Archive for the ‘கதய த்ரயம்’ Category

ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -1-ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 26, 2014

யாமுநார்ய ஸுதா⁴ம் போ⁴தி⁴ம் அவகா³ஹ்ய யதா²மதி ।
ஆதா³ய ப⁴க்தி யோகா³க்²யம் * ரத்நம் ஸந்த³ர்ஶயாம் யஹம் ॥

ஆளவந்தார் ஆகிற அமுதக் கடலிலே படிந்து குடைந்தாடி
பக்தி யோகமாகிற ரத்னத்தை
யதா மதி எடுத்து அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கிறேன் என்கை
இங்கு பக்தி யோகம் என்றது ஸாத்ய பக்தியான ப்ரபத்தியையே சொன்னபடியாம் –
இதன் மேலே –தத் பதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யத்ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதனமஸ் தீதி –என்று
அருளிச் செய்தது பொருந்துவதற்காக –

(கீழ் கத்யங்களில் தனியனாக ஸ்லோஹங்கள் இருந்தன
இதில் ஸ்வாமி தானே அருளிச் செய்த ஸ்லோகம் இது-ஸ்வயம் பிரயோஜனமாக பக்தியைச் சொன்னவாறு-)

ஆளவந்தாருடைய திருவருள் அடியாக கிடைத்த அர்த்தங்களை அன்பர்களுக்கு நித்ய அனுசந்தேயமாக வெளியிடுகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் தேர்ந்த கருத்து –

————

பிரவேசம் –

ஸ்ரீ பாஷ்யகாரர் தம் திரு உள்ளக் கருத்தில் அறுதி இட்ட அர்த்தம்
பனை நிழல் போலே தம் ஒருவர் அளவிலே பர்யவசியாதே
கல்பக தருச் சாயை போலே பர உபகார அர்த்தமாக
உபாய உபேயங்களை அனுஷ்டிப்பான் என்று பர உபதேச ப்ரவருத்தர் ஆகிறார் -ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே –

ஸ்ரீ ஸரணாகதி கத்யத்திலே-பெரிய கத்யத்திலே சாமான்ய பகவத் விஷயமாக அவரை நோக்கி
ஸ்வ பிரார்த்தனையாக அருளிச் செய்தார்(இதில் ஸரணாகதிக்கு முக்யத்வம்-ப்ராபக பரம்)

ஸ்ரீ ரெங்க கத்யத்தில் சௌலப்யத்துக்கு எல்லை நிலமான
பெரிய பெருமாள் விஷயமாக அவரை நோக்கி ஸ்வ பிரார்த்தனையாக அருளிச் செய்தார் -(இதில் ஸ்ரீ ரெங்கநாதனுக்கு முக்யத்வம்)

இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக
பிறரை நோக்கிக் கர்த்தவ்ய உபதேசம் பண்ணுகிறார் -(இதில் ஸ்ரீ வைகுண்ட வர்ணனைக்கு முக்யத்வம் -ப்ராப்ய பரம்)

ஸ்ரீ பாஷ்யத்தில்
லோகத்தில் துராசாரம் உபாயம் என்பார்
தேவ தாந்திர உபாசனம் உபாயம் என்பார்
தேவதையை ஒழியவே கேவல கர்மம் உபாயம் என்பார்
கேவலம் ஜ்ஞானம் உபாயம் என்பார்
கர்ம ஜ்ஞான சமுச்சயம் உபாயம் (பாஸ்கரர் பக்ஷம்) என்பாராய்க் கொண்டு

வேத வாக்யங்களை விகல்ப்பிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளை
நிரசிக்கைக்காக
நீங்கள் சொல்லுகிற வாக்யங்களுக்கு பொருள் நீங்கள் சொல்லுகிற படி அல்ல –

யுக்திகள் இருந்த படியாலும்
பிரமாணாந்தரங்கள் இருந்த படியாலும்
கர்ம ஜ்ஞான சஹ க்ருதையான பக்தியே உபாயம் என்று சொல்லுகிற இதுவே பொருள் -என்று
சாதிக்க வேண்டுகையாலே

பிரபத்தியும் உள்ளே ஸூசிதமாய்க் கிடக்கச் செய்தேயும்
பக்தியிலே நோக்காக உபபாதித்து அருளினார் –

இவ்வளவாலே-துஸ் சகையான பக்தியை உபாயம் என்று பிரமித்து மந்த மதிகள் பயப்படாமைக்காக
இப்படிப் பட்ட பக்தி சித்திக்கும்
புருஷார்த்த சித்திக்கும்
சரமமான உபாயம் பிரபத்தியே என்னும் இடத்தை உபபாதித்து அருளினார் -பெரிய கத்யத்திலே –

பக்தி சாத்குண்யத்துக்கும் பிரபத்தியே வேணும் என்று பிரபத்தி வைபவம் சொன்ன இவ்வளவாலே
பிரபத்தி அங்கமாய்
பக்தி தானே ஸ்வ தந்திர உபாயமோ என்னும் அதி சங்கை பிறவாமைக்காக
ஸூ சகமாய் ஸ்வரூப அனுரூபமாய் -இதர நிரபேஷமாய்
ஸ்வ தந்த்ரமான பிரபத்தி உபாயம்
என்னும் இடத்தை வெளி இட்டார் ஸ்ரீ ரெங்க கத்யத்திலே –

இனி
இதில் -இப்படி உபாய நிஷ்கர்ஷம் பிறந்த பின்பு
இவ் உபாய பிராப்யமான தேச விசேஷ வைபவத்தையும்
அத் தேசாதிபதியாய் -அனுபாவ்யமான அவ் வஸ்து வைபவத்தையும்
அவ் வஸ்து வைபவ அனுபவ ஜநிதமான கைங்கர்யத்தையும்
ஸ்ரோதாக்களுக்கு ருசி பிறக்கைக்காக அருளிச் செய்து

இவ் வர்த்தத்தில் ருசி பிறக்கைக்கு அடியான பாக்கியம் உடையார்
இப் பேறு பெற்று வாழ்ந்திடுக -என்று
உபாய அம்சத்தை சங்குசிதமாக அனுவதித்து
உபேய அம்சத்தை பரக்க அருளிச் செய்து -தலைக் கட்டுகிறார் –

———

இக் கத்யம் தானும் ஆறு சூரணையாய் இருக்கும் –

அதில் முதல்  சூரணையாலே –சரண்யமான வஸ்துவினுடைய ஸ்வரூப -ரூப -குண -விபூதி வைலஷண்யத்தையும்
அதுக்கு எதிர் தட்டான தன்னுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து-
இப்படி இருந்துள்ள எனக்கு அவ் வஸ்துவைப் பெறுகைக்கு பிரபத்தியை ஒழிய வேறு உபாயம் இல்லை என்று அறுதி இட்டு-
அவனுடைய சௌசீல்யாதி குணங்களே பற்றாசாக அவன்
திருவடிகளிலே சரணம் புகுவான் -என்கிறார்-(புகுவான்-புகக் கடவன் என்று பர உபதேசம்)

——

இரண்டாம் சூரணையிலே பலத்துக்கு சக்ருதேவ அமைந்து இருக்கச் செய்தேயும்
மனஸ் வேறு ஒன்றில் கவலை போகாமைக்கும் -தனக்கு கால ஷேபத்துக்குமாக நித்ய அனுசந்தானம் பண்ணுவான் -என்கிறார்-

——–

மூன்றாம் சூரணையிலே இவ் உபாய நிஷ்டனானவனுக்கு பல பிராப்த்திக்கு உறுப்பான
அர்ச்சிராதி வழியே போய் பிரகிருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்-
கடந்து சென்று பிரவேசிக்கிற நித்ய விபூதி வைபவத்தையும்-
அத் தேசத்தின் உடைய பண்பையும்-
அங்கு உள்ள அலங்காரங்களையும்-
அப்படி அலங்க்ருதமான தேசத்தில் உலகுடைய உபய  நாய்ச்சிமாரும் தானுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்-
அவர்களாலே பரிசர்யமாணனாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனையும்-
அந்த நாய்ச்சிமாருக்கு அனுபாவ்யமான திவ்ய  அவயவ சௌந்த்ர்யத்தையும்
அதுக்கும் அதிசய ஆபாதாகமான திவ்ய ஆபரணங்கள் உடைய ஸூ கடிதத்வத்தையும்
இவற்றைக் காத்தூட்டும் (காத்து ஊட்டும்-ரஷித்தும் வளர்த்தும்-யோக க்ஷேபம் வஹாம் அஹம்)திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
இஸ் ஸமுதாய சோபையைக் கண்டு அனுபவித்து

அவ் வநுபவ ஜனித ப்ரீதியாலே அநேக்தாபவித்து அடிமை செய்யும் ஸூரி பரிஷத்தையும்
அவர்களால் அநவரத பரிசரித சரண நளினனாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இப் பேற்றை நாம் எப்போது பெறக் கடவோம் -என்று மநோ ரதித்து

அம் மநோ ரத அனு குணமாகச் சென்று கிட்டி
பெருமாளே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் -என்கிறார்-

———–

நாலாம் சூரணையிலே இவன் அபேஷ அனுகூலமாக அவனாலே ஸ்வீக்ருதனாய்க் கொண்டு
அனுகூல வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான்என்கிறது-

——

ஐந்தாம் சூரணையிலே இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்த இழவு தீர
அநந்ய பரனாய் இமையாத கண்ணினாய்க் கொண்டு
ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது-

———-

ஆறாம் சூரணையிலே
அவன் இவனை வினவிக் குளிரக் கடாஷித்துத் திருவடிகளை தலையிலே வைக்க
அடி சூடும் அரசராய்-பெருமாள் திரு மொழி -10-7-
ஸ்வாராஜ்ய சாம்ராஜ்ய துரந்தரனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

(அன்று ஈன்ற கன்றின் மேல் வாத்சல்யத்தால் –
விபீஷணனை ஏற்றுக் கொண்டு ஸுக்ரீவாதிகளிலும் மேலாக அபிமானித்து அருளியது போல்
இன்று வந்த முக்தனையும் நித்யருக்கும் மேலாக அபி மானித்து அருளுவான் அன்றோ)

(குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-7-)

(எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்தில் அறுதியிட்ட அர்த்தம் பனை நிழல் போல் தம் ஒருவர் அளவிலே நின்று இராமே கற்பகக் காவின் நிழல் போல் உலகெல்லாம் பயன் பெற வேண்டும் என்று கருதி அருளினவராகையாலே
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலவே யாம்படி உபாய உபேயங்களை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து பர உபதேசத்தில் இழிகிறார் ஸ்ரீ வைகுண்ட கத்ய முகத்தாலே

பெரிய கத்யமான சரணாகதி கத்யத்திலே பொதுவாக எம்பெருமானை நோக்கின ஸ்வ ப்ரார்த்தனையாக அருளிச் செய்தார்

சிறிய கத்யமான ஸ்ரீ ரெங்க கத்யத்திலே அந்தப் பிரார்தனையை ஸுலபயத்துக்கு எல்லை நிலமான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச் செய்தார்

இதில் பரத்வத்துக்கு எல்லை நிலமான ஸ்ரீ வைகுண்ட நாதன் விஷயமாக பிறரை நோக்கி கர்தவ்ய உபதேசமாக அருளிச் செய்கிறார்
இதில் உபாய அம்சத்தைச் சுருங்க அருளிச் செய்து
உபேயமான அம்சத்தை மிகவும் பரக்க அருளிச் செய்கிறார்

இந்தக் கத்யம் ஆறு சூர்ணிகைகள் கொண்டதாய் இருக்கும் -அவற்றின் தாத்பர்ய ஸாரம் வருமாறு

சூர்ணிகை -1- எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வை லக்ஷண்யத்தையும் -தன்னுடைய நிலைமையையும் அநுஸந்தித்து
அப்பெருமானுடைய ஸுலப்யம் முதலிய திருக் குணங்களே பற்றாஸாக அவன் திருவடிகளிலே சரணம் புக வேணும் என்கிறது

சூர்ணிகை -2-பேற்றுக்கு ஒருகால் அனுசந்திக்கையே போதுமாய் இருக்கச் செய்தேயும்
நெஞ்சு வேறே ஒன்றில் செல்லாமைக்கும்
கால ஷேபத்துக்குமாக
நித்ய அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது

சூர்ணிகை -3-இவ்வதிகாரி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று ப்ரக்ருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்
கடந்து சென்று புகுகிற நித்ய விபூதியின் வைபவத்தையும்
அந்த தேச விசேஷத்தினுடைய பண்பையும்
அங்குள்ள அலங்காரங்களையும்
அப்படிப்பட்ட இடத்தில் நாச்சியாரும் ஸர்வேஸ்வரனுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அந்த நாச்சிமாருக்கு அநுபாவ்யமான வடிவு அழகையும் -திவ்ய ஆபரணச் சேர்த்தியையும் -திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
வழுவிலா அடிமை செய்யும் நித்ய ஸூரி பரிஷத்தையும்
அவர்களுடைய நித்ய கைங்கர்யத்துக்கு இலக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அனுசந்தித்து
நாம் இப்பேற்றை எப்போது பெறக் கடவோம் என்று பாரித்து
அப் பாரிப்பின் படியே சென்று கிட்டி
எம்பெருமானே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் என்கிறது

சூர்ணிகை -4- ஸ்வ அபேக்ஷித்தத்தின் படியே எம்பெருமானாலே ஸ்வீ கரிக்கப் பட்டவனாய்க் கொண்டு அநுகூல விருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் என்கிறது

சூர்ணிகை -5-இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்து இருந்த இழவு தீர அந்நிய பரதை அற்று இமையாத கண்ணினனாய்க் கொண்டு ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் படியைச் சொல்கிறது

சூர்ணிகை -6- இப்படி வந்து சேர்ந்த இவனை எம்பெருமான் வினவிக் குளிரக் கடாக்ஷித்துத் திருவடிகளைத் தலை மேல் வைக்க அடி சூடும் அரசு பெற்று நித்ய ஆனந்த ஸாலியாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது)

——————–————————————————————————————–

முதல்  சூரணையாலே –சரண்யமான வஸ்துவினுடைய ஸ்வரூப ரூப குண விபூதி வைலஷண்யத்தையும்
அதுக்கு எதிர் தட்டான தன்னுடைய வைலஷண்யத்தையும் அனுசந்தித்து
இப்படி இருந்துள்ள எனக்கு அவ் வஸ்துவைப் பெறுகைக்கு பிரபத்தியை ஒழிய வேறு உபாயம் இல்லை என்று அறுதி இட்டு
அவனுடைய சௌசீல்யாதி குணங்களே பற்றாசாக அவன்
திருவடிகளிலே சரணம் புகுவன் -என்கிறார்-

சூரணை 1- அவதாரிகை
அதில் முதல் சூரணையிலே
ஸ்வாதீன த்ரிவிதசேதன -என்று தொடங்கி
நாராயணம் -என்னும் அளவாக
சேதன அசேதன விலஷண ஸ்வரூபத்தையும்
ஸ்வரூப அனுகுணமான குணங்களையும் சொல்லுகிறது –

————

ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்ம விபாகாதி
அசேஷ தோஷ அசம்ப்ஸ்ப்ருஷ்டம்

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜ

ப்ரப்ருதய அசங்க்யேய கல்யாண குணா கணவ் மஹார்ணவம்

பரம புருஷம் பகவந்தம் நாராயணம்
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக
ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய
பரிசர்யைக மநோ ரத தத் பராப்தயே ஸ
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே
அநயன் னமே கல்ப கோடி சஹஸ்ரேணாபி சாதா நமஸ் தீதி மந்வான
தஸ்யைவ  பகவதோ நாராயணஸ் யா அகில சத்வதயைக சாகரச்ய
அநலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூல
அமர்யாத சீலவத
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா து
தேவ திர்யக் மனுஷ்யாதி
அகில ஜன ஹ்ருதய ஆநந்த நஸய
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
பக்த ஜன சம்ஸ்லேஷைக போகஸ்ய
நித்ய ஜ்ஞான க்ரிய
ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய மஹா விபூதே
ஸ்ரீ மத சரணாரவிந்த யுகளம்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன தத்கத சர்வ பாவேன சரணம் அநு வ்ரஜேத்

ஸ்வ அதீன –
இத்தால் பராதீனமான ப்ரவ்ருத்திகளாதிகளுடைய சேதன அசேதனங்களைப் போல் அன்றிக்கே
ஸ்வ அதீன வ்யாபாரனாய் -இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

ஜகத் வசே வர்த்த தேதம் க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம் -என்கிறபடியே
தன்னை ஒழிந்தவை அடைய தான் இட்ட வழக்கை இருக்கும் -என்கிறது

அவை தான் என் என்னில் –
த்ரிவித சேதன அசேதன –
பத்த முக்த நித்ய பேதேன மூன்று படிப் பட்ட ஆத்ம வர்க்கம் -என்ன
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித்து என-இவை

இவை தானேயோ பர தந்த்ரமாய் இருப்பன -எனில்
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
இவற்றின் உடைய தர்மி ஸ்வரூபம் என்ன –
தர்மமான ஸ்வபாவம் என்ன
இவற்றின் உடைய வியாபாரம் என்ன இவை

ஸ்திதி
வ்யவஸ்தித ஸ்வ பாவம்
நித்யோ நிதயாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹூ நாம் யோ விததாதி காமான் -என்றும்

அசேதன பரார்த்தா ஸ நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே -என்றும்

சேதன அசேதனங்கள் இரண்டின் ஸ்வ பாவமும் நித்யம் ஆகையாலே
ஸ்வரூப ஸ்திதி என்று சத்தாநுவ்ருத்தி சொல்ல வேண்டா –

சேதனனுக்கு ஸ்வரூப பேதம் ஆவதுமாயாவாதிகள் போலே ஏகாத்மாவாய் இருக்கை அன்றிக்கே
ஏகோ பஹூநாம் -என்றும்
நாநா ஆத்மாநோ வ்யவஸ்தாத- (கௌதமர் நியாய ஸாஸ்த்ரம்)என்றும்
சுக துக்காதி பேதத்தாலே ஆத்மாக்கள் அநேக ரூபமாய் இருக்கை –

ஸ்வபாவ பேதம் ஆவதுஜ்ஞாத்ருத்வ -கர்த்ருத்வ -போக்த்ருத்வ -நித்யத்வ -ஸ்வயம் பிரகாசத்வ சேஷத் வாதிகள்

பிரவ்ருத்தி பேதம் ஆவதுஜ்ஞான -சிகீர்ஷா -ப்ரயத்நாதிகள் –

அசேதனத்துக்கு ஸ்வரூப பேதம் ஆவதுபிரகிருதி மஹத் அஹங்கார தன்மாத்ர ஆகாசாதி பேதத்தாலும்
கலா காஷ்டா முஹூர்த்தாதி பேதத்தாலும்
பின்னமான கார்ய காரண அவஸ்த வஸ்துக்கள் –

ஸ்வபாவ பேதம் ஆவதுஜடத்வ பரிணாமித்வ நித்யத்வ பரார்த்தத்வ சத்வாதி குண ஆஸ்ரயத்வாதிகள்

பிரவ்ருத்தி பேதம் ஆவது -கார்ய ஆரம்பகத்வ -உபாதாநத்வ -திரோதாயாக்த்வ -அப்ரகாசத்வாதிகள்-

க்ருஹ- உபகரண -ப்ருத்யாதிகள் உடைய-ஸ்வரூப சம்பாதநாதி வியாபாரங்கள் ராஜாதி களுக்கும் ஸ்வ அதீனமாய் அன்றோ இருப்பது –
அவ்வோ மாத்ரமோ -என்னில்
க்லேச கர்ம விபாகாதி அசேஷ தோஷ அசம்ப்ஸ்ப்ருஷ்டம் –
என்கிறபடியே-ஈத்ருச சமஸ்த தோஷங்களும் இன்றிக்கே இருக்கும் இறே

(அவித்யை முதலான ஐந்து கிலேசங்கள் என்ன
புண்ய பாப ரூபா கர்மம் என்ன
இவை முதலான எவ்வித தோஷ சம்பந்தமும் இல்லாத)

க்லேசஅதாவது -ராக த்வேஷ அபி நிவேசா- க்லேசா –

கர்ம -அதாவது -புண்ய பாப ரூப கர்மம்

விபாக -அதாவது -சதி மூலே தத் விபாகா ஜாத் யாயுர் போகா-

ஆதி -சப்தம் வாசனையை சொல்லுகிறது

ஆசயோ நாம வாஸநா – என்னக் கடவது இறே –
இவற்றுக்கு வஸ்யனாய் இன்றிக்கே இருக்கை –

இவை ஹேயங்களுக்கு எல்லாம் உப லஷணமாய்
ஏவம் பிரகாரம்  அமலம் நித்யம் வ்யாபகம்  அஷயம்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-53-என்றும்

விநா ஹேயைர் குணாதிபி -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்றும் சொல்லுகிறபடியே
சமஸ்த ஹேய ப்ரத்ய நீகன் என்று சொல்லுகிறது –

(ஸ்ரீ ரெங்க கத்யத்தில் பார்த்தவை–உபய விபூதி யோகம்-அருளிச் செய்த பின்பு ஹேய பிரதி படத்வம்-அருளிச் செய்கிறார் க்லேச கர்மாத் யசேஷ தோஷ அசம்ஸ்ப்ருஷ்டம்(யோக ஸாஸ்த்ரத்தில் பதஞ்சலி ஸூத்ரம் அடியாகவே இத்தை அருளிச் செய்கிறார்) சேதன அசேதனங்கள் இரண்டும் சரீரமாய் ஈஸ்வரன் சரீரியாய் இருக்கிறான் ஆகில் சரீர பிரயுக்தமான தோஷம் சரீரிக்கு வாராதோ -என்னில் – தத் கத தோஷைர் அசம்ஸ்ப்ருஷ்டன் -என்கிறது கிலேசம் ஆவது – அவித்யா அஸ்மிதா அபிநிவேச ராக த்வேஷா பஞ்ச கிலேசா -இவை என்ன கர்ம-இவற்றுக்கு காரணமுமாய் கார்யமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -என்ன ஆதி –சப்த க்ராஹ்யமான விபாக ஆசயங்கள் -என்ன இவை முதலான அசேஷ தோஷங்களாலும் ஸ்பர்சிக்கப் படாதவன் – விபாகம் ஆவது (பக்குவம்)-தேவாதி ஜாதி யோகம் (பிறப்பு)-என்ன ஆயுஸ் என்ன -(போகம் ஸூக துக்கங்கள்)இவை முதலானவை ஆசயம் ஆகிறது -தத் தஜ் ஜாத்ய அனு குண புத்தி பேதங்கள் அசேஷ –பதத்தாலே அசித் கதமான பரிணாமத்தையும் சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளையும் நினைக்கிறது அசம்ஸ்பர்சத்தாலே ப்ராக பாவத்தை நினைக்கிறது (இல்லாதவன் என்றால் முன்பு இருந்து இப்பொழுது இல்லாமல் இருப்பதைச் சொல்லாமல் முன்பே -எப்பொழுதுமே -இல்லாததைச் சொன்னவாறு) (அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே)

—————————————

இப்படி ஹேய ப்ரத்ய நீகனாய் இருக்கும் அளவேயோ-என்னில்
சமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆதார பூதன் -என்கிறார்

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜ-ப்ரப்ருதய அசங்க்யேய கல்யாண குணா கணவ் மஹார்ணவம்

(ஸ்வா பாவிகங்களாயும்
உயர்வற உயர்ந்தவையுமாய் இருக்கிற
ஷாட் குண்யம் முதலான திருக் கல்யாண குண திரள்களுக்கு கடல் போன்று)

ஸ்வா பாவிக-

பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ – என்றும் –

த இமே சத்யா காமா -என்றும் சொல்லுகிறபடியே

ஒரு சாதனா அனுஷ்டானத்தாலே யாதல்
ஒரு தேவதா ப்ரசாதத்தாலே யாதல்
ஒரு நாள் வரையிலே யாதல்
போதல் வருதல் செய்கை அன்றிக்கே –
குணங்கள் தர்மிக்கு சத்தா பிரயுக்தமாய் இருக்கும் –என்கை

இப்படி ஸ்வபாவ சித்தமாய் இருந்துள்ள குணங்கள் தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்
அநவதிக அதிசய –
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குத்ஸ்சநேதி -என்றும்
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -என்றும் சொல்லுகிறபடியே
குணங்களின் உடைய மிகுதிக்கு எல்லை அற்று இருக்கும் –

உள்ள குணங்களுக்கு எல்லை அற்று இருந்தாலும்
இல்லாத குணங்களும் சில உண்டாய் இருக்குமோ –
உள்ள குணங்கள் தான் எவை -என்னும் அபேஷையிலே கிளம்புகிறது –
மஹார்ணவம் –

ஜ்ஞான —
அதாவது -யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா சவாத -என்கிறபடியே
சர்வ காலமும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத் காரம் –

பல –
அதாவது -ஸ தாதார ப்ருதிவீம் த்யாமுதேமாம் -என்றும்
அதவா பஹூ நோக்தேன கிம் ஜ்ஞா நேன தவார்ஜூன
விஷ்டப் யாஹமிதம் க்ருத்ஸ் நமேகாம் சேன ஸ்திதோ ஜகத்-என்றும்
சொல்லுகிறபடியே -உபய விபூதியையும் அக்லேசேன வஹிக்க வல்ல மிடுக்கு –

ஐஸ்வர்ய –
ஷரம் ப்ரதாநமம்ருதாஷரம் ஹர
ஷராத்மாநாவிசதே தேவ ஏக – என்கிறபடியே
இப்படி த்ரிவித ஜகத்தை தன் குடை நிழலின் கீழே -(துடைக் கீழே) -அமுக்கி ஆள வல்லனாகை யாகிற நியந்த்ருத்வம்

வீர்ய –
ந ஸ்ரமோ ந ஸ கேதஸ் தே ஜகத் தாரண சாசனே -என்று சொல்லுகிறபடியே
ஜகத் தாரண நியமனங்களிலே சாரீரமான சமான சர்வ கிலேசங்கள் என்றும் இன்றியிலே இருக்கை –

சக்தி –
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்றும்
ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹா ப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கச்யசித் -என்றும்
சேஷ்டா தஸ்யா ப்ரமே யஸ்ய வியாபிநோ அவ்யாஹதாத்மிகா -என்றும்
சொல்லுகிறபடியே ஏறிட்டுக் கொண்டதொரு கார்யம் முட்டுப் படாதபடி செய்து தலை கட்ட வற்றான சாமர்த்தியம்

தேஜஸ்-
ரகாராதீநி நாமாநி ராம தரஸ்தஸ்ய ராவண
ரத்நானி ஸ ரதாஸ்சைவ தராசம் சஞ்சயந்தி மே -ஆரண்ய -39-17-என்கிறபடியே
வ்யாபாராந்தர நிரபேஷமாக இவன் பேர் சொன்ன போதே
எதிரிகள் குடல் குழம்பும் படியான மதிப்பு

அன்றியே
இத்தால் பஹூ பிரயத்ன சாத்தியம் ஆனவற்றை அல்ப யத்னத்தாலே
தலைக் கட்ட வல்லன் -என்றபடி

ந தஸ்யேசே கச்சன தஸ்ய நாம மஹத் யச -என்கிறபடியே
வீர்ய சக்தி யாதிகளால் பிறக்கும் புகழாகவுமாம்

——–

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -41-

யாதொரு ஸ்தானத்தை விஷ்ணு சம்பந்தியான பரமபதம் என்கிறார்களா –
எந்த ஸ்தானமானது தமஸ்ஸுக்கு அப்பால் பரம ஆகாசம் எனப்படுகிறதோ
எந்த ஸ்தானமானதுதேஜு மயமாயும் நிஷ்க்ருஷ்ட சத்வமாயும் சாஸ்வதமாயும் உள்ளதோ –
எந்த ஸ்தானமானது ஆனந்த கந்தமாயும் மிக அழகியதாயும் ஆச்சர்யமாகவும் உள்ளதோ –

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ராஜஸ பராகே-என்றும்
தமஸஸ் து பாரே-என்றும்
தமஸஸ் பரஸ்தாத் -என்றும் சொல்லுகிறபடி ரஜஸ் தமஸ்ஸுக்களுக்கு அப்பால் அவை கலசாதபடி
பரம ஆகாசம் என்னப்படுகிறது யாதோ
தேஜோ மயம்
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பந்தி குதோயம் அக்நி–என்றும்
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ் ப்ரேஷம் தேவதா நவை –என்றும்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி என்றும் சொல்லும்படி
பரம சத்வ மயம்
ரஜோ குணம் தமோ குணங்கள் கலசாத சுத்த சத்வம் வடிவு எடுத்ததாய் இருக்கும்
த்ருவம் யத்
யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமம் த்ருவம் யத் பரம் ப்ராப்ய தத்வஞ்ஞாம் உச்யந்தே சர்வ கில்பிஷை–
பிரமாண வசனத்தில் உள்ள த்ருவம் -அனு வதித்த படி
அநாதி நிதானமாய் இருக்கும் என்றபடி
ஆனந்த கந்தம்
நலம் அந்தம் இல்லாதோர் நாடு அன்றோ
அதி ஸூந்தரம்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் அருளிச் செய்தபடி ஸுவ்ந்தர்யம் எல்லை காண ஒண்ணாதாய் இருக்கும்
அத்புதம் யத் —
அநு க்ஷணம் அபூர்வமாய் ஆச்சர்யாவாஹாமாய் இருக்குமது)

ஆனால் இப்படி ஷாட் குண்யமேயோ உள்ளது -என்னில்
ப்ரப்ருதய
தவ அநந்த குணச யபி ஷடேவ ப்ரதமே குணாயைஸ் த்வஏவ ஜகத் குஷாவன்யேஸ் அப்யந்தர் நிவேசிதா -என்கிறபடியே
இவை தொடக்கமான குணங்கள் பலவும் உள -என்கிறார்

இப்படி பல உண்டானாலும் இத்தனை என்று எண்ணப் பட்டு இருக்குமோ என்னில்

அசங்க்யேய  –
சங்க்யாதும் நைவ சக்யந்தே குணா -என்றும்
ஸ தே குணா நாம் அயுத ஏக தேசம் வதேன்ன வா -என்றும் சொல்லுகிறபடி
எண்ணிறந்து இருக்கும்

இப்படி எண்ணிறந்து இருக்கைக்கு அடி தோஷ குணங்கள்  கூடியோ என்னில்
கல்யாண –
பஹாவோ ந்ருப கல்யாண குணா -என்றும்
சங்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷாச்ச சார்ங்கின
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி அபாவாதேவ பச்சிம -என்றும்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் -என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ- என்றும் சொல்லுகிறபடியே
ஹேய ரஹீதமான குணங்கள் முடிவு இன்றிக்கே இருக்கும்

கல்யாண -ஆஸ்ரயமான அவன் தன்னோடு
அநு போக்தாககளோடு வாசி அற மங்களா வஹமாய் -சுகா வஹமாயும் இருக்கும்
கல்யாணம் மங்களம் சுபம் -என்னக் கடவது இறே
லோகத்திலும் இங்குத் திரள் என் -துக்கமோ கல்யாணமோ -என்று துக்க ப்ரதியோகியாக
சுகத்தை சொல்லக் கடவது இறே

குணா –
கேட்ட போதே செவி புதைக்க வேண்டும்படி இருக்கை அன்றிக்கே
குண்யந்த இதி குணா -என்றும்
ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திருவாய்மொழி -8-1-8-என்றும் சொல்லுகிறபடியே
அஹோ அஹோ என்று கிழவி நூல் கொண்டு -கீழ் நூல் -பலகாலும் ஆவர்த்திக்கும் படியாய் இருக்கை

(மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-)

இப்படி ஒரோ குணங்களேயோ சங்கையும் அவதியும் இன்றிக்கே இருப்பது -என்னில்

கணவ்-
தேஜஸாம் ராஸீம்-என்றும்
ஒண் சுடர்க் கற்றை -திரு வாய் மொழி -7-7-6-என்றும் சொல்லுகிறபடியே

(மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ?)

ஸ்வாமித்வ அனுபந்தியான ஸவ்ர்யம் என்ன -வீர்யம் என்ன -பராக்ரம் என்ன-
சாதுர்யம் என்ன -ஸ்தைர்யம் என்ன -தைர்யம் என்ன
ஏவமாதி குணங்கள் –

சௌலப்ய அனுபந்தியான பவ்யதை என்ன- கிருபை என்ன- அபராத சஹத்வம் என்ன-
கிலேச சஹிஷ்ணுத்வம் என்ன-
தோஷத்தில் குண புத்தி என்ன- பிரத் யுபகார நைரபேஷ்யம் என்ன ஏவமாதிகள்-

சௌசீல்ய அனுபந்தியான ஸ்வ வைப அஞ்ஞானம் என்ன-
பரகீய ஹேய அஞ்ஞானம் என்ன -அக்ருத்ரிமத்வம் என்ன ஏவமாதிகள்

வாத்சல்ய அனுபந்தியான பஷபாதம் என்ன -தோஷத்தில் குண புத்தி என்ன-
உபகார நைரபேஷ்யம் என்ன ஏவமாதிகள்

சந்தோஷ அனுபந்தியான பிரிய -மோத- பிரமோத -ஆனந்தாதி குணங்கள் என்ன
ஏவமாதியான ஒரோ குணங்களைப் பற்றி திறம் திறமாக வரும் குணங்களுக்கு ஓர் எல்லை இல்லை என்கிறது

இப்படிக்கொத்த குணங்கள் தான் தனித் தனியே அலககாயோ இருப்பது என்னில்
ஒகம்-
ஊர் வாரியும்- காட்டு வாரியும்- மலை வாரியும்– ஏரிகள் உடைந்த வாரியும் ஓர் இடத்திலே கூடினால்
கங்கும் கரையும் அழிந்து -கரை காண ஒண்ணாதே திரை மேல் திரையாக ஒரு வெள்ளமாக வருமா போலே
சமஸ்த குணங்களும் ஒரு வழிப் பட்டு இருக்கும் என்கிறது

எல்லாம் கூடினாலும் ஆற்று வெள்ளம் தனித் தனி நீர்களைப் பிரித்து அறிய ஒண்ணாதபடியும்-
கரை அழியப் பெருகினாலும் ஓர் இடத்தில் வந்த நீர் அவ்விடத்தில் நிலை நில்லாது ஒழியக் கடவதுமாய்-
மலையிலே அடி அற்றவாரே  வற்றக் கடவதுமாய் இறே இருப்பது

அப்படி இவ் வாஸ்ரயத்தில் நிலை நில்லாதபடி அஸ்திரங்களுமாய் அநித்யங்களுமாயோ  இருப்பது என்னில்
அரணவம் -என்கிறது –

சமுத்திர இவ சிந்துபி -என்கிறபடியே எல்லா நீரும் கூடிக் கடலிலே பர்யவசிக்கவும்-
அவ் விடத்தை விட்டுப் போகாது ஒழியவும் -வற்றாது ஒழியவும் -கடவதாய் இருக்குமா போலே
இங்கும் எல்லா குணங்களும் சேர இருக்கக் கடவதாய்- நித்யமுமாயும் இருக்கும்

அரணவம் -அர்ணஸ் ஆகிறது ஜலம் ஆகையாலே
அர்ணவம் –ஸூத்த ஜலக் கடல்

(1-ஐம்பூத் த்வீபம் -உப்புக்கடல்
2-பிலாஷா த்வீபம் -விஷுக்கடல் –
3-சாய த்வீபம் -சூராக்கடல் —
4-சால்மலி த்வீபம் -சர்ப்பிக்கடல்-
5-குசா த்வீபம்-ததிக்கடல்—
6-கிரௌஞ்ச த்வீபம்–பாற் கடல்-
7-புஷ்கார த்வீபம் -ஸூத்த நீர்க்கடல்)


1-லவண -உப்புக் கடல்
2-இஷூ –கரும்புச் சாறுக் கடல்
3-சூரா -கள்ளாலான கடல்
4-சர்ப்பி -நெய்க் கடல்
5-ததி -தயிர்க் கடல்
6-ஷீரங்கள்-பாற் கடல்
ஒவ்வொன்றும் நூறு மடங்கு பெரியதாய்
அடுத்து ஸூத்த நீர்க் கடல் -அர்ணவம் ஆகிற இவ்வருகில்

பரிச்சின்னங்களான ஷட் சமுத்ரங்கள் போல் அன்றிக்கே
இவை இத்தனைக்கும் அவ் வருகாய்
அதிக பரிமாண ஸூத்த ஜலம் போலே பெருத்து இருக்கும் -என்கிறது

இப்படி யானாலும் அது தானும் லோகாலோக ஸ்வேத த்வீபாதிகளால் பரிச்சின்னமாய் அன்றோ இருப்பது
அது போலேயோ இங்கும் -என்னில்
மஹார்ணவம்
குணா நாமா கரோ மஹான்-என்றும்
சமஸ்த கல்யாண குண அம்ருதோததி -என்றும் சொல்லுகிற படியே
அம்ருதமாய் இருப்பதொரு பெரும் புறக் கடல் -பெரிய திருமொழி -7-10-1- -என்கிறது –

(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

—————————————————————————————

பரம புருஷம் பகவந்தம் நாராயணம்
ஸ்வாமித்வேந குருத்வேந ஸூ ஹ்ருத்த் வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக
ஆத்யந்திக தத் பாதாம் புஜ த்வய
பரிசர்யைக மநோ ரத தத் பராப்தயே ஸ
தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே
அநயன்ன மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி சாதா நமஸ் தீதி மந்வான
தசைவ பகவதோ நாராயணஸ் யா அகில சத்வதயைக சாகரஸ்ய
அனலோசித குணா குணா அகண்ட ஜனாநுகூல
அமர்யாத சீலவத
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா து
தேவ திர்யக் மனுஷ்யாதி
அகில ஜன ஹ்ருத யாநந்த நஸய
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
பக்த ஜன சம்ஸ்லேஷைக போகஸ்ய
நித்ய ஜ்ஞான க்ரிய
ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய மஹா விபூதே
ஸ்ரீ மத் சரணாரவிந்த யுகளம்
அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன தத் கத சர்வ பாவேன சரணம் அநு வ்ரஜேத்

இப்படிப் பட்ட ஸ்வரூப ரூப குணங்களை உடையதான ஆஸ்து எது என்னில்
பரம புருஷம் -இத்யாதி

ஏவம் பூதன் நாராயணன் -என்கிறது –

கீத்ருக் பூதன் (எப்படிப்பட்ட பூதன்)-என்னில் -பரம புருஷம் –

புருஷ சப்தம் ஜீவ ஈஸ்வர சாதாரணம் ஆகையாலே
பரம -பதத்தை இட்டு வ்யாவர்த்திக்கிறது
பரோமா அஸ்மாதிதி பரம -என்று இவனுக்கு மேலாய் இருப்பார் இல்லை -என்கிறது -(ஓத்தார் மிக்கார் இலையாய மாயன் அன்றோ)

இப்படி சர்வ அதிசாயியான வஸ்துவுக்குப் பேர் என் என்னில்
பகவந்தம் –
ஸ்வா தீன த்ரிவித -என்று தொடங்கி சிருஷ்டி ஸ்திதி யாதி கர்த்ருத்வம் சொல்லுகையாலும்-
ஜ்ஞான பல ஐஸ்வர்ய -என்று ஷாட் குண்ய யோகம் சொல்லுகையாலும்-
பகாரத்தால்-ஸம் வர்த்தேதி -உண்டாக்குபவன் -மாறுபாடு செய்பவன்
பர்த்தா ஸ்வாமி -என்றும்
ககாரத்தால் நேதா ரக்ஷிப்பவன் -அழிப்பவன்
வான் -இவற்றை யுடையவன் -ஞான பலாதி குணங்கள் யுடையவன் -பிரமாணங்கள் சொல்லுமே
இவற்றை யுடைய வனுடைய திருநாமம் பகவான் என்று லோக -ஸாஸ்த்ரம் நிர்த்தேசம் இருப்பதால் இந்தத் திருநாமம்-

இத்தால் பூர்ண ஷாட் குண்யன் என்றும் -ஜகத் காரண பூதன் என்றும் சொல்லிற்று ஆயத்து

ப்ரஹ்மாதி களுக்கும் தத் குண லேச யோகத்தாலே ஔபசாரிகமாக பகவச் சப்த வாச்யத்வம் உண்டாய் இராதோ -என்னில் -அதுக்காக
நாராயணம் –

அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தனாய்
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே-என்கிறபடியே-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் கூட காரண பூதனாய்-ப்ராப்யனும் ஆனவன் -என்கிறது

(பகவந்தம்)நாராயணம் -பகவச் சப்தத்தாலும் ஷாட் குணய மாத்திரம்  இறே சொல்லிற்று

ப்ரப்ருதி அசங்க்யேய கல்யாண குணா கனௌ மஹார்ணவம் -என்று சமஸ்த கல்யாண குணாஸ்ரயம் சொல்லுகையாலே
அத்தால் பலிதமான திரு நாமம் சொல்லுகிறது –

நாராயணம் பரம புருஷம் -என்கையாலே
ஸ்ரீ புருஷ ஸூக்த பரமான பிரதிபாத்யம் சொல்லுகிறது –

பகவந்தம் -என்கையாலே
பகவான் பவித்ரம் வாசுதேவ
பவித்ரம் வாசுதேவோ பகவான்
சங்கர்ஷணோ பகவான்
ப்ரத்யும்னோ பகவான் -இத்யாதி
ரஹஸ்ய ஆம்னாய ப்ரதிபாத்யத்வம் சொல்லுகிறது –

நாராயணம் -என்கையாலே நாராயண அநுவாக பிரதிபாத்யம் சொல்லுகிறது

ஆக -இத்தால் வேதே ராமாயணே சைவ புராணே பாரதே ததா
ஆதௌ மத்யே ததா அந்தே ஸ விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும்

சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ச்ம்ருதிர் ஜ்ஞான மபோ ஹ நஞ்ச
வேதைஸ்ஸ சர்வைர் அஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் -என்றும்
சொல்லுகிற படியே –க்ருத்ஸ்ன வேத ப்ரதிபாத்யனான நாராயணன் -என்னும் அர்த்தம் சொல்லுகிறது-

இதுக்கு முன் ப்ராப்ய விஷய வைலஷண்யம் சொல்லிற்று ‘இனி இவ் விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லுகிறது -தத் பிராப்தயே-என்னும் அளவாக –

(ஸ்வாமித்வேந குருத்வேந ஸூஹ்ருத்த்வேந ஸ பரிக்ருஹ்ய ஐகாந்திக ஆத்யந்திக தத்பாதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப்பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்)

ஸ்வாமித்வேந குருத்வேந ஸூஹ்ருத்த்வேந ஸ பரிக்ருஹ்ய –
நாராயண சப்தத்தால் பிரதிபாதிக்கப் படுகிற அர்த்தத்தை அனுசந்திக்கிற படி –

(மூன்று பதங்களுக்கும் மூன்று மூன்று அர்த்தங்கள் சாதிக்கிறார்-சேஷியாகவும்- நேசனாகவும் -ஆச்சார்யனாயும் ஏற்றுக் கொண்டு)

ஸ்வாமித்வ -சௌலப்ய -சௌசீல்ய -வாத்சல்யாதிகள் இறே நாராயண சப்தார்த்தம் –

ஸ்வாமித்வேந -என்கையாலே ஸ்வாமித்வம் சொல்லுகிறது

குருத்வேந -என்கையாலே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் திருமொழி -5-2-8-என்கிற சௌலப்யம் சொல்லுகிறது –

ஸூஹ்ருத்த்வேந -என்கையாலே சௌசீல்யம் சொல்லுகிறது

ஸ-காரத்தாலே வாத்சல்யம் சொல்லுகிறது
அன்றிக்கே -உக்த சமுச்சயமாய் -வாத்சல்யம் உப லஷிதம் ஆகவுமாம் –

அன்றிக்கே
ஸ்வாமித்வேந -என்று பரம புருஷம் -என்று பரம புருஷ சப்தத்தாலே ஸூ சிதமான புருஷ ஸூக்தத்தில்
பிரதிபாதிதமான ஸ்வாமித்வத்தை சொல்லுகிறது

குருத்வேந -என்று பகவந்தம் -என்கையாலே பகவச் சப்த ஸூசிதமான ரஹஸ்ய ஆம்நாயத்தில்
சங்கர்ஷணோ பகவான் -என்று சங்கர்ஷண ரூபேண ஜ்ஞானப் பிரதானம் பண்ணின குருத்வத்தைச் சொல்லுகிறது –

ஸூஹ்ருத்த்வேந -என்று -நாராயணம் -என்று நாராயண சப்தத்தாலே ஸூசிதமான நாராயண அனுவாகத்தில்
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபி வா
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும்

தஸ்ய மத்யே வஹ்நிசிகா அணி யோர்த்வா வ்யவஸ்தித
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார ஸூகவத் தன்வீ பீதாபாஸ்யாத் தநூபமா
தஸ்யாஸ் ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் சேந்த்ரஸ் சோஷர பரமஸ் ஸ்வராட் -என்றும்

இவற்றை விட மாட்டாதே உட்புகுந்து கலந்து இருக்கும் -என்று ப்ரதிபாத்யமான சௌஹார்த்ததத்தைச் சொல்லுகிறது –

ஸ்வாமித்வேந -என்கையாலே சரணாகதி பண்ணுகைக்கு பற்றாசான ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லுகிறது

குருத்வேந -என்கையாலே சிஷ்ய -ஆச்சார்ய சம்பந்தம் சொல்லுகிறது –

ஸூஹ்ருத்த் வேந -என்கையாலே சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்று (சஹா -தோழமை)சக்ய நிபந்தனமான சம்பந்தம் சொல்லுகிறது –
சௌசீல்யம் சொல்லுகிறது என்றும் சொல்லுவார்கள்

இத்தால் சர்வ வித சம்பந்தமும் அவனோடு -என்றபடி

பரிக்ருஹ்ய -என்று ஒரு தலை மாற்றமாக தான் ப்ரீதி பத்தி பண்ணுகை  அன்றிக்கே சர்வ அவிகீதமாக லோக பரிக்ருஹீதமான அர்த்தம் என்கை-

பரிக்ருஹ்ய -பரித்தோ க்ருஹீத்வா
சாஸ்திர அவலோக நத்தாலும் -ஆச்சார்யா உபதேசத்தாலும்-
பகவத் அனுஷ்டானத்தாலும் ஆகிற சர்வ பிரகாரத்தாலும் நெஞ்சிலே ஸ்வீகரித்து

இப்படி அத்தலையில் ஸ்வாமித்வ அனுசந்தானம் பண்ணின அநந்தரம்
ஸ்வ உஜ்ஜீன இச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்று
ஸ்வாமித்வ பிரதி சம்பந்தி யான தாஸ்ய அனுகுண வ்ருத்தி விசேஷத்தை ஆசைப் படும்படி சொல்லுகிறது –ஐகாந்திக ஆத்யந்திக தத் பதாம் புஜ த்வய பரிசர்யைக மநோ ரத–என்கிற பதத்தாலே –

(ஐகாந்திக ஆத்யந்திக தத் பதா³ம்பு³ஜ த்³வய பரிசர்யைக மநோரத:² –எப்போதும் அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளைப் பற்றிய கைங்கர்யம் ஒன்றே செய்ய வேண்டும் என்னும் பாரிப்பை யுடையவனாய்)

ஐகாந்திக –
ஏகாந்த சம்பந்தியாய் இருக்கை -அதாவது அந்தரங்கம் -என்றபடி –

அது -தத் -பதத்தோடு -அன்வயிக்கவுமாம் –
தத் பதாம் புஜ த்வயத்தோடே-அன்வயிக்கவுமாம் –
பரிசர்யை யோடு அன்வயிக்கவுமாம்

தத் பதத்தோடு அந்வயித்த போது -நிருபாதிக பந்துவானவன் -என்றபடி –

தத் பதாம் புஜ த்வயத்தோடே அந்வயித்த போது
த்வத் பாத பங்கஜ பரிக்ரஹ தன்ய ஜந்மா
பூயாசமித் யபி நிவேசக தர்த்யமான-என்றும்
ப்ராமயன் நருமாம்ச பண நாய பரேத பூமா
வாகர்ண்ய பீரு ருதிதானி தவாக தோஸ்மி -என்றும்

கிம் சீதலை க்லமவி நோதி பி ரார்த்ரவாதான்
சஞ்சாரயாமி நளி நீதள தால வ்ருந்தை
அங்கே நிதாய கர போரு யதா ஸூகம் தே
சம்வாஹயாமி சரணாவுத பத்மதாம்ரௌ -(சகுந்தலையைப் பார்த்துச் சொல்லும் வார்த்தை)என்றும்

பாஹ்ய விஷயங்களில் காமம் போலே அப்ராப்தமாய் இருக்கை அன்றிக்கே
சேஷி உடைய திருவடிகளிலே சேஷ பூதனுக்கு பிறக்கும் காமம் ஸ்வத ப்ராப்தம் -என்கை –

தத் பதாம் புஜ த்வய -தத் சப்தம் பிரக்ருத பராமர்சி யாகையாலே -நாராயணம் -என்று பரஸ்துதனானவனை பராமர்சிக்கிரது

இத்தால் நாராயண சரணவ்-(த்வயம்) -என்கிற பதத்தை நினைக்கிறது

பதாம் புஜ த்வய-தத் -என்று -தர்மி  ப்ரஸ்துதமாய் இருக்கச் செய்தேயும்
பாத -என்று திருவடிகளைச் சொல்லுகிறது -ஸ்தநந்தய பிரஜைக்கு மாதாவினுடைய முலைக் கண் அபேஷிதம் ஆனால் போலே
சேஷ பூதனுக்கும் ஸ்வரூப ப்ராப்தமாகை

அங்கு முலைக் கண்ணில் பாலூருமா போலே –
ததஸ்ய ப்ரியமபி பாதோ அஸ்யாம்
நரோ யத்ர தேவயவோ மதநதி
உருக்ர மஸ்ய ஸ ஹி பந்து ரித்தா
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ -என்றும்-

தவாம் ருதஸ் யந்தினி பாத பங்கஜே
நிவேசிதாத்மா கத மன்யதிச்சதி
ஸ்திதேர விந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே -ஸ்தோத்ர ரத்னம் -27-என்றும்
சொல்லுகிற படியே இவனுக்கும் திருவடிகளிலே போக்யதை யூற்று இருக்குமே –

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.)

அம்புஜ-இது தான் தைவதமாய் -காஷாய பானம் போலே இருக்கை அன்றிக்கே
ராக பிராப்தமாம் படி போக ரூபமாய் இருக்கும் –

அம்புஜ -அமரர் சென்னிப் பூவை -திருக் குறும் தாண்டகம் -6–ஆகையாலே
குளித்து மயிருக்கு பூ வைக்கும் போது -சிரஸா தாரயேத் -என்று விதிக்க வேண்டா இறே

(மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?–6-)

த்வய -உபாயம் த்வயமாய் இருக்கையாலே
உபேயமும் த்வயமாய் இருக்கிறபடி

தேவா நாம் தாநவா நாம் ஸ சாமான்ய மதி தைவதம்
சர்வதா சரணத் வந்தவம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தே -2-என்னக் கடவது இறே –

இத்தால் சரணவ் -என்கிற த்வி வசனத்தை  நினைக்கிறது

பரிசர்ய-
சர்யா -சரித்ரம் -அனுஷ்டானம் -கைங்கர்யம் -என்றபடி –
பரிசர்யை ஆவது -சர்வ வித கைங்கர்யம் -என்றபடி –

இவ் வவயவ சக்தியை ஒழிய பரி சர்யை என்கிற ரூடியாலே
கௌரவ விஷயத்தில் பண்ணும் அநு வ்ருத்திக்குப் பேராய்
அத்தால் கைங்கர்யத்தை விவஷிக்கிறதாகவுமாம் –

அன்றிக்கே
பரிதஸ் சர்யையாய் -அதாவது -விஸ்வத பர்யேதி-என்றும்
கொண்ட கோயிலை வலம் செய்து -திருவாய் மொழி -10-1-5-என்றும்
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கு -திருவாய் -2-10-8-என்றும்
சொல்லுகிறபடியே
பிரதஷிண ஆதி உப லஷணமான அனுகூல வ்ருத்தியைச் சொல்லிற்று ஆகவுமாம்

(தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-)

(வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-)

ஏக -மநோ ரத-
புறம்புள்ள பலன்களை எல்லாம் விட்டு
கைங்கர்யம் ஒன்றுமே பெற வேண்டும் என்னும் படியான அபிநிவேசத்தை யுடையவனாய்

(மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கைவிட்டு)

(தத் ப்ராப்தயே ச தத் பாதா³ம்பு³ஜ த்³வய ப்ரபத்தேঃ
அந்யந்ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேணாபி ஸாத⁴நமஸ்தீதி மந்வாந: –அந்தக் கைங்கர்யத்தைப் பெறுவதற்கு கல்ப கோடி ஸஹஸ்ரமானாலும்
அப் பெருமானுடைய திருவடி இணைத் தாமரைகளையே நம்பி இருப்பதில் காட்டிலும் வேறே ஓன்று எனக்கு உபாயமாக இல்லை என்று எண்ணினவனாய்)

தத் பராப்தயே ஸ –
கீழே ப்ரஸ்துதமாய் மநோ ரத விஷயமான பரிசர்யையைப் பெறுகைக்காக
ஸ -என்று கீழ் வேறு ஒன்றின் உடைய பிராப்தியைச் சொல்லி
இதன் உடைய பிராப்திக்கும் என்று சமுச்ச்சயிக்கிறது அல்லவே –

சகாரத்துக்கு பொருள் என் -என்னில் அநுக்த சமுச்சயமாய்
ஸக்ருத் த்வ தாகார விலோக நாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புத்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவ லோக்யதாம் நய
ஷண அபி தே யத் விரஹோஸ்தி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-என்றும்

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் சொல்லுகிறபடியே

தத் ப்ராப்தி பலமான ததீய சேஷத்வ ப்ராப்திக்குமாகவும்என்று
அநுக்த சமுச்சயம் ஆகவுமாம் –

(ஸக்ருத் த்வ தாகார விலோக நாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத் விரஹோ’தி துஸ் ஸஹ: ||ஸ்தோத்ர ரத்னம் -56-

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றை புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளிவிடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித்
தங்கள் விசேஷமான கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.)

அன்றிக்கே
ஸ -என்று –
நின் புகழில் வைகும் தாம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான் – பெரிய திருவந்தாதி -53-என்றும்

(ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-)

துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாசம் ந விந்தெத தாவ தாஸ்மி கருதீ சதா -ஜிதந்தோ -12-என்றும்
சொல்லுகிற படியே

பரிசர்யா மநோ ரதம் தானே போந்து இருக்க
அதுக்கு மேலே இது பெற வேணும் என்று இருந்தான் ஆகில் என்று பிராப்தி சமுச்சயிக்கிறது -என்னவுமாம்

(துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது இதில் அந்த சித்தியும் வேண்டா தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது – ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம் ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –)

இதுக்கு கீழ் உபேய ஸ்வரூபம் சொல்லிற்று –
மேல் இதுக்கு சத்ருசமான உபாய நிஷ்கர்ஷமும்
தத் அனுஷ்டான பிரகாரமும் சொல்லுகிறது –
சரணம் அநு வ்ரஜேத் -என்றது அறுதியாக –

தத் பாதாம் புஜ த்வய ப்ரபத்யே -என்று தொடங்கி
மந்வான -என்று அறுதியாக உபாய நிஷ்கர்ஷம் சொல்லுகிறது –

தஸ்ய தொடங்கி –ஸரணாரவிந்தம் அறுதியாக உபேய வேஷம் சொல்லுகிறது

அநந்ய ஆத்ம -தொடங்கி -அனுவ்ரஜேத் -என்றது அறுதியாக உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது –

தத் பாதாம் புஜ த்வய-பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஒன்றாகில் – கார்ய காரணயோர் ஐக்கியம் பிரசங்கிக்கும்
ஐக்கியம் பிரசங்கித்தால் சாத்திய சாதனங்கள் இன்றிக்கே ஒழியும்-
இன்றிக்கே ஒழிந்த வாறே அவற்றில் பிரவர்த்தகர் இன்றிக்கே ஒழியும்
பிரவ்ருத்தி இல்லாமையாலே பிரவர்த்தக சாஸ்தரத்துக்கு வையர்த்தமும் அப்ராமாண்யமும் பிறக்கும் –
இத்தனை அநர்த்தங்கள் உண்டாய் இருந்தன –

இதுக்குப் பரிஹாரம் எது என்னில்
தத் பாதாம் புஜ த்வய பரிசர்யை பிராப்யம்
தத் பாதாம் புஜ த்வய பிரபத்தி உபாயம் என்று இட்டு பேதம் உண்டு ஆகையாலே ஒரு விரோதம் இல்லை –

ஆனால் பரிசர்யா ப்ரபத்திகள் உபாய உபேயங்கள் ஆகில்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
ப்ரஹ்ம வித ஆப்நோதி பரம் -என்றும்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்றும்
தவம் ஏவ உபாய உபேதோ மே பவ -என்றும்
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஓன்று என்றும்
எம்பெருமானே உபாய உபேயங்கள் என்றும் சொல்லுகிற பிரமாண வ்யவஹாரங்கள் செய்யும்படி என் -என்னில்

பரிசர்யா விஷயமும் பிரபத்தி விஷயமும் ஓன்று ஆகையாலே
விஷயம் ஓன்று ஆனால் பேதம் நடக்குமோ என்னில்
பேதகம் -விசேஷணம் -பேத்யம் -விசேஷ்யம்-என்கிற ந்யாயத்தாலே
பரிசர்யா ஜனித ப்ரீதி விசிஷ்ட விஷயமும்
பிரபத்தி ஜனித பிரசாத விசிஷ்ட விஷயமும்
விசேஷண பேதத்தால் வேறு ஆகையாலே வஸ்து ஒன்றானாலும் பேதத்துக்கு குறை இல்லை

ஆனால் அஜோ கஜோ மகிஷா(ஆட்டுத் தன்மை யானைத் தன்மை)-கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கௌ(முழுக் கொம்பு அரைக் கொம்பு கொம்பு இல்லாமல்)-என்கிற இடத்தில்
விசேஷண பேத அதீனமாக விசேஷ்ய ஸ்வரூபத்துக்கு பேதம் நடந்தது இல்லையோ -என்னில் –

விருத்த விசேஷமான அவ்விடத்தில் அப்படி ஆகிலும்
தேவ தத்த ஸ்யாமோ யுவா சம பரிமாண(கறுப்பாகவும் இளமையாகவும் ஸமமான பரிமாணங்களையும் கொண்ட)-என்ற இடம் போலே அவிருத்த விசேஷணம் ஆனவிடத்தில்
விசேஷண பேதாயத்த விசிஷ்டாகார பேதம் வரச் செய்தேயும் ஸ்வரூப பேதம் பிறவாது –

ஸ ஏவ ஸ்ருஜ்யஸ் ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே ஸ
ப்ரஹ்மாத் யவஸ் தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ வராதோ வரேண்ய-என்று
ப்ரஹ்மம் ஒன்றுமே கார்ய காரணமாம் இடத்தில் சூஷ்ம சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்ம காரணம்-
ஸ்தூல சித் அசித் விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யம் என்று அவிரோதேன நிர்வஹிக்கிறாப் போலே

ப்ரபத்தே –
ததே கோபாய தாயாச்ஞா பிரபத்தி -என்று
துர நுஷ்டேயமான உபாயங்களில் எனக்கு அன்வயம் இல்லை
ரஷகனானவனே உபாயம் ஆக வேணும் என்று பிறக்கிற  ப்ரார்த்தன அத்யாவசாயம் பிரபத்தி –

(உபாயம்
உபேயம்
ரக்ஷகம் மூன்றுமே அவன்-பிரபத்தி –)

அந்யத்-இப் பிரபத்தியை ஒழிய மற்ற உபாயாந்தரங்கள் இல்லையோ -என்னில்
அந்யத் -தொடங்கி -மந்வான -அறுதியாக
அவை எல்லாம் நெஞ்சு உடையார்க்கு நல்ல தீர்த்தம்
நமக்கு அதிகாரம் இல்லை என்று இருப்பான் -என்கிறார் –

அந்யத் -பக்தி -தத் பேதமான சத் வித்யை தொடக்கமானவை –
தத் அங்கமான ஜ்ஞான கர்மங்கள் தொடக்கமான பிரபத்தி வ்யதிரிக்தமான உபாயம் –
இப்படி சாஸ்த்ரங்களிலே தாத்பர்யம் பண்ணி விதிக்கிற இவை உபாயங்கள் அன்றோ -என்னில்

ந மே
இங்கே அஸ்தி யை கூட்டி -ந மே அஸ்தி -இவை எல்லாம் சக்த அதிகாரம் –
அஜ்ஞனாய்-அசக்தனாய் -கர்ம ப்ரவாஹத்திலே அழுந்தி
அது அடியாக -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய் மொழி -2-6-8-
மாதரார் வன முலைப் பயனே பேணி -பெரிய திருமொழி -1-6-1-
இப்படி விபரீத ப்ரவ்ருத்தி பண்ணி -ஷிபாமி -ந ஷமாமி -க்கு இலக்காய் இருக்கிற எனக்கு உபாயம் இல்லை –

(மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்–2-6-8-)

(வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-)

இப்படி மாறி மாறி பல பிறப்பும் பிறக்கிற பிறவிகளில் இதுக்கு முன்பு இல்லை யாகிலும்
இனிப் பிறக்கும் பிறவிகளிலே ஆகிலும் சாதன அனுஷ்டானம் பண்ணத் தட்டு என் -என்னில்

கல்ப கோடி சஹஸ்ரேணாபி –
ஒட்டடையை ஆயிரம் நாள் நீரிலே இட்டு வைத்தாலும் முளையாதாப் போலே
கால தத்வம் உள்ளது அனையும் திரிந்தாலும் அதிகாரம் உண்டாக மாட்டாது –

சதாநமஸ்தி –
இத்தை கீழே கூட்டினால் போலே கீழே உள்ள நஞ்ஞை இங்கே கூட்டி
சாதனம் நாஸ்தி -என்று ஆகிறது

எல்லாம் செய்தாலும் க்ருத பிராய சித்தமாம் அத்தனை போக்கி
அபிமத பலத்தை சாதித்து தர மாட்டாது –

சாதனம் நாஸ்தி -என்றால் ஸ்வ ரசமாகத் தோற்றுவது  சாதனம் இல்லை என்று இறே
அங்கன் அல்ல
சாதனம் ந பவதி -எனக்கு சாதனம் ஆக மாட்டாது -என்ற படி –

இதி மந்வான -(இப்படி நினைத்துக் கொண்டே இருந்து)இப் பிரகாரத்திலே அறுதி இட்டு
மந்வான -இந் நினைவு உருவ நடக்க வேணும் என்கிறது வர்த்தமானத்தாலே

தஸ்யைவ பகவதோ நாராயணஸ்ய-
கீழ் பகவந்தம் நாராயணம் -என்று பிரஸ்துதமான அவன் தன்னுடைய
கீழ் பகவந்தம் நாராயணம் -என்று
சோஸ்னுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்கிறபடியே –
பிராப்த்ய உபயோகியான குணங்களையும் குணாஸ்ரயமான தர்மியையும் சொல்லிற்று

இங்கு பகவதோ நாராயணஸ்ய-என்று பிராபகத்வ உபயோகியான குணங்களையும் குணியையும் விவரிக்கிறது –

(அனுபவிக்கத் தக்க குணங்கள் கீழ்
பற்றுவதற்குத் தக்க குணங்கள் இங்கு)

அகில சத்வ தயைக (தய ஏக )சாகரஸ்ய-
சகல சத்வ விஷயமாக தயைக்கு ஒரு கடலாய் இருக்கும்
அகில சத்வ -இன்னான் இனையான் என்று வரையாதே சகல ஜந்து விஷயம் என்றபடி –

தயா -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷ்ணுதவம்-
தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே பிறர் நோவு கண்டால் ஐயோ -என்கை –

ஏக சாக ரஸ்ய –
தயை யாகிற ஜலத்துக்கு வேறு ஒரு ஆஸ்ரயம்  இன்றிக்கே இவனே ஆஸ்ரயம் ஆகை

அகில சத்வ தயைக சாக ரஸ்ய -என்றது பர பீடா நிரூபணம் பண்ணியோ வென்னில் –
அநலோசித குணா குணா அகண்ட ஜன அநுகூல அமர்யாத சீலவத –
இப்படி குணா தோஷ நிரூபணம்   பண்ண ஒண்ணாத படியான
சீல குணம் உடையவன் -என்கிறது –

திரு உள்ளத்தால் ஆராயப் படாத படியான நன்மை தீமைகளை உடையராய் இருக்கிற
அகண்ட ஜனம் உண்டு -பிரியப் படாத மனுஷ்யர்கள்
அவர்கள் உஜ்ஜீவிக்கைக்கு ஈடாம் படியான நிரவதிக சீலத்தை உடையவனுடைய
தோஷம் திரு உள்ளத்தில் படாத அம்சம் ஏற்றம் ஆகிறது

உள்ள குணங்களை அங்கீ கரித்திலன்  என்றால் இது ஓர் ஏற்றமோ என்னில்
நிக்ரஹிக்கைக்கு அடியான தோஷங்களை நிரூபியாத மாத்ரம்
ரஷிக்கைக்கு பற்றாசான குணங்களையும் அபேஷியான் -என்றபடி
தான் ரஷிக்கும் போது குண அபேஷை இல்லை என்று கருத்து

(விபீஷண சரணாகதி -தீயவனாக இருந்தாலும் கைக் கொள்ளுவேன் என்றால் போல்)

அநலோசித –ஆலோசிதம் ஆவது -இவ் வாஸ்ரயத்தில் நன்மை உண்டோ தீமை உண்டோ என்று விடுத்து ஆராய்கை
அது இன்றிக்கே ஒழிகை

குணாகுண-அவை யாவன -நன்மை தீமைகள் -அதாவது அஜ்ஞனோ ப்ராஜ்ஞனோ-நாஸ்திகனோ ஆஸ்திகனோ-
தார்மிகனோ அதார்மிகனோ – விநீதனோ அவிநீதனோ-என்று ஏவமாதிகள் –

அகண்ட ஜன -தேவ மனுஷ்யர்களோடு
ப்ராஹ்மன ஷத்ரியாத் -யநுலோம ஜாதியோடு பிரதிலோம ஜாதியோடு வாசி அற சர்வ விஷயமாக
அனுகூல -இவை கு-மார்க்கங்களைத் தவிர்ந்து நல் வழி போய்க் கரைமரம் சேருகைக்கு உறுப்பாம் படி இருக்கை

அமர்யாத -மரியாதை யாகிறது -அவதி -நிரவதிகம் என்றபடி

சீல -பெரியவன் தாழ்ந்தவனோடு கலக்கும் இடத்தில் தன் மேன்மை பார்த்து இறுமாத்தல்
மற்றையவன் தண்மை பார்த்து கூசுதல் செய்யாதபடி புரை அறப் பரிமாறுகிற நீர்மை –

சீல வத -மதுப்பாலே
பூமா நிந்தா பிரசம் சாசூ நித்ய யோகே அதிசாயனே
சம்பந்தே அஸ்தி விவஷாயாம் பவந்தி மதுபாதய -என்று
நித்ய யோக மதுப்பாலே
இக் குணம் இவனுக்கு நித்ய சித்தம் -என்கிறது –

(பூமா -மிக்க செல்வம் உடையவன்
நிந்தா
பிரசம் சாசூ
நித்ய யோகே
அதிசாயனே
சம்பந்தே அஸ்தி
விவஷாயாம் பவந்தி மதுபாதய -மதுப்புக்கு பல அர்த்தங்கள்)

இப்படி அவன் தன் நீர்மையாலே எல்லாரோடும் கலந்தாலும் அவர்கள் தன்னைக் கண்டால் வெருவும்படியாய் இருக்குமோ என்னில் –
தேவ திர்யக் மனுஷ்யாதி -அகில ஜன ஹ்ருதய  ஆநந்த நஸய –
விவேகிகளோடு அவிவேகிகளோடு வாசி அற எல்லாருடைய நெஞ்சும் உருகும்படியாய் இருக்கும்

இப்படிச் செய்கைக்கு அடி என் என்னில்
து -ஒரு விசேஷம் உண்டு
அது தான் என் என்னில்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய குணவத்தயா –
ஸ்வதஸ் சித்தமான எல்லை இல்லாத மிகுதியை உடைத்தாய் இருக்கிற குணவத்தையாலே-

அடியே தொடங்கி ஒருபடிப் பட்ட குணங்களைச் சொல்லி வரச் செய்தே
புதுமை போலே குணவத்தயா -என்று சொல்கிறது -என் என்புது -என்னில் –
அவை எல்லாம் ஆத்ம குணங்களைச் சொல்லுகிறது

இங்கு -ராம ராம நய நாபி ராமதம் ஆச யஸ்ய சத்ருசீம் சமுத்வஹன்
சர்வ தேவ ஹ்ருத யங்க மோசசி -ஆரண்ய -17-9–என்கிறபடியே கண்ணுக்கு பிடிக்கும் படியான
காந்தி சௌகுமார்யாதி களை-விக்ரஹ குணங்களைச் சொல்லுகிறது –

தேவ திர்யக் மனுஷ்யாதி -அகில ஜன ஹ்ருத யாநந்த நஸ்ய —
பாப்ப வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -ஆரண்ய 17-9- என்றும்

தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரௌ மஹா பலௌ
புண்டரீக விசாலாஷௌ சீர கிருஷ்ணாஜி நாம்ப ரௌ -ஆரண்ய -19-14-

அதி ஜய தந்வாநம வேஷ்ய ராமம் சரந்த மேகாந்த விலாசிநீபி
நூனம் பபூவுர் வன தேவ தாச்ச மர்த்யான்க நாஜன் மகு தூஹ லின்ய -என்றும் –

ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூதோ ஜனகாத்மஜே -சுந்தர -35-8-என்று திருவடியும் அகப்பட்டான் இறே –

சூர்ப்பணகை
வந தேவதைகள்
திருவடி
அகப்பட்டவற்றுக்கு ப்ரமாணங்கள்

வாத மா மகன் மர்க்கடம் விலங்கு -பெரிய திரு மொழி -5-8-2-
என்று மூன்றுக்கும்- இது தானே உதாஹரணமாக்கவுமாம்

திருவடி தேவர் கோஷ்டிக்கும் திர்யக்க்குக்கும் மனுஷ்யத்துக்கும் -மூன்றுக்குமே உதாஹரணம்)

(வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-)

மனுஷ்ய
ரூப சம்ஹனனம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரு ஸூ ர விஸ்மிதாகாரா ராமஸ்ய வனவாசின -ஆரண்ய -1-13-என்று ரிஷிகள் அகப்பட்டார்கள் –

ஆதி சப்தத்தாலே ஸ்தாவரங்கள்-அதாவது –
பாஷாண கௌதமவதூவ புராப்தி ஹேது – என்று கல் உருகிப் பெண்ணாம் படி இருக்கை –

அகில ஜன -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற
ஹ்ருதய ஆநந்த தஸ்ய -கண்ணுக்கு அழகியனாய் -அநபிமத விஷயமாய் நெஞ்சுக்கு பிடியாது இருக்கை அன்றிக்கே

சித்தாபஹாரிணம் -என்றும்

கண்டவர் தாம் மனம் வழங்கும் -பெருமாள் திரு மொழி -8-1-9–என்றும் சொல்லுகிற படியே எல்லார் நெஞ்சை உருக்கும் படியாகவும்
நெஞ்சு உடையார் நெஞ்சை இழந்து
என் நெஞ்சினாரைக் கண்டால் -திரு விருத்தம் -30-என்று தன் நெஞ்சுக்கு தூது விட வேண்டும்படியாயும் இறே வடிவு அழகு இருப்பது

(வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-)

(அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-)

இப்படி சர்வ சாதாரணமாய் இருக்கும் இத்தனை போக்கி ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் இல்லையோ -என்னில் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
அவர்கள் விஷயத்தில் தோஷம் தானே போக்கியம் என்று நினைத்து இருக்கும் -என்கிறது

ஆஸ்ரித -பவத் விஷய வாசின -என்றும் -சக்ருதேவ பிரபன்னாய -என்றும்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி -என்றும் சொல்லுகிறபடியே
அவன் எல்லைக்கு உள்ளே கிடத்தல்

ஒரு பச்சிலை யாதல்
ஒரு மலர் ஆதல்
ஒரு உக்தி ஆதல்
நேர்ந்தவர்கள் –

வாத்சல்ய -கன்றின் உடம்பில் வழும்பை தாய் போக்யமாக நக்குமா போலே
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-என்னும்படி சிநேக விஷயமாகை-

(குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –41-)

அதாவது -தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
நத்யஜேயம் கதஞ்சன -என்று இருக்கை –

ஏக ஜலதே -ஏகாஸ்ரயமாய் இருக்கை –

இப்படி இவன் ஆஸ்ரயித்தால்-இத் தலைக்கு பலம் கொடுத்து விட்டானாய் இருக்கும் அது போக்கி
தன் பேறாக இருக்கும் அது இல்லையோ என்னில்
பக்த ஜன சம்ஸ்லேஷைக போகஸ்ய-
தனக்கு நல்லாராய் இருப்பாரோடு சேருகையே பரம பிரயோஜனமாய் இருக்கை –

பக்த ஜன -பக்தி யாகிறது –
பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரிகீர்த்தித
தஸ்மாத் சேவா புதை ப்ரோக்தா பக்தி சப்தேன பூயசீ -என்கிறபடியே
ஸ்நேஹமாய் -இது பக்த பிரபன்னாதி சாதாரணம்

சம்ஸ்லேஷக போகஸ்ய-ஷணே அபி தே யத் விரஹ அதிதுஸ் சஹ -என்றும்
ஒரு மா நொடியும் பிரியான் -திருவாய் -10-7-8-என்கிறபடியே
இப்படி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாரோடு ஷண மாத்திர விஸ்லேஷமும் பொறாத படி
கூட இருக்கையே தனக்கு தாரக போஷக போக்யங்களாக இருக்கும்

(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-)

இப்படி அனந்தாத்மாக்களோடு புஜிக்கும் இடத்தில்
பரிகர வைகல்யம் உண்டாய் இருக்குமோ என்னில் –
நித்ய ஜ்ஞான க்ரியா ஐஸ்வர் யாதி போக சாமக்ரீ சம்ருத் தஸ்ய-
நித்தியமாய் -போது செய்யாததுமாய் -(ஒரு காலத்திலேயே தான் வந்தது என்று இல்லாமல்-)போக்ய சமஸ்த வஸ்துக்களின் உடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டா
பிரயோஜன காலாதி விஷய ஜ்ஞானம் என்ன
க்ரியை என்ன
போக்யங்கள் தான் நினைத்த போது கை புகுரும்படியாய் இருக்கிற பரபுத்வம் ஆதல்

சம்பத்தாலான ஐஸ்வர்யம் என்ன
ஏவமாதியான போக சாமக்ரியுண்டு -புஷ்கல காரணம் -இவற்றால் பூரணன் ஆனவனுடைய

இப்படி போகமும் போக சாமக்ரியும் உண்டானால் போக ஸ்தானம் இல்லை யாகில் பிரயோஜனம் இல்லை யாகாதோ என்ன

மஹா விபூதே
லீலா விபூதி போலே கால் கூறாய் பரிச்சின்னமாய் இருக்கை அன்றிக்கே
அதில் மும் மடங்கு பெருமையை உடைத்தாய்
போகத்துக்கு ஏகாந்தமான நித்ய விபூதியை உடையவனுடைய

இப்படிப் பட்ட ஸ்தானத்தில் இருந்து
அநந்த ஆநந்த போகம் பண்ணும் இடத்தில்
கூட்டு இன்றியே பிரமச்சாரி நாராயணனாயோ இருப்பது என்னில்

ஸ்ரீ மத –
போக ஸ்ரோதஸ் ஸில் கரை காண்கைக்கு சஹாய பூதையாய்
சாஷால் லஷ்மியைத் தனக்கு பிரதான மகிஷியை உடையவனுடைய
இவனுக்கு சம்சாரி சாதாரணமான போகம் அன்றே

அவாப்த சமஸ்த கமதயா ஆனந்த மயனாய் இருந்துள்ள வனுக்கு
நாய்ச்சிமாரோட்டை சேர்த்தியாலே பிறக்கும் போகம் ஆவது என் –
அதில் சகாயம் ஆவது என் என்புது -என்னில்
இவனுக்கு போகமாவது ஆஸ்ரித உஜ்ஜீவனம்
அதுக்கு புருஷகார பூதையாய் நின்று சேர விடுகை -சஹாய பூதையாகையாவது
இப்படி இருக்கிறவன் தன்னையே பற்றுவது –

சரணாரவிந்த யுகளம் –
ஸ்வரூப ப்ராப்தமுமாய் -நிரதிசய போக்யமுமாய் -தன் சேர்த்தி அழகே நிதர்சனமாம் படியாக
எல்லாரையும் சேர்த்துக் கொள்ளக் கடவதாய் இருக்கிற இத் திருவடித் தாமரைகள் இரண்டையும்
பற்றும்படி என் என்னில்

அநந்ய ஆத்ம சஞ்சீவ நேன –
ஆத்ம உஜ்ஜீவனம் இது ஒழிய வேறு ஓன்று இல்லை என்று இருக்கிற நினைவோடு

தத் கத சர்வ பாவேன –
வேறு ஓன்று இல்லாமையாலே இதுவே ரஷகம் என்கிற நினைவோடும்
இந் நினைவுகளோடு கூடச் செய்யப் புகுகிற கார்யம் என் என்னில்

சரணம் அநு வ்ரஜேத் –
புருஷார்த்தத்துக்கு சாதனம் இவனே என்று அத்யவசிப்பன்
புத்யர்த்தத்துக்கு வேண்டுவது வ்ரஜேத் -அன்றோ

அநு என் என்னில் -வ்ரஜ -கதௌ -என்கிறது ஜ்ஞான மாத்திர வாசியாய்
அத்யவசாயம் ஆகிற அதிசயத்தை விவஷிக்கிற தாகவுமாம்

அனுஸ் யூதம் வ்ரஜேத் -என்று
த்வயம் அர்த்த அநுசந்தாநேன சஹ சதைவம் வக்தா -என்கிறபடியே
சர்வ கால அனுவ்ருத்தியைச் சொல்லிற்றாகவுமாம்

அன்றிக்கே
சரணம் அநு என்று உபாய உத்தேசேன அடைவன் -என்று ஆகவுமாம்

(நினைத்து
நன்றாக நினைத்து
தொடர்ந்து நன்றாக நினைத்து
சரணமாகக் கொண்டு பற்றுதல்
ஆக நான்கு அர்த்தங்கள்)

(இப்படி ஒருகால் சரணம் புகுந்து விடும் இத்தனையோ என்னில் பேற்றுக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
கால ஷேபத்துக்கும்
இனிமையால் விட ஒண்ணாமைக்குமாக
இவ் வத்யவசாயம் நாள் தோறும் இடையறாது செல்ல வேணும் என்கிறது மேல்)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -2 -3–4-5-6-7–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 26, 2014

சூரணை -2- அவதாரிகை

ப்ராப்யத்தை பிரார்த்தித்தார் கீழ்

இத்தால்
1-அநந்ய கதித்வம் -என்ன
2-ஆகிஞ்சன்யம் – என்ன
3-ஸ்வ தோஷம் – என்ன
இவற்றை முன்னிட்டுக் கொண்டு
இந்தக் கைங்கர்ய சித்த் யர்த்தமாக திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

ஸ்வாத்ம நித்ய நியாம்ய
நித்ய தாஸ்யைக ரசாத்ம
ஸ்வபாவ அனுசந்தான பூர்வக
பகவத் அநவதிக அதிசய ஸ்வாம்யாத்
யகில குண கண அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த் யுபாய
பூத
பக்தி தத் உபாய சமயக் ஜ்ஞான
தத் உபாய சமீசீந க்ரியா
தத் அனுகுண சாத்விக தாஸ்திக்யாதி
சமஸ்த ஆத்ம குண விஹீன
துருத்தரா நந்த
தத் விபர்யய
ஜ்ஞான க்ரிய அனுகுண
அநாதி பாப வாசனா மஹார்ணவ
அந்தர் நிமக்ன

தில தைலவத் தாருவஹ் நிவத் துர் விவேச
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ
அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப
துரத்யய பகவன் மாயா
திரோஹிதஸ்வ பிரகாச
அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசக்ய
விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித
அநாக தாநந்த கால சமீஷயாபி
அதருஷ்ட சந்தா ரோபாய
நிகில ஜந்து ஜாத சரண்ய

ஸ்ரீ மன் நாராயணா
த்வ சரணார விந்த யுகளம்
சரணம் அஹம் ப்ரபத்யே

————

1-ஸ்வ ஸ்வரூப அனுசந்தான ப்ரீதியாலும்
2-பகவத் குண அனுபவ ப்ரீதியாலும்
3-கைங்கர்ய ஸ்வரூப கதன ப்ரீதியாலும்
ஸ்வாத்ம நித்ய நியாம்ய -என்று தொடங்கி -நித்ய கைங்கர்ய -என்னும் அளவும்
செல்ல உக்தத்தை அனுபாஷிக்கிறார்–

1-பார தந்த்ர்ய ரசத்தாலே ஸ்வரூப அனுசந்தானமும்
2-பகவத் வை லஷணயத்தாலே தத் குண அனுபவமும்
3-உபய அனுகூலமாக ப்ரீதி காரிதம் ஆகையாலே கைங்கர்யமும் அபிமதமாய் இருக்கும் இறே –

(ஸ்வாத்ம நித்ய நியாம்ய –அடியேன் எப்பொழுதும் நியமிக்கத் தக்கவனாய் இருக்கை என்ன

நித்ய தா³ஸ்ய-எப்பொழுதும் அடிமை செய்து கொண்டே இருக்கை என்ன

ஏக ரஸ–ஆகிய இவற்றை சாரமாக வுடைய

ஆத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக ப⁴க³வத³நவதி⁴காதிஶய
ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித -எப்போதும் தனக்கே நியமிக்கத் தகுந்தவனாய் இருக்கை என்ன –
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றி இருக்கை என்ன
இப்படிப்பட்ட ஸ்வ ஸ்வ பாவத்தை அனுசந்தித்திக் கொண்டு
எம்பெருமானது சிறந்த ஸ்வாமித்வம் முதலிய சகல கல்யாண குணங்களையும் அனுபவிப்பதனால் யுண்டான)

அநவதிக அதிசய ஸ்வாம்ய -என்று
ஸ்வாத்ம நித்ய நியாம்ய
நித்ய தாஸ்யைக ரசாத்ம
ஸ்வபாவ அனுசந்தான பூர்வக
பகவத் அநவதிக அதிசய ஸ்வாம்ய-என்று ஔ பாதிக ஸ்வாம்யத்தை வ்யாவர்த்திக்கிறது –

மாதா பித்ரு ப்ரப்ருதிகள் உடைய ஸ்வாமித்வம்
ஒரோ ரஷணங்களுக்கு உறுப்பாய் -ஒரு நாளிலே முடியவும் கடவதாய் இறே இருப்பது –
அங்கன் அன்றிக்கே இந்த ஸ்வாமித்வம் சர்வ வித ரஷணங்களுக்கும் உறுப்பாய்
சத்தா பிரயுக்தமாயும் இருக்கும் இறே

ஸ்வாமித்வ பிரயுக்தமான குணங்களை சொல்லிற்று கீழ் சூரணை யிலே
அவற்றுக்கு அடியான ஸ்வாமித்வத்தை முதலாகச் சொல்லுகிறது இங்கு

கைங்கர்ய ப்ராப்த் யுபாய பூத பத்தி யாகிறது -பர பக்தி

தத் உபாய சமயக் ஜ்ஞானம் ஆகிறது -ஜீவ பர யாதாம்ய விஷயமாய்
அநவரத பாவமே யாம்படி பரி பக்வமான ஜ்ஞான விசேஷம்

தத் உபாய சமீசீந க்ரியா –
சமீசீந க்ரியை யாகிறது -ஆத்ம யாதாம்ய ஜ்ஞானத்தை உடைத்தாய்
த்ரிவித பரி த்யாக யுக்தமான கர்ம யோகம் –

தத் அனுகுண சாத்விக தாஸ்திக்யாதி சமஸ்த ஆத்ம குண விஹீன –
கீழ்ச் சொன்ன கர்ம யோகத்துக்கு அநுகுணமாய்
சத்வ பிரதானமாய்
சமோ தமஸ் தபஸ் சௌசம் ஷாந்தி ஆர்ஜவம் ஏவ ச
ஜ்ஞானம் விஞ்ஞானம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வ பாவஜம்-கீதை -18-42
என்கிறபடியே சம தமாத் யாஸ்திக்யம் பர்யந்தமான குணங்களும்
அமா நித்வாத் யாத்ம குணங்களுமான சமஸ்த ஆத்ம குணங்களாலே
சூன்யனாய் இருந்தேனே யாகிலும் –

(ஸமோ தமஸ் தபஸ் ஷௌசம் க்ஷாந்திர் ஆர்ஜவமேவ ச– ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ரஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்--৷৷18.42৷৷

ஸமோ –வெளி இந்திரியங்களை அடக்குதல் தமஸ் –மனத்தை அடக்குதல் தபஸ் -ஸாஸ்த்ரங்களை ஒட்டி சரீரத்தை வருத்துதல் ஷௌசம்–சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதியை உண்டாக்கிக் கொள்ளுதல் க்ஷாந்திஸ் –பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் மனம் வேறுபாடு அடையாமல் இருத்தல் — ஆர்ஜவம் -பிறரிடம் மனம் மெய் மொழிகளில் ஒருபடிப்பட நடத்தல் ஜ்ஞாநம் –பரதத்வத்தையும் மற்ற தத்துவங்களையும் உள்ளபடி அறிதல் விஜ்ஞாநம் -பரதத்வத்தின் தனித் தன்மைகளை அறிதல் ஆஸ்திக்யம் –வேதத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மையானதே என்ற அசைக்க முடியாத படி உறுதி கொள்ளுதல் ஏவம் ச -ஆகிய இவை ஸ்வபாவஜம்–முன் வினையால் ஏற்பட்ட ப்ரஹ்மம் கர்ம -ப்ராஹ்மணனுக்கு உரிய செயலாகும்

வெளி இந்திரியங்களை அடக்குதல் – மனத்தை அடக்குதல் சாஸ்திரங்களை ஒட்டி சரீரத்தை வருந்துதல் – சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதியை உண்டாக்கிக் கொள்ளுதல் – பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் மனம் வேறுபாடு அடையாமல் இருத்தல் – பிறர் இடம் மனம் மெய் மொழிகளில் ஒருபடிப் பட நடத்தல் – பர தத்துவத்தையும் மற்ற தத்துவங்களையும் உள்ளபடி அறிதல் -பரதத்வத்திடம் இருக்கும் தனித்தன்மைகளை அறிதல் – வேதத்தில் சொல்லியது அனைத்தும் உண்மையானது என்று அசைக்க முடியாதபடி உறுதி கொள்ளுதல் – ஆகிய இவை முன் வினையால் ஏற்பட்ட பிராமணனுக்கு உரிய செயல்களாகும் –) (அஶேஷாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிரூப நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி –ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ப்ராவண்யம் கொண்டு இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்துக்கு உபாயமான பக்தி என்ன தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந–அதுக்கும் உபாயமான பரிபக்குவ ஞானம் என்ன தது³பாய ஸமீசீந க்ரியா -அதுக்கும் உபாயமான நல்ல கர்ம யோகம் என்ன – தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ ஸமஸ்தா ஆத்மகு³ண விஹீந:–அதற்கும் உறுப்பான -ஸாத்விகத்வம் ஆஸ்திக்யம் முதலான ஆத்ம குணங்கள் என்ன ஆகிய இவை சிறிதும் இல்லாதவனாய்) ———

துருத்தர அநந்த தத் விபர்யய ஜ்ஞான க்ரிய அனுகுண அநாதி பாப வாசனா மஹார்ணவ அந்தர் நிமக்ன –
இதுக்கு கீழ்
அஹம் அஸ்ம் யபராதானாம் ஆலயோ அகிஞ்சநோச்கதி
த்வமேவோபாய பூதோ மே பவேதி பிரார்த்தனா மதி
சரணாகதி ரித் யுக்தா ஸா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் –என்கிறபடியே
தம்முடைய ஆகிஞ்சன்யம் சொன்னாரே

இதுக்கு மேலே
ஸ்வ தோஷ ஞாபனம்  பண்ணுகிறார்

(துருத்தர)கடக்க வரிதாய்
அவதி இன்றிக்கே  கீழ் சொன்ன கர்ம ஜ்ஞானங்களுக்கு
விபரீதமாய் இருந்துள்ள
ஜ்ஞானம் என்ன -வ்ருத்தம் என்ன – இவற்றுக்கு அநுகுணமாய்
அநாதியாய் இருந்துள்ள பாப வாசனை யாகிற பெரும் கடலிலே
அழுந்திக் கிடக்கிற –

பாப வாசனை யாகிறது -பாபத்தால் வந்த வாசனை யாதல்
பாப ஹேதுவான வாசனை யாதல்-

—————————————————————————————————

தில தைலவத் தாரு வஹ்நிவத் துர் விவேச
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ
அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப
துரத்யய பகவன் மாயா
திரோஹிதஸ்வ பிரகாச
அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசகா
விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித
அநாக தாநந்த கால சமீஷயாபி
அதருஷ்ட சந்தா ரோபாய
நிகில ஜந்து ஜாத சரண்ய

பாப வாசனையில் அகப்படுகைக்கு அடியான
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான
ஸ்வரூப திரோதா நத்தைச் சொல்லுகிறது –

தில தைலவத் தாரு வஹ் நிவத் துர்விவேச-
பிரகிருதி ஆத்மா விவேகம் பண்ணும் இடத்தில்
சிலரால் பிரிய அனுசந்திக்க அரிது என்னும் இடத்துக்கு
இரண்டு திருஷ்டாந்தம் சொல்கிறார்

விரகராய் சக்தருமாய் இருப்பார் பிரிக்கில் பிரிக்கும் இத்தனை இறே

எள்ளில் எண்ணெய் போலேயும்
அரணியில் அக்நி போலேயும் -இருக்கை –

இப்படி ஜ்ஞான வாசனையாலும்
பகவத் பிரசாதத்தாலுமாக பிரக்ருதியையும் ஆத்மாவையும்
பிரிய அனுசந்திக்குமது ஒழிய
அல்லாதார்க்கு பிரிய அனுசந்திக்க ஒண்ணாத படி இறே
பிரக்ருதியில் ஆத்மா அழுந்தித் திரோ ஹிதமாகக் கிடக்கிற படி –

தாருண யக்நிர் யதா தைலம் திலே தத்வத் புமா நபி
பிரதானே அவஸ்திதோ வ்யாபீசேத நாத்மா ஆத்ம வேதன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-28-என்னக் கடவது இறே –

த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ –
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களையும்
சத்த பரிணாமித்வத்தையும் ஸ்வ பாவமாக உடைத்தாய் –

அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப –
ஜடா ஸ்வ பாவமான பிரக்ருதியிலே அவர்ஜீயமான சம்பந்தத்தை உடைத்தாய் –

துரத்யய பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாச –
மம மாயா துரத்யயா-என்கிறபடியே
கடக்க அரிதுமாய்
ஒரு சர்வ சக்தியாலே பிணைக்கப் பட்டதாய்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மஹேஸ்வரம்-என்கிறபடியே
மாயா சப்த வாஸ்யையாய் இருந்துள்ள பிரக்ருதியாலே
மறைக்கப் பட்ட ஆத்ம பிரகாசத்தை உடையனாய்

அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசக்ய விஸ்ரம்சன கர்ம பாச ப்ர க்ரதித –
அநாதியான அஜ்ஞ்ஞாநத்தாலே திரட்டப் பட்டதாய்
முடிவு இன்றிக்கே என்னோடு பிறரோடு வாசி அற
ஒருவராலும் அவிழ்க்க சக்யம் அன்றிக்கே
இருந்துள்ள புண்ய பாப ரூபமான கர்மம் ஆகிற கயிற்றாலே

புறமறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறையாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன்
நிறமுடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே -திருவாய் -5-1-6-என்கிறபடியே
கட்டுண்டவனாய் –

இவ்வளவும் வர -அபராதானாம் ஆலயத்வம் -சொல்லிற்று ஆய்த்து-

——–

பாப வாஸநா மஹார்ணவ அந்தர் நிமக்ன -என்று வைத்து
பின்பு -பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாச -என்று வைத்து
பின்பு -கர்ம பாச ப்ர க்ரதித -என்கையாலே
வாஸநா கார்யம் ஸ்வரூப திரோதான ரூபமான அஞ்ஞானம்
தத் கார்யம் கர்மம் -என்று சொல்லிற்று ஆய்த்து –

அநாகத அநந்த கால சமீஷயாபி அத்ருஷ்ட சந்தா ரோபாய அஹம் –
ஆகையாலே
இதுக்கு முன்பு பாராதே மேலும் முடிவு இன்றிக்கே இருந்துள்ள –
மேல் வரப் புகுகிறதாய்
அனந்தமாய் இருந்துள்ள கால பரம்பரைகளை அடையப் பார்த்தாலும்
காணப் படாமல் இருந்துள்ள சம்சார சாகர சமுத்தரண உபாயத்தை உடையனான நான்

நிகில ஜந்து ஜாத சரண்ய
இப்படி அனுகூலங்களில் ஒன்றும் இன்றிக்கே
பிரதி கூலங்களில் இல்லாதது இன்றிக்கே
ஜன்ம மாத்திர யோகிகளான சகல ஜந்துக்களுக்கும்

இத்தால் எனக்கும்-சரண வரண அர்ஹன் என்று கருத்து –

அகில ஜகத் ஸ்வாமின் -என்று வைத்து
அஸ்மத் ஸ்வாமின் -என்னுமா போலே

———————————————————————————-
ஸ்ரீ மன் நாராயணா
த்வ சரணாரவிந்த யுகளம்
சரணம் அஹம் ப்ரபத்யே

ஸ்ரீ மன் –
பூர்வ வ்ருத்தம் பார்த்து
ஷிபாமி -என்ன அவசரம் இன்றிக்கே
அருகே இருந்து சேர்ப்பாரும் உண்டு -என்கிறார்

நாராயணா –
இஜ் ஜந்து விமுகமாய்க் கிடக்கும் தசையிலும்
சத்தையை நோக்கிக் கொண்டு போந்தவன் அல்லையோ –

ஆக
அருகு இருக்கும் பிராட்டியைப் பார்த்தாலும்
தேவரைப் பார்த்தாலும்
எவ் வழி யாலும் ரஷித்தே யாக வேணும் -என்றபடி

த்வ சரணாரவிந்த யுகளம் –
பரம காருணிகரான தேவர் உடையதாய்
சர்வ ஸூலபமாய்
நிரதிசய போக்யமாய்
ஒன்றுக்கு ஓன்று உபமாநமாம் அது ஒழியச்
சலித்துப் பார்த்தாலும்
வேறு உபமானம் இன்றிக்கே இருக்கிற திருவடிகளை –

சரணம் அஹம் ப்ரபத்யே –
உபாயமாக அத்யவசிக்கிறேன்

இது கத்யர்த்தம் ஆனாலும்
கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிற ந்யாயத்தாலே
அத்யவசாயத்தைக் காட்டுகிறது

———————————————————————————–

சூரணை -3- அவதாரிகை –

உபாய வரண சமநந்தரம்
அர்த்தித்வ மாத்ரத்தாலே
எனக்கு தாஸ்ய ரஸத்தைத் தந்து அருள வேணும்
என்று மஹா விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு
தம்முடைய ப்ராப்யத்தை அர்த்திக்கிறார் –

ஏவம் அவஸ்தி தஸ்யாபி
அர்த்தித்வ மாத்ரேண
பரம காருணிகோ பகவான்
ஸ்வ அனுபவ ப்ரீத்யா உபநீத ஐகாந்திக ஆத்யந்திக
நித்ய கைங்கர்ய ரதி ரூப
நித்ய தாஸ்யம் தாஸ்யதீதி
விஸ்வாஸ பூர்வகம்
பகவந்தம் நித்ய கிங்கர
தாம் ப்ரார்த்தயே

(ஏவமவஸ்தி²தஸ்யாபி –கீழ்ச் சூர்ணிகையில் விரிவாகச் சொன்னபடியே ஆகிஞ்சன்யாதி களே வடிவெடுத்து இருக்கின்ற எனக்கும்

பரமகாருணிகோ ப⁴க³வாந் –பேர் அருளானனான எம்பெருமான்

அர்தி²த்வ மாத்ரேண -என் பக்கலில் உள்ள இரப்பையே கொண்டு

ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத ஐகாந்திக ஆத்யந்திக நித்ய கைங்கர்யைக ரதி ரூப
நித்ய தா³ஸ்யம் தா³ஸ்யதீதி விஶ்வாஸ பூர்வகம்-தன்னை அனுபவிக்கும் உகப்பால் யுண்டாவதாய்
ஒருபடிப்பட்டதாய்
முடிவின்றிக்கே இருந்துள்ள
அடிமையிலேயே ஊற்றம் உற்று இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தை அருளப் போகிறான் என்கிற நம்பிக்கையுடன்

ப⁴க³வந்தம் நித்ய கிங்கரதாம் ப்ரார்த²யே –எம்பெருமான் இடத்தில் நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறேன்)

(குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –ஸ்ரீ திரு மாலை-25)

ஏவம் அவஸ்தி தஸ்யாபி –
உக்தி பிரகாரத்தாலே நின்ற எனக்கும்
அதாகிறது -அபராதாநாம் ஆலயனாய்
அகிஞ்சனனாய் கொண்டு
உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றின எனக்கும் -என்றபடி

அர்த்தித்வ மாத்ரேண
விரோதி வர்க்கத்தில் உபேஷை யாதல்
பிராப்யத்தில் த்வரை யாதல் -இன்றிக்கே
நிரபேஷனாய் இராதே
அபேஷித்த மாத்ரமே கொண்டு

பரம காருணிகோ பகவான் –
என்னுடைய சாம்சாரிகமான துக்கத்தைக் கண்டு
(வியசனேஷு மனுஷ்யாணாம்)ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே
அறப் பொறுக்க மாட்டாத ஸ்வ பாவத்தை உடையனாய்
ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு ஹேதுவான ஜ்ஞான சக்தியாதிகளால்
பரி பூரணராய் இருந்து உள்ளவர் .

இவ் விசேஷணங்கள் இரண்டும் அர்த்தநா மாத்ரத்தாலே
புருஷார்த்த ப்ரதனாகைக்கு ஹேதுக்களாகச் சொல்லுகிறது –

இனி மேல் அபேஷிதம் தன்னையே சொல்லுகிறது –
ஸ்வ அனுபவ ப்ரீத்யா உபநீத ஐகாந்திக ஆத்யந்திக நித்ய கைங்கர்ய ரதி ரூப –
தன்னை அனுபவிக்கும் அத்தாலே உண்டான ப்ரீதியாலே உண்டாக்கப் பட்டதாய்
ஒருபடிப் பட்டு முடிவு இன்றிக்கே இருந்துள்ள
கிங்கர பாவத்தைப் பற்றி இருந்துள்ள
ஆசையை வடிவாக உடைத்தான –

நித்ய தாஸ்யம் தாஸ்யதீதி-
யாவதாத்ம பாவியான தாஸ்யத்தை தந்து அருளும் என்கிற

விஸ்வாச பூர்வகம்
விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு

பகவந்தம் நித்ய கிங்கர தாம் ப்ரார்த்தயே –
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஊற்றுவாயான
ஜ்ஞான சக்த்யாதிகள் ஆறும் தன்னை
ஆஸ்ரயித்து நிறம் பெறும் படியான சர்வேஸ்வரனைக் குறித்து
நித்ய கிங்கரதையை பிரார்த்திக்கிறேன்

(ஜ்ஞான சக்த்யாதிகள் ஆறும்-மற்ற அனைத்து கல்யாண குணங்களுக்கும் ஊற்றுவாய்
இவை அவனிடம் இருப்பதாலேயே குணங்களுக்கு ஏற்றம் உண்டாகும்
கோபமும் திருட்டும் கூட அவனிடம் இருந்து சிறப்பும் உபா தேயமும் ஆகுமே)

தாஸ்யம் என்றும் கிங்கரதை என்றும் பர்யாயம்

———————————————————————————–

சூரணைகள் –4-5-அவதாரிகை –
தம் பாசுரத்தாலே
ப்ராப்யத்தை பிரார்த்தித்தார் -கீழ் –
இதிஹாசிக புருஷர்கள் பிரார்த்தித்த பிரகாரத்தே
பிரார்த்திக்கிறார் இங்கு –

என்ன பாசுரத்துக்கு இரங்கும் என்று அறியாத படியான
தம்முடைய பிராப்ய த்வரையாலே-

(எம்பெருமானே
உன்னை அனுபவித்த -அதனால் உண்டான உகப்பினால் விளையும் கைங்கர்யத்தை
பரம கிருபையினால் அடியேனுக்குத் தந்து அருள வேண்டும்
வேறு புகல் அறிகின்றிலேன்
செந்தாமரைக் கண்ணனே -ஸர்வ அவஸ்தைகளிலும் உனக்குச் செய்யக் கூடிய ஸகல வித கைங்கர்யங்களிலும் அடியேன் ருசி உடையேனாம் படி
நீ தானே செய்து அருள வேணும் என்கிறார் இந்த ஸ்லோகங்களாலே -இவற்றுக்கு ஆகரம் கண்டு கொள்வது–)

தவாநுபூ⁴தி ஸம்பூ⁴த ப்ரீதிகாரித தா³ஸதாம் ।
தே³ஹி மே க்ருʼபயா நாத² * ந ஜாநே க³திம் அந்யதா² ॥
சூரணை 4-

தவா நுபூதி சம்பூத ப்ரீதிகாரித தாசதாம் தேஹி –
உன்னுடைய அநு பூதியில் உண்டான
ப்ரீதியாலே பண்ணப் பட்ட
தாஸ்ய ரசத்தைத் தந்து அருள வேணும்

மே –
ருசிக்கு மேற்பட இன்றியிலே இருக்கிற எனக்கு –

க்ருபயா நாத –
இத் தலையிலே துர்க் கதியைக் கண்டு
இரங்கின இரக்கத்தாலும்
அவர்ஜநீய சம்பந்தத்தாலும்

ந ஜானே கதிம் அந்யதா–
இப் பிரகாரம் ஒழிய வேறு ஒரு உபாயம்
அறிகிறிலேன்

(என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–திருவாய்மொழி -5-8-3-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது

இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–திருவாய்மொழி –5-8-8-)

——-

ஸர்வ அவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதிஸ் தவ ।
ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ! * த்வமே வைவம் குருஷ்வ மாம் ॥
–5-

ஸர்வ அவஸ்த உசித அசேஷ சேஷைதைக ரதிஸ் தவ-
இத் தாஸ்யத்துக்கு அடியான ப்ரீதியும்
எனக்கு உண்டாம்படி தேவரீரே பார்த்து
அருள வேணும் -என்கிறார் –

தேவர் திருவடிகளிலே சர்வ அவஸ்தை களிலும்
உசிதமான சர்வ சேஷத்வத்தை ஒன்றையுமே
பற்றி இருந்துள்ள ப்ரேமத்தை உடையேனாக வேணும் –

பவேயம் புண்டரீகாஷ –
ஜிதந்தே புண்டரீகாஷ -என்கிறபடியே
ருசி ஜநகமான கடாஷத்தாலேயே
இப் ப்ரேமத்தை உடையேனாம் படி
பண்ணி அருள வேணும் –

த்வமே வைவம் குருஷ்வ மாம் —
என் பக்கல் ஒரு கைம் முதல் இன்றிக்கே
சர்வ அபேஷிதங்களுக்கும்
தேவர் கை பார்த்து இருக்கிற என்னை
தேவரே இப்படிப் பண்ணி அருள வேணும் –

————————————————————————————

சூரணை -6- அவதாரிகை –

நாம் உம்முடைய அபேஷிதம் தருகைக்கு
பிராப்யத்தின் உடைய யதா ஜ்ஞானமும்
தத் ருசியும் உமக்கு உண்டோ -என்ன

இப் பாசுரம் சொன்ன மாத்ரமே கொண்டு
அதின் அர்த்த தாத்பர்யத்தில் என் மனஸ் ஸூ நிஷ்டமாம் படி
தேவரே பார்த்து அருள வேணும்என்கிறார்-

ஸ்ரீ ரெங்க நாதனே
உன்னுடைய திருவருளால் அடியேன் அதிகார பூர்த்தி பெற்றவனாக நினைத்து இருக்கிறேன்
ஒருகால் அப்படிப்பட்ட அதிகார பூர்த்தி இல்லையே யானாலும்
அடியேனிடத்தில் கிடைக்கின்ற யுக்தி வியாஜ்யத்தைக் கொண்டு நீயே சேஷ பூர்ணம் செய்து கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிறார் இந்த சூர்ணிகையில்)

ஏவம் பூத தத்வ யாதாம்ய அவ போத
தத் இச்சா ரஹிதஸ்யாபி
ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப நேன
உச்யமான அர்த்த பரமார்த்த நிஷ்டம்
மே மனஸ் த்வமேவ அத்யைவ காரய

(ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴ததி³ச்சா²ரஹிதஸ்யாபி –இப்படி மிகச் சிறந்த புருஷார்த்தத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வதும் -அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாதவனாய் இருந்தாலும் 

ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப³நேந-என் வாய் மொழி தன்னையே கொண்டு

மே மநஸ் -என்னுடைய உள்ளத்தை

உச்யமாந அர்த்த பரமார்த² நிஷ்ட²ம் -உபாய உபேயங்களின் உண்மை யுணர்ச்சி பெற்றதாக

த்வமேவ அத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –

குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –)

ஏவம் பூத தத்வ யாதாம்ய போத தத் இச்சா ரஹிதஸ்யாபி –
ஜீவ ஸ்வரூபம் என்ன
பர ஸ்வரூபம் என்ன
ப்ராப்தி பலமான கைங்கர்யம் என்ன
இவற்றின் உடைய யாதாம்ய ஜ்ஞானம் இன்றிக்கே இருந்ததாகிலும்
அதில் இச்சையும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்

ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப நேன –
உக்தமான பாசுரத்தின் உடைய
உச்சாரண மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு –

உச்யமான அர்த்த பரமார்த்த நிஷ்டம் மே மனஸ் –
ஒரு முதல் இன்றிக்கே இருக்கிற
என்னுடைய நின்றவா நில்லா -பெரிய திருமொழி -1-1-4-
பிரமாதியான -ஸ்ரீ கீதை -6-34- மனஸ்சை
இதில் சொல்லப் படா நின்றுள்ள அர்த்தித்தின் உடைய
யாதாத்ம்யத்திலே நிஷ்டமாம் படி

(வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-)

(சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

ஹி-ஏன் எனில்
மந-மனமானது
சஞ்சலம் -இயல்பாகவே நிலை நில்லாததாகவும்
பலவத் -வலிமை யுடையதாகவும்
அதனாலேயே
ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும்
த்ருடம்—-விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
தஸ்ய நிக்ரஹம்-அதை அடக்குவதை
வாயோரிவ-புயல் காற்றை அடக்குவதை போலே
ஸு துஷ்கரம்–மிகவும் செய்ய இயலாதது என்று
க்ருஷ்ண
அஹம் மந்யே -நான் நினைக்கிறேன்

ஏன் என்னில் மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்)

த்வமேவ அத்யைவ காரய –
சஹகார்யந்தர நிரபேஷரான
தேவரே விளம்பம் அற
இப்போதே பண்ணி அருள வேணும் –

(த்வமேவ அத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –

குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –)

———–

சூரணை -7- அவதாரிகை –

இப்படித் தம் அபேஷிதம் செய்கைக்கு ஹேதுவான
அத் தலையில் ஸ்வ பாவங்களை அருளிச் செய்கிறார் –

அபார கருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷ லோக ஶரண்ய! * ப்ரணதார்த்தி ஹர * ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரத விதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய! * அஶேஷ சராசரபூ⁴த * நிகி²ல நியம நிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷி பூ⁴த * நிகி²ல ஜக³தா³தா⁴ர * அகி²ல ஜக³த் ஸ்வாமிந் * அஸ்மத் ஸ்வாமிந் * ஸத்ய காம * ஸத்ய ஸங்கல்ப * ஸகலேதர விலக்ஷண * அர்தி²கல்பக * ஆபத் ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந் நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

(அபாரகருணாம்பு³தே⁴! –கரை கடந்த கருணைக் கடலே

அநாலோசித விஶேஷ அஶேஷ லோக ஶரண்ய! –குண தோஷ நிரூபணம் பண்ண மாட்டாமே ஸகல ஜகத்துக்கும் சரண்யனானவனே

ப்ரணதார்த்தி ஹர-அடி பணிந்தாருடைய ஆர்த்திகளைப் போக்குமவனே

ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! –அடியார் பக்கலில் உண்டான வாத்சல்யத்துக்கு முக்யமான மஹா ஸமுத்ரமே

அநவரத விதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!–ஸகல பூத ஸமூஹங்களுடைய உண்மையை எப்போதும் அறிந்து உள்ளவனே

அஶேஷசராசர பூ⁴த -நிகி²ல நியம நிரத -அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷி பூ⁴த- நிகி²ல ஜக³தா³தா⁴ர அகி²ல ஜக³த் ஸ்வாமிந் அஸ்மத் ஸ்வாமிந்

ஸத்ய காம -அவாப்த ஸமஸ்த காமனே

ஸத்ய ஸங்கல்ப -நினைத்தது செய்து தலைக்கட்டு வல்லவனே

ஸகலேதர விலக்ஷண அர்தி²கல்பக

ஆபத் ஸக² –ஆபத் பந்துவானவனே

காகுத்ஸ்த² –காகுத்ஸ வம்ஸ ப்ரஸூதனானவனே

ஶ்ரீமந் நாராயண –திரு மாலே

புருஷோத்தம -பரம புருஷனே

ஶ்ரீரங்க³நாத² –ஸ்ரீ ரெங்கநாதன்

மம நாத², –எம்பெருமானே

நமோঽஸ்துதே-தே நமஸ் அஸ்து -தேவரீருக்கே சேஷமான இவ்வாத்ம வஸ்து தேவரீருக்கே போக்யமாய்த் தலைக்கட்ட வேணும் என்கை-)

அபார கருணாம்புதே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக மஹோ ததே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாத்ம்ய
சத்ய காம
சத்ய சங்கல்ப
ஆபத் சக
காகுத்ஸ்த
ஸ்ரீ மன்
நாராயண
புருஷோத்தம
ஸ்ரீ ரெங்க நாத
மம நாத
நமோஸ்து தே

அபார கருணாம்புதே –
கரை கடந்த க்ருபா சமுத்ரம் ஆனவனே

(கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே—7-9-9-)

கருணை யாகிறது -பர வ்யசன அசஹிஷ்ணுத்வம்
அது தான் அபரிச்சேத்யம் ஆகையாலே
சமுத்ரமாகப் பேசுகிறார்

அதுக்கு அபாரத்வம் ஆகிறது –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே
ஆஸ்ரிதர் அளவன்றிக்கே மனுஷ்ய சாமான்யத்திலும் வந்தேறுகை

இத்தால் என்னளவும் வர வெள்ளம் கோத்தது -என்கிறார் –

அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வரும் ஏற்றத் தாழ்வுகள் ஏதேனும் பாராதே
இருந்ததே குடியாக எல்லார்க்கும் சரண வரண அர்ஹன் ஆனவனே

இத்தால் கீழ் சொன்ன க்ருபா கார்யமான சர்வ லோக சரண்யத்வம் சொல்லிற்று ஆயிற்று –

பிரணதார்த்தி ஹர
இப்படி உக்தமான கிருபையையும்
சர்வ லோக சரண்யதையையும் அனுசந்தத்து
திருவடிகளிலே தலை சாய்த்தார்

இழவுகளைப் போக்குமவனே –

ஆஸ்ரித வாத்சல்யைக மஹோ ததே –
அன்று ஈன்ற கன்றின் உடம்பில்
வழும்பைத் தன பேறாக போக்கும் தேனுவைப் போலே
ஆஸ்ரிதர் உடைய தோஷங்களைத் தன் பேறாக
ஷமிக்கை யாகிற ஸ்வபாவம்
அனு சந்தாதாக்களுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும்
பெருமையை உடையவனே

மஹோ ததே –என்று
கீழ் சொன்ன கருணாம்புதியில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது

அநவரத விதித நிகில பூத ஜாத யாதாத்ம்ய –
சர்வ காலத்திலும் அறியப் பட்ட சகல பூத சமூஹத்தின் உடைய
உண்மையை உடையவனே

இத்தால் -ஸ்வதஸ் சர்வஜ்ஞரான தேவர்க்கு நான் அறிவிக்க வேண்டும்படியாய்
இருந்ததோ என்னுடைய தண்மை–என்று கருத்து –

ஸத்ய காம
நித்தியமான காமங்களை உடையவனே –

இத்தால் ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை கொடுக்கைக்கு
அடியான அவாப்த சமஸ்த காமத்வம் -சொல்லுகிறது

ஸத்ய சங்கல்ப
அமோகமான சங்கல்பத்தை உடையவனே

அபூர்வமாக போகங்களை சங்கல்பித்துக் கொடுக்கும் இடத்தில்
அவை தப்பாது இருக்கை –

ஆபத் சக –
ஆபத்து நேரிடுமாகில் அங்குத்தைக்கு துணை யாமவனே-

தன்னால் வரும் ஆபத்துக்கும் பிறரால் வரும் ஆபத்துக்கும்
ரஷகரான தேவர் கை விட்டாலும்
தேவரையே துணையாகப் பற்றலாய் இருக்கை –

(தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-)

காகுத்ஸ்த-
தன்னால் வரும் ஆபத்துக்கும் நாமே துணை என்னும் இடம் எங்கே கண்டீர் -என்ன
ககுஸ்த வம்ச ப்ரஸூதரான தேவர் ஆஸரித்ததாக
வதார்ஹம்பி காகுத்ஸ்த க்ருபயா பர்யா பாலயத்-என்று ஸ்ரீ ராமாயணத்தில் எழுதக் கண்டிலோமோ -என்கிறார் –

ஸ்ரீ மன்
தேவர் உபேஷித்தாலும் தேவராலும் உபேஷிக்க ஒண்ணாத படி
அருகே இருந்து சேர விடுவாரும் உண்டு -என்கை

இத்தால் அருகு இருக்கிற பிராட்டியைப் பார்த்து –
ரஷித்து அருள வேணும் -என்கிறார் –

நாராயண
அவள் தானே சித குரைக்கிலும் -என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-10-2-
என்னுமவர் அல்லீரோ தேவர்

இத்தால் நம் இருவருக்கும் உண்டான சம்பந்தத்தைப்
பார்த்து ரஷித்து அருள வேணும் -என்கிறார்

புருஷோத்தம –
உன் பக்கல் அர்த்தித்துப் பெறுவாரை உதாரா -என்னுமவர் அல்லீரோ தேவர்
தேவர் ஔதார்ய குணத்தைப் பார்த்து ரஷித்து அருள வேணும் -என்கிறார் –

ஸ்ரீ ரெங்க நாத
கீழ் சொன்ன ஸ்வ பாவங்கள் எல்லாம் என்றும் ஒக்க
ஓலைப் புறத்திலே
கேட்டுப் போகாமே பிரத்யஷிக்கலாம் படி
அன்றோ தேவர் கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடி –

மம நாத –
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது இம் முறையை
எனக்கு உணர்த்துகைக்காக -என்கிறார் –

(அரங்கமாளி என்னாளி -ஆழ்வார்)

நமோஸ்து தே –
முறையை அறிந்தவர்களுக்கு அபேஷிதமாய்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை அபேஷித்துத் தலைக் கட்டுகிறார்

எனக்கு ஆராவமுதாய் யெனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ —திருவாய்மொழி -10-10-6- என்னக் கடவது இறே-

தேவர்க்கே சேஷமான இவ் வாத்ம வஸ்து தேவரீர்க்கே போக்யமாய்த்
தலைக் கட்ட வேணும் –

எனக்கே யாட்செய் எக் காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடை வீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -1 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 26, 2014

இந்த இரண்டாவது கத்யத்துக்கு
ஸ்ரீ ரெங்க கத்யம் என்றும்
மித கத்யம் என்றும் வ்யவஹாரம்
ஸ்ரீ ரெங்க ஸாயிநம் –முதலில்– ஸ்ரீ ரெங்க நாத மம நாத நமோஸ்து தே -முடிவில் -என்பதால் ஸ்ரீ ரெங்க கத்யம்
முந்திய சரணாகதி கத்யம் ப்ருது கத்யம் -இது சிறியதாய் இருப்பதால் மித கத்யம்
முந்தியது போல் த்வய விவரணம் இதுவும்
இதில் முதல் சூர்ணிகை கைங்கர்ய ப்ராத்தநா பரமான உத்தர கண்ட விவரணமாகவும்
இரண்டாவது சரண வர்ண ப்ரதர்சன பரமான பூர்வ கண்ட விவரணமாக அவதரிக்கின்றது

சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே । ராமாநுஜாய முநயே நமோ மம க³ரீயஸே ॥—இந்த கத்யத்தின் தனியன் -மங்கள ஸ்லோகம்

சித³சித்பரதத்த்வாநாம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் ஆகிய தத்வ த்ரயங்களினுடைய தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।-உண்மையை உள்ளபடி அறிந்தவரான மம க³ரீயஸே ॥-எனக்கு உத்தம ஆச்சார்யரான ராமாநுஜாய முநயே நமோ -எம்பெருமானாருக்கு நமஸ்காரம் ஆகுக

த்₃வயத்தில் உபாயத்தில் நோக்கான பூர்வ வாக்ய விவரணம்:-உபேயத்தில் நோக்கான உத்தர வாக்ய விவரணம்: முநி -மனன சீலர் –தத்வ த்ரய -வேதாந்த ஸித்தம் – கரியதே -பூஜ்யர் இதில் உபேயத்வம் முதலில் அருளிச் செய்து பின்பு உபாயத்வம் அருளிச் செய்கிறார் நாராயணனே பறை -கைங்கர்யம் அருளிச் செய்து பின்பு தருவான் -உபாயம் -என்று நமக்கு உபதேசம் ஆனால் அனுஷ்ட்டிக்கும் பொழுது கறவைகள் பாசுரத்தில் -உபாயத்வம்-இறைவா நீ தாராய் –முதலில் பின்பு சிற்றம் சிறுகாலை –கைங்கர்யம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் அதே போல் சரணாகதி கத்யம் அனுஷ்டானம் இதில் நமக்கு உபதேசம் –

———–

பிரவேசம் –

ஸ்ரீ ரெங்க கத்யத்தால் செய்தது ஆகிறது –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தை ப்ரதமத்திலே  பிரார்த்தித்து

2-தத் சித்தி அர்த்தமாக -2-ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு
-ஸ்வ தோஷ க்யாபன பூர்வகமாக (அறிவித்து-ராவணன் அனுஜோ -கர்ப்பவாஸம் -சொல்லிக் கொண்டது போல் -விபீஷணன் -பலவிதமாகத் துன்புறுத்துவான் என்ற நாமம் சாத்தப்பட்டவன்)திருவடிகளையே உபாயமாக ஸ்வீகரித்து

3-அநந்தரம்
அர்த்தநா மாத்ரத்தாலே(வேண்டிக் கொண்டபடியாலேயே-இத்தனை அடியனாருக்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் -அந்தோ பிறவியுள் பிணங்குமாறே)
இப்படி விலஷணமாய் இருந்துள்ள தாஸ்யத்தை தந்து அருள வேணும் என்று விஸ்வாஸ பூர்வகமாக பின்னையும் ப்ராப்யத்தைப் பிரார்த்தித்து

4-இவ் விஸ்வாஸம் தன்னையும்
காருண்யாதி கல்யாண குண பரி பூரணரான தேவரே தந்து அருள வேணும் என்று அபேஷித்து

5-தேவருக்கு அனன்யார்ஹ சேஷ பூதமான இவ் வஸ்துவை
ஸ்வரூப அனுரூபமான
வ்ருத்தி பர்யந்தமாக தேவரே பண்ணி அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே அபேஷித்து தலைக் கட்டுகிறார்-

6-இப் பிரபத்தி அதிகாரத்திலே இழிந்த முமுஷூக்கள் யாவச் சரீர பாதம்-கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில் –
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வெந்நாகத்து உன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -திருவந்தாதி -63-என்கிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே அனுகூல வ்ருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்

7-மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச்
சார்த்தி இருப்பார் தவம் -நான் முகன் திருவந்தாதி -18- என்றும்
ஆராதாநாம் சர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்
தஸ்மாத் பர தரம் ப்ரோக்தம் ததியர் ஆராதனம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே ப்ரவண ஹ்ருதயரான ததீயர் உடைய ஆராதனம் ஆகிற
அனுகூல வ்ருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்

8-அதல் அசக்தராய் இருப்பார்
கார் கலந்த மேனியான் கைகலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவர் இப்போது -பெரிய திருவந்தாதி -86-என்கிறபடியே
பகவத் குண அனுபவத்திலேயே கால ஷேபம் பண்ணுதல்

9-அவ்வளவு பகவத் ப்ராவண்யம் போராதவர்கள்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ -என்கிறபடியே
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணா நின்று கொண்டு கால ஷேபம் பண்ணுதல் ஆய்த்து இருப்பது

அதில் இவர் த்வயத்தின் அர்த்த அனுசந்தானத்துடனே கால ஷேபம் பண்ண நினைத்து
இதில்
பெரிய கத்யத்தில் விஸ்த்ருதமாக அனுசந்தித்த அர்த்தத்தை
ஸ்ரோதாக்களுக்கு ஸூக்ரஹமாகவும்
பெரிய பெருமாளுக்குத் திருச் செவி சாத்த ஏகாந்தமாகவும்
அந்த த்வயத்தின் உடைய அர்த்தத்தை பாசுரப் பரப்பற
திரு முன்பே விண்ணப்பம் செய்யலாம்படி
சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————————————————————————————-

சூரணை -1- அவதாரிகை –

அதில் முதல் சூரணையிலே
பரம புருஷார்த்தமாக நிர்ணீதமான கைங்கர்யத்தை (பரார்த்தமான கைங்கர்யம் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே)அபேஷிக்கிறார்

கைங்கர்ய பிரதி சம்பந்தியாவான் நாராயணன் இறே
அந் நாராயண சப்தத்துக்கு அர்த்தம்
உபய விபூதி யோகமும்
ஹேய பிரதி படத்வமும்
சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் இறே

(எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -அந்தர்யாமித்வம் -வியாப்த கத தோஷம் அற்றவன்)
அதில் உபய விபூதி யோகத்தை முதலில் அருளிச் செய்கிறார்-

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்மாத் யசேஷ தோஷ அசம்ஸ்ப்ருஷ்டம்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்
சௌசீல்ய வாத்சல்ய மார்த்த்வ ஆர்ஜவ
சௌஹார்த்த சாம்ய காருண்ய மாதுர்ய
காம்பீர்ய ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய
தைர்ய சௌர்ய பராக்கிரம சத்ய காம
சத்ய சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்ய
அசங்க்யேய கல்யாண குணவ் ஏக
மஹார்ணவம் பரப் ப்ரஹ்ம பூதம்
புருஷோத்தமம் ஸ்ரீ ரங்க ஸாயினம்
அஸ்மத் ஸ்வாமினம் பிரபுத்த
நித்ய நியாமய நித்ய தாஸ்யை கர சாத்ம
ஸ்வ பாவோஸஹம்
தத் ஏக அனுபவ
தத் ஏக பிரியா
பரிபூரணம் பகவந்தம்
விசத தம அனுபவேன
நிரந்தர அனுபூய
தத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷை தைக ரதி ரூப
நித்ய கிங்கரோ பவானி

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
த்ரிவித சேதனர் -என்ன
த்ரிவித அசேதனங்கள் -என்ன
இவற்றின் உடைய ஸ்வரூப பேதம் என்ன
ஸ்திதி பேதம் என்ன
ப்ரவ்ருத்தி பேதம் என்ன
இவற்றை ஸ்வாதீனமாக உடையவன் -(ஸ்வாதீனமாக-தான் இட்ட வழக்காக -ஸங்கல்பம் அடியாகவே)

சேதன த்ரைவித்யம் பத்த முக்த நித்ய பேதத்தாலே  –
அசேதன த்ரைவித்யம் -சுத்த சத்வ ஆத்மகதை யாலும் -சுத்த சத்வமான அசித்தும் –
குண த்ரயாத்ம கதையாலும் -குண த்ரயாத் மிகையான -பிரகிருதியும் –
சிருஷ்டி யாதி நிர்வாஹகமான கால ரூபத்தாலும் –

அதில் பத்தர் ஆகிறார் -ஜ்ஞான சங்கோச அர்ஹ ஸ்வரூபராய்
புண்ய பாப பலமான சுக துக்க அனுபவத்திலே ஸ்திதியை உடையராய்
தத் ஹேதுவான புண்ய பாப ரூப கர்ம ப்ரவ்ருத்தி கரராய் இருப்பார்கள்

முக்தர் ஆகிறார் -நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே
ஜ்ஞான சங்கோச ஹேதுவான தேக சம்பந்தாதிகள் நிவ்ருத்தமாய்
அதடியாக ஆவிர்ப்பூத ஸ்வரூபராய்
கைங்கர்ய சுகத்திலே ஸ்திதியை உடையராய்
தத் அனுரூபமாக
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா-என்கிறபடியே
பகவத் குண அனுபவ ப்ரவ்ருத்திகராயும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி
தத் யதா தருண வத்ஸா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்வம் அனுகச்சேத் ததா ப்ரகாரம் -என்கிறபடியே
காயிகமான கைங்கர்ய ப்ரவ்ருத்த கராயும்-
அத்தாலே களித்து
ஹாவு ஹாவு ஹாவு -என்கிறபடியே -வாசிக ப்ரவ்ருத்திகராயும் இருப்பர்கள்

நித்யர் ஆகிறார் -ஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தரைப் போலே ஒரு நாள் அளவிலே வந்து
கிட்டினவர் அன்றிக்கே -அநாதி அனந்த கைங்கர்ய சுகத்திலே ஸ்திதியை உடையவராய்
சதா தர்சன ப்ரவ்ருத்தி கராயும் நித்ய அஞ்சலி புடராய் பிரவ்ருத்தி கராயும்
நித்ய ஸ்துதி பிரவ்ருத்தி கராயும் இருப்பர்கள் –
ஆகையால் ஆயிற்று நித்யர் என்று இவர்களுக்கு பேராயிற்று –

பிரகிருதி தத்வம்குண த்ரயாத் மகமாய்
சத்த பரிமாண ஸ்வரூபமாய்
சேதன கர்ம அனுகுணமாகப் பரிணமிக்கையாலே ஸ்திதியை உடைத்தாயும்
சேதனருக்கு ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூப -புருஷார்த்த ஸ்வரூப- உபாய ஸ்வரூப -விரோதி ஸ்வரூப-சம்பந்த ஸ்வரூப திரோதானகரமாயும் இருக்கும்

பஞ்ச உபநிஷண் மயமான அசித்து சுத்த சத்வ மயமாயும்
சதைக ரூப ரூபமாயும்
நித்ய முக்தர்கள் உடைய கைங்கர்யத்துக்கு உபகரண ரூபேணவும்
ஈஸ்வரன் உடைய ரஷண க்ருத்யத்துக்கு அனுகூலமாக வ்யூஹ விபவ ரூபேணவும்
ஸ்திதி யை உடைத்தாயும்
சர்வத்ர பிரகாச ப்ரவ்ருத்திகமாயும் இருக்கும்

காலம்பிரக்ருதியில் காட்டில் வ்யாவ்ருத்தமாய்
ஏக ஸ்வரூபமாய்
நிமேஷ காஷ்டாத்யவ அவஸ்தா யுக்தமாய்க் கொண்டு
ப்ராக்ருத பதார்த்தங்கள் என்ன
தத் சம்ஸ்ருஷ்ட சேதனர் என்ன
இவற்றின் உடைய நிர்வஹணத்திலே ஸ்திதியை யுடைத்தாயும்
சகலத்தின் உடைய உத்பத்தி விநாசாதி ப்ரவ்ருத்திகமாயும் இருக்கும்

இவற்றை ஸ்வாதீனமாக உடையனாகை யாவது
அந்தராத்மா தயா நின்று நியமிக்கை-

ஆக சகல சேதன சேதனங்களின் உடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள்
ஈஸ்வர அதீனமாகையாலே இவற்றின் உடைய சரீரத்வமும் ஈஸ்வரன் உடைய சரீரித்வமும் சொல்லிற்று ஆயிற்று –

(ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் -மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன்னதீனமாக இருக்கப் பெற்ற
இது முதலான த்விதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் மேலே
பகவந்தம் என்ற விசேஷ்யத்திலே அந்வயத்து
விசத தம அநு பவேந நிரந்தரம் அநு பூய -என்று இணங்கக் கடவது

உயர்வற உயர்நலம் முதல் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் உவன்
அவரவர் தம்தமது
நின்றனர் இருந்தனர் -என்று அடைவே யுள்ள மூன்று பாசுரங்களையும் தழுவி முதல் விசேஷணம்

பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித் சேதனர்
த்ரி குணம் -காலம் -ஸூத்த ஸத்வம் -த்ரிவித அசேதனம்
த்ரி வித -விசேஷணம் சேதனர் மட்டிலும் அன்வயித்து அசேதனங்களில் அந்வயியாதும் இருக்கலாம் -என்பது தேசிகர் திரு உள்ளம்

சூர்ணிகையில் முடிவில் உள்ள பேத பதம் ஸ்வரூபம் முதலிய மூன்றிலும் அன்வயித்து
ஸ்வரூப பேதம்
ஸ்திதி பேதம்
ப்ரவ்ருத்தி பேதம் என்று கொள்ளப் பாங்காக உள்ளது
ஒவ்வொன்றிலும் அவாந்தர பேதங்கள் உண்டே)

———

உபய விபூதி யோகம்-அருளிச் செய்த பின்பு
ஹேய பிரதி படத்வம்-அருளிச் செய்கிறார்

க்லேச கர்மாத் யசேஷ தோஷ அசம்ஸ்ப்ருஷ்டம்(யோக ஸாஸ்த்ரத்தில் பதஞ்சலி ஸூத்ரம் அடியாகவே இத்தை அருளிச் செய்கிறார்)
சேதன அசேதனங்கள் இரண்டும் சரீரமாய்
ஈஸ்வரன் சரீரியாய் இருக்கிறான் ஆகில்
சரீர பிரயுக்தமான தோஷம் சரீரிக்கு வாராதோ -என்னில் –
தத் கத தோஷைர் அசம்ஸ்ப்ருஷ்டன் -என்கிறது

கிலேசம் ஆவது –
அவித்யா அஸ்மிதா அபிநிவேச ராக த்வேஷா பஞ்ச கிலேசா -இவை என்ன
கர்ம-இவற்றுக்கு காரணமுமாய் கார்யமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -என்ன

ஆதிசப்த க்ராஹ்யமான விபாக ஆசயங்கள் -என்ன
இவை முதலான அசேஷ தோஷங்களாலும் ஸ்பர்சிக்கப் படாதவன் –

விபாகம் ஆவது (பக்குவம்)-தேவாதி ஜாதி யோகம் (பிறப்பு)-என்ன
ஆயுஸ் என்ன -(போகம் ஸூக துக்கங்கள்)இவை முதலானவை

ஆசயம் ஆகிறது -தத் தஜ் ஜாத்ய அனு குண புத்தி பேதங்கள்

அசேஷபதத்தாலே அசித் கதமான பரிணாமத்தையும்
சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளையும் நினைக்கிறது

அசம்ஸ்பர்சத்தாலே ப்ராக பாவத்தை நினைக்கிறது

(இல்லாதவன் என்றால் முன்பு இருந்து இப்பொழுது இல்லாமல் இருப்பதைச் சொல்லாமல் முன்பே -எப்பொழுதுமே -இல்லாததைச் சொன்னவாறு)

(அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே)

——–

உபய விபூதி யோகம்-அருளிச் செய்த பின்பு
ஹேய பிரதி படத்வம்-அருளிச் செய்த பின்பு-சமஸ்த கல்யாண குணாத் மகத்வம்-அருளிச் செய்கிறார்

ஸ்வாபாவிக -இத்யாதி-
இதில் 1-சர்வ சாதாரணமாயும்-2-ஆஸ்ரித விஷயமாகவும் -3-ஆஸ்ரித விரோதி விஷயமாகவும்
மூன்று வகைப் பட்ட குணங்களைச் சொல்லுகிறது –

ஸ்வா பாவிகம் ஆகையாவதுஜலத்துக்கு சைத்யம் போலேவும் -அக்னிக்கு ஔஷ்ண்யம் போலேயும் -யாவத் த்ரவ்ய பாவியாய் இருக்கை-

அநவதிக அதிசய –
உபர்யுபர்யப்ஜபு வோஸபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீப்ஸயா சதா ஸ்திதா நோத் யமதோஸ்தி சேரதே-ஸ்தோத்ர ரத்னம் -19-என்கிறபடியே
தனித் தனியே நிஸ் சீமமாய் ஆச்சர்ய அவஹமுமாய் இருக்கை

(ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக் கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதே போல ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர் யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோஸ்தி ஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,)

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறதுயோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -(ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்தி) என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கர்மீ பவித்து இருந்துள்ள அசங்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –

பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ஸ்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-

சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்-உபாதான சக்தி யாகவுமாம்

தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்

இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே
அநந்தரம்ஆஸ்ரித விஷயமாக பன்னிரண்டு குணம் சொல்லுகிறது
1-சௌசீல்ய –
சீலம் ஆவது -மகதோ மந்தைச் சஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வபாவத்வம்
சௌசீல்யம் ஆவது -அந்த மஹத்வம் தன் திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை –
ஆத்மானம் மானுஷம் மன்யே –

2-வாத்சல்ய –
அதாகிறது -ஆஸ்ரித கதமான தோஷமும் குனமாய்த் தோற்றும்படியான ப்ரேமம் –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷத்தை தன பேறாகப் போக்கி ஸ்வ குணங்களாலே தரிப்பிக்கை
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உன்னை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய் நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே – -திருச் சந்த விருத்தம் -111
மாலே படிச் சோதி மாற்றெல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி -58
அதாவது அத்யஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவிருக்கும் படி
கோபாலத்வம் ஜூ குப்சிதம்

3-மார்த்த்வ –
இது ரூப குணமாய் இருக்க
ஆத்ம குண பிரகரண படிதமாகையாலே மாநசமான
தௌர்ர்ப்பல்யத்தைக் காட்டுகிறது –
அதாகிறது -ஆஸ்ரித விஸ்லேஷம் பொறுக்க மாட்டாது ஒழிகை –
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யானி பிரியாணி மது ராணி ச
ஹ்ருத் யான் யம்ருத கல்பானி மன ப்ரஹ்லாத நானி ச -ஆரண்ய -16-39
அநித்ரஸ் சததம் ராம -சுந்தர -36-44-

4-ஆர்ஜவ-
அதாவது -ஆஸ்ரித சம்ஸ்லேஷ அர்த்தமாக தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை-
அதாவது -அவர்கள் உடைய செவ்வைக் கேடு தானே செவ்வையாம்படி தான் செவ்வியனாய் இருக்கை -(பொய் கலவாது என் மெய் கலந்தானே)

5-சௌஹார்த்த –
அதாவது -சோபா நாசம்சீதி ஸூஹ்ருத் –
ஆஸ்ரிதர் உடைய சந்நிதியோடு அசந்நிதியோடு வாசி அற
அவர்கள் உடைய சர்வ மங்களங்களையும் அன்வேஷியா நிற்கை –

6-சாம்ய
அதாவது ஜாதி குண வ்ருத்தாதிகள் உடைய உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே ஆபிமுக்கியமே ஹேதுவாக
ஆஸ்ரயணீயத்வே சமனாகை-
குஹேன சஹித
சபர்யா பூஜிதாஸ் சம்யக்

7-காருண்ய –
அதாவது –ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷிஷ்ணுத்வம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
உத்சவேஷூ ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40–என்றும்
இயம் சா யத் க்ருதே ராமஸ் சதுர்ப்பி பரிதப்யதே
காருண்யே நான்ரு சம்ஸ்யேன சோகேன மதநேன ச – சுந்தர -15-49-என்றும்
ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருண்யாத் -ஆஸ்ரிதேத் யான்ரு சம்ஸ்யத
பத்நீ நஷ்டேதி சோகேன- ப்ரியேதி மதநேன ச -சுந்தர -15-50 -என்றும் -இருக்கை

8-மாதுர்ய-
அதாவது ஸ்வரூப ரூப குண விபூதிகளால் உண்டான சர்வதோ முகமான சாரச்யம்
ஹந்தும் ப்ரவ்ருத்தன் ஆனாலும் அவனுக்கு ரசாவஹனாய் இருக்கை
அஸூர்யமிவ ஸூர்யேன-
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்று இருக்கை

(அக்காரக் கனி-ஆராவமுதமே
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஓத்தே)

9-காம்பீர்ய –
அதாவது -ஆஸ்ரிதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருத்தராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்கை
அதாவது தன்னுடைய கொடையின் சீர்மையையும்
கொள்ளுகிறவன் உடைய சிறுமையையும் பாராது ஒழிகை-
எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கை-
யா ஆத்மாதா பலதா(தன்னையும் அருளி அநுபவிக்க வேண்டிய பலத்தையும் அருளுபவன்)
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ -நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான் -பெரிய திருவந்தாதி -53-

10-ஔதார்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை இரந்து கொடுக்கை –
ச சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்ய ச –
உதாராஸ் சர்வ ஏவைத –

11-சாதுர்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்து வைக்கை-
ஆஸ்ரிதராய் இருப்பார் தன்னுடைய ரஷகத்வத்திலே அதி சங்கை பண்ணினால்
அவ் வதி சங்கையைப் போக்கி ரஷிக்கை –
பாதாங்குஷ்டேன சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்-
பிபேத ச புநஸ் சாலான் –

12-ஸ்தைர்ய-
அதாவது ப்ரத்யூஹ சஹஸ்ரம் உண்டானாலும்
ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞை குலையாது ஒழிகை –
மகா ராஜர் தொடக்க மானவர் நேராக விரோதிக்கச் செய்தேயும் -ந த்யஜேயம் கதஞ்சன -என்றார் இறே

ஆக
இப் பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்
அநந்தரம் மூன்று குணம் ஆஸ்ரித பிரதி பஷ விஷயம் –

1-தைர்ய-
அதாவது எதிரியை மதியாது ஒழிகை
இலங்கையிலே ராவணனும் பலமும் எல்லாம் குறி அழியாது இருக்க
அவன் தம்பியை கடலுக்கு இக்கரையிலே லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம் பண்ணி வைத்தான் இறே
அப்திம் ந தேரித ந ஜிக்யித ராஷ சேந்தரம்
நைவாச்ய ஜிஜ்ஞித யதா ச பலா பலம் த்வம்
நிச் சம்யச் சபதி தஸ்ய பதெச்ப் யாஷி யஷிஞசஸ்
தஸ்யா நுஜம் கதமிதம் ஹாய் விபீஷணஞ்ச -அதிமாநுஷ ஸ்தவம் -24
மூல பலம் சந்நிஹிதமான வன்று பெருமாள் திரு உள்ளம் பூர்வ ஷணத்தில் காட்டில்
ஒரு விக்ருதி இன்றிக்கே  இருந்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

(அப்திம் ந தேரித ந ஜிக்யித ராக்ஷஸேந்திரம்
நைவாஸ்ய ஜஞ்ஜித யதா ஸ பலாபலம் த்வம்
நிஸ் சம்சயஸ் சபதி தஸ்ய பதேப்ய ஷிஞ்ச
தஸ்யானுஜம் கதமிதம் ஹி விபீஷணஞ்ச ஸ –24-

ஹே ராம த்வம் யதா –நீ எப்பொழுது
அப்திம் ந தேரித –கடலைக் கடக்க வில்லையோ

ந ஜிக்யித ராக்ஷஸேந்திரம் –ராவணனை ஜெயிக்க வில்லையோ

நைவ அஸ்ய ஜஞ்ஜித ஸ பலாபலம் –இந்த ராவணனுடைய பலாபலத்தையும் அறிய வில்லையோ

ததா -அப்போது
சபதி-சகாசமாக

தஸ்யானுஜம்-விபீஷணஞ்ச-தஸ்ய பதே-அவன் தம்பியான விபீஷணனை அவன் பதவியிலேயே
நிஸ் சம்சயஸ் அப்யஷிஞ்ச கதமிதம் ஹி ஸ –சம்சயம் இல்லாதவனாய் அபிஷேகம் பண்ணினாய்
என்பது பிரசித்தம் -இதுவும் எங்கனே

அபி ஷிஸ்ய ஸ லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராமா விஜ்வர பிரமுமோதஹ
இப்படி செய்து அருளினது சத்ய காமத்தவ ஸத்ய ஸங்கல்ப -குணங்களை ஆவிஷ்கரித்துக் கொண்ட படி –

கதமிதம் ஹி-இது எப்படிச் செய்தாய்
ஒரு வேளை இராவணன் சரணாகதி செய்தான் ஆகில்
இலங்கா சாம்ராஜ்யம் இல்லாமல் அயோத்யா சாம்ராஜ்யத்தையே கொடுத்து அருளுவாயே
இது என்ன லீலை-பரத்வ அபிமானம் கொண்டே அன்றோ)

2-சௌர்ய –
அதாவது பர பலத்திலே சென்று புகும் போது ஸ்வ பலம் போலே இருக்கையும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -என்கிறபடியே ப்ரஹர்த்தாவாய் இருக்கையும் –

3-பராக்கிரம -(பரர்களை ஆக்ரமிக்கும் ஸக்தி)
அதாவது சாரிகை வரும் போது கையும் வில்லுமாக சஞ்சரிக்கும் சஞ்சாரத்திலே
எதிரிகள் துவக்குண்டு எதிரி என்று அறியாதபடி சஞ்சரிக்கை
ப்ரஹர்த்தாரம் சரீரேஷூ ந தே பஸ்யந்தி ராகவம்
இந்த்ரி யார்த்தேஷூ திஷ்டந்தம் பூதாத்மா நமிவ பிரஜா -யுத்தம் -94-23-

அநந்தரம் ஆஸ்ரித விஷயமாகவும்
உபாய விஷயமாகவும்
உபேய விஷயமாகவும்
நாலு குணங்களைச் சொல்லுகிறது –

1-சத்ய காம-(கீழே பற்ற வரும் பொழுது)
நித்தியமான காமங்களை உடையவன் -என்கிறது -(ஆசைப்படும் பொருள் ஆஸ்ரிதற்கு அநுபாவ்யமான குணங்களையும் விபூதியையும் சொல்லிற்று)
அன்றிக்கே -காம்யந்த இதி காமா -ஆஸ்ரித ரஷண விஷய மநோ ரதம் -காமம் ஆகிறது
அது அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம் –

2-சத்ய சங்கல்ப –
அதாவது -அபூர்வமான போக்யங்களை சங்கல்ப்பித்து அனுபவிப்பிக்கும் இடத்தில் அமோகமாய் இருக்கை –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -திருவாய் -8-5-2- இருக்குமவர்களுக்கு
கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்கு தேவ மனுஷ்யாத் யவதார சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம்

3-க்ருதித்வ –
அதாவது ஆஸ்ரிதர் அபிமதம் பெற்றால் அப் பேறு தன்னதாய் இருக்கை –
அபிஷிச்ய ச லங்கா யாம் –
இவர்கள் கர்த்தவ்யங்களை யடையத் தான் ஏறிட்டுக் கொண்டு செய்கை -என்றுமாம்
ஆதி கர்மணி க்தின் நந்த –

4-க்ருதஜ்ஞதா-
அதாவது ஆஸ்ரிதர் ஒரு கால் சரணம் என்ன
அம் மாத்ரத்தாலே   பின்பு செய்யும் குற்றம் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –
ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த வற்றை ஒழிந்து அவர்கள் செய்த வற்றையே நினைத்து இருக்கை -என்னவுமாம்
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் பிரதமத்தில் சரணம் என்ற உக்தி மாத்ரத்தையே நினைத்து இருக்கும் என்னவுமாம்
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் அத்தை மறந்து அவர்கள் செய்ததை ஒழிய தான் செய்யாத வற்றையே
நினைத்து இருக்கை -என்னவுமாம்
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா

ஆதி –
இவை முதலான

அசங்க்யேய கல்யாண குண கணவ் ஏக மஹார்ணவம் –
என்னுடைய மனஸ்ஸூ க்கு கோசரமாய் இருப்பன சில குணங்கள் சொல்லிற்று இத்தனை போக்கி
அனுக்தமான குணங்களுக்கு எண்ணில்லை
ஒரு மஹார்ணவத்தில் ஜல பரமாணு வுக்கு சங்க்யை யுண்டாகில் யாய்த்து
பகவத் குணங்களுக்கு சங்க்யை யுண்டாவது
வர்ஷா யுதைர் யஸ்ய குணா ந சகா
சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ர –

—–

பரப் ப்ரஹ்ம பூதம் புருஷோத்தமம் –
பர ப்ரஹ்ம சப்தத்தாலும் புருஷோத்தம சப்தத்தாலும்
வேதாந்தங்களில் ப்ரசித்தனானவன்

பர ப்ரஹ்மம்ஆவது -ப்ருஹத்த்வ ப்ரும்ஹணத்வ குண யோகத்தால் ப்ரஹ்ம சப்த வாஸ்யத்வம் –

ப்ருஹத்வம் ஆவது -தான் பெரியனாகை

ப்ரும்ஹணத்வம் ஆவது -தம்மையே ஒக்க அருள் செய்வர்-மம சா தர்ம்யம் ஆகதா-ஆஸ்ரிதரை தன்னைப் போலே ஆக்குகை-தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – -பெரிய திருமொழி -11-3-5-என்றும்

இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சா தர்ம்யமாகதா
சர்க்கேசபி நோப ஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -கீதை -14-2-என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரிதரை தன்னைப் போலே ஆக்குகை-தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே-

என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -திருவாய் -3-9-4-

(இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா– ஸர்கேபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2

இதம் ஜ்ஞாநம் –சொல்லப் போகும் இந்த அறிவை உபாஸ்ரித்ய –அடைந்து மம ஸாதர்ம்யம் –என்னோடு ஸாம்யத்தை ஆகதா–அடைந்தவர்களாய் ஸர்கேபி நோப ஜாயந்தே –அவர்கள் இங்கு படைக்கவும் படுவதில்லை ப்ரலயே ந வ்யதந்தி ச-அழிக்கவும் படுவது இல்லை—வ்யதந்தி-துன்பப்படுவது இல்லை -நேரான அர்த்தம்

ஸ்ரீ பகவான் கூறுகிறார் -முன் கூறியதை விட வேறுபட்டதாய் அறிவுகளில் சிறந்ததாக அறிவைப் பற்றி மறுபடியும் உரைக்கப் போகிறேன் – எந்த அறிவைப் பெற்று எல்லா முனிவர்களும் இந்த சம்சாரத்துக்கு அப்பால் பட்டதான பேற்றைப் பெற்றனரோ – சொல்லப் போகும் அறிவைப் பெற்று என்னுடைய சாம்யத்தைப் பெற்றவர் ஸ்ருஷ்ட்டி காலங்களில் பிறக்கவும் மாட்டார்கள் – பிரளய காலங்களில் ஞான சங்கோசாதிகளைப் பெற்று சிரமப்படவும் மாட்டார்கள் –)

புருஷோத்தமத்வம் ஆவது –
யஸ்மாத் ஷரமதீ தோஹம் அஷராதபி சோத்தம
அதோஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15-18-என்று சர்வ அதிகன் -என்றும்
புரு =பஹூ ஸூநோதி= ததாதீதி புருஷ -என்று சர்வ அபேஷித பல ப்ரதன் ஆகையாலே பரம உதாரன் என்றும் சொல்லப் படுகை –

(யஸ்மாத் க்ஷரமதீ தோஹம் அக்ஷராதபி சோத்தம– அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

அஹம் – நான் யஸ்மாத் – யாதொரு காரணத்தினால் க்ஷரம் – க்ஷர புருஷனை-பத்த ஜீவாத்மாவைக் கூட்டிலும் அதீத: – கடந்து நிற்கிறேனோ அக்ஷராத் அபி – அக்ஷர புருஷனை -முக்தனைக் காட்டிலும்-கூட உத்தம: ச – மேலானவனாய் இருக்கிறேனோ அத: – அக் காரணத்தினாலேயே வேதே ₃லோகே – ஶ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும்(அபி நிஷ்பத்ய ச உத்தம புருஷ சாந்தோக்யம்-லோகம் -பார்க்கும் கருவி இங்கு -ஸ்ம்ருதி ) புருஷோத்தம: – புருஷோத்தமன் என்று ப்ரதி₂த: அஸ்மி –புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

இங்கு வேதம் லோகம் இரண்டும் இருப்பதால் லோகம் என்பது வேதம் விளக்கிய ஸ்ம்ருதிகள் -கலக்கம் இல்லா நல் தவ முனிவர் -நால் வேதம் கண்ட ரிஷிகள்-மந்த்ர த்ரஷ்டா முனிகள் -மனன சீலர் கவி கிராந்தி தர்சீ

புருஷோத்தமன் இவர்களைக் காட்டிலும் உத்தமன் -இவர்களில் உத்தமன் -இவர்களுக்கு உத்தமன்-பஞ்சமி -சஷ்ட்டி சப்தமி உருபு கொண்டு-யவ்கிகமாயும் ரூடியாகவும் இவனையே சொல்லும்-சம அதீப்ய தரித்ரன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -மிகுனரை இலனே

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும்-)

ஸ்ரீ ரங்க ஸாயினம்-
இப்படி என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையைச் சொல்லுகிறது –

அஸ்மத் ஸ்வாமினம் –
இத்தால் -கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்கிறபடியே
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகாலும் சீலத்தாலும்
தம்மோடு எனக்கு உண்டான முறையை உணர்த்தினவர் -என்றபடி –

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -கிஷ்கிந்தா -4-12-

(அஸ்மத் ஸ்வாமிநம் –பரிபூர்ணம் ப⁴க³வந்தம்–எமக்கு ஸ்வாமியாய் -ஒன்றிலும் குறைவில்லாத எம்பெருமானை
இதற்கு அநு பூய -என்ற ல்யப்போடே அந்வயம்)

———

இதுக்கு கீழ் கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லிற்று
இனி மேல் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை சொல்லுகிறார்

பிரபுத்த நித்ய நியாம்ய நித்ய தாஸ்ய ஏக ரச ஆத்ம ஸ்வபாவோஸஹம்-

நித்ய நியாம்யமாய்
நித்தியமான தாஸ்யத்தையே ஏக ரசமாக
உடைத்தாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வபாவம் உள்ளபடி பிரகாசித்த நான் –

இத்தால் ஸ்வா தந்த்ர்யமும் விஷயாந்தரமும் ஆத்ம நாசகம் -என்றபடி –

(நித்ய நியாம்யமாய்-நித்ய தாஸ்ய ஏக ரஸமான ஆத்ம ஸ்வ பாவத்தை நன்கு அறிந்து கொண்டவனான அடியேன்
ப்ரபு³த்³த என்றது நன்றாக அறியப்பட்ட -என்றபடி –
ஸ்வாதீன -ஸ்வார்த்த -கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமம் இல்லாத படி அறிவதே நன்றாக அறிவதாகும்
இவ் வாத்மா எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே ந்யாம்யனும் தாஸ்யனுமானவன் என்று நன்றாக அறிந்து கொண்ட நான் என்றபடி –)

தத் ஏக அனுபவ
பகவத் விஷயம் ஒன்றுமே ஜ்ஞாநத்துக்கு விஷயமாம் படி யாய் –

தத் ஏக பிரியா
அவனையே பக்திக்கு விஷயம் ஆக்கினவனாய்

இத்தால் பகவத் அனுபவ ஹேதுவாய் இருந்துள்ள பர பக்தியாதிகளை நினைக்கிறது –

(ததே³காநுப⁴வ: -ததே³க ப்ரிய: –பகவத் விஷயம் ஒன்றே ஞானத்துக்கும் பக்திக்கும் விஷயமாகப் பெற்றவனும்)

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||ஶ்லோகம் 31 –

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்

இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு)

——-

பரி பூரணம் பகவந்தம் விசத தம அனுபவேன நிரந்தர அனுபூய-
ஜ்ஞாநாதிகளால் குறைவற்று இருக்கிற ஈஸ்வரனைப்
பரி பூரணமாக
விசத தம அனுபவத்தாலே
இடைவிடாதே  அனுபவித்து –

பூர்ண அனுபவம் ஆகிறது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் அனுபவத்துக்கு விஷயமாய் இருக்கை –

விசத அனுபவம் ஆகிறது -பிரத்யஷ அனுபவம் என்னலாம் படி தத் சமமாய் இருக்கை –
அது தான் பர பக்தி தச அனுபவம்
விசத தர அனுபவம் ஆகிறது -பர ஜ்ஞான தச அனுபவம் –
விசத தம அனுபவம் ஆகிறது -பரம பக்தி தச அனுபவம் –

நிரந்தர அனுபவம் ஆகிறது -இடை இடையே விஷயாந்தரம் கலசாது இருக்கை –

தத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்த உசித அசேஷ சேஷைதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவானி-
அவ் வனுபவத்தாலே ஜநிதமான
அநவதிக அதிசய ப்ரீதியாலே செய்விக்கப் படுமதாய் –
சர்வ அவஸ்தை களிலும் உசிதமான சகல சேஷ வருத்தி ஒன்றையே பற்றின ஆசையை வடிவாக உடைத்தாய்
யாவதாத்மா பாவியான கைங்கர்யத்துக்கு ஆஸ்ரய பூதனாக வேணும் –

அநவதிக அதிசயம் ஆகையாவது –
யாவதாத்ம பாவியான கைங்கர்யத்துக்கு அடியாய் இருக்கையும்
பர பக்தி யாதிகளைக் காட்டில் அதிசயத்து இருக்கையும் –

அசேஷ அவஸ்தை களாவன
அந்தபுரம் -திரு வோலக்கம் -பூம் சோலை -நீர் -வாவி இவை முதலானவை -என்னுதல்
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்கள் ஆகிற அவஸ்தா விசேஷங்கள் -என்னுதல்

அசேஷ சேஷைதை யாகிறது –
நிவாச சய்யா ஆசன பாதுக அம்ஸூக உபதான வர்ஷாதப வாரணாதிபி -என்றும்

சென்றால் குடையாம் -என்றும்

கிம் சைனாம் ப்ரதிவஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருசம்
யதா யதா ஹி கௌசல்யா தாசி வச்ச சகீவ ச
பார்யாவத் பகிநீ வச்ச மாத்ரு வச்சோப திஷ்டதி -அயோத்யா -12-68- என்றும்
சொல்லுகிறபடியே நாநா விதமான அடிமைகள்-

(நிவாஸ ஶய்யாஸந பாதுக அம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஶ்லோகம் 40 –

நீ திருவனந்தாழ்வானின் திரு மேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.)

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு-ஸ்ரீ பொய்கையாழ்வார்)

(தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித-அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப நித்யகிங்கரோ ப⁴வாநி –அவ் வனுபவத்தினால் விளைவிக்கப் பெற்ற மிகச் சிறந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ஊற்றத்தோடு கூடி இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தில் நிரதனாகக் கடவேன்

ஶேஷதைக ரதி-என்பது பஹு வ்ரீஹி யாகி நித்ய கிங்கரனுக்கு விசேஷணம் ஆகிறது –
அசேஷமான அடிமைகளிலும் நன்கு ஈடுபட்ட நித்ய கிங்கரனாக ஆகக் கடவேன் என்றபடி

ஆக இவ்வளவும் த்வயத்தில் உபேயத்திலே நோக்கான உத்தர கண்டம் விவரிக்கப்பட்ட தாகிறது –)

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23– -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 23, 2014

சூரணை -20-அவதாரிகை –

ஆக –ஏவ பூதோசி -என்று தொடங்கி-இவ்வளவும் வர –சரீர சமநந்தரம் பெரும் பேற்றையும்
இங்கு இருக்கும் நாள் கால ஷேபம் பண்ணும் பிரகாரத்தையும் அருளிச் செய்தாராய் நின்றார்

இனி
இவ் வதிகாரிக்கு சரீர விஸ்லேஷ தசையில் அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாகத் தான் செய்யும் ஏற்றங்களை அருளிச் செய்கிறார் –

(ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் – அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் -ஆறு வார்த்தைகளில் ஓன்று அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் அந்த காலே ச மாமேவ ஸ்மரந் முக்த்வா கலேவரம்.— யம் ப்ரயாதி ஸ மத் பாவம் யாதி நாஸ்த் யத்ர ஸம்ஸய-–৷৷8.5৷৷ அந்த காலே ச -தான் விரும்பிய பலனைப் பெறும் கடைசிக் காலத்திலும் ய -எவன் ஒருவன் மாமேவ ஸ்மரந்-தான் விரும்பிய நிலையோடே கூடிய என்னை நினைத்துக் கொண்டு த்யக்த்வா கலேவரம். ப்ரயாதி -தேகத்தை விட்டுச் செல்கிறானோ ஸ -அவன் மத் பாவம் யாதி -அந்த எனது நிலையை அடைகிறான் யத்ர -இவ் விஷயத்தில் ஸம்ஸய–ந அஸ்தி -ஐயம் இல்லை – தான் விரும்பிய பலனைப் பெறும் கடைசிக் காலத்திலும் எவன் ஒருவன் -தான் விரும்பிய நிலையோடு கூடிய என்னையே நினைத்துக் கொண்டு தேகத்தை விட்டுச் செல்கிறானோ அவன் அந்த எனது நிலையையே அடைகிறான் -இவ்விஷயத்தில் ஐயம் இல்லை கடைசி காலத்தில் என்னையே நினைத்து சரீரம் விட்டு -என் பாவனையே அடைகிறான் –)

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித 
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ பவிஷ்யசி

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதி பிர புத்த –
இச் சரீர விஸ்லேஷ தசையில்
உமக்கு ஒரு விசேஷம் உண்டு
அது தான் ஏது என்னில்

அதி பிரபுத்த –
ஸ்வஸ்த தசையிலும் காட்டில்
அவ்வளவில் வெளிச் செறிப்பு மிகையாம்(-ஸ்ருத ப்ரகாசகர் காட்டி அருளுகிறார்-அர்ச்சிராதிகதியில் செல்லும் ஆத்மா ஸூஷ்ம்நா நாடி மூலம் பிரயாணித்து -அனுக்ரஹித்துக் காட்டி அருளுவான் அன்றோ -தனியாக -கேவலம் -அனுக்ரஹம் இது போன்றவை)
அதுக்கடி என் என்னில்

கேவலம் மதீய யைவ தய்யா
அவ்வளவில் எங்கே போயிற்று எனலாம் என் பிரசாதத்தை
ஆனால் இது முன் பிறந்த பிரசாதம் அடியாகப் பிறந்ததோ என்னில்
கேவலம் –
இப்போது உண்டாயிற்று
கர்ம யோகம் அடியாக ஜ்ஞான யோகம் உண்டாய்
அது அடியாக பக்தி உண்டாய்
அது பரம பக்தியாமோபாதி
ஓன்று நிதானமாக (காரணமாக)வந்தது அல்ல-நிர்ஹேதுகமாக இப்போது உண்டாயிற்று

ஆனால் இவ்வளவாக கீழ் இவனுக்கு பிறந்த பாக விசேஷங்கள் அடைய
போக உபகரணமாய் கார்யம் செய்கைக்கு உருப்பாமோ என்னில்-மதீய யைவ தய்யா –
இத்தை ஒழிந்தால் வேறு அடி (காரணம்-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே)இல்லை

கீழேயும் –மதீய யைவ தய்யா -என்று வைத்து
இங்கும்- மதீய யைவ தய்யா -என்கையாலே
விஷயீ கரிக்கும் தசை யோடு -விஷயீ கரித்த தசையோடு-
விரோதி போக்கும் தசையோடு -அனுகூலங்களை உண்டாக்கும் தசையோடு
வாசி அற எல்லா தசைகளிலும் இவனுக்கு பரிகரமாய் உள்ளது வெறுமை
கார்யம் செய்கைக்கு அடி அவன் பிரசாதமே என்றது ஆயிற்று –

பிரபுத்த -என்ன அமைந்து இருக்க
அதி பிரபுத்த -என்றது பூர்வ அவஸ்தை களில் காட்டில் இதுக்கு விசேஷம் உண்டு என்கைக்காக-(போதம் ஞானம் புத்த ஞானி அதி பிரபுத்த விசேஷ ஞானி)

அது தான் ஏது என்ன
மாமேவ அவலோகயன் –
இது வாயிற்று இதுக்கு உண்டான விசேஷம்
முன்புத்தை அறிவு ஒரு தலையில் சரீரத்தையும் ஒரு தலையில் பகவத் விஷயத்தையும்
இரண்டையும் அவகாஹித்து இருக்கும்
அங்கன் அன்றியே தன்னை அபேஷியாதே என் பிரசாதம் அடியாக வந்த அறிவு ஆகையாலே
என்னை ஒருவனையே விஷயீ கரித்து இருக்கும்

அதுக்கு மேலே
அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மநோரத –
பூர்வ சம்ஸ்காரத்துக்கு பிரச்யுதி இல்லாத மநோ ரதத்தை வுடையீராய்
அதாவது -பகவத் சமாஸ்ரயணம் பண்ணி வைத்து
அபசாரங்களை கனக்கப் பண்ணிப் போந்து
சாம் (சாகும்)போதாக-நாமோ சாவப் புகா நின்றோம்
நம் திறத்தில் ஈஸ்வர ஹ்ருதயம் எங்கனே இருக்கிறதோ
நமக்கு பேறு எங்கனே இருக்குமோ
நாம் அநந்தரம் என் என்பதாகப் புகுகிறோமோ-நம்மால் செய்ய அடுப்பது என் –
என்று கலங்குகை அன்றிக்கே –

தன்னை இசைவித்த பகவத் பிரசாதம் அடியாக பிறந்த ஆசார்ய விஷயீ காரத்தையும்
தத் அனுகுணமான ஆசார்ய உபதேசத்தையும்
அது அடியாக வருகிற பகவத் சமாஸ்ரயணத்தையும்
சமாஸ்ரயித்த பின்பு பிறக்கும் வ்யவசாயத்தையும்- வ்யவசாயா நந்தரம் தனக்கு
ஈஸ்வரன் பிறப்பிக்கும் பாக விசேஷங்களையும்
அனுசந்தித்துக் கொண்டு
கீழ் நின்ற நிலை இது -பின் பிறந்த பாக விசேஷம் இது
ஆன பின்பு நமக்கு இனி அவன் பேற்றைத் தருகைக்கு ஓர் குறையும் இல்லை என்னும்
சம்ஸ்காரத்துக்கு
பிரச்யுதி இல்லாத மநோ ரதத்தை வுடையீராய் -என்றபடி

அதுக்கு மேலே –
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் இருந்துள்ள பிரக்ருதியை
ஜீரணமான வஸ்த்ரத்தைக் கழித்து
ஜீர்ணமுமாய் மலினமுமான வஸ்த்ரத்தை பரிஹரிக்கும் போது
ஜூகுப்சை யுடன் பரிஹரிக்குமா போலே
மாம்ஸ அஸ்ருகாதி மயமான இச் சரீரத்தை விடும் போதும் ஜூகுப்சை பிறக்கும் என்று
திருஷ்டாந்த பலத்தாலே சித்திக்கிறது

வஸ்த்ரத்துக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தமே யாய்த்து
ஆத்மாவுக்கும் உடம்புக்கும்
ஆகையாலே –ஸூ கேன -என்கிறது
அன்றிக்கே சம்பந்தத்தில் வாசி யுண்டானாலும் என் பிரசாதம் அடியாக கழிகையாலே
தலையில் சுமையை பொகடுமா போலே அநாயாசேன விட்டு -என்னவுமாம் –

இப்படி சரீரத்தோடே இருக்கும் போது பிறக்கும் பாக விசேஷங்களை அருளிச் செய்தவாறே
இப் பாக விசேஷம் எல்லார்க்கும் பிறக்கும் அது ஒன்றோ
இவ்வளவு இல்லாதார் இப் பேற்றை இழக்கும் அத்தனையோ
இவ்வளவு உண்டானாலும் இன்னமும் அவஸ்ய அபேஷிதமான பாக விசேஷங்கள் சில யுண்டாம் இருக்கும்

அவை யுண்டாம்படி எங்கனே -என்ன
ததா நீமேவ -(அந்த ஷணத்திலேயே)
இச் சரீர விஸ்லேஷ சம நந்தரத்திலேயே பரம பக்தி பர்யந்தமாக முன்பு பிறவாத பாக விசேஷம் எல்லாம் உண்டாகக் கடவது
கீழ் சில உண்டாய் இருக்கையும்- இல்லாமல் இருக்கையும் -பேற்றுக்கு அப்ரயோஜகம்
உண்டான அம்சம் உண்டாகில் போகத்துக்கு உறுப்பாகிறது
இல்லை யாகில் சரீர சமநந்தரத்திலே
க்ஷண  மாத்ரத்திலே  எல்லாவற்றையும் உடையன் ஆகிறான் -என்கிறார்
உபாசகனுக்கு உபாசன சமாப்தியிலே ஒரு குறை வரிலும்
ப்ராப்ய புண்ய க்ருதான் லோகா நுஷித்வா சாஸ்வதீ சமா
ஸூசிநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோஸ்பி ஜாயதே-ஸ்ரீ கீதை -6-42-என்று கொண்டு
கீழது மேலதாகப் பலிக்கும்

(ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீஸ் ஸமா—
ஸூசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே–৷৷6.41৷৷–நீண்ட காலம் போகம் அனுபவிப்பதால் இவன் தொடக்க நிலை

யோக ப்ரஷ்ட–யோகத்தைத் தொடங்கியவுடன் -அதில் இருந்து நழுவியவன்
அந்த யோக மஹாத்ம்யத்தாலேயே
புண்ய க்ருதாம் -மிக புண்யம் செய்தவர்கள்
லோகான் ப்ராப்ய -அடையும் நல்ல உலகங்களை அடைந்து
ஸாஸ்வதீஸ் ஸமா—அங்குள்ள போகங்களில் திருப்தி ஏற்படும் வரையில் -நீண்ட காலம்
உஷித்வா -அவ் வுலகங்களில் வாழ்ந்து
ஸூசீநாம் –பரி ஸூத்தி யுடையவர்களாய்
ஸ்ரீமதாம் -குண நலச் செல்வம் நிறைந்தவர்கள் வாழும்
மஹதி கேஹே -சிறந்த வீட்டில்
ஜாயதே–பிறக்கிறான் –

யோகத்தைத் தொடங்கியவுடன் அதில் இருந்து நழுவியவன் -யோகத்தின் பெருமையால் –
மிக்க புண்ணியம் செய்தவர் அடையும் நல்ல உலகங்களை அடைந்து -அங்குள்ள போகங்களில்
திருப்தி ஏற்படும் வரையில் நீண்ட காலம் அவ்வுலகங்களில் வாழ்ந்து பரி சுத்தி யுடையவர்களாய்
குண நலச் செல்வம் நிறைந்தவர்கள் வாழும் சிறந்த வீட்டில் பிறக்கிறான் –

ப்ர யத்னம் பண்ணி -யோகாப்யாஸம் ஆசை உடன் ஆரம்பித்து -புண்ணியம் செய்பவர்கள் அடையும் லோகத்தில் –
ஆசை வைத்து நிறைய ஆண்டுகள் கொடுத்து -நிறைய அனுபவிக்க வைக்கிறேன் – ஸ்வர்க்கமும் உண்டு -என்கிறான் இதில் –)

நடுவே ஒரு குறை வரிலும் அதுவே குறையாக அநர்த்தம் பலிக்கும்
இங்கன் அன்றாகில் அந்திம ஸ்ம்ருதி இல்லாத போது
பழைய நிலையேயாய்த் தலைக் கட்டி விடும்(ஜடபரதர்-மானாகவே பிறந்த வ்ருத்தாந்தத்தம்)

ஆன பின்பு இது கூடுமோ என்ன –
மத்  பிரசாத லப்த –
தன் தலையில் உபாய பாவம் சுமப்பானுக்கு அல்லவோ கீழ்ச் சொன்ன அநர்த்த சந்ததி எல்லாம் சம்பவிப்பது
அது தான் என் தலையிலே கிடக்குமாகில் அவனுக்கு இவ் வதிசயங்கள் எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லையே
புருஷார்த்த லாபத்துக்கும் ஒரு தட்டு இல்லையே –

ஆனால் தேவர் பிரசாதம் அடியாக லபிக்குமவை தான் எவை என்ன –
மச் சரணார விந்த யுகள ஏகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
என்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில் உண்டாய்
ஐகாந்திகமாயும் ஆத்யந்திகமாயும் இருந்துள்ள
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் –

க்ருத பரி பூர்ண அநவரத நித்ய விசத தம அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய மத் அனுபவ
முன்பு சொன்ன பர பக்த்யாதிகளால் பண்ணப் பட்டதாய்
பரி பூர்ணத்வாதி விசேஷண விசிஷ்டமாய்
அநவதிக அதிசயமான ப்ரீதியாலே அனுபவிப்பதான
என்னுடைய அனுபவத்தையும் –

ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரிதா அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷதைக ரதி ரூபா நித்ய கிங்கரோ பவிஷ்யசி-
அவ் வனுபவத்தால் உண்டாக்கப் பட்டதாய்
அநவதிகமான அதிசயத்தை உடையதான
ப்ரீதியாலே பண்ணப் படுமதாய்
எல்லா அவஸ்தைகளிலும்
அனுகூலமான எல்லா அடிமைகளிலும் உண்டான
அபிநிவேசத்தையும் வடிவாக வுடைத்தாய்
அபுநரா வ்ருத்தி லஷணமான கைங்கர்யமும்
உமக்கு உண்டாகக் கடவது
என்று பெரிய பெருமாள் அருளிச் செய்கிறார் –

———————————————————————————-

சூரணை -21
மா தே பூத் அத்ர சம்சய

பின்பு நிரூபித்து பார்த்தவாறே
பேறு கனத்து இரா நின்றது
நேர்த்தியைப் பார்த்தால் அத்யல்பமாய் இருந்தது
சூத்திர பலங்களில் ஒன்றுக்குப் பண்ணும் பிரவ்ருத்திகளே குவாலாய் இருந்த தாகில்
இப்படிக் கனத்த பேற்றுக்கு ஓர் ஆயாசம் இன்றிக்கே இருக்க
இவை எல்லாம் கிடைப்பதாக அருளிச் செய்யக் கூடுமோ
என்று எம்பெருமானாருக்கு அபிப்ராயமாக
மா தே பூத் அத்ர சம்சய -என்று அருளிச் செய்கிறார் –
இவ் வர்த்தத்தில் உமக்கு சம்சயம் உண்டாக வேண்டா
பிறருக்கு ஆனால் உண்டாக அமையும்
தனக்கு என்ன ஒரு கைம் முதல் இன்றிக்கே என் பக்கல்
ந்யஸ்த பரரான உமக்கு சம்சயிக்க வேண்டுவது இல்லை –
இது தான் நான் சொன்ன வார்த்தை யாகையாலேயும் சம்சயம் இல்லை

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –ந்யஸ்த பரரான உமக்கு சம்சயிக்க வேண்டுவது இல்லை -)

——————————————————————————————

சூரணை -22-

அந்ருதம் நோக்த பூர்வம் மே ந ச வஷ்யே கதாசன
ராமோ த்விர் நாபி பாஷதே
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூ ச –

அந்ருதம் நோக்த பூர்வம் -மே -ந ச வஷ்யே கதாசன –
இது பொய் அன்று-
இது வரையில் நான் முன்பு சொல்லிப் போந்த வற்றில்
ஒன்றாவது பொய்யாய் இருப்பது இல்லை
அப்படிப் பொய்யாகாமை வைதமாய் வந்தது (விதி கட்டளை)அல்ல
வாசனை இல்லாமையாலே

(முன்பு சொன்னதில் பொய் இல்லை பின்பு சொல்வதிலும் பொய் இல்லை -இப் பொழுது -வர்த்தமானம் -இறந்த காலத்துக்குள்ளும் வரும் காலத்துக்குள்ளும் அடங்கும் அன்றோ)

இனி மேலாகிலும்-அந்ருத பாஷணம் சம்பவிக்கலாமோ -என்ன-ந ச வஷ்யே கதாசன —
வாசனை அடி யற்ற பின்பு இனி மேல் கூடுவது எங்கனே -என்று அருளிச் செய்ய
ஆனாலும் கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயனான தேவர் உக்தி அன்றோ -என்ன -(ஏலாப் பொய்கள் உறைபவன் அன்றோ -கஸ்ய பால -கன்றுக் குட்டி பானைக்குள் தேடி இல்லை என்று கண்டு உன்னிடம் சொல்லிப் போக இருக்கிறேன் என்றவன் அன்றோ)
ராமோ த்விர் ந அபி பாஷதே –
இது நம் வார்த்தை அன்றே-
ஆன்ரு சம்சய பிரதரான ரிஷிகள் கோஷ்டியிலே பரிமாறும் வார்த்தை இறே
ராமாவதாரம் என்றால் நாக்கு புரளாது என்னும் இடம் எங்கும் பிரசித்தம் இறே
இனி நம் பக்கல் குறை இல்லையே -என்ன
ஓம் சக்ரவர்த்தி திருமகனாய் எங்கே அருளிச் செய்தீர் -என்ன
சக்ருதேவ பிரபன்னாய தவ அஸ்மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்று-
ராமாவதாரத்தில் நாம் கடல் கரையில் சொன்ன வார்த்தையாக இதிஹாஸ ஸ்ரேஷ்டமான
ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைத்த படி கண்டீரே -என்ன
ஆனாலும் இது தேவர் உக்தியோ என்ன
இன்றிக்கே ஒழிந்தாலும் இத்தோடு சக யுக்தி  (கோத்ரி) யன்றோ கண்ணனாய் அவதரித்த என் உக்தியும் -என்ன
ஆகில் அது எங்கே -என்ன
சர்வ தர்மான் பரி த்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூச -என்று(பிரார்த்தித்துப் பெறுவதே புருஷார்த்தம் -நாம் செய்யும் பிரபத்தியும் உபாயம் அல்லவே-அதிகாரி விசேஷணம் -விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்)
கிருஷ்ணாவதாரத்தில் திருத் தேர் தட்டிலே இருந்து நாம் சொன்னதாக
பஞ்சமா வேதமான மகாபாரதத்திலே ஸ்ரீ வேத வியாச பகவான் ஓதி வைத்தபடி பாரீர் -என்ன

ஆகிலும் அவதார பேதம் உண்டே -என்ன
உண்டானாலும் ராமாவதாரத்தில் மெய்யும்
கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்
இரண்டும் ஒக்கும் இறே ஆஸ்ரிதர்க்கு தஞ்சமாகைக்கு –என்ன
ஆனாலும் அதுவாமோ என்ன
இரண்டும் ஒருவர் வார்த்தை யாகில் அதுவாகைக்கு தட்டு என் -என்கிறார்

(வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்கும் மையாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-)

இதி மைவ ஹ்யுக்தம் -என்று
வேத முகத்தாலே யாதல்
வைதிக முகத்தாலே யாதல் -அன்றிக்கே
சரண்யனான என்னாலேயே சொல்லப் பட்டவை அல்லவோ -அவை

———————————————————————————————–

சூரணை -23-

அதஸ் த்வம் தவ தத்த்வதோ
மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ
நிஸ் சம்சயஸ்
ஸூக மாஸ்ஸ்வ

(நாயமாத்ம ஸ்ருதி–நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன |

யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||

“(இந்தப்‌ பரமான்மாவானவர்‌ திறமையினாலும்‌, புத்தியினாலும்‌, மிகு கேள்வியினாலும்‌ அடையற்பாலரன்‌று; இந்தப்‌ பரமான்‌மாவானவர்‌ எவனை விரும்புகின்றாரோ, அவனால்‌ அடையப்படுகின்றார்‌; அவனுக்கு இந்தப்‌ பரமான்மாவானவர்‌ தமது சொரூபத்தை விளக்குகின்றார்‌”)

அதஸ் –
ஆகையாலே

த்வம் –
இப்படிப் பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெரு வார்த்தையைக் கேட்டு -என்னையே விஸ்வசித்து இருக்கிற நீர்

தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ –
மத் -என் விஷயமாக
தவ
உமக்கு
தத்வத
மெய்யாக உண்டான
மெய்யே என்னுடைய ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
பக்த்யா தவ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப-ஸ்ரீ கீதை -11-54-
என்கிற ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ் ஸ்வ
சம்சயம் இல்லாதவராய்க் கொண்டு
சுகமே வர்த்தியும்

(பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷

அஹம் –நான்
பக்த்யா அநந்யயா து –ஸ்வயம் ப்ரயோஜன பக்தியாலேயே
ஏவம் வித –இவ் வண்ணமாக
தத்த்வேந–உள்ளபடி
ஜ்ஞாதும் –ஸாஸ்த்ரங்களால் அறிவதற்கும்
த்ருஷ்டும் ச –காண்பதற்கும்
ப்ரவேஷ்டும் ச –அடைவதற்கும்
ஸக்ய -கூடியவன் –

எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்)

——————————————————————————————–

அந்த்ய காலே ஸ்ம்ருதிர்யா து தவ கைங்கர்ய காரிதா
தாமே நாம் பகவன் நத்ய க்ரியமாணாம் குருஷ்வ மே

அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று

இந்த வாக்யத்துக்கு
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையோ
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசாச்சார்யாரோ
ஸ்ரீ தேசிகனோ
வியாக்யானம் செய்து அருள வில்லை

———–

பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை
அருளிச் செய்த சரணாகதி கத்ய  வியாக்யானம் சம்பூர்ணம் –

——–

ஆறு சொற்கள் த்வயம் -ஸ்ரீ மன் நாராயண -பிரித்து அஷ்ட பதங்கள் -விளிச்சொல் -ஸ்ரீ மானே நாராயணனே -உன்னுடைய -தவ அத்யாஹாரம் பண்ணிக் கொள்ள வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -போல்
அதே போல் இங்கும் ஸ்வாமி பல விளிச் சொற்கள் மிக்கு அருளிச் செய்துள்ளார்

விட வேண்டியவற்றை விபீஷணன் வார்த்தைகளாலும் அருளிச் செய்கிறார் இதில் -புராணப் பிரிகிரியையால் அதையும் சேர்த்து அருளிச் செய்துள்ளார்

நித்ய அனுசந்தானம் -ஏவம் வக்தா சததம்

ப்ருஹத் கத்யம் இது -ஸ்ரீ ரெங்க கத்யம் லகுவாகவும் -அடுத்து ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஸ்ரீ பரமபத விவரணம் மேல்

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -17-18-19– -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 23, 2014

சூரணை -17-அவதாரிகை –

இப்படி த்வயம் வ்யாக்யாதம் ஆயிற்று ஆகில் -இனி மேல் செய்கிறது என் என்னில் -(உபாய உபேய அத்யவசிதனான) இவ் வதிகாரி  (பக்கல் பெரிய பெருமாள் -சோம்பரை உகத்தி போலும் ) தமக்கு உண்டான பரீத் யதிசயத்தாலே
கீழ் சொன்னவற்றை அனுபாஷித்துக் கொண்டு
உமக்கு மத்  ப்ரசாதத்தாலே சர்வமும் குறைவற உண்டாயிடுக -என்று அருளிச் செய்து
இவருடைய ஹ்ருதயத்தை சந்துஷ்டம் ஆக்குகிறார்

இப்படி பெரிய பெருமாள் அருளிச் செய்தார் என்று நாங்கள்
விஸ்வசித்து இருக்கும்படி எங்கனே –
என்று எம்பார் கேட்க –
எனக்கு பெரிய பெருமாள் தம்முடைய சீலாதி குணங்களைக் கரதலாமலகமாகக் காட்டித் தந்து
அவர் சொல்லுவிக்கச் சொன்ன வார்த்தை யாகையாலே
அவர் அருளிச் செய்த வார்த்தை என்று விஸ்வசிக்க தட்டில்லை

அவர் திரு உள்ளம் ஆகாதது என் வாயால் புறப்படாதே
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –

ஏவம் பூத மத் கைங்கர்ய ப்ராப்தி
உபாய தயா வக்லுப்த
சமஸ்த வஸ்து விஹீநோபி
அநந்த தத் விரோதி பாபா க்ராந்ஸதோபி
அநந்த மத்  அபசார யுக்தோஸபி
அநந்த மதீய அபசார யுக்தோஸபி
அநந்த அசஹ்யா அபசார யுக்ஸதோபி
ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார
விமூடாத்ம ஸ்வ பாவோபி
ஏதத் உபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா சம்பத்தோஸபி
ஏதத் அனுகுண பிரகிருதி விசேஷ சம்பத்தோஸபி
ஏதன் மூலாத் யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக
ஸூக துக்க தத் தேது
தத் இதரோ பேஷணீய விஷய
அனுபவ ஜ்ஞான சங்கோச ரூபா
மச் சரணாரவிந்த
யுகள ஐகாந்திக ஆத்யந்திக
பர பக்தி பரஜ்ஞான பரம பக்தி
விக்ன ப்ரதிஹதோஸபி
யேன கேநாபி ப்ரகாரேண
த்வய வக்தா
த்வம் கேவலம் மதீயயைவ தய்யா
நிச் சேஷ விநஷ்ட ஸ ஹேதுக
மச் சரணார விந்த யுகளை காந்திகாத் யந்திக
பர பக்தி பரஜ்ஞான பரம பக்தி விக்ன
மத்  பிரசாத லப்த
மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி
மத்  பிரசாத தேவ சாஷாத் க்ருத யதா வச்தித
மத்  ஸ்வரூப ரூப குண விபூதி லீலோப கரண விஸ்தார
அபரோஷ சித்த
மன் நியாம்யதா மத தாஸ்யைக
ஸ்வபாவாத்ம ஸ்வரூப
மத்  ஏக அனுபவ
மத்  தாஸ்யைக ப்ரிய
பரிபூர்ண அநவரத நித்ய விசத தம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய
ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கிங்கரோ பவ

ஏவம் பூத மத்  கைங்கர்ய ப்ராப்தி –
இப்படிப் பட்ட என்னுடைய கைங்கர்ய லாபத்துக்கு –

உபாய தயா வக்லுப்த –
உபாயமாக வேதாந்தங்களிலே சொல்லப் பட்ட கர்ம ஜ்ஞான பக்திகள் என்ன -உமக்கு இல்லையே யாகிலும் –

சமஸ்த வஸ்து விஹீ நோபி –
இவ் உபாசன அங்கமான ஜீவ பர யாதாம்ய ஜ்ஞானம் என்ன
இதுக்கு அடியான வர்ண ஆஸ்ரம ஆசாரம் என்ன
இவை எல்லாவற்றுக்கும் அடியான அமாநித்வ அத்யாத்ம குணங்கள் (ஸ்ரீ கீதையில் 20 ஆத்ம குணங்கள்)என்ன
இங்கன் சொல்லப் பட்டவை -சர்வமும் -எல்லாம் உமக்கு இல்லை யாகிலும் –

அநந்த தத் விரோதி பாப ஆக்ராந்தோஸபி-
இவை இல்லாமையே அன்றியே இவற்றுக்கு விரோதியான
அநந்த பாபங்களாலே
ஆக்ராந்தராய் இருந்தீரே யாகிலும்
இவற்றிலே இழிய ஒட்டாதே இருக்கிற சகல பாபங்களாலே நெருக்கு உண்டு இருந்தீரே யாகிலும் –

அநந்த மத் அபசார யுக்தோஸபி –
கீழ் சொன்ன விரோதி பாபங்கள் மாதரம் அன்றிக்கே முடிவில்லாத நம் விஷயமான அபசாரத்தோடே கூடி இருந்தீரே யாகிலும் –

அநந்த மதீய அபசார யுக்தோஸபி –
இவ்வளவு அன்றிக்கே மத் அபிமான அந்தர் பூதராய் இருப்பார் திறத்தில் உண்டான
அளவிறந்த அபசாரத்தோடு கூடி இருந்தீரே யாகிலும்
அநந்த அசஹ்யா அபசார யுக்தோஸபி –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயங்களில் உண்டான
அளவிறந்த அபசாரத்தோடு கூடி இருந்தீரே யாகிலும்

ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார
இப்படிப் பட்ட பாபங்களுக்கு கார்யமுமாய் -காரணமுமாய்
இருந்துள்ள அநாதியான விபரீத அஹங்காரம் –

(அஹங்காரம் விபரீத ஞானம் -ஒன்றுக்கு ஓன்று காரணமாயும் கார்யமாகவும் இருப்பதால் –கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார)

விபரீத அஹங்காரம் ஆவது
அஹம் அல்லாத வஸ்துவிலே அஹம் புத்தி பண்ணுகை –
இதுக்கடி பாபங்கள் ஆகையாலே பாப கார்யமுமாய்
பாபங்களுக்கும் அடி தேகாத்ம அபிமானம் ஆகையாலே
தான் காரணமுமாய் இருக்கும்

அஹம் அர்த்தம் தான் ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபமாய்
ப்ரக்ருதே பரமாய் இருப்பது ஒன்றாய் இருக்க
துக்க ரூபமுமாய் ஜடமுமாய் சதத பரிணாமினியுமான ப்ரக்ருதியிலே
அப் புத்தி பண்ணுகை -பாப கார்யமுமாய்- பாப காரணமுமாய் இருக்கும் இறே

இத்தால் வரும் அவத்யம் ஏது என்ன –
விமூடாத்ம ஸ்வ பாவோபி –
இப்படிப் பட்ட அஹங்காரத்தாலே மறைக்கப் பட்ட ஆத்மாவினுடைய சேஷத்வ ஸ்வரூபத்தை
உடையீராய் இருந்தீரே யாகிலும் –
சேஷோஹம்–என்னாமல்- ஸ்வ தந்த்ரோஹம்– என்னப் பண்ணுகை –

ஏதத் உபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா சம்பத்தோஸபி
கீழ் சொன்ன பாபங்களுக்கும் அஹங்காரத்துக்கும் கார்யமுமாய் காரணமுமாய் அநாதியுமாய்
போருகிற  துர் வாசனையாலே கட்டுண்டு இருந்தீரே யாகிலும் –

ஏதத் அனுகுண பிரகிருதி விசேஷ சம்பத்தோஸபி –
இவற்றுக்கு எல்லாம் காரணமான துஷ் பிரக்ருதியாலே ஒரு சர்வ சக்தி பிரிக்கப் பார்க்கிலும்
அரிதாம்படி பிணை யுண்டு இருந்தீரே யாகிலும்
பத்தோஸ்பி -என்னாமல்- சம் பத்தோஸ்பி -பிணை உண்ட உறைப்பை சொல்கிறது –

ஏதன் மூலாத் யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக –
இப் பிரகிருதி  சம்பந்தம் அடியாக வருகிற தாப த்ரயங்கள்

ஆத் யாத்மிகம் ஆவது -ஆதியும் வியாதியும்

ஆதி மனதுக்கும்-வியாதி உடலுக்கும்

ஆதியாவது –
காம
குரோத
பய
த்வேஷ
லோப முஹ விஷாதஜ
சோகா
அசூய
அவமான
ஈர்ஷ்யா
மாத்சர்யாதி மயஸ் ததா -என்கிற இவை –

வியாதி யாவது –
சிரோ ரோக -தலைவலி
ப்ரதிஸ்யாயம் -ஜலதோஷம்
ஜவரம்
சூலம்
பகந்தரம்
குல்மச்வாசம்
ஸ்வயது
பர்ச்ச்ர்த் யாதி-ஆஸ்த்மா போல்வன
பிர நேகதாததாஷி ரோகாதி சார
குஷ்டாங்கா மய சம்ஜ்ஞகை -என்னுமவை-

ஆதி பௌதிகம் ஆவது
பசு பஷி மனுஷயாத்யை பிசாசோ உரக ராஷசை
சரீச்ருபாத்யைச் சன்ருனாம் ஜன்யந்தே சாதி பௌதிக -என்கிற இவை

ஆதி தைவிகமாவது –
சீதோஷ்ண வாத வர்ஷாம்பு வைத்யுதாதி சமுத்பவ -என்கிற இவை

ஸூக துக்க தத் தேது –
இப்படிப் பட்ட மூன்று வகைப் பட்ட சுக துக்கங்கள் என்ன –
அதுக்கு ஹேதுவாய் இருந்துள்ள -அவை தான் எவை என்னில் –

தத் இதர உபேஷணீய விஷய – –
தனக்கும் பிறர்க்கும் உபேஷணீயரான மத்யஸ்தர்க்கும் உண்டாமதான
காம க்ரோதாதி விஷயங்கள் -என்ன -இவற்றின் உடைய

தனக்கு காமம் அன்வயத்தில் சுக ஹேதுவாய் வ்யதிரேகத்தில் துக்க ஹேதுவாய் இருக்கும்

தனக்கு குரோதம் எதிரியை நலியும் போது சுக ஹேதுவாய்
அதுவே எதிரி அளவில் பலியாது ஒழிந்தால் துக்க  ஹேதுவாய் இருக்கும்

ஸ்வேதரரான அனுகூலர்க்கு காமம் அன்வயத்தில் சுக ஹேதுவாய் வ்யதிரேகத்தில் துக்க ஹேதுவாய் இருக்கும்

ஸ்வேதரரான பிரதி கூலர்க்கு காமம் அன்வயத்தில் துக்க ஹேதுவாய் வ்யதிரேகத்தில் சுக ஹேதுவாய் இருக்கும்

மத்யஸ்தர்க்கு காமாதிகள் உடைய அன்வய வ்யதிரேகங்களில்  உண்டான சுக துக்கங்கள் உபேஷணீயங்களாய் இருக்கும்-

அனுபவ ஜ்ஞான சங்கோச ரூப –
இப்படி ஸ்வ கீயமாயும் பர கீயமாயும் உபேஷணீயாருடையதையும்
இருந்துள்ள விஷயங்களின் அனுபவம் ஆனது
ஜ்ஞான சங்கோச ரூபமாய் இருக்கும்

ஆகையால் அந்த ஜ்ஞானம் அடியாக உண்டாகக் கடவ பர பக்த்யாதிகளுக்கு
விஷய அனுபவம் தான் பிரதி பந்தகமாய் இறே இருப்பது
அத்தை அருளிச் செய்கிறார்

மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞாந பரம பக்தி விக்ன ப்ரதி ஹதோஸபி –
நிரதிசய போக்யமான என் திருவடிகளிலே நித்தியமாய் ஏக ரூபமாய் இருந்துள்ள பர பக்த்யாதிகளுக்கு
விக்னமாய் இருந்துள்ள விஷய அனுபவத்திலே இழிந்தீரே யாகிலும் –

பிரதி ஹதோஸபி
ஹதம் ஆகையாவது -நசிக்கை -அதாவது நஷ்ட கல்பமாகை –

ஆக
யேன கேநாபி ப்ரகாரேண
ஏதேனும் ஒரு வகையிலே

த்வய வக்தா –
த்வய அனுசந்தானமே யாய்த்து செய்ய வேண்டுவது
அது தன்னிலும் ஒரு நியதி இல்லை

யேன கேநாபி ப்ரகாரேண-
அஹ்ருதயமாகவுமாம் -ஹ்ருதயமாகவுமாம்
ஆர்த்தராகவுமாம் -த்ருப்தனாகிலுமாம்
அர்த்த சஹிதம் ஆகிலுமாம்–  அர்த்த விதுரம் ஆகிலுமாம்
அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
த்வயமாம் இத்தனையே வேண்டுவது

முதலிலே மந்த்ராந்தங்களாக ஒண்ணாது
அது ஒழிந்தாலும் வ்யாபகாந்தரங்களாக ஒண்ணாது
அது ஒழிந்தாலும் திரு மந்த்ரமாக ஒண்ணாது
த்வயத்திலே  யாய்த்து இளைப்பாற வேண்டுவது

அது தன்னிலும் பூர்வ கண்ட அனுசந்தானமும் அமையாது
உத்தர கண்ட அனுசந்தானமும் அமையாது
உபயமும் ஆக வேணும்

எதுக்காக வென்னில்
பூர்வ கண்ட மாத்ரம் அனுசந்தித்தீர் ஆகில் அதில் சொன்ன சரண வரணம்
சர்வ சாதாரணம் ஆகையாலே உமக்கு புருஷார்த்தம் ஏதோ -என்ன வேண்டி வரும்
உத்தர கண்ட மாதரம் அனுசந்திதீர் ஆகில் அதில் சொன்ன ப்ராப்யம் சாதநாந்தர
சாதாரணம் ஆகையாலே உமக்கு சாதனம் ஏதோ -என்ன வேண்டி வரும்
இக் குறைகள் எல்லாம் தீர வேண்டி இருந்தீர் ஆகில்
த்வயத்திலே  யாய்த்து இளைப்பாற வேண்டுவது –

த்வம் –
அப்படிப் பட்ட அனுசந்தானம் கை புகுந்த நீர்

கேவலம் மதீயயைவ தயயா நிச்சேஷ விநஷ்ட ஸ ஹேதுக-
த்வய அனுசந்தானமே ஹேதுவாக
இரு கரையும் அழியப் பெருகின என் கிருபை ஒன்றாலுமே
நிச் சேஷமாகவும் ச ஹேதுகமாகவும் விநஷ்டமான -(கேவலம் -ஏவ -இரண்டு அடைமொழிகள் -கிருபையாலேயே மட்டுமே)

மச் சரணார விந்த யுகள  ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி விக்ன –
நிரதிசய போக்யமான என் திருவடிகளில் நித்தியமாய் ஏக ரூபமாய் செல்லுகிற
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி களுக்கு இடைச் சுவரான
முன் சொன்னவற்றை உடையீராய்

ஆனால்  விரோதி  நசித்தவாறே பர பக்த்யாதிகள்  தனக்குத் தானே உண்டாகிறனவோ என்னில்

மத் பிரசாத லப்த-
அதுக்கு மேலே இதுவும் என்னுடைய கிருபையாலேயே உடையீராகக் கடவீர்
பெறுவது தான் ஏதேனும் அபேஷையிலே-

மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
இது காணும் பெரும் பேறு
இவ்வளவே அன்று
இன்னமும் உண்டு

மத் பிரசாதத் ஏவ சாஷாத் க்ருத யதா வஸ்தித மத் ஸ்வரூப ரூப குண விபூதி லீலோப கரண விஸ்தார –
அதுக்கு மேலே சஹகார்யந்தர நிரபேஷமான என் கிருபையாலே சாஷாத் கரிக்கப் பட்டதாய்
உள்ளபடி இருந்துள்ள என்னுடைய ஸ்வரூபம் என்ன
ரூபம் என்ன குணம் என்ன விபூதி என்ன லீலோபகரணமான இவ் விபூதி என்ன
இவற்றின் உடைய பரப்பை வுடையீராய்

இங்கு யதாவஸ்தித -என்கிறார்-அயதா வாகவும் கண்டது உண்டோ என்னில் -உண்டு
வேதாந்தத்தில் பிரதேச விசேஷத்தில் கார்க்கி வித்யை என்று ஒரு வித்யை உண்டு -அதிலே எழுதக் கண்டோம்

சைஸா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்டித
வருணனால் ப்ருகுவுக்கு சொல்லப் பட்ட -வித்யை –

அன்றிக்கே
நீயாக வருந்திக் காணும் அன்று இறே அயதாவாகக் கடவது
என் பிரசாதம் அடியாக காண்கையாலே யதாவஸ்திதமாக குறை இல்லையே -என்றுமாம் –

அதுக்கு மேலே
அபரோஷ சித்த மன் நியாம்யதா மத் தாஸ்யைக ஸ்வபாவ ஆத்ம ஸ்வரூப –
ஸ்ரவண மனநாதிகளால் சித்திக்கை அன்றிக்கே
சாஷாத் காரத்தாலே சித்தித்த
மன் நியாம்யதையையும் மத் தாஸ்யதயையும்
ஸ்வபாவமாக உடைத்தான ஆத்ம ஸ்வரூபத்தை வுடையீராய்

ஸ்வரூப சாஷாத் காரம் பிறந்தால்
தத் கதமான ஈஸ்வரைக நியாம்யத்வமும் தன்னடையே வெளிச் செறிக்கும் இறே

அப்படி ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தவராய்
மத் ஏக அனுபவ
ஸ்வரூப சாஷாத்காரம் பிறந்தால் அவனை விஷயீ கரித்து அல்லது நில்லாதே

ஸ்வ ஸ்வரூபத்தை தெளியக் கண்டால் ஸ்வரூப கதமான ஜ்ஞான ஆனந்தங்களில்
பர்யவசிக்கை அன்றிக்கே ஸ்வரூப யாதாம்யத்து அளவும் செல்லும் இறே
ஸ்வரூப யாதாத்ம்யம் ஆவது ஆத்ம கதமான பகவத அத்யந்த பார தந்த்ர்யாதிகள் இறே

ஆகையாலே கைவல்யம் போல் அன்றிக்கே என்னை ஒருவனையுமே அனுபவ விஷயமாக உடையீராய்

அவதாரணத்தாலே
ஸ்வ ரசத்துக்கு உடலாக அனுபவிக்கும் அதிகாரியை வ்யாவர்த்திக்கிறது
தனக்கு என்று தன்னை அனுபவிக்கும் அனுபவத்தோடு
தனக்கு என்று ஈஸ்வரனை அனுபவிக்கும் அனுபவத்தோடு வாசி இல்லை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று
ஸ்வரூப தர்சனத்தில் வந்தால் -எனக்கு சேஷி -என்று அவனை தர்சிக்கை அன்றிக்கே
அவனுக்கு சேஷம் என்று தன்னை தர்சிக்கையும்
தர்சித்தால் அனுபவத்தில் அவனே விஷயம் ஆகையும்
இவ் வர்த்தத்தில் பிரமாணம் -அஹம் அன்னம் -என்னும் இதுவே

ஆனால் அன்னம் போலேயாக ஒண்ணாது-சேதனான வாசி ஸித்தி பெற வேண்டுமே -அசேதன வ்யாவ்ருத்தியாக சேதனன் இருக்க வேண்டும் அன்றோ-அஹம் அந்நாத-என்றது
சேதனனுக்கு இறே உபேயத்தில் உகப்பு உண்டாவது
அது இன்றிக்கே ஒழிந்தால் புருஷார்த்தம் ஆக மாட்டாதே

மத் தாஸ்ய ஏக ப்ரிய
இவனை அனுபவிக்கப் புக்கால் அவ் வளவிலே பர்யவசிக்கும் படியாய் அன்றே இருப்பது
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னிச் -செய்வது என் என்னில்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்றார் இறே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்–நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று இறே ஸ்வரூபம் இருப்பது
அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்

மத் தாஸ்ய ஏக ப்ரிய-இவ் வவதாரணத்தாலே வ்யாவர்த்த்யம் தனக்கு என்னப் பண்ணுமது –
இது தான் கூடாது என்று கழித்தது இறே உத்தர கண்டத்தில் நமஸ் சப்தம் –
எனக்குப் பண்ணும் கைங்கர்யத்தையே ப்ரீதி விஷயமாக உடையீராய்

பரிபூர்ண அநவரத நித்ய விசத தம அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரீதி மத் அனுபவவஸ் த்வம் –
பரிபூரணமாய்
ஷணம் தோறும் இடை விடாதே நித்தியமாய்
பிரத்யஷம் என்னலாம்படியாய்
அநந்ய பிரயோஜனமாய்
ப்ரஹ்மாதிகள் உடைய அதிசயத்தையும் கால் கடைக் கொண்ட
என்னுடைய அனுபவத்தையே ப்ரீதி பாத்ரமாக உடையீரான நீர்

ததா வித மத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித-
அப்படிப் பட்ட என்னுடைய அனுபவத்தால் உண்டான
அநவதிகமான
அதிசயத்தை வுடைத்தான
ப்ரீதியாலே செய்விக்கப் பட்ட

அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷைதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவ –
எல்லா அவஸ்தைகளிலும் அனுகூலமாய்
எல்லா அடிமைகளிலும் உண்டான
அபிநிவேசத்தையே வடிவாக உடையீராய்க் கொண்டு
யாவதாத்ம பாவி அனுபாவ்யமான
கைங்கர்யத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவீர் –

——————————————————————————–
சூரணை -18-

ஏவம் பூதோசி-(ஏவம் பூத அஸி)
பகவத் ப்ராப்த் யுபாவ்யமாகச் சொல்லப் பட்ட உபாசன அங்கமாய் இருந்துள்ள
வர்ண ஆஸ்ரம ஆசாராதி விஹீநராய் இருந்தீரே யாகிலும்
உபாசன அங்க விரோதியான அநந்த பாப ஆக்ராந்தராய் இருந்தீரே யாகிலும்
அநந்த மத் அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
அநந்த மதீய அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
அநந்த அசஹ்ய அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்

ஏதத் காரண பூதா நாதி-
விபரீத அஹங்கார விமூடாத்ம ஸ்வ பாவராய் இருந்தீரே யாகிலும்
ஏதத் உபய ஹேது பூதா நாதி விபரீத வாஸநா சம்பத்தராய் இருந்தீரே ஆகிலும்
ஏதன் மூல பூத பிரகிருதி சம்பந்த விசிஷ்டராய் இருந்தீரே யாகிலும்
ஏதன் மூலாத் யாத்மிகாதி சுக துக்கங்கள் என்ன
இவற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள ததி தரோ பேஷநீய விஷயங்கள் என்ன
இவற்றின் உடைய அனுபவத்தால் உண்டான பகவத் ஜ்ஞான சங்கோச ரூபமான பர பக்தி யாதி
விரோதியாலே நஷ்ட ப்ராயராய் இருந்தீரே ஆகிலும்

ஏதேனும் ஒரு படியாலே
த்வய அனுசந்தானம் பண்ணப் பெறுவீர் ஆனால்
சஹாயாந்தர நிரபேஷமான என்னுடைய கிருபையாலே
என் திருவடிகளில் உண்டான பர பக்தி யாதிகளுக்கு விரோதி யாமவை எல்லாம்
ஹேதுக்கள் உடன் நிச்சேஷமாக நசித்து
என் திரு வடிகளிலேயே பர பக்தி யாதிகள் உண்டாகப் பெற்று
என்னுடைய ஸ்வரூபாதிகளின் பரப்பை உள்ளபடி சாஷாத் கரிக்கப் பெற்று
மன் நியாம் யதாதிகளையே ஸ்வபாவமாக வுடைய ஆத்ம ஸ்வரூப சாஷாத் காரம் பெற்று
மத் ஏக அனுபவராய்
மத் தாஸ்யைக பிரியராய்
பகவத் அனுபவத்தையே எல்லா அன்புக்கும் இலக்காக்கி
ததாவித பகவத் அனுபவத்தில் உண்டான அநவதிக ப்ரீதியாலே செய்விக்கப் பட்ட
அசேஷ அவஸ்த உசித
சகல வித கைங்கர்யமே தேக யாத்ரையாம் படி யாகக் கடவீர் -என்று
பெரிய பெருமாள் அருளிச் செய்த வாறே

இவை எல்லா வற்றுக்கும் ஹேது ஏதோ வென்று பார்த்த வாறே
த்வய அனுசந்தானமே யாய் இருந்தது –
இது இருந்த படி என் -என்ன
அதுக்கு குறை உண்டோ -என்ன
அது இருந்தபடி கண்டோமுக்கு-

ஏவம் பூதோசி -(ஏவம் பூத அஸி)என்று சொல்ல வேண்டும்படியோ இதின் பிரபாவம் இருப்பது –

——————————————————————————–

சூரணை -19–அவதாரிகை-
எல்லாம் குறைவற வன்றோ உமக்கு இருக்கிறது
ஒரு தேச விசேஷத்தில் உள்ளாரோபாதி
இச் சரீரத்தோடே அடிமை செய்யும் படியாய் இருக்கிறது அன்றோ உமக்கு -என்ன

தாப த்ரயாதி களுக்கு அடியான இச் சரீர சம்பந்தம் கிடந்தது
இதுக்கு அவசான காலம் அறிகிறிலேன்
இங்கு இருக்கும் நாளைக்கு கால ஷேபம் பண்ணும் விரகு அறிகிறிலேன்
வஸ்தவ்ய பூமி ஏது என்று அறிகிறிலேன்
இப்படி இருக்க எல்லாம் குறை வற்றவனாக அருளிச் செய்யும்படி
உபச் சந்தனமாய் இரா நின்றதீ-என்ன

இதுவோ நீர் சொல்லிற்று- இவ்வளவே யன்றிக்கே இன்னமும் இது செய்யும்படி கேளீர்
என்று பெரிய பெருமாள் அருளிச் செய்கிறார் –

ஆத்யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக துக்க விக்ன கந்த ரஹித ஸ்தவம்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன
சஹ சதா ஏவம் வக்தா
யாவச் சரீர பாதம்
அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூகமாஸ்ஸ்வ

ஆத்யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக துக்க விக்ன கந்த ரஹித ஸ்தவம்
தாபத் த்ரயாதிகளால் வரும் துக்கம் ஆகிற விக்நத்தின் உடைய
கந்தமும் அற்றவராய் –

இச் சரீரத்தோடே இருக்கச் செய்தே
தாப த்ரயத்தால் வரும் துக்க கந்தம் அற வர்த்திக்கப் போமோ -என்னில்
ஸ்தவம் -நீர் அல்லீரோ
நீர் ஆகில் வர்த்திக்க குறை என்ன –
ஏவம் பூதோசி –என்று நான் சொல்லும்படியான வீறு உடையீர் அல்லீரோ –

அதாவது
காலம் குறுகா நின்றது -கர்மம் ஷயிக்கத் தொடங்கிற்று -‘கர்மம் ஷயிக்க -பிராப்யம் அணித்தாகா நின்றது -என்று
அநந்தரம் பெறுகிற பேற்றை அனுசந்தித்து
இவற்றால் வரும் துக்கங்களை மதியாதே வர்த்தியும் -என்றபடி –
என் போலே என்னில் -அபிஷேகப் பட்டினி போலே –

அங்கனே ஆகிலும் சரீரத்தோடே இருக்கும் நாளைக்கு கால ஷேபம் பண்ணுவது
எத்தாலே  என்னில்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ –
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணிக் கொண்டு
அதுவே துணையாக இரும்(ஜப்த்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்)

நாட்டாரோடு இயல் ஒழிந்து-திருவாய் மொழி -10-6-2- என்கிறபடியே
சம்சாரத்தில் வ்யாவ்ருத்தனாய்
கைங்கர்ய பிரார்த்தனையே யாம்படி
இதுக்கு தூரியனாய்
நாரணனை நண்ணினம் – திருவாய் மொழி -10-6-2- என்கிறபடியே பகவதி ந்யஸ்த பரனாய் இருக்கும் அதிகாரிக்கு
த்வயத்தில் அர்த்த அனுசந்தானமே யாய்த்து துணையாய் இருப்பது

கீழ் த்வய வக்தா –என்றது
இங்கு -த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ -என்கிறது

இதுக்குக் கருத்து என் என்னில்
பகவத் விஷயீ காரத்துக்கு பாசுரமே அமையும்
கால ஷேபத்துக்கு உடலாம் அன்று அர்த்த அனுசந்தானத்து அளவும் அபேஷிதமாய் இருக்கும் –

சதா ஏவம் வக்தா –
ஏவம் என்றது இப் ப்ரகாரத்தாலே   -என்றபடி

அதாவது கீழ் தாம் ஒரு பிரகாரத்தாலும்
முன்பு உள்ளார் படியாலும்
இதிஹாச பிரக்ரியை யாலுமாக
மூன்று ப்ரகாரத்தாலே சரணம் புக்கார் –

இதில் பூர்வர்கள் பிரக்ரியையும் ஒழிய
இதிஹாச பிரக்ரியையும் ஒழிய இக் கத்யத்தில் சொன்ன வழியாலே என்றபடி
இன்னம் இருபது படி சரணம் புக்காலும் மறித்து மறித்து சரணம் புகா நிற்கும்

அத்தனை போக்கி உபாயாந்தரம் இல்லையே இவர்க்கு –
வேறு புகல் இல்லையே இவர்க்கு –
இப்படி சரணம் புகுகிறது அவன் பிரசாதத்துக்க்காக இறே –
அது தானும் இதிலே சித்திக்கையாலே –ஏவம் ப்ரகாரத்தாலே -என்கிறார் –

வக்தா –
நெஞ்சுக்கு உள்ளே வேண்டா –
அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல்லே அமையும்

அன்றிக்கே –
ஏவம் வக்தா த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ –
இக் கத்யத்தை அனுசந்திக்கவே
த்வயத்தை அர்த்த அனுசந்தானதுடன் அனுசந்தித்தீர் ஆகிறீர்

இரண்டும் பொருள் ஒன்றே இறே என்னவுமாம் –
அதுக்கு பாசுரம் இதுவாம் இத்தனை இறே –

ஆனால் ஒருகால் அனுசந்தித்தாலும் அமையுமோ என்னில்
சதா –
எப்போதும்
எப்போதும் வேண்டுவான் என் என்னில்
உபாயாந்தரங்களும் நடையாடும் நெஞ்சு ஆகையாலே
அவை புகுராமைக்காக சதா என்கிறது

அன்றிக்கே
இவ் வதிகாரிக்கு பிரகிருதி சம்பந்தமும் பகவத் சம்பந்தமும் இரண்டும் கூடக் கலசி வர்த்திக்கையாலே
பிரகிருதி சம்பந்தம் இதர விஷயங்களிலே மூட்டும்
பகவத் சம்பந்தம் ஸ்வரூப அநுரூப வ்ருத்தியிலே மூட்டும்

இங்கனே இருக்கச் செய்தே இதர விஷயங்களுக்கு அஞ்சி
பகவத் விஷயத்தைப் பற்றினவர் ஆகையாலே
ஏற்கவே அதில் அன்வயம் இல்லை

இனி வ்ருத்தி விசேஷமோ என்றால் ஒரு தேச விசேஷத்திலே யாகையாலே
சால விப்ரக்ருஷ்டமாய் இருந்தது
இனி இருக்கும் நாளைக்கு போது போக்கு இதுவே இருக்கும் ஆகையாலே
எப்போதும் -என்கிறது -என்றுமாம் –

ஆகிலும் இவ் விருப்புக்கு அவஸானம் ஏதோ அபேஷையிலே
யாவச் சரீரபாதம் -என்கிறார் -பெரிய பெருமாள் –
இவர் தாம் இப்படி கேட்கிறது உபாயாந்தர பரிக்ரஹம் பண்ணி அது முடிந்த அளவிலேயோ
அன்றியே
உபாசனம் சமாபித்தாலும்
பிராயச பாப காரித்வாத் ம்ருதயோருத் விஜதே ஜன -க்ருதக்ருத்யா ப்ரதீஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதம் -என்று
தன்னளவும் பார்த்து இருக்க வேண்டும்படியான கர்ம அவஸாநத்திலேயோ
என்று சங்கித்துக் கேட்கிறார் அல்லர்

உபாயாந்தரத்தில் அன்வயம் இல்லாமையாலும்
அது இன்றிக்கே ஒழிந்தால் எப்போதோ -என்று சம்சயிக்க வேண்டாதே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருவாய் மொழி -9-10-5-என்று
பரமாச்சார்யர் அருளிச் செய்து வைக்கையாலும் –

இனி இப் பிரஸ்னத்துக்கு கருத்து என் என்னில்
ப்ராப்ய த்வரையாலும்
காலம் நெடுகித் தோற்றுகையாலும்
பரிக்ரஹித்த உபாயம் விளம்ப சஹம் அல்லாமையாலும்
கேட்க வேண்டி வரும்

நமக்கு ருசியும் உண்டாய் இருந்தது
ஸ்வீகரித்த உபாயமும் கண் அழிவு அற்று இருந்தால் இனி
இவ் விருப்புக்கு அடி அவன் நினைவாம் அத்தனை ஆகையாலே அவனையே நிர்பந்தித்துக் கேட்கிறார்

அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –யாவத் சரீர பாதம்
இச் சரீரமே அன்றோ விளம்பம் -ஆரம்பித்த கர்மம் எல்லாம் -பிராரப்த கர்மம் எல்லாம் -பார்க்க வேண்டாம் -அது தான் நாளுக்கு நாள் சென்று அன்றோ நிற்கிறது
ஆனால் இருள் தரும் மா ஞாலத்தில் எனக்கு இருப்பு நிஸ் ஸஹம்-இருக்கும்படி கடாஷித்த தேவரீரே
இருப்பிடமும் வகுத்துக் காட்டி அருள  வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்

அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூகமாஸ்வ
உமக்கு உபய விபூதியில் உள்ளாரும் ஒப்பாக மாட்டாதாப் போலே காணும்
பரம பதத்தையும் கால் கடைக் கொண்டு நாம் படுகாடு கிடக்கும் கோயிலுக்கு உபய விபூதியும் ஒப்பாக மாட்டாதபடி
வடிவுடை வானோர் தலைவன் வண் திருவரங்கன் -திருவாய் மொழி -7-2-10-என்றது இறே

விரோதியான இவ் வுடம்புடனே பகவத் அனுபவம் செய்யப்பட்ட உம்மைப் போலவே ஸம்ஸார விபூதியிலும் கூட்டு அன்றிக்கே நித்ய விபூதியிலும் கூட்டு அன்றிக்கே
இரண்டிலும் வ்யாவ்ருத்தியாய் த்ருதீய விபூதியான கோவிலே போர வஸ்தவ்ய பூமி உமக்கு
அனைத்து உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம்

ஸூகமாஸ்ஸ்வ
முக்த ப்ராயர் ஆகையாலே சுகமே வர்த்திக்கக் குறை இல்லை இறே

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -13-14-15-16- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 22, 2014

சூரணை – -13- அவதாரிகை –

கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இறே –
அவ்வளவும் போறாதே இவருக்கு –

பரம புருஷார்த்த லஷண மோஷ ரூப கைங்கர்ய சித்தியும் வேணுமே
இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யத்தோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை
அதினுடைய ஸித்தி அர்த்தமாக
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபேஷிக்கிறார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய

தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு

ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்

அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –

அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இறே அவனுக்கு உள்ள ஏற்றம் –
நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –
ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் ஸ்நேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –

ப்ரியோ ஹி ஜ்ஞானிந அத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யர்த்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த

ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று

அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி-தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-

அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயாநாம் அபஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இறே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இறே அவன் ப்ரேமம் இருப்பது-

(பெரியாழ்வார் போல்வாருடைய -அஸ்தான பயம்–அதி சங்கை -பயத்தைப் போக்க அவனாலும் இயலாதே-உற்ற நல் நோய் இது தேறினோம்)

————-

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷

பரதர்ஷப அர்ஜுந–பரத குலத்தில் உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனனே
ஆர்த்த-செல்வம் இழந்து வருந்துமவனும்
அரர்தார்தீ–புதிதாக செல்வம் பெற விரும்புபவனும்
ஜிஜ்ஞாஸு-ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புமவனும்
ஜ்ஞாநீ ச -ஸ்வரூப ஞானம் யுடையபவனுமாகிய
ஸுக்ருதிநோ.–புண்ய சாலிகளான
சதுர்விதா ஜநா -நாலு வகைப்பட்ட ஜனங்கள்
மாம்-என்னை
பஜந்தே –உபாஸிக்கிறார்கள் –

பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்

நான்கு விதம் -ஸூ ஹ்ருதம் இருந்தால் தான் ஆஸ்ரயிப்பார்கள் -புண்ய பலத்தால் -பார பக்ஷம் இல்லையே
வைஷம்யம் நைர்க்ருண்யம் ஸா பேக்ஷத்வாத் இல்லாதவன் –
பரத குலத்தில் உயர்ந்தவன் நீ -இங்கும் நால்வரில் உயர்ந்த வகையில் வர வேண்டாமோ –
ஆர்த்தர் –தொலைத்த ஐஸ்வர்யம் கேட்டும்
அர்த்தார்த்தி –புதிதாக ஐஸ்வர்யம் கேட்டும் —
இருவரும் அசித் அனுபவம் கண்டு கேட்டு -இத்யாதி-சிற்றின்பம் -செல்வ அனுபவம் —

அண்டக் குலத்துக்கு அதிபதி-புதிய ஐஸ்வர்ய காமன் பாசுரம் -அசுரர் இராக்கதர் இண்டைக் குலத்தை எடுத்துக் கலைந்த இருடீகேசன் -இழந்த ஐஸ்வர்யம் மீண்டு பெற பாசுரம்
ஜிஞ்ஞாசூ –ஆத்மானுபவம் -கேவலர்-ஜீவாத்மாவே தத்வம் என்று இருப்பவன் –

(அபர்யவஸ்யந்–தேசிகன் -மர நிழலில் தங்கி விட்டுப் போவது -கைவல்யன் நிலை -அக்காரக் கனியை சேவிக்க கால தாமதம்

இங்கேயே தங்கி விடுகிறான் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்-8 அத்யாயம் இத்தை மேலே விவரிக்கும்)
ஞானி –பகவத் லாபார்த்தி –
நால்வரும் அவன் இடமே சரண் அடைந்து பெற வேன்டும் -நால்வரையும் எனக்கு பிடிக்கும் —
இதற்க்காகவாவது வருகிறார்கள் -கிரமத்தில் திருத்தி-திருப்பி – மேலே வர வாய்ப்பு உண்டே-
எழுவார் -விடை கொள்வார் -ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –

அர்ஜுனன் வெள்ளை மனம் படைத்தவன் நீ ஞானியாகவே இருக்க வேண்டுமே

அபிமத சாதனம் என்றே அறிந்தவர் மூவரும் -அபிமதம் அவனே என்று அறியாமல் – இழந்தே போகிறார்கள்

ப்ராப்யத்திலே கண் வைக்க வேண்டும் உடையவர் சரம வார்த்தை-

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –ஸ்ரீ முதல் திருவந்தாதி 26-

——————

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம்  அஹம்  ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷

தேஷாம் -அந்த நால்வருக்குள்
நித்ய யுக்த-என்னோடே எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -எப்போதும் இருக்க ஆசை கொண்டவனாய்
ஏக பக்திர்–என் ஒருவன் இடம் மட்டுமே ஈடுபாட்டை யுடையவனாய் இருப்பவனாய்
ஜ்ஞாநீ -ஞானியானவன்
விஸிஷ்யதே–சிறப்புறுகிறான்
அஹம் -நான்
ஜ்ஞாநிந-அந்த ஞானிக்கு
அத்யர்தம் ப்ரியோ -சொல்ல ஒண்ணாத அளவுக்கு பிரியனானவன்
ஸ ச -அவனும்
மம ப்ரிய৷—எனக்கு இனியவன்

அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்

நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வ சக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
என் ஆசையும் உன்னுடைய அதீனம் – என் அவா அறச் சூழ்ந்தாயே –

மாசறு சோதி -மடலூறுதல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் –
பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் –
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -அமரும் காதல் -விலக்காதே –
பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –

நித்ய யுக்தன் சம்சாரத்தில் கிட்டாதே -ஆசைப்படுபவன் -இதுவே போதும் அந்த நிலைக்குப் போக
மிக இனிமை -எனக்கு அவர்கள் போல் இருக்க முடியவில்லையே என்னும் புருஷோத்தமன்
கத்ய த்ரயத்தில் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஓன்று –

ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்

‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]

தன் பெருமையை-12-ஸ்லோகங்களில்
பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் – -13–14-ஸ்லோகங்களில்
இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -15-ஸ்லோகத்தில்
இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும் -16-ஸ்லோகத்தில்
அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று-17-ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்

பிரபுத்தனே ஸ்ரேஷ்டன் இது முதல் மேல் 14 ஸ்லோகங்களும் -இதுவே சொல்ல வந்தது -கீழ் எல்லாம் முன்னுரை

துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
என் நல் நெஞ்சம் தன்னை விலக்க இயலாதே –
சிந்தனையை -பரம ப்ராப்யம் -தவ நெறியை -பிராபகம் -திருமாலை -மிதுனம் உத்தேச்யம் -இதுவே நாலாயிரத்தில் ஸப்த த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக தர்சனாய் -அதிகாரி ஸ்வரூபத்துடன் ப்ராப்ய ப்ராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
தேஷாம் ஞானி -அவர்களுக்குள் இங்கு -கீழ் பஞ்சமி அர்த்தே சஷ்ட்டி இங்கு நிர்த்தாரணே சஷ்ட்டி

அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் –

அத்தனை ப்ரீதி சர்வசக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே -அதனில் பெரிய என் அவா அன்றோ

——————————————————–

உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்

உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –

அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்

ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –

ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈஸ்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ –என்ன –

மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –

ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுத்தமான கதியான என்னை –
அனுத்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே

யுக்தாத்மா
கூடினவனாய்

ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இறே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்

————-

உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |– ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவ அநுத்தமாம் க₃திம் ||—7-18- ஸர்வ ஏவைதே–ஏதே ஸர்வ ஏவ –இவர்கள் அனைவருமே உதா₄ராஸ் –வண்மை மிக்கவர்கள் ஞாநீத் து -ஞானியோ என்னில் வாத்மைவ மே -மே ஆத்ம ஏவ -எனக்குத் தாரகனாய் இருப்பவன் என்று மே மதம் |–என் எண்ணம் யுக்தாத்மா–என்னோடே சேர விரும்புகின்ற ஸ -அவன் மாம் ஏவ –என்னையே ஆஸ்தி₂தஸ் ஸஹி –அநுத்தமாம் க₃திம் ||-ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டு உள்ளான் அன்றோ –

இவர்கள் அனைவருமே வண்மை மிக்கவர்கள் -ஞானியோ என்னில் எனக்குத் தாரகமாகவே இருப்பவன் என்று என் சித்தாந்தம் -என்னோடு சேர விரும்புகின்ற அவன் என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளான் அன்றோ

ஏதெ ஸர்வ ஏவ உதா₄ரா: – இவர்கள் எல்லாருமே வள்ளல்கள், -வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் சீர் கண்ணன்” ஞாநீ து (மே) ஆத்மா ஏவ – ஞானியோவெனில் (எனக்கு) ஆத்மாவாகவே, தாரகனாகவே இருப்பவன்.(என்று) மே மதம் – என்னுடைய சித்தாந்தம்- வேதாந்தம் வேறே சொல்லட்டும் –

என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் -போலே -என்னதுன்னதாவியில் அறிவார் உயிரானாய் அவன் மதம் தோற்றும்- இவர்கள் பிரார்திக்கவே நான் கொடுப்பவன் ஆனேன் -அதனால் வள்ளல் -புருஷோத்தமன் வாக்யம் அன்றோ ஞானி சப்தமாக இருந்தாலும் பக்தனையே சொல்கிறான் -பக்தி ரூபாபன்ன ஞானம் – யுக்தாத்மா ஸ: மாம் ஏவ – என்னோடு சேர விரும்புகிற அவன் என்னையே, மாமேவாநுத்தமாம் க₃திம் ஆஸ்தி₂த: ஹி – ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ.- பசுவும் கன்றும் போல பகவானும் பக்தனும்.-“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”

அறிவார் உயிர் -மே மதம் -700 ஸ்லோகங்களில் -இதில் தான் -என்னதுன்னவாவி -மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –ஆச்சார்ய ஹிருதயம் -179-

நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இலேன் -உன் தன்னோடு உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாதே –

அறிவார்களைத் தனக்கு உயிராகக் கொள்வான் -அறிவார் உயிரானாய் என்று -அவன் மதம் தோன்றும்

தாரக தார்ய பாவம் அவன் நமக்கு -இங்கு சார்ந்து இருக்கை -விட்டுப் பிரிந்தால் தரிக்ககில்லா மார்த்வம்-அன்று எனக்கு பட்டினி நாளே

ஸ்வரூப ஐக்யம் சொல்ல வந்தால் மற்ற மூவர் இடம் இல்லாததால் அத்வைதம் ஸித்திக்காதே

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -பற்று இல் -அகத்திலன் -உற்றவன் -நம்மை முற்றுமாகக் கொண்டவன் -நேர் எதிராக இரண்டு வியாக்கியானங்கள் இதுக்கு உண்டே

————————————————————————————-

பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப

பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-

ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்

மாம் –
என்னை –

வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக

ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி

ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –

இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –

ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் (தெளி விசும்பு திருநாட்டில் உள்ள நித்ய ஸூரிகளும்)உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –

நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது காண் -என்கிறான்

————

ந அல்ப ஸஂக்யா ஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து(அந்தே -ஜென்மத்தின் அந்தம் மரணத்திலா -இல்லை -பிரதிபத்தி வைஷித்யம் -துடிப்பு ஏற்பட பிரதிபந்தகங்கள் ஒழிய வேண்டுமே -அறிவு முதிர முதிர இந்த நிலை வரும்-ஞானீ ஞானவான் ஆகும் முடிவில் என்றவாறு -அவன் இடம் ஓன்று பெற்றுப் போகாமல் அவனே வேண்டும் என்று இருப்பவன் -ப்ராரப்தம் முடிந்து தான் இவனுக்கு பேறு -விளம்ப பலம் -ப்ரபன்னனுக்கு அது இல்லையே )

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |– வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-

ப₄ஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல புண்ணியப் பிறப்புகள் கழிந்த பின் ஞாநவாந் –அறிவு முதிரப் பெற்ற ஞானியானவன் வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-வாஸுதே₃வனே -எனக்குப் பரம பிராப்யமாகவும் பிராபகனாகவும் தாரகம் போஷகம் போக்யம் முதலாக எல்லாமுமாகவும் இருக்கிறான் என்று எண்ணி மாம் ப்ரபத்யந்தே |–என்னை சரண் அடைகிறான் ஸ -அவன் மஹாத்மா –விசாலமான நெஞ்சை யுடையவன் ஆவான் ஸுது₃ர்லப₄ ||-இவ்வுலகில் எனக்கு மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்

பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் – வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் – அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –

கீழ் சொல்லிய ஞானீ தான் ஞானவான் -அவனது பக்தி முற்றிய நிலை இது-மஹா மனம் படைத்தவன் –

ஸூலபன் -ஐஸ்வர்யார்த்திகள் நிறையே கிடைக்குமே கைவல்யார்த்திகள் ஸூ ஸூலபன் – வாழாட் பட்டு வல்லீரேல் -துர்லபன் ஸூதுர்லப தமம் -அதுக்கும் மேல் அவனே எல்லாம் -அவன் ஆனந்தமே பிரதானம்-மாம் வேத்தி தத்வத கீழ் சொல்லிய நிலை –

திருக்கோளூருக்கு என் ஜீவனத்தையும் கொண்டு போக வேண்டுமோ -முகத்தை கழற்றி வைத்து விட்டுப் போகக் கூடாதோ

எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் – நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர். பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் – வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.- எல்லா வித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் – பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும் “வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே – கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–

பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே –

அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ-கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை

பரமமான ப்ராப்யம் பிராபகம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே

மஹாத்மா மஹா மநா -ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே -முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே-என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன் -விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா

கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான்-

—————————————

இதி ஸ்லோக த்ரயோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி

ஸ்லோக த்ரயோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –

——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா.–-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வந் அந்யயா.– சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான த்ரயோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞாபரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா து அநந்யயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப்தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –

———-

புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.– யஸ்ய அந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

பார்த்த –குந்தீ புத்ரனே பூதாநி–எல்லாப் பொருள்களும் யஸ்ய-எந்தப் பரம புருஷனுடைய அந்தஸ்தாநி –உள்ளே இருக்கின்றனவோ யேந -எவனால் ஸர்வமிதம் -இவை அனைத்தும் ததம்–வியாபிக்கப்பட்டுள்ளதோ புருஷ ஸ பர து -அந்தப் பரம புருஷனோ என்னில் பக்த்யா அநந்யயா.–வேறு பயன் கருதாத பக்தியினால் லப்யஸ்–அடையத் தக்கவன்

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ – எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில் வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்

எவனுக்குள்ளே எல்லாம் வைக்கப்பட்டு -பூதங்களால் வியாபிக்கப்பட்ட -பர ப்ரஹ்மம் பக்தியால் -அநந்ய -ஆஸ்ரயம் -நியமனம் இரண்டும் நாராயணார்த்தம் – பூர்ணத்வத்த புருஷ -புரு சனா பவது கொடுத்து -பூர்ணன் -ஹிருதய கமல ஆத்ம பட்டணம் நிவாஸன் சூத்ர மணி போலே அனைத்தும் தன்னாலே –அநந்ய பக்தியால் அவனை அடையலாம் –

புருஷன் -நான்கு அர்த்தங்கள் 1-பூரி சேத உடலுக்குள் உறைபவன் 2-அனைவருக்கும் முன்னால் இருப்பவன் 3-பூர்ணம் 4-பஹு ச நோதி -வள்ளல் இவனே பரம புருஷன்

அர்ச்சிராதி கதி மூலம் -பஞ்சாக்கினி வித்யையில் சொல்லிய படி – தத் க்ருதி நியாயம் -ப்ரீதி காரித கைங்கர்யம் நித்தியமாக அனுபவிக்கப் பெற்று சாயுஜ்யம் -அடைகிறான் –

நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் – எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்

பூர்ணத்வாத் புருஷ -கொடுப்பவன் -ஆத்மாவாகிய பட்டணத்தில் சயனம் -சனாதனம் -முதலிய அர்த்தங்கள் உண்டே

பரிவதில் ஈசனைப் பாடி –புகை பூவே -மதுவார் -பொருள் படி அந்தாதி -எதுவே என் பணி என்னாது -அதுவே ஆட்ச்செய்யுமீடே -ஸூ ஆராதத்வம்-1-6-

————–

சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ

இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும்
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே உபாய தயா அல்ல –

அத் தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பர பக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப் பாகம் அபூர்வ தர்சனத்திலே உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்கிறார் –

புதிதாக அறிந்து கொண்டு -மேல் ஆசை கொண்டு -மேல் அடைந்து அனுபவித்து -ஞான தர்சன பிராப்தி -தசைகள் எப்போதுமே வேண்டுமே-

நிரபேஷ ஸ்வீகார உபாயமே ஸரணாகதி -அவனே

————————————————————————————————

சூரணை -16-அவதாரிகை

பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –

இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபேஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை

(எம்மா வீட்டில் புருஷார்த்தம் நிர்ணயம்
ஒழிவில் காலத்தில் புருஷார்த்த பிரார்த்தனை போல் இங்கும்)

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
க்ருத பரி பூர்ண
அநவரத நித்ய விசத தம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கிங்கரோ பவாநி

பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி க்ருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான

பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –

அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –

நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை-

விசத தம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் (மிக மிகத் தெளிவான)அனுபவம் –

அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரஸ்யமாய் இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்

ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தைகளிலும் அனுகூலமாய் இருக்கிற –

அசேஷ சேஷைதைக ரதி ரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு

நித்ய கிங்கரோ பவாநி
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –

அன்றிக்கே
நித்ய சப்தம் புநராவ்ருத்தி ரஹிதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -10-11-12- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 22, 2014

சூரணை -10 -அவதாரிகை –
ஆக முதல் சூரணை யிலே ப்ராப்ய ருசிக்கும் பிராபக விவசாயத்துக்கும் ஆகப் பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கு
இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே பெற்று
அநந்தரம் -ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான உபய விபூதி நாதத்வம் சொல்லி
அநந்தரம் ஆஸ்ரயிக்கைக்குத் துணையான சீலாதி குணங்களை முன்னிட்டு பிராட்டி புருஷகாரமாகத் தாம் சரணம் புக்கு
அநந்தரம் பூர்வர்கள் உடைய ப்ரக்ரியையாலே சரணம் புக்கு
அநந்தரம் இதிஹாச பிரக்ரியை யாலே சரணம் புக்கு
அநந்தரம் –கீழ் விட்டவை யடைய ஈஸ்வரனேயாகப் பற்றி
இதுதான் என்னளவே யன்று சகல சேதனர்க்கும் ஒக்கும் -என்று கீழ் பண்ணின பிரபத்திக்கு ஷாமணம் பண்ணினார்

பூர்வர்கள் உடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே யாகிலும்
அவர்கள் பாசுரத்தை முன்னிடவே ஈஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாம் என்று பார்த்து
அவர்கள் பாசுரத்தாலே சரணம் புகுந்தார் –

அதவா
சக்ருதேவ பிரபன்னாய-என்று சக்ருத் பிரபத்திக்கு கார்யம் செய்கைக்கு ஈஸ்வரன் சமைந்து நிற்க
ப்ராப்ய த்வராதிசயத்தாலும்- இது ஒழியச் செல்லாமையாலும்-
யார் பாசுரத்துக்கு ஈஸ்வரன் இரங்கும் என்று அறியாதே –பஹூ முகமாக பிரபத்தி பண்ணினார்

ஆக இவ்வளவாலும் பூர்வ கண்டார்த்தத்தை அனுசந்தித்தாராய் நின்றார் –

இனி உத்தர கண்டார்த்தத்தை அருளிச் செய்கிறார்

அதில் அநிஷ்ட நிவ்ருத்தி யுண்டானால் அல்லது இஷ்ட ப்ராப்தி கிடையாமையாலே
முந்துற –நமஸ் சப்தார்த்தை- அருளிச் செய்கிறார் –

அது தனக்கு தேஹாத்மாபி மானம் தொடக்கமாக
கைங்கர்யத்தில் மமதா புத்தி ஈறாக
நடுவுள்ள விரோதியைப் போக்கித் தர வேணும் என்று இறே அர்த்தமாக நிர்வஹித்துப் போருவது-
அது தான் சகல கர்ம ஷயத்தாலே யாய்த்து பிறப்பது –
ஆகையாலே முந்துறக் கர்மத்தை அருளிச் செய்கிறார்

நம்மாழ்வார் -பொய்ந் நின்ற ஜ்ஞானமும் -திரு விருத்தம் -1-என்று
அவித்யயை முதலாக அருளிச் செய்தார்

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–)

இவர் கர்மத்துக்கு அடி அஞ்ஞானம் -அஞ்ஞானத்துக்கு அடி தேக சம்பந்தம் -என்று
கர்மத்தை முந்துற அருளிச் செய்கிறார்

ஆழ்வாருக்கு ஸ்வ அனுபவமாய் இருக்கை யாலே தேஹாத்மா அபிமான த்வாரா நின்று
அஹங்காரம் நலிகிற ப்ரகாரத்தாலே அவித்யை முன்னாக அருளிச் செய்தார்

இவர்க்கு ஸ்வ அனுபவமாய் இருக்கச் செய்தே தர்சனத்துக்கு
கர்ம ப்ராதன்யம் சொல்லிப் போருவது ஒரு நிர்பந்தம் உண்டு ஆகையாலே அதினுடைய ஸ்திதிக்கு உறுப்பாகவும்
மாயாவாதி -அவித்யா நிவ்ருத்தி மோஷம் -என்று அவித்யயை பிரதானமாக சொல்லுகையாலே
அதினுடைய ப்ரதிஷேப அர்த்தமாகவும்
இவர் கர்மம் முதலாக அருளிச் செய்கிறார்

அவர் காரண பரம்பரையை அருளிச் செய்தார்
இவர் கார்ய பரம்பரையை அருளிச் செய்கிறார்-

மநோ வாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த
அநந்த அக்ருத்ய கரண
கருத்ய அகரண
பகவத் அபசார
பாகவத அபசார
அசஹ்ய அபசார ரூப
நாநாவித அநந்த அபசாரான்
ஆரப்த கார்யான்
அநாரப்த கார்யான்
கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
சர்வான்
அசேஷத ஷமஸ்வ-

மநோ வாக் காயைர் –

கர்மத்துக்குப் பரிகரம் ஏது என்று பார்த்தால் –மநோ- வாக் -காயங்கள் –
இவை தான் ஈஸ்வரனை லபிக்கைக்கும்
அவனை இழந்து அனர்த்தப் படுகைக்கும்
உடலாய் இருக்கும் –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ
பந்தாப விஷயா சங்கி முக்த்யை நிர் விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்று இறே இருப்பது –

அநாதி கால ப்ரவ்ருத்த
அநாதி காலம் பண்ணிப் போந்த

அநந்த –
இவை தான் அளவிறந்து இருக்கை –

இவை தான் இருக்கும் படி என் என்னில் –
அக்ருத்ய கரண-இது என்ன –
கருத்ய அகரண -இது என்ன –
பகவத் அபசார -இது என்ன –
பாகவத அபசார -இது என்ன –
அசஹ்ய அபசார -இது என்ன –
ரூப நாநாவித -இப்படி பஹூ விதமாய்
அநந்த அபசாரான்-இவற்றில் ஒரோ விதமே அனநதமாய்
இப்படி உள்ளவை தான் அசங்க்யாதமாய் இருக்கை –
இது இறே அபசாரத்தின் உடைய அநல்பதை இருந்தபடி –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேபி அநாஸ்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துர் இஹ ஷணார்த்தே -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -60-என்று
நூறாயிரம் ப்ரஹ்ம கல்பம் கூடினாலும் அனுபவித்து முடிக்க ஒண்ணாத பாபத்தை இறே
இச் சேதனன் ஒரு ஷணார்த்தத்திலே பண்ணுவது

(யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேபி அநாஸ்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துர் இஹ க்ஷணார்த்தே
ஏவம் சதா சகல ஜென்மஸூ சாபராதம்
ஷாம்யஸி அஹோ ததபிஸந்தி விராம மாத்ராத் –61-

எம்பெருமானே யாதொரு பாபமானது லக்ஷக்கணக்கான ப்ரஹ்ம கல்பங்கள் அனுபவித்தாலும் மாளாததோ
அப்படிப்பட்ட பாபத்தை சேதனன் இங்கு அரை நொடியில் செய்கிறான்
இப்படி எல்லா பிறப்புகளிலும் எப்போதும் குற்றவாளனாகவே இரா நின்ற சேதனனை –
இனி நாம் குற்றம் செய்யலாகாது என்று கை ஒழிந்த அளவையே கொண்டு க்ஷமித்து அருளா நின்றீர் —
ஆச்சர்யமான குணம் இது –
ஷமா குணத்தின் பெருமையைப் பேசுகிறார் இதில் –)

ஆரப்த கார்யான்-
பல பிரதானத்தில் ஒருப் பட்டவை(ப்ராரப்த கர்மாக்கள்)

அநாரப்த கார்யான் –
பிரபல கர்ம திரோதாநத்தாலே அவசர ப்ரதீஷம் ஆனவை -(ஸஞ்சித கர்மாக்கள்)

கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
கால த்ரயத்தில் உள்ளவையும்

சர்வான் –
இவை தான் சிலவற்றைச் சொல்லிற்று இத்தனை
என்னால் சொல்லி முடிக்க ஒண்ணாத எல்லாப் பாபங்களையும் –

அசேஷத ஷமஸ்வ –
ச வாசனமாகப் பொறுத்து அருள வேணும்

(ஸ்ருதி பிரகாசர்
வைதிக கர்ம காரியத்துக்கு யோக்யதை தடுப்பவையாய் இருப்பவை -அநர்ஹதா ஆபாதகத்வம்
ப்ரத்யாவாயம்–நேராக பாபங்கள் தருமவை
வாஸனா ஜனகத்வம் மூன்று வகைகள்-இவற்றைப் போக்கி அருள வேண்டும் என்கிறார்)

அக்ருத்ய கரணம் ஆவது –
சாஸ்திர விருத்தமானவற்றை அனுஷ்டிக்கை
க்ருத்ய அகரணமாவது-
சாஸ்திர விஹிதமானவற்றை அனுஷ்டியாது ஒழிகை
விதுஷ அதிக்ரமே தண்ட பூயஸ்த்வம்-ஞானி விதியை மீறினால் அதிக தண்டனை பெறுவான் என்றும்
சக்த்ஸ்ய அதீவ தோஷவத் -சக்தனாய் இருக்க சாஸ்திர விதியை அனுஷ்டியாது ஒழிந்தால் தோஷம் கனத்து இருக்கும் இறே
பகவத் அபசாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமாம் அவற்றை விச்சேதம் பண்ணுகை
அதாவது -அவற்றை தான் வாங்கி ஜீவித்தல்
பிறர்க்கு உபகரித்தல்
அத்தாலே ஜீவிப்பார் பக்கலிலே யாசிதமாயாதல் அயாசிதமாயாதல் பரிக்ரஹித்து ஜீவித்தலும்
அவதாரங்களில் சஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சாவதாரத்தில் உபாதான ஸ்ம்ருதியும்
ஈஸ்வரன் பக்கல் தேவதாந்தரந்களோடு சஜாதீய புத்தியும்
அவனதான வஸ்துக்களில் மமதா புத்தியும் –
இதுவும் அக்ருத்ய கரணங்களில் ஒன்றாய் இருக்க பிரிய எடுக்க வேண்டிற்று-இதனுடைய க்ரௌர்யா திசயம் இருந்த படி
பாகவத அபசாரம் ஆவது
அர்த்த காம அபிமான நிமித்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடு விவாதம் பண்ணுகையும்
ஜன்ம வ்ருத்தாதிகளால் அவர்களை குறைய நினைக்கையும்
விகல கரணர் பக்கல் ஷேபோக்தி பண்ணுகையும்
அசஹ்ய அபசாரம் ஆவது
நிர் நிபந்தநமாக பகவத் பாகவத சம்ருத்தியை கண்டால் பொறுக்க மாட்டாதே
முட்டிக் கொள்ளுதல் நான்று கொள்ளுதல் செய்கை
ஸ்ரீ வைஷ்ணவன் என்னும் இதுவே ஹேதுவாக ப்ரத்வேஷம் பண்ணுகை

புத்திர வாத்சல்யம் செல்லா நிற்க திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக அக்னி தாஹம் முதலான ஹிம்சையைப் பண்ணினான் இறே ஒருவன்

சிசூபாலாதிகள் பண்ணினவை பகவத அபசாரம்
ராவணாதிகள் பிராட்டி போல்வார் விஷயத்தில் பண்ணினவை பாகவத அபசாரம்
ஹிரண்யாதிகள் ஸ்ரீ ப்ரஹ்லாதாதிகள் விஷயத்தில் பண்ணினவை அசஹ்ய அபசாரம்-

——————————————————————————–

சூர்ணிகை -11- அவதாரிகை –
அநாதி கால பிரவ்ருத்த -இத்யாதி
கீழ் பொல்லா ஒழுக்கும் -என்கிற படியே அக்ருத்ய கரணாதி அபராதங்களைப்
பொறுத்து அருள வேணும் -என்றார்
இங்கு -அதுக்கு அடியான விபரீத வ்ருத்தத்தால் உண்டான அபராதத்தை பொறுத்து அருள வேணும் -என்கிறார்
வ்ருத்த ஹாநி கீழே சொல்லிற்று இல்லையோ வென்னில்
அங்கு அக்ருத்ய கரண க்ருத்ய அகரணம் என்று சாஸ்திர விருத்தம் ஆனவற்றை அனுஷ்டிக்கையும்
விஹித அனுஷ்டானம் பண்ணாது ஒழிகையும் ஆகிற வ்ருத்த ஹாநி சொல்லிற்று
வேதாந்த விஷய ஜ்ஞான அபாவத்தால் வரும் சில வ்ருத்த ஹானிகள் உண்டு
அவற்றை யாய்த்து இங்கு சொல்லுகிறது
ஆகையால் புநர் உக்தி தோஷம் இல்லை –

(கீழ் கர்ம காண்ட ஞானம் இல்லாமல் செய்த பொல்லா ஒழுக்கம்
இங்கு உத்தர காண்ட -ப்ரஹ்ம காண்ட ஞானம் இல்லாமல் செய்த ஒழுக்கம்
பொய் நின்ற ஞானத்தால் வந்த பொல்லா ஒழுக்கம் இவை இரண்டும் அன்றோ -)

அநாதி கால ப்ரவ்ருத்தம்
விபரீத ஜ்ஞானம்
ஆத்ம விஷயம் க்ருத்சன ஜகத் விஷயஞ்ச
விபரீத விருத்தம் ச
அசேஷ விஷயம்
அத்யாபி வர்த்தமானம்
வர்த்திஷ்ய மாணாஞ்ச
சர்வம் ஷமஸ்வ

அநாதி கால ப்ரவ்ருத்தம்
அநாதி காலம் பண்ணிப் போந்த

விபரீத ஜ்ஞானம்
இது ஸ்வரூப ஸ்பர்சி யன்று
ஆனால் ஒரு நாள் அளவிலே வந்தேறிற்றோ வென்னில்
அங்கன் சொல்ல ஒண்ணாது –-அநாதி-என்னும் இத்தனை –

ஸ்வரூப ஸ்பர்சி என்னலாம் படி இறே இதின் அநாதித்வம் இருப்பது –
பகவத் பிரசாதத்தாலே ஒரு நாள் வரையிலே கழியக் காண்கையாலே வந்தேறி என்று அறியும் இத்தனை-

விபரீத ஜ்ஞானம் ஆவது
ஓர் அர்த்தத்தில் அர்த்தாந்தர புத்தி பண்ணுகை –
அதாவது ரஜ்ஜூவிலே சர்ப்ப புத்தியும்
சூக்தியிலே ரஜத புத்தியும் .-

இதுக்கு விஷயம் ஏது என்னில்
ஆத்ம விஷயம் க்ருத்சன ஜகத் விஷயஞ்ச –
ஆத்ம விஷயமாகவும் க்ருத்சன ஜகத் விஷயமாகவும்
ஆத்ம விஷயமான விபரீத ஜ்ஞானம் ஆவது —தேகாத்ம அபிமானம்
க்ருத்சன ஜகத் விஷயமான விபரீத ஜ்ஞானம் ஆவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களில் தத் தத் புத்தி பண்ணுகை –

விபரீத விருத்தம் ச –
அதாவது விருத்தமாக அனுஷ்டிக்கை
க்ருத்சன ஜகத் விஷயமான விபரீத வ்ருத்தம் ஆவது
ஒருவன் தனக்கு ஓர் அபகாரம் பண்ணினால் ஸ்வ கர்ம பலம் என்றும்
தத் தத் கர்ம அனுகுணமாக ஈஸ்வரன் ப்ரவர்த்தகன் என்றும் நினையாதே
நிமித்த மாத்ரமான சேதனனை ஸ்வதந்த்ரனாக புத்தி பண்ணி அவன் செய்தான் என்று அவனுக்கு அபசாரம் செய்கை-
ஆத்ம விஷயமான விபரீத வ்ருத்தம் ஆவது –
பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்து தான் பிரவ்ர்த்திக்கை –

அசேஷ விஷயம் –
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களை அபேஷிக்கையும்
இப்படி சர்வ விஷயமாகவும் முன்பு செய்தவற்றையும் –

அத்யாபி வர்த்தமானம் –
இப்போது செய்கிறவற்றையும்

வர்த்திஷ்ய மாணாஞ்ச –
மேலே செய்யப் புகுகிற வற்றையும்

சர்வம் ஷமஸ்வ
அஞ்ஞன் ஆகையால் என்னால் அறிந்து தலைக் கட்ட ஒண்ணாது
சர்வஞ்ஞரான தேவர் அறிந்த எல்லா வற்றையும் பொறுத்து அருள வேணும் –

———————————————————————————————-

சூரணை -12-அவதாரிகை –

கீழ் கர்மத்தையும் சொல்லி
அதுக்கடியான அஞ்ஞானத்தையும் சொல்லி நின்றார் –
இவ் வஞ்ஞானத்துக்கு அடியான தேக சம்பந்தத்தை கடத்தி அருள வேணும் என்கிறார் -இங்கு

கீழே –ஷமஸ்வ -என்றார்
இங்கு தாரய-என்கிறார்
இங்கனே வேண்டுவான் என் -என்னில்
கர்மமும் அஞ்ஞானமும் நிக்ரஹ ரூபமாய்க் கொண்டு அவன் திரு உள்ளத்திலே கிடப்பது ஓன்று ஆகையாலே
அவன் ஷமிக்க நசிக்கும் -(புண்ய அபுண்யவ் ஈஸ்வர ப்ரீதியும் கோபமும்)
இவ் வசித்துத் தான் நித்யம் ஆகையாலே நசிக்க என்பது ஓன்று இல்லை –
இனி இதனின்றும் கழலுகையே யாய்த்து உள்ளது
ஆகையால் தாரய-என்கிறார் –
ஈஸ்வர விபூதியை அழிக்க வேணும் என்று அன்று இறே இவருக்கு கருத்து
இதின் நின்றும் தம்மை எடுக்கை இறே உள்ளது
பிரிக்க வென்னுதல் -விடுவிக்க என்னுதல் -செய்யலாவது ஸ்வரூபம் தோற்ற கிடக்கில் இறே
ஸ்வரூபம் நேராக நசித்து தேகமாய் கிடக்கையாலே எடுக்க வேணும் -என்கிறார்

பாலும் நீரும் தன்னிலே கலந்தால் பால் இது நீர் இது என்று பிரித்து காண ஒண்ணாத படியும்
அது ஒரு பதார்த்தத்தின் கைப் பட்ட வாறே சாரமான பாலை க்ரஹித்து ருஜீஷமான நீரைக் கழிக்குமா போலே
ஒரு சர்வ சக்தி பிரித்தல் இல்லையாகில் நசித்தல் போலே காணும் உள்ளது –
தைவீஹ் யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றும்
மாமேவ யே ப்ரபத் யந்தே மாயா மேதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை 7-14—என்றும்
நான் பண்ணின மாயை ஒருவராலும் கடக்க ஒண்ணாது என்றும் -என்னையே பற்றிக் கடக்க வேணும் என்றும்
அருளிச் செய்கையாலே நீயே கடத்தி அருள வேணும் -என்கிறார் –

(தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.– மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

மம -என்னுடையதான ஏஷா -இந்த குண மயீ -முக்குண மயமான மாயா -ப்ரகிருதி தைவீ -தேவனான என்னாலேயே படைக்கப் பட்டதாகையாலே துரத்யயா.–எவராலும் தம் முயற்சியால் மாத்ரம் கடக்க அரிதாய் உள்ளது யே -எவர்கள் மாம் ஏவ -என்னையே ப்ரபத்யந்தே -சரணம் அடைகிறார்களோ தே-அவர்கள் மாயாம் ஏதாம் -இந்த மாயையை தரந்தி -தாண்டுகிறார்கள் –

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே – எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது – எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்)

மதீய அநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்
பகவத் ஸ்வரூப திரோதாந கரீம்
விபரீத ஜ்ஞான ஜநநீம்
ஸ்வ விஷயா யாஸ்ச போக்ய புத்தேர் ஜநநீம்
தேஹேந்த்ரியத்வேன போக்யத்வேன ஸூ சம ரூபேண ச அவஸ்திதாம்
தைவீம் குண மயீம்
மாயம்
தாஸ பூதம்
சரணாக தோஸ்மி தவாஸ்மி தாஸ
இதி வக்தாரம் மாம் தாரய

அநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்
அநாதி காலம் பண்ணிப் போந்த கர்ம பரம்பரையாலே உண்டானதாய் –

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கம் அழுக்கு உடம்பு
இவை சுழலில் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று காரண காரியம் ஆகுமே
ஆகவே ப்ரவாஹம் பத பிரயோகம்)

மதீய-
இது தான் பிறர் உண்டாக்கினது ஓன்று அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஒன்றும் அன்றிக்கே
என்னாலே சம்பாதிக்கப் பட்டது ஓன்று என்கை –

இது செய்யும் கார்யம் என் என்னில்
பகவத் ஸ்வரூப திரோதாந கரீம் –
வகுத்த சேஷியான தேவர் உடைய ஸ்வரூபத்துக்கு திரோதாநத்தைப் பண்ணக் கடவதே
அதாவது -மறைக்கை -என்றபடி –

பகவத் ஸ்வரூபத்தை இது மறைக்கை யாவது என் -என்னில்
ஸ்ரீயபதியாய் -புருஷோத்தமனாய்-சமஸ்த கல்யாண குணாத் மகனாய்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -உபய விபூதி நாதனாய் இறே ஈஸ்வரன் இருப்பது

இப்படி இருக்க -குத்ருஷ்டி முகத்தாலே-நிர்விசேஷ சின் மாத்ரமாய் இருப்பதொரு வஸ்து வுண்டு-அல்லாதவை எல்லாம் அபாரமார்த்தம் -என்னும் மாயாவாதி –

சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றும் உண்டு
அதில் சித் அசித்கள் இரண்டும் ஈஸ்வர சேஷமாய்-
ஈஸ்வரன் அவற்றுக்கு சேஷியாய் இருக்கிறான் அல்லன்
எல்லாம் கூடி ஏக த்ரவ்ய பரிணாமம் -என்னும் பேத அபேத வாதி –

கர்மம் பண்ணுகைக்கு தான் உண்டாகில்
அதின் பலம் புஜிப்பிக்கைக்கு கர்மம் உண்டாகில்
இனி ஈஸ்வர அபேஷை தான் ஏன்
அது கொண்டு ஒரு தேவை இல்லை காண் -என்னும் சாங்க்ய -வைசேஷிகர்கள் –

ஆக இது வாய்த்து மறைக்கை யாவது
இதுக்கு அடி தேக சம்பந்தமாய் இறே இருப்பது –

விபரீத ஜ்ஞான ஜநநீம்-
அதுக்கு மேலே விபரீத ஜ்ஞானத்துக்கும் உத்பாதிகையாய்
விபரீத ஜ்ஞானம் ஆவது -அநாத்மந் யாத்ம புத்தி -அதாவது தேகத்தில் ஆத்ம புத்தி பண்ணுகை
இத்தால் ஸ்வ ஸ்வரூபத்தை மறைத்த படி சொல்லிற்று

ஆக -தன்னையும் மறைத்து
அவனையும் மறைத்தது இறே –
இனி தேகமே இறே உள்ளது –
இத்தால் தன்னரசு நாடாய் விட்டது -என்றபடி –

ஸ்வ விஷயா யாஸ்ச போக்ய புத்தேர் ஜநநீம்
தன்னரசு நாடாய்த்தே
இனி கள்ளர் பள்ளிகள் சாம்ராஜ்யம் பண்ணும் இத்தனை இறே
ஸ்வ கார்ய பூதமான சப்தாதிகளிலே போக்ய  புத்தியைப் பிறப்பிக்குமதாய்-

தேஹேந்த்ரியத்வேன போக்யத்வேன ஸூஷ்ம ரூபேண ச அவஸ்திதாம்-
போக ஆயதநமான தேக ரூபத்தாலும்
போக உபகரணமான இந்திரிய ரூபத்தாலும்
போக்யமான சப்தாதி ரூபத்தாலும்
இத்தனைக்கும் கிழங்கான ஸூஷ்ம பிரகிருதி ரூபத்தாலும்
அவஸ்திதையாய்-நாலு வகைப் பட்ட பரிமாணத்தை வுடைத்தாய்

தைவீம் –
தேவருக்கு க்ரீடா பரிகரமாய்

குண மயீம்-
குண த்ரய ப்ரசுரையுமாய் –
அதாவது -ஸ்வரூபம் தான் குண த்ரய ஆத்மகமுமாய் இருக்காய் –
அதில் சேதனர் பரிக்ரஹித்த சரீரங்கள் தமஸ் பிரசுரமாயும் ரஜஸ் பிரசுரமாயும் சத்வ பிரசுரமாயும் இருக்கும் –

மாயம்
விசித்திர கார்ய கரத்வத்தாலே மாயா சப்த வாஸ்யையாய்
விசித்திர பரிணாமிநி யாகையாலே
ஆச்சரயத்தை உடைத்தாய் –

ஆச்சர்யம் எத்தாலே என்னில்
பஞ்ச பூதங்களும் ஏக த்ரவ்ய பரிமாணங்களாய் இருக்க
அந்யோந்யம் பின்ன ரூபமாயும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களாயும்
சித்ர படம் போலே ஆச்சர்ய கரமாய் இருக்கை

மாம் தாரய-
இப்படிப்பட்ட ப்ரக்ருதியிலே அகப்பட்ட என்னைக் கடப்பித்து அருள வேணும் -என்கிறார் –

நாம் எடுத்து விடுகைக்கு அடியாக நீர் செய்து வைத்தது ஏதேனும் உண்டோ –
என் கொண்டு என்னை எடுத்து விடச் சொல்லுகிறது -என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாக

என் பக்கல் கைம்முதல் உண்டாய்ச் சொல்லுகிறேனோ
அநாதி காலம் துஷ் கர்மங்களைப் பண்ணிப் போந்தேனே யாகிலும்
தேகாத்ம அபிமானியாய் போந்தேனே யாகிலும்-
சப்தாதி விஷய பிரவணனாய்ப் போந்தேனே யாகிலும்
ஸ்வரூபத்தை நிரூபித்த வாறே உனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கும் என்னும் இவ் வளவாலே சொல்லுகிறேன் -என்கிறார் –

(கைகூப்புச் செய்கை -அகிஞ்சனன்
கால்கள் சேர்த்து வைத்து -அநந்ய கதித்வம்)

தாஸ பூதம்-என்று
அது சர்வ சாதாரணம் அன்றோ –
ஆன பின்பு நாம் கார்யம் செய்கைக்கு உம்முடைய பக்கல் ஏதேனும் ஒரு வ்யாவ்ருத்தி வேணுமே -என்ன

சரணாக தோஸ்மி தவாஸ்மி தாஸ இதி வக்தாரம் –
சரணாக தோஸ்மி-என்றும்
தவாஸ்மி-என்றும்
தாஸ-என்றும்
சொன்னேன்

தேவரே உபாயம் என்றும்
உபேயம் என்றும்
நான் தேவருக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும் -சொன்னேன்

(வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—)

வக்தாரம் மாம்
இப்படி உக்தி ப்ரதனாய் இருந்துள்ள என்னை

தாரய-
இவ் வுக்தி மாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு
கடப்பித்து அருள வேணும் –

(இதுவரை நமஸ் அர்த்தம்
அநிஷ்ட நிவ்ருத்தி சொல்லிற்று)

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -6-7-8-9- -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 22, 2014

சூரணை -6-அவதாரிகை –
சரணம் புகும் போது தத் அனுகுணமான பிராப்ய ருசியும் பிராபகத்தில் கனக்க அத்யாவசாயமும் உண்டாக வேண்டுகையாலே
அதினுடைய சித்த்யர்த்தமாக முதல் சூரணையிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கு ‘
இரண்டாம் சூரணையிலே பிராட்டி ப்ரசாதத்தாலே பெற்றார்

அநந்தரம் ஆஸ்ரயணீயனானவன் ஆர் என்னும் அபேஷையிலே
நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டுகையாலே
நார சப்த வாச்யங்களுக்கும்
அயநமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை அகில ஹேய -என்கிற சூரணையிலே சொல்லி
பின்பு நார சப்த வாச்யங்களை நிகில ஜகத் உதய விபவ லய லீல -என்னும் அளவாக
அவனுடைய உபய விபூதி நாதத்வம் சொல்லி

அநந்தரம் அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யவசித்து
இப்படி மேன்மையை உடைத்தான வஸ்துவை நம்மால் கிட்டப் போமோ -என்னும்
அபேஷையிலே
இருந்ததே குடியாக எல்லாருக்கும் கிட்டும் படியான சீலாதிகளை முன்னிட்டு
பிராட்டி புருஷகாரமாக சரணம் புக்கு நின்றார் இவ்வளவால்-

(தூயோமாய் வந்தோம்
அகிஞ்சநமாய் அநந்ய கதியாய் வந்தோம் -இதுவே தூய்மை)

அநந்தரம்
சரணம் புக்கோம் நான் அன்றோ -என்று தம்மை அனுசரித்து(அதிர்த்து -புறக்கணித்து)
பூர்வர்கள் உடைய பிரக்ரியையை முன்னிட்டு சரணம் புகுகிறார்

அநந்தரம் சரணம் புகும் போது
விட வேண்டுவன முன்னாக விட்டு
வகுத்த விஷயத்தைப் பற்ற வேண்டி இருப்பதோர் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே
அது கீழ் இரண்டு இடத்திலும் செய்யாமையாலே
அத்தால் ஏதேனும் குறை யுண்டாகிறதோ என்று – பார்த்து
புராண புருஷர்கள் உடைய சரணாகதி பிரக்ரியையான
இதிஹாச புராண வசனங்களை முன்னிட்டு சரணம் புகுகிறார்

ஆனால் கீழ் செய்யாத வற்றுக்கு குறை உண்டாகிறதோ -என்னில்
குறை வில்லாமையே யன்று
இத்தால் ஏற்றம் உண்டாகிறது -எங்கனே என்னில்
த்வயத்தில் தியாக  பூர்வகமாக ஸ்வீகரிக்க வேண்டிற்றாகில்
சர்வாதிகாரமாக மாட்டாது –
ஆகையால் ஏற்றம் உண்டாகிறது

(கூரத்தாழ்வான் முதலியாண்டான் ஸம்வாதம் -விட்டே பற்ற வேண்டுமானால் நீர் ஒருவரே அதிகாரி–மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கைவிட்டு -இத்யாதி)

பூர்வ புருஷர்கள் உடைய ஹ்ருதயம் வகுத்த விஷயத்தில் ஸ்வரூப அனுரூபமாக சரணாகதியை
பண்ணுமது ஒழிய இவன் விட வேண்டுவது உண்டோ- பற்ற வேண்டுவது உண்டோ- என்று ஆய்த்து இருப்பது

ஈஸ்வர விஷயீ காரத்துக்கு சம்சார பய பீதனாய் கொண்டு திருவடிகளில் சரணம் புகுவதுவே அமையும்

இவர் பிராப்ய ருசி செய்விக்க மாட்டிற்று இல்லாமையாலே ருசி ப்ரேரிக்கச் செய்வர்
ஆகையால் இவர் செய்யாது எல்லாம் குறையாகக் கடவது
இவர் தாம் இதுக்கு அவ் வருகு சரணம் புகக் காணாமையாலே மீண்டார் அத்தனை அல்லது
அமையும் என்று மீண்டார் அல்லர் -ஆகையால் சரணம் புகுகிறார்-

(வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-)

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணிஸ் க்ருஹாணி ச

சர்வ தர்மாம்ஸ் ச சந் த்யஜ்ய சர்வ காமாம்ஸ் ச ச அஷரான் –
லோக விக்ராந்த சரணவ் தே அவ்ரஜம் விபோ

பூர்வார்த்தத்தாலே சேதனரையும்
உத்தரார்த்தத்தாலே அசேதனங்களையும் சொல்லுகிறது

இவைதான் உபாயாந்தர சஹகாரியுமாய் ஸ்வயம் பிரயோஜனம் ஆகையாலே உபேயமுமாய்
இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும்

சர்வ தர்மாம்ஸ் ச –
என்று உபாயாந்தரமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது

சர்வ காமாம்ஸ் ச ச அஷரான் -என்று உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்லுகிறது –

சந்த்யஜ்ய -என்றது சவாசனமாக விட்டு -என்றபடி

சர்வ தர்மாம்ஸ் ச சர்வ காமாம்ஸ் ச -என்று இரண்டையும் கூட எடுத்து விடச் சொல்லுகையாலே
உபேயாந்தரங்கள் ஸ்வரூப நாசகமோபாதி உபாயாந்தரங்களும் ஸ்வரூப நாசகம் என்று கருத்து

இவற்றை ஸ்வரூப நாசகம் என்னலாமோ என்னில்
அவற்றில் ஸ்வயம் பிரயோஜனமாக இழிகையே ஸ்வரூபம்
இத்தை ஒழிந்தது எல்லாம் ஸ்வரூப நாச பர்யாயம்

இவை தான் ஸ்வரூப உஜ்ஜீவனம் ஆகிறது இல்லையோ வென்னில்
இவன் இவை தன்னை சாதனம் ஆக்கினால் போலே- இதுக்கு புறம்பே ஒன்றை
பிரயோஜனம் ஆக்காதே -நம்மையே பிரயோஜனமாகப் பெற்றோமே -என்னும் ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் ஆகிறது

பிரயோஜனாந்தரத்துக்கு மடி ஏற்பாரையும்
உதாரா –கீதை 7-18–என்னுமவன் ஸ்வபாவத்தாலே உஜ்ஜீவனம் ஆகிறது இத்தனை

(உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |– ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவ அநுத்தமாம் க₃திம் ||—7-18- ஸர்வ ஏவைதே–ஏதே ஸர்வ ஏவ –இவர்கள் அனைவருமே உதா₄ராஸ் –வண்மை மிக்கவர்கள் ஞாநீத் து -ஞானியோ என்னில் வாத்மைவ மே -மே ஆத்ம ஏவ -எனக்குத் தாரகனாய் இருப்பவன் என்று மே மதம் |–என் எண்ணம் யுக்தாத்மா–என்னோடே சேர விரும்புகின்ற ஸ -அவன் மாம் ஏவ –என்னையே ஆஸ்தி₂தஸ் ஸஹி –அநுத்தமாம் க₃திம் ||-ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டு உள்ளான் அன்றோ – இவர்கள் அனைவருமே வண்மை மிக்கவர்கள் -ஞானியோ என்னில் எனக்குத் தாரகமாகவே இருப்பவன் என்று என் சித்தாந்தம் -என்னோடு சேர விரும்புகின்ற அவன் என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளான் அன்றோ)

மேல் பற்றப் படும் விஷயம் சொல்லுகிறது —லோக விக்ராந்த சரணவ் சரணம் தே அவ்ரஜம் விபோ –
சீலாதி குண யுக்தனுமாய் -வகுத்த ஸ்வாமியுமாய்-ஜ்ஞான சக்தியாதி குண பூர்ணனுமான
உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றுகிறேன் -என்கிறது –

பிதரம் மாதரம்
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று ஈஸ்வரனோபாதி
மாதா பித்ரு அனுவர்த்தனத்தையும் உபாசன அங்கமாக
சாஸ்திரம் விதிக்கையாலே -உபாயாந்தர சஹகாரிகளுமாய்
உள்ளது அனையும் அனுவர்த்தித்து விடுகை அன்றிக்கே இவர்கள் உடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே
ஸ்வயம் பிரயோஜனமுமாய் இருப்பார்கள்

தாரான் –
ஸ்திரீயும் சஹ தர்ம சாரிணி யாகையாலே உபாயாந்தர சஹ காரிணியுமாய்
அபிமத விஷயம் ஆகையாலே உபேயாந்தர்ப்பூதையுமாய் இருக்கும் –

புத்ரான் –
புத்திர ஹீனனான போது புத் என்கிற நரக தர்சனம் பண்ண வேண்டுகையாலே
புத்திர உத்பாதனம் புன்நாம் நோ நரகாத் த்ராயத இதி புத்திர -என்கிறபடியே
அந்த நரக தர்சனத்துக்கு அடியான பாப விமோசன ஹேதுவாகிற முகத்தாலே உபாயாந்தர சஹகாரியுமாய்
அவ்வளவு அன்றிக்கே தத் வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்

பந்தூன்
அவர்கள் ஆகிறார் -இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழி நடத்துமவர்கள் ஆகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய்
இன்ன பெரும் குடிப் பாட்டிலே பிறந்தான் என்கிற செருக்காலே உபேய பூதருமாய் இருப்பார்கள்

சகீன்
தோழனும் இவனுக்கு ஹிதைஷியாய் ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கையாலே உபாயாந்தர சஹகாரியுமாய்
அபிமதன் ஆகையாலே உபேய பூதனுமாய் இருக்கும்

குரூன்
அவர்கள் ஆகிறார் -பகவத் ப்ராப்தி யாகிற உபேயத்தைக் குறித்து உபாயாந்தரங்களை உபதேசித்தும்
உபேயாந்தரங்களை குறித்து உபாயாந்தரங்களை உபதேசித்தும் போருகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய் -ஹித பரர் ஆகையாலே உபேய பூதருமாய் இருப்பர்

ரத்னாநீ-இத்யாதி
ரத்னம் தொடக்க மானவையும் உபாயாந்தரங்களுக்கு இதி கர்த்தவ்ய தயா சஹகாரிகள் ஆகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய்-அவற்றை அழிய மாறியும் விநியோகிக்கலாம் ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்

க்ருஹாணி ச
கருஹங்களும் கீழ் சொன்ன வற்றுக்கு எல்லாம் ஆவாச ஸ்தானம் ஆகிற ரஷகத்வம் முகத்தாலே உபாயாந்தர சஹகாரமுமாய்
மாட மாளிகையாக எடுக்கும்படியான அபிமதத்வத்தாலே உபேயமுமாய் இருக்கும்

சர்வ தர்மாம்ஸ் ச
தர்ம சப்தத்தாலே உபாய ரூபமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது
சர்வ சப்தத்தாலே அதிகாரி சம்பத்தி தர்மங்களைச் சொல்லுகிறது

சர்வ காமாம்ஸ் ச
என்று புத்திர பசு அந்நாதி தொடக்கமாக -ஸ்வர்க்க ஐஸ்வர்யம் நடுவாக-
பிரம்மா ஐஸ்வர்யம் பர்யந்தமான வற்றை எல்லாம் சொல்லுகிறது

ச அஷரான் -என்றது கைவல்யத்தை

சந் த்யஜ்ய -லஜ்ஜா புரஸ் ஸரமாக விட்டு

லோக விக்ராந்த சரணவ் -தொடங்கி பற்றுகிற விஷயம் வரையாதே வைத்த திருவடிகள்(தாவி வையம் கொண்ட தடம் தாமரை) ஆகையாலே சௌசீல்யம் சொல்லுகிறது

உறங்குகிற பிரஜையை தாய் முதுகிலே அணைத்து கொண்டு கிடக்குமா போலே
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே
விமுகனார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே வாத்சல்யம் சொல்லுகிறது

இத்தனையும் அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே சௌலப்யம் சொல்லிற்று

தே
என்று வகுத்த சேஷி -என்று –ஸ்வாமித்வம் சொல்லுகிறது

விபோ
என்கையாலே பிரபுத்வம் சொல்லுகிறது -அதாகிறது ஜ்ஞான சக்த்யாதி குண பூர்த்தி

இத்தால் அஹம் -சப்த வாச்யமும் இதிலே அனுசந்தேயம்

ஆக இத்தனையும் நாராயண சப்தார்த்தம்

தே -என்கிற இடத்தில் ஸ்வரூப அனுபந்தியான லஷ்மி சம்பந்தமும் அனுசந்தேயம்
இத்தால் புருஷகார பாவம் சொல்லுகிறது

(அவள் மார்பில் இருந்து பிரிந்தால் அன்றோ இவ்வஷரம் அகாரம்- விட்டுப் பிரிவது -ஸ்வரூப நிரூபக தர்மம் அன்றோ)

சரணவ் -என்கையாலே விக்ரஹ யோகம் சொல்லுகிறது

சரணம் -என்கையாலே உபாய பாவம் சொல்லுகிறது

அவ்ரஜம் –அத்ய வசித்தேன் -என்றபடி

ஆக இஸ் ஸ்லோகங்களால் விடுமவற்றை விட்டுப்
பற்றுமவற்றைப் பற்றி நின்றது

————————————————————————————

சூரணை -7-அவதாரிகை –
ஆனால் கீழ் விட்டவை எல்லாம் இழவே யாகிறதோ-என்னில்
அங்கனே இருப்பதொரு சாபேஷை யுண்டோ -சர்வ பிரகார
பரிபூர்ண விஷயத்தைப் பற்றினவனுக்கு-
ஆகையாலே கீழ் விட்டவை எல்லாம் ஈஸ்வரனே என்கிறார் –

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ் ச குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ

த்வமேவ மாதா ச –
பிறந்த பின்பு ஹித பர ஞான பிதாவைப் போல் அன்றியே கர்ப்ப வாசமே தொடங்கி ரஷித்துப் போருமவள் இறே மாதா –
இத்தால் இவர் நினைக்கிறது என் என்னில் மேல் ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பாக முதல் அழியாதபடி
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- ரஷித்துப் போந்தவன் -என்கிறார் –

பிதா த்வமேவ
மாதா-வுக்கு முன்னே பிறக்க கிருஷி பண்ணுவான் பிதாவிறே
இத்தால் –ஜிதந்தே புண்டரீகாஷ நமஸ்தே விஸ்வ பாவன
நமஸ்தேஸ் து ஹ்ருஷீகேச மகா புருஷ பூர்வஜா –ஜிதந்தே-1-என்றத்தை நினைக்கிறது
பிறப்பித்த தந்தை மற்றை யாராவாரும் நீ-பெரிய திருவந்தாதி -5-

த்வமேவ பந்துஸ் ச –
பந்துவாய் இருப்பார் இவன் வழி கெட வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துமவர் இறே
அப்படியே நான் வழி கெட வர்த்தியாதபடி அந்தராத்மதயா இருந்து நியமித்து நல் வழி யாக்கும் பந்துவும் நீயே

குருஸ் த்வமேவ –
கு சப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ரு சப்தஸ் தந் நிரோதக
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபி தீயதே -இருள் தரும் மா ஞாலத்தைப் போக்கித் -(திருவாய் மொழி -10-6-1-) தெளி விசும்புக் கொடுக்கையாலே-(திருவாய் மொழி -9-7-5-)
எனக்கு அஜ்ஞாத ஜஞாபனம் பண்ணும் ஆசார்யனும் நீயே –
அறியாதன அறிவித்த அத்தா -திருவாய் மொழி -2-3-2–என்னக் கடவது இறே
ஆசார்யரில் வைத்துக் கொண்டு பிரதம ஆசார்யனானவான் ஈஸ்வரன் இறே
லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்னக் கடவது இறே
இசைவித்து என்னை -திருவாய் மொழி -5-8-9- என்கிறபடியே
முதல் அடியிலே ருசி ஜனகன் ஆகையாலே பிரதம ஆச்சார்யன் -என்னக் குறை இல்லையே

த்வமேவ வித்யா –
உபதேசித்த ஜ்ஞானமும் நீயே –
ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே –திருவாய் மொழி -1-9-8-என்கிறபடியே
ஜ்ஞானத்தின் உடைய சத்தாதிகள் அவன் ஆதீனம் ஆகையாலும்
ஜ்ஞான பிரதிபாத்யன் அவன் ஆகையாலும்
ஜ்ஞானமும் நீயே -என்கிறது

த்ரவிணம் த்வமேவ –
த்ரவிணம் ஆகிறது த்ரவ்யம் -அதாவது -போகத்துக்கு உபகரணமாய் இருக்கை
இத்தால் போக உபகரணமான பர பக்தி யாதிகளும் நீயே -என்கிறார் –

அன்றிக்கே –
தனம் மதியம் -என்கிறபடியே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும்
நீயே என்கிறார் -ஆகவுமாம்

த்வமேவ சர்வம் –
சொல்லிச் சொல்லாதவை எல்லாம் நீயே

மம தேவ தேவ –
சர்வத்தையும் விட்டு உன்னையே பற்றின எனக்கு
விட்டவையும் எல்லாம்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீயே -என்கிறார் –

———————————————————————————
சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-

த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ

ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது

இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது-

ப்ரஹ்மத்தையே அளிக்கும் ஆச்சார்யனே பிதாவை விட ஸ்ரேஷ்டர்
வந்தே கோவிந்த தாதோ

ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –-ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம்சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இ றே

லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –

————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை
ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பர்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றால்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இறே –
அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் எல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இறே
ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரஸ்ய சகேவ சக்யு
பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்

தஸ்மாத் –
த்வமேவ-இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பர்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை  அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –

ப்ரணம்ய –
மானசமான தண்டன் –

ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்
இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்

ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்

ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை

ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்
ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது –ஸ்துத்யன் -என்றபடி
நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –

பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரஸ்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்
சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்
பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ
சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே
தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -2- 3-4-5 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 21, 2014

இரண்டாவது சூரணை அவதாரிகை –

கீழ் பிராட்டி யுடைய சரண்யதையும்
அதுக்கு அடியான ஊற்றுவாயையும்
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் -சொல்லி
அவள் திருவடிகளில் சரணம் புக்கு நின்றார்
அநந்தரம் -உமக்கு அபேஷிதம் என் -என்று பிராட்டி திரு உள்ளமாக
கைங்கர்ய ருசியும் பிரபத்தி நிஷ்டையும் எனக்கு உண்டாக வேணும் -என்கிறார் –
ஈஸ்வரன் திருவடிகளிலே கைங்கர்ய சித்திக்கு இறே சரணம் புகுவது –
அவ்வளவு அன்றிக்கே ருசி விச்வாசங்கள் என்றுதைத் தனியே அபேஷித்துப் பெற வேண்டுவன சில அதிகாரி விசேஷணங்கள் உண்டு இறே –
இப்போது அபேஷித்துப் பெற வேண்டும்படி இதுக்கு முன்பு இவர்க்கு இன்றிக்கே இருந்ததோ -என்னில்
உண்டானாலும் தம்தாமுக்கு என்றும் இல்லையாக விறே தம் தாமை நினைத்து இருப்பது

——————————————————————

பாரமார்த்திக பகவச் சரணார விந்த யுகள
ஐகாந்திக ஆத்யந்திக
பர பக்தி பரஜ் ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசத தம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய பிரிய பகவத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷதைக ரதி ரூப
நித்ய கைங்கர்ய
ப்ராப்த் யபேஷயா
பாரமார்த்திகீ பகவச் சரணாரவிந்த
சரணாகதி யதாவஸ்திதா அவிரதா அஸ்து மே

—————————————————————–

பாரமார்த்திக –
அர்த்தம்-என்று பிரயோஜனத்துக்கும்  மெய்க்கும் பெயர் –
இது பர பக்திக்கு விசேஷணம் ஆன போது அதனுடைய அக்ருத்ரிமத்வம் சொல்லுகிறது
திருவடிகளுக்கு விசேஷணம் ஆன போது அதனுடைய பரம பிரயோஜனத்வம் சொல்லுகிறது

இப் பிரிவுக்கு பிரயோஜனம் என் என்னில்
பக்தி விஷயமான போது திருவடிகள் பரம பிரயோஜனமாகக் கடவது
திருவடிகள் விஷயமான போது பக்தி அக்ருத்ரிமையாகக் கடவது

பகவத் சரணாரவிந்த –
கீழ்ச் சொன்ன பகவச் சப்தம் சர்வ உத்கர்ஷ வாசி –
இது குண யோகத்தால் வந்த ரஸ்யதையைச் சொல்லுகிறது–குணங்களும் போக்யமாக இருக்கையாலே பரம பக்தி ஜனகம் –

சரணாரவிந்தம் –
விக்ரஹவத்தையால் வந்த போக்யதை சொல்லுகிறது –

யுகள –
சேர்த்தியால் வந்த போக்யதை

ஐகாந்திக –
ஏகமே அந்தமாய் இருக்கை
அதாவது -வேறு ஒரு விஷயத்தை யுடைத்து அன்றிக்கே இருக்கை-

ஆத்யந்திக –
அந்தத்தை அதிகிரமித்து இருக்கை -அதாவது நித்தியமாய் இருக்கை –

பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
பர பக்தி யாவது -சம்ஸ்லேஷ விஸ்லேஷ சுக துக்காராம் படியான பிரேம விஷயம்
பர ஜ்ஞானம் ஆவது –இதனுடைய விபாக தசையான சாஷாத் காரம்
பரம பக்தி யாவது -ஷண காலமும் விஸ்லேஷத்தைப் பொறுக்க மாட்டாத தசை

உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய -என்கிறபடியே
ஜ்ஞான கர்மங்களாலே சம்ஸ்க்ருத அந்த கரணனாய் -பக்தி பிறந்து
அதனுடைய விபாக தசை பரம பக்தியாக கடவது உபாசகனுக்கு
இவர்க்கு அந்த ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நிற்க மேல் உள்ள தசைகளை அபேஷிககிறார்-

க்ருத
இவற்றால் பண்ணப் பட்ட

பரி பூர்ண –
பரிபூரணம் ஆகையாவது ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும் ஒரு காலே அனுபவ விஷயமாகை-

அநவரத-
அவிச்சின்னமாய் இருக்கை
அதாவது -இடைவிடாதே செல்லுகை-

நித்ய
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசத தம –
விசதம் ஆவது பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமம் ஆவது -பரம பக்தி தசையில் அனுபவம்

அநந்ய பிரயோஜன –
அனுபவ ஜனித ப்ரீதியும்
ப்ரீதி காரித கைங்கர்யமும் -வேண்டாம்
இது தானே அமையும் -என்னும் படி இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய –
அநவதிகமான அதிசயத்தை உடைத்தான ப்ரீதி

பகவத் அனுபவ
சரம சரீர அவசான சமனந்தரமாக அர்ச்சிராதி கதியாலே போய்ப் பரம பதத்தில் அனுபவிக்கும் அனுபவம்

ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித
அத்தால் பிறந்த ப்ரீதியாலே பண்ணுவிக்கப் பட்ட

ஸ்வாரத்தணி ஜந்தோ வா

அசேஷ அவஸ்த உசித
சர்வ அவஸ்தைகளிலும் அனுகூலமாய் இருக்கை

அசேஷ சேஷைதைக ரதி ரூப –
நிவாஸ ஸ்ய்யா ஆசன பாதுக அம்ஸூகோப தான வர்ஷா தப வாரணாதிப
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர் யதோசிதம் சேஷ இதீரிதே ஜனை-ஸ்தோத்ர ரத்னம் -40 -இத்யாதிப் படியே
சர்வவித சேஷதையிலும் உண்டான அபிநிவேசத்தையே வடிவாக உடைத்தாய் இருக்கை

நித்ய
அபுநரா வ்ருத்தி லஷணமாய் இருக்கை

கைங்கர்ய ப்ராப்த்ய பேஷையா
கைங்கர்ய ப்ராப்தியில் உண்டான அபேஷையாலே

பாரமார்த்திகீ
ஆர்த்த ரூபமாய் இருக்கை

பகவத்
ஜ்ஞான சக்த்யாதிகளால் பூரணமான விஷயம் ஆகையாலே
சஹாயாந்தர நிரபேஷமான உபாய பௌஷ்கல்யம் சொல்லுகிறது

சரணாரவிந்த
விக்ரஹத்தின் உடைய பரம உபாயத்வம் சொல்லுகிறது

சரணாகதி
ஸ லஷணமாய் இருக்கை

யதாவஸ்திதா
உபாயாந்தரங்கள் உடைய அனுபாயத்வ புத்தி பூர்வகமாக அத்தைப் பற்றுகை போலே காணும்
அதாகிறது -பற்றி விடுகையும் அன்றிக்கே
பற்றிப் பற்றுகையும் அன்றிக்கே
-என்னுமா போலே விட்டுப் பற்றுகை

யதாவஸ்திதா-
என்றது -இருந்தபடியே -என்றபடி
இது இப்படிப் போலே காணும் இருப்பது
ரஹஸ்யம் ஆகையாலே நேராக வெளியிடாது ஒழிகிறார்-

அவிரதாஸ்து மே –
அநந்ய கதியாய் இருந்துள்ள எனக்கு
யாவத் ப்ராப்தி விச்சேதம் இன்றிக்கே ஒழிய வேணும்-

———————————————————————————

சூரணை -3

அஸ்து தே
பிராட்டி அருளிச் செய்கிறார் –
உமக்கு அப்படியே உண்டாயிடுக-

—————————————————————————————

சூரணை -4-
தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே
அப்படிப் பட்ட உபாயம் தன்னாலேயே
பரபக்தி தொடக்கமாகக்
கைங்கர்யம் ஈறாக
நடுவு உள்ள தசைகள் அடைய
உண்டாகக் கடவது-

(மேலும் தேவரீர் அபேக்ஷிக்கப் போகும் உமது அடியார் அடியார்களுக்கும் பேறு உம்மைப் போலவே கிட்ட அருளுவோம் என்றுமாம்)

————————————————————————————————

சூரணை -5-
அவதாரிகை –
மேல் ஆஸ்ரயணீய வஸ்து நிர்த்தேசம் பண்ணுகிறார் –
ஆஸ்ரயணீய னானவன் நாராயணன் இறே
அதில் நார சப்தார்த்தம் மேல் சொல்லுவதாகக் கோலி
அதுக்கு ஆஸ்ரயமாய் அயன சப்தார்த்தமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை முதலிலே அருளிச் செய்கிறார்-

அகில ஹேய பிரத்யநீக
கல்யாணை கதான
ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷண
அநந்த ஜ்ஞான ஆனந்தைக ஸ்வரூப

அகில ஹேய பிரத்யநீக
நிர்க்குணம் -என்கிற வஸ்து இருக்கிற படி –
ஹேயங்கள் ஆவன –அசித் கதமான பரிணாமமும்
சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளும் –
நித்ய முக்தர் பக்கல் உண்டான பாரதந்த்ர்யமும் –
அகில சப்தத்தாலே உபய விபூதியில் உண்டான சேதன அசேதனங்களை சொல்லுகிறது –
பாரதந்த்ர்யம் ஹேயமோ என்னில் –
புருஷனுக்கு ஸ்தன உத்பேதமும்
ஸ்திரீக்கு ஸ்ம ஸ்ரு சம்யோகமும் போலே
பரதந்த்ரனுக்கு ஸ்வா தந்த்ர்யம் ஹேயம்
அப்படியே ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு பாரதந்த்ர்யம் ஹேயமாகக் கடவது

ப்ரத்யநீகத்வம் ஆவது
பதார்த்தாந்தர சம்சர்க்க அபாவாதாரத்வம் –
ஆஸ்ரிதர் உடைய ஹேய நிரசனத்துக்கு அடியான ஹேய ப்ரத்யநீகத்வம் -என்றுமாம்

கல்யாணை கதான –
கல்யாணைக விஸ்தார
அகண்டைக ரசம் போலே இஸ் சப்தம்

(ஸ்ருத பிரகாசர் –
அகில ஹேய பிரத்ய நீகன் -கல்யாண ஏக தான -உபய லிங்கம் -அடையாளங்கள் -நாராயணனுக்குக்கே அசாதாரணம்
நன்மை அளிக்கும் குணங்கள் மட்டுக்குமே இருப்பிடம்
அத ஏவ ஸமஸ்த ஸ்வ இதர வஸ்து விலக்ஷணன் –
பக்த முக்த நித்ய விலக்ஷணன் -புருஷோத்தமன் –
அநந்த ஞான ஆனந்த ஆனந்த ஸ்வரூபன்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்)

ஸ்வேதர சமஸ்த வஸ்து விலஷண-
அத ஏவ சமஸ்த வஸ்து வஸ்து விலஷண–
அநந்த
த்ரிவித பரிச்சேத ரஹித
விபுத்வாத் தேச பரிச்சேத ராஹித்யம் –
நித்யத்வாத் –கால பரிச்சேத ராஹித்யம் –
ஸ்வ வ்யதிரிக்த சம்ஸ்த வஸ்துக்களுக்கும் தான் பிரகாரியாய் தனக்கு ப்ரகார்யந்தரம் இல்லாதபடி நிற்கையாலே
ஸ்த்ருச வஸ்தவ பாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
துலையாலே-தராசுவாலே யாதல் –
பிரஸ்தாதிகளாலே -பரிமாணத்தை அளக்கும் படி முதலிய பாத்ரங்களால் -ஆதல்
வரும் பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் –

ஜ்ஞான ஆனநதைக ஸ்வரூப
அநந்ய அதீன பிரகாசத்வ -ஆஹ்லாத கரத்தவ –
ஜ்ஞானமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ -ஜ்ஞான ஆனந்தைக ஸ்வரூப
அதாவது -ஸ்வயம் பிரகாசத்வ
சுக ரூபத்வங்களே ஸ்வரூபமாய் இருக்கை –
இப்படி திவ்ய ஆத்ம ஸ்வரூபம் சொல்லப் பட்டது

(ஞானம் த்ரவ்யம் நம் சித்தாந்தம் -குணம் போல் அல்ல)

———————————————————————————–

அநந்தரம் நார சப்த வாச்யங்களில் ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
பஞ்ச உபநிஷண் மயமான திவ்ய விக்ரஹத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வ அபிமத அநுரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய
நிரவத்ய நிரதிசய ஔ ஜ்ஜ்வல்ய
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய
லாவண்ய யௌவன ஆதி
அநந்த குணநிதி திவ்ய ரூப

ஸ்வ அபிமத
கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்துக்கு -குணங்களில் காட்டில் பிரகாசகமுமாய்
அந்தரங்கமுமாய் இருக்கையாலே
குணங்களுக்கு முன்னே விக்ரஹத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வ அபிமத –
சம்ஸ்த கல்யாண குணாத் மகோ ச்சௌ-ஸ்வ சக்திலேஸ உத்த்ருத பூத சரக்க –
இச்சாக்ருஹீ தாபி மதோருதே ஹஸ் சம்சாதி தாஸ் சேஷ ஜகத்தி தோஸ் சௌ -என்கிறபடியே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் அபிமதமாய் இருக்கை

அநுரூப
ஸ்வரூப அனுபவத்துக்கு திரோதாயகமாய் இருக்கை அன்றிக்கே
ஸ்வரூப அனுபவத்துக்கு வர்த்தகமாய் இருக்கை –

ஏக ரூப –
ஷட்பாவ விகார ரஹீதமாய் இருக்கை –
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே
சதைக ரூப ரூபாய -விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே என்று இருக்கை —

அசிந்த்ய
இதர சஜாதீயதயா சிந்தயிதும் அசக்யமாய் இருக்கை –

திவ்ய
வருந்தியும் உபமானம் இன்றிக்கே இருக்கை –
அப்ராக்ருதமாய் இருக்கை -என்றுமாம் –

அத்புத –
ஷணம் தோறும் அபூர்வமாய் இருக்கை
அத ஏவ ஆச்சர்ய அவஹமாய் இருக்கை –

நித்ய நிரவத்ய
நித்ய நிர்தோஷமாய் இருக்கை –
அதாவது -என்றும் ஒக்க ஸ்வார்த்தமாய் இராது ஒழிகை –
பக்தாநாம் -என்று இருக்கும் இருப்பு –

(நித்ய -பரம பத வாஸம் -நிரவத்ய – அடைய எளிமை -அர்ச்சாவதாரம் இரண்டுமாக ஸ்ருத பிரகாசர்
எப்பொழுதும் குற்றம் அற்ற திரு மேனி என்றுமாம்)

நிரதிசய ஔஜ்ஜ்வல்யம்
சர்வ தேஜஸ்ஸூக்களையும் கீழ்ப் படுத்திக் கொண்டு இருக்கும் ஔஜ்ஜ்வல்யம்
இத்தால் ப்ரஹ்மாதி களுக்கும் அமைத்துக் காட்ட வேண்டும் படியாய் இருக்கை
இத்தால் விக்ரஹ வைலஷண்யம் சொல்லிற்று

——-
அத விக்ரஹ குணா நாஹ

சௌந்தர்ய -அவயவ சோபை

சௌகந்தயசர்வ கந்த -என்கிறபடியே சர்வத்தையும் பரிமளிதம் ஆக்கவற்றாய் இருக்கை

சௌகுமார்ய -நாய்ச்சிமாரும் உறைக்கப் பார்க்கப் பொறாதபடி
புஷ்பஹாச சுகுமாரமாய் இருக்கை –

லாவண்ய-சமுதாய சோபை
அதாவது லவணம் போலே எங்கும் ஒக்க வியாபித்து நின்று ரசத்தை தரவற்றாய் இருக்கை

யௌவனயுவாச குமார -என்கிறபடியே
நித்ய யுவாவாய் இருக்கும் பருவம்

ஆதி
இவை தொடக்கமான

(தீன வ்ருத்த ஆயதனம் -திருத்தோள்கள் போல்வன)

அநந்த குண நிதி
அசங்க்யாதமான குணங்களுக்கு கொள்கலமாய் இருக்கும்

திவ்ய ரூப
திவிஸ்தித ரூப
அதாவது இவ் விபூதியில் அடங்காது இருக்கை –

(த்யு லோகம் -ஆகாசம் -இருக்கும் திவ்ய ரூபம்)

————————————————————————————-

விக்ரஹ குணங்கள் விக்ரஹத்துக்கு பூஷணமாய் இருக்குமா போலே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு பூஷணமான ஸ்வரூப குணங்களை சொல்லுகிறது –

ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த
சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய
சௌர்ய பராக்ரம சத்ய காம சத்ய
சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்
அசங்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

ஸ்வா பாவிக
ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை

அநவதிக அதிசய
நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
அவற்றில்

ஜ்ஞான –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –

பல –
சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய
சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்

வீர்ய
சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம்
வேராத அநாயாமை
எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரதை என்னவுமாம்

சக்தி
ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் என்னவுமாம்
ஜகத் உபாதான சக்தி என்னவுமாம் –

தேஜஸ்
பராபிபவன  சாமர்த்தியம்-

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்திர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோஸ்யம் அக்நி
தமேவ பாந்தம் அநுபாதி சர்வம்
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -இத்யாதி
இப்படி சர்வ உத்க்ருஷ்டன் ஆனவனுக்கு -இனி பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்

1-சௌசீல்ய –
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வ பாவத்வம் சீலம் -என்கிறபடியே
அந்த மஹத்வம் தம் திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை சௌசீல்யம்
அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்ட்டான் ராமோ தர்ம ப்ருதாம் வர
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம்-யுத்தம் -120-11-15-என்னுமா போலே –

(அஹம் வோ பாந்தவ ஜாத)

(தஸ்ய ப்ரயோஜனாந்தரம் எதிர்பார்க்காமல் -கலப்பதால் தனக்கு ஒன்றும் வேண்டாதவன் என்னுமாம்
பெருமையைப் பார்த்து தன்னை அண்டினவர்க்குப் பயம் இல்லாமல் கலப்பது என்றுமாம்   )

2-வாத்சல்ய –
தன் பிரேமத்தாலே ஆஸ்ரித கதமான குணமாகத் தோற்றுகை-
கோபாலத்வம் ஜூ குப்சிதம்

(ஷமா குணத்தில் எல்லையே இது
ஆகவே தனியாக க்ஷமையைச் சொல்லவில்லை)

3-மார்த்தவ –
ஆஸ்ரித விஸ்லேஷம் பொறுக்க மாட்டாத திரு உள்ளத்தில் மென்மை
அநித்ரஸ் சத்தம் ராம ஸூப்தோஸ்பி ச நரோத்தம
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் ப்ரதி புத்யதே-சுந்தர -36-44

(ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||ஶ்லோகம் 56 –

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.)

(உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே -ஆழ்வார் அவனுக்கு மாஸூச -)

4-ஆர்ஜவ
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை
அதாவது -அவர்களுக்கு தன்னை நியமித்து கொடுக்கை –

(ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8-)

(அஹம் பக்த பராதீனன்)

(எதிர்ச்சையாக வந்த சூர்ப்பணகை இடமும் ஆர்ஜவம் காட்டிய பெருமாள்)

5-சௌஹார்த்த
ஆஸ்ரிதர்க்கு சர்வ மங்கள அன்வேஷண பரனாகை
சோபன ஆசம் சீதி –ஸூஹ்ருத்

(ஸூ ஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் -கீதை –ஸாதாரண -அனைவர் மேலும் -வ்யூஹ ஸுவ்ஹார்த்தம் -உறங்குவான் போல் யோகு செய்பவன்-இவன் பிறருக்காக இருக்கும் காலத்திலும் விட்டுச் செல்லாமல் உள்ளேயே பதி கிடந்தது அருளும் ஸாதாரண ஸுஹார்த்தம்
இங்கு ஆஸ்ரிதருக்கு ஸர்வ மங்களங்களைத் தேடித் தேடி அருளுபவர்-ததாமி புத்தி யோஹம்யோக க்ஷேமம் வஹாம் யஹம்-உன் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி நீஸூவ சத்தா அந பேஷா-தனது மேன்மை பார்க்காமல் ரக்ஷணத்தில் இழிகிறான் அன்றோ -தூது போயும் -தேரோட்டியும் -செத்தாரை மீட்டும் -போல்வன)

6-சாம்ய
ஜாதி குண வ்ருத்தாதிகளைப் பாராதே
அவர்களுக்கு ஆஸ்ரயணீயத்வத்தில் சமனாய் இருக்கை
குஹேன சஹிதோ ராமோ லஷ்மணேன ச சீதயா-என்றும்
சபர்யா பூஜித சம்யக் ராமோ தசரதாத் மஜ-என்றும்

(குஹேன சஹிதோ ராமோ லஷ்மணேன ச சீதயா-மூவருடன் சேர்ந்த சேர்க்கை ஸாம்யம் -குகனுடன் சேர்ந்த பின்பு தான் சேர்த்தி ஆனந்தம் பெற்றான் என்றுமாம் -)

(சபர்யா பூஜித சம்யக் ராமோ தசரதாத் மஜ-சக்ரவர்த்தி கொடுத்த அன்னம் போல் சபரி அளித்த பழங்களும் ஸாம்யம்)

(ஆஸ்ரயிக்கும் போதும் -அருளும் போதும் -சமர்ப்பித்த த்ரவ்யங்களை ஏற்கும் போதும்-தாரதம்ய ராஹித்வம்- ஸாம்யம் என்றுமாம்-சமோஹம் ஸர்வே பூதேஷு ந த்வேஷ ந ப்ரிய-விதுரர் சமர்ப்பித்த வாழைப்பழத்தோல் -குறும்பு அறுத்த நம்பி மண் பூ சமைப்பித்த வ்ருத்தாந்தம்)

7-காருண்ய-
ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷ்ணுத்வம்-என்றும்
ததாவிதம் த்விஜம் த்ருஷ்ட்வா நிஷாதேன நிபாதிதம்
ருஷேர் தர்மாத்மநஸ் தஸ்ய காருண்யம் சம பத்யத -பால -2-13-

(வால்மீகி பரத்வாஜர் சிஷ்யருடன் தமசானதியில் நீராடப் போக மிதுனப் பறவைகளைப் பார்த்து -வேடன் வீழ்த்த -வால்மீகி காருண்யம் ஏற்பட்டதே -வேடனுக்கு சாபம் கொடுத்தார் அன்றோ-)

8-மாதுர்ய
ஹந்தும் ப்ர வ்ருத்தத்வேஸ்பி ரசா வஹத்வம்-என்றும்
ஏஹ்யே ஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர
நமோஸ் சஸ்து தே தேவ வராஸ் அப்ரமேய
பிரசஹ்ய மாம் பாதய லோக நாத
ரதோத்தமாத் பூத சரண்ய சங்க்யே-என்றும்(பீஷ்மர் தன்னைக் கொல்ல வந்த கண்ணனைப் பார்த்து அருளிச் செய்த ஸ்லோகம்)
அஸூர்யமிவ ஸூர்யேன நிவாதமிவ வாயுநா
க்ருஷ்நேன சமுபேதேன ஜஹ்ருஷே பாரதம் புரம் – என்றும்(ஹஸ்தினாபுரியில் நுழைந்த கண்ணனைப் பார்த்து அருளிச் செய்த ஸ்லோகம்)
சர்வ ரச -என்றும் உள்ளவன்

8-காம்பீர்ய
ஆஸ்ரிதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை –
அதாவது -தன் கொடையின் சீர்மையும் கொள்ளுகிறவன் சிறுமையும் பாராது இருக்கை –
ய ஆத்மதா பலதா -தன்னையும் கொடுத்து தன்னை அனுபவிக்க பலமும் கொடுப்பவன்

9-ஔ தார்ய
ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை தானே இரந்து கொடுக்கை
அத மத்யம கஷ்யாயாம் சமாகச்சத் ஸூஹ்ருஜ் ஜனை
ஸ சர்வாநர்த்திநோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நன்த்யச–அயோத்யா-16-27-என்றும்
உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-

(கௌஸ்த்தர் தனது குருவுக்கு தக்ஷிணை கொடுக்க அனைத்து செல்வங்களையும் தானம் செய்த பின்பு ரகுமஹாராஜர் இடம் கேட்டதும் குபேர பட்டணம் சென்று போர் தொடுத்து செல்ல நிகைக்க குபேரன் தானே அளித்த செல்வம் அளித்த வ்ருத்தாந்தம்)

(துன் நிர்மிதா ஜடரதா–உனது செல்வங்களை இரந்து கொடுத்த வாமனன்)

(கொடுக்கும் பொழுது -தகப்பனார் சொத்தை மகன் அனுபவிக்குமா போல் -அளிக்கும் திரு உள்ளம் -உரிமை உடைய ஒருவன்)

(கொள்ளக் குறைவிலன் -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் மணி வள்ளல் அன்றோ)

(ஸர்வம் அளித்தும் ருணம் ப்ரவ்ருத்த மிவ -கோவிந்த –மாம் தூர வாஸினம் -புண்டரீகாஷா -திரௌபதிக்கு -கடனாளி போல் சென்றானே)

(செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா
பாண்டவ மம ப்ராணன் -ஆத்மைவ மே மதம் -என்று இருப்பவன்)

10-சாதுர்ய
ஆஸ்ரித தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கை –
ஆஸ்ரிதர் உடைய அதி சங்கையைப் போக்கி ரஷிக்கை -என்னவுமாம்-
உத்ஸ்மயித்வா மஹா பாஹூ ப்ரேஷ்ய ச அஸ்தி மஹா பல
பாதாங்குஷ்டேன சிஷேப சம் பூர்ணம் தச யோஜனம்-கிஷ்கிந்தா -1-65-

(தன்னடியார் திறத்தத்து தாமரையாள் யாகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்வார் என்னுமவன்)

(சாந்தணி தோள் சதுரன் அன்றோ)

11-ஸ்தைர்ய-
ப்ரத்பூஹ சதைரபி ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞா பங்கம் ந கரோதி
மித்ர பாவேன சம் ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேத்த கர்ஹிதம்-யுத்தம் -18-2-

(நூறு தடைகள் வந்தாலும் ஆஸ்ரித ரக்ஷணம் செய்தே தீர விரதம் கொண்டவன்
மித்ரன் வேஷமாக வந்து சரண் அடைந்தாலும் கைவிடாதவன்
உன்னை விட்டாலும் இலக்குமவனை விட்டாலும் உயிரை விட்டே ரிஷிகளை ரஷிப்பேன் என்னுமவன் அன்றோ)

(ஊற்றம் உடையாய் பெரியாய்)

12-தைர்ய
அதுக்கடியான நெஞ்சில் திண்ணிமை

அநந்தரம் இரண்டு குணம் ப்ரதிபஷ விஷயம்
1-சௌர்ய
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்ய வல்லனாய் இருக்கை

(செங்குந்தா –அடியார்க்கு தீர்த்து அசுரருக்கு தீமை செய்பவன்
கஞ்சன் வயிற்றில் நெருப்பாக -)

2-பராக்ரம
அளவற முடுகினாலும் வினை செய்ய வல்லனாய் இருக்கை –

(கர தூஷண வதம் -அஸகாய ஸூரன்–அநபாய தீரன் -மனுஷ்யன் -14000 ராக்ஷஸர்கள்)

அதவா
தைர்யாதி த்ரயோ குணா ப்ரதிபஷ விஷயா
1-தைர்ய
மூல பலே சந்நிஹிதேஸ்பி பூர்வ ஷணாத் ந விசேஷ

(ஆனை ஆயிரம் ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி-சேனை ஆயிரம் –கபந்தம் -ஆயிரம் கபந்தங்கள் ஆட மணி ஒலிக்கும் -ஏழரை நாழிகை அடித்ததே)

2-சௌர்ய
அவ்வளவு அன்றிக்கே அனுகூல இவ தத் பல பிரவேசனம்

(தனது படைக்குள் புகுவது போல் விரோதிகள் படைக்குள்ளும் தயக்கம் இல்லாமல் புகுவானே)

3-பராக்ரம –
அபியாதா ப்ரஹர்த்தா ச சேனாநய விசாரத –அயோத்யா 1-29-(முன்னே தானே சென்று தாக்குபவன்)என்றும்
சின்னம் பின்னம் சரீர் தக்தம் ப்ரபக்னம் சஸ்திர பீடிதம்
பலம் ராமேன தத்ருசூர் ந ராமம் சீக்ர காரிணம்-யுத்தம் -(அங்கங்கள் வெட்டுப்பட்டு உடைந்து விழுந்து எரிந்து -மூல பலம் அழிந்து -ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து)94-22

1-ஸத்ய காம –
கல்யாண குணங்களையும் விபூதிகளையும் சொல்லுகிறது
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான குண விபூதிகள் என்கை

(பல பலவே ஆபரணம் பேரும் பலபலவே -புகழும் நல் ஒருவன் என்கோ -அம்ருதம் போல் விபூதிகளைக் கேட்ட அர்ஜுனன் -யோகம் -கல்யாண சேர்க்கையும் விபூதியையும் விரிவாக சொல்லக் கேட்டான் அன்றோ
காம் யந்தே இது காம –ஆசைப்படப்படும் விஷயம் –
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் -ஸ்ருதி
ப்ரஹ்ம புரம் -அஸ்மின் -காமிக்கப்படும் குணங்கள் உள்ளன)

2-ஸத்ய சங்கல்ப –
அமோகமான அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க ஷமன் ஆகை(அமோக -பழுதாகாத)

( ஸூ தர்சன பட்டர் நிர்வாஹம்
நித்ய விபூதி மத்வம் -ஸத்ய காமம்
லீலா விபூதி மத்வம் -ஸத்ய ஸங்கல்பம்)

ஆஸ்ரித ஸம் ரஷண விஷயோ மநோ ரத காமசோஸ் ப்ரதி ஹதோ பவதீதி ஸத்ய காம

(ஆஸ்ரித ரக்ஷணத்தில் மநோ ரதம் கொண்டு
ஏகாகி ந ரமேதி -உண்டது உருக்காட்டாதே -தேசாந்தர புத்ரன் பக்கலிலே மநோ ரதம் கொண்டவன்
உறங்குவான் போல் யோக கள்ள நித்ரை கொண்டவன் -ஜகத் ரக்ஷண சிந்தை காமம் -எதாலும் தடைபடாமல் இருக்குமே -ஆகவே ஸத்ய காமம்)

தத் ரஷணாய தேவ மனுஷ்யாத் யாவதார சங்கல்போ மநோ ரத சோஸ் ப்ரதி ஹதோ பவதீதி ஸத்ய சங்கல்ப –

(உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்து
நாட்டில் பிறந்து படாதன பட்டு)

இக் குணங்கள் இரண்டும் ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பு ஆகையாலே-மத்யஸ்த ஜகத் ரஷண அர்த்தமாகவுமாம்

கீழ் ஆஸ்ரிதர் விஷயத்தில் அருளிச் செய்த 12 கல்யாண குணங்களுக்கும் மேல் விட்டுப்போன மேலும் இரண்டு குணங்களை-க்ருதித்வ- க்ருதஜ் ஞதா–அருளிச் செய்கிறார்

1-க்ருதித்வ-
ஆஸ்ரிதர் அபேஷிதம் பெற்றால் அந்த லாபம் தன்னதாய் இருக்கை-

ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
என் உயிரை அறவிலை செய்தனன் சோதி –தோள்கள் ஆயிரத்தாய் இத்யாதி உகப்பால் பணைத்ததே)
அபிஷிஸ்ய ச லங்காயாம் ராஷசேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ –

இவர்கள் கர்த்தவ்யங்கள் அடையத் தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கை -என்னவுமாம் -(அஹம் ஸ் மராமி மத் பக்தம் –நயாமி பரமாம் கதிம்)

ஆதி கர்மணி க்திந்தந்த

2-க்ருதஜ்ஞதா-
ஒரு கால் சரணம் என்னும் உக்தி மாத்ரத்தாலே பின்பு செய்யும் குற்றங்கள் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –

ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் அவற்றை மறந்து அவர்கள் செய்த ஸூக்ருத லவத்தையே நினைத்து இருக்கை -என்னவுமாம்-

கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிநாம்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மீஹ்ருத யானநாப சர்ப்பத்தி –

ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த அபகாரத்தையே நினைத்து இருக்கை -என்னவுமாம் –

தம் து மே ப்ராதரம் த்ரஷ்டும் பரதம் த்வரதே மன
மாம் நிவர்த்தயிதும் யோசசௌ சித்ரகூடம் உபாகத
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதும் மா -யுத்தம் -124-19

(வஸஸாம் -ஸாந்வனவாம் -விபீஷணனை சமாதானம் பண்ண–அத்தை நினைத்து அவன் உருக-இவன் பருகினான்
ஆகா என்று அருள் –ரக்ஷிக்க வந்து பிரார்த்திக்க -வருந்துவான் அன்றோ)

ஆதி -சப்தத்தாலே அநுக்த குணங்களை நினைக்கிறது

அசங்க்யேய
இக் குணங்கள் எண்ணிறந்து இருக்கை –

அநவதிக அதிசய —என்று நிஸ் ஸீமத்வம்
இத்தால்-அசங்க்யேய- நிஸ் சங்க்யே யத்வம்

கல்யாண
உள்ளது எல்லாம் நன்றாக இருக்கை

குண கனௌக
அவை தான் திரள் திரளாக இருக்கை
க்ரோதாதிகளும் ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இருக்கை –

(குண கண ஓக –ப்ரவாஹம்
கற்றுக் கறவை கணங்கள் பல
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று தேறி இருக்கலாமே
சினத்தினால் இலங்கை செற்ற –மனதுக்கு இனியான் அன்றோ)

மஹார்ணவ-
அஸ்மான் மநோ கோசரா கேசி தேவ உக்தா
வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா
வக்தும் சமேதைரபி சர்வ லோகை
மகாத்மான சங்க சக்ராசி பானேர்
விஷ்ணோர் ஜிஷ்னோர் வஸூ தேவாத் மஜச்ய -என்றும்
சதுர முகாயுர் யதி கோடி வக்த்ரோ
பவேன் நர க்வாபி விசூத்த சேதா
சதி குணா நாம யுதைக தேசம்
வதந்தவா தேவ வர ப்ரசீத –

(குண கணங்கள் சேர்ந்து இவனுக்குப் பெருமை சேர்க்காமல்
இவனை அடைந்து தாம் சத்தை பெறுகின்றன என்பதைக் காட்டவே
ப்ரவாஹம் குணங்கள் -நதிகள் போலும்
இவன் மஹா ஆர்ணவம் கடல் போலவும் என்று அருளிச் செய்கிறார் -)

—————————————————————————

ஸ்வ உசித விவித விசித்திர
அநந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய
நிரதிசய ஸூகந்த
நிரதிசய ஸூக ஸ்பர்ச
நிரதிசய ஔஜ்ஜ்வல்ய
கிரீட மகுட சூடாவதம்ச
மகர குண்டல க்ரைவேயக
ஹார கேயூர கடக ஸ்ரீ வத்ஸ
கௌஸ்துப முக்தாதாம உதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராத்
அபரிமித திவ்ய பூஷண

விக்ரஹ குணமான சௌந்தர்யாதி களோபாதி பூத்தாப் போலே
சாத்தின கிரீட மகுடாதி திவ்ய ஆபரணங்களை அனுசந்தித்து அருளுகிறார் –

ஏவம் விதனானவனுக்கு சோப அவஹமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லுகிறது –
ஜ்ஞாநாதிகள் ஆத்ம ஸ்வரூபத்துக்கு அலங்கார மானவோபாதி
விக்ரஹத்துக்கு ஆபரணங்கள் அலங்காரம் ஆகையாலே அவற்றைச் சொல்லுகிறார் –

ஸ்வ உசித
அவயவங்கள் தான் ஒருபடி பூத்தாப் போலே தகுந்து இருக்கை -(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -பொருந்தி இருக்குமே)

விவித –
அவை தான் நாநாவாய் இருக்கை –
அதாவது க்ரீடாதி பேதத்தாலே பலவகைப் பட்டு இருக்கை –

விசித்திர –
அங்குலீயகம் என்றால் இடைச்சரி கடைச்சரி -என்னுமா போலே ஒரோ வகைகளிலே நாநாவிதமாய் இருக்கை –

(நம்பெருமாளுக்கு கட்டை விரலிலும் நடு விரலிலும் ஒரே மோதிரங்கள் -மற்றவற்றில் இரணடு உண்டே அபய ஹஸ்தத்திலே)

விவித
முத்தின்படி மாணிக்கப்படி என்கிற விவித பதத்தைச் சொல்லுகிறது

விசித்திர
க்ரீடாதி நூபுராந்தமான வைசித்ர்யத்தைச் சொல்லுகிறது -என்னவுமாம் –

அநந்த ஆச்சர்ய
எல்லை யிறந்த ஆச்சர்யத்தை உடைத்தாய் இருக்கை –
ஒரோ ஆபரணச் சேர்த்தியை அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை –

(முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.))

நித்ய நிரவத்ய-நிரவத்யங்களாய் இருக்கும் அவற்றுக்கும் காதா சித்கமான
அவத்யங்கள் உண்டாய் இருக்கும் –
அங்கன் இன்றிக்கே நித்ய நிரவத்யங்களாய் இருக்கை –

நித்ய –
உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை –

நிரவத்ய
ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அனுரூபைர் அநூபமை
சிந்மயை ஸ்வ ப்ரகாசைச்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை-என்கிறபடியே
திவ்ய ஆபரண ஆழ்வார்கள் சேதனர் ஆகையாலே தம் தாமுடைய
சோபை ஸ்வார்த்தம் அன்றிக்கே இருக்கை –
சேதனராய் இருப்பார்க்கு ஸ்வார்த்தம் என்று இருக்கை அவத்யம் இறே

(சிந்மயை-திவ்ய ஆபரண ஆழ்வார்கள்-நித்ய ஸூரிகளே திவ்ய ஆபரணங்களாக கைங்கர்யம்)

நிரதிசய ஸூகந்த –
சர்வ கந்த -என்கிற விஷயத்துக்கும் ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –
அதாவது -திரு வாபரணம் சாத்தினால் திருமாலை சாத்துகை  பரிமளத்துக்கு உறுப்பு
அன்றிக்கே அலங்காரத்துக்கு உறுப்பாம் படி இருக்கை –

நிரதிசய ஸூக ஸ்பர்ச
அல்லாத ஆபரணங்கள் அழகுக்கு உறுப்பு ஆகையாலே
போகத்தில் வந்தால் கழற்ற வேண்டி வரும்
இவையோ என்னில் -பிராட்டிமாரோட்டை கலவியிலும் கழற்ற வேண்டாத படி
ஸ்ரக் சந்த நாதிகளோபாதி அனுகூலமாய் இருக்கும்

(ஹாரோபி –ஸ்பர்ச சம்ரோத பீருநா –சீதாப் பிராட்டி ஹாரத்தையும் அணிந்து கொள்ள மாட்டாள் -அப்படி உள்ளவள் இந்தப் பிரிவை எப்படி பொறுப்பாளோ -பெருமாள்)

நிரதிசய ஔஜ்ஜ்வல்ய
விக்ரஹ காந்தியையும் அமுக்கும் ஔஜ்ஜ்வல்யத்தை உடைத்தாய் இருக்கை

(ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய –ஒளியும் ஒப்புமை யாகமாட்டாத திவ்ய மங்கள விக்ரஹ காந்தியையும் அமுக்கும் அளவும் ஒஜ்வல்யம்)

(ஒன்பது அடைமொழிகள் காட்டி அருளுகிறார்
மேல் 16 திவ்ய ஆபரணங்களை அருளிச் செய்து–ஆதி என்று நிகமிக்கிறார்)

கிரீட மகுட
கிரீடம் ஆகிறது -திரு வபிஷேகத்தின் சுற்று
மகுடம் ஆகிறது -மேலில் கவிப்பு
சூட -திருச் சுட்டி -திருச் சுட்டு –
அவதம்ச-திருச் செவி மலர்

(ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம்- ஈஸதே -ஹஸ்தி பூஷண — -ஸ்வாமித்வம் பறை சாற்றும் திரு அபிஷேகம்
கிரீட சூட அவதம்ஸ -ஆதி ராஜ்ய ஜல்பிதா)

மகர குண்டல –மகர ஆகாரமான திருத் தோடுகள்

(துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-)

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-காதுக்கும் குழலுக்கும் தோள்களுக்கும் ஆபரணம் அன்றோ மகர குண்டலங்கள்)

க்ரைவேயக-திருக் கழுத்தில் ரேகா த்ரயங்களுக்கும் சாத்தும் ஆபரணமான முத்துத் திருக் கட்டு -திருவட்ட மணி முதலானவை –

ஹார-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போலே -மூன்றாம் திருவந்தாதி -55-என்னுமா போலே
திரு மார்பில் மடித்துச் சாத்த வேண்டும்படியான ஹாரம்

(கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-)

கேயூர-திருத் தோள் வளை

கடக –முன் கையில் சாத்தும் திரு வளைகள்

ஸ்ரீ வத்ஸ -திரு மறு
கீழ் உள்ள ஆபரணங்கள் போலே ப்ருதக் ஸ்திதி யோக்கியம் அன்றிக்கே
சர்வேஸ்வரத்வ சிஹ்னமான ஆபரணம்

(மண்டோதரி -வ்யக்தம் ஏஷ மஹா யோகி -ஸ்ரீ வத்ஸம் கண்டு)

கௌஸ்துபம்-ஸ்ரீ கௌஸ்துபம் -ஒரு காலமும் பிரியாதபடி அபிமதமாய்
சர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் இருக்கும் ரத்னம்

(புருடன் மணி வரமாக -ஜீவாத்மா கௌஸ்துவம் -மறு அசித்)

முக்தா தாம-
ஏகாவளீ-த்ரி சரம் பஞ்ச சரம் தொடக்கமான திரு முத்து வடங்கள்

உதர பந்தன-
திரு வுதர பந்தனம்
பிரளய ஆபத்துக்களிலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்துப் போந்த ஆபத் சகத்வத்துக்கு
பட்டம் கட்டினால் போலே இருக்கை –

பீதாம்பர –
சர்வேஸ்வரத்வ லஷணமாய்
திருவரை பூத்தால் போலே ஸூ சங்கதமாய் –
பும்ஸ்த்வ அவஹமாய் இருந்துள்ள திருப் பீதாம்பரம்

காஞ்சீ குணா
அந்தத் திருப் பீதாம்பரத்துக்கு சோப அவஹமாய்
அந்தரங்கமாய் இருந்துள்ள அரை நூல் பட்டிகை

நூபுர
பகவத் விஷயத்தில் இழிவார் எல்லாருக்கும் இழியும் துறையான திருவடிகளுக்கு
பிரகாசகமான திருச் சிலம்பு

ஆதி –
சப்தத்தாலே –புடையார் பொன் நூலினன் -மற்றும் பல்கலன் நடையா வுடைத் திரு நாரணன் -திருவாய் மொழி -3-7-4-என்கிறபடியே
அனுக்தமான திரு யஞ்ஞோபவிதம் கணையாழி மோதிரம் முதலானவற்றை சொல்லுகிறது

அபரிமித
எண்ணில் பல் கலன்களும்-திருவாய்மொழி -4-3-5-என்றும்
பல பலவே யாபரணம் -திருவாய்மொழி -2-5-6-என்றும்
சொல்லுகிறபடியே திரு வாபரணங்களுக்கு தொகை இல்லை என்கிறது –

திவ்ய பூஷண
ஸூ த்த சத்வாத்மகமாய்
திவ்ய அவயவங்களுக்கும் ஆபரணங்களுக்கும் உண்டான
சேர்த்தி அழகுக்கும் அடியான த்ரவ்ய லஷணம்

———————————————————————————–

ஸ்வ அநுரூப
அசிந்த்ய சக்தி சங்க சக்ர கதாசி சார்ங்க ஆதி
அசந்க்யேய நித்ய நிரவத்ய
நிரதிசய கல்யாண திவ்ய ஆயுத

ஸ்வ அனுரூபே–இத்யாதி
கீழ் சொன்ன ஆபரணங்க ளோடு விகல்ப்பிக்கலாம்படியான
திவ்ய ஆயுத வர்க்கத்தைச் சொல்லுகிறது –

(ஸோபா வஹம் -அழகு சேர்ப்பதில் -திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் -இரண்டுக்கும் ஸாம்யம் உண்டே
கண்கள் சிவந்து பெரியவாய் –இலகு விலகு மகர குண்டத்தன் –சுடர் முடியன் –ஒண் சங்கதை வாள் –அடியேன் உள்ளான் -சேர்த்தே அருளிச் செய்தார் அன்றோ -)

ஸ்வ அநுரூப
கீழ் சொன்ன பல வீர்யாதிகளை யுடைய தனக்கு அனுரூபமாய் இருக்கை –
அதவா
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் போது ஆயுதமாய்
ஆஸ்ரிதரை உகப்பிக்கும் போது ஆபரணமாய் இருக்கும் -என்றுமாம்

(பத்துடை அடியவர்களுக்கு எளியவனாயும் பிறருக்கு அரிய வித்தகனாயும் இருக்கும் கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று பிரார்த்திக்கிறார் ஆழ்வார்–அவன் திரு உள்ளபடியே திவ்ய ஆயுதங்கள் இருக்குமே)

அசிந்த்ய சக்தி
சர்வ சக்தியினுடைய சக்தியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்க
அரிதான சக்தியை யுடைத்தாய் இருக்கை –

(ஒரு ஆயுதமே எல்லாவற்றின் கார்யங்களையும் பண்ணுமே
ஏழு மராமரங்களையும்-ஏழு மலைகளையும் துளைத்து சரித்து மீண்டது ஒரு பாணமே)

(சங்க சக்ர கதா சார்ங்காதி-பத்மம் ஸ்ருஷ்டிக்கு பீஜம்-சக்கரம் ஸ்திதிக்கு-நிபந்தம் -கதா ஸம்ஹார பீஜம் து -சங்கமுடைமை முக்தி ப்ரதத்வம் காட்டும்-ஆகவே சங்கு முதலில் இங்கு அருளிச் செய்கிறார்)

சங்க சக்ர கதாசி சார்ங்க –இவை அஞ்சுக்கும் உப லஷணம்
அசி சப்த விதுரமாகவே கிடக்கிறது-(இல்லாமலே இருக்க வேண்டும் )
பத்யவத் கத்யத்துக்கும் ஒரு நியதி யுண்டாய் இருக்கும் இறே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(பஞ்சாயுத ஸ்தோத்ரம்
வாயில் இருந்து வாயு கிளம்பி பூரிக்கப்பட்டு ஒலி -பாஞ்ச ஜன்யம் -கர்வம் அழிக்கும்
சக்கரம் -பாஸ்கர கோடி துல்யம் -விரோதிகளின் பிராணன் விநாஸம் அழிக்கும்
கதை -மேரு சமானம் -திண்மை அசுரர் குலங்களை அழிக்கும்
சார்ங்கம் -வித்யா -த்யா நாண் -தேவர்கள் பயம் விலகும்)

ஆதி
இவை முதலான

(மழு -பரசு- வேல் -நின் கையில் வேல் போற்றி -உகிர் -போல்வனவும் உண்டே)இவை தான் எண்ணிறந்து இருக்கும் இறே
ஆபரணங்களோபாதி திவ்ய ஆயுதங்களுக்கும் தொகை இல்லாமையாலே
பிரதானமான சில சொன்ன இத்தனை

நித்ய
உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை –

நிரவத்ய –
சிந்மயர் ஆகையாலே பிரதிகூல நிரசநாதிகளில் சக்தி பிரவ்ருத்திகள் ஸ்வார்த்தமாய் இராதே சேஷிக்கு உறுப்பாய் இருக்கை –

(கருதும் இடம் பொருது கை நின்ற சக்கரத்தன்அம்பரீஷனுக்கு சக்கரம் உதவின வ்ருத்தாந்தம் -ஆழி எழ சங்கும் வில்லும் எழ –தண்டும் வாளும் எழ –உலகம் கொண்ட வாறே-உகந்த உள்ளத்தனாய் அளக்க இவையும் எழுந்தது கர்தவ்யமே)

அதவா
நித்ய நிரவத்ய
நாள் செல்ல நாள் செல்ல மழுங்குகை அன்றிக்கே
மழுங்காத வைன் நுதிய -திருவாய் மொழி -3-1-9- என்கிறபடியே சத்ரு சரீரங்களில்
தைக்கத் தைக்கச் சாணையில் இட்டாப் போலே கூர்மை மிக்கு இருக்கை –

(மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-)

நிரதிசய கல்யாண
ஸ்வ சம்பந்தத்தாலே சர்வ மங்களங்களையும் அத் தலைக்கு உண்டாக்க வற்றாய் இருக்கை -அதாவது-
ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் வந்தால் ஈஸ்வர சங்கல்ப்பத்திலும் முற்பாடராய் இருக்கை –
அறமுயலாழி படையவன் கோயில் -திருவாய் மொழி -2-10-5–இறே

(திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-)

திவ்ய ஆயுத
அப்ராக்ருத விக்ரஹராய் இருக்கை –

——————————————————————————–

ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய
அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணேத் யாதி ஸ்ரீ வல்லப
ஏவம் பூத பூமி நீளா நாயக

ஸ்வ அபிமத —
கீழ் சொன்ன விக்ரஹாதி வைலஷண்யம் அடையக் காட்டில் எரித்த நிலா வாகாதபடி
போக்த்ரிகளான மஹிஷீ வர்க்கத்தை சொல்லுகிறது –
பிரதம சூரணையிலும் இக் குணங்கள் உக்தமாய் இருக்கத்
திரியட்டும் சொல்லுகிறது புனர் உக்தம் அன்றோ என்னில்-
இவர் தாம் பிறர்க்கு உபதேசிக்கிறார் அன்றியிலே
அனுபவிக்கிறராய்-
அத்தாலே வந்த ஆதர அதிசயம் சொல்லுவிக்கச் சொல்லுகிறார் ஆகையாலே புனர் உக்தி தோஷம் இல்லை –

அதவா
அங்கு சரண்யதைக்கு உறுப்பாக அருளிச் செய்தார்
இங்கு வால்லப்யத்துக்கு உறுப்பாக அருளிச் செய்கிறார் –
இங்கு உள்ள பதங்களுக்கு அர்த்தம் அதுவே –

ஸ்ரீ வல்லப
ஏவம் வித வை லஷண்யோபேதையான பிராட்டிக்கு நாயகனானவனே
பசியன் சோற்றின் மேலே விழுமா போலே அவன் தானும் மேல் விழும்படியாய் இருக்கை –
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்னக் கடவது இறே –

(கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத் தலமும் அடி யிணையும் கமல வண்ணம்,
பார் வண்ண மட மங்கை பித்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர் வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் இது வன்றோ நிறை யழிந்தார் நிற்கு மாறே?)

(பஹு ருதூன் ராமயா சீதயாசார்த்த –இங்கு ராமனுக்கு முக்யத்வம்-இவனுக்கே ஈடுபாடு அதிகம்)

இவ் வால்லப்யம் புருஷகார பாவத்துக்கும்
ப்ராப்யதைக்கும் உறுப்பாய் இருக்கும் இறே

ஏவம் பூத
ஏவம் வித வை லஷண்யோபேதைகளான

பூமி நீளா நாயக –
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் –என்னக் கடவது இறே –

(கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே. கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள் கூவுதல் வருதல்செய் யாயே. 9.2.10)

கீழ் -ஸ்ரீ வல்லப -என்றது
இங்கு –நாயக –என்கிறது
இவர்கள் பக்கல் முறையாலே பரிமாறுகையும்
அவள் பக்கல் முறை கெடப் பரிமாறுகையும்
இம் முறை கேடு தனக்கு இவர்கள் தானும் தங்களை எழுதிக் கொடுத்து இறே இருப்பது —

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மடமகள் என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்; ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்; ‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்; தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

————————————————————————————–

ஸவச் சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
பேத அசேஷ சேஷதைக ரதி ரூப
நித்ய நிரவத்ய
நிரதிசய ஜ்ஞான கரியை ஐஸ்வர்ய
அத்யந்த கல்யாண குண கண
சேஷ சேஷாசன-கருட பிரமுக -நாநாவித அநந்த பரிஜன பரிசாரிக -அபரிசரித சரண யுகள

ஸ்வ சந்த அனுவர்த்தி
இப்படிப் பிராட்டிமாரோட்டை சேர்த்தியே தங்களுக்கு ஸ்வரூப லாபமாய்
அவர்களோட்டை கலவிக்கு கைதொடுமானமாய்
இருக்கிற பரிஜனத்தைச் சொல்லுகிறது

(இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ)

ஸ்வ சந்த அனுவர்த்தி –
நித்ய ஸூரிகள் முகம் அறிந்து -முறை அறிந்து -பரிமாறுமவர்கள் ஆகையாலே
ஸ்வ சந்த அனுவர்த்திகளாய் இருப்பார்கள்
சம்சாரிகள் முறை அறியாதே பரிமாறு கையாலே
சங்கல்ப அனுவர்த்தி களாய் இருக்கும்

ஸ்வ சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதங்கள் ஆவது –
ஈஸ்வரன் யாவர் சிலரைக் கொண்டு யாதோர் அடிமை கொள்ள நினைத்து அருளுகிறான்
அவ் வடிமைக்கு அனுரூபமான ஸ்வரூபமும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியுமாய் இருக்கை –
பாவஜ்ஜேன க்ருதஜ்ஜேன தர்மஜ்ஜேன ஸ லஷ்மண
த்வயா புத்ரேன தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம – ஆரண்ய -15-28-என்னக் கடவது இறே

அசேஷ சேஷதைக ரதி ரூப
ஈஸ்வரன் அடிமை கொள்ளும் போது அவ்வோ அடிமைகளில் வ்யவஸ்திதராய் இருக்கும் அத்தனை போக்கி
அவ் வாதரத்தைப் பார்த்தால்
சர்வ சேஷ வ்ருத்தியிலும் உண்டான ஆதரத்தையே வடிவாக உடையராய் இருப்பர்கள் –

தாஸ்ய உபகரணங்களை சொல்லுகிறது மேல்
நித்ய
முக்தரைப் போலே ஒரு கால் இல்லாமல் ஒரு கால் உண்டாகை அன்றிக்கே
எப்போதும் உண்டாய் இருக்கை –

நிரவத்ய
ஜ்ஞாநாதிகள் ஸ்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்கை அன்றிக்கே
பவந்த மேவா நுசரன் நிரந்தரம்
பிரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்திர
கதாஸ் ஹமை காந்திக நித்ய கிங்கரர்
ப்ரஹர்ஷயிஷ்யாமி சநாத ஜீவித -ஸ்தோத்ர ரத்னம் -46–என்று கைங்கர்யத்துக்கு அனுகூலமாய் இருக்கை –
அஞராய் அக்ரியராய் இருக்கிலும் இருப்பர்கள் –

(பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோ ரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: ||ஶ்லோகம் 46 –

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?)

நிரதிசய ஜ்ஞான
அடிமைக்கு உறுப்பான அஸங்குசித ஞானம்

க்ரியா
ஜ்ஞான அனுரூபமான வியாபாரம்

ஐஸ்வர்ய –
அடிமைக்கு உறுப்பான -உபயத்துக்கும் சத்ருசமான -நியமனம்
சேனை முதலியார் பிரம்பும் கையுமாய் பிறரை நியமிக்கும் அதுவும்
அங்குற்றைக்கு உறுப்பாய் இருக்கும் இறே(வான் இளவரசு வைகுண்ட குட்டனாக அவன் இருக்கவே இவரது ஐஸ்வர்யம்- நியமனம்)

ஆதி -சப்தத்தாலே அனுக்தங்களான குண விசேஷங்களை நினைக்கிறது –

அநந்த
ஈஸ்வரனுடைய ரஷண விஷயமான குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே
கைங்கர்ய விஷயமான குணங்களுக்குத் தொகை இன்றிக்கே இருக்கை –

குண கண
திரள் திரளாக அறியும் இத்தனை போக்கித் தனித் தனியே காண அரிதாய் இருக்கை –

சேஷ
திரு வநந்த ஆழ்வான்

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஶ்லோகம் 439-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —)

சேஷாசன
சேனை முதலியார்(சேஷ அசனம் –சேஷத்தை உண்பவர் -இதுவே நிரூபகம்)

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.)

கருட
பெரிய திருவடி

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)

பிரமுக
இவர்கள் தொடக்கமான

நாநா வித
சண்டாதி த்வார பாலர்கள்
குமுதாதி கணாதிபர்கள்
முதலான விவித பேதங்கள்

அநந்த பரிஜன
குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே இவர்களுக்கும் தொகை இன்றிக்கே இருக்கை

பரி சாரிக அபரிசரித சரண யுகள –
ஏவம் வித ஜ்ஞாநாதிகளை உடைய விமலாதிகள் என்ன
தம் பஞ்ச சதான் யப்ஸரசாம் பிரதி தாவந்தி சதம் மாலா ஹஸ்தா
சதம் அஞ்ஞன ஹஸ்தா சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா
சதம் பண ஹஸ்தாஸ் தம் பர்மா லங்காரேணா லங்குர்வந்தி -என்கிறபடியே
மதி முக மடந்தையர் -திருவாய் மொழி -10-9-10-என்ன
ஸூத்ரவதி முதலான (ருத்ரா ஸூ கீர்த்தி -பெரிய திருவடியின் மஹிஷிகள்)இவர்கள் மகிஷிகள் என்ன
இவர்களால் அடிமை செய்யப் பட்ட ஏற்றத்தை உடைய
திருவடிகளை உடையவனே
இவர்கள் மகிஷிகள் தம் போகத்துக்கு உறுப்பாகை அன்றிக்கே
அங்குத்தைக்கு உறுப்பாய் இருப்பர் இறே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் மொழி -1-1-1- என்று இறே ஏற்றம்

—————————————————————————————

(உபய லிங்க விஸிஷ்டன் -அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக ஸ்தானம்
உபய விபூதி விஸிஷ்டன்-)

(பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ-தனி விளிச் சொல்லாகவும் ஸூதர்சன பட்டர் வியாக்யானம்-உடையவனே -என்று ஸ்ரீ வைகுண்டத்தைச் சொல்லாமல் அவனையே சொன்னவாறு என்கிறார்)

பரமேதி
ஸூரி போக்யமான கைங்கர்யத்தின் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று கீழ்
அந்தக் கைங்கர்யத்துக்கு வர்த்தகமான தேச விசேஷத்தை சொல்லுகிறது மேல்

பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ

முக்தாநாம் லஷணம் ஹயேதத் ய ஸ்வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந-என்கிற(ப்ரஹ்ம ஏக பாவனை யுடைய)
சனகாதிகள்  உடைய வாங் மனஸ் ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடைத்தாய் இருக்கை-
அதாவது –பஞ்ச உபநிஷன் மயம் -ஸூத்த சத்வ மயம் என்று திரள
நினைத்தால் சொல்லுதல் செய்யும் இத்தனை ஒழிய
ஏவம் ஸ்வரூபம் ஏவம் ஸ்வபாவம் என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லும் சொல்லப் பெற்றேன்)

(திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதி ஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காம வ்ருத்த: ||-ஶ்லோகம் 47 –

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.)

பஞ்ச உபனிஷன் மயமாய் இருக்கையாலே ஏக த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அநேக த்ரவ்ய உபசயாத்மகம் ஆகையாலே நித்ய த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அவஸ்தாந்தராபத்தி இல்லாமையாலே பரிணாம ஸ்வபாவம் என்ன ஒண்ணாது
பகவத் சங்கல்பத்தாலே சில உண்டாகச் சொல்லுகையாலே ஏக ரூபம் என்ன ஒண்ணாது
ஆகையால் அளவுடையாராய் இருக்கும் பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும் தேசம்-

ஸ்வ அபிமத விவித விசித்திர
அநந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
அநந்த ஆச்சர்ய
அநந்த மஹா விபவ
அநந்த பரிமாண
நித்ய நிரவத்ய
நிரதிசய வைகுண்ட நாத

ஸ்வ அபிமத –
அன்புற்று அமர்ந்து உறைகின்ற -திருவாய் மொழி -7-10-1-(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான்)என்கிறபடியே ஆதரித்து வர்த்திக்கிற படியால் -அபிமதமாய்

விவித -விசித்திர –
நாநா விதமாய்
அநந்த
முடிவு இன்றிக்கே இருப்பதான –

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
போக்யங்களான அப்ராக்ருதமான சப்தாதி விஷயங்கள் என்ன
போக உபகரணங்கள் ஆன-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-பரிஜன பரிச்சதாதிகள் என்ன
போக ஸ்தானங்கள் ஆன தேச விசேஷங்கள் என்ன
இவற்றாலே சம்ருத்தமாய் இருந்துள்ள

அநந்த ஆச்சர்ய –
அநந்த உத்யாந- நதீ -தடாகாதி லஷணமான விபவத்தை உடைத்தாய் இருக்கை –
அநந்த ஆச்சர்யம் ஆகையாவது
க்ருதகம் என்றாதல் -நவம் என்றாதல் -புராதனம் என்றாதல் சொல்ல ஒண்ணாதே
அக்ருத்ரிமமாய் பிரதி ஷணம் அபூர்வமாய் இருக்கை

அநந்த மஹா விபவ
மஹத்வம் ஆவது இவற்றுள் ஓர் ஒன்றே போக்தாக்களால் அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை

அநந்த பரிமாண –
ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கை(பக்கவாட்டிலும் உயரத்திலும் எல்லை இல்லாமல் கீழே விரஜை உண்டே)

நித்ய நிரவத்ய நிரதிசய வைகுண்ட நாத
(வை குண்ட -சொல்லே அழியாதது என்பதைக் காட்டுமே)நித்ய-சதைக ரூபமாய் –
நிரவத்ய-ஹேய ப்ரத்யநீகமாய்
நிரதிசய-சர்வ பிரகாரத்தாலும் அதிசயிதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு நாதன் ஆனவனே

(உத்தமமான அநுத்தமுமான -இத்தை விட உயர்ந்தது இல்லாமல் தேஸம் -ஸ்ருதி)

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த–பரம பதத்தில் போக்தாக்களை சொல்லாது ஒழிந்தது(போக்த்ரு  வர்க்க-லீலா விபூதியில் சொல்லப் போகிறார் இங்கு சொல்ல வில்லையே)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய் மொழி -4-9-10-என்கிறபடியே
இவர்கள் போகத்துக்கு கை தொடுமானமாம் ஆகாரம் ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலே(நீயுமே-ஏவகாரம் –போக்தாக்கள் வேறே சொல்ல வில்லையே-முக்தருக்கும் நித்யருக்கும் தனியான ஆனந்தம் பெற மாட்டார்கள் அன்றோ)

ஆனால் ஸ்ருதி
ஏதத் சாம காயன்னாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ-என்று –அந்நாதோ-என்று போக்தாக்களை-சொல்லிற்று இல்லையோ வென்னில்

தான் அங்குத்தைக்கு ஸ்ரக் சந்த நாதிகளோபாதி போக உபகரணமாய் இருக்கும் இருப்பு
புருஷார்த்தம் ஆகையாலே சொல்லிற்று இத்தனை –
அங்கன் அன்றாகில் அஹம் அன்னம் என்றத்தோடு விரோதிக்கும் இறே-

(நான் உணவு முதலில் சொல்லி -மாலை சந்தனம் போல் அவனுக்கு போக்யத்துக்குக் கருவி சொல்லி
முரண்படாமல் –
அவனது பவள வாய் -முறுவல் தான் நமக்கு அன்னம்
நான் உணவை உண்பவன் என்றது படியாய்க் கிடந்தது உன் பவள காய் காண்பாவனாக இருக்க வேண்டும் அன்றோ
தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே புருஷார்த்தம்)

————————————————————————————-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல
சத்ய காம
சத்ய சங்கல்ப
பர ப்ரஹ்ம பூத
புருஷோத்தம
மஹா விபூதே
ஸ்ரீ மன் நாராயண
ஸ்ரீ வைகுண்ட நாத
அபார காருண்யா
சௌசீல்ய
வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய
சௌந்த்ர்ய மஹோததே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய
அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
நிகில ஜகதாதார
அகில ஜகத் ஸ்வாமின்
அஸ்மத் ஸ்வாமின்
சத்ய காம சத்ய சங்கல்ப
சகல இதர விலஷண
அர்த்தி     கல்பக ஆபத் சக ஸ்ரீ மன் நாராயண
அசரண்ய சரண்ய
அநந்ய சரண
த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே
அத்ர த்வயம் –

ஸ்வ சங்கல்ப -இத்யாதி –
இப்படி அப்ராக்ருதமான நித்ய விபூதி யுக்தனுக்கு
ஆவது அழிவதாய் -லீலா ரச ஹேதுவான லீலா விபூதி யோகம் சொல்லுகிறது மேல்
ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி –
ஸ்வ சங்கல்பத்தைபின் செல்லா நின்று உள்ள ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடைத்தாய் –

பிரகிருதி யாவது –
சத்வாதி குணத்ராயாத் மகமாய் -(ஆத்மாவுக்கு இவை வந்தேறி -உடலுடன் சேர்க்கையாலேயே இவை ஆத்மாவை பாதிக்கும்)அநந்த மாய்-(சூழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெரும் பாழ்)விசித்ரமான அவஸ்தா விசேஷ ரூப பரிணாமத்துக்கு சமர்த்தமாய் இருந்துள்ள பிரதானம் -(ப்ரக்ருதி ப்ரதானம் பர்யாயம்)

பிரக்ருதிக்கு ஸ்வரூபம் ஆவது –
சத்வாதி குணகமான ஜடத்வம் -(ஆத்மா அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம்)

ஸ்திதி யாவது -சேதனருக்கு போக மோஷ சாதன அனுஷ்டானத்துக்கும் -பல அனுபவத்துக்கும் -உபகரணமாய் இருக்கை -(மோக்ஷ அநு பவிக்க ப்ரக்ருதி தேவை இல்லையே -அப்ராக்ருதம் அன்றோ)

பிரவ்ருத்தி யாவது -ததர்த்தமாக -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண பரிணமிக்கை –

புருஷ-சம்சாரி சேதனனுக்கு ஸ்வரூபம் ஆவது -அசித் விசிஷ்ட ஆகாரத்வம்

ஸ்திதி யாவது -அந்நாதிகளால் தரிக்கை-

பிரவ்ருத்தி யாவது -புண்ய பாப ரூப கர்ம அனுஷ்டானம் என்ன-
தத் பல அனுபவம் என்ன -இவை

காலத்துக்கு ஸ்வரூபம் ஆவது -அசித்வம்

ஸ்திதி யாவது -சேதன அசேதனங்கள் உடைய பரிமாணங்களுக்கு நிர்வாஹகமாய் இருக்கை –

பிரவ்ருத்தி யாவது -நிமேஷ கலா காஷ்டாதி ரூபத்தாலே
உத்பத்தி விநாசாதிகளை ப்ரவர்த்திப்பிக்கை –

ஸ்வ சேஷதைக ஸ்வபாவ –
தனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை –

பிரகிருதி புருஷ காலாத்மக –
இப்படிப் பட்ட பிரகிருதி -புருஷ -கால -ரூபமாய்

விவித –
அத ஏவ விவிதமாய்

விசித்ர –
விசித்ரமாய்

அநந்த-
அனந்தமாய்

போக்ய –
போக்யம் என்ன –

போக்த்ரு வர்க்க-
போக்த்ரு வர்க்கம் என்ன(கீழே நித்ய விபூதியில் போக்த்ரு வர்க்கம் இல்லையே)

போக உபகரண-
போக உபகரணங்கள் என்ன

போக ஸ்தான –
போக போக்யங்களான ஸ்தான விசேஷங்கள் என்ன –

ரூப
இவற்றை வடிவாக உடைய

நிகில ஜகத் உதய விபவ லய லீல-
சகல லோகங்களின் உடைய உத்பத்தி ஸ்திதி சம்ஹாரங்களை லீலையாக உடையவனே

விசித்ரம் ஆகையாவது -நாநாவிதமாய் இருக்கை –

அநந்தம் ஆகையாவது -தொகை இன்றிக்கே  இருக்கை

போக்த்ரு வர்க்கம் ஆவது –தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியாலே ஸ்வ தந்த்ரராய்
சப்தாதி விஷயங்களுக்கு போக்தாக்கள் ஆகை-
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதிகள் உண்டாகிறது ஈஸ்வரனுக்கு உபகரண தயா வல்லது ஸ்வ தந்திர தயா வல்ல –
ஆனால் துக்க ரூபமாய் இராதோ -என்னில்
அவர்களுக்கு தபஸ் பலமாய் வந்தது ஆகையாலே (யுக கோடி ஸஹஸ்ராணி பத்ம பூ இத்யாதி -உண்டே)சுக ரூபமாய் இருக்கும்
நித்ய விபூதி யோகத்தால் வந்த பூர்த்தியை உடையனாகையாலே ஈஸ்வரனுக்கு இது லீலையாய் இருக்கும்(நாட்டைப்படை –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)

ஆக -நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று ஆயிற்று-

சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கலாவது
உபேய ருசியும் -உபாய அத்யவசாயமும் உண்டானால் ஆகையாலே
அதினுடைய சித்தி அர்த்தமாக முதல் சூரணை யிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கார் –

இரண்டாம் சூரணை யிலே -பிராட்டி பிரசாதத்தாலே அத்தை பிராப்தரானார்

அநந்தரம் ஆஸ்ரயணீயராவார் ஆர் என்னும் அபேஷையிலே
காரணம் து த்யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹ்ணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்னும் இத்யாதியாலே
சகல ஜகத் காரண பூதனான நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டும் ஆகையாலே
அகில ஹேய -என்கிற சூரணை யிலே நார சப்த வாச்யங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லி

அநந்தரம் -அவ் விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லி

அநந்தரம் -ஏவம் விதமானவற்றுக்குக் காவலான திவ்ய ஆயுத வர்க்கங்களைச் சொல்லி

அநந்தரம் -இப் போக்யதை காட்டில் எரித்த நிலா வாகாதபடி தலை நீர்ப் பாட்டிலே இருந்து அனுபவிக்கும் மஹிஷிகளைச் சொல்லி

அநந்தரம் -இச் சேர்த்தி அழகைக் கண்டு அனுபவித்து- தோற்று- எழுதிக் கொடுத்து-
எடுத்துக் கை நீட்டிப் பரிமாறும் திவ்ய பரிஜனங்களைச் சொல்லி

அநந்தரம் -கைங்கர்யத்துக்கு ஏகாந்தமாய் -தத் வர்த்தகமுமான நித்ய விபூதியைச் சொல்லி

அநந்தரம் -ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு விஷயமான லீலா விபூதியைச் சொல்லி
இப்படி அவனுடைய உபய விபூதி நாதத்வத்தைப் பேசி அருளினார் –

இனி ஆஸ்ரயிக்கை இறே உள்ளது-

அவ் வாஸ்ரயணத்துக்கு உபயோகியான குணங்களைச் சொல்லுகிறது மேல்அபார காருண்ய –இத்யாதியாலே
நடுவே எட்டு குணங்களைச் சொல்லா நின்றதே -இவற்றால் சொல்லுகிறது என் என்னில்
மேல் பண்ணப் புகுகிற ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
கீழ் சொன்னவற்றை அனுபாஷிக்கிறதுமாய் இருக்கிறது –

கீழ் ஆஸ்ரயணீயனைச் சொல்லிற்று ஆகில் அநந்தரம் ஆஸ்ரயிக்க அமையாதோ என்னில் -அமையாது –
ஆசார்ய உபதேச பூர்வகமாய் இறே ஆஸ்ரயணீயம் இருப்பது
அவ்விடத்தில் ஆசார்ய உபதேச முகத்தாலே அவனே பிராப்ய பிராபகங்கள்  என்று அத்யவசித்து
அநந்தரம் ஆஸ்ரயிக்க வேண்டும்
அல்லாத போது அவனுடைய ரஷகத்வத்திலே ஆதல்
உபாயத்வத்திலே ஆதல் அதிசங்கை நடக்குமாகில் ஆஸ்ரயித்தவனாக மாட்டான்
ஆகையால் –
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததே கோபாயதா யாச்ஞா பிரபத்தி சரணா கதி -என்னும்
நியாயத்தாலே கீழ்ச் சொன்ன நாராயணத்வத்தை அனுபாஷித்துக் கொண்டு
அவனே உபாய உபேயங்கள் என்று -அத்யவசிக்கிறார்

இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே தாம் பெற்ற அர்த்தத்தை அனுசந்திக்கிரார் –

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –

மஹா விபூதே ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிற இவை நித்ய விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிறது ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை கொள்ளும் தேசத்தைச் சொல்லுகிறது

ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை செய்கை போலே காணும் சேஷ பூதனுக்கு க்ருத்தியம்-இத்தால் அடிமை கொள்ளும் படி ஆஸ்ரயிக்கையே ஆஸ்ரயணம் என்றது ஆயத்து –

1-சத்ய காம
காம்ய ஸ்ப்ருஹா ஸ்மர காம -என்று நிகண்டு –
காம சப்தம் ஸ்மரனையும்(மன்மதனையும்)-இச்சிக்கப் படுமத்தையும் -இச்சையையும் சொல்லுகிறது
கீழே சத்ய காம -என்கிறது ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமாய்
அவ் வழியாலே தனக்கும் காம விஷயமான விபூதியைச் சொல்லுகிறது –
இங்கு சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை
ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் -என்கிறது –
கீழ் காமிக்கப் படுமவற்றைச் சொல்லிற்று
இங்கு காமத்தைச் சொல்லுகிறது –

சத்ய சப்தம் நித்ய வாசி
சிருஷ்டிக்கு விஷயமான புருஷ சமஷ்டி
ஸ்ருடரான சேதனர்க்கு போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபியான பிரகிருதி
இவற்றைக் கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கைக்குக் காலம்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கு தப பலமாகையாலே போக ரூபமாய் இருக்கும்
ஈஸ்வரனுக்கு லீலையாய் இருக்கும் ஐச்சிகம் ஆகையாலே

லீலை என்கிறது சேதனனுக்கு பந்தகமுமாய் நாச ஹேதுவுமாய் ஈஸ்வரனை மறைத்து அநர்த்த அவஹமாய் இருக்க
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் ஆவான் என் என்னில்
சுகோ முக்தோ வாமதேவோ விமுக்த -என்கிறபடியே ஓன்று இரண்டு வ்யக்தியிலே பலிக்கக் காண்கிறது இறே
அந் நசை யாயிற்று இவனுக்கு ஸ்ப்ருஹையை விளைக்கிறது –
ஆகை இறே அழித்து அழித்து சிருஷ்டிப்பது ஸ்திதிப்பிப்பது-அதி ப்ரவ்ருதமான வாறே சம்ஹரிப்பது
பின்னையும் இது தன்னையே செய்வதாக நிற்கிறது –
என் போலே வென்னில்
ஒரு ஷேத்ரம் நெடும் காலம் இட்டிறையாய் போகா நின்றாலும் ஒருகால் பலிக்கக் காண்கையாலே
அழித்து அழித்து பயிர் செய்யும் கர்ஷகனைப் போலே

2-சத்ய சங்கல்ப -கீழேயும் –சத்ய சங்கல்ப -என்றது
ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமான அபூர்வ போகங்களை தன நினைவாலே சிருஷ்டிக்க வல்லவன் என்கைக்காக
இங்கு சத்ய -சப்தம் அமோக வாசி –
இங்கு சத்ய சங்கல்ப -என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கும் என்கைக்காக
அதாவது இவற்றை அமோகமாக தன் நினைவிலே சிருஷ்டிக்க வல்லனாகை

ப்ரஹ்மாவினுடைய சங்கல்பமும் மோகமாய் இருக்கும் -எங்கனே என்னில்
சனகாதிகளை தன் நினைவாலே ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பாக சிருஷ்டித்தான்
அவர்களோ என்றால் -முமுஷூக்களான எங்களுக்கு இச் செயல் ஆகாது -உனக்கேயாம் இத்தனை -என்று இகழ்ந்து போனார்கள்

தான் சிருஷ்டித்த அசுரர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து தான் ஈஸ்வரன் காலிலே விழுந்து
வேதா மே பரமம் சஷூ -வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம -வேதா மே பரமம் சோத்தமம் –என்று கூப்பிட்டான் –

மேலே அவனுடைய திருவடிகளிலே சரணம் புகுகைக்கு உறுப்பாக
சிருஷ்டி முதலாக புருஷார்த்தத்துக்கு எல்லையான கைங்கர்ய பர்யந்தமான
நடுவுள்ளவை யடங்க அவனிட்ட வழக்கு என்று அருளிச் செய்கிறார் –எட்டு ஸ்வ பாவத்தாலே
1-சத்ய காம –
சேதனர் உடைய சரீர சம்பந்தத்துக்கு அடியான சிருஷ்டிக்கு உபகரணமான நித்ய பதார்த்தங்களை உடையவன் -என்கிறது

2-சத்ய சங்கல்ப
சிருஷ்டி அர்த்தமாக சங்கல்ப்பிக்கும் சங்கல்பம் அமோகமாய் இருக்கும் -என்கிறது

குண சூரணையிலே இவ் விரண்டு குணங்களும் உக்தமாய் இருக்க இங்கும் சொன்னால் புநர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு குண சத்பாவத்துக்கு உறுப்பாகச் சொல்லிற்று
இங்கு சிருஷ்டி யர்த்தமாகச் சொல்லுகிறது ஆகையாலே தோஷம் இல்லை –

3-பர ப்ரஹ்ம பூத –
ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

4-புருஷோத்தம –
புருஷாணாமுத்தம –
புருஷாணாம் என்கிற பஹூ வசனத்தாலே த்ரிவித சேதனரையும் வயாவர்த்திக்கிறது-

புருஷ-உத்புருஷ -உத்தர புருஷ -உத்தம புருஷ
புருஷர் ஆகிறார் -அசித் வ்யாவ்ருத்தரான பத்த சேதனர்
உத் புருஷர் ஆகிறார் -பத்தரில் வ்யாவ்ருத்தரான முக்தர்
உத்தர புருஷர் ஆகிறார் முக்தரில் வ்யாவ்ருத்தரான நித்யர்
உத்தம புருஷன் ஆகிறான் -ஸூரிகளிலும்  வ்யாவ்ருத்தனான ஈஸ்வரன்

பத்தர் ஹேய ஆகாரராய் இருப்பர்
முக்தர் ஹேயத்தின் நின்றும் ஒரு நாள் குளித்து ஏறினவராய் இருப்பர்
நித்யர் ஹேய ரஹிதராய் இருப்பது ஒழிய ஹேய பிரதி படர் அல்லர்
ஈஸ்வரன் ஹேய ப்ரதிபடனாய் இருப்பன்

ஈஸ்வரன் த்ரிவித சேதன அசேதனங்களிலும் அந்தராத்மதயா நிற்கச் செய்தே
அவற்றின் உடைய ஹேய கந்தம் தட்டாதவனாய்
ஆஸ்ரிதர் ஹேயத்தை போக்க வல்லனுமாயும் இருக்கும்

இத்தால் ஸ்ருஷ்டமான ஜகத்தின் உடைய வ்யாபன பரண ஸ்வாம்யத்தால் உண்டான வைலஷ்ண்யம் சொல்லுகிறது –
இத்தால் உஜ்ஜ்வலனாகா நிற்கும் என்றது ஆயத்து

(அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –)

அங்கன் அன்றிக்கே
ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு அபேஷித புருஷார்த்தங்களை கொடுக்குமவன் ஆகையாலே புருஷோத்தமன் -என்னவுமாம் –
புரு -பஹூ
சநோதி -ததாதி -என்று இறே இதுக்கு வ்யுத்பத்தி

மஹா விபூதே –
கீழேயும் விபூதியைச் சொல்லிற்று
மேலும் விபூதியை சொல்லப் புகா நின்றது
இப்படி சொல்லுகை புநர் உக்தம் அன்றோ -என்னில்
விபூதி மான் -என்கைக்காக விபூதி யோகம் சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனருக்கு அவ் விபூதியைக் கொடுக்கும் என்று விபூத் ஔதார்யம் சொல்லுகிறது இங்கு
மேல் அடிமைக்கு ஏகாந்தமான தேசம் என்று விபூதி விநியோகம் சொல்லுகிறது
ஆகையால் தோஷம் இல்லை

ஸ்ரீ மன் –
கொடுத்த தேசத்தில் போக்ய விஷயத்தை சொல்லுகிறது –
அங்கு இருவருமாய் இறே அடிமை கொள்ளுவது
வைகுண்டே  து பர் லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவத்தைஸ் சஹ -சிவ புராணம் -எண்ணக் கடவது இறே –

நாராயண –
அநந்த மங்கள குணங்களோடு குறைவற விருந்து அடிமை கொள்ளும்வன் என்கிறது –

ஆக ஸ்ரீ மன் நாராயண -என்கையாலே ஒரு மிதுனமே பிராப்யம் –என்கிறது –

ஸ்ரீ வைகுண்ட நாத –
அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்தமான பரம பதத்திலே நாதனாய் இருந்து அடிமை கொள்ளும் -என்கிறது

இவற்றில் கீழ் நாலு குணங்களும் சிருஷ்டிக்கு உறுப்பாய் இருக்கும்
மேல் நாலு குணங்களும் பிராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்
காரணமுமாய் பிராப்யமுமான வஸ்து இறே பிராபகம் –

அநந்தரம் ஆஸ்ரயணீயத்வத்தில் ப்ரக்ருஷ்ட உபகாரகங்களான குணங்களைச் சொல்லுகிறது -(16 குணங்களை இங்கு அருளிச் செய்கிறார் -அபார விசேஷணம் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்)
அபார காருண்யா இத்யாதி –
1-காருண்யம் ஆகிறது கிருபை அதாகிறது -பர துக்க அசஹிஷ்ணுத்வம்

இது அபாரமாகை யாகிறது
ஆனயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம்ஸ் யாபயம் மயா
விபீஷணோ வா சூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் 18-34-என்று அவன் அளவும் செல்லுகை –
அங்கன் அன்றியே
என்னளவும் வர வெள்ளம் கோக்கும் குணம் என்னவுமாம்

2-சௌசீல்ய –
உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு வந்து கலவா நின்றால்
இவன் நம்முடையான் என்று புரையற கலக்கலாம்படி இருக்கை –

இதுக்கு அபாரத்வம் ஆவது
தேவ மனுஷ்யாத் அவதாரங்கள் போல் அன்றிக்கே மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களிலும் இவை நம்முடையது என்று இருக்கையும்
தானும் அவற்றிலே ஒன்றாய் இருக்கையும்
இவற்றிலே நாம் ஓன்று என்று நினைத்து இருக்கையும் –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்யமிதோ அந்யதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்தம் -120-11-

3-வாத்சல்ய –
வாத்சல்யம் ஆவது -ப்ரேமத்தாலே ஆஸ்ரித கதமான தோஷமும் குணமாகத் தோற்றுகை
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர் அளவு அன்றிக்கே
சகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாமபி வத்சலா
அப்ய நுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதா கதம் -யுத்தம் -50-56-என்று
சத்ருக்கள் பக்கலிலும் அப்படி இருக்கை

ஆனால் பையல் தலையை அறுத்து விடுவான் என் என்னில்
அவர்கள் பக்கலிலும் அவன் படியில் குறை இல்லை
அதுவும் ஜீவியாதபடி அவர்கள் சூழ்த்துக் கொண்ட வித்தனை

அங்கன் அன்றியே
தலை அறுக்கை தானும் வாத்சல்யம் ஆகவுமாம்
எங்கனே என்னில் விளையாடக் கொடுத்த கோலைக் கொண்டு பிரஜை கண்ணை கலக்கிக் கொள்ளப் புக்கால்
கையில் கோலை வாங்கி இட்டு வைக்கும் தாயை போலே –

4-ஔதார்ய
ஔதார்யம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு ஸ்வரூப அனுரூபமான
அபேஷிதங்களை தன் பேறாக கொடுக்கை

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலனாக எப்போதும் நெஞ்சாறல் பட்டுக் கொண்டு இருக்கை –
ருணம் ப்ரவ்ருத்தம் இவ –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –பெரிய திருவந்தாதி -53

5-ஐஸ்வர்ய –
ஐஸ்வர்யம் ஆவது அர்த்திகள் அர்த்தித்தவை எல்லாம்
கொடுக்கும்படியான அடிவுடைமை

இதுக்கு அபாரத்வம் ஆவது
அவ் வடிவுடைமை தான் இவ்வளவு என்று இருக்கை அன்றிக்கே
கொடுக்க மேல் மேல் என வளர்ந்து கொடு செல்லுகை

(கொள்ளக் குறைவிலன் கோதில் மணி வண்ணன் 

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்)

6-சௌந்த்ர்ய மஹோததே 
சௌந்தர்யம் ஆவது அழகு

இதுக்கு அபாரத்வம் ஆவது
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சரகிலை தின்னிகளான ரிஷிகளையும் கூட மடல் எடுக்கப் பண்ண வற்றாய் இருக்கை –
அனுகூலரை யன்றிக்கே ப்ரதிகூலையான சூர்பணகி பொல்வாரையும் மடல் எடுக்கப் பண்ணுகை-என்றுமாம் –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்கள் பாராதே
இருந்ததே குடியாக சரண வரண அர்ஹனானவனே(ஸமோஹம் ஸர்வ பூதேஷூ)

8-பிரணத ஆர்த்தி ஹர –
இப்படி அத்யவசித்த ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவனே

9-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
கீழ் சொன்ன குணங்கள் எல்லாம் ஒரு தலை யானாலும்
அவற்றை எல்லாம் கீழ்ப் படுத்தும் படியான நிரவதிக வாத்சல்யத்தை உடையவனே
நிகரில் புகழாய் -திருவாய் மொழி -6-10-10-என்கிறபடியே

ஆக
கீழ் ஆஸ்ரயண அர்ஹதை சொல்லி –ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவன் என்று சொல்லி–
அதுக்கடியான வாத்சல்யம் சொல்லிற்று

10-அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய –
சத்தா யோகி சகல பதார்த்தங்களின் உடைய உண்மையை எப்போதும் ஒக்க அறியுமவனே
இத்தால் –அனுத்தமமான பாத்ரம் -ஸ்தோத்ர ரத்னம் -24-என்று நான் என் படி சொல்ல வேண்டா விறே -என்கிறார்

(நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந் நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||ஶ்லோகம் 24 –

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.)

11-அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
நல்லது இல்லை என்றால் -தீயவை இல்லாமல் இருந்தாயோ என்று கேட்ப்பாயாகில்
அனைவரையும் இயக்கும் சக்தி உன்னுடையது அன்றோ
ஜங்கம ஸ்தவாராத்மகமான ஸமஸ்த பதார்த்தங்களையும் சர்வ காலத்திலும் நியமிக்கிறாய் நீயே அன்றோ
ஸர்வ நியந்தாவாய் வன்றோ நீ உள்ளாய்
இத்தால் உனக்கு அவிதேயமாய் ஓன்று இருக்கும் அன்று தானே எனக்கு இழக்க வேண்டியது
பத்தனான ஆத்மாவோடு பந்தகமான பிரக்ருதியோடு வாசி யற நீ இட்ட வழக்கு அன்றோ


12-அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத –
சகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே
இத்தால் என் கார்யம் உன் பேறாக செய்ய வேண்டும் சம்பந்தம் உடையவன் அல்லையோ என்கை

13-நிகில ஜகத் ஆதார –
பகவத் பாகவத விஷயங்களில் அபராதம் பண்ணிப் போரும் ஜகத்துக்கும் ஆதார பூதனே
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்கிறார் –

14-அகில ஜகத் ஸ்வாமின் –
அபராதத்தை தவிர்ப்பித்து ஆபி முக்யத்தைஉண்டாக்கி
தேவர் திருவடிகளிலே புகுர நிறுத்துகைக்கு வேறு நிர்வாஹகர் உண்டோ

அத ஏவ
15-அஸ்மத் ஸ்வாமின்
கீழும் சேஷித்வம் சொல்லிற்று -அங்கு சம்பந்த பரம்
இங்கு சம்பந்த அனுகுண நியமன பரம்
இத்தால் என்னை இவ் வளவாக புகுர நிறுத்தினவன் நீ  அல்லையோ -என்கிறார்

16-சத்ய காம –
கீழ் குண சூரணை யிலே ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான வழியாலே தனக்கும் இனிதான குண விபூதியைச் சொல்லிற்று –

நடுவு –சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் என்கைக்காக

இங்கு சத்ய காம -என்கிறது ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டாதபடி
அவாப்த சமஸ்த காமதயா வந்த பூர்த்தியை உடையவன் -என்கைக்காக
இத்தால் –அகிஞ்சனோ அநந்ய கதி -ஸ்தோத்ர ரத்னம் -என்று
அகிஞ்சனான என் கார்யம் பூர்ணனான உனக்கு பரம் அன்றோ -என்கிறார்-

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||ஶ்லோகம் 22 –

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.)

(அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா)

17-சத்ய சங்கல்ப –
கீழ் குண சூரணை யிலே சத்ய சங்கல்ப -என்றது
அபூர்வமான போக்யங்களை அமோகமாக சிருஷ்டிக்க ஷமண் என்கைக்காக –

நடுவே சத்ய சங்கல்ப என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதம் –என்கைக்காக

இங்கு சொன்னது அகடிதங்களையும் சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்தும் ஷமண் –என்கைக்காக

இத்தால் -நித்ய சம்சாரியான என்னையும் நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க நினைத்தால்
செய்து முடிக்க வல்லன் அல்லையோ நீ –என்கிறார்

18- சகல இதர விலஷண-
சேதனர் உடைய ஜீவனம் சொல்லுகிறது

ஸ்வரூபதோ குண தச்ச விலஷண-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப குணங்களை உடையவனே
இவை தன்னை யாருக்காக படைத்தது -ஸ்வார்த்தம் ஆகவோ -என்கிறார்
ஒரு விபூதியாக அனுபவிப்பாரும் அனுபவிப்பிப்பாரும் ஆய்ச் செல்லா நிற்க ஸ்வார்த்தமாகவோ-என்கிறார் இறே
இவரை ஒழிய எல்லாரையும் அனுபவிப்பித்தாலும் குறையாய் இருக்கும் இறே –
இவரை அனுபவிப்பித்தால் ஆய்த்து அவனுடைய ரஷகத்வம் பூர்ணம் ஆவது
பூர்ண அனுபவம் பண்ணுவார்க்கு ஓன்று குறைந்தாலும் நெடும் பாழாய்த் தோற்றும் இறே(ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே)
ஆகையால் இவரோடும் கூட அனுபவித்தால் ஆய்த்து அவர்கள் அனுபவம் பூர்ணம் ஆவது
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்

(நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?)

அர்த்தி கல்பக
தன் தலையாலே இரந்து கொடுக்குமவனுக்கு இரந்தார்க்கு கொடாது ஒழிகை போருமோ -குறை யன்றோ –
அர்த்திப்பார்க்கு கடக்க நின்று தன்னை ஒழிந்த சிலவற்றை கொடுத்து விடும் பூண்டு போலேயோ -இங்கு கற்பக மரம் –
அர்த்திகளையும் உண்டாக்கி தானே இரந்து சகல பல பிரதனான உன்னையும் தருகிற நீ
என்னை யாக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திரு வாய் மொழி -2-7-11-என்னக் கடவது இறே –
அது போலே நாரும் நரம்புமாயிருக்கை –

அன்றிக்கே –
அபார சௌந்த்ர்ய மகோததே-என்னும்படியாய் இறே இருப்பது
இரந்து கொடுக்கும் அத்தனை ஒழிய இரந்தார்க்கு கொடுக்கலாது ஓன்று உண்டோ

ஆபத் சக –
ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
அதாவது துணையாய் இருக்கை
சர்வ ரஷகன் ஆனவனே அறச் செய்ய வேண்டும்படியான ஆபத்திலும் தானே துணையாய் இருக்கை

மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவை யடைக்கும் தசையிலும்
ரகுவர யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
ப்ரதிபவம் அபராத்துர் முக்த சாயுஜ்யதோச்பூ வாத கிமபத மாகஸ் தஸ்ய தேச்ஸ்தி ஷமாயா –ஸ்தோத்ர ரத்னம் –
தமேவ சரணம் கத -என்றும் தேவரே துணையாய் இருக்கை –

(ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ் தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||ஶ்லோகம் 63 –

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்ட வில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவி தோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசு பாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கி யருள வேண்டும்.)

ஸ்ரீ மன் –
இப்படி இருக்கிற உன்னையும் அச்சிர்த்துப் (புறக்கணித்து -கீழ் உள்ள எதுவுமே இல்லா விட்டாலும் )புருஷகார பூதையான பிராட்டியைப் பார்த்து ரஷிக்க வேணும் –

நாராயண
இவள் புருஷகாரம் ஆவதற்கு முன்னமே ஸ்ருஷ்ட் யார்த்த அநு பிரவேசத்தாலே சத்தையை நோக்கினவன் அல்லையோ -(தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ரவேஸஸ்ய)
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்றபடி

அசரண்ய சரண்ய –
கிம் புனர் அசரண்ய சரண்யத்வம்-
அதாகிறது –
இப்படி இருக்கிற தேவர்க்கும் புறம்பாய் -பின்னையும் தேவரை ஒழிய புறம்பு புகல்
அற்றார்க்கு சரண்யன் ஆனவனே -என்கிறார்
இப்படி இருப்பார் உண்டோ என்னில்

அநந்ய சரண அஹம்-
ததா விதோ அஹம்
அந்த அசரண்யன் ஆனவனே நான் என்கிறார்
பற்றிலார் பற்ற நின்றானே-

த்வத் பாத அரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே-
இப்படி இருக்கிற நான்
நிரதிசய போக்யமான தேவர் திருவடிகளையே
உபாயமாக அ

————————————————————————————–

ஸவச் சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
பேத அசேஷ சேஷதைக ரதி ரூப
நித்ய நிரவத்ய
நிரதிசய ஜ்ஞான கரியை ஐஸ்வர்ய
அத்யந்த கல்யாண குண கண
சேஷ சேஷாசன-கருட பிரமுக -நாநாவித அநந்த பரிஜன பரிசாரிக -அபரிசரித சரண யுகள

ஸ்வ சந்த அனுவர்த்தி
இப்படிப் பிராட்டிமாரோட்டை சேர்த்தியே தங்களுக்கு ஸ்வரூப லாபமாய்
அவர்களோட்டை கலவிக்கு கைதொடுமானமாய்
இருக்கிற பரிஜனத்தைச் சொல்லுகிறது

(இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ)

ஸ்வ சந்த அனுவர்த்தி –
நித்ய ஸூரிகள் முகம் அறிந்து -முறை அறிந்து -பரிமாறுமவர்கள் ஆகையாலே
ஸ்வ சந்த அனுவர்த்திகளாய் இருப்பார்கள்
சம்சாரிகள் முறை அறியாதே பரிமாறு கையாலே
சங்கல்ப அனுவர்த்தி களாய் இருக்கும்

ஸ்வ சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதங்கள் ஆவது –
ஈஸ்வரன் யாவர் சிலரைக் கொண்டு யாதோர் அடிமை கொள்ள நினைத்து அருளுகிறான்
அவ் வடிமைக்கு அனுரூபமான ஸ்வரூபமும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியுமாய் இருக்கை –
பாவஜ்ஜேன க்ருதஜ்ஜேன தர்மஜ்ஜேன ஸ லஷ்மண
த்வயா புத்ரேன தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம – ஆரண்ய -15-28-என்னக் கடவது இறே

அசேஷ சேஷதைக ரதி ரூப
ஈஸ்வரன் அடிமை கொள்ளும் போது அவ்வோ அடிமைகளில் வ்யவஸ்திதராய் இருக்கும் அத்தனை போக்கி
அவ் வாதரத்தைப் பார்த்தால்
சர்வ சேஷ வ்ருத்தியிலும் உண்டான ஆதரத்தையே வடிவாக உடையராய் இருப்பர்கள் –

தாஸ்ய உபகரணங்களை சொல்லுகிறது மேல்
நித்ய
முக்தரைப் போலே ஒரு கால் இல்லாமல் ஒரு கால் உண்டாகை அன்றிக்கே
எப்போதும் உண்டாய் இருக்கை –

நிரவத்ய
ஜ்ஞாநாதிகள் ஸ்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்கை அன்றிக்கே
பவந்த மேவா நுசரன் நிரந்தரம்
பிரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்திர
கதாஸ் ஹமை காந்திக நித்ய கிங்கரர்
ப்ரஹர்ஷயிஷ்யாமி சநாத ஜீவித -ஸ்தோத்ர ரத்னம் -46–என்று கைங்கர்யத்துக்கு அனுகூலமாய் இருக்கை –
அஞராய் அக்ரியராய் இருக்கிலும் இருப்பர்கள் –

(பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோ ரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: ||ஶ்லோகம் 46 –

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?)

நிரதிசய ஜ்ஞான
அடிமைக்கு உறுப்பான அஸங்குசித ஞானம்

க்ரியா
ஜ்ஞான அனுரூபமான வியாபாரம்

ஐஸ்வர்ய –
அடிமைக்கு உறுப்பான -உபயத்துக்கும் சத்ருசமான -நியமனம்
சேனை முதலியார் பிரம்பும் கையுமாய் பிறரை நியமிக்கும் அதுவும்
அங்குற்றைக்கு உறுப்பாய் இருக்கும் இறே(வான் இளவரசு வைகுண்ட குட்டனாக அவன் இருக்கவே இவரது ஐஸ்வர்யம்- நியமனம்)

ஆதி -சப்தத்தாலே அனுக்தங்களான குண விசேஷங்களை நினைக்கிறது –

அநந்த
ஈஸ்வரனுடைய ரஷண விஷயமான குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே
கைங்கர்ய விஷயமான குணங்களுக்குத் தொகை இன்றிக்கே இருக்கை –

குண கண
திரள் திரளாக அறியும் இத்தனை போக்கித் தனித் தனியே காண அரிதாய் இருக்கை –

சேஷ
திரு வநந்த ஆழ்வான்

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஶ்லோகம் 439-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —)

சேஷாசன
சேனை முதலியார்(சேஷ அசனம் –சேஷத்தை உண்பவர் -இதுவே நிரூபகம்)

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.)

கருட
பெரிய திருவடி

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)

பிரமுக
இவர்கள் தொடக்கமான

நாநா வித
சண்டாதி த்வார பாலர்கள்
குமுதாதி கணாதிபர்கள்
முதலான விவித பேதங்கள்

அநந்த பரிஜன
குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே இவர்களுக்கும் தொகை இன்றிக்கே இருக்கை

பரி சாரிக அபரிசரித சரண யுகள –
ஏவம் வித ஜ்ஞாநாதிகளை உடைய விமலாதிகள் என்ன
தம் பஞ்ச சதான் யப்ஸரசாம் பிரதி தாவந்தி சதம் மாலா ஹஸ்தா
சதம் அஞ்ஞன ஹஸ்தா சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா
சதம் பண ஹஸ்தாஸ் தம் பர்மா லங்காரேணா லங்குர்வந்தி -என்கிறபடியே
மதி முக மடந்தையர் -திருவாய் மொழி -10-9-10-என்ன
ஸூத்ரவதி முதலான (ருத்ரா ஸூ கீர்த்தி -பெரிய திருவடியின் மஹிஷிகள்)இவர்கள் மகிஷிகள் என்ன
இவர்களால் அடிமை செய்யப் பட்ட ஏற்றத்தை உடைய
திருவடிகளை உடையவனே
இவர்கள் மகிஷிகள் தம் போகத்துக்கு உறுப்பாகை அன்றிக்கே
அங்குத்தைக்கு உறுப்பாய் இருப்பர் இறே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் மொழி -1-1-1- என்று இறே ஏற்றம்

—————————————————————————————

(உபய லிங்க விஸிஷ்டன் -அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக ஸ்தானம்
உபய விபூதி விஸிஷ்டன்-)

(பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ-தனி விளிச் சொல்லாகவும் ஸூதர்சன பட்டர் வியாக்யானம்-உடையவனே -என்று ஸ்ரீ வைகுண்டத்தைச் சொல்லாமல் அவனையே சொன்னவாறு என்கிறார்)

பரமேதி
ஸூரி போக்யமான கைங்கர்யத்தின் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று கீழ்
அந்தக் கைங்கர்யத்துக்கு வர்த்தகமான தேச விசேஷத்தை சொல்லுகிறது மேல்

பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ

முக்தாநாம் லஷணம் ஹயேதத் ய ஸ்வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந-என்கிற(ப்ரஹ்ம ஏக பாவனை யுடைய)
சனகாதிகள்  உடைய வாங் மனஸ் ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடைத்தாய் இருக்கை-
அதாவது –பஞ்ச உபநிஷன் மயம் -ஸூத்த சத்வ மயம் என்று திரள
நினைத்தால் சொல்லுதல் செய்யும் இத்தனை ஒழிய
ஏவம் ஸ்வரூபம் ஏவம் ஸ்வபாவம் என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லும் சொல்லப் பெற்றேன்)

(திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதி ஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காம வ்ருத்த: ||-ஶ்லோகம் 47 –

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.)

பஞ்ச உபனிஷன் மயமாய் இருக்கையாலே ஏக த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அநேக த்ரவ்ய உபசயாத்மகம் ஆகையாலே நித்ய த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அவஸ்தாந்தராபத்தி இல்லாமையாலே பரிணாம ஸ்வபாவம் என்ன ஒண்ணாது
பகவத் சங்கல்பத்தாலே சில உண்டாகச் சொல்லுகையாலே ஏக ரூபம் என்ன ஒண்ணாது
ஆகையால் அளவுடையாராய் இருக்கும் பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும் தேசம்-

ஸ்வ அபிமத விவித விசித்திர
அநந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
அநந்த ஆச்சர்ய
அநந்த மஹா விபவ
அநந்த பரிமாண
நித்ய நிரவத்ய
நிரதிசய வைகுண்ட நாத

ஸ்வ அபிமத –
அன்புற்று அமர்ந்து உறைகின்ற -திருவாய் மொழி -7-10-1-(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான்)என்கிறபடியே ஆதரித்து வர்த்திக்கிற படியால் -அபிமதமாய்

விவித -விசித்திர –
நாநா விதமாய்
அநந்த
முடிவு இன்றிக்கே இருப்பதான –

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
போக்யங்களான அப்ராக்ருதமான சப்தாதி விஷயங்கள் என்ன
போக உபகரணங்கள் ஆன-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-பரிஜன பரிச்சதாதிகள் என்ன
போக ஸ்தானங்கள் ஆன தேச விசேஷங்கள் என்ன
இவற்றாலே சம்ருத்தமாய் இருந்துள்ள

அநந்த ஆச்சர்ய –
அநந்த உத்யாந- நதீ -தடாகாதி லஷணமான விபவத்தை உடைத்தாய் இருக்கை –
அநந்த ஆச்சர்யம் ஆகையாவது
க்ருதகம் என்றாதல் -நவம் என்றாதல் -புராதனம் என்றாதல் சொல்ல ஒண்ணாதே
அக்ருத்ரிமமாய் பிரதி ஷணம் அபூர்வமாய் இருக்கை

அநந்த மஹா விபவ
மஹத்வம் ஆவது இவற்றுள் ஓர் ஒன்றே போக்தாக்களால் அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை

அநந்த பரிமாண –
ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கை(பக்கவாட்டிலும் உயரத்திலும் எல்லை இல்லாமல் கீழே விரஜை உண்டே)

நித்ய நிரவத்ய நிரதிசய வைகுண்ட நாத
(வை குண்ட -சொல்லே அழியாதது என்பதைக் காட்டுமே)நித்ய-சதைக ரூபமாய் –
நிரவத்ய-ஹேய ப்ரத்யநீகமாய்
நிரதிசய-சர்வ பிரகாரத்தாலும் அதிசயிதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு நாதன் ஆனவனே

(உத்தமமான அநுத்தமுமான -இத்தை விட உயர்ந்தது இல்லாமல் தேஸம் -ஸ்ருதி)

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த–பரம பதத்தில் போக்தாக்களை சொல்லாது ஒழிந்தது(போக்த்ரு  வர்க்க-லீலா விபூதியில் சொல்லப் போகிறார் இங்கு சொல்ல வில்லையே)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய் மொழி -4-9-10-என்கிறபடியே
இவர்கள் போகத்துக்கு கை தொடுமானமாம் ஆகாரம் ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலே(நீயுமே-ஏவகாரம் –போக்தாக்கள் வேறே சொல்ல வில்லையே-முக்தருக்கும் நித்யருக்கும் தனியான ஆனந்தம் பெற மாட்டார்கள் அன்றோ)

ஆனால் ஸ்ருதி
ஏதத் சாம காயன்னாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ-என்று –அந்நாதோ-என்று போக்தாக்களை-சொல்லிற்று இல்லையோ வென்னில்

தான் அங்குத்தைக்கு ஸ்ரக் சந்த நாதிகளோபாதி போக உபகரணமாய் இருக்கும் இருப்பு
புருஷார்த்தம் ஆகையாலே சொல்லிற்று இத்தனை –
அங்கன் அன்றாகில் அஹம் அன்னம் என்றத்தோடு விரோதிக்கும் இறே-

(நான் உணவு முதலில் சொல்லி -மாலை சந்தனம் போல் அவனுக்கு போக்யத்துக்குக் கருவி சொல்லி
முரண்படாமல் –
அவனது பவள வாய் -முறுவல் தான் நமக்கு அன்னம்
நான் உணவை உண்பவன் என்றது படியாய்க் கிடந்தது உன் பவள காய் காண்பாவனாக இருக்க வேண்டும் அன்றோ
தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே புருஷார்த்தம்)

————————————————————————————-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல
சத்ய காம
சத்ய சங்கல்ப
பர ப்ரஹ்ம பூத
புருஷோத்தம
மஹா விபூதே
ஸ்ரீ மன் நாராயண
ஸ்ரீ வைகுண்ட நாத
அபார காருண்யா
சௌசீல்ய
வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய
சௌந்த்ர்ய மஹோததே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய
அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
நிகில ஜகதாதார
அகில ஜகத் ஸ்வாமின்
அஸ்மத் ஸ்வாமின்
சத்ய காம சத்ய சங்கல்ப
சகல இதர விலஷண
அர்த்தி     கல்பக ஆபத் சக ஸ்ரீ மன் நாராயண
அசரண்ய சரண்ய
அநந்ய சரண
த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே
அத்ர த்வயம் –

ஸ்வ சங்கல்ப -இத்யாதி –
இப்படி அப்ராக்ருதமான நித்ய விபூதி யுக்தனுக்கு
ஆவது அழிவதாய் -லீலா ரச ஹேதுவான லீலா விபூதி யோகம் சொல்லுகிறது மேல்
ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி –
ஸ்வ சங்கல்பத்தைபின் செல்லா நின்று உள்ள ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடைத்தாய் –

பிரகிருதி யாவது –
சத்வாதி குணத்ராயாத் மகமாய் -(ஆத்மாவுக்கு இவை வந்தேறி -உடலுடன் சேர்க்கையாலேயே இவை ஆத்மாவை பாதிக்கும்)அநந்த மாய்-(சூழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெரும் பாழ்)விசித்ரமான அவஸ்தா விசேஷ ரூப பரிணாமத்துக்கு சமர்த்தமாய் இருந்துள்ள பிரதானம் -(ப்ரக்ருதி ப்ரதானம் பர்யாயம்)

பிரக்ருதிக்கு ஸ்வரூபம் ஆவது –
சத்வாதி குணகமான ஜடத்வம் -(ஆத்மா அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம்)

ஸ்திதி யாவது -சேதனருக்கு போக மோஷ சாதன அனுஷ்டானத்துக்கும் -பல அனுபவத்துக்கும் -உபகரணமாய் இருக்கை -(மோக்ஷ அநு பவிக்க ப்ரக்ருதி தேவை இல்லையே -அப்ராக்ருதம் அன்றோ)

பிரவ்ருத்தி யாவது -ததர்த்தமாக -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண பரிணமிக்கை –

புருஷ-சம்சாரி சேதனனுக்கு ஸ்வரூபம் ஆவது -அசித் விசிஷ்ட ஆகாரத்வம்

ஸ்திதி யாவது -அந்நாதிகளால் தரிக்கை-

பிரவ்ருத்தி யாவது -புண்ய பாப ரூப கர்ம அனுஷ்டானம் என்ன-
தத் பல அனுபவம் என்ன -இவை

காலத்துக்கு ஸ்வரூபம் ஆவது -அசித்வம்

ஸ்திதி யாவது -சேதன அசேதனங்கள் உடைய பரிமாணங்களுக்கு நிர்வாஹகமாய் இருக்கை –

பிரவ்ருத்தி யாவது -நிமேஷ கலா காஷ்டாதி ரூபத்தாலே
உத்பத்தி விநாசாதிகளை ப்ரவர்த்திப்பிக்கை –

ஸ்வ சேஷதைக ஸ்வபாவ –
தனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை –

பிரகிருதி புருஷ காலாத்மக –
இப்படிப் பட்ட பிரகிருதி -புருஷ -கால -ரூபமாய்

விவித –
அத ஏவ விவிதமாய்

விசித்ர –
விசித்ரமாய்

அநந்த-
அனந்தமாய்

போக்ய –
போக்யம் என்ன –

போக்த்ரு வர்க்க-
போக்த்ரு வர்க்கம் என்ன(கீழே நித்ய விபூதியில் போக்த்ரு வர்க்கம் இல்லையே)

போக உபகரண-
போக உபகரணங்கள் என்ன

போக ஸ்தான –
போக போக்யங்களான ஸ்தான விசேஷங்கள் என்ன –

ரூப
இவற்றை வடிவாக உடைய

நிகில ஜகத் உதய விபவ லய லீல-
சகல லோகங்களின் உடைய உத்பத்தி ஸ்திதி சம்ஹாரங்களை லீலையாக உடையவனே

விசித்ரம் ஆகையாவது -நாநாவிதமாய் இருக்கை –

அநந்தம் ஆகையாவது -தொகை இன்றிக்கே  இருக்கை

போக்த்ரு வர்க்கம் ஆவது –தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியாலே ஸ்வ தந்த்ரராய்
சப்தாதி விஷயங்களுக்கு போக்தாக்கள் ஆகை-
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதிகள் உண்டாகிறது ஈஸ்வரனுக்கு உபகரண தயா வல்லது ஸ்வ தந்திர தயா வல்ல –
ஆனால் துக்க ரூபமாய் இராதோ -என்னில்
அவர்களுக்கு தபஸ் பலமாய் வந்தது ஆகையாலே (யுக கோடி ஸஹஸ்ராணி பத்ம பூ இத்யாதி -உண்டே)சுக ரூபமாய் இருக்கும்
நித்ய விபூதி யோகத்தால் வந்த பூர்த்தியை உடையனாகையாலே ஈஸ்வரனுக்கு இது லீலையாய் இருக்கும்(நாட்டைப்படை –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)

ஆக -நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று ஆயிற்று-

சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கலாவது
உபேய ருசியும் -உபாய அத்யவசாயமும் உண்டானால் ஆகையாலே
அதினுடைய சித்தி அர்த்தமாக முதல் சூரணை யிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கார் –

இரண்டாம் சூரணை யிலே -பிராட்டி பிரசாதத்தாலே அத்தை பிராப்தரானார்

அநந்தரம் ஆஸ்ரயணீயராவார் ஆர் என்னும் அபேஷையிலே
காரணம் து த்யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹ்ணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்னும் இத்யாதியாலே
சகல ஜகத் காரண பூதனான நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டும் ஆகையாலே
அகில ஹேய -என்கிற சூரணை யிலே நார சப்த வாச்யங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லி

அநந்தரம் -அவ் விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லி

அநந்தரம் -ஏவம் விதமானவற்றுக்குக் காவலான திவ்ய ஆயுத வர்க்கங்களைச் சொல்லி

அநந்தரம் -இப் போக்யதை காட்டில் எரித்த நிலா வாகாதபடி தலை நீர்ப் பாட்டிலே இருந்து அனுபவிக்கும் மஹிஷிகளைச் சொல்லி

அநந்தரம் -இச் சேர்த்தி அழகைக் கண்டு அனுபவித்து- தோற்று- எழுதிக் கொடுத்து-
எடுத்துக் கை நீட்டிப் பரிமாறும் திவ்ய பரிஜனங்களைச் சொல்லி

அநந்தரம் -கைங்கர்யத்துக்கு ஏகாந்தமாய் -தத் வர்த்தகமுமான நித்ய விபூதியைச் சொல்லி

அநந்தரம் -ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு விஷயமான லீலா விபூதியைச் சொல்லி
இப்படி அவனுடைய உபய விபூதி நாதத்வத்தைப் பேசி அருளினார் –

இனி ஆஸ்ரயிக்கை இறே உள்ளது-

அவ் வாஸ்ரயணத்துக்கு உபயோகியான குணங்களைச் சொல்லுகிறது மேல்அபார காருண்ய –இத்யாதியாலே
நடுவே எட்டு குணங்களைச் சொல்லா நின்றதே -இவற்றால் சொல்லுகிறது என் என்னில்
மேல் பண்ணப் புகுகிற ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
கீழ் சொன்னவற்றை அனுபாஷிக்கிறதுமாய் இருக்கிறது –

கீழ் ஆஸ்ரயணீயனைச் சொல்லிற்று ஆகில் அநந்தரம் ஆஸ்ரயிக்க அமையாதோ என்னில் -அமையாது –
ஆசார்ய உபதேச பூர்வகமாய் இறே ஆஸ்ரயணீயம் இருப்பது
அவ்விடத்தில் ஆசார்ய உபதேச முகத்தாலே அவனே பிராப்ய பிராபகங்கள்  என்று அத்யவசித்து
அநந்தரம் ஆஸ்ரயிக்க வேண்டும்
அல்லாத போது அவனுடைய ரஷகத்வத்திலே ஆதல்
உபாயத்வத்திலே ஆதல் அதிசங்கை நடக்குமாகில் ஆஸ்ரயித்தவனாக மாட்டான்
ஆகையால் –
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததே கோபாயதா யாச்ஞா பிரபத்தி சரணா கதி -என்னும்
நியாயத்தாலே கீழ்ச் சொன்ன நாராயணத்வத்தை அனுபாஷித்துக் கொண்டு
அவனே உபாய உபேயங்கள் என்று -அத்யவசிக்கிறார்

இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே தாம் பெற்ற அர்த்தத்தை அனுசந்திக்கிரார் –

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –

மஹா விபூதே ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிற இவை நித்ய விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிறது ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை கொள்ளும் தேசத்தைச் சொல்லுகிறது

ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை செய்கை போலே காணும் சேஷ பூதனுக்கு க்ருத்தியம்-இத்தால் அடிமை கொள்ளும் படி ஆஸ்ரயிக்கையே ஆஸ்ரயணம் என்றது ஆயத்து –

1-சத்ய காம
காம்ய ஸ்ப்ருஹா ஸ்மர காம -என்று நிகண்டு –
காம சப்தம் ஸ்மரனையும்(மன்மதனையும்)-இச்சிக்கப் படுமத்தையும் -இச்சையையும் சொல்லுகிறது
கீழே சத்ய காம -என்கிறது ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமாய்
அவ் வழியாலே தனக்கும் காம விஷயமான விபூதியைச் சொல்லுகிறது –
இங்கு சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை
ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் -என்கிறது –
கீழ் காமிக்கப் படுமவற்றைச் சொல்லிற்று
இங்கு காமத்தைச் சொல்லுகிறது –

சத்ய சப்தம் நித்ய வாசி
சிருஷ்டிக்கு விஷயமான புருஷ சமஷ்டி
ஸ்ருடரான சேதனர்க்கு போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபியான பிரகிருதி
இவற்றைக் கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கைக்குக் காலம்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கு தப பலமாகையாலே போக ரூபமாய் இருக்கும்
ஈஸ்வரனுக்கு லீலையாய் இருக்கும் ஐச்சிகம் ஆகையாலே

லீலை என்கிறது சேதனனுக்கு பந்தகமுமாய் நாச ஹேதுவுமாய் ஈஸ்வரனை மறைத்து அநர்த்த அவஹமாய் இருக்க
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் ஆவான் என் என்னில்
சுகோ முக்தோ வாமதேவோ விமுக்த -என்கிறபடியே ஓன்று இரண்டு வ்யக்தியிலே பலிக்கக் காண்கிறது இறே
அந் நசை யாயிற்று இவனுக்கு ஸ்ப்ருஹையை விளைக்கிறது –
ஆகை இறே அழித்து அழித்து சிருஷ்டிப்பது ஸ்திதிப்பிப்பது-அதி ப்ரவ்ருதமான வாறே சம்ஹரிப்பது
பின்னையும் இது தன்னையே செய்வதாக நிற்கிறது –
என் போலே வென்னில்
ஒரு ஷேத்ரம் நெடும் காலம் இட்டிறையாய் போகா நின்றாலும் ஒருகால் பலிக்கக் காண்கையாலே
அழித்து அழித்து பயிர் செய்யும் கர்ஷகனைப் போலே

2-சத்ய சங்கல்ப -கீழேயும் –சத்ய சங்கல்ப -என்றது
ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமான அபூர்வ போகங்களை தன நினைவாலே சிருஷ்டிக்க வல்லவன் என்கைக்காக
இங்கு சத்ய -சப்தம் அமோக வாசி –
இங்கு சத்ய சங்கல்ப -என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கும் என்கைக்காக
அதாவது இவற்றை அமோகமாக தன் நினைவிலே சிருஷ்டிக்க வல்லனாகை

ப்ரஹ்மாவினுடைய சங்கல்பமும் மோகமாய் இருக்கும் -எங்கனே என்னில்
சனகாதிகளை தன் நினைவாலே ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பாக சிருஷ்டித்தான்
அவர்களோ என்றால் -முமுஷூக்களான எங்களுக்கு இச் செயல் ஆகாது -உனக்கேயாம் இத்தனை -என்று இகழ்ந்து போனார்கள்

தான் சிருஷ்டித்த அசுரர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து தான் ஈஸ்வரன் காலிலே விழுந்து
வேதா மே பரமம் சஷூ -வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம -வேதா மே பரமம் சோத்தமம் –என்று கூப்பிட்டான் –

மேலே அவனுடைய திருவடிகளிலே சரணம் புகுகைக்கு உறுப்பாக
சிருஷ்டி முதலாக புருஷார்த்தத்துக்கு எல்லையான கைங்கர்ய பர்யந்தமான
நடுவுள்ளவை யடங்க அவனிட்ட வழக்கு என்று அருளிச் செய்கிறார் –எட்டு ஸ்வ பாவத்தாலே
1-சத்ய காம –
சேதனர் உடைய சரீர சம்பந்தத்துக்கு அடியான சிருஷ்டிக்கு உபகரணமான நித்ய பதார்த்தங்களை உடையவன் -என்கிறது

2-சத்ய சங்கல்ப
சிருஷ்டி அர்த்தமாக சங்கல்ப்பிக்கும் சங்கல்பம் அமோகமாய் இருக்கும் -என்கிறது

குண சூரணையிலே இவ் விரண்டு குணங்களும் உக்தமாய் இருக்க இங்கும் சொன்னால் புநர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு குண சத்பாவத்துக்கு உறுப்பாகச் சொல்லிற்று
இங்கு சிருஷ்டி யர்த்தமாகச் சொல்லுகிறது ஆகையாலே தோஷம் இல்லை –

3-பர ப்ரஹ்ம பூத –
ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

4-புருஷோத்தம –
புருஷாணாமுத்தம –
புருஷாணாம் என்கிற பஹூ வசனத்தாலே த்ரிவித சேதனரையும் வயாவர்த்திக்கிறது-

புருஷ-உத்புருஷ -உத்தர புருஷ -உத்தம புருஷ
புருஷர் ஆகிறார் -அசித் வ்யாவ்ருத்தரான பத்த சேதனர்
உத் புருஷர் ஆகிறார் -பத்தரில் வ்யாவ்ருத்தரான முக்தர்
உத்தர புருஷர் ஆகிறார் முக்தரில் வ்யாவ்ருத்தரான நித்யர்
உத்தம புருஷன் ஆகிறான் -ஸூரிகளிலும்  வ்யாவ்ருத்தனான ஈஸ்வரன்

பத்தர் ஹேய ஆகாரராய் இருப்பர்
முக்தர் ஹேயத்தின் நின்றும் ஒரு நாள் குளித்து ஏறினவராய் இருப்பர்
நித்யர் ஹேய ரஹிதராய் இருப்பது ஒழிய ஹேய பிரதி படர் அல்லர்
ஈஸ்வரன் ஹேய ப்ரதிபடனாய் இருப்பன்

ஈஸ்வரன் த்ரிவித சேதன அசேதனங்களிலும் அந்தராத்மதயா நிற்கச் செய்தே
அவற்றின் உடைய ஹேய கந்தம் தட்டாதவனாய்
ஆஸ்ரிதர் ஹேயத்தை போக்க வல்லனுமாயும் இருக்கும்

இத்தால் ஸ்ருஷ்டமான ஜகத்தின் உடைய வ்யாபன பரண ஸ்வாம்யத்தால் உண்டான வைலஷ்ண்யம் சொல்லுகிறது –
இத்தால் உஜ்ஜ்வலனாகா நிற்கும் என்றது ஆயத்து

(அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –)

அங்கன் அன்றிக்கே
ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு அபேஷித புருஷார்த்தங்களை கொடுக்குமவன் ஆகையாலே புருஷோத்தமன் -என்னவுமாம் –
புரு -பஹூ
சநோதி -ததாதி -என்று இறே இதுக்கு வ்யுத்பத்தி

மஹா விபூதே –
கீழேயும் விபூதியைச் சொல்லிற்று
மேலும் விபூதியை சொல்லப் புகா நின்றது
இப்படி சொல்லுகை புநர் உக்தம் அன்றோ -என்னில்
விபூதி மான் -என்கைக்காக விபூதி யோகம் சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனருக்கு அவ் விபூதியைக் கொடுக்கும் என்று விபூத் ஔதார்யம் சொல்லுகிறது இங்கு
மேல் அடிமைக்கு ஏகாந்தமான தேசம் என்று விபூதி விநியோகம் சொல்லுகிறது
ஆகையால் தோஷம் இல்லை

ஸ்ரீ மன் –
கொடுத்த தேசத்தில் போக்ய விஷயத்தை சொல்லுகிறது –
அங்கு இருவருமாய் இறே அடிமை கொள்ளுவது
வைகுண்டே  து பர் லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவத்தைஸ் சஹ -சிவ புராணம் -எண்ணக் கடவது இறே –

நாராயண –
அநந்த மங்கள குணங்களோடு குறைவற விருந்து அடிமை கொள்ளும்வன் என்கிறது –

ஆக ஸ்ரீ மன் நாராயண -என்கையாலே ஒரு மிதுனமே பிராப்யம் –என்கிறது –

ஸ்ரீ வைகுண்ட நாத –
அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்தமான பரம பதத்திலே நாதனாய் இருந்து அடிமை கொள்ளும் -என்கிறது

இவற்றில் கீழ் நாலு குணங்களும் சிருஷ்டிக்கு உறுப்பாய் இருக்கும்
மேல் நாலு குணங்களும் பிராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்
காரணமுமாய் பிராப்யமுமான வஸ்து இறே பிராபகம் –

அநந்தரம் ஆஸ்ரயணீயத்வத்தில் ப்ரக்ருஷ்ட உபகாரகங்களான குணங்களைச் சொல்லுகிறது -(16 குணங்களை இங்கு அருளிச் செய்கிறார் -அபார விசேஷணம் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்)
அபார காருண்யா இத்யாதி –
1-காருண்யம் ஆகிறது கிருபை அதாகிறது -பர துக்க அசஹிஷ்ணுத்வம்

இது அபாரமாகை யாகிறது
ஆனயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம்ஸ் யாபயம் மயா
விபீஷணோ வா சூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் 18-34-என்று அவன் அளவும் செல்லுகை –
அங்கன் அன்றியே
என்னளவும் வர வெள்ளம் கோக்கும் குணம் என்னவுமாம்

2-சௌசீல்ய –
உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு வந்து கலவா நின்றால்
இவன் நம்முடையான் என்று புரையற கலக்கலாம்படி இருக்கை –

இதுக்கு அபாரத்வம் ஆவது
தேவ மனுஷ்யாத் அவதாரங்கள் போல் அன்றிக்கே மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களிலும் இவை நம்முடையது என்று இருக்கையும்
தானும் அவற்றிலே ஒன்றாய் இருக்கையும்
இவற்றிலே நாம் ஓன்று என்று நினைத்து இருக்கையும் –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்யமிதோ அந்யதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்தம் -120-11-

3-வாத்சல்ய –
வாத்சல்யம் ஆவது -ப்ரேமத்தாலே ஆஸ்ரித கதமான தோஷமும் குணமாகத் தோற்றுகை
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர் அளவு அன்றிக்கே
சகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாமபி வத்சலா
அப்ய நுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதா கதம் -யுத்தம் -50-56-என்று
சத்ருக்கள் பக்கலிலும் அப்படி இருக்கை

ஆனால் பையல் தலையை அறுத்து விடுவான் என் என்னில்
அவர்கள் பக்கலிலும் அவன் படியில் குறை இல்லை
அதுவும் ஜீவியாதபடி அவர்கள் சூழ்த்துக் கொண்ட வித்தனை

அங்கன் அன்றியே
தலை அறுக்கை தானும் வாத்சல்யம் ஆகவுமாம்
எங்கனே என்னில் விளையாடக் கொடுத்த கோலைக் கொண்டு பிரஜை கண்ணை கலக்கிக் கொள்ளப் புக்கால்
கையில் கோலை வாங்கி இட்டு வைக்கும் தாயை போலே –

4-ஔதார்ய
ஔதார்யம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு ஸ்வரூப அனுரூபமான
அபேஷிதங்களை தன் பேறாக கொடுக்கை

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலனாக எப்போதும் நெஞ்சாறல் பட்டுக் கொண்டு இருக்கை –
ருணம் ப்ரவ்ருத்தம் இவ –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –பெரிய திருவந்தாதி -53

5-ஐஸ்வர்ய –
ஐஸ்வர்யம் ஆவது அர்த்திகள் அர்த்தித்தவை எல்லாம்
கொடுக்கும்படியான அடிவுடைமை

இதுக்கு அபாரத்வம் ஆவது
அவ் வடிவுடைமை தான் இவ்வளவு என்று இருக்கை அன்றிக்கே
கொடுக்க மேல் மேல் என வளர்ந்து கொடு செல்லுகை

(கொள்ளக் குறைவிலன் கோதில் மணி வண்ணன் 

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்)

6-சௌந்த்ர்ய மஹோததே 
சௌந்தர்யம் ஆவது அழகு

இதுக்கு அபாரத்வம் ஆவது
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சரகிலை தின்னிகளான ரிஷிகளையும் கூட மடல் எடுக்கப் பண்ண வற்றாய் இருக்கை –
அனுகூலரை யன்றிக்கே ப்ரதிகூலையான சூர்பணகி பொல்வாரையும் மடல் எடுக்கப் பண்ணுகை-என்றுமாம் –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்கள் பாராதே
இருந்ததே குடியாக சரண வரண அர்ஹனானவனே(ஸமோஹம் ஸர்வ பூதேஷூ)

8-பிரணத ஆர்த்தி ஹர –
இப்படி அத்யவசித்த ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவனே

9-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
கீழ் சொன்ன குணங்கள் எல்லாம் ஒரு தலை யானாலும்
அவற்றை எல்லாம் கீழ்ப் படுத்தும் படியான நிரவதிக வாத்சல்யத்தை உடையவனே
நிகரில் புகழாய் -திருவாய் மொழி -6-10-10-என்கிறபடியே

ஆக
கீழ் ஆஸ்ரயண அர்ஹதை சொல்லி –ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவன் என்று சொல்லி–
அதுக்கடியான வாத்சல்யம் சொல்லிற்று

10-அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய –
சத்தா யோகி சகல பதார்த்தங்களின் உடைய உண்மையை எப்போதும் ஒக்க அறியுமவனே
இத்தால் –அனுத்தமமான பாத்ரம் -ஸ்தோத்ர ரத்னம் -24-என்று நான் என் படி சொல்ல வேண்டா விறே -என்கிறார்

(நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந் நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||ஶ்லோகம் 24 –

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.)

11-அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
நல்லது இல்லை என்றால் -தீயவை இல்லாமல் இருந்தாயோ என்று கேட்ப்பாயாகில்
அனைவரையும் இயக்கும் சக்தி உன்னுடையது அன்றோ
ஜங்கம ஸ்தவாராத்மகமான ஸமஸ்த பதார்த்தங்களையும் சர்வ காலத்திலும் நியமிக்கிறாய் நீயே அன்றோ
ஸர்வ நியந்தாவாய் வன்றோ நீ உள்ளாய்
இத்தால் உனக்கு அவிதேயமாய் ஓன்று இருக்கும் அன்று தானே எனக்கு இழக்க வேண்டியது
பத்தனான ஆத்மாவோடு பந்தகமான பிரக்ருதியோடு வாசி யற நீ இட்ட வழக்கு அன்றோ


12-அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத –
சகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே
இத்தால் என் கார்யம் உன் பேறாக செய்ய வேண்டும் சம்பந்தம் உடையவன் அல்லையோ என்கை

13-நிகில ஜகத் ஆதார –
பகவத் பாகவத விஷயங்களில் அபராதம் பண்ணிப் போரும் ஜகத்துக்கும் ஆதார பூதனே
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்கிறார் –

14-அகில ஜகத் ஸ்வாமின் –
அபராதத்தை தவிர்ப்பித்து ஆபி முக்யத்தைஉண்டாக்கி
தேவர் திருவடிகளிலே புகுர நிறுத்துகைக்கு வேறு நிர்வாஹகர் உண்டோ

அத ஏவ
15-அஸ்மத் ஸ்வாமின்
கீழும் சேஷித்வம் சொல்லிற்று -அங்கு சம்பந்த பரம்
இங்கு சம்பந்த அனுகுண நியமன பரம்
இத்தால் என்னை இவ் வளவாக புகுர நிறுத்தினவன் நீ  அல்லையோ -என்கிறார்

16-சத்ய காம –
கீழ் குண சூரணை யிலே ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான வழியாலே தனக்கும் இனிதான குண விபூதியைச் சொல்லிற்று –

நடுவு –சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் என்கைக்காக

இங்கு சத்ய காம -என்கிறது ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டாதபடி
அவாப்த சமஸ்த காமதயா வந்த பூர்த்தியை உடையவன் -என்கைக்காக
இத்தால் –அகிஞ்சனோ அநந்ய கதி -ஸ்தோத்ர ரத்னம் -என்று
அகிஞ்சனான என் கார்யம் பூர்ணனான உனக்கு பரம் அன்றோ -என்கிறார்-

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||ஶ்லோகம் 22 –

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.)

(அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா)

17-சத்ய சங்கல்ப –
கீழ் குண சூரணை யிலே சத்ய சங்கல்ப -என்றது
அபூர்வமான போக்யங்களை அமோகமாக சிருஷ்டிக்க ஷமண் என்கைக்காக –

நடுவே சத்ய சங்கல்ப என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதம் –என்கைக்காக

இங்கு சொன்னது அகடிதங்களையும் சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்தும் ஷமண் –என்கைக்காக

இத்தால் -நித்ய சம்சாரியான என்னையும் நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க நினைத்தால்
செய்து முடிக்க வல்லன் அல்லையோ நீ –என்கிறார்

18- சகல இதர விலஷண-
சேதனர் உடைய ஜீவனம் சொல்லுகிறது

ஸ்வரூபதோ குண தச்ச விலஷண-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப குணங்களை உடையவனே
இவை தன்னை யாருக்காக படைத்தது -ஸ்வார்த்தம் ஆகவோ -என்கிறார்
ஒரு விபூதியாக அனுபவிப்பாரும் அனுபவிப்பிப்பாரும் ஆய்ச் செல்லா நிற்க ஸ்வார்த்தமாகவோ-என்கிறார் இறே
இவரை ஒழிய எல்லாரையும் அனுபவிப்பித்தாலும் குறையாய் இருக்கும் இறே –
இவரை அனுபவிப்பித்தால் ஆய்த்து அவனுடைய ரஷகத்வம் பூர்ணம் ஆவது
பூர்ண அனுபவம் பண்ணுவார்க்கு ஓன்று குறைந்தாலும் நெடும் பாழாய்த் தோற்றும் இறே(ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே)
ஆகையால் இவரோடும் கூட அனுபவித்தால் ஆய்த்து அவர்கள் அனுபவம் பூர்ணம் ஆவது
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்

(நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?)

அர்த்தி கல்பக
தன் தலையாலே இரந்து கொடுக்குமவனுக்கு இரந்தார்க்கு கொடாது ஒழிகை போருமோ -குறை யன்றோ –
அர்த்திப்பார்க்கு கடக்க நின்று தன்னை ஒழிந்த சிலவற்றை கொடுத்து விடும் பூண்டு போலேயோ -இங்கு கற்பக மரம் –
அர்த்திகளையும் உண்டாக்கி தானே இரந்து சகல பல பிரதனான உன்னையும் தருகிற நீ
என்னை யாக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திரு வாய் மொழி -2-7-11-என்னக் கடவது இறே –
அது போலே நாரும் நரம்புமாயிருக்கை –

அன்றிக்கே –
அபார சௌந்த்ர்ய மகோததே-என்னும்படியாய் இறே இருப்பது
இரந்து கொடுக்கும் அத்தனை ஒழிய இரந்தார்க்கு கொடுக்கலாது ஓன்று உண்டோ

ஆபத் சக –
ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
அதாவது துணையாய் இருக்கை
சர்வ ரஷகன் ஆனவனே அறச் செய்ய வேண்டும்படியான ஆபத்திலும் தானே துணையாய் இருக்கை

மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவை யடைக்கும் தசையிலும்
ரகுவர யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
ப்ரதிபவம் அபராத்துர் முக்த சாயுஜ்யதோச்பூ வாத கிமபத மாகஸ் தஸ்ய தேச்ஸ்தி ஷமாயா –ஸ்தோத்ர ரத்னம் –
தமேவ சரணம் கத -என்றும் தேவரே துணையாய் இருக்கை –

(ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ் தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||ஶ்லோகம் 63 –

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்ட வில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவி தோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசு பாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கி யருள வேண்டும்.)

ஸ்ரீ மன் –
இப்படி இருக்கிற உன்னையும் அச்சிர்த்துப் (புறக்கணித்து -கீழ் உள்ள எதுவுமே இல்லா விட்டாலும் )புருஷகார பூதையான பிராட்டியைப் பார்த்து ரஷிக்க வேணும் –

நாராயண
இவள் புருஷகாரம் ஆவதற்கு முன்னமே ஸ்ருஷ்ட் யார்த்த அநு பிரவேசத்தாலே சத்தையை நோக்கினவன் அல்லையோ -(தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ரவேஸஸ்ய)
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்றபடி

அசரண்ய சரண்ய –
கிம் புனர் அசரண்ய சரண்யத்வம்-
அதாகிறது –
இப்படி இருக்கிற தேவர்க்கும் புறம்பாய் -பின்னையும் தேவரை ஒழிய புறம்பு புகல்
அற்றார்க்கு சரண்யன் ஆனவனே -என்கிறார்
இப்படி இருப்பார் உண்டோ என்னில்

அநந்ய சரண அஹம்-
ததா விதோ அஹம்
அந்த அசரண்யன் ஆனவனே நான் என்கிறார்
பற்றிலார் பற்ற நின்றானே-

த்வத் பாத அரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே-
இப்படி இருக்கிற நான்
நிரதிசய போக்யமான தேவர் திருவடிகளையே
உபாயமாக அத்யவசிக்கிறேன்(கத்யர்த்தம் புத்த்யர்த்தம்-சரணம் –உபாயம் -க்ருஹம் -இருப்பிடம்-சரணாலயம் – -ரக்ஷகம் -இங்கு உபாய அர்த்தம் -)

த்வத் பாத அரவிந்த யுகளம்-உன் பொற்றாமரை அடியே
உன் அடி
பொன் அடி -பாவனத்வம்
தாமரை அடி -போக்யத்வம்

அத்ர த்வயம் –

——————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்-பிரவேசம்–சூரணை -1- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 20, 2014

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாப ஸ்ரீ தரஸ் சதா–ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியன்-வியாக்கியான சக்ரவர்த்தி சாம்ராஜ்யம் சூடியவர்

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத ஸ்திதி தராணி த்ருணாய மேன
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே -இதராணி த்ருணாய மேன-புல்லுக்கு சமம் 

வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீ கர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணம் சூடாமணி மஹர் நிஸம்-ஸ்ரீ திருக் குருகைப் பிரான் அருளிச் செய்த தனியன்

சாமீ கரம் -ஸ்வர்ணம்
கரண்டகம் -பாத்ர விசேஷம்

ஆர்யா தவறான விஷயஙகளில் புத்தி தொலைவில் உள்ளவர்கள் –

வேதாந்த ஸாஸ்த்ரமாகிற பச்சைக் கற்பூரம் ஸூ ரஷிதமாகவும் பரிமளம் குன்றாதபடியாகவும் வைப்பதற்கு ஸ்வர்ண பரணி என்னலாம் படி வேதாந்த மார்க்க ப்ரதிஷ்டபந ஆச்சார்யராய் ஆரியர்களுக்கு எல்லாம் ஸிரோ ரதனமாக தாங்குபவராயும் இருக்கும் எம்பெருமானாரை மஹர் நிஸம்—பகலும் இரவும் -எப்பொழுதும் நமஸ்காரம் செய்கிறேன்- –

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் -மாத்திரை போதும் வீடின்றி –
ப்ரயோஜனங்களைப் பெற்று அகலுவார் அன்றே

வேதாந்தங்கள் அவனையே வஹித்துக் கொண்டு இருப்பதால்  பச்சைக் கற்பூரம் என்றதாயிற்று
எம்பெருமானார் வேதாந்த தயா நிதி என்கிறார்

வேதாந்த கர்ப்பூர -வேத அர்த்தங்கள் கந்தம் மாறாமல் நவ க்ரந்தங்களால் ரக்ஷித்து அருளி –
சரணாகதி மறைத்து முறைகளில் உள்ளதை வெளிப்படுத்திக் காட்டி அருளிய ஸ்வாமி
சூடாமணிம் -சென்னிக்கு அணியாக
அஹர் நிஸம் வந்தே -பகலிலும் இரவிலும் வணங்குவோம்

——–

(பிரஸ்தான த்ரயம் -உபநிஷத் -ப்ரஹ்ம ஸூத்திரம் -கீதை -விளக்கம்
இதற்கு
வேதார்த்த ஸங்க்ரஹம்
வேதாந்த தீபம்
வேதாந்த சாரம்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்

திருவாராதன க்ரமம் -நித்ய கிரந்தம்

கத்ய த்ரயம்
த்வய விவரணம் சரணா த்தி கத்யம்-ப்ருஹத் கத்யம் இதுவே
-எதிராஜர் ரெங்கராஜா ஸம்வாதம் –சம்வாத ஏஷ த்வய விவரணம் -தேசிகர்
ஸ்ரீ வைகுண்ட கத்யம்
ஸ்ரீ ரெங்க கத்யம்
ஆகிய நவ ரத்தினங்கள்)

ரஹஸ்ய ரஷா -சமக்ருத வியாக்கியானங்கள் மூன்றற்கும் -தேசிகன் சாதித்துள்ளார்
ஸ்ருத பிரகாச பட்டர் -ஸ்ருத பிரகாசர் -வேத வியாச நாட்டாருடைய திருப் பேரனார் -சமஸ்க்ருத வியாக்யானம் சரணாகதி கத்யத்துக்கு மட்டும்-

ரஹஸ்ய ரஷாம்-
ரஹஸ்யங்களை ரக்ஷிக்கும் கிரந்தம்
வெங்கடேச ஸூர்
ப்ரக்யாத ஸ்ருத விபவான் -அசேஷான் –உலகு எங்கும் பரவியுள்ள கீர்த்தி யுடைய அனைத்து ஆச்சார்யர்களையும் வணங்கி —
லஷ்மீ ஈசன் -பிரபதனம் -வைபவம் -சரணாகதர் பெருமை பிரதிஷ்டா -ஆதாரம் இந்த கிரந்தம்
ராக அந்த்ய -காமாதிகள் -குருட்டுத்தனம் -ப்ரயோஜனாந்தரங்கள் குருடனாக்குமே
அசன்னேவ பவதி -சந்தமேனம்
இவற்றைப் போக்கி அருளும் -என்ற ஸ்லோகம்

லஷ்மீ பதி யதிபதி -ஸம்வாதம்
தயைக்கு இருப்பிடம் இருவரும் தயை ஏக ஸிந்துக்கள்
பராசரர் மைத்ரேயர் -கண்ணன் அர்ஜுனன் ஸம்வாதங்கள் போல் அல்லாமல் -அன்றோ இது
சரணாகதி மந்த்ர சாரம்
ஜகத் ஹிதார்த்தம் -நமக்காக அன்றோ எம்பெருமானார் சரணாகதி அனுஷ்ட்டித்து கிரந்தமும் சாதித்து அருளினார்

————————————————————-

ப்ரேவேசம்-
ஸ்ரீ பாஷ்யத்தில்
தத் த்வம் அஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானமே மோஷ சாதனம் என்றும்
கர்ம ஜ்ஞான சமுச்சயமே மோஷ சாதனம் என்றும் சொல்லுகிற
குத்ருஷ்டிகளை நிரசிக்கைக்காக
கர்ம அங்கமாய் வேதன த்யான உபாசன ஆதி சப்த வாச்யமாய்
பக்தி ரூபாபன்னமான உபாசாத்மாக ஜ்ஞானமே
வேதாந்த ப்ரதிபாத்யமான மோஷ சாதனம் என்று இவர் நிச்சயித்து அருளிச் செய்கையாலே

(பக்த்யா பரமயோ -இரண்டு வழிகள்-சரணாகதியை பரம ஸ்ரேஷ்டம்)

(த்ருஷ்ட்டி -பார்வை
கு த்ருஷ்ட்டி -தவறான பார்வை
ஸூ த்ருஷ்ட்டி -யாதாத்ம -உள்ளபடி அறிக்கை
சாங்கர -பாஸ்கர மாதங்கள் இரண்டையும் இங்கு காட்டி அருளுகிறார்
மஹா வாக்யங்கள் -நானே ப்ரஹ்மம் புரிதலே மோக்ஷம் –
கர்மங்களே தேவை இல்லை
பாஸ்கரர் -சற்று வேறுபட்டு கரம ஞான சேர்க்கையே மோக்ஷம் –அவித்யை கர்மம் சேர்ந்த வித்யையால் மோக்ஷம்)

(ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைலதாராவத்-ஸ்ம்ருதிக்கு மேல் த்யானம் -உபாஸீத
காரணந்து த்யேய -நித்யாஸன -வேதாந்த சித்தம் -கர்மங்களை அங்கமாக கொண்டு அன்புடன் பகவானை -நினைத்து -இடைவிடாமல் -ஸ்நேஹ பூர்வ அநு த்யான -பக்தி யோகமே மோக்ஷ சாதனம்)

இவர் மோஷ சாதனமாக அறுதி இட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு தம்முடைய
ருசி பரிக்ருஹீதமான (ஆசையுடன் கைக் கொண்ட )அர்த்தத்தையே விஸ்வசித்து இருக்கும் சாத்விகர் இத்தையே
விஸ்வசித்து இருக்கக் கூடும் என்று பார்த்து அருளி
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய்
தமக்குத் தஞ்சமாகத் தாம் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் –பிரபத்தி -என்னும் இடத்தை
இக் கத்ய ரூபேண வெளி இட்டு அருளுகிறார் –

ஆனால் இப் பிரபத்தி தன்னையே கொண்டு குத்ருஷ்டி நிரசனம் பண்ணாது ஒழிவான் என் என்னில்
பிராமணன் சண்டாளனுக்கு வேதத்தை உபதேசித்தால் போலே
தூரஸ்தர் ஆனவர்களுக்கு பரம ரகஸ்யமான இவ் வர்த்தத்தை வெளி இட ஒண்ணாது என்று பார்த்து –
அவர்கள் இழிந்த சாஸ்திர முகத்தாலே அவர்களை நிரசித்து
சாஸ்திர தாத்பர்யமான ஸ்வ சித்தாந்தத்தை இம் முகத்தாலே
வெளியிடுகிறார் –

(அசாரம் -அல்ப சாரம் –சாரம் -சார தரம் -சார தமம் -அனைத்தும் வேதங்களிலே உண்டே)

வேதாந்தங்களில் மகா பதமாக சொல்லுகிற (பத்யதே பதம் வழி -32 வித்யா ஸ்தானங்கள் உண்டே )பக்தியைக் காட்டில் இப் பிரபத்திக்கு ஏற்றம் என் என்னில்
அது 1-அதி க்ருதாதிகாரமுமாய்(த்ரை வர்ணிக புருஷர்களுக்கே )
2-துஷ்கரமுமாய்
3-விளம்ப பல பிரதமுமாய்(பஹு நாம் ஜன்மநாம் அந்தே )
4-பிரமாத (கவனக் குறைவு )சம்பாவனை யுள்ளதுமாய்(ஜடபரதர்-வ்ருத்தாந்தம் )
5-சாத்யமுமாய்
6-ஸ்வரூப அநனு ரூபமுமாய்
7-பிராப்யத்துக்கு வி சத்ருசமுமாய் இருக்கும் –

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

இதுவோ என்றால்
அதுக்கு எதிர்த் தட்டாம்படி 1-சர்வாதிகாரமுமாய்(ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -கஜேந்த்ரனும் சரணாகதி – )
2-ஸூ கரமுமாய்(நிவ்ருத்தி மார்க்கம் தானே இது -உன் கடைத்தலை வாழும் சோம்பரை யுகத்தி போலும் )
3-அவிளம்ப பல பிரதமுமாய்(சரணமாகும் தன் தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருப்த ப்ரபன்னர்கள் -ஆர்த்த -ப்ரபன்னர்கள் )
4-பிரமாத சம்பாவனையும் இன்றிக்கே(அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமம் பதம் )–5-சித்தமுமாய்(விலக்காமையே வேண்டுவது )
6-ஸ்வரூப அனுரூபமுமாய் (ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியே பிரபத்தி )-7-பிராப்யத்துக்கு சத்ருசமுமாய் இருக்கும் (உபாயமும் உபேயமும் அவனே அன்றோ )-

ஆனால் இவ் வுபாயம் வேதாந்த சித்தமோ -அன்றோ -என்னில்
யாஜ்ஞிகீயமான (மஹா நாராயண )உபநிஷத்தில்
1-சத்யம் 2-தபோ 3-தம 4-சமோ 5-தானம் 6-தர்ம 7-ப்ரஜனனம் 8-அக்னய
9-அக்னி ஹோத்ரம் 10-யஜ்ஞோ 11-மானஸம் 12-ந்யாஸோ த்வாதஸ –என்று
ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாக சொல்லிப் போந்து

எல்லாவற்றுக்கும் மேலாக
தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹூ -என்று
தபஸ்ஸூக்களில் வைத்துக் கொண்டு அதிரிக்தமான தபஸ்ஸூ பிரபத்தி என்று இதினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று

அதுக்கு மேலே
தர்மஜ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச –ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பிரபல பிரமாணமான ஆசார்ய ருசி பரிக்ருஹீதத்வம் ஆகிற ஏற்றமும் இதுக்கு உண்டு

வேதாஸ் ச -என்று வேதமும் அப்ரதான பிரமாணமாம்படி இறே-வைதிக பரிக்ருஹீதத்வத்தின் பிரமாண அதிசயம் இருப்பது –
அளவுடையாராய் இருப்பார்க்கு (நம்பிக்கை உள்ளாருக்கு)இதுவே போருமாயிற்று பிராமண்யத்துக்கு-இது தான் அளவில்லாதார்க்கு வேதாந்த சித்தமுமாய் இருக்கும் –

(மேலையார் செய்வனகள் வேண்டியது கேட்டாயாகில் –
செய்யாதன செய்யோம்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பின்னோர்ந்து)

ஆக
1-இப்படி வேதாந்த சித்தமுமாய்
2-ஸ்வரூப ப்ராப்தமுமாய்
3-ஆசார்ய ருசி பரிக்ருஹீதமுமாய்
4-சரண்ய ஹ்ருதய அனுசாரியுமாய் -இருக்கையாலே
அதிலும் இதுவே அனுஷ்டேயம் என்னும் இடத்தை தம்மை விஸ்வசித்து இருக்கும் சாத்விகர்
இழக்க ஒண்ணாது என்று பார்த்து
தாமும் பெரிய பெருமாளும் அறிந்ததாக அனுசந்தித்து விட அமைந்து இருக்க
தம்முடைய பரம கிருபையால் கத்ய  முகேன  வெளியிடுகிறார்

(அவனுக்கு கிருபை -இவருக்கோ பரம கிருபை
தாய்க்கும் -மகனுக்கும் விபீஷணனுக்கு -இவருக்கும் -இவர் அடி பணிந்த -மாறன் அடி பணிந்து உயந்த இவருக்கும் இது உண்டே)

இது தான் அவதரித்த படி எங்கனே என்னில்
ஒரு திரு வுத்தர திரு நாளிலே(ஒப்பற்ற ஒரு நாளிலே )பெருமாளும் நாச்சியாருமாகப் புறப்பட்டு ஏறி அருளா நிற்கும் அளவிலே(பெரிய பிராட்டியார் அமர்ந்து அருள நம்பெருமாள் அவள் ஆஜ்ஜையை நிறைவேற்ற நின்ற திருக்கோலம் )எம்பெருமானார் எழுந்தருளி திருவடி தொழா நின்றார்
அஸ்யாம் அவஸ்தாயாம்-திரு உள்ளத்திலே சம்சார பீதி நடையாட
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கவதுக்குப் பாசுரம் இட்டபடி

(அகலகில்லேன் -நம்மாழ்வார்
தாயே தந்தை என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் -பயத்தால் கலியன்)

முதலிலே சம்சார பய பீதராய்க் கொண்டு பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த போதே-
பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்கிலரோ -(ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமியில் பூர்ணாச்சார்யார் பெரிய நம்பி ஏரி காத்த ராமர் -மதுராந்தகத்திலே -பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து அருளினார் அந்தோ ஏரி -காரேய் கருணை -ஆளவந்தார் நதி -ஆழ்வார் மேகம் -நாதமுனிகள்-)
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்று அன்றோ சரண்யன் ஹிருதயம் இருப்பது
ஆன பின்பு
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் ப்ரபலார்தன
மாம் நயேத் எதி காகுத்சதஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -(சொல்லினால் சுடுவேன் –அவனுக்கு மாசு என்று விட்டாளே )என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
சொல்லுகிறபடியே உடையவன் உடைமையைச் செய்தபடி செய்கிறான் என்று ஆறி இருக்கப் பிராப்தமாய் இருக்க
திரியட்டும் இப்போது சரணம் புக வேண்டுவான் என் என்னில்
அவ்வளவு ஆறி இருக்க மாட்டாதே தம் பிராப்ய த்வரையால் சரணம் புகுகிறார்

இது இறே ஆழ்வார்களுக்கும் ரீதி
அவர்களை அடி ஒற்றுகிற ஆசார்யர்களுக்கும் அதுவே ரீதியாம் அத்தனை அன்றோ –
1-சம்சார பயமும்-2- ப்ராப்ய ருசியும் கனக்கக் கனக்க
ஒரு கால் சரணம் புக்காப் போலே
ஒன்பதின் கால் சரணம் புகும் இத்தனை இறே அவர்கள்

ஆக
சம்சார நிவ்ருத்தி பூர்வமாகக் கைங்கர்ய சித்திக்குப்
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார் –

பிரவேசம் முற்றிற்று –

(இனி இனி என்று இருபதின் கால் ஆழ்வாரும் கூப்பிட்டாரே
சீதா பிராட்டியும் துடித்து இருந்த இடம் உண்டே
ப்ராப்ய துடிப்பால்-நோற்ற நோன்பிலேன் தொடங்கி -துடிப்பால் சரணாகதி உண்டே
தோழிகளை எழுப்புவதும் -அவர்களும் -மோஹனா அஸ்திரம் -மயங்கி -ஜ்ரும்பணா அஸ்திரம் ஒரு இடம் நிற்கமாட்டாமல் திரிந்து இருப்பார்களே)

——————————-

(முதல் இரண்டு சூர்ணிகைகள் -பெரிய பிராட்டியார் இடம் ஸ்வாமி விண்ணப்பமும்
அடுத்த இரண்டு சூர்ணிகைகைளால் பெரிய பிராட்டியார் உத்தரம் அருளிச் செய்வதும் உண்டே)

முதல் சூரணை
அவதாரிகை –
இதுதான் த்வயத்துக்கு வியாக்யானம் ஆகிறது –
இதில் முதல் சூரணை யிலே
சரணம் புகுவார்க்கு சரணம் புக யோக்யதை யுள்ளது 1-கண் அழிவு அற்ற
உபேய ருசியும் 2-(கண் அழிவு அற்ற) உபாய அத்யாவசாயமும் உண்டானால் ஆகையாலே
தத் சித்தி அர்த்தமாகப் பிராட்டி திருவடிகளில் சரணம் புகுகிறார்

அது என் –
தேவேந்த்ரஸ் த்ரி புவனம் அர்த்தம் ஏகபிங்க
சர்வர்த்திம் த்ரிபுவன காஞ்ச கார்த்த வீர்ய
வைதேஹ பரம பதம் பிரசாதய விஷ்ணும்
சம் ப்ராப்தாஸ் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று(இந்த்ர பதவியும் -குபேர செல்வமும் கார்த்த வீர்ய அர்ஜுனனுக்கு ஐஸ்வர்யமும் ஜனகருக்கு பரமபதமும் விஷ்ணு அளித்தார் அன்றோ )சர்வ அபேஷைகளுக்கும் பல ப்ரதன் அவன் அன்றோ
ஆன பின்பு அந்த யோக்யதா சித்திக்குமாக அவன் திருவடிகளிலே சரணம் புகத் தட்டு என் -என்னில் –

போக்தாரம் யஜ்ஞ்த தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி-ஸ்ரீ கீதை -5-29-(வ்யூஹ ஸுஹார்த்தம் -உறங்குவான் போல் யோகு செய்து அருளி -ஹ்ருத் -ஸூ ஹ்ருத் -நல்ல திரு உள்ளம்)என்கிறபடியே
சர்வ பூத ஸூஹ்ருத்தாய் இருக்க
ஈஸ்வரனையும் நீரிலே நெருப்பு கிளருமா போலே
தானஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநாஸூ ரீஷ்வேவ யோநிஷூ–ஸ்ரீ கீதை -16-19-என்றும்
மத் பக்தம் ஸ்வ பசம் வாசபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி ந ஷமாமி வஸூ ந்தரே-ஸ்ரீ வராஹ புராணம் -என்றும்

(போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்—-
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி—৷৷5.29৷৷

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் -யாகங்களையும் தனங்களையும் ஏற்றுக் கொள்பவனும்
ஸர்வ லோக மஹேஸ்வரம்—-எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் -எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக-யதிவா ராவண ஸ்வயம் என்பவன் அன்றோ -சரணாகத வத்சலன் –
மாம்-என்னை
ஜ்ஞாத்வா –அறிந்து
ஸாந்திம் ருச்சதி—சாந்தியை அடைகிறான் –

யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக் கொள்பவனும் எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக என்னை அறிந்து சாந்தி அடைகிறான்

வ்யூஹ ஸுஹார்த்தம் கோயிலிலே காட்டி அருளுகிறார் அன்றோ-)

( தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

த்₃விஷத: – (முற் கூறியபடி) என்னை த்வேஷிப்பவர்களாய்
க்ரூராந் – கொடியவர்களாய்
நராத₄மாந் – மனிதரிற் கடையானவர்களாய்
அஶுபா₄ந் – அமங்களமானவர்களான
தாந் – அவர்களை(கீழ் 12 ஸ்லோகங்களால்-அருளிச் செய்த அசுரத்தன்மை–நான்கு விசேஷணங்கள் இவர்களுக்கு   )
அஹம் – நான்
அஜஸ்ரம் – இடை விடாமல்
ஸம்ஸாரேஷு – (பிறப்பு இறப்பு மூப்பு முதலா னவை மாறி மாறி வரும்) பிறவிகளில் (அதிலும்)
ஆஸுரீஷு ஏவ யோநிஷு- அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே
க்ஷிபாமி – தள்ளுகிறேன்)

(அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே-43-)

1-அபராதங்களைப் பண்ணிப் போந்த நாம் நேர் கொடு நேர் நின்று சரணம் புக்கால்
பூர்வ வ்ருத்தத்துக்கு ச்மாரகமாவுதோம் என்று தம்மை அஞ்சி
தம் திறத்தில் ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை ஆற்றுமவளாய்
2-ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மார்த்த்வத்தை உடையவளுமாய்(இங்கு திரு உள்ளத்தில் உள்ள மென்மை)

3-மாத்ருவ பிரயுக்தமான குடல் துவக்கை  உடையளுமாய்
4-இவர்கள் சொல்லும் வார்த்தையை செவி தாழ்த்துக் கேட்க்குமவளாய்(-ஸ்ருணோதி -)
5-அவனைத் தன்  போக்யதையால் துவக்கிக் கேட்பிக்குமவளாய்(ஸ்ராவயதி)
அதுக்கு மேலே
6-ஸ்தனந்தய பிரஜைக்கு தாய் கீழே ஒதுங்குகை ப்ராப்தம் ஆனவோபாதி ஸ்வரூப ப்ராப்தையுமாய் இருக்கையாலே
பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார்

நெடும் காலம் விஷய பிரவணனாய் போந்த பிரஜை -நிவ்ருதனான வன்று பிதாவின் பக்கல்
நேர் முகம் பார்த்து சொல்லுகை அரிதாய்
மாதாவின் பக்கல் சொல்லுகை எளியதாய்  இருக்கும் இறே

பிரதமத்தில் ஆஸ்ரயிக்கைக்கும் கூட இறாய்த்த இவர்
இவளை ஆஸ்ரயித்த அனந்தரம்
பண்ணின அபராதங்களை
ஷமஸ்வ -என்றார் இறே அந்தப்புர பரிகரம் ஆகையாலே –

(1-ஸ்ரீயதே –ஸகல சேதனர்களாலும் புருஷகார தயா ஆஸ்ரயிக்கப்படுபவள்
2-ஸ்ரயதே -சேதனர்களுக்காக அவனை ஆஸ்ரயிக்கிறாள்
3-ஸ்ருணோதி -சேதனர்களின் விண்ணப்பங்களை செவி கொடுத்துக் கேட்க்கிறாள்
4-ஸ்ராவயதி -அவற்றை அவனையும் கேட்ப்பிக்கிறாள்
5-ஸ்ர்ணாதி –ஆஸ்ரிதர் குற்றங்களை ஷமித்து இல்லை செய்பவள்
6-ஸ்ரீணாதி -தனது திருக் கல்யாண குணங்களால் உலகோரை உகப்பிக்கிறாள் –
ஸ்ரீரித் ஏவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஆளவந்தார்
ஸ்ரீ ரஸி யத -பட்டர்

கிடந்து –இத்யாதி மால் செய்கின்ற மால்
பார் வண்ண மட மங்கை பத்தர் -பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு

என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -அவள் இடம் நேரே தொடர்பு –
அனந்தாழ்வான் திரு மகளாருக்கு என் திரு மகள் என்றே திருநாமம் சாத்தினார் )

(அநாதி³கால ப்ரவ்ருʼத்தம் * விபரீத ஜ்ஞாநம் * ஆத்ம விஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச * விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥-11– இனி மோக்ஷ விரோதியான புண்ய பாப ரூபமான விலக்கடியை க்ஷமித்து அருள் வேண்டுகிறார்) (ஸ்ருத ப்ரகாசர் இதே போல் அவதாரிகை வேதாந்த தேசிகர் இத்தையே விவரித்து பக்தி தொடர -விஷ்ணு தர்மம் ஸ்லோகம் -சத்யம் பேச உறுதியாக இருக்க தடைகள் வந்து விக்நம் நிறைய வருமே தபஸ்ஸுக்கு ஆயிரம் ஹார்ச்சந்த்ரன் வ்ருத்தாந்தம் அறிவோம் கோவிந்தே பக்தி செய்ய பல்லாயிரம் இடையூறுகள் வருமாம் உபேய த்வரைக்கும் உபாய அத்யாவசாயத்துக்கும் உபாயாந்தரங்களில் போகாமல் இருக்கவும் மனதில் உருகி வரவும் பிராட்டியைப் பிரார்த்திக்கிறார் சம்சாரக்கடலைக் கடக்க -மாம் ஏகம் -மஹிஷிம் -ப்ரபத்யே -அவளே அருளிச் செய்கிறாள் பிராயச்சித்தம் செய்ய -மேலும் பாபங்களைக் கூட்டுகிறோம் அதுக்குப் பதிலாக பிராட்டி இடம் சரணம் -லஷ்மி தந்த்ர ஸ்லோகம் காட்டுகிறார்)

————————————————————————————

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

————————————————————————————-

(ப⁴க³வந் நாராயண-ஸமஸ்த கல்யாண குண பரி பூர்ணனான நாராயணனுக்கு
அபி⁴மத அநுரூப -உகப்பாயும் -தகுந்தும் இருக்கிற
ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ -ஸ்வரூபம் என்ன -விக்ரஹம் என்ன -ஸ்வரூப விக்ரஹ குணங்கள் என்ன -விபூதிகள் என்ன -இவைகளையும்
ஐஶ்வர்ய ஶீலாத்³–ஐஸ்வர்யம் ஸுசீல்யம் முதலிய
யநவதி⁴க அதிஶய –எல்லையில்லாத சிறப்புடைய
அஸங்க்²யேய -எண்ண முடியாத
கல்யாண கு³ண க³ணாம் -கல்யாண குண ஸமூஹங்களையும் உடையவளாய்
பத்³மவநாலயாம் –கமல வனத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவளாய்
ப⁴க³வதீம் –பரம பூஜ்யையாய்
ஶ்ரியம் –ஸ்ரீ என்று திரு நாமம் யுடையவளாய்
தே³வீம்-வடிவில் புகர் நிறைந்தவளாய்
நித்யாநபாயிநீம் -எம்பெருமானை ஒரு நாளும் விட்டுப் பிரியாதவளாய்
நிரவத்³யாம் -பரி ஸூத்தியை யுடையவளாய்
தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் -தேவாதி தேவண்டைய எம்பெருமானுடைய திவ்ய மஹிஷியாய்
அகி²ல ஜக³ந் மாதரம் -ஸமஸ்த ஜகத்துக்கும் மாதாவாய்
அஸ்மந் மாதரம்–விசேஷித்து அடியோமுக்குத் தாயாய்
அஶரண்ய ஶரண்யாம் -புகல் அற்றவர்களுக்கு புகலாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை
அநந்ய ஶரண: அஹம் -புகல் ஒன்றும் இல்லா அடியேன்
ஶரணம் ப்ரபத்³யே –சரணம் புகுகின்றேன் –

முந்துற முன்னம் பெரிய பிராட்டியாரை சரணம் புகுகிறார்
மேலே தாம் பெரிய பெருமாள் திருவடி வாரத்திலே சரணாகதி நிஷ்டைக்கு வெளியிடப் போகிற
உபேய ருசியும்
உபாயத்வ அத்யாவசாயமும்
பரி பக்குவமாய் இருக்க வேண்டுகையாலே -அவை குறைவற ஸித்திக்க வேண்டும் என்று பெரிய பிராட்டியார் திருவடிகளிலே சரணம் புகுகிறார்
உலகில் எது ஸித்திக்க வேண்டுமானாலும் பெரிய பிராட்டியார் சீர் அருளாலேயே ஸித்திக்க வேண்டும் என்ற அத்யவசாயம் இருப்பார்க்கு இது ப்ராப்தமே யாகும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் தமது முடியில் பொருந்த பிரார்த்தனை போல்-)

பகவன் நாராயண –
பகவச் சப்தத்தாலே(-ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் ஸக்தி தேஜஸ்-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-அகில ஹேய ப்ரத்யநீகமும் சொல்லும் -இவனுக்கே முக்கியார்த்தம் -மற்றவர்களுக்கு கௌண -இவன் சம்பந்தத்தால் லேசம் இருந்தாலும் பகவத் ஸப்த பிரயோகம் பண்ணுகிறோம்-சினத்தினால் செற்ற –மனதுக்கு இனியான்   )
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக்ரச்ய வீர்யச்ய யசசஸ் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது –

இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குண பூர்ணனுமாய்(ஸமஸ்த கல்யாண குண ஆர்ணவம் -குணக் கடல் )
பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் -என்கிறது-

நாராயண –
பகவச் சப்தத்திலே சர்வமும் இல்லையோ
இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்

அந்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு(ஸர்வத்ர ப்ருஹத் -இருப்பதிலேயே பெரியதாகியும் -ஆஸ்ரிதரை பெரியவராக்கி -அளவிலும் – குணங்களாலும் -ப்ருஹத்
ப்ரஹ்ம சப்தம் பிரக்ருதிக்கும் -ஆத்மாவுக்கும் பத பிரயோகம்
முடிவில் பெரும் பாழ் -நிர்தோஷ ஆத்மா முக்தனையும் ப்ரஹ்ம ஸப்தம் பிரயோகம் )

அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
யோக ரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
அத்தாலே விசேஷிக்கிறது-

(காரணப் பெயர் –பாசக -சமையல் காரர் –நாற்காலி போல் –யவ்க்கிகம்
இடுகுறிப் பெயர் -குடம் மாடு -புத்தகம் -பிரித்து அர்த்தம் கொள்ளாமல் இதுக்கு இந்தப் பெயர் -ரூடி -பிரசித்த
யோக ரூடம் -இரண்டும் -பங்கஜம் -சேற்றில் இருந்து தோன்றியவையும் -தாமரை -யோகமும் ரூடியும் உண்டே – நாற்காலி -பூனைக்கும் நான்கு கால்கள் இருந்தாலும் -பிரசித்த அர்த்தம் குறிப்பிட்ட வஸ்துவுக்கே
ஆக மூன்றுமே உண்டு-நாராயணன் யோக ரூடி -உலகில் உள்ள அனைத்துக்கும் இருப்பிடம் -காரணப் பெயர் -குறிப்பிட்ட வ்யக்திக்கே பிரயோகம் -ஆகவே ரூடி -)

(நார -அயன -பதங்கள் சேர்ந்து -நாராயண -ஆனதே
சூரப்ப -நகம் -சூர்ப்பணகை -முரம் போன்ற நகம் கொண்டவள் -இவளுக்கு மட்டுமே இவ்வாறு
தஷிணாயனம்
உத்தராயணம் -இங்கு மட்டும் ண)

ஆக –பகவன் நாராயண -என்று
சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனைச் சொல்லிற்று ஆயிற்று –

(பகவான் நாராயண
குண விபூதி புஷ்கல பரம் -ஸ்ருத ப்ரகாசகர்
ஈறில வண் புகழ் நாரணன் என்றும்
நாரணம் முழு ஏழு உலகுக்கும் நாதன் என்றும் சொல்லுமா போல்)

பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார் ஆகில்
இவ் விடத்தில் இது சொல்ல வேண்டுவான் என் என்னில் –
ஆற்றுக்கு சஹ்யம் (மலை -மூல காரணம் )போலேயும்
விளை நிலத்துக்கு ஏரிக் கட்டு போலேயும்
இவளுடைய கல்யாண குணங்களுக்கு அடியான (மூலமான அவனது )கல்யாண குண யோகத்தையும்
இவளுடைய விபூதிக்கு அடியான (மூலமான அவனது )உபய விபூதி யோகத்தையும் சொல்லுகிறது –

(ஸமஸ்த ஜீவாத்மாக்களும் அவனது ஸங்கல்பம் அடியாகவே பெரும் உத் கர்ஷம்
நித்யத்வத்வமும் அவனது நித்ய ஸங்கல்பம் அடியாகவே –
அதே போல் பிராட்டிக்கு உண்டே-ஜகன் மாதா -ஈசானம் ஜகத-ஆனதும் அவன் சம்பத்தாலேயே –காந்தஸ் தே புருஷோத்தம –இத்யாதி -)

அவனைச் சொல்லும் போது –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹ் யாகதோ மதுராம் புரிம் –ஹரிவம்சம் –என்ன வேண்டினவோபாதி
இவளைச் சொல்லும் போதும் –
அஸ்யேசானா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்ன வேண்டி இறே இருப்பது

நிரூபகத்தை ஒழிய நிரூப்யத்துக்கு ஸ்திதி இல்லாதவோ பாதி
நிரூப்யத்தை ஒழிய நிரூபகத்துக்கும் ஸ்திதி இல்லையே –

(பூவுக்கு பரிமளம் -ரத்னத்துக்கு ஒளி -விட்டுப் பிரியாத – நிரூப்யமும் நிரூபகமும் புள்ளரையன் கோ -என்பதிலேயே ஆசை அவனுக்கு-வைஷ்ணவன் -விஷ்ணு பக்தன் என்பதே நமக்கும் ஆசை)

(தேசிகன் ரஹஸ்ய ரக்ஷையில் இதே போல்
த்வய விவரணம் இது
பிராட்டியை விட்டுப் பிரியாத நாராயணன் -ஸ்ரீ மன்
இங்கு நாராயணனுக்கு அநுரூபை இவள்
மேல் ஸ்ரீ வல்லப -ஸப்தம் ஸ்ரீ மன் ஸப்தார்த்தம்
ஸூஷ்ம -பரம்பர -அடையாளம் -)

——–

அபிமத
ஏவம் விதனாய் இருந்துள்ள இவனுக்கு அபிமதமாய் இருக்கை-
அநுரூப – 
ராஜாக்கள் நீச ஸ்திரீ காற் கடையிலே துவளுமா போலே
அபிமதமே ஆகிலும் அநனுரூபமாய் இருப்பன உண்டு –

அங்கன் அன்றிக்கே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ-திருவாய்மொழி -10-10-6-யென்னும்படியே
அனுரூபமாய் இருக்கை –

(தேர் அணிந்த அயோத்யார் கோன் பெரும் தேவி கேட்டருளாய் –ஏக பத்னி -இங்கு பெருமாளாது பெருமைக்குத் தக்க தேவி)

(ஆறு விஷயங்கள் அபிதமாயும் அநு ரூபமாயும் இருக்கும் என்கிறது
ஸ்வரூபம்
ரூபம்
குணம்
விபவம் செல்வம்
ஐஸ்வர்யம் -நியமன சாமர்த்தியம்
சீலாதிகள்-ஆக ஒவ்வொன்றும் அபிமதமாயும் அனுரூபமாயும் இருக்கும் என்று 12 விஷயங்கள் )

——-

அவனுக்கு இவள் ஸ்வரூபம் அபிமதமாய் இருக்கை யாவது –
இவள் ஸ்வரூபம் அவன் ஸ்வரூபத்துக்கு தாரகமாய் இருக்கை
ராவணன் மாயா சிரசைக் காட்டின போதும் -இந்த்ரஜித்து மாயா சீதையைக் காட்டின போதும்-இருவருக்கும் மெய் என்று பிரமிக்கச் செய்தே
அந்யோந்யம் தரித்து கிடந்த இடம் ஸ்வரூப சத்தையால்  இறே-
அவன் ஸ்வரூபம் இவளுக்கு தாரகம் ஆகிறது ஸ்வரூபத –
இவள் ஸ்வரூபம் அவனுக்கு தாரகம் ஆகிறது அபிமதத்வத்தாலே

(ஸ்வாமி திருநாடு அலங்கரித்த செய்தி கேட்டதும் -வருந்தி உயிர் இழந்தவர் பலர் உண்டே -இதுவே தாரகம் -அபிமதம்)

(ஸ்வரூபத –நான் இல்லாத பொருள் இல்லை -கீதை -படைத்து அந்தர்யாமியாய் இருப்பதால் தான் சத்தை -அதே போல் பிராட்டி அந்தர்யாமியாய் அவனுக்கு இருந்து சத்தை தரவில்லை அபிமதத்வத்தாலே-மிகவும் பிடித்த பிரியமானவள் என்பதால்-இந்த வாஸி அறிய வேண்டும்-ஞானி து ஆத்மைவ மே மதம் ஞானியே தனக்கு ஆத்மா -இவன் மதம் – -)

—-

அனுரூபம் ஆகையாவது -(தகுந்தவளாவது)
நித்யை வைஷா ஜகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயினி
யதா சர்வ கதோ விஷ்ணுஸ் ததை வேயம் த்விஜோத்தம-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17-என்றும்(தகுந்த குணம் உடையவளும் என்றும் நீக்கமற நிறைந்து இருப்பது போல் பிராட்டியும் வியாபித்து இருப்பவள்
அணு மாத்ரம் அன்றோ ஜீவாத்மா என்னில் –
குடத்தில் கடத்வம் எங்குமே நிறைந்தால் போல்
பிராட்டி பகவானுக்கு அடையாளம் -நுண்ணியவளாய் இருந்தாலும் -அவனது ஒவ்வொரு இடத்திலும் பிராட்டி உண்டே –
விபுவானவன் அணுவான ஜீவாத்மாக்குள் இருப்பது போல்
அணுவாக இவள் இருந்தாலும் -சேர்ந்தே இருப்பதால் ஸர்வ கதா இவளும் )
த்வம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா
த்வயை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
யுக்தா ராமஸ்ய பவதீ தர்ம பத்நீ யசச்விநீ
பிரதி சந்திச மாம் தேவி கமிஷ்யே யத்ர ராகவ -யுத்த -116-47-என்றும்(யுக்தா-தகுந்தவள் )

ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அநுபூதயா அப்ய பூர்வ வத் விஸ்மயமாத தாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ் சதா தவை வோசிதயா தவ ஸ்ரீ யா -ஸ்தோத்ர ரத்னம் -38-என்றும்
சொல்லுகிற படியே இவளுடைய ஸ்வரூபம் அவனோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை

(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாத தாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –

இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.-நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.-)

(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும்
நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –

அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன்
இவள் போக்யதையாலே அபரிச்சின்னை
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -என்றும் சொல்லுகிறபடியே
தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
தவைவ உசிதயா ஸ்ரீரியா –என்னும் அளவே போதுமாய் இருக்க -தவ ஸ்ரீயா -என்றது
பிராட்டியின் அநந்யார்ஹத்வத்தை நிலை நாட்டி அருளவே –)

—-
ரூப
ரூபம் ஆவது -விக்ரஹம்(வடிவம் ரூபம் இரண்டுக்கும் ரூப பத பிரயோகம் உண்டே -இங்கு திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று என்றவாறு )
ஸ்வரூபத்தை சொன்ன அநந்தரம் ஸ்வரூப குணங்களைச் சொல்ல பிராப்தமாய் இருக்க
விக்ரஹத்தைச் சொல்லிற்று –ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களுக்கும் பிரகாசமாகையாலே
ஸ்வரூபம் அபிமதம் ஆகா நின்றால்
ரூபம் அபிமதம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே
அது தான் ஸ்வரூப ஆஸ்ரிதம் என்று இறே அபிமதம் ஆயிற்று
ரூபம் அபிமதம் ஆகையாவது
அகலகில்லேன் இறையும் -என்று அவள் துணுக்  துணுக்  என்னும்படியான அவன் தானும் மேல் விழும்படியாய் இருக்கை –
மெல்லியல் தோள் தோய்ந்தாய் –
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்றும் அவனுக்கு
உண்ணும் சோறு பருகு நீரும் இவள் வடிவேயாய் இறே இருப்பது
இது அனுரூபம் ஆகையாவது
சீலத்தாலும் வயசாலும் வ்ருத்தத்தாலும் துல்யமாய் இருக்கை –

குண
ரூபாநந்தர பாவித்வத்தாலே இது தான் சௌந்தர்யாதிகளாகக் கடவது
இவையும் ரூபத்துக்கு நிறம் கொடுத்து போக வர்த்தகங்களுமாய் இருக்கையாலே
அபிமதமாய் இருக்கும்
அத ஏவ அனுரூபமாய் இருக்கும்

விபவ
அர்த்தோ விஷ்ணு ரியம் வாணீ நீதிரேஷா நாயோ ஹரி
போதோ விஷ்ணு ரியம் புத்தி தரமோ சௌ சத்க்ரியா த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-என்று
அர்த்தாம்சம் அவனதாய் சப்தாம்சம் இவளதாய் -இருக்கை –
இவள் நியாய சாஸ்திரம் அவன் நியாயம்
அவன் ஜ்ஞானம் இவள் அதற்கு உபகரணமான புத்தி –
அவன் தர்மம் -இவள் அதை சாதிக்கும் நல் கர்மம் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோசய ஜந்தோ
தமக்ரதும் பஸ்யதி வீத சோகோ தாது ப்ரசாதான் மஹிமான மீசம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-என்னும்படி
புல்லிங்க பதார்த்தங்கள் அவனதாய்
ஸ்திரீ லிங்க பதார்த்தங்கள் இவளதாய் இருக்கை –
இயம் ஸா தயிதா பார்யா ராஷசீ வசமாகதோ
சர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு சிநேக பலாத் க்ருதா
அச்சிந்த்தயித்வா துக்காணி பிரவிஷ்டா நிர்ஜனம் வனம் -சுந்தர -16-19

என்று சர்வ போகங்களையும் விட்டு காடு ஏறப் புறப்பட்டாள் என்கையாலே
லீலா உபகரணங்களும் போக உபகரணங்களும் அவன் விபூதியிலும் விஞ்சி இருக்கை
அவை யாவன-
முற்றிலும் பைம் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8
பூவை பைம் கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்-யென்னுமவையும் -திருவாய் மொழி -6-7-3-
ஸ்ரக் சந்தநாதிகளும்
இவை தான் சாமான்யமாயும் அந்தப்புர பரிகரமாயும் இருக்கும்
அங்கன் அன்றியே
யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிச்சய
யோ யஸ்து நாரீபாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா
ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே
அதகிம் பஹூ நோக்தேன நர நாரீமயோ ஹரி -என்றும்

ஹேலாயா மகிலம் சராசரமிதம் போகே விபூதி பரா
தன்யாச்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூ ரய
ஸ்ரீ ரெங்கே ஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்க்கே வயம்
சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரனே -ஸ்ரீ குண ரத்ன-22-யென்னும்படியே
ஸ விபூதிகனான ஈஸ்வரன் என்றுமாம்
இது அவனுக்கு அபிமதம் ஆகிறதும் அந்தபுரகரம் ஆகையாலே

ஐஸ்வர்ய-
அதாவது –சகல பதார்த்த நியமன சாமர்த்தியம்
த்ரிவித சேதனரையும் ஸ்வரூபேண நியமிக்கும்
ஈஸ்வரனை பிரணயித்வத்தாலே நியமிக்கும்
நியமிக்கும் பிரகாரம் என் என்னில் –
பத்தரைக் கர்ம அனுகுணமாக நியமிக்கும்
நித்ய முக்தரை ஸ்வரூப அனுரூபமாக நியமிக்கும் –
ஈஸ்வரனை ரஷண அனுகுணமாக நியமிக்கும்
இது தான் அபிமதமாகிறதும் புருஷோத்தமத்வ ஸூசகம் ஆகையாலே
பிரணயினுடைய நியமனம் பிரணயிக்கு பும்ஸ்த்வ அவஹமாய் இருக்கும் இறே
இது ஜ்ஞாநாதி குணங்களுக்கும் உப லஷணம்-

சீல-
சீலம் ராஷசிகள் பக்கல் பிரசித்தம்
ராவணனைக் குறித்து –
மித்ர மௌ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப் சதா
வதம் சாநிச்சதா கோரம் த்வயா சசௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-என்றும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாக தவத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவது மிச்சசி-சுந்தர -21-20-என்றும்
ராஷசிகளைக் குறித்து
ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ -சுந்தர -58-90-
ராஜ சம்ஸ்ரய வச்யாநாம் குர்வந்தீநாம் பராஜ்ஞயா
விதேயா நாஞ்ச தாசீநாம் கே குப்யேத் வானரோத்தம-யுத்த 116-38
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருணா மார்யேண நகஸசின் நாபராத் யதி -யுத்தம் -116-44-என்றும்
திருவடியோடே மறுதலித்து ரஷித்தாள் இறே
இக் குணம் அபிமதம் ஆகிறது
தனக்கு ஸ்வரூபமான ரஷணத்துக்கு உபயோகி யாகையாலே
ஆதி -சப்தத்தாலே அனுக்தமான குண விசேஷங்களை நினைக்கிறது
சமஸ்த கல்யாண குணாத்மகனைப் பேசிலும் இவளைப் பேசி முடியாது -என்கை

அநவதிக அதிசய
இவை தான் ஓர் ஒன்றே அபரிச் சேத்யமாய் இருக்கும்

அசங்யேய-
எண்ணிறந்து இருக்கை

கல்யாண
சதஹ்ரதாநாம் லோலத்வம் சஸ்த்ராணாம் தீஷ்ணதாம் ததா
கருடா நிலயோ சைக்ர்யம் அனுகச்சந்தி யோஷித
இயம் து பவதோ பார்யா தோஷை ரேதைர் விவர்ஜிதா
ஸ்லாக்யா ச வ்யபதேச்யா ச யதா தேவீ ஹ்யருந்ததீ –ஆரண்ய -13-7-என்கிறபடியே
உள்ளது எல்லாம் அழகியதாய் இருக்கை
இவள் குணங்களுக்கு வ்யாவர்த்தம் அவன் குணங்கள் –
அவன் குணங்களுக்கு தோஷம் எது என்னில்

அவனுக்கு ஸ்வரூப அனுபந்தியான நிரங்குச ஸ்வா தந்த்ர்யம் உண்டு –
க்ரோத மாஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷஸாம்
துஷ்ப்ரேஷ சோபவத் க்ருத்தோ யுகாந்தாக்னி ரிவ ஜவலன்-ஆரண்ய -24-34-என்று
கோபத்தை அருளப் பாடிட்டுக் கார்யம் கொள்ள வேண்டும் என்கிறவனுக்கும் பூஜ்யையாய் இருக்கை –
அதுதானும் இவளுக்கு இன்றிக்கே இருக்கை

குண கணாம்-
இவை தான் திரள் திரளாய் இருக்கை

பத்மவ நாலயாம்
பத்ம சப்தம் -மங்களங்களுக்கு உப லஷணமாய் –சர்வ மங்கள நிவாஸிநீ -என்கை
அங்கன் இன்றியே –சர்வ கந்த சர்வ ரச -என்கிற வஸ்துவையும் ஸ்வ சம்பந்தத் தாலே பரிமளிதமாக்குகை -என்றுமாம்
பத்ம சப்தத்தாலே போக்யதையைச் சொல்லிற்றாய்-அத்தாலே
நிரதிசய போக்ய பூதை -என்றுமாம்
பரிமளம் இறே இவள் வடிவுக்கு உபாதானம்
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்னும் இவை இரண்டும் இத் தலையிலே கிடந்தபடி –

பகவதீம்
பகவத் சப்தம் பூஜ்ய வாசி-தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன –அவனுக்கும் பூஜ்யை

ஆக -பத்மவ நாலயாம் பகவதீம் -என்கிற இத்தால்
தன் வழியாக அவனைப் பற்றினால் குற்றம் பாராதபடி அவனைத் தன் போக்யதையால்-துவக்கிப் பொறுப்பிக்குமவள்-என்கை

ஸ்ரியம்-
தன்னைப் பற்றி சர்வமும் உண்டாம்படியாய்
தான் அவனைப் பற்றி உளளுமாய் இருக்கை –
இதிலே நிருக்தி பிரக்ரியையும் நடக்கக் கடவது –

தேவீம்
வடிவிலே புகர் இருக்கிறபடி
அவனோட்டைச் சேர்த்தியாலே த்யோதமானையாய் இருக்கிறவளை-

நித்ய அநபாயிநீம்
விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீம் -என்கிறபடியே அவனோடு உண்டான நித்ய சம்ச்லேஷத்தாலே-அபாயம் இன்றியே இருக்கை –அபாய -விஸ்லேஷ

நிரவத்யாம் –
கீழ்ச் சொன்ன ஏற்றம் எல்லாம் ஸ்வார்த்தமாய் இராதே
அத்தலைக்கேயாம்படி இருக்கை –
ஏதேனும் ஓன்று எனக்கு என்கை அவத்யம்
பிறர்க்கு என்கை நிரவத்யம்
இனி விஷய விபாகமே யுள்ளது
அது வகுத்த விஷயமாம் இத்தனையே வேண்டுவது
அவன் தானும் தன்னையும் தன் உடைமையையும்

ந தே ரூபம் ந ச ஆகாரோ நாயுதானி நசாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே-ஜிதந்தே -1-5-என்று இறே இருப்பது

தேவ தேவ திவ்ய மஹிஷீம்
சர்வேஸ்வர சாம்ராஜ்யத்திலே -தேவர்க்கும் தேவனானவனோடு ஒக்க அபிஷிக்தை யானவள் –
க்ருதாபிஷேகா மஹிஷீ போகி அந்யோன்யா ந்ருபச்த்ரிய

அகில ஜகன் மாதரம் –
இப் பெரிய மேன்மையைக் கண்டு இறாய்க்க வேண்டாதபடி சகல சேதனரோடு உண்டான
அவிநாபூதமான குடல் துடக்கைச் சொல்லுகிறது –
சார்வ பௌமன் மஹிஷி தன் பிரஜை சேற்றை யளைந்து மடியிலே ஏறப் புக்கால் அணைத்து உச்சி முகக்கும் இத்தனை இறே –
பிரஜையின் பக்கல் ப்ராப்தி இறே ஜீவிப்பது
அகில சப்தத்தில் தாமும் அந்தர்பூதர் ஆகையால் தம்மையும் கூட்டிக் கொள்கிறார் –
தம் பக்கலில் வாத்சல்யாதிசயம் கண்டார் ஆகையாலே விசேஷித்து அருளிச் செய்கிறார் –அஸ்மன் மாதரம் -என்று

அசரண்ய சரண்யாம் –
1-குண லேச மாத்ரத்தாலே குற்றங்களை அடையப் பொறுத்து உகக்குமவள் –
அங்கன் அன்றிக்கே -தேன மைத்ரீ பவது -என்று குற்றத்தோடே உகக்குமவள்
2-புறம்பு புகல் அற்றார்க்கு பகவத் விஷயம் புகலாய் இருக்கும்
பகவத் விஷயத்துக்கும் புறம்பாய் இருப்பார்க்கும் புகலாய் இருக்கும் இவள் –
3-செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-என்னுமவர் சீறிக் கையும் வில்லுமான அன்றும்
இவள் திருவடிகளே புகலாய் இருக்கும்
4-சர்வ லோக சரண்யர்-என்று காளமூதித் திரிகிறவர் அசரண்யர் ஆனவன்றும்
இவள் சரண்யையாய் இருக்கும்

5-சரணம் என்கிற உக்தியைப் பற்றி சரண்யர் அவர் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யையாய் இருக்கும் இவள் –

ஸ பித்ரா ஸ பரி த்யக்தஸ் ஸூ ரைச்ச சமஹர்ஷிபி
தரீன் லோகன் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ் தம் நிபதிதம் பூ மௌ சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34/35–

மித்ர மௌ பயிகம் கர்த்தும் –
விதி தாச ஹி தர்மஜஞ
ராஜ சம்ஸ்ரயவச்யானாம்-
பாபாநாம் வா ஸூ பானாம் வா

அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய –என்கிறபடியே
சர்வ சமாஸ்ரயநீயமான பகவத் விஷயத்துக்கு புறம்பாய் இருப்பாரும் உண்டோ என்னில்

அநந்ய சரணோஹம்-
அந்த அநந்ய சரணன் ஆகிறான் நான் என்கிறார்

சரணம் பிரபத்யே
அசரண்யர்க்கும் சரண்யரான தேவர் திருவடிகளையே உபாயமாக அத்யவசிக்கிறேன்
அசரண்யர்க்கும் சரணை யாவது என் என்னில்
அகில ஜகன் மாதா வாகையாலே அபேஷா நிரபேஷமாகப் பரிக்ரஹிக்கும் தேவர்க்கும்-பரிக்ரஹித்து அல்லது நிற்க ஒண்ணாத படியான அபேஷையையும் பண்ணினேன் –

சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம்
ஸ்ரீ யம் லோகே தேவ ஜூஷ்டா முதாராம்
தாம் பத்ம நேமிம் சரணம் அஹம் ப்ரபத்யே
அலஷ்மீர் மே நச்யதாம் த்வாம் வ்ருனே—-ஸ்ரீ ஸூ க்தம் -5

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்