சூரணை – -13- அவதாரிகை –
கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இறே –
அவ்வளவும் போறாதே இவருக்கு –
பரம புருஷார்த்த லஷண மோஷ ரூப கைங்கர்ய சித்தியும் வேணுமே
இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யத்தோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை –
அதினுடைய ஸித்தி அர்த்தமாக –
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபேஷிக்கிறார் –
தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய
தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்
அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –
அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இறே அவனுக்கு உள்ள ஏற்றம் –
நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –
ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் ஸ்நேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –
ப்ரியோ ஹி ஜ்ஞானிந அத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யர்த்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த
ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று
அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி-தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-
அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயாநாம் அபஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இறே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இறே அவன் ப்ரேமம் இருப்பது-
(பெரியாழ்வார் போல்வாருடைய -அஸ்தான பயம்–அதி சங்கை -பயத்தைப் போக்க அவனாலும் இயலாதே-உற்ற நல் நோய் இது தேறினோம்)
————-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷
பரதர்ஷப அர்ஜுந–பரத குலத்தில் உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனனே
ஆர்த்த-செல்வம் இழந்து வருந்துமவனும்
அரர்தார்தீ–புதிதாக செல்வம் பெற விரும்புபவனும்
ஜிஜ்ஞாஸு-ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புமவனும்
ஜ்ஞாநீ ச -ஸ்வரூப ஞானம் யுடையபவனுமாகிய
ஸுக்ருதிநோ.–புண்ய சாலிகளான
சதுர்விதா ஜநா -நாலு வகைப்பட்ட ஜனங்கள்
மாம்-என்னை
பஜந்தே –உபாஸிக்கிறார்கள் –
பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்
நான்கு விதம் -ஸூ ஹ்ருதம் இருந்தால் தான் ஆஸ்ரயிப்பார்கள் -புண்ய பலத்தால் -பார பக்ஷம் இல்லையே
வைஷம்யம் நைர்க்ருண்யம் ஸா பேக்ஷத்வாத் இல்லாதவன் –
பரத குலத்தில் உயர்ந்தவன் நீ -இங்கும் நால்வரில் உயர்ந்த வகையில் வர வேண்டாமோ –
ஆர்த்தர் –தொலைத்த ஐஸ்வர்யம் கேட்டும்
அர்த்தார்த்தி –புதிதாக ஐஸ்வர்யம் கேட்டும் —
இருவரும் அசித் அனுபவம் கண்டு கேட்டு -இத்யாதி-சிற்றின்பம் -செல்வ அனுபவம் —
அண்டக் குலத்துக்கு அதிபதி-புதிய ஐஸ்வர்ய காமன் பாசுரம் -அசுரர் இராக்கதர் இண்டைக் குலத்தை எடுத்துக் கலைந்த இருடீகேசன் -இழந்த ஐஸ்வர்யம் மீண்டு பெற பாசுரம்
ஜிஞ்ஞாசூ –ஆத்மானுபவம் -கேவலர்-ஜீவாத்மாவே தத்வம் என்று இருப்பவன் –
(அபர்யவஸ்யந்–தேசிகன் -மர நிழலில் தங்கி விட்டுப் போவது -கைவல்யன் நிலை -அக்காரக் கனியை சேவிக்க கால தாமதம்
இங்கேயே தங்கி விடுகிறான் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்-8 அத்யாயம் இத்தை மேலே விவரிக்கும்)
ஞானி –பகவத் லாபார்த்தி –
நால்வரும் அவன் இடமே சரண் அடைந்து பெற வேன்டும் -நால்வரையும் எனக்கு பிடிக்கும் —
இதற்க்காகவாவது வருகிறார்கள் -கிரமத்தில் திருத்தி-திருப்பி – மேலே வர வாய்ப்பு உண்டே-
எழுவார் -விடை கொள்வார் -ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
அர்ஜுனன் வெள்ளை மனம் படைத்தவன் நீ ஞானியாகவே இருக்க வேண்டுமே
அபிமத சாதனம் என்றே அறிந்தவர் மூவரும் -அபிமதம் அவனே என்று அறியாமல் – இழந்தே போகிறார்கள்
ப்ராப்யத்திலே கண் வைக்க வேண்டும் உடையவர் சரம வார்த்தை-
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –ஸ்ரீ முதல் திருவந்தாதி 26-
——————
தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிந அத்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷
தேஷாம் -அந்த நால்வருக்குள்
நித்ய யுக்த-என்னோடே எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -எப்போதும் இருக்க ஆசை கொண்டவனாய்
ஏக பக்திர்–என் ஒருவன் இடம் மட்டுமே ஈடுபாட்டை யுடையவனாய் இருப்பவனாய்
ஜ்ஞாநீ -ஞானியானவன்
விஸிஷ்யதே–சிறப்புறுகிறான்
அஹம் -நான்
ஜ்ஞாநிந-அந்த ஞானிக்கு
அத்யர்தம் ப்ரியோ -சொல்ல ஒண்ணாத அளவுக்கு பிரியனானவன்
ஸ ச -அவனும்
மம ப்ரிய৷—எனக்கு இனியவன்
அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வ சக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் –
என் ஆசையும் உன்னுடைய அதீனம் – என் அவா அறச் சூழ்ந்தாயே –
மாசறு சோதி -மடலூறுதல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் –
பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் –
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த -அமரும் காதல் -விலக்காதே –
பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –
நித்ய யுக்தன் சம்சாரத்தில் கிட்டாதே -ஆசைப்படுபவன் -இதுவே போதும் அந்த நிலைக்குப் போக
மிக இனிமை -எனக்கு அவர்கள் போல் இருக்க முடியவில்லையே என்னும் புருஷோத்தமன்
கத்ய த்ரயத்தில் எடுத்துக் காட்டிய ஸ்லோகங்களில் இதுவும் ஓன்று –
ஞானியினுடைய ஏற்றத்தை
சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா
ஏஷாமே காந்தின ஸ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா
அஹமேவ கதிஸ் தேஷாம் நிராசீ கர்ம காரிணாம்
யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மாதா
சர்வே ஸ்யவன தர்மாண ப்ரதி புத்தஸ்து மோஷபாக்-என்று மஹா பாரதம் சாந்தி பர்வத்தில் தானே வெளியிட்டு அருளினான்
‘சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஷ்ருதாஃ. தேஷாமேகாந்திநஃ ஷ்ரேஷ்டாஸ்தே சைவாநந்யதேவதாஃ৷৷அஹமேவ கதிஸ்தேஷாஂ நிராஷீஃ கர்மகாரிணாம். யே து ஷிஷ்டாஸ்த்ரயோ பக்தாஃ பலகாமா ஹி தே மதாஃ৷৷ஸர்வே ச்யவநதர்மாணஃ ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்’ [ம.பா.12.341.33.35]
தன் பெருமையை-12-ஸ்லோகங்களில்
பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் – -13–14-ஸ்லோகங்களில்
இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -15-ஸ்லோகத்தில்
இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும் -16-ஸ்லோகத்தில்
அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று-17-ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
பிரபுத்தனே ஸ்ரேஷ்டன் இது முதல் மேல் 14 ஸ்லோகங்களும் -இதுவே சொல்ல வந்தது -கீழ் எல்லாம் முன்னுரை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
என் நல் நெஞ்சம் தன்னை விலக்க இயலாதே –
சிந்தனையை -பரம ப்ராப்யம் -தவ நெறியை -பிராபகம் -திருமாலை -மிதுனம் உத்தேச்யம் -இதுவே நாலாயிரத்தில் ஸப்த த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக தர்சனாய் -அதிகாரி ஸ்வரூபத்துடன் ப்ராப்ய ப்ராபகம்
நாராயணனே நமக்கே பறை தருவான்
தேஷாம் ஞானி -அவர்களுக்குள் இங்கு -கீழ் பஞ்சமி அர்த்தே சஷ்ட்டி இங்கு நிர்த்தாரணே சஷ்ட்டி
அர்த்தம் -அத்யர்த்தம் சொல்ல ஒண்ணாத -வார்த்தைக்கு அப்பால் –அன்பு இல்லையா -ஆகாசத் தாமரையோ -இவனைக் காட்டில் மற்ற ஈஸ்வரனோ-அசக்தனா -மூன்று கேள்விகள்-எல்லை இல்லாதது -ஒரே பதில் மூன்றுக்கும் –
அத்தனை ப்ரீதி சர்வசக்தனான எந்நாளும் முடிய வில்லையே-குண ப்ரகரணம் -தோஷ ப்ரகரணம் இல்லையே -அதனில் பெரிய என் அவா அன்றோ
——————————————————–
உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்
உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –
அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்
ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈஸ்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ –என்ன –
மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுத்தமான கதியான என்னை –
அனுத்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே
யுக்தாத்மா
கூடினவனாய்
ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இறே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்
————-
உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |– ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவ அநுத்தமாம் க₃திம் ||—7-18- ஸர்வ ஏவைதே–ஏதே ஸர்வ ஏவ –இவர்கள் அனைவருமே உதா₄ராஸ் –வண்மை மிக்கவர்கள் ஞாநீத் து -ஞானியோ என்னில் வாத்மைவ மே -மே ஆத்ம ஏவ -எனக்குத் தாரகனாய் இருப்பவன் என்று மே மதம் |–என் எண்ணம் யுக்தாத்மா–என்னோடே சேர விரும்புகின்ற ஸ -அவன் மாம் ஏவ –என்னையே ஆஸ்தி₂தஸ் ஸஹி –அநுத்தமாம் க₃திம் ||-ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டு உள்ளான் அன்றோ –இவர்கள் அனைவருமே வண்மை மிக்கவர்கள் -ஞானியோ என்னில் எனக்குத் தாரகமாகவே இருப்பவன் என்று என் சித்தாந்தம் -என்னோடு சேர விரும்புகின்ற அவன் என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளான் அன்றோ
ஏதெ ஸர்வ ஏவ உதா₄ரா: – இவர்கள் எல்லாருமே வள்ளல்கள், -வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் சீர் கண்ணன்” ஞாநீ து (மே) ஆத்மா ஏவ – ஞானியோவெனில் (எனக்கு) ஆத்மாவாகவே, தாரகனாகவே இருப்பவன்.(என்று) மே மதம் – என்னுடைய சித்தாந்தம்- வேதாந்தம் வேறே சொல்லட்டும் –
என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் -போலே -என்னதுன்னதாவியில் அறிவார் உயிரானாய் அவன் மதம் தோற்றும்- இவர்கள் பிரார்திக்கவே நான் கொடுப்பவன் ஆனேன் -அதனால் வள்ளல் -புருஷோத்தமன் வாக்யம் அன்றோ ஞானி சப்தமாக இருந்தாலும் பக்தனையே சொல்கிறான் -பக்தி ரூபாபன்ன ஞானம் – யுக்தாத்மா ஸ: மாம் ஏவ – என்னோடு சேர விரும்புகிற அவன் என்னையே, மாமேவாநுத்தமாம் க₃திம் ஆஸ்தி₂த: ஹி – ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ.- பசுவும் கன்றும் போல பகவானும் பக்தனும்.-“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”
அறிவார் உயிர் -மே மதம் -700 ஸ்லோகங்களில் -இதில் தான் -என்னதுன்னவாவி -மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –ஆச்சார்ய ஹிருதயம் -179-
நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இலேன் -உன் தன்னோடு உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாதே –
அறிவார்களைத் தனக்கு உயிராகக் கொள்வான் -அறிவார் உயிரானாய் என்று -அவன் மதம் தோன்றும்
தாரக தார்ய பாவம் அவன் நமக்கு -இங்கு சார்ந்து இருக்கை -விட்டுப் பிரிந்தால் தரிக்ககில்லா மார்த்வம்-அன்று எனக்கு பட்டினி நாளே
ஸ்வரூப ஐக்யம் சொல்ல வந்தால் மற்ற மூவர் இடம் இல்லாததால் அத்வைதம் ஸித்திக்காதே
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -பற்று இல் -அகத்திலன் -உற்றவன் -நம்மை முற்றுமாகக் கொண்டவன் -நேர் எதிராக இரண்டு வியாக்கியானங்கள் இதுக்கு உண்டே
————————————————————————————-
பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப
பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-
ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்
மாம் –
என்னை –
வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக
ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி
ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –
இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –
ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் (தெளி விசும்பு திருநாட்டில் உள்ள நித்ய ஸூரிகளும்)உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –
நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது காண் -என்கிறான்
————
ந அல்ப ஸஂக்யா ஸஂக்யாதாநாஂ புண்ய ஜந்மநாஂ பலம் இதஂ யந்மச் சேஷதைக ரஸாத்ம யாதாத்ம்ய ஜ்ஞாந பூர்வகஂ மத் ப்ரபதநம் அபி து(அந்தே -ஜென்மத்தின் அந்தம் மரணத்திலா -இல்லை -பிரதிபத்தி வைஷித்யம் -துடிப்பு ஏற்பட பிரதிபந்தகங்கள் ஒழிய வேண்டுமே -அறிவு முதிர முதிர இந்த நிலை வரும்-ஞானீ ஞானவான் ஆகும் முடிவில் என்றவாறு -அவன் இடம் ஓன்று பெற்றுப் போகாமல் அவனே வேண்டும் என்று இருப்பவன் -ப்ராரப்தம் முடிந்து தான் இவனுக்கு பேறு -விளம்ப பலம் -ப்ரபன்னனுக்கு அது இல்லையே )
ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |– வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-
ப₄ஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல புண்ணியப் பிறப்புகள் கழிந்த பின் ஞாநவாந் –அறிவு முதிரப் பெற்ற ஞானியானவன் வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-வாஸுதே₃வனே -எனக்குப் பரம பிராப்யமாகவும் பிராபகனாகவும் தாரகம் போஷகம் போக்யம் முதலாக எல்லாமுமாகவும் இருக்கிறான் என்று எண்ணி மாம் ப்ரபத்யந்தே |–என்னை சரண் அடைகிறான் ஸ -அவன் மஹாத்மா –விசாலமான நெஞ்சை யுடையவன் ஆவான் ஸுது₃ர்லப₄ ||-இவ்வுலகில் எனக்கு மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் – வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் – அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான் பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –
கீழ் சொல்லிய ஞானீ தான் ஞானவான் -அவனது பக்தி முற்றிய நிலை இது-மஹா மனம் படைத்தவன் –
ஸூலபன் -ஐஸ்வர்யார்த்திகள் நிறையே கிடைக்குமே கைவல்யார்த்திகள் ஸூ ஸூலபன் – வாழாட் பட்டு வல்லீரேல் -துர்லபன் ஸூதுர்லப தமம் -அதுக்கும் மேல் அவனே எல்லாம் -அவன் ஆனந்தமே பிரதானம்-மாம் வேத்தி தத்வத கீழ் சொல்லிய நிலை –
திருக்கோளூருக்கு என் ஜீவனத்தையும் கொண்டு போக வேண்டுமோ -முகத்தை கழற்றி வைத்து விட்டுப் போகக் கூடாதோ
எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் – நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர். பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் – வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.- எல்லா வித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் – பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும் “வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே – கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–
பஹு ஜென்மங்கள் கழித்தே என் பக்கல் ப்ரீதி -தாய் சொல்லுவாளோ -என்னில் -உண்ண பசி வேண்டுமே -க்ருஷீ பலமாய் எல்லாம் செய்தாலும் -ருசி பிறக்க காத்து இருக்கிறான் -அவன் நைர் க்ருண்யன் அல்ல மஹா க்ரம -படிக்கட்டுக்கள் பல அவனை அடைய -ஸாஸ்த்ர ருசி வரவழைத்து -அல்ப அஸ்திர உணர்ந்து -இத்யாதி சொத்தை ஸ்வாமி அனுபவிக்க ஒட்டாமல் தடுத்த நம் குற்றம் தானே –
அவன் நினைவு எப்போதும் உண்டு -அது கார்யகரமாவது இவன் நினைவு மாறினால் தானே பிரதிபத்தி வைசேஷ்யாத் –கீழேயே ஸ்வாமி காட்டி அருளினார் அன்றோ-கீழ் எல்லாம் அவன் கொடுக்கிறவன் என்று பற்றிய நிலை -இப்பொழுது தான் அவனே என்று இருக்கும் நிலை
பரமமான ப்ராப்யம் பிராபகம் -ஆச்சார்யாராதிகளும் இருக்கலாம் -உபாயம் அவன் ஒருவனே -உன்னால் அல்லால் ஒன்றும் குறை வேண்டேன் -ஆகவே இங்கே பரம விசேஷணம் வேண்டாமே
மஹாத்மா மஹா மநா -ஸ்வ நேத்ர அங்க விகாரம் -கால் ஆளும் கண் சுழலும் நெஞ்சு அழியுமே -முந்துற்ற நெஞ்சு என்றுமாம் -முடியானே போல் அனைத்தும் விரும்பும் மனஸ் என்றுமாம் -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே-என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –தூது விட்ட பிழை யாரிடம் சொல்வேன் -விண்ணுளாரிலும் சீரியரே மஹா மநா
கீழ் உள்ள ஸ்லோகங்களால் -ஞானீயை இந்த சிந்தனைகளைச் செய்ய வைத்து ஞானவான் ஆக்குகிறேன் என்கிறான்-
—————————————
இதி ஸ்லோக த்ரயோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி
ஸ்லோக த்ரயோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –
——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை
முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான
பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா.–-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வந் அந்யயா.– சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத் பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான த்ரயோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ
அதில் பர ஜ்ஞான பரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா து அநந்யயா சக்ய-என்றும்
மத் பக்திம் லப்தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –
———-
புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.– யஸ்ய அந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷
பார்த்த –குந்தீ புத்ரனே பூதாநி–எல்லாப் பொருள்களும் யஸ்ய-எந்தப் பரம புருஷனுடைய அந்தஸ்தாநி –உள்ளே இருக்கின்றனவோ யேந -எவனால் ஸர்வமிதம் -இவை அனைத்தும் ததம்–வியாபிக்கப்பட்டுள்ளதோ புருஷ ஸ பர து -அந்தப் பரம புருஷனோ என்னில் பக்த்யா அநந்யயா.–வேறு பயன் கருதாத பக்தியினால் லப்யஸ்–அடையத் தக்கவன்
குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ – எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில் வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்
எவனுக்குள்ளே எல்லாம் வைக்கப்பட்டு -பூதங்களால் வியாபிக்கப்பட்ட -பர ப்ரஹ்மம் பக்தியால் -அநந்ய -ஆஸ்ரயம் -நியமனம் இரண்டும் நாராயணார்த்தம் – பூர்ணத்வத்த புருஷ -புரு சனா பவது கொடுத்து -பூர்ணன் -ஹிருதய கமல ஆத்ம பட்டணம் நிவாஸன் சூத்ர மணி போலே அனைத்தும் தன்னாலே –அநந்ய பக்தியால் அவனை அடையலாம் –
புருஷன் -நான்கு அர்த்தங்கள் 1-பூரி சேத உடலுக்குள் உறைபவன் 2-அனைவருக்கும் முன்னால் இருப்பவன் 3-பூர்ணம் 4-பஹு ச நோதி -வள்ளல் இவனே பரம புருஷன்
அர்ச்சிராதி கதி மூலம் -பஞ்சாக்கினி வித்யையில் சொல்லிய படி – தத் க்ருதி நியாயம் -ப்ரீதி காரித கைங்கர்யம் நித்தியமாக அனுபவிக்கப் பெற்று சாயுஜ்யம் -அடைகிறான் –
நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் – எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்
பூர்ணத்வாத் புருஷ -கொடுப்பவன் -ஆத்மாவாகிய பட்டணத்தில் சயனம் -சனாதனம் -முதலிய அர்த்தங்கள் உண்டே
பரிவதில் ஈசனைப் பாடி –புகை பூவே -மதுவார் -பொருள் படி அந்தாதி -எதுவே என் பணி என்னாது -அதுவே ஆட்ச்செய்யுமீடே -ஸூ ஆராதத்வம்-1-6-
————–
சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ
இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும் –
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்
த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே உபாய தயா அல்ல –
அத் தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பர பக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப் பாகம் அபூர்வ தர்சனத்திலே உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்கிறார் –
புதிதாக அறிந்து கொண்டு -மேல் ஆசை கொண்டு -மேல் அடைந்து அனுபவித்து -ஞான தர்சன பிராப்தி -தசைகள் எப்போதுமே வேண்டுமே-
நிரபேஷ ஸ்வீகார உபாயமே ஸரணாகதி -அவனே
————————————————————————————————
சூரணை -16-அவதாரிகை
பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –
இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபேஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை
(எம்மா வீட்டில் புருஷார்த்தம் நிர்ணயம்
ஒழிவில் காலத்தில் புருஷார்த்த பிரார்த்தனை போல் இங்கும்)
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
க்ருத பரி பூர்ண
அநவரத நித்ய விசத தம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கிங்கரோ பவாநி
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி க்ருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான
பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –
அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –
நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை-
விசத தம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் (மிக மிகத் தெளிவான)அனுபவம் –
அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரஸ்யமாய் இருக்கை –
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தைகளிலும் அனுகூலமாய் இருக்கிற –
அசேஷ சேஷைதைக ரதி ரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு
நித்ய கிங்கரோ பவாநி –
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –
அன்றிக்கே
நித்ய சப்தம் புநராவ்ருத்தி ரஹிதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –
—————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply