Archive for October, 2023

ஸ்ரீ பாஷ்ய ஸார ஸார அம்ருதம் –பூர்வ-விஷய -ஸித்த த்விகம்

October 26, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———

இரண்டாவது மங்கள ச்லோஹம்-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ் பகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேம்கடமுடையான் சந்நிதியில் அருளி
யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –
பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்
பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார்

———–

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

ப்ரஹ்மத்தின் சேஷித்வம் ஸ்பஷ்டமாகக் காணப்படும் -அபர ஸ்ரீ ரெங்க விமானம் போலே –
பிரணவ ஆகாரமாகவே பிரகாசிக்கிற ஸ்ரீ பாஷ்யத்தை சரணமாக வரிக்கிறேன்

ப்ரணவமாகிற ஓங்காரத்திலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும் பிரகாசிக்கும் பரமாத்மாவுடைய சேஷித்வம்
பிறரால் உண்டு பண்ணப்பட்டு இருக்கிற அதிசயத்தை -மேன்மையைத் தங்கி இருப்பது
ஸ்ரீ ரெங்கத்தில் பிரகாசிக்கும் சேஷித்வம் சேஷசாயித்வம் என்று கண்டு கொள்வது

திருமந்திரத்தில் பத த்ரயத்தாலே
ஜீவாத்மாக்களுடைய
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -ஆகிய -ஆகார த்ரயம்
ஸாப்தமாக ப்ரதிபாதிதம்
பரமாத்மாவின்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிய ஆகார த்ரயம்
ஆர்த்தமாகக் கிடைக்கும்

—————–

ஸ்ரீ ப்ரஹ்மஸூத்ரமும் ஸ்ரீ திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி
திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்ய ஹ்ருதயத்திலே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

—————

சாரீரக மீமாம்ஸா ஸாஸ்த்ரமான ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மம் ஜகத் ஏக காரணமாயும்
சேதன அசேதன விலக்ஷணமாயும் ஸர்வ சேஷியாகவும் –அறுதியிட்டார்-இதுவே பிரணவத்தின் அர்த்தம்
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ்ஸின் அர்த்தம்
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் ப்ராப்யம் என்று அறுதியிட்டார் -இதுவே த்ருதீய பதார்த்தம்

காரணத்வமும்
அபாத்யத்வமும்
உபாயத்வமும்
உபேயத்வமும்
ஆகிய நான்குமே அத்யாய சதுஷ்ட்யார்த்தம்

காரணந்து த்யேயம் —ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கப்பட வேண்டியது என்பதே உபநிஷத்
பக்தியாகவும் ப்ரபத்தியாகவும் பர ப்ரஹ்மத்தின் இடமே செய்ய வேண்டியது என்பதே வேதாந்த ஸித்தம்
தன்னோடு ஒத்த மற்ற பத்த ஜீவனைப் பற்றுவது ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகல் ஓடமாம் அத்தனை அன்றோ

தாபத் த்ரயா துரைஸ் அம்ருதத்வாய ஸ ஏவ ஜிஞ்ஞாஸ்ய

யோ ப்ரஹ்மாணம் விதாதா பூர்வம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –

இப்படி உள்ள வேதாந்த கோஷ சித்தாந்த ஸ்தாபனமே வியாசர் அருளிச் செய்த ப்ரஹ்ம ஸூத்ரம்

ஸுத்ரீ சங்க்யா ஸூபாஸீ அதி க்ருதி கணநா சிந்மயீ ப்ரஹ்ம காண்டே –அதிகரண ஸாரா வளீ -என்கிறபடியே
545 ஸூத்ரங்கள் –156-அதிகரணங்கள் –16 பாதங்கள் –4 அத்யாயங்கள்
ஜைமினி அருளிச் செய்த 12 அத்தியாயங்கள் கொண்ட கர்ம மீமாம்ஸை யில் விசாரித்த கர்மாக் களுக்கு ஆராத்யமாயும்
மேல் 4 அத்தியாயங்கள் கொண்ட தேவதா மீமாம்ஸை யில் விசாரித்த தேவதைகளுக்கு அந்தராத்ம பூதமாயும்
உள்ள ப்ரஹ்மத்தை இந்த 4 அத்யாயங்களால் விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறார்
ஆக ஸர்வ கர்ம ஸமாராத்யம்
ஸர்வ தேவதாந்த்ர அந்தர் பூதம்
பர ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் –என்பதே வேத வ்யாஸருடைய ஸித்தாந்தம்

அர்த்தைகத்வாத் ஏகம் வாக்யம் ஸ ஆகாங்க்ஷம் சேத் – என்கிற பூர்வ மீமாம்ஸா சாஸ்த்ர ஸூத்ரத்தின் படி
ஏகார்த்திக ப்ரதிபாத்யம் -ஒரே ஸாஸ்த்ரம்
பூர்வ கண்ட யுக்த கர்மங்கள் ஆராதன கருமங்கள்
ஆராத்ய வஸ்து என்னும் ஆகாங்க்ஷம் வர அதுக்கு சாந்தி உத்தர காண்டமாகிய உபநிஷத் ப்ரதிபாத்யமாகிற பர ப்ரஹ்மம்
கர்ம அங்க கம் ஞானம் உபாயம்
கர்ம ஞானங்களுக்கு அங்க அங்கி பாவம் சமுச்சயம்

வித்யாம் ச அவித்யாம் ச யஸ் தத் வேத உபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யம் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ் நுதே –உபநிஷத்

ஆனால் அத்வைதிகள் இந்த வாக்யத்துக்கு வியாக்யானம்
கர்ம ஞானங்கள் பரஸ்பர வ்ருத்தங்கள்
கர்மம் -பேத அவலம்பி
ஞானம் -அபேத அவலம்பி
ஆகவே இவற்றுக்கு அனுஷ்டானத்தில் ஸாஹித்யம் -ஒரு சேர இருக்கை -பொருந்தாது
ஆயினும் ஞாத்வயத்வே ஸாஹித்யம் பொருந்தும்
உபாதேயத்வேந ஞாதவ்யம் -ஞானம்
த்யாஜ்யத்வேந ஞாதவ்யம் -கர்மம்

இந்த வியாக்யானம் அயுக்தம் என்று ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்
கர்மங்கள் கர்தவ்யங்களாக வேத விகிதங்கள் என்பதால் த்யாஜ்யம் அன்று

மேலும் இவ்வாக்கியத்தில் உள்ள தீர்த்வா -என்ற பதத்துக்கு அடைந்து என்று பொருள் கூறுவது அப்ரஸித்தி தோஷ பராஹதம்
ம்ருத்யும் தீர்த்வா -என்கிற இடத்தில் ஸ்த்தித சேத் என்று இரண்டு பதங்களைச் சேர்த்து
வியாக்யானிக்கிற படியால் அத்யாஹார தோஷ ப்ரசங்கமும் உண்டாம்–ஆகையால் அத்வைதி வியாக்யானம் அஸங்கதம்

மேற் கூறிய வாக்யத்துக்கு யாதவ ப்ரகாசனின் வியாக்யானம்
ஞான கர்மாக்கள் சம பிரதான உபாயங்கள் -உபாயமும் இரண்டு -ஞானமும் கர்மமும்
உபேயமும் இரண்டு -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
அநிஷ்ட நிவ்ருத்தி ரூப பலத்துக்கு கர்மம் உபாயம்
இஷ்ட பிராப்தி ரூப பலத்துக்கு ஞானம் உபாயம்
சாதன ஸாத்ய த்வித்வ அங்கீ காரேண பூர்வ உத்தர வாக்யங்களுக்கு அர்த்தம் கூறுவது யுக்தம் என்பர்

இந்த வியாக்யானமும் அயுக்தம் என்பதே பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஞானம் ஒன்றே ஏக உபாயம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய விதயதே -என்பதால் உபாயம் ஞானம் ஒன்றே
அநிஷ்ட நிவ்ருத்தி பலமும் ஞான ஸாத்யமே
சேது பங்க ஸ்ரோத ப்ர ஸ்ருதி நியாயத்தாலே இஷ்ட பிராப்தி தன்னடையே ஏற்படும்

ஆக அங்க அங்கி பாவேந ஸாஹித்யமே -ஆதரணீயம்

பாஸ்கரனும் இத்தை ஆதரித்தாலும்
அவன் கர்மத்தை ஞான உத்பாகத்வேந அங்கம் என்று அங்கீ கரியாமல்
உத்பன்ன ஞானத்துக்கு அனுக்ராஹகம் -என்றான்

கர்மம் ஞான உத்பாதகம் -உத்பன்ன ஞான வர்த்தகம் -என்பதே பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஆகவே ஏக ஸாஸ்த்ரம்

சாரீரிக மீமாம்ஸ சாஸ்திரத்தில் நான்கு அத்தியாயங்களும்
விஷய த்விகம் -ஸித்த த்விகம் என்றும்
விஷயீ த்விகம் -ஸாத்ய த்விகம் என்றும் உண்டு
மூன்றாம் அத்தியாயத்தில் பக்தி ரூப ஞானம் விஷயி
நான்காம் அத்தியாயத்தில் ப்ரஹ்ம அனுபவ ஸ்வரூப ஞானம் விஷயி ஆகும்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படைப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – -அந்நிய ஆதரேண–தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதி மஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – பஞ்ச கால பராயணர்க்கு ஆப்தன் –அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசித ஜநந க்ருத் (2-3) –ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் –அசேதன ஸ்வரூப விகார -சேதன ஸ்வரூப ஸ்வ பாவ ஜனன கர்த்தா

இந்திரியாதே: உசித ஜநந க்ருத் (2-4)- இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்;-

ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்தி மூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1);

நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் -ரம்யன்;அகில ஹேய ப்ரத்ய நீகன் கல்யாண குணைகநாதன்

பஹுபஜனபதம் (3-3) –பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத் தக்கவன்;

ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய: (3-4) – ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்;

வர்ணாஸ்ரம ஸாஸ்வதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நரந்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாபச்சித் (4-1) – பாபங்களை நீக்குபவன்;-உத்தர பூர்வ பாபங்களில் அஸ்லேஷ விஸ்லேஷ கர்த்தா

ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்;

இதுவரை ஸ்தூல தேஹ விஸிஷ்டனுக்கு பலம்
மேல் ஸூஷ்ம தேஹ விஸிஷ்ட னுக்கு பலம்

அதிவஹந் (4-3) – அழைத்துச் செல்பவன்;

ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.-நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி

இங்கு ஸாம்யா பத்தி சொல்லி இருந்தாலும் —பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும்
அனுபவ ஜெனித ப்ரீதியும்
ப்ரீதி காரித ஸர்வ வித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா அசேஷ கைங்கர்யமும் -பரம புருஷார்த்தம்

இப்படி மொத்தம் 16 திருக் குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

—————

முதல் அத்யாயம் –11–6–10-8-அதிகரணங்கள் —-35–அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம் –10–8–7–8- அதிகரணங்கள் -33—அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம் –6–8–26–15–அதிகரணங்கள் —55–அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் –11-11-5-6-அதிகாரணங்கள் -33–அதிகரணங்கள்

முதல் பாதத்தில் முதல் நான்கு அதிகரணங்களும் ஸாஸ்த்ர உபோத்காதம்
முதல் அதிகரணம் மட்டுமே ஸாஸ்த்ர உபோத்காதம் என்றும் சொல்வர்
முதல் அத்தியாயத்தில் உள்ள 35 அதிகரணங்களில்
முதல் அதிகரணத்தால் ப்ரஹ்ம விசார கர்த்தவ்யதா ஸ்தாபன மாத்ர பரம்
இறுதியில் ஸர்வ வியாக்யான அதிகரணம் -பூர்வ யுக்த அந்ய ரயாதிதேச பரம்
இடையே -26 வது அதிகரணம் அப ஸூத்ராதிகரணம்
ஆக இந்த மூன்று ஒழிந்த மீதி 32 அதிகரணங்களில் ஸ்ரீ வேத வியாஸர் பரமாத்மாவை
சேதன அசேதன விலக்ஷணனாயும்
ஸர்வஞ்ஞனாயும்
ஸர்வ ஸக்தனாயும்
ஜகத்தான காரியத்துக்கு அபி பின்ன நிமித்த உபாதாந காரண பூதனாயும்
அறுதியிட்டுள்ளார்

முதல் பாதத்தில் வ்யாஸர் உபோத்காதத்தில்
ப்ரஹ்மம் சேதன அசேதன விலக்ஷணம்–ஜகத் ஏக காரணம் -விலக்ஷண புருஷ விசேஷம் – என்றும்
ஈஷத் அதிகரணத்தில் -அசேதன வைலக்ஷண்யமும்
ஆனந்த மய அதிகரணத்தில் -சேதன வைலக்ஷண்யமும் ஸ்பஷ்டம்

இரண்டாம் பாதத்தில் 6 அதிகரணங்களாலும்
பரமாத்மா ஜகச் சரீரம் என்றும்

மூன்றாம் பாதத்தில்
இவனே ஸர்வாத்மா என்றும் அறுதியிட்டார்
இப்பாதத்தில் அவனுடைய ஸர்வாத்மத்வம் -ஸங்கித தோஷ நிராச முகேந ஸம்யக் ஸ்தாபிதம்

ஸர்வம் ப்ரஹ்ம கார்யம்
ப்ரஹ்ம சரீரம்
ப்ரஹ்மாத்மகம்
என்று மூன்று பாதங்களில் தேறிய பொருள்கள்

அப்படி அந்வய முகேந அறிவித்த அர்த்தத்தை வ்யதிரேக முகேந அறுதியிடுகிறார் நான்காம் பாதத்தால்
அதாவது
அதத் காரியமாய் -அதச் சரீரமாய் –அத தாத்மகமாய் –ஒரு வஸ்துவும் கிடையாது என்பதே நான்காம் பாதத்தில் தேறின பொருள்
மூன்று பாதங்களில் ஞான அனுகுணமாக அறுதியிட்ட அர்த்தத்தை
நான்காம் பாதத்தில் வைராக்ய அனுகுணமாக ஸ்தாபிக்கிறார்

நம்மாழ்வாரும்
நம் கண்ணன் கண் என்றும்
அல்லது இல்லை ஓர் கண்ணே -என்றும் பரத்வத்தை ஸ்தாபித்து அருளினார்
இத்தால் ஞானத்தில் காட்டில் வைராக்யத்துக்கு உண்டான ப்ராதான்யம் சொல்லுகிறது –

திண்ணன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லைஓர் கண்ணே.–2-2-1-

நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.

முதல் பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்
இரண்டாம் பாதம் –அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்
மூன்றாம் பாதம்–ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்
நான்காம் பாதம் –ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்

முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பரம் –ப்ரஹ்மதுக்கு ஜகத் காரண ஸம்பந்தம் உள்ளது என்று நிரூபணம் -அர்ஜுனன் வில்லாளி போல்
மற்ற மூன்று பாதங்களும் -பாத த்ரயமும் -அந்ய யோக வ்யவச்சேத பரம் -ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்று நிரூபணம் –அர்ஜுனன் வில்லாளி போல்
ப்ரஹ்ம லக்ஷணமான ஜகத் காரணத்வத்துக்கு அஸம்பவ சங்கா பரிஹார பரம்
ப்ரஹ்மம் ஆகிற லஷ்யமே இல்லை -ஆகையால் லக்ஷணம் எப்படிப் பொருந்தும் என்ற
லஷ்ய அஸம்பவ ப்ரயுக்த லக்ஷண அஸம்பவ சங்கை ஏற்பட
அதற்குப் பரிஹாரமாக –சேதன அசேதன விலக்ஷணமான ப்ரஹ்மமான லஷ்யத்தை முதல் பாதத்தில் ஸ்தாபித்து
காரணத்வமாகிற லக்ஷணத்துக்கு ப்ரஹ்மத்தில் ஸத் பாவத்தை ஸ்தாபிக்கிறார் ஸ்ரீ வேத வியாசர்

ப்ரஹ்மமும் காரணம் ஆகட்டும் -மற்ற ஒன்றும் காரணமாக அமையட்டும் என்று
காரணத்வ ரூப லக்ஷணத்திற்கு அந்யத்ர -லஷ்யமான ப்ரஹ்மத்தில் காட்டில் – மற்ற ஒன்றிலே வியாப்தி என்று அதி வியாப்தி சங்கை ஏற்பட
ஸ்ரீ வேத வ்யாஸர் மேலே பாத த்ரயத்தால் ப்ரஹ்ம பின்னம் காரணம் அல்ல -என்று சங்கா பரிஹாரம் செய்கிறார்

மற்றவற்றுக்கு காரணத்வ ஸம்பந்தம் அறுத்தல் -அந்ய யோக வ்யவச்சேதம்
ப்ரஹ்ம பின்னம் ஜகத் காரணம் அல்ல என்று நிரூபணம்
அதி வியாப்தி சங்கா பரிஹார பரம் பாத த்ரயத்திலும் என்றபடி –

———–

ஜிஜ்ஞாச அதிகரணம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாச
அத -அதற்குப் பிறகு -கர்மம் விசாரம் செய்து முடிந்த பிறகு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாச-இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது

கர்மங்களின் அல்ப அஸ்த்ர பலன்களில் நசை ஒழிந்து மோஷ புருஷார்த்தம் விரும்புவர்கள் ஆதலால்
அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது-அதனை பெற உபாயம் இன்னது-பெற்று அனுபவிக்கும் பலன் இப்படிப் பட்டது

சாதன சம்பத்தியின் ஆனந்தரயமே அத சப்தார்தம் என்பர் சங்கரர் -இத்தை மறுத்து ஸ்ரீ பாஷ்யம்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் பற்றியும் கூறுவதை மறுக்க வேண்டுமே

லகு பூர்வ பஷம்
கர்ம மீமாம்சை -அர்த்த வாத அதிகரணம்
ஆம்நா யஸ்ய க்ரியார்த்தத்வாத்
ஆநர்த்தக்யம் அததர்த்தாநாம்
தஸ்மாத் அநித்யமுச்யதே
வாயவ்ய்ம் ஸ்வேத மால பேத பூதிகாம -கருமம் கர்தவ்யமாக சொல்லும் வேத வாக்கியம்

அடுத்த வாக்கியம் வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -முன் சொன்ன வேத வாக்ய ஆராத்யமான தேவதை வாயு வின் பெருமையை சொல்லும் வாக்கியம்
சீக்கிரமாக பலன் அளிக்க வல்ல தேவதை–இப்படிப் பட்ட வாக்கியம் அர்த்த வாத வாக்கியம்
விதி வாக்யங்கள் இல்லை
விதி நாது ஏக வாக்யத்வாத் ஸ்துத்யர்த்தேன விதீ நாமஸ்யு -என்ற சூத்ரம் பரிகாரம்
விதி வாக்யதுடன் ஏக வாக்யமாகக் கொண்டு பிராமாண்யம் பெறத் தட்டில்லை

சக்தி கிரஹணம்-சிறுவர்கள் கேட்டு அறிவது
ஆநய
காம் நய
அஸ்வம் ஆநய
எல்லா பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ்யார்த்த பரங்களே
கார்ய பரங்க ளான வாக்யங்களுக்கு பிரமாண்யம் உண்டு

ஏவஞ்ச கார்ய ரூபம் இல்லாத பர ப்ரஹ்மத்தின் இடத்தில் வேதாந்த வாக்யங்களுக்கு தாத்பர்யம் இருக்க முடியாமையாலே
வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்திரம் ஆரம்பிக்கத் தக்கது அன்று -பூர்வ பஷம் ப்ராப்தம்

இனி பூர்வ சித்தாந்தம்
விருத்த வ்யவஹாரத்தினாலேயே சிறுவர் களுக்கு முதல் வியுத்பத்தி உண்டாகிறது என்பது தவறு
இதோ சந்தரன் இதோ கிளி இதோ குதிரை இதோ மாமா காட்டி பூர்வ ஜன்ம வாசனையாலே
பதங்களுக்கும் அர்த்தங்களுக்கும் உள்ள சம்பந்தம்
ஒரு கார்யத்திலும் அன்வயியாத வஸ்துவிலேயே சக்தி கிரஹணம் உண்டாகின்றது என்று மூதலிக்கப் பட்டது

கார்ய பரமான வாக்யத்தில் இருந்து தான் சக்தி கிரஹணம் உண்டாகிறது என்பதும் தவறு
தேவ தத்தா உனக்கு பிள்ளை பிறந்தது
ப்ரபாகரர்கள் சகல பதங்களும் கார்யார்த்த பரங்கள் என்று கூறுவது உக்தி அற்றது
சித்த பரமான வாக்யத்தில் இருந்தும் சக்தி கிரஹணம் உண்டாகும்
கர்ம விசாரம் செய்த அளவிலே கர்ம பலன்கள் அஸ்திரம் என்று உணர்ந்து
கர்ம விசார இச்சை தொலைந்து
கர்ம விசார இச்சையே ப்ரஹ்ம விசார இச்சைக்கு விரோதியாக இருந்ததால்
இந்த பிரதி பந்தம் தொலையவே
ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும்
அதில் பிரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது
எனவே ப்ரஹ்ம விசாரத்தை குறித்து
கர்ம விசாரம் நியமேன அபேஷிதம் என்றது ஆகிறது

————————————————————————————

இரண்டாவது –ஜனமாத்யதிகரணம்
சூத்ரம் ஜன்மாத் யஸ்ய யத
ஜென்மாதி –அஸ்ய -யத மூன்று பதங்கள்
ஜென்மாதி உத்பத்தி ஸ்திதி பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் இந்த சேதன மிஸ்ரமான பிரபஞ்சத்துக்கு
யத -எந்த வஸ்து வின் இடத்தின் இருந்து ஆகின்றனவோ அதுவே பர ப்ரஹ்மம்

தைத்ரியம் பிருகு வல்லி –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம
யதோவா இமானி பூதானி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஜ்ஞா சஸ்வ தத் ப்ரஹ்மேதி
கார்ணத்வ ரூபமான லஷணம்

பூர்வ பஷம்
வ்யாவர்த்தக லஷணங்கள் மூன்று ப்ரஹ்மம்

சித்தாந்தம்
தேவ தத்தன் கறுத்து பருத்து யுவாவாயும் செந்தாமரைக் கண்ணன் ஆயும்
யுவா நீலோ வாமன பங்குச்ச தேவதத்த –விசேஷணம் உப லஷணம் இவை
விருத்த தர்மங்கள் கால பேதத்தால் ஒரே வ்யக்தி இடம் இருக்கக் குறை இல்லையே

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த –கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

—————————————————————————————–

மூன்றாவது அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத்
யோனி காரணம்
பிரத்யஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாத
அப்பஷோ வாயு பஷ-தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்-வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்ட படியாலே சாஸ்திரம் ஏவ யோனி

அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவித்–பர ப்ரஹ்மம் அனுமானத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதால் அனுமானம் ஈஸ்வர சதானத்தில் சக்தி உடையது அன்று–வேதாந்த சாஸ்திரமே பிரபல பிரமாணம்
இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

சாஸ்திர யோநித்வாத்
யஸ்ய தத் -சாஸ்திர யோனி -தஸ்ய பாவ -சாஸ்திர யோநித்வம் -தஸ்மாத் சாஸ்திர யோநித்வாத் -சாஸ்திரம் ஒன்றையே
பிரமாணமாக கொண்டது ஆகையினால் வேதாந்த சாஸ்த்ரத்தினாலே ப்ரஹ்ம விசாரம் செய்ய வேணும் என்றதாயிற்று

இனி மூன்றாவது அதிகரணம் -சாஸ்திர யோநித்வா அதிகரணம்
ஸூத்த்ரம் -சாஸ்திர யோநித்வாத் –
யோநி யாவது -காரணம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாகக் கொண்ட படி என்கை
அப்பஷோ வாயு பஷோ -தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்டது -என்கை –

இங்கு பூர்வ பஷம் –
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு எந்த பிரமானத்தாலும் ஏற்படாத விஷயத்தில் தான்
சாஸ்திரம் பிரவர்த்திப்பது -என்றும்
பர ப்ரஹ்மம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதாலும்
பூம் யங்குராதிகம் ச கர்த்ருகம் கார்யத்வாத் கடவத் –எனபது அனுமான சரீரம்
கர்த்தாவை முன்னிட்டு -வீடு பானை போலே —

சித்தாந்தம்
விஸ்வாமித்ரர் சிருஷ்டி அறிவோம் -விசித்திர ஜகத் சிருஷ்டி ஜீவா கோடியில் ஒருவர் பண்ண -அந்ய மிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகவே சாஸ்திரமே பர ப்ரஹ்ம சித்தியில் பல பிரமாணம்
அப்படிப் பட்ட வேதாந்த சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாக பொருந்தும்

————————————————————————————–

நான்காவது சமன்வ்யாதிகரணம்
சூத்ரம்
தத் து ச்ன்வயாத்
தத் கீழ் சூத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியினால்

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹ ஸ்வரூபம்-
புருஷார்த்தத்வேன சம்பந்தமே சமன்வயமாவது
ஸ்வயம் பிரயோஜனம் பரம புருஷார்த்தம்

தத் து சமன்வயாத் -இதில் ப்ரஹ்மண-என்ற ஒரு பதமும் -சாஸ்தரேண -என்ற ஒரு பதமும் தருவித்துக் கொள்ள வேணும்
வேதாந்த சாஸ்திரங்கள் -மூலம் விசாரித்து அடையும் -ப்ரஹ்ம ஞானம் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்றதாயிற்று –

அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்––ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–22-

ஹே ரெங்கேச–சகலா-சமஸ்தமான

குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -திவ்ய சேஷ்டிதங்கள்
ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்

சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்

புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்

அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே

சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன

ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு

உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்

ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –

பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர ஸ்ருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –

இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –

ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்

இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு –
நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
இங்கே நிதி உண்டு என்கிறது போலே
உபாசன தத் பல விதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

இனி -நான்காவது சமன்வயாதிகரணம் –
ஸூத்த்ரம் -தத் து சமன்வயாத்
தத் -கீழ் சொல்லப்பட்ட சாஸ்திர பிரமாணகதவம்
சமன்வயாத் -நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியில் –

பூர்வபஷம் –
தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் உண்டாக வேணுமே
பிரயோஜனத்வத்தில் தான் அந்த விருப்பம் உண்டாகும்
இஷ்ட பிராப்தி -பிரவர்த்தியாலும் –யாகம் -ஸ்வர்க்கம் கொடுப்பது போலே –
அநிஷ்ட பரிகாரம் -நிவ்ருத்தி யாலும்
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமையால் பிரயோஜனத்வம் சொல்ல முடியாதே –

சித்தாந்தம் –
வேதாந்த வாக்யங்கள் பலவும்
அது தான் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்று சொல்வதால்
பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -21-
அத்ராச்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்லோகம் -அனுசந்தேயம்

—————————————————————————————————————————————–

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள்
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

இந்த நான்கு அதிகரண்ங்களும் -நான்கு ஸூ த்த்ரங்கள் சதுஸ் ஸூத்ரி -என்று வழங்கப்படும்
சாஸ்திரம் ஆரம்பிக்க அவசியம் இல்லை என்பதை நிரசித்து
இனி மேல் சாஸ்திரம் ஆரம்பிக்கிறது –

—————————————————————————————

அடுத்து ஈஷத்யதிகரணம்

ஈஷதேர் நா சப்தம் –1-1-5-
ஈஷதே ந அசப்தம் -அசப்தம் பிரதானம் -சாஸ்திர பிரமாணமாக உடையது அல்லாமையால் அனுமான கம்யமானது பிரதானம்
ந -சத் வித்யையில் உள்ளதாய் -ஜகத் காரணத்தை சொல்லுமதான சச் சப்தத்தால் வாச்யம் அன்று
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-சச் சப்த நிர்திஷ்ட
வஸ்து ப்ரஹ்மமே ஒழிய பிரதானம் இல்லை
வஸ்துவுக்கு ஈஷணம் சங்கல்ப கர்த்ருத்வம்
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6- என்று பிரச்துதமான சத்துக்கு சேதனத்வம் சொல்லி இருக்கையாலே
ஈஷணம் சேதனனுக்கு அசாதாரணமாய் முக்கியமான ஈஷணம் என்பதே விவஷிதம்

மேலே -6-14-2- தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே -என்று சச் சப்த வாச்யத்தை உபாசிப்பவனுக்கு
தேகத்தில் நின்று விடும் அளவே தாமதம் -உபாசனத்து லஷ்யம் பிரதானமாய் இருக்க ஒண்ணாதே
தொடக்கத்தில் யேநாஸ்ருதம் ஸ்ருதம் -என்று ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்த படி ஆகுமே என்று சொல்லி
ஸ்தூல சூஷ்ம சேதனங்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே விவஷிதம்

சதா சோம்யே ததா சம்பன்னோ பவதி -6-8-1-லயம் சொல்லி ஸ்வ மவபீதோ பவதி என்கையாலே சச் சப்த வாக்கியம் பரமாத்மாவாகவே இருக்க வேணும் என்றதாயிற்று
இந்த அதிகரணத்தில் இது தலையான சூத்ரம்

கௌணச்சேத் நாத்தம சப்தாத்
தந் நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்
ஹேயத் வாவச நாச்ச
பிரதிஜ்ஞ்ஞா விரோதாத்
ஸ்வா ப்யயாத்
கதி சாமான்யாத்
ஸ்ருத்வாச்ச –1-1-12-
என்கிற ஏழு சூத்ரங்களும் உள்ளன
இவற்றின் பொருள் கீழே பார்த்தோம்

ஈஷத் அதிகரணம் -1-1-5–இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு
சங்கல்ப விசேஷம் ஓதப்பட்டு உள்ளது
அந்த சங்கல்பம் கௌணம் அன்றிக்கே முக்கியமாக நிர்வகிக்க வேண்டி இருப்பதால்
அப்படிப் பட்ட சங்கல்பத்துக்கு ஆஸ்ரய பூதமான ஜகத் காரண வஸ்து
அசேதனமான பிரதானமாய் இருக்க முடியாது என்று நிரூபிக்கப் படுகிறது
அசேதனம் இல்லாமல் ஜீவனே ஜகத் காரணம் என்றால் என்ன -என்பதற்கு
பரிகாரமாக
அடுத்த அதிகரணம் அவதரிக்கின்றது –

——————————-
ஆனந்தமயாதிகரணம் -1-1-6
ஆனந்தமய அப்யாசாத் -1-1-13-அளவு கடந்த ஆனந்தம் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது பரமாத்மாவுக்கே பொருந்தும்
ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-
அந்ய பதம் மேலே உள்ள -அந்தரதிகரணம் இரண்டாம் சூத்ரம் -பேத வ்யபதேசாச்ச அந்ய -வருவித்துக் கொள்ள வேண்டும்
ஆனந்த மய -சப்தத்தினால் சொல்லப் படும் புருஷன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்க வேண்டும்
அளவு கடந்தததாக ஓதப்படுவதால் என்றபடி

ஆனந்த வல்லி-ஆனந்த மயா வித்யா
தைத்ரிய ஆனந்த வல்லி
தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
ஆத்மாவை பிரஸ்தாபித்து -அதற்கு மேல்

சைஷா ஆனந்தச்ய மீமாம்ஸா பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதரா நந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்யச அகா மகாதச்ய -அகா மகாதச்ய மகா விரக்த்ன்
ச்ரோத்ரியன் வேதாந்தம் சரவணம் பண்ணினவன்
உபாசன பிரியனான பகவானால் -நிருபாதிகம் இல்லை சோபாதிகம்
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இயற்க்கை யாக இவன் ஒருவனே பர ப்ரஹ்மம்

கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் பிரக்ருதமான ஆனந்தம் அடைய முடியும்
கோ வா பராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மா வன்றோ
ஆனந்தயதி- எல்லா வித ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது

கோஹ்யேவான்யாத் க பராண்யாத் எதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ்யே வா நந்தயாதி
உத்தர நாராயண அனுவாகம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய
பந்தா வித்யதே அயநாயா -என்பதாலும்
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக மகா புருஷனை உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் பெற்றவன் ஆகிறான்
அயனாய -மோஷ ஆனந்தம் அடையும் பொருட்டு
அந்யா பந்தா ந வித்யதே -அந்த மகா புருஷனைத் தவிர வேறு உபாயம் இல்லை
அன்வய வ்யதிரேக முகேன இரண்டு ஸ்ருதிகளும் சொல்லி

தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது

ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்று ஆனந்த வல்லியில் ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம என்று லஷணம் சொல்லி
தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாசாஸ் சம்பூத -என்று
அந்த ப்ரஹ்மா ஆத்மா என்றும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்கள் உண்டாவதும்
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு
தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பந்தம் உண்டாவது சொல்வதால்
இந்த ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா -இது பூர்வ பஷம்

நிருபாதிகமான ஆனந்தம் அந்த பர பிரமம் ஒருவனுக்கே
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் என்பதால்
ஆனந்த மயா -விகாரம் இல்லை ஆனந்தம் மலிந்த பரமாத்மா
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத அப்ரமேய ஆனந்த மயன் பரமாத்மாவே

விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத் -இரண்டாவது சூத்ரம் இந்த அதிகரணம்
யதுக்தம் –ஆனந்த ப்ராசுர்யம் அல்ப துக்க சத்பாவம் அவகமயதீதி -தத் அசத்
தயை குணத்தால் ஆஸ்ரிதர் துக்கம் அனுசந்தித்து தானும் துக்கிப்பது குணப் பிரசுர்யம் தான்
ஆனந்த மயன் என்றால் சிறிது துக்கம் கலசி இருக்குமோ என்னில்
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக-சுருதி அகில ஹேய பிரத்ய நீகத்வம் சொல்லும்

பிரக்ருதியில்
ஜன்ம காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
கால பேதத்தினால் ஒரே வ்யக்தியினிடம் ஓன்று சேர்ந்து இருக்கக் கூடியவை என்பதால்
அவை வருத்தங்கள் ஆகாதே
இதனால் ப்ரஹ்மத்துக்கு பஹூத்வாபத்தி எனபது இல்லை
உழவன் ஒருவனே விதை விதைப்பதும் பயிர் விளைப்பதும் அறுப்பதும் போலே
லஷ்மி பதித்வம் அசாதாராண சிஹ்னம்

ஆனந்த மய அதிகரணம்

இதில் தலையான ஸூத்த்ரம் -ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
இதற்கு மேல் உள்ள அந்தர் அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்ரம்-பேத வ்யபதே சாச்சான்ய-என்கிற ஸூத்த்ரத்திலே
இருந்து அத்ய -பதம் எடுத்துஆனந்த மய அத்ய அப்யாசாத் -என்றதாயிற்று
ஆனந்த மய -ஆனந்த மய சப்தத்தால் குறிக்கப் பட்ட புருஷன்
அத்ய -ஜீவாத்மாவில் காட்டிலும் வேறு பட்ட பரமாத்வாகவே ஆகக் கடவன்
ஏன் என்னில்–அப்யாசாத் -அளவு கடந்ததாக ஓதப்பட்ட ஆனந்தம் உடைமை -என்பதாலே
தைத்திர உபநிஷத் ஆனந்த வல்லி-
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்கிற வாக்யத்தினால்
ஆனந்தமயமான ஆத்மாவை பிரஸ்தாபித்து –
அதுக்கு மேலே –
சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய -என்னும் அளவாக
ஆனந்த மயமான ஆத்மாவுக்கு உள்ள ஆனந்த அளவு கூறும் அடைவில்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் பண்ணினவன் -முக்தன் -அவனுக்கும் அப்படிப் பட்ட 100 மடங்கு நான் முகனை விட -ஆனந்தம்
அகாமஹத –விஷய விரக்தன் -என்றபடி
முக்தானந்தம் சோபாதிகம்-நிருபாதிகம் அன்று
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -காரணம் ஒன்றும் சொல்லப் பட வில்லை
நிருபாதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே -என்றதாயிற்று–

ஆனந்த வல்லியை -ஆனந்த மய வித்யா -என்பர் வேதாந்திகள் -அந்த வித்தையில் –
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது –

இதன் பொருளாவது
கீழே சொல்லப் பட்ட ஆகாச சப்த வாச்யமான வஸ்து
நிருபாதிகமாயும் அபரிச்சின்ன ஆனந்தம் உடையதாய் அல்லாமல் இருக்குமானால்
கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் –
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ
உத்தர நாராயண அனுவாகத்திலும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதனாலும்
இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகின்றது

ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக அம மகா புருஷனை உபாசிக்கிறவன்

அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தத்தைப் பெற்றவன் ஆகிறான்

அயனாய -அந்த மோஷ ஆனந்த பிராப்தியின் பொருட்டு
அந்ய பந்தா ந விந்த்யதே -அந்த மகா புருஷனைத் தவிர்ந்து வேறு ஒரு உபாயம் இல்லை –

ஏஷஹயே வா நந்தயாதி -என்கிற சுருதி வாக்யத்தில் அன்வயன முகேன தெரிவிக்கப் பட்ட அர்த்தமே
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்று வ்யதிரேக முகத்தாலே தெரிவிக்கப் பட்டது
உபய ஸ்ருதிகளும் ஏக அர்த்தம்
லஷ்மி பதியே விஷய பூதன் –

இன்னமும் ஆனந்த மய வித்யையில்-
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்கிற வாக்யத்தினாலே
ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ள
புண்டரீ காஷனையும் ஒன்றாக சொல்லி இருப்பதால்
ஆனந்த மய வித்யாவேத்யனும் புண்டரீ காஷனும் ஆனவன்
பரம புருஷனே -என்ற அர்த்தம் தேறிய படி-

பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் –ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று அந்த ப்ரஹ்மம் லஷணம் கூறி
தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஸ் சம்பூத -இத்யாதி
வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா என்னும் இடத்தையும்
அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியும் சொல்லி
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் –அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்ற அளவால்
உபாக்ராந்தமான ஆத்மா உபதேச பரம்பரை யானது ஆனந்தமயனில் சமாப்தி செய்யப் பட்டு இருக்கிறது –
ஆகையால் உபக்ரமித்த ப்ரஹ்மம் ஆனந்தமயமான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது –
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு -தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்ற உத்தர வாக்யத்தில்
சரீர சம்பந்தித்வம் ஆகிற சாரீரத்வம் சொல்லப் பட்டு இருக்கிறது
கர்ம பரவசனான ஜீவாத்மாவுக்க்கே கர்மபல அனுவர்த்தமாக சரீர சம்பந்தம் சம்பவிக்கும்
அகரமா வச்யனான பரம புருஷனுக்கு சம்பவிக்க நியாயம் இல்லை
ஆகவே ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா தான் என்னும் இடம் சித்தம் –

சித்தாந்தம்
நிருபாதிக ஆனந்தம் உடைமை பரமாத்வுக்கு மட்டுமே –
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் அவன் என்று ஒதப் படுவதாலும்
ஆனந்தமயம் -மய பிரத்யகம் விகாரம் அர்த்தம் ஆகையாலே
விகாரம் அற்றவன் -பரமாத்வாவுக்கே
அன்ன மய யஞ்ஞா -இங்கே மயம்-ப்ராசுர்யம் -மலிவு என்றே பொருள்
அன்னம் மலிந்த வேள்வி
இங்கும் ஆனந்தம் மலிந்த பரமாத்மா -என்பதால் விகார வாதம் அப்ரசித்தம் –
அடுத்த படியாக
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நிபிபேதி குதச்சன-என்று
வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாதபடி அப்ரமேயமான ஆனந்தம்
உடையவனாக ஓதப்பட்ட பரமாத்மாவின் இடத்தில் அன்றோ
மலிந்த ஆனந்தம் உடைமை தேறக் கடவது –

மேலும் ஒரு வாதம்
ஆனந்த பிராசுர்யம் -என்றால் துக்கம் சிறிது உண்டு என்றும் தோற்றும் இல்லையா
எத்தைக் காட்டிலும் ஆதிக்யம் என்னும் பொழுது
ஏவஞ்ச அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் -என்னப் படுகிற
பர ப்ரஹ்மம் இடத்தில் ப்ரசுர்ய ஆனந்த சாலித்வம் என்று
பரிஷ்கரிக்கப் பட்ட ஆனந்த மயத்வம் சொல்லுவதற்கு இல்லை என்பதாக –

இதுவும் பிசகு –

அந்த ஆனந்த ப்ரசுர்யத்தை விவரிக்கப் புகுந்த
சைஷா ஆனந்தச்ய மீமாம்சா பவதி -இத்யாதி ஆனந்த மீமாம்சையில்
தே ஏ சதம் பிரஜாபதிர் ஆனந்தா -என்னும் அளவாக பிரஸ்தாபிக்கப் பட்ட
சதுர்முக பரிந்த சகல ஜீவர்கள் ஆனந்தத்தைக் காட்டிலும்
நூறு மடங்கு அதிகமாய் இருக்கை யாகிற ஆனந்தமய பிரசுர்யமே
விவஷிதமாக விவரித்து இருக்கையாலே
துக்க சம்பந்தம் பிரசங்கிக்க விரகு இல்லை-

தயாளு
அடியார் துக்கம் கண்டு தானும் துக்கிப்பது தயாளுத்வம்
இப்படி துக்கம் உண்டு என்றால் ஆனந்த மயத்வம் கொள்ள இடம் இல்லையே என்ற சங்கை தோன்ற
இந்த அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்த்ரத்தில்
விகார சப்தான் நேதி சேனன ப்ராசுர்யாத் –
இதற்க்கு
ஸ்ரீ பாஷ்யத்தில்
அபஹதபாப்மா -விஜரோ விம்ருத்யுர் விசோக– ஸ்ருதி வாக்யத்தை எடுத்துக் காட்டி
பாபம் செய்தாலும் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சம் உண்டாக பெறாதவன்
அதே போலே சோகம் உண்டானாலும் அதன் பலனான ஹேய ஸ்பர்சம் உண்டாகப் பெறாதவன்
குணங்களில் சிறந்ததான சோகம் என்பதே ஆகும்

—-

7-அந்தரதிகரணம் –

அந்தஸ் தத்தர்மோ பதேசாத் –1-1-21-
இதில் மேல் உள்ள -பேத வ்யபேதேசாச்ச அந்ய-என்கிற சூத்ரத்தில் இருந்து அந்ய பதம் தருவித்திக் கொண்டு
அந்த -ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உறையும் புருஷன்
அந்ய -ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரம புருஷன்
தத்தர்மோ பதேசாத் -அந்த பரம புருஷனுக்கு உள்ள அசாதாராணமான தர்மங்களை ஓதி இருப்பதனாலே –

சாந்தோக்யம் –அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் –ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத
ஸூ பால உபநிஷத் –ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண –
புருஷ சூக்தம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி –
இவற்றால் ஆதித்ய மண்டலத்தின் உள்ளுறையும் புருஷன் பரம புருஷன் என்று நிர்ணயிக்கப் படுகிறது –

சாரீர சப்தம் பரம புருஷனுக்கு சம்பவிக்காதே பூர்வ பஷம்

சித்தாந்தம் -தஹர வித்யா பிரகரணம் –ந ஸூ கருத்தும் ந துஷ்க்ருதம் சர்வே பாபமா நோ நோ நிவர்த்தந்தே அபஹதபாப்மா
ஹ்யேஷ ப்ரஹ்ம லோக –என்று சொன்னதையே இங்கு -ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்பதால் கர்மம் சம்பந்தம் இல்லாத
வியக்தியே ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ளதாக ஸ்பஷ்டம்
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் -என்கிற படி ஸ்வ இச்சியினால் பரிக்ரஹிக்கப் பட்ட அப்ராக்ருதமான சரீஎரம் உடையவன் என்றதாயிற்று

சாது பரித்ரானம் ஏவ உத்தேச்யம் -ஆநு ஷங்கி கஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே –
மழுங்காத வை நுதிய –தொழும் காதல் களிறு அளிப்பான் —-இத்யாதி கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் உடைய இந்த ஸ்ரீ ஸூக்திகள்-
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்யச் சரீரம் யா –ஆதித்ய மாந்தரோ யமயதி -என்றும்
யஸ் சர்வேஷூ தேஷு திஷ்டன் -என்றும் அனைவரையும் நியமிப்பவனாக சொல்லி இருப்பதால்
இது ஆத்மாவைக் குறிக்காது பரம புருஷனை தான் குறிக்கும் என்றதாயிற்று

————————-

ஜ்யோதிர் அதிகரண சித்தாந்தம்
சாந்தோக்யம் -அத யத்த பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே -என்ற இடத்துக்கு முன்னர் -பாதோச்ய சர்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி
என்பதால் பர ப்ரஹ்மமே இந்த ஜ்யோதிஸ் ஆகும் –
சாந்தோக்யத்தில் காயத்ரீ வா இதம் சர்வம் —என்று பிரஸ்தாபித்து -ததேதத் ருசாப் யுக்தம் -என்றதால் -பூதம் பிருத்வி சரீரம் ஹிருதயம்
நான்கையும் நான்கு பாதங்களாக உடையவாக சொல்லிருப்பதால் காயத்ரீக்கு சமானமான பர ப்ரஹ்மமே சொல்லப் பட்டது –
நான்கு பாதங்கள் என்பதாலே சாம்யம்
இதே போலே -தேவா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே -என்று தொடங்கி சைஷா விராட் -என்று –
அக்னி சூர்ய ஜல சந்திர வாயு வாக் சஷூஸ் ச்ரோத்ர மனஸ் பிராணன்கள் ஆகிற பத்து வஸ்துக்களின் –
பத்து அஷரங்கள் கொண்ட சந்தஸ்க்கு வாசகமான விராட் சப்த பிரயோகம் போலே –
திவா பரோ ஜ்யோதி -தயு லோகத்துக்கு அப்பால் பட்டது த்யுலோக சம்பந்தியும் ஒன்றாக இருக்கக் கூடுமோ -என்னில்
-மரத்தின் நுனியில் பறவை -நுனிக்கு அப்பால் பறவை இரண்டும் சொல்வது போலே

————

8-ஆகாசாதி கரணம்

ஆகாசஸ் தல் லிங்காத்–1-1-23-
இதிலும் பேத வ்யபதேச்ச அந்ய -இருந்து அந்ய சப்தம் தருவித்துக் கொள்ள வேண்டும்
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே -என்கிற இடத்தில் ஆகாச சப்தத்தினால் சொல்லப் படுபவன்
அந்ய -பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
தல் லிங்காத் -அசாதாரணமான லிங்கம் ஸ்ருதமாய் இருப்பதினால் என்றவாறு
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே ஆகாசம் பிரத்யச்தம் யந்தி ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயாத் ஆகாச பராயணம் -என்று
ஆகாசம் சர்வ பூத உத்பத்தி லய காரனத்வமும் சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் பராயணத்வம் சொல்லப் படுகின்றன
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே –விஸ்வத பரமம் நித்யம் விச்வம் நாராயணம் ஹரிம் -நாராயணம் மஹாஜ் ஞேயம்
விச்வாத்மானம் பராயணம் –என்பதால் பரம புருஷனையே குறிக்கும்

————————————-

இந்திர பிராண அதிகரணம்
பிராணஸ் தத் அநு கமாத் -1-1-29-
பிராண சப்தம் இந்த்ரனுக்கும் உப லஷணம்
கௌஷீ தகி உபநிஷத் – பிராணோச்மி பிரஜ்ஞாத்மா தம் மாம் ஆயுரம்ருதம் இதி உபாஸ்வ -என்று
தன்னையே உபாசிக்க ப்ரதர்னனுக்கு உபதேசித்து
ச ஏஷ பிரஜ்ஞாத்மா ஆனந்தோ ஜரோம்ருத -ச ன் சாதுநா கர்மணா பூயான்னோ எவாசாதுனா கர்மணா கநீயான் -என்றவை
பர ப்ரஹ்மம் இடமே சம்பவிக்கும்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் -என்றும்
யமாத்மா நமந்தரோ யமயதி -என்றும் அந்தர்யாமி ப்ராஹ்மண ஸ்ருதியின் படி இந்திர பிராண சாரீரகனான பரமாத்மாகவே இருக்கத் தக்கது

———————————————————-

முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம்
முதல் அதிகரணம் –சர்வத்ர பிரசித்தி அதிகரணம்
பரம புருஷன் உபாசகர் சரீரத்தின் உள்ளே இருந்தாலும் கரும பலன்களை அனுபவிக்காது –
இரண்டாம் அதிகரணம் –அத்த்ரதிகரணம் —
அத்தா சராசரக் ரஹணாத்–1-2-9-
அத்தா -போக்தா என்று ஓதப்பட்டவன் -ச -அந்த பரம புருஷனே யாவன் –
சராசரக் ரஹணாத்-சகல பிரபஞ்சமும் போஜ்ய வஸ்துவாக ஸ்ருதியில் க்ரஹிக்கப் படுவதால்
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யச்யோவ பசே சனம் க இத்தா வேத யத்ர ச
உபாசகன் ரதி -சரீரம் முதலானவற்றை தேர் -சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் –

————————————–

அந்தர உபபத்தே –1-2-13-
அந்தர -கண்களின் உள்ளே இருப்பவன்
ச -அந்த பரம புருஷன்
உபபத்தே -அங்குச் சொல்லப்படும் அபயத்வம் அம்ருதத்வம் -முதலானவை அப் பரம புருஷன் இடத்திலேயே பொருந்தக் கூடியவை யாதலால்
ய ஏஷோஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏத தம்ருதம் ஏததபயம் ஏதத் ப்ரஹ்ம – என்பதில்
அஷிணி புருஷோ த்ருச்யதே -கண்ணில் உள்ளவனாக ஒரு புருஷன் எற்படுகிறான்
யச் சஷூஷி திஷ்டன் சஷூ ஷோந்தர-கண்ணில் உள்ளவனாகவும் நியாமகனாகவும் ஓதப்பட்ட பரம புருஷன் அந்த
ய ஏஷ –இத்யாதி வாக்யத்தினால் நினைப்பூட்டப் படுகிறான் ஆகவே அஷி புருஷன் பரம புருஷனாகவே இருக்கத் தக்கவன் –

தேவதாதிகரணம்
பரம புருஷன் உபாசனத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர் போலே அதிகாரம் தடை அற்றது என்கிறது
தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவத் –1-3-25
அர்த்தித்வ சாமர்த்தியங்கள் -வேணும் என்னும் அபேஷையும் அதற்கு உண்ட ஆற்றலும்
இதில் ஸூத்ரனுக்கு அதிகாரம் உண்டோ என்னும் சங்கை தீர்க்க
அபசூத்ராதிகரணம் -பிறந்தது
சு கஸ்ய தத நாதர ச்ரவணாத் ததாத்ரவணாத் ஸூ ச்யதே ஹி –1-3-33-
தஸ்மாத் சூத்ரோ யஜ்ஞ்ஞே அனவகல்ப்த-என்று யஜ்ஞ்ஞாத்தில் ஸூத்ரனுக்கு அதிகாரம் இல்லை என்றது வேதம் –
ஆனால் கர்ம அனுஷ்டானங்கள் ஸ்ரவண மானச உபாசனங்கள் உண்டே -அது இல்லை என்று மறுக்கப் படுகிறது இந்த அதிகரணத்தில் –
அபேஷை இருந்தாலும் சாமர்த்தியம் இல்லாததால் -என்கிறது
சு கஸ்ய ஸூ ச்யதே ஹி-
இந்த ஜ்ஞானஸ்ருதி என்னும் சத்ரியனுக்கு சோகம் உள்ளமை ஸூ சிதமாகிறது -எதனால் என்னில்
தத நாதர ச்ரவணாத் -தத் அநாதர ச்ரவணாத் -அந்த ஹம்ச பஷியின் இழிவுரையைக் கேட்டதனால்
ததாத்ரவணாத்-அப்பொழுதே ரைக்ருவர் இடம் விரைந்தோடி வருகையால்
ஆக ஸூ த்ரனுக்கு ப்ரஹ்ம விதியை அதிகாரம் இல்லை என்று முடிந்தது
வாக்ய அந்வயாதிகரணம்
ப்ருஹதாரனண்யத்தில் மைத்ரேயி ப்ராஹ்மணம் -யாஜ்ஞ வல்க்யர் மைத்ரேயி இடம் ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்ய
ஆத்மா சப்தம் பரமாத்மாவே -கார்ய காரண பாவம் உண்டு என்பதாலும் முக்தி தசையில் சாம்யாபத்தி என்பதாலும்
சரீராத்மா -அந்தராத்மா பாவத்தாலும் என்று காட்ட மேலே மூன்று சூத்ரங்கள்

—————————————————-

முதல் அத்யாயம் நான்காம் பாதம் –வாக்யான்வயதிகரணம்-நான்கு ஸூத்ரங்கள்
வாக்ய அந்வயாத் –முதல் ஸூ த்ரம்-இத்தால் ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -என்ற இடத்தில்
ஆத்மா பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறது
மேலே மூன்று ஸூத்ரங்களாலே ஆச்மரதத்ய மதம் -ஔடுலோமி மதம் காசக்ருத்சன மதங்கள் காட்டப்படுகின்றன
இதில் முதல் ஸூத்ரத்தாலே –பிரதிஜ்ஞா சித்தேர் லிங்க மாச்மரத்த்ய -ஆச்மரத்த்ய மதம் -கார்ய காரண பாவம் ஸ்ருதியில் சொல்லப் பட்டு
இருக்கையாலே அவற்றுக்குள் பேதம் உண்டு என்றவாறு -இவ்வபேதத்தை தெரிவிக்க பரமாத்மா ஜீவாத்மாக்களுக்கு ஐகய உக்தி உள்ளது என்கிறார் –
உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் யௌடுலொமி –முக்தி தசையில் ஜீவாத்மா பரமாத்மா அபெதித்து அவலம்பித்து ஔடுலொமி நிர்வஹித்தார்
அவஸ்திதே ரிதி காசக்ருத்சன -அந்தராத்மாவாக இருப்பதாலும் சரீர பரிந்த வாசகத்வம் சித்தம் ஆகையாலும் ஆத்மா சப்தத்தை
பரமாத்மா பர்யந்த வாசாகமாக நிர்வஹிப்பது உசிதம் என்கிறார் -காசக்ருத்ச்னர்

——————

இரண்டாம் அத்யாயம் –அவிரோதாத்யாயம்
ப்ரஹ்மத்துக்கு உண்டான காரணத்தவத்தாலும் ஜகத்தினுடைய கார்யத்வத்திலும்சங்கதமான
விரோதங்களை பரிக்ரஹித்து -ஜகத் ப்ரஹ்மங்களுக்கு உள்ள கார்ய காரண பாவத்தை ஸ்த்திரம் ஆக்குவது -என்றபடி

2–1-ஸ்ம்ருதி பாதம் -இதில் முதல் இரண்டு அதிகரணங்களால் சாங்க்ய யோக ஸ்ம்ருதி யோக விசாரம் செய்து
மற்ற அதிகரணங்களில் யுக்தி விசாரம் செய்தாலும் ஸ்ம்ருதி விசார பிரதானம் என்பதால் இந்த பாதம் ஸ்ம்ருதி பாதம் –

ஸ்ரீ கபில மகரிஷியே சாங்க்ய தந்த்ர பிரவர்த்தகர் ஆயினும் மன்வாதி ஸ்ம்ருதி விருத்தம் -என்று அநாதரணீயை-என்றவாறு –
நியாய வ்ருத்த சம்ருத்ய நுக்ருஹீத சுருதியில் காட்டிலும் நியாய அவ்ருத்த சம்ருத்ய நுக்ருஹீத சுருதி பிரபலை என்றும்
ருஷி -கபில -மாத்ர பிரணீத சம்ருத்ய நுக்ருஹீத சுருதியில் காட்டிலும் ஆப்த தம -மனு பிரணீத சம்ருத்ய நுக்ருஹீத சுருதி பிரபலை என்றும்
ஏக ஸ்ம்ருதி அநுக்ருஹீத சுருதியில் காட்டிலும் அநேக ஸ்ம்ருதி அநுக்ருஹீத சுருதி பிரபலை என்றும் கருத்து

ஆக கபில தந்த்ர ஸித்தமான பிரகிருதி தத்வம் ஜகத் காரணம் அல்ல -மன்வாதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடி
சேதன அசேதன விலக்ஷண ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பது வேதாந்த விழுப் பொருள் என்கிறார் இதில் –

2–2-தர்க்க பாதம் -யுக்தி விசார பிரதானம் -முதல் அதிகரணத்தில் பிரதான காரணத்வ வாத நிரஸனம் –
மேல் அதிகரணங்களில் பரமாணு காரணத்வ வாத நிரஸனம் செய்து ப்ரஹ்ம காரண வாத ஸ்தாபனம் –

2–1-ஸ்வ பக்ஷ ஸ்தாபனம்  -2-2-பர பக்ஷ ப்ரதிஷேப பரம்
ஸ்வ பக்ஷத்தில் பிறர் ஏறிடும் தோஷங்களை பரிஹரித்து ஸ்வ பஷ ஸ்தாபனம் செய்தார் ஸ்ம்ருதி பாதத்தில்
பிற மதங்களுக்கு தோஷங்களைக் காட்டி அவற்றைக் கண்டிக்கிறார் தர்க்க பாதத்தில் –
சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன சைவ மதங்களை தூஷிக்கிறார் தர்க்க பாதத்தில் -7-அதிகரணங்களாலே
மேலே இறுதி -8-அதிகரணத்தில் பாஞ்ச ராத்ர பிராமண்ய ஸ்தாபனம் –

ஈஷத் யதிகரணாதிகளில் சாங்க்ய மத பிரஸ்தாபம் உள்ளதாயினும் சாஷாத்தாக தன் மத கண்டனம் உள்ளது இந்த தர்க்க பாத்ததிலே என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர்
பிரதானம் என்றும் மூல பிரகிருதி என்றும் சப்தம் என்றும் சொல்லுகிற அசித்தத்வம்-ஆனுமாநிகம்-அப்ரஹ்மாத்மகம்
குணத்ரயாத்மகம் -ஜகத் காரணம் என்பதே சாங்க்ய பக்ஷம்
அவன் அனுமானத்தை நிரசித்து- சாங்க்ய யுக்த பக்ஷம் நிரஸனம் -செய்யும் பொழுது -தத் யுக்த பிராமண த்ரய தூஷணமும் கர்தவ்யம் ஆகிறது
ப்ரத்யக்ஷ சித்த பதார்த்தங்களில் சாணக்யனோடு அதிக விவாதம் கிடையாது -தர்மி தர்மங்களுக்கு அபேதமே
காரியங்களுக்கு அபி வ்யக்தி மாத்திரமே உள்ளது -அவஸ்தாந்த்ராபத்தி இல்லை -இத்யாதி விஷயங்களில் விவாதம் உண்டு —
ஆயினும் ப்ரத்யக்ஷ சித்த பதார்த்தங்களில் நாதீவ விவாத -என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் –ஆகையால் பிரத்யக்ஷ நிராஸத்தை உபேக்ஷித்தார் ஸ்ரீ வியாசர்

சாங்க்ய ஆகமம் பூர்வ காண்டத்தில் -முதல் அத்யாயம் -பிராமண அத்தியாயத்தில் -பெரும்பாலும் நிரஸ்தம் —
ஆகையால் ஆகம நிராசம் உபேக்ஷிதம் -பரிசேஷாத் சாங்க்ய யோக யுக்தி அனுமானத்தை இங்கே தூஷிக்கிறார்
அப்ரஹ்மாத்மகம் பிரதானம் ஜகத் காரணம் எனும் தத் யுக்த அனுமானத்தை தூஷித்து சத் அனுமானத்தாலே ப்ராஞ்ஞ அதிஷ்டிதமே பிரதானம் என்று
ஸ்தாபிக்கிறார் வியாசர் –

இங்கே சங்கை எழுமே -இந்த அதிகரணத்தில் அனுமானத்தாலே ஈஸ்வரனை ஸ்தாபிக்கும் வியாசர்
சாஸ்திர யோனித்வ அதிகரணத்தில் முன்னமே அனுமானத்தால் ஈஸ்வரனை சாதிக்க இயலாது என்பான் என் என்னில் -இந்த சங்கைக்கு பரிஹாரம்
சர்வ ஸ்ரஷ்டாவான பரமாத்வை அனுமானத்தால் சாதிக்க இயலாது என்றார் அங்கு -இங்கு பரமாத்வாய் அனுமானத்தாலும் பாதிக்க இயலாது என்கிறார்
அனுமான அவிஷயமான பர ப்ரஹ்மத்தை அனுமானத்தால் சாதிக்கவும் பாதிக்கவும் இயலாது என்பதே திரண்ட பொருள்

தர்க்க பாதத்தில் -கபில ப்ரோக்தமான சாங்க்ய தந்த்ரத்தையும் -ஹிரண்ய கர்ப்ப ப்ரணீதரமான யோக தந்த்ரத்தையும் -சிவ ப்ரோக்தமான
சைவ தந்த்ரத்தையும் வியாசர் தூஷிக்கிற படியால் தேறிய பொருளாவது –
மும்மூர்த்திகள் ஆனதும் வேத விருத்தமாக அவர்கள் பேசினால் த்யாஜ்யம் -வேத அனுகுணமே உத்தேச்யம் –
இறுதியில் பாஞ்சராத்ர பூஷணம் செய்வது சங்கதமே– சங்கதி யாவது தூஷணமோ பூஷணமோ பதார்த்தம் அல்ல

சாங்க்யாதிகள் வேதத்துக்கு எதிரியாக மாட்டாதே என்ற நிரூபணம் பாதார்த்தம்–ஆகும்
சாங்க்யாதி மதங்கள் குத்ஸிதி யுக்தி மூலகங்கள் ஆகையால் துர்பலங்கள்-ஆகையால் வேதங்களுக்கு எதிராக நிற்க இயலாது
பாஞ்ச ராத்ரம் வேத அனுகுணம் ஆகையால் வேத விருத்தம் இல்லை —
சாங்யாதிகளுக்கு வேத ப்ரத்யர்த்த நிராஸமே பாதார்த்தம் -என்றபடி -ஆகையால் பாஞ்சராத்ர ப்ரமண்ய ஸ்தாபனம் பாத சங்கதமே யாகும் என்றபடி –

பாஞ்ச ராத்ர சந்நிதியில் -சாங்க்யாதிகளான பஞ்ச மதங்களும் இராத்திரியாகுமே
சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன சைவ தூஷணத்தையும் -பாஞ்ச ராத்ர பூஷணத்தையும் சேர்த்து கண்டவர்கள் உணர்வார்கள்
மோக்ஷ தர்மத்திலும் -சாங்க்ய யோக யுக்தமான -25-தத்துவங்களையும் -யோக யுக்தமான யோகத்தையும் -வேத யுக்தமான கர்மங்களையும் -அங்கீ கரித்து
தத்வங்கள் ப்ரஹ்மாத்மகங்கள் என்றும் -யோகம் ப்ரஹ்ம உபாசனம் என்றும் – கர்மங்கள் ப்ரஹ்ம ஆராதனங்கள் என்றும் ஆரண்யகத்தில் அருளிச் செய்தார்
இவ்விஷயத்தையே பாஞ்ச ராத்ரஸ்ய க்ருத்ஸ நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -என்று
நாராயணன் பாஞ்ச ராத்ர தந்திரத்தில் விஸதீ கரித்தான் என்றபடி -என்பதே ஸ்ரீ பாஷ்ய சாரம்

மேலே வேத வாக்கியங்களில் பரஸ்பர விரோதா சங்கா பரிக்ரஹம் செய்யப் போகிறவராய் முதல் முன்னமே வேத சாத்வதங்களுக்கு விரோதி சங்கா பரிக்ரஹம் செய்கிறார் இங்கு
ஆகாசாத் யுத்பத்தி விஷயத்திலும் ஜீவ அனுத்பத்தி விஷயத்திலும் ஸ்ருதி வாக்கியங்களில் காணப்படும் பரஸ்பர விரோதி சங்கா பரிக்ரஹம்
வியதிகரணம் தொடக்கமாக செய்யப் போகிறார் வியாசர்
அதற்கு முன்னமே ஜீவ அனுத்பத்தி விஷயத்தில் பாஞ்ச ராத்ர விரோத சங்கை ஏற்பட அதற்கு பரிஹாரம் உரைத்து
பாஞ்ச ராத்ரம் பரமதம் என்ற பிரமத்தை நிரசிக்கிறார் இங்கே -ஆகையால் இந்த அதிகரணம் பாதத்தின் இறுதியில் அமைத்தார்

இந்த பாதத்தில் ரஸநாநுபத்திகரணம் தொடங்கி சாங்க்யாத் யாகம விசாரம் செய்யப் படுகிறது –
ஆகம சாம்யத்தைப் பற்ற பாஞ்சராத்ர ஆகமும் அப்ரமாணம் என்ற சங்கை உதிக்க அத்தை நிரசித்து பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தை ஸ்தாபிக்கிறார் –

சாக்த மத நிராச பரம் என்பர் மத்வர் -அது பின்ன விஷயம் -பாஞ்ச ராத்ர யுக்த நாராயண பரத்வமும் நாராயண ஆராதன வைபவமும் சங்கர பாஷ்ய சம்மதமே
தத் யுக்த ஜீவ உத்பத்தி விஷயம் ஒன்றிலே மட்டும் விசம்வாதம் காட்டினார்கள் -பாஷ்யபா மதீகாரர்களான-சங்கர வாசஸ்பதி மிஸ்ரர் –
பாஞ்சராத்ரத்துக்கு ஜீவ உத்பத்தி விஷயத்தில் தாத்பர்யம் இல்லை என்று அந்த விசம்வாதத்தையும் களைந்து எறிந்தார் கல்ப தருகாரரான அமலா நந்தர்
பாஞ்ச ராத்ரத்துக்கு -ஜீவ உத்பத்தி -வசனத்துக்கு கௌணார்த்தவம் கொண்டு பாஞ்ச ராத்ர பிரமாணத்தையே கல்பதருகாரரே ஸ்தாபிக்கிறார்
மாதாந்தர்களுக்கும் பாஞ்சராத்ர ஆகமம் சம்மதம் என்றதாயிற்று

இப்படி ஆறு பாதங்களால் ப்ராஹ்மண நிஷ்டமான காரணத்தை சோதித்து

மேல் இரண்டு பாதங்களால் -வியத் பாதம் -பிராண பாதம் –ஜெகன் நிஷ்டமான கார்யத்வத்தை சோதிக்கிறார் வியாசர்
ஆகாச ஆத்ம இந்திரியாதிகளுக்கு தத் தத் வஸ்து ஸ்வரூப அனுகுணமாய் ஸ்வரூப விகார ஸ்வபாவ விகாரங்களை நிரூபித்து
அவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்துவமே உள்ளது என்று ஸ்தாபிக்கிறார் –
வியததிகரணத்தில்-ஆகாச நித்யத்வத்தை சங்கித்து ஆகாச கார்யத்வம் சித்தாந்தம் –
ஆத்மாதிகரணத்தில் ஆத்ம கார்யத்வத்தை சங்கித்து ஆத்ம ஸ்வரூப நித்யத்வம் சித்தாந்தம் –
ஆகையால் சேதன அசேதனங்களில் துல்ய கார்யதா நிரூபணம் இப்பத்துக்கு பிரமேயம் என்ன ஒண்ணாது
ஆகையால் இ றே ஸ்ரீ பாஷ்யகாரர் கார்யதா பிரகார விசோதனம் பாதார்த்தம் என்று அருளிச் செய்கிறார் –

2–1-பாதத்தில் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -என்கிற விஷயத்தில் பர சமயிகளால் உத்பாவிதங்களான தோஷங்களை பரிஹரித்து
ப்ரஹ்ம காரணத்தை ஸ்தாபித்தார் –2–3-பாதத்தில் ஜகத்து காரியம் விஷயத்தில் பர யுக்த தோஷங்களை பரிஹரிக்கிறார்
இவ்விரண்டும் ஸ்வ பக்ஷ ஸ்தாபன பரம் -என்று சங்கதம்
நடுவில் -2–2-அமைய காரணம் என் என்னில் –
காரண விஷயத்தில் பர யுக்த தோஷ பரிக்ரஹ பரம் முதலில் அருளி -காரண விஷயத்தில் பர பக்ஷ பிரதி ஷேப பரமான
காரண விசார பரம் -என்று இரண்டையும் பூர்வாபரமாக நிர்த்தேசித்து மேலே கார்ய விசார பரமான வியத்பாத பிராண பாதங்களை பின்னே அமைத்தார் என்றபடி –

ஆகாசாதிகளுக்கு ஸ்வரூப விகார ரூப கார்யத்வமும் -ஜீவாத்மாக்களுக்கு ஸ்வ பாவ ரூப கார்யத்வமே என்று நிரூபிப்பார் -ஆர் என்னில் -உபநிஷத்தே நியாமகம்
போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா–என்று தத்வ த்ரய ஸ்வரூப கதனம் –
போக்கிய பூதமான பிரகிருதி மஹத் அஹங்கார பூத பஞ்சக இந்திரியாதி ரூபேண ஸ்வரூப பரிணாமம் பெற்றால் ஒழிய ஜீவாத்மாக்களுக்கு போக்யம் ஆக்கமாட்டாது
ஜீவாத்மா ஸ்வரூப கத விகாரம் அற்றவனாய் தன் ஸ் வபாவமான தர்ம பூத ஞானத்தினுடைய விகாசத்தாலே
அனுபவிக்கும் போக்தா ஆகையால் ஞான விகாசம் அவசியம் ஆகிறது
ஆகையால் பகவான் ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ விகாசத்தை பிறப்பிக்க
ப்ரக்ருதியை ப்ராக்ருதமாக ஸ்வரூபத்தாலே பரிணமிப்பிக்கிறான் -என்றபடி -ஆக சர்வம் ப்ரஹ்ம கார்யம் என்றதாயிற்று –

வியததிகரணம் தொடக்கமாக அசித் உத்பத்தி பிரகாரம் -ஆத்மாதிகரணம் தொடக்கமாக சித் உத்பத்தி பிரகாரம் -என்று கண்டு கொள்வது –
பூர்வ யுக்த வியததிகரண நியாயத்தாலே ஜீவ உத்பத்தி சங்கை ஸ்வத ப்ராப்த்தை யாகிறது -ஆகையால் ஜீவ உத்பத்தி வாதம் ஆகிற
பூர்வ பஷத்தை ஸூ த்ரகாரர் ஸூத்ரத்தால் நிர்தேசியாமல் ஜீவ அநுத்பத்தி பரமான சித்தாந்த ஸூ த்ரத்தை மட்டும் அருளிச் செய்கிறார்

பிராண உத்பத்தி அதிகரணத்தில் -வியததிகரண நியாயத்தாலே-ஸ்வத ப்ராப்தமான பிராண உத்பத்தி விஷயமான -சித்தாந்தத்தை ஸூத்ரகாரர்
ஸூத்ரத்தால் நிர்தேசியாமல் பிராண அநுத்பத்தி சங்கா பூர்வ பக்ஷ ஸூத்ரத்தை மட்டும் அருளிச் செய்கிறார்
இவ்வதிகரணத்தில் ஸூத்ரகாரர் திரு உள்ளம் பற்றிய சித்தாந்தம் இன்னது என்பதை ஸ்ரீ பாஷ்யகாரர் நிர்த்தேசித்து அருளுகிறார்
அப ஸூத்ராதிகரணத்தில் போலே -என்று கொள்வது

ஆத்மாதிகரணத்தில் ஜீவாத்மா நித்யத்வத்வ ஸ்தாபனம் -இங்கே சங்கை -சாஸ்திர யோநித்வாதி கரணத்தில் ப்ரஹ்மத்தின் ஜகத் காரணத்வம்
வேதாந்த பிரமாணகம் என்று சொல்லி -இதில் ஆத்மா நித்யன் என்று அறுதியிட்டால் பரஸ்பர விரோதம் வாராதோ என்னில்
ப்ரஹ்மம் சாஸ்திர பிரமாணகம் என்ற விஷயமே அங்கு -ஜகத் காரணத்வம் சாஸ்திர பிரமாணகம் என்ற விஷயம் விஷயம் அன்று அங்கு
இங்கு ஆத்ம நித்யத்வ பரமாக உதாகரிக்கப் பட்ட ஸ்ருதிகளுக்கு நோக்கு -அசித்தை போலே ஸ்வரூப அந்யதா பாவ ரூபமான விகாரம் இல்லை என்பதிலே நோக்கு என்றும்
பரமாத்மா நித்யத்வ பரமாக உதாஹரிக்கப் பட்ட வசனங்களுக்கு ஜீவாத்மாக்களில் பிரசித்தமான ஸ்வ பாவ அந்யதா பாவ -ஞான சங்கோச விகாச -ரூப விகாரம் பரமாத்மாவுக்கு இல்லை -என்ற விஷயத்திலே நோக்கு

அசித்துக்கு உண்டான ஸ்வரூப விகாரங்களும் சித்துக்கு உண்டான ஸ் வ பாவ விகாரங்களும் அநிஷ்டங்கள்
இவை பரமாத்வாவுக்கு இல்லை யாயினும் பர ப்ரஹ்மத்துக்கு உண்டான காரணத்வத்தை நிர்வஹிக்க மூன்றாவது விகாரம் ஓன்று
அந்த பரனுக்கே கூடும் -உபய விகார விசிஷ்ட சேதன அசேதன விசிஷ்டத்துவமே இ றே அவ்விகாரம் என்றபடி
ஆகையால் பர ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்பது அக்ஷதம் –

ஆக இரண்டு அத்யாயங்களால் ப்ரமேயத்வ வியாபக கார்யதா நிரூபித காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் என்றதாயிற்று –

பூர்வ த்வகத்தில் ஸூத்ரகாரர் -ப்ரக்ருதி ஆத்ம பேதத்தையும் -ஆத்ம பரமாத்மா பேதத்தையும் -ப்ரஹ்ம நிஷ்ட ஞான ஆனந்தாதி கல்யாண குணங்களையும் –
தர்மி ஞான தர்ம பூத ஞான பேதத்தையும் சாப்தமாக அருளிச் செய்தார்
ஈஷத் யதிகரணத்தில் -பிரகிருதி ரூப அசித் விலக்ஷணன் பரமாத்மா என்றும்
ஆனந்த மயாதிகாரணத்தில் ஜீவ விலக்ஷணன் பரமாத்மா என்றும்
அந்தரதிகரணத்தில் ஜீவ விசேஷ விலக்ஷணன் பரமாத்மா என்றும் வியாசர் ஸ்தாபித்தார் –
ஈஷத்யதிகரண பூர்வ பஷியினுடைய அநு யாயியை காரணத்வாதி கரணத்திலும்
ஆனந்த மயாதி கரண பூர்வ பஷியினுடைய அநு யாயியை ஜகத்வாசித்வாதி கரணத்திலும் நிரசித்து
சேதன அசேதன விலக்ஷணன் பரமாத்மா என்று அறுதியிட்டார் –
நேதர அநுபபத்தே–1–1–17-
பேத வ்யபதேசாச்ச –1–1–18-
பேத வியபதேசாச்ச அந்நிய –1–1–22-
கர்ம கர்த்ரு வ்யபதேசாச்ச–1- -2–4-
உபயேபி ஹி பேதேந ஏநமதீயதே -1–2–21-
பேத வ்யபதேசாத–1- -3–4-
ஸ்தித்யத நாப்யாஞ்ச –1- -3–6-
ஸூ ஷூப்த் யுத்க்ரந்த்யோர் பேதேந –1–3–43-
பத்யாதி சப்தேப்ய —1–3–44-
அதிகம் து பேத நிர்தேசாத் –2–1–22—இத்யாதி ஸூத்ரங்களாலே ஜீவ பரர்களுக்கு உண்டான பாரமார்த்திக ஸ்வரூப பேதத்தை வியாசர் அருளிச் செய்கிறார்
ஈஷத் யதிகரணம் தொடக்கமாக ஞான ஆனந்தாதி குண யோகத்தை ஹேதுவாகக் காட்டி சேதன அசேதன விலக்ஷணம் ப்ரஹ்மம் என்கிற வியாச ஸூ த்ரங்கள்
ப்ரஹ்மம் ச விசேஷம் என்கிற பக்ஷத்துக்கு பொருந்தும் அல்லது
ப்ரஹ்மம் நிர் விசேஷம் அத்விதீயம் குணதோ அபி சத்விதீயதாம் ந ஸஹதே –என்கிற மாயாவதி பக்ஷத்துக்குப் பொருந்தாது
ஜீவ பர பேதமே சித்தாந்தம் என்று கொண்ட ஸ்ரீ வேத வியாசர் ஜீவ பர அபேதத்தை அப்ரசித்தமும் விசாராநாஹமும் ஆகையால் விசார விஷயமாகக் கொள்ளாமல்
உபநிஷத் வாக்கியங்களில் எங்கேனும் ஜீவ பர அபேத சங்கை அங்குரிக்குமே யானால் அவ்விடத்தில் மட்டுமே
ஜீவ பர பேதத்தை குண ஸூத்ரங்களால் ஸ்தாபிக்கிறார் என்று கண்டு கொள்வது –
தர்மியும் தர்மமும் ஞானம் என்பது ஜீவ பர விஷயத்தில் அந கீ க்ருதம் –அதாவது ஜீவனும் பரனும் இருவருமே ஞான ஸ்வரூபர்கள் ஞான குணகர்கள்-என்றபடி –
ஞாத்ருத்வம் ஞானதா ச ஸ்ருதி பிரபிததே நாத்ர பக்ஷே பதாம -தேசிகன் –
யாவதாத்ம பா வித்வாச்ச ந தோஷ தத் தர்சநாத் –2–3–30-என்கிறார் வியாசர்
நிதயனான ஆத்மா நியாமான தர்ம பூத ஞானம் யுடையவன் –தர்ம பூத ஞானத்தையும் அதனுடைய நித்யத்தையும் ஸ்தாபிக்கிறார் வியாசர்
தர்ம பூத ஞானம் அத்ரவ்யம் அநித்தியம் ஆசந்துகம் -என்பர் நையாயிகர்
அது த்ரவ்யம் நித்யம் என்பது ஸ்ரீ ராமானுஜர் மதம்
ஜீவ தர்ம பூத ஞானத்துக்கு சங்கோச விகாசங்கள் உள்ளன -ஆனாலும் நித்யனான ஜீவாத்மாவைப் பற்றிக் கிடக்கிற தர்ம பூத ஞானம் நித்யமே என்பர் நம் பெரியோர் –
ஆகையால் சங்கோச விகாச ப்ரயுக்த ஞான விநாச சங்கைக்கு அவகாசம் இல்லை என்றபடி –
தர்மம் ஸ்வாபாவிகம் ஆனாலும் தர்மி அநித்யமானால் தர்மமும் அநித்யமாகும் –
தர்மி நித்யமானாலும் தர்மம் சோபாதிகம் ஆனால் உபாதை நிவ்ருத்தமாகும் போது ஓவ்பாதிகமும் நிவ்ருத்தம் ஆகையால் தர்மம் அநித்யமாகும்
இங்கு தர்மியான ஆத்மாவும் -தர்மமான ஞானமும் ஓவ்பாதிகம் அல்ல -ஆகையால் தர்ம பூத ஞானம் நித்யமே -என்று
திரு உள்ளம் பற்றி ஸ்ரீ பாஷ்யகாரர் -நித்யஸ்ய ஸ்வாபாவிக தர்மத்வேந -என்று அருளிச் செய்கிறார்
ஆகையால் சாரீரக மீமாம்சை விசிஷ்டாத்வைத சித்தாந்த்தையே நிலை நாட்டுகிறது -என்பதே ஸ்ரீ பாஷ்ய சாரமாகும் –

ஆக இவ்வளவால் பிராணவார்த்தம் -நிரூபிதம்-அசேஷ சித்அசித் வஸ்து சேஷித்வம் –
அகில புவன ஜென்ம -என்று அகாரத்தில் உபக்ரமித்தும்
ஆனுமாநிகாதிகரணத்தில் -உக்தம் -என்று உகாரத்தையும்
இறுதியில் சர்வம் சமஞ்ஜசம் -மகாரத்தையும் கொண்டு பிராணவாகாரமாகவே தோற்றுமே –
முதல் இரண்டு அத்யாயங்களால் ப்ரணவார்த்த நிரூபணம் -மேல் இரண்டு அத்தியாயங்கள் மந்த்ர சேஷார்த்தம்

———-

மூன்றாம் அத்யாயம்–சாதன அத்யாயம் – நமஸ் சப்தார்த்த நிரூபண பரம்
நான்காம் அத்யாய-பலாத்யாயம் – த்ருதீய பதார்த்த நிரூபண பரம்
நமஸ் சப்தார்த்தம் உபாயம் இறே -சர்வ சேஷியான நாராயணனே பரம உபாயம் என்று இறே சம்பிரதாய நிஷ்கர்ஷம்

ஆக இவ்வளவால் பிராணவார்த்தம் -நிரூபிதம்-அசேஷ சித்அசித் வஸ்து சேஷித்வம் –
அகில புவன ஜென்ம -என்று அகாரத்தில் உபக்ரமித்தும்
ஆனுமாநிகாதிகரணத்தில் -உக்தம் -என்று உகாரத்தையும்
இறுதியில் சர்வம் சமஞ்ஜசம் -மகாரத்தையும் கொண்டு பிராணவாகாரமாகவே தோற்றுமே –
முதல் இரண்டு அத்யாயங்களால் ப்ரணவார்த்த நிரூபணம் -மேல் இரண்டு அத்தியாயங்கள் மந்த்ர சேஷார்த்தம்
மூன்றாம் அத்யாயம்–சாதன அத்யாயம் – நமஸ் சப்தார்த்த நிரூபண பரம்
நான்காம் அத்யாய-பலாத்யாயம் – த்ருதீய பதார்த்த நிரூபண பரம்
நமஸ் சப்தார்த்தம் உபாயம் இறே -சர்வ சேஷியான நாராயணனே பரம உபாயம் என்று இறே சம்பிரதாய நிஷ்கர்ஷம்

—————-

சம்ருத்யதிகரணம் –2-1-1-
கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்
ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –

இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது

மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே

——————————————————————————————–

இனி
க்ருத்ஸ் ந ப்ரசக்தி அதிகரணத்தின் பிரமேயம் -விளக்கப் படுகிறது
பூர்வ பஷம்-
ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ஜகத்தாக பரிணமித்தால்
நிரவயவம் சுருதி விரோதிக்குமே
ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ன ஒண்ணாது –

மேல் சித்தாந்தம்
ஸூத்திரம் – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து -சப்தம் பூர்வ பஷததை வ்யாவர்த்திக்கிறது –
ப்ரஹ்மம் நிரவவயம் என்றும்
கார்யப் பொருளாக பரிணமிக்கிறது-பஹூ பவனத்வம் – என்றும் இரண்டு சுருதி சித்தமான அர்த்தங்கள்
பிரமத்தின் அநிர்வசநீயமான சக்தி விசேஷம்
கண்ணில்லாதவன் காண்கிறான்
செவி இல்லாதான் கேட்கிறான்
என்றும் ஓதப்படுகிறது
இத்தால் லௌகிக நியாயம் கொண்டு ப்ரஹ்மத்தின் இடத்தில் சோத்யம் செய்வது கூடாது
ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா -அத்புத சக்தி -உண்டே-

அடுத்த அதிகரணம்
பிரயோஜனவத்த்வாதிகரணம்
பரம புருஷன் சர்வ சக்தி யுக்தன் ஆகையாலும்
சத்ய சங்கல்பன் ஆகையாலும்
அவன் சங்கல்ப மாத்ரத்திலே ஜகத்தை சிருஷ்டிக்கும் விஷயம் சம்பாவிதம் அன்று
அவன் ஜகத்தை சிருஷ்டிக்கும் போதே ஏதேனும் ஒரு பிரயோஜனம் இருந்தாக வேணும்
அவாப்த சமஸ்த காமனுக்கு சிருஷ்டியினால் பிரயோஜனம் உண்டாக விரகு இல்லை
நம் போன்றவர்களுக்கும் பிரயோஜனம் என்று சொல்லப் போகாது
ஆத்யாத்மிக துக்காதிகளுக்கே ஹேது
பகவானுக்கு பஷபாதித்வம் நிர்தயத்வம் தோஷங்களை சங்கிக்கப் பண்ணுவதையும் இருக்கும்
ஆகவே பகவான் சிருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாது -எனபது பூர்வ பஷம்
இந்த பூர்வ பஷ ஸூத்த்ரம் -ந பிரயோஜனவத்வாத் –
இங்கே ஸ்ருஷ்டே-பதம் தருவித்துக் கொள்ள வேண்டும்

இந்தன் மேல் சித்தாந்த ஸூத்த்ரம் –லோகவத் து லீலா கைவல்யம்

இத்தால் அவாப்த சமஸ்த காமத்வத்துக்கு கொத்தை இல்லை
மன் பல் உயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு யுடையவன் –நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி கான்பதாலே பகவானுக்கு பஷபாதத்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே என்னில்
அந்த சங்கை –
வைஷம்ய நைர்குண்யே ந சாபேஷ்வாத் ததா ஹி தர்சயதி
என்கிற அடுத்த ஸூத்த்ரத்தால் பரிஹரிக்கப் படுகிறது
கருமங்களுக்குத் தக்கபடி நீச்ச உச்ச சிருஷ்டிகள்

இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு
அடுத்த ஸூத்த்ரம் பரிஹாரம் உணர்த்துகின்றமை
கண்டு கொள்வது –

——————————————————————————————-

2-2-சர்வதா அனுபபத்தி அதிகரணம்
இதில் சர்வ சூன்யவாதிகளான பௌத்த ஏக தேசிகள் பஷம் நிரசிக்கப் படுகிறது
பர பிரமமே ஜகத் காரனத்வம் என்று நன்று நிலை நாட்டிய பின்
இதில் இத்தை ஸ்ருளிச் செய்ய என்ன பிரசங்கம் எனில்
ஜகத் காரண வஸ்து பிரதானமா -பரம அணுவா -பர ப்ரஹ்மமா-எப்போது
பொருந்தும் என்னில்
ஜகத் உத்பத்தி என்று ஓன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்
ஜகத் உத்பத்தியே நிரூபிக்க முடியாததாய் இருக்க எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை எதற்கு
உத்பத்தி பாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
அபாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா

பாவத்தில் இருந்து எனபது சேராது
மண் பிண்டத்தில் இருந்து குடம் –மண் பிண்டம் உபமர்த்தித்துக் கொண்டு தானே உண்டாகின்றன –
காரண ஆகாரத்தின் விநாசமே தானே உபமர்த்தம் -அது தான் அபாவம்
ஆக பாவத்தில் இருந்து உத்பத்தி இல்லை
அபாவத்தில் இருந்து பாவ உத்பத்தி சம்பவிக்க மாட்டாது அன்றோ
ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாததால்
உத்பத்திக்கு பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாது எனபது சித்தம்
ஆக லோக விவகாரம் எல்லாம் பிரமை
ஆக சூன்யமே தான் தத்வம்

நிரசிக்கும் ஸூத்த்ரம் –சர்வத அநு பபத்தேச்ச -2-2-30-
பிரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லையாகிலுமாம்
பூர்வ பஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாது ஆகையாலே
மாத்யமிக தர்சனம் அசமஞ்சசம் என்றபடி –
சர்வம் சூன்யம் என்று சொல்பவர்கள்
தங்களுக்கு அபிமதமான இவ்வர்த்தத்தை சாதித்துத் தருபடியான
பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பரமான சத் பாவத்தை இசைந்த போதே சர்வ சூன்ய வாதம் தொலைந்தது
பிரமாணம் இல்லை என்னும் பஷத்தில் -பிரமாணம் இல்லாமையினாலே
தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அசித்தம் என்று முடிந்தது

மேலும் -சர்வ சூன்ய -வாதத்தாலே நாஸ்தித்வம் தானே விவஷிதமாக வேணும்
ஒரு ரூபத்தை விட்டு மற்று ஒரு ரூபத்தை அடைவதே நாஸ்தித்வம்
ரூபாந்தரத்திலே அஸ்தித்வம் சொல்லப் பட்டதாக முடிகிறது
மண் உண்டை ஓன்று இருந்தது
அது நசித்த அளவில் ம்ருத் பிண்டோ நாஸ்தி -என்று சொல்லுகிறான்
இந்த விவகாரத்தில் பானை என்கிற அவஸ்தை தானே விஷயம் ஆகிறது –

அஸ்தி நாஸ்தித்வங்கள்
இப்போது மண் உண்டை இருந்தது இப்போது மண் உண்டை இல்லை
இங்கு இருக்கிறது இங்கு இல்லை
கால இடம் உட்படுத்தியே வ்யவஹாரம்
பிண்டத்வ அவஸ்தை மாறி கடத்தவ அவஸ்தை பிறந்தால்
நாஸ்தித்வ வ்யவஹாரம் பண்ணினாலும்
வேறு ஒரு ஆகாரத்திலே அஸ்தித்வம் தேறி இருக்கும்
ஆக ஒரு படியாலும் சூன்ய வாதம் சித்தியாது
ஆக –
சூத்ரத்தின் மேல் பொருள்
சர்வதா –
சர்வ பிரகாரத்தாலும்
அநு பபத்தே –
ஸ்வ அபிமதமான சர்வ சூன்ய வாதம் உப பன்னம் ஆகைமையினாலே -என்றபடி
ஸ்ரீ பாஷ்யகாரம் அருளிய பொருள் சமஞ்சசம்  ஆன பொருள்
இவர் –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
உளன் இரு தகைமையினோடு ஒழிவிலன் பறந்தே -திருவாய் மொழி –1-1-9-
ஆறாயிரப்படியில் இதுக்கு ஸாதித்த பொருளைக் கொண்டு சூத்ரத்தின் பொருளை ஒருங்க விட்டு அருளிச் செய்கிறார்-

ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும் வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந்ய வாதியை நிரசித்தது –

இரண்டாம் அத்யாயம் செய்தது என் என்னில்
முதல் அத்யாயத்தினால் நிரூபிக்கப் பட்ட அர்த்தம்
சர்வாத்மனா அசைக்க முடியாதது என்று
பிரதி பஷ பிரதி ஷேப பூர்வகமாக சாதிதததுடன்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்கிற பகவத் பரணீத சாஸ்திர விசேஷத்தினாலே தேறிய பொருள் என்றும் நிரூபித்து
சகல சேதன அசேதன பொருள்கள் பரம புருஷ கார்ய பூதங்களே என்பதை
நன்கு சோதிக்கும் முகத்தாலே
கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்பதும் ஸ்தாபிக்கப் பட்டது –

ஆக –
இரண்டு அத்யாயங்களால் –
புருஷார்த்த ஸ்வ ரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டாலும்
அநாதி வாசனா பலத்தாலே
சூத்திர புருஷார்த்தங்களையே நச்சிக் கிடக்கும் சம்சாரிகளுக்கு
பரம புருஷ பிராப்தியில் பதற்றம் உண்டாகாமைக்கு காரணம்
தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பம் அஸ்தரம்
என்பதை ஆராய்ந்து உணராமையே என்று கருதிய சாஸ்திர காரர்
அந்த சம்சாரிகளுக்கு ‘இதர விஷயங்களில் வைராக்யத்தையும்
பரம புருஷார்த்தத்தில் மிக்க ருசியையும் உண்டாக்குவதற்காக
கர்ம பலன்கள் எல்லாம் ஷயிஷ்ணுக்கள் என்றும்
பரம புருஷ உபாசன பலமான அப வர்க்கம் ஒன்றே நித்ய புருஷார்த்தம் என்றும் -தெரிவித்து
இவ் வழியாலே –
பரம புருஷ பிராப்தியில் த்வர அதிசயத்தை உண்டாக்கவே
பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிகின்றார்-

—————————-—————————————————————————————————————————-—————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்-ஸ்ரீ பட்டர் பாஷ்யம் — -ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்-ஸ்ரீ துவாதச நாம ஸ்தோத்ரம்–ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள் –

October 24, 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பல ஸ்ருதிகள்–ஸ்ரீ பட்டர் பாஷ்யம் —

————-

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”
என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

————–

யதிதம் கீர்த்த நஸ்ய கேசவஸ்ய மஹாத்மந
நாம் நாம் சஹஸ்ரம் திவ்யானாம் அசேஷண ப்ரகீர்த்திதம்

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்
மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

அதா₂ஸ்ய நாம ஸஹஸ்ரஸ்ய கௌரவம் க்₃ராஹயன் ஸாந்தநவ꞉ கௌந்தேய மாஹ
இதீத₃ம்
இதி । யதே ₃தத் கீர்தநம் ப₄க₃வந் மஹிம்நி, அத்₃ய ப்ரப்₄ருதி ப₄க₃வான் கீர்தநாரம்ப₄ மர்ஹதீத்
யுக்தம்
கீர்தநீயஸ்யேதி ।
அத்ர காரணம்
கேஸவஸ்ய மஹாத்மந இதி ।
நாம்நாம் ப்ராக்ருத பரம பத₃ வ்யவஹார யோக்₃யத்வமாஹ
தி₃வ்யாநாமிதி ।
த்வ கௌரவாத் கிஞ்சித₃பி
ஜ்ஞாதவ்யம் ந ஹாபிதமித்யாஹ
அஸேஷேணேதி ॥

—————–

அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் கூறப்படுகின்றன

யதிதம் ஶ்ருணுயாந் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்
ந சுபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் சோமுத்ரேஹ சமாநவ –இங்கும் அங்கும் உள்ள அசுபங்கள் நீங்கி விடும்

அதா₂தி₄காரிப₂லாங்க ₃நிர்ணய ꞉ । ய இத₃ம்
ஶ்ருணு யாதி₃த் யாதி₃ ।
யதா₂தி₄காரம் ஶ்ரவண
மநநயோ ꞉ ஸாமாந்யே நோப₄ய லோகா ஸூப விரோதித்வம் தாவத்ப₂ல முக்தம் ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

————-

வேதாந்தகோ ப்ராஹ்மண ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன சம்ருத்தஸ் ஸ்யாச் சூத்ர ஸூகம் அவாப்னுயாத்-3-

அத₂ சதுர்ணாம் வர்ண விஸேஷாணா மநதி₄ரூட₄ப₄க₃வத்₃ப₄க்தீ நாம நா காங்க்ஷித ப₂ல
விஸேஷாணாம் யதா யோக்யம் ப₂லமாஹ
வேதா₃ந்தக ₃ இதி ॥

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

——

த₄ர்மார்தீ₂ ப்ராப்நுயாத்₃த₄ர்மமர்தா₂ர்தீ₂ சார்த₂மாப்நுயாத் ।
காமாநவாப்நுயாத் காமீ ப்ரஜார்தீ₂ ப்ராப்நுயாத் ப்ரஜா꞉ ॥ 4 ॥

அத₂ வர்ண விஸேஷேண யதா₂காமமப்₄யுத₃ ய ப₂லமாஹ
த₄ர்மார்தீ₂தி ॥

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

————

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் ய ஸ்தோத்தாயா சுசி தத்கத மனச
சஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்–5-

யசஸ் ப்ராப்னோதி விபுலம் ஞாதி ப்ராதான்ய மேவச
அசலாம் ஸ்ரியம் ஆப்நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத் யநுத்தமம்–6-

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமான் பல ரூப குணாந்வித-7-

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முஸ்யேத பந்தனாத்
பயான் முஸ்யேத பீதஸ்து முஸ்யே தாபந்ந ஆபத–8-

அத₂ நியம விசேஷ வஜ் ஜப ரூப ஸங்கீர்தநே ப₄க்தஸ்ய ஸர்வ ஸம்ருத்₃தி₄மாஹ
ப₄க்திமான்
இத்யாதி₃பி₄ஶ் சதுர்பி₄꞉ । அநுத்தமம் ஶ்ரேயோ முக்தி꞉ । அந்யே (அ)ப்₄யுத₃ யா விசேஷா ꞉ ॥

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

—————

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது

துர்க்காணி அதி தரத் யாசு புருஷஸ் புருஷோத்தமம்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி சமன்வித–9-

அத₂ ப₄க₃வதே ₃கார்தி₂நோ (அ)நந்ய ப₄க்தேர ப்ரார்தி₂தாமப்ய நர்த₂ நிவ்ருத்திமாஹ
து₃ர்கா₃ணீதி ॥

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

————–

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவோ பராயணா
சர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சனாதனம்–10-

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்

————-

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாஸூ தேவ பக்தானாம் அசுபம் வித்யதே க்வசித்
ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே–11-

அத₂ தேஷாம் தத் ப்ராப்திமாஹ வாஸுதே ₃வாஶ்ரய இதி ॥

இதம் ஸ்தவம் அதீ யான ஸ்ரத்தா பக்தி சமன்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி–12-

நியமவதோ ப₄க்தஸ்யாநுஷங்கி₃ணீமப்₄யுத₃ யஸித்₃தி₄மாஹ
இமம் ஸ்தவமிதி ।
ஶ்ரத்₃தா₄ – ஸ கௌரவ த்வரா । ப₄க்திர்வ்யாக்₂ யாதா । ஆத்மா சேதந꞉ । ப₄க₃வதி ப₄க்திர் மஹத꞉
ஸுக்ருதஸ்ய ப₂லம் * கோ₃விந்த₃ப₄க்த் ப்₄ தி₄கம் ஶ்ரேயஶ் சாந்யந்ந வித்₃ யதே , இதி ।

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

—————-

பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந அஸுபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தானாம் புருஷோத்தமே–13-

தத்த்வத ஏதே தோஷா ஸ்வபா₄வத ஏவ நிவர்தந்த இத்யாஹ
ந க்ரோத₄ இதி ।

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

—————–

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அயற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன–14–

நாயம் ப₂லார்த₂வாத₃ஶ்ங்கயோ நிர்பா₄க்₃யை ꞉ குதார்கிகை ꞉, ப₄கவத் ப்ரபா₄வஸ்யா
ஸம்பா₄வ்யாபா₄வேநாதிவாதா₃பவாத₃ யோர ஸம்ப₄வாதி₃த்ய பி₄ப்ரயன் தஸ்ய தம் ப்ரபா₄வமாஹ
த்₃யவ்ஸ் ஸத சந்த்₃ரேதி ।
வித்₄ருதாநீதி நாநாலிங்கா ₃நாம்
* நபும்ஸக மநபும்ஸகேநைக
வச்சாஸ்யாந்ய தரஸ்யாம், இதி நபும்ஸக லிங்க ₃சேஷதா ॥

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

————

அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –

ச ஸூரா அஸூரா கந்தர்வம் ச யஷோரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம் க்ருஷ்ணஸ்ய ச சராசரம்–15-

ஸர்வஸ்ய தச் ச₂க்தி வித்₄ரு தத்வ முக்த்வா தத்₃வஸ வர்த்தித்வமாஹ
ஸஸுராஸுரேதி ।
வர்ததே த ₃மித்யார்ஷீ ஸம்ஹிதா । அவர்ததேத₃மிதி வா ॥

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

————-

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்திரியாணி மநோ புத்தி சத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகானி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞ ஏவ ச–16–

இத₃ம் தத்₃வஸ வர்த்தித்வம் ஸாரீராத்ம பா₄வேந விஶிநஷ்டி
இந்த்₃ரி யாணீதி ।
வாஸுதே ₃வாத்மகாநி – தச்ச₂ரீராணீத் யர்த₂꞉ । ஆஹு꞉ ஸாஸ்த்ராணீதி சேஷ ꞉ ।

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

———-

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்

அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

சர்வ ஆகமானாம் ஆசார ப்ரதமம் பரிகல்பித
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–17–

சர்வ ஆகமானாம் –ப்ரமாணமான சாஸ்திரங்கள்
ப்ரதமம் பரிகல்பித -மிகவும் முக்கியமாக உபதேசிக்கும் தர்மம்–

ஆசார -நல் நடத்தை -ஒழுக்கம்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபு அச்யுத–தர்மத்தால் போற்றப்பட வேண்டியவன்

ஏவம் தத்த்வ ஸாஸ்த்ரார்தா₂நாம் தாத₃தீ₄ந்யமபி₄தா₄யா நுஷ்டா₂நா ஸாஸ்த்ரார்தா₂நாமபி
தாத₃தீ₄ந்யம் மந்தா₃தி₄காரிணாம் ப₄ யமபநேதுமாஹ –
ஸர்வாக ₃மாநாமிதி ।
ஸர்வாக ₃மாநாம்-ஸர்வ த₄ர்ம ப்ரமாணாநாம் ப்ரத₂மம் பரகல்பித꞉ – ப்ரத₂ம ப்ரதிபாத்₃ய த₄ர்ம꞉ ஆசார꞉
சவ்சாதி₃꞉, தத₃ங்க ₃꞉ ஶ்ரௌதோ த₄ர்ம இதி, தஸ் யாராத்₄ ய꞉ ப₂லத₃꞉ ஸஹாயஶ் சாச்யுத இதி ॥

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

——-

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷப பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ
ஜங்கம அ ஜங்கம சேதம் ஜெகன் நாராயண உத்பவம்–18–

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

————–

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞான மேதத் சர்வம் ஜனார்த்தநாத்–19–

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

————–

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான் யநேகச
த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய–20–

அவனே ஏகம் -அநேகம் -சேஷீ- நியாமகன்–ஆத்மா -ரக்ஷகன் -வ்யாப்த கத தோஷம் தட்டாதவன் –
புங்க்தே-லீலா ரசமும் போக ரசமும் அனுபவிப்பவன்
வாக்குக்கும் மனசுக்கும் கோசரம் அல்லன்

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

———

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேன கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷஸ் ஸ்ரேயஸ் ப்ராப்தும் ஸூகாநி ச

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

———

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத ப்ரபும் அவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் நதே யாந்தி பராபவம்
நதே யாந்தி பராபவம் ஓம் நம இதி

இப்படி ஆயிரம் திரு நாமங்களால் -ஸ்ரீ மன் நாராயணனே புருஷோத்தமன் -ஸ்ரீ யபதி –
சரணா கதர்களுக்கு உயிர் அளிக்கும் மருந்தாயும்-
எல்லையில்லா மங்களமான இயற்க்கை நிலை -ஸ்வரூபம் -வடிவம் -ரூபம் -பண்புகள் திரு விளையாடல்கள் –
பரத்வம் சௌலப்யம் ஆகியவற்றை உடையவன் –
அநிஷ்டங்களை களைந்து இஷ்டங்களை வழங்கும் வள்ளல் -சர்வ ரஷகன் -இவனுடைய சஹஸ்ர நாமங்களைச் சொல்பவர்
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச ஸர்வ துக்கம்
உன் மூல்ய ஸம் பதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேந ஸதா க்ரியாஸ்தாம்

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

———

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச சர்வ துக்கம்
உன்மூல்ய சம்மதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்கராஜ மஹிஷீ ச ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேன சதா க்ரியாஸ்தாம்

ஹாரீத குல திலகம் -ஸ்ரீவத்சாங்கர் -திருக்குமாரர்–ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ரெங்கநாதன் திவ்யாஜ்ஜையால் அருளிச் செய்த
ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம் சம்பூர்ணம்
ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் பலனை அளிக்கவும் காரணம் அச்யுதனே

அஸ்மாக மத்ர ச பரத்ர ச ஸர்வது₃꞉க்க ₂-
முந்மூல்ய ஸம்பத₃ம் அசேஷ விதா₄ம் விதா₄ ய।

ஶ்ரீரங்க ₃ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவாநாம்
ஸங்கா₃த் ஸுக₂ம் ஸஹ ஜயேந ஸதா₃ க்ரி யாஸ்தாம் ॥

இதி ஶ்ரீஹரித குலதிலக ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ர ஸூநோ ꞉ ஶ்ரீரங்க ₃ராஜ தி₃வ் யாஜ்ஞா-
லப்₃த₄ ஶ்ரீபராஸர ப₄ட்ட  அபர நாமதே ₄ யஸ்ய ஶ்ரீரங்க நாத₂ஸ்ய க்ருதௌ
ஶ்ரீமத்₃விஷ்ணு ஸஹஸ்ர நாம விவரணம் ப₄க₃வத்₃கு₃ண த₃ர்பணாக்₂ யம்
பா₄ஷ்யம் ஸமாப்தம் ।
॥ ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து ॥

———————————–

பத்ம பத்ர விசா’லாக்ஷ
பத்ம நாப ஸுரோத்தம |
பக்தானா மனுரக்தானாம்‌
த்ராதா பவ ஜநார்த்தன ||23-அர்ஜுனன் உவாச

தாமரைக் கண்ணனே -உந்தியிலே தாமரையைக் கொண்டவனே –
மனிதர்களுக்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான வனே
சேதனர்களுடைய ஜனியை அறுப்பவனே-ரக்ஷித்து அருள்வாய்

ஸ்ரீ பகவானுவாச-

யோ மாம்‌ நாம ஸஹஸ்ரேண
ஸ்தோதுமிச்சதி பாண்டவ |
ஸோ(அ)ஹம் ஏகேந  ஸ்லோகேன
ஸ்துத ஏவ ந ஸம்ச’ய: ||24

ஸ்துத ஏவ ந ஸம்ச’ய ஓம்‌ நம இதி

இவ்வளவும் கேட்டதும் அர்ஜுனனுக்கு பயம் ஆஸ்வாஸம் படுத்திய கண்ணனைப் போல்
ஆசை ஒன்றே போதும்-ஸோ(அ)ஹம்-அந்த நான் -முதல் ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்த உடனேயே
அதே பூர்ண ஆனந்தம் அடைகிறேன் -இதில் சங்கை ஒன்றுமே வேண்டாம்-மீண்டும் சொல்லி உறுதி படுத்துகிறான்

உதாசீனன் அனுமந்தா தூண்டும் நிலை மூன்றும் உண்டே-செய்வார்களைச் செய் வேனும் யானே என்னும்
ஜீவர்களின் ஸ்வா தந்திரம் மதித்து முதல் ப்ரவ்ருத்தியில் உதாஸீனன்

வ்யாஸ உவாச-

வாஸனாத்‌ வாஸுதேவஸ்ய
வாஸிதம்‌ தே ஜகத் (புவன )த்ரயம்‌ |
ஸர்வபூத நிவாஸோ(அ)ஸி
வாஸுதேவ நமோ(அ)ஸ்துதே ||25

ஸ்ரீ வாஸுதேவ நமோஸ்துத ஒம்‌ நம இதி

எங்கும் நீக்கமற நிறைந்து -முன்னும் பின்னும் இருக்க வணங்க வேண்டுமே

ஸ்ரீ பார்வத்யுவாச-

கேனோபாயேன லகுனா
விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌ /
பட்யதே பண்டிதைர்‌ நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ ||26–லகு உபாயம் நமக்காக கேட்டு

ஸ்ரீ ஈ’ஸ்வர உவாச-

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத் துல்யம்‌
ராம நாம வரானனே ||27–ஆயிரத்துக்கும் நிகர்

ஸ்ரீராம நாம வரானன ஓம்‌ நம இதி

ராமன் இடத்தில் –மனோரமே-மனதுக்கு இனியான் –ராம ராம ராம சொல்லி ரமே-ஆனந்திப்போம்

இத்தைக் கேட்டதும் –வரானனே-உனது முகத்தில் மகிழ்ச்சி துள்ளுகிறதே

ஸ்ரீ ப்ரஹ்மோவாச-

நமோ(அ)ஸ்த்வநனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி சிரோரு பாஹவே |
ஸஹஸ்ர நாம்னே புருஷாய சா’ஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம: ||28

ஸ்ரீஸஹஸ்ரகோடி யுகதாரிண ஒம்‌ நம இதி

கால தேச வஸ்து அபரிசசேத்யன்
ஆயிரமான -திருமேனிகள் திருத் தொடைகள் திருக்கைகள் இத்யாதி -திரு நாமங்கள் –
அனைத்தையும் தரிக்கும் அவனுக்கு நமஸ்காரங்கள்

ஸஞ்ஜய உவாச-

யத்ர யோகேச்’வர: க்ருஷ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்த்தர: |
தத்ர ஸ்ரீர்‌ விஜயோ பூதிர்‌
த்ருவா நீதிர்‌ மதிர் மம ||29-

இது என்னுடைய மதம்-நான் கண்ட நல்லதுவே
பார்த்த சாரதி பெயரிலே பாதி கொண்டானே

ஸ்ரீ பகவானுவாச-

அனன்யாஸ் சிந்தயந்தோமாம்
யே ஜனா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தாநாம்
யோக க்ஷேமம் வஹாம் யஹம் ||30

பரித்ராணாய ஸாதூனாம்‌
விநாசா’ய ச துஷ் க்ருதாம்‌ |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே ||31

ஸ்ரீ கீதா ஸ்லோகங்களை இங்கு சேர்த்து அனுசந்தேயம்-கத்ய த்ரயத்திலும் இதே போல் உண்டே

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||32

திருநாம சப்தம் ஒன்றாலே -துடிப்பு -குழப்பம் -மனம் உடைந்து -பயம் மிக்கு வியாதில் அகப்பட்ட -அனைத்தும் தொலைந்து நித்ய ஸூ கம் ஏற்படும்
அந்த அன்னை நரகம் புகாள் போல் இங்கும்

காயேன வாசா மனஸாஇந்த்ரியைர்‌வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்‌
கரோமி யத்யத்‌ ஸகலம்‌ பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி..

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

இதி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

————————————————

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
ஸுதர்சனம் சக்ரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே
ஸஹஸ்ரார-ஆயிரம் அரங்கள் -நேமியில் சேர-சிகையில் ஜ்வாலா-
அங்கும் இங்கும் வானவர் தானவர் –சங்கு சக்கரக் கையனே-
சக்கரம் மனஸுக்குப் பிரதி நிதி -அஸ்திர பூஷண அத்யாயம் விஷ்ணு புராணம் முதல் ஸ்கந்தம் கடைசி அதிகாரம் -சுற்றும் வேகம்

மிமிதீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண் டது போல பிரகாசமானதும் –
ஸுரத்விஷாம்-அசுரர்களை ப்ராணவிநாஸி-நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென–சுதர்சனம் சொலித்திடும் தீச் சுடராய் –
தேவர் தம்  பகைவரை அழித்து நிற்கும் பெருமான்  கைச் சக்க்ரத்தைச் சரணடைவோம்

பாஞ்சஜன்யம் சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் பூரிதஸ்ய-காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஓசையால் –தானவ தர்ப்பஹந்தா-அசுரர்களுக்கு ஒலி அச் சத்தைக் கொடுக்கக்கூடியதும், சுப்ரம்-வெண்மை வண் ணத்தில் சசி கோடி –ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

கடலில் பிறந்து பாஞ்சஜன்யம் உடலில் வளர்ந்து

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான் கோவைச் செவ்வாய் காற்றொலியால் தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்

தாமஸ அஹங்காரத்துக்கு பிரதிநிதி
பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் பிறக்கும்
த்வனி அதனால்

கௌமோதகம் கதை

ஹிரண் மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
வைகுண்ட வாமாக்ரகராபிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

புத்திக்கு -உறுதிக்கு பிரதிநிதி

பொன் மயமான மேரு மலையைப் போன்ற ஒளி யுள்ளதும், தைத்ய குலைக ஹந்த்ரீம்-அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் வாமாக்ர-இடது திருக்கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணமடைகின்றேன்.

பொன்னென மின்னும் மேருவைப் போல் – கெட்ட  தைத்யர் தன் குலம் அழித்து நின்று வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை கௌமோதகீயைச் சரணடைவோம்

நந்தகம் வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேத க்ஷரச் சோணித திக்த தாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஞானம் வித்யை -பிரதிநிதி
அஞ்ஞானம் உறை
வாள் உறையில்
ஞானான் மோக்ஷம்

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்ப தால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் என்னும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடை கிறேன்.

தேவர் தம் குடியை காத்திடவே – கொடிய ராக்கதர் தந்தலை கொய்தவர் தம்-உதிரத்தில் குளித்த செவ் வாளாம்-நந்தகம் தன்னை சரணடைவோம்

சார்ங்கம் வில்

யஜ் ஜ்யாநீ நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர் முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

ஸாத்விக அஹங்காரத்துக்கு பிரதிநிதி வில்-பஞ்ச கர்ம ஞான இந்திரியங்கள்-அம்புகள்
அஸநி பா வர்ஷ -இடி போன்ற அம்பு வர்ஷம்

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான-யஜ் ஜ்யாநீ நாத- நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக் கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப் போதும் சரணமடைகிறேன்.

மின்னலாய் பய இருள் போக்கி நின்று – பகைவர் பின்னமாய் இடிந்திட நாணொலிக்க சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும் சாரங்கத்தை என்றும் சரணடைவோம்

இமம் ஹரே: பஞ்ச மஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநி ஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

ஸத்ய:-உடனே
பயாநி-பாபாநி-அனைத்துக்கும் பஹு வசனம்

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

காலையில் அனு தினம் கருத்துடனே – ஆயுத மாலையிதை ஓதி நின்றால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி யிங்கு – நித்ய தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநே ரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்ச யாபத்ஸு மஹா பயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர மாகுலாத்மா
ஸுகி பவேத் தத் க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் – கெட்ட பேரிடர் பொழுதின் பயங்களிலும் தோத்திரம் இதனை ஓதி நின்றால் – சுகம் மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

———————–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||(பஞ்ஜரம்-கூண்டு )

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |

ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய -பொன்னின் நிறம் கொண்டவன் என்றுமாம் -கிலேச நாசகன் -கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.-சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் கதையைத் தரித்தவராய் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
ஆக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென் கிழக்கில், தாமரையைப் போன்றவனும்,  ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வட மேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
வஜ்ராயுதம்  ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத் ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வட கிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சம்மட்டியை -சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியங்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
பட்டாம் பூச்சி வண்ணம் -நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் பாசக் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ரம் அச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத –அச் சித்ரம்-கவசத்துக்குள் கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.–நிச்சயம்

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

துஞ்சும் போது அழைமின் துயர் வரும் பொழுது நினைமின்

——————–

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.-பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன்
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.
——————–———–

ஸ்ரீ ராம த்யான ஸ்லோகங்கள்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம் ||
சகல இடையூறுகளையும் நீக்கி எல்லாருக்கும் தனத்தையும் மகிழ்ச்சியும் அளித்து அருளும் ஸ்ரீ ராமபிரானை மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கிறேன்

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம் பீதி நாச’னம் |
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

கஷ்டத்தில் துடிப்போரின் வலியையும் பயத்தையும் நீக்கி அடியேனுடைய சத்ருவுக்கு எமனாய் விளங்கும்
அந்த ஸ்ரீ ராமசந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீ க்ருத ச’ராய ச |
கண்டித அகில தைத்யாய ராமாயா ‘ஆபந் நிவாரிணே ||
அசுரர்களை அடக்கி அடியேனுடைய கஷ்டங்களை எல்லாம் தூர விலக்கும் அந்த
சரங்கள் பூட்டியே உள்ள ஸ்ரீ கோதண்ட ராம சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே |
ரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||
ராமா– ராமபத்ரா- ராம சந்த்ரா – வேதஸே-படைப்பவனுக்கு -ரகுநாதா- நாதா- ஸீதா பதி என்று போற்றி அழைக்கப்படும்
அந்த ஸ்ரீ ஸீதா ராமத் சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்
அக்ரதஃ ப்ருஷ்டதச்’ சைவ பார்ச்’வதச்’ச மஹாபலௌ |
ஆகர்ண பூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ ||
ஆகர்ண பூர்ண தன்வாநௌ-காது வரையில் இழுத்துப் பூண்ட நாணுடைய தநுஸ்
தருணவ் ரூப ஸம்பன்னவ் ராமவ் மஹா பலவ் –சூர்ப்பணகை-
மஹா வலிமையும் பலமும் கொண்ட ராம லஷ்மன் இருவரும் எப்போதும் அடியேனுடன் முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் இருந்து
அடியேனை எல்லா திக்குகளிலும் ரக்ஷித்து அருளட்டும்
ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாண தரோ யுவா |
கச்சன் மம அக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண: ||

கவசம் அணிந்து வாளும் வில்லும் அம்புடன் அடியேனுடன்
எந்நேரமும் எனக்குப் பாதுகாப்பாக கூட வரும்
ராமா லஷ்மணா அடியேனை ரக்ஷித்து அருள்வீராக

அகார உகார மகாரங்கள் ராமன் சீதா லஷ்மணன் ஓங்காரம் போல் நடந்து –

ஸன்னத்த-விழிப்புடன் முதலிகளை கடற்கரையில் ரஷித்த்தை நினைத்து தஞ்சம்

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்’யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

அச்யுதாநந்த  கோவிந்த-ஆசமனம் பண்ணும் பொழுது சொல்லும் மூன்று திரு நாமங்கள் –

திரு நாம உச்சாரணமே மருந்து
அனைத்து ரோகங்களுக்கும் இதுவே மருந்து -ஸம்ஸாரமும் போகுமே

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |
வேதாச்’சா’ஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேச’வாத் பரம் ||

கையைத் தூக்கி ஸத்யம்
வேதம் ஒன்றே ஸாஸ்த்ரம்
கேசவன் ஒருவனே தெய்வம்

ச’ரீரே ஜர்ஜரி பூதே வ்யாதி க்ரஸ்தே களே பரே |
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-யார் மருந்து இனி யாகுவார்

ஜாந்ஹவீ தோயம்-கங்கை கங்கை என்னும் வாசகத்தால் கருவினை களையலாம்

ஆலோட்ய ஸர்வ சா’ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுநிஷ் பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

காரணந்து த்யேய
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்

காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

யதக்ஷர பத ப்ரஷ்டம் மாத்ரா ஹீனம்து யத் பவேத் |
தத் ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||

குற்றங்களுடன் சொன்னோம்
எழுத்து-சொல் அசை உச்சரிப்பு -மாத்ரா -இவற்றால் பலவும் செய்துள்ளோம்
நாராயணனே க்ஷமிக்கட்டும்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –குறைவாகச் சொன்னாலும் பேறு தப்பாதே

விஸர்க்க பிந்து மாத்ராணி பத பாத அக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||

ந்யூநாநி ச அதிரிக்தாநி-குறைத்தும் கூட்டியும் சொல்லி இருந்தாலும்

——————————————-

ஸ்ரீ இராமாயண அனுபவ துவாதச நாம ஸ்தோத்ரம் -ஸ்ரீ உ -வே -கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் பரத ப்ரிய ஸத்ரு ஹந்த
ஸூ க்ரீவ மித்ர லங்க அக்நே ராஜன் திவ்ய நமஸ்துதே –1-

நமஸ்கார ஆஸீஸ் ரூப மங்களம்
ஏழு காண்டங்கள் அர்த்த சுருக்கம்
ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் -பால காண்ட சுருக்கம் -திரு அவதாரம் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருமணம்
பரத ப்ரிய -அயோத்யா காண்டம் -பாரதந்தர்ய சிறப்பைக் காட்டும்
ஸத்ரு ஹந்த -ஆரண்ய காண்ட சுருக்கம்
ஸூக்ரீவ மித்ர -கிஷ்கிந்தா காண்ட சுருக்கம்
லங்க அக்நே -ஸூந்தர காண்ட சுருக்கம் -திருவடி மூலம் இலங்கா தகனம்
ராஜன் -யுத்த காண்ட சுருக்கம் -ஸ்ரீ பட்டாபிஷேகம்
திவ்ய -உத்தர காண்ட சுருக்கம் -தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினது
நமஸ்துதே

———-

ஸ்ரீ கேஸவ
ஸ்ரீ மன் வரத தேவைஸ் த்வம் ப்ரஹ்மாத்யை ப்ரார்த்திதோ திவி
அவதீர்னோ தசராதாத் லோக த்ராணாய கேஸவ -2-

ஸ்ரீ ப்ரஹ்மாதிகளால் பிரார்த்திக்கப் பட்டு ஸ்ரீ வரத லோக ரக்ஷண அர்த்தமாகவே அன்றோ
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளினீர்

க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம்
ஆவரம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேஸவ நாம பாக்

———

ஸ்ரீ நாராயண
பிதுர் மதே ஸ்திதோ ராம ஸ அநுஐ கௌசிகம் கத
ததத்வரம ரக்ஷஸ் தவம் நாராயண ரிபோர் வதாத் -3-

தந்தை சொல் படி தம்பியுடன் விசுவாமித்திரர் யாக ரக்ஷணம் –
தாடகை ஸூபாஹு -நிரஸனம் -நார ரக்ஷணம் -என்பதால் நாராயண

—————-

ஸ்ரீ மாதவ
ஜனகஸ்ய மீ கே பங்க்த்வா துரா ரோபம் பரைர் தநு
ஸஹ தர்ம ஸரீம் ஸீதாம் பிராப்தஸ் த்வம் மாதவ ஸ்ரீயம் -4-

ஸ்ரீ சீதாப் பிராட்டியைத் திருக்கைப் பற்றி மாதவன் ஆனார்

———-

ஸ்ரீ கோவிந்த
கைகேய்யா ப்ரிய பர்த்ருஸ் த்வம் பிதுர் வசன கௌரவாத்
அபிஷேகம் ஹி கோவிந்த த்யக்த்வா ப்ராப்தோ வநம் முதா -5-

ஹர்ஷத்துடன் வனம் போய் புக்கு –
ராஜ்ஜியம் வா வன வாஸோ மஹோ தய
கோவிந்தா -காம் விந்ததீதி கோவிந்த -வாக்குகளை ரஷிப்பவன்

————

ஸ்ரீ விஷ்ணு
குஹம் க்ருதார்த்தம் குர்வம்ஸ் சித்ர கூடம் கதோ கிரிம்
பாதுகே பரத யாதா விஷ்ணு ஸர்வ அபி ரஷகே -6-

குஹனை க்ருதார்த்தன் ஆக்கி அருளி சர்வ ரக்ஷகமான ஸ்ரீ பாதுகையை பரதனுக்கு அருளி –
ஸ்ரீ விஷ்ணு ஆனீர்

——————–

ஸ்ரீ மது ஸூதனன்
விராதஸ்ய கராதீநாம் தமஸா மிவ பாநுமான்
சேத்தா க்ருத்ர பவஸ்யாபி விபாஸி மது ஸூதந -7-

விரோதன் கரன் போன்றவர் நிரஸனம்
ஜடாயு மோக்ஷம் -அருளியதால் மது ஸூ தனன் ஆனீர்
பிரகிருதி சம்பந்தம் போக்கி -விரோதி நிரஸந சீலத்வம்

—————-

ஸ்ரீ த்ரிவிக்ரம
ஸூக்ரீவேண க்ருபாவத்யை ஸீதாயை ப்ரேஷித கபி
த்ரி விக்ரம அப்திம் வவ்ருதே லங்கிதும் த்வமி வா த்வரே -8-

முதல் பிரிவால் சிறை இருந்தவள் கிருபையை வெளியிட்டு அருளி ஏற்றம் காட்டி அருளினாரே
உம்மைப் போலவே திருவடி வளர்ந்து அருளி த்ரிவிக்ரமனும் நீரே என்று காட்டி அருளினாரே

———-

ஸ்ரீ வாமன
லங்காம் விசித்ய ஹநுமான் த்வத் ரூபோ வாமன அகிலாம்
ஸீதாம் த்ருஷ்ட்வா அக்ஷதாம் தேவீம் ஜகாத ச தவ பிரியம் -9-

உம்மைப் போன்ற வடிவைக் கொண்டு உம்முடைய பிரியத்தை பிராட்டி இடம் அறிவித்த திருவடி
நியதாம் அக்ஷதாம் தேவீம் ராகவாய நிவேதயத் -கற்பு நிலை நின்றதைச் சொல்லிற்றே –

———-

ஸ்ரீ தர
ப்ரபந்நாப்ய தாயீ த்வம் ராவணா தீன் நிஹத்யச
அபி ஷிக்தஸ் ஸீத ஸ்த்வம் ஸ்ரீ தர ஆப்தோ மஹீ மிமாம் -10-

அபய பிரதானம் அளித்த சீர்மை
குண ஸ்ரீ -வீர ஸ்ரீ-ராஜ்ய ஸ்ரீ அனைத்தும் கொண்ட சீர்மை –
பட்டாபிஷேகம் செய்து அருளி பிராட்டி உடன் கூடிய சீர்மை –

————–

ஸ்ரீ ஹ்ருஷீ கேஸ
பார தந்தர்ய ப்ரகாசாய த்வத் விஹீ நாபி ஜாநகீ
கங்கா யாம் நாஜஹத் ப்ராணான் ஹ்ருஷீ கேஸ தவ ப்ரியா -11-

இரண்டாம் பிரிவால் பாரதந்தர்யம் வெளியிட்டு அருளினாள் பிராட்டி
அவனே ஹ்ருஷீ கங்களுக்கு எல்லாம் -ஞான கர்ம இந்திரியங்களுக்கும் அந்தக்கரணத்துக்கும்
அனைத்துக்கும் -ஈசன் –

——————–

ஸ்ரீ பத்ம நாப

ப்ரஹ்மாதீ நாம் ச ஸர்வேஷாம் பஸ்யதாம் ஜாநகீ தவ
ப்ரகாஸ்யா நாய சேஷத்வம் பத்ம நாப புவம் கதா –12-

மூன்றாம் பிரிவால் -அநந்ய சேஷத்வம் –பத்ம சம்பவனான -ப்ரஹ்மாதிகள் பார்க்க
பூமிக்குள் சென்று வெளியிட்டு அருளினாள்
நாபி பத்ம கமலம் உடைய பத்ம நாபன் –

————————–

ஸ்ரீ தாமோதர
த்வம் ஸிராத் பரிபால் யாத ஸா கேதம் தச் சராசரை
ப்ரஹ்மாத் அபிஷ்டுத ப்ராப்த நாகம் தாமோதர ஸ்வகம் -13-

துக்க பூயிஷ்டமான இருள் தரும் மா ஞாலத்தில் அவதரித்ததே ஸுலப்யம் காட்டவே தாமோதரா
அன்று சாரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளி
ப்ரஹ்மாதிகள் ஸ்துதி செய்ய ஸ்வ பரம பதம் எய்திற்றே –

————-

ஏதத் துவாதச நாமார்ந்த தேவ ராஜ வர பிரத
ஸர்வதா தவ ஸர்வம்ச ஸர்வேப்யோபி பவேஸ் ஸூபம் –14-

ஸ்ரீ தேவாதி தேவனே எல்லா வற்றாலும் மங்களம் உண்டாகட்டும் –

———————————-

நெற்றியில் இடும் திருநாமம். பகவானின் திருவடிகளையே குறிக்கும்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் வெள்ளை நிறக்கோடுகள் இரு பக்கமும் இருக்கும்.
நடுவிலே சிவப்பு நிற ஸ்ரீ சூர்ணம் மகா லட்சுமியை குறிக்கும்.
தான் திருமாலின் அடியவர் என்பதைக் காட்டும் விதமாகவும், அவரது திருவடியை தன் தலைக்கு மேல் ஏந்திக்கொள்கிறேன் என்று கூறுவதுமாகும்.

நெற்றியுள் நின்றென் னை யாளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி,
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார்,
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்திரனும்,
மற்றை யமரருமெல்லாம் வந்தென துச்சி யுளானே.
-என்று நம்மாழ்வார் நெற்றியில் திருநாமம் இட்டுக் கொள்வதில் பெருமையை பறை சாற்றுகிறார்.

திருநாமம் இடும்போது நடுவே இடும் ஸ்ரீ சூர்ணம் மகாலட்சுமியோடு பகவான் கூடி இருக்கிறார் என்று காட்டுகிறது.
திருநாமத்தை இடும்போது கீழியிருந்து மேல் நோக்கி இடுகிறோம். இது நாமம் இடுபவருக்கு மேன்மையான எண்ணங்களை உருவாக்கும்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அதாவது அவரது நிலையை மேல்நோக்கி கொண்டு செல்லும்.
திருநாமத்தை நெற்றியில் மட்டுமன்றி உடலில் பல்வேறு இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அதாவது 12 இடங்களில் திருநாமம் இடவேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் திருநாமம் இடும்போது பகவான் நாமத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நாமம்.

நெற்றி – கேசவன்

வயிற்றின் மத்தியப்பகுதி – நாராயணன்

மார்பு மத்தியப் பகுதி – மாதவன்

கழுத்து மத்தியப் பகுதி – கோவிந்தன்

வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு

வலது தோள் – மதுசூதனன்

வலது கழுத்து – திருவிக்ரமன்

இடது வயிறு – வாமனன்

இடது தோள் – ஸ்ரீ தரன்

இடது கழுத்து – ரிஷிகேசன்

கீழ்முதுகு – பத்மநாபன்

கழுத்துக்கு பின்புறம் – தாமோதரன்

என சொல்ல வேண்டும்.

இதுபோல் ஸ்ரீ சூர்ணம் இடும் போதும் மகாலட்சுமி தாயாரின் பன்னிரெண்டு நாமங்களை கூற வேண்டும்.

நெற்றி – ஸ்ரீ

வயிற்றின் மத்தியப்பகுதி – அம்ருத்தோற்பவா

மார்பு மத்தியப் பகுதி – கமலா

கழுத்து மத்தியப் பகுதி – சந்திரசோபனா

வயிற்றின் வலதுபுறம் – விஷ்ணு பத்தினி

வலது தோள் – வைஷ்ணவி

வலது கழுத்து – வராரோஹா

இடது வயிறு – ஹரி வல்லபா

இடது தோள் – சார்ங்கிணி

இடது கழுத்து – தேவ தேவிகா

கீழ்முதுகு – மகா லட்சுமி

கழுத்துக்கு பின்புறம் – லோகசுந்தரி

திருநாமம் அணிந்த பிறகு கை அலம்பக்கூடாது.
திருமாலும் திருநாமம் இடுவதன் காரணம், தனது பக்தர்கள் எதைச் செய்தாலும் அதை தானும் செய்து பார்த்து மகிழ்வதுதான் திருமாலுக்கு விருப்பமானது.
அந்த வகையில் அவரும் நாமம் இட்டுக்கொள்கிறார்.
தானே தனது திருவடிகளை நெற்றியில் நாமமாக இட்டுப் பார்க்கிறார்

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வாம் ஸூஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீஹ் சலா பூதிர் ஹரி ப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சைஹ் பத்ம தாரிணீ ||–ஸ்ரீ லக்ஷ்மி த்வாதச நாம ஸ்தோத்ரம்.

ஸ்ரீ தேவிம் பிரதமம் நாமம்
த்விதீயம் அம்ருத உத்பவ
த்ருதீயம் கமலா ப்ரோக்தா
சதுர்த்தம் சந்த்ர சோபனா
பஞ்சமம் விஷ்ணு பத்னீ ச
ஷஷ்டம் வைஷ்ணவீ ததா
சப்தமம் து வராரோஹா
அஷ்டமம் ஹரி வல்லபா
நவமம் சார்ங்கிணீ
தசமம் தேவ தேவிகா
ஏகாதசம் மஹா லஷ்மீ
த்வாதசம் லோக ஸூந்தரீ –-ஸ்ரீ லஷ்மீ ஹ்ருதய ஸ்தோத்ரம்

ஸ்ரீ தேவீ பிரதமம் நாம த்விதீய அம்ருதோத்பவா
திருதீயம் கமலா ப்ரோக்தா சதுர்த்தியும் லோக ஸூந்தரீ

பஞ்சமம் விஷ்ணு பத்நீ ச ஸஷ்டம் ஸ்யாத் வைஷ்ணவீ ததா
ஸப்தமம் து வராரோஹா அஷ்டமம் ஹரி வல்லபா

நவமம் ஸார்ங்கிணீ ப்ரோக்தா தஸமம் தேவ தேவிகா
ஏகாதஸம் து லஷ்மீ ஸ்யாத் த்வாதஸம் ஸ்ரீ ஹரி ப்ரியா

த்வாதஸை தாநி நாமாநி த்ரி ஸந்த்யம் ய படேந் நர
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தஸ்ய புண்ய பல பரதம் –இதி லஷ்மீ த்வாதஸ நாம ஸ்தோத்ரம்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விதுரர் கூறும் விதுர நீதி – -ஸ்ரீ மஹாபா⁴ரத.-(உத்³யோக³பர்வ)-அத்⁴யாய: 33-40-

October 24, 2023
விது³ர நீதி
(உத்³யோக³பர்வ) of மஹாபா⁴ரத.அத்⁴யாய: 33
வைஶம்பாயந உவாச ।
த்³வா:ஸ்த²ம் ப்ராஹ மஹாப்ராஜ்ஞோ த்⁴ரு’தராஷ்ட்ரோ மஹீபதி: ।
விது³ரம் த்³ரஷ்டுமிச்சா²மி தமிஹாநய மாசிரம் ॥ 1॥
ப்ரஹிதோ த்⁴ரு’தராஷ்ட்ரேண தூ³த: க்ஷத்தாரமப்³ரவீத் ।
ஈஶ்வரஸ்த்வாம் மஹாராஜோ மஹாப்ராஜ்ஞ தி³த்³ரு’க்ஷதி ॥ 2॥
ஏவமுக்தஸ்து விது³ர: ப்ராப்ய ராஜநிவேஶநம் ।
அப்³ரவீத்³த்⁴ரு’தராஷ்ட்ராய த்³வா:ஸ்த² மாம் ப்ரதிவேத³ய ॥ 3॥
த்³வா:ஸ்த² உவாச ।
விது³ரோऽயமநுப்ராப்தோ ராஜேந்த்³ர தவ ஶாஸநாத் ।
த்³ரஷ்டுமிச்ச²தி தே பாதௌ³ கிம் கரோது ப்ரஶாதி⁴ மாம் ॥ 4॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ப்ரவேஶய மஹாப்ராஜ்ஞம் விது³ரம் தீ³ர்க⁴த³ர்ஶிநம் ।
அஹம் ஹி விது³ரஸ்யாஸ்ய நாகால்யோ ஜாது த³ர்ஶநே ॥ 5॥
த்³வா:ஸ்த² உவாச ।
ப்ரவிஶாந்த: புரம் க்ஷத்தர்மஹாராஜஸ்ய தீ⁴மத: ।
ந ஹி தே த³ர்ஶநேऽகால்யோ ஜாது ராஜா ப்³ரவீதி மாம் ॥ 6॥
வைஶம்பாயந உவாச ।
தத: ப்ரவிஶ்ய விது³ரோ த்⁴ரு’தராஷ்ட்ர நிவேஶநம் ।
அப்³ரவீத்ப்ராஞ்ஜலிர்வாக்யம் சிந்தயாநம் நராதி⁴பம் ॥ 7॥விது³ரோऽஹம் மஹாப்ராஜ்ஞ ஸம்ப்ராப்தஸ்தவ ஶாஸநாத் ।
யதி³ கிம் சந கர்தவ்யமயமஸ்மி ப்ரஶாதி⁴ மாம் ॥ 8॥
த்⁴ரு’தரஷ்த்ர உவாச ।
ஸஞ்ஜயோ விது³ர ப்ராப்தோ க³ர்ஹயித்வா ச மாம் க³த: ।
அஜாதஶத்ரோ: ஶ்வோ வாக்யம் ஸபா⁴மத்⁴யே ஸ வக்ஷ்யதி ॥ 9॥
தஸ்யாத்³ய குருவீரஸ்ய ந விஜ்ஞாதம் வசோ மயா ।
தந்மே த³ஹதி கா³த்ராணி தத³கார்ஷீத்ப்ரஜாக³ரம் ॥ 10॥
ஜாக்³ரதோ த³ஹ்யமாநஸ்ய ஶ்ரேயோ யதி³ஹ பஶ்யஸி ।
தத்³ப்³ரூஹி த்வம் ஹி நஸ்தாத த⁴ர்மார்த²குஶலோ ஹ்யஸி ॥ 11॥
யத: ப்ராப்த: ஸஞ்ஜய: பாண்ட³வேப்⁴யோ
ந மே யதா²வந்மநஸ: ப்ரஶாந்தி: ।
ஸவேந்த்³ரியாண்யப்ரக்ரு’திம் க³தாநி
கிம் வக்ஷ்யதீத்யேவ ஹி மேऽத்³ய சிந்தா ॥ 12॥
தந்மே ப்³ரூஹி விது³ர த்வம் யதா²வந்
மநீஷிதம் ஸர்வமஜாதஶத்ரோ: ।
யதா² ச நஸ்தாத ஹிதம் ப⁴வேச்ச
ப்ரஜாஶ்ச ஸர்வா: ஸுகி²தா ப⁴வேயு: ॥- ॥
விது³ர உவாச ।
அபி⁴யுக்தம் ப³லவதா து³ர்ப³லம் ஹீநஸாத⁴நம் ।
ஹ்ரு’தஸ்வம் காமிநம் சோரமாவிஶந்தி ப்ரஜாக³ரா: ॥ 13॥
கச்சிதே³தைர்மஹாதோ³ஷைர்ந ஸ்ப்ரு’ஷ்டோऽஸி நராதி⁴ப ।
கச்சிந்ந பரவித்தேஷு க்³ரு’த்⁴யந்விபரிதப்யஸே ॥ 14॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஶ்ரோதுமிச்சா²மி தே த⁴ர்ம்யம் பரம் நை:ஶ்ரேயஸம் வச: ।
அஸ்மிந்ராஜர்ஷிவம்ஶே ஹி த்வமேக: ப்ராஜ்ஞஸம்மத: ॥ 15॥
விது³ர உவாச ।
ரஜா லக்ஷணஸம்பந்நஸ்த்ரைலோக்யஸ்யாதி⁴போ ப⁴வேத் ।
ப்ரேஷ்யஸ்தே ப்ரேஷிதஶ்சைவ த்⁴ரு’தராஷ்ட்ர யுதி⁴ஷ்டி²ர: ॥- ॥
விபரீததரஶ்ச த்வம் பா⁴க³தே⁴யே ந ஸம்மத: ।

அர்சிஷாம் ப்ரக்ஷயாச்சைவ த⁴ர்மாத்மா த⁴ர்மகோவித:³ ॥- ॥
ஆந்ரு’ஶம்ஸ்யாத³நுக்ரோஶாத்³த⁴ர்மாத்ஸத்யாத்பராக்ரமாத் ।
கு³ருத்வாத்த்வயி ஸம்ப்ரேக்ஷ்ய ப³ஹூந்க்லேஷாம்ஸ்திதிக்ஷதே ॥- ॥
து³ர்யோத⁴நே ஸௌப³லே ச கர்ணே து:³ஶாஸநே ததா² ।
ஏதேஷ்வைஶ்வர்யமாதா⁴ய கத²ம் த்வம் பூ⁴திமிச்ச²ஸி ॥- ॥
ஏகஸ்மாத்வ்ரு’க்ஷாத்³யஜ்ஞபத்ராணி ராஜந்
ஸ்ருக்ச த்³ரௌணீ பேட²நீபீட³நே ச ।
ஏதஸ்மாத்³ராஜந்ப்³ருவதோ மே நிபோ³த⁴
ஏகஸ்மாத்³வை ஜாயதேऽஸச்ச ஸச்ச ॥- ॥
ஆத்மஜ்ஞாநம் ஸமாரம்ப⁴ஸ்திதிக்ஷா த⁴ர்மநித்யதா ।
யமர்தா²ந்நாபகர்ஷந்தி ஸ வை பண்டி³த உச்யதே ॥- ॥
நிஷேவதே ப்ரஶஸ்தாநி நிந்தி³தாநி ந ஸேவதே ।
அநாஸ்திக: ஶ்ரத்³த³தா⁴ந ஏதத்பண்டி³த லக்ஷணம் ॥ 16॥
க்ரோதோ⁴ ஹர்ஷஶ்ச த³ர்பஶ்ச ஹ்ரீஸ்தம்போ⁴ மாந்யமாநிதா ।
யமர்தா²ந்நாபகர்ஷந்தி ஸ வை பண்டி³த உச்யதே ॥ 17॥
யஸ்ய க்ரு’த்யம் ந ஜாநந்தி மந்த்ரம் வா மந்த்ரிதம் பரே ।
க்ரு’தமேவாஸ்ய ஜாநந்தி ஸ வை பண்டி³த உச்யதே ॥ 18॥
யஸ்ய க்ரு’த்யம் ந விக்⁴நந்தி ஶீதமுஷ்ணம் ப⁴யம் ரதி: ।
ஸம்ரு’த்³தி⁴ரஸம்ரு’த்³தி⁴ர்வா ஸ வை பண்டி³த உச்யதே ॥ 19॥
யஸ்ய ஸம்ஸாரிணீ ப்ரஜ்ஞா த⁴ர்மார்தா²வநுவர்ததே ।
காமாத³ர்த²ம் வ்ரு’ணீதே ய: ஸ வை பண்டி³த உச்யதே ॥ 20॥
யதா²ஶக்தி சிகீர்ஷந்தி யதா²ஶக்தி ச குர்வதே ।
ந கிம் சித³வமந்யந்தே பண்டி³தா ப⁴ரதர்ஷப⁴ ॥ 21॥
க்ஷிப்ரம் விஜாநாதி சிரம் ஶ்ரு’ணோதி
விஜ்ஞாய சார்த²ம் ப⁴ஜதே ந காமாத் ।
நாஸம்ப்ரு’ஷ்டோ வ்யௌபயுங்க்தே பரார்தே²
தத்ப்ரஜ்ஞாநம் ப்ரத²மம் பண்டி³தஸ்ய ॥ 22॥
நாப்ராப்யமபி⁴வாஞ்ச²ந்தி நஷ்டம் நேச்ச²ந்தி ஶோசிதும் ।

விது³ர நீதி
ஆபத்ஸு ச ந முஹ்யந்தி நரா: பண்டி³த பு³த்³த⁴ய: ॥ 23॥
நிஶ்சித்ய ய: ப்ரக்ரமதே நாந்தர்வஸதி கர்மண: ।
அவந்த்⁴ய காலோ வஶ்யாத்மா ஸ வை பண்டி³த உச்யதே ॥ 24॥
ஆர்ய கர்மணி ராஜ்யந்தே பூ⁴திகர்மாணி குர்வதே ।
ஹிதம் ச நாப்⁴யஸூயந்தி பண்டி³தா ப⁴ரதர்ஷப⁴ ॥ 25॥
ந ஹ்ரு’ஷ்யத்யாத்மஸம்மாநே நாவமாநேந தப்யதே ।
கா³ங்கோ³ ஹ்ரத³ இவாக்ஷோப்⁴யோ ய: ஸ பண்டி³த உச்யதே ॥ 26॥
தத்த்வஜ்ஞ: ஸர்வபூ⁴தாநாம் யோக³ஜ்ஞ: ஸர்வகர்மணாம் ।
உபாயஜ்ஞோ மநுஷ்யாணாம் நர: பண்டி³த உச்யதே ॥ 27॥
ப்ரவ்ரு’த்த வாக்சித்ரகத² ஊஹவாந்ப்ரதிபா⁴நவாந் ।
ஆஶு க்³ரந்த²ஸ்ய வக்தா ச ஸ வை பண்டி³த உச்யதே ॥ 28॥
ஶ்ருதம் ப்ரஜ்ஞாநுக³ம் யஸ்ய ப்ரஜ்ஞா சைவ ஶ்ருதாநுகா³ ।
அஸம்பி⁴ந்நார்ய மர்யாத:³ பண்டி³தாக்²யாம் லபே⁴த ஸ: ॥ 29॥
அர்த²ம் மஹாந்தமாஸத்³ய வித்³யாமைஶ்வர்யமேவ ச ।
விசரத்யஸமுந்நத்³தோ⁴ யஸ்ய பண்டி³த உச்யதே ॥- ॥
அஶ்ருதஶ்ச ஸமுந்நத்³தோ⁴ த³ரித்³ரஶ்ச மஹாமநா: ।
அர்தா²ம்ஶ்சாகர்மணா ப்ரேப்ஸுர்மூட⁴ இத்யுச்யதே பு³தை:⁴ ॥ 30॥
ஸ்வமர்த²ம் ய: பரித்யஜ்ய பரார்த²மநுதிஷ்ட²தி ।
மித்²யா சரதி மித்ரார்தே² யஶ்ச மூட:⁴ ஸ உச்யதே ॥ 31॥
அகாமாம் காமயதி ய: காமயாநாம் பரித்யஜேத் ।
ப³லவந்தம் ச யோ த்³வேஷ்டி தமாஹுர்மூட⁴சேதஸம் ॥- ॥
அகாமாந்காமயதி ய: காமயாநாந்பரித்³விஷந் ।
ப³லவந்தம் ச யோ த்³வேஷ்டி தமாஹுர்மூட⁴சேதஸம் ॥ 32॥
அமித்ரம் குருதே மித்ரம் மித்ரம் த்³வேஷ்டி ஹிநஸ்தி ச ।
கர்ம சாரப⁴தே து³ஷ்டம் தமாஹுர்மூட⁴சேதஸம் ॥ 33॥
ஸம்ஸாரயதி க்ரு’த்யாநி ஸர்வத்ர விசிகித்ஸதே ।
சிரம் கரோதி க்ஷிப்ரார்தே² ஸ மூடோ⁴ ப⁴ரதர்ஷப⁴ ॥ 34॥

விது³ர நீதி
ஶ்ராத்³த⁴ம் பித்ரு’ப்⁴யோ ந த³தா³தி தை³வதாநி நார்சதி ।
ஸுஹ்ரு’ந்மித்ரம் ந லப⁴தே தமாஹுர்மூட⁴சேதஸம் ॥- ॥
அநாஹூத: ப்ரவிஶதி அப்ரு’ஷ்டோ ப³ஹு பா⁴ஷதே ।
விஶ்வஸத்யப்ரமத்தேஷு மூட⁴ சேதா நராத⁴ம: ॥ 35॥
பரம் க்ஷிபதி தோ³ஷேண வர்தமாந: ஸ்வயம் ததா² ।
யஶ்ச க்ருத்⁴யத்யநீஶ: ஸந்ஸ ச மூட⁴தமோ நர: ॥ 36॥
ஆத்மநோ ப³லமாஜ்ஞாய த⁴ர்மார்த²பரிவர்ஜிதம் ।
அலப்⁴யமிச்ச²ந்நைஷ்கர்ம்யாந்மூட⁴ பு³த்³தி⁴ரிஹோச்யதே ॥ 37॥
அஶிஷ்யம் ஶாஸ்தி யோ ராஜந்யஶ்ச ஶூந்யமுபாஸதே ।
கத³ர்யம் ப⁴ஜதே யஶ்ச தமாஹுர்மூட⁴சேதஸம் ॥ 38॥
அர்த²ம் மஹாந்தமாஸாத்³ய வித்³யாமைஶ்வர்யமேவ வா ।
விசரத்யஸமுந்நத்³தோ⁴ ய: ஸ பண்டி³த உச்யதே ॥ 39॥
ஏக: ஸம்பந்நமஶ்நாதி வஸ்தே வாஸஶ்ச ஶோப⁴நம் ।
யோऽஸம்விப⁴ஜ்ய ப்⁴ரு’த்யேப்⁴ய: கோ ந்ரு’ஶம்ஸதரஸ்தத: ॥ 40॥
ஏக: பாபாநி குருதே ப²லம் பு⁴ங்க்தே மஹாஜந: ।
போ⁴க்தாரோ விப்ரமுச்யந்தே கர்தா தோ³ஷேண லிப்யதே ॥ 41॥
ஏகம் ஹந்யாந்ந வாஹந்யாதி³ஷுர்முக்தோ த⁴நுஷ்மதா ।
பு³த்³தி⁴ர்பு³த்³தி⁴மதோத்ஸ்ரு’ஷ்டா ஹந்யாத்³ராஷ்ட்ரம் ஸராஜகம் ॥ 42॥
ஏகயா த்³வே விநிஶ்சித்ய த்ரீம்ஶ்சதுர்பி⁴ர்வஶே குரு ।
பஞ்ச ஜித்வா விதி³த்வா ஷட்ஸப்த ஹித்வா ஸுகீ² ப⁴வ ॥ 43॥
ஏகம் விஷரஸோ ஹந்தி ஶஸ்த்ரேணைகஶ்ச வத்⁴யதே ।
ஸராஷ்ட்ரம் ஸ ப்ரஜம் ஹந்தி ராஜாநம் மந்த்ரவிஸ்ரவ: ॥ 44॥
ஏக: ஸ்வாது³ ந பு⁴ஞ்ஜீத ஏகஶ்சார்தா²ந்ந சிந்தயேத் ।
ஏகோ ந க³ச்சே²த³த்⁴வாநம் நைக: ஸுப்தேஷு ஜாக்³ரு’யாத் ॥ 45॥
ஏகமேவாத்³விதீயம் தத்³யத்³ராஜந்நாவபு³த்⁴யஸே ।
ஸத்யம் ஸ்வர்க³ஸ்ய ஸோபாநம் பாராவாரஸ்ய நௌரிவ ॥ 46॥
ஏக: க்ஷமாவதாம் தோ³ஷோ த்³விதீயோ நோபலப்⁴யதே ।
யதே³நம் க்ஷமயா யுக்தமஶக்தம் மந்யதே ஜந: ॥ 47॥

விது³ர நீதி
ஸோऽஸ்ய தோ³ஷோ ந மந்தவ்ய: க்ஷமா ஹி பரமம் ப³லம் ।
க்ஷமா கு³ணோ ஹ்யஶக்தாநாம் ஶக்தாநாம் பூ⁴ஷணம் ததா² ॥- ॥
க்ஷமா வஶீக்ரு’திர்லோகே க்ஷமயா கிம் ந ஸாத்⁴யதே ।
ஶாந்திஶங்க:² கரே யஸ்ய கிம் கரிஷ்யதி து³ர்ஜந: ॥- ॥
அத்ரு’ணே பதிதோ வஹ்நி: ஸ்வயமேவோபஶாம்யதி ।
அக்ஷமாவாந்பரம் தோ³ஷைராத்மாந்ம் சைவ யோஜயேத் ॥- ॥
ஏகோ த⁴ர்ம: பரம் ஶ்ரேய: க்ஷமைகா ஶாந்திருத்தமா ।
வித்³யைகா பரமா த்³ரு’ஷ்டிரஹிம்ஸைகா ஸுகா²வஹா ॥ 48॥
த்³வாவிமௌ க்³ரஸதே பூ⁴மி: ஸர்போ பி³லஶயாநிவ ।
ராஜாநம் சாவிரோத்³தா⁴ரம் ப்³ராஹ்மணம் சாப்ரவாஸிநம் ॥ 49॥
த்³வே கர்மணீ நர: குர்வந்நஸ்மிँல்லோகே விரோசதே ।
அப்³ருவந்பருஷம் கிம் சித³ஸதோ நார்த²யம்ஸ்ததா² ॥ 50॥
த்³வாவிமௌ புருஷவ்யாக்⁴ர பரப்ரத்யய காரிணௌ ।
ஸ்த்ரிய: காமித காமிந்யோ லோக: பூஜித பூஜக: ॥ 51॥
த்³வாவிமௌ கண்டகௌ தீக்ஷ்ணௌ ஶரீரபரிஶோஷணௌ ।
யஶ்சாத⁴ந: காமயதே யஶ்ச குப்யத்யநீஶ்வர: ॥ 52॥
த்³வாவேவ ந விராஜேதே விபரீதேந கர்மணா ।
க்³ரு’ஹஸ்த²ஶ்ச நிராரம்ப:⁴ கார்யவாம்ஶ்சைவ பி⁴க்ஷுக: ॥- ॥
த்³வாவிமௌ புருஷௌ ராஜந்ஸ்வர்க³ஸ்ய பரி திஷ்ட²த: ।
ப்ரபு⁴ஶ்ச க்ஷமயா யுக்தோ த³ரித்³ரஶ்ச ப்ரதா³நவாந் ॥ 53॥
ந்யாயாக³தஸ்ய த்³ரவ்யஸ்ய போ³த்³த⁴வ்யௌ த்³வாவதிக்ரமௌ ।
அபாத்ரே ப்ரதிபத்திஶ்ச பாத்ரே சாப்ரதிபாத³நம் ॥ 54॥
த்³வாவம்ப⁴ஸி நிவேஷ்டவ்யௌ க³லே ப³த்³த்⁴வா த்³ரு’ட⁴ம் ஶிலாம் ।
த⁴நவந்தமதா³தாரம் த³ரித்³ரம் சாதபஸ்விநம் ॥- ॥
த்³வாவிமௌ புருஷவ்யாக்⁴ர ஸூர்யமண்ட³லபே⁴தி³நௌ ।
பரிவ்ராட்³யோக³யுக்தஶ்ச ரணே சாபி⁴முகோ² ஹத: ॥- ॥
த்ரயோ ந்யாயா மநுஷ்யாணாம் ஶ்ரூயந்தே ப⁴ரதர்ஷப⁴ ।

விது³ர நீதி
கநீயாந்மத்⁴யம: ஶ்ரேஷ்ட² இதி வேத³விதோ³ விது:³ ॥ 55॥
த்ரிவிதா:⁴ புருஷா ராஜந்நுத்தமாத⁴மமத்⁴யமா: ।
நியோஜயேத்³யதா²வத்தாம்ஸ்த்ரிவிதே⁴ஷ்வேவ கர்மஸு ॥ 56॥
த்ரய ஏவாத⁴நா ராஜந்பா⁴ர்யா தா³ஸஸ்ததா² ஸுத: ।
யத்தே ஸமதி⁴க³ச்ச²ந்தி யஸ்ய தே தஸ்ய தத்³த⁴நம் ॥ 57॥
ஹரணம் ச பரஸ்வாநாம் பரதா³ராபி⁴மர்ஶநம் ।
ஸுஹ்ரு’த³ஶ்ச பரித்யாக³ஸ்த்ரயோ தோ³ஷா க்ஷயாவஹ: ॥- ॥
த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஶநமாத்மந: ।
காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் ॥- ॥
வரப்ரதா³நம் ராஜ்யாம் ச புத்ரஜந்ம ச பா⁴ரத ।
ஶத்ரோஶ்ச மோக்ஷணம் க்ரு’ச்ச்²ராத்த்ரீணி சைகம் ச தத்ஸமம் ॥- ॥
ப⁴க்தம் ச ப³ஜமாநம் ச தவாஸ்மீதி வாதி³நம் ।
த்ரீநேதாந் ஶரணம் ப்ராப்தாந்விஷமேऽபி ந ஸந்த்யஜேத் ॥- ॥
சத்வாரி ராஜ்ஞா து மஹாப³லேந
வர்ஜ்யாந்யாஹு: பண்டி³தஸ்தாநி வித்³யாத் ।
அல்பப்ரஜ்ஞை: ஸஹ மந்த்ரம் ந குர்யாந்
ந தீ³ர்க⁴ஸூத்ரைரலஸைஶ்சாரணைஶ்ச ॥ 58॥
சத்வாரி தே தாத க்³ரு’ஹே வஸந்து
ஶ்ரியாபி⁴ஜுஷ்டஸ்ய க்³ரு’ஹஸ்த² த⁴ர்மே ।
வ்ரு’த்³தோ⁴ ஜ்ஞாதிரவஸந்ந: குலீந:
ஸகா² த³ரித்³ரோ ப⁴கி³நீ சாநபத்யா ॥ 59॥
சத்வார்யாஹ மஹாராஜ ஸத்³யஸ்காநி ப்³ரு’ஹஸ்பதி: ।
ப்ரு’ச்ச²தே த்ரித³ஶேந்த்³ராய தாநீமாநி நிபோ³த⁴ மே ॥ 60॥
தே³வதாநாம் ச ஸங்கல்பமநுபா⁴வம் ச தீ⁴மதாம் ।
விநயம் க்ரு’தவித்³யாநாம் விநாஶம் பாபகர்மணாம் ॥ 61॥
சத்வாரி கர்மாண்யப⁴யங்கராணி
ப⁴யம் ப்ரயச்ச²ந்த்யயதா²க்ரு’தாநி ।
மாநாக்³நிஹோத்ரம் உத மாநமௌநம்

விது³ர நீதி
மாநேநாதீ⁴தமுத மாநயஜ்ஞ: ॥- ॥
பஞ்சாக்³நயோ மநுஷ்யேண பரிசர்யா: ப்ரயத்நத: ।
பிதா மாதாக்³நிராத்மா ச கு³ருஶ்ச ப⁴ரதர்ஷப⁴ ॥ 62॥
பஞ்சைவ பூஜயँல்லோகே யஶ: ப்ராப்நோதி கேவலம் ।
தே³வாந்பித்ரூ’ந்மநுஷ்யாம்ஶ்ச பி⁴க்ஷூநதிதி²பஞ்சமாந் ॥ 63॥
பஞ்ச த்வாநுக³மிஷ்யந்தி யத்ர யத்ர க³மிஷ்யஸி ।
மித்ராண்யமித்ரா மத்⁴யஸ்தா² உபஜீவ்யோபஜீவிந: ॥ 64॥
பஞ்சேந்த்³ரியஸ்ய மர்த்யஸ்ய சி²த்³ரம் சேதே³கமிந்த்³ரியம் ।
ததோऽஸ்ய ஸ்ரவதி ப்ரஜ்ஞா த்³ரு’தே: பாதா³தி³வோத³கம் ॥ 65॥
ஷட்³தோ³ஷா: புருஷேணேஹ ஹாதவ்யா பூ⁴திமிச்ச²தா ।
நித்³ரா தந்த்³ரீ ப⁴யம் க்ரோத⁴ ஆலஸ்யம் தீ³ர்க⁴ஸூத்ரதா ॥ 66॥
ஷடி³மாந்புருஷோ ஜஹ்யாத்³பி⁴ந்நாம் நாவமிவார்ணவே ।
அப்ரவக்தாரமாசார்யமநதீ⁴யாநம்ரு’த்விஜம் ॥ 67॥
அரக்ஷிதாரம் ராஜாநம் பா⁴ர்யாம் சாப்ரிய வாதி³நீம் ।
க்³ராமகாரம் ச கோ³பாலம் வநகாமம் ச நாபிதம் ॥ 68॥
ஷடே³வ து கு³ணா: பும்ஸா ந ஹாதவ்யா: கதா³சந ।
ஸத்யம் தா³நமநாலஸ்யமநஸூயா க்ஷமா த்⁴ரு’தி: ॥ 69॥
அர்தா²க³மோ நித்யமரோகி³தா ச
ப்ரியா ச பா⁴ர்யா ப்ரியவாதி³நீ ச ।
வஶ்யஶ்ச புத்ரோऽர்த²கரீ ச வித்³யா
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகா²நி ராஜந் ॥- ॥
ஷண்ணாமாத்மநி நித்யாநாமைஶ்வர்யம் யோऽதி⁴க³ச்ச²தி ।
ந ஸ பாபை: குதோऽநர்தை²ர்யுஜ்யதே விஜிதேந்த்³ரிய: ॥ 70॥
ஷடி³மே ஷட்ஸு ஜீவந்தி ஸப்தமோ நோபலப்⁴யதே ।
சோரா: ப்ரமத்தே ஜீவந்தி வ்யாதி⁴தேஷு சிகித்ஸகா: ॥ 71॥
ப்ரமதா:³ காமயாநேஷு யஜமாநேஷு யாஜகா: ।
ராஜா விவத³மாநேஷு நித்யம் மூர்கே²ஷு பண்டி³தா: ॥ 72॥
ஷடி³மாநி விநஶ்யந்தி முஹூர்தமநவேக்ஷணாத் ।

விது³ர நீதி
கா³வ: ஸேவா க்ரு’ஷிர்பா⁴ர்யா வித்³யா வ்ரு’ஷலஸங்க³தி: ॥- ॥
ஷடே³தே ஹ்யவமந்யந்தே நித்யம் பூர்வோபகாரிணம் ।
ஆசார்யம் ஶிக்ஷிதா ஶிஷ்யா: க்ரு’ததா³ரஶ்ச மாதரம் ॥- ॥
நாரிம் விக³தகாமஸ்து க்ரு’தார்தா²ஶ்ச ப்ரயோஜகம் ।
நாவம் நிஸ்தீர்ணகாந்தாரா நாதுராஶ்ச சிகித்ஸகம் ॥- ॥
ஆரோக்³யமாந்ரு’ண்யமவிப்ரவாஸ:
ஸத்³பி⁴ர்மநுஷ்யை: ஸஹ ஸம்ப்ரயோக:³ ।
ஸ்வப்ரத்யயா வ்ரு’த்திரபீ⁴தவாஸ:
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகா²நி ராஜந் ॥- ॥
ஈர்ஷுர்க்⁴ரு’ணீ நஸந்துஷ்ட: க்ரோத⁴நோ நித்யஶங்கித: ।
பரபா⁴க்³யோபஜீவீ ச ஷடே³தே நித்யது:³கி²தா: ॥- ॥
ஸப்த தோ³ஷா: ஸதா³ ராஜ்ஞா ஹாதவ்யா வ்யஸநோத³யா: ।
ப்ராயஶோ யைர்விநஶ்யந்தி க்ரு’தமூலாஶ்ச பார்தி²வா: ॥ 73॥
ஸ்த்ரியோऽக்ஷா ம்ரு’க³யா பாநம் வாக்பாருஷ்யம் ச பஞ்சமம் ।
மஹச்ச த³ண்ட³பாருஷ்யமர்த²தூ³ஷணமேவ ச ॥ 74॥
அஷ்டௌ பூர்வநிமித்தாநி நரஸ்ய விநஶிஷ்யத: ।
ப்³ராஹ்மணாந்ப்ரத²மம் த்³வேஷ்டி ப்³ராஹ்மணைஶ்ச விருத்⁴யதே ॥ 75॥
ப்³ராஹ்மண ஸ்வாநி சாத³த்தே ப்³ராஹ்மணாம்ஶ்ச ஜிகா⁴ம்ஸதி ।
ரமதே நிந்த³யா சைஷாம் ப்ரஶம்ஸாம் நாபி⁴நந்த³தி ॥ 76॥
நைதாந்ஸ்மரதி க்ரு’த்யேஷு யாசிதஶ்சாப்⁴யஸூயதி ।
ஏதாந்தோ³ஷாந்நர: ப்ராஜ்ஞோ பு³த்³த்⁴யா பு³த்³த்⁴வா விவர்ஜயேத் ॥ 77॥
அஷ்டாவிமாநி ஹர்ஷஸ்ய நவ நீதாநி பா⁴ரத ।
வர்தமாநாநி த்³ரு’ஶ்யந்தே தாந்யேவ ஸுஸுகா²ந்யபி ॥ 78॥
ஸமாக³மஶ்ச ஸகி²பி⁴ர்மஹாம்ஶ்சைவ த⁴நாக³ம: ।
புத்ரேண ச பரிஷ்வங்க:³ ஸந்நிபாதஶ்ச மைது²நே ॥ 79॥
ஸமயே ச ப்ரியாலாப: ஸ்வயூதே²ஷு ச ஸந்நதி: ।
அபி⁴ப்ரேதஸ்ய லாப⁴ஶ்ச பூஜா ச ஜநஸம்ஸதி³ ॥ 80॥
அஷ்டௌ கு³ணா: புருஷம் தீ³பயந்தி

விது³ர நீதி
ப்ரஜ்ஞா ச கௌல்யம் ச த³ம: ஶ்ருதம் ச ।
பராக்ரமஶ்சாப³ஹுபா⁴ஷிதா ச
தா³நம் யதா²ஶக்தி க்ரு’தஜ்ஞதா ச ॥- ॥
நவத்³வாரமித³ம் வேஶ்ம த்ரிஸ்தூ²ணம் பஞ்ச ஸாக்ஷிகம் ।
க்ஷேத்ரஜ்ஞாதி⁴ஷ்டி²தம் வித்³வாந்யோ வேத³ ஸ பர: கவி: ॥ 81॥
த³ஶ த⁴ர்மம் ந ஜாநந்தி த்⁴ரு’தராஷ்ட்ர நிபோ³த⁴ தாந் ।
மத்த: ப்ரமத்த உந்மத்த: ஶ்ராந்த: க்ருத்³தோ⁴ பு³பு⁴க்ஷித: ॥ 82॥
த்வரமாணஶ்ச பீ⁴ருஶ்ச லுப்³த:⁴ காமீ ச தே த³ஶ ।
தஸ்மாதே³தேஷு பா⁴வேஷு ந ப்ரஸஜ்ஜேத பண்டி³த: ॥ 83॥
அத்ரைவோதா³ஹரந்தீமமிதிஹாஸம் புராதநம் ।
புத்ரார்த²மஸுரேந்த்³ரேண கீ³தம் சைவ ஸுத⁴ந்வநா ॥ 84॥
ய: காமமந்யூ ப்ரஜஹாதி ராஜா
பாத்ரே ப்ரதிஷ்டா²பயதே த⁴நம் ச ।
விஶேஷவிச்ச்²ருதவாந்க்ஷிப்ரகாரீ
தம் ஸர்வலோக: குருதே ப்ரமாணம் ॥ 85॥
ஜாநாதி விஶ்வாஸயிதும் மநுஷ்யாந்
விஜ்ஞாத தோ³ஷேஷு த³தா⁴தி த³ண்ட³ம் ।
ஜாநாதி மாத்ராம் ச ததா² க்ஷமாம் ச
தம் தாத்³ரு’ஶம் ஶ்ரீர்ஜுஷதே ஸமக்³ரா ॥ 86॥
ஸுது³ர்ப³லம் நாவஜாநாதி கஞ்சித்³யுக்தோ ரிபும் ஸேவதே பு³த்³தி⁴பூர்வம் ।
ந விக்³ரஹம் ரோசயதே ப³லஸ்தை:²
காலே ச யோ விக்ரமதே ஸ தீ⁴ர: ॥ 87॥
ப்ராப்யாபத³ம் ந வ்யத²தே கதா³ சித்³
உத்³யோக³மந்விச்ச²தி சாப்ரமத்த: ।
து:³க²ம் ச காலே ஸஹதே ஜிதாத்மா
து⁴ரந்த⁴ரஸ்தஸ்ய ஜிதா: ஸபத்நா: ॥ 88॥
அநர்த²கம் விப்ர வாஸம் க்³ரு’ஹேப்⁴ய:
பாபை: ஸந்தி⁴ம் பரதா³ராபி⁴மர்ஶம் ।

விது³ர நீதி
த³ம்ப⁴ம் ஸ்தைந்யம் பைஶுநம் மத்³ய பாநம்
ந ஸேவதே ய: ஸ ஸுகீ² ஸதை³வ ॥ 89॥
ந ஸம்ரம்பே⁴ணாரப⁴தேऽர்த²வர்க³ம்
ஆகாரித: ஶம்ஸதி தத்²யமேவ ।
ந மாத்ரார்தே² ரோசயதே விவாத³ம்
நாபூஜித: குப்யதி சாப்யமூட:⁴ ॥ 90॥
ந யோऽப்⁴யஸூயத்யநுகம்பதே ச
ந து³ர்ப³ல: ப்ராதிபா⁴வ்யம் கரோதி ।
நாத்யாஹ கிம் சித்க்ஷமதே விவாத³ம்
ஸர்வத்ர தாத்³ரு’க்³லப⁴தே ப்ரஶம்ஸாம் ॥ 91॥
யோ நோத்³த⁴தம் குருதே ஜாது வேஷம்
ந பௌருஷேணாபி விகத்த²தேऽந்யாந் ।
ந மூர்ச்சி²த: கடுகாந்யாஹ கிம் சித்
ப்ரியம் ஸதா³ தம் குருதே ஜநோऽபி ॥ 92॥
ந வைரமுத்³தீ³பயதி ப்ரஶாந்தம்
ந த³ர்மமாரோஹதி நாஸ்தமேதி ।
ந து³ர்க³தோऽஸ்மீதி கரோதி மந்யும்
தமார்ய ஶீலம் பரமாஹுரக்³ர்யம் ॥ 93॥
ந ஸ்வே ஸுகே² வை குருதே ப்ரஹர்ஷம்
நாந்யஸ்ய து:³கே² ப⁴வதி ப்ரதீத: ।
த³த்த்வா ந பஶ்சாத்குருதேऽநுதாபம்
ந கத்த²தே ஸத்புருஷார்ய ஶீல: ॥ 94॥
தே³ஶாசாராந்ஸமயாஞ்ஜாதித⁴ர்மாந்
பு³பூ⁴ஷதே யஸ்து பராவரஜ்ஞ: ।
ஸ தத்ர தத்ராதி⁴க³த: ஸதை³வ
மஹாஜநஸ்யாதி⁴பத்யம் கரோதி ॥ 95॥
த³ம்ப⁴ம் மோஹம் மத்ஸரம் பாபக்ரு’த்யம்
ராஜத்³விஷ்டம் பைஶுநம் பூக³வைரம் ।
மத்தோந்மத்தைர்து³ர்ஜநைஶ்சாபி வாத³ம்
ய: ப்ரஜ்ஞாவாந்வர்ஜயேத்ஸ ப்ரதா⁴ந: ॥ 96॥

விது³ர நீதி
த³மம் ஶௌசம் தை³வதம் மங்க³ளாநி
ப்ராயஶ்சித்தம் விவிதா⁴ँல்லோகவாதா³ந் ।
ஏதாநி ய: குருதே நைத்யகாநி
தஸ்யோத்தா²நம் தே³வதா ராத⁴யந்தி ॥ 97॥
ஸமைர்விவாஹம் குருதே ந ஹீநை:
ஸமை: ஸக்²யம் வ்யவஹாரம் கதா²ஶ்ச ।
கு³ணைர்விஶிஷ்டாம்ஶ்ச புரோ த³தா⁴தி
விபஶ்சிதஸ்தஸ்ய நயா: ஸுநீதா: ॥ 98॥
மிதம் பு⁴ங்க்தே ஸம்விப⁴ஜ்யாஶ்ரிதேப்⁴யோ
மிதம் ஸ்வபித்யமிதம் கர்மக்ரு’த்வா ।
த³தா³த்யமித்ரேஷ்வபி யாசித: ஸம்ஸ்தமாத்மவந்தம் ப்ரஜஹாத்யநர்தா:² ॥ 99॥
சிகீர்ஷிதம் விப்ரக்ரு’தம் ச யஸ்ய
நாந்யே ஜநா: கர்ம ஜாநந்தி கிம் சித் ।
மந்த்ரே கு³ப்தே ஸம்யக³நுஷ்டி²தே ச
ஸ்வல்போ நாஸ்ய வ்யத²தே கஶ்சித³ர்த:² ॥ 100॥
ய: ஸர்வபூ⁴தப்ரஶமே நிவிஷ்ட:
ஸத்யோ ம்ரு’து³ர்தா³நக்ரு’ச்சு²த்³த⁴ பா⁴வ: ।
அதீவ ஸம்ஜ்ஞாயதே ஜ்ஞாதிமத்⁴யே
மஹாமணிர்ஜாத்ய இவ ப்ரஸந்ந: ॥ 101॥
ய ஆத்மநாபத்ரபதே ப்⁴ரு’ஶம் நர:
ஸ ஸர்வலோகஸ்ய கு³ருர்ப⁴வத்யுத ।
அநந்த தேஜா: ஸுமநா: ஸமாஹித:
ஸ்வதேஜஸா ஸூர்ய இவாவபா⁴ஸதே ॥ 102॥
வநே ஜாதா: ஶாபத³க்³த⁴ஸ்ய ராஜ்ஞ:
பாண்டோ:³ புத்ரா: பஞ்ச பஞ்சேந்த்³ர கல்பா: ।
த்வயைவ பா³லா வர்தி⁴தா: ஶிக்ஷிதாஶ்ச
தவாதே³ஶம் பாலயந்த்யாம்பி³கேய ॥ 103॥
ப்ரதா³யைஷாமுசிதம் தாத ராஜ்யம்

விது³ர நீதி
ஸுகீ² புத்ரை: ஸஹிதோ மோத³மாந: ।
ந தே³வாநாம் நாபி ச மாநுஷாணாம்
ப⁴விஷ்யஸி த்வம் தர்கணீயோ நரேந்த்³ர ॥ 104॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரநீதிவாக்யே த்ரயஸ்த்ரம்ஶோऽத்⁴யாய: ॥ 33॥
அத்⁴யாய: 34
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஜாக்³ரதோ த³ஹ்யமாநஸ்ய யத்கார்யமநுபஶ்யஸி ।
தத்³ப்³ரூஹி த்வம் ஹி நஸ்தாத த⁴ர்மார்த²குஶல: ஶுசி: ॥ 1॥
த்வம் மாம் யதா²வத்³விது³ர ப்ரஶாதி⁴
ப்ரஜ்ஞா பூர்வம் ஸர்வமஜாதஶத்ரோ: ।
யந்மந்யஸே பத்²யமதீ³நஸத்த்வ
ஶ்ரேய: கரம் ப்³ரூஹி தத்³வை குரூணாம் ॥ 2॥
பாபாஶங்கீ³ பாபமேவ நௌபஶ்யந்
ப்ரு’ச்சா²மி த்வாம் வ்யாகுலேநாத்மநாஹம் ।
கவே தந்மே ப்³ரூஹி ஸர்வம் யதா²வந்
மநீஷிதம் ஸர்வமஜாதஶத்ரோ: ॥ 3॥
விது³ர உவாச ।
ஶுப⁴ம் வா யதி³ வா பாபம் த்³வேஷ்யம் வா யதி³ வா ப்ரியம் ।
அப்ரு’ஷ்டஸ்தஸ்ய தத்³ப்³ரூயாத்³யஸ்ய நேச்சே²த்பராப⁴வம் ॥ 4॥
தஸ்மாத்³வக்ஷ்யாமி தே ராஜந்ப⁴வமிச்ச²ந்குரூந்ப்ரதி ।
வச: ஶ்ரேய: கரம் த⁴ர்ம்யம் ப்³ருவதஸ்தந்நிபோ³த⁴ மே ॥ 5॥
மித்²யோபேதாநி கர்மாணி ஸித்⁴யேயுர்யாநி பா⁴ரத ।
அநுபாய ப்ரயுக்தாநி மா ஸ்ம தேஷு மந: க்ரு’தா:² ॥ 6॥
ததை²வ யோக³விஹிதம் ந ஸித்⁴யேத்கர்ம யந்ந்ரு’ப ।
உபாயயுக்தம் மேதா⁴வீ ந தத்ர க்³லபயேந்மந: ॥ 7॥
அநுப³ந்தா⁴நவேக்ஷேத ஸாநுப³ந்தே⁴ஷு கர்மஸு ।
ஸம்ப்ரதா⁴ர்ய ச குர்வீத ந வேகே³ந ஸமாசரேத் ॥ 8॥

விது³ர நீதி
அநுப³ந்த⁴ம் ச ஸம்ப்ரேக்ஷ்ய விபாகாம்ஶ்சைவ கர்மணாம் ।
உத்தா²நமாத்மநஶ்சைவ தீ⁴ர: குர்வீத வா ந வா ॥ 9॥
ய: ப்ரமாணம் ந ஜாநாதி ஸ்தா²நே வ்ரு’த்³தௌ⁴ ததா² க்ஷயே ।
கோஶே ஜநபதே³ த³ண்டே³ ந ஸ ராஜ்யாவதிஷ்ட²தே ॥ 10॥
யஸ்த்வேதாநி ப்ரமாணாநி யதோ²க்தாந்யநுபஶ்யதி ।
யுக்தோ த⁴ர்மார்த²யோர்ஜ்ஞாநே ஸ ராஜ்யமதி⁴க³ச்ச²தி ॥ 11॥
ந ராஜ்யம் ப்ராப்தமித்யேவ வர்திதவ்யமஸாம்ப்ரதம் ।
ஶ்ரியம் ஹ்யவிநயோ ஹந்தி ஜரா ரூபமிவோத்தமம் ॥ 12॥
ப⁴க்ஷ்யோத்தம ப்ரதிச்ச²ந்நம் மத்ஸ்யோ ப³டி³ஶமாயஸம் ।
ரூபாபி⁴பாதீ க்³ரஸதே நாநுப³ந்த⁴மவேக்ஷதே ॥ 13॥
யச்ச²க்யம் க்³ரஸிதும் க்³ரஸ்யம் க்³ரஸ்தம் பரிணமேச்ச யத் ।
ஹிதம் ச பரிணாமே யத்தத³த்³யம் பூ⁴திமிச்ச²தா ॥ 14॥
வநஸ்பதேரபக்வாநி ப²லாநி ப்ரசிநோதி ய: ।
ஸ நாப்நோதி ரஸம் தேப்⁴யோ பீ³ஜம் சாஸ்ய விநஶ்யதி ॥ 15॥
யஸ்து பக்வமுபாத³த்தே காலே பரிணதம் ப²லம் ।
ப²லாத்³ரஸம் ஸ லப⁴தே பீ³ஜாச்சைவ ப²லம் புந: ॥ 16॥
யதா² மது⁴ ஸமாத³த்தே ரக்ஷந்புஷ்பாணி ஷட்பத:³ ।
தத்³வத³ர்தா²ந்மநுஷ்யேப்⁴ய ஆத³த்³யாத³விஹிம்ஸயா ॥ 17॥
புஷ்பம் புஷ்பம் விசிந்வீத மூலச்சே²த³ம் ந காரயேத் ।
மாலாகார இவாராமே ந யதா²ங்கா³ரகாரக: ॥ 18॥
கிம் நு மே ஸ்யாதி³த³ம் க்ரு’த்வா கிம் நு மே ஸ்யாத³குர்வத: ।
இதி கர்மாணி ஸஞ்சிந்த்ய குர்யாத்³வா புருஷோ ந வா ॥ 19॥
அநாரப்⁴யா ப⁴வந்த்யர்தா:² கே சிந்நித்யம் ததா²க³தா: ।
க்ரு’த: புருஷகாரோऽபி ப⁴வேத்³யேஷு நிரர்த²க: ॥ 20॥
காம்ஶ்சித³ர்தா²ந்நர: ப்ராஜ்ஞோ லபு⁴ மூலாந்மஹாப²லாந் ।
க்ஷிப்ரமாரப⁴தே கர்தும் ந விக்⁴நயதி தாத்³ரு’ஶாந் ॥ 21॥
ரு’ஜு பஶ்யதி ய: ஸர்வம் சக்ஷுஷாநுபிப³ந்நிவ ।

விது³ர நீதி–14
ஆஸீநமபி தூஷ்ணீகமநுரஜ்யந்தி தம் ப்ரஜா: ॥ 22॥
சக்ஷுஷா மநஸா வாசா கர்மணா ச சதுர்வித⁴ம் ।
ப்ரஸாத³யதி லோகம் யஸ்தம் லோகோऽநுப்ரஸீத³தி ॥ 23॥
யஸ்மாத்த்ரஸ்யந்தி பூ⁴தாநி ம்ரு’க³வ்யாதா⁴ந்ம்ரு’கா³ இவ ।
ஸாக³ராந்தாமபி மஹீம் லப்³த்⁴வா ஸ பரிஹீயதே ॥ 24॥
பித்ரு’பைதாமஹம் ராஜ்யம் ப்ராப்தவாந்ஸ்வேந தேஜஸா ।
வாயுரப்⁴ரமிவாஸாத்³ய ப்⁴ரம்ஶயத்யநயே ஸ்தி²த: ॥ 25॥
த⁴ர்மமாசரதோ ராஜ்ஞ: ஸத்³பி⁴ஶ்சரிதமாதி³த: ।
வஸுதா⁴ வஸுஸம்பூர்ணா வர்த⁴தே பூ⁴திவர்த⁴நீ ॥ 26॥
அத² ஸந்த்யஜதோ த⁴ர்மமத⁴ர்மம் சாநுதிஷ்ட²த: ।
ப்ரதிஸம்வேஷ்டதே பூ⁴மிரக்³நௌ சர்மாஹிதம் யதா² ॥ 27॥
ய ஏவ யத்ந: க்ரியதே ப்ரர ராஷ்ட்ராவமர்த³நே ।
ஸ ஏவ யத்ந: கர்தவ்ய: ஸ்வராஷ்ட்ர பரிபாலநே ॥ 28॥
த⁴ர்மேண ராஜ்யம் விந்தே³த த⁴ர்மேண பரிபாலயேத் ।
த⁴ர்மமூலாம் ஶ்ரியம் ப்ராப்ய ந ஜஹாதி ந ஹீயதே ॥ 29॥
அப்யுந்மத்தாத்ப்ரலபதோ பா³லாச்ச பரிஸர்பத: ।
ஸர்வத: ஸாரமாத³த்³யாத³ஶ்மப்⁴ய இவ காஞ்சநம் ॥ 30॥
ஸுவ்யாஹ்ரு’தாநி ஸுதி⁴யாம் ஸுக்ரு’தாநி ததஸ்தத: ।
ஸஞ்சிந்வந்தீ⁴ர ஆஸீத ஶிலா ஹாரீ ஶிலம் யதா² ॥ 31॥
க³ந்தே⁴ந கா³வ: பஶ்யந்தி வேதை:³ பஶ்யந்தி ப்³ராஹ்மணா: ।
சாரை: பஶ்யந்தி ராஜாநஶ்சக்ஷுர்ப்⁴யாமிதரே ஜநா: ॥ 32॥
பூ⁴யாம்ஸம் லப⁴தே க்லேஶம் யா கௌ³ர்ப⁴வதி து³ர்து³ஹா ।
அத² யா ஸுது³ஹா ராஜந்நைவ தாம் விநயந்த்யபி ॥ 33॥
யத³தப்தம் ப்ரணமதி ந தத்ஸந்தாபயந்த்யபி ।
யச்ச ஸ்வயம் நதம் தா³ரு ந தத்ஸந்நாமயந்த்யபி ॥ 34॥
ஏதயோபமயா தீ⁴ர: ஸந்நமேத ப³லீயஸே ।
இந்த்³ராய ஸ ப்ரணமதே நமதே யோ ப³லீயஸே ॥ 35॥

விது³ர நீதி–15-
பர்ஜந்யநாதா:² பஶவோ ராஜாநோ மித்ர பா³ந்த⁴வா: ।
பதயோ பா³ந்த⁴வா: ஸ்த்ரீணாம் ப்³ராஹ்மணா வேத³ பா³ந்த⁴வா: ॥ 36॥
ஸத்யேந ரக்ஷ்யதே த⁴ர்மோ வித்³யா யோகே³ந ரக்ஷ்யதே ।
ம்ரு’ஜயா ரக்ஷ்யதே ரூபம் குலம் வ்ரு’த்தேந ரக்ஷ்யதே ॥ 37॥
மாநேந ரக்ஷ்யதே தா⁴ந்யமஶ்வாந்ரக்ஷ்யத்யநுக்ரம: ।
அபீ⁴க்ஷ்ணத³ர்ஶநாத்³கா³வ: ஸ்த்ரியோ ரக்ஷ்யா: குசேலத: ॥ 38॥
ந குலம் வ்ரு’த்தி ஹீநஸ்ய ப்ரமாணமிதி மே மதி: ।
அந்த்யேஷ்வபி ஹி ஜாதாநாம் வ்ரு’த்தமேவ விஶிஷ்யதே ॥ 39॥
ய ஈர்ஷ்யு: பரவித்தேஷு ரூபே வீர்யே குலாந்வயே ।
ஸுகே² ஸௌபா⁴க்³யஸத்காரே தஸ்ய வ்யாதி⁴ரநந்தக: ॥ 40॥
அகார்ய கரணாத்³பீ⁴த: கார்யாணாம் ச விவர்ஜநாத் ।
அகாலே மந்த்ரபே⁴தா³ச்ச யேந மாத்³யேந்ந தத்பிபே³த் ॥ 41॥
வித்³யாமதோ³ த⁴நமத³ஸ்த்ரு’தீயோऽபி⁴ஜநோ மத:³ ।
ஏதே மதா³வலிப்தாநாமேத ஏவ ஸதாம் த³மா: ॥ 42॥
அஸந்தோऽப்⁴யர்தி²தா: ஸத்³பி:⁴ கிம் சித்கார்யம் கதா³ சந ।
மந்யந்தே ஸந்தமாத்மாநமஸந்தமபி விஶ்ருதம் ॥ 43॥
க³திராத்மவதாம் ஸந்த: ஸந்த ஏவ ஸதாம் க³தி: ।
அஸதாம் ச க³தி: ஸந்தோ ந த்வஸந்த: ஸதாம் க³தி: ॥ 44॥
ஜிதா ஸபா⁴ வஸ்த்ரவதா ஸமாஶா கோ³மதா ஜிதா ।
அத்⁴வா ஜிதோ யாநவதா ஸர்வம் ஶீலவதா ஜிதம் ॥ 45॥
ஶீலம் ப்ரதா⁴நம் புருஷே தத்³யஸ்யேஹ ப்ரணஶ்யதி ।
ந தஸ்ய ஜீவிதேநார்தோ² ந த⁴நேந ந ப³ந்து⁴பி:⁴ ॥ 46॥
ஆட்⁴யாநாம் மாம்ஸபரமம் மத்⁴யாநாம் கோ³ரஸோத்தரம் ।
லவணோத்தரம் த³ரித்³ராணாம் போ⁴ஜநம் ப⁴ரதர்ஷப⁴ ॥ 47॥
ஸம்பந்நதரமேவாந்நம் த³ரித்³ரா பு⁴ஞ்ஜதே ஸதா³ ।
க்ஷுத்ஸ்வாது³தாம் ஜநயதி ஸா சாட்⁴யேஷு ஸுது³ர்லபா⁴ ॥ 48॥
ப்ராயேண ஶ்ரீமதாம் லோகே போ⁴க்தும் ஶக்திர்ந வித்³யதே ।
த³ரித்³ராணாம் து ராஜேந்த்³ர அபி காஷ்ட²ம் ஹி ஜீர்யதே ॥ 49॥

விது³ர நீதி–16-
அவ்ரு’த்திர்ப⁴யமந்த்யாநாம் மத்⁴யாநாம் மரணாத்³ப⁴யம் ।
உத்தமாநாம் து மர்த்யாநாமவமாநாத்பரம் ப⁴யம் ॥ 50॥
ஐஶ்வர்யமத³பாபிஷ்டா² மதா:³ பாநமதா³த³ய: ।
ஐஶ்வர்யமத³மத்தோ ஹி நாபதித்வா விபு³த்⁴யதே ॥ 51॥
இந்த்³ரியௌரிந்த்³ரியார்தே²ஷு வர்தமாநைரநிக்³ரஹை: ।
தைரயம் தாப்யதே லோகோ நக்ஷத்ராணி க்³ரஹைரிவ ॥ 52॥
யோ ஜித: பஞ்சவர்கே³ண ஸஹஜேநாத்ம கர்ஶிநா ।
ஆபத³ஸ்தஸ்ய வர்த⁴ந்தே ஶுக்லபக்ஷ இவோடு³ராட்³ ॥ 53॥
அவிஜித்ய ய ஆத்மாநமமாத்யாந்விஜிகீ³ஷதே ।
அமித்ராந்வாஜிதாமாத்ய: ஸோऽவஶ: பரிஹீயதே ॥ 54॥
ஆத்மாநமேவ ப்ரத²மம் தே³ஶரூபேண யோ ஜயேத் ।
ததோऽமாத்யாநமித்ராம்ஶ்ச ந மோக⁴ம் விஜிகீ³ஷதே ॥ 55॥
வஶ்யேந்த்³ரியம் ஜிதாமாத்யம் த்⁴ரு’தத³ண்ட³ம் விகாரிஷு ।
பரீக்ஷ்ய காரிணம் தீ⁴ரமத்யந்தம் ஶ்ரீர்நிஷேவதே ॥ 56॥
ரத:² ஶரீரம் புருஷஸ்ய ராஜந்
நாத்மா நியந்தேந்த்³ரியாண்யஸ்ய சாஶ்வா: ।
தைரப்ரமத்த: குஶல: ஸத³ஶ்வைர்
தா³ந்தை: ஸுக²ம் யாதி ரதீ²வ தீ⁴ர: ॥ 57॥
ஏதாந்யநிக்³ரு’ஹீதாநி வ்யாபாத³யிதுமப்யலம் ।
அவிதே⁴யா இவாதா³ந்தா ஹயா: பதி² குஸாரதி²ம் ॥ 58॥
அநர்த²மர்த²த: பஶ்யந்நர்தம் சைவாப்யநர்த²த: ।
இந்த்³ரியை: ப்ரஸ்ரு’தோ பா³ல: ஸுது:³க²ம் மந்யதே ஸுக²ம் ॥ 59॥
த⁴ர்மார்தௌ² ய: பரித்யஜ்ய ஸ்யாதி³ந்த்³ரியவஶாநுக:³ ।
ஶ்ரீப்ராணத⁴நதா³ரேப்⁴ய க்ஷிப்ரம் ஸ பரிஹீயதே ॥ 60॥
அர்தா²நாமீஶ்வரோ ய: ஸ்யாதி³ந்த்³ரியாணாமநீஶ்வர: ।
இந்த்³ரியாணாமநைஶ்வர்யாதை³ஶ்வர்யாத்³ப்⁴ரஶ்யதே ஹி ஸ: ॥ 61॥
ஆத்மநாத்மாநமந்விச்சே²ந்மநோ பு³த்³தீ⁴ந்த்³ரியைர்யதை: ।

விது³ர நீதி–17-
ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந: ॥ 62॥
க்ஷுத்³ராக்ஷேணேவ ஜாலேந ஜ²ஷாவபிஹிதாவுபௌ⁴ ।
காமஶ்ச ராஜந்க்ரோத⁴ஶ்ச தௌ ப்ராஜ்ஞாநம் விலும்பத: ॥ 63॥
ஸமவேக்ஷ்யேஹ த⁴ர்மார்தௌ² ஸம்பா⁴ராந்யோऽதி⁴க³ச்ச²தி ।
ஸ வை ஸம்ப்⁴ரு’த ஸம்பா⁴ர: ஸததம் ஸுக²மேத⁴தே ॥ 64॥
ய: பஞ்சாப்⁴யந்தராஞ்ஶத்ரூநவிஜித்ய மதிக்ஷயாந் ।
ஜிகீ³ஷதி ரிபூநந்யாந்ரிபவோऽபி⁴ப⁴வந்தி தம் ॥ 65॥
த்³ரு’ஶ்யந்தே ஹி து³ராத்மாநோ வத்⁴யமாநா: ஸ்வகர்ம பி:⁴ ।
இந்த்³ரியாணாமநீஶத்வாத்³ராஜாநோ ராஜ்யவிப்⁴ரமை: ॥ 66॥
அஸந்த்யாகா³த்பாபக்ரு’தாமபாபாம்ஸ்
துல்யோ த³ண்ட:³ ஸ்ப்ரு’ஶதே மிஶ்ரபா⁴வாத் ।
ஶுஷ்கேணார்த்³ரம் த³ஹ்யதே மிஶ்ரபா⁴வாத்
தஸ்மாத்பாபை: ஸஹ ஸந்தி⁴ம் ந குர்யாத் ॥ 67॥
நிஜாநுத்பதத: ஶத்ரூந்பஞ்ச பஞ்ச ப்ரயோஜநாந் ।
யோ மோஹாந்ந நிக்⁴ரு’ஹ்ணாதி தமாபத்³க்³ரஸதே நரம் ॥ 68॥
அநஸூயார்ஜவம் ஶௌசம் ஸந்தோஷ: ப்ரியவாதி³தா ।
த³ம: ஸத்யமநாயாஸோ ந ப⁴வந்தி து³ராத்மநாம் ॥ 69॥
ஆத்மஜ்ஞாநமநாயாஸஸ்திதிக்ஷா த⁴ர்மநித்யதா ।
வாக்சைவ கு³ப்தா தா³நம் ச நைதாந்யந்த்யேஷு பா⁴ரத ॥ 70॥
ஆக்ரோஶ பரிவாதா³ப்⁴யாம் விஹிம்ஸந்த்யபு³தா⁴ பு³தா⁴ந் ।
வக்தா பாபமுபாத³த்தே க்ஷமமாணோ விமுச்யதே ॥ 71॥
ஹிம்ஸா ப³லமஸாதூ⁴நாம் ராஜ்ஞாம் த³ண்ட³விதி⁴ர்ப³லம் ।
ஶுஶ்ரூஷா து ப³லம் ஸ்த்ரீணாம் க்ஷமாகு³ணவதாம் ப³லம் ॥ 72॥
வாக்ஸம்யமோ ஹி ந்ரு’பதே ஸுது³ஷ்கரதமோ மத: ।
அர்த²வச்ச விசித்ரம் ச ந ஶக்யம் ப³ஹுபா⁴ஷிதும் ॥ 73॥
அப்⁴யாவஹதி கல்யாணம் விவிதா⁴ வாக்ஸுபா⁴ஷிதா ।
ஸைவ து³ர்பா⁴ஷிதா ராஜந்நநர்தா²யோபபத்³யதே ॥ 74॥
ஸம்ரோஹதி ஶரைர்வித்³த⁴ம் வநம் பரஶுநா ஹதம் ।

விது³ர நீதி–18-
வாசா து³ருக்தம் பீ³ப⁴த்ஸம் ந ஸம்ரோஹதி வாக்க்ஷதம் ॥ 75॥
கர்ணிநாலீகநாராசா நிர்ஹரந்தி ஶரீரத: ।
வாக்ஷல்யஸ்து ந நிர்ஹர்தும் ஶக்யோ ஹ்ரு’தி³ ஶயோ ஹி ஸ: ॥ 76॥
வாக்ஸாயகா வத³நாந்நிஷ்பதந்தி
யைராஹத: ஶோசதி ரத்ர்யஹாநி ।
பரஸ்ய நாமர்மஸு தே பதந்தி
தாந்பண்டி³தோ நாவஸ்ரு’ஜேத்பரேஷு ॥ 77॥
யஸ்மை தே³வா: ப்ரயச்ச²ந்தி புருஷாய பராப⁴வம் ।
பு³த்³தி⁴ம் தஸ்யாபகர்ஷந்தி ஸோऽபாசீநாநி பஶ்யதி ॥ 78॥
பு³த்³தௌ⁴ கலுஷ பூ⁴தாயாம் விநாஶே ப்ரத்யுபஸ்தி²தே ।
அநயோ நயஸங்காஶோ ஹ்ரு’த³யாந்நாபஸர்பதி ॥ 79॥
ஸேயம் பு³த்³தி:⁴ பரீதா தே புத்ராணாம் தவ பா⁴ரத ।
பாண்ட³வாநாம் விரோதே⁴ந ந சைநாம் அவபு³த்⁴யஸே ॥ 80॥
ராஜா லக்ஷணஸம்பந்நஸ்த்ரைலோக்யஸ்யாபி யோ ப⁴வேத் ।
ஶிஷ்யஸ்தே ஶாஸிதா ஸோऽஸ்து த்⁴ரு’தராஷ்ட்ர யுதி⁴ஷ்டி²ர: ॥ 81॥
அதீவ ஸர்வாந்புத்ராம்ஸ்தே பா⁴க³தே⁴ய புரஸ்க்ரு’த: ।
தேஜஸா ப்ரஜ்ஞயா சைவ யுக்தோ த⁴ர்மார்த²தத்த்வவித் ॥ 82॥
ஆந்ரு’ஶம்ஸ்யாத³நுக்ரோஶாத்³யோऽஸௌ த⁴ர்மப்⁴ரு’தாம் வர: ।
கௌ³ரவாத்தவ ராஜேந்த்³ர ப³ஹூந்க்லேஶாம்ஸ்திதிக்ஷதி ॥ 83॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரநீதிவாக்யே சதுஸ்த்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 34॥

அத்⁴யாய: 35
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ப்³ரூஹி பூ⁴யோ மஹாபு³த்³தே⁴ த⁴ர்மார்த²ஸஹிதம் வச: ।
ஶ்ரு’ண்வதோ நாஸ்தி மே த்ரு’ப்திர்விசித்ராணீஹ பா⁴ஷஸே ॥ 1॥
விது³ர உவாச ।
ஸர்வதீர்தே²ஷு வா ஸ்நாநம் ஸர்வபூ⁴தேஷு சார்ஜவம் ।விது³ர நீதி–19-
உபே⁴ ஏதே ஸமே ஸ்யாதாமார்ஜவம் வா விஶிஷ்யதே ॥ 2॥
ஆர்ஜவம் ப்ரதிபத்³யஸ்வ புத்ரேஷு ஸததம் விபோ⁴ ।
இஹ கீர்திம் பராம் ப்ராப்ய ப்ரேத்ய ஸ்வர்க³மவாப்ஸ்யஸி ॥ 3॥
யாவத்கீர்திர்மநுஷ்யஸ்ய புண்யா லோகேஷு கீ³யதே ।
தாவத்ஸ புருஷவ்யாக்⁴ர ஸ்வர்க³லோகே மஹீயதே ॥ 4॥
அத்ராப்யுதா³ஹரந்தீமமிதிஹாஸம் புராதநம் ।
விரோசநஸ்ய ஸம்வாத³ம் கேஶிந்யர்தே² ஸுத⁴ந்வநா ॥ 5॥
கேஶிந்யுவாச ।
கிம் ப்³ராஹ்மணா: ஸ்விச்ச்²ரேயாம்ஸோ தி³திஜா: ஸ்வித்³விரோசந ।
அத² கேந ஸ்ம பர்யங்கம் ஸுத⁴ந்வா நாதி⁴ரோஹதி ॥ 6॥
விரோசந உவாச ।
ப்ராஜாபத்யா ஹி வை ஶ்ரேஷ்டா² வயம் கேஶிநி ஸத்தமா: ।
அஸ்மாகம் க²ல்விமே லோகா: கே தே³வா: கே த்³விஜாதய: ॥ 7॥
கேஶிந்யுவாச ।
இஹைவாஸ்ஸ்வ ப்ரதீக்ஷாவ உபஸ்தா²நே விரோசந ।
ஸுத⁴ந்வா ப்ராதராக³ந்தா பஶ்யேயம் வாம் ஸமாக³தௌ ॥ 8॥
விரோசந உவாச ।
ததா² ப⁴த்³ரே கரிஷ்யாமி யதா² த்வம் பீ⁴ரு பா⁴ஷஸே ।
ஸுத⁴ந்வாநம் ச மாம் சைவ ப்ராதர்த்³ரஷ்டாஸி ஸங்க³தௌ ॥ 9॥
விது³ர உவாச ।
அந்வாலபே⁴ ஹிரண்மயம் ப்ராஹ்ராதே³ऽஹம் தவாஸநம் ।
ஏகத்வமுபஸம்பந்நோ ந த்வாஸேயம் த்வயா ஸஹ ॥ 10॥
விரோசந உவாச ।
அந்வாஹரந்து ப²லகம் கூர்சம் வாப்யத² வா ப்³ரு’ஸீம் ।
ஸுத⁴ந்வந்ந த்வமர்ஹோऽஸி மயா ஸஹ ஸமாஸநம் ॥ 11॥
ஸுத⁴ந்வோவாச ।
பிதாபி தே ஸமாஸீநமுபாஸீதைவ மாமத:⁴ ।
பா³ல: ஸுகை²தி⁴தோ கே³ஹே ந த்வம் கிம் சந பு³த்⁴யஸே ॥ 12॥

விது³ர நீதி–20-
விரோசந உவாச ।
ஹிரண்யம் ச க³வாஶ்வம் ச யத்³வித்தமஸுரேஷு ந: ।
ஸுத⁴ந்வந்விபணே தேந ப்ரஶ்நம் ப்ரு’ச்சா²வ யே விது:³ ॥ 13॥
ஸுத⁴ந்வோவாச ।
ஹிரண்யம் ச க³வாஶ்வம் ச தவைவாஸ்து விரோசந ।
ப்ராணயோஸ்து பணம் க்ரு’த்வா ப்ரஶ்நம் ப்ரு’ச்சா²வ யே விது:³ ॥ 14॥
விரோசந உவாச ।
ஆவாம் குத்ர க³மிஷ்யாவ: ப்ராணயோர்விபணே க்ரு’தே ।
ந ஹி தே³வேஷ்வஹம் ஸ்தா²தா ந மநுஷ்யேஷு கர்ஹி சித் ॥ 15॥
ஸுத⁴ந்வோவாச ।
பிதரம் தே க³மிஷ்யாவ: ப்ராணயோர்விபணே க்ரு’தே ।
புத்ரஸ்யாபி ஸ ஹேதோர்ஹி ப்ரஹ்ராதோ³ நாந்ரு’தம் வதே³த் ॥ 16॥
ப்ரஹ்லாத³ உவாச ।
இமௌ தௌ ஸம்ப்ரத்³ரு’ஶ்யேதே யாப்⁴யாம் ந சரிதம் ஸஹ ।
ஆஶீவிஷாவிவ க்ருத்³தா⁴வேகமார்க³மிஹாக³தௌ ॥ 17॥
கிம் வை ஸஹைவ சரதோ ந புரா சரத: ஸஹ ।
விரோசநைதத்ப்ரு’ச்சா²மி கிம் தே ஸக்²யம் ஸுத⁴ந்வநா ॥ 18॥
விரோசந உவாச ।
ந மே ஸுத⁴ந்வநா ஸக்²யம் ப்ராணயோர்விபணாவஹே ।
ப்ரஹ்ராத³ தத்த்வாம்ரு’ப்ச்சா²மி மா ப்ரஶ்நமந்ரு’தம் வதீ:³ ॥ 19॥
ப்ரஹ்லாத³ உவாச ।
உத³கம் மது⁴பர்கம் சாப்யாநயந்து ஸுத⁴ந்வநே ।
ப்³ரஹ்மந்நப்⁴யர்சநீயோऽஸி ஶ்வேதா கௌ:³ பீவரீ க்ரு’தா ॥ 20॥
ஸுத⁴ந்வோவாச ।
உத³கம் மது⁴பர்கம் ச பத² ஏவார்பிதம் மம ।
ப்ரஹ்ராத³ த்வம் து நௌ ப்ரஶ்நம் தத்²யம் ப்ரப்³ரூஹி ப்ரு’ச்ச²தோ: ॥ 21॥
ப்ரஹ்லாத³ உவாச ।
புர்தோ வாந்யோ ப⁴வாந்ப்³ரஹ்மந்ஸாக்ஷ்யே சைவ ப⁴வேத்ஸ்தி²த: ।
தயோர்விவத³தோ: ப்ரஶ்நம் கத²மஸ்மத்³விபோ⁴ வதே³த் ॥ 22॥

விது³ர நீதி–21-
அத² யோ நைவ ப்ரப்³ரூயாத்ஸத்யம் வா யதி³ வாந்ரு’தம் ।
ஏதத்ஸுத⁴ந்வந்ப்ரு’ச்சா²மி து³ர்விவக்தா ஸ்ம கிம் வஸேத் ॥ 23॥
ஸுத⁴ந்வோவாச ।
யாம் ராத்ரிமதி⁴விந்நா ஸ்த்ரீ யாம் சைவாக்ஷ பராஜித: ।
யாம் ச பா⁴ராபி⁴தப்தாங்கோ³ து³ர்விவக்தா ஸ்ம தாம் வஸேத் ॥ 24॥
நக³ரே ப்ரதிருத்³த:⁴ ஸந்ப³ஹிர்த்³வாரே பு³பு⁴க்ஷித: ।
அமித்ராந்பூ⁴யஸ: பஶ்யந்து³ர்விவக்தா ஸ்ம தாம் வஸேத் ॥ 25॥
பஞ்ச பஶ்வந்ரு’தே ஹந்தி த³ஶ ஹந்தி க³வாந்ரு’தே ।
ஶதமஶ்வாந்ரு’தே ஹந்தி ஸஹஸ்ரம் புருஷாந்ரு’தே ॥ 26॥
ஹந்தி ஜாதாநஜாதாம்ஶ்ச ஹிரண்யார்தோ²ऽந்ரு’தம் வத³ந் ।
ஸர்வம் பூ⁴ம்யந்ரு’தே ஹந்தி மா ஸ்ம பூ⁴ம்யந்ரு’தம் வதீ:³ ॥ 27॥
ப்ரஹ்லாத³ உவாச ।
மத்த: ஶ்ரேயாநங்கி³ரா வை ஸுத⁴ந்வா த்வத்³விரோசந ।
மாதாஸ்ய ஶ்ரேயஸீ மாதுஸ்தஸ்மாத்த்வம் தேந வை ஜித: ॥ 28॥
விரோசந ஸுத⁴ந்வாயம் ப்ராணாநாமீஶ்வரஸ்தவ ।
ஸுத⁴ந்வந்புநரிச்சா²மி த்வயா த³த்தம் விரோசநம் ॥ 29॥
ஸுத⁴ந்வோவாச ।
யத்³த⁴ர்மமவ்ரு’ணீதா²ஸ்த்வம் ந காமாத³ந்ரு’தம் வதீ:³ ।
புநர்த³தா³மி தே தஸ்மாத்புத்ரம் ப்ரஹ்ராத³ து³ர்லப⁴ம் ॥ 30॥
ஏஷ ப்ரஹ்ராத³ புத்ரஸ்தே மயா த³த்தோ விரோசந: ।
பாத³ப்ரக்ஷாலநம் குர்யாத்குமார்யா: ஸந்நிதௌ⁴ மம ॥ 31॥
விது³ர உவாச ।
தஸ்மாத்³ராஜேந்த்³ர பூ⁴ம்யர்தே² நாந்ரு’தம் வக்துமர்ஹஸி ।
மா க³ம: ஸ ஸுதாமாத்யோऽத்யயம் புத்ராநநுப்⁴ரமந் ॥ 32॥
ந தே³வா யஷ்டிமாதா³ய ரக்ஷந்தி பஶுபாலவத் ।
யம் து ரக்ஷிதுமிச்ச²ந்தி பு³த்³த்⁴யா ஸம்விப⁴ஜந்தி தம் ॥ 33॥
யதா² யதா² ஹி புருஷ: கல்யாணே குருதே மந: ।
ததா² ததா²ஸ்ய ஸர்வார்தா:² ஸித்⁴யந்தே நாத்ர ஸம்ஶய: ॥ 34॥

விது³ர நீதி–22-
ந ச²ந்தா³ம்ஸி வ்ரு’ஜிநாத்தாரயந்தி
ஆயாவிநம் மாயயா வர்தமாநம் ।
நீட³ம் ஶகுந்தா இவ ஜாதபக்ஷாஶ்
ச²ந்தா³ம்ஸ்யேநம் ப்ரஜஹத்யந்தகாலே ॥ 35॥
மத்தாபாநம் கலஹம் பூக³வைரம்
பா⁴ர்யாபத்யோரந்தரம் ஜ்ஞாதிபே⁴த³ம் ।
ராஜத்³விஷ்டம் ஸ்த்ரீபுமாம்ஸோர்விவாத³ம்
வர்ஜ்யாந்யாஹுர்யஶ்ச பந்தா:² ப்ரது³ஷ்ட:² ॥ 36॥
ஸாமுத்³ரிகம் வணிஜம் சோரபூர்வம்
ஶலாக தூ⁴ர்தம் ச சிகித்ஸகம் ச ।
அரிம் ச மித்ரம் ச குஶீலவம் ச
நைதாந்ஸாக்²யேஷ்வதி⁴குர்வீத ஸப்த ॥ 37॥
மாநாக்³நிஹோத்ரமுத மாநமௌநம்
மாநேநாதீ⁴தமுத மாநயஜ்ஞ: ।
ஏதாநி சத்வார்யப⁴யங்கராணி
ப⁴யம் ப்ரயச்ச²ந்த்யயதா² க்ரு’தாநி ॥ 38॥
அகா³ர தா³ஹீ க³ரத:³ குண்டா³ஶீ ஸோமவிக்ரயீ ।
பர்வ காரஶ்ச ஸூசீ ச மித்ர த்⁴ருக்பாரதா³ரிக: ॥ 39॥
ப்⁴ரூணஹா கு³ரு தல்பீ ச யஶ்ச ஸ்யாத்பாநபோ த்³விஜ: ।
அதிதீக்ஷ்ணஶ்ச காகஶ்ச நாஸ்திகோ வேத³ நிந்த³க: ॥ 40॥
ஸ்ருவ ப்ரக்³ரஹணோ வ்ராத்ய: கீநாஶஶ்சார்த²வாநபி ।
ரக்ஷேத்யுக்தஶ்ச யோ ஹிம்ஸ்யாத்ஸர்வே ப்³ரஹ்மண்ஹணை: ஸமா: ॥ 41॥
த்ரு’ணோக்லயா ஜ்ஞாயதே ஜாதரூபம்
யுகே³ ப⁴த்³ரோ வ்யவஹாரேண ஸாது:⁴ ।
ஶூரோ ப⁴யேஷ்வர்த²க்ரு’ச்ச்²ரேஷு தீ⁴ர:
க்ரு’ச்ச்²ராஸ்வாபத்ஸு ஸுஹ்ரு’த³ஶ்சாரயஶ் ச ॥ 42॥
ஜரா ரூபம் ஹரதி ஹி தை⁴ர்யமாஶா
ம்ரு’த்யு: ப்ராணாந்த⁴ர்மசர்யாமஸூயா ।
க்ரோத:⁴ ஶ்ரியம் ஶீலமநார்ய ஸேவா

விது³ர நீதி–23-
ஹ்ரியம் காம: ஸர்வமேவாபி⁴மாந: ॥ 43॥
ஶ்ரீர்மங்க³ளாத்ப்ரப⁴வதி ப்ராக³ல்ப்⁴யாத்ஸம்ப்ரவர்த⁴தே ।
தா³க்ஷ்யாத்து குருதே மூலம் ஸம்யமாத்ப்ரதிதிஷ்ட²தி ॥ 44॥
அஷ்டௌ கு³ணா: புருஷம் தீ³பயந்தி
ப்ரஜ்ஞா ச கௌல்யம் ச த³ம: ஶ்ருதம் ச ।
பராக்ரமஶ்சாப³ஹு பா⁴ஷிதா ச
தா³நம் யதா²ஶக்தி க்ரு’தஜ்ஞதா ச ॥ 45॥
ஏதாந்கு³ணாம்ஸ்தாத மஹாநுபா⁴வாந்
ஏகோ கு³ண: ஸம்ஶ்ரயதே ப்ரஸஹ்ய ।
ராஜா யதா³ ஸத்குருதே மநுஷ்யம்
ஸர்வாந்கு³ணாநேஷ கு³ணோऽதிபா⁴தி ॥ 46॥
அஷ்டௌ ந்ரு’பேமாநி மநுஷ்யலோகே
ஸ்வர்க³ஸ்ய லோகஸ்ய நித³ர்ஶநாநி ।
சத்வார்யேஷாமந்வவேதாநி ஸத்³பி⁴ஶ்
சத்வார்யேஷாமந்வவயந்தி ஸந்த: ॥ 47॥
யஜ்ஞோ தா³நமத்⁴யயநம் தபஶ் ச
சத்வார்யேதாந்யந்வவேதாநி ஸத்³பி:⁴ ।
த³ம: ஸத்யமார்ஜவமாந்ரு’ஶம்ஸ்யம்
சத்வார்யேதாந்யந்வவயந்தி ஸந்த: ॥ 48॥
ந ஸா ஸபா⁴ யத்ர ந ஸந்தி வ்ரு’த்³தா⁴
ந தே வ்ரு’த்³தா⁴ யே ந வத³ந்தி த⁴ர்மம் ।
நாஸௌ ஹர்மோ யதந ஸத்யமஸ்தி
ந தத்ஸத்யம் யச்ச²லேநாநுவித்³த⁴ம் ॥ 49॥
ஸத்யம் ரூபம் ஶ்ருதம் வித்³யா கௌல்யம் ஶீலம் ப³லம் த⁴நம் ।
ஶௌர்யம் ச சிரபா⁴ஷ்யம் ச த³ஶ: ஸம்ஸர்க³யோநய: ॥ 50॥
பாபம் குர்வந்பாபகீர்தி: பாபமேவாஶ்நுதே ப²லம் ।
புண்யம் குர்வந்புண்யகீர்தி: புண்யமேவாஶ்நுதே ப²லம் ॥ 51॥
பாபம் ப்ரஜ்ஞாம் நாஶயதி க்ரியமாணம் புந: புந: ।
நஷ்டப்ரஜ்ஞ: பாபமேவ நித்யமாரப⁴தே நர: ॥ 52॥

விது³ர நீதி–24-
புண்யம் ப்ரஜ்ஞாம் வர்த⁴யதி க்ரியமாணம் புந: புந: ।
வ்ரு’த்³த⁴ப்ரஜ்ஞ: புண்யமேவ நித்யமாரப⁴தே நர: ॥ 53॥
அஸூயகோ த³ந்த³ ஶூகோ நிஷ்டு²ரோ வைரக்ரு’ந்நர: ।
ஸ க்ரு’ச்ச்²ரம் மஹதா³ப்நோதோ நசிராத்பாபமாசரந் ॥ 54॥
அநஸூய: க்ரு’தப்ரஜ்ஞ: ஶோப⁴நாந்யாசரந்ஸதா³ ।
அக்ரு’ச்ச்²ராத்ஸுக²மாப்நோதி ஸர்வத்ர ச விராஜதே ॥ 55॥
ப்ரஜ்ஞாமேவாக³மயதி ய: ப்ராஜ்ஞேப்⁴ய: ஸ பண்டி³த: ।
ப்ராஜ்ஞோ ஹ்யவாப்ய த⁴ர்மார்தௌ² ஶக்நோதி ஸுக²மேதி⁴தும் ॥ 56॥
தி³வஸேநைவ தத்குர்யாத்³யேந ராதௌ ஸுக²ம் வஸேத் ।
அஷ்ட மாஸேந தத்குர்யாத்³யேந வர்ஷா: ஸுக²ம் வஸேத் ॥ 57॥
பூர்வே வயஸி தத்குர்யாத்³யேந வ்ரு’த்³த⁴ஸுக²ம் வஸேத் ।
யாவஜ்ஜீவேந தத்குர்யாத்³யேந ப்ரேத்ய ஸுக²ம் வஸேத் ॥ 58॥
ஜீர்ணமந்நம் ப்ரஶம்ஸந்தி பா⁴ர்யம் ச க³தயௌவநாம் ।
ஶூரம் விக³தஸங்க்³ராமம் க³தபாரம் தபஸ்விநம் ॥ 59॥
த⁴நேநாத⁴ர்மலப்³தே⁴ந யச்சி²த்³ரமபிதீ⁴யதே ।
அஸம்வ்ரு’தம் தத்³ப⁴வதி ததோऽந்யத³வதீ³ர்யதே ॥ 60॥
கு³ருராத்மவதாம் ஶாஸ்தா ஶாஸா ராஜா து³ராத்மநாம் ।
அத² ப்ரச்ச²ந்நபாபாநாம் ஶாஸ்தா வைவஸ்வதோ யம: ॥ 61॥
ரு’ஷீணாம் ச நதீ³நாம் ச குலாநாம் ச மஹாமநாம் ।
ப்ரப⁴வோ நாதி⁴க³ந்தவ்ய: ஸ்த்ரீணாம் து³ஶ்சரிதஸ்ய ச ॥ 62॥
த்³விஜாதிபூஜாபி⁴ரதோ தா³தா ஜ்ஞாதிஷு சார்ஜவீ ।
க்ஷத்ரிய: ஸ்வர்க³பா⁴க்³ராஜம்ஶ்சிரம் பாலயதே மஹீம் ॥ 63॥
ஸுவர்ணபுஷ்பாம் ப்ரு’தி²வீம் சிந்வந்தி புருஷாஸ்த்ரய: ।
ஶூரஶ்ச க்ரு’தவித்³யஶ்ச யஶ்ச ஜாநாதி ஸேவிதும் ॥ 64॥
பு³த்³தி⁴ஶ்ரேஷ்டா²நி கர்மாணி பா³ஹுமத்⁴யாநி பா⁴ரத ।
தாநி ஜங்கா⁴ ஜக⁴ந்யாநி பா⁴ரப்ரத்யவராணி ச ॥ 65॥
து³ர்யோத⁴நே ச ஶகுநௌ மூடே⁴ து:³ஶாஸநே ததா² ।
கர்ணே சைஶ்வர்யமாதா⁴ய கத²ம் த்வம் பூ⁴திமிச்ச²ஸி ॥ 66॥

விது³ர நீதி–25-
ஸர்வைர்கு³ணைருபேதாஶ்ச பாண்ட³வா ப⁴ரதர்ஷப⁴ ।
பித்ரு’வத்த்வயி வர்தந்தே தேஷு வர்தஸ்வ புத்ரவத் ॥ 67॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரஹிதவாக்யே பஞ்சத்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 35॥

—————————–
அத்⁴யாய: 36
விது³ர உவாச ।
அத்ரைவோதா³ஹரந்தீமமிதிஹாஸம் புராதநம் ।
ஆத்ரேயஸ்ய ச ஸம்வாத³ம் ஸாத்⁴யாநாம் சேதி ந: ஶ்ருதம் ॥ 1॥
சரந்தம் ஹம்ஸரூபேண மஹர்ஷிம் ஸம்ஶிதவ்ரதம் ।
ஸாத்⁴யா தே³வா மஹாப்ராஜ்ஞம் பர்யப்ரு’ச்ச²ந்த வை புரா ॥ 2॥
ஸாத்⁴யா ஊசு: ।
ஸாத்⁴யா தே³வா வய்மஸ்மோ மஹர்ஷே
த்³ரு’ஷ்ட்வா ப⁴வந்தம் ந ஶக்நுமோऽநுமாதும் ।
ஶ்ருதேந தீ⁴ரோ பு³த்³தி⁴மாம்ஸ்த்வம் மதோ ந:
காவ்யாம் வாசம் வக்துமர்ஹஸ்யுதா³ராம் ॥ 3॥
ஹம்ஸ உவாச ।
ஏதத்கார்யமமரா: ஸம்ஶ்ருதம் மே
த்⁴ரு’தி: ஶம: ஸத்யத⁴ர்மாநுவ்ரு’த்தி: ।
க்³ரந்தி²ம் விநீய ஹ்ரு’த³யஸ்ய ஸர்வம்
ப்ரியாப்ரியே சாத்மவஶம் நயீத ॥ 4॥
ஆக்ருஶ்யமாநோ நாக்ரோஶேந்மந்யுரேவ திதிக்ஷித: ।
ஆக்ரோஷ்டாரம் நிர்த³ஹதி ஸுக்ரு’தம் சாஸ்ய விந்த³தி ॥ 5॥
நாக்ரோஶீ ஸ்யாந்நாவமாநீ பரஸ்ய
மித்ரத்³ரோஹீ நோத நீசோபஸேவீ ।
ந சாதிமாநீ ந ச ஹீநவ்ரு’த்தோ
ரூக்ஷாம் வாசம் ருஶதீம் வர்ஜயீத ॥ 6॥
மர்மாண்யஸ்தீ²நி ஹ்ரு’த³யம் ததா²ஸூந்விது³ர நீதி–26-
கோ⁴ரா வாசோ நிர்த³ஹந்தீஹ பும்ஸாம் ।
தஸ்மாத்³வாசம் ருஶதீம் ரூக்ஷரூபாம்
த⁴ர்மாராமோ நித்யஶோ வர்ஜயீத ॥ 7॥
அரும் துரம் பருஷம் ரூக்ஷவாசம்
வாக்கண்டகைர்விதுத³ந்தம் மநுஷ்யாந் ।
வித்³யாத³லக்ஷ்மீகதமம் ஜநாநாம்
முகே² நிப³த்³தா⁴ம் நிர்ரு’திம் வஹந்தம் ॥ 8॥
பரஶ்சேதே³நமதி⁴வித்⁴யேத பா³ணைர்
ப்⁴ரு’ஶம் ஸுதீக்ஷ்ணைரநலார்க தீ³ப்தை: ।
விரிச்யமாநோऽப்யதிரிச்யமாநோ
வித்³யாத்கவி: ஸுக்ரு’தம் மே த³தா⁴தி ॥ 9॥
யதி³ ஸந்தம் ஸேவதே யத்³யஸந்தம்
தபஸ்விநம் யதி³ வா ஸ்தேநமேவ ।
வாஸோ யதா² ரங்க³ வஶம் ப்ரயாதி
ததா² ஸ தேஷாம் வஶமப்⁴யுபைதி ॥ 10॥
வாத³ம் து யோ ந ப்ரவதே³ந்ந வாத³யேத்³
யோ நாஹத: ப்ரதிஹந்யாந்ந கா⁴தயேத் ।
யோ ஹந்துகாமஸ்ய ந பாபமிச்சே²த்
தஸ்மை தே³வா: ஸ்ப்ரு’ஹயந்த்யாக³தாய ॥ 11॥
அவ்யாஹ்ரு’தம் வ்யாஹ்ரு’தாச்ச்²ரேய ஆஹு:
ஸத்யம் வதே³த்³வ்யாஹ்ரு’தம் தத்³த்³விதீயம் ।
ப்ரியம்வதே³த்³வ்யாஹ்ரு’தம் தத்த்ரு’தீயம்
த⁴ர்ம்யம் வதே³த்³வ்யாஹ்ரு’தம் தச்சதுர்த²ம் ॥ 12॥
யாத்³ரு’ஶை: ஸம்விவத³தே யாத்³ரு’ஶாம்ஶ் சோபஸேவதே ।
யாத்³ரு’கி³ச்சே²ச்ச ப⁴விதும் தாத்³ரு’க்³ப⁴வதி பூருஷ: ॥ 13॥
யதோ யதோ நிவர்ததே ததஸ்ததோ விமுச்யதே ।
நிவர்தநாத்³தி⁴ ஸர்வதோ ந வேத்தி து:³க²மண்வபி ॥ 14॥
ந ஜீயதே நோத ஜிகீ³ஷதேऽந்யாந்
ந வைரக்க்ரு’ச்சாப்ரதிகா⁴தகஶ் ச ।

விது³ர நீதி–27-
நிந்தா³ ப்ரஶம்ஸாஸு ஸமஸ்வபா⁴வோ
ந ஶோசதே ஹ்ரு’ஷ்யதி நைவ சாயம் ॥ 15॥
பா⁴வமிச்ச²தி ஸர்வஸ்ய நாபா⁴வே குருதே மதிம் ।
ஸத்யவாதீ³ ம்ரு’து³ர்தா³ந்தோ ய: ஸ உத்தமபூருஷ: ॥ 16॥
நாநர்த²கம் ஸாந்த்வயதி ப்ரதிஜ்ஞாய த³தா³தி ச ।
ராத்³தா⁴பராத்³தே⁴ ஜாநாதி ய: ஸ மத்⁴யமபூருஷ: ॥ 17॥
து:³ஶாஸநஸ்தூபஹந்தா ந ஶாஸ்தா
நாவர்ததே மந்யுவஶாத்க்ரு’தக்⁴ந: ।
ந கஸ்ய சிந்மித்ரமதோ² து³ராத்மா
கலாஶ்சைதா அத⁴மஸ்யேஹ பும்ஸ: ॥ 18॥
ந ஶ்ரத்³த³தா⁴தி கல்யாணம் பரேப்⁴யோऽப்யாத்மஶங்கித: ।
நிராகரோதி மித்ராணி யோ வை ஸோऽத⁴ம பூருஷ: ॥ 19॥
உத்தமாநேவ ஸேவேத ப்ராப்தே காலே து மத்⁴யமாந் ।
அத⁴மாம்ஸ்து ந ஸேவேத ய இச்சே²ச்ச்²ரேய ஆத்மந: ॥ 20॥
ப்ராப்நோதி வை வித்தமஸத்³ப³லேந
நித்யோத்தா²நாத்ப்ரஜ்ஞயா பௌருஷேண ।
ந த்வேவ ஸம்யக்³லப⁴தே ப்ரஶம்ஸாம்
ந வ்ரு’த்தமாப்நோதி மஹாகுலாநாம் ॥ 21॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
மஹாகுலாநாம் ஸ்ப்ரு’ஹயந்தி தே³வா
த⁴ர்மார்த²வ்ரு’த்³தா⁴ஶ்ச ப³ஹுஶ்ருதாஶ் ச ।
ப்ரு’ச்சா²மி த்வாம் விது³ர ப்ரஶ்நமேதம்
ப⁴வந்தி வை காநி மஹாகுலாநி ॥ 22॥
விது³ர உவாச ।
தமோ த³மோ ப்³ரஹ்மவித்த்வம் விதாநா:
புண்யா விவாஹா: ஸததாந்ந தா³நம் ।
யேஷ்வேவைதே ஸப்தகு³ணா ப⁴வந்தி
ஸம்யக்³வ்ரு’த்தாஸ்தாநி மஹாகுலாநி ॥ 23॥
யேஷாம் ந வ்ரு’த்தம் வ்யத²தே ந யோநிர்விது³ர நீதி–28-
வ்ரு’த்தப்ரஸாதே³ந சரந்தி த⁴ர்மம் ।
யே கீர்திமிச்ச²ந்தி குலே விஶிஷ்டாம்
த்யக்தாந்ரு’தாஸ்தாநி மஹாகுலாநி ॥ 24॥
அநிஜ்யயாவிவாஹைர்ஶ்ச வேத³ஸ்யோத்ஸாத³நேந ச ।
குலாந்யகுலதாம் யாந்தி த⁴ர்மஸ்யாதிக்ரமேண ச ॥ 25॥
தே³வ த்³ரவ்யவிநாஶேந ப்³ரஹ்ம ஸ்வஹரணேந ச ।
குலாந்யகுலதாம் யாந்தி ப்³ராஹ்மணாதிக்ரமேண ச ॥ 26॥
ப்³ராஹ்மணாநாம் பரிப⁴வாத்பரிவாதா³ச்ச பா⁴ரத ।
குலாந்யகுலதாம் யாந்தி ந்யாஸாபஹரணேந ச ॥ 27॥
குலாநி ஸமுபேதாநி கோ³பி:⁴ புருஷதோऽஶ்வத: ।
குலஸங்க்²யாம் ந க³ச்ச²ந்தி யாநி ஹீநாநி வ்ரு’த்தத: ॥ 28॥
வ்ரு’த்ததஸ்த்வவிஹீநாநி குலாந்யல்பத⁴நாந்யபி ।
குலஸங்க்²யாம் து க³ச்ச²ந்தி கர்ஷந்தி ச மயத்³யஶ: ॥ 29॥
மா ந: குலே வைரக்ரு’த்கஶ் சித³ஸ்து
ராஜாமாத்யோ மா பரஸ்வாபஹாரீ ।
மித்ரத்³ரோஹீ நைக்ரு’திகோऽந்ரு’தீ வா
பூர்வாஶீ வா பித்ரு’தே³வாதிதி²ப்⁴ய: ॥ 30॥
யஶ்ச நோ ப்³ராஹ்மணம் ஹந்யாத்³யஶ்ச நோ ப்³ராஹ்மணாந்த்³விஷேத் ।
ந ந: ஸ ஸமிதிம் க³ச்சே²த்³யஶ்ச நோ நிர்வபேத்க்ரு’ஷிம் ॥ 31॥
த்ரு’ணாநி பூ⁴மிருத³கம் வாக்சதுர்தீ² ச ஸூந்ரு’தா ।
ஸதாமேதாநி கே³ஹேஷு நோச்சி²த்³யந்தே கதா³ சந ॥ 32॥
ஶ்ரத்³த⁴யா பரயா ராஜந்நுபநீதாநி ஸத்க்ரு’திம் ।
ப்ரவ்ரு’த்தாநி மஹாப்ராஜ்ஞ த⁴ர்மிணாம் புண்யகர்மணாம் ॥ 33॥
ஸூக்ஷ்மோऽபி பா⁴ரம் ந்ரு’பதே ஸ்யந்த³நோ வை
ஶக்தோ வோடு⁴ம் ந ததா²ந்யே மஹீஜா: ।
ஏவம் யுக்தா பா⁴ரஸஹா ப⁴வந்தி
மஹாகுலீநா ந ததா²ந்யே மநுஷ்யா: ॥ 34॥
ந தந்மித்ரம் யஸ்ய கோபாத்³பி³பே⁴தி

விது³ர நீதி–29-
யத்³வா மித்ரம் ஶங்கிதேநோபசர்யம் ।
யஸ்மிந்மித்ரே பிதரீவாஶ்வஸீத
தத்³வை மித்ரம் ஸங்க³தாநீதராணி ॥ 35॥
யதி³ சேத³ப்யஸம்ப³ந்தோ⁴ மித்ரபா⁴வேந வர்ததே ।
ஸ ஏவ ப³ந்து⁴ஸ்தந்மித்ரம் ஸா க³திஸ்தத்பராயணம் ॥ 36॥
சலசித்தஸ்ய வை பும்ஸோ வ்ரு’த்³தா⁴நநுபஸேவத: ।
பாரிப்லவமதேர்நித்யமத்⁴ருவோ மித்ர ஸங்க்³ரஹ: ॥ 37॥
சலசித்தமநாத்மாநமிந்த்³ரியாணாம் வஶாநுக³ம் ।
அர்தா:² ஸமதிவர்தந்தே ஹம்ஸா: ஶுஷ்கம் ஸரோ யதா² ॥ 38॥
அகஸ்மாதே³வ குப்யந்தி ப்ரஸீத³ந்த்யநிமித்தத: ।
ஶீலமேதத³ஸாதூ⁴நாமப்⁴ரம் பாரிப்லவம் யதா² ॥ 39॥
ஸத்க்ரு’தாஶ்ச க்ரு’தார்தா²ஶ்ச மித்ராணாம் ந ப⁴வந்தி யே ।
தாந்ம்ரு’தாநபி க்ரவ்யாதா:³ க்ரு’தக்⁴நாந்நோபபு⁴ஞ்ஜதே ॥ 40॥
அர்த²யேதே³வ மித்ராணி ஸதி வாஸதி வா த⁴நே ।
நாநர்த²யந்விஜாநாதி மித்ராணாம் ஸாரப²ல்கு³தாம் ॥ 41॥
ஸந்தாபாத்³ப்⁴ரஶ்யதே ரூபம் ஸந்தாபாத்³ப்⁴ரஶ்யதே ப³லம் ।
ஸந்தாபாத்³ப்⁴ரஶ்யதே ஜ்ஞாநம் ஸந்தாபாத்³வ்யாதி⁴ம்ரு’ச்ச²தி ॥ 42॥
அநவாப்யம் ச ஶோகேந ஶரீரம் சோபதப்யதே ।
அமித்ராஶ்ச ப்ரஹ்ரு’ஷ்யந்தி மா ஸ்ம ஶோகே மந: க்ரு’தா:² ॥ 43॥
புநர்நரோ ம்ரியதே ஜாயதே ச
புநர்நரோ ஹீயதே வர்த⁴தே புந: ।
புநர்நரோ யாசதி யாச்யதே ச
புநர்நர: ஶோசதி ஶோச்யதே புந: ॥ 44॥
ஸுக²ம் ச து:³க²ம் ச ப⁴வாப⁴வௌ ச
லாபா⁴லாபௌ⁴ மரணம் ஜீவிதம் ச ।
பர்யாயஶ: ஸர்வமிஹ ஸ்ப்ரு’ஶந்தி
தஸ்மாத்³தீ⁴ரோ நைவ ஹ்ரு’ஷ்யேந்ந ஶோசேத் ॥ 45॥
சலாநி ஹீமாநி ஷடி³ந்த்³ரியாணி

விது³ர நீதி–30-
தேஷாம் யத்³யத்³வர்ததே யத்ர யத்ர ।
ததஸ்தத: ஸ்ரவதே பு³த்³தி⁴ரஸ்ய
சி²த்³ரோத³ கும்பா⁴தி³வ நித்யமம்ப:⁴ ॥ 46॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
தநுருச்ச:² ஶிகீ² ராஜா மித்²யோபசரிதோ மயா ।
மந்தா³நாம் மம புத்ராணாம் யுத்³தே⁴நாந்தம் கரிஷ்யதி ॥ 47॥
நித்யோத்³விக்³நமித³ம் ஸர்வம் நித்யோத்³விக்³நமித³ம் மந: ।
யத்தத்பத³மநுத்³விக்³நம் தந்மே வத³ மஹாமதே ॥ 48॥
விது³ர உவாச ।
நாந்யத்ர வித்³யா தபஸோர்நாந்யத்ரேந்த்³ரிய நிக்³ரஹாத் ।
நாந்யத்ர லோப⁴ஸந்த்யாகா³ச்சா²ந்திம் பஶ்யாம தேऽநக⁴ ॥ 49॥
பு³த்³த்⁴யா ப⁴யம் ப்ரணுத³தி தபஸா விந்த³தே மஹத் ।
கு³ருஶுஶ்ரூஷயா ஜ்ஞாநம் ஶாந்திம் த்யாகே³ந விந்த³தி ॥ 50॥
அநாஶ்ரிதா தா³நபுண்யம் வேத³ புண்யமநாஶ்ரிதா: ।
ராக³த்³வேஷவிநிர்முக்தா விசரந்தீஹ மோக்ஷிண: ॥ 51॥
ஸ்வதீ⁴தஸ்ய ஸுயுத்³த⁴ஸ்ய ஸுக்ரு’தஸ்ய ச கர்மண: ।
தபஸஶ்ச ஸுதப்தஸ்ய தஸ்யாந்தே ஸுக²மேத⁴தே ॥ 52॥
ஸ்வாஸ்தீர்ணாநி ஶயநாநி ப்ரபந்நா
ந வை பி⁴ந்நா ஜாது நித்³ராம் லப⁴ந்தே ।
ந ஸ்த்ரீஷு ராஜந்ரதிமாப்நுவந்தி
ந மாக³தை:⁴ ஸ்தூயமாநா ந ஸூதை: ॥ 53॥
ந வை பி⁴ந்நா ஜாது சரந்தி த⁴ர்மம்
ந வை ஸுக²ம் ப்ராப்நுவந்தீஹ பி⁴ந்நா: ।
ந வை பி⁴ந்நா கௌ³ரவம் மாநயந்தி
ந வை பி⁴ந்நா: ப்ரஶமம் ரோசயந்தி ॥ 54॥
ந வை தேஷாம் ஸ்வத³தே பத்²யமுக்தம்
யோக³க்ஷேமம் கல்பதே நோத தேஷாம் ।
பி⁴ந்நாநாம் வை மநுஜேந்த்³ர பராயணம்
ந வித்³யதே கிம் சித³ந்யத்³விநாஶாத் ॥ 55॥

விது³ர நீதி–31-
ஸம்பா⁴வ்யம் கோ³ஷு ஸம்பந்நம் ஸம்பா⁴வ்யம் ப்³ராஹ்மணே தப: ।
ஸம்பா⁴வ்யம் ஸ்த்ரீஷு சாபல்யம் ஸம்பா⁴வ்யம் ஜ்ஞாதிதோ ப⁴யம் ॥ 56॥
தந்தவோऽப்யாயதா நித்யம் தந்தவோ ப³ஹுலா: ஸமா: ।
ப³ஹூந்ப³ஹுத்வாதா³யாஸாந்ஸஹந்தீத்யுபமா ஸதாம் ॥ 57॥
தூ⁴மாயந்தே வ்யபேதாநி ஜ்வலந்தி ஸஹிதாநி ச ।
த்⁴ரு’தராஷ்ட்ரோல்முகாநீவ ஜ்ஞாதயோ ப⁴ரதர்ஷப⁴ ॥ 58॥
ப்³ராஹ்மணேஷு ச யே ஶூரா: ஸ்த்ரீஷு ஜ்ஞாதிஷு கோ³ஷு ச ।
வ்ரு’ந்தாதி³வ ப²லம் பக்வம் த்⁴ரு’தராஷ்ட்ர பதந்தி தே ॥ 59॥
மஹாநப்யேகஜோ வ்ரு’க்ஷோ ப³லவாந்ஸுப்ரதிஷ்டி²த: ।
ப்ரஸஹ்ய ஏவ வாதேந ஶாகா² ஸ்கந்த⁴ம் விமர்தி³தும் ॥ 60॥
அத² யே ஸஹிதா வ்ரு’க்ஷா: ஸங்க⁴ஶ: ஸுப்ரதிஷ்டி²தா: ।
தே ஹி ஶீக்⁴ரதமாந்வாதாந்ஸஹந்தேऽந்யோந்யஸம்ஶ்ரயாத் ॥ 61॥
ஏவம் மநுஷ்யமப்யேகம் கு³ணைரபி ஸமந்விதம் ।
ஶக்யம் த்³விஷந்தோ மந்யந்தே வாயுர்த்³ருமமிவௌகஜம் ॥ 62॥
அந்யோந்யஸமுபஷ்டம்பா⁴த³ந்யோந்யாபாஶ்ரயேண ச ।
ஜ்ஞாதய: ஸம்ப்ரவர்த⁴ந்தே ஸரஸீவோத்பலாந்யுத ॥ 63॥
அவத்⁴யா ப்³ராஹ்மணா கா³வோ ஸ்த்ரியோ பா³லாஶ்ச ஜ்ஞாதய: ।
யேஷாம் சாந்நாநி பு⁴ஞ்ஜீத யே ச ஸ்யு: ஶரணாக³தா: ॥ 64॥
ந மநுஷ்யே கு³ண: கஶ்சித³ந்யோ த⁴நவதாம் அபி ।
அநாதுரத்வாத்³ப⁴த்³ரம் தே ம்ரு’தகல்பா ஹி ரோகி³ண: ॥ 65॥
அவ்யாதி⁴ஜம் கடுகம் ஶீர்ஷ ரோக³ம்
பாபாநுப³ந்த⁴ம் பருஷம் தீக்ஷ்ணமுக்³ரம் ।
ஸதாம் பேயம் யந்ந பிப³ந்த்யஸந்தோ
மந்யும் மஹாராஜ பிப³ ப்ரஶாம்ய ॥ 66॥
ரோகா³ர்தி³தா ந ப²லாந்யாத்³ரியந்தே
ந வை லப⁴ந்தே விஷயேஷு தத்த்வம் ।
து:³கோ²பேதா ரோகி³ணோ நித்யமேவ
ந பு³த்⁴யந்தே த⁴நபோ⁴கா³ந்ந ஸௌக்²யம் ॥ 67॥

விது³ர நீதி–32-
புரா ஹ்யுக்தோ நாகரோஸ்த்வம் வசோ மே
த்³யூதே ஜிதாம் த்³ரௌபதீ³ம் ப்ரேக்ஷ்ய ராஜந் ।
து³ர்யோத⁴நம் வாரயேத்யக்ஷவத்யாம்
கிதவத்வம் பண்டி³தா வர்ஜயந்தி ॥ 68॥
ந தத்³ப³லம் யந்ம்ரு’து³நா விருத்⁴யதே
மிஶ்ரோ த⁴ர்மஸ்தரஸா ஸேவிதவ்ய: ।
ப்ரத்⁴வம்ஸிநீ க்ரூரஸமாஹிதா ஶ்ரீர்
ம்ரு’து³ப்ரௌடா⁴ க³ச்ச²தி புத்ரபௌத்ராந் ॥ 69॥
தா⁴ர்தராஷ்ட்ரா: பாண்ட³வாந்பாலயந்து
பாண்டோ:³ ஸுதாஸ்தவ புத்ராம்ஶ்ச பாந்து ।
ஏகாரிமித்ரா: குரவோ ஹ்யேகமந்த்ரா
ஜீவந்து ராஜந்ஸுகி²ந: ஸம்ரு’த்³தா:⁴ ॥ 70॥
மேடீ⁴பூ⁴த: கௌரவாணாம் த்வமத்³ய
த்வய்யாதீ⁴நம் குரு குலமாஜமீட⁴ ।
பார்தா²ந்பா³லாந்வநவாஸ ப்ரதப்தாந்
கோ³பாயஸ்வ ஸ்வம் யஶஸ்தாத ரக்ஷந் ॥ 71॥
ஸந்த⁴த்ஸ்வ த்வம் கௌரவாந்பாண்டு³புத்ரைர்
மா தேऽந்தரம் ரிபவ: ப்ரார்த²யந்து ।
ஸத்யே ஸ்தி²தாஸ்தே நரதே³வ ஸர்வே
து³ர்யோத⁴நம் ஸ்தா²பய த்வம் நரேந்த்³ர ॥ 72॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரஹிதவாக்யே ஷட்த்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 36॥

——————
அத்⁴யாய: 37
விது³ர உவாச ।
ஸப்தத³ஶேமாந்ராஜேந்த்³ர மநு: ஸ்வாயம்பு⁴வோऽப்³ரவீத் ।
வைசித்ரவீர்ய புருஷாநாகாஶம் முஷ்டிபி⁴ர்க்⁴நத: ॥ 1॥
தாநேவிந்த்³ரஸ்ய ஹி த⁴நுரநாம்யம் நமதோऽப்³ரவீத் ।
அதோ² மரீசிந: பாதா³நநாம்யாந்நமதஸ்ததா² ॥ 2॥விது³ர நீதி–33-
யஶ்சாஶிஷ்யம் ஶாஸதி யஶ் ச குப்யதே
யஶ்சாதிவேலம் ப⁴ஜதே த்³விஷந்தம் ।
ஸ்த்ரியஶ்ச யோऽரக்ஷதி ப⁴த்³ரமஸ்து தே
யஶ்சாயாச்யம் யாசதி யஶ் ச கத்த²தே ॥ 3॥
யஶ்சாபி⁴ஜாத: ப்ரகரோத்யகார்யம்
யஶ்சாப³லோ ப³லிநா நித்யவைரீ ।
அஶ்ரத்³த³தா⁴நாய ச யோ ப்³ரவீதி
யஶ்சாகாம்யம் காமயதே நரேந்த்³ர ॥ 4॥
வத்⁴வா ஹாஸம் ஶ்வஶுரோ யஶ் ச மந்யதே
வத்⁴வா வஸந்நுத யோ மாநகாம: ।
பரக்ஷேத்ரே நிர்வபதி யஶ்ச பீ³ஜம்
ஸ்த்ரியம் ச ய: பரிவத³தேऽதிவேலம் ॥ 5॥
யஶ்சைவ லப்³த்⁴வா ந ஸ்மராமீத்யுவாச
த³த்த்வா ச ய: கத்த²தி யாச்யமாந: ।
யஶ்சாஸத: ஸாந்த்வமுபாஸதீஹ
ஏதேऽநுயாந்த்யநிலம் பாஶஹஸ்தா: ॥ 6॥
யஸ்மிந்யதா² வர்ததே யோ மநுஷ்யஸ்
தஸ்மிம்ஸ்ததா² வர்திதவ்யம் ஸ த⁴ர்ம: ।
மாயாசாரோ மாயயா வர்திதவ்ய:
ஸாத்⁴வாசார: ஸாது⁴நா ப்ரத்யுதே³ய: ॥ 7॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஶதாயுருக்த: புருஷ: ஸர்வவேதே³ஷு வை யதா³ ।
நாப்நோத்யத² ச தத்ஸர்வமாயு: கேநேஹ ஹேதுநா ॥ 8॥
விது³ர உவாச ।
அதிவாதோ³ऽதிமாநஶ்ச ததா²த்யாகோ³ நராதி⁴ப: ।
க்ரோத⁴ஶ்சாதிவிவித்ஸா ச மித்ரத்³ரோஹஶ்ச தாநி ஷட் ॥ 9॥
ஏத ஏவாஸயஸ்தீக்ஷ்ணா: க்ரு’ந்தந்த்யாயூம்ஷி தே³ஹிநாம் ।
ஏதாநி மாநவாந்க்⁴நந்தி ந ம்ரு’த்யுர்ப⁴த்³ரமஸ்து தே ॥ 10॥
விஶ்வஸ்தஸ்யைதி யோ தா³ராந்யஶ்சாபி கு³ரு தக்பக:³ ।

விது³ர நீதி–34-
வ்ரு’ஷலீ பதிர்த்³விஜோ யஶ்ச பாநபஶ்சைவ பா⁴ரத ॥ 11॥
ஶரணாக³தஹா சைவ ஸர்வே ப்³ரஹ்மஹணை: ஸமா: ।
ஏதை: ஸமேத்ய கர்தவ்யம் ப்ராயஶ்சித்தமிதி ஶ்ருதி: ॥ 12॥
க்³ரு’ஹீ வதா³ந்யோऽநபவித்³த⁴ வாக்ய:
ஶேஷாந்ந போ⁴காப்யவிஹிம்ஸகஶ் ச ।
நாநர்த²க்ரு’த்த்யக்தகலி: க்ரு’தஜ்ஞ:
ஸத்யோ ம்ரு’து:³ ஸ்வர்க³முபைதி வித்³வாந் ॥ 13॥
ஸுலபா:⁴ புருஷா ராஜந்ஸததம் ப்ரியவாதி³ந: ।
அப்ரியஸ்ய து பத்²யஸ்ய வக்தா ஶ்ரோதா ச து³ர்லப:⁴ ॥ 14॥
யோ ஹி த⁴ர்மம் வ்யபாஶ்ரித்ய ஹித்வா ப⁴ர்து: ப்ரியாப்ரியே ।
அப்ரியாண்யாஹ பத்²யாநி தேந ராஜா ஸஹாயவாந் ॥ 15॥
த்யஜேத்குலார்தே² புருஷம் க்³ராமஸ்யார்தே² குலம் த்யஜேத் ।
க்³ராமம் ஜநபத³ஸ்யார்தே² ஆத்மார்தே² ப்ரு’தி²வீம் த்யஜேத் ॥ 16॥
ஆபத³ர்த²ம் த⁴நம் ரக்ஷேத்³தா³ராந்ரக்ஷேத்³த⁴நைரபி ।
ஆத்மாநம் ஸததம் ரக்ஷேத்³தா³ரைரபி த⁴நைரபி ॥ 17॥
உக்தம் மயா த்³யூதகாலேऽபி ராஜந்
நைவம் யுக்தம் வசநம் ப்ராதிபீய ।
ததௌ³ஷத⁴ம் பத்²யமிவாதுரஸ்ய
ந ரோசதே தவ வைசித்ர வீர்ய ॥ 18॥
காகைரிமாம்ஶ்சித்ரப³ர்ஹாந்மயூராந்
பராஜைஷ்டா:² பாண்ட³வாந்தா⁴ர்தராஷ்ட்ரை: ।
ஹித்வா ஸிம்ஹாந்க்ரோஷ்டு காந்கூ³ஹமாந:
ப்ராப்தே காலே ஶோசிதா த்வம் நரேந்த்³ர ॥ 19॥
யஸ்தாத ந க்ருத்⁴யதி ஸர்வகாலம்
ப்⁴ரு’த்யஸ்ய ப⁴க்தஸ்ய ஹிதே ரதஸ்ய ।
தஸ்மிந்ப்⁴ரு’த்யா ப⁴ர்தரி விஶ்வஸந்தி
ந சைநமாபத்ஸு பரித்யஜந்தி ॥ 20॥
ந ப்⁴ரு’த்யாநாம் வ்ரு’த்தி ஸம்ரோத⁴நேந
பா³ஹ்யம் ஜநம் ஸஞ்ஜிக்⁴ரு’க்ஷேத³பூர்வம் ।

விது³ர நீதி–35-
த்யஜந்தி ஹ்யேநமுசிதாவருத்³தா:⁴
ஸ்நிக்³தா⁴ ஹ்யமாத்யா: பரிஹீநபோ⁴கா:³ ॥ 21॥
க்ரு’த்யாநி பூர்வம் பரிஸங்க்²யாய ஸர்வாண்ய்
ஆயவ்யயாவநுரூபாம் ச வ்ரு’த்திம் ।
ஸங்க்³ரு’ஹ்ணீயாத³நுரூபாந்ஸஹாயாந்
ஸஹாயஸாத்⁴யாநி ஹி து³ஷ்கராணி ॥ 22॥
அபி⁴ப்ராயம் யோ விதி³த்வா து ப⁴ர்து:
ஸர்வாணி கார்யாணி கரோத்யதந்த்³ரீ: ।
வக்தா ஹிதாநாமநுரக்த ஆர்ய:
ஶக்திஜ்ஞ ஆத்மேவ ஹி ஸோऽநுகம்ப்ய: ॥ 23॥
வாக்யம் து யோ நாத்³ரியதேऽநுஶிஷ்ட:
ப்ரத்யாஹ யஶ்சாபி நியுஜ்யமாந: ।
ப்ரஜ்ஞாபி⁴மாநீ ப்ரதிகூலவாதீ³
த்யாஜ்ய: ஸ தாத்³ரு’க்த்வரயைவ ப்⁴ரு’த்ய: ॥ 24॥
அஸ்தப்³த⁴மக்லீப³மதீ³ர்க⁴ஸூத்ரம்
ஸாநுக்ரோஶம் ஶ்லக்ஷ்ணமஹார்யமந்யை: ।
அரோக³ ஜாதீயமுதா³ரவாக்யம்
தூ³தம் வத³ந்த்யஷ்ட கு³ணோபபந்நம் ॥ 25॥
ந விஶ்வாஸாஜ்ஜாது பரஸ்ய கே³ஹம்
க³ச்சே²ந்நரஶ்சேதயாநோ விகாலே ।
ந சத்வரே நிஶி திஷ்டே²ந்நிகூ³டோ⁴
ந ராஜந்யாம் யோஷிதம் ப்ரார்த²யீத ॥ 26॥
ந நிஹ்நவம் ஸத்ர க³தஸ்ய க³ச்சே²த்
ஸம்ஸ்ரு’ஷ்ட மந்த்ரஸ்ய குஸங்க³தஸ்ய ।
ந ச ப்³ரூயாந்நாஶ்வஸாமி த்வயீதி
ஸ காரணம் வ்யபதே³ஶம் து குர்யாத் ॥ 27॥
க்⁴ரு’ணீ ராஜா பும்ஶ்சலீ ராஜப்⁴ரு’த்ய:
புத்ரோ ப்⁴ராதா வித⁴வா பா³ல புத்ரா ।
ஸேநா ஜீவீ சோத்³த்⁴ரு’த ப⁴க்த ஏவ
வ்யவஹாரே வை வர்ஜநீயா: ஸ்யுரேதே ॥ 28॥

விது³ர நீதி–36-
கு³ணா த³ஶ ஸ்நாநஶீலம் ப⁴ஜந்தே
ப³லம் ரூபம் ஸ்வரவர்ணப்ரஶுத்³தி:⁴ ।
ஸ்பர்ஶஶ்ச க³ந்த⁴ஶ்ச விஶுத்³த⁴தா ச
ஶ்ரீ: ஸௌகுமார்யம் ப்ரவராஶ்ச நார்ய: ॥ 29॥
கு³ணாஶ்ச ஷண்மிதபு⁴க்தம் ப⁴ஜந்தே
ஆரோக்³யமாயுஶ்ச ஸுக²ம் ப³லம் ச ।
அநாவிலம் சாஸ்ய ப⁴வேத³பத்யம்
ந சைநமாத்³யூந இதி க்ஷிபந்தி ॥ 30॥
அகர்ம ஶீலம் ச மஹாஶநம் ச
லோகத்³விஷ்டம் ப³ஹு மாயம் ந்ரு’ஶம்ஸம் ।
அதே³ஶகாலஜ்ஞமநிஷ்ட வேஷம்
ஏதாந்க்³ரு’ஹே ந ப்ரதிவாஸயீத ॥ 31॥
கத³ர்யமாக்ரோஶகமஶ்ருதம் ச
வராக ஸம்பூ⁴தமமாந்ய மாநிநம் ।
நிஷ்டூ²ரிணம் க்ரு’தவைரம் க்ரு’தக்⁴நம்
ஏதாந்ப்⁴ரு’தார்தோऽபி ந ஜாது யாசேத் ॥ 32॥
ஸங்க்லிஷ்டகர்மாணமதிப்ரவாத³ம்
நித்யாந்ரு’தம் சாத்³ரு’ட⁴ ப⁴க்திகம் ச ।
விக்ரு’ஷ்டராக³ம் ப³ஹுமாநிநம் சாப்ய்
ஏதாந்ந ஸேவேத நராத⁴மாந்ஷட் ॥ 33॥
ஸஹாயப³ந்த⁴நா ஹ்யர்தா:² ஸஹாயாஶ்சார்த²ப³ந்த⁴நா: ।
அந்யோந்யப³ந்த⁴நாவேதௌ விநாந்யோந்யம் ந ஸித்⁴யத: ॥ 34॥
உத்பாத்³ய புத்ராநந்ரு’ணாம்ஶ்ச க்ரு’த்வா
வ்ரு’த்திம் ச தேப்⁴யோऽநுவிதா⁴ய காம் சித் ।
ஸ்தா²நே குமாரீ: ப்ரதிபாத்³ய ஸர்வா
அரண்யஸம்ஸ்தோ² முநிவத்³பு³பூ⁴ஷேத் ॥ 35॥
ஹிதம் யத்ஸர்வபூ⁴தாநாமாத்மநஶ்ச ஸுகா²வஹம் ।
தத்குர்யாதீ³ஶ்வரோ ஹ்யேதந்மூலம் த⁴ர்மார்த²ஸித்³த⁴யே ॥ 36॥

விது³ர நீதி–37-
பு³த்³தி:⁴ ப்ரபா⁴வஸ்தேஜஶ்ச ஸத்த்வமுத்தா²நமேவ ச ।
வ்யவஸாயஶ்ச யஸ்ய ஸ்யாத்தஸ்யாவ்ரு’த்தி ப⁴யம் குத: ॥ 37॥
பஶ்ய தோ³ஷாந்பாண்ட³வைர்விக்³ரஹே த்வம்
யத்ர வ்யதே²ரந்நபி தே³வா: ஸ ஶக்ரா: ।
புத்ரைர்வைரம் நித்யமுத்³விக்³நவாஸோ
யஶ: ப்ரணாஶோ த்³விஷதாம் ச ஹர்ஷ: ॥ 38॥
பீ⁴ஷ்மஸ்ய கோபஸ்தவ சேந்த்³ர கல்ப
த்³ரோணஸ்ய ராஜ்ஞஶ்ச யுதி⁴ஷ்டி²ரஸ்ய ।
உத்ஸாத³யேல்லோகமிமம் ப்ரவ்ரு’த்³த:⁴
ஶ்வேதோ க்³ரஹஸ்திர்யகி³வாபதந்கே² ॥ 39॥
தவ புத்ரஶதம் சைவ கர்ண: பஞ்ச ச பாண்ட³வா: ।
ப்ரு’தி²வீமநுஶாஸேயுரகி²லாம் ஸாக³ராம்ப³ராம் ॥ 40॥
தா⁴ர்தராஷ்ட்ரா வநம் ராஜந்வ்யாக்⁴ரா: பாண்டு³ஸுதா மதா: ।
மா வநம் சி²ந்தி⁴ ஸ வ்யாக்⁴ரம் மா வ்யாக்⁴ராந்நீநஶோ வநாத் ॥ 41॥
ந ஸ்யாத்³வநம்ரு’தே வ்யாக்⁴ராந்வ்யாக்⁴ரா ந ஸ்யுர்ரு’தே வநம் ।
வநம் ஹி ரக்ஷ்யதே வ்யாக்⁴ரைர்வ்யாக்⁴ராந்ரக்ஷதி காநநம் ॥ 42॥
ந ததே²ச்ச²ந்த்யகல்யாணா: பரேஷாம் வேதி³தும் கு³ணாந் ।
யதை²ஷாம் ஜ்ஞாதுமிச்ச²ந்தி நைர்கு³ண்யம் பாபசேதஸ: ॥ 43॥
அர்த²ஸித்³தி⁴ம் பராமிச்ச²ந்த⁴ர்மமேவாதி³தஶ் சரேத் ।
ந ஹி த⁴ர்மாத³பைத்யர்த:² ஸ்வர்க³லோகாதி³வாம்ரு’தம் ॥ 44॥
யஸ்யாத்மா விரத: பாபாத்கல்யாணே ச நிவேஶித: ।
தேந ஸர்வமித³ம் பு³த்³த⁴ம் ப்ரக்ரு’திர்விக்ரு’திர்ஶ்ச யா ॥ 45॥
யோ த⁴ர்மமர்த²ம் காமம் ச யதா²காலம் நிஷேவதே ।
த⁴ர்மார்த²காமஸம்யோக³ம் யோऽமுத்ரேஹ ச விந்த³தி ॥ 46॥
ஸந்நியச்ச²தி யோ வேக³முத்தி²தம் க்ரோத⁴ஹர்ஷயோ: ।
ஸ ஶ்ரியோ பா⁴ஜநம் ராஜந்யஶ்சாபத்ஸு ந முஹ்யதி ॥ 47॥
ப³லம் பஞ்ச வித⁴ம் நித்யம் புருஷாணாம் நிபோ³த⁴ மே ।
யத்து பா³ஹுப³லம் நாம கநிஷ்ட²ம் ப³லமுச்யதே ॥ 48॥

விது³ர நீதி–38-
அமாத்யலாபோ⁴ ப⁴த்³ரம் தே த்³விதீயம் ப³லமுச்யதே ।
த⁴நலாப⁴ஸ்த்ரு’தீயம் து ப³லமாஹுர்ஜிகீ³ஷவ: ॥ 49॥
யத்த்வஸ்ய ஸஹஜம் ராஜந்பித்ரு’பைதாமஹம் ப³லம் ।
அபி⁴ஜாத ப³லம் நாம தச்சதுர்த²ம் ப³லம் ஸ்ம்ரு’தம் ॥ 50॥
யேந த்வேதாநி ஸர்வாணி ஸங்க்³ரு’ஹீதாநி பா⁴ரத ।
யத்³ப³லாநாம் ப³லம் ஶ்ரேஷ்ட²ம் தத்ப்ரஜ்ஞா ப³லமுச்யதே ॥ 51॥
மஹதே யோऽபகாராய நரஸ்ய ப்ரப⁴வேந்நர: ।
தேந வைரம் ஸமாஸஜ்ய தூ³ரஸ்தோ²ऽஸ்மீதி நாஶ்வஸேத் ॥ 52॥
ஸ்த்ரீஷு ராஜஸு ஸர்பேஷு ஸ்வாத்⁴யாயே ஶத்ருஸேவிஷு ।
போ⁴கே³ சாயுஷி விஶ்வாஸம் க: ப்ராஜ்ஞ: கர்துமர்ஹதி ॥ 53॥
ப்ரஜ்ஞா ஶரேணாபி⁴ஹதஸ்ய ஜந்தோஶ்
சிகித்ஸகா: ஸந்தி ந சௌஷதா⁴நி ।
ந ஹோமமந்த்ரா ந ச மங்க³ளாநி
நாத²ர்வணா நாப்யக³தா:³ ஸுஸித்³தா:⁴ ॥ 54॥
ஸர்பஶ்சாக்³நிஶ்ச ஸிம்ஹஶ்ச குலபுத்ரஶ்ச பா⁴ரத ।
நாவஜ்ஞேயா மநுஷ்யேண ஸர்வே தே ஹ்யதிதேஜஸ: ॥ 55॥
அக்³நிஸ்தேஜோ மஹல்லோகே கூ³ட⁴ஸ்திஷ்ட²தி தா³ருஷு ।
ந சோபயுங்க்தே தத்³தா³ரு யாவந்நோ தீ³ப்யதே பரை: ॥ 56॥
ஸ ஏவ க²லு தா³ருப்⁴யோ யதா³ நிர்மத்²ய தீ³ப்யதே ।
ததா³ தச்ச வநம் சாந்யந்நிர்த³ஹத்யாஶு தேஜஸா ॥ 57॥
ஏவமேவ குலே ஜாதா: பாவகோபம தேஜஸ: ।
க்ஷமாவந்தோ நிராகாரா: காஷ்டே²ऽக்³நிரிவ ஶேரதே ॥ 58॥
லதா த⁴ர்மா த்வம் ஸபுத்ர: ஶாலா: பாண்டு³ஸுதா மதா: ।
ந லதா வர்த⁴தே ஜாது மஹாத்³ருமமநாஶ்ரிதா ॥ 59॥
வநம் ராஜம்ஸ்த்வம் ஸபுத்ரோऽம்பி³கேய
ஸிம்ஹாந்வநே பாண்ட³வாம்ஸ்தாத வித்³தி⁴ ।
ஸிம்ஹைர்விஹீநம் ஹி வநம் விநஶ்யேத்
ஸிம்ஹா விநஶ்யேயுர்ரு’தே வநேந ॥ 60॥

விது³ர நீதி–39-
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே ஸப்தத்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 37॥
அத்⁴யாய: 38
விது³ர உவாச ।
ஊர்த்⁴வம் ப்ராணா ஹ்யுத்க்ராமந்தி யூந: ஸ்த²விர ஆயதி ।
ப்ரத்யுத்தா²நாபி⁴வாதா³ப்⁴யாம் புநஸ்தாந்பதிபத்³யதே ॥ 1॥
பீட²ம் த³த்த்வா ஸாத⁴வேऽப்⁴யாக³தாய
ஆநீயாப: பரிநிர்ணிஜ்ய பாதௌ³ ।
ஸுக²ம் ப்ரு’ஷ்ட்வா ப்ரதிவேத்³யாத்ம ஸம்ஸ்த²ம்
ததோ த³த்³யாத³ந்நமவேக்ஷ்ய தீ⁴ர: ॥ 2॥
யஸ்யோத³கம் மது⁴பர்கம் ச கா³ம் ச
ந மந்த்ரவித்ப்ரதிக்³ரு’ஹ்ணாதி கே³ஹே ।
லோபா⁴த்³ப⁴யாத³ர்த²கார்பண்யதோ வா
தஸ்யாநர்த²ம் ஜீவிதமாஹுரார்யா: ॥ 3॥
சிகித்ஸக: ஶக்ய கர்தாவகீர்ணீ
ஸ்தேந: க்ரூரோ மத்³யபோ ப்⁴ரூணஹா ச ।
ஸேநாஜீவீ ஶ்ருதிவிக்ராயகஶ் ச
ப்⁴ரு’ஶம் ப்ரியோऽப்யதிதி²ர்நோத³கார்ஹ: ॥ 4॥
அவிக்ரேயம் லவணம் பக்வமந்நம் த³தி⁴
க்ஷீரம் மது⁴ தைலம் க்⁴ரு’தம் ச ।
திலா மாம்ஸம் மூலப²லாநி ஶாகம்
ரக்தம் வாஸ: ஸர்வக³ந்தா⁴ கு³ட³ஶ் ச ॥ 5॥
அரோஷணோ ய: ஸமலோஷ்ட காஞ்சந:
ப்ரஹீண ஶோகோ க³தஸந்தி⁴ விக்³ரஹ: ।
நிந்தா³ ப்ரஶம்ஸோபரத: ப்ரியாப்ரியே
சரந்நுதா³ஸீநவதே³ஷ பி⁴க்ஷுக: ॥ 6॥
நீவார மூலேங்கு³த³ ஶாகவ்ரு’த்தி:
ஸுஸம்யதாத்மாக்³நிகார்யேஷ்வசோத்³ய: ।

விது³ர நீதி-40-
வநே வஸந்நதிதி²ஷ்வப்ரமத்தோ
து⁴ரந்த⁴ர: புண்யக்ரு’தே³ஷ தாபஸ: ॥ 7॥
அபக்ரு’த்வா பு³த்³தி⁴மதோ தூ³ரஸ்தோ²ऽஸ்மீதி நாஶ்வஸேத் ।
தீ³ர்கௌ⁴ பு³த்³தி⁴மதோ பா³ஹூ யாப்⁴யாம் ஹிம்ஸதி ஹிம்ஸித: ॥ 8॥
ந விஶ்வஸேத³விஶ்வஸ்தே விஶ்வஸ்தே நாதிவிஶ்வஸேத் ।
விஶ்வாஸாத்³ப⁴யமுத்பந்நம் மூலாந்யபி நிக்ரு’ந்ததி ॥ 9॥
அநீர்ஷ்யுர்கு³ப்ததா³ர: ஸ்யாத்ஸம்விபா⁴கீ³ ப்ரியம்வத:³ ।
ஶ்லக்ஷ்ணோ மது⁴ரவாக்ஸ்த்ரீணாம் ந சாஸாம் வஶகோ³ ப⁴வேத் ॥ 10॥
பூஜநீயா மஹாபா⁴கா:³ புண்யாஶ்ச க்³ரு’ஹதீ³ப்தய: ।
ஸ்த்ரிய: ஶ்ரியோ க்³ரு’ஹஸ்யோக்தாஸ்தஸ்மாத்³ரக்ஷ்யா விஶேஷத: ॥ 11॥
பிதுரந்த:புரம் த³த்³யாந்மாதுர்த³த்³யாந்மஹாநஸம் ।
கோ³ஷு சாத்மஸமம் த³த்³யாத்ஸ்வயமேவ க்ரு’ஷிம் வ்ரஜேத் ।
ப்⁴ரு’த்யைர்வணிஜ்யாசாரம் ச புத்ரை: ஸேவேத ப்³ராஹ்மணாந் ॥ 12॥
அத்³ப்⁴யோऽக்³நிர்ப்³ரஹ்மத: க்ஷத்ரமஶ்மநோ லோஹமுத்தி²தம் ।
தேஷாம் ஸர்வத்ரக³ம் தேஜ: ஸ்வாஸு யோநிஷு ஶாம்யதி ॥ 13॥
நித்யம் ஸந்த: குலே ஜாதா: பாவகோபம தேஜஸ: ।
க்ஷமாவந்தோ நிராகாரா: காஷ்டே²ऽக்³நிரிவ ஶேரதே ॥ 14॥
யஸ்ய மந்த்ரம் ந ஜாநந்தி பா³ஹ்யாஶ்சாப்⁴யந்தராஶ் ச யே ।
ஸ ராஜா ஸர்வதஶ்சக்ஷுஶ்சிரமைஶ்வர்யமஶ்நுதே ॥ 15॥
கரிஷ்யந்ந ப்ரபா⁴ஷேத க்ரு’தாந்யேவ ச த³ர்ஶயேத் ।
த⁴ர்மகாமார்த² கார்யாணி ததா² மந்த்ரோ ந பி⁴த்³யதே ॥ 16॥
கி³ரிப்ரு’ஷ்ட²முபாருஹ்ய ப்ராஸாத³ம் வா ரஹோக³த: ।
அரண்யே நி:ஶலாகே வா தத்ர மந்த்ரோ விதீ⁴யதே ॥ 17॥
நாஸுஹ்ரு’த்பரமம் மந்த்ரம் பா⁴ரதார்ஹதி வேதி³தும் ।
அபண்டி³தோ வாபி ஸுஹ்ரு’த்பண்டி³தோ வாப்யநாத்மவாந் ।
அமாத்யே ஹ்யர்த²லிப்ஸா ச மந்த்ரரக்ஷணமேவ ச ॥ 18॥
க்ரு’தாநி ஸர்வகார்யாணி யஸ்ய வா பார்ஷதா³ விது:³ ।
கூ³ட⁴மந்த்ரஸ்ய ந்ரு’பதேஸ்தஸ்ய ஸித்³தி⁴ரஸம்ஶயம் ॥ 19॥

விது³ர நீதி–41-
அப்ரஶஸ்தாநி கர்மாணி யோ மோஹாத³நுதிஷ்ட²தி ।
ஸ தேஷாம் விபரிப்⁴ரம்ஶே ப்⁴ரஶ்யதே ஜீவிதாத³பி ॥ 20॥
கர்மணாம் து ப்ரஶஸ்தாநாமநுஷ்டா²நம் ஸுகா²வஹம் ।
தேஷாமேவாநநுஷ்டா²நம் பஶ்சாத்தாபகரம் மஹத் ॥ 21॥
ஸ்தா²நவ்ரு’த்³த⁴ க்ஷயஜ்ஞஸ்ய ஷாட்³கு³ண்ய விதி³தாத்மந: ।
அநவஜ்ஞாத ஶீலஸ்ய ஸ்வாதீ⁴நா ப்ரு’தி²வீ ந்ரு’ப ॥ 22॥
அமோக⁴க்ரோத⁴ஹர்ஷஸ்ய ஸ்வயம் க்ரு’த்யாந்வவேக்ஷிண: ।
ஆத்மப்ரத்யய கோஶஸ்ய வஸுதே⁴யம் வஸுந்த⁴ரா ॥ 23॥
நாமமாத்ரேண துஷ்யேத ச²த்ரேண ச மஹீபதி: ।
ப்⁴ரு’த்யேப்⁴யோ விஸ்ரு’ஜேத³ர்தா²ந்நைக: ஸர்வஹரோ ப⁴வேத் ॥ 24॥
ப்³ராஹ்மணோ ப்³ராஹ்மணம் வேத³ ப⁴ர்தா வேத³ ஸ்த்ரியம் ததா² ।
அமாத்யம் ந்ரு’பதிர்வேத³ ராஜா ராஜாநமேவ ச ॥ 25॥
ந ஶத்ருரங்கமாபந்நோ மோக்தவ்யோ வத்⁴யதாம் க³த: ।
அஹதாத்³தி⁴ ப⁴யம் தஸ்மாஜ்ஜாயதே நசிராதி³வ ॥ 26॥
தை³வதேஷு ச யத்நேந ராஜஸு ப்³ராஹ்மணேஷு ச ।
நியந்தவ்ய: ஸதா³ க்ரோதோ⁴ வ்ரு’த்³த⁴பா³லாதுரேஷு ச ॥ 27॥
நிரர்த²ம் கலஹம் ப்ராஜ்ஞோ வர்ஜயேந்மூட⁴ ஸேவிதம் ।
கீர்திம் ச லப⁴தே லோகே ந சாநர்தே²ந யுஜ்யதே ॥ 28॥
ப்ரஸாதோ³ நிஷ்ப²லோ யஸ்ய க்ரோத⁴ஶ்சாபி நிரர்த²க: ।
ந தம் ப⁴ர்தாரமிச்ச²ந்தி ஷண்ட⁴ம் பதிமிவ ஸ்த்ரிய: ॥ 29॥
ந பு³த்³தி⁴ர்த⁴நலாபா⁴ய ந ஜாட்³யமஸம்ரு’த்³த⁴யே ।
லோகபர்யாய வ்ரு’த்தாந்தம் ப்ராஜ்ஞோ ஜாநாதி நேதர: ॥ 30॥
வித்³யா ஶீலவயோவ்ரு’த்³தா⁴ந்பு³த்³தி⁴வ்ரு’த்³தா⁴ம்ஶ்ச பா⁴ரத ।
த⁴நாபி⁴ஜந வ்ரு’த்³தா⁴ம்ஶ்ச நித்யம் மூடோ⁴ऽவமந்யதே ॥ 31॥
அநார்ய வ்ரு’த்தமப்ராஜ்ஞமஸூயகமதா⁴ர்மிகம் ।
அநர்தா:²க்ஷிப்ரமாயாந்தி வாக்³து³ஷ்டம் க்ரோத⁴நம் ததா² ॥ 32॥
அவிஸம்வாத³நம் தா³நம் ஸமயஸ்யாவ்யதிக்ரம: ।
ஆவர்தயந்தி பூ⁴தாநி ஸம்யக்ப்ரணிஹிதா ச வாக் ॥ 33॥

விது³ர நீதி–42-
அவிஸம்வாத³கோ த³க்ஷ: க்ரு’தஜ்ஞோ மதிமாந்ரு’ஜு: ।
அபி ஸங்க்ஷீண கோஶோऽபி லப⁴தே பரிவாரணம் ॥ 34॥
த்⁴ரு’தி: ஶமோ த³ம: ஶௌசம் காருண்யம் வாக³நிஷ்டு²ரா ।
மித்ராணாம் சாநபி⁴த்³ரோஹ: ஸதைதா: ஸமித:⁴ ஶ்ரிய: ॥ 35॥
அஸம்விபா⁴கீ³ து³ஷ்டாத்மா க்ரு’தக்⁴நோ நிரபத்ரப: ।
தாத்³ரு’ங்நராத⁴மோ லோகே வர்ஜநீயோ நராதி⁴ப ॥ 36॥
ந ஸ ராத்ரௌ ஸுக²ம் ஶேதே ஸ ஸர்ப இவ வேஶ்மநி ।
ய: கோபயதி நிர்தோ³ஷம் ஸ தோ³ஷோऽப்⁴யந்தரம் ஜநம் ॥ 37॥
யேஷு து³ஷ்டேஷு தோ³ஷ: ஸ்யாத்³யோக³க்ஷேமஸ்ய பா⁴ரத ।
ஸதா³ ப்ரஸாத³நம் தேஷாம் தே³வதாநாமிவாசரேத் ॥ 38॥
யேऽர்தா:² ஸ்த்ரீஷு ஸமாஸக்தா: ப்ரத²மோத்பதிதேஷு ச ।
யே சாநார்ய ஸமாஸக்தா: ஸர்வே தே ஸம்ஶயம் க³தா: ॥ 39॥
யத்ர ஸ்த்ரீ யத்ர கிதவோ யத்ர பா³லோऽநுஶாஸ்தி ச ।
மஜ்ஜந்தி தேऽவஶா தே³ஶா நத்³யாமஶ்மப்லவா இவ ॥ 40॥
ப்ரயோஜநேஷு யே ஸக்தா ந விஶேஷேஷு பா⁴ரத ।
தாநஹம் பண்டி³தாந்மந்யே விஶேஷா ஹி ப்ரஸங்கி³ந: ॥ 41॥
யம் ப்ரஶம்ஸந்தி கிதவா யம் ப்ரஶம்ஸந்தி சாரணா: ।
யம் ப்ரஶம்ஸந்தி ப³ந்த⁴க்யோ ந ஸ ஜீவதி மாநவ: ॥ 42॥
ஹித்வா தாந்பரமேஷ்வாஸாந்பாண்ட³வாநமிதௌஜஸ: ।
ஆஹிதம் பா⁴ரதைஶ்வர்யம் த்வயா து³ர்யோத⁴நே மஹத் ॥ 43॥
தம் த்³ரக்ஷ்யஸி பரிப்⁴ரஷ்டம் தஸ்மாத்த்வம் நசிராதி³வ ।
ஐஶ்வர்யமத³ஸம்மூட⁴ம் ப³லிம் லோகத்ரயாதி³வ ॥ 44॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே அஷ்டத்ரிம்ஶோऽத்⁴யாய: ॥ 38॥
———————————–
விது³ர நீதி–43-
அத்⁴யாய: 39
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
அநீஶ்வரோऽயம் புருஷோ ப⁴வாப⁴வே
ஸூத்ரப்ரோதா தா³ருமயீவ யோஷா ।
தா⁴த்ரா ஹி தி³ஷ்டஸ்ய வஶே கிலாயம்
தஸ்மாத்³வத³ த்வம் ஶ்ரவணே க்⁴ரு’தோऽஹம் ॥ 1॥
விது³ர உவாச ।
அப்ராப்தகாலம் வசநம் ப்³ரு’ஹஸ்பதிரபி ப்³ருவந் ।
லப⁴தே பு³த்³த்⁴யவஜ்ஞாநமவமாநம் ச பா⁴ரத ॥ 2॥
ப்ரியோ ப⁴வதி தா³நேந ப்ரியவாதே³ந சாபர: ।
மந்த்ரம் மூலப³லேநாந்யோ ய: ப்ரிய: ப்ரிய ஏவ ஸ: ॥ 3॥
த்³வேஷ்யோ ந ஸாது⁴ர்ப⁴வதி ந மேதா⁴வீ ந பண்டி³த: ।
ப்ரியே ஶுபா⁴நி கர்மாணி த்³வேஷ்யே பாபாநி பா⁴ரத ॥ 4॥
ந ஸ க்ஷயோ மஹாராஜ ய: க்ஷயோ வ்ரு’த்³தி⁴மாவஹேத் ।
க்ஷய: ஸ த்விஹ மந்தவ்யோ யம் லப்³த்⁴வா ப³ஹு நாஶயேத் ॥ 5॥
ஸம்ரு’த்³தா⁴ கு³ணத: கே சித்³ப⁴வந்தி த⁴நதோऽபரே ।
த⁴நவ்ரு’த்³தா⁴ந்கு³ணைர்ஹீநாந்த்⁴ரு’தராஷ்ட்ர விவர்ஜயேத் ॥ 6॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஸர்வம் த்வமாயதீ யுக்தம் பா⁴ஷஸே ப்ராஜ்ஞஸம்மதம் ।
ந சோத்ஸஹே ஸுதம் த்யக்தும் யதோ த⁴ர்மஸ்ததோ ஜய: ॥ 7॥
விது³ர உவாச ।
ஸ்வபா⁴வகு³ணஸம்பந்நோ ந ஜாது விநயாந்வித: ।
ஸுஸூக்ஷ்மமபி பூ⁴தாநாமுபமர்த³ம் ப்ரயோக்ஷ்யதே ॥ 8॥
பராபவாத³ நிரதா: பரது:³கோ²த³யேஷு ச ।
பரஸ்பரவிரோதே⁴ ச யதந்தே ஸததோதி²தா: ॥ 9॥
ஸ தோ³ஷம் த³ர்ஶநம் யேஷாம் ஸம்வாஸே ஸுமஹத்³ப⁴யம் ।
அர்தா²தா³நே மஹாந்தோ³ஷ: ப்ரதா³நே ச மஹத்³ப⁴யம் ॥ 10॥
யே பாபா இதி விக்²யாதா: ஸம்வாஸே பரிக³ர்ஹிதா: ।

விது³ர நீதி–44-
யுக்தாஶ்சாந்யைர்மஹாதோ³ஷைர்யே நராஸ்தாந்விவர்ஜயேத் ॥ 11॥
நிவர்தமாநே ஸௌஹார்தே³ ப்ரீதிர்நீசே ப்ரணஶ்யதி ।
யா சைவ ப²லநிர்வ்ரு’த்தி: ஸௌஹ்ரு’தே³ சைவ யத்ஸுக²ம் ॥ 12॥
யததே சாபவாதா³ய யத்நமாரப⁴தே க்ஷயே ।
அல்பேऽப்யபக்ரு’தே மோஹாந்ந ஶாந்திமுபக³ச்ச²தி ॥ 13॥
தாத்³ரு’ஶை: ஸங்க³தம் நீசைர்ந்ரு’ஶம்ஸைரக்ரு’தாத்மபி:⁴ ।
நிஶாம்ய நிபுணம் பு³த்³த்⁴யா வித்³வாந்தூ³ராத்³விவர்ஜயேத் ॥ 14॥
யோ ஜ்ஞாதிமநுக்³ரு’ஹ்ணாதி த³ரித்³ரம் தீ³நமாதுரம் ।
ஸபுத்ரபஶுபி⁴ர்வ்ரு’த்³தி⁴ம் யஶஶ்சாவ்யயமஶ்நுதே ॥ 15॥
ஜ்ஞாதயோ வர்த⁴நீயாஸ்தைர்ய இச்ச²ந்த்யாத்மந: ஶுப⁴ம் ।
குலவ்ரு’த்³தி⁴ம் ச ராஜேந்த்³ர தஸ்மாத்ஸாது⁴ ஸமாசர ॥ 16॥
ஶ்ரேயஸா யோக்ஷ்யஸே ராஜந்குர்வாணோ ஜ்ஞாதிஸத்க்ரியாம் ।
விகு³ணா ஹ்யபி ஸம்ரக்ஷ்யா ஜ்ஞாதயோ ப⁴ரதர்ஷப⁴ ॥ 17॥
கிம் புநர்கு³ணவந்தஸ்தே த்வத்ப்ரஸாதா³பி⁴காங்க்ஷிண: ।
ப்ரஸாத³ம் குரு தீ³நாநாம் பாண்ட³வாநாம் விஶாம் பதே ॥ 18॥
தீ³யந்தாம் க்³ராமகா: கே சித்தேஷாம் வ்ரு’த்த்யர்த²மீஶ்வர ।
ஏவம் லோகே யஶ:ப்ராப்தோ ப⁴விஷ்யத்ஸி நராதி⁴ப ॥ 19॥
வ்ரு’த்³தே⁴ந ஹி த்வயா கார்யம் புத்ராணாம் தாத ரக்ஷணம் ।
மயா சாபி ஹிதம் வாச்யம் வித்³தி⁴ மாம் த்வத்³தி⁴தைஷிணம் ॥ 20॥
ஜ்ஞாதிபி⁴ர்விக்³ரஹஸ்தாத ந கர்தவ்யோ ப⁴வார்தி²நா ।
ஸுகா²நி ஸஹ போ⁴ஜ்யாநி ஜ்ஞாதிபி⁴ர்ப⁴ரதர்ஷப⁴ ॥ 21॥
ஸம்போ⁴ஜநம் ஸங்கத²நம் ஸம்ப்ரீதிஶ் ச பரஸ்பரம் ।
ஜ்ஞாதிபி:⁴ ஸஹ கார்யாணி ந விரோத:⁴ கத²ம் சந ॥ 22॥
ஜ்ஞாதயஸ்தாரயந்தீஹ ஜ்ஞாதயோ மஜ்ஜயந்தி ச ।
ஸுவ்ரு’த்தாஸ்தாரயந்தீஹ து³ர்வ்ரு’த்தா மஜ்ஜயந்தி ச ॥ 23॥
ஸுவ்ரு’த்தோ ப⁴வ ராஜேந்த்³ர பாண்ட³வாந்ப்ரதி மாநத³ ।
அத⁴ர்ஷணீய: ஶத்ரூணாம் தைர்வ்ரு’தஸ்த்வம் ப⁴விஷ்யஸி ॥ 24॥

விது³ர நீதி-45-
ஶ்ரீமந்தம் ஜ்ஞாதிமாஸாத்³ய யோ ஜ்ஞாதிரவஸீத³தி ।
தி³க்³த⁴ஹஸ்தம் ம்ரு’க³ இவ ஸ ஏநஸ்தஸ்ய விந்த³தி ॥ 25॥
பஶ்சாத³பி நரஶ்ரேஷ்ட² தவ தாபோ ப⁴விஷ்யதி ।
தாந்வா ஹதாந்ஸுதாந்வாபி ஶ்ருத்வா தத³நுசிந்தய ॥ 26॥
யேந க²ட்வாம் ஸமாரூட:⁴ பரிதப்யேத கர்மணா ।
ஆதா³வேவ ந தத்குர்யாத³த்⁴ருவே ஜீவிதே ஸதி ॥ 27॥
ந கஶ்சிந்நாபநயதே புமாநந்யத்ர பா⁴ர்க³வாத் ।
ஶேஷஸம்ப்ரதிபத்திஸ்து பு³த்³தி⁴மத்ஸ்வேவ திஷ்ட²தி ॥ 28॥
து³ர்யோத⁴நேந யத்³யேதத்பாபம் தேஷு புரா க்ரு’தம் ।
த்வயா தத்குலவ்ரு’த்³தே⁴ந ப்ரத்யாநேயம் நரேஶ்வர ॥ 29॥
தாம்ஸ்த்வம் பதே³ ப்ரதிஷ்டா²ப்ய லோகே விக³தகல்மஷ: ।
ப⁴விஷ்யஸி நரஶ்ரேஷ்ட² பூஜநீயோ மநீஷிணாம் ॥ 30॥
ஸுவ்யாஹ்ரு’தாநி தீ⁴ராணாம் ப²லத: ப்ரவிசிந்த்ய ய: ।
அத்⁴யவஸ்யதி கார்யேஷு சிரம் யஶஸி திஷ்ட²தி ॥ 31॥
அவ்ரு’த்திம் விநயோ ஹந்தி ஹந்த்யநர்த²ம் பராக்ரம: ।
ஹந்தி நித்யம் க்ஷமா க்ரோத⁴மாசாரோ ஹந்த்யலக்ஷணம் ॥ 32॥
பரிச்ச²தே³ந க்ஷத்ரேண வேஶ்மநா பரிசர்யயா ।
பரீக்ஷேத குலம் ராஜந்போ⁴ஜநாச்சா²த³நேந ச ॥ 33॥
யயோஶ்சித்தேந வா சித்தம் நைப்⁴ரு’தம் நைப்⁴ரு’தேந வா ।
ஸமேதி ப்ரஜ்ஞயா ப்ரஜ்ஞா தயோர்மைத்ரீ ந ஜீர்யதே ॥ 34॥
து³ர்பு³த்³தி⁴மக்ரு’தப்ரஜ்ஞம் ச²ந்நம் கூபம் த்ரு’ணைரிவ ।
விவர்ஜயீத மேதா⁴வீ தஸ்மிந்மைத்ரீ ப்ரணஶ்யதி ॥ 35॥
அவலிப்தேஷு மூர்கே²ஷு ரௌத்³ரஸாஹஸிகேஷு ச ।
ததை²வாபேத த⁴ர்மேஷு ந மைத்ரீமாசரேத்³பு³த:⁴ ॥ 36॥
க்ரு’தஜ்ஞம் தா⁴ர்மிகம் ஸத்யமக்ஷுத்³ரம் த்³ரு’ட⁴ப⁴க்திகம் ।
ஜிதேந்த்³ரியம் ஸ்தி²தம் ஸ்தி²த்யாம் மித்ரமத்யாகி³ சேஷ்யதே ॥ 37॥
இந்த்³ரியாணாமநுத்ஸர்கோ³ ம்ரு’த்யுநா ந விஶிஷ்யதே ।
அத்யர்த²ம் புநருத்ஸர்க:³ ஸாத³யேத்³தை³வதாந்யபி ॥ 38॥

விது³ர நீதி–46–
மார்த³வம் ஸர்வபூ⁴தாநாமநஸூயா க்ஷமா த்⁴ரு’தி: ।
ஆயுஷ்யாணி பு³தா:⁴ ப்ராஹுர்மித்ராணாம் சாவிமாநநா ॥ 39॥
அபநீதம் ஸுநீதேந யோऽர்த²ம் ப்ரத்யாநிநீஷதே ।
மதிமாஸ்தா²ய ஸுத்³ரு’டா⁴ம் தத³காபுருஷ வ்ரதம் ॥ 40॥
ஆயத்யாம் ப்ரதிகாரஜ்ஞஸ்ததா³த்வே த்³ரு’ட⁴நிஶ்சய: ।
அதீதே கார்யஶேஷஜ்ஞோ நரோऽர்தை²ர்ந ப்ரஹீயதே ॥ 41॥
கர்மணா மநஸா வாசா யத³பீ⁴க்ஷ்ணம் நிஷேவதே ।
ததே³வாபஹரத்யேநம் தஸ்மாத்கல்யாணமாசரேத் ॥ 42॥
மங்க³ளாலம்ப⁴நம் யோக:³ ஶ்ருதமுத்தா²நமார்ஜவம் ।
பூ⁴திமேதாநி குர்வந்தி ஸதாம் சாபீ⁴க்ஷ்ண த³ர்ஶநம் ॥ 43॥
அநிர்வேத:³ ஶ்ரியோ மூலம் து:³க²நாஶே ஸுக²ஸ்ய ச ।
மஹாந்ப⁴வத்யநிர்விண்ண: ஸுக²ம் சாத்யந்தமஶ்நுதே ॥ 44॥
நாத: ஶ்ரீமத்தரம் கிம் சித³ந்யத்பத்²யதமம் ததா² ।
ப்ரப⁴ விஷ்ணோர்யதா² தாத க்ஷமா ஸர்வத்ர ஸர்வதா³ ॥ 45॥
க்ஷமேத³ஶக்த: ஸர்வஸ்ய ஶக்திமாந்த⁴ர்மகாரணாத் ।
அர்தா²நர்தௌ² ஸமௌ யஸ்ய தஸ்ய நித்யம் க்ஷமா ஹிதா ॥ 46॥
யத்ஸுக²ம் ஸேவமாநோऽபி த⁴ர்மார்தா²ப்⁴யாம் ந ஹீயதே ।
காமம் தது³பஸேவேத ந மூட⁴ வ்ரதமாசரேத் ॥ 47॥
து:³கா²ர்தேஷு ப்ரமத்தேஷு நாஸ்திகேஷ்வலஸேஷு ச ।
ந ஶ்ரீர்வஸத்யதா³ந்தேஷு யே சோத்ஸாஹ விவர்ஜிதா: ॥ 48॥
ஆர்ஜவேந நரம் யுக்தமார்ஜவாத்ஸவ்யபத்ரபம் ।
அஶக்திமந்தம் மந்யந்தோ த⁴ர்ஷயந்தி குபு³த்³த⁴ய: ॥ 49॥
அத்யார்யமதிதா³தாரமதிஶூரமதிவ்ரதம் ।
ப்ரஜ்ஞாபி⁴மாநிநம் சைவ ஶ்ரீர்ப⁴யாந்நோபஸர்பதி ॥ 50॥
அக்³நிஹோத்ரப²லா வேதா:³ ஶீலவ்ரு’த்தப²லம் ஶ்ருதம் ।
ரதிபுத்ர ப²லா தா³ரா த³த்தபு⁴க்த ப²லம் த⁴நம் ॥ 51॥
அத⁴ர்மோபார்ஜிதைரர்தை²ர்ய: கரோத்யௌர்த்⁴வ தே³ஹிகம் ।

விது³ர நீதி–47-
ந ஸ தஸ்ய ப²லம் ப்ரேத்ய பு⁴ங்க்தேऽர்த²ஸ்ய து³ராக³மாத் ॥ 52॥
காநார வநது³ர்கே³ஷு க்ரு’ச்ச்²ராஸ்வாபத்ஸு ஸம்ப்⁴ரமே ।
உத்³யதேஷு ச ஶஸ்த்ரேஷு நாஸ்தி ஶேஷவதாம் ப⁴யம் ॥ 53॥
உத்தா²நம் ஸம்யமோ தா³க்ஷ்யமப்ரமாதோ³ த்⁴ரு’தி: ஸ்ம்ரு’தி: ।
ஸமீக்ஷ்ய ச ஸமாரம்போ⁴ வித்³தி⁴ மூலம் ப⁴வஸ்ய தத் ॥ 54॥
தபோப³லம் தாபஸாநாம் ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிதா³ம் ப³லம் ।
ஹிம்ஸா ப³லமஸாதூ⁴நாம் க்ஷமாகு³ணவதாம் ப³லம் ॥ 55॥
அஷ்டௌ தாந்யவ்ரதக்⁴நாநி ஆபோ மூலம் ப²லம் பய: ।
ஹவிர்ப்³ராஹ்மண காம்யா ச கு³ரோர்வசநமௌஷத⁴ம் ॥ 56॥
ந தத்பரஸ்ய ஸந்த³த்⁴யாத்ப்ரதிகூலம் யதா³த்மந: ।
ஸங்க்³ரஹேணைஷ த⁴ர்ம: ஸ்யாத்காமாத³ந்ய: ப்ரவர்ததே ॥ 57॥
அக்ரோதே⁴ந ஜயேத்க்ரோத⁴மஸாது⁴ம் ஸாது⁴நா ஜயேத் ।
ஜயேத்கத³ர்யம் தா³நேந ஜயேத்ஸத்யேந சாந்ரு’தம் ॥ 58॥
ஸ்த்ரீ தூ⁴ர்தகேऽலஸே பீ⁴ரௌ சண்டே³ புருஷமாநிநி ।
சௌரே க்ரு’தக்⁴நே விஶ்வாஸோ ந கார்யோ ந ச நாஸ்திகே ॥ 59॥
அபி⁴வாத³நஶீலஸ்ய நித்யம் வ்ரு’த்³தோ⁴பஸேவிந: ।
சத்வாரி ஸம்ப்ரவர்த⁴ந்தே கீர்திராயுர்யஶோப³லம் ॥ 60॥
அதிக்லேஶேந யேऽர்தா:² ஸ்யுர்த⁴ர்மஸ்யாதிக்ரமேண ச ।
அரேர்வா ப்ரணிபாதேந மா ஸ்ம தேஷு மந: க்ரு’தா:² ॥ 61॥
அவித்³ய: புருஷ: ஶோச்ய: ஶோச்யம் மிது²நமப்ரஜம் ।
நிராஹாரா: ப்ரஜா: ஶோச்யா: ஶோச்யம் ராஷ்ட்ரமராஜகம் ॥ 62॥
அத்⁴வா ஜரா தே³ஹவதாம் பர்வதாநாம் ஜலம் ஜரா ।
அஸம்போ⁴கோ³ ஜரா ஸ்த்ரீணாம் வாக்ஷல்யம் மநஸோ ஜரா ॥ 63॥
அநாம்நாய மலா வேதா³ ப்³ராஹ்மணஸ்யாவ்ரதம் மலம் ।
கௌதூஹலமலா ஸாத்⁴வீ விப்ரவாஸ மலா: ஸ்த்ரிய: ॥ 64॥
ஸுவர்ணஸ்ய மலம் ரூப்யம் ரூப்யஸ்யாபி மலம் த்ரபு ।
ஜ்ஞேயம் த்ரபு மலம் ஸீஸம் ஸீஸஸ்யாபி மலம் மலம் ॥ 65॥

விது³ர நீதி–48-
ந ஸ்வப்நேந ஜயேந்நித்³ராம் ந காமேந ஸ்த்ரியம் ஜயேத் ।
நேந்த⁴நேந ஜயேத³க்³நிம் ந பாநேந ஸுராம் ஜயேத் ॥ 66॥
யஸ்ய தா³நஜிதம் மித்ரமமித்ரா யுதி⁴ நிர்ஜிதா: ।
அந்நபாநஜிதா தா³ரா: ஸப²லம் தஸ்ய ஜீவிதம் ॥ 67॥
ஸஹஸ்ரிணோऽபி ஜீவந்தி ஜீவந்தி ஶதிநஸ்ததா² ।
த்⁴ரு’தராஷ்ட்ரம் விமுஞ்சேச்சா²ம் ந கத²ம் சிந்ந ஜீவ்யதே ॥ 68॥
யத்ப்ரு’தி²வ்யாம் வ்ரீஹி யவம் ஹிரண்யம் பஶவ: ஸ்த்ரிய: ।
நாலமேகஸ்ய தத்ஸர்வமிதி பஶ்யந்ந முஹ்யதி ॥ 69॥
ராஜந்பூ⁴யோ ப்³ரவீமி த்வாம் புத்ரேஷு ஸமமாசர ।
ஸமதா யதி³ தே ராஜந்ஸ்வேஷு பாண்டு³ஸுதேஷு ச ॥ 70॥
॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே ஏகோநசத்வாரிம்ஶோऽத்⁴யாய: ॥ 39॥

————————–
அத்⁴யாய: 40
விது³ர உவாச ।
யோऽப்⁴யர்தி²த: ஸத்³பி⁴ரஸஜ்ஜமாந:
கரோத்யர்த²ம் ஶக்திமஹாபயித்வா ।
க்ஷிப்ரம் யஶஸ்தம் ஸமுபைதி ஸந்தமலம்
ப்ரஸந்நா ஹி ஸுகா²ய ஸந்த: ॥ 1॥
மஹாந்தமப்யர்த²மத⁴ர்மயுக்தம்
ய: ஸந்த்யஜத்யநுபாக்ருஷ்ட ஏவ ।
ஸுக²ம் ஸ து:³கா²ந்யவமுச்ய ஶேதே
ஜீர்ணாம் த்வசம் ஸர்ப இவாவமுச்ய ॥ 2॥
அந்ரு’தம் ச ஸமுத்கர்ஷே ராஜகா³மி ச பைஶுநம் ।
கு³ரோஶ்சாலீக நிர்ப³ந்த:⁴ ஸமாநி ப்³ரஹ்மஹத்யயா ॥ 3॥
அஸூயைக பத³ம் ம்ரு’த்யுரதிவாத:³ ஶ்ரியோ வத:⁴ ।
அஶுஶ்ரூஷா த்வரா ஶ்லாகா⁴ வித்³யாயா: ஶத்ரவஸ்த்ரய: ॥ 4॥
ஸுகா²ர்தி²ந: குதோ வித்³யா நாஸ்தி வித்³யார்தி²ந: ஸுக²ம் ।விது³ர நீதி–49-
ஸுகா²ர்தீ² வா த்யஜேத்³வித்³யாம் வித்³யார்தீ² வா ஸுக²ம் த்யஜேத் ॥ 5॥
நாக்³நிஸ்த்ரு’ப்யதி காஷ்டா²நாம் நாபகா³நாம் மஹோத³தி:⁴ ।
நாந்தக: ஸர்வபூ⁴தாநாம் ந பும்ஸாம் வாமலோசநா ॥ 6॥
ஆஶா த்⁴ரு’திம் ஹந்தி ஸம்ரு’த்³தி⁴மந்தக:
க்ரோத:⁴ ஶ்ரியம் ஹந்தி யஶ: கத³ர்யதா ।
அபாலநம் ஹந்தி பஶூம்ஶ்ச ராஜந்ந்
ஏக: க்ருத்³தோ⁴ ப்³ராஹ்மணோ ஹந்தி ராஷ்ட்ரம் ॥ 7॥
அஜஶ்ச காம்ஸ்யம் ச ரத²ஶ்ச நித்யம்
மத்⁴வாகர்ஷ: ஶகுநி: ஶ்ரோத்ரியஶ் ச ।
வ்ரு’த்³தோ⁴ ஜ்ஞாதிரவஸந்நோ வயஸ்ய
ஏதாநி தே ஸந்து க்³ரு’ஹே ஸதை³வ ॥ 8॥
அஜோக்ஷா சந்த³நம் வீணா ஆத³ர்ஶோ மது⁴ஸர்பிஷீ ।
விஷமௌது³ம்ப³ரம் ஶங்க:² ஸ்வர்ணம் நாபி⁴ஶ்ச ரோசநா ॥ 9॥
க்³ரு’ஹே ஸ்தா²பயிதவ்யாநி த⁴ந்யாநி மநுரப்³ரவீத் ।
தே³வ ப்³ராஹ்மண பூஜார்த²மதிதீ²நாம் ச பா⁴ரத ॥ 10॥
இத³ம் ச த்வாம் ஸர்வபரம் ப்³ரவீமி
புண்யம் பத³ம் தாத மஹாவிஶிஷ்டம் ।
ந ஜாது காமாந்ந ப⁴யாந்ந லோபா⁴த்³
த⁴ர்மம் த்யஜேஜ்ஜீவிதஸ்யாபி ஹேதோ: ॥ 11॥
நித்யோ த⁴ர்ம: ஸுக²து:³கே² த்வநித்யே
நித்யோ ஜீவோ தா⁴துரஸ்ய த்வநித்ய: ।
த்யக்த்வாநித்யம் ப்ரதிதிஷ்ட²ஸ்வ நித்யே
ஸந்துஷ்ய த்வம் தோஷ பரோ ஹி லாப:⁴ ॥ 12॥
மஹாப³லாந்பஶ்ய மநாநுபா⁴வாந்
ப்ரஶாஸ்ய பூ⁴மிம் த⁴நதா⁴ந்ய பூர்ணாம் ।
ராஜ்யாநி ஹித்வா விபுலாம்ஶ்ச போ⁴கா³ந்
க³தாந்நரேந்த்³ராந்வஶமந்தகஸ்ய ॥ 13॥
ம்ரு’தம் புத்ரம் து:³க²புஷ்டம் மநுஷ்யா
உத்க்ஷிப்ய ராஜந்ஸ்வக்³ரு’ஹாந்நிர்ஹரந்தி ।

விது³ர நீதி–50-
தம் முக்தகேஶா: கருணம் ருத³ந்தஶ்
சிதாமத்⁴யே காஷ்ட²மிவ க்ஷிபந்தி ॥ 14॥
அந்யோ த⁴நம் ப்ரேதக³தஸ்ய பு⁴ங்க்தே
வயாம்ஸி சாக்³நிஶ்ச ஶரீரதா⁴தூந் ।
த்³வாப்⁴யாமயம் ஸஹ க³ச்ச²த்யமுத்ர
புண்யேந பாபேந ச வேஷ்ட்யமாந: ॥ 15॥
உத்ஸ்ரு’ஜ்ய விநிவர்தந்தே ஜ்ஞாதய: ஸுஹ்ரு’த:³ ஸுதா: ।
அக்³நௌ ப்ராஸ்தம் து புருஷம் கர்மாந்வேதி ஸ்வயம் க்ரு’தம் ॥ 16॥
அஸ்மால்லோகாதூ³ர்த்⁴வமமுஷ்ய சாதோ⁴
மஹத்தமஸ்திஷ்ட²தி ஹ்யந்த⁴காரம் ।
தத்³வை மஹாமோஹநமிந்த்³ரியாணாம்
பு³த்⁴யஸ்வ மா த்வாம் ப்ரலபே⁴த ராஜந் ॥ 17॥
இத³ம் வச: ஶக்ஷ்யஸி சேத்³யதா²வந்
நிஶம்ய ஸர்வம் ப்ரதிபத்துமேவம் ।
யஶ: பரம் ப்ராப்ஸ்யஸி ஜீவலோகே
ப⁴யம் ந சாமுத்ர ந சேஹ தேऽஸ்தி ॥ 18॥
ஆத்மா நதீ³ பா⁴ரத புண்யதீர்தா²
ஸத்யோத³கா த்⁴ரு’திகூலா த³மோர்மி: ।
தஸ்யாம் ஸ்நாத: பூயதே புண்யகர்மா
புண்யோ ஹ்யாத்மா நித்யமம்போ⁴ऽம்ப⁴ ஏவ ॥ 19॥
காமக்ரோத⁴க்³ராஹவதீம் பஞ்சேந்த்³ரிய ஜலாம் நதீ³ம் ।
க்ரு’த்வா த்⁴ரு’திமயீம் நாவம் ஜந்ம து³ர்கா³ணி ஸந்தர ॥ 20॥
ப்ரஜ்ஞா வ்ரு’த்³த⁴ம் த⁴ர்மவ்ரு’த்³த⁴ம் ஸ்வப³ந்து⁴ம்
வித்³யா வ்ரு’த்³த⁴ம் வயஸா சாபி வ்ரு’த்³த⁴ம் ।
கார்யாகார்யே பூஜயித்வா ப்ரஸாத்³ய
ய: ஸம்ப்ரு’ச்சே²ந்ந ஸ முஹ்யேத்கதா³ சித் ॥ 21॥
த்⁴ரு’த்யா ஶிஶ்நோத³ரம் ரக்ஷேத்பாணிபாத³ம் ச சக்ஷுஷா ।
சக்ஷு: ஶ்ரோத்ரே ச மநஸா மநோ வாசம் ச கர்மணா ॥ 22॥
நித்யோத³கீ நித்யயஜ்ஞோபவீதீ

விது³ர நீதி–51-
நித்யஸ்வாத்⁴யாயீ பதிதாந்ந வர்ஜீ ।
ரு’தம் ப்³ருவந்கு³ரவே கர்ம குர்வந்
ந ப்³ராஹ்மணஶ்ச்யவதே ப்³ரஹ்மலோகாத் ॥ 23॥
அதீ⁴த்ய வேதா³ந்பரிஸம்ஸ்தீர்ய சாக்³நீந்
இஷ்ட்வா யஜ்ஞை: பாலயித்வா ப்ரஜாஶ் ச ।
கோ³ப்³ராஹ்மணார்தே² ஶஸ்த்ரபூதாந்தராத்மா
ஹத: ஸங்க்³ராமே க்ஷத்ரிய: ஸ்வர்க³மேதி ॥ 24॥
வைஶ்யோऽதீ⁴த்ய ப்³ராஹ்மணாந்க்ஷத்ரியாம்ஶ் ச
த⁴நை: காலே ஸம்விப⁴ஜ்யாஶ்ரிதாம்ஶ் ச ।
த்ரேதா பூதம் தூ⁴மமாக்⁴ராய புண்யம்
ப்ரேத்ய ஸ்வர்கே³ தே³வ ஸுகா²நி பு⁴ங்க்தே ॥ 25॥
ப்³ரஹ்மக்ஷத்ரம் வைஶ்ய வர்ணம் ச ஶூத்³ர:
க்ரமேணைதாந்ந்யாயத: பூஜயாந: ।
துஷ்டேஷ்வேதேஷ்வவ்யதோ² த³க்³த⁴பாபஸ்
த்யக்த்வா தே³ஹம் ஸ்வர்க³ஸுகா²நி பு⁴ங்க்தே ॥ 26॥
சாதுர்வர்ண்யஸ்யைஷ த⁴ர்மஸ்தவோக்தோ
ஹேதும் சாத்ர ப்³ருவதோ மே நிபோ³த⁴ ।
க்ஷாத்ராத்³த⁴ர்மாத்³தீ⁴யதே பாண்டு³புத்ரஸ்
தம் த்வம் ராஜந்ராஜத⁴ர்மே நியுங்க்ஷ்வ ॥ 27॥
த்⁴ரு’தராஷ்ட்ர உவாச ।
ஏவமேதத்³யதா² மாம் த்வமநுஶாஸதி நித்யதா³ ।
மமாபி ச மதி: ஸௌம்ய ப⁴வத்யேவம் யதா²த்த² மாம் ॥ 28॥
ஸா து பு³த்³தி:³ க்ரு’தாப்யேவம் பாண்ட³வாந்ரப்தி மே ஸதா³ ।
து³ர்யோத⁴நம் ஸமாஸாத்³ய புநர்விபரிவர்ததே ॥ 29॥
ந தி³ஷ்டமப்⁴யதிக்ராந்தும் ஶக்யம் மர்த்யேந கேந சித் ।
தி³ஷ்டமேவ க்ரு’தம் மந்யே பௌருஷம் து நிரர்த²கம் ॥ 30॥
॥ இதி ஶ்ரீமாஹாபா⁴ரதே உத்³யோக³பர்வணி ப்ரஜாக³ரபர்வணி
விது³ரவாக்யே சத்வாரிம்ஶோऽத்⁴யாய: ॥ 40॥
இதி விது³ர நீதி ஸமாப்தா ॥

——————————————————

அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம்.

உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.

எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான்.

பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.

உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்

அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.

புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.

ஏகயா த்வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பிந் வசே குரு I

பஞ்ச ஜித்வா விதி த்வா ஷட் சப்த ஹித்வா சுகீ பவ II

ஒன்றால் இரண்டை ஜயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்-

இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது  இவ்விரண்டையும் ஆய்ந்து தீர்மானித்து’

மூன்றை – நண்பர், விரோதி, நட்பும் பகையும் இன்றி நடு நிலையில் இருப்போர் ஆகியோரை

நான்கினால் – சாம், தான, பேத, தண்டத்தால்

ஐந்தை ஜயித்து  – ஐந்து புலன்களை ஜயித்து

ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம்,த்வைதீ பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜ நீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து

ஏழை – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக செலவழித்தல், ஆகிய ஏழு குற்றங்களையும்-அறிந்து சுகமாக இரு.

——–

1ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புசிக்கக் கூடாது.-தனி ஒருவனாக ஒருவன் விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது.

தனி ஒருவனாக வழி போகக் கூடாது.

தூங்குகிறவர்களின் நடுவில் ஒருவனாக விழித்திருக்கக் கூடாது.

சத்தியமானது சமுத்திரத்திற்கு ஓடம் போல சுவர்க்கத்திற்குப் படியாக இருக்கிறது.

பொறுமையானது பெரிய பலம். சக்தியற்றவர்களுக்கு பொறுமையானது குணமாகின்றது. சக்தி படைத்தவர்களுக்கோ அது அலங்காரம்.

தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை.

பொறுமை ஒன்றே உத்தமமான சாந்தி.

வித்தை ஒன்றே மேலான திருப்தி.

அஹிம்சை ஒன்றே சுகத்தைக் கொடுக்கிறது.

———–

2எதிரிகளிடம் விரோதம் காட்டாத அரசன்,

தீர்த்த யாத்திரை போகாத அந்தணன்

இவ்விருவர்களையும் பாம்பானது எலிகளைத் தின்பது போல

பூமியானது தின்று விடுகிறது.

கடுமையாக ஒரு வார்த்தையையும் பேசாமல் இருத்தல்

துஷ்டர்களைக் கொண்டாடாமல் இருத்தல்

இவ்விரண்டையும் செய்பவன் உலகில் நன்கு விளங்குவான்.

பணமில்லாதவனின் ஆசையும்

சக்தியில்லாதவனுடைய கோபமும்

கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.

செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,

எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி

ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.

ச்க்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்

தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்

ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.

நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் த்குதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,

நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.

தானம் செய்யாத தனவானும்

தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்

கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.

————–

3பிறர் பொருளைக் கவர்தல்

பிறர் மனைவியை நேசித்தல்

நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்

ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.

நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.

அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.

இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.

——–

3அடுத்தவன்

அடுக்கிறவன்

நான் உன்னைச் சேர்ந்தவனாகிறேன் என்று கூறிச் சரணமடைகிறவன்

ஆகிய இம்மூவரையும் தனக்குக் கஷ்டம் நேரிட்ட காலத்திலும் கூடக் கைவிடக் கூடாது.

=======

4வரம் பெறுதல்

அரசனாதல் *

மகனைப் பெறுதல்

கஷ்டப்பட்டு எதிரியிடமிருந்து  விடுபடுதல்

இந்த நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை.

(* அரசன் என்பதற்கு இந்தக் காலத்தில் முக்கிய் உயரிய பதவி என்று எடுத்துக் கொள்ளலாம்.)

அரசன் விலக்க வேண்டிய கர்ரியங்கள் நான்கு.

புல்லறிவினர்

விரைந்து  செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதமாகச் செய்கிறவன்

சோம்பேறிகள்

முகஸ்துதி செய்பவர்கள்

இவர்களுடன் ஆலோசனை நடத்தக் கூடாது. இதைப் பண்டிதனானவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

செல்வத்துடன் கூடிய ஒரு இல்லறத்தான் கீழ்க்கண்ட நான்கு நபர்களுக்கும் பூரண வசதி அளித்து தன் வீட்டில் தங்கச் செய்ய வேண்டும்.

வயதான ஞாதி (அவன் நமக்குக் குல தர்மங்களை உபதேசிப்பான்)

தற்காலம் கஷ்ட தசையில் இருக்கும் நல்ல குலத்தில் பிறந்த ஒருவன் ( அவன் வீட்டிலுள்ள சிறுவர் சிறுமியர்க்குக் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுப்பான்)

ஏழையான ஒரு நண்பன் (அவன் நமது நன்மைகளை எடுத்துச் சொல்வான்)

குழந்தையில்லாத ஒரு சகோதரி (அவல் நமது சொத்தை நன்கு பாதுகாப்பாள்)

உடனே பலிக்கின்ற நான்கு எவை என்று இந்திரன் கேட்க பிரஹஸ்பது (குரு பகவான்)) கீழ்க்கண்ட நான்கை எடுத்துரைத்தார்.

தேவதைகளுடைய சங்கல்பம்

புத்திமான்களுடைய மகிமை

அறிஞர்களுடைய வினயம்

நாச கர்மம் ( நாசம் விளைவிக்கும் திருட்டு, வெடிகுண்டு வைத்தல், தீவிரவாதிகளின் இதர குற்றச் செயல்கள் என்று கொள்ளலாம்)

ஆகியவை உடனே பலன் அளிக்கும்.

அக்னிஹோத்ரம்

மௌனம்

அத்தியயனம்

யாகம்

ஆகிய் இந்த நான்கும் முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டால் மோக்ஷம் வரை உள்ள பயனை அளிக்கும்.

இவற்றை கௌரவத்திற்காக முறை தவறி ஆடம்பரமாகச் செய்தால் தீங்கையே விளைவிக்கும்.

——–

5எப்போதும் போற்ற வேண்டியவர்கள் ஐவர்

தாய்

தந்தை

அக்னி

ஆத்மா

குரு

இந்த ஐவகையினரையும் பூஜிக்கின்றவன் மிகுந்த புகழை அடைவான்

தேவர்கள்

பித்ருக்கள் (முன்னோர்)

பெரியோர்

சந்யாசிகள்

அதிதி (விருந்தினர்)

ஆகிய் இந்த ஐவரையும் கொண்டாட வேண்டும்

நண்பர்கள்

விரோதிகள்

நடு நிலைமையில் உள்ளவர்கள்

உன்னால் போற்றப்பட வேண்டிய குரு

உன்னை அண்டுகின்றவர்கள்

ஆகிய் இந்த ஐவரும் நீ போகும் இடமெல்லாம் கூடவே தொடர்ந்து வருவர்.

கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (மெய்)  என்ற ஐந்து இந்திரியங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு புலனையும் சரியாகப் பாதுகாக்காமல் இருந்தாலும் அதன் வழியே அவனது புத்தி ஓட்டைப் பாத்திரத்தின் வழியே ஒழுகும் ஜலம் போல அழிந்து விடும்.

ஆதலால் ஒருவனது புத்தி சரியான நிலையில் இருக்க எல்லாப் புலன்களையும் சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

—————–

விதுரநீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்
எந்த ஒரு விசயத்தையும் புதியதாக தெரிந்து கொள்ள முயலும் போது , அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறிய அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களை உடையவை. பழி பாவங்களிலிருந்து தப்பித்து, தர்மத்தின்படி வாழ்வை நடத்த வேண்டும் என நினைக்கும் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நீதிக் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறது விதுர நீதி.
சம்சார பந்தம்
ஒருவன், ஒரு பெருங் காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழைய முடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்து போய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவ லட்சணமான – யாவரும் வெறுக்கக் கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக் கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும் போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். அதான் திருமணம் எனும் சம்சார பந்தம்.அது எப்படி இருக்கிறது பார்க்கலாமா?
குடும்ப வாழ்க்கை
கிணற்றுக்குள் விழுந்தவன் நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! இனி சந்தோசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு( உற்றார் உறவினர்கள் நாக்கு) தலையைத் தூக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக் கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.(எதிர்காலம்)
கர்ம வினை
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… அவன் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக் கொண்டிருந்தன.(பொருளாதார குழப்பம்). இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்… உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்… அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
விதுர நீதி கற்பிக்கும் வாழ்க்கை
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது.
கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள், நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு – வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்து விடுகிறான் மனிதன். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பி விட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம். கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.
மூடத்தனம்
சாத்திரத்தை அறியாமல் வீணானவனும், வறுமையிலும் கர்வத்துடன் இருப்பவனும், தன் நோக்கங்களை அடைய முறையற்ற வழிகளை நாடுபவனும் மூடனாவான்.
தன் சொந்த நோக்கங்களை விட்டு விட்டு, பிறரின் நோக்கங்களில் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்பவனும், நண்பர்கள் காரியங்களில் ஏமாற்று தனத்தைக் கடைப்பிடிப்பவனும் மூடன் என்று அழைக்கப்படுகிறான்.
விரும்பத்தகாத பொருட்களை விரும்புபவனும், நியாயமாக விரும்பத்தக்க பொருட்களை விரும்பாது கைவிடுபவனும் , சக்திவாய்ந்தவர்களிடம் பகை கொள்பவனும், மூட ஆன்மா கொண்டவனாகக் கருதப்படுகிறான்.
தன் எதிரியைத் தனது நண்பனாகக் கருதுபவனும், நண்பனிடம் பகை கொள்பவனும், தீய செயல்கள் செய்பவனும், மூட ஆன்மாக கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
தனது திட்டங்களை வெளிப்படுத்திக் கொள்பவனும், எல்லாவற்றிலும் சந்தேகம் கொள்பவனும், குறுகிய காலமே செய்ய வேண்டியவற்றில் நீண்ட நேரத்தைச் செலவழிப்பவனும் மூடனாவான்.
பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யாதவனும், தெய்வங்களை வழிபடாதவனும், உன்னத மனம் கொண்ட நண்பர்களைப் பெறாதவனும், மூட ஆன்மா கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
அழையாத இடத்தில் நுழைபவனும், கேட்கப்படாத போதே அதிகம் பேசுபவனும், நம்பத்தகாத மனிதர்களை நம்புபவனும், மனிதர்களில் இழிந்தவனான மூடனாவான்.
தானே குற்றவாளியாக இருந்து கொண்டு, மற்றவர்கள் மீது பழிபோடுபவனும், தான் சக்தியற்றவனாக இருந்த போதும் கோபத்தை வெளிப்படுத்துபவனும், மனிதர்களிலேயே மிகப்பெரும் முட்டாளாவான்.
தனது சொந்த சக்தியை அறியாமல், அறம் பொருளில் , தர்ம நியமங்களில் இருந்து விலகிச்சென்று, அடைவதற்கு அரிதான பொருளை விரும்பியும் போதுமான வழிவகைகளைக் கைக்கொள்ளாமல் இருப்பவன், அறிவற்றவனாகச் சொல்லப்படுகிறான்.
தன் பலத்தை அறியாமல், அறம், பொருள் இல்லாத அடைய முடியாத பொருளை முயற்சியில்லாமலேயே விரும்புபவன் மூடனாவான்.
தண்டனைக்குத் தகாதவனைத் தண்டிப்பவனும், மனிதர்கள் அறியாமலேயே அவர்களுக்கு அஞ்சலி செலுத்துபவனும், கஞ்சனுக்குச் சேவை செய்பவனும், சிறு புத்தி கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.
ஆனால், மகத்தான செல்வத்தையும், செழிப்பையும் அடைந்திருந்தாலும் அல்லது பூரண கல்வியை அடைந்திருந்தாலும், ஒருவன் செருக்கடையாதிருந்தால், அவன் ஞானி என்று எண்ணப்படுகிறான். அதேபோல ஒருவன் செல்வச்செழிப்பு கொண்டிருந்தாலும், தானே உண்டு, அற்புத ஆடைகளை தானே உடுத்திக் கொண்டு, தன்னை நம்பியிருப்பவர்கள் மத்தியில் தனது செல்வத்தை பகிர்ந்தளிக்காதவனை விட இதயமற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?
ஒருவன் பாவங்களைச் செய்யும்போது, அதன் விளைவுகளின் பயனை அறுவடை செய்பவர்கள் பலராக இருப்பினும், இறுதியில் அந்தக் கனியை அனுபவித்தவர்கள் தீங்கில்லாமல் தப்பித்தாலும், அந்தப் பாவங்கள் அவற்றை செய்தவனை மட்டுமே பாவம் சேரும்.
ஒரு வில்லாளி கணையை அடிக்கும் போது, அவன் ஒரு மனிதனையாவது கொல்வதில் வெல்லவோ வெல்லோமலோ போகலாம், ஆனால், அதில், ஒரு தனிப்பட்ட புத்திசாலி, தனது புத்தியை சுய நலத்தின் நோக்கத்துடன் செலுத்தும்போது, மன்னனோடு கூடிய மொத்த நாட்டையும் அவன் அழித்துவிட நேரும்.
செய்ய கூடாத செயல்கள்
நஞ்சு ஒருவனேயே கொல்லும், ஆயுதமும் ஒருவனையே கொல்லும், ஆனால் தீய ஆலோசனைகள் மன்னனையும், குடிமக்களையும், மொத்த நாட்டையுமே அழித்துவிடும்.
ஒருவன் சுவைமிக்க உணவு எதையும் தனியாக உண்ணக்கூடாது, பொருள் ஆதாயம் சம்பந்தமான காரியங்களில் தனியாக ஆலோசிக்கக்கூடாது, தனியாக பயணத்தை மேற்கொள்ளக் கூடாது, உறங்கும் தோழர்களுக்கு மத்தியில் தனியாக விழித்திருக்ககூடாது. ஓ! மன்னா, உம்மால் புரிந்து கொள்ள முடியாத, இரண்டற்ற ஒன்று உண்மையே {சத்தியமே}. கடலில் படகைப் போன்று அதுவே {உண்மை}, சொர்க்கத்திற்கு வழியாக இருக்கிறது.
மன்னிக்கும் இயல்பும் மகிழ்ச்சியும்
மன்னிக்கும் இயல்புடைய மனிதர்களுக்கு ஒரே குறை மட்டுமே உள்ளது, மன்னிக்கும் இயல்புடைய மனிதனை, மக்கள் பலமற்றவன் என்று நினைக்கிறார்கள். அதுவே அந்தக் குறை. எனினும், அந்தக் குறையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மன்னிக்கும் இயல்பே பெரும் சக்தியாகும். மன்னிக்கும் இயல்பு {பொறுமை}, பலமற்றவர்களுக்கு அறமும், பலவான்களுக்கு ஆபரணமும் ஆகும்.
சக்தியற்றவர்களுக்கு பொறுமை குணமாகிறது. சக்தியுள்ளவர்களுக்கு அதுவே அலங்காரமாகும்.
மன்னிக்கும் இயல்பே இவ்வுலகில் அனைத்தையும் வெல்லும்; மன்னிக்கும் இயல்பால் பொறுமையால் அடைய முடியாது என்ன தான் இருக்கிறது?
எவனுடைய கையில் மன்னிப்பு எனும் ஆயுதம் இருக்கிறதோ, அந்த மனிதனைத் தீய மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? காய்ந்த புற்களற்ற நிலத்தில் விழும் நெருப்பு தானே அணைந்துவிடுகிறது.
மன்னிக்க தெரியாத மனிதன் பெருங்கொடுமை செய்து தன்னைத் தானே கறைப்படுத்திக் கொள்கிறான்.
நீதியே ஒரே உயர்ந்த நன்மை; மன்னிக்கும் இயல்பே {பொறுமையே} ஒரே உச்சபட்ச அமைதி; அறிவே ஒரே உச்சபட்ச மனநிறைவு; மனிதாபிமானமே என்றும் மனதிற்கு மாறாத மகிழ்ச்சியுமாகும்.
அறம் அறியாதவர்கள்
1.போதையில் இருப்பவன்,
2.கவனம் குறைந்தவன்,
3.உளறுபவன்,
4.களைப்பாக இருப்பவன்,
5.கோபம் கொண்டவன்,
6.பசியோடு இருப்பவன்,
7.அவசரப்படுபவன்,
8.பேராசை கொண்டவன்,
9.பயம் கொண்டவன்,
10.காமம் கொண்டவன்
ஆகிய பத்து பேரும் அறம் எது , தர்மம் எது என்பதை அறிய மாட்டார்கள்..
நல்ல மன்னனுக்கு உரிய குணங்கள்
காமத்தையும், கோபத்தையும் துறந்து, தகுந்தவனுக்குச் செல்வத்தை அளித்து, பாகுபாட்டை அறிந்து, கல்வி கற்று, சுறுசுறுப்பாக இருக்கும் மன்னனே அனைத்து மனிதர்களையும் நிர்வாகம் செய்யும் அதிகாரியாகக் கருதப்படுகிறான். பிறரை நம்பிக்கை கொள்ளச் செய்பவனும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பவனும், தண்டனையின் சரியான அளவை அறிந்தவனும், கருணை எப்போது காட்டப்பட வேண்டும் என்பதையும் அறிந்த நிர்வாகியே நல்ல மன்னனாக கருதபடுகிறான் .
பலமற்ற எதிரியைக் கூட அலட்சியம் செய்யாதவனும், எதிரியைப் பொறுத்த மட்டில் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனும்; தன்னைவிட பலமான மனிதர்களிடம் பகைமையை விரும்பாதவனும்; சரியான நேரத்தில் ஆற்றலை வெளிப்படுத்தம் மன்னனும் சிறந்த வீரனாவான் .ஏற்கனவே வந்துவிட்ட துயரத்துக்காக வருந்தாதவனும், தனது அனைத்துப் புலனங்களையும் குவியச் செய்து முயற்சிப்பவனும், துயரமான காலத்தைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்பவனுமாகிய மன்னனே நிச்சயமாக மனிதர்களில் முதன்மையானவன் ஆவன். அவனது எதிரிகள் அனைவரும் அவனால் என்றாவது ஒரு நாள் வீழ்த்தப்படுவார்கள் என்பது நிச்சயம்.
நல்ல மனிதனுக்குரிய குணங்கள்
பயனில்லாத நம்பிக்கையுடன் வாழ்வைக் கழிக்காதவனும், பாவிகளுடன் நட்பு கொள்ளாதவனும், அடுத்தவன் மனைவியை மனதாலும் எண்ணாதவனும், ஆணவத்தைக் காட்டாதவனும், திருடாதவனும், நன்றி மறக்காதவனும், குடியில் ஈடுபடாதவனும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆணவத்தால் மனித மனதின் மூன்று நோக்கங்களை அடைய முயலாதவனும் கேட்கப்படும் போது தடுமாறமால் தைரியமாக உண்மையைச் சொல்பவனும், நண்பர்களுக்காகக் கூட சச்சரவு செய்யாதவனும், அலட்சியப்படுத்தப் பட்டாலும் கோபம் கொள்ளாதவனும் நல்ல மனிதன் என்று கருதப்ப்படுகிறான்.
பிறருக்கு இழைக்கப்படும் தீங்கைப் பொறுக்காதவனும், அனைவரிடமும் அன்பாக இருபவனும், பலமற்றவனாக இருப்பின் பிறருடன் பூசல் கொள்ளாதவனும், ஆணவமாகப் பேசாதவனும், சச்சரவை மறப்பவனும், எங்கும் புகழப்படும் நல்ல மனிதனாகிறான் .
கர்வம் கொண்ட முகத்தை எப்போதும் கொள்ளாதவனும், பிறரைக் கண்டித்து, தன்னைப் புகழாதவனும், தான் பெற வேண்டியவற்றுக்காக பிறரிடம் எப்போதும் கடுஞ்சொல் பேசாதவனும் அனைவராலும் எப்போதும் விரும்பப்படுவான். பழைய பகைமை வளர்க்காதவனும், ஆணவத்துடனோ, மிகுந்த பணிவுடனோ நடந்து கொள்ளாதவனும், துயரத்தில் இருக்கும்போதும் முறையற்ற செயலைச் செய்யாதவனும், நன்னடத்தையுள்ளவன் என்று மரியாதைக்குரிய சான்றோர்களால் கருதப்படுகிறான்.
தனது மகிழ்ச்சியில் மிகவும் மகிழாதவனும், அடுத்தவர் துயரைக்கண்டு மகிழாதவனும், கொடையளித்துவிட்டு அதற்காக வருந்தாதவனும், நல்ல இயல்பும் நடத்தையும் கொண்ட மனிதன் எனச் சொல்லப்படுகிறான். பல்வேறு நாடுகளின் சடங்குகளில் ஞானத்தை அடைய விரும்புபவனும், பல்வேறு நாடுகளின் மொழிகளை அறிய விரும்புபவனும், பல்வேறு வகைகளிலான மனிதர்களின் பயன்பாடுகளை அறிய விரும்புபவனும், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன், அவன் எங்கே சென்றாலும், மகிழ்ச்சியாக இருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியடைவது நிச்சயம்.
ஆணவம் , மடமை, ,மரியாதையற்ற செயல்பாடு , துடுக்குத்தனம், பாவச்செயல்கள், மன்னனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, நடத்தையில் கோணல், பலருடன் பகைமை, குடிகாரர்கள், பைத்தியக்காரர்கள், தீயவர்கள் ஆகியோருடன் சச்சரவு ஆகியவற்றை விட்டுவிடும் புத்திசாலி மனிதன் தன் இனத்தில் முதன்மையானவன் ஆவான். தன்னடக்கம், தூய்மை, நல்ல சடங்குகள், தேவர்களை வழிபடுதல், பரிகார விழாக்கள் மற்றும் உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படும் பிற சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆகியவற்றைத் தினமும் கடைபிடிக்கும் , பயிலும் , மற்றோருக்கு கற்று தரும் மனிதனுக்கு தேவர்களே நேரில் காட்சியளித்து வேண்டுவன அளிக்கின்றனர்.
யாரிடமிருந்து துயரம் விலகி நிற்கும்
தாழ்ந்தவர்களோடு அல்லாமல் சம நிலை உள்ள மனிதர்களிடம் நல்ல உறவு கொள்பவனும், தன் முன் மேம்பட்ட தகுதியுடையவர்களை தகுந்த இடத்தில் அமர்த்துபவனும், சம நிலை மனிதர்களுடன் பேச்சும், நடத்தையும், நட்பும் பழக்கமும் கொள்பவனுமான கற்றறிந்த மனிதனை துயரங்கள் அணுகுவதில்லை
தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்து விட்டு மிதமாக உண்பவனும், அளவற்ற வேலைகளைச் செய்துவிட்டு மிதமாக உறங்குபவனும், யாசிக்கப்பட்டால் எதிரிகளுக்கும் தானம் அளிப்பவனும், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். அவனிடம் இருந்து துயரங்கள் விலகி நிற்கின்றன.
யாருடைய ஆலோசனைகள் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படுகிறதோ , நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, எவனுடைய செயல்களின் விளைவுகள் பிற மனிதர்களைக் காயப்படுத்துவதில்லையோ, அவன், தனது சிறு நோக்கங்களை அடைவதில் கூட வெற்றியாளனாகவே இருப்பான். அனைத்து உயிர்களுக்கு தீங்கிழையாமல் இருப்பதை நோக்கமாகக் கொண்டவனும், உண்மையுள்ளவனும், மென்மையானவனும், ஈகை குணம் கொண்டவனும், தூய மனம் கொண்டவனும், அற்புதமான சுரங்கத்தைத் தோற்றுவாயாகக் கொண்ட விலைமதிப்பற்ற ரத்தினத்தின் தூய கதிர் போல, தன் உறவினர்களுக்கு மத்தியில் பெரும் ஒளியுடன் ஒளிர்வான். அவனை எப்போதும் துன்பங்கள் அணுகுவதில்லை .
தன்னைத்தவிர வேறு யாருக்கும் தனது குற்றங்கள் அறியப்படாமல் இருந்தாலும், அக்குற்றங்களுக்காக வெட்கப்படுபவன், அனைத்து மனிதர்களுக்கும் மத்தியில் உயர்வாக மதிக்கப்படுகிறான். தூய இதயத்துடனும், அளவிலா சக்தியுடனும், சித்தத்தில் நிலை பெற்றும் இருப்பவன் தனது சக்தியின் விளைவாக சூரியனைப் போலவே ஒளிர்கிறான். அவனை எப்போதும் துன்பங்கள் அணுகுவதில்லை.
—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ விதுர மஹாத்மா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சீதாப்பிராட்டியுடைய சரம ஸ்லோகம்=

October 23, 2023

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே –ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே –ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இறே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இறே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வாநர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –

ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இறே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –

ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இறே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் –நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –


யுத்த  காண்டம்

ஸர்க்கம்-116; ஶ்லோகம்-44

பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாநாம் ப்லவங்க3|

கார்யம் கருணமார்யேண   கஶ்சிந் நாபராத்4யதி ||

பொழிப்புரை: வானரனே! பாபிகள் விஷயத்திலும், புண்ணியவான்கள் விஷயத்திலும்,கொல்லத்தக்கவர் விஷயத்திலும் நல்லோனாலே கருணையானது செய்யத்தக்கது. எவனும் குற்றம் செய்யவில்லை என்பது இல்லையே.

இராவணன் அழிந்து, இராமபிரான் போரில் ஜயித்தார் என்னும் இனிய செய்தியை ஸீதா பிராட்டியிடம் அநுமன் விண்ணப்பம் செய்ய, பிராட்டியும் உகப்பின் மிகுதியாலே, விம்மல், பொருமல்கள் ஏற்பட்டு செயலற்றவளாயிருக்க, ‘தேவி! என்ன நினைக்கிறீர்? தேவரீர் எதனால் என்னோடு பேசவில்லை?’ [கிந்நு சிந்தயஸே தே3வி, கிம் த்வம் மாம் நாபி4பா4ஷஸே; யுத்.கா. 116-16 ] என்று வினவினான். தேவியும் பதிலிறுத்தாள் ‘நீ செய்த பேருபகாரத்துக்குத் தக்கபடி தரக்கூடியதொன்றில்லையே என்று நினைத்தே பேசாமலிருந்தேன்’ என்று கூற அநுமனும், ‘தேவரீரைச் சூழ்ந்திருந்து துன்புறுத்திய இந்த அரக்கிகள் ராவணனைக் காட்டிலும் கொடியவர்கள், ராவணனுக்கு முன்னமேயே இவர்களைக் கொன்றிருக்க வேண்டும். ராவணன் இப்பொழுது உயிருடன் இல்லை என்பதனால் அடங்கி இருக்கிறார்கள். இவர்களை என் கையால் துன்புறுத்திக் கொல்வதற்கு தேவரீர் அநுமதி தரவேண்டும்   பகவானிடம் அபசாரம் செய்தவர்களையும், பாகவதாபசாரம் செய்தவர்களையும் தண்டிக்கும் ரீதியிலே தண்டிக்க முயற்சிக்கிறேன். முன்பு வந்தபோது அவகாஶமின்மையாலே விட்டுப்போனேன். இபோது இந்த வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார். இதைக் கேட்ட பிராட்டி பதிலிறுக்கும் வண்ணம் இந்த ஶ்லோகத்தை அருளிச் செய்கிறார்.

பாபிகளானும், பரிஶுத்தர்களானாலும் (பாபாநாம் வா ஶுபா4நாம் வா) நீ நினைக்கிறபடி பாபமே செய்தவர்களாக இருப்பினும் சரி, நான் நினைத்தபடி பரிஶுத்தர்களாக இருப்பினும் சரி, எப்படியிருந்தாலும் கருணை காட்டவேண்டியதே. பரிஶுத்தர்களாகில் கருணை காட்டவேண்டும் என்பதை நீயே அறிவாய். பாபிகள் பக்ஷத்திலும் கருணையே காட்டப்படவேண்டும் என்பதை நான் இப்போது நிரூபித்துக் காட்டுகிறேன். ‘கருணை காட்டுவதற்கு மஹாபாபிகள் கிடைக்கமாட்டார்களா?’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நல்லோர்கள். ‘குற்றமுளதாகில் மிகவும் நன்று’ [ தோ3ஷோ யத்3யபி தஸ்ய ஸ்யாத்; யுத்.கா.18-3] என்ற இராமபிரானைப் போலே, அழுக்குடையவனைத்தானே குளிப்பாட்ட வேண்டும்.  அதுபோலவே பாபமாகிற அழுக்குடையவர்கள் அகப்பட்டால், கருணையான குளிர்நீராலே அவர்களைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும். ஆகையால் ராக்ஷஸிகள் பாபம் செய்திருப்பதால்தான் அவர்களுக்குக் கருணை முகம் காட்டவேண்டும். பாபமற்றவராகில் அவர்கள் தாமாகவே கடைத்தேறிவிடுவார்கள். தங்களைக் கடைத்தேற்றிக் கொள்ளத் தம் கையில் ஒன்றும் இல்லாதவர்களையன்றோ நல்லோர்கள்  கைதூக்கி விடவேண்டும். இதைக்கேட்ட அநுமன், ‘அப்படியென்றால் தர்ம ஶாஸ்திரங்களைத் தூக்கி எறிய வேண்டுமோ?’ என வினவ, அதற்கு பிராட்டி சொன்னாள், ‘கொல்லத்தக்கவரானாலும் (வதா4ர்ஹாணாம்) நீ சொன்னது ஸாமாந்ய ஶாஸ்திரம்’. ஆகையால், கொல்லத்தக்கவனாயினும் ஶரணமடைந்தவனைக் கைவிடுவதில்லை’ [தஸ்மாத3பி வத்3யம் ப்ரபந்நம் ப்ரதிப்ரயச்சந்தி; யஜு.ஸம்.6-5-20] என்கிற விஶேஷ ஶாஸ்திரத்தைக் கிழித்துப் போடவேண்டுமே’. ஸாமாந்ய ஶாஸ்திரத்துக்கும், விஶேஷ ஶாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால், ஸாமாந்ய ஶாஸ்திரத்தைத் தள்ளி விஶேஷ ஶாஸ்திரத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்கிறாள் பிராட்டி. இதைக் கேட்டும் அநுமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமையாலே, பிராட்டி, ‘ஹரி, ஹரி’ என்கிறாள். பிடித்த பிடியை விடாத உன் குரங்கு புத்தியைத்தான் உன் செயலில் காண்கிறேன். வஸிஷ்டர், வாமதேவர் முதலானோர் மந்த்ராலோசனை வழங்கக்கூடிய இக்ஷ்வாகு வம்ஶத்தில் பிறந்தவன் அல்லையே நீ. கர்மயோகியான ஜனகரின் வம்ஶமுமன்று. காட்டில் கிளைக்குக்கிளை தாவித்திரியும் ஜாதியிலன்றோ நீ பிறந்தது! அப்பேர்பட்ட உனக்கு ஶரணாகதியின் பெருமை எப்படித் தெரியும்? பேருபகாரம் செய்த அநுமனை இப்படிப் பிராட்டி நிந்திக்கலாமோவெனில், அன்று அவன் செய்த பேருபகாரத்துக்குத் தோற்று ‘வானரோத்தம’ என்றவள், இன்று அவன் அடாத செயல் புரிவதில் பிடிவாதமாய் இருப்பதைக் காண்கையாலே, அவனைத் திருத்துமுகமாக ‘குரங்கே’ என்று நிந்திக்கிறாள் என்று கொண்டால் குற்றமில்லை. ராஜாவாய், இஷ்டப்படி நடக்கத்தக்க ஸ்வாதந்த்ரியமுடைய இராமபிரானும் எங்கள்முன் இத்தனை கோபமாகப் பேசியறியார். நீ கேவலம் ஒரு குரங்காயிருந்து என்முன்னம் இத்தனை கோபமாய்ப் பேசலாமோ?

நல்லோனால் கருணை காட்டப்படவேண்டும் (கார்யம் கருணமார்யேண). இவர்களுடைய புண்ணிய பாபத்தைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது எதற்கு? அது நிற்க. இப்போது இவர்களுடைய வருந்தத்தக்க நிலையைப் பார். உன்னைப்போல் ஒருவன் இவர்களைத் துன்புறுத்தினால், ரக்ஷிப்பதற்கு இங்கு ஒருவருமில்லை. இப்படிப்பட்ட ஸமயத்தில் இவர்களுக்காகவன்றோ நாம் இரங்க வேண்டும். நல்லோனன உனக்கு நான் இப்போது இவையெல்லாம் சொல்லித்தரவேண்டியுள்ளதே! நீ ஐந்திர வியாகரணம் கற்றிலையோ? இப்படி எல்லா ஶாஸ்திரமும் கற்றிருந்தும், ராம கோஷ்டியில் பழகின பின்னர் இத்தன்மையுடையனானாய் போலும்! நான் பிரிந்த பின்னர் பெருமாளுடைய கோஷ்டி நீர் விடப்பட்ட  பால்போலே தரம் குறைந்து போயிற்று போலும்!

குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே ( கஶ்சிந் நாபராத்4யதி) இந்த உலக வாழ்க்கையில் குற்றமில்லாதவர் யார்? அலைபோனபின்பு கடலில் குளிக்கலாம் என்று சொல்லமுடியுமோ? அதுபோலவே, குற்றமில்லாதாரைப் பார்த்து கருணை காட்டுவேன் என்று சொன்னால், கருணை காட்டுவதற்கு ஒருவருமே அகப்படமாட்டார்களன்றோ? குதிரைகளில் சிறந்த குதிரை ‘நற்குதிரை’ என்பதுபோலே, ‘நன்மனிதர்’ என்று மனிதரில் சிறந்தவராகத் வேஷமிட்டுக் கொண்டிருக்கும் இராமபிரான் மட்டும் குற்றம் செய்யாதவரா? நான்தான் குற்றம் செய்யாதவளா? நீதான் குற்றம் செய்யாதவனோ?

ராமபிரான் என்ன குற்றம் செய்தார்-எனில், அவர் காடு சென்றார். மடலூருவாரைபோலே இலக்ஷ்மணனும் இவர் சென்றவிடமெல்லாம் சென்றார். இராமபிரானோடு காட்டில் இஷ்டப்படியெல்லாம் திரிந்து விளையாடலாம் என்று நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். இப்படிப்பட்ட என்னைப் பிரிந்து பத்து மாஸம் இருந்தார். ஓர் அம்பைவிட்டு ராவணனை நினைத்த மாத்திரத்தில் ஏன் மாய்க்கவில்லை? இதைச் செய்ய வல்லவராயிருந்தும் என்னைப்பிரிந்தே இருக்க வல்லவரானபோதே பெருமாள் குற்றம் செய்தவர் என்பது தெரியவில்லையா? என்னுடைய பாரதந்திரியத்துக்குத் தக்கவாறு அவர் என்ன செய்தபோதிலும் நான் பேசாமலிராமல், அவர் குற்றத்தை உன்னிடம் சொன்னபோதே, நானும் குற்றவாளியாகிறேன். தன் தலைவனான ராவணன் கட்டளையை நிறைவேற்ற இந்த அரக்கிகளை நீ தண்டிக்க நினைத்தால், முதலில் நீ உன் தலைவனான ராமனின் கட்டளையைச் செய்வதால் உன்னையன்றோ முதலில் தண்டிக்க வேண்டும்! ஆகையால், நீ சொல்லுகின்ற காரணத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் நீயும் குற்றம் செய்தவனாகிறாய். ஆகவிப்படி, ராமபிரானும், நானும், நீயும் குற்றவாளிகள் ஆனபடியால், உலகில் குற்றம் செய்யாதவர்கள் யார்? அதாவது, எல்லாவிதத்திலும் ஒரு சேதனனைப் பெருமாள் கோபித்தபோது, அந்தக் கோபத்தை ஆற்றிவிடுவதற்காக (புருஷகார பூ4தையான) நான் உண்டு. நானும் அவர் வழியிலே சென்று ஒரு சேதனனைக் கைவிடுமேயானால் ஆசார்யனான நீ உண்டு அச்சேதனனையும் எங்களையும் திருத்திச் சேர்ப்பிப்பதற்கு என்று நினைத்திருந்தேன். நீயும் இப்படிக் கருணையற்றவனானால் குற்றம் செய்தவற்கு யார் புகல்? என்கிறாள் கோபம் என்பதையே அறியாதவள் (அஜ்ஞாத நிக்3ரஹா), கருணையே வடிவெடுத்தவள் (கருணா) என்று ஶாஸ்திரங்களில் பேசப்படும் பிராட்டி.

அரக்கிகளிலும் கொடிய நம்மைப் போன்ற மஹாபாபிகளுக்குத் தஞ்சமாவது பெருமாளுடைய சரமஶ்லோகங்களல்ல; பிராட்டியினுடைய இந்தச் சரமஶ்லோகமே நமக்கு எப்போதும் தஞ்சமாகக் கடவது.

————

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹா அபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று–
உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் -பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும் சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹவாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால் காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால் சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது -உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும் வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகச்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வரா விடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங்குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோ முக்கின்பம முனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

———

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்ததிருப் புளிங்குடிக் கிடந்தானே--9-2-1-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பல நாள்களாக செய்து போந்த உன் திரு வருளையும் -என்றது
நீ நேற்று இன்று செய்து போந்த கிருஷியின் பலமோ -இது –
எதிர் சூழல் புக்கு பல நாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இந்த கைங்கர்யம் -என்றபடி –
நெடுநாள் கிருஷியை செய்து-பல வேளையில் கை விடவோ -என்கிறார்-

பங்கயத்தாள் திருவருளும் -கொண்டு
அவன் அருளுக்கு காரணமான பெரிய பிராட்டியார் திருவருளையும் கொண்டு-
அவனுடைய அருளின் ஸ்வாதந்த்ரியத்தை தவிர்க்கும் அருள் –
காதல் காரணமாக வந்த பாரதந்த்ரியமே அன்றோ ஸ்வாதந்த்ர்யத்தை தவிர்ப்பது -என்றது-
அவன் அருளின் ஸ்வாதந்த்ர்யத்தின் வாசனையை தவிர்க்குமவன் அருளும்படியாக அன்றோ வந்தது –
ஆதலால் அவள் அருள் அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பின் செல்லாதபடி செய்யும் ஆயிற்று -என்றபடி-
நன்று -அங்கனமாயின் –
அவனுடைய பாரதந்த்ர்யம் அவள் காதல் காரணமாக வந்தது அன்றோ –அது நிலை நிற்குமோ –
ஸ்வா தந்த்ர்யமே அன்றோ அவனுக்கு இயற்க்கை –அதற்கு நாம் அஞ்ச வேண்டாமோ-எனின் -அஞ்ச வேண்டா
அவள் அருகே நிற்க ஸ்வாதந்த்ர்யம் நிலை நிற்காது-
ஆகையால் அன்றோ த்வயத்தில் முன் வாக்யத்தில் அவள் புருஷகாரமாக பற்றுகிறது
இனி
பண்டை நாளில் நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்பதற்கு
என் அடியார் அது செய்யார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-என்னும் உன் திரு அருளையும் –
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்-
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சின் ந அபராத்யதி -யுத்தம் -116-44 -என்று
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் அவள் திருவருளையும் பெற்று -என்றலுமாம் –
அன்றிக்கே –
சதம் நிபபதிம் பூமௌ சரண்ய சரணாகதம்-வதார்ஹமாபி காகுஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
கொல்லத் தக்கவனாய் இருந்தும் பேரருளால் அந்த காகாசுரனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
கிருபைக்கு பரதந்த்ரப் பட்டவனான உன்னுடைய திருவருளையும்-
அந்த பரதந்த்ரத்துக்கு காரணமான அவள் திருவருளையும் பெற்று என்றலுமாம் –

நின் திரு அருள் -பங்கயத்தாளுக்கு திரு வருள் -ஆழ்வார் திருமகள் -பக்ஷ பாதி -இயம் சீதா -உன் கையால் இவள் கையைப் பிடிக்க
உன் தாமரைக் கண்ணால் நோக்காய் –செந்தாமரைக் கையால் -சீரார் வளை ஒலிப்ப – அணி மிகு தாமரைக்கு கையை அந்தோ
ஸ்வா தந்தர்யம் போக்கும் பார தந்தர்யம் -பாபங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க அபாய ஹஸ்தம் வைத்து இருக்கும்
அவனைக் கண்டு பயப்படாதே என்னும் திருக் கை அன்றோ -இவளது –

———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அழகர் கலம்பகம்–ஸ்ரீ வேம்பத்தூர் ஐயர்

October 23, 2023

ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை ஸ்ரீ அழகர் கலம்பகம்.

பாயிரம்.
காப்பு.

கட்டளைக்கலித்துறை.

ஆனைக்கு முன்செல் லிடபா சலத்தி லழகனையெம்
மானைக் கருதிக் கலம்பகங் கூற வரற்கரற்குத்
தானைச் சுரர்க்குச் சடகோபங் சித்திக்கத் தாங்குசெங்கோல்
சேனைத் தலைவர் திருத்தாள் கருத்தொடுஞ் சேவிப்பனே.

அத்தியின் மத்தியி லேவிளங் காலிலம் மாமகிழ
நித்திரை கொள்ளுந்த மாலத் துருவ னிவனென்பதே
சத்திய மென்னப் புளிக்கீழ் மகிழந் தமிழ்க்கரசே
நித்திய மாலழ கன்றமிழ் கூறமுன் னின்றருளே.

நேரிசை வெண்பா.

முதலாழ்வார் மூவர்தொண்டர் பாதப் பொடியார்
மதுரகவி மாறன்மழி சைக்கோ – இதவார்
குலசே கரன்கோதை பட்டர்பிரான் பாணன்
கலியன் றிருவடிகள் காப்பு.

அவையடக்கம்

அழகர் பதின்ம ரருந்தமிழ்கொண் டார்யான்
குழறியபுன் சொற்றமிழுங் கொண்டார் – முழுதும்
கருத்திருத்தி வைத்த வெண்மர் காந்தருமாய்க் கூனி
உருத்திருத்திக் கொண்டதுபோ லும்.

நூல்.

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

எட்டடித்தரவுகள்       (2)

நீர்பூத்த பொற்றகட்டு நெட்டிதழ்ச்செந் தாமரைமான்
கார்பூத்த முழுநீலக் கண்ணுமன முங்குளிரச்
சுரும்புதுவைத் தோகைமிகச் சூடியதா மமுங்கவியும்
தரும்புதுவைத் தோகைகன தனதடங்கள் புளகரும்பப்
பழமுதிர்நான் மறைகுமுறப் பதின்மர்கண்முத் தமிழ்முழங்கப்
பழமுதிர்பூஞ் சோலைமலை பச்சைமர கதத்திலங்க
வந்தவிமா னத்தமரர் மலர்தூவிப் பணிசோமச்
சந்தவிமா னத்தமருஞ் சௌந்தரிய பரஞ்சோதீ.

குறித்தமுகில் பந்தரிட்டுக் குறுந்துளிதூற் றிடவாயர்
தறித்தமர மத்தனையுந் தழைத்தலர்ந்து பழுத்துதவக்
கடும்புலிக ளயர்ந்துசித்திர காயமெனும் பேர்விளக்கக்
கொடும்பணிகண் மாலையதாய்க் குலரத்தின விளக்கேற்றக்
கருங்கற்றான் வெண்ணெயெனக் கரைந்தோட விரைந்தோடி
வருங்கற்றா னிமைப்பொழிய மழவிடையங் கயர்ந்துநிற்ப
மிகவிளங்கோ வியரெழுத வெள்கியதிரி பங்கியுடன்
சுகவிளங்கோ வியர்மழலை தொனித்தக்குழ லிசைத்தோய்கேள்.

ஈரடித்தாழிசைகள்.       (6)

பலகடலுஞ் செதிலடங்கப் பசுந்துழாய் பரிமளிக்கப்
பலகடமீன் வடிவெடுத்தாய் பார்த்தெம்மைக் காக்கவென்றோ.             (1)

போகமடங் குலகமுற்றும் பூவெனவன் புறங்கிடக்க
நீகமட வுருக்கொண்டாய் நினைத்தெம்மைப் புரக்கவென்றோ.       (2)

நிலக்கினிய தேவகிபா னீபிறந்த சுபயோக
விலக்கினமேற் கடைப்பிடியோ விடபமலை யுவந்தனையே.       (3)

உதித்ததுநம் மிந்துகுல முயர்த்ததுநந் தமையென்றோ
பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே.       (4)

தருமகதி யாய்ப்பாடி தனினவநீ தங்கவர்ந்தா
யொருமகதி முனிமுதலோ ருள்ளமெனக் குறித்தேயோ.       (5)

ஆரமுத வுததிபொங்க வமரர்குழாம் வாயூற
வாரமுத மதித்தெடுத்தா யடியவர்கட் கென்றேயோ.       (6)

ஈரடி அராகங்கள்       (4)

நிலமுத லியவெயி னிலவுமிழ் கதிர்மதி
குலதெய்வம் வழிபடு குருவென வருளினை.       (1)

அரியய னரனென வவனவ ளதுவென
விரியிக பரமிரு வினையென மருவினை.       (2)

அருள்சில வறிபவ னறிவறி தருமொரு
பொருள்பல வெனமறை புகல்சுக வடிவினை.       (3)

ஒளியினு ளொளியுல குயிரினு ளுயிர்மிகு
களியினுள் களியென மிகமகிழ் கருணையை.       (4)

பெயர்த்தும் ஈரடித்தாழிசைகள்       (4)

அடலவுணன் பாற்குறுகி யற்பநிலங் கையேற்றாய்
கடலகிலம் யாவுமுந்தி காட்டுவது கண்டிலையோ.       (1)

இலகங்கை யெனத்திரைக ளெறியமுனை துளைந்தாய்வான்
குலகங்கை கால்பிடித்துக் கூப்பிடுதல் கேட்டிலையோ.       (2)

கருதுகளி றோலமிடக் கலுழனொடும் விண்பறந்தாய்
மருதினுர லொடுதவழ்ந்தாய் மால்விளையாட் டென்றேயோ.       (3)

சிறந்தபெரும் பகொரண்டத் திரளெல்லாந் திருவுருவிற்
பிறந்தகுறும் புளகெனினின் பெருமையையா ருரைக்கவல்லார்.       (4)

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.

சகலநற் பொருளிநீ தத்து வங்கணீ
புகறரு கரணநீ புவன போகநீ.       (1)

மொழியுநீ பொருளுநீ முக்கு ணங்கணீ
விழியுநீ மணியுநீ விந்து நாதநீ.       (2)

முச்சீர் ஓரடி அம்போதரங்கம்.

தயரதர் தவசிலு தித்தனை.
தசமுக னுருளவ தித்தனை.
உயர்சது முகனைவி தித்தனை.
உரனுள சரபமி தித்தனை.

இருசீர் ஓரடி அம்போதரங்கம்.       (16)

செகமி சைந்தனை. கரும மண்டினை.
ககமி சைந்தனை. தரும மண்டினை.
செயல்க டந்தனை. கதம டக்கினை.
மயல்க டந்தனை. மதம டக்கினை.
சுகமு கந்தனை. அருவி ழைந்தனை.
மகமு கந்தனை. உருவி ழைந்தனை.
துன்பொ ழிந்தனை. அமிழ்த ழைத்தனை.
பொன்பொ ழிந்தனை. தமிழ்த ழைத்தனை.

தனிச்சொல்.
எனவாங்கு.

இருபத்துமூன்றடியால்வந்த ஆசிரியச்சுரிதகம்.

தேறிய வடகலை தென்கலை யெனவிரண்
டாறொழு கரங்க வரவிந்த லோசன
குளிர்பத மிடுசட கோபமீ தெனவான்
வெளிமுக டணிவட வேங்கட வாண

அதிர்குரல் வளைசுட ராழியா மெனமதி
கதிர்புடை வரநிமிர் கரிகிரி வரத
வலம்புரி போலயன் வாகன மீண்டிச்
சிலம்புறு தரளச் சிலம்பாற் றிறைவ
எழுமணி யால்கட லீந்தபொன் னுடனொரு
செழுமணி யுரமணி தெய்வ சிகாமணீ
உரனுடை மதலையு மிரணிய னுரமொடு
சரபமும் வகிர்தரு நரகரி ரூபா
பூமியி லசுரப் புன்பனிக் கினனெனும்
நேமியம் பரம சாமி வாழி
இரவினி லாடு மிறையணி யொளிக்க
அரவினி லாடுநின் னடிமலர்க் கியம்புவென்
அண்டகோ டியையு மயனையு முந்திப்
புண்டரீ கத்துப் பொதிந்தரு ணின்னை
நெஞ்செனு மலரு ணிறுத்துமெய் யடியர்க்
கஞ்சுற் றஞ்சுற் றாங்கவர் தம்மை
கண்ட விடத்துநுங் காற்றுக ளென்று
தொண்டுபட் டொழுகத் துணைசெய்
தண்டமிழ்ச் சங்கத் தனியிறை யவனே.       (1)

நேரிசைவெண்பா.

அவனிவனென் றெண்ணி யலையா திருத்தி
அவனிவனி தைக்கா மழகன் – கவடார்
மருதிடந்தா னேகட வுண் மற்றில்லை நெஞ்சே
ஒருதிடந்தான் சொன்னே னுனக்கு.       (2)

கட்டளைக் கலித்துறை.

உனைக்கண் டகங்குளிர்ந் துன்னாமங் கூற வுனைவணங்க
வினைக்கண் டகரிடஞ் செல்லா திருக்கநல் வீடுபெற
முனைக்கண் டகங்கையை நேராக்குங் காந்தி முகுந்தநந்தன்
மனைக்கண் டகணித லீலாதென் சோலை மலைக்கொண்டலே.       (3)

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

கொண்டல்வண் ணாவன் றேயுன் குரைகழற் கமலம் பெற்றேன்
மண்டல மளந்த காலை மற்றுநான் புறம்போ சொல்லாய்
அண்டர்தெள் ளமுத முண்ண வாலமுண் டவர்க்கே சோமன்
துண்டமுன் றந்தாய் தந்தாய் சுந்தர ராச மாலே.       (4)

சந்தவிருத்தம்.

மாலைக் கரும்புபிறை புரைவா ளெயிற்றுநமன்
வனபாசம் வீசவுடலம்,
ஆலைக் கரும்புபடு முன்னேகண் முன்னேபுள் ளர
சோடும் வந்துதவுவாய்,
வேலைக் கரும்புனித விந்திராதி யர்க்கு நல்
விருந்திட்டு வந்துவிதுரன்,
சாலைக் கரும்புதுவி ருந்தா மருந்தே
தடஞ்சோலை மலையழகனே.       (5)

எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

மலைக்குமேன் மலைவிளக்கா மழகா வேத
வான்குதலை நான்குதலை மகனார் வாளா
தலைக்குமே லெழுதுகின்றா ரரியென் றெங்கள்
தாலத்தின் மேலெழுதச் சமர்த்தி லாரோ
அலைக்குமே லுடுமலரா மிதக்குங் கால
மாலமொன்று காயாம்பூ வலர்ந்தாற் போற்பச்
சிலைக்குமேற் செங்கண்வள ரனந்தா னந்தா
விருக்கி லிருக்கும் பொருளே யெம்பிரானே.       (6)

கட்டளைக் கலிப்பா.

பிரானெனச் சொன்முராரி புராரிநீ பிரமனீ குணப்பேதநீ பூதநீ,
தராதலத் திற்சராசரம் யாவுநீ சச்சிதாநந்த விம்பமுநீ யன்றோ,
மராமரங் கொலி ராமவிராகவ வாசுதேவ வனகிரி வாசமுன்,
கராசலஞ்சொற் பராபர நாதசெங் கஞ்சலோசன வஞ்சன மேருவே.       (7)

நேரிசைவெண்பா.

அஞ்சார லும்மணிநீ ராறுங் கிடைக்கரிய
மஞ்சீர மாறா வனகிரியே – பஞ்சவர்தம்
பங்கங் களைந்தான் பனிரண்டு கண்ணொருவர்
பங்கங் களைந்தான் பதி.       (8)

கட்டளைக்கலித்துறை.

பதிக்கின்ற கற்பகப் பூஞ்சோலையை யெட்டிப் பார்த்து மந்தி
குதிக்கின்ற மாலிருஞ் சோலைவெற் பாநின் குளிர்வதனம்
உதிக்கின்ற திங்கண்மெய் யுற்பலக் காடங் கொழுகு பைந்தேன்
மதிக்கின்ற கட்டழ கெங்கள்கண் மூழ்கு மதுகரமே.       (9)

புயவகுப்பு.

ஆசிரியவண்ணவிருத்தம்.

தனதனன தந்ததன தனதனன தந்ததன.
தனதனன தந்ததன -தனத்ததனதனந்தன.

மதுகயிட வன்சடல மெழுகுபட வெங்குருதி
மதுவினில்வ ழிந்தொழுக இறுக்கிநனிபிழிந்தன
வடிதயிர்மு கந்துரலில் வரியவுமி சைந்துபய
மருதையுமி டந்துபினும் அடுக்குறிநெய்கவர்ந்தன
மகளிர்நக சந்த்ரகலை பதிபிடர்த ழும்புபட
மணிகணிரெ னுஞ்சுரபி திருப்புகுணில்சுமந்தன
வயிறுகுழை யும்பொழுது சிறுகுமுத மொன்றநிரை
மடிமுலைவி ரைந்துருவி நுரைத்தசுரைகறந்தன

புதுவையின்ம டந்தைகவி பதின்மர்தமிழ் கொண்டினிது
புளகிதமெ றிந்துமர கதக்கிரியினிமிர்ந்தன
பொதுவர்தரு பெண்கள்முலை திமிர்மிர்கம தங்களொடு
புதியபசு மஞ்சள்குமு குமுக்கவிமிவளர்ந்தன
புவிகிடுகி டென்றதிர வெதிர்தொடைய றைந்துசமர்
பொருமலர்க லங்கமுகம் இடித்துமிகநுழைந்தன

புகையுமொரு கஞ்சன்விழ முரனடுந டுங்கயம
புரநெளிய வும்பர்மலர் இறைக்கவமர்புரிந்தன
மிதிலைமயி லின்புருவ நிகரலதி தென்றரனும்
வெருவிடவ வன்சிலையை முறித்தவையிலெறிந்தன
விசையினொடு கொம்பினிணை திருகிமணி சிந்தரண
வெறிகொள்கெச கும்பமது தகர்த்துவிருதணிந்தன
விசையன்ரத வெண்புரவி கருவிகொடு ரிஞ்சிமிக
மெழுகுசெய்து தண்புனலின் மினுக்கியுளைவகிர்ந்தன
விரனுனிசி வந்தபடி யுலவைகள்கொ ழுந்துவிட
வெணெயின்மலை யுங்கரைய இசைத்தகுழல்பயின்றன

அதிர்கனக னெஞ்சமிரு பிளவுசெய்து றுஞ்சமுக
அருகுதிர மொண்டுதவி நிணத்தகுடர்பிடுங்கின
அவைதொடைபு னைந்துரகம் வளைமலையை வென்றுதொழு
வரசிளம கன்குடுமி திருத்தியலர்புனைந்தன
அணிமகர குண்டலநல் விசயமக ளுஞ்சலென
வசையவவள் செம்பொனெயி லெனத்தொடிகள்செறிந்தன
அமுதமதி வந்துதவ ழிடபகிரி நின்றவடி
வழகர்துள வுந்தளவு மணத்ததிரள்புயங்களே.

நேரிசைவெண்பா.

புயங்க சயனா புயல்வண்ணா பூமின்
முயங்கு மணிமார்பா முகுந்தா – மயங்கும்
கருப்பழகா தன்பரையாள் கண்ணாதென் சோலைப்
பொருப்பழகா நீயே புகல்.       (11)

வண்டுவிடுதூது.

எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

நீயாகி லுஞ்சொல் லொணாதோ பிரிந்தேகும்
நிட்டூர ருக்கந்த நெட்டாலி னிலையோர்
பாயாக விழிதுஞ்சு முகில்சோலை வெற்பிற்
பசுந்தேன் விருந்துண் கருந்தேனி னரசே
மீயாகும் வெளிநாகம் வெண்பா லெனுந்தண்
மேகங்க ளுரிபுள்ளி மீனஞ்செவ் வானம்
வாயாகும் ரவிகான்ற மாணிக்க மெயிறோ
மதியால மறுமூச்சு வாடைக்கொ ழுந்தே.       (12)

இரங்கல்.

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

கொழுநனைவிட் டாய்பூவை நிரைக்கின்றாய்
வண்டிசையைக் குறித்தாய் கண்ணீர்,
விழுவதறா யொன்றுமருந் தாதுகைப்பா யிதழ்புலர்ந்தாய்
வினையேன் போன்றாய்,
எழுவிடையுந் தழுவியொரு விடைமலையில்
வாழழக ரிந்திர நீலச்,
செழுமலையொப் பார்நாட்டில் வெண்டளவே
கண்டளவே தேறி னேனே.       (13)

தவம்.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேறாது வனம்போயெள வனமும் போனீர்
சிறுகிழங்கைக்கொண்டுபெருங் கிழங்கைக் கொண்டீர்
ஏறாத பலஞ்சுவைத்தோர் பலமுங் காணீ
ரிலைமேய்ந்தும் பேறிலையே யிதுவோ யோகம்
மாறாது சருகுதின்று சருகு பட்டீர்
வாயுநுகர்ந் தீர்வாயு மௌன மானீர்
ஆறாத தீயினிற்பீர் தீய ரேநும்
மருந்தவமே தவமழகர்க் காட்ப டீரே.       (14)

கட்டளைக்கலித்துறை.

படவர வப்பள்ளி மாலலங் காரர் பழமறையும்
தடவர வச்சிரத் தண்டையு மார்ப்பச் சகடுதைத்த
திடவர வச்சுத ரெல்லா விடுக்கணுந் தீர்த்தருளக்
கடவர வற்றைக் கருது மவரைக் கருதுமினே.       (15)

மேகவிடுதூது.
நேரிசைவெண்பா.

மின்னுமுகி லேசோலை வெற்பழகர் வந்திலார்
உன்னையெதிர் கண்டே னுயிர்தரித்தேன் – ஒன்னார்
வெருவவிரு தூதுமவர் மேனிநிற முற்றும்
மருவவிரு தூதுபோய் வா.       (16)

இரங்கல்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

வாளுந் திகிரிப் படையுங் கதையுங்
வளையும் வளையுஞ் சிலையும் புனைவார்
ஆளுங் குலபூ தரனார் மலர்மா
னன்னாள் பிரியா ரெந்நாள் வருவார்
நீளுங் குழலீர் காமம் படுதீ
நெய்விட் டதுகா ணீர்பெய் பனிநீர்
வேளைங் கணையும் விறகா மவர்தாம்
வேயூ துவதுந் தீயூ துவதே.       (17)

வேறு.

வேயினா னிரையழைத்துக் களிறழைக்க வோடி
மென்பிடிக்காய் மான்பின்போய் விடைமலைமே லிருப்பீர்
போயின்மா முலைபருகு மச்சுதரே கேளீர்
பின்னைக்கு முன்னாளை பின்னைக்கென் னாமல்
போய்வாச வன்றருவை வேரினொடுங் கொணர்ந்தீர்
புதல்வனார் தமக்குமுந்திப் பூவிருப்பென் றளித்தீர்
தூயகோ வியர்க்குமெல்ல விதழ்கொடுத்தீர் நம்புந்
தொண்டன்முடி மேற்றாளைச் சூட்டுவதுன் கடனே.       (18)

சந்தவிருத்தம்.

கடதாரை குன்றாத விபராசன் முன்றாவு
ககராச னுந்தாமு நொடியூடே
வடமேரு வுஞ்சோனை மழைமேக மும்போல
வருமா லலங்காரர் பதிகேளீர்
சடகோபர் தம்பாட லெனவே பசுந்தேறல்
தவழ்சாரல் சங்கீனு மணியாலே
திடராக மஞ்சீர நதியோ லிடுந்தூய
திருமாலிருஞ்சோலை மலைதானே.       (19)

வண்டுவிடுதூது.
நேரிசைவெண்பா.

மலையழகர் வண்டினமே வண்டுவரை யார்காண்
நிலைகொள் பொறியளியை நீங்கார் – தலைவரவர்
ஆழியுடை யாருமக்குண் டாறுகால் பேர்சுமந்தீர்
வாழிசெல லாஞ்சொலலா மால்.       (20)

கட்டளைக் கலித்துறை.

மாலாகும் வேளையி னீலா சலமொத்து மாப்பறவை
மேலாக வந்தருள் வாயெங்கள் கோசலை மெய்வயிறென்
ஆலா னதிலிளஞ் சேயாயுறங்கி யசோதை கண்போல்
சேலா யெழுமழ காகுல பூதரச் சீதரனே       (21)

அம்மானை.

மடக்குக் கலித்தாழிசை.

சீதரராஞ் சோலைமலைச் செல்வரைமுன் சந்ததியா
மாதர சோதை வளர்த்தனள்கா ணம்மானை
மாதர சோதை வளர்த்தனளே யாமாகில்
ஆதரவில் லார்போ லடித்ததே னம்மானை
அடித்ததொரு வன்மத்தா லல்லவோ வம்மானை.       (22)

மடக்கு.

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மானமா லழகர் பதிகணூற் றெட்டே
மற்றவை யாவுநூற் றெட்டே
வளரக நந்த னந்தமா மனையே
வதைத்தது மந்தமா மனையே
ஏனமா யெடுத்த தெட்டுமா தாரையே
யிணங்கிய தெட்டுமா தரையே
யேற்றது கயவர்க் குடையுமை வரையே
யேந்திய குடையுமை வரையே
ஆனைகூப் பிடுமுன் புகுமிடங் கரையே
யன்றுயுங் கனகன் கைப்பொருந் தூணே
யண்டகோ டிகள்பொருந் தூணே
பானமுங் கரும்பேய் வனமுலைப் பாலே
பயிற்சியும் வனமுலைப் பாலே
பாயலு மரவுக் கரசனா லிலையே
பரஞ்சுட ரவனலா லிலையே.       (23)

கட்டளைக்கலித்துறை.

இலையும் பசும்புல்லுஞ் செஞ்சூட்டரவு மிடைச்சி மடித்
தலையுஞ் சயனங்கொண் டீரடி யேன் மனத் தாமரையின்
றலையுஞ் செயலொழித் திங்கிருந் தாலென்ன வஞ்சனமா
மலையுங் கடலும் பொருந்தமிழ்ச் சோலை மலையரசே.       (24)

மறம்.

பதினான்குசீர்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அரசர் தூத கவிஞர் தூத ரயனொடுந் துதிக்கவே
யைவர்தூத ராயளித்த வழகர்நாட்டின் மறவர்யாம்
பரசிகால தூதரும் பறப்பரெங்கள் பேர்சொலிற்
பயமிலாது செல்லுமென்று பயமிலோலை வைத்தனை
சரசம்வாசி யென்றுசொல்வை சரணிதேடு காவலர்
தளமிணக்க மென்கிறாய் சரந்தொடுக்க வெண்டுமோ
சிரமிருக்க வேண்டிலுங்க டிருமுகங் கிழித்தெறி
சேரர்பெண்ணை யீவர்போ சிறாரினிப் பொறார்களே.       (25)

வேறு.

பொறுபொறு தூத பசிபொறாய் முந்திப்
புனைசுருட் டோலையைத் தின்னு
புரவலர் காதிற் சொருகுசந் திரிகை
புயனிறத் தழகர்சீர் பதியின்
மறவரென் றறிந்துங் காரிகை கேட்டாய்
மதமலோ வதுபுல வரைக்கேள்
வயலிலே யரிவை சிலையிலே நாரி
மரத்தினு மண்ணினும் பாவை
குறிதிகழ் தையல் பாணர்பால் வஞ்சி
குடக்கினிற் கோதையு மாங்கே
குன்றின்மேற் குன்றா விளம்பிடி நல்ல
குமரியுண் டடவியி லுடனே
நறுமணங் கூடுஞ் சோறுமுண் டோடு
நங்கையைப் பார்வினை முகத்தில்
ஞாலமே னீங்கள் வாலையே படைத்தா
னரியொடுந் திரிவது திரமே.       (26)

மடக்கு.
கட்டளைக்கலிப்பா.

திரவி ருப்பணி தாமத் திகிரியே
செங்கை மேலணி தாமத் திகிரியே
வரதர் மொய்ம்பு குலவர விந்தமே
வாய்கண் கால்கை குலவர விந்தமே
உரமி சைக்கரும் பன்ன கமலையே
யுறையு ளுங்கரும் பன்ன கமலையே
அரச ருக்கிட முத்தமர் சங்கமே
யழகர் சேரிட முத்தமர் சங்கமே.       (27)

கட்டளைக்கலித்துறை

மேகங் கடல்மணி காளிந்தி பூவைமென் காவிகண்மை
மாகந் தொடுபச்சை நின்னுருக்காட்ட மனங்குளிர்ந்தேன்
சோகந் தவிர்ந்தனென் மாலிருஞ் சோலைச் சுரும்புசெய்த
யோகந் திகழழ காவவைவாழி யொளிசிறந்தே.       (28)

நேரிசை வெண்பா.

சிறந்துன் பதந்தொழுவார் சேவடிதொ ழாமல்
இறந்தும் பிறந்து மிரைக்கே – பறந்தும்
மிகவேசற் றேனிடப வெற்பாவ சோதை
மகவேசற் றேகடைக்கண் வை.       (29)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்

வைக்குமிடத் தன்புவையா மாந்தர் காளம்
மறலிகதை யறியீரோ வருமே நாளை
தக்ககதை புகுமேநுங் குணமும் போமே
சரமும்போ மேயெடுத்த தநுவும் போமே
திக்கிலைவே றிக்கணமே சோலை வெற்பிற்
சீதரசஞ் சீவிதனைத் தேடிக் கொள்ளும்
துக்கமறு நமனோடத் துரப்பீர் யார்க்குந்
தோற்றிடீ ரொருகாலுந் தோற்றி டீரே.       (30)

கட்டளைக்கலிப்பா

தோற்றும் பொய்கை விடாதா ரருவியுந்
துலங்க விட்டவர் சோலைவெற் பார்சந்தச்
சேற்று மொய்ம்ப ரிவரிக்கரி தோநம
திருக்குளக் குறை தீர்ப்பது மாவலி
ஊற்று நீரினி தென்றே குடங்கைகொண்
டுற்ற நாளங் கொருகால்விண் ணுச்சிகண்
டாற்று நீர்தந்த திங்கொரு காலுல
களந்து போக ம்னைத்த்துங் கொடுத்ததே.       (31)

கட்டளைக்கலித்துறை.

கொடுக்கின்ற செங்கை யழகனென் றோதுங் குழகன் வெய்யோன்,
எடுக்கின்ற சக்கரத் தேரோ டிலங்கு மிடபவெற்பில்,
அடுக்கின்ற வாயிரம் பேரோ கிரணமஞ் ஞானவிருள்,
தடுக்கின் றவருமுண் டோபனி காண்புன் சமயங்களே.       (32)

அறுசீர்க்கழிநெடில் வண்ணவிருத்தம்.

சமயமென முதுகடவு கடவியுயிர் கறுவிவரு
சமனுமொரு திரண மிவனே,
ஆமையுமென வுழலும்யம படருமொரு மசகமெழு
தயனுமவ னளவு நமர்காள்,
கமையுரக கிரியிறைவர் கரிகிரியில் வரதர்வளர்
கமலைதன கிரியை யகலார்,
இமையகிரி ரசதகிரிகனககிரி பரவுநம
திடபகிரி யழகர் துணையே.       (33)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

துணையென்று வந்தே மெம்மைத் தொடர்ந்துமா லாக்கிக் கொண்டாய்,
அணையென்று நாக மீந்தா யாங்கரு டனைவி டேமால்,
இணையொன்று மில்லாய் நல்லா யீசசர் வேச புல்லும்,
சுணையென்ற வழகா வெண்ணெய்க் கள்வனே துளவி னானே.       (34)

மடக்கு.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

துளவழகர் கலக்கவர வஞ்சலிக்குங் காலந்
தொனித்திடிகள் கலக்கவர வஞ்சலிக்குங் காலம்
வளமலிவெற் பருகுகரு மஞ்சாருங் காலம்
வாடையுயிர் பருகுகரு மஞ்சாருங் காலம்
களிறுருளச் சிலையருவி யம்புதைக்குங் காலங்
காயமுறுஞ் சிலையருவி யம்புதைக்குங் காலம்
தளவமளி பாடீரப் பூச்செறியுங் காலந்
தளவமளிப் பாடீரப் பூச்செறியுங் காலம்.       (35)

வேறு.

காலமுகந் தானு மோலமுகந் தானுங்
காமனைவாய்த் தானு மாமனைமாய்த் தானும்
ஞால மடுத்தானுஞ் சூல மெடுத்தானு
நளின விருப்பானும் புளின விருப்பானும்
நீல மதித்தானுஞ் சீலம் விதித்தானு
நீதி பொழிந்தானுஞ் சோதி வழிந்தானும்
சால நிறைந்தானு மால முறைந்தானுஞ்
சலமலை வென்றானுங் குலமலை நின்றானே.       (36)

கட்டளைக்கலித்துறை.

மலைதாங்கு மாயர் வனகிரிக் கேமழை தாங்கிச்சந்திர
கலைதாங்கி யிந்திர சிலைதாங்கிக் கஞ்சமுந் தாங்கியங்கே
கொலைதாங்கு நீலங் குமிழாம்ப றாங்கிக் கொடியொன்றின்மேல்
நிலைதாங்கு கோங்கமுந் தாங்கியொர் பூங்கொம்பு நிற்கின்றதே.       (37)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேனைப் பழித்த விசைக்குயில்காள் செம்மாந் தழைக்கப் புறப்பட்டீர்,
சோனைப் புயல்போ லனங்கனம்பு தொடுத்தா னினிமேற் றொடப்போமோ,
ஆனைக் கரச னிடுக்கணிருட் கருணோதயம்போ லிமைத்த செம்பொற்,
றானைத் திருமா லலங்கார தந்தா ரிந்தா தந்தாரே.       (38)

மடக்கு.
தாழிசை.

தாரமருங்கா மனப்புள்ளே தைக்கு மருங்கா மனப்புள்ளே
சரக்கோ டங்கங் குலைபடவே தகுமோ வங்கங் குலைபடவே
வேரோ டின்ப வளவனமே விடமோ வின்ப வளவனமே
மேகம் பாவி வருந்திடரே விதிகாண்பாவி வருந்திடரே
மாரனுடைவாட் கேதகையே மயல்கொண் டுடைவாட் கேதகையே
மணந்த விராவம் போருகமே வந்த விராவம் போருகமே.
ஆரங் கடுக்கு மென்னுரையே யாருக் கடுக்கு மென்னுரையே
யலைக வராவெண் ணந்தினமே யழகர் வராவெண்ணந்தினமே       (39)

நேரிசைவெண்பா.

தினகரனு மப்பால்வெண் டிங்களுங்கா ரென்ன
வனகிரிவாழ் காயாம்பூ வண்ணா – அனகா
அறவேத வித்தேநின் னம்புயத்தாள் காணா
தறவேத வித்தே னருள்.       (40)

களி.

பன்னிருசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அருணன் பரிபோற் பரியிலக
வமரில் விசயன் றேர்கடவு
மழக ரிணையில் குழகரெமை
யாளும் பெருமாள் வாளரக்கர்

செருவென் றிறுத்தார் மதுவார்க்குஞ்
செயலை முடித்தார் பின்னுமன்பர்
தேனுக் கலையா மற்கருணை
செய்தா ரவர்தந் திருவடிகள்

கருதுங் களியெங் கனமடத்தைக்
கழுவு மினிய வினையடையுங்
கஞ்சாக் கருக்கு வகைநிறையுங்
கற்பத் தயன்வீழ்ந் தனனன்று

குருவி சார மச்சமறுங்
குலவா ரணங்கள் முன்படியுங்
குறும்பாட் டையுமோ திடும்வாருங்
குடியும் படையும் வேண்டியவே.       (41)

பறவைவிடுதூது.
எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

வேண்டலர் நகைக்கவொரு பாங்கியும் வெறுக்கவனை
வேங்கையி னதட்டமதன் வில்லாலே
தூண்டில்படு மச்சமென நான்பதை பதைக்கும்விதி
தூங்கியிரை கொத்திநிமிர் புள்ளீரே
பாண்டவர் துதிக்குமயில் கூந்தல்சொரு கத்தவள
பாஞ்சசனி யத்தொனிசெய் செவ்வாயர்
ஆண்டுதுரு வற்குநிழ லீந்தவன வெற்பிலெனை
யாண்டவழ கர்க்கினிது சொல்லீரே.       (42)

கட்டளைக்கலித்துறை.

சொல்லிட பாசல மாயர்நன் னாட்டிற் சுடர்க் கொதுங்கும்
அல்லிடர் தீர்குழ லாய்நின் படாமுலை யானை கண்டால்
மல்லிட றுந்திண் புயத்தார் கனக வளைநிரைப்பார்
புல்லிட வுஞ்செய்வ ரீந்தார் பிடியென்றிப் பூந்தழையே.       (43)

பாண்.

தாழிசை.

தழைவிருந்த வனத்தர்பூமிசை குழைவிருந்தவ னத்தனை
தந்தசுந்தர ராசகேசவர் தம்பதங்களி னினைவினார்
இழைமருங்குடை வாணியுந்தொழ வியங்கொர்பாணரு ளாரவ
ரிசைபுகுந்திடு காதின்மற்றவ ரிசைபுகாதுத காதுநீ’
மழைதொடுங்கொடி மாடவீதியில் வந்ததேபிழை யிறையிவண்
வரத்தைவிட்டனர் ஞானம்வந்து பரத்தைநச்சினர் வீணையும்
பழையபேச்சுரை யுந்தொடுத்தனை புதியபேச்சுரை காணது
பாடினிக்கு மவட்கெழுந்தருள் பாடினிக்கு மணாளனே.       (44)

ஊசல்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மணங்கமிழ்பு வையுமயிலுந் தமாலக் காடும்
வண்கிளியு நீலவெற்பு மடமான் கன்றும்
இணங்குகட லுந்துகிருங் காரு மின்னும்
யமுனையெனுந் திருநதியு மெகினப் பேடும்
கணங்குழைய கோசலைதே வகிய சோதை
கண்மணியும் பாவையும்போற் கமல வீட்டில்
அணங்கரசி னுடன்குலவி யாடி ரூச
லலங்கார மாயவரே யாடி ரூசல்.       (45)

தவம்.
எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

ஊசிமுனை நின்றுமென தாழ்குகைநு ழைந்துமென
வூமரிலி ருந்துமென வளைபோலே
காசினிசு ழன்றுமென வானிடைப றந்துமென
காயமிதெ ழுந்துவிழும் வினைபோமோ
நீசரையு மண்டர்செய சோலைமலை யின்கன்முழு
நீலமலை யுண்டுதொழு மியலாதேல்
கேசவமு குந்தமது சூதனவ னந்தகக
கேதனவெ னுந்தளரி னினைவீரே.       (46)

கட்டளைக்கலித்துறை

நினையா தவர்தமை யாளலங் காரனை நேர்ந்து நந்தன்
தனையா தவர்நண்ப வென்றிட பாசலச் சாரலிற் போய்
முனையா தவர்தகை தீர்சிலம் பாற்றின் முடை யுடலை
நனையா தவர்சன்ம முஞ்சன்ம மோவிந்த நானிலத்தே.       (47)

சந்தவிருத்தம்

நிலங்குலவு நாபர்பணி லங்குலவு முத்த
நிரைக்குமரு விக்குலவ ரைக்குமரு வியகார்
இலங்கையில்வெவ் வாளிகொடி லங்கையிலி ருக்கு
மிராவணவி ராவணனி ராவணம றுத்தோர்
அலங்கலைய ளித்தனர லங்கலைக டற்கு
மந்தமத னுக்குமனை சந்தமத னுக்கும்
கலங்கலெ னெனக்கணிக லங்கலவை தம்மின்
கையிலமனை தாருமுலை சயிலமனை யாரே.       (48)

கொச்சகக் கலிப்பா

ஆராம வெற்பி லழகர்சுரு திக்குமெட்டா
ஏரார் பதந்தீண்ட வெத்தவங்கள் செய்தனவோ
சூரான வன்சிலையுந் துந்துமியென் புஞ்சகடும்
காராய கட்டையும்வெங் காளியப்பேர் நாகமுமே.       (49)

மதங்கி

தாழிசை

காளமேகமும் வெளிறிமின்னிய கண்னனார்வன கிரியினில்
காமதங்கம தங்கமாமெழின் மாமதங்கம டந்தைகேள்
தாளநின்முலை யிடைகுறுந்துடி தவளசங்கதிர் களமுகம்
தகசந்திர வலையநூபுர சரணமென்பது மத்தளம்
நீளூம்யாழின முன்கைகார்குழ னெற்றிவேடன தம்புரு
நிறுத்தினன்றொறு சற்றுடுக்கைநெ கிழ்க்கவேண்டுநின் சிந்தையே
நாளுநச்சின னாடகத்தினி நட்டுவாவெனு மதிசயம்
நாட்டவாளினை சுழலுமுன்பல கூட்டவாள்சுழல் கின்றவே.

நேரிசைவெண்பா

சுழல்காற்றை மாய்த்துஞ் சுடர்நெருப்பை யுண்டும்
நிழல்பார்த் திடபகிரி நின்றோன் – குழலூதிக்
கற்றாக் குவித்த கடவுளவ னேயனைத்தும்
பெற்றாக்கு வித்த பிரான்.

33- அடி நேரிசை ஆசிரியம்.

வித்தகர் கருத்துட் பத்தி பாய
நீலம் பழுத்த கோல மேனி
காற்கடன் முகந்த சூற்புய லென்று
கதிரிளங் கொங்கைச் சதிரிள மங்கையர்
இயலுறு கலாப மயினட மாடக்
காயா மலர்விரி காயா வனமென
அரையர வல்லி வரையர மகளிர்
குழலிசை வண்டு குழலிசை பாட
அங்கையிற் றாங்குஞ் சங்கமுந் திகிரியும்
புதையிருள் சீக்கு மதிகதிரென்ன
கவண்கலா லிசைசெய் சிவந்தவாய் மழலைக்
கொடிச்சியர் கண்போ லடிக்கடி சுனைதொறும்
பதுமச் செங்கா டிதழ்குவிந் தலர
இருவகைக் காந்தமும் பெருமுனி வர்க்குப்
புனலும் புகையாக் கனலுங் கொடுப்ப
வனந்திரி மேதி யினஞ்சொரி தீம்பால்
கங்கையிற் பரக்கப் பொங்குதேன் வெள்ளம்
சாம்புன தம்போன் மேம்படு சாரல்
சோலை மாமலை மேலினி தமர்ந்தோய்
அதிர்ந்துவெண் பரிக ளெதிர்ந்தவென் றஞ்சி
பசும்பரி யேழும் விசும்பிடை மறுக
விரிதிரை கொழிக்கும் பரிபுர நதியோய்
மழுப்படைக் கடவுள் விழிக்குடை யாத
சித்தசர் கோடி யொத்தகட் டழக
சடைகொடு வேட்ட விடையுடை யவற்காப்
புரஞ்சொற் றருளிய பரஞ்சுடர் மூர்த்தி
குருகூர் விளங்க வருசட கோபர்
வழுத்தவிர் நான்மறை விழுப்பொருள் பழுத்த

வாக்கெனு மமுதந் தேக்கிய வொருநீ
புவிமேற் சிற்சிலர் கவியுங் கொண்டனை
ஆங்கவை தமக்குப் பாங்கெனும் வளைகாய்ப்
புளியென மகிழ்ந்தனை போலும்
எளியேன் புன்கவி யேற்பதெத் திறமே.       (52)

குறம்.
எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

ஏற்றபூங் கோதைகே ளிடபமால் வரையில்வா
ழிளங்குறப் பாவையான் விளங்குறப் பாவையும்
சாற்றுவேன் கண்ணர்முன் வெண்ணெயாக் குவியவே
தானடுக் குறிசொனேன் சயிலமா தினைமுதற்
போற்றினே னாழியின் னெல்லையுஞ் சங்கையும்
பூரியெட் டக்கரஞ் சீரினிட் டெம்பிரான்
தோற்றுவார் வாக்குநன் கூழ்பெலங் கஞ்சியச்
சுதர்விடா ரம்பரத் துணிவையா யினியமே.       (53)

கைக்கிளை.
மருட்பா.

இனியஞ்ச னெஞ்சே யினியவிசை யேழும்
கனியாறு காலுமிரு காலும் – முனிவர்
தொழுதா ளழகர் சுரும்பில்
எழுபூ வாய்ந்த திவளணங் கவளே.       (54)

சித்து.
தாழிசை.

அலகைமாமுலை யுண்டகொண்டல்புள்
ளலகையன்றுப குந்தமா
லழகர்தாள்தெரி சித்தசித்தா
னுக்கிரகம்பெறு சித்தர்யாம்

சலனமேனொரு கடகநற்கரி
தனையழைப்பிமுன் னாகமா
தங்கமாக்குவெ மெய்தராவிடு
சந்தமிக்குயர் பணம்வரும்

இலகிரும்புத னைப்பொன்வெள்ளியொ
டேற்றுவோமுரை குறைபடா
தெடுத்ததாம்பிர மாழை மச்சநம்
மிரதவாதம தன்கையிற்

பலமருந்தறி வொஞ்சொல்வோமதி
பசியவர்க்குப சரியையா
படியளப்பந மக்குமாவடை
பழவனம்பிரிய மப்பனே       (55)

கட்டளைக்கலித்துறை
அப்போத கத்துறை செந்திரு மார்பத் தழகர்பனைக்
கைப்போத கஞ்சொன்ன மாயரெக்காலங் கருணை செய்வார்
மெய்ப்போ தகநமக் கெந்நாள்வரும் வினையென் றொழியும்
எப்போ தகமு மமதையும் போம்புக லேழைநெஞ்சே       (56)

சம்பிரதம்

14-சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்

ஏழுலோ கமுமிக்க மண்டலத் தூடடைத்
திடுவோங் குணக்கு வெய்யோ
ரெமதிசை புகச்செய்வோ முத்தரத் தூடுபன்
னிருதிங்க ளெண்ணி விடுவோம்

வாழ்குகையு ளண்டரை யரம்பையரை நாரதனை
வரவழைப் போம் படர்கொடி
மருப்பங் கயங்கள்பல் குதிரைகுடை சுனையிலெழ
மாதேரை யடைய நினைவோம்

தாழ்வறும் புல்லையடு புலிசெய்வோந் திரணத்தை
யுந்திருத் தூணாக்கு வோம்
தருமெறும் பிதனைமத கரிசெய்வோந் துவரையைச்
சண்பகா டவியாக்கு வோம்

ஆழிநீர் முன்பொருப் பாக்குவோ மெய்யகலு
மாவிகள் வரப்பண்ணு வோ
மதிரகசி யங்கேளு மழகர்தாட் காளலா
வதிதெய்வ முன்விடுவ மே.       (57)

கலிவிருத்தம்.

விடலறு மறையினும் விடவ ராவினும்
நடமிடு மழகரெந் நாளி ரங்குவார்
தடமுலை மயிலொரு சரம் விடாமுனம்
அடன்மதன் விடுசர மனந்த கோடியே.       (58)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

கோடிதவ முயன்முனிவோர்க் கருள்பதத்தா மரையார்
குறியவரா கம்பெரிய நெடியவரா கமுமாய்
ஆடிரண சிங்கமுமா மெம்மான்பல் கலையோ
டம்புலிதாழ் கோட்டிடபத் தணிவரையைக் கண்டால்
மூடி ருளைப் பொருதறுகண் மறலிகடா விடிலே
முடுகொருக டாமடங்கு மூன்றுகடா மடங்கா
தோடிவரக் குளிறிவெளி றியகளிறு வந்தே
யுறப்பிடரி னிணைத்துலவும் பிறப்பிடர்மற் றி**ய.       (59)

தாழிசை.

இடர்களென்ற திரைகளாலி டிந்துதீரம் வீழவே
யெழுந்தபாவ சாகரத்தி னிடைமிதந்த திரணநான்
மடமைநெஞ்ச நாளிலே மகிழ்ச்சிகூர்ந்த தெம்பிரான்
மந்த்ரமூல சொருபகாந்தி யிந்த்ரநீல மல்லவோ
உடன்மறந்த மறவிராத னுறவிராத தறுகணா
னொடுங்கவந்த னாவிபோயொ டுங்கவந்த நிருதரும்
திடமலைந்து விடமலைந்து தென்னிலங்கை வென்றவன்
திங்கள்குன்ற முத்திலங்கு நங்கள்குன்ற மாயனே.       (60)

கட்டளைக்கலித்துறை.

மாய்கின்ற தேவர்க்கெ லாமண வாளர் வடிவழகர்
வேய்கின்ற குல்லையென் றோதரு வாரெங்கள் மின்கரும்பு
சாய்கின்ற பூவணை யாலைபொன் னோலையிற் றாவுங்கண்ணீர்
பாய்கின்ற சாறு குறுவேர் பிதுங்கிய பான்முத்தமே.       (61)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

பாலிருந்த நீர்பிரிப்பீ ரொருநீ ருங்கள்
பங்கயத்தோன் றன்னாவைப் பாரா னென்கண்
போலிருந்தா ரையமெனை யும்பிரித்தா னிந்தப்
புண்ணியமுங் களையடையும் போமோ சொல்லீர்
சேலிருந்த கொடியோனைப் பெறுமால் சோலைச்
சிலம்பாற்றி னிரைதெவுட்டித் திரைமுத் தூஞ்சல்
மேலிருந்து விளையாடிக் கமல வீட்டின்
மென்பேட்டி னுடன்செல்செங்கால் வெண்புள் ளீரே.       (62)

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

புள்ளின்வாய்க் கிழித்தார் மருதிடந் தழித்தார்
பூதனை யாருயிர் கழித்தார்
புறகுசுழல் காற்றுண் டுதிரமொண் டிரைத்தார்
புரவியோ டிரவியை மறைத்தார்

துள்ளிய குயிலைப் பூத்ததே மாவைத்
தூற்றுமன் னையைச்சிறு காற்றைச்
சுடுமதி கோர மதியினை விடுத்தார்
தோன்றிய மதியையென் சொல்வேன்
விள்ளரும் பிலத்துட் பணிகளோ வென்று
விகங்க பூபதியெழக் கனகன்
வெங்குடர் பிடுங்கி யெறிந்துறங் கிழித்து
விடாய்க்குவெங் குருதிநீ ருறுஞ்சி

பிள்ளையைப் புரந்த வெள்ளெயிற் றகல்வாய்ப்
பெருங்குரற் சிங்கமெங் கணுந்தேன்
பெருக்கெறி சோலைப் பொருப்பலங் காரர்
பிறர்க்குப் காரமொன் றிலரே.       (63)

கட்டளைக்கலித்துறை.

ஒன்றாகி மூன்று வடிவா யடியவ ருள்ளத்துள்ளே
நின்றாய் புறத்தும்புள் ளேறிவந் தாயெங்கு நீநிறைந்தாய்
நன்றாமுன் னாடல்பொன் னாடர்கை கூப்பிய நங்கள்குன்றிற்
குன்றா மரகதக் குன்றே குன்றேந்து குணக்குன்றமே.       (64)

கலிவிருத்தம்.

குணசலதி யாமழகர் குலவரையின் முகில்காள்
மணமலரின் வண்டுநிகர் வன்கணர்பி ரிந்தார்
கணவரவர் நெஞ்சது கருங்கல்ல வோவென்
புணர்முலையில் வந்துவிளை பொன்னையுரை யீரே       (65)

மடக்கு.
கொச்சகக்கலிப்பா.

ஈரமதிச் சோலைவரை யிறைவர்மதிச் சோலைவரை
சாரகவி மானமறார் தாரகவி மானமறார்
ஆரணந்தா மோதரனா ரயனாந்தா மோதரனார்
சீரரங்க மொழியாரே தீயரங்க மொழியாரே.       (66)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மொழியு மினியீர் குழைவார்ந்தீர் முத்த
மிழச்செய்யுட்பயின்றீர்,
வழியு மாசா ரமுஞ்சிறந்தீர் மதுரக்
கழைகா ளினிக்கேளீர்,
பொழியுங் கொடையா ரழகர்வெற்பிற் புராரிக்
கெதிர்போய்த் தழல்விழியால்,
அழியுங் காமன் பழிகாரனங்கே
யிணக்க மாகாதே.       (67)

நேரிசைவெண்பா
அங்காப் பொழிய வருணனுக்குத் தேனருவி
அங்காப் பொழியேற் றசலமே – பங்கயமேல்
துங்கத் திருப்பிரியான் சுத்தத் தமிழ்ப்புலவர்
சங்கத் திருப்பிரியான் சார்பு.       (68)

வஞ்சித்துறை
சாரலங் காராமால்
சாரலங் காராமால்
நீரலங் காராமால்
நீரலங் காராமால்.       (69)

சந்தவிருத்தம்
அலங்கார யமனும் புறஞ்சாய விதழ்மென்
றறுங்காது பொருகும்ப கனன்வீழா
இலங்கேசன் மகுடந் தகர்ந்தோட முனையம்
பெயுங்கார்மு கமன்முன்பென் மயல்கூறீர்
கலங்காம லரசன்முன் செலுங்காம துவசங்
களைந்தேவின் முதல்தின்று மகிழ்வாயே
சிலம்பாறு தனில்வந் திளம்பேடை குமுறும்
சிலம்போசை நறவுண்ட குருகாரே       (70)

நேரிசைவெண்பா
காமனார் வெள்ளைக் கருப்புவில்லே கீற்றுமதி
தாமடுவுச் சிந்து சரங்களே – ஆமாம்
வளைத்தெய் வசிகா மணிநிகரில் லாவெள்
வளைத்தெய் வசிகா மணி.       (71)

கட்டளைக்கலித்துறை.

மணியுந்தி யான நதிபாய் வனவெற்பன் மண்ணும்விண்ணும்
தணியுந்தி யானலங் காரனெங் கோவெனுந் தாமமென்னும்
பணியுந்தி யானந்த வேளென்னு நீலம் பசுங்குரும்பைக்
கணியுந்தி யான மிடுந்திசை பார்க்குமென் னாரணங்கே.       (72)

நாரைவிடுதூது.
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

ஆரமா மலையிற் றொன்றி யங்கங்கோ டிச்செய் தீங்கால்
ஈரமே வியதென் காற்று மிந்துவுஞ் சமனே கண்டீர்
வீரமா லலங்காரர்க்கு விடவரா விடவ ராதோ
தீரமே நாரை காணீர் செல்லுவீர் சொல்லு வீரே.       (73)

கட்டளைக்கலித்துறை.

சொல்லா ரணப்பொருண் மாலலங் காரர்தண் சோலைவெற்பில்,
வல்லா ரிளங்கொங்கை மங்கையெங் கேமனு நூல்வழியிற்,
செல்லாச் செலுத்தொரு கோல்போன் முடங்கிய தீங்கரும்பு,
வில்லானைங் கோல்வென்று முக்கோல் விழைந்திட்ட வேதியரே.       (74)

சந்தவிருத்தம்.

வேதாவே னச்சொல்சுதர் பூமேல்வ ரத்தளரின்
மீதாம்வி சித்ரர்மறை வேரானார்
வாதாச னச்சயன ராராம வெற்பிறைவர்
வாராம லெய்த்ததுயர் சீராமா
சாதார ணத்ததல வேள்பூச லிப்பொழுது
தாரா மடைக்குருகு தூதாமோ
போதா வவைக்கறிவு போதாவெ னிற்பரிவர்
போதாம லர்த்துளவு போதாவே.       (75)

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தாவுமன் புள்ளவர் மேவுமன் புள்ளவர்
தக்கதா மலையினார் மிக்கசே மலையின்மேல்
ஆவியுங் கூடுமா வோவியந் தேடுமே
வலகிலா வஞ்சன்முன் னுலகெலாங் கஞ்சமும்
காவியும் மகரமு நாவியுஞ் சிகரமுங்
காந்தளுஞ் சங்கமும் பாந்தருளுஞ் சிங்கமும்
கோவையு மாரமும் பூவையுங் கீரமுங்
கொஞ்சுமின் சொல்லுநீண் மஞ்சும்விண் வில்லுமே.       (76)

நேரிசைவெண்பா

மஞ்சுகா ளுங்களைப்போல் மாரன்பூ மாரிபெய்ய
விஞ்சியது பேராசை வெள்ளங்காண் – தஞ்சம்
வழுத்தீர் மதிச்செங்கண் மாலலங் காரர்க்கு
வழுத்தீர் மதிச்செங்கண் மால்.       (77)

வஞ்சிவிருத்தம்.

செங்கண் மாயவர் சீபதி
மங்கை யாரிடம் வண்புனம்
கொங்கை யுங்கணுங் குதலையும்
அங் கரும்பிணை யாகுமால்.       (78)

தாழிசை.

மாலுநான்முகனு மரனுமாமழகர்
மால் விடைச் சயில மயிலனீர்
நீலராமிறைவ ரின்னம்வந்திலர்கன்
னெஞ்சர்போலு மினியென்செய்வேன்
ஆலகாலம்வட காலதாகவெதி
ரம்புகாலவில் வளைத்ததால்
காலகாலர்கள மெனவிருண்டுபல
காறிறந்தமழை காலமே.       (79)

கட்டளைக்கலிப்பா.

மழையுறங்குத டஞ்சோலைமாமலை
வாணன்வாணன்க ரங்களைப்பூதங்கள்
விழையும்பாரவெ ழுக்களென்றேபற்றி
வீசுமாலும்பர் வேதாமவருக்கே
பழயநான்மறை சிங்காசனமலர்ப்
படுக்கைவீடுந டுக்கடல்வெண்ணெய்போல்
குழையுமன்பர்க ருத்தேயுபரிகை
குளிர்நிலாமுற்றங் கோகுலங்காணுமே.       (80)

மடக்கு.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

குலமலைமா யாவாழி கொடியவென்றன் சிந்தா
குலமலைமா யாவாழி கொடியமதி ளிலங்கை
நிலமலைய மாதவரி னானெறிந்தாய் மந்தா
நிலமலைய மாதவர்கை நின்னாமங் கண்டாய்
பலவருண வாரீச நயனமுழு நீலோற்
பலவருண வாரீசன் பயப்படவெற் பெடுத்து
நலவரிசைக் கவிகைபுனை காரேதென் குருகூர்
நலவரிசைக் கவிகைவிடா நளினமின்னா யகனே.       (81)

கலிநிலைத்துறை.

நளினவி லோசன ரழகர்பு லோமிசை நாதன்றன்
இளவலு மாயவர் மாயவர் வெற்பினி விலையோகாண்
தளையவிழ் மல்லிகை புல்லிய வண்டீர் தமியேன்போல்
வளைகலை நாண்மதி தோற்றிட நின்றே மருண்மாலை.       (82)

அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

மருதொடித்து விளவெறிந்து குருந்திலேறி
வடத்துறங்கிச் சோலைமலை வருமால்வெற்பில்
இருதலைப்புள் ளென்னவிருந் திமைப்புநீங்கா
வெனைப்பிரிந்த பாதகர்நாட் டில்லைபோலும்
அருவிமத மிக்களைமா தளைகடள்ளி
யடையலர்மாக் கோட்டையிடந் தாவிதேக்கித்
தெருவுதொறு மால்யானைக் கன்றுபோலத்
தென்றலிளங் கன்றோடித் திரியும்வேனில்.       (83)

கட்டளைக்கலித்துறை.

திரியுங் கிரிக்கெதிர் சென்றோ ரழகர் திருமலைமேல்
பரியுங் கொடித்தடந் தேர்வல வாபரி போற்றிரைகள்
விரியும் புனற்கட லுண்டமை யாதுநம் மின்கொடிகண்
சொரியும் புனற்கடற் கோடுதல் பார்நுண் டுளிப்புயலே.       (84)

நேரிசைவெண்பா.

புயல்பார்க்குஞ் சாதகமே போன்றேன்பொன் னாட்டின்
இயல்பார்க்குஞ் சேமலைமே லெந்தாய் – தயையின்
நிலையா திருக்கவரு ணேயா மிடிதீர்த்
தலையா திருக்க வருள்.       (85)

வலைச்சியார்.
அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அலைகடலி னடுத்துயிலு மழகர்நாட்டி
லஞ்சொலெலாங் குளமாக வஞ்சனக்கண்
வலையெறிவீர் பொய்கைவிட்டென் னாவிதாங்கும்
வரலாறு கேளுமச்ச மருங்குநில்லும்
கலைமதியோ டாரலலர் வெளிச்சைமீறுங்
கவலைமுன்னீ ரிரையேர்க்குங் கனகருப்பம்
சிலையருவ ரால்மலங்கு படுதல்பாருந்
திருக்கைவையு மழைச்சுறவைத் தேடுவீரே.       (86)

கொற்றியார்.

எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தேடுதமிழ் வடிவழகர் நெடியவிடை மலைமேற்
சிறியவிடைப் பெரியவிடைத் திருக்குலத்தி னமுதே
கூடுகின்ற வெண்ணெடொடும் வேனிலா னெய்யுங்
குறைவிலைவிற் போரதிகங் கொண்டதெழு படிகாண்
நாடறிந்த ததிமோக முறையிணக்கம் வையு
நவமணிசேர் பொன்னாழி நல்குவேன் மெல்ல
ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரு மிச்ச
மாமுழக்கு மோர்போது மகலேனந் தமையே.       (87)

தாழிசை.

நந்தனந்தன வென்றுகார்தனை நங்கைசெங்கைமு கிழ்க்குமின்
நளினமாதென விகலுமாரனை நமதுசாபம்வி டாதெனும்
சந்த்ரசூரியர் தங்களைச்செய சங்குசக்ர மெனத்தொழும்
சலதியாடுதல் யமுனைமூழ்குத றவமெனுந்தலை நாளிலே
ஐந்தலைப்பணி யுந்தருப்பையு மாகிலேனெனும் வேணுவா
யமுதமுண்டுயர் வம்சமானத திட்டமேயெனு மாசைநோய்
மந்திரத்தில றாதுதீர்க்குநின் வாசம்வீசிய துளவுகாண்
வாசவன்பதி பரவுசீபதி வாசசுந்தர ராசனே.       (88)

சுரம்போக்கு.

கட்டளைக்கலித்துறை.

சுந்தரத் தோள ரழகர்நன் னாட்டன்னத் தூவியந்தாள்
மந்தரத் தீஞ்சொற் கிளிசெல்லு மோசக்ர வாளஞ்சுற்றி
அந்தரப் பானுவு மோடச்செந் தீயுநெட் டாழிவிழக்
கந்தரத் தன்குளக் கண்போற் கொதிக்குங் கடுஞ்சுரமே.       (89)

பிச்சியார்.

மடக்கு – எண்சீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

மேதினிபோற் றழகர்மலைத் திருப்பிச்சி யாரே
வெளிப்பட்டீர் முனிவர்மலைத் திருப்பிச்சி யாரே
கோதுபடு குழல்போக விளங்குதலைச் சுகமே
கொள்ளைகொண்டீ ரிங்குவர விளங்குதலைச் சுகமே
காதிலிட்ட செம்பணியு நடுக்காவி யுடையுங்
கபாலமுஞ்சூ லமுங்கண்டே நடுக்காவி யுடையும்
ஆதரியு முங்கள்சிவ மதவேடந் திரமே
யறிவீரே யன்றெதிர்த்த மதவேடந் திரமே.       (90)

நேரிசைவெண்பா.

மதுசூத னாமுகுந்தா வாமனா மாயா
அதிரூபா ராமா வழகா – எதுவீரா
வெண்ணந் துளவா விமலா மகலாட்சா
தண்ணந் துளவா சரண்.       (91)

பதினான்குசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

சரணகோ கனகங் கற்பக நாறத்
தண்டுழாய் முடிபரி மளிக்க
சங்குநே மியும்வெண் ணிலாவெயி லெறிக்கத்
தமனியத் துகில்பள பளக்க

மரகத மேனி யெழில்பழுத் தொழுக
மகரகுண் டலம்புயத் தலம்ப
வனசலோ சனங்க ளருண்மழை பொழிய
வந்தநின் கோலநான் மறவேன்

திரன்முலைக் கிராத நுணுகிடைக் கிராத
சிறுமிகள் முகமதி யெனவாய்
திறந்தவாம் பலையும் பறந்தவண் டையுஞ்செந்
தீயெழு புகையெனப் பதறி

விரனெரித் தடங்கா விழிபுதைத் தோடி
வெண்பளிக் கறைகுடி புகுங்கா
வெற்பலங் காரா வுற்பலங் காரா
மெய்யனே தெய்வநா யகனே.       (92)

அறுசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

தெய்வசிகா மணியையெங்கள் சாரசோர
சிகாமணியைக் கண்மணியிற் சிறந்தோன்றன்னை
ஐவர்சகா யனைமுதலுந் தும்பியன்றோ
வழைத்ததின்னந் தும்பிகளே யழைத்துவாரும்
கைவருபந் தாடுமணி முற்றமெல்லாங்
கமழ்பனிநீ ரிறைத்திறைத்துக் கழுநீர்போலும்
மைவிழியார் குளமாக்கி விட்டாரென்ன
வன்பகையோ பொருமுதலை வளர்கின்றாரே.       (93)

எழுசீர்க்கழிநெடில் சந்தவிருத்தம்.

வளங்குலவு தண்டலைநெ டுங்கிரிமு குந்தர்நல்வ
ரந்தினம்வ ழங்கழ கர்தாம்
இளங்குதலை கொஞ்சியப சுங்கிளிகள் கெஞ்சியுமி
ரங்கியினம் வந்தில ரையோ
உளங்கரையு மென்சொலமு னஞ்சமன டுங்கிடவு
தைந்தவர்வெ குண்டு சுடவே
களங்கமற வெந்ததும தன்சடல மென்றனர்க
ரும்புகையொ ழிந்த தலவே.       (94)

மடக்கு.

பன்னிருசீர்க்கழிநெடி லாசிரியவிருத்தம்.

அலமேந் தழகர் பதிச்சுனையே
யாடு மேமெய்ப் பதிச்சுனையே
யணில்வாற் கதிர்போ மருந்தினையே
யகன்றே மேய மருந்தினையே

குலவஞ் சுகமே கோகிலமே
கொம்பிற் புனத்திக் கோகிலமே
கூட வளர்மா தவிப்போதே
கொடியார்க் கென்மா தவிப்போதே

கலைமுன் பிரியக் கணக்கன்றே
கரும்பைப் பிரியக் கணக்கன்றே
கணியார் காட்டு மருவலரே
கணியார் காட்டு மருவலரே       (94)

சலதி முகக்கு முகமஞ்சே
தனித்தே நிமிட முகமஞ்சே
தைய லொதுங்கும் வரவழையே
தயையுண் டானால் வரவழையே       (95)

அகவல்.

வரம்பெற் றிடுதலி னருந்தவக் கிழவரும்
கண்டகரை யடர்த்தலின் மண்டலத் தரசரும்
கற்பக மண்டலிற் கனக நாடரும்
கானமு ழக்கலி னானகந் திருவரும்
எழுதரு மறைகள்கூ றிடலால் வியாதனும்
போதக மோதலிற் புராணவே தியரும்
சாந்தமுற் றிடுதலிற் றனிஞா னிகளும்
மான்மத மடுத்தலின் வைணவக் குரவரும்
நவமணி விரித்தலி னன்னா வலரும்
அன்னம் வழங்கலி னகவாழ்க் கையரும்
செம்பொன் னீட்டலிற் றிருப்பாற் கடலும்
அச்சங் களைதலி னமுதசஞ் சீவியும்
பூமிதந் திடுதலிற் புண்ட ரீகனும்
பொங்க ருரைதலிற் பூவை வண்ணனும்
அம்பிகை கலத்தலி னந்தி வண்ணனும்
பொருமலை யெறிதலிற் புலோமிசை கொழுநனும்
அகிலங் காட்டலி னலர்கதிர் ஞாயிறும்
முத்தமிழ் துதித்தலின் முழுமதிக் கடவுளும்
சிவணுங் கடவுட் சிலம்பாற் றிறைவ
இருபது சிகரத் தெண்ணிலாச் சிகரப்
பொன்மலை வளைத்த செம்மலை யேந்தும்
வெண்குன் றெடுத்த கருங்குன் றொருநாள்
முழைவாய் திறந்து மழைபோ லிடித்து
முடுகுசெங் களத்துக் கொடுமரம் வாங்கி
அடுசம ராட நடுநடு நடுங்கி
கொடிமுடி கவிழ்தலிற் குறுநகை பூத்து
நாளைவா வின்றுன நீள்பதிக் கேகென
விடைகொடுத் தருள்மால் விடைமலை வாண
உந்திக் கமலத் துச்சிவிட் டிறங்கி
கருத்திற் றெளிந்த கரகநீ ராட்டிக்
கண்டகண் போற்குளிர் தண்டுழாய் சாத்தி
இசைமக ளுடன்றுதித் தெண்ணில் கோடி
பிரமர்போற்      (*)றிய பரம சாமீ
அளவறு பிறைகளும் களனுறு கறைகளும்
கணக்கிலா மழுக்களும் குணக்கிலாக் கழுக்களும்
உடையார் புலித்தோ லுடையா ரிடையார்
அலகிலா வுமைகளு மிலகுபன் னதிகளும்
பதிகொ ளத்தனார் குதிகொள் மத்தனார்
வீரபத் திரமுதற் கோரபுத் திரரொடும்
அனந்த முருத்திரர் தினந்தினந் தொழுதிடும்
திருவடி யுடைய பிரம மூர்த்தி
ஒருவிண் ணப்பமுன் பெருமுனி பின்னர்
நம்பிநன் னிழலிற் றம்பின் தொடரச்
செஞ்சிலை யொடும்போய்க் கருஞ்சிலை மிதித்து
மின்னிள மேகமும் வில்லும் பிறையும்
அரவிந் தமுமாங் கதிற்சில பூவும்
சங்கமுந் திகிரியும் பங்கய முகுளமும்
காந்தளுங் கொடியும் பாந்தளுங் கதலியும்
மாவிளந் தளிரும் வகுத்தனை மீண்டும்
புன்மதி யுடைய வென்மனப் பாறையை
நற்பதப் படுத்தி யற்புதம் விளைக்கும்
கண்ணநீ யுண்ணக் கவர்ந்த
வெண்ணெய் செய்து விடுவதுன் கடனே.       (96)

தாழிசை

வெண்ணெய்சூறை கொண்டகொண்டல் மேனிமாயர் வனகிரி
விறலியென்ற கோகிலத்து மென்பெடைக்கோர் சேவல்கேள்
பண்ணுமிங்கு தங்குடைந்து பாணர்தம்மை வென்றபின்
பாதகற்கு மருமையோவோர் பாணநின்னை வெல்வது
வண்ணமார் பெழுந்தகொங்கை கிண்ணமென்ப ரதுமெய்யா
வந்துபா னிறைந்ததுண்மை மதலைபால னென்பதும்
எண்ணெயீது பசுநரம்பெ னுங்கொடிக்கு விட்டநீ
ரேற்குமோ வவர்க்கும்யாழின் வீக்குகாய நின்பமே.       (97)

எழுசீர்க்கழிநெடிலடி வாசிரிய விருத்தம்

காயரன் பிரமர்முத லோர்தொழுஞ் சனகர்நிமிர்
காளமஞ் சனவழகர் மா
மாயரம் புவியுநவ நீதமுங் கமிழ்பவள
வாயர்கண் டிலர்கொ லளிகாள்
பாயும்வெம் புலிபொருத மாமனென் பவன்விடுமோர்
பாறைநெஞ் சினள் சிகரநேர்
ஆயகொங் கையிலொழுகு பால்பரந் தெனவிரிய
கோர சந்திர கிரணமே.       (98)

சந்தவிருத்தம்

சந்தன நிழற்குளிரு வந்ததகை தீரச்
சந்திரமுகி யேகவியு மிந்த்ரதரு மானும்
ஐந்தலை யராவில்வரு மழகர்பழ மறைதே
டரியமுனை யார்முளரி தெரியமுனை போல்
வந்தருணம் வைகையிது பொய்கையிது முத்தின்
வண்டலிது கொண்டறவழ் மண்டபமி தல்லால்
செந்திருநன் னகரமிது சிகரமிது சோலைச்
சிலம்பிடைசி லம்பியசி லம்புநதி யிதுவே.       (99)

கட்டளைக்கலித்துறை.

நதிபெற்ற பாதர் மலையலங் காரர்நன் னாட்டணங்கே
கதிபெற்ற னன்னந்த மீகாமன் காமன் கழைகழையே
பதிபெற்ற வவ்வங்க மிவ்வங்கஞ் சங்கம் பலித்ததங்கே
துதிபெற்ற முத்தங் கிடைத்ததொப் பேதுன் சுகக்கடற்கே.       (100)

அறுசீர்கழிநெடி லாசிரியவிருத்தம்.

சகமும் பிகமும் மறையோதும் சோலை மலையி லலங்காரர்
இகமும் பரமும் வகுத்தபிரா னெல்லாப் பதமும் தரவாழ்
மகமுந் தவமுஞ் செய்ததொக்கும் மானந் தனைக்கும் பிடுவ
செகமும் பரவுஞ் சிலம்பாற்றுத் திருநீர் படியு மொருநீரே.       (101)

ஸ்ரீ அழகர் கலம்பகம் முற்றுப்பெற்றது.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அழகர் கிள்ளை விடு தூது–ஸ்ரீ சொக்க நாதர் புலவர்

October 23, 2023

ஸ்ரீ அழகர் கிள்ளை விடு தூது

கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது.
காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் கொண்ட நூல் இது
இந்நூலை இயற்றியவர் சொக்கநாதப் புலவர்.

  1. திருமாலிருஞ்சோலை,
  2. இடபகிரி,
  3. தென்திருப்பதி,
  4. சஞ்சீவி பர்வதம்,
  5. பழமுதிர்சோலை

எனப் பல பெயர்கள் உண்டு.

கிள்ளை விடு தூதில் அழகர் மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
அழகர் மலைக் கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் கூறக் கிளியைத் தூது அனுப்புவதாக அமைகிறது நூல்.
நூலின் முதலில் கிளியின் பெருமைகள் சொல்லப்படுகின்றன.
அடுத்துக் கோடைத் திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமானிடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாறும் சொல்லப்படுகின்றன.
இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கிவருமாறு கிளியிடம் கூறுவதாக நூல் அமைகிறது.

இவர் மதுரை நகரைச் சார்ந்தவர். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.

பலபட்டடைக் கணக்கு எழுதும் தொழில் செய்யும் மரபில் வந்ததால் இப்பெயர் பெற்றார்.

அழகர் மலைக்கு,

  1. திருமாலிருஞ்சோலை,
  2. இடபகிரி,
  3. தென்திருப்பதி,
  4. சஞ்சீவி பர்வதம்,
  5. பழமுதிர்சோலை

எனப் பல பெயர்கள் உண்டு.

——–

திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத்‌ திருமால்‌ திருப்பதிகள்‌ பதினெட்டனுள்‌ ஒன்று.
சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில்‌ இதன்‌ பெருமை சிறப்பித்துச்‌ சொல்லப்‌ படுகின்றது.
அந்நூலில்‌ இளம்பெருவழுதியாரென்னும்‌ புலவ ராற்‌ பாடப்பெற்று, மருத்துவன்‌ நல்லச்சுதனாரால்‌ இசை யமைக்‌கப் பெற்ற
நோதிறப்‌ பண்ணிலமைந்த பதினைந்தாம்‌ பாடல்‌ இத்தலப்‌ பெருமையை விரிவாகக்‌ கூறும்‌;
அப்பாடலின்‌ பொருட்‌ சுருக்கம்‌ வருமாறு :–

‌அறிவெல்லையால்‌ அறியப்படாத புகமுடனே விளங்கி நிலத்தைத்‌ தாங்கும்‌ சக்கர வாளம்‌ முதலாகத்‌
தொல் லிசைப்‌ புலவர்கள்‌ ஆராய்ந்துரைத்த குன்றங்களைப்‌ பொதுவகையால்‌ சொல்லப்‌ புகுந்தாற்‌ பலவாம்‌ ;
அப்பலவற்றுள்ளும்‌ நிலத்தில்‌ உள்ளோரது பசித்‌ துன்பத்தை நீக்கி, நிறை பயன்களெல்லா வற்றையும்‌
எப்பொழுதும்‌ அவர்‌ பெறப்‌ பயன்படும்‌ குன்றுகள்‌ சில;
அச் சிலவற்றுள்ளும்‌ தெய்வங்கள்‌ தாமாக விரும்பும்‌ மலர்‌ களையுடைய தடாகங்களும்‌ மேகம்‌ படியும்‌ சிகரங்களும்‌ உள்ள குல வரைகள்‌ சில சிறந்தன ;
அவற்றுள்ளே கடலும்‌ கானலும்‌ போல வேறு வேறாகிய நிறத்தினையும்‌, சொல்லும்‌ பொருளும்‌ போல வேறுபடாத தொழிலினையுமுடைய
மாயோனும்‌ பலதேவரும்‌ எழுந்தருளியிருக்கும்‌ சோலைமலை சிறந்தது.
துழாய்‌ மாலையை யுடைய திருமால்‌ அருள்‌ புரிந்தாலல்லாமல்‌ துறக்கம்‌ அடைதல்‌ எளிதாகுமோ ?
அரிதிற்‌ பெறும்‌ துறக்கத்தை எளிதிற்‌ பெறச்‌ செய்வதனால்‌ திருமாலிருஞ்சோலை மலையை ஏத்தக்‌ கடவோம்‌.

பலதேவரது திருமார்பிலுள்ள வெண் கடப்ப மாலையைப்‌ போல அருவியாக வீழ்வதனால்‌ சிலம்பாறு அழகுபெறும்‌.
திருமாலிருஞ்சோலை யென்னும்‌ பெயர்‌ உலகமெல்லாம்‌ பரவ, மகளிரும்‌ மைந்தரும்‌ காமத்தை விதைத்து விளைக்கும்‌
யாமத்‌ தியல்பையுடைய இருங்குன்றத்தில்‌ இளவெயில்‌ சூழ இருள்‌ வளர்தலை யொத்துப்‌ பீதாம்பரத்தையுடைய
திருமால்‌ பலதேவ ரோடு அமர்ந்து நிற்கும்‌ நிலைமையை, மாந்தர்களே !
தியானம்‌ செய்ம்மின்‌ ;அம் மலையின்‌ சிறப்பைக்‌ கேண்மின்‌ :

சுனைகளிலெல்லாம்‌ நீலமலர்‌ மலர அச்சுனையைச்‌ சூழப்‌ பொன்னிறமுள்ள அசோக மலர்கள்‌ மலர்தலாலும்‌
வேங்கை மலர்கள்‌ மலர்தலாலும்‌ பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஓத்த நிலையினதாயிற்று அம்மலை.
இருங்குன்றென்னும்‌ பெயர்‌ பரவி உலகத்தில்‌ பழையதாகிய புகழையுடைய அது தன்னைக்‌
கண்டாரது மயக்கத்தை அறுக்கும்‌ தெய்வம்‌ ;
அதனால்‌ சென்று திருமாலைத்‌ தொழும்‌ ஆற்றலை இல்லாதீர்‌ !
அம்மலையைக்‌ கண்‌ டேனும்‌ பணிமின்‌.
குட்டியால்‌ தழுவப்பட்ட மந்தி பாயவும்‌, முல்லை மலர்‌ கற்பு நிகழ்ச்சியைக்‌ காட்டவும்‌, மயில்கள்‌ அகவவும்‌,
குருக்கத்தியின்‌ இலை உதிரவும்‌, அதன் கண்‌ இருந்து குயிலினம்‌ கூவவும்‌
அவ்‌ விருங்குன்றத்தில்‌ குகைக்குள்‌ முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.
நும்‌ மனைவியரோடும்‌ தாய்‌ தந்தையரோடும்‌ குழந்தைகளோடும்‌ சுற்றத்தோடும்‌ கூடி
அக் குன்றத்தைத்‌ தெய்வமாக மதித்துத்‌ திசை நோக்கித்‌ தொழுது சென்மின்‌.

தன்‌ திருவுந்தியில்‌ முன்பு உண்டாகிய கமலத்தை யொக்‌கும்‌ கண்ணை உடையவனும்‌,
மேகம்‌ இருள்‌ மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும்‌,
எல்லா உலகத்திலும்‌ வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க்‌ கூட்டங்களின்‌ பிறவித்‌ துன்‌பத்தைக்‌ களைவோனுமாகிய
திருமால்‌ அன்பு கொண்டு அக்குன்‌றத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்கின்றான்‌.
திருமாலே ! நீ பசுந்துழாய்‌ மாலையையுடையை ; நீல மலையைப்‌ போன்றாய்‌;
மிக்க ஒளியினையுடையை; ஒற்றைக்‌ குழையையுடையை ; கருடக்கொடியை உடையை;
வளைந்த கலப்பையை உடையை; தண்டு, சங்கு, சக்கரம்‌, வில்‌, அம்பு, பாராவளை, வாள்‌ என்பவற்றை ஏந்தினை.
இங்ஙனம்‌, வேதம்‌ அவன்‌ பெருமை ஈதென்று உரைத்தலால்‌ யாமும்‌ அவற்றுள்‌ அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத்‌
திருமால்‌ பலதேவரென்னும்‌ இருவரையும்‌ தொழுது அவ்விருங்‌குன்றத்தின்‌ அடியில்‌ வாழ்தல்‌
எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக !?

இப் பரிபாடலால்‌, முற்காலத்தில்‌ இத்தலத்தே திருமாலோடு
நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும்‌ கோயில் கொண்டு எழுந்‌தருளியிருந்தனரென்று தெரிகின்றது.
அன்றியும்‌, இற்றைக்குச்‌ சற்றேறக்குறைய இரண்டாயிர வருஷங்களுக்கு முன்பே பாடப்‌ பெற்ற இப்பரிபாடலில்‌ உள்ள,
இருங்குன்‌ றென்னும்‌ பெயர் பரந்‌ ததுவே
பெருங்கலி ஞாலதீதுதீ தொன்றியல்‌ புகழது ??–என்னும்‌ பகுதி
அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப்‌ பாராட்டுதல்‌ அறிதற்குரியது.

————————-

சிலப்பதிகாரச்‌ செய்தி
சிலப்பதிகாரத்தில்‌, மதுரை நோக்கிச்‌ செல்லும்‌ கோவலனுக்கு ஓரந்தணன்‌ வழியிலே
காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில்‌ இம் மலையைப் பற்றிய செய்திகள்‌ பல காணப்படுகின்றன :–
திருமால்‌ குன்றத்துச்‌ செல்வீராயின்‌, அங்கே மிக்க மயக்கத்தைக்‌ கொடுக்கும்‌ பிலத் துவார வழி ஒன்று உண்டு.
அங்கே புண்ணிய ஸ்ரவணம்‌, பவ காரணி, இட்ட சித்தி என்னும்‌ பெயரை யுடைய மூன்று பொய்கைகள்‌ உள.
புண்ணிய ஸ்ரவணத்தில்‌ நீராடினால்‌ இந்திரனாற்‌ செய்யப்பட்ட இந்திர வியாகரணமென்‌னும்‌ இலக்கணத்தை உணரலாகும்‌.
பவ காரணி யென்னும்‌ தீர்த்‌தத்தில்‌ ஆடுவார்‌ பழம் பிறப்பை உணர்வர்‌.
இட்ட சித்தியில்‌ நீராடி நினைத்தவற்றை யெல்லாம்‌ அடைதல்‌ கூடும்‌.
அங்கே சிலம்பாற்றின்‌ கரையின் கண்‌ உள்ள கோங்க மரத்தின்‌ நிழலிலே ஒரு தெய்வப்பெண்‌ தோன்றி, ‘
இப்பிறப்பிற்கு இன்பமும்‌ மறு பிறப்பிற்கு இன்பமும்‌ இவை இரண்டும்‌ ஒழிந்து
எக்காலத்தும்‌ ஒன்றாந்‌ தன்மையாய்க்‌ கோட்டமின்‌ றி அழிவற நிற்கும்‌ இன்பமு மாகிய பொருள்கள்‌ யாவை?
அவற்றை உரைமின்‌ ;

யான்‌ இம்‌ மலையடிவாரத்திலே வாழ்வேன்‌ ; வரோத்தமை யென்னும்‌ பெயருடையேன்‌.
யான்‌ வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார்‌ கூறுகின்றனரோ அவருக்கு யான்‌ ஏவல்‌ புரிவேன்‌ .
நீவிர்‌. உரைத்தீராயின்‌ இப்பொழுது இப்பிலவாயிற்‌ கதவைத்‌ திறந்து தருவேன்‌? என்று சொல்வாள்‌.
அவள்‌ வினாவியவற்றிற்கு விடை கூறின்‌ அவள்‌ பிலம்‌ திறந்துவிடுவாள்‌
மேலே செல்லின்‌ ஆங்கொரு பெண் தெய்வம்‌ முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும்‌ காட்டுவாள்‌.
அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும்‌ அஷ்டாக்ஷரத்தையும்‌ மனத்தால்‌ நினைத்து ஜபித்து நீராடின்‌ நற்பயனை அடைவீர்கள்‌.
அப்பொய்கையினால்‌ உண்டாகும்‌ பயனை விரும்பீராயின்‌, அவற்றை நினையாது, அம்மலைமீது
நின்‌றோனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளைத்‌ தியானம்‌ செய்‌யுங்கள்‌.
அங்கே துவஜஸ்தம்பத்தைக்‌ காண்பீர்கள்‌. அப்பெருமானுடைய திருவடி தரிசனம்‌ பிறவித்‌ துன்பத்தைக்‌ கெடுக்கும்‌ (சிலப்‌. 11 : 87–138, சுருக்கம்‌.)

இப் பகுதியால்‌ இந்தத்‌ தலத்தில்
மூன்று பொய்கைகளும்‌, சிறப்புடைய கோங்கமரம்‌ ஒன்றும்‌, பிலத்துவாரம்‌ ஒன்றும்‌ இருந்து வந்தனவென்று தெரியவரும்‌.
அன்றியும்‌ சிலப்பதிகார காலத்தில்‌ இத்தலத்தின்‌ கண்ணே தெய்வப்‌ பெண்கள்‌ வாழ்ந்து வந்ததாக
மக்கள்‌ எண்ணி யிருந்தனரென்பதும்‌ பெறப்படும்‌.

————

வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால்‌ இயற்றப்பெற்ற கலம்பகம்‌ ஒன்றும்‌,
சாமி கவிகாளருத்திரர்‌ இயற்றிய பிள்ளைத்‌ தமிழ்‌ ஒன்றும்‌,
பெருங்கரைக்‌ கவிகுஞ்சர பாரதியால்‌ இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும்‌
இத்தல ஸம்பந்தமாக உள்ளன.

—————

தலத்தின்‌ திருநாமங்கள்‌
அலங்காரன்மலை, அழகர்‌ கோயில்‌, அழகர்மலை, ஆராம சைலம்‌, இருங்குன்றம்‌, குலபூதரம்‌, குலமலை,
குளிர்மாமலை, குன்றம்‌, கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம்‌,
சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம்‌, திருமலை, திரு மால்குன்றம்‌, திருமாலிருஞ்சோலை,
திருமாலிருஞ்சோலைமலை, தென்‌ திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை,
பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம்‌, மண்டூகபர்வதம்‌, மாலிருங்‌குன்றம்‌, வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.

பெருமாள்‌ திருநாமங்கள்‌
அலங்காரர்‌, அழகர்‌, கள்ளழகர்‌, சங்கத்தழகர்‌, சுந்தரத்‌ தோளர்‌, சுந்தரபாஹு, சுந்தரராஜப்‌ பெருமாள்‌,
சோலைமலைக்‌ கரு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர்‌, மாலலங்‌காரர்‌, விருஷபாத்திரி நாதர்‌.

நாச்சியார்‌ திருநாமம்‌
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும்‌ வழங்‌கும்‌.
ஆண்டாளும்‌ இங்கே திருக்கோயில்‌ கொண்டெழுந்‌ தருளியுள்ளாள்‌.

தீர்த்தங்கள்‌
சிலம்பாறு என்பத! இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்‌தம்‌.
அது தேனாறு, தூபுர கங்கை, பகவத்பாத தீர்த்தம்‌, மஞ்‌சீரநதி, விஷ்ணு கங்கை யென்றும்‌ வழங்கப்பெறும்‌.
அது திருக்‌ கோயிலுக்கு வடக்கே 23 மைல்‌ தூரத்தில்‌ இருக்கிறது.
மற்றத்‌தீர்த்தங்கள்‌ வருமாறு :–
அக்கினிவாபி, அனுமதீர்த்தம்‌, இஷ்டசிதீதி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக்‌கவி,
கருடதீர்த்தம்‌, கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்‌
டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம்‌, புண்ணிய சரவணம்‌,
பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும்‌ மூங்கிற்கவி.

விருக்ஷங்கள்‌
இங்கே முதல்‌ யுகத்தில்‌ ஆலாகவும்‌
இரண்டாவது யுகத்தில்‌ அரசாகவும்‌
மூன்றாவதில்‌ வில்வமாகவும்‌
இக்கலியுகத்தில்‌ புத்திரதிபமென்னும்‌ பெயரின தாகவும்‌ ஒரு ஸ்தல விருக்ஷம்‌ உண்டென்று இந்த நூல்‌ கூறும்‌.

மூன்றாம்‌ யுகத்தில்‌ பலாவாகவும்‌
இக்கலி யுகத்தில்‌ புத்திர ஜீவியென்னும்‌ விருக்ஷமாகவும்‌ இருப்பதாக இத்தல மான்மியம்‌ தெரிவிக்கும்‌.

நூபுரகங்கையின்‌ ஆரம்பத்தில்‌ ஒரு மகா வடவிருக்ஷம்‌ இருந்ததென்பர்‌.
சந்தனமரத்தைத் தலவிருக்ஷமென்பாரும்‌ உளர்‌.
சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும்‌, இந்நூலில்‌ கூறப்படும்‌ உறங்காப்புளியும்‌
இத்தலத்தோடு .சேர்த்திச்‌ சொல்லப்பெறும்‌ விருக்ஷங்களாம்‌.
இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும்‌ கூறுவர்‌.

விமானம்‌
சோமச்சந்திர விமானமென்றும்‌, சோமச்சந்த விமான மென்றும்‌ வழங்கும்‌.
இது பிரணவாகாரமானதென்று தலமான்‌ மியம்‌ கூறும்‌.

மண்டபங்கள்‌
(1) மாத்வி மண்டபம்‌ : இது சிலம்பாற்றங்கரையில்‌ இருப்‌பது; இந்தத்‌ தலமான்மியத்திலும்‌ இது கூறப்படுகின்றது.
(2)சோலைமலை மண்டபம்‌ : இது சாம்பல்போடும்‌ மண்டபமென்‌ றும்‌ வழங்கும்‌ ; பதினாறு கால்களை உடையது.
(3) கனு மண்டபாம் : கல்யாண சுந்தரவல்லித்தாயார்‌ கனுத்‌ திருவிழா நடைபெறும்‌ மண்டபம்‌.
4) வண்டியூர்‌ மண்டபம்‌ : அழகர்‌ எழுந்‌ தருளும்‌ மண்டபங்களுள்‌ ஒன்று.
(5) தேனூர்‌ மண்டபம்‌ :வையையாற்றின்‌ இடையிலே உள்ளது; அழகர்‌ எழுந்தருளும்‌ மண்டபங்களுள்‌ ஒன்று;
இது தேனூரிலுள்ள அன்பர்களாற்‌ கட்டப்பெற்றமையின்‌ இப்பெயர்‌ பெற்றது.

பூசித்துப்‌ பேறுபெற்றோர்‌
அம்பரீஷன்‌, அருச்சுனன்‌, அனுமன்‌, இந்திரத்தியும்நன்‌,
இந்திரன்‌, கந்தருவன்‌ ஒருவன்‌, கருடன்‌, குப்ஜபாண்டியன்‌,

கெளதம முனிவர்‌, சதிரிளமடவார்‌, சந்திரகேது, சுதபஸ்‌ என்‌
னும்‌ முனிவர்‌, செளனக முனிவர்‌, தருமதேவர்‌, தாலப்பியர்‌,

பச்சை வாரணதாசர்‌, பராசரர்‌, பாண்டவர்‌, பிரகலாதன்‌, பிரமதேவர்‌, புண்ணியம்‌, புரூரவ௬ு, புலத்தியர்‌, மரீசி,
மலயத்துவசன்‌, மார்க்கண்டேயர்‌, மாவலி, மைத்திரேயர்‌, யானையொன்று, ர௬ுக்மாங்‌கதர்‌, வசிஷ்டர்‌, விபீஷணன்‌.

பிற கோயில்கள்‌
(1) ஸ்ரீ நாகநாதர்‌ கோயில்‌: பல நாகர்கள்‌ உள்ள கோயில்‌.
(2) இராக்காயி அம்மன்‌ கோயில்‌ :
(3) அனுமன்‌கோயில்‌ : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ளது.
(4) கருடன்‌ கோயில்‌ : கருட தீர்த்தத்துகீகு அருகில்‌ உள்ள து.
(5) பாண்டவர்‌ கோயில்‌ : பாண்டவர்‌ தீர்த்தத்துக்கு அருகில்‌ உள்ளது.
(6) சதிரிளமடவார்‌ கோயில்‌ : இம்மலையின்‌ தென்‌ பகுதியில்‌ உள்ளது.
(7) சக்கரத்தாழ்வார்‌ கோயில்‌ : இதற்‌ குச்‌ சில நிவந்தங்கள்‌ அமைந்ததாகக் கூறும்‌ சிலாசாஸனம்‌ உண்டு.
(8), தண்டலைக்‌ கோயில்‌.
(9) வெள்ளிமலை : இது மலையின்‌ தென்‌ பகுதிக்குப்‌ பெயரென்றும்‌- இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும்‌ கடவுள்‌ உறைவதாகவும்‌ கூறுவர்‌.
(10) க்ஷேத்திரபாலகர்‌ கோயில்‌ : க்ஷேத்திரபாலகர்‌ கல்லெனவும்‌ வழங்கும்‌ ; இக்கல்லில்‌ வைரவர்‌ எழுந்தருளியிருக்கின்‌றனரென்பது லீதிஹ்யம்‌.

விழாக்கள்‌
1) கோடை உத்ஸவம்‌ : இஃது இந்நூலிற்‌ சிறப்பிக்கப்‌ பெறுவது ; சித்திரா பெளர்ணமியில்‌ நிகழ்வது. இவ்விழாவில்‌ பெருமாள்‌, ஆண்டாள்‌ சூடிக் கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்‌.
(2) வசந்த உத்ஸவம்‌ : வைகாசி மாதம்‌ பத்துநாள்‌ நடை பெறும்‌.
3 முப்பழ உத்ஸவம்‌ : ஆனிப்‌ பெளர்ணமியன்று முக்‌ கனிகள்‌ நிவேதனம்‌ செய்யப்படும்‌.
(5) பிரும்மோத்ஸவம்‌ : பத்துநாள்‌ திருவிழா. மலயத்து வச பாண்டியன்‌ முதலில்‌ தொடங்கியதாகத்‌ தலமான்மியம்‌கூறும்‌.
தங்கப்‌ பல்லக்கில்‌ பெருமாள்‌ எழுந்தருளுவர்‌. ஆஷாட பெளர்ணமி யன்று திருத்தேர்‌.
5)கருட ஸேவை: ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம்‌ : 5 நாள்‌ நடைபெறும்‌.-ஆவணி மாதம்‌ பெளர்ணமியோடு நிறைவுறும்‌.
(7) நவராத்திரி : புரட்டாசிமாதம்‌ நடைபெறுவது.
(8) எண்ணெய்க்‌ காப்பு உத்ஸவம்‌ : ஐப்பசி மாதம்‌ நடை பெறுவது, சுக்கில பக்ஷத்‌ துவாதசி யன்று பெருமாள்‌ தீர்த்தத்‌ தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம்‌;
இதனால்‌ இது தொட்டி யுத்ஸவமென்றும்‌ வழங்கும்‌.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு.
(10) அத்யயன உத்ஸவம்‌ : மார்கழி மாதம்‌ நடைபெறும்‌ பகற்‌ பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர்‌ உத்ஸவம்‌ : தை மாதம்‌ நடைபெறுவது.
(12) திருக் கல்யாண உத்ஸவம்‌ : பங்குனி உத்தரத்தன்று நிகழும்‌. மறுநாள்‌ தெப்பத்‌ திருவிழா நடைபெறும்‌.
இவற்றை யன்றி வேறு சில உத்ஸவங்களும்‌ நடைபெறுவதுண்டு. .
வாமன புராணம்‌, வராக புராணம்‌, பிரம்மாண்ட புராண மென்னும்‌ மூன்று புராணங்களில்‌
இத்திருப்பதியின்‌ மான்மியம்‌ கூறப்பட்டிருப்பதாகத்‌ தலபுராணம்‌ தெரிவிக்கின்றது.

திவ்யப்‌ பிரபந்தத்திற்‌ கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள்‌ சிலம்பாற்றை,
சிலம்பாறு பாயுந்தென்‌ நிருமாலிருஞ்‌ சோலையே -என்றும்
ஓட்டருந் தண் சிலம்‌ பாறுடை மாலிருஞ்‌ சோலையதே
என்றும் பெரியாழ்வாரும்‌,

சந்தொடு காரகிலுஞ்‌ சுமந்து தடங்கள்‌ பொருது
வந்திழி யுஞ்சிலம்‌ பாறுடை மாலிருஞ்‌ சோலை –என்று ஆண்டாளும்

சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ்‌ சோலை –என்று திருமங்கை மன்னனும்‌ பணித்தனர்‌.

இங்கே திருக்கோயில்‌ கொண்டெழுந்தருளிய பெருமாளை,
சுந்தரத்‌ தோளுடையான்‌
திருமாலிருஞ்‌ சோலைநம்பி
மாலிருஞ்‌ சோலைநம்பி
சுந்தரன்‌ –என்று ஆண்டாளும்‌,

தேவர்கள்‌ நாயகன்‌
கேசவ நம்பி –என்று திருமங்கைமன்னனும்‌,

அழகர்‌ என்று நம்மாழ்வாரும்‌ போற்றுகின்றனர்‌.

நெடுமாறன்‌ தென்கூடற்கோன்‌
தென்னன்‌ கொண்டாடும்‌ தென்றிருமாலிருஞ்‌ சோலை
அளித்தெங்கு நாடு நகரமும்‌ தம்முடைதீ தீவினை .தீர்க்கலுற்றுதீ தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத்‌ திருமாலிருஞ்சோலையே
சென்றுலகங்‌ குடைந்தாடுஞ்‌ சுனைத்திரு மாலிருஞ்சோலை –என்று (பெரியாழ்வார்‌)

தேசமெல்‌ லாம்வணங்குநீ்‌ திருமாலிருஞ்சோலை என்று (திருமங்கையாழ்வார்‌)

தென்சொல்‌ திசைக்குத்‌ திலகமாய்‌ நின்ற திருமாலிருஞ்‌ சோலை என்று (நம்மாழ்வார்‌)
இவ்வாறு இத்தலம்‌ பாராட்டப்படுகின்றது.

————–

நூலின்‌ பொருள்‌ அமைப்பு
இந்நூலில்‌
1-தூதுவிடப்‌ பெறும்‌ கிளியின்‌ பெருமையும்‌,
2-பாட்டுடைத்‌ தலைவராகிய அழகர்‌ சிறப்பும்‌,
3-தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும்‌
முறையே கூறப்படுகின்றன.

———–

கிளியின்‌ பெருமை
திருமாலின்‌ திருநாமமாகிய அரியென்னும்‌ பெயரையும்‌, அவர்‌ திருக்கண்வளரும்‌ பாயலாகிய ஆலிலையின்‌
நிறத்தையும்‌ கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும்‌ கிளியரசே, நான்‌ சொல்வதைக்‌ கேட்பாயாக :
உன்னுடைய பெருமை பலபடி யாகப்‌ பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன்‌ சொல்லைக்‌ கேளாதவர்‌ ஆர்‌ ?
மன்மதனது ஒற்றைச்‌ சக்கரங்கூட இல்லாமற்‌ செலுத்துகின்ற காற்றாகிய தேரைப்‌ பலங்கொண்டு
இழுத்துத்‌ திரிகின்ற பச்சைக்‌ குதிரையே, ஒற்றைச்‌ சக்கரத்தோடு கூடிய சூரியன்‌ தேர்‌ ஒன்றை
யிழுக்கும்‌ பச்சைக் குதிரைகள்‌ ஏழும்‌ உனக்கு ஒப்பாகுமோ?
அந்தக்‌ குதிரைகள்‌ சுற்றிவரும்‌ உலக மும்‌ நீயே; ஞான விளக்கும்‌ நீயே? என்று சொல்வதிற்‌ பிழை யென்ன ?
உன்‌ உருவம்‌ கொண்ட சுகமுனிவர்‌ எல்லாம்‌ தாமாகவே இருந்தார்‌.
எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும்‌ உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள்‌ ஒன்‌நில்‌ அடங்குமன்றோ

உன்‌ மேனி முமுவதும்‌ பச்சை நிறமா யிருந்தால்‌ உன்னைக்‌ கண்‌டோர்‌ பார்வதி தேவியாரென்று
எண்ணி விடுவார்களென்று கருதியோ நீ மூக்கு மாத்திரம்‌ சிவந்திருக்கின்றாய்‌ ?
நாக்குத்‌ தடுமாறிப்‌ பேசுபவர்களை உலகத்தார்‌ சேர்த்துக்‌ கொள்ளாமல்‌ விடுவர்‌ , -உன்னை அப்படி விடுபவர்‌ ஒருவரும்‌ இல்லை.
முன்பு சீவகனுடைய மனைவியருள்‌ ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக்‌ காரணம்‌,
அவள்‌ உன்‌ பெயருள்‌ ஒன்றாகிய தத்தை யென்பதைக்‌ கொண்டமையே.
பிற பறவைகளினிடத்தில்‌ திருமால்‌ திருநாமத்தையும்‌, சிவபெருமான்‌ நாமத்தையும்‌ சொல்வதனால்‌ பயனில்லை.
உன்னிடம்‌ சொன்னால்‌ நீ அவற்‌ றைப்‌ பயின்று கூறுவாய்‌.
கூடுவிட்டுக்‌ கூடுபாயும்‌ யோகி உனக்கு ஓப்பாவானோ ?
பாலின்‌ பெயராகிய கீரம்‌ என்ப து உனக்‌கும்‌ பெயர்‌. அதனால்‌ உனக்கும்‌ ஆடை (பாலாடை, உடை) உண்டு.
பாடகம்‌, காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய்‌. -கற்புடையாய்‌ ; சோலையாகிய மனையிலே சேர்வாய்‌. இவற்றால்‌ உன்னையும்‌ ஒரு பெண்ணென்றே சொல்லலாம்‌.

சாயுச்சியமென்னும்‌ பதவியைச்‌ சுகரூபமென்பர்‌.
உன்‌ பெயர்‌ சுகமாதலின்‌ அது நின்‌ சொரூப மென்றே சொல்லவேண்‌டும்‌.
வன்னி (வன்னி நெருப்பு கிளி )பரிசித்த வெல்லாம்‌ பரிசுத்தம்‌ ? என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும்‌ உண்கின்‌றனர்‌.
யாருடைய சொல்லையும்‌ நீ கற்றுக்கொள்வாய்‌.
யோகங்கள்‌ சாதித்துப்‌ 1 பச்சைப்பிள்ளையாக வாழும்‌ பெரியோர்‌ பலர்‌ உண்டு.
ஆயினும்‌ அந்த யோகங்கள்‌ சாதியாமலே பச்சைப்‌ பிள்ளையாய்‌ நீ வாழ்கின்றாய்‌.

நீ|பாலனத்தாலே(பாலனம் பாலோடு கூடிய சோறு) பசி தீர்ககின்றாய்‌.
திருமாலும்‌ தம்முடைய பாலனத்தாலே உலகத்தோர்‌ பசியைத்‌ தீர்க்கின்றார்‌.
ஆதலின்‌ நீ அவருக்கு ஒப்பாகின்றாய்‌.
மிக்க நண்பினரானாலும்‌ பூசையை விட்டார்‌ முதலியோரை நீ விரும்பாய்‌.
உனக்குப்‌ பச்சை சிவப்பு என்னும்‌ இரண்டு நிறம்‌ இருப்பதனால்‌
இரண்டு வடிவமுடைய (பறவை வடிவமும் புருஷ வடிவமும் )கருடாழ்வானுக்கு இணை யாவாய்‌. ‘

ஐபம்‌ செய்வோர்களுக்கெல்லாம்‌ திருவரங்கர்‌ திருநாமத்தை நீ உபதேசம்‌ செய்வாய்‌.
பெண்களுக்கு ஆடவரைப்‌ போல முத்தம்‌ கொடுப்பாய்‌,
அங்ஙனம்‌ முத்தங்கொடுப்பதனால்‌ அவருக்கு இதழிலே செந்நிறம்‌ உண்டாயிற்றோ?
அன்றி அவர்‌ இதழ்ச்‌ சிவப்பு உன்‌ அலகிற்கு ஏறியதோ ?
யாருக்கும்‌ தோந்றாத வனாகிய மன்மதனை நீ தேர்க்‌ குதிரையாகி இழுத்து வருவாயாயின்‌, அவனுக்குக்‌ குறை ஏது?
யோகிகளெல்லாம்‌ அடக்கிக்‌ கஷ்டப்படுகின்ற வாயுவை உன்‌ பின்னாலே (தேராக) வரச்‌ செய்வாய்‌.
திருமகளும்‌ மலைமகளும்‌ தம்முடைய திருக்‌ கரங்களிலே உன்னைப்‌ பிடித்திருக்கும்படி நீ நட்புப்‌ பூண்டாய்‌.
திருமாலுக்கும்‌, பார்வதிக்கும்‌, உனக்கும்‌ பச்சை நிறம்‌ வந்த விதம்‌ எங்ஙனம்‌ ?
யாவரும்‌ மெச்சும்‌ பறவையே, உன்னுடைய நாக்குக்‌ கூழை நாக்கானது, அரி கீர்த்தனத்தை இடைவிடாமற்‌ செய்ததனாலோ ?
குயில்‌, வண்டு, புறா, மயில்‌, நாகணவாய்ப்புள்‌ என்னும்‌ பறவைகளுக்கு உன்‌ சிறப்பு வருமோ ?
வேதமாகிய சிவபிரான்‌ குதிரைகளுக்குப்‌ பிரமதேவர்‌ சாரதி ;
மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச்‌ சாரதி யார்‌ ? சிவபெரு மான்‌ திருநுதற்‌ கண்ணால்‌ மன்மதனும்‌, அவன்‌ நாணாகிய வண்டும்‌, சின்னமாகிய குயிலும்‌ சுடப்பட்டுக் கருகிய காலத்திலும்‌ நீ கருகாமலே வந்தாய்‌.
உனக்குக்‌ கனியினிடத்தில்‌ அதிக விருப்பம்‌.
நீ அரிதாளை (திருமால் திருவடி -அரிந்த தினைத்தாள்) விட்டு அகலாய்‌.
எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக்‌ கில்லை. எனக்கும்‌ உனக்கும்‌ பேதம்‌ இதுதான்‌.
நீ வீட்டுக்குள்‌ இருக்கும்‌ மனிதர்களுடன்‌ இதமாகப்‌ பழகு வாய்‌. அன்பினால்‌ அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப்‌பாய்‌.
வண்டு மதுவை உண்டு குழறும்‌. குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக்‌ கத்தும்‌.
கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும்‌, என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்‌.
நீ அன்னமில்லாமற்‌ பால்மாத்திரம்‌ குடிக்கும்‌ பச்சைச்‌ குழந்‌ தையானாலும்‌, உன்‌ காலைப்‌ பிடிப்பார்‌ பலராவர்‌. மன்மதனால்‌ வருந்துவோருடைய நோயைத்‌ தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப்‌ படைத்தாய்‌?

மகளிருடைய மயக்கமாகிய காட்டைச்‌ சுடுவதற்காகவோ நீ வன்னியென்னும்‌ பெயரைத்‌ தாங்கினாய்‌ ?(வன்னி -நெருப்பு -கிளி )
அவர்களுடைய துன்பமாகிய. வேழத்தைக்‌ கொல்லவோ நீ அரி வடிவம்‌ பூண்டாய்‌? (அரி -சிம்மம் கிளி )
அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ கிள்ளை(குதிரை கிளி ) வடிவத்தை எடுத்தாய்‌? மாதர்களுடைய விசனம்‌ கெடுவதற்காகவோ நீ சுக (இன்பம் கிளி )வடிவத்தைகீ கொண்டாய்‌ ?
ரதிக்கும்‌ கலைமகளுக்கும்‌ உன்னை உவமானமாக்கி உரைப்பர்‌.
உவமையாகக்‌ கூறும்‌ பொருளே உயர்ந்ததாதலின்‌ அவ்விருவரிலும்‌ நீயே உயர்ந்தாயன்றோ ?
உன்னுடைய வடிவமும்‌ வளைந்த மூக்கும்‌ திருமாலினுடைய துவசத்தில்‌ இருக்கும்‌ கருடதேவனது அம்சமோ?
உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில்‌ கண்ணபிரான்‌ வேய்ங்குழல்‌ வாசித்த போது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ ?
அல்லது, இராமபிரான்‌ இராவணனைச்‌ சம்ஹரித்த பிறகு விபீடணன்‌ இலங்கையிலே புக்குக்கட்டிய புதுத்தோரணமோ ?
உன்னுடைய இனியமொழி கண்ணபிரானது வேய்ங்குழுலோசையோ ?

கிளிப்பிள்ளயே, தெள்ளமுதக்‌ கிள்ளையே, இன்பரசக்‌குஞ்சே,
தென்றற்‌ குழவியைத்‌ தாய்போல எடுத்துச்‌ சஞ்சரிக்‌கும்‌ செல்வமே,
திருமகள்‌ திருக்கரத்திலே யுள்ளாய்‌, முத்தி நகரேழில்‌ ஒன்றாகிய அவந்தியென்பதன்‌ பெயரையும்‌,
தமிழில்‌ வல்லினம்‌ ஆறனுள்‌ ஒன்றாகிய தகரவரியிலமைந்த தத்தை யென்னும்‌ பெயரையும்‌,
லீந்து பூதத்தில்‌ ஒன்றாகிய நெருப்பின்‌ பெயராம்‌ வன்னியென்பதையும்‌,
சதுரங்க சேனைகளுள்‌ குதிரையின்‌ பெயராகிய கிள்ளையென்பதையும்‌,
மும்மூர்த்திகளில்‌ ஒருவராகிய அரியின்‌ திருநாமத்தையும்‌, இரு பயனாகிய சுக துக்கங்களில்‌ சுகமென்னும்‌ பெயரையும்‌ தாங்கிய என்‌ கண்ணே,
கண்ணுண்‌ மணியே, நான்‌ திருமாலைத்‌ தரிசனம்‌ செய்யப்போய்‌ ஊராரெல்லாம்‌ அவர்‌ கூறும்‌ நிலையை அடைந்ததைச்‌ சொல்‌ கின்றேன்‌ ; கேட்பாயாக

———–

அழகர்‌ பெருமை
அவன்‌, நரசிங்கம்‌ போன்ற திருவுருவத்தை எடுத்து இரணிய ஸம்ஹாரம் செய்தவன்‌. -கிருஷ்ணாவதாரத்தில்‌ பூதனையின்‌ பாலை யுண்டவன்‌.
பிள்ளைத்‌ தன்மை நீங்காதவன்‌.- கல்லைப்‌பெண்ணாக்கும்‌ திருவடியையுடையவன்‌.
ஒரு கவிஞன்‌ பொருட்‌டுத்‌ தன்‌ படுக்கையைத்‌ தூக்கிச்‌ சென்றவன்‌. தேவர்களுக்காக அமுது கடைந்தவன்‌,
சீதாபிராட்டியுடன்‌ கானங்‌ கடந்தவன்‌.-ஒரு வேடனுக்கு மெல்லிய கால்‌ நகங்களைத்‌ தந்தவன்‌.
என்‌ காதல்‌ வெள்ளத்திலே அமிழ்ந்தினவன்‌ ; பிரளயகால வெள்ளத்‌திலே மிதந்தவன்‌ என்‌ உள்ளத்தே உள்ளவன்‌ ;
ஆயினும்‌, உலகத்துக்கு அப்பாலான்‌. வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன்‌ –
அருகிலே இருந்தும்‌ அணுகுதற்கரியான்‌. மாயன்‌ என்னும்‌ பெயருக்கேற்ப என்‌ மனத்துள்‌ இருந்தாலும்‌ மாயம்‌ செய்து ஓளிப்பவன்‌.
எல்லாவற்றையும்‌ காட்டி யருளிக்‌ கண்ணனென்னும்‌ பெயரை அடைபவன்‌.
எங்கும்‌ இல்லாதிருந்தும்‌ எங்கும்‌ நிறைந்திருப்பவன்‌ ; எங்கும்‌ நிறைந்திருந்தும்‌ எங்கும்‌ இல்லாதவனாக இருப்பவன்‌.
என்னை எனக்கு ஓளித்துத்‌ தன்னை எனக்கருளும்‌ தம்பிரான்‌.
என்னுடைய பழைய வினை களையும்‌ பல மாயைக்‌ கூட்டத்தையும்‌ கலைத்து என்னைத்‌ தனியே இருத்துவோன்‌.
நானே பிரமன்‌; நானே எல்லா வுயிரும்‌; இவ்விருவரையும்‌ ஏவுபவனும்‌ நான்‌? என்று உணர்த்‌ தும்‌ பொருட்டுக்‌
கோவலரிடத்தே பசுவும்‌ பசுவின்‌ கன்றும்‌ அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி.
தன்னுடைய சங்கத் தொனியைக்‌ கேட்டாரை நரகினின்றும்‌ மீட்பவன்‌.
வேய்ங்‌ குழலின்‌ தொனியால்‌ பட்ட மரங்களைத்‌ தளிர்க்கச்‌ செய்தவன்‌.
ஆதிமூலம்‌ இவன்‌? என்பதை உணர்த்தும்‌ யான யொன்றை உடையவன்‌.
பிரமாவைத்‌ திருவுந்தியால்‌ வெளிப்படுத்திச்‌சிருஷ்டிக்கு மூலகாரணன்‌ தானென்பதைப்‌ புலப்படுத்துவோன்‌ ;
அப்படியே பிரளயகாலத்தில்‌ உலகங்களை விழுங்கித்‌ துடைப்‌ போனும்‌ தானே யென்பதை உணர்த்துவோன்‌.
தமிழினாலே வேதக்‌ கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள்‌ பதினொரு வருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன்‌.
தன்‌ பாத மாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும்‌ தேனைப்‌ போலக்‌ கங்கை உண்டாகும்‌ பெருமையுடையவன்‌.
துயிலாத் துயில்‌ கொள்பவன்‌. தன்‌ தாயாகிய யசோதைப்‌ பிராட்டிக்கு, தன்னுள்ளும்‌ புறம்பும்‌ உலகம்‌ இருப்பதை வாய்‌ திறந்து காட்டி உணர்த்தியவன்‌.
பிறப்பாகிய கடலில்‌ கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில்போல விளங்குபவன்‌.
பரசமயவாதங்களாகிய நதிகள்‌ யாவும்‌ தன்பாலே அடங்கக் கடல்‌ போல இருப்பவன்‌.
ஒரு கிரணம்போன்ற என்னைத்‌ தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம்‌ பூண்டவன்‌.
உலகமாகிய ஊசலில்‌ எழுந்தருளியிருப்பவனும்‌ அதனை இயக்கு பவனும்‌ தானே யாகின்ற அண்ணல்‌.
வேடர்கள்‌ ஒரு பார்வை மிருகத்தைக்‌ கொண்டு நூறுமான்களைப்‌ பிடிப்பதைப்‌ போலத்‌
தன்‌ :அவதாரமாகிய பத்தினால்‌ தான்‌ படைத்த எண்பத்து நான்கு லக்ஷம்‌ யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்‌.

———-

தசாங்கம்‌
கேசவாத்திரி, சிங்காத்திரி, இடபகிரி என்னும்‌ திருநாமங்‌களையுடைய சோலைமலைக்கு அவன்‌ தலைவன்‌.
அந்த இடபாசலம்‌ இந்திரன்‌ போலவும்‌ அதில்‌ உள்ள சுனைகள்‌ அவன்‌ கண்களைப்‌ போலவும்‌ இருப்ப,
தோளில்‌ புரளும்‌ முத்தாரத்தைப்‌ போல விளங்கும்‌ நூபுரநதியை உடையவன்‌.
பூமிதேவிக்குப்‌ பன்னிரு செந்தமிழ்‌ நாடுகளும்‌ கை இரண்டு, காது இரண்டு, நகில்‌ இரண்டு, முகம்‌, காலிரண்டு,
பின்னல்‌, கண்ணிரண்டு ஆகப்‌ பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும்‌,
அவற்றுள்‌ சோழ நாடும்‌ பாண்டிநாடும்‌ கண்களாக விளங்க, அவற்றுள்ளும்‌ வலக் கண்ணாக விளங்கும்‌ பாண்டி நாட்டையுடையவன்‌.
சோமச்‌ சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும்‌, துவசஸ்தம்‌ பத்தைக்‌ கற்பகவிருட்ச மென்றும்‌,
தன்னை உபேந்திரனென்றும்‌, திருமாலையாண்டானென்றும்‌, ஆசிரியரைப்‌ பிருகஸ்பதி யென்‌றும்‌,
மற்ற யாவரையும்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களென்றும்‌
யாரும்‌ எண்ணுதலால்‌ தேவர்‌ வாழும்‌ அமராபதி போலத்‌ தோன்றுகின்ற சீபதியென்னும்‌ திருப்பதியையுடையவன்‌.
தன்‌ திருமார்பில்‌ உள்ள பல ஆபரணங்களின்‌ நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப்போலத்‌ தோற்றும்‌
பசுந்துளபமாலையை அணிந்த வன்‌. வைணவமாகிய மதம்‌ பொங்கவும்‌ (மதம் யானையின் மதம் சமயம் )
வைகானசம்‌ பாஞ்‌ சராத்திரமென்னும்‌ ஆகமங்களாகிய மணிகள்‌ ஒலிப்பவும்‌,
வடகலையும்‌ தென்கலையும்‌ புரசைக் கயிறாக விளங்கும்‌ அத்துவி தானந்தமென்னும்‌ யானையை உடையவன்‌. வேதமாகிய குதிரையையும்‌ கருடனாகிய கொடியையும்‌ மும்முரசையும்‌ உடையான்‌.-தவநிலை ஆணை தரித்தவன்‌.

———

பிற சிறப்புக்கள்‌
கண்ணபிரானாக வந்தகாலத்துத்‌ தன்‌ திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப்‌ பிதிர்கள்‌ நட்சத்திரங்களைப்‌ போலவும்‌
கையில்‌ ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம்‌ போலவும்‌ விளங்க அதனை உண்டவன்‌. சூரிய சந்திரர்களாகிய திருவிழி
களையும்‌, அவற்றைப்‌ போன்ற சங்கு சக்கரங்களையும்‌ தாங்கினவன்‌. உலகத்தை உண்ட திருவாயையும்‌, அடக்கிய
திருவயிற்றையும்‌, ஈன்ற திருவுந்தித்‌ தாமரையையும்‌, அளந்த திருத்தாளையும்‌, அதனை மாவலிபால்‌ ஏற்ற திருக்கரத்தையும்‌,
அதன்கண்‌ வளைந்த பயிர்களின்‌ நிறத்தைக்‌ காட்டும்‌ திருமேனியையும்‌, அதனை வராகாவதாரத்தில்‌ பெயர்த்த மருப்பை யும்‌, ஆமையாகி ஏந்திய முதுகையும்‌, அதனைத்‌ தன்‌ படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும்‌ உடையவன்‌.
தன்‌ திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப்‌ பயன்களை ஈபவன்‌.
பிரமன்‌ எழுதும்‌ எழுத்தைத்‌ தன்‌ அஷ்டாக்ஷரத்தால்‌, இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன்‌.
சங்கரன்‌ முதலியோர்‌ தங்கள்‌ தங்கள்‌ மலைகள்‌ எங்கே இருப்‌ பினும்‌ இது நம்‌ குன்று என எண்ணிவரும்‌ நண்புடையவன்‌.
பச்சைவாரண தாசரென்பவருகீகு இரண்டு கண்களையும்‌ மாற்றினவன்‌ ; ஒரு யானைக்‌ கன்றுக்குக்‌ கண்‌ கொடுத்தவன்‌.
திருக்கையில்‌ உத்தியோகச்‌ சக்கரத்தை யுடையவன்‌. இலங்‌கையை முன்பு வென்று கொண்டாலும்‌ நிலத்தை (மாவலியி னிடம்‌) தானமாக வாங்கினவன்‌……
திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும்‌, மதுரையிலுள்ள சங்கத்தில்‌ வீற்றிருந்து
தமிழ்‌ ஆராய்ந்தமையினாலும்‌ சங்கத்தழகனென்று சொல்லும்‌ திருநாமமுடைய தம்பிரான்‌.
தன்னுடைய பாதுகை அரசு புரியவும்‌ கருடாழ்வான்‌ பறவைகளுக்கரசாக இருப்பவும்‌ அருள்‌ புரிந்தவன்‌.
செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத்‌ தோற்றினவன்‌.
சுந்தரத்தோளன்‌, மலையலங்காரன்‌ என்னும்‌ திரு நாமங்களையுடையவன்‌ .
வேறு வேறு தெய்வங்களை மக்கள்‌ பூசித்தமையால்‌ உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப்பெற்றவன்‌.
மலயதீதுவச பாண்டியனால்‌ வழிபடப்‌ பெற்றவன்‌. அம்பரீஷ னுக்கு அருள்‌ செய்தவன்‌.

————

திருவிழா
அத்தகைய திருமால்‌, தென்றல்‌ வீசுங்காலத்திலே கோடைத்‌ திருவிழாக்‌ கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான்‌.
தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில்‌ குதிரைவாகனத்தில்‌ எழுந்தருளிப்‌ பொற்குடையும்‌ வெள்ளிக்‌ குடையும்‌ கொடிகளும்‌ இலங்‌ கவும்‌, முரசம்‌ முழங்கவும்‌, மக்கள்‌ கூட்டம்‌ கூட்டமாகத்‌ தொடர்ந்து வரவும்‌,
நீர்வீசு கருவிகள்‌ பனிநீரைத்‌ தூவவும்‌, காணிக்கைக்‌ கொப்பரை முன்னே செல்லவும்‌ வையைநதியில்‌ அங்கங்கே செய்யப்படும்‌ உபசாரங்களை ஏற்றருளி
வண்டியூர்‌ மண்டபத்தில்‌ வீற்றிருந்தருளினான்‌.
அப்பொழுது சூரியன்‌ அத்தமித்தான்‌. தீவட்டிகள்‌ பிரகாசித்‌ தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள்‌ அனந்தாழ்‌ வான்‌ மீது பவனிவந்தான்‌.
அப்பவனியிலே அவனைத்‌ தரிசித்துக்‌ காமமயக்கத்தை யான்‌ அடைந்தேன்‌. அவன்‌ மற்ற இடங்‌ களுக்கு எழுந்தருளலானான்‌.

——————

தலைவியின்‌ நிலை
நான்‌ அவனுடைய திருமுகமண்டலம்‌ முதலியவற்றைக்‌ கண்டு மால் கொண்டு என்‌ உடன்‌ வந்த மாதர்களுக்கு அவனைப்‌ பற்றிக்‌ கூறினேன்‌.
பின்‌ அவனைப்‌ பார்த்து, **அன்று நீர்‌ திருடிய வெண்ணெயைப்போலத்‌ தோற்றும்‌ சங்கு இருப்பவும்‌ என்‌ கையிலுள்ள சங்கைக்‌ கவர்ந்துகொண்டீர்‌. (சங்கு வளை )-என்னுடைய கண்ணீர்‌ உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ?
உமக்குரிய பீதாம்பரம்‌ போதாதோ ? இராமாவதாரத்திலே-உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ?
திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக்‌ கவர்ந்தீரே.
பழையபடி கோவியர்‌ ஆடை கவர்ந்ததைப்‌ போலத்‌ திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ ?
இந்த நூலாடை உமக்‌ குப்‌ *பாலாடையாயிற்றோ ? (காய்ச்சின்ன பாலில் உள்ள மேல் உள்ள ஏடு )
உம் மேல்‌ விருப்பங்கொண்டு முழங்‌ குகின்ற எம்முடைய வார்த்தையை நீர்‌ கேட்டிலீர்‌.
பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும்‌ தூக்கம்‌ உண்டோ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம்‌ பரந்ததோ?
அன்றிப்‌ பாற்கடல்தான்‌ உம்முடைய பிரிவாந்றாமல்‌ உம்மைப்‌ பின்‌ தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ?
இரவாகிய யானை கசேந்‌ திரன்‌ போல இருக்கிறது;-அதன்மேல்‌ வரும்‌ முதலையைப்‌போன்ற சந்திரனை நீர்‌ சும்மா விட்டு விடலாமா
சதிரிள மடவா ருக்கு இரங்கிய நீர்‌ நெஞ்சம்‌ தவிக்கும்‌ இளமாதருக்கு இரங்கு தல்‌ கூடாதோ?
கோவியர்களிடத்தில்‌ காம விளையாடல்‌ புரிந்த செய்திகளெல்லாம்‌ இப்பொழுது மறந்து போனீரோ??? என்று யான்‌ கூறி முறையிட்டேன்‌.
பிறகு பெருமான்‌ தேநூர்‌ மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச்‌. சார்ந்தான்‌…
யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம்‌ போலானேன்‌.
இந்தத்‌ துன்பத்தைத்‌ தந்த அவன்‌ சிறிதேனும்‌ திருவுள்ளங்‌ கனியானாயினன்‌.
சந்திரனும்‌, கடலும்‌, அயல்‌ மகளிர்‌ மொழியும்‌, மன்மதன்‌
செயலும்‌, காளைகளின்‌ மணியும்‌, வேய்ங்குழலும்‌ என்னைப்‌ பலவாறாகத்‌ துன்புறுத்துகின்‌றன.

——————

கிளியை வேண்டுதல்‌
கிளியரசே, என்னுடைய உடம்பும்‌ உன்‌ கூடும்‌ பலவகையில்‌
ஓப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான்‌ உண்பிப்பேன்‌ ;
நலங்குக்‌ குளிப்பாட்டுவேன்‌ ; பட்டாடையால்‌ துடைப்பேன்‌ ; கூட்டில்‌ இருத்தி ஆலத்தி எடுப்பேன்‌ ; வாசனைத்‌ தூபம்‌ காட்டுவேன்‌;
இளவெயிலிலே குளிர்காயச்‌ செய்து
எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல்‌ வைத்துப்‌ பெருமாள்‌ திரு நாமமெல்லாம்‌ உனக்குப்‌ பழக்கி வைப்பேன்‌.
உன்னையன்‌ றிப்‌ பிறபொருள்களைத்‌ தூதுவிடல்‌ கூடுமோ
அன்னம்‌, சூயில்‌, வண்டு, தென்றல்‌, மேகம்‌, காக்கை என்பன தகுதியற்றவை.
நீயோ, அங்கே போனால்‌ அடியார்கள்‌ இருப்‌பின்‌ நீயும்‌ அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம்‌ செய்வாய்‌. நாச்சி யார்‌ அருகில்‌ இருந்தால்‌ அவர்‌ கையிற்‌ பறந்து சென்றிருப்பாய்‌.
எங்கிருந்து வந்தாய்‌??? என்று கேட்டால்‌, சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன்‌ ?? என்று சொல்வாய்‌.
செளந்தரவல்லிக்கும்‌, சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும்‌ தெரியாமல்‌ என்னுடைய காதலைத்‌ தெலுங்கிலே தந்திரமாகச்‌ சொல்வாய்‌.
என்னுடைய துன்‌பத்தை நீக்குவாய்‌. சச்சிதானந்தனாகிய பெருமாள்‌ அணிந்‌துள்ள மாலையைக்‌ கொண்டு வருவாய்‌.
அங்கே யுகந்தோறும்‌ வேறு வேரறுகிக்‌ கலியுகத்தில்‌ புத்திர தீபமாகும்‌ தரு ஒன்று உண்டு.
தேவர்களுக்குரிய லந்து கற்‌பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும்‌. ஒரு கோடி சோலை களும்‌, ஒரு கோடி ஆறுகளும்‌, ஒரு கோடி பூஞ்சுனையும்‌ இருக்‌கின்றன.
அன்றியும்‌, யோகிகளைப்போல அல்லும்‌ பகலும்‌ துயிலாத உறங்காப்‌ புளி ஒன்று இருக்கின்றது.

—————-

கோயிற்‌ பணியாளர்‌

அத்தலத்தில்‌ பிரமதேவனும்‌ இந்திரனும்‌ வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள்‌.
சீரங்கராச பட்டரென்னும்‌ அர்ச்சகரும்‌, திரு மாலிருஞ்சோலைச்‌ சீயரென்னும்‌ மாதவரும்‌,
திருமாலை யாண்டா னென்னும்‌ ஆசிரியரும்‌, தோழப்பையங்காரும்‌, வேத பாரகரும்‌, அமுதாரும்‌,
திருமலை நம்பியும்‌, சோலைமலை நம்பியும்‌, சடகோப நம்பியும்‌, திருமாலிருஞ்‌ சோலைப்‌ பிரியரென்னும்‌ சீகருணிகரும்‌,
சீகாரியஞ்‌ செய்யும்‌ நாயகர்களும்‌ தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான்‌ திருவோலக்கத்தில்‌ எழுந்தருளி யிருப்பான்‌.

————-

தூதுரைக்கும்‌ முறை
அப்பொழுது நீ தூதுரைக்கத்‌ தொடங்கினால்‌ உன்‌ வார்த்தை அவன்‌ திருச்செவியில்‌ ஏறாது.
ஆதலின்‌ அவன்‌ பள்ளியறைக்கு எழுந்தருளும்‌ வேளை பார்த்து வேறொருவர்‌ ஒன்றை விண்ணப்பித்‌தற்கு முன்‌,
என்னை மன்மதன்‌ துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர்‌ அலர்‌ தூற்றுவதற்கு முன்னே,
கடலின்‌ ஒலியும்‌ தாயின்‌ உரையும்‌ என்னைத்‌ துன்புறுத்தாமல்‌ அடங்கும்படியாகத்‌ தத்‌தையே, நீ என்‌ தூதுச்செய்தியை உரைப்பாயாக.
உன்பேர்‌ ஸ்வாகதமாகையால்‌(ஸ்வா கதம் நல் வரவு ) உனக்கும்‌ சுவாகதம்‌ உண்‌ டாகும்‌.
முன்பு ஒருநாள்‌ ஸ்ரீ ராமபிரானே உன்னைப்‌ புகழ்ந்து பேசினானென்றால்‌ உன்னைப்‌ புகழ்ந்து பேசாதவர்‌ யார்‌ ?
நீ என்‌ தூதுச்‌ செய்தியைச்‌ சொல்லிப்‌ பெருமாளிடம்‌ அவன்‌ திருப்‌ புயத்திலணிந்த மாலையைக்‌ கேள்‌.
உம்முடைய மாலையை அளியாவிடின்‌ கோதையார்‌ சூடிக்கொடுத்துவிட்ட மாலையை யேனும்‌ தந்தருள்க??என்று கேள்‌.
தன்னை அடுப்பவர்‌ யாவருக்கும்‌ ஆடி மாதத்தில்‌ தியாகம்‌ கொடுக்கும்‌ எம்பிரான்‌ இல்லையென்று சொல்லான்‌.
ஆதலின்‌ அவ்வழகன்‌ புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.

————–

நூற் பொருள்‌ ஆராய்ச்சி
அணிகள்‌
இந்தூலின்கண்‌ அங்கங்கே பலவகையான சொல்லணி பொருளணிகளைக்‌ காணலாம்‌.
வேளாண்மை யென்னும்‌ விளைவுக்கு நின்வார்தீதை
கேளாதவரார் காண்‌ கிள்ளையே (3)
மாலினைப்‌ போல மகிதலத்தோர்‌ வாட்டமறப்‌
பாலனதீ தாலே பசிதீர்ப்பாய்‌ (19)
என்பன போன்ற இடங்களில்‌ சிலேடையணி அமைந்திருக்கின்‌றது,

தூதுக்குரிய பொருள்களுட்‌.கிளியல்லாத பிறபொருள்கள்‌ தகுதியடையனவல்லவென்று கூறும்‌ பகுதியில்‌ சிலேடையமைதியை மிகுதியாகக்‌ காணலாம்‌.
செலுத்தியகாற்‌ றேரைமுமுதீ தேராய்‌ (4)
—என்காதல்‌ வெள்ளத்‌ தமிழ்ந்தினோன்‌ வேலைக்கு மேன்மிதந்தோன்‌
உள்ளத்துள்‌ ளானுலகுக்‌ குப்பாலான்‌ (24-5)
என்பன போன்ற இடங்களில்‌ விரோத அணியும்‌,

மைப்பிடிக்கும்‌ வேற்கண்‌ மலர்மாதஞ்‌ சங்கரியும்‌
கைப்பிடிக்க நீவங்‌ கணம்பிடித்தாய்‌ (28)
—கும்பமுனி
வாய் னுரையடங்க வந்த கடலடங்கத் தாயி னுரையடங்கத்‌ தத்தையே?? (232-3)
என்பன முதலியவற்றிற்‌ பின்வரு நிலையணியும்‌ அமைந்‌துள்ளன.

தேறுகனி காவேரி சிநீதுகோ தாவிரியும்‌ வீறு பெறுமே?? (33)
அரசா யிருத்தியா லத்தி யெடுத்து? (196)
என்யவற்றிற்‌ பிறபொருட்‌ பெயர்கள்‌ தொனிக்கின்றன.

தத்தை யடைந்தவரே ததீதையடையார்‌ (64)
கூடலிற்‌ கூடலெனுங் கூ a நிருநகரில்‌ 7? (146)
சல்கெடுப்பாம்‌ அசெழுக்னுத்‌ சச்சிதானந்தர்‌ ?? (208-9)
என்பன போன்ற மடக்குகளும்‌,

திருப்பா துகைக்குஞ்‌ செழுங்கருட னுக்கும்‌
திருப்பா துகைக்குமர சீந்தோன்‌ (137)
: பாத கமலம்‌ பரவுமல பரவுமல யதீதுவசன்‌
பாத கமலம்‌ பறித்திடுவோன்‌ ?(041)
என்பவற்றில்‌ யமகமும்‌,

72-4, 142, 147, 2242-ஆம்‌ கண்ணிகளில்‌ திரிபும்‌ அமைந்துள்ளன.

சில இடங்களில்‌ வகையுளி அமைந்‌ திருக்கின்றது (108, 215)

——–

தொகை முதலியன
ஏமுமுதல்‌ இரண்டு வரையில்‌ உள்ள சில தொகைப்‌ பொருள்கள்‌ ஒவ்வொன்றிலும்‌
கிளியின்‌ பெயரை அமைத்துக்‌ காட்டிய பகுதி (635) இன்பந்‌ தருவதாகும்‌.
பூமிக்கும்‌ திருமாலுக்கும்‌ உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில்‌ தொகுத்துச்‌ சொல்லப்பட்டுள்ளது (1026-8)
* கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்‌? (6-7),
அவனசையாமல்‌ அணுவசையாது ? (123),
யானையுண்ட விளாம்பழம்‌ (187-8) என்னும்‌ பழமொழிகள்‌ இதில்‌ வந்துள்ளன.

—————

சமற்காரம்‌
கிளியின்‌ பெருமையைப்‌ பல திறத்திற்‌ பாராட்டிக்‌ கூறவந்த இந்நூலாசிரியர்‌ அதன்‌ பெயரையும்‌, இயல்பையும்‌,
புராண வரலாறுகளையும்‌ வைத்துக்கொண்டு சமற்காரமாகப்‌ பல பொருளமை யும்படி அமைத்துக்‌ காட்டுகின்றார்‌.
அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம்‌, சுகம்‌, சுவாகதம்‌, தத்தை, வன்னி என்னும்‌ கிளியின்‌ பெயர்களைச்‌
சிலேடை வகையிலும்‌ பிறவாறும்‌ இவர்‌ எடுத்தாளுவர்‌.
பிறபொருள்களைத்‌ தூதுவிடுவதனாற்‌ பயனில்லை என்று மறுக்கும்‌ வாயிலாகச்‌ சில தூதுப்‌ பொருள்களின்‌ பெயர்கள்‌ சொல்லப்படுகின்றன.
அவை வருமாறு: அன்னம்‌ (33,199), காகீகை (304), குயில்‌ (3&,46,200), தென்றல்‌ (202), நாகண வாய்ப்புள்‌ (38),
புறா (36), மயில்‌ (37), மேகம்‌ (203), வண்டு (35,46,201)

——————–

புராண முதலிய நூற்‌ செய்திகள்‌
திருமாலின்‌ பெருமைகளைச்‌ சொல்லுமிடங்களில்‌ இராமாயணம்‌, பாரதம்‌ என்னும்‌ இதிகாசச்‌ செய்திகளும்‌,
பாகவதம்‌ முதலிய மாபுராண வரலாறுகளும்‌, இத்தலத்திற்குரிய புராணத்‌ திற்‌ கண்ட சிறப்புக்களும்‌ எடுத்தாளப்படுகின்றன.
ஓரிடத்தில்‌ சீவக சிந்தாமணிச்‌ செய்தியைக்‌ காணலாம்‌.

——————-

வைணவ மரபு
நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல்‌ வைணவ மரபு ;
கருடனைப்‌ பெரிய திருவடிகள்‌ என்றும்‌ (22),
திருமால்‌ வாகனமாகிய குதிரையைக்‌ குதிரை நம்பிரானென்றும்‌ (152),
ஆதிசேடனை அனந்தாழ்வான்‌ என்றும்‌ (166), பள்ளியறையைச்‌ சேர்த்தி யென்‌றும்‌ (230) வழங்குதல்‌ அம்மரபைச்‌ சார்ந்ததே.

——————

பாண்டி நாட்டு வழக்கம்‌
உன்னுடைய சிறகுகள்‌, இராமாவதாரத்தில்‌, விபீடணன்‌ இலங்கையைக்‌ கைப்பற்றிக்‌ கொண்டபோது,
அங்கே கட்டிய புது மாவிலைத்‌ தோரணமோ ? (59) என்பது ஒரு கண்ணியிற்‌ கண்ட பொருள்‌.
ஒரு நிலத்தை மற்றொருவன்‌ தனக்குரிய தாக்கும்போது அங்கே . தோரணங்கட்டுதலும்‌,
அதனால்‌ அச் செயலைத்‌ தோரணம்‌ வைத்தலென்று வழங்குதலும்‌ பாண்டி நாட்‌ டினர்‌ வழக்கம்‌.
அவ்வழக்கத்தைப்‌ பின்பற்றியே அவ்வாசிரியர்‌ இங்கே இங்ஙனம்‌ அமைத்தார்‌.

———

செய்யுள்‌ நடை
இத்தூதின்‌ செய்யுள்‌ நடை பலவிதமாக அமைந்துள்ள து.
மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக்‌ கடினமாக இருப்பினும்‌
மற்ற இடங்களில்‌ தெளிவாகச்‌ செல்வது. திருமாலினுடைய இயல்பைச்‌ சொல்லும்‌ இடங்கள்‌,
முக்கியமாக 75-ஆம்‌ கண்ணி முதலிய சில கண்ணிகள்‌ இந்‌
நூலாசிரியர்‌ உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும்‌.
உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும்‌, தெளிவாகவும்‌ விளக்கும்‌ அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின்‌ சிறந்த அமைப்பைக்‌ காணலாம்‌.
கிளியினைத்‌ தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம்‌ அதைப்‌ பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப்‌ பாராட்டியிருக்கின்றார்‌.
கல்வி, கேள்வி, அனுபவங்‌களிலே கிளியைப்பற்றி அறிந்தவற்றையெல்லாம்‌ எப்படியோ தொடுத்துக்‌ கோத்திருக்கின்றார்‌.
கிளியைப்போலத்‌ தூது செல்லு வதற்குரிய பொருள்‌ வேறில்லை யென்று சொல்லுவதற்காக
நிகண்டிலே கிளியின்‌ பெயர்களாக உள்ள பதங்களும்‌, புராண இதிகாசங்களும்‌, சிலேடையணி முதலிய கருவிகளும்‌, இவருக்குத்‌ துணையாக நிற்கின்றன.
கிளிதான்‌ சகலமுமென்றவரைக்குங்‌ கூட இவர்‌ பாராட்டிப்‌ பேசி விடுகிறாரெனின்‌ வேறு என்‌ செய்வது !
—கண்ட
செகமுமுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ — என்று இவர்‌ வினாவும்பொழுது ஆம் என்று விடையளிப்‌ பதையன்றி வேறு வழி யேது;
யுக்தியினால்‌ சமற்காரமாகக்‌ கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப்‌ பாராட்டும்‌ இடங்கள்‌ இதிலே பல இருக்கின்றன.
கிளியைப்‌ பலர்‌ தம்‌ கையிலே பிடிப்பர்‌ ;
இதே விஷயத்தைக்‌ கிளிக்குப்‌ பெருமை விளைவிக்கும்‌ உருவத்‌ திலே மாற்றி,
*பால்குடிக்கும்‌ பச்சைக்‌ குழந்தை நீ யானாலும்‌
கால்பிடிப்பார்‌ கோடிபேர்‌ கண்டாயே –என்று அமைக்கும்‌ இக் கவிஞருடைய சாமர்த்தியத்தை நாம்‌ வியவாமல்‌ இருப்பது எங்ஙனம்‌ ?

திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார்‌. தலப்‌ பெருமையையும்‌, தசாங்கங்களையும்‌, திருவிழா நடைபெறும்‌ முறையையும்‌ ஒழுங்காக உணர்த்துகின்றார்‌.
இந்தத்‌ தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின்‌ பெயர்களை வரிசையாகத்‌ தெரிவிக்‌ கின்றார்‌.
அந்தப்‌ பகுதியினால்‌ கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும்பயன்‌ ஒன்றும்‌ இல்லையென்றாலும்‌
ஆசிரியர்‌ தம்‌ காலத்தில்‌ இருந்த அவர்களைக்‌ கிளியோடும்‌ அழகரோடும்‌ சேர்த்து அவர்கள்‌ புகழையும்‌ கல்லிற்‌ பொறித்ததுபோல்‌ தம்‌ சொல்லிற்‌ பொறித்திருக்கின்றார்‌.
இது புலவருடைய நன்றியறிவென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற்‌ பிழை யாதும்‌ இல்லை.

————-

காப்பு
(வெண்பா)
தெள்ளு தமிழழகர்‌ சீபதி வாழ்‌வார் மீது
கிள்ளை விடு தூது கிளத்தவே–பிள்ளைக்‌
குருகூரத்‌தானே சங்‌கூர் கமுகிலேறும்‌
குருகூரத்‌தா னேசங்‌ கூர்‌.

பிள்ளைக்‌ குருகு- நாரைக்குஞ்சு.
ஊர- தன்பின்னே ஊர்ந்து வருதலால்‌.தானே சங்கு ஊர்‌ கமுகில்‌ ஏறும்‌ :
ஊர்கமுகு – மேற்பாகம்‌ பரவியுள்ள கமுகு;
ஊர்தல்‌ – பரத்தல்‌. சங்கு ஏறுதற்கு இடமான.
குருகூர்‌ அத்தான்‌ – ஆழ்வார்திருநகரியில்‌ எழுந்தருளியுள்ள தலைவனே ;
அத்தான்‌ – அத்தனே : விளி;
நேசம்‌ கூர்‌-திருவருள்‌ புரிவாயாக.

————-

நூல்‌
கிளியின்பெருமை

கார்கொண்ட மேனிக்‌ கடவுள்‌ பெயர்கொண்டு
நீர்கொண்ட பாய னி றங்கொண்டு– சீர்கொண்ட–1-

அரி என்பது கிளிக்கும் பெயர்
பாயல்‌ – அவருடைய படுக்கையான ஆலிலையின்‌. நிறம்‌ -பச்சை நிறம்‌.-
கடவுளினற்‌ பேர் கொண்டு.

வையம்‌ படைக்கு மதனையுமேற்‌ கொண்டின்பம்‌
செய்யுங்‌ கிளியரசே செப்பக்கேள்‌-வையமெலாம்‌–2-

வை அம்பு அடைக்கும்‌ மதனையும்‌ : மதனையும்‌–மன்மதனையும்‌.
கிளி- மன்மதனுக்கு வாகனமாதலால்‌, மதனையுமேற்‌ கொண்டு? என்றார்‌.
வையம்‌ படைக்கும்‌ அதனையும்‌ – புவியைப்‌ படைக்கும்‌ அத்‌ தொழிலையுமென்று வேறொரு பொருளும்‌ தோற்றுகின்றது.

வேளாண்மை யென்னும்‌ விளைவுக்கு நின் வார்த்தை
கேளா தவரார் காண்‌ கிள்ளையே-நாளும்‌–3-

வேளாண்மை- மன்மதனுடைய ஆட்சி; பயிர்களை விளைத்தல்‌ ;சிலேடை.
வேளாண்மைத்‌ தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள்‌.

மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில்‌ லாமற்‌
செலுத்தியகாற்‌ றேரை முழுத்‌ தேராய்ப்‌ -பெலத்திழுத்துக்‌-4-

மலைத்திடும்‌ – போர் செய்யும்‌.
மாரன்‌ – மன்மதன்‌.
ஒற்றை வண்டில்‌ – ஒரு சக்கரம்‌ ; சக்கரம்‌ வண்டிலெனவும்‌ வழங்கும்‌
கால் தேர்‌ – தென்றற் காற்றாகிய தேர்‌; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள்‌.
மாரன்‌ செலுத்திய என இயைக்க.
பெலத்து – பலம்‌ கொண்டு,

கொண்டு திரி பச்சைக்‌ குதிரா யுனக்கெதிரோ
பண்டு திரி வெய்யோன்‌ பரியேழும்‌-கண்ட–5-

பச்சைக் குதிராய்‌ – பச்சைக் குதிரையே என்றது –ஸூரியன்‌ தேரிலுள்ள ஏழு பச்சைக் குதிரைகளை நினைந்து.

ஒற்றைச்‌ சக்கரத்தை யுடைய ஸூரியன்‌ தேரை இழுத்துச்‌ செல்‌லும்‌ ஏழு பச்சைக் குதிரைகளும்‌
ஒரு சக்கரமும்‌ இல்லாத தேரை இழுத்‌துச்‌ செல்லும்‌ பச்சைக்‌ குதிரையாகிய உனக்கு ஒப்பாக மாட்டா. என்றவாறு

செகமுழுது நீ ஞான தீப முநீ யென்று
சுக முனியே சொல்லாரோ சொல்லாய்‌-வகை வகையாய்‌-6-

சுகமுனி – சுகமுனிவர்‌ –கிளி வடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும்‌ தெய்வ மகளிடம்‌
வியாசருடைய கருணையால்‌ அவதரித்தமை யின்‌ இவர்‌ இப்பெயர்‌ பெற்றார்‌.
செக…… முனியே : சுகமுனிவர்‌ பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில்‌ நடநீது சென்றார்‌.
அவர்‌ தந்தையான வியாசர்‌, * குழந்தாய்‌ ? என்று அவரை அழைப்ப எல்லாப்‌ பொருளும்‌ ஏனென்று கேட்டனவென்பர்‌ ;
பிறந்தபொழுதே துறந்து பிறைக்‌ குழவி போனடப்பப்‌ பின்போய்த்‌ தொன்னூல்‌,
அறைந்தபுகழ்‌ வியாத முனி யாதரத்தான்‌ மதலாயென்‌ றழைப்பச்‌ செவ்வாய்‌, திறந்து
நறை பொழியு மலர்ச்‌ செழுந்தருவு மேனென்ன வுயிர்கள்‌ யாவும்‌,
நிறைநீ துறையுஞ்‌ சுகமுனிவ விரையிதழ்தீதா மரைமலர்தீதா ணினை தல்‌ செய்‌ வாம்‌ (பாகவதம்‌, காப்பு 3)
என்பதனாலும்‌ இவர்‌ எங்கும்‌ வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும்‌.
சுகமுனிவர்‌ உன்‌ வயிற்றிற்‌ பிறந்தவ ராதலால்‌ புகழ்பெற்றார்‌.

எவ் வண்ண மாம்ப் பறக்கு மெப்பறவை யாயினு முன்‌
ஐ வண்ணத்‌ துள்ளே யடங்குமே-மெய் வண்ணம்‌–7-

ஐ வண்ணம்‌ – ஐந்து நிறம்‌; பஞ்ச வர்ணக் கிளி யென்று கிளியில்‌ ஒரு சாதியுண்டு.

பார்க்கும்‌ பொழுதிலுனைப்‌ பார்ப்பதி யென்‌ பாரென்றோ
மூக்குச்‌ சிவந்தாய்‌ மொழிந்திடாய்‌- நாக்குத்‌–8-

பார்வதி யென்று யாரும்‌ உன்னை நினையாதபடி முற்றும்‌ பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும்‌ சிவந்தாயென்றபடி ;
இதனால்‌: உன்னுடைய அடக்கம்‌ வெளிப்படுகின்றது. பார்வதி தேவியார்‌ பச்சை நிறமுடையவர்‌.

தடுமாறு வோரையெல்லாந்‌ தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாம்‌-அடுபோர்‌–9-

உன்னை – குழறிப் பேசுகின்ற உன்னை.
விடுவார்‌ – தள்ளுபவர்‌.

மறந்தரு சீவகனார்‌ மங்கையரிற்‌ றத்தை
சிறந்த துநின்‌ பேர்படைத்த சீரே-பிறந்தவர்‌–10-

சீவகனார்‌ – சிந்தாமணி யென்னும்‌ காப்பியத் தலைவன்‌. தத்தை-காந்தருவதத்தை;
சீவகனுடைய பட்டத்தேவியருள்‌ முதல்வி; இவள்‌ பெயர்‌ தத்தை யென்றும்‌ வழங்கும்‌.

ஆரும்‌ பறவைகளுக் கச்சுதன்பே ர௬ஞ்சிவன்றன்‌
பேரும்‌ பகர்ந்தார்‌ பிழை யன்றோ-நேர் பெறுவி–11

அச்சுதன் பேர்‌ அரங்கனென்பது.-சிவன் தன் பேர்‌ சொக்க னென்பது.
கிளி ரங்க ரங்கா வென்று கூறுதல்‌ வெளிப்படை. சொக்கர்‌ பெயரைக்‌ கூறுதல்‌,
புமுகுநெய்சீ சொக்க ரபிடேகச்‌ சொக்கர்கர்ப்‌ பூரச்‌ சொக்கர்‌,
அழகிய சொக்கர்‌ கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்‌;
தழுவியசங்கத்‌ தமிழ்ச்சொக்க ரென்றென்று சநீததநீ;
பழகிய சொற்குப்‌ பயன்‌ நேர்ந்து வாவிங்கென்‌ பைங்கிளியே ?? (மதுரைக்‌. 54) என்பதனால்‌ விளங்கும்‌,
பகர்ந்தால்‌ – கற்பித்தால்‌.-பிழை – தகுதியில்லார்க்குக்‌ கற்‌பித்தல்‌.
அச்சுதன் பேரையும்‌ சிவன் பேரையும்‌ நீ பிழையில்லாமற்‌ கூறுகின்றாய்‌.
மற்றப்‌ பறவைகளுக்குக்‌ கற்பித்தால்‌ அவை பிழை படக்‌ கூறும்‌ ;
அங்ஙனம்‌ கற்பித்தல்‌ பிழை.
நேர்‌ – நேர்மை.

வேகி யொருகூடூ விட்டுமறு கூடடையும்‌
யோகி யுனக்குவமை யுண்டோ காண்‌- நீகீரம்‌–12-

கூடு – உடம்பு, பறவைக்‌ கூடு. ஒருகூடு விட்டு மறு கூட்டை
அடையும்‌ யோகி உனக்கு உவமை ஆகான்‌;
அவன்‌ தான்‌ இருக்கும்‌ உடம்பை விட்டு அரூபியாகி வேறோர்‌ உடம்பிற்‌ புகுவான்‌
நீ உடம்‌போடு வேறு கூட்டை அடைவாய்‌
கிட்டுநெறி யோகியருங்‌ கிள்ளைகளுந்‌ தங்கூடு, விட்டுமறு கூடடையும்‌ வேங்கடமே  (திருவேங்கட மாலை, 73).
கீரம்‌ – கிளி, பால்‌ ; சிலேடை.

11-12. விவேகி – விவேகியாகிய ஒருவன்‌

ஆகையா லாடை யுனக்குண்டே பாடகமும்‌
நீ கொள்வாய்‌ காலாழி நீங்காயே-ஏகாத–13-

ஆடை-பாலின்‌ ஆடை ; இங்கே சட்டை.
பாடகம்‌-ஓராபரணம்‌.
காலாழி-ஒருவகை அணி; இது பீலி யென்னும்‌ ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும்‌.
கிளிக்குச் சட்டை போடுதலும்‌, கால் விரல்களில்‌ மோதிரம்‌ போடுதலும்‌ உண்டு.
ஏகாத – நீங்காத,

கற்புடையாய்‌ நீயென்றாற்‌ காமனையுஞ்‌ சேர்வாயே
அற்புடைய பெண்கொடி நீ யாகாயோ-பொற் புடையோர்‌–14-

கற்புடையாய்‌- கல்லின்‌ பக்கத்தே யுள்ளாய்‌, கற்பை யுடையாய்‌-சிலேடை. -நீ கற்புடையா யென்றால்‌.
காமனை – மன்மதனை, காவாகிய மனையை; கா – சோலை ;-சிலேடை.

கிளியையும்‌ பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள்‌ சிலேடை வகையாற்‌ கூறப்பட்டன

துன்னியசா யுச்யஞ்‌ சுகரூப மாகையால்‌
அன்னது நின்சொருப மல்லவோ-வன்னி–15–

பரிசித்த வெல்லாம்‌ பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்‌-துரிச ற்றோர்‌–16-

சுக ரூபம்‌ – இன்ப ரூபம்‌.
வன்னி- கிளி, நெருப்பு,
உன்‌ எச்சில்‌ – உன்னுடைய உச்சிட்டதீதை. கிளி கடித்த பழம்‌ சிறந்தது?
சுழித்து நல்லமு தொழுகியஞ்‌ சுகமுகஞ்‌ சேர்ந்து,
தழைத்த நான்‌ மறைத் தடஞ்சினைக்‌ கற்பகத் தருவிற்‌,
பழுத்து திர்ந்தது பரமபா கவத மென்‌ றிசைக்கும்‌,
விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார்‌ மேலோர்‌ -(பாகவதம்‌, காப்பு. 4),
வன்னியென்னும்‌ பெயர்‌, —அச்ச மனப்‌ பேதையார்‌ மால்‌ வனஞ்சுடவோ வன்னி, எனப் பேர்‌ படைத்தா யியம்பாய்‌ -(49-50) என்று பின்னும்‌ சிலேடையில்‌ அமைக்கப்பட்‌ டுள்ளது.

இன் சொல்லைக்‌ கற்பா ரெவர்சொல்லு நீ கற்பாய்‌
உன் சொல்லைக்‌ கற்க வல்லா ருண்டோ காண்‌-நின்போலத்‌-17-

உண்டோ : இல்லையென்றபடி.

தள்ளரிய யோகங்கள்‌ சாதியாதே பச்சைப்‌
பிள்ளையாய்‌ வாழும்‌ பெரியோரார்‌-உள்ளுணர்ந்த–18-

யோகங்கள்‌ – மருந்துகள்‌, யோகாப்பியாசங்கள்‌.
பச்சைப்‌ பிள்ளையாய்‌ – இளம் பிள்ளையாகி. இளம் பிள்ளையைப்‌ பச்சைப்‌ பிள்ளை யென்பது .வழக்கு,
எப்போதும்‌ இளம் பிள்ளையாயிருத்தற்கு யோகம்‌ இன்றி யமையாதது.
உள்‌ உணர்ந்த – அறிஞர்கள்‌ உள்ளத்தால்‌ உண ரப்பட்ட.

மாலினைப்‌ போல மகிதலத்தோர்‌ வாட்டமறப்‌
பாலனத்‌ தாலே பசி தீர்ப்பாய்‌-மேலின த்தோர்‌–19-

பாலனம்‌ : திருமாலுக்குப்‌ பரிபாலனத் தொழிலென்றும்‌ கிளிக்குப்‌ பாற் சோறென்றும்‌ கொள்க.

நட்டா ரெனினு நடந்து வரும்‌ பூசை தனை
விட்டார்‌ முகத்தில்‌ விழித்திடாய்‌-வெட்டுமிரு–20-

நட்டார்‌ – நண்பர்‌,
பூசை தனை விட்டார்‌ – பூனையை உன் மேல்‌ விட்டவர்‌,-பூஜையைச்‌ செய்யாது விட்டவர்‌.

வாளனைய கண்ணார்‌ வளர்கீகவளர்‌வா யுறவில்‌
லாளனை நீ கண்டா லகன்‌ நிடுவாம்‌-கேளாய்‌–21-

உறவில்லாளனை – மிக வில்லை யாள்கின்ற வேடனை,-உறவு இல்லாதவனை ; சிலேடை.

இருவடிவு கொண்டமையா லெங்கள்‌ பெரிய
திருவடிகள்‌ வீறெல்லாஞ்‌ சேர்வாம்‌-குருவாய்ச்‌-22-

இரு வடிவு : கருடனுக்குப்‌ புருஷ வடிவமும்‌ பறவை வடிவமும்‌; –கிளிக்குப்‌ பசீசை வடிவமும்‌ சிவப்பு வடிவமும்‌.

பெரிய திருவடி-கள்‌-கருடன்‌ ;**வயங்கு மீருரு வண்ணக்‌ கலுழன்‌ (தக்க, 286,)
வீறு–வேறொன்றற்கில்லாத பெருமை.
* மெய்யின்‌, வடிவம்‌ வளைந்த மணி மூக்கு மாயன்‌, கொடியிலிருப்பவர்தங்‌ கூறோ — என்பர்‌ பின்‌ ) 56-7.

செப தேசிகர் கீகெல்லாநீ தென்னரங்கர்‌ நாமம்‌
உபதேச மாக வுரைப்பாய்‌-இபமுலையார்‌–23-

செப தேசிகர்‌ – ஜபஞ்செய்தலையுடைய குருமார்‌. உரைப்பது:–ரங்க ரங்காவென்பது.
இபம்‌ – யானை -இங்கே அதன்‌ கொம்பு அல்லது மத்தகம்‌.

சித்தங்‌ களிகூரச்‌ செவ்விதழி லாடவர்போல்‌
முத்தங்‌ கொடுக்க முகங்கோணாம்‌-நித்தமவர்‌–24-

இதழ்‌ – கீழுதடு.
ஆடவர் போல்‌ – கணவரைப் போல. முத்தங்‌ கொடுத்தல்‌-ஆடவர் தொழில்‌.
அவர்‌ – அம் மகளிருடைய.
செவ்விதழ் நின்‌ ; செவ்வி யழியாதவர் போல்‌.

செவ்விதமுன்‌ மூக்காற்‌ சிவந்ததோ வுன்மூகீகில்‌
அவ்வித ழின்சிவப்புண்‌ டானதோ–செவ்வியிழந்‌–25–

தண்டருக்குந்‌ தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங்‌ குறை யுண்டோ -உண்டடக்கி–26–

தோற்றான்‌ – தோல்வி யுற்றவன்‌, கண்ணுக்குப்‌ புலப்படாதவன்‌.
அடல்‌ வேள்‌ ஆனானை – தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை.
தோல்வியுற்றவனை நீ இழுத்தும்‌ குறையில்லாயென்றபடி,

ஆயுவை நீட்ட வருந்தவத்தோர்‌ பூரகஞ்செய்‌
வாயுவை யுன்‌ பின்னே வரவழைப்பாய்‌-தேயசொளிர்‌–27-

ஆயுவை – ஆயுளை.
பூரகம்‌ – காற்றை உள்ளே நிரப்புதல்‌.
தென்றலென்னும்‌ தேரை இழுக்கும்‌ குதிரையாய்‌ முன்னே செல்லுதல்‌
பற்றி, * வாயுவை யுன்‌ பின்னே வரவழைப்பாய்‌ ? என்றார்‌ ; வாயு-தென்ற லாகிய தேர்‌.
தேயசு- ஒளி.

மைப் பிடிக்கும்‌ வேற் கண்‌ மலர்மா துஞ்‌ சங்கரியும்‌
கைப் பிடிக்க நீ வங்‌ கணம் பிடித்தாய்‌-மெய்ப் பிடிக்கும்‌–28-

மலர் மாது – திரு மகள்‌. திருமகள்‌ கையில்‌ கிளியுண்மை,
பின்னைத் தாய்‌ கையிலுறை பெண்டத்தாய்‌ -என்றும்
நாச்சியார்‌, பங்கிருந்‌தாற்‌ கையிற்‌ பறந்திருப்பாய்‌ -என்றும் (65, 205) என்பவற்றாலும்‌,
உமாதேவியாரின்‌ கையிலுண்மை, — களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங்‌ கறைக்‌ கண்டனே காசிக்‌. -61) என்பதனாலும்‌ விளங்கும்‌.
வங்கணம்‌-நட்பு ; நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை (தனிப்‌.)

பச்சைநிற மச்சுதற்கும்‌ பார்ப்பதிகீகு முன்‌ றனகீகும்‌
இச்சைபெற வந்தவித மெந்தவிதம்‌-மெச்சும்‌–29–

குருகே யுன்‌ னாக்குத்தான்‌ கூழைநாகீ கான
தரிகீர்த்‌ தனத்தினா லன்றோ-தெரிவையர்கள்‌–30-

கீர்த்தனம்‌ – இறைவன்‌ பெயரை இசையோடு சார்த்திச்‌ சொல்லுதல்‌

ஆர்த்தவிர லுன்முகமொப்‌ பாகையா லேகையைப்‌
பார்த்து முகமதனைப்‌ பாரென்பார்‌-சீர்த்திகீ–31-

தூங்கி யெழுந்தவுடன்‌ மகளிர்‌ தம்‌ கை விரலைப்‌ பார்த்துப்‌
பின்பு கண்ணாடியில்‌ முகத்தைப்‌ பார்க்க வேண்டுமென்பது பண்டை மரபு;
இங்ஙனம்‌ கூறுதற்குக்‌ காரணம்‌ அவர்களுடைய: கை விரலின்‌ நகம்‌ உன்‌ மூக்கை ஒத்திருத்தலே.

கிரியையிலே காணுங்காற்‌ கிள்ளை யடையாத
பெரியதனம்‌ வீணன்றோ பேசாய்‌-தெரியுங்காற்‌–32-

கிள்ளை – கிள்ளுதலை, கிளியை.
பெரிய தனம்‌ – பெருத்த நகில்‌,-பெருஞ்செல்வம்‌.

றேறுகனி காவேரி சிந்து கோ தாவிரியும்‌
வீறுபெறுமே நீ விரும்பினாற்‌-கூ நிலனம்‌–33-

தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச்‌ சிந்து கின்ற சக்கையாகக்‌ கெடும்‌ ; நீ விரும்பினால்‌ ௮க்கனிகள்‌ வீறுபெறும்‌-
வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும்‌ விரும்பி யுண்ணப்படுதல்‌ : கீழ் 16,கண்ணி பார்க்க.
அனம்‌ – சோறு, அன்னப்பறவை.
இக் கண்ணியில்‌ கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும்‌ நதிப்‌ பெயர்கள்‌ தோற்றுகின்றன.
கனி – தொகுத்தல்‌.

உன்னுடைய வூணன்றோ வூதப்‌ பறந்து போம்‌
சின்னவடி வன்றோ செழுங்குயிலும்‌-என்னே–34-

ஊதுதற்குப்‌ பறந்து செல்லும்‌ சின்னமாகிய வாத்திய வடிவு ஊதியவளவிற்‌ பறந்துபோம்‌ சிறிய வடிவு
குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும்‌ வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.

முதுவண்‌ டினந்தான்‌ முடிச்சவிழ்த்‌ தாலும்‌
மதுவுண்டாற்‌ பின்னைவா யுண்டோ- எதிரும்‌--35-

முடிச்சவிழ்தீதல்‌ – பேரரும்பின்‌ இதழ்க் கட்டை அவிழ்த்தல்‌,-இரகசியத்தை விரித்துச்‌ சொல்லுதல்‌.
வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45-6).

கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும்புறா வுக்குமொரு வாயோ-விரும்புமயில்‌–36-

கரும்புறா -கரும்பின்‌ சுவையுறாத, –கரிய புருவென்னும்‌ பறவை.
புரு தூது விடுவனவற்றுள்‌ ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும்‌ நூலால்‌ அறியப்படுகின்றது (கபோதம்‌-புறா -சந்தேசம்‌ – தூது); நன்புறவைத் தூண்டினது நாளுந் தூதுண்டொழிக்கும்‌, என்புறத்துத்‌ தூதாக வெண்ணுமே (கச்சியானந்த. வண்டு.-337)

உற்ற பிணிமுகமே யுன்போற்‌ சுகரூபம்‌
பெற்ற பறவை பிறவுண்டோ-கற்றறியும்‌–37-

பிணிமுகமென்பது மயிலின்‌ பெயர்‌ ;நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்‌.

கல்வியுங்‌ கேள்வியுநீ கைக்கொண்டாய்‌ சாரிகைக்குன்‌
செல்வமதி லள்ளித்‌ தெளித்தாயோ-சொல் வேத–38-

சாரிகை – நாகணவாய்ப்புள்‌.
செல்வமதில்‌ அள்ளி – உன்னு டைய செல்வத்திற்‌ சிறிய பாகத்தை அள்ளி.
நாகணவாய்ப்புள்‌ பேசும்‌ வன்மை சிறிதே பெற்றதென்னும்‌ கருத்தை உட்கொண்டு இங்ஙனம்‌ கூறினார்‌.

மென்பரிநா லுக்கும்‌ விதிசா ரதிவில்வேள்‌
தன்பரி யேயுனக்குச்‌ சாரதியார்‌-வன் போரில்‌–39-

வேத மென்‌ பரி-வேதமாகிய மெல்லிய குதிரை; வேதமென்‌னும்‌ பரியுமாம்‌.
விதி – பிரமன்‌.

மேவுஞ்‌ சிவன்விழியால்‌ வேள்கருகி நாண்கருகிகீ
கூவும்‌ பெரிய குயில்கருகிப்‌-பாவம்போல்‌–40-

வேள் கருகி – நெற்றிக்‌ கண்ணின்‌ தீயால்‌ மன்மதன்‌ சாம்பராகி; –கரு நிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள்‌. மன்மதன்‌-கரியநிற முடையவன்‌
ஆழி யுடையான்‌ மகன்‌ மாயன்‌ (தண்டி. 48, மேற்‌.).
நாண்‌ – வண்டு.
கூவும்‌ – சின்னமாக இருந்து கூவுகின்‌ற.
இயற்கைகள்‌ செயற்கையாகக்‌ கூறப்பட்டன.

நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற்‌
சென்று மறுப்படா தேவந்தாம்‌-என்றுமாகீ–41-

மறுப்படு நாள்‌ – தோல்வியுற்ற காலத்தில்‌, சாம்பராகி மறுப்‌ பட்ட காலத்தில்‌.
மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி இருத்தலை நினைந்து.

காய்க்குங்‌ கனியல்லாற்‌ காய்பூவென்‌ ரானாக்கு
மூக்கு மறுப்பாய்‌ முகம் பாராய்‌-ஆக்கம்‌-42-

நாக்கு மூக்கு மறுப்பாய்‌ – நாக்கையும்‌ மூக்கையும்‌ கொண்டு முறையே சுவைத்தலையும்‌ மோத்தலையும்‌ செய்ய மறுப்பாய்‌ ;
அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும்‌ மூக்கையும்‌ அறுப்பா யென்று வேறொரு பொருள்‌ கொள்க.
ஆக்கம்‌ – செல்வம்‌.

வரையாம னன்மை வரத்தினை நல்கும்‌
அரிதாளை நீவிட்‌ டகலாம்‌-இருகை–43-

உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக்‌ கில்லை
எனக்குமுனக்‌ கும்பேத மீதே-மனைக்குள்‌–44-

நன்மை வரத்தினை நல்கும்‌ – நல்ல கரிய மேன்மையான தினையைக்‌ கொடுக்கும்‌, –நல்ல வரத்தைக்‌ கொடுக்கும்‌;
கருந் தினை யென்று ஒரு சாதியுண்டு.
அரிதாளை – தினையின்‌ அரிந்த தாளை, திருமாலின்‌ பாதங்களை ;
அரிதாள்‌, மறவாத பாக வதனே (மான் விடு தூது, 45) என்று பிறரும்‌ இதனைச்‌ சிலேடையில்‌ அமைத்துள்ளனர்‌.

இதமாய்‌ மனிதருட னேபழகு வாயன்‌” —
பதனான்‌ முறையிட்‌ டழைப்பாய்‌-ம துவுண்‌ .–45-

முறையிட்டு – முறைப்பெயரிட்டு; அப்பா, அம்மா; அக்கா என்பன முதலியன

.டளிப்பிள்ளை வாய்குழறு மாம்பரத்தி லேறிக்‌
களிப்பிள்ளைப்‌ பூங்குயிலும்‌ கத்தும்‌-கிளிப்பிள்ளை.
.–46-

களிப்புள்ள பூங்குயிலும்‌. -பாட பேதம்
அளிப்பிள்ளை – இளைய வண்டு.
ஆம்பரம்‌ – மாமரம்‌.
பிள்ளைப்‌ பூங்குயிலும்‌ – பிள்ளையாகிய குயிலும்‌ ;-குயிலுக்கு மாமரம்‌ உரியது.

சொன்னத்தை ச்‌ சொல்லுமென்று சொல்லப்‌ பெயர் கொண்டாம்‌
அன்னத்தைப்‌ போலுமொரு பேதுண்டோ-அன்னமின்‌ றிப்‌--47-

சொன்னத்தை – சொல்லியதை; தங்கத்தை.
அத்தைப்‌ போலும்‌ – அதனைப்போலும்‌.
அன்னம்‌ இன்றி – அன்னம்‌ இல்லாமல்‌.

பால்குடிக்கும்‌ பச்சைக்‌ குழந்தைநீ யானாலும்‌
கால் பிடிப்பார்‌ கோடி பேர்‌ கண்டாயே-மால் பிடித்தோர்‌–48-

பச்சைக் குழந்தை – இளங்குழந் தை.
கால் பிடித்தல்‌ – கிளியின்‌ கால்‌ தம்‌ கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்‌.

கைச்சிலைவே ளால்வருந்துங்‌ காமநோய்‌ தீர்ப்பதற்கோ
பச்சிலை ரூபம்‌ படைத்திருந்தாம்‌-௮ச்ச–49-

நோயைத்‌ தீர்ப்பதற்குரிய மருந்துகளுள்‌ பச்சிலை ஒன்று.

மனப்பேதை யார்மால்‌ வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர்‌ படைத்தா யியம்பாய்‌-அனத்தை–50-

மால் வனம்‌ – காம மயக்கமாகிய காட்டை.
வன்னி- கிளி,நெருப்பு.
அனத்தை – அன்னப் பறவையை, சோற்றை.

நிலவோவென்‌ பார்க ணெடுந்துயர்வே ழத்தைகீ
கொலவோ வரிவடிவங்‌ கொண்டாய்‌-சிலை நுதலார்‌--51-

அன்னப் பறவையையும்‌ மயக்கத்தால்‌ நிலவென்று அஞ்சும்‌ மகளிர்‌-தலைவரைப்‌ பிரிந்த மகளிர்‌ நிலவைக்‌ கண்டு
வருந்துவராதலின்‌ வெண்மையான பிற பொருள்களையும்‌ கண்டு அஞ்சுவாராயினர்‌.

கொள்ளை விரகக்‌ கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய்‌ கிற்பாய்நீ-உள்ளம்‌–52-

கிள்ளை – குதிரை, கிளி,
கிற்பாய்‌ – வன்மை யுடையாய்‌.

மிகவுடை மாதர்‌ விதனங்‌ கெடவோ
சுகவடிவு நீகொண்டாய்‌ சொல்லாம்‌-தகவுடைய–53-

உடைமாதர்‌ – உடைந்த மகளிர்‌.
சுகவடிவு- கிளியாகிய வடிவு, இன்பவடிவு.

தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்‌
வித்தையடைந்‌ தாயுனையார்‌ மெச்சவல்லார்‌-முத்தமிழோர்‌–54-

ததீதை-கிளியை, ஆபதீதை.

மாரதி பாரதியார்க்‌ குன்னை யுவ மானிப்பார்‌
ஆரதிக மார்தாழ்‌ வறைந்திடாய்‌-ஊர றிய–55-

மா ரதி- திருமகளுக்கும்‌ ரதிதேவிக்கும்‌.
பாரதியார்க்கு -கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து;
உயர்ந்ததன்‌ மேற்றே யுள்ளுங்‌ காலை (தொல்‌. உவம. 3)

நெய்யிற்கை யிட்டாலு நீதான்‌ பசுமையென்றே
கையிட்டுச்‌ சுதீதீ கரிக்கலாம்‌-மெய்யின்‌–56-

ப௬மையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்‌தி னத்தை நினைந்து.
கையிட்டு – கையைச்‌ செலுத்தி, கையறைந்து.

வடிவும்‌ வளை ந்த மணிமூக்கு மாயன்‌
கொடியி லிருப்பவர்தங்‌ கூறோ-நெடியமால்‌–57-

கொடியிலிருப்பவர்‌ – கருடாழ்வார்‌.

விண்டுதறித்‌ தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ-கொண்டசிற–58-

விண்டு- மூங்கிலை.
தறித்‌து- வெட்டி.
வேணு- புல்லாங்குழல்‌.
சிறகு, தழைத்த பசுந்தழையோ.
சிறகு : இடைநிலைத்‌ தீவகம்‌.

கல்லிலங்கு மெய்யானை யன்றமித்து வீடணன்‌ போய்த்‌
தொல்லிலங்கை கட்டுபுதுத்‌ தோரணமோ -நல் வாய் –59-

மெய்யான்‌ – இராவணன்‌.
கிளி தோரணத்திற்கு உவமை;
மாடத்துப்‌ பறக்குமொண்‌ கிளியொ முங்கின்‌, இலை செருகிய பசும் பூந்‌ தோரண மிசைய வார்த்தார்‌

மழலை மொழிதான்‌ மணிவண்ணன்‌ செங்கைக்‌
குழலி னிசைதானோ கூறாம்‌-அழகுக்‌–60-

மணிவண்ணன்‌ – நீலமணி போன்ற நிறதீதையுடைய கண்ண பிரான்‌.

கிளிப்பிள்ளாய்‌ தெள்ளமுதக்‌ கிள்ளாய்‌ நலங்குக்‌
குளிப்பிள்ளா யின்பரசக்‌ குஞ்சே-வளிப்பிள்ளை–61-

நலங்கு குளிப்பிள்ளாய்‌- நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்‌)
நலம் காட்டுவேன்‌ பட்டாடை யாற்றுடைப்பேன்‌ என்பர்‌ பின்‌ ; 195.
வளிப்பிள்ளை – தென்றற்காற்று.

தன்னைத்தாய்‌ போலெடுத்துச்‌ சஞ்சரிக்குஞ்‌ சம்பத்தாய்‌
பின்னைத்தாய்‌ கையிலுறை பெண்‌ டத்தாய்‌-பொன்னொத்தாம்‌-62-

தாய் போலெடுத்துச்‌ சஞ்சரிக்குமென்றது-குதிரையாக இருந்து வளிப் பிள்ளையைத்‌ தாங்கிச்‌ செல்லுதலை நினைந்து.
பின்னை தீதாய்‌- திரு மகள்‌ ; நப்பின்னையுமாம்‌.
பொன்‌ – கிளிச் சிறையென்னும்‌ பொன்‌.

முத்திநக ரேழிலொன்றே முத்‌ தமிழ்வல்‌ லாறிலொன்றாய்‌
ஓத்ததனித்‌ தவ்வரிப்பே ருற்றதொன்றே-சுத்தமுறும்‌–63-

முத்தி நகர்‌ ஏழில்‌ ஒன்று அவந்தி.
வல்லாறில்‌ – வல்லெழுத்து ஆறில்‌ ;
தவ்வரிப்பேர்‌ உற்றது ஒன்று : தத்தை.
அவந்தி யென்பதும்‌ தத்தை யென்பதும்‌ கிளியின்‌ பெயர்கள்‌.

ஐந்துபூ தத்திலொன்றே யான படை நான்கிலொன்றே
முந்துமுத லானபொருண்‌ மூன்‌ நிலொன்றே-வந்த–64-

ஐந்து பூதத்தில்‌ ஒன்று : வன்னி (நெருப்பு).
படைநான்கி லொன்று : குதிரை.
குதிரைக்குக்‌ கிள்ளையென்று ஒரு பெயர்‌ உண்டு.
முதலான பொருள்‌ மூன்றில்‌ – திரிமூர்த்திகளில்‌, ஒன்று என்றது அரி யென்னும்‌ பெயரை.
வன்னி, கிள்ளை, அரி யென்பன கிளியின்‌ பெயர்கள்‌.

இருபயனி லொன்றே யிமையே விழியே
பருவ விழியிலுறை பாவாய்‌-ஒரு நாரில்‌–65-

இருபயன்‌ – சுகம்‌, துக்கம்‌; ஒன்று சுகம்‌; அது கிளிக்கும்‌ பெயர்‌,
நார்‌ – அன்பு, பூத்தொடுக்கும்‌ நார்‌.

ஏற்றுந்‌ திருமாலை யெய்தப் போ யூரெல்லாம்‌
தூற்று மலர்‌ கொண்ட கதை சொல்லக் கேள்‌-தோற்றி–66-

திருமாலை-அழகரை, அழகிய மாலையை,
அலர்‌ – பூ. பழிமொழி

ஒரு நாரில்‌ தொடுத்த பூமாலையை அடையப் போய்‌ மலரை மாத்திரம்‌ கொண்டேனென்பது வேறு பொருள்‌.

————

அழகர்‌ சிறப்பு

அரிவடிவு மாய்ப்பின்‌ னரன்வடிவு மாகிப்‌
பெரியதொரு தூணிற்‌ பிறந்து-கரிய–67-

அரி – சிங்கம்‌.
அரன்‌ – சிவன்‌.
நரன் வடிவுமாகி யெனப்‌ பிரித்து, நரனென்னும்‌ அவதாரம்‌ செய்தென்று கொள்ளுதலுமாம்‌.
இக் கண்ணி நரசிங்காவதாரத்தைச்‌ சுட்டியது. .

வரைத்தடந்‌ தோளவுணன்‌ வன்காயங்‌ கூட்டி
அரைத்திடுஞ்‌ சேனை யருந்தி-உருத்திரனாய்ப்‌–68-

அவுணன்‌ – இரணியன்‌.
காயம்‌ – உடம்பு,
உணவுப்‌ பொருளோடு சேர்க்கும்‌ பலவகைப்‌ பொடி) இது மசாலை யென வழங்கும்‌ )-உப்பொடு நெய்பா றயிர்காயம்‌ பெய்தடினும்‌ (நாலடி. 116).
சேனை-சைனியத்தை, சேனைக் கிழங்கை.
உருத்திரனாய்‌- நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும்‌ கடவுளாகி.

பண்ணுந்‌ தொழிலைப்‌ பகைத்துநிலக்‌ காப்புமணிந்‌
துண்ணும்‌ படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்‌–69-

பண்ணும்‌ தொழில்‌ – காத்தற்றொழில்‌.
நிலக்காப்பு – மண்ணைக்‌ குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக்‌ காத்தல்‌.
குழந்தைகளுக்கு மண்‌ பொட்டிடுதல்‌ மரபு ;
மண்பொட்‌ டணிந்து நீறிட்டு?? (பிரபு. மாயை யுற்பதீதி, 46). உண்ணும்‌ உலகங்களை யெல்லாம்‌ உண்டு;
படி – உலகம்‌;-படியால்‌:அளக்கப்படும்‌ அரிசியால்‌
குளப்படி நெய்‌ யடிசிற்‌ கொதத்ததோ –திரு வரங்கத்‌.–89-

பூதனை தந்தபால்‌ போதாம லேபசித்து
வேதனையும்‌ பெற்று வெளிநின்று-பாதவத்தைத்–70-

வேதனை -துன்பத்தை – பிரம தேவனை.
பாதவத்தை – மருத-மரங்களை

தள்ளுநடை யிட்டுத்‌ தவழ்ந்து விளையாடும்‌
பிள்ளைமை நீங்காத பெற்றியான்‌-ஓள்ளிழையார்‌–71-

ஒள்ளிழையார்‌ – ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர்‌.

கொல்லைப்பெண்‌ ணைக்குதிரை யாகீகுந்‌ திருப்புயத்தான்‌
கல்லைப்பெண்‌ ணாக்குமலர்க்‌ காலினான்‌-சொல்கவிக்குப்‌–72-

கொல்லையிலுள்ள பனை மரத்தாலாகிய குதிரை யாக்குதற்குக்‌ காரணமான -மகளிர்‌ மடலேறுதல்‌,
திவ்யப் பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல்‌ முதலியவற்றால்‌ அறியப்படும்‌.
புயவழகைக்‌ கண்டு மகளிர்‌ மடலேறுவாரென்பது கருத்து.
பெண்‌ –அகலிகை.
கவிக்கு- திருமழிசை யாழ்வார்‌ மாணாக்கரான கணி கண்ணர்‌ பொருட்டு.

பார முதுகடைந்த பாயலான்‌ விண்ணவர்கீகா
ஆர முதுகடைந்த வங்கையான்‌- நாரியுடன்‌–73-

முதுகு அடைந்த பாயலான்‌ : அரவப்‌. பாயலைத்‌ தோளில்‌
எடுத்துத் தூக்கிக்‌ கணி கண்ணர்க்குப்‌ பின்னே சென்றாரென்னும்‌ பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது?
பணிகொண்ட முடவுப்‌ படப்பாய்ச் சுருட்டுப்‌ பணைத் தோளெருத் தலைப்பப்‌, பழமறைகண்‌
முறையிடப்‌ பைந்தமிழ்ப்‌ பின்‌ சென்ற பச்சைப்‌ பசுங்கொண்டலே (மீனாட்சி. பிள்ளைத்‌. காப்பு. 1).

ஆர்‌அமுதுகடைந்த – அரிய அமுதத்தைக்‌ கடைந்த
கடல் கடைந்து அமுதம் கொண்ட; அண்ணலை –திருவாய் -3-4-9-
நாரியுடன் -ஸீதாப்பிராட்டியுடன்

வன்கா னகங்கடந்த வாட்டத்தான்‌ வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான்‌-என்காதல்‌–74-

வன்‌ கானகம்‌ கடந்த – வலிய தண்டகாரணியத்தைக்‌ கடந்து சென்ற.
வேட்டுவற்கு – சரனென்னும்‌ வேடனுக்கு.
மென்‌ கால்‌ நகங்கள்‌ தந்த- மெல்லிய கால்‌ நகங்களைத்‌ தந்த,
கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின்‌ கண்ணபிரானது பாதமென்று அறிந்து
வருந்திய அவனுக்கு வீட்டையும்‌ அளித்தனரென்பதை வீட்டினான் என்பதனால் உடம்படு புணர்த்தினார்‌ ;
இந்த வரலாறு பாகவதம்‌,11-ஆம்‌ கந்தம்‌ தன்னுடைச்‌ சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம்‌,28-ஆம்‌ செய்யுள்‌ முதலியவற்றால்‌ அறியப்படும்‌.

வெள்ளத்‌ தமிழ்ந்தினோன்‌ வேலைக்கு மேன்மிதந்தோன்‌
உள்ளத்துள்‌ ளானுலகுக்‌ குப்பாலான்‌-தெள்ளிதின்‌–75-

முதலடியில்‌ முரண்‌ அமைந்துள்ளது-

வெட்ட வெறுவெளியி லேநின்றுந்‌ தோற்றாதான்‌
கிட்ட விருந்துங்‌ கிடையாதான்‌-தட்டாதென்‌–76-

எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்‌
கண்ண னெனும்பெயராற்‌ காண்பிப்போன்‌-எண்ணுங்கால்‌–77-

மாயன்‌ – கரிய நிறமுடையவன்‌, மாயையை யுடையவன்‌.
கண்ணன்‌ – எல்லார்‌ கண்ணிலும்‌ உள்ளவன்‌
வீதிவாய்ச்‌ செல்கின்‌றான் போல்‌ விழித்திமை
யாது நின்ற, மாதரார்‌ கண்களூடே வாவுமான்‌ நேரிற்‌ செல்வான்‌,
யாதினு முயர்ந்தோர்‌ தன்னை யாவர்க்குங்‌ கண்ணனென்றே,
ஓதிய பெயர்க்குத்‌ தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான்‌ (கம்ப, உலாவியற்‌. 6) என்பதிலும்‌
இச்சொல்‌ இப்பொருளில்‌ அமைக்கப்‌ பட்டுள்ளது.

எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்‌:
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான்‌-அங்கறியும்‌–78-

என்னை யெனக்கொளித்தி யானென்றுங்‌ காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்‌-முன்னைவினை–79-

கொன்று மலமாயைக்‌ கூட்டங்‌ குலைத்தென்னை
என்றுந்‌ தனியே யிருத்துவோன்‌-துன்றுபிர–80-

மாவுநான்‌ மன்னுயிரு நானவ்‌ விருவரையும்‌
ஏவுவான்‌ றானுநா னென்றுணர்த்தக்‌-கோவலர்பால்‌–81-

கோவலர்பால்‌ – இடையரிடத்தில்‌.

பிரமாவும்‌ நான்‌.

ஆனுமா யான்கன்று மாகி யவற்றைமேய்ப்‌
பானுமாய்‌ நின்ற பரஞ்சோதி-மா நரகப்‌–82-

பிரமன்‌ ஆன்கன்றுகளையும்‌ சிறார்களையும்‌ கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான்‌
அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம்‌, மலரவன்‌ சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால்‌ அறியப்படும்‌.

பேரிரு ணீக்கப்‌ பெருந்தவம்வேண்‌ டாவுடலில்‌
ஆருயிர்‌ கூட்ட வயன்‌ வேண்டா-பாருமெனச்‌--83-

சங்கத்‌ தொனியுந்‌ தடங்குழ லோசையெனும்‌
துங்கத்‌ தொனியுந்‌ தொனிப்பிப்போன்‌-பொங்குமலை–84-

துரியோதனனைச்‌ சேர்ந்தவர்கள்‌ தீது செய்தவராயினும்‌,
கண்ணபிரானது சங்கத் தொனியைக்‌ கேட்டமையின்‌ நரகம்‌ புகாராயினார்‌;
ஆதலின்‌ நரகப்பேரிருள்‌ நீக்கச்‌ சங்கத்தொனி தொனிப்பிப்போன்‌ என்றார்‌.
வேய்ங்குழலோசையால்‌ பட்டுப்போன மரங்கள்‌ தளிர்த்தனவாதலின்‌,
உடலில்‌ ஆருயிர்‌ கூட்ட வயன்வேண்டா -என்றும்‌,
குழலோசை —-தொனிப்பிப்போன்‌ -என்றும்‌ கூறினார்‌.
அலை- திருப்‌ பாற்கடல்‌.

மோதும்‌ பரனாதி மூல மிவனென்றே
ஓதுங்‌ கரியொன்‌ றுடையமால்‌-மூ துலகைத்‌–85-

கரி – கசேந்திரனென்னும்‌ யானை, சாட்சி.

தந்திடுவோ னுந்துடைப்போன்‌ றானுநா னென்றுதிரு
உந்தியால்‌ வாயா லுரைத்திடுவோன்‌-பைந்தமிழால்‌–86-

உந்தி- நாபி; இது தன் பால்‌ பிரமனைத்‌ தோற்றி உலகைச்‌ சிருட்டிப்பது.
பிரளய காலத்தில்‌ உலகத்தை உண்டமையால்‌ வாய்‌ அழித்தற்கு. உரியது
உலக. முண்ட பெருவாயா(திருவாய்‌, 6: 1) .

ஆ திமறை நான்கையுநா லாயிரத்து ‘நற்கவியா
ஓதும்‌ பதினொருவ ருள்ளத்தான்‌-பா ஈதமெனும்‌–87-

பதினொருவர்‌ – ஆழ்வார்கள்‌ பன்னிருவருள்‌ மதுரகவி யொழிந்த மற்றையோர்‌.

செந்தா மரை மலரிற்‌ சிந்திய தேன் போல
மந்தா கினி வழியும்‌ வண்மையான்‌-சந்ததமும்‌–88-

திரிவிக்கிரமாவதார காலத்தில்‌ வலக் காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர்‌.
மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன்‌ அவயவப்‌ பொருள்‌.

ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்‌
தோன்றத்‌ துயிலாத்‌ துயில்கொள்வோன்‌-ஈன்றவளைத்‌–89-

துயிலாத்‌ துயில்‌ – அறிதுயில்‌,
ஈன்றவளை – யசோதையை.

தெள்ளு மணிவாயிற்‌ காட்டிச்‌ செகம்புறமும்‌
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்‌-கொள்ளைத்‌–90-

கொள்ளை – மிகுதி.
ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.

கவற்சிதரு சென்மக்‌ கடலிற்‌ கலந்த
அவிச்சை யுவர்‌ வாங்க முகி லானோன்‌-நிவப்பா–91-

அவிச்சை யுவர்‌ – அஞ்ஞானமாகிய உப்பை.– உவரை நீக்கி நீரைக்‌ கொள்வது முகிலின்‌ இயல்பு ;
முகில்‌ – மேகம்‌.
நிவப்பா – உயர்‌வாக.

மடங்கும்‌ பரசமய வாத நதிவந்‌
தடங்கக்‌ கருங்கடலு மானோன்‌-உடம்பிற்‌–92-

கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு.

புணர்கீக வொருகிரணம்‌ போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன்‌-பணைக்கும்‌–93-

நீலமணி ஏனை நிறங்களைத்‌ தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும்‌ இயல்புடையது.

விசைப்பூ தலவூசன்‌ மீதிலிருப்‌ போனும்‌
அசைப்போனுந்‌ தானாகு மண்ணல்‌-இசைத்திசைத்‌–94-

தூன் பிடிக்கும்‌ வேட ரொருபார்வை யானூறு
எண் பிடிக்‌ கின்ற வகை யென்னத்‌-தான் படைத்த–95-

பார்வை – பார்வை மிருகம்‌-மிருகங்களைப்‌ பிடிப்பதற்காக வேடர்கள்‌ வளர்க்கும்‌ மிருகங்கள்‌
அல்லது அவற்றைப்‌ போல மண்ணாற்‌் செய்த வடிவங்கள்‌ ;
இவை தீபகமென்றும்‌ சொல்லப்படும்‌.

என் பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமும்
தன் பிறவி பத்தாற் றணித்திடுவோன்‌-முன்பு புகழ்ந்‌ –96–

பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்துநான்கு லட்சம்‌ பிறப்பின்‌ பேதங்களை,
பிறவி பத்து – தசாவதாரம்‌;
தாம்‌ அவதாரம்‌ எடுத்தமையால்‌ அவற்றைத் தியானிக்க என்‌ பிறவி தீர்ந்த தென்பது கருத்து.

———-

தசாங்கங்கள்‌
(மலை)

தேத்திருவர்‌ நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்‌-கோத்திரமாம்‌--97-

இருவர்‌ – பிரமதேவரும்‌ உருதீதிரரும்‌.
கேசவாத்திரி – அழகர்‌ மலையின்‌ திருநாமங்களுள்‌ ஒன்று.

வெங்காத்‌ திரஞ்சேர்‌ விலங்குகளை மாய்த்திடலாற்‌
சிங்காத்‌ திரியென்னுஞ்‌ சீர்மருவி-எங்கோமான்‌–98-

காத்திரம்‌ சேர்‌ விலங்குகளை – உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை,
முன்காலைச்‌ சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை–சிலேடை.–காத்திரம்‌ – யானையின்‌ முன்கால்‌.
சிங்காத்திரி : இம்மலையின்‌ திருநாமம்‌,
எம்கோமான்‌ – கண்ணபிரான்‌.

மேய்த்த நிரைபோல வெற்புகளெல்‌ லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால்‌ விடையாய்ப்‌-பார்த்திடலால்‌–99-

கீழேயிருக்கும்‌ சிறு குன்றுகளுக்குப்‌ பசு நிரையும்‌, அழகர்‌ மலைக்கு இடபமும்‌ உவமை.
தரும தேவதை இடப வடிவங்கொண்டு இங்கே தவஞ்‌ செய்து வழிபட்டுப்‌ பேறு பெற்றமையின்‌ இடபகிரி யென்ற
பெயர்‌ உண்டாயிற்றென்பர்‌.

இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர்‌
மன்னிய சோலை மலையினான்‌-எந்நாளும்‌–100-

இனிமை இயம்‌ – இனிய வாத்தியங்கள்‌ ;
முன்றி லதிர் மும்‌ முரசினான்‌ –என்பர்‌ பின்‌ ; 122.

—————-

(நதி)

பொற்சிலம்பி லோடுஞ் சாம்‌ பூநத போன்‌ மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்‌-கற்சிலம்பில்‌ –101–

பொற்சிலம்பில்‌ – மேருமலையில்‌.
சாம்பூநதம்‌-மேருவின்‌ தென்‌ பால்‌ ஓடும்‌ ஓராறு; நாவற்பழத்தின்‌ சாறே ஆறாக ஓடுதலால்‌ இந்நதம்‌ சாம்பூ நதமெனப்‌ பெயர்‌ பெற்றது;
நதம்‌ – மேற்கு நோக்கி ஓடும்‌ ஆறு.
மாணிக்க நற்சிலம்பு – திருவடியில்‌ அணியப் பெற்றுள்ள மாணிக்கப்‌ பரலை யுடைய சிலம்பென்னும்‌ ஆபரணம்‌,
கற் சிலம்பில்‌ – பல வகையான கல் மலைகளுக்கு இடையே.

இந்திரன்‌ போலு மிடபா சலமவன்மேல்‌
இத்தவிழி போலும்‌ வளச்சுனைகள்‌-முந்துதிரு–102-

௬னைகளுக்கு இந்திரன்‌ விழிகள்‌ உவமை.

மாலுடைய தோளின்‌ மணிமார்பின்‌ முத்தாரம்‌
போல வருதா புரநதியான்‌-சீலமுறு–103-

முத்தாரம்‌ தோளிலும்‌ மார்பிலும்‌ உள்ளன;–நதிக்கு-முத்தாரம்‌ உவமை
மாயோன்‌ மார்பி லாரம்‌ போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி(தொல்‌. செய்‌. 35, பேர்‌. மேற்‌;)
நதிக்குப்‌ போத வொமுகு முதீதாரமும்‌ (தக்க. 280).
நூபுர நதி – சிலம்பாறு ?
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்‌ றகன்றலை (சிலப்‌. 11 : 108) ;
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்‌ சோலை (பெரியதிரு. 9, 9:9)

—————-

நாடு

பன்னிரு செந்தமிழ்சேர்‌ நாடுகளும்‌ பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால்‌-பின்னகங்கண்‌ –104-

பன்னிரு செந்தமிழ்‌ சேர்‌ நாடுகள்‌ – செந்தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ்‌ நாடுகள்‌
தென்பாண்டி குட்டங்‌ குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவா வதன்வடக்கு-நன்றாய, சீத மலாடு
புனனாடூ செந்தமிழ்சேர்‌, ஏதமில்‌ பன்னிருநாட்‌ டெண்‌ (நன்‌. 274மயிலை. மேற்‌.)
பின்னகம்‌ – பின்னல்‌.
கண்‌ – கண்கள்‌.
கையிரண்டு; காதிரண்டு, நகிலிரண்டு, முகம்‌, காலிரண்டு, பின்னல்‌, கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும்‌ பன்னிரு நாடுகளுக்கு உவமை.

காட்டு மவற்துட்‌ கனக வரை மீது புகழ்
தீட்டும்‌ புனனாடுந்‌ தென்னாடும்‌-நாட்டமாம்‌.–105-

கனகவரை – மேருமலை,
புனல்நாடு – சோழநாடு.
தென்னாடு- பாண்டிநாடு.
நாட்டம்‌ ஆம்‌ – கண்கள்‌ ஆகும்‌.

அந்நா டிரண்டி லருள்சேர்‌ வலக்கணெனும்‌
நன்னுடாந்‌ தென்பாண்டி நாட்டினான் பொன்னுருவச் –106-

—————————-

(ஊர்‌)

சந்தீரவடி வாஞ்சோமச்‌ சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும்‌-மந்தரவிரு–107-

சோமச்சந்திர விமானம்‌ : இஃது அழகருடைய விமானத்தின்‌ திருநாமம்‌.
தரும தேவதையின்‌ கட்டளைப்படி விஸ்வ கருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால்‌ இப்பெயர்‌ பெற்றது;
இது சோமச் சந்த விமானமென்றும்‌ வழங்கும்‌ ;
வந்த விமா னத்தமரர்‌ மலர்‌ தூவிப்‌ பணி சோமச்‌, சந்த விமானத் தமருஞ்‌ செளந்தரிய பரஞ்சோதி ?? (அழகர்‌ கலம்‌. 1)

துகீகொடி யேறு துசத்தம்பம்‌ வல்லி சா
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும்‌-மிக்கோர்க்‌–108-

விருதுக் கொடி – வெற்றிக் கொடி.
துசத்தம்பம்‌ – துவசதீதம்‌பம்‌.
வல்லி சாதக் கொடி – கற்பகமரத்திற்‌ படரும்‌ காமவல்லி

கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்‌
திருமாலை யாண்டானைத்‌ தேவ-குருவென்றும்‌–109-

ஒரு வாழ்வானோனென்ற.து அழகரை.
திருமாலையாண்டான்‌ – உடையவருடைய குரு- இவருடைய விக்கிரகம்‌ ஸ்ரீ ஆண்டாள்‌ சந்நிதி யின்‌ பக்கத்தே இத் தலத்தில்‌ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸுப்ர பாதபடனம்‌, புஷ்பாஞ்சலி முதலியன இவர்‌ சொல்லா நிற்ப அர்ச்சகர்‌ செய்யவேண்டும்‌. திவ்யப்ரபந்த சேவையும்‌ உண்டு.
இவருடைய சந்ததி யார்‌ பெருமாள்‌ எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில்‌ வருவார்‌கள்‌.
திரியெடுத்தாடுதல்‌ முதலியவற்றில்‌ இவர்களுக்குக்‌ காணிக்கை யுண்டு.
இவர்களைச்‌ சேவித்த பின்‌ அடியார்கள்‌ பெருமாளைச்‌ சேவிப்‌ பார்கள்‌.

நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும்‌-எண்ணுதலால்‌–110-

நம்பி – திருமலை நம்பி; இவர்‌ கைங்கரிய பரர்‌ ;
பட்டைக்‌ கைங்‌ கரியமென்று பெயர்‌ – இக்கைங்கரியம்‌ தர்ப்பம்‌, கூர்ச்சம்‌, பவித்ரம்‌ முதலியன கொடுத்துப்‌
புண்யாஹவாசனாதிகள்‌ செய்து வைக்கும்‌ பெளரோகித சம்பந்தமானது.
இவர்‌ பரம்பரையார்‌ இன்றும்‌ இங்கேயே இருந்து கைங்கரியஞ்‌ செய்து வருகிறார்கள்‌.
விபுதர்‌ – தேவர்‌.

ஆர்பதி யான வமரா பதிபோலும்‌
சீர்பதி யான திருப்பதியான்‌-மார்பிடத்தில்‌–111-

ஆர்‌ பதி- நிறைந்த ஊர்‌.
சீர்பதி-ஸ்ரீய பதி; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்‌,

——————

மாலை

எண்ணுங்‌ கலனிறத்தோ டிந்திரவிற்‌ போற்பசந்த
வண்ணந்‌ தருந்துளப மாலையான்‌-உண்ணின்‌–112-

கலன்‌ – ஆபரணங்கள்‌.
மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில்‌ உவமை.

—————-

(யானை)

றுருக்கும்‌ வபிணவமா மோங்குமதம்‌ பொங்கதீ
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர-நெருக்கிய–113-

மதம்‌ – சமயம்‌, யானையின்‌ மதம்‌.
திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு.
துதிக்கை – துதித்தல்‌, யானை யின்‌ துதிக்கை.

பாகமொத்த வைகான தம் பாஞ்ச ராத்திரமாம்‌
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு–114-

வைகானதம்‌, பாஞ்சராத்திரம்‌ : வைஷ்ணவ ஆகமங்களின்‌ பெயர்கள்‌.

மட்டும்‌ பிணிக்கும்‌ வடகலையுந்‌ தென்கலையும்‌
கட்டும்‌ புரசைக்‌ கயிறாக-விட்டுவிடா–115-

வடகலை, தென்கலை – வைணவ மததீதின்‌ உட்பிரிவுகள்‌.
புரசைக்‌ கயிறு – யானையின்‌ கழுத்திற்‌ கட்டும்‌ கயிறு.

வானந்த மான மலர்தீதாள்கண்‌ டத்துவி
தானந்த மென்றகளி யானையான்‌-தானந்த–116-

வான்‌ அந்தம்‌ ஆன.

—————-

(குதிரை)

வர்கீகத்‌ துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங்‌ காண்பித்துச்‌-சொர்க்கத்தில்‌–117-

வர்க்கம்‌-எமுத்தின்‌ வர்க்கம்‌, சேணம்‌.
வாயின்‌ உரைகடந்து- மனிதர் வாயின்‌ உரையைக்‌ கடந்து, –வாயில்‌ நுரைகள்‌ தந்தென்பது மற்‌ றொரு பொருள்‌,
கற்கி வடிவு – கோயிலின்‌ வடிவு. குதிரையின்‌ வடிவு
கற்கி-கோயில்‌ —கற்கிளர்‌ கற்கி செய்தோன்‌ (சேது.இராமநாத. 43)

ஏறுங்‌ கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும்‌ பலகலையும்‌ வென்றோடி-ஆறங்கம்‌–118-

அணு – துளி, உயிர்‌,
தோற்றி – வெளிப்படச்‌ செய்து.
கலை – நூல்கள்‌, மான்கள்‌.
ஆறு அங்கம்‌ – வேதாங்கம்‌ ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்‌.

சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டூ தாரணியிந்‌
போற்றிய வேதப்‌ புரவியான்‌-பாற்கடலிற்‌–119-

வேதத்துக்கும்‌ குதிரைக்கும்‌ சிலேடை,

—————-

(கொடி)

புக்கதொரு மந்தரமும்‌ பூமியும்‌ பம்பரமும்‌
சக்கரமும்‌ போலத்‌ தலைசுழன்று-தொக்கவிசை–120-

மந்திரத்திற்குப்‌ பம்பரமும்‌, பூமிக்குச்‌ சக்கரமும்‌ உவமைகள்‌.
விசை – வேகம்‌.

வற்றும்‌ பொழுதுவிழ வாசுகியைச்‌ சேடனைப்‌
பற்றுங்‌ கருடப்‌ பதாகையான்‌-சுற்றியதன்‌–121-

கருடப்பதாகை – கருடக்கொடி : பதாகை – பெருங்கொடி.

—————

(முரசு)

குன்நிலரி யுங்கரியுங்‌ கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும்‌ முரசினான்‌-என்றும்‌–122-

அரி – சிங்கம்‌.
கரி- யானை,
கொண்மூ- மேகம்‌.
மும்முரசு –நியாய முரச, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 :12, உரை)

————–

ஆணை

அவன் அசையாமல் அணுவும் அசையாது என்னும்
தவநிலை யாணை தரித்தோன்‌-நவநீதம்‌ –122-

எங்கும் நிறைகின்றவன் என்றவாறு
நவநீதம் -வெண்ணெய்

மேனியிற்‌ சிந்தியது மென்கையி லேந்தியதும்‌
வானி லுடுவு மதியுமெனத்‌-தானுண்டோன்‌–124-

உடு -நக்ஷத்ரம்
மதி -சந்திரன்

மேனியிற்‌ சிந்திய வெண்ணெயின்‌ சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும்‌,
கையில்‌ எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும்‌ உவமைகள்‌.

செங்கதிரும்‌ வெண்கதிரு மென்னத்‌ திருவிழியும்‌
சங்கமுஞ்‌ சக்கரமுந்‌ தாங்கினோன்‌-அங்கணுல–125-

திங்கள்‌ இடக்கண்ணும்‌ சங்கும்‌, சூரியன்‌ வலக்கண்ணும்‌ சக்கரமும்‌ ஆகும்‌.

குண்டகனி வாயா னுறையுந்‌ திருவயிற்றான்‌
கொண்ட படியீன்ற கொப்பூழான்‌-மண்டி–126-

உலகு உறையும்‌ என இயைக்க.
கொண்டபடி – உட்‌கொண்டபடி,
கொப்பூழ்‌ – திருவுந்தி.’

அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்‌
விளைந்த பொருள்காட்டு மெய்யான்‌-உளங்கொண்–127-

பூமியை அளந்ததும்‌ அதனை ஏற்றதும்‌ வாமனாவதார
தீதில்‌. விளைந்த பொருள்‌ – பச்சைப் பயிர்‌.

டிடந்த மருப்பினா னேந்து முதுகான்‌
படந்தனில்‌ வைத்த மணிப்‌ பாயான்‌-தொடர்ந்தவினை–128-

இடந்த- பெயர்த்த; இது வராகாவதாரத்தில்‌.
முதுகிலேந்தியது கூர்மாவதாரத்தில்‌,
பாய்‌ – ஆதிசேடன்‌.

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க்‌ கீழ்புக்‌,
கிடந்‌திடுந்‌ தன்னுட்‌ கரக்கு முமிமும்‌,
தடம்பெருந்தோ எாரதீ தழுவும்‌ பாரென்னும்‌,
மடந்தையை மால்செய்கின்ற மாலார்‌ காண்பாரே —
உண்டு முமிழ்ந்துங்‌ கடந்து மிடந்துங்‌ கிடந்து நின்றும்‌,
கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும்‌,
கண்டவாற்றாற்‌ நனதே யுலகென நின்றான்‌ (திருவாய்‌. 2, 8: 7; 4. 5:10)

முட்டதுக்குந்‌ தன்னாம முன்னித்‌ திருநாமம்‌
இட்டவருக்‌ கீவோ னிகபரங்கள்‌-எட்டெழுத்தாற்‌--129-

முட்டு- தடை.
தன்‌ நாமம்‌ முன்னி -தன்‌ திருநாமங்களைத்‌ தியானித்து.
திருநாமம்‌ இட்டவருக்கு – திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு;
மணிவாசற்‌ றூங்க வொருகுடைக்‌ கீழ் வையங்‌ காத்துச்‌ சிந்தா,
மணிவா சவனென வாழ்ந்திருப்‌ போர்பின்னை மாதிருக்கும்‌,
மணி வாச மார்பரங்‌ காகேச வாவென்று வாழ்தீதித்திரு,
மணிவா சகங்கொண் டணிவா ரடியை வணங்கினரே (திருவரங்கத்‌. 72);
ஈராறு நாம முரைசெய்து மண் கொண்‌் டிடுவார்கள்‌ காணு மிமையோர்‌ ? (வி. பா. 9-ஆம்‌ போர்ச்‌. 1),
எட்டெழுத்து – அஷ்டாக்ஷரம்‌.

பிஞ்செழுத்தாய்‌ நையும்‌ பிரம லிபியெனும்பேர்‌
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன்‌-வஞ்சமறத்‌–130-

பிஞ்சு எழுத்தாய்‌- சிறிய எழுத்தாய்‌ :
பிஞ்சு எழுத்து எனப்‌ பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம்‌.

பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகியது; அஞ்சு எழுத்து – யாவரும்‌ அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம்‌.
மூன்று எழுத்தது – மூன்று எழுத்தையுடைய இல்லை யென்னுஞ்‌ சொல்‌
போதனார்‌ நெட்டெழுதீது நமனா ரிட்ட குற்றெழுத்தும்‌ புனலெழுத் தாய்ப்போக (சீரங்க. ஊசல்‌, 16) ்‌

தங்கள்குன்‌ றெங்கிருந்துஞ்‌ சங்கர னாதியோர்‌
நங்கள்குன்‌ நீ தென்னவரு நண்புடையோன்‌-அங்கோர்‌–131-

வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன்‌ போற்றும்‌
கயமுனிக்குக்‌ கண் கொடுத்த கண்ணன்‌-நயமுரைக்கின்‌–132-

வயமுனி-பச்சை வாரண தாசர்‌; இவர்‌ திருக்கச்சி நம்பி முன்‌ னோர்களுள்‌ ஒருவர்‌; பச்சை வாரணப்‌ பெருமாள்‌
கோயிலில்‌ வழிபட்டவர்‌. இவருக்கு ஹஸ்திகிரியில்‌ கண்ணைப்‌ போக்கின தாகவும்‌,
அழகர்‌ மலையில்‌கண்ணைக்‌ கொடுத்ததாகவும்‌ வரதராஜ ஸ்தவத்தில்‌ கூரத்தாழ்வார்‌ கூறி யிருப்பதாகப்‌ பெரியோர்‌ கூறுவர்‌.
கயமுனி – யானைக்கன்று; இதற்குக்‌கண்‌ கொடுத்தது, வளிநான்ற மணிமுறத்‌ தழைசெவிச்‌ சிறுகவுளில்‌ வண்டோ டிரண்டுபாடும்‌ மழைபாய்‌ கடாக்கரிக்‌ கண்கொடுத்தும்‌ (அழகர்‌ பிள்ளைத்‌. அம்புலிப்‌. 4) என்பதிலும்‌ கூறப்பட்டுள்ளது.

அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச்‌ சக்‌கரத்தான்‌-எஞ்சாது–133-

அஞ்சுபடை -பஞ்சாயுதம்‌, அஞ்சுகின்ற படை.
உத்தியோகச் சக்கரம்‌ : உத்தியோகச் சக்கரம்‌, பிரயோகச்‌ சக்கரமெனச்‌ -சக்கராயுதம்‌-இருவகைப்படும்‌-
அவற்றுள்‌ இயல்பாக உள்ளது உத்தியோகச்‌ சக்கரம்‌.

விண்ணிலங்கொள்‌ பொன்னிலங்கை வெற்றியாய்க்‌ கொண்டாலு
மண்ணிலங்கைத்‌ தானமாய்‌ வாங்குவோன்‌-பண்ணிலங்‌கும்‌–134-

பொன்‌ இலங்கை – பொன் மயமான இலங்கை நகரத்தை.
மண்‌ நிலத்தை. கைத் தானமாய்‌ வாங்குவோன்‌ –மகாபலியினிடத்தே தானமாய்க்‌ கையில்‌ வாங்குவோன்‌.

ஏரணி பொன்னரங்கத்‌ தெம்பிரான்‌ போலெவர்க்கும்‌
தாரணி நல்காத தம்பிரான்‌-காரணியும்‌–135-

அரங்கத்‌ தெம்பிரான்‌ – ஸ்ரீ ரங்க நாதர்‌.
ஸ்ரீரங்கநாதர்‌ நாச்சியார்‌ பலருக்கு மாலையை அளிப்பவர்‌
அழகர்‌ ஆண்டாளுக்கு மட்டும்‌ மாலை அளிப்பவராதலின்‌ இங்ஙனம்‌ கூறினார்‌.
தாரணி – மாலையாகிய . ஆபரணத்தை.
கார்‌ அணியும்‌ – கொடையால்‌ மேகத்தை ஒத்த.

செங்கைத்‌ தலத்திடத்துந்‌ தென்மதுரை யூரிடத்தும்‌
சங்கத்‌ தழகனெனுந்‌ தம்பிரான்‌-எங்கும்‌–136-

இடச்செங்கையில்‌ சங்கமென்னும்‌ ஆயுதத்தையுடைய அழகர்‌
தென்மதுரையூரிடத்தில்‌ தமிழ்ச் சங்கத்திலுள்ள அழகர்‌;
சுந்தரத் தமிழ்ப்‌ புலவர்‌, சங்கத்‌ திருப்பிரியான்‌ சார்பு (அழகர்‌.கலம்‌. 68)

திருப்பாது கைக்குஞ்‌ செழுங்கருட னுக்கும்‌
திருப்பாது கைக்குமர சீந்தோன்‌-விருப்பமுகம்‌--137-

திருப்பாது உகைக்கும்‌ – பின் வாங்காமல்‌ செலுத்துகின்ற.
கருடன்‌ – கருடாழ்வான்‌;
கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது.
திருப்பாதுகை – திருவடி நிலை; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில்‌.

சந்திர னான சவுந்தர வல்லியுடன்‌
சுந்தர ராசனெனத்‌ தோன்றினோன்‌-அந்தம்‌–138-

சவுந்தர வல்லி- இத்தலத்து நாச்சியார்‌ திருநாமம்‌,
அந்தம்‌ -அழகு.

சொலநலங்கொ டோளழகாற்‌ சுந்தரத்‌ தோளன்‌
மலையலங்‌ காரனென வந்தோன்‌-பலவிதமாய்‌–139-

தோள்‌ அழகால்‌- தோளாலும்‌ அழகாலும்‌.
தோளால்‌ சுந்தரத்‌ தோளனென்றும்‌,
அழகால்‌ மலை யலங்காரனென்றும்‌ உண்டாயின.

—————

வழி பட்டோர்‌

நண்ணியதெய்‌ வத்தை நரரெல்லாம்‌ பூசித்த
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன்‌-கண்ணனைய–140-

புண்ணியம்‌ – தருமதேவதை ;
தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம்‌ கண்ணியின்‌ குறிப்புரையால்‌ அறியலாம்‌.
கள்‌ நனைய – தேனை யுடைய-
அரும்புகளை யுடையனவாகிய; அரும்புகள்‌, இட்டவை.

பாத கமலம்‌ பரவுமல யத்துவசன்‌
பாத கமலம்‌ பறித்திடுவோன்‌-கோதில்‌--141-

பாத கமலம்‌ பரவு – திருவடித் தாமரைகளை வணங்கிய.
மலயத் துவசன்‌ – மலயத்துவசபாண்டியன்‌ ;
இவன்‌ இத்தலத்தில்‌ கோயிற்நிருப்‌ பணி முதலிய திருப்பணிகளையும்‌
நித்தவிழா முதலியவற்றையும்‌ செய்‌வித்துப்‌ பேறு பெற்றவன்‌;
இவ்வரலாறு இத்தலபுராணத்திலும்‌ உள்ளது;
பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே (அழகர்‌ கலம்‌. 1).

அரணாம்‌ புயங்களுறு மம்பரீ டற்குச்‌
சரணாம்‌ புயங்க டருவோன்‌-திரு நாளில்‌–142-

அரணும்‌ :புயங்கள்‌ – தம்முடைய குடிகளுக்கு அரணுகிய தோள்கள்‌ ;
அரண்டரு திரடோள்‌ (கம்ப. சடாயுவுயிர்‌. 63).
அம்பரிடன்‌ : இத் தலத்தில்‌ வழிபட்டுப்‌ பேறுபெற்ற ஓரரசன்‌.
சரண அம்புயங்‌கள்‌ – திருவடித் தாமரைகளை.

—————————

கோடைத்‌ திருவிழா

சந்தக்கா வூடு தவழ்ந்துவருந்‌ தென்றற்கால்‌
மந்தக்கா லாக மருவுங்காற்‌-சிந்திக்கும்‌–143-

சந்தக்காவூடு – சந்தனச்‌ சோலையினுள்ளே -என்றது பொதியின்‌ மலையிலுள்ள சந்தனச்‌ சோலையை.
மந்தக்கால்‌ ஆக – மந்த மாருதமாக; -தென்றலின்‌ மூவகை நடையுள்‌ மந்தம்‌ ஒன்று.

வாடைத்‌ துளிபோன்‌ மலர்த்தேன்‌ றுளிதுளிக்கும்‌
கோடைத்‌ திருவிழாக்‌ கொண்டருளி-நீடுவிடைக்‌–144-

குன்றிலுற்ற வெள்ளங்‌ கொழுந்தோடி வையைதனிற்‌
சென்றெதிர்த்து நிற்பதெனச்‌ சீபதியோர்‌-அன்றெதிர்த்துக்‌–145-

விடைக்‌ குன்று; அழகர்மலை -99, பார்க்க.
ஸ்ரீ பதியோர்‌ -அழகர்‌ மலையிலுள்ளோர்‌.

கூடலிற்‌ கூடலெனுங்‌ கூடற்‌ நிருநகரில்‌
ஏடலர் தாரான் எழுந்தருளி ஆடக்குடன்–146-

ஸ்ரீ பதியோர்‌ கூடுதலால்‌ கூடலென்னும்‌ பெயர்‌ பெற்ற மதுரையில்‌;
இது பிரிநிலை நவிற்சியணி.
தாரான்‌ – அழகர்‌.

கல்லா குளங்கள்‌ கரையப்‌ பணிவார் முன்‌
தல்லா குளம் வந்து சார்ந்தருளி-மெல்ல –147-

கல்‌ ஆகு உளங்கள்‌ – கல்லைப்‌ போன்ற மனங்கள்‌.
தல்லா குளம்‌ – மண்டபப்படியுள்ள ஓர்‌ ஊரின்‌ பெயர்‌-இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.

——–

வையைக்கு எழுந்தருளுதல்‌

நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்றுசிலர்‌ பார்க்கச்‌-சுரலோகத்‌-148-

நரலோகமீது – பூமியின்மேல்‌.
சுரலோகத்து – தேவருலகத்‌தில்‌ உள்ள.

திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்‌
சந்த்ர விமானமே தானென்றும்‌-முந்தியவட்‌–149-

சோமச் சந்த்ர விமானம்‌ : இத் தலத்துள்ள கோயிலின்‌ விமானம்‌ ; 107-ஆம்‌ கண்ணியின்‌ குறிப்பைப்‌ பார்க்க.

டாங்க விமான மவையிரண்டு மென்னவே
தாங்கு விமானந்‌ தனிற்புகுமுன்‌-தீங்கிலார்‌–150-

அட்டாங்க விமானம்‌ : எட்டு அங்கங்களையுடையது :
அழகருடைய சோமச்சந்திர விமானமும்‌, கூடலழகருடைய விமானமும்‌ இவ்வாறு கூறப்படுதலால்‌, -அட்டாங்க விமான மவையிரண்டும்‌ -என்றார்‌.
இதன்‌ இலக்கணத்தை, அழகர்‌ பிள்ளைத்‌ தமிழ்‌, முத்தப்‌ பருவம்‌, * மட்பாவை தோயும்‌  (2) என்னும்‌ முதற்‌ குறிப்புடைய செய்‌ யுளால்‌ அறிந்து கொள்ளலாம்‌.
தீங்கிலார்‌ – விமானந்‌ தாங்குவோர்‌.

உன்னி விமான முரத்தெடுக்கும்‌ போதனந்தன்‌ 
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே--151-

உரத்து – வன்மை கொண்டு.
அனந்தன்‌ – ஆதிசேடனுடைய.
சென்னிமணி – தலையிலுள்ள மணிகளுள்‌.

உம்பரில்‌ வெய்யோ னுதயஞ்‌ செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்‌–152-

குதிரை நம்பிரான்‌ – பெருமாளுடைய வாகனமான குதிரை ;
உத்தம இலக்கணம்‌ அமைந்த குதிரையைக்‌ குதிரை நம்பிரானென்றல்‌ மரபு (சீவக. 2157, ந)
ஸூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.

கோடி கதிரோனுங்‌ கோடி பனிமதியும்‌
ஓடி நிரையா வுதித்தவென-நீடிய–153-

கதிரோன்‌ – சூரியன்‌.
மதி- சந்திரன்‌.
நிரையா – வரிசையாக

பொற்கொடியும்‌ வெள்ளிக்‌ குடையும்‌ பொலிந்திலங்க
விற்கொடிகள்‌ விண்ணோர்‌ வெயர்துடைப்பச்‌-சொற்கத்‌--154-

பொற் குடைக்குச்‌ சூரியனும்‌, வெள்ளிக் குடைக்குச்‌ சந்திரனும்‌ உவமைகள்‌.
விற் கொடிகள்‌ – ஒளியை யுடைய கொடிகள்‌

தியலுங்‌ கரியுமதி லெற்று முரசும்‌ 
புயலு முருமேறும்‌ போலக்‌-கயலினத்தை-155-

எற்றும்‌ – அடிக்கப்படும்‌.

அள்ளுந்‌ திரைவையை யாறுட்‌ பரந்துநர
வெள்ளங்‌ கரைகடந்து மீதூர-வள்ளல்‌–156-

திருத்தகு மேகம்போற்‌ செல்லுதலா னீர்தூம்‌
துருத்தி மழைபோற்‌ சொரியகீ-கருத்துடனே-157

நீர்தூம்‌ துருத்தி – நீர்தூவும்‌ ஒருவகைக்‌ கருவி.

வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்‌
கேட்டவர மூறுங்‌ கிணறுபோல்‌ நாட்டமுடன்‌–158-

காணிக்கை வாங்கியன்பர்‌ கைகோடி யள்ளியிடும்‌
ஆணிப்பொற்‌ கொப்பரைமுன்‌ னாகவரகீ-காணிற்‌–159-

காணிக்கை – கையுறைகளை.

புரந்தரற்கு தேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண்‌ வையைநதி யெய்தி-உரந்தரித்த--160-

திருக்கண்‌ – வையை நதியினிடையே அழகர்‌ திருக்கண்‌
சாத்தி யருளுதற்காக வைக்கப்படும்‌ பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள்‌.
ஆயிரம்‌, பலவென்னும்‌ பொருளை யுடையது. -ஆயிரங்‌
கண்களை யுடைமையால்‌ வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர்‌.
உரம் -மார்பு

——————

வண்டியூர்‌ மண்டபத்தில்‌ எழுந்தருளுதல்‌

வார்மண்டு கொங்கை மனம்போல்‌ விலங்குவண்டி
யூர்மண்டபத்தி னுவந்திருந்து-சீர்மண்டு–161-

வார்மண்டு கொங்கை–திரு மகள்
வண்டியூர் மண்டபம் -வையைக்கு வடக்கில் உள்ள ஓரூர்
இவ்வூரில் சிவ கங்கை அரசரால் மண்டபப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பர்

மாயனுக்கு வாகனமாய்‌ வாவென்று சேடனைத்தான்‌
போயழைக்க வெய்யோன்‌ புகுந்திடலும்‌-தூயோன்‌–162-

சூரியன்‌ அதீதமிக்க. தற்குறிப்பேற்றவணி.

மருளப்‌ பகலை மறைத்தவ னிப்போ
திருளைப்‌ பகல்செய்தா னென்னத்‌-தெருளவே–163-

பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில்‌ ;
பகல்‌ – சூரியன்‌

அங்கிக்‌ கடவுளும்வந்‌ தன்பருட னாடுதல்போற்‌
றிங்கட்‌ கடவுள்சே விப்பதுபோநற்‌-கங்குற்‌–164-

கரதீப மும்வாணக்‌ காட்சியுங்‌ காண
வரதீப ரூபமாய்‌ வந்த-திருமால்‌–165-

கரதீபம்‌ – தீவட்டி,
காண – காண்பதற்கு.
தீப ரூபமாய்‌ வந்தது திருத் தண் காலில்‌-இவருடைய திருநாமம்‌ விளக்கொளிப்‌ பெருமாளென்பது.

—————

தலைவி அழகரைத்‌ தரிசித்து மயல்‌ கொள்ளல்‌

அவனி பரிக்கு மனந்தாழ்வான்‌ மீது
பவனிவரக்‌ கண்டு பணிந்தேன்‌-அவனழகிற்‌–166-

அனந்தாழ்வான் மீது – ஆதி சேட வாகனத்தின் மீது.
பவனி -உலா

பின்னழகு முன்னழகாம்‌ பேரழகைகீ காணுமுன்னே
முன்னழகைக்‌ கண்டேனான்‌ மோகித்தேன்‌-பின்னழகு-167-

பெருமானுடைய முன்னழகைப்‌ போல்வதாகிய பின்னழகைக்‌ காணுமுன்னே. முன்னிலும்‌ பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம்‌ உண்டு-
முன்பிலும் பின்‌ பழகிய நம்‌ பெருமாள்‌ (சீரங்க. ஊசல்‌, 8. )

தானேகண்‌ டாலுந்‌ தனக்குத்‌ துயர்வருமென்‌
ஹேனோரை நோக்கி யெழுந்தருள-ஆனோன்‌–168-

(பி-ம்‌.) எழுந்தருளி – வானோன்‌.

விமலத்‌ திருமுகமு மென்மார்பின்‌ மேவும்‌
கமலத்‌ திருமுகமுங்‌ கண்டேன்‌-அமலன்‌–169-

கமலத்திரு – தாமரைப்‌ பூவிலுள்ள திருமகளது.

அரவணையா னென்பதுமுண்‌ டண்ணலரன்‌ போல
இரவணையா னென்பதுமுண்‌ டேனும்‌-பரவைத்–170-

அரவணையான்‌ – ஆதிசேடனை அணையாக உடையவன்‌.
இரவு அணையான்‌ – யாசித் தலைப்‌ பொருந்தான்‌, இரவில்‌ தழுவான்‌..

திருவணையா னென்றுதினஞ்‌ செப்புவது பொய்யென்‌
றுருவணையு மாதர்க்‌ குரைத்தேன்‌-மருவணையும்‌–171-

பரவைத் திருவணையான்‌ – கடலிற்கட்டிய திருவணையை யுடையவன்‌, –பாற்கடலிற்றோன்‌ றிய திருமகளை அணையாதவன்‌ ;
பரவை – கடல்‌, பாற்கடல்‌.
மரு – வாசனை.
(ி-ம்‌.) செப்புவதைப்பொய்‌ ; முருகனையுஞ்‌.

—————–

தலைவி அழகரை நோக்கிக்‌ கூறுதல்‌

செங்கரத்தி லன்று திருடியவெண்‌ ணெய்போலச்‌
சங்கிருக்க வென்சங்கு தான்கொண்டீர்‌-கொங்கை–172-

என்‌ சங்கு – என்னுடைய வளையலை.

மலையருவி நீருமக்கு மாலிருஞ்‌ சோலைத்‌
தலையருவி நீர்தானோ சாநீறீர்‌-விலையிலாப்‌–173-

கொங்கையாகிய மலையில்‌ விழுகின்ற அருவி போன்ற கண்ணீர்‌.

பொற்கலை யொன்‌நறிருந்தாற்‌ போதாதோ வன்றுபுனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ-நற்கலைதான்‌–174-

அன்று- இராமாவதாரத்தில்‌.
வற்கலை- மரவுரி.
நற்கலை-நல்ல ஆடைகளை

ஆரஞ்சேர்‌ கொங்கைக்‌ களித்த தறியீரோ
சோரந்‌ திரும்பத்‌ தொடுத்தீரோ-ஈரஞ்சேர்‌--175-

ஆரம்‌ – முத்துமாலைகள்‌.
கொங்கைக்கு – திரெளபதிக்கு.
சோரம்‌ – திருட்டுத்‌ தொழில்‌ ; என்றது-கிருஷ்ணாவதாரத்தில்‌ கோவியர்‌ துகில்‌ கவர்ந்ததை நினைந்து.

நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்‌
பாலாடை யாமோ பகருவீர்‌-மாலாகி–176-

பாலாடை – பால்போன்ற ஆடை, காய்சீசிய பாலிலுள்ள ஏடு-
ஆடை தனை யொதுக்கிடுமென்‌ பால்வாரும்‌ (அழகர்‌ கலம்‌. 87)

மொய்த்திரையு மெங்கண்‌ மொழிகேளீர்‌ பாற்கடலில்‌
நித்திரைதான்‌ வேகவதி நீரிலுண்டோ-இத்தரையிற்‌–177-

மொய்த்து-நெருங்கி.
இரையும்‌-முழங்கும்‌.
வேகவதி-வையை நதி.
(பி-ம்‌.) வேகவதி நீருண்டோ.

பொங்குநிலா வெள்ளம்‌ பொருந்திற்றோ பாற்கடறான்‌
அங்குநிலா தும்மோ டணைேந்ததோ-கங்குலெனும்‌–178-

நிலாவிற்குப்‌ பாற்கடல்‌ உவமை.

ஆனை கெசேந்திர னாகிலதன்‌ மேல்வருவன்‌
மீனையும்‌ விட்டு விடலாமோ-கானச்‌--179-

கெசேந்திரன்‌ – கசேந்திராழ்வான்‌.
வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும்‌ மீனென்றல்‌ மரபு;
மைம்மீன்‌ புகையினும்‌ (புறநா. 117 : 1); –முதலையென்பது மற்றொரு பொருள்‌.
கானம்‌ – பாட்டு.

சதிரிள மாதர்‌ தமகீகிரங்கு வீர்நெஞ்‌
சதிரிளமா தர்கீகிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்‌–180-

சதிரிளமாதர்‌ – இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள்‌-
இப்‌பெயர்‌, சதிரிள மடவார்‌ தாழ்ச்சியை மதியாது(திருவாய்மொழி, 2.10: 2) என்பதிலும்‌ காணப்படும்‌.
நெஞ்சு அதிர்‌ இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.

கொட்டத்து வெண்பால்‌ குனிந்துகறப்‌ பார்முலையில்‌
விட்டுக்‌ கறப்பதையும்‌ விட்டீரோ-கிட்டப்போய்‌–181-

கொட்டத்து – பால்கறக்கும்‌ பாதீதிர தீதில்‌.

கன்றை விட்டுக்‌ கறப்பதையென இயைக்க.

மென்பா றெறித்த வியன்முலையைப்‌ பாற்குடமென்‌
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்‌–182-

எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில்‌. (பி-ம்‌.) எடுப்பதறியீரோ,

செவ்விதழின்‌ மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்‌
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை–183-

செவ்வி தழை – அழகு தழைத்த. (பி-ம்‌.) யுண்பார்போல்‌.

குன்றன்‌ றெடுத்தீர்‌ குளிருமமு தங்கடைந்தீர்‌
சென்றன்று பாம்பினடஞ்‌ செய்தீரே-என்றென்று--184-

குன்று – கோவர்தீதன மலையை.
அமுதங்கடைந்தீர்‌ : ஆரமுதுகடைந்த வங்கையான்‌ -என்றார்‌ முன்னும்‌; 73.
பாம்பில்‌-காளியன்‌ தலையில்‌.

—————

அழகர்‌ சோலைமலைக்கு மீளுதல்‌

கொண்டபஞ்‌ சாயுதன்மேற்‌ கொள்கை பெறத் தேனூர்‌
மண்டபஞ்‌ சார்வாய்‌ வலங்கொண்டு-பண்டை–185-

தேனூர்‌ – மிகப்‌ பழையதோர்‌ ஊர்‌ ;
ஐங்குறு நூற்றிலும்‌ இப்‌பெயர்‌ வந்துள்ளது ;
தேனூர்‌ வெற்றிலையும்‌ மானூர்ச்‌ சுண்ணாம்பும்‌ – என்பது ஒரு பழமொழி.

விரசையுடன்‌ வைகுந்த வீடுமிது வென்னப்‌
புரசைமலை காத்தோன்‌ புகுந்தான்‌-வரிசை–186-

விரசை – விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர்‌ ஆறு.
வைகுந்த வீடு – வைகுந்தமாகிய ,முத்தி யுலகு.
புரசைமலை -கசேந்திரனாகிய யானையை.

உபசாரங்‌ கொண்டருளி யோர்சிவிகை மீது
தபசாரஞ்‌ சீபதியைச்‌ சார்ந்தான்‌-இபமுண்ட–187-

தபசு ஆர்‌ ௮ம்‌ சீபதி – தவம்‌ பொருந்திய அழகிய சோலை மலையை.
இபம்‌-இங்கே யானை யென்னும்‌ நோய்‌–
தூம்புடை நெடுங்கை வேழந்‌ துற்றிய வெள்ளி லேபோல்‌ (சீவக. 232) என்பதன்‌ உரையையும்‌ ஒப்புமைப்‌ பகுதியையும்‌ பார்க்க.

—————-

தலைவியின்‌ நிலை

வெள்ளிற்‌ கனியானேன்‌ வேதனை யீன்றவன்றான்‌
உள்ளிற்‌ கனியானே யூர்ந்துவரும்‌-பிள்ளைமதி–188-

வெள்ளிற்கனி- விளாம்பழம்‌.
வேதனை யீன்றவன்‌ -பிரமனைப்‌ பெற்றவன்‌, –துன்பத்தைக்‌ கொடுத்தவன்‌ ;
வேதனையும்‌ பெற்று வெளி நின்று–என்றார்‌ முன்னும்‌ ; 70.
உள்ளில்‌ கனியான்‌ – மனத்தில்‌ இரங்‌ கான்‌.
பிள்ளைமதி – பிறை.

செவ்வை மதியோ திரைக்கடல்‌ வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான்‌ கூற்றன்றோ-எவ்வமுறும்‌–189-

செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து.
மொழி – பழிமொழி.
கூற்று- யமன்‌, சொல்‌.
எவ்வம்‌-துன்பம்‌.

காற்றேரி னானுமொரு காலனன்‌ றோவுருக்கி
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ-வேற்றுக்‌–190-

காற்றேரினான்‌ – தென்றற் காற்றாகிய தேரையுடையவன்‌.
ஒரு காலன்‌ – ஒற்றைத்‌ தேர்ச் சக்கரத்தை யுடையவன்‌, ஓர்‌ யமன்‌.
உருக்கி ஊற்றாத – வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத; –தன்‌ ஓசையைக்‌ கேட்டாரை உருக்கி ஊற்றத.
சே மணி – இடபத்தின்‌ ‘கழுத்திற்‌ கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ :
மெமுகான்‌, றூ துலைப்‌ பெய்த பகுவாய்த் தெண்மணி(குறுந்‌. 155 : 3-4)

கிளை யோடு வாடிக்‌ கிடந்தாலுஞ்‌ சுட்டுத்‌
‘துளையாக்‌ குழலுமுண்டோ சொல்லாய்‌-கிளியரசே–191-

வேற்றுக்‌ கிளையோடு – வேறு மூங்கில்களோடு.
௬ட்டுத் துளையாக்‌ குழல்‌ – சுட்டுத்‌ துளை செய்யப்படாத வேய்ங்குழல்‌, தன்‌ இசையைக்‌ கேட்பவரைச்‌ சுட்டுத்‌ துளையாத குழல்‌.

என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்‌
உன்கூடு மென்கூடு மொன்றுகாண்‌-என் கூட்டில்‌–192-

என்‌ கூடு – என்னுடம்பு. பொன்‌ – பசலை.

மாங்கனி யுண்டு வளஞ்சேர்‌ செழுங்கொவ்வைத்‌
தீங்கனி யுண்டா சினியுண்டு-பாங்கிற்‌–193-

கொவ்வைத்‌ தீங்கனியென்றது உதட்டை,
ஆசினி – பலா–இங்கு அதன்‌ .பழத்திற்கு ஆயிற்று;
கொங்கைக்கு உவமை: –கொங்கைப்‌ பலாப்பழத்‌தீயினொப்பாய்‌ ?? (திருவா. நீத்தல்‌.)
(பி-ம்‌.) செழுங்கோவைத்‌.

குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்‌
டூழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்‌–194-

குழையும்‌ மனம்‌, குழையும்‌ அனம்‌.
பால்‌ – பகுதி, உண்ணும்‌ பால்‌,
உழை – பக்கம்‌.

தூட்டுவே னுள்‌ யுருப்பசியா யென்ன நலம்‌
காட்டுவேன்‌பட்டாடையாற்றுடைப்பேன்‌- கூட்டில்‌–195-

உருப்பசியே தாயே என்றுகூற, உருவம்‌ பசுதீதிருப்பாயென்று யாவரும்‌ சொல்ல. நலங்கு ஆட்டுவேன்‌ : 61.

அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்‌
புரைதீர்‌ நறையும்‌ புகைப்பேன்‌-அருகே–196-

ஆலத்தி- ஹாரத்தி;
அரசு, ஆல்‌; அதீதி யென்னும்‌ மரப்‌ பெயர்கள்‌ தோற்றுதல்‌ ஒரு நயம்‌.
நறை – நறும்புகை.

இளவெயிலிற்‌ காய்வித்‌ தெடுத்தொருகான்‌ முத்தி
வளைபயில்‌ கையின்மேல்‌ வைத்துத்‌-துளபமணி–197-

முத்தி – முத்தங்கொண்டு : புதல்வர்‌ பூங்கண்‌ முத்தி -(புறநா. 41:14)

ஈசன்‌ நிருநாம மெல்லாமென்‌ போலுனக்குப்‌
பாசந்‌ தொலையப்‌ பயிற்றுவேன்‌-பேசென்றே–198-

பேசென்று பயிற்றுவேனேன இயைக்க.

————–

பிற பொருள்‌ தூதிற்‌ சிறவா வென்றல்‌

ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத்‌ தூ துவிட்டாற்‌
சூடுபட்‌ டார்துணிந்து சொல்வாரோ- கூடுகட்டி–199-

ஈடுபட்ட – எனிவரவுபட்ட (தக்க. 61, உரை).
எகினத்தை -அன்னப் பறவையை.
சூடு – உச்சிக்‌ கொண்டை : இஃது அன்னத்தின்‌ தலையிலுள்ளது.
சூடுபட்டார்‌ – சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்‌.

அன்பாய்‌ வளர்த்ததா யார்க்குதவாகீ கோகிலந்தான்‌
என்பா லருள்வைத்‌ தியம்புமோ-தன்‌ பேர்‌–200-

வளர்த்த தாயார்‌ – காக்கை,
கோகிலம்‌ – சூயில்‌.
காக்கைக்‌ கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்த பின்‌ பறந்து போய்‌ விடுதல்‌ குயிலின்‌ இயல்பு;
வருந்தி யீன்றாண்‌ மறந்தொழிந்தாள்‌ வளர்த்தாள்‌ சொற்‌ கேட்டில்‌ கடிந்தாள்‌ (சீவக. 1661)
உயிர்த்த பொழுதே நின்‌ குரல்கே ளாமுன்‌ ஓடிற்‌ நீன்றதாய்‌, நயதீதின்‌ வளர்த்த தாய்குரல்கேட்‌டலுமே நடுங்கத்‌ துரந்ததால்‌ (பிரபு. பிரபுதேவர்‌ வந்த. 63)

அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்‌
வரிவண்டு பேசி வருமோ-விரகஞ்செய்‌–201-

அரியென்று……சொல்லும்‌ : என்றது வண்டு குழறு மென்ற படி;
முதுவண்‌ டினந்தான்‌ முடிச்சவிழ்தீ தாலும்‌ மதுவுண்டாற்‌ பின்னைவா யுண்டோ
அளிப்பிள்ளை வாய்குழறும்‌ என்றார்‌ முன்‌ னும்‌; 35) 46.
அரி- அளியென்னும்‌ இரண்டும்‌ வண்டின்‌ பெயர்கள்‌.
அரியென்பது திருமால்‌ பெயர்‌ ; அதைக்‌ கூடச்‌ சொல்லத்தெரியா தென்‌பதும்‌,
அரிச்சுவடியிலே முதல்‌ வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும்‌ வேறு பொருள்‌;
அரியென்றெங்கள்‌, தாலத்தின்‌ மீதெழுதச்‌ சமர்தீதி லாரோ (அழகர் கலம்‌. 6).
விரகம்‌ – பிரிவால்‌ உண்டாகும்‌ துன்பம்‌.

வன்கால திக்கின்‌ மலைவா யிருக்கின்ற
தென்காலு மென்காதல்‌ செப்புமோ-பொன்காதல்‌–202-

காலதிக்கு – தெற்கு; காலன்‌ – யமன்‌. .துன்பத்தைச்‌ செய்வா
ரோடு தொடர்புடையதென்பதைக்‌ காட்டத்‌ தெற்கென்னாது காலதிக்‌கென்றாள்‌.
மலைவாய்‌- பொதியின்‌ மலையின்கண்‌, –மலைப்புடன்‌.
தென்‌கால்‌ – தென்றற்‌ காற்று.
பொன்‌ – திருமகள்‌.

வண்டலையுநீ தாரான்முன்‌ மாதரையெல்லாந்தூந்றும்‌
கொண்டலையுந்‌ தூதுவிடகீ கூடுமோ-உண்ட-203-

தாரான்‌ – திருமால்‌,
மாதரை எல்லாம்‌ தூற்றும்‌ – பெண்களை யெல்லாம்‌ பழி கூறுகின்ற. –பெரிய பூமி முமுதும்‌ துளியைத்‌ தூற்றுகின்‌ற.
கொண்டலை – மேகத்தை,

படியேழுங்‌ காக்கும்‌ பரங்கருணை யான்முன்‌ 
கொடியோரும்‌ போவாரோ கூறாய்‌-அடியார்கள்‌–204-

படி- உலகம்‌.
கொடியோர்‌ – காக்கைகள்‌, கொடுமையை யுடையவர்‌ ;

காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும்‌ நூலால்‌ விளங்கும்‌.

————-

கிளியின்‌ தகுதி

அங்கிருந்தார்‌(கீர்த்‌ னஞ்செய்‌ வாயடுத்த நாச்சியார்‌
பங்கிருந்தாற்‌ கையிற்‌ பறந்திருப்பாம்‌-எங்கிருந்து–205-

கீர்த்தனம்‌ ; : குருகேயுன்‌ னாக்குத்தான்‌ கூழைநாக்‌ கான, தரிகீர்த்‌ தனத்தினா லன்றோ–என்றார்‌ முன்னும்‌ – 30.

நாச்சியார்‌ – ஆண்‌டாள்‌ இவர்‌ கையிற்‌ கிளியிருக்கும்‌.

வந்தாயென்‌ றான்மா லிருஞ்சோ லையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந்‌ தேனென்பாய்‌-அந்தசீ–206-

சவுந்தர வல்லியெனுந்‌ தற்சொரூ பிக்கும்‌
உவந்தலர்சூ டிக்கொடுத்தா ளுக்கும்‌-சிவந்த–207

சவுந்தரவல்லி : இத் தலத்துள்ள நாச்சியார்‌ திருநாமம்‌,
தற்‌ சொரூபி – அதே வடிவாயிருப்பவள்‌.
சூடிக்கொடுத்தாள்‌ – ஆண்டாள்‌

கடுகிலே சங்கோபங்‌ காணாம லென்மால்‌
வடுகிலே சொல்வாய்‌ வகையாய்‌-அடுகிலே--208-

கடுகு இலேசம்‌ – கடுகளவாகிய சிறுமைகூட.
மால்‌ – மயல்‌.
வடுகு – தெலுங்கு. .

சங்கெடுப்பாய்‌ சங்கெடுக்குஞ்‌ சச்சிதா னந்தரணி
கொங்கெடுக்குந்‌ தாமங்‌ கொடுவருவாய்‌-அங்கடுகீகின்‌–209-

அடு கிலேசம்‌ கெடுப்பாய்‌ – வருந்துகின்ற துன்பத்தைப்‌ போக்குவாய்‌.
சச்சிதானந்தர்‌ – அழகர்‌.
கொங்கு – தேன்‌; பூந்தாதுமாம்‌.

———–

அடையாளம்‌

ஓருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய்‌
ஒருகத்தி லேவில்‌ லுவமாகி-ஒருகதீதிற்‌–210-

கிருதயுகதீதில்‌ ஆலமரமாகவும்‌,
திரேதாயுகத்தில்‌ அரச மரமாகவும்‌,
துவாபரயுகத்தில்‌ பலாமரமாகவும்‌,
கலியுகத்தில்‌ புத்திரஜீவி மரமாகவும்‌ தருமம்‌ விளங்கும்‌ என்று இத்தலபுராணம்‌ கூறும்‌.
இவர்‌ மூன்றாம்‌ யுகத்தில்‌ வில்வமரத்தைக் கூறுகின்றார்‌.

புத்திர தீபமுமாய்ப்‌ புங்கவர்கீகா றாந்தருவாய்ச்‌
சத்தி தருமோர்‌ தருவுண்டு-மொய்த்த–211-

புத்திரதீபம்‌ – ஒரு மரம்‌,
புங்கவர்க்கு – தேவர்க்கு. கற்பகங்‌கள்‌ ஐந்தாதலின்‌,ஆறாந்‌ தருவாய்‌- என்றார்‌ ;
மூவரி னால்வரா முனி?? (கம்ப. மந்திரப்‌. 5). என்பது போல.

ஒரு கோடி காவுண்‌ டொருகோடி யாறுண்‌
டொருகோடி பூஞ்சுனையு முண்டு-திருமால்‌—212-

கா- சோலை.

அறங்காக்கும்‌ யோகிகள்போ லல்லும்பகலும்‌
உறங்காப்‌ புளிதானு முண்டு-திறஞ்சேர்‌–213-

உறங்காப்புளி-ராஜ கோபுரத்துக்கு வடக்கே பதினெட்டாம் படிக்கு எதிரில் இது முன்னிருந்த தென்றும்‌,
சில நாளைக்குமுன்‌ கீழே விமுந்துவிட்டதென்றும்‌ அந்த இடத்தில்‌ இப்பொழுது பூஜை நிவேதனம்‌ நடந்து வருகின்றனவென்றும்‌ கூறுவர்‌.
குமுதவல்லியோடு திருமங்கை மன்னன்‌ எழுந்தருளி மங்களாசாசனம்‌ செய்தபோது வைக்கப்பட்டதென்பது கர்ண பரம்பரைச்‌ செய்தி

யோகிகள்‌ இரவும்‌ பகலும்‌ தூங்காதிருப்பர்‌.

அவர்போல்‌ இலைகளை மூடாமல்‌ எப்பொழுதும்‌ விரித்தே – இருக்கும்‌ புளியை உறங்காப்புளி யென்பர்‌.

திருமால்‌ அறம்‌ – ரீவைஷ்ணவ தர்மம்‌.

தாமக னோடுறையும்‌ பெற்றி விளங்கப்‌
பிதாமகன்‌ வந்துபுகழ்‌ பேசசீ-சதாகால–214-

மகனோடு பிதா உறையும்‌ பெற்றி. பிதாமகன்‌ – பிரமன்‌…

முந்திரமாய்‌ வாழு முபேந்திரனங்‌ கில்லையென
இந்திரனார்‌ வந்தங்‌ கினிதிறைஞ்சப்‌-பிந்திய–215-

சதாகாலமும்‌-எப்பொழுதும்‌.
திரம்‌-ஸ்திரம்‌.
உபேந்திரன்‌ -அசுரரால்‌ தேவர்களுக்கு உண்டாகும்‌ துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால்‌
உபேந்திரராக எருந்தருளி யிருக்கிறிரென்பது மகாபுராண
வரலாறு.
இருகூல மும்பொரு மாநீ ரரங்கத்தி லெந்தை…புருகூத
னுக்குத்‌ திருத் தம்பி யாகிப்‌ புரக்கும்‌ (திருவரங்கத்து மாலை, 16).
முதலிலுள்ள அங்கென்றது தேவலோகதீதைக்‌ குறித்தது.

தம்பியர்‌ மூவருக்குந்‌ தானே யரசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர்‌-வெம்பிறவித்‌–216-

மூவர்‌ – பரதன்‌, சுக்கிரீவன்‌) விபீடணன்‌ ஆகிய மூவர்‌.

————-

ஸ்தலாசாரிய புருஷர்களும்‌ பிறரும்‌

தேகம்‌ பவித்திரஞ்செய்‌ சீரங்க ராசபட்டர்‌
ஆகும்‌ ப்ரசித்தரா மர்ச்சகரும்‌-மோகமுறும்‌–217-

பவித்திரம்‌ – சுத்தம்‌.
சீரங்கராச பட்டர்‌ : இவர்‌ ஸ்தானிகராக முதலில்‌ வந்தவர்‌ ;-அர்ச்சக ஸ்தானிகத்தில்‌ குரு பரம்பரையார்‌.

கங்குன்‌ மலமாயை கன்மம்‌ விளங்காமற்‌
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்‌-சங்கையறச்‌–218-

கங்குல்‌ – இருளைப் போன்ற. மலமும்‌, மாயையும்‌, கன்மமும்‌
அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம்‌. திரிதண்டம்‌ ஸ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது.
சங்கை – சந்தேகம்‌.

செய்யுந்‌ திருமா லிருஞ்சோலைச்‌ சீயரென
வையம்‌ விளங்கவரு மாதவரும்‌-பொய்யில்லா-219-

திருமாலிருஞ்சோலைச்‌ சீயர்‌ : ஸ்ரீ மணவாள மாமுனிகள்‌ காலத்தில்‌ இந்த ஜீய ஸ்தானம்‌ ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு உரிய ஆசாரியர்கள்‌ இப்போது கூடலழகர்‌ சந்நிதியிலுள்ளனரென்பர்‌.

ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட்‌ டென்றொருப
மானதீ பங்காட்டி வந்துநின்று-மேனாளில்‌–220-

முத்தமிழ்க்குப்‌ பின்போவார்‌ முன்போகப்‌ பின் போன
அத்தன்‌ நிருமாலை யாண்டானும்‌-பத்தியினால்‌ –221.

முத்தமிழ்க்குப்‌ பின்போவாரென்றது திருமழிசையாழ்வாருடைய மாணாக்கருள்‌ ஒருவராகிய
கணி கண்ணர்‌ செல்ல அவர் பின்னே திருமால்‌ சென்றதை
சொல்கவிக்குப்‌, பார முதுகடைந்த பாயலான்‌ (72-3) என்பதன்‌ குறிப்புரையைப்‌ பார்க்க.
திருமாலையாண்டான்‌ – இவர்‌ உடையவருடைய ஆசிரியர்களுள்‌ ஒருவர்‌
இவர்‌ பரம்பரையினர்‌ தல்லா குளத்திற்கு வந்து விட்டனரென்பர்‌.

வையங்கார்‌ வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்‌
பையங்கா ரென்னுமா சாரியரும்‌-மெய்யன்பாம்‌–222-

வையம்‌ கார்வண்ணனையே வாழ்த்த–வையம்‌ -உலகத்தார்‌.
தோழப்பையங்கார்‌ : திருமாலையாண்டான்‌ பரம்பரையிலிருந்து பிரிந்தவர்களுள்‌ மூத்தவர்‌;
தோழப்பர் நற்றமிழ் சீர் பதிப்போன் நலமருவு மழகன்‌ புரோகிதன்‌ புனிதபத நாண்மலர்‌ வமுத்துவேனே -(அழகர்‌.பிள்ளைத்‌. பழிச்சினர்ப்பரவல்‌, 14)

சிட்டர்க டேவர்க ளாகத்‌ தினம்பரவும்‌
பட்டர்க ளாம் வேத பாரகரும்‌-விட்டுவெனும்‌–223-

சிட்டர்கள்‌ – ஓழுக்கமுடையோர்‌.
வேதபாரகர்‌- வேதத்தைக்‌ கரை கண்டவர்‌.
விட்டு – விஷ்ணு

சோதிகரு ணேக்கடற்‌ றோன்றிக்‌ கரசர
ணாதியுடன்‌ வந்த வமுதாரும்‌-மூ துலகிற்‌–224-

கரசரணாதியுடன்‌ – கைகால்களுடன்‌.
அமுதார்‌ – இவருடைய திருவுருவம்‌ நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்‌;– இவர்பரிசாரக ஸ்தானிகர்‌.

றண்ணந்‌ துழாயழகன்‌ றங்குந்‌ திருமலைபோல்‌
நண்ணுந்‌ திருமலை நம்பிகளும்‌-உண்ணின்ற--225–

திருமலை – திருவேங்கடம்‌.
திருமலை நம்பிகள்‌ :மடைப்‌ பள்‌ளிப்‌ பரிசாரக ஸ்தானிகர்‌.

மாமலை சோலை மலையையே நம்புதலாற்‌
சோலைமலை நம்பியெனுந்‌ தூயோரும்‌-மேலை--226-

மாலை மலை – மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத்‌ தரித்த எனினுமாம்‌.
சோலைமலை நம்பி – சோலை மலையை நம்பியவரென்பது பொருள்‌ ; இவர்‌ சந்நிதி பரிசாரக கூடஸ்தர்‌.

விரிஞ்சன்‌ முதலோர்க்கும்‌ விட்டுப்‌ பிரசாதம்‌
தருஞ்சட கோபநம்பி தாமும்‌-பெருஞ்சீர்‌–227-

விரிஞ்சன்‌ – பிரமன்‌.
சடகோப நம்பி – பரிசாரக ஸ்தானிக ருள்‌ ஒருவர்‌.
இதன்பின்‌
மருவு திருமா லிருஞ்சோலை நம்பி
உருவின்‌ மதனனையொப்‌ போனும்‌ –என ஒரு கண்ணின் மிகையாகக் காணப்படுகின்றது.

வரியெழுதிக்‌ கற்றதிரு மாலிருஞ்‌ சோலைப்‌
பிரியரெனுஞ்‌ சீர்கருணப்‌ பேரும்‌-கிரியிலிருந்‌–228-

வரி- எழுத்து.
திருமாலிருஞ்சோலைப்‌ பிரியர்‌ :இவர்‌ ௧ருணீகர்களுள்‌ ஒருவர்‌.
சீர்கருணப்பேர்‌ – கணக்கர்‌.

தாளுங்‌ கடவு எருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய்‌ நாயகரும்‌-தாள்வணங்க–229-

கடவுள்‌ – அழகர்‌.
சீகாரியஞ்செய்‌ நாயகர்‌ – கோயிற்‌ பணி விடை செய்பவர்‌ ; இவர்களைக்‌ கோயிற்கொத்தென்பர்‌.

———————

தூதுரைக்க வேண்டூதல்‌

ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொமுதுன்‌ _
வார்த்தை திருச்செவியில்‌ வாயாது-சேர்த்‌ யிலே–230-

திருவோலக்கம்‌- சூழ இருப்பாரோடு ஆதனத்தில்‌ எழுந்தருளி யிருத்தல்‌.
வாயாது – பொருந்தாது.
சேர்த்தி – பள்ளியறை.

மெல்ல வெழுந்தருளும்‌ வேளைபார்த்‌ தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர்‌ சொல்லாமுன்‌-/வெல்லுமதன்‌–231-

மதன்‌ – மன்மதன்‌.

அம்பலர்‌ தூற்ற வடர்த்து வருமுன்னே ‘
வம்பலர்‌ தூற்ற வருமுன்னே-கும்பமுனி–232-

அம்பு அலர்‌ தூற்ற – பாணமாகிய பூவைத்‌ தூவ.
வம்பலர்‌ -அயலார்‌.
தூற்ற – பழிமொழிகூற.
கும்பமுனி- அகத்திய முனிவருடைய.

வாயி னுரையடங்க வந்த கடலடங்கத்‌
தாயி னுடையடங்கத்‌ தத்தையே-நீயுரையாய்‌–233-

நுரை அடங்க – நுரைகள்‌ ஒன்று பட. வாயில்‌ வந்தவென இயைக்க.
அகத்தியமுனிவர்‌ கடலை ஆசமனம்‌ செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது.
தாயின்‌: உரை – செவிலித்தாயின்‌ அதிகாரச்‌ சொற்கள்‌)
அனை வேங்கையினதட்ட (அழகர்‌ கலம்‌. 42).
தத்தையே -.கிளியே.

உன்பேர்‌ சுவாகதமென்‌ றோதுகை யாலுனக்கும்‌
அன்பேர்‌ சுவாகதமுண்‌ டாகுங்காண்‌-முன்பொருநாள்‌--234-

சுவாகதம்‌ – கிளியின்‌ பெயர்களுள்‌ ஒன்று.
அன்பு ஏர்‌ சுவாகதம்‌ ; சுவாகதம்‌ – நல்வரவு.

கோசலை கையிற்‌ குருசி லுனைப்புகழ்ந்து
பேசி னுனைப்புகழ்ந்து பேசாரார்‌-நேசமுடன்‌–235-

குருசில்‌ – இராமன்‌,
அவர்‌ கிளியைப்‌ புகழ்ந்து பேசியதென்‌ றது, சீதை தன்‌ கிளிக்கு யார்‌ பெயர்‌ வைப்பதென்று கேட்க,
கைகேயி யின்‌ பெயரை வைக்கும்படி இராமன்‌ கூறியதை நினைந்து;
என்னொ ரின்னுயிர்‌ மென்கிளிக்‌ கியார்பெய ரீகேன்‌,
மன்ன வென்றலு மாசறு கைகயன்‌ மாதென்‌,
அன்னை .தன்பெய ராகென வன்பினொ டந்நாட்‌,
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்‌ந்தோய்‌ (கம்ப. சூடாமணிப்‌. 83)

எம்முடைய மாலை யிருபுயத்து மாலைகேள்‌
உம்முடைய மாலை யுதவீரேல்‌-அம்மைதிருக்‌--236-

மாலை – திருமாலை ;
நோக்கியென ஒரு சொல்‌ வருவிக்க.
மாலை கேள்‌ – பூமாலையைக்‌ கேட்பாயாக.

கோதையார்‌ சூடிக்‌ கொடுத்து வரவிட்ட
தாதையார்‌ மாலைதனைத்‌ தம்மினென்பாய்‌-நீதி–237-

கோதையார்‌ – சூடிக்கொடுத்த நாச்சியார்‌.
தாதைஆர்‌ – பூந் தாதுகள்‌ நிரம்பிய.
திருவிழாக் காலத்தில்‌ சூடிக்கொடுத்த நாச்சியார்‌ சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம்‌.
தம்‌மின்‌ – தருவீர்‌.

அடுப்பவர்‌ யாவர்க்கு மாடித்‌ தியாகம்‌
கொடுப்பவ னில்லையென்று கூறான்‌-தடுக்கும்‌–238-

ஆடித் தியாகம்‌ : அழகருக்கு: ஆடிமாதத்தில்‌ முன்பு பிர மோத்ஸவம்‌ நடைபெற்று வந்ததென்பர்‌.

அருமாலை நீக்கு மழகன்‌ புயத்து
மருமாலை நீ வாங்கி வா.–239-

அருமாலை – போக்குதற்கு அரிய மயக்கத்தை.
மருமாலை -நறுமணமுள்ள பூமாலையை.
புயத்து மரும்‌ மாலையென்று கொண்டு-திருத்தோளில்‌ மருவிய மாலையெனலும்‌ ஆம்‌.

அழகர்‌ கிள்ளைவிடு தூது முற்றிற்று.

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் –ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரும்‌ ஸ்ரீ பங்குனி உத்தரமும்‌ —

October 23, 2023

ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைப் பற்றி இது வரையில்‌ கிடைத்த ஆதாரங்கள்‌ ஐந்து
இவைகளில்‌ ஸ்ரீ ரங்க நாதனுடைய பங்குனி உத்ஸவம்‌ முழுவதும்‌, அவர்‌ ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைக்‌ கல்யாணம்‌ பண்ணிக் கொண்ட விவரமும்
நன்றாய்ச்‌ சொல்லப்‌ படுவதால்‌ அவை உள்ளபடியே இங்கு எழுதப்படுகன்‌றன.–

1. நிசுளாபுரி மாஹாத்மியம்‌
இந்த மாஹாத்மியம்‌ காகிதத்தில்‌ எழுதிய பிரதி ஒன்று தான்‌ கிடைத்தது
சென்னையிலும்‌ தஞ்சாவூரிலுமுள்ள ராஜாங்க புஸ்‌தக சாலைகளில்‌ இது கிடைக்கவில்லை. மூன்று அத்தியாயமாயுள்ள இது பரீதாவி வருஷத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கீதா பாஷ்யம்‌ ரங்காசாரியரால்‌ தமிழில்‌ எழுதி அச்சிடப்பட்‌டிருக்கிறது. -இதிலுள்ளபடி. நாச்சியாரின்‌ சரித்திரம்‌ பின்வருமாறு-

1-ம்‌ அத்‌யாயம் –
திரி சரனுடைய திரிசிர பர்வதமென்னும்‌ திருச்சி மலைக் கோட்டையைச்‌ சுற்றியுள்ள ப்ரதேசம்
கரன் என்னும்‌ ராக்ஷஸனுடைய வாஸஸ் ஸ்தானமாய்‌ காரண்யமாயிருக்தது —
அகஸ்‌தியர்‌ கரனை வடக்கே அனுப்பி அவ்விடத்தை ரிஷிகளின்‌ தபஸ்‌ஸுக்கு விரோதமில்லாமல்‌ செய்தார்‌.

2-ம்‌ அத்‌,–
பிரம்மா, விஷ்ணு, சிவன்‌–இம்‌ மூவரில்‌ யார்‌ பெரியவர்‌–என்று அறிவதற்காக பிருகு மஹரிஷி காலையில்‌ சிவனிடம்‌ போனார்‌.
அவர்‌ பார்வதியோடு கிரீடித்துக் கொண்டு ரிஷிக்குத் தரிசனம்‌ கொடுக்க: வில்லை.
ரிஷி பிரம்மாவினிடம்‌ போய்‌, அவர்‌ கர்மானுகுணமாக ஸ்ருஷ்டி செய்து கொண்டே யிருப்பது கண்டு
அவரும்‌ பரவஸ்‌து வல்லவென்று நிச்சயித்து,ஸாயங்‌ காலம்‌ விஷ்ணுவினிடம்‌ போனார்‌.
விஷ்ணு பிருகுவை உபசரித்து, வந்த காரியம்‌ வினவுகையில்‌, தனியாய்த்‌. தெரிவிக்க வேண்டுமென்றார்‌ ரிஷி.
எல்லாரும்‌ அப்பால்‌ செனறார்கள்‌. காந்தனோடு எகாந்தமாயிருக்கும்‌ ஸமயம்‌ ௮து தானென்று கண்ட லக்ஷ்மி பிருகுவை அப்பால்‌ போகச்‌ சொன்னாள்‌.
பிருகு கோபித்துக்கொண்டு, மனுஷிய ஜாதியில்‌ பிறப்பாய்‌ என்று சபித்து, விஷ்ணுவே பர தத்வம்‌ என்று சொல்லிக் கொண்டு. போனார்‌,
லக்ஷ்மி ரிஷியின்‌ சாப்த்தினால்‌ மிகவும்‌ கவலைப்‌. பட்டாள்‌,

விஷ்ணு–பிருகு சாபம்‌ தப்ப முடியாது, பூலோகத்தில்‌ பிறந்திரு, நானும்‌ அங்கே வந்து உன்‌ னைக்‌ கலியாணம்‌ செய்துகொள்கிறேன்‌.
கொஞ்ச நாள்‌ பூலோகத்திலிருர்து இங்கே வருவோம்‌.

லக்ஷ்மி கேவலமான மனுஷ்யனுக்கு நான்‌ எவ்‌விதம்‌ பிறப்பது

விஷ்ணு–கராஸூரனை அகஸ்தியர்‌ வடக்கே அனுப்பிக்‌ கராரண்யத்தை ரிஷி வாஸத்துக்குத்‌ தகுதி யாக்கிய பிறகு,
சோழ. ராஜனான தர்மவர்மா என்னும்‌ பக்தன்‌ கும்ப கோணத்தை விட்டுக்‌ காவேரியின்‌ தென்‌ கரையில்‌ நகரம்‌ ஸ்தாபித்து
தன்‌ பத்தினி நிசுளையின்‌ பெயரால்‌ நிசுளாபுரி எனப்‌ பெயரிட்டு அரசு செலுத்துகிறான்
அவனும்‌ மனைவியும்‌ ஸந்ததி யில்லாக்‌ குறையினால்‌ லக்ஷிமீ தந்த்ரம்‌ என்னும்‌ சாஸ்‌திரத்‌தின்படி உன்னைப்‌ பூஜிப்பார்கள்‌,
நீ அவர்களுக்குப்‌ பெண்ணாய்‌ப் பிற–நானும்‌ அங்கே வருகிறேன்‌.

3-ம்‌ அத்‌–அப்படியே நிசுளாதேவியின்‌ கர்பத்‌தில்‌ சித்திரை, சுக்ல துவாதசி , உத்தரம்‌-கூடிய வெள்‌ளிக்‌ கிழமையில்‌ லக்ஷ்மி அவதரித்தாள்‌.
அவளுக்கு வாஸ லக்ஷ்மி எனப்‌ பெயரிடப்பட்ட, .பிறகு சந்திர திலகன்‌ என்ற புத்திரன்‌ பிறந்தான்‌.
தர்ம வர்மா ரங்ககாதனிடம்‌ உத்தமமான பக்தனாயிருக்தான்‌.
வாஸ லக்ஷ்மி ரங்க நாதனையே விரும்பிக்‌ கலியாணம்‌ செய்து கொண்டாள்

மீனாக்ஷி ஸூந்தரம்‌ பிள்ளை எழுதிய உறையூர்ப் புராணம்‌
உறையூர்‌ நாச்சியாரைப் பற்றியதல்ல வாகையால்‌ இங்கு சேர்க்‌கப் பட வில்லை.
அது பஞ்சவர்ண ஸ்வாமி காந்திமதி யம்மன்‌ விஷயம்‌.

2. திவ்ய ஸூரி சரிதம்‌
தர்ம வர்மாவின்‌ வம்‌ஸத்தவனான நந்த சோழனுக்கு உறையூர்‌ நாச்சியார்‌ கிடைத்ததாகக்‌ கோயிலொழுகு ;
தர்ம வர்மாவுக்குக்‌ கிடைத்ததாக திவ்ய ஸூரி சரிதம்‌-7-ம்‌ ஸர்கம்‌. மற்றை விவரம்‌ கோயிலொழுகு போலே.
உடையவர் காலத்தில்‌ உத்தம நம்பி வம்சத்தில் இருந்து கருட வாஹன பண்டிதரால்‌ ஆழ்வார்‌ ஆசார்யர்களின்‌
சரித்ரம்‌ இந்தக்‌ காவ்யமாக எழுதப் பட்டது.

3- கோயிலோழுகு
“ நிகளாபுரியிலே தர்ம வர்மாவின்‌ வம்சரான நந்த சோழன்‌ ராஜ்யம்‌ பண்ணுகிற காலத்தில்‌ பகுகாலம்‌ அநபத்யனாயிருந்து
ஸ்ரீரங்க நாயகரிடத்தலே ௮திப்‌ பிரவணனாய்‌ தபஸ்ஸைப்‌ பண்ணி, அந்த தபோ பலத்‌தினாலே ஒருநாள்‌ தாமரை ஓடையில்‌
தாமரைப் பூவிலே ஒரு சிசுவாக ஸ்திரீ ப்ரஜை இருக்கக் கண்டு, அந்த ராஜா ஹ்ருஷ்டனாய்‌, அந்தக்‌ குழந்தையைத்
தம்முடைய கிருஹத்திலே கொண்டு வந்து கமல வல்லி யென்று நாம கரணம்‌ பண்ணி வளர்க்குமிடத்தில்‌,
அந்தக் குழந்தையும்‌ வளர்ர்து பெரியவளாய்‌ ஒத்த பெண்களுடனே விளையாடும்‌ காலத்‌திலே,
ஒருநாள்‌ தோழிகளுடனே லீலோத்யாநத்தில்‌ புஷ்பாப௪யம்‌ பண்ணுகிற ஸமயத்‌திலே,–
ஸ்ரீரங்கராஜர்‌ குதிரை நம்பிரான் மேலே ஏறி யருளி பலாச தீர்த்தத்துக்கு (சியர் புரத்‌துக்கு) வேட்டை எழுந்தருளாகிறவர்‌.
அந்தக்‌ கமல வல்லிக்கு அதி ஸுந்‌தரராய்‌ விபவாவதாரமாக ஸேவை சாதிக்க, கமலவல்லி கண்டு மோஹித்து
மஹா பிரயத்னத்தினாலே தோழிமார்‌ தேற்றத் தேர்ந்து , தன்‌ விடுதியிலே வந்து உன்மத்தை போலேயிருக்க,
அந்த ராஜாவும்‌ கமல வல்லியைக் கண்டு மன்மத விகாரம்‌ என்று கணிசித்து ,
* உனக்கு ஆர் மேலே மனஸ்ஸு இருக்கறது *– என்‌று கேட்க ,கமலவல்லி தனக்கு * ஸ்ரீரல்கராஜன்‌ அன்றியிலே ஒருத்தரிடத்‌திலேயும்‌ மனஸ்ஸூ இல்லை;
தன்னை * ஸ்ரீரங்கராஜருக்குப்‌ பாணி கிரஹணம்‌ பண்ணுவியும்‌’–என்று சொல்ல,
ராஜாவும்‌ ஸந்துஷ்டனாய் தனது மந்திரிகள் உடனே ஆலோசித்து , தம்முடைய குமாரத்தி கமல வல்லியை ஸ்ரீரங்க.ராஜருக்கு கன்னிகா ப்‌ரதானம்‌
பண்ணுவித்து பெண்ணைக்‌ கோயிலுக்கு அனுப்பும்‌ போது, ஸ்திரீ தனமாக முன்னூற்றுப் பதின்கலம்‌ தங்க
அமுதுபடியும்‌, அதுக்கு வேண்டின பருப்பமுதும்‌, கொம்பஞ்சு கொடியஞ்சு கறியமுதும்‌, அதுக்கு வேண்‌டின சம்பாரங்களெல்லாம்‌
தங்கக்தாலே பண்‌ணுவித்‌து அது களையும்‌, ஸ்‌த்ரீகளுக்கு ஸமங்களமான நூறு பரிசாரிகைகளையும்‌ கொடுத்தனுப்பி வைக்க,–
அத்தக் கமல வல்லியும்‌ கோயிலிலே வந்து திரு மண்ணுக்குள்ளே-(திரு மணத் தூணுக்குள்ளே ) புகுந்து அத்ருத்யை யாக, -அத்தைக் கண்டு ராஜாவும்‌ அதி ஸந்துஷ்டனாய்‌
அநபத்யனாகையாலே தம்முடைய ஸர்வஸ்வத்தையும்‌ பெருமாளதீனம்‌ பண்ணி,–
திரு மா மணி மண்டபங்களும்‌, திருமதிள்களும்‌, திருக் கோபுரங்களும்‌, திரு தந்தவனங்கள்‌ முதலானதுகளையும்‌ கட்டிவைத்து
தம்முடைய பட்டணமான உறையூரிலேயும்‌ தம்முடைய குமாரத்தியையும்‌ அதி ஸுந்தர ரூபத்‌தினாலே
வஸீ கரித்தபடி யாலே அழகிய மணவாளப் பெருமாளையும்‌ பிரதிஷ்டிப்பிக்து,
விமான கோபு மண்டப பிரகாராதிகளையும்‌ விஸ்த்ருதமாகக்‌ கட்டி வைத்து அனைத்து அழகும்
கண்டருளப் பண்ணிக் கொண்டி ருந்தான்‌.”

4. லக்ஷ்மீ காவ்யம்‌
இது உறையூர்‌ நாச்சியார்‌ விஷயமாயும்‌ ரங்கநாதன்‌ விஷயமாயும்‌ ஏற்பட்ட காவ்யம்‌. இது உத்தமநம்பி திரு மலாசாரியரால்‌ எழுதப்பட்டது.
இவர்‌ தன்‌ பெயரையும்‌ வம்சத்தையும்‌ ஒவ்வொரு ஸர்கத்தின்‌ முடிவில்‌ முத்ரையாகச்‌ சொல்லுவது தவிர இரண்டு மூன்று இடங்களிலும்‌ சொல்லுகிறார்‌.

ஸ்ரீரங்கத்திலிருந்த பூர்வாசாரியர்களையும்‌, கைங்கர்ய பரர்களையும்‌ சொல்லும்‌ கவி தன்‌ வம்சத்தில்‌
தனக்கு முன்‌ தன்னைப் போலொரு காவியம்‌ எழுதின திவ்ய ஸூரி சரித்‌ர காரைச்‌ சொல்லவேயில்லை. உறையூர்‌ திருப்பாணாழ்வார்‌ அவதரித்த இடமென்றும்‌ இவர்‌ சொல்ல வில்லை.
இதில்‌ கந்தாடை ராமானுஜ அய்யங்காரைப் பற்றிச்‌ சொல்லுவதால்‌ கவி ௮வர் காலத்துக்குப்‌ பிற்பட்டவராவார்‌.
இந்தக்‌ காவியம்‌ இருப்பதாக குரு பரம்பரையிலிருந்து தெரிந்து சேடினதில்‌ பிராசீன வித்யா பிருஹஸ்பதி
கும்ப கோணம்‌ காலேஜ்‌ தமிழ்ப் பண்டிதர்‌ சடகோப ராமானுஜாசாரியாரிடத்திலும்‌, சென்னையிலும்‌, அடையாரிலும்‌ இருப்பதாகத் தெரிந்தன,.
இதையே வெகு நாளாகச்‌ தேடிக் கொண்டிருந்த திவான்‌ பஹதூர்‌ ஸ ர்‌. டி. தேசிசாரியாரிடம்‌ தெரிவித்ததும்‌,
அவர்‌ சடகோப ராமானுஜாசாரியாருடைய புஸ்தகத்தை வர வழைத்து எழுதுவதற்கும்‌, சென்னையிலுள்ள
புஸ்‌தகங்களோடு ஒத்துப் பார்ப்பதற்கும்‌ வேண்டிய செலவைக்‌ கொடுத்து சேகாம் செய்து அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்‌.
உறையூர்‌ நாச்சியார்‌. சரித்திரமூம்‌ ரங்க நாதனுடைய ஆதி ப்ரம்மோத்ஸவமும்‌ லஷ்மீ காவ்யகத்தில்‌ வர்ணித்‌திருக்கும்‌
கிரமத்திலேயே சுருக்கமாய்‌ எழுதப்படுகின்றன.

1-ம்‌ ஸர்‌–
நித்ய ஸூரிகள்‌, வியாஸர்‌, ஆழ்வார்‌கள்‌, பெருமாள்‌ நாச்சியார்‌, ஊர்‌, கோபுரம்‌ மண்டபம்‌,
கோயில்‌, பூர்வாசாசியர்கள்‌, கைங்கரிய பரர்கள்‌—வர்‌ணிக்கப் பட்டிருக்கிறார்கள் ,
[ விஷ்வக்ஸேனர்‌, ஸுூத்ரவதி, கஜானனன்‌, ஜயத்‌ஸேனன்‌, ஸிம்மவக்தரன்‌, காலன்‌, ஆதிசேஷன்‌, கருடன்‌,
ருத்ரை ஸூகீர்த்கிகள்‌, பஞ்சாயுதங்கள்‌, கெளஸ்‌துபம்‌,ஸரஸ்வதி , ஹயக்ரீவன்‌, வியாஸர்‌, நம்மாழ்வார்‌,
திருமங்கை யாழ்வார்‌, உடையவர்‌, பெருமாள்‌, நாச்சியார்‌, கிருஷ்ணார்‌ ஜுனர்கள்‌, துவஜ கருடன்‌, கோபுர நர ஸிம்ஹன்‌, கோபுர விநாயகர்‌,
கங்கை யமுனை, நான்முக கோபுரம்‌, தாமோதர கோபுரம்‌, ராமாயண மண்டபம்‌, ஆயிரம் கால்‌ மண்டபம்

சந்‌திரபுஷ்கரிணி, பார்த்தஸாரதி , சக்காத்தாழ்வான்‌, வீர ஹனுமான்‌, ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌, பராசர வியாஸ பட்டர்‌கள்‌,
பெரியநம்பி, மணவாளமாமுணி, வாதூல தேசிகர்‌, எம்‌பார்‌, திருவேங்கட தாதாசாரியார்‌, பிரதிவாதி பயங்காம்‌ அண்ணா,
கந்‌தாடை ராமானுஜ அய்யங்கார்‌, உத்தம நம்பி,திருப்பணி செய்வார்‌, பாகவத நம்பி, ஹரித கோத்ரிகளான பாரிகர்கள்‌?,
அரையர்‌, திருமஞ்சனக் கரரர்‌, புரோஹிதர்கள்‌,ஆரியபடர்கள்‌, வைத்தியர்கள்‌, புண்டரீக தாஸர்கள்‌, கணக்‌குப்பிள்ளை,
சேர்வைகாரன்‌, உறையூர்‌ வல்லி கூட்டத்தாரான தாஸிகள்‌–இவர்கள்‌ வர்ணிக்கப்பட்டிருக்கறார்கள்‌.]

2-ம்‌ ஸர்‌–
ஆலிலையில்‌ பள்ளிகொண்டவனும்‌ கிருஷ்ணன்‌ வரையுள்ள எல்லா அவதாரங்களையும் எடுத்‌தவனுமான
ஸர்வேஸ்வரனே ரங்கநாதனாக வந்து ஜகம்‌ முழுவதையும்‌ ஆனத்திப்பிக்கிறான்‌.
ரங்க நாதனுக்கு லக்ஷ்மி, பூமி, நீளை, ஆண்டாள்‌–நால்வர்‌ தவிர, சேர சோழ பாண்டியர்‌–முதலான ராஜ புத்திரிகளும்‌ பத்‌னிகளாயிருந்தார்கள்‌,
ரங்கநாதன்‌ வஸந்த ருதுவில்‌ காவேரி முதலிய இடக்களிலும்‌, கிரிஷ்ம ருதுவில்‌ குளங்களிலும்‌,
வருஷ ருதுவில்‌ சயன கிருஹத்‌திலும்‌ பத்னிகளோடு வினோதமாய்க்‌ காலம்‌ கழித்தார்‌;–
கார்த்திகை பூர்ணிமையில்‌ திபோத்ஸவம்‌ கண்டருளினார்‌;
ஹேமந்தத்தில்‌ மார்கழி முதல் நாள்‌ திவ்ய ஸூக்‌தியான திருப்பள்ளி யெழுச்சியினால்‌ பள்ளியுணர்ந்து , ஆராதனம்‌ கண்டருளி,
பிராம்மணர்களுக்கு நித்ய தானம்‌ பண்ணி வேத பாராயணம்‌ சேட்டு, சகீத ந்ருத்யங்களோடு மண்டபம்‌ போய்‌,
நம்மாழ்வார்‌ முதலானோர்‌ களால்‌ ஸேவிக்கப்பட்டு அவர்களின்‌ ஸூக்‌திகளையும்‌,
அவற்றிலுள்ள சரித்ரத்தின் ௮பி நயத்தையும்‌ ௮னுபவித்து ஸாயங்காலம்‌–நின்ற போது நாட்டியமும்‌ போகும்
போது வாத்யமுமாய் உள்ளே எழுந்து அருளினார்

ஓன்பது நாளும்‌ இப்படியே நடந்தது; பத்‌தாம்‌ நாள்‌ மாயா நாராயணீ ரூபம்‌ தரித்தார்‌, பதினோராம் நாள் வேத பாராயணம்‌ கேட்டருளி,
வடக்குவாசல்‌ வழியாகப்போய்‌, நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌, உடையவர்‌ மூவரையம் பாதுகைகளால்‌ அனுக்ரஹித்து
மண்டபத்திலிருந்து நம்மாழ்வாருடைய பிரபந்தத்தையும்‌ ந்ருத்த கீதங்களையும்‌ கேட்டருளி, கடைசி நாள்
அவருடைய சரணாகதியையும்‌ அங்கீ கரித்தார்‌–
தை முதல்‌ நாளின்‌ உத்வைத்தையும்‌ ஆயிரம் கால்‌ மண்ட. பத்தில்‌ உபய நாயகி மாரகளோடு மத்தியானம்‌ வரையில்‌
அனுபவித்து உள்ளே எழுந்தருளினார்‌;- சிசிர ருதுவிலும்‌ தகுந்த ஸுகங்களை அனுபவித்தார்‌,

[ திருக்கார்த்‌திகையன்‌று திருமுகப் பட்டையம்‌ அனுப்புவதைக்‌ கவி எழுதவில்லை.
மார்கழித் திருகாள்‌ முதல்‌ தேதி ஆரம்பமானது போலே எழுதப்பட்டிருக்கிறது ]

3-ம்‌ ஸர்‌–
பெருமாள்‌ சயனித்‌ இருக்கையில்‌ பாடகர்கள்‌ வந்து–
தாமோதரன்‌ கோபுரத்தில்‌ வெயில்‌ வந்து விட்டது; சந்தன மண்டபத்தில்‌ வெயில்‌ வந்து: விட்டது .” என்று பாடி. எழுப்பினார்கள்‌,
பெரு.மாள்‌ எழுந்திருந்து காலைக்‌ காரியங்களை நடத்‌தினார்‌,
பிரம்மா, சிவன்‌, ஸுப்‌ரம்மணியன்‌, இந்திரன்‌, கணே
சன்‌–எல்லா தேவர்களும்‌ வந்து பெருமாளை ஸ்தோத்‌திரம்‌ செய்தார்கள்‌,

4-ம்‌ ஸர்க்கம்
ரங்கநாதன்‌ ஸந்தோஷித்து வந்த காரியம்‌ வினவினார்‌. உம்முடைய ஆஜ்ஞையினால்‌. நான்‌ ஸ்ருஷ்டித்த இந்த பரபஞ்சத்தின்‌ ஷேமத்துக்காக.
சுபமான இந்தப்‌ பங்குனியில்‌ துவஜாரோஹண பூர்‌வகமாக யாத்ரோத்ஸவத்தை நீர்‌ அனுபவிக்க வேண்‌டும்‌.
சோழ ராஜனக்குத்‌ தபஸ்ஸினால் பிறந்த லக்ஷ்மியின்‌ ௮ம்சமான லக்ஷ்மியை நீர்‌ கலியாணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.
நீலீ வனத்திலிருக்கும்‌ வியாக்ரா ஸுரனையும்‌ வதம்‌ செய்ய வேண்டும்‌.” என்று பிரார்த்‌தித்தார்பிரம்மா, பெருமாள்‌ அங்கீ கரித்தார்‌.
எல்லாரும்‌ அனுமதி பெற்றுக்கொண்டு சந்திர புஷ்கரிணியில்‌ மாத்யாந்ஹிகம்‌ பண்ணி, நாச்சியாரைத் தர்சித்துப் போனார்கள்‌.
பெருமாளுடைய ஆஜ்ஜையின் பேரில்‌ விஷ்வக்ஸேனர்‌ பங்குனி பரணியில்‌ ௮ங்குரார்ப்பணம்‌
செய்து, கார்த்திகையில்‌ ஹோமம்‌, பலி, கருட பிர திஷ்டை முதலியவற்றை நடத்தி, பரிவாரங்களோடு நகர சோதனை செய்தார்‌.
[இப்பொழுது நகர சோதனை முன்னும்‌ கருட ப்‌ரதிஷ்டை பின்னுமாக நடக்கிறது .]

5-ம்‌ ஸர்‌–
முதல்‌ திருநாள்‌–ரோஹிணியன்று நல்ல முஹுர்‌த்தத்தில்‌ உத்ஸவத்தை ஆரம்பிப்பதற்‌காக ரங்கநாதன்‌ புறப்பட்டு,
அன்னமூர்த்தி இருக்கும்‌ மண்டபத்‌திலிருந்து ஸங்கீதங்களைக் கேட்டுக் கொண்டே த்வஜாரோஹணம்‌ நடத்தி, மத்தியானம்‌ உள்ளே போனார்‌ ;
ஸாயங்கால்ம்‌ உபய நாச்சி மார்களோடு பூச்‌சப்பரத்தில்‌ எழுந்தருளி, உத்ஸவத்துக்கு வந்த ராஜாக்‌களோடும்‌ சைன்யங்களோடும் புறப்பட்டு,
மூலை தோறும்‌ ந்ருத் யங்களை அனுபவித்‌துக் கொண்டே வீதி வலம்‌ வந்து, ஆரியபடாள்‌ வாசலில்‌ ராஜாக்கள்‌ முதலானோரை நிறுத்தி உள்ளே போய்‌,
திருவந்திக்‌ காப்பு கண்டருளி, யாகசாலையில்‌ திரு மஞ்சனம்‌ செய்து கொண்டு, ஹோமம்‌ முதலியன ஆனதும் உள்ளே போனார்‌.
[அன்னமூர்த்தி துவஜாரோஹண மண்டபத்திலேயே இப்பொழுது பின்னமாய்க்‌ கிடக்கிறார் .
பெருமாள்‌ கண்ணாடி. யறை எழுந்தருளின தாகச்‌ சொல்லப்படவில்லை.
கண்ணாடி. யறை பின்காலத்தில்‌ சேர்க்கப்பட்டதென்று அந்தக்‌ கட்ட டமே தெரிவிக்‌கிறது ]

இரண்டாம்‌ திருநாள்‌–மிருகசீர்ஷத்தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ மேலூர்‌ புன்னாக தீர்த்தத்துக்கருகே யுள்ள மண்டபத்துக்குப்‌ புறப்பட்டு,
வழியே பத்ர காளி கோயிலையும்‌ பயங்கரமான ஷுத்ர தேவதைகளையும்‌ பார்த்துக்கொண்டே போய்‌ சாயங்காலமம் திரும்பினார்
சந்திரசேகரன்‌ :சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்‌துக்கு வந்து ௮னுக்ர ஹிக்கவேண்‌டும்‌ என்று பிரார்த்‌தித்தான்‌.
பெருமாள்‌ அங்கீ கரித்து ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளினர்‌.[ சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமம் கிளியனூராயிருக்கலாம்‌.]

6-ம்‌ ஸர்‌. மூன்றாம்‌ திருகாள்‌–திருவாதிரையன்று காலையில்‌ ரங்கநாதன்‌ குதிரையேறி வீரர்களோடும்‌,
அரசர்களோடும்‌, பக்தர்களோடும்‌ புறப்பட்டு மூங்கில்‌காடு வழியாகவும்‌ காவேரிக் கரை வழியாகவும்‌
ஸு*ப்‌ரமண்யன்‌ தபஸ்‌ செய்த ஈசானமங்கலம்‌ என்னும்‌ கிராமம்‌ போய்‌, அங்கே தென்கரையிலுள்ளவர்களரல்‌ உபசரிக்கப்பட்டார்
[ஸுப்ரம்மண்யன்‌ சீயர்புரத்தில்‌ தபஸ்‌ செய்த விருத் தாந்தம் நம்மால் வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்ம்யத்தில் பார்க்க.
சீயர் புர கிராமத்துக்கே ஏற்பட்ட ஈசானமங்கலம்‌ என்னும்‌ பெயர்‌ இப்பொழு ஈசான்ய மண்டபம்‌ என்னு
மண்டபத்தின்‌ பெயராக மாறியிருக்கிறது.
இங்கு அம்மையார்‌ தண்ணீர்ப்பந்தல்‌ விருத்தாந்தம் கவியினால்‌ சொல்லப்பட வில்லை]

பிறகு, ஸ்நானம்‌ செய்‌து கொண்டிருக்த உறையூர்‌ நாச்சியாரின்‌ கூந்தவிலிருந்து பூக்கள்‌ விழும்‌ காவேரியின்‌ தென் கரை வழியாக
ரங்க நாதன்‌ கொஞ்சதூரம்‌ வந்து .காவேரியிலிறங்‌கி வடகரை போனார்‌. அவர்‌ கையிலிருந்த மோதிரம்‌ ஜலத்தில்‌ வீழ்ந்த்து ; அதை அவர்‌ கவனிக்கவில்லை ;வடகரை போய்‌, வடக்கு முகமாகவே நெடுந்தூரம் வினேதமாக சவாரி” செய்து, நேற்று அழைத்த சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ சிறிது நேரம் தங்கித்‌ திருவெள்ளறை வரையிலும்‌ போய்‌ நீலிவனம்‌ (திருப்பைங்‌கிலி) சென்றார்
அங்கு இருந்த வியாக்‌.ராஸுரன்‌ ரங்க நாதனைக் கண்டு ஒளிந்தான் -அங்கே வெகுநேரம்‌ வேட்டையாடி,
கந்தஸ்தம்பேசருடைய ளெளம்ய ஜாமாத்ருமங்கலம்‌ (திருமணத் தூண்‌ நம்பிவசமுள்ள அழகிய மணவாளம்‌ கிராமம்‌) ,
காவேரி தீரத்‌திலுள்ள வகுள தீர்த்தம்‌ (திருவாசி), இவற்றைப்‌ பார்வையிட்டுக்கொண்டே. ஊருக்குள்‌ பிரவேசித்து மேல வாசல்‌ வந்ததும் மழை வெகு
கடுமையாகப்‌ பெய்தது .
மழை ஓயும்‌ வரையில்‌ பெருமாள்‌ உத்தம நம்பி திருமாளிகையில்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்றுக் கொண்டு சந்நிதிக்குள் போய்‌ வாஹனத்தை விட்டு இறங்கினார்
(பங்குனி மூன்றாம்‌ திரு நாள் குகிரைவாஹனம்‌ இந்த மழைக்குப்பிறகு உத்தமநம்பியால்‌ பல்லக்காக மாறின
விவரம்‌ கோயிலொழுகு 124-ம்‌ பக்கத்தில்‌ இருக்கிறது

7-ம்‌ ஸர்‌. நாலாம்‌ திரு-புனர்வஸூ -*வன்று காலையில்‌ ரங்கராசன்‌ புறப்பட்டு உத்தம நம்பி பிராமணர்களுக்குக்‌
கொடுத்த ௮க்ரஹா.ரத்தின்‌ வழியாக காவேரிக்கரையிலுள்ள கருட வாஹன மண்டபம்‌ போய்‌ உல்லாஸமாயிருந்தார்‌.
மத்தியானம்‌ ஒரு தாஸி லஷமிக்குப்‌ பெருமாளிடமுள்ள காதலை லக்ஷ்மீ நாடகத்திலுள்ளபடி.யே அபிநயித்‌தாள்‌.
அப்பொழுது ஸூர்ய வம்சத் வனான உறையூர்‌ ராஜாவினால்‌ அனுப்பப்பட்ட புரோஹிதர்‌
பெருமாளிடம்‌ வந்து விக்ஞாபனம்‌ பண்ணினார்‌ :–

தர்மவர்மாவின்‌ வம்சத்தவனான நிசுளாபுரி” ராஜா கரிகால்‌ சோழன்‌ சந்திரவம்௪த்தில்‌ பிறந்த
தர்மதை என்னும்‌ மனைவியோடு ஸந்தானத்துக்காக நெடுநாள் லக்ஷ்மியை தியானித்து தபஸ்‌ செய்தான்‌.
லக்ஷ்மி பிரத்யகூமாகி * நானே உனக்குப்பெண்ணாய்‌ பிறக்கிறேன்‌… – என்று அனுக்ரஹித்தாள்‌.
அப்‌:படியே கொஞ்சநாளில்‌ பெண்‌ குழந்தை பிறக்து லஷ்கி யெனப் பெயரிடப்பட்டஅு. லஷ்மி இப்பொழு கல்‌யாணப்‌ பருவத்‌தில் இருக்கிறாள்‌,
அவளுடைய ஸ்வயம்‌ வர த்துக்காக தேவர்களும்‌ ராக்ஷஸர்களும்‌ வந்‌து .இருக்‌கிறார்கள் –
ஸ்வயம்வரத்துக்கு உம்மை அழைத்து வருமாறு நான்‌ ராஜனால்‌ அனுப்பப்பட்டு வந்தேன்‌.
லஷ்மியும்‌ தன்னுடைய தோழி ஹரிலேகையை- அனுப்பியிருக்கறாள்‌. அவள்‌ எல்லா விஷயங்களையும்‌:
சொல்லுவாள்‌, ”–என்று சொல்லி விடையெற்றுச்‌ சென்றார்‌ புரோஹிதர்‌.

6-ம்‌ ஸர்‌–ஹரிலேகை வந்தாள்‌. அவன்‌ விரும்‌பியபடி எல்லாரும்‌ வெளியே அனுப்பப்பட்டார்கள்‌…-
அவள்‌ ரங்கநாதனுக்கெதுரில்‌ உட்கார்க்து ஏகாந்தமாய்ச்‌ சொல்லுகிறாள்‌.
” சோழ ராஜ புத்ரியான லஷ்மி தோழிகளோடு
,காவேரியில்‌ விளையாடிக் கொண்டி ருக்கையில்‌, நீர்‌ ஸைனயங்களோடு குதிரை மேலேறிப்‌ போய்க் கொண்டி.ருந்தீர்‌,
உம்முடைய அழகைப் பார்‌த்து அவள்‌ மோஹித்துக்‌ இடக்கிறாள்‌. உம்முடைய மோதிரம்‌ காவேரி ஜலத்தில்‌ அகப்பட்டது.
இந்த மோதிரத்தை உமக்குக்‌ கொடுக்‌கச் சொன்னாள்‌. ”–என்று . சொல்லி மோதிரத்தைக்‌ கொடுத்தாள்‌.
அதில்‌ லஷ்மி என்று எழுதி யிருந்தது கண்டு ரங்கநாதனுக்கு மோஹமமும்‌ மகிழ்ச்சியும்‌ மிகுந்தது
ஹரிலேகை–நான்‌ லஷ்மியினிடம்‌. என்ன “சொல்லுகிறது ?
ரங்கநாதன்‌–புஷ்யத்தன்று அவளுடைய ராஜ தானிக்கு வருகிறேன்‌.
ஹரிலேகை விடைபெற்று லஷ்மியினிடம்‌ போனாள்‌.

9-ம்‌ ஸர்‌-.-ரக்கநாதன்‌ கருடவாஹனத்‌தில் ஏறிப்‌ புறப்பட்டு வீதி வலம்‌ வந்து ஸன்னிதிக்குள்‌ சென்றார்‌.

10-ம்‌ ஸர்‌–5-ம்‌ திருநாள் –புஷ்யத்தன்று காலையில்‌ நான்காம்‌ ஜாமத்தில்‌ ரங்கநாதன்‌ ஸைன்யத்தோடும்‌
௮ரசர்களோடும்‌ பல்லக்கிலேறிப்‌ புறப்பட்டுக்‌ காவேரிதாண்டி உறையூர்‌ சேர்ந்தார்‌.
கரிகால்‌ சோழன்‌ வந்து அடி.பணிந்து ரங்கநாதனுக்கு உடத்தியானத்தில்‌ இடம்‌ கொடுத்து உபசரித்தான்‌,
ஸ்வபம் வரத்துக்கு தில்லை நடராஜன்‌, ஜம்பூபதி, ஏகாம்பர நாதன்‌, மத்யார்ஜுனேசன்‌ முதலான எல்லா சைவ மூர்த்திகளும்‌ வந்திருந்தார்கள்‌.

11-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ ஸ்வயம்வர மண்டபத்‌துக்குப்போக சித்தமாயிருக்கையில்‌ சோழ ராஜா வந்து அழைத்தான்‌.
ரங்கநாதன்‌ யானை மேலேறிப் புறப்பட்டு வந்து எல்லா தேவர்களுக்குமிடையே ஆஸனத்‌திலமர்ந்தார்‌,i

12-ம்‌ ஸர்‌–ராஜா மஹோதயன்‌ என்னும்‌ மந்திரியை அனுப்பி, பெண்ணை ஸ்வயம்வர மண்டபத்‌துக்கு வரவழைத்து,
ஒவ்வொரு க்ஷேத்திரத்திலிருந்து வந்திருக்கும்‌ சிவா மூர்த்தி விஷ்‌ணு மூர்த்திகளின்‌ பெயர்‌ இருப்பிடம்‌, வைபவம்‌ முதலியவற்றைச்‌ சொன்னான்‌.
[ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்தில்‌ திவ்ய ஸூரி சரிதக்‌காரர்‌ 108 திருப்பதியிலுள்ள விஷ்ணு மூர்த்‌திகளை மட்டுமே வர்ணித்திருக்கறார்‌.
இந்தக் கவி சிவ மூர்த்திகளையும்‌ சேர்த்து வர்ணிக்கிறார்‌. ]

சோழராஜன்‌ கடையில்‌ ரங்க நாதனிடம்‌ வந்து
அவருடைய பெருமையை வர்ணித்தான்‌.
லக்ஷ்மி எல்‌லாருக்கும்‌ மத்தியில்‌ ரங்க நாதனுக்கே மாலையிட்டாள்‌,

13-ம்‌ ஸர்‌– ராஜா முறைப்படி உறையூர்‌ வல்லிக்‌ கும்‌ ரங்கநாதனுக்கும்‌ அக்னி ஸாக்ஷிகமாகக்‌ கலியாணம்‌ செய்து வைத்தான்‌.
அந்த ஸ்வயம் வரத்தில்‌ அத்தனை மூர்‌த்திகளுக்கு இடையில்‌ ரங்கநாதனையே அழகான மாப்‌பிள்ளையாக
உறையூர்‌ வல்லி தீர்மானித்ததால்‌ அவரும்‌ அழகிய மணவாளனானார்‌.
ராஜா அநேக விதமான சீர்களையும்‌ ௮னேகம்‌ சேடிகளையும்‌ கொடுத்து , ரங்கநாதனையும்‌ உறையூர்‌ வல்லியையும்‌ ஊருக்கு அனுப்‌பினான்‌,
வழியில்‌ வியாக்ராஸூரன்‌ ஸைன்யத்தோடு சூழ்ந்து கொண்டான்‌. விஸ்வக்ஸேன பரிகரமான கஜானனன்‌ வியாக்ராஸுரனிடம்‌ பேரய்‌ “இரண்டு நாள்
முன்னரே உன்னை நீலி வனத்தில்‌ வேட்டையாட வேண்டி யிருந்தது. நீ ஒளிந்துசொண்டாய்‌, இப்போது
கலியாணமாகி பட்டணப் ப்ரவேசம்‌ சேய்வதற்கு உன்னை பலியிடுகிறேன்‌.” என்று சொல்லி,
ரங்க நாதனை ஸாக்ஷியாக வைத்துக் கொண்டு, ராஷஸ ஸைன்யத்தோடு கோரமாக யுத்தம் பண்ணி, வியாக்ராஸூரனையும்‌ அவ னுடைய ஸைந்யத்தையும்‌ வதம்‌ செய்து ஒழித்தான்‌.

(ரங்கநாதன்‌ ‘ வியாக்ராஸுரனை வதம்‌ செய்ததால்‌ அவருக்கு ** வ்யாக்ராஸூர நிஷுதந – என்ற பெயர்‌ ஏற்பட்டிருக்கிறது .
ரங்கநாகன்‌ ராமாவதாரதத்துக்கும் முன்‌னமே வியாக்ராஸுரனை வதம்‌ செய்வதற்காகக்‌ காவேரி வந்து
ரிஷிகளுக்கு தரிசனம்‌ கொடுத்துத்‌ திரும்பிய விவரம்‌ நம்மால்‌ வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்மியத்தில்‌ காண்க, நெடுநாள் முன்‌ நடந்த வியாக்ராஸுரன் வதத்தை உறையூர்‌ நாச்சியார் கல்யாணத்தோடு சேர்த்தது யுத்த வர்ணனத்துக்கு அவகாசம கொடுப்பதற்கான கவி சாதுர்யம.
இந்து மதியைக்‌ கல்யாணம்‌ செய்‌து கொண்டு புறப்படும்‌ ௮ஜ மஹா ராஜாவுக்கும்‌ ஸ்வயம் வரத்துக்கு வந்த ராஜாக்களுக்கும்‌
யுத்தம் நடந்ததாக ரகு வம்‌ஈத்தில்‌ காளிதாஸ கவி வர்ணித்திருக்‌கிறார்‌.
ரகுவம்சத்தையே அனுஸரித்து எழுதப்பட்ட திவ்ய ஸுூரி சரித்ரத்திலும்‌ ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்‌துக்குப்‌ பிறகு
திருமங்கையாழ்வார்‌ வேடர் பறியாக வந்து அ ரங்கநாதனை எதிர்த்ததாக வர்ணிக்கப்பட்டிருக்டுறது .
ஸ்வயம்வரத்துக்கு வந்த மூர்த்திகளை திவ்யஸூரி சரிதத்திலும்‌ லக்ஷ்மீ காவியத்‌திலும்‌ வாணித்தது கூட
இந்துமதி ஸ்வயம்வரத்தில்‌ காளிதாஸ கவி ஒவ்வொரு ராஜாவையும்‌ வர்ணித்ததை அனுஸரித்ததாகும்‌.

14-ம்‌ ஸர்‌ – ரங்க நாதன்‌ பல்லக்கோடு வந்து சக்கரத்தாழ்வான்‌ ஸன்னிதிக்கருகிலுள்ள வாஹன மண்ட
பத்தில்‌ இறங்கி வேறு ஆஸனத்திலேறி உள்ளே போனார்‌.
[4-ம்‌ திருநாள் கருட வாஹனம்‌ வாஹன மண்டபத்தில்
இறங்கினதாகக்‌ கவி சொல்லாமல்‌ இன்று பல்லக்கு இறங்கினதாகச்‌ சொல்லுறார்‌.
புஷ்யத்தில்‌ கலியாணமெனறு கவி -வியக்‌தமாகச்‌ சொல்லுவதால்‌ பெருமாள்‌ உறையூர்‌ எழுந்‌தருள வேண்டியது 5-ம்‌ திருநாள் .
இப்பொழுது 6-ம்‌ திரு நாள்‌ ஆயில்யத்தன்று எழுந்தருளுகிறார்‌. உறையூர்‌ நாச்சியார்‌ பிறகு யாதாயினள்‌ என்று கவி சொல்லவில்லை.]

15-ம்‌ ஸர்‌–ஆறாம்‌ திரு நாள் –ஆயில்யத்தன்று காலையில்‌ பெருமாள்‌ புறப்பட்டு தாமோதர கோபுரத்தின்‌
வழியாகப்‌ பல்லவராஜன்‌ தோட்டம்‌ போய்‌,
ஸாயம் காலம்‌ யானை வாஹனத்‌துக்கேற்ற உடைகளோடு வந்‌து யானையேற்று மண்டபத்தில்‌ யானையேறி வீதி வலம்‌ வந்து,
வாஹனத்திலிருந்கவாறே திருவந்திக்காப்பு கண்டருளி, யானையை விட்டிறங்கி உள்ளே போய்‌
திருமஞ்சனம்‌ செய்து கொண்டார்‌.
[பெருமாளோடு யானை மேல்‌ அர்ச்சகர்‌ உட்காருவதும்‌, யானையை விட்டிறங்கி ஆண்டாளும்‌ பெருமாளும்‌ மாலை
மாற்றிக் கொள்வதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
மணவாள மாமுனி ஸன்னிதிக்குப்‌ பல்லவராயன்‌ மடம்‌ என்று பெயர்‌.
கோயிலை ஆஸ்ரயித்திருக்கும்‌ தேசாந்தரி ஜியர்களுக்காக ௮து பல்லவ ராயனால்‌ கட்டப் பட்டதென்று அங்குள்ள சிலா சாஸனமே சொல்லுகிறது .
இவனே கிழக்கே பல்லவ ராஜன்‌ தோட்டம்‌ என்று பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகத் தெரிகிறது. ]

16-ம்‌ ஸர்‌—ஏழாம்‌ திரு நாள் –மகத்தன்று ரங்க நாதன்‌ .வஸந்த வேஷம்‌ தரித்துக்கொண்டு உபய நாச்சிமாரோடு-சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டார்‌.
எல்லோரும்‌ ஒருவர்மேலொருவர்‌ மஞ்சள்‌ பொடியைக்‌ தூவி விளையாடினர்‌.
Iரங்க நாதன் ஸாயங்காலம்‌ புறப்பட்டுக்‌ கொட்டார வாசலில்‌ நெல்‌ அளவு கண்டருளி, ப்ர தஷிணமாக நாச்சியார்‌ கோயில் போய்‌,
இரு புறமும்‌ வரிசையாய்‌ நிற்கும்‌ தாஸிகள்‌ மூலம்‌ திருவந்திக்காப்பு செய்து கொண்டு, ஸிம்ஹா ஸனத்தில்‌ வீற்றிருந்து
திரு மஞ்சனம்‌ முதலியவற்றை அனுபவித்து, பூந் தேரில்‌ புறப்பட்டு, மூலை தோறும்‌ நர்த்தனங்களைப்‌ பார்த்துக்‌
கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே போனார்‌,

[இப்பொழுது .பூந்தேர்‌ முன்னும்‌ திருமஞ்சனம்‌ பின்னுமாக நடக்கிறது. கவியின்‌ காலத்தில்‌ நடந்த விதம்‌ எப்‌பொழுது மாறினதோ?
பாஞ்சராத்‌திரப்படி நடக்கிற ஜல க்ரீடை இங்கு சொல்லப்படவில்லை:]

எட்டாம்‌ திரு நாள் –பூரத் தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ ஸ்ரீரங்கத்தின்‌ எல்லையைப்‌ பார்ப்பதற்காகப்‌ புறப்பட்டு
பத்‌ர . ஸுபத்ரர்கள்‌ உள்ள (நாழிகேட்ட)) வாசல்‌ வந்து, பஞ்ச கோபுரங்களையும்‌ தாண்டி. வாமனாஸ்ரமத்தைப்‌
பார்‌த்துக் கொண்டே தென்‌ திருக் காவேரியின்‌ ௨டகரை சென்றார்‌.
[வாமனப்‌ பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில்‌ உபநயனம்‌ நடந்ததாக பாஞ்சராத்‌ர பாரமேஸ்வர
ஸம்‌ஹிதையிலிருக்கும்‌ விவரம்‌ நம்முடைய ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.
கவி பஞ்ச கோபுரங்களுக்கும்‌ வேளியே என்று கணக்கிட்ட ரீதியில்‌ தெற்கு ராயகோபுரத்துக்கு உள்பட்ட
திருக் குறளப்பன்‌ ஸன்னிதியே வாமனாஸ்ரமம்‌ என்று தெரிகிறது .
இந்த ஸன்னிதி புராண ப்ர ஸித்தம் என்று கோயிலொழுகிலும்‌ ‘சொல்லப் பட்டிருக்கிறது .]

ரங்கநாதன்‌ காவேரிக்‌ கரையிலிருந்து கிழக்கே போய்‌, வடக்கே திரும்பி, ஸ்ரீரங்கத்துக்கும்‌ மாதங்க
வனத்துக்கும்‌ (திருவானைக் காவலுக்கும்‌)  உள்ள எல்லைக்‌ கல்லையும்‌, வழியிலிருந்த ஜம்பூபதி ஸைன்யத்தையும்‌, தாமோதர கோபுரத்தையும்‌ பார்த்துக் கொண்டே கின்னர .கிம் புருஷ கந்தர்வர்கள்‌ வஸிக்கும்‌ ச்வேதாங்‌கணம்‌ என்னும்‌ பில்வ தீர்த்தம் போய்‌, வடதிருக்‌ காவேரி தாண்டி,
கதம்ப தீர்த்தத்தின்‌ வழியாகத்‌ திரு மங்கையாழ்வாருடைய மண்டபம்‌ போனார்‌;
ஸாயங்‌ காலம்‌ குதிரை யேறிப்‌ புறப்பட்டு, காவேரியில்‌ விளையாடி, வடக்கு வாசல்‌ வழியாக ப்‌ரவேசித்து, மூலை
களில்‌ .ந்ருத்தங்களை அனுபவித்துக் கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே எழுந்தருளினார்‌.
[கதம்ப தீர்த்தம்‌ திருமங்கை யாழ்வாருடைய ஸ்தானம்‌.-இன்னும்‌ அவர்‌ பேரிலேயே பட்டா இருக்றது .
எல்லைக்‌ கரை ஆஸ்தான மண்டபம்‌ லஷ்மீ காவ்யத்துக்குப் பிறகு கொள்ளிடத்தின்‌ தென்‌ கரையில்‌ ஏற்பட்டதால்‌
பெருமாள்‌ கதம்ப தீர்த்தத்‌துக்கு மாசி உத்ஸவத்தில்‌ எழுந்தருளுகிறார்‌.
ஸ்ரீ ரங்கத் தாருக்கும்‌ திருவானைக் காவலாருக்கும்‌ நேர்ந்த எல்லைச்‌ சண்டை இங்கு சொல்லப்படவில்லை யாகையால்‌
இந்தக்‌ காவியத்துக்குப் பிறகு ௮து நேர்ந்து இருக்க வேண்டும்‌.]

நாள் 17-ம்‌ ஸர்‌–9-ம்‌ திரு –உத்தரத்தன்று காலையில்‌
பெருமாள்‌ ரத யாத்திரை செய்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போனார்‌.
[இப்பொழுது நாச்சியார் கோயிலுக்குப்‌ போவது முன்‌னும்‌ ரத யாத்திரை பின்னுமாய்‌ நடக்கிறது,
நாச்சியார்‌ கோயிலில்‌ பிரணய கலஹம கத்யத்ரய கோஷ்டி முதலியன்‌ இங்கு சொல்லப்படவில்லை. |

16-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ திர்த்தவாரிக்காக வட திருக் காவேரி போய்‌ வருண ஸூக்தம்‌ சொல்லும்‌ ரித்‌ விக்குகளோடு ஸ்நானம்‌ செய்தார்‌.
கூட வந்தவர்கள்‌ எல்லாரும்‌ ஸ்நானம்‌ செய்தார்கள்‌.–ரங்கநாதன்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளினார்‌. ;
[இப்பொழுது பெருமாள்‌ நாச்சியார் கூடவே இருந்து விடுவதால்‌ தீர்த்‌த வாரிக்கு செல்வர்‌ மட்டும்‌ வட திருக் காவேரி எழுந்தருளுகிறார்‌.]

10-ம்‌ திரு நாள் –ஹஸ்தத்தன்று மத்தியானத்‌து க்கு
மேல்‌ பெருமாள்‌ மண்டபத்தில்‌ திருமஞ்சனம்‌ செய்து
கொண்டு பாஞ்சராத்ர முறைப்படி புஷ்பயாகம்‌ செய்தார்‌.
பிறகு மேள வாத்தியங்களோடு ஸப்‌த ஆவரணங்களையும்‌ பிர,தஷிணம்‌ செய்வதற்காக வெளியே போய்‌
ஐந்து பிரகாரங்களை ப்ரதக்ஷிணம் செய்து, ஆர்ய
படாள்‌ கோபுரத்துக்கு நேராக வடக்கே பார்த்து
நின்று,
பூர்வ ராஜாக்களாலும்‌ வர்த்தமான ராஜாக்களாலும் செய்யப்பட்ட கைங்கரியங்களைப் பற்றிய ஸ்ரீஸூக்‌தியைக்கேட்டு,
தீர்த்தம்‌, துளஸி, சந்தனம்‌, மாலை முதலியன அனுக்ரஹித்து தேவதை முதலானோரை உத்வாஸனம்‌ பண்ணி,
பத்ர ஸுபத்ரர்கள்‌ உள்ள கோபுரம்‌ (நாழி கேட்ட வாசல்‌) தாண்டி, கருட விஷ்வக்‌ஸேனர்கள்‌ இருக்கும்‌ பிரகாரத்தையும்‌, துர்கை கஜானனர்களிருக்கும்‌ பிராகாரக்தையும்‌ பிர தக்ஷிணம் செய்து கொண்டு ரங்கநாதன்‌ உள்ளே எழுந்தருனினார்‌.
[பெருமாள்‌ திருவிண்ணாழியையும்‌ பீரதஷிணம்‌ செய்த தாகவும்‌ ஸப்த ப்ராகாரங்களிலும்‌ மேள வாத்தியங்களோடும்‌ எழுந்தருளினதாகவும்‌ தெரிகிறது .
ராமானுஜ நூற்றந்தாதிக்காக மேளமில்லாமல்‌ எழுந்து அருளுவதும்‌, உடையவர்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளுவதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
ஸப்த ஆவரணத்தோடு காவியம்‌ பூர்த்தியாகிறது. ஆடும்‌ பல்லக்கு சொல்லப்படவில்லை.]

————

5. ஸ்ரீரங்கராஜ சரித பாணம்‌

[பாணம்‌ என்பது நாடகம் போலுள்ள ஒரு ரசனை, இது கெளண்டின்ய கோத்ரியான ஸ்ரீனிவாஸ கவியால்‌ எழுதப்‌ பட்டது .
இவருடைய காலம்‌ தெரியவில்லை. இந்தப்‌ புஸ்‌தகம்‌ 1881, 1891-ம்‌ வருஷங்களில்‌ கிரந்த எழுத்தில்‌ அச்சு இடப் பட்டிருக்கிறது.
ரங்கநாதன்‌ ஒவ்வொரு நாயகியோடும்‌ கிரீடித்துக் கொண்டு உறையூர்‌ நாச்சியாரிடம்‌ போய்‌, அவளைக் கலியாணம்‌ செய்‌து கொள்வதையும்‌,
அவளுக்குப்‌ பெருமாளிடம்‌ காதல்‌ உண்டான விவரத்தையும்‌, பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உண்டாகும்‌ பிரணய ரோஷத்தையும்‌ இந்தக்‌ கவி வெகு ரஸமாகச்‌ சொல்லுகிறார்‌.
இந்த கிரந்தத்தில் உள்ள கடைசி இரண்டு விஷயங்கள்‌ மட்டும்‌ இங்கு அவஸ்யமாதலால்‌ எழுதப்படுகின்‌றன-

[ரங்க நாதன் உறையூர்‌ வல்லியைக்‌ கலியாணம்‌ செய்து கொண்டு அவளை மடியில்‌ வைத்து விளையாடிக் கொண்டிருக்‌கிறார்‌.
அப்பொழுது அவளுடைய தாய்‌ நிசுளையும்‌ பெரு மாளும்‌ இவ்வாறு பேசுகிறார்கள்‌.]

நிசுளை–உம்முடைய கருணையினாலேயே நீர்‌ எங்களுக்கு மணவாளப்‌ பிள்ளையாக வாய்த்தீர்‌, இவளுடைய செய்தியைச்‌ செல்லுகிறேன்‌ ; கேளும்‌ :–
பதினெட்டாம்‌ பெருக்கன்ரூ காவேரிக்குப்‌ பொட்‌டும்‌ புடவையும்‌ விடுத்துக்‌ கரையில்‌ நின்ற உம்மழகைப்‌ பார்த்து இவள்‌ ஆசைப்பட்டாள்‌.

நீர்‌ குறுத்‌துக்களால்‌ அலங்கரிக்க பல்லக்கிகே ஏறி ஒரே மூச்சிலோடி, ஆண்டாளிடம்‌ போய்‌ அவளுடைய
மாலையை வாங்கிச்‌ சூடியது கண்டு_-
**இவர்‌ எனக்கு என்ன மாகக்‌ கிடைப்பார்‌”,–என்று என்‌ பெண்‌ கவலை கொண்டாள்‌.

ரங்கநாதன்‌–இதற்கு முன்னேயே இவ்ளுடைய ஆசையை நான்‌ தெரிந்து கொண்டேன்‌, எப்போ என்‌றால்‌–
௮னேக கலச தீர்த்‌தங்களினால்‌ நான்‌ ஜேஷ்டாபிஷேகம்‌ செய்து கொண்டு உபய நாச்சியாரோடு திருப்‌ பாவாடை யன்று
ஏராளமான ப்‌ரஸாதங்களைப்‌ பார்த்‌துக் கொண்டிருக்கையில்‌ இவள்‌ என்‌ மனதைக்‌ கவர்ந்து விட்டாள்‌.

நிசுளை–பவித்ரோச்ஸவத்தில்‌ 360 தரம்‌ திருவாராதனம்‌ செய்து கொண்டு ஆச்‌சரியமான முக காந்தி யோடு
நீர்‌ பவிதர உத்ஸவ மண்டபத்தில் இருந்த படியே இவள்‌ மனதில்‌ பிரவேஸித்து விட்டீர்‌.
[பவித்ர உத்ஸவத்தன்௮ பெருமாள்‌ யாக சாலையி லிருந்து உள்ளே எழுந்தருளுகிறார்‌.
கவியின்‌ காலத்தில்‌ மண்டபம்‌ எழுந்தருளினார் போலத்‌ தோன்று கிறது .]

ரங்கநாதன்‌–அந்த மாஸத்திலேயே உறியடி. யன்று நான்‌ நாச்சிமார்களோடு வீதி வருகையில்‌ இவள்‌
அடிக்கடி என்னை ஸந்தோஷ்மாகப்‌ பார்த்தாலும்‌ ஓரோர்‌ ஸமயத்தில்‌ பார்வை கோபத்துடனிருந்தது

நிசுளை–அடுத்த மாஸம்‌ நவ ராத்ரியில்‌ நாச்சியார்‌ பூஜித்த குதிரைமேலேறி நீர்‌ சமீ விருஷ்த்தினிடம்‌
போனதைப்‌ பார்த்து இவள்‌ மெய்‌ மறந்தாள்‌
ஐப்பசி மாஸத்தில்‌ தாஸிகளின்‌ பாடலைக்‌ கேட்டுக்‌ கொண்டே ஊஞ்சலாடும்‌ உம்முடைய பக்கத்‌திலிருந்த
நாச்சிமார்களைப்‌ போலிருக்க இவள்‌ ஆசைப்பட்டாள்‌,

ரங்கநாதன்‌–இத்தளையும்‌ என்னுடைய பெருமையைக் கண்டு உண்டான ஆசை தானே!
நிசுளை–கார்த்திகை யன்று நீர்‌ தீப ஸ்‌தம்பத்தைப்‌ பார்த்து விட்டு, திரும்பவும்‌ ஆஸ்தானத்‌திலிருந்‌து
கலியன்‌ பாட்டுக்‌ கேட்ட களிப்பால்‌ ஆழ்வாருக்கு எல்லாவற்றையும்‌ கொடுத்து ஒன்றுமேயில்லாமல்‌ :
உள்ளே கடந்‌து போனதை நினைத்து நினைத்து இவள் தூங்கவேயில்லை.

ரங்கநாதன்‌–இக்த மாஸத்திலேயே உன்‌ பெண்‌ செய்த காரியத்தைச்‌ சொல்லுகிறேன்‌
கைசிகத்‌தன்று நான்‌ போர்வை சாத்திக்கொண்டு கைசிக புராணம்‌ கேட்கையில்‌ இவளைப்‌ பார்த்தேன்‌ ;
உடனே எனக்கு எல்லாம்‌ நூதனமாகிப்‌ புராணமென்பதே இல்‌லாமல்‌ போயிற்று 1 .

நிசுளை–இன்னொரு ௮திசயம்‌ கேளும்‌. மரர்கழி
மாஸத்தில்‌ நீர்‌ சித்திர மண்டபத்தில்‌ ஆழ்வார் ஆசாரியர்களோடு விற்றிருந்து
பெரியாழ்வார்‌ பிரபந்தம்‌ முதலாக பத்து நாளும்‌ பானம்‌ பண்ணின அமிருதத்தை எல்லாருக்கும்‌ கொடுப்பகற்காக
தரித்துக் கொண்ட மோஹினி ரூபத்தைக் கண்டு இந்தப்‌ பெண்‌ வெட்டுப்‌ போனாள்‌.
முக்த சேதனன்‌ அர்ச்சிராதி மார்க்கமாய்ப்‌ போவதை ஏகாதசி முதல்‌ அனுகரித்து பக்தர்களை அநுக்ரஹிப்பதற்காக நீர்‌
ஆயிரக்கால்‌ மண்டபம்‌ போய்‌ ஆழ்வாருடைய பிரபந்தத்தைக் கேட்டு அவரை ஆனந்‌திப்‌ பித்த குணத்தையே இவள்‌ பாடிக்கொண்டிருக்கிறாள்‌.

இதிலேயே நீர்‌ எட்டாம்‌ திரு நாள் குதிரை மேலேறி வையாளி விளையாடுகையில்‌ கூட்டமாய்‌ வந்து
எதிர்த்து வழிப்பறி செய்த கலியனை அனுக்ரஹித்ததைக் கண்டு இவள்‌ ஆச்சரியப்படுகிறாள்‌,

இந்த உத்ஸவத்திலேயே நீர்‌ நித்தியம்‌ ராத்திரி ஏகாந்தத்தில்‌ ஸங்கீதம் கேட்பதற்காகக்‌ கூட்டமில்லாமல்‌ உள்ளே போய்‌,
வீணை வாத்‌தியத்தைக்‌ கேட்டுக்‌ கொண்டே. படியேற்றம்‌ கண்டருளினதைப்‌ பார்த்து இவள்‌ திகைத்துப் போனாள்

தை மாஸத்‌தில்‌ முதல்‌ திருநாள் நீர்‌ உபய நாச்சியாரோடிருந்‌து மற்றை நாளில்‌ ஹம்ஸம்‌, ஸிம்மம்‌, ௧ருடன்‌, ஹனுமான்‌, யானை–வாஹனங்களேறி,
ஏழாம்‌ நாள்‌ உபய நாச்சிமாரோடு சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டு, எட்டாம்‌ நாள்‌ குதிரையேறி விளையாடி,
ஒன்பதாம்‌ நாள்‌ நாச்சிமாரோடு தேரிலிருந்ததைப்‌ பார்த்து இவள்‌ மோஹித்துப்‌ போனாள்‌,

இந்தச்‌ தேரன்று ராத்‌ரி நாச்சியார் கோயிலில்‌ உபசாரங்களைப்பெற்று, உபய நாச்சியாரைத் தனித்தனியாகப்‌ பல்லக்கில்‌ வைத்து
நீர்‌ வீதி வலம்‌ வந்த வைபவத்தைக்‌ கண்டு இவள்‌ பூரித்துப்‌ போனாள்‌.

கனுவன்று நீர்‌ முத்து நகை பூண்டு மாலைப்‌ போதில்‌ குதிரை யேறி வேட்டை. விளையாடினதைப்‌ பார்த்து இவள்‌ மகிழ்க்தாள்‌.

மாசி மாஸக்தில்‌ கதம்பம்‌,வகுளம்‌, ஆம்ரம்‌ முதலிய: தீர்த்தங்களில்‌ உத்ஸவம்‌ பண்ணிக்‌ கடைசி நரள்‌
பெரிய தெப்பத்தில்‌ நாச்சிமாரோடு நீர்‌ விளையாடினது கண்டு இவளும்‌ விளையாட விரும்பினாள்‌.”
[க,தம்பம்‌ ஆம்‌சம்‌-இவ்விரண்டு தான்‌ இப்பொழுது மாசி உத்ஸவத்தில்‌ நடக்கின்றன.
தீர்தங்களில்‌ உத்ஸவம்‌ கடக்கும்‌ விவரத்தை ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.]

பங்குனி உத்தரத்‌தில்‌ நீர்‌ உபய நாச்சிமார்களை கர்ப க்ருஹத்திலேயே விட்டு பெரிய பிராட்டியாரோடு
ஏக ஆஸனத்தில் இருப்‌பதைப் பார்த்து இவள்‌ தானும்‌ உம்‌ மோடு வீற்றிருக்க விரும்பினாள்‌.

[கவி இங்கு பிரணய கலஹத்தைச்‌ சொல்லாதது . இவளுடைய கல்யாணம்‌ பூர்த்தியாகாததால்‌.]
இன்னொரு விஷயம்‌ நினைவுக்கு வந்தது :–இந்த உச்ஸவத்திலேயே மூன்றாம்‌ திருநாள்‌ சத்‌ர சாமராதிகளோடும்‌, ஸைன்யங்களோடும்‌,
பெரிய கூட்டத்‌தோடும்‌, மஹா வைபவத்துடன்‌ புறப்பட்டு அகண்ட. காவேரியில்‌ நீர்‌ அம்மையாரை நினைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீர்ப் பந்தலில்‌ போய்‌ உட்கார்ந்ததைப் பார்த்து.-
*இவ்வளவு இறு பிள்ளையாயிருப்பவர்க்கு அம்மையாரிடம்‌ ஆசை உண்டாயிற்றே,”.- என்று சொல்லி என்‌ பெண்‌ சிரித்தாள்‌.
[லக்ஷ்மீ காவ்யக்காரர்‌ சொல்லாத அம்மையார்‌ தண்ணீர்ப்‌ பந்தலை இந்தக் கவி சொல்லுகிறார்‌,]

சித்திரை மாஸத்தில்‌ நீர்‌ த்வஜ ஆரோஹணம்‌ பண்ணி, நாளுக்கு மண்டபமாகப்‌ போய்‌, வித:விதமான
நைவேத்தியங்களை அனுபவித்து உச்ஸவம்‌ செய்து கொண்ட அழகையும்‌ என்‌ பெண்‌ பார்த்தாள்‌.

ரங்கநாதன்‌–௮ம்மா- நான்‌ ஒன்று சொல்லுகிறேன்–இந்த மாஸத்திலேயே பச்சைக்‌ கர்ப்பூரம்‌ குங்குமப்பூ, கஸ்தூரி,
முதலிய வாஸனை த்ரவியங்‌களாலும்‌ பூக்களாலும்‌ சைத்யோபசாரம்‌ செய்து சொண்டு, பானகம்‌ முதலியவற்றால்‌
நான்‌ ஸந்‌தோஷப்‌படுகையில்‌ இவள்‌ தினங்தோறும்‌ என்னெதிரிலிருந்து எனக்கு நேத்ர ஆநந்தத்தைக்‌ கொடுத்தாள்‌,

நிசுளை-வைகாசி மாஸத்தில்‌ ஜலம்‌, நிறைந்த: அகழி நடுவே மண்டபத்தில்‌ நாச்சிமாரோடு ஊஞ்சலில்‌
நர்த்தனம்‌ செய்யும்‌ தாஸிகள் சூழ நீர்‌ உட்கார்ந்‌து இருப்‌பதைப் பார்த்து மெச்சினாள்‌.
ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ சந்த்ர புஷ்கரணியில்‌ – நீர்‌ தீர்த்வாரி நடத்துவதையும்‌,

பத்தாம்‌ திரு நாள் .
புஷ்ட யாகத்துக்குப் பிறகு வீதி வந்து. உபகார ஸ்மிருதியாக உடையவர்‌ ஸன்னிதி த்வாரத்துக்குப்‌ போவதையும்‌, படிப்புக்‌ கேட்பதையும்‌, கொடி யிறக்குவதையும்‌- பார்தது இவள்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ சொரிந்தாள்‌,
[உடையவர்‌ ஸன்னிதி விஷயம்‌ வக்ஷ்மீ காவியக்காரரால்‌ சொல்லப் படவில்லை.]

ஸ்லாமி ! ஒவ்வொரு உத்ஸத்திலும்‌ ஏழாம்‌ திரு நாள் உபய நாச்சிமார்களோடு நீர்‌ நெல்‌ அளவிட்டு
இவ்வளவென்று சொல்வதற்குப்போல நாச்சியார் கோயில்‌ போனதைக் கண்டு இவள்‌ மோஹித்தாள்‌..

ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ எட்டாம்‌ திருநாள்‌ நீர்‌ எல்லையெல்லாம்‌ சுற்றி.மண்டபத்திலிருக்து
குதிரை யேறிக்‌ காவேரி வழியாய்த் திரும்பும் போது இவளும்‌ கூட வந்தாள்‌,
[இத்தால்‌ எல்லைக் கரை எழுந்து அருளுவது இப்போது
போலப்‌ பங்குனியில்‌ மட்டுமில்லாமல்‌ ஒவ்வொரு யாத்ர உத்ஸவச்திலும்‌ உண்டென்று தெரிகிறது -.
கோயிலுக்கு “வெளியே உள்ள்‌ மண்டபத்துக்கு எழுந்து அருளுவது கூட இப்‌பொழுது கோயிலுக்குள்ளேயே ஏற்பட்டுவிட்டது .]

ஒவ்வொரு உத்ஸவத்துலும்‌ முதல்‌ நாள்‌ ராத்திரி நீர்‌ யாக சாலையிலிருந்து வந்து பெரிய பெருமாளுக்கெதிராக உட்கார்ந்து பிரதி ஸரம்‌ கட்டிக்கொண்டு, வெகு வேகமாகத்‌ திரும்பி எழுந்தருளின அழகைக்‌ கண்டு இவள்‌ ஆச்சரியப்பட்டாள்‌,
மத்தளம்‌, தாளம்‌, எக்காளம்‌ முதலிய கோஷத்‌தோடும்‌, ஸ்‌துதி பாடகர்கள்‌ சொல்லும்‌ கட்டியத்தோடும்‌, கைகூப்பி நிற்கும்‌ ஜனங்களினிடையில்‌,
சாமரங்‌களுக்கு நடுவே, திருமுகத்துக்‌ குடையின்‌ கீழ்‌ நீர்‌ திருவந்திக்‌ காப்பு கண்டருளும்போது உம்முடைய முக
ஜோதியைப்‌ பார்க்கப்‌ பார்க்க இவளுக்கு அலுக்கவே யில்லை,
தீபாவளியன்றும்‌ யுகாதியன்றும்‌ நீர்‌ சந்தன மண்‌டபத்‌திலிருந்து நம்மாழ்வார்‌ முதலானோரை வெகுமதி யளித்‌.து அனுப்பி,
ஷண நேரம்‌ தங்கி விட்டு உடனே உள்ளே எழுந்தருளின அழகையே இவள்‌ பாடிக்‌ கொண்டிருக்கிறாள்‌,

ஸங்கிராந்தி முதலான தினங்களில்‌ மேனி முழும்‌ நீர்‌ சந்தனம்‌ பூசிக்கொண்டு ஸஹஸ்‌ர தாரைத் தீர்த்தத்தினால்‌
திருமஞ்சனம்‌ செய்துகொள்ளும்‌ போது உம்மூடைய கன்னத்தின்‌ அழகைக் கண்டு இவள்‌ முத்தமிடப்‌ புறப்பட்டாள்‌.

ரங்க நாதன்‌–உன்‌ பெண்‌ தன்னுயிராலேயே
என்னை அங்கீ கரித்து விட்டாள்‌.

நிசுளை–ஒன்று மாத்திரம்‌ பெண்‌ புத்தியால்‌ கேட்டுக் கொள்கிறேன்‌ : உம்முடைய மற்றை மஹிஷிகளைப் போல இவளையும்‌ பாவிக்க வேண்டும்‌,

ரங்ககாதன்‌–இந்த ஸபையில்‌ இப்படி. ப்‌ரதிக்ஞை பண்ணித்‌ தருகிறேன்‌ : இவள்‌ எனக்கு லக்ஷ்மியைப்‌ போல பிரியாத பத்தினி,
லக்ஷ்மியைப்‌ போல இவளையும்‌ தனிக் கோயிலில்‌ வைத்‌து இவளுக்கு ஸகல போகம்‌களையும்‌ கொடுக்கிறேன்‌.
வருஷத்துக்‌கு ஓருமுறை இந்த நகரம்‌ வந்து ஒரு நாள்‌ ‘இவளோடிருக்கிறேன்‌.

[ரங்க நாதன்‌ ஸ்ரீரங்கம்‌ வந்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போய்‌ கதவைக்‌ தட்டிக்‌ கூப்பிடுகிமுர்‌.] ்‌
கண்ணே யார்‌ அங்கே? ரங்க ரஸிகன்‌ ;
இங்கென்ன போம்‌ 1] நான்‌ உன்னுடைய காந்தன்‌;
அவர்‌ இங்கில்லை–விளையாடப்‌ போயிருக்கிறார்‌ ;
உன்னை விட்டு அவர்‌ எங்கே விளையாடுவது ?
பாக்யசாலியான ப்ரியை எங்‌கே யிருக்கிருளோ 7
உன்னைவிட அவருக்கு ப்ரியை யார்‌?
நிசுளைக்கு நாதனுடைய கன்யா ரத்னம்‌ இருக்‌கிறாளே]|

[ரங்க நாதன்‌ கதவைத் திறந்து உள்ளேபோய்‌ நாச்சியாரிடம் உட்கார்ந்து . ௮வளை ஸமாதானப்படுத்‌தி னார்‌. ]
நாச்சியார்‌–உம்முடைய மேனி மிக்க மிருது வென்று நான்‌ கெட்டியாகக் கூட கட்டி யணைந்த தில்லை;-அழுத்தமாயும்‌ முத்தமிட்ட தில்லை,
கொஞ்சம்கூட தயவேயில்லாமல்‌ யார்‌ உம்மை இப்படிக்‌ காயப்‌ படுத்தியது?

ரங்கநாதன்‌–அப்படி நினையாதே, நேற்று ராத்‌ரியே நான்‌ ஊரைவிட்டு நீலீவனம்‌ போய் ராக்ஷஸனைக்‌
கொன்று ரிஷிகளை ஸந்தோஷப்படுத்தி , இப்போது தான்‌ வருகிறேன்‌.
சத்துரு புலியாயிருந்தாலும்‌ இடம்‌ காடாயிருந்தாலும்‌ யுத்தத்‌தில்‌ உடம்பெல்லாம்‌: காயமாயிற்று,
நான்‌ நிஜத்தைச் சொல்லுகிறேன்‌.-பொய்‌ சொன்னதுமில்லை ண: சொல்லட் போகிறதுமில்லை,

நாச்சியார்‌–(கடகடவென்று சிரித்‌துக் கொண்டு):
வியாக்ராஸூரனை இன்று கொன்றதும்‌ நிஜம்‌ ! நீலீ வனத்தில்‌ முள்‌ இருப்பதும்‌ நிஜம்‌ |

ரங்கநாதன்‌–நம்பிக்கை யில்லையானால் தேவர்களின்‌
முன்னால்‌ ஸத்தியம்‌ பண்ணுகிறேன்‌; நெருப்பைக்‌ கையிலேந்துகிறேன்‌.
கொடிய பாம்பையும்‌ கையில்‌ பிடிக்கறேன்‌; ஸ்ரீயான நீதான்‌ எனக்கு ப்ரியமானவள்‌.

நாச்சியார்‌–நீரே ஸத்யமான பரம புருஷன்‌.-
தேவர்கள்‌ உம்முடைய துளி மாயையாலும்‌ வஞ்சிக்கபடுவார்கள்‌.
உம்முடைய முகமே நெருப்பு, பாம்பே உமக்குப்‌ படுக்கை, நீர்‌ ஸ்ரீ ய : ஸ்ரீ -ஸ்ரீ க்கும் ஸ்ரீ யாய் இருப்பவர்யிருப்பவர்‌).

ரங்கநாதன்‌–பதில்‌ சொல்ல இடமில்லாமல்‌ பேசுகிறாளே ! குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக்‌ கேட்க வேண்டியது தான்‌. “
(என்று மன்னிப்புக்‌ கேட்‌கிறார்‌. நாச்சியாரும் மன்னித்தாள்‌.)

————-

6–ஆதி ப்ரஹ்ம உத்ஸவம்

விபீஷணன்‌ ரங்க விமானத்தை அயோத்தியில் இருந்து லங்சைக்குக்‌ கொண்டு போகையில்‌ மாத்யாந்ஹிகத்துக்‌காக புஷ்கரிணிக்‌ கரையில்‌ வைத்தான்‌.
அப்பொழுது உறையூரில்‌ ராஜாவாயிருந்த தர்மவர்மா விபிஷணனை உபசரித்து இங்கேயே சில நாள் இருக்கும் படியாகப்‌.ப்‌ரார்த்தித்தான்‌.
மறுநாள்‌ பிரம்மா ஏற்படுத்தின உத்ஸவத்தை நடத்த வேண்டிய தினமாகையால்‌ லங்கைக்குப்‌ போக விரும்பின விபீஷணன்‌ தர்மவர்மாவின்‌ பிரார்த்தனையினால்‌ இவ்விடமே உச்ஸவத்தை நடத்தினான்‌.
(ஸ்ரீரங்க மாஹாத்மியம்‌ பார்க்க) ஸ்ரீ ரங்கமாஹாத்மியத்திலும்‌ லக்ஷ்மீ காவ்யத்திலும்‌ சொன்ன
ப்ரகாரமே பங்குனி ரோஹிணியில்‌ த்வஜ ஆரோஹணம் ஆகி பத்து நாள் உத்ஸவம்‌ இப்பொழுதும்‌ நடக்‌கிறது
இந்த உத்ஸவத்தின்‌ விவரம்‌ ஈருக்கமாகப்‌ பின்வருமாறு,

1-ம்‌ திரு–த்வஜாரோஹணம்‌, பேரி தாடனம்‌,
உபய நாச்சியாரோடு திருவீதி , யாக சாலையில்‌ பெருமாளுக்குத் திரு மஞ்சனம்‌,
பஞ்சகுண்டஹோமம்‌, ஸன்‌னிதி வாசலில்‌ யாத்ரா தானம்‌,

2-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில் வீதி எழுந்து அருளுவதில்லை. அம்பட்ட மண்டபத்துக்கு எழுந்தருளுவதாக ஐதிஹ்யம்‌.
ஆனால்‌ கருட மண்டபத்திலேயே மண்டபப்படியாகி சீக்கிரம்‌ உள்ளே எழுந்தருளுவார்‌.
இன்றைய மண்ட பப்படி.செலவு மட்டும்‌ திருச்சி பரியாரி’களுடையது.

3-ம்திகு–சீயர்‌ புரத்துக்காக ராத்ரியே பெருமாள்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு ப்‌ரதக்ஷிணமாய்‌ வடக்கு வாசல்‌ வழியாக மேலூர்‌ போய்‌,
விருஷி தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து, கொள்ளிடத்திலிறங்கி -சிலையாத்தி போய்‌, மீண்டும்‌ கொள்ளிடத்‌ திலிறங்‌கி, காவேரியையும்‌ தாண்டி
இரவெல்லாம்‌ வழி நடந்து, உதயம்‌ சீயர் புரம் அம்மையார்‌ தண்ணீர்ப் பந்தலில்‌ தத்யோகனமும்‌ மாங்‌காய்‌ ஊறுகாயும்‌ அழுது செய்து, மண்டபத்தில்‌ ஆராதன நைவேத்தியம்‌ : கண்டருளி,ஸாயங்காலம்‌ புறப்பட்‌டுக்‌ காவேரி தாண்டி,
மேலூர்‌ வழியாக வந்து வடக்கு வாசல்‌ பிரவேசித்து, வீதி எழுந்தருளி உள்ளே போவார்‌,

4-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்‌பட்டு கொள்ளிடம்‌ இறங்கி , நொச்சியத்துக்கு மேற்கில்‌
ஸ்ரீரங்கராஜ புரத்திலுள்ள செட்டி ராயர்‌ மண்டபத்திலிருந்து ஸாயங்காலம்‌ கருட வாஹனகத்தில்‌ புறப்பட்டு.
விதி யெழுந்தருளி உள்ளே போவார்‌.

5-ம்‌ திரு–காலை சேஷ வாஹனத்தில்‌ வீதி யெழுந்தருளி, மத்தியானம்‌ சேஷ ராய மண்டபத்திலிருந்து
ஸாயங்காலம்‌ கல்ப விருக்ஷத்தில்‌ வீதி யெழுந்தருளி உள்ளே போய்‌, விடியற்காலையில்‌ புறப்பட்டு உறையூர் எழுந்தருளுவார்‌.

6-ம்‌ திரு–உறையூருக்குப்‌ பெருமாள்‌ எழுந்தருளும்போது 10 மணியாகும்‌. பெருமாள்‌ பல்லக்கோடு சந்தன மண்டபத்தில்‌ எழுந்தருளுவார்‌.
திருக்காப்பு சேர்த்து வெளியே தாஸிகள்‌ பாட்டும்‌ மேள வாத்தியமும்‌ முழங்கும்‌.
ஸன்னிதிக்‌கெதிரில்‌ பல்லக்கோடு எழுந்தருளின பெருமாள்‌ பல்லக்கிலேயே நாச்சியாருக்கு நேராக எழுந்தருளி,
புது வஸ்திரம் . சந்தனம்‌, திலகம்‌, மாலை முதலியன சாத்திக் கொண்டு, களைந்த மாலையை நாச்சியாருக்கு அனுப்புவார்‌.
நாச்சியார்‌ மாலை யணிந்து கொண்ட பிறகு, ஏகாந்த ப்ரஸாதம்‌ நிவேதனமாகும்‌.
முதலில்‌ பெருமாளும்‌ பிறகு நாச்சியாரும்‌ வெளி மண்‌ டபத்தில்‌ எழுந்தருளி, திருவாராதனம்‌ முதலியன ஆகும்‌.
ராத்திரி 10 மணி வரையில்‌ பெருமாள்‌ எல்‌லாருக்கும்‌ ஸேவை ஸாதித்து, நாச்சி யாரை உள்ளே அனுப்பிப்‌ புறப்பட்டு, ஸ்ரீரங்கம்‌ வந்து வெளியாண்டாளோடு மாலை மாற்றிக் கொண்டு உள்ளே எழுந்தருளுவார்‌.

7-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ வீதி எழுந்தருளுவதில்லை; ,ஸாயங்காலம்‌ உபய நாச்சிமாரோடிருந்து
ஜலக்ரீடை,, சூர்ணாபிஷேகம்‌, நெல்‌அளவு–இவை ஆனதும்‌ வீதி யெழுந்தருளி, நாச்சி யார் கோயிலில்‌ திருமஞ்‌சனம்‌ செய்து கொண்டு உள்ளே போவார்‌,

8-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ திரு வீதி எழுந்‌தருளாமலே தெற்கு வாசல்‌ வழியாகக்‌ கிழக்கே போய்‌,
அசுவத்த தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து-வேலேந்து தாஸருக்கு ஆனை ஏற்றம் அனுக்ரஹித்து வழியில் அவ்வோ இடங்களில்‌
ஸ்தலத்தார்களையும்‌ அனுக்ரஹித்து , பில்வ தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து எல்‌லைக் கரை மண்டபம்‌ போய்‌, எல்லைக் கரை ராமானுஜனையும்‌ ஸ்ரீரங்க நாரயண ஜீயரையும்‌ ௮நுக்ரஹிப்பார்‌;
ராத்திரி குதிரை வாஹனத்‌தில்‌ புறப்பட்டுக்‌ கொள்‌ளிடம்‌ இறங்கி வடக்கு வாசல்‌ வழியாக ஊருக்குள்‌
பிரவேசித்து , கோரதத்தினடி.யில்‌ வையாளி யாகி உள்ளே எழுந்தருளுவார்‌.

9-ம்‌ திரு. பங்குனி உத்தரம்‌–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு சித்திரை வீதி உள்‌ திரு வீதிகளில்‌ வலம்‌ வந்து
நாச்சியார்‌ ஸன்னிதிக்குள்‌ போகையில்‌ கதவுகள்‌ சாற்றப் பட்டு, தாஸிகள்‌ புஷ்பங்களையும்‌ பழங்களையும்‌ எறிந்து பெருமாளைத்‌ தடுக்து வெளியே நிறுத்தி வைப்பார்கள்‌.
கதவு திறக்கும் போது பெருமாள்‌ உள்ளே போவதும்‌ கதவு சாற்றும் போ.து பெருமாள்‌ பின்னால்‌ ஒதுங்குவதுமாயிருக்கும்‌.
பெருமாள்‌ நாச்சிமார்களுக்கு ஸமாதானம்‌ பண்ணி வைப்பதற்‌காக நம்மாழ்வார்‌ வருவார்‌.
பெருமான்‌ தான்‌ சொல்ல வேண்டியவைகளை அரையரிடம்‌ சொல்லி ஆழ்வாரை மத்தியஸ்‌தமாகக்‌ கொண்டு நாச்சியாரிடம்‌ தெரிவிப்‌பதற்காக இருவரையும்‌ அனுப்புவார்‌,
அரையர்‌ ஆழ்‌வாரோடு உள்ளே போய்‌ நாச்சியாருடைய பரிகரமான பண்டாரியினிடம்‌ பெருமாள்‌ சொன்னதைச்‌ சொல்லி
பண்டாரி சொல்லும்‌ நாச்சியார் வார்த்தையைப்‌ பெருமாளிடம்‌ – ஆழ்வாரோடு வந்து சொல்லுவார்‌,
பெருமாள்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை, நாச்சியார்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை,
இந்தப்‌ பத்து வார்த்‌தைக்குப்‌ பத்து பாட்டு வெகு ௮ழகாக முன்னோரான அரையர்களால்‌ செய்யப்பட்டு இப்பொழுதும்‌ சொல்லப்‌ படுகிறது.
பாட்டு அரையர்களிடமே இருக்கிறது,–வார்த்தை மட்டும்‌ * மட்டையடி” என்னு விகாரமாகப்‌ பெயர் பெற்ற புஸ்தகமாய்‌ வெளியாயிற்று, அத்த வார்த்தை பின்‌ வருமாது :—

நாம்‌ உத்ஸவார்த்தமாகப்‌ புறப்பட்டருளி, திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷிக்க,
ப்‌ராம்மணர்களெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம்‌ பண்ண,—இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்தில்‌ வந்தால் ,
தாங்களெப்போதும்‌ எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து, உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்மாஸனத்திலேறி யருளப் பண்ணி, திருவடி விளக்‌க, திரு வொத்து வாடை சாத்தி, திருவால வட்டம்‌ பரிமாறி, மங்களாலத்தி கண்டருளப் பண்ணி, சுருளமுது
திருத்தி ஸமர்ப்பித்‌து , –இப்படி ௮னேக உபசாரங்களெல்லாம்‌ நடக்குமே.
இன்றைக்கு நாமெழுந்தருளின விடத்திலே திருக் காப்பு சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்‌ திருப்பிக் கொண்டு, திருச் சேவடிமார்‌கள்‌ கைகளாலே
பந்துகளாலும்‌ பழங்களாலும்‌ விட்டெ.றிவித்‌து , இப்படி யொரு நாளும்‌ : பண்ணாத ௮வமானங்களை யெல்லாம்‌ இன்றைக்குப்‌ பண்ண வந்த காரியம்‌
ஏதென்று. கேட்டு வரச்‌ சொல்லிப்‌–பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌,

தாம்‌ எப்போதும் போல எழுந்தருளினதே மெய்‌யானால்‌—திருக் கண்களெல்லாம்‌ சிவந்து இருப்பானேன்‌?
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேன்‌ ?
கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந் திருப்பானேன்‌ ? திருவதரம் வெளுத்திருப்பானேன்‌ ? திருக் கழுத்தெல்லாம்‌
நக க்ஷதங்களா யிருப்பானேன்‌ ? திருமேனியெல்லாம்‌ குங்குமப்பொடிகளாக யிருப்பானேன்‌ ?
திருப்பரிவட்‌டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேன்‌ ?திருவடிகளெல்லாம்‌ செம்மஞ்சக்‌ குழம்பா யிருப்பானேன்‌?
இப்படிப்பட்ட அடையாளங்களைப்‌ பார்த்து . நாச்சியாருக்கு மிகவும்‌ திருவுள்ளம்‌ கலங்கி யிருக்கிறது,
ஆன படியினாலே , உள்ளே யிருக்கிறவர்களை வெளியிலே விட வேண்டாமென்றுல்‌, வெளியிலே யிருக்கிறவர்களை
உள்ளே விட வேண்டாமென்றும்‌– இப்படி, கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற ஸமயத்திலே உள்ளே விண்‌ணப்பம் செய்ய ஸமயமில்லை, ஆன படியினாலே நேற்றைக்‌ கெழுக்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி– நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

திருக் கண்‌ சிவந்து இருப்பான் என் என்றால்‌ நாம்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வரானபடியினாலே
கவிரி முடித்து, கல்கச்சை சட்டி, வல்லய மேந்தி,குதிரை நம்பிரான்‌ மேலே ராத்திரி முழுவதும்‌ நித்திரை
யின்‌றி ஜகத்‌ ரக்ஷணார்‌த்தமாக ஜாக ரூகனாயிருந்த படியினாலே திருக்கண்‌ சிவந்து போச்சுது .,
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேனென்றால்‌–காற்‌றடித்து கலைந்து போச்சுது -, கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந்திருப்பானேனென்றால்‌–௮தி கடோரமான ஸுரிய கிரணத்தால்‌ கரைந்து போச்சுது –திருவதரம்‌ வெளுத்திருப்பானேனென்றால்‌-௮ஸூர நிரசனார்த்தம்‌
தேவதைகளுக்காக சங்கத் வானம்‌ பண்ணின படியினாலேவெளுத்துப்‌ போச்சுது .
திருக் கழுத்தெல்லாம்‌ நக க்ஷதமாயிருப்பானே னென்றால்‌—௮தி ப்ரயாஸமான காடுகளிலே போகிற போது பூ முள்ளு கிழித்தது.
திருமேனி யெல்லாம் குங்குமப் பொடிகளா யிருப்பானேனென்றால்‌- தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணு படிந்தது. திருப் பரிவட்டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேனென்றால்‌-ஸந்த்யா ராகம்‌ போலே யிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள்‌ கண்ணுக்கு மஞ்சள்‌ வர்ணமாகசத் தோன்றுகிறது ,
திருவடி.கனெல்லாம்‌ செம்மஞ்‌சக் குழம்பாயிருப்பானேனென்றால்‌–குதிரை நம்பிரான்‌
மேலேறி ௮ங்கவடிவமேல்‌ திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியினாலே திருவடிகள்‌ சிவந்து போயின.
இப்படிப்பட்ட அடையாளமே யொழிய வேறில்லை.–ஆனால் போது கழித்து வருவானேனென்‌றால்‌–வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கை யாழ்வானென்பவன்‌ ஒருவன்‌ வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையம்‌ பண்ணிக் கொண்டு போனான்‌,
அவனைச்‌ சில நல்ல வார்த்தைகளைச்‌ சொல்‌லித்‌ திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு
போய்‌ கருகூலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ ௧னையாழி மோதிரம்‌ காணாமல்‌ போச்சுது.
அதற்காக விடிய பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம்‌ வலம் வந்து, கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு  மீள வாரா நிற்கச் செய்தே,௮ப்‌பொழுது தேவதைகள்‌ பாரிஜாத புஷ்பங்கள்‌ கொண்டு ஸேவிக்க வந்தார்கள்‌,
நாம்‌ நம்முடைய பெண்டுகளன்‌றியிலே சூடுகிறது இல்லை யென்று நமக்கு முன்னமே வரக்காட்டி. நாமும்‌ பின்னே எழுந்தருளினோம்‌.
ஆன படியினாலே நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக்‌ கொண்டு நம்மையும்‌ உள்ளே அழைக்கச்‌ சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌

கணையாழி மோதிரம்‌ காணாமல் போனதே மெய்‌யானால்‌–விடிய’ பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி உறையூரிலே போய்‌,
மின்னிடை மடவார்‌ சேரியெல்‌லாம்‌ புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து உண்டாயிருக்கிற அடையாளங்களெல்லாம்‌
திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்‌தேயும்‌, அவ் வடையாளங்களையும்‌ அந்யாதவாகக்‌ கொண்டு, நாங்கள்‌ ஏழைகளானபடி.யினாலே
இப்படிப்பட்டிருக்கிற வஞ்சந உக்‌திகளை யெல்லாம்‌ நேற்றைக்‌ கெழுந்தருளின விடத்தில்‌ தானே
சொல்லிக் கொண்டு இன்றைக்கும்‌ அங்கே. தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டது மில்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களா யிருக்கிறவர்களும்‌
மனதுக்குச்‌ சரிப்போனபடி சொன்‌னால்‌ நீரும்‌ அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்‌ கொண்டு நம்மையும்‌ ஒரு நாளும்‌ பண்ணாத அவமானன்‌களெல்லாம்‌ பண்ணலாமா ?
நீங்கள்‌ ஸ்‌த்ரீகளானபடி.யினாலே முன்பின்‌ விசாரியாமல்‌ பண்ணினீர்களாமென்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத்‌ தேவை யில்லை.
ஆனபடியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்‌பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைக்‌கச் சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாசம்‌.

முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள்‌ வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள்‌ அதி ப்ரீதியுடனே
எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து, உள்ளே யெழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்ஹாசனத்திலே
ஏறி யருளப் பண்ணி, திருவடி விளக்கி , திரு வொத்து வாடை. சாத்தி, திருவாலவட்டம்‌ பரிமாறினோம்‌.
அப்‌போது ௮தி௧ ஸிரமத்தோடே எழுந்தருளி யிருந்தார்‌.
ஆனால்‌, இளைப்போ வென்று வெந்நீர்த்‌ திருமஞ்சனம்‌ சேர்த்து ஸமர்ப்பித்தோம்‌.
அதை நீராடினது பாதியும்‌ நீராடாதது பாதியுமாக எழுந்தருளி யிருந்தார்‌,
ஆனால்‌, இளைப்போவென்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம்‌ கொண்டு வந்து ஸமர்ப்பித்‌தோம்‌, அதையும்‌ எப்போதும்‌ போல சாத்‌திக் கொள்‌ ளாமல்‌ ஏதோ ஒரு விதமாக சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று கஸ்தாரித்‌ திருமண் காப்பு சேர்த்து ஸமமர்ப்பித்தோம்‌. அதையும்‌ எப்போதும்‌
போல சாத்திக் கொள்ளாமல்‌ திரு வேங்கடமுடையான்‌
திருமண்காப்பு போல கோணாமாணாவாய்ச்‌ சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று தங்கப் பள்ளயத்தில்‌ அப்பம்‌ கலந்த சிற்றுண்டி யக்காரம்‌ பாலில் கலந்து,
வர்க வகைகள்‌ முதலானதுகளைச்‌ சேர்தது ஸமர்ப்பித்‌தோம்‌.
அதையும்‌ அமுது செய்தது பாதியும்‌ அமுத செய்யாதது பாதியுமாய்‌ எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌ இளைப்போவென்று
சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்‌தோம்‌. அசையும்‌ ௮முது செய்யாதபடி தானே எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌, இளைப்போவென்று
திருவநந்தாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன்‌ மேலே திருக் கண்‌ வளரப் பண்ணி அடியோங்கள்‌ திரு வடிகளைப்‌ பிடித்துக்கொண்டிருந்தோம்‌.
தாம்‌ வஞ்‌சகரான படியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை யுண்டாக்‌கி , எங்கள்‌ கருகூலம்‌ திறந்து, எங்கள்
ஸ்த்ரீ தனங்களான அம்மானை பந்து கழஞ்சி பீதாம்பரங்களையும்‌ கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. எழுந்தருளுகிறோமென்றும்‌ சொல்லாதபடி. எழுந்தருளினார்‌.
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள்‌ ௮ச்சமுடன்‌ திடுக்கிட்டெழுந்திருந்து, திருப்படுக்கையைப்‌ பார்க்கு மிடத்தில்‌,
பெருமாளைக்‌ காணாமையாலே கை நெரித்து வாயடித்து ௮ணுகவிடும்‌ வாசற்‌ காப்பாளரை யழைத்‌துக் கேட்குமளவில்‌,–
அவர்கள் வந்து , அம்மானை பந்து கழஞ்சு பீதாம்பாமான ஸ்திரீ தனத்தையும்‌ கைக்‌ கொண்டு, இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. யெழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள் –அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க
பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடி.மார்களை யழைப்‌பித்தோம்‌.
அவர்கள்‌ வந்து அடிபிடித்து அடிமிதித்‌துக் கொண்டு போனவிட த்‌ திலே, உறையூரிலே கொண்டு போய் விட்டது .
௮ங்கே மச்சனியென்று ஒருத்‌திக்கு முறைமை சொல்லி, மற்றொருத்தியை மடியைப் பிடித்தும்
கச்சணி பொன்‌ முலை கண்ணா லழைத்ததும்‌, கனி வாய்‌ கொடுத்ததும்‌,
கையில்‌ நகக் குறி மெய்யங்கமானதும்‌, கார் மேனி யெங்கும்‌ பசுமஞ்சள்‌ பூத்ததுமாகக்‌
கரும்புத்‌ தோட்டத்தில்‌ யானை ஸஞ்சரிக்கிறாப் போலே,. தேவரீர்‌ ஸஞ்சரிக்கிறிர் என்று நாங்கள்‌ உசிதமாகப்‌
போக விட்ட தூதியோடி அங்கே உள்ளபடி. வந்து சொன்னாள்‌.
உம்மாலே எங்கள்‌ மனது உலை மெழுகாயிருக்றது -ஒன்‌றும்‌ சொல்லாதே போம்‌ போமென்று நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌, அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்திலுல்‌ தீராமற்போனால்‌, ப்‌ரமாணத்தாலே தீர்த்‌துக் கொள்வார்கள்‌.
அந்தப்படி ப்‌ரமாணம்‌ பண்ணித்‌ தருகிறோம்‌. நாம்‌ தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்‌.
ஸமுத்திரத்திலே முழுகுகிறோம்‌. அக்நி ப்ரவேசம்‌ பண்ணுறோம்‌. பாம்புக்‌ குடத்‌திலே கையிடுகிறோம்‌,
மழுவேந்துகிறோம்‌. நெய்க்‌ குடத்திலே கையிடுகிறோம்‌. இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும்‌ வாங்கிக்
கொண்டு, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிச்‌ சூட்‌டிக் கொண்டு, நம்மையும்‌ உள்ளே யழைக்கச்‌ சொல்லிப்‌
பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌ அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்தாலும்‌ தீராமற் போனால்‌: ப்‌ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்‌.
லோகத்திலே ப்ராம்மணனுக்கும்‌ ப்‌ராம்மணனுக்கும்‌ வாக்‌கு வாதம் வந்தால்‌ ப்ராம்மணன்‌ ப்ராம்மணனைத் தாண்டிக் கொடுப்பான்‌.
தாம்‌ தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே !
அந்த தேவகைகள்‌ தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம்‌ ! எப்போ காணப் போகிறோம்‌ ! –என்று ஸதா பிரார்த்தித்துக்‌ கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால்‌ வேண்டா மென்பார்‌களா –
ஸமுத்‌ரத்திலே முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே !ப்‌ரளய காலத்திலே ஸகல லோகங்களையும்‌ திரு வயிற்றிலே வைத்‌து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத்‌ தளிரிலே கண்வளர்ந்த உமக்கு ஸமுத்திரத்தலே முழுகிறது அருமையா ?
அக்நி ப்‌ரவேசம்‌ பண்ணுகிறோமென்று சொல்ல வந்தீரே ! ப்‌ரம்மாவுக்காக உத்தர வேதியில்‌ ஆவிர்ப்பவித்‌த தமக்கு அக்நியில்‌ முழுகுகிறோமென்‌றால்‌ அக்நி சுடுமா ?
பாம்புக்குடத்‌திலே கையிட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே ! சென்றாற்‌ குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
என்று ஸதா ஸர்வ காலம்‌ திரு வானந்தாழ்வான் மேலே திருக் கண்‌ வளர்ந்து இருக்கிற
தமக்குப்‌ பாம்புக்‌ குடத்திலே கையிட்டால்‌ பாம்பு கடிக்குமா
மழுவேந்துகிறோ மென்று சொல்ல வந்தீரே! கோடி ஸூர்ய ப்‌ரசாசமான திருவாழியாழ்‌வானை ஸதா திருக்கையிலே தரித்‌துக் கொண்டி.ருக்கிற
தமக்கு ௮ப்ரயோஜகமான இரும்பு மழு வேந்துகிறது அருமையா?
நெய்க்‌ குடத்திலே கையிடுகிறது அருமையா? இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்‌.ரமாணங்களை யெல்லாம்‌ சரிப் போன விடத்திலே தானே
பண்‌ணிக் கொண்டு இன்றைக்கும்‌ ௮ங்கே தானே யெழுந்த ருளச்‌ சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ உச்ஸவார்‌த்தமாகப்‌ புறப்பட்டருளி திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து, தேவதைகள்‌ புஷ்பவர்‌ஷம்‌ வர்ஷிக்க,
ப்ராம்மணர்க ளெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம் பண்ண, இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்‌தில்‌ வந்தால்
தங்கள் எப்போதும் போலே ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப்‌ பண்ணினோம் என்‌றீர்கள்‌.
நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டதுமில்லை, காதாலே கேட்டதுமில்லை யென்று சொன்னோம்‌.
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்‌.
ஆனால்‌, ப்‌ரமாணம்‌ பண்ணித் தருகிறோம் என்று சொன்‌னோம்‌. -அத்தைப்‌ பரிஹாஸ ப்ரமாணமென்று சொன்‌னீர்கள்‌.
இப்படி நாம்‌ எத்தனை சொன்ன போதிலும்‌ அத்தனையும்‌ அந்யதாவாகக்‌ கொண்டு சற்றும்‌ திருவுள்‌ளத்தில்‌ இரக்கம்‌ வராமல்‌,
கோபத்தாலே திருவுள்ளம்‌ கலங்கத் திருமுகமண்டலம்‌ கறுத்துத்‌ திருக்கண்கள்‌ சிவந்து இப்படி. யெழுந்தருளியிருந்தால்‌ நமக்கென்ன கதி யிருக்கிறது?
௮ழகிய மணவாளப்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்க நாச்சியார்‌ ஸந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக்‌ கொண்டிருக்கிறாராம் என்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத் தேவை யில்லை.
ஆன படியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைச்கச் சொல்லிப்‌ பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ வருஷா வருஷம்‌ அடமாயெழுந்தருளியிருந்து தமக்குச்‌ சரிப் போன படி நடந்து போட்டு, பின்னும்‌ இங்கே வந்து
நாமொன்று மறியோமென்றும்‌, ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும்‌–பரிஹாஸங்‌களைப்‌ பண்ணி இப்படிப் பட்டிருக்கிற
அக்ருத்யங்‌களைப்‌ பண்ணிக் கொண்டு வருகிறீர்‌.-நாமானால்‌ பொறுக்‌கிறதில்லை. நம்முடைய அய்யா நம்மாழ்வார்‌ வந்து
மங்களமாகச்‌ சொன்ன வாய்‌ மொழியினாலே பொறுத்‌தோம்‌. உள்ளே எழந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்‌ரகாரம்‌.

முதல்‌ ஏகாந்தம்‌–நாச்சியாரால்‌ அனுமதிக்கப்‌ பட்டு பெருமாள்‌ ஸன்னிதி வாசலில்‌ எழுந்தருளி ஆழ்வாரை மரியாதை செய்து அனுப்புவார்‌.
உறையூரில்‌ நடந்தது போலவே ஏகாக்தம்‌, தளிகை நிவேதனம்‌ நடந்து பெருமாள்‌ பங்குனி உத்தர மண்டபம்‌
எழுந்து அருளுவார்‌.-நாச்சியாரும்‌ பெருமாளிடம்‌ போய்‌ வீற்றிருப்பாள்‌,

இரண்டாம்‌ ஏகாந்தம்‌– செல்வர்‌ பெரிய கோயிலி.லிருந்து புறப்பட்டு வட திருக் காவேரியில்‌ தீர்த்தம்‌ ஸாதித்துப்‌ பெருமாளிடம்‌ வந்ததும்‌,
கத்ய த்ரயம்‌.ஸேவிக்கப்படும்‌. -கத்ய த்ரயம்‌ என்னும்‌ கிரந்தம் இன்றைய தினமே அவதரித்தது,
கத்ய த்ரய சாற்று முறைக்காக இரண்டாம்‌ ஏகாந்தத் தளிகை நிவேதனம்‌ ஆனதும்‌ செல்வர்‌ பெரிய கோயில்‌ எழுந்தருளுவார்‌.

மூன்றாம்‌ ஏகாந்தம்‌. பெருமாள்‌ நாச்சியார்‌ இருவருக்கும்‌ பதினெட்டு ஆவ்ருத்தி திருமஞ்சனம்‌ ஆகும்‌.
மூன்றாம்‌ ஏகாந்தத்‌ தளிகை நிவேதனம்‌ முதலியவை ஆனதும்‌ நாச்சியார்‌ உள்ளே எழுந்து அருளுவாள்‌,
பெருமாள்‌ கோரதத்தில்‌ திரு விதி எழுந்தருளி: உள்ளே போய்‌ கண்ணாடி யறையில்‌ திருமஞ்சனம்‌: செய்து கொள்வார்‌.

10-ம்‌ திரு–பெருமாள்‌ திருமஞ்சனம்‌ செய்து ‘கொண்டு ஸாயங்காலம்‌ மேளமில்லாமல்‌ உலாப்பாட்டும்‌
ராமானுஜ நூற்றந்தாதியும்‌ கேட்டுக் கொண்டே வீதி யெழுந்தருளி, உடையவர்‌ ஸன்னிதி வாசலில்‌ உடை யவரை அனுக்ரஹித்து,
அவர்‌ செய்‌து வைக்கும்‌ சைத்யோபசாரங்களையும்‌ பெற்றுக் கொண்டு, துவஜ ஸ்தம்பத்‌தினடியில்‌
படிப்புக்‌ கேட்டு ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளுவார்‌. பிறகு ரக்ஷா விஸர்ஜனமும்‌ துவஜ அவரோஹணமும்‌ ஆகும்‌.
மறு நாள் ராத்திரி விடாயாற்றியாக ஆடும்‌ பல்லக்கில் பெருமாள்‌ வீதி எழுந்தருளுவார்‌.
பெருமாள்‌ பங்குனி உத்தரத்தன்று நாச்சியார்‌ ஸன்‌னிதிக்கு எழுந்தருளச்‌ காரணம்‌ என்ன? ஸ்ரீரங்கத்தில்‌
பங்குனி உத்தரம்‌ என்பது தந்த்ரோத்ஸவம்‌ -அதாவது-இரண்டு உத்ஸவம்‌.
உத்ஸவம்‌ அவ.வர்களுடைய நக்ஷத்‌திரத்தில்‌ ஆரம்பமாக வேண்டும்‌ ; ௮ல்லது , முடிய வேண்டும்‌.
பெருமாளுக்கு ரோஹிணி நக்ஷத்‌திரமாகையால்‌ அன்று இந்த உத்ஸவம்‌ ஆரம்பமாகி உத்தரத்தில்‌ முடிகிறது;
நாச்சியாருக்கும்‌ ரோஹிணியில்‌ ஆரம்பமாகி அவளுடைய நக்ஷத்ரமான உத்தரத்தில்‌ முடிகிறது -.
பெருமாளுக்கு காலை யிலும்‌ ராத்‌திரியிலும்‌ உத்ஸவம்‌ நடக்க வேண்டி யிருப்பதால்‌ நாச்சியார் உத்ஸவம்‌ தனியாக
நடக்க முடியாமல்‌ பாவனையாக நடக்கிறது .-உத்தாம்‌ இருவருடைய உத்ஸவத்துக்கும்‌
கடைசி நாளாதாகையால் நாச்சியாருடைய சேர்த்‌தியில் இருப்‌பதற்காகப்‌ பெருமாள்‌ இன்று அங்கெ போகிறார்‌.
பிரளய கலஹ உத்ஸவம்‌ பண்ண வேண்டுமென்ற ஆகம விதிப்படி. அதற்கும்‌ உறையூர்‌ நாச்சியார்‌ ஸம்பந்தம்‌ அனுகூலமான ஸந்தர்பமாய்‌ வாய்த்தது.

77- உறையூர்ச் சரித்திரம்

உறையூர்‌ சோழர்களின்‌ ராஜ தானியாயிருக்தது — திருச்‌சினாப்பள்ளி கெஜடீர்‌ 27, 30, 49 பக்கங்களில்‌ பார்க்க,
உறையூர்‌ ராஜாவான பராந்தகன்‌, திரிசிர மலையில்‌ ஸரம முனி பயிராக்கின சிவந்திப்பூவை அபஹரித்த தோட்டக்‌.காரனை மன்னித்ததால்‌
சிவன்‌ கோபித்துக் கொண்டு உறையூரை மண்‌ மாரியால்‌ அழித்தார்‌.கெஜடீர்‌ 337-ம்‌ பக்கத்தில்‌ காண்க. கலி யுகத்திலே_ பகுகாலம்‌ சென்ற அனத்தரம்‌,. ஒரு கால விசேஷத்திலே ஒரு சோழனுடைய பாப விசேஷத்தினாலே மண் மாரி பெய்து பட்டணம்‌ முழுகிப் போயிற்று,
அநந்தரம் , ௮து முதலாக சோள தேசாதி பதிகள்‌ கங்கை கொண்டானிலே வாஸம்‌ பண்ணுகையில்‌,
கால விசேஷச்திலே உறையூரிலே கொஞ்சமாகக்‌ கோயில்‌ கட்டி பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ ஒரு சோழன்‌ பிரதிஷ்டிப்பித்‌தான்‌, என்று கோயிலொழுகு 5-ம்‌ பக்கத்தில்‌ இருக்‌கிறது
இது எந்த சோழனுடைய என்ன பாபத்‌தினாலே : மண் மாரி பெய்தது என்றும்‌, எந்தச் சோழன்‌ ஊரைப்‌ புனருத்‌தாரணம்‌ பண்ணினான்‌ என்றும்‌ தெரியவில்லை .
ஸுந்தர பாண்டியன்‌ சோழ ராஜாக்களை ஐயித்‌து அவர்‌களுடைய பட்டணங்களான தஞ்சாவூர்‌ உறையூர்‌ இரண்‌டையும்‌ எரித்த பிறகு
அவர்களுக்கே கொடுத்து விட்டதாக தன்னுடைய ஸ்ரீரங்கம்‌ சாஸனத்தில்‌ சொல்லும்‌ விவரம்‌ கெஜடீர்‌ 45 ஆம் பக்கத்திலிருக்கிறது .
உறையூர்‌ 1820ம்‌ வருஷத்துக்கு முன்பு துருப்புக்கள் தங்குமிடமாயிருந்தது ..–கெஜடீர்‌ 336 ம்‌ பக்கம்‌,

இப்படிப்‌ பல தடவை உறையூருக்கு ஆபத்து வந்த காலத்தில்‌ கோயிலை ரக்ஷிக்க முடியாமல்‌
நாச்சியாரை மட்டும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினதாகச்‌ சொல்லப்படுகிறது .
உறையூர்‌ கமல வல்லித்‌ தாயாரை ஸ்ரீரங்கத்திலேயே கூர நாராயண ஜீயர்‌ பிரதிஷ்டிப்பித்த விவரம்‌ கோயிலொழுகு 112ம்‌ பக்கம்‌,
உறையூர்க் கோயிலைச்‌ சேர்ந்த இடங்கள்‌ இப்பொழுது குடிகளாலும்‌ அன்ய மதத்தினராலும்‌ ஆக்‌ரமிக்கப்பட்டு விட்டன.
கோயிலுக்‌ கெதிரிலிருந்த தெப்பக் குளம்‌ இப்‌பொழுது அன்னியர்களால்‌ ஆக்ரமிக்கப்பட்டதாய்த்‌ தெரிகிறது இப்படி ஸ்தலங்கள்‌ “பறி கொடுக்கப் பட்டதால்‌
நாச்சியாருக்குத் தெப்பம்‌ நடத்த இடமில்லாமல்‌ கோயிலுக்‌குள்ளே யிருக்கும்‌ சிறு புஷ்கரிணிக்குள்ளேயே தெப்பம்‌ நடந்து கொண்டிருக்கிறது
நம்முடையதை அன்யர்களுக்கு அபஹரித்துக்‌ கொடுக்கும்‌ விஷயத்‌தில்‌ சட்டமும்‌ அதிகாரமும்‌ செல்லுன்றனவே யன்றி
அன்யர்களால்‌ ஆக்ரமிக்கப்‌பட்ட நம்முடைய ஸ்தலத்தை நமக்கு மீட்டுக் கொடுக்க எதுவும் பயன்படுகிறது இல்லை.
அன்யர்களுக்குள்‌ மதாபிமானமும்‌ நமக்குள்‌ ௮து இல்லாததுமே இம்மாதிரி துர்கதிக்குக் காரணம்‌.
தெப்பத்தன்று கோயில்‌ கிணற்றில்‌ தெப்பம்‌ சுற்றின பிறகு மற்றை நாளில்‌ வெளி வராத நாச்சியார்‌
அன்றும் அடுத்த நாள்‌ பந்தக் காட்சி யன்றும்‌ வீதி வருவதைக்‌ கொண்டே ஆதியில்‌ தெப்பக்குளம்‌ வெளியே இருந்ததாகத்‌ தீர்மானிக்கலாம்‌.
உறையூர்க் கோயிலில்‌ மணவாளப்‌ பிள்ளை யாக நின்ற திருக் கோலமாய்‌ ரங்க நாதனும்‌ அவருக்கு அருகில்
உறையூர்‌ நாச்சி யாரும்‌ த்ருவ பேரங்களாக எழுந்தருளி ‘ யிருக்கிறார்கள்‌.
நாச்சியாரின்‌ உத்ஸவ மூர்த்தி முன்னால்‌ பெருமாளுடைய திருவடி. நிலைகளுக்குக் கீழ்‌ பிரதிஷ்டிக்கப்‌ பட்டிருக்கிறது ஸ்ரீரங்கத்‌துக்கு அபி முகமாயிருக்க வேண்‌டியதால்‌ இந்த ஸன்னிதி வடக்குப்‌ பார்த்திருக்கிறது
எதிரில்‌ குளமும்‌ அப்பால்‌ காவேரியுமாய்‌ வெகு அழகாயுள்ள ஸன்னிவேசத்தை எதிரில் வீடுகள்‌ சூழ்ந்து விகாரப்படுத்தி விட்டன

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திருக்குறுங்குடி. அழகிய நம்பியுலா

October 23, 2023

காப்பு
பூமாலை சேர் குறுங்கைப்‌ பொன்மேனி நம்பியெங்கள்‌
மாமால்‌ பவனியுலா மாலைக்கு–நாமேவு
பூவற்‌ கருடனே பொன்னுலகத்‌ தார்பரவுங்‌
காவற்‌ கருடனே காப்பு.

நூல்‌
கார்கொண்ட மேனியான்‌ கைகொண்ட நேமியான்‌
பார்கொண்ட பாதப்‌ பரந்தாமன்‌ சீர்கொண்ட
பூமகளும்‌ பார்மகளும்‌ போற்றியிரு பாலிருப்ப
மாமலரோன்‌ கைகுவித்து வந்திப்ப நேமியுடன்‌
சங்கமுத லைம்படையுந்‌ தானிலங்கப்‌ புள்ளரசு
புங்கவனாஞ்‌ சேனையர்கோள்‌ போற்றிசைப்ப—எல்குங் நிறை
தேவர்‌ குழாம்நெருங்கிச்‌ சேவிப்பச்‌ செங்கமலப்‌
பூவலரும்‌ நிலவரை போலவே–யாவருக்கு ––5-

மிஞ்சிய வைகுண்ட வீட்டிருக்கும்‌(வீட்டிருக்க ) நாளவுணன்‌
நெஞ்சிற்‌ கெறுவம்‌ நிறுத்த வெண்ணிக்‌–கொஞ்சவுரு
வாமனமாய்‌ வேள்விபுரி மண்டபத்திற்‌ சென்றிரந்து
தாமன தால்‌ மூவடிமண்‌ தாவென்ன—ஒமெனவே
வெள்ளி தடுப்ப விழியொன்று போக்கிமுன்னே
யள்ளியநீர்‌ கையேற்ற வந் நாளில்‌–உள்ளமகிழ்ந்
தோரடியிற்‌ கீழே ழுலகளந்து(யுலகளந்து ) மேல்நின்ற
வோரடியில்‌’ மேலே ழுலகளந்தும்‌(யுலகளந்தும் )–ஓரடிக்கும்‌
எங்கே யிடமென்‌ றெதிர்மா வலிசிரசிற்‌
பங்கே ருகப்பொற்‌ பதம்வைத்தே— துங்கத்‌–10-

திரிவிக்‌ கிரமத்‌ திருவவதா ரஞ்செய்‌
தருள் முக் கியதலமென்‌றாகும்‌–ப.ரவரிய
வாமனச்‌ சேத்ரமென வாழுங்‌ குறுங்குடியான்‌
தேமருவு சித்தாச்‌ சிரமத்தான்‌–மாமறையோன்‌
கோர முகத்திற்‌ குறுங்கண் பிறந்திந்தத்
தாரணியிற்‌ றீதிழைக்கக்‌ தான்கண்டே—நேரெதிர்ந்து
( வென்றி தரு )வென்று திரு வைகுண்டம்‌ விற்றிருந்த கோலமும் பொற்
குன்று தனில்நின்‌ற கோலமும்பால்‌–துன்று கடற்‌
பள்ளி கொண்ட கோலமும்பண்‌ பாய்ச் சேவை சாதித்து
விள்ளுமவ னாமம்‌ விளங்குமூர்‌–உள்ள மகிழ்‌–15

கோடி மகர தீர்ததங்‌ குலவு, தல மென்‌ றுவிண்ணோர்‌
நாடியிறைஞ்‌ சுங்குறுங்கை நன்னகரான்‌– வீடு பெற.
நேசித் தலர் சொரிந்து நின்றெழுபத்‌ தெண் பிரமர்‌
பூசித்‌ தினிதேத்தும்‌ பொற் பதத்‌தான்‌ -தேசிகமாஞ்‌
செக்கச்‌ சிவந்த செழுஞ்சுடரைப்‌ பேத மறப்
பக்கத்தில்‌ வைத்த பரிவினான்‌—மிக்க தமிழ்ச்‌
சீரன்‌ புறவே தெரிந்து பா டும்பறைச்சிக்‌
காரங் கொடுத்தருளு மன்பினான்‌—நாரதனார்
நன்றுதரு மெஞ்ஞான்றும்‌ ஞானம்‌ “விளங்குமென
நின்று தவம்புரிய நேசித்தோன்‌– வென்‌ றிதரு–20-

மாக்களிற்று வேக்தன்‌ மனப்பூ ரணமாக :
நாக்கறுக்க வுண்மையாய்‌ நாக்களித்தோன்‌–ஆக்கமது
மிச்ச நமக்குக்கீழ்‌ வீட்டுவர மங்கையெனப்‌ ்‌
பிச்சனுக்குப்‌ பேறுதவும்‌ பெற்றியான்‌–இச்செகத்தில்‌
வந்தித்த காரி மதலை யெனப்புளிக் கீழ்ச்
சந்தத்து (சந்தித்து ) வேதந் தமிழ்செய்தோன்‌–சிந்‌திக்குந்‌
தெற்குவீ டென்று திருமங்கை மன்னன் வர
நற்கதியன்‌ றீந்தருளும்‌ நம்பெருமாள்‌ சொற்கிசைந்த
பாடற்‌ குருகிப்‌ பரவு மரையர் துழாய
மாடத்திற்‌ போயிருந்த வாரத்தான்‌–நாடிக்‌–25–

குழனார்‌ கழனிக்‌ குளத்திற்‌(குழத்திற் ) றிருவாய்‌
மொழியா லடகுகொய்த மூர்த்தி–வழுவால்‌
வருராக்‌ கதனும்‌ மதங்கனும்வீ டெய்தக்‌
கருணா கடாட்சமருள்‌ கண்ணன்‌—அருள் கூரும்‌
எம்பெருமா னார்சீட னென்னச்சோ மன்றுவைத்த (மன்றோய்த்த )
நம்பெருமா னாயிர நாமத்தான்‌–தம்பமினி. ‘
யாரெனக்கு நானுன்‌ னடைக்கலமென்‌ றேயிறைஞ்சுஞ்‌
சேரனுக்குப்‌ பிள்ளையாய்ச்‌ சென்மித்தோன்‌–வார்புனலிற்‌
காரண்ட மூழ்கிக்‌ கரும்பனையைச்‌ சுற்றி வரப்‌
பேரண்ட வீடளித்த பெற்‌றியான்‌—சீர்தங்கு–30-

பிள்ளைதர வேணுமென்றே (வேணுமென்று )பேராசை யாற்றவஞ்செய்‌
வள்ள முலைப்‌ பாடக வல்லிபால்‌–உள்ளறிவாய்ச்‌
சென்மித்துத்‌ திக்களைத்துஞ்‌ சென்றுரா மேசுரத்திற்
றன்மத்தால்‌ செப்பேடு தான்கண்டே–நன்மைபெறுஞ்‌
சீவல மாறனுக்குச்‌ சித்த மகிழ்ந் தேயருள்செய்‌
காவலவன்‌ செங்கமலக்‌ கண்ணினான்‌–மேவு
முறைகேத்‌ திரபால மூர்த்தி வட கீழ்‌
புறமேவ வன்பு (புற மேவி யன்பு )புரிந்தோன்‌–நிறமான
பச்சைப்‌ பரியேறிப்‌ பாரறியச்‌ சேரனுக்காய்‌
(மெச்சு )மெய்ச்சப்‌ படைவெட்டும்‌ வீர த்தான்‌—உச்சி தமாம்‌ –35–

நீல வரையருவி நேராகச்‌ செவ்வந்தி
மாலை புனையு மணிப்புயத்‌தான்‌–சால
மழைதடுத்து முன்னாள்‌ வசந்தன்கொண்‌ டாடுங்‌
‘குழகனம்பி ராயனெங்கள்‌ கோமான்‌–விழைவாகத்‌
தேசிக விலாசச்‌ சிகரந் தெரிசித்த
கோசிகனுக் கன்பு கொடுத்த பிரான்‌–விசலைசூழ்‌
பாருண்‌ டுமிழ்ந் தளந்து(தமர்ந்து ) பன்‌.றியாய்க்‌ கீண்டெடுத்த
நீருண்ட மேக நிஐத்தினான்‌–பேரண்ட
௮ண்டமு மண்டத்‌ தலகிலுயி ரும்படைக்கப்‌
பண்டயனை யீன்ற பரந் தாமன்‌ விண்ட –40–

முதலை நிருதன்‌(கிருதன் ) முனியை யடர்ந்து
மதலை மதலையாய்‌ வந்தோன்‌–இதமுடனே
அன்றெதிர்ந்த தாடகையை யாதி யிராவணனை
வென்று செயங்கொண்ட வீரத்‌தான்‌–துன்று
மருது ௪கடு வளர்தொட்டிற்‌ பேய்ச்சி
யெருது குதிரை யிளங்கன்‌–றுருகியபுள்‌
ளானை முதல்மல்ல ராவியுண்டு கஞ்சனையும்‌
வானி லனுப்பு மருகனார் –ஆனிரைக்காய்க்‌
குன்றெடுத்து மாய்ச்சியர்கள்‌ கூறையெடுத்‌ தும்மனைக்‌குள்‌
சென்றெடுத்து வெண்ணெய்‌ திருடியும்‌–அன்றெடுத்த–45–

தாம்போ டசோதைமுன்னே தாழ்ந்து நின்றோன்‌ தாமரைத்தாள்‌
பாம்போடுமாடும்பர தத்தான்‌–மேம்பாடி த்‌
தென்றுபதி னாறா யிரங்கோ பியர் மகழ
மன்‌ றல்‌ புரிந்தருளு மாயத்தான்‌—வென்‌ றிபுனை
ஐவருக்குத் தூதுரைத்தும்‌ அர்ச்சுன ற்குத்‌ தேரூர்ந்தும்‌
தையலுக்குத்‌ தானை தனைக்காத்தும்‌- செய்ய ்‌
பகலில்‌ இரவழைத்தும்‌ பாரதப்போர்‌ மூட்டிச்‌
செக மகிழப்‌ பூபாரந்‌ தீர்த்தோன்‌-.-இகழ்வான
வாணன்‌ கரமறுத்தோன்‌ வானோர்‌ பணிந் (பரிந்)தேத்தும்‌
சேணிந் திரற்கிளைய செங்கண்மால்‌–காணும்‌–50-

மதுகை டபர்ச்செற்றோன்‌ மாமதவா னைக்காய்‌
முதலை தனையடர்ந்த மூர்த்தி–முதியதிரைப்‌
பாலுததி யிற்பகுவாய்ப்‌ பாம்பிற்‌ பசுத்துரத்துங்
கோலிலா லிற்றுயிலுங் கோவிந்தன்‌–மேலடியார்‌
தன்னெஞ்சும்‌ வைகுந்தத்‌ தானமுந் தாழ்ந் திறைஞ்சும்‌
என்னெஞ்சும்‌ நீங்கா தினி திருந்தோன்‌–முன்னமொரு:
மாவானை முன்னு மதுரத்‌ தமிழ்பாடு
நாவாணன்‌ பின்னும்‌ நடந்த பிரான்‌–தேவான
ஈசனார்‌ பக்கத்தும்‌ ஏத்துமறை யுச்சியினும்‌
நேசமா யெப்போதும்‌ நின்றமால்‌–காசினியாந்–55-

தான மடிதீண்டத்‌ தாரகைக்கு மேலான
வானமுடி தீண்ட வளர்ந்‌த பிரான்‌. ஆன தவம்‌
நம்புருஷ நாராயணப்பேரே ரிச்சிறப்புந்
தும்பிநின்‌ றுலாவிய பூஞ்‌ சோலையும்‌–பைம்புனல்சேர்‌
காலடியி லாற்றின்‌ (லிரற்றினக் )கவர்த்தலையிற்‌ பொன்விளையச்‌
சாலி விளையு்‌ந் தடம்பணையும்‌–மேலான
சித்திர கோபு ரமுஞ்‌ சேர்ந்ததென்னஞ்‌ சோலைகளும்‌
வர்த்‌தனையாந் தென் குறுங்கை மாநகரான்‌–இத்தரையில்
முத்தொழிற்கு மூவுருவாய்‌ மூல நடு வீறாகி
வித்தகஞ்செய்‌ பேரின்ப வீட்டினான்‌– ௮த்திபடி (அத்தியடி )–60-

மீனாமை பன்றி யரி மிக்க குறள் பரசுக்
கோன்வார்‌ சிலைராமன்‌ கூன்கலப்பை— தானே
விசயபெல்‌ ராமன்‌ விளங்கு கிட்ண மாவாந்‌
தெசவவதா ரம்புரியுந் தேவன்‌—உசி தமறைக்‌
காரணத்தா னார்க்குமடங் காரணத்தா னேந்தி யகை
வாரணத்தான்‌ காத தருள்கை வாரணத்தான்‌.. கார் வரை போல்
ஆகத்தான்‌ பூமகள்சே ராகத்தா னன்றெடுத்த
நாகத்தான்‌ பள்ளிகொண்ட காகத்தான்‌–கோகனக
வுந்தியா னீள்‌ சகட வுந்தியான்‌ கன்றெறிந்த
வந்தியான்‌ தாரணிசெவ்‌ வந்தியான்‌–சிந்தியார்‌–65-

உண்ணத்தான்‌ பார்முழுது முண்ண த்தான்‌ நீண்டகடல்‌
வண்ண த்தான்‌ வாமகர வண்ணத்‌ தான்‌–எண்ணுமன்‌பால்
வாரத் தான்‌ முன்பாரா வாரத்‌ தான்‌ அஞ்சவெய்த
தீரத்தான்‌ சிந்துநதி தீரத்தான்‌.-பாரிரந்த
வாமத்தான்‌ சங்கரன்சேர்‌ வாமத் தான்‌ ஆயிரமா
நாமத்தான்‌ கஸ்த்தூரி நாமத்தான்‌–கோமளப்பால்‌
வேலையான்‌ முத்தொழில்செய்‌ வேலையா னெல் லழைத்‌த(வளைத்த )
மாலையான்‌ பூந் துளப மாலையான்‌–ஞாலத்‌
திடர்செய்‌ கனகன் எதிர வவன் தன்
குடாலங்க லாயணிந்த கொண்டல்‌… கடல்சார்‌ (கடல் அரசர் )–70-

அலகில்‌ தரணி யடியி லடைய (லடையு )
மலரு மிருதாள்‌ மலரான்‌. -குலவுநெறி
நின்று முனிவர்‌ நெருங்‌கித்‌ தவம்புரியு
மன்றல்‌ மயேந்திர மால்வரையும்‌– நன்று தருஞ்‌,
சிந்து நதியுந் திருப்பாற்‌ கடல்வளமும்‌
நந்து தவழ்‌ வைகுந்த நன்னாடும்‌—முந்துங்
குறுங்கா புரியுங் குலவுபுது வாச
மருங்கா துளப மலரும்‌–நெருங்கும்‌
கருட துவசமும் கைமதங்கள்‌ சிந்த
மருடருநாற்‌ கோட்டுமத மாவும்‌— தரணியிலே.–75-

வென்றி தருங்கவன மேவு துரகதமும்‌.
மன்‌ றலொலி மாறா மணி முரசுந்‌-.. துன்‌று
மருவு தசாங்கமென வாழ்வோன்‌ சிறந்த
உருவு தசாங்க முடையோன்‌–அருமறைதேர்‌
அயயன்‌ குழகன்‌ அழகிய நம்பியலர்‌
கொய்யுந் துளபக்‌ குறுங்குடிமால்‌–பையா
டராவணை வாசன்‌ அறிவி லரிய
பிரான் எனை யாளும்‌ பெருமாள்‌–விராவுமலை
நம்பிதிருப்‌ பாற் கடலில்‌ நம்பிபள்ளி கொண்டருளும்‌
நம்பி யிருந்த நம்பி நானிலத்தில்‌–உம்பர்தொழ–80-

நின்ற கரு மேகம்போல்‌ நீண்டபொன்‌ மேனிநம்பி
வென்றிபுனை நாத வினேதநம்பி-என்றும்‌
தரணிபுக ழாபற்‌ சகாய நம்பி செம்பொன்‌
மருவிய செங்கனி வாய்‌ நம்பி-.- கருணை
பரவுதய மார்த்தாண்டப்‌ பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்‌–தருபீடத்‌
துற்பனமாய்ப்‌ பூமகளும்‌ ஓங்கு (ஒங்க )நிலமகளும்‌
விற்பனமாய்‌ நீங்காத மேன்மையான்‌– அற்புதமாம்‌
நங்கையெனையாளும்‌ நம்பிக்கு நாச்சியார்‌
மங்கை குறுங்குடி வல்லியார் பங்கிலே-85-

சீராக வீற்றிருக்கச்‌ சித்த மகிழ்ந்து திரு
வாரா தனங் கொண் டருளுநாள்‌–பாரோர்‌
பரவு திருப்பங் குனித்‌திருவி ழாவிற்‌
கருட துவசமேற்‌ கட்டிச்‌ -சுருதி முறை
கேட்டு முதற்.றிருநாள்‌ (கேடகத்து மிரண்டா நாள் )கேடகத்தி ரண்டாம்நாள்‌
தீட்டு திறல்விசைய சிங்கத்‌துஞ்‌—சூட்டுநாள்‌
மூன்றி லனுமார்‌ முதபுயத்தும்‌ நாலாம்நாள்‌
நான்‌ றமுடி யைந்தலை நாகத்துந்‌- தோன்‌ றிவரும்‌
அஞ்சாம்நா ளிற்கருட னம்புயத்தும்‌ ஆறாம்நாள்‌
எஞ்சாத வானையினும்‌ ஏழாம்நாள்‌—மிஞ்சவே-90-

வேண்டியபள்‌ ளிச்சிவியார்‌ மேவு சிவிசையினுங்‌
கூண்டவெட்டாம்‌ நாளிற் குதிரையினும்‌–பூண்டுங்‌
குலவொன்ப தாம்நாள்‌ குருந்தேறி வீதி
வலம்வந்து பத்தாம்நாள்‌ வானில்‌–௮லருதைய
காலத்தில்‌ நித்யல்படிக்‌ கட்டளையாந் தாரையுட்ணஞ்‌(தாரையுட்டிணஞ்‌)
சீலத்‌ துடனமுது செய்தபின்பு–பாலாழிச்‌
சீரார்‌ திருமஞ்‌ சனஞ்செய்‌து வாய்த்ததிரு
வாரா தனங்கொண்‌ டருளியே- நேராய்
இசைந்தமணி ரத்னாபி ஷேகத்துக்‌ கேற்க
அசைந்த குழைக்கா தழகும்‌–பசுந் துளபத்‌-95-

தாரும்‌ கவுஸ்த்‌ துவமுஞ்‌ சங்குசக்‌ரக்‌ கையுமியல்‌(கையுமேல்)
தேருங்கஸ்த்‌ தூரித்‌ திரு நுதலும்‌–காரில்மின்போற்‌
பிதாம்‌ பரமும்‌ பிறவிப்‌ பிணியறுக்கும்‌
பாதாம்‌ புயமும்‌ பலபணியுஞ்‌–சோதிதரு
மாணிக்க மாலை வயிரவொளி யுஞ்சூழ்ந்த
காணிற்பொன்‌ (கானிற்பொன்‌)பூத்ததொரு கார்வரைபோல்‌—பூணிலகப்
பூவுலகும்‌ பாதலமும்‌ பொன்னகரத்‌ திந்‌ த்ரன்முதல்‌
தேவர்‌ முனிவர்‌ செயசெயென–மேவரிய
காளமுதற்‌ பல்லியமுங் கார்முழக்க மென்னவண்ட
கோளமட்டும்‌ நின்று குமிறவே–ஆழ்வார்கள்‌--100-

பன்னிருவ ரோதியப்ர பந்தமும்‌ நான்மறையும்‌
முன்னம்‌ மறையோர்‌ மொழிந்து செல்ல–உன்னரிய
பேரருளா ளச்சீயர்‌ பேராம்‌ வயிணவர்கள்‌
சார்வுறுதா னத்தார்‌ தலத்தார்கள்‌–வாரமுறுங்
கோயில்‌ வள ரனைத்துக்‌ கொத்தும்‌ புடைசூழ
ஏய திருத்‌ தேரி லெழுந்தருளி–நாயகனார்‌
சீலப்‌ பவனி வரச்‌ சேனையர்கோ னின்றுதிரு
வோலக்கஞ்‌ சேவித்‌ துடன்போத– மேலான

குழாங்கள்‌

காத லரம்பையருங்‌ காகோ தரநாட்டு
மாதரும்பர்‌ மங்கையரும்‌ வந்தீண்டிச்‌–சிதக்‌–105-

களமுங்க கவானுங் கன தனமேற்‌று ஓய்யில்‌
வளமும்‌ விழியும்‌ வதனத் .-தழகும்‌
கமுகு கதலி கரும்பிளநீர்‌ வாசங்‌
குமுகுமெனுங்‌ காவிகஞ்சங்‌ கொண்டே–சமுகமாய்‌
வீதி வளமைசெய்யு மேன்மைபோலே நெருங்கி
நீதி. யிருமருங்கும்‌ நின்றேற்றி-(நின்றேத்தி )-மாதரீர்‌
வாரிர்‌ பவனிதொழ வாரீ ரிவ.ரழகைப்‌
பாரீர்‌ எனவே பகருவார்‌ தார்குழலீர்‌(கார் குழலீர் )
முன்னானை காத்தார்‌ முலையானைக்‌ சன்புசெய்யார்‌
என்னா மிவர் நீதி யென்றுசொல்வார்‌…..நன்னுதலீர்‌–110-

நாடறிய வேழுன்‌ நர சிங்க மாயானைக்‌
கோடுபிளந் தாரென்.று கூறுவார்‌. ஆடை தனை
அன்றொருத்திக்‌ கீந்த தவராகி மாதர்கலை
இன்றுகொள்வ தேதென்‌றி யம்புவார்‌–நன்றுநன்று
கூடுகின்‌ற கோபியர்‌ தங் கூறைகவர்ந் தேதுளபஞ்‌
சூடுகின்றார்க் குள்ள தொழிலி தென்பார்‌ ஆடல்மதன்‌.
வாதை பொறாமல் வளை சோர்வார் வார் சோர்வார்
கோதைமலர்‌ சோர்வார்‌ குழாத் தொருத்‌தி பேதையடர்

பேதை

காலம்வரு மட்டும்‌ கரை கடவா வேலைபோல்‌
வேலைவிடம்‌ போலும்‌ விழியினாள்‌–மாலை–115–

வனைகுழலார்‌ தமமுடனே வண்டலயர்‌ போதில்‌
எனையடிமை கொண்டநம்பி ராயர்‌-புனைதேர்ப்‌
பவனி தொழுந் தாயரைப்பின்‌ பற்றி நடந் தோடி. ‘யவர்கள்சொன்ன வண்ணமுரைத்‌ தன்னே–இவர்மெய்‌யில்‌
மாலை தனைவாங்கும்‌ வண்டல் மக வுக்கெனவே
சேவைநிகர்‌ கட்கடைநீர்‌ சிந்‌தினாள்‌-..-ஆலை
மதன் பைங் கழைகுழையான்‌ வார்கணையும்‌ பூட்டான்‌
விதஞ்செய்மறு வீதி போம்‌ வேளை- பெதும்பை ரத்ன

பெதும்பை

வார்புனைய முத்து வடம்புனையச்‌ சிந்தையருள்‌
கூரவடிக்‌ (கூர்வடிக் )கொண்டரும்புங் கொங்கையாள்‌–.ஆர்வமுடன்‌-120-

வெற்றிசெய்யுங்‌ காமா (காம)விகாரங்‌ கொழுந்து விட்டுப்‌
பற்றிப்‌ படரும்‌ பருவத்தாள்‌–பொற்று ஒடியார்‌
கூடுங்‌ கலவி குறித்தெழுதுஞ்‌ சித்திரத்தை
மேடையிற்போய்ப்‌ பார்த்‌து நிற்கும்‌ வேளை தனில்‌ சூடும்‌
மருத்தேர்‌ குழற்பாங்கி வந்து நம்பி ராயன்‌
திருத்தேர்ப்‌ பவனியென்று செப்பக்‌–கருத்துருகி
மாதருடன்‌ வந்து வணங்கி நம்பி ராயன்மேல்‌
காத லரும்பவிழும் காட்சிபோல்‌-.ஓதீர்(ஆதீர்)
மருக்குலவு மார்பிலொரு மாதல்லால்‌ தோள்மேல்‌
இருக்குமிவள் ஒருத்தி யென்றாள்‌–விரைக்குழலார்‌–125-

பூவில்வளர்‌ மாது புவிமா திருவரிவற்‌
காவசிய மென்ப தறியாயோ(தறியாயே )–பாவாய்‌
எனவுரைத்த போதில்‌ இணைவிழியால்‌ நோக்கி
மனமுருகி னாள் பின்‌ மறந்தாள்‌–பனிமதியைக்‌
காண விளகுசந்த்ர காந்தமொத்தாள்‌ மாரன்வர்மம்‌
பூணவயல்‌ வீதிப்‌ புறம்போந்தாள்‌–வாணுதலாள்‌

மங்கை

மங்கை யொருத்தி மதனாபி ஷேகமிரு
கொங்கைமயில்‌ காமக்‌ குலதெய்வம்‌—இங்கி தமாஞ்‌
சீரார் துணைவி நம்பி தேர்ப்பவனி பார்க்கமின்னே
வாரா யெனவே மகிழ்ந்துபோய்‌–நேராய்ப்‌–130-

பணிந்தே மயலாய்ப்‌ பரிபவங்க ளெல்லாந்
துணிந்தே யெதிராடிச்‌ சொன்னாள்‌–மணந்தருளிச்‌
செய்யவிருந்‌ தாவனத்திற்‌ சென்றொருத்திக் காக் நீர்
மையல்கொண்ட செய்தி மறந்தீரோ –பொய்யலவே
மோகம்‌ பொறாமலொரு மொய்குழலுக்‌ கும்மைப்போல்‌
ஆகங்‌ கொடுத்தார்கள்‌ ஆர்சொல்வீர்‌–சோகமாய்ப்‌
பேராசை யானானும்‌ (யாய் நானும்)பெண்ணென்றோ பூந் துளபத்
தாராசை தீரவே தாருமென்று–தேரிற்
தொடர்ந்தாள்வே ளம்பு சொரியவயல்‌ வீதி
நடந்தார்பொற் றேருடனே நம்பி–மடந்தை--135-

மடந்தை

வடுவும்‌ பிணையும்‌ வளர்சேலும்‌ வேலும்‌
கடுவுமமு துங்கலக்த கண்ணாள்‌–நடுவாம்‌
எழுபருவத்‌ துள்ளு மிவள் பருவ மென்று
தொழுது மதன்‌ போற்றுந் துரைப்பெண்‌– அழகான
பொன்னூச லாடும்‌ பொழுது குழை யிரண்டும்‌
மின்னூச லாட விறலிபோய்‌—உ ன்னழகு
நன்றென்று கொண்டாடி. நம்பிதிருத்‌ தேர்ப்பவனி
யின்றென்றாள்‌ சென்றாள் இறைஞ்சினாள் –நின்று உருகிச்
செங்கனகத்‌ தேர்விருப்பஞ்‌ செய்‌தீர்‌ மயலான
வெங்களல்குற்‌ றேருமுமக்‌ கேலாதோ-.-பைங்கமலக்--140-

கைச்சங்கங்‌ கொண்டீர்‌ கருத்தில்‌ விரும்புமெங்‌கள்‌
மெய்ச்சங்கம்‌ நிர்விரும்ப வேண்டாவோ–நச்சரவம்‌
ஏறுபுள்ளோ டின்புற்‌ றிருந்ததுபோ லெங்கள்மேற்‌
சீறுமதி நட்பாச்சோ தீண்‌ டாதோ—கூறீர்‌
எனாமுன்மத னெய்தான்‌ இருகாலி லிட்டாள்‌(விட்டான் )
மனாவையல்கு லேந்தினாள்‌ வாரைத் –தனமேற்
கரிய குழல்மறைப்பக்‌ காதல்கொண்டாள்‌ மற்றோர்‌
தெருவில்‌ மதனொடுதேர்‌ செல்ல—அரிவை

அரிவை

இலவுகுமிழ்‌ முல்லை யிதழ்க்குவளை வள்ளை
மலருமொரு தாமரையில்‌ வாய்ப்பக் –கலவியிலே–145-

மேனகையுங்‌ கொல்லிமலை மேனகைசெய்‌ தாளும்வெடகத்‌
தானகைசெய்‌ காமசுர தானியாம்‌-(தனியாம்‌)-மானனையாள்‌
பாங்கினாற்‌ செம்பொற்‌ படாமும்‌ வனைகோலும்‌(பரமும் வளை கோலும் )
வாங்கினாள்‌ நம்பி வடிவெழுத–ஓங்குபொற்றேர்‌
மன்னும்‌ குறுங்‌கை நம்பி வந்தார் வந்தாரென்று [த்தி
சின்னத் தொனிகேட்பச்‌ சென்‌ நிறைஞ்சி-முன்னொரு
மெய்க் கரும்பி னாசையால்‌ (கரும்பு மாசையால் )வில்லொடித்தீர்‌ போர் மாரன்‌
கைக்கரும்பை வில்லைசெய்யக்‌ காணேனான்‌–மைக்கடலின் ‘
வீறடைத்து மேவுமணை மீது சென்‌றீர்‌ என்னிருகண்‌
ணாறடைத்து மேவு மணை காணீர்‌–மாறுபடும்‌–150

புள்வாய்‌ கிழித்தநீர்‌ பூங்குபிலோ டன்‌றிலெனும்‌
புள்வாய்‌ கிழிக்கவின்‌று போகாதோ–உள்ளம்‌
பரிபவமென்‌ றாள்கடைக்கண்‌ பாலித்து மற்றோர்‌
தெருவில்‌ மதனொடுதேர்‌ செல்ல த்‌–தெரிவை

தெரிவை

நிலவுமுடித்‌ தோன்முடிக்க நீறுபட்ட காமன்‌
இலகுமுயிர்‌ பெற்றுலக மெங்குஞ்‌–சிலையேந்திச்‌
சென்றுபோர்‌ வென்று செயஸ்தம்பம்‌ நாட்டியே
நின்றநாள்‌ தேடுகின்ற நிட்சேபந் –துன்‌று மலர்‌
வாவிப்‌ புனலாடி மாதருடன்‌ தேர்ப்பவனி
சேவித்தாள்‌ நம்பி திருமுன்போய்‌–மேவீர்‌–155-

வளையாழி கைக்கிருக்க மையலா மெங்கள்‌
வளையாழி கொள்ள வழக்கோ–இளையார்கள்‌
காணவளைத்‌ தாளிவளைக்‌ கைக்கொளவே நல்கீரேல்‌
பூணமலர்த்‌ தாரளித்தாற போதுமே–வாணுதலார்‌
ஆந்தரங்க மாமிருவர்க்‌ காட்சி புய மார்பல்லாற்‌
பூந் துளப மார்க்கும்‌ பொதுவன்றோ–பூந் துளபத்‌
தாரே தரீரேற்‌ (தாரேதீ ரீரேற் )றகுந்தகா தென்பதொன்றும்‌
பாரேன்கை தொட்டும்‌ (தொட்டுப் )பறிப்பேனான்‌–சேருமென்றாள்‌
புன்முறுவல்‌ செய்து நம்பி போனா ரயல் வீதி(போனார் பல வீதி )
மன்மதனும்‌ நின்று வளைக்கின்றான்‌–கன்னற் -160–

றனுவிற்‌ சரந் தொடுத்தான்‌ தையலின்மெய்‌ (தையலும் மெய்)யென்னத்‌
தனுவிற்‌ சரக்கூட (சரக்கூடத்)தானாள்‌–வனிதையப்பாற்‌

பேரிளம்பேண்‌

காரார்‌ கருங்கூந்தற் செங்கனிவாய்‌ வெண்முறுவற்
பேரான சிற்றிடைசேர்‌ பேரிளம்பெண்‌–மாரனுக்கு
வீறு தரு விற்று எழிலு மிக்ககலைக்‌ கியானமுமே
கூறவருந்‌ (கூறு வருந்)தீட்சா குருபீடம்‌–தேறிமறை
தேடுகின்ற நம்பி திருப்பதி நூற்‌ றெட்டிலொன்று
பாடகமென்‌ றேயணியாப்‌ பாதத்தாள்‌–நாடறிய
எல்கள் நம்பிக்‌ கொப்பாக யான்வனையே னென்றிகழ்ந்து
சங்கவளை பூட்டாத்‌ தடக்கையாள்‌–௮ங்கொருத்தி
மா அக்கு மாலானாள்‌ மாத்றவள்பே ரென்றுசொல்லிக்‌–165–

மாலுக்கு மாலானாள்‌ மாத்றவள்பே ரென்றுசொல்லிக்‌
கோலக்‌ திருவணியாக்‌ கூந்தலாள்‌—மேலுலகத்‌
தோரைவென்று தானே உபயசொர்க்க மாய்ச்சினந்து
பாரைவெல்லப்‌ பார்க்கும்‌ பயோதரத்தாள்‌–நேரான
கீதம்வளர்‌ வச்ரச்‌ சிலா தலத்திலே பகவற்‌
கீதை பிர சங்கிக்கக்‌ கேட்டிருக்கும்‌ போது
விரும்பவனி போற்று நம்பி மேவுதிருத்‌ தேரில்‌
வரும்பவனி சேவிக்க வந்தாள் -கரும்புயல்போல்‌
நீண்டபொன்‌ மேனி நம்பி நின்‌ற வடிவழகைக்‌
காண்டலுமே மட்டுமிஞ்சும் காதலாய்‌–வேண்டுகின்‌றாள்–170-

(சாந்தளிவர் மீது )சந்ததமும்‌ நீர்விரும்புஞ்‌ (நீ இருப்பச் )சந்திரபா கைக்குதவும்‌
ஜந்தருவந் தாலு மதுகொள்ளேன்‌–சிக்தா
மணிமகத்வ மார்புமது மார்புக்‌ கணியாய்‌
அணிகவுதக்வ மீதுமில்லை யாசை–பணிவோர்க்குச்‌
சாந்தணியு மார்பிற்‌ சவாது மணம்வீசும்‌
பூந் துளப மாலை தந்தாற்‌ போதுமே–ஈந்தருள்‌ வீர்‌
என்றாள் இது ௪மய மென்று மதன்‌ வில் வளைத்தான்
வென்றாள் .இனியெனவே மெய்‌தளர்ந்தாள்‌–தென்‌றல் வரச்
சாலகங்கள்‌ தாழ்‌ திறந்தார்‌ தாரை யுட்ண சாந்திகள் மென்‌
மேலுமமைத்‌தார் தளிரால்‌ மெத்தையிட்டார்‌–ஆலவட்‌டம் .–175-

வீசினார்‌ மல்லிகைவி தானித்தார்‌ சாந்து பன்னீர்‌
பூசினார்‌ நேர்ந்‌ தாரப்‌ போதொருத்தி–நேசமுள்ள
மூதறிவாம்‌ பாங்கி வந்து மொய்குழலாரை விலக்கிக்‌
காத லொருவர்‌ கருத்த.றியிர்‌–வே.தனையே
செய்‌தீர்‌ இவட்கு இதங்கள்‌ செய்வதுபோலே யிடர்கள்‌
செய்தீர்‌ இனியென்ன செய்குவீர்‌–வெய்துயிர்க்க
வார்த்தபன்னீர்‌ நம்பி மகிழும் திருப்படிக்கத்‌
தீர்த்த நிக ராகுமோ செப்புவீர்‌– போர்த்த
குளிரு முலைமேற்‌ குறுங்கேச ஈம்பி |
துளப நிக ராகுமோ சொல்லீர்‌… .குனிர்மையென்‌தீர்‌-180-

ஏந்து களபநம்பி யிட்டபட்ட வர்த்தனம்போல்‌
போக்தமயல்‌ போக்கவிது புத்தியோ. சாந்தாற்றி
வட்ட விசிறி நம்பி வாழ்கோ புரவாச
லிட்டமுள்ள தென்‌ றலொப்போ வீதெல்லாம்‌–விட்டுவிடுவீர்
என்றுபோய்‌ நம்பிக்‌கு இதமுரைத்து வாங்கி வந்து
மன்‌ றல்மலர்‌ சூட்ட மனமகழ்ந்தாள்‌—நின்‌று கிளி
பேசுகின்ற தென்னவரும்‌ பேதைமுதற்‌ பேரிளம்பெண்‌
ணாசைகொண்டு போற்ற வருள்செய்தே–தேசமகிழ்‌–184

நம்பிகுறுங்‌ காபுரியில்‌ நாத விநோத நம்பி
யும்பர் தொழப்‌ போந்தான்‌ உலா.

ஸ்ரீ அழகிய நம்பி உலா முற்றும்

————-

அனுப பந்தம்

பரவுதய மார்த்தாண்டப்‌ பந்தற்கீ ழுண்மை
வரு. ராம தேவ மக ராசன்‌–தருபீடத்‌–82- என்று

இவ்வுலாவில்‌ வரும்‌ அடிகள்‌ சரித்திரத்‌ தொடர்புடையன.
“உதயமார்த்தாண்டர்‌ என்ற அரசர்‌ தம்பெயராற்‌ சமர்ப்பித்த பந்தலின்‌ கீழாக இராமதேவர்‌ என்ற அரசர்‌
தம்பெயார்ல்‌ அமைத்தளித்த பீடத்திலே’ என்பது பொருள்‌.

கொல்லம்‌ ஆண்டு 630-ல்‌ (கிபி. 1455) எழுதப்பெற்ற தாமிர சாஸன மொன்றிலும்‌ காட்டாற்றுப்‌ போக்கு வைகுண்ட வளநாட்டுத்‌ திருக்குறுங்குடியில்‌
உதய மார்த்‌தாண்டப்‌ பந்தலின்‌ கீழ்ப்‌ புஜபல வீரசெளந்தர ராமவர்மன்‌ பீடத்தில்‌
ஸ்வாமி அழகிய நம்பி எழுந்தருளியிருந்ததாகக்‌ காணப்படுகின்றது.-(Rangacharya’s I. M. P. vol. tii. p. 1472, no. 285).
இங்கே கூறப்பெற்ற உதய மார்த்தாண்டர்‌ சேர – உதய மார்த்தாண்ட வர்மவாக இருத்தல்வேண்டும்‌. ஏனெனின்‌,
இவமே திருநெல்வேலிக்குத் தெற்கிலுள்ள நாட்டுப் பகுதியை வென்றடிப்படுத்து வள்ளியூரிலும்‌,
சேரன்‌ மாதேவியிலும்‌ அடிக்கடி தங்கி வசித்து வந்தார்
இவருக்கு முன்‌ உதயமார்த்தாண்டர்‌’ என்ற பெயருடையராக இருவர்‌ திருவிதாவ்‌ கோட்டுச்‌ சரித்திரத்திற்‌ காணப்படினும்‌,
இவ்விருவருக்கும்‌ திருக் குறுங்குடிப்‌ பிரதேசத்‌திற்கும்‌ யாதோரியைபும்‌ இருந்ததாகத்‌ தெரிய வில்லை.
இவர்‌ தமது 16-வது . ஆண்டில்‌ பட்டத்திற்கு வந்தார்‌; 78-வது
ஆண்டில்‌, கொல்லம்‌ 619-ம்‌ வருடத்‌தில்‌, தேகவியோகமாயினர்‌.
(திரு விதாங்கூர்‌ ஸ்டேட் மானுவல்‌, முதல் வால்யம்‌, பக்‌. 262).
ஆகவே, .கி பி. 15-ம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌ உதயமார்த்தாண்டப்‌ பக்.தல்‌ அமைக்கப்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
அழகிய நம்பி கோயிலிலுள்ள மணியின்‌ மேற்புறத்‌தில்‌,

செயதுங்க நாட்டுச்‌. சிறை வாய் மன்‌னாதித்தன்‌ தென் வஞ்சியான்‌
வியலொன்‌ றகில கலையாளன்‌ கன்னி விசாகம் வந்தோன்‌
நயமொன்று கொல்ல மறுதூற்று நாற்பத்‌து நாலினண்பால்‌
அயனும்‌ பணிய மணியளித்‌ தானம்பிக்‌ கன்புகொண்டே –. என்ற செய்யுள்‌ பொறிக்கப்பட்டுள்ள.து.
இதனால்‌ திருவிதாங்கோட்டு: அரசர்கள்‌ பலர்‌. திருக்குறுங்குடி ஸ்வாமி அழகிய நம்பியின்‌ பக்தர்‌களாய்‌ விளங்கினர்‌ என்பது உணரலாம்‌.

இப் பந்தரின் கீழுள்ள பீடத்தை இயற்றியவர்‌ இன்னாரென அறிந்து கொள்வது எளிதன்று.
ராமவர்மன்‌ என்ற ஓர்‌ அரசர்‌ கொல்‌லம்‌ 646 முதல்‌ 659 வரை அரசு புரிந்தவரெனச்‌ ‘ சிலா ஸாஸன ஆராய்ச்சியாற்‌ புலனாகின்றது.
இவ்வரசர்‌ கொல்லம்‌ 640 – லும்‌, 654-லும்‌ சாஸனங்கள்‌ செய்திருக்கின்றார்‌. இவர்‌ ௮ரசாவதற்கு முன்‌
தமது மூத்த சகோதரர்‌ ஆதித்திய வர்மரின்‌ பிரதி நிதியாகப்‌ பல விடங்களில்‌ ஆட்‌சி புரிந்திருக்கிறார்‌.
இவருக்குச்‌ “செண்பகராமன்‌’ என்ற பட்டப் பெயரும்‌ உளதாகத்‌ தெரிகிறது .
செண்பகராமச்‌ சதுர்‌’வேதி மங்கலம்‌ எனவொன்று திருக்குறுங்குடியில்‌ கொல்லம்‌ 646-ல்‌ இருந்ததென்பதும்‌, செண்பகராம மண்டபம்‌ எனவொன்று திரு
நெல்வேலியில்‌ கொல்லம்‌ 653 ல்‌ இருக்ததென்பதும்‌ சாஸனங்களால்‌ அறியலாவன.

புஜபல வீர செளச்தர ராமவர்மன்‌ என்பதும்‌ இவரது பெயராகவே கருதத்தக்கது .
நூலிற்‌ குறிக்கப் பெற்ற சாஸ னத்திற்‌ காணும்‌ புஜபல வீரசெளச்தர ராமவர்மன்‌ பீடமாக: இருத்‌தல் கூடும்‌. இவ்வூகம்‌ சரியாயின்‌, உத்தேசம்‌ கிபி. 1450-ல்‌ இப்பீடம்‌ அமைக்கப் பெற்றதாகலாம்‌.
ஆனால்‌ நூலில்‌ வந்துள்ள தொடர்‌ இம்‌ முடிபை அத்துணை ஆதரிப்பதாகத்‌ தோன்றவில்லை.
* ராமதேவ மகராசன்‌ ‘ என்றே அது கூறுகின்றது .
கொல்லம்‌ 7608-ல்‌ உதய மார்த்தாண்டப் பந்தரின்‌ கீழ்ப்‌ புஜபல வீர வசந்த வேங்கடதேவ மகா ராஜர்‌ பீடத்தில்‌ ஸ்வாமி அழகிய நம்பி வீற்றிருந்ததாக வேறொரு தாமிர சாஸனம்‌ தெரிவிக்கின்றது. (1. நந. 1. 114. ஐ. 172, 00. 986).
இங்கே குறித்த வேங்கடதேவ மகாராஜர்‌ விஜய நகரத்து அரசர்களுள் ஒருவர்‌.
இவரைப்போன்று, ராமதேவ மகராசனும்‌ விஜய நகரத்து அரசரில்‌ ஒருவராயிருத்தல்‌ மிகப்‌ பொருத்தமானதாகும்‌.
இஃது உண்மையாயின்‌, இவர்‌ மேற்குறித்த வேங்கடதேவ மகாராஜாவின்‌ பின் இ. பி. 619 முதல்‌ 680 வரை அரசு புரிந்த ராமதேவ மகாராஜாவாக இருத்தல் வேண்டும்‌.
சாலிவாகன சகாப்தம்‌ 1551-ல்‌ பொறிக்கப்பட்ட சாஸனமொன்நில்‌ ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வர
ராமதேவ மஹாராயர்‌’ என்று இவர்‌ குறிக்கப்படுகிறார்‌. (5. 1.1. v . no . 291).
எனவே, இப்பீடம் தோன்றியது இவரது காலமாகிய கி பி. 17-வது நூற்றாண்டின்‌ தொடக்கமாதல் வேண்டும்‌.

பீடம்‌ அமைத்ததைச்‌ குறிக்கும் தொடர்‌ அத்‌ திருப் பணி நிகழ்ந்த காலத்தில்‌ இருந்தார் ஒருவரது கூற்றுப் போலத்‌ தோன்றுகிறது.
ஆதலால்‌ இந் நூல்‌ இயற்றப் பெற்ற காலமும்‌ 17-ம்‌ நூற்றாண்டின்‌ முற்‌ பகுதியே யாதல்‌ வேண்டும்‌.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நாராயண புர மங்களா ஸாஸனம்

October 23, 2023

செவ்வடி திருக்காப்பு -கரியான் ஒரு காளையின் திருவடி செய்யாள் இருப்பதால் சேவடி
திரு நாராயண புர மங்களா ஸாஸனம்

புள்ளரையன் கோயில் என்பதும் இத்தையே
திவ்ய ஸூரிகள் -நித்ய ஸூரிகளில் வ்யாவ்ருத்தி

திருப் பொலிந்த சேவடி இங்கு தானே

ஸ்ரீ ரெங்க மங்கள மணி கருணா நிவாஸம் -மூலவர் உத்சவர் இருவருக்கும் ப்ராதான்யம் ஆகவே இரண்டு பத பிரயோகங்கள்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் மூலவருக்கு பிரதான்யம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் -உத்சவருக்கு பிரதான்யம்
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யது சைல தீபம் -இருவருக்கும் ப்ராதான்யம்

தக்ஷிண பத்ரிநாத்
ராமபிரான் ராமானுஜ பிரியன்
வைரமுடி -சேவை=கண்ணை மூடி சமர்ப்பித்து கருடனுக்கே முதல் சேவை இன்றும்

போக மண்டபம் புஷ்ப மண்டபம் தியாக மண்டபம் ஞான மண்டபம்

திருவல்லிக்கேணி அருளிச் செயல் மண்டபம் என்பர்

கல்யாண புஷ்கரணியில் 1237 கருடன் சந்நிதி -திருமண ஏந்தி ஸேவை -எம்பெருமானார் எடுத்த திருமண் -தனமாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அளிக்கிறார்
பஹு தான்ய வருஷம் 1098-எம்பெருமானார் 82 திரு நக்ஷத்ரம் தை சுக்ல பக்ஷம் புனர்வஸு

கிருத யுகத்தில் வேதகிரி -ஸநத்குமாரரால் ஆராதனம்
த்ரேதா யுகத்தில் நாராயண கிரி
த்வாபர யுகத்தில் யாதவகிரி -நம்பி மூத்த பிரான் கிருஷ்ணன் -ஆராதனம்
கலியுகம் -யதிசைலம் -ராமாநுகர்
மாசி கேட்டை -உத்சவம் செல்லப்பிள்ளை இங்கு வந்து ப்ரதிஷ்டை செய்த நாள்
தமர் உகந்த மேனி
பாங்கூர் சத்திரம் -ரெங்கசாமி ரகுநந்தனன் -9620606866

மேல் நாட்டு -ஆராவமுது அனுசந்திக்க நாதமுனிகள் -பிரமாணம் ரக்ஷணம்
ராமானுஜர் ரக்ஷணம் -பிரமாதா ரக்ஷணம்
தத்தாத்ரேயர் -நாராயண கிரி -வேதம் ரக்ஷணம்
கடாரத்தில் பூரித்து வைத்தேன் -இன்றும் கடாரம் சொல்
குப்பாயம் -shirt -ஆண்டாள் பெரியாழ்வார்
உகிரால் கீண்டு சாப்பிடு -நகம் சொல்லாமல்
மரி குட்டிக்கு
பழமை ரக்ஷணம்
ப்ரமேயம் ரக்ஷணம் -அழகிய மணவாளன் -பல வருஷங்கள் இங்கு இருந்து ரக்ஷிக்கப் பட்டார்

திருமேனிக் காவலுக்கு மிதுனமாக எழுந்து அருள எம்பெருமானாரும் சேர்ந்து எழுந்து அருளுவார் இன்றும்

பேசும் எதிராஜர் -உத்சவரே பதில் சொல்லிக் காட்டி அருளினார்
ஏகதா பவதி -நித்ய ஸூரிகள் போல் இவரும் -தமர் உகந்த திருமேனி இங்கு

ஆலிங்கனம் பண்ணிக் கொண்டார் தான் உகந்த -தானான திருமேனியும் இவரே

சரம ஸந்தேஸம் திரு நாராயண புரம்
படித்தவா பாஷ்யம் தத் பிரவசனம்
தத் அசக்தவ் சடாரி போத்த்ரி ஸப்தா ஸ்ரத்தா
திவ்ய தேச  கைங்கர்யம் வா
ப்ரபந்ந த்வயம் அனுசந்தானம்
பரிசார்யா -ஸ்ரீ வைஷ்ணவன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
திருநாராயண புரத்தில் குடில் க்ருத்வா -யதுகிரி தடே நித்ய வாஸம்-ஆறு விஷயங்கள்

————

திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ – 4-1-1-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

உபாயத்வம் அடியிலே தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –
ஏகாதி பத்தியம் பண்ணும் ராஜாக்களே பிச்சை ஆகையால் நிருபாதிக சம்பந்த உக்தன் -நித்ய ஸ்ரீ –திருவடிகளைப் பற்றுங்கோள்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்-மண்டல நாதன் -ஏக அதிபதி -ஓட -நெடுங்காலம் -லோகத்துடன் பொருந்தி
ஆண்டவர் -ராஜ்ய ரஷணம் பண்ணிப் போந்தவர்கள்
ஐஸ்வர்யம் பக்னம் ஆனவாறே -லஜ்ஜித்து-இரவிலே- பிச்சை பெற தேடி
மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் இல்லையே

கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்-கருப்பு நாய் -இருட்டு அறியாமல் காலை வைக்க
கவ்வப்பட்ட கால் -உடைய ஒட்டாஞ்சில் –

பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-மகா பிருத்வியில் உள்ளார் அனைவரும் காண -இவரால் முன் நாள் நலியப்பட்டவர்கள்
இந்த ஜன்மம் தன்னிலே -கை மேல் பலன் -லஜ்ஜையையும் விட்டு தாமே அர்த்தித்து -தாமே கொள்வர்
ஐஸ்வர்யம் அஸ்தரம்

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-நித்ய ஸ்ரீ -நிருபாதிக சேஷி -திரு உடன் கூடிய தாள் -கை விடாத –
கால விளம்பம் பெறாமல் சடக்கென –பிராப்யமாக -அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள்

ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம் ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள்,
கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக
இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்;
ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால்
நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

நாயகம் – முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக.
‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

‘சார்வபௌமராய்ப் போந்த இராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்;
ஆன பின்பு, திரு மறு மார்பன் -‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே,
அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.-
ஈசான சீல நாராயணன் -பகவத் பாதர் ஆதி சங்கரர் –

ஒரு நாயகமாய் –
தனி அரசாக. ‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய
ஐஸ்வரியத்தைப் பௌண்ட்ரக வாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.
அநுகாரம்-சர்வேஸ்வரனைப் போலே -இவர்கள் தங்களை நினைத்து

நாயகம் -ஆழ்வார் கொண்டாட வில்லை -அவர்கள் அபிப்ராயத்தாலே –
‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே! சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுகலானேல் ஆடமர்க் கெழுக’ என்னா வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’–பாகவதம்
நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.

ஓட –
இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது, ‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி.
‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில்,

உலகு –
கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; ‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ,
அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும்
யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே,
முந்திரிகை நிலம்-கை மண் அளவு -ஷேத்திர அல்ப அம்சம் – உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது.

உடன் ஆண்டவர் –
இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல்.

அன்றிக்கே,
‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக் கொண்டு போந்த
கார்த்த வீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.

ஆண்டவர் –-ரஷிப்பவர் என்றுமாம் –

‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு
போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில்,
‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்ய முடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்;
அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே,
அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்:

கருநாய் கவர்ந்த காலர் –
‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு வாழ்கிறது என்?’
‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே!
வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே,
பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;
இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;
அவை கடிக்கும்.

அன்றிக்கே,
கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல்.

அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;
என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே,
‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று
கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.

காலர் –
‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.

சிதைகிய பானையர் –
கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே பொகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக் கொள்ளும்.
இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார்,
சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு
இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,
‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

பெரு நாடு காண –
முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ?
அதற்கும் போர இப்போது தடை அற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக,

அன்றிக்கே,
முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே எல்லாரும் காண வருவர்கள் ஆதலின்,
‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல்.
‘இப்படிச் செய்வது ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில்,

இம்மையிலே –
அப்படி வாழ்ந்த இந்தப் பிறவியிலே.

பிச்சை –
முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது?
இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.
முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு
ஆள் வைத்தே அன்றோ வாங்குவது?
இப்போது தாமே கொள்வர்.

அன்றிக்கே.
இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார்,
தாம் கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –
‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாளன்
இணையடியே அடைநெஞ்சே!’–பெரிய திருமொழி.6: 9 : 1.
இடர் கெடுத்த திருவாளன் இணை அடி’ என்றும்,
‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும்
வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும்.
இதனால், ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக் கதி இல்லை என்பது போதரும்;
கபாலித்வம்– தத்ர நாராயாண ஸ்ரீ மான் -மயா பிஷாம் –ஸ்வப்ன லப்த தனம் போலே –
கபாலம் போனதே -சிவன் பார்வதிக்கு சொன்னது -பிண்டியார் –சாபம் தீர்த்த ஒருவனூர் –
கபால போஜனம் –‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ?

தாள் –
‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?
அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை
‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?

காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; ‘வாழ்வு சாதலை முடிவாக உடையது;
உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன;
செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த
எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின்,
நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார்.

அன்றிக்கே,
‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கண நேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு?
அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது;
கேடு வருகைக்கு அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’
என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.

சிந்தித்து –
“இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா;
அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்;
நெஞ்சிலே அடி பட நினைக்க அமையும்’ என்றபடி.–
நெஞ்சிலே திருவடி பட –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
இடைவெளி இல்லாமல் சிந்திக்க இடை வெளி இல்லாமல் உஜ்ஜீவிப்போமே

உய்ம்மின் –
அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது.
‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்;
இரவு பகல் எந் நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப்
பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக
‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.

தாள் சிந்தித்து உய்ம்மின் –
அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? –அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம்
ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம்

————————

நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – 3-7-4-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

திரு நாரணன் –
அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ என்பர் மேல்.
அணிகலன்களைச் சொல்லுகிற இடத்தில் பிராட்டியை அருளிச் செய்வதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அங்குத்தைக்கு’ என்று தொடங்கி.
‘திருவாபரணங்களோடு சேர்த்துச் சொல்லப்படுகையால் பிராட்டியையும் திருவாபரணவகையில் கோடல் வேண்டும்,’ என்பதாம். அதற்குக் காட்டும்
பிரமாணம், ‘உன் மார்வத்து மாலை நங்கை’ என்பது. இது, திருவாய்.-10. 10 : 2.
திரு மார்பு ஆர மார்பு -திருவார மார்பு போலே –
அன்றிக்கே,
திரு ஆபரண ஆழ்வார்களாகிறார் நித்திய சித்த புருஷர்களாகையாலே இவர்களையுடையவன் திரு நாரணன் என்கையாலே,
இம்மிதுனமே உலகத்துக்குச் சேஷி என்கிறார்,’ என்னுதல்.
திரு’ என்பதனை ஆபரண கோடியிலே சேர்த்து அருளிச்செய்தார் மேல்.
திரு’ என்பதனை ‘நாரணன்’ என்ற பதத்தோடே கூட்டிச் சேஷித்வத்திலே நோக்காக அருளிச்செய்கிறார்,
திருவாபரண ஆழ்வார்களாகிறார்’ என்று தொடங்கி. மிதுனம் – இரட்டை. சேஷி – இறைவர்

———–

நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் – 9=8-3-

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்-குற்றம் அற்ற -சோபாதிக பாந்தவ்யம் இல்லையே -துர்லபத்வ குற்றம் இல்லாமல்
சுலபன்-திரு நாரணன் – -நிருபாதிக பந்து

நவை இல் திரு நாரணன்-சேர்
பற்றுதற்கு அரியனாய் இருக்கை முதலான-குற்றம் இன்றிக்கே-ஸ்ரீ மானான நாராயணன் -என்றது –
எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-சுலபனானவன் -என்றபடி –

————–

தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – 2-9-4-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண்  திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த
ஸ்ரீ மானான நாராயணனே –
இங்கே அம்மம் உண்ணப் போதராயே –

——–

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் —5-4-7-

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

திருப் பொலிந்த சேவடி –
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள் –
ஆர்ஜவ குணம் இருக்கிற படி
இவன் செவ்வை கேடே தனக்கு செவ்வையாகை –

ஐஸ்வர்ய சிஹ்னங்களை உடைத்தான திருவடிகள்
கதா புனவில் சொல்லுகிறபடியே –
பார்த்திவவ் யஞ்ஞாநான் விதமான திருவடிகள் (ஸ்ரீ ராமாயணம் -)

——————-

திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்–1-2-21-

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

யசோதை பிராட்டி உடைய சிநேகத்தை  உடையராய் கொண்டு அனுபவித்ததும் –
இவள் பாதாதி கேசம் அனுபவித்து பிறர்க்கு காட்டின கட்டளையிலே பேசினதுமான இதுவே –
அவளோடு இவருக்கு சாம்யம் ஆகையாலே –
அசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த -என்று அருளிச் செய்தார் ஆய்த்து-

—————–

வாராய் உன் திருப்பாத மலர் கீழ் – 2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –
வாராத இன்னாப்பாலே –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-
தாராதாய் -என்ற வசவாலே -அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–(பேராதே நான் வந்து-உன் திருவடிகளை -அடைந்து-உன் உகப்புக்காக -கைங்கர்யம் செய்வதே பிராப்தி )

——————–

திருப் பாதங்கள் (1)
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – 4-7-8-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

நின் திருப்பாதங்கள் மேல்-பிராப்தனான உன் திருவடிகளில்

நின் திருப்பாதங்கள் மேல் –
உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார்
திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை
அடைந்தவனாகக் கடவேன்,’ என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச்செய்தார்.
‘போக்கியதையுண்டானாலும் அடையத்தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘உன்னுடைய’ என்று தொடங்கி. இது, மாலதீ மாதவ நாடகம்.

————–

நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2

————-

தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே – 1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

உன் தேனே மலரும் திருப்பாதம்-
இவை ஒன்றும் இல்லை யானாலும் அடியில் உன் போக்யதையை பார்த்தால் தான் விடப் போமோ
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்னக் கடவது இறே
இவர் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது இறே ஆசைப் பட்டது -இவர் ஆசைப் பட்ட படியே திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்று
அந்த திருவடிகளையே காட்டிச் சேர விட்டான் –தேன் போன்ற கங்கை என்றுமாம்
உன் தேனே மலரும் திருப்பாதம் –என்று அத்தையே அபேஷிக்கிறார்
——————-

வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – 4-6=8=

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

வேதம் வல்லார்களைக் கொண்டு –
‘சர்வேசுவரனே பலமும் பலத்தை அடைதற்குரிய வழியும்,’ என்கிற வேத தாத்பரியம் கைப்பட்டவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு என்றது,
‘வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? -இது உலகில் நடை பெறாதே –
தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?
ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,’ என்றபடி.
இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ?
‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே,
அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?

வேதம் வல்லார்களைக் கொண்டு சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,
‘விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச்செய்வதனால்
நித்தியஸூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது;
அதனை விளக்குகிறார், ‘இங்கிருக்கும்’ என்று தொடங்கி.
இவர்கள் இருவரும் புருஷகாரமாய் இருப்பது, முமுக்ஷூத்வ அவஸ்தையிலும், முத்த அவஸ்தையிலும் ஆம்.
‘அவர்கள் புருஷகாரமாய் இருப்பர்களோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அந்த அமாநவன்’ என்று தொடங்கி. இது, சாந்தோக்யஉபநிட. 4 : 15.
அமாநவனைச் சொன்னது, நித்திய சூரிகளுக்கும் உபலக்ஷணம்.
இங்கு, ‘முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள’ என்ற தமிழ் மறை அநுசந்திக்கத் தகும். இது, திருவாய். 10. 9 : 8.

விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி திருவடிகளிலே பணிந்து. இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது –
நோய் கொண்டவள் இவள்; நோய்தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யாமல்.

—————–

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – 8-5-5-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

சொல்ல மாட்டேன் –
என் உள்ளத்தில் நின்று நலிகிற படிக்கு பாசுரம்-இடப் போகிறது இல்லை –

அடியேன் –
சம்பந்தத்தால் தவிர மாட்டுகின்றிலேன் –

உன் துளங்கு சோதித் திருப்பாதம்
மாட்டாத பிரகாரம் ஏது -என்ன –விளங்கா நின்றுள்ள ஒளியை உடைய உன் திருவடிகள்

எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா-
அளவிறந்த அழகை உடைய-இளம் சூரியர் இருவர் போலே-என் உள்ளத்தே நின்று நலிகிற படி-
கண்களால் பருகலாம் படி இருக்கையாலும்
வருத்தத் தொடங்கின இத்தனை என்று தோற்றுகையாலும்-இள நாயிறு -என்கிறார்-

அன்றிக்கே –
இள நாயிறு -என்பதற்கு
என்னை வருத்த வருத்த இளமை மிகுகிறபடி -என்னலுமாம்
என் உள்ளவா சொல்ல மாட்டேன் -என்று கூட்டுக –

மீனோடு ஆமை –இன்னம் கார் வண்ணனே -அவதரித்து அவதரித்து இளகிப் பதித்த படி —
யுவ குமாரா என்னுமா போலே இள நாயிறு -சேவை சாதிக்காமல் ஆழ்வாரை துடிக்கப் பண்ணப் பண்ண -இளமை கூடி
வா போகு-சக்கரவர்த்தி பஞ்ச விம்சதி போலே

அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே –
இதற்கு -உன்னைக் காட்டாதே அருமைப் படுத்தப் பார்த்தாய் ஆகில்-
நாட்டார் -தண்ணிது-என்கிற அஞ்ஞானம் வருவதற்கு ஒரு உபாயம் ஏதோ -என்று அருளிச் செய்வர் பட்டர் –
அப்போது மறந்து பிழைக்கலாம் என்னுமதனாலே –

அன்றிக்கே
உன் திருவடிகள் என் உள்ளத்திலே பிரகாசியா நிற்க துக்கத்துக்கு காரணமான-
அறிவின்மை வருவதற்கு உபாயம் உண்டோ -என்று அருளிச் செய்வர் அம்மாள் –என்னே -பிரிநிலை ஏகாரம் -உபாயம் இல்லை என்றவாறு –

உண்டாகில் உண்டு உடுத்துத் திரியலாமே உலகத்தாரைப் போன்று –
சூர்யன் இருக்க இருள் வராதே -தேஜஸ் இருள் சேராதே பால ஆதித்யர் -உதித்த பின்பு -அல்லல் -துக்கம் என்றவாறு –

——————

தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – 105-

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் –
பரம வைதிகரானவர்கள் ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள் –
(தூங்கும் கண்ணன் -கண் துயில் மாயன் -கண் வளரும் கமலக் கண்ணன் -பற்றாமல் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
இவரை பற்ற அன்றோ அடுப்பது-)-அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்
அவர்கள் அடியனான எனக்கு வஸ்த்வ்ய தேசம்

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –

செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் -பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து – என்கிறபடியே
அப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே ஈடுபட்டு –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி –
அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான –
கலக்கமிலா நல் தவ முனிவராலே —

நெஞ்சில் மேவும் நல் ஞானி –
இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு – போருகையாலே அவர்கள்
நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷன்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –

செழும் திரை — மேவு நன் ஞானி
தனக்கு ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த நன் ஞானம் –பாற்கடல் கண் துயிலும் ஸ்ரீ மாயன் குணங்களிலே ஈடுபட்டு –
அதன் கண்ணே நிலை நிற்கும் -ரசிகர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்களாலும் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு வாய்த்த இந்த சாஸ்திர தாத்பர்ய ஞானத்தின் சீர்மை இருந்தபடி என் -என்று
நெஞ்சார எப்பொழுதும் கொண்டாடும்படி உள்ளதாம் – அத்தகைய ஞானம் வாய்ந்தவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் .

ஸ்ரீ எம்பெருமான் கண் துயிலும் ஸ்ரீ திருப்பாற் கடலிலே அலைகள் செழுமை வாய்ந்து உள்ளன –
செழுமை -அழகு -பெருமையுமாம் –
கோலக் கருமேனி செங்கண் மால் திரு மேனியைத் தீண்டப் பெற்ற பெரும் களிப்பினால் –
கைகளைத் தூக்கி ஆரவாரத்துடன் ஆடுவது போன்று உள்ளது அந்தக் கடல் –
அங்கே போய் ஸ்ரீ மாயனை வழி படுகின்றனர் ஸ்ரீ ப்ரஹ்ம பாவனையில் நிற்பவர்களான சனகாதி முனிவர்கள் –
தன்னிடம் வந்து பள்ளி கொண்ட ஸ்ரீ பரமனை கடல் தன் அலைகள் ஆகிற கைகளாலே திருவடிகளை அலைத்து –
ஊஞ்சலில் ஆட்டி உறங்கும்படி -செய்வதனால் ஸ்ரீ எம்பெருமான் கண் துயில்வதாக தோற்றுகிறது -பக்தர்களுக்கு –

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 13- என்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் .
உண்மையில் உறங்குகிறானா அவன் – அவனுறங்கி விட்டால் உலகின் கதி என்னாவது -ஸ்ரீ மாயன் அல்லனோ –
பொய் உறக்கம் கொள்கிறான் -உறங்குவான் போல் உலகு உய்யும் வழியை யோசனை செய்கிறான் –
உறங்குவான் போல் யோகு செய்வதாக கூறுகிறார் ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ நம் ஆழ்வார் –
நித்ராசி ஜாகர்யயா -விழிப்புடன் உறங்குகின்றாய் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி –
உலகினை காக்கும் விஷயத்தில் விழிப்புடன் உறங்குகின்ற ஆச்சர்யத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே புண்டரீகாஷா -ஸ்ரீ தாமரைக் கண்ணனே உன் அழகுக்கு தோற்றோம் -என்றபடி
குணத்திற்கு தோற்று திருவடிகளிலே விழுகிறார்கள் அந்த ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –

இது ஒரு நாள் நிகழும் நிகழ்ச்சி யன்று –
பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 89- என்றபடி
நாள் தோறும் நடை பெரும் நிகழ்ச்சியாகும் –
ஆகவே வரும் போதெல்லாம் வியக்கத்தக்க குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் விழுவதும் அவர்கட்கு மாறாத இயல்பாகி விட்டது –
இது தோற்ற -ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ மாயன்-ஆச்சர்யப் படத் தக்கவன்
பாற்கடல் பள்ளிகொள் மாயன் -என்றும் ஒரு பாடம் உண்டு

இங்கனம் மாயன் குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் வீழ்தலின் இருப்பு உடையார் உள்ள -ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம் ஆழ்வாரால் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -ஸ்ரீ திருவாய் மொழி – 8 3-10 – என்று போற்றப்படும் ஏற்றமுடைய தங்களது நெஞ்சிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய நல் ஞானம் மேவுதற்கும் இடம் ஏற்பட்டு விடுகிறதாம் –
பல காலும் அவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் உடைய நல் ஞானத்தை கொண்டாடிப் பேசுகையாலே –அவர்கள் நெஞ்சிலே
அந்த ஞானம் இடம் கொண்டமை தெரிகிறது .
நூல்களிலே ஸ்ரீ சனகாதி முனிவர் பேச்சுக்களாய் வரும் இடங்களிலே சரம பர்வ விஷயமாக ஸ்ரீ எம்பெருமானார் அளித்த
ஞானமே பலகாலும் கொண்டாடப் பட்டுள்ளமையைக் கண்டு ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுகிறார் -என்க –
மேவு நல் ஞானி ஸ்ரீ எம்பெருமானது குணத்தை ரசித்து அனுபவிக்கும் நெஞ்சிலும் இந்த நல் ஞானம்
ரசிக்க தக்கதாய் இருத்தலின் பலகால் கொண்டாடும்படி இடம் பெறுகிறது .
மேவுவது விசேஷணமான ஞானம்-அதனை உடையவன் ஞானி அல்லன் .

நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் –தொழும் திருப் பாதன்
லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே- என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் –
பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் – என்றும் –
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே
பிரணமாத்ய அனுவர்த்தனந்களை பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேக விடு தூது–

October 23, 2023
தனியன்

போதுமண வாளணங்கு புல்லுநறை யூர்நம்பி
மீதுமண வாளரருண் மேகவிடு – தூதுதனைச்
சொல்லுவார் கேட்போர் துதிப்பாரிம் மேதினிமேல்
வெல்லுவா ரெல்லாம் விரைந்து.

காப்பு
நம்மாழ்வார்

நாரணனை யெவ்வுயிர்க்கும் நாயகனை யண்டாண்ட
பூரணனை நாகணையிற் புண்ணியனை – வாரணமுன்
வந்தானை யேத்தி மறையா யிரந் தமிழாற்
றந்தானை நெஞ்சே தரி.

திருமங்கையாழ்வார்

நாட்டியசீர்த் தென்னறையூர் நம்பி திருவடிக்கே
சூட்டியதோர் மேகவிடு தூதுக்குக் – கூட்டம்
பொலியன்ப ரேத்தும் புனலாலி நாடன்
கலியன் பரகாலன் காப்பு.

நூல்

கலிவெண்பா
மேகத்தை விளித்தல்

சீர்கொண்ட செங்கமலச் செல்வத் திருமகளு
நீர்கொண்ட வேலை நிலமகளு – மேர்கொண்ட 1

காந்தண் மணிக்கடகக் கையா லடிவருடப்
பாந்தண் மணிச்சுடிகைப் பாயன்மேற் – சேர்ந் துறங்குஞ் 2

செங்கண்மா லுந்தித் திருத்தா மரைப்பிறந்த
வங்கண்மா ஞாலத் தனைத்துயிர்க்குந் – தங்காமும் 3

மாரி வழங்குதன் மாறாமே கைம்மாறு
காரிய மென்று கருதாமே – பாரிற் 4

றுளிக்கின்ற தண்ணந் துளியமுத நல்கி
யளிக்கின்ற கொண்மூ வரசே – களிக்கின்ற 5

மேலுலக மேறி விரிஞ்சனா மம்படைத்து
நாலு திசைமுகமு நண்ணுதலான் – மாலுமாய் 6

நீலநிற மாகி நிறைகமலக் கண்ணாகிக்
கோல வளையாழிக் கொள்கையாற் – சூலம் 7

விரவிய பாணியால் மின்னையிடந் தாங்கி
யரவ மணியு மழகால் – வரமளிக்கு 8

மெத்தே வருக்கு மிறைவராய் மேலாய்
முத்தே வருநிகரா மூர்த்தியே – மைத்தகன்ற 9

வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே – வானத்து 10

வேலைவாய் நீரருந்தி வெற்பி லரசிருந்து
சோலைவாய்க் கண்படுக்குந் தோன்றலே – ஞாலமிசைத் 11

மேகத்தின் சிறப்புரைத்தல்

தானமும் மெய்யுந் தருமமுங் கல்வியு
மானமுந் தானமு மாதவமு – நானக் 12

கருங்கொண்டை மங்கையர்தங் கற்புநிலைநிற்ப
தருங்கொண்ட லேயுனைக்கொண் டன்றோ – நெருங்குமுவ 13

ராழிநீர் துய்யவமுத நீரானதுவும்
வாழிநீ யுண்ட வளமன்றோ – தாழுமடி 14

தந்துயர்கூறி மேகத்தை வேண்டுதல்

யாவுஞ் சிந்தாமணியு மம்புயமுஞ் சங்கமுங்
காவும் பணியவுயர் கார்வேந்தே – நாவினாற் 15

சாதகமும் தோகைத்தனி மயிலும்போலவே
மேதகையை நின்வரவை வேட்டிருந்தேன் – பூதலத்துப் 16

பல்லுயிருங் காக்கும் பரமா முனக்கெனது
புல்லுயிருங் காக்கில் புகழன்றோ – வல்லதொரு 17

சீருயிரு மேகமே செங்கண்மாற் காளானேன்
ஆருயிரு மேகமே யல்லவோ – பேரரவ 18

நீலமஞ்சே கேட்டியா னின்னையல்லா தென்னையிந்தக்
காலமஞ்சே லென்பாரைக் காணகிலேன் – ஓலமரு 19

விண்மாரியே பெருமாள் வேரித்துழாய் வேட்டென்
கண்மாரி பெய்வதெல்லாங் கண்டாயே – தண்மை 20

விளையும் பயோதரமே வெம்பாத செம்பொன்
அளையும் பயோதரமே ஆனேன் – கிளைபிரியாக் 21

கோலமழையே குயில்மாரனையங்குக்
காலமழையாமல் காப்பாரார் – நீலநிற 22

மங்குலுக்கு வேந்தே மலர்க்கண் புதைத்தனைய
கங்குலுக்கு நெஞ்சங்கரைகின்றேன் – இங்கு 23

நடந்தகனமே முலையினாலுந்தரள
வடந்தகனமே செய்து மாய்த்தேன் – விடந்திரண்ட 24

திங்களெழிலிக்குச் சிலைமாரவேள் முனியில்
எங்களெழிலிக்கரசே யென்செய்கேன் – மங்கலமா 25

மிந்திரவில் வாங்கி யெழுகின்ற மைப்புயலே
வந்திரவில் வாடை வருத்துங்காண் – அந்தரத்து 26

விண்ணே யுனக்கிவற்றை விண்டுரைத்தே னல்லாதெ
னுண்ணேய வேட்கை யெவர்க்கோதுவேன் – கண்ணழலால் 27

வேட்கைபிறர்க் குரையேனென்றல்

வெந்தானிலத்துக்கு வீறாகத் தாங்குதலால்
மந்தானிலத்துக்கும் வாய்திறவேன் – அந்த 28

குருத்தத்தை மாரன்குரகதாமா மென்றே
வருத்தத்தை யங்குரைக்க மாட்டேன் – கருத்துள்ள 29

மாதண்டலைவாய் மதுகரத்துக்கும வன்றன்
கோதண்ட நாணென்று கூறேனான் – மூதண்ட 30

கோளக்குயிற் கெல்லாங் கோவே யவன்றனது
கானக்குயிற்குங் கழறேனான் – நாளொன்றில் 31

அன்புருவுக்கு மரசனுட லீர்வித்த
புன்புறாவுக்கும் புகலேனான் – மென்புரத்து 32

கோம்பிக்குடல் பனிக்கும் கொச்சை மடமஞ்ஜைக்கும்
சோம்பித் தளரும் துயர் பணியேன் – றேம்பிரச 33

நிற்கின்ற பூவைக்கு நீள்குழலார் சொல்லியதே
கற்கின்ற பூவைக்குங் கட்டுரையேன் – பொற்கால் 34

வெறிப்பதுவும் வீட்டன்னம் வெண்பாலு நீரும்
பிறிப்பதுபோல் நட்புப் பிரிக்குங் – குறிப்பறிந்து 35

காதலா லுள்ளக் கவலையது கேட்க
வோதலாகா தென்றுரையேனான் – ஆதலால் 36

உள்ளே புழுங்குவதன்றி யோருவருக்கு
விள்ளே னுனக்கு விளம்பினேன் – தெள்ளியநூல் 37

இரக்கந் தோன்ற வுரைத்துத் தூதுவேண்டல்

ஓதுவாரெல்லாம் உதவுவாரொப் புரைக்க
வேதுவாய் நின்ற வெழிலியே – பூதலத்து 38

பெய்யுதவியும் புரிந்தால் பேச்சுதவியுஞ் சிறிது
மெய்யுதவியும் புரிய வேண்டாவோ – துய்ய 39

அடலாழி யானடிக்கே அன்பாயகாதல்
கடலாழி மூய்கினேன் கண்டாய் – உடல்வாழ 40

விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பால்
மைம்முகிலே சந்தாகமாட்டாயோ – பெய்மதவேள் 41

தண்ணப்பஞ் செய்வதெல்லாந் தாமோதரனடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ – வெண்ணத்தின் 42

சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய் கொணர்ந்தென்
ஆதரவு தீர்த்தருள லாகாதோ – கேதகைக்கு 43

மின் கேள்வனாக்கிய நீவிண்ணோர் பெருமானை
என் கேள்வனாக்கினா லேலாதோ – முன்கேட்டு 44

மெள்ளரிய தாமம் எனக்குதவா யேலுனக்கு
வள்ளலெனும் நாமம் வழுவாதோ – தெள்ளுகடன் 45

ஞாலத் துளவமே நல்லிளமை போகாமல்
கோலத்துளவமே கொண்டுதவாய் – சீலத்தா 46

லூனா யுடலாயுறு துணையாய்த் தெய்வமா
யானா மருந்தா யென்னாருயிராய் – ஆனாத 47

நெஞ்சமாய்க் கண்ணாய் நினைவாய் வினையேற்கு
தஞ்சமாய்நின்ற தனிமுதலே – பஞ்சவர்க்காய் 48

மெய்த்தூது சென்றவரை வெல்லவே வெண் சங்கம்
வைத்தூது செங்கமல மாயோன் பால் – இத்தூது 49

நல்லதெனக்காரே நடந்தருள வேண்டுநீ
அல்லதெனக்காரே யருள் செய்வார் – சொல்லித் 50

தருதுமெனக் கந்தரமே சாற்றாயே லுய்யக்
கருதுமெனக் கந்தரமே கண்டாய் – பெரிது 51

தூது சென்றார் சிலரை எடுத்துக்காட்டல்

மெனைத் தோன்றியோ துயரமெய்தினார் பார் மேல்
தோன்றியோ தூதுழன்றார் – நினைத்தார் 52

தமது பிறப்பறுக்கும் தாயாகி மேனாள்
அமுதிற் பிறந்தாள் பாலன்றோ – நமது 53

கருமஞ்சனை யவர்க்கா காய் கதிரைப் பாய்ந்து
பொருமஞ்சனை சிறுவன் போனான் – தரணிதனில் 54

மீது பரவை விடமுண்டவ னன்றோ
மாது பரவைமனை வந்தான் – ஆதலால் 55

ஓதுமிவரில் உயர்ந்தாரிலை யென்றே
தூது புரிந்தோரை தொகுத்துரைத்தேன் – ஆதலால் 56

தேனின்புறத் தூது தெய்வத் துளவினன்பால்
யானின்புறத் தூது எழுந்தருளாய் – வானிற் 57

றிவலை பிலிற்றி வருந்தெய்வமே நீயென்
கவலையறத் தூது போங்காலை – குவலயத்தி 58

பாற்கடலிற் பரமன் பெருமையும் நிலைமையும்

லெம்பிரானூரு மவர்பெயரு மெற்பயின்ற
தம்பிரான் செய்தமையுஞ் சாற்றக்கேள் – உம்பரில் 59

பன்னிருவர் மான்றேர் பரிதிக் கடவுளரு
மன்னிருவர் தெய்வ மருத்துவரும் – ஒன்னலரைப் 60

பாயும் விடையர் பதினொருவருந் திசையில்
காயுங் கடாஆ யானைக் காவலரும் – தூயகதிர் 61

வெண்ணிலா விட்டுவிளங்குங் கலா மதியும்
எண்ணினத் தாரகை யீட்டமும் – கண்ணி 62

லருடரு மாஞானத் தகுந்தவர் நாகர்
தெருடரும் விஞ்சையர் சித்தர் – கருடர் 63

அரக்கரி யக்கரவுணர் முதலோர்
பரக்கும் கணங்கள் பலரும் – பெருக்கரு 64

நீரேழுமேழு நினது பெருங்கணமும்
பாரேழு மேழு பருப்பதமும் – ஈரே 65

ழடுக்கும் புவனமு மாடகமால் வெற்பு
மெடுக்கு மரவரசு மெல்லாம் – தொடுக்கத்தான் 66

முண்டக நாபிமுளைக்குஞ் சதுமுகனோ
டண்ட வளாக மடங்கலுந் தான் – கண்டளித்து 67

முன்னிய வண்ண முடித்து விளையாடும்
தன்னிக ரில்லாத் தனி முதல்வன் – அன்னமாய் 68

மீனாகி ஆமையாய் வெள்ளேனமாய் மடங்கல்
மானாகி மாயையாய் வாமனமாய் – ஆனாத 69

மானிடராய் பாய்பரியாய் வாழு மடியவர்க்கு
தானிட ராற்றப் புகுந்த தம்பிரான் – மேனாளிற் 70

பைந்நாகப் பள்ளிமேல் பங்கயங்கள் பூத்தொளிரும்
மைந்நாகம்போல் கண்வளருநாட் – பொன்னாய 71

வன்ன முளரிமலர்த்தவிசில் வீற்றிருக்கும்
அன்ன முணர்த்த வுணராமையால் – என்னையல்லால் 72

இந்நித்திரை மடந்தை எய்தலுமாயிற் றோவென்
றுன்னித்திரை மடந்தை யூடினளால் – அந்நிலையே 73

திருமகள் சுகந்த வனம் வருதல்

காயத்திரியுங் கலைமகள் சாவித்திரியும்
ஆயத் தெரிவைய ராமாங்கு வர – நேயத்தார் 74

கோலத்தார் கைதொழுது கூரிலைய முக்கவட்டுச்
சூலத்தாளே வற்றொழில் கேட்ப – ஞாலத்து 75

மானிட மங்கைவடி வாகவந் துறையும்
கானிடம் யாதென்று கண்சாத்தி – யானா 76

யோசனையோர் நாற்றிசையும் முத்தித்
தலமாஞ் சுகவனந்தன்னுள் – அலமாற 77

வான்றிகழுங் கங்கை முதல் மங்கைமார் மார்கழியில்
தோன்றிய முற்பக்கத் துவாதசியில் – தேன்றிகழும் 78

கூந்தனனை குடைந்தாடலான திக்கு
வேந்தனென நாமம் விளம்பியே – பாய்ந்த 79

திருமணி முத்தாறலைக்குந் தீரத்தினின்ற
மருமருவுவஞ்சியின் கீழ்வைக – வருகைமா 80

வானமே தாவிவளரும் மகிழடியின்
ஞான மேதாவியெனு நன்முனிவன் – தானெய்திச் 81

மேதாவி திருமகளைத் தமக்கு அருமகளாகப் போற்றல்

செய்ய கமலத்துச் செய்யவளைக் கண்டுவந்தே
யையர் பயந்தெடுத்த வன்னையார் – துய்யபெய 82

ரூரேதெனப் பெயருமூருமிலை தந்தைதாய்
நீரேயென முனிவன் நெஞ்சுருகி – பாரேத்த 83

மன்னிள வஞ்சியின் கீழ்வந்துறைதலால் பெயரும்
என்னிள வஞ்சியரே என்றுரைத்து – தன்றுழையி 84

லானவர முனிவனவ் வனத்துள் கொண்டிருப்ப
வானவர் தோலாவலி தோற்று – தானவரால் 85

எம்பெருமான் மானிட வடிவாய் மாமகளைத் தேடி வருதல்

விண்ணாடிழந்து விரிஞ்சகனோடு கூப்பிடுநாட்
டண்ணாந்துழாய் மாதவனுணர்ந்து – நண்ணார் 86

மிடைகிடைத்துமென்று விடைகொடுத்து பின்னர்
கிடைகிடைத்தச் செந்துவர் வாய்க்கிள்ளை – யடைகொடுத்த 87

புண்டரீகமாளிகைமேல் பூவைதணந்தமையும்
அண்டரெல்லா மாற்றலகன் றமையும் – கண்டருளிச் 88

செந்திருவை நாடுவான் தெய்வ வடிவகற்றி
யைந்துருவமாகி யவனியின்மேல் – வந்தருளி 89

ஆடல்பறவை யரசன கல்விசும்பு
திசையனைத்துந் தேடியணாள் – நீடும் 90

சுகந்தவன நோக்கித் துணையாய் செல்வி
யுகந்த வனமீதென்றுணர்ந்து – புகுந்தருள 91

மேதாவி அதிதிகளை ஆராதித்தல்

மேதாவிகண்டு விருந்தளிப்ப வெவ்வுயிர்க்கு
மாதாவினல்லான் மகிழ்ந்த கற்பின் – போதார் 92

முருகுவளை மொய்கழலை முன்றிதனிற்கண்டு
பெருகுவளை முன்கை பிடிப்பத் – திருமகளும் 93

காதலால்வந்த நம்பி கைபிடித்தா னென்றலறி
கோதிலா மாமுனியைக் கூவுதலும் – வேதியனும் 94

கண்புகையச்செய்யக் கதிர்புகைய கார் வெளிற
விண்புகைய வாய்துடிப்ப மெய்பதற – மண்புகைய 95

எம்பெருமான் ப்ரஸந்நனாதலும் முனிவர் துதித்துத் தம்மகளை மணஞ் செய்து கொடுத்தலும்

வந்தான் கரகநீர் வாங்கிச் சபிப்பதற்கு
முந்தாமுன் சங்காழி முன்காட்டச் – சிந்தை 96

மயங்கினான் அஞ்சினான் வாய்குழறிப் பார்மேல்
முயங்கினான் செங்கை முகிழ்த்தான் – தியங்கி 97

அழுதான் துளவின்மா லஞ்சலென வானோர்
விழுதாமரைத் தாளில் வீழ்ந்து – முழுது 98

மறியாமை செய்தேன் அதுபொறுத்தியென்ன
எறியாழியம்மா னிரங்கிச் – செறிதுழாய் 99

கோதைமணம் புணர்ந்த வக்கொண்டலுமப் புண்டரீக
மாதைமணம் புணர்ந்து வைகியபின் – நீதி 100

வாக்குவரமளித்து வீடருளி எம்பெருமான் சுகந்தகிரிமேல் அமர்தல்

யறந்திறம்பா நேமியானவ் வனஞ்சேர்கைக்கும்
பிறந்தார்கள் வீடுபெறற்கும் – சிறந்த மலர் 101

மாமாதின் பேரே வழங்குகைக்கும் கேட்டவர
மாமாதவனுக் கருளியபின் – பூமாதை 102

பாமாதுள்ளிட்டார் பணிந்துவிடை கொடுபோய்
தேமாமலரோன் செவிபடுப்ப – நாம 103

மறையாளனவ் வனத்து வந்தரசனீழல்
முறையாய வேள்வி முடித்து – பொறையார்ந்த 104

பாதாரவிந்தம் பணிந்தேத்தப் பாற்கடலில்
சீதாரவிந்தத் திருவினொடும் – பூதலத்தோர் 105

பேறுபெறவே பஞ்சபேரவடிவுகந்து
வீறுபெற மாமுனிக்கு வீடருளி – கூறரிய 106

ஞாலத்தெழுபத்து நான்கு சதுரயுகம்
நீலத்தடவரை போனின்றபிரான் – மேலைச் 107

திருக்காவிரிவளனும் திருநறையூர்ச் சிறப்பும்

சிகரக் குடகிரியில் சென்றிழிந்து கீழை
மகரக் கடல் வயிறு மட்டும் – அகலிடத்தில் 108

பாரங்கிழித்துப் பரவி மதகிடறி
யாரஞ்சுருட்டி யகிலுருட்டி – நார 109

நுரையெறிந்து வித்துருமக் கொத்து நுடங்கி
திரையெறிந்து முத்தஞ் சிதறி – கரையில் 110

கொழிக்குங் காவேரி குதித்தோடப் பாய்ந்து
சுழிக்குங் காவேரித் துறையான் – வெழிற்கருகி 111

யோங்கிப் பகலிருளை உண்டாக்கி மேகரும்பை
தாங்கிப் புயறடுத்த தண்டலையும் – தேங்கமலப் 112

பூமிசை யன்னம் பொருந்தி வலம்புரியும்
நேமியு மேந்திய நீள்கயமும் – காம 113

ருளமகிழ வெண்ணிலா வொண்கதிரைக் கன்னல்
வளமதனை ஈன்ற வயலும் – அளவின்றி 114

தன்னையே போலத் தழைப்பத் தரணிக்கோ
ரன்னையே போல வருள்செய்வான் – மன்னு 115

மருநறையூர் வீதி மணிமாடக் கோயில்
திருநறையூர் வாழ்வாசு தேவன் – இரணியனைப் 116

நம்பியின் சிறப்புரைத்தல்

பாரிலுரங் கிழித்த பன்னகத்தான் பன்னகத்தான்
வாரிநிகர் வண்ணத்தான் வண்ணத்தான் – ஆரிடத்தும் 117

தண்ணளியான் தண்ணளியான் தாழ்ந்தவசைக் கரத்தான்
கண்ணினழகார் முகத்தான் கார்முகத்தான் – விண்ணுலகில் 118

நல்லசுரர்க் கண்ணியான் நாறுதுழாய்க் கண்ணியான்
புல்லசுரர்க்குக் கொடியான் புட்கொடியான் – தொல்லிலங்கை 119

வஞ்சனை யங்கறுத்தான் வாய்ந்த வடிவங்கறுத்தான்
கஞ்சனை முன்சிவந்தான் கண்சிவந்தான் – துஞ்சுந் 120

திரையான் மலரிந்திரையான் கவிகை
வரையான் செழுந்துவரையான் – திரையார் 121

மங்கையான் வேதநியமங்கையான் சென்னியிலோர்
கங்கையான் சூடிய காற்கங்கையான் – பங்கயக்கை 122

ஆரணன் கேசவன் ஆழியான் அச்சுதன்
காரண னெம்பெருமான் காகுத்தன் – நாரணன் 123

யாதவன் கண்ண னிருடிகேசன் முகுந்தன்
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் – சீதரன் 124

மாயன் அனந்தன் மதுசூதனன் திருமால்
ஆயன் முராரி அருளாளன் – தூயகழல் 125

தேவாதிதேவன் திருநாயகத்தேவன்
றவாவிடர் கெடுத்த தம்பிரான் – ஓவாப் 126

படந்திகழு மாடரவப் பாய்க்கிடந்து மேலா
மிடந்திகழ் வைகுந்தத்திருந்து – நடந்து 127

பொறையூ ரடிக்கமலம் பூத்தோயவந்து
நறையூரி னின்றருளும் நம்பி – மறையூரு 128

நம்பி திருவிழாக் கோலங்கொண்டு மண்டபத்து அமர்தலும் வானவராதியோர் வந்து பணிதலும்

மாயிரம் பேழ்வாய் அனந்தன் பணாடவிமேல்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திறைஞ்ச – சேயிருந்தார் 129

அண்டர்குழாமும் அருந்தவரீட்டமும்
தொண்டர் குழாமுந் தொழுதேத்தப் – பண்டைத் 130

திருவாய்மொழியும் திருமொழியும் வேதாத்
துருவாய் மொழியுந் தழைப்ப – வருவாத 131

திங்களு நாளுந் திருவிழா நின்றோங்க
மங்கல வெண்சங்கம் வாய்பிளிற – வங்கமர்ந்து 132

நன்பஞ்சேர் நாடகக்கானம்பிக்கு நாயகிதன்
இன்பஞ்சேர் நாளிலினி தொருநாள்- அன்பமர்ந்து 133

தன்னிசையாற் புள்வேந்தன் சாமவேதம்பாடும்
இன்னிசையால் பள்ளியெழுந்தருளி – மன்னி 134

சிலம்பு திரைமோது திருமணி முத்தாற்றி
னலம்பு திருமஞ்சனமாடி – நலம்பரவு 135

சேலைகளைந்தணிந்து தெய்வ பசுந்துளப
மாலை புதியவகைசூடிக் – கோல 136

துயங்கு திருவாராதனைக் கொண்டபின்னர்
இயங்கு கடற்சங்கமிசைப்பப் – பெயர்ந்ததோர் 137

திருந்து மணிமண்டபத்துச் சிங்கஞ்சுமந்த
வருந்தவிசினேறியருளி – பொருந்தியநூல் 138

வேதமும்வேதாந்தமெய்த்த திருவாய்மொழியு
நாதமுங் கேட்டு நயந்துருகி – யோது 139

மருவை வடவரை அம்பொற்குவட்டிற்
றருணமவுலிதயங்க – திருநாம 140

மிட்டவதனத்தெழுதிய கத்தூரி
வட்டமதியின் மறுவேய்ப்பக் – கிட்டரிய 141

தேங்குழைக்கீழ்க் கற்பகத்தில் செம்பாம்பு சூழ்ந்ததென
பூங்குழைக்கீழ்வாகுபுரிதயங்க – வாங்கிற் 142

பதிக்குங் கவுத்துவமும் மார்பும் பருதி
உதிக்குமரகதக்குன்றொப்ப – குதித்தொருநாட் 143

கால்வீழ்ந்தகங்கை விலங்கிக்கடிமார்பின்
மேல்வீழ்ந்ததென்ன முந்நூல்விட்டிலங்க – சூல்வீங்கு 144

கொண்டலின்கீழ்தோன்று குடதிசையில்செக்கரென
விண்டிலங்கு பொன்னாடை மெய்யசைய – தொண்டரெல்லாம் 145

பற்றிக்கழல வடபாதாரவிந்தத்தின்
வெற்றிக்கழலின் வெயிலெறிப்பட – மற்றுந்தான் 146

வேண்டும்பலகலனுமேகவடிவிற்கேற்ப
பூண்டுகளபம்புயத்தணிந்து – நீண்டகடற் 147

பெண்ணாடியதன் பெரியதிருவடியைக்
கண்ணாடிமண்டிலத்தில் கண்சாத்தி – வண்ணத் 148

திருமருங்குக் கேற்பதொரு சிற்றுடைவாள்வீக்கி
யிருமருங்கும் ஐம்படையுமேந்தித் – திருமறுகில் 149

போதரலுநாற்கடல்சூழ் பூதலத்தும் வானத்தும்
மாதரரம்பையர்கள் வந்தீண்டிப் – பாதம் 150

தொழுவார்வளைகலைநாண் சோர்வார் மயலா
யழுவார்முலை பசலையாவார் – குழுவாகி 151

தலைவி தனது குறையுரைத்தல்

யம்மாதர் நிற்பயருவினையேன் கைதொழுதேன்
விம்மாவெதும்பாமெலிவானேன் – எம்மானுக் 152

கென்னெஞ்சுமென்கலையுமென்னாணுஞ் சங்குமவன்
தன்னெஞ்சறியத்தனிதோற்றேன் – பின்னுமொரு 153

விண்ணப்பமுண்டென்று மெய்ந்நடுங்கிக் கைகூப்பி
வண்ணத்துகிலொதுக்கி வாய்புதைத்துன் – கண்ணுதலாம் 154

வீரன்சிலையிறுத்தவேந்தே வினைவிளைக்கு
மாரன் சிலையிறுக்க வாராயோ – பாரமலை 155

யன்றெரித்தகையால் அழல்வீசியதென்றல்
குன்றெடுத்தபோது குறையாமோ – நின்றெரிக்கும் 156

செய்யகதிர்மறைத்த சீராழியால் மதியின்
வெய்யகதிர்மறைக்க வேண்டாவோ – கையசைக்கு 157

முன்னநீவாயடங்கு முந்நீரையென்பொருட்டால்
இன்னநீவாயடக்கிலேலாதோ – பன்னகத்தின் 158

பூமரமேழுந்துளைத்த போர்வாளிபுன்குயில்வாழ்
மாமரமொன்றுந்துளைக்கமாட்டாதோ – சேமலைந்து 159

மாவாய்பிளந்த மரகதமே வம்புரைப்பார்
நாவாய்பிளந்தால் நவையாமோ – பூவாய்த்த 160

தூயகுருந்தொசித்த தோளாய் செவிவெதுப்பு
மாயர்குழலொசித்தால் ஆகாதோ – மாயமாங் 161

காதிச்சுழல்காற்றைக்காய்ந்த நீவாடையா
வாதிச்சுழல்காற்றை மாற்றாயோ – மோதிவரு 162

மண்ணாறுநீங்கவழிகண்டநீயெனது
கண்ணாறுநீங்கவழிகாட்டாயோ – தண்ணார்ந்த 163

தாதுதிரும்பைந்துழாய் தாராயேல் கண்ணனென
வோதுதிருநாம மாசுண்ணாதோ – வீதிருக்க 164

நீநெடுமாலானநிலை நின்சேவடிதொழுது
நாணெடுமாலாகவோ நம்பியே – மாநிலத்து 165

பாவையர்கைச்சங்கம் பறிப்பதற்கு நின்சங்கம்
தீவகமோ நேமித்திருமாலே – மேவத் 166

திருக்கடைக்கண் சாத்தாய் திருவாய்மலராய்
யருட்கடலே என்னுமளவின் – மருக்கமலை 167

தலைவி தனது மையலுரைத்தல்

நாதன்சிறிதேநகைகோட்டி வெண்கோட்டு
மாதங்கமீதே மறைதலால் – சீதரன்தனா 168

வையம்புதைக்குமலர்கருதி மாரவேள்
எய்யம்புதைக்குமிலக்கானேன் – செய்யநிறப் 169

பீதகவாடைக்கும் பெரியதிருவரை
பாதகவாடைக்கும் பரிவானேன் – ஆதலால் 170

அந்திக்கமலனணையுங் கொலென்றிருந்தேன்
உந்திக்கமலத்துளமானேன் – கொந்துற்ற 171

கொய்துழாய்மார்பகலம்கூடுங் கொலோவெனவே
கைதுழாய்மண்சுழித்துக் கைசோர்ந்தேன் – எய்தி 172

யயனாலுங்காணவரியான்கரிய
புயனாலுங்காணாமல் பூண்டேன் – வியமாரன் 173

தாதைதிருப்பவளந்தான் வேட்டிளந்தென்றல்
ஊதைதிருப்பவளமொல்கினேன் – மாதுவரை 174

ஆயன்பவனிதொழுதன்றுமுதல் இன்றளவும்
தூயநயனந் துயினீங்கி – யாயொறுக்க 175

பந்துகழன்மறந்து பாவைகிளிதுறந்து
சந்துபனிநீர் தனத்தகற்றி – வெந்துயரால் 176

போதக்கழலணிந்து பூவிழிந்து நீரிழிந்து
காதற்சிறையிருத்தல் கண்டாயே – மாதுளபத் 177

தலைவி தூது செல்ல மேகத்திற்குத் துணிவு கூறல்

தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும்
வாரானை யன்றழைக்க வந்தானை – காரானை 178

மெய்யானை யன்பருக்குமெய்த்தானைகண்கைகால்
செய்யானை வேலையணைசெய்தானை – வையமெல்லாம் 179

பெற்றானைக்காணப் பெறாதானைக் கன்மழையில்
கற்றானைக்காத்த தொருகல்லானை – யற்றார்க்கு 180

வாய்ந்தானை செம்பவளவாயானை மாமடியப்
பாய்ந்தானை ஆடரவப்பாயானை – பூந்துவரை 181

மாமாலைக் கண்டந்திமாலைவருமுன்னமே
தேமாலைவாங்க நீசெல்லுங்கால் – பூமாயன் 182

முன்னந்தடுத்த முளரித்திருக்கரத்தால்
இன்னந்தடுக்குமென்றெண்ணாதே – நின்னுடைய 183

தீமுழக்கின் மிக்கதெனச் செங்கண்மால் கைச்சங்கின்
வாய்முழக்கங்கேட்டு மயங்காதே – நீமருவும் 184

வானச்சிலையின் வனப்புளதென்றெம்பெருமான்
கூனற்சிலைகண்டுகூசாதே – மேனிலத்து 185

மின்சோதியெல்லாம் விழுங்குமென்று நாந்தகத்தின்
நன்சோதிகண்டு மிகநாணாதே – நின்சோதி 186

மையழகினீலமணியழகிலெம்மான்றன்
மெய்யழகு நன்றென்றுவெள்காதே – துய்யமணி 187

தலைவி தன்செய்தி கூற உபாயமுரைத்தல்

யாரக் கபாட மணிக்கோயில் வாசலெல்லா
சேரக் கடந்து திருமுன்போய் – தூரத்தில் 188

நின்றுவணங்கி நெடிதேத்தி வாய்புதைத்து
சென்று பெருமான்திருச் செவியில் – துன்றுகடல் 189

தையற்கரசே யுன்னார்வேட்டொருபேதை
மையற்கரைசேருமாறறியாள் – மெய்யுருகி 190

கொம்பனையாளோர் விரகங்கொண்டாளதுதன்னை
யெம்பெருமான் கேட்டருளாயேதென்னில் – அம்பரமும் 191

மட்புலனுமுண்டுமிழ்ந்த மாயோனுருவமல்லால்
கட்புலனும் வேறுருவும் காணற்க – புட்புளத்து 192

மூர்த்திபுகழேமுகப்பதல்லான் மற்றொருவர்
கீர்த்திசெவிமடுத்துக் கேளற்க – நீர்த்தரங்கப் 193

பூவெடுத்த வெண்கோட்டுப்புண்ணியனையல்லாதென்
நாவெடுத்துவேறு நவிலற்க – கோவெடுத்து 194

கங்கையுலவும்கழலினாற் கல்லாதென்
செங்கைத்தலைமிசை போய்ச்சேரற்க – பங்கயத்தாள் 195

தாங்குந் திருத்துழாய்தாம மணமல்லாதென்
மூக்கும் பிறிதுமணமோவற்க – மாக்கடல்போல் 196

அஞ்சனவண்ணனடிக்கமலமல்லாதென்
நெஞ்சமுமொன்றை நினையற்க – செஞ்சுணங்கோ 197

டிங்கெழுந்த கொங்கையெழுபிறப்பு மெம்பெருமான்
கொங்கணைந்த தோளல்லால் கூடற்க – மங்கைநல்லீர் 198

என்று வருந்தியிருந்தாளவளுக்குன்
மன்றல்கமழ்தார் வழங்கென்று – நின்றிரந்து 199

மாலைபெற்று வாவென்றல்

பண்டுளவத்தாமரையாள் பற்றுந்திருமார்பின்
வண்டுளவத்தார் வாங்கிவா. 200

ஸ்ரீ அழகிய மணவாளர் அடியிணை வாழ்க
மேகவிடுதூது முற்றிற்று

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வஞ்சுள வல்லி ஸமேத ஸ்ரீ திரு நறையூர் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –