ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -10-11-12- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை -10 -அவதாரிகை –
ஆக முதல் சூரணை யிலே ப்ராப்ய ருசிக்கும் பிராபக விவசாயத்துக்கும் ஆகப் பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கு
இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே பெற்று
அநந்தரம் -ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான உபய விபூதி நாதத்வம் சொல்லி
அநந்தரம் ஆஸ்ரயிக்கைக்குத் துணையான சீலாதி குணங்களை முன்னிட்டு பிராட்டி புருஷகாரமாகத் தாம் சரணம் புக்கு
அநந்தரம் பூர்வர்கள் உடைய ப்ரக்ரியையாலே சரணம் புக்கு
அநந்தரம் இதிஹாச பிரக்ரியை யாலே சரணம் புக்கு
அநந்தரம் –கீழ் விட்டவை யடைய ஈஸ்வரனேயாகப் பற்றி
இதுதான் என்னளவே யன்று சகல சேதனர்க்கும் ஒக்கும் -என்று கீழ் பண்ணின பிரபத்திக்கு ஷாமணம் பண்ணினார்

பூர்வர்கள் உடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே யாகிலும்
அவர்கள் பாசுரத்தை முன்னிடவே ஈஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாம் என்று பார்த்து
அவர்கள் பாசுரத்தாலே சரணம் புகுந்தார் –

அதவா
சக்ருதேவ பிரபன்னாய-என்று சக்ருத் பிரபத்திக்கு கார்யம் செய்கைக்கு ஈஸ்வரன் சமைந்து நிற்க
ப்ராப்ய த்வராதிசயத்தாலும்- இது ஒழியச் செல்லாமையாலும்-
யார் பாசுரத்துக்கு ஈஸ்வரன் இரங்கும் என்று அறியாதே –பஹூ முகமாக பிரபத்தி பண்ணினார்

ஆக இவ்வளவாலும் பூர்வ கண்டார்த்தத்தை அனுசந்தித்தாராய் நின்றார் –

இனி உத்தர கண்டார்த்தத்தை அருளிச் செய்கிறார்

அதில் அநிஷ்ட நிவ்ருத்தி யுண்டானால் அல்லது இஷ்ட ப்ராப்தி கிடையாமையாலே
முந்துற –நமஸ் சப்தார்த்தை- அருளிச் செய்கிறார் –

அது தனக்கு தேஹாத்மாபி மானம் தொடக்கமாக
கைங்கர்யத்தில் மமதா புத்தி ஈறாக
நடுவுள்ள விரோதியைப் போக்கித் தர வேணும் என்று இறே அர்த்தமாக நிர்வஹித்துப் போருவது-
அது தான் சகல கர்ம ஷயத்தாலே யாய்த்து பிறப்பது –
ஆகையாலே முந்துறக் கர்மத்தை அருளிச் செய்கிறார்

நம்மாழ்வார் -பொய்ந் நின்ற ஜ்ஞானமும் -திரு விருத்தம் -1-என்று
அவித்யயை முதலாக அருளிச் செய்தார்

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–)

இவர் கர்மத்துக்கு அடி அஞ்ஞானம் -அஞ்ஞானத்துக்கு அடி தேக சம்பந்தம் -என்று
கர்மத்தை முந்துற அருளிச் செய்கிறார்

ஆழ்வாருக்கு ஸ்வ அனுபவமாய் இருக்கை யாலே தேஹாத்மா அபிமான த்வாரா நின்று
அஹங்காரம் நலிகிற ப்ரகாரத்தாலே அவித்யை முன்னாக அருளிச் செய்தார்

இவர்க்கு ஸ்வ அனுபவமாய் இருக்கச் செய்தே தர்சனத்துக்கு
கர்ம ப்ராதன்யம் சொல்லிப் போருவது ஒரு நிர்பந்தம் உண்டு ஆகையாலே அதினுடைய ஸ்திதிக்கு உறுப்பாகவும்
மாயாவாதி -அவித்யா நிவ்ருத்தி மோஷம் -என்று அவித்யயை பிரதானமாக சொல்லுகையாலே
அதினுடைய ப்ரதிஷேப அர்த்தமாகவும்
இவர் கர்மம் முதலாக அருளிச் செய்கிறார்

அவர் காரண பரம்பரையை அருளிச் செய்தார்
இவர் கார்ய பரம்பரையை அருளிச் செய்கிறார்-

மநோ வாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த
அநந்த அக்ருத்ய கரண
கருத்ய அகரண
பகவத் அபசார
பாகவத அபசார
அசஹ்ய அபசார ரூப
நாநாவித அநந்த அபசாரான்
ஆரப்த கார்யான்
அநாரப்த கார்யான்
கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
சர்வான்
அசேஷத ஷமஸ்வ-

மநோ வாக் காயைர் –

கர்மத்துக்குப் பரிகரம் ஏது என்று பார்த்தால் –மநோ- வாக் -காயங்கள் –
இவை தான் ஈஸ்வரனை லபிக்கைக்கும்
அவனை இழந்து அனர்த்தப் படுகைக்கும்
உடலாய் இருக்கும் –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ
பந்தாப விஷயா சங்கி முக்த்யை நிர் விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்று இறே இருப்பது –

அநாதி கால ப்ரவ்ருத்த
அநாதி காலம் பண்ணிப் போந்த

அநந்த –
இவை தான் அளவிறந்து இருக்கை –

இவை தான் இருக்கும் படி என் என்னில் –
அக்ருத்ய கரண-இது என்ன –
கருத்ய அகரண -இது என்ன –
பகவத் அபசார -இது என்ன –
பாகவத அபசார -இது என்ன –
அசஹ்ய அபசார -இது என்ன –
ரூப நாநாவித -இப்படி பஹூ விதமாய்
அநந்த அபசாரான்-இவற்றில் ஒரோ விதமே அனநதமாய்
இப்படி உள்ளவை தான் அசங்க்யாதமாய் இருக்கை –
இது இறே அபசாரத்தின் உடைய அநல்பதை இருந்தபடி –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேபி அநாஸ்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துர் இஹ ஷணார்த்தே -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -60-என்று
நூறாயிரம் ப்ரஹ்ம கல்பம் கூடினாலும் அனுபவித்து முடிக்க ஒண்ணாத பாபத்தை இறே
இச் சேதனன் ஒரு ஷணார்த்தத்திலே பண்ணுவது

(யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேபி அநாஸ்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துர் இஹ க்ஷணார்த்தே
ஏவம் சதா சகல ஜென்மஸூ சாபராதம்
ஷாம்யஸி அஹோ ததபிஸந்தி விராம மாத்ராத் –61-

எம்பெருமானே யாதொரு பாபமானது லக்ஷக்கணக்கான ப்ரஹ்ம கல்பங்கள் அனுபவித்தாலும் மாளாததோ
அப்படிப்பட்ட பாபத்தை சேதனன் இங்கு அரை நொடியில் செய்கிறான்
இப்படி எல்லா பிறப்புகளிலும் எப்போதும் குற்றவாளனாகவே இரா நின்ற சேதனனை –
இனி நாம் குற்றம் செய்யலாகாது என்று கை ஒழிந்த அளவையே கொண்டு க்ஷமித்து அருளா நின்றீர் —
ஆச்சர்யமான குணம் இது –
ஷமா குணத்தின் பெருமையைப் பேசுகிறார் இதில் –)

ஆரப்த கார்யான்-
பல பிரதானத்தில் ஒருப் பட்டவை(ப்ராரப்த கர்மாக்கள்)

அநாரப்த கார்யான் –
பிரபல கர்ம திரோதாநத்தாலே அவசர ப்ரதீஷம் ஆனவை -(ஸஞ்சித கர்மாக்கள்)

கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
கால த்ரயத்தில் உள்ளவையும்

சர்வான் –
இவை தான் சிலவற்றைச் சொல்லிற்று இத்தனை
என்னால் சொல்லி முடிக்க ஒண்ணாத எல்லாப் பாபங்களையும் –

அசேஷத ஷமஸ்வ –
ச வாசனமாகப் பொறுத்து அருள வேணும்

(ஸ்ருதி பிரகாசர்
வைதிக கர்ம காரியத்துக்கு யோக்யதை தடுப்பவையாய் இருப்பவை -அநர்ஹதா ஆபாதகத்வம்
ப்ரத்யாவாயம்–நேராக பாபங்கள் தருமவை
வாஸனா ஜனகத்வம் மூன்று வகைகள்-இவற்றைப் போக்கி அருள வேண்டும் என்கிறார்)

அக்ருத்ய கரணம் ஆவது –
சாஸ்திர விருத்தமானவற்றை அனுஷ்டிக்கை
க்ருத்ய அகரணமாவது-
சாஸ்திர விஹிதமானவற்றை அனுஷ்டியாது ஒழிகை
விதுஷ அதிக்ரமே தண்ட பூயஸ்த்வம்-ஞானி விதியை மீறினால் அதிக தண்டனை பெறுவான் என்றும்
சக்த்ஸ்ய அதீவ தோஷவத் -சக்தனாய் இருக்க சாஸ்திர விதியை அனுஷ்டியாது ஒழிந்தால் தோஷம் கனத்து இருக்கும் இறே
பகவத் அபசாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமாம் அவற்றை விச்சேதம் பண்ணுகை
அதாவது -அவற்றை தான் வாங்கி ஜீவித்தல்
பிறர்க்கு உபகரித்தல்
அத்தாலே ஜீவிப்பார் பக்கலிலே யாசிதமாயாதல் அயாசிதமாயாதல் பரிக்ரஹித்து ஜீவித்தலும்
அவதாரங்களில் சஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சாவதாரத்தில் உபாதான ஸ்ம்ருதியும்
ஈஸ்வரன் பக்கல் தேவதாந்தரந்களோடு சஜாதீய புத்தியும்
அவனதான வஸ்துக்களில் மமதா புத்தியும் –
இதுவும் அக்ருத்ய கரணங்களில் ஒன்றாய் இருக்க பிரிய எடுக்க வேண்டிற்று-இதனுடைய க்ரௌர்யா திசயம் இருந்த படி
பாகவத அபசாரம் ஆவது
அர்த்த காம அபிமான நிமித்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடு விவாதம் பண்ணுகையும்
ஜன்ம வ்ருத்தாதிகளால் அவர்களை குறைய நினைக்கையும்
விகல கரணர் பக்கல் ஷேபோக்தி பண்ணுகையும்
அசஹ்ய அபசாரம் ஆவது
நிர் நிபந்தநமாக பகவத் பாகவத சம்ருத்தியை கண்டால் பொறுக்க மாட்டாதே
முட்டிக் கொள்ளுதல் நான்று கொள்ளுதல் செய்கை
ஸ்ரீ வைஷ்ணவன் என்னும் இதுவே ஹேதுவாக ப்ரத்வேஷம் பண்ணுகை

புத்திர வாத்சல்யம் செல்லா நிற்க திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக அக்னி தாஹம் முதலான ஹிம்சையைப் பண்ணினான் இறே ஒருவன்

சிசூபாலாதிகள் பண்ணினவை பகவத அபசாரம்
ராவணாதிகள் பிராட்டி போல்வார் விஷயத்தில் பண்ணினவை பாகவத அபசாரம்
ஹிரண்யாதிகள் ஸ்ரீ ப்ரஹ்லாதாதிகள் விஷயத்தில் பண்ணினவை அசஹ்ய அபசாரம்-

——————————————————————————–

சூர்ணிகை -11- அவதாரிகை –
அநாதி கால பிரவ்ருத்த -இத்யாதி
கீழ் பொல்லா ஒழுக்கும் -என்கிற படியே அக்ருத்ய கரணாதி அபராதங்களைப்
பொறுத்து அருள வேணும் -என்றார்
இங்கு -அதுக்கு அடியான விபரீத வ்ருத்தத்தால் உண்டான அபராதத்தை பொறுத்து அருள வேணும் -என்கிறார்
வ்ருத்த ஹாநி கீழே சொல்லிற்று இல்லையோ வென்னில்
அங்கு அக்ருத்ய கரண க்ருத்ய அகரணம் என்று சாஸ்திர விருத்தம் ஆனவற்றை அனுஷ்டிக்கையும்
விஹித அனுஷ்டானம் பண்ணாது ஒழிகையும் ஆகிற வ்ருத்த ஹாநி சொல்லிற்று
வேதாந்த விஷய ஜ்ஞான அபாவத்தால் வரும் சில வ்ருத்த ஹானிகள் உண்டு
அவற்றை யாய்த்து இங்கு சொல்லுகிறது
ஆகையால் புநர் உக்தி தோஷம் இல்லை –

(கீழ் கர்ம காண்ட ஞானம் இல்லாமல் செய்த பொல்லா ஒழுக்கம்
இங்கு உத்தர காண்ட -ப்ரஹ்ம காண்ட ஞானம் இல்லாமல் செய்த ஒழுக்கம்
பொய் நின்ற ஞானத்தால் வந்த பொல்லா ஒழுக்கம் இவை இரண்டும் அன்றோ -)

அநாதி கால ப்ரவ்ருத்தம்
விபரீத ஜ்ஞானம்
ஆத்ம விஷயம் க்ருத்சன ஜகத் விஷயஞ்ச
விபரீத விருத்தம் ச
அசேஷ விஷயம்
அத்யாபி வர்த்தமானம்
வர்த்திஷ்ய மாணாஞ்ச
சர்வம் ஷமஸ்வ

அநாதி கால ப்ரவ்ருத்தம்
அநாதி காலம் பண்ணிப் போந்த

விபரீத ஜ்ஞானம்
இது ஸ்வரூப ஸ்பர்சி யன்று
ஆனால் ஒரு நாள் அளவிலே வந்தேறிற்றோ வென்னில்
அங்கன் சொல்ல ஒண்ணாது –-அநாதி-என்னும் இத்தனை –

ஸ்வரூப ஸ்பர்சி என்னலாம் படி இறே இதின் அநாதித்வம் இருப்பது –
பகவத் பிரசாதத்தாலே ஒரு நாள் வரையிலே கழியக் காண்கையாலே வந்தேறி என்று அறியும் இத்தனை-

விபரீத ஜ்ஞானம் ஆவது
ஓர் அர்த்தத்தில் அர்த்தாந்தர புத்தி பண்ணுகை –
அதாவது ரஜ்ஜூவிலே சர்ப்ப புத்தியும்
சூக்தியிலே ரஜத புத்தியும் .-

இதுக்கு விஷயம் ஏது என்னில்
ஆத்ம விஷயம் க்ருத்சன ஜகத் விஷயஞ்ச –
ஆத்ம விஷயமாகவும் க்ருத்சன ஜகத் விஷயமாகவும்
ஆத்ம விஷயமான விபரீத ஜ்ஞானம் ஆவது —தேகாத்ம அபிமானம்
க்ருத்சன ஜகத் விஷயமான விபரீத ஜ்ஞானம் ஆவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களில் தத் தத் புத்தி பண்ணுகை –

விபரீத விருத்தம் ச –
அதாவது விருத்தமாக அனுஷ்டிக்கை
க்ருத்சன ஜகத் விஷயமான விபரீத வ்ருத்தம் ஆவது
ஒருவன் தனக்கு ஓர் அபகாரம் பண்ணினால் ஸ்வ கர்ம பலம் என்றும்
தத் தத் கர்ம அனுகுணமாக ஈஸ்வரன் ப்ரவர்த்தகன் என்றும் நினையாதே
நிமித்த மாத்ரமான சேதனனை ஸ்வதந்த்ரனாக புத்தி பண்ணி அவன் செய்தான் என்று அவனுக்கு அபசாரம் செய்கை-
ஆத்ம விஷயமான விபரீத வ்ருத்தம் ஆவது –
பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்து தான் பிரவ்ர்த்திக்கை –

அசேஷ விஷயம் –
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களை அபேஷிக்கையும்
இப்படி சர்வ விஷயமாகவும் முன்பு செய்தவற்றையும் –

அத்யாபி வர்த்தமானம் –
இப்போது செய்கிறவற்றையும்

வர்த்திஷ்ய மாணாஞ்ச –
மேலே செய்யப் புகுகிற வற்றையும்

சர்வம் ஷமஸ்வ
அஞ்ஞன் ஆகையால் என்னால் அறிந்து தலைக் கட்ட ஒண்ணாது
சர்வஞ்ஞரான தேவர் அறிந்த எல்லா வற்றையும் பொறுத்து அருள வேணும் –

———————————————————————————————-

சூரணை -12-அவதாரிகை –

கீழ் கர்மத்தையும் சொல்லி
அதுக்கடியான அஞ்ஞானத்தையும் சொல்லி நின்றார் –
இவ் வஞ்ஞானத்துக்கு அடியான தேக சம்பந்தத்தை கடத்தி அருள வேணும் என்கிறார் -இங்கு

கீழே –ஷமஸ்வ -என்றார்
இங்கு தாரய-என்கிறார்
இங்கனே வேண்டுவான் என் -என்னில்
கர்மமும் அஞ்ஞானமும் நிக்ரஹ ரூபமாய்க் கொண்டு அவன் திரு உள்ளத்திலே கிடப்பது ஓன்று ஆகையாலே
அவன் ஷமிக்க நசிக்கும் -(புண்ய அபுண்யவ் ஈஸ்வர ப்ரீதியும் கோபமும்)
இவ் வசித்துத் தான் நித்யம் ஆகையாலே நசிக்க என்பது ஓன்று இல்லை –
இனி இதனின்றும் கழலுகையே யாய்த்து உள்ளது
ஆகையால் தாரய-என்கிறார் –
ஈஸ்வர விபூதியை அழிக்க வேணும் என்று அன்று இறே இவருக்கு கருத்து
இதின் நின்றும் தம்மை எடுக்கை இறே உள்ளது
பிரிக்க வென்னுதல் -விடுவிக்க என்னுதல் -செய்யலாவது ஸ்வரூபம் தோற்ற கிடக்கில் இறே
ஸ்வரூபம் நேராக நசித்து தேகமாய் கிடக்கையாலே எடுக்க வேணும் -என்கிறார்

பாலும் நீரும் தன்னிலே கலந்தால் பால் இது நீர் இது என்று பிரித்து காண ஒண்ணாத படியும்
அது ஒரு பதார்த்தத்தின் கைப் பட்ட வாறே சாரமான பாலை க்ரஹித்து ருஜீஷமான நீரைக் கழிக்குமா போலே
ஒரு சர்வ சக்தி பிரித்தல் இல்லையாகில் நசித்தல் போலே காணும் உள்ளது –
தைவீஹ் யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றும்
மாமேவ யே ப்ரபத் யந்தே மாயா மேதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை 7-14—என்றும்
நான் பண்ணின மாயை ஒருவராலும் கடக்க ஒண்ணாது என்றும் -என்னையே பற்றிக் கடக்க வேணும் என்றும்
அருளிச் செய்கையாலே நீயே கடத்தி அருள வேணும் -என்கிறார் –

(தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.– மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

மம -என்னுடையதான ஏஷா -இந்த குண மயீ -முக்குண மயமான மாயா -ப்ரகிருதி தைவீ -தேவனான என்னாலேயே படைக்கப் பட்டதாகையாலே துரத்யயா.–எவராலும் தம் முயற்சியால் மாத்ரம் கடக்க அரிதாய் உள்ளது யே -எவர்கள் மாம் ஏவ -என்னையே ப்ரபத்யந்தே -சரணம் அடைகிறார்களோ தே-அவர்கள் மாயாம் ஏதாம் -இந்த மாயையை தரந்தி -தாண்டுகிறார்கள் –

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே – எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது – எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்)

மதீய அநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்
பகவத் ஸ்வரூப திரோதாந கரீம்
விபரீத ஜ்ஞான ஜநநீம்
ஸ்வ விஷயா யாஸ்ச போக்ய புத்தேர் ஜநநீம்
தேஹேந்த்ரியத்வேன போக்யத்வேன ஸூ சம ரூபேண ச அவஸ்திதாம்
தைவீம் குண மயீம்
மாயம்
தாஸ பூதம்
சரணாக தோஸ்மி தவாஸ்மி தாஸ
இதி வக்தாரம் மாம் தாரய

அநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்
அநாதி காலம் பண்ணிப் போந்த கர்ம பரம்பரையாலே உண்டானதாய் –

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கம் அழுக்கு உடம்பு
இவை சுழலில் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று காரண காரியம் ஆகுமே
ஆகவே ப்ரவாஹம் பத பிரயோகம்)

மதீய-
இது தான் பிறர் உண்டாக்கினது ஓன்று அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஒன்றும் அன்றிக்கே
என்னாலே சம்பாதிக்கப் பட்டது ஓன்று என்கை –

இது செய்யும் கார்யம் என் என்னில்
பகவத் ஸ்வரூப திரோதாந கரீம் –
வகுத்த சேஷியான தேவர் உடைய ஸ்வரூபத்துக்கு திரோதாநத்தைப் பண்ணக் கடவதே
அதாவது -மறைக்கை -என்றபடி –

பகவத் ஸ்வரூபத்தை இது மறைக்கை யாவது என் -என்னில்
ஸ்ரீயபதியாய் -புருஷோத்தமனாய்-சமஸ்த கல்யாண குணாத் மகனாய்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -உபய விபூதி நாதனாய் இறே ஈஸ்வரன் இருப்பது

இப்படி இருக்க -குத்ருஷ்டி முகத்தாலே-நிர்விசேஷ சின் மாத்ரமாய் இருப்பதொரு வஸ்து வுண்டு-அல்லாதவை எல்லாம் அபாரமார்த்தம் -என்னும் மாயாவாதி –

சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றும் உண்டு
அதில் சித் அசித்கள் இரண்டும் ஈஸ்வர சேஷமாய்-
ஈஸ்வரன் அவற்றுக்கு சேஷியாய் இருக்கிறான் அல்லன்
எல்லாம் கூடி ஏக த்ரவ்ய பரிணாமம் -என்னும் பேத அபேத வாதி –

கர்மம் பண்ணுகைக்கு தான் உண்டாகில்
அதின் பலம் புஜிப்பிக்கைக்கு கர்மம் உண்டாகில்
இனி ஈஸ்வர அபேஷை தான் ஏன்
அது கொண்டு ஒரு தேவை இல்லை காண் -என்னும் சாங்க்ய -வைசேஷிகர்கள் –

ஆக இது வாய்த்து மறைக்கை யாவது
இதுக்கு அடி தேக சம்பந்தமாய் இறே இருப்பது –

விபரீத ஜ்ஞான ஜநநீம்-
அதுக்கு மேலே விபரீத ஜ்ஞானத்துக்கும் உத்பாதிகையாய்
விபரீத ஜ்ஞானம் ஆவது -அநாத்மந் யாத்ம புத்தி -அதாவது தேகத்தில் ஆத்ம புத்தி பண்ணுகை
இத்தால் ஸ்வ ஸ்வரூபத்தை மறைத்த படி சொல்லிற்று

ஆக -தன்னையும் மறைத்து
அவனையும் மறைத்தது இறே –
இனி தேகமே இறே உள்ளது –
இத்தால் தன்னரசு நாடாய் விட்டது -என்றபடி –

ஸ்வ விஷயா யாஸ்ச போக்ய புத்தேர் ஜநநீம்
தன்னரசு நாடாய்த்தே
இனி கள்ளர் பள்ளிகள் சாம்ராஜ்யம் பண்ணும் இத்தனை இறே
ஸ்வ கார்ய பூதமான சப்தாதிகளிலே போக்ய  புத்தியைப் பிறப்பிக்குமதாய்-

தேஹேந்த்ரியத்வேன போக்யத்வேன ஸூஷ்ம ரூபேண ச அவஸ்திதாம்-
போக ஆயதநமான தேக ரூபத்தாலும்
போக உபகரணமான இந்திரிய ரூபத்தாலும்
போக்யமான சப்தாதி ரூபத்தாலும்
இத்தனைக்கும் கிழங்கான ஸூஷ்ம பிரகிருதி ரூபத்தாலும்
அவஸ்திதையாய்-நாலு வகைப் பட்ட பரிமாணத்தை வுடைத்தாய்

தைவீம் –
தேவருக்கு க்ரீடா பரிகரமாய்

குண மயீம்-
குண த்ரய ப்ரசுரையுமாய் –
அதாவது -ஸ்வரூபம் தான் குண த்ரய ஆத்மகமுமாய் இருக்காய் –
அதில் சேதனர் பரிக்ரஹித்த சரீரங்கள் தமஸ் பிரசுரமாயும் ரஜஸ் பிரசுரமாயும் சத்வ பிரசுரமாயும் இருக்கும் –

மாயம்
விசித்திர கார்ய கரத்வத்தாலே மாயா சப்த வாஸ்யையாய்
விசித்திர பரிணாமிநி யாகையாலே
ஆச்சரயத்தை உடைத்தாய் –

ஆச்சர்யம் எத்தாலே என்னில்
பஞ்ச பூதங்களும் ஏக த்ரவ்ய பரிமாணங்களாய் இருக்க
அந்யோந்யம் பின்ன ரூபமாயும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களாயும்
சித்ர படம் போலே ஆச்சர்ய கரமாய் இருக்கை

மாம் தாரய-
இப்படிப்பட்ட ப்ரக்ருதியிலே அகப்பட்ட என்னைக் கடப்பித்து அருள வேணும் -என்கிறார் –

நாம் எடுத்து விடுகைக்கு அடியாக நீர் செய்து வைத்தது ஏதேனும் உண்டோ –
என் கொண்டு என்னை எடுத்து விடச் சொல்லுகிறது -என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாக

என் பக்கல் கைம்முதல் உண்டாய்ச் சொல்லுகிறேனோ
அநாதி காலம் துஷ் கர்மங்களைப் பண்ணிப் போந்தேனே யாகிலும்
தேகாத்ம அபிமானியாய் போந்தேனே யாகிலும்-
சப்தாதி விஷய பிரவணனாய்ப் போந்தேனே யாகிலும்
ஸ்வரூபத்தை நிரூபித்த வாறே உனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கும் என்னும் இவ் வளவாலே சொல்லுகிறேன் -என்கிறார் –

(கைகூப்புச் செய்கை -அகிஞ்சனன்
கால்கள் சேர்த்து வைத்து -அநந்ய கதித்வம்)

தாஸ பூதம்-என்று
அது சர்வ சாதாரணம் அன்றோ –
ஆன பின்பு நாம் கார்யம் செய்கைக்கு உம்முடைய பக்கல் ஏதேனும் ஒரு வ்யாவ்ருத்தி வேணுமே -என்ன

சரணாக தோஸ்மி தவாஸ்மி தாஸ இதி வக்தாரம் –
சரணாக தோஸ்மி-என்றும்
தவாஸ்மி-என்றும்
தாஸ-என்றும்
சொன்னேன்

தேவரே உபாயம் என்றும்
உபேயம் என்றும்
நான் தேவருக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும் -சொன்னேன்

(வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—)

வக்தாரம் மாம்
இப்படி உக்தி ப்ரதனாய் இருந்துள்ள என்னை

தாரய-
இவ் வுக்தி மாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு
கடப்பித்து அருள வேணும் –

(இதுவரை நமஸ் அர்த்தம்
அநிஷ்ட நிவ்ருத்தி சொல்லிற்று)

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading