Archive for April, 2022

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்தோத்திரங்கள்–ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

April 6, 2022

ஸ்ரீ வராஹ மூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது.
இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில் வாழ இயக்கம் அடைந்த
நிலையை எடுத்துக் காட்டுகிறது

——-

ஸ்ரீ வராஹ மூர்த்தி ஸ்லோகம்
ஸ்ரீ வராஹ மூர்த்தி பூமியைக் காக்க எடுத்த மூன்றாவது அவதாரமான
ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு உரிய ஸ்லோகம்

ஸுத்த ஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம் – –
தயா நிதிம் தயா ஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதா பாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம் யஹம்

ஸுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே,
ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே,
கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே,
ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, ஸ்ரீ வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

———–

ஸ்ரீ வராக அவதாரத்தின் கதை இதுதான்

ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர்.
அங்கு காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷி களைத் தடுத்தார்கள்.

அந்த ரிஷிகள் கோபம் அடைந்து,
“நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள்.

ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி,
“உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தை
மறவாதிருக்க அருள் புரிய வேண்டும்” என்று கேட்டனர்.
ஸ்ரீ விஷ்ணு அங்கே தோன்றி, முனிவர்களிடம், “இவர்கள் செய்த தவறுக்குத் தாங்கள் அளித்த சாபம் சரியானது தான்.
இவர்கள் இருவரும் பூலோகத்தில் கொடிய அசுரர்களாக மூன்று முறை பிறந்து,
பின், நம் அருளினால் நம்மையே அடைவார்கள்” என்று கூறினார்.

அதன்படி, இருவரும் கசிப முனிவருக்கும், அதிதிக்கும் பிள்ளைகளாகப் பிறந்தார்கள்.
முதலில் பிறந்தவன் இரண்யகசிபு.
அடுத்துப் பிறந்தவன், இரண்யாட்சன்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவம் இருந்து,
‘ எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது’ என்று வரம் பெற்று,
மூன்று லோகங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டான்.
இரண்யாட்சனும் பிரம்மனிடம் வரங்களைப் பெற்றுப் பலசாலியாகி, தேவர்களை சிறை பிடித்தான்.
அவர்கள் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்யாட்சன் ஆணவம் அதிகமாகி, வருண பகவானை வம்புக்கு இழுத்தான்.
அதற்கு வருண பகவான், “ அசுரனே, விஷ்ணு பகவான் வராக உருவம் எடுத்து வருவார். அவரிடம் போராடு” என்று சொன்னார்.
அவன் வராக மூர்த்தியைத் தேடிப் பல திசைகளிலும் அலைந்து திரிந்தான்.
நீர்ப் பிரளயத்தில் பூலோகம் மூழ்கியதால், பிரம்மா மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார்.
அப்போது அவருடைய சுவாசத்திலிருந்து வெண்ணிறமாக சிறிய வராகம் ( பன்றி ) ஒன்று உருவாகிச்
சிறிது சிறிதாக வளர்ந்து பிரம்மாண்டமான உருவம் எடுத்தது.

பிரளயத்தில் மூழ்கியிருக்கும் பூமியை வெளியே கொண்டுவரச் சமுத்திரத்தில் குதித்தது.
இச் சமயத்தில், எங்கு தேடியும் வராக மூர்த்தியைக் காணாததால், இரண்யாட்சன் சோர்வடைந்து,
அசுர லோகத்தில் சுகமாக இருந்தான். அப்போது நாரதர் அங்கே தோன்றி,
“இரண்யாட்சா, மகாவிஷ்ணு வராக உருக் கொண்டு நீரில் மூழ்கியிருக்கும்
பூமியை மேலே தூக்கிக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
உடனே அவன் கதாயுதத்தைக் கையில் ஏந்தியபடி விரைந்தான்.
வராகமூர்த்தி தமது கோரைப் பற்களால் பூமியைத் தூக்கியபோது இரண்யாட்சன் தன் கதாயுதத்தால் அடித்தான்.
இருவருக்கும் கடும் போர் உண்டானது.
இரண்யாட்சன் அடித்த அடியால், மகா விஷ்ணுவின் கதாயுதம் கையிலிருந்து நழுவி விழுந்தது.

தேவர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றனர். இரண்யாட்சன் மீண்டும் தன் கதாயுதத்தால் தாக்க,
மகாவிஷ்ணு தம் இடது காலால் அதைத் தட்டிவிட்டு, தம் கையில் சக்கராயுதத்தை வரவழைத்தார்.
இரண்யாட்சன் சூலாயுதத்தை ஏவினான். சக்கராயுதத்தால் சூலாயுதமும் பொடிப் பொடியானது.
இரண்யாட்சன் ஆவேசமாக மகாவிஷ்ணுவின் மார்பின் மீது ஓங்கிக் குத்தினான்.
இருவருக்கும் உக்கிரமான போர் மூண்டது. இரண்யாட்சனால் சமாளிக்க முடியவில்லை.

பின், அவன் மறைந்து, ஆகாயத்திலிருந்து கற்களையும், அனேகவித பாணங்களையும் கொண்டு தாக்கினான்.
சிறிது நேரம் அவனுடைய ஆற்றலை விளையாட்டாக வேடிக்கை பார்த்தார் மகா விஷ்ணு.
அசுரர்கள் பலர், பயங்கரமான உருவங்களில் இரண்யாட்சனுக்கு உதவியாக வந்தனர்.
அவர்கள் அத்தனை பேரையும் வதம் செய்தார் மஹாவிஷ்ணு.

இனியும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று எண்ணிய மகாவிஷ்ணு அவனை இறுகப் பிடித்துத்
தலையின் மீது ஓங்கி அடிக்க, இரத்தத்தைக் கக்கிக் கொண்டு பூமியின் மீது விழுந்து மடிந்தான்.
அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.
இது தான் திருமாலின் 3வது அவதாரமான வராக அவதாரம் பற்றியது.

2. வராகரின் பேருருவம்

திரிவிக்கிரம அவதாரத்தை விட பல மடங்கு பெரிய அவதாரம் வராக அவதாரம் என்பதை
ஒரு எளிய உதாரணத்தின் மூலம் ஆழ்வார்கள் காட்டுகின்றார்கள்.
கீழே உள்ள ஏழு உலகங்கள்,மேலே உள்ள ஏழு உலகங்கள், அதைத் தாண்டி அண்ட ஆவரணங்கள் எல்லாம்
கடந்து சென்ற அவனுடைய திருவடியை, பிரம்மன் சத்திய லோகத்தில் வணங்கி கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்.
ஆனால் வராக அவதாரம் திருவிக்கிரம அவதாரம் விட பெரியது.
‘‘குரமத் யகதோ யஸ்ய மேரு கண கணாயதே” என்ற சுலோகம் வராகத்தின் பேருருவைக் கூறுகிறது
மேருமலையும் வராகத்தின் குளம்படியில் சுருண்டு தூள்தூளாக ஆகியது என்றால்
அவன் உருவத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. அத்தனை பிரம்மாண்டமானது வராகரின் பேருருவம்.

3.வேதங்களில் வராக அவதாரம்

வராக புராணம் என்பது மகா புராணங்களில் திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணமாகும்.
இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும்
சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.
இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள்
ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
வராகர் பற்றிய குறிப்பு கிருஷ்ண யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வராக அவதாரத்தை பொருத்தவரை முதல் குறிப்பு வேதத்தில் சதபத பிராமணத்தில் இருக்கிறது.
நிலவுலகில் வலிமை மிக்க பன்றி ஒன்று எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து வெளிவந்ததாகவும்
அந்தப் பன்றியும் படைப்பு கடவுளான பிரஜாபதியும் ஒருவரே என்றும் சதபத பிராமணம் கூறுகின்றது.

நாராயண வல்லியில் வராக அவதாரம் மிக அருமையான முறையில் விளக்கப்பட்டிருக்கிறது.
அதில் பூமிப் பிராட்டியை மீட்டவுடன் வராகன் ஆனந்த சொரூபமாக இருந்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பகவத் சாஸ்திரத்தில் ஸ்ரீ வராக பெருமானின் உருவம் விளக்கப்படுகிறது.

‘‘விஷ்னோர் மகா வராகஸ்ய நிர்மாண மது நோச்யதே” என்கிற மந்திரத்தில்
கழுத்து வரை மனித உருவாகவும் மேலே திருமுகமண்டலம் வராக முகமாகவும்
இடது முழங்கையில் பூமிப் பிராட்டியை ஏந்திக் கொண்டும்
வலது திருக்கையை இடுப்பில் வைத்துக்கொண்டும்
திருமுகமண்டலம் திரும்பி தேவியின் திருமேனித் தடங்களை முகரும் படியாகவும்
திருவாழ்மார்பன் ஆகவும் திவ்ய ஆபரண பூஷிதனாகவும் கர்ப்பக்கிரகத்தில்
வராக பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் ஸ்ரீ முஷ்ணத்தில் வராகர் காட்சியளிக்கிறார்.
விஷ்ணு புராணம் வராக அவதாரத்தின் தோற்றத்தை மிக விரிவாகக் கூறுகின்றது.
விஷ்ணு புராணத்தில் இரண்யாட்சனைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை
ஆனால் கடலில் பூமி மூழ்கிய விஷயமும் பகவான் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிய விஷயமும்,
அப்பொழுது பூமி பிராட்டி செய்த ஸ்தோத்திரம் மற்ற தேவதைகள் கூறிய ஸ்துதிகள் கூறப்பட்டுள்ளன.

விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ வராக அவதார வைபவம்
“தஸ்ய யஜ்ஞ வரஹஸ்ய விஷ்ணோ அமிததேஜச பிரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நம:”
என்று குறிப்பிடப்படுகிறது
அவர் சப்த சமுத்திரத்திலும் நிற்கும் பொழுது அவருடைய முழங்கால் அளவுக்கு கூட சமுத்திரம் இருக்கவில்லை
என்று புராணங்கள் கூறுகின்றன.
சுவேத வராகத்தின் கர்ஜனை ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்கிறது
(வராகர் பூமியை துக்கிய போது அவரின் மூச்சுக்காற்றின் வேகம் காரணமாக அவரின் வேர்வை
ஜனலோகம் வரை சென்றதாய் விஷ்ணுபுராணம் கூறுகிறது)

தன்னுடைய 100 கைகளால் ஒரு பன்றி இப்பூவுலகை மேலேதூக்கி வந்தது என்று தைத்ரீய ஆரண்யகம் குறிப்பிடுகிறது.
மகாபாரதத்திலும் மார்க்கண்டேய புராணத்தில் விஷ்ணுவின் அவதாரமாக பூவராகர் பெருமை பேசப்படுகிறது.

பிரம்மாண்ட புராணத்தில் ஐந்தாம் அத்தியாயம் வராக பெருமானின் பேருருவை வருணிக்கிறது.

வராக சரம ஸ்லோகம்

வைணவ சமயத்தில் மூன்று மஹா மந்திரங்கள் உண்டு. அதில் ஒன்று சரம ஸ்லோகம்.
அந்த சரம ஸ்லோகத்தில் மூன்று விதமான மந்திரங்கள் உண்டு.
அதில் முதன்மையான சரம ஸ்லோகம் வராக அவதாரத்தில் வராகப்பெருமாள் பூமாதேவிக்கு சொன்னது.

“ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்”

அவர் சொன்ன அந்த சரம ஸ்லோகத்தின் உடைய பொருள் வராக சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸ்,
ஒரு மனிதன் நல்ல உடல்நலத்தோடு இருக்கக் கூடிய நிலையில், வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால் அவர் அந்திம திசையில் ,அவரால் பகவான் திருநாமமும் சொல்ல முடியாத
ஒரு நிலையை அடைந்து,,நினைவிழந்து,இருக்கும்போது,தெய்வத்தினுடைய நாமமும் சிந்தனையோ செய்யவேண்டிய
அவசியம் இல்லாதபடி நானே அவனுடைய அருகில் சென்று அவனை என்னுடைய பதத்திற்கு அழைத்துக் கொள்கிறேன்.

இதை பெரியாழ்வார் மிக அழகான பாசுரத்தில் பாடுகின்றார்.

“துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்
ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்பு என்னை வந்துநலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!”

யாகங்களும் வராகனும்
வராகர் பொதுவாக ஆதி வராகர்,
யக்ஞ வராகர் மற்றும்
பிரளய வராகர் ஆகிய மூன்று வடிவங்களில் வணங்கப்படுகிறார்.

வராக பெருமானுக்கு உள்ள தனிச்சிறப்பு, யாகங்களைக் காப்பாற்றுகின்ற மூர்த்தி.
யாகங்கள் நிறைவேற வேண்டும் என்று சொன்னால் அங்கே
வராக பெருமாள் யக்ஞ வராகராய் ஆவாஹனம் ஆக வேண்டும்.
120 (10 யோசனை)கிலோ மீட்டர் அகலமும் 1200 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவராக
மலையைப் போன்ற பெரிய உருவோடு வெண்மையான கூர்மையான பற்களைக் கொண்டு
தீயைப் பொலிகின்ற ஒளியும் சூரியனைப் போல ஜொலிக்கும் கண்களும் கொண்டு விளங்கியதாக
இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வராக மூர்த்தியின் வடிவம் வேத வேள்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒப்பிடப்படுகிறது.
அவரே ஒரு வேள்விச் சாலை.
உபநிடதங்களும் அவற்றின் மறைபொருளும் அவருக்கு இருக்கை.
சூரியனும் சந்திரனும் அவரது இரு கண்கள்.
வேதத்தின் சாகைகள் அவருடைய காதணிகள்.
அவருடைய நீண்ட முகம் வேள்வியின் சுருக்
அதாவது ஆஜ்யம் விடுகின்ற கரண்டி.
அவருடைய பெருத்த ஓசை சாமவேதம்.
அவருடைய வடிவம் உண்மையும் ஒழுக்கமும் நிறைந்த வடிவம்.
வேத மேடையே அவரது இதயம்.
சோம பானமே அவரது குருதி எப்படி வர்ணிக்கப்படுகிறது.

வராகரைப் போற்றும் துதி நூல்கள்

திருமாலை போற்றும் ஸ்ஹஸ்ரநாமாவளிகள் ஏழு பெயர்கள் வராக அவதாரம் தொடர்புடைய
திருநாமங்கள் ஆக விளங்குகின்றன.
இந்த ஏழு திருநாமங்களும் திருவுருவத்தை வர்ணிக்கின்றன.
பூமியைத் தாங்கும் பெரிய உருவத்தை உடையவன்;
பூமியைத் தாங்கும் பெரிய கொம்புகளை உடையவன்;
வராக முகத்தை உடையவன்;
பூமியை திரும்பவும் அடைந்தவன்;
பர ஞானம் இவற்றைக் கொடுப்பவன் என்று திருநாமங்கள் போற்றுகின்றன.

ஆழ்வார்கள் அனைவருமே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பொய்கை ஆழ்வார் ஆறு பாசுரங்கள், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்கள், பேயாழ்வார் ஒரு பாசுரம்,
திருமழிசையாழ்வார் ஆறு பாசுரங்கள், நம்மாழ்வார் 11 பாசுரங்கள், குலசேகர ஆழ்வாரும் ஆண்டாளும் ஒரு பாசுரம்,
பெரியாழ்வார் ஏழு பாசுரங்கள்,திருமங்கை ஆழ்வார் 15 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்

இது தவிர ஸ்ரீ வேதாந்த தேசிகன் தேசிக பிரபந்தம், தசாவதார ஸ்தோத்திரம்,பூஸ்துதி, ரகசிய சிகாமணி
போன்ற நூல்களிலும் வராகப் பெருமானைப் போற்றியுள்ளார்.

இது தவிர வராக கவசம், ஸ்ரீ வராக ஸ்தோத்திரம்,வராக உபநிஷத்,
ஸ்ரீ பூவராகர் சுப்ரபாதம், பிரபத்தி, மங்களம் போன்றவை
வராக பெருமானின் பெருமையைப் போற்றும் வண்ணம் உள்ளன.

வராக தலங்கள்

பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் காஞ்சி வரதர் சந்நதியிலும்,
மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலிலும், மாமல்லபுரத்திலும் ,
திருமலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீ வில்லிபுத்தூர், முதலிய
தளங்களிலும் வராகர் சன்னதிகள் உள்ளன.
ஸ்ரீ முஷ்ணம் வராகருக் கென்றே உள்ள தலம்.
அக்கால அரசர்கள் பலரும் தங்கள் ஸ்தூபிகளில் வராகர் உருவைப் பயன்படுத்தினர்.
நாணயங்கள் வராகர் பெயரால் வராகன் என்றே வழங்கப்பட்டன.
வராகி மிகிரர் என்ற பெயரில் உள்ள ரிஷி ஜோதிட சாஸ்திரத்தை வரையறை செய்து கொடுத்தார்.
அரசு முத்திரைகளில் வராகர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டன.

முஸ்தா சூரணம்

ஆச்சாரியர்கள் வராக அவதாரத்தில் மேன்மையை மிக அற்புதமாகப் பேசுகின்றார்கள்.
பகவான் அவதாரம் எடுக்கும் பொழுது அந்த அவதாரத்துக்கு ஏற்ப அத்தனை இலக்கணங்களும்
பொருந்தும் படியாக ஆகி விடுகின்றார். இதற்கு “மெய்ப்பாடு” என்று பெயர்.
வராக அவதாரத்தில் அவருடைய உணவு என்ன என்று சொன்னால்
நிலத்திலேயே அடியில் முளைக்கக் கூடிய கோரைக்கிழங்கு.

தண்ணீர் நிறைந்து உள்ள சதுப்பு நிலங்களில் உண்டாகும் இந்த கோரைக்கிழங்கு சரீர வியாதிகளைப் போக்க வல்லது.
கபம், பித்தம், ஜுரம் முதலியவை இந்த மருந்தினால் தீர்ந்துவிடும்.வராக சேத்திரம் ஆகிய ஸ்ரீ முஷ்ணத்தில்
இந்த முஸ்தா கிழங்கு சூரணத்தை பிரசாதமாகத் தருவர்.
அதனை சர்க்கரையோடு அல்லது வெல்லத்தோடு சேர்ந்து உண்டால் நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய
பல்வேறு விதமான நோய்களும் நீங்கிவிடும்.
ஆசாரியர்கள் இந்த கோரைக்கிழங்கை முத்தக்காசு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்கள்.

சங்கல்ப மந்திரம்

நாம் தினசரி சங்கல்ப மந்திரம் சொல்கிறோம்.
அதில் வராகப் பெருமான் பற்றிய குறிப்பு வருகிறது.
‘‘துவிதீய பரார்த்தே ஸ்ரீ சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலியுகே ப்ரதமே பாதே” என்று
சங்கல்ப மந்திரம் கூறுகிறோம்.
இது கலியுகத்தின் முதல் பாதம் ஆகும்.மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள்.
தேவர்களுக்கு 365 நாள் ஒரு தேவ ஆண்டு. 1200 தேவ ஆண்டு கலியுகம்.

கலியுகம் ஒரு மகாயுகம்

ஆயிரம் மகாயுகம் ஒரு பிரம்மாவின் பகல். இப்பகலின் முடிவில் ஒரு பிரளயம் ஏற்படும்.
அப்பொழுது எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் மயமாகவே இருக்கும்.
இரவு முடிந்த பிறகு மறுபடியும் படைப்புத் தொழில் ஆரம்பிக்கும். இது ஒரு கால சுழற்சி.
இதை நாம் ஒரு கல்பம் என்று சொல்லுகின்றோம்.
ஒரு கல்பத்தில் 12 மனுக்கள் வாழ்ந்து போவார்கள்.
ஒரு மநுவின் காலம் ஒரு மன்வந்தரம் எனப்படும் இப்பொழுது 6 மனுக்கள் போய்விட்டனர்.

ஏழாவது மனுவில் கிருத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் முடிந்து
கலியுகத்தின் முற்பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த கல்பம் உண்டாகும் பொழுது தான் பகவான் வராக ரூபம் எடுத்து தண்ணீரில் இருந்து
பூமிப் பிராட்டியை மேலே கொண்டுவந்து நிலை நிறுத்தினார்.
அதனால் நாம் வாழும் கல்பம் ஸ்ரீ ஸ்வேத வராக கல்பம் எனப்படுகிறது.
இதை தினசரி சொல்லி நம்மை அறியாமலே வராகப் பெருமானை வணங்கும் பேறு நமக்குக் கிடைக்கிறது.

————-

வராஹ அவதாரம்:
தியான ஸ்லோகம்

அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந் முக்தாபம் கண்ட
தேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம் ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள்
கட்ககேடே கதாக்யாம் ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.

மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹ ரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா

————

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஸ்திதே மனஸி ஸூ ஸ் வதே சரீரே சதி யோ நர |
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ||

ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்பக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||

ஸ்ரீ இராமாயண சரம ஸ்லோகம்
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே|
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம யுத்த || 18.33

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் (பகவத் கீதை)
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ|
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச ||18.66
—-

காஷ்ட பாஷாணங்கள் விழுந்து கிடக்கும் போது என்ன செய்வது? –
காஷ்ட என்றால் கட்டை போலும், பாஷாணம் என்றால் கல் போலும்,
நினைவு தப்பி விழுந்து கிடக்கும் நிலையில் பெருமாளை நினைக்க முடியாதே என்ன செய்வதே?

பதில்:
வராஹ சரம ஸ்லோகத்தில் இதற்கான பதில் சொல்லப்பட்டுள்ளது –
“ததஸ்தம் ம்ரியாம்நாம் து காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்|
அஹம் ஸ்மராமி மத்வக்தம் ந்யாயாமி பரமாம் கதிம்||”

வராஹ பெருமாள் பூமா தேவிக்கு தானே கூறும் விளக்கம்:
என்னை பிறப்பு அற்றவனாக நன்கு உணர்ந்து, மனது நல்ல முறையிலும், உடலில் சக்தி இருக்கும்போது
1) எவன் என்னுடைய திருநாமத்தை உரக்க தினமும் சொல்லுகிறானோ
2) எவன் என்மேல் விஸ்வாசம் கொண்டு என் திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ
3) அவனது முயற்ச்சியை விட்டு என்னை மட்டுமே உபாயம் என பற்றி
என்னுடைய திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ (சரணாகதி) அவனுக்கு:
அந்திம காலத்தில் அவன் கட்டை மாதிரி கிடக்கும் போது (காஷ்ட்ர பாஷாணாம் சன்னிபம்!),
எல்லாரும் கை விட்ட நிலையில்! பெருமாள் சொல்லறார், நான் கைவிடமாட்டேன்! (அஹம் ஸ்மராமி மத்பக்தம் )

அந்த காலத்தில் என் நாமத்தை சொல்ல வில்லை என்றால் நான் அவனை கை விடுவேனா?
சரணாகதி பண்ணிய நாளிலிருந்து நினைவு தப்பும் வரை என்னை நினைத்து இருந்தான், அவனை விட்டு விடுவேனா?

சரணாகதி செய்த அடியார்(மறந்தும் புறந்தொழா மாந்தர்)என்னுடைய பக்தன், என் பெயரை சொன்னவன்,
என்னுடைய திருவடியில் சரணாகதி பண்ணினவன், அவனை நான் ஒரு நாளும் கை விட மாட்டேன்..

நானே வருவேன், என்னுடன் அர்சிராத்ரி மார்கத்தில் வழித்துனையாக (வழித்துனை பெருமாள் – திருமோகூர்)
அழைத்துக்கொண்டு வைகுந்தம் சென்று (ந்யாயாமி பரமாம் கதிம்) நித்ய கைங்கரியத்தை கொடுத்து அருளுவேன்🙏

எம்பெருமானார் திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜ பெருமாளிடம் கேட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்று –
“அந்திம காலத்தில் பெருமாளை நினைத்தால்தான் வைகுந்தம் கிட்டுமா?
தேவாதி ராஜனும் இதற்கு சரணாகதி செய்து என் மேல் திட விஸ்வாசம் கொண்டிருக்கும்
அடியார்களை கடைசி காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் வைகுந்தம் கொடுப்போம்!

இதிலிருந்து நாம் அறியும் விஷயம் என்னவென்றால்
கடைசி காலத்தில் அவர் நம்மை நினைக்க வேண்டும் (அஹம் ஸ்மராமி மத் பக்தம்) என்றால்-
சரணாகதி செய்த பின்னர் நாம் அவரை எப்பொழுதும் (நினைவு தப்பும் வரை) நினைத்து இருக்க வேண்டும்!
கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்!

———–

த்விதீ யஸ்ய பரார்த்தஸ்ய வர்த்தமானச்ய வை த்விஜ
வராஹ இதி கல்போ அயம் பிரதம பரிகீர்த்தித –1-3-28-

ப்ரஹ்மா நாராயணாக்யோ அசௌ கல்பாதௌ பகவான் யதா
ஸ ஸர்ஜ சர்வ பூதானி ததா சஷ்வ மஹா முநே –1-4-1–என்று
மைத்ரேயர் வராஹ கல்ப படைப்பைப் பற்றியும் கேட்கிறார்-

பவதோ யத் பரம் தத்தவம் தன்ன ஜா நாதி கச்சன
அவதாரேஷூ யத்ரூபம் ததர்சந்தி திவௌ கச –1-4-17-

உனது நிஜமான ஸ்வரூபத்தை யார் தான் அறிவார் -நீ லீலையாக செய்து அருளின அவதாரங்களை அன்றோ
தேவர்கள் ஆராதிக்கின்றனர் -என்றபடி

யத் கின்ஜன் மநஸா க்ராஹ்யம் யத் க்ராஹ்யம் சஷூராதிபி
புத்த்யா ஸ யத் பரிச்சேத்யம் தத் ரூபம் அகிலம் தவ –1-4-19–என்று

மனத்தாலே கிரஹிக்கப் படும் சுகாதிகளும் –கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கப் படும் ரூபம் போன்றவைகளும்
-புத்தியினால் ஆலோசிக்கப் படும் பிரமாணாந்தரங்களும் உன்னுடைய ஸ்வரூபம் அன்றோ

ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்துதிக்கின்றாள்-ஹே சம்பூர்ண ஞான மயனே –ஹே ஸ்தூல மாயனே -ஹே அவ்யயனே –
ஹே அநந்த-ஹே அவ்யக்த -ஹே வ்யக்தமய பிரபோ –
ஹே பராபர ஸ்வரூப -ஹே விச்வாத்மன் -ஹே யஜ்ஞ பதே-ஹே அநக -ஹே பிரபோ – -இத்யாதி

———————

ஸ்ரீ தைத்திரயம் –
அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே -இத்யாதி பஞ்ச பிரகார பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபம்

ஸ்ரீ வராஹ புராணம் -சாத்விக புராணங்களில் ஓன்று -24000 ஸ்லோகங்கள் கொண்டது
கைசிக மஹாத்ம்யம் இதில் உள்ளது
48 அத்யாயம் -92- ஸ்லோகங்கள் இதில் உண்டே

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்

மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57-

மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர –58–

538-த்ரிபத-
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

539-த்ரிதச அத்யக்ஷாய
த்ரி தச -முப்பத்து மூவர் தேவர்களுக்கும் சேவியர் இவரே
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

540- மஹா ஸ்ருங்காய
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

541–க்ருதாந்தக்ருத
ஹிரண்யாக்ஷனை நிரசித்தவர்
யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

542-மஹா வராஹாய
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-ஸ்லோகம் சொல்லுமே
மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –

—————–

ஸ்ரீ வராஹ திரு அவதார பரமான அருளிச் செயல்கள் –

ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை–3-5-5-

எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே –5-2-3-

—————————-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே––நாச்சியார் –11-8-

————————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே-பெருமாள் திருமொழி -2-3-

———–

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்தது முன் கடைந்த பெற்றியோய் –திருச்சந்த விருத்தம்–28-

——————————

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -திருச்சந்த விருத்தம்-114-

—————————-

வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் -ஸ்ரீ பெரிய திருமொழி–1-1-4-

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாசசிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – (வரம் கொள்ள -)
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவாய் நினைவார் என் நாயகரே –2-6-3-

திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செலும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின்னாகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவலையம் கண்ணி கொல்லியம்பாவை சொல்லு நின் தாள் நயந்து இருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-1-

இவள் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-2-

என் தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-3

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-4-

ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-5-

என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-6-

இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-7-

இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-8-

வன முலையாளுக்கு என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -2-7-9-

இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை –பாடல் வல்லார் பழ வினை பற்று அறுப்பாரே -2-7-10-

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –திரு வயிந்திர புரமே-3-1-1-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம வின்னகரே சேர்மினீரே -3-4-3-

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
வானும் மண்ணும் நிறையைப் புகுந்து ஈண்டி வணங்கும் நல் தேனும் பாலும் கலந்தந் தன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் தானாய பெருமானைத் தன்னடியார் மனத்து என்றும்
தேனாகியமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-3-

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திருவுருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய எம்மீசன் காண்மின் -7-8-4-

பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் -7-8-10-

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

——————————————-

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-

——–

பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரமெய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என்னருகில் இலானே –1-9-2-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே -2-8-7-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–4-5-10-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5-6-1-

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

தானே உலகெல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே யாள்வானே––10-5-3-

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என்னன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -10-10-7-

——–

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-2-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-9-

என்னுள்ளம் ஓவாது எப்போதும் —கேழலாய் பூமி இடந்தானை ஏத்தி எழும் –ஸ்ரீ முதல் திருவந்தாதி-25-

இடந்தது பூமி –பேரோத வண்ணர் பெரிது –ஸ்ரீ முதல் திருவந்தாதி-39-

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் -உராய் உலகளந்த ஞான்று -வராகத்
தெயிற்றளவு போதாவாறு என் கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி -ஸ்ரீ முதல் திருவந்தாதி-84

ஊனக் குரம்பையின் உள் புக்கிருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள் தோறும் ஏனத்துருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-91-

———————————————————————————–

நீ யன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே நீ யன்று உலகிடந்தாய் என்பரால்
நீ யன்று காரோதம் முன் கடைந்து பின்னடைத்தாய் மா கடலை பேரோத மேனிப்பிரான் -இரண்டாம் திருவந்தாதி–30-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும் குரா நற் செழும் போது கொண்டு வராகத்
தணி யுவன் பாதம் பணியுமவர் கண்டீர் மணியுருவம் காண்பார் மகிழ்ந்து –இரண்டாம் திருவந்தாதி-31-

மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்நெஞ்சே இரு –இரண்டாம் திருவந்தாதி–36

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து -இரண்டாம் திருவந்தாதி-47

——————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——மூன்றாம் திருவந்தாதி–45-

கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர்
மாதுகந்த மார்வதற்கு பெண்ணகலம் காதல் பெரிது –மூன்றாம் திருவந்தாதி-54

——————————————

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்—நான்முகன் திருவந்தாதி -70-

வகையால் மதியாது மண் கொண்டாய்

—————————-

நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே
பொலிந்த எமக்கு எல்லா விடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப்பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலங்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -திரு விருத்தம் -39-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும்கேழ்பவருளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -திரு விருத்தம் -45-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத் துருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –99-

—————————————-

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் –ஸ்ரீ திருவாசிரியம்–6-

—————————————————

யாமே யாருவினையோம் செயோம் எண் நெஞ்சினார்
தானே அனுக்கராய்ச் சார்ந்து ஒளிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு -பெரிய திருவந்தாதி -7-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடமுன் படைத்தான் என்பரால் -பாரிட
மாவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகாவாலவை -42-

—————————————–

ஏழ உலகு எயிற்றினில் கொண்டனை –திருவெழு கூற்றிருக்கை

——————————-

மன்னிவ் வகலிடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை -பெரிய திருமடல்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூமா தேவிப்பிராட்டி ஸமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு மாலை-45–வள வெழும் தவள மாட–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும்
கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே
தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து
பெரிய பெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் .

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம் –அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய
மா மதுரைநகரம் தன்னுள் –பெருமை தங்கிய வடமதுரையில்
கவளம் மால் யானை கொன்ற–கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை –கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்–இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி–தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–திருமாலையாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே–பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)

விளக்க உரை

கவளம் என்று யானையுணவுக்குப் பெர்.
“களவமால்யானை” என்றும் பாடமுண்டு.
அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம்
ஒரு பருவத்தில் பெருத்த யானை யென்றபடி.

இளைய புன் என்பவை -சப்தத்தில்
இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.

எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும்,
எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு
இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.

“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-
இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாந ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

அடிவரவு:-
காவல் பச்சை வேதம்
மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய்
சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது
குரங்கு உம்பரால் ஊர் மனம் தவமார்த்து
மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருள்
அடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-44 –பெண்ணுலாம் சடையினானும்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக
ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்;
சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று நெடுங்காலம்
தவம் புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கி நிற்க்கும்படியாயிற்று;
கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.
அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது.
ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே

பதவுரை

பெண் உலாம் சடையினானும்–கங்காநதி உலாவுகின்ற சடையையுடையனான சிவனும்
பிரமனும்–நான் முகக்கடவுளும்
உன்னைக் காண்பான்–உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி–எண்ண முடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்–தவம் புரிந்தவர்களாய் (அவ்வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப–வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருக்க
அன்று–அக்காலத்திலே
ஆனைக்கு–(முதலைவாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து–(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த –நித்யஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்–(என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
உன்னை–உன்னை
களை கணா–தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ–நினைக்கலாகுமோ?

விளக்க உரை

வெள்கிநிற்ப-
தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து
தரையைக்கீறி நிற்கையில் என்கை.
அன்றியே,
வெள்கிநிற்ப-
வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம்.
ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.

அவர்களுக்கு வெட்கமாவது-
ஐயோ! முதலையின் வாயிலே அகப்படாமல் தபஸ்ஸிலே இழிந்து என்ன காரியஞ்செய்தோம்! என்றுபடும் லஜ்ஜை.
அப்படி அவர்கள் லஜ்ஜைப்படும்படியாகவும் விண்ணுவார் ஆச்சரியப்படும்படியாகவும் வந்து என்க.

வியப்ப –
பரஹ்மாதிகள் நெடுங்காலமாக எதிர்பாராநிற்க அவர்களையும் எங்களையும் அநாதரித்து
ஒரு திர்யக்ஜந்துவின் காற்கடையிலே அரைகுலையத்தலைகுலைய ஓடிப்போய்விழுவதே! என்று
நித்யஸுரிகள் வியப்ப கண்ணறாய் ஸ்ரீ கண்ணறை யென்பதன் விளி.

“உன்னையென்னோ களைகணாக் கருதுமாறே”
ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை ஜகத்துக்குப் பொதுவான ரக்ஷகனென்று
சொல்லுமவர்கள் மதிகேடரென்றுகிறார்
(தேவாநாம் தாநவா நாஞ்ச ஸாமாந்ய மதிதைவதம்’ என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காகச் சிலரை அழிக்கிற இவனை ஸர்வரக்ஷகனென்று நினைக்கலாமோ?” என்பது
வ்யாக்யாநஸுக்தி.

களைகண்-ரக்ஷகம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-43–அமர ஓர் அங்கம் ஆறும் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்–(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி–நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப்
பழிப்பர் ஆகில்–(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்–ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர் –சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)

விளக்க உரை

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு;
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு;
இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து,
அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும்
சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள்,
கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய
ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை)
அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால்
தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள்.

இப்படிப் போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-42 —பழுதிலா வொழுகலாற்று–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே

பதவுரை

மதிள் திருவரங்கத்தானே!-;
ஒழுகல் ஆறு–பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில்
பழுது இலா–ஒரு குற்றமு மற்றிருக்குமவர்களாய்
பல சதுப்பேதிமார்கள்–நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே!
எம் அடியார்கள் ஆகில்–“நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்)
இழி குலத்தவர்களேனும்–தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும்
நீர்–நீங்கள்
தொழுமின்–(அவர்களைத்) தொழுங்கள்;
கொடுமின்–(உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்;
கொள்மின்–(அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று–என்று உபதேசித்தருளி
நின்னோடும் ஒக்க–உனக்கு ஸமமாக
வழிபட–அவர்களை ஆராதிக்கும்படி
அருளினாய்–உரைத்தருளினாய்
(போல்-அசை).

விளக்க உரை

உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே
ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி
எம் பெருமான் கூறின வார்த்தை;-
‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மா தொடங்கி நெடுகி வருகிற வம்ச ப்ரவாஹத்திலே பிறந்து
சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது;
எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்;
பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக் கொள்ளலாம்.
விசேஷமாகச் சொல்வதேன்? என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ,
அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே
“பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி
“தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக.

ஆசார்ய ஹ்ருதயத்தில் –
“ம்லேச்சனும் பக்தனானால் சதுர் வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக் குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு
பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்”, என்னும் ஸ்ரீஸூக்தியும்
அதன் வ்யாக்யாந ஸ்ரீ ஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக் கடவன.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-41–வானுளார் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

பகவத் ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு நீஹீந ஜந்மத்தாலும் நிஹீன அநுஷ்டாநத்தாலும்
ஒரு குறையுமில்லை யென்பது மாத்திரமேயல்ல;
அவர்கள் தங்களுடைய உச்சிஷ்டாந்நத்தாலே ஸம்ஸாரிகளையெல்லாம் பரிசுத்தராக்கும் படியான
பெருமை பொருந்தியவர்கள் என்பது இப்பாட்டு.

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

பதவுரை

ஊனம் ஆயினகள் செய்யும்–தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும்.
ஊன காரகர்கள் ஏனும்–பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும்.
வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் –மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாததேவனே, என்று அநுஸந்திப்பராகில்.
தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில்–‘தேன் பெருகா நின்ற திருத்துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்
(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்)
போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை
தருவர் ஏல் அன்றே–அநுக்ரஹிப்பாரானால் அப்போதே
புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

விளக்க உரை

தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய
ஸ்வரூபம் ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது.
“நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம்.
கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால்,
“அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை
அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க.

இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல்,
அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும்,
தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும்
அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி
இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அ

வ்வளவேயுமன்று;
அவர்கள் தாங்களமுது செய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால்
அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி
அத்தனை பெருமை பொருந்தியவர்கள் காண் என்கிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-40–திரு மறு மார்வ நின்னை–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

தாழ்ந்த வகுப்பில் பிறப்பேயன்றி நீசமான அநுஷ்டாநமு முடையரேயாயினும்
“மேம் பொருள் போகவிட்டு” என்ற பாட்டிற்கூறிய அதிகாரத்திலே நிஷ்டையுடையராகில்
அவர்களுக்கு அந்தக் கருமங்களின் பலன் அநுபவிக்கக் கடவதல்ல என்கிறது, இப்பாட்டு.

திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேனும்
அருவினைப் பயனது  உய்யார் அரங்க மா நகர் உளானே

பதவுரை

திருமறு மார்ப–பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும் திருமார்பிலே அணிந்துள்ளவனே
அரங்கமா நகருளானே!-;
மாநிலத்து உயிர்கள் எல்லாம்–(இந்தப்) பெரிய பூமண்டலத்திலே உள்ள ஜீவராசிகளெல்லாம்
வெருவு உற–(ஜகத் தெல்லாம்) நடுங்கும்படி
கொன்று சுட்டிட்டு –பர ஹிம்ஸை பண்ணி
ஈட்டிய வினையர் எலும்–விசேஷமாக ஸம்பாதிக்ப்பட்ட பாவங்களை யுடையவர்களானாலும்
நின்னை சிந்தையில் திகழ வைத்து –உன்னை (தங்கள்) நெஞ்சில் விளங்கும்படி வைத்து
மருவிய மனத்தர் ஆகில்–த்ருடமான அத்யவஸா யத்தை உடையராயிருப்பரேயானால் (அவர்கள்)
அருவினை பயன் அது உய்யார்–(தாங்கள் செய்த) மஹாபாதகங்களினுடைய பலனை அநுபவிக்கமாட்டார்கள்.

விளக்க உரை

திருமகள் கொழுநனான எம்பெருமானே!
என்னை இடைவிடாது நெஞ்சிலே அநுஸந்தித் திருப்பராகில்
அந்த ப்ரபாவத்தாலே
அவர்களுடைய பரஹிம்ஸை முதலிய கொடியபாவங்களும் தீயிலிட்ட தூசுபோல் உருமாய்ந்தொழியு மாதலால்
அவர்கள் நரகங்களிலே புக்கு அக்கருமங்களின் பலன்களான தண்டனைகளை
அநுபவிக்கவேண்டிய ப்ரஸக்தியே யில்லை என்றவாறு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-39 –அடிமையில் குடிமை யில்லா–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

இனிமேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது.
எம்பெருமான் தன் திருவடித்தாமரைகளில் பக்திசெய்யாதவர்கள் உயர்குலத்திற் பிறந்தவர்களாயிருந்த போதிலும்
அவர்களை ஒருபதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்துவிட்டு,
தனது திருவடிகளில் பகதி செய்பவர் மிகவும் இழிகுலத்தவராயினும்
அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்.

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

முடியினில் துளபம் வைத்தாய்–திருமுடியிலே திருத்துழாய் மாலையை அணிந்தவனே
அரங்கம் மாநகர் உளானே!-:
அடிமையில்–(உனக்குக்) கைங்கரியம் செய்வதில்
குடிமை இல்லா–உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத
அயல்–(அடிமைக்கு) அயலான
சதுப்பேதிமாரில்–நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்.
குடிமையில் கடைமைபட்ட –குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்)
குக்கரில்–பரம சண்டாள ஜாதியில்
பிறப்பர் ஏனும்–பிறப்பர்களானாலும்
மொய் கழற்கு–(உனது) நெருங்கிய திருவடிகளிடத்து
அன்பு செய்யும்–பக்தி செய்கின்ற
அடியரை–அடியார்களையே
உகத்தி போலும் –நீ விரும்புவாய் போலும்

விளக்க உரை

மேன்மைக்குக் காரணம் –
எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று.
அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்;
இழிகுலப்பிறப்பு அன்று,
ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க.

குடிமை-
குடிப் பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம்.

அயலாதலாவது ‘
எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை.
அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள்
நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.

சதுப்பேதிமார் -சதுர் வேதிமார்; இருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்ற
நான்கு வேதங்களை ஓதினவர்களென்கை.
குக்கர் – மிகவும் தாழ்ந்தவர் என்பது பொருள்
(க்ஷுத்ர) என்ற வடசொல் குக்கர் எனத்திரிந்தது.

ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-38—மேம்பொருள் போக விட்டு –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

“அளியல் நம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே
“இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும்
அதற்காக நம் கைபார்த்திருப்பதும்
அதுக்கு மேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே!
இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய்,
அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார்,
“பெருமானே! தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து
நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று
பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

பதவுரை

புனல் சூழ் அரங்கத்தானே –காவிரி சூழ்ந்த கோயிலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மேம்பொருள்–(ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை
போக விட்டு–வாஸகையோடு விட்டிட்டு
மெய்ம்மையை–ஆத்ம ஸ்வரூபத்தை
மிக உணர்ந்து–உள்ளபடி அறிந்து
ஆம் பரிசு–ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும்
அறிந்து கொண்டு-தெரிந்து கொண்டு
ஐம்புலன்–ஐந்து இந்திரியங்களையும்
அகத்து அடக்கி–(விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி,
காம்பு அற–அடியோடே
தலை சிரைத்து–தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து
உன் தலைக்கடை இருந்து –உனது திருவாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து
வாழும்–உஜ்ஜீவிக்கின்ற
சோம்பரை–(தம்முடைய ஹிதத்தில்) சோம்பியிருக்குமவர்களை
உகத்தி போலும்–உகக்குமவனல்லையோ நீ.

விளக்க உரை

மேம்பொருள் என்பதற்கு
மேலெழுந்த பொருளென்றும்,
மேவின பொருளென்றும்,
மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்;

கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே
விட்டகலும்படியாயிருக்கும் பொருள்-மேலெழுந்த பொருள் எனப்படும்.
அதாவது
ஸம்ஸாரஸம்பந்தம்.

மேவின பொருளாவது-
சிக்கன ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள்;
சேதநனால் பிரிக்கவெண்ணாதபடியிருக்கை.
அதாவது
தேஹஸம்பந்தம்,
அவித்யா ஸம்பந்தம்.

மேம்பாட்டை விளைக்கையாவது-
தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.
அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்; ஆ
கிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதாபுத்தி
தேஹத்திற்காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரியபுத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.

அதற்குமேல் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணரவேணும்:
அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,
நித்யன், உணர்வைக் குணமாகவுடையவன்: அணுபரிமாணன்,
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,
அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.

ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த
பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –
கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை.

ஐம்புலனகத்தடக்குகையாவது-
எம்பெருமானுக்குப் பண்ணும் கைங்கரியத்தில் ஸ்வப்ரயோஜநத்வபுத்தி பிறவாதபடி நோக்குகை.
“தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” என்றபடி.
எம்பெருமானுக்கே இனிதாகப் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஸூக்ஷ்மார்த்தம் இங்கு உணரத்தக்கது.

காம்பு அறத் தலைசிரைத்து –
உபாயாந்தரங்களில் தனக்குள்ள பற்று அறும்படி தன் தலையிலுண்டான துரிதங்களைப்போக்கி.
அதாவது
பேற்றுக்கு எம்பெருமான் ஸாதநமே யொழிய நாம் செய்யும் க்ரியாகலாபங்களொன்றும் ஸாதநமல்ல என்று
உறுதியான அத்யவஸாயம் வஹித்து என்றபடி.
அஹங்கார கர்ப்பமான உபாயாந்தரங்களின் விடுகையைச் சொன்னபடி.

இப்படி பரமைகாந்திகளாய் எப்போதும் உன் திருவாசலையே பற்றிக்கிடந்து வாழுஞ் சோம்பராகிய
பரமபாகவதர்கள் விஷயத்திலே தேவரீர் திருவுள்ளம் உப்ந்திருக்கும்படியே! என்று வியக்கிறபடி.

வாழும் சோம்பர் என்றது
கெடுஞ்சோம்பரை வ்யாவர்த்திக்கிறது.
கெடுஞ்சோம்பராவார் ஈச்வரனில்லை, சாஸ்த்ரமில்லை, பரலோகமில்லை என்றாற்போலே
எல்லாவற்றையும் இல்லைசெய்து
விஹிதகர்மங்களை அநுஷ்டியாமல் தோன்றிற்றுச் செய்து சோம்பேறிகளாய்த் திரிவார்.

வாழுஞ் சோம்பராவார்-
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய்க் கர்த்தவ்யங்களை விடுகையன்றிக்கே
ஆஸ்திகசிகாமணிகளாய் ஸித்தோபாயமான எம்பெருமானை ஸ்வீகரித்து
அவ்வெம்பெருமானுடைய அநுபவமே காலக்ஷேபமாய்த்
தமது ஹிதத்தைத் தாமே தேடிக்கொள்ளுவதில் சோம்பியிருப்பவர்கள்.

உகத்தி- முன்னிலையொருமை வினைமுற்று

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -41-50–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 2, 2022

அவதாரிகை

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே
அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய்
நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இவ்வாறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்-பிரகாரத்தையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்றும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இந் நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்

இவ்வாறு வெம்மை
இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது

ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம்
அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை
அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்
உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி
பெரிய திருவடியை நடத்துகிறவன்

அருள் அருளாத இந் நாள்
தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே

மன்றில் நிறை பழி தூற்றி
மன்றிலே நிறைந்த பழியை
அயலாரை இட்டுத் தூற்றுவித்து

நின்று
போகாமல் நின்று

எம்மை
பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை

வன் காற்று அடுமே–
பலவானான வாடைக் காற்றானது
அடியா நின்றது என்கிறாள்

இத்தால்
பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள்
தண்ணீர்ப் பந்தல் என்னும்படி
பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு
லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே
இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று
இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று
நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி
சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே
என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று
இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை

புன்வாடை
மந்தமாருதம்

இது கண்டறிதும்
இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம்
அனுபவித்தோம் இறே

இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்
பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல
வாடை
லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்

ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே
வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப்
பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான
அருளும் மறுத்த படி

வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35-
அல்லாதாராபாதி –
பெருமாள் –

மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே

————————–

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான அளவிலே
ஈஸ்வரன்
தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை
பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து
அருளுகிறார் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –
தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின-

வியாக்யானம்

வன் காற்றறைய
வலிய காற்றானது
சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க

வொருங்கே மறிந்து
ஓர் இடத்திலே சேரப் புரிந்து

கிடந்தலர்ந்த
கிடைப்பாட்டிலே விகஸிதமான

மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில்
மார்த்தவத்தை யுடைய

கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே

பொலிந்தன
அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –

இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது
அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத
சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )

ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை

கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை

மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்
கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)

கமலத் தடம் என்று
நிறத்தாலும்
குளிர்த்தியாலும்
பரப்பாலும்
போக்யமாய் இருக்கை

பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப்
போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –
(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )

மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்
என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று
தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே
ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்
என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து

விண்ணும் மண்ணும் -என்றும்
பாட பேதம் சொல்லுவார்

தன் பால் பணிந்த என் பால்
தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து

தன்பால் என்ற
பாடமான போது
தன்னிடத்து என்றும் சொல்லுவர்

எம்பிரான் தடக் கண்களே
த்ரை விக்ரம அபதானத்தாலே
அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய
பெரிய திருக்கண்கள்

இப்பாட்டு
நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட
நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –

—-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று
இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வியாக்யானம்

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன
மென் கால் கமலமாவது
மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான
மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது

இதிலே வன் காற்றாவது
அது தான்
தன்னைப் பாராதே
அறைவது

ஒருங்கே
ஏகதோமுகமாக

மறிந்து கிடந்தது அலர்ந்த
மற்றை அருகே புரியில்
தரமிலோபம்

மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே

—————————-

அவதாரிகை
இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்
அவ் வழியாலே
அவயாந்தர சோபையையும்
வடிவழகையும்
அனுசந்தித்து
இவ்வாழ்வாருக்கும்
அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும்
பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்

இது
நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால்
சொல்லப் பட்டதாகவுமாம் –

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –
தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –
உயர்வற உயர் நலம் -1-1-

பதவுரை

கண்ணும்–திருக்கண்களும்
செந்தாமரை–செந்தாமரைப் பூவையொப்ப
கையும்–திருக்கைகளும்
அவை–அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ–திருவடிகளும்
மதி விகற்பால்–ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து–ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு–அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே–அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது–எம்பெருமானுடைய
எழில் நிறம்–அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று–நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் யவர்க்கும்–அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ–(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

கண்ணும் செம் தாமரை
நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும்
வாத்சல்யத்துக்கும்
ஸூ சகமான திருக் கண்களும் தாமரை

கையும் அவை அடியோ அவையே
திருக்கைகளுக்கும்
திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை

ஓ -என்ற அசை
தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –
(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று
திருமேனி நிறம்
நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி

மதி விகற்பால்
மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்

விண்ணும் கடந்தும்
மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள்
வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து

உம்பர் அப்பால் மிக்கு
மேலுண்டான ஸநகாதிகள்
ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்

மற்று எப்பால் யவர்க்கும்
இவர்களில் வியாவ்ருத்தராய்
எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்

எண்ணும் இடத்ததுவோ
தங்கள் (மதி )வைஷம்யங்களாலே
பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ

எம்பிரானது எழில் நிறமே –
இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய
ஸுந்தர்ய சோபை யானது

ஆக
உபய விபூதியிலும்
இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை

நோக்கின அக்கண் வழியே
திருமேனியில் அழகை அடைய அனுபவித்து
இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால்
ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

வியாக்யானம்

கண்ணும் செந்தாமரை
நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று

முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன

கையும் அவையே
நோக்கின அநந்தரம்
ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே
அணைத்த கைகளும் தாமரை

அடியோ அவையே
ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும்
துறையான திருவடிகளும் அவையே

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

—————-

அவதாரிகை

இப்படி அபரிச்சேத்யம் என்று சொல்லப் போமோ
ஈஸ்வரனுடைய ரூப வேஷ நாம விக்ரஹங்களை நிஷ்கர்ஷித்து
அவ்வவ ஸாஸ்த்ர சமயங்களிலே நிற்கிறவர்கள்
சொல்லுகிறார்கள் அன்றோ என்னில்
அவர்களும் அவன் பெருமையை முடியக் காணப் பெற்றார் இல்லை என்கிறார்

இதுவும்
தலைவி தலைமகன் பெருமையை யுரைத்தல் யாகிற கிளவியாம்

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-
துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –
பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால்
சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய
வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறம் தான் மிகைத்துத் தோற்றும்படியான ஒப்பனையும்

அன்றியே
நிறத்தோடு சேருகையாலே உயர்த்தி பெற்ற
ஒப்பனையும் என்றுமாம்

பேருமுருவமும்
இவ்வழகிலே அகப் பட்டார் பாசுரமிட்டு ஸ்துதிக்கைக்கு ஈடான திரு நாமங்களும்
இவ்வழகுக்கு ஆஸ்ரயமான விக்ரஹங்களும்

இவை இவை என்று
கால பேதத்தாலும்
குண பேதத்தாலும் உண்டான
அதிகாரி பேதத்தாலே
தத் தத் நியதமாக அநு சந்தேயமான ரூபாதி பேதங்களை நிஷ்கர்ஷித்து

அற முயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம மார்க்கத்தாலே முயன்று பெற்ற ஞானத்தை யுடையரான
வைதிக ஸாஸ்த்ர ஸமய நிஷ்டரானவர்கள் ஸ்ரோத்தாக்களுக்குப் பாசுரம் இட்டுப் பேசிலும்

அற முயல்
மிகவும் முயல் என்றுமாம்

அங்கு அங்கு எல்லாம்
அந்த அந்த
ரூப
வேஷ
நாம
விக்ரஹங்கள் எல்லாவற்றிலும்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
அவற்றிலே சிறக்க உயர்ந்து வருகின்ற ஞானமாகிற
தீபத்தாலே விளக்கத்தைப் பெற்று நின்றது ஒழிய

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
ஒரு பிரகாரத்தையும் பரிச்சேதிக்கப் பெறும் படி
யத்னம் பண்ணினார் இல்லை

எம்பிரான் பெருமையே
இவை எல்லாவற்றையும் எனக்கு ப்ரகாசிப்பித்த மஹா உபகாரகனுடைய
நிரதிசய மஹாத்ம்யத்தை -என்று
தமக்கு அவன் அருளாலே
இவ் வபரிச்சித்த மஹாத்ம்யம் பிரகாசித்த படியை
அருளிச் செய்தார் யாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
இவ்வாசிகளும் யுண்டாய்ச்
சிலர் அறிந்தார் களுமாய்
அவர்களுக்கு அறியாதாரில் காட்டில் ஓர் ஏற்றம் யுண்டாய்ப் போரா நிற்க
எப்பால் எவர்க்கும் எண்ணும் இடத்து -என்றத்துக்குக்
கருத்து என் என்னில்
அவர்கள் அறிந்தாரான நிலை இது அன்றோ என்று
அதுக்கு உத்தரம் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை

இதம் இத்தம் என்று
தத் தத் ஸமய நிஷ்டர்களால் அறியலாகாதோ என்ன
வாசா சொன்ன மாத்ரமே
அங்கனே அறியப் போகாது என்று அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறத்துக்கு மேல் தோன்றும்
ஓர் ஓர் அழகும்

பேரும்
திருநாமங்களும்

உருவமும்
திவ்ய மங்கள விக்ரஹங்களும்

இவை இவை என்று
பேர்கள் இவை
உருவங்கள் இவை
என்று தனித் தனியே நிஷ்கர்ஷித்து

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம த்வய லீதரிநாப நிவிஷ்டராய்
த்வே வித்யே வேதீ தவ்ய-முண்டக -1-1-4-
என்னப்பட்ட
பரோக்ஷ அபரோக்ஷ ஞானாவாந்தர பெத்த நிஷ்கர்ஷண ப்ரவ்ருத்தர்கள்
சிஷ்யர்களுக்கு ஸப்தத்தால் நிரூபித்துச் சொல்லிலும்

அங்கு அங்கு எல்லாம்
அங்கு அங்காகப் பேசும் இடங்கள் எல்லாம்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி
விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய்
பர ப்ரகாசமுமாய்
ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார்
என்றும்
எங்கும்
இல்லையே

சரி -எத்தை -என்ன
எம்பிரான் பெருமையே
இத்தை எல்லாம் எனக்கு அறிவித்து
என்னை அடிமை கொண்டு உபகரித்தவனுடைய
ஸர்வ உத்க்ருஷ்ட ஸ்வரூபாதிகளை ஒன்றும் பெற முயல்வார் இல்லை
என்று அந்வயம்

—————————-

அவதாரிகை

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –

இவர் திரு உள்ளமானது
ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று
ஹ்ருஷ்டராகா நின்றீர்
சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது
நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று
திரு உள்ளத்துக்கு கருத்தாக

அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண்
என்று அருளிச் செய்கிறார் –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்-
தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
ஊனில் வாழ் உயிரே -2-3-

பதவுரை

மட நெஞ்சமே–பேதை நெஞ்சமே!
பெரும் கேழலார்–(பிரளய வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹா வராஹ ரூபியானவனர்
இ அகாலம்–(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம்–தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம்–பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல்–நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார்–ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர்–(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே–வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம்–(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
(அப்படிப்பட்ட நமக்கு)
சூழ் பிறப்பு–விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே–அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு–சொல்லாய்;
வாழி–(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.

வியாக்யானம்

பெரும் கேழலார்
பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு
அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி
மஹா வராஹமானவர்
ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய –
(தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி
ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே
விகஸிதமான கண் அழகு இருந்தபடி

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார்
அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே
நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே
ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்

இவ்வகாலம்
இக்காலத்தில்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
இக்கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே
அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ

பிரளய ஆர்ணவமும்
ஸம்ஸார ஆர்ணவமுமான
ஆபத்தின் வாசி போரும் இறே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும்
நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசி

தொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் )
இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே
பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான
வாழ்வு யுடையோம் ஆவோம்

வாழ்வு என்று
அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )

சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
நம்மைச் சூழ்ந்த பிறப்பும்
நம் பரிசரங்களிலே வரவற்றோ

சொல்லு
பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு
ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா
சொல்லிக் காண் –

வாழி
உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக

(ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும்
கருவிலே திருவுடையார் அன்றோ )

மட நெஞ்சமே
ஒடுக்கமுடைய நெஞ்சமே
உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று
திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று

இப்பாட்டு
கிளவியாம் இடத்து
நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து
உரைத்தது ஆகவுமாம்
அவ்விடத்து
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம்
பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை
ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப்
பெற்றுக் கொடு நின்றேன்
இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

வியாக்யானம்

பெரும் கேழலார் 
ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்
மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-
ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
ஸ்புட பத்ம லோசன

நம் மேல்
குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே
நம் சிறுமை பாராதே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –

ஒருங்கே
நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால்
அதுவும் அரிதாம் படியாயிற்று
த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-
இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது
அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம்
நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில்
நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய

பிறழ
மிகுதியைச் சொல்லவுமாம்
கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்

வைத்தார்
இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை
ஆகிலும் ஒரு

இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

வியாக்யானம்

பெற்றதாயிற்று
அப்போது மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்
இக்காலத்தில்
நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்
ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும்
வரும் நன்மை யுடையாரும் யுண்டோ

தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும்
யோனிகள் தோறும் பிறப்பும்
நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ

சொல்லு வாழி மட நெஞ்சமே
உன் அதிசங்கை நீங்கி
அவனோடே வாழக் கடவாய்
எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

—————————————————

அவதாரிகை

இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு
பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம்மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில்
அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் தாறும் திரிகின்றதே -46-

பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –
நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –
அருள் பெறுவார் அடியார் -10-6-

பதவுரை

மடம் நெஞ்சம் என்றும்–பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும்–நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி–ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார்–மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும்–அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
(ஏனெனில்)
அ பொன் பெயரோன்–அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம்–பெரிய மார்பை
கீண்ட–எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது–பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ்–திருவடிகளிலே
விட–(யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது)
போய்–விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய்–உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து–(தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும்–இன்று வரையில்
திரிகின்றது–(அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும்
மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்

தமது என்றும்
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே
கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்

ஓர் கருமம் கருதி
இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே
அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து

விட நெஞ்சை உற்றார்
நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்

விடவோ அமையும்
அந்த அறுதிப்பாட்டைத் தவிர அமையும்

ஓ -என்று
இழவைக் காட்டுகிறது

நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ
(அருகிலே உள்ளார் உண்டோ )
தவிருகிறது என் என்னில்

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்
பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய
அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை
அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போகவிட

இத்தால்
ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும்
அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே
நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படி

போய்த் திட நெஞ்சமாய்
விட்டதே பற்றாசாக
விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய்
த்ருட அத்யவசாய யுக்தமாய்

இவ்விடத்தில்
நெஞ்சு என்றது
வியவசாயத்தை

எம்மை நீத்து
கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு

இன்று தாறும் திரிகின்றதே –
இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய்
அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –

இத்தால்
தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி
பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை
அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் –
ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்
அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது
என்று நெஞ்சைக் கொண்டாடினார்
இப்போது
நெஞ்சை இன்னாதாகிறார்
அது என் என்னில்

ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ்வாசைக்கு இரை இட்டு
இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று
இன்னாதாகிறார் –

இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே
ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே
பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று
நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே

அவனை உபாயம் என்கிறது
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி
நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே

அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே
அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை

இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே
தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே

ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன
இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும்
தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது

அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே
இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே
இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –

இன்று தாறும் தாறும் திரிகின்றதே

வியாக்யானம்
மட நெஞ்சம் என்றும் தமது என்றும்
நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று
சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன்
இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே
இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி
சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்

அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது
பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே
அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று

அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில்
அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று
இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்று

எம்மை நீத்து
என்னை ஸந்யசித்தது

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே
ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே
தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இந்நெஞ்சையே அவர் வரவுக்கு தூது திடீர் என்றவர்களுக்கு
இதில் ஸ்வ பாவத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்
தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்
நெஞ்சு தான் தங்களது என்றும்
அத்யவசித்து
இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்
அந்த நினைவை விடத்தக்கதே

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால்
அகன்ற மார்வை விதாரணம் செய்த
மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட

போய்திட நெஞ்சமாய்
சடக்கெனப் போய்
என்னை விடுமத்திலும்
அவரையே தொடர்வதிலும்
அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்

எம்மை நீத்து
என்னை நிராகரித்து

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
தோளில் இட்ட திருத்துழாய் தாரும்
தானுமாய்
அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே

ஆகையால் ஆர்க்கும் தன் நரேஞ்சு என்று தூது விடலாகாது என்று –

————–

அவதாரிகை

இப்படி மானஸ அனுபவம் நடக்க
பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு
இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை
வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது
வளை இழந்த தலை மகளைக் கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

பாசுரம் -47-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –
பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –
நாங்கள் வரி வளை -8-2-

பதவுரை

வட மாருதம்–வாடைக் காற்று
திரிகின்றது–உலாவுகிறது;
திங்கள்–(குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம் தீ–கொடிய நெருப்பை
முகந்து சொரிகின்றது–வாரி யிறைக்கின்றது:
அதுவும் அது–முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன்–கண்ண பிரானுடைய
விண் ஊர்–பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே–இடைவிடாது தொழுது அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம்–(கையிலணிந்துள்ள) சங்கு வளை.
சரிகின்றது–கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு–(அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
(ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)
முழு மெய்யும்–உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?–(இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம் பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு–மென்மையான தன்மையை யுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல்–யாதாய் முடியுமோ.

வியாக்யானம்
திரிகின்றது வடமாருதம்
வாடைக்காற்று உலவா நின்றது –
கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே

திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது
பூர்ண சந்த்ரனானது
லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு
முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது

அதுவுமது ,
முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே

கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்
கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64-
பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது

சரிகின்றன -என்றும்
சொல்லுவர்

தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்
முழு மதியாலும்
வாடையாலும்
யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில்
அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி
பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –

என்னாம் கொல் என் மெல்லியற்கே
ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய்
எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ
என்று வெறுத்தாள் ஆயிற்று –

இத்தால்
வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே
ஆஸ்வாஸ கரருமாய்
ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு
லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும்
பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படி

கண்ணன் -இத்யாதியாலே
ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான
மினுக்கமும் குலைந்து
(கை வளையும் மேகலையும் காணேன் )
அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே
அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது

என்னாம் கொல் -இத்யாதியாலே
தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று
ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத்தாயார்
பாதகங்களின் பெருமையையும்
இவள் மார்த்வத்தையும் அநு சந்தித்து
என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள்

வியாக்யானம்

திரிகின்றது வட மாருதம்
மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –
நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –

அன்றிக்கே
வாடையானது குளிரக் கடவது இறே
அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –

திங்கள் இத்யாதி
இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று
சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்

வெம் தீ
நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது

முகந்து சொரிகின்றது
அங்குக் குறைவற்றுக் கிடந்த படி

அதுவுமது
வாடையோ பாதியும்
சந்திரனோ பாதியும்
பாதகமாவன சில யுண்டு இறே
ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள்

குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே
விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப்
பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது

என்னாம் கொல் என் மெல்லியற்க்கே
ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –

———————————–

அவதாரிகை

இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட
பார்ஸ்வஸ்தரானவர்கள்
பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ
உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு
ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று
இவரை ஆஸ்வஸிப்பிக்க
அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு -பல்லிக்குரல் கேட்டதை –
தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9–

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செல்கைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது
புண்னிலே கிளர்ந்து
அவ்விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது
லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி

இத்தால்
அல்ப ஞான சக்திகனான நான்
லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று

ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்
இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான
ஜன்ம
வித்யா
விருத்தங்களை யுடைய என்னாலும்

தன்னைச்
அத்யந்த விலக்ஷணமாய்
அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை

சொல்லிய சூழல்
சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது
தத்வமான தான் சொல்லுமதிலும்
தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை

(வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –
காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் –
மண் குடம் போல் அல்லவே பொன் குடம்
ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமே )

திருமால்
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே
ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –

அவன் கவி
அவனுடைய கவி
ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி
கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை

யாது கற்றேன்
அது நான் கற்றேன் அத்தனை
என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல
பின்னுருச் சொன்னேன் அத்தனை –

ஆனால் என்
நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய்
லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு
ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும்
தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே

பண்டு பண்டே-
இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று
தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து
பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி
அருளிச் செய்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது
இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே
அங்கன் இன்றிக்கே
நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம்
மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்

ஆழ்வீர் நீர் வாரீர்
உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர்
நமக்காகவே இருக்கிறீர் அத்தனை
நாமும் ரசித்து
நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் –
அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க

ஆனால் தட்டு என்
நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்
ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை
விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கை
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது
ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –
இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிருமி
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே
முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது

குருவில் மிளிர்ந்தது
அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து
உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது –
பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே
புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது

ஆங்கே
அந்தக் கிரந்தியிலே

செல்லிய செல் கைத்து
செல்லுகிற செல்கையை யுடைத்து
நடக்கிற யாத்திரையை யுடைத்து
உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும்
இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே
அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக்கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி

செண்டேறுகை யாவது
ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை
நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –

உலகை என் காணும்
லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ
இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை

ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல
அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்

இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே
பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும்
அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே –
இது இன்று முதலோ –

———–

அவதாரிகை

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர்
தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை
ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
முற்காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இந்தப் பரந்த இருள் போலே நாங்கள்
கண்டதுவும் இல்லை
அறிவதும் இல்லை
கேட்பதுவும் இல்லை

காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்
கறுத்த வண்ணத்தை யுடையவனாய்
வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால்
ஸர்வ சேஷியானவன்
(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ )

காள வண்ண வண்டு -என்று
வண்டின் நிறம் ஆகவுமாம்

மதுசூதனன்
மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்

தாமோதரன்
ஆஸ்ரித பவ்யனானவன்

உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே
பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்
அநந்தரத்திலே உமிழ்ந்தும்
ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு
ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே

(மண்ணேர் அன்ன
நேர் அழகு
அன்ன -நிகரான )

கடாய -என்று
நடத்துதலாய் நிர்வஹிக்கை
அதாவது ரஷிக்கை

அன்றியே
கடாய் என்று
கடத்தலாய்
அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –

இத்தால்
முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே
ஸ்ரவணத்துக்கும்
மனனத்துக்கும்
அபரோஷிக்கைக்கும்
விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –

காள -என்று தொடங்கி
மண்ணேர் அன்ன ஒண் நுதலே -என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண )
போக்யத்தையும் -(வண்டுந்துழாய் )
சேஷித்வத்தையும் -(பெருமான் )
விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் )
சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன்
ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி

ஒள்ளிய நுதலுக்கு
மண்ணேர் ஒத்தது என்கையாலே
ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம்
நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்
பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்
முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு
இது காதாசித்கமுமாய்
அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான
ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே
தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல்
தோழி வார்த்தை யாதல் –

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான்
மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே
இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே

வீங்கிருள் காண்டும்
முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது –
இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்
நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை –
முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள்
ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன
இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34
ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே
நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே
மே த்ருஷ்டி
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு

மே ராமம்
இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று

அத்யாபி ந நிவர்த்ததே
கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே
ந த்வா பஸ்யாமி
பெருமாளைக் காணப் பெறா விட்டால்
அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்
கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே

நத்வா பஸ்யாமி -என்கையாலே

போக்குமவன்
தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்
அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி
கடாய
கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே
கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

———————

அவதாரிகை

இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு
தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர்
ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை

பொருள் வயிற் பிரிந்து
வினை முற்றி
மீண்ட தலைமகன்
தலை மகள் ஆற்றாமை நினைத்து
பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல்
அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம் )

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்வித்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை
அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்

விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும்
நம்முடைய தேரானது
சடக்கெனக் கிட்ட வேண்டும்

வலவ கடா கின்று
தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக

கடாவுக்கா இன்று என்று
இன்று நடந்துக்க என்றுமாம்

தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய
தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில்
வெளுத்த முத்து வாசிகை போலே

மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே
பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான
அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே
நண்ணுதல் வேண்டும்
என்று அந்வயம்

இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து
இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்
தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை
த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –

இவ்விடத்தில்
மா மலைக்கே -என்கிற இடம்
ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமை க்கு பொருந்தி இருக்குமே )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே
போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி
இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான்
வினை முற்றி மீண்ட தலைமகன்
பதினாலு ஆண்டும் கூடப்போன

நம் அவ்வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு
நம் அவ்வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று
அப்பெருமலை எல்லாம்
அம்மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று
என்று அந்வயம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .