ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -2- 3-4-5 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

இரண்டாவது சூரணை அவதாரிகை –

கீழ் பிராட்டி யுடைய சரண்யதையும்
அதுக்கு அடியான ஊற்றுவாயையும்
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் -சொல்லி
அவள் திருவடிகளில் சரணம் புக்கு நின்றார்
அநந்தரம் -உமக்கு அபேஷிதம் என் -என்று பிராட்டி திரு உள்ளமாக
கைங்கர்ய ருசியும் பிரபத்தி நிஷ்டையும் எனக்கு உண்டாக வேணும் -என்கிறார் –
ஈஸ்வரன் திருவடிகளிலே கைங்கர்ய சித்திக்கு இறே சரணம் புகுவது –
அவ்வளவு அன்றிக்கே ருசி விச்வாசங்கள் என்றுதைத் தனியே அபேஷித்துப் பெற வேண்டுவன சில அதிகாரி விசேஷணங்கள் உண்டு இறே –
இப்போது அபேஷித்துப் பெற வேண்டும்படி இதுக்கு முன்பு இவர்க்கு இன்றிக்கே இருந்ததோ -என்னில்
உண்டானாலும் தம்தாமுக்கு என்றும் இல்லையாக விறே தம் தாமை நினைத்து இருப்பது

——————————————————————

பாரமார்த்திக பகவச் சரணார விந்த யுகள
ஐகாந்திக ஆத்யந்திக
பர பக்தி பரஜ் ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசத தம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய பிரிய பகவத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷதைக ரதி ரூப
நித்ய கைங்கர்ய
ப்ராப்த் யபேஷயா
பாரமார்த்திகீ பகவச் சரணாரவிந்த
சரணாகதி யதாவஸ்திதா அவிரதா அஸ்து மே

—————————————————————–

பாரமார்த்திக –
அர்த்தம்-என்று பிரயோஜனத்துக்கும்  மெய்க்கும் பெயர் –
இது பர பக்திக்கு விசேஷணம் ஆன போது அதனுடைய அக்ருத்ரிமத்வம் சொல்லுகிறது
திருவடிகளுக்கு விசேஷணம் ஆன போது அதனுடைய பரம பிரயோஜனத்வம் சொல்லுகிறது

இப் பிரிவுக்கு பிரயோஜனம் என் என்னில்
பக்தி விஷயமான போது திருவடிகள் பரம பிரயோஜனமாகக் கடவது
திருவடிகள் விஷயமான போது பக்தி அக்ருத்ரிமையாகக் கடவது

பகவத் சரணாரவிந்த –
கீழ்ச் சொன்ன பகவச் சப்தம் சர்வ உத்கர்ஷ வாசி –
இது குண யோகத்தால் வந்த ரஸ்யதையைச் சொல்லுகிறது–குணங்களும் போக்யமாக இருக்கையாலே பரம பக்தி ஜனகம் –

சரணாரவிந்தம் –
விக்ரஹவத்தையால் வந்த போக்யதை சொல்லுகிறது –

யுகள –
சேர்த்தியால் வந்த போக்யதை

ஐகாந்திக –
ஏகமே அந்தமாய் இருக்கை
அதாவது -வேறு ஒரு விஷயத்தை யுடைத்து அன்றிக்கே இருக்கை-

ஆத்யந்திக –
அந்தத்தை அதிகிரமித்து இருக்கை -அதாவது நித்தியமாய் இருக்கை –

பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
பர பக்தி யாவது -சம்ஸ்லேஷ விஸ்லேஷ சுக துக்காராம் படியான பிரேம விஷயம்
பர ஜ்ஞானம் ஆவது –இதனுடைய விபாக தசையான சாஷாத் காரம்
பரம பக்தி யாவது -ஷண காலமும் விஸ்லேஷத்தைப் பொறுக்க மாட்டாத தசை

உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய -என்கிறபடியே
ஜ்ஞான கர்மங்களாலே சம்ஸ்க்ருத அந்த கரணனாய் -பக்தி பிறந்து
அதனுடைய விபாக தசை பரம பக்தியாக கடவது உபாசகனுக்கு
இவர்க்கு அந்த ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நிற்க மேல் உள்ள தசைகளை அபேஷிககிறார்-

க்ருத
இவற்றால் பண்ணப் பட்ட

பரி பூர்ண –
பரிபூரணம் ஆகையாவது ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும் ஒரு காலே அனுபவ விஷயமாகை-

அநவரத-
அவிச்சின்னமாய் இருக்கை
அதாவது -இடைவிடாதே செல்லுகை-

நித்ய
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசத தம –
விசதம் ஆவது பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமம் ஆவது -பரம பக்தி தசையில் அனுபவம்

அநந்ய பிரயோஜன –
அனுபவ ஜனித ப்ரீதியும்
ப்ரீதி காரித கைங்கர்யமும் -வேண்டாம்
இது தானே அமையும் -என்னும் படி இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய –
அநவதிகமான அதிசயத்தை உடைத்தான ப்ரீதி

பகவத் அனுபவ
சரம சரீர அவசான சமனந்தரமாக அர்ச்சிராதி கதியாலே போய்ப் பரம பதத்தில் அனுபவிக்கும் அனுபவம்

ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித
அத்தால் பிறந்த ப்ரீதியாலே பண்ணுவிக்கப் பட்ட

ஸ்வாரத்தணி ஜந்தோ வா

அசேஷ அவஸ்த உசித
சர்வ அவஸ்தைகளிலும் அனுகூலமாய் இருக்கை

அசேஷ சேஷைதைக ரதி ரூப –
நிவாஸ ஸ்ய்யா ஆசன பாதுக அம்ஸூகோப தான வர்ஷா தப வாரணாதிப
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர் யதோசிதம் சேஷ இதீரிதே ஜனை-ஸ்தோத்ர ரத்னம் -40 -இத்யாதிப் படியே
சர்வவித சேஷதையிலும் உண்டான அபிநிவேசத்தையே வடிவாக உடைத்தாய் இருக்கை

நித்ய
அபுநரா வ்ருத்தி லஷணமாய் இருக்கை

கைங்கர்ய ப்ராப்த்ய பேஷையா
கைங்கர்ய ப்ராப்தியில் உண்டான அபேஷையாலே

பாரமார்த்திகீ
ஆர்த்த ரூபமாய் இருக்கை

பகவத்
ஜ்ஞான சக்த்யாதிகளால் பூரணமான விஷயம் ஆகையாலே
சஹாயாந்தர நிரபேஷமான உபாய பௌஷ்கல்யம் சொல்லுகிறது

சரணாரவிந்த
விக்ரஹத்தின் உடைய பரம உபாயத்வம் சொல்லுகிறது

சரணாகதி
ஸ லஷணமாய் இருக்கை

யதாவஸ்திதா
உபாயாந்தரங்கள் உடைய அனுபாயத்வ புத்தி பூர்வகமாக அத்தைப் பற்றுகை போலே காணும்
அதாகிறது -பற்றி விடுகையும் அன்றிக்கே
பற்றிப் பற்றுகையும் அன்றிக்கே
-என்னுமா போலே விட்டுப் பற்றுகை

யதாவஸ்திதா-
என்றது -இருந்தபடியே -என்றபடி
இது இப்படிப் போலே காணும் இருப்பது
ரஹஸ்யம் ஆகையாலே நேராக வெளியிடாது ஒழிகிறார்-

அவிரதாஸ்து மே –
அநந்ய கதியாய் இருந்துள்ள எனக்கு
யாவத் ப்ராப்தி விச்சேதம் இன்றிக்கே ஒழிய வேணும்-

———————————————————————————

சூரணை -3

அஸ்து தே
பிராட்டி அருளிச் செய்கிறார் –
உமக்கு அப்படியே உண்டாயிடுக-

—————————————————————————————

சூரணை -4-
தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே
அப்படிப் பட்ட உபாயம் தன்னாலேயே
பரபக்தி தொடக்கமாகக்
கைங்கர்யம் ஈறாக
நடுவு உள்ள தசைகள் அடைய
உண்டாகக் கடவது-

(மேலும் தேவரீர் அபேக்ஷிக்கப் போகும் உமது அடியார் அடியார்களுக்கும் பேறு உம்மைப் போலவே கிட்ட அருளுவோம் என்றுமாம்)

————————————————————————————————

சூரணை -5-
அவதாரிகை –
மேல் ஆஸ்ரயணீய வஸ்து நிர்த்தேசம் பண்ணுகிறார் –
ஆஸ்ரயணீய னானவன் நாராயணன் இறே
அதில் நார சப்தார்த்தம் மேல் சொல்லுவதாகக் கோலி
அதுக்கு ஆஸ்ரயமாய் அயன சப்தார்த்தமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை முதலிலே அருளிச் செய்கிறார்-

அகில ஹேய பிரத்யநீக
கல்யாணை கதான
ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷண
அநந்த ஜ்ஞான ஆனந்தைக ஸ்வரூப

அகில ஹேய பிரத்யநீக
நிர்க்குணம் -என்கிற வஸ்து இருக்கிற படி –
ஹேயங்கள் ஆவன –அசித் கதமான பரிணாமமும்
சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளும் –
நித்ய முக்தர் பக்கல் உண்டான பாரதந்த்ர்யமும் –
அகில சப்தத்தாலே உபய விபூதியில் உண்டான சேதன அசேதனங்களை சொல்லுகிறது –
பாரதந்த்ர்யம் ஹேயமோ என்னில் –
புருஷனுக்கு ஸ்தன உத்பேதமும்
ஸ்திரீக்கு ஸ்ம ஸ்ரு சம்யோகமும் போலே
பரதந்த்ரனுக்கு ஸ்வா தந்த்ர்யம் ஹேயம்
அப்படியே ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு பாரதந்த்ர்யம் ஹேயமாகக் கடவது

ப்ரத்யநீகத்வம் ஆவது
பதார்த்தாந்தர சம்சர்க்க அபாவாதாரத்வம் –
ஆஸ்ரிதர் உடைய ஹேய நிரசனத்துக்கு அடியான ஹேய ப்ரத்யநீகத்வம் -என்றுமாம்

கல்யாணை கதான –
கல்யாணைக விஸ்தார
அகண்டைக ரசம் போலே இஸ் சப்தம்

(ஸ்ருத பிரகாசர் –
அகில ஹேய பிரத்ய நீகன் -கல்யாண ஏக தான -உபய லிங்கம் -அடையாளங்கள் -நாராயணனுக்குக்கே அசாதாரணம்
நன்மை அளிக்கும் குணங்கள் மட்டுக்குமே இருப்பிடம்
அத ஏவ ஸமஸ்த ஸ்வ இதர வஸ்து விலக்ஷணன் –
பக்த முக்த நித்ய விலக்ஷணன் -புருஷோத்தமன் –
அநந்த ஞான ஆனந்த ஆனந்த ஸ்வரூபன்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்)

ஸ்வேதர சமஸ்த வஸ்து விலஷண-
அத ஏவ சமஸ்த வஸ்து வஸ்து விலஷண–
அநந்த
த்ரிவித பரிச்சேத ரஹித
விபுத்வாத் தேச பரிச்சேத ராஹித்யம் –
நித்யத்வாத் –கால பரிச்சேத ராஹித்யம் –
ஸ்வ வ்யதிரிக்த சம்ஸ்த வஸ்துக்களுக்கும் தான் பிரகாரியாய் தனக்கு ப்ரகார்யந்தரம் இல்லாதபடி நிற்கையாலே
ஸ்த்ருச வஸ்தவ பாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
துலையாலே-தராசுவாலே யாதல் –
பிரஸ்தாதிகளாலே -பரிமாணத்தை அளக்கும் படி முதலிய பாத்ரங்களால் -ஆதல்
வரும் பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் –

ஜ்ஞான ஆனநதைக ஸ்வரூப
அநந்ய அதீன பிரகாசத்வ -ஆஹ்லாத கரத்தவ –
ஜ்ஞானமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ -ஜ்ஞான ஆனந்தைக ஸ்வரூப
அதாவது -ஸ்வயம் பிரகாசத்வ
சுக ரூபத்வங்களே ஸ்வரூபமாய் இருக்கை –
இப்படி திவ்ய ஆத்ம ஸ்வரூபம் சொல்லப் பட்டது

(ஞானம் த்ரவ்யம் நம் சித்தாந்தம் -குணம் போல் அல்ல)

———————————————————————————–

அநந்தரம் நார சப்த வாச்யங்களில் ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
பஞ்ச உபநிஷண் மயமான திவ்ய விக்ரஹத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வ அபிமத அநுரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய
நிரவத்ய நிரதிசய ஔ ஜ்ஜ்வல்ய
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய
லாவண்ய யௌவன ஆதி
அநந்த குணநிதி திவ்ய ரூப

ஸ்வ அபிமத
கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்துக்கு -குணங்களில் காட்டில் பிரகாசகமுமாய்
அந்தரங்கமுமாய் இருக்கையாலே
குணங்களுக்கு முன்னே விக்ரஹத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வ அபிமத –
சம்ஸ்த கல்யாண குணாத் மகோ ச்சௌ-ஸ்வ சக்திலேஸ உத்த்ருத பூத சரக்க –
இச்சாக்ருஹீ தாபி மதோருதே ஹஸ் சம்சாதி தாஸ் சேஷ ஜகத்தி தோஸ் சௌ -என்கிறபடியே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் அபிமதமாய் இருக்கை

அநுரூப
ஸ்வரூப அனுபவத்துக்கு திரோதாயகமாய் இருக்கை அன்றிக்கே
ஸ்வரூப அனுபவத்துக்கு வர்த்தகமாய் இருக்கை –

ஏக ரூப –
ஷட்பாவ விகார ரஹீதமாய் இருக்கை –
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே
சதைக ரூப ரூபாய -விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே என்று இருக்கை —

அசிந்த்ய
இதர சஜாதீயதயா சிந்தயிதும் அசக்யமாய் இருக்கை –

திவ்ய
வருந்தியும் உபமானம் இன்றிக்கே இருக்கை –
அப்ராக்ருதமாய் இருக்கை -என்றுமாம் –

அத்புத –
ஷணம் தோறும் அபூர்வமாய் இருக்கை
அத ஏவ ஆச்சர்ய அவஹமாய் இருக்கை –

நித்ய நிரவத்ய
நித்ய நிர்தோஷமாய் இருக்கை –
அதாவது -என்றும் ஒக்க ஸ்வார்த்தமாய் இராது ஒழிகை –
பக்தாநாம் -என்று இருக்கும் இருப்பு –

(நித்ய -பரம பத வாஸம் -நிரவத்ய – அடைய எளிமை -அர்ச்சாவதாரம் இரண்டுமாக ஸ்ருத பிரகாசர்
எப்பொழுதும் குற்றம் அற்ற திரு மேனி என்றுமாம்)

நிரதிசய ஔஜ்ஜ்வல்யம்
சர்வ தேஜஸ்ஸூக்களையும் கீழ்ப் படுத்திக் கொண்டு இருக்கும் ஔஜ்ஜ்வல்யம்
இத்தால் ப்ரஹ்மாதி களுக்கும் அமைத்துக் காட்ட வேண்டும் படியாய் இருக்கை
இத்தால் விக்ரஹ வைலஷண்யம் சொல்லிற்று

——-
அத விக்ரஹ குணா நாஹ

சௌந்தர்ய -அவயவ சோபை

சௌகந்தயசர்வ கந்த -என்கிறபடியே சர்வத்தையும் பரிமளிதம் ஆக்கவற்றாய் இருக்கை

சௌகுமார்ய -நாய்ச்சிமாரும் உறைக்கப் பார்க்கப் பொறாதபடி
புஷ்பஹாச சுகுமாரமாய் இருக்கை –

லாவண்ய-சமுதாய சோபை
அதாவது லவணம் போலே எங்கும் ஒக்க வியாபித்து நின்று ரசத்தை தரவற்றாய் இருக்கை

யௌவனயுவாச குமார -என்கிறபடியே
நித்ய யுவாவாய் இருக்கும் பருவம்

ஆதி
இவை தொடக்கமான

(தீன வ்ருத்த ஆயதனம் -திருத்தோள்கள் போல்வன)

அநந்த குண நிதி
அசங்க்யாதமான குணங்களுக்கு கொள்கலமாய் இருக்கும்

திவ்ய ரூப
திவிஸ்தித ரூப
அதாவது இவ் விபூதியில் அடங்காது இருக்கை –

(த்யு லோகம் -ஆகாசம் -இருக்கும் திவ்ய ரூபம்)

————————————————————————————-

விக்ரஹ குணங்கள் விக்ரஹத்துக்கு பூஷணமாய் இருக்குமா போலே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு பூஷணமான ஸ்வரூப குணங்களை சொல்லுகிறது –

ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த
சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய
சௌர்ய பராக்ரம சத்ய காம சத்ய
சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்
அசங்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

ஸ்வா பாவிக
ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை

அநவதிக அதிசய
நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
அவற்றில்

ஜ்ஞான –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –

பல –
சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய
சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்

வீர்ய
சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம்
வேராத அநாயாமை
எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரதை என்னவுமாம்

சக்தி
ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் என்னவுமாம்
ஜகத் உபாதான சக்தி என்னவுமாம் –

தேஜஸ்
பராபிபவன  சாமர்த்தியம்-

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்திர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோஸ்யம் அக்நி
தமேவ பாந்தம் அநுபாதி சர்வம்
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -இத்யாதி
இப்படி சர்வ உத்க்ருஷ்டன் ஆனவனுக்கு -இனி பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்

1-சௌசீல்ய –
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வ பாவத்வம் சீலம் -என்கிறபடியே
அந்த மஹத்வம் தம் திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை சௌசீல்யம்
அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்ட்டான் ராமோ தர்ம ப்ருதாம் வர
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம்-யுத்தம் -120-11-15-என்னுமா போலே –

(அஹம் வோ பாந்தவ ஜாத)

(தஸ்ய ப்ரயோஜனாந்தரம் எதிர்பார்க்காமல் -கலப்பதால் தனக்கு ஒன்றும் வேண்டாதவன் என்னுமாம்
பெருமையைப் பார்த்து தன்னை அண்டினவர்க்குப் பயம் இல்லாமல் கலப்பது என்றுமாம்   )

2-வாத்சல்ய –
தன் பிரேமத்தாலே ஆஸ்ரித கதமான குணமாகத் தோற்றுகை-
கோபாலத்வம் ஜூ குப்சிதம்

(ஷமா குணத்தில் எல்லையே இது
ஆகவே தனியாக க்ஷமையைச் சொல்லவில்லை)

3-மார்த்தவ –
ஆஸ்ரித விஸ்லேஷம் பொறுக்க மாட்டாத திரு உள்ளத்தில் மென்மை
அநித்ரஸ் சத்தம் ராம ஸூப்தோஸ்பி ச நரோத்தம
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் ப்ரதி புத்யதே-சுந்தர -36-44

(ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||ஶ்லோகம் 56 –

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.)

(உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே -ஆழ்வார் அவனுக்கு மாஸூச -)

4-ஆர்ஜவ
ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை
அதாவது -அவர்களுக்கு தன்னை நியமித்து கொடுக்கை –

(ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை–8-)

(அஹம் பக்த பராதீனன்)

(எதிர்ச்சையாக வந்த சூர்ப்பணகை இடமும் ஆர்ஜவம் காட்டிய பெருமாள்)

5-சௌஹார்த்த
ஆஸ்ரிதர்க்கு சர்வ மங்கள அன்வேஷண பரனாகை
சோபன ஆசம் சீதி –ஸூஹ்ருத்

(ஸூ ஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் -கீதை –ஸாதாரண -அனைவர் மேலும் -வ்யூஹ ஸுவ்ஹார்த்தம் -உறங்குவான் போல் யோகு செய்பவன்-இவன் பிறருக்காக இருக்கும் காலத்திலும் விட்டுச் செல்லாமல் உள்ளேயே பதி கிடந்தது அருளும் ஸாதாரண ஸுஹார்த்தம்
இங்கு ஆஸ்ரிதருக்கு ஸர்வ மங்களங்களைத் தேடித் தேடி அருளுபவர்-ததாமி புத்தி யோஹம்யோக க்ஷேமம் வஹாம் யஹம்-உன் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி நீஸூவ சத்தா அந பேஷா-தனது மேன்மை பார்க்காமல் ரக்ஷணத்தில் இழிகிறான் அன்றோ -தூது போயும் -தேரோட்டியும் -செத்தாரை மீட்டும் -போல்வன)

6-சாம்ய
ஜாதி குண வ்ருத்தாதிகளைப் பாராதே
அவர்களுக்கு ஆஸ்ரயணீயத்வத்தில் சமனாய் இருக்கை
குஹேன சஹிதோ ராமோ லஷ்மணேன ச சீதயா-என்றும்
சபர்யா பூஜித சம்யக் ராமோ தசரதாத் மஜ-என்றும்

(குஹேன சஹிதோ ராமோ லஷ்மணேன ச சீதயா-மூவருடன் சேர்ந்த சேர்க்கை ஸாம்யம் -குகனுடன் சேர்ந்த பின்பு தான் சேர்த்தி ஆனந்தம் பெற்றான் என்றுமாம் -)

(சபர்யா பூஜித சம்யக் ராமோ தசரதாத் மஜ-சக்ரவர்த்தி கொடுத்த அன்னம் போல் சபரி அளித்த பழங்களும் ஸாம்யம்)

(ஆஸ்ரயிக்கும் போதும் -அருளும் போதும் -சமர்ப்பித்த த்ரவ்யங்களை ஏற்கும் போதும்-தாரதம்ய ராஹித்வம்- ஸாம்யம் என்றுமாம்-சமோஹம் ஸர்வே பூதேஷு ந த்வேஷ ந ப்ரிய-விதுரர் சமர்ப்பித்த வாழைப்பழத்தோல் -குறும்பு அறுத்த நம்பி மண் பூ சமைப்பித்த வ்ருத்தாந்தம்)

7-காருண்ய-
ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷ்ணுத்வம்-என்றும்
ததாவிதம் த்விஜம் த்ருஷ்ட்வா நிஷாதேன நிபாதிதம்
ருஷேர் தர்மாத்மநஸ் தஸ்ய காருண்யம் சம பத்யத -பால -2-13-

(வால்மீகி பரத்வாஜர் சிஷ்யருடன் தமசானதியில் நீராடப் போக மிதுனப் பறவைகளைப் பார்த்து -வேடன் வீழ்த்த -வால்மீகி காருண்யம் ஏற்பட்டதே -வேடனுக்கு சாபம் கொடுத்தார் அன்றோ-)

8-மாதுர்ய
ஹந்தும் ப்ர வ்ருத்தத்வேஸ்பி ரசா வஹத்வம்-என்றும்
ஏஹ்யே ஹி புல்லாம்புஜ பத்ர நேத்ர
நமோஸ் சஸ்து தே தேவ வராஸ் அப்ரமேய
பிரசஹ்ய மாம் பாதய லோக நாத
ரதோத்தமாத் பூத சரண்ய சங்க்யே-என்றும்(பீஷ்மர் தன்னைக் கொல்ல வந்த கண்ணனைப் பார்த்து அருளிச் செய்த ஸ்லோகம்)
அஸூர்யமிவ ஸூர்யேன நிவாதமிவ வாயுநா
க்ருஷ்நேன சமுபேதேன ஜஹ்ருஷே பாரதம் புரம் – என்றும்(ஹஸ்தினாபுரியில் நுழைந்த கண்ணனைப் பார்த்து அருளிச் செய்த ஸ்லோகம்)
சர்வ ரச -என்றும் உள்ளவன்

8-காம்பீர்ய
ஆஸ்ரிதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை –
அதாவது -தன் கொடையின் சீர்மையும் கொள்ளுகிறவன் சிறுமையும் பாராது இருக்கை –
ய ஆத்மதா பலதா -தன்னையும் கொடுத்து தன்னை அனுபவிக்க பலமும் கொடுப்பவன்

9-ஔ தார்ய
ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை தானே இரந்து கொடுக்கை
அத மத்யம கஷ்யாயாம் சமாகச்சத் ஸூஹ்ருஜ் ஜனை
ஸ சர்வாநர்த்திநோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நன்த்யச–அயோத்யா-16-27-என்றும்
உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-

(கௌஸ்த்தர் தனது குருவுக்கு தக்ஷிணை கொடுக்க அனைத்து செல்வங்களையும் தானம் செய்த பின்பு ரகுமஹாராஜர் இடம் கேட்டதும் குபேர பட்டணம் சென்று போர் தொடுத்து செல்ல நிகைக்க குபேரன் தானே அளித்த செல்வம் அளித்த வ்ருத்தாந்தம்)

(துன் நிர்மிதா ஜடரதா–உனது செல்வங்களை இரந்து கொடுத்த வாமனன்)

(கொடுக்கும் பொழுது -தகப்பனார் சொத்தை மகன் அனுபவிக்குமா போல் -அளிக்கும் திரு உள்ளம் -உரிமை உடைய ஒருவன்)

(கொள்ளக் குறைவிலன் -வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் மணி வள்ளல் அன்றோ)

(ஸர்வம் அளித்தும் ருணம் ப்ரவ்ருத்த மிவ -கோவிந்த –மாம் தூர வாஸினம் -புண்டரீகாஷா -திரௌபதிக்கு -கடனாளி போல் சென்றானே)

(செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா
பாண்டவ மம ப்ராணன் -ஆத்மைவ மே மதம் -என்று இருப்பவன்)

10-சாதுர்ய
ஆஸ்ரித தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கை –
ஆஸ்ரிதர் உடைய அதி சங்கையைப் போக்கி ரஷிக்கை -என்னவுமாம்-
உத்ஸ்மயித்வா மஹா பாஹூ ப்ரேஷ்ய ச அஸ்தி மஹா பல
பாதாங்குஷ்டேன சிஷேப சம் பூர்ணம் தச யோஜனம்-கிஷ்கிந்தா -1-65-

(தன்னடியார் திறத்தத்து தாமரையாள் யாகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்வார் என்னுமவன்)

(சாந்தணி தோள் சதுரன் அன்றோ)

11-ஸ்தைர்ய-
ப்ரத்பூஹ சதைரபி ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞா பங்கம் ந கரோதி
மித்ர பாவேன சம் ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேத்த கர்ஹிதம்-யுத்தம் -18-2-

(நூறு தடைகள் வந்தாலும் ஆஸ்ரித ரக்ஷணம் செய்தே தீர விரதம் கொண்டவன்
மித்ரன் வேஷமாக வந்து சரண் அடைந்தாலும் கைவிடாதவன்
உன்னை விட்டாலும் இலக்குமவனை விட்டாலும் உயிரை விட்டே ரிஷிகளை ரஷிப்பேன் என்னுமவன் அன்றோ)

(ஊற்றம் உடையாய் பெரியாய்)

12-தைர்ய
அதுக்கடியான நெஞ்சில் திண்ணிமை

அநந்தரம் இரண்டு குணம் ப்ரதிபஷ விஷயம்
1-சௌர்ய
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்ய வல்லனாய் இருக்கை

(செங்குந்தா –அடியார்க்கு தீர்த்து அசுரருக்கு தீமை செய்பவன்
கஞ்சன் வயிற்றில் நெருப்பாக -)

2-பராக்ரம
அளவற முடுகினாலும் வினை செய்ய வல்லனாய் இருக்கை –

(கர தூஷண வதம் -அஸகாய ஸூரன்–அநபாய தீரன் -மனுஷ்யன் -14000 ராக்ஷஸர்கள்)

அதவா
தைர்யாதி த்ரயோ குணா ப்ரதிபஷ விஷயா
1-தைர்ய
மூல பலே சந்நிஹிதேஸ்பி பூர்வ ஷணாத் ந விசேஷ

(ஆனை ஆயிரம் ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி-சேனை ஆயிரம் –கபந்தம் -ஆயிரம் கபந்தங்கள் ஆட மணி ஒலிக்கும் -ஏழரை நாழிகை அடித்ததே)

2-சௌர்ய
அவ்வளவு அன்றிக்கே அனுகூல இவ தத் பல பிரவேசனம்

(தனது படைக்குள் புகுவது போல் விரோதிகள் படைக்குள்ளும் தயக்கம் இல்லாமல் புகுவானே)

3-பராக்ரம –
அபியாதா ப்ரஹர்த்தா ச சேனாநய விசாரத –அயோத்யா 1-29-(முன்னே தானே சென்று தாக்குபவன்)என்றும்
சின்னம் பின்னம் சரீர் தக்தம் ப்ரபக்னம் சஸ்திர பீடிதம்
பலம் ராமேன தத்ருசூர் ந ராமம் சீக்ர காரிணம்-யுத்தம் -(அங்கங்கள் வெட்டுப்பட்டு உடைந்து விழுந்து எரிந்து -மூல பலம் அழிந்து -ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து)94-22

1-ஸத்ய காம –
கல்யாண குணங்களையும் விபூதிகளையும் சொல்லுகிறது
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான குண விபூதிகள் என்கை

(பல பலவே ஆபரணம் பேரும் பலபலவே -புகழும் நல் ஒருவன் என்கோ -அம்ருதம் போல் விபூதிகளைக் கேட்ட அர்ஜுனன் -யோகம் -கல்யாண சேர்க்கையும் விபூதியையும் விரிவாக சொல்லக் கேட்டான் அன்றோ
காம் யந்தே இது காம –ஆசைப்படப்படும் விஷயம் –
ஸோஸ்நுதே ஸர்வான் காமான் -ஸ்ருதி
ப்ரஹ்ம புரம் -அஸ்மின் -காமிக்கப்படும் குணங்கள் உள்ளன)

2-ஸத்ய சங்கல்ப –
அமோகமான அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க ஷமன் ஆகை(அமோக -பழுதாகாத)

( ஸூ தர்சன பட்டர் நிர்வாஹம்
நித்ய விபூதி மத்வம் -ஸத்ய காமம்
லீலா விபூதி மத்வம் -ஸத்ய ஸங்கல்பம்)

ஆஸ்ரித ஸம் ரஷண விஷயோ மநோ ரத காமசோஸ் ப்ரதி ஹதோ பவதீதி ஸத்ய காம

(ஆஸ்ரித ரக்ஷணத்தில் மநோ ரதம் கொண்டு
ஏகாகி ந ரமேதி -உண்டது உருக்காட்டாதே -தேசாந்தர புத்ரன் பக்கலிலே மநோ ரதம் கொண்டவன்
உறங்குவான் போல் யோக கள்ள நித்ரை கொண்டவன் -ஜகத் ரக்ஷண சிந்தை காமம் -எதாலும் தடைபடாமல் இருக்குமே -ஆகவே ஸத்ய காமம்)

தத் ரஷணாய தேவ மனுஷ்யாத் யாவதார சங்கல்போ மநோ ரத சோஸ் ப்ரதி ஹதோ பவதீதி ஸத்ய சங்கல்ப –

(உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்து
நாட்டில் பிறந்து படாதன பட்டு)

இக் குணங்கள் இரண்டும் ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பு ஆகையாலே-மத்யஸ்த ஜகத் ரஷண அர்த்தமாகவுமாம்

கீழ் ஆஸ்ரிதர் விஷயத்தில் அருளிச் செய்த 12 கல்யாண குணங்களுக்கும் மேல் விட்டுப்போன மேலும் இரண்டு குணங்களை-க்ருதித்வ- க்ருதஜ் ஞதா–அருளிச் செய்கிறார்

1-க்ருதித்வ-
ஆஸ்ரிதர் அபேஷிதம் பெற்றால் அந்த லாபம் தன்னதாய் இருக்கை-

ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
என் உயிரை அறவிலை செய்தனன் சோதி –தோள்கள் ஆயிரத்தாய் இத்யாதி உகப்பால் பணைத்ததே)
அபிஷிஸ்ய ச லங்காயாம் ராஷசேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ –

இவர்கள் கர்த்தவ்யங்கள் அடையத் தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கை -என்னவுமாம் -(அஹம் ஸ் மராமி மத் பக்தம் –நயாமி பரமாம் கதிம்)

ஆதி கர்மணி க்திந்தந்த

2-க்ருதஜ்ஞதா-
ஒரு கால் சரணம் என்னும் உக்தி மாத்ரத்தாலே பின்பு செய்யும் குற்றங்கள் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –

ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் அவற்றை மறந்து அவர்கள் செய்த ஸூக்ருத லவத்தையே நினைத்து இருக்கை -என்னவுமாம்-

கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிநாம்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மீஹ்ருத யானநாப சர்ப்பத்தி –

ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த அபகாரத்தையே நினைத்து இருக்கை -என்னவுமாம் –

தம் து மே ப்ராதரம் த்ரஷ்டும் பரதம் த்வரதே மன
மாம் நிவர்த்தயிதும் யோசசௌ சித்ரகூடம் உபாகத
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதும் மா -யுத்தம் -124-19

(வஸஸாம் -ஸாந்வனவாம் -விபீஷணனை சமாதானம் பண்ண–அத்தை நினைத்து அவன் உருக-இவன் பருகினான்
ஆகா என்று அருள் –ரக்ஷிக்க வந்து பிரார்த்திக்க -வருந்துவான் அன்றோ)

ஆதி -சப்தத்தாலே அநுக்த குணங்களை நினைக்கிறது

அசங்க்யேய
இக் குணங்கள் எண்ணிறந்து இருக்கை –

அநவதிக அதிசய —என்று நிஸ் ஸீமத்வம்
இத்தால்-அசங்க்யேய- நிஸ் சங்க்யே யத்வம்

கல்யாண
உள்ளது எல்லாம் நன்றாக இருக்கை

குண கனௌக
அவை தான் திரள் திரளாக இருக்கை
க்ரோதாதிகளும் ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இருக்கை –

(குண கண ஓக –ப்ரவாஹம்
கற்றுக் கறவை கணங்கள் பல
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று தேறி இருக்கலாமே
சினத்தினால் இலங்கை செற்ற –மனதுக்கு இனியான் அன்றோ)

மஹார்ணவ-
அஸ்மான் மநோ கோசரா கேசி தேவ உக்தா
வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா
வக்தும் சமேதைரபி சர்வ லோகை
மகாத்மான சங்க சக்ராசி பானேர்
விஷ்ணோர் ஜிஷ்னோர் வஸூ தேவாத் மஜச்ய -என்றும்
சதுர முகாயுர் யதி கோடி வக்த்ரோ
பவேன் நர க்வாபி விசூத்த சேதா
சதி குணா நாம யுதைக தேசம்
வதந்தவா தேவ வர ப்ரசீத –

(குண கணங்கள் சேர்ந்து இவனுக்குப் பெருமை சேர்க்காமல்
இவனை அடைந்து தாம் சத்தை பெறுகின்றன என்பதைக் காட்டவே
ப்ரவாஹம் குணங்கள் -நதிகள் போலும்
இவன் மஹா ஆர்ணவம் கடல் போலவும் என்று அருளிச் செய்கிறார் -)

—————————————————————————

ஸ்வ உசித விவித விசித்திர
அநந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய
நிரதிசய ஸூகந்த
நிரதிசய ஸூக ஸ்பர்ச
நிரதிசய ஔஜ்ஜ்வல்ய
கிரீட மகுட சூடாவதம்ச
மகர குண்டல க்ரைவேயக
ஹார கேயூர கடக ஸ்ரீ வத்ஸ
கௌஸ்துப முக்தாதாம உதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராத்
அபரிமித திவ்ய பூஷண

விக்ரஹ குணமான சௌந்தர்யாதி களோபாதி பூத்தாப் போலே
சாத்தின கிரீட மகுடாதி திவ்ய ஆபரணங்களை அனுசந்தித்து அருளுகிறார் –

ஏவம் விதனானவனுக்கு சோப அவஹமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லுகிறது –
ஜ்ஞாநாதிகள் ஆத்ம ஸ்வரூபத்துக்கு அலங்கார மானவோபாதி
விக்ரஹத்துக்கு ஆபரணங்கள் அலங்காரம் ஆகையாலே அவற்றைச் சொல்லுகிறார் –

ஸ்வ உசித
அவயவங்கள் தான் ஒருபடி பூத்தாப் போலே தகுந்து இருக்கை -(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -பொருந்தி இருக்குமே)

விவித –
அவை தான் நாநாவாய் இருக்கை –
அதாவது க்ரீடாதி பேதத்தாலே பலவகைப் பட்டு இருக்கை –

விசித்திர –
அங்குலீயகம் என்றால் இடைச்சரி கடைச்சரி -என்னுமா போலே ஒரோ வகைகளிலே நாநாவிதமாய் இருக்கை –

(நம்பெருமாளுக்கு கட்டை விரலிலும் நடு விரலிலும் ஒரே மோதிரங்கள் -மற்றவற்றில் இரணடு உண்டே அபய ஹஸ்தத்திலே)

விவித
முத்தின்படி மாணிக்கப்படி என்கிற விவித பதத்தைச் சொல்லுகிறது

விசித்திர
க்ரீடாதி நூபுராந்தமான வைசித்ர்யத்தைச் சொல்லுகிறது -என்னவுமாம் –

அநந்த ஆச்சர்ய
எல்லை யிறந்த ஆச்சர்யத்தை உடைத்தாய் இருக்கை –
ஒரோ ஆபரணச் சேர்த்தியை அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை –

(முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.))

நித்ய நிரவத்ய-நிரவத்யங்களாய் இருக்கும் அவற்றுக்கும் காதா சித்கமான
அவத்யங்கள் உண்டாய் இருக்கும் –
அங்கன் இன்றிக்கே நித்ய நிரவத்யங்களாய் இருக்கை –

நித்ய –
உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை –

நிரவத்ய
ஸ்ரக் வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வ அனுரூபைர் அநூபமை
சிந்மயை ஸ்வ ப்ரகாசைச்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை-என்கிறபடியே
திவ்ய ஆபரண ஆழ்வார்கள் சேதனர் ஆகையாலே தம் தாமுடைய
சோபை ஸ்வார்த்தம் அன்றிக்கே இருக்கை –
சேதனராய் இருப்பார்க்கு ஸ்வார்த்தம் என்று இருக்கை அவத்யம் இறே

(சிந்மயை-திவ்ய ஆபரண ஆழ்வார்கள்-நித்ய ஸூரிகளே திவ்ய ஆபரணங்களாக கைங்கர்யம்)

நிரதிசய ஸூகந்த –
சர்வ கந்த -என்கிற விஷயத்துக்கும் ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –
அதாவது -திரு வாபரணம் சாத்தினால் திருமாலை சாத்துகை  பரிமளத்துக்கு உறுப்பு
அன்றிக்கே அலங்காரத்துக்கு உறுப்பாம் படி இருக்கை –

நிரதிசய ஸூக ஸ்பர்ச
அல்லாத ஆபரணங்கள் அழகுக்கு உறுப்பு ஆகையாலே
போகத்தில் வந்தால் கழற்ற வேண்டி வரும்
இவையோ என்னில் -பிராட்டிமாரோட்டை கலவியிலும் கழற்ற வேண்டாத படி
ஸ்ரக் சந்த நாதிகளோபாதி அனுகூலமாய் இருக்கும்

(ஹாரோபி –ஸ்பர்ச சம்ரோத பீருநா –சீதாப் பிராட்டி ஹாரத்தையும் அணிந்து கொள்ள மாட்டாள் -அப்படி உள்ளவள் இந்தப் பிரிவை எப்படி பொறுப்பாளோ -பெருமாள்)

நிரதிசய ஔஜ்ஜ்வல்ய
விக்ரஹ காந்தியையும் அமுக்கும் ஔஜ்ஜ்வல்யத்தை உடைத்தாய் இருக்கை

(ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய –ஒளியும் ஒப்புமை யாகமாட்டாத திவ்ய மங்கள விக்ரஹ காந்தியையும் அமுக்கும் அளவும் ஒஜ்வல்யம்)

(ஒன்பது அடைமொழிகள் காட்டி அருளுகிறார்
மேல் 16 திவ்ய ஆபரணங்களை அருளிச் செய்து–ஆதி என்று நிகமிக்கிறார்)

கிரீட மகுட
கிரீடம் ஆகிறது -திரு வபிஷேகத்தின் சுற்று
மகுடம் ஆகிறது -மேலில் கவிப்பு
சூட -திருச் சுட்டி -திருச் சுட்டு –
அவதம்ச-திருச் செவி மலர்

(ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம்- ஈஸதே -ஹஸ்தி பூஷண — -ஸ்வாமித்வம் பறை சாற்றும் திரு அபிஷேகம்
கிரீட சூட அவதம்ஸ -ஆதி ராஜ்ய ஜல்பிதா)

மகர குண்டல –மகர ஆகாரமான திருத் தோடுகள்

(துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-)

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-காதுக்கும் குழலுக்கும் தோள்களுக்கும் ஆபரணம் அன்றோ மகர குண்டலங்கள்)

க்ரைவேயக-திருக் கழுத்தில் ரேகா த்ரயங்களுக்கும் சாத்தும் ஆபரணமான முத்துத் திருக் கட்டு -திருவட்ட மணி முதலானவை –

ஹார-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போலே -மூன்றாம் திருவந்தாதி -55-என்னுமா போலே
திரு மார்பில் மடித்துச் சாத்த வேண்டும்படியான ஹாரம்

(கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-)

கேயூர-திருத் தோள் வளை

கடக –முன் கையில் சாத்தும் திரு வளைகள்

ஸ்ரீ வத்ஸ -திரு மறு
கீழ் உள்ள ஆபரணங்கள் போலே ப்ருதக் ஸ்திதி யோக்கியம் அன்றிக்கே
சர்வேஸ்வரத்வ சிஹ்னமான ஆபரணம்

(மண்டோதரி -வ்யக்தம் ஏஷ மஹா யோகி -ஸ்ரீ வத்ஸம் கண்டு)

கௌஸ்துபம்-ஸ்ரீ கௌஸ்துபம் -ஒரு காலமும் பிரியாதபடி அபிமதமாய்
சர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் இருக்கும் ரத்னம்

(புருடன் மணி வரமாக -ஜீவாத்மா கௌஸ்துவம் -மறு அசித்)

முக்தா தாம-
ஏகாவளீ-த்ரி சரம் பஞ்ச சரம் தொடக்கமான திரு முத்து வடங்கள்

உதர பந்தன-
திரு வுதர பந்தனம்
பிரளய ஆபத்துக்களிலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்துப் போந்த ஆபத் சகத்வத்துக்கு
பட்டம் கட்டினால் போலே இருக்கை –

பீதாம்பர –
சர்வேஸ்வரத்வ லஷணமாய்
திருவரை பூத்தால் போலே ஸூ சங்கதமாய் –
பும்ஸ்த்வ அவஹமாய் இருந்துள்ள திருப் பீதாம்பரம்

காஞ்சீ குணா
அந்தத் திருப் பீதாம்பரத்துக்கு சோப அவஹமாய்
அந்தரங்கமாய் இருந்துள்ள அரை நூல் பட்டிகை

நூபுர
பகவத் விஷயத்தில் இழிவார் எல்லாருக்கும் இழியும் துறையான திருவடிகளுக்கு
பிரகாசகமான திருச் சிலம்பு

ஆதி –
சப்தத்தாலே –புடையார் பொன் நூலினன் -மற்றும் பல்கலன் நடையா வுடைத் திரு நாரணன் -திருவாய் மொழி -3-7-4-என்கிறபடியே
அனுக்தமான திரு யஞ்ஞோபவிதம் கணையாழி மோதிரம் முதலானவற்றை சொல்லுகிறது

அபரிமித
எண்ணில் பல் கலன்களும்-திருவாய்மொழி -4-3-5-என்றும்
பல பலவே யாபரணம் -திருவாய்மொழி -2-5-6-என்றும்
சொல்லுகிறபடியே திரு வாபரணங்களுக்கு தொகை இல்லை என்கிறது –

திவ்ய பூஷண
ஸூ த்த சத்வாத்மகமாய்
திவ்ய அவயவங்களுக்கும் ஆபரணங்களுக்கும் உண்டான
சேர்த்தி அழகுக்கும் அடியான த்ரவ்ய லஷணம்

———————————————————————————–

ஸ்வ அநுரூப
அசிந்த்ய சக்தி சங்க சக்ர கதாசி சார்ங்க ஆதி
அசந்க்யேய நித்ய நிரவத்ய
நிரதிசய கல்யாண திவ்ய ஆயுத

ஸ்வ அனுரூபே–இத்யாதி
கீழ் சொன்ன ஆபரணங்க ளோடு விகல்ப்பிக்கலாம்படியான
திவ்ய ஆயுத வர்க்கத்தைச் சொல்லுகிறது –

(ஸோபா வஹம் -அழகு சேர்ப்பதில் -திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் -இரண்டுக்கும் ஸாம்யம் உண்டே
கண்கள் சிவந்து பெரியவாய் –இலகு விலகு மகர குண்டத்தன் –சுடர் முடியன் –ஒண் சங்கதை வாள் –அடியேன் உள்ளான் -சேர்த்தே அருளிச் செய்தார் அன்றோ -)

ஸ்வ அநுரூப
கீழ் சொன்ன பல வீர்யாதிகளை யுடைய தனக்கு அனுரூபமாய் இருக்கை –
அதவா
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் போது ஆயுதமாய்
ஆஸ்ரிதரை உகப்பிக்கும் போது ஆபரணமாய் இருக்கும் -என்றுமாம்

(பத்துடை அடியவர்களுக்கு எளியவனாயும் பிறருக்கு அரிய வித்தகனாயும் இருக்கும் கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று பிரார்த்திக்கிறார் ஆழ்வார்–அவன் திரு உள்ளபடியே திவ்ய ஆயுதங்கள் இருக்குமே)

அசிந்த்ய சக்தி
சர்வ சக்தியினுடைய சக்தியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்க
அரிதான சக்தியை யுடைத்தாய் இருக்கை –

(ஒரு ஆயுதமே எல்லாவற்றின் கார்யங்களையும் பண்ணுமே
ஏழு மராமரங்களையும்-ஏழு மலைகளையும் துளைத்து சரித்து மீண்டது ஒரு பாணமே)

(சங்க சக்ர கதா சார்ங்காதி-பத்மம் ஸ்ருஷ்டிக்கு பீஜம்-சக்கரம் ஸ்திதிக்கு-நிபந்தம் -கதா ஸம்ஹார பீஜம் து -சங்கமுடைமை முக்தி ப்ரதத்வம் காட்டும்-ஆகவே சங்கு முதலில் இங்கு அருளிச் செய்கிறார்)

சங்க சக்ர கதாசி சார்ங்க –இவை அஞ்சுக்கும் உப லஷணம்
அசி சப்த விதுரமாகவே கிடக்கிறது-(இல்லாமலே இருக்க வேண்டும் )
பத்யவத் கத்யத்துக்கும் ஒரு நியதி யுண்டாய் இருக்கும் இறே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

(பஞ்சாயுத ஸ்தோத்ரம்
வாயில் இருந்து வாயு கிளம்பி பூரிக்கப்பட்டு ஒலி -பாஞ்ச ஜன்யம் -கர்வம் அழிக்கும்
சக்கரம் -பாஸ்கர கோடி துல்யம் -விரோதிகளின் பிராணன் விநாஸம் அழிக்கும்
கதை -மேரு சமானம் -திண்மை அசுரர் குலங்களை அழிக்கும்
சார்ங்கம் -வித்யா -த்யா நாண் -தேவர்கள் பயம் விலகும்)

ஆதி
இவை முதலான

(மழு -பரசு- வேல் -நின் கையில் வேல் போற்றி -உகிர் -போல்வனவும் உண்டே)இவை தான் எண்ணிறந்து இருக்கும் இறே
ஆபரணங்களோபாதி திவ்ய ஆயுதங்களுக்கும் தொகை இல்லாமையாலே
பிரதானமான சில சொன்ன இத்தனை

நித்ய
உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை –

நிரவத்ய –
சிந்மயர் ஆகையாலே பிரதிகூல நிரசநாதிகளில் சக்தி பிரவ்ருத்திகள் ஸ்வார்த்தமாய் இராதே சேஷிக்கு உறுப்பாய் இருக்கை –

(கருதும் இடம் பொருது கை நின்ற சக்கரத்தன்அம்பரீஷனுக்கு சக்கரம் உதவின வ்ருத்தாந்தம் -ஆழி எழ சங்கும் வில்லும் எழ –தண்டும் வாளும் எழ –உலகம் கொண்ட வாறே-உகந்த உள்ளத்தனாய் அளக்க இவையும் எழுந்தது கர்தவ்யமே)

அதவா
நித்ய நிரவத்ய
நாள் செல்ல நாள் செல்ல மழுங்குகை அன்றிக்கே
மழுங்காத வைன் நுதிய -திருவாய் மொழி -3-1-9- என்கிறபடியே சத்ரு சரீரங்களில்
தைக்கத் தைக்கச் சாணையில் இட்டாப் போலே கூர்மை மிக்கு இருக்கை –

(மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-)

நிரதிசய கல்யாண
ஸ்வ சம்பந்தத்தாலே சர்வ மங்களங்களையும் அத் தலைக்கு உண்டாக்க வற்றாய் இருக்கை -அதாவது-
ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் வந்தால் ஈஸ்வர சங்கல்ப்பத்திலும் முற்பாடராய் இருக்கை –
அறமுயலாழி படையவன் கோயில் -திருவாய் மொழி -2-10-5–இறே

(திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-)

திவ்ய ஆயுத
அப்ராக்ருத விக்ரஹராய் இருக்கை –

——————————————————————————–

ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய
அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணேத் யாதி ஸ்ரீ வல்லப
ஏவம் பூத பூமி நீளா நாயக

ஸ்வ அபிமத —
கீழ் சொன்ன விக்ரஹாதி வைலஷண்யம் அடையக் காட்டில் எரித்த நிலா வாகாதபடி
போக்த்ரிகளான மஹிஷீ வர்க்கத்தை சொல்லுகிறது –
பிரதம சூரணையிலும் இக் குணங்கள் உக்தமாய் இருக்கத்
திரியட்டும் சொல்லுகிறது புனர் உக்தம் அன்றோ என்னில்-
இவர் தாம் பிறர்க்கு உபதேசிக்கிறார் அன்றியிலே
அனுபவிக்கிறராய்-
அத்தாலே வந்த ஆதர அதிசயம் சொல்லுவிக்கச் சொல்லுகிறார் ஆகையாலே புனர் உக்தி தோஷம் இல்லை –

அதவா
அங்கு சரண்யதைக்கு உறுப்பாக அருளிச் செய்தார்
இங்கு வால்லப்யத்துக்கு உறுப்பாக அருளிச் செய்கிறார் –
இங்கு உள்ள பதங்களுக்கு அர்த்தம் அதுவே –

ஸ்ரீ வல்லப
ஏவம் வித வை லஷண்யோபேதையான பிராட்டிக்கு நாயகனானவனே
பசியன் சோற்றின் மேலே விழுமா போலே அவன் தானும் மேல் விழும்படியாய் இருக்கை –
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்னக் கடவது இறே –

(கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத் தலமும் அடி யிணையும் கமல வண்ணம்,
பார் வண்ண மட மங்கை பித்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர் வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் இது வன்றோ நிறை யழிந்தார் நிற்கு மாறே?)

(பஹு ருதூன் ராமயா சீதயாசார்த்த –இங்கு ராமனுக்கு முக்யத்வம்-இவனுக்கே ஈடுபாடு அதிகம்)

இவ் வால்லப்யம் புருஷகார பாவத்துக்கும்
ப்ராப்யதைக்கும் உறுப்பாய் இருக்கும் இறே

ஏவம் பூத
ஏவம் வித வை லஷண்யோபேதைகளான

பூமி நீளா நாயக –
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் –என்னக் கடவது இறே –

(கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே. கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள் கூவுதல் வருதல்செய் யாயே. 9.2.10)

கீழ் -ஸ்ரீ வல்லப -என்றது
இங்கு –நாயக –என்கிறது
இவர்கள் பக்கல் முறையாலே பரிமாறுகையும்
அவள் பக்கல் முறை கெடப் பரிமாறுகையும்
இம் முறை கேடு தனக்கு இவர்கள் தானும் தங்களை எழுதிக் கொடுத்து இறே இருப்பது —

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மடமகள் என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்; ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்; ‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்; தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

————————————————————————————–

ஸவச் சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
பேத அசேஷ சேஷதைக ரதி ரூப
நித்ய நிரவத்ய
நிரதிசய ஜ்ஞான கரியை ஐஸ்வர்ய
அத்யந்த கல்யாண குண கண
சேஷ சேஷாசன-கருட பிரமுக -நாநாவித அநந்த பரிஜன பரிசாரிக -அபரிசரித சரண யுகள

ஸ்வ சந்த அனுவர்த்தி
இப்படிப் பிராட்டிமாரோட்டை சேர்த்தியே தங்களுக்கு ஸ்வரூப லாபமாய்
அவர்களோட்டை கலவிக்கு கைதொடுமானமாய்
இருக்கிற பரிஜனத்தைச் சொல்லுகிறது

(இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ)

ஸ்வ சந்த அனுவர்த்தி –
நித்ய ஸூரிகள் முகம் அறிந்து -முறை அறிந்து -பரிமாறுமவர்கள் ஆகையாலே
ஸ்வ சந்த அனுவர்த்திகளாய் இருப்பார்கள்
சம்சாரிகள் முறை அறியாதே பரிமாறு கையாலே
சங்கல்ப அனுவர்த்தி களாய் இருக்கும்

ஸ்வ சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதங்கள் ஆவது –
ஈஸ்வரன் யாவர் சிலரைக் கொண்டு யாதோர் அடிமை கொள்ள நினைத்து அருளுகிறான்
அவ் வடிமைக்கு அனுரூபமான ஸ்வரூபமும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியுமாய் இருக்கை –
பாவஜ்ஜேன க்ருதஜ்ஜேன தர்மஜ்ஜேன ஸ லஷ்மண
த்வயா புத்ரேன தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம – ஆரண்ய -15-28-என்னக் கடவது இறே

அசேஷ சேஷதைக ரதி ரூப
ஈஸ்வரன் அடிமை கொள்ளும் போது அவ்வோ அடிமைகளில் வ்யவஸ்திதராய் இருக்கும் அத்தனை போக்கி
அவ் வாதரத்தைப் பார்த்தால்
சர்வ சேஷ வ்ருத்தியிலும் உண்டான ஆதரத்தையே வடிவாக உடையராய் இருப்பர்கள் –

தாஸ்ய உபகரணங்களை சொல்லுகிறது மேல்
நித்ய
முக்தரைப் போலே ஒரு கால் இல்லாமல் ஒரு கால் உண்டாகை அன்றிக்கே
எப்போதும் உண்டாய் இருக்கை –

நிரவத்ய
ஜ்ஞாநாதிகள் ஸ்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்கை அன்றிக்கே
பவந்த மேவா நுசரன் நிரந்தரம்
பிரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்திர
கதாஸ் ஹமை காந்திக நித்ய கிங்கரர்
ப்ரஹர்ஷயிஷ்யாமி சநாத ஜீவித -ஸ்தோத்ர ரத்னம் -46–என்று கைங்கர்யத்துக்கு அனுகூலமாய் இருக்கை –
அஞராய் அக்ரியராய் இருக்கிலும் இருப்பர்கள் –

(பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோ ரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: ||ஶ்லோகம் 46 –

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?)

நிரதிசய ஜ்ஞான
அடிமைக்கு உறுப்பான அஸங்குசித ஞானம்

க்ரியா
ஜ்ஞான அனுரூபமான வியாபாரம்

ஐஸ்வர்ய –
அடிமைக்கு உறுப்பான -உபயத்துக்கும் சத்ருசமான -நியமனம்
சேனை முதலியார் பிரம்பும் கையுமாய் பிறரை நியமிக்கும் அதுவும்
அங்குற்றைக்கு உறுப்பாய் இருக்கும் இறே(வான் இளவரசு வைகுண்ட குட்டனாக அவன் இருக்கவே இவரது ஐஸ்வர்யம்- நியமனம்)

ஆதி -சப்தத்தாலே அனுக்தங்களான குண விசேஷங்களை நினைக்கிறது –

அநந்த
ஈஸ்வரனுடைய ரஷண விஷயமான குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே
கைங்கர்ய விஷயமான குணங்களுக்குத் தொகை இன்றிக்கே இருக்கை –

குண கண
திரள் திரளாக அறியும் இத்தனை போக்கித் தனித் தனியே காண அரிதாய் இருக்கை –

சேஷ
திரு வநந்த ஆழ்வான்

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஶ்லோகம் 439-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —)

சேஷாசன
சேனை முதலியார்(சேஷ அசனம் –சேஷத்தை உண்பவர் -இதுவே நிரூபகம்)

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.)

கருட
பெரிய திருவடி

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)

பிரமுக
இவர்கள் தொடக்கமான

நாநா வித
சண்டாதி த்வார பாலர்கள்
குமுதாதி கணாதிபர்கள்
முதலான விவித பேதங்கள்

அநந்த பரிஜன
குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே இவர்களுக்கும் தொகை இன்றிக்கே இருக்கை

பரி சாரிக அபரிசரித சரண யுகள –
ஏவம் வித ஜ்ஞாநாதிகளை உடைய விமலாதிகள் என்ன
தம் பஞ்ச சதான் யப்ஸரசாம் பிரதி தாவந்தி சதம் மாலா ஹஸ்தா
சதம் அஞ்ஞன ஹஸ்தா சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா
சதம் பண ஹஸ்தாஸ் தம் பர்மா லங்காரேணா லங்குர்வந்தி -என்கிறபடியே
மதி முக மடந்தையர் -திருவாய் மொழி -10-9-10-என்ன
ஸூத்ரவதி முதலான (ருத்ரா ஸூ கீர்த்தி -பெரிய திருவடியின் மஹிஷிகள்)இவர்கள் மகிஷிகள் என்ன
இவர்களால் அடிமை செய்யப் பட்ட ஏற்றத்தை உடைய
திருவடிகளை உடையவனே
இவர்கள் மகிஷிகள் தம் போகத்துக்கு உறுப்பாகை அன்றிக்கே
அங்குத்தைக்கு உறுப்பாய் இருப்பர் இறே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் மொழி -1-1-1- என்று இறே ஏற்றம்

—————————————————————————————

(உபய லிங்க விஸிஷ்டன் -அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக ஸ்தானம்
உபய விபூதி விஸிஷ்டன்-)

(பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ-தனி விளிச் சொல்லாகவும் ஸூதர்சன பட்டர் வியாக்யானம்-உடையவனே -என்று ஸ்ரீ வைகுண்டத்தைச் சொல்லாமல் அவனையே சொன்னவாறு என்கிறார்)

பரமேதி
ஸூரி போக்யமான கைங்கர்யத்தின் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று கீழ்
அந்தக் கைங்கர்யத்துக்கு வர்த்தகமான தேச விசேஷத்தை சொல்லுகிறது மேல்

பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ

முக்தாநாம் லஷணம் ஹயேதத் ய ஸ்வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந-என்கிற(ப்ரஹ்ம ஏக பாவனை யுடைய)
சனகாதிகள்  உடைய வாங் மனஸ் ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடைத்தாய் இருக்கை-
அதாவது –பஞ்ச உபநிஷன் மயம் -ஸூத்த சத்வ மயம் என்று திரள
நினைத்தால் சொல்லுதல் செய்யும் இத்தனை ஒழிய
ஏவம் ஸ்வரூபம் ஏவம் ஸ்வபாவம் என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லும் சொல்லப் பெற்றேன்)

(திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதி ஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காம வ்ருத்த: ||-ஶ்லோகம் 47 –

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.)

பஞ்ச உபனிஷன் மயமாய் இருக்கையாலே ஏக த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அநேக த்ரவ்ய உபசயாத்மகம் ஆகையாலே நித்ய த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அவஸ்தாந்தராபத்தி இல்லாமையாலே பரிணாம ஸ்வபாவம் என்ன ஒண்ணாது
பகவத் சங்கல்பத்தாலே சில உண்டாகச் சொல்லுகையாலே ஏக ரூபம் என்ன ஒண்ணாது
ஆகையால் அளவுடையாராய் இருக்கும் பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும் தேசம்-

ஸ்வ அபிமத விவித விசித்திர
அநந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
அநந்த ஆச்சர்ய
அநந்த மஹா விபவ
அநந்த பரிமாண
நித்ய நிரவத்ய
நிரதிசய வைகுண்ட நாத

ஸ்வ அபிமத –
அன்புற்று அமர்ந்து உறைகின்ற -திருவாய் மொழி -7-10-1-(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான்)என்கிறபடியே ஆதரித்து வர்த்திக்கிற படியால் -அபிமதமாய்

விவித -விசித்திர –
நாநா விதமாய்
அநந்த
முடிவு இன்றிக்கே இருப்பதான –

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
போக்யங்களான அப்ராக்ருதமான சப்தாதி விஷயங்கள் என்ன
போக உபகரணங்கள் ஆன-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-பரிஜன பரிச்சதாதிகள் என்ன
போக ஸ்தானங்கள் ஆன தேச விசேஷங்கள் என்ன
இவற்றாலே சம்ருத்தமாய் இருந்துள்ள

அநந்த ஆச்சர்ய –
அநந்த உத்யாந- நதீ -தடாகாதி லஷணமான விபவத்தை உடைத்தாய் இருக்கை –
அநந்த ஆச்சர்யம் ஆகையாவது
க்ருதகம் என்றாதல் -நவம் என்றாதல் -புராதனம் என்றாதல் சொல்ல ஒண்ணாதே
அக்ருத்ரிமமாய் பிரதி ஷணம் அபூர்வமாய் இருக்கை

அநந்த மஹா விபவ
மஹத்வம் ஆவது இவற்றுள் ஓர் ஒன்றே போக்தாக்களால் அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை

அநந்த பரிமாண –
ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கை(பக்கவாட்டிலும் உயரத்திலும் எல்லை இல்லாமல் கீழே விரஜை உண்டே)

நித்ய நிரவத்ய நிரதிசய வைகுண்ட நாத
(வை குண்ட -சொல்லே அழியாதது என்பதைக் காட்டுமே)நித்ய-சதைக ரூபமாய் –
நிரவத்ய-ஹேய ப்ரத்யநீகமாய்
நிரதிசய-சர்வ பிரகாரத்தாலும் அதிசயிதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு நாதன் ஆனவனே

(உத்தமமான அநுத்தமுமான -இத்தை விட உயர்ந்தது இல்லாமல் தேஸம் -ஸ்ருதி)

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த–பரம பதத்தில் போக்தாக்களை சொல்லாது ஒழிந்தது(போக்த்ரு  வர்க்க-லீலா விபூதியில் சொல்லப் போகிறார் இங்கு சொல்ல வில்லையே)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய் மொழி -4-9-10-என்கிறபடியே
இவர்கள் போகத்துக்கு கை தொடுமானமாம் ஆகாரம் ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலே(நீயுமே-ஏவகாரம் –போக்தாக்கள் வேறே சொல்ல வில்லையே-முக்தருக்கும் நித்யருக்கும் தனியான ஆனந்தம் பெற மாட்டார்கள் அன்றோ)

ஆனால் ஸ்ருதி
ஏதத் சாம காயன்னாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ-என்று –அந்நாதோ-என்று போக்தாக்களை-சொல்லிற்று இல்லையோ வென்னில்

தான் அங்குத்தைக்கு ஸ்ரக் சந்த நாதிகளோபாதி போக உபகரணமாய் இருக்கும் இருப்பு
புருஷார்த்தம் ஆகையாலே சொல்லிற்று இத்தனை –
அங்கன் அன்றாகில் அஹம் அன்னம் என்றத்தோடு விரோதிக்கும் இறே-

(நான் உணவு முதலில் சொல்லி -மாலை சந்தனம் போல் அவனுக்கு போக்யத்துக்குக் கருவி சொல்லி
முரண்படாமல் –
அவனது பவள வாய் -முறுவல் தான் நமக்கு அன்னம்
நான் உணவை உண்பவன் என்றது படியாய்க் கிடந்தது உன் பவள காய் காண்பாவனாக இருக்க வேண்டும் அன்றோ
தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே புருஷார்த்தம்)

————————————————————————————-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல
சத்ய காம
சத்ய சங்கல்ப
பர ப்ரஹ்ம பூத
புருஷோத்தம
மஹா விபூதே
ஸ்ரீ மன் நாராயண
ஸ்ரீ வைகுண்ட நாத
அபார காருண்யா
சௌசீல்ய
வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய
சௌந்த்ர்ய மஹோததே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய
அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
நிகில ஜகதாதார
அகில ஜகத் ஸ்வாமின்
அஸ்மத் ஸ்வாமின்
சத்ய காம சத்ய சங்கல்ப
சகல இதர விலஷண
அர்த்தி     கல்பக ஆபத் சக ஸ்ரீ மன் நாராயண
அசரண்ய சரண்ய
அநந்ய சரண
த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே
அத்ர த்வயம் –

ஸ்வ சங்கல்ப -இத்யாதி –
இப்படி அப்ராக்ருதமான நித்ய விபூதி யுக்தனுக்கு
ஆவது அழிவதாய் -லீலா ரச ஹேதுவான லீலா விபூதி யோகம் சொல்லுகிறது மேல்
ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி –
ஸ்வ சங்கல்பத்தைபின் செல்லா நின்று உள்ள ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடைத்தாய் –

பிரகிருதி யாவது –
சத்வாதி குணத்ராயாத் மகமாய் -(ஆத்மாவுக்கு இவை வந்தேறி -உடலுடன் சேர்க்கையாலேயே இவை ஆத்மாவை பாதிக்கும்)அநந்த மாய்-(சூழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெரும் பாழ்)விசித்ரமான அவஸ்தா விசேஷ ரூப பரிணாமத்துக்கு சமர்த்தமாய் இருந்துள்ள பிரதானம் -(ப்ரக்ருதி ப்ரதானம் பர்யாயம்)

பிரக்ருதிக்கு ஸ்வரூபம் ஆவது –
சத்வாதி குணகமான ஜடத்வம் -(ஆத்மா அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம்)

ஸ்திதி யாவது -சேதனருக்கு போக மோஷ சாதன அனுஷ்டானத்துக்கும் -பல அனுபவத்துக்கும் -உபகரணமாய் இருக்கை -(மோக்ஷ அநு பவிக்க ப்ரக்ருதி தேவை இல்லையே -அப்ராக்ருதம் அன்றோ)

பிரவ்ருத்தி யாவது -ததர்த்தமாக -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண பரிணமிக்கை –

புருஷ-சம்சாரி சேதனனுக்கு ஸ்வரூபம் ஆவது -அசித் விசிஷ்ட ஆகாரத்வம்

ஸ்திதி யாவது -அந்நாதிகளால் தரிக்கை-

பிரவ்ருத்தி யாவது -புண்ய பாப ரூப கர்ம அனுஷ்டானம் என்ன-
தத் பல அனுபவம் என்ன -இவை

காலத்துக்கு ஸ்வரூபம் ஆவது -அசித்வம்

ஸ்திதி யாவது -சேதன அசேதனங்கள் உடைய பரிமாணங்களுக்கு நிர்வாஹகமாய் இருக்கை –

பிரவ்ருத்தி யாவது -நிமேஷ கலா காஷ்டாதி ரூபத்தாலே
உத்பத்தி விநாசாதிகளை ப்ரவர்த்திப்பிக்கை –

ஸ்வ சேஷதைக ஸ்வபாவ –
தனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை –

பிரகிருதி புருஷ காலாத்மக –
இப்படிப் பட்ட பிரகிருதி -புருஷ -கால -ரூபமாய்

விவித –
அத ஏவ விவிதமாய்

விசித்ர –
விசித்ரமாய்

அநந்த-
அனந்தமாய்

போக்ய –
போக்யம் என்ன –

போக்த்ரு வர்க்க-
போக்த்ரு வர்க்கம் என்ன(கீழே நித்ய விபூதியில் போக்த்ரு வர்க்கம் இல்லையே)

போக உபகரண-
போக உபகரணங்கள் என்ன

போக ஸ்தான –
போக போக்யங்களான ஸ்தான விசேஷங்கள் என்ன –

ரூப
இவற்றை வடிவாக உடைய

நிகில ஜகத் உதய விபவ லய லீல-
சகல லோகங்களின் உடைய உத்பத்தி ஸ்திதி சம்ஹாரங்களை லீலையாக உடையவனே

விசித்ரம் ஆகையாவது -நாநாவிதமாய் இருக்கை –

அநந்தம் ஆகையாவது -தொகை இன்றிக்கே  இருக்கை

போக்த்ரு வர்க்கம் ஆவது –தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியாலே ஸ்வ தந்த்ரராய்
சப்தாதி விஷயங்களுக்கு போக்தாக்கள் ஆகை-
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதிகள் உண்டாகிறது ஈஸ்வரனுக்கு உபகரண தயா வல்லது ஸ்வ தந்திர தயா வல்ல –
ஆனால் துக்க ரூபமாய் இராதோ -என்னில்
அவர்களுக்கு தபஸ் பலமாய் வந்தது ஆகையாலே (யுக கோடி ஸஹஸ்ராணி பத்ம பூ இத்யாதி -உண்டே)சுக ரூபமாய் இருக்கும்
நித்ய விபூதி யோகத்தால் வந்த பூர்த்தியை உடையனாகையாலே ஈஸ்வரனுக்கு இது லீலையாய் இருக்கும்(நாட்டைப்படை –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)

ஆக -நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று ஆயிற்று-

சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கலாவது
உபேய ருசியும் -உபாய அத்யவசாயமும் உண்டானால் ஆகையாலே
அதினுடைய சித்தி அர்த்தமாக முதல் சூரணை யிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கார் –

இரண்டாம் சூரணை யிலே -பிராட்டி பிரசாதத்தாலே அத்தை பிராப்தரானார்

அநந்தரம் ஆஸ்ரயணீயராவார் ஆர் என்னும் அபேஷையிலே
காரணம் து த்யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹ்ணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்னும் இத்யாதியாலே
சகல ஜகத் காரண பூதனான நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டும் ஆகையாலே
அகில ஹேய -என்கிற சூரணை யிலே நார சப்த வாச்யங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லி

அநந்தரம் -அவ் விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லி

அநந்தரம் -ஏவம் விதமானவற்றுக்குக் காவலான திவ்ய ஆயுத வர்க்கங்களைச் சொல்லி

அநந்தரம் -இப் போக்யதை காட்டில் எரித்த நிலா வாகாதபடி தலை நீர்ப் பாட்டிலே இருந்து அனுபவிக்கும் மஹிஷிகளைச் சொல்லி

அநந்தரம் -இச் சேர்த்தி அழகைக் கண்டு அனுபவித்து- தோற்று- எழுதிக் கொடுத்து-
எடுத்துக் கை நீட்டிப் பரிமாறும் திவ்ய பரிஜனங்களைச் சொல்லி

அநந்தரம் -கைங்கர்யத்துக்கு ஏகாந்தமாய் -தத் வர்த்தகமுமான நித்ய விபூதியைச் சொல்லி

அநந்தரம் -ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு விஷயமான லீலா விபூதியைச் சொல்லி
இப்படி அவனுடைய உபய விபூதி நாதத்வத்தைப் பேசி அருளினார் –

இனி ஆஸ்ரயிக்கை இறே உள்ளது-

அவ் வாஸ்ரயணத்துக்கு உபயோகியான குணங்களைச் சொல்லுகிறது மேல்அபார காருண்ய –இத்யாதியாலே
நடுவே எட்டு குணங்களைச் சொல்லா நின்றதே -இவற்றால் சொல்லுகிறது என் என்னில்
மேல் பண்ணப் புகுகிற ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
கீழ் சொன்னவற்றை அனுபாஷிக்கிறதுமாய் இருக்கிறது –

கீழ் ஆஸ்ரயணீயனைச் சொல்லிற்று ஆகில் அநந்தரம் ஆஸ்ரயிக்க அமையாதோ என்னில் -அமையாது –
ஆசார்ய உபதேச பூர்வகமாய் இறே ஆஸ்ரயணீயம் இருப்பது
அவ்விடத்தில் ஆசார்ய உபதேச முகத்தாலே அவனே பிராப்ய பிராபகங்கள்  என்று அத்யவசித்து
அநந்தரம் ஆஸ்ரயிக்க வேண்டும்
அல்லாத போது அவனுடைய ரஷகத்வத்திலே ஆதல்
உபாயத்வத்திலே ஆதல் அதிசங்கை நடக்குமாகில் ஆஸ்ரயித்தவனாக மாட்டான்
ஆகையால் –
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததே கோபாயதா யாச்ஞா பிரபத்தி சரணா கதி -என்னும்
நியாயத்தாலே கீழ்ச் சொன்ன நாராயணத்வத்தை அனுபாஷித்துக் கொண்டு
அவனே உபாய உபேயங்கள் என்று -அத்யவசிக்கிறார்

இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே தாம் பெற்ற அர்த்தத்தை அனுசந்திக்கிரார் –

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –

மஹா விபூதே ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிற இவை நித்ய விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிறது ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை கொள்ளும் தேசத்தைச் சொல்லுகிறது

ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை செய்கை போலே காணும் சேஷ பூதனுக்கு க்ருத்தியம்-இத்தால் அடிமை கொள்ளும் படி ஆஸ்ரயிக்கையே ஆஸ்ரயணம் என்றது ஆயத்து –

1-சத்ய காம
காம்ய ஸ்ப்ருஹா ஸ்மர காம -என்று நிகண்டு –
காம சப்தம் ஸ்மரனையும்(மன்மதனையும்)-இச்சிக்கப் படுமத்தையும் -இச்சையையும் சொல்லுகிறது
கீழே சத்ய காம -என்கிறது ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமாய்
அவ் வழியாலே தனக்கும் காம விஷயமான விபூதியைச் சொல்லுகிறது –
இங்கு சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை
ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் -என்கிறது –
கீழ் காமிக்கப் படுமவற்றைச் சொல்லிற்று
இங்கு காமத்தைச் சொல்லுகிறது –

சத்ய சப்தம் நித்ய வாசி
சிருஷ்டிக்கு விஷயமான புருஷ சமஷ்டி
ஸ்ருடரான சேதனர்க்கு போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபியான பிரகிருதி
இவற்றைக் கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கைக்குக் காலம்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கு தப பலமாகையாலே போக ரூபமாய் இருக்கும்
ஈஸ்வரனுக்கு லீலையாய் இருக்கும் ஐச்சிகம் ஆகையாலே

லீலை என்கிறது சேதனனுக்கு பந்தகமுமாய் நாச ஹேதுவுமாய் ஈஸ்வரனை மறைத்து அநர்த்த அவஹமாய் இருக்க
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் ஆவான் என் என்னில்
சுகோ முக்தோ வாமதேவோ விமுக்த -என்கிறபடியே ஓன்று இரண்டு வ்யக்தியிலே பலிக்கக் காண்கிறது இறே
அந் நசை யாயிற்று இவனுக்கு ஸ்ப்ருஹையை விளைக்கிறது –
ஆகை இறே அழித்து அழித்து சிருஷ்டிப்பது ஸ்திதிப்பிப்பது-அதி ப்ரவ்ருதமான வாறே சம்ஹரிப்பது
பின்னையும் இது தன்னையே செய்வதாக நிற்கிறது –
என் போலே வென்னில்
ஒரு ஷேத்ரம் நெடும் காலம் இட்டிறையாய் போகா நின்றாலும் ஒருகால் பலிக்கக் காண்கையாலே
அழித்து அழித்து பயிர் செய்யும் கர்ஷகனைப் போலே

2-சத்ய சங்கல்ப -கீழேயும் –சத்ய சங்கல்ப -என்றது
ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமான அபூர்வ போகங்களை தன நினைவாலே சிருஷ்டிக்க வல்லவன் என்கைக்காக
இங்கு சத்ய -சப்தம் அமோக வாசி –
இங்கு சத்ய சங்கல்ப -என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கும் என்கைக்காக
அதாவது இவற்றை அமோகமாக தன் நினைவிலே சிருஷ்டிக்க வல்லனாகை

ப்ரஹ்மாவினுடைய சங்கல்பமும் மோகமாய் இருக்கும் -எங்கனே என்னில்
சனகாதிகளை தன் நினைவாலே ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பாக சிருஷ்டித்தான்
அவர்களோ என்றால் -முமுஷூக்களான எங்களுக்கு இச் செயல் ஆகாது -உனக்கேயாம் இத்தனை -என்று இகழ்ந்து போனார்கள்

தான் சிருஷ்டித்த அசுரர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து தான் ஈஸ்வரன் காலிலே விழுந்து
வேதா மே பரமம் சஷூ -வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம -வேதா மே பரமம் சோத்தமம் –என்று கூப்பிட்டான் –

மேலே அவனுடைய திருவடிகளிலே சரணம் புகுகைக்கு உறுப்பாக
சிருஷ்டி முதலாக புருஷார்த்தத்துக்கு எல்லையான கைங்கர்ய பர்யந்தமான
நடுவுள்ளவை யடங்க அவனிட்ட வழக்கு என்று அருளிச் செய்கிறார் –எட்டு ஸ்வ பாவத்தாலே
1-சத்ய காம –
சேதனர் உடைய சரீர சம்பந்தத்துக்கு அடியான சிருஷ்டிக்கு உபகரணமான நித்ய பதார்த்தங்களை உடையவன் -என்கிறது

2-சத்ய சங்கல்ப
சிருஷ்டி அர்த்தமாக சங்கல்ப்பிக்கும் சங்கல்பம் அமோகமாய் இருக்கும் -என்கிறது

குண சூரணையிலே இவ் விரண்டு குணங்களும் உக்தமாய் இருக்க இங்கும் சொன்னால் புநர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு குண சத்பாவத்துக்கு உறுப்பாகச் சொல்லிற்று
இங்கு சிருஷ்டி யர்த்தமாகச் சொல்லுகிறது ஆகையாலே தோஷம் இல்லை –

3-பர ப்ரஹ்ம பூத –
ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

4-புருஷோத்தம –
புருஷாணாமுத்தம –
புருஷாணாம் என்கிற பஹூ வசனத்தாலே த்ரிவித சேதனரையும் வயாவர்த்திக்கிறது-

புருஷ-உத்புருஷ -உத்தர புருஷ -உத்தம புருஷ
புருஷர் ஆகிறார் -அசித் வ்யாவ்ருத்தரான பத்த சேதனர்
உத் புருஷர் ஆகிறார் -பத்தரில் வ்யாவ்ருத்தரான முக்தர்
உத்தர புருஷர் ஆகிறார் முக்தரில் வ்யாவ்ருத்தரான நித்யர்
உத்தம புருஷன் ஆகிறான் -ஸூரிகளிலும்  வ்யாவ்ருத்தனான ஈஸ்வரன்

பத்தர் ஹேய ஆகாரராய் இருப்பர்
முக்தர் ஹேயத்தின் நின்றும் ஒரு நாள் குளித்து ஏறினவராய் இருப்பர்
நித்யர் ஹேய ரஹிதராய் இருப்பது ஒழிய ஹேய பிரதி படர் அல்லர்
ஈஸ்வரன் ஹேய ப்ரதிபடனாய் இருப்பன்

ஈஸ்வரன் த்ரிவித சேதன அசேதனங்களிலும் அந்தராத்மதயா நிற்கச் செய்தே
அவற்றின் உடைய ஹேய கந்தம் தட்டாதவனாய்
ஆஸ்ரிதர் ஹேயத்தை போக்க வல்லனுமாயும் இருக்கும்

இத்தால் ஸ்ருஷ்டமான ஜகத்தின் உடைய வ்யாபன பரண ஸ்வாம்யத்தால் உண்டான வைலஷ்ண்யம் சொல்லுகிறது –
இத்தால் உஜ்ஜ்வலனாகா நிற்கும் என்றது ஆயத்து

(அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –)

அங்கன் அன்றிக்கே
ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு அபேஷித புருஷார்த்தங்களை கொடுக்குமவன் ஆகையாலே புருஷோத்தமன் -என்னவுமாம் –
புரு -பஹூ
சநோதி -ததாதி -என்று இறே இதுக்கு வ்யுத்பத்தி

மஹா விபூதே –
கீழேயும் விபூதியைச் சொல்லிற்று
மேலும் விபூதியை சொல்லப் புகா நின்றது
இப்படி சொல்லுகை புநர் உக்தம் அன்றோ -என்னில்
விபூதி மான் -என்கைக்காக விபூதி யோகம் சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனருக்கு அவ் விபூதியைக் கொடுக்கும் என்று விபூத் ஔதார்யம் சொல்லுகிறது இங்கு
மேல் அடிமைக்கு ஏகாந்தமான தேசம் என்று விபூதி விநியோகம் சொல்லுகிறது
ஆகையால் தோஷம் இல்லை

ஸ்ரீ மன் –
கொடுத்த தேசத்தில் போக்ய விஷயத்தை சொல்லுகிறது –
அங்கு இருவருமாய் இறே அடிமை கொள்ளுவது
வைகுண்டே  து பர் லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவத்தைஸ் சஹ -சிவ புராணம் -எண்ணக் கடவது இறே –

நாராயண –
அநந்த மங்கள குணங்களோடு குறைவற விருந்து அடிமை கொள்ளும்வன் என்கிறது –

ஆக ஸ்ரீ மன் நாராயண -என்கையாலே ஒரு மிதுனமே பிராப்யம் –என்கிறது –

ஸ்ரீ வைகுண்ட நாத –
அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்தமான பரம பதத்திலே நாதனாய் இருந்து அடிமை கொள்ளும் -என்கிறது

இவற்றில் கீழ் நாலு குணங்களும் சிருஷ்டிக்கு உறுப்பாய் இருக்கும்
மேல் நாலு குணங்களும் பிராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்
காரணமுமாய் பிராப்யமுமான வஸ்து இறே பிராபகம் –

அநந்தரம் ஆஸ்ரயணீயத்வத்தில் ப்ரக்ருஷ்ட உபகாரகங்களான குணங்களைச் சொல்லுகிறது -(16 குணங்களை இங்கு அருளிச் செய்கிறார் -அபார விசேஷணம் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்)
அபார காருண்யா இத்யாதி –
1-காருண்யம் ஆகிறது கிருபை அதாகிறது -பர துக்க அசஹிஷ்ணுத்வம்

இது அபாரமாகை யாகிறது
ஆனயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம்ஸ் யாபயம் மயா
விபீஷணோ வா சூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் 18-34-என்று அவன் அளவும் செல்லுகை –
அங்கன் அன்றியே
என்னளவும் வர வெள்ளம் கோக்கும் குணம் என்னவுமாம்

2-சௌசீல்ய –
உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு வந்து கலவா நின்றால்
இவன் நம்முடையான் என்று புரையற கலக்கலாம்படி இருக்கை –

இதுக்கு அபாரத்வம் ஆவது
தேவ மனுஷ்யாத் அவதாரங்கள் போல் அன்றிக்கே மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களிலும் இவை நம்முடையது என்று இருக்கையும்
தானும் அவற்றிலே ஒன்றாய் இருக்கையும்
இவற்றிலே நாம் ஓன்று என்று நினைத்து இருக்கையும் –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்யமிதோ அந்யதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்தம் -120-11-

3-வாத்சல்ய –
வாத்சல்யம் ஆவது -ப்ரேமத்தாலே ஆஸ்ரித கதமான தோஷமும் குணமாகத் தோற்றுகை
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர் அளவு அன்றிக்கே
சகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாமபி வத்சலா
அப்ய நுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதா கதம் -யுத்தம் -50-56-என்று
சத்ருக்கள் பக்கலிலும் அப்படி இருக்கை

ஆனால் பையல் தலையை அறுத்து விடுவான் என் என்னில்
அவர்கள் பக்கலிலும் அவன் படியில் குறை இல்லை
அதுவும் ஜீவியாதபடி அவர்கள் சூழ்த்துக் கொண்ட வித்தனை

அங்கன் அன்றியே
தலை அறுக்கை தானும் வாத்சல்யம் ஆகவுமாம்
எங்கனே என்னில் விளையாடக் கொடுத்த கோலைக் கொண்டு பிரஜை கண்ணை கலக்கிக் கொள்ளப் புக்கால்
கையில் கோலை வாங்கி இட்டு வைக்கும் தாயை போலே –

4-ஔதார்ய
ஔதார்யம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு ஸ்வரூப அனுரூபமான
அபேஷிதங்களை தன் பேறாக கொடுக்கை

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலனாக எப்போதும் நெஞ்சாறல் பட்டுக் கொண்டு இருக்கை –
ருணம் ப்ரவ்ருத்தம் இவ –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –பெரிய திருவந்தாதி -53

5-ஐஸ்வர்ய –
ஐஸ்வர்யம் ஆவது அர்த்திகள் அர்த்தித்தவை எல்லாம்
கொடுக்கும்படியான அடிவுடைமை

இதுக்கு அபாரத்வம் ஆவது
அவ் வடிவுடைமை தான் இவ்வளவு என்று இருக்கை அன்றிக்கே
கொடுக்க மேல் மேல் என வளர்ந்து கொடு செல்லுகை

(கொள்ளக் குறைவிலன் கோதில் மணி வண்ணன் 

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்)

6-சௌந்த்ர்ய மஹோததே 
சௌந்தர்யம் ஆவது அழகு

இதுக்கு அபாரத்வம் ஆவது
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சரகிலை தின்னிகளான ரிஷிகளையும் கூட மடல் எடுக்கப் பண்ண வற்றாய் இருக்கை –
அனுகூலரை யன்றிக்கே ப்ரதிகூலையான சூர்பணகி பொல்வாரையும் மடல் எடுக்கப் பண்ணுகை-என்றுமாம் –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்கள் பாராதே
இருந்ததே குடியாக சரண வரண அர்ஹனானவனே(ஸமோஹம் ஸர்வ பூதேஷூ)

8-பிரணத ஆர்த்தி ஹர –
இப்படி அத்யவசித்த ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவனே

9-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
கீழ் சொன்ன குணங்கள் எல்லாம் ஒரு தலை யானாலும்
அவற்றை எல்லாம் கீழ்ப் படுத்தும் படியான நிரவதிக வாத்சல்யத்தை உடையவனே
நிகரில் புகழாய் -திருவாய் மொழி -6-10-10-என்கிறபடியே

ஆக
கீழ் ஆஸ்ரயண அர்ஹதை சொல்லி –ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவன் என்று சொல்லி–
அதுக்கடியான வாத்சல்யம் சொல்லிற்று

10-அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய –
சத்தா யோகி சகல பதார்த்தங்களின் உடைய உண்மையை எப்போதும் ஒக்க அறியுமவனே
இத்தால் –அனுத்தமமான பாத்ரம் -ஸ்தோத்ர ரத்னம் -24-என்று நான் என் படி சொல்ல வேண்டா விறே -என்கிறார்

(நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந் நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||ஶ்லோகம் 24 –

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.)

11-அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
நல்லது இல்லை என்றால் -தீயவை இல்லாமல் இருந்தாயோ என்று கேட்ப்பாயாகில்
அனைவரையும் இயக்கும் சக்தி உன்னுடையது அன்றோ
ஜங்கம ஸ்தவாராத்மகமான ஸமஸ்த பதார்த்தங்களையும் சர்வ காலத்திலும் நியமிக்கிறாய் நீயே அன்றோ
ஸர்வ நியந்தாவாய் வன்றோ நீ உள்ளாய்
இத்தால் உனக்கு அவிதேயமாய் ஓன்று இருக்கும் அன்று தானே எனக்கு இழக்க வேண்டியது
பத்தனான ஆத்மாவோடு பந்தகமான பிரக்ருதியோடு வாசி யற நீ இட்ட வழக்கு அன்றோ


12-அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத –
சகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே
இத்தால் என் கார்யம் உன் பேறாக செய்ய வேண்டும் சம்பந்தம் உடையவன் அல்லையோ என்கை

13-நிகில ஜகத் ஆதார –
பகவத் பாகவத விஷயங்களில் அபராதம் பண்ணிப் போரும் ஜகத்துக்கும் ஆதார பூதனே
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்கிறார் –

14-அகில ஜகத் ஸ்வாமின் –
அபராதத்தை தவிர்ப்பித்து ஆபி முக்யத்தைஉண்டாக்கி
தேவர் திருவடிகளிலே புகுர நிறுத்துகைக்கு வேறு நிர்வாஹகர் உண்டோ

அத ஏவ
15-அஸ்மத் ஸ்வாமின்
கீழும் சேஷித்வம் சொல்லிற்று -அங்கு சம்பந்த பரம்
இங்கு சம்பந்த அனுகுண நியமன பரம்
இத்தால் என்னை இவ் வளவாக புகுர நிறுத்தினவன் நீ  அல்லையோ -என்கிறார்

16-சத்ய காம –
கீழ் குண சூரணை யிலே ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான வழியாலே தனக்கும் இனிதான குண விபூதியைச் சொல்லிற்று –

நடுவு –சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் என்கைக்காக

இங்கு சத்ய காம -என்கிறது ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டாதபடி
அவாப்த சமஸ்த காமதயா வந்த பூர்த்தியை உடையவன் -என்கைக்காக
இத்தால் –அகிஞ்சனோ அநந்ய கதி -ஸ்தோத்ர ரத்னம் -என்று
அகிஞ்சனான என் கார்யம் பூர்ணனான உனக்கு பரம் அன்றோ -என்கிறார்-

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||ஶ்லோகம் 22 –

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.)

(அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா)

17-சத்ய சங்கல்ப –
கீழ் குண சூரணை யிலே சத்ய சங்கல்ப -என்றது
அபூர்வமான போக்யங்களை அமோகமாக சிருஷ்டிக்க ஷமண் என்கைக்காக –

நடுவே சத்ய சங்கல்ப என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதம் –என்கைக்காக

இங்கு சொன்னது அகடிதங்களையும் சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்தும் ஷமண் –என்கைக்காக

இத்தால் -நித்ய சம்சாரியான என்னையும் நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க நினைத்தால்
செய்து முடிக்க வல்லன் அல்லையோ நீ –என்கிறார்

18- சகல இதர விலஷண-
சேதனர் உடைய ஜீவனம் சொல்லுகிறது

ஸ்வரூபதோ குண தச்ச விலஷண-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப குணங்களை உடையவனே
இவை தன்னை யாருக்காக படைத்தது -ஸ்வார்த்தம் ஆகவோ -என்கிறார்
ஒரு விபூதியாக அனுபவிப்பாரும் அனுபவிப்பிப்பாரும் ஆய்ச் செல்லா நிற்க ஸ்வார்த்தமாகவோ-என்கிறார் இறே
இவரை ஒழிய எல்லாரையும் அனுபவிப்பித்தாலும் குறையாய் இருக்கும் இறே –
இவரை அனுபவிப்பித்தால் ஆய்த்து அவனுடைய ரஷகத்வம் பூர்ணம் ஆவது
பூர்ண அனுபவம் பண்ணுவார்க்கு ஓன்று குறைந்தாலும் நெடும் பாழாய்த் தோற்றும் இறே(ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே)
ஆகையால் இவரோடும் கூட அனுபவித்தால் ஆய்த்து அவர்கள் அனுபவம் பூர்ணம் ஆவது
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்

(நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?)

அர்த்தி கல்பக
தன் தலையாலே இரந்து கொடுக்குமவனுக்கு இரந்தார்க்கு கொடாது ஒழிகை போருமோ -குறை யன்றோ –
அர்த்திப்பார்க்கு கடக்க நின்று தன்னை ஒழிந்த சிலவற்றை கொடுத்து விடும் பூண்டு போலேயோ -இங்கு கற்பக மரம் –
அர்த்திகளையும் உண்டாக்கி தானே இரந்து சகல பல பிரதனான உன்னையும் தருகிற நீ
என்னை யாக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திரு வாய் மொழி -2-7-11-என்னக் கடவது இறே –
அது போலே நாரும் நரம்புமாயிருக்கை –

அன்றிக்கே –
அபார சௌந்த்ர்ய மகோததே-என்னும்படியாய் இறே இருப்பது
இரந்து கொடுக்கும் அத்தனை ஒழிய இரந்தார்க்கு கொடுக்கலாது ஓன்று உண்டோ

ஆபத் சக –
ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
அதாவது துணையாய் இருக்கை
சர்வ ரஷகன் ஆனவனே அறச் செய்ய வேண்டும்படியான ஆபத்திலும் தானே துணையாய் இருக்கை

மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவை யடைக்கும் தசையிலும்
ரகுவர யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
ப்ரதிபவம் அபராத்துர் முக்த சாயுஜ்யதோச்பூ வாத கிமபத மாகஸ் தஸ்ய தேச்ஸ்தி ஷமாயா –ஸ்தோத்ர ரத்னம் –
தமேவ சரணம் கத -என்றும் தேவரே துணையாய் இருக்கை –

(ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ் தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||ஶ்லோகம் 63 –

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்ட வில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவி தோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசு பாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கி யருள வேண்டும்.)

ஸ்ரீ மன் –
இப்படி இருக்கிற உன்னையும் அச்சிர்த்துப் (புறக்கணித்து -கீழ் உள்ள எதுவுமே இல்லா விட்டாலும் )புருஷகார பூதையான பிராட்டியைப் பார்த்து ரஷிக்க வேணும் –

நாராயண
இவள் புருஷகாரம் ஆவதற்கு முன்னமே ஸ்ருஷ்ட் யார்த்த அநு பிரவேசத்தாலே சத்தையை நோக்கினவன் அல்லையோ -(தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ரவேஸஸ்ய)
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்றபடி

அசரண்ய சரண்ய –
கிம் புனர் அசரண்ய சரண்யத்வம்-
அதாகிறது –
இப்படி இருக்கிற தேவர்க்கும் புறம்பாய் -பின்னையும் தேவரை ஒழிய புறம்பு புகல்
அற்றார்க்கு சரண்யன் ஆனவனே -என்கிறார்
இப்படி இருப்பார் உண்டோ என்னில்

அநந்ய சரண அஹம்-
ததா விதோ அஹம்
அந்த அசரண்யன் ஆனவனே நான் என்கிறார்
பற்றிலார் பற்ற நின்றானே-

த்வத் பாத அரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே-
இப்படி இருக்கிற நான்
நிரதிசய போக்யமான தேவர் திருவடிகளையே
உபாயமாக அ

————————————————————————————–

ஸவச் சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
பேத அசேஷ சேஷதைக ரதி ரூப
நித்ய நிரவத்ய
நிரதிசய ஜ்ஞான கரியை ஐஸ்வர்ய
அத்யந்த கல்யாண குண கண
சேஷ சேஷாசன-கருட பிரமுக -நாநாவித அநந்த பரிஜன பரிசாரிக -அபரிசரித சரண யுகள

ஸ்வ சந்த அனுவர்த்தி
இப்படிப் பிராட்டிமாரோட்டை சேர்த்தியே தங்களுக்கு ஸ்வரூப லாபமாய்
அவர்களோட்டை கலவிக்கு கைதொடுமானமாய்
இருக்கிற பரிஜனத்தைச் சொல்லுகிறது

(இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ)

ஸ்வ சந்த அனுவர்த்தி –
நித்ய ஸூரிகள் முகம் அறிந்து -முறை அறிந்து -பரிமாறுமவர்கள் ஆகையாலே
ஸ்வ சந்த அனுவர்த்திகளாய் இருப்பார்கள்
சம்சாரிகள் முறை அறியாதே பரிமாறு கையாலே
சங்கல்ப அனுவர்த்தி களாய் இருக்கும்

ஸ்வ சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதங்கள் ஆவது –
ஈஸ்வரன் யாவர் சிலரைக் கொண்டு யாதோர் அடிமை கொள்ள நினைத்து அருளுகிறான்
அவ் வடிமைக்கு அனுரூபமான ஸ்வரூபமும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியுமாய் இருக்கை –
பாவஜ்ஜேன க்ருதஜ்ஜேன தர்மஜ்ஜேன ஸ லஷ்மண
த்வயா புத்ரேன தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம – ஆரண்ய -15-28-என்னக் கடவது இறே

அசேஷ சேஷதைக ரதி ரூப
ஈஸ்வரன் அடிமை கொள்ளும் போது அவ்வோ அடிமைகளில் வ்யவஸ்திதராய் இருக்கும் அத்தனை போக்கி
அவ் வாதரத்தைப் பார்த்தால்
சர்வ சேஷ வ்ருத்தியிலும் உண்டான ஆதரத்தையே வடிவாக உடையராய் இருப்பர்கள் –

தாஸ்ய உபகரணங்களை சொல்லுகிறது மேல்
நித்ய
முக்தரைப் போலே ஒரு கால் இல்லாமல் ஒரு கால் உண்டாகை அன்றிக்கே
எப்போதும் உண்டாய் இருக்கை –

நிரவத்ய
ஜ்ஞாநாதிகள் ஸ்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்கை அன்றிக்கே
பவந்த மேவா நுசரன் நிரந்தரம்
பிரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்திர
கதாஸ் ஹமை காந்திக நித்ய கிங்கரர்
ப்ரஹர்ஷயிஷ்யாமி சநாத ஜீவித -ஸ்தோத்ர ரத்னம் -46–என்று கைங்கர்யத்துக்கு அனுகூலமாய் இருக்கை –
அஞராய் அக்ரியராய் இருக்கிலும் இருப்பர்கள் –

(பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோ ரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: ||ஶ்லோகம் 46 –

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?)

நிரதிசய ஜ்ஞான
அடிமைக்கு உறுப்பான அஸங்குசித ஞானம்

க்ரியா
ஜ்ஞான அனுரூபமான வியாபாரம்

ஐஸ்வர்ய –
அடிமைக்கு உறுப்பான -உபயத்துக்கும் சத்ருசமான -நியமனம்
சேனை முதலியார் பிரம்பும் கையுமாய் பிறரை நியமிக்கும் அதுவும்
அங்குற்றைக்கு உறுப்பாய் இருக்கும் இறே(வான் இளவரசு வைகுண்ட குட்டனாக அவன் இருக்கவே இவரது ஐஸ்வர்யம்- நியமனம்)

ஆதி -சப்தத்தாலே அனுக்தங்களான குண விசேஷங்களை நினைக்கிறது –

அநந்த
ஈஸ்வரனுடைய ரஷண விஷயமான குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே
கைங்கர்ய விஷயமான குணங்களுக்குத் தொகை இன்றிக்கே இருக்கை –

குண கண
திரள் திரளாக அறியும் இத்தனை போக்கித் தனித் தனியே காண அரிதாய் இருக்கை –

சேஷ
திரு வநந்த ஆழ்வான்

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||–ஶ்லோகம் 439-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —)

சேஷாசன
சேனை முதலியார்(சேஷ அசனம் –சேஷத்தை உண்பவர் -இதுவே நிரூபகம்)

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.)

கருட
பெரிய திருவடி

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)

பிரமுக
இவர்கள் தொடக்கமான

நாநா வித
சண்டாதி த்வார பாலர்கள்
குமுதாதி கணாதிபர்கள்
முதலான விவித பேதங்கள்

அநந்த பரிஜன
குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே இவர்களுக்கும் தொகை இன்றிக்கே இருக்கை

பரி சாரிக அபரிசரித சரண யுகள –
ஏவம் வித ஜ்ஞாநாதிகளை உடைய விமலாதிகள் என்ன
தம் பஞ்ச சதான் யப்ஸரசாம் பிரதி தாவந்தி சதம் மாலா ஹஸ்தா
சதம் அஞ்ஞன ஹஸ்தா சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா
சதம் பண ஹஸ்தாஸ் தம் பர்மா லங்காரேணா லங்குர்வந்தி -என்கிறபடியே
மதி முக மடந்தையர் -திருவாய் மொழி -10-9-10-என்ன
ஸூத்ரவதி முதலான (ருத்ரா ஸூ கீர்த்தி -பெரிய திருவடியின் மஹிஷிகள்)இவர்கள் மகிஷிகள் என்ன
இவர்களால் அடிமை செய்யப் பட்ட ஏற்றத்தை உடைய
திருவடிகளை உடையவனே
இவர்கள் மகிஷிகள் தம் போகத்துக்கு உறுப்பாகை அன்றிக்கே
அங்குத்தைக்கு உறுப்பாய் இருப்பர் இறே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் மொழி -1-1-1- என்று இறே ஏற்றம்

—————————————————————————————

(உபய லிங்க விஸிஷ்டன் -அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக ஸ்தானம்
உபய விபூதி விஸிஷ்டன்-)

(பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ-தனி விளிச் சொல்லாகவும் ஸூதர்சன பட்டர் வியாக்யானம்-உடையவனே -என்று ஸ்ரீ வைகுண்டத்தைச் சொல்லாமல் அவனையே சொன்னவாறு என்கிறார்)

பரமேதி
ஸூரி போக்யமான கைங்கர்யத்தின் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று கீழ்
அந்தக் கைங்கர்யத்துக்கு வர்த்தகமான தேச விசேஷத்தை சொல்லுகிறது மேல்

பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ

முக்தாநாம் லஷணம் ஹயேதத் ய ஸ்வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந-என்கிற(ப்ரஹ்ம ஏக பாவனை யுடைய)
சனகாதிகள்  உடைய வாங் மனஸ் ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடைத்தாய் இருக்கை-
அதாவது –பஞ்ச உபநிஷன் மயம் -ஸூத்த சத்வ மயம் என்று திரள
நினைத்தால் சொல்லுதல் செய்யும் இத்தனை ஒழிய
ஏவம் ஸ்வரூபம் ஏவம் ஸ்வபாவம் என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லும் சொல்லப் பெற்றேன்)

(திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதி ஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காம வ்ருத்த: ||-ஶ்லோகம் 47 –

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.)

பஞ்ச உபனிஷன் மயமாய் இருக்கையாலே ஏக த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அநேக த்ரவ்ய உபசயாத்மகம் ஆகையாலே நித்ய த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அவஸ்தாந்தராபத்தி இல்லாமையாலே பரிணாம ஸ்வபாவம் என்ன ஒண்ணாது
பகவத் சங்கல்பத்தாலே சில உண்டாகச் சொல்லுகையாலே ஏக ரூபம் என்ன ஒண்ணாது
ஆகையால் அளவுடையாராய் இருக்கும் பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும் தேசம்-

ஸ்வ அபிமத விவித விசித்திர
அநந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
அநந்த ஆச்சர்ய
அநந்த மஹா விபவ
அநந்த பரிமாண
நித்ய நிரவத்ய
நிரதிசய வைகுண்ட நாத

ஸ்வ அபிமத –
அன்புற்று அமர்ந்து உறைகின்ற -திருவாய் மொழி -7-10-1-(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான்)என்கிறபடியே ஆதரித்து வர்த்திக்கிற படியால் -அபிமதமாய்

விவித -விசித்திர –
நாநா விதமாய்
அநந்த
முடிவு இன்றிக்கே இருப்பதான –

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
போக்யங்களான அப்ராக்ருதமான சப்தாதி விஷயங்கள் என்ன
போக உபகரணங்கள் ஆன-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-பரிஜன பரிச்சதாதிகள் என்ன
போக ஸ்தானங்கள் ஆன தேச விசேஷங்கள் என்ன
இவற்றாலே சம்ருத்தமாய் இருந்துள்ள

அநந்த ஆச்சர்ய –
அநந்த உத்யாந- நதீ -தடாகாதி லஷணமான விபவத்தை உடைத்தாய் இருக்கை –
அநந்த ஆச்சர்யம் ஆகையாவது
க்ருதகம் என்றாதல் -நவம் என்றாதல் -புராதனம் என்றாதல் சொல்ல ஒண்ணாதே
அக்ருத்ரிமமாய் பிரதி ஷணம் அபூர்வமாய் இருக்கை

அநந்த மஹா விபவ
மஹத்வம் ஆவது இவற்றுள் ஓர் ஒன்றே போக்தாக்களால் அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை

அநந்த பரிமாண –
ஆயாம விஸ்தாரங்களால் அளவிறந்து இருக்கை(பக்கவாட்டிலும் உயரத்திலும் எல்லை இல்லாமல் கீழே விரஜை உண்டே)

நித்ய நிரவத்ய நிரதிசய வைகுண்ட நாத
(வை குண்ட -சொல்லே அழியாதது என்பதைக் காட்டுமே)நித்ய-சதைக ரூபமாய் –
நிரவத்ய-ஹேய ப்ரத்யநீகமாய்
நிரதிசய-சர்வ பிரகாரத்தாலும் அதிசயிதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு நாதன் ஆனவனே

(உத்தமமான அநுத்தமுமான -இத்தை விட உயர்ந்தது இல்லாமல் தேஸம் -ஸ்ருதி)

போக்ய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த–பரம பதத்தில் போக்தாக்களை சொல்லாது ஒழிந்தது(போக்த்ரு  வர்க்க-லீலா விபூதியில் சொல்லப் போகிறார் இங்கு சொல்ல வில்லையே)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய் மொழி -4-9-10-என்கிறபடியே
இவர்கள் போகத்துக்கு கை தொடுமானமாம் ஆகாரம் ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலே(நீயுமே-ஏவகாரம் –போக்தாக்கள் வேறே சொல்ல வில்லையே-முக்தருக்கும் நித்யருக்கும் தனியான ஆனந்தம் பெற மாட்டார்கள் அன்றோ)

ஆனால் ஸ்ருதி
ஏதத் சாம காயன்னாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ-என்று –அந்நாதோ-என்று போக்தாக்களை-சொல்லிற்று இல்லையோ வென்னில்

தான் அங்குத்தைக்கு ஸ்ரக் சந்த நாதிகளோபாதி போக உபகரணமாய் இருக்கும் இருப்பு
புருஷார்த்தம் ஆகையாலே சொல்லிற்று இத்தனை –
அங்கன் அன்றாகில் அஹம் அன்னம் என்றத்தோடு விரோதிக்கும் இறே-

(நான் உணவு முதலில் சொல்லி -மாலை சந்தனம் போல் அவனுக்கு போக்யத்துக்குக் கருவி சொல்லி
முரண்படாமல் –
அவனது பவள வாய் -முறுவல் தான் நமக்கு அன்னம்
நான் உணவை உண்பவன் என்றது படியாய்க் கிடந்தது உன் பவள காய் காண்பாவனாக இருக்க வேண்டும் அன்றோ
தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே புருஷார்த்தம்)

————————————————————————————-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல
சத்ய காம
சத்ய சங்கல்ப
பர ப்ரஹ்ம பூத
புருஷோத்தம
மஹா விபூதே
ஸ்ரீ மன் நாராயண
ஸ்ரீ வைகுண்ட நாத
அபார காருண்யா
சௌசீல்ய
வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய
சௌந்த்ர்ய மஹோததே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய
அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
நிகில ஜகதாதார
அகில ஜகத் ஸ்வாமின்
அஸ்மத் ஸ்வாமின்
சத்ய காம சத்ய சங்கல்ப
சகல இதர விலஷண
அர்த்தி     கல்பக ஆபத் சக ஸ்ரீ மன் நாராயண
அசரண்ய சரண்ய
அநந்ய சரண
த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே
அத்ர த்வயம் –

ஸ்வ சங்கல்ப -இத்யாதி –
இப்படி அப்ராக்ருதமான நித்ய விபூதி யுக்தனுக்கு
ஆவது அழிவதாய் -லீலா ரச ஹேதுவான லீலா விபூதி யோகம் சொல்லுகிறது மேல்
ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி –
ஸ்வ சங்கல்பத்தைபின் செல்லா நின்று உள்ள ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடைத்தாய் –

பிரகிருதி யாவது –
சத்வாதி குணத்ராயாத் மகமாய் -(ஆத்மாவுக்கு இவை வந்தேறி -உடலுடன் சேர்க்கையாலேயே இவை ஆத்மாவை பாதிக்கும்)அநந்த மாய்-(சூழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெரும் பாழ்)விசித்ரமான அவஸ்தா விசேஷ ரூப பரிணாமத்துக்கு சமர்த்தமாய் இருந்துள்ள பிரதானம் -(ப்ரக்ருதி ப்ரதானம் பர்யாயம்)

பிரக்ருதிக்கு ஸ்வரூபம் ஆவது –
சத்வாதி குணகமான ஜடத்வம் -(ஆத்மா அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம்)

ஸ்திதி யாவது -சேதனருக்கு போக மோஷ சாதன அனுஷ்டானத்துக்கும் -பல அனுபவத்துக்கும் -உபகரணமாய் இருக்கை -(மோக்ஷ அநு பவிக்க ப்ரக்ருதி தேவை இல்லையே -அப்ராக்ருதம் அன்றோ)

பிரவ்ருத்தி யாவது -ததர்த்தமாக -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண பரிணமிக்கை –

புருஷ-சம்சாரி சேதனனுக்கு ஸ்வரூபம் ஆவது -அசித் விசிஷ்ட ஆகாரத்வம்

ஸ்திதி யாவது -அந்நாதிகளால் தரிக்கை-

பிரவ்ருத்தி யாவது -புண்ய பாப ரூப கர்ம அனுஷ்டானம் என்ன-
தத் பல அனுபவம் என்ன -இவை

காலத்துக்கு ஸ்வரூபம் ஆவது -அசித்வம்

ஸ்திதி யாவது -சேதன அசேதனங்கள் உடைய பரிமாணங்களுக்கு நிர்வாஹகமாய் இருக்கை –

பிரவ்ருத்தி யாவது -நிமேஷ கலா காஷ்டாதி ரூபத்தாலே
உத்பத்தி விநாசாதிகளை ப்ரவர்த்திப்பிக்கை –

ஸ்வ சேஷதைக ஸ்வபாவ –
தனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை –

பிரகிருதி புருஷ காலாத்மக –
இப்படிப் பட்ட பிரகிருதி -புருஷ -கால -ரூபமாய்

விவித –
அத ஏவ விவிதமாய்

விசித்ர –
விசித்ரமாய்

அநந்த-
அனந்தமாய்

போக்ய –
போக்யம் என்ன –

போக்த்ரு வர்க்க-
போக்த்ரு வர்க்கம் என்ன(கீழே நித்ய விபூதியில் போக்த்ரு வர்க்கம் இல்லையே)

போக உபகரண-
போக உபகரணங்கள் என்ன

போக ஸ்தான –
போக போக்யங்களான ஸ்தான விசேஷங்கள் என்ன –

ரூப
இவற்றை வடிவாக உடைய

நிகில ஜகத் உதய விபவ லய லீல-
சகல லோகங்களின் உடைய உத்பத்தி ஸ்திதி சம்ஹாரங்களை லீலையாக உடையவனே

விசித்ரம் ஆகையாவது -நாநாவிதமாய் இருக்கை –

அநந்தம் ஆகையாவது -தொகை இன்றிக்கே  இருக்கை

போக்த்ரு வர்க்கம் ஆவது –தேவாதி சரீரங்களிலே அஹம் புத்தியாலே ஸ்வ தந்த்ரராய்
சப்தாதி விஷயங்களுக்கு போக்தாக்கள் ஆகை-
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதிகள் உண்டாகிறது ஈஸ்வரனுக்கு உபகரண தயா வல்லது ஸ்வ தந்திர தயா வல்ல –
ஆனால் துக்க ரூபமாய் இராதோ -என்னில்
அவர்களுக்கு தபஸ் பலமாய் வந்தது ஆகையாலே (யுக கோடி ஸஹஸ்ராணி பத்ம பூ இத்யாதி -உண்டே)சுக ரூபமாய் இருக்கும்
நித்ய விபூதி யோகத்தால் வந்த பூர்த்தியை உடையனாகையாலே ஈஸ்வரனுக்கு இது லீலையாய் இருக்கும்(நாட்டைப்படை –வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்)

ஆக -நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று ஆயிற்று-

சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கலாவது
உபேய ருசியும் -உபாய அத்யவசாயமும் உண்டானால் ஆகையாலே
அதினுடைய சித்தி அர்த்தமாக முதல் சூரணை யிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கார் –

இரண்டாம் சூரணை யிலே -பிராட்டி பிரசாதத்தாலே அத்தை பிராப்தரானார்

அநந்தரம் ஆஸ்ரயணீயராவார் ஆர் என்னும் அபேஷையிலே
காரணம் து த்யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹ்ணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்னும் இத்யாதியாலே
சகல ஜகத் காரண பூதனான நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டும் ஆகையாலே
அகில ஹேய -என்கிற சூரணை யிலே நார சப்த வாச்யங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லி

அநந்தரம் -அவ் விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லி

அநந்தரம் -ஏவம் விதமானவற்றுக்குக் காவலான திவ்ய ஆயுத வர்க்கங்களைச் சொல்லி

அநந்தரம் -இப் போக்யதை காட்டில் எரித்த நிலா வாகாதபடி தலை நீர்ப் பாட்டிலே இருந்து அனுபவிக்கும் மஹிஷிகளைச் சொல்லி

அநந்தரம் -இச் சேர்த்தி அழகைக் கண்டு அனுபவித்து- தோற்று- எழுதிக் கொடுத்து-
எடுத்துக் கை நீட்டிப் பரிமாறும் திவ்ய பரிஜனங்களைச் சொல்லி

அநந்தரம் -கைங்கர்யத்துக்கு ஏகாந்தமாய் -தத் வர்த்தகமுமான நித்ய விபூதியைச் சொல்லி

அநந்தரம் -ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு விஷயமான லீலா விபூதியைச் சொல்லி
இப்படி அவனுடைய உபய விபூதி நாதத்வத்தைப் பேசி அருளினார் –

இனி ஆஸ்ரயிக்கை இறே உள்ளது-

அவ் வாஸ்ரயணத்துக்கு உபயோகியான குணங்களைச் சொல்லுகிறது மேல்அபார காருண்ய –இத்யாதியாலே
நடுவே எட்டு குணங்களைச் சொல்லா நின்றதே -இவற்றால் சொல்லுகிறது என் என்னில்
மேல் பண்ணப் புகுகிற ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
கீழ் சொன்னவற்றை அனுபாஷிக்கிறதுமாய் இருக்கிறது –

கீழ் ஆஸ்ரயணீயனைச் சொல்லிற்று ஆகில் அநந்தரம் ஆஸ்ரயிக்க அமையாதோ என்னில் -அமையாது –
ஆசார்ய உபதேச பூர்வகமாய் இறே ஆஸ்ரயணீயம் இருப்பது
அவ்விடத்தில் ஆசார்ய உபதேச முகத்தாலே அவனே பிராப்ய பிராபகங்கள்  என்று அத்யவசித்து
அநந்தரம் ஆஸ்ரயிக்க வேண்டும்
அல்லாத போது அவனுடைய ரஷகத்வத்திலே ஆதல்
உபாயத்வத்திலே ஆதல் அதிசங்கை நடக்குமாகில் ஆஸ்ரயித்தவனாக மாட்டான்
ஆகையால் –
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததே கோபாயதா யாச்ஞா பிரபத்தி சரணா கதி -என்னும்
நியாயத்தாலே கீழ்ச் சொன்ன நாராயணத்வத்தை அனுபாஷித்துக் கொண்டு
அவனே உபாய உபேயங்கள் என்று -அத்யவசிக்கிறார்

இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே தாம் பெற்ற அர்த்தத்தை அனுசந்திக்கிரார் –

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –

மஹா விபூதே ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிற இவை நித்ய விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிறது ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை கொள்ளும் தேசத்தைச் சொல்லுகிறது

ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை செய்கை போலே காணும் சேஷ பூதனுக்கு க்ருத்தியம்-இத்தால் அடிமை கொள்ளும் படி ஆஸ்ரயிக்கையே ஆஸ்ரயணம் என்றது ஆயத்து –

1-சத்ய காம
காம்ய ஸ்ப்ருஹா ஸ்மர காம -என்று நிகண்டு –
காம சப்தம் ஸ்மரனையும்(மன்மதனையும்)-இச்சிக்கப் படுமத்தையும் -இச்சையையும் சொல்லுகிறது
கீழே சத்ய காம -என்கிறது ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமாய்
அவ் வழியாலே தனக்கும் காம விஷயமான விபூதியைச் சொல்லுகிறது –
இங்கு சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை
ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் -என்கிறது –
கீழ் காமிக்கப் படுமவற்றைச் சொல்லிற்று
இங்கு காமத்தைச் சொல்லுகிறது –

சத்ய சப்தம் நித்ய வாசி
சிருஷ்டிக்கு விஷயமான புருஷ சமஷ்டி
ஸ்ருடரான சேதனர்க்கு போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபியான பிரகிருதி
இவற்றைக் கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கைக்குக் காலம்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கு தப பலமாகையாலே போக ரூபமாய் இருக்கும்
ஈஸ்வரனுக்கு லீலையாய் இருக்கும் ஐச்சிகம் ஆகையாலே

லீலை என்கிறது சேதனனுக்கு பந்தகமுமாய் நாச ஹேதுவுமாய் ஈஸ்வரனை மறைத்து அநர்த்த அவஹமாய் இருக்க
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் ஆவான் என் என்னில்
சுகோ முக்தோ வாமதேவோ விமுக்த -என்கிறபடியே ஓன்று இரண்டு வ்யக்தியிலே பலிக்கக் காண்கிறது இறே
அந் நசை யாயிற்று இவனுக்கு ஸ்ப்ருஹையை விளைக்கிறது –
ஆகை இறே அழித்து அழித்து சிருஷ்டிப்பது ஸ்திதிப்பிப்பது-அதி ப்ரவ்ருதமான வாறே சம்ஹரிப்பது
பின்னையும் இது தன்னையே செய்வதாக நிற்கிறது –
என் போலே வென்னில்
ஒரு ஷேத்ரம் நெடும் காலம் இட்டிறையாய் போகா நின்றாலும் ஒருகால் பலிக்கக் காண்கையாலே
அழித்து அழித்து பயிர் செய்யும் கர்ஷகனைப் போலே

2-சத்ய சங்கல்ப -கீழேயும் –சத்ய சங்கல்ப -என்றது
ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமான அபூர்வ போகங்களை தன நினைவாலே சிருஷ்டிக்க வல்லவன் என்கைக்காக
இங்கு சத்ய -சப்தம் அமோக வாசி –
இங்கு சத்ய சங்கல்ப -என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கும் என்கைக்காக
அதாவது இவற்றை அமோகமாக தன் நினைவிலே சிருஷ்டிக்க வல்லனாகை

ப்ரஹ்மாவினுடைய சங்கல்பமும் மோகமாய் இருக்கும் -எங்கனே என்னில்
சனகாதிகளை தன் நினைவாலே ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பாக சிருஷ்டித்தான்
அவர்களோ என்றால் -முமுஷூக்களான எங்களுக்கு இச் செயல் ஆகாது -உனக்கேயாம் இத்தனை -என்று இகழ்ந்து போனார்கள்

தான் சிருஷ்டித்த அசுரர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து தான் ஈஸ்வரன் காலிலே விழுந்து
வேதா மே பரமம் சஷூ -வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம -வேதா மே பரமம் சோத்தமம் –என்று கூப்பிட்டான் –

மேலே அவனுடைய திருவடிகளிலே சரணம் புகுகைக்கு உறுப்பாக
சிருஷ்டி முதலாக புருஷார்த்தத்துக்கு எல்லையான கைங்கர்ய பர்யந்தமான
நடுவுள்ளவை யடங்க அவனிட்ட வழக்கு என்று அருளிச் செய்கிறார் –எட்டு ஸ்வ பாவத்தாலே
1-சத்ய காம –
சேதனர் உடைய சரீர சம்பந்தத்துக்கு அடியான சிருஷ்டிக்கு உபகரணமான நித்ய பதார்த்தங்களை உடையவன் -என்கிறது

2-சத்ய சங்கல்ப
சிருஷ்டி அர்த்தமாக சங்கல்ப்பிக்கும் சங்கல்பம் அமோகமாய் இருக்கும் -என்கிறது

குண சூரணையிலே இவ் விரண்டு குணங்களும் உக்தமாய் இருக்க இங்கும் சொன்னால் புநர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு குண சத்பாவத்துக்கு உறுப்பாகச் சொல்லிற்று
இங்கு சிருஷ்டி யர்த்தமாகச் சொல்லுகிறது ஆகையாலே தோஷம் இல்லை –

3-பர ப்ரஹ்ம பூத –
ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

4-புருஷோத்தம –
புருஷாணாமுத்தம –
புருஷாணாம் என்கிற பஹூ வசனத்தாலே த்ரிவித சேதனரையும் வயாவர்த்திக்கிறது-

புருஷ-உத்புருஷ -உத்தர புருஷ -உத்தம புருஷ
புருஷர் ஆகிறார் -அசித் வ்யாவ்ருத்தரான பத்த சேதனர்
உத் புருஷர் ஆகிறார் -பத்தரில் வ்யாவ்ருத்தரான முக்தர்
உத்தர புருஷர் ஆகிறார் முக்தரில் வ்யாவ்ருத்தரான நித்யர்
உத்தம புருஷன் ஆகிறான் -ஸூரிகளிலும்  வ்யாவ்ருத்தனான ஈஸ்வரன்

பத்தர் ஹேய ஆகாரராய் இருப்பர்
முக்தர் ஹேயத்தின் நின்றும் ஒரு நாள் குளித்து ஏறினவராய் இருப்பர்
நித்யர் ஹேய ரஹிதராய் இருப்பது ஒழிய ஹேய பிரதி படர் அல்லர்
ஈஸ்வரன் ஹேய ப்ரதிபடனாய் இருப்பன்

ஈஸ்வரன் த்ரிவித சேதன அசேதனங்களிலும் அந்தராத்மதயா நிற்கச் செய்தே
அவற்றின் உடைய ஹேய கந்தம் தட்டாதவனாய்
ஆஸ்ரிதர் ஹேயத்தை போக்க வல்லனுமாயும் இருக்கும்

இத்தால் ஸ்ருஷ்டமான ஜகத்தின் உடைய வ்யாபன பரண ஸ்வாம்யத்தால் உண்டான வைலஷ்ண்யம் சொல்லுகிறது –
இத்தால் உஜ்ஜ்வலனாகா நிற்கும் என்றது ஆயத்து

(அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம்யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பிராகிருத சரீரத்துடன் கூடிய -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித்-பிராகிருத சரீர- நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான நாராயணன்
வ்யாபநாத்–அவைகளை -வியாபிக்கிற படியால்
பரணாத்–அவைகளை -தரிக்கிற படியால்
ஸ்வாம்யாத்–அவைகளை -நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –)

அங்கன் அன்றிக்கே
ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு அபேஷித புருஷார்த்தங்களை கொடுக்குமவன் ஆகையாலே புருஷோத்தமன் -என்னவுமாம் –
புரு -பஹூ
சநோதி -ததாதி -என்று இறே இதுக்கு வ்யுத்பத்தி

மஹா விபூதே –
கீழேயும் விபூதியைச் சொல்லிற்று
மேலும் விபூதியை சொல்லப் புகா நின்றது
இப்படி சொல்லுகை புநர் உக்தம் அன்றோ -என்னில்
விபூதி மான் -என்கைக்காக விபூதி யோகம் சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனருக்கு அவ் விபூதியைக் கொடுக்கும் என்று விபூத் ஔதார்யம் சொல்லுகிறது இங்கு
மேல் அடிமைக்கு ஏகாந்தமான தேசம் என்று விபூதி விநியோகம் சொல்லுகிறது
ஆகையால் தோஷம் இல்லை

ஸ்ரீ மன் –
கொடுத்த தேசத்தில் போக்ய விஷயத்தை சொல்லுகிறது –
அங்கு இருவருமாய் இறே அடிமை கொள்ளுவது
வைகுண்டே  து பர் லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவத்தைஸ் சஹ -சிவ புராணம் -எண்ணக் கடவது இறே –

நாராயண –
அநந்த மங்கள குணங்களோடு குறைவற விருந்து அடிமை கொள்ளும்வன் என்கிறது –

ஆக ஸ்ரீ மன் நாராயண -என்கையாலே ஒரு மிதுனமே பிராப்யம் –என்கிறது –

ஸ்ரீ வைகுண்ட நாத –
அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்தமான பரம பதத்திலே நாதனாய் இருந்து அடிமை கொள்ளும் -என்கிறது

இவற்றில் கீழ் நாலு குணங்களும் சிருஷ்டிக்கு உறுப்பாய் இருக்கும்
மேல் நாலு குணங்களும் பிராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்
காரணமுமாய் பிராப்யமுமான வஸ்து இறே பிராபகம் –

அநந்தரம் ஆஸ்ரயணீயத்வத்தில் ப்ரக்ருஷ்ட உபகாரகங்களான குணங்களைச் சொல்லுகிறது -(16 குணங்களை இங்கு அருளிச் செய்கிறார் -அபார விசேஷணம் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்)
அபார காருண்யா இத்யாதி –
1-காருண்யம் ஆகிறது கிருபை அதாகிறது -பர துக்க அசஹிஷ்ணுத்வம்

இது அபாரமாகை யாகிறது
ஆனயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம்ஸ் யாபயம் மயா
விபீஷணோ வா சூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் 18-34-என்று அவன் அளவும் செல்லுகை –
அங்கன் அன்றியே
என்னளவும் வர வெள்ளம் கோக்கும் குணம் என்னவுமாம்

2-சௌசீல்ய –
உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு வந்து கலவா நின்றால்
இவன் நம்முடையான் என்று புரையற கலக்கலாம்படி இருக்கை –

இதுக்கு அபாரத்வம் ஆவது
தேவ மனுஷ்யாத் அவதாரங்கள் போல் அன்றிக்கே மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களிலும் இவை நம்முடையது என்று இருக்கையும்
தானும் அவற்றிலே ஒன்றாய் இருக்கையும்
இவற்றிலே நாம் ஓன்று என்று நினைத்து இருக்கையும் –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்யமிதோ அந்யதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்தம் -120-11-

3-வாத்சல்ய –
வாத்சல்யம் ஆவது -ப்ரேமத்தாலே ஆஸ்ரித கதமான தோஷமும் குணமாகத் தோற்றுகை
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர் அளவு அன்றிக்கே
சகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாமபி வத்சலா
அப்ய நுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதா கதம் -யுத்தம் -50-56-என்று
சத்ருக்கள் பக்கலிலும் அப்படி இருக்கை

ஆனால் பையல் தலையை அறுத்து விடுவான் என் என்னில்
அவர்கள் பக்கலிலும் அவன் படியில் குறை இல்லை
அதுவும் ஜீவியாதபடி அவர்கள் சூழ்த்துக் கொண்ட வித்தனை

அங்கன் அன்றியே
தலை அறுக்கை தானும் வாத்சல்யம் ஆகவுமாம்
எங்கனே என்னில் விளையாடக் கொடுத்த கோலைக் கொண்டு பிரஜை கண்ணை கலக்கிக் கொள்ளப் புக்கால்
கையில் கோலை வாங்கி இட்டு வைக்கும் தாயை போலே –

4-ஔதார்ய
ஔதார்யம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு ஸ்வரூப அனுரூபமான
அபேஷிதங்களை தன் பேறாக கொடுக்கை

இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலனாக எப்போதும் நெஞ்சாறல் பட்டுக் கொண்டு இருக்கை –
ருணம் ப்ரவ்ருத்தம் இவ –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –பெரிய திருவந்தாதி -53

5-ஐஸ்வர்ய –
ஐஸ்வர்யம் ஆவது அர்த்திகள் அர்த்தித்தவை எல்லாம்
கொடுக்கும்படியான அடிவுடைமை

இதுக்கு அபாரத்வம் ஆவது
அவ் வடிவுடைமை தான் இவ்வளவு என்று இருக்கை அன்றிக்கே
கொடுக்க மேல் மேல் என வளர்ந்து கொடு செல்லுகை

(கொள்ளக் குறைவிலன் கோதில் மணி வண்ணன் 

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்)

6-சௌந்த்ர்ய மஹோததே 
சௌந்தர்யம் ஆவது அழகு

இதுக்கு அபாரத்வம் ஆவது
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சரகிலை தின்னிகளான ரிஷிகளையும் கூட மடல் எடுக்கப் பண்ண வற்றாய் இருக்கை –
அனுகூலரை யன்றிக்கே ப்ரதிகூலையான சூர்பணகி பொல்வாரையும் மடல் எடுக்கப் பண்ணுகை-என்றுமாம் –

(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

7-அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்கள் பாராதே
இருந்ததே குடியாக சரண வரண அர்ஹனானவனே(ஸமோஹம் ஸர்வ பூதேஷூ)

8-பிரணத ஆர்த்தி ஹர –
இப்படி அத்யவசித்த ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவனே

9-ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
கீழ் சொன்ன குணங்கள் எல்லாம் ஒரு தலை யானாலும்
அவற்றை எல்லாம் கீழ்ப் படுத்தும் படியான நிரவதிக வாத்சல்யத்தை உடையவனே
நிகரில் புகழாய் -திருவாய் மொழி -6-10-10-என்கிறபடியே

ஆக
கீழ் ஆஸ்ரயண அர்ஹதை சொல்லி –ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவன் என்று சொல்லி–
அதுக்கடியான வாத்சல்யம் சொல்லிற்று

10-அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய –
சத்தா யோகி சகல பதார்த்தங்களின் உடைய உண்மையை எப்போதும் ஒக்க அறியுமவனே
இத்தால் –அனுத்தமமான பாத்ரம் -ஸ்தோத்ர ரத்னம் -24-என்று நான் என் படி சொல்ல வேண்டா விறே -என்கிறார்

(நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந் நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||ஶ்லோகம் 24 –

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.)

11-அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
நல்லது இல்லை என்றால் -தீயவை இல்லாமல் இருந்தாயோ என்று கேட்ப்பாயாகில்
அனைவரையும் இயக்கும் சக்தி உன்னுடையது அன்றோ
ஜங்கம ஸ்தவாராத்மகமான ஸமஸ்த பதார்த்தங்களையும் சர்வ காலத்திலும் நியமிக்கிறாய் நீயே அன்றோ
ஸர்வ நியந்தாவாய் வன்றோ நீ உள்ளாய்
இத்தால் உனக்கு அவிதேயமாய் ஓன்று இருக்கும் அன்று தானே எனக்கு இழக்க வேண்டியது
பத்தனான ஆத்மாவோடு பந்தகமான பிரக்ருதியோடு வாசி யற நீ இட்ட வழக்கு அன்றோ


12-அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத –
சகல சேதன அசேதனங்களுக்கும் சேஷி யானவனே
இத்தால் என் கார்யம் உன் பேறாக செய்ய வேண்டும் சம்பந்தம் உடையவன் அல்லையோ என்கை

13-நிகில ஜகத் ஆதார –
பகவத் பாகவத விஷயங்களில் அபராதம் பண்ணிப் போரும் ஜகத்துக்கும் ஆதார பூதனே
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்கிறார் –

14-அகில ஜகத் ஸ்வாமின் –
அபராதத்தை தவிர்ப்பித்து ஆபி முக்யத்தைஉண்டாக்கி
தேவர் திருவடிகளிலே புகுர நிறுத்துகைக்கு வேறு நிர்வாஹகர் உண்டோ

அத ஏவ
15-அஸ்மத் ஸ்வாமின்
கீழும் சேஷித்வம் சொல்லிற்று -அங்கு சம்பந்த பரம்
இங்கு சம்பந்த அனுகுண நியமன பரம்
இத்தால் என்னை இவ் வளவாக புகுர நிறுத்தினவன் நீ  அல்லையோ -என்கிறார்

16-சத்ய காம –
கீழ் குண சூரணை யிலே ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான வழியாலே தனக்கும் இனிதான குண விபூதியைச் சொல்லிற்று –

நடுவு –சத்ய காம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் என்கைக்காக

இங்கு சத்ய காம -என்கிறது ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டாதபடி
அவாப்த சமஸ்த காமதயா வந்த பூர்த்தியை உடையவன் -என்கைக்காக
இத்தால் –அகிஞ்சனோ அநந்ய கதி -ஸ்தோத்ர ரத்னம் -என்று
அகிஞ்சனான என் கார்யம் பூர்ணனான உனக்கு பரம் அன்றோ -என்கிறார்-

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||ஶ்லோகம் 22 –

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.)

(அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா)

17-சத்ய சங்கல்ப –
கீழ் குண சூரணை யிலே சத்ய சங்கல்ப -என்றது
அபூர்வமான போக்யங்களை அமோகமாக சிருஷ்டிக்க ஷமண் என்கைக்காக –

நடுவே சத்ய சங்கல்ப என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதம் –என்கைக்காக

இங்கு சொன்னது அகடிதங்களையும் சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்தும் ஷமண் –என்கைக்காக

இத்தால் -நித்ய சம்சாரியான என்னையும் நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க நினைத்தால்
செய்து முடிக்க வல்லன் அல்லையோ நீ –என்கிறார்

18- சகல இதர விலஷண-
சேதனர் உடைய ஜீவனம் சொல்லுகிறது

ஸ்வரூபதோ குண தச்ச விலஷண-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப குணங்களை உடையவனே
இவை தன்னை யாருக்காக படைத்தது -ஸ்வார்த்தம் ஆகவோ -என்கிறார்
ஒரு விபூதியாக அனுபவிப்பாரும் அனுபவிப்பிப்பாரும் ஆய்ச் செல்லா நிற்க ஸ்வார்த்தமாகவோ-என்கிறார் இறே
இவரை ஒழிய எல்லாரையும் அனுபவிப்பித்தாலும் குறையாய் இருக்கும் இறே –
இவரை அனுபவிப்பித்தால் ஆய்த்து அவனுடைய ரஷகத்வம் பூர்ணம் ஆவது
பூர்ண அனுபவம் பண்ணுவார்க்கு ஓன்று குறைந்தாலும் நெடும் பாழாய்த் தோற்றும் இறே(ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் என்மின்களே)
ஆகையால் இவரோடும் கூட அனுபவித்தால் ஆய்த்து அவர்கள் அனுபவம் பூர்ணம் ஆவது
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்

(நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?)

அர்த்தி கல்பக
தன் தலையாலே இரந்து கொடுக்குமவனுக்கு இரந்தார்க்கு கொடாது ஒழிகை போருமோ -குறை யன்றோ –
அர்த்திப்பார்க்கு கடக்க நின்று தன்னை ஒழிந்த சிலவற்றை கொடுத்து விடும் பூண்டு போலேயோ -இங்கு கற்பக மரம் –
அர்த்திகளையும் உண்டாக்கி தானே இரந்து சகல பல பிரதனான உன்னையும் தருகிற நீ
என்னை யாக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திரு வாய் மொழி -2-7-11-என்னக் கடவது இறே –
அது போலே நாரும் நரம்புமாயிருக்கை –

அன்றிக்கே –
அபார சௌந்த்ர்ய மகோததே-என்னும்படியாய் இறே இருப்பது
இரந்து கொடுக்கும் அத்தனை ஒழிய இரந்தார்க்கு கொடுக்கலாது ஓன்று உண்டோ

ஆபத் சக –
ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
அதாவது துணையாய் இருக்கை
சர்வ ரஷகன் ஆனவனே அறச் செய்ய வேண்டும்படியான ஆபத்திலும் தானே துணையாய் இருக்கை

மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவை யடைக்கும் தசையிலும்
ரகுவர யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
ப்ரதிபவம் அபராத்துர் முக்த சாயுஜ்யதோச்பூ வாத கிமபத மாகஸ் தஸ்ய தேச்ஸ்தி ஷமாயா –ஸ்தோத்ர ரத்னம் –
தமேவ சரணம் கத -என்றும் தேவரே துணையாய் இருக்கை –

(ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ் தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||ஶ்லோகம் 63 –

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்ட வில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவி தோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசு பாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கி யருள வேண்டும்.)

ஸ்ரீ மன் –
இப்படி இருக்கிற உன்னையும் அச்சிர்த்துப் (புறக்கணித்து -கீழ் உள்ள எதுவுமே இல்லா விட்டாலும் )புருஷகார பூதையான பிராட்டியைப் பார்த்து ரஷிக்க வேணும் –

நாராயண
இவள் புருஷகாரம் ஆவதற்கு முன்னமே ஸ்ருஷ்ட் யார்த்த அநு பிரவேசத்தாலே சத்தையை நோக்கினவன் அல்லையோ -(தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ரவேஸஸ்ய)
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்றபடி

அசரண்ய சரண்ய –
கிம் புனர் அசரண்ய சரண்யத்வம்-
அதாகிறது –
இப்படி இருக்கிற தேவர்க்கும் புறம்பாய் -பின்னையும் தேவரை ஒழிய புறம்பு புகல்
அற்றார்க்கு சரண்யன் ஆனவனே -என்கிறார்
இப்படி இருப்பார் உண்டோ என்னில்

அநந்ய சரண அஹம்-
ததா விதோ அஹம்
அந்த அசரண்யன் ஆனவனே நான் என்கிறார்
பற்றிலார் பற்ற நின்றானே-

த்வத் பாத அரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே-
இப்படி இருக்கிற நான்
நிரதிசய போக்யமான தேவர் திருவடிகளையே
உபாயமாக அத்யவசிக்கிறேன்(கத்யர்த்தம் புத்த்யர்த்தம்-சரணம் –உபாயம் -க்ருஹம் -இருப்பிடம்-சரணாலயம் – -ரக்ஷகம் -இங்கு உபாய அர்த்தம் -)

த்வத் பாத அரவிந்த யுகளம்-உன் பொற்றாமரை அடியே
உன் அடி
பொன் அடி -பாவனத்வம்
தாமரை அடி -போக்யத்வம்

அத்ர த்வயம் –

——————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading