சூரணை -6-அவதாரிகை –
சரணம் புகும் போது தத் அனுகுணமான பிராப்ய ருசியும் பிராபகத்தில் கனக்க அத்யாவசாயமும் உண்டாக வேண்டுகையாலே
அதினுடைய சித்த்யர்த்தமாக முதல் சூரணையிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கு ‘
இரண்டாம் சூரணையிலே பிராட்டி ப்ரசாதத்தாலே பெற்றார்
அநந்தரம் ஆஸ்ரயணீயனானவன் ஆர் என்னும் அபேஷையிலே
நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டுகையாலே
நார சப்த வாச்யங்களுக்கும்
அயநமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை அகில ஹேய -என்கிற சூரணையிலே சொல்லி
பின்பு நார சப்த வாச்யங்களை நிகில ஜகத் உதய விபவ லய லீல -என்னும் அளவாக
அவனுடைய உபய விபூதி நாதத்வம் சொல்லி
அநந்தரம் அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யவசித்து
இப்படி மேன்மையை உடைத்தான வஸ்துவை நம்மால் கிட்டப் போமோ -என்னும்
அபேஷையிலே
இருந்ததே குடியாக எல்லாருக்கும் கிட்டும் படியான சீலாதிகளை முன்னிட்டு
பிராட்டி புருஷகாரமாக சரணம் புக்கு நின்றார் இவ்வளவால்-
(தூயோமாய் வந்தோம்
அகிஞ்சநமாய் அநந்ய கதியாய் வந்தோம் -இதுவே தூய்மை)
அநந்தரம்
சரணம் புக்கோம் நான் அன்றோ -என்று தம்மை அனுசரித்து(அதிர்த்து -புறக்கணித்து)
பூர்வர்கள் உடைய பிரக்ரியையை முன்னிட்டு சரணம் புகுகிறார்
அநந்தரம் சரணம் புகும் போது
விட வேண்டுவன முன்னாக விட்டு
வகுத்த விஷயத்தைப் பற்ற வேண்டி இருப்பதோர் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே
அது கீழ் இரண்டு இடத்திலும் செய்யாமையாலே
அத்தால் ஏதேனும் குறை யுண்டாகிறதோ என்று – பார்த்து
புராண புருஷர்கள் உடைய சரணாகதி பிரக்ரியையான
இதிஹாச புராண வசனங்களை முன்னிட்டு சரணம் புகுகிறார்
ஆனால் கீழ் செய்யாத வற்றுக்கு குறை உண்டாகிறதோ -என்னில்
குறை வில்லாமையே யன்று
இத்தால் ஏற்றம் உண்டாகிறது -எங்கனே என்னில்
த்வயத்தில் தியாக பூர்வகமாக ஸ்வீகரிக்க வேண்டிற்றாகில்
சர்வாதிகாரமாக மாட்டாது –
ஆகையால் ஏற்றம் உண்டாகிறது
(கூரத்தாழ்வான் முதலியாண்டான் ஸம்வாதம் -விட்டே பற்ற வேண்டுமானால் நீர் ஒருவரே அதிகாரி–மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கைவிட்டு -இத்யாதி)
பூர்வ புருஷர்கள் உடைய ஹ்ருதயம் வகுத்த விஷயத்தில் ஸ்வரூப அனுரூபமாக சரணாகதியை
பண்ணுமது ஒழிய இவன் விட வேண்டுவது உண்டோ- பற்ற வேண்டுவது உண்டோ- என்று ஆய்த்து இருப்பது
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு சம்சார பய பீதனாய் கொண்டு திருவடிகளில் சரணம் புகுவதுவே அமையும்
இவர் பிராப்ய ருசி செய்விக்க மாட்டிற்று இல்லாமையாலே ருசி ப்ரேரிக்கச் செய்வர்
ஆகையால் இவர் செய்யாது எல்லாம் குறையாகக் கடவது
இவர் தாம் இதுக்கு அவ் வருகு சரணம் புகக் காணாமையாலே மீண்டார் அத்தனை அல்லது
அமையும் என்று மீண்டார் அல்லர் -ஆகையால் சரணம் புகுகிறார்-
(வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-)
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணிஸ் க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ஸ் ச சந் த்யஜ்ய சர்வ காமாம்ஸ் ச ச அஷரான் –
லோக விக்ராந்த சரணவ் தே அவ்ரஜம் விபோ
பூர்வார்த்தத்தாலே சேதனரையும்
உத்தரார்த்தத்தாலே அசேதனங்களையும் சொல்லுகிறது
இவைதான் உபாயாந்தர சஹகாரியுமாய் ஸ்வயம் பிரயோஜனம் ஆகையாலே உபேயமுமாய்
இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும்
சர்வ தர்மாம்ஸ் ச –
என்று உபாயாந்தரமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது
சர்வ காமாம்ஸ் ச ச அஷரான் -என்று உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்லுகிறது –
சந்த்யஜ்ய -என்றது சவாசனமாக விட்டு -என்றபடி
சர்வ தர்மாம்ஸ் ச சர்வ காமாம்ஸ் ச -என்று இரண்டையும் கூட எடுத்து விடச் சொல்லுகையாலே
உபேயாந்தரங்கள் ஸ்வரூப நாசகமோபாதி உபாயாந்தரங்களும் ஸ்வரூப நாசகம் என்று கருத்து
இவற்றை ஸ்வரூப நாசகம் என்னலாமோ என்னில்
அவற்றில் ஸ்வயம் பிரயோஜனமாக இழிகையே ஸ்வரூபம்
இத்தை ஒழிந்தது எல்லாம் ஸ்வரூப நாச பர்யாயம்
இவை தான் ஸ்வரூப உஜ்ஜீவனம் ஆகிறது இல்லையோ வென்னில்
இவன் இவை தன்னை சாதனம் ஆக்கினால் போலே- இதுக்கு புறம்பே ஒன்றை
பிரயோஜனம் ஆக்காதே -நம்மையே பிரயோஜனமாகப் பெற்றோமே -என்னும் ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் ஆகிறது
பிரயோஜனாந்தரத்துக்கு மடி ஏற்பாரையும்
உதாரா –கீதை 7-18–என்னுமவன் ஸ்வபாவத்தாலே உஜ்ஜீவனம் ஆகிறது இத்தனை
மேல் பற்றப் படும் விஷயம் சொல்லுகிறது —லோக விக்ராந்த சரணவ் சரணம் தே அவ்ரஜம் விபோ –
சீலாதி குண யுக்தனுமாய் -வகுத்த ஸ்வாமியுமாய்-ஜ்ஞான சக்தியாதி குண பூர்ணனுமான
உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றுகிறேன் -என்கிறது –
பிதரம் மாதரம்
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று ஈஸ்வரனோபாதி
மாதா பித்ரு அனுவர்த்தனத்தையும் உபாசன அங்கமாக
சாஸ்திரம் விதிக்கையாலே -உபாயாந்தர சஹகாரிகளுமாய்
உள்ளது அனையும் அனுவர்த்தித்து விடுகை அன்றிக்கே இவர்கள் உடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே
ஸ்வயம் பிரயோஜனமுமாய் இருப்பார்கள்
தாரான் –
ஸ்திரீயும் சஹ தர்ம சாரிணி யாகையாலே உபாயாந்தர சஹ காரிணியுமாய்
அபிமத விஷயம் ஆகையாலே உபேயாந்தர்ப்பூதையுமாய் இருக்கும் –
புத்ரான் –
புத்திர ஹீனனான போது புத் என்கிற நரக தர்சனம் பண்ண வேண்டுகையாலே
புத்திர உத்பாதனம் புன்நாம் நோ நரகாத் த்ராயத இதி புத்திர -என்கிறபடியே
அந்த நரக தர்சனத்துக்கு அடியான பாப விமோசன ஹேதுவாகிற முகத்தாலே உபாயாந்தர சஹகாரியுமாய்
அவ்வளவு அன்றிக்கே தத் வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்
பந்தூன்
அவர்கள் ஆகிறார் -இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழி நடத்துமவர்கள் ஆகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய்
இன்ன பெரும் குடிப் பாட்டிலே பிறந்தான் என்கிற செருக்காலே உபேய பூதருமாய் இருப்பார்கள்
சகீன்
தோழனும் இவனுக்கு ஹிதைஷியாய் ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கையாலே உபாயாந்தர சஹகாரியுமாய்
அபிமதன் ஆகையாலே உபேய பூதனுமாய் இருக்கும்
குரூன்
அவர்கள் ஆகிறார் -பகவத் ப்ராப்தி யாகிற உபேயத்தைக் குறித்து உபாயாந்தரங்களை உபதேசித்தும்
உபேயாந்தரங்களை குறித்து உபாயாந்தரங்களை உபதேசித்தும் போருகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய் -ஹித பரர் ஆகையாலே உபேய பூதருமாய் இருப்பர்
ரத்னாநீ-இத்யாதி
ரத்னம் தொடக்க மானவையும் உபாயாந்தரங்களுக்கு இதி கர்த்தவ்ய தயா சஹகாரிகள் ஆகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய்-அவற்றை அழிய மாறியும் விநியோகிக்கலாம் ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
க்ருஹாணி ச
கருஹங்களும் கீழ் சொன்ன வற்றுக்கு எல்லாம் ஆவாச ஸ்தானம் ஆகிற ரஷகத்வம் முகத்தாலே உபாயாந்தர சஹகாரமுமாய்
மாட மாளிகையாக எடுக்கும்படியான அபிமதத்வத்தாலே உபேயமுமாய் இருக்கும்
சர்வ தர்மாம்ஸ் ச
தர்ம சப்தத்தாலே உபாய ரூபமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது
சர்வ சப்தத்தாலே அதிகாரி சம்பத்தி தர்மங்களைச் சொல்லுகிறது
சர்வ காமாம்ஸ் ச
என்று புத்திர பசு அந்நாதி தொடக்கமாக -ஸ்வர்க்க ஐஸ்வர்யம் நடுவாக-
பிரம்மா ஐஸ்வர்யம் பர்யந்தமான வற்றை எல்லாம் சொல்லுகிறது
ச அஷரான் -என்றது கைவல்யத்தை
சந் த்யஜ்ய -லஜ்ஜா புரஸ் ஸரமாக விட்டு
லோக விக்ராந்த சரணவ் -தொடங்கி பற்றுகிற விஷயம் வரையாதே வைத்த திருவடிகள்(தாவி வையம் கொண்ட தடம் தாமரை) ஆகையாலே சௌசீல்யம் சொல்லுகிறது
உறங்குகிற பிரஜையை தாய் முதுகிலே அணைத்து கொண்டு கிடக்குமா போலே
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே
விமுகனார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே வாத்சல்யம் சொல்லுகிறது
இத்தனையும் அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே சௌலப்யம் சொல்லிற்று
தே
என்று வகுத்த சேஷி -என்று –ஸ்வாமித்வம் சொல்லுகிறது
விபோ
என்கையாலே பிரபுத்வம் சொல்லுகிறது -அதாகிறது ஜ்ஞான சக்த்யாதி குண பூர்த்தி
இத்தால் அஹம் -சப்த வாச்யமும் இதிலே அனுசந்தேயம்
ஆக இத்தனையும் நாராயண சப்தார்த்தம்
தே -என்கிற இடத்தில் ஸ்வரூப அனுபந்தியான லஷ்மி சம்பந்தமும் அனுசந்தேயம்
இத்தால் புருஷகார பாவம் சொல்லுகிறது
(அவள் மார்பில் இருந்து பிரிந்தால் அன்றோ இவ்வஷரம் அகாரம்- விட்டுப் பிரிவது -ஸ்வரூப நிரூபக தர்மம் அன்றோ)
சரணவ் -என்கையாலே விக்ரஹ யோகம் சொல்லுகிறது
சரணம் -என்கையாலே உபாய பாவம் சொல்லுகிறது
அவ்ரஜம் –அத்ய வசித்தேன் -என்றபடி
ஆக இஸ் ஸ்லோகங்களால் விடுமவற்றை விட்டுப்
பற்றுமவற்றைப் பற்றி நின்றது
————————————————————————————
சூரணை -7-அவதாரிகை –
ஆனால் கீழ் விட்டவை எல்லாம் இழவே யாகிறதோ-என்னில்
அங்கனே இருப்பதொரு சாபேஷை யுண்டோ -சர்வ பிரகார
பரிபூர்ண விஷயத்தைப் பற்றினவனுக்கு-
ஆகையாலே கீழ் விட்டவை எல்லாம் ஈஸ்வரனே என்கிறார் –
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ் ச குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ
த்வமேவ மாதா ச –
பிறந்த பின்பு ஹித பர ஞான பிதாவைப் போல் அன்றியே கர்ப்ப வாசமே தொடங்கி ரஷித்துப் போருமவள் இறே மாதா –
இத்தால் இவர் நினைக்கிறது என் என்னில் மேல் ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பாக முதல் அழியாதபடி
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- ரஷித்துப் போந்தவன் -என்கிறார் –
பிதா த்வமேவ
மாதா-வுக்கு முன்னே பிறக்க கிருஷி பண்ணுவான் பிதாவிறே
இத்தால் –ஜிதந்தே புண்டரீகாஷ நமஸ்தே விஸ்வ பாவன
நமஸ்தேஸ் து ஹ்ருஷீகேச மகா புருஷ பூர்வஜா –ஜிதந்தே-1-என்றத்தை நினைக்கிறது
பிறப்பித்த தந்தை மற்றை யாராவாரும் நீ-பெரிய திருவந்தாதி -5-
த்வமேவ பந்துஸ் ச –
பந்துவாய் இருப்பார் இவன் வழி கெட வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துமவர் இறே
அப்படியே நான் வழி கெட வர்த்தியாதபடி அந்தராத்மதயா இருந்து நியமித்து நல் வழி யாக்கும் பந்துவும் நீயே
குருஸ் த்வமேவ –
கு சப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ரு சப்தஸ் தந் நிரோதக
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபி தீயதே -இருள் தரும் மா ஞாலத்தைப் போக்கித் -(திருவாய் மொழி -10-6-1-) தெளி விசும்புக் கொடுக்கையாலே-(திருவாய் மொழி -9-7-5-)
எனக்கு அஜ்ஞாத ஜஞாபனம் பண்ணும் ஆசார்யனும் நீயே –
அறியாதன அறிவித்த அத்தா -திருவாய் மொழி -2-3-2–என்னக் கடவது இறே
ஆசார்யரில் வைத்துக் கொண்டு பிரதம ஆசார்யனானவான் ஈஸ்வரன் இறே
லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்னக் கடவது இறே
இசைவித்து என்னை -திருவாய் மொழி -5-8-9- என்கிறபடியே
முதல் அடியிலே ருசி ஜனகன் ஆகையாலே பிரதம ஆச்சார்யன் -என்னக் குறை இல்லையே
த்வமேவ வித்யா –
உபதேசித்த ஜ்ஞானமும் நீயே –
ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே –திருவாய் மொழி -1-9-8-என்கிறபடியே
ஜ்ஞானத்தின் உடைய சத்தாதிகள் அவன் ஆதீனம் ஆகையாலும்
ஜ்ஞான பிரதிபாத்யன் அவன் ஆகையாலும்
ஜ்ஞானமும் நீயே -என்கிறது
த்ரவிணம் த்வமேவ –
த்ரவிணம் ஆகிறது த்ரவ்யம் -அதாவது -போகத்துக்கு உபகரணமாய் இருக்கை
இத்தால் போக உபகரணமான பர பக்தி யாதிகளும் நீயே -என்கிறார் –
அன்றிக்கே –
தனம் மதியம் -என்கிறபடியே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும்
நீயே என்கிறார் -ஆகவுமாம்
த்வமேவ சர்வம் –
சொல்லிச் சொல்லாதவை எல்லாம் நீயே
மம தேவ தேவ –
சர்வத்தையும் விட்டு உன்னையே பற்றின எனக்கு
விட்டவையும் எல்லாம்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீயே -என்கிறார் –
———————————————————————————
சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-
த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ
ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது
இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது-
ப்ரஹ்மத்தையே அளிக்கும் ஆச்சார்யனே பிதாவை விட ஸ்ரேஷ்டர்
வந்தே கோவிந்த தாதோ
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –-ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம்சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இ றே
லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –
————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை
ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பர்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றால்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இறே –
அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் எல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இறே
ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரஸ்ய சகேவ சக்யு
பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்
தஸ்மாத் –
த்வமேவ-இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பர்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –
ப்ரணம்ய –
மானசமான தண்டன் –
ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்
இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்
ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்
ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை
ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்
ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது –ஸ்துத்யன் -என்றபடி
நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –
பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரஸ்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்
சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்
பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ
சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே
தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply