யாமுநார்ய ஸுதா⁴ம் போ⁴தி⁴ம் அவகா³ஹ்ய யதா²மதி ।
ஆதா³ய ப⁴க்தி யோகா³க்²யம் * ரத்நம் ஸந்த³ர்ஶயாம் யஹம் ॥
ஆளவந்தார் ஆகிற அமுதக் கடலிலே படிந்து குடைந்தாடி
பக்தி யோகமாகிற ரத்னத்தை
யதா மதி எடுத்து அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கிறேன் என்கை
இங்கு பக்தி யோகம் என்றது ஸாத்ய பக்தியான ப்ரபத்தியையே சொன்னபடியாம் –
இதன் மேலே –தத் பதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யத்ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதனமஸ் தீதி –என்று
அருளிச் செய்தது பொருந்துவதற்காக –
(கீழ் கத்யங்களில் தனியனாக ஸ்லோஹங்கள் இருந்தன
இதில் ஸ்வாமி தானே அருளிச் செய்த ஸ்லோகம் இது-ஸ்வயம் பிரயோஜனமாக பக்தியைச் சொன்னவாறு-)
ஆளவந்தாருடைய திருவருள் அடியாக கிடைத்த அர்த்தங்களை அன்பர்களுக்கு நித்ய அனுசந்தேயமாக வெளியிடுகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் தேர்ந்த கருத்து –
————
பிரவேசம் –
ஸ்ரீ பாஷ்யகாரர் தம் திரு உள்ளக் கருத்தில் அறுதி இட்ட அர்த்தம்
பனை நிழல் போலே தம் ஒருவர் அளவிலே பர்யவசியாதே
கல்பக தருச் சாயை போலே பர உபகார அர்த்தமாக
உபாய உபேயங்களை அனுஷ்டிப்பான் என்று பர உபதேச ப்ரவருத்தர் ஆகிறார் -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே –
ஸ்ரீ ஸரணாகதி கத்யத்திலே-பெரிய கத்யத்திலே சாமான்ய பகவத் விஷயமாக அவரை நோக்கி
ஸ்வ பிரார்த்தனையாக அருளிச் செய்தார் –(இதில் ஸரணாகதிக்கு முக்யத்வம்-ப்ராபக பரம்)
ஸ்ரீ ரெங்க கத்யத்தில் சௌலப்யத்துக்கு எல்லை நிலமான
பெரிய பெருமாள் விஷயமாக அவரை நோக்கி ஸ்வ பிரார்த்தனையாக அருளிச் செய்தார் -(இதில் ஸ்ரீ ரெங்கநாதனுக்கு முக்யத்வம்)
இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக
பிறரை நோக்கிக் கர்த்தவ்ய உபதேசம் பண்ணுகிறார் -(இதில் ஸ்ரீ வைகுண்ட வர்ணனைக்கு முக்யத்வம் -ப்ராப்ய பரம்)
ஸ்ரீ பாஷ்யத்தில்
லோகத்தில் துராசாரம் உபாயம் என்பார்
தேவ தாந்திர உபாசனம் உபாயம் என்பார்
தேவதையை ஒழியவே கேவல கர்மம் உபாயம் என்பார்
கேவலம் ஜ்ஞானம் உபாயம் என்பார்
கர்ம ஜ்ஞான சமுச்சயம் உபாயம் (பாஸ்கரர் பக்ஷம்) என்பாராய்க் கொண்டு
வேத வாக்யங்களை விகல்ப்பிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளை
நிரசிக்கைக்காக
நீங்கள் சொல்லுகிற வாக்யங்களுக்கு பொருள் நீங்கள் சொல்லுகிற படி அல்ல –
யுக்திகள் இருந்த படியாலும்
பிரமாணாந்தரங்கள் இருந்த படியாலும்
கர்ம ஜ்ஞான சஹ க்ருதையான பக்தியே உபாயம் என்று சொல்லுகிற இதுவே பொருள் -என்று
சாதிக்க வேண்டுகையாலே
பிரபத்தியும் உள்ளே ஸூசிதமாய்க் கிடக்கச் செய்தேயும்
பக்தியிலே நோக்காக உபபாதித்து அருளினார் –
இவ்வளவாலே-துஸ் சகையான பக்தியை உபாயம் என்று பிரமித்து மந்த மதிகள் பயப்படாமைக்காக
இப்படிப் பட்ட பக்தி சித்திக்கும்
புருஷார்த்த சித்திக்கும்
சரமமான உபாயம் பிரபத்தியே என்னும் இடத்தை உபபாதித்து அருளினார் -பெரிய கத்யத்திலே –
பக்தி சாத்குண்யத்துக்கும் பிரபத்தியே வேணும் என்று பிரபத்தி வைபவம் சொன்ன இவ்வளவாலே
பிரபத்தி அங்கமாய்
பக்தி தானே ஸ்வ தந்திர உபாயமோ என்னும் அதி சங்கை பிறவாமைக்காக
ஸூ சகமாய் ஸ்வரூப அனுரூபமாய் -இதர நிரபேஷமாய்
ஸ்வ தந்த்ரமான பிரபத்தி உபாயம்
என்னும் இடத்தை வெளி இட்டார் ஸ்ரீ ரெங்க கத்யத்திலே –
இனி
இதில் -இப்படி உபாய நிஷ்கர்ஷம் பிறந்த பின்பு
இவ் உபாய பிராப்யமான தேச விசேஷ வைபவத்தையும்
அத் தேசாதிபதியாய் -அனுபாவ்யமான அவ் வஸ்து வைபவத்தையும்
அவ் வஸ்து வைபவ அனுபவ ஜநிதமான கைங்கர்யத்தையும்
ஸ்ரோதாக்களுக்கு ருசி பிறக்கைக்காக அருளிச் செய்து
இவ் வர்த்தத்தில் ருசி பிறக்கைக்கு அடியான பாக்கியம் உடையார்
இப் பேறு பெற்று வாழ்ந்திடுக -என்று
உபாய அம்சத்தை சங்குசிதமாக அனுவதித்து
உபேய அம்சத்தை பரக்க அருளிச் செய்து -தலைக் கட்டுகிறார் –
———
இக் கத்யம் தானும் ஆறு சூரணையாய் இருக்கும் –
அதில் முதல் சூரணையாலே –சரண்யமான வஸ்துவினுடைய ஸ்வரூப -ரூப -குண -விபூதி வைலஷண்யத்தையும்
அதுக்கு எதிர் தட்டான தன்னுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து-
இப்படி இருந்துள்ள எனக்கு அவ் வஸ்துவைப் பெறுகைக்கு பிரபத்தியை ஒழிய வேறு உபாயம் இல்லை என்று அறுதி இட்டு-
அவனுடைய சௌசீல்யாதி குணங்களே பற்றாசாக அவன்
திருவடிகளிலே சரணம் புகுவான் -என்கிறார்-(புகுவான்-புகக் கடவன் என்று பர உபதேசம்)
——
இரண்டாம் சூரணையிலே பலத்துக்கு சக்ருதேவ அமைந்து இருக்கச் செய்தேயும்
மனஸ் வேறு ஒன்றில் கவலை போகாமைக்கும் -தனக்கு கால ஷேபத்துக்குமாக நித்ய அனுசந்தானம் பண்ணுவான் -என்கிறார்-
——–
மூன்றாம் சூரணையிலே இவ் உபாய நிஷ்டனானவனுக்கு பல பிராப்த்திக்கு உறுப்பான
அர்ச்சிராதி வழியே போய் பிரகிருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்-
கடந்து சென்று பிரவேசிக்கிற நித்ய விபூதி வைபவத்தையும்-
அத் தேசத்தின் உடைய பண்பையும்-
அங்கு உள்ள அலங்காரங்களையும்-
அப்படி அலங்க்ருதமான தேசத்தில் உலகுடைய உபய நாய்ச்சிமாரும் தானுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்-
அவர்களாலே பரிசர்யமாணனாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனையும்-
அந்த நாய்ச்சிமாருக்கு அனுபாவ்யமான திவ்ய அவயவ சௌந்த்ர்யத்தையும்
அதுக்கும் அதிசய ஆபாதாகமான திவ்ய ஆபரணங்கள் உடைய ஸூ கடிதத்வத்தையும்
இவற்றைக் காத்தூட்டும் (காத்து ஊட்டும்-ரஷித்தும் வளர்த்தும்-யோக க்ஷேபம் வஹாம் அஹம்)திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
இஸ் ஸமுதாய சோபையைக் கண்டு அனுபவித்து
அவ் வநுபவ ஜனித ப்ரீதியாலே அநேக்தாபவித்து அடிமை செய்யும் ஸூரி பரிஷத்தையும்
அவர்களால் அநவரத பரிசரித சரண நளினனாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இப் பேற்றை நாம் எப்போது பெறக் கடவோம் -என்று மநோ ரதித்து
அம் மநோ ரத அனு குணமாகச் சென்று கிட்டி
பெருமாளே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் -என்கிறார்-
———–
நாலாம் சூரணையிலே இவன் அபேஷ அனுகூலமாக அவனாலே ஸ்வீக்ருதனாய்க் கொண்டு
அனுகூல வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் –என்கிறது-
——
ஐந்தாம் சூரணையிலே இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்த இழவு தீர
அநந்ய பரனாய் இமையாத கண்ணினாய்க் கொண்டு
ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது-
———-
ஆறாம் சூரணையிலே
அவன் இவனை வினவிக் குளிரக் கடாஷித்துத் திருவடிகளை தலையிலே வைக்க
அடி சூடும் அரசராய்-பெருமாள் திரு மொழி -10-7-
ஸ்வாராஜ்ய சாம்ராஜ்ய துரந்தரனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
(அன்று ஈன்ற கன்றின் மேல் வாத்சல்யத்தால் –
விபீஷணனை ஏற்றுக் கொண்டு ஸுக்ரீவாதிகளிலும் மேலாக அபிமானித்து அருளியது போல்
இன்று வந்த முக்தனையும் நித்யருக்கும் மேலாக அபி மானித்து அருளுவான் அன்றோ)
(குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-7-)
(எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பனை நிழல் போல் தம் ஒருவர் அளவிலே நின்று இராமே கற்பகக் காவின் நிழல் போல் உலகெல்லாம் பயன் பெற வேண்டும் என்று கருதி அருளினவராகையாலே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலவே யாம்படி உபாய உபேயங்களை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து பர உபதேசத்தில் இழிகிறார் ஸ்ரீ வைகுண்ட கத்ய முகத்தாலே
பெரிய கத்யமான சரணாகதி கத்யத்திலே பொதுவாக எம்பெருமானை நோக்கின ஸ்வ ப்ரார்த்தனையாக அருளிச் செய்தார்
சிறிய கத்யமான ஸ்ரீ ரெங்க கத்யத்திலே அந்தப் பிரார்தனையை ஸுலபயத்துக்கு எல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்தார்
இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக பிறரை நோக்கி கர்தவ்ய உபதேசமாக அருளிச் செய்கிறார்
இதில் உபாய அம்சத்தைச் சுருங்க அருளிச் செய்து
உபேயமான அம்சத்தை மிகவும் பரக்க அருளிச் செய்கிறார்
இந்தக் கத்யம் ஆறு சூர்ணிகைகள் கொண்டதாய் இருக்கும் -அவற்றின் தாத்பர்ய ஸாரம் வருமாறு
சூர்ணிகை -1- எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வை லக்ஷண்யத்தையும் -தன்னுடைய நிலைமையையும் அநுஸந்தித்து
அப்பெருமானுடைய ஸுலப்யம் முதலிய திருக் குணங்களே பற்றாஸாக அவன் திருவடிகளிலே சரணம் புக வேணும் என்கிறது
சூர்ணிகை -2-பேற்றுக்கு ஒருகால் அனுசந்திக்கையே போதுமாய் இருக்கச் செய்தேயும்
நெஞ்சு வேறே ஒன்றில் செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்குமாக
நித்ய அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது
சூர்ணிகை -3-இவ்வதிகாரி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று ப்ரக்ருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்
கடந்து சென்று புகுகிற நித்ய விபூதியின் வைபவத்தையும்
அந்த தேச விசேஷத்தினுடைய பண்பையும்
அங்குள்ள அலங்காரங்களையும்
அப்படிப்பட்ட இடத்தில் நாச்சியாரும் ஸர்வேஸ்வரனுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அந்த நாச்சிமாருக்கு அநுபாவ்யமான வடிவு அழகையும் -திவ்ய ஆபரணச் சேர்த்தியையும் -திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
வழுவிலா அடிமை செய்யும் நித்ய ஸூரி பரிஷத்தையும்
அவர்களுடைய நித்ய கைங்கர்யத்துக்கு இலக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அனுசந்தித்து
நாம் இப்பேற்றை எப்போது பெறக் கடவோம் என்று பாரித்து
அப் பாரிப்பின் படியே சென்று கிட்டி
எம்பெருமானே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் என்கிறது
சூர்ணிகை -4- ஸ்வ அபேக்ஷித்தத்தின் படியே எம்பெருமானாலே ஸ்வீ கரிக்கப் பட்டவனாய்க் கொண்டு அநுகூல விருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் என்கிறது
சூர்ணிகை -5-இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்து இருந்த இழவு தீர அந்நிய பரதை அற்று இமையாத கண்ணினனாய்க் கொண்டு ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் படியைச் சொல்கிறது
சூர்ணிகை -6- இப்படி வந்து சேர்ந்த இவனை எம்பெருமான் வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலை மேல் வைக்க அடி சூடும் அரசு பெற்று நித்ய ஆனந்த ஸாலியாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது)
——————–————————————————————————————–
முதல் சூரணையாலே –சரண்யமான வஸ்துவினுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வைலஷண்யத்தையும்
அதுக்கு எதிர் தட்டான தன்னுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து
இப்படி இருந்துள்ள எனக்கு அவ் வஸ்துவைப் பெறுகைக்கு பிரபத்தியை ஒழிய வேறு உபாயம் இல்லை என்று அறுதி இட்டு
அவனுடைய சௌசீல்யாதி குணங்களே பற்றாசாக அவன்
திருவடிகளிலே சரணம் புகுவன் -என்கிறார்-
சூரணை 1- அவதாரிகை
அதில் முதல் சூரணையிலே
ஸ்வாதீன த்ரிவிதசேதன -என்று தொடங்கி
நாராயணம் -என்னும் அளவாக
சேதன அசேதன விலஷண ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுகுணமான குணங்களையும் சொல்லுகிறது –
————
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்ம விபாகாதி
அசேஷ தோஷ அசம்ப்ஸ்ப்ருஷ்டம்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜ
ப்ரப்ருதய அசங்க்யேய கல்யாண குணா கணவ் மஹார்ணவம்
பரம புருஷம் பகவந்தம் நாராயணம்
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக
ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய
பரிசர்யைக மநோ ரத தத் பராப்தயே ஸ
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே
அநயன் னமே கல்ப கோடி சஹஸ்ரேணாபி சாதா நமஸ் தீதி மந்வான
தஸ்யைவ பகவதோ நாராயணஸ் யா அகில சத்வதயைக சாகரச்ய
அநலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூல
அமர்யாத சீலவத
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா து
தேவ திர்யக் மனுஷ்யாதி
அகில ஜன ஹ்ருதய ஆநந்த நஸய
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
பக்த ஜன சம்ஸ்லேஷைக போகஸ்ய
நித்ய ஜ்ஞான க்ரிய
ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய மஹா விபூதே
ஸ்ரீ மத சரணாரவிந்த யுகளம்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன தத்கத சர்வ பாவேன சரணம் அநு வ்ரஜேத்
ஸ்வ அதீன –
இத்தால் பராதீனமான ப்ரவ்ருத்திகளாதிகளுடைய சேதன அசேதனங்களைப் போல் அன்றிக்கே
ஸ்வ அதீன வ்யாபாரனாய் -இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
ஜகத் வசே வர்த்த தேதம் க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம் -என்கிறபடியே
தன்னை ஒழிந்தவை அடைய தான் இட்ட வழக்கை இருக்கும் -என்கிறது –
அவை தான் என் என்னில் –
த்ரிவித சேதன அசேதன –
பத்த முக்த நித்ய பேதேன மூன்று படிப் பட்ட ஆத்ம வர்க்கம் -என்ன
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித்து என-இவை
இவை தானேயோ பர தந்த்ரமாய் இருப்பன -எனில்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
இவற்றின் உடைய தர்மி ஸ்வரூபம் என்ன –
தர்மமான ஸ்வபாவம் என்ன
இவற்றின் உடைய வியாபாரம் என்ன இவை
ஸ்திதி
வ்யவஸ்தித ஸ்வ பாவம்
நித்யோ நிதயாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹூ நாம் யோ விததாதி காமான் -என்றும்
அசேதன பரார்த்தா ஸ நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே -என்றும்
சேதன அசேதனங்கள் இரண்டின் ஸ்வ பாவமும் நித்யம் ஆகையாலே
ஸ்வரூப ஸ்திதி என்று சத்தாநுவ்ருத்தி சொல்ல வேண்டா –
சேதனனுக்கு ஸ்வரூப பேதம் ஆவது –மாயாவாதிகள் போலே ஏகாத்மாவாய் இருக்கை அன்றிக்கே
ஏகோ பஹூநாம் -என்றும்
நாநா ஆத்மாநோ வ்யவஸ்தாத- (கௌதமர் நியாய ஸாஸ்த்ரம்)என்றும்
சுக துக்காதி பேதத்தாலே ஆத்மாக்கள் அநேக ரூபமாய் இருக்கை –
ஸ்வபாவ பேதம் ஆவது —ஜ்ஞாத்ருத்வ -கர்த்ருத்வ -போக்த்ருத்வ -நித்யத்வ -ஸ்வயம் பிரகாசத்வ சேஷத் வாதிகள் –
பிரவ்ருத்தி பேதம் ஆவது –ஜ்ஞான -சிகீர்ஷா -ப்ரயத்நாதிகள் –
அசேதனத்துக்கு ஸ்வரூப பேதம் ஆவது –பிரகிருதி மஹத் அஹங்கார தன்மாத்ர ஆகாசாதி பேதத்தாலும்
கலா காஷ்டா முஹூர்த்தாதி பேதத்தாலும்
பின்னமான கார்ய காரண அவஸ்த வஸ்துக்கள் –
ஸ்வபாவ பேதம் ஆவது –ஜடத்வ பரிணாமித்வ நித்யத்வ பரார்த்தத்வ சத்வாதி குண ஆஸ்ரயத்வாதிகள்
பிரவ்ருத்தி பேதம் ஆவது -கார்ய ஆரம்பகத்வ -உபாதாநத்வ -திரோதாயாக்த்வ -அப்ரகாசத்வாதிகள்-
க்ருஹ- உபகரண -ப்ருத்யாதிகள் உடைய-ஸ்வரூப சம்பாதநாதி வியாபாரங்கள் ராஜாதி களுக்கும் ஸ்வ அதீனமாய் அன்றோ இருப்பது –
அவ்வோ மாத்ரமோ -என்னில்
க்லேச கர்ம விபாகாதி அசேஷ தோஷ அசம்ப்ஸ்ப்ருஷ்டம் –
என்கிறபடியே-ஈத்ருச சமஸ்த தோஷங்களும் இன்றிக்கே இருக்கும் இறே
(அவித்யை முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
புண்ய பாப ரூபா கர்மம் என்ன
இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத)
க்லேச –அதாவது -ராக த்வேஷ அபி நிவேசா- க்லேசா –
கர்ம -அதாவது -புண்ய பாப ரூப கர்மம்
விபாக -அதாவது -சதி மூலே தத் விபாகா ஜாத் யாயுர் போகா-
ஆதி -சப்தம் வாசனையை சொல்லுகிறது
ஆசயோ நாம வாஸநா – என்னக் கடவது இறே –
இவற்றுக்கு வஸ்யனாய் இன்றிக்கே இருக்கை –
இவை ஹேயங்களுக்கு எல்லாம் உப லஷணமாய்
ஏவம் பிரகாரம் அமலம் நித்யம் வ்யாபகம் அஷயம்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-53-என்றும்
விநா ஹேயைர் குணாதிபி -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்றும் சொல்லுகிறபடியே
சமஸ்த ஹேய ப்ரத்ய நீகன் என்று சொல்லுகிறது –
(ஸ்ரீ ரெங்க கத்யத்தில் பார்த்தவை–உபய விபூதி யோகம்-அருளிச் செய்த பின்பு ஹேய பிரதி படத்வம்-அருளிச் செய்கிறார் க்லேச கர்மாத் யசேஷ தோஷ அசம்ஸ்ப்ருஷ்டம்(யோக ஸாஸ்த்ரத்தில் பதஞ்சலி ஸூத்ரம் அடியாகவே இத்தை அருளிச் செய்கிறார்) சேதன அசேதனங்கள் இரண்டும் சரீரமாய் ஈஸ்வரன் சரீரியாய் இருக்கிறான் ஆகில் சரீர பிரயுக்தமான தோஷம் சரீரிக்கு வாராதோ -என்னில் – தத் கத தோஷைர் அசம்ஸ்ப்ருஷ்டன் -என்கிறது கிலேசம் ஆவது – அவித்யா அஸ்மிதா அபிநிவேச ராக த்வேஷா பஞ்ச கிலேசா -இவை என்ன கர்ம-இவற்றுக்கு காரணமுமாய் கார்யமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -என்ன ஆதி –சப்த க்ராஹ்யமான விபாக ஆசயங்கள் -என்ன இவை முதலான அசேஷ தோஷங்களாலும் ஸ்பர்சிக்கப் படாதவன் – விபாகம் ஆவது (பக்குவம்)-தேவாதி ஜாதி யோகம் (பிறப்பு)-என்ன ஆயுஸ் என்ன -(போகம் ஸூக துக்கங்கள்)இவை முதலானவை ஆசயம் ஆகிறது -தத் தஜ் ஜாத்ய அனு குண புத்தி பேதங்கள் அசேஷ –பதத்தாலே அசித் கதமான பரிணாமத்தையும் சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளையும் நினைக்கிறது அசம்ஸ்பர்சத்தாலே ப்ராக பாவத்தை நினைக்கிறது (இல்லாதவன் என்றால் முன்பு இருந்து இப்பொழுது இல்லாமல் இருப்பதைச் சொல்லாமல் முன்பே -எப்பொழுதுமே -இல்லாததைச் சொன்னவாறு) (அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே)
—————————————
இப்படி ஹேய ப்ரத்ய நீகனாய் இருக்கும் அளவேயோ-என்னில்
சமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆதார பூதன் -என்கிறார்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜ-ப்ரப்ருதய அசங்க்யேய கல்யாண குணா கணவ் மஹார்ணவம்
(ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக் கல்யாண குண திரள்களுக்கு கடல் போன்று)
ஸ்வா பாவிக-
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ – என்றும் –
த இமே சத்யா காமா -என்றும் சொல்லுகிறபடியே
ஒரு சாதனா அனுஷ்டானத்தாலே யாதல்
ஒரு தேவதா ப்ரசாதத்தாலே யாதல்
ஒரு நாள் வரையிலே யாதல்
போதல் வருதல் செய்கை அன்றிக்கே –
குணங்கள் தர்மிக்கு சத்தா பிரயுக்தமாய் இருக்கும் –என்கை
இப்படி ஸ்வபாவ சித்தமாய் இருந்துள்ள குணங்கள் தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்
அநவதிக அதிசய –
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குத்ஸ்சநேதி -என்றும்
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -என்றும் சொல்லுகிறபடியே
குணங்களின் உடைய மிகுதிக்கு எல்லை அற்று இருக்கும் –
உள்ள குணங்களுக்கு எல்லை அற்று இருந்தாலும்
இல்லாத குணங்களும் சில உண்டாய் இருக்குமோ –
உள்ள குணங்கள் தான் எவை -என்னும் அபேஷையிலே கிளம்புகிறது –
மஹார்ணவம் –
ஜ்ஞான —
அதாவது -யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா சவாத -என்கிறபடியே
சர்வ காலமும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத் காரம் –
பல –
அதாவது -ஸ தாதார ப்ருதிவீம் த்யாமுதேமாம் -என்றும்
அதவா பஹூ நோக்தேன கிம் ஜ்ஞா நேன தவார்ஜூன
விஷ்டப் யாஹமிதம் க்ருத்ஸ் நமேகாம் சேன ஸ்திதோ ஜகத்-என்றும்
சொல்லுகிறபடியே -உபய விபூதியையும் அக்லேசேன வஹிக்க வல்ல மிடுக்கு –
ஐஸ்வர்ய –
ஷரம் ப்ரதாநமம்ருதாஷரம் ஹர
ஷராத்மாநாவிசதே தேவ ஏக – என்கிறபடியே
இப்படி த்ரிவித ஜகத்தை தன் குடை நிழலின் கீழே -(துடைக் கீழே) -அமுக்கி ஆள வல்லனாகை யாகிற நியந்த்ருத்வம்
வீர்ய –
ந ஸ்ரமோ ந ஸ கேதஸ் தே ஜகத் தாரண சாசனே -என்று சொல்லுகிறபடியே
ஜகத் தாரண நியமனங்களிலே சாரீரமான சமான சர்வ கிலேசங்கள் என்றும் இன்றியிலே இருக்கை –
சக்தி –
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்றும்
ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹா ப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கச்யசித் -என்றும்
சேஷ்டா தஸ்யா ப்ரமே யஸ்ய வியாபிநோ அவ்யாஹதாத்மிகா -என்றும்
சொல்லுகிறபடியே ஏறிட்டுக் கொண்டதொரு கார்யம் முட்டுப் படாதபடி செய்து தலை கட்ட வற்றான சாமர்த்தியம்
தேஜஸ்-
ரகாராதீநி நாமாநி ராம தரஸ்தஸ்ய ராவண
ரத்நானி ஸ ரதாஸ்சைவ தராசம் சஞ்சயந்தி மே -ஆரண்ய -39-17-என்கிறபடியே
வ்யாபாராந்தர நிரபேஷமாக இவன் பேர் சொன்ன போதே
எதிரிகள் குடல் குழம்பும் படியான மதிப்பு
அன்றியே
இத்தால் பஹூ பிரயத்ன சாத்தியம் ஆனவற்றை அல்ப யத்னத்தாலே
தலைக் கட்ட வல்லன் -என்றபடி
ந தஸ்யேசே கச்சன தஸ்ய நாம மஹத் யச -என்கிறபடியே
வீர்ய சக்தி யாதிகளால் பிறக்கும் புகழாகவுமாம்
——–
யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -41-
யாதொரு ஸ்தானத்தை விஷ்ணு சம்பந்தியான பரமபதம் என்கிறார்களா –
எந்த ஸ்தானமானது தமஸ்ஸுக்கு அப்பால் பரம ஆகாசம் எனப்படுகிறதோ
எந்த ஸ்தானமானதுதேஜு மயமாயும் நிஷ்க்ருஷ்ட சத்வமாயும் சாஸ்வதமாயும் உள்ளதோ –
எந்த ஸ்தானமானது ஆனந்த கந்தமாயும் மிக அழகியதாயும் ஆச்சர்யமாகவும் உள்ளதோ –
யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ராஜஸ பராகே-என்றும்
தமஸஸ் து பாரே-என்றும்
தமஸஸ் பரஸ்தாத் -என்றும் சொல்லுகிறபடி ரஜஸ் தமஸ்ஸுக்களுக்கு அப்பால் அவை கலசாதபடி
பரம ஆகாசம் என்னப்படுகிறது யாதோ
தேஜோ மயம்
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பந்தி குதோயம் அக்நி–என்றும்
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ் ப்ரேஷம் தேவதா நவை –என்றும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி என்றும் சொல்லும்படி
பரம சத்வ மயம்
ரஜோ குணம் தமோ குணங்கள் கலசாத சுத்த சத்வம் வடிவு எடுத்ததாய் இருக்கும்
த்ருவம் யத்
யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமம் த்ருவம் யத் பரம் ப்ராப்ய தத்வஞ்ஞாம் உச்யந்தே சர்வ கில்பிஷை–
பிரமாண வசனத்தில் உள்ள த்ருவம் -அனு வதித்த படி
அநாதி நிதானமாய் இருக்கும் என்றபடி
ஆனந்த கந்தம்
நலம் அந்தம் இல்லாதோர் நாடு அன்றோ
அதி ஸூந்தரம்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் அருளிச் செய்தபடி ஸுவ்ந்தர்யம் எல்லை காண ஒண்ணாதாய் இருக்கும்
அத்புதம் யத் —
அநு க்ஷணம் அபூர்வமாய் ஆச்சர்யாவாஹாமாய் இருக்குமது)
ஆனால் இப்படி ஷாட் குண்யமேயோ உள்ளது -என்னில்
ப்ரப்ருதய
தவ அநந்த குணச யபி ஷடேவ ப்ரதமே குணாயைஸ் த்வஏவ ஜகத் குஷாவன்யேஸ் அப்யந்தர் நிவேசிதா -என்கிறபடியே
இவை தொடக்கமான குணங்கள் பலவும் உள -என்கிறார்
இப்படி பல உண்டானாலும் இத்தனை என்று எண்ணப் பட்டு இருக்குமோ என்னில்
அசங்க்யேய –
சங்க்யாதும் நைவ சக்யந்தே குணா -என்றும்
ஸ தே குணா நாம் அயுத ஏக தேசம் வதேன்ன வா -என்றும் சொல்லுகிறபடி
எண்ணிறந்து இருக்கும்
இப்படி எண்ணிறந்து இருக்கைக்கு அடி தோஷ குணங்கள் கூடியோ என்னில்
கல்யாண –
பஹாவோ ந்ருப கல்யாண குணா -என்றும்
சங்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷாச்ச சார்ங்கின
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி அபாவாதேவ பச்சிம -என்றும்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் -என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ- என்றும் சொல்லுகிறபடியே
ஹேய ரஹீதமான குணங்கள் முடிவு இன்றிக்கே இருக்கும்
கல்யாண -ஆஸ்ரயமான அவன் தன்னோடு
அநு போக்தாககளோடு வாசி அற மங்களா வஹமாய் -சுகா வஹமாயும் இருக்கும்
கல்யாணம் மங்களம் சுபம் -என்னக் கடவது இறே
லோகத்திலும் இங்குத் திரள் என் -துக்கமோ கல்யாணமோ -என்று துக்க ப்ரதியோகியாக
சுகத்தை சொல்லக் கடவது இறே
குணா –
கேட்ட போதே செவி புதைக்க வேண்டும்படி இருக்கை அன்றிக்கே
குண்யந்த இதி குணா -என்றும்
ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திருவாய்மொழி -8-1-8-என்றும் சொல்லுகிறபடியே
அஹோ அஹோ என்று கிழவி நூல் கொண்டு -கீழ் நூல் -பலகாலும் ஆவர்த்திக்கும் படியாய் இருக்கை
(மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-)
இப்படி ஒரோ குணங்களேயோ சங்கையும் அவதியும் இன்றிக்கே இருப்பது -என்னில்
கணவ்-
தேஜஸாம் ராஸீம்-என்றும்
ஒண் சுடர்க் கற்றை -திரு வாய் மொழி -7-7-6-என்றும் சொல்லுகிறபடியே
(மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?)
ஸ்வாமித்வ அனுபந்தியான ஸவ்ர்யம் என்ன -வீர்யம் என்ன -பராக்ரம் என்ன-
சாதுர்யம் என்ன -ஸ்தைர்யம் என்ன -தைர்யம் என்ன
ஏவமாதி குணங்கள் –
சௌலப்ய அனுபந்தியான பவ்யதை என்ன- கிருபை என்ன- அபராத சஹத்வம் என்ன-
கிலேச சஹிஷ்ணுத்வம் என்ன-
தோஷத்தில் குண புத்தி என்ன- பிரத் யுபகார நைரபேஷ்யம் என்ன ஏவமாதிகள்-
சௌசீல்ய அனுபந்தியான ஸ்வ வைப அஞ்ஞானம் என்ன-
பரகீய ஹேய அஞ்ஞானம் என்ன -அக்ருத்ரிமத்வம் என்ன ஏவமாதிகள்
வாத்சல்ய அனுபந்தியான பஷபாதம் என்ன -தோஷத்தில் குண புத்தி என்ன-
உபகார நைரபேஷ்யம் என்ன ஏவமாதிகள்
சந்தோஷ அனுபந்தியான பிரிய -மோத- பிரமோத -ஆனந்தாதி குணங்கள் என்ன
ஏவமாதியான ஒரோ குணங்களைப் பற்றி திறம் திறமாக வரும் குணங்களுக்கு ஓர் எல்லை இல்லை என்கிறது
இப்படிக்கொத்த குணங்கள் தான் தனித் தனியே அலககாயோ இருப்பது என்னில்
ஒகம்-
ஊர் வாரியும்- காட்டு வாரியும்- மலை வாரியும்– ஏரிகள் உடைந்த வாரியும் ஓர் இடத்திலே கூடினால்
கங்கும் கரையும் அழிந்து -கரை காண ஒண்ணாதே திரை மேல் திரையாக ஒரு வெள்ளமாக வருமா போலே
சமஸ்த குணங்களும் ஒரு வழிப் பட்டு இருக்கும் என்கிறது
எல்லாம் கூடினாலும் ஆற்று வெள்ளம் தனித் தனி நீர்களைப் பிரித்து அறிய ஒண்ணாதபடியும்-
கரை அழியப் பெருகினாலும் ஓர் இடத்தில் வந்த நீர் அவ்விடத்தில் நிலை நில்லாது ஒழியக் கடவதுமாய்-
மலையிலே அடி அற்றவாரே வற்றக் கடவதுமாய் இறே இருப்பது
அப்படி இவ் வாஸ்ரயத்தில் நிலை நில்லாதபடி அஸ்திரங்களுமாய் அநித்யங்களுமாயோ இருப்பது என்னில்
அரணவம் -என்கிறது –
சமுத்திர இவ சிந்துபி -என்கிறபடியே எல்லா நீரும் கூடிக் கடலிலே பர்யவசிக்கவும்-
அவ் விடத்தை விட்டுப் போகாது ஒழியவும் -வற்றாது ஒழியவும் -கடவதாய் இருக்குமா போலே
இங்கும் எல்லா குணங்களும் சேர இருக்கக் கடவதாய்- நித்யமுமாயும் இருக்கும்
அரணவம் -அர்ணஸ் ஆகிறது ஜலம் ஆகையாலே
அர்ணவம் –ஸூத்த ஜலக் கடல்
(1-ஐம்பூத் த்வீபம் -உப்புக்கடல்
2-பிலாஷா த்வீபம் -விஷுக்கடல் –
3-சாய த்வீபம் -சூராக்கடல் —
4-சால்மலி த்வீபம் -சர்ப்பிக்கடல்-
5-குசா த்வீபம்-ததிக்கடல்—
6-கிரௌஞ்ச த்வீபம்–பாற் கடல்-
7-புஷ்கார த்வீபம் -ஸூத்த நீர்க்கடல்)
1-லவண -உப்புக் கடல்
2-இஷூ –கரும்புச் சாறுக் கடல்
3-சூரா -கள்ளாலான கடல்
4-சர்ப்பி -நெய்க் கடல்
5-ததி -தயிர்க் கடல்
6-ஷீரங்கள்-பாற் கடல்
ஒவ்வொன்றும் நூறு மடங்கு பெரியதாய்
அடுத்து ஸூத்த நீர்க் கடல் -அர்ணவம் ஆகிற இவ்வருகில்
பரிச்சின்னங்களான ஷட் சமுத்ரங்கள் போல் அன்றிக்கே
இவை இத்தனைக்கும் அவ் வருகாய்
அதிக பரிமாண ஸூத்த ஜலம் போலே பெருத்து இருக்கும் -என்கிறது
இப்படி யானாலும் அது தானும் லோகாலோக ஸ்வேத த்வீபாதிகளால் பரிச்சின்னமாய் அன்றோ இருப்பது
அது போலேயோ இங்கும் -என்னில்
மஹார்ணவம்
குணா நாமா கரோ மஹான்-என்றும்
சமஸ்த கல்யாண குண அம்ருதோததி -என்றும் சொல்லுகிற படியே
அம்ருதமாய் இருப்பதொரு பெரும் புறக் கடல் -பெரிய திருமொழி -7-10-1- -என்கிறது –
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)
—————————————————————————————
பரம புருஷம் பகவந்தம் நாராயணம்
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக
ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய
பரிசர்யைக மநோ ரத தத் பராப்தயே ஸ
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே
அநயன்ன மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதா நமஸ் தீதி மந்வான
தசைவ பகவதோ நாராயணஸ் யா அகில சத்வதயைக சாகரஸ்ய
அனலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூல
அமர்யாத சீலவத
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா து
தேவ திர்யக் மனுஷ்யாதி
அகில ஜன ஹ்ருத யாநந்த நஸய
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
பக்த ஜன சம்ஸ்லேஷைக போகஸ்ய
நித்ய ஜ்ஞான க்ரிய
ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய மஹா விபூதே
ஸ்ரீ மத் சரணாரவிந்த யுகளம்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன தத் கத சர்வ பாவேன சரணம் அநு வ்ரஜேத்
இப்படிப் பட்ட ஸ்வரூப ரூப குணங்களை உடையதான ஆஸ்து எது என்னில்
பரம புருஷம் -இத்யாதி
ஏவம் பூதன் நாராயணன் -என்கிறது –
கீத்ருக் பூதன் (எப்படிப்பட்ட பூதன்)-என்னில் -பரம புருஷம் –
புருஷ சப்தம் ஜீவ ஈஸ்வர சாதாரணம் ஆகையாலே
பரம -பதத்தை இட்டு வ்யாவர்த்திக்கிறது
பரோமா அஸ்மாதிதி பரம -என்று இவனுக்கு மேலாய் இருப்பார் இல்லை -என்கிறது -(ஓத்தார் மிக்கார் இலையாய மாயன் அன்றோ)
இப்படி சர்வ அதிசாயியான வஸ்துவுக்குப் பேர் என் என்னில்
பகவந்தம் –
ஸ்வா தீன த்ரிவித -என்று தொடங்கி சிருஷ்டி ஸ்திதி யாதி கர்த்ருத்வம் சொல்லுகையாலும்-
ஜ்ஞான பல ஐஸ்வர்ய -என்று ஷாட் குண்ய யோகம் சொல்லுகையாலும்-
பகாரத்தால்-ஸம் வர்த்தேதி -உண்டாக்குபவன் -மாறுபாடு செய்பவன்
பர்த்தா ஸ்வாமி -என்றும்
ககாரத்தால் நேதா ரக்ஷிப்பவன் -அழிப்பவன்
வான் -இவற்றை யுடையவன் -ஞான பலாதி குணங்கள் யுடையவன் -பிரமாணங்கள் சொல்லுமே
இவற்றை யுடைய வனுடைய திருநாமம் பகவான் என்று லோக -ஸாஸ்த்ரம் நிர்த்தேசம் இருப்பதால் இந்தத் திருநாமம்-
இத்தால் பூர்ண ஷாட் குண்யன் என்றும் -ஜகத் காரண பூதன் என்றும் சொல்லிற்று ஆயத்து
ப்ரஹ்மாதி களுக்கும் தத் குண லேச யோகத்தாலே ஔபசாரிகமாக பகவச் சப்த வாச்யத்வம் உண்டாய் இராதோ -என்னில் -அதுக்காக
நாராயணம் –
அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தனாய்
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே-என்கிறபடியே-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் கூட காரண பூதனாய்-ப்ராப்யனும் ஆனவன் -என்கிறது
(பகவந்தம்)நாராயணம் -பகவச் சப்தத்தாலும் ஷாட் குணய மாத்திரம் இறே சொல்லிற்று
ப்ரப்ருதி அசங்க்யேய கல்யாண குணா கனௌ மஹார்ணவம் -என்று சமஸ்த கல்யாண குணாஸ்ரயம் சொல்லுகையாலே
அத்தால் பலிதமான திரு நாமம் சொல்லுகிறது –
நாராயணம் பரம புருஷம் -என்கையாலே
ஸ்ரீ புருஷ ஸூக்த பரமான பிரதிபாத்யம் சொல்லுகிறது –
பகவந்தம் -என்கையாலே
பகவான் பவித்ரம் வாசுதேவ
பவித்ரம் வாசுதேவோ பகவான்
சங்கர்ஷணோ பகவான்
ப்ரத்யும்னோ பகவான் -இத்யாதி
ரஹஸ்ய ஆம்னாய ப்ரதிபாத்யத்வம் சொல்லுகிறது –
நாராயணம் -என்கையாலே நாராயண அநுவாக பிரதிபாத்யம் சொல்லுகிறது
ஆக -இத்தால் வேதே ராமாயணே சைவ புராணே பாரதே ததா
ஆதௌ மத்யே ததா அந்தே ஸ விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும்
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ச்ம்ருதிர் ஜ்ஞான மபோ ஹ நஞ்ச
வேதைஸ்ஸ சர்வைர் அஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் -என்றும்
சொல்லுகிற படியே –க்ருத்ஸ்ன வேத ப்ரதிபாத்யனான நாராயணன் -என்னும் அர்த்தம் சொல்லுகிறது-
இதுக்கு முன் ப்ராப்ய விஷய வைலஷண்யம் சொல்லிற்று ‘இனி இவ் விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லுகிறது -தத் பிராப்தயே-என்னும் அளவாக –
(ஸ்வாமித்வேந குருத்வேந ஸூஹ்ருத்த்வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப்பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்)
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூஹ்ருத்த்வேந ஸ பரிக்ருஹ்ய –
நாராயண சப்தத்தால் பிரதிபாதிக்கப் படுகிற அர்த்தத்தை அனுசந்திக்கிற படி –
(மூன்று பதங்களுக்கும் மூன்று மூன்று அர்த்தங்கள் சாதிக்கிறார்-சேஷியாகவும்- நேசனாகவும் -ஆச்சார்யனாயும் ஏற்றுக் கொண்டு)
ஸ்வாமித்வ -சௌலப்ய -சௌசீல்ய -வாத்சல்யாதிகள் இறே நாராயண சப்தார்த்தம் –
ஸ்வாமித்வேந -என்கையாலே ஸ்வாமித்வம் சொல்லுகிறது
குருத்வேந -என்கையாலே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்கிற சௌலப்யம் சொல்லுகிறது –
ஸூஹ்ருத்த்வேந -என்கையாலே சௌசீல்யம் சொல்லுகிறது
ஸ-காரத்தாலே வாத்சல்யம் சொல்லுகிறது
அன்றிக்கே -உக்த சமுச்சயமாய் -வாத்சல்யம் உப லஷிதம் ஆகவுமாம் –
அன்றிக்கே
ஸ்வாமித்வேந -என்று பரம புருஷம் -என்று பரம புருஷ சப்தத்தாலே ஸூ சிதமான புருஷ ஸூக்தத்தில்
பிரதிபாதிதமான ஸ்வாமித்வத்தை சொல்லுகிறது
குருத்வேந -என்று பகவந்தம் -என்கையாலே பகவச் சப்த ஸூசிதமான ரஹஸ்ய ஆம்நாயத்தில்
சங்கர்ஷணோ பகவான் -என்று சங்கர்ஷண ரூபேண ஜ்ஞானப் பிரதானம் பண்ணின குருத்வத்தைச் சொல்லுகிறது –
ஸூஹ்ருத்த்வேந -என்று -நாராயணம் -என்று நாராயண சப்தத்தாலே ஸூசிதமான நாராயண அனுவாகத்தில்
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபி வா
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்
தஸ்ய மத்யே வஹ்நிசிகா அணி யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபாஸ்யாத் தநூபமா
தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட் -என்றும்
இவற்றை விட மாட்டாதே உட்புகுந்து கலந்து இருக்கும் -என்று ப்ரதிபாத்யமான சௌஹார்த்ததத்தைச் சொல்லுகிறது –
ஸ்வாமித்வேந -என்கையாலே சரணாகதி பண்ணுகைக்கு பற்றாசான ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லுகிறது
குருத்வேந -என்கையாலே சிஷ்ய -ஆச்சார்ய சம்பந்தம் சொல்லுகிறது –
ஸூஹ்ருத்த் வேந -என்கையாலே சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்று (சஹா -தோழமை)சக்ய நிபந்தனமான சம்பந்தம் சொல்லுகிறது –
சௌசீல்யம் சொல்லுகிறது என்றும் சொல்லுவார்கள்
இத்தால் சர்வ வித சம்பந்தமும் அவனோடு -என்றபடி
பரிக்ருஹ்ய -என்று ஒரு தலை மாற்றமாக தான் ப்ரீதி பத்தி பண்ணுகை அன்றிக்கே சர்வ அவிகீதமாக லோக பரிக்ருஹீதமான அர்த்தம் என்கை-
பரிக்ருஹ்ய -பரித்தோ க்ருஹீத்வா
சாஸ்திர அவலோக நத்தாலும் -ஆச்சார்யா உபதேசத்தாலும்-
பகவத் அனுஷ்டானத்தாலும் ஆகிற சர்வ பிரகாரத்தாலும் நெஞ்சிலே ஸ்வீகரித்து
இப்படி அத்தலையில் ஸ்வாமித்வ அனுசந்தானம் பண்ணின அநந்தரம்
ஸ்வ உஜ்ஜீன இச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்று
ஸ்வாமித்வ பிரதி சம்பந்தி யான தாஸ்ய அனுகுண வ்ருத்தி விசேஷத்தை ஆசைப் படும்படி சொல்லுகிறது –ஐகாந்திக ஆத்யந்திக தத் பதாம் புஜ த்வய பரிசர்யைக மநோ ரத–என்கிற பதத்தாலே –
(ஐகாந்திக ஆத்யந்திக தத் பதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்)
ஐகாந்திக –
ஏகாந்த சம்பந்தியாய் இருக்கை -அதாவது அந்தரங்கம் -என்றபடி –
அது -தத் -பதத்தோடு -அன்வயிக்கவுமாம் –
தத் பதாம் புஜ த்வயத்தோடே-அன்வயிக்கவுமாம் –
பரிசர்யை யோடு அன்வயிக்கவுமாம்
தத் பதத்தோடு அந்வயித்த போது -நிருபாதிக பந்துவானவன் -என்றபடி –
தத் பதாம் புஜ த்வயத்தோடே அந்வயித்த போது
த்வத் பாத பங்கஜ பரிக்ரஹ தன்ய ஜந்மா
பூயாசமித் யபி நிவேசக தர்த்யமான-என்றும்
ப்ராமயன் நருமாம்ச பண நாய பரேத பூமா
வாகர்ண்ய பீரு ருதிதானி தவாக தோஸ்மி -என்றும்
கிம் சீதலை க்லமவி நோதி பி ரார்த்ரவாதான்
சஞ்சாரயாமி நளி நீதள தால வ்ருந்தை
அங்கே நிதாய கர போரு யதா ஸூகம் தே
சம்வாஹயாமி சரணாவுத பத்மதாம்ரௌ -(சகுந்தலையைப் பார்த்துச் சொல்லும் வார்த்தை)என்றும்
பாஹ்ய விஷயங்களில் காமம் போலே அப்ராப்தமாய் இருக்கை அன்றிக்கே
சேஷி உடைய திருவடிகளிலே சேஷ பூதனுக்கு பிறக்கும் காமம் ஸ்வத ப்ராப்தம் -என்கை –
தத் பதாம் புஜ த்வய -தத் சப்தம் பிரக்ருத பராமர்சி யாகையாலே -நாராயணம் -என்று பரஸ்துதனானவனை பராமர்சிக்கிரது
இத்தால் நாராயண சரணவ்-(த்வயம்) -என்கிற பதத்தை நினைக்கிறது
பதாம் புஜ த்வய-தத் -என்று -தர்மி ப்ரஸ்துதமாய் இருக்கச் செய்தேயும்
பாத -என்று திருவடிகளைச் சொல்லுகிறது -ஸ்தநந்தய பிரஜைக்கு மாதாவினுடைய முலைக் கண் அபேஷிதம் ஆனால் போலே
சேஷ பூதனுக்கும் ஸ்வரூப ப்ராப்தமாகை
அங்கு முலைக் கண்ணில் பாலூருமா போலே –
ததஸ்ய ப்ரியமபி பாதோ அஸ்யாம்
நரோ யத்ர தேவயவோ மதநதி
உருக்ர மஸ்ய ஸ ஹி பந்து ரித்தா
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ -என்றும்-
தவாம் ருதஸ் யந்தினி பாத பங்கஜே
நிவேசிதாத்மா கத மன்யதிச்சதி
ஸ்திதேர விந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே -ஸ்தோத்ர ரத்னம் -27-என்றும்
சொல்லுகிற படியே இவனுக்கும் திருவடிகளிலே போக்யதை யூற்று இருக்குமே –
(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.)
அம்புஜ-இது தான் தைவதமாய் -காஷாய பானம் போலே இருக்கை அன்றிக்கே
ராக பிராப்தமாம் படி போக ரூபமாய் இருக்கும் –
அம்புஜ -அமரர் சென்னிப் பூவை -திருக் குறும் தாண்டகம் -6–ஆகையாலே
குளித்து மயிருக்கு பூ வைக்கும் போது -சிரஸா தாரயேத் -என்று விதிக்க வேண்டா இறே
(மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?–6-)
த்வய -உபாயம் த்வயமாய் இருக்கையாலே
உபேயமும் த்வயமாய் இருக்கிறபடி
தேவா நாம் தாநவா நாம் ஸ சாமான்ய மதி தைவதம்
சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தே -2-என்னக் கடவது இறே –
இத்தால் சரணவ் -என்கிற த்வி வசனத்தை நினைக்கிறது
பரிசர்ய-
சர்யா -சரித்ரம் -அனுஷ்டானம் -கைங்கர்யம் -என்றபடி –
பரிசர்யை ஆவது -சர்வ வித கைங்கர்யம் -என்றபடி –
இவ் வவயவ சக்தியை ஒழிய பரி சர்யை என்கிற ரூடியாலே
கௌரவ விஷயத்தில் பண்ணும் அநு வ்ருத்திக்குப் பேராய்
அத்தால் கைங்கர்யத்தை விவஷிக்கிறதாகவுமாம் –
அன்றிக்கே
பரிதஸ் சர்யையாய் -அதாவது -விஸ்வத பர்யேதி-என்றும்
கொண்ட கோயிலை வலம் செய்து -திருவாய் மொழி -10-1-5-என்றும்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கு -திருவாய் -2-10-8-என்றும்
சொல்லுகிறபடியே
பிரதஷிண ஆதி உப லஷணமான அனுகூல வ்ருத்தியைச் சொல்லிற்று ஆகவுமாம்
(தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-)
(வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-)
ஏக -மநோ ரத-
புறம்புள்ள பலன்களை எல்லாம் விட்டு
கைங்கர்யம் ஒன்றுமே பெற வேண்டும் என்னும் படியான அபிநிவேசத்தை யுடையவனாய்
(மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கைவிட்டு)
(தத் ப்ராப்தயே ச தத் பாதா³ம்பு³ஜ த்³வய ப்ரபத்தேঃ
அந்யந்ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: –அந்தக் கைங்கர்யத்தைப் பெறுவதற்கு கல்ப கோடி ஸஹஸ்ரமானாலும்
அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளையே நம்பி இருப்பதில் காட்டிலும் வேறே ஓன்று எனக்கு உபாயமாக இல்லை என்று எண்ணினவனாய்)
தத் பராப்தயே ஸ –
கீழே ப்ரஸ்துதமாய் மநோ ரத விஷயமான பரிசர்யையைப் பெறுகைக்காக
ஸ -என்று கீழ் வேறு ஒன்றின் உடைய பிராப்தியைச் சொல்லி
இதன் உடைய பிராப்திக்கும் என்று சமுச்ச்சயிக்கிறது அல்லவே –
சகாரத்துக்கு பொருள் என் -என்னில் அநுக்த சமுச்சயமாய்
ஸக்ருத் த்வ தாகார விலோக நாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புத்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவ லோக்யதாம் நய
ஷண அபி தே யத் விரஹோஸ்தி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் சொல்லுகிறபடியே
தத் ப்ராப்தி பலமான ததீய சேஷத்வ ப்ராப்திக்குமாகவும்–என்று
அநுக்த சமுச்சயம் ஆகவுமாம் –
(ஸக்ருத் த்வ தாகார விலோக நாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத் விரஹோ’தி துஸ் ஸஹ: ||ஸ்தோத்ர ரத்னம் -56-
உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றை புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.
ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளிவிடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித்
தங்கள் விசேஷமான கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.)
அன்றிக்கே
ஸ -என்று –
நின் புகழில் வைகும் தாம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் – பெரிய திருவந்தாதி -53-என்றும்
(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாசம் ந விந்தெத தாவ தாஸ்மி கருதீ சதா -ஜிதந்தோ -12-என்றும்
சொல்லுகிற படியே
பரிசர்யா மநோ ரதம் தானே போந்து இருக்க
அதுக்கு மேலே இது பெற வேணும் என்று இருந்தான் ஆகில் என்று பிராப்தி சமுச்சயிக்கிறது -என்னவுமாம்
(துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத யதி நாஸம் ந விந்தேத தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12
ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது இதில் அந்த சித்தியும் வேண்டா தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது – ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம் ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –)
இதுக்கு கீழ் உபேய ஸ்வரூபம் சொல்லிற்று –
மேல் இதுக்கு சத்ருசமான உபாய நிஷ்கர்ஷமும்
தத் அனுஷ்டான பிரகாரமும் சொல்லுகிறது –
சரணம் அநு வ்ரஜேத் -என்றது அறுதியாக –
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே -என்று தொடங்கி
மந்வான -என்று அறுதியாக உபாய நிஷ்கர்ஷம் சொல்லுகிறது –
தஸ்ய தொடங்கி –ஸரணாரவிந்தம் அறுதியாக உபேய வேஷம் சொல்லுகிறது
அநந்ய ஆத்ம -தொடங்கி -அனுவ்ரஜேத் -என்றது அறுதியாக உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது –
தத் பாதாம் புஜ த்வய-பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஒன்றாகில் – கார்ய காரணயோர் ஐக்கியம் பிரசங்கிக்கும்
ஐக்கியம் பிரசங்கித்தால் சாத்திய சாதனங்கள் இன்றிக்கே ஒழியும்-
இன்றிக்கே ஒழிந்த வாறே அவற்றில் பிரவர்த்தகர் இன்றிக்கே ஒழியும்
பிரவ்ருத்தி இல்லாமையாலே பிரவர்த்தக சாஸ்தரத்துக்கு வையர்த்தமும் அப்ராமாண்யமும் பிறக்கும் –
இத்தனை அநர்த்தங்கள் உண்டாய் இருந்தன –
இதுக்குப் பரிஹாரம் எது என்னில்
தத் பாதாம் புஜ த்வய பரிசர்யை பிராப்யம்
தத் பாதாம் புஜ த்வய பிரபத்தி உபாயம் என்று இட்டு பேதம் உண்டு ஆகையாலே ஒரு விரோதம் இல்லை –
ஆனால் பரிசர்யா ப்ரபத்திகள் உபாய உபேயங்கள் ஆகில்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
ப்ரஹ்ம வித ஆப்நோதி பரம் -என்றும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றும்
தவம் ஏவ உபாய உபேதோ மே பவ -என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஓன்று என்றும்
எம்பெருமானே உபாய உபேயங்கள் என்றும் சொல்லுகிற பிரமாண வ்யவஹாரங்கள் செய்யும்படி என் -என்னில்
பரிசர்யா விஷயமும் பிரபத்தி விஷயமும் ஓன்று ஆகையாலே
விஷயம் ஓன்று ஆனால் பேதம் நடக்குமோ என்னில்
பேதகம் -விசேஷணம் -பேத்யம் -விசேஷ்யம்-என்கிற ந்யாயத்தாலே
பரிசர்யா ஜனித ப்ரீதி விசிஷ்ட விஷயமும்
பிரபத்தி ஜனித பிரசாத விசிஷ்ட விஷயமும்
விசேஷண பேதத்தால் வேறு ஆகையாலே வஸ்து ஒன்றானாலும் பேதத்துக்கு குறை இல்லை
ஆனால் அஜோ கஜோ மகிஷா(ஆட்டுத் தன்மை யானைத் தன்மை)-கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கௌ(முழுக் கொம்பு அரைக் கொம்பு கொம்பு இல்லாமல்)-என்கிற இடத்தில்
விசேஷண பேத அதீனமாக விசேஷ்ய ஸ்வரூபத்துக்கு பேதம் நடந்தது இல்லையோ -என்னில் –
விருத்த விசேஷமான அவ்விடத்தில் அப்படி ஆகிலும்
தேவ தத்த ஸ்யாமோ யுவா சம பரிமாண(கறுப்பாகவும் இளமையாகவும் ஸமமான பரிமாணங்களையும் கொண்ட)-என்ற இடம் போலே அவிருத்த விசேஷணம் ஆனவிடத்தில்
விசேஷண பேதாயத்த விசிஷ்டாகார பேதம் வரச் செய்தேயும் ஸ்வரூப பேதம் பிறவாது –
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே ஸ
ப்ரஹ்மாத் யவஸ் தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ வராதோ வரேண்ய-என்று
ப்ரஹ்மம் ஒன்றுமே கார்ய காரணமாம் இடத்தில் சூஷ்ம சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்ம காரணம்-
ஸ்தூல சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யம் என்று அவிரோதேன நிர்வஹிக்கிறாப் போலே
ப்ரபத்தே –
ததே கோபாய தாயாச்ஞா பிரபத்தி -என்று
துர நுஷ்டேயமான உபாயங்களில் எனக்கு அன்வயம் இல்லை
ரஷகனானவனே உபாயம் ஆக வேணும் என்று பிறக்கிற ப்ரார்த்தன அத்யாவசாயம் பிரபத்தி –
(உபாயம்
உபேயம்
ரக்ஷகம் மூன்றுமே அவன்-பிரபத்தி –)
அந்யத்-இப் பிரபத்தியை ஒழிய மற்ற உபாயாந்தரங்கள் இல்லையோ -என்னில்
அந்யத் -தொடங்கி -மந்வான -அறுதியாக
அவை எல்லாம் நெஞ்சு உடையார்க்கு நல்ல தீர்த்தம்
நமக்கு அதிகாரம் இல்லை என்று இருப்பான் -என்கிறார் –
அந்யத் -பக்தி -தத் பேதமான சத் வித்யை தொடக்கமானவை –
தத் அங்கமான ஜ்ஞான கர்மங்கள் தொடக்கமான பிரபத்தி வ்யதிரிக்தமான உபாயம் –
இப்படி சாஸ்த்ரங்களிலே தாத்பர்யம் பண்ணி விதிக்கிற இவை உபாயங்கள் அன்றோ -என்னில்
ந மே
இங்கே அஸ்தி யை கூட்டி -ந மே அஸ்தி -இவை எல்லாம் சக்த அதிகாரம் –
அஜ்ஞனாய்-அசக்தனாய் -கர்ம ப்ரவாஹத்திலே அழுந்தி
அது அடியாக -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய் மொழி -2-6-8-
மாதரார் வன முலைப் பயனே பேணி -பெரிய திருமொழி -1-6-1-
இப்படி விபரீத ப்ரவ்ருத்தி பண்ணி -ஷிபாமி -ந ஷமாமி -க்கு இலக்காய் இருக்கிற எனக்கு உபாயம் இல்லை –
(மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்–2-6-8-)
(வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-)
இப்படி மாறி மாறி பல பிறப்பும் பிறக்கிற பிறவிகளில் இதுக்கு முன்பு இல்லை யாகிலும்
இனிப் பிறக்கும் பிறவிகளிலே ஆகிலும் சாதன அனுஷ்டானம் பண்ணத் தட்டு என் -என்னில்
கல்ப கோடி சஹஸ்ரேணாபி –
ஒட்டடையை ஆயிரம் நாள் நீரிலே இட்டு வைத்தாலும் முளையாதாப் போலே
கால தத்வம் உள்ளது அனையும் திரிந்தாலும் அதிகாரம் உண்டாக மாட்டாது –
சதாநமஸ்தி –
இத்தை கீழே கூட்டினால் போலே கீழே உள்ள நஞ்ஞை இங்கே கூட்டி
சாதனம் நாஸ்தி -என்று ஆகிறது
எல்லாம் செய்தாலும் க்ருத பிராய சித்தமாம் அத்தனை போக்கி
அபிமத பலத்தை சாதித்து தர மாட்டாது –
சாதனம் நாஸ்தி -என்றால் ஸ்வ ரசமாகத் தோற்றுவது சாதனம் இல்லை என்று இறே
அங்கன் அல்ல
சாதனம் ந பவதி -எனக்கு சாதனம் ஆக மாட்டாது -என்ற படி –
இதி மந்வான -(இப்படி நினைத்துக் கொண்டே இருந்து)இப் பிரகாரத்திலே அறுதி இட்டு
மந்வான -இந் நினைவு உருவ நடக்க வேணும் என்கிறது வர்த்தமானத்தாலே
தஸ்யைவ பகவதோ நாராயணஸ்ய-
கீழ் பகவந்தம் நாராயணம் -என்று பிரஸ்துதமான அவன் தன்னுடைய
கீழ் பகவந்தம் நாராயணம் -என்று
சோஸ்னுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே –
பிராப்த்ய உபயோகியான குணங்களையும் குணாஸ்ரயமான தர்மியையும் சொல்லிற்று
இங்கு பகவதோ நாராயணஸ்ய-என்று பிராபகத்வ உபயோகியான குணங்களையும் குணியையும் விவரிக்கிறது –
(அனுபவிக்கத் தக்க குணங்கள் கீழ்
பற்றுவதற்குத் தக்க குணங்கள் இங்கு)
அகில சத்வ தயைக (தய ஏக )சாகரஸ்ய-
சகல சத்வ விஷயமாக தயைக்கு ஒரு கடலாய் இருக்கும்
அகில சத்வ -இன்னான் இனையான் என்று வரையாதே சகல ஜந்து விஷயம் என்றபடி –
தயா -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷ்ணுதவம்-
தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே பிறர் நோவு கண்டால் ஐயோ -என்கை –
ஏக சாக ரஸ்ய –
தயை யாகிற ஜலத்துக்கு வேறு ஒரு ஆஸ்ரயம் இன்றிக்கே இவனே ஆஸ்ரயம் ஆகை
அகில சத்வ தயைக சாக ரஸ்ய -என்றது பர பீடா நிரூபணம் பண்ணியோ வென்னில் –
அநலோசித குணா குணா அகண்ட ஜன அநுகூல அமர்யாத சீலவத –
இப்படி குணா தோஷ நிரூபணம் பண்ண ஒண்ணாத படியான
சீல குணம் உடையவன் -என்கிறது –
திரு உள்ளத்தால் ஆராயப் படாத படியான நன்மை தீமைகளை உடையராய் இருக்கிற
அகண்ட ஜனம் உண்டு -பிரியப் படாத மனுஷ்யர்கள்
அவர்கள் உஜ்ஜீவிக்கைக்கு ஈடாம் படியான நிரவதிக சீலத்தை உடையவனுடைய
தோஷம் திரு உள்ளத்தில் படாத அம்சம் ஏற்றம் ஆகிறது
உள்ள குணங்களை அங்கீ கரித்திலன் என்றால் இது ஓர் ஏற்றமோ என்னில்
நிக்ரஹிக்கைக்கு அடியான தோஷங்களை நிரூபியாத மாத்ரம்
ரஷிக்கைக்கு பற்றாசான குணங்களையும் அபேஷியான் -என்றபடி
தான் ரஷிக்கும் போது குண அபேஷை இல்லை என்று கருத்து
(விபீஷண சரணாகதி -தீயவனாக இருந்தாலும் கைக் கொள்ளுவேன் என்றால் போல்)
அநலோசித –ஆலோசிதம் ஆவது -இவ் வாஸ்ரயத்தில் நன்மை உண்டோ தீமை உண்டோ என்று விடுத்து ஆராய்கை
அது இன்றிக்கே ஒழிகை
குணாகுண-அவை யாவன -நன்மை தீமைகள் -அதாவது அஜ்ஞனோ ப்ராஜ்ஞனோ-நாஸ்திகனோ ஆஸ்திகனோ-
தார்மிகனோ அதார்மிகனோ – விநீதனோ அவிநீதனோ-என்று ஏவமாதிகள் –
அகண்ட ஜன -தேவ மனுஷ்யர்களோடு
ப்ராஹ்மன ஷத்ரியாத் -யநுலோம ஜாதியோடு பிரதிலோம ஜாதியோடு வாசி அற சர்வ விஷயமாக
அனுகூல -இவை கு-மார்க்கங்களைத் தவிர்ந்து நல் வழி போய்க் கரைமரம் சேருகைக்கு உறுப்பாம் படி இருக்கை
அமர்யாத -மரியாதை யாகிறது -அவதி -நிரவதிகம் என்றபடி
சீல -பெரியவன் தாழ்ந்தவனோடு கலக்கும் இடத்தில் தன் மேன்மை பார்த்து இறுமாத்தல்
மற்றையவன் தண்மை பார்த்து கூசுதல் செய்யாதபடி புரை அறப் பரிமாறுகிற நீர்மை –
சீல வத -மதுப்பாலே
பூமா நிந்தா பிரசம் சாசூ நித்ய யோகே அதிசாயனே
சம்பந்தே அஸ்தி விவஷாயாம் பவந்தி மதுபாதய -என்று
நித்ய யோக மதுப்பாலே
இக் குணம் இவனுக்கு நித்ய சித்தம் -என்கிறது –
(பூமா -மிக்க செல்வம் உடையவன்
நிந்தா
பிரசம் சாசூ
நித்ய யோகே
அதிசாயனே
சம்பந்தே அஸ்தி
விவஷாயாம் பவந்தி மதுபாதய -மதுப்புக்கு பல அர்த்தங்கள்)
இப்படி அவன் தன் நீர்மையாலே எல்லாரோடும் கலந்தாலும் அவர்கள் தன்னைக் கண்டால் வெருவும்படியாய் இருக்குமோ என்னில் –
தேவ திர்யக் மனுஷ்யாதி -அகில ஜன ஹ்ருதய ஆநந்த நஸய –
விவேகிகளோடு அவிவேகிகளோடு வாசி அற எல்லாருடைய நெஞ்சும் உருகும்படியாய் இருக்கும்
இப்படிச் செய்கைக்கு அடி என் என்னில்
து -ஒரு விசேஷம் உண்டு
அது தான் என் என்னில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா –
ஸ்வதஸ் சித்தமான எல்லை இல்லாத மிகுதியை உடைத்தாய் இருக்கிற குணவத்தையாலே-
அடியே தொடங்கி ஒருபடிப் பட்ட குணங்களைச் சொல்லி வரச் செய்தே
புதுமை போலே குணவத்தயா -என்று சொல்கிறது -என் என்புது -என்னில் –
அவை எல்லாம் ஆத்ம குணங்களைச் சொல்லுகிறது
இங்கு -ராம ராம நய நாபி ராமதம் ஆச யஸ்ய சத்ருசீம் சமுத்வஹன்
சர்வ தேவ ஹ்ருத யங்க மோசசி -ஆரண்ய -17-9–என்கிறபடியே கண்ணுக்கு பிடிக்கும் படியான
காந்தி சௌகுமார்யாதி களை-விக்ரஹ குணங்களைச் சொல்லுகிறது –
தேவ திர்யக் மனுஷ்யாதி -அகில ஜன ஹ்ருத யாநந்த நஸ்ய —
பாப்ப வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -ஆரண்ய 17-9- என்றும்
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரௌ மஹா பலௌ
புண்டரீக விசாலாஷௌ சீர கிருஷ்ணாஜி நாம்ப ரௌ -ஆரண்ய -19-14-
அதி ஜய தந்வாநம வேஷ்ய ராமம் சரந்த மேகாந்த விலாசிநீபி
நூனம் பபூவுர் வன தேவ தாச்ச மர்த்யான்க நாஜன் மகு தூஹ லின்ய -என்றும் –
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூதோ ஜனகாத்மஜே -சுந்தர -35-8-என்று திருவடியும் அகப்பட்டான் இறே –
சூர்ப்பணகை
வந தேவதைகள்
திருவடி
அகப்பட்டவற்றுக்கு ப்ரமாணங்கள்
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு -பெரிய திரு மொழி -5-8-2-
என்று மூன்றுக்கும்- இது தானே உதாஹரணமாக்கவுமாம்
திருவடி தேவர் கோஷ்டிக்கும் திர்யக்க்குக்கும் மனுஷ்யத்துக்கும் -மூன்றுக்குமே உதாஹரணம்)
(வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-)
மனுஷ்ய
ரூப சம்ஹனனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரு ஸூ ர விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாசின -ஆரண்ய -1-13-என்று ரிஷிகள் அகப்பட்டார்கள் –
ஆதி சப்தத்தாலே ஸ்தாவரங்கள்-அதாவது –
பாஷாண கௌதமவதூவ புராப்தி ஹேது – என்று கல் உருகிப் பெண்ணாம் படி இருக்கை –
அகில ஜன -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற
ஹ்ருதய ஆநந்த தஸ்ய -கண்ணுக்கு அழகியனாய் -அநபிமத விஷயமாய் நெஞ்சுக்கு பிடியாது இருக்கை அன்றிக்கே
சித்தாபஹாரிணம் -என்றும்
கண்டவர் தாம் மனம் வழங்கும் -பெருமாள் திரு மொழி -8-1-9–என்றும் சொல்லுகிற படியே எல்லார் நெஞ்சை உருக்கும் படியாகவும்
நெஞ்சு உடையார் நெஞ்சை இழந்து
என் நெஞ்சினாரைக் கண்டால் -திரு விருத்தம் -30-என்று தன் நெஞ்சுக்கு தூது விட வேண்டும்படியாயும் இறே வடிவு அழகு இருப்பது
(வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-)
(அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-)
இப்படி சர்வ சாதாரணமாய் இருக்கும் இத்தனை போக்கி ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் இல்லையோ -என்னில் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
அவர்கள் விஷயத்தில் தோஷம் தானே போக்கியம் என்று நினைத்து இருக்கும் -என்கிறது
ஆஸ்ரித -பவத் விஷய வாசின -என்றும் -சக்ருதேவ பிரபன்னாய -என்றும்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி -என்றும் சொல்லுகிறபடியே
அவன் எல்லைக்கு உள்ளே கிடத்தல்
ஒரு பச்சிலை யாதல்
ஒரு மலர் ஆதல்
ஒரு உக்தி ஆதல்
நேர்ந்தவர்கள் –
வாத்சல்ய -கன்றின் உடம்பில் வழும்பை தாய் போக்யமாக நக்குமா போலே
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-என்னும்படி சிநேக விஷயமாகை-
(குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு –41-)
அதாவது -தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
நத்யஜேயம் கதஞ்சன -என்று இருக்கை –
ஏக ஜலதே -ஏகாஸ்ரயமாய் இருக்கை –
இப்படி இவன் ஆஸ்ரயித்தால்-இத் தலைக்கு பலம் கொடுத்து விட்டானாய் இருக்கும் அது போக்கி
தன் பேறாக இருக்கும் அது இல்லையோ என்னில்
பக்த ஜன சம்ஸ்லேஷைக போகஸ்ய-
தனக்கு நல்லாராய் இருப்பாரோடு சேருகையே பரம பிரயோஜனமாய் இருக்கை –
பக்த ஜன -பக்தி யாகிறது –
பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரிகீர்த்தித
தஸ்மாத் சேவா புதை ப்ரோக்தா பக்தி சப்தேன பூயசீ -என்கிறபடியே
ஸ்நேஹமாய் -இது பக்த பிரபன்னாதி சாதாரணம்
சம்ஸ்லேஷக போகஸ்ய-ஷணே அபி தே யத் விரஹ அதிதுஸ் சஹ -என்றும்
ஒரு மா நொடியும் பிரியான் -திருவாய் -10-7-8-என்கிறபடியே
இப்படி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாரோடு ஷண மாத்திர விஸ்லேஷமும் பொறாத படி
கூட இருக்கையே தனக்கு தாரக போஷக போக்யங்களாக இருக்கும்
(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-)
இப்படி அனந்தாத்மாக்களோடு புஜிக்கும் இடத்தில்
பரிகர வைகல்யம் உண்டாய் இருக்குமோ என்னில் –
நித்ய ஜ்ஞான க்ரியா ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய-
நித்தியமாய் -போது செய்யாததுமாய் -(ஒரு காலத்திலேயே தான் வந்தது என்று இல்லாமல்-)போக்ய சமஸ்த வஸ்துக்களின் உடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டா
பிரயோஜன காலாதி விஷய ஜ்ஞானம் என்ன
க்ரியை என்ன
போக்யங்கள் தான் நினைத்த போது கை புகுரும்படியாய் இருக்கிற பரபுத்வம் ஆதல்
சம்பத்தாலான ஐஸ்வர்யம் என்ன
ஏவமாதியான போக சாமக்ரியுண்டு -புஷ்கல காரணம் -இவற்றால் பூரணன் ஆனவனுடைய
இப்படி போகமும் போக சாமக்ரியும் உண்டானால் போக ஸ்தானம் இல்லை யாகில் பிரயோஜனம் இல்லை யாகாதோ என்ன
மஹா விபூதே
லீலா விபூதி போலே கால் கூறாய் பரிச்சின்னமாய் இருக்கை அன்றிக்கே
அதில் மும் மடங்கு பெருமையை உடைத்தாய்
போகத்துக்கு ஏகாந்தமான நித்ய விபூதியை உடையவனுடைய
இப்படிப் பட்ட ஸ்தானத்தில் இருந்து
அநந்த ஆநந்த போகம் பண்ணும் இடத்தில்
கூட்டு இன்றியே பிரமச்சாரி நாராயணனாயோ இருப்பது என்னில்
ஸ்ரீ மத –
போக ஸ்ரோதஸ் ஸில் கரை காண்கைக்கு சஹாய பூதையாய்
சாஷால் லஷ்மியைத் தனக்கு பிரதான மகிஷியை உடையவனுடைய
இவனுக்கு சம்சாரி சாதாரணமான போகம் அன்றே
அவாப்த சமஸ்த கமதயா ஆனந்த மயனாய் இருந்துள்ள வனுக்கு
நாய்ச்சிமாரோட்டை சேர்த்தியாலே பிறக்கும் போகம் ஆவது என் –
அதில் சகாயம் ஆவது என் என்புது -என்னில்
இவனுக்கு போகமாவது ஆஸ்ரித உஜ்ஜீவனம்
அதுக்கு புருஷகார பூதையாய் நின்று சேர விடுகை -சஹாய பூதையாகையாவது
இப்படி இருக்கிறவன் தன்னையே பற்றுவது –
சரணாரவிந்த யுகளம் –
ஸ்வரூப ப்ராப்தமுமாய் -நிரதிசய போக்யமுமாய் -தன் சேர்த்தி அழகே நிதர்சனமாம் படியாக
எல்லாரையும் சேர்த்துக் கொள்ளக் கடவதாய் இருக்கிற இத் திருவடித் தாமரைகள் இரண்டையும்
பற்றும்படி என் என்னில்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன –
ஆத்ம உஜ்ஜீவனம் இது ஒழிய வேறு ஓன்று இல்லை என்று இருக்கிற நினைவோடு
தத் கத சர்வ பாவேன –
வேறு ஓன்று இல்லாமையாலே இதுவே ரஷகம் என்கிற நினைவோடும்
இந் நினைவுகளோடு கூடச் செய்யப் புகுகிற கார்யம் என் என்னில்
சரணம் அநு வ்ரஜேத் –
புருஷார்த்தத்துக்கு சாதனம் இவனே என்று அத்யவசிப்பன்
புத்யர்த்தத்துக்கு வேண்டுவது வ்ரஜேத் -அன்றோ
அநு என் என்னில் -வ்ரஜ -கதௌ -என்கிறது ஜ்ஞான மாத்திர வாசியாய்
அத்யவசாயம் ஆகிற அதிசயத்தை விவஷிக்கிற தாகவுமாம்
அனுஸ் யூதம் வ்ரஜேத் -என்று
த்வயம் அர்த்த அநுசந்தாநேன சஹ சதைவம் வக்தா -என்கிறபடியே
சர்வ கால அனுவ்ருத்தியைச் சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
சரணம் அநு என்று உபாய உத்தேசேன அடைவன் -என்று ஆகவுமாம்
(நினைத்து
நன்றாக நினைத்து
தொடர்ந்து நன்றாக நினைத்து
சரணமாகக் கொண்டு பற்றுதல்
ஆக நான்கு அர்த்தங்கள்)
(இப்படி ஒருகால் சரணம் புகுந்து விடும் இத்தனையோ என்னில் பேற்றுக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
கால ஷேபத்துக்கும்
இனிமையால் விட ஒண்ணாமைக்குமாக
இவ் வத்யவசாயம் நாள் தோறும் இடையறாது செல்ல வேணும் என்கிறது மேல்)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-