ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -2 -3–4-5-6-7–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை -2- அவதாரிகை

ப்ராப்யத்தை பிரார்த்தித்தார் கீழ்

இத்தால்
1-அநந்ய கதித்வம் -என்ன
2-ஆகிஞ்சன்யம் – என்ன
3-ஸ்வ தோஷம் – என்ன
இவற்றை முன்னிட்டுக் கொண்டு
இந்தக் கைங்கர்ய சித்த் யர்த்தமாக திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

ஸ்வாத்ம நித்ய நியாம்ய
நித்ய தாஸ்யைக ரசாத்ம
ஸ்வபாவ அனுசந்தான பூர்வக
பகவத் அநவதிக அதிசய ஸ்வாம்யாத்
யகில குண கண அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கைங்கர்ய ப்ராப்த் யுபாய
பூத
பக்தி தத் உபாய சமயக் ஜ்ஞான
தத் உபாய சமீசீந க்ரியா
தத் அனுகுண சாத்விக தாஸ்திக்யாதி
சமஸ்த ஆத்ம குண விஹீன
துருத்தரா நந்த
தத் விபர்யய
ஜ்ஞான க்ரிய அனுகுண
அநாதி பாப வாசனா மஹார்ணவ
அந்தர் நிமக்ன

தில தைலவத் தாருவஹ் நிவத் துர் விவேச
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ
அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப
துரத்யய பகவன் மாயா
திரோஹிதஸ்வ பிரகாச
அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசக்ய
விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித
அநாக தாநந்த கால சமீஷயாபி
அதருஷ்ட சந்தா ரோபாய
நிகில ஜந்து ஜாத சரண்ய

ஸ்ரீ மன் நாராயணா
த்வ சரணார விந்த யுகளம்
சரணம் அஹம் ப்ரபத்யே

————

1-ஸ்வ ஸ்வரூப அனுசந்தான ப்ரீதியாலும்
2-பகவத் குண அனுபவ ப்ரீதியாலும்
3-கைங்கர்ய ஸ்வரூப கதன ப்ரீதியாலும்
ஸ்வாத்ம நித்ய நியாம்ய -என்று தொடங்கி -நித்ய கைங்கர்ய -என்னும் அளவும்
செல்ல உக்தத்தை அனுபாஷிக்கிறார்–

1-பார தந்த்ர்ய ரசத்தாலே ஸ்வரூப அனுசந்தானமும்
2-பகவத் வை லஷணயத்தாலே தத் குண அனுபவமும்
3-உபய அனுகூலமாக ப்ரீதி காரிதம் ஆகையாலே கைங்கர்யமும் அபிமதமாய் இருக்கும் இறே –

(ஸ்வாத்ம நித்ய நியாம்ய –அடியேன் எப்பொழுதும் நியமிக்கத் தக்கவனாய் இருக்கை என்ன

நித்ய தா³ஸ்ய-எப்பொழுதும் அடிமை செய்து கொண்டே இருக்கை என்ன

ஏக ரஸ–ஆகிய இவற்றை சாரமாக வுடைய

ஆத்ம ஸ்வபா⁴வாநுஸந்தா⁴ந பூர்வக ப⁴க³வத³நவதி⁴காதிஶய
ஸ்வாம்யாத்³யகி²ல கு³ணக³ணாநுப⁴வஜநித -எப்போதும் தனக்கே நியமிக்கத் தகுந்தவனாய் இருக்கை என்ன –
நித்ய கைங்கர்யத்திலே ஊன்றி இருக்கை என்ன
இப்படிப்பட்ட ஸ்வ ஸ்வ பாவத்தை அனுசந்தித்திக் கொண்டு
எம்பெருமானது சிறந்த ஸ்வாமித்வம் முதலிய சகல கல்யாண குணங்களையும் அனுபவிப்பதனால் யுண்டான)

அநவதிக அதிசய ஸ்வாம்ய -என்று
ஸ்வாத்ம நித்ய நியாம்ய
நித்ய தாஸ்யைக ரசாத்ம
ஸ்வபாவ அனுசந்தான பூர்வக
பகவத் அநவதிக அதிசய ஸ்வாம்ய-என்று ஔ பாதிக ஸ்வாம்யத்தை வ்யாவர்த்திக்கிறது –

மாதா பித்ரு ப்ரப்ருதிகள் உடைய ஸ்வாமித்வம்
ஒரோ ரஷணங்களுக்கு உறுப்பாய் -ஒரு நாளிலே முடியவும் கடவதாய் இறே இருப்பது –
அங்கன் அன்றிக்கே இந்த ஸ்வாமித்வம் சர்வ வித ரஷணங்களுக்கும் உறுப்பாய்
சத்தா பிரயுக்தமாயும் இருக்கும் இறே

ஸ்வாமித்வ பிரயுக்தமான குணங்களை சொல்லிற்று கீழ் சூரணை யிலே
அவற்றுக்கு அடியான ஸ்வாமித்வத்தை முதலாகச் சொல்லுகிறது இங்கு

கைங்கர்ய ப்ராப்த் யுபாய பூத பத்தி யாகிறது -பர பக்தி

தத் உபாய சமயக் ஜ்ஞானம் ஆகிறது -ஜீவ பர யாதாம்ய விஷயமாய்
அநவரத பாவமே யாம்படி பரி பக்வமான ஜ்ஞான விசேஷம்

தத் உபாய சமீசீந க்ரியா –
சமீசீந க்ரியை யாகிறது -ஆத்ம யாதாம்ய ஜ்ஞானத்தை உடைத்தாய்
த்ரிவித பரி த்யாக யுக்தமான கர்ம யோகம் –

தத் அனுகுண சாத்விக தாஸ்திக்யாதி சமஸ்த ஆத்ம குண விஹீன –
கீழ்ச் சொன்ன கர்ம யோகத்துக்கு அநுகுணமாய்
சத்வ பிரதானமாய்
சமோ தமஸ் தபஸ் சௌசம் ஷாந்தி ஆர்ஜவம் ஏவ ச
ஜ்ஞானம் விஞ்ஞானம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வ பாவஜம்-கீதை -18-42
என்கிறபடியே சம தமாத் யாஸ்திக்யம் பர்யந்தமான குணங்களும்
அமா நித்வாத் யாத்ம குணங்களுமான சமஸ்த ஆத்ம குணங்களாலே
சூன்யனாய் இருந்தேனே யாகிலும் –

(ஸமோ தமஸ் தபஸ் ஷௌசம் க்ஷாந்திர் ஆர்ஜவமேவ ச– ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ரஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்--৷৷18.42৷৷

ஸமோ –வெளி இந்திரியங்களை அடக்குதல் தமஸ் –மனத்தை அடக்குதல் தபஸ் -ஸாஸ்த்ரங்களை ஒட்டி சரீரத்தை வருத்துதல் ஷௌசம்–சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதியை உண்டாக்கிக் கொள்ளுதல் க்ஷாந்திஸ் –பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் மனம் வேறுபாடு அடையாமல் இருத்தல் — ஆர்ஜவம் -பிறரிடம் மனம் மெய் மொழிகளில் ஒருபடிப்பட நடத்தல் ஜ்ஞாநம் –பரதத்வத்தையும் மற்ற தத்துவங்களையும் உள்ளபடி அறிதல் விஜ்ஞாநம் -பரதத்வத்தின் தனித் தன்மைகளை அறிதல் ஆஸ்திக்யம் –வேதத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மையானதே என்ற அசைக்க முடியாத படி உறுதி கொள்ளுதல் ஏவம் ச -ஆகிய இவை ஸ்வபாவஜம்–முன் வினையால் ஏற்பட்ட ப்ரஹ்மம் கர்ம -ப்ராஹ்மணனுக்கு உரிய செயலாகும்

வெளி இந்திரியங்களை அடக்குதல் – மனத்தை அடக்குதல் சாஸ்திரங்களை ஒட்டி சரீரத்தை வருந்துதல் – சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யத் தகுதியை உண்டாக்கிக் கொள்ளுதல் – பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் மனம் வேறுபாடு அடையாமல் இருத்தல் – பிறர் இடம் மனம் மெய் மொழிகளில் ஒருபடிப் பட நடத்தல் – பர தத்துவத்தையும் மற்ற தத்துவங்களையும் உள்ளபடி அறிதல் -பரதத்வத்திடம் இருக்கும் தனித்தன்மைகளை அறிதல் – வேதத்தில் சொல்லியது அனைத்தும் உண்மையானது என்று அசைக்க முடியாதபடி உறுதி கொள்ளுதல் – ஆகிய இவை முன் வினையால் ஏற்பட்ட பிராமணனுக்கு உரிய செயல்களாகும் –) (அஶேஷாவஸ்தோ²சித அஶேஷஶேஷதைகரதிரூப நித்ய கைங்கர்ய ப்ராப்த்யுபாய பூ⁴தப⁴க்தி –ஸர்வ அவஸ்த உசித ஸர்வ வித கைங்கர்யங்களிலும் ப்ராவண்யம் கொண்டு இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்துக்கு உபாயமான பக்தி என்ன தது³பாய ஸம்யக்³ஜ்ஞாந–அதுக்கும் உபாயமான பரிபக்குவ ஞானம் என்ன தது³பாய ஸமீசீந க்ரியா -அதுக்கும் உபாயமான நல்ல கர்ம யோகம் என்ன – தத³நுகு³ண ஸாத்விகதாஸ்திக்யாதி³ ஸமஸ்தா ஆத்மகு³ண விஹீந:–அதற்கும் உறுப்பான -ஸாத்விகத்வம் ஆஸ்திக்யம் முதலான ஆத்ம குணங்கள் என்ன ஆகிய இவை சிறிதும் இல்லாதவனாய்) ———

துருத்தர அநந்த தத் விபர்யய ஜ்ஞான க்ரிய அனுகுண அநாதி பாப வாசனா மஹார்ணவ அந்தர் நிமக்ன –
இதுக்கு கீழ்
அஹம் அஸ்ம் யபராதானாம் ஆலயோ அகிஞ்சநோச்கதி
த்வமேவோபாய பூதோ மே பவேதி பிரார்த்தனா மதி
சரணாகதி ரித் யுக்தா ஸா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் –என்கிறபடியே
தம்முடைய ஆகிஞ்சன்யம் சொன்னாரே

இதுக்கு மேலே
ஸ்வ தோஷ ஞாபனம்  பண்ணுகிறார்

(துருத்தர)கடக்க வரிதாய்
அவதி இன்றிக்கே  கீழ் சொன்ன கர்ம ஜ்ஞானங்களுக்கு
விபரீதமாய் இருந்துள்ள
ஜ்ஞானம் என்ன -வ்ருத்தம் என்ன – இவற்றுக்கு அநுகுணமாய்
அநாதியாய் இருந்துள்ள பாப வாசனை யாகிற பெரும் கடலிலே
அழுந்திக் கிடக்கிற –

பாப வாசனை யாகிறது -பாபத்தால் வந்த வாசனை யாதல்
பாப ஹேதுவான வாசனை யாதல்-

—————————————————————————————————

தில தைலவத் தாரு வஹ்நிவத் துர் விவேச
த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ
அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப
துரத்யய பகவன் மாயா
திரோஹிதஸ்வ பிரகாச
அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசகா
விஸ்ரம்சன கர்ம பாச ப்ரக்ரதித
அநாக தாநந்த கால சமீஷயாபி
அதருஷ்ட சந்தா ரோபாய
நிகில ஜந்து ஜாத சரண்ய

பாப வாசனையில் அகப்படுகைக்கு அடியான
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான
ஸ்வரூப திரோதா நத்தைச் சொல்லுகிறது –

தில தைலவத் தாரு வஹ் நிவத் துர்விவேச-
பிரகிருதி ஆத்மா விவேகம் பண்ணும் இடத்தில்
சிலரால் பிரிய அனுசந்திக்க அரிது என்னும் இடத்துக்கு
இரண்டு திருஷ்டாந்தம் சொல்கிறார்

விரகராய் சக்தருமாய் இருப்பார் பிரிக்கில் பிரிக்கும் இத்தனை இறே

எள்ளில் எண்ணெய் போலேயும்
அரணியில் அக்நி போலேயும் -இருக்கை –

இப்படி ஜ்ஞான வாசனையாலும்
பகவத் பிரசாதத்தாலுமாக பிரக்ருதியையும் ஆத்மாவையும்
பிரிய அனுசந்திக்குமது ஒழிய
அல்லாதார்க்கு பிரிய அனுசந்திக்க ஒண்ணாத படி இறே
பிரக்ருதியில் ஆத்மா அழுந்தித் திரோ ஹிதமாகக் கிடக்கிற படி –

தாருண யக்நிர் யதா தைலம் திலே தத்வத் புமா நபி
பிரதானே அவஸ்திதோ வ்யாபீசேத நாத்மா ஆத்ம வேதன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-28-என்னக் கடவது இறே –

த்ரி குண ஷண ஷரண ஸ்வபாவ –
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களையும்
சத்த பரிணாமித்வத்தையும் ஸ்வ பாவமாக உடைத்தாய் –

அசேதன பிரகிருதி வ்யாப்தி ரூப –
ஜடா ஸ்வ பாவமான பிரக்ருதியிலே அவர்ஜீயமான சம்பந்தத்தை உடைத்தாய் –

துரத்யய பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாச –
மம மாயா துரத்யயா-என்கிறபடியே
கடக்க அரிதுமாய்
ஒரு சர்வ சக்தியாலே பிணைக்கப் பட்டதாய்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மஹேஸ்வரம்-என்கிறபடியே
மாயா சப்த வாஸ்யையாய் இருந்துள்ள பிரக்ருதியாலே
மறைக்கப் பட்ட ஆத்ம பிரகாசத்தை உடையனாய்

அநாதி அவித்யா சஞ்சித அனந்த அசக்ய விஸ்ரம்சன கர்ம பாச ப்ர க்ரதித –
அநாதியான அஜ்ஞ்ஞாநத்தாலே திரட்டப் பட்டதாய்
முடிவு இன்றிக்கே என்னோடு பிறரோடு வாசி அற
ஒருவராலும் அவிழ்க்க சக்யம் அன்றிக்கே
இருந்துள்ள புண்ய பாப ரூபமான கர்மம் ஆகிற கயிற்றாலே

புறமறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும்
முறை முறையாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன்
நிறமுடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே -திருவாய் -5-1-6-என்கிறபடியே
கட்டுண்டவனாய் –

இவ்வளவும் வர -அபராதானாம் ஆலயத்வம் -சொல்லிற்று ஆய்த்து-

——–

பாப வாஸநா மஹார்ணவ அந்தர் நிமக்ன -என்று வைத்து
பின்பு -பகவன் மாயா திரோஹித ஸ்வ பிரகாச -என்று வைத்து
பின்பு -கர்ம பாச ப்ர க்ரதித -என்கையாலே
வாஸநா கார்யம் ஸ்வரூப திரோதான ரூபமான அஞ்ஞானம்
தத் கார்யம் கர்மம் -என்று சொல்லிற்று ஆய்த்து –

அநாகத அநந்த கால சமீஷயாபி அத்ருஷ்ட சந்தா ரோபாய அஹம் –
ஆகையாலே
இதுக்கு முன்பு பாராதே மேலும் முடிவு இன்றிக்கே இருந்துள்ள –
மேல் வரப் புகுகிறதாய்
அனந்தமாய் இருந்துள்ள கால பரம்பரைகளை அடையப் பார்த்தாலும்
காணப் படாமல் இருந்துள்ள சம்சார சாகர சமுத்தரண உபாயத்தை உடையனான நான்

நிகில ஜந்து ஜாத சரண்ய
இப்படி அனுகூலங்களில் ஒன்றும் இன்றிக்கே
பிரதி கூலங்களில் இல்லாதது இன்றிக்கே
ஜன்ம மாத்திர யோகிகளான சகல ஜந்துக்களுக்கும்

இத்தால் எனக்கும்-சரண வரண அர்ஹன் என்று கருத்து –

அகில ஜகத் ஸ்வாமின் -என்று வைத்து
அஸ்மத் ஸ்வாமின் -என்னுமா போலே

———————————————————————————-
ஸ்ரீ மன் நாராயணா
த்வ சரணாரவிந்த யுகளம்
சரணம் அஹம் ப்ரபத்யே

ஸ்ரீ மன் –
பூர்வ வ்ருத்தம் பார்த்து
ஷிபாமி -என்ன அவசரம் இன்றிக்கே
அருகே இருந்து சேர்ப்பாரும் உண்டு -என்கிறார்

நாராயணா –
இஜ் ஜந்து விமுகமாய்க் கிடக்கும் தசையிலும்
சத்தையை நோக்கிக் கொண்டு போந்தவன் அல்லையோ –

ஆக
அருகு இருக்கும் பிராட்டியைப் பார்த்தாலும்
தேவரைப் பார்த்தாலும்
எவ் வழி யாலும் ரஷித்தே யாக வேணும் -என்றபடி

த்வ சரணாரவிந்த யுகளம் –
பரம காருணிகரான தேவர் உடையதாய்
சர்வ ஸூலபமாய்
நிரதிசய போக்யமாய்
ஒன்றுக்கு ஓன்று உபமாநமாம் அது ஒழியச்
சலித்துப் பார்த்தாலும்
வேறு உபமானம் இன்றிக்கே இருக்கிற திருவடிகளை –

சரணம் அஹம் ப்ரபத்யே –
உபாயமாக அத்யவசிக்கிறேன்

இது கத்யர்த்தம் ஆனாலும்
கத்யர்த்தா புத்த்யர்த்தா -என்கிற ந்யாயத்தாலே
அத்யவசாயத்தைக் காட்டுகிறது

———————————————————————————–

சூரணை -3- அவதாரிகை –

உபாய வரண சமநந்தரம்
அர்த்தித்வ மாத்ரத்தாலே
எனக்கு தாஸ்ய ரஸத்தைத் தந்து அருள வேணும்
என்று மஹா விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு
தம்முடைய ப்ராப்யத்தை அர்த்திக்கிறார் –

ஏவம் அவஸ்தி தஸ்யாபி
அர்த்தித்வ மாத்ரேண
பரம காருணிகோ பகவான்
ஸ்வ அனுபவ ப்ரீத்யா உபநீத ஐகாந்திக ஆத்யந்திக
நித்ய கைங்கர்ய ரதி ரூப
நித்ய தாஸ்யம் தாஸ்யதீதி
விஸ்வாஸ பூர்வகம்
பகவந்தம் நித்ய கிங்கர
தாம் ப்ரார்த்தயே

(ஏவமவஸ்தி²தஸ்யாபி –கீழ்ச் சூர்ணிகையில் விரிவாகச் சொன்னபடியே ஆகிஞ்சன்யாதி களே வடிவெடுத்து இருக்கின்ற எனக்கும்

பரமகாருணிகோ ப⁴க³வாந் –பேர் அருளானனான எம்பெருமான்

அர்தி²த்வ மாத்ரேண -என் பக்கலில் உள்ள இரப்பையே கொண்டு

ஸ்வாநுப⁴வ ப்ரீத்ய உபநீத ஐகாந்திக ஆத்யந்திக நித்ய கைங்கர்யைக ரதி ரூப
நித்ய தா³ஸ்யம் தா³ஸ்யதீதி விஶ்வாஸ பூர்வகம்-தன்னை அனுபவிக்கும் உகப்பால் யுண்டாவதாய்
ஒருபடிப்பட்டதாய்
முடிவின்றிக்கே இருந்துள்ள
அடிமையிலேயே ஊற்றம் உற்று இருக்கை யாகிற நித்ய கைங்கர்யத்தை அருளப் போகிறான் என்கிற நம்பிக்கையுடன்

ப⁴க³வந்தம் நித்ய கிங்கரதாம் ப்ரார்த²யே –எம்பெருமான் இடத்தில் நித்ய கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறேன்)

(குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –ஸ்ரீ திரு மாலை-25)

ஏவம் அவஸ்தி தஸ்யாபி –
உக்தி பிரகாரத்தாலே நின்ற எனக்கும்
அதாகிறது -அபராதாநாம் ஆலயனாய்
அகிஞ்சனனாய் கொண்டு
உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றின எனக்கும் -என்றபடி

அர்த்தித்வ மாத்ரேண
விரோதி வர்க்கத்தில் உபேஷை யாதல்
பிராப்யத்தில் த்வரை யாதல் -இன்றிக்கே
நிரபேஷனாய் இராதே
அபேஷித்த மாத்ரமே கொண்டு

பரம காருணிகோ பகவான் –
என்னுடைய சாம்சாரிகமான துக்கத்தைக் கண்டு
(வியசனேஷு மனுஷ்யாணாம்)ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே
அறப் பொறுக்க மாட்டாத ஸ்வ பாவத்தை உடையனாய்
ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு ஹேதுவான ஜ்ஞான சக்தியாதிகளால்
பரி பூரணராய் இருந்து உள்ளவர் .

இவ் விசேஷணங்கள் இரண்டும் அர்த்தநா மாத்ரத்தாலே
புருஷார்த்த ப்ரதனாகைக்கு ஹேதுக்களாகச் சொல்லுகிறது –

இனி மேல் அபேஷிதம் தன்னையே சொல்லுகிறது –
ஸ்வ அனுபவ ப்ரீத்யா உபநீத ஐகாந்திக ஆத்யந்திக நித்ய கைங்கர்ய ரதி ரூப –
தன்னை அனுபவிக்கும் அத்தாலே உண்டான ப்ரீதியாலே உண்டாக்கப் பட்டதாய்
ஒருபடிப் பட்டு முடிவு இன்றிக்கே இருந்துள்ள
கிங்கர பாவத்தைப் பற்றி இருந்துள்ள
ஆசையை வடிவாக உடைத்தான –

நித்ய தாஸ்யம் தாஸ்யதீதி-
யாவதாத்ம பாவியான தாஸ்யத்தை தந்து அருளும் என்கிற

விஸ்வாச பூர்வகம்
விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு

பகவந்தம் நித்ய கிங்கர தாம் ப்ரார்த்தயே –
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஊற்றுவாயான
ஜ்ஞான சக்த்யாதிகள் ஆறும் தன்னை
ஆஸ்ரயித்து நிறம் பெறும் படியான சர்வேஸ்வரனைக் குறித்து
நித்ய கிங்கரதையை பிரார்த்திக்கிறேன்

(ஜ்ஞான சக்த்யாதிகள் ஆறும்-மற்ற அனைத்து கல்யாண குணங்களுக்கும் ஊற்றுவாய்
இவை அவனிடம் இருப்பதாலேயே குணங்களுக்கு ஏற்றம் உண்டாகும்
கோபமும் திருட்டும் கூட அவனிடம் இருந்து சிறப்பும் உபா தேயமும் ஆகுமே)

தாஸ்யம் என்றும் கிங்கரதை என்றும் பர்யாயம்

———————————————————————————–

சூரணைகள் –4-5-அவதாரிகை –
தம் பாசுரத்தாலே
ப்ராப்யத்தை பிரார்த்தித்தார் -கீழ் –
இதிஹாசிக புருஷர்கள் பிரார்த்தித்த பிரகாரத்தே
பிரார்த்திக்கிறார் இங்கு –

என்ன பாசுரத்துக்கு இரங்கும் என்று அறியாத படியான
தம்முடைய பிராப்ய த்வரையாலே-

(எம்பெருமானே
உன்னை அனுபவித்த -அதனால் உண்டான உகப்பினால் விளையும் கைங்கர்யத்தை
பரம கிருபையினால் அடியேனுக்குத் தந்து அருள வேண்டும்
வேறு புகல் அறிகின்றிலேன்
செந்தாமரைக் கண்ணனே -ஸர்வ அவஸ்தைகளிலும் உனக்குச் செய்யக் கூடிய ஸகல வித கைங்கர்யங்களிலும் அடியேன் ருசி உடையேனாம் படி
நீ தானே செய்து அருள வேணும் என்கிறார் இந்த ஸ்லோகங்களாலே -இவற்றுக்கு ஆகரம் கண்டு கொள்வது–)

தவாநுபூ⁴தி ஸம்பூ⁴த ப்ரீதிகாரித தா³ஸதாம் ।
தே³ஹி மே க்ருʼபயா நாத² * ந ஜாநே க³திம் அந்யதா² ॥
சூரணை 4-

தவா நுபூதி சம்பூத ப்ரீதிகாரித தாசதாம் தேஹி –
உன்னுடைய அநு பூதியில் உண்டான
ப்ரீதியாலே பண்ணப் பட்ட
தாஸ்ய ரசத்தைத் தந்து அருள வேணும்

மே –
ருசிக்கு மேற்பட இன்றியிலே இருக்கிற எனக்கு –

க்ருபயா நாத –
இத் தலையிலே துர்க் கதியைக் கண்டு
இரங்கின இரக்கத்தாலும்
அவர்ஜநீய சம்பந்தத்தாலும்

ந ஜானே கதிம் அந்யதா–
இப் பிரகாரம் ஒழிய வேறு ஒரு உபாயம்
அறிகிறிலேன்

(என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–திருவாய்மொழி -5-8-3-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது

இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–திருவாய்மொழி –5-8-8-)

——-

ஸர்வ அவஸ்தோ²சித அஶேஷ ஶேஷதைக ரதிஸ் தவ ।
ப⁴வேயம் புண்ட³ரீகாக்ஷ! * த்வமே வைவம் குருஷ்வ மாம் ॥
–5-

ஸர்வ அவஸ்த உசித அசேஷ சேஷைதைக ரதிஸ் தவ-
இத் தாஸ்யத்துக்கு அடியான ப்ரீதியும்
எனக்கு உண்டாம்படி தேவரீரே பார்த்து
அருள வேணும் -என்கிறார் –

தேவர் திருவடிகளிலே சர்வ அவஸ்தை களிலும்
உசிதமான சர்வ சேஷத்வத்தை ஒன்றையுமே
பற்றி இருந்துள்ள ப்ரேமத்தை உடையேனாக வேணும் –

பவேயம் புண்டரீகாஷ –
ஜிதந்தே புண்டரீகாஷ -என்கிறபடியே
ருசி ஜநகமான கடாஷத்தாலேயே
இப் ப்ரேமத்தை உடையேனாம் படி
பண்ணி அருள வேணும் –

த்வமே வைவம் குருஷ்வ மாம் —
என் பக்கல் ஒரு கைம் முதல் இன்றிக்கே
சர்வ அபேஷிதங்களுக்கும்
தேவர் கை பார்த்து இருக்கிற என்னை
தேவரே இப்படிப் பண்ணி அருள வேணும் –

————————————————————————————

சூரணை -6- அவதாரிகை –

நாம் உம்முடைய அபேஷிதம் தருகைக்கு
பிராப்யத்தின் உடைய யதா ஜ்ஞானமும்
தத் ருசியும் உமக்கு உண்டோ -என்ன

இப் பாசுரம் சொன்ன மாத்ரமே கொண்டு
அதின் அர்த்த தாத்பர்யத்தில் என் மனஸ் ஸூ நிஷ்டமாம் படி
தேவரே பார்த்து அருள வேணும்என்கிறார்-

ஸ்ரீ ரெங்க நாதனே
உன்னுடைய திருவருளால் அடியேன் அதிகார பூர்த்தி பெற்றவனாக நினைத்து இருக்கிறேன்
ஒருகால் அப்படிப்பட்ட அதிகார பூர்த்தி இல்லையே யானாலும்
அடியேனிடத்தில் கிடைக்கின்ற யுக்தி வியாஜ்யத்தைக் கொண்டு நீயே சேஷ பூர்ணம் செய்து கொள்ள வேணும் என்று பிரார்த்திக்கிறார் இந்த சூர்ணிகையில்)

ஏவம் பூத தத்வ யாதாம்ய அவ போத
தத் இச்சா ரஹிதஸ்யாபி
ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப நேன
உச்யமான அர்த்த பரமார்த்த நிஷ்டம்
மே மனஸ் த்வமேவ அத்யைவ காரய

(ஏவம்பூ⁴த தத்த்வயாதா²த்ம்ய அவபோ³த⁴ததி³ச்சா²ரஹிதஸ்யாபி –இப்படி மிகச் சிறந்த புருஷார்த்தத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வதும் -அறிந்து கொள்ள விருப்பமும் இல்லாதவனாய் இருந்தாலும் 

ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப³நேந-என் வாய் மொழி தன்னையே கொண்டு

மே மநஸ் -என்னுடைய உள்ளத்தை

உச்யமாந அர்த்த பரமார்த² நிஷ்ட²ம் -உபாய உபேயங்களின் உண்மை யுணர்ச்சி பெற்றதாக

த்வமேவ அத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –

குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –)

ஏவம் பூத தத்வ யாதாம்ய போத தத் இச்சா ரஹிதஸ்யாபி –
ஜீவ ஸ்வரூபம் என்ன
பர ஸ்வரூபம் என்ன
ப்ராப்தி பலமான கைங்கர்யம் என்ன
இவற்றின் உடைய யாதாம்ய ஜ்ஞானம் இன்றிக்கே இருந்ததாகிலும்
அதில் இச்சையும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்

ஏதத் உச்சாரண மாத்ரா வலம்ப நேன –
உக்தமான பாசுரத்தின் உடைய
உச்சாரண மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு –

உச்யமான அர்த்த பரமார்த்த நிஷ்டம் மே மனஸ் –
ஒரு முதல் இன்றிக்கே இருக்கிற
என்னுடைய நின்றவா நில்லா -பெரிய திருமொழி -1-1-4-
பிரமாதியான -ஸ்ரீ கீதை -6-34- மனஸ்சை
இதில் சொல்லப் படா நின்றுள்ள அர்த்தித்தின் உடைய
யாதாத்ம்யத்திலே நிஷ்டமாம் படி

(வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-)

(சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷

ஹி-ஏன் எனில்
மந-மனமானது
சஞ்சலம் -இயல்பாகவே நிலை நில்லாததாகவும்
பலவத் -வலிமை யுடையதாகவும்
அதனாலேயே
ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும்
த்ருடம்—-விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
தஸ்ய நிக்ரஹம்-அதை அடக்குவதை
வாயோரிவ-புயல் காற்றை அடக்குவதை போலே
ஸு துஷ்கரம்–மிகவும் செய்ய இயலாதது என்று
க்ருஷ்ண
அஹம் மந்யே -நான் நினைக்கிறேன்

ஏன் என்னில் மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே ப்ரமாதி-கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்)

த்வமேவ அத்யைவ காரய –
சஹகார்யந்தர நிரபேஷரான
தேவரே விளம்பம் அற
இப்போதே பண்ணி அருள வேணும் –

(த்வமேவ அத்³யைவ காரய ॥–நீ தானே இப்போதே செய்து அருள வேணும் –

குரு -என்னாதே -காரய -என்றது -அதுவும் அவனது இன்னருளே -என்ற பரம அர்த்தத்தைக் காட்டுவதற்காவே –)

———–

சூரணை -7- அவதாரிகை –

இப்படித் தம் அபேஷிதம் செய்கைக்கு ஹேதுவான
அத் தலையில் ஸ்வ பாவங்களை அருளிச் செய்கிறார் –

அபார கருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷ லோக ஶரண்ய! * ப்ரணதார்த்தி ஹர * ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரத விதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய! * அஶேஷ சராசரபூ⁴த * நிகி²ல நியம நிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷி பூ⁴த * நிகி²ல ஜக³தா³தா⁴ர * அகி²ல ஜக³த் ஸ்வாமிந் * அஸ்மத் ஸ்வாமிந் * ஸத்ய காம * ஸத்ய ஸங்கல்ப * ஸகலேதர விலக்ஷண * அர்தி²கல்பக * ஆபத் ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந் நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

(அபாரகருணாம்பு³தே⁴! –கரை கடந்த கருணைக் கடலே

அநாலோசித விஶேஷ அஶேஷ லோக ஶரண்ய! –குண தோஷ நிரூபணம் பண்ண மாட்டாமே ஸகல ஜகத்துக்கும் சரண்யனானவனே

ப்ரணதார்த்தி ஹர-அடி பணிந்தாருடைய ஆர்த்திகளைப் போக்குமவனே

ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! –அடியார் பக்கலில் உண்டான வாத்சல்யத்துக்கு முக்யமான மஹா ஸமுத்ரமே

அநவரத விதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!–ஸகல பூத ஸமூஹங்களுடைய உண்மையை எப்போதும் அறிந்து உள்ளவனே

அஶேஷசராசர பூ⁴த -நிகி²ல நியம நிரத -அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷி பூ⁴த- நிகி²ல ஜக³தா³தா⁴ர அகி²ல ஜக³த் ஸ்வாமிந் அஸ்மத் ஸ்வாமிந்

ஸத்ய காம -அவாப்த ஸமஸ்த காமனே

ஸத்ய ஸங்கல்ப -நினைத்தது செய்து தலைக்கட்டு வல்லவனே

ஸகலேதர விலக்ஷண அர்தி²கல்பக

ஆபத் ஸக² –ஆபத் பந்துவானவனே

காகுத்ஸ்த² –காகுத்ஸ வம்ஸ ப்ரஸூதனானவனே

ஶ்ரீமந் நாராயண –திரு மாலே

புருஷோத்தம -பரம புருஷனே

ஶ்ரீரங்க³நாத² –ஸ்ரீ ரெங்கநாதன்

மம நாத², –எம்பெருமானே

நமோঽஸ்துதே-தே நமஸ் அஸ்து -தேவரீருக்கே சேஷமான இவ்வாத்ம வஸ்து தேவரீருக்கே போக்யமாய்த் தலைக்கட்ட வேணும் என்கை-)

அபார கருணாம்புதே
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக மஹோ ததே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாத்ம்ய
சத்ய காம
சத்ய சங்கல்ப
ஆபத் சக
காகுத்ஸ்த
ஸ்ரீ மன்
நாராயண
புருஷோத்தம
ஸ்ரீ ரெங்க நாத
மம நாத
நமோஸ்து தே

அபார கருணாம்புதே –
கரை கடந்த க்ருபா சமுத்ரம் ஆனவனே

(கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே—7-9-9-)

கருணை யாகிறது -பர வ்யசன அசஹிஷ்ணுத்வம்
அது தான் அபரிச்சேத்யம் ஆகையாலே
சமுத்ரமாகப் பேசுகிறார்

அதுக்கு அபாரத்வம் ஆகிறது –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்கிறபடியே
ஆஸ்ரிதர் அளவன்றிக்கே மனுஷ்ய சாமான்யத்திலும் வந்தேறுகை

இத்தால் என்னளவும் வர வெள்ளம் கோத்தது -என்கிறார் –

அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வரும் ஏற்றத் தாழ்வுகள் ஏதேனும் பாராதே
இருந்ததே குடியாக எல்லார்க்கும் சரண வரண அர்ஹன் ஆனவனே

இத்தால் கீழ் சொன்ன க்ருபா கார்யமான சர்வ லோக சரண்யத்வம் சொல்லிற்று ஆயிற்று –

பிரணதார்த்தி ஹர
இப்படி உக்தமான கிருபையையும்
சர்வ லோக சரண்யதையையும் அனுசந்தத்து
திருவடிகளிலே தலை சாய்த்தார்

இழவுகளைப் போக்குமவனே –

ஆஸ்ரித வாத்சல்யைக மஹோ ததே –
அன்று ஈன்ற கன்றின் உடம்பில்
வழும்பைத் தன பேறாக போக்கும் தேனுவைப் போலே
ஆஸ்ரிதர் உடைய தோஷங்களைத் தன் பேறாக
ஷமிக்கை யாகிற ஸ்வபாவம்
அனு சந்தாதாக்களுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும்
பெருமையை உடையவனே

மஹோ ததே –என்று
கீழ் சொன்ன கருணாம்புதியில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது

அநவரத விதித நிகில பூத ஜாத யாதாத்ம்ய –
சர்வ காலத்திலும் அறியப் பட்ட சகல பூத சமூஹத்தின் உடைய
உண்மையை உடையவனே

இத்தால் -ஸ்வதஸ் சர்வஜ்ஞரான தேவர்க்கு நான் அறிவிக்க வேண்டும்படியாய்
இருந்ததோ என்னுடைய தண்மை–என்று கருத்து –

ஸத்ய காம
நித்தியமான காமங்களை உடையவனே –

இத்தால் ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை கொடுக்கைக்கு
அடியான அவாப்த சமஸ்த காமத்வம் -சொல்லுகிறது

ஸத்ய சங்கல்ப
அமோகமான சங்கல்பத்தை உடையவனே

அபூர்வமாக போகங்களை சங்கல்பித்துக் கொடுக்கும் இடத்தில்
அவை தப்பாது இருக்கை –

ஆபத் சக –
ஆபத்து நேரிடுமாகில் அங்குத்தைக்கு துணை யாமவனே-

தன்னால் வரும் ஆபத்துக்கும் பிறரால் வரும் ஆபத்துக்கும்
ரஷகரான தேவர் கை விட்டாலும்
தேவரையே துணையாகப் பற்றலாய் இருக்கை –

(தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-)

காகுத்ஸ்த-
தன்னால் வரும் ஆபத்துக்கும் நாமே துணை என்னும் இடம் எங்கே கண்டீர் -என்ன
ககுஸ்த வம்ச ப்ரஸூதரான தேவர் ஆஸரித்ததாக
வதார்ஹம்பி காகுத்ஸ்த க்ருபயா பர்யா பாலயத்-என்று ஸ்ரீ ராமாயணத்தில் எழுதக் கண்டிலோமோ -என்கிறார் –

ஸ்ரீ மன்
தேவர் உபேஷித்தாலும் தேவராலும் உபேஷிக்க ஒண்ணாத படி
அருகே இருந்து சேர விடுவாரும் உண்டு -என்கை

இத்தால் அருகு இருக்கிற பிராட்டியைப் பார்த்து –
ரஷித்து அருள வேணும் -என்கிறார் –

நாராயண
அவள் தானே சித குரைக்கிலும் -என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-10-2-
என்னுமவர் அல்லீரோ தேவர்

இத்தால் நம் இருவருக்கும் உண்டான சம்பந்தத்தைப்
பார்த்து ரஷித்து அருள வேணும் -என்கிறார்

புருஷோத்தம –
உன் பக்கல் அர்த்தித்துப் பெறுவாரை உதாரா -என்னுமவர் அல்லீரோ தேவர்
தேவர் ஔதார்ய குணத்தைப் பார்த்து ரஷித்து அருள வேணும் -என்கிறார் –

ஸ்ரீ ரெங்க நாத
கீழ் சொன்ன ஸ்வ பாவங்கள் எல்லாம் என்றும் ஒக்க
ஓலைப் புறத்திலே
கேட்டுப் போகாமே பிரத்யஷிக்கலாம் படி
அன்றோ தேவர் கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடி –

மம நாத –
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது இம் முறையை
எனக்கு உணர்த்துகைக்காக -என்கிறார் –

(அரங்கமாளி என்னாளி -ஆழ்வார்)

நமோஸ்து தே –
முறையை அறிந்தவர்களுக்கு அபேஷிதமாய்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை அபேஷித்துத் தலைக் கட்டுகிறார்

எனக்கு ஆராவமுதாய் யெனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ —திருவாய்மொழி -10-10-6- என்னக் கடவது இறே-

தேவர்க்கே சேஷமான இவ் வாத்ம வஸ்து தேவரீர்க்கே போக்யமாய்த்
தலைக் கட்ட வேணும் –

எனக்கே யாட்செய் எக் காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடை வீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading