ஸ்ரீ அருணாசல கவி நாடக ராமாயணம் -பகுதி -6–

இளையவர் நாகபாசத்தால் கட்டுண்டதற்காக 
ஸ்ரீராமர் இரங்கல் 

விநய விபீஷணன் இவ்வா றழுதுவாடும் 
வேளையில் இராமச்சந்திரன் இடத்தில்மேவி 
அனலன் எனும் மந்திரி சொல்லச் சுடர் அம்பேந்தி 
அவ்விருளைத் துரத்தி ஐயன் களத்தில் வந்தான் 
முனை பெறுசுக் ரீவனை அங்க தனைக்கண்டான் 
முசித்தபடை களைக்கண்டான் மூர்ச்சையான 
தனியனுமா னையும் கண்டான் சாமிகோபம் 
தாங்கினான் தம்பியைப் பார்த்து ஏங்கினானே 

பல்லவி 
என்னதான் செய்வேன் அடா லட்சுமணா 
என்னதான் செய்வேன் 
நான் 
( என் ) 

அநுபல்லவி 

உன்னைப் பாசங்கட்ட உன் பாசம் என்னைக்கட்ட 
ஒருத்தன் நான் தவிப்பேனடா 
லட்சுமணா 
( என் ) 

சரணங்கள் 

1 --சனகி பிரிந்தகுறை மறக்கவோ நீவந்து 
தந்தாய் இந்தத் 
தொல்லையே 
லட்சுமணா 
நினைவின்படி நான்கீறும் கோட்டைக் கடந்தொருவர் 
நில்லென்றாலும் 
நில்லையே லட்சுமணா 
எனது கண்ணே நானும் உனதுபின் வருகிறேன் 
ஏதுக் கெடுத்தேன் 
வில்லையே லட்சுமணா 
உன துயிர் போனால் என் உயிரும்போம் அப்புறம் 
ஒருகவலையும் 
இல்லையே 
லட்சுமணா ( என் ) 

2. எடுத்தென் பசியறிந்து அருங்கனி தருங்கையை 
எப்படிப் பிடிப் 
பித்தாயோ 
லட்சுமணா 
பகுத்தறியாத நான் களத்தில் தூங்கிறேன் நீ 
பார்என்றுவரு 
வித்தாயோ லட்சுமணா 
அடுத்த தகப்பன் போலே நீயும் போய் என்னையிங்கே 
அவத்திலே சோ 
தித்தாயோ 
லட்சுமணா 
பிடித்த கொம்பையும் விட்டு மிதித்த கொர்பையும் விட்டுப் 
பேய்போல் அவை 
வைத்தாயோ -லட்சுமணா ( என் ) 

3. பெண்ணுக்காய் மான்பின்னே நடக்கச்சே தடுத்தஉன் 
பேச்சையும் 
கடந்தேனே 
லட்சுமணா 
மண்ணும் வரும் உன்னாலே மனைவியும் வரும் என்று 
மனமகிழ்ச்சி 
அடைந்தேனே - லட்சுமணா 
கண்ணைக் கொண்டு நடக்கும் அவர்போலே நானும் 
உன்னைக் கொண்டு 
நடந்தேனே 
லட்சுமணா 
எண்ணின எண்ணமும்போய் எதிரிக் கிளக்காரமா 
ஏழையாய்க் 
கிடந்தேனே - லட்சுமணா ( என் ) 

செருட பகவான் வருதலும் நாகபாச பறுதலும் 

அதிபதி ரகுபதி துணைவனொ டுருகிற அறையிருளின் போதில் 
உதறிட அரியதோர் தசமுகன் மகன்விடும் உரசநெடும் பாசம் 
சிதறிட இளையவன் எழுதர அமரர்கள் திசைதிசை நின்றாடக் 
கதிரவ னவனலன் 
னவனலன் இவனென விசையொடு கெருடனும் வந்தானே 

பல்லவி 

தெய்வக் 
கெருட பகவானும் வந்தானே 
கெருட பகவானும் வந்தானே 

அநு பல்லவி 

கெருட பகவான் வந்தான் கிளம்பிப் பெருங்காற்றினை 
இருசிறைகளும் சாடவே அஷ்டமா நாக 
அரசனும்பயந் தோடவே 
ராமனைக் 
கண்டு 
உருகி மனது வாடவே 
வனமலைபோல் 
உரகபூஷணம் அந்நேரமே 
( கெரு ) 
ஆடவே 

சரணங்கள் 
1. முந்தி ஆனையினால் என் முதுகேறி முதலைமேல் 
அந்தச் சக்கரம் விட்டாயே 
அந்தச் சக்கரத்தைவிட் டம்பும் வில்லுங்கொண்ட 
செந்தா மரைப்பூங் 
கையனே - எவர்களுக்கும் 
சந்தோஷம் தரும் மெய்யனே அமியார்போல 
நொந்தா லெப்படி துய்யனே அடியேனிதோ 
வந்தேன் வந்தேன் அய்யனே என்றுசொல்லி 
( கெரு ) 

2. விரிசிறகால் மண்ணும் விண்ணும் மூடிக்கொண்டு 
ஒரு மலையெனத் தாவியே 
ஒரு மலைமேற் சூரியன் உதித்தாற்போல் தலைமேலே 
பருமுடி ஒளி 
விரிய - காதங்கள் கோடி 
இருகண் பார்வையும் தெரிய - சாமி கைவிட்ட 
பிரிவாலேமனம் 
பரிய பரவசம் ஆய் 
உருகிக் கண்ணீர் 
சொரிய , வேகமதாக 
( செரு ) 

3. திடத்துடனே தெற்குத் திசையில் இருந்து பாய்ந்து 
வடக்குத் திசையை நாடியே 
வடக்குத்திசையில் ஐயன் மலர்ப்பாதம் கண்டுகை 
எடுத்து வணக்கம் 
குறிக்க - கழுத்தில் வெள்ளை 
துடிப்பா வெண்ணில 
வெறிக்க - ராகுகேதுவும் 
திடுக்கென் றுடலை முறிக்க - நாகபாசமும் 
பொடிப் பொடியாய்த் தெறிக்க - அன்பினுடன் 
( கெரு ) 

4. கிழிந்துபா தாளத்தில் கிடக்கும் பாம்புகளும் கண் 
சுழன்று தத்தளித் திடவே 
சுழன்று நாகபாசம் தொடுக்கும் இந்திர சித்தாலே 
விழுந்தோர் மெள்ள 
மெள்ளவே - நித்திரை நீங்கி 
எழுந்தவர் போலத் 
அழுந்தத் தழுவித் 
ஒழிந்து கவலை 
துள்ளவே 
தம்பியைராமன் 
கொள்ளவே தேவர்கள் பயம் 
தள்ளவே 
அவர்கள் வேண்ட ( கெரு ) 


கெருட பகவான் ஸ்ரீராமரைத் துதித்தல் 
மதஞ்சேர்நாக பாசமிந்த வகையால் தெறிக்க ராமச்சந்திரன் 
இதஞ்சேர்லட்சு மணன்முதலோர் எழுதல்கண்டான் அதிசயிக்கும் 
விதம்சேர் நீயார் எனக்கேட்டான் விரித்துரைப்பேன் பிறகென்று 
பதம் சேவித்தான் மனத்தன்பு பதித்தான் கெருடன் துதித்தானே 

பல்லவி 
அய்யனேஉன் மேன்மையை அறிந்து சொல்ல மேணுமென்றால் 
ஆதிசேஷனுக்கும் வருமோ 
( அய் ) 

அநுபல்லவி 

துய்யனே காத்தருள்செய் மெய்யனே எனத்தேவர் 
தோத்திரம் செய்திடஅ யோத்திநகரில் வந்த 
( அய் ) 

சரணங்கள் 
1. பிரமாதி தேவர்களைப் பெறுவானும் நீ அவர்க்குப் 
பெருரானும் நீஉனக்கு ஒருவர் நேரா 
தருமாதிபதவிகளைத் தருவானும் நீடனக்குத் 
தரவேண தென்னகோ சலைகுமாரா எங்கள் 
( அய் ) 
2. உலகெல்லாம் உன்வயிற்றில் ஒடுக்குவாய் விடுப்பாய்பின் 
ஒருவருக்கும் உண்டோ இந்தப் பெரியதிராணி 
தலைவனே உனக்கொருவர் பலம் வேணும் என்பதென்னோ 
சத்தியமோ நித்தியகோ 
தண்டபாணி - எங்கள் ( அய் ) 
3. ஆதிநடு முடிவாகி எள்ளும் எண்ணெயும் போலே 
அங்கங்கும் நிறைந்தாயே 
நீயிப்போது 
மேதினியிலே உனக்கும் எதிர் ஒருவர் உண்டென்எறு 
வில் எடுத்து விளையாட 
வந்ததேது - எங்கள் ( அய் ) 
4 . ஆரணங்கள் கூடவுன்றன் காரணங்களறியாமல் 
அரளிக்கையால் அகில 
லோகமித்திரனே 
நாரணனே அகண்டபரி பூரணனே உன்கீர்த்தி 
நானுரைக்க முடியுமோ 
ராமபத்திரனே 
எங்கள் ( அய் ) 
5. முத்தொழிலும் முக்குணமும் முச்சுடரும் முப்பொழுதும் 
முப்பொருளும் ஆகிநின்ற 
மூர்த்திராமா 
பத்தர் ஆசாபாசம் தொலைக்கும் உனக்கொருநாக 
பாசம் தொலைத்திடுவது பிர 
யா சமாமோ 
எங்கள் ( அய் ) 

இராத்திரியில் மகாராட்சத வீரர்கள்வதை 

கெடிக்கருடன் விடைகொண்டான் அப்புறம்வா னரரும் 
கெர்ச்சித்தார் கெருடன் வந்த வகையை இரா வணன் முன் 
துடித்திடத்தூதுவர் சொன்னார் அவனும்மக னிடம் போய்ச் 
சொன்னான் இந்திரசித்தும் ஒருபிர்மாஸ் திரத்தால் 
அடித்திடுவேன் நாளைப்போய் நரர்பொல்லார் இன்றைக் 
காகாது மிகநொந்தேன் அப்பப்பா என்றான் 
முடித்தலைபத் துள்ளவனும் படைத்தலைவ ரோடே 
முறைப்பட்டான் அங்கவரும் புறப்பட்டார் தாமே  

கண்ணிகள் 
1. விக்கிரம ராவணன் அனுப்பவேவெகு 
வேகமாப்படை 
அக்கினிகேது முதற்படை வீரர்கள் 
அனேகரும் களம் 
2. நீலன் முதற் படைத்தலைவர்கள் இதுகண்டு 
நேருக்கு நேரேபோய்க் 
ஆலகாலமும் வடவாக்கினியும் போல் 
அவரும் இவரும்போர் 
3. சரத்தாலே ராட்சதர் வானரத் தளங்களைத் 
தரையிலே விழ 
அடுத்தாரே 
குதித்தாரே 
எதிர்த்தாரே 
முடித்தாரே 
மரத்தாலே வானரர் அரக்கர் படைகளை 
மண்டைகள் பிளந்திட 
அடித்தாரே 

4. வில்லும் சரமும் கொண்டுராட் சதர்வானர 
வீரர்கள் அணிகளை 
கல்லும் மரமும் கொண்டு ராட்சத சேனையைக் 
கவிப்படைத் தலைவர்கள் 
உடைத்தாரே 
புடைத்தாரே 

5 சுக்கிரீவன் வந்த சூரியகேதுவை 
துண்டம் துண்டமாக 
வைக்காமல் அப்போ தங்கதன் பாய்ந்ததொரு 
மாபெரும் பக்கனுயிர் 
முறித்தானே 
பறித்தானே 
வென்றானே 

6. தூமக்கண்ண னைராம தூதன் எம 
தூதனைப் போலவே 
மாமுஷ்கர முள்ள நீலன் மலைகொண்டு 
மலைபோன்ற மாலினியைக் 
கொன்றானே 

7. இடபன் போய்ப் பொல்லா வச்சிரதந்தனை 
ஏற்றி அவன் கழுத்தை 
உடனே பனசன் பிசாசனைக் கண்டோடி 
உதைத்து மிதித்துக் கையால் 
ஒடித்தானே 
அடித்தானே 
நடந்தானே 

8. இளையோன் மேலே அக்கினி கேதுவும் 
ஈரிரு வெள்ளங்கொண்டு 
கிளைபோய்ச் சேனையும் போய் அக்கினி 
கேதுவும் பட்டுக் 
கிடந்தானே 
கவிந்தாரே 

9. விரிவாகவே ஸ்ரீராமனை ஓராறு 
வெள்ளம் அரக்கர் போய்க் 
ஒருவாளியினாலே ஈசல்போக்குப் போல 
உடனே அவர்மண்ணில் 
அவிந்தாரே 

10. நாயும் நரியும் கழுகுகளும் வந்து 
நாலுதிக்கிலும் குதி 
பேயும் ரணபத்ர காளியும் கூனியும் 
பிணங்களைத் தின்று சதை 
குதித்தவே 
உதித்தவே 

11. இரணசுக்கிரன் புறப்பட்ட கண்ணிலே 
கண்டை முள்ளுதைத்த 
மரணம் கொடுத்திடும் ராவணன் இந்த 
வார்த்தையைக் கேட்டான் 
தைப்போலே 
அப்பாலே 
நின்றானே 

12. குனித்தே மகரக் கண்ணன் படைகளஞ்சு 
கோடி கொண் டரக்கன் முன் 
வனத்தேஎன் அப்பனைக் கொன்ற பழிக்குப்பழி 
மனிதரை வாங்குவேன் 
என்றானே 
தின்னவே 

13. வெறுவா யைத்தின்னு கின்ற அவனுக்கு 
வெள்ளவல் கிடைத்தது 
குறியா அரக்கனும் இருபது வெள்ளம் 
கூட்டினானே துணை 
என்ன 
வே 
வோர்கூட 

14. சிங்கமுகனும் ரத்தாட்சனும் என்னும் 
சேனைத் தலைவர் இரு 
இங்கே அந்தமக ராட்சதன் வந்தானே 
ராமச்சந்திரனுடன் 
போராட 
எய்தானே 

15. ஓராயிரம் அம்பு மகரக்கண்ணன் 
ஒருதொடை யாகவே 
ஓராயிரம் அம்பாலே அய்யனதை 
ஒருநொடியிற் பொடி 
செய்தானே 
அழிந்ததே 

16. பின்னும் ராகவன் அம்பாலே அவன் 
பெருந்தேரும் பரியும் 
மன்னும் ஒருகணையாலே அந்த 
மகராட்சதன் தலை 
விழுந்ததே 

17 -கண்டானே 
நளனாலே ரத்தாட்சனும் அந்த 
நமனார் உலகத்தைக் 
ளையாத பனசனாலே அந்த 
இகற் சிங்கமுகனுயிர் 
விண்டானே 


18 வில்லாலும் கல்லாலும் இருபது 
வெள்ளம் படைகளும் போய் 
சொல்லானது ராவணன் செவியிலே 
சுட்டாற் போலே போய்ப் 
இறந்ததே 
பிறந்ததே 

லட்சுமணருக்கும் இந்திரசித்துக்கும் இரண்டாம் முறை யுத்தம் 

அதையறிந்தான் இராவணன் என் மகன் தன்னை இங்கே 
அழையுங்கள் எனத் தூதர் அவன்பக்கல் சென்றார் 
வதைபடையின் கதைகேட்டான் தந்தையிடம் வந்தான் 
வணங்கி மக்கள் இறந்ததற்கு வருந்தாதே நான்போய்ச் 
சிதைய அந்தஇருமனிதர் சவம் சீதை கண்டும் 
சிறுகுரங்கின் பிணக்குவையத் தேவதைகள் கண்டும் 
பதைபதைத்தல் நீ காண்பாய் என்றிந்திந்திரசித்தன் 
பதிவிட்டான் தம்பியவன் எதிரிட்டானே 

பல்லவி 
லட்சுமணன் செய்த 
பெருஞ்சண்டை கேளீர் 
பெருஞ் சண்டைகேளீர் 

அநுபல்லவி 
பெருஞ்சண்டை கேளீர்கள் 
அருஞ்சண்டயாளிகள் 
தருந்திண்டேர் யானைகள் 
கருந்துண்ட சேனைகள் 
பருஞ்சண்ட மாருதம்போல் நெருங்குண்ட வாசிகள் 
மருங்கண்டவே தந்திரத்தொடு வருங்கண்டக இந்திரசித்தொடு 
( பெரு ) 
சரணங்கள் 
1. சிரத்தில் மணிமகுடம் 
தரித்து மார்பிற்கவசம் 
பரித்துப் பணிகள் அலங் 
கரித்து வலியப்பெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்ரனைப் போலார்ப் பரித்து விக்கிரமத்துடன் 
துங்கத்தைக் கோறி - ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி - அலைஎறியும் 
சீர்கொள் ஏழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூரர்கள் விடவிடென 
ஊர்கொள் பருதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையும்மணித் தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித் தரவே 
அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே உயர்ந்த அண்ட 
கோளம் கனத்த சக்கிர 
வாளம் பருத்தபுவி 
நீளந்தன் னொடுபாள 
பாளங்க ளாவெடிக்க 
மேளங்கள் அடிக்கக்கைத் 
தாளங்கள் துடிக்க எக் 
காளங்கள் தொனிக்கக்கத்தி காளங்க யானைகள் 
வீறிட்டுக் கதறத் - திக்குபாலர்ப 
கீரிட்டுப் பதறக் களத்தில் வந்து 
துன்று சமர் விளைக்க 
அன்றில் அணிவகுத்து 
இன்று மனிதர்களை 
வென்று பகைமுடிப்பென் 
என்று சங்கம் பூரித்து 
ஒன்றத் தனு வளைத்துக் 
குன்று வந்ததென - எத்துடனே - நின்ற இந்திரசித்துடனே ( பெரு ) 

2-வீரன் இந்திரசித்தன் 
போரில் நின்றவுடனே 
காரெனவே ஆர 
வாரம் செய்ய அதி 
தீரன் சுக்கிரீவனை 
சேரும் வானரர் எல் 
லாரும் சிங்கத்தைக் கண்டு பேரும் யானைக் குலம்போல் 
நடுக்கங்கொண் டோட 
அரக்கரவர் 
இடுக்கம் கண் டா 
அனுமசுக்கிரீ 
வனும் அங்கதனும் ஸ்ரீரா மனும் சாம்பவனும் லட்சும 
ணனும் உக்கிரம் உளவீரர் 
எனும் சிலவரும் அஞ்சா 
தினும் முந்தி வரும் ராட்ச 
தனும் இந்தப் போரினில் 
தனுவிந்தையா வளைத்து 
மனுமந்திர வாளிள் 
தொடுப்பதும் ஏற்போம் --- நம்மைக் கெலித்து 
விடுப்பதும் பார்ப்போம் - எனவே நிற்க 
தீதும் அதனில் மிக்க 
சூதும் உள்ள அரக்கர் 
வாது செய்ய நினைத்துப் 
போது படைகளைக் கொண் 
டீதததிசயம் இனி 
ஏது விளையுமோ என் 
றோதி அமரர் வெட்க 
மோதி அமர் விளைக்க 
அதை அய்யன் கண்டு லட்சுமணா நீ 
வதை செய்வில் கொண்டு என்று சொல்லி 
அனுமார் அங்கதன் தோளில் தனுவார் ராமலட்சுமணர் 
எனும் ஓர் இருவர் கேச 
வனும் ருத்திரனும் மிகு 
கனமர் புள் ஏற்றின் மீ 
தினில் ஏறினாற்போல 
மனமகிழ்ந்திட ஏறி - அன்றவன் சினம் மிகுந்திடவீறி- நின்றபின் ( பெரு ) 
3. திடத்த நீலன்மூதற் 
படைத்தலைவர் எல்லாம் 
கிடைத்த மலைகளைக் கீண் டெடுத்து மரங்களும் கொண் 
டடித்துப் போர்புரியத் 
துடித்துப் போமளவில் 
அடுத்த ராமச்சந்திரன் 
தடுத்தென் தம்பிசெயும் 
சண்டையை இன்று நீங்கள் பார்த்துக் 
கொண்டிரும் என்று 
சொல்லியேறும் 
பெருமானும் தம்பியும் 
ஸ்திரமாக வேநின்று 
உரமா வில்லை வளைத்துச் சரமாரிகள் பொழிய 
அரனால் அன்றுதிரி 
புரம் நீறெழுந்தாற்போல் 
வரம் ஆரும் வெள்ளம் ஓர் 
இருமுப்பதும் மடிந்து 
விழுந்ததைக் கண்டு இந்திரசித்தன் 
அழுதுள்ளம் விண்டு அமர்க்களத்தில் 
பெருநதியைப்போல் உ 
திரவெள்ளம் ஓடவே 
வரும் ஆனைசேனை கு 
திரையாவையும் மடியவே 
ஒருநிமி ஷத்திலே 
ருவோ ருமாவட்ட 
சரவேகமும் இவர்கள் 
கரவேகமும் சொல்ல 
எந்தன்னால் 
ஆதிசேஷ 
னும் சொல்லப் போமோ 
மடிந்தசேனை 
ஞாலத்தில் இத்தவக் 
கோலத்தர் விடும் ஆல 
காலத்தை நிகர்மாண 
சாலத்திலோ எந்த 
காலத்திலோ இந்திர 
சாலத்திலோ எந்த 
காலத்திலும் கண்டிலேன் வென்ற மூலத்தை நான் கண்டிலேன் என்ற 
( பெரு ) 
4. இன்று போரில் நமக் 
கென்று ராமலட்சுமணர் 
துன்றும் அரக்கர் தமைக் 
கொன்று விருந்து செய்தார் 
நன்று நன்றெனவே 
சென்று சென்று பல்லால் 
மென்று மென்று சுவைத்துத் 
தின்று தின்று கொழுத்துக் 
கூளிகள் 
ரணபத்திர 
காளிகள் ஆட 
அதனைக்கண்டு 
துங்க மாக முன்னம் 
பொங்கும் இந்திரசித்தன் 
மங்கியே பிரமித்து 
இங்குவந் தமர்செய் 
ஆமோ 
சிங்க ஏறனைய 
அங்கதன் அனுமனை 
இங்கு ரைக்கிலனேகர் 
எங்கும் மனிதர் என 
ஆச்சரியம் கொண்டு முன்னிருந்த 
மாச்சரியம் விண்டு இருந்தபோதா 
காசம் ஆருந்தேவர் 
வாசமலர்கள் கொண்டு 
நேசமா இருவர் மேல் 
வீச அதையும் கண்டு 
பூசலிலே அரக்கர் 
நாசமாகவே இவர்க் 
கேசல் ஆச்சுதேநம்பிர 
காசம் போச்சுதே என்று 
மனந்திடுக் கிட்டான் பெருமூச்சுகள் 
அனந்தமா இட்டான் அந்தவேளையில் 
முக்கியமான எட்டுத் 
திக்குகளும் அதிர 
மக்கி நட்சத்திரங்கள் 
மிக்கிடவே உதிர 
சக்கிரம் ஏந்தும் திரி 
விக்கிரமன் நேர் அனுமான் 
உக்கிரமுடன் இருதோளும் கொட்டிய நெக்கிடும் ஒலி ஆகாசம் முட்டிய 
( பெரு ) 

5. மாருதி தோள்கொட்டி ஆரவாரம் செய்யவே 
ஊரும் ஆயிரங்கோடி 
தேர்களிலே யிருந்து 
வீரரெல்லாம் நடுங்கி 
பாரில் விழுந்தார்லங்கை 
ஊரில் இருந்த பெரும் 
காரரக்கரும் ரத்தம் 
தனைக்கக்கி னார்கள் - சில அரக்கர் 
நினைத்துட்கி னார்கள் மேகநாதன்கண் 
டோர் குரங்கார்ப்புக்கு 
நீர் நடுங்கின போதே 
பார்மீதிலே செத்த 
பேர் நீங்களே என்று 
கார்வண்ண ராமன்போல் 
நேர்வண்ண லட்சுமணன் 
போர்மன்னிய முகத்தில் 
நேர்வந்தெதிர்ந்தபோதா 
யிரங்கோடி உரவே கத்தேரவர் 
மருங்கோடி வரவே லட்சுமணன் கண்டு 
துஷ்டஇந்திர சித்தன் முன் விட்ட நாகபாசக் 
கட்டினாலே தோற்று 
விட்டானென் றுலகத்தோர் 
சட்டமா எனைச் சொல்வார் வெட்டி அவன் 
தலை உன் 
கிட்டவைக் காவிட்டால் 
இஷ்ட அடிமையல்லேன் 
எனக் கண்ணன் முன்னே - சிலசபதம் 
தனைப் பண்ணப் பின்னே சாமியும் மெய்க்க 
ஆலமுண்ட பிரளய 
காலருத்திரனைப் போல 
சீலலட்சுமணன் பாண 
சாலத் தாயிரங்கோடி 
கோலத் தேரை அழித்து மேலிட்ட அரக்கரைக் 
காலன் வெருவிட அன்றகன்றிடும் ஞாலம் மருவிடநின்று கொன்றிடும் 
( பெரு ) 

6 . தனித்திந்திர சித்தன்வில் 
குனித்து லட்சுமணாநான் 
உனைக் கொன்றுன் அண்ணன்உன் தனக்குற் றுரிமை செய்ய 
நினைத்தேன் முடிக்காவிட்டால் அனைத்துலகையும் ஆளும் 
கனத்தராவணன் மகன் 
எனப்பேர் படைத்தும் ஒரு 
நலனில்லை இன்று வில் எடுத்ததால் 
பலனில்லை என்று - சொல்ல லட்சுமணன் 
நல்ல வார்த்தை சொன்னாய் செல்வம் சொல்லுக்கஞ்சுமா 
மல்லார் போரினில் வந்தால் 
எல்லாம் அப்போ தெரியும் 
பொல்லா உன் தனையே நான் கொல்வேன் உனக்குன் அப்பன் 
கல்லார் கடன் கழிப்ப 
தெல்லாரும் காண்பார்வா 
வா என்று சொல்ல இந்திரசித்துஆ 
ஆ என்று வெல்ல பிரளயகாலத் 
திடிபோலே ஆர்ப்பரித் 
துடனே கடோரமாம் 
வடவாக் கினியைப் போலும் திடவானிகள் அனேகம் 
படபடென அங்கதன் 
உடலில் ஆயிரம்பாணம் 
கடல் தாவும் அனுமான்மேல் அடல்சேர் பாணம் ரண்டா 
யிரம் விட்டுத் தடுக்க தேவர்கள் கண்டு 
உரங்கெட்டு நடுக்க ராமானுஜன் 
இடிஉற்றெழுந்து கார்கற் கடகச்சந்திர யோகத்தில் 
படியிற் பொழிந்தாற் போல் வடியிட்ட சரமாரி 
நொடியிற் பொழிய நீசன் கொடிய பகழி எல்லாம் 
பொடிப்பட்ட அன்று கெட்டவன் கெடிவிட்டிட நின்று விட்டபின் 
( பெரும் 
7 , லோகநாதன் தம்பியும் 
மேகநாதனும் எய்யும் 
வேகமாகிய பாணத் 
தீகள் எழுந்ததனால் 
சாகரங்களின் நீரும் 
மேகநீரும் வற்றிப் 
போகக் காடுகள் பற்றி 
வேகஅதனை ராமா 
நுடன் கண்டு கடுகி - சரங்கள் பல 
துஜம் கொண்டு முடுகி 
விடவே இந்திர 
சித்தன் தேரில் கட்டும் 
பத்து நூறென்னும் சிங் 
கத்திரள் யாவையும் 
செத்துப் போக அந்த 
எத்தன் இந்திரசித்தனைச் சுற்றி வந்திடும்சே 
மத்தேர் இல்லாமையால் 
மத்தியான சூரியன் 
பரிவேஷம் நீங்கி - நின்றாற் போல்நின் 
றொரு சோஷம் ஓங்கி - செய்து குரங்கின் 
சேனைமேலே பெருஞ் 
சோணை மழைபோற் கூர்மை 
ஆன சரங்கள் கையில் 
ஆனமட்டும் எய்து 
மான அங் கதன்மேலும் 
சேனைசரங்கள்விட்டு 
வானின் மீ திடித்துச்ச 
மானமாகச் சங்க 
நாதத்தைப் பண்ணி மகிழஓர்வி 
காதத்தை 
எண்ணி லட்சுமணன்பத்து 
தேட்டமான பாணம் 
போட்டுமேக நாதன் 
மாட்டி வந்தகவச 
மூட்டுகளைக் கழற்றி 
கோட்டுவிற் குணத்தொனி காட்டிநின்றி டச்சுவாமி 
கேட்டுமா நலம் என்று மகிழ்ந்திடும் கூட்டவானரர் நின்று புகழ்ந்திடும் 
பெரு ) 

அ . மண்டுபோர் ளையான்பிர 
சண்டவில் குணத்தொனி 
கண்டு மணமகிழ்ந்து 
கொண்டல் வண்ணராமன் 
அண்டம் உண்டவாயால் 
விண்டு சொல்ல வானரர் 
எண்டிசை களும் அதிர் 
கொண்டிடவே அட்ட 
சுாசத்தைப் பண்ணி 
கெர்ச்சித்தார் துஷ்ட 
நாசத்னத எண்ணி அந்தவேளையில் 
ஈசர்க்கும் எண்டிசை 
வாசர்க்கும் உலகர்க்கும் 
பேசற்கரிய பிரம 
பாசத்தை விடுவதில் 
மாசத்துவம் உடைய 
நீசன் இந்திர சித்தன் 
மோசத்தை எண்ணி ஆ 
காசத்திலே போய்த்தன் 
உடலத்தை மறைத்தான் வானரர் என்னும் 
கடல்வற்றக் குறைத்தான் அதனைக்கண்டு 
நாமாறி லாப்பரந் 
தாமா ஸ்ரீராமா நாம் 
ஏமாறி 
பறி இருந்தால் என் ஆமோ இந்திரசித்தன் 
சாமாறு பிரமாஸ்திரம் 
நாமேவிட்டிட வேணும் 
நேமம் அருள்வாயென்று 
ராமானுஜன் சொல்ல 
அதைராமன் தடுக்க செயிக்கும் வேளை 
இது அன்றென்றெடுக்க - உறவே இந்திர 
சித்தன் மனதில் வெகு 
சத்தியுள்ள பிரம 
அஸ்திரத்தை விட்டு 
வெற்றிபெறவோரு 
உத்தி செய்துலங்கை 
அத்தினான் இதுகண்டு 
சுற்றும் வானரர் ஆரவாரித்த சத்தியவானவர் நேரேபூரித்த 
( பெரு ) 

அனுமாருக்கும் அகம்பனுக்கும் யுத்தம் 
 
நலிஇந்திர சித்திலங்கை நகர்புகுகக் கீழே 
லட்சுமண னோடிறங்கிக் கவசமுதல் நீக்கி 
மெலிசேனை உணவுக்கா வீடணனைப் போக்கி 
வீரன் ஆயுதபூசை விதிசெய்யப் போனான் 
கிலிகொள் மகன் சத்தியினால் அவரை ஏமாற்றக் 
கிளர் இரா வணன்விடம் கோதரனோடகம்பன் 
வலியவந்தான் அவனையும் சேனைகளையும் பாய்ந்தனுமான் 
வாட்டினான் தெண்டு கொண்டு மாட்டினானே 

பல்லவி 

சாடினானே 
அனுமான் 
சாடினானே 
( சாடி ) 
அ
இளையவர் நாகபாசத்தால் கட்டுண்டதற்காக 
ஸ்ரீராமர் இரங்கல் 

விநய விபீஷணன் இவ்வா றழுதுவாடும் 
வேளையில் இராமச்சந்திரன் இடத்தில்மேவி 
அனலன் எனும் மந்திரி சொல்லச் சுடர் அம்பேந்தி 
அவ்விருளைத் துரத்தி ஐயன் களத்தில் வந்தான் 
முனை பெறுசுக் ரீவனை அங்க தனைக்கண்டான் 
முசித்தபடை களைக்கண்டான் மூர்ச்சையான 
தனியனுமா னையும் கண்டான் சாமிகோபம் 
தாங்கினான் தம்பியைப் பார்த்து ஏங்கினானே 

பல்லவி 
என்னதான் செய்வேன் அடா லட்சுமணா 
என்னதான் செய்வேன் 
நான் 
( என் ) 

அநுபல்லவி 

உன்னைப் பாசங்கட்ட உன் பாசம் என்னைக்கட்ட 
ஒருத்தன் நான் தவிப்பேனடா 
லட்சுமணா 
( என் ) 

சரணங்கள் 

1 --சனகி பிரிந்தகுறை மறக்கவோ நீவந்து 
தந்தாய் இந்தத் 
தொல்லையே 
லட்சுமணா 
நினைவின்படி நான்கீறும் கோட்டைக் கடந்தொருவர் 
நில்லென்றாலும் 
நில்லையே லட்சுமணா 
எனது கண்ணே நானும் உனதுபின் வருகிறேன் 
ஏதுக் கெடுத்தேன் 
வில்லையே லட்சுமணா 
உன துயிர் போனால் என் உயிரும்போம் அப்புறம் 
ஒருகவலையும் 
இல்லையே 
லட்சுமணா ( என் ) 

2. எடுத்தென் பசியறிந்து அருங்கனி தருங்கையை 
எப்படிப் பிடிப் 
பித்தாயோ 
லட்சுமணா 
பகுத்தறியாத நான் களத்தில் தூங்கிறேன் நீ 
பார்என்றுவரு 
வித்தாயோ லட்சுமணா 
அடுத்த தகப்பன் போலே நீயும் போய் என்னையிங்கே 
அவத்திலே சோ 
தித்தாயோ 
லட்சுமணா 
பிடித்த கொம்பையும் விட்டு மிதித்த கொர்பையும் விட்டுப் 
பேய்போல் அவை 
வைத்தாயோ -லட்சுமணா ( என் ) 

3. பெண்ணுக்காய் மான்பின்னே நடக்கச்சே தடுத்தஉன் 
பேச்சையும் 
கடந்தேனே 
லட்சுமணா 
மண்ணும் வரும் உன்னாலே மனைவியும் வரும் என்று 
மனமகிழ்ச்சி 
அடைந்தேனே - லட்சுமணா 
கண்ணைக் கொண்டு நடக்கும் அவர்போலே நானும் 
உன்னைக் கொண்டு 
நடந்தேனே 
லட்சுமணா 
எண்ணின எண்ணமும்போய் எதிரிக் கிளக்காரமா 
ஏழையாய்க் 
கிடந்தேனே - லட்சுமணா ( என் ) 

செருட பகவான் வருதலும் நாகபாச பறுதலும் 

அதிபதி ரகுபதி துணைவனொ டுருகிற அறையிருளின் போதில் 
உதறிட அரியதோர் தசமுகன் மகன்விடும் உரசநெடும் பாசம் 
சிதறிட இளையவன் எழுதர அமரர்கள் திசைதிசை நின்றாடக் 
கதிரவ னவனலன் 
னவனலன் இவனென விசையொடு கெருடனும் வந்தானே 

பல்லவி 

தெய்வக் 
கெருட பகவானும் வந்தானே 
கெருட பகவானும் வந்தானே 

அநு பல்லவி 

கெருட பகவான் வந்தான் கிளம்பிப் பெருங்காற்றினை 
இருசிறைகளும் சாடவே அஷ்டமா நாக 
அரசனும்பயந் தோடவே 
ராமனைக் 
கண்டு 
உருகி மனது வாடவே 
வனமலைபோல் 
உரகபூஷணம் அந்நேரமே 
( கெரு ) 
ஆடவே 

சரணங்கள் 
1. முந்தி ஆனையினால் என் முதுகேறி முதலைமேல் 
அந்தச் சக்கரம் விட்டாயே 
அந்தச் சக்கரத்தைவிட் டம்பும் வில்லுங்கொண்ட 
செந்தா மரைப்பூங் 
கையனே - எவர்களுக்கும் 
சந்தோஷம் தரும் மெய்யனே அமியார்போல 
நொந்தா லெப்படி துய்யனே அடியேனிதோ 
வந்தேன் வந்தேன் அய்யனே என்றுசொல்லி 
( கெரு ) 

2. விரிசிறகால் மண்ணும் விண்ணும் மூடிக்கொண்டு 
ஒரு மலையெனத் தாவியே 
ஒரு மலைமேற் சூரியன் உதித்தாற்போல் தலைமேலே 
பருமுடி ஒளி 
விரிய - காதங்கள் கோடி 
இருகண் பார்வையும் தெரிய - சாமி கைவிட்ட 
பிரிவாலேமனம் 
பரிய பரவசம் ஆய் 
உருகிக் கண்ணீர் 
சொரிய , வேகமதாக 
( செரு ) 

3. திடத்துடனே தெற்குத் திசையில் இருந்து பாய்ந்து 
வடக்குத் திசையை நாடியே 
வடக்குத்திசையில் ஐயன் மலர்ப்பாதம் கண்டுகை 
எடுத்து வணக்கம் 
குறிக்க - கழுத்தில் வெள்ளை 
துடிப்பா வெண்ணில 
வெறிக்க - ராகுகேதுவும் 
திடுக்கென் றுடலை முறிக்க - நாகபாசமும் 
பொடிப் பொடியாய்த் தெறிக்க - அன்பினுடன் 
( கெரு ) 

4. கிழிந்துபா தாளத்தில் கிடக்கும் பாம்புகளும் கண் 
சுழன்று தத்தளித் திடவே 
சுழன்று நாகபாசம் தொடுக்கும் இந்திர சித்தாலே 
விழுந்தோர் மெள்ள 
மெள்ளவே - நித்திரை நீங்கி 
எழுந்தவர் போலத் 
அழுந்தத் தழுவித் 
ஒழிந்து கவலை 
துள்ளவே 
தம்பியைராமன் 
கொள்ளவே தேவர்கள் பயம் 
தள்ளவே 
அவர்கள் வேண்ட ( கெரு ) 


கெருட பகவான் ஸ்ரீராமரைத் துதித்தல் 
மதஞ்சேர்நாக பாசமிந்த வகையால் தெறிக்க ராமச்சந்திரன் 
இதஞ்சேர்லட்சு மணன்முதலோர் எழுதல்கண்டான் அதிசயிக்கும் 
விதம்சேர் நீயார் எனக்கேட்டான் விரித்துரைப்பேன் பிறகென்று 
பதம் சேவித்தான் மனத்தன்பு பதித்தான் கெருடன் துதித்தானே 

பல்லவி 
அய்யனேஉன் மேன்மையை அறிந்து சொல்ல மேணுமென்றால் 
ஆதிசேஷனுக்கும் வருமோ 
( அய் ) 

அநுபல்லவி 

துய்யனே காத்தருள்செய் மெய்யனே எனத்தேவர் 
தோத்திரம் செய்திடஅ யோத்திநகரில் வந்த 
( அய் ) 

சரணங்கள் 
1. பிரமாதி தேவர்களைப் பெறுவானும் நீ அவர்க்குப் 
பெருரானும் நீஉனக்கு ஒருவர் நேரா 
தருமாதிபதவிகளைத் தருவானும் நீடனக்குத் 
தரவேண தென்னகோ சலைகுமாரா எங்கள் 
( அய் ) 
2. உலகெல்லாம் உன்வயிற்றில் ஒடுக்குவாய் விடுப்பாய்பின் 
ஒருவருக்கும் உண்டோ இந்தப் பெரியதிராணி 
தலைவனே உனக்கொருவர் பலம் வேணும் என்பதென்னோ 
சத்தியமோ நித்தியகோ 
தண்டபாணி - எங்கள் ( அய் ) 
3. ஆதிநடு முடிவாகி எள்ளும் எண்ணெயும் போலே 
அங்கங்கும் நிறைந்தாயே 
நீயிப்போது 
மேதினியிலே உனக்கும் எதிர் ஒருவர் உண்டென்எறு 
வில் எடுத்து விளையாட 
வந்ததேது - எங்கள் ( அய் ) 
4 . ஆரணங்கள் கூடவுன்றன் காரணங்களறியாமல் 
அரளிக்கையால் அகில 
லோகமித்திரனே 
நாரணனே அகண்டபரி பூரணனே உன்கீர்த்தி 
நானுரைக்க முடியுமோ 
ராமபத்திரனே 
எங்கள் ( அய் ) 
5. முத்தொழிலும் முக்குணமும் முச்சுடரும் முப்பொழுதும் 
முப்பொருளும் ஆகிநின்ற 
மூர்த்திராமா 
பத்தர் ஆசாபாசம் தொலைக்கும் உனக்கொருநாக 
பாசம் தொலைத்திடுவது பிர 
யா சமாமோ 
எங்கள் ( அய் ) 

இராத்திரியில் மகாராட்சத வீரர்கள்வதை 

கெடிக்கருடன் விடைகொண்டான் அப்புறம்வா னரரும் 
கெர்ச்சித்தார் கெருடன் வந்த வகையை இரா வணன் முன் 
துடித்திடத்தூதுவர் சொன்னார் அவனும்மக னிடம் போய்ச் 
சொன்னான் இந்திரசித்தும் ஒருபிர்மாஸ் திரத்தால் 
அடித்திடுவேன் நாளைப்போய் நரர்பொல்லார் இன்றைக் 
காகாது மிகநொந்தேன் அப்பப்பா என்றான் 
முடித்தலைபத் துள்ளவனும் படைத்தலைவ ரோடே 
முறைப்பட்டான் அங்கவரும் புறப்பட்டார் தாமே  

கண்ணிகள் 
1. விக்கிரம ராவணன் அனுப்பவேவெகு 
வேகமாப்படை 
அக்கினிகேது முதற்படை வீரர்கள் 
அனேகரும் களம் 
2. நீலன் முதற் படைத்தலைவர்கள் இதுகண்டு 
நேருக்கு நேரேபோய்க் 
ஆலகாலமும் வடவாக்கினியும் போல் 
அவரும் இவரும்போர் 
3. சரத்தாலே ராட்சதர் வானரத் தளங்களைத் 
தரையிலே விழ 
அடுத்தாரே 
குதித்தாரே 
எதிர்த்தாரே 
முடித்தாரே 
மரத்தாலே வானரர் அரக்கர் படைகளை 
மண்டைகள் பிளந்திட 
அடித்தாரே 

4. வில்லும் சரமும் கொண்டுராட் சதர்வானர 
வீரர்கள் அணிகளை 
கல்லும் மரமும் கொண்டு ராட்சத சேனையைக் 
கவிப்படைத் தலைவர்கள் 
உடைத்தாரே 
புடைத்தாரே 

5 சுக்கிரீவன் வந்த சூரியகேதுவை 
துண்டம் துண்டமாக 
வைக்காமல் அப்போ தங்கதன் பாய்ந்ததொரு 
மாபெரும் பக்கனுயிர் 
முறித்தானே 
பறித்தானே 
வென்றானே 

6. தூமக்கண்ண னைராம தூதன் எம 
தூதனைப் போலவே 
மாமுஷ்கர முள்ள நீலன் மலைகொண்டு 
மலைபோன்ற மாலினியைக் 
கொன்றானே 

7. இடபன் போய்ப் பொல்லா வச்சிரதந்தனை 
ஏற்றி அவன் கழுத்தை 
உடனே பனசன் பிசாசனைக் கண்டோடி 
உதைத்து மிதித்துக் கையால் 
ஒடித்தானே 
அடித்தானே 
நடந்தானே 

8. இளையோன் மேலே அக்கினி கேதுவும் 
ஈரிரு வெள்ளங்கொண்டு 
கிளைபோய்ச் சேனையும் போய் அக்கினி 
கேதுவும் பட்டுக் 
கிடந்தானே 
கவிந்தாரே 

9. விரிவாகவே ஸ்ரீராமனை ஓராறு 
வெள்ளம் அரக்கர் போய்க் 
ஒருவாளியினாலே ஈசல்போக்குப் போல 
உடனே அவர்மண்ணில் 
அவிந்தாரே 

10. நாயும் நரியும் கழுகுகளும் வந்து 
நாலுதிக்கிலும் குதி 
பேயும் ரணபத்ர காளியும் கூனியும் 
பிணங்களைத் தின்று சதை 
குதித்தவே 
உதித்தவே 

11. இரணசுக்கிரன் புறப்பட்ட கண்ணிலே 
கண்டை முள்ளுதைத்த 
மரணம் கொடுத்திடும் ராவணன் இந்த 
வார்த்தையைக் கேட்டான் 
தைப்போலே 
அப்பாலே 
நின்றானே 

12. குனித்தே மகரக் கண்ணன் படைகளஞ்சு 
கோடி கொண் டரக்கன் முன் 
வனத்தேஎன் அப்பனைக் கொன்ற பழிக்குப்பழி 
மனிதரை வாங்குவேன் 
என்றானே 
தின்னவே 

13. வெறுவா யைத்தின்னு கின்ற அவனுக்கு 
வெள்ளவல் கிடைத்தது 
குறியா அரக்கனும் இருபது வெள்ளம் 
கூட்டினானே துணை 
என்ன 
வே 
வோர்கூட 

14. சிங்கமுகனும் ரத்தாட்சனும் என்னும் 
சேனைத் தலைவர் இரு 
இங்கே அந்தமக ராட்சதன் வந்தானே 
ராமச்சந்திரனுடன் 
போராட 
எய்தானே 

15. ஓராயிரம் அம்பு மகரக்கண்ணன் 
ஒருதொடை யாகவே 
ஓராயிரம் அம்பாலே அய்யனதை 
ஒருநொடியிற் பொடி 
செய்தானே 
அழிந்ததே 

16. பின்னும் ராகவன் அம்பாலே அவன் 
பெருந்தேரும் பரியும் 
மன்னும் ஒருகணையாலே அந்த 
மகராட்சதன் தலை 
விழுந்ததே 

17 -கண்டானே 
நளனாலே ரத்தாட்சனும் அந்த 
நமனார் உலகத்தைக் 
ளையாத பனசனாலே அந்த 
இகற் சிங்கமுகனுயிர் 
விண்டானே 


18 வில்லாலும் கல்லாலும் இருபது 
வெள்ளம் படைகளும் போய் 
சொல்லானது ராவணன் செவியிலே 
சுட்டாற் போலே போய்ப் 
இறந்ததே 
பிறந்ததே 

லட்சுமணருக்கும் இந்திரசித்துக்கும் இரண்டாம் முறை யுத்தம் 

அதையறிந்தான் இராவணன் என் மகன் தன்னை இங்கே 
அழையுங்கள் எனத் தூதர் அவன்பக்கல் சென்றார் 
வதைபடையின் கதைகேட்டான் தந்தையிடம் வந்தான் 
வணங்கி மக்கள் இறந்ததற்கு வருந்தாதே நான்போய்ச் 
சிதைய அந்தஇருமனிதர் சவம் சீதை கண்டும் 
சிறுகுரங்கின் பிணக்குவையத் தேவதைகள் கண்டும் 
பதைபதைத்தல் நீ காண்பாய் என்றிந்திந்திரசித்தன் 
பதிவிட்டான் தம்பியவன் எதிரிட்டானே 

பல்லவி 
லட்சுமணன் செய்த 
பெருஞ்சண்டை கேளீர் 
பெருஞ் சண்டைகேளீர் 

அநுபல்லவி 
பெருஞ்சண்டை கேளீர்கள் 
அருஞ்சண்டயாளிகள் 
தருந்திண்டேர் யானைகள் 
கருந்துண்ட சேனைகள் 
பருஞ்சண்ட மாருதம்போல் நெருங்குண்ட வாசிகள் 
மருங்கண்டவே தந்திரத்தொடு வருங்கண்டக இந்திரசித்தொடு 
( பெரு ) 
சரணங்கள் 
1. சிரத்தில் மணிமகுடம் 
தரித்து மார்பிற்கவசம் 
பரித்துப் பணிகள் அலங் 
கரித்து வலியப்பெரும் 
கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை 
எரித்த ருத்ரனைப் போலார்ப் பரித்து விக்கிரமத்துடன் 
துங்கத்தைக் கோறி - ஓராயிரம் 
சிங்கத்தேர் ஏறி - அலைஎறியும் 
சீர்கொள் ஏழுகடலின் நீர்கள் கரைபுரளப் 
பார்கள் கிடுகிடெனச் சூரர்கள் விடவிடென 
ஊர்கொள் பருதிநிகர் ஏர்கொள் குடைகள் மலர்த் 
தார்கள் அசையும்மணித் தேர்கள் ஆயிரங்கோடி 
புடைசுற்றித் தரவே 
அறுபது வெள்ளம் 
படைதத்தி வரவே உயர்ந்த அண்ட 
கோளம் கனத்த சக்கிர 
வாளம் பருத்தபுவி 
நீளந்தன் னொடுபாள 
பாளங்க ளாவெடிக்க 
மேளங்கள் அடிக்கக்கைத் 
தாளங்கள் துடிக்க எக் 
காளங்கள் தொனிக்கக்கத்தி காளங்க யானைகள் 
வீறிட்டுக் கதறத் - திக்குபாலர்ப 
கீரிட்டுப் பதறக் களத்தில் வந்து 
துன்று சமர் விளைக்க 
அன்றில் அணிவகுத்து 
இன்று மனிதர்களை 
வென்று பகைமுடிப்பென் 
என்று சங்கம் பூரித்து 
ஒன்றத் தனு வளைத்துக் 
குன்று வந்ததென - எத்துடனே - நின்ற இந்திரசித்துடனே ( பெரு ) 

2-வீரன் இந்திரசித்தன் 
போரில் நின்றவுடனே 
காரெனவே ஆர 
வாரம் செய்ய அதி 
தீரன் சுக்கிரீவனை 
சேரும் வானரர் எல் 
லாரும் சிங்கத்தைக் கண்டு பேரும் யானைக் குலம்போல் 
நடுக்கங்கொண் டோட 
அரக்கரவர் 
இடுக்கம் கண் டா 
அனுமசுக்கிரீ 
வனும் அங்கதனும் ஸ்ரீரா மனும் சாம்பவனும் லட்சும 
ணனும் உக்கிரம் உளவீரர் 
எனும் சிலவரும் அஞ்சா 
தினும் முந்தி வரும் ராட்ச 
தனும் இந்தப் போரினில் 
தனுவிந்தையா வளைத்து 
மனுமந்திர வாளிள் 
தொடுப்பதும் ஏற்போம் --- நம்மைக் கெலித்து 
விடுப்பதும் பார்ப்போம் - எனவே நிற்க 
தீதும் அதனில் மிக்க 
சூதும் உள்ள அரக்கர் 
வாது செய்ய நினைத்துப் 
போது படைகளைக் கொண் 
டீதததிசயம் இனி 
ஏது விளையுமோ என் 
றோதி அமரர் வெட்க 
மோதி அமர் விளைக்க 
அதை அய்யன் கண்டு லட்சுமணா நீ 
வதை செய்வில் கொண்டு என்று சொல்லி 
அனுமார் அங்கதன் தோளில் தனுவார் ராமலட்சுமணர் 
எனும் ஓர் இருவர் கேச 
வனும் ருத்திரனும் மிகு 
கனமர் புள் ஏற்றின் மீ 
தினில் ஏறினாற்போல 
மனமகிழ்ந்திட ஏறி - அன்றவன் சினம் மிகுந்திடவீறி- நின்றபின் ( பெரு ) 
3. திடத்த நீலன்மூதற் 
படைத்தலைவர் எல்லாம் 
கிடைத்த மலைகளைக் கீண் டெடுத்து மரங்களும் கொண் 
டடித்துப் போர்புரியத் 
துடித்துப் போமளவில் 
அடுத்த ராமச்சந்திரன் 
தடுத்தென் தம்பிசெயும் 
சண்டையை இன்று நீங்கள் பார்த்துக் 
கொண்டிரும் என்று 
சொல்லியேறும் 
பெருமானும் தம்பியும் 
ஸ்திரமாக வேநின்று 
உரமா வில்லை வளைத்துச் சரமாரிகள் பொழிய 
அரனால் அன்றுதிரி 
புரம் நீறெழுந்தாற்போல் 
வரம் ஆரும் வெள்ளம் ஓர் 
இருமுப்பதும் மடிந்து 
விழுந்ததைக் கண்டு இந்திரசித்தன் 
அழுதுள்ளம் விண்டு அமர்க்களத்தில் 
பெருநதியைப்போல் உ 
திரவெள்ளம் ஓடவே 
வரும் ஆனைசேனை கு 
திரையாவையும் மடியவே 
ஒருநிமி ஷத்திலே 
ருவோ ருமாவட்ட 
சரவேகமும் இவர்கள் 
கரவேகமும் சொல்ல 
எந்தன்னால் 
ஆதிசேஷ 
னும் சொல்லப் போமோ 
மடிந்தசேனை 
ஞாலத்தில் இத்தவக் 
கோலத்தர் விடும் ஆல 
காலத்தை நிகர்மாண 
சாலத்திலோ எந்த 
காலத்திலோ இந்திர 
சாலத்திலோ எந்த 
காலத்திலும் கண்டிலேன் வென்ற மூலத்தை நான் கண்டிலேன் என்ற 
( பெரு ) 
4. இன்று போரில் நமக் 
கென்று ராமலட்சுமணர் 
துன்றும் அரக்கர் தமைக் 
கொன்று விருந்து செய்தார் 
நன்று நன்றெனவே 
சென்று சென்று பல்லால் 
மென்று மென்று சுவைத்துத் 
தின்று தின்று கொழுத்துக் 
கூளிகள் 
ரணபத்திர 
காளிகள் ஆட 
அதனைக்கண்டு 
துங்க மாக முன்னம் 
பொங்கும் இந்திரசித்தன் 
மங்கியே பிரமித்து 
இங்குவந் தமர்செய் 
ஆமோ 
சிங்க ஏறனைய 
அங்கதன் அனுமனை 
இங்கு ரைக்கிலனேகர் 
எங்கும் மனிதர் என 
ஆச்சரியம் கொண்டு முன்னிருந்த 
மாச்சரியம் விண்டு இருந்தபோதா 
காசம் ஆருந்தேவர் 
வாசமலர்கள் கொண்டு 
நேசமா இருவர் மேல் 
வீச அதையும் கண்டு 
பூசலிலே அரக்கர் 
நாசமாகவே இவர்க் 
கேசல் ஆச்சுதேநம்பிர 
காசம் போச்சுதே என்று 
மனந்திடுக் கிட்டான் பெருமூச்சுகள் 
அனந்தமா இட்டான் அந்தவேளையில் 
முக்கியமான எட்டுத் 
திக்குகளும் அதிர 
மக்கி நட்சத்திரங்கள் 
மிக்கிடவே உதிர 
சக்கிரம் ஏந்தும் திரி 
விக்கிரமன் நேர் அனுமான் 
உக்கிரமுடன் இருதோளும் கொட்டிய நெக்கிடும் ஒலி ஆகாசம் முட்டிய 
( பெரு ) 

5. மாருதி தோள்கொட்டி ஆரவாரம் செய்யவே 
ஊரும் ஆயிரங்கோடி 
தேர்களிலே யிருந்து 
வீரரெல்லாம் நடுங்கி 
பாரில் விழுந்தார்லங்கை 
ஊரில் இருந்த பெரும் 
காரரக்கரும் ரத்தம் 
தனைக்கக்கி னார்கள் - சில அரக்கர் 
நினைத்துட்கி னார்கள் மேகநாதன்கண் 
டோர் குரங்கார்ப்புக்கு 
நீர் நடுங்கின போதே 
பார்மீதிலே செத்த 
பேர் நீங்களே என்று 
கார்வண்ண ராமன்போல் 
நேர்வண்ண லட்சுமணன் 
போர்மன்னிய முகத்தில் 
நேர்வந்தெதிர்ந்தபோதா 
யிரங்கோடி உரவே கத்தேரவர் 
மருங்கோடி வரவே லட்சுமணன் கண்டு 
துஷ்டஇந்திர சித்தன் முன் விட்ட நாகபாசக் 
கட்டினாலே தோற்று 
விட்டானென் றுலகத்தோர் 
சட்டமா எனைச் சொல்வார் வெட்டி அவன் 
தலை உன் 
கிட்டவைக் காவிட்டால் 
இஷ்ட அடிமையல்லேன் 
எனக் கண்ணன் முன்னே - சிலசபதம் 
தனைப் பண்ணப் பின்னே சாமியும் மெய்க்க 
ஆலமுண்ட பிரளய 
காலருத்திரனைப் போல 
சீலலட்சுமணன் பாண 
சாலத் தாயிரங்கோடி 
கோலத் தேரை அழித்து மேலிட்ட அரக்கரைக் 
காலன் வெருவிட அன்றகன்றிடும் ஞாலம் மருவிடநின்று கொன்றிடும் 
( பெரு ) 

6 . தனித்திந்திர சித்தன்வில் 
குனித்து லட்சுமணாநான் 
உனைக் கொன்றுன் அண்ணன்உன் தனக்குற் றுரிமை செய்ய 
நினைத்தேன் முடிக்காவிட்டால் அனைத்துலகையும் ஆளும் 
கனத்தராவணன் மகன் 
எனப்பேர் படைத்தும் ஒரு 
நலனில்லை இன்று வில் எடுத்ததால் 
பலனில்லை என்று - சொல்ல லட்சுமணன் 
நல்ல வார்த்தை சொன்னாய் செல்வம் சொல்லுக்கஞ்சுமா 
மல்லார் போரினில் வந்தால் 
எல்லாம் அப்போ தெரியும் 
பொல்லா உன் தனையே நான் கொல்வேன் உனக்குன் அப்பன் 
கல்லார் கடன் கழிப்ப 
தெல்லாரும் காண்பார்வா 
வா என்று சொல்ல இந்திரசித்துஆ 
ஆ என்று வெல்ல பிரளயகாலத் 
திடிபோலே ஆர்ப்பரித் 
துடனே கடோரமாம் 
வடவாக் கினியைப் போலும் திடவானிகள் அனேகம் 
படபடென அங்கதன் 
உடலில் ஆயிரம்பாணம் 
கடல் தாவும் அனுமான்மேல் அடல்சேர் பாணம் ரண்டா 
யிரம் விட்டுத் தடுக்க தேவர்கள் கண்டு 
உரங்கெட்டு நடுக்க ராமானுஜன் 
இடிஉற்றெழுந்து கார்கற் கடகச்சந்திர யோகத்தில் 
படியிற் பொழிந்தாற் போல் வடியிட்ட சரமாரி 
நொடியிற் பொழிய நீசன் கொடிய பகழி எல்லாம் 
பொடிப்பட்ட அன்று கெட்டவன் கெடிவிட்டிட நின்று விட்டபின் 
( பெரும் 
7 , லோகநாதன் தம்பியும் 
மேகநாதனும் எய்யும் 
வேகமாகிய பாணத் 
தீகள் எழுந்ததனால் 
சாகரங்களின் நீரும் 
மேகநீரும் வற்றிப் 
போகக் காடுகள் பற்றி 
வேகஅதனை ராமா 
நுடன் கண்டு கடுகி - சரங்கள் பல 
துஜம் கொண்டு முடுகி 
விடவே இந்திர 
சித்தன் தேரில் கட்டும் 
பத்து நூறென்னும் சிங் 
கத்திரள் யாவையும் 
செத்துப் போக அந்த 
எத்தன் இந்திரசித்தனைச் சுற்றி வந்திடும்சே 
மத்தேர் இல்லாமையால் 
மத்தியான சூரியன் 
பரிவேஷம் நீங்கி - நின்றாற் போல்நின் 
றொரு சோஷம் ஓங்கி - செய்து குரங்கின் 
சேனைமேலே பெருஞ் 
சோணை மழைபோற் கூர்மை 
ஆன சரங்கள் கையில் 
ஆனமட்டும் எய்து 
மான அங் கதன்மேலும் 
சேனைசரங்கள்விட்டு 
வானின் மீ திடித்துச்ச 
மானமாகச் சங்க 
நாதத்தைப் பண்ணி மகிழஓர்வி 
காதத்தை 
எண்ணி லட்சுமணன்பத்து 
தேட்டமான பாணம் 
போட்டுமேக நாதன் 
மாட்டி வந்தகவச 
மூட்டுகளைக் கழற்றி 
கோட்டுவிற் குணத்தொனி காட்டிநின்றி டச்சுவாமி 
கேட்டுமா நலம் என்று மகிழ்ந்திடும் கூட்டவானரர் நின்று புகழ்ந்திடும் 
பெரு ) 

அ . மண்டுபோர் ளையான்பிர 
சண்டவில் குணத்தொனி 
கண்டு மணமகிழ்ந்து 
கொண்டல் வண்ணராமன் 
அண்டம் உண்டவாயால் 
விண்டு சொல்ல வானரர் 
எண்டிசை களும் அதிர் 
கொண்டிடவே அட்ட 
சுாசத்தைப் பண்ணி 
கெர்ச்சித்தார் துஷ்ட 
நாசத்னத எண்ணி அந்தவேளையில் 
ஈசர்க்கும் எண்டிசை 
வாசர்க்கும் உலகர்க்கும் 
பேசற்கரிய பிரம 
பாசத்தை விடுவதில் 
மாசத்துவம் உடைய 
நீசன் இந்திர சித்தன் 
மோசத்தை எண்ணி ஆ 
காசத்திலே போய்த்தன் 
உடலத்தை மறைத்தான் வானரர் என்னும் 
கடல்வற்றக் குறைத்தான் அதனைக்கண்டு 
நாமாறி லாப்பரந் 
தாமா ஸ்ரீராமா நாம் 
ஏமாறி 
பறி இருந்தால் என் ஆமோ இந்திரசித்தன் 
சாமாறு பிரமாஸ்திரம் 
நாமேவிட்டிட வேணும் 
நேமம் அருள்வாயென்று 
ராமானுஜன் சொல்ல 
அதைராமன் தடுக்க செயிக்கும் வேளை 
இது அன்றென்றெடுக்க - உறவே இந்திர 
சித்தன் மனதில் வெகு 
சத்தியுள்ள பிரம 
அஸ்திரத்தை விட்டு 
வெற்றிபெறவோரு 
உத்தி செய்துலங்கை 
அத்தினான் இதுகண்டு 
சுற்றும் வானரர் ஆரவாரித்த சத்தியவானவர் நேரேபூரித்த 
( பெரு ) 

அனுமாருக்கும் அகம்பனுக்கும் யுத்தம் 
 
நலிஇந்திர சித்திலங்கை நகர்புகுகக் கீழே 
லட்சுமண னோடிறங்கிக் கவசமுதல் நீக்கி 
மெலிசேனை உணவுக்கா வீடணனைப் போக்கி 
வீரன் ஆயுதபூசை விதிசெய்யப் போனான் 
கிலிகொள் மகன் சத்தியினால் அவரை ஏமாற்றக் 
கிளர் இரா வணன்விடம் கோதரனோடகம்பன் 
வலியவந்தான் அவனையும் சேனைகளையும் பாய்ந்தனுமான் 
வாட்டினான் தெண்டு கொண்டு மாட்டினானே 

பல்லவி 

சாடினானே 
அனுமான் 
சாடினானே 
( சாடி ) 
அநு பல்லவி 
சாடிக்கும்ப கர்னன் முன்னே 
நாடியகம்பன் படையில் 
போடுமந்தத் தெண்டினாலே 
ஆடுகளில் வேங்கைபோலே ( சாடி )  

1. வாரும் வாரும் ராட்சதரே 
வாரி அந்தலங்கை 
சாரிசாரி யாகவொரு 
தானொருத்தனுமேருத்திர 
வாருமென்று கூவினான் 
ஊரில் விழத் தூவினான் 
கேசரிபோல் தாவினான் 
சாமிபோல் உலாவினான் 
ஆரநெருங்கிய குதிரைகள் சருகென ஓட்டி - பிணம்பிணமா 
ஆனைகள் பூனைகளாக விழும்படி வாட்டி - தேங்காய் போல் தள்ளி 
தேர்தனையே விடுசாரதி தலைகளை மூட்டி - மென்மேலும் வந்த 
சேனையை வீசி அதோ கதியாகவே மாட்டி - திசாதிசையில் 
வீரிட்டரக்கியர் கிழ - ஓரிக்குரல் போலே யழ 
நேரிட்ட ராட்சதர் வீடு 
ழப்பீரிட்ட இரத்தம் எழ ( சாடி ) 

சனை 
ஒருகாலே 
2. கோடிபேர்க்கொரு குத்தாகப் 
போடுவான் 
ஒருபுறம் 
கொக்கரித்து ராமனைக் கொண் டாடுவான் ஒருபுறம் 
ஆடுவான் வாலாலே சுற்றி 
மூடுவான் 
ஒருபுறம் 
ஆரடா சேவகன் என்று 
தேடுவான் 
ஒருபுறம் 
மூடன் நிகும்பனவ் வேளையிலே அனுமானே உன்னைதான் கொன்று 
போடுவேன் என்றொரு சூலம் எடுத் தெறிவானைப் பொருந்தி அவன் 
தாடையில் ஓரடி போட முழங்கிய சோனை 
போலவே ரத்தம் 
டமடிந்தனன் மேலும் மகாபல 
சுற்றியபோது
சாடிசட்டி 
மூடியிட்ட சூளைபோலே 
கோடையிடி விழுந்தாற் போலே ஓடிஓடித்தெண்டினாலே ( சாடி ) 
3. அகந்தையா லொருதெண்டு கொண்டு ஆயிரங்கழுதைத் தேரிலே 
அகம்பன் வந்தடித்தான் முன்னே புகுந்தனுமான் மார்பிலே 
கழ்ந்த அனுமானும் தெண்டால் 
தட்டினான் அந்நேரிலே 
தெண்டுங் கொண்டையும் பிண்டு உருண்ட அந்தப் பாரிலே 
புகுந்தவன்தன திடக்கையால் அனுமானை 
அடித்தான் அடிக்க அய்யன் 
பொட்டெனவே அந்தத் துட்டனைக் கையானே 
பிடித்தான் - பிடித்துமார்பில் 
பருந்து குபீரென ரத்தம் இறங்கிட இடித்தான் இடித்தபின்னும் 
பார்த்தவனாவியைக் கூற்றுவனாமெனக் குடித்தான் 
முத்திஐயையோ 
புதைந்து ராவணன் தள்ள உகந்துவரும் நூறு வெள்ளம் 
மிகும்படையைக் காலன்கொள்ள அகம்பனுயிர் துள்ளத்துள்ள (சாடி ) 

இளையவர் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் 

அகம்பனங்கே படஅனுமான் முதலோர்கள் இருளில் 
அகன்று தனித் தனுப்போர்செய் திளையவன்பால் அடைந்தார் 
புகைந்த இரா வினில் மகோ தரன் தேவேந் திரன் போல் 
போர் செய்தான் இளையவனும் திகைத்தானப் போது 
முகிந்தபிர மாஸ் திரமிந்திரசித்து விட்டான் தம்பி 
முதலானோர் படுத்துவிட்டார் அதையறிந்து ராமன் 
மிகுந்துயரால் வந்துலைவாய் மெழுகுபோல் உருகி 
விழுகின்றான் துணைவனைப்பார்த் தழுகின்றானே 

கண்ணிகள் 

1. அப்பனே அய்யனே அரும்பிறவியே என் தன் 
அரசே கண்மணியே 
லட்சுமணா 
எப்படிநானுனை மறப்பேன் எப்போதுன்னுடன் பிறப்பேன் 
னி என் மனம் துணியேன் 
லட்சுமணா 

2. வன்னமாம் பிரம்மாஸ்திரம் கொடுத்த பிரம்மாவைப்பழி 
லட்சுமணா 
வாங்கநீ தொடர்ந்தாயோ 
என்னுடன் பிறந்தகுறை உசரப்போய் தசரதற்கு 
லட்சுமணா 
யம்பநீ நடந்தாயோ 
3. தந்தையையும் சடாயுவையும் கொடுத்ததும் போதாமல்உன் 
லட்சுமணா 
தனையும் பறிகொடுத்தேனே 
இந்தவயதினில் இந்தக்கண் காட்சிகாணநா 
லட்சுமணா 
என்னஉடம் பெடுத்தேன் 
லட்சுமணா 

4. அந்தோநான் களையாகித் தண்ணீர் விடாயெடுத்தால் 
ஆர்முகத்தைப் பார்ப்பேன் 
ந்தாரும் காய்கனிகள் அண்ணா என்றழைக்கும்உன் 
இன்சொல் தான் என்று கேட்பேன் 
லட்சுமணா 

5. நேரமறிந் தென்வயிற்றில் காய்கனியை இட்டநீ 
நெருப்பை இட்டாயோ நீ 
லட்சுமணா 
ஆரையும்விட்டென்னை விடேன் என்றாயே என்னைக்கூட 
அகல விட்டாயோ நீ 
லட்சுமணா 

6. சோற்றிலேகல் லெடுக்கறியேன் முகவணைக்கல் எடுப்பேனென்ற 
சொல்லையோ நான் எடுத்தேன் 
லட்சுமணா 
ஆற்றி நான் முடிபெறுமுன் வந்தவிபீஷணற்கு லங்கை 
ஆள முடி கொடுத்தேன் 
லட்சுமணா 
7. படிக்கும் உன்புத்திதள்ளி உனக்கும் வானரங்களுக்கும் 
பழிகாரன் ஆனேனே 
லட்சுமணா 
பிடித்ததே பிடியாகப் பெண்வார்த்தை கொண்டுநான் 
பிழைமோசம் போனேனே 
லட்சுமணா 
8. நீமாள என்னுயிர் போம் பரதற்கு இதுகேட்கில் 
நிமிஷத்தில் உயிர்போமே 
லட்சுமணா 
தாய்மார்க்கும் உயிர்போமே நான் பிறக்கச் சூரியகுலம் 
தான் துளக்கம் ஆச்சே 
லட்சுமணா 

ஸ்ரீராமரை ஆகாசத்தில் சகலதேவதைகளும் தோத்தரித்தல் 

இந்தா வந்தேன் வந்தேனென் றிளையபெருமாள் முகம்நோக்கி 
நொந்தாயாசம் பெறமலிந்து நோக்கும் பெரிபெருமாள் முன் 
அந்தோ உனக்கும் கவலையுண்டோ ஐயாஎன்றே அந்தரத்தில் 
வந்தார் தேவர் சாமிமுகம் மதித்தார் இறங்கித் துதித்தாரே 

பல்லவி 
( உன் ) 
உன்னது மகிமையை இன்னதென்றே வாராலும் 
உரைக்கல் ஆமோ ராமா 

அநுபல்லவி 
நின்னோடு நாபியில் பிரமா ஒருத்தனாலே 
நிகரில் சார சரங்கள் சகலமும் தரலாலே 
நன்னி அரக்கருக்கு நீபயப்படுவது 
நாயமோ சாமிஉன் தன் மாயமோ புவிமேலே 
( உன் ) 
சரணங்கள் 

ஆவாயே 
1. முப்பரம் பொருளுமாய் 
முப்பரம் பொருளுக்குள் 
மூலமுதற் பொருளும் 
அப்பனும் அன்னையும் 
தம்பியும் உனக்குண்டோ 
அவர்கள் வருத்தங்கண்டு 
நோவாயே 
இப்படி உன்சரித்திரம் 
இதுவே நிலைவரம் 
என்றால் அத்தையும்கூடக் 
கடந்தாயே 
செப்பிலும் இல்லை பந்திலும் இல்லை உன் செயல் 
சீமையிலே தகப்பன் சாமி என் 
பது நீயே 
2. அத்தி மரத்தினிலே தொத்திய கனிபோலே 
அண்டம் என்னும் கனிகள் 
உன் மேலே 
தொத்தி இருப்பவற்றுள் ஒருகனியிற் செனித்த 
துஷ்ட அரக்கர் என்னும் 
புழுவாலே 
கஸ்தி அடையலாமோ சிற்றூரில் செல்வக்கூத்து 
கட்டுகிறாய் என்ன 
உத்தமனே உன்கீர்த்தி எத்தனைபேர் சொன்னாலும் 
ஊசிக் கண்ணாலே ஆகாசம் பார்க்கிறாப் போலே 
( உன் ) 
ஒருகாலே 
( உன் ) 
ரகநாட்டம் 
மாறாட்டம் 

3. அம்பரீஷன் பிரகலாதன் முதலோருக் 
அருளிச்செய்தாயே அவனுக்கி 
நம்பின எங்களைஇந்த அரக்கருக்கு 
நடுங்கச் செய்ததென்ன 
தம்பியும் பிழைக்கின்றான் உன்தனக் கிவர் என்ன 
சண்டமா ருதத்தின்முன் 
எம்பிரானே நீநொந்தால் எங்களுக்கொருகதி 
இருக்குமோ தேவர் என்றும் தரிக்குமோஎங் 
சருகோட்டம் 
கள் கூட்டம் ( உன் ) 

ராமலட்சுமணருக்கு சீதாதேவி இரங்கல் 

வானவர் இப் படித்துதிக்கத் தூதர் சென்று 
மன்னவனே உன்மகனால் மனிதச் சாதி 
ஆனவரும் குரங்குகளும் முடிந்தார் என்றார் 
அவனுமங்கே புஷ்பகவி மானத் தேற்றிச் 
சானகிக்குக் காட்டுமென்றான் கண்டாள் சீதை 
தணல் அடுத்த வெண்ணெய் போல் உருகிவாழ 
நானொரு பெண் பிறக்க இவ்வா றாச்சோ என்று 
நலிகின்றாள் நொந்துநொந்து மெலிகின்றாளே 

கண்ணிகள் 

1 என்னசெய்வேன் சாமிநான் என்னசெய்வேன் சாமிநான் 
இந்தக் கோலம் காட்டவோ 
வந்தீர் 
துன்னிக்கைக் கொட்டினது வாய்க்கெட்டாமலே போக 
தோதகம் ஏன் ஒருமிக்கத் 
தந்தீர் 

2 . கண்ணே அமுதே கருணாகரரே என் மனக் 
காவலோடே இத்தனை 
மண்ணில் இருந்ததுயிர் மறைந்த திருமேனியை 
மார்பில் அணைப்பதற்கோ 
நாளா 
வாளா 
தானோ 

3. நகரில் இருஎன்ற உம்மை அகலேன் என் றோர் பிடியா 
நான் தொடர்ந்த திதற்குத் 
பகைவர் இலங்கையிலே நீர்மடிந்தபிறகும் 
பாவி நான் உயிர் தரிப் 
பேனோ 
4. ஏகபோக மாகவே இருந்த என் பிராணேசரை 
இழந்த உயிர் எமன் 
கொண்டு 
போகமாட்டாமல் இந்தப் பொல்லாத் துயர் கடலில் 
போட்டுவிட்டானே என்னைக் 
கண்டு 
5. ஊர்மனிதர்க் கன்றுநீர் பதினாலு வருஷம்போய் 
உடன்வருவேன் என்றதும் 
தப்போ 
ஏர்பிடித்தோன் என் செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் 
என்பார் அதுவோ தான் 
ஒப்போ 
6 . ஆசைமான் பின்போ என்றாள் காரண காட்சிக்கெல்லாம் 
அடிவேர் இவள் என்றறி 
வீரே 
மோசம் செய்தாளிவளை முகம்பார்க்கல் ஆகாதென்று 
மூடிக்கொண்டீ ரோகண்ணை 
நீரே 
ஏனோ 

7. வீட்டில் என் சாமி அன்னை வார்த்தை தட்டாமல் வந்து 
விரதங் கொண்டார் என்பதெல்லாம் 
காட்டில் எரித்த நிலா கானலில் மழையாச்சே 
கைகண்ட பலன் இது 
தானோ 

8 போமோ 
அருமையா கிய ஓர் பெண் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் 
அரக்கர் செயம் பொருந்தப் 
தருமமே செயம் பெரு மாளேதுணை என்றும் என் 
சாமிக்கப செயம்வரல் 
ஆமோ 

9 காதக இந்திரசித்தன் சூதோ அன்றி இதென்ன 
காரணமோ நான் முன் செய்த 
சதியோ 
ஆதிமறை பொய்த்தாலும் பொய்யாப் பிராண நாதரை 
அலையக் காண்பதும் பாழ்த்த 
விதியோ 
10. அய்யோலட் சுமணாநீ என்சிறை மீட்கும் முன்னே 
ஆவிஉனக்கு சும்மாப் 
போச்சே 
கையாலே நான் பாவி உன் அண்ணன் கைப்பிடித்த 
காலபலம் அப்படி 
ஆச்சோ 
11 . ஓதும் டேச் ஈம்காணேன் மூச்சும் காணேனேசாமிக் 
குயிர் உண்டோ இல்லையோ சொல் 
மகனே 
ஏதும் அசைவும் காணேன் இருவர்க்கும் ஓரெழுத்தா 
எழுதி வைத்தானோ சதுர் 
முகனே 
12 . மையான காட்டில் அண்ணன் மெய்வருந்தாமல் தூங்க 
மலர் கொய்து மெத்தையிட்ட 
நீயே 
வெய்யராட்சதநீசர் எய்யும் அம்புகள் என்னும் 
மெத்தை மேலே கிடக்கி 
றாயே 
13 மெய்காணும் சாமிக்கும் உனக்கும் பழிகாரி நான் 
ழுந்தாலும் என்பாரல்லலோ 
நீலி 
கைகேசி மகராசி கறுவிக் கறுவி எல்லாம் 
கட்டிக் கொண்டாளே பாக்கிய 
சாலி 
14. தாய்பகை வந்தபோது நீயிருந்தண்ணனைக் 
காட்டிக் கொடாதே என்று 
தனியே 
தாய்சுமித் திரை சொன்னாளே அதுக்கோ நீ அண்ணன் முன்னே 
சாய்ந்து கிடக்கிறாய் பிள்ளைக் 
கனியே 
பொய்யோ 

15. புத்திரனே கண்மணியே கைத்துணையான உன்னைப் 
போக்கடித்தேன் நான் பாவி 
வற்றி வடகமாயும் இத்தனைப் பாடுங்காண 
வைத்ததே பாவி தெய்வம் 
அய்யோ 

16. எப்போதும் போலேசாமி செயிப்பார் என்றிருந்தேனே 
இங்கே கண்டேனே அலங் 
கோலம் 
குப்பை உயர்ந்தென்ன கோபுரம் தாழ்ந்தென்ன 
கூடிச்சோ நீசருடன் 
காலம் 
17. தாய்மார்கள் இருவரும் பரதனும் இதுகேட்கத் 
தரிக்குமோ அவரவர் 
தேகம் 
கேவலம் பழிகொண்டேன் எனக்கினி ஒருக்காலும் 
கிடைக்குமோ நல்லபடி 
லோகம் 

திரிசடையம்மாள் சீதாதேவியைத் தேற்றுதல் 

பரிந்திந்த வகையழுது சாமிமேலே 
பதைத்துவிழ எழுந்தவளைக் கட்டிக்கொண்டு 
விரிந்திடும் கண் ணீர் துடைத்துப் பிறர் கேளாமல் 
மிகப்பசித்தேர் களைத்தேற்றும் அமுதுபோல 
சரிந்த பயிர் களைதேற்றும் மழையைப் போல 
சவலைதனைத் தேற்றுகின்ற தாயைப் போல 
தெரிந்ததிரி சடைஎன்பாள் சீதைதன்னைத் 
தேற்றுவாள் மனக்குறையை ஆற்றுவாளே 


பல்லவி 
ஏதுக்கு வருந்துகிறாய் அம்மா 
ஏதுக்குவருந்து கிறாய் சும்மா 
( ஏது ) 

அநுபல்லவி 

கேதப்படாதே தெய்வம் 
கிணறு தப்பி என்ன 
பொது என்பதழிந்ததோ 
துர விலே விழுந்ததோ 
( ஏது ) 

சரணங்கள் 

1 -உன்னண்டை 
மாயமான் என்றும் சனகராசன் என்றும் 
மயக்கங் காட்டினான் 
மற்றை நாள் வெளியாச்சது போல் இந்திர 
சித்தும் செய்கிறான் 
சிலசண்டை 
ஓயவேபெரும் பேயும் நாயும்தின்ன 
உருளுது பாரிவன் 
தலைமண்டை 
உத்தமராமனை அரகர் கெலிக்கும்போது 
உள்ளங்கையினில் முடிக்கிறேன்பார் ஒன்பது கொண்டை ( ஏது ) 
2. அனுமான் என்பவன் தனதாகவே வந்து 
அடிமைக் கடிமையாகி 
உழைக்கிறான் 
அவனாலேயே உன் கணவன் தம்பியுடனே 
தவறாதபடி 
பிழைக்கிறான் 
நினைவேதோ லட்சுமணன் இளஞ்சூரியன் 
எனவே முகத்தொளி 
தழைக்கிறான் 
நிமிஷத்திலே ராவணனையும் படையையும் 
நமனும் வந்து தன் உலகத்துக் 
கழைக்கிறான் ( ஏது ) 
நீங்குமோ 

3. சொப்பனமும் உன் தன் கற்பும் சகுனமும் 
சுப பலன் கொடுக்காமல் 
சொல்வாய் மங்கலம் இல்லார்களை இந்த 
தூய விமானமது 
தாங்குமோ 
வாங்குமோ 
ஒப்பில்லா ராகவன் இந்த ராட்சத 
அற்பருக்குப்பின் 
ஒருக்காலே பயந்திருக்கிறாயே என்ன 
ஒருகுளப் படிகண்டு திரைகடல் 
ஏங்குமோ ( ஏது ) 

அனுமார் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுவருதல் 

திரிசடை சொல்லாற் சீதை தேறிப்போனாள் 
சிலைவீரர் பாடும் சேனைகளின் பாடும் 
கருதிவிபீஷணன் சொல்ல அனுமான் சாம்பன் 
கட்டுரையால் சஞ்சீவி மலையை நாடி 
இருபுயமும் தூக்கியண்ட கோள மட்டும் 
எட்டும் விஸ்வரூபங் கொண்டினிமேல் நீங்கள் 
வெருவிடவேண் டாம்நான்போய் வருவேன் என்று 
விளம்பினான் அனுமந்தன் கிளம்பினானே 


பல்லவி 
( பாய் ) 
பாய்ந்தானே அனுமந்தன் பாய்ந்தானே 
பர்வதத்தைக் கொண்டு வந்தானே 

அநுபல்லவி 
சேர்ந்தசாம்புவன் உரைக்கையாலே திரிவிக்கிர சாமிபோலே 
தேவர்மகிழ மூவர் புகழ 
திசையுள நீளங் கண்டு விஸ்வரூபங் கொண்டு 
( பாய் ) 


சரணங்கள் 

1. தெற்கிலே நின்று வடக்கை நோக்கி விஸ்வரூபத்தைப் 
பெருக்கி - நட்சத் 
திரமண்டலமும் கிழித்தே அண்டகோளத்தை முட்டி. 
நெருக்கி - ஒண்டி 
நிற்கப்போர்த் திசைஎட்டினும் டமில்லாமலே 
அடுக்கி - பெரு 
நிலத்தை உதைத்து விசைத்துக்கிளம்பி நெடியகழுத்தைச் 
சுருக்கி - ஒரு 
கைக்குக்கை ஓராயிரம்யோ சனைமட்டும் நீட்டி - நிமிர்ந்து 
கணகணெனவே வீரவாலின் மனிதனை ஆட்டி தனது 
விக்கிரமபுசபல பாரக்கிரமம் அடங்கலும் காட்டி 
விசையிலும் அதிவேக மாகிய விசையை முன் 
ஒட்டி -- எங்கும் 
தகப்பன் 
விளங்கும் 
மக்கிமலைகள் வேர் அறுந்தாட மரங்கள் செடிகள் பிடுங்குண்டோட 
சொர்க்கத்தவரும் பதற 
பக்கக் கடலும் கொதற 
திக்குத் திசையும் கதற 
சக்கிரக் கிரியும் சிதற ( பாய் ) 
2. இலங்கைவிட் டொன்பதாயிரம் யோசனை மயகிரியில் 
தாண்டி 
அந்த 
மயம்விட் டொன்பதாயிரம் யோசனை ஏமகூடத்தில் 
தாண்டி அப்பால் 
சலங் கொண்டெண்பதினாயிரம் யோசனை நிஷதகிரியில் 
தாண்டி - நிஷதமும் 
விட்டெண்பதினாயிரம் யோசனை தங்கப்பெருமலை 
தாண்டி - 
அங்கே 
துலங்கும் வெள்ளியங் கயிலை ஈசன் உமைக்குக் 
கையாலே 
வாயுவின் 
சுதன் இவன் என்று காட்ட அவனைத் துதி செய் 
தப்பாலே 
அலங்கலின் மாயவனைப் பணிந்து தா வி விண்மேலே போகையில் 
அருக்கணைக்கண்டு விடிந்து போச்சென்று திகைத் 
தொரு சாலே 
நிலந்தனிலே அங்கே பகலென்றறிந்து நீலமலை கண்டப்பாற் பறிந்து 
விலங்கிப்புயல் விண்டொழிய தொலைந் தெட்டரவும் கழிய 
குலுங்கித் தறையும் குழிய கலங்கித் திசையும் கிழிய ( பாய் ) 
3 அரிய மருந்தைக் காக்கும் தெய்வங்கள் அடங்கலும் வந்து 
தடுக்கி 
ஆரடா என்று கேட்க ராமதூதன் நான் என்று கடுக்கி 
ஒரு 
பெரிய சக்கரம் சுழன்று வந்தது போமட்டும் நெஞ்சை 
ஒடுக்கி 
பெலத்தங்கிருந்த காவற்பேரையும் பின்னிட்டோடவே 
முடுக்கி - அங்கே 
தரையிலே ஆயிரம்யோசனை தாழ்ந்துவே 
ரோடி - மேலே 
தலை எடுத்தாயிரம் யோசனை மட்டும் 
சூடி - ஆர்க்கும் 
தெரியவே ஓராயிரம் யோசனையொடு 
மூடி - நின்ற 
தீர்க்க மலையை ஒருகையாலே தூக்கிப்பந் தாடி - திரும்பி 
வருகையில் அந்தவாடை சுழன்று வஞ்சகன் பிரம்மாஸ்திரம் கழன்று 
ஒருலட்சுமணன் தேற - பெருகிப் புவனம்தேற 
தருமப்பயிரும் தேற -- திருலட்சுமியும் தேற 
( பாய் ) 

பின்னும் 
கிட்டி 
ஸ்ரீராமர் லட்சுமணருக்காகப் பின்னும் இரங்கல் 
மறம்மிகும் அனுமான்பாய்ந்து வருமுன்னே சாம்புவ : னும் 
திறல் விபீஷணனும் தேறத் தேற்றுவார் தம்மை நோக்கிக் 
கறவைதன் கன்றைத் தேடி கரைகிறாற் போல ராமன் 
பிறவியை எண்ணிவேதை பெருகுவான் உருகுவானே 

பல்லவி 
ஆனாலும் என்னைப் போல்இனி ஆர்க்குண்டிந்த அநியாயம் ( ஆ ) 

அநுபல்லவி 

மானாகரன் தசரதன் 
வருந்தையிலே இப்படி 
பிள்ளைத் தவம் 
இருந்ததோ காரணம் 
( ஆனா ) 

1. ஆரார்க்கென்ன செய்யினும் தம்பிபோல 
அதுவந்தென் அவதி 
துடைக்குமோ 
நேரே ராவணனைக் கண்டுவிட்டு 
நெஞ்கிடந்து புடை 
புடைக்குமோ 
தீராஎன் காலப்பிழை வெண்ணெய் 
திரண்டு வரச்சேதாழி 
உடைக்குமோ 
தாரம் தேடக்கிடை யாதோ என் 
தம்பியைப் போல் எங்குந்தேடக் 
கிடைக்குமோ ( ஆனா ) 
2. சற்றும் தம்பி வார்த்தையை எண்ணாமல் 
தயங்கிய மானின் பின்னே 
போனேனே 
கத்திக் கொண்டுங்களைத் தேற்றிவந்து 
கழுத்தறுத் தேனே 
நான்தானே 
உற்ற தகப்பனும் சடாயுவும் 
ஒருபிற வியும் 
இழந்தேனே 
பெற்றாரையும் பிறந்தாரையும் கொன்றேன் 
பெண்ணாசை கொண்டபித்தன் என் பதுநானே 
( ஆனா ) 
3 சதிகார ராட்சதப் பையல்கைக்கு 
தாழுவதென் தம்பிக் 
கையோ 
பொய்யோ 
மதிமோசமா அய்யனைக் கொண்டுவந்து 
மடிப்பாகக் கொடுத்தேன் 
இதவாக தருமமே செயிக்கும் என் 
றிருந்த எனக்கது 
கதையோ கரும்புக் குழுதபுழுதி 
காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆமோ 
மெய்யோ 
அய்யோ 
( ஆனா ) 

தம்பிக்காக இரங்கின ஸ்ரீராமரை சாம்புவன் தேற்றுதல் 

இளையவனை நினைந்திப்படிக்கு ராகவன் புலம்ப எழுந்தான் சாம்பன் 
வளையும் வகைவணங்கிநின்றான் சாமிநீ நொடிப் போதும்வருந்த வேண்டாம் 
விளையுமுயிர் தருமருந்து கொண்டுவருவான் அனுமான்விழுந்தோர்க்கெல்லாம் 
களையகலும் அது செய்யும் குணம் என்பான் காண்பாயிக்கணம் என்பானே 

பல்லவி 
இந்தவேதை நீகொண்டால் சாமி - இனி 
எந்தவிதம் பிழைக்கும் பூமி 
( இந்த ) 
அநுபல்லவி  
சந்ததம் உனது தர்மத்தாலே தழைப்போம் 
தம்பியும் நீயும் எல்லாரும் 
பிழைப்போம் ராமா 
( இந்த ) 
சரணங்கள் 
1. அளந்துள்னை நானறிவேன் உனக்கொன்றும் குறையில்லை 
அலைகடல் கடையச்சே 
நாலுமருந்தன்று 
வளர்ந்து வடகுருவில் 
ருந்ததைக் கொண்டுவர 
மாருதி கிளம்பினான் 
பாய்ந்து சென்று 
பிளந்தது கூட்டும் ஒன்று 
படைகரைப்ப தொன்று 
பிராணன் கொடுப்பதொன்று பெலன்கொடுக் கிறதொன்று 
களங்கமில் லாமல் வரும் 
அதுமுன்னாகமலை 
கலங்கினாலும் மனம் 
கலங்கா தவனே இன்று ( இ ) 
2 தன்னைப் படைத்த பிரம் மாவையும் பிரம்மாஸ்திரம் 
சாடும் உயிர் குடித்துப் போடும் 
அதன் கடூரம் 

3 -பின்னும் பிரம்மாஸ்திரமும் அந்த மருந்தைக் கண்டால் 
மெய்யை விட்டுக்கழன்று செய்யுமே நமஸ்காரம் 
பின்னைத் தம்பிகையாலே அரக்கர்படு வதெல்லாம் 
பெருக்கத் தெரியும் சற்றே பொறுபொ றென்னவிசாரம் 
பன்னிச்சொல் வதென்ன முன்னாள் சண்டையொரு 
பாக்கும் இனிமேற் சண்டை தோப்பும் ஆகுமிந் நேரம் ( இந்த ) 
ஆரும் அறியார் அந்த மருந்திருக்கும் இடத்தை 
அடையாளம் சொன்னேன் விஷணுசக்கரம் காவலுண்டு 
பேரும் ஊரும் அறிய அத்தை இந்தமட்டுக்கும் 
பிடுங்கிக் கொண்டுபோன பேர்களும் இல்லைபண்டு 
சாகும்வாயு வேகம் மனவேகமா அனுமான் 
தருவான் நொடிக்குள் இங்கே வருவான் அதனைக் கொண்டு 
நேரும் உன் காரியம் உனக்கேசெயம் அய்யா 
நெருப்பு மெழுகுபோலே அடிக்கடி 
மணம்பிண்டு ( இந்த ) 

தம்பிமுதலானோர் எழுந்ததற்காக ஸ்ரீராமர் அனுமாரைப் புகழ்தல் 

வெம்பியிந்த விதம்சாம்பன் தேற்றும் போது 
விக்கிரம மாருதி மலை சஞ்சீவி தன்னை 
பின்புகளத் தினில் வைத்தான் ஒருபிர்மாஸ்திரம் 
பிரிந்திடவே பரிபூர்ணச் சந்திரன் போலே 
இம்பர் இளையவனும் வெள்ளம் ஏழுபத்தும் 
எழுந்திடப் பூ மலர்தேவர் பொழிந்து வாழ்த்தத் 
தம்பியைப்போல் எழுந்த இராகவன் விசாரம் 
சாடினான் அனுமனைக்கொண் டாடினானே


பல்லவி 

அனுமானே 
நீயே - கனவானே 
( அனு ) 

அநுபல்லவி 

தனதா எங்கட்குப் பிராண தாரைநீ வார்த்தாயே 
( அனு ) 

தாமே 
நாமே 

சரணங்கள் 
1. நமது துணைவரும்வா னரர்களும் 
நிமிஷத்துன்னால் உயிர் நிலைபிடித் தோமே 
சுமதலை உனக்கென்றே துணிந்தோம் 
எமலோக பரியந்தம் இனி சாதிக்க 
லாமே 
( அனு ) 
2 . ஒன்றும் அசைவில்லாமல் உடம்பையும் மறந்தோம் 
கொன்ற உயிர்களை நீ கொடுக்கவே சிறந்தோம் 
அன்று தசரதன் பெற் 
றாருயிர் 
இறந்தோம் 
இன்றுனது வயிற்றில் இருவரும் பிறந்தோம் ( அன்று ) 
3 விழிபோலும் என் தம்பி மெய்யுயிர் போயே 
முழுகாதபடி காத்தாய் 
முழுதுங்காப் 
பழிகாரன் முன் இந்தப் பயம் தீர்த் 
அழியாத சீரஞ்சீவி 
ஆயிருப் 
பாயே 
( அனு ) 

பாயே 
தாயே 
இலங்கையில் வானரர் நெருப்பிட்டுக் கெர்சனை செய்தல் 

கட்டி உவந்தனு மத்துதி ராகவகர்த்தன் உரைத்தளவில் 
தட்டற அண்டர் இறைத்தனர் பூமலர் தத்தையர் நிர்த்தமிட 
மட்டற வெந்து பொடிப்பொடி யாகவளைத்து நெருப்பதனைக் 
கிட்டி. இலங்கையில் இட்டனர் வானரர் கெர்ச்சனை இட்டனரே 


இந்திரசித்து மாயாசீதையை அனுமார் முன் கொண்டு வருதல் 

இத்தலையில் இவரார வாரங் கேட்டான் 
இலங்கேசன் உள்ளுடைந்தான் உடனே இந்திர 
சித்தெழுந்தான் சஞ்சீவி மலையை முன்போல் 
செலுத்திய மாருதியும் வந்தான் எதிர்த்துக் கொண்டான் 
விந்தையினால் ஒருத்தனை அந்நேரந் தன்னில் 
மெய்ச்சீதை வடிவாக்கி வெட்டுவேன் என் 
றத் தலையில் கைத்தாலத்தில் வாளொன் றேந்தி 
ஆட்டினான் மாயையினாற் காட்டினானே 
( மாய ) 
பல்லவி 
மாயச்சீதை கொண்டிந்திர சித்தனு 
மான்முன் வந்தானே 

அநுபல்லவி 
தீயலங்கை மேலைவாசலிலே 
மந் 
திரத்தாலே தந்திரத்தாலே செய்த 
( மாய ) 

சரணங்கள் 

அதிரவே 
மெலிந்து 
கலை 

1. அளப்பில்லா வெகு களத்தோடே பேரிகை 
அடித்துக்கொண்டு 
விளைத்த சண்டைகள் வீணாச்சே என்று 
விகடங்கள் 
படித்துக்கொண்டு உடல் 
நெளிக்க மயிர்தொட் டிழிந்திப்பல்லை நெற 
நெற என்று 
கடித்துக்கொண்டு மண்டை 
பிளக்க வெட்டுகிறேன் பார் எனவேகத்தி 
பிடித்து கொண்டுதுடி துடித்துக்கொண்டு 
ஒரு ( மாய ) 
2. வீரமாம்புலி வாய்மான் போலவள் 
குறைந்து கொள்ள - மழைத் 
தாரையா விட்டழுத கண்ணீர் முலைத் 
தடங்களில் 
நின்றைந்து கொள்ள 
சோரவே புரண்டறுந்த உடைமைகள் 
சுற்றிலும் 
இறைந்து கொள்ள அய்யா 
மாருதியே முறையோ என்றவள் வெட்கம் 
மறைந்து கொள்ளக் கண்ணில் அறைந்து கொள்ள 
3. நேசமுள்ள அனுமானே இங்கேசற்றே 
நில்லடா 
சொல்லுகிறேன் 
வாள் 
வீசிநான் இந்தச் சீதை தன்னை உன் தன் 
விழிமுன்னே 
கொல்லுகிறேன் 
மறு 
யோத்திக்கும் 
செல்லுகிறேன் 
கேசிபரதன் எல் லாரையும் வேருடன் 
கொல்லுகிறேன் உன்னை வெல்லுகிறேன் - என்று 
( மாய ) 

ஒரு ( மாய ) 


இந்திரசித்து வெட்டின சீதைக்காக அனுமார் புலம்பல் 

வந்தபாதகன் இந்திரசித்தென்பான் மாயா சீதையை வளாலே 
விந்தை மாருதி நல்ல வார்த்தை சொலவும் துணியாவீசிப் போட்டான் 
பந்தமாம் அயோத்தி மேலே போக்குக் காட்டி நிகும் பலையிற்சேர்ந்தான் 
சிந்தை மாருதிகண்டு சோம்பினான் அழுதழுது தேம்பினானே
பல்லவி  
இதுக்கோ நான்பட்டது சும்மா பாவி அனுமான் 
னிமேல் நான் என்ன செய்வேன் அம்மா 
( இது ) 

அநுபல்லவி 
விதிக்கும் என் எண்ணம் போச்சே 
விழலுக் கிறைத்தநீர் ஆச்சே 
( இது ) 

சரணங்கள் 

1. ஓம் என்று முன் தூது வந்தேன் உன்உயிர்க்குக்கேடு தந்தேன் 
ஆம்என் றெப்படி செல்வேன் ஐயனுக்கெப்படி சொல்வேன் 
சாமி என்னென்று கேட்பான் தாய் நீ இருந்தாலல்லோ மீட்பான் 
தீமைதானேமே லிட்டதோ தெய்வமும் தான்கண் கெட்டதோ ( இது ) 


2. அன்னமே தாயே என் தன்னை அறிந்தும் இந்திரசித் துன்னை 
பின்னமே செய்திட நானே பிரதேம் போலிருந் தேனே 
சொன்னசஞ் சீவிக்கா தாண்டி சுருக்காகநான் உன்னை வேண்டி 
என்னென்ன செய்தாலும் அங்கே இப்படி ஆச்சுதே இங்கே 


3. அருந்ததி தொழும் பெண்ணே அனைவருக்கும் இரு கண்ணே 

விரும்பும் உயிர்க்குயிர் ஆயே விளங்குகின்ற என் 
கரைந்து நானுன்னைத் தேடி கண்டேன் என்று முன் ஓடி 
இருந்தாள் என்றவா யாலே இறந்தாள் என்னவோ மேலே 

தாயே 
சீதைக்காக இரங்குகிற ஸ்ரீராமரை லட்சுமணர் முடுக்குதல் 
அஞ்சனைபா லகனிந்தப் படிக்கு நொந்தான் 
ஐயன் இரா மனுக்குப்போய் அறிக்கையிட்டான் 
செஞ்சிலை வீரனுமறிந்தான் எறிந்தான் வில்லைத் 
தேடினான் வாடினான் தியக்கத் கொண்டான் 
தன் செயலா னதுமறந்தான் அந்த வேளை 
தம்பியும் அப் படிதளர்ந்தான் இனிமேற்சாமி 
என் செயலா வது நமக்கும் இருப்பே தென்றே 
என சொல்வான் லட்சுமணன் சினம்சொல்வானே . 


பல்லவி 
தேவிபோனபின் 
இனிமேல் யோசனை ஏதைய்யா 
இரங்கினால் அகா தையா 
( இனி ) 

அநு பல்லவி 
உனது கவலை சொன்னால் ஊரார்க்கென்ன நஷ்டியோ 
சினம் எங்கே போச்சுதையோ சீவன் கருப்பட்டியோ 

சரணங்கள் 

1. இலங்கை உள்ளாரும் தேவர் எவரையும் இப்போது நேரே 
குலங்களோடும் கொல்லாவிட்டால் கொஞ்சம் சொல்லி நகைப்பாரே 
புலம்பல் ஆமோ இன்னம் சற்றே பொறுத்தால் எதிர்த்த பேரை 
விலங்கிலும் போடுவார் அடிமை வேலை செய்யச் சொல்லுவாரே ( இனி ) 
2. விலக்கவும் சீதையைப் பாவி வீசினான் என்றனுமான் சொன்ன 
கலக்கம் கொண்டாய் தர்மத்துக்கிது காலமோ அல்லவோ சின்ன 
கொலைத் தொழில் செய்தப் பாலெங்கும் கொளுத்துவாய் நெருப்பாய் 
மின்ன 
தலைக்குமேல் ஓடியவெள்ளம் சாண் ஓடிஎன்ன முழம்ஓடி என்ன ( இனி ) 
3. நாட்டிலரசும் போச்சுதுன்னுடைய நன்மையாலே வந்ததெண்டம் 
காட்டிலும் வந் திந்தக் கொள்ளை கட்டிக்கொண்டோ மேதினகண்டம் 
பூட்டிநீ வில்லை வளைத்தால் பொடிப்பொடியாமேமூ 
தண்டம் 
ஆட்டங் காட்டலாமோசாமி அடியேன் சொன்னபடி எடுநீ கோதண்டம் 
( இனி ) 

ஸ்ரீ ராமரை அனுமார் முடுக்குதல் 

சினமா இப்படி இளையோன் உரைக்க இந்திர 
சித்தயோத்தி யின்மேலே போன போக்கை 
அனுமானும் சாமியுடன் சொன்னான் சாமி 
ஆவிதடு மாறினான் அந்த வேளை 
புனைவீரப் படைகளையும் உமையும் கொண்டு 
போய் அரக்கன் முன்குதிப்பேன் அல்ல என்றால் 
முனையாதா னேபொருதிக் கொல்வேன் என்று 
முடுகுவான் மாருதியும் கடுகுவானே 

பல்லவி 
அனுமான் நானிருக்க 
இதுக்கோ இந்தயோசனை சாமி 
இதுக்கோ இந்தயோசனை சாமி 
( இது ) 


அநுபல்லவி 

பதைக்கிறேன் இந்திரசித்தை உதைக்கிறேன் அவனைநான் 
வதைக்கிறேன் அயோத்தியில் புதைக்கிறேன் அதுக்கென்ன ( இது ) 

சரணங்கள் 
நீட்டி - ராவணன்தன்னை 
1. சுற்றிய மதில் ஏழும் 
எற்றி ஊரிலே கையை 
கொத்துப் பனங்காய் போலே 
பத்துத்தலையும் பிடித் 
சித்தே என்றவனங்கே 
கத்தி அலறும்படி 
தாட்டி 
மகனே இந்திர 
மாட்டி - ஆட்டுக்குட்டி போல 

ஊட்டி 
மொய்த்த அரக்கர்களைக் 
குத்திக் கழுகுக்கிரை 
பாராய்என்சாமி 
சுற்றிலே லங்கை நகரத்தைப் பிடுங்கி ஒரு 
பந்தைப் போல் தூக்கியங் கெத்துகிறேன் அடியேன் 
( இது ) 

2. துடுக்காய் என் தாய் முன் கத்தி 
எடுத்தான் அவனுக்கிந்த 
மிண்டேன் - கொல்லாதே என்று 
படித்துப் படித்துச் சொல்லி 
அடிக்கடி வேண்டிவேண்டிக் கொண்டேன் -- கேளாமற்பாவி 
முடுக்கி வீசக்கண்டு 
துடித்துத் துடித்து மனம் 
விண்டேன் - பரதன்மேலே 
வடக்குத் திசையை நோக்கி 
நடக்க என் கண்ணாரக் 
கண்டேன் 
உத்தாரந்தந்தால் 
பிடிப்பேன் ஒருகடியாக் கடிப்பேன் அவன் உயிரைக் 
குடிப்பேன் பழிக்குப்பழி முடிப்பேன் என்னலா காதோ 
( இது ) 

3. பூத்தபுவனமெல்லாம் 
காத்திட வந்த பரந் 
தாமா - உன்வில்லுக்குமும் 
மூர்த்திகளாகிலும் 
பாத்திரரோ ரகு 
ரமா தர்மம் செயம் என்ற 
சாத்திரமும் உனது 
தோத்திரமும் தப்பிப் 
போமா நம்பினதேவர் 
பேய்த்தனம் கொள்ள என்ன 
கூத்திது நீவருந்தல் 
ஆமா 
சேனையும் தோளில் 
ஏற்றி உம்மையும் நொடி மாத்திரத்துக்குள்ளாக 
நேத்தியாக் கொண்டுபோய் அயோத்தியிற் குதிக்கிறேன் 
( இது ) 

சீதையின் இருட்பைக் கண்டுவந்த விபீஷணர் 
ஸ்ரீராமருக்கு அறிவித்தல் 
அளப்பரிய அனுமன் இதுசொல்ல விபீஷணன் அதனை 
அறிந்தான் நான் போய் 
வளப்பமெலாம் கண்டுவந்து சொல்வேன் என்றிலங்கையிலோர் 
வண்டாய்ப் போனான் 
களங்கமிலாச் சீதையையும் நிகும்பலையை அரக்கன் செய் 
கவடும் கண்டான் 
உளக்கவலை கடல் கடக்கக் கரை செய்வான் சாமிமுன்னே 
உரைசெய் வானே . 


பல்லவி 

இருக்கின்றாள் தாய் அசோக வனத்தினில் 
ருக்கின்றாள் சாமி 
( இருக் ) 

அநுபல்லவி 
இருக்கிறாள் நமக்கொரு 
ராவணன் குடிக்கொரு 
பாக்கியம் உற்றாற்போல 
சூனியம் வைத்தாற்போல ( இரு 

சரணங்கள் 

என்று 
1. மோதுவேன் என்றும் இடிக்கிறேன் என்றும் 
மிண்டு 
முறைமுறையே 
சொல்லும் 
வாதரக்கியர்முன் புலிக்கூட்டத்தில் ஒரு 
மான்போல் மனம் 
பிண்டு 
தீதிலாஒரு ராமா மிர்தமே 
சீவனமாக 
உண்டு - ரகு 
நாதனே உன்கைவில் ஓசையும் வா 
கண்டு 
னரஓசையும் 
பரிபூரணம் 
கொண்டு 


2 நல்லது 
சொன்ன முறைபிசகிச் சிஷ்டர் எண்ணமழிந்து 
துஷ்டர் எண்ணமுமே 
முற்றுமோ 
தர்மமே செயம் 
என்னநாலு வேதங்களும் ஆறு 
சாஸ்திரங்களும் வீண் 
கத்துமோ 
ன்னதே மெய்யானால் சந்திர சூரியகதி 
இரண்டும் இங்கே 
சுற்றுமோ 
என் தன் 
அன்னையைத் தொட்டாலவன் இன்னமும் இருப்பானோ 
அருக்களிப் பேதுக்கையோ 
நெருப்பைப் புழு பற்றுமோ 

3. அந்த நிகும்பலை யாகம் செய்யப் போனான் 
அறிந்தேன் அவன் 
சூதை 
சாமி 
உன் தன் அயோத்திக்கவன் ஓரடிவைத்ததில்லை 
உனக்கேன் மன 
வேதை - சீதை 
சிந்தை தேற்றுவாள் அடியேன் விபீஷணன் பெண் 
திரிசடை எனும் 
மந்திரி அனுமான் முன்னே இந்திரசித்துக் கொன்றது 

மாயாசீதை அது தாயார் எனும் சீதை 
பேதை 
( இருக் ) 

ஸ்ரீ ராமர் லட்சுமணருக்கு யுத்த தந்திரம் கற்பித்தல் 

கலக்கம் அறஇப்படி சொல்லிக் காட்டி அந்த விபீஷணன் பின் 
விலக்க வேணும் நிகும்பலையின் வேள்வி முடியா முன்என்றான் 
பெலத்த படையும் தம்பியுமென் பின்கூட்டென்றான் சாமியுமுட்கொண் 
டிலக்குமணனை அழைத்துறுதி எடுத்தான் சொல்லத் தொடுத்தானே 

பல்லவி 
தம்பீ லட்சுமணா இந்திரசித்தன் 
தலைகொண்டுவா போடா 
( தம்பீ ) 

நம்பி உன்னோடேயாவர் 
நானறியேனோஉன் 
ஆனதுவே உப 

எதிர்ப்பார்கள் 
வீரம் - சத்தியம் 
காரம் உனக் 
தாரம் 
நேரம் - அடா 
கேனினி சொல்லவிஸ் 
இதுவோபாரம் 
( தம்பி ) 

சரணங்கள் 

1. முதற்சண்டை போல்மறு சண்டைபோற் சேனையை 
மோசப் படுத்தாமல் 
தேக்கி - நின்று 
பதைத் தவன் அம்புக் கெதிரம்பு போட்டுப் 
படுதுக ளாகவே 
நாலு 
விதத்திலும் போர் செய்து கைமெய் சலித்தவன் 
மெலிவான வேளையை 
நோக்கி மார்பிற் 
பதித்த கவசமும் வில்லையும் போக்குவாய் 
பார்த்திடுவார் தேவர் 
சாக்கி 
கூற்றுவன் போலம்பு 
எல்லாம் 
தோற்றிடவே ஒண்டி 
உயிரைப் போக்கி வெட்டித் 
ஆக 
தாக்கி 
ஆக்கி 
தூக்கி 
( தம்பி ) 


2 -ஆசைநிகும்பலை வேள்வி முடிந்தாற்பின் 
ஆராலும் வெல்லக்கூ 
டாதே ஒரு 
கேசரிபோற் படையோடும் போய் அத்தைக் 
செடுத்திடுவாய் வேளை 
ஈதே 
அந்த 
நீசனானவன்பிர் மா ஸ்திரம் தொட்டால் 
நீயும்பிர் மாஸ்திரம் தொ 
டாதே 
கயிலை 
வாசன் சூலமும் சக்கரமும் இவை 
ரண்டையும் போடதின் 
மீதே 
துண்டுது ண்டாகும் தப் 
பாதே 
அவன் 
சண்டை எல்லாம் வெறும் 
மலைக்காதே இப் 
போதே 
அடா 
சூதே 
( தம்பி ) 

தீங்கு - பார் 
லாங்கு 
என்று 
3. மந்திர வாளந்த இந்திரன் கையினில் 
வச்சிரத்தையும் செய்யும் 
இந்தவில் அந்த மாயவன் வில்இத்தை 
எதுவும் செய்யாது பொல் 
அந்த நாளிற்கும்ப முனிசொல்ல 
அறிந்தாய் நீ அல்லவோ 
வந்து நமக்குத் தருமம் தானேபிர 
மாணம் என்று கையில் 
பூணும் கவசத்தைத் 
தூணி யிந்தாபிடித் 
வென்று நீங்கு இதே 
ஆங்கு 

இனி 
நான் 
வாங்கு 
தாங்கு 
அம்பறாத் 
தோங்கு 
பாங்கு அடா ( தம்பீ ) 


இந்திரசித்தை அனுமார் பழித்தல் 

படித்தார் ராமன் சொன்னபடி பாய்ந்தார் லட்சுமணன் முதலோர் 
அடித்தார் பிடித்தார் கரிபரித்தேர் அழித்தார் கழித்தார் அரக்கருயிர் 
குடித்தார் கடித்தார் யாகத்தைக் குலைத்தார் கலைத்தார் கொக்கரித்தார் 
இடித்தார் வடிவில் இந்திரசித்தை இழுப்பான் அனுமான் பழிப்பானே 

பல்லவி 
இந்திர சித்தேஉன் தந்திரவித்தைகள் 
எல்லாம் ஏன்டா புறப்பட்டா 
( இந் ) 

அநுபல்லவி 
உன் தன் நிகும்பனலயில் ஒளித்துச் செய்கிறாய்பூசை 
ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏண்டாமீசை 
( இந் ) 
சரணங்கள் 
1. முந்தஎன் தாயைப்போல் ஒருத்தியைக் 
கொன்றாயே 
முடுக்கா அயோத்திமேல் நடக்கிறேன் என்றாயே 
பந்தல் அலைந்தவனே நீயும் 
சென்றாயோ 
பரதனை 
வென்றாயோ 
அந்தரா வணனுக்கு வந்த லச்சை 
அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலசொணாதோ 
வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ 
வாணாள்வைக்க வேணுமோ சாணல்லவோ 
ஈதோ 
கயிறு 
வயிறு 
முனைவே 
லாயுதம் 
லாயுதம் 

2. விடுக்கும் வச்சிராயுதம் 
விஷ்ணு சக்கராயுதம் சிவன் சூ 
எடுக்கும் நாகாஸ்திரம் பிரம்மாஸ்திரத் 
எதைவேணும் அதைப் 
திடுக்கிட வினைசெய்யும் உங்களுக்கே 
செத்தவனே எங்களுக் குண்டோடா 
அடுக்களை பூனை போலே இடுக்கிலே 
ஆடெடுத்த கள்ளன் போலே 
தோடு 
போடு 
நாசம் 
மோசம் 
சுழிக்கிறாய் 
முழிக்கிறாய் 
( இந்த ) 

மேலே 
ணாலே 
போச்சே 
3. நிறை கடல் போலஉன் சேனைகள் கள 
நேராக விழுந்தத்தைப் பாரடாகண் 
பரபரப்பிலே நிகும் பலையாகமும் 
பாழும் சுடலை 
கறுவி நமனும் வந்து குறுகிக் கொண்டான் 
காலம் முடிந்ததினி மேலே என்னடா 
சிறைபட்ட இந்திரனும் குறைவிட்டுத் 
செல்வ லட்சுமணனிதோ கொல்லவந் 
உன்னை 
முன்னை 
தழைக்கிறான் 
தழைக்கிறான் 
( இந்த ) 

இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் மூன்றாம் முறை யுத்தம் 

மாருதி வ்வா றோத வளைந்தராட் சதரும்சேனை 
வீரவா னரரும் சண்டை . வித்திட்டார் இந்திரசித்தன் 
தேரினில் ஏறிக் கொண்டான் சிலை கொண்டான் தம்பிதானும் 
மாருதி மேற்கொண்டம்பு வருஷித்தான் கருசித்தானே 

பல்லவி 
அஸ்திர வருஷம் தம்பி பொழிந்தானே 
சித்தன் படைகள் போய் ஒழிந்தானே 
நிகும்பலையிலே இந்திர 
( அஸ் ) 

அநுபல்லவி 
வைத்த சமித்தும் பிணமும் எரிபட மந்திரபூரண கும்பம் நெரிபட 
எத்தி அதிலெழும் தேரும் சிதைபட - எருமையின் கூட்டங்கள் எல்லாம் 
வதைபட 
ரத்தம் எழுந்திட சுற்றம்விழுந்திட - யாகம் கலைந்திட யூகம்குலைந்திட ( அஸ் ) 

சரணங்கள் 

1. தேரில் அரக்கன் ஏறி அனுமானை 
சிலகணையாற்களை 
செய்தான் 
நேரில் எழுந்த அனுமன் புயந்தம்பி 
நின்று கணைசில 
பெய்தான் 
கூரிய வாளிகளால் அரக்கன் அந்த 
குரங்குப் படைசிந்த 
அடித்தான் 
வாரி அம்பால் தம்பி அரக்கன் சேனையை 
மண்ணோடு மண்ணாக 
மடித்தான் 
தேர் 
வலங்கொண்டு சுற்ற அனுமான் இடங்கொண்டு தந்த அவன்தேர் 
வானில் உலாவ அனுமான் விடேன் என்று தாவ இருவர்கை 
வாழி நெடுங்கணை 
எங்கும் 
நிறைந்திட 
மலைகளெல்லாம் வெந்து நீறாய் இறைந்திட 
எழுகடல்நீரும் 
வற்றிக் குறைந்திட 
எட்டுத்திக்கும் தெரி யாமல் மறைந்திட 
எங்கும் புகை முட்ட எங்கும் தணல் கொட்ட 
இரவுபகலாக நிருதன் மனம் நோக 
( அஸ் ) 

அவன் 
2. இளையான் மேற்பின்னும் அரக்கன் சீறி 
இருபத்தைந்து கணை 
விடுத்தான் 
தொளையா அவன்மார்பும் கவசமும் தம்பி 
தொளைத் தோட ஓர் கணை 
தொடுத்தான் 
களையாய் அவன் அனுமான் மேல்ரத்தம் 
காணச் சிலகணை 
விதைத்தான் 
வளையாவரும் அனுமான் அவன் தேரினை 
மளுக்கென் றொடியவே 
உதைத்தான் - 
மற்றொன்றில் ஏறிஐயன்மேலே பத்தம்பைத் தூறிவிடத்தம்பி 
வடிக்கணை சிந்தி அவன் அதைத்தடுக்காமல் முந்தி- போட்ட அவன் 
மந்தரத் தோளை ஓர் அம்பால் 
தொளை செய்ய 
மற்றோர் அம்பாலவன் 
தேரைவிழச் செய்ய 
நொந்தரக்கன் ரத்தம் கக்கி 
அவசத்தில் 
நூறுபத் தம்பெய்யத் 
தம்பி 
கவசத்தில் 
நுழையாம லேவிண்டு பழுதாய் விழக்சுண்டு 
நுங்கிய வன்பிந்த எங்கும் தன்கை முந்த 
( அஸ் ) 

3. சிந்தச்சிலகணை அரக்கன் பின்னுமந்தச் 
சேவகன் மார்பினில் 
புந்திமகிழ்தம்பி அரக்கன் மணிநெற்றி 
புதையச் சிலகணை 
தூற்றினான் 
ஏற்றினான் 

அவன் 
இந்தவில் அந்தமாயவன் வில் இவன் 
ஈசனும் என்றவன் 
கூசினான் 
அந்தவேளையில் விபீஷணன் தம்பியை 
அரக்கன் மேல்முடுகென்று 
பேசினான் 
அவன் 
அக்கினி அஸ்திரம் வித்தம்பி அக்கினி அஸ்திரம் விட்டே 
ஆதித்தன் அஸ்திரம் விடத்தம்பி ஆதித்தன் அஸ்திரம் விட்டேவிசை 
ஆகப்பின்னும்சில அம்பைப் பொழிந்திட 
அணி அணியாய் நின்றதேர்கள் அழிந்திட 
ஏகத்தில் வந்த கெசங்கள் 
படிந்திட 
இராட்சத வீரர்கள் ஆரும் மடிந்திட 
இற்ற துண்டங்களும் அற்றமுண்டங்களும் 
லங்கையிற் போய்விழ மங்கையர் கண்டழ 
( அஸ் ) 
கொய்தான் 

தன் 
4. ஆரணன் அஸ்திரம் அவன்விடச்சிவன்ஆயுதத்தால் தம்பி 
காரணன் சூலத்தை அவன்விடத்தம்பி 
கைச்சூலத்தாற் பொடி 
சய்தான் 
நாரணன் அஸ்திரம் தொட்டரக்கன் எங்கும் 
நடுங்கிடவேஎய் 
தோக்கினான் 
போரினில் தம்பியை அதுவலஞ்செய்து 
போகக் கண்டேபயம் 
தேக்கினான் 
புத்தியும் கெட்டான் தனக்குள்ள சத்தியும் விட்டான் தம்பி செய்த 
போரையும் பார்த்தான் ஓடி ஒளிக்க ஊரையும் பார்த்தான் - அதுக்கும் 
போக்கிடம் இல்லாது பார்த்து 
மெலிபட்ட 
போதினிலே அந்தப் பாதகன் மேற்போட்ட 
வாக்கிஐயன் அம்பு போடக் களைப்பட்டு 
மார்பும் கரங்களும் தோளும் தொளைபட்டு 
வல்லரக்கன் பக்கம் எல்லாம் ஒருலட்சம் 
சல்லடைக் கண்ணாகச் சில்லிகளாய்ப் போக 
( அஸ் ) 
இந்திரசித்து விபீஷணனர வயிற்றெரிச்சலாலே ஏசுதல் 
சில்லிகளாய்ப்போன இந்திரசித்தனவன் அழிந்ததொரு தேர் மேல் நின்று 
கல்லின் மழையென அம்பு பொழிந்தங்கே வீடணனைக் கண்டான் எம்மைக் 
கொல்ல நிகும்பலை கெடுத்தாய் அரக்கர் குலத்தையும் கெடுத்தாய் 
கோளினாலே 
எல்லவரையும் கெடுத்தாய் என்று வசை பேசுவான் ஏசுவானே 

பல்லவி 
சிற்றப்பா நீதான் இத்தனை அபகீர்த்தி 
பெற்றதே போதும் அடா 
( சிற் ) 

அநுபல்லவி 
சத்திய விபீஷணன் என் 
றெடுந்தாயே 
பேர்நான் 
சமைத்த நிகும்பலையும் 
கெடுத்தாயே 
வற்றல் மனிதர்க் காளாய் 
போனாயே ஐயோ 
வளர்த்த கிடாக்கையில் பாய்ந்தாற்போல் 
(சிற் ) 
ஆனாயே 

சரணங்கள் 
1. விநயம் சொல்லிமாயப் பூனைவேஷம் கொண்டாய் 
வேருடனே எங்களைக் 
கெல்லவோ - நாங்கள் 
அனைவரும் இறந்தபின் ஓராண்காணியா 
அரசாள லங்கையிற் 
செல்லவோ 
தினமும் ஒருகலத்தில் உண்டும் இப்படிசதி 
செய்தாய் பாவந்தீரச் 
சொல்லவோ அற்ப 
மனிதர்க்குப் பஞ்சையாய்ப் பணியும் செய்கிறாய்உயிர் 
வைத்திருக்கிறதிலும் செத்தாற்குணம் அல்லவோ 
( சிற் ) 

2 --மாடுமேய்க்கிறாய்ப் போலே தடிகொண்டு திரிகிறாய் 
மானமும் லச்சையும் 
துறந்தாயே னி 
சூடும்முடி பெற்றாலும் சின்னமனிதர்க்கு நீ 
தொண்டன் அல்ல என்ன 
சிறந்தாயோ 
தேடி நம்மை வணங்கும் பேரை நாம் வணங்கினால் 
சின்னத்தனம் என்பதை 
மறந்தாயோ - உன்னுடன் 
கூடப்பிறந்தவனைக் கொல்லென்று கோட்சொல்லி 
குடிகெடுக்க வென்றிந்தக் குலத்தினில் பிறந்தாயோ ( சிற் ) 
பாரளலாம் என்று மனப்பால் குடிக்கிறாய் 
பஞ்சை உன்னால் அது 
தள்ளுமோ 
இந்த 
ஊரில் வாராதுக்கு வழிஇட்டாயோ உனக் 
ஒருக்காலும் வசையிது 
விள்ளுமோ 
நீருள்ள மட்டுக்கும் மீனும் துள்ளும் அந்த 
நீரேபோனால் மீனென்ன 
துள்ளுமோ 
பேராம் ராட்சத ரெல்லாம் போய் நீ ஒருத்தனும் 
பிணந்தின்னும் பூச்சி போல் இருந்தால் கனம்கொள் 
வெகு 
மோ 
( சிற் ) 

விபீஷணர் இந்திரசித்துக்கு எதிர்மொழிதல் 

ல்லாம் மூடன் இந்திரசித்தன் இவ்வாறுரைக்க உரைத்ததெல்லாம் 
செல்லா தடடா தருமமும்சத் தியமும் நானே கைக்கொண்டேன் 
பொல்லாப் பாவம் கைக்கொண்டாய் போவாய் உருண்டுபோ வாய்என் 
றல்லார்மேனி விபீஷணன்எச் சரிப்பான் மறுசொல் உரைப்பானே 

பல்லவி 
துஷ்டப்பயலே இந்திரசித்தே என்ன 
சொன்னாய் அடாபயலே 
( துஷ் )
அநுபல்லவி 
இஷ்டமாம் எனக்கு 
ராமன்பதமே சொந்தம் 
எனக்கும் உங்களுக்கும் இனிமேலே என்னடா தொந்தம் ( து 

சரணங்கள் 

மன்னராகி முன்பின் தர்மம் துணையில்லாமல் 
வாழ்ந்தவர் 
எவர்தாமோ 
தன்னிலே குதிக்கிறாய் பாவம் சாம் அல்லாமல் 
தருமம் என் 
பது சாமோ 

சிந்தை வஞ்சனை செய்யேன் புலைசெய்யேன் கொலைசெய்யேன் 
தெய்வம் என்னை 
ஒறுக்குமோ 
அந்தபுத்தி உங்களுக் கிருந்தால் வரவர 
ஆதிக்கமும் 
சிறுக்குமோ 
என்தாய் சீதைமேல் ஆசையுன் அப்பனுக்கு 
இன்னந்தான் 
வெறுக்குமோ 
இந்தப் புத்தியினாலே இலங்கைச் செல்வமெல்லாம் 
இழக்கலாச்சே நாய்க்கு முழுத்தேங்காய் பொறுக்குமோ ( துஷ் ) 

3. கொடும்பாவம் என்னசெய்தே னோ நானுங்கள் 
குலத்தில் வந்துடம் 
பெடுத்தேன் 
கடந்து போகவேண்டி உங்களைக் கடலிலே 
கையைக் கழுவி 
விடுத்தேன் 
மடங்க ராவணனுக்கு எத்தனை புத்திகள் 
வகை மணியாத் 
தொடுத்தேன் 
அடங்காப் பாம்புக்கு ராசா மூங்கில் தடி 
மென்ற வனைவிட்டு ராமன் தனை அடுத்தேன் 
( துஷ்) 


இந்திரசித்து தகப்பனுடன் முறையிடுதல் 

எதிர்கொண்டிவ் வார்த்தை சொன்ன வீடணன் 
மேல் 
அம்பொன்றை எய்தான் அத்தைக் 
கதிகொண்ட தம்பிகொய்தான் வேலெய்தான் 
அத்தையும் அக் கணத்திற் கொய்தான் 
முதிகொண்ட கோபமுடன் சொர்ச்சனையிட் 
டொளிந்திலங்கை மூதூர் சேர்ந்தான் 
குதிகொண்டான் அப்பன் முன்னே முறைபட்டான் 
இந்திரசித்தன் குறைபட்டானே 


பல்லவி 
அய்யா ராவணா என்னால் சண்டை 
ஆகா தாகாதையா 
( அய் ) 
அநுபல்லவி 
நொய்யாம் மனிதர்கை அம்புகளாலே 
நொந்தேன் ஒளிந்தோடி வந்தேன் இனிமேலே 
( அய் ) 
சரணங்கள் 
1 . வட்டவார் உலகினில் தம்பி 
பிறக்கத்தறை 
மட்டம் ஆச்சுதென்பார் உனக்கே அந்தக்கறை 
கிட்டியுன் தம்பி என் வேள்வியைத் 
தடுத்தானே 
கெடுத்தான் 
கெடுத்தானே 
திட்டமானதொரு பிரம்மாஸ் 
திரம்போட்டும் 
சிவன்படை யுடனேகே சவன்படை தன்னைவிட்டு 
குட்டிக் கரணம் போட்டென்னாலே ஆனமட்டும் 
குதித்தும் குடத்திலிட்ட விளக்காச்சே என்னப்பட்டும் ( அய் ) 
2. ஆரும் அறிவாரே என் 
கைவில்லை 
ஆண்டவன் காரியத்தில் சற்றுவஞ் சனையில்லை 
தாராளமா அடிக் டி போய் 
நின்றேன் 
சகல பேரையும் 
கொன்றேன் 
வாராஉயிர் வந்து வந்து 
கிளைக்கிறார் 
வறுத்த பயிர்எழுந்து முளைத்தாற் போல் முளைக்கிறார் 
தீராப்பழி கொண்டோம் ஆரைவிட் டதுசனி 
தெய்வபலமும் இல்லை செய்வதுண் டோஇனி 
( அய் ) 
3 நீதி யாகநாம் ஏன் செல்வம் 
செருக்கிறோம் 
நீயும் நானுமல்லவோ தப்பி 
இருக்கிறோம் 
ஏதோபலம் வரவர 
அடங்குதே 
எடுத்த அடி 
மடங்குதே 
ஆதலால் அவர் முன் என் சூதெல்லாம் விட்டுப்போட்டேன் 
அங்கே இன்னம் போனால் இங்கே வரமாட்டேன் 
சீதையை விடுவது காரியம் 
அப்பாலுன்றன் 
சித்தத்துக்குச் சரிபோன 
படி என்றன் 
( அய் )

இந்திரசித்தை இராவணன் உதாசனித்தல் 

னங் கொண்டிப்படி தன் பிள்ளை இசைத்திட இலங்கை வேந்தன் 
கனங் கொண்ட தணல்வாய் நெய்யைக் கவிழ்த்தது போலே கொண்டான் 
மனங்கொண்ட பயத்தாற் சொன்னாய் மனிதரோர் பொருட்டோ என்ன 
சினங்கொண்டே இந்திரசித்தைச் சீறுவான் கூறுவானே . 

பல்லவி 
என்னபுத்தி சொன்னாய் அடா இந்திரசித்தேநீ 
என்னபுத்தி சொன்னாய் அடா 
( என் ) 

அநு பல்லவி 

என்னபுத்தி சொன்னாய்நீ சின்ன மனிதர்க்கஞ்சி 
என்னுடனே முறையிட் 
பட்டாயே நீ கெட்டாயே 
டாயே 
பயப் 
( என் ) 

சரணங்கள் 
1. ஆனாலும் உவமையவள் கோனாளும் கயிலையை 
மேனாளில் எடுத்த னகத் 
தலம் போச்சேரி 
நானே செய்ததற்கு நீதானோ பயலே நீ 
போனாலும் என்னஎன் 
குலம் போச்சோ 
படைக்கலம் போச்சோ . மூலபலம் 
போச்சோ ( என் ) 
2- சோருவேனோ மனிதர் ஈருயிரையும் அடி . 
வேருடனோ கல்லிப் 
பறியாமல் 
தீரும்போதும் ராமன் பேரும் என் பேரும் எல் 
லாரும் சொல்லிக் கொள்வாரே 
பிறியாமல் 
இத்தை அறியாமல் முன்பின் 
குறியாமல் ( என் ) 
3. செயமான கீர்த்தியை முயலாமல் மனிதர்க்குப் 
பயமாய் அபகீர்த்தியைத் 
தொடுவேனோ 
கையாலகாதவன் போலே மயில்போலும் சீதையை 
உயிரோடே நான் இனி 
விடுவேனோ 
முதுகிடுவேனோ சும்மா 
படுவேனோ ( என் ) 

நாலாம் முறை யுத்தத்தில் இந்திரசித்தன் வதை 

தவறுபடா திடிக்கும் ஒரு தலைவ லிக்குத் 
தலையணையை மாற்றிப்போட் டாற்போமோ என் 
உவமையிது என்மகன்வார்த் தையைக் கேளாமல் 
உறுமும் இராவணனை விட்டான் ஊரைவிட்டான் 
கவனமொடா யிரங்குதிரை கொண்ட தேர்மேல் 
கடற்படையும் தானும் போர்க் களத்தில் வந்தா ன் 
பவனெனும் லட்சுமணன் அம்பு பாயப்பாயப் 
பாய்ந்திட்டான் இந்திரசித்து மாய்ந்திட்டானே 

பல்லவி 
விழுந்தானே இந்திரசித்தன் 
ஒழிந்தானே மண்மேல் 
( விழு ) 

அநுபல்லவி 

இழந்திட்டோம் இலங்கையை எனமனம் 
அழுந்தத் தழுவி அப்பன் ஆசையை 
எழும்பிப் பரிகளாயிரம் கொண்டதேர் 
குழைந்த தம்பிகை அம்பாற் கிழிந்திட்டு 
பிண்டுபிண்டு 
விண்டுவிண்டு 
மேற்கொண்டு 
வதையுண்டு 
( விழு ) 

சரணங்கள் 

1 -நிறையக் கணைதொடுத்தார் இரண்டுபேர்களும் 
நெறநெறென்று சொரி 
மழை போலே 
பிறகவன் தேரையும் சாரதி தலையையும் 
பிளந்தானே தம்பி 
அதன் மேலே 
உறுதியா அரக்கன் கல்லின் மழைபொழிய 
உருண்டதே குரங்குகள் 
ஒருகாலே 
கறுவி இளையவன் ஒருகணை விட அந்தக் 
கணைவந் தரக்கன்மேற் 
படலாலே 
மறையும் கவசம்பிளந் துடம்படங்கலும் தைத்து 
வடிக்கணை ஒன்றாலவன் விடும்சிவன் சூலம் இற்று 
பிறையைப் பாம்பு தொட்டுத் தறையில் விழுவதொத்து 
பிடித்த வில்லுடனவன் இடக்கையும் கூட அற்று 
( விழு ) 

வடிக்க 
அடிக்க 
வளர்த்த தாயாரும் பெண்களும் இலங்கையில் 
வாய்விட் டழுதுகண்ணீர் 
ளைப்பிலா இரை வந்ததென்று பேய் 
எழும்பி எழும்பிக் கொண்டான் 
ஒளித்ததிருட்டரக்கன் வருகிறான் என்றுதேர் 
ஓசைகொண்டு தேவர்கிலி 
கிளைத்த மலைபோலே ஆகாசத்தில்வந்து 
கெர்ச்சித்தானே அண்டமும் 
செளைப்பில்லா மல்வரும் சேனை 
திக்கிலும் லட்சுமணன் கைக்கிரை 
குளத்தைக் குழப்பியங்கே பருந்துக் 
கொடுத்தாற்போல ரக்கரைக் குரங்குக்கே 
பிடிக்க 
வெடிக்க 
களைஎட்டு 
ஆகவீட்டுக் 
கிரையிட்டுக் 
இட்டுபட்டு 
( விழு ) 

3 நித்தியமாவது வேதவிதிவச 
னத்திலே சொல்லும் 
பொருளொன்று 
சித்தியாவது வேதியரைத் தெரி 
சித்து வருகிற 
தேதென்று 
கர்த்தனும் ரகுராமனேபர 
தத்துவ மாய் அவன் 
சத்தியம் எனில் இந்திர சித்தன் தலைநிமி 
ஷத்திலே கொண்டு 
வாவென்று 
அர்த்தசந்திர பாணம் அய்யன் தொடுத்தாற் போலே 
அற்றதே அவன் தலை ., எற்றி விடுத்தாற் போலே 
தத்துவமுனி வர்க்கெல்லாம் வெற்றிதொடுத்தாற் போலே 
தளரும் ந்திராதியர்க்குக் களைஎடுத்தாற் போலே 
வேறன்று 
( விழு ) 

இந்திரசித்து வதை ராவணன் கேட்ட இடத்திலே புலம்பல் 
 
இந்திரசித்தன் இந்தவிதம் விழுந்தான் தேவர் 
இரக்கத்தால் குரங்கினத்தார் எழுந்தார் தம்பி 
வந்தனு மானுடன் போனான் சாமிகாலில் 
வல்லரக்கன் தலை தன்னை அங்கதனும் வைத்தான் 
தொந்த விபீஷணனை ஐயன் மகிழ்ந்தான் அப்பால் 
தூதர் இராவணற்குப் போய்ச் சொன்னார் சொல்லப் 
பந்தம் எரிந்தாற் போலே மகனை எண்ணிப் 
பத்துவாயா லுமவன் கத்துவானே 

கண்ணிகள் 

ஒருவாயால் 
1. மந்திரியே என் துரையே மகனே 
மகனே என்பான் 
இந்திரசித்தே இந்திரசித்தே என்று 
இரைந்தழுவான் 
ஒருவாயால் 
ஒருவாயால் 
ஒருவாயால் 

2. இகத்தில் என்னைத் தவிக்கவிட்டு நீயும் 
இறந்தாயோ என்பான் 
முகத்தை இனிக்காண்ப தெப்போதே 
என்று முறையிடுவான் 
3. பனிவாழைக் கனிதனிலே முள்ளு 
பாய்ந்தது போலே 
மனிதன் அம்புகள் பாய்ந்த தோ உன்றன் 
மார்பில் என்பான் 
மகனே 
ஒருவாயால் 
மணிமாலை 

4. பரஞ்சேர் இந்திரன் முடிமேல்மகனே 
பறித் தணிந்த 
நரன் காலில் விழ ஆச்சே இந்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 

5. துள்ளும் முசலாலே சிங்கம் பெரும் 
துரவில் விழுந் 
பிள்ளை மனிதன்கை அம்பாற்பட்டுப் 
பிரண்டாயோ என்பான் 
ததுபோலே 
ஒருவாயால் 


6 னைக்கால 
ஈசன் முதலார் படைகளும் உமி 
எனப்போ மேஉன் 
பாசமது தீண்டிடுமோ இப்போ 
பதறி என்பான் 
ஒருவாயால் 
யும் வென்று 
அரனையும் மாயனையும் வென்றுதிக்கில் 
அஷ்டகெ சங்களை 
நரனுக்குத் தோற்றிட லாச்சோ இத்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 
மன 
யேமகனே 
மலைகலங்கினாலும் சற்றே உன்றன் 
து 
கலங்கா 
நிலை கலங்கி விழுந்தாயே இந்த 
நிலத்தில் என்பான் 
ஒருவாயால் 

இந்திரசித்துக்காக ராவணன் களத்திலே புலம்பல் 

என்றழுது களம்பார்க்க நடந்தான் பிள்ளை 
இடதுகையும் வில்லுமற்றுக் கிடக்கக்கண்டான் 
சென்றெடுத்தான் முண்டமாம் உடம்பைக் கண்டான் 
சிரங்காணான் இரங்கினான் உலகம் மூன்றும் 
வென்றநான் இந்த அலங் கோலம் பார்க்க 
விதித்தாயோ என்மகனே மகனே என்று 
கன்றிழந்த பசுப்போல வாயை விட்டுக் 
கதறினான் ராவணனும் பதறி நானே 

பல்லவி 

மசனே இந்திரசித்தே நான் 
மனதெப்படித் துணிவேன் 
( மக ) 

அநு பல்லவி 

இகம்பேமல் நானொரு பெண்ணா சையைத்தொட்டு 
என்னுயிர்க் குயிரான உன்னை இழந்துவிட்டு 
( மக ) 

1. வனமான் ஒருபுலியை அடித்தாற்போல 
மனிதன் உன்னை அடிக்க 
விடுத்தேனே 
கனமும் துரைத்தனமும் தரும் உன்னை என் இரு 
கண்பறி கொடுத்தாற்போற் 
மனிதன் நாளச் சண்டையினில் என்னை 
மயங்கிய நமனும்கைச் சங்கிலி 
னிமேல் இந்திரனும் என்னை நாப்புக் 
இலங்கையிற் சூரியன் தேரை கலங்காமல் 
கொடுத்தேனே 
மாட்டு வானே 
ஆட்டுவானே 
காட்டுவானே 
ஓட்டு வானே ( மக ) 

2 . நாற்றிசையிலும் உன்றன் கூத்திமார் அழக் கண்டு 
நானும் அழுதுதத் 
தளிப்பேனோ 
சீர்த்தியாம் சிவனுக்கும் மாயனுக்கும் பயந்து 
திருடன் போலே இனி 
ஒளிப்பேனோ 
பார்த்தால் இனியிந்த லங்கைத் 
தெருவாரே 
பரியாசம்செய் தென்னைத்துரை என்று 
மருவாரே 
போர்த்தெவரும் வசை வார்த்தைகள் 
தருவாரே 
பெண்டுகள் கூட இனிச் சண்டைக்கு 
வருவாரே ( மக ) 
3. பயமாம் குரங்கினில் ஒன்றும் செத்ததில்லையே 
படுகளத்தினில் நீயே 
செத்தாயே 
நயமா எனக்கு நீ செய்யும் உற்றுரிமையை 
நானே உனக்குச் செய்ய 
வைத்தாயே 
உயிரேேேட மனிதன் கையில் விழுந்த 
பேச்சே 
உலகம் உள்ளமட்டுக்கும் தொலையுமோ இது ஏச்சே 
வயிறும் குடலும்பற்றி மண்டி எரியல் 
வல்லமையும் செல்வமுமெல்லாம் உன்னோடே 
போச்சே 
( மக ) 
ஆச்சே 

இந்திரசித்துக்காக மண்டோதரி புலம்பல் 

எடுத்திந்த வண்ணம் போர்க் களத்தினுள்ளே 
ராவணனும் அழுதுமகன் உடலைக் கொண்டு 
தடுக்கரிய அரண்மனையில் வந்து சேர்ந்தான் 
தாய்மண்டோதரியறிந்தாள் அவன் கால் வீழ்ந்து 
கெடுத்தாயே மகனை என்றொப் பாரி சொன்னாள் 
கெடகெடென்று பிரண்டாள் பின் மகன் மேல் வீழ்ந்தாள் 
அடுத்தமகன் உடலைத்தன் கண்ணீராலே 
அலம்பினாள் பதைபதைத்துப் புலம்பினாளே 

பல்லவி 
ஐயையோ மகனே இனி என் செய்வேன் 
ஐயையோ மகனே . 

சரணங்கள் 

1. கையிரு பதுள்ளஉன்தன் ஐயனைப்போல் மூவுலகும் 
மெய்ம்மை யாகநீயரசு செய்குவை என்றிருந்தேனே 
( ஐ ) 
( ஐ ) 

2. குழந்தைப் பிறந்த அன்றுன் அழுங்குரல் கேட்டிம்மேகம் 
மழுங்கியே நடுங்கிமண் மேல் விழுந்தகீர்த்தியும் பாழாச்சே 
3. தன்னிகர் ஒன்றுமில்லாத உன்னை இவ் உலகத்தில்ஓர் 
சின்னமனிதன் கொல்லவே என்னபாவம் பண்ணினேனோ 
( ஐ ) 

4. அம்புலிவா என்னவந்து கும்பிட்டவன் . மேல்மறுவை 
வம்பிதென் றுரைக்கும் உன்றன் தெம்பை நான் என்றுகாண்பேனோ ( ஐ ) 
5 . கண்னேஎன் கருவூலமே மண்ணோடே மண்ணானாயோ 
பெண்ணாலே கெட்டகுடியாப் பண்ணிவிட்டானே உன் அப்பன் ( ஐ ) 


6 காட்டுச்சிங்கக் குட்டிகளைக் கூட்டி நீபிடித்துச் சண்டை 
மூட்டும் உன்னுடைவிளை யாட்டை என்றைக்குக் காண்பேனோ 
( ஐ ) 

7. சின்னஞ்சிறு வயதினில் இன்னபடி ஆவாய் என்று 
என்னமா பாவிப்பிரமன் தன்கைஎழுத்தை இட்டானோ 
8. அந்தரங் கிட்டியே அந்த இந்திரனைக் கட்டியே அன்றுன் 
தந்தைமுன் விட்டையேயின்று என் தனைத் தெருவில் விட்டையே ( ஐ ) 

9. கோளும்குண் டுணிப்பேச்சும் நாளும் சொல்லியுன் அத்தை 
ஆளும்பிள்ளையைக் கொல்ல மூளுவித்தாளே யோர்பாவி 
0. இரக்கமாய் உன்தேவியராம் அரக்கியர் கூடிவந்திங்கே 
உரக்க அழுதும் உன் முகம் பரக்கநீ காட்டாதேனோ 
( ஐ ) 
( ஐ ) 

11. ஒக்கலையும் மக்களையும் தக்காமலே செய்தெந்நாளும் 
மக்கிமனம் குலைந்து நான் வெட்கவைத்தானே உன் அப்பன் 
( ஐ ) 

12. இச்சகம் பேசுவோர் வார்த்தை மெச்சி உன் அப்பன் என்றன் 
மச்சினர் சொன்ன வார்த்தையைச் துச்சமாக மதித்தானே 
( ஐ ) 


13 -வீரியம் இல்லாமனிதன் செய் போரில் நீ வீழ்ந்து மக 
மேருவும் வாயுவினாலே வேரற்று வீழ்ந்தாற் போலாச்சே 
( ஐ ) 


14 --துதி செய்து சீதையைவிடத் ததியிதென்று நீ சொல்லியும் 
வீதிவழியிலே உன் அப்பன் மதிபோச்சுதே என்செய்வேன் 
( ஐ ) 

15. ஒப்பில்லாச் சீதையால் நீ இப்படி மடிந்த போதுன் 
அப்பனார் உயிரும் நாளை எப்படி ஆமோ அறியேன் 
( ஐ ) 


16 -பெருகும் உன் துயரும் நாளை வருதுயர் தனையும் எண்ணி 
வருதலைக் கொள்ளியள் எறும்பு புகுதல் போல ஆனேனே 
( ஐ ) 

சீதையை வெட்ட நடந்த ராவணனை மகோதரன் தடுத்தல் 

தொடுத்து மண்டோ தரிபுலம்பும் வாக்கியம் எல்லாம் 
சுறுக்கென்று சுட்டிடலும் திடுக்கென்றங்கே 
அடுத்திருந்த அரக்கன் மனம் கலங்கி மக்கள் 
அனைவர்களும் அரக்கர்களும் மாண்டார் ஆசை 
விடுத்தனென்சீ தையைஇனிமேற் கொல்வேனென்று 
வெகுண்டு நடந் தானந்த வேளை இந்த 
துடுக்காமோ ராவணனே இதுபெண் பாவம் 
சொல் என்றா 
றான் மகோதரனும் நில்ஏன்றானே . 

பல்லவி 

 இந்தச் சனகிதன்னைக் கண்டிக்க நடக்கிறாய் 
ஏதையா ராவ ணேஸ்வர . T 
( இந்த ) 

அநுபல்லவி 

சொந்த மகன் தலையைப் 
துஷ்டமனிதர் தம்மை 
பந்துபோற் கொண்டு போன 
விட்டுவிட்டேழையான ( இந்த ) 

சரணங்கள் 

1. பொட்டான தேவர்களும் 
நெட்டாங்க மடிப்பாரே 
புலத்தியன் குலத்திற்கோர் பழிகாட்டி இடிப்பாரே 
அட்ட கெசமும் புத்தி 
கெட்டான் என்றெண்ணாதோ 
அரனார் கயிலாசமும் 
பரியாசம் பண்ணாதோ 
சட்டான காலகேயர் 
மேலே எறிந்தவாளை 
கன்னி மேலெறிந்தால் 
குன்னஞ் சொல்லாரோ நாளை 
முட்டாளும் கூட உன்னைச் 
சட்டைதான் செய்வானோ 
மூன்று லோகமும் கட்டி ஆண்டதிப்படி தானோ ( இந்த ) 
2. முடுக்கில் இருந்து கொண்டு 
துடிக்கிறாய் என்ன சாரம் 
முன்கொன்ற மனிதரை 
முனைகொண்டாலல்லோ வீரம் 
அடுத்தாரைக் கெடுக்கிறாய் 
உன்னைப்போல் உண்டோ ஏழை 
ஆயிரம் வேதம் கற்றும் 
நீயே கற்றறி 
பிடித்த கத்தி உறையில் 
அடக்கவேணும் என்சாமி 
பெண்பழி கொண்டால் முனைபங்கம் சொல்லாதோ 
எடுப்பான பேருக் கெல்லர்ம் எடுப்பான நீஉன் மேலே 
எய்தவனை நோகாமல் அம்பை நொந்தது போலே ( இந்த ) 

மோழை 
பூமி 

3. அரியாப் பிர்மாதிகள் 
ஆகிய உனக்கிது 
பெருமையோ சிறுமையோ 
பெண்மேற் கத்தி எடுத்த 
தரும் ஒரு கோபம்வந்து 
சந்தோஷம் வந்தாலும் 
நரரைக் கெலிப் பாய்நாளை 
நகரில் வருவாய்பிற 
யாவர்க்கும் முதல் மூர்த்தி 
ஆகுமோ அபகீர்த்தி 
பாராய் எனது 
சொல்லை 
மன்னவர் எங்கும் இல்லை 
கிணற்றில் விழுந்தா லாயிரம் 
எழும்பப் போமோ சரீரம் 
விருதுகளும் பூணுவாய் 
கிவளை எங்கே காணுவாய் ( இந்த ) 


தூதர் இராவணனுக்கு மூலபலத்தை அறிவித்தல் 

அருந்துணை மந்திரிஇந்த வாறுசொல்ல 
அரக்கனும் வாள்விட்டெறிந்தான் மகன் உடம்பை 
பெருந்தயிலத் தோணியிட்டான் அழைக்கப்போன 
பெருமூல பலசேனை வரவுகேட்டான் 
விரிந்தது அணியணியா புகட்டும் என்றான் 
மென்மேலும் அதுபோக வந்த தூதர் 
தெரிந்தது சொல் வோம்சாமி காதுக்குள்ளே 
சேரென்றார் வகைவகையாப் பாரென்றாரே . 


கண்ணிகள் 


1. தீரா ராவணவீரா விசயம் சேர்இருபது 
தோளாய் 
ஆராகிலும் சொல்லா மூலபலம் இதை அறிந்தது சொல்லக் கேளாய் 
2. சாகத்தீவினில் உறைவார் இவர் வேகத்தை எவர் மொழிவார் 
மேகத்தைக்கூட தாகத்தினாலே நோகக் கைக்கொண்டு பிழிவார் 
3. குசைஎனும் பெருந்தீவோர் இவர் விசயங்கேள் 
ஒரு 
பேச்சு 
வசனம் சொல்லவே இசையும் தேவர்க்கும் அசையுமோ ஒரு மூச்சு 
4. இறலித் தீவினில் உறைவோர் உன் தன் முறைதப்பாமலே திரிவோர் 
திறம்மிக்கோர் இந்தத் தறை முற்றும் சுற்றிமறலிக்கும் கொலை புரிவோர் 

5 பவளத்தீவினை விட்டோர் இவர் கவனத்தால் 
புறப்பட்டோர் 
அவனிக்கே பெரும் திவலைப் பாற்கடல் சுவறக்காலடி இட்டோர் 

6 . மலையமாமலைத் தீவோர் இவர் தொலைவிலே நின்று வந்தோர் 
சிலையினால் இந்திரன் நிலையும் குலைகுலையவே வசை தந்தோர் 
இவர்கள் கிரவுஞ்சத்தீவோர் இவர் எவரிலும் பிரதாபர் 
அவரிவர் என்றும் பார்த்தாயே ஆகிலும் கொல்லும் கோபர் 


7 


8. கந்தமாதானத் கோளர் இவர் சொந்தமாம் படையாளர் 
அந்தகனுக்கும் அந்தகன் என்ன வந்த பாவ சண்டாளர் 


9. புட்கரப் பெருந்தீவோர் இவர் விக்கிரமம் என்ன செய்யார் 
திக்கசங்களை மற் கொடுங்கையால் வைக்கிறவர் இவர் அய்யார் 


10 .லவமாம ரத்தீவோர் இவர் கலகமே கற்றுப்படித்தோர் 
மலையையும் கடலலையும் சேடன் தலையையும் தூக்கிப் பிடித்தோர் 
சமர்த்துப் பேசிய வன்னியை மாலியவான் இடித்தல் 
மதியுடனிப் படிமூல பலத்தின் சேதி 
வந்ததூ துவர்சொன்னார் அரக்கன் கேட்பின் 
அதிலொருவன் வன்னி என்பான் சீதையாலே 
அடைந்த தெல்லாம் அறிந்தவர் ஆர் வலிஎன்என்ன 
பதறியழும் நோயாளி முகத்தின் முன்னே 
பரிகாரி தலைமாட்டில் அழுகின்றாற்போல் 
எதிர் இருந்த மாலியவான் வன்னிதன்னை 
இடிக்கின்றான் பழமை சொல்லிப் படிக்கின்றானே 

பல்லவி 
வன்னியோசனை செய்வதேதடா அந்த 
மானிடரை வெல்லப் போகாதடா 
( வன் ) 
அநுபல்லவி 
உன்னுட கெருவத்தாலே ஓதுகிறாய் சூதும் வாதும் 
தென்னிலங்கை பட்டபாடு சென்மசென் மத்துக்கும் போதும் 
( வன் ) 

சென்று 
1. கோலமாரீசனும் மானைப்போலவே 
கெட்டான் 
சாலவே கரனும் நொடிவேலை 
யினிலே பட்டான் 
வாலியும் அவர்கை அம்பினாலே 
உயிரை விட்டான் 
நீலவருணனும் ரெத்தினமாலை 
தந்துக்கும் பிட்டான் 
மேலென்ன சானகி என்னும் விஷத்தில் நாம்தப்ப லாமோ 
காலிலே சுற்றிய பாம்பு கடித்தாலல்லது ஒழியப் போமோ ( வன் ) 

2. பண்டு கும்ப கர்னனையும் 
அண்டு அதிகாயன்முடி 
கண்டகன் இந்திரசித்தன் 
ஒண்டி ஒழிந்தோரை நமன் 
மண்டு கடல் வெந்ததங்கே 
மிண்டராம் அரக்கர்க்கினி 
கண்டதுண்ட 
பிண்டுவீழத் 
மண்டைவிழத் 
அண்டையிலே 
வந்ததில்லையோ 
மேலே என்ன 
மாக்கினார் 
தாக்கினார் 
தூக்கினார் 
போக்கினார் 
நெருப்பு 
இருப்பு 
( வன் ) 

பேரடா 
ஊரடா 
பாரடா 
3. முத்தன்வில் ஒடித்தேபிர 
தத்தி ஒரு குரங்கு கொ 
மற்றது சஞ்சீவிதந்த 
செத்தவர் பிழைத்தாலினி 
இத்தலை ஆயிரவெள்ளம் 
புத்தில் ஈசல்போல் மடிந்து 
சித்தமான 
(ளுத்தியதிவ் 
வித்தைஎன்ன 
வெற்றிகொள்வ 
ராட்சதரும் 
போனபிற 
தாரடா 
அவராலே 
கினிமேலே 
( வன் ) 

மூலபாம் கண்டு ஓடின சாம்பவான் முதலோரை 
மறித்த அங்கதனுக்கு அவன் கூறுதல் 
அரக்கன் இந்தப்படிபாட்டன் வன்னிக் கோத 
அதை மறுத்தான் மூலபலம் தன்னை விட்டான் 
தரைக் கடங்கா ததுவரக்கண்டஞ்சி ஏங்கிச் 
சாம்பன்முத லனைவரும்சா மியைவிட் டப்பால் 
கரக்கநினைந் தலைகடலைத் தாண்டிப் போனார் 
காகுத்தன் அருளாலே அப்போ தந்த 
குரக்கினத்தை அங்கதன் போய் மறிப்பே னென்று 
கூடினான் சாம்பன்உரை யாடினானே . 

பல்லவி 
எங்களால் ஆகாதையா 
மூலபலத்தின் 
எதிர்நிற்கப் போகாதையா 
( எங் ) 
அநுபல்லவி 
அங்கதா உன் தர்மம் எங்கள் மேலேயோ வர்மம் 
அரக்கர்க் கெங்களைக் கொடுக்கத் துடிக்கிறாய் 
( எங் ) 
சரணங்கள் 
1. வினைக்குள் இந்திரசித்தம்பால் பட்ட புண்கள் ஆறி 
வேறே ரத்தம் இன்னம் ஊறவும் இலையே 
அனர்த்த காலம் போற் கங்குகனரகாணாச் சேனைமேல் 
அஞ்சாதே அழைக்கிறாய் 
என்செய்வோம் கொலை யே 
தனுக்கையர் இருவரும் அனுமானும் இவர் முன்னே 
தரிக்கொள்வதே மெத்தப் 
பெரிதவர் 
நிலையே 
பனித்த பஞ்சினிற் பாயும் கனல்போல் எங்களையவர் 
பாய்ந்து கொல்வாரென்றா ராய்ந்துபார்க் கலையே 
கனத்தகும் பகர்னனைத் தின்பானொரு 
அரக்கன் பொறிக்கறி 
போலும் 
கணிதம் இவர்களுக் குண்டோ பெருங்கடல் 
மணலையே எண்ணி 
னாலும் 
உனக்கென் சிறுபிள்ளை ஆலோ 
சனைக்குத் தெரியுமோ 
நாலும் 
ஒட்டும் பாஷையும் இட்டுத்தலை தொட்டென் 
உயிர்க்குப் பிணை நீசொன் னாலும் 
( எங்க ) 
போரோ 
வாரோ 
பாரோ 
ஆகிய 
பேரோ 
2. ஆனரா வணன் தலை பத்து இவர்க்காயிரம் 
ஐந்நூறு தலைகண்டோம் என்னென்ன 
போனவாலியும் கால நேமியும் மாலியும் 
பூச்சிப்போல் இவர்க்கொரு மூச்சுக்கா 
ஈனராகும் இவரை மூவரும் தூர நின் 
றெட்டிப் பார்ப்பாரல்லாமல் கிட்டிப்பார் 
தீனராகிய கொஞ்சம் வானரர் நாமந்த 
தேவர்களிலும் பலம் 
ஊனமா இந்தச் சேனைமுன் விடுத் 
தேன்குழைக்கறிபோல் 
குழைக்கிறாய் 
உற்றபேர்களை கெடுக்கவோ உன் தன் 
சிற்றப்பனோடு நீ 
பிழைக்கிறாய் 
ஆனமட்டும் பார்த்தோமே துரையே 
ஏனோ வீணிலே 
உழைக்கிறாய் 
அறமுறுக்கு கொண்ட புரிபோல் அற்றுவிட 
அறியாப் புத்தியினாலே 
அழைக்கிறாய் 
( எங்க 

3. இனித்தான் அவர்எங்களைத் தொடராமல் அணையைப் போய் 
இடிக்கிறோம் இதற்கு நீ 
தடுத்துக் சொல்லாதே 
சினத்த எருதும் எருதும் போராடி நடுப்புல்லை 
தேய்த்தாற்போல் எங்களை 
ஏய்துக் கொல்லாதே 
னத்தோடே நாங்கள் எல்லோரும் போய் அவர் கையில் 
இறக்கும்மட்டும் உனது 
பறப்பு நில்லாதே 
தனித்துத் தாய் வயிற்றினில் செனிக்கையிலே இவர் 
சதியும் மாயமும் கற்றோர் 
அதுவுமல்லாதே 
பனிப் பெருக்கிலே கப்பலோட்டிட 
நினைக்கிறாய் நீ 
சொன்ன 
படிக்கு நடக்குமே குரங்குப்பிடியே 
பிடிக்கிறாய் பன்னப் 
பன்ன 
அனுப்பினால்எழு பதுவெள்ளமும் ஒரு 
வனுக்குப் போதுமோ 
தின்ன 
அருந்தத் தழையுண்டு உறங்க முழையுண்டு 
அரக்கர் ஆண்டென்ன மனிதராண் 
டென்ன 
( எங்க ) 

அங்கதன் சாம்புவந்தனை இடித்தல் 

இரங்கிச்சாம்பன் முதலானோர் இவ்வாறுரைக்க நீங்களென்ன 
உரங்கெட்டீரோ படைக்கஞ்சி ஓடல் ஆமோ சூரனுக்குத் 
துரும்பத்தனையே சீவன் எனச் சொல்வாரிலையோ வாருமென்று 
பரிந்தப்போ தங்கதன் நீதி படிப்பான்சொல்லி இடிப்பானே . 


பல்லவி  
என்னகாரியம் எண்ணினீர் சாம்பவரே - நீர் 
என்ன காரியம் பண்ணினீர் 
( என் ) 
அநுபல்லவி 
ஆச்சே 
தன்னவர் என்றும்மைச் சாமி சொன்னதும் 
போச்சே 
சாமித்துரோ கி என்று பூமிக்கும் பேர் 
பனும் அங்கதன் என்சொல் எண்ணாமல் 
ஒதுங்கிறீர் 
படைக்குப் பயந்திப்போது செடிக்குள்ளே பதுங்கிறீர் ( என் ) 

சரணங்கள் 
1. பேய்த்தனமாகவே இகத்துக்கும் பரத்துக்கும் 
பிரட்டன் என்று சொல்லக் 
கேட்டீரே 
பிராணன் போனாலென்ன மானம் போகலாமோ நம் 
பினபேரைப் போரிற்கை 
விட்டீரே 
ஏற்றராமன் ஆதிமூர்த்தி என்றீரே 
இங்கே ஒளிக்கத் தலைப் 
பட்டீரே 
இளந்தை அல்லவோ நீர் எல்லாம் தெரிந்திருந்தும் 
காடிப்பானையிற் கையை 
இட்டீரே 
ஆத்திரமோ அவர்க்கென்ன உங்களைத் 
தொட்டு 
அழித்தவாலி ஓர் அம்பால் விழுந்தானே தலை நட்டு 
சாத்திரமோ ஓடல் ஆமோ முது 
கிட்டு 
சாகிறபேருக்குச் சமுத்திரம் முழங்கால் 
மட்டு . 
( என் ) 

2. திடுக்கென்று போமிந்த பாழும் சரீரத்தை 
ஸ்திரமென்றங்கே எண்ணம் 
பெற்றீரே 
சீவன் போனாலென்ன கீர்த்தியும் உடன் போமோ 
தெரியாமல் நினைவெல்லாம் 
செத்தீரே 
அடுத்தபேரைக் கொல்லும் விஷமான நீங்களும் 
அமுதம்போற் சாமியை 
உற்றீரே 
அன்பெல்லாம் வெளியாச்சே மண்குதிரையை நம்பி 
ஆற்றில் இறங்கச் சொல்லி 
வைத்தீரே 
முடுக்கி வாரும் உயிர் கொடு துப் பழி 
ஒழிப்பீர் 
முன்னொன்றும் பின்னொன்றும் செய்தவசை கழிப்பீர் 
நடுக்கிஓடி நற்பேர் எடுத்தெப்படி 
செழிப்பீர் 
நாயகன் முகத்தினிமேல் எப்படி 
முழிப்பீர் ( என் ) 

3. நால்வரும்போற் சண்டை பார்ப்பதல்லால் உண்டோ 
நம்மாலே சாமிக்கு 
லவலேசம் 
நமக்குத்தான் அபகீர்த்தி சுமக்க நாயமோ னி 
நாளைக்கெப்படி செல்லும் 
விசுவாசம் 
மேல்கீழ் ஆனாலும் ஐயன்வில் இருக்க 
மிஞ்சி நமக்குவரு 
மோ மோசம் 
வீரர் என்று சும்மா பேர் கொண்டீரே ஐயோ 
வேண்டாமோ அணுவாகி 
லும்ரோஷம் 
சாலம்செய் தோடினால் நம்மைத் தடுப்ப 
தாரோ 
சதி செய்யும் பேருக்கு சமர்த்தன் என்றும் 
பேரோ 
நீல அரக்கர் கெடுங்காலம் என் 
யீரோ 
நில்லாது வாருங்கள் நிலைகடந்துபாய் 
வாரோ 
( என் ) 

மூலபலச் சண்டை 
ஓதியிவ்வா றங்கதன்சொல் உரைக்குச் சாம்பன் 
உடன்பட்டான் அங்கு தம்பி முதலானோர்கள் 
நாதனுரையா லவரைக் கூடப் போனார் 
நாலுசமுத்திரமும் ஒன்றாய் வளைத்தாற்போலத் 
தீதுசெய்யும் மூலபலம் எதிர்க்கக் கண்டான் 
சீராமன் கோதண்டத்தினை நாணேற்றிக் 
காதளவும் வாங்கி இதெம் மாத்திரம் என்று 
கருசித்தான் சரமாரி வருஷித்தானே . 

பல்லவி
மூலபல சண்டையைக் கேளும் - ஸ்ரீராமன் செய்த 
மூலபல சண்டையைக் கேளும் 
( மூல ) 

அநுபல்லவி 

மூலபல : சண்டைகேளும் 
மூடன் ராவணன்குடி 
முவ்வுலகக் கிளைஞர்க்கும் 
முந்த உபசாரம் பண்ணிப் 
முன்னரக்கர் நம்பினோர் 
முக்கிய தேவாந்தகன் 
முடிபெறும் சூரியகேது 
முனைபெற்ற சம்பு மன்னன் 
முதுபோர் இடும்பன் அகம்பன் 
முச்சிரத்தரக் கன்சங்கன் 
முகை கும் பருதிக் கண்ணன் 
முதல் வீரர் முடிந்தனர் 
முழுதும் நெஞ்சு காய்ந்தது 
முற்றுயிர் கொடுக்கும் பேர்கள் 
முடவர் முதலாக இன்று 
மூயவிட்ட தூதர் செல்லப் 
வேலைசூழ் இலங்கை ஆளும் 
கேடன் ராவணன்கெடி 
எவ்வுலகத்த வுணர்க்கும் 
பிந்திட விசாரம் எண்ணி 
தன்னொடத்த தம்பிமார் 
உக்கிர நாராந்தகன் 
கெடிபெறும் யாககேது 
ரணமஸ்தன் கும்பகர்னன் 
அதிகாயன் கும்பன் நிகும்பன் 
வச்சிரத் தெயிற்றன் வங்கன் 
புகைக்கும் குருதிக் கண்ணன் 
சதிமாரும் மடிந்தனர் 
பழுதுவந்து நேர்ந்தது 
கத்தி என்றெடுக்கும் பேர்கள் 
கடுகிவர வேணுமென்று 
போஎவர்க்கும் சேதி சொல்ல 
முந்தி லங்கையை நாடி 
வந்து துக்கங்கொண்டாடி 
முண்டாக்கன் தன்னைத் தேற்றி சண்டையை உட்கொண்டு தோற்றி 
மூளும்கனல் போலேபற்றி 
ஆளும்கள மேலேசுற்றி 
மூடவும் பூமியசைந்தாடவும் தேவர் அஞ்சி 
வாடவும் வானரர்கண் டோடவும் தேடிவந்த 
( மூலபல ) 

சரணங்கள் 
1. அஞ்சு முகங்கள் ஈர் 
ஐம்பது தலைகள் ஈர் 
ஐந்நூறு முடிகள் ஈர் 
ஆயிரம் சிரங்கள் இரண் 
அங்கம்மிகு காத்திரங்கள் 
அலைபோலும் நாக்குகள் 
ஆவெனத்திறந்த வாய்கள் 
ஆகாசம் தொட்டகைகள் 
அடரக்கறு சுறுத்தும் 
அண்டத்தில் உள்ளோர் நவ 
அஞ்சுனக வெற்பங்கள் 
ஐம்பது புசமலைகள் 
ஐந்நூறு தோள் அடிகள் 
டாயிரம் கரங்களுடன் 
பொங்கும் பொறி நேத்திரங்கள் 
மலைபோலும் மூக்குகள் 
தாவெனப்புகுந்த ஈய்கள் 
ஏகாசம் இட்டமெய்கள் 
படையைக் குறிகுறித்து 
கண்டத்திலுள் ளோரெல்லாம் 
அடியோ டெழும்பி அந்தக் 
அரும்பார்க்குள் நிறைபட்டாற் 
பெரும் போர்க்குப் புறப்பட்டாற் 
கடல் ஏழும் பொங்கி இந்த 
போல் 
புற்றினில் ஈசல் 
போல் மலைமலைகள் 
ஆனபெரு ராட்சதர்கள் 
அனைய பெருமத்த கெசங்கர் 
தனி விருது பெற்ற துசங்கள் 
மானமளவா நிறைந்து 
தேவரைவென்று 
- கணக்கில்லாத 
அண்டபகி ரண்டமுட்டும் 
அளவும் காத்திர ரதங்கள் 
வளரும் போர்த்துர கதங்கள் 
எண்டிசை அகன்றமட்டும் 
கண்களிற்பொறி 
முறைமுறையா 
ஆற்று மணல் அளவிட்டே நட் 
அதிகக் குதிரைக் கூட்டம் 
பதறிக் கொள் ஆட்ட பாட்டம் 
சேத்திரம் அளவிட்டாலும் 
திக்குகளெல்லாம் 
கைக்கடங்கள் 
ஆகம் அணிபதக்கங்கள் தோள் 
வளைகள் கால்வளைகள் 
அக்குமணிக் குண்டலங்கள் 
மணியிழைத்த 
பொற்கொலுசு வெண்டையங்கள் வெற்றிக்கொடிகள் 
ஆலவட்டம் தாலவட்டம் 
அவுதாக்கள் முத்துக் குடைகள் 
கவிகைகள் சித்திரக் குடைகள் 
சாமரங்கள் சுருட்டிகள் 
- பீலிக்குடைகள் 
- வெயில் மறைக்க 
அதிவித நாதசுரம் தவிலொடு 
தாரை சின்னம் 
அறைந்த சங்குகள் எக்காளங்கள் 
கர்னாவொடு 
சிறந்த கொம்புகள் கைத்தாளங்கள்- துத்தாரிகள் 
ஆகுளிகள் மேளங்கள் 
ஐந்துவித பேரிகைகள் 
பம்பையொடு பூரிகைகள் 
காகளம் டமாரங்கள் 
வீராணங்கள் 
முழங்கிவர 
அங்குசங்கள் பரிசைகள் 
அஸ்திரம் வேலா யுதங்கள் 
சஸ்திரம் சூலா யுதங்கள் 
சங்கிலியின் வரிசைகள் 
-வல்உலக்கைகள் 
- இப்படிக்கொத்த 
ஆயுதத்தின் பேதங்கள் 
அங்கைகொண்டு சூழ்ந்துவர 
கங்கு கங்காப் பாய்ந்து வர 
கோடிகோடி பூதங்கள் 
பேய்களும் கொண்டு 
புலி இறைச்சி 
ஆட்டிறைச்சி மானிறைச்சி 
அலகைகள் கொடுத்துவர 
பலபேய்கள் எடுத்துவர 
மாட்டிறைச்சி நாயிறைச்சி 
மதுக்குடங்கள் 
கெக்கலிகொட்டி 
அண்டமும் அகன்ற நவ 
கண்டமும் கிடுகிடென்ன 
ஆர்ப்பரித்துத் தொடைகள் தட்டி விழிகள் எல்லாம் 
தீப்பறக்கப் பொறிகள் 
கொட்டி ராவணன் சொன்னது 
ஆரடா மனிதனவன் 
ஆரடா என்றே கத்திகள் 
அடங்கலும் வீசிக் 
கொண்டு ராமன் எங்கே என் 
றிடும்புகள் பேசிக் 
கொண்டு விதம் விதமா 
ஆளிபுலி கரடிகள் 
அரக்கர் மெத்தப் பாய்கு வாரும் 
ரைச்சலிட்டுச் சாய்கு வாரும் 
ஞாளி கழுதைகள் மேலே 
சிங்கத்தில் ஏறி 
சில அரக்கர் 
ஆகத்தினில் அடங்காத 
அங்கையாற் பிடிப் 
செங்கையாற் குடிப் 
பாரும் 
பாரும் 
தாகத்தாலே மேகங்களை 
சலம் பிழிந்து 
அதுக்கிஷ்டயாம் 
ஆரும் வேசாறி அந்த 
அலைகடலை அள்ளு 
சலசலெனக் கொள்ளுநீரும் அகப்படாமல் 
வாரும் பெருவாயால் 
வாரும் - கைகளை நீட்டி 
அஷ்டகெசங்களைக் கூடச் 
சுட்டெடுத்துத் தின்னவந்த 
அனல்போற் 
சொறிவரும் 
மரங்களாலே 
தினவுகளைச் சொறிவாரும் - பிறைகள் போலே 

அக்கிரமம் மிகுந்தபல 
ஆவென்று 
கூவென்று 
திறப்பாரும் 
பறப்பாரும் 
உக்கிர தந்தங்களைக் காட்டி 
பசிக்குதையோ 
கழுதைமுகம் 
ஆனைமுகம் புலிமுகம் 
ஆகும் அரக்கர் 
வேகும் அரக்கர் 
அனந்தம் 
அனந்தம் 
பூனை முகம் பரிமுகம் 
கண்கள் நெருப்பா 
சற்றாகிலும் 
அஸ்தத்தில் விரல் இல்லாமல் 
ஆன அரக்கர் 
போன அரக்கர் 
கோடி 
கோடி 
ஒற்றைக்கையும் ஒற்றைக்காலும் 
சொரூபம் கெட்டுப் 
வரைக் கண்ட 
அண்டர்கள் எல்லாரும் நீல 
அய்யா என்றே ஒடுங்கியே 
வையாமலே 
நடுங்கியே 
கண்டனிடம் போய் எப்படி 
உயிர்மேல் ஆசை 
சிவனே இந்த 
அம்புவியற் கடல்களும் 
அரக்கராய் வந்தன 
குரக்கினம் நொந்தன 
பம்புசரா சரங்களும் 
என்று - ஓடி ஒளித்துக் 
நாங்களும் இனி 
இன்று 
அம்பரத்திருக்கும் இந்த 
உம்பருலகத்தை விட்டு 
அப்பாலே செல்லுவோம் என்றார் இருந்தால் இவர் 
தப்பாமல் கொல்லுவார் என்றார் - என்னவே அரன் 
அந்தராமன் சரத்தாலே 
அதமாகிப் போவார் 
சதமாகி வாழ்வீர் 
ன்னய் 
இந்த அரக்கர் எல்லாம் 
நீங்கள் எல்லாரும் 
கேட்டு அமரர்கள் 
என்ன 
அகத்தினிலே முன்னம் 
அகற்றிப் பயங்கரம் விண்டார் 
கித்துத் தயிரியம் 
கொண்டார் 
மிகுந்த துயர்களெல்லாம் 
ராட்சதர் கோரம் 
முனிவரெல்லாம் 
அண்டநிழல் இல்லையென்று 
தண்டு கமண்டலங்கள் விட்டு 
அலங்கோலமாய் வெதும்பினார் தாமரை இலைச் 
சலம் போலவே ததும்பினார் - 
சித்தர்கள் எல்லாம் 
அனந்தம் அரக்கர்க்கொரு 
அளவிடத் தள்ளா தென்பார் 
களமிடம் கொள்ளா தென்பார் 
குரங்கை உரையிட்டாலும் 
இந்த சேனைக்கு 
சாத்தியர் எல்லாம் 
அத்தனை இத்தனை அல்ல 
இத்தனைப் பேர் தலைகளை 
அய்யன் அம்பு கொய்யுமோ என்பார் 
நமது பங்கில் 
தெய்வம் என்ன செய்யுமோ என்பார் வித்தியாதரர்கள் 
ஆயிரங்கோடி அந்தகர் 
ஆகிலும் வரைக் கொல்ல 
அனந்தம் நாள் வேணும் 
என்பார் -- உலகழிக்க 
நினைந்ததோ காணும் என்பார் - கந்தருவர்கள் 
ஆனையும் சேஷனும் இத்தப் 
அங்கத்தைச் சுமந்ததோ 
எங்கிட்டுச் சமைந்ததோ 
என்பார் 
என்பார் 
பூமியும் எப்படி இவர் 
இத்தனை பேரும் 
இவர்கள் இந்த 
ஆச்சரியம் கொள்ளவெகு 
மாச்சரியம் கொண்ட ரக்கர் 
அஷ்ட திசைமேலும் மேவினார் 
- ஆகாசம் என்னும் 
வெட்ட வெளிமேலும் தாவினார் இவரைக் கண்டு 
ஆர்வமுள்ள பதினெட்டு 
வீரரொடு சாம்புவனும் 
அரண்டங் கேநாட்டங் கொள்ளவே நடுநடுங்கிக் 
குரங்கெல்லாம் ஓட்டம் கொள்ளவே இவ்வகை நீசர் 
அடர்ந்து மலையும் குன்றும் 
படர்ந்து ராகவன் முன்னே 
கடந்து நாலு திக்கிலும் 
தொடர்ந்து தொடர்ந்து வந்த ( மூல ) 

2. எட்டி வருவார் சிலர் 
ஈண்டு வருவார் சில . 
ஏறி வருவார் சிலர் 
இரைந்து வருவார் சிலர் 
இடத்தில் வருவார் சிலர் 
எடுக்க வருவார் 
சிலர் 
இடிஇடி என்பார் சிலர் 
கிட்டி வருவார் சிலர் 
தாண்டி வருவார் சிலர் 
சீறி வருவார் 
சிலர் 
விரைந்து வருவார் சிலர் 
வலத்தில் வருவார் சிலர் 
முடுக்க வருவார் சிலர் 
பிடிபிடி என்பார் சிலர் 

எற்றும் எற்றும் என்பார் சிலர் குத்தும் குந்தும் என்பார் சிலர் 
எட்டும் எட்டும் என்பார் சிலர் வெட்டும் வெட்டும் என்பார் சிலர் 
எதிர் எதிர் என்பார் சிலர் மிதி மிதி என்பார் 
சிலர் 
இந்த வகை ராமனை 
வந்து வந்து மென்மேலும் 
ஈய்கள் மொய்துக் கொண்டவகைபோல் பெரும்புலியை 
நாய்கள் சுற்றிக் கொண்ட வகைபோல் சுற்றயில் அய்யன் 
என் சமர்த்தும் ராவணன் 
தன் சமர்த்தும் வந்தபடை 
யின் சமர்த்தும் பார்ப்போம் என்றே - நினைந்து மெள்ள 
புன்சிரிப்புக் கொண்டு கொண்டே நிற்க ராட்சதர் 
எல்லாரும் இவன் ஒரு 
திருக்கும் செருக்கே 
பெருக்க வேணுமோ 
வல்லாள கண்டன் தனித் 
போதும் 
இதிலும் செயம் 
ஓதும் என முதுகில் 
எத்தேச காலமும் 
வற்றாப் பெரும் சமுத்திரம் 
என்ற அம்பறாத்தூணி சாத்தி 
பிரசண்டகோ 
தண்டவில்லை நாணி 
ஏற்றி குணத்தொணிசெய் 
திட்ட போது மும்மதமும் 
ணிருண்ட சிலயானை 
வறண்ட சில யானைகளுக்குச் 
பொட்டெனவே வறண்டுகண் 
களுக்கு தொண்டையும் கூட 
சில யானைமேல் 
இருந்த பாகரைத் தள்ளி 
எடுத்துப் பிடித்தது ஓட்டம் 
விடுத்தது தேவர் கூட்டம் 
வருந்த வதைத்துக் கையை 
பயத்தை யெல்லாம் 
வல்லரக்கர்கள் 
ஏறி வந்த புரவிகள் 
இளைத்துத் தள் ளாடினவே 
உளைத்துள்ளம் வாடினவே 
வீறி வந்த கதிமாறி 
ராட்சதருக்கு 
பின்சாமி முனைந் 
திணையில்லா வெகுசூடு 
எவரும் இறக்க 
அவரும் பறக்க 
கணை ஏவி நின்றவர்கள் 
அடித்தான் 
அப்பாலே நின்ற 
முடித்தான் முடிக்கவே நாம் 
இருநூறு வெள்ளமிவன் 
எனத்திரும்பிக் கூடிக் 
பனிக்குலம் போல் மூடிக் 
ஒரு மானிடன் போகாதீர் 
கொண்டார் சூரியன் முன்னே 
கொண்டார் இவரே நமக் 
கீடெனச் சினந்து காற் 
றாடிபோற் சுழலும் கணை 
இலக்கமற்ற கணை 
தாக்கினான் 
தாக்கி அவரைத் 
தொலைத்து வெட்ட வெளி யாக்கினான் பின்னும் அரக்கர் 
இருநூறு வெள்ளமுடன் 
ஒரு நூறு வெள்ளங்கொண்டு 
ஏகோபித்து முளைத்துக் 
கொண்டார் நெருங்கி வந்து 
மாகோபத்தில் வளைத்துக் கொண்டார் அவரவருக்கு 
ஏறும் வழிமாற வெகு 
நூறுகணை தூறிமுது 
கிட்டோடத் தறித்து 
நின்றான் சிலரைத் தரி 
கெட்டோட முறித்து நின்றான் 
விடவிடவே 
இப்படி அந்நூறு வெள்ளம் 
டெசமானன் வன்னி 
வசமாகியே 
தப்பற முடிந்தது கண் 
என்பவன் மிகவும்பர 
புலம்புவன் அரக்கர் இன்று 
இறந்தனர் எல்லோரும் 
றேக்கமாய்க் கவலை 
மூக்கிலே விரலை 
பறந்தனர் ஐயோ என் 
பெற்று 
குறுகுறுத்து 
வைத்து இனி எப்படி 
ராவணன் முகம் முன் நிற்கப் 
லச்சைக் கேடென்று 
அச்சத்தோடன்று 
போகுவோம் இதென்ன மெத்த 
விளம்பி விளம்பியபின் 
கிளம்பி 
பலதிசையின் 
இரைச்சலை மாற்றி நின்ற 
ஈடழிந்து நொந்த 
ஓடி இங்கேவந்த 
அரக்கரைப் பார்த்து நீங்கள் 
தென்றும் மனிதற்கஞ்சி 
தென்றும் தேவர்கண்டால் 
ஏச்சாகும் இது கொஞ்சப் 
ஏசிடா ஏச்சை 
ரோஷமா வார்ந்தை 
பேச்சாகும் என்றவரை 
ஏசி - சீசீ எனவே 
பேசி அரக்கர் எல்லாம் 
இரைத் தோங்கியே ஒரு 
பெரும்பரம்பைத் தேரைகள் 
இளப்பம் என்று சுற்றிக் கொண்டாற்போல் - விட்டிற் பூச்சிகள் 
விளக்கை வந்து மொய்த்துக் கொண்டாற்போல் - மொய்க்க மனிதன் 
எம்மாத்திரம் என்றுதானே 
ஏகமாய்க் கடுக 
வேகமாய் முடுக 
ஐந்நூறு வெள்ளம் சேனை 
விட்டான் - அம்பிலும் அதி 
விட்டான் - விடுத்த பின்னை 
இளைத்தவன் போல் அவர் தன்னை வளைத்திடும் படிக்குச் சற்றே 
இடங்கொடுத்துப் பின் வாங்கினான் 
எவரும் கைக்குள் 
அடங்கவிட்டு முன் 
ஓங்கினான் வந்த அரக்கர் 
எறிநேசம் கட்டாரி 
இலக்காக மீதில் 
நொக்காக ராமன் 
தறி தோமரங்கள் வாரி 
சொரிந்தார் - அதுகள் நொக்கு 
அரிந்தான் - பின்னும் நெருங்கி 
புரவி ஓர் பக்கத்தில் விட்டும் 
விட்டும் 
அணி அணியா 
விட்டும் நிரை நிரையா 
ரதம் ஓர்பக்கத்தில் விட்டும் 
யானைஓர் பக்கத்தில் 
சேனைஓர் பக்கத்தில் 
இருப்புலக்கை பிண்டிபாலம் 
என்னும் படைவாங்கி 
பின்னும் கணை ஓங்கித் 
பெருத்தகத்தி தண்டு சூலம் 
விடுத்தார் - விடுத்தே அதின் 
தொடுத்தார் - அவரவரும் 
எத்தனைகை எத்தனைவில் 
டெப்படி ஒருவன் 
எப்படித்தான் போர் 
எத்தனை அம்பெத்தனை தண் 
தடுப்பான் அவர்மேல் ஐயன் 
தொடுப்பான் பெருமழைபோல் 
எடுத்துவிட்டான் படையெல்லாம் தடுத்துவிட்டான் என்று வாயால் 
எட்டிக் கடிக்க 
மேவினார் - கைப்பிடியாக 
கட்டிப் பிடிக்கத் 
தாவினார் 
ஆகாசத்தினில் 
நீசனார் நிருதர்கள் 
எல்லோர்க்கும் மனம் 
உல்லாசமாக 
நாசமாப் போவார் என்று 
தேற்றினார் சாமியைத் தேவர் 
வாழ்த்தினார் அந்த வேளையில் 
எப்புறத்தும் ராட்சதர்கள் 
கிரையாகத் தொகுத்துக் 
சரக்கூடம் வகுத்துக் 
அப்புறம் போகாமல் வாளிக் 
கொண்டான் 
- சுற்றிலும் போட்ட 
கொண்டான் - வகுத்த பின்பு 
ரதங்கள் யானைகள் துர 
கதங்கள் சேனைகள் பட 
எவரையும் மண்ணிற் 
சதித்தான் பிடித்தவில்லோ 
டவரவர் முன்னிற் 
குதித்தான் தனித்தனியே 
இந்திரவாணம் மோக வாணம் 
சந்திரவாணம் நாகவாணம் 
எரிவாணம் 
வாயுவாணம் 
ஹரிவாணம் 
மாயவாணம் குபேரவாணம் 
விஜயமுர 
மையாத வருணன் வாணம் 
நமன்வாணம் அருணன் வாணம் 
இடிவாணமாக 
நொடித்தான் அரக்கர் தம்மை 
யோடே சாக அடித்தான் 
- பின்னையுமவர் 
எண்ணிறந்த சேனை சண்டை பண்ணி முடியா தென்றெண்ணி 
ஏகமாகக்கடு 
கடுத்தான் மந்திரம் சொல்லி 
மோகனாஸ்திரம் 
தொடுத்தான் தொடுத்த போதில் 

இங்கும் ராமன் அங்கும் ராமன் அங்கும் ராமன் இங்கும் ராமன் 
எங்கும் ராமனாகத் தோன்றினான் அவருக்கவர் 
தங்களாலேசாக 
மாற்றினான் இந்த வகையா 
ஈனராம் ஆயிரம் வெள்ளம் 
சேனையும் முகூர்த்தந்தன்னில் 
இறும்படியாகப் 
புடைத்தான் 
ரணக்களத்தை 
வெறுங்களமாகத் 
துடைத்தான் 
அனந்தங்கோடி 
எரிவாளிகள் பிறந்த கருமேகம்போற் சிறந்த 
ஒருராமனால் இறந்த சருகுகள் போற் பறந்த 
( மூலால ) 


3. தோள்கள் அறுந்த 
தாடைகள் இடிந்த 
தொந்திகள் 
சரிந்த 
துணைக் கைகள்இற்ற 
தொண்டைகள் தறிந்த 
துண்டம் துண்டமான 
தூணிகள் இழந்த 
துரகம் உலைந்த 
தோரணங்கள் கெட்ட 
தோமரம் பறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
தாள்கள் முறிந்த 
டைகள் ஒடிந்த 
சந்துகள் முறிந்த 
கணைக் கால்களற்ற 
மண்டைகள் திறந்த 
கண்டம் கண்டமான 
நாணிகள் இழந்த 
இரதம் கலைந்த 
வாரணங்கள் விட்ட 
சாமரம் எறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 

தொட்டெடுத்த வாள் கெட்டு நட்ட கட்டை போல்பட்டு 
துள்ளித் துள்ளி நெளிப்பாரும் 
பிணங்கள் தம்மேல் 
தள்ளித் தள்ளி ஒளிப்பாரும் 
பலபலவா 
துண்டங்கள் ஆம் உடம்புகள் 
இண்டங்கொடி போலே அம்பு 
துறுபட்டு 
மாய்வாரும் 
குறைத்தலையாய் 
அறுபட்டுச் 
சாய்வாரும் இவ்வள வென்று 
சொல்ல இடம் இல்லாத பேரும் சல்லடைக்கண்போல் உடம்பு 
தொளைபட்டு 
வீழ்வாரும் விடாய் எடுத்துக் 
களைபட்டுச் 
சாய்வாரும் 
போடப் போடவும் 
தொலையா அம்புகளாலே தலைபோய்ப் பம்பரம்போலே 
சுற்றிச் சுற்றி 
மடிவாரும் முண்டங்களாகித் 
தத்தித் தத்திப் படிவாரும் நிலை கலங்கித் 
தோளென்றும் தாளென்றும் வாளென்றும் அடையாளம் 
தோற்றாமற் 
கெட்ட பேரும் 
காயங்களாலே 
ஆற்றாமற் 
பட்ட பேரும் தலைகள் அற்றுத் 
தும்பிமேலே நின்றபடி 
தொப்பெனவே 
குப்புறவே 
தொம்பர் போலலாகு கொண்டு 
வீழ்வாரும் - மண்ணைக்கடித்துக் 
தாழ்வாரும் - அம்புகள் எங்கும் 
சொருகி உயிர்விடச்சே 
சுருட்டிக் கொண்டு 
திருட்டிஉயிர் 
மரணவலிப்பெடுத்துச் 
படுப்பாரும் - கண்பூச்சிபறந் 
விடுப்பாரும் - கைகால்கள் அற்றுச் 
சுருங்காமலே அடிக்கும் 
சோலைபோலே 
மாலைபோலே 
பெருங்காற்றில் கொம்பு போன 
காணுவாரும் தங்கள் குடலை 
பூணுவாரும் - அடுத்தடுத்துத் 
தொண்ணூறு தரம் ஐயோ தண்ணீர் தண்ணீர் என்று 
துடிதுடித்து 
ஓய்வாரும் - ரத்தத்தை அள்ளிக் 
குடிகுடித்துச் 
சாய்வாரும் - மனிதன் என்று 
துடுக்குச் சொல்லிய வாயின் இடுக்குக் காரியம் அம்பு 
சொரிபட்டு 
வதைவாரும் - சின்னபின்னமா 
அரிபட்டுச் 
சிதைவாரும் - கழுக்கள் கொத்த 
தொங்கிய பனங்காயிலே 
பொங்கும் விழுந்தலை 
பொங்கி விழுந்தலை 
நுங்கு போலக் கண்களும் போய் 
அனந்தம் 
ரத்தம் பெருகிப் 
அனந்தம் கழுத்து கள் போய்த் 
தூரத் தொலையில் விழப் 
தூறும் தலைகள் 
ஏறும் தலைகள் 
பீறிட்டு ரத்தம் எழத் 
அனந்தம் 
ஒன்றின் மேல் லொன்றா 
அனந்தம் அந்தத் தலையைத் 
தொந்தமிடும் பே பினங்கள் 
சுற்றிலும் வீழ்தலை 
முற்றிலும் வீழ்தலை 
பந்துபோல் எடுத்தாடச் 
அனந்தம் 
கடலின் கரை 
அனந்தம் 
சுவாமி அம்பாலே 
சொர்க்கம் உண்டெங்களுக்கென்று கொக்கரித்துக் கொக்கரித்துத் 
துடித்து விழும் தலை அனந்தம் 
ஓன்றோடொன்றாக 
அடித்து விழும் தலை அனந்தம் 
அம்புபட்டிரு 
துண்டாய்ச் சிலைகள் விழ 
சுழலும் கவந்தம் 
உழலும் கவந்தம் 
ரண்டாய்த் தலைகள் எழச் 
அனந்தம் 
பிணங்களோடே 
அனந்தம் முடித் தலைகள் 
துண்டித்து விழவும் தேகம் 
சோரும் கவந்தம் 
சேரும் கவந்தம் 
அனந்தம் 
அனந்தம் 
கொண்டெட்டி நடந்தப்பாலே 
எதிர் எதிரா 
அம்புபட்டிரு 
துருவிட்ட கணைபட்டு 
சுருளும் கவந்தம் 
உருளும் கவந்தம் 
மரவட்டை உருவிட்டுச் 
அனந்தம் ஈரம்பிசிக்க 
அனந்தம் - நட்சத்திரம் போலத் 
தொடுத்தமணி குண்டலத்தை அடுத்தடுத்தும் மாலை போடத் 
தொட்டாடும் சில பேய்கள் கவந்தத்தோடு 
முட்டாடும் சில 
பேய்கள் - ரத்தத்தில் ஆனைத் 
தோட்டியினிற் பிணங்களை 
மாட்டிவிளை யாட்டுக்காகத் 
தூண்டிலிடும் சில 
பேய்கள் - அதைப்பறிக்கத் 
தாண்டிவிழும் சில 
பேய்கள் - தின்று கொழுத்துச் 
சுயம்கொண்டு ராமனுக்குச் 
செயம் செயம் என்று சொல்லித் 
துதித்தாடும் சில 
பேய்கள் - பிணமலைமேல் 
குதித்தாடும் சில 
பேய்கள் 
ஆனைமணியைச் 
சோடன தாளமாக்கி 
ஆடி கொண்டு ராகவற்கு 
தோத்திரம் சொல்லும் சில பேய்கள் - சண்டை உண்டென்று 
சாத்திரம் சொல்லும் சில பேய்கள் - ராட்சதர்வாயில் 
சுரைவிரை போன்ற பல்லைப் 
தூவியிடும் சில 
கூவியிடும் சில 
பொரி என்றுவாயில் கவ்வித் 
நாய்கள் - லங்கையைப் பார்ம்துக் 
நாய்கள் - ஈரலை எல்லாம் 

தோண்டித் தோண்டிப் பிடுங்கித் 
தாண்டித்தாண்டிப் பசியை 
தொலைத்திடும் சில 
நாய்கள் 
களத்தில் எங்கும் 
குலைத்திடும் சில 
நாய்கள் - பெருகும் ரத்தச் 
சுனைக்குள் விழும்பிணத்தை 
உனக்கெனக் கென்றுசண்டை . 
தொடுத்திடும் சில 
நரிகள் - குட்டிக்கிரையாக் 
கொடுத்திடும் சில 
நரிகள் - இழுத்திழுத்துத் 
துணுக்குத்துணுக்காகக் கொத்தி பிணத்தைப் பெரும்பசியாம் 
சூளையிடும் சில 
தரிகள் - இலங்கையைப் பார்த்து 
ஊளையிடும் சில 
நரிகள் - எலும்புகளும் 
தொண்டைகளும் மண்டைகளும் கொண்டுபோய் இலங்கையிலே 
தூற்றும் சில 
பருந்துகள் - வீடுகள்மேலே 
ஏற்றும் சில 
பருந்துகள் - மூக்குகளாலே 
தொப்புளின் நரம்புகளை 
முப்புரிகொள்வது போலச் 
சுருட்டும் சில 
கழுகுகள் - தலை தலையாய் 
உருட்டும் சில 
கழுகுகள் - பிணமலைமேல் 
தொத்தித் தொத்தி மண்டைகளை கொத்திக் கொத்தி மூக்கினாலே 
தூக்கும் சில 
கழுகுகள் - 
ஓர் இடத்திலே 
சேர்க்கும் சில 
கழுகுகள் - கைஒழியாமல் 
துரத்தித் துரத்தி அந்த 
தூதரும் 
நாதரும் 
அரக்கரைப் பிடித்தெம் 
சலித்தாரே - எட்டுத்திசைக்கும் 
கெலித்தாரே - பிணங்கள் மேலே 
சோரும் அரக்கியர் கண் 
தொண்டுபண்ணும் சில 
உண்டுபண்ணும் 
கூளி 
ணீரிற்குளித்து பூசைத் 
அதற்குப்பலன் 
ரணகாளி - சம்மோகனச் 
சுடுகணை ஒன்றாலே 
தொலைந்த தென்றார் 
குலைந்ததென்றார் 
விடுமூல பலமெல்லாம் 
சிலதேவர் - ராவணன் கொட்டம் 
சிலதேவர் - இந்தக் கணையைத் 
தாடுக்கிற வித்னதராக 
தோணுமென்றார் 
காணும் என்றார் 
வனுக்கும் சிவனுக்கும் 
சிலதேவர் - பின் ஆர் அறிவார் 
சிலதேவர் - ராகவன் மேலே 
சொர்க்கத் தலத்தில் உள்ள 
தூறினார் சில 
கூறினார் சில 
கற்பகமலர் பறித்துத் 
தேவர் - செயமங்களம் 
தேவர் - இப்படிக் கொத்த 
துரைராமன் முன் நடந்து - திரையாழி போற்படர்ந்து 
வரையான கோதண்டத்துக் கிரையாக வே மடிந்த 
( மூலபல ) 


லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் 

பெருமூல பலமெல்லாம் இவ்வாறு சாமிகையாற் 
வ்வாறு சாமிகையாற் போனபின்னை 
வருபோரில் ராவணனும் தேர்கொண்டான் பத்துவில்லும் வாங்கிக் 
கொண்டான் 
ஒரு நூறு கோடி தேர் நானூறு கோடி பரிஓங்கும் யானை 
இருநூறு கோடியுடன் குதித்திட்டான் இளையவன்வந் தெதிர்த்திட்டானே . 
தரு 

பல்லவி 
லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் நேர்ந்ததே சண்டை 
( லட் ) 
அநுபல்லவி 
அட்சயமான மூலபலம் 
தன்னை 
அந்தக் கோதண்டம் உண்டுவிட்ட பின்னை 
கட்சி அரக்கனும் தேரில் 
துள்ள 
காவலிளையவன் அனுமான்மேற் கொள்ள 

சரணங்கள் 

1. குரக்கு வெள்ளத் தாரும் அரக்கர் வெள்ளத்தாரும் 
கூடித் தொந்த யுத்தம் 
ஆடினார் 
குன்றும் மரங்களும் தெண்டும் சரங்களும் 
கொண்டு ஒன்றை ஒன்றாற் 
சாடினார் 
செருக்களத்தினில் அரக்கன் நொடிக்குள்ளே 
சில நூறு கோடியம் 
பேவினான் 
திரும்பத் தம்பியும் அதுக்கதையை விட்டுத் 
தெள்ளும் தவிடு போலத் 
துரத்திப் பத்தம்பை அரக்கன் 
சுவாமி அதைக்கூடத் தூளி 
அரக்கன் மோகன அஸ்திரம் 
அய்யன் நாரணன் அம்பால் 
தூவினான் 
எய்யவும் 
செய்யவும் 
தெறிக்கவும் 
முறிக்கவும் 
( லட் ) 

2. வெஞ்சத் தனம்பண்ணி அரக்கன் வீடணன் 
மேலே மயன் வேலைத் 
தூண்டினான் 
குறுக்கேதம் பிக்குமுன்னே அங்கதனோடு 
அனுமான் அதுக் கெதிர் 
தாண்டினான் 
தஞ்சம் என்ற விபீஷணனுக்காகத் தம்பி 
இருவரையும் தள்ளி 
ஓங்கினான் 
சகல பேர்களும் உருக்கவே அந்த 
வேலை மார்பினில் 
வாங்கினான் 
அஞ்சி விபீஷணன் பயந்து 
வாடவும் 
அரக்கன் கெலித்தோ மென்று ஊரில் ஓடவும் 
சஞ்சீவியைக் கொண்டு அனுமான் 
அழைக்கவும் 
தம்பியும் சேனை களும் 
பிழைக்கவும் 
( லட் ) 

3. பிழைத்த தம்பி விபீஷணன் சுகமோ 
சுகமோ என்று 
கிளம்பினான் 
பின்பு சாம்பவன் ராமன்சேவடி 
முன்பின் உள்ளது 
விளம்பினான் 
தழைத்த ராகவன் உனைப்போல் ஆர் என்று 
தம்பிதன் புகழ் 
பாடினான் 
தந்தனம் சிரஞ்சீவி என்றனு 
மந்தனையும் கொண் 
டாடினான் 
அழைத்து வானர வெள்ளம் 
கெர்ச்சிக்க 
ஆசை முனிவர்கள் பேசி 
அர்ச்சிக்க 
மழைக்கு நிகர்மலர் தேவர் 
தூற்றிட 
வாழி இளையன் என்று 
வாழ்த்திட 
( லட் ) 

மூலப்பலப் படுகளக்காட்சி 

சீலமுள்ள ராகவனும் இளையோன் தன்னைத் 
தேற்றினான் பிறகுவிபீ ஷணனும் அங்கே 
கோலமுள்ள சுக்கிரீவன் அனுமான் சாம்பன் 
குமுதன்முத லோரை எல்லாம் கூட்டிக்கொண்டான் 
நாலுதிக்கும் சூரியன் முன் பனியைப் போல 
நாயான்கைக் கோதண்டம் ஒன்றினாலே 
மூலபலப் படுகளத்தைப் பாரீர் என்று 
மூட்டினான் வகைவகையாக் காட்டினானே 

கண்ணிகள் 

1. வெற்றி கொள்ளவந்த மூலபலம் மாள 
வேதண்டமாம் வீரகோதண்டம் செய்ததைச் 
சுற்றிய சேனை படைத்தலை வருடன் 
சுக்கிரீவரே வாரும் சுவாமிசெய்த விக்கிரமத்தைப் பாரும் 


2. சண்டப் பிரசண்டப் பெருங்காற்றிலே வெகு 
தாகத்தினால் விழும் மேகக் குலம் போலே 
அண்டர் பெருமான் ராமன் கையால் வீழ்ந்த 
ஆனைகளைப் பாரும் கிடக்கிற சேனைகளைப்பாரும் 

3. துண்ணெனப் பொங்கிய ரத்தக்கடல் மேலே 
சுவாமி யம்பாலே செந் தாமரைப் பூப்போலே 
வண்ணம் செவந்து மிதந்து வருமுக 
மண்டலத்தைப் பாரும் சிதறிய குண்டலத்தைப்பாரும் 

4. சீராம் பெரும்பாய்கள் கட்டும் கொடியாகச் 
செத்த களத்திலே ரத்தக் குளத்திலே 
ஓராயிரம் கோடி கப்பலைப் போலவே 
ஓடும் தேரைப்பாரும் விசையறுந் தாடுந்தேரைப் பாரும் 

5. கடலிலேபல பகரமீன் போலே 
கண்டித்த யானையும் துண்டித்த யானையும் 
எடலமாகிய ரத்தக்கடல் மேலே 
எழுகிறதைப் பாரும் அழுந்தி முழுகிறதைப் பாரும் 

6. கூத்தினில் நட்டுவன் பாத்திரம் என்றேத்தக் 
குண்டலங்கள் குறைத் துண்டங்க ளாய் எங்கும் 
பேர்த்துப் பேர்த்துநொண்டிக் கூத்தினைப் போலாடும் 
பிரேதங்களைப் பாரும்கைகள் கொட்டும் பூதங்களைப்பாரும் 

7. பண்டு பட்டயானை வால்புறத்தே அறுப் 
புண்டு சட்டயானையின் தலைகாணவே 
ரண்டுபக்கமும் தலயுள்ள யானை போலும் 
லட்சணத்தைப் பாரும் பேய்கள் தின்னும் பட்சணத்தைப்பாரும் 

8. அந்தரத்தக் கடலுக்குள்ளே மத 
யானைக் கொம்பு அந்திவானத்திலே இளஞ் 
சந்திரனைப் போல் மிதந்து மிதந்து 
தளும்புவதைப் பாரும் அங்கங்கே கிளம்புவதைப் பாரும் 

9. அத்திக் கொம்பால் தந்த சுத்தி செய்துரத்தம் 
அப்பி அப்பி வாயைக் கொப்பளித்து வீழ்ந்த 
கத்திகளைக் கொண்டு நாக்கு வழிக்கிற 
காளிகளைப் பாரும் சுற்றிவரும் கூளிகளைப்பாரும் 
10. யுத்தகளம் என்னும் ரத்த வயல்மேலே 
ஏற்றசதை என்னும் சேற்றினிடத்திலே 
அஸ்திரங்கள் பயிர் ஒத்துக் கிடக்கிற 
அற்புதத்தைப் பாரும் ரத்தம்தனில் புற்புதத்தைப்பாரும் 
11. கொண்ட கணவன் எனும் பிணத்தைக் கையில் 
கொண்டெழும்பும் பேயைக் கண்ட அரக்கியர் 
அண்டம் மட்டும் அதை எட்டிப் பிடிக்கிற 
ஆச்சரியத்தைப்பாரும் அவருடைய மாச்சரியத்தைப்பாரும் 
12. தும்பிமுகத்திலே ராட்சதர் மீசையைத் 
துள்ளறு கரச்சாத்திப் பிள்ளையார் என்றேத்திக் 
கொம்பில் அவர்மண்டைத் தேங்காய் உடைக்கிற 
குட்டிப் பேயைப்பாரும் குதிக்கிற மட்டிப் பேயைப்பாரும் 

13. பேய்முகம் நாய்முகம் ஆகியராட்சதப் 
பெண்டுகள் அந்தப்பிணம் பிடுங்கவந்த 
பேய் முகம் நாய்முகம் கொண்டே அடையாளம் 
பிடிக்கிறத்தைப் பாரும் நல்வார்த்தைப் படிக்கிறதைப்பாரும் 
14. பெண் அரம்பைக் கூத்துப் பார்க்கிற தெல்லாம் போய் 
பேய்க்கூத் தாச்சுதோ என்று முறைப்பட்டு 
பண்ணுடனே கிழப் பெண்கள் ஒப்பாரி 
பாடுவதைப் பாரும் தலைவிரித் தாடுவதைப்பாரும் 

15. இந்திர லோகமும் சந்திரலோகமும் 
எட்டுத்திக்கும் கொள்ளை இட்டுச் சிறைவைத்து 
கந்த அரக்கரை ராமன் வில்லுக்கிரை 
கற்பித்ததைப்பாரும் இராவணன் ஒப்பித்ததைப்பாரும் 
16. எள்ளிடவும் இடம் இல்லாமல் மண்டிய 
இத்தனைச் சேனையும் கைத்தனு ஒன்றாலே 
வள்ளல் இராமன் முதர்த்தத்தில் கொன்றுயிர் 
வாங்கினதைப் பாரும் பூமிபாரம் நீங்கினதைப்பாரும் 


ஸ்ரீராமரை மாலியவான் கொண்டாடல் 

நீதன்கை வீச்சர மாரிபட வேபடை . 
பாடுண்டு போனதை விபீஷணனா டேவிழி 
நேர்கண் டெ போர்களும் இராகவனை மேவினர் 
அதன்மேலே 
ஓதும்பி ராணியுடன் ஓடியத் சான்னன் 
மூதண்ட கோடியுள தேவர்கள் பகீரிட 
ஊரெங்கும் வேண்களி யாடல்வினையாடல் கள் செய் - கிறபோமே 
கோதண்ட வாளியினில் மூலபல சேனையை 
நாசஞ்செய் தானெனவே ஓடிவரு தூதர்கள் 
கூறும் சொல் லாலிதென மானிட வனாலவர் 
- படுவா ரா ஏதென்று ராவணன் விசாரமிட மாலிய 
வானவந்து காதுகளி லேசுறீல் சுறீலென 
ராமன் பிராதப செயராமன் இசையானது 
- புகழ்வானே 

பல்லவி 
ராமனுக்கு நிகராக ராவணா பூமியில் வேறுண்டோ 
( ராம ) 

அநுபல்லவி 
மாமூல பல மெல்லாம் 
ஒருத்தன் கொன்றதெந்த 
வகையென்று தூதரைப் பகையா தெழுந்து முந்த 
ஆமவன் கோதண்டம் 
வளைத்தானோ படைசிந்த 
அரையம்பு காலம்பு தெறித்தானோ ஏதோ அந்த ( ராம ) 

சரணங்கள் 

1 பின்னும் சொல்லுகிறேன் அவனுக் குனதுசண்டை 
பிள்ளைவிளை யாட்டல்லோ 
அத்தாட்சி 
மன்னும் மரமும் புல்லும் கல்லும் ஒரு சரத்தால் 
மண்ணோடே மண்ணாமே 
கண்காட்சி 
சின்ன மனிதன் என்றும் ஒருத்தனென்றும் எண்ணாதே 
தேவர்க்கும் தேவனவ 
னே சூட்சி 
உன்னைக் கட்டினவாலி தன்னைக் கொன்றானே இது 
உன்னண்டையில் இருக்க இன்னும் என்ன டாசாட்சி 
(ராம ) 

2. திண்டும் மிண்டும் செல்லாதே தர்மம் சேருமிடத்தில் 
செயமும் சேரும் அட 
நிர்மூட 
சண்டை உன்னாலாகாது செத்தவர்க்கெல்லாம்தில 
தர்ப்பணம் செய்யடா 
பெண்டுகளே யல்லாமல் லங்கையை விட்டுனக்குப் 
பின்பனட வருவதுண் 
டோகூட 
அண்டர் நாயகனை ஒருத்தன் ஒருத்தன் என்றாய் 
அண்டம் அழிக்கும் தேவர் ரண்டு பேர் உண் டோடா 
குடிகேட் 
( ராம ) 
தந்தாயே 
வீரவேல் விட்டேனென்றும் லட்சுமணன் பட்டான் என்றும் 
வீம்புவார்த்தைகள் இங்கே 
மாருதி மருந்தாலே அவன் எழுந்தானே இந்த 
மதிமோசத்தால் அல்லவோ 
வெந்தாயே 
காரியம் தெரிந்த விபீஷணன் சொல்லும் கும்ப 
கர்ணன் சொல்லும் கேட்க 
நொந்தாயே 
வீரியத்தால் ஐயோ காடுவாவா என்ன 
வீடுபோ போ என்ன வினைகொண்டு 
வந்தாயே 
( ராம ) 

மூலபலப்படுகளத்தை ராவணன் கண்டது 

வல்லாண்மை பேசியரா வணன் முன் இந்த 
வகைவகையாய் மாலியவான் சொல்லிச் சொல்லிப் 
பொல்லாத புண்ணிலேகோ லிட்டாற் போலப் 
புடைபுடைத்தான் மூலபலம் மடிந்த வாறும் 
சொல்லாலே தூதர் சொன்ன சொல்லும் உன் தன் 
சொல்லும்நிலை வரமோ என் றரக்கன் பொங்கி 
எல்லாம்பார்ப் போமெனக்கோ புரத்தின்மேலே 
ஏறினான் படுகளங்கண் டாறினானே 

பல்லவி 
மூலபலப்படு 
கண்டானே ராவணன் மேன்மேலே 
களத்தை 
இருபது கண்களாலே 
( கண் ) 

அதுபல்லவி 
மிண்டாம் தூதர்சொல் இன்று மெய்யோ பொய்யோ என்று 
மெத்தவிசாரப் பட்டக்கணம் சென்றுஉத்தர கோபுர உச்சியிலேநின்று 
( கண் 

1. போன முகந்தோறும் மலைமலையாப் பிணம் குவிய - இதுவே 
வே நல்ல 
தானமா மென்று மேகங்கள் வந்து கவிய 
ராகவன்விட்ட 

2 மானக் கணைகள் பட்ட 
பாணத் தளவும்முட்ட 
வானத்திலும் அட்ட 
கோணத்திலும் எட்ட 
சோனைப் பெரியமலை 
தானொத் தெழுந்த கொலை 
ஆனைப் பிணங்களையும் 
சேனைப் பிணங்களையும் ( கண் ) 
சீலமுனிவர்கள் கண்டுடனே நடுநடுங்க - சீறிய ஆல 
காலமரம் எனும் கண்களை நாய்நரி பிடுங்க வீரகோதண்டம் 
காலமாரி மழை 
போலே கணைசொரிய 
நாலுதிசையும் வளைந் 
தோலமிடும் பெரிய 
மூலபலப் படையைக் 
கோலிவேர் அரிய 
மூலைக்குமூலை அலங் கோலமாய்த் தெரிய 
( கண் ) 

3. பெருகவேகளம் எங்கெங்கும் கவந்தங்கள் ஆட நட்டுவன் போல 
அருகிலே நின்று பேய்கள் தாளங்கள் போட - ராமன்பிடித்த 
ஒரு சிலை அதனாலே 
வரவர ஒருகாலே 
விடு கணை அறுபட 
நிருதர் முடிகள் கெட 
ஒரு பெருமலை மேலே 
வரும் அருவியைப் போல 
குருதிநீர் துள்ளத்துள்ள குருவிகள் கொள்ளக் கொள்ள ( கண் ) 
4. மங்கைமீர் அந்தவானரப் பூச்சிகளை புடைத்து - நிமிஷத்திலே 
உங்கள் முன் வருவேன் என்று கண்களைத் துடைத்துத் துடுக்காவந்த 
தங்கள் கணவன் கிடை 
அங்கெதிர்கண்டு கடைக் 
கண்களில் நீர் பெருகி 
அங்கமெல்லாம் உருகிப் 
பெண்கள் திரண்டு மொய்த்துச் செங்கை தலையில்வைத்து 
எங்கும் பதறி அழ 
எங்குங் கதறி அழ ( கண் ) 
5. பெரியவில்லுடன் அறுபட்ட கைகளும் விரலும் கண்டு கண்கள் நீர் 
சொரிய அரக்கியர் அடித்துக்கொண்டழும் கூக்குரலும் கண்டம்கண்ட 
ஒருவன்குடல் சரிய 
ஒருவன் உடல் எரிய 
ஒருவன் தலை மடிய 
ஒருவன் சிலை ஒடிய 
ஒருவன் தொடைபறிய ஒருவன் குடைமுறிய 
ஒருவன் உயிர் வதை 
ஒருகணை செய்ததை ( கண் ) 

இராவணன் தேர் ஏறுதல் 

மூலபலப் படுகளம் இவ் வாறு கண்டான் 
முடிபுனைகோபுரம் இறங்கிக் கோவில் சேர்ந்தான் 
காலம் எனும் முக்கோடி வயசும் ஈசன் 
கைவரமும் தொலைக்க ராவணன் முன்னாளில் 
மாலெனும் ராகவன் கொடுத்த வரத்தினாலே 
மதியும் அது விதியும் அது எனலால் துவார 
பாலன் எனமுன் போல் வைகுந்த வாசற் 
படி கொள்வான் தேரேறத் துடி கொள்வானே


பல்லவி 
தேர்மேற் கொண்டானே - ராவணன் 
போர்மேற் கொண்டானே 
( தேர் ) 

அநுபல்லவி 
பார்மேலும் திசை மேலும் 
பாயும் திரைகடல் மேலும் 
ஆயிரம் புரவிகளும் 
மலைமேலும் 
முட்டிய 
கட்டிய 
( தேர் ) 

சரணங்கள் 

1 -னத்தோடே வரச்சொல்லி 
இருந்தோரில் நூறு வெள்ளம் 
தொனித்துக் கையோடு கையை 
தூணியும் கவசமும் 
உறுக்கினான் - தப்பி 
பொறுக்கினான் - சங்கம் 
முறுக்கினான் 
இறுக்கினான் 
கனத்தபூமியும் மலையும் 
முனைத்த பேரிகை குமுறி 
சினத்தினால் முக வேர்வை 
தனக்கும் சீதைக்கும் இடக்கண் 
வெடித்திட 
இடித்திட 
பொடித்திட 
துடித்திட 
( தேர் 

2. பத்து முடியும் தரித் 
பத்தும் வெட்டியவாளை 
தோங்கினான் - 
திசை 
தாங்கினான் கோ 
நீங்கினான் - ஒரு 
வாங்கினான் 
பத்தால் அரண்மனையை 
பத்து வில்லையும் கையில் 
செத்தபேர்களை எண்ணி 
சத்தமே சங்கள் போலே 
கைத்தலத்திலும் வாரிக் 
சுற்றி அர்ச்சனை செய்ய 
மனம்நொந்து 
நாலைந்து 
கொடைதந்து 
வலம்வந்து 
( தேர் ) 

மாட்டினான் - காதில் 
பூட்டினான்- தும்பை 
சூட்டினான் - கண்கள் 
காட்டினான் 

3. இருபதுகையும் வளை 
இருபது குழைகளும் 
இருபது தோளிலும் 
இருபதும் நெருப்புப்போல் 
வருபெண் சானகி 
பதறு 
ஒருமண் டோதரி 
கதறு 
விருதெல்லார்களும் பார்க்க 
இருவகையில் ஒன் றாக்கு 
கிறதொன்று 
கிறதொன்று 
வே இன்று 
வேன் என்று 
( தேர் ) 


ராவணன் அவசகுனங்கள் காணுதல் 
கதிர்விடு குண்டலம் மணிமகுடம்பல கடகம் அலங்கிருதம் 
மென்போர்வை கவசம் நெடுஞ்சரம் அரைவடம் அந்தைகள் 
கலகலெனும் பணி --- யின்கோவை 
இதுமுதல் கொண்டொரு பதுகையில் வெஞ்சிலை இருபது செங்கையி 
லும்பாணம் - எரிவிழசிந்திய கருமலை என்றென எவரும் நடுங்க 
நெடுந்தேர் மேல் 
மதிகரிசிந்திட உடுநிறை சிந்திட மலைகள் அதிர்ந்திட - மண்பூமி 
மறுகிட எண்டிசை முருகிதியங்கிட மனிதன் எனும் சொல் 
இடும்பாலே 
அதிரணமண்டலம் அதிரரதம் தனை அதிரவிடென்று - இலங்கேசன் 
அருகினில் எங்கணும் இருபது கண்களில் அவசகுனம் பல 
கண்டானே


பல்லவி 
இப்படியா அவசகுனம் கண்டானே கண்டராவணன் 
இடும்பாலே எண்ணாமற் சென்றானே 

அதுபல்லவி 

கைப்படை ஆனதைச் 
சேகரம் பண்ணி 
காகுத்தன் சரத்துக்குக் கொடுத்திட எண்ணி 
அப்படி வந்தா 
ராமன்மேலே 
அறிந்திருந்தும் புத்தி கெட்டவன் போலே 
னே 
( இப் ) 

சரணங்கள் 

1. ஆனைகளும் குதிரைகளும் பின்னுக்கு வாங்கி டக்கால் பதறவும் 
அறுந்த கொடிமேல் பகுந்து விழவும் அங்கே ரத்தத்துளி சிதறவும் 
சேனைகாவலர் வாயெலாம் வெறும் பானை போல் வறண் டுதறவும் 
சேரநாய்களும் பேய்களும் அழச் சூரியனைப் பார்த்தோர் கதறவும் 
( இப் ) 
2. தோள்வளைசரிய மாலைகள்கரிய இடப்புறக்கண்கள் 
துடிக்கவும் 
தோகைமாரழக் காகம்மேல்விழ ஆகாவாய்ச்சொல் படிக்கவும் 
வாளின்வாய்முனை மடங்கவும் கருந்தூளி ஆனது 
பிடிக்கவும் 
வானின் மேற் கருமேகம் இல்லாமல் வல்லிடி இடிக்கவும் கொள்ளிகள் 
பிடிக்கவும் ( இப் ) 
3 . முறை முறையாத் தேரிலே கட்டும் 
விருதுகேதனம் அழியவும் 
முரசம் பேரியம் டமாரமும் சருகுபோலே 
இழியவும் 
மறவர்கள் பூசும் சந்தனம்வறவ றென்றுபோய்க் கழியவும் 
மண்மாரிகள் ஆனவை பொழியவும் பெண்ஆனையிலேமதம் வழியவும் 
( இப் ) 


ஸ்ரீராமர் தேர் ஏறுதல் 

ஆசைகள் அதிர இவரவ சகுனம் இராவணன் எதிர்படப் தேர்விடலால் 
ஆண்மைகள் பெருகிய நீமறுபடி அனுமான் மிசைவருதல் ஒணாது முனே 
மாசறு சதுமுகன் நேசமொடு தவிய வாசவன் விடுகிற தேரிதன் மேல் 
மாருதிபுசமென ஏறுதி எனவரு மாதலிஉரைசெய ஆதரவாய் 
ஏசறுமுதுமறை ஏறிடவிதிநிலை ஏறிடமுனிவர்கள் தேவர்கள் ஈ 
டேறிட மகம் நிறை வேறிட அவரவர் ஏறிய பதவியில் ஏறிடவே 
வீசிடமழைபொழி கார்முகிலொளிவிடு மேருவென் மலைமிசை ஏறுதல்போல் 
வீரன் இரவிகுலசூரன் அதுலரகுவீரன் இரதமிசை ஏறினனே 

பல்லவி 
தேர்ஏறினானே - ராமச்சந்திரன் - தேர் ஏறினானே 
(நேர் ) 
அநுபல்லவி 
பார்மேலே வைப்பது நேரல்ல அரவிந்த 
பாதம்வைப் பாயென்று மாதலி கொடுவந்த 
( தேர் ) 

சரணங்கள் 

1. சோதி மதிநுதலில் 
திருநாமம் அணிந்திட்டு 
துலங்கும் அம்பறாத்தூணி வலப்புறத் தினிலிட்டு 
காதல் செய்யுந்தும்பை மாலைதோள் மேலிட்டு 
கச்சைகட் டியமார்பில் வச்சிர 
கவசந்தொட்டு 
குரோதம் செய்யும் இள நகை 
விடுத்துக்கொண்டு 
பாதம் தன்னில்மிதி 
யடி 
தொடுத்துக்கொண்டு 
கோதண்டம் ஒருகை 
யினில் 
எடுத்துக்கொண்டு 
தாய்தந்த மரவுரி 
யினை 
உடுத்திக்கொண்டு ( தேர் ) 
2. ஆரவா ரம் செய்யும் வீர வண்டையம் 
சாத்தி 
அங்கைத் தலத்துக்கு முன்கை கட்டியும் ஏற்றி 
தாரணி உள்ளோரும் வானவரும் 
தான் சொல்லவே லட்சுமிகாந்தனென்றே தோற்றி 
வீரபட்டம் விசாலம் 
நெற்றி 
நேரில் இட்டதி காரம் உள்ள 
கத்தி 
ஓர்வலப்புறம் மீதினில் 
சுற்றி 
ஆரும் ஒப்பிடொ ணாதொரு 
வெற்றி ( தேர் ) 
போற்றி 
உள்ள 

பாட 
3. தேவர் மடந்தையர் 
சீதை மனத்தில் 
தூவும் மலர்க்கை 
சூரியன் தேர் ஓட்ட 
சோபனங்கள் 
நினைந்ததுகை 
முனிவர்கள்கூத் 
லங்கைமேற்கண் 
தாட 
போட 
யாவரும் 
பாவிகள் 
தேவருக் 
ராவணன் 
கண்கண்டு 
சந்தங்கள் 
கானந்தம் 
வைகுந்தம் 
தேறவும் 
மாறவும் 
உறவும் 
ஏறவும் 
( தேர் ) 

மகோதரன் வதை 

திருத்தேர் ஏறி ராகவனும் சென்றான் போர்க்கும கோதரனும் 
தரிக்கா தெழுந்து ராவணன் பால் சார்ந்து போர்க்கு விடைகொடெனச் 
செருத்தான் செய்து லட்சுமணனை செயித்து வாவென் ற னுப்பவந்து 
கருத்தா வானரா கவனைக் கடிந்தான் அவனால் மடிந்தானே 

பல்லவி 
ராமன்கை அம்பால் 
மடிந்தானே மகோதரன் 
படிந்தானே மண்மேல் 
( மடி ) 

அநுபல்லவி 
கடிந்து ராவணனால் லட்சு 
கடுகி ஓடியவன் 
தொடர்ந்து ராமன் மீத 
சூதும்வாதும் சுவாமி 
மணன் மீது விடப்பட்டு 
மீதிற்போரினை விட்டு 
னேகசரங்கள் தொட்டு 
தொடுங்கணையாற் கெட்டு ( மடி ) 

சரணங்கள் 

1. அனு கூலச் சத்துராதி ஆகியிருந்துரா 
வணன் குடியினைக் 
கெடுத்து 
தன்னுடைய 
அகத்தில் எண்ணமெல்லாம் 
முடித்து லங்கையின்மேதே 
ஆசையினையும் விடுத்து - இணையில்லாரா 
மனுக்குர தம் அனுப்பும் தேவர்களையும்மக 
வானையும் கடு 
கடுத்து 
லட்சுமணனை மடித்துவரு வேனென்று வீரம் பேசிக்கையில் 
வலிய தனுவை 
எடுத்து அதிக்கடுஞ் 
சினத்தி னோடு பெரும் தேரை 
ஓட்டிக்கொண்டு 
சேனைகளை எல்லாம் தன் பின்னே கூட்டிக்கொண்டு 
கனத்த வில்லை வளைத்து நாணைப் பூட்டிக்கொண்டு 
கணைகள் எய்து ராமன்கையில் மாட்டிக்கொண்டு ( மடிந் ) 
2. போர்களத்தினில் வந்து அட்டகா சஞ்செய்து 
புவியெங்கும் கிடுகி 
டென்ன லட்சுமணன் மீதில் 
போகவிட்டிடுந் தேரை மறித்து ராமன்மீதிற் 
போகட்டும் , விடுவி 
டென்ன சாரதிஇந்தப் 
பார்க்குள் ராமனை வெல்லக் கூடாதென்று சொல்ல 
பற்களை நெடநெ 
டென்ன - வேகடித்து 
பாரடா உன்னை விழுங்குவேன் 
என்ன சாரதி 
பயந்துடல் விடுவி 
டென்ன 
நடுநடுங்கி 
கார்க்கடல் :வண்ணன்ரா 
மன்மீதில் தேர்விட 
கலங்காமலே மகோ 
தரன் நின்று போரிட 
ஆர்க்கும் சேனைராமன் 
அம்பினாற் பேர் கெட 
அதமாக அவன் மார்பில் 
ஓரம்பின் கூர்பட ( மடிந் ) 
மாலியவான் சொல்லால் சீதையை விடவே , சம் 
மதித்த ராவணனை 
அன்று - தடுக்கப் பெரு 
வயிற்றைச் சாய்த்துக்கொண்டு குடுகு டென்றேஓடி 
வஞ்சனை எண்ணி 
நின்று - அதிகபல 
சாலியானரா வணனே மூவுலகமும் 
சௌரியத் துடனே 
இன்றுமனம் 
தளர்ந்திந்த சனகியை விடலாமோ போபோஉன் 
தனக்கிது சரியோ 
சொல்லிய சொல்லும் 
காலனைப்போலவன் 
பாலிலே இருந்து 
கழுவாக்கரைத்து நாளும் கலகம் செய்து திரிந்து 
சீலராமன் கணைக்குத் தன்சேனையை விருந்து 
செய்வித்தோர் கணையால் தன் பெருவயிறும் சரிந்து 
( மடிந் ) 

வென்று 
என்று 
கடைசிநாளில் இராம இராவண யுத்தம் 
திடுதிடென ஓடிமகோதரனும் சென்ற 
சேனைகளும் சாமிகையில் மடிந்த பின்பு 
முடுகி இரு வரும் தேரில் ஏறிக்கொண்டு 
மூதண்ட கோடிகளும் நடுங்கவிட்டே 
கடுகிமலை யோடுமலை எதிர்த்தாற்போல 
கடலினொடு கடல் எதிர்த்தாற் போல் விற்கொண்டு 
அடும் இரா கவனும் இரா வணனும் அங்கே 
அடுத்திட்டார் சண்டைசெய்யத் தொடுத்திட்டாரே 


பல்லவி 
( ராக ) 
ராகவனுக்கும் ராவணனுக்கும் 
நடந்ததே சண்டை தொடர்ந்ததே 

அநுபல்லவி 
மேகத்தைப் போலவே 
அய்யன் கணைகள் சாட 
மேலத்தைக் காணாமல் 
வெய்யன் கணைகள் மூட 
வாகொத்த தேர்மேலே 
இருவரும் கதித்தாரே 
வானமும் பூமியும் 
ஒன்றாக மதித்தாரே 

வான வெள்ளம் கடல்போலே களத்தைப்போய் 
ஈனர்விடும்கைச் சரத்தாலே நெளித்துப்போய் 
வா ரிவிடும்கற் பெருக்காலே அரக்கர்க்காவி 
வீரர் விடும்கைத் தடிக்குச் சூழ் குரக்குச்சேனை 
வளைக்கவும் 
ளைக்கவும் 
துள்ளவும் 
விள்ளவும் 
வடவையொடுபொரு 
டெவை எனநிலை 
மலையினொடுபொரு 
மலைய தென அலை 
கடலி னொடுபொரு 
கடலதென விரி 
ககனமொடுபொரு 
ககணம் என அரி 

சரணங்கள் 
அரக்கன் ராவணன் 
சிலகணைகள் 
அதைக் கண்டேராமன் தவிடுபொடிகள் 
( ராக ) 


1 எய்தான் 
செய்தான் 
அரக்கன் நூறு நூறா 
அதைக்கண்டே ராமன் 
யிரமம்பு 
தூற்றினான் 
நொடியொன்றில் மாற்றினான் 
அரக்கன் ஆயிரமாயிரம் 
ஆயுதம் 
அதைக்கண்டே ராமன் தூளிகள் தூளிகள் 
அரக்கன் தேரைஆ 
காசத்திற் 
அதுக்கும் சாமிதேர் 
மேலாகத் 
தொட்டான் 
இட்டான 
போக்கினான் 
தூக்கினான் 

ஆதிநெடுஞ் சேஷனும்பட்சீ சனம் பொற்றூ 
ணிடத்தேகன 
காசுரனும் சிங்கமும்தப்பா தடுத்துப்போர் தொடுத்தால் என 
ஆனதுரங்கம் திருப்பிக்கோல் பிடித்துத்தேர் விடுத்தேவரும் 
மாதலிசங்கம் தொனிக்கச்சே பயப்பட்டார் முடித்தேவரும் 
அக்கணம் இருதேரும் 
திக்குத்திசை களும் போய் 
அப்புறம் மலைதாவும் 
இப்புறம் செவிதாவும் 
தடந்தத்தும் 
இடஞ்சுற்றும் 
அலைதாவும் 
புவிதாவும் 
நிலந்தத்தும் 
வலம் சுற்றும் 
கடல் தாவும் 
கெவிதாவும் 
கட.கட 
பயந்து 
நடுங்கி 
அன்று முனிவர் 
என்று பதறி 
அண்டமுகடு 
மண்டலமும்மிசை 
பிளந்து 
விண்டு 
விடவிட 
நிலைகெட 
தலைகெட 
அதிர மலைகளும் 
அதிரவெகு திசை 
அதிரஉத்திகள் 
அதிரஉடுவினம் 
அதிரநிலைகளும் 
அதிரமலையிடி 
அதிரமதிகதிர் 
அதிரஇப்படி 
( ராக ) 


2 -வட திசைமுதல் 
கடலிலும் போவார் 
மனது வேகமோ 
கனக லோகமோ 
நாலு திசையும் 
கடல் அப்புறமும் 
வாயு வேகமோ 
கீழ் உலகமோ 
போவார் 
போவார் 
என்ன 
என்ன 
வருவர் ஓடுவர் 
பொருவர் சேருவர் 
வசன மாகஉரை 
குசவனானவன் 
கூடு வர்இரு 
நேருவர் இதை 
யார் சொல் வாரொருக் 
விடுதிகிரியைப் 
தேரும் 
ஆரும் 
காலே 
போலே 

தானே 
தானே 
மாரிவழங்கும் பிரசண்டக்கொண் டலைப்போல இடித்தார் பலர் 
தீவும் விசும்பும் குலுங்கச்செஞ் சாக்காடா முடித்தார்சிலர் 
மாதலி அங்கம் தொலைத்துப்பாய் பரிக்குக்கோல் விடுத்தான் ஒரு 
சாமி நெடுந்தேர் மறைத்தங்கே துசத்தைக்கீழ்ப் படுத்தான் அவன் 
வளையராகவன் தேரை நிருதன் 
மூட 
லாலே 
இளையவன் முதலானோர் களையானார் அதன் மேலே 
மணவாள ராகவன் 
பனிபோல 
ஒத் 
கணையெல்லாம் அறுத்தவன் கொடியையும் அறுத் 
மால்ஒத்தவன் படை 
மாரி 
பெய்திட 
சூலப்படை கொடு 
சுவாமி கொய்திட 
வன்னி வாளியை 
அவன் 
விடுத்திட 
அன்னதே கொடு 
சாமி 
தடுத்திட 
மாமயன் படை 
அரக்கன் 
தொடுக்கவும் 
சாமிகந்தரு 
வஸ்திரம் எடுக்கவும் 
நாக லோகமும் 
புவியும் பொடிப்பொடி 
ஆகவே கள 
மீதில் அடிக்கடி 
( ராக ) 
3. சாமிமேல் ஒரு 
தெண்டவன் 
விடுத்திட 
சாமி ஓரம்பு 
கொண்டதைத் 
தடுத்திட 
சாமிமேல் அவன் 
மாயாஸ் 
திரம்போட 
சாமிதான் ஞானாஸ் திரந்தொடுத் 
ததைச்சாட 
சாமிமேல் சூலம் 
அவன் விடச் 
சினங்கொண்டு 
சாமி ஓங்காரம் 
விழக்கண்டு 
சாமி மூவரும் 
இவனென்னும் 
விவகாரம் 
தம்பி சொன்னதை 
நினைந்தெண்ண அந்நேரம் 
தாகருடன் செஞ்சரத்தைக் கைப்பிடித்துச் சாமிதொட்டே அவன் 
நாகமெனும் செஞ்சரத்தைக் கொத்தவிட்டுத் தூளியிட்டான் 
ஒரு 
சாமிதிரும் பத்தொடுத்துப் பொற்பிறைக் கொக்கும் சரத்தால்வரு 
ராவணன் நெஞ்சைத் தொலைத்தொற்றைச் சிரத்தைத் துண்டம் 
இட்டான் 
செய்தது 
தறிபடு சிரம் 
அவனுக்கு 
சரிசரி அரியவே 
வரவரக் 
தறிபடுகையால் மாதலி 
மார்பைக் 
அவன் விடு தோ மரத்தையும் அய்யன் 
முளைத்திட 
கிளைத்திட 
கலக்கினான் 
விலக்கினான் 
( ராக ) 


தறித்திவன் சரீ 
ரம் நிறைந்திட 
மயிர்க்கோர் அம்பது 
ஆய் மறைந்திட 
சலித்தவன்களை 
ஆய்விழுந்திட 
உணர்ச்சி கொண்டுட 
னே எழுந்திட 
சரமும் விடுவிடு 
படையும் பொடிபட 
சகலரதக்ச 
தளமும் அடிபட 
இருவர் மனதிலும் 
வளர முழுபகை 
எவரும் உடல்விட 
விடென இவ்வகை 
4. எடுத்து ராவணன் 
வளைத்த சிலை 
தன்னை 
ஒடித்து நாணியை அறுத்தும் இப்படிப் 
பின்னை 
இடக்கை யோடவன் வலக்னகயும்விழ 
துடித்து ராகவன் முடுக்கினான்கணை 
ஒன்று 
இழுத்துத் தேர்வரு பரியும் பாகனும் 
அழுத்தத் தூணியும் குடையும் படையும் போக 
எதிர்த்த ராவணன் 
ஒருபதுமுடி 
மேலே 
பதைத்து மாமலை 
யினில் விழும் இடி 
போலே 
ராமன் விடுசெஞ் சரத்திற் கொத்துடைப் பத்துப் பனங்காய் என 
நாய்நரி மண்டிக் கடிக்கக் கொக்கரித்து சுற்றிலும் போய்விழ 
ராகவன் இப்படித் தொடுத்துக்கத் தரிக்கத்கத் தரிக்கத்தலை 
ராவணனுக்குச் சரிகட்டிச் சரிக்கட்டிக் கிளைத்துக்கொள 
என்று 
சாக 
ன 
இப்புறம் ராமன் அரக்கன் மாளும் வனக என்ன 
அப்புறம் விபீஷணன் உபாயம் . 
முறை 
பன் 
லட்சுமி சீதையும் காவல் கொண்ட சிறை தீர 
தட்சண சூரியன் தேரும் லங்கை வழி சேர 
ணக்கிடும் காதண்ட 
வணக்கிடும் கோதண்ட 
பட்டு கைபிரமாஸ்தி 
விட்டிடத்தனி ராட்ச 
மனுமதி 
நடுவதில் 
ரம்தனை 
தன் புனை 
ரத்தின மணிமருமத்தின் 
வைத்த அமுர்த கடத்தில் 
மத்தன் விடுகிற சித்திர 
பத்து மணிமுடி தத்தி 
இடையிட்டு 
அடிபட்டு 
ரதம் விட்டுப் 
விழும் மட்டும் 
( ராது ) 


இராம பாணத்தால் இராவணன் இறந்தது 

தூவி முடிக்கயி லாசம் எடுத்திரு நாலுமதக்கரி யைச்சாடி 
சூரியனைத்திசை மாறவிடுத்தொரு சூறையடித்த மிடுக்காலே 
பூவுலகத்தவர் கீழுலகத்தவர் மேலுலகத்தவர் தப்பாதே 
பூசைசெலுத்திட ஆண்மை செலுத்துபு யாசலமிக்க தசக்ரீவன் 
ஆவல்மிகுந்தொரு சீதைபொருட்டினில் வீரமும் வெற்றியும் முக்கோடி 
ஆயுசும்மட்டி டொ ணாத அரக்கரும் ஆடலம் ஒக்க விடுத்தேபின் 
யாவரும் இக்கதை ஆரமுதொப்பென வேதினம் உத்தமர் கற்றோத 
ராமசரத்தினில் மாமலை ஒத்த இ ராவணனிப்படிப் பட்டானே 
அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் 
நிருதனிவ் வாறழிந்தபின்பு சாமிதேரில் 
நின்றிறங்கி இவன் முதுகில்வடு வேதென்றான் 
வரும் முதல் நாள் அனுமான்கைக் குத்தால் வந்த 
வடுஎனவீடணன் சொல்ல மகிழ்த்தானிப்பால் 
அருளும் ஐயன் ஏவலினால் இவனும் போனான் 
அண்ணா அண்ணா என்றே அண்ணன் மேலே 
ஒருமலைமேல் ஒருமலைபோல் வீழ்ந்து கண்ணீர் 
ஒழுகின்றான் பழமை சொல்லி அழுகின்றானே 

கண்ணிகள் 
1-உண்டாற் கொல்லும் விஷம் உலகத்தில் எங்கெங்கும் 
உண்டே 
அண்ணாவே - சீதை என்ற 
கண்டாற் கொல்லும் விஷம் உன்னிடத்திலே மாத்திரம் 
கண்டேன் 
அண்ணாவே 

2. இந்த அநியாயத்தை பிரம்மாவிடம் சொல்ல 
இறந்தாயோ 
அண்ணாவே 
பந்தித்த ஆசையும் உயிரோடேகொண்டு 
பறந்தாயோ 

அண்ணாவே 
3. உள்ளதோ சீதையைத் திருடுவதென்ற என்னை 
ஓட்டினாய் 
அண்ணாவே உலகிலே 
கள்ளனுக்குக் கூவென் றவன்மேல் பகைபோலக் 
காட்டினாய் 
அண்ணாவே 
4. அடி நாளை சாபத்தீடு சீதையாய் வந்ததென்றேன் 
அலைந்தாயே 
அண்ணாவே உடம்பெங்கும் 
சுடுகிற செந்தணலை மடிமேலே கட்டித் 
தொலைந்தா யே 
அண்ணாவே 
5. நினையாதே சீதையைக் குலையும் வாழ்வென்ற சொல் 
நிறைந்ததோ 
அண்ணாவே 
ராமனை 
மனிதன் மனிதன் என்ற வாயும் துடுக்கும் எங்கே 
மறைந்தாயோ 
அண்ணாவே 
6. வள்ளல் கும்பகர்ணன் மாலியவான் சொல்லியும் 
மருண்டாயே 
அண்ணாவே அடங்காமல் 
துள்ளின மாடுபொதி சுமக்கும் என்றாற்போலே பட்டுச் 
சுருண்டாயே 
அண்ணாவே 

7. சுற்றமும் சேனையும் உன் பத்து முடியும் முதல் நாள் 
சோர்ந்தாயே 
அண்ணாவே --- எல்லாரும் 
செத்தபிற காகிலும் ராமனை தெய்வமென்று 
தேர்ந்தாயே 
அண்ணாவே 
பரந்த கயிலாசமும் உன்னுடைய தோளுக்கு 
பற்றுமோ 
அண்ணாவே தோள்மேலே 
சுரந்து குரங்குக் கூட்டம் இப்போ தணியணியா 
தொத்துமோ 
அண்ணாவே 
9. விரிந்த தேவர்க்கெல்லாம் கடைக்கண் கொடாமல் வெடு 
வெடுத்தாயே 
அண்ணாவே 
களத்திலே 
பருந்தும் கழுகும் கொத்த முழுமுழுக் கண்கொடுத்துப் 
படுத்தாயே 
அண்ணாவே 
10. பூமலர் அம்புகளைக் காமன்கை எய்தெய்து 
பொழிந்ததே 
அண்ணாவே இப்போதிந்த 
ராமன் எய்தபிறகு காமன் எய்கிறதெல்லாம் 
இழிந்ததே 

அண்ணாவே 
11. சிறுமதி கொண்டல்லவோ மறுபெண்கள் மேலாசை 
திரண்டாயே 
அண்ணாவே 
அவரவர் 
பொறுமை இடித்தல்லவோ மண்ணென்கிற பெண்மேலே 
புரண்டாயே 
அண்ணாவே
ன்றைக்கெம் 

12. பிரமாதி தேவர்கள் தந்தவரங்கள் எங்கே 
பிரிந்ததோ 
அண்ணாவே 
தருமரா சனுக்கும் உன்னைத் தின்று தொந்தி 
சரிந்ததோ 
அண்ணாவே 

மண்டோதரி புலம்பல் 

நாடிவிபீ ஷணன்இவ்வா றழுதபோது 
நல்லசாம்புவன் தேற்றத் தெளிந்தான் இப்பால் 
பாடல் செய்யும் மடமாதர் அரக்கர் மாதர் 
பாதாள மாதர் முதற் பலரும் சேர்ந்து 
கூடமண்டோ தரியங்கே கொள்கொம் பில்லாக் 
கொடிபோல ராவணன் பேருடல்மேல் வீழ்ந்து 
தேடரிய துணையிழந்த கிளிபோல் வாயைத் 
திறக்கின்றாள் அழுதழுது பறக்கின்றாளே 

கண்ணிகள் 

1. என்னசெய்வேன் என்னசெய்வேன் மைந்நாத் மேைபா லுன்னை 

இங்கேகண்டு நொந்தோன் நொந்தேன் லங்கைமன்னவா - ஐயோ 
உன்னுயிரைக் கொன்றநமன் என்னுயிரும் கைகொள்ளானோ 
ஓடியிதோ வந்தேன் வந்தேன் 
லங்கைமன்னவா 
2 . கண்ணான பேர்களையெல்லாம் புண்ணாக்கி வீடணனென்னும் 
கரும்பையும் வேம்பாக்கிவிட்டாய் லங்கைமன்னவா -- ஐயோ 
பெண்ணான சீதைபிறக்க லங்கை அழிந்துபோம் என்ற 
பேச்சையே மெய்யாக்கியே விட்டாய் 
லங்கைமன்னவா 
3. தினம் இந்த லோகத்திலே நீ தேவராலும் சாகாய் என் 
று 
சிந்தை மகிழ்ச்சி ஆனேனே 
லங்கைமன்னவா - 
வினைபோலிந்த நானிலொரு மனிதனாலேசாவாயென்று 
விதியறியமாற் போனேனே 
லங்கைமன்னவா 
ஐயோ 
ஐயோ 

4. சீதை ஆசையை வெளியில் ஓதாமல் அடக்கிக்கொண்டு 
செருக்களத்தில் தூங்கிறாயோ 
லங்கைமன்னவா ஐயோ 
ஏதையா சொர்க்கலோகத்து மா தருக்குள் உனக்கேற்க 
எந்தப் பெண்ணைக் காண்கிறாயோ லங்கைமன்னவா 
5. எட்டானைக் கொப்பு பிடுங்க ஒட்டாமற் கெட்டியாகக் கட்டி 
இருக்கின்ற மணிமார்பாச்சே லங்கை மன்னவா 
சட்டமாக ராமன் அம்பு பட்டாடைமேல் ஊசிபோலத் 
தட்டாமல் உருவிப்போச்சோ லங்கை மன்னவா 
6 . ஊரிலே சீதைமேல் வைத்த ஆசையிந்த மட்டும் எங்கே 
ஒளித்திருந்து வாதிச்சதே 
லங்கை மன்னவா ரகு 
வீரன்பாணம் உன்உடம்பை எலிவெட்டிச் சோதிக்கிறா போலே 
வெட்டியின்று சோதிச்சதே லங்கை மன்னவா 
7. அனர்த்தமா விளையும் அய்யோ நினைக்காதே சீதையைான்றேன் 
அன்று கேளாமல் வைதாய் லங்கை மன்னவா 
உனக்கு முந்திக் கொள்ளாதமுன் எனக்கு நீமுந்திக்கொண்டாயே 
ஓரவஞ்சகம் செய்தாயே 

லங்கை மன்னவா 
8. நங்கைசூர்ப் பநகிதனான் நங்கையை எடுக்கச்சொல்லி 
நமன் போல் வந்து நின்றாளே லங்கைமன்னவா - ஐயோ 
என்கழுத்தும் பாவியவள் தன் கழுத்தைப் போலே ஆக்க 
எண்ணியே உன்னைக் கொன்றாளே லங்கைமன்னவா
9. அந்தமரம் சீதையை ஆரும் வந்தனை செய்யும் தெய்வத்தை 
ஆரோபோல் ஆசைப்பட்டாயே லங்கைமன்னவா 
இந்தமரத்தை வெட்டினால் இந்தஇடத்திற் சாயுமென் 
றெண்ணாமல் புத்திகெட்டாயே 

லங்கைமன்னவய 
10. வேதன்முதலோர் வரப்பிர சாதத்தால் மூவுலகுக்கும் 
வேந்தன் என வாழ்ந்திட்டாயே லங்கைமன்னவா ஐயோ 
நான் 
ஐபோ 
சீதையாம் புரைமோரிட்டு வாழ்வாம்பாற் கடல் கெடுத்துத் 
தெருவிலே என்னை விட்டாயே லங்கைமன்னவா 

சீதாதேவிக்கு அனுமான் ஜெயசேதி கூறுதல் 
ஆனமண்டோ தரியிவ்வா றழுது சோர்ந்தாள் 
அரக்கனுக்குக் கடன் விபீஷணனும் செய்தான் 
வானரவேந் தனும் தம்பி தானும் செம்பொன் 
மௌலிவைக்க இலங்கையபி ஷேகம் கொண்டான் 
மானவனும் மாருதியை ஏவத் தான் போய் 
வாடியதோர் பயிர்க்குமழை பொழிந்தாற் போல 
சானகிதன் காதில் இரா வணன் போய் வீழ்ந்ததனம் சொல்வான் மகிழ்ந்துசோ பனம் சொல்வானே
பல்லவி 
சாடிக்கும்ப கர்னன் முன்னே 
நாடியகம்பன் படையில் 
போடுமந்தத் தெண்டினாலே ஆடுகளில் வேங்கைபோலே ( சா 1. 
வாரும் வாரும் ராட்சதரே வாரி அந்தலங்கை சாரிசாரி யாகவொரு தானொருத்தனுமேருத்திர வாருமென்று கூவினான் ஊரில் விழத் தூவினான் கேசரிபோல் தாவினான் சாமிபோல் உலாவினான் ஆரநெருங்கிய குதிரைகள் சருகென ஓட்டி - பிணம்பிணமா ஆனைகள் பூனைகளாக விழும்படி வாட்டி - தேங்காய் போல் தள்ளி தேர்தனையே விடுசாரதி தலைகளை மூட்டி - மென்மேலும் வந்த சேனையை வீசி அதோ கதியாகவே மாட்டி - திசாதிசையில் வீரிட்டரக்கியர் கிழ - ஓரிக்குரல் போலே யழ நேரிட்ட ராட்சதர் வீடு ழப் பீரிட்ட இரத்தம் எழ ( சாடி ) - 

சனை -- ஒருகாலே கோடிபேர்க்கொரு குத்தாகப் போடுவான் ஒருபுறம் கொக்கரித்து ராமனைக் கொண் டாடுவான் ஒருபுறம் ஆடுவான் வாலாலே சுற்றி மூடுவான் ஒருபுறம் ஆரடா சேவகன் என்று தேடுவான் ஒருபுறம் மூடன் நிகும்பனவ் வேளையிலே அனுமானே உன்னைதான் கொன்று போடுவேன் என்றொரு சூலம் எடுத் தெறிவானைப் பொருந்தி அவன் தாடையில் ஓரடி போட முழங்கிய சோனை போலவே ரத்தம் டமடிந்தனன் மேலும் மகாபல சுற்றியபோது சாடிசட்டி மூடியிட்ட சூளைபோலே கோடையிடி விழுந்தாற் போலே ஓடிஓடித்தெண்டினாலே ( சாடி )  

அகந்தையா லொருதெண்டு கொண்டு ஆயிரங்கழுதைத் தேரிலே அகம்பன் வந்தடித்தான் முன்னே புகுந்தனுமான் மார்பிலே கழ்ந்த அனுமானும் தெண்டால் தட்டினான் அந்நேரிலே தெண்டுங் கொண்டையும் பிண்டு உருண்ட அந்தப் பாரிலே புகுந்தவன்தன திடக்கையால் அனுமானை அடித்தான் அடிக்க அய்யன் பொட்டெனவே அந்தத் துட்டனைக் கையானே பிடித்தான் - பிடித்துமார்பில் பருந்து குபீரென ரத்தம் இறங்கிட இடித்தான் இடித்தபின்னும் பார்த்தவனாவியைக் கூற்றுவனாமெனக் குடித்தான் முத்திஐயையோ புதைந்து ராவணன் தள்ள உகந்துவரும் நூறு வெள்ளம் மிகும்படையைக் காலன்கொள்ள அகம்பனுயிர் துள்ளத்துள்ள (சாடி ) 

இளையவர் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டதற்காக ஸ்ரீராமர் இரங்கல் 
அகம்பனங்கே படஅனுமான் முதலோர்கள் இருளில் அகன்று தனித் தனுப்போர்செய் திளையவன்பால் அடைந்தார் புகைந்த இரா வினில் மகோ தரன் தேவேந் திரன் போல் போர் செய்தான் இளையவனும் திகைத்தானப் போது முகிந்தபிர மாஸ் திரமிந்திரசித்து விட்டான் தம்பி முதலானோர் படுத்துவிட்டார் அதையறிந்து ராமன் மிகுந்துயரால் வந்துலைவாய் மெழுகுபோல் உருகி விழுகின்றான் துணைவனைப்பார்த் தழுகின்றானே 

கண்ணிகள் 
1. அப்பனே அய்யனே அரும்பிறவியே என் தன் அரசே கண்மணியே லட்சுமணா எப்படிநானுனை மறப்பேன் எப்போதுன்னுடன் பிறப்பேன் னி என் மனம் துணியேன் லட்சுமணா 
2. வன்னமாம் பிரம்மாஸ்திரம் கொடுத்த பிரம்மாவைப்பழி லட்சுமணா வாங்கநீ தொடர்ந்தாயோ என்னுடன் பிறந்தகுறை உசரப்போய் தசரதற்கு லட்சுமணா யம்பநீ நடந்தாயோ 
3. தந்தையையும் சடாயுவையும் கொடுத்ததும் போதாமல்உன் லட்சுமணா தனையும் பறிகொடுத்தேனே இந்தவயதினில் இந்தக்கண் காட்சிகாணநா லட்சுமணா என்னஉடம் பெடுத்தேன் லட்சுமணா 
4. அந்தோநான் களையாகித் தண்ணீர் விடாயெடுத்தால் ஆர்முகத்தைப் பார்ப்பேன் ந்தாரும் காய்கனிகள் அண்ணா என்றழைக்கும்உன் இன்சொல் தான் என்று கேட்பேன் லட்சுமணா 
5. நேரமறிந் தென்வயிற்றில் காய்கனியை இட்டநீ நெருப்பை இட்டாயோ நீ லட்சுமணா ஆரையும்விட்டென்னை விடேன் என்றாயே என்னைக்கூட அகல விட்டாயோ நீ லட்சுமணா 
6. சோற்றிலேகல் லெடுக்கறியேன் முகவணைக்கல் எடுப்பேனென்ற சொல்லையோ நான் எடுத்தேன் லட்சுமணா ஆற்றி நான் முடிபெறுமுன் வந்தவிபீஷணற்கு லங்கை ஆள முடி கொடுத்தேன் லட்சுமணா 7. படிக்கும் உன்புத்திதள்ளி உனக்கும் வானரங்களுக்கும் பழிகாரன் ஆனேனே லட்சுமணா பிடித்ததே பிடியாகப் பெண்வார்த்தை கொண்டுநான் பிழைமோசம் போனேனே லட்சுமணா 
8. நீமாள என்னுயிர் போம் பரதற்கு இதுகேட்கில் நிமிஷத்தில் உயிர்போமே லட்சுமணா தாய்மார்க்கும் உயிர்போமே நான் பிறக்கச் சூரியகுலம் தான் துளக்கம் ஆச்சே லட்சுமணா ஸ்ரீராமரை ஆகாசத்தில் சகலதேவதைகளும் தோத்தரித்தல
9 இந்தா வந்தேன் வந்தேனென் றிளையபெருமாள் முகம்நோக்கி நொந்தாயாசம் பெறமலிந்து நோக்கும் பெரிபெருமாள் முன் அந்தோ உனக்கும் கவலையுண்டோ ஐயாஎன்றே அந்தரத்தில் வந்தார் தேவர் சாமிமுகம் மதித்தார் இறங்கித் துதித்தாரே 

( உன் ) உன்னது மகிமையை இன்னதென்றே வாராலும் உரைக்கல் ஆமோ ராமா 
அநுபல்லவி நின்னோடு நாபியில் பிரமா ஒருத்தனாலே நிகரில் சார சரங்கள் சகலமும் தரலாலே நன்னி அரக்கருக்கு நீபயப்படுவது நாயமோ சாமிஉன் தன் மாயமோ புவிமேலே ( உன் ) 
சாணங்கள் ஆவாயே 
1. முப்பரம் பொருளுமாய் முப்பரம் பொருளுக்குள் மூலமுதற் பொருளும் அப்பனும் அன்னையும் தம்பியும் உனக்குண்டோ அவர்கள் வருத்தங்கண்டு நோவாயே இப்படி உன்சரித்திரம் இதுவே நிலைவரம் என்றால் அத்தையும்கூடக் கடந்தாயே செப்பிலும் இல்லை பந்திலும் இல்லை உன் செயல் சீமையிலே தகப்பன் சாமி என் பது நீயே 
2. அத்தி மரத்தினிலே தொத்திய கனிபோலே அண்டம் என்னும் கனிகள் உன் மேலே தொத்தி இருப்பவற்றுள் ஒருகனியிற் செனித்த துஷ்ட அரக்கர் என்னும் புழுவாலே கஸ்தி அடையலாமோ சிற்றூரில் செல்வக்கூத்து கட்டுகிறாய் என்ன உத்தமனே உன்கீர்த்தி எத்தனைபேர் சொன்னாலும் ஊசிக் கண்ணாலே ஆகாசம் பார்க்கிறாப் போலே ( உன் ) ஒருகாலே ( உன் ) ரகநாட்டம் மாறாட்டம் 
3. அம்பரீஷன் பிரகலாதன் முதலோருக் அருளிச்செய்தாயே அவனுக்கி நம்பின எங்களைஇந்த அரக்கருக்கு நடுங்கச் செய்ததென்ன தம்பியும் பிழைக்கின்றான் உன்தனக் கிவர் என்ன சண்டமா ருதத்தின்முன் எம்பிரானே நீநொந்தால் எங்களுக்கொருகதி இருக்குமோ தேவர் என்றும் தரிக்குமோஎங் சருகோட்டம் கள் கூட்டம் ( உன் ) 

ராமலட்சுமணருக்கு சீதாதேவி இரங்கல் 
வானவர் இப் படித்துதிக்கத் தூதர் சென்று மன்னவனே உன்மகனால் மனிதச் சாதி ஆனவரும் குரங்குகளும் முடிந்தார் என்றார் அவனுமங்கே புஷ்பகவி மானத் தேற்றிச் சானகிக்குக் காட்டுமென்றான் கண்டாள் சீதை தணல் அடுத்த வெண்ணெய் போல் உருகிவாழ நானொரு பெண் பிறக்க இவ்வா றாச்சோ என்று நலிகின்றாள் நொந்துநொந்து மெலிகின்றாளே 

கண்ணிகள் 
1 . என்னசெய்வேன் சாமிநான் என்னசெய்வேன் சாமிநான் இந்தக் கோலம் காட்டவோ வந்தீர் துன்னிக்கைக் கொட்டினது வாய்க்கெட்டாமலே போக தோதகம் ஏன் ஒருமிக்கத் தந்தீர் 
2 . கண்ணே அமுதே கருணாகரரே என் மனக் காவலோடே இத்தனை மண்ணில் இருந்ததுயிர் மறைந்த திருமேனியை மார்பில் அணைப்பதற்கோ நாளா வாளா தானோ 
3. நகரில் இருஎன்ற உம்மை அகலேன் என் றோர் பிடியா நான் தொடர்ந்த திதற்குத் பகைவர் இலங்கையிலே நீர்மடிந்தபிறகும் பாவி நான் உயிர் தரிப் பேனோ 
4. ஏகபோக மாகவே இருந்த என் பிராணேசரை இழந்த உயிர் எமன் கொண்டு போகமாட்டாமல் இந்தப் பொல்லாத் துயர் கடலில் போட்டுவிட்டானே என்னைக் கண்டு 

5. ஊர்மனிதர்க் கன்றுநீர் பதினாலு வருஷம்போய் உடன்வருவேன் என்றதும் தப்போ ஏர்பிடித்தோன் என் செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் என்பார் அதுவோ தான் ஒப்போ 
6 . ஆசைமான் பின்போ என்றாள் காரண காட்சிக்கெல்லாம் அடிவேர் இவள் என்றறி வீரே  மோசம் செய்தாளிவளை முகம்பார்க்கல் ஆகாதென்று மூடிக்கொண்டீ ரோகண்ணை நீரே ஏனோ 
7. வீட்டில் என் சாமி அன்னை வார்த்தை தட்டாமல் வந்து விரதங் கொண்டார் என்பதெல்லாம் காட்டில் எரித்த நிலா கானலில் மழையாச்சே கைகண்ட பலன் இது தானோ 
8 . போமோ அருமையா கிய ஓர் பெண் பாவத்தைக் கட்டிக்கொள்ளும் அரக்கர் செயம் பொருந்தப் தருமமே செயம் பெரு மாளேதுணை என்றும் என் சாமிக்கப செயம்வரல் ஆமோ 

9 . காதக இந்திரசித்தன் சூதோ அன்றி இதென்ன காரணமோ நான் முன் செய்த சதியோ ஆதிமறை பொய்த்தாலும் பொய்யாப் பிராண நாதரை அலையக் காண்பதும் பாழ்த்த விதியோ 
10. அய்யோலட் சுமணாநீ என்சிறை மீட்கும் முன்னே ஆவிஉனக்கு சும்மாப் போச்சே கையாலே நான் பாவி உன் அண்ணன் கைப்பிடித்த காலபலம் அப்படி ஆச்சோ 
11 . ஓதும் டேச் ஈம்காணேன் மூச்சும் காணேனேசாமிக் குயிர் உண்டோ இல்லையோ சொல் மகனே ஏதும் அசைவும் காணேன் இருவர்க்கும் ஓரெழுத்தா எழுதி வைத்தானோ சதுர் முகனே 
12 . மையான காட்டில் அண்ணன் மெய்வருந்தாமல் தூங்க மலர் கொய்து மெத்தையிட்ட நீயே வெய்யராட்சதநீசர் எய்யும் அம்புகள் என்னும் மெத்தை மேலே கிடக்கி றாயே 
13 மெய்காணும் சாமிக்கும் உனக்கும் பழிகாரி நான் ழுந்தாலும் என்பாரல்லலோ நீலி கைகேசி மகராசி கறுவிக் கறுவி எல்லாம் கட்டிக் கொண்டாளே பாக்கிய சாலி 
14. தாய்பகை வந்தபோது நீயிருந்தண்ணனைக் காட்டிக் கொடாதே என்று தனியே 496 தாய்சுமித் திரை சொன்னாளே அதுக்கோ நீ அண்ணன் முன்னே சாய்ந்து கிடக்கிறாய் பிள்ளைக் கனியே பொய்யோ 
15. புத்திரனே கண்மணியே கைத்துணையான உன்னைப் போக்கடித்தேன் நான் பாவி வற்றி வடகமாயும் இத்தனைப் பாடுங்காண வைத்ததே பாவி தெய்வம் அய்யோ 
16. எப்போதும் போலேசாமி செயிப்பார் என்றிருந்தேனே இங்கே கண்டேனே அலங் கோலம் குப்பை உயர்ந்தென்ன கோபுரம் தாழ்ந்தென்ன கூடிச்சோ நீசருடன் காலம் 
17. தாய்மார்கள் இருவரும் பரதனும் இதுகேட்கத் தரிக்குமோ அவரவர் தேகம் கேவலம் பழிகொண்டேன் எனக்கினி ஒருக்காலும் கிடைக்குமோ நல்லபடி லோகம் 

திரிசடையம்மாள் சீதாதேவியைத் தேற்றுதல் 
பரிந்திந்த வகையழுது சாமிமேலே பதைத்துவிழ எழுந்தவளைக் கட்டிக்கொண்டு விரிந்திடும் கண் ணீர் துடைத்துப் பிறர் கேளாமல் மிகப்பசித்தேர் களைத்தேற்றும் அமுதுபோல சரிந்த பயிர் களைதேற்றும் மழையைப் போல சவலைதனைத் தேற்றுகின்ற தாயைப் போல தெரிந்ததிரி சடைஎன்பாள் சீதைதன்னைத் தேற்றுவாள் மனக்குறையை ஆற்றுவாளே  

பல்லவி ஏதுக்கு வருந்துகிறாய் அம்மா ஏதுக்குவருந்து கிறாய் சும்மா ( ஏது ) 

அநுபல்லவி கேதப்படாதே தெய்வம் கிணறு தப்பி என்ன பொது என்பதழிந்ததோ துர விலே விழுந்ததோ ( ஏது ) 
சரணங்கள் 
1 . உன்னண்டை மாயமான் என்றும் சனகராசன் என்றும் மயக்கங் காட்டினான் மற்றை நாள் வெளியாச்சது போல் இந்திர சித்தும் செய்கிறான் சிலசண்டை ஓயவேபெரும் பேயும் நாயும்தின்ன உருளுது பாரிவன் தலைமண்டை உத்தமராமனை அரகர் கெலிக்கும்போது உள்ளங்கையினில் முடிக்கிறேன்பார் ஒன்பது கொண்டை ( ஏது ) 
2. அனுமான் என்பவன் தனதாகவே வந்து அடிமைக் கடிமையாகி உழைக்கிறான் அவனாலேயே உன் கணவன் தம்பியுடனே தவறாதபடி பிழைக்கிறான் நினைவேதோ லட்சுமணன் இளஞ்சூரியன் எனவே முகத்தொளி தழைக்கிறான் நிமிஷத்திலே ராவணனையும் படையையும் நமனும் வந்து தன் உலகத்துக் கழைக்கிறான் ( ஏது ) நீங்குமோ 
3. சொப்பனமும் உன் தன் கற்பும் சகுனமும் சுப பலன் கொடுக்காமல் சொல்வாய் மங்கலம் இல்லார்களை இந்த தூய விமானமது தாங்குமோ வாங்குமோ ஒப்பில்லா ராகவன் இந்த ராட்சத அற்பருக்குப்பின் ஒருக்காலே பயந்திருக்கிறாயே என்ன ஒருகுளப் படிகண்டு திரைகடல் ஏங்குமோ ( ஏது ) 

அனுமார் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுவருதல் 
திரிசடை சொல்லாற் சீதை தேறிப்போனாள் சிலைவீரர் பாடும் சேனைகளின் பாடும் கருதிவிபீஷணன் சொல்ல அனுமான் சாம்பன் கட்டுரையால் சஞ்சீவி மலையை நாடி இருபுயமும் தூக்கியண்ட கோள மட்டும் எட்டும் விஸ்வரூபங் கொண்டினிமேல் நீங்கள் வெருவிடவேண் டாம்நான்போய் வருவேன் என்று விளம்பினான் அனுமந்தன் கிளம்பினானே  

பல்லவி சஞ்வி ( பாய் ) பாய்ந்தானே அனுமந்தன் பாய்ந்தானே பர்வதத்தைக் கொண்டு வந்தானே 

அநுபல்லவி சேர்ந்தசாம்புவன் உரைக்கையாலே திரிவிக்கிர சாமிபோலே தேவர்மகிழ மூவர் புகழ திசையுள நீளங் கண்டு விஸ்வரூபங் கொண்டு ( பாய் ) 

சரணங்கள் 
1. தெற்கிலே நின்று வடக்கை நோக்கி விஸ்வரூபத்தைப் பெருக்கி - நட்சத் திரமண்டலமும் கிழித்தே அண்டகோளத்தை முட்டி. நெருக்கி - ஒண்டி நிற்கப்போர்த் திசைஎட்டினும் டமில்லாமலே அடுக்கி - பெரு நிலத்தை உதைத்து விசைத்துக்கிளம்பி நெடியகழுத்தைச் சுருக்கி - ஒரு கைக்குக்கை ஓராயிரம்யோ சனைமட்டும் நீட்டி - நிமிர்ந்து கணகணெனவே வீரவாலின் மனிதனை ஆட்டி தனது விக்கிரமபுசபல பாரக்கிரமம் அடங்கலும் காட்டி விசையிலும் அதிவேக மாகிய விசையை முன் ஒட்டி -- எங்கும் - தகப்பன்  - -- விளங்கும் மக்கிமலைகள் வேர் அறுந்தாட மரங்கள் செடிகள் பிடுங்குண்டோட சொர்க்கத்தவரும் பதற பக்கக் கடலும் கொதற திக்குத் திசையும் கதற சக்கிரக் கிரியும் சிதற ( பாய் ) 

2. இலங்கைவிட் டொன்பதாயிரம் யோசனை மயகிரியில் தாண்டி அந்த மயம்விட் டொன்பதாயிரம் யோசனை ஏமகூடத்தில் தாண்டி அப்பால் சலங் கொண்டெண்பதினாயிரம் யோசனை நிஷதகிரியில் தாண்டி - நிஷதமும் விட்டெண்பதினாயிரம் யோசனை தங்கப்பெருமலை தாண்டி - அங்கே துலங்கும் வெள்ளியங் கயிலை ஈசன் உமைக்குக் கையாலே வாயுவின் சுதன் இவன் என்று காட்ட அவனைத் துதி செய் தப்பாலே அலங்கலின் மாயவனைப் பணிந்து தா வி விண்மேலே போகையில் அருக்கணைக்கண்டு விடிந்து போச்சென்று திகைத் தொரு சாலே நிலந்தனிலே அங்கே பகலென்றறிந்து நீலமலை கண்டப்பாற் பறிந்து விலங்கிப்புயல் விண்டொழிய தொலைந் தெட்டரவும் கழிய குலுங்கித் தறையும் குழிய கலங்கித் திசையும் கிழிய ( பாய் ) 

3 அரிய மருந்தைக் காக்கும் தெய்வங்கள் அடங்கலும் வந்து தடுக்கி ஆரடா என்று கேட்க ராமதூதன் நான் என்று கடுக்கி ஒரு பெரிய சக்கரம் சுழன்று வந்தது போமட்டும் நெஞ்சை ஒடுக்கி பெலத்தங்கிருந்த காவற்பேரையும் பின்னிட்டோடவே முடுக்கி - அங்கே தரையிலே ஆயிரம்யோசனை தாழ்ந்துவே ரோடி - மேலே தலை எடுத்தாயிரம் யோசனை மட்டும் சூடி - ஆர்க்கும் தெரியவே ஓராயிரம் யோசனையொடு மூடி - நின்ற தீர்க்க மலையை ஒருகையாலே தூக்கிப்பந் தாடி - திரும்பி வருகையில் அந்தவாடை சுழன்று வஞ்சகன் பிரம்மாஸ்திரம் கழன்று ஒருலட்சுமணன் தேற - பெருகிப் புவனம்தேற தருமப்பயிரும் தேற -- திருலட்சுமியும் தேற ( பாய் ) பின்னும் - கிட்டி 

ஸ்ரீராமர் லட்சுமணருக்காகப் பின்னும் இரங்கல் 
மறம்மிகும் அனுமான்பாய்ந்து வருமுன்னே சாம்புவ : னும் திறல் விபீஷணனும் தேறத் தேற்றுவார் தம்மை நோக்கிக் கறவைதன் கன்றைத் தேடி கரைகிறாற் போல ராமன் பிறவியை எண்ணிவேதை பெருகுவான் உருகுவானே 

ஆனாலும் என்னைப் போல்இனி ஆர்க்குண்டிந்த அநியாயம் ( ஆ ) 
அநுபல்லவி மானாகரன் தசரதன் வருந்தையிலே இப்படி பிள்ளைத் தவம் இருந்ததோ காரணம் ( ஆனா ) 
1. ஆரார்க்கென்ன செய்யினும் தம்பிபோல அதுவந்தென் அவதி துடைக்குமோ நேரே ராவணனைக் கண்டுவிட்டு நெஞ்கிடந்து புடை புடைக்குமோ தீராஎன் காலப்பிழை வெண்ணெய் திரண்டு வரச்சேதாழி உடைக்குமோ தாரம் தேடக்கிடை யாதோ என் தம்பியைப் போல் எங்குந்தேடக் கிடைக்குமோ ( ஆனா ) 2. சற்றும் தம்பி வார்த்தையை எண்ணாமல் தயங்கிய மானின் பின்னே போனேனே கத்திக் கொண்டுங்களைத் தேற்றிவந்து கழுத்தறுத் தேனே நான்தானே உற்ற தகப்பனும் சடாயுவும் ஒருபிற வியும் இழந்தேனே பெற்றாரையும் பிறந்தாரையும் கொன்றேன் பெண்ணாசை கொண்டபித்தன் என் பதுநானே ( ஆனா ) 
3 சதிகார ராட்சதப் பையல்கைக்கு தாழுவதென் தம்பிக் கையோ 501 பொய்யோ மதிமோசமா அய்யனைக் கொண்டுவந்து மடிப்பாகக் கொடுத்தேன் இதவாக தருமமே செயிக்கும் என் றிருந்த எனக்கது கதையோ கரும்புக் குழுதபுழுதி காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆமோ மெய்யோ அய்யோ ( ஆனா ) 

தம்பிக்காக இரங்கின ஸ்ரீராமரை சாம்புவன் தேற்றுதல் 
இளையவனை நினைந்திப்படிக்கு ராகவன் புலம்ப எழுந்தான் சாம்பன் வளையும் வகைவணங்கிநின்றான் சாமிநீ நொடிப் போதும்வருந்த வேண்டாம் விளையுமுயிர் தருமருந்து கொண்டுவருவான் அனுமான்விழுந்தோர்க்கெல்லாம் களையகலும் அது செய்யும் குணம் என்பான் காண்பாயிக்கணம் என்பானே 

பல்லவி இந்தவேதை நீகொண்டால் சாமி - இனி எந்தவிதம் பிழைக்கும் பூமி ( இந்த ) 
அநுபல்லவி சந்ததம் உனது தர்மத்தாலே தழைப்போம் தம்பியும் நீயும் எல்லாரும் பிழைப்போம் ராமா ( இந்த ) 
சரணங்கள் . 
1-அளந்துள்னை நானறிவேன் உனக்கொன்றும் குறையில்லை அலைகடல் கடையச்சே நாலுமருந்தன்று வளர்ந்து வடகுருவில் ருந்ததைக் கொண்டுவர மாருதி கிளம்பினான் பாய்ந்து சென்று பிளந்தது கூட்டும் ஒன்று படைகரைப்ப தொன்று பிராணன் கொடுப்பதொன்று பெலன்கொடுக் கிறதொன்று களங்கமில் லாமல் வரும் அதுமுன்னாகமலை கலங்கினாலும் மனம் கலங்கா தவனே இன்று ( இ ) 

2 தன்னைப் படைத்த பிரம் மாவையும் பிரம்மாஸ்திரம் சாடும் உயிர் குடித்துப் போடும் அதன் கடூரம்  
3 . பின்னும் பிரம்மாஸ்திரமும் அந்த மருந்தைக் கண்டால் மெய்யை விட்டுக்கழன்று செய்யுமே நமஸ்காரம் பின்னைத் தம்பிகையாலே அரக்கர்படு வதெல்லாம் பெருக்கத் தெரியும் சற்றே பொறுபொ றென்னவிசாரம் பன்னிச்சொல் வதென்ன முன்னாள் சண்டையொரு பாக்கும் இனிமேற் சண்டை தோப்பும் ஆகுமிந் நேரம் ( இந்த ) 
ஆரும் அறியார் அந்த மருந்திருக்கும் இடத்தை அடையாளம் சொன்னேன் விஷணுசக்கரம் காவலுண்டு பேரும் ஊரும் அறிய அத்தை இந்தமட்டுக்கும் பிடுங்கிக் கொண்டுபோன பேர்களும் இல்லைபண்டு சாகும்வாயு வேகம் மனவேகமா அனுமான் தருவான் நொடிக்குள் இங்கே வருவான் அதனைக் கொண்டு நேரும் உன் காரியம் உனக்கேசெயம் அய்யா நெருப்பு மெழுகுபோலே அடிக்கடி மணம்பிண்டு ( இந்த ) 

தம்பிமுதலானோர் எழுந்ததற்காக ஸ்ரீராமர் அனுமாரைப் புகழ்தல் 
வெம்பியிந்த விதம்சாம்பன் தேற்றும் போது விக்கிரம மாருதி மலை சஞ்சீவி தன்னை பின்புகளத் தினில் வைத்தான் ஒருபிர்மாஸ்திரம் பிரிந்திடவே பரிபூர்ணச் சந்திரன் போலே இம்பர் இளையவனும் வெள்ளம் ஏழுபத்தும் எழுந்திடப் பூ மலர்தேவர் பொழிந்து வாழ்த்தத் தம்பியைப்போல் எழுந்த இராகவன் விசாரம் சாடினான் அனுமனைக்கொண் டாடினானே  

பல்லவி அனுமானே நீயே - கனவானே ( அனு ) 
அநுபல்லவி தனதா எங்கட்குப் பிராண தாரைநீ வார்த்தாயே ( அனு ) 

தாமே நாமே சரணங்கள் 
1. நமது துணைவரும்வா னரர்களும் நிமிஷத்துன்னால் உயிர் நிலைபிடித் தோமே சுமதலை உனக்கென்றே துணிந்தோம் எமலோக பரியந்தம் இனி சாதிக்க லாமே ( அனு ) 

2 . ஒன்றும் அசைவில்லாமல் உடம்பையும் மறந்தோம் கொன்ற உயிர்களை நீ கொடுக்கவே சிறந்தோம் அன்று தசரதன் பெற் றாருயிர் இறந்தோம் இன்றுனது வயிற்றில் இருவரும் பிறந்தோம் ( அன்று ) 
3 விழிபோலும் என் தம்பி மெய்யுயிர் போயே முழுகாதபடி காத்தாய் முழுதுங்காப் பழிகாரன் முன் இந்தப் பயம் தீர்த் அழியாத சீரஞ்சீவி ஆயிருப் பாயே ( அனு ) பாயே தாயே இலங்கையில் வானரர் நெருப்பிட்டுக் கெர்சனை செய்தல் 
கட்டி உவந்தனு மத்துதி ராகவகர்த்தன் உரைத்தளவில் தட்டற அண்டர் இறைத்தனர் பூமலர் தத்தையர் நிர்த்தமிட மட்டற வெந்து பொடிப்பொடி யாகவளைத்து நெருப்பதனைக் கிட்டி. இலங்கையில் இட்டனர் வானரர் கெர்ச்சனை இட்டனரே 

இந்திரசித்து மாயாசீதையை அனுமார் முன் கொண்டு வருதல் 
இத்தலையில் இவரார வாரங் கேட்டான் இலங்கேசன் உள்ளுடைந்தான் உடனே இந்திர சித்தெழுந்தான் சஞ்சீவி மலையை முன்போல் செலுத்திய மாருதியும் வந்தான் எதிர்த்துக் கொண்டான் விந்தையினால் ஒருத்தனை அந்நேரந் தன்னில் மெய்ச்சீதை வடிவாக்கி வெட்டுவேன் என் றத் தலையில் கைத்தாலத்தில் வாளொன் றேந்தி ஆட்டினான் மாயையினாற் காட்டினானே 
( மாய ) 
பல்லவி 
மாயச்சீதை கொண்டிந்திர சித்தனு மான்முன் வந்தானே அநுபல்லவி தீயலங்கை மேலைவாசலிலே மந் திரத்தாலே தந்திரத்தாலே செய்த -- ( மாய ) 
சரணங்கள் - 
அதிரவே மெலிந்து கலை 
1. அளப்பில்லா வெகு களத்தோடே பேரிகை அடித்துக்கொண்டு விளைத்த சண்டைகள் வீணாச்சே என்று விகடங்கள் படித்துக்கொண்டு உடல் நெளிக்க மயிர்தொட் டிழிந்திப்பல்லை நெற நெற என்று கடித்துக்கொண்டு மண்டை பிளக்க வெட்டுகிறேன் பார் எனவேகத்தி பிடித்து கொண்டுதுடி துடித்துக்கொண்டு ஒரு ( மாய ) 
2. வீரமாம்புலி வாய்மான் போலவள் குறைந்து கொள்ள - மழைத் தாரையா விட்டழுத கண்ணீர் முலைத் தடங்களில் நின்றைந்து கொள்ள சோரவே புரண்டறுந்த உடைமைகள் சுற்றிலும் இறைந்து கொள்ள அய்யா மாருதியே முறையோ என்றவள் வெட்கம் மறைந்து கொள்ளக் கண்ணில் அறைந்து கொள்ள 
3. நேசமுள்ள அனுமானே இங்கேசற்றே நில்லடா சொல்லுகிறேன் வாள் வீசிநான் இந்தச் சீதை தன்னை உன் தன் விழிமுன்னே கொல்லுகிறேன் மறு ே யோத்திக்கும் செல்லுகிறேன் கேசிபரதன் எல் லாரையும் வேருடன் கொல்லுகிறேன் உன்னை வெல்லுகிறேன் - என்று ( மாய ) ஒரு ( மாய ) - - 

இந்திரசித்து வெட்டின சீதைக்காக அனுமார் புலம்பல் 
வந்தபாதகன் இந்திரசித்தென்பான் மாயா சீதையை வளாலே விந்தை மாருதி நல்ல வார்த்தை சொலவும் துணியாவீசிப் போட்டான் பந்தமாம் அயோத்தி மேலே போக்குக் காட்டி நிகபலையிற்சேர்ந்தான் சிந்தை மாருதிகண்டு சோம்பினான் அழுதழுது தேம்பினானே 
எது தலகாம்போதிராகம் ஆதிதாளம் บอล இதுக்கோ நான்பட்டது சும்மா பாவி அனுமான் னிமேல் நான் என்ன செய்வேன் அம்மா ( இது ) 
அநுபல்லவி விதிக்கும் என் எண்ணம் போச்சே விழலுக் கிறைத்தநீர் ஆச்சே ( இது ) 
சரணங்கள் 
1. ஓம் என்று முன் தூது வந்தேன் உன்உயிர்க்குக்கேடு தந்தேன் ஆம்என் றெப்படி செல்வேன் ஐயனுக்கெப்படி சொல்வேன் சாமி என்னென்று கேட்பான் தாய் நீ இருந்தாலல்லோ மீட்பான் தீமைதானேமே லிட்டதோ தெய்வமும் தான்கண் கெட்டதோ ( இது ) 
2. அன்னமே தாயே என் தன்னை அறிந்தும் இந்திரசித் துன்னை பின்னமே செய்திட நானே பிரதேம் போலிருந் தேனே சொன்னசஞ் சீவிக்கா தாண்டி சுருக்காகநான் உன்னை வேண்டி என்னென்ன செய்தாலும் அங்கே இப்படி ஆச்சுதே இங்கே 
3. அருந்ததி தொழும் பெண்ணே அனைவருக்கும் இரு கண்ணே விரும்பும் உயிர்க்குயிர் ஆயே விளங்குகின்ற என் கரைந்து நானுன்னைத் தேடி கண்டேன் என்று முன் ஓடி இருந்தாள் என்றவா யாலே இறந்தாள் என்னவோ மேலே தாயே --- 

சீதைக்காக இரங்குகிற ஸ்ரீராமரை லட்சுமணர் முடுக்குதல் 
அஞ்சனைபா லகனிந்தப் படிக்கு நொந்தான் ஐயன் இரா மனுக்குப்போய் அறிக்கையிட்டான் செஞ்சிலை வீரனுமறிந்தான் எறிந்தான் வில்லைத் தேடினான் வாடினான் தியக்கத் கொண்டான் தன் செயலா னதுமறந்தான் அந்த வேளை தம்பியும் அப் படிதளர்ந்தான் இனிமேற்சாமி என் செயலா வது நமக்கும் இருப்பே தென்றே என சொல்வான் லட்சுமணன் சினம்சொல்வானே . 

 
பல்லவி தேவிபோனபின் 
இனிமேல் யோசனை ஏதைய்யா இரங்கினால் அகா தையா ( இனி ) 
அநு பல்லவி 
உனது கவலை சொன்னால் ஊரார்க்கென்ன நஷ்டியோ சினம் எங்கே போச்சுதையோ சீவன் கருப்பட்டியோ 
சரணங்கள் 
1. இலங்கை உள்ளாரும் தேவர் எவரையும் இப்போது நேரே குலங்களோடும் கொல்லாவிட்டால் கொஞ்சம் சொல்லி நகைப்பாரே புலம்பல் ஆமோ இன்னம் சற்றே பொறுத்தால் எதிர்த்த பேரை விலங்கிலும் போடுவார் அடிமை வேலை செய்யச் சொல்லுவாரே ( இனி ) 
2. விலக்கவும் சீதையைப் பாவி வீசினான் என்றனுமான் சொன்ன கலக்கம் கொண்டாய் தர்மத்துக்கிது காலமோ அல்லவோ சின்ன கொலைத் தொழில் செய்தப் பாலெங்கும் கொளுத்துவாய் நெருப்பாய் மின்ன தலைக்குமேல் ஓடியவெள்ளம் சாண் ஓடிஎன்ன முழம்ஓடி என்ன ( இனி ) 
3. நாட்டிலரசும் போச்சுதுன்னுடைய நன்மையாலே வந்ததெண்டம் காட்டிலும் வந் திந்தக் கொள்ளை கட்டிக்கொண்டோ மேதினகண்டம் 
பூட்டிநீ வில்லை வளைத்தால் பொடிப்பொடியாமேமூ தண்டம் ஆட்டங் காட்டலாமோசாமி அடியேன் சொன்னபடி எடுநீ கோதண்டம் ( இனி ) 

ஸ்ரீ ராமரை அனுமார் முடுக்குதல் 
சினமா இப்படி இளையோன் உரைக்க இந்திர சித்தயோத்தி யின்மேலே போன போக்கை அனுமானும் சாமியுடன் சொன்னான் சாமி ஆவிதடு மாறினான் அந்த வேளை புனைவீரப் படைகளையும் உமையும் கொண்டு போய் அரக்கன் முன்குதிப்பேன் அல்ல என்றால் முனையாதா னேபொருதிக் கொல்வேன் என்று முடுகுவான் மாருதியும் கடுகுவானே 

பல்லவி 
அனுமான் நானிருக்க இதுக்கோ இந்தயோசனை சாமி இதுக்கோ இந்தயோசனை சாமி ( இது ) 
அநு பல்லவி 
பதைக்கிறேன் இந்திரசித்தை உதைக்கிறேன் அவனைநான் வதைக்கிறேன் அயோத்தியில் புதைக்கிறேன் அதுக்கென்ன ( இது ) 
சரணங்கள் நீட்டி - ராவணன்தன்னை
1. சுற்றிய மதில் ஏழும் எற்றி ஊரிலே கையை கொத்துப் பனங்காய் போலே பத்துத்தலையும் பிடித் சித்தே என்றவனங்கே கத்தி அலறும்படி தாட்டி மகனே இந்திர மாட்டி - ஆட்டுக்குட்டி போல 508 ஊட்டி மொய்த்த அரக்கர்களைக் குத்திக் கழுகுக்கிரை பாராய்என்சாமி சுற்றிலே லங்கை நகரத்தைப் பிடுங்கி ஒரு பந்தைப் போல் தூக்கியங் கெத்துகிறேன் அடியேன் ( இது ) 
2. துடுக்காய் என் தாய் முன் கத்தி எடுத்தான் அவனுக்கிந்த மிண்டேன் - கொல்லாதே என்று படித்துப் படித்துச் சொல்லி அடிக்கடி வேண்டிவேண்டிக் கொண்டேன் -- கேளாமற்பாவி முடுக்கி வீசக்கண்டு துடித்துத் துடித்து மனம் விண்டேன் - பரதன்மேலே வடக்குத் திசையை நோக்கி நடக்க என் கண்ணாரக் கண்டேன் உத்தாரந்தந்தால் பிடிப்பேன் ஒருகடியாக் கடிப்பேன் அவன் உயிரைக் குடிப்பேன் பழிக்குப்பழி முடிப்பேன் என்னலா காதோ ( இது ) 
3. பூத்தபுவனமெல்லாம் காத்திட வந்த பரந் தாமா - உன்வில்லுக்குமும் மூர்த்திகளாகிலும் பாத்திரரோ ரகு ரமா தர்மம் செயம் என்ற சாத்திரமும் உனது தோத்திரமும் தப்பிப் போமா நம்பினதேவர் பேய்த்தனம் கொள்ள என்ன கூத்திது நீவருந்தல் ஆமா சேனையும் தோளில் ஏற்றி உம்மையும் நொடி மாத்திரத்துக்குள்ளாக நேத்தியாக் கொண்டுபோய் அயோத்தியிற் குதிக்கிறேன் - ( இது ) --- 

சீதையின் இருட்பைக் கண்டுவந்த விபீஷணர் ஸ்ரீராமருக்கு அறிவித்தல் 
அளப்பரிய அனுமன் இதுசொல்ல விபீஷணன் அதனை அறிந்தான் நான் போய் வளப்பமெலாம் கண்டுவந்து சொல்வேன் என்றிலங்கையிலோர் வண்டாய்ப் போனான் 
களங்கமிலாச் சீதையையும் நிகும்பலையை அரக்கன் செய் கவடும் கண்டான் உளக்கவலை கடல் கடக்கக் கரை செய்வான் சாமிமுன்னே உரைசெய் வானே . 

பல்லவி 
இருக்கின்றாள் தாய் அசோக வனத்தினில் ருக்கின்றாள் சாமி ( இருக் ) 
அநுபல்லவி 
இருக்கிறாள் நமக்கொரு ராவணன் குடிக்கொரு பாக்கியம் உற்றாற்போல சூனியம் வைத்தாற்போல ( இரு) 

சரணங்கள் - என்று 
1. மோதுவேன் என்றும் இடிக்கிறேன் என்றும் மிண்டு முறைமுறையே சொல்லும் வாதரக்கியர்முன் புலிக்கூட்டத்தில் ஒரு மான்போல் மனம் பிண்டு தீதிலாஒரு ராமா மிர்தமே சீவனமாக உண்டு - ரகு நாதனே உன்கைவில் ஓசையும் வா கண்டு னரஓசையும் பரிபூரணம் கொண்டு 
2 . -- நல்லது சொன்ன முறைபிசகிச் சிஷ்டர் எண்ணமழிந்து துஷ்டர் எண்ணமுமே முற்றுமோ தர்மமே செயம் என்னநாலு வேதங்களும் ஆறு சாஸ்திரங்களும் வீண் கத்துமோ ன்னதே மெய்யானால் சந்திர சூரியகதி இரண்டும் இங்கே சுற்றுமோ என் தன் அன்னையைத் தொட்டாலவன் இன்னமும் இருப்பானோ அருக்களிப் பேதுக்கையோ நெருப்பைப் புழு பற்றுமோ 
3. அந்த நிகும்பலை யாகம் செய்யப் போனான் அறிந்தேன் அவன் சூதை சாமி உன் தன் அயோத்திக்கவன் ஓரடிவைத்ததில்லை உனக்கேன் மன வேதை - சீதை சிந்தை தேற்றுவாள் அடியேன் விபீஷணன் பெண் திரிசடை எனும் மந்திரி அனுமான் முன்னே இந்திரசித்துக் கொன்றது மாயாசீதை அது தாயார் எனும் சீதை பேதை - ( இருக் ) 

ஸ்ரீ ராமர் லட்சுமணருக்கு யுத்த தந்திரம் கற்பித்தல் 
கலக்கம் அறஇப்படி சொல்லிக் காட்டி அந்த விபீஷணன் பின் விலக்க வேணும் நிகும்பலையின் வேள்வி முடியா முன்என்றான் பெலத்த படையும் தம்பியுமென் பின்கூட்டென்றான் சாமியுமுட்கொண் டிலக்குமணனை அழைத்துறுதி எடுத்தான் சொல்லத் தொடுத்தானே 

பல்லவி 
தம்பீ லட்சுமணா இந்திரசித்தன் தலைகொண்டுவா போடா ( தம்பீ ) 
அநு பல்லவி
நம்பி உன்னோடேயாவர் நானறியேனோஉன் ஆனதுவே உப எதிர்ப்பார்கள் வீரம் - சத்தியம் காரம் உனக் தாரம் நேரம் - அடா - கேனினி சொல்லவிஸ் இதுவோபாரம் ( தம்பி ) 
சரணங்கள் 
1. முதற்சண்டை போல்மறு சண்டைபோற் சேனையை மோசப் படுத்தாமல் தேக்கி - நின்று  - பதைத் தவன் அம்புக் கெதிரம்பு போட்டுப் படுதுக ளாகவே நாலு விதத்திலும் போர் செய்து கைமெய் சலித்தவன் மெலிவான வேளையை நோக்கி மார்பிற் பதித்த கவசமும் வில்லையும் போக்குவாய் பார்த்திடுவார் தேவர் சாக்கி கூற்றுவன் போலம்பு எல்லாம் தோற்றிடவே ஒண்டி உயிரைப் போக்கி வெட்டித் ஆக தாக்கி ஆக்கி தூக்கி - ( தம்பி ) 
2 - - --- ஆசைநிகும்பலை வேள்வி முடிந்தாற்பின் ஆராலும் வெல்லக்கூ டாதே ஒரு கேசரிபோற் படையோடும் போய் அத்தைக் செடுத்திடுவாய் வேளை ஈதே அந்த நீசனானவன்பிர் மா ஸ்திரம் தொட்டால் நீயும்பிர் மாஸ்திரம் தொ டாதே கயிலை வாசன் சூலமும் சக்கரமும் இவை ரண்டையும் போடதின் மீதே துண்டுது ண்டாகும் தப் பாதே அவன் சண்டை எல்லாம் வெறும் மலைக்காதே இப் போதே அடா சூதே - ( தம்பி ) 
தீங்கு - பார் லாங்கு என்று - 3. மந்திர வாளந்த இந்திரன் கையினில் வச்சிரத்தையும் செய்யும் இந்தவில் அந்த மாயவன் வில்இத்தை எதுவும் செய்யாது பொல் அந்த நாளிற்கும்ப முனிசொல்ல அறிந்தாய் நீ அல்லவோ வந்து நமக்குத் தருமம் தானேபிர மாணம் என்று கையில் பூணும் கவசத்தைத் தூணி யிந்தாபிடித் வென்று நீங்கு இதே ஆங்கு -- இனி நான் வாங்கு தாங்கு அம்பறாத் தோங்கு பாங்கு அடா ( தம்பீ ) 

இந்திரசித்தை அனுமார் பழித்தல் 
படித்தார் ராமன் சொன்னபடி பாய்ந்தார் லட்சுமணன் முதலோர் அடித்தார் பிடித்தார் கரிபரித்தேர் அழித்தார் கழித்தார் அரக்கருயிர் குடித்தார் கடித்தார் யாகத்தைக் குலைத்தார் கலைத்தார் கொக்கரித்தார் இடித்தார் வடிவில் இந்திரசித்தை இழுப்பான் அனுமான் பழிப்பானே 
பல்லவி 
இந்திர சித்தேஉன் தந்திரவித்தைகள் எல்லாம் ஏன்டா புறப்பட்டா ( இந் ) 
அநு பல்லவி 
உன் தன் நிகும்பனலயில் ஒளித்துச் செய்கிறாய்பூசை ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏண்டாமீசை ( இந் ) 
சரணங்கள் 
1. முந்தஎன் தாயைப்போல் ஒருத்தியைக் கொன்றாயே முடுக்கா அயோத்திமேல் நடக்கிறேன் என்றாயே பந்தல் அலைந்தவனே நீயும் சென்றாயோ பரதனை வென்றாயோ அந்தரா வணனுக்கு வந்த லச்சை அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலசொணாதோ வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ வாணாள்வைக்க வேணுமோ சாணல்லவோ ஈதோ கயிறு வயிறு முனைவே லாயுதம் லாயுதம் 
2. விடுக்கும் வச்சிராயுதம் விஷ்ணு சக்கராயுதம் சிவன் சூ எடுக்கும் நாகாஸ்திரம் பிரம்மாஸ்திரத் எதைவேணும் அதைப் திடுக்கிட வினைசெய்யும் உங்களுக்கே செத்தவனே எங்களுக் குண்டோடா அடுக்களை பூனை போலே இடுக்கிலே ஆடெடுத்த கள்ளன் போலே தோடு போடு நாசம் மோசம் சுழிக்கிறாய் முழிக்கிறாய் ( இந்த ) 
மேலே ணாலே போச்சே 3. நிறை கடல் போலஉன் சேனைகள் கள நேராக விழுந்தத்தைப் பாரடாகண் பரபரப்பிலே நிகும் பலையாகமும் பாழும் சுடலை கறுவி நமனும் வந்து குறுகிக் கொண்டான் காலம் முடிந்ததினி மேலே என்னடா சிறைபட்ட இந்திரனும் குறைவிட்டுத் செல்வ லட்சுமணனிதோ கொல்லவந் உன்னை முன்னை தழைக்கிறான் தழைக்கிறான் ( இந்த ) 

இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் மூன்றாம் முறை யுத்தம் 
மாருதி வ்வா றோத வளைந்தராட் சதரும்சேனை வீரவா னரரும் சண்டை . வித்திட்டார் இந்திரசித்தன் தேரினில் ஏறிக் கொண்டான் சிலை கொண்டான் தம்பிதானும் மாருதி மேற்கொண்டம்பு வருஷித்தான் கருசித்தானே 

பல்லவி 
அஸ்திர வருஷம் தம்பி பொழிந்தானே சித்தன் படைகள் போய் ஒழிந்தானே நிகும்பலையிலே இந்திர ( அஸ் ) 
அநுபல்லவி 
வைத்த சமித்தும் பிணமும் எரிபட மந்திரபூரண கும்பம் நெரிபட எத்தி அதிலெழும் தேரும் சிதைபட - எருமையின் கூட்டங்கள் எல்லாம் வதைபட ரத்தம் எழுந்திட சுற்றம்விழுந்திட - யாகம் கலைந்திட யூகம்குலைந்திட ( அஸ் ) 
சரணங்கள
1. தேரில் அரக்கன் ஏறி அனுமானை சிலகணையாற்களை செய்தான் நேரில் எழுந்த அனுமன் புயந்தம்பி நின்று கணைசில பெய்தான் கூரிய வாளிகளால் அரக்கன் அந்த குரங்குப் படைசிந்த அடித்தான் வாரி அம்பால் தம்பி அரக்கன் சேனையை மண்ணோடு மண்ணாக மடித்தான் தேர் வலங்கொண்டு சுற்ற அனுமான் இடங்கொண்டு தந்த அவன்தேர் வானில் உலாவ அனுமான் விடேன் என்று தாவ இருவர்கை வாழி நெடுங்கணை எங்கும் நிறைந்திட மலைகளெல்லாம் வெந்து நீறாய் இறைந்திட எழுகடல்நீரும் வற்றிக் குறைந்திட எட்டுத்திக்கும் தெரி யாமல் மறைந்திட எங்கும் புகை முட்ட எங்கும் தணல் கொட்ட இரவுபகலாக நிருதன் மனம் நோக ( அஸ் ) - 

அவன் 2. இளையான் மேற்பின்னும் அரக்கன் சீறி இருபத்தைந்து கணை விடுத்தான் தொளையா அவன்மார்பும் கவசமும் தம்பி தொளைத் தோட ஓர் கணை தொடுத்தான் களையாய் அவன் அனுமான் மேல்ரத்தம் காணச் சிலகணை விதைத்தான் வளையாவரும் அனுமான் அவன் தேரினை மளுக்கென் றொடியவே உதைத்தான் - மற்றொன்றில் ஏறிஐயன்மேலே பத்தம்பைத் தூறிவிடத்தம்பி வடிக்கணை சிந்தி அவன் அதைத்தடுக்காமல் முந்தி- போட்ட அவன் மந்தரத் தோளை ஓர் அம்பால் தொளை செய்ய மற்றோர் அம்பாலவன் தேரைவிழச் செய்ய நொந்தரக்கன் ரத்தம் கக்கி அவசத்தில் நூறுபத் தம்பெய்யத் தம்பி கவசத்தில் நுழையாம லேவிண்டு பழுதாய் விழக்சுண்டு நுங்கிய வன்பிந்த எங்கும் தன்கை முந்த ( அஸ் ) 
3. சிந்தச்சிலகணை அரக்கன் பின்னுமந்தச் சேவகன் மார்பினில் புந்திமகிழ்தம்பி அரக்கன் மணிநெற்றி புதையச் சிலகணை தூற்றினான் ஏற்றினான் அவன் இந்தவில் அந்தமாயவன் வில் இவன் ஈசனும் என்றவன் கூசினான் அந்தவேளையில் விபீஷணன் தம்பியை அரக்கன் மேல்முடுகென்று பேசினான் அவன் அக்கினி அஸ்திரம் வித்தம்பி அக்கினி அஸ்திரம் விட்டே ஆதித்தன் அஸ்திரம் விடத்தம்பி ஆதித்தன் அஸ்திரம் விட்டேவிசை ஆகப்பின்னும்சில அம்பைப் பொழிந்திட அணி அணியாய் நின்றதேர்கள் அழிந்திட ஏகத்தில் வந்த கெசங்கள் படிந்திட இராட்சத வீரர்கள் ஆரும் மடிந்திட இற்ற துண்டங்களும் அற்றமுண்டங்களும் லங்கையிற் போய்விழ மங்கையர் கண்டழ ( அஸ் ) 

கொய்தான் தன் 4. ஆரணன் அஸ்திரம் அவன்விடச்சிவன்ஆயுதத்தால் தம்பி 
காரணன் சூலத்தை அவன்விடத்தம்பி 
கைச்சூலத்தாற் பொடி 
செய்தான் 
நாரணன் அஸ்திரம் தொட்டரக்கன் எங்கும் 
நடுங்கிடவேஎய் 
தோக்கினான் 
போரினில் தம்பியை அதுவலஞ்செய்து 
போகக் கண்டேபயம் 
தேக்கினான் 
புத்தியும் கெட்டான் தனக்குள்ள சத்தியும் விட்டான் தம்பி செய்த 
போரையும் பார்த்தான் ஓடி ஒளிக்க ஊரையும் பார்த்தான் - அதுக்கும் 
போக்கிடம் இல்லாது பார்த்து 
மெலிபட்ட 
போதினிலே அந்தப் பாதகன் மேற்போட்ட 
வாக்கிஐயன் அம்பு போடக் களைப்பட்டு 
மார்பும் கரங்களும் தோளும் தொளைபட்டு 
வல்லரக்கன் பக்கம் எல்லாம் ஒருலட்சம் 
சல்லடைக் கண்ணாகச் சில்லிகளாய்ப் போக 
( அஸ் ) 

இந்திரசித்து விபீஷணனர வயிற்றெரிச்சலாலே ஏசுதல் 
சில்லிகளாய்ப்போன இந்திரசித்தனவன் அழிந்ததொரு தேர் மேல் நின்று 
கல்லின் மழையென அம்பு பொழிந்தங்கே வீடணனைக் கண்டான் எம்மைக் 
கொல்ல நிகும்பலை கெடுத்தாய் அரக்கர் குலத்தையும் கெடுத்தாய் 
கோளினாலே 
எல்லவரையும் கெடுத்தாய் என்று வசை பேசுவான் ஏசுவானே  


பல்லவி 
சிற்றப்பா நீதான் இத்தனை அபகீர்த்தி 
பெற்றதே போதும் அடா 
( சிற் ) 

அநுபல்லவி 
சத்திய விபீஷணன் என் 
றெடுந்தாயே 
பேர்நான் 
சமைத்த நிகும்பலையும் 
கெடுத்தாயே 
வற்றல் மனிதர்க் காளாய் 
போனாயே ஐயோ 
வளர்த்த கிடாக்கையில் பாய்ந்தாற்போல் 
(சிற் ) 
ஆனாயே 

சரணங்கள் 

1. விநயம் சொல்லிமாயப் பூனைவேஷம் கொண்டாய் 
வேருடனே எங்களைக் 
கெல்லவோ - நாங்கள் 
அனைவரும் இறந்தபின் ஓராண்காணியா 
அரசாள லங்கையிற் 
செல்லவோ 
தினமும் ஒருகலத்தில் உண்டும் இப்படிசதி 
செய்தாய் பாவந்தீரச் 
சொல்லவோ அற்ப 
மனிதர்க்குப் பஞ்சையாய்ப் பணியும் செய்கிறாய்உயிர் 
வைத்திருக்கிறதிலும் செத்தாற்குணம் அல்லவோ 
( சிற் ) 


2 மாடுமேய்க்கிறாய்ப் போலே தடிகொண்டு திரிகிறாய் 
மானமும் லச்சையும் 
துறந்தாயே னி 
சூடும்முடி பெற்றாலும் சின்னமனிதர்க்கு நீ 
தொண்டன் அல்ல என்ன 
சிறந்தாயோ 
தேடி நம்மை வணங்கும் பேரை நாம் வணங்கினால் 
சின்னத்தனம் என்பதை 
மறந்தாயோ - உன்னுடன் 
கூடப்பிறந்தவனைக் கொல்லென்று கோட்சொல்லி 
குடிகெடுக்க வென்றிந்தக் குலத்தினில் பிறந்தாயோ ( சிற் ) 

3 பாரளலாம் என்று மனப்பால் குடிக்கிறாய் 
பஞ்சை உன்னால் அது 
தள்ளுமோ 
இந்த 
ஊரில் வாராதுக்கு வழிஇட்டாயோ உனக் 
ஒருக்காலும் வசையிது 
விள்ளுமோ 
நீருள்ள மட்டுக்கும் மீனும் துள்ளும் அந்த 
நீரேபோனால் மீனென்ன 
துள்ளுமோ 
பேராம் ராட்சத ரெல்லாம் போய் நீ ஒருத்தனும் 
பிணந்தின்னும் பூச்சி போல் இருந்தால் கனம்கொள் 
வெகு 
மோ 
( சிற் ) 

விபீஷணர் இந்திரசித்துக்கு எதிர்மொழிதல் 

ல்லாம் மூடன் இந்திரசித்தன் இவ்வாறுரைக்க உரைத்ததெல்லாம் 
செல்லா தடடா தருமமும்சத் தியமும் நானே கைக்கொண்டேன் 
பொல்லாப் பாவம் கைக்கொண்டாய் போவாய் உருண்டுபோ வாய்என் 
றல்லார்மேனி விபீஷணன்எச் சரிப்பான் மறுசொல் உரைப்பானே 

பல்லவி
துஷ்டப்பயலே இந்திரசித்தே என்ன 
சொன்னாய் அடாபயலே 
( துஷ்) 
அநுபல்லவி 
இஷ்டமாம் எனக்கு 
ராமன்பதமே சொந்தம் 
எனக்கும் உங்களுக்கும் இனிமேலே என்னடா தொந்தம் ( துஷ்)  

சரணங்கள் 
மன்னராகி முன்பின் தர்மம் துணையில்லாமல் 
வாழ்ந்தவர் 
எவர்தாமோ 
தன்னிலே குதிக்கிறாய் பாவம் சாம் அல்லாமல் 
தருமம் என் 
பது சாமோ 

2 சிந்தை வஞ்சனை செய்யேன் புலைசெய்யேன் கொலைசெய்யேன் 
தெய்வம் என்னை 
ஒறுக்குமோ 
அந்தபுத்தி உங்களுக் கிருந்தால் வரவர 
ஆதிக்கமும் 
சிறுக்குமோ 
என்தாய் சீதைமேல் ஆசையுன் அப்பனுக்கு 
இன்னந்தான் 
வெறுக்குமோ 
இந்தப் புத்தியினாலே இலங்கைச் செல்வமெல்லாம் 
இழக்கலாச்சே நாய்க்கு முழுத்தேங்காய் பொறுக்குமோ ( துஷ் ) 


3. கொடும்பாவம் என்னசெய்தே னோ நானுங்கள் 
குலத்தில் வந்துடம் 
பெடுத்தேன் 
கடந்து போகவேண்டி உங்களைக் கடலிலே 
கையைக் கழுவி 
விடுத்தேன் 
மடங்க ராவணனுக்கு எத்தனை புத்திகள் 
வகை மணியாத் 
தொடுத்தேன் 
அடங்காப் பாம்புக்கு ராசா மூங்கில் தடி 
மென்ற வனைவிட்டு ராமன் தனை அடுத்தேன் 
( துஷ்) 

இந்திரசித்து தகப்பனுடன் முறையிடுதல் 
எதிர்கொண்டிவ் வார்த்தை சொன்ன வீடணன் 
மேல் 
அம்பொன்றை எய்தான் அத்தைக் 
கதிகொண்ட தம்பிகொய்தான் வேலெய்தான் 
அத்தையும் அக் கணத்திற் கொய்தான் 
முதிகொண்ட கோபமுடன் சொர்ச்சனையிட் 
டொளிந்திலங்கை மூதூர் சேர்ந்தான் 
குதிகொண்டான் அப்பன் முன்னே முறைபட்டான் 
இந்திரசித்தன் குறைபட்டானே 


பல்லவி 
அய்யா ராவணா என்னால் சண்டை 
ஆகா தாகாதையா 
( அய் ) 
அநுபல்லவி 
நொய்யாம் மனிதர்கை அம்புகளாலே 
நொந்தேன் ஒளிந்தோடி வந்தேன் இனிமேலே 
( அய் ) 
சரணங்கள் 
1 . வட்டவார் உலகினில் தம்பி 
பிறக்கத்தறை 
மட்டம் ஆச்சுதென்பார் உனக்கே அந்தக்கறை 
கிட்டியுன் தம்பி என் வேள்வியைத் 
தடுத்தானே 
கெடுத்தான் 
கெடுத்தானே 
திட்டமானதொரு பிரம்மாஸ் 
திரம்போட்டும் 
சிவன்படை யுடனேகே சவன்படை தன்னைவிட்டு 
குட்டிக் கரணம் போட்டென்னாலே ஆனமட்டும் 
குதித்தும் குடத்திலிட்ட விளக்காச்சே என்னப்பட்டும் ( அய் ) 
2. ஆரும் அறிவாரே என் 
கைவில்லை 
ஆண்டவன் காரியத்தில் சற்றுவஞ் சனையில்லை 
தாராளமா அடிக் டி போய் 
நின்றேன் 
சகல பேரையும் 
கொன்றேன் 
வாராஉயிர் வந்து வந்து 
கிளைக்கிறார் 
வறுத்த பயிர்எழுந்து முளைத்தாற் போல் முளைக்கிறார் 
தீராப்பழி கொண்டோம் ஆரைவிட் டதுசனி 
தெய்வபலமும் இல்லை செய்வதுண் டோஇனி 
( அய் ) 
3 நீதி யாகநாம் ஏன் செல்வம் 
செருக்கிறோம் 
நீயும் நானுமல்லவோ தப்பி 
இருக்கிறோம் 
ஏதோபலம் வரவர 
அடங்குதே 
எடுத்த அடி 
மடங்குதே 
ஆதலால் அவர் முன் என் சூதெல்லாம் விட்டுப்போட்டேன் 
அங்கே இன்னம் போனால் இங்கே வரமாட்டேன் 
சீதையை விடுவது காரியம் 
அப்பாலுன்றன் 
சித்தத்துக்குச் சரிபோன 
படி என்றன் 
( அய் 


இந்திரசித்தை இராவணன் உதாசனித்தல் 

னங் கொண்டிப்படி தன் பிள்ளை இசைத்திட இலங்கை வேந்தன் 
கனங் கொண்ட தணல்வாய் நெய்யைக் கவிழ்த்தது போலே கொண்டான் 
மனங்கொண்ட பயத்தாற் சொன்னாய் மனிதரோர் பொருட்டோ என்ன 
சினங்கொண்டே இந்திரசித்தைச் சீறுவான் கூறுவானே . 

பல்லவி 
என்னபுத்தி சொன்னாய் அடா இந்திரசித்தேநீ 
என்னபுத்தி சொன்னாய் அடா 
( என் ) 
அநு பல்லவி 
என்னபுத்தி சொன்னாய்நீ சின்ன மனிதர்க்கஞ்சி 
என்னுடனே முறையிட் 
பட்டாயே நீ கெட்டாயே 
பயப்டாயே 
( என் ) 


சரணங்கள் 

1. ஆனாலும் உவமையவள் கோனாளும் கயிலையை 
மேனாளில் எடுத்த னகத் 
தலம் போச்சேரி 
நானே செய்ததற்கு நீதானோ பயலே நீ 
போனாலும் என்னஎன் 
குலம் போச்சோ 
படைக்கலம் போச்சோ . மூலபலம் 
போச்சோ ( என் ) 
2- சோருவேனோ மனிதர் ஈருயிரையும் அடி . 
வேருடனோ கல்லிப் 
பறியாமல் 
தீரும்போதும் ராமன் பேரும் என் பேரும் எல் 
லாரும் சொல்லிக் கொள்வாரே 
பிறியாமல் 
இத்தை அறியாமல் முன்பின் 
குறியாமல் ( என் ) 
3. செயமான கீர்த்தியை முயலாமல் மனிதர்க்குப் 
பயமாய் அபகீர்த்தியைத் 
தொடுவேனோ 
கையாலகாதவன் போலே மயில்போலும் சீதையை 
உயிரோடே நான் இனி 
விடுவேனோ 
முதுகிடுவேனோ சும்மா 
படுவேனோ ( என் ) 


நாலாம் முறை யுத்தத்தில் இந்திரசித்தன் வதை 

தவறுபடா திடிக்கும் ஒரு தலைவ லிக்குத் 
தலையணையை மாற்றிப்போட் டாற்போமோ என் 
உவமையிது என்மகன்வார்த் தையைக் கேளாமல் 
உறுமும் இராவணனை விட்டான் ஊரைவிட்டான் 
கவனமொடா யிரங்குதிரை கொண்ட தேர்மேல் 
கடற்படையும் தானும் போர்க் களத்தில் வந்தா ன் 
பவனெனும் லட்சுமணன் அம்பு பாயப்பாயப் 
பாய்ந்திட்டான் இந்திரசித்து மாய்ந்திட்டானே 

பல்லவி
விழுந்தானே இந்திரசித்தன் 
ஒழிந்தானே மண்மேல் 
( விழு ) 
அநுபல்லவி 
இழந்திட்டோம் இலங்கையை எனமனம் 
அழுந்தத் தழுவி அப்பன் ஆசையை 
எழும்பிப் பரிகளாயிரம் கொண்டதேர் 
குழைந்த தம்பிகை அம்பாற் கிழிந்திட்டு 
பிண்டுபிண்டு 
விண்டுவிண்டு 
மேற்கொண்டு 
வதையுண்டு 
( விழு ) 


சரணங்கள் 

1 நிறையக் கணைதொடுத்தார் இரண்டுபேர்களும் 
நெறநெறென்று சொரி 
மழை போலே 
பிறகவன் தேரையும் சாரதி தலையையும் 
பிளந்தானே தம்பி 
அதன் மேலே 
உறுதியா அரக்கன் கல்லின் மழைபொழிய 
உருண்டதே குரங்குகள் 
ஒருகாலே 
கறுவி இளையவன் ஒருகணை விட அந்தக் 
கணைவந் தரக்கன்மேற் 
படலாலே 
மறையும் கவசம்பிளந் துடம்படங்கலும் தைத்து 
வடிக்கணை ஒன்றாலவன் விடும்சிவன் சூலம் இற்று 
பிறையைப் பாம்பு தொட்டுத் தறையில் விழுவதொத்து 
பிடித்த வில்லுடனவன் இடக்கையும் கூட அற்று 
( விழு ) 
2 வடிக்க 
அடிக்க 
வளர்த்த தாயாரும் பெண்களும் இலங்கையில் 
வாய்விட் டழுதுகண்ணீர் 
ளைப்பிலா இரை வந்ததென்று பேய் 
எழும்பி எழும்பிக் கொண்டான் 
ஒளித்ததிருட்டரக்கன் வருகிறான் என்றுதேர் 
ஓசைகொண்டு தேவர்கிலி 
கிளைத்த மலைபோலே ஆகாசத்தில்வந்து 
கெர்ச்சித்தானே அண்டமும் 
செளைப்பில்லா மல்வரும் சேனை 
திக்கிலும் லட்சுமணன் கைக்கிரை 
குளத்தைக் குழப்பியங்கே பருந்துக் 
கொடுத்தாற்போல ரக்கரைக் குரங்குக்கே 
பிடிக்க 
வெடிக்க 
களைஎட்டு 
ஆகவீட்டுக் 
கிரையிட்டுக் 
இட்டுபட்டு 
( விழு ) 

3 நித்தியமாவது வேதவிதிவச 
னத்திலே சொல்லும் 
பொருளொன்று 
சித்தியாவது வேதியரைத் தெரி 
சித்து வருகிற 
தேதென்று 
கர்த்தனும் ரகுராமனேபர 
தத்துவ மாய் அவன் 
சத்தியம் எனில் இந்திர சித்தன் தலைநிமி 
ஷத்திலே கொண்டு 
வாவென்று 
அர்த்தசந்திர பாணம் அய்யன் தொடுத்தாற் போலே 
அற்றதே அவன் தலை ., எற்றி விடுத்தாற் போலே 
தத்துவமுனி வர்க்கெல்லாம் வெற்றிதொடுத்தாற் போலே 
தளரும் ந்திராதியர்க்குக் களைஎடுத்தாற் போலே 
வேறன்று 
( விழு ) 


இந்திரசித்து வதை ராவணன் கேட்ட இடத்திலே புலம்பல் 

இந்திரசித்தன் இந்தவிதம் விழுந்தான் தேவர் 
இரக்கத்தால் குரங்கினத்தார் எழுந்தார் தம்பி 
வந்தனு மானுடன் போனான் சாமிகாலில் 
வல்லரக்கன் தலை தன்னை அங்கதனும் வைத்தான் 
தொந்த விபீஷணனை ஐயன் மகிழ்ந்தான் அப்பால் 
தூதர் இராவணற்குப் போய்ச் சொன்னார் சொல்லப் 
பந்தம் எரிந்தாற் போலே மகனை எண்ணிப் 
பத்துவாயா லுமவன் கத்துவானே 


கண்ணிகள் 
ஒருவாயால் 
1. மந்திரியே என் துரையே மகனே 
மகனே என்பான் 
இந்திரசித்தே இந்திரசித்தே என்று 
இரைந்தழுவான் 
ஒருவாயால் 
ஒருவாயால் 
ஒருவாயால் 

2. இகத்தில் என்னைத் தவிக்கவிட்டு நீயும் 
இறந்தாயோ என்பான் 
முகத்தை இனிக்காண்ப தெப்போதே 
என்று முறையிடுவான் 
3. பனிவாழைக் கனிதனிலே முள்ளு 
பாய்ந்தது போலே 
மனிதன் அம்புகள் பாய்ந்த தோ உன்றன் 
மார்பில் என்பான் 
மகனே 
ஒருவாயால் 
மணிமாலை 

4. பரஞ்சேர் இந்திரன் முடிமேல்மகனே 
பறித் தணிந்த 
நரன் காலில் விழ ஆச்சே இந்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 

5. துள்ளும் முசலாலே சிங்கம் பெரும் 
துரவில் விழுந் 
பிள்ளை மனிதன்கை அம்பாற்பட்டுப் 
பிரண்டாயோ என்பான் 
ததுபோலே 
ஒருவாயால் 

6 . னைக்கால 
ஈசன் முதலார் படைகளும் உமி 
எனப்போ மேஉன் 
பாசமது தீண்டிடுமோ இப்போ 
பதறி என்பான் 
ஒருவாயால் 

7 . யும் வென்று 
அரனையும் மாயனையும் வென்றுதிக்கில் 
அஷ்டகெ சங்களை 
நரனுக்குத் தோற்றிட லாச்சோ இத்த 
நாளில் என்பான் 
ஒருவாயால் 

8 . மன 
யேமகனே 
மலைகலங்கினாலும் சற்றே உன்றன்து 
கலங்கா 
நிலை கலங்கி விழுந்தாயே இந்த 
நிலத்தில் என்பான் 
ஒருவாயால் 


இந்திரசித்துக்காக ராவணன் களத்திலே புலம்பல் 

என்றழுது களம்பார்க்க நடந்தான் பிள்ளை 
இடதுகையும் வில்லுமற்றுக் கிடக்கக்கண்டான் 
சென்றெடுத்தான் முண்டமாம் உடம்பைக் கண்டான் 
சிரங்காணான் இரங்கினான் உலகம் மூன்றும் 
வென்றநான் இந்த அலங் கோலம் பார்க்க 
விதித்தாயோ என்மகனே மகனே என்று 
கன்றிழந்த பசுப்போல வாயை விட்டுக் 
கதறினான் ராவணனும் பதறி நானே 


பல்லவி 
மசனே இந்திரசித்தே நான் 
மனதெப்படித் துணிவேன் 
( மக ) 

அநுபல்லவி 
இகம்பேமல் நானொரு பெண்ணா சையைத்தொட்டு 
என்னுயிர்க் குயிரான உன்னை இழந்துவிட்டு 
( மக ) 

1. வனமான் ஒருபுலியை அடித்தாற்போல 
மனிதன் உன்னை அடிக்க 
விடுத்தேனே 
கனமும் துரைத்தனமும் தரும் உன்னை என் இரு 
கண்பறி கொடுத்தாற்போற் 
மனிதன் நாளச் சண்டையினில் என்னை 
மயங்கிய நமனும்கைச் சங்கிலி 
னிமேல் இந்திரனும் என்னை நாப்புக் 
இலங்கையிற் சூரியன் தேரை கலங்காமல் 
கொடுத்தேனே 
மாட்டு வானே 
ஆட்டுவானே 
காட்டுவானே 
ஓட்டு வானே ( மக ) 

2 . நாற்றிசையிலும் உன்றன் கூத்திமார் அழக் கண்டு 
நானும் அழுதுதத் 
தளிப்பேனோ 
சீர்த்தியாம் சிவனுக்கும் மாயனுக்கும் பயந்து 
திருடன் போலே இனி 
ஒளிப்பேனோ 
பார்த்தால் இனியிந்த லங்கைத் 
தெருவாரே 
பரியாசம்செய் தென்னைத்துரை என்று 
மருவாரே 
போர்த்தெவரும் வசை வார்த்தைகள் 
தருவாரே 
பெண்டுகள் கூட இனிச் சண்டைக்கு 
வருவாரே ( மக ) 
3. பயமாம் குரங்கினில் ஒன்றும் செத்ததில்லையே 
படுகளத்தினில் நீயே 
செத்தாயே 
நயமா எனக்கு நீ செய்யும் உற்றுரிமையை 
நானே உனக்குச் செய்ய 
வைத்தாயே 
உயிரேேேட மனிதன் கையில் விழுந்த 
பேச்சே 
உலகம் உள்ளமட்டுக்கும் தொலையுமோ இது ஏச்சே 
வயிறும் குடலும்பற்றி மண்டி எரியல் 
வல்லமையும் செல்வமுமெல்லாம் உன்னோடே 
போச்சே 
( மக ) 
ஆச்சே 


இந்திரசித்துக்காக மண்டோதரி புலம்பல் 

எடுத்திந்த வண்ணம் போர்க் களத்தினுள்ளே 
ராவணனும் அழுதுமகன் உடலைக் கொண்டு 
தடுக்கரிய அரண்மனையில் வந்து சேர்ந்தான் 
தாய்மண்டோதரியறிந்தாள் அவன் கால் வீழ்ந்து 
கெடுத்தாயே மகனை என்றொப் பாரி சொன்னாள் 
கெடகெடென்று பிரண்டாள் பின் மகன் மேல் வீழ்ந்தாள் 
அடுத்தமகன் உடலைத்தன் கண்ணீராலே 
அலம்பினாள் பதைபதைத்துப் புலம்பினாளே 

பல்லவி 
ஐயையோ மகனே இனி என் செய்வேன் 
ஐயையோ மகனே . 


சரணங்கள் 

1. கையிரு பதுள்ளஉன்தன் ஐயனைப்போல் மூவுலகும் 
மெய்ம்மை யாகநீயரசு செய்குவை என்றிருந்தேனே 
( ஐ ) 
( ஐ ) 

2. குழந்தைப் பிறந்த அன்றுன் அழுங்குரல் கேட்டிம்மேகம் 
மழுங்கியே நடுங்கிமண் மேல் விழுந்தகீர்த்தியும் பாழாச்சே 
3. தன்னிகர் ஒன்றுமில்லாத உன்னை இவ் உலகத்தில்ஓர் 
சின்னமனிதன் கொல்லவே என்னபாவம் பண்ணினேனோ 
( ஐ ) 

4. அம்புலிவா என்னவந்து கும்பிட்டவன் . மேல்மறுவை 
வம்பிதென் றுரைக்கும் உன்றன் தெம்பை நான் என்றுகாண்பேனோ ( ஐ ) 
5 . கண்னேஎன் கருவூலமே மண்ணோடே மண்ணானாயோ 
பெண்ணாலே கெட்டகுடியாப் பண்ணிவிட்டானே உன் அப்பன் ( ஐ ) 


6 . காட்டுச்சிங்கக் குட்டிகளைக் கூட்டி நீபிடித்துச் சண்டை 
மூட்டும் உன்னுடைவிளை யாட்டை என்றைக்குக் காண்பேனோ 


( ஐ ) 


7. சின்னஞ்சிறு வயதினில் இன்னபடி ஆவாய் என்று 
என்னமா பாவிப்பிரமன் தன்கைஎழுத்தை இட்டானோ 
8. அந்தரங் கிட்டியே அந்த இந்திரனைக் கட்டியே அன்றுன் 
தந்தைமுன் விட்டையேயின்று என் தனைத் தெருவில் விட்டையே ( ஐ ) 


9. கோளும்குண் டுணிப்பேச்சும் நாளும் சொல்லியுன் அத்தை 
ஆளும்பிள்ளையைக் கொல்ல மூளுவித்தாளே யோர்பாவி 
0. இரக்கமாய் உன்தேவியராம் அரக்கியர் கூடிவந்திங்கே 
உரக்க அழுதும் உன் முகம் பரக்கநீ காட்டாதேனோ 

( ஐ ) 

( ஐ ) 


11. ஒக்கலையும் மக்களையும் தக்காமலே செய்தெந்நாளும் 
மக்கிமனம் குலைந்து நான் வெட்கவைத்தானே உன் அப்பன் 
( ஐ ) 

12. இச்சகம் பேசுவோர் வார்த்தை மெச்சி உன் அப்பன் என்றன் 
மச்சினர் சொன்ன வார்த்தையைச் துச்சமாக மதித்தானே 
( ஐ ) 


13 . வீரியம் இல்லாமனிதன் செய் போரில் நீ வீழ்ந்து மக 
மேருவும் வாயுவினாலே வேரற்று வீழ்ந்தாற் போலாச்சே 
( ஐ ) 


14 . துதி செய்து சீதையைவிடத் ததியிதென்று நீ சொல்லியும் 
வீதிவழியிலே உன் அப்பன் மதிபோச்சுதே என்செய்வேன் 
( ஐ ) 


15. ஒப்பில்லாச் சீதையால் நீ இப்படி மடிந்த போதுன் 
அப்பனார் உயிரும் நாளை எப்படி ஆமோ அறியேன் 
( ஐ ) 


16 பெருகும் உன் துயரும் நாளை வருதுயர் தனையும் எண்ணி 
வருதலைக் கொள்ளியள் எறும்பு புகுதல் போல ஆனேனே 
( ஐ ) 


சீதையை வெட்ட நடந்த ராவணனை மகோதரன் தடுத்தல் 

தொடுத்து மண்டோ தரிபுலம்பும் வாக்கியம் எல்லாம் 
சுறுக்கென்று சுட்டிடலும் திடுக்கென்றங்கே 
அடுத்திருந்த அரக்கன் மனம் கலங்கி மக்கள் 
அனைவர்களும் அரக்கர்களும் மாண்டார் ஆசை 
விடுத்தனென்சீ தையைஇனிமேற் கொல்வேனென்று 
வெகுண்டு நடந் தானந்த வேளை இந்த 
துடுக்காமோ ராவணனே இதுபெண் பாவம் 
சொல் என்றா 
றான் மகோதரனும் நில்ஏன்றானே . 

பல்லவி 
இந்தச் சனகிதன்னைக் கண்டிக்க நடக்கிறாய் 
ஏதையா ராவ ணேஸ்வர . T 
( இந்த ) 

அநுபல்லவி 
சொந்த மகன் தலையைப் 
துஷ்டமனிதர் தம்மை 
பந்துபோற் கொண்டு போன 
விட்டுவிட்டேழையான ( இந்த ) 

சரணங்கள் 

1. பொட்டான தேவர்களும் 
நெட்டாங்க மடிப்பாரே 
புலத்தியன் குலத்திற்கோர் பழிகாட்டி இடிப்பாரே 
அட்ட கெசமும் புத்தி 
கெட்டான் என்றெண்ணாதோ 
அரனார் கயிலாசமும் 
பரியாசம் பண்ணாதோ 
சட்டான காலகேயர் 
மேலே எறிந்தவாளை 
கன்னி மேலெறிந்தால் 
குன்னஞ் சொல்லாரோ நாளை 
முட்டாளும் கூட உன்னைச் 
சட்டைதான் செய்வானோ 
மூன்று லோகமும் கட்டி ஆண்டதிப்படி தானோ ( இந்த ) 
2. முடுக்கில் இருந்து கொண்டு 
துடிக்கிறாய் என்ன சாரம் 
முன்கொன்ற மனிதரை 
முனைகொண்டாலல்லோ வீரம் 
அடுத்தாரைக் கெடுக்கிறாய் 
உன்னைப்போல் உண்டோ ஏழை 
ஆயிரம் வேதம் கற்றும் 
நீயே கற்றறி 
பிடித்த கத்தி உறையில் 
அடக்கவேணும் என்சாமி 
பெண்பழி கொண்டால் முனைபங்கம் சொல்லாதோ 
எடுப்பான பேருக் கெல்லர்ம் எடுப்பான நீஉன் மேலே 
எய்தவனை நோகாமல் அம்பை நொந்தது போலே ( இந்த ) 
மோழை 
பூமி 
3. அரியாப் பிர்மாதிகள் 
ஆகிய உனக்கிது 
பெருமையோ சிறுமையோ 
பெண்மேற் கத்தி எடுத்த 
தரும் ஒரு கோபம்வந்து 
சந்தோஷம் வந்தாலும் 
நரரைக் கெலிப் பாய்நாளை 
நகரில் வருவாய்பிற 
யாவர்க்கும் முதல் மூர்த்தி 
ஆகுமோ அபகீர்த்தி 
பாராய் எனது 
சொல்லை 
மன்னவர் எங்கும் இல்லை 
கிணற்றில் விழுந்தா லாயிரம் 
எழும்பப் போமோ சரீரம் 
விருதுகளும் பூணுவாய் 
கிவளை எங்கே காணுவாய் ( இந்த ) 


தூதர் இராவணனுக்கு மூலபலத்தை அறிவித்தல் 

அருந்துணை மந்திரிஇந்த வாறுசொல்ல 
அரக்கனும் வாள்விட்டெறிந்தான் மகன் உடம்பை 
பெருந்தயிலத் தோணியிட்டான் அழைக்கப்போன 
பெருமூல பலசேனை வரவுகேட்டான் 
விரிந்தது அணியணியா புகட்டும் என்றான் 
மென்மேலும் அதுபோக வந்த தூதர் 
தெரிந்தது சொல் வோம்சாமி காதுக்குள்ளே 
சேரென்றார் வகைவகையாப் பாரென்றாரே . 

கண்ணிகள் 
1. தீரா ராவணவீரா விசயம் சேர்இருபது 
தோளாய் 
ஆராகிலும் சொல்லா மூலபலம் இதை அறிந்தது சொல்லக் கேளாய் 
2. சாகத்தீவினில் உறைவார் இவர் வேகத்தை எவர் மொழிவார் 
மேகத்தைக்கூட தாகத்தினாலே நோகக் கைக்கொண்டு பிழிவார் 
3. குசைஎனும் பெருந்தீவோர் இவர் விசயங்கேள் 
ஒரு 
பேச்சு 
வசனம் சொல்லவே இசையும் தேவர்க்கும் அசையுமோ ஒரு மூச்சு 
4. இறலித் தீவினில் உறைவோர் உன் தன் முறைதப்பாமலே திரிவோர் 
திறம்மிக்கோர் இந்தத் தறை முற்றும் சுற்றிமறலிக்கும் கொலை புரிவோர் 


5 . பவளத்தீவினை விட்டோர் இவர் கவனத்தால் 
புறப்பட்டோர் 
அவனிக்கே பெரும் திவலைப் பாற்கடல் சுவறக்காலடி இட்டோர் 


6 . மலையமாமலைத் தீவோர் இவர் தொலைவிலே நின்று வந்தோர் 
சிலையினால் இந்திரன் நிலையும் குலைகுலையவே வசை தந்தோர் 
இவர்கள் கிரவுஞ்சத்தீவோர் இவர் எவரிலும் பிரதாபர் 
அவரிவர் என்றும் பார்த்தாயே ஆகிலும் கொல்லும் கோபர் 


7 


8. கந்தமாதானத் கோளர் இவர் சொந்தமாம் படையாளர் 
அந்தகனுக்கும் அந்தகன் என்ன வந்த பாவ சண்டாளர் 


9. புட்கரப் பெருந்தீவோர் இவர் விக்கிரமம் என்ன செய்யார் 
திக்கசங்களை மற் கொடுங்கையால் வைக்கிறவர் இவர் அய்யார் 


10 . லவமாம ரத்தீவோர் இவர் கலகமே கற்றுப்படித்தோர் 
மலையையும் கடலலையும் சேடன் தலையையும் தூக்கிப் பிடித்தோர் 

சமர்த்துப் பேசிய வன்னியை மாலியவான் இடித்தல் 

மதியுடனிப் படிமூல பலத்தின் சேதி 
வந்ததூ துவர்சொன்னார் அரக்கன் கேட்பின் 
அதிலொருவன் வன்னி என்பான் சீதையாலே 
அடைந்த தெல்லாம் அறிந்தவர் ஆர் வலிஎன்என்ன 
பதறியழும் நோயாளி முகத்தின் முன்னே 
பரிகாரி தலைமாட்டில் அழுகின்றாற்போல் 
எதிர் இருந்த மாலியவான் வன்னிதன்னை 
இடிக்கின்றான் பழமை சொல்லிப் படிக்கின்றானே 


பல்லவி 

வன்னியோசனை செய்வதேதடா அந்த 
மானிடரை வெல்லப் போகாதடா 
( வன் ) 


அநுபல்லவி 

உன்னுட கெருவத்தாலே ஓதுகிறாய் சூதும் வாதும் 
தென்னிலங்கை பட்டபாடு சென்மசென் மத்துக்கும் போதும் 
( வன் ) 

சென்று 
1. கோலமாரீசனும் மானைப்போலவே 
கெட்டான் 
சாலவே கரனும் நொடிவேலை 
யினிலே பட்டான் 
வாலியும் அவர்கை அம்பினாலே 
உயிரை விட்டான் 
நீலவருணனும் ரெத்தினமாலை 
தந்துக்கும் பிட்டான் 
மேலென்ன சானகி என்னும் விஷத்தில் நாம்தப்ப லாமோ 
காலிலே சுற்றிய பாம்பு கடித்தாலல்லது ஒழியப் போமோ ( வன் ) 

2. பண்டு கும்ப கர்னனையும் 
அண்டு அதிகாயன்முடி 
கண்டகன் இந்திரசித்தன் 
ஒண்டி ஒழிந்தோரை நமன் 
மண்டு கடல் வெந்ததங்கே 
மிண்டராம் அரக்கர்க்கினி 
கண்டதுண்ட 
பிண்டுவீழத் 
மண்டைவிழத் 
அண்டையிலே 
வந்ததில்லையோ 
மேலே என்ன 
மாக்கினார் 
தாக்கினார் 
தூக்கினார் 
போக்கினார் 
நெருப்பு 
இருப்பு 
( வன் ) 

பேரடா 
ஊரடா 
பாரடா 

3. முத்தன்வில் ஒடித்தேபிர 
தத்தி ஒரு குரங்கு கொ 
மற்றது சஞ்சீவிதந்த 
செத்தவர் பிழைத்தாலினி 
இத்தலை ஆயிரவெள்ளம் 
புத்தில் ஈசல்போல் மடிந்து 
சித்தமான 
(ளுத்தியதிவ் 
வித்தைஎன்ன 
வெற்றிகொள்வ 
ராட்சதரும் 
போனபிற 
தாரடா 
அவராலே 
கினிமேலே 
( வன் ) 


மூலபாம் கண்டு ஓடின சாம்பவான் முதலோரை மறித்த அங்கதனுக்கு அவன் கூறுதல் 

அரக்கன் இந்தப்படிபாட்டன் வன்னிக் கோத 
அதை மறுத்தான் மூலபலம் தன்னை விட்டான் 
தரைக் கடங்கா ததுவரக்கண்டஞ்சி ஏங்கிச் 
சாம்பன்முத லனைவரும்சா மியைவிட் டப்பால் 
கரக்கநினைந் தலைகடலைத் தாண்டிப் போனார் 
காகுத்தன் அருளாலே அப்போ தந்த 
குரக்கினத்தை அங்கதன் போய் மறிப்பே னென்று 
கூடினான் சாம்பன்உரை யாடினானே . 


பல்லவி 

எங்களால் ஆகாதையா 
மூலபலத்தின் 
எதிர்நிற்கப் போகாதையா 
( எங் ) 

அநுபல்லவி 

அங்கதா உன் தர்மம் எங்கள் மேலேயோ வர்மம் 
அரக்கர்க் கெங்களைக் கொடுக்கத் துடிக்கிறாய் 
( எங் ) 


சரணங்கள் 

1. வினைக்குள் இந்திரசித்தம்பால் பட்ட புண்கள் ஆறி 
வேறே ரத்தம் இன்னம் ஊறவும் இலையே 
அனர்த்த காலம் போற் கங்குகனரகாணாச் சேனைமேல் 
அஞ்சாதே அழைக்கிறாய் 
என்செய்வோம் கொலை யே 
தனுக்கையர் இருவரும் அனுமானும் இவர் முன்னே 
தரிக்கொள்வதே மெத்தப் 
பெரிதவர் 
நிலையே 
பனித்த பஞ்சினிற் பாயும் கனல்போல் எங்களையவர் 
பாய்ந்து கொல்வாரென்றா ராய்ந்துபார்க் கலையே 
கனத்தகும் பகர்னனைத் தின்பானொரு 
அரக்கன் பொறிக்கறி 
போலும் 
கணிதம் இவர்களுக் குண்டோ பெருங்கடல் 
மணலையே எண்ணி 
னாலும் 
உனக்கென் சிறுபிள்ளை ஆலோ 
சனைக்குத் தெரியுமோ 
நாலும் 
ஒட்டும் பாஷையும் இட்டுத்தலை தொட்டென் 
உயிர்க்குப் பிணை நீசொன் னாலும் 
( எங்க ) 

போரோ 
வாரோ 
பாரோ 
ஆகிய 
பேரோ 
2. ஆனரா வணன் தலை பத்து இவர்க்காயிரம் 
ஐந்நூறு தலைகண்டோம் என்னென்ன 
போனவாலியும் கால நேமியும் மாலியும் 
பூச்சிப்போல் இவர்க்கொரு மூச்சுக்கா 
ஈனராகும் இவரை மூவரும் தூர நின் 
றெட்டிப் பார்ப்பாரல்லாமல் கிட்டிப்பார் 
தீனராகிய கொஞ்சம் வானரர் நாமந்த 
தேவர்களிலும் பலம் 
ஊனமா இந்தச் சேனைமுன் விடுத் 
தேன்குழைக்கறிபோல் 
குழைக்கிறாய் 
உற்றபேர்களை கெடுக்கவோ உன் தன் 
சிற்றப்பனோடு நீ 
பிழைக்கிறாய் 
ஆனமட்டும் பார்த்தோமே துரையே 
ஏனோ வீணிலே 
உழைக்கிறாய் 
அறமுறுக்கு கொண்ட புரிபோல் அற்றுவிட 
அறியாப் புத்தியினாலே 
அழைக்கிறாய் 
( எங்க 


3. இனித்தான் அவர்எங்களைத் தொடராமல் அணையைப் போய் 
இடிக்கிறோம் இதற்கு நீ 
தடுத்துக் சொல்லாதே 
சினத்த எருதும் எருதும் போராடி நடுப்புல்லை 
தேய்த்தாற்போல் எங்களை 
ஏய்துக் கொல்லாதே 
னத்தோடே நாங்கள் எல்லோரும் போய் அவர் கையில் 
இறக்கும்மட்டும் உனது 
பறப்பு நில்லாதே 
தனித்துத் தாய் வயிற்றினில் செனிக்கையிலே இவர் 
சதியும் மாயமும் கற்றோர் 
அதுவுமல்லாதே 
பனிப் பெருக்கிலே கப்பலோட்டிட 
நினைக்கிறாய் நீ 
சொன்ன 
படிக்கு நடக்குமே குரங்குப்பிடியே 
பிடிக்கிறாய் பன்னப் 
பன்ன 
அனுப்பினால்எழு பதுவெள்ளமும் ஒரு 
வனுக்குப் போதுமோ 
தின்ன 
அருந்தத் தழையுண்டு உறங்க முழையுண்டு 
அரக்கர் ஆண்டென்ன மனிதராண் 
டென்ன 
( எங்க ) 


அங்கதன் சாம்புவந்தனை இடித்தல் 

இரங்கிச்சாம்பன் முதலானோர் இவ்வாறுரைக்க நீங்களென்ன 
உரங்கெட்டீரோ படைக்கஞ்சி ஓடல் ஆமோ சூரனுக்குத் 
துரும்பத்தனையே சீவன் எனச் சொல்வாரிலையோ வாருமென்று 
பரிந்தப்போ தங்கதன் நீதி படிப்பான்சொல்லி இடிப்பானே . 

பல்லவி 
என்னகாரியம் எண்ணினீர் சாம்பவரே - நீர் 
என்ன காரியம் பண்ணினீர் ( என் ) 
அநுபல்லவி 
ஆச்சே 
தன்னவர் என்றும்மைச் சாமி சொன்னதும் 
போச்சே 
சாமித்துரோ கி என்று பூமிக்கும் பேர் 
பனும் அங்கதன் என்சொல் எண்ணாமல் 
ஒதுங்கிறீர் 
படைக்குப் பயந்திப்போது செடிக்குள்ளே பதுங்கிறீர் ( என் ) 


சரணங்கள் 

1. பேய்த்தனமாகவே இகத்துக்கும் பரத்துக்கும் 
பிரட்டன் என்று சொல்லக் 
கேட்டீரே 
பிராணன் போனாலென்ன மானம் போகலாமோ நம் 
பினபேரைப் போரிற்கை 
விட்டீரே 
ஏற்றராமன் ஆதிமூர்த்தி என்றீரே 
இங்கே ஒளிக்கத் தலைப் 
பட்டீரே 
இளந்தை அல்லவோ நீர் எல்லாம் தெரிந்திருந்தும் 
காடிப்பானையிற் கையை 
இட்டீரே 
ஆத்திரமோ அவர்க்கென்ன உங்களைத் 
தொட்டு 
அழித்தவாலி ஓர் அம்பால் விழுந்தானே தலை நட்டு 
சாத்திரமோ ஓடல் ஆமோ முது 
கிட்டு 
சாகிறபேருக்குச் சமுத்திரம் முழங்கால் 
மட்டு . 
( என் ) 

2. திடுக்கென்று போமிந்த பாழும் சரீரத்தை 
ஸ்திரமென்றங்கே எண்ணம் 
பெற்றீரே 
சீவன் போனாலென்ன கீர்த்தியும் உடன் போமோ 
தெரியாமல் நினைவெல்லாம் 
செத்தீரே 
அடுத்தபேரைக் கொல்லும் விஷமான நீங்களும் 
அமுதம்போற் சாமியை 
உற்றீரே 
அன்பெல்லாம் வெளியாச்சே மண்குதிரையை நம்பி 
ஆற்றில் இறங்கச் சொல்லி 
வைத்தீரே 
முடுக்கி வாரும் உயிர் கொடு துப் பழி 
ஒழிப்பீர் 
முன்னொன்றும் பின்னொன்றும் செய்தவசை கழிப்பீர் 
நடுக்கிஓடி நற்பேர் எடுத்தெப்படி 
செழிப்பீர் 
நாயகன் முகத்தினிமேல் எப்படி 
முழிப்பீர் ( என் ) 

3. நால்வரும்போற் சண்டை பார்ப்பதல்லால் உண்டோ 
நம்மாலே சாமிக்கு 
லவலேசம் 
நமக்குத்தான் அபகீர்த்தி சுமக்க நாயமோ னி 
நாளைக்கெப்படி செல்லும் 
விசுவாசம் 
மேல்கீழ் ஆனாலும் ஐயன்வில் இருக்க 
மிஞ்சி நமக்குவரு 
மோ மோசம் 
வீரர் என்று சும்மா பேர் கொண்டீரே ஐயோ 
வேண்டாமோ அணுவாகி 
லும்ரோஷம் 
சாலம்செய் தோடினால் நம்மைத் தடுப்ப 
தாரோ 
சதி செய்யும் பேருக்கு சமர்த்தன் என்றும் 
பேரோ 
நீல அரக்கர் கெடுங்காலம் என் 
யீரோ 
நில்லாது வாருங்கள் நிலைகடந்துபாய் 
வாரோ 
( என் ) 
ற்றி 
மூலபலச் சண்டை 
ஓதியிவ்வா றங்கதன்சொல் உரைக்குச் சாம்பன் 
உடன்பட்டான் அங்கு தம்பி முதலானோர்கள் 
நாதனுரையா லவரைக் கூடப் போனார் 
நாலுசமுத்திரமும் ஒன்றாய் வளைத்தாற்போலத் 
தீதுசெய்யும் மூலபலம் எதிர்க்கக் கண்டான் 
சீராமன் கோதண்டத்தினை நாணேற்றிக் 
காதளவும் வாங்கி இதெம் மாத்திரம் என்று 
கருசித்தான் சரமாரி வருஷித்தானே . 

பல்லவி
மூலபல சண்டையைக் கேளும் - ஸ்ரீராமன் செய்த 
மூலபல சண்டையைக் கேளும் 
( மூல ) 
அநுபல்லவி 
மூலபல : சண்டைகேளும் 
மூடன் ராவணன்குடி 
முவ்வுலகக் கிளைஞர்க்கும் 
முந்த உபசாரம் பண்ணிப் 
முன்னரக்கர் நம்பினோர் 
முக்கிய தேவாந்தகன் 
முடிபெறும் சூரியகேது 
முனைபெற்ற சம்பு மன்னன் 
முதுபோர் இடும்பன் அகம்பன் 
முச்சிரத்தரக் கன்சங்கன் 
முகை கும் பருதிக் கண்ணன் 
முதல் வீரர் முடிந்தனர் 
முழுதும் நெஞ்சு காய்ந்தது 
முற்றுயிர் கொடுக்கும் பேர்கள் 
முடவர் முதலாக இன்று 
மூயவிட்ட தூதர் செல்லப் 
வேலைசூழ் இலங்கை ஆளும் 
கேடன் ராவணன்கெடி 
எவ்வுலகத்த வுணர்க்கும் 
பிந்திட விசாரம் எண்ணி 
தன்னொடத்த தம்பிமார் 
உக்கிர நாராந்தகன் 
கெடிபெறும் யாககேது 
ரணமஸ்தன் கும்பகர்னன் 
அதிகாயன் கும்பன் நிகும்பன் 
வச்சிரத் தெயிற்றன் வங்கன் 
புகைக்கும் குருதிக் கண்ணன் 
சதிமாரும் மடிந்தனர் 
பழுதுவந்து நேர்ந்தது 
கத்தி என்றெடுக்கும் பேர்கள் 
கடுகிவர வேணுமென்று 
போஎவர்க்கும் சேதி சொல்ல 
முந்தி லங்கையை நாடி 
வந்து துக்கங்கொண்டாடி 
முண்டாக்கன் தன்னைத் தேற்றி சண்டையை உட்கொண்டு தோற்றி 
மூளும்கனல் போலேபற்றி 
ஆளும்கள மேலேசுற்றி 
மூடவும் பூமியசைந்தாடவும் தேவர் அஞ்சி 
வாடவும் வானரர்கண் டோடவும் தேடிவந்த 
( மூலபல ) 

சரணங்கள் 

1. அஞ்சு முகங்கள் ஈர் 
ஐம்பது தலைகள் ஈர் 
ஐந்நூறு முடிகள் ஈர் 
ஆயிரம் சிரங்கள் இரண் 
அங்கம்மிகு காத்திரங்கள் 
அலைபோலும் நாக்குகள் 
ஆவெனத்திறந்த வாய்கள் 
ஆகாசம் தொட்டகைகள் 
அடரக்கறு சுறுத்தும் 
அண்டத்தில் உள்ளோர் நவ 
அஞ்சுனக வெற்பங்கள் 
ஐம்பது புசமலைகள் 
ஐந்நூறு தோள் அடிகள் 
டாயிரம் கரங்களுடன் 
பொங்கும் பொறி நேத்திரங்கள் 
மலைபோலும் மூக்குகள் 
தாவெனப்புகுந்த ஈய்கள் 
ஏகாசம் இட்டமெய்கள் 
படையைக் குறிகுறித்து 
கண்டத்திலுள் ளோரெல்லாம் 
அடியோ டெழும்பி அந்தக் 
அரும்பார்க்குள் நிறைபட்டாற் 
பெரும் போர்க்குப் புறப்பட்டாற் 
கடல் ஏழும் பொங்கி இந்த 
போல் 
புற்றினில் ஈசல் 
போல் மலைமலைகள் 
ஆனபெரு ராட்சதர்கள் 
அனைய பெருமத்த கெசங்கர் 
தனி விருது பெற்ற துசங்கள் 
மானமளவா நிறைந்து 
தேவரைவென்று 
- கணக்கில்லாத 
அண்டபகி ரண்டமுட்டும் 
அளவும் காத்திர ரதங்கள் 
வளரும் போர்த்துர கதங்கள் 
எண்டிசை அகன்றமட்டும் 
கண்களிற்பொறி 
முறைமுறையா 
ஆற்று மணல் அளவிட்டே நட் 
அதிகக் குதிரைக் கூட்டம் 
பதறிக் கொள் ஆட்ட பாட்டம் 
சேத்திரம் அளவிட்டாலும் 
திக்குகளெல்லாம் 
கைக்கடங்கள் 
ஆகம் அணிபதக்கங்கள் தோள் 
வளைகள் கால்வளைகள் 
அக்குமணிக் குண்டலங்கள் 
மணியிழைத்த 
பொற்கொலுசு வெண்டையங்கள் வெற்றிக்கொடிகள் 
ஆலவட்டம் தாலவட்டம் 
அவுதாக்கள் முத்துக் குடைகள் 
கவிகைகள் சித்திரக் குடைகள் 
சாமரங்கள் சுருட்டிகள் 
- பீலிக்குடைகள் 
- வெயில் மறைக்க 
அதிவித நாதசுரம் தவிலொடு 
தாரை சின்னம் 
அறைந்த சங்குகள் எக்காளங்கள் 
கர்னாவொடு 
சிறந்த கொம்புகள் கைத்தாளங்கள்- துத்தாரிகள் 
ஆகுளிகள் மேளங்கள் 
ஐந்துவித பேரிகைகள் 
பம்பையொடு பூரிகைகள் 
காகளம் டமாரங்கள் 
வீராணங்கள் 
முழங்கிவர 
அங்குசங்கள் பரிசைகள் 
அஸ்திரம் வேலா யுதங்கள் 
சஸ்திரம் சூலா யுதங்கள் 
சங்கிலியின் வரிசைகள் 
-வல்உலக்கைகள் 
- இப்படிக்கொத்த 
ஆயுதத்தின் பேதங்கள் 
அங்கைகொண்டு சூழ்ந்துவர 
கங்கு கங்காப் பாய்ந்து வர 
கோடிகோடி பூதங்கள் 
பேய்களும் கொண்டு 
புலி இறைச்சி 
ஆட்டிறைச்சி மானிறைச்சி 
அலகைகள் கொடுத்துவர 
பலபேய்கள் எடுத்துவர 
மாட்டிறைச்சி நாயிறைச்சி 
மதுக்குடங்கள் 
கெக்கலிகொட்டி 
அண்டமும் அகன்ற நவ 
கண்டமும் கிடுகிடென்ன 
ஆர்ப்பரித்துத் தொடைகள் தட்டி விழிகள் எல்லாம் 
தீப்பறக்கப் பொறிகள் 
கொட்டி ராவணன் சொன்னது 
ஆரடா மனிதனவன் 
ஆரடா என்றே கத்திகள் 
அடங்கலும் வீசிக் 
கொண்டு ராமன் எங்கே என் 
றிடும்புகள் பேசிக் 
கொண்டு விதம் விதமா 
ஆளிபுலி கரடிகள் 
அரக்கர் மெத்தப் பாய்கு வாரும் 
ரைச்சலிட்டுச் சாய்கு வாரும் 
ஞாளி கழுதைகள் மேலே 
சிங்கத்தில் ஏறி 
சில அரக்கர் 
ஆகத்தினில் அடங்காத 
அங்கையாற் பிடிப் 
செங்கையாற் குடிப் 
பாரும் 
பாரும் 
தாகத்தாலே மேகங்களை 
சலம் பிழிந்து 
அதுக்கிஷ்டயாம் 
ஆரும் வேசாறி அந்த 
அலைகடலை அள்ளு 
சலசலெனக் கொள்ளு 
நீரும் அகப்படாமல் 
வாரும் பெருவாயால் 
வாரும் - கைகளை நீட்டி 
அஷ்டகெசங்களைக் கூடச் 
சுட்டெடுத்துத் தின்னவந்த 
அனல்போற் 
சொறிவரும் 
மரங்களாலே 
தினவுகளைச் சொறிவாரும் - பிறைகள் போலே 
அக்கிரமம் மிகுந்தபல 
ஆவென்று 
கூவென்று 
திறப்பாரும் 
பறப்பாரும் 
உக்கிர தந்தங்களைக் காட்டி 
பசிக்குதையோ 
கழுதைமுகம் 
ஆனைமுகம் புலிமுகம் 
ஆகும் அரக்கர் 
வேகும் அரக்கர் 
அனந்தம் 
அனந்தம் 
பூனை முகம் பரிமுகம் 
கண்கள் நெருப்பா 
சற்றாகிலும் 
அஸ்தத்தில் விரல் இல்லாமல் 
ஆன அரக்கர் 
போன அரக்கர் 
கோடி 
கோடி 
ஒற்றைக்கையும் ஒற்றைக்காலும் 
சொரூபம் கெட்டுப் 
வரைக் கண்ட 
அண்டர்கள் எல்லாரும் நீல 
அய்யா என்றே ஒடுங்கியே 
வையாமலே 
நடுங்கியே 
கண்டனிடம் போய் எப்படி 
உயிர்மேல் ஆசை 
சிவனே இந்த 
அம்புவியற் கடல்களும் 
அரக்கராய் வந்தன 
குரக்கினம் நொந்தன 
பம்புசரா சரங்களும் 
என்று - ஓடி ஒளித்துக் 
நாங்களும் இனி 
இன்று 
அம்பரத்திருக்கும் இந்த 
உம்பருலகத்தை விட்டு 
அப்பாலே செல்லுவோம் என்றார் இருந்தால் இவர் 
தப்பாமல் கொல்லுவார் என்றார் - என்னவே அரன் 
அந்தராமன் சரத்தாலே 
அதமாகிப் போவார் 
சதமாகி வாழ்வீர் 
ன்னய் 
இந்த அரக்கர் எல்லாம் 
நீங்கள் எல்லாரும் 
கேட்டு அமரர்கள் 
என்ன 
அகத்தினிலே முன்னம் 
அகற்றிப் பயங்கரம் விண்டார் 
கித்துத் தயிரியம் 
கொண்டார் 
மிகுந்த துயர்களெல்லாம் 
ராட்சதர் கோரம் 
முனிவரெல்லாம் 
அண்டநிழல் இல்லையென்று 
தண்டு கமண்டலங்கள் விட்டு 
அலங்கோலமாய் வெதும்பினார் தாமரை இலைச் 
சலம் போலவே ததும்பினார் - 
சித்தர்கள் எல்லாம் 
அனந்தம் அரக்கர்க்கொரு 
அளவிடத் தள்ளா தென்பார் 
களமிடம் கொள்ளா தென்பார் 
குரங்கை உரையிட்டாலும் 
இந்த சேனைக்கு 
சாத்தியர் எல்லாம் 
அத்தனை இத்தனை அல்ல 
இத்தனைப் பேர் தலைகளை 
அய்யன் அம்பு கொய்யுமோ என்பார் 
நமது பங்கில் 
தெய்வம் என்ன செய்யுமோ என்பார் வித்தியாதரர்கள் 
ஆயிரங்கோடி அந்தகர் 
ஆகிலும் வரைக் கொல்ல 
அனந்தம் நாள் வேணும் 
என்பார் -- உலகழிக்க 
நினைந்ததோ காணும் என்பார் - கந்தருவர்கள் 
ஆனையும் சேஷனும் இத்தப் 
அங்கத்தைச் சுமந்ததோ 
எங்கிட்டுச் சமைந்ததோ 
என்பார் 
என்பார் 
பூமியும் எப்படி இவர் 
இத்தனை பேரும் 
இவர்கள் இந்த 
ஆச்சரியம் கொள்ளவெகு 
மாச்சரியம் கொண்ட ரக்கர் 
அஷ்ட திசைமேலும் மேவினார் 
- ஆகாசம் என்னும் 
வெட்ட வெளிமேலும் தாவினார் இவரைக் கண்டு 
ஆர்வமுள்ள பதினெட்டு 
வீரரொடு சாம்புவனும் 
அரண்டங் கேநாட்டங் கொள்ளவே நடுநடுங்கிக் 
குரங்கெல்லாம் ஓட்டம் கொள்ளவே இவ்வகை நீசர் 
அடர்ந்து மலையும் குன்றும் 
படர்ந்து ராகவன் முன்னே 
கடந்து நாலு திக்கிலும் 
தொடர்ந்து தொடர்ந்து வந்த ( மூல ) 

2. எட்டி வருவார் சிலர் 
ஈண்டு வருவார் சில . 
ஏறி வருவார் சிலர் 
இரைந்து வருவார் சிலர் 
இடத்தில் வருவார் சிலர் 
எடுக்க வருவார் 
சிலர் 
இடிஇடி என்பார் சிலர் 
கிட்டி வருவார் சிலர் 
தாண்டி வருவார் சிலர் 
சீறி வருவார் 
சிலர் 
விரைந்து வருவார் சிலர் 
வலத்தில் வருவார் சிலர் 
முடுக்க வருவார் சிலர் 
பிடிபிடி என்பார் சிலர் 

எற்றும் எற்றும் என்பார் சிலர் குத்தும் குந்தும் என்பார் சிலர் 
எட்டும் எட்டும் என்பார் சிலர் வெட்டும் வெட்டும் என்பார் சிலர் 
எதிர் எதிர் என்பார் சிலர் மிதி மிதி என்பார் 
சிலர் 
இந்த வகை ராமனை 
வந்து வந்து மென்மேலும் 
ஈய்கள் மொய்துக் கொண்டவகைபோல் பெரும்புலியை 
நாய்கள் சுற்றிக் கொண்ட வகைபோல் சுற்றயில் அய்யன் 
என் சமர்த்தும் ராவணன் 
தன் சமர்த்தும் வந்தபடை 
யின் சமர்த்தும் பார்ப்போம் என்றே - நினைந்து மெள்ள 
புன்சிரிப்புக் கொண்டு கொண்டே நிற்க ராட்சதர் 
எல்லாரும் இவன் ஒரு 
திருக்கும் செருக்கே 
பெருக்க வேணுமோ 
வல்லாள கண்டன் தனித் 
போதும் 
இதிலும் செயம் 
ஓதும் என முதுகில் 
எத்தேச காலமும் 
வற்றாப் பெரும் சமுத்திரம் 
என்ற அம்பறாத்தூணி சாத்தி 
பிரசண்டகோ 
தண்டவில்லை நாணி 
ஏற்றி குணத்தொணிசெய் 
திட்ட போது மும்மதமும் 
ணிருண்ட சிலயானை 
வறண்ட சில யானைகளுக்குச் 
பொட்டெனவே வறண்டுகண் 
களுக்கு தொண்டையும் கூட 
சில யானைமேல் 
இருந்த பாகரைத் தள்ளி 
எடுத்துப் பிடித்தது ஓட்டம் 
விடுத்தது தேவர் கூட்டம் 
வருந்த வதைத்துக் கையை 
பயத்தை யெல்லாம் 
வல்லரக்கர்கள் 
ஏறி வந்த புரவிகள் 
இளைத்துத் தள் ளாடினவே 
உளைத்துள்ளம் வாடினவே 
வீறி வந்த கதிமாறி 
ராட்சதருக்கு 
பின்சாமி முனைந் 
திணையில்லா வெகுசூடு 
எவரும் இறக்க 
அவரும் பறக்க 
கணை ஏவி நின்றவர்கள் 
அடித்தான் 
அப்பாலே நின்ற 
முடித்தான் முடிக்கவே நாம் 
இருநூறு வெள்ளமிவன் 
எனத்திரும்பிக் கூடிக் 
பனிக்குலம் போல் மூடிக் 
ஒரு மானிடன் போகாதீர் 
கொண்டார் சூரியன் முன்னே 
கொண்டார் இவரே நமக் 
கீடெனச் சினந்து காற் 
றாடிபோற் சுழலும் கணை 
இலக்கமற்ற கணை 
தாக்கினான் 
தாக்கி அவரைத் 
தொலைத்து வெட்ட வெளி யாக்கினான் பின்னும் அரக்கர் 
இருநூறு வெள்ளமுடன் 
ஒரு நூறு வெள்ளங்கொண்டு 
ஏகோபித்து முளைத்துக் 
கொண்டார் நெருங்கி வந்து 
மாகோபத்தில் வளைத்துக் கொண்டார் அவரவருக்கு 
ஏறும் வழிமாற வெகு 
நூறுகணை தூறிமுது 
கிட்டோடத் தறித்து 
நின்றான் சிலரைத் தரி 
கெட்டோட முறித்து நின்றான் 
விடவிடவே 
இப்படி அந்நூறு வெள்ளம் 
டெசமானன் வன்னி 
வசமாகியே 
தப்பற முடிந்தது கண் 
என்பவன் மிகவும்பர 
புலம்புவன் அரக்கர் இன்று 
இறந்தனர் எல்லோரும் 
றேக்கமாய்க் கவலை 
மூக்கிலே விரலை 
பறந்தனர் ஐயோ என் 
பெற்று 
குறுகுறுத்து 
வைத்து இனி எப்படி 
ராவணன் முகம் முன் நிற்கப் 
லச்சைக் கேடென்று 
அச்சத்தோடன்று 
போகுவோம் இதென்ன மெத்த 
விளம்பி விளம்பியபின் 
கிளம்பி 
பலதிசையின் 
இரைச்சலை மாற்றி நின்ற 
ஈடழிந்து நொந்த 
ஓடி இங்கேவந்த 
அரக்கரைப் பார்த்து நீங்கள் 
தென்றும் மனிதற்கஞ்சி 
தென்றும் தேவர்கண்டால் 
ஏச்சாகும் இது கொஞ்சப் 
ஏசிடா ஏச்சை 
ரோஷமா வார்ந்தை 
பேச்சாகும் என்றவரை 
ஏசி - சீசீ எனவே 
பேசி அரக்கர் எல்லாம் 
இரைத் தோங்கியே ஒரு 
பெரும்பரம்பைத் தேரைகள் 
இளப்பம் என்று சுற்றிக் கொண்டாற்போல் - விட்டிற் பூச்சிகள் 
விளக்கை வந்து மொய்த்துக் கொண்டாற்போல் - மொய்க்க மனிதன் 
எம்மாத்திரம் என்றுதானே 
ஏகமாய்க் கடுக 
வேகமாய் முடுக 
ஐந்நூறு வெள்ளம் சேனை 
விட்டான் - அம்பிலும் அதி 
விட்டான் - விடுத்த பின்னை 

இளைத்தவன் போல் அவர் தன்னை வளைத்திடும் படிக்குச் சற்றே 
இடங்கொடுத்துப் பின் வாங்கினான் 
எவரும் கைக்குள் 
அடங்கவிட்டு முன் 
ஓங்கினான் வந்த அரக்கர் 
எறிநேசம் கட்டாரி 
இலக்காக மீதில் 
நொக்காக ராமன் 
தறி தோமரங்கள் வாரி 
சொரிந்தார் - அதுகள் நொக்கு 
அரிந்தான் - பின்னும் நெருங்கி 
புரவி ஓர் பக்கத்தில் விட்டும் 
விட்டும் 
அணி அணியா 
விட்டும் நிரை நிரையா 
ரதம் ஓர்பக்கத்தில் விட்டும் 
யானைஓர் பக்கத்தில் 
சேனைஓர் பக்கத்தில் 
இருப்புலக்கை பிண்டிபாலம் 
என்னும் படைவாங்கி 
பின்னும் கணை ஓங்கித் 
பெருத்தகத்தி தண்டு சூலம் 
விடுத்தார் - விடுத்தே அதின் 
தொடுத்தார் - அவரவரும் 
எத்தனைகை எத்தனைவில் 
டெப்படி ஒருவன் 
எப்படித்தான் போர் 
எத்தனை அம்பெத்தனை தண் 
தடுப்பான் அவர்மேல் ஐயன் 
தொடுப்பான் பெருமழைபோல் 
எடுத்துவிட்டான் படையெல்லாம் தடுத்துவிட்டான் என்று வாயால் 
எட்டிக் கடிக்க 
மேவினார் - கைப்பிடியாக 
கட்டிப் பிடிக்கத் 
தாவினார் 
ஆகாசத்தினில் 
நீசனார் நிருதர்கள் 
எல்லோர்க்கும் மனம் 
உல்லாசமாக 
நாசமாப் போவார் என்று 
தேற்றினார் சாமியைத் தேவர் 
வாழ்த்தினார் அந்த வேளையில் 
எப்புறத்தும் ராட்சதர்கள் 
கிரையாகத் தொகுத்துக் 
சரக்கூடம் வகுத்துக் 
அப்புறம் போகாமல் வாளிக் 
கொண்டான் 
- சுற்றிலும் போட்ட 
கொண்டான் - வகுத்த பின்பு 
ரதங்கள் யானைகள் துர 
கதங்கள் சேனைகள் பட 
எவரையும் மண்ணிற்
சதித்தான் பிடித்தவில்லோ 
டவரவர் முன்னிற் 
குதித்தான் தனித்தனியே 
இந்திரவாணம் மோக வாணம் 
சந்திரவாணம் நாகவாணம் 
எரிவாணம் 
வாயுவாணம் 
ஹரிவாணம் 
மாயவாணம் குபேரவாணம் 
விஜயமுர 
மையாத வருணன் வாணம் 
நமன்வாணம் அருணன் வாணம் 
இடிவாணமாக 
நொடித்தான் அரக்கர் தம்மை 
யோடே சாக அடித்தான் 
- பின்னையுமவர் 

எண்ணிறந்த சேனை சண்டை பண்ணி முடியா தென்றெண்ணி 
ஏகமாகக்கடு 
கடுத்தான் மந்திரம் சொல்லி 
மோகனாஸ்திரம் 
தொடுத்தான் தொடுத்த போதில் 
இங்கும் ராமன் அங்கும் ராமன் அங்கும் ராமன் இங்கும் ராமன் 
எங்கும் ராமனாகத் தோன்றினான் அவருக்கவர் 
தங்களாலேசாக 
மாற்றினான் இந்த வகையா 
ஈனராம் ஆயிரம் வெள்ளம் 
சேனையும் முகூர்த்தந்தன்னில் 
இறும்படியாகப் 
புடைத்தான் 
ரணக்களத்தை 
வெறுங்களமாகத் 
துடைத்தான் 
அனந்தங்கோடி 
எரிவாளிகள் பிறந்த கருமேகம்போற் சிறந்த 
ஒருராமனால் இறந்த சருகுகள் போற் பறந்த 
( மூலால ) 


3. தோள்கள் அறுந்த 
தாடைகள் இடிந்த 
தொந்திகள் 
சரிந்த 
துணைக் கைகள்இற்ற 
தொண்டைகள் தறிந்த 
துண்டம் துண்டமான 
தூணிகள் இழந்த 
துரகம் உலைந்த 
தோரணங்கள் கெட்ட 
தோமரம் பறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
தாள்கள் முறிந்த 
டைகள் ஒடிந்த 
சந்துகள் முறிந்த 
கணைக் கால்களற்ற 
மண்டைகள் திறந்த 
கண்டம் கண்டமான 
நாணிகள் இழந்த 
இரதம் கலைந்த 
வாரணங்கள் விட்ட 
சாமரம் எறிந்த 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
பேரும் 
தொட்டெடுத்த வாள் கெட்டு நட்ட கட்டை போல்பட்டு 
துள்ளித் துள்ளி நெளிப்பாரும் 
பிணங்கள் தம்மேல் 
தள்ளித் தள்ளி ஒளிப்பாரும் 
பலபலவா 
துண்டங்கள் ஆம் உடம்புகள் 
இண்டங்கொடி போலே அம்பு 
துறுபட்டு 
மாய்வாரும் 
குறைத்தலையாய் 
அறுபட்டுச் 
சாய்வாரும் இவ்வள வென்று 
சொல்ல இடம் இல்லாத பேரும் சல்லடைக்கண்போல் உடம்பு 
தொளைபட்டு 
வீழ்வாரும் விடாய் எடுத்துக் 
களைபட்டுச் 
சாய்வாரும் 
போடப் போடவும் 
தொலையா அம்புகளாலே தலைபோய்ப் பம்பரம்போலே 
சுற்றிச் சுற்றி 
மடிவாரும் முண்டங்களாகித் 
தத்தித் தத்திப் படிவாரும் நிலை கலங்கித் 
தோளென்றும் தாளென்றும் வாளென்றும் அடையாளம் 
தோற்றாமற் 
கெட்ட பேரும் 
காயங்களாலே 
ஆற்றாமற் 
பட்ட பேரும் தலைகள் அற்றுத் 
தும்பிமேலே நின்றபடி 
தொப்பெனவே 
குப்புறவே 
தொம்பர் போலலாகு கொண்டு 
வீழ்வாரும் - மண்ணைக்கடித்துக் 
தாழ்வாரும் - அம்புகள் எங்கும் 
சொருகி உயிர்விடச்சே 
சுருட்டிக் கொண்டு 
திருட்டிஉயிர் 
ணவலிப்பெடுத்துச் 
படுப்பாரும் - கண்பூச்சிபறந் 
விடுப்பாரும் - கைகால்கள் அற்றுச் 
சுருங்காமலே அடிக்கும் 
சோலைபோலே 
மாலைபோலே 
பெருங்காற்றில் கொம்பு போன 
காணுவாரும் தங்கள் குடலை 
பூணுவாரும் - அடுத்தடுத்துத் 
தொண்ணூறு தரம் ஐயோ தண்ணீர் தண்ணீர் என்று 
துடிதுடித்து 
ஓய்வாரும் - ரத்தத்தை அள்ளிக் 
குடிகுடித்துச் 
சாய்வாரும் - மனிதன் என்று 
துடுக்குச் சொல்லிய வாயின் இடுக்குக் காரியம் அம்பு 
சொரிபட்டு 
வதைவாரும் - சின்னபின்னமா 
அரிபட்டுச் 
சிதைவாரும் - கழுக்கள் கொத்த 
தொங்கிய பனங்காயிலே 
பொங்கும் விழுந்தலை 
பொங்கி விழுந்தலை 
நுங்கு போலக் கண்களும் போய் 
அனந்தம் 
ரத்தம் பெருகிப் 
அனந்தம் கழுத்து கள் போய்த் 
தூரத் தொலையில் விழப் 
தூறும் தலைகள் 
ஏறும் தலைகள் 
பீறிட்டு ரத்தம் எழத் 
அனந்தம் 
ஒன்றின் மேல் லொன்றா 
அனந்தம் அந்தத் தலையைத் 
தொந்தமிடும் பே பினங்கள் 
சுற்றிலும் வீழ்தலை 
முற்றிலும் வீழ்தலை 
பந்துபோல் எடுத்தாடச் 
அனந்தம் 
கடலின் கரை 
அனந்தம் 
சுவாமி அம்பாலே 
சொர்க்கம் உண்டெங்களுக்கென்று கொக்கரித்துக் கொக்கரித்துத் 
துடித்து விழும் தலை அனந்தம் 
ஓன்றோடொன்றாக 
அடித்து விழும் தலை அனந்தம் 
அம்புபட்டிரு 
துண்டாய்ச் சிலைகள் விழ 
சுழலும் கவந்தம் 
உழலும் கவந்தம் 
ரண்டாய்த் தலைகள் எழச் 
அனந்தம் 
பிணங்களோடே 
அனந்தம் முடித் தலைகள் 
துண்டித்து விழவும் தேகம் 
சோரும் கவந்தம் 
சேரும் கவந்தம் 
அனந்தம் 
அனந்தம் 
கொண்டெட்டி நடந்தப்பாலே 
எதிர் எதிரா 
அம்புபட்டிரு 
துருவிட்ட கணைபட்டு 
சுருளும் கவந்தம் 
உருளும் கவந்தம் 
மரவட்டை உருவிட்டுச் 
அனந்தம் ஈரம்பிசிக்க 
அனந்தம் - நட்சத்திரம் போலத் 
தொடுத்தமணி குண்டலத்தை அடுத்தடுத்தும் மாலை போடத் 
தொட்டாடும் சில பேய்கள் கவந்தத்தோடு 
முட்டாடும் சில 
பேய்கள் - ரத்தத்தில் ஆனைத் 
தோட்டியினிற் பிணங்களை 
மாட்டிவிளை யாட்டுக்காகத் 
தூண்டிலிடும் சில 
பேய்கள் - அதைப்பறிக்கத் 
தாண்டிவிழும் சில 
பேய்கள் - தின்று கொழுத்துச் 
சுயம்கொண்டு ராமனுக்குச் 
செயம் செயம் என்று சொல்லித் 
துதித்தாடும் சில 
பேய்கள் - பிணமலைமேல் 
குதித்தாடும் சில 
பேய்கள் 
ஆனைமணியைச் 
சோடன தாளமாக்கி 
ஆடி கொண்டு ராகவற்கு 
தோத்திரம் சொல்லும் சில பேய்கள் - சண்டை உண்டென்று 
சாத்திரம் சொல்லும் சில பேய்கள் - ராட்சதர்வாயில் 
சுரைவிரை போன்ற பல்லைப் 
தூவியிடும் சில 
கூவியிடும் சில 
பொரி என்றுவாயில் கவ்வித் 
நாய்கள் - லங்கையைப் பார்ம்துக் 
நாய்கள் - ஈரலை எல்லாம் 
தோண்டித் தோண்டிப் பிடுங்கித் 
தாண்டித்தாண்டிப் பசியை 
தொலைத்திடும் சில 
நாய்கள் 
களத்தில் எங்கும் 
குலைத்திடும் சில 
நாய்கள் - பெருகும் ரத்தச் 
சுனைக்குள் விழும்பிணத்தை 
உனக்கெனக் கென்றுசண்டை . 
தொடுத்திடும் சில 
நரிகள் - குட்டிக்கிரையாக் 
கொடுத்திடும் சில 
நரிகள் - இழுத்திழுத்துத் 
துணுக்குத்துணுக்காகக் கொத்தி பிணத்தைப் பெரும்பசியாம் 
சூளையிடும் சில 
தரிகள் - இலங்கையைப் பார்த்து 
ஊளையிடும் சில 
நரிகள் - எலும்புகளும் 
தொண்டைகளும் மண்டைகளும் கொண்டுபோய் இலங்கையிலே 
தூற்றும் சில 
பருந்துகள் - வீடுகள்மேலே 
ஏற்றும் சில 
பருந்துகள் - மூக்குகளாலே 
தொப்புளின் நரம்புகளை 
முப்புரிகொள்வது போலச் 
சுருட்டும் சில 
கழுகுகள் - தலை தலையாய் 
உருட்டும் சில 
கழுகுகள் - பிணமலைமேல் 
தொத்தித் தொத்தி மண்டைகளை கொத்திக் கொத்தி மூக்கினாலே 
தூக்கும் சில 
கழுகுகள் - 
ஓர் இடத்திலே 
சேர்க்கும் சில 
கழுகுகள் - கைஒழியாமல் 
துரத்தித் துரத்தி அந்த 
தூதரும் 
நாதரும் 
அரக்கரைப் பிடித்தெம் 
சலித்தாரே - எட்டுத்திசைக்கும் 
கெலித்தாரே - பிணங்கள் மேலே 
சோரும் அரக்கியர் கண் 
தொண்டுபண்ணும் சில 
உண்டுபண்ணும் 
கூளி ணீரிற்குளித்து பூசைத் 
அதற்குப்பலன் 
ரணகாளி - சம்மோகனச் 
சுடுகணை ஒன்றாலே 
தொலைந்த தென்றார் 
குலைந்ததென்றார் 
விடுமூல பலமெல்லாம் 
சிலதேவர் - ராவணன் கொட்டம் 
சிலதேவர் - இந்தக் கணையைத் 
தாடுக்கிற வித்னதராக 
தோணுமென்றார் 
காணும் என்றார் 
வனுக்கும் சிவனுக்கும் 
சிலதேவர் - பின் ஆர் அறிவார் 
சிலதேவர் - ராகவன் மேலே 
சொர்க்கத் தலத்தில் உள்ள 
தூறினார் சில 
கூறினார் சில 
கற்பகமலர் பறித்துத் 
தேவர் - செயமங்களம் 
தேவர் - இப்படிக் கொத்த 
துரைராமன் முன் நடந்து - திரையாழி போற்படர்ந்து 
வரையான கோதண்டத்துக் கிரையாக வே மடிந்த 
( மூலபல ) 

லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் 

பெருமூல பலமெல்லாம் இவ்வாறு சாமிகையாற் 
வ்வாறு சாமிகையாற் போனபின்னை 
வருபோரில் ராவணனும் தேர்கொண்டான் பத்துவில்லும் வாங்கிக் 
கொண்டான் 
ஒரு நூறு கோடி தேர் நானூறு கோடி பரிஓங்கும் யானை 
இருநூறு கோடியுடன் குதித்திட்டான் இளையவன்வந் தெதிர்த்திட்டானே . 


பல்லவி 
லட்சுமணனுக்கும் ராவணனுக்கும் நேர்ந்ததே சண்டை
( லட் ) 
அநுபல்லவி 
அட்சயமான மூலபலம் 
தன்னை 
அந்தக் கோதண்டம் உண்டுவிட்ட பின்னை 
கட்சி அரக்கனும் தேரில் 
துள்ள 
காவலிளையவன் அனுமான்மேற் கொள்ள 

சரணங்கள் 

1. குரக்கு வெள்ளத் தாரும் அரக்கர் வெள்ளத்தாரும் 
கூடித் தொந்த யுத்தம் 
ஆடினார் 
குன்றும் மரங்களும் தெண்டும் சரங்களும் 
கொண்டு ஒன்றை ஒன்றாற் 
சாடினார் 
செருக்களத்தினில் அரக்கன் நொடிக்குள்ளே 
சில நூறு கோடியம் 
பேவினான் 
திரும்பத் தம்பியும் அதுக்கதையை விட்டுத் 
தெள்ளும் தவிடு போலத் 
துரத்திப் பத்தம்பை அரக்கன் 
சுவாமி அதைக்கூடத் தூளி 
அரக்கன் மோகன அஸ்திரம் 
அய்யன் நாரணன் அம்பால் 
தூவினான் 
எய்யவும் 
செய்யவும் 
தெறிக்கவும் 
முறிக்கவும் 
( லட் ) 


2. வெஞ்சத் தனம்பண்ணி அரக்கன் வீடணன் 
மேலே மயன் வேலைத் 
தூண்டினான் 
குறுக்கேதம் பிக்குமுன்னே அங்கதனோடு 
அனுமான் அதுக் கெதிர் 
தாண்டினான் 
தஞ்சம் என்ற விபீஷணனுக்காகத் தம்பி 
இருவரையும் தள்ளி 
ஓங்கினான் 
சகல பேர்களும் உருக்கவே அந்த 
வேலை மார்பினில் 
வாங்கினான் 
அஞ்சி விபீஷணன் பயந்து 
வாடவும் 
அரக்கன் கெலித்தோ மென்று ஊரில் ஓடவும் 
சஞ்சீவியைக் கொண்டு அனுமான் 
அழைக்கவும் 
தம்பியும் சேனை களும் 
பிழைக்கவும் 
( லட் ) 

3. பிழைத்த தம்பி விபீஷணன் சுகமோ 
சுகமோ என்று 
கிளம்பினான் 
பின்பு சாம்பவன் ராமன்சேவடி 
முன்பின் உள்ளது 
விளம்பினான் 
தழைத்த ராகவன் உனைப்போல் ஆர் என்று 
தம்பிதன் புகழ் 
பாடினான் 
தந்தனம் சிரஞ்சீவி என்றனு 
மந்தனையும் கொண் 
டாடினான் 
அழைத்து வானர வெள்ளம் 
கெர்ச்சிக்க 
ஆசை முனிவர்கள் பேசி 
அர்ச்சிக்க 
மழைக்கு நிகர்மலர் தேவர் 
தூற்றிட 
வாழி இளையன் என்று 
வாழ்த்திட 
( லட் ) 

மூலப்பலப் படுகளக்காட்சி 
சீலமுள்ள ராகவனும் இளையோன் தன்னைத் 
தேற்றினான் பிறகுவிபீ ஷணனும் அங்கே 
கோலமுள்ள சுக்கிரீவன் அனுமான் சாம்பன் 
குமுதன்முத லோரை எல்லாம் கூட்டிக்கொண்டான் 
நாலுதிக்கும் சூரியன் முன் பனியைப் போல 
நாயான்கைக் கோதண்டம் ஒன்றினாலே 
மூலபலப் படுகளத்தைப் பாரீர் என்று 
மூட்டினான் வகைவகையாக் காட்டினானே 


கண்ணிகள் 

1. வெற்றி கொள்ளவந்த மூலபலம் மாள 
வேதண்டமாம் வீரகோதண்டம் செய்ததைச் 
சுற்றிய சேனை படைத்தலை வருடன் 
சுக்கிரீவரே வாரும் சுவாமிசெய்த விக்கிரமத்தைப் பாரும் 

2. சண்டப் பிரசண்டப் பெருங்காற்றிலே வெகு 
தாகத்தினால் விழும் மேகக் குலம் போலே 
அண்டர் பெருமான் ராமன் கையால் வீழ்ந்த 
ஆனைகளைப் பாரும் கிடக்கிற சேனைகளைப்பாரும் 

3. துண்ணெனப் பொங்கிய ரத்தக்கடல் மேலே 
சுவாமி யம்பாலே செந் தாமரைப் பூப்போலே 
வண்ணம் செவந்து மிதந்து வருமுக 
மண்டலத்தைப் பாரும் சிதறிய குண்டலத்தைப்பாரும் 

4. சீராம் பெரும்பாய்கள் கட்டும் கொடியாகச் 
செத்த களத்திலே ரத்தக் குளத்திலே 
ஓராயிரம் கோடி கப்பலைப் போலவே 
ஓடும் தேரைப்பாரும் விசையறுந் தாடுந்தேரைப் பாரும் 

5. கடலிலேபல பகரமீன் போலே 
கண்டித்த யானையும் துண்டித்த யானையும் 
எடலமாகிய ரத்தக்கடல் மேலே 
எழுகிறதைப் பாரும் அழுந்தி முழுகிறதைப் பாரும் 

6. கூத்தினில் நட்டுவன் பாத்திரம் என்றேத்தக் 
குண்டலங்கள் குறைத் துண்டங்க ளாய் எங்கும் 
பேர்த்துப் பேர்த்துநொண்டிக் கூத்தினைப் போலாடும் 
பிரேதங்களைப் பாரும்கைகள் கொட்டும் பூதங்களைப்பாரும் 

7. பண்டு பட்டயானை வால்புறத்தே அறுப் 
புண்டு சட்டயானையின் தலைகாணவே 
ரண்டுபக்கமும் தலயுள்ள யானை போலும் 
லட்சணத்தைப் பாரும் பேய்கள் தின்னும் பட்சணத்தைப்பாரும் 

8. அந்தரத்தக் கடலுக்குள்ளே மத 
யானைக் கொம்பு அந்திவானத்திலே இளஞ் 
சந்திரனைப் போல் மிதந்து மிதந்து 
தளும்புவதைப் பாரும் அங்கங்கே கிளம்புவதைப் பாரும் 

9. அத்திக் கொம்பால் தந்த சுத்தி செய்துரத்தம் 
அப்பி அப்பி வாயைக் கொப்பளித்து வீழ்ந்த 
கத்திகளைக் கொண்டு நாக்கு வழிக்கிற 
காளிகளைப் பாரும் சுற்றிவரும் கூளிகளைப்பாரும் 
10. யுத்தகளம் என்னும் ரத்த வயல்மேலே 
ஏற்றசதை என்னும் சேற்றினிடத்திலே 
அஸ்திரங்கள் பயிர் ஒத்துக் கிடக்கிற 
அற்புதத்தைப் பாரும் ரத்தம்தனில் புற்புதத்தைப்பாரும் 
11. கொண்ட கணவன் எனும் பிணத்தைக் கையில் 
கொண்டெழும்பும் பேயைக் கண்ட அரக்கியர் 
அண்டம் மட்டும் அதை எட்டிப் பிடிக்கிற 
ஆச்சரியத்தைப்பாரும் அவருடைய மாச்சரியத்தைப்பாரும் 
12. தும்பிமுகத்திலே ராட்சதர் மீசையைத் 
துள்ளறு கரச்சாத்திப் பிள்ளையார் என்றேத்திக் 
கொம்பில் அவர்மண்டைத் தேங்காய் உடைக்கிற 
குட்டிப் பேயைப்பாரும் குதிக்கிற மட்டிப் பேயைப்பாரும் 
13. பேய்முகம் நாய்முகம் ஆகியராட்சதப் 
பெண்டுகள் அந்தப்பிணம் பிடுங்கவந்த 
பேய் முகம் நாய்முகம் கொண்டே அடையாளம் 
பிடிக்கிறத்தைப் பாரும் நல்வார்த்தைப் படிக்கிறதைப்பாரும் 
14. பெண் அரம்பைக் கூத்துப் பார்க்கிற தெல்லாம் போய் 
பேய்க்கூத் தாச்சுதோ என்று முறைப்பட்டு 
பண்ணுடனே கிழப் பெண்கள் ஒப்பாரி 
பாடுவதைப் பாரும் தலைவிரித் தாடுவதைப்பாரும் 
15. இந்திர லோகமும் சந்திரலோகமும் 
எட்டுத்திக்கும் கொள்ளை இட்டுச் சிறைவைத்து 
கந்த அரக்கரை ராமன் வில்லுக்கிரை 
கற்பித்ததைப்பாரும் இராவணன் ஒப்பித்ததைப்பாரும் 
16. எள்ளிடவும் இடம் இல்லாமல் மண்டிய 
இத்தனைச் சேனையும் கைத்தனு ஒன்றாலே 
வள்ளல் இராமன் முதர்த்தத்தில் கொன்றுயிர் 
வாங்கினதைப் பாரும் பூமிபாரம் நீங்கினதைப்பாரும் 


ஸ்ரீராமரை மாலியவான் கொண்டாடல் 

நீதன்கை வீச்சர மாரிபட வேபடை . 
பாடுண்டு போனதை விபீஷணனா டேவிழி 
நேர்கண் டெ போர்களும் இராகவனை மேவினர் 
அதன்மேலே 
ஓதும்பி ராணியுடன் ஓடியத் சான்னன் 
மூதண்ட கோடியுள தேவர்கள் பகீரிட 
ஊரெங்கும் வேண்களி யாடல்வினையாடல் கள் செய் - கிறபோமே 
கோதண்ட வாளியினில் மூலபல சேனையை 
நாசஞ்செய் தானெனவே ஓடிவரு தூதர்கள் 
கூறும் சொல் லாலிதென மானிட வனாலவர் 
- படுவா ரா 
ஏதென்று ராவணன் விசாரமிட மாலிய 
வானவந்து காதுகளி லேசுறீல் சுறீலென 
ராமன் பிராதப செயராமன் இசையானது 
- புகழ்வானே 

பல்லவி 
ராமனுக்கு நிகராக ராவணா பூமியில் வேறுண்டோ 
( ராம ) 

அநுபல்லவி 
மாமூல பல மெல்லாம் 
ஒருத்தன் கொன்றதெந்த 
வகையென்று தூதரைப் பகையா தெழுந்து முந்த 
ஆமவன் கோதண்டம் 
வளைத்தானோ படைசிந்த 
அரையம்பு காலம்பு தெறித்தானோ ஏதோ அந்த ( ராம ) 


சரணங்கள் 


1 பின்னும் சொல்லுகிறேன் அவனுக் குனதுசண்டை 
பிள்ளைவிளை யாட்டல்லோ 
அத்தாட்சி 
மன்னும் மரமும் புல்லும் கல்லும் ஒரு சரத்தால் 
மண்ணோடே மண்ணாமே 
கண்காட்சி 
சின்ன மனிதன் என்றும் ஒருத்தனென்றும் எண்ணாதே 
தேவர்க்கும் தேவனவ 
னே சூட்சி 
உன்னைக் கட்டினவாலி தன்னைக் கொன்றானே இது 
உன்னண்டையில் இருக்க இன்னும் என்ன டாசாட்சி 
(ராம ) 

2. திண்டும் மிண்டும் செல்லாதே தர்மம் சேருமிடத்தில் 
செயமும் சேரும் அட 
நிர்மூட 
சண்டை உன்னாலாகாது செத்தவர்க்கெல்லாம்தில 
தர்ப்பணம் செய்யடா 
பெண்டுகளே யல்லாமல் லங்கையை விட்டுனக்குப் 
பின்பனட வருவதுண் 
டோகூட 
அண்டர் நாயகனை ஒருத்தன் ஒருத்தன் என்றாய் 
அண்டம் அழிக்கும் தேவர் ரண்டு பேர் உண் டோடா 
குடிகேட் 
( ராம ) 

தந்தாயே 
வீரவேல் விட்டேனென்றும் லட்சுமணன் பட்டான் என்றும் 
வீம்புவார்த்தைகள் இங்கே 
மாருதி மருந்தாலே அவன் எழுந்தானே இந்த 
மதிமோசத்தால் அல்லவோ 
வெந்தாயே 
காரியம் தெரிந்த விபீஷணன் சொல்லும் கும்ப 
கர்ணன் சொல்லும் கேட்க 
நொந்தாயே 
வீரியத்தால் ஐயோ காடுவாவா என்ன 
வீடுபோ போ என்ன வினைகொண்டு 
வந்தாயே 
( ராம ) 


மூலபலப்படுகளத்தை ராவணன் கண்டது 

வல்லாண்மை பேசியரா வணன் முன் இந்த 
வகைவகையாய் மாலியவான் சொல்லிச் சொல்லிப் 
பொல்லாத புண்ணிலேகோ லிட்டாற் போலப் 
புடைபுடைத்தான் மூலபலம் மடிந்த வாறும் 
சொல்லாலே தூதர் சொன்ன சொல்லும் உன் தன் 
சொல்லும்நிலை வரமோ என் றரக்கன் பொங்கி 
எல்லாம்பார்ப் போமெனக்கோ புரத்தின்மேலே 
ஏறினான் படுகளங்கண் டாறினானே

பல்லவி 
மூலபலப்படு 
கண்டானே ராவணன் மேன்மேலே 
களத்தை 
இருபது கண்களாலே 
( கண் ) 
அநுபல்லவி 
மிண்டாம் தூதர்சொல் இன்று மெய்யோ பொய்யோ என்று 
மெத்தவிசாரப் பட்டக்கணம் சென்றுஉத்தர கோபுர உச்சியிலேநின்று 
( கண் )

1. போன முகந்தோறும் மலைமலையாப் பிணம் குவிய - இதுவே 
வே நல்ல 
தானமா மென்று மேகங்கள் வந்து கவிய 
ராகவன்விட்ட 

2 மானக் கணைகள் பட்ட 
பாணத் தளவும்முட்ட 
வானத்திலும் அட்ட 
கோணத்திலும் எட்ட 
சோனைப் பெரியமலை 
தானொத் தெழுந்த கொலை 
ஆனைப் பிணங்களையும் 
சேனைப் பிணங்களையும் ( கண் ) 
சீலமுனிவர்கள் கண்டுடனே நடுநடுங்க - சீறிய ஆல 
காலமரம் எனும் கண்களை நாய்நரி பிடுங்க வீரகோதண்டம் 
காலமாரி மழை 
போலே கணைசொரிய 
நாலுதிசையும் வளைந் 
தோலமிடும் பெரிய 
மூலபலப் படையைக் 
கோலிவேர் அரிய 
மூலைக்குமூலை அலங் கோலமாய்த் தெரிய 
( கண் ) 

3. பெருகவேகளம் எங்கெங்கும் கவந்தங்கள் ஆட நட்டுவன் போல 
அருகிலே நின்று பேய்கள் தாளங்கள் போட - ராமன்பிடித்த 
ஒரு சிலை அதனாலே 
வரவர ஒருகாலே 
விடு கணை அறுபட 
நிருதர் முடிகள் கெட 
ஒரு பெருமலை மேலே 
வரும் அருவியைப் போல 
குருதிநீர் துள்ளத்துள்ள குருவிகள் கொள்ளக் கொள்ள ( கண் ) 
4. மங்கைமீர் அந்தவானரப் பூச்சிகளை புடைத்து - நிமிஷத்திலே 
உங்கள் முன் வருவேன் என்று கண்களைத் துடைத்துத் துடுக்காவந்த 
தங்கள் கணவன் கிடை 
அங்கெதிர்கண்டு கடைக் 
கண்களில் நீர் பெருகி 
அங்கமெல்லாம் உருகிப் 
பெண்கள் திரண்டு மொய்த்துச் செங்கை தலையில்வைத்து 
எங்கும் பதறி அழ 
எங்குங் கதறி அழ ( கண் ) 
5. பெரியவில்லுடன் அறுபட்ட கைகளும் விரலும் கண்டு கண்கள் நீர் 
சொரிய அரக்கியர் அடித்துக்கொண்டழும் கூக்குரலும் கண்டம்கண்ட 
ஒருவன்குடல் சரிய 
ஒருவன் உடல் எரிய 
ஒருவன் தலை மடிய 
ஒருவன் சிலை ஒடிய 
ஒருவன் தொடைபறிய ஒருவன் குடைமுறிய 
ஒருவன் உயிர் வதை 
ஒருகணை செய்ததை ( கண் ) 

இராவணன் தேர் ஏறுதல் 

மூலபலப் படுகளம் இவ் வாறு கண்டான் 
முடிபுனைகோபுரம் இறங்கிக் கோவில் சேர்ந்தான் 
காலம் எனும் முக்கோடி வயசும் ஈசன் 
கைவரமும் தொலைக்க ராவணன் முன்னாளில் 
மாலெனும் ராகவன் கொடுத்த வரத்தினாலே 
மதியும் அது விதியும் அது எனலால் துவார 
பாலன் எனமுன் போல் வைகுந்த வாசற் 
படி கொள்வான் தேரேறத் துடி கொள்வானே 


பல்லவி 
தேர்மேற் கொண்டானே - ராவணன் 
போர்மேற் கொண்டானே 
( தேர் ) 

அநுபல்லவி 
பார்மேலும் திசை மேலும் 
பாயும் திரைகடல் மேலும் 
ஆயிரம் புரவிகளும் 
மலைமேலும் 
முட்டிய 
கட்டிய 
( தேர் ) 


சரணங்கள் 


1 னத்தோடே வரச்சொல்லி 
இருந்தோரில் நூறு வெள்ளம் 
தொனித்துக் கையோடு கையை 
தூணியும் கவசமும் 
உறுக்கினான் - தப்பி 
பொறுக்கினான் - சங்கம் 
முறுக்கினான் 
இறுக்கினான் 
கனத்தபூமியும் மலையும் 
முனைத்த பேரிகை குமுறி 
சினத்தினால் முக வேர்வை 
தனக்கும் சீதைக்கும் இடக்கண் 
வெடித்திட 
இடித்திட 
பொடித்திட 
துடித்திட 
( தேர் 

2. பத்து முடியும் தரித் 
பத்தும் வெட்டியவாளை 
தோங்கினான் - 
திசை 
தாங்கினான் கோ 
நீங்கினான் - ஒரு 
வாங்கினான் 
பத்தால் அரண்மனையை 
பத்து வில்லையும் கையில் 
செத்தபேர்களை எண்ணி 
சத்தமே சங்கள் போலே 
கைத்தலத்திலும் வாரிக் 
சுற்றி அர்ச்சனை செய்ய 
மனம்நொந்து 
நாலைந்து 
கொடைதந்து 
வலம்வந்து 
( தேர் ) 
மாட்டினான் - காதில் 
பூட்டினான்- தும்பை 
சூட்டினான் - கண்கள் 
காட்டினான் 

3. இருபதுகையும் வளை இருபது குழைகளும் 
இருபது தோளிலும் இருபதும் நெருப்புப்போல் 
வருபெண் சானகி 
பதறு 
ஒருமண் டோதரி 
கதறு 
விருதெல்லார்களும் பார்க்க 
இருவகையில் ஒன் றாக்கு 
கிறதொன்று 
கிறதொன்று 
வே இன்று 
வேன் என்று 
( தேர் ) 


ராவணன் அவசகுனங்கள் காணுதல் 
கதிர்விடு குண்டலம் மணிமகுடம்பல கடகம் அலங்கிருதம் 
மென்போர்வை கவசம் நெடுஞ்சரம் அரைவடம் அந்தைகள் 
கலகலெனும் பணி --- யின்கோவை 
இதுமுதல் கொண்டொரு பதுகையில் வெஞ்சிலை இருபது செங்கையி 
லும்பாணம் - எரிவிழசிந்திய கருமலை என்றென எவரும் நடுங்க 
நெடுந்தேர் மேல் 
மதிகரிசிந்திட உடுநிறை சிந்திட மலைகள் அதிர்ந்திட - மண்பூமி 
மறுகிட எண்டிசை முருகிதியங்கிட மனிதன் எனும் சொல் 
இடும்பாலே 
அதிரணமண்டலம் அதிரரதம் தனை அதிரவிடென்று - இலங்கேசன் 
அருகினில் எங்கணும் இருபது கண்களில் அவசகுனம் பல 
கண்டானே 

பல்லவி 

இப்படியா அவசகுனம் கண்டானே கண்டராவணன் 
இடும்பாலே எண்ணாமற் சென்றானே 
அதுபல்லவி 
கைப்படை ஆனதைச் 
சேகரம் பண்ணி 
காகுத்தன் சரத்துக்குக் கொடுத்திட எண்ணி 
அப்படி வந்தா 
ராமன்மேலே 
அறிந்திருந்தும் புத்தி கெட்டவன் போலே 
னே 
( இப் ) 


சரணங்கள் 

1. ஆனைகளும் குதிரைகளும் பின்னுக்கு வாங்கி டக்கால் பதறவும் 
அறுந்த கொடிமேல் பகுந்து விழவும் அங்கே ரத்தத்துளி சிதறவும் 
சேனைகாவலர் வாயெலாம் வெறும் பானை போல் வறண் டுதறவும் 
சேரநாய்களும் பேய்களும் அழச் சூரியனைப் பார்த்தோர் கதறவும் 
( இப் ) 
2. தோள்வளைசரிய மாலைகள்கரிய இடப்புறக்கண்கள் 
துடிக்கவும் 
தோகைமாரழக் காகம்மேல்விழ ஆகாவாய்ச்சொல் படிக்கவும் 
வாளின்வாய்முனை மடங்கவும் கருந்தூளி ஆனது 
பிடிக்கவும் 
வானின் மேற் கருமேகம் இல்லாமல் வல்லிடி இடிக்கவும் கொள்ளிகள் 
பிடிக்கவும் ( இப் ) 
3 . முறை முறையாத் தேரிலே கட்டும் 
விருதுகேதனம் அழியவும் 
முரசம் பேரியம் டமாரமும் சருகுபோலே 
இழியவும் 
மறவர்கள் பூசும் சந்தனம்வறவ றென்றுபோய்க் கழியவும் 
மண்மாரிகள் ஆனவை பொழியவும் பெண்ஆனையிலேமதம் வழியவும் 
( இப் ) 


ஸ்ரீராமர் தேர் ஏறுதல் 

ஆசைகள் அதிர இவரவ சகுனம் இராவணன் எதிர்படப் தேர்விடலால் 
ஆண்மைகள் பெருகிய நீமறுபடி அனுமான் மிசைவருதல் ஒணாது முனே 
மாசறு சதுமுகன் நேசமொடு தவிய வாசவன் விடுகிற தேரிதன் மேல் 
மாருதிபுசமென ஏறுதி எனவரு மாதலிஉரைசெய ஆதரவாய் 
ஏசறுமுதுமறை ஏறிடவிதிநிலை ஏறிடமுனிவர்கள் தேவர்கள் ஈ 
டேறிட மகம் நிறை வேறிட அவரவர் ஏறிய பதவியில் ஏறிடவே 
வீசிடமழைபொழி கார்முகிலொளிவிடு மேருவென் மலைமிசை ஏறுதல்போல் 
வீரன் இரவிகுலசூரன் அதுலரகுவீரன் இரதமிசை ஏறினனே 

பல்லவி 
தேர்ஏறினானே - ராமச்சந்திரன் - தேர் ஏறினானே 
(தேர் ) 
அநுபல்லவி 
பார்மேலே வைப்பது நேரல்ல அரவிந்த 
பாதம்வைப் பாயென்று மாதலி கொடுவந்த 
( தேர் ) 


சரணங்கள் 

1. சோதி மதிநுதலில் 
திருநாமம் அணிந்திட்டு 
துலங்கும் அம்பறாத்தூணி வலப்புறத் தினிலிட்டு 
காதல் செய்யுந்தும்பை மாலைதோள் மேலிட்டு 
கச்சைகட் டியமார்பில் வச்சிர 
கவசந்தொட்டு 
குரோதம் செய்யும் இள நகை 
விடுத்துக்கொண்டு 
பாதம் தன்னில்மிதி 
யடி 
தொடுத்துக்கொண்டு 
கோதண்டம் ஒருகை 
யினில் 
எடுத்துக்கொண்டு 
தாய்தந்த மரவுரி 
யினை 
உடுத்திக்கொண்டு ( தேர் ) 
2. ஆரவா ரம் செய்யும் வீர வண்டையம் 
சாத்தி 
அங்கைத் தலத்துக்கு முன்கை கட்டியும் ஏற்றி 
தாரணி உள்ளோரும் வானவரும் 
தான் சொல்லவே லட்சுமிகாந்தனென்றே தோற்றி 
வீரபட்டம் விசாலம் 
நெற்றி 
நேரில் இட்டதி காரம் உள்ள 
கத்தி 
ஓர்வலப்புறம் மீதினில் 
சுற்றி 
ஆரும் ஒப்பிடொ ணாதொரு 
வெற்றி ( தேர் ) 

போற்றி 
உள்ள 
பாட 
3. தேவர் மடந்தையர் 
சீதை மனத்தில் 
தூவும் மலர்க்கை 
சூரியன் தேர் ஓட்ட 
சோபனங்கள் 
நினைந்ததுகை 
முனிவர்கள்கூத் 
லங்கைமேற்கண் 
தாட 
போட 
யாவரும் 
பாவிகள் 
தேவருக் 
ராவணன் 
கண்கண்டு 
சந்தங்கள் 
கானந்தம் 
வைகுந்தம் 
தேறவும் 
மாறவும் 
உறவும் 
ஏறவும் 
ஊ 
( தேர் ) 


மகோதரன் வதை 

திருத்தேர் ஏறி ராகவனும் சென்றான் போர்க்கும கோதரனும் 
தரிக்கா தெழுந்து ராவணன் பால் சார்ந்து போர்க்கு விடைகொடெனச் 
செருத்தான் செய்து லட்சுமணனை செயித்து வாவென் ற னுப்பவந்து 
கருத்தா வானரா கவனைக் கடிந்தான் அவனால் மடிந்தானே 


பல்லவி 

ராமன்கை அம்பால் 
மடிந்தானே மகோதரன் 
படிந்தானே மண்மேல் 
( மடி ) 

அநுபல்லவி 
கடிந்து ராவணனால் லட்சு 
கடுகி ஓடியவன் 
தொடர்ந்து ராமன் மீத 
சூதும்வாதும் சுவாமி 
மணன் மீது விடப்பட்டு 
மீதிற்போரினை விட்டு 
னேகசரங்கள் தொட்டு 
தொடுங்கணையாற் கெட்டு ( மடி ) 

சரணங்கள் 


1. அனு கூலச் சத்துராதி ஆகியிருந்துரா 
வணன் குடியினைக் 
கெடுத்துதன்னுடைய 
அகத்தில் எண்ணமெல்லாம் 
முடித்து லங்கையின்மேதே 
ஆசையினையும் விடுத்து - இணையில்லாரா 
மனுக்குர தம் அனுப்பும் தேவர்களையும்மக 
வானையும் கடு 
கடுத்து 
லட்சுமணனை 
மடித்துவரு வேனென்று வீரம் பேசிக்கையில் 
வலிய தனுவை 
எடுத்து அதிக்கடுஞ் 
சினத்தி னோடு பெரும் தேரை 
ஓட்டிக்கொண்டு 
சேனைகளை எல்லாம் தன் பின்னே கூட்டிக்கொண்டு 
கனத்த வில்லை வளைத்து நாணைப் பூட்டிக்கொண்டு 
கணைகள் எய்து ராமன்கையில் மாட்டிக்கொண்டு ( மடிந் ) 
2. போர்களத்தினில் வந்து அட்டகா சஞ்செய்து 
புவியெங்கும் கிடுகி 
டென்ன லட்சுமணன் மீதில் 
போகவிட்டிடுந் தேரை மறித்து ராமன்மீதிற் 
போகட்டும் , விடுவி 
டென்ன சாரதிஇந்தப் 
பார்க்குள் ராமனை வெல்லக் கூடாதென்று சொல்ல 
பற்களை நெடநெ 
டென்ன - வேகடித்து 
பாரடா உன்னை விழுங்குவேன் 
என்ன சாரதி 
பயந்துடல் விடுவி 
டென்ன 
நடுநடுங்கி 
கார்க்கடல் :வண்ணன்ரா 
மன்மீதில் தேர்விட 
கலங்காமலே மகோ 
தரன் நின்று போரிட 
ஆர்க்கும் சேனைராமன் 
அம்பினாற் பேர் கெட 
அதமாக அவன் மார்பில் 
ஓரம்பின் கூர்பட ( மடிந் ) 
மாலியவான் சொல்லால் சீதையை விடவே , சம் 
மதித்த ராவணனை 
அன்று - தடுக்கப் பெரு 
வயிற்றைச் சாய்த்துக்கொண்டு குடுகு டென்றேஓடி 
வஞ்சனை எண்ணி 
நின்று - அதிகபல 
சாலியானரா வணனே மூவுலகமும் 
சௌரியத் துடனே 
இன்றுமனம் 
தளர்ந்திந்த சனகியை விடலாமோ போபோஉன் 
தனக்கிது சரியோ 
சொல்லிய சொல்லும் 
காலனைப்போலவன் 
பாலிலே இருந்து 
கழுவாக்கரைத்து நாளும் கலகம் செய்து திரிந்து 
சீலராமன் கணைக்குத் தன்சேனையை விருந்து 
செய்வித்தோர் கணையால் தன் பெருவயிறும் சரிந்து 
( மடிந் ) 

வென்று 
என்று 
கடைசிநாளில் இராம இராவண யுத்தம் 
திடுதிடென ஓடிமகோதரனும் சென்
சேனைகளும் சாமிகையில் மடிந்த பின்பு 
முடுகி இரு வரும் தேரில் ஏறிக்கொண்டு 
மூதண்ட கோடிகளும் நடுங்கவிட்டே 
கடுகிமலை யோடுமலை எதிர்த்தாற்போல 
கடலினொடு கடல் எதிர்த்தாற் போல் விற்கொண்டு 
அடும் இரா கவனும் இரா வணனும் அங்கே 
அடுத்திட்டார் சண்டைசெய்யத் தொடுத்திட்டாரே 

பல்லவி 
( ராக ) 
ராகவனுக்கும் ராவணனுக்கும் 
நடந்ததே சண்டை தொடர்ந்ததே 

அநுபல்லவி 
மேகத்தைப் போலவே 
அய்யன் கணைகள் சாட 
மேலத்தைக் காணாமல் 
வெய்யன் கணைகள் மூட 
வாகொத்த தேர்மேலே 
இருவரும் கதித்தாரே 
வானமும் பூமியும் 
ஒன்றாக மதித்தாரே 

வான வெள்ளம் கடல்போலே களத்தைப்போய் 
ஈனர்விடும்கைச் சரத்தாலே நெளித்துப்போய் 
வா ரிவிடும்கற் பெருக்காலே அரக்கர்க்காவி 
வீரர் விடும்கைத் தடிக்குச் சூழ் குரக்குச்சேனை 
வளைக்கவும் 
ளைக்கவும் 
துள்ளவும் 
விள்ளவும் 


வடவையொடுபொரு
டெவை எனநிலை
மலையினொடுபொரு 
மலைய தென அலை 
கடலி னொடுபொரு 
கடலதென விரி 
ககனமொடுபொரு 
ககணம் என அரி 

சரணங்கள் 
அரக்கன் ராவணன் 
சிலகணைகள் 
அதைக் கண்டேராமன் தவிடுபொடிகள் 
( ராக ) 


1 . எய்தான் செய்தான் 
அரக்கன் நூறு நூறா 
அதைக்கண்டே ராமன் 
யிரமம்பு 
தூற்றினான் 
நொடியொன்றில் மாற்றினான் 
அரக்கன் ஆயிரமாயிரம் 
ஆயுதம் 
அதைக்கண்டே ராமன் தூளிகள் தூளிகள் 
அரக்கன் தேரைஆ 
காசத்திற் 
அதுக்கும் சாமிதேர் 
மேலாகத் 
தொட்டான் 
இட்டான 
போக்கினான் 
தூக்கினான் 
ஆதிநெடுஞ் சேஷனும்பட்சீ சனம் பொற்றூ 
ணிடத்தேகன 
காசுரனும் சிங்கமும்தப்பா தடுத்துப்போர் தொடுத்தால் என 
ஆனதுரங்கம் திருப்பிக்கோல் பிடித்துத்தேர் விடுத்தேவரும் 
மாதலிசங்கம் தொனிக்கச்சே பயப்பட்டார் முடித்தேவரும் 
அக்கணம் இருதேரும் 
திக்குத்திசை களும் போய் 
அப்புறம் மலைதாவும் 
இப்புறம் செவிதாவும் 
தடந்தத்தும் 
இடஞ்சுற்றும் 
அலைதாவும் 
புவிதாவும் 
நிலந்தத்தும் 
வலம் சுற்றும் 
கடல் தாவும் 
கெவிதாவும் 
கட.கட 
பயந்து 
நடுங்கி 
அன்று முனிவர் 
என்று பதறி 
அண்டமுகடு 
மண்டலமும்மிசை 
பிளந்து 
விண்டு 
விடவிட 
நிலைகெட 
தலைகெட 
அதிர மலைகளும் 
அதிரவெகு திசை 
அதிரஉத்திகள் 
அதிரஉடுவினம் 
அதிரநிலைகளும் 
அதிரமலையிடி 
அதிரமதிகதிர் 
அதிரஇப்படி 
( ராக ) 


2 . வட திசைமுதல் 
கடலிலும் போவார் 
மனது வேகமோ 
கனக லோகமோ 
நாலு திசையும் 
கடல் அப்புறமும் 
வாயு வேகமோ 
கீழ் உலகமோ 
போவார் 
போவார் 
என்ன 
என்ன 
வருவர் ஓடுவர் 
பொருவர் சேருவர் 
வசன மாகஉரை 
குசவனானவன் 
கூடு வர்இரு 
நேருவர் இதை 
யார் சொல் வாரொருக் 
விடுதிகிரியைப் 
தேரும் 
ஆரும் 
காலே 
போலே 
தானே 
தானே 

மாரிவழங்கும் பிரசண்டக்கொண் டலைப்போல இடித்தார் பலர் 
தீவும் விசும்பும் குலுங்கச்செஞ் சாக்காடா முடித்தார்சிலர் 
மாதலி அங்கம் தொலைத்துப்பாய் பரிக்குக்கோல் விடுத்தான் ஒரு 
சாமி நெடுந்தேர் மறைத்தங்கே துசத்தைக்கீழ்ப் படுத்தான் அவன் 
வளையராகவன் தேரை நிருதன் 
மூட 
லாலே 
இளையவன் முதலானோர் களையானார் அதன் மேலே 
மணவாள ராகவன் 
பனிபோல 
ஒத் 
கணையெல்லாம் அறுத்தவன் கொடியையும் அறுத் 
மால்ஒத்தவன் படை 
மாரி 
பெய்திட 
சூலப்படை கொடு 
சுவாமி கொய்திட 
வன்னி வாளியை 
அவன் 
விடுத்திட 
அன்னதே கொடு 
சாமி 
தடுத்திட 
மாமயன் படை 
அரக்கன் 
தொடுக்கவும் 
சாமிகந்தரு 
வஸ்திரம் எடுக்கவும் 
நாக லோகமும் 
புவியும் பொடிப்பொடி 
ஆகவே கள 
மீதில் அடிக்கடி 
( ராக ) 
3. சாமிமேல் ஒரு 
தெண்டவன் 
விடுத்திட 
சாமி ஓரம்பு 
கொண்டதைத் 
தடுத்திட 
சாமிமேல் அவன் 
மாயாஸ் 
திரம்போட 
சாமிதான் ஞானாஸ் திரந்தொடுத் 
ததைச்சாட 
சாமிமேல் சூலம் 
அவன் விடச் 
சினங்கொண்டு 
சாமி ஓங்காரம் 
விழக்கண்டு 
சாமி மூவரும் 
இவனென்னும் 
விவகாரம் 
தம்பி சொன்னதை 
நினைந்தெண்ண அந்நேரம் 
தாகருடன் செஞ்சரத்தைக் கைப்பிடித்துச் சாமிதொட்டே அவன் 
நாகமெனும் செஞ்சரத்தைக் கொத்தவிட்டுத் தூளியிட்டான் 
ஒரு 
சாமிதிரும் பத்தொடுத்துப் பொற்பிறைக் கொக்கும் சரத்தால்வரு 
ராவணன் நெஞ்சைத் தொலைத்தொற்றைச் சிரத்தைத் துண்டம் 
இட்டான் 
செய்தது 
தறிபடு சிரம் 
அவனுக்கு 
சரிசரி அரியவே 
வரவரக் 
தறிபடுகையால் மாதலி 
மார்பைக் 
அவன் விடு தோ மரத்தையும் அய்யன் 
முளைத்திட 
கிளைத்திட 
கலக்கினான் 
விலக்கினான் 
( ராக ) 


தறித்திவன் சரீ 
ரம் நிறைந்திட 
மயிர்க்கோர் அம்பது 
ஆய் மறைந்திட 
சலித்தவன்களை 
ஆய்விழுந்திட 
உணர்ச்சி கொண்டுட 
னே எழுந்திட 
சரமும் விடுவிடு 
படையும் பொடிபட 
சகலரதக்ச 
தளமும் அடிபட 
இருவர் மனதிலும் 
வளர முழுபகை 
எவரும் உடல்விட 
விடென இவ்வகை 
4. எடுத்து ராவணன் 
வளைத்த சிலை 
தன்னை 
ஒடித்து நாணியை அறுத்தும் இப்படிப் 
பின்னை 
இடக்கை யோடவன் வலக்னகயும்விழ 
துடித்து ராகவன் முடுக்கினான்கணை 
ஒன்று 
இழுத்துத் தேர்வரு பரியும் பாகனும் 
அழுத்தத் தூணியும் குடையும் படையும் போக 
எதிர்த்த ராவணன் 
ஒருபதுமுடி 
மேலே 
பதைத்து மாமலை 
யினில் விழும் இடி 
போலே 
ராமன் விடுசெஞ் சரத்திற் கொத்துடைப் பத்துப் பனங்காய் என 
நாய்நரி மண்டிக் கடிக்கக் கொக்கரித்து சுற்றிலும் போய்விழ 
ராகவன் இப்படித் தொடுத்துக்கத் தரிக்கத்கத் தரிக்கத்தலை 
ராவணனுக்குச் சரிகட்டிச் சரிக்கட்டிக் கிளைத்துக்கொள 
என்று 
சாக 
ன 
இப்புறம் ராமன் அரக்கன் மாளும் வனக என்ன 
அப்புறம் விபீஷணன் உபாயம் . 
முறை 
பன் 
லட்சுமி சீதையும் காவல் கொண்ட சிறை தீர 
தட்சண சூரியன் தேரும் லங்கை வழி சேர 
ணக்கிடும் காதண்ட 
வணக்கிடும் கோதண்ட 
பட்டு கைபிரமாஸ்தி 
விட்டிடத்தனி ராட்ச 
மனுமதி 
நடுவதில் 
ரம்தனை 
தன் புனை 
ரத்தின மணிமருமத்தின் 
வைத்த அமுர்த கடத்தில் 
மத்தன் விடுகிற சித்திர 
பத்து மணிமுடி தத்தி 
இடையிட்டு 
அடிபட்டு 
ரதம் விட்டுப் 
விழும் மட்டும் 
( ராது ) 

இராம பாணத்தால் இராவணன் இறந்தது 

தூவி முடிக்கயி லாசம் எடுத்திரு நாலுமதக்கரி யைச்சாடி 
சூரியனைத்திசை மாறவிடுத்தொரு சூறையடித்த மிடுக்காலே 
பூவுலகத்தவர் கீழுலகத்தவர் மேலுலகத்தவர் தப்பாதே 
பூசைசெலுத்திட ஆண்மை செலுத்துபு யாசலமிக்க தசக்ரீவன் 
ஆவல்மிகுந்தொரு சீதைபொருட்டினில் வீரமும் வெற்றியும் முக்கோடி 
ஆயுசும்மட்டி டொ ணாத அரக்கரும் ஆடலம் ஒக்க விடுத்தேபின் 
யாவரும் இக்கதை ஆரமுதொப்பென வேதினம் உத்தமர் கற்றோத 
ராமசரத்தினில் மாமலை ஒத்த இ ராவணனிப்படிப் பட்டானே 


அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் 

நிருதனிவ் வாறழிந்தபின்பு சாமிதேரில் 
நின்றிறங்கி இவன் முதுகில்வடு வேதென்றான் 
வரும் முதல் நாள் அனுமான்கைக் குத்தால் வந்த 
வடுஎனவீடணன் சொல்ல மகிழ்த்தானிப்பால் 
அருளும் ஐயன் ஏவலினால் இவனும் போனான் 
அண்ணா அண்ணா என்றே அண்ணன் மேலே 
ஒருமலைமேல் ஒருமலைபோல் வீழ்ந்து கண்ணீர் 
ஒழுகின்றான் பழமை சொல்லி அழுகின்றானே 

கண்ணிகள் 

1-உண்டாற் கொல்லும் விஷம் உலகத்தில் எங்கெங்கும் 
உண்டே 
அண்ணாவே - சீதை என்ற 
கண்டாற் கொல்லும் விஷம் உன்னிடத்திலே மாத்திரம் 
கண்டேன் 
அண்ணாவே 

2. இந்த அநியாயத்தை பிரம்மாவிடம் சொல்ல 
இறந்தாயோ 
அண்ணாவே 
பந்தித்த ஆசையும் உயிரோடேகொண்டு 
பறந்தாயோ 

அண்ணாவே 
3. உள்ளதோ சீதையைத் திருடுவதென்ற என்னை 
ஓட்டினாய் 
அண்ணாவே உலகிலே 
கள்ளனுக்குக் கூவென் றவன்மேல் பகைபோலக் 
காட்டினாய் 
அண்ணாவே 
4. அடி நாளை சாபத்தீடு சீதையாய் வந்ததென்றேன் 
அலைந்தாயே 
அண்ணாவே உடம்பெங்கும் 
சுடுகிற செந்தணலை மடிமேலே கட்டித் 
தொலைந்தா யே 
அண்ணாவே 
5. நினையாதே சீதையைக் குலையும் வாழ்வென்ற சொல் 
நிறைந்ததோ 
அண்ணாவே 
ராமனை 
மனிதன் மனிதன் என்ற வாயும் துடுக்கும் எங்கே 
மறைந்தாயோ 
அண்ணாவே 
6. வள்ளல் கும்பகர்ணன் மாலியவான் சொல்லியும் 
மருண்டாயே 
அண்ணாவே அடங்காமல் 
துள்ளின மாடுபொதி சுமக்கும் என்றாற்போலே பட்டுச் 
சுருண்டாயே 
அண்ணாவே 

7. சுற்றமும் சேனையும் உன் பத்து முடியும் முதல் நாள் 
சோர்ந்தாயே 
அண்ணாவே --- எல்லாரும் 
செத்தபிற காகிலும் ராமனை தெய்வமென்று 
தேர்ந்தாயே 
அண்ணாவே 
பரந்த கயிலாசமும் உன்னுடைய தோளுக்கு 
பற்றுமோ 
அண்ணாவே தோள்மேலே 
சுரந்து குரங்குக் கூட்டம் இப்போ தணியணியா 
தொத்துமோ 
அண்ணாவே 
9. விரிந்த தேவர்க்கெல்லாம் கடைக்கண் கொடாமல் வெடு 
வெடுத்தாயே 
அண்ணாவே 
களத்திலே 
பருந்தும் கழுகும் கொத்த முழுமுழுக் கண்கொடுத்துப் 
படுத்தாயே 
அண்ணாவே 
10. பூமலர் அம்புகளைக் காமன்கை எய்தெய்து 
பொழிந்ததே 
அண்ணாவே இப்போதிந்த 
ராமன் எய்தபிறகு காமன் எய்கிறதெல்லாம் 
இழிந்ததே 

அண்ணாவே 
11. சிறுமதி கொண்டல்லவோ மறுபெண்கள் மேலாசை 
திரண்டாயே 
அண்ணாவே 
அவரவர் 
பொறுமை இடித்தல்லவோ மண்ணென்கிற பெண்மேலே 
புரண்டாயே 
அண்ணாவே
ன்றைக்கெம் 

12. பிரமாதி தேவர்கள் தந்தவரங்கள் எங்கே 
பிரிந்ததோ 
அண்ணாவே 
தருமரா சனுக்கும் உன்னைத் தின்று தொந்தி 
சரிந்ததோ 
அண்ணாவே 

மண்டோதரி புலம்பல் 

நாடிவிபீ ஷணன்இவ்வா றழுதபோது 
நல்லசாம்புவன் தேற்றத் தெளிந்தான் இப்பால் 
பாடல் செய்யும் மடமாதர் அரக்கர் மாதர் 
பாதாள மாதர் முதற் பலரும் சேர்ந்து 
கூடமண்டோ தரியங்கே கொள்கொம் பில்லாக் 
கொடிபோல ராவணன் பேருடல்மேல் வீழ்ந்து 
தேடரிய துணையிழந்த கிளிபோல் வாயைத் 
திறக்கின்றாள் அழுதழுது பறக்கின்றாளே 

கண்ணிகள் 

1. என்னசெய்வேன் என்னசெய்வேன் மைந்நாத் மேைபா லுன்னை 

இங்கேகண்டு நொந்தோன் நொந்தேன் லங்கைமன்னவா - ஐயோ 
உன்னுயிரைக் கொன்றநமன் என்னுயிரும் கைகொள்ளானோ 
ஓடியிதோ வந்தேன் வந்தேன் 
லங்கைமன்னவா 
2 . கண்ணான பேர்களையெல்லாம் புண்ணாக்கி வீடணனென்னும் 
கரும்பையும் வேம்பாக்கிவிட்டாய் லங்கைமன்னவா -- ஐயோ 
பெண்ணான சீதைபிறக்க லங்கை அழிந்துபோம் என்ற 
பேச்சையே மெய்யாக்கியே விட்டாய் 
லங்கைமன்னவா 
3. தினம் இந்த லோகத்திலே நீ தேவராலும் சாகாய் என் 
று 
சிந்தை மகிழ்ச்சி ஆனேனே 
லங்கைமன்னவா - 
வினைபோலிந்த நானிலொரு மனிதனாலேசாவாயென்று 
விதியறியமாற் போனேனே 
லங்கைமன்னவா 
ஐயோ 
ஐயோ 

4. சீதை ஆசையை வெளியில் ஓதாமல் அடக்கிக்கொண்டு 
செருக்களத்தில் தூங்கிறாயோ 
லங்கைமன்னவா ஐயோ 
ஏதையா சொர்க்கலோகத்து மா தருக்குள் உனக்கேற்க 
எந்தப் பெண்ணைக் காண்கிறாயோ லங்கைமன்னவா 
5. எட்டானைக் கொப்பு பிடுங்க ஒட்டாமற் கெட்டியாகக் கட்டி 
இருக்கின்ற மணிமார்பாச்சே லங்கை மன்னவா 
சட்டமாக ராமன் அம்பு பட்டாடைமேல் ஊசிபோலத் 
தட்டாமல் உருவிப்போச்சோ லங்கை மன்னவா 
6 . ஊரிலே சீதைமேல் வைத்த ஆசையிந்த மட்டும் எங்கே 
ஒளித்திருந்து வாதிச்சதே 
லங்கை மன்னவா ரகு 
வீரன்பாணம் உன்உடம்பை எலிவெட்டிச் சோதிக்கிறா போலே 
வெட்டியின்று சோதிச்சதே லங்கை மன்னவா 
7. அனர்த்தமா விளையும் அய்யோ நினைக்காதே சீதையைான்றேன் 
அன்று கேளாமல் வைதாய் லங்கை மன்னவா 
உனக்கு முந்திக் கொள்ளாதமுன் எனக்கு நீமுந்திக்கொண்டாயே 
ஓரவஞ்சகம் செய்தாயே 

லங்கை மன்னவா 
8. நங்கைசூர்ப் பநகிதனான் நங்கையை எடுக்கச்சொல்லி 
நமன் போல் வந்து நின்றாளே லங்கைமன்னவா - ஐயோ 
என்கழுத்தும் பாவியவள் தன் கழுத்தைப் போலே ஆக்க 
எண்ணியே உன்னைக் கொன்றாளே லங்கைமன்னவா
9. அந்தமரம் சீதையை ஆரும் வந்தனை செய்யும் தெய்வத்தை 
ஆரோபோல் ஆசைப்பட்டாயே லங்கைமன்னவா 
இந்தமரத்தை வெட்டினால் இந்தஇடத்திற் சாயுமென் 
றெண்ணாமல் புத்திகெட்டாயே 

லங்கைமன்னவய 
10. வேதன்முதலோர் வரப்பிர சாதத்தால் மூவுலகுக்கும் 
வேந்தன் என வாழ்ந்திட்டாயே லங்கைமன்னவா ஐயோ 
நான் 
ஐபோ 
சீதையாம் புரைமோரிட்டு வாழ்வாம்பாற் கடல் கெடுத்துத் 
தெருவிலே என்னை விட்டாயே லங்கைமன்னவா 

சீதாதேவிக்கு அனுமான் ஜெயசேதி கூறுதல் 
ஆனமண்டோ தரியிவ்வா றழுது சோர்ந்தாள் 
அரக்கனுக்குக் கடன் விபீஷணனும் செய்தான் 
வானரவேந் தனும் தம்பி தானும் செம்பொன் 
மௌலிவைக்க இலங்கையபி ஷேகம் கொண்டான் 
மானவனும் மாருதியை ஏவத் தான் போய் 
வாடியதோர் பயிர்க்குமழை பொழிந்தாற் போல 
சானகிதன் காதில் இரா வணன் போய் வீழ்ந்ததனம் சொல்வான் மகிழ்ந்துசோ பனம் சொல்வானே

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –




								
				

			

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading