ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -1 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

இந்த இரண்டாவது கத்யத்துக்கு
ஸ்ரீ ரெங்க கத்யம் என்றும்
மித கத்யம் என்றும் வ்யவஹாரம்
ஸ்ரீ ரெங்க ஸாயிநம் –முதலில்– ஸ்ரீ ரெங்க நாத மம நாத நமோஸ்து தே -முடிவில் -என்பதால் ஸ்ரீ ரெங்க கத்யம்
முந்திய சரணாகதி கத்யம் ப்ருது கத்யம் -இது சிறியதாய் இருப்பதால் மித கத்யம்
முந்தியது போல் த்வய விவரணம் இதுவும்
இதில் முதல் சூர்ணிகை கைங்கர்ய ப்ராத்தநா பரமான உத்தர கண்ட விவரணமாகவும்
இரண்டாவது சரண வர்ண ப்ரதர்சன பரமான பூர்வ கண்ட விவரணமாக அவதரிக்கின்றது

சித³சித்பரதத்த்வாநாம் தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே । ராமாநுஜாய முநயே நமோ மம க³ரீயஸே ॥—இந்த கத்யத்தின் தனியன் -மங்கள ஸ்லோகம்

சித³சித்பரதத்த்வாநாம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் ஆகிய தத்வ த்ரயங்களினுடைய தத்த்வயாதா²ர்த்²யவேதி³நே ।-உண்மையை உள்ளபடி அறிந்தவரான மம க³ரீயஸே ॥-எனக்கு உத்தம ஆச்சார்யரான ராமாநுஜாய முநயே நமோ -எம்பெருமானாருக்கு நமஸ்காரம் ஆகுக

த்₃வயத்தில் உபாயத்தில் நோக்கான பூர்வ வாக்ய விவரணம்:-உபேயத்தில் நோக்கான உத்தர வாக்ய விவரணம்: முநி -மனன சீலர் –தத்வ த்ரய -வேதாந்த ஸித்தம் – கரியதே -பூஜ்யர் இதில் உபேயத்வம் முதலில் அருளிச் செய்து பின்பு உபாயத்வம் அருளிச் செய்கிறார் நாராயணனே பறை -கைங்கர்யம் அருளிச் செய்து பின்பு தருவான் -உபாயம் -என்று நமக்கு உபதேசம் ஆனால் அனுஷ்ட்டிக்கும் பொழுது கறவைகள் பாசுரத்தில் -உபாயத்வம்-இறைவா நீ தாராய் –முதலில் பின்பு சிற்றம் சிறுகாலை –கைங்கர்யம் -உனக்கே நாம் ஆட் செய்வோம் அதே போல் சரணாகதி கத்யம் அனுஷ்டானம் இதில் நமக்கு உபதேசம் –

———–

பிரவேசம் –

ஸ்ரீ ரெங்க கத்யத்தால் செய்தது ஆகிறது –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தை ப்ரதமத்திலே  பிரார்த்தித்து

2-தத் சித்தி அர்த்தமாக -2-ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு
-ஸ்வ தோஷ க்யாபன பூர்வகமாக (அறிவித்து-ராவணன் அனுஜோ -கர்ப்பவாஸம் -சொல்லிக் கொண்டது போல் -விபீஷணன் -பலவிதமாகத் துன்புறுத்துவான் என்ற நாமம் சாத்தப்பட்டவன்)திருவடிகளையே உபாயமாக ஸ்வீகரித்து

3-அநந்தரம்
அர்த்தநா மாத்ரத்தாலே(வேண்டிக் கொண்டபடியாலேயே-இத்தனை அடியனாருக்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் -அந்தோ பிறவியுள் பிணங்குமாறே)
இப்படி விலஷணமாய் இருந்துள்ள தாஸ்யத்தை தந்து அருள வேணும் என்று விஸ்வாஸ பூர்வகமாக பின்னையும் ப்ராப்யத்தைப் பிரார்த்தித்து

4-இவ் விஸ்வாஸம் தன்னையும்
காருண்யாதி கல்யாண குண பரி பூரணரான தேவரே தந்து அருள வேணும் என்று அபேஷித்து

5-தேவருக்கு அனன்யார்ஹ சேஷ பூதமான இவ் வஸ்துவை
ஸ்வரூப அனுரூபமான
வ்ருத்தி பர்யந்தமாக தேவரே பண்ணி அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே அபேஷித்து தலைக் கட்டுகிறார்-

6-இப் பிரபத்தி அதிகாரத்திலே இழிந்த முமுஷூக்கள் யாவச் சரீர பாதம்-கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில் –
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வெந்நாகத்து உன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -திருவந்தாதி -63-என்கிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே அனுகூல வ்ருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்

7-மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச்
சார்த்தி இருப்பார் தவம் -நான் முகன் திருவந்தாதி -18- என்றும்
ஆராதாநாம் சர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம்
தஸ்மாத் பர தரம் ப்ரோக்தம் ததியர் ஆராதனம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே ப்ரவண ஹ்ருதயரான ததீயர் உடைய ஆராதனம் ஆகிற
அனுகூல வ்ருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்

8-அதல் அசக்தராய் இருப்பார்
கார் கலந்த மேனியான் கைகலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவர் இப்போது -பெரிய திருவந்தாதி -86-என்கிறபடியே
பகவத் குண அனுபவத்திலேயே கால ஷேபம் பண்ணுதல்

9-அவ்வளவு பகவத் ப்ராவண்யம் போராதவர்கள்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ -என்கிறபடியே
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணா நின்று கொண்டு கால ஷேபம் பண்ணுதல் ஆய்த்து இருப்பது

அதில் இவர் த்வயத்தின் அர்த்த அனுசந்தானத்துடனே கால ஷேபம் பண்ண நினைத்து
இதில்
பெரிய கத்யத்தில் விஸ்த்ருதமாக அனுசந்தித்த அர்த்தத்தை
ஸ்ரோதாக்களுக்கு ஸூக்ரஹமாகவும்
பெரிய பெருமாளுக்குத் திருச் செவி சாத்த ஏகாந்தமாகவும்
அந்த த்வயத்தின் உடைய அர்த்தத்தை பாசுரப் பரப்பற
திரு முன்பே விண்ணப்பம் செய்யலாம்படி
சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————————————————————————————-

சூரணை -1- அவதாரிகை –

அதில் முதல் சூரணையிலே
பரம புருஷார்த்தமாக நிர்ணீதமான கைங்கர்யத்தை (பரார்த்தமான கைங்கர்யம் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே)அபேஷிக்கிறார்

கைங்கர்ய பிரதி சம்பந்தியாவான் நாராயணன் இறே
அந் நாராயண சப்தத்துக்கு அர்த்தம்
உபய விபூதி யோகமும்
ஹேய பிரதி படத்வமும்
சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் இறே

(எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -அந்தர்யாமித்வம் -வியாப்த கத தோஷம் அற்றவன்)
அதில் உபய விபூதி யோகத்தை முதலில் அருளிச் செய்கிறார்-

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்மாத் யசேஷ தோஷ அசம்ஸ்ப்ருஷ்டம்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்
சௌசீல்ய வாத்சல்ய மார்த்த்வ ஆர்ஜவ
சௌஹார்த்த சாம்ய காருண்ய மாதுர்ய
காம்பீர்ய ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய
தைர்ய சௌர்ய பராக்கிரம சத்ய காம
சத்ய சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்ய
அசங்க்யேய கல்யாண குணவ் ஏக
மஹார்ணவம் பரப் ப்ரஹ்ம பூதம்
புருஷோத்தமம் ஸ்ரீ ரங்க ஸாயினம்
அஸ்மத் ஸ்வாமினம் பிரபுத்த
நித்ய நியாமய நித்ய தாஸ்யை கர சாத்ம
ஸ்வ பாவோஸஹம்
தத் ஏக அனுபவ
தத் ஏக பிரியா
பரிபூரணம் பகவந்தம்
விசத தம அனுபவேன
நிரந்தர அனுபூய
தத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷை தைக ரதி ரூப
நித்ய கிங்கரோ பவானி

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
த்ரிவித சேதனர் -என்ன
த்ரிவித அசேதனங்கள் -என்ன
இவற்றின் உடைய ஸ்வரூப பேதம் என்ன
ஸ்திதி பேதம் என்ன
ப்ரவ்ருத்தி பேதம் என்ன
இவற்றை ஸ்வாதீனமாக உடையவன் -(ஸ்வாதீனமாக-தான் இட்ட வழக்காக -ஸங்கல்பம் அடியாகவே)

சேதன த்ரைவித்யம் பத்த முக்த நித்ய பேதத்தாலே  –
அசேதன த்ரைவித்யம் -சுத்த சத்வ ஆத்மகதை யாலும் -சுத்த சத்வமான அசித்தும் –
குண த்ரயாத்ம கதையாலும் -குண த்ரயாத் மிகையான -பிரகிருதியும் –
சிருஷ்டி யாதி நிர்வாஹகமான கால ரூபத்தாலும் –

அதில் பத்தர் ஆகிறார் -ஜ்ஞான சங்கோச அர்ஹ ஸ்வரூபராய்
புண்ய பாப பலமான சுக துக்க அனுபவத்திலே ஸ்திதியை உடையராய்
தத் ஹேதுவான புண்ய பாப ரூப கர்ம ப்ரவ்ருத்தி கரராய் இருப்பார்கள்

முக்தர் ஆகிறார் -நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே
ஜ்ஞான சங்கோச ஹேதுவான தேக சம்பந்தாதிகள் நிவ்ருத்தமாய்
அதடியாக ஆவிர்ப்பூத ஸ்வரூபராய்
கைங்கர்ய சுகத்திலே ஸ்திதியை உடையராய்
தத் அனுரூபமாக
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா-என்கிறபடியே
பகவத் குண அனுபவ ப்ரவ்ருத்திகராயும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி
தத் யதா தருண வத்ஸா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்வம் அனுகச்சேத் ததா ப்ரகாரம் -என்கிறபடியே
காயிகமான கைங்கர்ய ப்ரவ்ருத்த கராயும்-
அத்தாலே களித்து
ஹாவு ஹாவு ஹாவு -என்கிறபடியே -வாசிக ப்ரவ்ருத்திகராயும் இருப்பர்கள்

நித்யர் ஆகிறார் -ஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தரைப் போலே ஒரு நாள் அளவிலே வந்து
கிட்டினவர் அன்றிக்கே -அநாதி அனந்த கைங்கர்ய சுகத்திலே ஸ்திதியை உடையவராய்
சதா தர்சன ப்ரவ்ருத்தி கராயும் நித்ய அஞ்சலி புடராய் பிரவ்ருத்தி கராயும்
நித்ய ஸ்துதி பிரவ்ருத்தி கராயும் இருப்பர்கள் –
ஆகையால் ஆயிற்று நித்யர் என்று இவர்களுக்கு பேராயிற்று –

பிரகிருதி தத்வம்குண த்ரயாத் மகமாய்
சத்த பரிமாண ஸ்வரூபமாய்
சேதன கர்ம அனுகுணமாகப் பரிணமிக்கையாலே ஸ்திதியை உடைத்தாயும்
சேதனருக்கு ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூப -புருஷார்த்த ஸ்வரூப- உபாய ஸ்வரூப -விரோதி ஸ்வரூப-சம்பந்த ஸ்வரூப திரோதானகரமாயும் இருக்கும்

பஞ்ச உபநிஷண் மயமான அசித்து சுத்த சத்வ மயமாயும்
சதைக ரூப ரூபமாயும்
நித்ய முக்தர்கள் உடைய கைங்கர்யத்துக்கு உபகரண ரூபேணவும்
ஈஸ்வரன் உடைய ரஷண க்ருத்யத்துக்கு அனுகூலமாக வ்யூஹ விபவ ரூபேணவும்
ஸ்திதி யை உடைத்தாயும்
சர்வத்ர பிரகாச ப்ரவ்ருத்திகமாயும் இருக்கும்

காலம்பிரக்ருதியில் காட்டில் வ்யாவ்ருத்தமாய்
ஏக ஸ்வரூபமாய்
நிமேஷ காஷ்டாத்யவ அவஸ்தா யுக்தமாய்க் கொண்டு
ப்ராக்ருத பதார்த்தங்கள் என்ன
தத் சம்ஸ்ருஷ்ட சேதனர் என்ன
இவற்றின் உடைய நிர்வஹணத்திலே ஸ்திதியை யுடைத்தாயும்
சகலத்தின் உடைய உத்பத்தி விநாசாதி ப்ரவ்ருத்திகமாயும் இருக்கும்

இவற்றை ஸ்வாதீனமாக உடையனாகை யாவது
அந்தராத்மா தயா நின்று நியமிக்கை-

ஆக சகல சேதன சேதனங்களின் உடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள்
ஈஸ்வர அதீனமாகையாலே இவற்றின் உடைய சரீரத்வமும் ஈஸ்வரன் உடைய சரீரித்வமும் சொல்லிற்று ஆயிற்று –

(ஸ்வாதீ⁴ந த்ரிவித⁴ சேதநாசேதந ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴த³ம் -மூன்று வகைப்பட்ட சேதன அசேதனங்களின்
ஸ்வரூபம் என்ன
ரக்ஷணம் என்ன
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் என்ன
இவை தன்னதீனமாக இருக்கப் பெற்ற
இது முதலான த்விதீ யாந்த விசேஷணங்கள் எல்லாம் மேலே
பகவந்தம் என்ற விசேஷ்யத்திலே அந்வயத்து
விசத தம அநு பவேந நிரந்தரம் அநு பூய -என்று இணங்கக் கடவது

உயர்வற உயர்நலம் முதல் திருவாய் மொழியில்
நாம் அவன் இவன் உவன்
அவரவர் தம்தமது
நின்றனர் இருந்தனர் -என்று அடைவே யுள்ள மூன்று பாசுரங்களையும் தழுவி முதல் விசேஷணம்

பத்தர் முக்தர் நித்யர் -த்ரிவித் சேதனர்
த்ரி குணம் -காலம் -ஸூத்த ஸத்வம் -த்ரிவித அசேதனம்
த்ரி வித -விசேஷணம் சேதனர் மட்டிலும் அன்வயித்து அசேதனங்களில் அந்வயியாதும் இருக்கலாம் -என்பது தேசிகர் திரு உள்ளம்

சூர்ணிகையில் முடிவில் உள்ள பேத பதம் ஸ்வரூபம் முதலிய மூன்றிலும் அன்வயித்து
ஸ்வரூப பேதம்
ஸ்திதி பேதம்
ப்ரவ்ருத்தி பேதம் என்று கொள்ளப் பாங்காக உள்ளது
ஒவ்வொன்றிலும் அவாந்தர பேதங்கள் உண்டே)

———

உபய விபூதி யோகம்-அருளிச் செய்த பின்பு
ஹேய பிரதி படத்வம்-அருளிச் செய்கிறார்

க்லேச கர்மாத் யசேஷ தோஷ அசம்ஸ்ப்ருஷ்டம்(யோக ஸாஸ்த்ரத்தில் பதஞ்சலி ஸூத்ரம் அடியாகவே இத்தை அருளிச் செய்கிறார்)
சேதன அசேதனங்கள் இரண்டும் சரீரமாய்
ஈஸ்வரன் சரீரியாய் இருக்கிறான் ஆகில்
சரீர பிரயுக்தமான தோஷம் சரீரிக்கு வாராதோ -என்னில் –
தத் கத தோஷைர் அசம்ஸ்ப்ருஷ்டன் -என்கிறது

கிலேசம் ஆவது –
அவித்யா அஸ்மிதா அபிநிவேச ராக த்வேஷா பஞ்ச கிலேசா -இவை என்ன
கர்ம-இவற்றுக்கு காரணமுமாய் கார்யமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -என்ன

ஆதிசப்த க்ராஹ்யமான விபாக ஆசயங்கள் -என்ன
இவை முதலான அசேஷ தோஷங்களாலும் ஸ்பர்சிக்கப் படாதவன் –

விபாகம் ஆவது (பக்குவம்)-தேவாதி ஜாதி யோகம் (பிறப்பு)-என்ன
ஆயுஸ் என்ன -(போகம் ஸூக துக்கங்கள்)இவை முதலானவை

ஆசயம் ஆகிறது -தத் தஜ் ஜாத்ய அனு குண புத்தி பேதங்கள்

அசேஷபதத்தாலே அசித் கதமான பரிணாமத்தையும்
சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளையும் நினைக்கிறது

அசம்ஸ்பர்சத்தாலே ப்ராக பாவத்தை நினைக்கிறது

(இல்லாதவன் என்றால் முன்பு இருந்து இப்பொழுது இல்லாமல் இருப்பதைச் சொல்லாமல் முன்பே -எப்பொழுதுமே -இல்லாததைச் சொன்னவாறு)

(அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே)

——–

உபய விபூதி யோகம்-அருளிச் செய்த பின்பு
ஹேய பிரதி படத்வம்-அருளிச் செய்த பின்பு-சமஸ்த கல்யாண குணாத் மகத்வம்-அருளிச் செய்கிறார்

ஸ்வாபாவிக -இத்யாதி-
இதில் 1-சர்வ சாதாரணமாயும்-2-ஆஸ்ரித விஷயமாகவும் -3-ஆஸ்ரித விரோதி விஷயமாகவும்
மூன்று வகைப் பட்ட குணங்களைச் சொல்லுகிறது –

ஸ்வா பாவிகம் ஆகையாவதுஜலத்துக்கு சைத்யம் போலேவும் -அக்னிக்கு ஔஷ்ண்யம் போலேயும் -யாவத் த்ரவ்ய பாவியாய் இருக்கை-

அநவதிக அதிசய –
உபர்யுபர்யப்ஜபு வோஸபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீப்ஸயா சதா ஸ்திதா நோத் யமதோஸ்தி சேரதே-ஸ்தோத்ர ரத்னம் -19-என்கிறபடியே
தனித் தனியே நிஸ் சீமமாய் ஆச்சர்ய அவஹமுமாய் இருக்கை

(ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக் கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதே போல ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர் யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோஸ்தி ஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,)

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறதுயோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -(ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்தி) என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கர்மீ பவித்து இருந்துள்ள அசங்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –

பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ஸ்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-

சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்-உபாதான சக்தி யாகவுமாம்

தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்

இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே
அநந்தரம்ஆஸ்ரித விஷயமாக பன்னிரண்டு குணம் சொல்லுகிறது
1-சௌசீல்ய –
சீலம் ஆவது -மகதோ மந்தைச் சஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வபாவத்வம்
சௌசீல்யம் ஆவது -அந்த மஹத்வம் தன் திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை –
ஆத்மானம் மானுஷம் மன்யே –

2-வாத்சல்ய –
அதாகிறது -ஆஸ்ரித கதமான தோஷமும் குனமாய்த் தோற்றும்படியான ப்ரேமம் –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷத்தை தன பேறாகப் போக்கி ஸ்வ குணங்களாலே தரிப்பிக்கை
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உன்னை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய் நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே – -திருச் சந்த விருத்தம் -111
மாலே படிச் சோதி மாற்றெல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி -58
அதாவது அத்யஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவிருக்கும் படி
கோபாலத்வம் ஜூ குப்சிதம்

3-மார்த்த்வ –
இது ரூப குணமாய் இருக்க
ஆத்ம குண பிரகரண படிதமாகையாலே மாநசமான
தௌர்ர்ப்பல்யத்தைக் காட்டுகிறது –
அதாகிறது -ஆஸ்ரித விஸ்லேஷம் பொறுக்க மாட்டாது ஒழிகை –
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யானி பிரியாணி மது ராணி ச
ஹ்ருத் யான் யம்ருத கல்பானி மன ப்ரஹ்லாத நானி ச -ஆரண்ய -16-39
அநித்ரஸ் சததம் ராம -சுந்தர -36-44-

4-ஆர்ஜவ-
அதாவது -ஆஸ்ரித சம்ஸ்லேஷ அர்த்தமாக தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை-
அதாவது -அவர்கள் உடைய செவ்வைக் கேடு தானே செவ்வையாம்படி தான் செவ்வியனாய் இருக்கை -(பொய் கலவாது என் மெய் கலந்தானே)

5-சௌஹார்த்த –
அதாவது -சோபா நாசம்சீதி ஸூஹ்ருத் –
ஆஸ்ரிதர் உடைய சந்நிதியோடு அசந்நிதியோடு வாசி அற
அவர்கள் உடைய சர்வ மங்களங்களையும் அன்வேஷியா நிற்கை –

6-சாம்ய
அதாவது ஜாதி குண வ்ருத்தாதிகள் உடைய உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே ஆபிமுக்கியமே ஹேதுவாக
ஆஸ்ரயணீயத்வே சமனாகை-
குஹேன சஹித
சபர்யா பூஜிதாஸ் சம்யக்

7-காருண்ய –
அதாவது –ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அசஹிஷிஷ்ணுத்வம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
உத்சவேஷூ ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40–என்றும்
இயம் சா யத் க்ருதே ராமஸ் சதுர்ப்பி பரிதப்யதே
காருண்யே நான்ரு சம்ஸ்யேன சோகேன மதநேன ச – சுந்தர -15-49-என்றும்
ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருண்யாத் -ஆஸ்ரிதேத் யான்ரு சம்ஸ்யத
பத்நீ நஷ்டேதி சோகேன- ப்ரியேதி மதநேன ச -சுந்தர -15-50 -என்றும் -இருக்கை

8-மாதுர்ய-
அதாவது ஸ்வரூப ரூப குண விபூதிகளால் உண்டான சர்வதோ முகமான சாரச்யம்
ஹந்தும் ப்ரவ்ருத்தன் ஆனாலும் அவனுக்கு ரசாவஹனாய் இருக்கை
அஸூர்யமிவ ஸூர்யேன-
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்று இருக்கை

(அக்காரக் கனி-ஆராவமுதமே
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஓத்தே)

9-காம்பீர்ய –
அதாவது -ஆஸ்ரிதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருத்தராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்கை
அதாவது தன்னுடைய கொடையின் சீர்மையையும்
கொள்ளுகிறவன் உடைய சிறுமையையும் பாராது ஒழிகை-
எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கை-
யா ஆத்மாதா பலதா(தன்னையும் அருளி அநுபவிக்க வேண்டிய பலத்தையும் அருளுபவன்)
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ -நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான் -பெரிய திருவந்தாதி -53-

10-ஔதார்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை இரந்து கொடுக்கை –
ச சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்ய ச –
உதாராஸ் சர்வ ஏவைத –

11-சாதுர்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்து வைக்கை-
ஆஸ்ரிதராய் இருப்பார் தன்னுடைய ரஷகத்வத்திலே அதி சங்கை பண்ணினால்
அவ் வதி சங்கையைப் போக்கி ரஷிக்கை –
பாதாங்குஷ்டேன சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்-
பிபேத ச புநஸ் சாலான் –

12-ஸ்தைர்ய-
அதாவது ப்ரத்யூஹ சஹஸ்ரம் உண்டானாலும்
ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞை குலையாது ஒழிகை –
மகா ராஜர் தொடக்க மானவர் நேராக விரோதிக்கச் செய்தேயும் -ந த்யஜேயம் கதஞ்சன -என்றார் இறே

ஆக
இப் பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்
அநந்தரம் மூன்று குணம் ஆஸ்ரித பிரதி பஷ விஷயம் –

1-தைர்ய-
அதாவது எதிரியை மதியாது ஒழிகை
இலங்கையிலே ராவணனும் பலமும் எல்லாம் குறி அழியாது இருக்க
அவன் தம்பியை கடலுக்கு இக்கரையிலே லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம் பண்ணி வைத்தான் இறே
அப்திம் ந தேரித ந ஜிக்யித ராஷ சேந்தரம்
நைவாச்ய ஜிஜ்ஞித யதா ச பலா பலம் த்வம்
நிச் சம்யச் சபதி தஸ்ய பதெச்ப் யாஷி யஷிஞசஸ்
தஸ்யா நுஜம் கதமிதம் ஹாய் விபீஷணஞ்ச -அதிமாநுஷ ஸ்தவம் -24
மூல பலம் சந்நிஹிதமான வன்று பெருமாள் திரு உள்ளம் பூர்வ ஷணத்தில் காட்டில்
ஒரு விக்ருதி இன்றிக்கே  இருந்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

(அப்திம் ந தேரித ந ஜிக்யித ராக்ஷஸேந்திரம்
நைவாஸ்ய ஜஞ்ஜித யதா ஸ பலாபலம் த்வம்
நிஸ் சம்சயஸ் சபதி தஸ்ய பதேப்ய ஷிஞ்ச
தஸ்யானுஜம் கதமிதம் ஹி விபீஷணஞ்ச ஸ –24-

ஹே ராம த்வம் யதா –நீ எப்பொழுது
அப்திம் ந தேரித –கடலைக் கடக்க வில்லையோ

ந ஜிக்யித ராக்ஷஸேந்திரம் –ராவணனை ஜெயிக்க வில்லையோ

நைவ அஸ்ய ஜஞ்ஜித ஸ பலாபலம் –இந்த ராவணனுடைய பலாபலத்தையும் அறிய வில்லையோ

ததா -அப்போது
சபதி-சகாசமாக

தஸ்யானுஜம்-விபீஷணஞ்ச-தஸ்ய பதே-அவன் தம்பியான விபீஷணனை அவன் பதவியிலேயே
நிஸ் சம்சயஸ் அப்யஷிஞ்ச கதமிதம் ஹி ஸ –சம்சயம் இல்லாதவனாய் அபிஷேகம் பண்ணினாய்
என்பது பிரசித்தம் -இதுவும் எங்கனே

அபி ஷிஸ்ய ஸ லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராமா விஜ்வர பிரமுமோதஹ
இப்படி செய்து அருளினது சத்ய காமத்தவ ஸத்ய ஸங்கல்ப -குணங்களை ஆவிஷ்கரித்துக் கொண்ட படி –

கதமிதம் ஹி-இது எப்படிச் செய்தாய்
ஒரு வேளை இராவணன் சரணாகதி செய்தான் ஆகில்
இலங்கா சாம்ராஜ்யம் இல்லாமல் அயோத்யா சாம்ராஜ்யத்தையே கொடுத்து அருளுவாயே
இது என்ன லீலை-பரத்வ அபிமானம் கொண்டே அன்றோ)

2-சௌர்ய –
அதாவது பர பலத்திலே சென்று புகும் போது ஸ்வ பலம் போலே இருக்கையும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -என்கிறபடியே ப்ரஹர்த்தாவாய் இருக்கையும் –

3-பராக்கிரம -(பரர்களை ஆக்ரமிக்கும் ஸக்தி)
அதாவது சாரிகை வரும் போது கையும் வில்லுமாக சஞ்சரிக்கும் சஞ்சாரத்திலே
எதிரிகள் துவக்குண்டு எதிரி என்று அறியாதபடி சஞ்சரிக்கை
ப்ரஹர்த்தாரம் சரீரேஷூ ந தே பஸ்யந்தி ராகவம்
இந்த்ரி யார்த்தேஷூ திஷ்டந்தம் பூதாத்மா நமிவ பிரஜா -யுத்தம் -94-23-

அநந்தரம் ஆஸ்ரித விஷயமாகவும்
உபாய விஷயமாகவும்
உபேய விஷயமாகவும்
நாலு குணங்களைச் சொல்லுகிறது –

1-சத்ய காம-(கீழே பற்ற வரும் பொழுது)
நித்தியமான காமங்களை உடையவன் -என்கிறது -(ஆசைப்படும் பொருள் ஆஸ்ரிதற்கு அநுபாவ்யமான குணங்களையும் விபூதியையும் சொல்லிற்று)
அன்றிக்கே -காம்யந்த இதி காமா -ஆஸ்ரித ரஷண விஷய மநோ ரதம் -காமம் ஆகிறது
அது அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம் –

2-சத்ய சங்கல்ப –
அதாவது -அபூர்வமான போக்யங்களை சங்கல்ப்பித்து அனுபவிப்பிக்கும் இடத்தில் அமோகமாய் இருக்கை –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -திருவாய் -8-5-2- இருக்குமவர்களுக்கு
கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்கு தேவ மனுஷ்யாத் யவதார சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம்

3-க்ருதித்வ –
அதாவது ஆஸ்ரிதர் அபிமதம் பெற்றால் அப் பேறு தன்னதாய் இருக்கை –
அபிஷிச்ய ச லங்கா யாம் –
இவர்கள் கர்த்தவ்யங்களை யடையத் தான் ஏறிட்டுக் கொண்டு செய்கை -என்றுமாம்
ஆதி கர்மணி க்தின் நந்த –

4-க்ருதஜ்ஞதா-
அதாவது ஆஸ்ரிதர் ஒரு கால் சரணம் என்ன
அம் மாத்ரத்தாலே   பின்பு செய்யும் குற்றம் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –
ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த வற்றை ஒழிந்து அவர்கள் செய்த வற்றையே நினைத்து இருக்கை -என்னவுமாம்
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் பிரதமத்தில் சரணம் என்ற உக்தி மாத்ரத்தையே நினைத்து இருக்கும் என்னவுமாம்
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் அத்தை மறந்து அவர்கள் செய்ததை ஒழிய தான் செய்யாத வற்றையே
நினைத்து இருக்கை -என்னவுமாம்
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா

ஆதி –
இவை முதலான

அசங்க்யேய கல்யாண குண கணவ் ஏக மஹார்ணவம் –
என்னுடைய மனஸ்ஸூ க்கு கோசரமாய் இருப்பன சில குணங்கள் சொல்லிற்று இத்தனை போக்கி
அனுக்தமான குணங்களுக்கு எண்ணில்லை
ஒரு மஹார்ணவத்தில் ஜல பரமாணு வுக்கு சங்க்யை யுண்டாகில் யாய்த்து
பகவத் குணங்களுக்கு சங்க்யை யுண்டாவது
வர்ஷா யுதைர் யஸ்ய குணா ந சகா
சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ர –

—–

பரப் ப்ரஹ்ம பூதம் புருஷோத்தமம் –
பர ப்ரஹ்ம சப்தத்தாலும் புருஷோத்தம சப்தத்தாலும்
வேதாந்தங்களில் ப்ரசித்தனானவன்

பர ப்ரஹ்மம்ஆவது -ப்ருஹத்த்வ ப்ரும்ஹணத்வ குண யோகத்தால் ப்ரஹ்ம சப்த வாஸ்யத்வம் –

ப்ருஹத்வம் ஆவது -தான் பெரியனாகை

ப்ரும்ஹணத்வம் ஆவது -தம்மையே ஒக்க அருள் செய்வர்-மம சா தர்ம்யம் ஆகதா-ஆஸ்ரிதரை தன்னைப் போலே ஆக்குகை-தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – -பெரிய திருமொழி -11-3-5-என்றும்

இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சா தர்ம்யமாகதா
சர்க்கேசபி நோப ஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -கீதை -14-2-என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரிதரை தன்னைப் போலே ஆக்குகை-தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே-

என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -திருவாய் -3-9-4-

(இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா– ஸர்கேபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2

இதம் ஜ்ஞாநம் –சொல்லப் போகும் இந்த அறிவை உபாஸ்ரித்ய –அடைந்து மம ஸாதர்ம்யம் –என்னோடு ஸாம்யத்தை ஆகதா–அடைந்தவர்களாய் ஸர்கேபி நோப ஜாயந்தே –அவர்கள் இங்கு படைக்கவும் படுவதில்லை ப்ரலயே ந வ்யதந்தி ச-அழிக்கவும் படுவது இல்லை—வ்யதந்தி-துன்பப்படுவது இல்லை -நேரான அர்த்தம்

ஸ்ரீ பகவான் கூறுகிறார் -முன் கூறியதை விட வேறுபட்டதாய் அறிவுகளில் சிறந்ததாக அறிவைப் பற்றி மறுபடியும் உரைக்கப் போகிறேன் – எந்த அறிவைப் பெற்று எல்லா முனிவர்களும் இந்த சம்சாரத்துக்கு அப்பால் பட்டதான பேற்றைப் பெற்றனரோ – சொல்லப் போகும் அறிவைப் பெற்று என்னுடைய சாம்யத்தைப் பெற்றவர் ஸ்ருஷ்ட்டி காலங்களில் பிறக்கவும் மாட்டார்கள் – பிரளய காலங்களில் ஞான சங்கோசாதிகளைப் பெற்று சிரமப்படவும் மாட்டார்கள் –)

புருஷோத்தமத்வம் ஆவது –
யஸ்மாத் ஷரமதீ தோஹம் அஷராதபி சோத்தம
அதோஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15-18-என்று சர்வ அதிகன் -என்றும்
புரு =பஹூ ஸூநோதி= ததாதீதி புருஷ -என்று சர்வ அபேஷித பல ப்ரதன் ஆகையாலே பரம உதாரன் என்றும் சொல்லப் படுகை –

(யஸ்மாத் க்ஷரமதீ தோஹம் அக்ஷராதபி சோத்தம– அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

அஹம் – நான் யஸ்மாத் – யாதொரு காரணத்தினால் க்ஷரம் – க்ஷர புருஷனை-பத்த ஜீவாத்மாவைக் கூட்டிலும் அதீத: – கடந்து நிற்கிறேனோ அக்ஷராத் அபி – அக்ஷர புருஷனை -முக்தனைக் காட்டிலும்-கூட உத்தம: ச – மேலானவனாய் இருக்கிறேனோ அத: – அக் காரணத்தினாலேயே வேதே ₃லோகே – ஶ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும்(அபி நிஷ்பத்ய ச உத்தம புருஷ சாந்தோக்யம்-லோகம் -பார்க்கும் கருவி இங்கு -ஸ்ம்ருதி ) புருஷோத்தம: – புருஷோத்தமன் என்று ப்ரதி₂த: அஸ்மி –புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

இங்கு வேதம் லோகம் இரண்டும் இருப்பதால் லோகம் என்பது வேதம் விளக்கிய ஸ்ம்ருதிகள் -கலக்கம் இல்லா நல் தவ முனிவர் -நால் வேதம் கண்ட ரிஷிகள்-மந்த்ர த்ரஷ்டா முனிகள் -மனன சீலர் கவி கிராந்தி தர்சீ

புருஷோத்தமன் இவர்களைக் காட்டிலும் உத்தமன் -இவர்களில் உத்தமன் -இவர்களுக்கு உத்தமன்-பஞ்சமி -சஷ்ட்டி சப்தமி உருபு கொண்டு-யவ்கிகமாயும் ரூடியாகவும் இவனையே சொல்லும்-சம அதீப்ய தரித்ரன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -மிகுனரை இலனே

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல் வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும்-)

ஸ்ரீ ரங்க ஸாயினம்-
இப்படி என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையைச் சொல்லுகிறது –

அஸ்மத் ஸ்வாமினம் –
இத்தால் -கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்கிறபடியே
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகாலும் சீலத்தாலும்
தம்மோடு எனக்கு உண்டான முறையை உணர்த்தினவர் -என்றபடி –

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -கிஷ்கிந்தா -4-12-

(அஸ்மத் ஸ்வாமிநம் –பரிபூர்ணம் ப⁴க³வந்தம்–எமக்கு ஸ்வாமியாய் -ஒன்றிலும் குறைவில்லாத எம்பெருமானை
இதற்கு அநு பூய -என்ற ல்யப்போடே அந்வயம்)

———

இதுக்கு கீழ் கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லிற்று
இனி மேல் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை சொல்லுகிறார்

பிரபுத்த நித்ய நியாம்ய நித்ய தாஸ்ய ஏக ரச ஆத்ம ஸ்வபாவோஸஹம்-

நித்ய நியாம்யமாய்
நித்தியமான தாஸ்யத்தையே ஏக ரசமாக
உடைத்தாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வபாவம் உள்ளபடி பிரகாசித்த நான் –

இத்தால் ஸ்வா தந்த்ர்யமும் விஷயாந்தரமும் ஆத்ம நாசகம் -என்றபடி –

(நித்ய நியாம்யமாய்-நித்ய தாஸ்ய ஏக ரஸமான ஆத்ம ஸ்வ பாவத்தை நன்கு அறிந்து கொண்டவனான அடியேன்
ப்ரபு³த்³த என்றது நன்றாக அறியப்பட்ட -என்றபடி –
ஸ்வாதீன -ஸ்வார்த்த -கர்த்ருத்வ போக்த்ருத்வ பிரமம் இல்லாத படி அறிவதே நன்றாக அறிவதாகும்
இவ் வாத்மா எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே ந்யாம்யனும் தாஸ்யனுமானவன் என்று நன்றாக அறிந்து கொண்ட நான் என்றபடி –)

தத் ஏக அனுபவ
பகவத் விஷயம் ஒன்றுமே ஜ்ஞாநத்துக்கு விஷயமாம் படி யாய் –

தத் ஏக பிரியா
அவனையே பக்திக்கு விஷயம் ஆக்கினவனாய்

இத்தால் பகவத் அனுபவ ஹேதுவாய் இருந்துள்ள பர பக்தியாதிகளை நினைக்கிறது –

(ததே³காநுப⁴வ: -ததே³க ப்ரிய: –பகவத் விஷயம் ஒன்றே ஞானத்துக்கும் பக்திக்கும் விஷயமாகப் பெற்றவனும்)

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||ஶ்லோகம் 31 –

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்

இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு)

——-

பரி பூரணம் பகவந்தம் விசத தம அனுபவேன நிரந்தர அனுபூய-
ஜ்ஞாநாதிகளால் குறைவற்று இருக்கிற ஈஸ்வரனைப்
பரி பூரணமாக
விசத தம அனுபவத்தாலே
இடைவிடாதே  அனுபவித்து –

பூர்ண அனுபவம் ஆகிறது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் அனுபவத்துக்கு விஷயமாய் இருக்கை –

விசத அனுபவம் ஆகிறது -பிரத்யஷ அனுபவம் என்னலாம் படி தத் சமமாய் இருக்கை –
அது தான் பர பக்தி தச அனுபவம்
விசத தர அனுபவம் ஆகிறது -பர ஜ்ஞான தச அனுபவம் –
விசத தம அனுபவம் ஆகிறது -பரம பக்தி தச அனுபவம் –

நிரந்தர அனுபவம் ஆகிறது -இடை இடையே விஷயாந்தரம் கலசாது இருக்கை –

தத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்த உசித அசேஷ சேஷைதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவானி-
அவ் வனுபவத்தாலே ஜநிதமான
அநவதிக அதிசய ப்ரீதியாலே செய்விக்கப் படுமதாய் –
சர்வ அவஸ்தை களிலும் உசிதமான சகல சேஷ வருத்தி ஒன்றையே பற்றின ஆசையை வடிவாக உடைத்தாய்
யாவதாத்மா பாவியான கைங்கர்யத்துக்கு ஆஸ்ரய பூதனாக வேணும் –

அநவதிக அதிசயம் ஆகையாவது –
யாவதாத்ம பாவியான கைங்கர்யத்துக்கு அடியாய் இருக்கையும்
பர பக்தி யாதிகளைக் காட்டில் அதிசயத்து இருக்கையும் –

அசேஷ அவஸ்தை களாவன
அந்தபுரம் -திரு வோலக்கம் -பூம் சோலை -நீர் -வாவி இவை முதலானவை -என்னுதல்
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்கள் ஆகிற அவஸ்தா விசேஷங்கள் -என்னுதல்

அசேஷ சேஷைதை யாகிறது –
நிவாச சய்யா ஆசன பாதுக அம்ஸூக உபதான வர்ஷாதப வாரணாதிபி -என்றும்

சென்றால் குடையாம் -என்றும்

கிம் சைனாம் ப்ரதிவஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருசம்
யதா யதா ஹி கௌசல்யா தாசி வச்ச சகீவ ச
பார்யாவத் பகிநீ வச்ச மாத்ரு வச்சோப திஷ்டதி -அயோத்யா -12-68- என்றும்
சொல்லுகிறபடியே நாநா விதமான அடிமைகள்-

(நிவாஸ ஶய்யாஸந பாதுக அம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஶ்லோகம் 40 –

நீ திருவனந்தாழ்வானின் திரு மேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.)

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற்கு அரவு-ஸ்ரீ பொய்கையாழ்வார்)

(தத³நுப⁴வ ஜநிதாநவதி⁴காதிஶய ப்ரீதிகாரித-அஶேஷாவஸ்தோ²சித
அஶேஷ ஶேஷதைக ரதி ரூப நித்யகிங்கரோ ப⁴வாநி –அவ் வனுபவத்தினால் விளைவிக்கப் பெற்ற மிகச் சிறந்த உகப்பினால் செய்விக்கப் பட்ட ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ஊற்றத்தோடு கூடி இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தில் நிரதனாகக் கடவேன்

ஶேஷதைக ரதி-என்பது பஹு வ்ரீஹி யாகி நித்ய கிங்கரனுக்கு விசேஷணம் ஆகிறது –
அசேஷமான அடிமைகளிலும் நன்கு ஈடுபட்ட நித்ய கிங்கரனாக ஆகக் கடவேன் என்றபடி

ஆக இவ்வளவும் த்வயத்தில் உபேயத்திலே நோக்கான உத்தர கண்டம் விவரிக்கப்பட்ட தாகிறது –)

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading