Archive for October, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –நான்காம் பத்து –

October 9, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –நான்காம் பத்து –
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்–4-1-11-

உய்யப் புகுமாறு அஃதே என்று –
திருநாரணன் தாள்’ என்று நான் சொன்ன அதுவே உஜ்ஜீவிப்பதற்கு -உய்வதற்கு உரிய-
உபாயமும் உபேயமும் – வழியும் பலமும் என்று.
கண்ணன் கழல்கள் மேல் – ‘கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி,
கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?
அது தன்னையே அருளிச் செய்கிறார்.
இப்படி ‘அடி யுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ் வடிகளைத் தாம் பற்றியது?
‘துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று தம் திரு வுள்ளத்திற்கு அருளிச் செய்தார்;
‘வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.
இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;
கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார். இது என்ன அடிப் பாடு தான்!
‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?

கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் –
நித்ய வசந்தமான -எப்பொழுதும் பூவும் தளிருமாய் இருக்கின்ற திருச் சோலை சூழ்ந்த திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார், சர்வேஸ்வரன் திருவடிகளில் அந்தரங்கக் கைங்கரியம்-விருத்தி – செய்தவை இவை தாம்.

——————-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்–4-2-11-

மெலியும் நோய் தீர்க்கும் –
‘மெலியும்’ என்று தாயார் கை வாங்கினாள்;
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே!’–பெரிய திருமொழி. 8. 9 : 7.–என்கிற பாசுரப்படியே
பின்னையும் உடையவன் கை விடானே? உடையவன் – ஸ்வாமி.-ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது.

நம் கண்ணன் –
இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப் பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது.
தாஸாம் ஆவிராபூத் ஸுரி ‘கண்ணபிரான் அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் தோன்றினான்,’ என்பது ஸ்ரீ பாகவதம்.

கண்ணன் கழல்கள் மேல் –
இப்படிச் சரீரம் மெலிவதற்கு-சிதிலையாகைக்கு – அடியான விரக வியசனத்தைப் போக்கும்-
ஆஸ்ரித -அடியார்கட்கு ஸூலபனான ஸ்ரீகிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக.

மலி புகழ் –
‘தேச காலங்களால்-விப்ரக்ருஷ்டமான – கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று
விடாய்க்கும்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலி புகழ்’ என்கிறது.

வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
இப்படிப்பட்ட புகழை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த.

—————–

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்-4-3-11-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி –
இவர் சர்வேஸ்வரனுடைய பிரணயித்வத்தை – காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது,
பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று;
இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.

கண்ணன் ஒண் கழல் மேல் –
தான் பரம பிரணயி காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ண பிரானுடைய திருவடிகளிலே.

செய்ய தாமரைப் பழனம் தென் நல் குருகூர்ச் சட கோபன் –
சிவந்த தாமரையை யுடைய பழனங்களை யுடைத்தாய்த் தெற்குத் திக்கிற்குச் சிறந்ததாயுள்ள
திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த.
அவனுடைய பிரணயித்வ- காதல் குணத்தைச் சொல்லுதலாலே இவர் தரித்தவாறே
அகால பலிநோ வ்ருஷ ‘எல்லா மரங்களும் காலம் அல்லாத காலத்திலும் பழங்களையுடையன ஆகக்கடவன,’ என்கிறபடியே
ஆயின ஆதலின், ‘செய்ய தாமரைப் பழனம்’ என்கிறது.

——————

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்-4-4-11-

ஆஸ்ரிதருடைய -அடியார்களுடைய -விஸ்லேஷ ஹேதுவான -பிரிவிற்குக் காரணமான
மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை.
இதனால், ‘பெற்றவர்கள் கைவிட்டால் பிடித்தவர்கள் கைவிடார்கள்,’ என்பதனைத் தெரிவித்தபடி.
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்றடியேனுக் குற்றானாய் வளர்த்து என் னுயிராகி நின்றானை’ — பெரிய திருமொழி

வண் குருகூர்ச் சடகோபன் –
பரம உதாரரான -பெருவள்ளலான ஆழ்வார். இன்று நாமும் கூட இருந்து பகவானுடைய குணங்களை
அநுசந்தானம் பண்ணும்படி பண்ணின வள்ளன்மை அன்றோ? ஆதலால், ‘வண்சடகோபன்’ என்கிறது.

———————————-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல்–4-5-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –
நிரந்தரமாக வர்ஷிக்கையாலே -எப்பொழுதும் மழை பெய்கையாலே -ஸ்ரமஹரமாய்–
சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க்- தர்ச நீயமான – காட்சிக்கு இனியதான திருமலையையுடைய
சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று;
‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்ய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு
முன்பே நித்ய சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே,
சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று.
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்,
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மாமலை’-திருவிருத்தம், 50-
ஆகையாலே, -அறற்றலையாய்-தர்ச நீயமாய் – காட்சிக்கு இனியதாய் இருத்தலின்,
‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது.
(‘அறற்றலை’ என்பது, சிலேடை : ‘தண்ணீரைத் தலையிலேயுடையது’ என்பதும்,
‘தர்மத்தைத் தலையிலேயுடையது’ என்பதும் பொருள்.)

வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் –
அழகியதாய் தர்ச நீயமாய் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி.
திருநகரிக்கு ஸஹ்யம் திருமலை யாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே
திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.

காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால் ‑
சொன்ன அர்த்தத்தில் -பொருளில்- அதி சங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது.

————————-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்–4-6-11-

இதற்கு, ‘மோஹித்தவள் அல்பம் ஆஸ்வசித்தவாறே சிறிது தெளிந்தவாறே,
மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண்விழித்தாள், வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’
அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய் மொழியாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது.
இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை.
அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ? அது வேண்டாதே,
தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை-பிரபாவம் – புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று,
உட் புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.

வழுவாத தொல் புகழ் –
வழுவாத தொல் புகழாவது, -அஞ்ஞான திசையிலும் -மயங்கிக் கிடக்கிற நிலையிலும்
தேவதாந்த்ர ஸ்பர்சமும் வேறு தெய்வங்களின் சம்பந்தமும் -ததீய ஸ்பர்சமும் -அத் தெய்வங்களின்
அடியார்களுடைய சம்பந்தமும் –சத்தயா அவ்வப் பொருள்களின் தன்மையால் விநாசத்திற்கு ஹேதுவாய்,
அவ்வாறு மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப் பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்
பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலை நின்ற புகழ்.
ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது.
‘சர்வேஸ்வரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு,
தேவதாந்த்ர ஸ்பர்சமும் -வேறு தெய்வங்களின் சம்பந்தமும்-அபாகவதர் ஸ்பர்சமும் – பாகவதர் அல்லாதார்
சம்பந்தமும் உண்டாகுமேயானால்,வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
பூர்வார்த்தத்தை -முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்;
உத்தரார்த்தை -பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;
கர்மம் கைங்கரியத்திலே புகும்’ என்பது, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ ஸூக்தி.

கொடியாடு மணி மாட அயோத்தி மூதூர்
குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட
நெடியானே! அடியேன் நான் முயற்சி யின்றி
நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே.’– திவ்விய கவி-

கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதல்?’-திருவிருத்தம், 97- என்றே அன்றோ இருப்பது?
சொரூபம் இது’ என்று அறிந்தால் சொரூபத்திற்குத் தகுதியான கைங்கரியமும்
அதற்கு விரோதியானவற்றைக் காற்கடைக் கொள்ளுமதுவும் இல்லையாகில்,ஞானம் பிறந்தது இல்லையா மித்தனையே அன்றோ?
இஃது இல்லையாகில், ஆழ்வார்கள் போன வழியிலே சேர்ந்திலனாமித்தனை.
திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்’-நான்முகன் திருவந். 68.- என்றும்,
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’-நான்முகன் திருவந். 53.- என்றும்,
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே’-பெரிய திருமொழி, 11. 6 : 7- என்றும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’-பெரிய திருமொழி, 7. 4 : 4.- என்றும் அன்றோ இவர்கள் படி?
அநாதி -பல காலங்களாக இவன் சூழ்த்துக் கொண்ட பாவங்கள் போகையும்,
நித்ய கைங்கரியம் பெறுகையுமாகிற இப்பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

————————

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்-4-7-11-

நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அதிமாத்ரமான –
அளவு கடந்த காதலாலே.
தாமரைக்கண்ணன் தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –நேத்ர பூதரைச் சொல்லுகிறார்.
குழுவு மாடம் தென்குருகூர் –
ஆழ்வார்க்குத் துக்கம்-ஆர்த்தி – மிக மிகச் சர்வேஸ்வரன் வரவு தப்பாது’ என்று
திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி.
இதனை சரவஞ்ச குசலம் க்ருஹே -ஸ்ரீராமா. யுத். 127 : 5.
(ஸ்ரீ பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலே யன்றோ ‘எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று
பரத்வாஜ முனிவர் ஸ்ரீ ராம பிரானைப் பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.-)
வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போலே

மாறன் –சம்சாரத்தை மாற்றினவர்.

சடகோபன் –பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் -விமுகருக்கு சத்ரு -பகைவர்.

—————-

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்-4-8-11-

உயிரினால் குறை இல்லா ஏழ் உலகு –
அஸங்யேரான ஆத்மாக்கள் -பூர்ணமாய் -நிறைந்துள்ள ஏழ் உலகங்களையும்.

தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை –
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிற போது,
செருப்பு வைத்துத் திருவடி தொழச் செல்லுவாரைப்போலே அந்ய பரதைக்கு- வேறு ஒன்றற்கு உடலாக ஒண்ணாது,’ என்று
எல்லா உலகங்களுக்கும் வேண்டுவன வற்றை -சம்விதானம் -யெல்லாம் தன் சங்கல்பத்தாலே -நினைவாலே செய்து,
பின்னை ஆயிற்று வெண்ணெய் அமுது செய்தது.
அன்றிக்கே,
‘கருவுற்ற மகளிர் வயிற்றிலுள்ள பிள்ளைக்குத் தகுதியாக போஜனாதிகள் -உணவு முதலானவைகளை
உட் கொள்ளுமாறு போன்று உள் விழுங்கின உலகங்கட்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்’ என்னுதல்.
அன்றிக்கே,-
ஸர்வஸ்ய ஜகத பாலவ் வத்சா பாலவ் பபூவது – எல்லா உலகங்களையும் பாதுகாக்கின்றவர்களான
அந்தக் கிருஷ்ண பலராமர்கள் கன்றுகளைக் காப்பாற்றுகின்றவர்கள் ஆனார்கள்,’ என்கிறபடியே,
சர்வேஸ்வரனாயிருந்து வைத்து, அடியார்கள் ஸ்பர்சம் – சம்பந்தம் உள்ள பொருள்களால்
அல்லது சொல்லாதபடி இருக்குமவன்,’ என்னுதல்.

தடம் குருகூர்ச் சடகோபன் –
பிருந்தம் பிருந்தம் அயோத்யாயாம் –அயோத்தியா நகரத்தில் கூட்டம் கூட்டமாக’ என்கிறபடியே,
பெருமாளுடைய திருவபிஷேக மங்கள மகோத்சவத்தைக் காணவேண்டும்’ என்று நாடுகளடையத் திரண்டு கிடந்தால் போலே,
இவர் ஆத்மாவையும் ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் ‘வேண்டா’ என்று கழித்திருக்கிற இருப்பைக்
காண்கைக்காகத் திரண்ட ஸ்ரீ வைஷ்ணவ மக்களுக்கு அடைய இடம் போரும்படியான
பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

———————-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்-4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.
நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-
வத்சலனாய் – இருப்பவனை.
கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து,
இவர்கள் விரோதியைப் போக்குமவனை.
பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.
திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் மநோ ரதத்தை எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் மநோ ரதம் இதுவே அன்றோ?
செழுங்குருகூர்ச் சடகோபன் –
திரு வயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே,
அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு – ஈடுபாட்டிற்குக் காரணம்.

—————-

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்-4-10-11-

அடிமை செய்து சர்வேஸ்வரனைக் கிட்டினவர்.
முறையிலே சர்வேஸ்வரனைப் பற்றினவர் ஆயிற்று இவர்
ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலே காணும்,
தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது.
கையில் திருவாழி சேர்ந்தால் போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி.
கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.
உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள்.
இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி?
பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ?
சர்வேஸ்வரன் திரு அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி.
இனி, இவர்க்குத் தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத்
தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே,
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.
இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று.

நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் –
நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் -இம் மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து,
சாத்தின மாலையும் வாடி இருந்தது முன்பு;
இப்போது, பகவானுடைய பரத்வத்தை உபபாதித்து -விரித்து அருளிச் செய்து,
இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு,
இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது.
(திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை–மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி- தம்முடைய பெருமை அருளி / கலியன் -சீர்காழி)

மாறன் சடகோபன் –
பகவானை அடைவதற்குத் தடையாக -பகவத் பிராப்தி பிரதிபந்தகமான -உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி மூன்றாம் பத்து —

October 8, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி மூன்றாம் பத்து
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் —

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்-3-1-11-

வியப்பு ஆய வியப்பு இல்லா –
வேறு சில வ்யக்திகளிலே கண்டால்-விஸ்மய ஹேதுவாய் இருக்குமடைய இவன் பக்கலிலே கண்டால் ப்ராப்தமாய் இருக்கும்.
ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது விசமய ஹேதுவாய் இருக்கும் ;
‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, ப்ராப்தமாய் இருந்தது இறே – என்றது, –
சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிஜடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர,
அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன,
தண்டைச் சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக் கொண்டு போனான்’ என்னும்
சரிதப் பகுதியை உணர்த்தியவாறு.

மெய் ஞ்ஞான வேதியனை –
யதா பூதவாதியான -உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே -ப்ரதிபாதிக்கப்பட்ட -சொல்லப்படுகின்ற –
உத் கர்ஷத்தை — ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை.

சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் –
‘இந் நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர் தம்மைப் போன்று சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த புகழையுடைய
ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து-வர்த்திகைக்கு – வாழ்க்கைக்குத் தகுதியாகப்
பரப்பை யுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

—————

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்-3-2-11-

இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லா வுயிர்களையும் எல்லா உலகங்களை யுமுடையவனாயிற்று;
இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப் புக்கது;
அங்கு ஸ விபூதிகனானவனை ஆயிற்று இழக்கப் புக்கது’ என்றபடி.
இனி, ஏக அங்கம் விகலமானாலும் -‘உறுப்புகளில் ஒன்று குறையினும் -அங்க வை கல்யம் -உறுப்புக் குறைவு உண்டு அன்றோ?
அப்படி யின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈஸ்வரத்வம் பூர்ணமாயிற்று ’-என்னுதல்.

குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன் –
பிரகாரியானவன் தரித்து,-பிரகாரரான இவரும் தரித்து,-இவர் தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து,
அங்கு உண்டான சோலைகளும் தரித்து,
அங்கு உண்டான திர்யக்குகளினுடைய – பறவைகளுடைய-ஹர்ஷ ஸூசகமான த்வனியும் -மகிழ்ச்சிக்கு
அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம்.
அகால பலிநோ வ்ருஷ -‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களை யுடையனவாயும்,
தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படி யாயிற்று என்றபடி.

————–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்-3-3-11-

கடின ஸ்தலத்தில் பூவைப் பரப்பினால் போலே ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
காடும் மலையுமான பூமியை அநாயாசேந அளந்துகொண்ட சர்வேஸ்வரனை யாயிற்று கவி பாடிற்று
ஆயின், திருவேங்கடமுடையானை யன்றோ பாடிற்று இத் திருவாய்மொழியில்?
மண் தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின்,
’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும்,
’மண் அளந்த இணைத் தாமரைகள்’ என்றும்,
‘உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்து’ என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்வர்கள்;
அன்றியும், எல்லாரையும் க்ரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும்,
வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும்
திருவேங்கடமுடையானை ஸ்ரீ வாமனனாகச் சொல்லக் கடவது இறே

நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் –
திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி
வளர்ந்த பொழிலை யுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்

————–

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன-3-4-11-

கிண்ணகத்திலே இழிவாரைப் போன்று வண்டுகளானவை திரண்டு தேனைக் குடித்து ஒலிக்கின்ற
ஸ்ரமஹரமான -சிரமத்தைப் போக்குகின்ற மாலையையும், ஸ்ரமஹரமான சிரமத்தைப் போக்குகிற மேகம்
போன்றிருக்கின்ற திருமேனியையு முடைய சர்வேஸ்வரனை.
இத் திருப்பதிகத்தில் பரக்கச் சொன்ன விபூதி முழுதும்,
தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியா யிருக்கிற படியைக் கண்டு
அருளிச் செய்தமை தோற்ற ‘வண்டு கூடி அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்’ என்கிறார்.

மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன –
பர்யந்தங்களிலே -பக்கங்களிலே அலர்ந்த சோலையை யுடைய திருநகரிக்கு-நிர்வாஹகராய் – உரியவராய் –
பரம உதாரரான – ஆழ்வார்

————–

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்-3-5-11-

‘பிராப்யப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்;
அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகை யாவது,
அவர்களுடைய பிராப்யப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.
அஹம் சர்வம் கரிஷ்யாமி -‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’
என்று இருந்தாலும்,-க்ரியதாம் இதி மாம் வத- ‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே,
அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது.

ஆர்ந்த புகழ் அச்சுதனை –
குறை வற்ற கல்யாண குணங்களை யுடையவனாய்,
‘தன்னை -ஆஸ்ரயித்தாரை-அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும் கேட்டு அறியாதவனை.

அமரர் பிரானை எம்மானை –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான -சம்சாரத்தின் வாசனை சிறிதும் இல்லாதவரான நித்ய ஸூரிகளைக் கொள்ளும்
அடிமையைத் தன் பக்கல் -ஆசா லேசமும் -ஆசை சிறிதுமின்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டவனை.
இதனால், அடியார்களை நழுவ விடாதவன் என்னும் தன்மை கேட்டார் வாய்க் கேட்டு அன்றிக்கே,
தம் பக்கலிலே அநுஷ்டான பர்யந்தமாகக் கண்டு சொல்லுகிறார் என்பது போதரும்.

வாய்ந்த –
பகவானுடைய குணங்களைச் சொல்லுகையும்-அனுசந்திக்கையும் –
அவ் வனுசந்தானம் -அச் சொல்லுகை ஒழியச் செல்லாமையுமாகிற இவ்வளவே யன்றி,
பகவானுடைய குணங்களைக் கேட்டால் -அவிக்ருதராய் -விகாரமில்லாமல் இருப்பாரை நிந்தித்தும்,-
விக்ருதராய் – உரையும் செயலும் வேறுபடுகின்றவர்களாய் இருப்பாரைக் கொண்டாடியும் போரும்படி
அவ் விஷயத்திலே-அவகாஹித்துச் மூழ்கிச் சொன்ன. வாய்கை – கிட்டுகை.

வளம் வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சடகோபன்
வயலுக்குச் சொல்லுகிற சிறப்பையும் நகரங்களுக்குச் சொல்லுகிற சிறப்பையும் உடைத்தான திருநகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார்
தண்-குளிர்த்தி / நேர்ந்த -சொன்ன என்றபடி /
பகவானுடைய குண அநுசந்தானத்தாலே விக்ருதராய்க் கொண்டு -உரையும் செயலும் வேறுபட்டவராவார்-

—————

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வள நாடன் குருகைக் கோன் சடகோபன்–3-6-11-

காணப்பெறாத இன்னாப்போடே சொல்லுகிறார்.
கண்களாற் காண அரியனாய், ‘காண ஒண்ணாது’ என்று மறந்து பிழைக்க ஒண்ணாதபடி
நெஞ்சுக்கு மிகவும் முன்னிலையாய்
இவர்க்குப் பிரிவாவது,-விஸ்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே – புறக் கண்களால் காண வேண்டும்
என்னும் நசையாலே- மனத்தின் அனுபவத்துக்கு வரும் கலக்கம்.
சம்ச்லேஷம் -கலவியாவது -ப்ரத்யக்ஷ சமானாகாரமான -புறக் கண்களால் நேரே காண்டலைப் போன்று-
ஞான சாஷாத்காரம் – உட் கண்ணால் காண்டல்.

மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் வானவர் ஈசனை –
நித்ய ஸூரிகளுக்கு-அனுபாவ்யனானால்- அனுபவிக்கத் தக்கவன் ஆனால் போலே, சம்சாரிகள் என்று
வாசி வையாமல் அர்ச்சாவதார முகத்தாலே வந்து ஸூலபன் ஆனவனை.

பண் கொள் சோலை –
வண்டுகளின் மிடற்று ஓசையாலே பண் மிக்கிருந்துள்ள சோலை;
முக் கோட்டை போலே காணும் சோலை இருப்பது.

வழுதி நாடன் குருகைக் கோன் சடகோபன் சொல் –
திருவழுதி நாட்டுக்கும் திருநகரிக்கும் நிர்வாஹகரான ஆழ்வார்

——————

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் -3-7-11-

பாண்டவர்களை அரக்கு மாடத்திலே அகப்படுத்தியும், சூதிலே தோற்பித்தும்,
வனவாசம் முதலியவைகளைப் பண்ணுவித்தும், தாங்கள் புத்திரர் மித்திரர் முதலியவர்களாலே
நிறைந்து -பல்கி –ராஜ்யத்திலே வேர் விழுந்த துரியோதனாதிகள் நூற்றுவரும் முடியும்படி.

அன்று –
அவர்களாலே-நிரஸ்தரான – தள்ளப்பட்ட அன்று.

ஐவர்க்கு அருள் செய்த நெடியோனை –
இரண்டு இடத்திலும் ஒக்கும் காணும் ஐவர்க்கு அருள் செய்கை.
இங்குத் திசை திசை வலித்து எற்றுகின்ற ஐவர்க்கு அருள் செய்தான்;
அங்கு அவர்களாலே எற்று உண்ட ஐவர்க்கு அருள் செய்தான்.
இவர்களுடைய யானை குதிரை உள்ளிட்டவை அவர்கள் பறித்துக் கொள்ள,
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ‘எவனுக்கு மந்திரியாயும் காக்கின்றவனாயும் இருக்கின்றானோ’ என்கிறபடியே,
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். ‘அருள் செய்த’ என்கிறார்.

நெடியோனை –
பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும்,
நாதிஸ் வஸ்த்தமநா ‘நிறைவு பெறாத மனத்தை யுடையவனாய் இருக்கிறேன்,’ என்கிறபடியே,
அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.

தென் குருகுகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் –
ஆழ்வார்-பாகவத சேஷத்வ பர்யந்தமான – பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேஸ்வரனுக்கு.

—————–

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்-3-8-11-

புலம்பு சீர்ப்
இவர் புகழுமா போலே லோகம் அடைய புகழும்படி யாயிற்று அவன் குணங்கள் –

பூமி யளந்த பெருமானை
பூமியை அளந்து –அந்ய சேஷத்வ /ஸூவ ஸ்வாதந்த்ர்யம் -இரண்டையும் தவிர்த்த –
சர்வ ஸ்வாமியை யாயிற்று இவர் கவி பாடிற்று –

நலங்கொள் சீர்-நன் குருகூர்ச் சடகோபன் சொல்
கரணங் களும் சேதன சமாதியால் விடாய்த்து
அவை தான் ஓர் இந்த்ரிய வ்ருத்தியை ஓர் இந்திரியம் ஆசைப்பட்டு-
இவை எல்லாவற்றின் விருத்தியையும் தாம் ஆசைப்பட்டு-
இப்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ உடைய ஆழ்வார்
அனுபவ அபி நிவேசம் ஆகிற நன்மையையுடைய ஞானாதி குண விசிஷ்டராய்-
நன்றான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் சொல்

————–

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-3-9-11-

தகுதியான மிக்க புகழை யுடையவனாய், நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய்,
அம் மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷயத்வே- மனிதத் தன்மையிலே பரத்வத்தையுடையவன் தனக்கு.
மனுஷ்யத்வே ‘மனிதத் தன்மையில் பரத்வம் சொல்லப்பட்ட இடம் உண்டோ?’ எனின்,
ஸ்ரீ கீதையில் ஒன்பதாம் ஓத்திலே நின்று மனுஷ்யத்வே- மனிதத் தன்மையிலே பரத்துவத்தைப் பரக்கப் பேசா
நின்றதே அன்றோ?

ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் –
‘அவன் உபய விபூதிகளை யுடையவன்’ என்றால், தக்கு இருக்குமாறு போன்று சர்வேஸ்வரன் கவி இவர்’ என்றால்
அதற்குப் போரும்படி யிருக்கிற ஆழ்வார்

————–

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரத்துள் -3-10-11-

கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களை யுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

குரு கூர்ச் சடகோபன் சொன்ன –
ரகுவீர சரிதம் முனி ப்ரணீதம் ‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே,
அவதாரத்துக்கு அவ் வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி இரண்டாம் பத்து —

October 8, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி இரண்டாம் பத்து —
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்-2-1-11-

இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய்,
இவரோடே வந்து கலந்து அத்தாலே-உஜ்ஜவலனுமாய் – ஒளி உருவனுமாய் இருந்தான்.
இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின,
இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது;
இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார்,
‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார்.
பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.
இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.
(பிரணயித்வ நிபநந்தனமாகவும் வாஸ்தவமான ஆகாரத்தாலும் இரண்டு விதமாக அருளிச் செய்து
இவருடன் கலந்ததனால் உஜ்ஜவலனாயும் தனது பேறாகவும் கொண்டமையும் தோற்ற அருளிச் செய்கிறார் )
ஆராத காதல் –இத் திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம்
பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.
காதல் குருகூர்ச் சடகோபன் – காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.
‘இது, தற் புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –
இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

—————–

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனைக் குருகூர்ச் சடகோபன்-2-2-11-

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூ ராணாம் ‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும்,
அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் ஸ்துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ,
அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு
எனக்கு எப் பொழுதும் அருள் புரிய வேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம் மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட.

கோலக் கூத்தனை –
திருவுலகு அளத்தருளின போது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும்,
அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார்,‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச் செய்கிறார்.
இதனால், இந்திரன்-ராஜ்ய ஸ்ரத்தை – இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியது போன்று,
இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதுவும் ,
அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதுவும் போதரும்.

குருகூர்ச் சடகோபன் சொல் –
ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய் மொழிக்குள்ள
உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

——————-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த–2-3-11-

கரிஷ்யே மைதிலீ ஹேதோ ரபிசாச ம ராக்ஷஸம் ’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால்
இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு –
வர புஜ பலத்தால் – வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின
ராக்ஷஸருடைய ஜாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

குழாம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் –
அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர்.
ஜனஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,
‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக்
காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின்,
‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்.
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ?
சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால், அத்தேசத்திலுள்ளார்
திரளச் சொல்லவேண்டா அன்றோ?

———————-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை கூட்டி, வண் சடகோபன் சொல்-2-4-11-

இவ்வளவில் வந்து முகம் காட்டிற்று இலனாகில் புகழுக்கு வாட்டம் வரும் இறே
‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;
இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.
இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.

இசை கூட்டி –
பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள்.

வண் சடகோபன் சொல்
உதாரதீர் முநி –‘உதார குணத்தை யுடையவரும் மனன சீலருமான ஸ்ரீ வால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை
உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் ஸ்லோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே,
மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,
‘வண் சடகோபர்’ என்கிறார்.

——————–

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்-2-5-11-

தன் படிகளைப் பேசப் புக்கால்,ஆனந்தவல்லியில் சொல்லுகிறபடியே, பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை.
அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று;
குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸூ தேவாத் மஜஸ்ய –‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும்,
ஜெய சீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ண பிரானுடைய நற்குணங்கள் உலகங்கள்
அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்.

அம்மானை –
குடக்கூத்தாலே என்னைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டவனை.-அநந்யார்ஹம் ஆக்கினவனை

கூறுதலே மேவி –
‘நான் சொல்லுவது என்? சொல்லீரே!’ என்னா, மீண்டும் ‘சொல்லீர் என் அம்மானை’ என்று தொடங்குமவர் ஆதலின்,
‘பேச நிலம் அன்று’ என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் ‘பேச ஒண்ணாது’ என்று கை வாங்காதே,
அழகிதாகப் பேசக் கடவோம் என்று உறுதி கொண்டார்.
‘உறுதி கொண்ட அளவேயோ, கூறியதும் உண்டோ?’ என்னில்,
‘குருகூர்ச் சடகோபர் அன்றோ? கூறச் சொல்ல வேண்டுமோ?
மயர்வற மதி நலமருளப் பெற்றவர்க்குப் பேசத் தட்டு உண்டோ?’ என்றபடி.

——————

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன-2-6-11-

இப் போதாயிற்று-வளையம் – மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும்,
திருக்கண்கள்-விக்ஷிதம் – மலர்ச்சி பெற்றதும்.
புகழ் நண்ணி –
இவன், தம் பக்கல் செய்த -வ்யோமோஹ -காதலாகிய குணத்திலே -அவகாஹித்து -மூழ்கி.
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஒன்று திருப் பெயர்;
ஒன்று-சத்ரு வர்க்கத்துக்கு – பகைவர் கூட்டத்துக்கு-ம்ருத்யுவாய் – யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது.

———————-

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய-2-7-13-

வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை யுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீல ரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்./ மா-கருமை. /இவ் வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:

அமரர் தலை மகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.

கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.

நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தை யுடையவனை.

தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய –
வேதம் போன்று பிறப்பிலி அன்று; அபவ்ருஷேயம் ‘புருஷனால் செய்யப் படாதது’ என்னுமதிலும்
வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று -வக்த்ரு விசேஷத்தாலே – இயற்றினார் சிறப்பாலே.

——————

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் –அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய
சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-பிரதிபாத்ய வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார்-வக்த்ரு வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

—————–

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன்-2-9-11-

விடல் இல் சக்கரத்து அண்ணலை’
நாம் விடுகிறோம்’ என்று அதி சங்கை பண்ணுவது என்?
நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக் காட்டினான்;
‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார்.
அதாவது, ‘ஒரு நாளும் விடாத திருவாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார்.

மேவல் விடல் இல் வண்குருகூர்ச் சடகோபன் சொல் –
அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார்
வண்மையாவது,-இவ் வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம்.

—————

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11-

ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’ என்று பலகாலும் உண்டாக்கா நிற்கும் –
ப்ரயோஜனப்படும் -பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக –
அஞ்ஞான கந்தமும் -அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குண விஷயமாக
மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி –முதல் பத்து –

October 8, 2020

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி முதல் பத்து —
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –

பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் –1-1-11-
வால் மீகிர்ப் பகவான் ருஷி:என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச் செய்கிறார்.

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் –1-2-11-
ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று;
ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன்-1-3-11-
சேர்ந்த பொழில்.–வளப்பத்தை யுடைத்தான திருநகரி
எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் -பூர்ண விஷயத்தில் வாசிகமான விருத்திக்கு –சொற்களைக் கொண்டு
செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே!

வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்-1-4-11-
அகால பலிநோ வ்ருஷ ( ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ )என்கிறபடியே,
ஸ்ரீ திரு நகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று.

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-1-5-11-
மாலே-ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.
மாயப் பெருமானே –குணத்தால் வந்த விபுத்வம் – உயர்வு.
மா மாயவனே –சேஷ்டிதங்களால் -செயல்களால் வந்த -ஆதிக்யம் -மேன்மை.
என்று என்று மாலே ஏறி – ஏவம் விதமான -இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து,
‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,
தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று,
அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-

மாதவன் பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து-
தீது -அவம் -ஏதம் –
இதனை, ‘தீது இல் மாதவன் பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த, ஏதம் இல் ஆயிரம்’
என்று சொற்களைக் கொண்டு கூட்டி,
பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும்,
பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும்,
பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச் செய்தனர் முன்னைய பெரியோர்.
ஸ்ரீ பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,-
த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்;
இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கை விடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-
தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார்

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்-1-8-11-
நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.
ஆர்ஜவ குணமாவது, சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை.
ஆக, இத் திருவாய்மொழியில் அருளிச் செய்தது சர்வேஸ்வரனுடைய ஆர்ஜவ குணம் என்பது போதரும்.
இவ் வார்ஜவ குணத்திற்கு இலக்கான ஆழ்வார்-இவ் வர்த்தத்தைக் கடக்க நின்ற ஒருவர் அல்லர்,

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்-1-9-11-

பூமி இல்லை -என்று-என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான்-இனி அவ்வருகு போக்கில்லை
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்-உபகார சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்குத் தம் பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்த படியை அவன் திரு உள்ளத்திலே படும்படி உணர்த்தி
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவு அன்றிக்கே சம்சாரிகளும் அறியும் படி பண்ணின உதாரரான ஸ்ரீ ஆழ்வார்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரம்–1-10-11-

மணியை-முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார்.
‘தென் குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம்.
வானவர் கண்ணனை –இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார்.
தன்னதோர் அணியை-இதனால் ‘அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார்.
இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய் ஆயிரம் –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்ததாய் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆக வேண்டும்’ என்று,சொற்கள் தாம்
‘என்னைக் கொள், என்னைக் கொள்’ என்று ‘மிடைந்தசொல்’ என்கிறபடியே,சொற்கள் பணி செய்த ஆயிரம் பாசுரங்கள்.
இனி, ‘சொல் பணி செய் ஆயிரம்’ என்பதற்கு,
‘சொற்களால் பணி செய்த ஆயிரம்; அதாவது, வாசிகமான அடிமையைச் சொல்லுதல் –

——————-——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் வண்டு பத பிரயோகம் – /ஸ்ரீ தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

October 8, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி

செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –

செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –

அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
கார் வண்ணன் வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்-2-5-10-

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-

வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

———————

பூங்குவளைப் போதில் பொறி வந்து கண் படுப்ப -ஸ்ரீ திருப்பாவை -3-

பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்-ஸ்ரீ நாச்சியார் திரு மொழி- —5-3-

————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே–ஸ்ரீ பெருமாள் திருமொழி – 2-8-

வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-

பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே-

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே –4-6-

தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே -ஆகையால்
அரும் தவத்தேன்-என்னக் குறை இல்லை இறே –

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

———————–

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–22-

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த-71-

————

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–ஸ்ரீ திரு மாலை-14-

கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-

திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –பகவத் அனுபவத்தாலே முக்தருக்கு பிறக்கும் விகாசம் திர்யக்குகளுக்கும்
பிறக்கும் படி யாய்த்து கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இறே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும் அலையா நிற்கும் யாய்த்து –

—————

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-ஸ்ரீ அமலனாதி பிரான்–6-

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –-திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து
கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

—————-

ஸ்ரீ பெரிய திருமொழி-

மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை-1-1-10-
வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும்
பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –

வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை-1-2-10-

மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-

நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை-1-3-10-

பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
வண்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்-2-2-10-

வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே-3-6-1-
பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே-3-6-2-
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்-3-6-6-
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-
நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன்-3-9-10-

மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-

வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-

எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

நறும் தண் தீம் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-

வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே வரிகளை உடையனான
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள் தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம்  –

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்–6-1-1-

செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும்
என்று திருவடிகளின் மேலே

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-
இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை-7-1-10-

வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

மென் தளிர் போல் அடியினானைப் பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னை-7-4-8-

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே -என்ன பாக்கியம்
ஒரு நாளும் தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்-

இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-

———————-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-

தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று,
பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –

வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையை யுடையனாய்,
ஸ்ரீயபதி- திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தையுடையனாய் இருக்கிறவனுடைய-
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்-5-9-6-

இவற்றின் குரல் த்வனியில் -ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை,
பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய்
அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே, பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.

குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்-5-9-9-

குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டால் போலே இருக்கை.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”- பால. 1-18-
வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு -.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை -போலே
ஸ்ரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி – குடித்து.
முக்தமாய் -இளமையோடு கூடியதாய்க் தர்ச நீயமான -காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள திருவல்லவாழ்.
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப்
புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே,
இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றன வாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

சில வண்டுகளைக் குறித்து, அவர் இத் தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இத் தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது;
பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யரா யிருக்குமவர்க்கு,
ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.

இவற்றை வேறுகொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பதஸ்தம் -பல கால்களை யுடையன ஆகையாலே.
இன்னம் ஒன்று, சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ
அன்றிக்கே. “தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2. ‘- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –தலையான திருஷ்டாந்தம்-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-

பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு தான் அறிந்திருக்குமே.
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ
என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக் கூலி கொடுப்பாரைப் போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாக வேணுமே.
இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.
அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹா ராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது;
இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ.-தலையான பரிசில் அன்றோ இது தான்.

என்றும் இவள் குழலில் மது பானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.–
இவை யாதல். அவனேயோ சாம்யா பத்தி – ஒத்த தரத்தைத் தர வல்லான்,
நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே,
உங்களையும் அவனையும் ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ.
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய்
ஸ்லாக்யமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?
ஊதிரோ-மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழிய மாட்டாமல்
நின்று பறக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும் பர ரக்ஷணமுமானால் -பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,
கூடிய வண்டினங்காள் –மஹா ராஜரைப் போலே படை திரட்ட வேண்டா அன்றோ உங்களுக்கு
என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளைய பெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை த்வாரத்திலே -வாசலிலே சென்று
குண கீர்த்தனம் செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

மதுபான மத்தமாய் -தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் த்வனி -இசை எனக்கு துஸ்ஸஹமாய் -பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்-

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

இனிய பேச்சை உடைய வண்டுகாள் –
அவன் அநாதரிக்கிலும் -விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே
வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது –
பூக்களிலே இரைத்துக் கொண்டு-மது பானம் -தேனைக் குடிக்கும் பொழில்
அன்றிக்கே
மலர்கிற காலத்தில் சென்று தேனைக் குடிக்கும் சோலை என்னுதல்
உங்களுக்கு மீட்சியில் ஆகவும் வேண்டா
ததிமுகன் முதலானோர் காவலும் இல்லை
முன்பு தேனைக் குடிக்கிறவர் களோடு தேனைக் குடிக்க அமையும் –
நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது
உங்கள் வார்த்தை கேட்டிருக்கவும் கேட்டுக் கொண்டாடுகைக்கும் புருஷகாரம் உண்டு -என்கை-

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

பெரிய திருவடியை உடைய தெய்வம் ஆகிற வண்டாலே ஆத்த -எடுக்கப் பட்ட சாரத்தை உடையதான
என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –
ஏவம் -இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது –

வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-

வண்டுகள் மதுபான மத்தமாய் -தேனை உண்டு அதனால் மயக்கம் கொண்டு
பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –

——————–

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும்
தண்டுழாய்க் கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில்
பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய
ஸ்லாக்யமான திருவடிகளை வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

———————————

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –ஸ்ரீ –திரு விருத்தம் -30-

ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-
தூது போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-
என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி
அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்-

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

வண்டுந்துழாய் -ஒப்பனையால் வந்த அழகை சொல்லுகிறது –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகச்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகசா -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –

——————-

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-152-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளிச் செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது
குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும்
தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து
வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்
சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

அதாவது
1-என் பெறுதி என்ன பிரமியாது
கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரிய திருமொழி -8-4-5 – என்று
நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-
(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் –
( ஒன்பதோடு ஓன்று -முதல் மட்டும் -பிரமிக்காமல் -வண்டு பிரமரதம் என்பர் – -எதிர்மறை -மற்றவை எல்லாம் சாம்யம் ))

2-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –
களங்கனி வண்ணா கண்ணனே என் தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி-4-3-9-என்று
தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும்
சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –
த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி –
ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி-
மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

3-தூ மது வாய்கள் கொண்டு —
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு-திருவாய்-6-8-3- -என்று
பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..

4-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து –
என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று
பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த –
ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே
இத் தலையில் போக்யத்தை அனுபவித்து –

5-தே தெனவென்று ஆளம் வைத்து –
வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியே
இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-
(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

6-சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் —
(இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு )
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும்
தென் திருமாலிருஞ்சோலையே –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி — பெரியாழ்வார்-4-8-8–என்றும்
(மல்லிகை வெண் சங்கூதும் பெரியாழ்வார்-4-8-8–மல்லிகை பூ மலர -காற்று வீச சங்கு போல இசை வருமே )
வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –
கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் –
என்கிறபடியே காலோசிதமான பண்களை –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

7-துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –
(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –
இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –
அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு-
அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –
சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –
சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க –
நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று
திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி-
திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே –
அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற –
பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு

8-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி –
வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –
நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

9-அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –
அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் ,
இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று
அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே –
இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —
தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-
என்கிற படியே-அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள்
வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

10-வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –
கொங்குண் வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி
சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே –
அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று
வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி –
கருட வாஹனாய் – சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —

சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று
ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் –
பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி —
(மஹதி நாரதருடைய வீணைக்கு பெயர்-கர்ம -உபய -பாவனை இல்லாமல் ப்ரஹ்ம பாவனையில் மட்டும் இருக்கும் க்ஷேமம் )
லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை –
( அரையர் ஸ்வாமிகளை -பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்று உள்ள வர்கள் என்றவாறு )
இக் குண சாம்யத்தாலே – வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–

தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே – ஓர் அவாந்தர பேதம் —
ஆகையால் இறே -வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும்
பிரிய அருளிச் செய்தது-

———————————————————-———————————————————-———————————————————-———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ வைபவ ஸ்லோகங்கள் –ஸ்ரீ ஸ்வாமி வடிவு அழகு பாசுரங்கள் –

October 6, 2020

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா.– (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

உகாரத்தால் அகாரத்தை மகாரம் அடைந்து உஜ்ஜீவிக்க
மாசுறு சோதியான நம்மை மாசறு சோதி ஆக்கி அருளும் ஆச்சார்யர்கள் அன்றோ
த்வம் மே -அஹம் மே இத்யாதி –
உடையவர் -ஸ்வாமி -ஒருவரே
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க
பச்சாது தாபம் -பின் வருந்துவது இன்றிக்கே இருக்க
உபகார ஆச்சார்யர் அன்றோ நம்மை உத்தாரக ஆச்சார்யரான ஸ்வாமி திருவடிகளில் சேர்த்து அருளுகிறார் –
மண் மிசை யோனிகளைப்பித்தோரும் மாதவனே வந்து கண்ணுற நிற்கிலும் கணகிலா–
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நாரணனுக்கு ஆள் ஆனோமே

ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான் ஒன்றே
குரு ரேவ பர ப்ரஹ்ம பர தனம் –
பர ப்ரஹ்மம் காட்டித்தரும் ஆச்சார்யர்
ஆச்சார்யரைப் பெற்றுத் தரும் பர ப்ரஹ்மம்
ஸத்ருச ப்ரத்யுபகாரம் செய்ய விபூதி சதுஷ்டயமும் ஈஸ்வர த்வயமும் வேண்டும்
உத்சவம் உபயம்-சொல்வதே நாமும் சேர்ந்து கொள்வதே -அதுவும் அவனது இன்னருளே –
ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –
ஆண்டாள்- இதனாலே அவனையும் ஆண்டாள் -நம்மையும் ஆண்டாள் -பக்தியையும் ஆண்டாள் –
அரி உருவாய் -கொண்டாடும் பெரியாழ்வாரை அண்டி அவனையும் ஆண்டாளே
பிதாமஹம் நாத முனையே விலோஸ்ய -ஆனியில் பிறந்த தாத்தா பேரைச் சொல்லி
அவனையே ஆட வைத்து அனுக்ரஹம் பெற்று ப்ரகர்ஷ யிஷ்யாமி -ஆளவந்தார் –

தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர் ஜ்வர அஸீஸமது

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,
எதுவும் இதற்குள் உண்டு என்பதைத்தான் வைசம்பாயனர், ஜனமேஜயன் என்னும் ராஜாவுக்குச் சொல்லுகிறார்

மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா –

புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி–எதிராஜ சப்ததி-

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஆமுதல்வன் இவனென்னு தத்தேத்தி
என்நா முதல் வந்து புகுந்த நல் ஈங்கவி
தூமுதல் பத்தர்க்கு தான் தன்னைச் சொன்ன
என்வாய் முதல் அப்பனை என் சொல்லி மறப்பனோ

கஸ்ஸ்ரீஸ்ரீயஹா பரமசத்த சாமாஸ்ரயஹ்கஹா
கஹா புண்டரீக நயனஹா கஃப்புண்டரீக நயனஹா கஃப் புருஷோத்தமஹா

545 சூத்திரம். ப்ரம்ம சூத்திரத்திலே, 545 சூத்திரங்கள், 156 அதிகரணங்கள், 16 பாதங்கள், 4 அத்தியாயங்கள்.
முதல் அத்தியாயம் (சமந்வயா அத்தியாயம்), இரண்டாவது அத்தியாயம் (அவிரோதா அத்தியாயம்)
மூணாவது அத்தியாயம் (ஸாதனா அத்தியாயம்) நாலாவது அத்தியாயம் (பலா அத்தியாயம்)

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை.
சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ?
प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545.
அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

விஷ்ணுலோக மணி மண்டப மார்க்கதாயி’

இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.

எம்பெருமானார் தரிசனம் என்னே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்த தரினத்தை
எம்பெருமானார் வளர்த்த அந்தச்செயல் அறிகைக்கா.

பாதுகே எதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்யதாஸரதே பாதவ் சிரஸா தாரயாம்யகம்

உன்ன ஒழிய ஒரு தெய்வம் மத்தறியா வடுக நம்பி தன்னிலையை எனக்கருள் எதிராசா

பொலிக பொலிக பொலிக! *
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த *
நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை *
கலியும் கெடும் கண்டு கொள்மின் *
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
மலியப் புகுந்திசைபாடி *
ஆடி உழிதரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம் * கண்ணுக்கினியன கண்டோம் *
தொண்டீர்! எல்லீரும் வாரீர் * தொழுது தொழுது நின்றார்த்தும்

பண் தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து * அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன்

பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை.
அருளிச்செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை.
உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருகை.
த்வயத்தை அர்தாநுஸந்தாநம் பண்ணிப் போருகை.
என்னுடையவன் என்று அபிமாநிப்பான் யாவனொரு பரமபாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை.
திருநாராயணபுரத்திலே ஒரு குடில் கட்டிக்கொண்டு இருக்கை.

திசைகளில் ஒளிரும் கமலச் செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும்…
இசைவுடன் அதிலே இணைந்து அமைந்து இனிமை கூட்டிடும் இடது கழலும்…
இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற்கழலும்…
திடமென அழகை எல்லாம் சேர்த்த திவ்யமான கணுக்கால் எழிலும்…
அதிசய ஒளிமுகம் சுருளாய் இறங்கும் அழகைப் போல் இரு முழந்தாள்களும்…
உதிரென அமையும் திருத்தொடைகளும், பொன்னரைஞாணைப் பூண்ட அழகும்…
அந்தி நிறத்தில் அமையும் ஆடையும், அஞ்சலி செய்யும் தடக்கைகளும்…
உந்தி மலரும் உயரிய கரமும், உடன் இணைந்திடும் கணுக்கைகளும்…
தங்க வளையலைத் தாங்கிய அழகும், தானாய் மடிந்த முழங்கைகளும்,
அங்கம் விரிந்து நீண்டு அமைந்த, அழகிய புஜங்கள் ஆடும் அழகும்,
பளபளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும்,
தளமாய்ப் பிரிந்த முந்நூல் அழகும், வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்…
வலம்புரிச் சங்கின் சுழிபோல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும்…
உலகை மயக்கும் மந்திர முகமும், உரையை வழங்கும் திருப்பவளமும்…
மந்தகாஸமும், ஸ்படிகமயத்தில் மண்டலம் போற்றிடும் கபோலங்களும்…
செங்கநகத்தில் செழித்து வளர்ந்து செவிமேல் அமைந்த கர்ணபாசமும்…
குடிமூக்கழகும், கோலத்தாமரை குடிகொண்டாடும் இரு நயனங்களும்…
வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்…
சந்திரகிரணம் ஒன்று கலந்து, சரியும் அழகாய்த் தாமரை நாமமும்…
இந்திரை மலராய்த் திருவடிபோலே, இலங்கி வளரும் ஸ்ரீசூர்ணமும்…

உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும்,
நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும்,
பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும்,
கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்,
காணக் காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜநே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

சம்ஸ்க்ருதம் சுபாஷிதம்–

October 6, 2020

சுபாஷிதம் 01
அக்ரதஸ் சதுரோ வேதாஹா ப்ருஹ்ஸ்டதஸ் ஸசரம் தனுஹூ
இதம் ப்ராம்மம் இதம் க்ஷாத்ரம் சாபாதபி சராதபி

முன்னால் நான்கு வேதங்கள், பின்னால் அம்பு பூட்டிய வில். ஒன்று உள் சக்தி, மற்றோன்று
புறசக்தி. தவ வாக்கினாலும் அன்பினாலும் உலகம் நன்மை அடைய உழைப்போம்,
இரண்டும் சேர்ந்திருக்கும்போது பெருமை கூடுகிறது.

சுபாஷிதம் 02
அகர்தவ்யம் ந கர்தவ்யம்
ப்ரானை கண்டகதைரபி
லர்ட்ஜவ்ய மேவ கர்தவ்யம்
ப்ரானை கண்டகதைரபி — சாணக்ய சரசம்கிரஹ

எந்தச் செயல் தவறானதோ மரணமே வந்தாலும் அந்த செயலை செய்யக் கூடாது.
எந்தச் செயல் சரியானதோ அதை மரணமே வந்தாலும் செய்து முடிக்க வேண்டும்

சுபாஷிதம் 03
அதாம்பிகத்வம் ஆசாரே, விசாரே தூரதர்ஷிதா
பிரசாரே தத்வநிஷ்கத்வம் ஸ்வீகார்யம் சங்க யோகினா —– சங்க கீதை

படாடோபமில்லாமல் நடந்து கொள்ளுதல் நெடு நோக்குடன் சிந்தித்தல். கொள்கையையே
வலியுறித்திப் பிரசாரம் செய்தல். இவை சங்க அன்பர்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை.

சுபாஷிதம் – 04
அதிஷ்டானம் ததா கர்தா
கரணஞ்ச ப்ருதக்விதம்
விவிதாஷ்ச ப்ருதக்சேஷ்டா
தைவம் சைவாத்ர பஞ்சமம் — பகவத்கீதை

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைப்பதற்கு இடம்(ஆதாரம்), பணி செய்கிறவர், பல்வேறு
கருவிகள், விதவித முயற்சிகள் இவற்றிற்குப் பிறகு தெய்வம் ஐந்தாவதாக விளங்குகிறது.

சுபாஷிதம் 05
அந்த ஷாஸ்த்ரம் பஹீலாஷ்ச
வித்யாஹ அல்பஷ்ச காலோ பஹூவிகநதாச
யத்ஸார்பூ தம் ததுபாஸநீயம்
ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமத்யாத் —- சாணக்ய நீதி

சாஸ்த்திரங்கள் எண்ணற்றவை; கல்வி கணக்கிலடங்ககாதவை; ஆயுட்காலமோ மிகவும்
குறுகியது; வாழ்க்கை நிறைய தடைகளைக் கொண்டது. எனவே ஆராய்ந்து பார்த்து
பாலிலிருந்து நீரை பிரித்து பருகும் அன்னம் போல நாமும் வழ்விற்குரியவற்றை
தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ள வேண்டும்.

சுபாஷிதம் 06
அபார பூமி விஸ்தாரம்
அகண்ய ஜன சங்குலம்
ராஷ்ற்றம் சங்கடநாஹீநம்
ப்ரப்வேந்நாத்ம ரக்க்ஷணே||

எல்லை யில்லாத பரந்து விரிந்த நிலப்பகுதி, எல்லையில்லாத அளவு மக்களின் எண்ணிக்கை
இருந்தாலும் – ஒற்றுமையாக இல்லையென்றால் நாடு தன்னை காத்துக் கொள்ள இயலாது

சுபாஷிதம் 07
அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் அநௌஷ்தம்
அயோக்ய புருஷோ நாஸ்தி யோஜகத் தத்ர துர்லபம்

உதவாக் கரை என்று எந்த மனிதனும் இல்லை. சரியான தகுதி உள்ளவரைத் தேடிக் கண்டு
பிடிக்கும் ஆற்றல் உள்ளவனே சரியான தேசியப் பணி செய்யும் தொண்டன்

சுபாஷிதம் 08
அவிசார்ய ந வக்தவ்யம் வக்தவ்யம் ஸூ விசாரிதம்
கிஞ்ச தத்ரைவ வக்தவ்யம் யத்ர உக்தம் ஸ பலம் பவேத்

ஆராயாமல் பேசக் கூடாது; நன்கு யோசித்த பிறகே பேச வேண்டும். மேலும் எங்கு பேசினால்
பலன் கிடைக்குமோ அங்கு மட்டுமே பேச வேண்டும்

சுபாஷிதம் 09
அயம் மே ஹஸ்த்தோ பகவன்
அயம் மே பகவத்தரஹ
அயம் மே விஸ்வ பேஷஜஹ
அயம் மே ஷிவாபிமர்ஷனஹ

இந்த எனது கை இறைவனாகும். இது அதிக இறைமையுடையது. இந்த எனது கை உலக
மருத்துவன் (அனைவரது நோயையும் போக்கும்) இந்த எனது கை நன்மை விளைவிக்கும்
தன்மை யுடையது.

சுபாஷிதம் 10
அயம் நிஜஹ் பரோவேத்தி கணனா லகு சேதசாம்
உதார சரிதானாம்து வசுதைவ குடும்பகம் ——- சார்ங்கதர பததி

இவன் நம்முடையவன்; அவன் வேறு என்கிற பேதம் குறுகிய மனம் உள்ளவர்களுக்குத் தான்.
பரந்த மனப்பான்மை உள்ளவர்க்கு உலகமே சொந்தக் குடும்பம்.

சுபாஷிதம் – 11
அர்த்த ஸித்தி பராமிச்சன் தர்மமேவாதிதஷ்சரேத்
நஹி தர்மாதபைத்யர்தஹ ஸ்வர்க லோகாதி வாம்ருதம் —-விதுர நீதி

எவனெருவன் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டு இருக்கிறானோ அவன்
முதலில் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஸ்வர்கத்தை விட்டு அமுதம் பிரிந்து போவது
இல்லை. அது போல தர்மத்தினின்று செல்வம் பிரிந்து போவது இல்லை.

சுபாஷிதம் 12
அலப்தம் சைவ லிப்ஸேத
லப்தம் ரக்ஷேதவேக்ஷயா
ரக்ஷிதம் வர்த்தயேத் ஸம்யக்
வ்ருத்தம் தீர்தேஷு நிக்ஷிபேத்

இது வரை அடையாததனை (திறமை, செல்வம்) அடைய விரும்ப வேண்டும்.
அடைந்ததனைப் பொறுப்பாகப் பாதுகாக்க வேண்டும்.
பாதுகாத்ததனை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு நன்கு வளர்ந்ததனை (திறமை, செல்வம்) நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டும்

சுபாஷிதம் 13
அனல்பே (அ)ல்பம் விலயதி
நித்யே (அ)நித்யம் ஸ்திரே(அ)ஸ்திரம்
ஸமஷ்டி ஜீவனே தஸ்மாத்
மஜ்ஜயேத் வ்யஷ்டி ஜீவனம் — சங்க கீதை

சிறிதானது பெரியதுடன் கலந்து விடும். நிரந்தரமில்லாதது நிரந்தரத்துடன் கலந்து விடும், ஆகவே
தனி மனித வாழ்க்கையை சமுதாய வாழ்க்கையுடன் கலந்து விடவேண்டும்.

சுபாஷிதம் 14
அனாகத விதா தாச
ப்ரத்யுத் பன்ன மதிஸ்ததா
த்வாவைதௌ ஸூகமேதேதே
யத்பவிஷ்யோ வினஷ்யதி —- சாணக்ய நீதி சாஸ்திரம்

நிகழ் காலத்தில் விழிப்புடனிருப்பவனும், எதிர் காலத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்பவனும் வெற்றி
பெறுவான். நடக்க வேண்டியது தான் நடக்கும் என்பவன் தோல்வியுறுவான்.

சுபாஷிதம் 15
அனாத்த்யந்தா து ஸா த்ருஷ்ணா
அந்தர் தேஹ கதா ந்ருணாம்
வினாஷயதி ஸம்பூதா
அயோனிஜ இவானலஹ | —– மஹாபாரதம்

ஆரம்பமும், முடிவும் இல்லாத – தன்னுள்ளேயே இருக்க கூடிய — பேராசையானது, சுயமாக வளர்ந்து
அழிக்கக் கூடிய தியைப் போன்று மனிதனை அழித்து விடும்

சுபாஷிதம் – 16
அனிர்வேதஷ் ஷ்ரியோமூலம்
லாபஸ்யச ஷுபஸ்யச |
மஹான்பவத் யநிர்விண்ணஹ
ஸுகம் சானந்த்யமஷ்னுதே || — விதுர நீதி 7 – 57-

ஊக்கத்துடன் உழைப்பது தான் செல்வம், லாபம் சுபம் ஆகியவற்றின் அடிப்படையாகும்
உழைப்பை விடாதவன் மஹான் ஆகி எல்லையில்லாத ஆனந்த நிலை அனுபவிப்பான்

சுபாஷிதம் – 17
அனித்யாநி ஷரீராணி விபவோ நைவ ஷாஸ்வதஹ
நித்யம் ஸந்நிஹிதோ ம்ருத்யுஹு கர்தவ்யோ தர்ம ஸங்க்ரஹஹ

உடம்பு நிலையானது அல்ல,, அதிலும் செல்வம் நிலையானது அல்ல, சாவு – எப்பொழுதும்
அருகிலேயே இருப்பதால் எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதே கடமை.

சுபாஷிதம் 18
அஸ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச் நைவச
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துபல காதகஹ — ஹிதோபதேசம்

பலி கொடுப்பது குதிரையை அல்ல, யானையையும் அல்ல; புலியையோ அல்லவே அல்ல.
ஆட்டுக் குட்டியைத்தான் பலி கொடுக்கிறார்கள். அதாவது பலமற்றவர்களுக்கு கடவுளால்
கூட திமை ஏற்படுகிறது

சுபாஷிதம் 19
அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஹி

அசத்தியலிருந்து என்னை சத்திய நிலைக்கு எட்டுச் செல்வாயாக.
அஞ்ஞான இருளிலிருந்து ஞான ஒளிக்கு என்னை அழைத்துச் செல்வாயாக
அழிவிலிருந்து என்னை அமரத்துவ நிலைக்கு கொண்டு செல்வாயாக.
அமைதி அமைதி அமைதி

சுபாஷிதம் 20
அஹமஸ்மி ஸஹமான்
உத்தரோனாம் பூப்யாம்
அமீஷாமஸ்மி விஸ்வாஷா
மாஷா விஷாஸஹி — அதர்வண வேதம்

எனது தாய் நாட்டிற்காக, அதன் பாதுகாப்புக்காக எல்லா விதமான இன்னல்களையும் ஏற்க நான்
ஆயத்தமா யுள்ளேன். எந்த திசையிலிருந்து எந்த நேரத்தில் அந்த இன்னல் ஏற்படுமாயினும் சரி

சுபாஷிதம் 21
ஆலஸ்யம்ஹி மனுஷ்யாநாம்
ஷரீரஸ்தோ மஹான் ரிபுஹீ
நஸ்த்யுத் யமஸோ பந்து ஹீ
க்ருத்வாயம் நாவஸீததி

ஒவ்வொருவரிடத்திலும் இருக்கும் மிகப்பெரிய எதிரி அவரது சோம்பேறித்தனம். நமக்கு உண்மையான
நண்பன் – உழைப்பு; இதனை நம்பி செயல் புரிந்து கெட்டுப் போனவர்கள் யாருமில்லை

சுபாஷிதம் 22
ஆலோகம் தாது மந்தே ப்யோ
நேத்ர தானம் விஷிஷ்யதே
யேன ஜீவேன் ம்ருதோ (அ) ப்யத்ர
யஷஹ் காயேன ஷாஷ்வதம்

பார்வை இல்லாதவர்களுக்கு கண் தானம் செய்வது மிகவும் சிறப்பான தொண்டு, இப்படித் தருபவர்கள்
இறந்த பிறகும் புகழ் உடம்புடன் என்றென்றும் வாழ்வார்கள்

சுபாஷிதம் 23
ஆத்மார்தம் ஜீவ லோக(அ)ஸ்மின்
கோன ஜீவதி மானவஹ
பரம் பரோப காரார்தம்
யோ ஜீவதி ஸ் ஜீவதி

இவ்வுலகில் எவரொருவர் தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்கு உதவும் வாழ்க்கை வாழ்வாரோ
அவரே உண்மையில் வாழ்கிறார்

சுபாஷிதம் 24
ஆஸிந்து ஸிந்து பர்யந்தா
யஸ்ய பாரத பூமிகா
பித்ருபூஹீ புண்யபூஷ்சைவ
ஸவை ஹிந்து ரிதி ஸ்ம்ருதஹ

சிந்து நதி தொடங்கி கடல்கள் சூழ்ந்த பகுதி வரைக்கும் உள்ள தந்தையர் நாடு தான் எல்லா மதங்களின்
தாயகம். பாரத பூமியை எவன் தன் புண்ய பூமியாக கருதுகிறானோ அவனே ஹிந்து.

சுபாஷிதம் 25
ஆஹார நித்ரா பய மைதுனம் ச
ஸாமான்ய மேதத் பசுபிர் ந ராணாம்
தர்மோ ஹி தாரஹ அதிகோ விசேஷஹ
தர்மேண ஹீனாஹ பசுபிஸ் ஸமானாஹா:

உணவு, உறக்கம், அச்சம், இனவிருத்தி செய்தல் இவை விலங்குகளுக்கும் மனிதனுக்கும் பொது.
தர்மம் தான் மனிதனின் சிறப்பு. தர்மாம் இல்லாவிட்டல் மனிதனும் மிருகமும் ஒன்றே.

சுபாஷிதம் 26
உக்ரத்வம் ச ம்ருத்வம் ச ஸமயம் வீக்ஷ்ய ஸம்ஷ்ரயேத் |
அந்தகாரமஸம்ஹ்ருத்ய நோக்ரோ பவதி பாஸ்கரஹ ||

நேரத்திற்கு தகுந்தவாறு கடுமையாகவோ மென்மையாகவோ இருக்க வேண்டும்.
சூரியன் இருளை முழுமையாக அழிக்கும் வரை மென்மையான கிரண்ங்களைச் செலுத்துகிறான்.
அதன் பிறகே உக்கிரமடைகிறான்.

சுபாஷிதம் 27
உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஸ்சைவ தக்ஷிணம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்த தா —–விஷ்ணுபுராணம்

சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமயமலைக்குத் தெற்கிலும் அமைந்துள்ள நாட்டின் பெயர் பாரதம்.
அதன் மக்கள் பாரதீயர்கள்.

சுபாஷிதம் 28
உத்பன்ன பஷ்சாதாபஸ்ய
புத்திர் பவதி யாத்ருஷீ
தாத்ருஷீ யதி பூர்வம் ஸ்யாத்
கஸ்ய ந ஸ்யான்மஹோதயஹ– சாணக்ய நீதி சாஸ்திரம்

ஒரு செயலை செய்து முடித்த பின் வருந்துவதை விட செயலை செய்யும் முன் சிந்திப்பவன்
நிச்சயம் வெற்றி பெறுவான்

சுபாஷிதம் 29
உத்யந்து ஷதமதித்யாஹ உத்யந்து ஷதமிந்தவஹ |
நவீனா விதுஷாம் வாக்யைஹி நஷ்யத்யாப்யந்தரம் நமஹ ||

நூறு சூரியங்கள் உதித்தாலும், நூறு சந்திரங்கள் உதித்தாலும் அறிஞர்களின்
அறிவுரைகள் இல்லாமல் உள்ளே இருக்கும் இருள் நீங்குவதில்லை

சுபாஷிதம் – 30
உத்யமம் சாகஸம் தைர்யம்
புத்திஷ் ஷக்திஹ் பராக்ரமஹ
ஷடேதே யத்ர வர்தந்தே
தத்ர தேவஸ் ஸஹாய க்ருத் —– பகவத் கீதை

உழைப்பு, துணிவு, தைரியம், அறிவு, பலம் வீரம் இந்த ஆறு பண்புகளும் எங்கே இருக்கின்றனவோ
அங்கே தெய்வம் துணை நிற்கும்

சுபாஷிதம் – 31
உத்யமே நாஸ்தி தாரித்ரியம் ஜபதோ நாஸ்தி பாதகம்
மெளனேன கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாக்ரதோ பயம்

உடலுழைப்பு இருப்பின் ஏழ்மை என்றும் நெருங்காது. நாம ஜபம் செய்வோரிடம் பாவம் அண்டாது.
மெளனமாய் இருந்தால் கலகம் ஏற்படாது. அது போல விழிப்புடன் இருப்பவனுக்கு பயம் இல்லை

சுபாஷிதம் 32
உத்ஸவே வ்யஸனே ப்ராப்தே துர்பிக்ஷே ஷத்ரு ஸங்கடே
ராஜத்வானா ஸ்மஷானே ச யஸ்திஷ்டதி ஸ பாந்தவஹ ——- சாணக்ய நீதி

கொண்டாட்டங்களின் போதும் துக்கதிலும் வறட்சி ஏற்படும் போதும், எதிரிகளால் தாக்கப்படும்
போதும் மன்னனால் கௌரவிக்கப்படும் போதும் மயானத்திலும் கூடவே இருப்பவர்கள் தான் உறவினர்கள்

சுபாஷிதம் 33
உத்ஸாஹோ பலவான் ஆர்ய நாஸ்த்யுத் ஸஹாத் பரம் பலம்
ஸோத் ஸாஹஸ்ய ஹி லோகேஷு நகிஞ்சிதபி துர்பைம் —- வால்மீகி ராமாயணம்

[லக்ஷ்மணன் ராமனிடத்தில்]
வணங்கிதற்குரிய சகோதரரே! உற்சாகம் நிரம்பியவனே பலமுடையவனாவான்; உற்சாகத்தைத்
தவிர வேறொரு பலம் தருகின்ற ஒன்றுமில்லை; உற்சாகமுடையவனுக்கு முன்னால் உலகில்
அடைய முடியாதது என்பதே இல்லை.

சுபாஷிதம் 34
உபகாரிஷூ யஸ்ஸா துஹீ ஸாதுத்வே தஸ்ய
அபகாரிஷூ யஸ் ஸாது ஹீ ஸ ஸாது ஹீ — பஞ்சதந்திரம்

உதவி செய்தவனிடம் நல்லவனாக ஒருவன் நடந்து கொண்டால் அவனுடைய நற் குணத்தில்
சிறப்பு என்ன உள்ளது. தீங்கு செய்தவனிடமும் எவன் நல்லவனாக நடந்து கொள்கிறானோ
அவனே நற் குணத்தவன் என்று சொல்லப்படுகிறான்

சுபாஷிதம் 35
உபகுர்யான்னி ராகாங்க்ஷோ
யஸ்ஸ ஸாது ரிதீர்யதெ
ஸாகாங் க்ஷமுபகுர் யாத்யஹ
ஸாதுத்வே தஸ்ய கோ குணஹ—– ஸ்கந்த புராணம்

யார் தனக்காக எதுவும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே
நல்லவரெனப்படுகிறார்கள். எதிர்பார்ப்புடன் தொண்டு செய்வதில் என்ன நற்குணமுள்ளது?

சுபாஷிதம் 36
உபார்ஜிதானாம் வித்தானாம்
த்யாக ஏவ ஹி ரக்ஷணம்
த்டாகோதர – ஸம்ஸ்தானாம்
பரீவாஹ இவாம்பஸாம்ல்

ஒருவர் சேர்த்த செல்வத்தை நல்ல பணிகளுக்காக செலவிடுவதே, செல்வத்தைப்
பாதுகாக்க சிறந்த வழியாகும். ஏரியில் அதிகப்படியான நீர் வெளியேற உதவும் கால்வாய்
இருப்பதால் அல்லவா ஏரி உடையாமல் இருக்கிறது.

சுபாஷிதம் 37
ஏகத் தேஷ ப்ரஸூதஸ்ய ஸகாஷாதக்ர ஜன்மனஹ
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் ஷிக்ஷேரன் ப்ருதிவ்யாம் ஸர்வ மானவாஹ

இந்த நாட்டில் பிறந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும்
தத்தமது வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்

சுபாஷிதம் 38
ஏகம் விஷரஸம் ஹந்தி
சஸ்த்ரே ணைகச்ச வத்யதே |
ஸராஷ்ட்ரம் ஸப்ரஜம் ஹந்தி
ராஜானம் மந்த் ரவி ப்ளவ: ||

நஞ்சானது ஒரு சமயத்தில் ஒருவரை மட்டும் அழிக்கும் ஆயுதமானது ஒரே சமயத்தில் பலரை
அழிக்க வல்லது. ஆனால் ஒர் அரசனோ அல்லது அவனது மந்திரிகளோ எடுக்கும் ஓர் தவறான
முடிவு கூட அந்த நாட்டையோ அல்லது மக்களையோ அழிக்க வல்லது

சுபாஷிதம் 39
கச்சன் பிபீலகோ யாதி யோஜனானாம் ஷதான்யபி
அகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி

ஊர்ந்து போகின்ற எறும்பாய் இருந்தாலும் நடந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் நூறு
யோஜனை தூரத்தையும் கடக்க முடியும். வேகமாகப் பறக்கின்ற கழுகாய் இருந்தாலும் அசையாமல்
இருந்தால் ஒரு அடி கூட கடக்க முடியாது.

சுபாஷிதம் – 40
கதே ஷோகோ நகர்த்தவ்யோ
பவிஷ்யன்னைவ சிந்தயேத் |
வர்தமானேன காலேன
ப்ரவர்த்தந்தே விசக்ஷனாஹா ||–சாணக்ய நீதி சாஸ்திரம்

கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படக்கூடாது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
அறிஞர்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுகிறார்கள்

சுபாஷிதம் 41
கர்ணஸ் த்வசம் சிபிர் மாம்ஸம் ஜீவம் ஜீமுதவாஹனஹ
தாதள ததீசி அஸ்தீனி நாஸ்த்யதேயம் மஹாத்மனாம்

கர்ணன் தன் தோலைக் கொடுத்தான். சிபி தனது சதையைக் கொடுத்தார். ஜீவமூதவாஹனன்
தன் உயிரையே கொடுத்தார். ததீசி தன் எலும்பையே கொடுத்தார். உயர்ந்த மனிதர்களால்
கொடுக்க முடியாதது என்று ஒன்றுமே இல்லை.

சுபாஷிதம் – 42
கலி; சயனோ பவதி, ஸஞ்ஜிஹானஸ்து த்வாபர;
உத்திஷ்ட்டன் ஸத்ரேதா பவதி, க்ருதம் ஸம்பத்யத சரன்
சரைவேதி! சரைவேதி!!

உறங்குவது கலியுகம் ; கண் விழித்துப் பார்ப்பது துவாபரயுகம் ; சிலிர்த்து எழுவது த்ரேதாயுகம் ;
விரைய முற்படுவது கிருதயுகம். எனவே முன்னேறிச் செல்லுங்கள், விரைந்து முன்னேறிச் செல்லுங்கள்

சுபாஷிதம் 43
காமஹ் க்ரோதஷ்ச லோபஷ்ச தேஹே திஷ்டந்தி தஸ்கராஹ
ஞானரத்னா பஹாராய தஸ்மாஜ் ஜாக்ரத ஜாக்ரத

காமம், குரோதம், கருமித்தனம், என்னும் திருடர்கள் உடலுக்குள்ளேயே இருக்கிறார்கள்.
இவர்கள் ஞானமென்னும் ரத்தினத்தைத் திருடிவிடுவார்கள். ஜாக்கிரதை!

சுபாஷிதம் 44
கிராமஸ்ய ஸேவயானுனம்
ஸேவா தேஷ்ஸ்ய ஸித்யதி
தேஷஸேவா ஹி தேவஸ்ய
ஸேவாத்ர பரமார்தத ஹ—- கிராம கீதாம்ருதம் 3-27

உண்மையிலேயே கிராமங்களுக்கு செய்யும் சேவையே தேச சேவையாகும். தேச சேவையே
உயர்ந்த லட்சியமாகிய இறைவனின் தொண்டாகும்

சுபாஷிதம் 45
குணஷ்வைவ ஹி கர்த்தவ்யஹ ப்ரயத்னஹ் புருஷோஸ்ஸதா
குணயுக்தோ தரித்ரோபி நைஷ்வரைர் குணைஸ்ஸமவா:

மனிதன் நற் குணங்களைப் பெறுவதற்காகத் தான் எப்போதும் முயல வேண்டும். நற் குணங்கள்
இல்லாதவன் செல்வந்தனாக இருந்தாலும் நற் குணங்கள் கொண்ட ஏழைக்கு சமமானவனல்ல

சுபாஷிதம் 46
குணாஹ ஸ்ர்வத்ர பூஜ்யந்தே
நமஹத்யோபி ஸம்பதஹ
பூர்னேந்து கிம் ததா வந்த்யோ
நிஷ்கங்கோ யதா க்ருன்ஷஹ —– சாணக்ய நீதி சாஸ்திரம்

செல்வம் எவ்வளவு இருந்தாலும் நல்ல குணம் தான் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறது.
முழு நிலவைக்கூட மாசற்ற, சிறிய வளர்பிறையின் இரண்டாம் நாள் சந்திரனே மதிக்கப்படுகிறது.
(அடுத்த நாளே சுப நாளாக கருதப்படுகிறது)

சுபாஷிதம் 47
கோ(அ)ஸ்தி பாரஸ் ஸ்மர்தானாம்
கிம் தூரம் வ்யவஸாயினாம்
கோ விதேஷஹ் ஸவித்யானாம்
கஹ்பரஹ் ப்ரிய வாதினாம்.

திறமை உள்ளவருக்கு எந்த வேலையும் பாரம் இல்லை. உழைப்பாளிகளுக்கு எதுவும்
தூரமில்லை. கற்றறிந்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனிமையாகப் பழகுகிறவருக்கு
எவரும் “யாரோ” ஆவதில்லை [அவருக்கு எல்லோரும் நம்மவர் தான்]

சுபாஷிதம் – 48
சங்க கார்யைக நிஷ்டஸ்ய வரிஷ்டஸ்ய விஷேஷதஹ
வாசோ பவேயுர் மதுராஹ சர்வலோக மனேஹராஹ —– சங்க கீதை

சங்க கார்யத்தில் மனதைச் செலுத்தியவர்கள் விசேஷமான குணங்களைப் பெற்றிருப்பர்.
அவர்களது வாக்கு இனிமையாக இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும்படி இருக்கும்

சுபாஷிதம் 49
சங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸ்ம்வோ மனாம்ஸி ஜானதாம்!
தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜா நானா உபாஸதே !!

தோளுடன் தோள் இணைந்து செல்லுங்கள். ஒருமித்த குரலுடன் பேசுங்கள்.
சமமான அறிவு இருக்கட்டும். பழைய காலத்தில் தேவர்கள் தங்களது அமிர்தத்தை
எவ்வாறு பெற்றுக் கொண்டார்களோ, அதுபோலவே ஒருமித்த அறிவுடன் பணிபுரிபவர்களும்
தத்தமக்கு உரிய பங்கினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

சுபாஷிதம் 50
சத்யம் மாதா பிதா ஞானம்
தர்மோ ப்ராத தயா சகா
சாந்திஹ் பத்னீ க்ஷமா புத்ரஹ
ஷடேதே மம பாந்தவஹ

சத்யமே தாய்; ஞானமே தந்தை; தர்மமே சகோதரன்; கருணையே நண்பன்; அமைதியே
மனைவி; மன்னிப்பே மகன் என்று எனக்கு இவர்களே ஆறு உறவினர்கள்.

சுபாஷிதம் 51
சதுர்தா புருஷா லோகே ஸங்க கார்யோபகாரகா
மமக்ஞா யுக்தகர்மக்ஞா ஸத்குணக்ஞாஸ் ஸூயோஜகா: —- சங்க கீதை

வேலையின் ஆழத்தைத் தெரிந்தவரும் தகுந்த வேலையத் தெரிந்தவரும், நல்ல குணங்களை
அடையாளம் தெரிந்து கொள்பவரும் திட்டமிடத் தெரிந்தவரும் ஆகிய இந்த நான்கு குணங்களை
உடையவர்கள் சங்க வேலை செய்ய உதவியாய் இருப்பவர்கள்

சுபாஷிதம் 52
சந்தனம் சீதலம் லோகே
சந்தனாதபி சந்த்ர மாஹா
சந்த்ர சந்தனயோர் மத்யே
சீதலா ஸாது சங்ககதிஹி

உலகில் சந்தனம் குளிர்ச்சியானது. சந்தனத்தை விட சந்திரன் குளிர்ச்சியானது. சந்தனம்,
சந்திரன் இரண்டையும் விடக் குளிர்ச்சியானது நல்லோர் உறவு.

சுபாஷிதம் – 53
சஸ்த்ரைர் ஹதாஸ்து புருஷா: ந ஹதா பவந்தி
பிரக்ஞா ஹதாஸ்ச்ச நிதராம், ஸூ ஹதா பவந்தி
சஸ்த்ரம் நிஹந்தி புருஷஸ்ய, சரீர மேகம்
பிரக்ஞா குலஞ்ச்ச விபவஞ்ச்ச, யஷஷ்ச்ச ஹந்தி

ஆயுதங்களாலே கொல்லப்பட்ட மனிதர்கள் உண்மையில் கொல்லப்பட்டவர்களாக ஆவதில்லை.
புத்தியின் மூலமாக அழிக்கப்பட்டவர்கள், முற்றிலும் அழிக்கப்பட்டவர்களாகவே ஆகிறார்கள்.
ஆயுதங்கள் மனிதனின் உடலை மட்டிலுமே அழிக்கின்றன. புத்தியோ குலத்தையும்,
செல்வத்தையும், புகழையும் சேர்ந்து அழித்துவிடுகின்றது

சுபாஷிதம் – 54
சஷினா ச நிஷா நிஷயா ச சஷி
சஷினா நிஷயா ச விபாதி நபஹ
பயஸா கமலம் கமலேன பயஹ
பயஸா கமலேன விபாதி ஸரஹ

சந்திரனால் இரவுக்கு அழகு; இரவால் சந்திரனக்கு அழகு, இரண்டும் சேர்ந்து ஆகாயத்தை
அழகுபடுத்துகின்றன. தாமரையால் தண்ணீருக்குப் பொலிவு; தண்ணீரால் தாமரைக்குப் பொலிவு.
இரண்டும் சேர்ந்து தடாகத்தைப் பொலிவுற செய்கின்றன. [அது போல தனி மனிதனும், சமுதாயமும்
நன்மை பெறும் வரும் வண்ணம் இணக்கத்தோடு இயங்க வேண்டும்]

சுபாஷிதம் 55
சாயம் அன்யாஸ்ய குர்வந்தி
ஸ்வயம் திஷ்டந்தி சா தபே
பலந்தி ச பரார்த்தேஷூ
நா த்ய ஹேதோ; மஹாத்ருமா:

பெரிய மரங்கள் தங்கள் வெயிலில் வாடினும் மற்றவர்களுக்கு நிழல் தருகின்றன. மேலும் அவை
கனிகளை தருவதும் பிறர் நமையின் பொருட்டேயன்றி தமது சுயநலதிற்காக அல்ல.
(மகான்களும் இது போன்றே)

சுபாஷிதம் 56
சாஸ்த்ராண்ய திதியாபி பவந்தி மூர்கா|
யஸ்து க்ரியா வான்புருஷ: ஸ வித்வான் ||

பல நூல்களைக் கற்ற போதிலும் ஒருவன் மூடனாக இருக்க முடியும் என்வன் தான் கற்றதை
செயலில் வெளிப் படுத்துகின்றானோ அவனே வித்வான் ஆகிறான்

சுபாஷிதம் 57
சிந்தினீயா ஹி விபதாம்
ஆதாவேவ ப்ரதிக்ரியா |
ந கூபகனனம் யுக்தம்
ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே ||

வீடு தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதை அணைப்பதற்காக கிணறுத் தோண்டுவது
பயனற்றது. மாறாக நாம் முன் யோசனையுடன் இருக்க வேண்டும். அதைப் போலவேப் பிரச்சினைகள்
தோன்றுவதற்கு முன்னரே அதை எதிர்க் கொள்ளக் கூடிய வகையில் நாம் முன் தயாரிப்புடன் இருக்க
வேண்டும்.

சுபாஷிதம் 58
த்ருதி; க்ஷமா தமோஸ் தேயம்
ஷௌசம் இந்திரிய நிக்ரஹ
தீர் வித்யா ஸத்யமக்ரோதஹ
தசகம் தர்ம லக்ஷணம்

உறுதி, பொறுமை, அடக்கம், தனக்குரிய தல்லாத பொருளை ஏற்காமலிருப்பது, தூய்மை,
புலனடக்கம், அறிவுக் கூர்மை, கல்வி யறிவு, உண்மை, கோபப்படாமலிருப்பது ஆகிய பத்தும்
தர்மத்திற்கு இலக்கணமான பத்து பண்புகள்.

சுபாஷிதம் 59
த்யஜேத் ஏகம் குலஸ்யார்த்தே க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபத்ஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத் —– மகாபாரதம்

குலத்தின் நன்மைக்காக ஒரு நபரை இழக்கலாம், கிராமத்திற்காக ஒரு குலத்தை இழக்காலாம்,
நாட்டிற்காக ஒரு கிராமத்தை இழக்கலாம் ஆன்ம உணர்வு பெற உலகை இழக்கலாம்.

சுபாஷிதம் 60
த்வாவிமௌ புருஷௌ ராஜன் ஸ்வர்க்கஸ்யோ பரிதிஷ்டதஹ
ப்ரபு ஸ் ச க்ஷமயா யுக்தஹ தரித்ரஸ்ச ப்ரதானவான்—– விதுரநீதி

அரசே! பலசாலியாக இருந்தும் மன்னிப்பவனும், ஏழையாக இருந்தும் கொடையாளியாக இருப்பவனும்.
சுவர்கத்தைவிட உயர்வான இடத்தை பெறுகின்றனர்.

சுபாஷிதம் 61
த நானி ஜீவிதம் சைவ பரார்த்தே ப்ரஜ்ஞ உத்ஸ்ருஜேத்
ஸந் நிமித்தம் வரம் த்யாகஹ விநாசே நியதே ஸதி.

பணம் வாழ்க்கை ஆகியவைகளை பிறருக்காகத் தியாகம் செய்வது சிறந்தது ஆகும். அழியும்
தன்மை கொண்ட இவ்விரண்டும் நல்ல செயலுக்காக பயன்படட்டுமே

சுபாஷிதம் 62
தர்மார்த ப்ரபவதே தர்மாத் ப்ரபவதே ஸுகம்
தர்மேன லபதே ஸ்ர்வம் தர்ம ஸாரமிதம் ஜகத் —– இராமாயணம் அயோத்யா காண்டம்,

பொருளும் இன்பமும் தர்மத்தினாலேயே கிடைக்கின்றன. எல்லா ஆசைகளும் தர்மத்தினாலேயே
நிறைவேறுகிறது. தர்மமே உலகிற்கு ஆதாரம்.

சுபாஷிதம் 63
தனதான்ய ஸீஸம்பன்னம் ஸ்வர்ணரத்னாதி ஸம்பவம் |
ஸீஸம்ஹதிம் வினா ராஷ்ட்ரம் ஸதாஸ்யாத் சூன்யவைபவம் ||

பொருள்: தனம் தான்யம் நிறைந்த போதிலும், தங்கம் ரத்னம் இவைகள் குவிந்திருந்த போதிலும்
உறுதியான ஒருங்கிணைப்பு இல்லாத நாடு(எப்பொழுதும்) எதுவும் இல்லாதது போலாகிவிடும்

சுபாஷிதம் 64
தனதான்ய ஸூக ஸம்பன்னம்
ஸ்வர்ண ரத்ன மயாகரம்
ஸூஸம்ஹதிம் விநா ராஷ்ட்ரம்
ந பவேத் விபவாஸ்பதம்

செல்வம் தான்யம் நிறைந்திருக்கலாம் – தங்கம், ரத்னம் கொட்டியிருந்தாலும் – நல்ல ஒற்றுமை
இல்லாத பட்சத்தில் நாடு முன்னேற்றம் அடைய முடியாது

சுபாஷிதம் 65
தானாய லக்ஷ்மீ, சுக்ருதாய வித்யா
சிந்தா பரப்ரம்ஹ வினிஸ்ச யாய
பரோபகாராய வாசன்ஸி யஸ்ய
வந்த்யஸ் த்ரிலோகே திலகஸ்ஸ ஏவ—–சாங்கதர ஸ்ம்ருதி

தனது செல்வமெல்லாம் தானமளிப்பதற்கே, தனது கல்வியறிவு நற்பணிகளுக்கே, தனது
சிந்தனையோ உயர்ந்த விஷயங்களைக் கண்டு உணர்வதற்கேதான். சொல்லும் சொல் எல்லாம்
பிறர் நன்மைக்காகவே என்று வாழ்கின்ற பெருந்தகையை மூவுலகும் கைதொழும்; அவரே மேலோர்.

சுபாஷிதம் 66
திருஷ்டிபூதம் ந்யஸேத்பாதம் வஸ்த்ரபூதம் பிபேஜ்ஜலம்
ஷாஸ்த்ரபூதம் வதேத்வாக்யம் மனஹ்பூதம் ஜ்ஸமம்சரேத்—- சாணக்ய நீதி

பார்வையால் சோதித்து காலடி வைக்க வேண்டும். துணியால் சோதித்து (வடிகட்டி) தண்ணீர்
குடிக்க வேண்டும். நன்னெறி வழுவாமல் வார்த்தைகளை வெளியிட வேண்டும். மனதால்
சோதித்து (மனசாட்சி) நடைமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுபாஷிதம் 67
தேவி புவன மனமோகினீ
நீல சிந்த்ஜல தௌதசரணதல—- ரவீந்திரநாத் தாகூர்

பாரத மாதாவின் பேரழகு உலகையே மயக்குகிறது. அவளது திருவடிகளை நீலக் கடல்கள் கழுவுகின்றன.

சுபாஷிதம் – 68
தைவா வலம்பினஹ் கேசித், கேசித் தேவா வலம்பினஹ
சங்க கார்ய ப்ரவ்ருத்தாஸ்யுஹு புருஷார்த்த வலம்பினஹ

சிலர் அதிருஷ்டத்தை நம்பியிருப்பார்கள்; இன்னும் சிலர் கடவுளை நம்பியிருப்பார்கள்;
சங்கப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் உழைப்பை நம்பி இருப்பார்கள்

சுபாஷிதம் 69
தைவாயத்ஹ்டம் குலே ஜன்ம
மதாயத்தம் து பௌருஷம்

எந்தக் குலத்தில் பிறக்கிறோம்,என்பது விதி வசம். ஆண்மை கைவரப் பெறுவதோ தன் முயற்சியின் பலன்.

சுபாஷிதம் – 70
ந தேவா தண்ட மாதாய, ரக்ஷந்தி பஷூ பாலவத்
யந்து ரக்ஷிதுமிச்சந்தி, புத்யா ஸம்விபஜந்தி தம்

தேவர்கள் தடியை எடுத்துக் கொண்டு மாடு மேய்ப்பவர்களைப் போல பாதுகாவல் செய்வதில்லை.
யாரைப் பாதுகாக்க விரும்புகின்றார்களோ, அவருக்கு புத்தியை அளித்து அருள் புரிவார்கள்

சுபாஷிதம் 71
ந புத்தி பேதம் ஜனயேத் அஞானம் கர்ம ஸங்கனாம்
ஜோஷயேத் சர்வ கர்மாணி வித்வான் யுக்தஸ் ஸமாசரண்—- பகவத் கீதை (3-26)

நம்பிக்கையுடன் சேவை போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பாமரர்களின் மனதில் குழப்பம்
ஏற்படுத்தக் கூடாது. மாறாக விஷயம் தெரிந்தவர்கள் நற்பணிகளில் முழுபாவத்துடன் தாங்களும்
ஈடுபட்டு மற்றவரையும் ஈடுபடுத்த வேண்டும்.

சுபாஷிதம் – 72
ந ராஷ்ட்ரம் ராஷ்ட்ரதாம் யாதி
யத்ய ஸங்கடிதா ஜனாஹ|
நிதானம் ராஷ்ட்ர பாவஸ்ய
ஸூஸங்கடித ஜீவனம் ||

மக்கள் ஒருங்கிணையாமல் இருந்தால் தேசம், தேசியத்தை அடைவதில்லை. தேசிய உணர்வின்
அடிப்படை ஒருங்கிணைந்த வாழ்க்கையே

சுபாஷிதம் 73
ந ராஷ்ட்ரம் ராஷ்டதாம்யாதி
யத்ர அசங்கடிதா ஜநா;
நிதானம் ராஷ்ற்ற பாவஸ்ய
சு சங்கடித ஜீவனம்

மக்கள் ஒற்றுமை இல்லையெனில் நாடு நாடாகாது. நல்ல ஒற்றுமை வாழ்வே தேச உணர்வுக்கு அடிப்படை

சுபாஷிதம் 74
ந ராஜ்யம் ந ச ராஜாஸீத் ந
தண்ட்யோ ந ச தாண்டிகஹ
தமேணைவ ப்ரஜாஸ் ஸர்வாஹ
ரக்ஷந்திஸ்ம பரஸ்பரம்

அரசு இருக்கவில்லை; அரசனில்லை; தண்டனை இல்லை; குற்றவாளியில்லை, தர்மத்தின் மூலமே
ஒவ்வொருவரும் பரஸ்பரம் காப்பாற்றிக் கொண்டனர்.

சுபாஷிதம் 75
நாத்மானம் அவமன்யேத
பூர்வாபி ரஸ்ம்ருத்திபி:
ஆ-ம்ருத்யோ: ஸ்ரீயம் அன்விச்சேத்
நைனாம் மயேத துர்பலம்

கடந்த காலத் தோல்விகளை எண்ணி ஒருவர் தன்னைத்தானே இகழ்ந்து கொள்ளக்கூடாது.
வெற்றி ஒன்றும் எட்டாக் கனி அல்ல என்ற எண்ணத்துடன் உயிருள்ளவரை முயற்சி செய்ய வேண்டும்

சுபாஷிதம் – 76
நாத்மான மவன்யேத பூர்வாபிரஸம்ருத்திபிஹி
ஆ ம்ருத்யோஷ் ஷ்ரியமன்விச்சேத் நைனாம் மன்யேத் துர்லபாம்—மனுஸ்ம்ருதி

முந்தைய தோல்விகளின் காரணமாகத் தன்னைத் தானே ஈனமாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
மாறாக வாழ்க்கை முழுவதும் நல்ல நிலை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
முடியாது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது

சுபாஷிதம் 77
நா பிஷேகோ ந ஸ்ம்ஸ்காரஹ
ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜித சத்வஸ்ய
ஸ்வயமேவ ம்ருகேந்த்ரத— கருட புராணம்

காட்டில் எவரும் முடிசூட்டி, சிங்கம் அரசனாவதில்லை. தனது பராக்ரமத்தின் துணை கொண்டே தானே
விலங்குகளின் அரசனாக அமைகிறது சிங்கம்.

சுபாஷிதம் 78
நாரிகேல சமர்காராஹ த்ருஷ்யந்தேஹி சுஹ்ருத் த்மாஹ
அன்யே பதாகா காராஹ பஹிரேவ மனோஹராஹ

நல் இதயம் படைத்தவள் தேங்காய் போன்ற தோற்றம் உடையவர்கள். அதாவது மேலே மட்டையும்
உள்ளே இனிய தேங்காயும் உடையவர்கள். மற்றவர்கள் இலந்தையைப் போல வெளியே மென்மையாகவும்,
அழகாகவும் உள்ளே கருமையாகவும் இருப்பார்கள்

சுபாஷிதம் 79
நாஸ்தி வித்யாஸமம் சக்ஷூ;
நாஸ்தி சத்ய சமம் தப:
நாஸ்தி ராக ஸமம் துக்கம்
நாஸ்தி த்யாக சமம் சுகம்

கல்விக்கு இணையான கண்கள் இல்லை, உண்மைக்கு இணையான தவம் இல்லை. ஆசைக்கு
இணையான துன்பம் இல்லை. தியாகத்திற்கு இணையான சுகம் இல்லை.

சுபாஷிதம் 80
நிஷ்சித்ய ய(ப்) ப்ரக்ரமதே நாந்தர்வஸதி கர்மணஹ
அவந்த்ய காலோ வஸ்யாத்மா ஸ் வை பண்டித உஸ்யதே||—– விதுர நீதி

துவக்குவதற்கு மு வேலையினை முடிவு செய்பவர், இடையில் வேலையை நிறுத்தாமல் இருப்பவர்,
நேரத்தை விணடிக்காமல் இருப்பவர், மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் எவரோ அவரே
அறிஞர் என அழைக்கப்படுகிறார்.

சுபாஷிதம் – 81
ப்ரதம வயஸி பீதம் தோயமல்பம் ஸ்மரந்தஹ
ஷிரஸி நீஹிதபாரா நாரிகேலா நராணாம்
உதகமம்ருத கல்பம் தத்யு ராஜீவிதாந்தம்
நஹிக்ருத முபகாரம் ஸாதவோ விஸ்மரந்தி!

கன்றாக இருக்கும்போது. நீரை மனிதனின் கையால் குடித்ததை நினைவில் வைத்துக் கொண்டு,
இளநீர் வடிவத்தில் தலைமேல் சுமந்து நிற்கும் தென்னை மரம். வாழ்நாள் முழுவதும் அமுதம்
போலிள்ள நீரைக் [மனிதனுக்கு] கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் பெற்ற உபகாரத்தை
மறக்க மாட்டார்கள் (கடமை உணர்வோடு சமுதாயத்திற்கு சேவை செய்வார்கள்)

சுபாஷிதம் 82
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச்ச்
கார்யாகார்யே பயாபயே |
பந்தம் மோக்ஷஞ்சயா வேத்தி
புத்தி: ஸா பார்த்த ஸாத்விகீ||— கீதை [அத்யாயம் 18, பாடல் 30]

எந்த செயலில் ஈடுபடுவது எதிலிருந்து விலகியிருப்பது என்றும் கார்யம் எது கார்யம் அல்லாதது
எது என்பதையும் அச்சத்தையும் அச்சமின்மையையும் பந்தத்தையும் விடுதலையையும் எந்த
புத்தி அறிகிறதோ அதுவே சாத்வீக புத்தியாகும்

சுபாஷிதம் 83
ப்ராப்யாப தம் நவ்யததே கதாசித்
உத்யோகம் அன்விச்சதி சாப்ரமத்தஹ
துக்கஞ்ச காலே ச ஹதே மஹாத்மா
துரந்த ரஹ்த ஸ்ய ஜிதா ஹ ஸபத் னா ஹ—விதுரநீதி 1-101

நெருக்கடியைக் கண்டு கலங்க மாட்டான்; கவனம் சிதறாதவனாகவே பணியில் இறங்குவான்;
பெருந்தன்மையுடையவனாக, நேர்கிற துன்பத்தைப் பொறுத்துக் கொள்வான் பொறுப்பு ஏற்பான்;
இதனால் அவனது எதிரிகள் அவனிடம் தோற்று விடுவர்

சுபாஷிதம் – 84
ப்ராரப் யதேன கலு விக்ன பயேன நீசை;
ப்ராரப்ய விக்ன விஹதா விரமம்தி மத்யா;
விக்னைர் முஹீர் முஹீரபி ப்ரதிஹன்ய மானா;
ப்ராரப்த முத்தம் குணா த பரியஜந்தி— நீதி சாஸ்திரம்

அதமர்கள் (சோம்பேறிகள்) கஷ்டம் வந்துவிடும் என்ற பயத்தினால் ஒரு காரியத்தையும்
ஆரம்பிக்க மாட்டார்கள். மத்தியமர்கள் துணிந்து ஆரம்பித்து கஷ்டத்தினால் தடைபட்டு நின்று
விடுவார்கள். உத்தமர்கள் எவ்வளவு கஷ்டங்கள் நேரிட்ட போதிலும் ஆரம்பித்த காரியத்தை
முடிக்காமல் விட மாட்டார்கள்

சுபாஷிதம் 85
ப்ரியவாக்ய ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவாஹ
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

இனிய சொற்களைப் பேசினால் மிருகங்களுக்குக் கூட மகிழ்ச்சி உண்டாகிறது. ஆகவே இனிமையாகப்
பேச வேண்டும். இனிய பேச்சுக்கு என்ன பஞ்சம் வந்து விட்டது?

சுபாஷிதம் 86
பரஸ்பர விரோதே து வயம் பஞ்ச ச தே சதம்
பரைஹி பரிபவே ப்ராப்தே வயம் பஞ்சாதிகம் சதம்——- மகாபாரதம்

நமக்குள் பகைவரும் போது நாம் ஐவர், அவர்கள் நூறு பேர். ஆனால் நமக்குப் பொதுவான எதிரி
வரும்போது நாம் நூற்றைந்து பேர், என்று தர்மபுத்திரன் பீமனிடம் கூறுகிறான்

சுபாஷிதம் 87
பரோக்ஷே கார்யஹந்தாரம்
ப்ரத்யக்ஷே ப்ரியவாதினம்
வர்ஜயேத்தா த்ருசம் மித்ரம்
விஷகும்பம் பயோ முகம்

காணாத போது காரியத்தைக் கெடுப்பவன்; ஆனால் நேரில் பார்க்கும் போது இனிமையாகப்
பேசுபவன். இத்தகைய நண்பனை ஒதுக்க வேண்டும். விஷம் நிறைந்த பானையின் வாயருகே
மட்டும் பால் உள்ளது போன்றவன் அவன்.

சுபாஷிதம் 88
பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா
பரோபகாராய வஹந்தி நத்ய;
பரோபகாராய சரந்தி காவ:
பரோபகாரார்த்த மிதம் சரீரம்

பிறர்க்கு வழங்குவதற்காக மரங்கள் கனிகள் உற்பத்தி செய்கின்றன; பிறர்க்கு நீர் தருவதற்காக
நதிகள் ஓடுகின்றன; பிறர்க்கு பால் வழங்குவதற்காக பசுக்கள் மேய்கின்றன. எனது இந்த
உடலும் பிறர்க்கு உதவுவதற்காக. பரமபூஜனீய ஸ்ரீ குருஜி போன்ற மகாங்களின்
வாழ்க்கையும் இது போன்றதுதான்.

சுபாஷிதம் 89
பரோபகாரஹ் கர்த்தவயஹ ப்ராணைரபி தனரபி
பரோபகாரஜ புண்யம் ந ஸ்யாத்க்ரதுஷதைரபி

நமது உயிரையும் பணத்தையும் கூடப்பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
ஏனெனில் பரோபகாரத்தால் வரும் புண்ணியம் நூற்றுக்கணக்கான ஜன்மங்களுக்கும் மறையாது.

சுபாஷிதம் 90
பஹூனாம் அல்ப ஸாரானாம் ஸம்ஹதிஹ் கார்யஸாதிகா
த்ருணைர் குணத்வமா பன்னைஹி பத்யந்தே மத்த தந்தினஹ

குறைந்த சக்தியுள்ளவராக இருந்தாலும் இணைந்து இருப்பதால் கார்யங்களை சதிக்க முடியும்.
காய்ந்த புல்லாய் இருந்தாலும் கயிறாக திரிப்பதால் மத யானையையும் கட்ட உதவும்.

சுபாஷிதம் 91
பாத்ரேத்யாகீ, குணே ராகீ
போகீபரிஜனை ஸ்ஸஹ!
ஷாஸ்த்ரே போத்தா ரணே யோத்தா
ஸவை புருஷஉச் யதே!!

தகுதியுள்ள நல்லவர்களுக்கு தானம் தருபவனும், நற்குணங்கள் உள்ளவனிடம் ஈடுபாடு
கொண்டவனும் அருகில் இருப்பவர்களுடன் வசதிகளைப் பகிர்ந்து அனுபவிப்பவனும் நீதிநெறிகளைத்
தெரிந்தவனும், போர்க்களத்தில் வீரத்துடன் போராடுபவனுமாகிய ஒருவனைத்தான் ஆண்மகன்
என்று சொல்வார்கள்.

சுபாஷிதம் 92
பார்த்த நைவே ஹ நாமுத்ர வினாஷஸ்தஸ்ய வித்யதே
நஹி கல்யாணக்ருத் கஷ்சித் துர்கதிம் தாதகச்சதி —-பகவத்கீதை (6-40)
அர்ஜூனா! ஈடுபட்டிருந்த நல்ல வேலையைத் (யோகம்) தொடர முடியாமல் போனாலும் அவருக்கு
இந்த உலகிலும் அந்த உலகிலும் வீழ்ச்சி கிடையாது (ஏனென்றால்) பிறருக்கு நன்மை செய்த
எவருக்குமே அவல நிலை வராது,

சுபாஷிதம் 93
புராண மித்யேவ நஸாது ஸர்வம்
ந சா பி காவ்யம் நவமித் யவத் யம் !
ஸந்த ஹ் பரீக்ஷ்யானய தரத் ப ஜந்தே
மூட ஹ் பரப்ரத் யயநேய புத்தி ஹி!!

வெறும் பழமையானது என்பதற்காக எல்லாம் நல்லதாக ஆகாது. புதியது என்பதற்காக
எந்த ஒரு பொருளும் ஓதுக்கப்பட வேண்டியது ஆகாது. புத்திசாலியான நல்லவர்கள் ஆராய்ந்து
பார்த்த பின்புதான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஆனால் முட்டாள்
சுயபுத்தியை பயன்படுத்தாமல் மற்றவர்களின் கருத்தின்படி முடிவுக்கு வருவான்

சுபாஷிதம் 94
புத்திர்யஸ்ய பலம் தஸ்ய
நிர்புத்தேட்து குதோ பலம்
வனேஸிம்ஹோ மதோன் மத்தஹ
ஷஷகேன நிபாதிதஹ—– பஞ்சதந்திரம்

புத்தி யாருக்கு உண்டோ அவன் சக்தி வாய்ந்தவன். புத்தியில்லாதவனுக்கு பலம் எப்படிப் பயன் படும்?
காட்டில் மதம் பிடித்த சிங்கத்தை ஒரு முயலே தோற்கடித்தது.

சுபாஷிதம் 95
மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம்
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்

மகான்களுடைய சிந்தனை, சொல், செயல், இவை எப்பொழுதும் ஒன்றாக இருக்கிறது. ஆனால்
துர்ஜனங்களுடையதோ சிந்தனை வேறு, சொல் வேறு, செயல் வேறாக இருக்கிறது.

சுபாஷிதம் 96
மஹா சித்தாந்த நிஷ்டானாம்
ஸ்வானுஷாஸன வர்தினாம் |
ஸமஷ்டிலீன வ்யஷ்டினாம்
ஸங்க ஆதர்ஷ் உஸ்யதே || சங்ககீதை 115

யாருக்கு உயர்ந்த லட்சியப்பற்றும் சுய கட்டுப்பட்டுடன் நடந்து கொள்வதும் சமுதாயத்தில் இரண்டறக்
கலந்துவிடுவதும் தன்மையாகியுள்ளதோ அவர்களது ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி (சங்கம்)
முன்னுதரணமாக இருக்கும்.

சுபாஷிதம் 97
மாத்ருவத் பரதாதேஷு பரத்ரவ்யேஷு லோஹ்ஸ்டவத்
ஆத்மவத் சர்வ பூதேஷூ யஹ்பஹ்ஸ்பதி ஸ் பண்டிதஹ—- சாணக்ய நீதி

பிறருடைய மனைவியைத் தாயாகவும் தன்னுடையதல்லாத எந்தப் பொருளையும் மண்ணைப் போலவும்.
அனைத்து உயிர்களையும் தன்னைப் போன்றதாகவும் கருதுபவன் தான் அறிஞன்.

சுபாஷிதம் 98
முக்தஸ்ங்கோ(அ)நஹம்வாதீ த்ருத்யத்ஸாஹ ஸயன்விதஹ
ஸித்யஸித்யோர் நிர்விகாரஹ கர்த்தா ஸாத்விக உஸ்யதே—— பகவத் கீதை

பலனில் பற்றை விட்டவன், அகங்காரம் இல்லாதவன் உறுதியும், உற்சாகமும் நிரம்பியவன், வெற்றி
தோல்விகளால் பாதிக்கப் படாதவன் ஆகிய குணங்களை உடையவனே உத்தம ஊழியன்.

சுபாஷிதம் 99
யத்ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ரு தோபமம்
தத்ஸுகம் ஸாத்விகம் ப்ரோக்தம் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்—–பகவத் கீதை (18 – 37)

ஆரம்பத்தில் கடினமாகவும் விளைவுகளில் அமுதம் போன்றும் இருப்பதுதான் சாத்வீக சுகம் என்று
சொல்லப்படுகிறது. இது உள்ளுணர்விலிருந்து ஏற்பட்ட சுகமாகும்.

சுபாஷிதம் 100
யதாத்மானஸ் ததான்யஸ்ய
ரஹஸ்யம் ந ப்ரகாஷயேத்
விஜானீயாச்ச வைகுண்யம்
யதான்யஸ்ய ததாத்மனஹ — சங்ககீதை

சொந்த ரகசியத்தைக் கட்டிக் காப்பது போலவே மற்றவர்களின் ரகசியத்தையும் விளம்பரப்படுத்தாமல்
இருக்க வேண்டும். பிறரிடம் குறை காண்பது போலவே ஒருவர் தமது குறைகளையும் கவனத்தில்
கொள்ள வேண்டும்.

சுபாஷிதம் 101
யதயத் ஆசரதிஸ்ரேஷ்டஹ தத்ததேவ இதரோ ஜனஹ
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனு வர்த்ததே—- மகாபாரதம்

மேன்மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே மற்ற ஜனங்களும் நடந்து கொள்வார்கள்.
எதனை அவர்கள் மதிப்புள்ளதாக செய்கிறார்களோ அதனை உலகம் பின்பற்றும்

சுபாஷிதம் 102
யத்ர யோகேஸ்வர(ஹ்) க்ருஹ்ஸ்ணோ
யத்ர பார்த்தோ தனுர்தரஹ
தத்ர ஸ்ரீ விஜயோ பூதிர்
த்ருவா நிதிர் மதிர் மம:

யோக ஈசனான கண்ணனும் வில்லேந்திய பார்த்தனும்(அர்ஜூனன்)எங்கே இருக்கிறார்களோ,
அங்கே மேன்மைகளும், வெற்றியும், செல்வமும், சாஸ்வதமான நீதியும் இருக்கும் என்பது
என் கருத்து (என்று சஞ்சயன் திருதராஷ்ற்றனிடம் கூறுகிறான்)

சுபாஷிதம் – 103
யத்துஷ்கரம் யத்துராபம்
யத்துர்கம் யச்சதுஸ்தரம்
தத்ஸர்வம் தபஸா ப்ராப்யம்
தபோஹி துரதிக்ரமம்

எளிதில் செய்ய முடியாத வேலைகளையும் கஷ்டம் தரும் விஷயங்களையும் கடக்க முடியாத இடங்களையும்
கூட கடுந்தவத்தால் சாதிக்க முடியும். எல்லாக் கஷ்டங்களுக்கும் தீர்வு தவம் தான்.

சுபாஷிதம் 104
யாவத் பரியேத் ஜடரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம்
அதிகம் யோபி மன்யேத ஸ் ஸ்தேனோ தண்ட மர்ஹதி — மனு ஸ்ம்ருதி

உடலுக்கு அத்தியாவசியமான அளவை மட்டும் எடுத்துக் கொள். அதைவிட அதிகமாக ஏற்பது திருட்டு.
அது தண்டனைக்குரிய செயலாகும்.

சுபாஷிதம் – 105
யாத்ரு ஷைஸ் ஸந்நிவிஷதே
யத்ருஷாம்ஸ் சோபஸேவதே
யத்ருகிச்சேச்ச பவிதும்
தாத்ருக் பவதி பூருஷஹ— விதுரநீதி 4 – 12

யாருடன் பழகுகிறானோ, யாருடன் பணிபுரிகிறானோ, எவரைப் போன்று ஆக விரும்புகிறானோ அவ்வாறே
மனிதன் ஆகிறான். (நல்லோருடன் பழக நல்லோரைப் போல் ஆக விரும்ப நல்லவனாகிறான்)

சுபாஷிதம் 106
யதாக்நிர் தாருமத்யஸ்தோ
நோத்திஷ்டேன் மதநம் விநா |
விநா சாப்யாஸ யோகேந
ஞான தீபஸ்ததா நஹி ||

நெருப்பு விறகில் இருப்பினும் அதனைக் கடையாவிட்டால் வெளிப்படுவதில்லை. அதுபோல முயற்சி
என்ற யோக சாதனை இல்லாமல் ஞானம் என்ற ஒளி ஏற்படுவதில்லை.

சுபாஷிதம் 107
யாந்தி ந்யாய ப்ரவ்ருத்தஸ்ய
திர்யஞ்சோ (அ)பி ஸஹாயதாம் |
ஆ பந்தானாந்து கச்சந்தம்
ஸோதரோ (அ)பி வுமுஞ்சதி ||— அனார்கராகவ

நியாயமான பாதையில் செல்பவனுக்கு (ராமனுக்கு) குரங்குகளும் உதவியளிக்கும். தவறான
பாதையில் செல்பவனை (ராவணனை) சொந்த சகோதரன் கூட (விபீஷணன்) கை விட்டு விடுவான்.

சுபாஷிதம் 108
யஸ்ய ப்ரஸாதே பத்மாஸ்தே
விஜயஷ்ச பராக்ரமே
ம்ருத்யுஷ்ச வஸதி க்ரோதே
ஸர்வ தேஜோ மயோஹி ஸஹ—– ஹிதோபதேசம்

யாருடைய அருளால் (மகிழ்ச்சி கொண்டால்) செல்வம் கிடைக்குமோ, வீரத்தால் வெற்றி கிட்டுமோ,
கோபம் கொண்டால் மரணத்தை ஏற்படுத்த முடியுமோ அவன்தான் ஒளிமயமானவன்

சுபாஷிதம் – 109
யஸ்ய க்ருத் யம ந விக்னந்தி
ஷீத முஷ்ணம் பயம் ரதி ஹி
ஸம்ருத்தி ர் அஸம்ருத் திர்வா
ஸ வை பண்டித உச்யதே! விதுரநீதி 1- 17

எவனது செயலை குளிர், வெப்பம், பயம், வேறு பொருளில் நாட்டம், வசதி, வசதிகுறைவு என்று எதுவும்
இடையூறாகித் தடை செய்யாதோ அவனே அறிவாளி

சுபாஷிதம் 110
யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரக்ஞா
ஷாஸ்த்ரம் தஸ்ய கரோதிகிம்
லோசநாப்யாம் விஹீநஸ்ய
தர்பணம் கிம் கரிஷ்யதி

சுய அறிவு இல்லாதவனுக்கு எவ்வளவுதான் சாஸ்த்ரம் புகட்டினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்வை
இல்லாதவனுக்கு கண்ணாடியால் என்ன செய்ய இயலும்? [சுய அறிவு என்பது கண்களுக்கும், சாஸ்த்ரம்
என்பது கண்ணாடிக்கும் ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது]

சுபாஷிதம் 111
யஸ்மான்னோத்விஜதே லோகஹ லோகான்னோத்விஜதே
ஹர்ஷாமர்ஷ பயோத்வேகைஹி முக்தோ யஸ் ஸ: சமே ப்ரியஹ— பகவத் கீதை

யாரால் உலகத்திற்குப் பிரச்சனை இல்லையோ,, யாருக்கு உலகத்தால் பிரச்சனை ஏற்படாதோ,
யார் மகிழ்ச்சி, எரிச்சல், அச்சம், கலக்கம், இவைகளிலிருந்து விடுபட்டவனோ அவன் எனக்குப்
பிடித்தமானவன் என்கிறார் பகவான்

சுபாஷிதம் 112
ரத்னாகரா தௌதபதாம்
ஹிமாலய கிரீடினீம்
ப்ரம்மராஜரிஷி ரத்னாட்யாம்
வந்தே பாரதமாதரம்

எந்த பாரத அன்னையின் கால்களைக் கடல் நனைக்கிறதோ, எந்த அன்னை இமயலையை கிரீடமாக
அணிந்திருக்கிறாளோ, ப்ரம்ம ரிஷிகள் ராஜரிஷிகள் எங்கின்ற செல்வங்களை உடையவளான அந்த
பாரத அன்னைக்கு வணக்கம்.

சுபாஷிதம் 113
ராகஞி தர்மினி தர்மிஷ்டா பாமே பாபாஸ் ஸமே ஸமாஹ
ராஜானமனுவர்த்தந்தே யதா ராஜா ததா ப்ரஜ—சாணக்ய நீதி
அரசன் தர்மவானாக இருந்தால் குடிமக்களும் தர்மவான்களாக இருப்பர். அரசன் பாவியாக இருந்தால்
குடிமக்களும் பாவிகளாக இருப்பர். அவன் அனைவரிடத்திலும் சமமான பார்வையுடையவனாக
இருந்தால் மக்களும் அனைவரிடத்திலும் சமமான பார்வையுடைவர்களாக இருப்பர். எல்லவற்றிலும்
குடிமக்கள் மன்னனையே பின்பற்றுவார்கள். மன்னன் எப்படியோ, குடிமக்களும் அப்படியே.

சுபாஷிதம் 114
லக்ஷ்மீர் வஸதி ஜிஹ்வாக்ரே
ஜிஹ்வாக்ரே மித்த பாந்தவாஹ
பந்தநம் சைவ ஜிஹ்வாக்ரே
ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம்

நாக்கின் நுனியில் திருமகள் வஸிக்கிறாள். நாக்கின் நுனியிலேயே நண்பர்களும் உறவினர்களும்
இருக்கிறார்கள். சிறைபடுதலும் (தளையும்) நாக்கின் நுனியில் தான். மரணம் கூட நிச்சயமாக
நாக்கின் நுனியில் தான் இருக்கிறது.

சுபாஷிதம் – 115
வ்ருத்தி ப்ரலாவஸ்தேஜஸ்ச
ஸத்வ முத்தானமேவ ச
வ்யவஸயஸ்ச யஸ்ய ஸ்யாத்
தஸ்யவ்ருத்தி பயம் குத:— விதுர நீதி 5வது அத்யாயம் 41வது ஸ்லோகம்

எங்கு வளரும் சக்தி, ஒளி, வலிமை, பராக்ரமம், முயற்சி, உறுதி போன்றவை காணப்படுகிறதோ
அங்கு உயிர் போய்விடும் என்ற பயம் எவ்வாறு ஏற்படும்?

சுபாஷிதம் 116
வ்யாயாம புஷ்ட காத்ரஸ்ய
புத்திஸ்தேஜோ யஷோ பலம்!
ப்ரவர்தந்தே மனுஷ்யஸ்ய
தஸ்மாத் வ்யாயாமமாசரேத்!!

உடற் பயிற்சியால் நல்ல உடம்பை அடைந்தவனின் புத்தியும், தெய்வீக களையும், புகழும்,
பலமும் வளரும். ஆகவே உடற்பயிற்சி செய்வீர்.

சுபாஷிதம் – 117
வதனம் ப்ரஸாத ஸதனம்; ஸதயம் ஹ்ருதயம் ஸூதாமுசோ வாசஹ
கரணம் பரோபகரணம் யேஷாம் கேஷாம் நதே வந்த்யாஹா

எப்போதும் மலர்ந்த முகம்; இதயத்திலோ கருணை பொங்கும்; வாக்கிலே அமுது சிந்தும் ; எப்போதும் பிறர்க்கு
உதவிகரமாக இருப்பார் – இப்படிப்பட்ட வரை யார் தான் போற்றமாட்டார்கள்?

சுபாஷிதம் 118
வனானி தஹதே வன் ஹேஹெ ஸகா பவதி மாருதஹ
ஸ ஏவ தீப நாஷாய, க்ருஷே கஸ்யாஸ்தி ஸொஹ்ருதம்

காடு தீப்பற்றி எரியும் போது வீசும் காற்று தீக்கு நண்பனாகி பரவச் செய்து விடுகிறது. அதே காற்று மெல்லிய
தீபத்தை அணைத்து விடுகிறது. பலவீனமானவனுக்கு யார் தான் நண்பனாக இருப்பார்கள்?

சுபாஷிதம் 119
வாக்த்ருத்வம் கீத கானம் ச
கதா கதன கெளஷலம்
யத்னே நைதே(அ)தி கந்த வ்யாஹ
லோக ஸங்கட கா குணாஹ — சங்ககீதை

பேச்சுத்திறன், பாட்டுப்பாடும் திறன், கதை சொல்கின்ற திறமை ஆகியவை மக்களை இணக்கும் குணங்கள்.
இவற்றை முயற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும்

சுபாஷிதம் 120
விகாஸயதி ஸத்பாவான் விலோபயதி துர்குணான்!
வினாஷயதி வித்வேஷான் கார்யம் ஸங்கடனாத்மகம்

நல்ல எண்ணங்களை மலரச் செய்வதும், தீயகுணங்களைக் களைவதும், வெறுப்பை அழிப்பதும்
சங்கவேலையின் பலனாகும்

சுபாஷிதம் – 121
விகாஸயதி ஸத்பாவான்
விலோபயதி துர்குணான் |
வினாஷயதி வித்வேஷான்
கார்யம் ஸ்ங்கடனாத்மகம் ||—- ஸங்க கீதை

நல்ல எண்ணங்களை மலரச் செய்வதும், தீய குணங்களைக் களைவதும் வெறுப்பை அழிப்பதும் சங்க
வேலையின் பலனாகும்.

சுபாஷிதம் 122
வித்யா மித்ரம் ப்ரவாஸேஷு
மாதா மித்ரம் க்ருஹேஷுச
ரோகினம் ஒளஷதம் மித்ரம்
தர்மோ மித்ரம் ம்ருதஸ்யச

பயணம் செய்பவனுக்கு கல்வி நண்பன். வீட்டில் தாய் நண்பன், நோயாளிக்கு மருந்தே நண்பன்.
தர்மம் இறந்த பின்னும் நண்பனாயிருக்கும்

சுபாஷிதம் 123
வீரேதி ஹாஸ விக்யாதம் ஸாது சாரித்ரிய விஹ்ஸ்ருதம்
வினா ஸங்கடிதம் ராஷ்ட்ரம் ந பவேத் பலவந்தரம் —– சங்க கீதை

வீரர்களின் வரலாற்றால் பெயர் பெற்றிருந்தாலும் நல்லவர்களின் செயல்களால் புகழ் பெற்றிருந்தாலும்
நாடு இணைந்து இல்லாவிட்டால் பலம் வாய்ந்ததாக ஆகாது.

சுபாஷிதம் 124
விஸ்மய: ஸ்ர்வதா ஹேய:
ப்ரத்யூஹ்: ஸர்வகர்மணாம்
தஸ்மாத் விஸ்மயமுத்ஸ்ருஜ்ய
ஸாத்யே ஸித்திர் விதீயதாம்

எதைக் கண்டும் மலைத்துப் போகக்கூடாது. அது நமது பணிகளுக்கு மிகப்பெரும்
தடையாகும். ஆகையால் எதனைக் கண்டும் மலைத்துப் போகாமல், அடைய வேண்டிய
குறிக்கோளை நோக்கி முழுமுயற்சி செய்ய வேண்டும்.

சுபாஷிதம் 125
விஹாய பௌருஷம் யோஹி தவமேவா வலம்பதே
ப்ரஸாத ஸிம்ஹ வத்தஸ்ய மூர்த்னி திஷ்டந்தி வாயஸாஹ!

எவனொருவன் தன்னுடைய செயல் சக்தியை மறந்துவிட்டு வெறும் தெய்வத்தை (விதியை)
நம்பி இருப்பானோ, அவன் வீட்டுக்கு முன் உள்ள உயிரற்ற சிங்க பொம்மைகள் போல இருக்கிறான்.
அது சிங்கமாக இருந்தாலும் அந்த தலையின் மீது காக்கை உட்காரும்.

சுபாஷிதம் 126
விஜேதவ்யா லங்கா சரண தரணீயொ ஜலநிதிஹி
விபக்ஷஹ் பௌலஸ்த்யோ ரணபுவி ஸஹாயாஷ்ச கபயஹ
த்தாப் யே கோ ராமஸ் ஸகலமவ தீத்ராக்ஷஸகுலம்
க்ரியா ஸித்திஸ் ஸத்வே பவதி மஹதாம் நோபகரணே||

ஜெயிக்க வேண்டியதோ இலங்கை; கடக்க வேண்டியதோ பெருங்கடல்; எதிரியோ ராவணன்;
போர்க்களத்தில் உதவி என்று பார்த்தால் குரங்குகள், இப்படி எல்லாம் இருந்தாலும் ராமன் தனியாக
ராக்ஷஸ குலம் முழுவதையும் அழித்தான். (காரணம்) மகாங்களுக்கு வேலையில் வெற்றி
கருவிகளால் இல்லை; உள் சக்தியினால் தான்

சுபாஷிதம் 127
வினா ஸ்வதர்மான் ந ஸூகம்
ஸ்வதர்மோ து பரம் தபஹ—- சுக்ர நீதி

ஒருவன் தன்னுடைய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கா விட்டால் இன்பமில்லை. தன்னுடைய
வாழ்க்கை முறையே ஒருவனுக்கு தலைசிறந்தத தவமாகும்.

சுபாஷிதம் 128
வேஷா பாஷா ஸதாசாரஹ ரக்ஷணீயம் இதம் த்ரயம்
அந்தானு கரம் மன்யேஷாம் அகீர்த்தி கரமுஸ்யதே

ஆடை, மொழி, நன்னடத்தை இம்மூன்றும் பாதுகாக்கப் படவேண்டும். பிறரைக் கண்மூடித்தனமாய்ப்
பின்பற்றுவது பெருமையல்ல என்று கூறப்படுகிறது.

சுபாஷிதம் 129
வேஷா பாஷா ஸதாசாரஹ
ரக்ஷணீயம் இதம் த்ரயம் |
அந்தானு கரண மன்யேஷாம்
அகீர்த்தி கரமுச்யதே ||

ஆடை, மொழி, நன்னடத்தை இம்மூன்றும் பாதுகாக்கப்பட வேண்டும். பிறரைக் கண்மூடித்தனமாக
பின்பற்றுவது பெருமையல்ல என்று கூறப்படுகிறது.

சுபாஷிதம் 130
ஸ்ரீர்மங்கலாத் ப்ரபவதி ப்ராகல்ப்யாத் ஸம்ப்ரவர்த்தே !
தாக்க்ஷ்யாத்து குருதே மூலம் ஸம்யமர்தப்ரதி திஷ்ட்தி!!—-விதுரநீதி
செல்வமானது சுபகார்யங்களால் வரும். பராக்கிரமத்தினால் அது பெருகும். புத்திசாலிதனத்தினால்
அது வேரூன்றி நிற்கும். மனக்கட்டுப்பாட்டால் அது பாதுகாப்பாக இருக்கும்.

சுபாஷிதம் – 131
ஸ்வதேசம் பதிதே கஷ்டே
தூரஸ்தா லோகயந்தியே
நைவச ப்ரதிகுர்வந்தி
தே நராஹா சத்ரு நந்தனாஹா

சொந்த நாடு துன்பத்தில் இருக்கும் பொழுது விலகி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் நாட்டின்
பகைவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுபவர்களாகிறார்கள்

சுபாஷிதம் 132
ஸ்ரோத்ரம் ஸ்ருதேனைவ ந குண்டலேன
தானேன பாணிர் நது கங்கணேன
விபாதி காயஹ கருணா பராணாம்
பரோபகாரேண ந சந்தனேன—— நீதிசதகம்

நல்ல கருத்துக்களைக் கேட்பதால் காது பிரகாசிக்கிறது, குண்டலம் அணிவதால் அல்ல.
தானம் செய்வதே கரத்திற்கு அழகு; கங்கணம் அணிவதல்ல. கருணை உள்ளம் படைத்தவர்கள்
சரீரம் பிறருக்கு உதவுவதால் பிரகாசிக்கிறது, சந்தனத்தால் அல்ல.

சுபாஷிதம் – 133
ஸ்வதேச பதிதம் கஷ்டம் தூரஸ்தா லோகயந்தி யே
நைவ ச ப்ரதி குர்வந்தி தே நராஹா சத்ரு நந்தனாஹா

நாடு துன்பத்தில் இருக்கும் போது அதனை நீக்க முயலாமல் எட்டி நின்று வெறுமனே பார்த்துக்
கொண்டிருப்பவர்கள் நாட்டின் பகைவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவர்களாக ஆகிறார்கள்.

சுபாஷிதம் 134
ஸ்வபாவம் ந ஜஹாத்யேவ ஸாதுராபத்கதோபி யென்
கர்ப்பூரஹ் பாவகஸ்ப்ருஷ்டஹ ஸௌரபம் லபதேதராம்

உயர்ந்த மனிதர்கள் கஷ்டம் வந்த காலத்திலும் தங்கள் பிறவியின் பண்பை மாற்றிக் கொள்ள
மாட்டார்கள். கற்பூரத்தை நெருப்பிட்டுக் கொளுத்தினாலும் அது நறு மணத்தைத்தான் தரும்

சுபாஷிதம் – 135
ஸக்தாஹ் கர்மண்ய வித்வாம்ஸோ
யதா குர்வந்தி பாரத
குர்யாத் வித்வாம்ஸததா ஸகதஹ
சிகீர்ஷீர் லோக் சங்க்ரஹம் — ஸ்ரீமத் பகவத் கீதை

பார்த்தா பற்றுள்ளவராய் பாமரர் செயல்படுவது போல அறிஞர்கள் பறில்லாதவராய் உலகை
நல்வழியில் நடத்த வேலை செய்ய வேண்டும்

சுபாஷிதம் 136
ஸங்க ச்சத்வம் ஸம்வதத்வம்
ஸம்வோ மனாம்ஸி ஜானதாம் |
தேவா பாகம் யதா பூர்வே
ஸ்ஞ்ஜானானா உபாஸதே– ரிக்வேதம்

நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செல்லுங்கள். ஒன்று கூடி அன்புடன் அளவளாவுங்கள்
(பேசுங்கள்). உங்கள் மங்கள் ஒத்த கருத்துடையனவாகி மீயறிவைத் தேடட்டும். முற்காலத்தில்
சான்றோர்கள் ஒன்றாகச் சேர்ந்து யாகங்களைச் செய்து தேவர்களை வழிபட்டது போலவே
நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடையவராகுங்கள்.

சுபாஷிதம் – 137
ஸதா ப்ரவாஸி நிரோஹி பத்ரவேஷ ஷூசிஸ்மிதஹ
ஹிதகாரி மிதாஹாரி பவேத் சங்க பராயணஹ– சங்க கீதை

சங்கமொன்றே சிந்தையாகக் கொண்ட சிறந்த கார்யகர்த்தர்கள் எப்போதும் தமது பணிக்களத்தில்
சுற்றுப்பயணம் செய்து கொண்டிருப்பர். ஆரோக்கியமானவர்களாகவும், நேர்த்தியான
உடையணிந்தவர்களாகவும் இருப்பர். சுத்தமாகவும் சிரித்த முகத்தோடும் காணப்படுவர்.
எப்போதும் நல்லதையே செய்து கொண்டிருப்பர், மிதமான உணவை உட்கொள்வர்

சுபாஷிதம் 138
ஸமானோ மந்த்ரஸ் ஸமிதிஸ் ஸமானி
ஸமானம் மனஸ் ஸஹச் சித்தமேஷாம்!
ஸமானம் மந்த்ரம் அபிமந்த்ரயேவஹ
ஸமானேன வோ ஹவிஷா ஜீஹோமி!!

எனது உணவை உன்னுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வேனாக. நீ இணைந்து பணியாற்றி,
எய்த வேண்டிய பலனை அடைவதற்கு நான் உறுதுணையாய் இருப்பேன்.

சுபாஷிதம் 139
ஸமானீவ ஆகூதிஹி ஸமானா ஜ்ருதயானிவஹ!
ஸமானமஸ்து வோ மனோ யதா வஸ் ஸீஸஹாஸதி!!

உங்கள் அனைவருக்கும் ஒரே சிந்தனை, ஒரே இலட்சியம் அமையட்டும். உங்கல் எல்லோரது
இதயங்களும் இணைந்து பணீ புரியட்டும். உங்கள் எல்லோரது மனமும் ஒருங்கிணைந்து அமையட்டும்.
அதன் மூலம் நீங்கள் செய்யும் பணீயில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்குவீர்களாக.

சுபாஷிதம் 140
ஸச ஸர்வகுணோபேதஹ கௌஸல்யாநந்த வர்தனஹ!
ஸமுத்ர இவ காம்பீர்யே ஸ்தைர்யேண ஹிமவானிவ!!—— வால்மீகி

அவன் (ஸ்ரீராமன்) எல்லா குணங்களும் நிறைந்தவனாக இருந்து கௌஸல்யையின்
(அம்மாவின்) மகிழ்ச்சியை அதிகரிப்பவனாக இருந்தான். கம்பீரத்தில் கடல்போலவும,
மன உறுதியில் இமயம் போலவும் விளங்கினான்

சுபாஷிதம் 141
ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயாஹா
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மாகஸ்சித் துக்க பாக்பவேத்

எல்லோரும் இன்பமடையட்டும்
எல்லோரும் நோய் அற்றவர்களாக இருக்கட்டும்
எல்லோரும் மங்களங்களையே அனுபவிக்கட்டும்
ஒருவரும் துன்பமடையக் கூடாது

சுபாஷிதம் 142
ஸர்வதா ஸ்ம்ஹதைர் ஏவ துர்பலைர் பலவானபி
அபித்ரஹ ஷக்யதே ஹந்தும் மதுஹா ப்ரமரைரிவ—– வியாசர்

பலவீனர்களும் ஒன்று திரண்டு தாக்கினால் பலவானையும் வீழ்த்த முடியும். தேனீக்கள் ஒன்று
திரண்டு தேனெடுக்கும் மனிதனைத் தாக்கித் துரத்திவிட முடியும்.

சுபாஷிதம் 143
ஸர்வேபி சிகினஸ் ஸந்து ஸர்வே ஸந்து நிராமயாஹ
ஸர்வே பத்ராணி பஸ்யந்து மாகஸ்சித் துக்க பாக் பவேத்

எல்லோரும் சுகமாக இருக்கட்டும்; எல்லோரும் நோயற்றவர்களாக இருக்கட்டும். எல்லோரும்
மங்களகரமானவற்றையே பார்க்கட்டும். யாருக்கும் துக்கம் நேராது இருக்கட்டும்.

சுபாஷிதம் 144
ஸத்யம் ஏக பதம் ப்ரம்ஹஹ ஸத்யே தர்மப் ப்ரதி ஷஷ்டிதஹ
ஸத்யமேவாக்ஷயா வேதாஹா ஸத்யேநா வாப்யதே பரம்

உண்மை ஓங்கார வடிவ ப்ரம்மம் ஆகும்; உண்மை தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகும்; உண்மை
அழியாத வேதமாகும்; உண்மை பரம்பொருளிடம் நம்மை சேர்ப்பிப்பதாகும்.

சுபாஷிதம் 145
ஸம்ஸார விஷவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே
காவ்யாம்ருத ரஸாஸ்வாத ஜ ஆலாபஸ் ஸஜ்ஜனநஹி ஸஹ

பிறவியாகிய விஷமரத்தினுடைய அம்ருதத்திற்கு ஒப்பான இரண்டு கனிகள் அம்ருத சுவையுடைய
நூலும், நன்மக்களுடன் உரையாடலும் ஆகும்

சுபாஷிதம் 146
ஸமுத்ர வஸனே தேவி
பர்வதஸ்தன மண்டலே
விஷ்ணுபத்நி நமஸ்துப்யம்
பாதஸ்பர்ஷம் க்ஷமஸ்வமே’

சமுத்ரத்தை ஆடையாக அணிந்தவளும், மலைகளை மார்பகங்களாக கொண்டவளும்,
விஷ்ணுவின் மனைவியுமான அன்னையே உன்னை வணங்குகிறேன். எனது கால்கள் உன் மீது
படுகின்றது. அதற்காக என்னை மன்னிக்கவும்.

சுபாஷிதம் 147
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி நத்யஜேத்
ஸர்வாரம்பாஹி தோஷேண தூமேனாக்னிரி வாவ்ருதாஹா——பகவத் கீதை (18 – 48)

அர்ச்சுனா! குறைகள் தோன்றினாலும் இயல்பாய் நாம் ஏற்றெடுத்த வேலையைக் கைவிட்டு
விடக்கூடாது. (ஏனென்றால்) புகைமூட்டம் நெருப்பை சுற்றி இருப்பது போல நல்ல வேலையைக்
குறைகளும் குற்றங்களும் சூழ்ந்திருக்கும்.

சுபாஷிதம் 148
ஸாக்ஷரா: விபரீதாச்சேத்ராக்ஷஸா:
ஏவ கேவலம் |
ஸரஸோ விபரீதச்சேத்ஸரஸத்வம்
ந முஞ்சதி ||

நன்கு படித்தறிந்தவன் கூட சந்தர்ப்பவசத்தால் அரக்கனைப் போல மாறுவான். மாறாக உயர்ந்தப்
பண்பாளன் எத்தகைய சூழ்நிலையிலும் தன் இயல்பிலுருந்து மாறமாட்டான்
“சாக்ஷ்ரா” எனும் வார்த்தையை மாற்றி எழுதும் போது “ராக்ஷசா” என்று வடிவம் பெறும்
மாறாக ஸரஸா எனும் வார்த்தையை மாற்றி எழுதும் போது ஸரஸா என்ற வடிவமே பெறும்.

சுபாஷிதம் 149
ஸாமர்த்யமூலம ஸ்வாதந்த்ரயம்
ஸ்ரமமூலம் ச வைபவம்
ந்யாயமூலம் ஸூராஜ்யம் ஸ்யாத்
ஸங்க மூலம் மஹாபலம்–சங்ககீதை 37
ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு அடிப்படை அதன் கெட்டிக்கரத்தனத்தில் உள்ளது. உன்னத
நிலைக்கு அடிப்படை உழைப்பாகும். நல்லாட்சிக்கு அடிப்படை நீதி நெறியாகும். பெரும் சக்திக்கு
அடிப்படை ஒருங்கிணைப்பு (சங்கம்) ஆகும்

சுபாஷிதம் 150
ஸிம்ஹாதேகம் பகாதேகம்
ஷட் ஷூனஸ்த்ரீணி கர்தபாத்
வாயஸாத் பஞ்சஷிக்ஷேச்ச
சத்வாரி குக்குடாதபி
பஞ்சதந்திரம்

சிங்கத்திடமிருந்து ஒன்றும் (ஒழுங்காகச் செய்தல்),
கொக்கிடமிருந்து ஒன்றும் (கவனம் சிதறாமலிருப்பது)
நாயிடமிருந்து ஆறும்
(கொஞ்ச உணவு, கிடைத்ததில் திருப்தி, தகுந்த தூக்கம், சுறுசுறுப்பு, எஜமான பக்தி, சாகஸ குணம்),
கழுதையிடமிருந்து மூன்றும்
(ஓய்வில்லாமல் சுமப்பது, குளிர், வெய்யிலால் பாதிக்காதது, இன்ப, துன்பங்களில் மாறாதது),
காக்கையிடமிருந்து ஐந்தும்
(கெளரவமான இல்லற வாழ்க்கை, தங்க வீடு ஏற்படுத்திக் கொள்வது, தைரியமாக முயற்சிப்பது,
எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது, சோம்பலின்மை)
சேவலிடமிருந்து நான்கும்
(எதிரியுடன் பின் வாங்காத போராட்டம், உறவினருடன் சேர்ந்து உண்ணுதல்,
அதிகாலையில் எழுதல், பெண்களைக் காப்பாற்ற பயமின்றிப் போராடுவது)
கற்றுக் கொள்ளத் தக்கவை
[அதாவது எல்லாரிடமிருந்தும் ஏதேனும் கற்றுக் கொள்ள முடியும்]

சுபாஷிதம் 151
ஷ்ரத்தா த்யாகஸ்தபோ யத்னஹ
ஸமதா ஷூத்த ஷீலதா
இத்யேதத் ஸங்க யோகஸ்ய
விக்ஞாதவ்யம் ஷடங்ககம்

சிரத்தை, தியாகம், தவம், உழைப்பு(முயற்சி), சமத்துவம், நல்லொழுக்கம் இவைகள் சங்க யோகத்தின்
ஆறு அம்சங்கள். [சங்க வேலையில் வெற்றிக்காக கடைபிடிக்க வேண்டியவை]

சுபாஷிதம் 152
ஷ்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிபிஹி
பரோபகாரஹ் புண்யாய பாபாய பரபீடனம்

கோடிக்கணக்கான நீதி நூல்கள் கூறும் விஷயத்தை நான் வெறும் அரை ஸ்லோகத்தில் கூறிவிடுவேன்.
“மற்றவர்களுக்கு உதவி செய்வது புண்ணயம் தீங்கு செய்வது பாவம்”

சுபாஷிதம் – 153
ஷட் தோஷா ; புருஷே னேஹ
ஹாதவ்யா பூதிமிச்சதா
நித்ரா தந்த்ரிபயம் க்ரோதஹ
ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா— விதுரநீதி 1- 72

தூக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல் சிந்திப்பதில் நேரம் கடத்திச் செயலில் ஈடுபடாமை
என்ற ஆறும் நலத்தை விரும்புகிறவனால் தவிர்க்கத் தக்கவை

சுபாஷிதம் 154
ஷட் தோஷாஹா புருஷேணேஹ
ஹாதவ்யா பூதிமிச்சதா |
நித்ராம் தந்த்ரா, பயம், க்ரோத,
ஆலஸ்யம் தீர்க்க சூத்ரதா ||

வெற்றி பெற விருப்பமுள்ளவர்கள், அதிகமாகத் தூங்குதல், பாதி தூக்கம்-பாதி
விழித்திருத்தல், பயம், கோபம், சோம்பல், வேலையைத் தள்ளிப் போடுதல் அல்லது
மெதுவாகச் செய்தல் ஆகிய ஆறு குறைகளை விட்டுவிட வேண்டும்

சுபாஷிதம் 155
ஷஷிநா ஷோபதே ராத்ரிஹி
ஸ்ருஷ்டிஸ் சீர்யேண ஷோபதே
ஸத்யேந ஷோபதே வாணீ
ஸதாசாரேண ஜீவநம்

இரவு சந்திரனால் விளங்குகிறது; உலகமானது சூரியனால் விளங்குகிறது; வாக்கு உண்மை
பேசுவதால் விளங்குகிறது. வாழ்வு ஸதாசாரத்தால் (நல்லொழுக்கத்தால்) சிறப்புற்று விளங்குகிறது

சுபாஷிதம் 156
ஹ்ருதம் ஸதயம் யஸ்ய பாஷிதம் ஸத்ய பூஷிதம்
காயஹ பரஹிதோபாயஹ கலிஹ் குர்வித தஸ்யகிம்—- வைராக்ய சதகம்

கருணை நிறைந்த இதயம், உண்மையால் மெருகேறிய பேச்சு. பிறருக்கு உதவுவதற்காக உடல்
என்று கொண்ட ஒருவரை கலி என்னதான் செய்துவிட முடியும்.

சுபாஷிதம் 157
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்
ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய
யுத்தாய க்ருதநிஷ்சய !!– ஸ்ரீமத் பகவத்கீதை

போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய். வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய்.
ஆகையால் கௌந்தேய (அர்ஜுனா) போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.

சுபாஷிதம் 158
ஹஸ்தி ஸ்தூலதனுஸ் ஸ் சாங்குஷ வஷஹ
கிம் ஹஸ்தி மாத்ரோங் குஷஹ
தீபே ப்ரஜ்வலிதே வினஸ்யதி தமஹ
கிம் தீப மாத்ரம் தமஹ!
வஜ்ரேணா பிஹிதாஹ் பதந்தி கிரயஹ
கிம் சாத்ரி மாத்ரஹ் பவிஹி
தேஜோ யஸ்ய விஹாஜதே ஸ் பலவான்
ஸ்தூலேஷ்ய் கஹ் பரத்ய்ய்ஹ!
யானையின் சாரீரம் மிகப் பெரியதாயினும் அங்குசத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அங்குசம் என்ன யானையைப் போன்ற பெரிய உருவம் கொண்டு இருக்கிறதா?
விளக்கை ஏற்றுவதால் சுழ்ந்துள்ள இருட்டு விலகிப் போய்விடுகிறது.
இருட்டு என்ன விளக்கைப் போல் சிறியதாகவா இருக்கிறது?
வஜ்ராயதத்தின் தாக்குதல் மிகப்பெரிய மலைகளையும் முடக்கி விடுகின்றது.
வஜ்ராயுதம் என்ன மலையைப் போன்று பெரியதாகவா இருக்கின்றது?
ஆகவே பெரிய உருவம் என்பதல்ல முக்யம்.
யாரிடம் தேஜஸ் (உள் சக்தி) இருக்கிறதோ அவனே பலவான்.

சுபாஷிதம் – 159
ஹிமாலயம் ஸமாரப்ய
யாவதிந்து ஸரோவரம்
தம்தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே — பார்ஹஸ்பத்ய சாஸ்த்ரம்

இமய முதல் சமுத்திரம் வரை பரந்துள்ள ஹிந்துஸ்தானம் இறைவனால் உருவாக்கப்பட்ட தேசம்,
நம் கண் முன் உள்ளது.

சுபாஷிதம் 160
ஜனனி ஜனகஷ்சைவ
ஜன்ம பூமிர் ஜனார்தன:
ஜீவோ ஜயஸ்ச ஜனதா
ஸேவாஏதே ஸகௌரவம்

ஜனனி (தாய்) ஜனக (தந்தை) ஜன்மபூமி (பிறந்த நாடு) ஜனார்த்தன (இறைவன்) ஜீவ (வாழ்வு)
ஜய (வெற்றி)
மற்றும் மக்கள் (சமுதாயம்) இவர்களுக்கு தொண்டு மிகுந்த மரியாதையுடன் செய்ய வேண்டும்

சுபாஷிதம் – 161
ஜாதி மாத்ரேன கிம் கஸ்சித்
தன்யதே பூஜ்யதே க்வசித்
வ்யவஹாரம் பரிக்ஞாய
வத்ய(ஹ்) பூஜ்யோ(அ)தவா பவேத்— இதோபதேசம்

ஜாதியை மட்டும் வைத்து எவரையும் பெருமைக்குரியவர் என்றோ, போற்றத்தக்கவர் என்றோ
கொள்வதில்லை. ஒருவரது நடத்தையை வைத்தே அவர் தண்டனைகுரியவராகிறார்
அல்லது போற்றுதலுக்குரியவராகிறார்

சுபாஷிதம் – 162
ஜாதி த்வேஷோ தர்ம நாசோ தேச துரோகஹ ஸ்வவிஸ்ம்ருதிஹி
யத்ர ப்ரவர்ததே தத்ர சங்க தர்மோஹி தரகஹ.

ஜாதிக் காழ்ப்புணர்வு, தர்மத்தின் அழிவு, தேச துரோகம், நாம் யார் என்பது பற்றிய உணர்வின்மை –
இவை மண்டிக் கிடக்கும் இடத்தில் சங்க நெறி தான் அருமருந்து

சுபாஷிதம் 163
ஜீவனே யாவதா தானம் ஸ்யாத் ப்ரதானம் ததோதிகம்
இத்யாஷா ப்ரார்த் தனாஸ்மாகம் பகவன் பரிபூர்யதாம்

வாழ்க்கையில் நாம் பெறுவதை விட கொடுப்பதே அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த எங்களது ப்ரார்த்தனையை கடவுள் நிறைவேற்றட்டும்.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பஞ்ச முக திருவடி தியான ஸ்லோகம் –தியான ஸ்லோகங்கள்–

October 6, 2020

vande vAnaranArasi.nhakhagarATkroDAshvavaktrAnvitaM
divyAla~NkaraNaM tripa~nchanayanaM dedIpyamAnaM ruchA |
hastAbjairasikheTapustakasudhAkumbhA~NkushAdriM halaM
khaTvA~NgaM phaNibhUruhaM dashabhujaM sarvArivIrApaham ||

Salutations to him who has faces of a monkey, Narasimha, king of birds, horse and a boar,

Which are divinely decorated, have fifteen eyes, which shines immensely,

Who has ten hands and holds shield, book , nectar, goad , plough and

Sword and moves with his body all over the earth and is valorous everywhere.

வந்தே வாநரானாராஸி ந்ஹகஹகராத் க்ரோதாஷ் வவக்த்ர் அந்விதம்
திவ்யால ந்கரணாம் த்ரிபந்ச நயனாம் தேதிப்யமானம் ருச
ஹஸ்தாப்ஜை ரஸிகேத புஸ்தக ஸூதா கும்பாந் குஷாத்ரிம் ஹலாம்
கத்வாந் கம் பாணி பூருஹம் தச புஜம் ஸர்வாரி விராபகம்

ஸ்ரீ பஞ்ச முக -தானான ஸ்ரீ திருவடி திவ்ய திரு முகம் -ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய திரு முகம் –
ஸ்ரீ பெரிய திருவடி திவ்ய திரு முகம் -ஸ்ரீ ஹயக்ரீவர் திவ்ய திரு முகம் -ஸ்ரீ வராஹ நாயனார் திவ்ய திரு முகம்
மிளிரும் பதினைந்து திவ்ய திருக் கண்கள் -பத்து திவ்ய கரங்கள் –
கேடயம் -புஸ்தகம் -கலப்பை -அம்ருத கலசம் -கலப்பை -தரித்து -பூமி எங்கும் வியாபித்து
ஜயம் நாட்டி ஸ்வாமியாகத் திகழ்கிறார் –

Every Face of Sri Panchamukha Hanuman has significance —

Sri Hanuman faces east. He grants purity of mind and success.

The Narasimha faces south. He grants victory and fearlessness.

The west facing Garuda removes black magic and poisons.

The north facing Varaha, showers prosperity, wealth.

The Hayagriva mukha faces the Sky. But since we cannot see it, it is usually tilted
and shown above Hanuman’s face. Hayagriva gives Knowledge and good children.”

According to another legend, the five faces depict five forms of prayer –
Naman, Smaran, Keerthanam, Yachanam and Arpanam.

ஸ்ரீ திருவடி -கிழக்கு முகம் -ஸூத்த மனஸ்ஸூ -எதிலும் ஜெயம்
ஸ்ரீ நரஸிம்ஹர் -தெற்கு முகம் -பயம் இன்மை -எங்கும் ஜெயம்
ஸ்ரீ பெரிய திருவடி மேற்கு முகம் -விஷங்களை-கபட வஞ்சனையை முறித்து
ஸ்ரீ வராஹ நாயனார் ஐஸ்வர்யம் அளிப்பார்
ஸ்ரீ ஹயக்ரீவர் மேல் நோக்கி -நாம் சேவிக்க திருவடிக்கு மேலே சேவை சாதிப்பார் –
ஞானம் ஆனந்தம் சந்தான செல்வம் அளிப்பார்
ஐந்தும் திரு நாம சங்கீர்த்தனம் -ஸ்மரணம்-கீர்த்தனம் -யஜனம் -அர்ப்பணம் -இவற்றையும் காட்டி அருளும்

———-

தியான ஸ்லோகங்கள்:

ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத துஹே நம: ||

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||

பாராஶார்ய வச: ஸரோஜமமலம் கீதார்த கந்தோத்கடம் |
நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: |
வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: |
த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ |
யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |

தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர்மதிர்மம ||

————

1.கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.
2.தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.
3.மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா
4.வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.
5.மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.
6 ஆஞ்சநேயர் மந்திரங்களுக்கு பின்னியில் உள்ள புராணக்கதை-
ஒரு முறை அவுரங்கசீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்றிருந்தார். துளசிதாஸை பரியாசம் செய்த பேரரசர், கடவுளை தனக்கு காண்பிக்க சொல்லி சவால் விட்டார். உண்மையான பக்தி இல்லாமல் ராம பிரானை பார்ப்பது இயலாது என சாமார்த்தியமாக பதிலளித்தார் கவி. இதன் விளைவாக, அவுரங்கசீப்பால் சிறைப் பிடிக்கப்பட்டார் துளசிதாஸ். சிறையில் இருந்த காலத்தில் தான் ஆஞ்சநேயர் மந்திரங்கள் என்ற இந்த அற்புதமான செய்யுளை அவர் இயற்றினார் என நம்பப்படுகிறது.
காலையில் குளித்த பிறகு மட்டுமே இந்த மந்திரங்களை படிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இதனை படிக்க வேண்டுமானால் உங்கள் கைகள், பாதங்கள் மற்றும் முகத்தை முதலில் கழுவ வேண்டும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் போது, தீய சக்திகளில் இருந்து விடுபடுதல் உட்பட மிகப்பெரிய பிரச்சனைகள் வரை, ஆஞ்சநேயரின் ஆன்மீக பங்களிப்பு இருக்கும்
புராணக் கதைகளின் படி, சனி பகவானுக்கு ஆஞ்சநேயர் என்றால் பயமாகும். அதனால் ஆஞ்சநேயர் மந்திரங்கள் படித்தால், சனியின் தாக்கங்கள் சற்று குறையும் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் திசை இருக்கும் நிலையால் அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயர் மந்திரங்களை படிக்க வேண்டும்; குறிப்பாக சனிக்கிழமைகளில். இதனால் அமைதியும் வளமும் பெருகும்.
ஆபத்தை விளைவிக்கும் தீய சக்திகளை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார் ஆஞ்சநேயர். நீங்கள் தீய சக்திகளால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால் ஆஞ்சநேயர் மந்திரங்களை உங்கள் தலையணையின் கீழ் வைத்து படுங்கள். அது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தும். கடினமான எண்ணங்களை போக்கவும் கூட இது உதவும்.
நாம் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்கிறோம். ஹிந்து மத கொள்கைகளின் படி, நம் பாவங்களினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சிக்குள் சிக்கி தவிக்கிறோம். ஆஞ்சநேயர் மந்திரங்களில் ஆரம்ப செய்யுள்களை ஓதினால், சென்ற ஜென்மத்திலும் தற்போதைய ஜென்மத்திலும் செய்த பாவங்கள் நீங்கும்.
விநாயகரை போல் ஆஞ்சநேயரும் கூட நம் அனைத்து தடைகளையும் நீக்கும் வல்லமையை பெற்றவர். முழுமையான பக்தியோடு ஒருவர் ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், ஆஞ்சநேயரின் இறைதன்மையுள்ள பாதுகாப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் அந்த பக்தர் எந்த ஒரு சிக்கல்களையும் சந்திக்க மாட்டார்.
காலை எழுந்த முதல் காரியமாக ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அன்றைய நாள் சிறப்பாக செல்லும். நீங்கள் அமைதியாக இருக்க உதவும். அதே போல் வாழ்க்கையும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அமையும். ஆஞ்சநேயர் மந்திரங்களை ஜெபித்தால், ஒருவருக்கு ஆன்மீக ஆசீர்வாதம் கிடைக்கும்.
சில கார்களில் முன்பக்க கண்ணாடியில் அல்லது டாஷ்போர்ட் மீது சிறிய ஆஞ்சநேயர் சிலையை கண்டிருப்பீர்கள். சரி அவரின் சிலையை எதற்கு வாகனங்களில் வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? விபத்துக்களை தவிர்த்து, வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள ஆஞ்சநேயர் உதவுகிறார் என நம்பப்படுகிறது.
ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதுவதால் கிடைக்கும் பயன்கள் எண்ணிலடங்கானவை. தூய்மையான ஆன்மீகத்துடனும் கவனத்துடனும் இந்த 40 செய்யுள்களையும் நீங்கள் படித்தால், உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். இந்த மந்திரங்களை தொடர்ந்து படித்து வந்தால், கடவுளின் ஆசியும் அனுகிரஹமும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
ஆஞ்சநேயர் மந்திரங்களை ஓதும் பக்தர்களுக்கு ஆன்மீக அறிவு கிடைக்கும். ஆன்மீகத்தில் சரியான பாதையை நோக்கி செல்பவர்களுக்கு ஆஞ்சநேயர் சரியான பாதையை காண்பிப்பார் என நம்பப்படுகிறது. அதே போல் தங்கள் மனதை கட்டுப்படுத்துவும் உதவுவார் என நம்பப்படுகிறது.
ஆஞ்சநேயர் மந்திரங்களை அதிக சத்தத்துடன் படித்தால், நம்மை சுற்றி நேர்மறையான ஆற்றல் திறன்கள் அதிகமான சுற்றும
அதனால் நாள் முழுவதும் நீங்கள் உற்ச்சாகத்துடன் இருக்கலாம். இது சோர்வு மற்றும் தாமதமாக்கலை போக்கி ஒருவரை திறமையானவராக மாற்றும். தலைவலி, தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்ற சிறிய பிரச்சனைகளையும் கூட இது குணமாக்கும்.
கெட்ட சகவாசம் அல்லது ஏதேனும் பழக்கத்திற்கு அடிமையானால், ஆஞ்சநேயர் மந்திரங்களை படித்தால், அவர்களை சீர்திருத்த அது உதவும். மந்திரங்கள் படிப்பதால் ஏற்படும் ஆற்றல் திறன் பக்தனின் இதயத்தை நேர்மறையான எண்ணம் மற்றும்
உண்மையான பக்தி மற்றும் அர்பணிப்புடன் ஆஞ்சநேயர் மந்திரங்களை தினமும் படித்து வந்தால், அனைத்து வித கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் நீங்கி, வாழ்க்கையில் ஒருமித்த கருத்து, மனநிறைவு, சந்தோஷம் மற்றும் அமைதியும் நிலவும். உறவில் நீடிக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, நல்லிணக்கத்தை கொண்டு வரும்.
ஆஞ்சநேயர் மந்திரங்களை உரைக்க படிப்பவரை எந்த ஒரு தீய சக்தியும் தாக்காது. இது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மனது மற்றும் ஆன்மாவில் நிலவும் அனைத்து வித எதிர்மறை எண்ணங்களை போக்கி, அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்.
ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே
ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-
புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
கொடுத்த மோதிரத்தை சீதையிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ராமனிடமும் கொடுத்து அவர் களின் முகத்தில் மகிழ்ச்சியை படரச் செய்தவர். வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர். இந்திரஜித் எய்த நாகபாணத்தால், மூர்ச்சையாகி விழுந்த லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து, தனது உள்ளங்கையில் தாங்கியபடி வந்தவர். மகாபாரதப் போரில், அர்ச்சுனனின் தேர் கொடியில் இருந்து, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அனுமன். ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் சீதைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே விஸ்வரூபம் பீமனுக்கு பயத்தைக் கொடுத்தது.
பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார்.
நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’
நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்
இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும்
———-

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராம தூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம பிரானின் முன்னோர்கள்–ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம் -ஸ்ரீ மஹாபாரதம்-ஸ்ரீ பாகவதம்-

October 6, 2020

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

————————

விஸ்வம் பரர் முனிவர் குருவித்துறை -ராமர் சுக்ரீவன் அங்கதன் ஆஞ்சநேயர் திரு உருவம் ஸ்வப்னத்தில் கண்டு –
சிற்பி மூலம் செய்து -திருவாராதனம் செய்து
அவற்றை திருமலை நம்பிக்கு இராமாயண காலஷேபம் அன்று கொடுக்க -அவர்களையே கர்ப்ப க்ருஹத்தில் ப்ரதிஷ்டை –
இதுக்காக திருமலைக்கு ஏறிச் சென்று
ஏழு திருமேனி -அங்கதன் சுக்ரீவன் விபீஷணன் -ராம சீதா லஷ்மணன் திருவடி
மடப்பள்ளியில் அங்கதன் சுக்ரீவன் விபீஷணன்
முன்பே திருவேங்கட அப்பனே கேட்க வந்தான் திருவடி நிலை திருமலைக்கு கீழ் பிரதிஷ்டை -ராமானுஜர்

அனந்தாழ்வான் -நீரே ஆண் பிள்ளை
யமுனைத் துறைவன் மண்டபம்
ராமானுஜர் புத்தேரி பொய்கை-
ராமானுஜர் நந்தவனம் -மூன்றையும் சமைத்து
அடியேன் மதுரகவி தாசன் இவர்கள் சிஷ்யர்கள் இன்றும் –
வேதார்த்த ஸங்க்ரஹம் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து காலக்ஷேப உபதேசம் —
ஆச்சார்ய பீடம் -ஸ்ரீ பாஷ்ய காரர் -அவர் திருவடிக் கீழே திருவடி நிலையாக திருவேங்கட அப்பனே
இருந்து கேட்டுக் கொண்டதாக ஐதிக்யம்

குருடன் பார்க்க வேண்டும் -யாதவ பிரகாசர் இடம் மீட்டு-
செவிக்கு இனிய செஞ்சொல் கேட்க -உபன்யாசம் பண்ணி பேசத் தொடங்க
முடவன் போல் இல்லாமல் யாத்திரை -ஞானப்புத்ரன் பெறுவார் பல் கலையோர் மன்னும் படி
இதற்கே ஆளவந்தார் பேர் அருளால் இடம் பிராத்தனை
யஸ்ய பிரசாத கலையா –
நரசிம்மர் -11 -திருநாமங்கள் -அம்ருத்யு -சர்வ த்ருக் சிம்ம சந்தாதா ஸ்திர அஜ துர்மர்ஷண சாஸ்தா ஸூராரிகா-
ஈசாண்டான் மருமகன் -நரசிம்ம மந்த்ரம் நரசிம்ம உபநிஷத் உபதேசம் ஆளவந்தார் செய்து
இத்தை ராமானுஜருக்கு அருளச் சொல்லி –
ராமானுஜர் சம்ப்ரதாயம் நித்தியமாக இருக்க -இதுவே உதவிற்று –
74 சிம்ஹாசானாபதிகளுக்கும் இதே போல் நரசிம்ம மந்த்ரமும் ஸ்ரீ லஷ்மீ நரசிம்ம விக்ரஹங்களும் பிரசாதிக்க –
நரஸிம்ஹர் விக்ரஹம் நடாதூர் ஆழ்வானுக்கு பிரசாதிக்க -ஆதி வண் சடகோபருக்கு கிட்டிற்றாம்
வாத்ஸ்ய வரத குரு நடாதூர் அம்மாள் -நரசிம்ம ஜெயந்தி அன்று திரு அவதாரம்

குணத்துக்காக சதகம் தயா சதகம்
பாதுகைக்காக சஹஸ்ரம் பாதுகா சஹஸ்ரம்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -பேயாழ்வார் -வெற்பு என்று பாடினேன் திருமழிசை
கண்ணன் அடி இணை எனக்கு காட்டும் வெற்பு -தேசிகன்
வேங்கட நாதனை வேதாந்த –வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை வேங்கடமே திரு மூலர் –
மலையும் தேசிகனும் பெருமாளும் அடி இணைக்கு ஒப்பு இல்லையே – வெற்பு இவற்றையே எனக்குக் காட்டும்
ராம ராவண யுத்தம் -அதுக்கு இணை இல்லையே
அடி இணை தானே கண்ணனைக் காட்டும் வெற்பு
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
காம்பற தலை சிறைத்து -சரணாகதர்களுக்குகே காட்டிக் கொடுக்கிறான்

புரட்டாசி மாதம் முதல் நாள் மா முனிகள் திருமலைக்கு எழுந்து அருளிய நாள்

அழகியான் தானே அரி உருவம் தானே -ஸூந் தர ராமன் திருவடி சம்பந்தத்தால் தானே –
அழகிய சிங்கர் நம் சம்ப்ரதாயம் -இவருக்கு மட்டுமே அழகிய விசேஷணம்
கராவலம்பம் -லஷ்மீ நரசிம்மர் –16- கரங்கள் உடன் தோன்றி சங்கர பகவத் பாதாளை ரஷித்த கதை –
மண்டலமிஸ்ரர் உபய பாரதி உடன் வாதம் –

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

———————–

ஏக ஸ்லோக ஸ்ரீ பாகவதம்

ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,
மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,
கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்
சைதத் பாகவதம் புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு கோபியர் வீட்டில் வளர்ப்பு
மாயா உருவ பூதனையின் அழிவு கோவர்த்தன மலையின் உயர்வு கம்ச, கௌரவர்கள் அழிவு
குந்தீ மகன் காப்பு
இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

——-

ஏக ஸ்லோக ஸ்ரீ மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்
த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,
லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,
பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம், ஹ்யேதன் மஹா பாரதம்

ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு -அரக்கு மாளிகை எரிப்பு–சூதாட்டத்தில் நாடு இழப்பு
காட்டில் சுற்றல்–மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு–ஆநிரை கவர்தல்-போரில் அழிவு
சமாதான உடன்படிக்கை மீறல்–பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்
இதுவே மஹா பாரதம்

———-

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,
வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,
வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்–பொன் மானைக் கொல்லல்–சீதா தேவி கடத்தல்
ஜடாயு இறத்தல்–சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்–வாலீ அழிவு,
கடல் தாண்டல்–இலங்கை எரிப்பு–பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்
இதுவே ராமாயணம்

——————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சீதாபிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் –

October 6, 2020

ஸ்ரீ கர்ப்ப உத்சவம் ஸ்ரீ ஜனன உத்சவம் -இரண்டு வகை கொண்டாட்டம்
பாக்ய நகரம் -Hydrabad -Secundrabad -பழைய பெயர் –
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருக்கல்யாணம்
தேவை இடாதவரை பிரதிஷ்டை பண்ண ராமானுஜர் –
கர்ம யோக சாஸ்திரம் -ஞான யோக சாஸ்திரம் -வளர்ந்து -பக்தி என்னும் பெரும் வெள்ளம் ஸ்ரீ ராமாயணம் –
மந்த்ர சாஸ்திரம் -பலா அதி பலா -அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருதயம்
சரணாகதி சாஸ்திரம்
கவி குல குரு -துளஸீ தாசர்
ஸ்ரவணாதிகளால் அனுபவ -ஜெனித -பிரீதி -காரித -கைங்கர்யம் -நிலைத்து நிற்கும்
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் வசிஷ்டோபி மஹா தேஜா —
வேதம் வாக்கியம் போல் -ஸூத்த மனசால் -கேட்டு –
ஸ்ரீ ராமாயணத்தில் பக்தி -அழுக்கைப் போக்கி தூய வெள்ளம் பெற்று காணலாமே
ராஜீவ லோசனன் -ஸூ குமாரன் -புஷ்ப்ப ஹாஸ -அனுபவிக்காமல் யாக ரக்ஷணம் இவரைக் கொண்டு செய்யாமல் –
ஆழ்வாராதிகள் தானே அவனையே ப்ராப்யமாக அனுபவிப்பார்கள்

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம்
சத்ருக்கனன் அ நக -ஆயில்யம் நக்ஷத்ரம் -பரதேன் -நித்ய சத்ரு-ப்ரீதி புரஸ்தர –
ராமதாம் அநு கச்சதி மே த்ருஷ்ட்டி -தசரதன்
இரங்கி-இன்னருள் சுரந்து -குஹ ஸஹ்யம் -ஆபதாம் –தாதாரம் சர்வ சம்பதாம் –
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி தனது பேறாக -அமலன் நிமலன் விமலன் -நின்மலன்

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
மூல மந்த்ரம் -ஸ்ரீ ராம நாம பிரபாவம் –வாலி வதம் –
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்த்ரம்
தம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை
ராமம் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை
மந்த்ரம் பதம் மருந்து நாமம் -விருந்தும் மருந்தும் –
ராம ராம இதி மதுரம் மதுர அக்ஷரம் -இனிமை தூய்மை -கூஜந்தம்-ஆருஹ்ய கவிதா சாகம்
மூலம் ஆதி காரணம் ஆதாரம் முதன்மை பெற்றது -வேர் போல் –
முன்னும் இராமனாய் தானாய் -பின்னும் ராமனாய் -தானான அவதாரம்
கிருஷ்ணம் நாமமே குளறிக் கொன்றீர்–மிருத ஸஞ்ஜீவினி -காகுத்தனும் வாரானால்
பெரும் பதம் தத் விஷ்ணோ பரமம் பதம் பெற்றுக் கொடுக்கும்

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
களி நடம் கண்டேன்
களி நடம் புரியக் கண்டேன்
த்ருஷ்டா சீதா கண்டேன் சீதை -என்றவர் -நல் பெரும் தவத்ததள் ஆய நங்கைகையைக் கண்டேன் அல்லேன் –
மூன்றும் சேர்ந்து நாட்டியம் -இலங்கை வெற்பில் –
இற் பிறப்பு என்பது ஒன்றும் –
இரும் பொறை என்பது ஒன்றும் –
கற்பு என்று பெயர் ஒன்றும் –
திரு மேனி- பண்பு- கதை -வனம்- மந்த்ரம்- காவ்யம்- திருவடி -ஸூ ந்தரன் -ஸூந்தரி –
காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

கிளி மொழியாள் வலியச் சிறை புகுந்தாள்
வாலில் நெருப்பு -பெருமாளின் ஆலிங்கனம் -யாம் பெரும் பரிசு -ஸீதா மஹாத்ம்யம் –

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
நின் அடியிணை அடைந்தேன் –

அபய பிரதான சாரம் -இதுக்காக அன்றோ ஸ்ரீ ராமாயணம்
சரணாகதி சாஸ்திரம்
ஆஜகாம முஹூர்த்தேந யத்ர ராம ச லஷ்மணா
சர்வ லோக சரண்யாயா ராகவாயா மஹாத்மணே -விபீஷணன் -எளிமையும் மேன்மையும்
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் –மேன்மையும்
எளிமையும் சொல்லி -தொடங்கி
நிவேதயதா மாம் க்ஷிப்ரம் –
நிர்வேதம் ஏற்படுத்தாமல் -மனசு உடையும் படி வெறுப்பு ஏற்படாத படி –நிவேதயத -உங்கள் ஸ்வரூப அனுரூபமாக -சத்தை பெற
நிரதாம் வேதயதே -திரு உள்ளத்தில் படும் படி
அக்கரை அநர்த்தக் கடலில் இருந்து இக்கரை வந்து இளைப்பாறி ஆகாசத்தில் பெருமாள் அங்கீகாரம் கிடைக்காமல் தரிக்க மாட்டாமல்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -மாம் நிவேதியத
க்ஷிப்ரம் -உடனே –
விரையும் கார்யம் தூங்கேல் தூங்கும் கார்யம் விரையேல்
சஞ்சலம் -மனம்
வந்து ஒல்லைக் கூடுமினோ
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடைமை -கடகர் அன்றோ விரைய வேண்டும் -சிஷ்யரை விரைவாக வர –
ராமன் முன்பே என்னை அங்கீ கரித்து அருளி ராவணனை எதிர்பார்த்து உள்ளாரே –
கைகள் கூப்பும் -கால்கள் சேரும் -சாஷ்டாங்க பிரணாமத்துக்கு ஸூசகமாக நால்வர் உடன் –
இளையவர்க்கு அவித்த மௌலி அடியேனுக்கும் சூட்டி அருள -ஆவியை பிரித்த அவன் தம்பி நாயேன் –

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

ஹிரண்ய வதைப் படலம் -கம்ப நாட்டாழ்வார் –
பிளந்தது தூணும் செங்கண் சீயம் -சிங்கப்பிரான் -மேட்டு அழகிய ஸிங்கர் –

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-

வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-

த்வயார்த்தம் விரித்து உரைக்கும் பதிகம் இது
பிராட்டி விஷயீ காரம் தொடங்கி-மான் மட நோக்கி –
ஒன்பதாம் பாசுரம் பெருமாள் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உய்ந்தேன் –
1-விஷயீ காரத்தை சொல்லி
2-கைங்கர்யத்தை சொல்லி
3-அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி
4-அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி
5-அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி
6-கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று சொல்லி
7-சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவு படுகிற என்னையும் மீட்டு
தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே உன் திருவடிகளை தந்து அருள வேணும் என்று சொல்லி
8-தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே கார்யம் செய்த சக்தி மத்தையை0 அந்தமில் பேரின்பத்
தடியரோடே வைக்காக அன்றோ தேவரீர் இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது என்று சொல்லி
9-உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே
எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சொல்லி சரணம் புகுகிறார் –

மாழை மான் மட நோக்கி -என்று தொடங்கி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்று தலைக் கட்டுகையாலே
ஒன்பது பாட்டிலும் ஏகார்த்தத்தைப் பற்றவே சரணாகதியாய் இருக்கிறது

பால் குடிக்க நோய் தீருமா போலே
இவருடைய பாசுரத்தைச் சொல்ல
ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சீதாபிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –