ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ப்ரமாணத்திரட்டு –

1-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ-தை சீஷா -11-2-அகில ஜகன்மாதாவான பிராட்டியையும் அழிவற்ற தந்தையுமான அச்சுதனையும் அறியாதது அறிவித்த ஆசார்யனையும் விருந்தாகும் பெருந்தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

2-ஆசரதீத் யாசார்ய-வ்யுத்பத்தி -ஆசரித்து -அனுஷ்டித்துக் காட்டுமவன் ஆசார்யன்

3–ஆசினோதி ஹி ஸாஸ்த் ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
எவன் ஒருவன் சாஸ்த்ரார்த்தங்களை சிஷ்யர்களுக்கு உபதேசித்து -அவர்களை சதாசாரத்திலே நிலை நிறுத்தி தானும் ஆசரிக்கிறானோ அவனே ஆச்சார்யன் எனப்படுமவன்

4-நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.-இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

5-தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

6-பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
-3

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

7-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-
5-

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

8-யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||
-6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

9-த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-
ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

10-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

11-ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

12-கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||
-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

13-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

14-(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-

15-அஹம் ஸ்லோக க்ருத் -பால-2-40–(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்

16-காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத -பால-4-7-–விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –

17-(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)

18-அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் 

19-நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்

20-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

21-ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன்

22-(யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)

23-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )

24-புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )

25-ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே

(26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

28-யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத –அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)

29-புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)

(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

31-த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

32-உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-
இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

33-யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)

34-உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக

34-ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

35-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் தைவதம் தேவதா நாஞ்ச பூதாநாம் யோ அவ்யய பிதா
எந்த பகவான் பவித்ரங்களுள் பவித்ரனாய் இருக்கிறானோ மங்களங்களுள் மங்களமாய் இருக்கிறானோ தேவதைகளுக்கும் தேவதையாய் இருக்கிறானோ எவன் ஒருவன் ஜீவராசிகளுக்கு எல்லாமே அழிவற்ற தந்தையாய் இருக்கிறானோ

36-ஸ ஹி தேவர ஸம் யுக்தோ மம பர்த்தா மஹாத்யுதி நிர்ப்பயோ வீர்யம் ஆஸ்ரித்ய ஸூந்யே வசதி தண்டகே -ஆர -58-14-
மைத்துனனான லஷ்மணனுடன் கூடியவராய் பரஞ்சோதியான என்னுடைய நாதன் வீர்யத்தைத் துணை கொண்டு பயமற்றவராய் சூன்யமான தண்டவனத்தில் வசிக்கிறார் –

37-யதா திருப்தாச்ச மாதங்க சசச்ச சஹிதோ வநே ததா திவிரவத் ராமஸ் த்வம் நீசசசவத் ஸ்ம்ருத-ஸூந்தர -22-16-
ஒரு காட்டில் மதிப்புடன் கூடிய யானையும் நரியும் சேர்ந்து இருந்தால் எப்படியோ அப்படியே யானை போன்றவர் ராமபிரான் -நீ ஒரு நரியைப் போன்றவன் –

(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

39-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் -புருஷ ஸூக்தம் -பரமபுருஷனே உனக்கும் ஸ்ரீ பூ தேவிகள் பத்னிகள்

40-ஸ்ரீயப்பதி கீதாபாஷ்ய பிரவேசம் -லஷ்மீ நாதன்

41- ஆகார த்ரய ஸம்பன்நாம் அரவிந்த நிவாஸினீம் அசேஷ ஜெகதீஸித்ரீம் வந்தே வரத வல்லபாம்
சேஷித்வ புருஷகாரத்வ ப்ராப்யத்வங்களாகிற மூன்று ஆகாரங்களை யுடையவளும் தாமரையை வசிப்பவளும் எல்லாமே உலகுக்கும் ஈஸ்வரியாய் இருப்பவளும் வரதனுக்குப் பிரியையுமான தேவியை வணங்குகிறேன் –

42-ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா
–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

43-ஸ்ரீ நிவாஸ சப்தேந பாசுபதா திவ்யுதாஸ -ஸ்ருத பிரகாசிகை -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே என்கிற இடத்திலுள்ள ஸ்ரீ நிவாஸ ஸப்தத்தினால் பாசுபதர் முதலானோர் தள்ளப்படுகின்றனர் –

44-தயா ஸ ராஜ ரிஷி ஸூதோ அபி ராமயா ஸமேயிவ அநுத்தம ராஜ கந்யா -அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபு ஸ்ரீயா விஷ்ணுரிவா மரேஸ்வர -பால –77-30-
அழகியவளாய் உத்தம ராஜபுத்ரியான அந்த ஸீதையுடன் கூடிய ராஜ ரிஷி புத்ரனான ராமபிரான் மிகவும் விரும்பத்தக்க ஸ்ரீ தேவியுடன் கூடிய அமரர்கள் அதிபதியான விஷ்ணு பகவானைப் போலே மிகவும் விளங்கினான் –

45- ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்னுதே -யஜு காட -3-3-தேவனாகிற பகவான் ஸ்ரத்ததா ஸப்த வாஸ்யையான பிராட்டியாலேயே தேவனாக இருக்கும் தன்மையை அடைகிறான் –

46-ஸ்ருணாதி நிகிலான் தோஷாந் ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -பாஞ்சராத்ரம்
ஆஸ்ரிதர்களுடைய தோஷங்களைப் போக்குகிறாள் -அவர்களுடைய அத்வேஷம் ஆபிமுக்யம் முதலான குணங்களைப் பெருக்குகிறாள் 3-அடியார்களாலே தினம் தோறும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் -பரம பிராப்யமான பகவானை ஆஸ்ரயித்து இருக்கிறாள் -அடியாருடைய கூக்குரலைக் கேட்க்கிறாள் -அவற்றை எம்பெருமானைக் கேடப்பிக்கிறாள் -ஆகையால் பிராட்டிக்கு ஸ்ரீ எனப்படுகிறாள் –

47-பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

48-மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரியாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் –

49-ௐ ப⁴க³வந்நாராயணாபி⁴மதாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்-நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம் அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1 ॥

50-ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ -யஜு -காட -3-3-உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாகவும் இருப்பவள் –

51-ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீயம் -ஸ்ரீ ஸூக்தம் -9-ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கிறேன் –

52-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் –

53-அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )

54-அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து

55-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||
-40-

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

56-ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் 

57-ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது 

58-பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்

59-கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்

(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

61-ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் 

61-பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||-
-46-

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

62-ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-38-

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

63-மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்

(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

65-போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா -(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)

66-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் –

67-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் –

68-ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

69-தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

70-ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள்

71(69)தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

72-கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்

73-த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-42-

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.

74-ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-43-* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

75-ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே

78-கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் –

79-ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் 

80-தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

82-மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே

83-உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)

84-அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான்

85-அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் 

86-இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம் —மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

87-அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ

88-மாயாந்து ப்ரக்ருதீம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -ஸ்வே -4-10-ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மகேஸ்வரன் என்றும் அறியக் கடவன்

89-அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிம்ஸ் சாந்யோ மாயயா ஸந் நிருத்த -ஸ்வே -4-9-இந்த மாயையாகிற பிரக்ருதியிலிருந்து மாயியாகிற பகவான் இவ்வுலகைப் படைக்கிறான் -அதில் ஜீவனாகிற மற்ற ஒருவன் மாயையினால் கட்டுண்டு கிடக்கிறான் –

90-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் 

91-ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா-

92-ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத் -(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான்

93-யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் –

94-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான்

95-அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் –

96-கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||-14-

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

97-த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது-

98-ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள்-

99-த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே மைதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத் தனம் -உத்யோக பர்வம்
அரசனே மனைவி வேலைக்காரன் பிள்ளை ஆகிய மூவரும் தனமற்றவர்கள் -அவர்கள் சம்பாதிக்கும் பொருளும் அவர்களுடைய யஜமாநர்களுக்குச் சேருகிறது –

100-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித-தை நா -11-
இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயுமிருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான் –

(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

102-மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன-

103-103-பஸ்யக -காஸ்யபோ பவதி -தை ஆ -1-8- ஞானி என்னும் பொருளுடைய பஸ்யக என்னும் சொல் கஸ்யப என்றும் மாறுகிறது –

104-த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-

105-ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும்

106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

107-ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்

108-பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-
சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

109-ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள்-

110-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை-

111-இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக –

112-மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்-

113-அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்-

114-ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

115-ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-)

116-ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –

117-உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்

(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

119-தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||-7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

120-யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||-8-

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்; கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

121-யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்)

122-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-55-

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

123-அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
 –ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

124-ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – 

125-தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்

126–கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு 

127-ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை 

128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

129-ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்

130-ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான்

131-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66

132-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்-

133-சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

134-கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவபரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப்பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்தப் வார்த்தைகளே யாகும்

135 (118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

136-ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம்
பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் –2-

பெரிய பிராட்டியாரே எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு – நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும்-ஹே லஷ்மீ-இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு–இலக்காகக் கடவோம்

137-ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்-இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

138-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )

139-அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

140-யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –

141-மூலப்பிரக்ருதிர் ஈஸாநி ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -66

142-ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

144-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்

145-பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 -பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்

146-ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

147-ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்

148-வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்

149-தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10-

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

150-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –
இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோ –

151-சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்

152-யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்

153-(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

154-(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

155-(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1-
எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

156-யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10-
எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —

157-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –

158-தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞாதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
–ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

159-ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே

160- பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44-
வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –

161-காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-
அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –

162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5
–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

163-(144)-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —

164-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11--உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்

165-யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24-
வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –

166(31)த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

167–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்

168-க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்

169-ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-
நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்

170-விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்

171(146)ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

172-ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–ஸ்ரீ ஸ்தவம்-1-

எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்–ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில் –இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ–அந்தப் பெரிய பிராட்டியார் நன்மையை அளிக்கக் கடவள்-

173-ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீத்தை

174-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

175-லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ-ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக-

176-ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38-
வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –

177-மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

178-ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35-
பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்

179-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –

180-தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41-
அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-

181-தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –
தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –

182-புண்யா புண்யாவீஸ்வர ப்ரீதி கோபவ் -புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்

183-பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாப ப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ ஸம்பன்னா ஸா தேவீ மே ப்ரஸீதது -மங்கள ஸம்ஹிதை
தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –

184-அனுக்ரஹ பராம் ருத்தி மநகாம் ஹரிவல்லபாம் நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோதா ஸம் பவாம் -ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம்
அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –

185-186-“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7-
த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

187-ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-
அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–

188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

189-த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந த்ரயம் -வி நஷ்ட ப்ராய மபவத் த்வயேதாநீம் ஸமேதிதம் -விபு -1-9-123-
தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது –

190-ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முநயஸ் ச தபோதநா ஏதந்தே த்வத் பதச்சாயாம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி -காஸ்யபீயம்
கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –

191-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
29-

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் 

192-ப்ருதிவ்யப்ஸூ ப்ரலீயதே ஆபஸ் தேஜஸி லீயதே தேஜோ வாயவ் லீயதே வாயுர் ஆகாஸே லீயதே ஆகாஸம் இந்த்ரியேஷு இந்திரியாணி தன்மாத்ரேஷு தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே பூதாதிர் மஹதி லீயதே மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரே தேவ ஏகீ பவதி -ஸூபால -2-
பூமி ஜலத்தில் லயிக்கிறது -ஜலம் தீயில் லயிக்கிறது -தீ வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் லயிக்கிறது -ஆகாசம் இந்த்ரியங்களுடனும் இந்திரியங்கள் சப்தாதி தன்மாத்ரையுடனும் சேருகின்றன -தன் மாத்ரம் பூதாதி என்னும் தாமஸ அஹங்காரத்தில் லயிக்கிறது –அஹங்காரம் மஹானில் லயிக்கிறது -மஹான் அவ்யக்தத்தில் லயிக்கிறது -அவ்யக்தம் தமஸ்ஸிலே லயிக்கிறது -தமஸ் மேலான தேவனிடம் ஒன்றாகிறது –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –

194-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது –

195-ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி -கலா முஹூர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ–தை நா -1-8-
மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் கலைகளும் முஹூர்த்தங்களும் காஷ்டைகளும் இராப்பகலும் ஆகிய கால தத்வம் எல்லாம் உண்டாயின –

196–வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரோ நாமாநி க்ருத்வா அபி வதந் யாதாஸ்தே -புருஷ ஸூக்தம்
ஆதித்ய வர்ணனாய் ப்ரக்ருதிக்கு அப்பால் எழுந்தருளி இருப்பவனாய் ஸர்வஞ்ஞனாய் எல்லா நாம ரூபங்களையும் படைத்து அவற்றைத் உச்சரித்துக் கொண்டு எழுந்தருளி இருப்பவனான இந்த மஹா புருஷனை நான் அறிகிறேன் –

197-ஸேயம் தேவதைஷத ஹந்தாஹம் இமாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக் -6-3-2-
அப்படிப்பட்ட இந்த தேவதை நான் நெருப்பு நீர் பூமி என்னும் இந்த மூன்று தேவதைகளையும் எண்ணுருவாய் இருக்கும் ஜீவனால் வியாபித்து நாம ரூபங்களைச் செய்யக்கடவேன் -என்று ஸங்கல்பித்தது-

198-ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)
அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –

199-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

———-

200-ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.-அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.-பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).-இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

——–

201-உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்-அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன-(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன)-இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல–இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்-(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.–இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.–பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .–மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

————

202-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயி தவ்யா –தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் –

203 (26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

204 (27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

205-விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது

206-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73
பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –

206-அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52-
தேவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது

207-ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21-
மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –

208/209-அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத்
அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை

210-விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9-
எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –

211-புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை

212-பத்ம யோநிரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் திவ்யம் சாஷ்ட குணை ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -ப்ரஹ்ம புராணம்
நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்

213-ப்ரஹ்ம அதீநாம் யதாயத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ ய பதே -ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்

214-ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

215-ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

216-அம்ருதஸ்யைஷ ஸேது -முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்

217-ஸ ப்ரீதோ அலம் பலாய -த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்

218-பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்

219-ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-
ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்

220-உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

221-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14-
காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-

222-அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –

223-(106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

224-ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-
வானரத்தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –

225-யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்
சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –

226-புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்
உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –

227-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

228-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் ஷிப்ர ப்ரஸாதிநீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -ஸ்வாயம்புவம்
எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-

229-ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –

230-ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரிசோஷிணீ பவ பங்காப ஹாரிணீ பர நிர்வாணதாயிநீ -ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23
உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –

231-ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள் –

232-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –
லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –

233-மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –
ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –

234-தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் –

235-யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

236-த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –ஸூந்தர -55-26-
பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப்பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —

237- ஸாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் மஹா விபூதி ஸம்ஸ்த்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம்-ல த-17-5-
ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ —

238-அஸநாயா அபி பாஸே ச சோக மோஹவ் ஜராம் ருதீ ஷடூர்மிபிர் விசுத்தா —ஸ்ருதி
பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது

239-அபஷய விநா சாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜிதா சக்யதே வக்தும் யஸ் ஸதா அஸ்தீதி கேவலம் -வி பு -1-2-11-
குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்

240-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்
தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-

241-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1-
எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –

242-ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –

243-ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3-
இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –

244-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-
விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –

245-ஆனந்த ஆத்மா ப்ரஹ்ம -தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்

246-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் –தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்

247-நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2-
களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –

248-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் –
எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –

249-ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத்வாச் ச தத் ப்ரஹ்மேத் யபிதீயதே -பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –

250-அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1-
விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –

251-ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்
கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –

252-த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

253-பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ
தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்

253(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

254-ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –

255-256-ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14-
எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –

257-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7-
நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –

257 (193)ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-
ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்

258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

259-ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

260-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

261-சக்தயஸ் பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷ தாக்யயா -பாஞ்சராத்ரம்
பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை –

262-பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி –பரமேஷ்டீ ஸ்ம்ருதஸ் சப்தே ஸ்பர்ஸே து புரூக்ஷ ஸ்ம்ருதஸ் -விஸ்வாத்மா தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்த்யாத்மோ ரஸே ஸ்ம்ருதஸ் -ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருதஸ் -பாஞ்சராத்ரம்
பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –

263-பஞ்சைதாஸ் சக்தயே ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந அசேஷ ஜெகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா -பாஞ்சராத்ரம்
இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –

264-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி ஸம்பவா -வராஹ பு -34-40-
அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –

265-ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -சாந்தி -206-60-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –

266-பஞ்ச சக்தி மயோ தேவ-பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்

267-ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாசகம் -ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-

268-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
–ஸ்ரீ கீதை 15-6
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-

269-ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்
அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —

270-யத்ர தூமஸ் தத்ராக்நி -தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-

271-தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-
விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-

272-பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –

273-அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்

274-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

275-யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச –எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –

276-அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6-

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்

277-ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-
கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –

278-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்
பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்

279-நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி

280-தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67-
சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –

281-ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

282-ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

283-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம்
கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –

284-க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50
யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –

285-ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ-சாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-

286-ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

287-ஸ்லோகமும் பொருளும் மூலத்திலேயே உள்ளது

288-யுவா குமார -ருக்வேத –யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் -யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –

289-ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-
இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் –

290-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்

291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

293-கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்

294-ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது

295-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

296-ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

296-க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –

297-நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –

298-(20)-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

299-பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ தேவீ தத் தர்ம தர்மிணீ -பாஞ்சராத்ரம் –
நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –

299-(128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

300-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருதஸ் அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி அஹமர்த்தம் விநா அஹந்தா நிராதாரா ந ஸித்த்யதி -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது

301-(291)-291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

302-188-188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

303-ராஜ ரஜோ சிவஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குண ஸாலிநஸ் -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் –

304-(227)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

305-தத்ர திவ்ய வபுர் ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தந ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன –அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –

306-(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

307-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –

308(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

309-வ்யூகேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயினீ -பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –

310-தைஸ் தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சார்ங்கிண கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அநு காமிநீ -லஷ்மீ தந்த்ரம் -17-4-
அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்

311-குணைர் விவாசை ரூபைஸ் ச ஸ்வாத்ம நா வா ஆத்ம நீஸ்வரம் நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -பாஞ்சராத்ரம்
குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –

311-ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

312(174)-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

313-ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

314-அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

315-யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

315-தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

317-ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

318-யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி
–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

319-அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-
புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

320(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

320(199)-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

321-பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

322-ஆத்மன் யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சே த்யாகாரைஸ் தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வா தயந்த்யாத்த ரூபா தூரீ குர்யான் நஹி மதுரதாதுக்த சிந்தோஸ் தரங்காத்
பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –

323-வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –

324-ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-
ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –

325/326-க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –

327-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-
அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –

328-ஏஷோ அணுர் ஆத்மா சேதஸா வேதிதவ்ய -முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்

329-த்ரஸ ரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா -ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்தப் ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்

330-ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ

331-ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-
அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்

332-(60)புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

333-சவும்ய அஸம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயைதத் தேவி பூரிதம் -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –

334(252)த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

335-தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம்-
மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –

335 (139)அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

336-ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் ஈஸ்வரன் ஸர்வ பூதாநாம் -எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்

337(100)யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்

338-அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான் –

339-யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22-
எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் –

340-ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-
குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –

341-ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-
ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-

———-

342-ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3-
ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –

343-யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபி ஸம் விஸந்தி -தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி -தை ப்ருகு -1-
எதனிடமிருந்து இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக –

344-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -சாந்தோ -3-14-1-
அந்தப் பிரஹ்மத்தினிடமிருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் இவை எல்லாமே ப்ரஹ்மம் அன்றோ என்று சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் –

345–காரணந்து த்யேய -அதர்வசிகை -காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது –

346-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -1-1-1-கர்மவிசாரத்தில் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது

347-ஜன்மாத் யஸ்ய யத-1-1-2-இவ்வுலகின் பிறப்பு முதலியவை எதனிடமிருந்தோ அதுவே ப்ரஹ்மம்

348-ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -ஆனுசா பர்வம்-எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) 

349-292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

350–ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-

351-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )

352-258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

353-வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )

354-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால்

355-நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் 

356-(அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-

357-358-359-(162)162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

360–ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்
அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யமுன முனிவரை ஸ்துதிக்கிறேன்

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading