ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -17-18-19– -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை -17-அவதாரிகை –

இப்படி த்வயம் வ்யாக்யாதம் ஆயிற்று ஆகில் -இனி மேல் செய்கிறது என் என்னில் -(உபாய உபேய அத்யவசிதனான) இவ் வதிகாரி  (பக்கல் பெரிய பெருமாள் -சோம்பரை உகத்தி போலும் ) தமக்கு உண்டான பரீத் யதிசயத்தாலே
கீழ் சொன்னவற்றை அனுபாஷித்துக் கொண்டு
உமக்கு மத்  ப்ரசாதத்தாலே சர்வமும் குறைவற உண்டாயிடுக -என்று அருளிச் செய்து
இவருடைய ஹ்ருதயத்தை சந்துஷ்டம் ஆக்குகிறார்

இப்படி பெரிய பெருமாள் அருளிச் செய்தார் என்று நாங்கள்
விஸ்வசித்து இருக்கும்படி எங்கனே –
என்று எம்பார் கேட்க –
எனக்கு பெரிய பெருமாள் தம்முடைய சீலாதி குணங்களைக் கரதலாமலகமாகக் காட்டித் தந்து
அவர் சொல்லுவிக்கச் சொன்ன வார்த்தை யாகையாலே
அவர் அருளிச் செய்த வார்த்தை என்று விஸ்வசிக்க தட்டில்லை

அவர் திரு உள்ளம் ஆகாதது என் வாயால் புறப்படாதே
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –

ஏவம் பூத மத் கைங்கர்ய ப்ராப்தி
உபாய தயா வக்லுப்த
சமஸ்த வஸ்து விஹீநோபி
அநந்த தத் விரோதி பாபா க்ராந்ஸதோபி
அநந்த மத்  அபசார யுக்தோஸபி
அநந்த மதீய அபசார யுக்தோஸபி
அநந்த அசஹ்யா அபசார யுக்ஸதோபி
ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார
விமூடாத்ம ஸ்வ பாவோபி
ஏதத் உபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா சம்பத்தோஸபி
ஏதத் அனுகுண பிரகிருதி விசேஷ சம்பத்தோஸபி
ஏதன் மூலாத் யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக
ஸூக துக்க தத் தேது
தத் இதரோ பேஷணீய விஷய
அனுபவ ஜ்ஞான சங்கோச ரூபா
மச் சரணாரவிந்த
யுகள ஐகாந்திக ஆத்யந்திக
பர பக்தி பரஜ்ஞான பரம பக்தி
விக்ன ப்ரதிஹதோஸபி
யேன கேநாபி ப்ரகாரேண
த்வய வக்தா
த்வம் கேவலம் மதீயயைவ தய்யா
நிச் சேஷ விநஷ்ட ஸ ஹேதுக
மச் சரணார விந்த யுகளை காந்திகாத் யந்திக
பர பக்தி பரஜ்ஞான பரம பக்தி விக்ன
மத்  பிரசாத லப்த
மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி
மத்  பிரசாத தேவ சாஷாத் க்ருத யதா வச்தித
மத்  ஸ்வரூப ரூப குண விபூதி லீலோப கரண விஸ்தார
அபரோஷ சித்த
மன் நியாம்யதா மத தாஸ்யைக
ஸ்வபாவாத்ம ஸ்வரூப
மத்  ஏக அனுபவ
மத்  தாஸ்யைக ப்ரிய
பரிபூர்ண அநவரத நித்ய விசத தம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய
ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷைதைக ரதி ரூப
நித்ய கிங்கரோ பவ

ஏவம் பூத மத்  கைங்கர்ய ப்ராப்தி –
இப்படிப் பட்ட என்னுடைய கைங்கர்ய லாபத்துக்கு –

உபாய தயா வக்லுப்த –
உபாயமாக வேதாந்தங்களிலே சொல்லப் பட்ட கர்ம ஜ்ஞான பக்திகள் என்ன -உமக்கு இல்லையே யாகிலும் –

சமஸ்த வஸ்து விஹீ நோபி –
இவ் உபாசன அங்கமான ஜீவ பர யாதாம்ய ஜ்ஞானம் என்ன
இதுக்கு அடியான வர்ண ஆஸ்ரம ஆசாரம் என்ன
இவை எல்லாவற்றுக்கும் அடியான அமாநித்வ அத்யாத்ம குணங்கள் (ஸ்ரீ கீதையில் 20 ஆத்ம குணங்கள்)என்ன
இங்கன் சொல்லப் பட்டவை -சர்வமும் -எல்லாம் உமக்கு இல்லை யாகிலும் –

அநந்த தத் விரோதி பாப ஆக்ராந்தோஸபி-
இவை இல்லாமையே அன்றியே இவற்றுக்கு விரோதியான
அநந்த பாபங்களாலே
ஆக்ராந்தராய் இருந்தீரே யாகிலும்
இவற்றிலே இழிய ஒட்டாதே இருக்கிற சகல பாபங்களாலே நெருக்கு உண்டு இருந்தீரே யாகிலும் –

அநந்த மத் அபசார யுக்தோஸபி –
கீழ் சொன்ன விரோதி பாபங்கள் மாதரம் அன்றிக்கே முடிவில்லாத நம் விஷயமான அபசாரத்தோடே கூடி இருந்தீரே யாகிலும் –

அநந்த மதீய அபசார யுக்தோஸபி –
இவ்வளவு அன்றிக்கே மத் அபிமான அந்தர் பூதராய் இருப்பார் திறத்தில் உண்டான
அளவிறந்த அபசாரத்தோடு கூடி இருந்தீரே யாகிலும்
அநந்த அசஹ்யா அபசார யுக்தோஸபி –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயங்களில் உண்டான
அளவிறந்த அபசாரத்தோடு கூடி இருந்தீரே யாகிலும்

ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார
இப்படிப் பட்ட பாபங்களுக்கு கார்யமுமாய் -காரணமுமாய்
இருந்துள்ள அநாதியான விபரீத அஹங்காரம் –

(அஹங்காரம் விபரீத ஞானம் -ஒன்றுக்கு ஓன்று காரணமாயும் கார்யமாகவும் இருப்பதால் –கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார)

விபரீத அஹங்காரம் ஆவது
அஹம் அல்லாத வஸ்துவிலே அஹம் புத்தி பண்ணுகை –
இதுக்கடி பாபங்கள் ஆகையாலே பாப கார்யமுமாய்
பாபங்களுக்கும் அடி தேகாத்ம அபிமானம் ஆகையாலே
தான் காரணமுமாய் இருக்கும்

அஹம் அர்த்தம் தான் ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபமாய்
ப்ரக்ருதே பரமாய் இருப்பது ஒன்றாய் இருக்க
துக்க ரூபமுமாய் ஜடமுமாய் சதத பரிணாமினியுமான ப்ரக்ருதியிலே
அப் புத்தி பண்ணுகை -பாப கார்யமுமாய்- பாப காரணமுமாய் இருக்கும் இறே

இத்தால் வரும் அவத்யம் ஏது என்ன –
விமூடாத்ம ஸ்வ பாவோபி –
இப்படிப் பட்ட அஹங்காரத்தாலே மறைக்கப் பட்ட ஆத்மாவினுடைய சேஷத்வ ஸ்வரூபத்தை
உடையீராய் இருந்தீரே யாகிலும் –
சேஷோஹம்–என்னாமல்- ஸ்வ தந்த்ரோஹம்– என்னப் பண்ணுகை –

ஏதத் உபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா சம்பத்தோஸபி
கீழ் சொன்ன பாபங்களுக்கும் அஹங்காரத்துக்கும் கார்யமுமாய் காரணமுமாய் அநாதியுமாய்
போருகிற  துர் வாசனையாலே கட்டுண்டு இருந்தீரே யாகிலும் –

ஏதத் அனுகுண பிரகிருதி விசேஷ சம்பத்தோஸபி –
இவற்றுக்கு எல்லாம் காரணமான துஷ் பிரக்ருதியாலே ஒரு சர்வ சக்தி பிரிக்கப் பார்க்கிலும்
அரிதாம்படி பிணை யுண்டு இருந்தீரே யாகிலும்
பத்தோஸ்பி -என்னாமல்- சம் பத்தோஸ்பி -பிணை உண்ட உறைப்பை சொல்கிறது –

ஏதன் மூலாத் யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக –
இப் பிரகிருதி  சம்பந்தம் அடியாக வருகிற தாப த்ரயங்கள்

ஆத் யாத்மிகம் ஆவது -ஆதியும் வியாதியும்

ஆதி மனதுக்கும்-வியாதி உடலுக்கும்

ஆதியாவது –
காம
குரோத
பய
த்வேஷ
லோப முஹ விஷாதஜ
சோகா
அசூய
அவமான
ஈர்ஷ்யா
மாத்சர்யாதி மயஸ் ததா -என்கிற இவை –

வியாதி யாவது –
சிரோ ரோக -தலைவலி
ப்ரதிஸ்யாயம் -ஜலதோஷம்
ஜவரம்
சூலம்
பகந்தரம்
குல்மச்வாசம்
ஸ்வயது
பர்ச்ச்ர்த் யாதி-ஆஸ்த்மா போல்வன
பிர நேகதாததாஷி ரோகாதி சார
குஷ்டாங்கா மய சம்ஜ்ஞகை -என்னுமவை-

ஆதி பௌதிகம் ஆவது
பசு பஷி மனுஷயாத்யை பிசாசோ உரக ராஷசை
சரீச்ருபாத்யைச் சன்ருனாம் ஜன்யந்தே சாதி பௌதிக -என்கிற இவை

ஆதி தைவிகமாவது –
சீதோஷ்ண வாத வர்ஷாம்பு வைத்யுதாதி சமுத்பவ -என்கிற இவை

ஸூக துக்க தத் தேது –
இப்படிப் பட்ட மூன்று வகைப் பட்ட சுக துக்கங்கள் என்ன –
அதுக்கு ஹேதுவாய் இருந்துள்ள -அவை தான் எவை என்னில் –

தத் இதர உபேஷணீய விஷய – –
தனக்கும் பிறர்க்கும் உபேஷணீயரான மத்யஸ்தர்க்கும் உண்டாமதான
காம க்ரோதாதி விஷயங்கள் -என்ன -இவற்றின் உடைய

தனக்கு காமம் அன்வயத்தில் சுக ஹேதுவாய் வ்யதிரேகத்தில் துக்க ஹேதுவாய் இருக்கும்

தனக்கு குரோதம் எதிரியை நலியும் போது சுக ஹேதுவாய்
அதுவே எதிரி அளவில் பலியாது ஒழிந்தால் துக்க  ஹேதுவாய் இருக்கும்

ஸ்வேதரரான அனுகூலர்க்கு காமம் அன்வயத்தில் சுக ஹேதுவாய் வ்யதிரேகத்தில் துக்க ஹேதுவாய் இருக்கும்

ஸ்வேதரரான பிரதி கூலர்க்கு காமம் அன்வயத்தில் துக்க ஹேதுவாய் வ்யதிரேகத்தில் சுக ஹேதுவாய் இருக்கும்

மத்யஸ்தர்க்கு காமாதிகள் உடைய அன்வய வ்யதிரேகங்களில்  உண்டான சுக துக்கங்கள் உபேஷணீயங்களாய் இருக்கும்-

அனுபவ ஜ்ஞான சங்கோச ரூப –
இப்படி ஸ்வ கீயமாயும் பர கீயமாயும் உபேஷணீயாருடையதையும்
இருந்துள்ள விஷயங்களின் அனுபவம் ஆனது
ஜ்ஞான சங்கோச ரூபமாய் இருக்கும்

ஆகையால் அந்த ஜ்ஞானம் அடியாக உண்டாகக் கடவ பர பக்த்யாதிகளுக்கு
விஷய அனுபவம் தான் பிரதி பந்தகமாய் இறே இருப்பது
அத்தை அருளிச் செய்கிறார்

மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞாந பரம பக்தி விக்ன ப்ரதி ஹதோஸபி –
நிரதிசய போக்யமான என் திருவடிகளிலே நித்தியமாய் ஏக ரூபமாய் இருந்துள்ள பர பக்த்யாதிகளுக்கு
விக்னமாய் இருந்துள்ள விஷய அனுபவத்திலே இழிந்தீரே யாகிலும் –

பிரதி ஹதோஸபி
ஹதம் ஆகையாவது -நசிக்கை -அதாவது நஷ்ட கல்பமாகை –

ஆக
யேன கேநாபி ப்ரகாரேண
ஏதேனும் ஒரு வகையிலே

த்வய வக்தா –
த்வய அனுசந்தானமே யாய்த்து செய்ய வேண்டுவது
அது தன்னிலும் ஒரு நியதி இல்லை

யேன கேநாபி ப்ரகாரேண-
அஹ்ருதயமாகவுமாம் -ஹ்ருதயமாகவுமாம்
ஆர்த்தராகவுமாம் -த்ருப்தனாகிலுமாம்
அர்த்த சஹிதம் ஆகிலுமாம்–  அர்த்த விதுரம் ஆகிலுமாம்
அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
த்வயமாம் இத்தனையே வேண்டுவது

முதலிலே மந்த்ராந்தங்களாக ஒண்ணாது
அது ஒழிந்தாலும் வ்யாபகாந்தரங்களாக ஒண்ணாது
அது ஒழிந்தாலும் திரு மந்த்ரமாக ஒண்ணாது
த்வயத்திலே  யாய்த்து இளைப்பாற வேண்டுவது

அது தன்னிலும் பூர்வ கண்ட அனுசந்தானமும் அமையாது
உத்தர கண்ட அனுசந்தானமும் அமையாது
உபயமும் ஆக வேணும்

எதுக்காக வென்னில்
பூர்வ கண்ட மாத்ரம் அனுசந்தித்தீர் ஆகில் அதில் சொன்ன சரண வரணம்
சர்வ சாதாரணம் ஆகையாலே உமக்கு புருஷார்த்தம் ஏதோ -என்ன வேண்டி வரும்
உத்தர கண்ட மாதரம் அனுசந்திதீர் ஆகில் அதில் சொன்ன ப்ராப்யம் சாதநாந்தர
சாதாரணம் ஆகையாலே உமக்கு சாதனம் ஏதோ -என்ன வேண்டி வரும்
இக் குறைகள் எல்லாம் தீர வேண்டி இருந்தீர் ஆகில்
த்வயத்திலே  யாய்த்து இளைப்பாற வேண்டுவது –

த்வம் –
அப்படிப் பட்ட அனுசந்தானம் கை புகுந்த நீர்

கேவலம் மதீயயைவ தயயா நிச்சேஷ விநஷ்ட ஸ ஹேதுக-
த்வய அனுசந்தானமே ஹேதுவாக
இரு கரையும் அழியப் பெருகின என் கிருபை ஒன்றாலுமே
நிச் சேஷமாகவும் ச ஹேதுகமாகவும் விநஷ்டமான -(கேவலம் -ஏவ -இரண்டு அடைமொழிகள் -கிருபையாலேயே மட்டுமே)

மச் சரணார விந்த யுகள  ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி விக்ன –
நிரதிசய போக்யமான என் திருவடிகளில் நித்தியமாய் ஏக ரூபமாய் செல்லுகிற
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி களுக்கு இடைச் சுவரான
முன் சொன்னவற்றை உடையீராய்

ஆனால்  விரோதி  நசித்தவாறே பர பக்த்யாதிகள்  தனக்குத் தானே உண்டாகிறனவோ என்னில்

மத் பிரசாத லப்த-
அதுக்கு மேலே இதுவும் என்னுடைய கிருபையாலேயே உடையீராகக் கடவீர்
பெறுவது தான் ஏதேனும் அபேஷையிலே-

மச் சரணாரவிந்த யுகள ஐகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
இது காணும் பெரும் பேறு
இவ்வளவே அன்று
இன்னமும் உண்டு

மத் பிரசாதத் ஏவ சாஷாத் க்ருத யதா வஸ்தித மத் ஸ்வரூப ரூப குண விபூதி லீலோப கரண விஸ்தார –
அதுக்கு மேலே சஹகார்யந்தர நிரபேஷமான என் கிருபையாலே சாஷாத் கரிக்கப் பட்டதாய்
உள்ளபடி இருந்துள்ள என்னுடைய ஸ்வரூபம் என்ன
ரூபம் என்ன குணம் என்ன விபூதி என்ன லீலோபகரணமான இவ் விபூதி என்ன
இவற்றின் உடைய பரப்பை வுடையீராய்

இங்கு யதாவஸ்தித -என்கிறார்-அயதா வாகவும் கண்டது உண்டோ என்னில் -உண்டு
வேதாந்தத்தில் பிரதேச விசேஷத்தில் கார்க்கி வித்யை என்று ஒரு வித்யை உண்டு -அதிலே எழுதக் கண்டோம்

சைஸா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்டித
வருணனால் ப்ருகுவுக்கு சொல்லப் பட்ட -வித்யை –

அன்றிக்கே
நீயாக வருந்திக் காணும் அன்று இறே அயதாவாகக் கடவது
என் பிரசாதம் அடியாக காண்கையாலே யதாவஸ்திதமாக குறை இல்லையே -என்றுமாம் –

அதுக்கு மேலே
அபரோஷ சித்த மன் நியாம்யதா மத் தாஸ்யைக ஸ்வபாவ ஆத்ம ஸ்வரூப –
ஸ்ரவண மனநாதிகளால் சித்திக்கை அன்றிக்கே
சாஷாத் காரத்தாலே சித்தித்த
மன் நியாம்யதையையும் மத் தாஸ்யதயையும்
ஸ்வபாவமாக உடைத்தான ஆத்ம ஸ்வரூபத்தை வுடையீராய்

ஸ்வரூப சாஷாத் காரம் பிறந்தால்
தத் கதமான ஈஸ்வரைக நியாம்யத்வமும் தன்னடையே வெளிச் செறிக்கும் இறே

அப்படி ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தவராய்
மத் ஏக அனுபவ
ஸ்வரூப சாஷாத்காரம் பிறந்தால் அவனை விஷயீ கரித்து அல்லது நில்லாதே

ஸ்வ ஸ்வரூபத்தை தெளியக் கண்டால் ஸ்வரூப கதமான ஜ்ஞான ஆனந்தங்களில்
பர்யவசிக்கை அன்றிக்கே ஸ்வரூப யாதாம்யத்து அளவும் செல்லும் இறே
ஸ்வரூப யாதாத்ம்யம் ஆவது ஆத்ம கதமான பகவத அத்யந்த பார தந்த்ர்யாதிகள் இறே

ஆகையாலே கைவல்யம் போல் அன்றிக்கே என்னை ஒருவனையுமே அனுபவ விஷயமாக உடையீராய்

அவதாரணத்தாலே
ஸ்வ ரசத்துக்கு உடலாக அனுபவிக்கும் அதிகாரியை வ்யாவர்த்திக்கிறது
தனக்கு என்று தன்னை அனுபவிக்கும் அனுபவத்தோடு
தனக்கு என்று ஈஸ்வரனை அனுபவிக்கும் அனுபவத்தோடு வாசி இல்லை

ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று
ஸ்வரூப தர்சனத்தில் வந்தால் -எனக்கு சேஷி -என்று அவனை தர்சிக்கை அன்றிக்கே
அவனுக்கு சேஷம் என்று தன்னை தர்சிக்கையும்
தர்சித்தால் அனுபவத்தில் அவனே விஷயம் ஆகையும்
இவ் வர்த்தத்தில் பிரமாணம் -அஹம் அன்னம் -என்னும் இதுவே

ஆனால் அன்னம் போலேயாக ஒண்ணாது-சேதனான வாசி ஸித்தி பெற வேண்டுமே -அசேதன வ்யாவ்ருத்தியாக சேதனன் இருக்க வேண்டும் அன்றோ-அஹம் அந்நாத-என்றது
சேதனனுக்கு இறே உபேயத்தில் உகப்பு உண்டாவது
அது இன்றிக்கே ஒழிந்தால் புருஷார்த்தம் ஆக மாட்டாதே

மத் தாஸ்ய ஏக ப்ரிய
இவனை அனுபவிக்கப் புக்கால் அவ் வளவிலே பர்யவசிக்கும் படியாய் அன்றே இருப்பது
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னிச் -செய்வது என் என்னில்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்றார் இறே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்–நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று இறே ஸ்வரூபம் இருப்பது
அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்

மத் தாஸ்ய ஏக ப்ரிய-இவ் வவதாரணத்தாலே வ்யாவர்த்த்யம் தனக்கு என்னப் பண்ணுமது –
இது தான் கூடாது என்று கழித்தது இறே உத்தர கண்டத்தில் நமஸ் சப்தம் –
எனக்குப் பண்ணும் கைங்கர்யத்தையே ப்ரீதி விஷயமாக உடையீராய்

பரிபூர்ண அநவரத நித்ய விசத தம அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரீதி மத் அனுபவவஸ் த்வம் –
பரிபூரணமாய்
ஷணம் தோறும் இடை விடாதே நித்தியமாய்
பிரத்யஷம் என்னலாம்படியாய்
அநந்ய பிரயோஜனமாய்
ப்ரஹ்மாதிகள் உடைய அதிசயத்தையும் கால் கடைக் கொண்ட
என்னுடைய அனுபவத்தையே ப்ரீதி பாத்ரமாக உடையீரான நீர்

ததா வித மத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித-
அப்படிப் பட்ட என்னுடைய அனுபவத்தால் உண்டான
அநவதிகமான
அதிசயத்தை வுடைத்தான
ப்ரீதியாலே செய்விக்கப் பட்ட

அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷைதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவ –
எல்லா அவஸ்தைகளிலும் அனுகூலமாய்
எல்லா அடிமைகளிலும் உண்டான
அபிநிவேசத்தையே வடிவாக உடையீராய்க் கொண்டு
யாவதாத்ம பாவி அனுபாவ்யமான
கைங்கர்யத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவீர் –

——————————————————————————–
சூரணை -18-

ஏவம் பூதோசி-(ஏவம் பூத அஸி)
பகவத் ப்ராப்த் யுபாவ்யமாகச் சொல்லப் பட்ட உபாசன அங்கமாய் இருந்துள்ள
வர்ண ஆஸ்ரம ஆசாராதி விஹீநராய் இருந்தீரே யாகிலும்
உபாசன அங்க விரோதியான அநந்த பாப ஆக்ராந்தராய் இருந்தீரே யாகிலும்
அநந்த மத் அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
அநந்த மதீய அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
அநந்த அசஹ்ய அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்

ஏதத் காரண பூதா நாதி-
விபரீத அஹங்கார விமூடாத்ம ஸ்வ பாவராய் இருந்தீரே யாகிலும்
ஏதத் உபய ஹேது பூதா நாதி விபரீத வாஸநா சம்பத்தராய் இருந்தீரே ஆகிலும்
ஏதன் மூல பூத பிரகிருதி சம்பந்த விசிஷ்டராய் இருந்தீரே யாகிலும்
ஏதன் மூலாத் யாத்மிகாதி சுக துக்கங்கள் என்ன
இவற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள ததி தரோ பேஷநீய விஷயங்கள் என்ன
இவற்றின் உடைய அனுபவத்தால் உண்டான பகவத் ஜ்ஞான சங்கோச ரூபமான பர பக்தி யாதி
விரோதியாலே நஷ்ட ப்ராயராய் இருந்தீரே ஆகிலும்

ஏதேனும் ஒரு படியாலே
த்வய அனுசந்தானம் பண்ணப் பெறுவீர் ஆனால்
சஹாயாந்தர நிரபேஷமான என்னுடைய கிருபையாலே
என் திருவடிகளில் உண்டான பர பக்தி யாதிகளுக்கு விரோதி யாமவை எல்லாம்
ஹேதுக்கள் உடன் நிச்சேஷமாக நசித்து
என் திரு வடிகளிலேயே பர பக்தி யாதிகள் உண்டாகப் பெற்று
என்னுடைய ஸ்வரூபாதிகளின் பரப்பை உள்ளபடி சாஷாத் கரிக்கப் பெற்று
மன் நியாம் யதாதிகளையே ஸ்வபாவமாக வுடைய ஆத்ம ஸ்வரூப சாஷாத் காரம் பெற்று
மத் ஏக அனுபவராய்
மத் தாஸ்யைக பிரியராய்
பகவத் அனுபவத்தையே எல்லா அன்புக்கும் இலக்காக்கி
ததாவித பகவத் அனுபவத்தில் உண்டான அநவதிக ப்ரீதியாலே செய்விக்கப் பட்ட
அசேஷ அவஸ்த உசித
சகல வித கைங்கர்யமே தேக யாத்ரையாம் படி யாகக் கடவீர் -என்று
பெரிய பெருமாள் அருளிச் செய்த வாறே

இவை எல்லா வற்றுக்கும் ஹேது ஏதோ வென்று பார்த்த வாறே
த்வய அனுசந்தானமே யாய் இருந்தது –
இது இருந்த படி என் -என்ன
அதுக்கு குறை உண்டோ -என்ன
அது இருந்தபடி கண்டோமுக்கு-

ஏவம் பூதோசி -(ஏவம் பூத அஸி)என்று சொல்ல வேண்டும்படியோ இதின் பிரபாவம் இருப்பது –

——————————————————————————–

சூரணை -19–அவதாரிகை-
எல்லாம் குறைவற வன்றோ உமக்கு இருக்கிறது
ஒரு தேச விசேஷத்தில் உள்ளாரோபாதி
இச் சரீரத்தோடே அடிமை செய்யும் படியாய் இருக்கிறது அன்றோ உமக்கு -என்ன

தாப த்ரயாதி களுக்கு அடியான இச் சரீர சம்பந்தம் கிடந்தது
இதுக்கு அவசான காலம் அறிகிறிலேன்
இங்கு இருக்கும் நாளைக்கு கால ஷேபம் பண்ணும் விரகு அறிகிறிலேன்
வஸ்தவ்ய பூமி ஏது என்று அறிகிறிலேன்
இப்படி இருக்க எல்லாம் குறை வற்றவனாக அருளிச் செய்யும்படி
உபச் சந்தனமாய் இரா நின்றதீ-என்ன

இதுவோ நீர் சொல்லிற்று- இவ்வளவே யன்றிக்கே இன்னமும் இது செய்யும்படி கேளீர்
என்று பெரிய பெருமாள் அருளிச் செய்கிறார் –

ஆத்யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக துக்க விக்ன கந்த ரஹித ஸ்தவம்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன
சஹ சதா ஏவம் வக்தா
யாவச் சரீர பாதம்
அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூகமாஸ்ஸ்வ

ஆத்யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக துக்க விக்ன கந்த ரஹித ஸ்தவம்
தாபத் த்ரயாதிகளால் வரும் துக்கம் ஆகிற விக்நத்தின் உடைய
கந்தமும் அற்றவராய் –

இச் சரீரத்தோடே இருக்கச் செய்தே
தாப த்ரயத்தால் வரும் துக்க கந்தம் அற வர்த்திக்கப் போமோ -என்னில்
ஸ்தவம் -நீர் அல்லீரோ
நீர் ஆகில் வர்த்திக்க குறை என்ன –
ஏவம் பூதோசி –என்று நான் சொல்லும்படியான வீறு உடையீர் அல்லீரோ –

அதாவது
காலம் குறுகா நின்றது -கர்மம் ஷயிக்கத் தொடங்கிற்று -‘கர்மம் ஷயிக்க -பிராப்யம் அணித்தாகா நின்றது -என்று
அநந்தரம் பெறுகிற பேற்றை அனுசந்தித்து
இவற்றால் வரும் துக்கங்களை மதியாதே வர்த்தியும் -என்றபடி –
என் போலே என்னில் -அபிஷேகப் பட்டினி போலே –

அங்கனே ஆகிலும் சரீரத்தோடே இருக்கும் நாளைக்கு கால ஷேபம் பண்ணுவது
எத்தாலே  என்னில்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ –
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணிக் கொண்டு
அதுவே துணையாக இரும்(ஜப்த்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்)

நாட்டாரோடு இயல் ஒழிந்து-திருவாய் மொழி -10-6-2- என்கிறபடியே
சம்சாரத்தில் வ்யாவ்ருத்தனாய்
கைங்கர்ய பிரார்த்தனையே யாம்படி
இதுக்கு தூரியனாய்
நாரணனை நண்ணினம் – திருவாய் மொழி -10-6-2- என்கிறபடியே பகவதி ந்யஸ்த பரனாய் இருக்கும் அதிகாரிக்கு
த்வயத்தில் அர்த்த அனுசந்தானமே யாய்த்து துணையாய் இருப்பது

கீழ் த்வய வக்தா –என்றது
இங்கு -த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ -என்கிறது

இதுக்குக் கருத்து என் என்னில்
பகவத் விஷயீ காரத்துக்கு பாசுரமே அமையும்
கால ஷேபத்துக்கு உடலாம் அன்று அர்த்த அனுசந்தானத்து அளவும் அபேஷிதமாய் இருக்கும் –

சதா ஏவம் வக்தா –
ஏவம் என்றது இப் ப்ரகாரத்தாலே   -என்றபடி

அதாவது கீழ் தாம் ஒரு பிரகாரத்தாலும்
முன்பு உள்ளார் படியாலும்
இதிஹாச பிரக்ரியை யாலுமாக
மூன்று ப்ரகாரத்தாலே சரணம் புக்கார் –

இதில் பூர்வர்கள் பிரக்ரியையும் ஒழிய
இதிஹாச பிரக்ரியையும் ஒழிய இக் கத்யத்தில் சொன்ன வழியாலே என்றபடி
இன்னம் இருபது படி சரணம் புக்காலும் மறித்து மறித்து சரணம் புகா நிற்கும்

அத்தனை போக்கி உபாயாந்தரம் இல்லையே இவர்க்கு –
வேறு புகல் இல்லையே இவர்க்கு –
இப்படி சரணம் புகுகிறது அவன் பிரசாதத்துக்க்காக இறே –
அது தானும் இதிலே சித்திக்கையாலே –ஏவம் ப்ரகாரத்தாலே -என்கிறார் –

வக்தா –
நெஞ்சுக்கு உள்ளே வேண்டா –
அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல்லே அமையும்

அன்றிக்கே –
ஏவம் வக்தா த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ –
இக் கத்யத்தை அனுசந்திக்கவே
த்வயத்தை அர்த்த அனுசந்தானதுடன் அனுசந்தித்தீர் ஆகிறீர்

இரண்டும் பொருள் ஒன்றே இறே என்னவுமாம் –
அதுக்கு பாசுரம் இதுவாம் இத்தனை இறே –

ஆனால் ஒருகால் அனுசந்தித்தாலும் அமையுமோ என்னில்
சதா –
எப்போதும்
எப்போதும் வேண்டுவான் என் என்னில்
உபாயாந்தரங்களும் நடையாடும் நெஞ்சு ஆகையாலே
அவை புகுராமைக்காக சதா என்கிறது

அன்றிக்கே
இவ் வதிகாரிக்கு பிரகிருதி சம்பந்தமும் பகவத் சம்பந்தமும் இரண்டும் கூடக் கலசி வர்த்திக்கையாலே
பிரகிருதி சம்பந்தம் இதர விஷயங்களிலே மூட்டும்
பகவத் சம்பந்தம் ஸ்வரூப அநுரூப வ்ருத்தியிலே மூட்டும்

இங்கனே இருக்கச் செய்தே இதர விஷயங்களுக்கு அஞ்சி
பகவத் விஷயத்தைப் பற்றினவர் ஆகையாலே
ஏற்கவே அதில் அன்வயம் இல்லை

இனி வ்ருத்தி விசேஷமோ என்றால் ஒரு தேச விசேஷத்திலே யாகையாலே
சால விப்ரக்ருஷ்டமாய் இருந்தது
இனி இருக்கும் நாளைக்கு போது போக்கு இதுவே இருக்கும் ஆகையாலே
எப்போதும் -என்கிறது -என்றுமாம் –

ஆகிலும் இவ் விருப்புக்கு அவஸானம் ஏதோ அபேஷையிலே
யாவச் சரீரபாதம் -என்கிறார் -பெரிய பெருமாள் –
இவர் தாம் இப்படி கேட்கிறது உபாயாந்தர பரிக்ரஹம் பண்ணி அது முடிந்த அளவிலேயோ
அன்றியே
உபாசனம் சமாபித்தாலும்
பிராயச பாப காரித்வாத் ம்ருதயோருத் விஜதே ஜன -க்ருதக்ருத்யா ப்ரதீஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதம் -என்று
தன்னளவும் பார்த்து இருக்க வேண்டும்படியான கர்ம அவஸாநத்திலேயோ
என்று சங்கித்துக் கேட்கிறார் அல்லர்

உபாயாந்தரத்தில் அன்வயம் இல்லாமையாலும்
அது இன்றிக்கே ஒழிந்தால் எப்போதோ -என்று சம்சயிக்க வேண்டாதே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருவாய் மொழி -9-10-5-என்று
பரமாச்சார்யர் அருளிச் செய்து வைக்கையாலும் –

இனி இப் பிரஸ்னத்துக்கு கருத்து என் என்னில்
ப்ராப்ய த்வரையாலும்
காலம் நெடுகித் தோற்றுகையாலும்
பரிக்ரஹித்த உபாயம் விளம்ப சஹம் அல்லாமையாலும்
கேட்க வேண்டி வரும்

நமக்கு ருசியும் உண்டாய் இருந்தது
ஸ்வீகரித்த உபாயமும் கண் அழிவு அற்று இருந்தால் இனி
இவ் விருப்புக்கு அடி அவன் நினைவாம் அத்தனை ஆகையாலே அவனையே நிர்பந்தித்துக் கேட்கிறார்

அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –யாவத் சரீர பாதம்
இச் சரீரமே அன்றோ விளம்பம் -ஆரம்பித்த கர்மம் எல்லாம் -பிராரப்த கர்மம் எல்லாம் -பார்க்க வேண்டாம் -அது தான் நாளுக்கு நாள் சென்று அன்றோ நிற்கிறது
ஆனால் இருள் தரும் மா ஞாலத்தில் எனக்கு இருப்பு நிஸ் ஸஹம்-இருக்கும்படி கடாஷித்த தேவரீரே
இருப்பிடமும் வகுத்துக் காட்டி அருள  வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்

அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூகமாஸ்வ
உமக்கு உபய விபூதியில் உள்ளாரும் ஒப்பாக மாட்டாதாப் போலே காணும்
பரம பதத்தையும் கால் கடைக் கொண்டு நாம் படுகாடு கிடக்கும் கோயிலுக்கு உபய விபூதியும் ஒப்பாக மாட்டாதபடி
வடிவுடை வானோர் தலைவன் வண் திருவரங்கன் -திருவாய் மொழி -7-2-10-என்றது இறே

விரோதியான இவ் வுடம்புடனே பகவத் அனுபவம் செய்யப்பட்ட உம்மைப் போலவே ஸம்ஸார விபூதியிலும் கூட்டு அன்றிக்கே நித்ய விபூதியிலும் கூட்டு அன்றிக்கே
இரண்டிலும் வ்யாவ்ருத்தியாய் த்ருதீய விபூதியான கோவிலே போர வஸ்தவ்ய பூமி உமக்கு
அனைத்து உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம்

ஸூகமாஸ்ஸ்வ
முக்த ப்ராயர் ஆகையாலே சுகமே வர்த்திக்கக் குறை இல்லை இறே

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading