ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி இரண்டாம் பத்து —

ஸ்ரீ நம் ஆழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ நம் ஆழ்வார் -திருவாய் மொழி இரண்டாம் பத்து —
பல சுருதி பாசுரங்களைப் பார்த்து அறிகிறோம் –

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்-2-1-11-

இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய்,
இவரோடே வந்து கலந்து அத்தாலே-உஜ்ஜவலனுமாய் – ஒளி உருவனுமாய் இருந்தான்.
இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின,
இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது;
இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார்,
‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார்.
பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.
இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.
(பிரணயித்வ நிபநந்தனமாகவும் வாஸ்தவமான ஆகாரத்தாலும் இரண்டு விதமாக அருளிச் செய்து
இவருடன் கலந்ததனால் உஜ்ஜவலனாயும் தனது பேறாகவும் கொண்டமையும் தோற்ற அருளிச் செய்கிறார் )
ஆராத காதல் –இத் திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம்
பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.
காதல் குருகூர்ச் சடகோபன் – காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.
‘இது, தற் புகழ்ச்சி அன்றோ?’ எனின், தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –
இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

—————–

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனைக் குருகூர்ச் சடகோபன்-2-2-11-

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட –
சங்கைஸ் ஸூ ராணாம் ‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும்,
அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் ஸ்துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ,
அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு
எனக்கு எப் பொழுதும் அருள் புரிய வேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம் மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட.

கோலக் கூத்தனை –
திருவுலகு அளத்தருளின போது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும்,
அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார்,‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச் செய்கிறார்.
இதனால், இந்திரன்-ராஜ்ய ஸ்ரத்தை – இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியது போன்று,
இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதுவும் ,
அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதுவும் போதரும்.

குருகூர்ச் சடகோபன் சொல் –
ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய் மொழிக்குள்ள
உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

——————-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த–2-3-11-

கரிஷ்யே மைதிலீ ஹேதோ ரபிசாச ம ராக்ஷஸம் ’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால்
இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே,
புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு –
வர புஜ பலத்தால் – வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின
ராக்ஷஸருடைய ஜாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

குழாம் கொள் தென்குருகூர்ச் சடகோபன் –
அடியார்கள் கூட்டத்தைக் கொண்ட அழகிய திருக் குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர்.
ஜனஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று,
‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக்
காண வேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின்,
‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்.
‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ?
சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே வாய் புலற்றும்படியான தேசமானால், அத்தேசத்திலுள்ளார்
திரளச் சொல்லவேண்டா அன்றோ?

———————-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை கூட்டி, வண் சடகோபன் சொல்-2-4-11-

இவ்வளவில் வந்து முகம் காட்டிற்று இலனாகில் புகழுக்கு வாட்டம் வரும் இறே
‘நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;
இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.
இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.

இசை கூட்டி –
பரிமளத்தோடே பூ அலருமாறு போன்று, இசையோடே புணர்புண்டவைகள்.

வண் சடகோபன் சொல்
உதாரதீர் முநி –‘உதார குணத்தை யுடையவரும் மனன சீலருமான ஸ்ரீ வால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை
உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் ஸ்லோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே,
மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின்,
‘வண் சடகோபர்’ என்கிறார்.

——————–

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்-2-5-11-

தன் படிகளைப் பேசப் புக்கால்,ஆனந்தவல்லியில் சொல்லுகிறபடியே, பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை.
அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று;
குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.
விஷ்ணோர் ஜிஷ்ணோர் வஸூ தேவாத் மஜஸ்ய –‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும்,
ஜெய சீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ண பிரானுடைய நற்குணங்கள் உலகங்கள்
அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்.

அம்மானை –
குடக்கூத்தாலே என்னைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டவனை.-அநந்யார்ஹம் ஆக்கினவனை

கூறுதலே மேவி –
‘நான் சொல்லுவது என்? சொல்லீரே!’ என்னா, மீண்டும் ‘சொல்லீர் என் அம்மானை’ என்று தொடங்குமவர் ஆதலின்,
‘பேச நிலம் அன்று’ என்று வேதங்கள் மீண்ட விஷயம் என்று, தாமும் ‘பேச ஒண்ணாது’ என்று கை வாங்காதே,
அழகிதாகப் பேசக் கடவோம் என்று உறுதி கொண்டார்.
‘உறுதி கொண்ட அளவேயோ, கூறியதும் உண்டோ?’ என்னில்,
‘குருகூர்ச் சடகோபர் அன்றோ? கூறச் சொல்ல வேண்டுமோ?
மயர்வற மதி நலமருளப் பெற்றவர்க்குப் பேசத் தட்டு உண்டோ?’ என்றபடி.

——————

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன-2-6-11-

இப் போதாயிற்று-வளையம் – மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும்,
திருக்கண்கள்-விக்ஷிதம் – மலர்ச்சி பெற்றதும்.
புகழ் நண்ணி –
இவன், தம் பக்கல் செய்த -வ்யோமோஹ -காதலாகிய குணத்திலே -அவகாஹித்து -மூழ்கி.
தென் குருகூர்ச் சடகோபன் மாறன் –
ஒன்று திருப் பெயர்;
ஒன்று-சத்ரு வர்க்கத்துக்கு – பகைவர் கூட்டத்துக்கு-ம்ருத்யுவாய் – யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது.

———————-

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய-2-7-13-

வண்ணம் மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை யுடைத்தாய்ப் பெரு விலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை உடையவனை.
‘நீல ரத்தினம் போன்ற வடிவில் தேஜஸ்ஸை – ஒளியை உடையவன்’ எனலுமாம்.
வண்ணம் – நிறம்./ மா-கருமை. /இவ் வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:

அமரர் தலை மகனை –
ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.

கண்ணனை –
அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை.

நெடுமாலை –
ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தை யுடையவனை.

தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய –
வேதம் போன்று பிறப்பிலி அன்று; அபவ்ருஷேயம் ‘புருஷனால் செய்யப் படாதது’ என்னுமதிலும்
வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று -வக்த்ரு விசேஷத்தாலே – இயற்றினார் சிறப்பாலே.

——————

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

பூ தலங்கள்-என்னுமா போலே திருக் கண்களின் பரப்பைப் பற்றச் சொல்லுகிறது
பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் –அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய
சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-பிரதிபாத்ய வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் -பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் –
வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார்-வக்த்ரு வைலஷ்யண்யத்தை சொல்கிறார்-

—————–

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன்-2-9-11-

விடல் இல் சக்கரத்து அண்ணலை’
நாம் விடுகிறோம்’ என்று அதி சங்கை பண்ணுவது என்?
நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக் காட்டினான்;
‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார்.
அதாவது, ‘ஒரு நாளும் விடாத திருவாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார்.

மேவல் விடல் இல் வண்குருகூர்ச் சடகோபன் சொல் –
அவன் ஸ்வபாவத்தாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார்
வண்மையாவது,-இவ் வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம்.

—————

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11-

ஒருநாள் அல்லா ஒருநாளாகிலும் பயன்படாதோ?’ என்று பலகாலும் உண்டாக்கா நிற்கும் –
ப்ரயோஜனப்படும் -பயன்படும் என்று இல்வுலகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குணங்கள் விஷயமாக –
அஞ்ஞான கந்தமும் -அறிவின்மையின் வாசனையும் இல்லாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரம்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குண விஷயமாக
மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading