Archive for June, 2025

ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்

June 16, 2025

ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்

ராம —  ராமனுக்கு; அநுஜ — பிற்பாடு உண்டான–இந்தப் பதம் ப்ரதமாசார்யனான எம்பெருமான் தொடக்கமாக ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளார் வரையிலாக ப்ரஸித்தி பெற்று விளங்கும் குருபரம்பரையிலுள்ள எல்லா ஆசார்யர்களையும் குறிக்கும்-யோகிகள் எல்லோரும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் செய்யப்படும் த்யானத்தினால்பரம ப்ரீதியை அடைகிறார்களோ, அப்படிப் பட்ட ப்ரீதி விஷயமான பரப்ரஹ்மம் ‘ராம’ என்னும் பதத்தினால் சொல்லப் படுகின்றது. இந்தப் பரமாத்மா திருவனந்தாழ்வானான திருப்பள்ளி மெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேண்டுமென்று ஸஹ்ருதயனாய் இருந்தபோதிலும் அந்த எண்ணம் கைகூடாமல் உலகத்தவர் உண்டியே உடையே உகந்து ஓடித் திரிந்து நின்றமையினால் அவன் ஏகாகியைப் பொலவே ஸந்தோஷமில்லாதவனாய் இருக்கும்படியாயிற்று. அந்த நிலைமையை மாற்றி “திருத்திப் பணிகொள்வான்” என்றபடி ஜனங்களைத் திருத்தி, ப்ரபத்தியாகிற உபாயத்தின் ப்ரபாவத்தை உலகெங்கும் பரப்பினான்.

ராம: என்பது ஆத்மாராமனான எம்பெருமானைக் குறிக்கிறது. அதாவது தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபகுண விக்ரஹாதிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதினால் பரம ப்ரீதனாய் இருப்பவன் பரமாத்மா. அப்படிப்பட்ட பரமாத்மாவை இல்லையென்றும், நிரவயவன் என்றும், நிர்குணன் என்றும் கூறும் பிறமத வாதங்களைக் கண்டித்து பரமாத்மா ஸகல கல்யாண குணங்களை உடையவன் என்று ஶததூஷணீ முதலான ஶ்ரீஸூக்திகளில் ஸ்தாபித்து அவனுடைய தயூக்குப் பாத்திரமானார் ஸ்வாமி.

லக்ஷ்மியின் ஸம்பந்தம் பெற்றவர் எம்பெருமான். அதனாலேயே அவனுக்கு ஏற்றம். பரப்ரஹ்மம் யார் என்று நிர்ணயம் செய்ய ஆரம்பித்தவர்கள் லக்ஷ்மியைத் திருமார்பில் தரித்திருப்பவன் என்று அறுதியிட்டார்கள்

ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி

ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம்
   -(தயா ஶதகம் 8)

 பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில்  (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.-க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை-வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||
-தயா ஶதகம் 7-நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்  அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.

 ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.-பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் | யதுபஜ்ஞமஶேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகா  ப்ரபாவ:||(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)-பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும், பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகுக்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.

 ராமாநுஜ  என்பது இளைய பெருமாளைக் குறிக்கிறது. ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யத்தையும் பகவானுக்குச் செய்வதே நமது கடமை. இப்படிப்பட்ட ஶேஷத்வ நிலைமை இல்லாதபோது ஸ்வரூபம் முடிந்ததாகப் பாவிக்க வேண்டும்

ராமாநுஜ  என்னும் பதம் சத்ருக்னாழ்வானைக் குறிக்கிறது. இவர் அநுஷ்டித்துக் காட்டிய பாகவத தாஸ்யமே நமக்கு ப்ரதானம் என்று கொண்டு அதையே ஸாரஶாஸ்திரத்தில் மத்திமமான பதினாறாவது புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில் நிரூபித்தருளியபடி.

ராமாநுஜ  என்கிற பதம் கீதாசார்யனைக் குறிக்கிறது.தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல் மாதுற்ற மாயன் மருவ இக்கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே-என்று ஸ்ரீகீதை பக்தி யோகம் செய்பவர்களுக்கும் ஶரணாகதி நிஷ்டர்களுக்கும் ப்ரயோஜநமாகும் என்று நிரூபித்தருளி கீதையினுடைய ஸாரமான ஸமுதாயார்த்தமாகும்

ராமாநுஜ என்ற பதம் பரதத்வ வாமனனாய் அவதரித்து த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்த உத்தமமான அவதாரத்தைக் குறிக்கிறது.

ராமௌ என்ற பதம் பெருமாளையும் பிராட்டியையும் குறிக்கிறது. அநுஜ என்ற பதம் விஷ்வக்ஸேநரைக் குறிப்பிடுகிறது. இவர் அந்த திவ்ய தம்பதிகளின் நியமனத்தின்பேரில் அவதாரம் செய்து, விஶிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவர்.இவருக்கு ஸேனைநாதன், ஸேனை முதலியார் என்ற திருநாமங்கள் உண்டு. இவருடைய ப்ரபாவத்தை ஸ்வாமி, குருபரம்பரை அநுஸந்தானப் பாசுரத்தில் பெரிய பிராட்டிக்கு அடுத்தபடியாக ஸேனைநாதன் என்று அருளிச் செய்துள்ளபடி.-வந்தே வைகுண்டஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம் |
யத்வேத்ரஶிரவரஸ்யபந்தே விஸ்வமேதத்வய வஸ்திதம் ||
  ( யதிராஜஸப்ததி)

தநுஜமதநே விஷ்வக்ஸேநோ ஹரேஸ்ததநந்யதீ:
அசேஷவிக்ரசமநமநீகேச்வரமாச்ரயே|
ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத்த இவோத்திதம் || 
( தயாஶதகம்)

ராமாநுஜ என்கிற பதம் திவ்யதம்பதிகளுக்குப் பிறகு மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைக் குறிக்கிறது.-அந்த பகவான் கலியுகத்தில் ஶரணாகதி தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு தன்னுடைய அம்ஶமாக தன்னுடைய ஸங்கல்ப விஶேஷத்தாலே பத்து ஆழ்வார்களை அவதாரம் செய்வித்து த்ராவிட வேதத்தை (திவ்யப்ரபந்தம்) வெளிப்படுத்தி மற்றுமோர் அபிநவ தஶாவதாரத்தை நிகழ்த்திக் காட்டினான். ஆழ்வார்கள் வாயிலாக வந்த அவை நித்யமானது என்பதை ஸ்வாமி தேஶிகன் ஸம்ஸ்க்ருத வேதத்தில் புரியாத அர்த்தங்களை திராவிட வேதமான திவ்யப்ரபந்தத்தை ஓதி தெளியாத மறைநிலங்களை தெளிகின்றோமே என்று அருளிச் செய்துள்ளபடி.-எத்தனை வேதங்கள் எம்பெருமானைப் பின்தொடர்ந்து வந்தாலும் ‘தேடியோடும் செல்வன்’ என்றபடியும் “மெய் நின்று கேட்டருள்வாய்” என்றபடியும் எம்பெருமான் பின்தொடர்ந்து செவிசாய்ப்பதால் ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளின் உயர்வைக் காட்டுகிறது.

ராமாநுஜ என்ற பதம் முதலாழ்வார் மூவரைக் குறிப்பிடுகின்றது. பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளால் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) அநுபவித்தவர்கள். ஆகையால் இவர்களை இன்கவி பாடும் பரம கவிகளால் (திருவாய்மொழி) என்றும் செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி) என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.-பாட்டுக்குரிய பழையவர் (அதிகாரஸங்க்ரஹம்) என்ற பாசுரத்தில் தமிழ்ப்பல்லாண்டு இசையுடன் பாடும் ஸூரிகளின் அவதாரம் என்றும், “நாட்டுக்கு இருள்செக, நான்மறையந்தி நடைவிளங்க, வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் மெய்விளக்கு” என்னும்படியான தீபத்தை ஏற்றி பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தார்கள்.

ராமாநுஜ என்கிற பதம் திருமழிசை ஆழ்வாரையும் குறிக்கிறது. இவர் சக்கரத்தாழ்வானுடைய அவதாரம் என்பதை “மழிசை வந்த சோதி” (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்) என்று காண்பித்துள்ளார்.

ராமாநுஜ என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவருக்கு ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் அந்வயம் உண்டு.த்³ரமிடோ³பநிஷத் த்³ரஷ்டுரஸ்ய யாதா²த்ம்யமத்³பு⁴தம்|ஸம்யக் ஶ்ருதவதாம் நாத்ர ஶங்கநீய உபப்லவ:||
தே³வகு³ஹ்யோஷு சாந்யேஷு ஹேதுர்தே³வி நிரர்த² இத்யாதி³
ந்யாயத்³ருஷ்டயா ச தோஷ்டவ்யமிஹ ஸூரிபி
⁴:(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)அத² பராஶரப்ரப³ந்தா⁴த³பி வேதா³ந்தரஹஸ்ய வைஶத்³யாதிஶயஹேதுபூ⁴தை: ஸத்³ய: பரமாத்மசித்த ரஞ்ஜகதமை: ஸர்வோபஜீவ்யை: உபப்³ருஹ்மணை: மது⁴ரகவிப்ரப்⁴ருதி ஸம்ப்ரதா³யபரம்பரயா நாத²முநேரபி உபகர்தாரம் கால விப்ரகர்ஷேபி பரமபுருஷஸங்கல்பாத்  கதா³சித்  ப்ராது³ர்பூ⁴ய ஸாக்ஷாத³பி ஸர்வோபநிஷத் ஸாரோபதே³ஷ்டா²ரம் பராங்குஶமுநிம்(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)த்³ரமிடோ³பநிஷந்நிவேஶஶூந்யாநபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யாத் |
த்⁴ருவமாவிஶதிஸ்ம பாது³காத்மா ஶட²கோப: ஸ்வயமேவ மாநநீய:||
 (ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்)பா⁴ஷா கீ³தி: ப்ரஶஸ்தா ப⁴க³வதி வசநாத் ராஜவச்வோபசாராத்”  (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)நித்யம் ஜாதா ஶட²ரிபுதநோ: நிஷ்பதந்தி முகா²த்தே| ப்ராசீநாநாம்ஶ்ருதிபரிஷதா³ம் பாது³கேபூர்வக³ண்யா(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்) தாம்ரவர்ணீதடக³தஶட²ஜித் த்³ருஷ்ட ஸர்வீய ஶாகா² (ஸ்ரீத்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளி) ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்³ருஷ்டவந்தம்    (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)அகி²லத்³ராமிட³ப்³ரஹ்மத³ர்ஶீ
 (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)வகுளத⁴ரதநுஸ்த்வம்ஸம்ஹிதாம் யாமபஶ்ய: (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)வகுளத⁴ரமார்ஷித்³ருஷ்டே த்³ரமிட³ நிக³மே  (ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை)ஶ்ராவ்யவேதா³த்  (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஶட²ஜிது³பசிஷத்³து³க்³த⁴ஸிந்து⁴ம்   (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)வேதா³நாக³ஸ்த்ய பா⁴ஷா ப³புஷ உத³த⁴ரச்ச்²ரேயஸே தே³ஹிநாம் ய:  (தாத்பர்யரத்னாவளி)ஶட²மத²நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ⁴மீ வகுளத⁴ரமஹர்ஷித்³ருஷ்ட விஶ்வஜநீநோபநிஷத் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒருவரே என்று நிரூபித்தருளியுள்ளார்

ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது.

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது.

ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார்.

ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார்–ஆசார்ய நிஷ்டை-வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே(நாச்சியார் திருமொழி)

ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்)

ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.-தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.

ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது.

ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது.

ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்-ஸ்ரீதத்வமுக்தா கலாபம்)-தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்||
 (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)-மஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்| சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் || (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)-பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார்.-ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம்-ஸ்ரீதத்வடீகை

ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது.ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும் 

ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)

ராமாநுஜ என்கிற பதம் தர்ஶந ஸ்தாபகரான எம்பெருமானாரைக் குறிக்கிறது-ஸ்ரீபாஷ்யகார பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புத: (ஸ்ரீதேஶிக மங்களம்)-ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ம ஶரீரத்தில் ஜந்துக்களைப்போல பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கநம் பண்ண அவரோடுண்டான குடல் துவக்கத்தாலே நாம் உத்தீர்ணராவுதோம்’ (ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற முதலியாண்டான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை அறியாமல் எம்பெருமானார் அனுஷ்டித்த ஶரணாகதியே போதும், வேறொரு உபாயம் வேண்டாம் என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஆழ்வான் அந்திம தஶையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய, இப்பேறு நமக்கு வருகை அரிது, நாம் என்ன செய்யக்கடவோம், என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்கள் அபிப்பிராயத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ, இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்ட சர்க்கரையையும் இட்ட மாத்திரமன்றோ, நாம் உபாயத்திற்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம் என்றருளிச்செய்ய, முதலிகள் தெளிந்து நிர்ப்பரரானார்கள்” என்று ஆழ்வான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை வெளியிட்டருளினார். எம்பெருமானார் அனுஷ்டித்துக் காட்டிய உபாயம் எல்லாம் மோக்ஷத்திற்கு ஸாதகமாகாது என்று சிலர் கூற அதற்கு பெரியோர்களின் வார்த்தைகளே நமக்கு ப்ரமாணம் அனுஷ்டித்த சிற்சில பாகங்கள் ப்ரமாணமாகும் ईश्वराणां वचस्सत्यं
 ஈஶ்வராணாம் வசஸ்ஸத்யம் (ஸ்ரீமத் பாகவதம்) என்றபடி அவர்களுடைய வர்ணாஶ்ரம பேதமில்லாமல் (விரோதமில்லாமல்) உள்ள அம்ஶங்களே ப்ரமாணமாகும். அநுஷ்டானமும் ஶாஸ்த்ர விரோதமாக இருக்கவில்லை என்பதை திருவுள்ளம் கொண்டு கர்மாநுஷ்டானத்தில் மிகவும் விழிப்புடன் இருந்தார் என்பதை ‘பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ ‘எம்பெருமானுள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திம திவஸாவதியான அநுஷ்டானங்களை (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) 
  என்று அருளிச் செய்துள்ளார். மேலும் ஸ்ரீபரமபத ஸோபானத்தில் எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே என்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில்  இதி யதிராஜமஹாநஸபரிமள பரிவாஹ வாஸிதாம் என்றும் அருளிச் செய்துள்ளார்.

ராமாநுஜ என்கிற பதம் திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் குறிக்கிறது. இவர் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஜ்ஞாநபுத்ரர் என்று வடுக நம்பியால் கொண்டாடப்பட்டவர். இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற வ்யாக்யானம் செய்தருளியுள்ளார்

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்கிற திருநாமமுடைய எங்களாழ்வானைக் குறிக்கிறது. இவர் வேதார்த்த ஸங்க்ரஹத்திற்கு வ்யாக்யாநமிட்டுள்ளார்-உக்தம் ச ஸ்ரீவிஷ்ணுசித்தை: ச்யேந கபோதீய கபோதோபாக்யாந காகவிபீஷண க்ஷத்ரபந்துமுசுகுந்த கஜேந்த்ரத்ரௌபதீ தக்ஷக சதமகாதிஷு மோக்ஷார்ததயா க்ஷணகாலநிர்வர்த்ய ப்ரபதநார்த தர்சநாத் அபதிராணாம் தத்ர முக்யத்வம் இதி (ஸ்ரீநிக்ஷேபரக்ஷை),

ராமாநுஜ என்கிற பதம் நடாதூர் அம்மாளைக் குறிக்கிறது.-ஸ்ரீமத்பயாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம் (அதிகரண ஸாராவளி)-வ்யாதாநீத்  வேங்கடேசோ வரதகுரும் க்ருபா லம்பிதோத்தாம் பூமா (ஸ்ரீ தத்வமுக்தாகலாபம்
)ப்ரணம்ய வரதாசார்ய (ஸ்ரீதத்வடீகை)

ராமாநுஜ என்கிற பதம் வஸிஷ்டரையும், ஸாந்திபிநி ரிஷியையும் குறிக்கிறது.-பத்யு: ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாதகோடீரயோ: ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ்ததாந்யாந் குரூந்  (ந்யாயபரிஶுத்தி) என்றும், மேலும் பெரிய நம்பிகளையும், ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளாரையும் குறிக்கிறது.  இவருடைய பெருமையை அப்புள்ளார் அருளிச் செய்த விரகு, கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார், கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாய்ப் போலே பழக்குவிக்க, அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்),ஶ்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி தத(ஸ்ரீதத்வமுக்தாகலாபம்)ஸ்ரீமத்பயாம்ராமாநுஜாப்யா(அதிகரணசாராவளி)அஶ்ரௌஷம்  சேஷகலபாதஹமபி வீதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத (அதிகரணஸாராவளி)நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயிநே (வாழித்திருநாமம்)வந்தே ஆத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம் (அப்புள்ளார் தனியன்)ததூக்தா ….. மம குருபி: வாதிஹம்ஸாம்புவாஹை: (அதிகரண ஸாராவளி)

ராமாநுஜ என்கிற பதம் எம்பெருமானாருக்கு திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த வேதாந்தோயநர் என்ற கிடாம்பி ஆச்சானைக் குறிக்கிறது. இவர் வழியில் வந்தவர் எல்லோருக்கும் பயன்பெறுமாறு முப்பத்து நான்கு ரஹஸ்யங்களாக அருளிச் செய்துள்ளார் என்றபடி “ஆச்சான் பக்கலிலே கேட்டு” (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்” (ஸ்ரீபரமபதஸோபாநம்)இதி யதிராஜமஹாநஸ பரிமளபரிவாஹ வாஸிதாம் பிபத (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம் (ஸ்ரீஶரணாகதி தீபிகை)யோ மஹாநஸிகோ மஹாந் யதிபதே நீதச்ச தத்பௌத்ரஜாந் ஆசார்யாந் (ஸ்ரீந்யாஸதிலகம்)

ராமாநுஜ என்கிற பதம் திருமலையாண்டானைக் குறிக்கிறது. திருமலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்  (ரஹஸ்யத்ரயஸாரம்)

மேலும் ஆசார்ய பரம்பரையில் எம்பெருமானாருக்கு ரஹஸ்யார்த்தங்கள் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமாயணார்த்த விசேஷங்களை உபதேசித்த பெரியதிருமலை நம்பிகளும் இவர்களுடைய ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யஸாரம், ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி முதலியவற்றில் நிரூபித்திருப்பதால் அவர்களுடைய தயைக்குப் பாத்ரமானார் ஸ்வாமி என்றபடி.

                                                                            

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

திருச் சின்ன மாலை -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

June 15, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

சிறப்புத் தனியன்கள் –

மன்னு திருமந்திரத்தின் வாழ் துவயத்தின் இன்பொருளும்
துன்னு புகழ்க் கீதை தனில் சொன்ன எண் நான்கின் இன் பொருளும்
அன்ன வயல் கச்சி யருளாளர் திருச் சின்ன வொலி
யின்ன படி என்று உரைத்தான் எழில் வேதாந்த்ரியனே –

எண் நான்கின் இன் பொருளும் -முப்பத்து இரண்டு அஷரங்களால் ஆகிய சரம ஸ்லோகத்தின் அர்த்த விசேஷங்களும் –

———

ஏகாந்த மூன்றும் எழிலால் உரை செய்து
மா காந்தம் செய்து அருளும் வள்ளலாய் -சாகாந்த
தேசிகனாம் தூப்புல் திரு வேங்கடேச குரு
வாசகமே எங்களுக்கு வாழ்வு –

மா காந்தம் செய்து அருளும் வள்ளலாய்-பெருமை மிக்க உலோகமான காந்தம் போலே பிறர் மனசைக் கவர்ந்து
அவர்களை உஜ்ஜீவிக்குமாறு அருள் புரியும்
சாகாந்த தேசிகனாம் -வேதாந்த தேசிகன் என்று பிரசித்தி பெற்ற –

——————————-

பரிச்சின்னமான விரு நாலு எழுத்தின் பல் வண்மை எலாம்
விரிச்சு நலம் பெற வோத வல்லார்க்கு இந்த மேதினிக்கே
மரிச்சு இன்னம் மீளப் பிறவாமல் வாழ்விக்கும் மால் வரதர்
திருச் சின்ன வோசை இனிமை யுண்டோ மற்றைத் தேவருக்கே –

[அளவுபட்ட திருவெட் டெழுத்தான திருமந்திரத்தின் பல்வகைப் பலனையும் அளிக்கவல்ல தன்மை முழுதையும் தாம் நன்மையை அடையும் பொருட்டு விளக்கி அநுஸந்தாநம் செய்யும் பாகவதோத்தமர்களை இந்தத்தரணியிலே இறந்து பின்னும்பிறக்காமல் உஜ்ஜீவிக்கச் செய்பவரும் பக்தர்களிடம் விசேடஅன்பு உடையவருமான பேரருளாளருடைய திருச்சின்னத்தின் சப்தத் தின் இனிமை மற்றைத் தேவர்பாற் பெறமுடியுமோ?

மால்வரதர், திருச்சின்ன வோசை யினிமை யுண்டோமற்றைத் தேவர்கட்கே என்றதன் வியாக்கியானமாக-முதல்வன்வந்தா னித்யவிபவன் வந்தான் என்றுஉன் முன்னூது விருதுசின்னம் முச்சகமு மெச்சுமிதை மற்றுமுள தெய்வங்கள் முன்னூதில் வெட்குவார் காண்-எனவமைத்துப் பாடிய பெற்றியே பெற்றி.

—————————————————————————-

திவ்ய பிரபந்தங்கள் திரு வீதிகளில் சேவிக்கக் கூடாது என்ற ஆஷேபங்களை வென்று
இந்த பிரபந்தம் சாதித்ததாகச் சொல்லுவார்கள்-ஸ்ரீ பேர் அருளாளன் திரு உள்ளம் உகந்து திருச் சின்னங்களில் ஒன்றை ஸ்ரீ தேசிகன் இடம் அருளியதால் இன்றும் ஒற்றைத் திருச் சின்னமே சேவிக்கப் படுகிறது –

—————————————————

முகவுரை.
உன்னரு ளன்றி யெனக்கொரு நற்றுணை யின்மையினா
லென்னிரு வல்வினை நீயே விலக்கி யிதங்கருதி
மன்னிய நற்றிரு மந்திர மோதும் பொருணிலையே
பொன்னரு ளாலரு ளாய்புகழ் தூப்புற் குலவிளக்கே.-(பிள்ளையந்தாதி. 15)

தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பத்தர்களும்|
பூவின் மழைபொழிந்து போற்றியே – தாவி|
யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந் தூப்புற்
குல குருவே யெங்கள் குரு.-(தேசிகர் நூற்றந்தாதி. 26.)

பூவின் மன்னு மங்கைதாள் பொருந்துமார்ப னாழ்புகழ்
யாவுமங்கம் வேதநான்குபாடுமாற னாகம்
மேவியோங்கு பாச்சியம் விரித்த யோகி நாமமே
நாவிலங்கு தூப்புலய்யர் பாதநண்ணுநெஞ்சமே.-(ஸ்ரீ வேதாந்த தேசிகன் துதி.)

செய்யாட் குகந்த திருமார்பன் வேங்கடச் சீர்வரையான்
மையாருங் கண்டன் மலரய னேத்தி வணங்குவளைக்
கையா னருளிற் கனிந்துயர் தூப்புற் கதிரனைய
வையா! சரண மடைந்தேன் றளுக்க டைக்கலமே.-(ஸ்ரீ வேதாந்ததேசிகன் அடைக்கலப்பத்து. 10.)

திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்த பேராசிரியர் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர். அத்யாச்சரியமான அபார பாண்டித்யமும், அற்புதமான அநுட்டானமும், அனைவரும் ஆதரிக்கத் தக்க ஆத்மகுண பூர்த்தியும், விசேடித்துப் போற்றத் தக்க விரக்தியும் ஒருங்கே அமைந்தவர் இம் மஹான். இச் சந்தமிகு தமிழ் மறையோன் அவதரித்தருளியிராவிடில் கலியுலகில்,பண்டித வுலகில், ஸ்ரீ வைஷ்ணவ வுலகில், இவ்விருள்தருமா ஞாலத்தில் இன்பம் காண்பது அரிதினும் அரிதே.

இவ்வவதார புருஷச்ரேஷ்டர் எண்ணில் பல்குணங்கள் நன்கு பொருந்தியவர். ஆசாரியர்கட்கு அணிகலமான ஞான, பக்தி, விரக்திகள் என்ற முக்குணங்கள் இவரை அடைந்து நிறம் பெறுவன இந்நல்லாசிரியரது கவித்திறன், சாஸ்த்ர பாண்டித்யம்,தமிழ், பிராகிருதம் முதலிய பல பாஷைகளில் அளவு கடந்த வல்லமை, எளிய நடையில் ஸ்தோத்ரங்கள் இயற்றும் பெற்றி, கம்பீர நடையில் சாஸ்த்ரீயக்ரந்தங்கள் அருளிச்செய்யும் அழியா வழகு முதலியன ஒப்புயர்வற்றன.

இந்நாவலருந் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி இவ்வுலகில் தோன்றி அருளிய திவ்ய ஸூக்திகள் அனந்தம். இம் மறைமுடித்தேசிகனாரது சாஸ்த்ர பாண்டித்யச் சீர்மையை
சததூஷணீ, தத்வமுக்தாகலாபம், ஸர்வார்த்தஸித்தி, ந்யாய பரிசுத்தி, ந்யாஸித்தாஞ்ஜநம், ஸேச்வரமீமாம்ஸை, மீமாம்ஸா பாதுகை என்னும் அரும் பெரு நூல்கள் நன்கு அறிவிக்கும்.
அரிய பெரிய சீரிய உயர்ந்த அழகிய வியாக்கியானங்களை அருளிச் செய்வதிலுள்ள அபார அற்புதமான சக்தியை தத்வடகை, கீதாதாத்பர்ய சந்திரிகை, கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை,ஸ்தோத்ர பாஷ்யம், சதுச் ச்லோகீபாஷ்யம், கத்யபாஷ்யம் என்னும் திவ்ய க்ரந்தங்கள் தெற்றெனத் தெளிவிக்கும்.ஆதிமஹா கலிகளைப் போலே சாலச் சிறந்த காவ்ய நாடகங்களை இயற்றுவதில் ஒப்பற்ற நைபுண்யத்தை யாதவாப்யுதயம், ஸங்கல்பஸூர்யோதயம், ரகுவீர கத்யம், ஹம்ஸ் ஸந்தேசம், ஸுபாஷிதநீவி முதலியவைகளும்,பாதுகா ஸஹஸ்ரம் முதலிய பல பல துதி நூல்களும் புலப்
படுத்தும். அபார கருணாநிதியான அச்சுதனின் அபிநவ தசாவதாரமெனக் கொண்டாடப் பெற்று வரும் ஆழ்வார் அருளிச்செயல்களில் ஆழ்ந்து அகங்குழைந்து உருகி நிற்கும் அளவிலாப் பெருமை த்ரமிடோப நிஷத் தாத்பர்யரத்நாவளி, த்ரமிடோபநிஷத்ஸாரம் முதலியவற்றால் மூதலிக்கப் பெறும். அமிழ்தினுமினியதமிழ் இலக்கண இலக்கியங்களிலும் அனைவரும் போற்றியுகக்கத்தக்க ஆச்சரியமான பேரறிவு பெற்று சீரிய நற்கவிகளையியற்றும்பெற்றி”தேசிகமாலை ” யென நற்றமிழர் நன்கு போற்றி வரும்
துய்யதமிழ் இருபத்துநான்கு பிரபந்தங்களினால் தலைமைபெற்று நிலைத்து நிற்கும். அநுட்டான விஷயங்களில் ஆழ்ந்து சிறந்ததேறிய ஆராய்ச்சிகளைச் செய்து நிகரற்ற நிர்ணயங்களை வெளி யிடும் அபூர்வவல்லமை ஸச்சரித்ரரக்ஷை, ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை,நிஷேப ரக்ஷை முதலியவற்றால் நன்கு உணர்த்தப் பெறும்.-கூரிய சீரிய ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டு ஸம்ஸாரிகளை உய்விப்பதில் உண்டாகிய அஸாதாரணமான பரமகருணை ஸம்ப்ரதாய பரிசுத்தி முதலிய ரஹஸ்யங்களினால் ஸதஸ்யமாக விளங்கும்.

அதிமாநுதிவ்யப்ரபாவங்களையுடைய ஆசார்ய ஸார்வ பெளமர் நம் வேதாந்த தேசிக சிகாமணி. கடலளவாயதிசை யெட்டினுள்ளும் மிடைதந்த கலியிருளை உபதேசங்களாலும்,
அநுட்டானங்களாலும், பல பல திவ்யக்ரந்தரசநைகளாலும் அறவே போக்கியருளிய அந்தணர் திலகமே இத்தூப்புல் வள்ளல். பகவத் பாகவத பக்திப் பெருஞ்செல்வமும் ஐஹிகஸுகங்களில் அதிமாத்ரவிரக்தியும் இவ்விசுவாமித்திரகுலதிலகரது நித்ய சரித்
திரங்களினால் நிலை நின்று விளங்கும்.
சீரொன்றுதூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் ஒரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.
-(தேசிகமாலைத்தனியன்.)

தம்மை வணங்கினார்க் கெஞ்ஞான்றுந் தம்முடைய
தன்மை யளிக்குமி ராமாநுசர்போல் -உம்மை
வணங்கு மடியேற்கு வாதிசிங்கரே நீர்
இணங்கும் வகையருள்வீ ரின்று.
-(தேசிகர்நூற்றந்தாதி, 97.)

கண்டார் கரையைக் கடந்தார் பவக்கடலை
அண்டாத வார்வ மடைந்திட்டார்-வண்டாரும்
கொந்தலர்பூந் தூப்புல்வருங் குற்றமில்சீர் வாதிசிங்கர்
செந்தமிழ்நூல் சிந்தித் தவர்
.-(தேசிகர்நூற்றந்தாதி, 91.)

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன் திருநாராயணன். அவனே மறை முடித்தேசிகன். அவன் தாள் நற்றாள். அத்தாண்மலர் சூடியவன் தொல்லருள் மாறன்.
அவன் துணையடிக்கீழ் வாழ்வை யுகந்தவர் இராமாநுசமுனி.vஅவர் வண்மை போற்றும் சீர்மையர் ” தூப்பு) பிள்ளை ” யாம் “வேதாந்தகுரு ” அவரது பொற்றாமரையடியையே என்றும் நினைந்திருப்பார் பாதம் அடியேன் சென்னிதனிற் சூடும்மலர். திருவாய் மொழித்தேவர் நம்மாழ்வார். “ திருமொழித்தேவர் ” திருமங்கையாழ்வார். அதுபோல திருச்சின்னமாலைத் தேவர் தூப்புல் திருவேங்கடமுடையான் என ஆன்றோர்கூறுப. அணங்குகண்டவனே நன்மை யளித்துக் காக்கவல்லவன். திருக் கண்டவன் ஞானத்தமிழன். திருவின் திருவை உள்ளவாறு கண்டு, கண்டவாறு உரைத்தவனே கவிவாதி சிங்கத் தேவாய் விளங்கிய நம் வேதாந்த தேசிகன். செய்யதாமரைத் திருமறு மார்பனே திருச்சின்னன். (சின்னம் – அடையாளம்). அவனே சுந்தரன். வெற்றித்திருவால் விளங்குபவனே திருமகள் கேள் வனாகிய ஒருவன். தேனவேதியர் தொழுந் தெய்வம் அவனே.-(தேனவேதியர் – தேனரும் வேதியரும். தேனர் – ஆத்மாவைத் திருடுபவர் .) அவனே அத்திகிரித்திருமால். (அத்திகிரி, ஹஸ்திகிரி.-திகிரி -சக்கரம். அத்தி-யானை.) அவனே பேரருளாளன். அவனே தேவாதிராஜன். அவனது திருச்சின்னமே எங்கும் முழங்குவது.‘திருச்சின்னம்’ என்பது எம்பெருமானுடைய ஸந்நிதிகளில் ஸேவிக்கப் பெறுகிற ஒரு வாத்யவிசேஷம். அதன் ஓசை யின் காம்பீர்யமும் இனிமையும் ஒப்பற்றன. அவை வருணிக் கவும் இயலாது ஸ்ரீ தேவப்பெருமாள் ஸந்நிதியில் ஸேவிக்கப்பெறும் திருச்சின்னவாத் யவோசை ஸ்வாமிதேசிகன் திருவுள்ளத்தைக் கவர்ந்தது. அவ்வினிய ஓசையில் ஒரு நுட்பத்தைக் கண்டார் வேதசிரத் தேசிகனார். திருச்சின்னத்தை முழக்கி உலகை உய்யக் கொண்டவரே நம் ஆரியசிகாமணியான வேதாந்தவாரியன். அண்ட கோளகைக்கு அப்புறத்து அண்டர் கோன் அமரும் அந்தமில் பேரின்ப வீடு எய்திய ஓர் விஞ்சையர் கோதை புண்டரீக மென்பதத்தியைப் புகழ, அப்பிராட்டியும் மிக மகிழ்ந்து அம்மங்கையாரிடம் வண்டாமது மாலையை அளிக்க,அக்கன்னி அம்மாலையை யாழிடைப் பிணித்து அயனுலகம் எய்தினள் என அழுந்தூருள் வாழ்வோனாகிய கம்பநாட்டாழ்வான் பாடியுள்ளான். தூப்புல்இறை தமது பேரின்ப அநுபவ வெள்ளமேலீட்டால் திருச்சின்னத்துக்குப் பாமாலை சாத்தி மகிழ்ந்தார். திருச்சின்னனான திருமார்பனுக்குத் திருச் சின்னமாலை” என்னும் நித்யமான நீள் மணங்கமழும் பாமாலையைச் சாற்றித் திருவுக்குந் திருவாகிய செல்வனை மகிழ்வித்தவர்-தூப்புல் மா புருடன். திருவின் நாயகனைத் திருக் கொண்டு காட்டி இருவரையும் நன்கு துலங்கவைத்ததனாலன்றே அத்திரு முன்பே திருவரங்கத்தில் நித்திய வாசஞ் செய்யுந்திருப்பேறு பெற்றான் இத்தமிழ் மறைதந்த வள்ளல் என்பர் பேரறிஞர்.

உலகம் போற்றும் பெற்றியரான தூப்புற்குலமணி தேவாதி தேவனான பேரருளாளனுடைய யாத்ரோத்ஸவாதிகளில் ஊதப் பெறுகிற திருச்சின்னத்தின் நாதநலம் இருக்கும் இருப்பை
அநுஸந்தித்து, அதுபோன்ற நாதவின்பத்தை நல்குமோ இதர தேவதைகளின் பிரயாணகாலத்தில் முழங்கப் பெறும் காஹளாதி வாத்தியங்கள் என்று அநுபவித்து, அந்த அதிமதுரநாதம் மற்றத் தேவதைகட்கு ஸாதாரணமல்லாமையினாலே பகவானுடைய
அஸாதாரண குணங்களை நிரூபிக்கக்கருதி அப்படிப்பட்ட உயர் குணங்களை உடைய பெருமாள் எழுந்தருளினார் என்றுகாட்டுவதாகத் திருவுள்ளம்பற்றி அருளிச் செய்துள்ளார் இம்மாலையை.ஏரணி கீர்த்தி இராமாநுசமுனி வண்மை போற்றும் சீரியனான இவ்வேதாந்த வாரியனின் “திருச்சின்னமாலை”யைச் சற்றுச் சிரமேல் அணிந்து அவ் அடியார்க்கு நல்லாரின் இன்னருள் பெற்று இன்புறுவோமாக. சேரவாரும் செகத்தீரே!நல்லன்பர்களே ! வம்மின்

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்தது ” திருமாலை “. “திருமாலை அறியான் திருமாலை அறியான்” என்பது மூதுரை. தென்னரங்க மணவாளர்க்கன்பு மிக்குச்
செப்பியது இந்நற்றிருமாலை நாற்பத்தைந்து பாசுரங்களடங்கிய பிரபந்தம். தேசிகனார் அருளாளப் பெருமாள் தேசின்திறத்தில் ஈடுபட்டுத் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம் ” சின்னத்திருமாலை ” என்ப. பிரணவத்தைச் “ சிறுவேதம் ” (அமிருதாசுவாதினி. 2) என இவ்வேதாந்தவாரியர் குறிப்பதை இங்கு நினைக.-தூப்புல் துரந்தரனின் துய்ய தமிழ் இருபத்து நான்கு பிரபந்தங் களுள் திருவுடன் மாலையாக அமைந்து விளங்குவதே இவரது
செய்ய தமிழ் மாலையாகிய “ திருச்சின்னமாலை
”. இது ஒரு தனித் தமிழ்ப் பிரபந்தம்.

தம்மை இப்படி விசேஷித்துக் கடாக்ஷித்தருளின பேரருளாளனிடத்தில் கரை புரண்ட பக்திமேலிட்டுத் தம்முடைய திருமாளிகைக்குச் செல்லும்போது அத்திருச்சின்னத்தின்கம்பீர
மான ஓசை ஸர்வவேதார்த்தங்களையும் உத்கோஷிக்கிறாப் போலே ஸ்வாமியின் திருச் செவியில்பட அவற்றை ப்ரதிபாதித்து“ திருச்சின்னமாலை ” என்னும் பிரபந்தத்தைச் செய்தருளினார்
பெருமாள் கோவிலை-பேரருளாளரைப் ஒரு பஞ்சாசத்துச் முள்ள மீதன்பு
திருச்சின்னமாலை விருத்தம். நாடியே-எங்கள் பாடியே சூடியே-
திருச்சின்னமாலை சாத்தியே–சரணங்கள்.-

கரதலா மலகம் போல் வேதாந்தத்தைக் கரைகண்ட கண்டாவதாரர் நாளும்
நிரதராய்க் கச்சியைச்சூழ் திவ்யதேச நிலையெல்லாஞ் சேவித்து நிதமுந்தாமே
விரதராய்ப் பேரருளா ளரையுமின்னம் வெண்பரிமுகத் தாரையுமா ராதித்தே
வரதர்திரு வடிச்செந்தா மரையை வாழ்த்தி வந்திப்பார் திருமலையைச் சிந்திப்பாரே
-விருத்தம்.-(வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை) என்பது காண்க.

வோதக் கடலேந்துலகமெலாங் காத்தபிரான் வந்தான்
200 வடவேங் கடத்தரசு வந்தான் -றொடர்கதியைக்
கைமாவி னுக்குமொரு காலமா வென்றருள்சே
201 வைமாத வப்பெருமான் வந்தான்-பைமா
வனந்த கருடா சலத்திருப்பான் வந்தான்
202 மனந்தனிலே வீற்றிருப்பான் வந்தா னினைந்து
பொழிவிழியா னந்தப்புலவர்பிரான் வந்தான்
203 வழிபுழுகு மெய்யுடையான் வந்தா-னழகொழுகு
நீல மலைகுனிய நின்ற பெரு மான்வந்தான்
204 மாலை யணிந்திலகு மால்வந்தான்-வேலைப்
புடவிலய மாகாமற்பொன்னுதரந் தாங்க
205 வடலிலையி லேதுயின்றான் வந்தான்-கடல்கடந்த
சீராமன் வந்தான் சிவனே செபித்தாலும்
206 வாரா விருந்தான் வரவந்தா-னேரலர்மேன்
மங்கை மணவாளன் வந்தான்வந் தானென்று
207 பைங்கனகச் சின்னம் பணிமாறக்-(திருவேங்கடவுலா .)

156 கருத்தி னருத்தி யினைக் கண்டு மகிழ்ந்து
மருத்தின் மகன் றோள்வந்தான் வந்தான்-திருத்திப்
157 பரவத்து நிர்ணயஞ்செய் பட்டர்பிரான் முன்னே
வரவயப் புள்ளில்வந்தான் வந்தான்-அரவ
158 உருவமரு வுங்கொடியோ னூருக்குத் தந்தை
மருகருக்காத்தூதுவந்தான் வந்தான்-உருகு
159 கடக்குஞ் சரங்கார்கக் கால்விசைத்தோடி
மடுக்கரைக்கு முன்வந்தான் வந்தான்-அடுக்கா
160 விதலையை யுற்ற வியன் மதலைக்காக
மிதிலை யதி லேவந்தான் வந்தான்—இதனின்
161 மனத்திற் கொடுமை கொண்ட மாதின் மொழியால்
வனத்தினிடை யேவந்தான் வந்தான்- சினத்திற்
162 ககனத்து வந்து கடுந்தவஞ்செய் மன்னன்
மகனுக்கு முன்வந்தான் வந்தான்-செகத்தோர்
163 புகழ்புட்பகத்தே பொருவி லொருதம்பி
மகிழ்வுற்றிட வந்தான் வந்தான்- மகிமை
164 மருவும் மணிவண்ணன் வந்தான் வந்தானென்
றொருவாது சின்னமுறைக்கத் திருவீதி-(தென் புதுவை மணிவண்ணனுலா.)

அசுவமேதயாக சாலைக்குச் செல்லச் செழு மணித்திண்டேர் ஏறினான் ஸ்ரீராம
பிரான்.
மங்கையர் வாழ்த்த மாகத ரேத்த மறைய வராசிகள் கூறப்
பொங்கிய கடலிற் புடைபரந் திரைத்துப் பொன்னகர்ச் சனம்புடை சுற்றப்
பங்கமல்வீரன் பங்கயக் கண்ணாற் பார்த்தபார்த்திடமெலாஞ் சனங்கள்
செங்கரங் கூப்பத் தேவர்களுவப்ப வேறினான் செழுமணித் திண்டேர்.
-(அசுவமேதயாகப்படலம். 72.)
அப்பொழுது திருச்சின்னங்கள் மாறி மாறி ஊதத்தலைப்பட்டன.
எங்ஙனமெனின்,
கம்புவைத் தரித்த கையிற் கார்முகந் தரித்தான் வந்தான்
அம்புயக் கண்ணன் வந்தான் அன்பருக் கன்பன் வந்தான்
தம்பியர்க் கினியான் வந்தான் தசரத ராமன் வந்தான்
உம்பருக் கமிழ்த முன்னாள் உதவியாவொருவன் வந்தான்.-(73)

மநுகுலம் விளங்கத் தோன்றி வரிசிலை யிளையானோடும்
முனியொடு போனான் வந்தான் முப்புர மெரித்த வில்லி
தநுவினை யறுத்துச் சீதை தனைக்கரம் பிடித்தான் வந்தான்
அனையவ ளுடனே மீண்டும் அயோத்தியி லடைந்தான் வந்தான்-(74)

தாயுரை தலைமேற் கொண்டு தையலை யுடனே கொண்டு
தீயவெங் கானஞ் சேர்ந்த செருவலி வில்லி வந்தான்
தூயமா முனிவன் முன்பு தோன்றிய தூயோன் வந்தான்
மாயமா ரீசன் மாள வரிசிலை வளைத்தோன் வந்தான்.-(75)

அநுமனை யடிமைகொண் டாங் காயிரங் கதிரோன் மைந்தற்
கினியனாய் வாலி மாள வெரிசரந் துரந்தோன் வந்தான்
நினைவதன் முன்ன மாழி| நீரெலா நெருப்பதாகக்
குனிசிலை வளைத்தான் வந்தான் கோசலை நாடன் வந்தான்.–(76)

குன்றினா லாழி கட்டிக் கொடுந்திறற் சேனை யோடு
சென்றிராக் கதரை யெல்லாஞ் செருக்களத் தவிய நூறித்
தன்றிற லழிந்து நின்ற தசமுகன் வலிமைகண்டங்
கின்றுபோய் நாளை வா வென்றியம்பிய விறைவன் வந்தான்.-(77)

முன்னநாஞ்சொன்ன நாளின் முடுகிநாஞ்செல்லோ மாயின்
வன்னியின் பரதன் வீழு மென்றுதன் மனத்தி லெண்ணி
அன்னவ னெரிவி ழாமல் அநுமனை முன்னே யேவிப்
பொன்னக ரடைந்தான் வந்தான் புவனமூன் றுடையான் வந்தான்.-(78)

என்று கூறி,
இசைந்துடன் மாறியூதத் தன்றுணை யிலாத வென்றித்
தசரத ராமன் தேர்மேல் பொன்றிகழ் மாடவீதி புகுந்தனன்-(79)என முற்றுவித்துள்ளார்.

மேற்குறித்த பாடல்களில் “வந்தான் ” என்றபதம் முதற் பாட்டில் ஆறு முறையும், இரண்டு முதல் நான்கு வரையிலுள்ள பாக்களில் முறையே மூன்று முறையும், ஐந்தாறாம் பாக்களில் ஒரு முறையும் காணப்பெறுகின்றது. “கம்பு ‘ (சங்கு) என்று ஆதியிற் றொடங்கியுள்ளதையும் ” கம்பன்” என்ற திருநாமத்தையும் ஆய்ந்து நோக்கி உண்மை தெளிக. அவ்வாறு பாசுரங்
களும் திருச்சின்னம் பரிமாறியதை விளக்குகின்றது.

வேதாந்த வாசிரியன் யாத்த ” திருச்சின்னமாலை பதினொன்று பாசுரங்கள் கொண்டது. இறுதிப்பாசுரம் நீங்கலாக இதர பத்துப்பாசுரங்கள் எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தங்
களாக வமைக்கப்பெற்று
ஒவ்வொரு பாசுரத்திலும் “வந்தார்” எனும்பதம் எண் முறை வந்து, ஈற்றடியிறுதி ‘ வந்தார்தாமே ” என முற்றுவித்துள்ளது விசேடித்து அநுபவித்தற்குரியது. இறுதிப் பாசுரமும் அதே விருத்த வகையே. அதில்லையேல் இம் மாலைப் பொருள் எளிதில் அரியவியலாது.

இத்திருச்சின்னமாலை என்ற சீரிய நற்பிரபந்தம், மன்னு திரு மந்திரத்தின், வாழ்துவயத்தின் பொருளும், துன்னு புகழ்க் கீதைதனிற்சொன்ன வெண்னான்கின் பொருளும், இன்னபடி என்று உரைக்கும் செய்ய தமிழ்மாலை.

இதில், முதலாறு பாசுரங்கள் திரு மந்திரார்த்தத்தை வெளி யிடுகின்றன. அவற்றுள், முதல் மூன்று பாட்டுக்கள் பிரணவார்த்தத்தைப் பிரதி பாதிக்கின்றன. அவற்றுள், முதல் இரண்டு
பாசுரங்களால் பிரணவத்தில் உள்ள அகாரத்தின் அர்த்தம் கூறப் பெறுகின்றது. முதற்பாசுரத்தில், அனைத்தையும் படைத்தல் முதலிய தன்மைகளால் காரணத்வமும், நித்யஸூரிகளால் அநுப விக்கப்படுதல் முதலியவற்றாலும், இரண்டாம் பாசுரத்தில் வேதத்தைக் காத்தல் முதலியவற்றாலும் ரக்ஷகத்வமும் விளக்கப் பெற்றுள்ளன. மூன்றாவது பாசுரம் அகாரத்தின்மேல் ஏறி லோபித்துக்கிடக்கும் நான்காம் வேற்றுமையையும், உகாரமகாரங் களின் அர்த்தங்கள் இருக்கும்படியையும் விளக்கும். நான்கு முதல் ஆறுவரையுள்ள பாக்கள் நமச்சப்தத்தின் அர்த்தத்தையும், நாராயணசப்தார்த்தத்தையும், நாராயண சப்தத்தின் மீதுள்ள நான்காம் வேற்றுமையின் பொருளையும் கூறும். துவயப் பொருளை வெளிக்காட்டுவது ஏழாம் பாட்டு. சரம சுலோகக் கருத்தைச் சுருக்கிக் கூறுவது எட்டாம் பாட்டு. அச்சுலோகரத்தினத்தில் மாம், அஹம்’ என்ற சொற்களால் தோற்றுகிற குணங்களை அவனுடைய லீலைகளைக் கொண்டு நிரூபிப்பது ஒன்பதாம்பாட்டு.
கீழ்க்கூறிய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் பேரருளாளன் விஷயத்திலே அநுபவித்து அர்ச்சாவதார வைபவத்தைப் பரக்கப் பேசுகின்றது அடுத்த பத்தாம் பாட்டு. நிகமனப் பாசுரம் இம் மாலைச் சுருக்கத்தையும், சங்கதியையும், பேரருளாளன் பிரபாவ மான இந்நன்னூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது.

ரஹஸ்யத்ரய ஸாரார்த்தத்தை விரிவாகவும், சுருக்கமாகவும் பல பிரபந்தங்களில் தனக்குவமையில்லாத சாகாந்த தேசிகன் அருளிச் செய்வர்.
” மூன்றி லொருமூன்று மூவிரண்டு முந்நான்குந்
தோன்றத் தொலையுந்துயர்.”-(ரஹஸ்யபதவீ. தேசிகமாலை, அமிருதரஞ்சனி 4.)

என்ற குறட்பா ஒன்றே இதற்குத்தக்க சான்று பகரும்.

ஏகாந்த மூன்று மெழிலா லுரைசெய்து
மாகாந்தஞ் செய்தருளும் வள்ளலாய்-சாகாந்த
தேசிகனார் தூப்புற் றிருவேங்க டேசகுரு
வாசகமே யெங்களுக்கு வாழ்வு.

[ திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்ற மூன்று ரஹஸ்யங்களையும் அழகோடு பேருரை வகுத்து பெருமையுள்ள காந்தம் என்னும் உலோகத்தைப்போல் பிறர் மனத்தைக் கவர்ந்து அவர் உஜ்ஜீவிக்குமாறு அருள் புரிகின்ற வள்ளலாகி வேதாந்த தேசி கன் என்று பிரசித்திபெற்ற தூப்புல்திருவேங்கட முடையானுடைய அருளிச் செயல்களே எங்களை உஜ்ஜீவிக்கச் செய்யும்.]

மூன்று ரஹஸ்யங்களின் பொருள் விளக்கும் திருச்சின்னமாலை யமைப்பில் ‘ இவ்வாறுள்ளவர், இன்ன குணம்செயல் உள்ளவர் வந்தார்‘ என்று ஒவ்வோரடியிலும் வந்துள்ளதை நோக்க, ஒவ்வொரு தொடரும் ஆதியம் பகவானாகிய திருமாலது ஒரு ” திருநாமம்” ஆக அமைந்துள்ளதைக் காண்க

1) ஈர் உலகைப் படைக்க எண்ணி யிருந்தார்.
(2) எழில் மலரோன் தன்னை அன்றே ஈன்றார்.
(3) மாருதி மண் நீர் ஆகும் மாயோர்
(4)வானொடு எரி ஆகும் மறை யோர்.
(5) சூரியர் தம் முடன் துலங்கு தூயோர். (6) சுரர்களுக்கு அன்று அமுது அருள் சுந்தரனார். (7) வாரிதி சூழ் வையகம் வாழ் வித்தார்.
(8) வண்மையுடன் வரம் தருவார்.
(9) அருமறையை ஊழிதனில் காத்தார்.
(10) அது தன்னை அன்று அயனுக்கு அளித்தார்.
(11) தரும வழி அழியாமல் காப்பார்.
(12) தாமரையா ளுடன் இலங்கும் தாதை
(13) திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார்.
(14) திரு அருளால் செழும் கலைகள் தந்தார்.
(15) மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர்.
(16) வான் ஏற வழி தந்தார்.
(17) அனைத்து உலகும் காக்கும் அருளாளர் . (18) அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார்.
(19) தினைத்தனையும் திருமகளை விடாதார்
(20) தேசு ஒத்தார் மிக்காரும் இல்லார்.
(21) நினைக்க நமக்கு இன் அறிவு தந்தார்.
(22) நிலை நின்ற உயிர் தோன்ற நினைந்தார்.
(23) எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார்.
(24) எழுத்து ஒன்றில் திகழ நின்றார்.
(25) நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார்.
(26) நம்மை அடைக்கலம் கொள்ளும் நாதர் . (27) நாம் எமக்கு ஆம் வழக்கு எல்லாம் அறுத்தார்.
(28) நமக்கு இது என்று உரையாமல் வைத்தார்.
(29) சேமம் எண்ணி எம்மை அன்பர்க்கு அடைத்தார்.
(30) செழும் தகவால் திண்சரணாம் ஈசர்.
(31) தீவினையை அனைத்தும் தாம் தவிர்ப்பார்.
(32) எமைத் தமக்கே யாய்க்கொள்வார்.
(33) உலகு எல்லாம் உள்ளே வைத்து உமிழ் ந்தார்.

(34) உலகு உடம்பாய்த் தாம் உயிராய்நின்றார்.
(35) அலை கடலாய் ஆனந்தம் அடைந்தார்.
(36) அளவு இல்லா அருள் ஆழிப் பெருமாள்.
(37) திலகம் எனும் திருமேனிச் செல்வர்.
(38) செழும் குணங்கள் இரு மூன்றும் உடையார்.
(39) இலகு சுடர் முழுநலம் ஆம் இனியார்.
(40) எல்லார்க்கும் கதி ஆனார்.
(41) அருளாலே விலங்குஇரண்டும் அழிப்பார்.
(42) அம்சிறையைக் கழித்துஅருளும் அன்பர்.
(43) மருள்வாரா நம்மைக் காப்பார்.
(44) வான்ஏற வழிநடத்தி வைப்பார்.
(45) தெருள்ஆரும் தெளிவிசும்பு தருவார்.
(46) திண்கழற்கீழ் வாழ்ச்சிநமக்கு அருள்வார். (47) பொருளான அடிமைநமைக் கொள்வார்.
(48) பிரியாமல் காத்து அளிப்பார்.
(49) அகலகிலாத் திருமகளார் அன்பர்.
(50) அடிஇரண்டும் ஆறாகத் தருவார்.
(51)புகல்இல்லார் புகல்ஆகும் புனிதர்.
(52) பொன்உலகில் திருவுடனே திகழ்வார்.
(53) அகிலம்எலாம் ஆனந்தம் ஆனார்.
(54) அடியிணைக்கீழ் வைத்து அடிமை கொள்வார்.
(55) பகல்நடுவு இரவுஅழைக்க வல்லார்.
(56) பகல்ஒன்றாய் இரவு அழித்தார்.
(57) தருமன்விடத் தாம்தூது போனார்.
(58) தரணிபொறாத் திண்பாரம் தவிர்த்தார். (59) அருமறையின் பொருள்அனைத்தும் விரித்தா.
(60) அஞ்சினநீ என்னைஅடை என்றார். (61) தருமம்எலாம் தாம்ஆகி நிற்பார்.
(62) நம்வினை அனைத்தும் தாமேதவிர்ப்பார்.
(63) பரம்எனது நீபுலம்பேல் என்றார்.
(64) பார்த்தனுக்குத்தேரூர்ந்தார்.
(65) வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார்.
(66) மல்லர்மத கரிமாள மலைந்தார்.
(67) கஞ்சனைக் கடும்சினத்தால் போர்கடிந்தார்.
(68) கண்நுதல்முன் வாணன்தோள் கழித்தார்.

(69) வெம்சொல்தர வீடுகொடுத்து உகந்தார்.
(70) விலக்கு இல்லா வழிநடத்தவிரைந்தார்.
(71) பஞ்சவரைப் பலவகையும் காத்தார்.
(72) பாஞ்சாலி குழல்முடித்தார்.
(73) அத்திகிரி அருளாளப் பெருமாள்.
(74) ஆனைபரி தேரின்மேல் அழகர்.
(75) கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள்
(76) கருதவரந் தரும்தெய்வப் பெருமாள் . (77) முத்திமழை பொழியும்முகில் வண்ணர்.
(78) மூலமென ஓலம்இட வல்லார்.
(79) உத்தரவே திக்குள்ளே உதித்தார்.
(80) உம்பர்தொழும் கழல் உடையார்.

“ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் ” என்று ஒரு ரஹஸ்யம் ஸ்ரீ வேதாந்ததேசிகனால் மணிப்பவள நடையில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது. அதனை “மெய்விரத நன்னிலத்து மேன்மை “(29) என்று அதன் இறுதிப்பாசுரம் கூறும். ஸத்யவரதம் என்னும் சிறந்த க்ஷேத்ரத்தின் பெருமை என்பது அத்தொடரின் பொருள். மெய்விரதம் ஸத்யவ்ரதம். இத்திருப்பதி காஞ்சீபுரம், ஹஸ்திகிரி, பெருமாள்கோயில் எனவும் வழங்கப்பெறும். இந்தப்
புண்ணியதலத்தில் அநுஷ்டிக்கப்படும் வ்ரதங்கள் முதலிய புண்ய கர்மங்களுக்கு உடனேபலன் கிடைப்பது நிச்சயமாதலின் ‘மெய் விரதம்’ எனப்பெயர் வந்தது என்பர்.
இந்தரஹஸ்யத் தொடக்கம் பின்வருமாறு :
ஸகலலோக ஹிததம விஷய விவித வேதாந்தோப ப்ரஹ் மணங்களான புராணங்களில் முக்யதம மாகையாலே முற்பட எண்ணப்பட்ட ப்ரஹ்மாண்டபுராணத்தில் ஸத்யவரத க்ஷேத்ர மாஹாத்ம்ய முகத்தாலே ஸந்தர்சிதமான பேரருளாளன் பெருமையை பாவுகரான பகவந்நிஷ்டருடைய ஹ்ருதயரஞ்சநார்த்தமாக மநஸ்ஸிலே பாவமும், வாக்கிலே ராகமும், கரத்திலே தாளமுமாக பாவ ராக தாளங்களை வகுத்த பரத சாஸ்திரத்தின்படியேபண்ணும் இசையும் திகழப் பார்க்கின்றோம். இத்தைக் குறிக்கொண்டு கேட்டருள்வீர்மின்.”

[ஸகலலோக – எல்லாவுலகங்களுக்கும்; ஹிததமவிஷய – உயர்ந்த நன்மையைப்பற்றிக் கூறுகிற; விவித – அநேகவிதங்களான; வேதாந்த – வேதாந்தங்களின் அர்த்தங்களை; உபப்ரஹ்மணங்களான – விசதமாக நிரூபிக்கிற; ஸந்தர்சிதமான – காட்டப்பெற்ற; பாவுகர் – ரஸிகர் ; பகவந்நிஷ்டர் – பாகவதர்; ஹ்ருதயரஞ்சநார்த்தம் மனத்தில் சந்தோஷம் உண்டாவதற்காக ; வகுத்தவிரிவாக நிரூபிக்கப்பெற்றிருக்கிற; பரத சாஸ்திரம் – பரதமுனி
யால் இயற்றப்பெற்றது; பண்ணும் – கானமும்; இசையும் -ஷட்ஜாதிஸ்வரங்களும்; திகழ – பிரகாசிக்கும்படி ; குறிக்கொண்டு-ஸாவதானமாக.]

இந்தமாஹாத்ம்ய மத்தியில்,
“இப்படி வேகவதியாய் வந்த ஸரஸ்வதியினுடைய வேகம் அடங்கும்படி வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தன் கடாக்ஷிக்கக் கலக்கமற்றுவந்த ஸரஸ்வதியையும் கூட்டிக்கொண்டு ப்ரஹ்மா அச்வமேதயாகத்தை நடத்த வபாஹோமம் ப்ரவ்ருத்தமான வளவிலே ஆயிரம்கோடி ஆதித்யர்கள் உதித்தாப்போலே உத்தரவேதி மத்யத்திலே ஒரு மஹாதேஜஸ்ஸு தோன்றிற்று.(வெஃகா – திருவெஃகா என்னும் க்ஷேத்திரம் ; துயில் அமர்ந்த வேந்தன் – அறிதுயிலமர்ந்த ராஜாவாகிய ஸ்ர்வேச்வரன் ; கலக்கமற்று– பிரணய கோபம் நீங்கி.)” இப்படி பெருமாள் ஆவிர்பவித்தருளினபடிக்கு நித்யஸுரிகள் முகத்தாலே காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் ஆர்த்தன .(ஆவிர்பவித்தருளினபடிக்கு – அத்தோற்றத்தின் ஏற்றத்திற்குத் தகுந்தபடி; நித்யஸூரிகள் முகத்தாலே – நித்யஸூரிகளுடைய வாயினால் ஊதப்பெற்ற; எங்கும் – எல்லாத்திக்குக்களிலும்; கலந்து -வியாபித்து; ஆர்த்தன – சப்தித்தன.)

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனைபரி தேரின்மே லழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரம் தரும்தெய்வப் பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியும்முகில் வண்ணர் வந்தார்
மூலமென ஒலமிட வல்லார் வந்தார்
உத்தரவே திக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே
-என மறைமுடித் தேசிகனார் உயர்விருத வருளாளப் பெருமாள் தேசின் திறத்தில் திருச்சின்னமாலை பாடியிருப்பது நோக்கத்தக்கது.

இங்குக் காட்டிய இரண்டு பாசுரங்களில் முதற் பாசுரத் திலுள்ள பின்னிரண்ட்டிகள் “திருச்சின்ன மாலை ” யில் உள்ள இரண்டாவது பாசுரத்தின் பின்னிரண்டடிகளே. ” அத்தி
கிரியருளாளப் பெருமாள் வந்தார் ” என்ற இரண்டாம் பாசுரம் “ திருச்சின்ன மாலை ” யின் பத்தாவது பாசுரமாக அங்ஙனே மிளிர்கின்றது.
அத்திகிரி அருளாளப் பெருமாள் உத்தரவேதிக்குள்ளே உதித்தவுடன் திருச்சின்னம் பரிமாறியதை வெகு கம்பீரமாக நன்கு உணர்த்துகின்றன இப்பாக்கள்.

“திருச்சின்னமாலை ” யில் முன்னோர் மொழி பொன்னேபோல் போற்றியுள்ள பெற்றி காண்பாம்.
ஈருலகைப் படைக்க வெண்ணி யிருந்தார் எழில் மலரோன் றன்னை யன்றே யீன்றார் (1)
என்பதை
தேவும் எப்பொருளும் படைக்க
பூவல் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக் கல்லால்
பூவும் பூசனையும் தகுமே?
-(திருவாய்மொழி 2-2-4)-திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச்
செந்தாமரை மலர்மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
-(திருவாய்மொழி 5-10-8)-என்பனவற்றோடு ஒப்பிடலாம்.-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய்நெடு வானாய்
சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாய் அய னானாய்!-(
திருவாய்மொழி 6-9-1)-தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் நீயாய் நீநின்ற வாறு இவை யென்ன நியாயங்களே !
-(திருவாய்மொழி 7-8-1)-என்பனவற்றை
மாருதமண்ணீராகு மாயோர் வானோடெரித்தாமாகு மறையோர்-2- என்பவற்றிற்கு மூலமென்னலாம்.அயர்வறு மமரர்கள் அதிபதிதூயானைத் தூய மறையானை
-(பெரிய திருமொழி 11-7-3)-என்பதன் வியாக்கியானமாக-சூரியர்தம் முடன் துலங்கு தூயோர்-எனவமைத்தார் போலும்.

பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்–(பெரிய திருமொழி 5-3-6) என்ற மங்கையர் கோன் பாடல்-சுரர்களு க்கன் றமுதருள் சுந்தரனார்
என வேற்றுருவுடன் பொலிந்து நிற்கின்றது.-அமரர்க்கு அமுதீந்த ஆயர்கொழுந்து-(திருவாய்மொழி 1-7-9)என்பதும் அநுஸந்தேயம்.

வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கு அருளிமுன் பரிமுகமாய்
இசைகொள் வேதநூலென் றிவை பயந்தவனே !
-(பெரிய திருமொழி-5-3-2)
என்ற வேல் வலவன் பாசுரத்தையும் அதுதன்னை அன்று அயனுக்கு அளித்தார்-2-
என்ற அடிகளையும் நோக்குக.

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்றுஎன்|
மனக்கே வந்து இடை வீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனையான்கொள் சிறப்பே.-
(திருவாய்மொழி 2-9-4)
என்ற வண்குருகூர்ச் சடகோபன் திருவாய் மலர்ந்தருளிய பாசுரத்தின் மூன்றாவதடியை
தமக்கேயா யெமைக் கொள்வார் (4) எனப் பொன்னே போல் போற்றி யுள்ளார் தூப்புற்றூயோன்.

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனதே யுலகென நின்றான் தன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே
.-(திருவாய்மொழி 4-5-10)

ஆதியாகி அகலிடம் படைத்து உண்டுமிழ்ந்து கடந்திடந் திட்ட
சோதி நீள்முடி யாய்! தொண்ட னேன்மது சூதனனே
!-(திருவாய்மொழி 7-1-3)

ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாத னென்றும்-(பெரிய திருமொழி 4-8-6)

கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண் டுமிழ்ந்த கற்பகத்தை/ -(பெரிய திருமொழி 5-6-6)
என்ற ஆழ்வார்கள் அருளிச் செயல்களின் ஸங்க்ரஹமே-உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் (5) என்ற வேதாந்த வாசிரியரின் வாய்மொழியாக மலர்ந்த
தென்னலாம்.

திடவிசும் பெரி வளி நீர்நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவது மாய் அவை யவை தொறும்
உடல் மிசை யுயி ரெனக்கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே —
-(திருவாய்மொழி 1-1-7)உம்முயிர் வீடுடையான்-(திருவாய் மொழி 1-2-1) என்ற குருகைநாதன் வாய் மொழிகளின் ஸாரார்த்தமே-உலகுடம் பாய்த் தாமுயிராய் நின்றார்-5- என்று விளங்குகின்ற தென்க.

உயர் வற வுயர் நலம் உடையவன்-(திருவாய்மொழி 1-1-1) என்றதன் கருத்து
அலை கடலா யானந்த மடைந்தார் (5)

பிணக்கற அறு வகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்
-(திருவாய்மொழி 1-3-5)
என்பதை
செழுங்குணங்கள் இருமூன்றும் உடையார் (5) என ஷாட்குண்யபரி பூர்ணராய் (ஜ்ஞானசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸு) நிரூபிதஸ்வரூப விசேஷணங்களையும் ஸ்வரூபநிரூபகந்தர் கதமானவ மலத்வத்தையும் கூறுகின்றார்.

இனனுணர் முழுநலம்--(திருவாய்மொழி 1-1-2)- ஒளிவரு முழுநலம்-(திருவாய்மொழி 1-3-2)
என்பனவற்றின் வியாக்கி யானமாக–இலகு சுடர் முழுநலமா மினியார்-(5)என்கின்றார் வேதாந்த குரு.

திருமெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினைகடிந்து இங்கு என்னை யாள்கின்றானே
.-(திருவாய்மொழி 10-4-2)
இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் சூழ் திருப்பேர் நகரானே
.-(திருவாய்மொழி 10-8-5) என்ற ஆழ்வார் பாசுரங்களையும்-தாமனைத்துந் தீவினையைத் தவிர்ப்பார் (4)nஎன்பதனோடு ஒப்பிடுக.

அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
-(திருவாய் மொழி 10-6-1)
மண்கொள் உயிர்க்கெல்லாம் ஞாலத்து அருள் செய்யும் வானவ ரீசனை-(திருவாய்மொழி 3-6-11)என்ற பரசுரங்களின் கருத்து-அளவில்லா வருளாழிப் பெருமாள் (5) என்பதிற்றிகழ்கின்றது.-அருளாலே விலங்கிரண்டு மழிப்பார்-6-அஞ்சிறையைக் களித்தருளு மன்பர்-6-என்பனவும் அதைச் சார்ந்ததே.)

வானேற வழிதந்த வாட்டாற்றான் -(திருவாய்மொழி 10-6-5) என்றதே வானேற வழிநடத்தி வைப்பார்-(16)என விரிந்தது போலும்

விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்--(திருவாய்மொழி 10-6-3) தெளிதாகிய சேண்விசும்பு தருவானே.-(திருவாய்மொழி 10-8-4)–நீ அவர்க்கு வைகுந்த மென்றருளும் வான். -(பெரிய திருவந்தாதி 53) என்ற ஆழ்வார்களின் அருளிச் செயல்களே
தெருளாருந் தெளிவிசும்பு தருவார் (6) என புத்துருக் கொண்டு நிற்கிறது.

அகலகில்லேன் இறையு மென்று அலர்மேல் மங்கை யுறைமார்பா !-(திருவாய்மொழி 6-10-10)-கோலமலர்ப்பாவைக்கன் பாகிய என் அன்பே யோ!-(திருவாய்மொழி 10-10-7)-என்ற ஆழ்வார் செய்யதமிழ் மாலைகள்-அகலகில்லாத் திருமகளா ரன்பர்-7- –தினைத்தனையுந் திருமகளை விடாதார்-2-என்ற தேசிகனார் மொழிகளாக மிளிர்ந்தன.

ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்-(திருவாய்மோழி 5-7-10)என்ற குருகூர்ச் சடகோபன் சொல்லோடு அடியிரண்டி மாறாகத் தந்தார் (7) என்பது ஒப்பு நோக்கத் தகும்.

அடிக்கீழமர்ந்து புகுந்து அடியீர்! வாழ்மின் என்றருள் கொடுக்கும் —(திருவாய்மொழி 6-10-11)-அருளா தொழிவாய் அருள்செய்து அடியேனைப் பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்-(திருவாய்மொழி 9-8-8)-சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனை-(திருவாய்மொழி 3-7-7)என்றசடகோபன் வாய்மொழிகள் திண்கழற்கீழ் வாழநமக் கருள்வார் (6) என்ற தேசிகனார் திருவாக்காக மலர்ந்தது என்னலாம்.

பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட பகலே
ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந்தானே
. -(பெரிய திருமொழி 5-7-8)என்ற மானவேற் கலியன் வாயொலிகள்-பகல்நடுவே யிரவழைக்க வல்லார்-7-
என்ற மறைமுடி ஆசிரியன் வாக்காக ஒலிக்கின்றன.

வல்வினை தீர்க்கும் கண்ணனை-(திருவாய்மொழி 4-4-11)-தீராவினைகள் தீரஎன்னை யாண்டாய் !-(திருவாய்மொழி 5-8-10)-என்ற ஆழ்வார் பாசுரங்களையும்
தாமேநம் வினையனைத்துந் தவிர்ப்பார் (8) என்பதனோடு ஒப்பு நோக்கத்தகும்.

கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்
வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்
-(பெரிய திருமொழி 4-8-2)-பேய்மகள், துஞ்சநஞ்சு சுவைத்துண்ட தோன்றலை கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனை
-(பெரிய திருமொழி 7-10-8)-என்ற கலியன் உரை செய்தவற்றையும்,
வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார்9-கஞ்சனைப் போர்க் கடுஞ்சினத்தாற் கடிந்தார்)-9-
என்பனவற்றையும் ஒப்பிடலாம்.

வாணபுரம் புக்கு முக்கட் பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள்துணித்தான்
-(திருவாய்மொழி 7-10-7) என்ற ஆழ்வார் பாசுரத்தை
கண்ணுதல்முன் வாணன்தோள் கழித்தார் (9) என்பது அடியொற்றியுளதென்னலாம்.

அன்று ஐவர்க்கு அருள்செய்த நெடியோன் -(திருவாய்மொழி 3-7-11)
என்ற ஆழ்வார் பாசுரமும்-பஞ்சவரைப் பலவகையுங் காத்தார்(9) என்றதும் ஒருபடித்தே.

கன்னலே! அமுதே ! கார்முகில் வண்ணனே ! -(திருவாய்மொழி 7-1-2) என்பர் நம்மாழ்வார்.
முத்திமழைபொழியு முகில் வண்ணர் (10)என விளக்கியுள்ளார் தூப்பு குலவிளக்கு.

ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய தேனை உண்டுகளித்து பிறர் உய்யுமாறு பிரபந்தம்
அருளி அத்தேனைச் சேமித்து வைத்தவரே நம் தூப்புற்குலமணி என்பது தெற்றென விளங்கும்.

திருச்சின்னமாலை யாகிய இவ்வரிய பிரபந்தத்தில் அநேக மணிகள் உள்ளன.-

பெரிய பிராட்டியாரையும் அத்திருமங்கையின் கேள்வனான திருமாலையும் சேர்த்து அநுபவிப்பது-தாமரையாளுடனிலங்குந் தாதை-2-
திருவுரையாய்த்தாம் பொருளாய் நிற்பார்-2-
தினைத்தனையுந் திருமகளை விடாதார்-3-
அகலகில்லாத் திருமகளாரன்பர்-7-
பொன்னுலகில் திருவுடனே திகழ்வார்-7-

அருள்வரதனே “காக்குங் கடவுள் ” என்பதை,
அருமறையை யூழிதனிற் காத்தார்-2-
தருமவழி யழியாமற் காப்பார்-2-
அனைத்துலகுங் காக்கும் அருளாளர்-3-
மருள் வாராவகை நம்மைக் காப்பார்-6-பிரியாமற் காத்தளிப்பார்-6-
பஞ்சவரைப் பலவகையுங்காத்தார்-9-

அத்திகிரித் திருமாலின் அருண்மையை வெளிப்படுத்தும் பகுதிகளாவன :-
சுரர்களுக் கன்றமுதருள் சுந்தரனார்-1-
வாரிதிசூழ் வையகம் வாழ்வித்தார்-1-
அதுதன்னை யன்றயனுக் களித்தார்-2-
திருவருளாற் செழுங்கலைகள் தந்தார்-2-
சேம மெண்ணியெம்மையன்பர்க் கடைத்தார்-4-
செழுந்தகவால் திண்சரணாமீசர்-4-
அளவில்லா வருளாழிப் பெருமாள்-5-
அருளாலே விலங்கிரண்டு மழிப்பார்-6-
திண்கழற்கீழ் வாழ்ச்சி நமக்கருள்வார்-6-
பிரியாமற் காத்தளிப்பார்-6-
அத்திகிரி யருளாளப் பெருமாள்-10-
உயர்விருத வருளாளப் பெருமாள்-11-

அவரது

அவர் “ மாயோன்”என்பது,
மாருத மண்ணீராகு மாயோன்-1-
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோன்-
2-
பேரருளாளனே “சர்வலோக நாயகன் “ என்பதை
அனைத்துக்கு மதிபதியாய் நிற்பார்-3-
நம்மை யடைக்கலங் கொள்ளுநாதர்-4-
நாம் வணங்கத்தாம் வணங்கா நிற்பார்-4-
செழுந்தகவால் திண்சரணாமீசர்-4

அவரே ஆதியம்பகவன் என்பதும், ஸர்வசக்தன் என்பதும், சரணாகதவத்ஸலன் என்பதும்
மூலமென வோலமிட வல்லார் வந்தார்-10-

செழுங்குணங்களிரு மூன்றுமுடையார்-5- என்பது அவன் பகவச்சப்தவாச்யன் எனக் குறிக்கின்றது.)

அவரது வடிவழகு
சுந்தரனார்-1-
தேசொத்தார் மிக்காருமிலாதார்-3-
திலகமெனுந் திருமேனிச் செல்வர்-5-
முத்திமழை பொழியு முகில்வண்ணர்
–10-என்பனவற்றிற்பொலிந்து திகழ்கின்றது.

அருளாளப் பெருமாள் “இனியார் ” என்பதை,
எனக்கிவர் நானிவர்க் கென்னவினியார்-3-
இலகுசுடர் முழுநலமாமினியார்–5-
என்று விளக்குகிறார் விசுவாமித்திரகுலவிப்பிரர்.
அவன் ‘ முத்திதரும் அண்ணல் ” என்பது
வானேற வழிதந்தார்-2-
வீடு கொடுத்துகந்தார்-9-
முத்தி மழை பொழியு முகில்-10-
என்பனவற்றிற் கொண்டாடப்பெறுகின்றது.

அவரே கண்ணனாய்த் திருவவதரித்தவர் “-என்பது பின் வரும் அடிகளால் வெளிப்பபடை.
பகல் நடுவேயிர வழைக்க வல்லார்-7-
தருமன் விடத்தாந்தூது போனார்-8-
தரணி பொறாத்திண்பாரந்தவிர்த்தார்-8-
அருமறையின் பொருளனைத்தும் விரித்தார்-8-
அஞ்சின நீ யென்னையடை யென்றார்-8-
தரும மெலாந்தாமாகி நிற்பார்-8-
தாமே நம் வினையனைத்துந்தவிர்ப்பார்-8-
பரமெனது நீ புலம் பேல் என்றார்-8-
பார்த்தனுக்குத் தேரூர்ந்தார்-8-
வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார்-9-மல்லர் மதகரி மாள மலைந்தார்-9-
கஞ்சனைப்போர் கடுஞ்சினத்தாற் கடிந்தார்-9-
கண்ணுதன்முன் வாணன்றோள் கழித்தார் -9-வெஞ்சொல்தர வீடு கொடுத்து கந்தார்-9-
பஞ்சவரைப் பலவகையுங் காத்தார்-9-
பாஞ்சாலி குழல் முடித்தார் -9-

அவரே ” நான்முகற் பயந்த நாரணன் ” என்பதை
எழில் மலரோன்றன்னை யன்றேயீன்றார்-1-
அது தன்னை யன்ற யனுக்களித்தார்-2-
என்பனவற்றிற் காட்டுகின்றார்.

முத்திமழை பொழியுமுகில் (10) என்பது எதிகட்கிறைவரான பெரும்பூதூர் வந்த வள்ளலைக்
குறிப்பதாகக் கருதுவது இழுக்காகாது.

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார். ஆனைபரி தேரின்மே லழகர் வந்தார் (10)-ஆனைமேலழகர், பரிமேலழகர், தேரின் மேலழகர் என்ற திருநாமங்களின் இடையிலுள்ளதான தோரழகு மோரழகே-திருக்குறட்குச் சீரிய உரையிட்ட பரிமேலழகர் ஸ்ரீ காஞ்சிமா நகரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் அருச்சக பரம்பரையிற் பிறந்தவர் ; வைணவ சமயத்தினர்-பதினொன்றாம் நூற்றாண்டுக்கும் பதினான்காம் நூற்றாண்டுத்தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலமொன்றே பரிமேலழகர்க்கு
உரியது என்பது சாஸந ஆராய்ச்சியாளர் கருத்து.-பரிமேலழகியன் என்பது, குதிரை நம்பிரான் மேல் அலங்காரத் திருக்கோலங்கொண்டருளியவர் என்ற பொருளதாய்க் கச்சி அருளாளப் பெருமாளைக் குறிப்பதாம். சித்திரா பெளர்ணிமை முதலிய திருவிழாக் காலங்களில் அப்பெருமான் பரிமேலழகியாராகவும் ஆனைமேலழகியாராகவும் காட்சி தருந்திருக்கோலம் இன்றும் தரிசிக்கத்தக்கது.

பதத் தொகுதி அழகு

எழில் மலரோன்-1-
துலங்கு தூயோர்-1-
அருளாழிப் பெருமாள்-5-
திலகமெனுந்திருமேனி-5-
சுடர் முழுநலம்-5-
அருளுமன்பர்-6-
வழி நடத்தி வைப்பார்-6-
மாளமலைந்தார்-9-
ஆனைபரி தேரின் மேலழகர்-10-
முத்தி மழை பொழியுமுகில்-10-
உம்பர்தொழுங் கழலுடையார்-10–என்பன காண்க.

மோனையழகு

வண்மையுடன் வரந்தருவார் வந்தார்தாமே-1-
அது தன்னையன் றயனுக்களித்தார்-2
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோர்-2-
வானேற வழிதந்தார் வந்தார்-2-
உலகெல்லா முள்ளே வைத் துமிழ்ந்தார்-5-
அலைகடலா யானந்த மடைந்தார்-5-
அஞ்சி றையைக்கழித்தருளு மன்பர்-6-
புகலில்லார் புகலாகும் புனிதர்-7-
அகில மெலா மானந்த மானார்-7-
புகலில்லார் புகலாகும்-7-
மூலமென வோலமிட வல்லார்-10-
என்பன வற்றில் அநுப்ராசங்காண்க.

எம்பெருமானைச் சொன்னவிடமெல்லாம் பிராட்டியையும் சொல்லும். ஸர்வசரீரியே திருமகளார் தனிக்கேள்வன். எவ்வாறு விஷ்ணு எங்கும் உளனோ அவ்வாறே திருவும் எங்கு முளள்.-பரத்வத்துக்குத் தாம்பத்யம் உயிர். இந்து தன் நிலவுடன் இலங்கும் தன்மை போல் அவன் திருதனக்கு அவனே திருவாகித் திருவுடன் ஒன்றியே நாராயணனும், நாராயணனோ டொன்றியே திருவும் விளங்குதலின் பரதத்துவம் ஒன்றே.
“அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ “ என்று ஸ்ரீ பராசரபசுவான் அருளிச் செய்கிறார்.
“புல்லிய சொல்லும் பொருளும் போலவும்” என்பது பரிபாடலில் காணப்பெறும் உவமம், ‘ சொல்லும். பொருளும்போற்பரந்து‘ (இராமா. பால. ஆற்று 19) என்று த்வநியில் வைத்துக் குறிப்பிடுவர் கம்ப நாடர். பூமகளும் பொருளும் மெனநீயென் மாமகள் தன்னொடு மன்னுதி-(இராமா. பால. கடிமண 87.)[பொருள்- பரம் பொருளாகிய திருமால் ; பூமகள்-திருமா மகள் ]என விளக்குதலும் காண்க-இவற்றையெல்லாம் சால விளக்குவான் வேண்டி இத் திருச்சின்னமாலையில் திருவுரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் (2) என்று அழகுற வமைத்துள்ளார் தூப்புல் மா புருடன். இவரது உவமை நலம் அனைவரது உள்ளத்தையுங் கொள்ளை கொள்ள வல்லதே.

முத்திதர வல்ல தலைவன் வந்தான் சகலாண்ட நாதன் வந்தான்-என்பன
முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்உம்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே
என்பவற்றின் கருத்தையுட்கொண்டு வந்தனவே.

கண்ணனெழிற் கமலபதக் காதல் வந்தார்
கிரிசையறி வுடனினைவு வந்தார் வந்தார்
கண்ணிதுவென் றெண்ணுமறை காப்பார் வந்தார்
கண்ணனருள் பொதியுமதி வண்ணர் வந்தார்
பண்ணமரும் பழமறைகள் பூத்தார் வந்தார்
பாடியமே நாடியநாப் பகவர் வந்தார்
கண்ணனடி நண்ணுநலம் தந்தார் வந்தார்
கண்ணனெனக் கண்கொடுப்பார் வந்தார் தாமே
.(தேசிகமாலை – கீதைச்சுருக்கு – 7.
வகுளமாலை தொகுதி 3 பகுதி 1, 2. பக்கம். 2) இவற்றால் வேதாந்த குருவின் வாசகத்தைத் தமிழ்கூறு நல்லுலகு பொன்னேபோல் போற்றியுள்ளமை தேற்றம்.

————————

ஈருலகைப் படைக்கவெண்ணி யிருந்தார் வந்தா
ரெழின்மலரோன் றன்னையன்றே யீன்றார் வந்தார்
மாருதமண் ணீராகு மாயோர் வந்தார்
வானொடெரி தாமாகு மறையோர் வந்தார்
சூரியர்தம் முடன்றுலங்கு தூயோர் வந்தார்
சுரர்களுக்கன் றமுதருள்சுந் தரனார் வந்தார்
வாரிதிசூழ் வையகம்வாழ் வித்தார் வந்தார்
வண்மையுடன் வரந்தருவார் வந்தார்தாமே (1)

[ஈர்உலகை-சேதனம், அசேதநம் என்னும் இருவிதமான பிரபஞ்சத்தை; படைக்க – சிருட்டிக்க; எழில் – அழகிய; மலரோன் -பிரமன் ; மாருதம் -வாயு ; மாயோர் – ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவர் ; வான் – ஆகாசம்; எரி – அக்நி ; மறையோர் -வேதத்தால் போற்றப்பெறுபவர் ; சூரியர் – நித்ய சூரிகள்; துலங்குவார் – விளங்குபவர் ; சுரர் – தேவர்; அன்று – திருப்பாற்கடல் கடைந்த அக்காலத்தில்; சுந்தரனார் – அழகர் ; வாரிதி – கடல்;
வையகம் உலகம் ; வண்மை – கொடை ; தருவார் – கொடுத்தருளுவார்.

அருமறையை யூழிதனிற் காத்தார் வந்தா
ரதுதன்னை யன்றயனுக் களித்தார் வந்தார்
தருமவழி யழியாமற் காப்பார் வந்தார்
தாமரையா ளுடனிலங்குந் தாதை வந்தார்
திருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார்
திருவருளாற் செழுங்கலைக டந்தார் வந்தார்
மருவலர்க்கு மயக்குரைக்கு மாயோர் வந்தார்
வானேற வழிதந்தார் வந்தார் தாமே. (2
)

(அருமறை – அறியவரிய வேதங்கள் ; ஊழி – பிரளயகாலம் ;அது – அந்த வேதத்தை ; அயனுக்கு – பிரமனுக்கு ; அளித்தார் -கிருபையாலே உபதேசித்தவர்; தருமவழி – அறநெறி; தாமரையாள் – பெரிய பிராட்டியார் ; தாதை – உலகுக்குத் தந்தை; திரு -இலக்குமி ; உரை – வாக்கு; பொருள் – அர்த்தம்; செழும்கலைகள் – மேன்மேலும் தழைக்கின்ற வித்யைகள் ; மருவலர்க்கு -தம்மை அடையாதார்க்கு; மயக்கு – மோஹந சாஸ்த்ரங்கள் ;வான் – பரமபதம் ; வழிதந்தார் – உபாயங்களை உபதேசித்தவர்.]

அனைத்துலகுங் காக்குமரு ளாளர் வந்தா
ரனைத்துக்கு மதிபதியாய் நிற்பார் வந்தார்
தினைத்தனையுந் திருமகளை விடாதார் வந்தார்
தேசொத்தார் மிக்காரு மில்லார் வந்தார்
நினைக்கநமக் கின்னறிவு தந்தார் வந்தார்
நிலைநின்ற வுயிர்தோன்ற நினைந்தார் வந்தா
ரெனக்கிவர்நா னிவர்க்கென்ன வினியார் வந்தா
ரெழுத்தொன்றிற் றிகழநின்றார் வந்தார் தாமே.(3)

அனைத்து உலகும் – உலகம் யாவையும்; அருளாளர் -பேரருளாளர்; அனைத்துக்கும் – எல்லாவஸ்துக்களுக்கும்; அதிபதி – சுவாமி ; தேசு – தேஜஸ்ஸு; இன் அறிவு – ஆநந்த
ரூபமான ஜ்ஞாநம்; நிலைநின்ற – நித்யனான ; உயிர் – ஜீவன் ; கோன்ற-தன்னையறியவேறு ஜ்ஞாநம் வேண்டாத படிதானே பிரகாசிக்கும்படி ; எனக்கு இவர் – எனக்கு இவர் சுவாமி;
நான் இவர்க்கு – நான் இவருக்கு அடியன் ; என்ன – என்று சொல்ல; இனியார் – போக்யமாய்த் தோன்றுமவர்; ஒன்று எழுத்தில – ஓர் அக்ஷரமான பிரணவத்தில்; திகழ நின்றார் – போற்றப் பெற்றுப் பிரகாசிப்பவர்.

நாம்வணங்கத் தாமிணங்கா நிற்பார் வந்தார்
நம்மையடைக் கலங்கொள்ளு நாதர் வந்தார்
நாமெமக்காம் வழக்கெல்லா மறுத்தார் வந்தார்
நமக்கிதுவென் றுரையாமல் வைத்தார் வந்தார்
சேமமெண்ணியெம்மையன்பர்க் கடைத்தார் வந்தார்
செழுந்தகவாற் றிண்சரணா மீசர் வந்தார்
தாமனைத்துந் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்
தமக்கேயா யெமைக்கொள்வார் வந்தார் தாமே.(4)

வணங்க-ஸேவிக்க, இணங்கா நிற்பார் – பலனளிக்க உடன் பட்டு நிற்பவர்; நாதர் – ரக்ஷகர் ; வழக்கு – விவாதங்கள்; சேமம்- க்ஷேமம்; அன்பர்க்கு – பாகவதர்கட்கு ; அடைத்தார் – அடிமையாக்கியவர் ; செழும் தகவால் – மிக்க கிருபையால் ; ஈசர் – ஸர்வேசுவரன்; வினை – கர்மங்கள் ; தவிர்ப்பார் – ஒழிப்பவர் ; கொள்வார் – அங்கீகரிக்குமவர்

உலகெல்லா முள்ளேவைத் துமிழ்ந்தார் வந்தா
ருலகுடம்பாய்த் தாமுயிராய் நின்றார்வந்தா|
ரலைகடலா யானந்த மடைந்தார் வந்தா
ரளவில்லா வருளாழிப் பெருமாள் வந்தார்
திலகமெனுந் திருமேனிச் செல்வர் வந்தார்
செழுங்குணங்க ளிருமூன்று முடையார் வந்தா
ரிலகுசுடர் முழுநலமா மினியார் வந்தா
ரெல்லார்க்குங் கதியானார் வந்தார் தாமே. (5)

(உள்ளே – பிரளய காலத்தில் தம் வயிற்றினுள்; உமிழ்ந்தார் – சிருட்டி காலத்தில் மறுபடி படைத்தவர் ; உயிராய் -அந்தர்யாமியாய்; அலைகடலாய் – குமிழி, நுரை, அலைமுதலிய
பல நிலைமையில் மாறுகின்ற அலை நிறைந்த கடலைப்போலிருந்து;
திருமேனி – திவ்யமங்கள விக்ரஹம் ; இரு மூன்று குணங்கள் – ஜ்ஞநம்,சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தே ஸ் என்ற ஆறுகுணங்கள் : அல்லது, காக்குந்தன்மை, அருள், ஜ்ஞாநம் எளிமை, இந்திரியங்களின் அடக்கம், மனத்தின் அடக்கம் என்பன; இலகு -மாறுபடாமல் பிரகாசிக்கின்ற; சுடர் -ஜ்ஞாந ஸ்வரூபரும் ; முழுநலம் – பரிபூர்ணாநந்தஸ்வரூபருமாகஆகின்ற; கதி – அநுபவிக்கப் பெறும் பலனாயிருப்பவர்.

அருளாலே விலங்கிரண்டு மழிப்பார் வந்தா
ரஞ்சிறையைக் கழித்தருளு மன்பர் வந்தார்
மருள்வாரா வகைநம்மைக் காப்பார் வந்தார்
வானேற வழிநடத்தி வைப்பார் வந்தார்
தெருளாருந் தெளிவிசும்பு தருவார் வந்தார்
திண்கழற்கீழ் வாழநமக் கருள்வார் வந்தார்
பெருவானி லடிமைநம்மைக் கொள்வார் வந்தார்
பிரியாமற் காத்தளிப்பார் வந்தார் தாமே. (6)

விலங்கு- விலங்கு போன்ற புண்ய பாபங்களாகிய கர்மங்கள் ; அம்சிறை – ஸம்ஸாரிகளுக்குக்கர்மவசத்தால் அழகிய தாய்த் தோன்றுகின்ற ஸம்ஸாரமாகிய சிறையை ; கழித்து – போக்கி ; மருள் – அந்திம காலத்தில் தீய நினைவுகளைத் தருகின்ற
அஜ்ஞாநம் ; வான் – பரமபதம்; வழி – அர்ச்சிராதி மார்க்கம் ; தெருள் – ஜ்ஞாநம்; ஆரும் – நிறைந்து பிரகாசிக்கும் ; தெளிவிசும்பு சுத்த ஸத்துவமயமான பரமபதத்தை; கழல்- திருவடிகள்;வாழ – கைங்கரியம் செய்து வாழும்படி ; பெருவானில் -ஸ்ரீ வைகுண்டத்தில் ; கொள்வார் – ஏற்றுக்கொள்பவர்.)

அகலகிலாத் திருமகளா ரன்பர் வந்தா
ரடியிரண்டு மாறாகத் தந்தார் வந்தார்
புகலில்லார் புகலாகும் புனிதர் வந்தார்
பொன்னுலகிற் றிருவுடனே திகழ்வார் வந்தா
ரகிலமெலா மானந்தமானார் வந்தா
ரடியிணைக்கீழ் வைத்தடிமை கொள்வார் வந்தார்
பகனடுவே யிரவழைக்க வல்லார் வந்தார்.
பகலொன்றா யிரவழித்தார் வந்தார்தாமே-7-

அகலகிலா – கணமும்பிரியாத ; ஆறாக – உபாயமாக ; புகல் உபாயம் ; புனிதர் – பரிசுத்தர்; பொன் உலகு – பரமபதம் ; அகிலம் – லீலா நித்ய விபூதியாகிய உலகங்கள் ; அழைக்க -கொணரும்; பகல் ஒன்றாய் – முக்தியில் ஒரே பகலாய் ; இரவு – ஸம்ஸாரமாகிய இராத்திரி.

தருமன்விடத் தாந்தூது போனார் வந்தார்
தரணி பொறாத் திண்பாரந் தவிர்த்தார் வந்தா
ரருமறையின் பொருளனைத்தும் விரித்தார் வந்தா
ரஞ்சினநீ யென்னையடை யென்றார் வந்தார்
தருமமெலாந்தாமாகி நிற்பார் வந்தார்
தாமேநாம் வினையனைத்துந் தவிர்ப்பார் வந்தார்
பரமெனது நீபுலம்ப லென்றார் வந்தார்
பார்த்தனுக்குத் தேரூர்ந்தார் வந்தார் தாமே. (8)

தருமன்- தருமபுத்திரன்; தூதுபோனார் – துரியோதனனிடம் தூதுசென்றவர்; தரணி – பூமி; விரித்தார் – ஸ்ரீபகவற் கீதை வாயிலாக விளக்கியவர் ; அடை – சரணமடைவாயாக ; தருமம் –
உபாயம் ; வினை – கர்மங்கள்; தவிர்ப்பார் – தொலைப்பவர் ; பரம் – உனக்குப் பலனை யளித்துக் காக்கவேண்டிய பொறுப்பு; புலம்பல் வருந்தாதே; என்றார் – என்று உறுதி கூறியவர் ; தேரூர்ந்தார் -தேரை ஓட்டியவர்.

வஞ்சனைசெய் பூதனையை மாய்த்தார் வந்தார்
மல்லர்மத கரிமாள மலைந்தார் வந்தார்
கஞ்சனைப்போர் கடுஞ்சினத்தாற் கடிந்தார் வந்தார்
கண்ணுதன்முன் வாணன்றோள் கழித்தார் வந்தார்
வெஞ்சொறர வீடுகொடுத் துகந்தார் வந்தார்
விலக்கில்லா வழி நடத்த விரைந்தார் வந்தார்
பஞ்சவரைப் பலவகையுங் காத்தார் வந்தார்
பாஞ்சாலி குழன் முடித்தார் வந்தார் தாமே .) (9)

மாய்த்தார் – கொன்றவர்; மல்லர் – முஷ்டிகன் முதலிய மல்லரும் ; மதகரி – குவலயாபீட மென்னும் மதயானை ; மாள – மாண்டுபோகும்படி ; மலைந்தார் – போர்செய்தவர்; கடும் –
கொடிய ; கடிந்தார் – கொன்றவர்; கண்நுதல் – நெற்றிக்கண்ணைப் படைத்த சிவபிரான் ; வாணன் – பாணாஸுரன்; கழித்தார் -அறுத்தார்; வெம் சொல்தர- சிசுபாலன் கொடிய நிந்தைச்சொற்களைக்கூற; வீடு – மோக்ஷம்; உகந்தார் – மகிழ்ந்தவர்; விலக்கு இல்லாவழி – தடையில்லாத அர்ச்சிராதி மார்க்கம்; பஞ்சவர் – பஞ்சபாண்டவர்கள் ; பாஞ்சாலி – திரௌபதி; குழல் – கூந்தல்.]

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தா
ரானைபரி தேரின்மே லழகர் வந்தார்

கச்சிதனிற் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருதவரந்தருதெய்வப் பெருமாள் வந்தார்
முத்திமழை பொழியுமுகில் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தா
ருத்தரவே திக்குள்ளே யுதித்தார் வந்தா
ரும்பர்தொழுங் கழலுடையார் வந்தார் தாமே.(10)

[பரி -குதிரை; கச்சி – காஞ்சீபுரம்; கண் – ஜ்ஞா நக்கண்ணை; கருத – மநத்தினால் அநுஸந்தித்தால்; தெய்வப்பெருமாள் தேவச்சிரேஷ்டர் ; முத்தி – மோக்ஷம்; முகில் – மேகம் ; வண்ணர் – நிறமுடையவர் ; மூலம் எனஓலம் இட – முதலையால் பீடிக்கப்பட்ட கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூக்குரலிட; வல்லார் – அந்த யானையைக் காக்கச் சக்தியுடையவர் ; உதித்தார் – ஆவிர்ப்பவித்தவர் ; உம்பர் – நித்யசூரிகள் ; கழல் – திருவடி.

மறைத்தலையி லிசை யெழுத்தில் வணங்கும்வாக்கின்
மந்திரத்தி னாலெழுத்தாந் திருநா மத்தி
னிறைத்திலகு வேற்றுமையி லிரண்டா மொன்றி)
னெடுமாறன் கீதையெலா நிறைந்த சொல்லி
னுறைத்தவர்கண் டுரைத்தபொரு ளான வெல்லா
முயர்விரத வருளாளப் பெருமா டேசின்
றிறத்திலியை திருச்சின்னமாலை பத்துஞ்
செவிக்கினிதாஞ்சிற்றின்ப மிசையா தார்க்கே. (11)

மறைத் தலையில் – வேதங்களின் ஆரம்பத்திலும் முடிவிலும்; இசை – அமைந்த ; எழுத்து – எழுத்தாகிய ப்ரணவம் ; வாக்கு நமச்சப்தம்; மந்திரம் – திருமந்திரம்; திருநாமம் – நாராயண சப்தம்; நிறைத்து – பூர்த்திசெய்து; வேற்றுமை – நான்காம் வேற்றுமையில் ; இரண்டுஆம் ஒன்றில் – இரண்டுபாகமாக யிருந்து ஒரு மந்திரமாயுள்ள துவயத்திலும் ; சொல்லில் – சரம சுலோகத்திலும் ; உறைத்தவர் – நன்கு பரிசயம் செய்த ஆசாரி யர்கள் ; உரைத்த- நமக்கு உபதேசித்த ; உயர்விரதம் – சரணா கதரக்ஷண மென்னும் உயர்ந்த விரதத்தைக் கொண்டுள்ள ; தேசின் பெருமையின் ; திறத்தில் – விஷயத்தில் ; சிறுஇன்பம் –
அற்பமான ஸம்ஸாரஸுகத்தை ; இனிது – மதுரம்.)

திருச்சின்னமாலையில் உள்ள நிகமனப்பாசுரம் இம்மாலைச் சுருக்கத்தையும், சங்கதியையும், பேரருளாளன் பிரபாவமான இந்நன்னூல் சிற்றின்பம் இசையாதார்க்கு இனிதாம் என்பதையும் புலப்படுத்துகின்றது.

வேதங்களின் முதலிலும் முடிவிலும் அமைந்த எழுத்தாகிய பிரணவத்திலும் வணக்கத்தைக்கூறும் சொல்லாகிய நமச்சப்தத்திலும், மூலமந்திரத்தில் உள்ள நான்கு அக்ஷரங்கள் அமைந்தநாராயண சப்தத்திலும், அந்த நாராயண சப்தத்தைப் பூர்த்திசெய்து பிரகாசிக்கின்ற நான்காம் வேற்றுமையிலும், இரண்டுபாகமாயிருந்து ஒருமந்திரமாயுள்ளதுவயத்திலும், எம்பெருமானுடையஸ்ரீஸுக்தியாகிய ஸ்ரீ பகவத் கீதையில் உள்ள எல்லாப்பொருளும் தன்னுள் அடங்கப் பெற்ற சுலோகரத்தினத்திலும்
நன்கு பரிசயம் செய்த ஆசார்யர்கள் தாங்கள் உள்ளபடி அறிந்து நமக்கும் உணர்ந்தவாறு உபதேசித்த அர்த்தங்கள் அனைத்தையும் சரணாகத ரக்ஷணம் என்னும் உயர்ந்த விரதத்தைக் கொண்டுள்ள பேரருளாளப் பெருமாளுடைய பெருமையின் விஷயத்திலே
இயைத்து உரைக்கின்ற திருச்சின்ன மாலையாகிய பத்துப் பாசுரங்களும் அற்பமான ஸம்ஸார ஸுகத்தை விரும்பி அங்கீ கரிக்காதவர்களுக்கு செவிக்கு மதுரமாயிருக்கும். இப்பிரபந்தம் பேரின்பமான பகவதநுபவத்தில் கருத்துடையோர்க்கே ரஸிப்பதாகும் என்றபடி.)

————————————————————————————–

வாழ்க உலகெலாம்.
வாழ்க சந்தமிகுதமிழ் மறையோன்.
வளர்க திருச்சின்னமாலை.
வாழ்க அன்பரீட்டம்.
சொல்வதுமுன்னாமந்தொழுவதுமுன்பாத
நல்குவது முன்னுடைய நற்குணமே-தொல்லருளுக்
கெம்மை யிலக்காக்கி யீனமா மெம்பரிசு
செம்மைசெய் தேசிகனே யின்று.
-(தேசிகர் நூற்றந்தாதி 95)

நானிலமுந் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள்
சென்னியணி சேர்தூப்புல்வேதாந்த தேசிகரே !
இன்னமொரு நூற்றாண் டிரும்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥

June 13, 2025

॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥

நமாமீஸ்²வரம் ஸச்சிதா³னந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்ராஜமானம் |
யஸோ²தா³பியோலூக²லாத்தாவமாநம்
பராம்ருஷ்டமத்யம் ததோ த்³ருத்ய கோ³ப்யா || 1 ||

ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்³மேந ஸாதங்கநேத்ரம் |
முஹு​:ஸ்²வாஸ கம்ப-த்ரிரேகா²ங்கண்ட²
ஸ்தி²தக்³ரைவம்-தா³மோத³ரம் பக்திப³த்த³ம் || 2 ||

இதித்³ருக் ஸ்வலீலாபிராநந்த³ குண்டே³
ஸ்வகோஷம் நிமஜ்ஜந்தமாக்யா பயந்தம் |
ததீ³யேஸி²தஜ்ஞேஷு பக்தைர்ஜிதத்வம்
புந​: ப்ரேமதஸ்தம் ஸ²தாவ்ருத்தி வந்தே³ || 3 ||

வரம் தே³வ ! மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஸா²த³பீஹ ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பால பா³லம்
ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை || 4 ||

இத³ம் தே முகா²ம்போஜமத்யந்தநீலை –
ர்வ்ருதம் குந்தலை​: ஸ்நிக்³த்தரக்தைஸ்²ச கோ³ப்யா |
முஹுஸ்²சும்பி³தம் பி³ம்ப³ரக்தாதரம் மே
மநஸ்யாவிராஸ்தாமலம் லக்ஷலாபை: || 5 ||

நமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ !
ப்ரஸீத ப்ரபோ ! து³:க²ஜாலாப்திமக்³நம் |
க்ருபாத்³ருஷ்டி வ்ருஷ்டயாதிதீ³நம் பதாநு –
க்³ருஹானேஸ² மாமஜ்ஞமேத்யக்ஷித்³ருஸ்²ய​: || 6 ||

குபே³ராத்மஜௌ ப³த்த³மூர்த்த்யைவ யத்³வத்
த்வயா மோசிதௌ பக்திபாஜௌ க்ருதௌ ச |
ததா² ப்ரமபக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷே க்³ரஹோ மே (அ) ஸ்தி தா³மோத³ரஹ || 7 ||

நமஸ்தே(அ)ஸ்து தா³ம்னே ஸ்புரத்³தீ³ப்திதாம்நே
த்வதீ³யோத³ராயாத² விஸ்²வஸ்ய தாம்நே |
நமோ ராதிகாயை த்வதீ³ய ப்ரியாயை
நமோ (அ) நந்தலீலாய தே³வாய துப்யம் || 8 ||

॥ இதி ஸ்ரீ தாமோதராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயணோத்தரதாபிநீயோபநிஷத்

June 11, 2025

ஸ்ரீ நாராயணோத்தரதாபிநீயோபநிஷத்
ப்ரத²ம: க²ண்ட:³ ।
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா ஆநந்த³ம் ப்³ரஹ்மணோ வித்³வாந்
ஸச்சிதா³நந்த³ம்ப³ரூபோ ப⁴வதி ।
த்³வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா²யா ஸமாநம் வ்ரு’க்ஷம் பரிஷஸ்வஜாதே ।
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்³வத்த்யநஶ்நந்நந்யோ அபி⁴சாகஶீதி ॥
யோ வேதா³தௌ³ ஸ்வர: ப்ரோக்தோ வேதா³ந்தே ச ப்ரதிஷ்டி²த: ।
தஸ்ய ப்ரக்ரு’திலீநஸ்ய ய: பர: ஸ மஹேஶ்வர: ॥
அணோரணீயாந்மஹதோ மஹீயாநாத்மா கு³ஹாயாம் நிஹிதோऽஸ்ய ஜந்தோ: ।
தமக்ரதும் பஶ்யதி வீதஶோகோ தா⁴து: ப்ரஸாதா³ந்மஹிமாநமீஶம் ॥
வாஸநாத்³வாஸுதே³வஸ்ய வாஸிதம் ஹி ஜக³த்த்ரயம் ।
ஸர்வபூ⁴தநிவாஸோऽஸி வாஸுதே³வ நமோऽஸ்து தே ॥
பூ⁴ஶ்ச நாராயண: । பு⁴வஶ்ச நாராயண: । ஸுவஶ்ச நாராயண: ।
மஹஶ்ச நாராயண: । ஜநஶ்ச நாராயண: । தபஶ்ச நாராயண: ।
ஸத்யம் ச நாராயண: । நாராயண: பரம் ப்³ரஹ்ம । நாராயண ஏவேத³ம் ஸர்வம் ।
நாராயணாந்ந கிஞ்சித³ஸ்தி । ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்³ரஹ்ம । யோ வேத³ நிஹிதம்
கு³ஹாயாம் பரமே வ்யோமந் । தஸ்மாத்³வா ஏதஸ்மாதா³த்மந ஆகாஶ: ஸம்பூ⁴த: ।
ஆகாஶாத்³வாயு: । வாயோரக்³நி: । அக்³நேராப: । அத்³ப்⁴ய: ப்ரு’தி²வீ । ப்ரு’தி²வ்யா
ஓஷத⁴ய: । ஓஷதீ⁴ப்⁴யோऽந்நம் । அந்நாத்புருஷ: । நாராயண: ஸர்வபுருஷ
ஏவேத³ம் பரப்³ரஹ்ம । நாராயண: ஸர்வபூ⁴தாந்தர்யாம்யாத்மா । ஆத்மேத³ம் ஸர்வம்
நாராயண: । நாராயண: ஸ்வயம் ஜ்யோதி: । தஸ்மாத்ப்ரகாஶாத்மா ॥
நீவாரஶூகவத்தந்வீ பீதா பா⁴ஸ்வத்யணூபமா ।
தஸ்யா: ஶிகா²யா மத்⁴யே பரமாத்மா வ்யவஸ்தி²த: ॥
பாஶப³த்³த:⁴ ஸ்ம்ரு’தோ ஜீவ: பாஶமுக்த: ஸநாதந: ।
துஷேண ப³த்³தோ⁴ வ்ரீஹி: ஸ்யாத்துஷாபா⁴வேந தண்டு³ல ॥

பரப்³ரஹ்ம ஸ்வயம் சாத்மா ஸாக்ஷாந்நாராயண: ஸ்ம்ரு’த: ।
நாராயணமநாதி³ம் ச யோக³நித்³ராபராயணம் ॥
ஜாக்³ரத்ஸ்வப்நஸுஷுப்தீஷு ஸர்வகாலவ்யவஸ்தி²தம் ।
நாராயணம் மஹாத்மாநம் மஹாத்⁴யாநபராயணம் ।
ஸர்வவேதா³ந்தஸம்லக்ஷ்யம் தத்³ப்³ரஹ்மேத்யபி⁴தீ⁴யதே ॥
ஸ ஹோவாச ப⁴க³வாந் நாராயண ஏவேத³ம் ஸர்வம் ப்ரதிஷ்டி²தம் ய ஏவம் வேத³ ।
இத்யுபநிஷத் ॥
இத்யாத²ர்வணரஹஸ்யே நாராயணோத்தரதாபிநீயே ப்ரத²ம: க²ண்ட³ ।

த்ரு’தீய: க²ண்ட:³ ।
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா நாராயண: பரப்³ரஹ்மேதி ய ஏவம் வேத³ ।
நாராயணாத்மா வேத³ம் ஸர்வம் நிர்விகாரம் நிரஞ்ஜநவஸ்து ப்ரதிபாத்³யதே ।
ஸ நாராயணோ விராட்புருஷோ ப⁴வாதி । தே³வாநாம் வாஸவோ ப⁴வதி ।
இந்த்³ரியாணாம் மநோ
ப⁴வதி । ஸர்வேஷாம் வஸ்தூநாம் முக்²யவஸ்து ப⁴வதி । ௐ நமோ நாராயணாத³ந்யோ
மந்த்ர: நாராயணாத³ந்யோபாஸ்திர்நாஸ்தி । நாந்யந்நாராயணாது³பாஸிதவ்யம் ।
ஸர்வம்
நாராயண ஏவ ப⁴வதீதி விஜ்ஞாயதே । யோऽதீ⁴தே நித்யம் ஸர்வாந் காமாநவாப்நோதி

ஸ ப்³ரஹ்மஹத்யாயா: பூதோ ப⁴வதி । ஸுராபாநாத் பூதோ ப⁴வதி । ஸ்வர்ணஸ்தேயாத்
பூதோ ப⁴வதி । கு³ருதல்பக³மநாத் பூதோ ப⁴வதி । அக³ம்யாக³மநாத் பூதோ ப⁴வதி ।
அப⁴க்ஷ்யப⁴க்ஷாத் பூதோ ப⁴வதி । ஸ உபபாதகமஹாபாதகேப்⁴ய: பூதோ ப⁴வதி ।
ஸர்வவேத³மதீ⁴யாநோ ப⁴வதி । ஸர்வக்ரதுப²லம் ப்ராப்நோதி । ஸர்வகர்மகர்தா
ப⁴வதி । சது:ஸமுத்³ரபர்யந்தபூ⁴தா³நப²லம் ப்ராப்நோதி । த்³விஜோத்தமோ ப⁴வதி ।
சதுர்வர்க³ப²லம் ப்ராப்நோதி । ப்³ரஹ்மசாரீ ஜ்ஞாநவாந் ப⁴வதி । க்³ரு’ஹீ
புத்ரபௌத்ரமஹைஶ்வர்யவாந் ப⁴வதி । ஸம்ந்யாஸஈ மோக்ஷவாந் ப⁴வதி ॥
பட²நாச்ச்²ரவணாத்³வாऽபி ஸர்வாந் காமாநவாப்நுயாத் ।
நாராயணப்ரஸாதே³ந வைகுண்ட²பத³மஶ்நுதே ॥
இதி ஸ ஹோவாச ப⁴க³வாந் ய ஏவம் வேத³ । இத்யுபநிஷத் ॥
வேதா³க்ஷராணி யாவந்தி படி²தாநி த்³விஜோத்தமை: ।
தாவந்தி ஹரிநாமாநி கீர்திதாநி ந ஸம்ஶய: ॥
நாராயண ஹரே க்ரு’ஷ்ண வாஸுதே³வ ஜக³த்³கு³ரோ ।
முகுந்தா³ச்யுத தே³வேஶ மஹாவிஷ்ணோ நமோऽஸ்து தே ॥
பூ⁴தாநி தத்த்வஸம்ஜ்ஞாநி கூடஸ்தோ²ऽக்ஷரஸம்ஜ்ஞித: ।
உத்தமஶ்சாபி புருஷோ நாராயண இதீர்யதே ॥
இத்யாத²ர்வணரஹஸ்யே நாராயணோத்தரதாபிநீயே த்ரு’தீய: க²ண்ட:³
(வைஷ்ணவ-உபநிஷத:³)
இதி நாராயணோத்தரதாபிநீயோபநிஷத் ஸமாப்த ।

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-


த்³விதீய: க²ண்ட:³ ।
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா நாராயண: பரவஸ்து ப⁴வதீதி விஜ்ஞாயதே ।
ஸச்சிதா³நந்த³ரூபாய ஜ்ஞாநாயாமிததேஜஸே ।
பரப்³ரஹ்மஸ்வரூபாய நாராயண நமோऽஸ்து தே ॥
நித்யஶுத்³தா⁴ய பு³த்³தா⁴ய நித்யாயாத்³வைதரூபிணே ।
ஆநந்தா³யாத்மரூபாய நாராயண நமோऽஸ்து தே ॥
ௐ நமோ ப⁴க³வதே ஶ்ரீமந்நாராயணாய மஹாவிஷ்ணவே அமிதப³லபராக்ரமாய
ஶங்க²சக்ரக³தா³த⁴ராய லக்ஷ்மீஸமேதாய க³ருட³வாஹநாய த³ஶாவதாராய
ஸர்வது³ஷ்டதை³த்யதா³நவஸம்ஹரணாய ஶிஷ்டப்ரதிபாலகாய பரப்³ரஹ்மரூபாய
மஹாத்மநே பரமபுருஷாய புண்ட³ரீகாக்ஷாய புராணபுருஷாய ஶுத்³த⁴பு³த்³தா⁴ய
ஸச்சிதா³நந்த³ஸ்வரூபாய மஹாத்மநே க்⁴ரு’ணி: ஸூர்ய ஆதி³த்ய ௐ நமோ
நாராயணாய
ஸஹஸ்ரார ஹும் ப²ட் ஸ்வாஹா ॥
நாராயணாய ஶாந்தாய ஶாஶ்வதாய முராரயே ।
யஜ்ஞேஶ்வராய யஜ்ஞாய ஶரண்யாய நமோ நம: ॥
ஸ ஹோவாச ப⁴க³வாந் ப்³ரஹ்மா ஸர்வம் விஶ்வமித³ம் நாராயண: ய ஏவம் வேத³ ।
இத்யுபநிஷத் ॥
இத்யாத²ர்வணரஹஸ்யே நாராயணோத்தரதாபிநீயே த்³விதீய: க²ண்ட³ ।

ஸ்ரீ பர ப்ரஹ்ம தத்வ விளக்கம்-

June 11, 2025

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வஸிதமேதத்யத் ருக் வேதோ யஜுர் வேத : ஸாம வேதோ தர்வாங்கிரஸஹிஹாஸ: புராணம் வித்யா உபநிஷூத ”-சுக்ல யஜுர் வேத பிருஹதாாண்யகோபநிஷத்தில் 4-ம் அத்தியாயம் 4-ம் பிராம்மணம்.-இத்யாதியாகிய ப்ரமாணங்களின்படியே சர்வ நியந்தாவாயும்,
சர்வ வேதோபப்ரஹ்மணாதி நூல்களின் ப்ரதிபாத்தியனாயும்,
சர்வாந்தர்யாமியாயுமிருக்கும் சர்வேஸ்வரனது ஸங்கல்ப ஸ்வாஸமே ருக், யஜுர், ஸாமம், அதர்வண முதலாகிய வேதங்களும் இதிஹாசம், புராணம், வித்தை, உபநிஷத் முதலியன என அறுதியிட்டுள்ளபடியால், எம்பெருமானது ஜாயமான கடாக்ஷமில்லையாயின் வேதத்தின் யதார்த்தம் வெளிப்படையாய் தோன்றாதாகையால் தமது பரம க்ருபையால் தாமே தம் ப்ரஜைகளுக்கு விளக்கிக் காட்டியபடியால்
வேதங்கள் அனாதியாய் கல்பங்கள் தோரும் ப்ரஜைகளாகிய
ப்ரம்ம, ருத்ர, இந்த்ராதி தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும்,
ஸர்வேஸ்வரனால் போதிக்கப்படுவதால், அவ்வேத ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வான் பக்கலிலும், வேதத்தின் பக்கலிலுமுள்ள ஏற்றங்களை அறிந்தவர்களில் தலைமை யானவர்கள் எமதாரியர்களேயாம்.

காலக்ரமத்தில் வேதாத்யயனம் குறைவு பட்டுப்போய் வேதமானது கோர்வை யின்றி சிதரிப்
போனமையால் அதை சீர்திருத்த வேண்டி எமதருட் பெருங்கருணை யப்பன் தமது பரம க்ருபையால் “பரமேஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்” என்கிறபடியே பரமேஸ்வராயும், பரம பத நிர்வாணனனாயும், விளங்காகின்ற மஹா விஷ்ணுவினம்சமாய் “ வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ் ரூபாய விஷ்ணுவே” என்றும் “ ஸ ஹோதா வ்யாச பராசர்ய :” என்றும் “வ்யாஸய தீ திவ்யாஸ ” என்கிற யஜுர் வேதத்தில் வித்பத்யின் பிரகாரம் வேதங்களினுடைய யதார்த்தத்தை ஸ்தாபிக்கவும், அனர்த்தங்களை நிராகரிக்கவும்,கல்பங்கள் தோரும் அம்ஸாரூடராயும், பராசரர் புத்திரராயும்,விளங்கிய வேத வ்யாஸ பகவான் அவதரித்து அஹோ பாஹ்யமாய் கெம்பீரார்த்தமாய், தைத்ரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்று பெயர் பெற்றிருந்த வேதங்களை தமது பரம க்ருபையாலே எதிர்கால நிகக்ஷியைக் கணித்து சிற்றறிவினோர் அறிந்துய்யுமாரு ருக், யஜுர். ஸாமம், அதர்வணம் என்பதாகப் பிரித்து தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க அவர்கள் அவ்வொவ்வொரு பாகத்தையும் அநேக பகுதிகளாகத் தொகுத்து அவ் வாறு தொகுத்த பாகங்களுக்கு வேத ஸாகைளென்று பெயராய் அதிலும் ருக்வேதத்தில் 21, யஜூர்வேதத்தில் 109, ஸாமவேதத்தில் 1000, அதர்வண வேதத்தில் 50, இப்படி 1180, ஸாகைகளாய் ஒவ்வொரு சாகைகளுக்கும் ஒவ்வொரு உபநிஷதென்று பெயராய் ஒவ்வொரு ஸாகையும் முந்தியபாகம் யஜ்ஞாதி நித்ய, நைமித்ய, கருமங்களையும், அவைகளை அனுஷ்டிக்க வேண்டிய விதிகளையும், செய்ய யோக்யதையுள்ள அதிகாரிகளையும், செய்விக்றவர்களின் யோக்யதையும், ஆராதிக்க வேண்டிய தேவதைகளையும், தத் தேவதைகளைப் பற்றிய மந்தரங்களையும்,தத்தத் கருமங்களின் பலன்களையும், கூறுகிறது.அக் காரணத்தால் இதற்கு கரும காண்டமென்றும், அவித்தை என்றும் கருதப்படுகிறது. வேதத்தில் கரும காண்டத்திற்கு அவித்தை என்னும் நிரூபணம் மைத்திராயண்ணி யுபநிஷத்தில்7, 9 கடோபநிஷத்தில் 2, 4 ஈஸாவாஹியோபநிஷத்தில் 11லும் காணலாம். உத்ர பாகமானது சர்வேஸ்வரனை உபாஸிக்கும் மார்க்கமாகிய ஸாங்கிய யோகம், நிஷ்காம கரும யோகம், தபசு, ஸகுண நிர்க்குண ப்ரஹ்மோபாசனா விதியும், ஆத்ம லக்ஷணமும், ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ ரக்ஷகத்வமும்,ஸமஸ்த்த கல்யாண குணாத் மஹத்வமும், ஸர்வ சேஷித்வமும், ஸ்ரீய:பதித்வம் முதலியவைகளையும், அவைகளுக்க அங்கோபாங்கமான விஷயங்களையும் கூறுகையாலே, ஸ்வ பாகத்திற்கு ஞான காண்டமென்றும், வித்தையென்றும், மேலே கூறிப் போந்தமைத்திராயண்ணியம், கடோபநிஷத்தும், ஈஸாவாஹியம் முதலிய ஸ்ருதிகள் கூறுகிறது இவ்வாறு விவரிக்கப்பட்ட விஷயங்களை முக்திகோபநிஷத்திலும், விஷ்ணு புராணத்திலும் விரிவாகக் காணலாம் இப்படி 1180 ஸாகைகளுடைய வேதங்களின் கில பாகங்களே தற்போது 108, உபநிஷத்துகளாக வெளியாயிருக் கின்றது இவ் 1180 ஸாகைகளையுடைய வேதங்களை வேத புருஷனால் வெளியிடப்பட்ட மீமாம்ஸா ஸாஸ்த்திரங்களன்றி வேதத்தின் யதார்த்தம் விளங்காது. அம்மீமாம்ஸா ஸாஸ்த்திரம் 20 அத்யாயங்களாயும்,அதில் பூர்வ பாகம் 14 அத்தியாயங்களையுடையதாயும், கரும நிச்சய ஸாதனமாயும், ஜைமினி முனிவரால் விளக்கப்பட்டதாயும், உத்ரபாகம் ப்ரஹ்மத்தினுடைய நிச்சயத்தின் ஸாதனமாயும், 6 -அத்யாயங்களை யுடையதாயும்,வ்யாஸ பகவானால் விளக்கப்பட்டதாயுமிருக்கும்.

யஜுர்வேத ப்ரதிபாத்யரான – வேதவ்யாஸ பகவான்« வேத ஸாஸ்த்ராத்பரம்” என்கையாலே அவ் வேதங்களை யனுசரித்தே பர தத்வ பரம் பொருளை யறிய வேண்டும்.

அந்நபூர்ணோபநீஷத்தில்
யச்சூன்யவாதிநாம் சூந்யம் ப்ரஹம ப்ரஹ்ம விதாம் சயத்
விஜ்ஞாந மாத்ரம் விஜ்ஞாந விதாம் யதமலாத்மகம்
புருஷஸ் ஸாங்கய தருஷ்டீநா மீஸ்வரோ யோகவாதிநாம்
ஸிவச்சைவா கமஸ்தாநாம் கால: காலைக வாதிநாம்
யத் ஸர்வ ஸாத்ர ஸித்தாந்தம் யத் தத்வம் ததயௌஸ்திக:”

இதன் பொருள்,
ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரனை உய்யும் வகை எண்ணிலவாயினும், சூன்யவாதி சூன்யமாகவும், ப்ரஹ்மவாதி ப்ரஹ்ம மாகவும், விஞ்ஞானமுளோன் ஆன்மாவினிடத்தில் விஞ்ஞானமாகவும், ஸாங்க்யன் புருஷனாகவும், யோகவாதி ஈஸ்வரனாகவும், ஸைவ, ஆகமி சிவனாகவும், காலைகவாதி காலமாகவு மறிகிறானாதலால், ஸர்வ ஸாஸ்த்திர சித்தாந்தங்களினு முடிந்த தத்வப் பொருளும், விகாராஹிதமான நிர்விகாசனும், கல்பங்கள்
தோரும் ப்ரம்ம, சிவ, இந்த்ராதி தேவர்களை நிக்ரஹித்து
ஹரிக்கின்றவனுமான ஸர்வேஸ்வரன் ஒருவனே யுளன்.

அதர்வசிரோபநீஷத்.
காரணாநாம் த்யாதா காரணந்து த்யேயஸ் ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர’ என்கிறபடியே சராசர ப்ரபஞ்சங்களுக்கும் காரண வஸ்துவும், க்யாதாவும்.அறிபொருளும், பரவின வஸ்துவும், ஸர்வ வ்யாபகனுமான ஸர்வேஸ்வரனே யாவன். மேலே கூறியுள்ள ஈஸ்வர ஸப்தத்தால் அஸாஸ்த்ர வாதிகளும், நவீன பண்டாரங்களும் நிகண்டுகளில் கூறும் ஈஸ்வர ஸப்தங்களுக்கு ருத்ராதி தேவர்களுக்குத் தான் பொருந்துமென நம்புகின்றனர் அதற்கிணங்க சிற் சில ஆபாசமான உதாரணங்களையும்,கதைகளையும், பிதற்றுகின்றனராயிலும் ஆராயுமளவில் சில காரணத்தால் சிற் சில தேவர்களால், தங்களுக்கேற்பட்டுள்ள கடுமைகளைத் தவிர்த்து காப்பாற்றும் பொருட்டு துதித்துக் கொண்டாடப் பெற்றதாம் அதாவது கடுமையால் வருந்தும் ஒருவன் தனது போஷகத்துக்காக பிரரை வருந்திக் கொண்டாடப்பட்ட பட்டப் பெயர்களுக்கு எவ்வாறு அர்த்தம் பொருந்தாதோ அவ்வாறே பெற்றவையாம் ருத்ராதி தேவர்களின் ஈஸ்வரத்வம்.

சகல ஈஸ்வர சப்தங்களுக்கும் பிரதிபாத்யன் யாவனெனில்.
யதா ஈஸ்வர ஸப்தோயம் நாராயணோ பிரதிஷ்டதே” என்றும்,
“ யத்வா ஈஸ்வர ஸப்தோயம் ரூட்யாவத்தி ஜநார்த்தநம்” என்றும்,வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் வியாகரண சூத்திரங்களினாலே ஈஸ்வர சப்தங்களுக்கு ப்ரதிபாத்யனும், அச்சப்தார்த்தங்களுக்கு அர்ஹனுமானவன் ஸ்ரீமந் நாராயண னொருவனே யாவன் என்றும், ஜீவ கோடிகளினுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டங்களை கொடுக்குமவனான ஜநார்த்த னொருவனே யாவன் என்றும் ஹிதாநு ஸாகர கர்மாநுகுண நியாமக ஸ்வரூப ரூப நாம விபூதிகளையும், பரத்வ காரணத்வாதி கல்யாண குண ஸமூஹங்களையும், வேத வேதாந்தாதிகளெல்லாம் ஒதத்தக்க அநந்த வைபவ ஸஹிதனாய் விளங்குமவனாதலால், ஸமஸ்த விலக்ஷண ப்ரமேய ப்ரமா தாக்களான சதுர்முக, பஞ்சமுக,வ்யாச பராசர, சுக செளநக, விகனச, வசிஷ்டாதி ப்ரஹ்ம வித்துக்களும், ஸ்ரீபராங்குச பாகால பட்டர்பிரரன் ஆதியான ப்ரஹ்ம விதாக்ரேசர்களும் அப்பரமேஸ்வர ஸப்த்த ப்ரதிபாத்யனான பர ப்ரஹ்மத்திற்கு நாராயணனென்ற திருநாமமே அஸாதாரண திருநாம மென்று அறிவுறுத்தினார்களிறேநாராயணோ ப்ரதிஷ்டதே” என்கிற
சப்தார்த்தமானது, ஜகஜந்மாதி காரண பூகனாய், சர்வாந்தர்யாமியாய், ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அதீதமானவனாய்,சர்வ வேத ப்ரதிபாத்யனாய், ஜீவோத்பதியாய், பரம பாவன சச்சித்தானந்த ஸ்வரூபமாயுமுள்ளப் பரமபத நிர்வாஹனுமான,
பரமாத்மாவையே ஈஸ்வர சப்தம் ப்ரதிபாதிக்கும் என்றே சூத்திரகாரர்களும் அறுதி யிட்டனர், இதற்கிணங்கியே மீமாம்ஸர்களும், மதுவும் அருளிச் செய்தனர்.

ஜகஜ்ஜன்மாதி காரண பூதனாவது.-யஜுர்வேதம் தைத்ரியோபநிஷத்
“ யதோவா இமாநி பூதானி ஜாயந்தே யேந ஜாதாநி வந்தி யத் ப்ரயந்த்யபிஸம், விஸந்தி தத் விஜிஜ்ஞாஸ்வ ப்ரஹ்மேதி-என்கிறபடியே முன்னம் இச் சராசராத்மகமான பூத, பெளதி
ப்ரபஞ்சங்களும், அதற்குள்ளடங்கிய உடலும், உயிரும், சரப, அசரபமுமாய் காணப்படுகிற சகல வஸ்த்துக்களும் எவனிடத்திலடங்கினவோ, பிறகு அடங்கின யாவும் எவனிடத்திலிருந்து வெளிப்படுகின்றனவோ, வெளிப்பட்ட யாவும், தத்தமக்கு விதித்த காலம் வரை கடவாது நிலை பெற்று நிற்க எவனால் ரக்ஷிக்கப்படுகின்றனவோ அப்பரம் பொருளே நாராயண பர ப்ரஹ்மம் என்று அறிக –

நாராயணோபநிஷத்
நாராயணாத் ப்ரம்மா ஜாயதே, நாராயணா ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோ ஜாயதே,நாராயணாத் த்வாதச ஆதித்யா,ருத்ரா வஸ்வஸ் ஸர்வானி சந்தாம் ஹி நாராயணா தேவா ஸமுத்பத்யந்தே,நாராயணாத் ப்ரவர்த்தியந்தே, நாராயணே ப்ரலீயந்தே”
என்கிறபடியே புருஷோத்தமனாயும், ப்ரணவ மந்திரப் ப்ரதி பாத்யனாயுள்ள ஸ்ரீமந் நாராயணன் இடத்திலிருந்தே ப்ரம்மா, சிவன், இந்திரன், த்வாதசாதித்யர் முதலான பன்னிரண்டு ருத்ரர்களும்,தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும்
உண்டாயிற்றென்றும், அத் தயா பரக் கடலாகிய ஸ்ரீமந்நாராயணனாலேயே அவ் ஒவ்வொன்றும் தத்தமக்கு விதித்த நாள் வரை,நிலை பெற்று நிற்கின்றனவென்றும், பின்னர் கற்ப க்ஷயத்தில் அகில ஈஸ்வர சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் இடத்திலேயே அவையாவும் லயமாகின்றன வென்றும்

பைங்களோபநிஷத்.
” ப்ராணி கர்ம வஸாதேஷ படோயத்வத ப்ரஸாரித:
பராணி கர்ம ஷயாத் புநஸ்த்திரோ பாவயதி தஸ்மிந்
நேவாகிலம் விஸ்வம் ஸங்கோஸ்தித படவர்வர்ததே
ஈஸாதிஷ்டி தாவரண சக்திதோ ரஜோ த்ரிக்தாமஹ தாக்யா
-என்கிறபடியே ப்ரம்ம, ருத்ர, இந்தராதி தேவர்கள் முதல் ஸ்தாவரம் வரையிலுள்ள யாவும் ப்ராணிகளே யாயினும் கர்ம வசத்தினாலே மாறுதலடைவதேயாம், சுருட்டப்பட்ட சித்ரப் படம் போலே சகல ஜகத்தையும், அதிலடங்கிய ப்ரம்ம, ருத்ர, ஈசான்ய ப்ரிதிவ்யாதி பதார்த்தங்களனைத்தும் தனக்குள்ளே
லயிக்கவும், அனந்தரம் நிக்ரஹிக்கவும், பின்னர் ஹரிக்கவும், வல்லவனாகையாலே (ஹரி) என்னும் திருநாமமுண்டாயிற்றென்று வயாஸ பகவானும், ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், சங்கராசாரியரும், மத்வாசரியரும், வித்யாரண்யர் முதலானோரும் தங்கள் பாஷ்யங்களிலே ஸ்பஷ்டமாக அறுதியிட்டனர். இக் காரணத்தால் ஸர்வ நியந்தாவும், திருவஷ்டாக்ஷர ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனை ஜெகஜ் ஜன்மாதி காரண
பூதனெனத் தட்டில்லையிறே.

சர்வாந்தர்யாமித்மாவது.
நாராயணேபநிஷத்,
அந்தர்ப் பஹிச்ச நாராயண : நாராயண யேவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் நிஷ்களங்கோ நிரஞ்ஜநோ நிர்விகவ்போ நிராக்யா தச்சுத்தோ தேவ ஏகோ நாராயண : என்கிறபடியே அவித்யாதி கர்மகட்டுகளும் நாராயணன், ஊர்த்தவமும் நாராயணன், அதோங்கமும் நாராயணன், உள்ளும், புறம்பும் நாராயணன், பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான சர்வ லோகங்களிலும் அணுவிற்கணுவாயும், மேருக்கு மேர்வாயும்,
யாதொரு பூ த காலம், பவிஷ்யத்காலம், சர்வமும் நாராயணனே யாய், நிஷ்களங்கனாப், நிரஞ்சனனாய், நிர்விகல்பனாய், சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து சங்கல்பத்தால் ஆட்டி அசைப்பிக்கும் அகடித கடனா சாமர்த்தியமமைந்த பரம் பொருளன்றோ சர்வார்ந்தர்யாமியான ஸ்ரீமந் நாராயணனென்றும்,

யஜுர் வேதத்தில் தஹர வித்தையில்.
“புருஷயேவேதம் ஸர்வம் யத்பூதம் யச்சபவ்யம்-என்கிற படியே கால பரிச்சேத ரஹிதமாய், கழிந்த காலத்திருந்த ஜகத்தும், எதிர் கால நோக்குடைய ஜகத்தும், நம் முன் காணப்படுகிற ஜகத் யாவும் அதிருத்த நாராயணனின் அந்தர்யாமித்வமென்றும், இம் முக்கால நோக்குள்ள ஜகத்தும் அதிலுள்ள சேதனா சேதனங்களும் அப் பரம புருஷனுக்கு சரீரமாயமையப் பட்டவை என்றும்,
சுக்ல யஜுஸ் சுபாலோபநிஷத்.
சக்ஷ்ஷு க்ஷ த்ருஷ்டவ்யம்ஸ நாராயண: ஸ்ரோத்ரஸ் ஸ ஸ்ரோதவ்யம்ஸ நாராயண :
என்கிறபடியே சகல லோகங்களிலுமுள்ள சகல வஸ்துக்களையும் பார்க்கின்றவனும், பார்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களும் நாராயணன், கேட்க்கின்றவனும், கேட்க்கப்படுகின்ற சகல வஸ்துக்களிலும், சகல சப்த்தங்களிலும் அந்தர்யாமியானவன் நாராயணனே என்றும்,
அந்தச் சரீரே நிஹிதோ ஹுஹாயாம்”-ஒவ்வொரு தேவ, மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி ஸ்தூல சூஷ்மாதி சரீரங்களிலும், உள்ளும், புறம்பும் வ்யாபித்துள்ளோன் நாராயணனென்றும்,=மஹாநாராயணோபநிஷத்.
“ யச்ச கிஞ்சித் ஜகத்தஸ்மிந் துர்ஷ்யதே ஸுர்யதேபிவா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்யா நாராயண ஸ்தித
:”-என்கிறபடியே காலபரிச்சேத ரஹிதனாய், த்ரிகால நோக்குள்ள ஜகஜ் ஜீவகோடிகளின் துருஷ்டிக்குக் காணப்படுகிற மேரு த்ரணாதிகளினுள்ளும் புறம்பும் வியாபிப்பவனும், அவ்வொவ் வொன்றினின்று மெழும் சப்தங்களை கேட்கும் ஜீவகோடிகளிலும், அவ்வாறு நிகழும் சப்தங்களிலும், நிஷ்களங்கனாய், நிரஞ்சனனாய், நிர்மலனாய், அபின்னனாய், அவாங் மனோ கோசரனாய்,
தனக்குப் புறம்பிற் போகவிட்ட சிதசித்துக்களில்லாமல் அவைகளை விடாதே வளைத்துக் கொண்டு சுக சயனனாய் எழுந்தருளியிருக்கும் பரம்பொருளே ஸ்ரீமந்நாராயண னென்றும் மஹா நாராயணேபநிஷத்.
” அநந்தமவ்யயம் கவிம் சமுத்ரேந்தரம் விஸ்வசம்
பவம் பத்மகோச பிராதிகாசம் ஹிருதயம் சாப்யதோமுகம்
-என்று சகல பிரம்மாண்டங்களின் ப்ருதிவியில் வசிக்கும் ஜீவ கோடிகளின் வியாபகமின்றிக்கே சகல பிரம்மாண்டங்களிலுமுள்ள சப்த சமுத்ரங்களில் வசிக்கும் மச்ச குழாங்களிலும்,
அச் சமுத்ரங்களினின்றெழும் குமிழிகளிலும், அலைகளிலும்,
அவ்வலைகளினின்று சிதரும் ஜலத் துளிகளிலும், அத்துளிகளின் ஒவ்வொன்றிலும் தனித்தனியாய், உள்ளும் புறம்பும் வியாபியா நின்றவன் ஸ்ரீமந் நாராயணனே என்றும்,

கோபாலதாபன்னியூபநிஷத்.
” ஏகோ தேவஸ் ஸர்வ பூதேஷு கூடஸ் ஸர்வ வ்யாபீ mஸர்வ பூதாந்தராத்மா”
சகல பிரம்மாண்டங்களிலும், சராசர பூதங்களிலும், சகல ஜீவ கோடிகளிலும், சர்வாந்தர்யாமி யாயிருக்குமவன் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவே என்றும்,

அதர்வசிரோபநிஷத்,
அஹமேஹ பிரதமமாசம் வர்த்தாமி பவிஷ்யாமி சநாந்யய: கச்சிந் மத்தோ வியக்துருக்க: ஹிதிசோ
ந்ராந்தரம் பிராவிசத்தி சன்சாந்தரம் பிராவிஸச் சோஹம்நித்யா நித்யோஹம் பிரபஞ்ச்யோஹம் ப்ரத்யஞ்ச்யோஹம் முதஞ்ச்யோஹம் மதஞ்ச்
யோத்வா திஷத்சாஹம் த்ருஷு ஜகத் அனுஷத் சோஹம் சந்தோஹம் தியரஹம் பார்கஸ் வத்சோஹம்
-என்கையாலே சிவபிரான் தானே தெய்வ சபையில் நின்றும்,. யதார்த்தமாயும், சர்வ வேத தாத்பர்யார்த்தமாயும், சொல்வதாக நிச்சயித்து, சர்வாந்தாயாமியாயும், ஜீவோதபதியுமான,ஸ்ரீமந் நாராயணன் எனக்குள் அந்தர்யாமி யாயிருக்கையால் தான் நான் திரிலோகாதிபதி யாயிருக்கப் பெற்றேனென்றும், அவ்வேற்றத் தாலே பூத பவுஷ்ய வர்த்தமான காலங்களிலும், எனக்கீடானவ ரொருவருமில்லை என்றும் தனது சந்தோஷப் பெருக்காலே பிர சங்கித்தனரென்றும், இப்பிரமாண பெருக்கை ஸ்கந்தோப நிஷத்தும் காணலாம்.

மஹோபநிஷத்.
“பீதாபாஸ் யாத்தனுபமா தஸ்ய ஸிகாயா மத்யே பரமாத்மா வியவஸ்தித ஸ பிரம்மா ஸ ஸிவாஸ ஸிந்த்ரோக்ஷர பரம ஸ்வராட்” என்று ஒவ்வொரு ஜீவ கோடிகளின் ஹிருதய நடு நிலைமையில் இருக்கும் ஜடாக்கினியின் மத்தியில், கறு மேகத்தினை பிளவுபட ஒடி ஒளியும் மின்னல் கொடி போலும், நெல் நுனி போல் மெல்லியதாயும், ஸ்வயம் பிரகாசமாய், சமனற்றதாய், விராட் புருஷனான பரமாத்மா வியாபித்துளன் -அவ் விராட் புருஷனான ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவிற்குள்ளும், சிவனுக்குள்ளும், இந்தரனுக்குள்ளும் இவ்வாறே அந்தாயாமி யாயிருக்கிறானென்றும் அப் பரம புருஷன் மூவித பேதமற்றவனென்றும், தன்னை யொழிந்த சர்வராலும் தொழப்படு மவனென்றும், கருமத்திற்கு வசப்
படாதவனென்றும், ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல வேத வேதாந்தாதிகளும் ஸ்ரீமந்நாராயணனே சர்வாந்தர்யாமி என்றும், பர ப்ரஹ்ம மென்றும் நிச்சயிக்கப்பட்டது. இத்யாதிப் ப்ரபல
ப்ரபாவங்களைக் கொண்டே (ஹரி: ஓம்) என்று மும்முறை ஆரணங்கள் முறையிடுகின்றன.

ஸத்வ, ரஜ தமோ குணங்களுக்கு அதீதமான நிற்குணமாவது.
திருபாத் விபூதி மஹாராயணோபநிஷத்.
”ஸுத்த சத்வம் மயோலீலா க்ருஹீத நிரதிசய ஆனந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத் ஸயே வநித்ய பரிபூரண பரத விபூதி வைகுண்ட நாராயண-என்று சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்திலுள்ளவனானாலும் அச்சத்வ குண ரஹிதனாயும், மாய்கையை ஸ்வாதீனமாயுடை யவனானாலும் அம்மாய்கை ரஹிதனாயும், விளங்கும் ஸ்ரீமந் நாராயணனை தியாநிக்கின்றேனென்று இச் சுருதி உத்கோஷிக்கின்றது.

அதர்வண வேத திருபாத்விபூதி மஹா நாராயணோபநிஷத்.
நாராயணாம் ஸை:ஜோகுண ப்ரதாநை ரேகைக-ஸ்ருஷ்டி கர்த்ருபி ரதிஷ்டிதாநி விஷ்ணு மஹே ச்வராக்யைர் நாராயணாம் சைஸ் ஸத்வ தமோ குண ப்ரதாநை
ரேகைக ஸ்திதி ஸம்ஹார கர்த்ரு பியாதிஷ்டிதாநி”
என்று யாதொரு பொருளே ஆதி மத்யந்த மென்னும் பாகுபாடாக விருத்தல் போலே சர்வேஸ்வரனான நாராயணனே ஸத்வ
ரஜ தமஸ்சுக்களாகிய முக் குணங்களுக்கும் ப்ரதாநியாயும் அதீதனாயும், விஷ்ணு, ப்ரம்ம,ருத்த, யென்பவர்களின் முத் தொழிலுக்கும் ப்ரதானியாயும், அதீதனாயும் இம் மூவித தெய்வங்களைக் கடந்தவனாயும், விளங்கா நின்றவன் ஸ்ரீமந் நாராணனென்று வேதங்களிலும், ஸ்ருதியாதி உபநிஷத்துக்களிலும், நிவாச தீக்ஷித முதலான பாஷ்யங்களிலும், ப்ரஹ்ம ஸூத்ரத்தாலும் நிரூபிக்கப்பட்டது.

வேத ப்ரதிபாத்யனாவது.—வ்யாகாண ஸூத்திரம்.
“சர்வ வேதாய யத் பதம் மாமநந்தி சர்வ வேதாய
த்ரைகம்பவந்தி நதஸ்ம வசஸாம் பரதிஷ்டாவச
சாம் வாத்ஸ்ய உத்தமம் நாராயண பரோ வேத?””
-என்று சர்வ வேத வேதாந்தாதிகளும் யாதொரு பரதத்வமான பதத்தை நாடுகின்றனவோ, ஸ்ருதியாதி சகல ப்ரமாணங்ளும் யாதொரு மங்கள வஸ்துவை தியாநிக்கின்றனவோ, இதிஹாசாதி சகல சாஸ்த்திரங்களிலும் யாதொரு பரம பாவன பரம் பொருளைத் துதித்துக் கொண்டாடப்படுகின்றனவோ அவ் வுத்தம பர தத்வ பரம்பொருளே ஸ்ரீமந் நாயணனென்றும்,
ஸாஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மத்திய மகீர் தனும் மகியானானுத்ரதே லோகாந் காருண்ய ஸாஸ்த்ர பாணினாம்”)-என்று யாதொரு வேத முதல்வனும் சர்வ நியந்தாவும் சகல ஜீவ கோடிகளாலும், உபாயோபேயமாக ஆஸ்ரயிக்கப்படுவதுமான பரம்பொருளை ஸ்ரீமந்நாராயணனென்றும்
நாராயண பரோ வேதோ தேவா -நாராயண நாங்கஜா” என்றும்,
” ஆலோடீயா ஸர்வ ஸாஸ்ராணி விசாரியே ஸுப் புன புன்:
யிதமேஹ ஸுநிஷ்பன்னம் த்தேயோ நாராயண சத
:”என்று சர்வ சாஸ்த்ர ஸித்தாந்த்ங்களிலும், மநுவாதி நூல்களிலும் வஸிஸ்டாதி ஸூத்ரங்களிலும், பலவாராக பரிசோதித்து நாராண நாமமுள்ளான் யாவனோ அவன்றான் சுத்த சாத்விக ப்ரஹ்மமென்றும் ஆணை யிட்டுரைத்து விட்டன வேத வேதாந்தங்க ளென்றுணரக் கடவீர்

ஜீவோத்பதியாவது,
மஹா நாராயணாதி உபநிஷத்துக்களிலும், ஈசம், கேனம்,கடகம், மஹோபநிஷத் முதலான உபநிஷத்துக்களிலும்
“நாராயணாத் ப்ராணோ ஜாயதே,-என்றும்,நாராயணாத்
ப்ரவிர்த்யந்தே, என்றும், நாராயணாத் ப்ரலீயந்தே
என்றும்,”
ஜகஜ் ஜன்மாதி சர்வ ஜீவன்களையும் நிக்ரஹிக்கவும், ரஷிக்கவும் பின்னர் ஹரிக்கவுமான அசாதாரண க்ருத்யங்களை செய்ய வல்லோனாகையால் ஸ்ரீமந் நாராயணனே ஜீவோத்பதி என சகல ப்ரமாணங்களிலும் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன –பகவத் ஸாஸ்த்ரமாகிய ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில் ஜீவோத்பதி ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் லிளக்கப்படுவதால் அதை அனுசரித்தே ஸ்ருதிகளும்
மஹோபநிஷத்
“விஸ்வமேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுப ஜீவதி-பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவ அச்சுதம் நாராயண மஹாங்கேயம்)-என்று சகல பிரம்மாண்டங்களும் அதிலுள்ள ஜீவ கோடிகளும் உஜ்ஜீவிப்பதற் குடலாய் ஆஸ்ரயிக்கப்படுமவன் எவனோ சகல
சேதனாசேதனங்களும் எவனால் நிலை பெற்று நிற்கின்றனவோ சகல ப்ரம்மாண்டங்களுக்கும் அதிலுள்ள தேவ மநுஷ்யாதி சகல பதார்த்தங்களுக்கும் (பதி) நாயகனாய் நின்றவன் எவனோ பரமேஸ்வராயும், அழிவற்றவனாயும், மங்கள ஸ்வரூபனாயும், அச்சுதனாயும் விளங்கா நின்றவன் எவனோ அவனே ஸ்ரீமந் நாரயணனென்று வேத வேதாந்தாதிகளும், இதிஹாசாதி சாஸ்திரங்களும்,வெளிப்படையாய் ஆணை யிட்டுரைத்து விட்டன-இத்யாதி ப்ரமாணங்களால் பரமாத்மாவாயும், ஜீவோத்பதியுமான ஸ்ரீமந் நாராயணன் சேஷியான தான் நவவித ஸம்மந்தத்தால் ஜீவாத்மாவை தனக்கு சேஷப்படுத்தி ரக்ஷிக்க முன் வருகிறனாகையாலும் ஜீவோபதி யென தட்டில்லையிறே.

ஸ்ரீ பாஷ்யம்.
இச்சயாயது பாதேயம் யஸ்யாதி ஸய ஸி த்தயே
உபயா நுபயைகைக ஜூஷாதெள ஸேஷ ஸேஷிணௌ”
என்றும்.
அயமே வாத்ம ஸரீர பாவ : பருதக் ஸித்தய நாஹாதாராதேயபாவ :
‘நியந்த்ரு நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்ச
” என்றும்
“பரகத அதிஸயாதா நேச்ச யோபாதேயத்வமே
வயஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ: பரஸ் ஸேஷி
” என்றும்.
யஸ் சேதநஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும் தாரயிதும் ச ஸக்யம் தச் சேஷதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய ஸரீரம்”
என்னும் ஸ்ருதி வாக்யங்களுக்கு, வேதார்த்த சங்க்ரஹத்திலும், ஸ்ரீபாஷ்யத்திலும், நியந்த்ரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று சம்மந்தத்தையும் தெளிவாய் விளக்கப் பட்டிருக்கிறது.

“யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே
நகத்யதே ஈஸ்வரேண ஜகத் ஸர்வம் யதேஷ்டமவி நியுஜ்யமத”
என்று ஸர்வ ஸேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கு சகல ஜீவ கோடிகளும் எப்போதும் எக்காலத்தும் இஷ்ட விநியோஹார்த்தமாக ஸேஷப்பட வேண்டி யிருக்கையாலும்,
” தேவகீ ஸூத கோவிந்த வாஸு தேவ ஜகத் பதி” என்றும்.
“நாராயணப் பதிம் ஸர்வ லோகாந்” என்றும்,
” நாராயணப் பதிம் ஸர்வ ஜீவாநாம் ” என்றும்.
ஸர்வ லோகங்களுக்கும், சகல ஜீவன்களுக்கும் நாயகனாயும், பர ப்ரஹ்மமாயும், தேவகீ புத்ரனாயும், கோகுல திலகமாயும், வாசு தேவனான ஸ்ரீமந்நாராயணனை தியானிக்கின்றேனென்று மஹா நாராயணோபநிஷத் முதலான ஸ்ருதிகள் உத்கோஷிக்கை யாலும்,
“ மநூநாம் ஸர்க்க மசுரோந் முக பாஹு ரூபாதது : சதுர்னாம்
பராஹ்மணாதீநாம் ஸர்க்க மகத்வாரம் ஜகத் பதி:
“என்று ஸ்ரீபாஞ்சராத்ர, விஷ்வக்ஸேந , பராசா, நாரத, அனுருத்த,பாத்மாதி முதலிய ஸம்ஹிதைகளிலும் ஜீவோத்பதி
ப்ரமாணம் ஸ்பஷ்டமாய் கூறுகையாலும், ப்ரம்ம ருத்ரேந்தராதி பிபீலிக்காநந்தமான சேதனாசேதன வர்க்கங்களை யெல்லாம் வளைத்துக் கொண்டு அவ்வவ் பகுதியாதிகளைத் தமது ஜாயமான கடாக்ஷத்தால் ரக்ஷித்துப் பின்னர் பஞ்ச பிரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக தம்மில் அயனப்படுத்துவோனாதலால் (ஜீவோத்பதி) ஜகஜ் ஜீவ நாயகனெனத் தட்டில்லையிறே.

சச்சிதாநத்த மயமான பரமபத நிர்வாஹனாவது.
சுக்ல யஜுஸ் நிராலம்ப உபநிஷத்.
” ப்ராணேந்தர்யா அந்த கணர்ண குணாதேஹ பர தரம் சத்சிதாநந்தமயம் ஸர்வ சாஷிஹம்
நித்ய முக்தர் ப்ரஹ்மமஸ்தாநம் பரம பதம்”
-என்று வாக்கு மனசுக்களாகிய ப்ராணேந்தர்ய வியாபாரங்களுக்கு எட்டாததும், ப்ரம்ம ருத்ரேந்தராதி தேவர்களளால் அறியத், தகாததும், த்ரிகாலத்தும் பரத்வ நிலை பெற்றதும், சத், சித்,ஆநக்த மயமானதும், சர்வ சாக்ஷியமானதும், விஷ்வக் சேநாதி நித்தியர்களும், ஸ்ரீமந் நாரணனையே உபாயோபேயமாய் ஆஸ்ரயித்துய்யும் சடகோபாதி ஜீவந் முக்தர்களும், வர்த்திக்கும் பர ப்ரஹ்ம ஸ்தானம் பரமபதம் என்றும்,
த்ருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
“ஸுத்த சத்வம் மயோ லீலா க்ருஹித நிரதிசயானந்த லக்ஷணோ மாயோபாதிகோ வைகுண்ட நாராயண-
என்று சுத்த ஸத்வமாயும், பஞ்ச பிரளயானந்தரம் பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனின் வாஸஸ்தானமாயும், நிரதிசையானந்தமயமானதும், மாயையாதி சகல விகார ரஹிதமான தாயும், நித்யமானதாயும் விளங்கியது பரமபதம் -என்றும்
அதர்வசிகை
“யந்த தேவாந்த முநயோந ஸாஹந்ந ஸ ஸங்ரஹ
ஜாநந்தி பரமே ஸஸ்யா தத் விஷ்ணு: பரமம் பதம்”
என்று தெய்வ சபைபில் தானே பிரம்மா, யதார்த்த பிரசங்கிதமாக தேவர்களாலும், ஜனகாதி முனீஸ்வரர்களாலும், பிரம்மாவாகிய என்னாலும், சம்ஹார காத்தர்வாகிய சங்கரனாலும், பரமேஸ்வரனாய் விளங்கா நின்ற ஸ்ரீமந் நாராயணனது நிரதிசையானந்த மயமான பரம பதத்தை அறிய முடியாது என்றும்,
யஜுஸ் மண்டல ப்ரம்ம உபநிஷத்
“ தந் மனோ விலயம்யாதி தத் விஷ்ணு: பரமம் பதம் ”
என்று மஹா மேருவை ஆதாரமாய் கொண்ட கைலையாதி சத்யலோகம் முதலான லோகங்களும் பிரம்ம, சிவ , இந்தராதி சகல தேவர்களும், கற்ப க்ஷயத்தில் ஸ்ரீமந் நாராயணனால் ஹரிக்கப் பட்டு பின்னர் பரம பத நிர்வாஹநாய் விளங்குகிறானென்றும்
“பேதாபாவாத்யேத தேவ பரமதத்வம் ” என்று சச்சிதாநந்த மயமானதும்,நிர்விகாரமானதும், ஸ்வயம் பிரகாசமானதாயுமுள்ள, பரம பதமே பரமாத்மாவின் வாஸஸ்தானமான தென்றும், அப் பதமே மோக்ஷ ப்ரதானமென்றும் மிச் சுருதி ஆணை யிட்டுரைத்து விட்டது.

ஸ்ரீவிஷ்ணுபுராணம் 6-ம் அம்சம்.
“தத் ப்ராஹ்ம தத் பரந்தாம தத்யேயம் மோக்ஷகாங்ஷிபி
ஸ்ருதி வாக்யோதிதம் ஸூக்ஷ்மம் தத் விஷ்ணு: பரமம் பதம்”-
என்று யாதொரு பர ப்ரஹ்மம் இச் சராசர ப்ரபஞ்சங்களனைதையும் உண்டுமிழ்ந்து அளந்தாண்டதுமான வியவஹாரங்களை ஒருங்குணர்ந்து நடத்த வல்லதோ அப் பரம் பொருளே பரந்தாமனென்று ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசங்களும் ப்ரதிபாதிக்கின்றதோ அப் பொருளின் நிர்வாஹ ஸ்தானமே மோக்ஷ ஸ்தான பரமபதம் என கண்டிதமாயுரைத்து விட்டபடியால் ஸ்ரீமந் நாராயணனே பரம பத நிர்வாஹனென குறை யில்லையிறே ஆகையாலே யிறே ஜகஜ் ஜன்மாதி காரண பூதனும், சர்வாந்தர்யாமியும்,
த்ரிகுண அதீ தமானவனும், சர்வவேத ப்ரதிபாத்யனும், ஜீவோத்பதியும், சச்சிதாநந்தமயமான பரம பத நிர்வாஹனுமான ஸ்ரீமந் நாராயணனே சகல நிர்வாஹனென்றும், ப்ரஹ்ம சப்த பரதிபாத்யனென்றும், பரமேஸ்வரனென்றும், ஸர்வ ஸேஷி என்றும், வேத வேதாந்தாதிகள் பன்முறை முறையிடுகின்றன.

நீலகண்ட சிவாச்சாரியரும், சிற் சில சாஸ்த்ர பயிர்ச்சி யுள்ளோராயினும், தாம் ஓர் பாஷ்யம் செய்ய வல்லோராயினும்,வேத யதார்த்தம் விளங்காததினாலோ, அர்த்த மறியாமையினாலோ, சைவ அபிமானத்தினாலோ வேத தாத்பர்யங்களுக்கு சிவ பரமாய் வியாக்யானம் செய்யப் புகுந்த காலத்தும் மஹோபநிஷதாதி ஸ்ருதிகள் இடங்கொடாமையால் கேவல நிமித்த காரணம் சிவனென்கிற சைவ வாதத்துக்கு நேர் விருத்தமாய் ஜகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ப்ரஹ்மமென்று தமது நீலகண்ட பாஷ்யத்தில் சொல்லி யிருக்கிராறாயினும் இவரது பாஷ்யத்தை ஸ்ருதியாதி ஸாஸ்த்ரங்களும், யதார்த்தவாதிகளும், பாஷ்யகாரரென சரஸ்வதியால் பட்டப் பெயர் தரித்து மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த சத்வ குண விசிஷ்டாத்வைத மதத்தை நிலைநாட்டிய ஸ்ரீமத் ராமாநுஜாசாரியரும், இன்னும் இதர பாஷ்யகாரரும் சம்மதியாராகையால் இவரது பாஷ்யம் கண்டிக்கத் தக்கதே.

ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனாவது.
அதர்வண முண்டகோபநிஷத்,
“ யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வ வித்யஸ்ய ஜ்ஞாநமயம் தப :
தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நம் சஜாயதே”?-
என்று யாதொரு பரமேஸ்வரன் அநந்தங்கோடி பிரம்மாண்டங்களையும் தனது வக்ஷஸ்தலத்தில் லயிக்க வல்லவனாயும், த்ரிகுண பிரதானியாயும், சர்வஞ்யத்வாதி கல்யாண குண பரிபூரணனாயுமுள்ளான் யாவனோ அவனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், “யதேதத் பரமம் பரமஹ : வேத வேதேஷு பக்ஷயதே ஸ தேவ: புண்டரீ காக்ஷ: ஸ்வயம் நாராயண ப்ரபு : என்று த்விதீயமான பர ப்ரஹ்மமாயும், சர்வ வேத பாதிபாத்யனாயும்,பர தேவதையாயும், செந் தாமரை புஷ்பமொத்த நேத்ரங்களை யுடையவனும், ப்ரபுவுமான ஸ்ரீமந் நாராயணனே ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென்றும், சாம வேத மஹோபநிஷத். “நாராயண பர ப்ரஹ்மத்வம் நாராயண பர:”என்று நாராயண சப்த வாச்சியனான ஸ்ரீ மந் நாராயணனே ப்ரஹ்ம
சப்த ப்ரதிபாத்யனென ஸ்ருதிகளும் ஊர்ஜிதப் படுத்தி விட்டன.

திருபாத்விபூதி மஹா நாராயண உபநிஷத்.
” நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர : நாராயண பரோ ஜோதி ஆத்மா நாராயண பர
:”என்று ஸ்ரீமந் நாராயணனே பர ப்ரஹ்மமென்றும், பரமாத்மா வென்றும், அந் நாராயணனே பரஞ்ஜோதி மய ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனென நிலை நாட்டப்பட்டது.
ஷ உபநிஷத்
“ திசச்ச நாராயண; காலச்ச நாராயண :
கர்மாலகிலஞ்ச நாராயண : காரணாத்மகம் ஸர்வம் கார்யாத்மகம் ஸகலம் நாராயண : நாராயண பர ப்ரஹ்ம நாராயண நமோஸ்துதே
” என்று சர்வ அண்டங்களும், அதிலுள்ள சராசர சமூஹங்ககளும், ஸர்வ திசைகளும், த்ரிகாலங்களும், நாராயணன், வேதாத்யயன கருமங்களும் தத்தத் பலன்களும், தக் கருமதேவதைகளும், தத் கருமத்தை செய்பவனும் நாராயணன் சகல காரணங்களும், சகல காரியங்களும் நாராயணனே அப் பர ப்ரஹ்ம் ஸ்வரூபனும், பரமாத்மாவுமான ஸ்ரீமந் நாராயணனை நமஸ்கரிக்கின்றேனென்று ஸ்ருதி உத்கோஷிக்கின்றது.
” அதகஸ்மாதுச்சீதே யேகோ நாராயண பரப்ரஹ்ம்?” என்று ப்ரஹ்ம சப்த ப்ரதிபாத்யனான நாராயணனுக்கு சகல ப்ரம்மாண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாகந்த முள்ள தேவ,
மநுஷ்ய, திரியக், ஸ்தாவராதி பூத பௌதிக சராசர சமூகங்களும் த்ரணீகரிக்குமாறு வரம்பிடப் போகாத ஒத்தார் மிக்காரில்லை யெனக் கண்டிதமா யுறைத்து விட்டது.
ந நாராயண சமோ நாந்ய ஸர்வ லோகேஷ வித்யதே“. என்று போதாயனரும் தமது ஸூத்ரத்தில் அவ்வாறே அண்டங்களும், சர்வ தேவர்களிலும் ஸ்ரீமந் நாராயணனுக்கு
மேரு த்ரணாதியென வரம்பிடப் போகாத அளவிறந்த வேற்றத்தை யுடைய பர ப்ரஹ்மமென்று அறுதியிட்டனர்.-இத்யாதி ப்ரஹ்ம சப்த்த ப்ரதிபாத்யனும்,ஜீவோத்பதி
யும், ஜகஜன்மாதி கரரண பூதனும், சச்சிதாநந்த மய பரம்பத நிர்வாஹனுமாய் நின்றவன் ஸ்ரீமந் தாராயணனென்று வேத வேதாந்தாதிகள் ஏக கண்டமாய் ஊர்ஜிதப்படுத்தி விட்டன.

பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனேயாய் ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகலதேவ மநுஷ்யாதி வர்க்கங்களனைத்தும் ஜீவாத்மாக்களேயாயினும், சிவபிரான் பக்த சிரேஷ்டனெனல்
சுக்ல யஜுர் ப்ரஹதாரண்யோபநிஷத்
” யச்ரமாத் தப ஸோபிஜாதோ ஸித்யப்ரவித் “என்று ருதான் செய்ததவங்கள் செய்து சிவனாயினான் என்றும்
க்ருஷ்ணோபநிஷத் ” ருத்ரேபக்தேப்ரஹ்மணி ” என்று ருத்ரனான சிவன் ப்ரஹ்ம ஞ்ஞானியான மஹா பக்தனென இச்சருதி கூறுகையாலும்,
க்ருஷ்ண யஜுஸ் ஸ்வேதாஸ்வத உபநிஷத்-3-ம் அத்தியாயம் 4-வது மந்த்ரம்
“விஸ்வாதி கோருத்ரோடமஹருஷி : எ
ன்று சிவபிரான் இப்பிரபஞ்சத்தில் சிரேஷ்டமான தபசியாய் விளங்குகிறானென்றும்.
ருத்ரகீதை அகஸ்தியசம்ஹிதை, பிரம்ம புராணம் ” சாம்பேய புஷ்ப ஸஹஸ்ரை: ஆநர்ச்ச சங்கரோ ஹரிம் ” என்று சிவபிரானது பக்தியின் மிகுதியாலே ஆயிரம் சண்பசக புஷ்பங்களினால் பரமாத்மாவான ஹரியை அர்சித்து பக்திப் பெருக்கைப் பிரசித்தப்படுத்தினா ரென்றும்.

பாத்மோத்ரகாண்டம்
” கைலாஸ சிகரோம்யே விஷ்ணுமாராத் தயசங்கர : உபவிஷ்டத்ததோ போக்தும் பார்வதீம் சங்கரோப்ரவித் “
” என்று கைலாய சிகரத்தை ஸ்தானமாய்க் கொண்டு இந்நிக்ருஷ்டமான சம்ஹாரத் தொழிலிநின்றும் விடுபட்டு பரப்ரஹ்ம சாயுஜ்யமான பரமபதத்திற்சென்று பரமாத்மா வைபவாதந்தத்தை அனுபவிக்க வேண்டியே நான் ஸ்ரீ மாஹாவிஷ்ணுவை இடைவிடாது தியாநிக்கிறேனென்று தனது பத்நியும், பர்வத ராஜனின் புத்ரியுமான பார்வதியுடனே சிவபிரான் பரமாத்மாவினிடம் தனக்குள்ள அந்தரங்க பக்தியை வெளி யிட்டன ரென்றும்.

இத்யாதி ச பாகவதத்தில் ஸ்ரீ வேதவ்யாஸ பகவான்
“ஹஸ்தேக்ஷ்மாலா ஹ்ருதய ராமதத்வம் ஜி
ஹ்வாக்ரபாகேவரராம மந்த்ரம் ஸமஸ்த்தகே கேசவ பாத தீர்த்தம் ஸ்வம் மஹாபாகவதம் ஸ்மராமி ”
-என்று சிவனது ஹ்ருதயத்தில் ஸ்ரீ ராமபிரானே ஜகத்காரண வஸ்து என்ற தியானமும்,நாவில் அம் மஹாமந்தரமே உச்சரிப்பும், கரத்தில் அம்மந்தர ப்ரதானனென விளக்கப்படும் ஜப மாலிகையும்,அப்பரமாத்மாவின் ஸ்ரீபாத தீர்த்தத்தா லலங்கிருதமான
சிரசும், அப்புருஷோத்தமனுக்கே தான் அந்தரங்க பக்தனென வெளிப்படையாய் விளக்கிக் காட்டவல்ல ஜடையாதி சின்னங்களாகையால் சிவன் மஹா பக்தனே என்று நிச்சயிக்கப்பட்டது.ஸ்வாக்ருதி: பஸ்மவிகிதகாத்ரேசர்மம்பரம். பிரம்ம கபால மாலாத்ருதாக்ஷமாலாபி ருகாகநஸ்த ஜடாதராதி வசனாகிமேயம்-என்று சிவபிரானது பக்தியின் நிலைமை, திரேகமெல்லாம் பஸ்மத்தாலலங்கிருதமாயும், பிரம்ம ஹத்தியினாலே தொத்திய மண்டையோடுடைய அஸ்தமும்,ஜபமாலிகையாதி ஜடை முடி தரித்து சிரசும், புலித்தோலுடைய ஸ்மஷான நிரவாணி ஸ்வரூபமமையப்
பெற்றதுமான பக்தியின் பெருக்கை நிரூபிக்க வல்லவனென்றும்.இத்யாதி சகல ப்ரமாணங்களாலும் சிவன் பக்த சிரேஷ்டனென்றே நிரூபித்து விட்டன.

இதற்கிணங்கியே வேதபுருஷனாய் விளங்கிய திவ்யகவி அழகிய மணவாளர் அருளிச் செய்த. அஷ்ட பிரபந்தத்தில்
புகலிராமனடி கொள் பாதுகையகலு முக்கண்ணன் காமதே
திங்கள்சூழ்திருச்சித்ர கூடமேவிய யெங்கள் கோவிந்தராஜர்க்கு
தினமுமே கூத்தாடியானவன் திருச்சிற்றம்பல வணனே
” என்றும்,
கானேந்து தாமரை வாவி யுளானை கராவினயர்ந்
தூனேந்து மூல மென்றோதிய நாட் சென்றுதவுகையால்
தேனேந்து சோலை யரங்கனல்லாற் றெய்வமில்லை யென்றே
மானேந்து கையன் மழுவேந்தினானிந்த மாநிலத்தே”
என்றும்,
சர்வ சாஸ்திர நிபுணரும் வேத யதார்த்தம் நன்குணர வல்லவருமான ஸ்ரீமாந் ராமாநுஜ நாவலரும் தமது வைராக்ய சூர்யோதய மென்னும் சாத்விக க்ரந்தத்தில், பதித பாவனனான அப்பராமாத்மாவினுடைய ஸதா ஸ்ரீபாத தீர்த்த மாலாலங்காரண சேகரராம்.
கரத்திலுறுஞ் சபவடத்தை யகற்றேனென்னைக் காணு மகக்கண்ண தனைக் களையே லென்றும் சிறத்தை யுறச் சீராம நமவோ மென்னுஞ் செந்நாவை யெந்நாளுந் தெரிந்து நீக்கேல் ”என்கிறபடியே ஸ்ரீராம ராம ராமா வென்று வாய் நிறைந்து குளிரடைய, உடலம் புளகிக்க, ஜபமாலிகையோடு அவனது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஸ்ரீராமாந்தத் நாண்டவஞ் செய்து ,வர்த்தித்து வருதலில் சாம்பசிவ நடேச மஹாப் பிரபுவைப் போலே யிருக்கவேண்டும் பக்தியின் மிகுதியென்றும், சிவனது பக்தியும் பரமாத்மாவின் பிரசன்னமும்-பாத்ம புராணம் 37-வது அத்தியாயம்.’அச்யுதாநந்த கோவிந்தம் மந்த்ர மானுஷ்டுபம் சுபம் ஒந் நமஸ் ஸம்பு டீருத்வா ஜபந் விஷ ரோஹர் : என்று திருப்பாற் கடைந்ததில் நின்றும் பெருகிய விஷத்தைப்பார்த்து திடுக்கிட்டு பயந்து தன்னால் நிவர்த்திக்க சக்தி யற்ற காலத்து (அச்சுதாநந்த கோவிந்த) வென்ற திருநாமத்தை பக்தி புரஸ்சரமாகத் த்யாநிக்க,அபயஸ்தமானதும் அநந்யாரஹமானதுமான தத் பக்திக்கு பரமாத்மா பிரசன்னராகி ருக்வேதம் 8-ம் அத்தியாயம் 23- ம் வர்க்கம் ” கேச்யாக்ம் கேசி விஷம் கேசீ பிபர்த்தி ரோதஸீ கெசி விஷஸ்ய பாத்ரேன யத் ருத்ரேணா பிபத்ஸஹ” என்று ருத்ரனாகிய அச் சிவ பிரானின் பீதி யடங்கத் தான் அவ் விஷத்தைப் பக்ஷித்து உம்மையும் ரக்ஷிக்கிறேன் பயப்படாதே யென்று கேசியான ஸ்ரீமந்நாராயணன் பீதியடைந்த பிள்ளைக்கு,எவ் வஸ்துவால் அப்பிள்ளைக்குப் பீதி ஏற்பட்டதோ அவ் வஸ்துவைக் கொண்டே அப்பிள்ளையின் பீதியைப் போக்குமாப் போலே சிவபிரானை பீதியடையச் செய்த அவ்விஷத்தை அச்சிவனின் கரத்தையே அவ் விஷத்திற்குப் பாத்திரமாகக் கொண்டு விஷத்தைத் தான் பானம் செய்து ரக்ஷித்தனரென்றும்,

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அசம் 33 ம் அத்தியாயம்
‘ க்ருஷ்ண க்ருஷ்ண ஜகநாத ஜாநேவாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாத்ம நாதிநித நம் ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத்மிகா லீலேயம் ஸர்வ பூதஸ்ய தவ சேஷ்டோப லக்ஷண
–என்று சிவபிரான் தன்னை சாணமடைந்த வாணாஸூரனை தலை
மயிர் பூ வாடாமல் ரக்ஷிக்கிறேனென்று ப்ரதிஞ்ஞை பண்ணித் தன்னை தொழுத கைகளைத் தன் முன்னே கள்ளிக் காட்டைச் சீத்தாற்போல் ஸ்ரீகண்ணபிரான் சீக்கக் கண்டு உயிரோடிருந்தால் உப்பு மாறியேனும் பிழைக்கலா மென்றெண்ணி நடுங்கி, குடும்பத்தோடு நெற்றிக் கண்ணை புதைத்துக் கொண்டு ஸர்வ சரண்யனான கிருஷ்ணனை அஞ்சவியஸ்தனாய், ஒ க்ருஷ்ண பரமாத்மா, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஆதியந்தமில்லாதவனே,லோக ரக்ஷணார்த்தம் அவதரித்தவா, இவ் வமயம் தேவரீர் மநுஷ்ய சரீரத்தை அவலம்பித்ததை அடியேனறியேன் இச் சமயம் அடியேனை ரக்ஷித்தாண்டருள வேணுமென்று பிரார்தித்து சரணமடைந்த அப்பக்திக்கு இரங்கி ரக்ஷித்தனரென்றும்,

பாத்மபுராணம் உத்ரபாகம் மஹாமஹாத்மியம் 20-ம் அத்யாயம்.
“ ப்ரக்ருதம் ச்ருணு ராஜேந்த்ர கபால பாணி
நாதத் லோகேக பாவீ பிக்ஷார்த் தீ பக்ஷமடதி சங்கா ?”-
என்று சிவன் பிரம்மஹத்தியினால் தொத்திய மண்டையோட்டுடன் லஜ்ஜை யுற்றவாைய் ஷேத்திரங்கள் தோரும் பிக்ஷை
யாசிக்கப்பட்டும், தமது பிரம்ம ஹத்தியை நிவர்தித்துக்கொள்ள யதொரு உபாயமும் காணப் பெறாமல் வருந்தினவனாய் ராமேஸ்வரமே தமக்குப் பிரதான க்ஷேத்ரமெனக் கருதி பாத்மோத்திரத்தில்,ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வராநநே-தனது தாரக மந்தரமாயுமுள்ள, ஸ்ரீராம மஹா மந்தராதி ஜப மாலிகையுடன் ஸ்ரீராமாநந்தத் தாண்டவஞ்செய்து வர்த்தித்து வரும் தத் பக்தியை,யஜுர் ராமோபநிஷத் 22-ம் ஸ்காந்தம் வேத வேத்யே பரே பும்ஸி ஜாதேத ஸரதாத்மஜே”-என்று பரமாத்மாவும், வேத ப்ரதிபாத்ய பரமபுருஷன் சக்ரவர்த்தித் திருமகனாய் வவதரித்தவனுமான ஸ்ரீ புருஷோத்தமன்-ராமோபநிஷத் பக்த்ய மந்த்ரேணா நேநமாம் ஸிவ பிரஹ்மஹத்தி யாதி பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூஸ:” என்று சிவபிரானினது அகோசரமான பக்திக்குப் பிரசன்னராக சந்தோஷித்து இஸ் க்ஷேத்திரத்தில் ராம தாரக மந்திரங்களினாலே உண்மையான பக்தியுடன் என்னை தியானித்தீராகையால் யாம் கருதார்த்தாரானோம். உமது பிரம்மஹத்தியாதி பாபங்களில் நின்றும் விடுவிக்கிறோம். க்ரம க்ரமாந்திரத்தில் என்னுடைய சாயுஷ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறோம். ஓய் சிவனே பயப்படாதே யென்று அபயஸ்தம் கொடுத்து பிரம்மஹத்தியைப் போக்கிய க்ஷேத்திரமே ராமேஸ்வரமென்றும்

பிரயாஹைமஹாத்மியம் தத்ர நாராயண : ஸ்ரீமாந் மயாபிக்ஷாம் பராய ஸித விஷ்ணு ப்ரஸாதாத் ஸு ச்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ர தாஸ்புடி தம் பஹுதாயாதம் ஸவப்ந லப்தம் தநம் யதா “என்று பர்வதராஜன் புத்ரியும், எனது பத்நியுமான பார்வதியே என்னுடைய பிரம்ம ஹத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று என்னால் ஸ்ரீமந் நாராயணனிடம் பிக்ஷை யாசிக்கப்பட்டு அப்பரமாத்மாவின் பிரசாதத்தினால் யென் கையிலொட்டிய பிரம்ம கபாலமானது ஆயிரம் சுக்கலாய் தூளியாய் ஸ்வப்னத்தில் கண்ட தனமானது விழித்துப் பார்க்குமளவில் காணாதாப்போல் பறந்து போயிற்றென்று உமாதேவிக்கு யதார்த்தத்தை வெளியிட்டதுமான க்ஷேத்திரமே ராமேஸ்வரமாய் நிற்க,அதைச் சார்ந்த பாம்பன் கிராமத்தில் வசிக்கும் குமரகுரு தாஸனென்பானால் வரையப்பட்டுள்ள சைவ சமய சரபமென்னும் த்வேஷ்ப் பண்டாரச்சுவடியில்,தனது பூரண பாண்டித்வத்தைக் காட்டும் பொருட்டோ,தான் சங்கரனுக்கே அறத்தீர்ந்த பக்தனென பிறர் மெச்சும் பொருட்டோ, அல்லது சைவ எல்லப்பநாவலன், துறைமங்கலம் சிவப்பிரகாசன், கச்சியப்ப சிவாச்சாரி முதலானவர்களைப் போல் தாமும் பண்டார சமயாச்சாரியாக வேணுமென்னும் ஆவலுள்ளவனும், தன்னைத்தானே புகழ்ந்தவனுமாய்த் தான் சிவ நிஷ்டையிலிருந்ததாயும், அந்நிடை முடிந்தவுடன் பசி,தாகாதி, சோகங்களினால் இந்திர்ய மாருதலினாலோ,பித்த அபிவிரத்தியினால் திகைத்த நினைவினாலோ, தாமஸ குணனான சிவ நிஷ்டையினாலேற்பட்ட தாமஸத்தினாலோ, அல்லது அறிவின்மையினாலோ, அப் பண்டாரத் தூஷணச் சுவடியை வரைந்தன னென்றும், தாம் 108 உபநிஷத்துக்களையும், 18 ஸ்ம்ருதி,18 புராணங்களையும் நன்குணர்ந்தவனென்றும், இவ்வாறு மேல் குறித்த யாவும் கரதலமலமாக நன் குணர்ந்தோனாகையால்,அவைகளிலுள்ள அசாரங்களைத் தள்ளி சாரங்களே தாமாகக் கருதி உபநிஷத்துக்களில் 109 ஆவதாகவும் ஸ்ம்ருதிகளில் 19, ஆவதாகவும், புராணங்களில் 19, ஆவதாகவும், தனது சைவ சமய சரபமென்னும் தூஷணப் பண்டாரச்சுவடியை கல்பித்துத் தாமும், தம்மைச் சார்ந்தவர்களும், மற்ற யாவரும் மதிக்கத் தக்கதென அபிப்பிராயமேற்படுவதாலும், தமதுச் சுவடியில் ஆதியந்தமென்னும் புத்தக ரூப கோட்பாடில்லாமையாலும், வீண் நிந்தகமே புத்தக ரூபமாயிருப்பதாலும், புரட்டுகளும், அனர்த்தங்களும், அஹங்காரங்களுமான க்ரூர வசனங்களால் நிந்தித்துத் திரியும் த்ரோஹியாயிருப்பதாலும், வேத வேதாந்தாதி சகல ப்ரமாணங்களாலும், த்வேத யதார்த்தங்களாலும், அகில பாஷ்யங்களுக்கிணங்கியும், சகல ஜன சம்மதமாயும், இவனதுச் சுவடியின், புரட்டுகளை வெளிப்படையாய் கண்டிக்கவும்,அனர்த்தங்களை நிராகரித்து யதார்த்தங்களை ஸ்தாபிக்கவும்,அஹங்கார க்ரூர வசனங்களை வெட்டி யடியோடொழிக்கவும்,சகல வேத வேதாந்த்தப் பிரதிபாத்தியமான மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த ஸ்ரீமத் பரம வைதிக சுத்த ஸத்வ குண விசிஷ்டாத்வைத மதமே சத்யமென நிலை நாட்டவுமே யாம் முன் வந்தோம்.

யதார்த்தமாய் வேத சாஸ்திரங்களால் முறையிடப்படும் ஸ்ருஷ்டிக் கிரமம்.
ஸாம வேதம் சாந்தோக்ய உபநிஷத் 6-வது ப்ரபாடகம்-2-வது காண்டம் 3-வது வாக்யம்.
“ததைக்ஷத பஹுயாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோஸ்ருஜா” என்று பரமபத நிர்வானான ஸ்ரீமந்நாராயணன் பரமபதத்தை விட்டு மூலப்ரக்ருதியை யடைந்து அநந்தங்கோடி ப்ரம்மாண் டங்களையும் சங்கல்ப்பித்தார்,-ருக்வேதம் நாராயண உபநிஷத்-ஹரி ஓம் ஹத புருஷோஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ்ருஜே யேதி நாராயணாத் ப்ராணோஜாயதே, மநஸ் ஸர்வேந்திரியானிச கம் வாயுர் ஜ்யோதி ராப ப்ரதி விச்வஸ்ய தாரிணி நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நராயணாத் ருத்ரோ ஜாயதே, நாராயணா திந்த்ரோஜாயதே,நாராயணாத் வாதசாதித்ய ருத்ராவஸவஸ் ஸர்வாணி சந்தாம்பி நாராயணாத் தேவாஸ் முத்பத்யந்தே, நாராயணாத் ப்ரவர்த்தந்தே நாராயணாத் பரலீயந்தே.”என்று ஆதியந்தகிதனான ஸ்ரீமந்நாராயணனது சங்கல்ப மாத்திரத்திலேயே சகல ஜீவாத்ம கோடிகளும் ஸ்ருஷ்டியாயி அவனிடத்திலிருந்தே மனஸ் ஸர்வேந்திர்யங்களும், ஆகாசம் தொடக்க மான ப்ருதிவி வரைக்குமுள்ள அநந்தங்கோடி ப்ரமமாண்டங்களும் பிரம்ம, ருத்ர, இந்த்ர, த்வாதசாதித்ய,ஏகாதச ருத்ர, அஷ்ட வசுக்களுமான தேவர்களும், சகலமும் உண்டாயினவென்று.., அவனாலேயே அவையாவும் ஜீவித்திருக்கின்றன வென்றும், பின்னர் அவனாலேயே யாவும் ஹரிக்கப்படுகின்றன வென்றும் ஸ்ருதிகள் முறை யிடுகையாலும்,

மஹா நாராயணோபநிஷத்.
ஹத புருஷோஹவை நாராயணஸ் ஸோகாமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி
ஆஸ்ருஜன் நாராயணாத் ப்ரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே,
நாராயணா திந்தரோ ஜாயதே,நாராயணா த்வாதஸாதித்யா ருத்ர வஸவ:ருஷய: ப்ரஜாதயச்ச பூர்வே தேவாஸ் ஸமுத்பத்யந்தே)
என்று பரமபுருஷனான ஸ்ரீமந் நாராயணனிடத்திருந்தே ப்ரம்மன், சிவன் இந்த்ரன், த்வாதசாதித்யர் ஏகாதச ருத்ரர்கள் அஷ்ட வசுக்கள் ஸப்த ருஷிகள், நவ ப்ராஜாபதிகள் முதலானோர் உண்டாயின ரென்றும்

யஜுர்வேதம்
” யதோர்ண நாபீஸ் ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா ஒஷதயஷ்
ஸம் பவந்தி யோசௌச யதோ விஷ்ணுஸ் ஸத்வ குண ப்ரணீதோபவத் தஸ்ய நரபேர ஜோத்மா ஸ்வயம்பூ : ததாதஸ் யப்ருவோந்த ராலாத் தமோ ருத்ர
: “என்று ஊர்நாபி என்கிற சிலந்திப் பூச்சியானது எவ்வளவு காலத்தில் நூலை ஸ்ருஷ்டித்து பின்பு கிரஹிக்கின்றதோ அவ்வாறே பரமாத்மா பருதிவ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்து,
ஸ்ருஷ்டித் தன்றே கிரஹிக்கின்றானென்றும் அன்றே என்கையாலே, அவனது நித்யத்தைச் சொன்னபடியாலும் சுத்த சத்வ குணனென்றும், அவன் தன்னை யொழிந்த சர்வராலும் தொழப் படுகிறானென்றும் அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து ராஜஸ குணனான ப்ரம்மா பிறந்தானென்றும், அப்பிரம்மாவின் நெற்றிப் பிரதேசத்திலிருந்து தாமஸ குணனான சிவன் பிறந்தானென்றும், கூறுகையாலும்,

அதர்வண முண்டகோபநிஷத்
“யதோர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதேச ததா ப்ருதிவ்யா வோஷதயஸ் ஸம்பவந்தி யதாஸ்த புருஷாத்கேஸ லோமாநி ததா அஷராத் ஸம்பவதீஹவிஸ்வம் “
-என்று சிலந்திப் பூச்சியானது நூலை ஸ்ருஷ்டிக்கவும், பின்பு ஹரிக்கவுமான ஜாலத்தை செய்ய வல்லதோ, அவ்வாறே விராட் புருஷனான நாராயணன் அனந்தங்கோடி பிரம்மாண்டமும்,பிரம்ம, சிவ, இந்த்ராதி சகல சேதனாசேதனங்களனைத்தையும் ஸ்ருஷ்டிக்கவும், ரக்ஷிக்கவும், பின்னர் ஹரிப்பதுமான அசாதாரண க்ருத்தியங்களைச் செய்ய வல்லோனென்றும்,

யஜுர்வேதம்.–ஸப்ரஜாபதிரேக : புஷ்கர பன்னே ஸமபவத் லலாடாத் க்ரோதஜா ருத்ர: தரயக்ஷ: கண்ட பரசு: வரஜ்ஜநத் ஸம்வத்ஸரோ ஜாயத இந்த்ரோ வருண: ஸோமோ ருத்ர: பர்ஜந்யோயம்: ப்ரம்ஹண புத்ரா யஜ்யேஷ்டாய ச்ரேட்டாய புத்ராய ருத்ராய–என்று பிரம்மா ஒருவனே பரமாத்மாவின் நாபிக் கமலத்திலிருந்து உண்டாயினனென்றும், மற்ற ருத்ர, இந்திராதி தேவர்கள் அனைத்தும் ப்ரம்மனால் படைக்கப்பட்டவர்களே யென்றும்,ஆயினும் சிவனே ப்ரம்மாவின் ஸ்ரேஷ்டப் புத்திரனென்று இச் சுருதி கூறுகையாலும்,

யஜுர்வேதத்தில் 24 மந்திரங்கொண்ட தகர வித்தை.-“தஸ்மாத் விராட ஜாயதா விராஜோ ஹதிபுருஷ:ஸஜாதோ ஹத்யரிச்சதா யத்ஸ்யா பூமி மதோபுர.“-என்று விராட் புருஷனான அநிருத்த நாராயணனின் நாபிக் கமலத்திலிருந்து ஸ்வயம் பிரகாசமானதாயும், ஸ்வர்ண மயமானதாயுமுள்ள ப்ரம்மாண்ட முண்டாகி அதில் சதுர்முகப் பிரம்மா உண்டாயினர் பரம்மாண்டத்தை சரீரமா யுடைய அநிருத்த நாராயணனுடைய நாபிக் கமலத்திலுண்டான சதுர்முகப் பிரம்மா பெரிய தேஹத்தை யுடையவராய் ஸ்ருஷ்டியாதி க்ரமங்களில்
ப்ரவேசித்தாரென்றும்,
ஸாமவேதம் மஹோபநிஷத்-* ருத்ரச்ச ஸர்வாவா பூத ஜாதய: நாசமேவா
நுதா வந்திலி ஸலாநீவ பாடபம்.”
என்று வேத ப்ரதிபாத்யனான நாராயணன், ப்ரம்ம, ருத், இந்ராதி தேவர்களையும், பூதங்களையும் ஸ்ருஷ்டித்தனரென்றும்,
மநு ஸ்ம்ருதி.-” ஸோபித்யாய சரீராத் ஸ்வத்ஸ்ஸ்ரு ஸுர் விவிதா ப்ரஜ:-என்று பகவத் சப்த ப்ரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணன் தன் திருமேனியிலிருந்து வேறு பட்ட ஆத்மாக்களின் தத்தத் காமானுகுண சரீரங்களை சங்கல்ப்பித்தவராய் ஜலத்தைத்
தோற்றுவித்து அதில் அண்டத்தை நிர்மித்து தன் நாபிக் கமலத்தில் நின்றும் சதுர்முகனை ஸ்ருஷ்டித்து அப் பிரம்மனால் அவ்வாத்மாக்களை ஸ்ருஷ்டிக்க நியமித்தனரென்றும், மநுஸ் மருதியிலும் ஸ்பஷ்டமாய் விளக்கப்பட்டிருக்கையாலும், இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல ப்ரமாணங்களாலும் ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே பிரம்ம, சிவாதி தேவர்களும், அனந்தமான பிரம்மாண்டங்களும் உண்டாயினவென்று நிர்ணயித்துவிட்டன. –

பஞ்சப்ரளய கால சம்ஹார க்ரமம்.-ஸாம வேதம் மஹோபநிஷத்-” ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாந : ந ஹிமே ப்ருதிவ்யாந நக்ஷத்ராணி “என்று பஞ்சபூதப் பரப்பாலலங்க்ருதமான அகிலாண்டங்களும்,-ஒவ்வோரண்டங்களிலுமுள்ள பிரம்ம, சிவன் முதலான தேவர்களும் பஞ்ச ப்ரளய காலத்தில் தன் சங்கல்பாதீனமாக சம்ஹரிக்கப்பட்டு பின்பு நாராயணனொருவனே யிருக்கின்றானென்றும்,
ஆங்கீரஸ உபநிஷத்.
” ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரம்மா ந சங்கர: ஸமுநிர்பூத்வாஸ்
மசிந்தயத் தத ஏதேத்யா நாஜ்ஜாயந்தே விஸ்வோ ஹிரண்ய கர்ப்போக்நி, யம், வருண,ருத்ர, இந்தர
;-என்று பிரம்ம, ருத்ர, ஈசான்ய பருதிவ்யாதிப் பதார்த்தங்களனைத்தும், கற்ப ஷயத்திலழிந்து, நாராயணனொருவனே முடிவிலிருக்கின்றானென்றும், பின்பு அழிந்த யாவும் அந் நாராயணனிடத் திலிருந்தே உண்டாகின்றன என்றும் இஸ் ஸ்ருதி கூறுகையாலும்,
ஷை உபநிஷத்.” யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரம் சோபேபவத ஓதநம்“-என்று நாராயணனுக்கு பிரளய காலத்தில், ப்ரம்மனும், குரோதசநான ருத்ரனும் இரண்டு கவள அன்ன ஸ்தானமாகிறார்களென்றும்

ஷை உபநிஷத்-“ ம்ருதயுர்ஸ்யோ ஸேசநம்”என்று பரமாத்மாவான நாராயணனுக்கு, கற்பக்ஷயத்தில் அநதங்கோடி ப்ரம்மாண்டங்களும், அதிலடங்கிய தேவ, மநுஷ்ய,திரியக் ஸ்தாவராதி சகல பதார்த்தங்களும் அன்னஸ்தானமும் பிரம்ம, ருத்ரர், ஊர்க்காய் ஸ்தானமுமா கின்றனவென்றும்
நாராயணோபநிஷத்-“நாராயணாத் ப்ரலீயந்தே”என்கையாலே நாராயணனிடத்திலேயே, சகல அண்டங்களும், ப்ரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள யாவும் லயிக்கின்றன
வென்றும்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1-ம் அம்சம் 2-ம் அத்தியாயத்தில் ஸ்ரீமந் நாராயணன் காலாக்கினி ருத்ரனைப் போலே பிரளய காலத்தில் மேக மண்டலத்தை பெருக்காற்றடித்தது போலச் சம்ஹாரம் செய்கிறானென்றும்.சிவ ரகசியத்தில் 3-ம் அம்சம் 1-வது காண்டம் 12-வது சர்க்கத்தில் ஸ்ரீமந் நாராயணன் ப்ரளய காலத்தில் ஜலத்தைப் பெருகும்படிச் செய்து காலாக்கினி ருத்ரனைப்போலே சர்வத்தையும் சம்ஹாரம் செய்கிறானென்றும்.
இத்யாதி வேத வேதாந்தங்களிலுள்ள ஸ்ருதி ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்களாலும், சகலாண்டங்களும், பிரம்ம ருத்ராதிதேவர்களும், ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்தே உண்டாயின வென்றும், பின்பு அவனாலேயே ஹரிக்கப்படுகின்றன வென்றும், நிச்சயிக்கப்பட்டிருக்கிறதேஅதர்வசிகோபநிஷத்.-” ஸர்வைச்வர்ய ஸம்பந்நஸ் ஸர்வேஸ்வரச் சம்புராகாச மத்யே”என்று தியானிக்கப் படும் தியேயனும் ஸர்வேஸ்வரனும் சம்பு வும்,சர்வாந்தர்யாமியும் ஆகாச மத்தியில் வியாபித்துள்ளோனுமானவன் ஸ்ரீமந் நாராயணன் என்பதே இச் சுருதியின் கருத்து.-மஹா நாராயணோபநிஷத்.-* ஸஹஸ்ர ஸீரிஷம் தேவம் விஸ்வாக்ஷம் விஸ்வ சம்புவும் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரம ப்ரபும் விஸ்வதஹ பரமாம் நித்யம் விஸ்வம் நாராயணோ ஹரி:”,
மைத்திராயண்ணியுபநிஷத், 7-வது பிரபாடகம் “அவித்யா மஸ் ரஜத்யா சிவ மசிவ மித்யூத்தி
-என்று அவித்தையாகிய, கருமகாண்டத்தில், சொல்லும், மோசடியான சாஸ்திரத்தை அஞ்ஞானிகள் நம்பி மங்களத்தை அமங்களமென்றும்,அமங்களத்தை, மங்களமென்றும் நம்பி நரகத்துக்கு ஆளாகிறார்களென்று இச்சுருதி கூறுகிறது. ஆதலால், இச்சுருதி “ சிவ ” யென்கிற சப்தத்திற்கு மங்களமென்றும், ” மசிவ,” அமங்களமென்றும்,அர்த்தம் கொள்கிறது-மஹா நாராயணோபநிஷத்
“விஸ்வ மேவேதம் புருஷஸ் தத் விஸ்வமுபஜீவதி பதிம் விஸ்வஸ்
யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவ அச்சுதம் நாராயண மஹாங்யேயம் விஸ்வாத்மானம் பராயணம் நாராயண பர ப்ரஹ்மா தத்வம் நாராயண பர:
“-என்று இச்சுருதியில் பலவிடங்களிலும், மேஸ்வரம், சிவ முத லான சப்தங்களால் ஸ்ரீமந் நாராயணனுடைய குண முதலான பரமாத்ம லக்ஷணங்களை அலங்கார ரூபமாய் உத்கோஷியா நின்றது அன்றோ -அதாவது மேஸ்வரம் பரமேஸ்வரனாய், ஸாஸ்வதம்-அழிவற்றவனாய், சிவம் மங்களமானவனுமாய், அச்சுதம்–ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய், நாராயண மஹாங்யேயம்-நாராயண சப்த ப்ரதிபாத்யனாயும் விளங்கிய பர ப்ரஹ்மம் நாராயண னென்று பொருள் தரும்-சிவ, சம்பு, பரப்ரஹ்ம, பரஞ்சோதி பரதத்வ பரமாத்மா முதலிய சப்தங்களால் தியானிக்கப் படும் தேவதை சொல்லப்பட்டிருப்பதால் அச் சப்தங்களுக்கும் நாராயணனே பொருளென்று ஸ்தாபித்தனர்.

க்ருஷ்ண யஜுர் ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.-” ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் நதஸ்மஸ்ஸாப்தி கஸ்ஸத்துர்ஸ்யதே“-என்று ஜகத் காரணனான மஹேஸ்வரனுக்கு ஒத்தார்மிக்காரில்லை யென்றும்
“யத் வேதாதவ் யீஸ்வர ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய பிரக்ருதி லீனஸ்ய: பரஸ்ய மஹேஸ்வர
:என்று வேதங்களின் ஆதியிலும், அந்தத்திலும் சொல்லப்படுகின்ற பிரணவமெதுவோ அதன் பிறப்பிடமாகிய அகாரத்தி லினமாயிருப்பவனெவனோ அவனே பானும் மஹேஸ்வரனுமான பரப்ரஹ்மமென்றும் கூறுகையாலே ப்ரணவ ப்ரதிபாத்தியனும் அகாரத்தி லீனமாயிருப்பவனுமான ஸ்ரீமந் நாராயணனே மஹேஸ்வர சப்த பிரதிபாத்திய னெனத் தட்டில்லை.
மஹா நாராயணோபநிஷத் “” அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதமாபிதாம்“-என்று மேலே விளக்கப்பட்ட சுருதியில் கூறிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமென்றும்,-நாராயணோபஷத்” ஒமிதி சர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரண ரூப அகாரம் ?என்று சர்வ வேத பாதிபாத்தியமாயுள்ள ப்ரணவம் சர்வபூதங் களுக்கும் த்யாதாவாயும், அப் பிரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரம் நாராயணனின் பிரதான திருநாமமாயும் விளங்குகின்றது என்றும்,
தியாநபிந்தூபநிஷத்
” அகாரே துல்யம் ப்ராப்தே ப்ரதமே பிரணவாம்சகே
அந்தரிக்ஷம் யஜூர் வாயுர்புவோ விஷ்ணுர் ஜநார்த்தந “
என்று ப்ரணவத்தின் பிறப்பிடமாகிய அகாரத்திலீனமாயிருப் பவன் யாவனோ அவனே ஜனார்த்தனனென்றும் த்ரயீ யென்கிற வேதங்கள் உத்கோஷிக்கையாலும்,
முண்டகோபநிஷத்-பிரணவோ தநு ?”-என்று பிரணவமானது நாராயணனது திருக்கரத்திலுள்ள ஸ்ரீ பாஞ்ச சன்னியமே யென்றும்,
” ஒங்காரோ பகவான் விஷ்ணு : த்ரயீன வசநாம்பதி
தஸ்யோ சாரமாத்ரேண பரப்ரஹ்மாதி கச்சதி “
‘என்று, ஓங்காரத்திற்கு ப்ரதிபாத்தியன் விஷ்ணு ஒருவனே யென்றும் அவன் த்ரயீ யென்கிற வேதங்களுக்கு நாயகனென்றும் – ஜீவர்கள் ஓங்காரத்தை உச்சரித்த மாத்திரத்தி லவனையே யடைகிறார்களென்றும், அவ் ஒங்காரத்தின் பிறப்பிடமாகிய அகாரம் அவனுடைய பிரதான திருநாமமென்றும்,
‘அகாரோவிஷ்ணு: பிரதமநாமோச்சயதே” என்று அகாரமானது நாராயணனின் பிரதான திருநாமமென்றும்
நாராயணோபநிஷத்-“ஒம் பிரதிகாநந்தம் -பரம் புருஷம் ப்ரணவ ஸ்வரூபம் “ என்றும்,
ஆத்மபோதோபநிஷத்
“ஓம் பிரதிகானந்தம் பரஹ்ம புருஷம் பிரணவ ஸ்வரூபம்
அகார, உகார, மகார, இதிதானே கதாசம்பவத் ததே ததோமிதி
யமுத்வாமுச்சயதே யோகீ ஜன்ம சமசார பந்தனாத்-ஓம் நமோ நாராயணாய இதிமந்த்ரோபச ?”
என்று சர்வாந்தர்யாமியாயும், ப்ரஹ்ம புருஷனாயும், ப்ரணவ ஸ்வரூபனாயும், யோகிகளின் சம்சார பந்தத்தைத் திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தாலே போக்குமவனாயும் விளங்கிய ஸ்ரீமந் நாரா யணனை இச்சுருதி தியானிக்கையாலும்,
கீதோபநிஷத்து
”அக்ஷராணா அகாரோக்ஷரம்
“-என்று அக்ஷரங்களில் அகாரம் நானாகிறேனென்று கண்ணன் கீதையில் கூறுகையாலும்,
இத்யாதி சகல பிரமாணங்களிலும் சிவ, சம்பு, மஹேஸ்வராதி நாமங்களனைத்தும் நாராயணனது கல்யாண குணங்களைக் காண்பிக்கும் பொருப்டே” சுருதிகள் அச் சப்தங்களால் வர்ணித் துரைக்கின்றமையாலும், வேத வேதாந்தாதிகளிலுள்ள ஸர்வாக்ஷரங்களும் ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களாக விருக்கு மன்றிக்கே இதரமானவர்களைச் சொன்னதே யில்லை— சொல்லிய போதிலும் விஸ்வருபனான நாராயணனுடைய சரீரங்களாக விருக்குந் தேவதைகளைச் சொன்ன வாசங்களுக்
கெல்லாம் வாஸ்ய பூதன்ஸ்ரீய பதியே யாவன்,

பைங்களோபநிஷத்
” ஸஸ்வாதீந மாயஸ் ஸர்வஜ்ஞஸ் ஸ்ருஷ்டி ஸ்திதி லயா நாமாதி கர்த்தா ஜகதங்குர ரூபோபவதி
”-என்று அநந்த கோடி பிரம்மாண்டங்களின் ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயங்களுக்குக் காரண பூதனான ஸ்ரீமந் நாராயணன் தனது இச்சா-சத்தியாலுண்டான மாஹா மாயை யாகிய மூலப் பிரக்ருதியை ஸ்வா தீனமாயுடையவனாய், அம்மாயயைக் கொண்டே சகல ஜகத்தையும் படைத்தனன் என்றும்,
மஹா நாராயணோபநிஷத்
“ஸுத்த ஸத்வ மயோ லீலா க்ருஹீத நிரதிசயாநந்த லக்ஷணோ மாயோபாதிகோ நாராயண ஆஸீத்”-
என்று கற்ப க்ஷயத்தில் அம் மஹா மாயையான மஹாலக்ஷிமிக்கு வாசஸ்தானமானதும், அம் மாயையின் ஸ்வாதீனனான நாராயணனது விகாரமற்றதும், சுத்த சத்வ மயமானதுமான பரமபதம் என்றும்,
ஸ்ரீஸுக்த்தம்
” அஸ்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்தீநாத ப்ரபோதநீம்
ஸ்ரீயம் தேவீ மூபாஹ்வய ஸ்ரீமார்தேவீ ஜுஷதாம்
”-என்று சராசர பிரபஞ்சங்களையும் தமது ஜாலத்தாலே நிக்ரஹிக்கவும், ஹரிக்கமுடைய ஜாலமே குதிரைகளாகவும், அப் பிரம்மாண்ட ஸ்ருஷ்டி சம்ஹாரக் கர்த்தர்களை ரதமாகவும் கொண்டு ஜகத் காரணங்களை நடத்துபவளாயும், யாவற்றிற்கும் நாயகியாகவும், ஜகத் நாயகனான ஸ்ரீமந் நாராயணனின் திரு மார்பையே வாஸஸ்தானமாய், அந்த பரமேஸ்வரனோடே நித்ய ஸம்யுக்தை
யாய், “ பூத நாயகன் புவிமகணாயகன் பொருவில், வேத நாயகன் மார்பகத்தினது வீற்றிருந்த ஆதி நாயகி ” என்றும்
” உலகம் யாவையு மீன்றளித் தழித்திட்டு மொருவன் இலக மார்பகத்திருந் துயிர்யாவையுமீன்ற, திலகவாணுதல்”-என்றும்–“ ஏக நாயகன் மார்பகத்தினது வீற்றிருக்கும் ஆதி நாயகி “-என்றும் மலரில் மணமும், கல்லில் ஒளியும் போலே ஸர்வ லோக நாதனுடைய வக்ஷஸ்தலத்தில் நிரந்தரம் அநபாயினியாய் வாஸம் பண்ணிப் போருமவளென்றும், அவ்வாறிருக்கக் கருத்தேதென்னில், எம்பெருமான் தண்டதரனாதலாலே இவ்வாத்மாக்களோ, எந்நாளும் அபராதமே வடிவமாய் அவ் வெம்பெருமான் பக்கல் நன்றியற்ற பாவிகளா யிருக்குமிவ் வாத்மகோடிகளினது குற்றங்களை நற்றமாகக் கொண்டருள் புரிய வேண்டியும், சதுர்முக, பசுபதி, மகபதி முதலானோர் கேட்டுக் கொண்ட படியும், அவனது திருமார்பை விட்டகலாதவளாயுமிறே சர்வ
லோக சுந்தரியான எமதரும் கருணைத் தாயாரிருப்பது.

ஸ்ரீ பாஞ்சாராத்ரத்தில் “‘ க்யாநாதயோ குணாரூபம் லக்ஷ்மிர் நித்யாநபாயி பூமி நீளா தயோ தேவ்யா சேநேசாத்யாச சூர்ய: ததாமபரம் காலஹ புருஷஸ் ப்ரகுருதிஸ்தா மஹதாதிதராந்தா நிசப்த சாவரணான்யபி பிரம்ம
மந்தம் ததந்தஸ்தா லோகஸ்வஸ சராஸராஹ யேவமந்தாய நந்தாநி தத் சர்வம் நாராயணமுச்சதே
-என்று ஸ்ரீமந் நாராயணனுடைய நித்யமான ஜ்ஞாந சக்தியாதி திவ்யாத்ம குணங்களும், குண ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹமும், அவ்விக்ரஹ குணமான ஸௌந்தர்யாதிகளும், அச் சௌந்தர்யாதிகளோபாதி சாத்தின கிரீட மகுடாதி திவ்யாபாணங்களும், அவ்வாபரணங்களோடே விகல்ப்பிக்கலாம்படியான சங்கச் சக்ராதி திவ்யாயுதங்களும், இவ்வளவிருந்த வேற்றத்தை யுடைய பர வாசுதேவனை, காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்தது அநு பவிக்கிற மாமாபையாகிய மஹா லஷ்மியும்,மஹருஷி வர்க்கங்களும், அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற அநந்தக் கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான நித்ய ஸூரி ஸங்கமும்,அவர்களோபாதி அடிமை செய்கிற முக்தரும், அவ்வடிமைக்கு பிரவர்த்தகமாய் பஞ்சோப நிஷண் மயமான பரமபதமும், குண த்ரயாத்மகமான மூல ப்ரக்ருதி மண்டலமும், புருஷ ஸமஷ்டியும் அஹோராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும் ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும், தத் கார்யமான அண்டங்களும், அண்டாந்தர்வர்த்திகளான தேவ, மநுஷ்ய, திர்யக் ஸ்தாவரங்களுமாக ஸ்ரீமந் நாராயணன் மஹா மாய்கையை ஸ்வாதீனமாகக் கொண்டு அண்டாதி ஜகத் காரணத்தை யாதொரு குறைவுமின்றியே நடத்துகிறானென்றும், இத்யாதிபடியே மாமாயை என்றும், பராசக்தி என்றும், இச்சா சக்தி என்றும்,-க்ரியாசக்தி என்றும், தேவீ என்றும், மஹா லஷ்மி என்றும், வேத வேதாந்தாதிகளால் முறையிடா நின்ற நமது தீன தயாளச் செல்வியார் ஸர்வாந்தர் யாமியான ஸர்வேஸ்வரனாடே தானும் அபின்னா பூதையாய் யவனை விடாது நிற்கின்றபடியால் அகாரத்திற் சொல்லுகின்ற ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வசேஷித்வ,ஸமஸ்த கல்யாண குணாத்மகவாதிகளுக் கெல்லாம் ஆதார பூதையாய், ஸ்ரீ ஸூக்த ப்ரதி பாத்யையான பெரிய பிராட்டியாருடைய நித்ய ஸம்பந்த முள்ளதன்றோ ? அந்த ப்ரஹ்மமே என்று வேதங்களும், வேதோபப்ருஹ்மணங்களும் வாயோலை யிட்டு வைத்த காரணத்தாலிறே, ஸ்ரீய பதியான முகுந்தனுக்கன்றி ப்ரஹ்ம சப்த வாஸ்யனாந் தன்மை மற்றையாருக்கு மில்லை யாயிற்று, இவ்வளவேற்றமுடைய மஹா லஷ்மியாராற்றன் எந்தப் பதவிகளினு மிருக்கின்ற தேவதைகளுக்கும்,அவர்கள் தொண்டர்களுக்கும் மங்களமுண்டாக வேண்டியது-இவர் தாம் அதைக் கொடுக்க வேண்டியது எந்த மதாந்தர காமரானவர்களும் நமது லஷ்மி கடாக்ஷம் வேண்டுமென்றே கோருவார்களேயன்றி, இவருக்கெதிர்த்தட்டான ஜேஷ்டையினுடைய கடாக்ஷத்தைக் கோர மாட்டார்கள் இந்த ஸாது ஸேவ்யை யாரது கடைக் கண்ணினின்றுங் கொட்டுண்டு கிடக்கப்பட்டதிறே அணிமாதி அஷ்டசித்திகளும், அஷ்டைஸ்வர்யங்களும், ஸர்வாங்க ஸுந்தர ஸுகாநந்த ரூபியான இவர் கடாக்ஷமற்ற காலத்தில் விதி சிவ சதமகாதி சராசரங்கள் பட்ட கஷ்டங்கள் ஸகல வித்யா ஸமூஹங்களெல்லாவற்றினும் கண்டு கொள்ளலாம். இத் தாயார் கடாக்ஷித்தால் நாம் எப்போதும் ஸூமங்களைகளாய் நமது மகிழ்நரோடு கூடி அமங்களை களென்னாது ஸகல பாக்ய ஸுகத்தோடும் வாழலாமே யென்றன்றோ ? ஸதா காலமும் பாரதி, பார்வதி,சகி, அருந்ததி முதலான தேவ, மநுஷ்ய, பந்நகாதி ஸமஸ்தமான ஸ்திரீகளும், மஹா விஸ்வாஸத்தோடு சுக்ரவார முதலான தினங்களில் அதி நியமனமான விரதமிருந்து நோன்பெடுப்பது, ஸ்ரீவர லக்ஷ்மி வரத சரித்ரத்தைக் கேட்டரிவர்களாயின் பார்வதி நோற்ற நோன்பு விசதமாகும் இவ்வாறு பராசத்தியும்,ஸ்ரீமந் நாராயணனின் வல்லபையுமான மஹா லக்ஷிமியின் ஸர்வ சக்த்யாதி சகல கல்யாண குண சமூஹங்களையும் அநந்த ப்ரமாணங்களாலும் வெளிப்படையாய் விளக்கப்பட்டிருக்குமே

ஸ்ரீ விஷ்ணுபுராணம் 5-ம் அம்சம்
க்ருஷ்ண க்ருஷ்ண ஜகந்நாத ஜாநேத்வாம் புருஷோத்தமம் பரேசம் பரமாத்மாநம் காதி நித ஹரிம் தேவ திர்யங் மநுஷ்யேஷு சரீர க்ரஹணாத் மிகாலியெம்
“-என்று வாணாசுரவதத்தில், சிவன், க்ருஷ்ணனைப் பார்த்து, புருஷோத்தமா, பரமேஸ்வரா, ஜெகத்நாயாகா, ஆதியந்த மில்லாதவா, லோகோஜ் ஜீவநார்த்தம் அவதரித்தவர், என்று பலவாராகத் துதித்துச் சரணமடைந்ததாலும்,
மஹா நாராயணோபநிஷத்
“தேவகீ ஸூத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
-என்று தேவகி புத்ரனாயும், கோகுல நிர்வாஹனாயும், அவதரித்த வாசுதேவன் ஜகத்பதி என்று கூறுகையாலும்,
அதர்வண சிரசில்
” ப்ரஹ்மண்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மண்ய மது சூதந –
என்று தேவகி புத்ரனாயவதரித்த மதுசூதனன் பரப்ரஹ்மமென்றும்,
ருகவேதம் ஆத்மபோதோபநிஷத்
“வைகுண்ட புவனங்க மிஷ்யதி ததிதமபுண்டரீகம் விஜ்ஞானகம் தஸ்மாத் கடிதாப: மாத்ரம் ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ரோ ப்ரஹ்மண்ய மதுசூதந :”
என்று யோகிகளினது ஜனனத்தை அரத்திக்கும் ஸ்ரீவைகுண்ட நாதனும், பர ப்ரஹ்மமுமான மதுசூதனன் தேவகி புத்ரனா யவதரித்தான் என்றும்,
யஜுர்வேதம் கலிசந்தாரணோபநிஷத்
*ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண ஹரே”
-என்று இச் சுருதி க்ருஷ்ண பரமாத்மாவை தியானிக்கையாலும்,

பவிஷ்யபுராணத்தில்
‘ த்ரவிடாநாய நிரதம் யோநிம் ததி ஸ்துமம் திம்பிரம்ம: பிரளய பரியந்தம் கும்பிபாகேச பச்யதே”
என்று ஸ்ரீமந் நாராயணனை உபாயோபேயமாய் ஆஸ்ரயித்து மோக்ஷ சாம்ராஜ்யமாகிய பரம பதத்தை யடையப் ப்ராப்தமாயுள்ள சகல ஜீவன்களுமெளிதில் உணரும் பொருட்டுத் தமது பரம க்ருபையால் (வியாஸ ரூபாய விஷ்ணுவே ) என்றும் (விஸ்வத் சேநோ ஜநார்தந🙂 என்றும் (சடகோபாய விஸ்வத்சே :)என்றுமித்யாதி வாக்கியங்களின் படியே வேத யதார்த்தங்களை ஸ்தாபிக்க வியாசரும், அவ் வேதார்த்தங்களை திரவிட வேதமாய் ஸ்தாபிக்கச் சடகோபருமாக, பகவான் அம்சாரூடராய் கல்பங்கள் தோரும் அவதரிக்கின்றபடியால் அவர்களிடத்தும்,அவரருளிச் செய்த திரவிடோபநிஷத்தினிடத்தும் திரி கரணங்களாலும், அத்யந்த பிரீதி யுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும், அவரையும் அவரருளிச் செயல்களையும் நிந்திப்பவர் பிரம்ம பிரளய பர்யந்தம் றௌரவாதி நரகத் துன்புறுவது திண்ணமென நிச்சயிக்கப்பட்டது.ஸ்ரீ பாஞ்சராத்ரம்-அதித்யாத்ரமிடாம் நாயம் ஸ்வசாகாத்யாய நாத் பரம் ஸ்ரமந்ந குரத்தேந்ய த்ரசோபியாதி பராங்கதிம்”-என்று வேதத்தில் அவித்தை யாகிய கரும காண்டத்தை நீக்கி வித்தை யாகிய ஞான காண்டத்தின் ரசமே திரவிடோபநிஷத்தாக கல்பங்கள் தோறும் ஸ்ரீமத் சடகோபரால் ஸ்தாபிக்கப்பட்டு அத் திரவிடோப நிஷத்தைக் கொண்டே சகல திவ்ய தேசங்களிலும் க்ரஹங்களிலும் ஈஸ்வரார்த்யயநம் – செய்ய வேண்டியதென்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

அனுருத்தசம்ஹிதா
“ ஸ்வாசாக : தரமிடாம் நாமவ் விசித்வேதேத் திரி புருஷம் யஸ்ய தஸ்மி நாவாஷாஸ் யாத்திரௌ ப்ராந்ஹம் நனாமிதி ஸ்ருதிம்”.-
என்று யாதொரு பிரம்ம வித்துக்கள் மோக்ஷத்தை யடைந்தாலும் இந்த திராவிட ஸ்ருதியைக் கொண்டே ப்ரஹ்மமேத ஸமஸ்காரம் செய்ய வேண்டிய தென்றும் திரவிட ஸ்ருதி, வேதங்களால் ஸ்தாபிக்கக் கூடரத பரம புருஷார்த்தத்தை ஸ்தாபித்துள்ளபடியால் வேத அத்யயநத்திற்கு முன் செல்ல வேண்டியதென்றும் மற்றை யாவையையும் கண்டித்து கூறுகையாலும் ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது” பக்தாம் ருதம் விஸ்வஜநாநுமோதம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்மயம் ஸஹஸ்ர ஸாகோபநிஷத் ஸமாகம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம்”என்று 1180 ஸாகைகளை யுடைய வேதங்களின் சகல ரகஸ்யங்களையும் விவரிக்க வல்லதாயும் அஹோபாஹ்யமாய் கம்பீரார்த்தமாய் அறுபதினாயிரப்படியெனவும், முப்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஆறாயிரப்படி, மூவாயிரப்படியென பிரம்மவித்துக்களால் வியாக்யான முடையதாயும், ஈஸ்வர ஸ்வரூப, ரூப குண சேஷ்டிதங்களையே நன்குணர்த்த வல்லதுமான திரவிடவேதமென்கிற மஹா சமுத்திரத்தை ஸ்ரீமத் சடகோபரால் அருளிச் செய்யபட்டவை என்றும்,திருக்குருகைப்பிரான்” ஆய்ந்த பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் பேராத வுள்ளம் பெற” என்றும்,மணவாளமாமுனிகள்” ஏரார் வைகாசி விசாகத்தினேற்றத்தை பாரோரறியப் பகர்கின்றேன் சீராரும் வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள்” என்றும்,மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள்–ஈயாடுவதோ கருடற்கெதிரே யிரவிக்கெதிர் மின்மினியாடுவதோ நாயோடுவதோ வுருமிப்புலிமுன் நரகேசரிமுன் நடையாடுவதோ பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமானடி சேர் வகுளாபரணன் ஓராயிர மா மறையின் தமிழிலொரு சொற் பொருமோ வுலகிற்கவியே-என்றும்-திருவள்ளுவர்“ குருமுனிவன் முத்தமிழு மென்குறளு நங்கை சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்” என்றும்,ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த செம் பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்-தண் குருகூர்ச் சேய்மொழியதென்பர் சிலர் யானிவ்வுலகின் தாய்மொழியதென்பன் நகைந்து” என்றும்,ஔவையாரும் “ சேய் மொழியோ தாய் மொழியோ செப்பினிரண்டுமொன்றவ் வாய் மொழியை யாருமறையென்ப-வாய்மொழி போல்-ஆய்மொழிகள் சாலவுளவெனினு மம்மொழியின் சாய்மொழிக ளென்பேன் றகைந்து” என்றும்,இத்யாதி வேதங்களை யொத்த 108 சம்மிதைகளை யுடைய ஸ்ரீ பாஞ்சராத்ர முதலான சாஸ்திரங்களாலும்,ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமான ப்ரஹ்ம விதாக்ரேசர்களாலும், ஆத்மோஜ்ஜீவனார்த்த தாரகமே, திரவிடோப நிஷத்தென்று பரமோதக்ருஷ்டமாய்க் கொண்டாடியுள்ளதாயும், சகல வேதங்களினும் முற்பட்டதென்றும், கல்பங்கள் தோறும் இதன் ஏற்றங்களையே பிரதிபாதிக்கையாலும், இத் திரவிடோபநிஷத்திற்கு வொத்த சாஸ்திரங்களுமில்லை என்றும், இதை யருளிச் செய்த சடகோபருக்கு மேம்பட்ட பரம புருஷன் எக்கல்பங்களிலும் கிடையாதெனக் கண்டிகமாய் சகல சாஸ்திரங்களாலும் ஆணை யிட்டுரைத்து விட்டன,

சாந்தோக்ய உபநிஷத், பிரதம பிரபாடகம் 6-ம் காண்டம்-” நாராயணஸ் ஸரஸிஜா ஸந்நிவிஷ்ட : கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்கசக்ர : தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ அக்ஷிணீ என்று ஸ்ரீமந் நாராயணனுடைய லக்ஷணங்களைக் கூறு மிச்சுருதி நாராயண சப்தங்களால் ஜகத் காரணத்தைச் சொல்லிற்றே-பகவத் சப்தம், பரமேஸ்வர சப்தம், ப்ரஹ்ம சப்தம் முதலான சகல சப்தங்களும் அந் நாராயண னொருவனை யுணர்த்துமே யன்றி மற்ற யாவரையும் கூறினதே யாகாது-பர்க்க சப்தத்திற்கு” பர்கோ தேவஸ்ய தீ மஹித்யோயோந ரசோதயாத்”-என்னும் பர்க சப்த வாக்யத்திற்கு வஸிஷ்டர் விஸ்வாமித்ரர் தங்கள் வியாகாண சூத்திரத்திலும் ஸ்ரீமத் ராமாநுஜர் சங்கரர், மத்வர் வித்யாரண்யர், குண்ணத்தூர் அய்யன் ஸ்வாமி, வைத்ய
நாதர், க்ருஷ்ணபட்டர், நாராயணசாமி முதலியனரும் தங்கள் பாஷ்யங்களில் பர்க்க சப்தத்திற்குப் பொருள் ஸ்ரீமந்நாராயணனே என்றே அருளிச் செய்துள்ளனர் –

யஜுர்வேதத்தில், வாகோபநிஷத் ஜீவன் முக்தி லக்ஷணத்தில்-“யஸ்மஸ்தார்த ஜாலேஷு வியவஹார்யபி ஸீதள பரார்தே ஸ்வீவா பூர்ணாத்மா ஸ ஜீவன் முக்த உச்சயதே-என்று ரிபு மஹருஷியினிடம் வராகமூர்த்தி தமது க்ருபையால் கடாக்ஷித்து ஓ! முனியே எப்பொழுது சித்தத்திலுள்ள சகல கருமங்களையும் விட்டு ஜெகஜ் ஜன்மாதிகாரண பூதனான என்னையே உபாயோபேயமாகப் பற்றுகிறானோ அப்பொழுது தானவன் ஜீவ முக்தனென்று சொல்லப்படுமென வெளியிட்டபடியாலும்.யஜுர்வேதம் இராமோபநிஷத்-பக்த்யாமந்தரேணாநேந மாம் சிவ ப்ரஹ்மஹத்யாதி-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:“என்று இராம தாரக மந்த்ரங்களாலே பக்தியுடன் தியானிக்குமுன்னை பிரஹ்ம ஹத்யாதி பாபங்களினின்றும் விடுவித்து க்ரம க்ரமாந்திரத்தில் என் சாயுஜ்யத்தைக் கொடுக்கிறேனென்று தமது பரம க்ருபையை வெளியிடுகையாலும் –பகவத்கீதை-“ ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூசா?என்று அர்ஜனா! சகல கருமங்களையும் அடியோடொழித்து அநந்த கோடி யண்டங்களுக்கும் நிர்வாணனான என்னையே சரணமாக அடைவாயாக உன்னை சகல பாபங்களினின்றும் விடுவித்து என் சாயுஜ்யமாகிய பரம பதத்தைக் கொடுக்கிறேன் பயப்படாதே என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கீதையில் வெளியிட்ட படியாலும்,இத்யாதி வராஹமூர்த்தி, ரிபுசம்வாதத்தால் வராகோப நிஷத்தும், ஸ்ரீராமபிரான் சிவன் சம்வாதத்தால் ராமோபநிஷத்தும், ஸ்ரீக்ருஷ்ணன், அர்ஜுன சம்வாதத்தால், கீதோபநிஷத்தும், ஆக இம்மூன்று சரம சுலோகங்களின் ரசங்களையும் அவைகளின் அங்கோபாங்கங்களான நியமங்களையுமே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் வெளியிட்டனர்- தைத்திரீயோபநிஷத்-” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதிபி:நராணாம் ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”என்கிறபடியே பஹு தர ஜந்மங்களாக, அவித்தையாதி அஞ்ஞாந கரும ஹோமாதிகளைச் செய்தே அநந்தமான ஜீவாதமாக்கள் ஷீண தசையாகிய ஜனன மரணங்களை யடைவதால், அவித்யாதி கருமங்களை முற்றும் விட்டு ஸ்ரீமந் நாராயணனையே உபாயோபேயமாக அடையும் பொருட்டே நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற இம் மூன்று பாவங்களை அடைந்தே பரமபத சாயுஜ்யத்தைப் பெற வேணுமென்று மிச் சுருதி கூறுகையாலும், சுருதி, ஸ்மருதி, சூத்ர, மீமாம்ஸா,பகவத் சாஸ்த்ராதிகளின் ரசங்களைத் திரட்டின-பரம புருஷார்த்தத்தையே ஸ்ரீமத் ராமாநுஜர் தமது ஸ்ரீபாஷ்யத்தில் அருளிச் செய்தனர்-ஸ்ரீமத் ராமாநுஜரது ஸ்ரீபாஷ்யம்” தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வேஹ்யாத்மாந பரமாத்மம் : நாந்யதா லக்ஷணம் தேஷாம் பந்தே மோக் ஷததைவ “-என்று ஒருவனுக்கு க்ருஹ க்ஷேத்ராதிகளும், ஸேஷமாய் ஸ்வ சரீரமும், ஸேஷமாயிருக்கச் செய்தே, க்ருஹ க்ஷேத்ராதிகள் ப்ருதக் ஸித்யாதிகளுக்கு அர்ஹமாய், ஸரீரம் அவற்றிற்கு அநர்ஹமா யிருக்கக் காண்கையாலே, இவ் வாத்மாவானது ஈஸ்வரனுக்கு சேஷமாமென்னுமிடம் தட்டில்லை யென்க,” பரகத அதிஸய ஆதாநேச்சய உபாதேயத்வமே வயஸ் யஸ்வரூபம், ஸஸேஷ : பரஸ் ஸேஷி’ என்றும்,“ இச்சயாய துபாதேயம் யஸ்யாதிஸய ஸித்தயே உபயாநுபயைகைக ஜுஷாதௌஸே ஸேஷிணௌ” என்றும்,”அயமே வாத்மா சரீர பாவ : ப்ருதக் ஸித்த்யநர்ஹா தாராதேயபாவு : நியந்த நியாம்ய பாவ: ஸேஷ ஸேஷிபாவஸ்??-என்று ஸ்ரீமந் நாராயணனுக்கும், ஜீவாத்மாக்களுக்குமுள்ள நியந்தரு நியாம்ய பாவம், ஆதார ஆதேய பாவம், ஸேஷ ஸேஷி பாவமாகிற சம்மந்தங்களால் ஜீவாத்மாக்கள் உஜ்ஜீவிக்க வேணுமென்றும் அனாதியான இச் சம்மந்தங்களைக் கொண்டே உஜ்ஜீவிப்பிக்கச் செய்கிறானாகையால் ஸ்ரீமந் நாராயணனே வோத்பதி என்றும் தமது ஸ்ரீபாஷ்பத்தில் தெளிவாய் நிரூபித்தனர்.ஸ்ரீ பாஷ்யம் “யதேஷ்ட விநியோகார்ஹம் ஸேஷ ஸப்தே நகத்யதே-ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் விநியுஜ்யதே”-என்று ஸேஷ சப்தப் பொருள்களாகிய பிரம்மாதி பிபீலிகாநந்தமுள்ள சகல சேதனாசேதனங்களும் ஸேஷி சப்தப் பிரதிபாத்யனான ஸ்ரீமந் நாராயணனுக்கு இஷ்ட விநியோஹார் மென்று-ஸ்ரீபாஷ்யத்தில் மற்ற யாவையும் கண்டித்துரைத்து விட்டனரிறே எதிகட் கிறைவனான எம் மிராமாநுஜன்,பிரம்மாண்டபுராணம்-”மந் நியோகாத் பூத புர்யாம் அஹீநாம் ஈஸ்வர : கலௌ ஸ்ரீராமாநுஜ ரூபேண ஜநிஷ்யதி ஸதாம்முதே” என்று ஸ்ரீபத்ரிகாஸ்ரமத்திலே நாராயணனுக்கும் நரனுக்கும் நடந்த சம்வாதத்தில், ஓ நரா! என்னுடைய நியோகத்தால் ஸ்ரீ பெரும்பூதூரில் ஸர்பங்களுக்கெல்லாம் ராஜனான திருவனந்த ஆழ்வான் கலியுகத்தில் ஸ்ரீமத்ராமாநுஜரென்ற ரூபத்தாலே லோக உஜ்ஜீவனார்த்தமாக அவதரிக்கப் போகின்றாரென்று திருவாய் மலர்ந்தருளினாராதலாலும்,ஸ்ரீபாஞ்சராத்ரம்-” அநந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணச் சதது: பரம்’என்று அநந்தனுடைய 4-வது அவதாரமே கலி யுகத்தில் ஸ்ரீமத் ராமாநுஜர் என்னுமோரவதார முண்டென்று கூறுகையாலும்,தாடீபஞ்சகம்-“பாஷண்ட ருமண்டதாவதஹ ச் சார்வாக சைலாசநி பெளத்தத்வாந்த நிராஸ்வாஸரபதிர் ஜைநேபகண்டீரவு:மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரைவித்ய சூடாமணி : ஸ்ரீரங்கேச ஜயத்வஜோ விஜயதே ராமாநுஜோயம் “” பாஷண்டஷண்ட கிரி கண்டந வஜ்ரத் தண்டா:ப்ரசந்த பௌத்த மகராலய மந்த தண்டா வேதாந்த ஸார ஸுக தர்சம் தீப தண்டா ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா:-என்கிறபடி அடர்ந்த ஆரண்யங்களைப் போன்ற வேதங்களின் ரசங்களையே திரட்டி ஸ்ரீபாஷ்யமாயும், இவ் வுலகிலுள்ள சாக்ய, உலூக்க,அக்ஷபாத, சமுண, கபில்,பதஞ்சலிகளாகிய பாஹ்ய சமயங்களையும், சைவ, மாயாவாத, நியாய, வைஸேஷிக, பாட்ட ப்ரபாகராதிகளாகிய குத்ருஷ்டி சமயங்களையும்,அடியோடறுத் தெரிந்துத் தமது சுத்த சத்வ குண விஸிஷ்டாத்வைத மதமே மிஸ்ர வைதிக வைதிக மதங்களில் சிறந்த பரம வைதிக மதமென திக் விஜயம் செய்து ஸ்தாபித்து த்ரி தண்டம் தரித்தவனிறே எதிராஜன்.யதிராஜவிம்சதி”ஸ்ரீமாதவாங்கரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் காமாதி தோஷ ஹர மாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜஸ் யதிபதிம் பரணமாமி மூர்த்நா”-என்று இப்பிரபஞ்ச முழுமையும் பேரின்ப வெள்ளமான பரமபதத்தை பிரம்மா முதல், பிபீலிகாநந்தமுள்ள யாவும் கருதவல்ல ஞானங்களை ஊட்டி வளர்த்த எம்மிராமாநுஜனை,எதிகட்கிறைவனை தியானிக்கிறேனென்றும்,தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்ச் சடையோன் சொற் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமாநுசழனி போர்ந்த பின்னே” என்றும்,பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந் தண்டமேந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே” என்றும்,”வாழ் வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம் தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினற்கு அந்நாழற்றது நம் இராமாநுஜன் தந்த ஞானத்திலே” என்றும்,சாருவாகம் தம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட மாறுசெய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த் தற மிகுத்து மேல் வந்த பாசுபதர் சிந்தியோடும் வகைவாது செய்த எதிராஜனார் ”என்றும் ” எதிராஜோத் ஜகத் குரு” என்றும்,” ராமாநுஜோ சதுரா சதுரக்ஷரி” என்றும்,” ராமா நுஜாய நம? என்றும்,இத்யாதி அளவிறந்த ஏற்றங்களை யுடையவராயும், இவ்வுலக முதல் பரமபதம் வரை, ஸ்வாதீன முள்ளவராயும், மோக் ஷவதிகாரியானாலும், இவரது கடாக்ஷம் பெற்றே மோக்ஷமடைய வேண்டியதாலும், ஸர்வாந்தர்யாமியாயும், ஸர்வேஸ்வரனாயும், ஸர்வ வேத ப்ரதிபாத்யனாயும், விளங்கா நின்ற ஸ்ரீமந்நாராயணனால் சாக்ஷாத்கரித்துப் பட்டங் கட்டிய ஸர்வலோக ஸரண்யனாயும் விளங்கா நின்றானிறே எம்மிராமாநுஜன்

அதர்வண மஹோபநிஷத் ப்ரஹ்ம ஸூக்த்தத்தில்-தக்ஷிணேது புஜே விப்ரோ பிப்ருயாத்வை ஸுதர்சனம் ஸவ்யேது சங்கம் பிப்ரூயாதிதி ப்ரஹ்ம விதோவிது : என்று முமுக்ஷ வானவன் வலது புஜத்தில் சுதர்சன மென்னும் சங்கத்தையும்,இடது புஜத்தில் பாஞ்சிய சந்யமென்னும் சங்கத்தையும் தரிக்கக் கடவர்களென்று பிரம்மவித்துக்களரிவர்களென்று மிச்சுருதி நிரூபிக்கையாலும்,மஹோபநிஷத் 4வது காண்டத்தில்” தேவாஸோயேந வித்ருதேந பாஹுநா ஸுதர்சநேந ப்ரயாதம் ஸ்வர்க்க மாயாந்தி தாம லோக விஸ்ருஷ்டவீ தஸ்வயந்தி ப்ரஹ்ம ணேளவேஸ் ஸர்வா வம்ஸர்வை தேவதாநாம், ஸர்வாவை விப்ராணாம் ஸர்வாவை க்ஷத்ரியாணாம் ஸர்வாவை வைச்யாநாம், சூத்ராணாமித்யக்நிநா வைஹோத்ரா, த தம் சக்ரம் த்வி புஜே தார்யே தோர்த்வபுண்ட்ர மாலிகேத் தஸ்மாத் விரேகம் பவதிபு நராகமநந்ந சேதி ப்ரஹ்மணஸ் ஸாயுஜ்யம் ஸலோகதாமாப்நோதி“-என்று பிரம்ம ருத்ரர்கள்முதல் சமஸ்த தேவர்களும், சமஸ்த பிராம்மணர்களும், சமஸ்த க்ஷத்திரியர்களும், சமஸ்த வைசி யர்களும், சமஸ்தசூத்திரர்களும், அக்னியில் தப்தம் பண்ணின சக்ராங்கிதத்தை இரண்டு புஜங்களிலும் தரிக்கக் கடவர்க ளென்றும் இடைவெளியோடு க்ஷடின ஊர்த்வ புண்டாங்களையும் தரிக்கக் கடவர்களென்றும், இவ்வநுஷ்டானமுள்ள தேவர்கள் முதல் மநுஷ்யர் வரையிலும் பரமபதமென்னும் சாம்ராஜ்யத்தைப் பெறுவர்க ளென்றும் பிரம்மாவிடைய சத்ய லோகம் போலேயும், சிவனுடைய கைலாயம் போலேயும் மீண்டும் பிறப்பதில்லை என்றும், ருக்வேதம் வாக சங்கிதையிலும், யஜுர்வேதம் முதல் பிரசனத்திலும் சாமவேதம் 6-வது அத்தியாயத்திலும், சுக்ல யஜுர் வேதம் பிரஹதாரணயோபநிஷத்திலும் கடவல்லிலும், சகடக மென்கிற சுருதி
யிலும், ஸ்பஷ்டமாய் காணலாம்.”ஸக்ராதி தாாணம் பும்சாம் பர சம்மந்த நிவேதனம் பதி வ்ரதா நிமித்தமஹி வளையாதி பூஷணம்”-இத்யாதி அநந்த ப்ரமாணங்களாலும் முமுக்ஷவான பரம்புருஷார்தத்தை பெருவதற்கே சக்ராங்கிதம் பிரதானச் சின்னமாகக் கூறா நின்றதிறே

ஸ்ரீ பாஞ்சராத்ரம் பராசரா சம்ஹிதை
“விஷ்ண்வர்ப்பிதம் ரக்த வர்ணம் ஹரித்ரா சூர்ண முக்தமம் லக்ஷ்மீ நிவாஸ ஸித்யர்த்தம் தீபாகாரந்து சூக்ஷ்மகம் ஊர்த்வ புண்டரஸ்ய மத்யேது லலாடே தாரயேத்விஜ
:”-என்று ஏ ப்ராஹ்மணா ஸ்ரீமந்நாராயணனுக்கு சமர்ப்பித்ததாய்ச் சிவந்த நிறமுள்ள உயர்ந்த ஸ்ரீ சூரணத்தைப் பிராட்டி நிலை பெறுகைக்காக தீபாகாரம் போலே மெல்லியதாய்த் திருமண் காப்பின் நடுவில் நெற்றியில் தரிக்க வேண்டுமென்று கூறுகையாலும்,
ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்ம சம்ஹிதை
“நாஸாத்வியங்குலம் பாதம் மத்யம் ஸார்த்தாங்குளம் பவேத்
பார்ச்வ மங்குள மாத்ரந்து ஸுஸ்ஸ்பஷ்டம் தாரயே த்விஜ:
-என்று இரண்டங்குலம் பாதமும் நடுவிலொன்னறை யங்குலமிடமும், விட்டு இருபக்கங்களிலும் ஓரங்குலமுமுள்ள ஊர்தவ புண்டரம் தரிக்க வேண்டியதென்றும் கூறுகையாலும்,
பாத்மபுராணம்
“ஊர்த்வ புண்டாம் மதாபூர்வ மநுஷ்டாநம் ஸமாசரேத்
.-என்று ஆசமனத்திற்குப் பிறகு ஊர்த்வ புண்டரந்தரித்துக் கொண்டு சந்தியா வந்தன முதலிய வனுஷ்டானங்களை முடிக்கக் கடவனென்றும்,
பிரம்மாண்டபுராணம்
ஊர்த்வ புண்டரம் ம்ருதா பூர்வ மநிஷ்டாய ஸமாசரேத்
-என்று பூர்வத்தில் ஊர்த்வ புண்டரம் தரித்துக்கொண்ட பிறகு அனுஷ்டானம் செய்யக் கடவனென்றும் கூறுகையாலும், இத்யாதி பரமாணங்களாலும் மோஷ காமியானவன் சக்ராங்கித ஊர்த்வ புண்டராதிகளைத் தரிக்கக் கடவனென்றும் சொல்லிற்று அன்றோ

1-இதிஹாச ஸ்ரீ மத் பாகவதம் -வேத வியாசர் அருளிச் செய்தது -18000 ஸ்லோகங்கள் -12 ஸ்கந்தங்கள் -200 அத்யாயங்கள் கொண்டது-இதற்கு வக்தா சுகமுனீந்திரர்-ஸ்ரோத பரீக்ஷித்துராஜன், புலவர் திலகராகிய ஆரியப்புலவரால் 4970-திருவிருத்தங்களாகத் தமிழில் மொழி பெயர்த் தருளப்பெற்றது இப்பாகவதமேயாம்.
2- புராண பாகவதம் -இதுவும் வேத வியாசர் அருளிச் செய்தது -இதற்கு-வக்தா நாரத பகவான் -ஸ்ரோதா, உருக்மணி பிராட்டியார்,.இதுவே அட்டாதச மகா புராணங்களுள் ஒன்றே பாகவதம்,
3- ஸம்ஹிதா பாகவதம் -வைராக்ய ரசம் நிறைந்தது -1100-அத்தியாயங்களாய் விரிந்த 18-காண்டங்களாகப்பகுக்கப்பட்டது. இதற்கு வக்தா வைசம்பாயன முனிவர் ஸ்ரோதா ஜனமேஜயன்
4- உப ஸம்ஹிதா பாகவதம்-70000-சுலோகங்களாய் 2000-அத்தியாயங்களாய்ப் பிரிக்கப் பட்டு – இதற்கு வக்தா அகஸ்திய மகரிஷி-ஸ்ரோதா, சுதர்சனர்
தா, சுதர்சனர்

5-விஷ்ணு ரகஸ்ய பாகவதம்:- தண்டங்க ளிடையிடையே கலந்த 100000-ஸ்லோகங்களுடையதாய் 1000-அங்கங்களாய் 10000- அத்தியாயங்களாய் விரிந்தது – இதற்கு தாவ ஹாரீத முனி, ஸ்ரோதா காசிபரிஷி.

6-விஷ்ணுயாமள பாகவதம் :-இது 80000 ஸ்லோகங் களை யுடையதாய் 800-அத்தியாயங்களை யுடையது இதற்கு வக்தா பராசர மகரிஷி, ஸ்ரோதா மைத்திரேயர்

7.கெளதம சம்மித பாகவதம் இது 10000-ஸ்லோகங்கள் அடங்கிய 100-அத்தியாயங்களை யுடையது. இதில் மோக்ஷமளிக்கத்தக்க க்ருஷ்ண சரித்திர மாத்திரம் சொல்லப்பட் டிருக்கின்றது.இதற்கு வக்தா கௌதம ரிஷி ஸ்ரோதா கௌசிக ரிஷி.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

தத் த்வம் அஸி விளக்கம்-

June 9, 2025

தத்துவம் என்றால் தத்+த்வம்=அது நீயே.-அது எது? நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள். -த்வம் என்றால்-தேடி அலைந்துகொண்டிருக்கும் நீ-நீ கடவுள் என்பதே தத்துவம் என்பதன் அர்த்தம்-மஹா வாக்கியங்கள்-என்பன உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயருண்மை கொண்ட நான்கு சொற்றொடர்களைக்(வாக்கியங்களைக்) குறிப்பது ஆகும். ஒவ்வொரு மஹா வாக்கியமும் அது சார்ந்த வேதத்தின் பிழிவாக, சாரமாக கருதப்படுகிறது. நான்கு மஹா வாக்கியங்களும் முறையே நான்கு வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. இந்து மதத்தின் அனைத்து தத்துவங்களையும் உண்மைகளையும் தம்முள் அடக்கியவையாக இவ்வாக்கியங்களை கருதப்படுகின்றனர். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
-1. பிரக்ஞானம் ப்ரஹ்மம் – “பிரக்ஞையே(அறிவுணர்வே) ப்ரஹ்மம்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்])
-2. அயம் ஆத்மா ப்ரஹ்மம் – “இந்த ஆத்மா ப்ரஹ்மம்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
-3. தத் த்வம் அஸி – “அது(ப்ரஹ்மம்) நீ” (சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம்)
தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : உளாய், அல்லது ‘நீ அதுவாக உளாய்’ என்றும் சொல்லலாம்.
-4. அஹம் ப்ரஹ்மாஸ்மி – “நான் ப்ரஹ்மம்” (யஜுர் வேதத்தின்பிருஹதாரண்யக உபநிடதம்)
-மேலே கூறப்பட்டுள்ள ப்ரஹ்மம்,பிற்காலத்தின் படைப்பின் கடவுளாக கருதப்படும் நான்முக பிரம்மனை குறிப்பது அல்ல. இது ஒட்டுமொத்த படைப்பின் ஆதாரமாக வேதங்களில் குறிப்பிடப்படும் ‘ப்ரஹ்மத்தை’க் குறிக்கிறது தமிழில் கடவுள்,இறைவன் என்பதைக் குறிக்கிறது.
இந்த நான்கு மஹா வாக்கியங்களும் ஆத்மனுக்கும் ப்ரஹ்மனுக்கும் உள்ள உள்ளுறவைக் குறிக்கிறது.
-சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக ஆருணி என்ற மகரிஷி பன்னிரண்டு வயதுள்ள மகன் ஸ்வேதகேதுவை குருகுலத்திற்கு அனுப்பி வேத சாஸ்த்திரங்களெல்லாம் கற்று வரும்படிச் சொல்கிறார். பன்னிரண்டாண்டுகள் குருகுலத்தில் படித்து விட்டுத் திரும்பும் வாலிபனிடம் “எதனால் கேள்விக் கேட்கப்டாதது கேட்கப் பட்டதாயும், நினைவுக் கெட்டாதது நினைக்கப் பட்டதாயும், அறிவுக் கெட்டாதது அறியப் பட்டதாயும் ஆகுமோ அவ் வுபதேசத்தை குருவிடம் தெரிந்து கொண்டாயா?”என்று கேட்கிறார்.
இதைத் தொடர்ந்து தானே அவனுக்கு அந்த பரம்பொருளை ஒன்பது எடுத்துக் காட்டுகளால் விளக்கி, முடிந்த முடிவாக இதே மஹா வாக்கியத்தை ஒன்பது முறையும் சொல்கிறார்.-ஒன்பது எடுத்துக் காட்டுகளில் சில-“எப்படி எல்லா ஆறுகளும் எல்லாத் திசையிலிருந்தும் கடலையே அடைந்து, கடலாகவே ஆகி விடுகின்றனவோ, -மற்றும் அவை அந் நிலையில் ‘நான் இது’என்று எங்ஙனம் அறிய மாட்டாவோ அங்ஙனமே பிராணிகளெல்லாம் பரம் பொருளிலிருந்து தோன்றினோம் என உணரவில்லை. எது அணு மாத்திரமான ஸூஷ்மப்பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“ஆலம்பழம் ஒன்றைப் பிளந்தால் அணு வடிவான விதைகள் காணப் படுகின்றன. அவ் விதைகளில் ஒன்றைப் பிளந்தால் ஒன்றும் காணப்படுவதில்லை. ஆனால் காணப்படாத அந்த ஸூஷ்மப் பொருளிலிருந்தே பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கிறது. எது அணு மாத்திரமான ஸூஷ்மப் பொருளோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆத்மா. அதுவே நீயாக உளாய்”-“உப்பை நீரில் போட்டு வைத்து அது கரைந்தபின், நீரில் போட்ட உப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் நீரில் மேல் பாகத்தையோ நடுப் பாகத்தையோ அடிப் பாகத்தையோ உண்டு பார்த்தால் அது உப்பாகவே யிருப்பது தெரியும். அதே போல் முக் காலமும் சத்தான பொருளை நீ காணவில்லை எனினும் அது எங்கும் இருக்கவே இருக்கிறது. அணு மாத்திரமான அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்”-“ஒருவனை கண்ணைக் கட்டி காந்தார தேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவன் கண்ணைத் திறந்து நீ வீட்டுக்குப்போ என்று சொன்னால் அவனால் எப்படிப் போகமுடியும்? அச்சமயம் ஒரு அயல் மனிதன் வந்து அவனுக்கு பாதை காட்டி அவனுடைய வீட்டுக்குப்போக வழி சொல்லிக் கொடுத்தால் எப்படியோ அப்படித்தான் ஒரு குரு நமக்கெல்லாம் இச்சம்சாரக் காட்டிலிருந்து மீள வழி காட்டுகிறார். அந்தப்பாதையில் சென்று ஆத்ம ஞானம் பெற்று அப்பரம் பொருளுடன் ஒன்றுபடலாம். அணு மாத்திரமான் அந்த ஸூஷ்மப்பொருள் எதுவோ அதையே ஆன்மாவாய்க் கொண்டது இது எல்லாம். அதுவே ஆன்மா. அதுவே நீயாக உளாய்.த

தத் தவம் அஸி-இந்த வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு விசிஷ்டாத்வைத தத்துவத்தை ஸ்தாபிக்கிறார் ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில். இதன் பொருள் என்ன என்பதை விளக்க சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு முழு அத்தியாயம் இருக்கிறது

ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.

தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.

வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.

இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.

இதில் உத்தாலகருடைய மகன் ச்வேத கேது குருகுலவாசம் முடிந்து தந்தையிடம் வருகிறான். அவனைப் பார்க்கும்போது எல்லாம் அறிந்தவான் போல் ஒரு பெருமிதம் காணப்படுகிறது. அதைப் பார்த்து உத்தாலகர் கேட்கிறார்.-எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ (ஏக விக்ஞானேன சர்வ விஞ்ஞானம்) அந்த ஞானத்தை அடைந்தாயா என்று,-அவன் அது என்ன என்று கேட்கிறான் . அவன் தந்தை சொல்ல ஆரம்பிக்கிறார். “ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத். ஏகமேவ அத்விதீயம்.” சத் அல்லது பிரம்மம்தான் முதலில் இருந்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை , என்று ஆரம்பித்து கடைசியில் “தத் தவம் அஸி” நீதான் பிரம்மம் என்று முடிக்கிறார்.-தந்தை “எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா,” என்று கேட்க ச்வேதகேது “ அது எப்படி சாத்தியம் “ என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.

யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத் 
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.-இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பினால் ஆன பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.-ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.“ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்’

சௌம்ய– அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே 
ஆஸீத்– இருந்தது 
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது 
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்றும் இல்லை

அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.-சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது? 
தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் பிரஜாயேய என்கிறார்.-அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது.-அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ 
அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.-அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)-இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.-அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.-இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே.

எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக்குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

ச்வேதகேது மேலும் விளக்கத்தைக் கேட்கவே எட்டு உதாரணங்கள் மூலம் அதை விளக்குகிறார்.ஒவ்வொன்றையும் சொல்லி “ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ” என்று முடிக்கிறார்.

1. ஒரு தேநீயானது பல புஷ்பங்களில் இருந்து தேனை சேகரிக்கிறது. ஆனால் அவை ஒன்றாகச் சேர்ந்த பின் எந்த மலரிலிருந்து எந்த தேன் வந்தது என்று தெரிவதில்லை. எல்லாம் ஒன்றாகவே ஆகிறது.

அதே போல ஜீவ ராசிகள் எப்படி அயர்ந்த தூக்கத்தில் இருக்கும்போது தன்னுடைய தனித் தன்மையை அறிய முடியவில்லையோ அது போல முடிவில் பிரம்மத்தில் லயித்து விடுகின்றன,. ஆனால் மறுபடி ஸ்ருஷ்டி தொடங்கும்போது தனித்தன்மைகளுடன்தான் தோன்றுகின்றன.

அதாவது மனிதன், விலங்குகள், பட்சிகள் , பூச்சிகள் முதலிய எல்லா ஜீவராசிகளின் குணமும் ஸ்ருஷ்டிக்கு சிருஷ்டி மாறுபடுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை கொசு கடிக்காமல் இருப்பதில்லை. தூங்கி எழுந்த போது எப்படி அதனதன் இயற்கை மாறவில்லையோ அது போல,. முக்தியடைந்த ஜீவர்கள் மறுபடி பிறப்பதில்லை. மற்றவர்கள் அவரவர் கர்மவாசனைப்படி மறுபிறவி எடுக்கிறார்கள்.

பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும் எல்லா உயிர்களும் சூக்ஷ்ம ரூபத்தில் இறைவனிடம் ஒடுங்குகின்றன. கர்ம வாசனை பிரம்மஞானம் ஏற்பட்டு முக்தியடையும் வரை அழிவதில்லை. 

2.ஆறுகள் சமுத்திரத்தை அடையும் முன் தனித் தனிப் பெயர்கள் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் கடலில் கலந்ததும் அவைகளின் தனித் தன்மை போய் விடுகிறது. கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி எல்லாமே உப்புக்கடலாக மாறிவிடுகிறது. ஆயினும் அவை ஆவியாகி மறுபடி பூமியில் மழையாக சேரும்போது அவைகள் மறுபடி தனித் தனி உருவம் பெறுகின்றன. அதே போல ஜீவராசிகள் பிரம்மத்தில் ஒடுங்கும்போது தனித் தன்மையை இழந்தாலும் மறுபடி ஸ்ருஷ்டியின்போது பழைய நிலையை அடைகின்றன.

3. இந்த மரம் உயிருள்ளவரை தண்ணீர் குடித்து வாழ்கிறது. வேரில் உறிஞ்சிய தண்ணீர் மரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. ஆனால் அதன் ஒரு கிளையை ஒடித்துவிட்டால் அந்த ஒடிக்கப்பட்ட கிளையானது வாடி விடுகிறது. அதாவது அந்தக் கிளையிலிருந்து ஜீவன் போய்விட்டது. மரம் முழுவதுமே வெட்டப்பட்டால் அது மறுபடி துளிர்ப்பதில்லை.

அதே போல இந்த உடலில் ஆத்மாவானது இருக்கும் வரை உடல் உயிருடன் இருக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் உடல் உயிரற்றதாகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது எது உறங்குவதில்லையோ அதுதான் ஆத்மா. அதன் அந்தராத்மாவாக இருப்பது பிரம்மம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உள்ளது.

ஆனால் ச்வேத்கேதுவின் கேள்வி இதல்ல. ஸத் அல்லது பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி சர்வவ்யாபி என்பதை உணர்ந்தாலும் எப்படி அது உலகமாக நாமரூப வடிவில் தோன்றுகிறது என்பதுதான் அவன் சந்தேகம். அதை மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்

4. ஒரு ஆலம்பழத்தை எடுத்து அதைப் பிளந்தால் சிறிய விதைகளைப் பார்க்கிறோம். அதில் ஒரு விதையை எடுத்துப் பிளந்தால் உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. தந்தை கூறினார். இந்த வெற்றிடம் போல் காணப்படுவதில் இருந்துதான் இந்த பெரிய மரம் வளர்கிறது. அதேபோல உருவம் இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் இந்த பிரபஞ்சம் ஸ்தூல உருவில் தோன்றுகிறது,

5. ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டி உப்பைப் போட்டால் அது கரைந்து விடுகிறது. அதில் உப்பு எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா? அது எங்கும் பரவி உள்ளது, அதை உணரலாமே தவிர பார்க்க முடியாது. அதுபோல் பிரம்மம் எங்கும் பரவியுள்ளதானாலும் அதைக் காண இயலாது. ஏனென்றால் அது சர்வாந்தர்யாமியாக பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கமுடியாததாடாக உள்ளது. ஆனால் எவ்வாறு தண்ணீரில் கரைந்த உப்பைக் காண முடியாவிட்டாலும் அதை சாப்பிட்டால் உணரமுடியுமோ அதைப் போல பிரம்மத்தை வேறுவிதமாக அறிய முடியும். எப்படி என்பதை இன்னும் சில உதாரணங்களுடன் விளக்குகிறார்

6. காந்தார தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதனை கொள்ளைக்காரர்கள் அவனுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு அவன் கண்களைக் கட்டி அவனை ஒரு மனித சஞ்சாரம் அற்ற ஒரு காட்டில் விட்டுவிடுகின்றனர்.

அவன் நான்குதிசைகளிலும் ஓடி என்னைக் கண்ணில் கட்டி இந்த இடத்தில் விட்டுவிட்டனர் என்று கூவுகிறான். அப்போது அதைக் கேட்ட ஏதோ ஒரு நல்ல வழிப்போக்கன் அவன் கண்கட்டை அவிழ்த்து விடுகிறான். திக்கு திசை தெரியாத அவனிடம் காந்தார தேசத்திற்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்கிறான். அதன்படி அவன் அந்த வழியிலே சென்று தன் இருப்பிடத்தை அடைகிறான்.

அதேபோல நாம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இந்த உலகத்தில் இருக்கிறோம்.நம்முடைய ஆசைகளே திருடர்கள். அவைகள் நம் அறிவைக் குருடாக்கி உலகம் என்ற காட்டில் அலைய விடுகின்றன.நம்முடைய அறியாமையே நம் கண்களுக்குபோட்ட கட்டு. வழிப்போக்கன் அந்த மனிதனுக்கு உதவினது போல் நம் குரு நமக்கு அறியாமை என்னும் கண்கட்டை அவிழ்த்து நல்ல வழியைக் காட்டுகிறார்.

இந்த உடலில் உள்ளவரைதான் சம்சாரம். பிரம்மஞானத்தை அடைந்து விட்டால் இந்த உடலை விட்டதும் இறைவனிடம் போய் சேர்ந்து விடுவோம் அதாவது வந்த இடத்திற்கே சென்று விடுவோம். இதன் சாராம்சம் பிரம்மத்தை குருமூலம் தான் அடைய முடியும் என்பது.

7. அடுத்த உதாரணம் இறக்கும் நிலையில் உள்ள மனிதனைப் பற்றியது. அந்த நிலையில் “என்னைத்தெரிகிறதா ,” என்று சுற்றி இருக்கும் உறவினர் கேட்கின்றனர். எதுவரை அவனுக்கு தன்னைப் பற்றியும் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் உணர்வு இருக்கும்?

உத்தாலகர் சொல்கிறார். 
‘ எதுவரை வாக்கு மனதில் ஒடுங்கி மனம் பிராணனில் ஒடுங்கி, பிராணன் அக்னியில் ஒடுங்கி, அக்னியும் பரப்ரம்மத்தில் ஒடுங்கவில்லையோ அதுவரை அவனுக்கு பிரக்ஞை இருக்கும். அதற்குப்பிறகு அவன் ஆத்மா அந்தராத்மாவான பிரம்மத்தில் ஒடுங்குகிறது. அந்த பிரம்மமே எல்லா உயிர்கட்கும் ஆத்மா.”

இதை நாம் நடைமுறையில் காணலாம். மரணத்தருவாயில் முதலில் பேச்சு ஒடுங்குகிறது. மனது நினைத்தாலும் பேச முடிவதில்லை. அடுத்ததாக மனம் பிராணனில் ஒடுங்குகிறது. அதாவது மூச்சு மட்டும் இருக்கிறது. பிறகு பிராணன் அக்னியில் ஒடுங்குகிறது என்றால் பிராணன் போய் விட்டபோதும் உடல் உடனே சில்லிடுவதில்லை. ஏனென்றால் பிராணன அக்னியில் ஒடுங்குகிறது. எப்போது அக்னியும் ஆத்மாவில் ஒடுங்குகிறதோ அப்போதுதான் இறப்பு உறுதியாகிறது. அதாவது உடல் குளிர்ந்து போகிறது.

இதில் ஒரு சந்தேகம் எழலாம் . இது எல்லோருக்கும் உள்ளதுதானே ? ஆனால் பிரம்மத்தில் ஒடுங்குவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? பிறகு ஏன் சில ஜீவர்கள் மறுபடி பிறக்கிறார்கள் சிலர் பிரம்மத்தை அடைந்து முக்தியடைகிறார்கள் ? என்று. இதற்கு பதில் அடுத்ததாக கூறுகிறார்.

8. ஒருவனை அவன் திருடியதாக சந்தேகித்து அழைத்து வருகிறார்கள். அவனை பழுக்கக் காய்ச்சிய கோடரியையைக் கையில் பிடிக்கச் சொல்கிறார்கள். அவன் குற்றவாளி என்றால் அவன் கையில் வெந்து விடும். அப்போது அவனைக் கொன்றுவிடுவார்கள். அவன் நிரபராதி என்றால் அவன் கைக்கு ஒன்றும் ஆகாது. அப்போது அவனை விடுவித்துவிடுவார்கள்.

இது ஒரு வேத கால தண்டனையைக் குறிக்கிறது. 
இது எப்படி ச்வேதகேதுவின் கேள்விக்கு பதிலாகிறது என்று பார்க்கலாம்.

குற்றம் செய்தவன் கோடரியால் தீய்க்கப் படுவது போல அறியாமையால் உலகப் பற்று கொண்ட ஜீவன் பழுக்கக் காய்ந்த கோடரி போன்ற உலகின் தொடர்பால் பிறப்பு இறப்பு என்று துன்புறுகிறது. ஆனால் எவ்வாறு ஒரு நிரபராதியை அந்தக் கோடரி சுடாதோ அதே போல ஒரு ஞானியை இந்த உலகம் பாதிப்பதில்லை. அதனால் மறுபிறப்பில்லை.

அதுவே நீயாக உளாய்’ என்ற வாக்கியத்தில், ‘அது’ என்ற பரம் பொருளினிடத்திலுள்ள படைப்பாற்றல், மாயா ஆற்றல் முதலிய மானிடமல்லாத குணங்களைத் தள்ளிவிட்டு, அவ்விதமே ‘நீ’ என்ற பிராணி யினிடத்தில் குடி கொண்டிருக்கும் அஞ்ஞானத்தையும், உடல், மனது, புத்தி இவைகளையும் தள்ளி விட்டால், ‘அது’வும், ‘நீ’யும் ஒன்றே என்பது விளங்கும் என்பது அத்வைத சித்தாந்தம்.
ஸ்ரீராமானுஜரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக வைணவம் என்ற பெயரில் பெரிதும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் விசிஷ்டாத்துவைத வேதாந்தம் மேற்சொன்ன அத்வைத சித்தாந்தத்தை மறுக்கிறது. மகாவாக்கியத்திலுள்ள ‘நீ’ என்ற சொல், பிராணிகளிலுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது என்பது உண்மைதான்; ஆனால் இவ்வான்மாவையும் அப்பரம் பொருளையும் ஒன்றாக்கி ஒரு முற்றொருமையாகக் கூறமுடியாது. ஏனென்றால், இவ்வான்மா அப்பரம் பொருளின் ஒர் அம்சமே. ‘இது’ வும் ‘அது’ வும் ஒன்றாகாது. இரண்டன்மை என்னும் பொருள் படும் அத்வைதம் என்னும் கருத்தில் இருந்து நுட்பமாய் வேறுபாடு கொண்டது என்று குறிக்கவே விசிஷ்ட என்னும் முன்னொட்டு உள்ளது
மத்வாச்சாரியாரால் விரிவாக விளக்கப்பட்டு, பற்பல நூற்றாண்டுகளாக பெரிதும் போற்றப்படும் துவைதம் வேதாந்தம் மேற்சொன்ன இரு சித்தாந்தங்களையும் மறுக்கிறது. ‘தத்துவமஸி’ என்றுள்ள உபநிடதவாக்கியத்திற்கு முன்னால் வரும் ‘ஸ ஆத்மா’ என்ற சொற்களைச் சேர்த்து இலக்கண வழிப்படி பார்க்கும்போது, ‘ஸ ஆத்மாதத்துவமஸி’ என்பதை ‘ஸ ஆத்மா + அதத்துவமஸி’ என்று பிரிக்கவேண்டும் என்றும், அதனால் அதன் பொருள் ‘நீ ‘அதத்’, அதாவது, பரம்பொருள் அல்லாததாக, உளாய்’ என்று ஏற்படுகிறது. ஆக, அத்வைதம் சொல்கிறபடி ஆன்மாவும் பரம்பொருளும் முற்றொருமையாகவோ, விசிஷ்டாத்வைதக் கூற்றின்படி ஆன்மா பரம்பொருளின் ஓர் அம்சமாகவோ இருக்கமுடியாது. ஆன்மாக்கள் வேறு. பரம்பொருள் வேறு, என்பது துவைத சித்தாந்தம். மேலும் இவ்விதம் ‘அதத்துவமஸி’ என்று சொல்வதுதான் சுவேதகேதுவின் கேள்விகள் ஏற்பட்ட சூழ்நிலைக்குப் பொருந்துகிறது. ஏனென்றால் அவன் வரும்போதே தான் 12 ஆண்டுகள் படித்துவிட்ட செறுக்குடன் வந்தான். அவன் உண்மையில் பரம்பொருள் என்று சொல்லப்பட்டுவிட்டால் அவனது கர்வம் இன்னும் அதிகமாகிவிடும்
சுத்தாத்வைதம் -இது 15ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லபரால் விரிவாக விளக்கப்பட்ட வேதாந்தப்பிரிவு. இதன்படி ஆன்மாவும் பரம்பொருளும் சாராம்சத்தில் ஒன்றே; ஆனால் ஆன்மாவுக்கு பரம்பொருளின் ஆனந்த அம்சம் கிடையாது. அதனால் ‘தத்துவமஸி’ என்ற மகாவாக்கியத்திற்கு சங்கரரின் முற்றொருமையில் ஒரு சிறிய மாற்றத்துடன் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, ‘தத்’ என்பது பரம்பொருள். ‘துவம்’ என்ற சீவன் அதனுடைய ஒரு பாகம்
துவைதாத்வைதம் -இது நிம்பர்க்கரால் 11ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சித்தாந்தம். இதன்படி, பரம்பொருளுக்கும் தனிப்பட்ட சீவன்களுக்கும் உள்ள ‘பேதத்தில் அபேதம்’, ஆதவனுக்கும் அதன் கிரணங்களுக்கும் உள்ள உறவு, அல்லது நெருப்புக்கும் நெருப்புத் துளிகளுக்கும் உள்ள உறவு, இவைகளைப் போன்றது. இதற்குகந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்
அசிந்த்யபேதாபேதம் இது 16ம் நூற்றாண்டில் சைதன்யரால் விரிவாக விளக்கப்பட்டது. பரம்பொருளுக்கும் சீவனுக்கும் உள்ள பேதா அபேதம் (ஒற்றுமை வேற்றுமைகள்) நம் அறிவுக்கெட்டாதது. ஒரே சமயத்தில் ‘அது’வும் ‘நீ’யும் ஒன்றாகவும் வேறாகவும் உள்ளது. குணங்களில் ஒன்றாகவும், அளவில் வேறாகவும் உள்ளது. ஒன்று முடிவுள்ளது, மற்றொன்று முடிவில்லாதது. இதற்கு தகுந்தபடி மகாவாக்கியத்திற்குப் பொருள் கொள்ளவேண்டும்

பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது?

தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய என்கிறார். அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. இதன் மூலம் மேற்கூறிய மூன்று காரணங்களும் பிரம்மமே என்று ஆகிறது.

வேதார்த்த சங்க்ரஹம்-9

அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான்.

எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ர்த்திகேத்யேவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது.

குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,

.இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.

பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.

இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,

எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை

 .பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.

எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.

பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள்.

எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.

சரி ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

வேதார்த்த சங்க்ரஹம்-10

ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.

ராமானுஜரின் விளக்கத்தின்படி,

தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய

பிரம்மம் பலவாக ஆக சங்கல்பித்தது.

ஸ்வாம்ச ஏகதேசாதேவ வியதாதி பூதானி ஸ்ருஷ்ட்வா

தன்னுடைய ஒரு அம்சத்தினாலேயே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களை தோற்றுவித்து,

சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை.

அங்கே ‘தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,’ அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.

அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது. 
‘அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்ய உப.)

இதன் பொருள், ‘இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.’

இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.

இப்போது ஜடவஸ்துக்களின் உளதாம் தன்மை (existence) அவற்றின் உள் பிரம்மம் அந்தர்யாமியாக இருப்பதனால் தான் என்று அறிகிறோம்.

இப்போது புலன் உணர்ச்சி கொண்ட உயிர்களும் உலகத்தில்(sentient) உள்ளவைதானே ? அவைகளுக்கும் பிரம்மமே ஜீவனாக இருக்கிறது அல்லவா? அத்தகைய ஜீவராசிகள் பிரம்மத்தின் உடல்லகவும் பிரம்மமே அவைகளின் உயிராகவும் உபநிஷத் வாக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

‘எது ஜீவாத்மாவின் உள் இருந்துகொண்டு அதை நடத்துகிறதோ, எதை ஜீவாத்மா அறியவில்லையோ,எதற்கு ஜீவாத்மா சரீரமாக உள்ளதோ அதுதான் உண்மையானஆத்மா, அந்தர்யாமியாகவும் நித்யமாகவும் இருக்கிறது. அதுதான் ப்ரஹ்மம்.’(brhd.up. 5.7)

அதனால் எல்லாவற்றிற்கும் பிரம்மமே அந்தராத்மா என்று அறிகிறோம். ‘ப்ரம்மாத்மகானி தானி ஸர்வாணி.’

ஆகையால் தேவர், மனுஷ்யர், யக்ஷர், ராக்ஷசர், பசு, ம்ருகம், பக்ஷி, வ்ருக்ஷம், கோடி, கட்டை, கல், புல், பானை, துணி, முதலிய எல்லா சொற்களும் அதனதன் உருவம், குணம் இவைகளால் அவற்றின் மூலமான பிரம்மத்தையே சுட்டுகின்றன.

இதை எளிதாக விளக்கலாம். இது ஒரு பசு என்று சொல்லும்போது நாம் அதன் உருவத்தை மட்டுமா குறிப்பிடுகிறோம்? அதன் குணங்கள், தன்மை மேலும் அதை ஒரு உயிருள்ள ஜந்துவாக அல்லவா காண்கிறோம்?

அதே போல இவன் தான் ராமசாமி அன்று சொல்லும்போது அவன் உருவம் மட்டுமா நம் மனதில் தோன்றுகிறது? அதற்கு அவன் படமே போதும். அவன் யார் எப்படிப்பட்டவன் என்ற எல்லா விஷயங்களும் நம் மனதிற்கு வருகின்றது. மேலும் அவனுடைய தேகத்தைத் தாண்டி அவன் ஒரு உயிருள்ள மனிதன் என்னும்போது தேகம் மனம் புத்தி எல்லாவற்றிற்கும் மேல் அவன் உயிர் அல்லது ஆன்மா என்பது தானே உண்மை. இல்லாவிட்டால் அவன் என்பது போய் அது என்றாகிவிடுமே.

அதனால் பெயர் உருவம் குணம் மற்ற சம்பந்தங்கள் எல்லாவற்றிற்கும் மேல் ஆன்மா என்பதே முக்கியம் ஆகிறது. அந்த ஆன்மாவிற்குள் அந்தராத்மாவாக இருப்பதே பிரம்மம்.

\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது, 
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.

இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே .

,
‘க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ச ஜகத் தஸ்ய சரீரம். ‘

‘அதனால் பிரம்மம்தான் அகில உலகத்துக்கும் ஆத்மா. அகில உலகமும் பிரம்மத்தின் சரீரம் ‘ ‘த்வம்’ என்னும் சப்தத்தால் கூறப்படும் ‘நீ’ பிரம்மத்தினுடைய படிவமே. இதனால் எல்லாம் பிரம்மத்தையே ஆத்மாவாகக் கொண்டவை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

‘தத் த்வம் அஸி’ என்ற மஹாவாக்கியத்தின் பொருள், நீ என்ற ஜீவன் உன் அந்தராத்மாவான பிரம்மமே என்பது.

இந்த சரீர சரீரி பாவம்அதாவது பிரம்மம் தான் ஆத்மா ஜீவன் , ஜகத் இவை அதன் உடல் என்பதை பின்னும் விவரிக்கிறார் . அதைப் பின்னர் காண்போம்.

வேதார்த்த சங்க்ரஹம் -11

எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது ப்ரம்மமே என்பதனால் எப்படி ஒருவரின் பெயர் அவருடைய உடலை மட்டும் குறிக்காமல அவருடைய ஆத்மாவை குறிக்குமோ அதுபோல எந்தப் பொருளை குறிப்பிட்டாலும் அது பிரம்மத்தையே குறிக்கிறது.

இது எப்படி என்றால் இப்போது ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா போய்விட்டார் என்று சொல்கிறோம். அப்பா என்ற சொல் அவர் உடலை அல்ல அவர் ஆத்மாவைக் குறிக்கிறது என்று தெரிகிறது. அதே போல இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக உள்ள பிரம்மம்தான் எல்லாவற்றினாலும் குறிக்கப்படுகிறது.

‘யஸ்ய ஆத்மா சரீரம்’ என்ற உபநிஷத் வாக்கியமும் இதைத்தான் கூறுகிறது. அதனால் ‘ப்ரம்மாத்மகானி சர்வாணி’ எல்லாவிதமான உயிருல் உயிரில்லாத வஸ்துக்களும் பிரம்மத்திற்கு சரீரமாகவும் பிரம்மமே அவற்றின் ஆத்மாவாகவும் இருக்கிறது. அதனால் சொற்களின் மூலம் அறியப்படுவது எல்லாம் முடிவில் பிரம்மத்தையே சுட்டுகின்றன.

‘.ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்’ என்ற சாந்தோக்ய உபநிஷத் விளக்கத்தில் பிரம்மமே ஜகத்காரணம் என்று பார்த்தோம். அதற்குப்பிறகு ‘ஸந்மூலா: ஸௌம்ய இமா: ஸர்வா: பிரஜா: ஸதாயதனதா: ஸத்ப்ரதிஷ்டா:’ (சாந்தோக்ய-6.8., 4-6), இவை எல்லாம் ஸத், அதாவது பிரம்மத்தில் இருந்து தோன்றின, பிரம்மத்தில் இருக்கின்றன, பிரம்மத்தால் நிலைநிறுத்தப் படுகின்றன , என்ற வாக்கியம் காணலாம். 
எப்படி உடலுக்கு உயிர் காரணமோ , உயிரினால் உடல் வாழ்கிறதோ , உயிர் உடலை தாங்குகிறதோ அதேபோல பிரம்மம் இந்த உலகத்திற்கு உயிர் அல்லது ஆத்மாவாக இருக்கிறது,

எப்படி உடல் உயிரின் உடைமையோ அதே போல உலகம் பிரம்மனின் உடைமை. 
ராமானுஜர் மேலும் சொல்கிறார்

‘ஏதத் ஆத்ம்யம் இதம் ஸர்வம் தத் சத்யம்’ என்ற வாக்கியம் ‘தத் தவம் அஸி’ என்பதற்கு முன்பு காணப்படுகிறது. இதன் பொருள், பிரம்மம் ஜகத் காரணம் என்பதனால் இந்த உலகம் உண்மை ஏனென்றால் பிரம்மமே அதன் அந்தராத்மாவாக இருக்கிறது. பிறகு ‘தத் தவம் அஸி’ அந்த பிரம்மம்தான் உண்மையில் நீ என்று சொல்லப்படுகிறது.

க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ஜகத் தஸ்யசரீரம். அதாவது பிரம்மம் அகில உலகத்திற்கும் ஆத்மாவாக உள்ளது. அகில உலகமும் அதன் சரீரம்.

அதனால் தத் அந்த பிரம்மம் த்வம் அஸி நீதான். எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக் குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

தத் த்வம் அஸி என்பது ஏன் பிரம்மஜீவ ஐக்யத்தைக் குறிப்பதாக இருக்கக் கூடாது? ஏன் சரீர சரீரி பாவத்தை கொண்டுவரவேண்டும்

முதல் ஆறு அத்தியாயங்களும்  த்வம் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விளக்குகிறது.ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடைய வேண்டிய நிறை நிலை, அதற்கு எடுக்க வேண்டிய முயற்சி போன்றவை அடங்கி உள்ளது. இது முதல் ஷட்கம். ஏழாம் அத்தியாயம் முதல் பனிரெண்டு ஈறாக உள்ளவை இரண்டாம் ஷட்கம். அது  தத் எனும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரத்துவம் அல்லது பரமாத்மாவை விளக்குகிறது. பதிமூன்றிலிருந்து பதினெட்டு வரையிலான அத்தியாயங்கள் மூன்றாவது ஷட்கமாகும் அஸி எனும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்மா ஜீவாத்மா இணக்கத்தைத் தெரியப் படுத்துகிறது. தத் த்வம் அஸி என்னும் மூன்று பதத்துக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருக்கிறது கீதை.ஆக மஹாவாக்கியத்துக்கான வியாக்கியானம் என்றும் இதைஇயம்பவேண்டும்

ஒருவர் கீதையை பக்தி நூல் எனலாம். இன்னொருவர் ஞான மார்க்கம் எனலாம் மற்றொருவர் அதை யோக சாஸ்திரம் எனலாம் இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம்வெறும் பெயரளவில்  என்றும் கூறலாம். நீ அத்வைதியாயிரு, துவைதியாயிரு விசிஷ்டத்த்வைதியாயிரு என்றெல்லாம் அது புகட்டுவதில்லை. ”ஆத்மபோதம் அடையப் பெற்றவனாக ஆவாயாக. உனது பேரியல்பில் நிலை பெற்றிடு. பேராற்றல் படைத்தநீ உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இப்பூவுலகுக்கு வரவில்லை.உலகுக்கும் உனக்கும் தொடர்புண்டு. அதை நிலை நாட்டுவது யோகம். தூக்கி வினை செய்து அத்தொடர்பை நிரூபிப்பாயாக ஆத்மஸ்வரூபத்தில் அனைத்தையும் அடக்கிக் கொள்வாயாக மலர் மணம் வீசுவதுபோல உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும் ஒளிவிடும் ஞாயிறு போல் உன் அறிவு ஓங்கி இருப்பதாக எல்லாப் பிரிவுகளும் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம ஸ்வரூபத்தில் காண்கின்றன” என்று யோகேஸ்வரன்  உயிர்களை யோகிகளாகத் தூண்டுகிறான்.

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சில்லறை ரஹஸ்யங்கள்

June 9, 2025

அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள்

ஸ்ரீ ஸம்ப்ரதாய பரிசுத்தி ‘
தத்த்வ பதவீ
ரஹஸ்ய பதவீ
தத்த்வ நவநீதம்‌
ரஹஸ்ய நவநீதம்‌

தத்வ மாத்ருகை
ரஹஸ்ய மாத்ருகை
தத்த்வ ஸந்தேசம்‌
ரஹஸ்ய ஸந்தேசம்‌
ரஹஸய ஸந்தேச விவரணம்

‌ரஹஸ்ய சிகாமணி
அஞ்சலி வைபவம்

ஸ்ரீ பிரதான சதகம் —
விரோதி பரிக்ரஹம்
தத்வ ரத்னாவளி -தத்வ ரத்னாவளி ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்
ரஹஸ்ய ரத்னாவளி
ரஹஸ்ய த்ரய சுகளம்
சார சங்ஷேபம்
உபகார ஸங்க்ரஹம்-சார தீபம்

சுளகம்‌ என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று  பொருள்‌. அசேதனம்‌ - சேதநன்‌- ஈச்வரன்‌ என்னும்‌  தத்துவங்களைப்‌ பற்றிய விஷயங்களை உள்ளங்கையில்‌ வைத்தாற்‌ 
போல்‌ எளிதில்‌ காட்டுவதால்‌ இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர்‌ வந்தது.
ரஹஸ்ய மாத்ருகை (வடமொழியில்‌ ௮ முதல்‌ க்ஷ வரையில்‌ உள்ள 
ஐம்பத்தொன்று எழுத்துக்களுக்கு -மாத்ருகை” எனப்‌ பெயர்‌. இந்த
ரஹஸ்யத்தில்‌ திருமந்த்ரம்‌ - த்வயம்‌ - சரம ஸ்லோகம்‌ என்னும்‌ மூன்று
ரஹஸ்யங்களின்‌ ஸாரார்ததங்களைச்‌ சுருக்கி ஐம்பத்தொன்று
வாக்கியங்களில்‌ அருளிச்‌ செய்வதால்‌ ரஹஸ்ய மாத்ருகை
எனத்‌
திருநாமம்‌ வந்தது
எம்பெருமானுக்கு ஒர்‌ அணி போல போக்யமாய்‌ விளங்கும்‌ ரஹஸ்ய ரத்நாவளி யென்னும்‌ ரஹஸ்யத்தின்‌  தாத்பர்யத்தை என்‌ அறிவுக்கு ஏற்றவாறு அதன்‌ ஹ்ருதயமென்ற  பெயரால்‌ இவ்வாறு நானே விளக்கி ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தேன.-திருமகள் சேர்‌ மார்வனுக்குக்‌  கோல மா மணி யாரமும்‌' முத்துத் தாமமும்‌ போலே ரஹஸ்ய ரத்நாவளியும்‌  ஹ்ருதயத்துக்கு ஏற்கும்‌ திருவாபரணம்‌- என்றபடி 

வேதார்தத ஸங்‌க்ரஹம் கடைசி ஸ்லோகம்‌ -ஸாரம்‌ அஸாரம்‌ -இவற்றின்‌
பாகுபாட்டை அறிபவர்களாய்‌ மிகப்‌ பெரியராய்‌ பொறாமை யற்றவா்‌ களாய்‌ ப்ரமாணங்களுக்குக கட்டுப்பட்ட வர்களாயுள்ள பலர்‌ உலகில்‌ இருக்கின்றார்களென்று கருதியே இநத வேதார்த்த ஸங்கரஹம்‌ என்னால்‌ இயற்றப்பட்டது.
விஷ்ணு புரா. (2-7-28) மரத்தினுள்‌ தீப் போலவும்‌ எள்ளினுள்‌ எண்ணெய் போலவும்‌ ஜீவாத்மா அசேதநமான சரீரத்தினுள்‌ புகுந்து எங்கும்‌ செல்ல வல்லவனாய் ஞானமுடையனாய்த்‌ தானே தன்னை அறிபவனாயுள்ளான்‌.

பரஹ்ம ஸூ. (3-2-5) * ஜீவனது இயற்கையான ரூபம்‌ ஸம்ஸார தசையில்‌ பரமாத்ம ஸங்கல்பத்தால்‌ மறைந்துள்ளது. அந்த மறைவு ஸ்ருஷ்டி காலத்தில்‌ சரீரமாக மாறுபட்ட அசேதநத்தின்‌ ஸம்பந்தத்தாலும்‌ ப்ரளய தசையில்‌ ஸூக்ஷ்ம நிலையுள்ள அசேதநத்தின்‌ ஸம்பந்தத்தாலும்‌ வருகின்றது.

ப்ரஹ்ம ஸூ. (3-1-4 ப்ரஹ்ம ஜ்ஞாநமின்றி யாகம்‌ தானம்‌ முதலிய புண்ணிய கர்மங்களை மட்டும்‌ செய்பவன்‌ வேறு சரீரத்தைப்‌ பெறும் போது பஞ்ச பூதங்களின்‌ ஸூக்ஷ்மமான அம்சங்களின்‌ தொடர்புடனேயே செல்கின்றான்‌. ஏனெனில்‌ - ஸ்வேதகேதுவை பரவாஹணன்‌ இவ் விஷயங்களைப்‌ பற்றிக்‌ கேட்ட கேள்வியாலும்‌
ஸ்வேதகேது கூறும்‌ விடையாலும்‌ இவ்வம்சம்‌ தெளிவு படுவதால்‌.

பாகவதம்‌ (1717-72-75): எல்லா உயிர்களுக்கும்‌ அந்தாயாமியான்‌ என்னை ஒருவனையே எல்லாவகையாலும்‌ சரணமாகப்‌ பற்று. அங்ஙனம்‌ செய்தால்‌ எவரிடமும்‌ பயமற்ற இருப்பைத்‌ தரும்‌ மோக்ஷத்தை அடைவாம்‌. (உத்தவருக்குக்‌ கண்ணன்‌ உபதேசம்‌).
பாகவதம்‌ ( 11-19-18) * கர்ம பலன்களை அனுபவிககப்‌  பிறந்தவர்களான பிரமன்‌ வரை உள்ள அனைவரும்‌ பிறரின்‌  பாபத்தைப்‌ போக்க வல்லரல்லர்‌ என்பதை உணர்ந்து அவர்களை  அணுக விரும்பாதவர்க்கு வாஸுதேவனே அடையப்படும்‌ சிறந்த  பலனாவான. 

ஸ்ரீ பாஷ்யகாரர்‌ வாக்யம்‌ : ப்ரபத்தியென்பது நம்பிக்கை. அதாவது -
ஒரு தடவை பிரார்த்திப்பதாலேயே வேண்டிய பலனைத்‌ தருவான்‌ என்ற
நம்பிக்கையுடன்‌ பிரார்த்திப்பது


விஷ்ணு புரா. (7-9-78)- எம்பெருமானே! ஸகல பாபங்களையும்‌ ஒழிக்கவல்ல உன்னைச்‌ சரணமடையாத வரையில்‌ தான்‌ மனிதனுக்குத தான்‌ இழந்த ஐச்வர்யத்தை மறுபடி பெற வேண்டுமென்ற கவலையும்‌, புதிய ஜச்வர்யத்தைப்‌ பெற ஆசையும்‌, சரீரததிலும்‌' வேறுபட்ட ஆத்மாவை அநுபவியாமையும்‌, ஸம்ஸார துக்கமும்‌ இருககும்‌.

ப்ரஹ்மபு (50)*+ பக்தி யோகம்‌ செய்யமுடியாமல்‌ உன்னிடம்‌ ப்ரபததியைச செய்தவர்களும்‌ ஸம்ஸார மண்டலத்தைக்‌ கடந்து பரமபதததை அடைகின்றனர்‌


லக்ஷ்மீ தந்‌ (17-76)* நிக்ஷேபம்‌ என்ற வேறு பெயரையுடைய பரநயாஸம்‌ ஐந்து அங்கங்களுடன்‌ கூடியது இதுவே “ஸநநயாஸம்‌, த்யாகம்‌, சரணாகதி' எனற பெயர்களால்‌ வழங்கும்‌.


லக்ஷ்மீ தந (177-100): பக்தியோகாதிகளில்‌ தெளிவான ஞானமோ,
ப்ரபத்தியிலும்‌ ஸூக்ஷ்மமான விசேஷங்களில்‌ அறிவோ
இல்லாதவர்க்கும்‌ இநத ப்ரபததியே ஏற்ற உபாயம்‌. பகதி யோகாதிகளில்‌
தெளிவான ஞானமோ, ப்ரபததிககு வேண்டிய சரண்யனுடைய குண
விசேஷங்களில்‌ ஞானமோ உடையவர்க்கும்‌ இநத ப்ரபத்தியே
உபாயமாகும்‌. விரைவில்‌ ஸம்ஸாரததைக கடக்க விரும்புமவாககும்‌
இதுவே உபாயமாகும்‌. ஸ்ரீவைகுண்டத்தில்‌ விரைவில பரிபூர்ண
பகவதநுபவததைப்‌ பெற விரும்பு மவர்க்கும்‌ இநத ப்ரபததியே
உபாயமாகும்‌.

ஜிதந்தா (1-18) - மிகவும்‌ கெட்ட புத்தியடையனான நான்‌ எங்கே? என்‌ நன்மையை ஆலோசிதது அறிவது எங்கே? ஆதலின எம்பெருமானே! எனக்கு நன்மையை நீயே கட்டளையிட வேண்டும்‌. உன்னைச்‌ சரணமடைந்தேன்‌. உனக்கு அடியனான எனக்கு வேறு கதியில்லை. இப்பொழுதே என்னை உன்‌ திருவடிக்‌ கமலத்தில்‌ சோத்துக
கொண்டு கைங்கரியம்‌ புரியுமாறு செய்‌.
விஷ்ணு புராணம்‌ ( 2- 13- 98) - அரசனே! ஜீவன்‌ தேவனல்லன்‌; மனிதனலலன்‌; மிருகமல்லன்‌; மரமல்லன்‌. சரீரங்களின்‌ அமைப்பினால்‌ ஏற்பட்ட இவ்வேற்றுமைகள்‌ கர்மத்தால்‌ வந்த சரீரங்களைப்‌ பற்றியனவேயாகும்‌.
விஷ்ணு புராணம்‌ (1-1-31) - ப்ரபஞ்சம்‌ எம்பெருமானுடைய ஸங்கலபத்தால்‌ உண்டானது. பிரளயத்தில்‌ அவனிடமே லயத்தை அடைகிறது. இதைக்‌ காப்பவனும்‌ அழிப்பவனும்‌ அவனே. ப்ரபஞ்சமே அவனுக்குச்‌ சரீரம்‌.

பாரதம்‌ - ஸபா (41-23) - கண்ணன்‌ ஒருவனே உலகங்களுக்கு உத்பத்தி ஸ்தாநம்‌. லயிக்கும்‌ இடமும்‌ அவனே. தாவர ஜங்கமமாகிய இவ்வுலகம்‌ முழுதும்‌ கண்ணனுக்காகவே ஏற்பட்டது.
பாகவதம்‌ ( 11-19-18) * கர்ம பலன்களை அனுபவிககப்‌ பிறந்தவர்களான பிரமன்‌ வரை உள்ள அனைவரும்‌ பிறரின்‌ பாபத்தைப்‌ போக்க வல்லரல்லர்‌ என்பதை உணர்ந்து அவர்களை அணுக விரும்பாதவர்க்கு வாஸுதேவனே அடையப்படும்‌ சிறந்த பலனாவான.

எம்பெருமானுடைய திருவடிகளில்‌ நம்மைச்‌ சேர்க்கின்ற பிராட்டியும்‌(1),அவனோடு சேர்ந்திருப்பதில்‌ ஸ்திரமான தன்மையும்‌ (2),சீர்மையால்‌ பெரியனான எம்பருமானுக்குத்‌ தக்கனவாகிய குணங்களும்‌(3),ஆஸ்ரிதர்கள்‌ த்யானிக்க இலக்கான திருமேனியின்‌ பகுதியாகிய இரண்டு திருவடிகளும்‌ (4),சேதநர்களால்‌ ப்ரதாநமாய்க்‌ கருதப்படுகின்ற உபாயமான ஸ்ரீமந்‌ நாராயணனும்‌ (5),உபாயமாகிய எம்பெருமானிடம்‌ மஹா விஸ்வாஸத்துடன்‌ கூடிய பர ந்யாஸமும்‌ (6), வேறு உபாயத்தில்‌ அதிகாரமற்ற நம்முடைய நிலைமையும்‌ (7),நாம்‌ அடைகின்ற ப்ரதாந பலனாகிய ஸ்ரீமந் நாராயணனும்‌ (8),சேதநன்‌ கைக்‌ கொள்கின்ற எல்லைகளாகிய பகவத்‌ பாகவத கைங்கர்யம்‌ முதலியவையும்‌ (9),அஹங்கார மமகாரங்கள்‌ முதலிய எல்லாக் களைகளும்‌ நீங்கப்‌ பெறுதலும்‌ (10)ஆகிய பத்‌து அர்ததங்களையும்‌ த்வயத்தில்‌ அநுஸந்தித்தோம்‌.

சிஷ்யன்‌ மோக்ஷம்‌ பெறுதற்கு முதற் காரணம்‌ –சேதநம்‌ – அசேதநம்‌ – ஈஸ்வரன்‌ ஆகிய மூன்று தத்துவங்களில்‌ விளக்கமான அறிவேயாகும்‌. இந்த அறிவு பெறும்‌ முறையை உபநிஷத்துப்‌ பசு – பால்‌ – நெய்‌ என்ற மூன்று உதாஹரணங்களைக்‌ கூறி விளக்கியுள்ளது. அந்த விளக்கம்‌ வருமாரு – பசுக்கள்‌ பல்வேறு நிறமுமையனவாயினும்‌ அவற்றினின்று தோன்றும்‌ பால்‌ ஒரே வகையாயுள்ளது. அவ்வாறே அசேதநமான சரீரங்கள்‌ தேவர்‌ – மனிதர்‌ முதலிய பிரிவை யுடையனவாயினும்‌ அவற்றுள்‌ .இருக்கும்‌ ஜீவாத்மாவின்‌ ஸ்வரூபம்‌ ஒரே வகையதே யாகும்‌–மறைந்துள்ள நெய்‌ நம்‌ கண்ணுக்குப்‌ புலப்படாதது போல்‌ அந்த ஜீவர்களுக்குள்‌ அந்தர்யாமியாய்‌ நிற்கும்‌ எம்பெருமானும்‌ நம்‌ கண்ணுக்குப்‌ புலப்படுவதில்லை யென்பது. இந்தக்‌ கருத்தையே தமிழ்‌ மறை முடியான திருவாய்மொழியும்‌ கறந்த பாலுள்‌ நெய்யே போல்‌? என்று பேசியது. இந்த ஸூக்தியில்‌ சேதநம்‌ மட்டுமன்றி அசேதநத்தையும்‌ கூட்டிக்‌ கொண்டு அவனுக்குச்‌ சரீரமான சேதநம்‌ அசேதநம்‌ இரண்டுடினுள்ளும்‌ உட்புகுந்து எம்பெருமான்‌ அந்தர்யாமியாய்‌ நின்றும் நியமித்த அருளுவதை அநுஸந்தித்துக்‌ கொள்ள வேண்டும்‌.

1-கர்த்தா -2-ப்ரேரகன்‌ (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பல ப்ரதன்‌
(7) பலி (8) உதாஸீநன்‌
என்று அந்த அந்த நிலைகளில்‌
1-கர்த்தா – வஸ்துவினுள்‌ புகுந்து படைப்பு முதலியவற்றைச்‌ செய்பவன்‌.
(2) ப்ரேரகன்‌ – ஜீவனுக்கு அறிவைக்‌ கொடுத்து ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவுபவன்‌.
(3) அநுமந்தா – சேதநன்‌ செயலைச்‌ செய்யும் போது அதைச்‌ செய்விப்பவன்‌.
(4) ஸஹகாரி – சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ பெரும் பகுதியை ஏற்றுத்‌ துணை செய்பவன்‌.
(5) ஸாக்ஷி! சேதனன்‌ செய்யும்‌ செயலை நேரில்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌.
(6) பல ப்ரதன்‌ – சேதநன்‌ செயல்களுக்குப்‌ பலனை அளிப்பவன்‌.
(7) பலி -அச்செயலின்‌ பலனை முக்கியமாய்ப்‌ பெறுமவன்‌.
(8) உதாஸீநன்‌ – சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ விசேஷமான தொடர்பற்றுப்‌ பொதுக்‌ காரணமாக இருப்‌பவன்‌

பிரணவத்தில்‌ கடை எழுத்தான மகாரத்தால்‌ கூறப்படும்‌ ஜீவன்‌ முதலெழுத்தான அகாரத்தால்‌ கூறப்படும்‌ எம்பெருமானுக்கும்‌ நடு எழுத்தான உகாரத்தால்‌ கூறப்படும்‌ பிராட்‌டிக்கும்‌ தாஸனாய்‌ நிற்பவன்‌ என்று பொருள்‌ தேறுகின்றது. -ஆனால்‌ இவ்வாறு பொருள்‌ கொண்டால்‌ அவர்கள்‌ இருவருக்கே தாஸன்‌ என்ற வரையறை எவ்வாறு கிடைக்கும்‌ என்று கேட்கலாம்‌. கருத்து வகையில்‌ பெற்று விடலாமென்பது விடை. குறிப்பிட்டு இருவரைக்‌ கூறி அவர்களுக்குச்‌ சேஷமென்றால்‌ வேறு ஒருவருக்கும்‌ சேஷனல்லன்‌ என்று தானாகவே தேறிவிடுமென்றோ?
”ந-ம:” என்பதற்கு எனக்கு நான்‌ உரியனல்லன்‌ ; மற்றவற்றிலும்‌ எனக்கு உரிமை யில்லை? என்று பொருள்‌ தேறுவதால்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ளத்‌ தனக்குச்‌ சக்தி யற்றமை – வேறு புகலற்றமை முதலிய பொருள்களும்‌ கருத்து வகையில்‌ கிடைக்கின்றன. ந என்பது மறுப்பைக்‌ கூறும்‌ சொல்‌. ம: என்பதால்‌ கூறப்‌பட்ட விரோதியான அம்சத்தை ந என்பது கூடாதென்று மறுக்கின்றது-இங்கு சேஷித்வம்‌ என்ற ஒரு சொல்லை. வருவித்துக்‌ கொண்டு
“ம: சேஷித்வம்‌ ந” என்று வைத்து எனக்கு என்னைப் பற்றியும்‌ என்‌ உடைமைகளைப்‌ பற்றியும்‌ உரிமை இல்லை யென்றும்‌ பொருள்‌

நாராயண சப்தம்‌ நார – அயந என்ற இரண்டு பதங்கள்‌ சேர்ந்து உருக்கொண்டதாகும்‌. இதை இரண்டு விதமாய்ப்‌ பிரிக்கலாம்‌. (1) பஹு வ்ரீஹி (அன்மொழித் தொகை) (2) தத் புருஷன்‌
(வேற்றுமைப்‌ புணர்ச்சி) என்று-பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ – நார சப்தார்த்தம்‌-நாரா : அயநம்‌ யஸ்ய – நூராயண:. இது பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ என்று பெயர்‌ கொண்டது. இதனின்று
நாரங்களை அயநமாக வுடையன்‌ எம்பெருமான்‌ என்று தேறும்‌.

நர” என்று ஆகும்போது அழியும்‌ பொருளான அசேதநத்திற்‌ காட்டிலும்‌ வேறுபட்ட அழியாப்‌ பொருளான ஜீவாத்மாவைக்‌ கூறும்‌. நார என்னும்‌ சொல்லுக்கு நராணாம்‌ ஸஹூஹா : ௪ நாரா: என்று கூட்டி ஜீவாத்மாக்களின்‌ கூட்டங்கள்‌ என்று யொருள்‌ கொள்ள வேண்டும்‌. நாரா: என்று பன்மையில்‌ இருப்பதால்‌ ஜீவர்களின்‌ கூட்டங்கள்‌ பலவென்று கூறியதாயிறறு. நர என்னும்‌ சொல்‌ அழியாத ஜீவனைக்‌ கூறுவதாக முன்‌ சொல்லிய வழியாலேயே எவ்வகையிலும்‌ அழியாத ஸர்வேஸ்வரனையும்‌ கூறுமன்றோ? ஆகவே ஸர்வேஸ்வரன்‌ நரனாகிறான்‌. மேலும்‌ –நர சப்தம்‌ *ந்ரு’ என்ற வினைப்பகுதியினின்று தேறுவதும்‌ உண்டு. இந்த வினைப்பகுதிக்கு ”ந்ரு- நமே? என்றபடி வழியில்‌ நடததிச செல்லல்‌ பொருளாகும்‌. ஆகவே எல்லாப்‌ பிராணிகளையும்‌ அந்த அந்த வழியில்‌ நடததுமவனான எம்பெருமானை நர” என்ற சொல்‌ கூறுவதில்‌ தடை என்ன? ஆகவே இவ்விரண்டு வழிகளாலும்‌ நர
சப்தம்‌ எம்பெருமானையே கூறி விடுகின்றது. நார சப்தததை-நரஸம்டாந்தி – நாரம்‌ என்று கூட்டிப்‌ பார்த்தால்‌ ஸர்வேஸ்வரனுடன்‌ தொடர்புள்ளவை என்று பொருள்‌ தேறும்‌. அவனோடு தொடர்பற்ற வஸ்து ப்ரபஞ்சத்தில்‌ ஏது? அதலின்‌ ப்ரமாணங்கள்‌ சொல்லுகிறபடி
அவனுக்குச்‌ சேஷமாகவோ சரீரமாகவோ அவனைச்‌ சேர்ந்த சேதநம்‌ அசேதநம்‌ ஆகிய ஸகல வஸ்துக்களுமே நார சப்தத்திற்குப்‌ பொருளாகி விடுகின்றன. இப்படி நார சப்தத்துக்கு முதவில்‌ ஜீவர்களின்‌ கூட்டமென்றும்‌, பின்பு கூறிய முறையில்‌ சேதந அசேதநங்களின்‌ கூட்டமென்றும்‌ பொருள்‌ தேறி நிற்கின்றது.

நாராணாம்‌ அயதநம்‌” என்ற தத் புருஷ ஸமாஸத்தில்‌ பொருளைப்‌ பார்ப்போம்‌. அயநம்‌ என்ற சொல்லுக்கு “உபாயம்‌ பலன் – ஆதாரம்‌ என்ற மூன்று பொருள்கள்‌ உண்டு. அயநம்‌
என்ற சொல்லை ?ஈயதே அநேந? என்று விரிததால்‌ ஒன்றை அடையக்‌ காரணமாயிருப்பவன்‌ என்று பொருள்‌ தேறுவதால்‌ உபாயம்‌ என்று கிடைத்துவிடும்‌. ?ஈயதே அஸெள? என்று விளக்கினால்‌ அடையப்படும்‌ பலனாயுள்ளவன்‌ என்று பொருள்‌
இடைக்கும்‌. *ஈயதே அஸ்மிந்‌ என்று பிரித்தால்‌ ஆதாரம்‌ என்ற பொருள்‌ தேறி விடும்‌.

பஹுவ்ரிஹி – அயந சப்தார்ததம்‌-அயநம்‌ என்ற சொல்லுக்கு இருப்பிடம்‌ – சூழ்ந்து நிற்கப்‌ பெறும்‌ வஸ்து என்ற இரண்டு பொருள்‌ உண்டு. நாரங்களை அயநமாக வுடையன்‌ என்னும் போது முதற்‌ பொருளில்‌ சேதத அசேதநங்களைத்‌ தனக்கு இருப்‌பிடமாக வுடையன்‌ எம்பெருமான்‌ என்றும்‌ இரண்டாம்‌ பொருளில்‌ சேதந அசேதநங்களைத்‌ தான்‌
சூழ்ந்து நிற்கும்‌ வஸ்துக்களாகக்‌ கொண்டவன்‌
என்றும்‌ பொருள்‌ கிடைக்கின்றது. இங்கு முதற்‌ பொருளில்‌ அவை உள்ளவிடத்தில்‌ தான்‌ இல்லை யென்று சொல்ல முடியாதவாறு கலந்து நிற்பதாகிய அந்தர் வ்யாப்தி கூறப்பட்டதாகின்றது. இரண்டாம்‌ பொருளில்‌ அந்த வஸ்துக்கள்‌ இல்லாதவிடத்திலும்‌ தான்‌ உளன்‌ என்று கூறும்படி திற்றலாகிய பஹிர்வ்யாப்தி சொல்லப்‌ பட்டதாகின்றது. இப்படி அந்த அந்த வஸ்துக்களில்‌ உள்ளும்‌ புறமும்‌ சிறிதும்‌ தப்பாதவாறு பரிபூர்ணமாய்‌ எம்பெருமான்‌ நிற்கின்ற நிலை
வெளியாகின்றது. மேலும்‌ சேதந – அசேதந வஸ்துக்களுள்‌ சாஸ்வதமாகப்‌ புகுந்து நியமித்துக்‌ கொண்டும்‌ சூழ்ந்து கொண்டும்‌ எம்பெருமான்‌ இருப்பதால்‌ அவை இவனுக்குச்‌ சரீரமாயுள்ளமையும்‌ இவன்‌ அவற்றுக்கு ஆத்மாவாய்‌ நிற்பது மாகிய ஸம்பந்தம்‌ விளங்குகின்றது.

நான்கு அத்யாயங்களின்‌ ஸாரார்த்தங்களும்‌ திருமந்திரத்தில்‌ உள்ள நாராயண சப்தத்தில்‌ சுருக்கமாய்க்‌ கூறப்பட்டுள்ளன.எவ்வாறெனில்‌ – நர சப்தத்தால்‌ எம்பெருமானைக்‌ கூறி
அவனிடமிருந்து தோன்றிய சேதந அசேதநங்களை நார சப்தத்துக்குப்‌ பொருளாகக்‌ கூறும்போது ப்ர பஞ்சத்துக்கு அவன்‌ காரணமென்று ஏற்படுவதால்‌ முதல்‌ அத்யாயததின்‌ பொருள்‌ கூறுவதாகக்‌ கொள்ளுதல்‌ பொருந்தும்‌. நரன்‌ என்ற சொல்‌ எம்பெருமானை அழிவு, மாறுபாடு முதலிய குற்றமற்றவனெனக்‌ கூறுவதால்‌ அவனது காரணத் தன்மை தடையற்றதாய்‌ உறுதியாக்கப்‌ பட்டு இரண்டாம்‌ அத்தியாயத்தின்‌ பொருளைக்‌ காட்‌
டுகின்றது.
அயநம்‌ என்ற சொல்லுக்கு உபாயம்‌ என்ற பொருளைக்‌
கொண்டால்‌ சேதநர்களுக்கு உபாயமாயுள்ளவனென்ற மூன்றாவது அத்யாயத்தின்‌ பொருள்‌ கிடைக்கின்றது. அயந சப்தத்தூக்குப்‌ பலன்‌ என்ற பொருளைக்‌ கொண்டு. சேதநர்களால்‌ அநுபவிக்கப்‌ படும்‌ பலனாகவும்‌ உள்ளானென்று நான்காவது அத்யாயத்தின்‌
பொருளையும்‌
இங்குக்‌ கண்டுவிடலாம்‌.

ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரய ஸாரத்தில்‌ கூறாத -சில விஷயங்களைச்‌ சில்லரை 
ரஹஸ்யங்களில்‌ அருளிச்‌ செய்திருப்பதை நன்கு காணப்‌ பெறலாம்‌-
ஸ்ரீ சப்தத்தின்‌ ஆறு பொருள்கள்‌

இந்த ஸ்ரீ என்னும்‌ சப்தததுக்கு இலக்கண முறையைத்‌ தழுவி அறு வகைப்‌ பொருள்களைச்‌ சாஸ்தரம்‌ கூறுகின்றது.
அவையாவன -
(1) ஸ்ரீயதே - ஆஸ்ரயிக்கப்படுகின்றாள்‌. நற்கதியைப்‌ பெற
வேண்டுமென்று விரும்பும்‌ எல்லாச்‌ சேதநர்களும்‌' இவளை வந்து
ஆஸ்ரயிக்கின்றார்கள்‌.
(2) ஸ்ரயதே - அடைகின்றாள்‌. யாரை? ஸர்வேஸ்வரனை... அவன் அபராதம்‌ செய்த சேதநர்களைத தண்டிக்க முற்படும் போது பிராட்டி அவனை அடைந்து அவன்‌ கொண்ட சீற்றத்தை ஆற்றி அவர்களைக்‌ காக்குமாறு செய்து விடுகின்றாள்‌.
(3) ஸ்ருணோதி - கேட்கின்றாள்‌ (செவி சாய்க்கின்றாள் )அபராதிகளான சேதநர்கள்‌ இவளிடம்‌ வந்து தங்களை எம்பெருமான்‌ திருவடிகளில்‌ காட்டிக்‌ கொடுத்து ரக்ஷித்தருள வேண்டுமென்று மனம்‌ நொந்து சொல்லும்‌ சொற்களைக்‌. கேட்டுக்‌
கொள்கின்றாள்‌. .
(4) ஸ்ராவயதி - கேட்கும்படி செய்கின்றாள்‌. அதாவது - எடுத்துச்‌
சொல்லுகின்றாள்‌. சேதநர்கள்‌ ஈனக்குரலோடு கூறியவற்றைக்‌ கூறி
அவர்களின்‌ துயரம்‌ தீர்க்குமாறு ஸர்வேச்வரனிடம்‌ விண்ணப்‌ பிக்கின்றாள்‌.
(5) ஸ்ருணாதி - ஒழிக்கின்றாள்‌. அடியார்களின்‌ குற்றங்களை
யெல்லாம்‌ தகர்க்கின்றாள்‌. இதுவரை உபாயத்தைச்‌ செய்யவும்‌
மோக்ஷ்மாகிய பலனைப்‌ பெறவும்‌ தடையாயிருந்த கர்மங்களை
யெல்லாம்‌ ஒழிக்கின்றாள்‌.
(6) ஸ்ரீணாதி - பரிபக்குவ நிலையை உண்டாக்குகின்றாள்‌. -தன்னை அடைந்தவர்களுக்குத்‌ தன்‌ அருளால்‌ ஜ்ஞாதம்‌ பக்தி முதலிய நற்குணங்களைப்‌ பரிபக்குவ நிலைக்குக்‌ கொண்டு வருகின்றாள்‌-

திரும்ந்திரத்திலே பிறத்தல்‌
திருமந்தரததிலே பிறக்கையாவது
– முதல்‌ ரஹஸ்யமான திரு மந்த்ரத்தையும்‌ அதன்‌ அர்த்தங்களையும்‌ ஆசார்யனால்‌ உபதேசிக்கப்‌ பெற்றால்‌ சேதநனுக்குப்‌ புதிய பிறவி உண்டாகின்றது. இதுவரை விவேகம்‌ பெறாமவிருத்தபடியால்‌ முன்‌ தாய்‌ வயிற்றில்‌ பிறந்த பிறவி நேர்மையானதாகாகாகையால்‌ இவனைப்‌ பிறந்தவனாகவே கருத முடியாது. திருமந்திரத்தின்‌ அர்ததத்தை அறிந்த பின்‌ ஜீஸ்வாத்மாவினுடைய ஸ்வரூபம்‌ –
எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌ – இருவருக்கும்‌ உள்ள ஸம்பந்தம்‌ முதலிய பற்பல முக்கிய விஷயங்களை அறிய முடிவதால்‌ இப்பொழுது தான்‌ அவன்‌ உலகில்‌ பிறந்தவனாகின்றான்‌.

த்வயததில்‌ வளர்தல்‌
த்வயத்தில்‌ வளருகையாவது
– திருமந்திரம்‌ கூறிய அர்த்தங்களை மிக விளக்கமாகக்‌ கூறுகின்றது த்வயம்‌. உயர்ந்த தததுவமாய்‌ எல்லோரையும்‌ காக்கவல்ல எம்பெருமானை த்வயம்‌ நன்கு தெளிவு படுத்துகின்றது. நமக்குப்‌ பெரிய நன்மையை விளைவிப்‌ பதாய்‌ நமக்குச்‌ செய்ய ஏற்றதான சரணாகதியைத்‌ திருமந்திரததிற்‌ காட்டிலும்‌ விளக்கமாய்க்‌ கூறுகின்றது த்வயம்‌.-மேலும்‌ மோக்ஷத்தில்‌ அவனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமாகிய சிறந்த
பலனையும்‌ கூறுகின்றது த்வயம்‌. மேலும்‌ அப் பலனுக்காக ப்ர பத்தியைச்‌ செய்ய வேண்டிய முறையையும்‌ முக்கியமாக வைத்துத்‌ தெளிவாய்க்‌ காட்டுகின்றது இந்த த்வயம்‌.
இவ வுண்மைகளை அறிந்து சரணாகதியைச்‌ செய்தலே -த்வயத்தினால்‌ சேதநன்‌ பெற்ற வளர்ச்சியாகும்‌.
த்வயத்திலேயே நிஷ்டை யுடைமை
த்வயத்திலேயே நிஷ்ட்டனாகையாவது
– ப்ரபத்திக்குப்‌ பின் அவகாசமுள்ள . போதெல்லாம்‌ த்வயத்தையே அநுஸத்திததுக்‌ கொண்டேயிருந்து வேறு உபாயத்தையும்‌ வேறு பயனையும்‌
நாடாமல்‌ த்வயம்‌ காட்டிய சரணாகதியிலும்‌ அவன்‌கைங்கர்யமாகிய பலனிலும்‌ மிக்க ஊற்றத்துடன்‌ நிற்கை.
த்வயத்தின்‌ அமைப்பு
இந்த த்வயம்‌ இரண்டு. பகுதியாயுள்ளது. முற்பகுதி -உபாயமான சரணாகதியையும்‌ பிற்பகுதி பலனான கைங்கர்யத்தையும்‌ ஆக இரண்டையும்‌ தெளிவாய்‌ விளக்குவதால்‌ த்வயம்‌ இரண்டு என்று பெயர்பெற்றது.

ஶ்ரீ ஹர்யஷ்டகம் (ஸ்ரீ ப்ரஹ்லாத³ க்ருதம்)-ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர் க்ருதம் ||

June 8, 2025

ஶ்ரீ ஹர்யஷ்டகம் (ப்ரஹ்லாத³ க்ருதம்) ||

ஹரிர்ஹரதி பாபாநி து³ஷ்டசித்தைரபி ஸ்ம்ருத꞉ ।
அநிச்ச²யா(அ)பி ஸம்ஸ்ப்ருஷ்டோ த³ஹத்யேவ ஹி பாவக꞉ ॥ 1 ॥

கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ

ஸ க³ங்கா³ ஸ க³யா ஸேது꞉ ஸ காஶீ ஸ ச புஷ்கரம் ।
ஜிஹ்வாக்³ரே வர்ததே யஸ்ய ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 2 ॥

வாராணஸ்யாம் குருக்ஷேத்ரே நைமிஶாரண்ய ஏவ ச ।
யத்க்ருதம் தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 3 ॥

ப்ருதி²வ்யாம் யாநி தீர்தா²நி புண்யாந்யாயதநாநி ச ।
தாநி ஸர்வாண்யஶேஷாணி ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 4 ॥

க³வாம் கோடிஸஹஸ்ராணி ஹேமகந்யாஸஹஸ்ரகம் ।
த³த்தம் ஸ்யாத்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 5 ॥

ருக்³வேதோ³(அ)த² யஜுர்வேத³꞉ ஸாமவேதோ³(அ)ப்யத²ர்வண꞉ ।
அதீ⁴தஸ்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 6 ॥

அஶ்வமேதை⁴ர்மஹாயஜ்ஞைர்நரமேதை⁴ஸ்ததை²வ ச ।
இஷ்டம் ஸ்யாத்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 7 ॥

ப்ராண꞉ ப்ரயாண பாதே²யம் ஸம்ஸாரவ்யாதி⁴நாஶநம் ।
து³꞉கா²த்யந்த பரித்ராணம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 8 ॥

(ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் -)

ப³த்³த⁴꞉ பரிகரஸ்தேந மோக்ஷாய க³மநம் ப்ரதி ।
ஸக்ருது³ச்சாரிதம் யேந ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 9 ॥

ஹர்யஷ்டகமித³ம் புண்யம் ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
ஆயுஷ்யம் ப³லமாரோக்³யம் யஶோ வ்ருத்³தி⁴꞉ ஶ்ரியாவஹம் ॥ 10 ॥

ப்ரஹ்லாதே³ந க்ருதம் ஸ்தோத்ரம் து³꞉க²ஸாக³ரஶோஷணம் ।
ய꞉ படே²த்ஸ நரோ யாதி தத்³விஷ்ணோ꞉ பரமம் பத³ம் ॥ 11 ॥

இதி ப்ரஹ்லாத³க்ருத ஶ்ரீ ஹர்யஷ்டகம் ।

—————————-

ஶ்ரீ ஹர்யஷ்டகம் -ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர்க்ருதம் ||

ஸ்வமுத்³த⁴ர்தும் ஹரே வேத்தி கிம் கூபே பதித: பஶு: ।
க்ஷிபந்நங்க்⁴ரிம் முஹுர்க்ரந்த³ந் க்ரு’பாம் ஜநயதி ப்ரபோ⁴ ॥ 1॥

அநிச்ச²தோऽபி தஸ்யாஜ்ஞஸ்யாங்க³ம் குக்ஷிம் ச தா³மபி:⁴ ।
ஶநைர்நிப³த்⁴ய ஸ்வஜநைர்ஹரே ஸ பரமுத்³த⁴ரேத் ॥ 2॥


ஸ ஹரே லாலயேத் பங்கம் க்ஷாலயேத் பாலயேத்த்ரு’ணை: ।
ஶமயே தௌ³ஷதை⁴ர்மந்த்ரை: ஸ்வகோ³ஷ்ட²ஸ்தஸ்ய வேத³நாம் ॥ 3॥


ததா² நரபஶோரீஶ ப⁴வகூபேऽர்தி³தஸ்ய மே ।
ஹரே பரிஹராஶேஷ க்லேஶம் கேஶிக்⁴ந கேஶவ ॥ 4॥


மாம் ஹி ஜீவந்ம்ரு’தம் கர்தும் யதந்தே பரித: க²லா: ।
தாந்நிஹத்ய ஹரே ஶீக்⁴ரம் ஸேவாயாம் தே நியுங்க்ஷ்வ மாம் ॥ 5॥


காமாத்³யாऽந்தர ஶத்ருப்⁴யோ பா³ஹ்ய ஶத்ருப்⁴ய ஏவ ச ।
பீ⁴தம் ஹரேऽஸுராத்³பீ⁴தம் ப்ரஹ்லாதா³ஹ்லாத³ பாஹி மாம் ॥ 6॥


ஆதீ⁴ந்வ்யாதீ⁴நரீந்ராஜ்ஞோ த்³ரோஹிணோऽந்யாம்ஶ்ச து³ர்ஜநாந் ।
க்ஷிப்ரம் நாஶய ஸர்வஜ்ஞ ஸர்வஶக்தே ஹரே மம ॥ 7॥


கலிம் க²ண்ட³ய தத்³ப்⁴ரு’த்யாந் த³ண்ட³யாஶு ஹரே மம ।
மநஶோத⁴ய ஸத்தத்த்வம் போ³த⁴யேஷ்டம் ப்ரஸாத³ய ॥ 8॥


வாதி³ராஜ யதி ப்ரோக்தமேவம் ஹர்யஷ்டகம் நவம் ।
பட²ந் ந்ரு’ஸிம்ஹ க்ரு’பயா ரிபூந் ஸம்ஹரதி க்ஷணாத் ॥ 9॥


இதி வாதி³ராஜதீர்த²விரசிதம் ஹர்யஷ்டகம் ஸம்பூர்ணம் ।

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ப்ரஹ்லாத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ப்ரமாணத்திரட்டு –

June 7, 2025

1-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ-தை சீஷா -11-2-அகில ஜகன்மாதாவான பிராட்டியையும் அழிவற்ற தந்தையுமான அச்சுதனையும் அறியாதது அறிவித்த ஆசார்யனையும் விருந்தாகும் பெருந்தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

2-ஆசரதீத் யாசார்ய-வ்யுத்பத்தி -ஆசரித்து -அனுஷ்டித்துக் காட்டுமவன் ஆசார்யன்

3–ஆசினோதி ஹி ஸாஸ்த் ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
எவன் ஒருவன் சாஸ்த்ரார்த்தங்களை சிஷ்யர்களுக்கு உபதேசித்து -அவர்களை சதாசாரத்திலே நிலை நிறுத்தி தானும் ஆசரிக்கிறானோ அவனே ஆச்சார்யன் எனப்படுமவன்

4-நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.-இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

5-தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

6-பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
-3

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

7-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-
5-

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

8-யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||
-6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

9-த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-
ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

10-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

11-ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

12-கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||
-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

13-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

14-(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-

15-அஹம் ஸ்லோக க்ருத் -பால-2-40–(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்

16-காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத -பால-4-7-–விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –

17-(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)

18-அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் 

19-நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்

20-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

21-ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன்

22-(யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)

23-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )

24-புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )

25-ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே

(26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

28-யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத –அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)

29-புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)

(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

31-த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

32-உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-
இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

33-யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)

34-உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக

34-ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

35-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் தைவதம் தேவதா நாஞ்ச பூதாநாம் யோ அவ்யய பிதா
எந்த பகவான் பவித்ரங்களுள் பவித்ரனாய் இருக்கிறானோ மங்களங்களுள் மங்களமாய் இருக்கிறானோ தேவதைகளுக்கும் தேவதையாய் இருக்கிறானோ எவன் ஒருவன் ஜீவராசிகளுக்கு எல்லாமே அழிவற்ற தந்தையாய் இருக்கிறானோ

36-ஸ ஹி தேவர ஸம் யுக்தோ மம பர்த்தா மஹாத்யுதி நிர்ப்பயோ வீர்யம் ஆஸ்ரித்ய ஸூந்யே வசதி தண்டகே -ஆர -58-14-
மைத்துனனான லஷ்மணனுடன் கூடியவராய் பரஞ்சோதியான என்னுடைய நாதன் வீர்யத்தைத் துணை கொண்டு பயமற்றவராய் சூன்யமான தண்டவனத்தில் வசிக்கிறார் –

37-யதா திருப்தாச்ச மாதங்க சசச்ச சஹிதோ வநே ததா திவிரவத் ராமஸ் த்வம் நீசசசவத் ஸ்ம்ருத-ஸூந்தர -22-16-
ஒரு காட்டில் மதிப்புடன் கூடிய யானையும் நரியும் சேர்ந்து இருந்தால் எப்படியோ அப்படியே யானை போன்றவர் ராமபிரான் -நீ ஒரு நரியைப் போன்றவன் –

(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

39-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் -புருஷ ஸூக்தம் -பரமபுருஷனே உனக்கும் ஸ்ரீ பூ தேவிகள் பத்னிகள்

40-ஸ்ரீயப்பதி கீதாபாஷ்ய பிரவேசம் -லஷ்மீ நாதன்

41- ஆகார த்ரய ஸம்பன்நாம் அரவிந்த நிவாஸினீம் அசேஷ ஜெகதீஸித்ரீம் வந்தே வரத வல்லபாம்
சேஷித்வ புருஷகாரத்வ ப்ராப்யத்வங்களாகிற மூன்று ஆகாரங்களை யுடையவளும் தாமரையை வசிப்பவளும் எல்லாமே உலகுக்கும் ஈஸ்வரியாய் இருப்பவளும் வரதனுக்குப் பிரியையுமான தேவியை வணங்குகிறேன் –

42-ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா
–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

43-ஸ்ரீ நிவாஸ சப்தேந பாசுபதா திவ்யுதாஸ -ஸ்ருத பிரகாசிகை -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே என்கிற இடத்திலுள்ள ஸ்ரீ நிவாஸ ஸப்தத்தினால் பாசுபதர் முதலானோர் தள்ளப்படுகின்றனர் –

44-தயா ஸ ராஜ ரிஷி ஸூதோ அபி ராமயா ஸமேயிவ அநுத்தம ராஜ கந்யா -அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபு ஸ்ரீயா விஷ்ணுரிவா மரேஸ்வர -பால –77-30-
அழகியவளாய் உத்தம ராஜபுத்ரியான அந்த ஸீதையுடன் கூடிய ராஜ ரிஷி புத்ரனான ராமபிரான் மிகவும் விரும்பத்தக்க ஸ்ரீ தேவியுடன் கூடிய அமரர்கள் அதிபதியான விஷ்ணு பகவானைப் போலே மிகவும் விளங்கினான் –

45- ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்னுதே -யஜு காட -3-3-தேவனாகிற பகவான் ஸ்ரத்ததா ஸப்த வாஸ்யையான பிராட்டியாலேயே தேவனாக இருக்கும் தன்மையை அடைகிறான் –

46-ஸ்ருணாதி நிகிலான் தோஷாந் ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -பாஞ்சராத்ரம்
ஆஸ்ரிதர்களுடைய தோஷங்களைப் போக்குகிறாள் -அவர்களுடைய அத்வேஷம் ஆபிமுக்யம் முதலான குணங்களைப் பெருக்குகிறாள் 3-அடியார்களாலே தினம் தோறும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் -பரம பிராப்யமான பகவானை ஆஸ்ரயித்து இருக்கிறாள் -அடியாருடைய கூக்குரலைக் கேட்க்கிறாள் -அவற்றை எம்பெருமானைக் கேடப்பிக்கிறாள் -ஆகையால் பிராட்டிக்கு ஸ்ரீ எனப்படுகிறாள் –

47-பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

48-மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரியாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் –

49-ௐ ப⁴க³வந்நாராயணாபி⁴மதாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்-நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம் அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1 ॥

50-ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ -யஜு -காட -3-3-உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாகவும் இருப்பவள் –

51-ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீயம் -ஸ்ரீ ஸூக்தம் -9-ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கிறேன் –

52-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் –

53-அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )

54-அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து

55-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||
-40-

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

56-ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் 

57-ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது 

58-பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்

59-கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்

(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

61-ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் 

61-பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||-
-46-

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

62-ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-38-

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

63-மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்

(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

65-போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா -(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)

66-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் –

67-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் –

68-ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

69-தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

70-ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள்

71(69)தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

72-கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்

73-த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-42-

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.

74-ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-43-* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

75-ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே

78-கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் –

79-ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் 

80-தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

82-மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே

83-உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)

84-அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான்

85-அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் 

86-இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம் —மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

87-அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ

88-மாயாந்து ப்ரக்ருதீம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -ஸ்வே -4-10-ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மகேஸ்வரன் என்றும் அறியக் கடவன்

89-அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிம்ஸ் சாந்யோ மாயயா ஸந் நிருத்த -ஸ்வே -4-9-இந்த மாயையாகிற பிரக்ருதியிலிருந்து மாயியாகிற பகவான் இவ்வுலகைப் படைக்கிறான் -அதில் ஜீவனாகிற மற்ற ஒருவன் மாயையினால் கட்டுண்டு கிடக்கிறான் –

90-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் 

91-ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா-

92-ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத் -(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான்

93-யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் –

94-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான்

95-அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் –

96-கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||-14-

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

97-த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது-

98-ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள்-

99-த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே மைதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத் தனம் -உத்யோக பர்வம்
அரசனே மனைவி வேலைக்காரன் பிள்ளை ஆகிய மூவரும் தனமற்றவர்கள் -அவர்கள் சம்பாதிக்கும் பொருளும் அவர்களுடைய யஜமாநர்களுக்குச் சேருகிறது –

100-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித-தை நா -11-
இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயுமிருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான் –

(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

102-மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன-

103-103-பஸ்யக -காஸ்யபோ பவதி -தை ஆ -1-8- ஞானி என்னும் பொருளுடைய பஸ்யக என்னும் சொல் கஸ்யப என்றும் மாறுகிறது –

104-த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-

105-ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும்

106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

107-ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்

108-பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-
சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

109-ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள்-

110-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை-

111-இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக –

112-மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்-

113-அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்-

114-ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

115-ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-)

116-ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –

117-உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்

(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

119-தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||-7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

120-யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||-8-

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்; கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

121-யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்)

122-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-55-

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

123-அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
 –ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

124-ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – 

125-தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்

126–கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு 

127-ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை 

128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

129-ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்

130-ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான்

131-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66

132-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்-

133-சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

134-கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவபரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப்பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்தப் வார்த்தைகளே யாகும்

135 (118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

136-ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம்
பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் –2-

பெரிய பிராட்டியாரே எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு – நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும்-ஹே லஷ்மீ-இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு–இலக்காகக் கடவோம்

137-ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்-இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

138-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )

139-அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

140-யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –

141-மூலப்பிரக்ருதிர் ஈஸாநி ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -66

142-ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

144-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்

145-பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 -பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்

146-ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

147-ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்

148-வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்

149-தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10-

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

150-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –
இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோ –

151-சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்

152-யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்

153-(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

154-(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

155-(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1-
எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

156-யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10-
எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —

157-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –

158-தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞாதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
–ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

159-ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே

160- பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44-
வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –

161-காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-
அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –

162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5
–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

163-(144)-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —

164-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11--உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்

165-யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24-
வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –

166(31)த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

167–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்

168-க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்

169-ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-
நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்

170-விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்

171(146)ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

172-ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–ஸ்ரீ ஸ்தவம்-1-

எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்–ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில் –இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ–அந்தப் பெரிய பிராட்டியார் நன்மையை அளிக்கக் கடவள்-

173-ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீத்தை

174-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

175-லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ-ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக-

176-ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38-
வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –

177-மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

178-ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35-
பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்

179-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –

180-தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41-
அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-

181-தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –
தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –

182-புண்யா புண்யாவீஸ்வர ப்ரீதி கோபவ் -புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்

183-பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாப ப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ ஸம்பன்னா ஸா தேவீ மே ப்ரஸீதது -மங்கள ஸம்ஹிதை
தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –

184-அனுக்ரஹ பராம் ருத்தி மநகாம் ஹரிவல்லபாம் நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோதா ஸம் பவாம் -ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம்
அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –

185-186-“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7-
த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

187-ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-
அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–

188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

189-த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந த்ரயம் -வி நஷ்ட ப்ராய மபவத் த்வயேதாநீம் ஸமேதிதம் -விபு -1-9-123-
தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது –

190-ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முநயஸ் ச தபோதநா ஏதந்தே த்வத் பதச்சாயாம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி -காஸ்யபீயம்
கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –

191-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
29-

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் 

192-ப்ருதிவ்யப்ஸூ ப்ரலீயதே ஆபஸ் தேஜஸி லீயதே தேஜோ வாயவ் லீயதே வாயுர் ஆகாஸே லீயதே ஆகாஸம் இந்த்ரியேஷு இந்திரியாணி தன்மாத்ரேஷு தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே பூதாதிர் மஹதி லீயதே மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரே தேவ ஏகீ பவதி -ஸூபால -2-
பூமி ஜலத்தில் லயிக்கிறது -ஜலம் தீயில் லயிக்கிறது -தீ வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் லயிக்கிறது -ஆகாசம் இந்த்ரியங்களுடனும் இந்திரியங்கள் சப்தாதி தன்மாத்ரையுடனும் சேருகின்றன -தன் மாத்ரம் பூதாதி என்னும் தாமஸ அஹங்காரத்தில் லயிக்கிறது –அஹங்காரம் மஹானில் லயிக்கிறது -மஹான் அவ்யக்தத்தில் லயிக்கிறது -அவ்யக்தம் தமஸ்ஸிலே லயிக்கிறது -தமஸ் மேலான தேவனிடம் ஒன்றாகிறது –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –

194-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது –

195-ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி -கலா முஹூர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ–தை நா -1-8-
மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் கலைகளும் முஹூர்த்தங்களும் காஷ்டைகளும் இராப்பகலும் ஆகிய கால தத்வம் எல்லாம் உண்டாயின –

196–வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரோ நாமாநி க்ருத்வா அபி வதந் யாதாஸ்தே -புருஷ ஸூக்தம்
ஆதித்ய வர்ணனாய் ப்ரக்ருதிக்கு அப்பால் எழுந்தருளி இருப்பவனாய் ஸர்வஞ்ஞனாய் எல்லா நாம ரூபங்களையும் படைத்து அவற்றைத் உச்சரித்துக் கொண்டு எழுந்தருளி இருப்பவனான இந்த மஹா புருஷனை நான் அறிகிறேன் –

197-ஸேயம் தேவதைஷத ஹந்தாஹம் இமாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக் -6-3-2-
அப்படிப்பட்ட இந்த தேவதை நான் நெருப்பு நீர் பூமி என்னும் இந்த மூன்று தேவதைகளையும் எண்ணுருவாய் இருக்கும் ஜீவனால் வியாபித்து நாம ரூபங்களைச் செய்யக்கடவேன் -என்று ஸங்கல்பித்தது-

198-ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)
அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –

199-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

———-

200-ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.-அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.-பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).-இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

——–

201-உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்-அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன-(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன)-இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல–இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்-(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.–இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.–பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .–மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

————

202-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயி தவ்யா –தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் –

203 (26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

204 (27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

205-விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது

206-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73
பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –

206-அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52-
தேவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது

207-ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21-
மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –

208/209-அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத்
அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை

210-விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9-
எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –

211-புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை

212-பத்ம யோநிரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் திவ்யம் சாஷ்ட குணை ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -ப்ரஹ்ம புராணம்
நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்

213-ப்ரஹ்ம அதீநாம் யதாயத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ ய பதே -ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்

214-ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

215-ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

216-அம்ருதஸ்யைஷ ஸேது -முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்

217-ஸ ப்ரீதோ அலம் பலாய -த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்

218-பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்

219-ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-
ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்

220-உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

221-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14-
காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-

222-அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –

223-(106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

224-ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-
வானரத்தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –

225-யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்
சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –

226-புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்
உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –

227-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

228-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் ஷிப்ர ப்ரஸாதிநீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -ஸ்வாயம்புவம்
எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-

229-ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –

230-ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரிசோஷிணீ பவ பங்காப ஹாரிணீ பர நிர்வாணதாயிநீ -ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23
உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –

231-ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள் –

232-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –
லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –

233-மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –
ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –

234-தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் –

235-யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

236-த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –ஸூந்தர -55-26-
பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப்பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —

237- ஸாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் மஹா விபூதி ஸம்ஸ்த்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம்-ல த-17-5-
ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ —

238-அஸநாயா அபி பாஸே ச சோக மோஹவ் ஜராம் ருதீ ஷடூர்மிபிர் விசுத்தா —ஸ்ருதி
பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது

239-அபஷய விநா சாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜிதா சக்யதே வக்தும் யஸ் ஸதா அஸ்தீதி கேவலம் -வி பு -1-2-11-
குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்

240-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்
தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-

241-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1-
எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –

242-ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –

243-ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3-
இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –

244-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-
விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –

245-ஆனந்த ஆத்மா ப்ரஹ்ம -தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்

246-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் –தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்

247-நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2-
களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –

248-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் –
எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –

249-ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத்வாச் ச தத் ப்ரஹ்மேத் யபிதீயதே -பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –

250-அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1-
விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –

251-ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்
கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –

252-த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

253-பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ
தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்

253(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

254-ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –

255-256-ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14-
எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –

257-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7-
நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –

257 (193)ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-
ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்

258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

259-ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

260-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

261-சக்தயஸ் பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷ தாக்யயா -பாஞ்சராத்ரம்
பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை –

262-பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி –பரமேஷ்டீ ஸ்ம்ருதஸ் சப்தே ஸ்பர்ஸே து புரூக்ஷ ஸ்ம்ருதஸ் -விஸ்வாத்மா தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்த்யாத்மோ ரஸே ஸ்ம்ருதஸ் -ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருதஸ் -பாஞ்சராத்ரம்
பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –

263-பஞ்சைதாஸ் சக்தயே ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந அசேஷ ஜெகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா -பாஞ்சராத்ரம்
இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –

264-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி ஸம்பவா -வராஹ பு -34-40-
அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –

265-ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -சாந்தி -206-60-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –

266-பஞ்ச சக்தி மயோ தேவ-பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்

267-ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாசகம் -ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-

268-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
–ஸ்ரீ கீதை 15-6
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-

269-ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்
அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —

270-யத்ர தூமஸ் தத்ராக்நி -தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-

271-தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-
விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-

272-பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –

273-அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்

274-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

275-யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச –எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –

276-அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6-

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்

277-ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-
கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –

278-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்
பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்

279-நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி

280-தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67-
சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –

281-ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

282-ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

283-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம்
கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –

284-க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50
யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –

285-ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ-சாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-

286-ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

287-ஸ்லோகமும் பொருளும் மூலத்திலேயே உள்ளது

288-யுவா குமார -ருக்வேத –யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் -யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –

289-ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-
இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் –

290-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்

291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

293-கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்

294-ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது

295-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

296-ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

296-க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –

297-நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –

298-(20)-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

299-பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ தேவீ தத் தர்ம தர்மிணீ -பாஞ்சராத்ரம் –
நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –

299-(128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

300-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருதஸ் அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி அஹமர்த்தம் விநா அஹந்தா நிராதாரா ந ஸித்த்யதி -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது

301-(291)-291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

302-188-188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

303-ராஜ ரஜோ சிவஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குண ஸாலிநஸ் -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் –

304-(227)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

305-தத்ர திவ்ய வபுர் ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தந ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன –அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –

306-(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

307-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –

308(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

309-வ்யூகேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயினீ -பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –

310-தைஸ் தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சார்ங்கிண கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அநு காமிநீ -லஷ்மீ தந்த்ரம் -17-4-
அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்

311-குணைர் விவாசை ரூபைஸ் ச ஸ்வாத்ம நா வா ஆத்ம நீஸ்வரம் நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -பாஞ்சராத்ரம்
குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –

311-ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

312(174)-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

313-ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

314-அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

315-யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

315-தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

317-ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

318-யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி
–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

319-அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-
புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

320(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

320(199)-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

321-பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

322-ஆத்மன் யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சே த்யாகாரைஸ் தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வா தயந்த்யாத்த ரூபா தூரீ குர்யான் நஹி மதுரதாதுக்த சிந்தோஸ் தரங்காத்
பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –

323-வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –

324-ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-
ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –

325/326-க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –

327-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-
அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –

328-ஏஷோ அணுர் ஆத்மா சேதஸா வேதிதவ்ய -முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்

329-த்ரஸ ரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா -ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்தப் ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்

330-ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ

331-ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-
அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்

332-(60)புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

333-சவும்ய அஸம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயைதத் தேவி பூரிதம் -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –

334(252)த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

335-தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம்-
மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –

335 (139)அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

336-ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் ஈஸ்வரன் ஸர்வ பூதாநாம் -எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்

337(100)யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்

338-அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான் –

339-யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22-
எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் –

340-ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-
குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –

341-ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-
ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-

———-

342-ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3-
ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –

343-யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபி ஸம் விஸந்தி -தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி -தை ப்ருகு -1-
எதனிடமிருந்து இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக –

344-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -சாந்தோ -3-14-1-
அந்தப் பிரஹ்மத்தினிடமிருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் இவை எல்லாமே ப்ரஹ்மம் அன்றோ என்று சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் –

345–காரணந்து த்யேய -அதர்வசிகை -காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது –

346-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -1-1-1-கர்மவிசாரத்தில் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது

347-ஜன்மாத் யஸ்ய யத-1-1-2-இவ்வுலகின் பிறப்பு முதலியவை எதனிடமிருந்தோ அதுவே ப்ரஹ்மம்

348-ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -ஆனுசா பர்வம்-எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) 

349-292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

350–ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-

351-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )

352-258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

353-வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )

354-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால்

355-நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் 

356-(அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-

357-358-359-(162)162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

360–ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்
அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யமுன முனிவரை ஸ்துதிக்கிறேன்

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –