கும் படிப்பதும் 
கோதும் தினைக் கொல்லையினிற் பம்பைகள் 
எடுத்துக் குரங்குகள் அடிப்பதும் 
ஆதவன் குதிரையைப்போல் பசும்பாறை ஒளிபாய்ந்த 
ஆடுகள் பசுமையாய்க் கோடேறி நடிப்பதும் 
பேதமில்லாமல் மேல்ஓடும் மேகத்தைப் 
பெண்யானை எனக்கையால் யானைகள் பிடிப்பதும் ” 
பாராய் பெண்ணே ! எனக்கூறும் கற்பனை பயிலத்தக்கதாம் . இவ்வாறே ஏனைய சரணங்களும் அமைந்துள்ளன .
இராமனைச் சீதையிடத்து அனுமான் வருணிக்குமிடத்து 

" அந்தராம சௌந்திரியம் என்னால் அறிந்து சொல்லப்போமோ 
எனத் தொடங்கி 

கந்தமேவுமர விந்தமலரும் அவர் 
காலுக்கு நிகராமோ , கைக்குத்தான் சொல்லப்போமோ 
உருண்ட மணிமுழங் காலுக்குவமை அவர் 
உடைய அட்சய தூணி ஏற்குமே 
திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் 
திசையானை துதிக்கையும் தோற்குமே
பூணும் 
விரிந்த மார்புக்கிணை பூமி அகலங் காணும் 
விளங்குங் கழுத்துக்குநேர் இளங்க முகே 
பரந்த புசங்களுக்கு மேரு மலையும் நாணும் 
பார்க்கப் பார்க்கப் பதினாயிரங் கண்சுள் வேணும் ( சுந் - தரு 8
சூர்ப்பணகை இராமனைக்கண்டு அவன் பேரழகில் மயங்கிக்  கூறுகின்ற விடத்து
தேவனோ மனிதன் தானோ யாவனோ யௌனமுள்ள 
சித்தனோ இவன் கர்த்தனோ பிரமன் 
பாவனையாற் கண்ட பெண்கள் 
ஆவியைக் கொள்ளை கொள் என்று 
படைத்தானோ என்னை உடைத்தானோ ? என்கிறாள்-( ஆரணி - திப 3 ) 
இவ்வாறே ஏனைய திபதைகளும் அமைந்துள்ளன .
அவளே சீதையின் பேரழகை 

காணவேண்டும் லட்சம் கண்கள் . 
சீதா தேவிதன் காலுக்கு நிகரோ பெண்கள் 
குவளை விழிகளோ பாணம் அவள் தன் 
வார்த்தை கொண்டால் அதுவே கல்யாணம் 
நவரத்தினத் தங்கத்தோடு 
நடையா லே அன்னப் பேடு 
அவனியிலே இல்லைஈடு . அவளுக்கவளே சோடு 
தங்கக் கொடி போல் இடையும் - சீவிவகிர்ந்து 
சாய்ந்த பின்னலின் சடையும் 
இங்கித மிருது வாக்கியம் 
இவளே தேவதா போக்கியம் 
மங்கையர்க் குள்ளே சிலாக்கியம் 
வாய்ச்சொல் உன்னதே பாக்கியம் ( ஆர . திரு . 8 )
இந்திரசித்து இலக்குமணன் இரண்டாம் முனறப் போர் வருணனையுள் . 

பெருஞ் சண்டை கேளீர்கள் அருஞ்சண்டை யாளிகள் 
தருந் திண்டேர் யானைகள் கருந்துண்ட சேனைகள் 
பெருஞ் சண்ட மாருதம் போல் நெருங் குண்டவாசிகள் 
மருங் கண்டவே தந்திரத் தோடு 
வருங் கண்டக இந்திரசித்தோடு . 

சிரத்தினில் மணிமகுடம் தரித்து மார்பிற் கவசம் 
பரித்துப் பணிகள் அலங் கரித்து வலியபெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்திரனைப் போல் பரித்து விக்கிரமத்துடன் என்கிறார்
மேலும் துங்கத்தைக் கோரி ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி அலையெறியும் 
சீர்கொள் எழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூர்கள் விடவிடென 
ஊர்கொள் பகுதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையு மணித்தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித்தரவே அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே  --என்கிறார் .
எதுகைச் சிறப்புச்சந்தம் : -- 
எனக்குன் இருபதம் நினைக்க வரமருள் 
இனித்த தசரதன் தனக்கு மகனெனும் 
மனத்தின் உடனவ தரித்து முனிவரன் 
மகத்தில் அரக்கியை வதைத்த - அரசே ( பாயிரம் பெருமாள் தோத்திரம் - சரணம் 1 )
தேவி இவள் ராமா கௌதமன் - ஆவி இவள் ராமா 
ஆவலினாற் பண்டுமேவல் மனங்கொண்டு 
அந்தரம் நாடிய இந்திரன் கூடிய தேவி ( பாலகாண்டம் தரு - 11 )
சடாயு ராசன் 
கொத்திக் கொத்தி அடித்தானே 
கொத்திக் கொத்தி அடித் தானே 

பத்துச்சி ரத்திலும் தாளிலும் தோளிலும் 
பற்றிக் கரத்தனில் மாரிலும் தேரிலும் 
தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால் 
குத்திக் குத்தி எங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால் , கொத்தி " ( அயோத்தியா காண்டம் தரு -- 12 )
தேடித் திரிந்தானே சீதாதேவி - தன்னை அனுமானே 
ஆடிப் பறக்கின்ற காற்றும் நுழையாத 
அங்கக்கொத் தளந்தங்கும் 
இலங்கைப்பட் டணமெங்கும் - ( தேடி ) 
இடுக்குகளும் இருட் டொடுக்குகளும் இருட்டுறி 
அடுக்குகளும் மூலை முடுக்குகளும் பாய்ந்து " ( தேடி ) ( சுந்தரகாண்டம் தரு - 3 )
இராம ராவணயுத்தம் 
அப்புறம் மலைதாவும் அலைதாவும் கடல்தாவும் 
இப்புறம் செவிதாவும் புவிதாவும் கெவிதாவும் 

அன்று முனிவர் பயந்து கடகட 
என்று பரிந்து நடுங்கி விடவிட 
அண்டுமுகடுபி ளந்து நிலை கெட 
மண்டலமும் மிசை விண்டு தலைகெட 

அதிரமலைகளும் அதிரநிலைகளும் 
அதிர வெகுதிசை அதிரமழையிடி, 
அதிர உத்திகள் அதிர மதிகதிர் 

அதிர உடுவினம் அதிர இப்படி 
ராகவனுக்கும் ராவணனுக்கும் நடந்ததே சண்டை ( யுத்தகாண்டம் சரணத்தில் ஒன்று தரு - 80 )
மாணிக்க தீபங்கள் ஏற்றினார் நல்ல 
வாடைகள் தூரிகள் தீற்றினார் 
ஆணிப் பொன்னாடைகள் சாத்தினார் பன்னீர் 
ஆலைத் தெருவெங்கும் ஊற்றினார் 
சந்தனத்தைக் கோலம் தீட்டினார் 

பஞ்ச 
தருவையும் நன்றாக நாட்டினார் 
சுந்தர பாலிகை கூட்டினார் - நறுந் 
தூபமும் தீபமும் காட்டினார் " ( பாலகாண்டம் திபதை -2 )
ஆழநெடுந்திரை கங்கை ஆறுகடந்தாலு மென்ன 
தோழன் என்றுராமன் என்னைச் சொல்லியருளிய தொரு 
சொல்லேனோ சொன்னபடிக்கு 
நில்லேனோ நான் பிடித்தகை 
வில்லேனோ இவரைக் கொல்லேனோ ( அயோத் - தரு -- 15 )
அந்தராமத் துரோகி இவன்பலம் குறியேனோ 
ஆத்திநார் கிழித்தாற்போல் கிழிக்கநான் அறியேனோ 
புவியடங்கலும் கிட்டவே 

மண்டோதரி 
புலம்பும் ஓசை முட்டவே கண்டவர்கள் 
எவரும் செக்கலி கொட்டவே வாலினாலே 
முழுதும் பிடித்துப் பொட்டவே 

கட்டி 
இறுக்குறேன் 

தோள் ஒடிய 
முறுக்குறேன் தலைபத்தும் 
அறுக்குறேன் தேங்காய் போல 
நொறுக்குறேன் " 
( சுந்தரகாண்டம் தரு 
கண்டேன் கண்டேன் - சீதையைக் - கண்டேன் ராகவா 
அண்டரும் காணாத இலங்கா புரத்திலே 
அரவிந்த வேதாவைத் தரவந்த மா தாவை கண்டேன்
மின்ன 
பன்ன 
காவி விழிகளில் உன்உரு ஒளி 
கனிவாய் தனலே உன் திருநாமமே 
ஆவித் துணையைப் பிரிந்த மட 
வன்ன 
மானாலும் நான் சொல்லுவ 
தென்ன 
பூவைத் திரிசடை நித்தம் நித்தம் 
சொன்ன 
புத்திவழியே தன்புத்தி நிலை 
மன்ன 
பாவியாக்கியர் காவல் சிறை 
துன்ன 
பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் 
என்ன - 
கண்டேன் ( சுந்தரகாண்டம் தரு - 26 ) 
இந்த சேதுவைக் கண்டால் - சனகன் பெண்ணே 
கபர சித்தியாமே 
நிந்தை யானகள்ளைக் குடிப்பதும் - 
மந்தை உரிஞ்சு கல்லை இடிப்பதும் - நடுச் 
சந்தி விருட்சங்களை ஒடிப்பதும் - பிறர் 
சொந்தப் பெண்களைக்கை பிடிப்பதும் 
( இந்த ) 
பசு 
நொந்த பேர்பொருளைக் கொண்ட தோஷமும் 
நோன்புகளை நடுவில் 
விண்ட தோஷமும் 
வந்தபேர் பசிக்க 
உண்ட 
தோஷமும் 
மடிநழுவும் பெண்களைக் 
கண்ட தோஷமும் - இந்த ( யுத்த காண்டம் - தரு - 87 ) 

வழியெதுகைச் சிறப்பு : 

“ பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்த வாளாய் 
குட்டிமனிதன் தன்னை கட்டியிழுக்கப் பின்னை 
பெட்டிப் பாம்பு போலே சுட்டி அண்ணனாலே ( ஆரண்யகாண்டம் - தரு - 6 )
எட்டுநாளையில் பாருமம்மா 
இராவணப் பேரும் இவன் ஊரும் -------
முட்டர்கள் துட்டர்கள் கெட்டபலிட்டர்கள் 
இட்டிடு கட்டுகள் ஒட்டுகள் கெட்டபின் 
நெட்டுள பட்டின மட்டியரக்கியர் 
கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் எட்டு " ( சுந்தரகாண்டம் - தரு - தரு - 12 )
" நாயகன் சொல் மறந்தாய் அண்ணாவென்று 
பேயனைப் போல் பறந்தாய் 
தாயரையும் துறந்தாய் - பழிபோட 
நீயிதற் கோபிறந்தாய் 
சேயின் முகம்பார்க்கும் தாயின் முகம் போலே 
காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே 
தீயும் பயிருக்குப் பேயும் மழைபோலே 
மாயன் கஜேந்திரனுக் காய்வந்தது போலே ( யுத்தகாண்டம் தரு - 92 )
ஆனை முகனே அரனார் திருமகனே 
சேனையர்கோ னாகவலஞ் செய்வோனே 
நாடகத்தைக் கொண்டஉன்றன் நல்லருளா லேராம 
நாடகத்தைச் சொல்லுவேன் நான் --விநாயகர் தோத்திரம்
கம்பரா மாயணப் பாற்கடலை உண்டு 
நம்பவரும் ராம்நா டகமாம்மா மழையை 
அம்புவியில் காழி அருணாசல மேகம் 
கும்பும் உயிர்ப்பயிர்க்குப் பெய்து வினை கொய்ததுவே--ஆக்கியோன் பெருமை
ஏர்கொண்ட நான் மறையின் பொருளை எல்லாம் 
இனியதமி ழாற்செய்து தொண்டர்க் கீந்த 
பார்கொண்ட குருகூர்வாழ் சடகோ பாழ்வார் 
பதமலரைப் பணிந்து திருச் சென்னை மேவும் 
தார்கொண்ட புயாசலன் ஒப் பில்லா வீரன் 
சதுரன் அயன் தொழும்ராமச் சந்திர மாலின் 
சீர்கொண்ட திருவருளின் பெருமை தன்னைத் 
தேறுவேன் மன மகிழ்ந்து கூறு வேனே
பூதகி முலையுண்ணல் போல் ஆவி உண்டொருக் 

போற்றும் யாதவர்க்கின்பம் தேக்கச் செய்தாய்பரி 
புத்தமு தத்தினை நற்கரருக்குமுன் 
உற்றிட மிக்க அளித்திடும் சற்குண 

பூஜிதம் பெறு ராமச்சந்திர 
னேசவுந்தர ரூபரஞ்சித 
புகழலர் மகள் தழு விய அதி புஜபல 

மிகுபரி மளமுறு துளவணி ரவிகுல 
புண்யம் நீடும் அண்ட பகிரண்டங்களை உண்ட 
திண்ய னே அகண்ட புகழ் கொண்ட பிர சண்ட 
உதித்து 
தசரதன் சுதனா 
தரணி மன்னர்மன் னதிபுஜபல 
தசரதன் சுதனா 
தகைமை வாய்ப்ப உயர் மனு நெறி முறைகொடு 
தரும் அயோத்திநகர் அரசுசெய் ரவிகுல 
உதித்து 
உதித்து 
உதித்து 

தசரதன் சுதனா 
சர்ப்ப ராஜசயனத்தின் மீதுதுயில் 
உற்று வீறுபர வஸ்து வானதொரு 
தசரதன் சுதனா 
தசமுக னால் இடர் படும்உயர் அமரர்கள் 
நசையுட னே துதி தரநர உருவொடு 

தசரதன் சுதனா 
தார்புனை ஈசனும்விண் சூரியனும் வேதனும் 
மாமக வானும் அவன் பாலனும் தேயுவும் 
சீர் அனு மான்சுக்கி ரீவனர் சாம்பவன் 
வாலியங் கதன் நீலன் ஆய்வர வானவர் 
உதித்து 
மட்டி 
வானரங்க ளாய்மண்ணில் வந்திடச்செய்து , 
தானவர் குலத்தைவிண்ணில் சார்ந்திடக் கங்கணங்கட்டி 
தசரதன் சுதனா 
உதித்து 
சங்கு சங்கரமும் மங்களத்தினில் மி 
குந்த அற்புத அனந்த நற்றவனும் 
வந்துதித்திடநி னைந்திடத் தரையில் 
சம்ப்ரமத்தில் இல குஞ்சுமித் திரையின் 

தன்னிடம் லட்சுமணன் சத்துருக்கனும் கைகேசி 
மின் வயிற்றிற் பரதனும் தம்பியராய் சனிக்கத் 
தான் எண்ணிக் கோசலை வயிற்றிற் சித்திரைமாதம் 
ஆனநவமி புனர் பூசநக்ஷத்திர நாளில் 
தசரதன் சுதனா 

உதித்து 
சந்திர விம்பமுகம் கிருபைவளர்தரு 
கின்ற கண்களும் நெடுஞ்சிலை எனும் நுத 
லுஞ் சிறந்த பவ ளந்தனை நிகர் அத 
ரம்தகுந்த ஒளிர் குண்டலம் அணி செவி 
களுநில வெறிகமு கினை நிகர் களமொடு 
விரைகமழ் துளவணி புயமலைகளும் நெடு 
உலகமதனையுணும் அழகிய வயிறொடு 
தாரணி மார்பும் வண்டாமரைத் தாள் களும் 
சாமள மேனியும் ராமநன் நாமமும் 
தயங்க அரு மறையுணர் புங்கவர் மிகு 
ஜெயம் விஜயபவ எனமங் களமொடு 
தசரதன் சுதனா 

உதித்து , 
தனுவிற்கதித்து , 
தாடகைப் பாவியை 
வதைத்து 
விசுவா மித்திரனுடன் மிதிலைக்குச் செல்லும் 
வேதச் சிரத்தில் நடமாடும் சீர்பாதப் 
இசைவுறப் பட்டளவில் அகலிகை என்னும் 
எழுந்தாள் கல்உருமாறி ; அதுவல்லாமல் மண் 

போது 
போது 
மாது 
இந்திர போகசன கன்வில்லை ரண்டு 
துண்ட மாஒடித்தான் அதைக் கண்டு 
சுந்தரி சீதையைத் தந்தனனே மகிழ் 
கொண்டிட வேமண மானபின்னே வரு 
கின்ற வழியதனில் பரசுர மன் வில்மு 
றிந்திட வேசெய்து சனகியோ டயோத்தி 
தந்து கூனிகல கந்தனால் அரசி 
ழந்து நீடுபுகழ் தம்பியோடு மலர் 
மங்கை சீதை பதம் நொந்து வாடிவர 
கங்கை மாந்தி கடந்து வாசமலர்க் 
காவிரி தருசித்ரக் கூடபர் வதத்தில் 

மேவிய பரதனுக்குப் பாதுகை யளித்தபின் 
விரிதண்டகவன வழி கொண்டதில் அத் 
திரி என்றிடுதவ முனிவன் கிருபை பெற் 
றிட்டபின்பு விரா தன் இருகையது 
முட்ட விண்டி.டவே செய்து சரபங்க 
முனிவன் ஆசிரமந் தனிலே எழிற் 
சனகியோ டெய்தி இந்திரன் போனபின் 
தண்டகாரண்ய வாசிகள் படு துயர் 
கண்டன் னோரிடர் தீர்தர இணையறு 
கருணைகொண்டே அந்த வனமதிற்பத்து 
வருடம் நின்று வரும் வழியிற்சுதிட்ட 
மாமுனி வரங்கொண்டே அகஸ்தியன் றனைக்கண்டு 
சேமவிற் சரங்கொண்டு துதித்தவன் றனை விண்டு 
சென்று சடாயுஉற வாடப் பஞ்ச வடியில் 
நின்று விடாதமய லோடு கெஞ்சிய பெரு 
நீலி சூர்ப்பணகை காது மூக்கரிந்து 
கால னார்க்குநிக ராகப் போர்க்குவந்த 
கர தூஷணத் திரிசிரசன் ஆதியரை 
அரைநாழி கைதனில் மறலி நாடதனில் 
அனுப்பி மானுரு வாய்வந்த மாரீ 
சன்கையாற் பிடித்திட வேபோன 
தருணங்கண் டிராவணன் தபசி போல் 
விரைவில் வந்து சீதையை நிலத்தினொடு 
மேலெடுத்துச் செல்லும் போது சடாயுவின் 
ஆவியினை வதைத் தசோக வனந்தனில் 
அரிய சிறையிலிட வேசானகி தன்னைப் 
பிரியும் அதிகதுயர் ஆலோசினம் பண்ணிப் 
பின்மதிக் கவந்தனை சொர்க்கம் ஏற்றிச்சவரி 
சொன்ன விதங்கொடு சுக்கிரீ வனைத் தனது 
சொந்தம் ஆக்கி அக்ரமமிகு வாலிதனை 
முந்த வாட்டி விக்ரம அனுமானை , அளி 

மொய்த்த குழற்சிதைதனைத் தேட விடுக்க அவன் 
உத்தமசம் பாதி தன்னால் உளவறிந்து கொண்டு 
ஒப்பில்லாத விஸ்வரூபங் கொண்டு மயேந்திரம் ஏறிச் 
செப்பமாய்க் கடலைத் தாண்டி லங்கையிற் சேர்ந்து 
திடமுறு லங்கணியை முதற்பலி யிட்டுச் சீதையை
கடி பெமறு லங்கை எங்கும் தேடிக் காணாமற் பின்பு 
காவல் மிகும் அசோக வனத்தில் திரிசடை யன்பு 
மேவக்காத் திடவட முகம் பார்த் திருக்கக் கண்டு 
விசையகோ தண்டராம தூதன் நான் என்று சொல்லி 
நசைதரும் கணையாழி கொடுத்துத் திடமுங் கூறி 
நாயகி சீதைதந்த சூடாமணிகைக் கொண்டு 
தீயகிங் கரர்எண்ப தாயிரம் பேர்களொடு 
செழித்த அசோக வனத்தையும் அழித்திடக் கண்டெதிர்த்த 
கொழுத்த ராக்ஷத சேனையொடு சம்புமாலி மிகுத்த 
கொடுமை செய் பஞ்சசேனா திபர்களும் அக்ஷதனும் 
மடியநாற் பது வெள்ளம் அரக்கரோ டிந்திரசித்தன் 
வந்து போர் செய்ய அனு மந்தன் அந்தத்தளத்னதச் 
சிந்துசிந் தாக்கி இந்திர சித்தன்தேரை யழித்துச் 
சிலையை முறித்து முடித் தலையை உடைக்க அவன் 
வலிய பிரம்ம பாசத்தால் கட்டராவணனப்போ 
வாலில் நெருப்பையிட அந்த நெருப்பைலங்கையின் 
மூலைக்கு மூலையிட்டுக் கொளுத்திநீ றாக்கிவிட்டு 
உள மிகிழ் கொண்டு மீண்டு வந்து சாமினயச் சேவித்து 
அளிதிகழ் சூடாமணி தரக்கொண்டு மகிழ்ந்த பின்பு 
அடல் மிகுந்த எழு பதுவெள்ளம் வானரப் 
படையும் ஒப்பிலதின் அதிபரும் நீடிய 

பரிவொடு தென்கடல் அருகில் நிறைந்த பின் 
சரணம் அடைந்து நின் துணையடி தந்தருள் 
சாமி என்றவிபீ ஷணன் தனக்கு லங்கா 
பூமிதந்து விகா தஞ் செய்தவருணன்மேல் 
பொற்கணை விடுத்தவனை வரச்செய்து புஜபல 
சித்திரக் கவியினங்கள் அதைக்கொடு விரைவொடு 
சேது பந்தனஞ் செய்வித்து நீள் கடல் வளைந்திடு 
மாதிரம் பயந்திடச்செய் ராவணன் இலங்கைதன்னை 
வந்து முத்திகை செய்து கொண்டு தும்பி அங்கதன் மீதும் 
முந்து விக்ரம அனுமந்தன் அம்புயந் தன்னிலும் ஏறி 
மூதண்டம் திகில் மேவி யதிர்ந்திட 
கோதண்டந்தனில் நாணொலி கொண்டுற 
குரைகடல் வெருவிட நெடுநிலம் அது தனை 
ஒருசுமை என உறும் உரகன் உடல் நெளிய 
உயர்மதி கதிர்வழி பிசகிட நெடுவரை 
அயர்தர உடுஇனம் அது தரையில் உதிர 
அணி ரதகஜபரி பரிசன வகை மிக 
அணி அணியொடுவர அதிவலிமைகள் சொலி 
அனல் கக்கிடும் அத்திர சத்திர மழு 
கனசக்கரம் நெட்டயில் பட்டய மொடு 
கதிர் வீசும் கதிர்முத்தலை சூலம் 
கதைவார் அஞ்சிலை கைக் கொடு தாளம் 
காளஞ் சின்னந் தாரைகள் மத்தள பேரிகள் பலவித 
மேளம் பின்னும் நாக சுரத்தொடு பூரிகை ஒலிதர 
வீரராவணன் தேரில் ஏறி போர்க்களத்தில் வந்து 
சேரவே அவன் சேனை வீரர் யாரும் போரில் முந்த 

தீய வச்சிரமுஷ்டி துன்முகன் சுபாரிசன் 
மாய பிரகஸ்தன் கெட்டவன் மனங் கொள் நீசரை 
வானர வீரர்கள் கொல்ல ராவணன் இவரை வெல்ல 
சானகி மணாளன் வில்லிற் சோணை மாரி என்று சொல்லத் 
தகுஞ்சரங் களைவிட்டு அவன் தேர்வில்லை முறித்துத் 
திகழ்மணி முடிபத்தும் தரைமேல் உருளச் செய்து 
திடமொடு சண்டை செய்ய நாளைவா இன்றுபோ வென்று 
விடைதர மனம் நொந்து தனியாய்ப் போய் லங்கை சேர்ந்து 
விட யாவரும் எழுந்து போரில் வீறிக்கதிக்க 
வெற்றிசேர் கும்பகர்ணனை நித்திரையில் இருந்தெழுப்பி 
அத்ததியில் சண்டைக்கு விடுத்திட அவன் களத்தை 
அடுக்க ராகவன் அம்பு தொடுக்கவே கும்பகர்ணன் 
நொடிக்குள் காலும் கையும் போய்படிக்குள்ளேமுண்டமாகி 
நொந்து பின் சாமிதனைச் நிந்தனை பேசி 
இறந்ததை ராவணன் அறிந்ததி காயனை 
அனுப்ப அவன் பரிசனத் திரளினொடு 
முனைத் தலைவர்களும் சமர்க்களம் அணு 
முச்சிரத்தன் வயமஸ்தன் கும்பன் தேவாந்தகனும் 
அச்சமற்ற ரண மஸ்தன் வம்பன் நராந்தகனும் 
அனுமான் முதலோர் கையால் மடிந்திட அதிகாயன் 
சின மாகி இளை யோனோ டமர் செய்துமுடிவாகச் 
செய்தி தெரிந்திந்திரசித்தன் தேரில்ஏறி 
வெய்ய சதுரங்கம் மொய்க்கப் போரில் வீறி 
விஞ்சுஞ்சுக் ரீவன் பனசன் சாம்பன் அனுமன் 
வஞ்ச மற்ற நீலன் முதலினோர்கள் தமையும் 
வாட்டக் கண்டு லட்சுமணன் தன் வில்லினிற்சரம் 
பூட்ட இந்திரசித்தன் ரத கஜபரி சனம் 
புரவி யாவற்றும் மாண்டு தானும் மிக மெலிந்து 
இரவில் நாகபாசத்தை ஏந்த அதனால் நொந்து 
லக்குமணன் முதலோர் களத்திற்படுக்க ராமன் 
அக்கணம் அவ்விடம் மேவிதிகைத்து வருந்தும் வேளை 
அடல் சேர் கருடன் வர நாகபாசம் தெறித்து 

மிதமற்ற சேனை சூழ உக்கிரங் கொண்டுவந் தெதிர்ந்த 
மதம் உற்ற சூரியகேது வச்சிர தந்தன் பெரும்பக்கன் 
மாலிசிங்கன் பேயன் பரிதிக்கண்ணனையும் 
ஆலம் அஞ்சும் தீய குருதிக்கண்ணனையும் 
ஆர்க்குங் கவித்தலைவர் மாய்க்கராம லட்சுமணர் 
தாக்க மகரக்கண்ணன் அக்கினி கேதுமடிய 

தசமுகன் அதைத் தெரிந்து இந்திரசித்தனைவிட 
வசை கொள்ளும் அவன்களம் வந்து லட்சுமணனுடன் 
வாது செய்ய இளையோன் அப்போது சரமாரி வெய்யன் 
மீதில் எய்ய அதனால் அப்பாதகன் திரேகம் நைய 
விண்ணில் மறைந்து தன் ஊரைச் சேர்ந்து சூது 
பண்ணி வெல்ல எண்ணி போருக்க கம்பனோடு 
பாவி மகோதரனை ஏவ அவர்கள் களம் 
மேவி பலத்துடனே ராவில் அமர்புரிய 
வீறும் அனுமன் தன்னால் அகம்பன் நிகும்பன் சிரங்களுருண்டபின் 
சீறும் மகோதரன் கைச்சரங்கள் அழுந்திட வருந்தி இளையவன் 
திகைக்கும் வேளையில் இந்திரசித்தன் அங்குவந்து சோபித 
மிகுத்த பிர்மாஸ்திரம் விடுக்கத்தம்பி முதலோர் சாய்ந்திட 
வித்தகஸ்ரீ ராமன்கண்டு மெத்தவும் ஆகுலங் கொண்டு 
சித்தப்பிர மையாக அன்று உத்தம அனுமான் சென்று 
செழித்த சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்தபின் 
பிழைத்தனைவரும் போருக் கெதிர்க்க இந்திரசித் தென்னும் 
பித்தன் மாயா சீதையை வெட்டி நிகும்பலை யா 
கத்தின் சாலை சேர அதைத் தெரிந் திளையவன் 
கணை மழை பொழிந்தரக்கன் செய்யும் யாக மழித்து 
க்ஷணமதில் அவன் சிரத்தைக் கொய்து தேவர் துதிக்கச் 
சாமிபாத நேரில்வைக்க ராவணனறிந்ததன் மேலமர் செயவிட 
பூமிபாரமான துஷ்ட மூலபலங்கள் ஓர் ஆயிரம் வெள்ளமும் 
போரி லேறுதல் கண்டு வானர வீரரோடவே ஒன்றியாகிய 
தீரராகவன் சண்டமாருதம் ஆகிநீசர்கள் பஞ்சுபோலே கெட 
திவ்விய மோகனாஸ் திரம் ஏவி எங்கும் ராமனாகத்தோன்றிட 
வெய்யர் யாரும் பார்க்குள் தாவி தங்களில் தாங்களே மாண்டபின் 
வேதனை யேசெய்யும் ஜாதக காதக 
பாதக னானம கோதரன் போர் செய்து 
படையும் போய் ராகவன் கைக்கணை தன்னால் ஆவிவிண்டு 
மடிய , ராவணன் துர்ச்சகுனம் மென்மேலுங் கண்டு 

பெருஞ் சண்டை செய்ய சாமி ராவணன் பத்துச் சிரத்தையும் 
விந்தை அம்பு கொண்டு கொய்யக் கொய்ய மீண்டும் மீண்டும் முளைக்க அவ் 
வேளையிலே இதமாக பிராதபகு 
ணாள விபீஷணன் ஓதும் உபாயத்தி 
னால் இணையறு பிரம்மாஸ்திரம் அதனை விட்டு 
ஆலம் அனையவிழி ராவணன் நாபியில் வைத்த 
அமிர்த கலசத்துடன் முடிகள் சிதறச் செய்து 
இமையவர் முனிவர்கள் படுதுயரம் ஒழித்து 
இணையில் எழிற் சனகி தீயினிற் குளித்த பின்பு 
துணைவன் கவிப்படை விபீஷணனும் கற்பிலங்கு 
தூயசீதை தன்னொடு புஷ்பக மீதிலேறி முன்வினை முற்றிலும் 
மாயவே செய்கின்ற மகத்துவமான சேது அண்டையில் ஒப்பறு 
மாதேவற் கன்று நீராட்டி இறைஞ்சி திரும்பிமுன் வந்த வழிகளை 
சீதேவிக் கன்பொடு காட்டி மகிழ்ந்து நடந்து பன்னருந் தல நிலை 
திகழும் பரத்துவாசன் மடத்தினிற் சேர்ந்தபின் திடத்துடன் அனுமானைப் 
புகழும் பர தராசன் இடத்தினிற் கேவிட நொடிக்குள்ளே அவன் போன 

போது சாமி வரவைக் காணே னென்று பரதன் 

ஓதுந் தீயினில் விழப் போகக் கண்டு அனுமன் 
மோதிரந்தந்து பதறாதே ரகுபதி வரமுனி மடம் வந்து சேர்ந்தா னென்று 
ஆதரவும் சுபமும்கூறி பரதனிடம் விரைவில் விடை கொண்டு ஆஞ்சநேயன் 
அக்கணம் திரும்பி லோக ரக்ஷகன் உண்ணும் வேளைக்க 
ரைக் கணம் முந்திவந் தோதப்பஷங் கொண்டவனைக் கூட 
வைத்து வரதன் பொசித்துப் புஷ்பக மதிற்கதித்து 
சத்திய பர தன் துதிக்க உத்தம குகன் மதிக்க 
தகைமை மேவிய அயோத்தி நகரில் வந்து 
திகழும்மூ வுலகம் போற்ற ஒளி சிறந்த 
சித்திர மிகுந்த சிங்காசன மீதினில் 
அற்புதம் உற்றசெந் தேன்மொழியாள் , எம 
தன்னை சீதையோ டமர்ந்து பேரிகையும் 
மன்னு தாளமிரு தங்க நாகசுர 

வாத்தியம் ஒலிக்க வருசுரர் மருமலர்கொடு 
நாற்றிசை இறைக்க வெகு முனிவர்கள் மணிமுடி 

நரபதிகளும்வானரபதிகளும் பூ 
சுரர் துதி சொலவே கவரிகள் அருகே 
தூயலட் சுமணனுடன் சத்துருக்கனும் வீசிட 
நேயம் உற்றபர தன் உட் களித்திதம் பேசியே 
நிலவெறி தருசந்திர வட்டக் குடை கவிக்க 
பலமிகு அனுமந்தன் நற்றுணையடி பிடிக்க 
பகர் வசிட்டனால் மகுடாபி ஷேகம் கொண்டு 
செகதலத்துளோர் துதி பேசச் சேவைதந்த 
தீனதயா நிதியே அடியார்உள 
மேநிலையாய் நிதம் வாழ்வர தாஉயர் 
வேதர் அரியணை மேவு வினோதா 
தாதா சுரர் முதலோர் துதிபாதா 
சதுரனே சராசரங்களைத் தருமூலா 
துதி செய் ராஜசேகரன் த மிழ்க் கனுகூலா 
சுமுக சுகுண சுந்தராங்க சுகிர்தநய 
விமல விபவ விந்தை யோங்கிடு மிகுஜய 

கோதண்ட தீக்ஷா குருவே - பக்தரிரு தய 
கோகனக மலர் மருவே 

(கோதண்ட )
ராவணன் முன் நின்ற ஹனுமனை ராவணன் கேட்கச் சொன்னதால் ப்ரஹஸ்தன் என்ற ராக்ஷச அதிகாரி கேட்கிறான்:
”ஏ, வானரா, நீ யார், யாரால் அனுப்பப்பட்டவன்? பயப்படாமல் உண்மையைச் சொல், உன்னை விடுவிக்கிறேன்.’

இது தான் அந்த பாடல்:
செஞ்சுருட்டி : ஆதி தாளம்
” ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ – ஆரடா குரங்கே”
வார் சிங்காசனம் போல், – வால் இட்டென்னிலும் மேல் இட்டிருகிறாய் ”
கம்பத்தின் மேலே காலனைப் போலே
செம்புமாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலெ
சிட்சை செய்வேன் என்று கட்சி உடனே வந்த
அட்சதனைக் கூட பட்சணம் செய்த நீ…. ஆரடா குரங்கே…..

(ராவணன் எதிரில் தனது வாலைச்சுற்றி உயரமான ஆசனம் அமைத்து ராவணனை விட மேலே உயரமாக அனுமன் அமர்ந்திருக்கிறானாம்) ( செஞ்சுருட்டி ராகத்தில் ஆதி தாளத்தில் — ராவணன் கேட்பது )

அதற்கு அனுமார் பதில்: மோகனம்: ஆதி தாளம்

”ராமசாமியின் தூதன் நான் அடா — அடடா ராவணா
நான் அடா என் பேர் அனுமான் அடா ( ராவணன் ஒரு அடா போட்டால் அனுமன் பல அடா போடுகிறான்!!)
கொடுத்த வரமும் தனமும் கனமும் வீணிலேன் போக்குகிறாய்
குடிக்கும் பாலை அய்யோ கமர் வெடிக் குளேன் வார்க்கிறாய்
துடுக்குடன் பரஸ்த்ரி செனங்களை தொடர்ந்தேன் பழி ஏற்கிறாய்
தூக்கி ஏறவிட்டேணியை வாங்கும் துர்த்தர் வார்த்தையைக் கேட்கிறாய் …( . ராம )

ராமாயண ஓரடிக் கீர்த்தனை முற்றிற்று 
-----------
 . 
இராம நாடகம் 
பாயிரம் 
ஏற்புடைக் கடவுள் வணக்கங்கள் . 
அனுமார் தோத்திரம் 
நேரிசை வெண்பா 

கோதண்ட தீக்ஷா குருராம நாடகத்தைத் 
தீதண்டா வாறடியேன் செப்பவே - கோ தண்டா 
மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை 
வாருதியே நீதுணையா வா ! --கலியாணி ராகம் --ரூபகசாப்புத் தாளம் 


பல்லவி 
அனுமந்தா நீ 
துணைவந் தருள் புரிகுவாய் 
துணை வந் தருள்புரிகுவாய் (துணை ) 

அநுபல்லவி 
துணைவந் தருள்வாய் நல்ல சொற்பொருளது புல்ல 
இணையொன் றிலாத வல்ல ராமநாடகம் சொல்ல ( துணை ) 

விண்டு சரணங்கள் துஷ்டவாலி தோழமையை விண்டோனே 
சுக்கிரீவன் தோழமையைக் கொண்டேனே 
வெகு திட்டமா ராகவனைப் போய்க் கண்டோனே 
அவன் செப்பிய சொல்மிர்தத்தை உண்டோனே 
சுக்கிரீவன் கஷ்டமும் அரசிழந்த நஷ்டமும் அவனிருப்பும் சட்டமாச் சொன்ன இட்ட கருணை மாருதி வாருதி (துணை ) 
தூயனே --- அஷ்ட திக்கில் தென் திசை உகந்தோனே 
சீதைக்கா அரிய பிலத்தினுட் புகுந்தோனே 
அப்போது பொட்டெனப் பூமியினைப் பிளந்தோனே 
உயிரைப் போக்கவே மிகமனம் தளர்ந்தோனே 
சம்பாதி எட்டவே இருந்து மென்ன கட்டவே வர அவற்குப் பட்டதைச் சொல்லும் முட்டிலா ஆஞ்ச நேயனே ( துணை ) 

-----
3 உக்கிரமா விஸ்வ சொரூபம் எடுத்தோனே 

மயேந்திரத் துதைந்து சடலைத்தாண்டி விடுத்தோனே 
பொல்லாத அக்கிரம லங்கணியைக்கீழ்ப் படுத்தோனே  
நற்றிரு ஆழியைத் தேவிகையினில் கொடுத்தோனே ஆறுபோல் 

கக்கவே ராட்சத ரெல்லாம் மக்கவே செய்யும் ருத்திரனே 
முக்கிய மாம்வாயு புத்திரனே 

( துணை ) 
----------
4 தேவி சூடாமணி கையில் தரித்தோனே 
சொன்ன சேதிகள் எல்லாம் அங்கி கரித்தோனே - படுபாவிராவணன் லங்கையை எரித்தோனே 
ராமன் பக்கல்வந்துற்ற சேதிகள் விரித்தோனே 
பூவுலகத் தோரும் தேவர் கோவும் முனிக்கணமும் பராவிய சிரஞ் சீவியே மேவிய (துணை ) 

-- + - 
என தாவியே 
5 அருமையாம் சஞ்சீவி மலையை ஏற்றோனே - பிர்ம்ம அஸ்திர வேதைக ளெல்லாம் தீர்த்தோனே - சீதையை 
உரிமையாம் ராகவன் பக்கல் சேர்த்தோனே - பரதன் உயிரை விடுமுன்னமே போய்க் காத்தோனே தவத்தில் 
பெருமை யார்முனி விருந்தினில் தரும ராமனோ டருந்தின ஒருமையாற் சஞ்சீவி ராயனே 
பிரம பட்டம் பெறும்உ பாயனே ( துணை ) 

பெருமாள் தோத்திரம் --விருத்தம் - 1 
அண்டர்தம் துயரம்தீர அயோத்திமா நகரில் வந்து 
தண்டகா ரணியம் சென்று சமுத்திரமீ தணையைக் கட்டி , 
கொண்டுரா வணனை மாட்டக் கோதண்டம் கையில் ஏந்தும் 
புண்டரீ கக்கண் ணாளி பொன்னடி க்கமலம் போற்றி --சௌராஷ்டிர ராகம் --திரிபுடை தாளம் 

பல்லவி 
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்லாய் - ஸ்ரீராமச்சந்திரா 
எனக்குன் இருபதம் நினைக்க வரம் அருள்வாய் ( எனக் ) 

சரணங்கள் 

எனக்குன் இருபதம் இனித்த தசரதன் மனத்தினுடன் அவ மகத்தில் அரக்கியை 
நினைக்கவரம் அருள் தனக்கு மகன் எனும் தரித்து முனிவரன் வதைத்த அரசே ! ( எனக் ) 
நடக்கையிலே அகலிகைக் நடத்திச் சனகன்வில் பிடித்துப் பரசுராம 
பிரித்து நகரில் வந் கிருபை செய்து ஒடித்துச்சனகிகை மனுக்குமமதையைப் திருக்கும் அய்யனே ( எனக் ) 


3. தரிக்கும் முடிபர தடத்தில் குகனுடன் வரைக்குள் சனகியோ 
வணக்கம் செயமகிழ் தனுக்கு தவி நதித் அடுத்துச்சித்திரகூட டிருக்கத் துணைவன் நல் குணக்குஞ்சரமே ( எனக் )  

4. துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர தொடுத்தமிதியடி கொடுத்தரசுசெய 
வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே வனத்தில் வரும் விரா தனைக் கொன்றவனே 
5. வீடுக் கரிய சடா யுவுக்குறவு சொலி 
விடுத்துக்கொண்டுபஞ்ச வடிக்குச் சென்றவுடன் அடுத்த சூர்ப்பநகி 
கொடுத்த கரதூ ஷணத்திரிசிரர்முடி துணித்த ராகவா ( எனக் ) 

6. தனித்து வருமாரீ சனைக் கொன்றொருகவந் தனுக்கருளி அனுமனைக் கண்டொருசுக்ரீ வனுக்குதவி வாலி தனைப்பொருதிவா னரப்படையை ஆ தரித்ததுரையே ( எனக் ) 

7. இருக்கும் அனுமன்வந் ருக்கை அறிந்தபின் 
பெருக்க அணைசெய்து பெலத்த அரக்கரைத் 
துரைக்க நிசிசரர் எரித்த கடலிலே வருக்கம் வருக்கமா 
தொலைத்த தெய்வமே ( எனக் ) 

8. கொடிய இந்திரசித்தன் கொள்ளும் மூலபல 
முடியும் கும்பகர்ணன் முடியும் பொடியாக 
பிரகஸ்தன் முதலாகக் வெள்ள அரக்கர்தம் 
முடியும் ராவணன்  விடுபுங் கவனே ( எனக் ) 


9 நினைத்தபடி விபீ நிறுத்தி ஒருபுஷ்ப தனத்தில் உயர் தரும் 
தனத்தி ருக்கும்ரகு ஷணற் கரசுபெற ரதத்தில் ஏறிவந்து 
அயோத்தியிலே சிமா குலக்குமரனே ( எனக் ) 

அபசாரக்ஷயை -விருத்தம் - 2 
கனமான வால்மீகர் சுலோகம் செய்தார் 

கம்பரும் ராமாயணத்தைக் கவியாச் செய்தார் 
உனதாசை யாலேநா டகமாச் செய்தேன் 
உளறினால் என்ன பலன் உண்டாம் என்றால் 
முனிமார்சொல் லியராம மந்திரத்தை 

மூவரும் ஓதியராம மந்திரத்தை 
வனவேடன் மராமார் என்றே முத்தி 
வழிகண்டான் அது கொண்டே மொழிகின் றேனே . 

அடதாளசாப்பு -தரு- 3 -சாவேரி ராகம் 

பல்லவி 
ஐயனேரகு ராமனே என்சொல் அபசாரம் 
உபசாரம் ஆக்கிக் கொள்வாயே 

அநுபல்லவி 

கையில் ஆகாதநான் ஏதேது சொன்னாலும் 
காக்கக் கடன் என் பிழையை நீக்கக்கடன்உன்பாரம் ( ஐய ) 

சரணங்கள் 

எள்ளத் தனையும் இல்லாத சுப தெள்ளத் தெளியேன் செய்தேன் இதோ 

குத்தம் 
சத்தம் 
மொத்தம் 
சுத்தம் 

வெள்ளைக் கவி பிள்ளைக் 
விள்ளத் 
உள்ளத் 
தள்ளத் 
கொள்ளத் தகுமோ 


கவி 
தகுமோ 
தகுமோ 
தகுமோ 

என்றும் - இது சொன்ன 
என்றும் - சொல்வதல்லால் 
பழுதுகள் 
சாமிநீ 
திருவுளம் 
அறிகிலேன் 

( ஐய ) 

நற்பொருள் நவரச வைப்புள்ள வண்ணவி 
ஒப்புத் தப்புத் 
சொற்பிக் கறியேன் 
கற்பிக் கறியேன் 
மெய்ப்பிக் கறியேன் 
ஒப்பிக் கறியேன் 

நீதமும் 
பேதமும் 
கீதமும் 
நோதமும் 
தெரிவேனோ - அதிலுள்ள 
தெரிவேனோ - இலக்கணச் 
உன் புகழ் சொல்லி சாமி எங்கள் ( இய ) 
முன்னம் சொன்ன  உத்தம முனி உரைக்கக் கம்பர் நற்றமிழ் தன்னைச் 
 
சின்ன வைத்திப்படிக் 
புத்திப்பிழைபித்துச்சொல தென்ன கண்டேன் - பெரியோர்முன் 
கொண்டேன் . என்சாமி வைப்போலே 

சத்திக்க ஒ 
நத்திச்சொலும் 
சித்தத்தில் இருக்காலே 
என்மேலே 
தத்தாலே ( ஐய ) 

நூற்பெருமை -விருத்தம் - 3 

சதிர்பெறும் ராம காதை சதகோடி பிரபந்த மாகும் 
அதிலோர் அட் சரம்சொன் னாலும் அருவினை போகும் என்றே 
விதியினால் முனிவால் மீகி விளம்பிய உறுதி கொண்டு 
மதியினால் அறிந்த மாத்திரம் வகுத்துநா டகஞ்சொல் வேனே --சாவேரி ராகம் --திரிபுடை தாளம் 

பல்லவி 
முனி 
மகத்துவம் உள்ளகதை ராமகதை இதுவேகேட்க வேணும் 
வருக்கும்பலமனி தருக்கும் இது பொதுவே 

( மகத் ) 
அநுபல்லவி 
மிகுத்த மிகுத்த புராணம் சொல்லும் கதை 
விரும்புமோ மறுநாள் சொன்னாள் அதை 
அகத்தினில் ஆனந்தம் தருமே 
இது சொல்ல 
அடிக்கடி சொல்லினும் வெறுக்கு மோ நல்ல 

( மகத் ) 
சரணங்கள் 
1. சேர்க்கும் பொருள்களில் என்ன இணைச்செவி 
ஏற்கும் பொருளிது மாத்திரம் 
செபமும் இது பெருந் தபமும் இதுவென்று தெளிவதே நல்ல 
சூத்திரம் பார்க்குள் இதையறி யார்க்கெ லாம்பிறந் தெடுத்தஉடம்பவ 

பாத்திரம் 
பத்தியாலிது கற்றவர்க்குப் பலிப்பது பரமபத க்ஷேத்திரம் 
தீர்க்க மா இதைக் கேட்கின் றோர்பெரும் 
திருமனையில் வரு வாரே தேவரும் 
ஏற்கும் இதன் குணமும் யார்க்குச் 
இகபரங்களிற் சகல 
சொல்லவரும் முந்தரும் 


(மகத் ) 

தருமராஜன்கை நேரும் போதினில் ஒருமையாயதைத் 
சற்றே படிக்கினும் புத்திரபாக்யமும் சகலபாக்யமும் 
பெருகுநவக்கிரக ஏகாதசப் பலனைப்பிரியமுடன் வந்து 
பேயும்பூதமும் நோயும் சூனியமும் பிணிசெய்யாதபடி 

தடுக்குமே 
அடுக்குமே 
கொடுக்குமே 
விடுக்குமே 

கின்னம் 
இன்ன 
மரணசெனன வியாதி தமக் 
வருந்துவார் வருந்தாதபடி 
அரிய மருந்திது ஆமென்றே 
ஆதியிலயன்சுகர் காதிலே 

முன்னம் 
சொன்ன 

( மகத் 
சீமைதனிற் கங்கையமுனைமுதற் பெருந்திவ்ய தெய்வந்தி ஸ்நானமும் 
சேனைமா நிலம் யானை முதலாகச்செய்யும் பலபல தானமும் 
ஆமிதாமென்று தேறுகின்றவே தாந்தம் முதற்கலைக் கியானமும் 
அதுவுமல்லாமல் எது நினைந்தாலும் உதவும் அந்தநி தானமும் 
சாமிநாரத முனிவன் சொல்லி னவத்த சரித்திரம் வால்மீகர் உரைத்தபடி 

கொற்றி 
ராமன் அவதாரம் ஆம்முன்னே 

மெத்த 
நயங்கொண் டாதிகாவியம் என்றே பெற்ற ( மகதி ) 


அனவயடக்கம் --விருத்தம் -4 


முத்து முதல் விலையில்லா மணிகள் பெற்ற 
முதியகடல் ஆடுகின்றார் அதிலே ஏழு 
சற்றும் உதவாதமணி யாம் பருக்கை 
தான் போடக் களிப்பான சமுத்திரம் போல் 
கர்த்தன் எனும் ராமச்சந்திரன் கதைப்பா கேட்கும் 
காதிலே நாடகமா அதனைச் சொல்லிக் 
குற்றமிகச் செய்தாலும் குணமாக் கொண்டு 
கூட்டுவீர் என்கவிபா ராட்டு விரே . 

விருத்தம் - 5 

அரன்முடிமேல் கங்கைபகீ ரதன்கொ ணர்ந்தே 
அந்நாள் செய் தர்ப்பணம்போல் இந்நாள் இந்த 
நரரும் அந்தக் கங்கையிலே தர்ப்ப ணத்தை 
நடத்திமுத்தி பெறுகின்றார் அதுபோல் ஆதிப் 
பிரமன்முகத் தினில்வந்த ராமகாதை 
பெருமுனிவால் மீகிசொல்லக் கம்பர் சொன்னார் 
விரவுதமிழ்ப் பதத்தாலே நானும் சொன்னேன் 
மேற்கொள்வீர் என் பிழைதீர்த் தாட்கொள் வீரே --மத்தியமாவதி ராகம் --ஆதி தாளம் 


பல்லவி 

பிழை பொறுக்கவேணும் - பெரியோரே பிள்ளை உமக்கு நான்காணும் 

( பிழை ) 

அநுபல்லவி 

மழை நிறத்த ராம சாமிகதை 
வகையென்றறிந்தும் அறியாமலும் நான் 
இன்ன 
சொன்ன ( பிழை ) 


சரணங்கள் 

மதித்தாரே 
விதித்தாரே 
இக்கதையைப் 
துதித்தாரே 

ஆதியில் பிர்ம்மதேவர் நூறு கோடி விஸ்தாரம் 
ஆதிகாவியம் என்றித்தை 
பேதமில் இருபத்து நாலாயிரமாகப் 
பிறகு வால்மீகர் சொல்லி 
போதாயனர்முதல் மாதவர் 
புனைந்துவட மொழியால் 
தியகம்பர் பன்னீராயிரம் கவியாக 
உரைசெய்து தமிழிலே 
காதலால் இவர் செய்ய நான் அதுக் 
கருடன் பறக்க ஒருகொசுவும் பறந் 
ஈதொரு நாடக மாகஓதினேன் 
எட்டும் ரண்டும் தெரியாத ஏழைநான் ஆ பதித்தாரே 
சிப்பாலே தாற்போலே புவிமேலே கையினாலே ( பிழை ) 

வாவிய பெருவெள்ளம் வாவும் கடலிலே 
வாய்க்காலும் பாயுமல்லோ நில்லாமல் 
யாவதும் கற்றோர் சொல்லை கேட்கிற நீங்களும் 
என் சொல்லும் கேளும் தடை 

இல்லாமல் காவியமும் பஞ்ச லட்சணமுந் தெரிய 
கற்ற உங்களைப் போலே 
சொல்லாமல் 
கேவலம் நான் இதைப் பாகவதர்படிக்கும் 
கீர்த்தனையாச் சொன்னேன் 
தல்லாமல்  என்று 
தேவராமன் பேரே உற்றது 
தேடி அந்தப்பேர் இந்த நாடகத்தில் வைத்தது 
பூவோடே கூடிய நாரும் மணம் பெற்றது 
போலே விளங்கும் அதினாலே சொன்னேன் 
கற்றது ( பிழை ) 
3. திருந்தும் நமசிவாய நாராயணா 
செபிக்கும் மந்திரம் இரண்டும் மெய்தானே 
உரைக்கும் மந்திரம் இரண்டில் இரண்டாம் எழுத் திரண்டும் 
ஒருராமன் ஆகிவந்த பெருமானே 
அருள் செய்த சுதையிதை லக்கண சால்ல 
அறிவேனோ சின்னஞ் சிறியனே 
பரப்பிய பாலையும் சோற்றையும் குழந்தைகள் 

பாச்சி சோச்சியெனும் 
பொருத்தம் இல்லாச்சொல்லால் உரைசெய்தாலும் தள்ளப் 
போமே உங்களால் ஆமே திருத்திக் கொள்ள 
அரைச்சொல் கொண்டம்பலம் ஏறினால் மெள்ள மெள்ள 
அரைச்சொல்லும் முழுச்சொல்லாம் ஆகையால் இதில் உள்ள (பிழை ) 

மாகச படி நானே மங்களம் 

விருத்தம் - 6 
வருக்கும் தேவியர்க்கும் தேவ ரோடு 
முனிவர்க்கும் முன்னிந்தக் கதையைச் சொன்ன 
நாவருக்கும் தசரதற்கும் தேவி மார்க்கும் 
நற்றம்பி மார்களுக்கும் சீதை 

சீதை யோடு 
வ நக்கும் கோவருக்கும் அனுமான் மற்றோர் 
ஆழ்வார்கள் ஆரியர் ஐம் பனட அ னந்தன் 
மா வருக்கம் இதைப்படிப்போர் கேட்போர்க் கெல்லாம் 
வளஞ்சொல்வான் ராகவன்மங் களஞ்சொல் வேனே . --ஆதி தாளம் -அசாவேரி தாகம் 

பல்லவி 
ஸ்ரீராமச்சந்திரனுக்கு செயமங்களம் - 
நல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம் 

அநுபல்லவி 
மாராபி ராமனுக்கு மன்னுபரந்தாமனுக்கு 
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோபனுக்கு 

சாணங்கள் 
கொண்டல்பணி வண்ணனுக்கு கண் மங்களம் 
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் 
புண்டரீகத் தாளனுக்கு 
பூச்சக்கிர ஆளனுக்கு 
தண்டுளவத் தோளனுக்கு 
சானகிம ணாளனுக்கு 
கோவைமணி வாயனுக்கு மாயனுக்கு மங்களம் 
கோதண்ட கையனுக்கு மெய்யனுக்கு மங்களம் 
தாவுகுண சீலனுக்கு சத்தியவி லாசனுக்கு 
தேவர் அனு கூலனுக்கு 
தெசரதன் பாலனுக்கு 
பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு மங்களம் 
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம் 
( ஸ்ரீராம ) 
( ஸ்ரீராம ) 

சகல உல் தருமந்த அகிலவி அயோத்தியா 
லாசனுக்கு 
காசனுக்கு 
லாசனுக்கு 
வாசனு பக்கு 
( ஸ்ரீராம் பாயிரம் முற்றிற்று . 

------------------
 
கம்பராமாயண ஒப்புமைப் பாடல்கள் 


இராம நாடகம் --பாயிரம் --அனுமார் தோத்திரம் 

வெண்பா -1 
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி 
அஞ்சிலே ஒன் றாறாக ஆருயிர் காக்க ஏகி 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண் டயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான் 

காப்பு - மிகைப்பாடல் 10 

பெருமாள்  தோத்திரம் -விருத்தம் -2 
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் 
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
அலகிலா விளை யாட்டுடை யார் அவர் 
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே 

ஆதி யந்தம் அரிஎன யாவையும் 
ஓதினார் அல குள்ளன இல்லன 
வேதம் என்பன மெய்ந்நெறி நோன்மையான் 
பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார் 

பாயிரம் - கடவுள் வாழ்த்து 

ஒன்றாய் இரண்டு சுடராய் ஒருமூன்றுமாகிப் 
பொன் றாதவேதம் ஒருநான்கொடு ஐம்பூதமாகி 
ன்றாகி அண்டத்தகத்து ஆகி அப்புறத்துமாகி 
நின்றான் ஒருவன் அவன் நீள்கழல் நெஞ்சில் வைப்பாம் 
நீலமாம் கடல் நேமியந்தடக்கை 
மாலைமால்கெட வணங்குதும் மகிழ்ந்தே 

பராவ அரு மறைபயில் பரமன் பங்கயக் 
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினால் 
அரா அணைத் துயில் துறந்து அயோத்திமேவிய 
இராகவன் மலரடி இறைஞ்சி ஏத்துவாம்  

முத்தமிழ்த் துறையின் முறை போகிய 
உத்தமக் கவிஞர் கட்கொன்று ணர்த்துவென் 
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் 
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ 

தேவ பாடையின் இக்கதை செய்தவர் 
மூவ ரானவர் தம்முளும் முந்திய 
நாவி னான் உரை யின்படி நான் தமிழ்ப் 
பாவி னாலிது உணர்த்திய பண்பரோ 
 
நாராயணாய நமவென்னும் நன்னெஞ்சர் 
பாராளும் பாதம்பணிந்து ஏத்துமா றறியேன் 
காராரும் மேனி கருணாகரமூர்த்திக்கு 
ஆராதனைஎன் அறியாமை ஒன்றுமே 

இறுவ ரம்பில் இராமஎன் றோர்உம்பர் 
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் 
மறுவில் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் 
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ 

அன்ன தானம் அகில நல் தானங்கள் 
கன்னி தானம் கபிலையின் தானமே 
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவர் 
மன்னி ராமன் கதைமற வார்க்கரோ 

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு 
பூசை முற்றவும் நக்குபு புக்கென 
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக் 
காசில் கொற்றத்து இராமன் கதையரோ 

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற் றேன் எனை 
வைத வைவின் மராமரம் ஏழ்துளை 
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை 
செய்த செய்தவன் சொல்நின்ற நேயத்தே 

ஆதியாய் நடுவாகி முடிவுமாகி 
அண்டப கிரண்டமுமாய் அனைத்துமாகிப் 
போதினை ஆலினை வெள்ளிப் பொருப்பை விட்டுப் 
புகழ்பொறைகள் தருமமெலாம் பொலிந்து நல்ல 
நீதிசேர் அயோத்தியில்வாழ் தசர தேந்திரன் 
நெடியமா தவத்தினில்வந் துதித்தஎங்கள் 
சோதியா கியராமன் நாடகத்தைச் 
சுயஞ்சொல் வான் மகிழ்ந்து தோடயஞ் சொல்வேனே . 

எவரும் வணங்கிய ரகுராமன் எதுவும் நினைத்தது தருராயன் 
ரவிகுலசுந்தா செயராமன் நாடகத்தைச் சொல்லவே ஆஆ ! 
கவளநெடுங்கர தலசாமி கமலதிரியம்பகம் உளசாமி 
பவனிவரும்கெச முகசாமி பா தபற்பந்துணையே யெ செயா ! 

துணிவுள புசபெல ராவணே கரன்முடி பொடிபட மோதுமால் 
அணிபெறு தசரத ராமநா கமதுஉரைசெயவேவ ஆ ஆ ! 
திணிதரு புயமிரு நாலுசேரி திசைமுகன் இசைபெறு நாவில்வாழ் 
மணமிகு சரஸ்வதி பாத்தா மரை எனதுதுணையே செய் செயா ! 

கோனொடு வானவர் தேடவொரு கோசலை யாள்விளையாட வரு 
ஞானகிரு பாகர ராமகதை நாடகமா சொலவே ஆஆ ! 
வானவ னாம் மண வாளமுனி மாருதி நீர் கரு டாதிபதி 
சேனையர் கோனுடனே பதின்மர் சேவடிகள் துணையே செய செயா ! 

வாசவன்மாகாரொடு லோகாந்திர வாசிகள் பூசுரர் இவர் ஏகாந்த 
பூசிதராகவனிட ஆராய்ந்த புகழது உரைசெயவே ஆ ஆ 
காசினி மீதனில் மிகுமூடாந்த காரம் தோடவே வருதோந்த 
தேசிகர் தாமரை மலரே போன்ற திருவடிகள் துணையே செய செயா 

திருமகள் சானகிசேரும் வாமன் செயமொடு கோசலம் வாழும் நேமன் 
கருமணியே நி க : 21 கும் ராமன் கதையது உரை தெ GFS ஆஆ ! 
குருகையில் மேவிய காரிமாறர் குணநிதியாகிய பாஷ்யகாரர் 
மருளறு தேசிசர் மாசிலாத மலரடிகள் துணையே பெயசெயா 

மைக்கடல் வாய்விண்டு பொங்கவே வைத்தொரு பாணம் துரந்தமால் 
விக்ரமராமன் பிரபந்தம் ஆம் விந்தையது சொலவே ஆ ஆ 
பக்குவமாம் அன்பு கொண்டுவாழ் பத்தரை ஆளும் திறங்கள் சேர் 
சக்கர கோதண்டம் தண்டம்வாள் சங்கம் இவை துணையே செய செயா . 

அரசியல் கட்டியம் வசனம் 

அசோடாதிராசன் மகாதேசப் பி , க சன் 
ராச பரமோன் தேசநர மீசுரன் 
ராச மார்த்தாண்டன் ரணரங்கோத் தண்டன் 
ராச கெம்ரன் நேச சபீரன் 
பாஸ்கர குலதிரன் சிலாக்யமுள வீரன் 
புத்தியில் கஸ்பதி வித்தையில் சரஸ்வதி 
நயகுண சீலன் பாலன் 
நல்லார்க்கு மித்துரு பொல்லார்க்குச் சத்துரு 
சுசரிதசண நேசன் தசரத மகராசன் 
மனு நீதி கோணாமல் சனவேதை தோணமல் 
ஆறில் ஒரு கடமைகொண்டு மாறு டு பகையை 
திங்கள்மும் மாரிபெய்ய எங்கும் முப்போகஞ் செய்ய 
செங்கோல் முகம் சாயாமல் வெங்கோல் முகம் பாயாமல் 
பயன அறு தினாயிரம் வருஷம் பகவும் புலியும் ஒருதுறையில் நீர்உண் 
ராச்சிய பரிபாலனம் பண்ணின கீர்த்தியைச் சொல்லுகிற மார்க்கம் 
மகராசன் அசமகா ராசன் ஈன்ற 
மகராசன் மிகு சூரிய வங்கிச ராசன் 
சுகராசன் கௌசலைநா யகிகைகேசி 
சுமித்திரையாம் தேவியர்கை தொட்டராசன் 
மிகராசர் பணிந்திட இந்திரனைக் காத்த 
விசயதசரத ராசன் அயோத்தி வாழும் 
செகராசன் ஒருவன் மனு நீதி யாலே 
தேசமெல்லாம் ஒரு குடைக்கீழ்ச் செய்தாண் டானே -தரு -1 --சாவேரி ராகம் -திரிபுடை தாளம் 


பல்லவி 

ராசரா சர்க்கும் ராசன் - தசரத ராசன் இருந்தானே 
( ராச ) 

அநுபல்லவி 

தேச் திலகன் அ யோத்தி நகர்க் கொரு திலகன் ரவிகுல திலகன் ஆகவே 
( ராச ) 
சரணங்கள் 

செழிக்கவே 
ஒரிக்கவே 
மந்திர தந்திரமும் நித்திய நைமித்தமும் 
மகங்களும் தினம் 
வன்புலி யோடு பசுவும் ஓர் துறை நீர் 
உண்டு கொண்டு பயம் 
இந்திர பதமும் குபேர கனங்களும் 
எவரும் சிறிதென்று 
எங்கெங்கும் மூப் போகம் விளையவே 
திங்கள் தோறும் மும்மாரி 
பழிக்கவே 
கொழிக்கவே 
( ராக ) 
பாயாமலே 
நாலு வர்ணா சிரமங்களும் சொன்ன 
நடை புரண்டு 
நரர்க்கும் வேறுள உயிர்க்கும் வயதுகள் 
நடுவிலே 
கோலமாகிய மிருகமும் பறவையும் 
குறிகடந்து 
தேயாமலே 
மேயாமலே 

குடியில் ஆறிலொரு கடமை கொண்டுசெங் 
கோலின் முகம்  சாயாமலே 

(ராச ) 

மறுமங்கை யருக்கும் மறுமன்ன வருக்கும் 
மார்பும் முதுகும் கொடாமலே 
வளரும் அஷ்ட லட்சுமியும்தன் அர 
மனையைவிட்டடி எடாமலே 
அறுபதாயிரம் வருஷமும் ஏ காதிபத்தியம் விடாமலே 
ஆரும் மனதில் விசாரத்தால் ஆ ராய்ச்சி மணியைத் தொடாமலே 

சக்கிரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் 

இருந்த தசரத ராசன் நெடுநாளாய்ப் புவியா ண்டோன் இடையே இந்தப் 
பெரும் புவியை ஆள்வதற்கும் முத்தியிலே சேர்ப்பதற்கும் பிள்ளை காணேன் 
அருந்தவனே குலகுருவே குலகுருவே வதிஷ்டமுனி யேபிள்ளை அதைநான் காண 
வருந்துவதில் லா வகையை மொழியென் றான் இதற்கென்ன வழியென் றானே- 

பல்லவி 

நான் பிள்ளையில்லாத பாக்கியம் 
பெற்றிருந் தென்னசி லாக்கியம் 

அநுபல்லவி 

வள்ளலே சென்மமலடன் என் 
வசைகொண்டேன் தசரதன் நான் 
சுள்ளியானது நெடுகள் 
காய் உண்டோ கனிஉண்டோ 
றொருகாலே 
புவிமேலே 
ளர்ந்ததாலே 
அதுபோலே 
மறுவில்லாது இந்தசூரிய வங்கிசம் இது 
வளரும் வங்கிசம் 
ஆச்சே - இது 
மழைபேய்ந் தடிமறைந்தாற் போல என் 
மட்டிலே நின்று 
போச்சே 
அறுபதி னாயிரம் வருஷமும் 
வருந்தும் 
அரசுதான் இனி ஆரைக்கொண்டு திருந்தும் 
குறைவில்லாத அந்த சஞ்சீவி 
மருந்தும் 
கொடுக்கும் தெய்வமும் நீதானே கிடைத் திருந்தும் 
( பிள் ) 
ஆனேன் 
பெருக்கக் காண்பதே காண்பதல்லால் 
பெறுவதொன்றும் காணேன் - மிகு 
பிச்சர்போல நெடுநாளும் உண்டஉண்ட 
எச்சிலை உண்ணல் 
விருத்தன் நான் இனித்தவ சில்லே 
வேணும் அல்லாமல் புவி ஆள்வதும் சிறப் பல்ல 
இருத்தும் வாழையடி வாழையாய்ப் 

புல்ல 
இவன் மகன் இவன் ஆம் என்று சொல்ல 

( பிள் ) 
மோந்தால் முத்தியும் வரும் பரத்திலே 
முத்தியும் கூட 
வருமே - மேலே 
காய்ந்தால் உடம்பெங்கும் குளிருமே 
தழுவஇன்பம் தருமே 
வாய்ந்த பொன்னுலகளவும் போய்ச்சனி 
மண்டலமும் திருத்திக் கொண்டேன் 
புவிதனி 
ஏந்தினேன் இல்லையே ஒருபிள்ளைக்கனி 
என்னவீ டென்ன வாசல் 
எனக்கினி 
( பின் ) 
பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு 
விருத்தம் -4 
மன்னவனாம் தசரதபூ பதியிவ் வாறு 
மக்களில்லாத் துன்பத்தை வதிஷ்ட னோடே 
சொன்னவுடன் அந்தமுனி வனும்தியானித்தான் 
சுரர்முதலா னவர்கள் மக மேருமேலே 
சின்ன அரக் கரைநடுங்கி வாழ்த்தும் போது 

சிறைக்கருடன் மீதினில் அச சுதனும் வந்தான் 
பொன்னின் மலர் அவன் பதத்தில் இறைத்தே கண்ணீர் 
பொழிகின்றார் அரக்கர் துன்பம் பொழிகின் றாரே --அசாவேரி ராகம் --ஆதி தாளம் 

பல்லவி 
கடைக்கண்ணால் இரங்கிப் 
காவாவிட்டால் இனிமேல் 
பார் அய்யா - பார்த்துக் 
ஆர் அய்யா 
( கடை ) 

அதுபல்லவி 
அடைக்கலம் என ஓட்ட 
ஆலைக் கரும்பு போல 
வந்தோமே - நாங்கள் 
நைந்தோமே (கடை ) 

சரணங்கள் 
சொர்க்காதி புவனமெல்லாம் 
துரத்தக் கும்பகர்ணன்தனை 
பக்கம் இந்திர சித்தென்னும் பெருங் 
பண்ணிவைத்தானே ராவணன் 
செக்குள்ளே அகப்பட்ட எள்ளுப் 
கைக்குள்ளே அகப்பட்ட எங்கள் 
தாவிக் - கொண்டு 
ஏவி - மற்ற 
கோவி ஆளப் 
பாவி போலே - அரக்கர் 
மேலே உனது ( கடை ) 


மெத்தத் அளகேசன் புஷ்பகம் கையிலே சூரியன்தேரும் 
தளர இந்திரனனக் கூடச் சருவகொள்ளை யடிக்கத் 
தனைவிட்டான் 
இலங் வரவொட்டான் 
சிறையிட்டான் - அரக்கன் தலைப்பட்டான் 
ஆமோ 
எளியோர்களை இப்படிஈனர் 
கிளியை வளர்த்துப் பூனை கிட்டக் 
ஒடுக்கல் கொடுக்கல் ஆமோ ( கடை ) 

பாவி அரக்கன் பேச்சே 
படைத்த பலங்கள் எல்லாம் 
பூவைவண்ணா அரக்கன் 
பொருப்பே அறியும்இனி 
மேலாச்சு - தாங்கள் 
மேல்பூச்சு - நல்ல 
கைவிச்சு . வெள்ளிப் 
ஏன் பேச்சு 

ராவணன் வதைக்கின் றான் எங்கள்மேல் என்ன கண்டோ 
தேவ நீ கேளா விட்டால் தீக்குத்திசை இன்னமுண்டோ ( கடை ) 

தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு 

 
இசையும்வா னவர்கள் கூடி இப்படிச் சொல்ல மாயோன் 
அசையும்வா ளரக்கர் தம்மை அகற்றுவோம் அஞ்ச வேண்டாம் 
தசரதன் மதலை பாகித் தரணியில் ளருவோம் கள் 
திசைதொறும் கவிகளாகிச் சேருமென் றுரைசெய்வானே -- 

அவதாரஞ்செய் அரக்கர் பயத்தை 

பல்லவி 

திடுவீரே 
விடுவீரே 
கனக 

அநுபல்லவி 
வாலியும் சுக்கி ரீவணும் ஆகிக் 
கண்ணா யிரவ னும்கதி ரோனும் போகி 
( அள ) 


சரணங்கள் 
சீலன் 
நீலன் 
காலன் 
பாலன் - 

ஆக 
அதிகமான ருத்திரன் அங்க சன் எனும் 
அக்கினி யேசேனைக் கதிபனான 
சதுர்முகப் பிரம்மாவே சாம்பவன் எனும் 
தரும்உ பேந்திரன் வாலிதனக்குப் 
சங்கமும் சக்கிரமும் சேஷனும்பரி 
தம்பியர் ஆய்வரத்தானே நாம்பூ 
துங்கனான தசரத ராசன் குறை 
சுருக்கா வருவோம் எவரும் அதின் முன் 
வானர வடிவாலும் மானிடவடி தானல்லா தரக்கன் சாகானே ஒரு 
ஆன படியினாலே அனைவரும்புலி கானிலும் இரும் காட்சி தருவோம் மென் 


வாகத் 
லோகத் 
போகச் 
பாகப் - போய் 


வாலும் 
காலும் 
போலும் 
மேலும் - எ ந்து 
 
பெருமாள் திரு அவதாரம் 

விருத்தம் - 6 


இவ்வகையா மாயவன் முன் நடந்த தென்றே 
எண்ணிமுனி கலைக்கோட்டு முனிவ னாலே 

அவ்வகையம் புத்திரகாமேஷ்டி தன்னை 
அயோத்தியா சனைக்கொண்டுசெய் வித்த போதின் 
பைவளரும் பாம்பணைமேல் பள்ளி கொள்ளும் 
பரமனே தசரதன்செய் பாக்கியத் தாலே 
மெய் வகை சேர் உலகெல்லாம் மனு விக்கியான 
விதிசெய்வான் அவதாரம் அது செய்வானே 


1) கௗலிபந்து ராகம் தி பல்லவி 
ஸ்ரீராமனாகப் பரப்பிரம்ம சொரூபமே பாரில் வந்தது பாரும் 
அதுால் ரவி வரத்தினால் அரக்கனர வானத்தில் ஏற்றவும் 
வானத்தில் தேவர்கள் மலர்மாரி தூற்றவும் ( பரட் ) சரணங்கள் தேற வேற

1. பத்தி முனிவன் கலைக்கோட்டு மா முனி பண்ணிய யாக பலன் 
சத்திய தசரதற் கறுபதினாயிரம் சம்வச்ர பலன் நிறை 
சித்திரை மாசம் நவமி கடகம் செழும் புனர் பூசம்தேன் 
ஒத்த கிரகங்கள் நால்வரும் பதினொன்றில் உச்சத்தில் ஐவரும் - ஆதி ஊற ( பரப் ) சேர



2. சீராரும் லட்சுமணன் சத்துருக்கன் சுமித் திரை வயிற்றில் நின்று பேர 
பாரார் புகழ் கைகேசி வயிற்றில் நின்று பரதன் வந்து புவி 
ஆராலும் கொள்ளாத ஆனந்தம் மேற்கொண்டு அம்புவியோர் இடர் தீர 
காராரும் குழல் வல்லி இருவர்க்கும் மேலான கௌசலைக் கண்களி கூர - ஆதி ( பரம் ) முடிக்க படிக்க


3. தேவர் முனிவர்பகை தீர்ந்தோம் என்று சென்னியில்பூந் துழாய் 
பூவுல கத்துள் வேதியர் எல் லோரும் புகழம்வே தாகமம் 
பாவி இலங்கையின் மேல் சூரியன் தேரிலுள்ள பச்சைப்பரி ஏழும் 

னாத இருக்கின்ற ராட்சதர் 
யாவர்க்கும் இடக் கண்கள் துடிக்க - ஆதி 
நடிக்க 
ராவண ( பரப் ) 

கௌசிகர் இராமனைக் குறித்துக் கேட்குதல் 

விருத்தம் - 7 
மைந்தர் இவ் வாறு வந்து வதிஷ்டனால் பேரும் பெற்றார் 
அந்த நாள் விசுவா மித்திரன் அணிதச ரதன் முன் வந்தான் 
இந்த நாள் எனது வேள்வி இராமனால் முடியவேணும் 
தந்திட இது நல் வேளை தாவென்றான் காவென்றானே 


தரு - 6 -மோகன ராகம் -அடதாளச்சாப்புத் தாளம் 

பல்லவி 
செகரட்சக 
ராமனைத் தருவாய் 
ராமனைத் தருவாய் ( ராம ) 

அநுபல்லவி 
தசரதேந்திரா 
தாமசம் செப்பாதே 
இப்போதே (ராம ) 


சரணங்கள் 
அரன்பக்கம் செல்வேன் 
அரிமுன்னே சொல்வேன் 
ரண்டும் தப்பினால் உனைவிட் டெவரால் பகை வெல்வேன் ( ராம ) 

பாவி வேள்வி தாடகைப் தவிர்த்தாள் என் 
பீடைவராமற் காத்தாற் பிழைக்குமென் 
ஆவி ( ராம ) 
( ராம ) 

உம்பர் விசாரம் ஒழிக்க அந் நேரம் 
சம்பர னைக் கொன்றாயே தயவாய் இந் நேரம் 
4. கோபத்தில் ருத்திரன் 
(சருவிசுவா மித்திரன் ஆபத்துக் காக்க வேணும் 
அதனால் உன் புத்திரன் (ராம ) 

சக்கிரவர்த்தி அதை மறுத்தல் 

விருத்தம் - 8 
சொல்லிது முனிவன் சொல்லத் துடித்தனன் தசர தேந்திரன் 
சில்லிது வேள்விக் காகச் சிறுபிள்ளை ராமன் ஏன் தான் 
சல்லியம் செய்யும் அந்தத் தாடகை தனைநான் கொல்வேன் 
பல்பல உரையேன் திராணி பார் என்பான் நேர் என் பானே . 
 
பல்லவி 
ராமன் இதுக்கோ அவன் வர 
நான் வருகிறேன் 
வேணும் 
காணும் (ராம ) 

அநுபல்லவி 
பூமி அரச னென்று நான் இருந்தென்ன 
சாமி.அவன்கை ஏந்துகுழந்தைப் கொள்ளை பிள்ளை ( ராம ) 

சரணங்கள் 
1. ஏனிந்த தோத்திரம் - தாடகை 
எனக்கெம் மாத்திரம் 
வானுளோர் வந்து தடுத்தாலும் அடிக்கிறேன் 
நானே வந்துன் வேள் வியை முடிக்கிறேன் (ராம ) 


2. பேயைக் கொல்வ தரிதோ - காரியம் 
பெரிதோ வீரியம் பெரிதோ 
ஆயுதம் பிடிக்கறியான்கேளாய்ஒரு சொல்லை 
வாயில் முலைப்பால் மணம்மாற வில்லை (ராம ) 

3. கவலை ஏன் கொண்டாய் - என் முன் ஒரு 
காலும் வராள் கண்டாய் 
அவளையும் படையையும் அடிக்கிறேன் பாராய்பாராய் 
இவனால் என்ன எழுந்திரு வாராய்வாராய் ( ராம ) 


வதிஷ்டர் தகவுரைத்தல் 

விருத்தம் - 9 
இனமதில் அயோத்தி வேந்தன் இதுசொல்ல விஸ்வா மித்திர 
முனிவனும் கோபம் செய்தான் முன்னின்ற வதிஷ்டன் கண்டான் 
உனதுமைந் தனுக்கு மன்னா யோகநாள் வந்த தென்று 
கன மு ... ன் விரித்துச் சொல்லிக் காட்டுவான் கூட்டு வானே 

முரி ராகம் ஆதி தாளம் 
பல்லவி 
மோசம் வாரா தைய்யா நான் சொன்ன வார்த்தை 
மோசம் வாரா தைய்யா 

அநுபல்லவி 
கோசிகன் பின்னே ராமனைக் 
கூட்டி விடுவாய் சொன்னேன் ( மோச ) 

உப்பு நீர் மேகம் சேர்ந்தால் உலகிற்பிரவாகம் 
அப்படிஉன் மகனுக்கு அடித்ததே யோகம் ( மோச ) 
றுவுண்டோ வதிஷ்டன்சொல் வாத்தைக்கும் ரண்டோ 
பொறு பொறு முளைப்பாரைப் புதைப்பாரும் உண்டோ ( மோச ) 
போதிக்க வேண்டாம் நாள் சொல்வதே லேம் 
ஆதித்தன் குலத்திற்கின் றனு கூல ( மோச ) 

கௌசிகர் இராமனுக்கு நீதி சொல்லுதல் 
விருத்தம் - 10 
முனிவ நிஷ்டன் இவ்வாறு சொல்ல வேந்தன் 
முறையாலே ராமனைலட் சுமண னோடே 
இனிதழைத்துக் கூட்டி விட்டான் வழிக்கிவேண்டி 
இருவரும்மந் திரங் கொண்டார் வெயில் படாமல் 
தனிநடந்தார் வேள் வியில் தா டகையும் வந்தாள் 
சாமியும் பெண் என நினைந்தான் முனிவன் அந்த 
நினைவறிந்தான் பெண் இவளோ அல்ல ராமா 
நில் என்றான் இப்பொழுதே கொல் என்றானே 
 
கலியாணி ரகம் -ஆதி தாளம் 
பால் சவி பெண் இவள் அல்ல 
வண்ணங் கெசண்டநமன் இவள் 
மண்ணில் மெத்த உயிரை வதைத்த நிர்ம் 
கண்ணில் கண்டது கோடி காணாத னந்தம் கோடி ( பெண் )  

சரணங்கள் 
இஷ்டமா முனிவர் என்றொரு திருக்கும் கடலுக் கிவள் பெருத்தமந் 
ஷ்டகாசம் செய்தால் அதுவொரு அண்டகூட மெங்கும் இடியுமே 
எட்டுத் திசையிலும் ஓடி முட்டுமே 
முட்டினால் மலையும் பிளந் திட்டுமே 
எட்டியும் பார்க்கக் கூடுமோ கிட்டி ஒரு 
விட்டு நான் சொல்ல வேணுமோ மட்டில்லாப் 
இவள் ஆதாளி 
தூளி தூளி 
காளிகூளி 
பாவசண்டாளி ( பெண் ) 

ஆயிரம் குணம் ஒரு லோப குணத்தால் தட்டும் 
அதுபோல் இம் மருதத்தை அழித்தாலும் அழிக் கட்டும் 
இவள் பேர் சொன்னால் முனிவர்க்கும் பல்லு கிட்டும் 
வற்றல் என்றெம் மைத்தள்ளி வைத்தாலே இம் மட்டும் 
தூயதிசையானை எட்டும் ஈயெறும் பாய் விழக் காட்டி 
வாயில் ஒருபல் லிடுக்கிலே அடக்குவாளே கூட்டி 
தீயவடவாக் கினிபோல் பாயுவாள் கைகளை நீட்டி 
பேயையும் பிடுங்கித் தின்னும் பேயென வந்த வெள் ளாட்டி ( பெண் ) 
3. ஒரு குமதி யென்னும் பெண்ணைப் பிளந்தான் இந்திரன் அப்போது 
ஒரு பெண் கிய தியை மாயன் ஒழித்தானே 
புவிமீது பெருமானே இவள் அந்தப் பெண் எனவும் கூடாது 
பெண் என்றால் பேயும் இரங்குமே அதிவ ரூக்கேது 
இருடிகள் உடம்பை மெத்த உருகை என்று கண்டுகொண்டே 
பெருமகம் செய் வோரைக் கொல்ல வருகிறாள் இதென்னமுண்டே 
நிருதி இவளைப் பெண் ணென்று கருதுகிறாய் என்ன கண்டோ 
ஒரு நொடியில் கொல்ல வேணும் குருமொழி தனக்கும்ரண்டோ ( பெண் ) 


தாடகை முதலானவர்கள் வதம் 
 
செய்தி களை இவ் வாறுரைக்கச் சிரமேற் கொண்ட ரகுராமன் 
வெய்து வணங்கிக் குருவிசுவா மித்திரன் சொல்லே வேதச்சொல் 
மையம் எனவே மகங்காக்க வரிவில் வளைத்தான் தாடகையும் 
எய்த பாணம் பட்டுருவி எழுந்தாள் மலைபோல் விழுந்தாளே 

 
நாமநாதக்கிரியைராகம் -அடதாளசாப்புத்தாளம் 
பல்லவி 
பொல்லாக் கொடிய தாடகை பா வி விழுந்தாள் 
கொடிய தாடகைபாவி விழுந்தாள் ( கொடி ) 

அநுபல்லவி 

கொடிய தாட கைபாவி விழுந்தாள் - செம்பொன் 
முடியன் ராவணன் வெற்றிக் கொடிவிழுந்தாற்போல் ( கொடி ) 

சரணங்கள் 
 
காலன் உரைத்த தேவர் துன்பம் 
ஒருக்காலும் காணாத ருசிகண்டு 
அரக்கர் ஆதிக்கங்கள் அனுகூல காலங்கள் முனிவர்க்குப் 
பறக்க 
இறக்க 
நல்ல ( கொடி ) 

மூதண்ட கோடிக்கப் 
முழங்கவிசுவாமித்திரன் சாலைக்கிய 
கோதண்ட பாணியம் 
குலைந்து புரண்டலறிக் கொண்டு மட் 
பாலே 
பாலே 
நிலை ( கொடி ) 

நடலை வஞ்சனை மாயம் 
நான் கொண்டு முதற்பலி அரக்கரைக் 
கடின சுவா குபட்டுப் 
கணையாலே மாரீசன் கடலோட்டம் 
படுக்க - ராமன் எடுக்க ( கொடி ) 

அகலினக சாபவிமோசனமும் சரித்த்ரமும் விருத்தம் - 12 
தாடகைதான் விழுந்தபின் தேவர் சொல்லச் 
சகலபடை . கரும் கொடுத்தே முனிவர் எல்லாம் 
கூடவரக் கௌசிகையே முதலாம் தீர்த்தம் 
கொண்டாடிக் கௌதமன் ஆ சிரமம்சேர் போதில் 
காடதிலே ரகுராமன் பதத்தூள் சிந்தக் 
கல்லுருப் போய் நல்லுருளாய் விளங்கிநின்ற 
பாடகக்கால் அகலிகையை இவள் ஆர் என்னப் 
பரந்துவிகவா மித்திரமுனி பகர்கின் றானே , 
 
தேவி இவள் ராமா கௌதமன் 
ஆவி இவள் ராமா ( தேவி ) 
 
சரணங்கள் 
மாபத்தியால் கங்கை ஆடத்தடை 
மாமுனிகண்டு வெகுண் டுபயஞ் 
கோபத்தினால் இடு சாபமொழி 
கூறையிலே கரும் பாறைவடி 
பெற்ற 
சுற்ற 
மெத்த 
வுற்ற ( தேவி ) 

வெம்பிய மாமுனி கண்ணில் எதிர்ப் பட்ட 
வேளையிற் கண்டு பொறாமல் முனி திட்ட 
அம்பொன் முடிதொட் டடியளவும் முட்ட 
ஆயிரங்கண் அந்த வாசவனுக் ( தேவி ) 

கெந்த ஞானத்தினால்உன்னை ஓதினபேர்க் 
நன்மையுண் டாமோ அறி யேன் இப்போ திந்த 
கானத்திலே உந்தன் பாதத் தூள்கள் 
கல்உரு மாறி அகலியை யாய் வந்த 
சிந்த ( தேவி ) 


ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல் 
விருத்தம் - 13 
இட மாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண 
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒரு மா மணிமேடையில் சீதை 
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன் 
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரகம் கொண்டானே 

பல்லவி 
ஆரோ இவர் யாரோ - என்ன 
பேரோ அறியேன் ( ஆரோ ) 


அநுபல்லவி 
கார் உலாவும் சீர் உலாவும் மிதிலையில் 
கன்னி மாடந்தனில் முன்னே நின்றவர் ( ஆரோ ) 

பண்ணிப் பதித்தாற் போல் இரு பாங்கியர்கள் இன்ன முந்துரைத் 
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் 
பெண்ணைப் போல் கண்ணிற் காணும் 
ஸ்தனமும் -- 
தனமும் 
பங்கயப் 
மங்கையார் ( ஆரோ )

சனமே- அதிங்கே 
மனமே 
பெண்கள் 
கண்கள் ( ஆரேயா ) 

பாக்கியம் என்ப திவர் தெரி 
பலித்ததென்ன புண்ணியமோ 
மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் 
பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ 
சந்திர விம்பமுக தானே பார்க்கிறார் 
அந்த நாளில் தொந்தம் போலே 
இந்த நாளில் வந்து சேவை 
மலராலே - என்னைத் 
ஒருகாலே 
உருகிறார் 
தகுகிறார் ( ஆரோ ) 

கௌசிகர் ஸ்ரீராமர் வரலாறு சொல்லுதல் 

விருத்தம் - 14 
மனதில் இந்தப் படி நினைந்து மறுநாள் எழுந்து மகஞ்செய்யும் 
கனக மணியன் டபத்தினிற்போய் காகுத்தனும் தம்பியு மிருந்தார் 
அனைய காலத் திவர்பெருமை அருமை தெரிய உரையு மென்றே 
சனகன் உரைப்பக் கௌசிகன்உத் தரிப்பான் விவரம் விரிப்பானே . 


பல்லவி 
( ஆரெ ) ரென் றெண்ணாமலே - நாளுமிவன் 
அதிசயங்களைச் சொல்லக் கேளும் 

அநுபல்லவி 
சூராதி சூரன் ராமன் எனும் பேரன் 
சுகுண தீரன் ரவிகுலகு மாரன் - இவனை ( ஆரெ )  
சியில் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய வென் 
பூதந் தந்தபர மானந்தத்தை நாலாகப் 
பொன்னின் கமலத்திலே 

எடுத்தான் அதில் 
சோதி கோசலைக்கொன்று கைகேசிக்கொன்றும் 
சுமித்திரைக் கிரண்டுமாக் கொடுத்தான் மூத்த 
பேதை கோசலை இடந்திந்த ராகவன் 
பிறந்தான் என்கவலையை விடுத்தான் வனை ( ஆரெ ) 
நான் தலையாம் பரதன் லட்சுமணன் சத்துருக்கன் 
தம்பியர் இவனுக்கு 
நேயம் மிகக் கொலையாளன் சுவாகுவையும் சேனையையும் இவனம்பு 
கொண்டுபோனதென்ன மாயம் - 
உலையா தென்வேள்வியை முடித்தானே இவனம்பால் 
உருண்ட தே தாடகை காயம் 
மலைபோலே வந்ததும் பனிபோலே போச்சிந்த 
மகராசன் செய்தச காயம் இவனை ( ஆரெ ) 

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே 
துடைத்தானே அவள் உடல் 
சொல்லும் 
பெருக்கம் என்ன . இவன் பிறக்கவே உலகெங்கும் 
பிறந்ததே மங்கல ஓசை - உங்கள் 
பருத்தவில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ 
பார்க்கவேணும் இன்னோர் 
ஆசை இங்கே 
வரச் சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலிவிலே 
வந்தானே நீங்கள் செய்த பூசை எனை ( ஆரெ ) 

ஸ்ரீ ராமர் வில்வளைத்தல் 

புங்கவனாம் முனிவனிந்த வாறு சொல்லப் 
போர்வில்லை அறுபதினா யிரம் . பேராலே 
அங்குவரும் படி செய்தான் இதைநாண் ஏற்ற 
ஆகுமென்றால் மருமகனே ஆகும் என்றன் 
சிங்கமெனும் சனகனுடன் விண்ணும் மண்ணும் 
திடுக்கிடவே எல்லோரும் ராமன் கையால் 
துங்கமுள்ள அந்தவில்லை வளைவு காணத் 
தொடக் கண்டார் இரண்டுதுண்டாய் விடக்கண் டாரே 

பல்லவி 
வில்லானது ரண்டாய் ஒடிந்து விழுந்ததே பாரில் ( வில் ) 

அநுபல்லவி 
கலியான ராமன் அனகன் கையால் 
மிதிலையில் வாழ் சனகன் ( வில் ) 


சரணங்கள் 
சுத்திப்பெறும் முனிலோர்கள் மங்கள சோபனங்கள் கூற 
பத்துத் திசை வானவர் எல்லோரும் பனிமலர்மாரிகள் தூற 
சித்தப் பிரமையாலே நாலிரு திசையானைகள் தலை பீற 
கத்திப் பிடியிடையாள் சானகி காதலெண்ணம் நிறை வேற ( வில் ) 

சிங்கார மகா ரவிகுலமே சிலாக்கியம் என்ன ஒளி வீச 
உங்காரம் செய்தரசர் எல்லோரும் ஒருத்தர் போல முகம் 
இங்கே பெண் சீதை செய்தவப்பலன் லபிச்சுதென்று பலர் பேச 
கெங்கா தரனல்லால் ஒருவருக்கும் கிளப்பொண்ணா தமகாப்பிர யாச ( வில் ) 

தருமாகம சாஸ்திரகோடிகளும் சகல வேதங்களும் 
வருமா முனிவிசுவாமித்திரன் சொல் மறுவில்லாதபடி 
ஒருகாலனும் இந்தஓசைதனை ஓர்க்கொணாமல் செவி 
திரமா இனி இவனே கோ தண்ட தீட்சா குரு என்று கொண்டாட ( வில் ) 


மிதிலைக்குச் சக்கிரவர்த்தியின் எழுச் 
நண்ணரிய வில்லது நாண் ஒடிந்த பின்பு 
நடைத்தூதர் கலியாண ஓலை காட்ட 
அண்ணல்எனும் தசரதனும் பயண பேரி 
அதுமுழங்கத் தேவியரும் படையுங் கூடத் 
தண்ணுலவு சந்திரகிரி பிறவும் சென்றான் 
சனகேசன் சதுரங்க தளத்தி னோடே 
எண்ணரிய களிப்பாக வழிமேற் கொண்டே 
எதிர் வந்தான் உடன்மிதிலைப் பதிவந் தானே . 
 
பல்லவி 
சனகமகா ராசனாம் தசரத ராசன் 
ராசன் பதிக்கு வந்தானே ( ராச ) 
அநுபல்லவி 
வாசவன் பணிராக 
வாசகம் கண்டுவிசு 
வேசன் கல்யாண ஓலை 
வாசநேசம் உண்டாகி ( ராச ) 


சரணங்கள் 
கொட்டமிடுங் கெசமும் 
அட்டமிடுந்துசமும் 
எட்டிய குதிரையும் 
கட்டிய தேர் நிரையும் 
இட்டமுள்ள ராசரும் 
அட்டாள தேசருமாய்ப் 
பட்டவர்த்தனர் 
ணங்க கப்பணம் 
இட்டு மறவர் 
வணங்க 
வட்ட வெண் குடையும் முடிகளும் துலங்க 
மகர தோரணங்கள் முறை முறை லங்க 
சட்டபான திசை எட்டின் மேலும் படை 
மட்டில்லாமல் 
கட்டியம் 
பெண்கள் 
கொண் 

உச்ச மாணிக்கத்தாலே அச்சுதன் தாய்முதலா 
இச்சையால் முன்னேபோ தச்சபல்லக்கின் மேலே 
மெச்சிய தேவிமார்கள் கச்செய்து பின்னாகவே பாங்கியர் 
பச்சைப் பைங்கிளி மொய்ச்சுக் கொண்டு என்னவே துன்னவே 
வச்சிர பாணி என்ன மலர் முகம் மின்னலே 
பண்ணும் விண்ணும் என்ன அதிசயம் என்னவே 
உச்சி மீது கரம் வைச்சு மன்னவர்கள் 
பேச எச்சரிக்கை கவரி  வெகுவி 


மெத்தப் பெருஞ்சேனைகள் 
சத்த மேகம் போல் ஆர்க்க 
சத்திர பதி சனகன் 
முற்றிய கடல் 
மற்றொரு கடல் 
சுற்றத் துந்துமிபேரி 
அத்திசையிலே நின்று 
நெற்றிநேராகவர 
மேலே புகுந்த 
போலே கலந்து 
மலர்ந்து 
பத்தியாக இரு படைகளும் 
பார்த்திரண்டுராசரும் முகம் 
வெற்றி ஏறியபு சத்திலே 
ஒற்றியணைத்து அவனை மிகுந்த 
மாற்றி 
கீர்த்தி 
மூர்த்தி 
யோத்தி 
படைத்த ( ராச ) 


ஸ்ரீராமர் பவனிவருதல் 

வந்ததச ரதராசன் தன்னை முன்னே 
வந்திருந்த ராமனும் தம் பியும் போய்க் கண்டார் 
அந்த இரு வருந்தந்தை அருளைக் கொண்டார் 
அரசர் இரு வரும்பின்னே வரமுன் சென்றார் 
பந்தமுள்ள மிதிலை வீதியிலே தே மேல் 
பவனி வரும் ராமனைக்கண் டாசை கொண்டு 
செந்திருவை நிகரான பெண்கள் பின்னே 
செல்லுவார் மதிமயங்கிச் சொல்லுவாரே 

வெகுமாதர் சோதி நெடுந் தேர்மிதிலை வீதியினில் வரக் கண்டு 
சுவாமி முகம் காணவந்தார் 
பூதலந் தனில் இந்தவூர் மாதவம் என் செய்ததோ புண்ணியன் வந்தான் என்றார் 

வெகுமாதர் 
ஆடகலோகத்தமுதை ஈக்கள் மொய்த்துக் கொண்டதைப் போல் 
ஐயனை மொய்த்துக் கொண்டார் 

வெகுமாதர் 
கோடைதனிலே தண்ணீர் ஓடைகண் ! - மான்கள் போலக் 
கூடிக் கொண்டோடி வந்தார் 

வெகுமாதர் 
ஆழியும் வளையும் செம்பொன் ஓலையும் மாலையும் விட்ட பின் 
ஆடை விடாமல் நின்றாள் 

ஒருமாது 
கேள்வி முறை யில்லையோ சுவாமி உன் முன்னே : அம்பாலே 
கிழிக்கின்றான் மாரன் என்றாள் 

ஒருமாது 
பெருத்த மலைபோல் வில்லை ஒடித்தாயே சீதைக்காக 
பெலத்தவன் நீயே என்றாள் 

ஒருமாது 
வருத்தமோ மாரன் கையில் கருப்பு வில்லை ஒடிக்க 
மாட்டாயோ சுவாமி என்றாள் 

ஒருமாது 
கண்ணுக்கோர் உருவாய்ப் பார்ப்போர் கண்ணிலெல்லாம் தோன்றுமிவன் 
கண்ணனே யாகுமென்றாள் 

ஒருமாது 
மண்ணும் விண்ணும் கடந்தானை கண்ணால் வளைத்துக் கொண்டாளே 
வைதேகியே பெண்ணே என்றாள் 

ஒருமாது 
சாய்த்தொருவரையும் காணாள் சாமிதனையே கண்டாள் 
தனியனோ ராமன் என்றாள் 

ஒருமாது 
வார்த்தையும் உடைமைகளும் பூந்துகிலும் சோர்ந்தாளுயிர் 
மாத்திரம் சோராமல் நின்றாள் 

ஒருமாது 
இங்கேயென் உளம் புகுந்தால் கண் கதவினாலே மூடி 
இறுக்குவேன் இவனை என்றாள் 

ஒருமாது 
மங்கையரே என் மனது வள்ளல் பின்னே போச்சு தங்கே 
வரக் கண்ட துண்டோ என்றாள் 

ஒருமாது 
தன் மருக னாக இந்த மன்னனைப் பெற்ற சனகன் 
தர்மவான் என்று சொன்னாள் 
கன்மனதுக் காரனிவன் தன் மகளுக்காகவில்லை 
ஏன்வளைக்கச் சொன்னான் என்றாள் 

ஒருமாது -சீதை சபாமண்டபத்துக்கு வருதல் 

பாவையர் இப் படியுருகப் பவனி வந்தான் 
படையரசர் தசரதனும் பலரும் வந்தார் 
மாவிசுவா மித்திரனுடன் தம்பி மாரும் 
மருங்கிருக்க ராகவனும் இருந்தான் இப்பால் 
தாவு புகழ் வதிஷ்டமுனி வார்த்தை கொண்ட 
சனகன்உரை கொண்டு மணி மண்ட பத்தில் 
பூவுலகில் தேவர் சிறை மீட்க வந்த 
பொருளினால் சீதையெழுந் தருளி னாளே 

பல்லவி 
அன்னை சானகி வந்தாளே ராசாதிராசர் 
அனைவர்க்கும் காட்சி தந்தாளே ( அன் ) 

அநுபல்லவி 
கன்னிமார் என்னும் தாரா கணத்தில் சந்திரனை நேரா 
பொன்னின் ஒளியும் பூமணமும் கொண்டு தொடர்ந்து 
மன்னன் சனகமணி மண்டபத்தில் நடந்து ( அன் ) 


சரணங்கள் 
சுந்தரப் பாதம் வைக்கவே 
சோதி நிலத்தில் மொய்க்கவே 
தந்தாய் மகளுக் கென்னவே 
தளிர்போல எங்கும் மின்னவே 
அந்த அமிர்தங் கொண்ட ஆகிய ராமர் முன்னே 

ரத்தினச் சிலம்பின் பூமியாகிய விரித்ததேமாந் 
இந்திரன் போலே தாகம் தோகையர் நடுவாக 
கந்தமலர்க் கைவளைச் சோதியினாலே ரண்டு 
கடைக் கண்கள் கொண்டு ராமன் 
வடிப்பங்கள் கண்டு கொண்டு ( அன் ) 
இடும்போதவன் 
அம்மன்கையான 
காட்டும் சூரியன் போல் 

வீரராமன் கை தீண்டியே 
மென்கை பிடிக்க வேண்டியே 
வாரீச மலர் விரித்துக் 
மாணிக்கக் கங்கணம் தரித்து 
சோர நடைகண்டு 

துவளும் அன்னங்கள் போலக் 
ஸ்ரீராமனை விடுத்து 

தெய்வம் இவள் என்றெண்ணிக் 
கைகள் அஞ்சலி செய்ய 
நேராகாமல் மெத்த 
கவரி மங்கையர் சுற்ற 
ஆர் ஆருக்கும் துய்ய ( அன் ) 
பூர்ணச் சந்திரன் போல் மாலிகைசூடி தேவர்கள் செய்த னாலே 

சீவிய கூந்தல் மேலே தெரிந்திட ஒருக் 
காலே தரவில்லாமல் முன் 
தவம் வெளி வந்தாற் போலே 
மூவுலகும் செலுத்தும் 
முத்தி கொடுக்க வந்த 
தேவி இவள் என்றால் 
சிலையோ ஒடி 
மலையும் ஒடிப்பான் என்ன 
ராவணனுக்குப் 
பண்டு 
சித்திரவடிவைக் கொண்டு 
ராகவன் இந்தச் சின்ன உப்பான் ஏழு ( அன் ) 

சொல்ல என்றாலும் இந்திரா ணி முதல்  ராமனும் காண 
நாணுமே 

தெரிசனம் காணப் போகுமோ சேஷனாலேயும் ஆகுமோ 
அரிவையர்க்கும் மெய் அனந்தம் கோடிக்கண் வேணுமே 
பிரமன் முதல் எதுவும் உருவினில் இனிவேறு 
அருமையா உலகிற் கல் திருமங்கிலியத்தில் இடும் 
பெற்றவளுக்கு நல்ல உடைமைகள் என்னசொல்ல 
யாணத்திற் பெண்கள் திருவாகிய எங்கள் ( அன் ) 


ஸ்ரீ ராமர் மணக் கோலம் கொள்ளுதல் 

விருத்தம் -.19 
சீலம் கொண்டிப்படி வந்த சீதை மாதரொடும் சென்றாள் 
மூலங் கொண்ட கௌசிகனும் முகுர்த்தம் நாளை என்று சொன்னான் 
ஓலங்கொண்ட வேதன் முதல் ஓராயிரத் தெட்டண்ட மும்தன் 
கோலங் கொண்ட ராமன் மணக் கோலங் கொண்டான் கொண்டானே 
ராமசாமி கொண்ட கோலம் என்னாலே சொல்லப் போமோ 

அனுபல்லவி 
கோமிதிலை ராசன் முன் அனேக  கோடி மன்மதனே நிகராக 

சணங்கள் 
பாத சடகம் சேர்த்திரு மருங்கினில்  பசும் பொன்னாடை  போர்த்தி மார்பின் 
மீது பொன்னூல்  ஏற்றிதன் நாமமும்  விளங்கவே  சார்த்தி 
சீதை ஆசையிது  எனப்பா ராட்டி தெரிந்த சந்திர சூரியர் 
அதை நாட்டி ஓதிமாறு காதிலே ஒளிக் காட்டி குண்டலங்கள் பூட்டி (ராம ) 

வரித்து நவரத்தின தொங்கள் மாலை 
பரித்து முடிமேல் விமல மகுடம் 
தரித்து பீதாம்பரம் மேனிமேலே கமல மாமலர் நாண 
கங்கணங்கள் செங் கையினிற் பூண 
அமிர்த முகச்சீந்திரன் போல் முகங் காண 
யோககல் யாண் வன்ன வன்னம் ஆனமணிகள் 
பச்சை மேகம் போலே காந்தி விளங்கும் மேனியிற் கலவை ஏந்தி (ராம ) 

வாகுமந்தர கிரிமுறுக் வாசுகீஎன மணிவகை 
நாகரீக கேயூரம் ஒளி வீரகோ 
குண்ட 
கொண்ட 
மண்ட 
தண்ட 
லியாணச் சடங்கு செய்தல் 
 
சக்கிரபதி ஆகிய ராகவன் இவ்வாறு 
சமைத்தநல்ல மணவாளக் கோலங்கொண்டான் 
அக்கணமே தம்பியரும் கோலங்கொண்டார் 
அரசர்களும் தசரதனும் மந்திரிமாரும் 
திக்கில் உள்ள முனிவரும்வே தியருங்கூடித் 
திரைகடல்போல் மிகப்பொங்கி மிதிலைதன்னில் 
முக்கியமுள்ள பலசடங்கின் விதிகள் எல்லாம் 
முறைசெய்தார் கலியாணத் துறை செய்தாரே 


கண்ணிகள் 
கல்யாண பேரிகை அடித்தார் - சனகன் 
சொல்லிய வார்த்தையைப் படித்தார் 
எல்லோரும் ஆனந்தம் கூடினார் - அவர் 
எங்கெங்கும் நின்றுகூத் தாடினார் 


வாழை கமுகுகள் நாட்டினார் - நெடு 
வானமட்டும் பந்தல் ஓட்டினார் 
ஆழிபோலே திரை அமைத்தார் - அலங் 
கார வேதிகை சமைத்தார் 
தூணுக்குத் தூண்உறை பூட்டினார் - சந்திர 
சூரியர் போற் கண்ணாடி மாட்டினார் 
காணுக்குச் சாண்மாலை தொடுத்தார் - தங்கத் 
தாலமும் கும்பமும் எடுத்தார் 

பொன்னரி மாலைகள் பொன்னும் பவளமும் கின்னரி வீணைகள் 
கேளிக்கை மாதர்கள் வீக்கினார் - முத்தும் தூக்கினார் மெத்த 
பாடினார் ஆடினார் பூரண கும்பங்கள் பூசுரர் வேதத்தால் 
தோரணத் தால்வெளி சொர்ண வருஷமா பதித்தார் முக்கிய 
துதித்தார் மறைத்தார் - எங்கும் இறைத்தார்  

மாணிக்கத் தீபங்கள் வாடை கஸ்தூரிகள் ணிப்பொன் னாடைகள் 
ஆலைத் தெருவெங்கும் ஏற்றினார் நல்ல தீற்றினார் சாத்தினார் -பனிநீர் ஊற்றினார் 
தீட்டினார் - பஞ்ச 
நாட்டினார் 
கூட்டினார் - நறுந் 
காட்டினார் 

சந்தனத்தால் கோலம் தருவையும் நன்றாக  சுந்தரப் பாலிகை தூபமும் தீபமும் 
பொன்னால வட்டமும் புஷ்பமும் விந்தமும் தன்னார வண்ணமாக் தங்கப் பொடிகளாக் 
பட்டமும் திவ்விய குந்தமும் கட்டினார் எங்கும் கொட்டினார் 
மத்தளம் மல்லரி வாத்தியம் நரகெச தித்திகளால் சக்கிர செவிடு படுமே அண்ட 
தாளங்கள் பஞ்ச மேளங்கள் வாளமும் திக்கும் கோளமும் 
சனகனும் தசரத சவனுடனே அள கனிவுள சந்தோஷம் 
கலியாண மண்டபம் பாசனும் கேசன்போல் மீறினார் வந்து ஏறினார் 

வெள்ளை விடையினை வேணி யரன்வந்து வள்ளியும் கந்தனும் மைந்தன் வல்லபையும் 
ஊர்ந்தார் - உமை 
நேர்ந்தார் 
சேர்ந்தார் - மூத்த 
கார்ந்தார் 

வேதனும் வாணியும் நாடினார் - தேவேந்திரன் இந்திராணியும் கூடினார் 
மாதவர் தேவர் மென்மேலே -அந்த மண்டபம் சேர்ந்தார் இப் பாலே 
மங்களம் ஆம் ராமச் வங்கிச மணியான கங்கைமுதல் தீர்த்தம் கலவைச் சலவைகள் 
சந்திரன் - சூரிய 
தந்திரன் 
ஆடினான் - மிகக் 
சூடினான் 
 
மாலை மகுடமு வாகு வலயம்ச காலணி கைவளை கங்கள் முதல் அலங் 
கத்தணி - பட்டம் ரப்பணி பாரித்தார் - பதக் காரித்தார் 
தனதாம் பரதன்கை தம்பியர் சாமரை கனக ரதங்கண்டு கலியாண வேதிகை 
நீட்டவே - மற்ற ஆட்டவே தாவினான் - ராமன் மேவினான் 

எப்பொ ருளும்பெற்ற கோதையை - அஷ்ட லட்சுமியும் ஆன சீதையை ஒப்பனை செய்யவும் 
தேடுமோ - என் ஒருத்தனாலே சொல்லக் கூடுமோ 

பூமியுள் ளோர்க்கெல்லாம் ஆவியை - நல்ல பூவைஎனும் சீதா தேவியை சாமி அருகினி லே தந்தார் --வ திஷ்டரும் தருப்பை கொண் டூவந்தார் 


முத்தான தண்டுலம் விரித்தார்- வேத முறையே சடங்கெல்லாம் தரித்தார் 
உத்தம மந்திரம் விளைத்தார் - முனிவர் ஓமாக்கினியை வளர்த்தார்  
தான தருமங்கள் ஓங்கவே - ரா க்ஷதர்போய்ப் பூமிபாரம் வாங்கவே 
வானவ ருக்கின்பம் சுற்றவே - ஓமம் வலங்கொண் டெழுந்தது மெத்தவே 
சல்லாபன் ஆகிய தன்னை அந்தமிதி எல்லாரும் காண முன் ஈந்தானே ராமன்கை 
நேசன் - சீதை லேசன் னாலே - சொல்லி மேலே 
அய்யனும் தையல்கைப் பிடித்தான் - கலி யாணவிதி யெல்லாம் முடித்தான் 
செய்யவ ளுந்திரு மாலே - போலச் சேர்ந்தெழுந் தாரேமென் மேலே 


ஸ்ரீ ராமர் அக்கினி வலம் வருதல் முதலிய துகள் 
 
ராகவன் சீதையைப்பாணி கிராணம் செய்து 
நற்றியை வலம் வந்தான் சீதை பாதம் 
மோகமுடன் பற்றி அம்மி மீதில் வைத்தான் 

முக்காலும் அருந்ததிமுன் காட்டினான் பின் 
ஏகமன துடன்முனிவர் தந்தை தாய்மார் 

எல்லார்க்கும் சேவித்தான் அப்பால் இன்பம் 
கவொரு நன்மணையில் சீதை யோடும் 
அமர்ந்திட்டான் அண்டமெல்லாம் சுமந்திட்டானே . 

சோபனம் பாடுதல் 

விருத்தம் - 22 
மணம்உள்ள மலர்மாரி அந்த வேளை 

வானவர்கள் பாழிந்திட்டார் முனிவர் எல்லாம் 
கணம்உள்ள ஆசீர்வா தங்கள் சொன்னார் 

காவலர்கள் பொன்மலர்கள் சொரிந்தார் தாய்மார் 
பணம்உள்ள நல்வரிசை பலவும் ஈந்தார் 
பத்தியுள்ள பந்துக்கள் எல்லாம் மொய்த்தார் 
குணம்உள்ள சுமங்கலிகள் அங்கே வந்து 
கூடினாார் சோபனங்கள் பாடி னாரே 

பல்லவி 

சோபனம் சோபனம் சோபனம் சோபனம் சாமிக்கும் சீதைக்கும் ( சோ ) 
 
அநுபல்லவி 

பூபன் தசரத மதிக்கும்  புண்ணிய சனகபூபதிக்கும் 
சோபனம் சோபனம் ( சோ ) 

சரணங்கள் 

தாமம் மேவிய ரதிக்கும் ரதிசுந் தரனுக்கும் 
சீர்மகள் இந்திராணிக்கும் இந்திரனுக்கும் 
மாமதி பெருகும் வாணிக்கும் அவள் வரனுக்கும் 
தாமரை மலர்த் திருவுக்கும் தாமோதரனுக்கும் 

தேவிக்கும் அரனுக்கும் சோபனம் சோபனம் சோபனம் 
சோபனம் ( சோ )

நேர்வரும் சுமந்திரன் முதல் மந்திரி நேசர்க்கும் சோபனம் 
நேர் பெறு வதிஷ்டன் கௌசிகன் முதலாம் யோகீசர்க்கும் சோபனம் 
வார்முலை அரம்பை மாதர்க்கும் எண்டிசைவாசர்க்கும் சோபனம் 
சேவை செய்து மனம் மகிழும் ஐம்பத்தாறு தேசர்க்கும் சோபனம் 
ராசாதி ராசர்க்கும் சோபனம்( சோ )


வருகௌசலை கைகை சுமித்திரை எனும் தாய் மாருக்கும் 
பெருகு பரதன் முதலாகிய மூன்று பேருக்கும் 
ஒருமையால் இது சொன்ன வால்மீகிகம்பரிரு வோருக்கும் 
அருணாசலகவி நாடகம் இதுபடிப் பாருக்கும் கேட்கும் எல் லாருக்கும் ( சோ ) 


ஸ்ரீ ராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் 


திருமகளாம் சானகிகல் யாணம் செய்து செயமுள்ள தம்பியர்க்கும் விவாகம் செய்து 
வரும்வழியிற் சகுனவிரோ தத்தி னாலே மலைபோலே முனிபரசு ராமன் வந்தான் 
பெருகு தச ரதன்கண்டு நடுங்கும் போது பிரசண்ட கோதண்டகுரு ராமன் தானும் 
ஒரு வரும்நேரில்லை என வில்லை ஏந்தி உரஞ்சொல்வான் உடனேஉத் தரஞ்சொல் வானே . 


ஆசீர் மண்ணில் அரசர்போலக் காணுகின்றாயே வாதம் ரகு 
கண்ணில் வேதியர் போல் தோணுகின் றாயே நமஸ் பாரம் பரசு ராமரி 
தாடகை எனும்பெண்மேல் சண்டை கொள்ளராசர்க்கு 
தான் விதி யோ வேடர்கள் தொடுக்கும்வில்லை பிராமணர் தொடத்தலை 
விதியோ பரசு ராமா ராமா 
ஆனாற்பெண் கொலைசெய்யல் ஆமோ உனக்கிது அடைவோ ரகு 
தானாகப் பெற்றெடுத்த தாயைக் கொலை செய்தாயே தகுமோ பரச ராமா 
தருமமா என்னைப்பெற்றதகப்பன் சொற்படி செய்தேன் 
தாய்க்கொலையோ குருவார்த்தை தடுக்காமல் நானும் செய்தேன் பெண் கொலையோ பரசு ராமா 
ராமா ராமா 
சொத்தைவில் ஒடித்தத்தை மெத்த மெத்தவே எண்ணித் துள்ளாதே ரகு 
கற்ற வேதியன் என்று பொறுத்தேன் பொறுத்தேன் குதிக் காதே பரசு ராமா 

அந்தவில் வளைத்தாயே இந்தவில் வளை இந்தா அடடாரது 
இந்தா வளைத்தேன் இதில் வைத்த அம்புக்கு வழி எங்கே பரசு ராமா ராமா 
அம்புக்கு வழியில்லை நான் பிராமணன் இனி அனுக்கிரகம் செய் 
பின் புத்திக் காரன் இரு பிறப்பன் உன் னொ டென்ன ராமா 
பேச்சு பரசு ராமா ராமா 
சந்தி செபதங்கள் எல்லாம் உன் சரத்துக்கே தந்தேன் ரகு 
வந்தவழி பார்த்துக் கொண்டோடிப் போவதே நல்ல மார்க்கம் பரசு 

ஸ்ரீ ராமர் திரு அயோத்தியைச் சேர்தல் 

இன்னவகை சொன்னரா கவனை வாழ்த்தி 
இனியதவம் செயப்பரசு ராமன் போனான் 
அன்னவன்கைக் கொண்ட வில்லை வருண ராசன் 
அடைக்கலமா வைத்துவிட்டு ராமச் சந்திரன் 
மன்னவரும் தேவியரும் தேர்மேற் கொண்டு 
வர அருகே தானும்மணித் தேர் மேல் ஏறி 
மின்னனைய சீதையுடனே சந்தோஷம் 
மிகவந்தான் அயோத்திமா நகர்வந் தானே 

பாலகாண்டம் முற்றிற்று . 
சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம் 

--------------- 


தழை செவி சிறுகண் தாழ்கை தந்தசிந் துரமும் தாரை 
மழைமதத் தறுகண் சித்ர வாரண முகத்து வாழ்வை 
இழையிடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற 
குழவியைத் தொழுவன் அன்பால் குறைவர நிறைக என்றே (பாயிரம் - மிகை - 13 ) 


பொத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான 
வித்தகம் தரித்த செங்கை விமலயை அமலை தன்னை 
மொய்த்த கொந் தனக பார முகிழ்முலை தவள மேனி 
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செவ்வாம் ( பாயிரம் மிகை 12 )  


தருகை நீண்ட தயரதன் தான் தரும் 
இருகை வேழத் திராகவன் தன் கதை 
திருசை வேலைத் தரைமிசைச் செப்பிட 
குருகை நாதன் குறைகழல் காப்பதே (பாயிரம் - மிகை --9 ) 


அரசியல் 
 
ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும் 
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்ணில் யாவும் 
நீதிந் நிலையும் இவை நேமியி னோர்க்கு நின்ற 
பாதிம் முழுதும் இவற்கே பணிகேட்ப மன்னோ ( அரசியற்படலம் 2 ) 


தாயொக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் 
சேய்ஒக்கும் முன்னின் றொருசொல் கதியொக்கும் நீரால் 
நோய் ஒக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்குகேள்வி 
ஆயம் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான் ( அரசியற்படலம் 57 


வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர் 
உள்ளமும் ஒருவழி ஓட நின்றவன் 
தள்ளரும் பெரும்புகழ்த் துயரதப்பெயர் 
வள்ளல் வள் ளுறைஅயில் மன்னர் மன்னனே ( அரசியற்படலம் 6 ) 


குன்றென உயரிய குவவுத் தோளினான் 
வென்றிவெம் திகிரிவெம் பருதி யாமென 
ஒன்றென உலகிடை உலாவி மீமிசை 
நின்றுநின் றுயிர்தொறும் நெடிது காக்குமே ( அரசியற்படலம் 11 ) 
துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் 
பனிவென்ற படியென்ன பகைவென்று படி காப்போன் 
தனுவன்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் 
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் 


சக்ரவர்த்தி மக்கள் வேண்டி வருந்தல் 

அறுபதி னாயிரம் ஆண்டும் மாண்டுற 
உறுபகை ஒடுக்கியிவ் வுலகை ஓம்பினேன் 
பிறிதொரு குறையிலை என்பின் வையகம் 
மறுகுறும் என்பதோர் மறுக்கம் உண்டரோ 

( திருவவதாரப்படலம் 3 ) 
அருந்தவ முனிவரும் அந்த ணாளரும் 
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் 
இருந்துயர் வழக்குநர் என்பின் என்பதோர் 
அருந்துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் 

(திருவவதாரப்படலம் 4 ) 
பெருமாள் சந்நிதியில் தேவர்கள் முறையீடு 

விருத்தம் -4 - தரு - 3 
பொன்வரை , இழிவதோர் புயலின் பொற்புற 
என்னை ஆள் உடையவன் தோள் நின்று எம்பிரான் 
சென்னிவான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி 
துன்னுபொற் பீடமேல் பொலிந்து தோன்றினான் (திருவவதாரப் படலம் 13 ) 


ஐயிரு தலையினோன் அனுசர் ஆதியாம் 
மெய்வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே 
செய்தவம் இழந்தன திருவின் நாபக 
உய்திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் ( திருவவதாரப்படலம் 15 ) 
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்றுளார் 
பொங்குமூ வுலகையும் புடைத்தழித்தனர் 
செங்கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் 
நுங்குவர் உலகைஓர் நொடியில் என் றனர் ( திருவவதாரப்படலம் 16 ) 

தேவர்களுக்குப் பெருமாள் அருளிப்பாடு 
 
வானுளோர் அனைவரும் வான ரங்களாய் 
கானிணும் வரையினும் கடித் டத்தினும் 
சேனையொ டவதரித் திடுமின் சென்கிறன 
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் (திருவவதாரப்படலம் 18 ) 
மசரதம் அனையவர் வரமும் வாழ்வுமோர் 
நிசரத கணைகளால் நீறு செய்யயாம் 
கசரதத் துரகமாக் கடல் கொள் காவலன் 
தசரதன் மதலையாய் வருதும் தாரணி (திருவவதாரப்பட லம் 19 ) 
வளையொடு திகிரியும் வடவை தீதர 
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும் 
இளையர்கள் என அடி பரவ ஏகிநாம் 
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன் ( திருவவதாரப்படலம் 20 ) 
என்னையா ளுடைய ஐயன் கலுழன் மீ தெழுந்து போய 
பின்னர் வா னவரை நோக்கிப் பிதாமகன் பேசு கின் றான் 
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று 
அன்ன வா றெவரும் நீர்போய் அவதரித் திடுமின் என்றான் 

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு 
மருவலர்க் கசனி யன்ன வாலியும் மகனும் என்ன 
இரவிமற் றெனது கூறங் கவர்க்கிளை யவன் என்று ஓத 
அரியும்மற் றெனது கூறு நீலன் என் றறைந்திட் டானால் 


வாயுமற் றெனது கூறு மாருதி எனலும் மற்றோர் 
காயும்மற் கடங்க ளாகிக் காசினி அதனின் மீது 
போயிடத் துணிந்தோ மென்றார் புராரிமற் றியானும் காற்றின் 
சேயெனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கவதி யுண்டோ (திருவவதாரப்படலம் 23 , 24 , 25 ) 

பெருமாள் திரு அவதாரம் 

தெரிவையர் மூவரும் சிறிதுநாள் செலீ 
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின் 
பொருவரு திருமுகம் அன்றி பொற்பு நீடு 
உருவமும் மதியமொடு ஒப்பத் தோன்றினார் ( திருவவதாரப்படலம் 19 ) 
ஒருபகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து 
அருமறைக் குணர்வரும் அவனை அஞ்சனக் 
கருமுகிற் கொழுந்தெழில் காட்டும் சோதியை 
திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை 


ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்தெழ 
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துறப் 
பூசமும் மீனமும் பொலிய நல்கினார் 
மாசறு கேகயன் மாது மைந்தனை 


தளையவிழ் தருவிடைச் சயில் கோபனும் 
கிளையும் அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற 
அளைபுகும் அரவினோடு அலவன் வாழ்வுற 
இளையவற் பயந்தனள் இளைய மென்கொடி 


படங்கிளர் பல்தலைப் பாந்தள் ஏந்துபார் 
நடங்கிளர் தரமறை நனிமகிழ்ந்திட 
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட 
விடங்கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள் 
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை 
பாடினர் கின்னரர் துவைத்த பல் இயம் 
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் 
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே (திருவவதாரப்படலம் 101 -- 105 ) 

கௌசிகர் ஸ்ரீ ராமரைக் குறித்துக் கேட்குதல் 
 
நிலம்செய்தவம் என்றுணரின் அன்று நெடி யோய்என் 
நலம் செய்வினை உண்டெனினும் அன்று நகர் நீயான் 
வலம்செய்து வணங்கஎளிவந்த இது முந்து என் 
குலம்செய்தவம் என்றினிது கூறமுனி கூறும் 

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறுஒன்று உடைய ரானால் 
பன்னகமும் நகு வெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து 
அந்நகரும் கற்பகநாட் டணிகவரும் மணிமாட அயோத்தி என்னும் 
பொன்னகரும் அல்லாது புகல்உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் , ( கையடைப் படலம் 7 , 8 ) 


தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறாத் தவம்செய் வோர்கள் 
வெகுவரச்சென் றடைகாம வெகுளியென 
நிருதர் இடை விலக்கா வண்ணம் 
செருமுகத்துக் காத்தியென நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் 
ஒருவனைத்தந் திடுதியென உயிர் இரக்கும் 
கொடுங்கூற்றின் உளையச் சொன்னான் ( கையடைப்படலம் 11 ) 


சக்கரவர்த்தி அதை மறுத்தல் 
 

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த 
புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தா லெனச்செவியில் புகுத லோடும் 
உண்ணிலா விய துயரம் பிடித்துந்த ஆருயிர் நின்று ஊச லாடக் 
கண்ணிழந்தான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காவ வேலான் தொடையூற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான் 
ஒருவண்ணம் துயரம் நீங்கி  படையூற்றம் இலன் சிறியன் இவன்பெரியோய் பணி இதுவேல் பனிநீர்க் கங்கை புடையூற்றும் சடையானும் நான்முகனும் புரந்தரனும் புகுந்து செய்யும் 
இடையூற்றுக் கிடையூறாய் யான் காப்பென் 
பெருவேள்விக்கு எழுக என்றான் ( கையடைப்படலம் 13 ) 

வதிஷ்டர் தகவுரைத்தல் 

கறுத்த மாமுனி கருத்தை உன்னி நீ 
பொறுத்தி என்றவற் புகன்று நின் மகற்கு 
உறுத்த லாகலா உறுதி எய்தும்நாள் 
மறுத்தி யோஎனா வசிட்டன் கூறுவான் 


பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம்போய் 
மொய்கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல் 
ஐய நின்மகற்கு அளவில் விஞ்சைவந்து 
எய்து காலமின்று எதிர்ந்தது என்னவே ( கையடைப்படலம் 15 , 16 ) 


அன்ன தம்பியும் தானும் ஐயனாம் 
மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டாலெனச் 
சொன்ன மாதவன் தொடர்ந்து சாயைபோல் 
பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான் (கையடைப்படலம் 21 ) 


களசிகர் ஸ்ரீ ராமருக்கு நீதி சொல்லுதல் 


சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் 
நிலம்புக மிதித்தனள் நெளிந்த குழிவேலைச் 
சலம்புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் 
பிலம்புக நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள் 


இறைக்கடை துடித்தபுரு வத்தள் எயி றென்னும் 
பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயாள் 
மறைக்கடை அரக்கிவட வைக்கனல் இரண்டாய் 
நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாள் ( தாடகைவதைப்படலம் 29 , 30 ) 

மேகமவை பற்றுபு பிழிந்தனள் விழுங்கா 
மாகவரை இற்றுக உதைத்தனள் மதித்திண் 
பாகமெனும் முற்றெயிறு அதுக்கி அயில்பற்றா 
ஆகமுற உய்த்தெறிவென் என்றெதிர் அழன்றாள் 

அண்ணல்முனி வற்கது கருத்தெனினும் ஆவி 
உண் என வடிக்கணை தொடுக்கிலன் உயிர்க்கே 
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுள ளேனும் 
பெண்என மனத்திடை பெருந்தகை நினைத்தான் ( தாடகை வதைப்படலம் 34 , 35 ) 


தீது என்று உள்ளவை யாவும் செய்து எமைக் 
கோதென்று உண்டிலன் இத்துணையே குறை 
யாதென்று எண்ணுவது இக்கொடி யாளையும் 
மாது என்று எண்ணுவ தோமணில் ணினாய் ( தாடகைவதைப்படலம் 37 ) 


மன்னும் பல்லுயிர் வாரிதன் வாய்ப் பெய்து 
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய 
பின்னும் தாழ்குழல் பேதமைப் பெண் இவள் 
என்னும் தன்மை எளிமையின் பாலதே 


ஈறில் நல்லறம் பார்த்திசைத் தேன் இவட் 
சீறி நின்றிது செப்புகின் றேன் அலென் 
ஆறி நின்றது அருளன்று அரக்கியைக் 
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் ( தாடகைவதைப்படலம் 42 , 43 ) 

தாடகை முதலானவர்கள் வதம்  


மாலும் அக்கணம் வாளியைத் தொட்டதும் 
கோல வில்கால் குனித்ததும் கண்டிலர் 
காலனைப் பறித்து அக்கடி யாள்விட்ட 
சூலம் அற்றுவீழ் துண்டங்கள் கண்டனர் 


அல்லின் ஆயது அனைய நிறத்தவன் 
சொல்லும் மாத்திரை யின் கடல் தூர்ப்பன 
கல்லின் மாரியைக் கைவகுத் தாள் அவை 
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் 


சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் 
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுத்தலும் வயிரக் குன்றக் 
கல்லொக்கும் நெஞ்சில் தாங்காது அப்புறம் கழன்று கல்லாப் 
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே 
பொன்னெடும் குன்றம் அன்னாள் புகர்முகப் பகழி என்னும் 
மன்நெடுங் கால வன்காற்று அடித்தலும் இடித்து வானில் 
கல்நெடு மாரி பெய்யக் கடையுகத் தெழுந்த மேகம் 
மின்னொடும் அசனி யோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் 

( தாடகை .. வதைப் படலம் 47-50 ) 
திருமகள் நாயகன் தெய்ல வாளிதான் 
வருவரு தாடகை பயந்த வீரர்கள் 
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது அங்கு 
ஒருவனை அந்தக புரத்தின் உய்த்ததே ( வேள்விப்படலம் 41 ) 


அகலிகை சாபவிமோசனமும் , சரித்திரமும் 


கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ 
உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவம் 
கொண்டு மெய்உணர் பவன் கழல் கூடியது ஒப்பப் 
பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான் 


மாயிரு விசும்பின் கங்கை மண்மிசை கொணர்ந்தோன் மைந்த 
மேயின உவகை யோடு மின் என ஒதுங்கி நின்றாள் 
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் 
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் எள்றான் ( அகலிகைப்படலம் 14 , 15 ) 


தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய 
உய்யலாம் உறுதிநாடி உழல்பவன் ஒருநாள் ற்ற 
மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து 
பொய்யிலா உள்ளத் தான் தன் உருவமே கொண்டு புக்கான் 


புக்கவ ளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் 
ஒக்கவுண் டிருந்த லோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் 
தக்கதன் றென்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்பத் தாழா 
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் 


சரந்தரு சாபமல்லால் தடுப்பரும் சாபம் வல்ல 
வரந்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா 
நிரந்தரும் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள் நின்றா 
புரந்தரன் நடுங்கி ஆங்கோர் பூசையாப் போக லுற்றாள் 


தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்யத் 
தூயவன் அவனை நின்கைச் சுடுசரம் அனைய சொல்லால் 
ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகஎன்று 
ஏயினன் அவையெ லாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் 


எல்லையில் நாணம் எய்தி யாவர்க்கும் நகைவந் தெய்தப் 
புல்லிய பழியி னோடும் புரந்தரன் போய பின்றை 
மெல்லிய லாளை நோக்கி விலைமகள் அனைய நீயும் 
கல் இயல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள் 


பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே , அன்பால் 
அழல் தரு கடவுள் அன்னாய் முடிவிதற்கு அருள்க என்ன 
தழைத்துவண் டிமிருந் தண்தார் தசரத ராமன் என்பான் 
கழல்துகள் கதுவ இந்தக் கல் உருத் தவிர்தி என் என்றான் 


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகுக் கெல்லாம் 
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ 
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன் ( அகலிகைப் படலம் 18 - 23 ) 


ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டு ஐயுறல் 


கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம் 
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள் 
சொல்லும் தன்மைத் தன்றது குன்றும் சுவரும்திண் 
கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனிநின்றாள் 


வெங்களி விழிக்கொரு விழவும் ஆயவர் 
கண்களின் காணவே களிப்பு நல்கலால் 
மங்கையர்க்கு இனியதோர் மருந்தும் ஆயவள் 
எங்கள் நா யகற்கு இனி யாவ தாங்கொலோ 


இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே 
மழைபொரு கண்ணினை மடந்தை மாரொடும் 
பழகிய எனினுமிப் பாவை தோன்றலால் 
அழகெனும் அணியும்ஓர் அழகு பெற்றதே 


எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக் 
கண்ணொடு கண்ணிணைக் கவ்வி ஒன்றையொன்று 
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட 
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் 


நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை 
ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன 
வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் 
தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே 

பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்து 
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் 
வரிசிலை அண்ணலும் வாட்சண் நங்கையும் 
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார் 


மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும் 
ஒருங்கிய இரண்டுடற்கு உயிர் ஒன் றாயினார் 
கருங்கடற் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் 
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ ( மிதிலைக்காட்சிப் படலம் 32-38 ) 


கௌசிகர் ஸ்ரீ ராமர் வரலாறு சொல்லுதல் 


அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் 
பயந்தகுலக் குமரரிவர் தமக்குள்ள பரிசெல்லாம் 
நயந்துரைத்துக் கரையேறல் நான்முகற்கும் அரிதாம் , பல் 
இயந்து வைத்த கடைத்தலையாய் யானறிந்த படி கேளாய் 


துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன் 
பனிவென்ற படியென்ன பகைவென்று படிகாப்போன் 
தனுவின்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான் 
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான் ( வரலாற்றுப்படம் 15-16 ) 


காதலரைத் தரும்வேள்விக்கு உரியவெலாம் கடிதமைப்ப 
மா தவரிற் பெரியோனும் மாமகத்தை முற்றுவித்தான் 
சோதிமணிப் பொற்கலத்துச் சுதையனைய வெண்சோறுஓர் 
பூதகணத் தரசேந்தி அனல் நின்றும் போந்ததால் 

பொன்னின் மணிப்பரிகலத்தில் புறப்பட்ட இன்னமுதைப் 
பன்னுமறைப் பொருளணர்ந்த பெரியோன் றன் பணியினால் 
தன்னனைய நிறைகுணத்துத் தசரதனும் வரன்முறையால் 
நன் னுதலார் மூவருக்கும் நாலுகூறு இட்டு அளித்தான் 


கன் விரிந்திடுதீ வினைசெய்த வெவ்விய தீ வினையாலும் 
அருங்கடையில் மறையறைந்த அறஞ்செய்த தவத்தாலும் 
இருங்கடகக் கரதலத்து இவ் எழுதரிய திருமேனிக் 
கருங்கடலைச் , செங்கனிவாய்க் கவுசலை என் பாள் பயந்தாள் 


தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் 
பள்ளமெனும் தகையானை , பரதன் எனும் பெயரானை 
எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த 
வள்ளலையே அனையானை கேகயர்கோன் மகள் பயந்தாள் 


அருவலிய திறலினராய் அறங்கெடுக்கும் விறலரக்கர் 
வெருவருதிண் திறலார்கள் வில்லேந்தி வரும் மேருப் 
பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள் 
இருவரையும் இவ்விருவர்க்கு இளையாளும் ஈன்றெடுத்தாள் ( வரலாற்றுப்படலம் 20-4- ) 


ஈங்கிவரால் என் வேள்விக்கு இடையூறு கடிதியற்றும் 
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையனாய்ப் 
பூங்கழலார்க் கொண்டுபோய் வனம்புக்கேன் புகாமுன்னம் 
தாங்கரிய பேராற்றல் தாடகையே தலைப்பட்டாள் 

அலைஉருவக் கடல் உருவத்து ஆண்தகைதன் நீண்டுயர்ந்த 
நிலைஉருவப் புயவலியை நீ உருவ நோக்கையா 
உலைஉருவக் கனல் உமிழ்கண் தாடகைதன் உரம் உருவி 
மலைஉருவி மரம்உருவி மண் உருவிற்று ஒருவாளி ( வரலாற்றுப்படலம் 27 , 28 ) 


கோதமன்றன் பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன் 
போது வென்ற தெனப்பொலிந்த பொலங்கழற்காற் பொடிகண்டாய் 
காதல் என் றன் உயிர்மேலும் இக்கரியோன் பால்கண்டால் 
ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான் ( ஆற்றுப்படலம் 31 ) 

நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அருந்தவனும் 
புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம் பார்த்தான் 
வனைந்தனைய திருமேனி வள்ளலும் அம் மாதவத்தோன் 
நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான் (கார் முகப் படலம்  )


ஸ்ரீ ராமர் வில் வளைத்தல் 

விருத்தம் - 15 
உறுவலி யானையை ஒத்த மேனியர் 
செறிமயிர்க் கல்எனத் திரண்ட தோளினர் 
அறுபதி னாயிரர் அளவில் ஆற்றலர் 
தறிமடுத் திடையிடைத் தண்டில் தாங்கினார் 


நெடுநில மகள் முதுகு ஆற்ற நின்றுயர் 
தடநிமிர் வடவரை தானும் நாண்உற 
இடமிலை உலகென வந்தது எங்கணும் 
கடல் புரை திருநகர் இரைத்துக் காணவே ( கார்முகப் படலம் 3,4 ) 


தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் 
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப 
மாக மடங்கலும் மால்விடையும் , பொன் 
நாகமும் நாகமும் நாண நடந்தான் 


ஆடக மால்வரை அன்னது தன்னை 
தேடரு மாமணி சீதையெ னும்பொன் 
சூடக வால்வளை சூட்டிட நீட்டும் 
ஏடவிழ் மாலையிது என்ன எடுத்தான் 


தடுத்திமை யாமல் இருந்தவர் , தாளில் 
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் ( கார்முகப் படலம் 32-34 ) 


பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம் 
பாமமா கடல்கள் எல்லாம் பன்மணி தூவி ஆர்த்த 
கோமுனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற 
நாமவேல் சனகற்கு இன்று நல்வினை பயந்த தென்னா ( கார்முகப் படலம் 36 ) 


தயரதன் புதல்வர் என்பார் தா மரைக் கண்ணன் என்பார் 
புயலிவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் 
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் 
கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் 


நம்பியைக் காண நங்னகக்கு ஆயிரம் நயனம் வேண்டும் 
கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்ன தேயாம் 
தம்பியைக் காண்மின் என்பார் தவமுடைத்து உலகம் என்பார் 
இம்பர் இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் ( கார்முகப் படலம் 42 , 43 ) 


மிதிலைக்குச் சக்கரவர்த்தியின் எழுச்சி  


கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை 
ஈறில்வண் புகழினாய் இது அது என்றனர் 
வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் 
மாறதிர் கழலினான் வாசி என்றனன் ( எழுச்சிப் படலம் 3 ) 


என்றுரைத்து எதிர் எதிர் இடைவி டாதுநேர் 
துன்றிய கனைகழல் தூதர் கொள்கஎனா 
பொன்திணி கலங்களும் தூசும் போக்கினான் 
குன்றென உயரிய குவவுத் தோளினான் ( எழுச்சிப் படலம் 5 )


விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் 
இடையிலை உலகினில் என்ன ஈண்டிய 
கடையுக முடிவினில் எவையும் கால்படப் 
புடைபெயர் கடலென எழுந்து போயதே ( எழுச்சிப் படலம் 9 ) 


உழுந்திட இடமிலை உலகம் எங்கணும் 
அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம் பாயினான் 
எழுந்திலன் எழுந்துஇடைப் படரும் சேனையின் 
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே ( எழுச்சிப் படலம் 23 ) 
பொய்கையம் கமலக் கானில் பொலிவதோர் அன்னம் என்ன 
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி 
ஐயிரு நூறு சூழ ஆய்மணிச் சிவிகை தன்மேல் 
தெய்வமங் கையரும் நாணத் தேன் திசை முரலப் போனாள் 

விரிமணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் 
அரிமலர்த் தடங்கண் நல்லார் ஆயிரத் திரட்டி சூழ 
குருமணிச் சிவிகை தன்மேல் கொண்டலின் மின் இது என்ன 
இருவரைப் பயந்த நங்கை யாழிசை முரலப் போனாள் 


வெள்ளெயிற் றிலவச் செவ்வாய் முகத்தைவெண் மதியம் என்று 
கொள்ளையின் திரள் வான்மீன்கள் குழுமிய அனைய ஊர்தி 
தெள்ளரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத்தேன்சிந்த 
வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்கப் போனாள் ( எழுச்சிப்படலம் 63 - 65 ) 


பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி வெள்ளம் 
சுற்றுறு கமலம் பூத்த தொடுகடல் திரையின் செல்ல 
கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப 
மற்றொரு கதிரோன் என்ன மணிநெடுந் தேரிற் போனான் ( எழுச்சிப்பட லம் 75 ) 


ஸ்ரீராமர் பவனிவருதல் --விருத்தம் - 17 -- திபதை - 1 

மானினம் வருவ போன்றும் மயிலினம் திரிவ போன்றும் 
மீனினம் மிளிர வானில் மின்னினம் மிடைவ போன்றும் 
தேனினம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்பி ஏங்கப் 
பூநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார் 

விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்றம் நோக்கார் 
சுரிந்தபூந் துகில்கள் தாங்கார் இடைதடுமாறத் தாழார் 
நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று 
அருங்கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் (உலாவியற்படலம் 1 , 2 ) 

வீதிவாய்ச் செலகின் றான் போல் விழித்திமையாது நின்ற 
மாதரார் கண்க ளூடே வாவும்மான் தேரிற் செல்வான் 
தூது பெற்றிலள் இன்னுயிர் சோர்கின்றாள் 
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குல் கண்ணன் என்றே 
ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான் (உலாவியற்படலம் 6 ) 

சொன்னலம் கடந்தகாமச் சுவையை ஓர் உருவமாக்கி 
ன்னலம் தெரியவல்லார் எழுதியது என்னநின்றாள் 
பொன்னையும் பொருவும் நீராள் புனைந்தன எல்லாம்போகத் 
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கிநின்றாள் (உலாவியற்படலம் 12 ) 

மைக்கருங் கூந்தற் செவ்வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் 
நெக்கனள் உருகு கின்றாள் நெஞ்சிடை வஞ்சன்வந்து 
புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலம்கொள் வாயில் 
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் ( உலாவியற்படலம் 14 ) 

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற்கமலம் அன்ன 
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரும் அஃதே 
வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக் கண்டார் 
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார் (உலாவியற் படலம் 19 ) 

மாது ஒருத்தி மனத்தினை யல்லதோர் 
போதரிக் கண்பொலன் குழையப் பூண்முலைச் 
சீதை எத்தவம் செய்தனளோ என்றாள் (உலாவியற்படலம் 23 ) 

கனக நூபுரம் கைவளை யோடு உக 
மனம் நெகும்படி வாடி ஓர் வாணுதல் 
அனகன் இந்நகர் எய்தியது ஆதியில் 
சனகன் செய்த தவப்பயனால் என்றாள் ( உலாவியற் படலம் 26 ) 

சீதை சபா மண்டபத்துக்கு வருதல் -விருத்தம் - 18 -தரு - 16 

சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி 
வந்தடி வணங்கிச் சுற்ற மணியணி விதான நீழல் 
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவ தென்ன 
நந்தலில் விளக்கம் அன்ன நங்கையும் நடக்க லுற்றாள் ( கோலங்காண் படலம் 23 ) 

தொழுந்தகைய மென்னடை தொலைந்துகளி அன்னம் 
எழுந்திடை விழுந்து அயர்வது என்ன அயலெங்கும் 
கொழுந்துடைய சாமரை குலாவ ஓர்கலாபம் 
வழங்கு நிழல் மின்னவரும் மஞ்ஞைஎன வந்தாள் ( கோலங்காண் படலம் 25 ) 

பொன்னின் ஒளி பூவின்வெறி சாந்துபொதி சீதம் 
மின்னின் எழில் அன்னவள் தன் மேனியது மான 
அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தம் நாண 
மன்னவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள் (கோலங்காண் படலம் 28 ) 

ஸ்ரீராமர் மணக்கோலங் கொள்ளுதல் விருத்தம் - 19 - தரு - 17 

அழிவருந் தவத்தினோடு அறத்தை ஆக்குவான் 
ஒழிவருங் கருணைஓர் உருவு கொண்டென 
எழுதரு வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் 
தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே 

மங்கல முழுநிலா மலர்ந்த திங்களைப் 
பொங்கிருங் கருங்கடல் பூத்த தாம் எனச் 
செங்கிடைச் சிகழிகை செம்பொன் மாலையும் 
தொங்கலும் துயல்வரச் சுழியம் சூடியே 

ஏதமில் இருகுழை இரவு நன்பகல் 
காதல் கண் டுணர்ந்தன கதிரும் திங்களும் 
சீதைதன் கருத்தினைச்செவியின் உள்ளுறத் 
தூதுவத் துரைப்பன போன்று தோன்றவே ( கடிமணப் படலம் 50-52 ) 

பந்திசெய் வயிரங்கள் பொறியின் பாடுற 
அந்தமில் சுடர்மணி அழலின் தோன்றலாம் 
சுந்தரத் தோளணி வலயம் தொல்லைநாள் 
மந்தரஞ் சுற்றிய அரவை மானுமே ( கடிமணப் படலம் 55 ) 

முகைவிரி சுடரொளி முத்தின் பத்திவான் 
தொகைவிரி பட்டிகைச் சுடரும் சுற்றிடத் 
தகைஉடை வாளெனும் தயங்கு வெய்யவன் 
நகை இன வெயிலென தொங்கல் நாற்றியே ( கடிமணப் படலம் 64 ) 

கலியாணச் சடங்கு செய்தல் விருத்தம் - 20 --- திபதை - 2 

மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் 
இன்னிசை மணியாழின் இசைமது நுகர்வாரும் 
சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் 
கன்னலின் மணவேலைக் கடிகைகள் தெரிவாரும் 
கணிகையர் தொகுவாரும் 

கலைபல பயில்வாரும் 
பணியணி இனமுத்தம் பல இரு நிலமன்னர் 
அணிநெடு முடியொன்று ஒன்று அறைதலின் உரும் அம்பொன் 
மணிமலை எனமன்ன வாயிலின் மிடை வாரும் ( கடிமணப்படலம் 3!, 32 ) 

தேர்மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் 
ஊர்தியில் வருவாரும் ஒளிமணி நிரை ஓடைக் 
கார்மிசை வருவாரும் கரிணியில் 
வருவாரும் 
பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் ( கடிமணப்படலம் 35 } 

ந்திரன் சசியொடு எய்தி னான் இளஞ் 
சந்திர மௌலியும் தைய லாளொடும் 
வந்தனன் மலரயன் வாக்கி னாளுடன் 
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே 
நீந்தருங் கடலென நிறைந்த வேதியர் 
தோய்ந்த நூல் மார் பினர் சுற்றத் , தொல்நெறி 
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மையற 
ஏய்ந்தன கலப்பையொடு இனிதின் எய்தினான் 

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன் 
மண்டலம் விதிமுறை வகுத்து மென்மலர் 
கொண்டுநெய் சொரிந்து எரி குமும மூட்டினான் 
பண்டுள மறைநெறி பரவச் செய்தனன் 

மன்றலின் வந்து மணத்தவிசு ஏறி 
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து 
இன் துணை அன்னமும் எய்தி யிருந்தார் 
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் 

கோமகன் முன் சன கன்குளிர் நல்நீர் 
பூமக ளும் பொரு ளும் என நீ என் 
மாமகள் தன்னொடும் மன்னுதி என்னா 
தாமரை யன்ன தடக்கையின் ஈந்தான் (கடிமணப்படலம் 82-86 ) 

வெய்ய கனற்றலை வீரனும் அந்நாள் 
மையறு மந்திரம் மும்மை வழங்கா 
நெய்யமை யாவுதி யாவையும் நேர்ந்தே 
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் ( கடிமணப்படலம் 89 ) 

ஸ்ரீராமர் அக்கினி வலம் வருதல் முதலியவைகள் --விருத்தம் - 21 

இடம்படு தோளவ னோடு இயைய வேள்வி 
தொடங்கிய வெங்கனல் சூழ்வரு போதின் 
மடம்படு சிந்தையள் மாறு பிறப்பின் 
உடம்புஉயி ரைத்தொடர் கின்றதை ஒத்தாள் 

வலங்கொடு திடை வணங்கினர் வந்து 
பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி 
இலங்கொளி அம்மி மிதித்து எதிர் நின்ற 
கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார் 

மற்றுள செய்வன செய்து மகிழ்ந்தார் 
முற்றிய மாதவர் தாள்முடி சூடி 
கொற்ற வனைக்கழல் கும்பிடலோடும் 
பொற்றொடி யைக் கொடு நன்மனை புக்கான் ( கடிமணப்படலம் 90 - 92 ) 

சோபனம் பாடுதல் -விருத்தம் - 22 
 
அந்தணர் ஆசி அருங்கல மின்னார் 
தந்தபல் லாண்டிசை தார் முடி மன்னர் 
வந்தனை மாதவர் வாழ்த்தொலி யோடு 
முந்திய சங்கம் முழங்கின மாதோ ( கடிமணப்படலம் 87 

ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் 
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் 
ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு 
ஆர்த்தன வண்டினம் ஆர்த்தன வேலை ( கடிமணப்படலம் 93 } 

ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் -விருத்தம் - 23 திபதை - 3 

ற்றோடிய சிலையின் திறம் அறிவென் இனி யானுன் 
பொற்றோள்வலி நிலைசோதனை புரிவான் நசையுடையேன் 
செற்றோடிய திரள்தோள்உறு தினவும் சிறிதுடையேன் 
மற்றோர்பொருள் இலையிங்கு இது என் வரவு என்றனன் உரவோன் ( பரசுராமப் படலம் 18 

மானம்ம ணி முடிமன்னவன் நிலை சோர்வுறல் மதியான் 
தானந்நிலை உறுவான்று வினைஉண்டது தவிரான் 
ஆனம்உடை உமையண்ணலை அந்நாள் உறுசிலைதான் 
ஊனம்உளது அதன் மெய்ந்நெறி கேள் என்றுரை புரிவான் ( பரசுராமப்படலம் 25 

உலகெலாம் முனிவற் கீந்தேன் உறுபகை ஒடுக்கிப் போந்தேன் 
அலகில் மா தவங்கள் செய்து ஓர் அருவரை இருந்தேன் ஆண்டை 
சிலையை நீ இறுத்த ஓசை செவியுறச் சீறிவந்தேன் 
மலைகுவென் வல்லையாகின் வாங்குதி தனுவை என்றான் ( பரசுராமப்படலம் 34 ) 

பூதலத் தரசையெல்லாம் பொன்றுவித் தனை என்றாலும் 
வேதவித் தாயமேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் 
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பதன்றால் 
யாதிதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் ( பரசுராமப்படலம் 36 ) 

எய்த அம்பு பழுது எய் திடாமல் என் 
செய்தவம் யாவையும் சிதைக்க வே எனக் 
கையவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன் 
மையறு தவமெலாம் வாரி மீண்டதே ( பரசுராமப்படலம் 39 ) 

ஸ்ரீராமர் அயோத்தியைச் சேர்தல் விருத்தம் -24 

எண்ணிய பொருளெலாம் இனிது முற்று 
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்க் 
கண்ணிய , யாவர்க்கும் களைக் 
புண்ணிய , விடையெனத் தொழுது போயினான் 
ணாகிய ( பரசுராமப்படலம் 40 ) 

பூமழை பொழிந்தனர் புகுந்த தேவருள் 
வாமவேல் வருணனை மான வெஞ்சிலை 
சேமி என் றுதவி தன் சேனை ஆர்த்தெழ 
நாமநீர் அயோதிமா நகரம் நண்ணினான் ( பரசுராமப்படலம் 45 ) 

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –


									

ஸ்ரீ ஸூந்தர காண்ட மஹிமை -ஸ்ரீ திருவடி ஏற்றம் –ஸ்ரீ அர்த்த பஞ்சக மஹிமை– 

May 3, 2023

பஞ்ச பூதங்கள்
பஞ்ச பிராணன்
பஞ்ச ஞான இந்திரியங்கள்
பஞ்ச கர்ம இந்திரியங்கள்
பஞ்ச பூதம்
பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள்
பஞ்ச வேதங்கள் பாரதம் பஞ்சமோ வேதம்
பஞ்ச நிலைகள் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா
பஞ்ச ஆயுதங்கள்
பஞ்ச -பாஞ்ச ராத்ர ஆகமம்
பஞ்ச ஸம்ஸ்காரம்
பஞ்ச கவ்யம் கோ மயம் பசும் சாணம் கோ மூத்திரம் பால் தயிர் நெய் -ஆநில் மேய ஐந்து

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

விக்ராந்தஸ் த்வம் ஸமர்த்தஸ் த்வம் ப்ராஞ்ஞஸ் த்வம் வாநரோத்தம
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம் –36-7-

விக்ராந்தஸ் த்வம் து -கருடனைப் போல் வீர்யம்
ஸமர்த்தஸ் நரசிம்மன் போல் ஸமர்த்தன்
ப்ராஞ்ஞஸ்தம் ஹயக்ரீவர் போல் ஞானவான் –
வாநரோத்தம–வானர தலைவன் -நடுவில்
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம்–৷வலிமை வராகன் போல்

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

—————-

அஞ்சைக் கேட்டால் அஞ்ச வேண்டாம்–அர்த்த பஞ்சகம்
ஐந்தாம் காண்டம் ஸூந்த்ர காண்டம் -ஐந்து விஷயம்
ஐந்திலே ஓன்று பெற்றான் -பாசுரத்தில் ஐந்து ஐந்துகள்
மேல் ஓட்டமாக ஐந்து பூதங்கள்
வாயு புத்ரன் -கடலைத்தாண்டி -ஆகாச மார்க்கம் ஆறு -பூமி பெற்ற பிராட்டி -நெருப்பை வைத்தவன் நம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்–பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி…

– இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும்,
ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.
(ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் – இலங்கைக்கு
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ராம பக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து – அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப் பாடலின் பொருள்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம்.
ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

ஆச்சார்ய பரமான அர்த்தம்
ஸம்ஸார சிறையில்
அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச ஸம்ஸ்காரம் -மந்த்ர உபதேசம் பெற்று -திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்திலேயே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருந்து
அன்று நான்  பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி -அர்த்த பஞ்சகத்தில் ஒன்றை -விரோதி -நீர் நுமது என்றவற்றை அகற்றி

அஞ்சிலே ஓன்று ஆறாக -கர்ம ஞான பக்தி யோகம் சரணாகதி மார்க்கம்தாண்டி -ஆச்சார்ய அபிமானம்
காலைப் பிடித்து திண்ணிய கழல்

ஆர் உயிர் காக்க -ஜீவாத்மாவை

அஞ்சிலே ஓன்று அணங்கை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
மண்டினார் உய்யல் அல்லால் வேறே யார் உய்யலாகும்

அவனுக்கு பிராட்டி ஸ்தானம் ஜீவர்கள் எல்லாம்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பித்ரு லோகம் -ஸ்வர்க்க லோகம் நரக லோகம் -கைவல்யம் தாண்டி ஸ்ரீ வைகுண்டம் அடைந்து

அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்

ப- நெருப்பு –புண்டர பூமி –மந்த்ரம் காற்று திருவாராதனம் நீர் -பஞ்ச பூதங்களும் இவற்றிலே உண்டே

ஐந்து முகம் நம்மாழ்வார் –
தானான -தலைவி தாய் தோழி ஆச்சார்யர்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் 
வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்

ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த
வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான்
ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும்,
நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும்,
ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும்,
அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும்,
வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (ஆச்சார்ய ஹ்ருதயம் –211)

————–

கூஜந்தம்  ராம  ராம  இதி மதுரம்  மதுராக்ஷரம் |

ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் ||
(குயில் ஒன்று கூவும்
மதுவாய்ச்  சொல்  மிழற்றிக்
கற்கண்டு  போல்  இனிதாய்
ராம  ராம  என  நித்தம்
கவிதையின்  கிளைமீது  வீற்ற
புவிபுகழ் முனி வால்மீகிப்
பதமலர்  பணிவதென் பேறே.)
வால்மீகேர்  முனி  ஸிம்ஹஸ்ய  கவிதா  வன  சாரிண: |
ச்ருண்வந்  ராமகதா  நாதம்  கோ  ந  யாதி  பராங் கதிம் ||  )
(கவிதையாம்  கானில்  திரியும்
தவமுனி  வால்மீகிச்  சீயம்
எழுப்பிடும்  ராம   நாதம்
கேட்டவர்   எவர்தான்  செல்லார்
கேடிலா  உயர்ந்த  மார்க்கம் )
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்–
அழகான ஸூந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு;
அன்னை சீதா அழகு;
ஸூந்தர காண்டம் கதை அழகு;
அசோக வனம் அழகு;
வானரர்கள் அழகு;
ஸூந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு;
நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு;
காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு.
ஸூந்தர காண்டத்தில் எல்லாமே அழகு தான்
இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம்.
அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது.
ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்;
மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன்.
ஸூந்தரன் -அஞ்சனா தேவி சூட்டிய இயல் பெயர்
அஞ்சனை மைந்தன் வாயு புத்ரன் ஹனுமான் காரணப் பெயர்கள்
இவன் பெருமையை முழுவதுமாக சொல்லி –
திருவடி நடந்தவையும் திரிசடை கனவு வரப் போவதையும் சொல்லி மொத்த ஸ்ரீ ராமாயணமும் இதில் அடங்கும்
ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும்.
மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட
நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன்.
அனுமனுக்கு ஸூந்தரன் என்ற பெயரும் உண்டு
ஆகவே ஸூந்தரகாண்டம் .
அனுமனின் மகிமையை நன்கு விளக்கும் அழகு கொண்டதால் ஸூந்தர காண்டம் .
சீதையும் ராமனும்  ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அறிந்து கொள்ளும் மகிழ்ச்சியான பகுதி என்பதால் ஸூந்தரகாண்டம்.
அழகே உருவான அன்னை சீதையின் மனம் அனுமனைக் கண்டு மகிழ்ச்சி யடைவதால் ஸூந்தர காண்டம்
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்  .
அழகென்பதே மகிழ்ச்சி தானே?
கடல் தாவுப் படலம் .  காப்புச் செய்யுளுடன் தொடங்கியது
இலங்கை நகரை  தனது விஸ்வரூப வடிவில் கண்ட அனுமன் கால்கள் ஊன்றி யெழுந்ததால்  மகேந்திரமலையில் ஏற்படும் அதிர்வுகளை,’
வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.’–என்று  வார்த்தைகளிலேயே
வீரம் தெறிக்க  கம்பன் அழகுற விளக்குவதை ரசிக்கும்பொழுதில்  …
மைநாக மலை  அனுமனிடம்  வேண்டிக் கொண்டது
‘என்னிடத்தில் தங்கி யான் செய்யும் விருந்தினை அங்கீகரிப்பாயாக’ என்று  .
அனுமன் அதற்கு  மந்தகாசசிரிப்பை உதிர்த்து விட்டு  சொல்கிறானாம் ….

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்த போதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன் மேல் இனி ஈவது என்னோ?

(வருந்தேன்,அருந்தேன்,பெருந்தேன்,இருந்தேன்! நுகர்ந்தேன்….சஹானா ராகத்தில் அமைந்த பழைய பிரபல திரைப் பாடல்  )

அன்பின்  வலிமையை அதே நேரம் தன பணியின் நோக்கத்தை  அழகாக சொல்கிறார் சொல்லின் செல்வன் அனுமன் .

 என் துணைவனான ராமன்  என் மீது   வைத்துள்ள அன்பு  என்னைக் களைப்படையச் செய்யாது
 என் ஆசை நிரப்பின் அல்லால் ..என் மனோ ரதம் நிறைவேற்றலல்லாமல்  இனி இப்பொழுது யான் யாதும் அருந்தேன் .
பெருந்தேன் பொழி சார நின் அன்பு  மிகுதியான தேனைச் சொரிகின்ற  சாரல்=பக்கங்களை (தாழ்வரைகளை)  உடைய உன் பிரியமானது என் மீது உண்டான போதே
இருந்தேன் நுகர்ந்தேன் மலையான உன் மீது தங்கி விருந்துண்டவனானேன்)

இதின் ஊங்கு –இந்த அன்பினைக் காட்டிலும்
இனி=இன்னமும் ,
ஈவது==நீ எனக்குக் கொடுக்கக் கூடியது  –
உண்டே —உண்டோ ?(இல்லை யென்கிறபடியாக)

‘ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், ,
அந்த  வேலை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும்.
அதற்காக  சென்றுகொண்டிருக்கும் என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.
பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?
அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கி சாப்பிட்டு விட்டேன்  என்றாகிறதே ?”என்பதை
கம்பன் ,அனுமன் வாயிலாக சுந்தரத் தமிழில் பாடலாய்க்கொடுத்துள்ளது பாகாய் இனிக்கிறது அல்லவா?

அனுமான் ‘இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?’ என்று கூறுவது போலவே ராமரும் குகனுக்கு கூறுகிறார். ..

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான்.

‘’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
மந்திர  சக்திமிகு  மாருதியே, -எந்திர,
சம்சார  தன்னிலே, சந்தோஷம் காண ருத்ர,
அம்சாவ  தாரா அருள்’’….

‘’அனுமந்த ராயா, அசகாய சூரா,
தினமுந்தன் பாதம் தொழுவேன், -எனையிந்த,
பாழும் மனமென்ற, ஆழியைத் தாண்டிடத்,
தோழா கொடுத்திடு தோள்’’….கிரேசி மோகன்….

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து – பத்தாம் திருமொழி –
‘நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்’ என்று ஆரம்பிக்கும் பத்து பாசுரங்களும்
சுந்தர காண்டத்தில் அனுமன் பிராட்டியினிடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு
இராமாயணம் முழுவதையும் சொல்லும் பாசுரங்கள்.
இந்தப் பத்துப் பாசுரங்களையும் எங்கள் அகத்தில் தினமும் சேவிப்போம்.
தேனான தமிழில் தித்திக்கும் பாசுரங்கள்.

—————–

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ.

இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷

ஸம்ஸார சிறையில் மீட்க்கப்புறப்படும் ஆச்சார்யர் போல்
கணையாழி பகவத் பிரசாதம்
இதில் தான் ஸூஷ்ம அர்த்தங்கள்

காலால் அளந்தவனைப் போல் வாலை உயர்த்திப் பறந்தான்

ராவணன்   காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.
முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின்,
அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,
அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க,
அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,
எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.
ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.
அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே,
அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.
அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும்
என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம்.
அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.

ஸிம்ஹிகா ராகுவின் அம்மா குடல் மாலை சாத்தி -proteen மிக்கு -ஆகவே வடை மாலை தெற்கும் -ஜாங்கிரி மலை வடக்கே யும்
ஆகவே ஹனுமான் ஸ்திதியால் ராகு கேது பீடைகளுக்கு பயப்பட வேண்டாம்
அன்பால் வந்த தடையை அன்பால் வென்று
அமரர்கள் அனுப்பிய தடையை அறிவால்
உண்மையாக வந்த தடையை உறுதியால் வென்று -மூன்றையும் கடைந்து

———————–

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

ஸூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளம் ஸூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
ஸூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள்.
அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண் நகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப் பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம் கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

 ————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-