ஸ்ரீ திரு நாராயண புர மங்களா ஸாஸனம்

செவ்வடி திருக்காப்பு -கரியான் ஒரு காளையின் திருவடி செய்யாள் இருப்பதால் சேவடி
திரு நாராயண புர மங்களா ஸாஸனம்

புள்ளரையன் கோயில் என்பதும் இத்தையே
திவ்ய ஸூரிகள் -நித்ய ஸூரிகளில் வ்யாவ்ருத்தி

திருப் பொலிந்த சேவடி இங்கு தானே

ஸ்ரீ ரெங்க மங்கள மணி கருணா நிவாஸம் -மூலவர் உத்சவர் இருவருக்கும் ப்ராதான்யம் ஆகவே இரண்டு பத பிரயோகங்கள்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் மூலவருக்கு பிரதான்யம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் -உத்சவருக்கு பிரதான்யம்
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யது சைல தீபம் -இருவருக்கும் ப்ராதான்யம்

தக்ஷிண பத்ரிநாத்
ராமபிரான் ராமானுஜ பிரியன்
வைரமுடி -சேவை=கண்ணை மூடி சமர்ப்பித்து கருடனுக்கே முதல் சேவை இன்றும்

போக மண்டபம் புஷ்ப மண்டபம் தியாக மண்டபம் ஞான மண்டபம்

திருவல்லிக்கேணி அருளிச் செயல் மண்டபம் என்பர்

கல்யாண புஷ்கரணியில் 1237 கருடன் சந்நிதி -திருமண ஏந்தி ஸேவை -எம்பெருமானார் எடுத்த திருமண் -தனமாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அளிக்கிறார்
பஹு தான்ய வருஷம் 1098-எம்பெருமானார் 82 திரு நக்ஷத்ரம் தை சுக்ல பக்ஷம் புனர்வஸு

கிருத யுகத்தில் வேதகிரி -ஸநத்குமாரரால் ஆராதனம்
த்ரேதா யுகத்தில் நாராயண கிரி
த்வாபர யுகத்தில் யாதவகிரி -நம்பி மூத்த பிரான் கிருஷ்ணன் -ஆராதனம்
கலியுகம் -யதிசைலம் -ராமாநுகர்
மாசி கேட்டை -உத்சவம் செல்லப்பிள்ளை இங்கு வந்து ப்ரதிஷ்டை செய்த நாள்
தமர் உகந்த மேனி
பாங்கூர் சத்திரம் -ரெங்கசாமி ரகுநந்தனன் -9620606866

மேல் நாட்டு -ஆராவமுது அனுசந்திக்க நாதமுனிகள் -பிரமாணம் ரக்ஷணம்
ராமானுஜர் ரக்ஷணம் -பிரமாதா ரக்ஷணம்
தத்தாத்ரேயர் -நாராயண கிரி -வேதம் ரக்ஷணம்
கடாரத்தில் பூரித்து வைத்தேன் -இன்றும் கடாரம் சொல்
குப்பாயம் -shirt -ஆண்டாள் பெரியாழ்வார்
உகிரால் கீண்டு சாப்பிடு -நகம் சொல்லாமல்
மரி குட்டிக்கு
பழமை ரக்ஷணம்
ப்ரமேயம் ரக்ஷணம் -அழகிய மணவாளன் -பல வருஷங்கள் இங்கு இருந்து ரக்ஷிக்கப் பட்டார்

திருமேனிக் காவலுக்கு மிதுனமாக எழுந்து அருள எம்பெருமானாரும் சேர்ந்து எழுந்து அருளுவார் இன்றும்

பேசும் எதிராஜர் -உத்சவரே பதில் சொல்லிக் காட்டி அருளினார்
ஏகதா பவதி -நித்ய ஸூரிகள் போல் இவரும் -தமர் உகந்த திருமேனி இங்கு

ஆலிங்கனம் பண்ணிக் கொண்டார் தான் உகந்த -தானான திருமேனியும் இவரே

சரம ஸந்தேஸம் திரு நாராயண புரம்
படித்தவா பாஷ்யம் தத் பிரவசனம்
தத் அசக்தவ் சடாரி போத்த்ரி ஸப்தா ஸ்ரத்தா
திவ்ய தேச  கைங்கர்யம் வா
ப்ரபந்ந த்வயம் அனுசந்தானம்
பரிசார்யா -ஸ்ரீ வைஷ்ணவன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
திருநாராயண புரத்தில் குடில் க்ருத்வா -யதுகிரி தடே நித்ய வாஸம்-ஆறு விஷயங்கள்

————

திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ – 4-1-1-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

உபாயத்வம் அடியிலே தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –
ஏகாதி பத்தியம் பண்ணும் ராஜாக்களே பிச்சை ஆகையால் நிருபாதிக சம்பந்த உக்தன் -நித்ய ஸ்ரீ –திருவடிகளைப் பற்றுங்கோள்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்-மண்டல நாதன் -ஏக அதிபதி -ஓட -நெடுங்காலம் -லோகத்துடன் பொருந்தி
ஆண்டவர் -ராஜ்ய ரஷணம் பண்ணிப் போந்தவர்கள்
ஐஸ்வர்யம் பக்னம் ஆனவாறே -லஜ்ஜித்து-இரவிலே- பிச்சை பெற தேடி
மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் இல்லையே

கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்-கருப்பு நாய் -இருட்டு அறியாமல் காலை வைக்க
கவ்வப்பட்ட கால் -உடைய ஒட்டாஞ்சில் –

பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-மகா பிருத்வியில் உள்ளார் அனைவரும் காண -இவரால் முன் நாள் நலியப்பட்டவர்கள்
இந்த ஜன்மம் தன்னிலே -கை மேல் பலன் -லஜ்ஜையையும் விட்டு தாமே அர்த்தித்து -தாமே கொள்வர்
ஐஸ்வர்யம் அஸ்தரம்

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-நித்ய ஸ்ரீ -நிருபாதிக சேஷி -திரு உடன் கூடிய தாள் -கை விடாத –
கால விளம்பம் பெறாமல் சடக்கென –பிராப்யமாக -அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள்

ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம் ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள்,
கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக
இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்;
ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால்
நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

நாயகம் – முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக.
‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

‘சார்வபௌமராய்ப் போந்த இராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்;
ஆன பின்பு, திரு மறு மார்பன் -‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே,
அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.-
ஈசான சீல நாராயணன் -பகவத் பாதர் ஆதி சங்கரர் –

ஒரு நாயகமாய் –
தனி அரசாக. ‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய
ஐஸ்வரியத்தைப் பௌண்ட்ரக வாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.
அநுகாரம்-சர்வேஸ்வரனைப் போலே -இவர்கள் தங்களை நினைத்து

நாயகம் -ஆழ்வார் கொண்டாட வில்லை -அவர்கள் அபிப்ராயத்தாலே –
‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே! சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுகலானேல் ஆடமர்க் கெழுக’ என்னா வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’–பாகவதம்
நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.

ஓட –
இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது, ‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி.
‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில்,

உலகு –
கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; ‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ,
அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும்
யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே,
முந்திரிகை நிலம்-கை மண் அளவு -ஷேத்திர அல்ப அம்சம் – உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது.

உடன் ஆண்டவர் –
இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல்.

அன்றிக்கே,
‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக் கொண்டு போந்த
கார்த்த வீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.

ஆண்டவர் –-ரஷிப்பவர் என்றுமாம் –

‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு
போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில்,
‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்ய முடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்;
அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே,
அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்:

கருநாய் கவர்ந்த காலர் –
‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு வாழ்கிறது என்?’
‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே!
வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே,
பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;
இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;
அவை கடிக்கும்.

அன்றிக்கே,
கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல்.

அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;
என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே,
‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று
கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.

காலர் –
‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.

சிதைகிய பானையர் –
கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே பொகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக் கொள்ளும்.
இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார்,
சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு
இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,
‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

பெரு நாடு காண –
முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ?
அதற்கும் போர இப்போது தடை அற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக,

அன்றிக்கே,
முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே எல்லாரும் காண வருவர்கள் ஆதலின்,
‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல்.
‘இப்படிச் செய்வது ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில்,

இம்மையிலே –
அப்படி வாழ்ந்த இந்தப் பிறவியிலே.

பிச்சை –
முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது?
இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.
முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு
ஆள் வைத்தே அன்றோ வாங்குவது?
இப்போது தாமே கொள்வர்.

அன்றிக்கே.
இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார்,
தாம் கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –
‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாளன்
இணையடியே அடைநெஞ்சே!’–பெரிய திருமொழி.6: 9 : 1.
இடர் கெடுத்த திருவாளன் இணை அடி’ என்றும்,
‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும்
வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும்.
இதனால், ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக் கதி இல்லை என்பது போதரும்;
கபாலித்வம்– தத்ர நாராயாண ஸ்ரீ மான் -மயா பிஷாம் –ஸ்வப்ன லப்த தனம் போலே –
கபாலம் போனதே -சிவன் பார்வதிக்கு சொன்னது -பிண்டியார் –சாபம் தீர்த்த ஒருவனூர் –
கபால போஜனம் –‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ?

தாள் –
‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?
அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை
‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?

காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; ‘வாழ்வு சாதலை முடிவாக உடையது;
உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன;
செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த
எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின்,
நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார்.

அன்றிக்கே,
‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கண நேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு?
அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது;
கேடு வருகைக்கு அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’
என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.

சிந்தித்து –
“இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா;
அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்;
நெஞ்சிலே அடி பட நினைக்க அமையும்’ என்றபடி.–
நெஞ்சிலே திருவடி பட –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
இடைவெளி இல்லாமல் சிந்திக்க இடை வெளி இல்லாமல் உஜ்ஜீவிப்போமே

உய்ம்மின் –
அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது.
‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்;
இரவு பகல் எந் நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப்
பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக
‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.

தாள் சிந்தித்து உய்ம்மின் –
அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? –அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம்
ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம்

————————

நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – 3-7-4-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

திரு நாரணன் –
அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ என்பர் மேல்.
அணிகலன்களைச் சொல்லுகிற இடத்தில் பிராட்டியை அருளிச் செய்வதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அங்குத்தைக்கு’ என்று தொடங்கி.
‘திருவாபரணங்களோடு சேர்த்துச் சொல்லப்படுகையால் பிராட்டியையும் திருவாபரணவகையில் கோடல் வேண்டும்,’ என்பதாம். அதற்குக் காட்டும்
பிரமாணம், ‘உன் மார்வத்து மாலை நங்கை’ என்பது. இது, திருவாய்.-10. 10 : 2.
திரு மார்பு ஆர மார்பு -திருவார மார்பு போலே –
அன்றிக்கே,
திரு ஆபரண ஆழ்வார்களாகிறார் நித்திய சித்த புருஷர்களாகையாலே இவர்களையுடையவன் திரு நாரணன் என்கையாலே,
இம்மிதுனமே உலகத்துக்குச் சேஷி என்கிறார்,’ என்னுதல்.
திரு’ என்பதனை ஆபரண கோடியிலே சேர்த்து அருளிச்செய்தார் மேல்.
திரு’ என்பதனை ‘நாரணன்’ என்ற பதத்தோடே கூட்டிச் சேஷித்வத்திலே நோக்காக அருளிச்செய்கிறார்,
திருவாபரண ஆழ்வார்களாகிறார்’ என்று தொடங்கி. மிதுனம் – இரட்டை. சேஷி – இறைவர்

———–

நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் – 9=8-3-

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்-குற்றம் அற்ற -சோபாதிக பாந்தவ்யம் இல்லையே -துர்லபத்வ குற்றம் இல்லாமல்
சுலபன்-திரு நாரணன் – -நிருபாதிக பந்து

நவை இல் திரு நாரணன்-சேர்
பற்றுதற்கு அரியனாய் இருக்கை முதலான-குற்றம் இன்றிக்கே-ஸ்ரீ மானான நாராயணன் -என்றது –
எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-சுலபனானவன் -என்றபடி –

————–

தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – 2-9-4-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண்  திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த
ஸ்ரீ மானான நாராயணனே –
இங்கே அம்மம் உண்ணப் போதராயே –

——–

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் —5-4-7-

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

திருப் பொலிந்த சேவடி –
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள் –
ஆர்ஜவ குணம் இருக்கிற படி
இவன் செவ்வை கேடே தனக்கு செவ்வையாகை –

ஐஸ்வர்ய சிஹ்னங்களை உடைத்தான திருவடிகள்
கதா புனவில் சொல்லுகிறபடியே –
பார்த்திவவ் யஞ்ஞாநான் விதமான திருவடிகள் (ஸ்ரீ ராமாயணம் -)

——————-

திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்–1-2-21-

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

யசோதை பிராட்டி உடைய சிநேகத்தை  உடையராய் கொண்டு அனுபவித்ததும் –
இவள் பாதாதி கேசம் அனுபவித்து பிறர்க்கு காட்டின கட்டளையிலே பேசினதுமான இதுவே –
அவளோடு இவருக்கு சாம்யம் ஆகையாலே –
அசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த -என்று அருளிச் செய்தார் ஆய்த்து-

—————–

வாராய் உன் திருப்பாத மலர் கீழ் – 2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –
வாராத இன்னாப்பாலே –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-
தாராதாய் -என்ற வசவாலே -அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–(பேராதே நான் வந்து-உன் திருவடிகளை -அடைந்து-உன் உகப்புக்காக -கைங்கர்யம் செய்வதே பிராப்தி )

——————–

திருப் பாதங்கள் (1)
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – 4-7-8-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

நின் திருப்பாதங்கள் மேல்-பிராப்தனான உன் திருவடிகளில்

நின் திருப்பாதங்கள் மேல் –
உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார்
திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை
அடைந்தவனாகக் கடவேன்,’ என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச்செய்தார்.
‘போக்கியதையுண்டானாலும் அடையத்தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘உன்னுடைய’ என்று தொடங்கி. இது, மாலதீ மாதவ நாடகம்.

————–

நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2

————-

தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே – 1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

உன் தேனே மலரும் திருப்பாதம்-
இவை ஒன்றும் இல்லை யானாலும் அடியில் உன் போக்யதையை பார்த்தால் தான் விடப் போமோ
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்னக் கடவது இறே
இவர் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது இறே ஆசைப் பட்டது -இவர் ஆசைப் பட்ட படியே திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்று
அந்த திருவடிகளையே காட்டிச் சேர விட்டான் –தேன் போன்ற கங்கை என்றுமாம்
உன் தேனே மலரும் திருப்பாதம் –என்று அத்தையே அபேஷிக்கிறார்
——————-

வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – 4-6=8=

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

வேதம் வல்லார்களைக் கொண்டு –
‘சர்வேசுவரனே பலமும் பலத்தை அடைதற்குரிய வழியும்,’ என்கிற வேத தாத்பரியம் கைப்பட்டவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு என்றது,
‘வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? -இது உலகில் நடை பெறாதே –
தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?
ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,’ என்றபடி.
இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ?
‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே,
அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?

வேதம் வல்லார்களைக் கொண்டு சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,
‘விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச்செய்வதனால்
நித்தியஸூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது;
அதனை விளக்குகிறார், ‘இங்கிருக்கும்’ என்று தொடங்கி.
இவர்கள் இருவரும் புருஷகாரமாய் இருப்பது, முமுக்ஷூத்வ அவஸ்தையிலும், முத்த அவஸ்தையிலும் ஆம்.
‘அவர்கள் புருஷகாரமாய் இருப்பர்களோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அந்த அமாநவன்’ என்று தொடங்கி. இது, சாந்தோக்யஉபநிட. 4 : 15.
அமாநவனைச் சொன்னது, நித்திய சூரிகளுக்கும் உபலக்ஷணம்.
இங்கு, ‘முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள’ என்ற தமிழ் மறை அநுசந்திக்கத் தகும். இது, திருவாய். 10. 9 : 8.

விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி திருவடிகளிலே பணிந்து. இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது –
நோய் கொண்டவள் இவள்; நோய்தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யாமல்.

—————–

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – 8-5-5-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

சொல்ல மாட்டேன் –
என் உள்ளத்தில் நின்று நலிகிற படிக்கு பாசுரம்-இடப் போகிறது இல்லை –

அடியேன் –
சம்பந்தத்தால் தவிர மாட்டுகின்றிலேன் –

உன் துளங்கு சோதித் திருப்பாதம்
மாட்டாத பிரகாரம் ஏது -என்ன –விளங்கா நின்றுள்ள ஒளியை உடைய உன் திருவடிகள்

எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா-
அளவிறந்த அழகை உடைய-இளம் சூரியர் இருவர் போலே-என் உள்ளத்தே நின்று நலிகிற படி-
கண்களால் பருகலாம் படி இருக்கையாலும்
வருத்தத் தொடங்கின இத்தனை என்று தோற்றுகையாலும்-இள நாயிறு -என்கிறார்-

அன்றிக்கே –
இள நாயிறு -என்பதற்கு
என்னை வருத்த வருத்த இளமை மிகுகிறபடி -என்னலுமாம்
என் உள்ளவா சொல்ல மாட்டேன் -என்று கூட்டுக –

மீனோடு ஆமை –இன்னம் கார் வண்ணனே -அவதரித்து அவதரித்து இளகிப் பதித்த படி —
யுவ குமாரா என்னுமா போலே இள நாயிறு -சேவை சாதிக்காமல் ஆழ்வாரை துடிக்கப் பண்ணப் பண்ண -இளமை கூடி
வா போகு-சக்கரவர்த்தி பஞ்ச விம்சதி போலே

அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே –
இதற்கு -உன்னைக் காட்டாதே அருமைப் படுத்தப் பார்த்தாய் ஆகில்-
நாட்டார் -தண்ணிது-என்கிற அஞ்ஞானம் வருவதற்கு ஒரு உபாயம் ஏதோ -என்று அருளிச் செய்வர் பட்டர் –
அப்போது மறந்து பிழைக்கலாம் என்னுமதனாலே –

அன்றிக்கே
உன் திருவடிகள் என் உள்ளத்திலே பிரகாசியா நிற்க துக்கத்துக்கு காரணமான-
அறிவின்மை வருவதற்கு உபாயம் உண்டோ -என்று அருளிச் செய்வர் அம்மாள் –என்னே -பிரிநிலை ஏகாரம் -உபாயம் இல்லை என்றவாறு –

உண்டாகில் உண்டு உடுத்துத் திரியலாமே உலகத்தாரைப் போன்று –
சூர்யன் இருக்க இருள் வராதே -தேஜஸ் இருள் சேராதே பால ஆதித்யர் -உதித்த பின்பு -அல்லல் -துக்கம் என்றவாறு –

——————

தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – 105-

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் –
பரம வைதிகரானவர்கள் ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள் –
(தூங்கும் கண்ணன் -கண் துயில் மாயன் -கண் வளரும் கமலக் கண்ணன் -பற்றாமல் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
இவரை பற்ற அன்றோ அடுப்பது-)-அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்
அவர்கள் அடியனான எனக்கு வஸ்த்வ்ய தேசம்

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –

செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் -பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து – என்கிறபடியே
அப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே ஈடுபட்டு –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி –
அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான –
கலக்கமிலா நல் தவ முனிவராலே —

நெஞ்சில் மேவும் நல் ஞானி –
இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு – போருகையாலே அவர்கள்
நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷன்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –

செழும் திரை — மேவு நன் ஞானி
தனக்கு ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த நன் ஞானம் –பாற்கடல் கண் துயிலும் ஸ்ரீ மாயன் குணங்களிலே ஈடுபட்டு –
அதன் கண்ணே நிலை நிற்கும் -ரசிகர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்களாலும் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு வாய்த்த இந்த சாஸ்திர தாத்பர்ய ஞானத்தின் சீர்மை இருந்தபடி என் -என்று
நெஞ்சார எப்பொழுதும் கொண்டாடும்படி உள்ளதாம் – அத்தகைய ஞானம் வாய்ந்தவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் .

ஸ்ரீ எம்பெருமான் கண் துயிலும் ஸ்ரீ திருப்பாற் கடலிலே அலைகள் செழுமை வாய்ந்து உள்ளன –
செழுமை -அழகு -பெருமையுமாம் –
கோலக் கருமேனி செங்கண் மால் திரு மேனியைத் தீண்டப் பெற்ற பெரும் களிப்பினால் –
கைகளைத் தூக்கி ஆரவாரத்துடன் ஆடுவது போன்று உள்ளது அந்தக் கடல் –
அங்கே போய் ஸ்ரீ மாயனை வழி படுகின்றனர் ஸ்ரீ ப்ரஹ்ம பாவனையில் நிற்பவர்களான சனகாதி முனிவர்கள் –
தன்னிடம் வந்து பள்ளி கொண்ட ஸ்ரீ பரமனை கடல் தன் அலைகள் ஆகிற கைகளாலே திருவடிகளை அலைத்து –
ஊஞ்சலில் ஆட்டி உறங்கும்படி -செய்வதனால் ஸ்ரீ எம்பெருமான் கண் துயில்வதாக தோற்றுகிறது -பக்தர்களுக்கு –

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 13- என்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் .
உண்மையில் உறங்குகிறானா அவன் – அவனுறங்கி விட்டால் உலகின் கதி என்னாவது -ஸ்ரீ மாயன் அல்லனோ –
பொய் உறக்கம் கொள்கிறான் -உறங்குவான் போல் உலகு உய்யும் வழியை யோசனை செய்கிறான் –
உறங்குவான் போல் யோகு செய்வதாக கூறுகிறார் ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ நம் ஆழ்வார் –
நித்ராசி ஜாகர்யயா -விழிப்புடன் உறங்குகின்றாய் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி –
உலகினை காக்கும் விஷயத்தில் விழிப்புடன் உறங்குகின்ற ஆச்சர்யத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே புண்டரீகாஷா -ஸ்ரீ தாமரைக் கண்ணனே உன் அழகுக்கு தோற்றோம் -என்றபடி
குணத்திற்கு தோற்று திருவடிகளிலே விழுகிறார்கள் அந்த ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –

இது ஒரு நாள் நிகழும் நிகழ்ச்சி யன்று –
பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 89- என்றபடி
நாள் தோறும் நடை பெரும் நிகழ்ச்சியாகும் –
ஆகவே வரும் போதெல்லாம் வியக்கத்தக்க குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் விழுவதும் அவர்கட்கு மாறாத இயல்பாகி விட்டது –
இது தோற்ற -ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ மாயன்-ஆச்சர்யப் படத் தக்கவன்
பாற்கடல் பள்ளிகொள் மாயன் -என்றும் ஒரு பாடம் உண்டு

இங்கனம் மாயன் குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் வீழ்தலின் இருப்பு உடையார் உள்ள -ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம் ஆழ்வாரால் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -ஸ்ரீ திருவாய் மொழி – 8 3-10 – என்று போற்றப்படும் ஏற்றமுடைய தங்களது நெஞ்சிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய நல் ஞானம் மேவுதற்கும் இடம் ஏற்பட்டு விடுகிறதாம் –
பல காலும் அவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் உடைய நல் ஞானத்தை கொண்டாடிப் பேசுகையாலே –அவர்கள் நெஞ்சிலே
அந்த ஞானம் இடம் கொண்டமை தெரிகிறது .
நூல்களிலே ஸ்ரீ சனகாதி முனிவர் பேச்சுக்களாய் வரும் இடங்களிலே சரம பர்வ விஷயமாக ஸ்ரீ எம்பெருமானார் அளித்த
ஞானமே பலகாலும் கொண்டாடப் பட்டுள்ளமையைக் கண்டு ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுகிறார் -என்க –
மேவு நல் ஞானி ஸ்ரீ எம்பெருமானது குணத்தை ரசித்து அனுபவிக்கும் நெஞ்சிலும் இந்த நல் ஞானம்
ரசிக்க தக்கதாய் இருத்தலின் பலகால் கொண்டாடும்படி இடம் பெறுகிறது .
மேவுவது விசேஷணமான ஞானம்-அதனை உடையவன் ஞானி அல்லன் .

நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் –தொழும் திருப் பாதன்
லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே- என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் –
பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் – என்றும் –
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே
பிரணமாத்ய அனுவர்த்தனந்களை பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading