Archive for October, 2018

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-2-10-

October 28, 2018

அழகிது; அப்படியே செய்கிறோம்; பஜனத்துக்கு ஆலம்பமான -வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான- மந்திரம் யாது?’ என்ன,
அது இன்னது என்றும், அதனுடைய -அர்த்தம் அனுசந்தேயம் -பொருள் நினைத்தற்கு உரியது -என்றும் அருளிச் செய்கிறார்.
‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச்செய்ய வேண்டுமோ?’ எனின்,

இம் மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளா நிற்பர்;
நம் ஆசாரியர்கள்,-ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதனுடைய அர்த்த அனுசந்தானம் மோக்ஷ சாதனம் – என்று
தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள்.
மற்றும் வேதங்களுக்கும் இவ் வாழ்வார்க்கும் இம் மந்திரம் பிரஸ்துதமான போதே முன்னர் மந்திரத்தைச் சொல்லி,
பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்;
அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல்
செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்;
அதற்குக் காரணம்,-அர்த்த அனுசந்தானம் – பொருளின் நினைவு இன்றியமையாதது -ஆகையாலே.
‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,’என்னுதல்
‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ -என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு –
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்திதி –
(‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,) என்னுதல்
நாராயண பரஞ்சோதி நாராயண பரமாத்மா
(‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’) என்னுதல் செய்யும் வேதமும்

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப்பணித்து இப்பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆலம்பன மந்த்ரம் எது என்ன -என்றது
சாஸ்த்ராதி ஷு ஸூத் ருஷ்டாபி சாங்கா சக பலோ தயா-ந ப்ரஸீததி வை வித்யா விநா சதுபதேச-என்றதைப் பற்ற –
அநந்ய சாத்யத்வ ரூபமான -அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வ – ஸ்வரூபத்துக்குச் சேர
பூர்வர்கள் அர்த்த அனுசந்தானத்திலே நிஷ்டராய் இருந்து உபதேசிப்பர்
அந்தர் பஹிஸ்ஸ -பஹு வ்ரீஹி ஸித்தமான ஸுலப்யம்
ப்ரோ ஜ்யோதி தத் புருஷ ஸித்தமான பரத்வம்
ஸ்ரீ ஆழ்வானுடைய முந்தின வார்த்தை கௌரவ்யத்தையிலே நோக்கு -பிந்தின வார்த்தை போக்யத்தையிலே நோக்கு

————————-

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-

எண் பெருக்கு அந் நலத்து,
‘எண் பெருக்கு’ என்கிற இத்தால் ஜீவ அநந்தயத்தைச் சொல்லுகிறது
‘நலத்து’ என்கிற இதனால், இவ்வஸ்துக்கள் தாம் ஞான குண ஆஸ்ரயமாக-இருக்கக் கடவது இறே
பிரணவத்தில்-த்ருதீய பதமான மகாரத்தாலே ஞான குண ஆஸ்ரயமுமாய் ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்று இறே

‘ஒண் பொருள்’
அசைதன்யம் அசித்திக்கு ஸ்வ பாவமாய் நிற்கச் செய்தே வாஸ்து தான் ஜடமுமாயும் அசம்ஞாவத்துமுமாயும் இருக்கும் இறே
அங்கண் அன்றிக்கே வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –
இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து -நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்

‘ஈறு இல’
என்பதனை ‘ஈறு இலவான ஒண்பொருள்’ என்றும்,
‘ஈறு இலவான வண்புகழ்’ என்றும் அன்வயித்துக் கிடக்கும்
ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது –

பாவத்க மங்கல குணா ஹாய் நிதர்சனம் ந -( ‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு
எடுத்துக்காட்டாய் இருக்கின்றன?’ )என்கிறபடியே,
தன்னுடைய கல்யாண – நற்குணங்களைப் போன்று,
இவ்வுயிர்களும் நித்தியமுமாய்ப் பிரகாரமுமாய் இருக்கும் என்பதனைத் தெரிவித்தபடி.
குணங்களை நிதர்சனமாகச் சொல்லிற்று –
ஆக, நித்தியரான த்ரிவித -மூவகைப்பட்ட சேதனரையும், நித்தியமான கல்யாண குணங்களையும் உடையவன்
நாராயணன் என்பதாயிற்று. -அவனுடைய

திண் கழல் சேர் –
இப்படி சம்பந்தம் காதா சித்கமாகை தவிர்ந்து நித்யமாயிற்ற பின்பு ஸ்வரூப ஞானம் உடையாரை அவன் ஒரு நாளும் விடான் இறே
ஆஸ்ரிதரை ஒருகாலும் விட்டுக் கொடாத திண்மையைப் பற்றத் ‘திண் கழல்’ என்கிறார்:
‘இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம் ஒரு காலத்தில் வந்தது அன்று; என்றும் உள்ளது ஒன்று,’ என்னும்
ஞானமுடையாரை ஒரு நாளும் விடான் அன்றே!
சேர் –
ஆஸ்ரயி -அடைவாய். உன்னுடையதாய், உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக உட்கொள்:
ஸ்வீகரி – ‘நம:’ என்றபடி.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

எண் பெருக்கு -எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருக்கிற ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான
ஆனந்தாதி குணத்தை – -ஆனந்த்யத்தைச் சொல்லுகிறது-
நலத்து -என்று ஞான குணகத்வம் –
ஒண் பொருள் என்று ஞான ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது –
ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வ பாவ ஞானத்தையும் சொல்லுகிறது
ஸூகித்வம் ஞாத்ருவஞ்ச ஞாயதே -ஸ்ரீ பாஷ்யம் –
ஸ்வஸ்மை பாஸாத இதி பாசந பிரதி சம்பந்தித்வ ரூப ப்ரத்யக்த்வாபி ப்ராயேண ஞாத்ருத்வம் இது யுக்தம்
நது தர்ம பூத ஞான ஸ்புரணாத் -ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர்
நலத்து -ஒண் -பாத த்வயத்தாலும் அசித் வியாவிருத்தி சித்தம்
ஜடமுமாய் என்றதுக்கு பிரதி கோடி ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமுமாய் -ஓண்மை

நாராயண சப்தத்துக்கு அர்த்தங்கள் அநேகம் உண்டாய் இருக்க
ஆத்மாவுக்கு அனந்தரம் குணங்களை சொன்னது நித்ய வஸ்துக்கும் நித்ய பாரதந்தர்யம்
கூடும் என்பதற்கு த்ருஷ்டாந்தத்வேன –
ஈறு-நாசம்/ இல-இல்லாமை /நித்தியமாய் இருக்கிற என்றவாறு
நாரணன் திண் கழல் -சமபி வ்யாஹார லப்யம் –
அன்றிக்கே -பஹு வ்ரீஹியில் சொல்லுகிற ஸுலப்யத்தையும் –
தத் புருஷனின் சொல்லுகிற ஸ்வாமித்வத்தையும் சொல்லுகிறது
சேர் நமஸ் சப்தார்த்தம்
பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப்பாட்டு பிரமேயம்
எண் பெருக்கு அந்நலத்து ஈறிலவான ஒண் பொருளையும் ஈறிலவான வண் புகழையுமுடைய
நாரணன் திண் கழல் சேர் -என்று அன்வயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-2-9-

October 27, 2018

இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்த ஞானம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து அகல வேண்டா என்றும்,
பஜனமாவது -வணங்குதலாவது – இவன், இறைவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு
உறுப்பு ஆக்குகை என்றும் அருளிச் செய்தார், கீழே இரண்டு திருப்பாசுரங்களால்;
‘இது தன்னரசு நாடாய்-ப்ராப்த விஷயம் – அடையத் தக்க பொருள் அவன் அல்லாமையால் -பஜியாது- வழி படாது இருக்கின்றேமோ!
பஜனை விரோதிகள் -வழிபட ஒட்டாமல் தடுக்கும் விரோதிகள்-கனக்க- மிகுதியாக இருத்தலால் அன்றோ
நாங்கள் வழிபடாது இருக்கிறோம்?’ என்ன,
‘நீங்கள் அவனைக் கிட்டவே அவை அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருபாசுரத்தில்.

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

கீழ் இரண்டு பாட்டில் ப்ரதிபாதித்த பிரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
இப்பாட்டில் ஒடுங்கலும் எல்லாம் விடும் என்கிற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி – அருளிச் செய்கிறார்-
பஜன விரோதிகள் என்றது பஜன கார்ய விரோதிகள் -புருஷார்த்த விரோதிகள் என்றவாறு –
அவனைக் கிட்டவே -கிட்டுகை -ஆஸ்ரயணம் –

———————-

ஒடுங்க அவன் கண், ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை, விடும் பொழுது எண்ணே-1-2-9-

ஒடுங்க அவன் கண் –
அவன் கண் ஒடுங்க – பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று சேர,

ஒடுங்கலும் எல்லாம் விடும் –
ப்ராப்த்தத்தைச் செய்ய -செய்யத் தக்கனவற்றைச் செய்ய,
அப்ராப்தமானவை -தகாதவை எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;
ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –
ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.
‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன அல்ல;
ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது.
‘ஒடுங்கல்’ என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு-ஒடுக்கல்-
‘இவனுக்குக் குறைவைப் -சங்கோசத்தைப் -பிறப்பிக்குமவை’ எனலுமாம்.

எல்லாம் விடும் –
அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு.

‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும் பாசுரங்களை யோஜித்துக் கொள்வது

‘இவை நீங்கினால், பின்னர் இவன் செய்யத் தக்க காரியம் -கர்த்தவ்யம் யாது எனின்,
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-‘
உபாசனத்தால் -பத்தியினால் வந்த ராஜகுலங்கொண்டு பலன் தப்பாது,
தன்னடையே வருகிறது,’ என்று ஆறியிருத்தல்
அன்றிக்கே, -ஹேதுவான காரணமான அறிவின்மை முதலியவைகள் கழிந்தனவாகில்,
அவற்றின் காரியமான இச்சரீரமும் ஒருபடி போய்,தண்ணீர் துரும்பு அற்றுப் பிராப்தி -பலன் கைப்புகுந்தது ஆவது எப்போதோ என்று
அதற்கு விரல் முடக்கி இருக்கும் இத்தனை.
‘ஆயின், கேவலனைப் போன்று உடலின் நீக்கத்தினை மட்டும் விரும்புவது என்?’ என்னில்,
இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு
உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று,
இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.
‘கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்,’ என்று
அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி.
அப்படியே, அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல்
எப்போதோ என்று பார்த்திருக்கும் இத்தனை.

ஆயின, கூற்றுவன் ஒருவன் இருக்க, பேற்றினை எதிர்பார்த்து இருத்தல் என்பது எவ்வாறு பொருந்தும்?’ எனின்,
ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம் (‘மனிதன் பாவத்தினைச் செய்தவனாய் இருத்தலின், யமனைக் கண்டு அஞ்சுகிறான்;
செய்யவேண்டுமவற்றைச் செய்து முடித்தவர்கள் யமனை அன்புள்ள விருந்தினைப் போன்று எதிர்பார்க்கிறார்கள்,’)
ஆதலின், பொருந்தும் என்க.
ஆயின்,க்ருதக்ருத்யா ( செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்தவர்க்கு )அன்றோ அது சாத்தியம்?’ எனின்,
சித்த சாதன பரிக்ரஹம் பண்ணினவர்கள் இறே
விது கிருஷ்ணம் ப்ராஹ் ணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்தா –
( ‘அரசனே சாஸ்திரங்களோடு கூடின எல்லா வேதங்களும், அறியத் தக்க எல்லாப் பொருள்களும், எல்லா யாகங்களும்,
யாகங்களில் ஆராதிக்கப்படுகின்ற எல்லாத் தேவர்களும் கிருஷ்ணனேயாவன் என்று எந்த அந்தணர்கள் கிருஷ்ணனை
உள்ளவாறு அறிகின்றார்களோ, அவர்கள் எல்லா யாகங்களையும் செய்து முடித்தவர்கள் ஆகின்றார்கள்,’ )என்கிறபடியே,
எம்பெருமாளையே பற்றுக்கோடாகப் பற்றின அடியார்களே யாவர்.

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி,
‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில்
ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.
அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

ஒடுங்க சேர –
அப்ருதக் சித்த விசேஷணமான இவன் அவன் பக்கலிலே சேருகையாவது -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையைத் தவிர்க்கை -என்றபடி –
ஓடுங்கல்-என்று வந்தேறி -அப்ராப்தம் -பிரகாரத்வ அனுசந்தானம் விவஷிதம் –
விட்டுக் கழியும் -கார்யகரம் இன்றிக்கே ஒழியும்-
வானோ மறி கடலோ -இத்யாதி -பெரிய திருவந்தாதி -54-
நம்மோடு நெடுக்கப் பழகிப் போந்த பிரபல துக்கத்தை விளைக்கும் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களை நம்முடைய சமீபத்தில் கண்டிலோம் –
இது ஆகாசத்தில் பறந்து போயிற்றோ -திரைக் கிளப்பத்தை யுடைய கடலிலே புக்கதோ –
காற்றிலே உரு தெரியாதபடி சிதிலமாய்க் கரந்து போயிற்றோ -நெருப்பிலே தக்தமாய்ப் போயிற்றோ –
காட்டிலே மஹா பிரஸ்தானமாய்ப் போயிற்றோ -எங்கே ஒருங்கிப் போயிற்றோ –
மாடே வரப் பெறுவராம் என்றே வல் வினையார் காடானு மாதானும் கைக்கு கொள்ளார் ஊடே போய்ப்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன் பெரோத்தகி சிந்திக்கப் பேருந்து –பெரிய திருவந்தாதி -59-
மநோ ரதிக்கவே போகுமே -வல்வினையார் -அவித்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –

தண்ணீர் துரும்பற்று -பிரதிபந்தகம் போய்
அழுக்குக் கழற்றி போகத்தில் அந்வயிக்கப் பார்த்து இருந்தவர்களுக்கு பிரமாணம்
பிராயச பாப காரித்வாத் ம்ருத்யோருத் விஜதே ஜன-க்ருதக்ருத்யா பிரதீஷந்தே ம்ருத்யும்
ப்ரியமிவாதிதிம் -ஸ்ரீ மஹா பாரதம் ராஜ ஸூயே -சரீர நிவ்ருத்தி புருஷார்த்தமாக –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்கள் க்ருதக்ருத்யர் -என்பதற்கு பிரமாணம் –
சர்வே வேதாஸ் சர்வ வேத்யாஸ் ச சாஸ்த்ராஸ் சர்வே யஞ்ஞாஸ் சர்வ இஜ்யாஸ் ச க்ருஷ்ண –

எண்ணே -முந்தின அர்த்தம் தேற்ற ஏகாரமாய் என்ன வேண்டும்
இரண்டாம் அர்த்தம் பிரிநிலை ஏகாரமாய் என்ன வேண்டாம் என்றாய் சிந்திக்கைக்கு விஷயம் உண்டோ என்றபடி –
தேற்றம் -நிச்சயம் -விநா ப்ரச்னம் -பிரிநிலை -வ்யதிரேகம்
ஆச்ரயண பலம் விரோதி நிவ்ருத்தி என்று இப்பாட்டுக்குப் பிரமேயம் –
அவன் கண் ஒடுங்க ஒடுங்கலும் இத்யாரப்ய அன்வயம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் /ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-2-8-

October 27, 2018

அவனுக்கு விபூதியாய் அந்வயித்தால் (‘இறைவனுக்கு உரிய செல்வங்களுள் ஒன்றாகச்சேரின்,) பின்னை,
தானும், தனக்கு என்னச் சில கரணங்களும் – உண்டாய் பஜித்தானாகை அரிதாக இருந்ததே என்ன –
(வேறாகக் காணப்படுவன இலவே? வேறாக இருப்பின் அன்றோ வணங்குதல் முடியும்?’ என்ன,)
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச்செய்கிறார்.

—————————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

சம்பந்த ஞானம் பூர்வகமாக அவன் விபூதிக்குள்ளே ஒருவனாய் அந்வயிப்பது என்ற அனந்தரம் –
கரண த்ரயத்தையும் அப்ராப்த்த விஷயங்களில் பிரவணம் ஆகாதபடி பண்ணி பகவத் விஷயத்தில் பிரவணம் ஆக்குவதற்கு
என்று சொன்னதுக்கு பிரயோஜனத்தை சங்கா பரிஹார கதந முகேந அருளிச் செய்கிறார் –
பஜன பிரகாரத்தை என்றது–இறையுள்ளில் ஒடுங்கே-என்றது –
பஜனப் பிரகாரமாவது-அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை –

————————-

உள்ளம் உரைசெயல், உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்துஇறை, உள்ளில் ஒடுங்கே.-1-2-8-

உள்ளம் உரை செயல் –
பாஹ்ய விஷயங்களில் -வெளிப்பொருள்களில் -பிரவணமாகிற மனசை -விருப்பத்தைச் செலுத்தும் மனத்தை-
ப்ரத்யக் ஆக்கியவாறே – உட்பொருளை நோக்கும்படி செய்தால்,
அது-பகவத் அனுசந்தானத்துக்கு உடலாமே ( இறைவனை நினைத்தற்குக் காரணமாகும்; )
அவ்வனுசந்தானம் வழிந்து (அந்நினைவு முதிர்ந்து வழிந்து,)
‘பொங்கேழ் புகழ்கள் வாயவாய்’ என்கிறபடியே, சொல்லாகப் புறப்படுகைக்குக் காரணமாகும் வாக்கு;
குணைர் தாஸ்யம் உபாகத ( ‘குணங்களால் அடிமை பூண்டு இருக்கிறேன்,’ )என்கிறபடியே,
திருவடிகளிலே விழுந்து எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்குக் காரணமாகும் உடல்.

உள்ள இம்மூன்றையும் –
இவைதாம் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே சேஷியான தான் இவற்றை உண்டாக்கி வைத்தான்;
இவையும் வேறு சிலவும் தேடவேண்டா; இங்கே
‘தாம் உளரே,’
‘நா வாயில் உண்டே’ என்பனவற்றை நினைவு கூர்க.

உள்ளி –
உள்ள இம்மூன்றையும் ஆராய்ந்து;
‘இவற்றை எதற்காகப் படைத்தான்? இவைதாம் இப்போது இருக்கிறபடி என்?’ என்று ஆராய்ந்து பார்த்தால்,
அவை-அப்ராப்த விஷயங்களில் – அடையத்தகாத பொருள்களில் அன்புடன் கூடியிருத்தல் விளங்கும்.

கெடுத்து –
கெடுப்பது -அவற்றினின்றும் மீட்பது – மீட்டு.

இறை உள்ளில் ஒடுங்கு –
பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போன்று,
ப்ராப்த விஷயத்தில் -அடையத்தக்க பொருளில் ஆக்கப் பார்.
அதாவது, கரணங்களை அவன் விஷயத்தில் அன்புடன் இருக்கச் செய் என்றபடி.
ஒடுங்க என்னுதல்
ஒடுக்கு என்னுதல் –

தாம் உளரே
தம்தாமைத் தேட வேண்டாவே
தம் உள்ளம் உள் உளதே
எனக்கு சற்றுப்போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு தர வேண்டும் என்று தனிசு வாங்க வேண்டாவே –
தாம் உளரானால் உண்டான நெஞ்சும் உண்டே
தாமரையின் பூ உளதே
கைக்கு எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே –
கள்ளார் துழாய் என்று அங்குத்தைக்கு அசாதாரணமான திருத்துழாயைச் சொல்லி
அத்தோடு ஓக்க கணவலர் என்று காக்கணத்தையும் ஆம்பலையும் சொல்லுகையாலே அங்குத்தைக்கு ஆகாதது இல்லை என்ற படி –
ஆகையால் தாமரையின் பூ உளதே என்றது எல்லா புஷ் பங்களுக்கும் உப லக்ஷணமாம் அத்தனை –
ஏத்தும் பொழுதுண்டே -காலத்தை உண்டாக்கி வைத்தானே அது தனிசு வாங்க வேண்டாவே
வாமனன் -இது எல்லாம் வேண்டுவது அவன் அவனல்லவாகில் அன்றோ –
தன் உடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாவான் ஒருவனாய் இருந்தானே –
திருமருவு தாள் -அவனுடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகள் என்னுதல்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்னுதல் –
மருவு சென்னியரே -மருவுகை -சேருகை -இப்படிப்பட்ட திருவடிகளில் சேருகைக்குத் தலை யாக்கி வைத்தானே –
வாமனன் -அமரர் சென்னிப்பூவான திருவடிகளை நித்ய சம்சாரிகள் தலையிலும் வைப்பான் ஒருவனாய் இருந்தானே –
இப்படி இருக்கச் செய்தே செவ்வே அருநரகம் சேர்வது அரிது -இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடி தேடிக்கொண்டு போகிறபடி எங்கனேயோ –

நா வாயில் உண்டே -இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே –
நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -சஹஸ்ர அக்ஷரமாலா மந்த்ரம் போல் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தாய் நடுவே விச்சியாதே சொல்லலாம் திரு நாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதி கண் செல்லும் வகை உண்டே -புநரா வ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை யுண்டாக்கி வைத்தானே
என் ஒருவர் தீக்கதி கண் செல்லும் திறம் -இங்கனே இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிறது எங்கனேயோ –

——————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

உள்ளம் உரை செயல் -இது ப்ரதீகோபாதகம் அன்று -பாட்டுக்கு எல்லாம் உபாதானம் –
மேலே மஹா வாக்ய தாத்பர்யம் -இத்தால் ஏவம் வித ஆஸ்ரயணம் ஸூ கரம் என்று த்யோதகம் -ப்ரத்யக் -அந்தர் முகம்
உள்ளுகை-ஆராய்கை-உள்ளும் பிரகாரத்தையும் உள்ளினால் இருக்கும் படியையும் காட்டுகிறார்
பகவத் ஸமாச்ரயண அர்த்தமாகவே ஸ்ருஷ்டி -என்று அத்யாஹாரம் -பகவத் விஷயத்தில் பிரவணமே
பிரயோஜனமுமாய் ஸ்வரூப பிராப்தமுமாய் இருக்கும் –
கரணங்களைக் கொண்டு ஒடுங்குதல் -ஆஸ்ரயித்தல் –
அன்றிக்கே இவற்றை இறையுள்ளில் ஒடுக்குதல் -சமர்ப்பிக்கை

தாமரையைச் சொன்னது சம்பகாதிகளைப் போலே சாகாக்ரத்திலே இருக்கை அன்றிக்கே
தாழ நின்று ஸூக்ரஹமாகையைப் பற்ற –
கள்ளார் துழாயும் கணவலரும் கூ விளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள்ளாய் ஓர் ஏனமாய்
புக்கு இடந்தான் பொன்னடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாய்க் கொள்ளோமே —
கூவிளை-பிலவம் / ஆம்பல் -குமுதம் / முளரி -தாமரை / கணவலர்-காக்கணாம் பூ -அலரி என்றுமாம் –
காலத்தை உண்டாக்கி வைத்தான் -என்ற இடத்தில்
ப்ராதர் நிசி ததா சந்த்யா மத்யாஹ்நாதிஷூ ஸம்ஸ்மரன் நாராயண மவாப்நோதி சத்ய பாபஷயம் நர -என்றது அனுசந்தேயம்
வாமன் -என்று இரப்பும் அளப்பும்-
அவன் அவனாகை ஸூலபன் இரப்பையும் -அமரர் சென்னி இத்யாதியாலே அளப்பையும் காட்டும் தோன்றும்
திரு ஐஸ்வர்யமும் பிராட்டியும் -ஐஸ்வர்ய பிரகாசம் என்றது -த்விஜ அரவிந்தாதிகளைப் பற்ற –
அஸி தேஷணா-என்னும்படி வடிவு அழகுக்கு நீயும் தகுதி இல்லாதபடியான அதிசயித வைலக்ஷண்யத்தை உடைய
கமல வாஸினீயான ஸ்ரீ லஷ்மியும் ஏவம் பூத வைலக்ஷண்யத்தை உடைய ஸ்ரீ பூமியும்
ஸ்வபாவிக மார்த்தவமான திருக்கைகளாலே பிடிக்கும் படியான நிரதிசய ஸுகுமார்யத்தை உடைய திருவடிகளை –
அரு நரகம் -சம்சாரம் / விலக்கடி- ப்ராப்ய ப்ரபகாந்தரங்கள்
ஓவாது உரைக்கும் உரை உண்டே -திரு நாமத்தினுடைய ஸுலப்யம் சொன்னபடி -மூவாத -நசியாத -புநராவ்ருத்தி இல்லாத –
கமயத இதி கதி -ப்ராப்யம் –
ஓவாது உரைக்கும் உரை -சாதனம் –
மாக்கதிக் கண் செல்லும் வகை -செல்லுகைக்கு ஈடான உபாயம் -புருஷார்த்தத்தை உண்டாக்கி வைத்தான் –
த்ரிவித கரணங்களையும் அபிராப்த விஷயங்களில் போகாமே சேஷி பக்கல் ப்ரவணம் ஆக்குகை யாகிற
பஜனை பிரகாரம் இப் பாட்டுக்கு பிரமேயம் –
நாராயணேதி சப்தோ அஸ்தி –பதந்தீதி கிமத்புதம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-2-7-

October 27, 2018

சங்க ஸ்வபாவன் -அடியார் பக்கல் பற்றையே இயல்பாக உடையவன் -என்றார் கீழ் –
அவன் பற்றையே இயல்பாக உடையவன் ஆயினும்,-அபரிச்சின்ன அளவிட முடியாத-
உபய – இரண்டு விதமான மஹா விபூதியையுடையவனாய் இருந்தான்;
இவன்-அதி ஷூத்ரனாய் – மிகச் சிறியனாய்,-ஷூத்ர- மிகச் சிறிய உபகரணத்தை யுடையவனாய் இருந்தான்;
ஆன பின்னர், அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ?
மேலும், கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்கவும்,
திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ?
‘அப்படியே அவனுடைய ஐஸ்வரிய-தரங்கமானது – அலையானது- இவனைத் தள்ளாதோ?’ என்னில்,
இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே –
நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!
ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால்
வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய
வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு
வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி
விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,
‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,
கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,
அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய்
அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால்
ஒருவன் இரு வினைப் பயன்களை -புஜியா நிற்கும் -நுகரா நிற்பன்; ஒருவன் -புஜிப்பித்து -நுகர்வித்து விளங்கா நிற்பன்;
அவன் நியாமகன் – ஏவுகின்றவன்; நாம்-நியாம்யம் – ஏவப்படும் பொருள்,’ என்னும் முறை அறியவே பொருந்தலாம் அன்றே!

ஓர் அரச குமாரன்-உத்யானத்தை – பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தகப்பனது காண்,’ என்னவே,
நினைந்தபடி நடந்து கொள்ளலாம் அன்றோ!
ஆன பின்னர்,ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;
தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்.

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

சங்க ஸ்வ பாவனானால் அவன் பூர்த்தியும் இவன் குறையும் கொண்டு கார்யம் என் –
இவை ஆராயாதே கிட்ட ஒண்ணாதோ என்ன –
ஆனாலும் அவன் ஐஸ்வர்ய உத்ரேகம் இவனுக்குப் பயத்தை விளைவிக்கும் என்னுமத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
கடலுக்கும் இத்தைத் தள்ள வேணும் என்னும் நினைவு இல்லை -துரும்புக்கும் தள்ளப் போகிறது என்கிற நினைவு இல்லை
ஐஸ்வர்ய தரங்கம்-இவனைத் தள்ளுகையாவது அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று அயோக்ய அனுசந்தானத்தால் பிற்காலிக்கை-
இத்தால் தானும் அவ்விபூத் அந்தர் பூதனாய்க் கொண்டு-சேஷ பூதனானால்
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்தைக் கொண்டு கிட்டலாம் என்றதாயிற்று –
அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி -அம்பாலே தலை அறும்படி
தார்ஷ்டாந்திகத்தில்-ஜீவர்கள் சரீரமாகிற வ்ருக்ஷத்தில் சங்கதராய் இருக்கச் செய்தே-த்வம் மே -என்றால் அஹம் மே –
ஷிபாமி -ந ஷமாமி-இங்கனே பிணங்குகிற சமயத்தில்
ஆச்சார்யன் சம்பந்தத்தை உணர்த்தி உபதேசிக்க -இவன் அபிமானத்தில் போம்படி திருத்தி –
தேவர்க்கு சேஷமான இவ் வாத்மாவை இவன் அபாராத்தைப் பார்த்து தள்ள ஒண்ணாது -என்று அவன் திருவடிகளில் சரணம் புக்கு
இவ் வழியாலே இருவரும் கூடினால் -பொழுதே பல பகலும் இத்யாதிப்படியே இவன் சோகிக்க-
கர்மத்தை வியாஜி கரித்து தள்ளினோமே என்று அவனும் சோகிக்க –
இப்படி இருவரும் கீழ் இழந்த நாளைக்கு சோகிக்க -இருவரும் ரஷ்ய ரஷக பாவேந சேருகை
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்–அபிசாகதீதி-என்றதால் பலித்த நியாந்த்ரு நியாம்ய பாவ சம்பந்தமும் இப்பாட்டுக்கு விவஷிதம்-

——————-

அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

அடங்க எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –
போக பூமியாய் இருக்கும் நித்ய விபூதி –
கர்மா நிபந்தனமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ் விபூதி –
அதில் ததீயம் என்று அனுசந்திக்கப் புக்கவாறே கர்மா நிபந்தமான ஆகாரம் தோற்றாதே –
ததீய ஆகாரத்துவமே இறே தோற்றுவது-

அடங்கு எழில் அஃது என்று –
கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு, ‘நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய செல்வம் இவை எல்லாம்,’ என்று
அனுசந்தித்து – நினைந்து, அவ் விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக் கடவன்;
‘சேரின் பயன் யாது?’ எனின், அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம்;
‘சேஷிக்கு அதிசயத்தை விளைத்தால் இவ் வாத்துமாவுக்குப் பயன் யாது?’ எனின்,
அவனுக்குச் சேஷமாக இருக்கும் இவ் வாத்துமாவினுடைய ஸ்வரூப சித்தி, சேஷி பக்கல் கிஞ்சித்காரத்தாலேயாய் இருக்குமே?
அதாவது, அடிமை சித்திப்பதே பலன் என்றபடி.

அடங்குக உள்ளே –
ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த ஞானம் தானும் அவன் விபூதியிலேயே ஒருவனாய்ச் சேர்தல் வேண்டும்-அந்வயிக்கலாம் இறே
சமுத்திரம் அபரிச்சின்னமானாலும் அளவிடக் கூடாததாக இருப்பினும், அதன் உள்ளில் -சத்தவங்களுக்கு –
மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாம்; அன்றே? அது போன்று, சம்பந்தஞானம் அடியாகக் கிட்டலாம்;
சம்பந்த ஞானம் இல்லாத த்ருணத்தை துரும்பை யன்றே கடல் கரையிலே ஏறத் தள்ளுகிறது?
ஆயின், சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின்,
அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம் –

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

அஃது அடங்க சர்வேஸ்வரனுடைய சம்பத்து என்று உள்ளே அடங்குகை -அந்தர்பவிக்கை-சேஷ பரார்தத்வாத்-
பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –
பர சப்தம் உத்க்ருஷ்டத்தையும் ண்யத்தையும் சொல்லுமே -அதிசயம் -பிரயோஜன ரூபமான கைங்கர்யம் –
அஃது அடங்க இது அடங்க ஈசன் எழில் ஈஸ்வரனுடைய சம்பத்து என்று உள்ளே அடங்குக அன்வயி என்று அன்வயம்
ராஜ புத்ர த்ருஷ்டாந்தத்தில் பிதா புத்ர சம்பந்தத்தை ஒருவன் உணர்த்தினால் போலே
தார்ஷ்டாந்திகத்தில் சேஷி சேஷ பாவ சம்பந்தத்தை உணர்த்துகிறார்
மஹத்வம் உண்டானாலும் சம்பந்த ஞானம் அடியாக கிட்டுக்கைக்கு த்ருஷ்டாந்தம்
கடலில் சத்வங்களும் -ஞானம் இல்லாத துரும்பு கரையில் தள்ளப்படுவதை ப்ரத்யஷிக்கலாம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-2-6-

October 27, 2018

பற்றுமிடத்தில் வரும்-அந்தராய பரிஹாரம் – இடையூற்றை நீக்குதலை அருளிச் செய்தார் கீழே ;
‘ஆயின், நீர் பரிகாரம் சொல்லுகைக்கு-அவாப்த ஸமஸ்த காமனாய்- எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய்,
சேஷியாயிருக்கிற அவன்தான் நமக்குக் கைப் புகுந்தானோ?’ என்ன,
அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஒன்று இல்லை;
அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்- என்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

ஆத்ம அனுபவம் ஆகிற அந்தராயத்தைத் தப்புங்கோள் என்ற அனந்தரம் சங்க ஸ்வ பாவனாவனுடைய சர்வவித
கைங்கர்யங்களிலும் அன்வயி என்றதற்குப் பிரயோஜனத்தை சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
நீர் பரிகாரமும் சொல்லி நாங்களும் ஆஸ்ரயிக்கைக்கு அவன் இப்போது கைப் புகுந்தானோ என்றபடி –
ஈசன் என்றத்தைக் கடாக்ஷித்து அவாப்த ஸமஸ்த காமன் இத்யாதி –

——————-

பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-

பற்றிலன் –
பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;
இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;
அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.
அன்புள்ளவனாயினும் இறைவன் அன்றோ அவன்?’ எனின்,

ஈசனும் –
ஈஸ்வரத் -இறைமைத் -தன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடக்குமித்தனை.
இஸ் சங்கம் குணம் ஆகைக்காகவே கிடக்கிறது
கழற்றொண்ணாமையால் கிடந்தாலும் அச்சத்திற்குக் காரணமாமே?’ எனின், ஆகாது;
அவ்விறைமைத்தன்மை இவ்வன்பு குணமாகைக்காகக் கிடக்கிறது; அஞ்சுதற்கு உடல் அன்று;
பெரியவன் உடைய எளிமையே குணம் என்று சொல்லப்படும்.

‘ஆயின், இதனை நாம் காணும் இடம் உண்டோ?’ எனின்,
பிரசாதவ் பரமவ் நாதவ் ‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று
கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூ விற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ஸ்ரீ மாலாகாரர்’
தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது.
மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை;
‘இரண்டும் அவ்வாஸ்ர்ய கதமாய் – அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க,
தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில்,
சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க,
நெடுந்தெருவே போகிறவர்கள், மம கேஹம் உபாகதவ் (‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே )
தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும் இடம் தெரிந்தது இல்லையோ?’
தந்யோ அஹம் ( ‘ஒக்கச் சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப்போலே, )-
அர்ச்சியிஷ்யாமி (என்னுடைய -ஸ்வரூப அனுரூபமான விருத்தியலே அன்வயித்து– அடிமைக்குத் தக்கதான தொழிலிலே சேர்ந்து-
அழித்துக் கெடுத்து ஜீவிக்கப் பாரா நின்றேன் – அவன் விருப்பின்படி என்னை உபயோகித்துக் கொள்ள எதிர்பாரா நின்றேன்,’ )
என்றும் கூறினார் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் கூறுமாற்றால் அறிதல் தகும்
இத்யாஹ-சூட்டு நன்மாலைகள் தூயன வேந்தி நிற்பார் சொல்லக் கடவ பாசுரத்தை இவன் சொல்லுவதே -என்று ருஷி கொண்டாடுகிறார்
மால்ய உப ஜீவன -பூவில் கண் வைத்துத் தொடுக்கில் சாபலம் பிறக்கும் என்று கண்ணை மாறவைத்துத் தொடுத்து
பூ விற்று ஜீவிக்கும் அத்தனை புல்லியனான சொல்லும் வார்த்தை ஈது-என்கிறான் –

முற்றவும் நின்றனன் –
சமோஹம் சர்வ பூதேஷூ (‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்;
அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே
நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ )என்கிறபடியே-
ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –
இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.

பற்றிலையாய் –
நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்

அவன் முற்றில் அடங்கு –
அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே,
அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

அதவா –
இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –
வாஸூதேவோ அஸீ பூர்ண ( ‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக
இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’) என்கிறபடியே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஞானம் ஆனந்தம் -அமல -குற்றம் இன்மை இவற்றையே-ஸ்வரூபனாய் – வடிவாக உடையவனாய்,-
திரை மாறின கடல் போலே-ஈஸிதவ்யரான-ஏவப்படுகின்றவர்களான நித்திய சூரிகளை உடையவனாய்த்-
பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘
ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபட்டு இரானோ?’ என்னில,

முற்றவும் நின்றனன் –
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்;
த்வயி கிஞ்சித் சமாபந்நே கிம் கார்யம் சீதையா மம – ‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில்,
பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று,
நித்தியாஸ்ரிதையான ஸ்ரீ பிராட்டியாலும் காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்-

பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?

அவன் முற்றில் அடங்கு –
அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:
ஆயின், அவன் எல்லாமாக இருப்பனோ? எனின்,
வாஸூ தேவஸ் சர்வம் (‘எல்லாப் பொருளும் வாசுதேவனே’ )என்றும்,
மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண ( தாயும் தகப்பனும் உடன் பிறந்தோனும் வீடும்
காப்பாற்றுமவனும் நட்டோனும் கதியும் நாராயணனே ஆவன்,’ )என்றும்,
ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ (‘சுற்றத்தார்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயன்பொருட்டு,’ என்றும்
வருவனவற்றால் அவன் எல்லாமாக இருப்பான் )என்பது ஓர்தல் தகும்.

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

பற்றிலன் –
பற்று என்று சங்கமாய்– இல் என்று வாசஸ்தானமாய்-சங்க ஸ்வ பாவன்-பற்றிலே யானவன்
ஈசனும் -உம்மைத்தாய் தொகை -ஈசனே யாகிலும் –
சங்கம் பிரதமோபாத்தம் ஆகையால் ஈஸ்வரத்வம் தத் உப சர்ஜனம்-பயாவஹம் அன்று
ப்ரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோ அஹம் அர்ச்சஇஷ்யாமீ த்யாஹா
மால்ய உபஜீவித -ஸ்ரீ விஷ்ணுபுராணம் -பஞ்சம அத்யாயம் ஏகோந விம்ச அத்யாயம்
ஆகதவ் உபாகதவ் -கேஹம் உபாகதவ் -மம கேஹம் உபாகதவ் -என்று பிரித்து
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இருள் தரும் மா ஞாலத்தில் எழுந்து அருளின படியையும் –
சத்ரு பூயிஷ்டமான ஸ்ரீ மதுரையிலே எழுந்து அருளினை படியையும்
அதிலும் வீதியில் போகை அன்றிக்கே ஷூத்ர க்ருஹத்தில் எழுந்து அருளின படியையும் –
அதுவும் ராஜ வீதியில் இருக்கிற க்ருஹத்திலே அன்றிக்கே ஷூத்ரரான மனுஷ்யரும் அருவருக்கும் படியான
என் அகத்திலே வரும்படியே என்று எண்ணி -ரிஷியின் ஈடுபாடு
என்னுடைய ஸ்வரூபம் அநாதியாக இருக்க இழந்த நன் நிர்ஹேதுகமாக இப்போது காணப் பெற்றேன் –
தன கணம் லப்தா–ஸூத்ரத்தில் திரு உள்ளம் கொண்டு ஈஸ்வரனை தன ஸ்தானத்தில்
யதேஷ்ட விநியோகத்தை அருளிச் செய்கிறார்

ப்ராப்யத்வேன ப்ராபகத்வேன ச இத்யர்த்த தனஸ்ய ஆபரணாதி ரூபேண ப்ராப்யத்வம் –
அபீஷ்ட வஸ்து கிரய சாதனத்வேன ப்ராபகத்வம் –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -சூட்டுகைக்குத் தக்கதான நல்ல மாலைகள் –
அப்ராக்ருதம் ஆகையால் அனுரூபமாய் புழுகிலே தோய்ந்தால் போலே அநுராக ரஞ்சிதம் ஆகையால் நேரானவை –
தூயன -கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிற புழுவும் மயிரும் தூரலும் இல்லாமையால் பறி ஸூத்தமானவை
ஏந்தி -பாரதந்தர்யத்தாலே யாவத் அங்கீ காரம் தரித்துக் கொண்டு நிற்கிற நித்ய ஸூரிகள் –
சமோஹம் சர்வ பூதேஷூ ந மே த்வேஷ்யோ அஸ்தி ந பிரிய -யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷூ சாப்யஹம் -ஸ்ரீ கீதா 9- அத்யாயம் –
ஜென்ம வ்ருத்த ஞான சாஹித்ய ராஹித்ய வேஷேண-இருந்தபடி இருக்க –
முற்றில் அடங்கே -சகலத்தில் என்றாய் எல்லாக் கைங்கர்யங்களிலும் அன்வயி என்றபடி –
ஈசனும் பற்றிலன் என்று இரண்டாம் நிர்வாகம் -நித்ய ஸூரிகள் பக்கல் சங்கத்தை விட்டு
நம்மையே தாரகாதிகளாக-முற்றவும் – நினைத்து இருப்பான் ஒருவனாகிறது
அப்படி அனுஷ்டித்துக் காட்டின இடம் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம–பரதேந மஹா பாஹோ லஷ்மணனே
ந யவீ யஸா -சத்ருக்னேன ச ஸக்ருத்ன ஸ்வ ஸரீரேண வா புந —
நித்ய அநபாயினியாய் ப்ராணேப்யோ அபி கரீயஸியாய் -பாஸ்கரேண பிரபாயதா-
இவள் நிமித்தமாக இறே உமக்கு இப்படிப் பட வேண்டுகிறது என்று இதுக்கு நிமித்தமான இவளையும் வேண்டேன் –
இவ்வளவும் அல்ல -அவளிலும் பிரிய தமரான இவ் விளைய பெருமாள் நிமித்தமாக உமக்கு ஒரு வாட்டம் வரில்
அவரையும் நான் வேண்டேன் -தாம் உகந்ததே செய்பவன் ஆகையால் இவனிலும் பிரியனான ஸ்ரீ பரதாழ்வான் நிமித்தமாகவும்
அவனுக்கு நல்லனாய் நம் விஷயமாக இந்திரியத்தை ஜெயிக்கையாலே வீரனான சத்ருக்கன் நிமித்தமாக –
உமக்கு ஒரு வாட்டம் வரில் இவர்கள் இத்தனை போரையும் வேண்டேன் –
இவர்களுக்கு ஜீவன் இறே திரு மேனி -ஸ்வ சப்தம் பிராட்டி முதலானோரைச் சொல்லுகிறது -ஸ்வ சேஷாம் ஸரீரேண-

பற்றிலையாய் –
நீ ஒரு தலையும் நித்ய ஸூரிகள் ஒரு தலையுமானால் -அவர்கள் தலையை விட்டு உன் தலையைப் பற்றினான் –
மாணிக்கத்தை விட்டுக் கரியைப் பற்றினால் போலே-
நீயும் விடலான பிராக்ருதி பிராக்ருதங்கள் என்னும் கரியை விட்டு-பரம ப்ராப்யமான மாணிக்கத்தைப் பற்றத் தட்டு என்
அவனாகிற முற்றில் அடங்கு
பஹு நாம் ஜென்ம நாமந்தே ஞானவான் வாஸூ தேவஸ் ஸர்வமிதி மாம் ப்ரபத்யதே ச மஹாத்மா ஸூ துர்லபா -ஸ்ரீ கீதை 7-அத்யாயம்
பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரம் மித்ரா தயோ அபி வா ஏகைக பல லாபாய சர்வ லாபாயா கேசவா -ஸர்வவித போக்யத்வமும் விவஷிதம்
சர்வ சமனான சர்வேஸ்வரன் சங்க ஸ்வ பாவன் -ஆகையால் அவன் இடத்தில் சங்கம் உடையவனாய்க் கைங்கர்யத்தில் அந்வயிக்கை இப் பாட்டுக்குப் ப்ரமேயம்
இன்று ஆஸ்ரயித்தவனை நித்ய ஸூரிகளையும் விட்டு ஸ்ரீ பகவான் ஆதரிக்கும் –
ஆகையால் விஷயங்களை விட்டு ஸர்வவித பந்துவுமாக அவனை ஆஸ்ரயிக்க வேணும் என்று பிரமேயம் -என்னவுமாம் –
ஈசனும் பற்றிலன் -முற்றவும் நின்றனன் -என்று தொடங்கி அன்வயம் –
ஆஸ்ரயணத்வேன சமனாய் நிற்கும் சர்வேஸ்வரன் பக்கல் சங்கத்தை உடையனாய் அவனுடைய
எல்லாக் கைங்கர்யங்களிலும் அந்வயிக்கப் பார் என்று பிரதம அர்த்தம்
ஸ்ரீ பட்டர் யோஜனையில் சர்வேஸ்வரன் இன்று ஆஸ்ரயித்தவர்கள் பக்கலிலே தாரகதவாதிகள் எல்லாமாக நின்றான் –
நீயும் சாம்சாரிக சங்கத்தை விட்டுவனாய் அவனுடைய தாரகதவாதி ஸமஸ்த பாவத்திலும் அந்தர்ப்பவிக்கப் பார் -என்று த்விதீயார்த்தம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-2-5–

October 27, 2018

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –
அருளிச்செய்கிறார்.
(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை. ‘
ஆயின், அதனை இடையூறு என்றால் பொருந்துமோ?’ எனின், )
இந்திர பதத்தினைக் கோலுமவன், இல்வருகு உண்டான ஐஸ்வர்யத்தைக் கோலான்;
பிரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன், இவ்வருகு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்;
கைவல்யத்தை (ஆத்துமானுபவத்தை) ஆசைப்படுமவன் ஐஸ்வர்யம் முதலியவைகளில் கண் வையான்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் நித்ய மங்கள விக்ரஹ உக்தனாய் –
எல்லா நற்குணங்களையுமுடையனாய் திவ்வியமங்கள விக்கிரகத்தையுடையவனாய் –
இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான்;
ஆக, இங்ஙனம்,- இவை ஒன்றற்கு ஒன்று இடையூறு ஆதல் காண்க.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

செற்றது மன்னுரில்-என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –
ஆத்ம அனுபவம் அந்தராயம் என்னலாம் என்று விவஷித்து அநேக வாக்கியங்கள் அருளிச் செய்கிறார்
ப்ராப்யதயா பற்றினவன் கைவல்யத்தை இச்சியாதே -அத்தை அபேக்ஷியாது இருக்கையை பரிஹாரம் –

——————-

அற்றது பற்றுஎனில், உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில், அற்று இறை பற்றே-1-2-5-

அற்றது பற்று எனில் –
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் – உடலும் உடல் சம்பந்தமான பொருள்களும் ஆன இவற்றில்- உண்டான –
பற்றது அற்றும் –
ஆசை நீங்கியது -என்னும் அளவிலே

உற்றது வீடுயிர்
உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது; ‘அடையல் உறும்’ என்றபடி
விலக்ஷண- வேறுபட்ட- ஞானத்தையும் -ஸ்வரூபத்தினை யுமுடைய உயிர்ப் பொருளுக்கு-அசித் சம்சர்க்கத்தாலே –
உடலின் சேர்க்கையால்-திரோதானத்தைப் பண்ணுகிறது – மறதி உண்டாகிறது;
அம் மறதி-யோக அப்யாஸத்தாலே – யோகத்தின் பயிற்சியால் நீங்கினவாறே ஸ்வரூபம் பிரகாசிக்கும்;
அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று
தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.

அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.

மன் உறில் –
மன்ன உறில், அதாவது, தன்னைப் பற்றினால் ‘இன்னமும் அதற்கு அவ்வருகே ஓர் அனுபவம் உண்டு’ என்று
இருக்க வேண்டாதபடியான நிலை நின்ற-புருஷார்த்தத்தை – உறுதிப் பொருளைப் பற்றப் பார்க்கில் -.

அற்ற இறை பற்று –
ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்-
‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

ஆத்ம விலக்ஷணம் -ஞானஸ்ய வைலக்ஷண்யம் நாம சர்வ வஸ்து சாஷாத்கரித்வம்-ஞான ஆனந்த ஸ்வரூபம்
பகவத் அனுபவத்துக்கு அந்தராயமாய் தன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளுமே-
மன்னுறில் –பகவத் அனுபவம் எல்லையான புருஷார்த்தம் -ஆகையால் பொருந்த யுறில்-என்றபடி –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து அங்கு உள்ளார் இருக்கிறவர்கள் படியைக் கேட்டு இவனுக்கும் அபேக்ஷை பிறக்கும் –
பிறந்தாலும் தத்க்ரது நியாயத்தாலே ஈஸ்வரன் இத்தையே அனுபவிப்பிக்கும் என்றபடி –
அபரிச்சின்னம் ஆகையால் மேன் மேல் என வேறே புருஷார்த்தங்களில் ருசி பிறவாத படி நிலை நிற்குமே
இறை சேஷி -அது தீர்ந்து புல்கு -என்றும் இறையைப் பற்றி அறு -அறப்பார் என்றுமாம்
சர்வேஸ்வரன் பக்கல் மனஸ்ஸூ பிரவணமாக-இதர ஆசைகளை ச வாசனமாக விட்டு சம்சார நிவ்ருத்தி
பற்று அற்றது எனில் உயிர் வீடு உற்றது -அது செற்று மன்னுறில் அற்று இறையைப் பற்று -என்றும்
இறையைப் பற்றி அறு என்றுமாம்
இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —-1-2-4–

October 27, 2018

விடப்படுகின்ற பொருள்கள் போன்று –
அபோக்யமுமாய் -இன்பம் அற்றனவாயும்,-ச தோஷமுமாய் – குற்றங்களையுடையனவாயும் இராது என்று
பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

——————

இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

இல்லதும் –
பிரமாணங்களால் அறியக் கூடாததாய், முயற்கொம்பு என்பது போன்று உலகத்திலே இல்லாததாய் உள்ள தன்மையினைப் பற்றவாதல்,
இப்பி வெள்ளியாகத் தோன்றுதல் போன்று கண்களுக்குத் தோன்றுகிற அளவேயாகிப் பின் பிரமாணங்களைக் கொண்டு
நோக்கின் இல்லை என்று கூறத் தக்கதாயுள்ள தன்மையினைப் பற்றவாதல்
துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;
விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.

உள்ளதும் –
அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.
யத் அஸ்தி யந் நாஸ்தி (‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ )என்று விஷ்ணு புராணமும்,
சத்யஞ்ச ந்ருத்தஞ்ச (‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ )
என்று தைத்திரீய உபநிடதமும் ஈண்டு-சித்துக்களையும் அசித்துக்களையும் கூறுதல் ஒப்பு நோக்கத் தக்கன.
அன்றிக்கே
இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –
அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம் –

அல்லது அவன் உரு –
நஸ்வரமாய் -அழிந்து போகின்ற அசித்தின் படியும் அன்று;
அசித் சம்சர்க்கத்தாலே -உடலின் சேர்க்கையால்-அஹம் ஸூகீ அஹம் தூக்கீ ( ‘நான் சுகத்தையுடையவன்,இத்யாதி ’ )என்கிற
ஆத்துமாவின்படியும் அன்று அவன் ஸ்வரூபம். ‘ஆயின், எங்ஙனம் இருக்கும்?’ என்னில்,

எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.

புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் –
அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.

பற்று அற்றே –
அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.
இறைவன் 6‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

விடப்படும் விஷயங்கள் -சித் அசித் வஸ்துக்கள் -நரக அவஹத்வம் –
த்யாஜ்யமான சம்சாரத்தில் விரக்தியும் உபாதேயமான பகவத் விஷயத்தில் திருஷ்ணையும் பிறக்கும்படி
த்ருதீய அத்தியாயத்தில் முதல் இரண்டு பாதத்தால் சம்சாரத்தின் தோஷத்தையும் பகவத் விஷயத்தினுடைய
ஹேயபிரத்ய நீகத்வ கல்யாணைகதாநத்வ ரூபமான வை லக்ஷண்யத்தையும் சொன்னவோ பாதி
இவரும் மூன்று பாட்டாலே சம்சாரத்தின் தோஷத்தை அருளிச் செய்து
இப் பாட்டில் பகவத் விஷய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் -என்று அருளிச் செய்வர்
இல்லத்துக்கு -ச ச விஷாணம் என்று சொல்லுகிற ஸூந்யவாதியையும் –
ஸூக்தி கார ஜாதம் என்கிற மாயா வாதியையும் போலே போலவும் இல்லை என்கிறது அல்ல என்கிறார் –
இல்லது இல் என்று க்ருஹம் -இல்லதும் இல் அதும் -அந்த இல் என்றபடி
உள்ளது–உள்ளானது ஆத்மா
இவை இரண்டையும் பற்ற பகவத் ஸ்வரூபம் வியாவ்ருத்தமாய் இருக்கும் –
எல்லையில் அந்நலம் ஸ்வரூப தர்ம ஆனந்தங்கள் -முழு உணர்வும் முழு நலமும் -நசியாத ஆனந்தம் மிக்கு இருப்பவன் –
கல்யாண குண உஜ்வலமான ஞான ஆனந்த லக்ஷண ஸ்வரூபம் -ஸமஸ்த கல்யாணத்வம் குண ஸ்வ பாவோ யஸ்ய –
பற்றற்றே -ஏவகாரம் -இருக்கற -விஷயாந்தரமும் பகவத் விஷயமும் -ப்ரபாகாந்தரமும் சித்தோ உபாயமும் –
பற்றிலர் -சாதனாந்தர சங்கம் இல்லாதவர் பற்றும்படி சரண்ய சரண்யனாய் நிற்பானாய்
அந்நலம் -அழகிதான் நலம் -அந்நலம் பற்றற்றே புல்கு -என்று அன்வயம்
சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண
குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —-1-2-3–

October 27, 2018

‘தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்; காலம் அநாதி;
அக்காலத்தில் ஈட்டிய வினைகளும்-அநந்தரமாய்- முடிவின்றி இருக்கின்றன;
ஆதலால், பற்றின காலம் எல்லாம் வேண்டுமன்றோ விடுகைக்கும்?’ என்ன,
த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

—————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

அஹங்கார மமகார நிவ்ருத்தியையும் -பகவத் சமாஸ்ரயணத்தையும் சொல்லுகிறதுக்கு பிரயோஜனத்தை
சங்கா பரிகார முகேன தர்சிப்பிக்கிறார் –
பீஜம் -அஞ்ஞானம் கர்மத்துக்குக் காரணம் –
நீர் நுமது என்கையாலே சம்சார பீஜம் -வேர் முதல் மாய்த்து -பேஷஜம்

———————–

நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

நீர் நுமது –
அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.
ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை
‘நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி
‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.
நன்று ‘என் உடைமை’ என்னுமது வேணுமாகில் தவிருகிறேன்; ‘நான்’ என்னுமது தவிரும்படி என்?’ என்னில்,
இவன் ‘அஹம்’ என்றால், இராவணன் முதலியோர் ‘நான்’ என்றாற்போன்று பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு
அன்றே இருப்பது? சரீரத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே!

இவை வேர் முதல் மாய்த்து –
இவற்றை வேர்முதல் மாய்க்கையாவது என் என்னில்
இதை அ புருஷார்த்தம் – உறுதிப்பொருள் அன்று -என்னும் நினைவு உண்டாதல்.
இரண்டு மரங்கள் சேர நின்றால், ஒன்றிலே தொளைத்துப் பெருங்காயத்தை வைக்கச் சில நாள் ஒன்று போலே நின்று,
பின்னைப் பட்டுப் போகா நின்றது;
அப்படியே,அகங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் – யான் எனது என்னும் செருக்கு விடத்தக்கது- என்னும் நினைவு உண்டாகத்
தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும் என்றபடி.
அநாத்மந் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வ மிதி யா மதி அவித்யா தரு சம்பூதி பீஜ மேதத் த்விதா ஸ்திதம்
(‘உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும்,
அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, ) என்று சம்சார பீஜமும் –
அச்யுதாஹந் தவாஸ் மீதி சைவ சம்சார பேஷஜம் ( ‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய்
இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’,_)என்று பரிஹாரமும் –
அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது.
ஆதலால்,ரக்ஷகனானவன் – அளிக்குமவன்-அவசர பிரதீஷகனாக – ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை
எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

இறை சேர்மின் –
அபிராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.
சேர்மின்
சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு,
முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்–
உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.
சம்சார ஆர்ணவ மக்நாநாம் (‘பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால்
இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு,)
விஷ்ணு போதம் ( எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத்) தவிர, சிறந்த சாதனம் வேறு ஒன்று இல்லை,’
எங்கும் நிறைந்த ஓடம் ஆகையால், இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு கடத்தும் என்பது பெறுதும்.
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேராதார்,’ என்ற திருக்குறள் நினைத்தல் தகும்

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

பீஜம் பேஷஜம் என்றதுக்கு பிரமாணம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-அம்சம் காண்டிக்யம் ப்ரதிகேசித்வ ஜோக்தமிதம்
அன்றிக்கே இறை சேர்மினே -என்றதையும் கடாக்ஷித்துக் கொண்டு யுக்த அர்த்தத்துக்கு பிரமாணமாகவுமாம்
த்யாஜ்யத்துக்கு பிரதிகோடி இறை சேர்க்கை
பற்றுங்கோள் என்னாதே சேர்மினே என்றது ஈடுபாடு –
மரக்கலத்தை ஆலம்பநமாகக் கொண்டு அன்றோ வாயு வசாத் கரை சேருகிறது —
அப்படியே ஸ்ரீ விஷ்ணு போதுமான சர்வேஸ்வரனும் க்ருபாவானாய்க் கொண்டு கடத்தும் -என்றபடி –
சீர்மையாய் நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒத்த சீரியது இல்லை என்றபடி –
நேர் –ஒப்பு -நிறை -பூர்த்தி
ரக்ஷகனானவன் அவசர பிரதீஷனாய் இருக்க –
வேங்கடங்கள் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் –
கெடும் இடராய வெல்லாம் –
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரா –
ஒடுங்கலும் எல்லாம் விடும் –
விஷயேந்த்ரிய சம்யோகாத் யத் தத் அக்ரே அம்ருதோபமம்-என்றும்
சம்சார ஆர்ணவ மக்நானாம் விஷயாக்ராந்த சேதஸாம் -விஷ்ணு போதம் விநா நான்யத்
கிஞ்சித் அஸ்தி பராயணம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம்
விஷ்ணு -வியாப்தவ் என்கிற தாத்பர்யம் –
இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருக்கு கடத்தும் ஓடம் -என்றவாறு –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-2-2–

October 27, 2018

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு விட்டுச் சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே
ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்,’ என்றார் முதற்பாட்டில்;
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்தனவற்றை இப் போதாக விடப் போமோ?’ என்ன,
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

முதல் பாட்டில் த்யாஜ்யத்தை அடங்க விடுங்கோள் என்று சொல்லி அனந்தரம் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களை
சொல்லுகிறதுக்கு பிரயோஜனம் சம்சாரிகளுக்குப் பிறந்த சங்கையை பரிஹரிக்கை என்கிறார் –

——————

மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

மின்னின் நிலை இல –
மின்னலைப் போன்றும் நிலையினையுடைய அல்ல.
மின்னல் – அற்பமாய் அஸ்திரமாய் -நிலை யற்றதா யிருக்கும்;
இவ் வுடலும், அங்ஙனம் நிலையற்றதாய் இருந்தும், நிலையான அறிவினைப் பிறப்பித்துக்
கேட்டோடே-அநர்த்தத்தோடே – முடித்து விடும்.
சந்தனம் என்ற மயக்கத்தாலே நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு பாம்பின் மேலே கையினை வைத்துக் கொண்டு
ஒருவன் கிடந்து உறங்கா நின்றால், ஓர் -தார்மிகன் -அறவோன் ‘இது பாம்பு’ என்று அறிவித்தால்,
பின்னை அதனினின்றும் கை வாங்கி அல்லது நிற்க வொண்ணாதே!
அப்படியே,-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே
விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

மன் உயிர் ஆக்கைகள் –
உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்மவஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,
திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின்,
‘உயிர் யாக்கைகள்’ என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை’ என்கிறபடியே,
‘ஓரலகு தானே காணி நிலையிலே நிற்பது கோடி நிலையிலே நிற்பது ஆமாறு போன்று,
ஓர் உயிர் தானே கர்மங்களின் வேறுபாட்டினால் தேவ சரீரம் முதலான சரீரங்கள் பலவற்றை மேற்கொள்ளுதல்.
அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு-
ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம் –

என்னும் இடத்து –
பகவத் குணங்களை -பரிச்சேதிக்கிலும் -அளவிட்டு அறியினும்,- அளவிட்டு அறிய முடியாதபடி -தோஷாப் பரப்பு –
இவ் விடையாட்டத்து என்றபடி -குற்றங்களின் மிகுதி இருத்தலின், ‘என்னுமிடத்து’ என்கிறார்.

இறை உன்னுமின் –
இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.
நீரே –
இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.
சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

மின்னின் நிலையில -பஞ்சமி வேத உறுப்புக்கு அநேக அர்த்தங்கள்
இங்கே உபமார்த்தே பஞ்சமி -யத்தவா மின்னில் காட்டிலும் –
கர்ப்பே அபி லீயதே பூயோ ஜாயமானோ அஸ்தமேதி ச -ஜாத மாத்ரோ அபி மிரியதே பால பாவே
அத யவ்வன -மத்யமஞ்ச வய ப்ராப்ய வார்த்தகே வா த்ருவா ம்ருதி-என்றும்
சம்பத ஸ்வப்னம் ஸங்காசா யவ்வனம் குஸூ மோபமாம்-தடிச் சஞ்சலமா யுஸ்ச கஸ்ய ஸ்யாத் ஜாநதோ த்ருதி-என்றும் அனுசந்தேயம்
மின்னைப் போலே அல்ப அஸ்திரத்வாதி ப்ரகாஸகத்வ குணம் உண்டு இறே மின்னுக்கு
அநாதி காலம் வாசிதங்களான வஸ்துக்களினுடைய தோஷங்களைத் தர்சித்தால் ஸூகமாக விடலாம் என்றபடி –
இதுக்கு அவதாரிகையோடே சேர்த்தி –
உயிர் மன்னுகிற ஆக்கைகள் -ஆத்மாவைப் பற்றி விடேன் என்று இருக்கிற சரீரங்கள் -என்றபடி –
மன்னுகை -காலத்தோடு பொருந்துதலாய் -கால விசேஷம் சொல்லாமையாலே சர்வ கால சம்பந்தம் சித்திக்கிறது –
உயிர் -ஏக வசனம் / ஆக்கைகள் -பஹு வசனம் -ஒரு ஆத்ம வஸ்து தானே அநேக சரீர பரிக்ரஹம் –
மகிழலகு -மகிழம் விரை -ஜ்யோதிர் வித்துக்கள் இவற்றை அலகாக வைத்து-காணி பத்து நூறு -கோடி ஸ்தானத்தில்
எண்ணுவது இதுக்கு த்ருஷ்டாந்தம்
உயிர் மன்னுகிற ஆக்கைகள் என்றுமாம்-
என்னுமிடம் -என்ற போதே -தோஷ பாஹுல்யம்-இது முதலான தோஷப்பரப்பு -என்றபடி
நீரே -ஏவகாரம் -தோஷம் ப்ரத்யக்ஷம் ஆகையால் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –1-2-1–

October 27, 2018

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷசாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய் மொழி-

இத்திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தாராகத்திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி
நிர்வகித்துக்கொண்டு போந்து -எம்பெருமானாரும் அப்படியே அருளிச்செய்துகொண்டு போந்து,
ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச்செய்துகொண்டு போந்தார்,
பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச்செய்தார்.
இவருடைய பத்தியும் பிரபத்தியும்  விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? ,
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது பத்தி ரூபா பன்ன ஞானமாய் இருந்தது;
தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுவது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், விப்ரலம்பக கோடியிலே ஆவரே.
ஆதலால், தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும்.
ஆயின், பத்தி என்பது உபய கர்மிதஸ் வாந்தஸ்ய (‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’)
என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும்-சம்ஸ்க்ருத அந்தகரணனுக்கு- தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு
உண்டாவது அன்றோ? பர பக்தி –
அந்த ஞான கர்மங்களினுடைய-ஸ்தாநேந – இடத்தில் பகவத் பிரசாதமாய் நிற்க,
அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றே!இவருடைய பக்தி தான் –
‘இதுதான் வேதாந்த விஹிதையான பத்திதானே ஆனாலோ?’ என்னில், 
சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்; 
அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும்;
ஆன பின்பு தான் பெற்றத்தையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்துவத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்து –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே?
தாம் அனுபவித்த பொருளை எல்லை கண்டோ,
அன்றி, தாம் அப்பொருளில் விரக்தராகியோ?’ என்னில், விஷயமோ என்றால், 
‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –
‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ அன்றே?

இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், 
‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும், 
‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .
ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் அபிநிவேசம் பிறந்தால் அப்பொருளிலேயே வேறு காலங்களில் -காலாந்தரத்தில் –
விரக்தி பிறக்கக் காண்கின்றோம்;
அப்படியே, சில காலம் அனுபவித்துப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது;
‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’
என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்-

இனி, ஆசாரிய பதம் -நிர்வஹிக்கைக்காக மேற்கொள்ளுகைக்காக அன்று; க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று; 
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பரதந்த்ரராய் அன்று (‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன்
அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.)
‘ஆயின், இது பின்னர் எத்தாலே ஆவது?’ என்னில்,
ஸ்வ அனுபவ பிரகர்ஷம்-இன்பப் பெருக்கு- இருக்கிறபடி –
தாம் அனுபவித்த விஷயம் தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது;
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு
ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று  பலகாலும் அருளிச்செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில்,
இவர்கள்-சேதனராய் – அறிவு உள்ளவர்களாய்- இருக்கிறார்கள்; சப்தாதி விஷயங்களில் வாசியறிந்து,
தீயவை கழித்து, நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
ஆதலால், அவற்றினுடைய ஹேயதையையும் சர்வேஸ்வரனுடைய உபாதேயதையையும் இவர்களுக்கு அறிவித்தால்,
அவற்றை விட்டு இறைவனைப் பற்ற அடுக்கும் என்று பார்த்து, சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

—————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இரண்டு வித சங்கதி –
மோக்ஷ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-பூர்வ த்விகம் -சமன்வயம்-1-1 -1–முதல் –7-வரை அளவும் — என்றும்
அவிரோதம் -1-1-8-தொடங்கி இரண்டு பாட்டிலும் –என்றும் –
உத்தர த்விகம் -சாதன அத்யாயம் -பல அத்யாயம் –
சதுஸ்லோகீ -ஸ்வ சேஷா சேஷார்த்தோ நிரவதிக நிர்பாத மஹிமா பலா நாம் தாதா யா பலமிதி ச சாரீரகமித-
ஸ்ரியம் தத் சத்ரீசீம் ததுபசத யாத்ரா சசமனீம் அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுன முனி
ஸ்வ சேஷா சேஷார்த்தோ -என்று சர்வ சேஷித்வம் சொன்னது –
ஸர்வேஷாம் வேதாந்தா நாம் ப்ராஹ்மணி சம்யக் அன்வயம் சொல்லுகிற பிரதம அத்யாய பலிதம் சொல்லிற்று
நிரவதிக நிர்பாத மஹிமா -என்றது அவிரோத அத்யாய பலிதம் –
பலா நாம் தாதா -மூன்றாம் அத்யாயம் உபாயம்
யா பலமிதி ச -நான்காம் அத்யாயம் அர்த்தம்
சாரீரகமித-ஸ்ரியம் தத் சத்ரீசீம் -சாரீரகத்தை பிரமாணமாக யுடையவன்
ததுபசத யாத்ரா சசமனீம்–அபராத பீதரானவர்கள் பயத்தைப் போக்குமவளை
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுன முனி -ஸ்ரீ சதுஸ்லோகீயில் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்
பழுதற்ற மதியை உடைய ஸ்ரீ யமுன முனி என்றவாறு
இத்தால் பூர்வ த்விகம் தத்வ பரம் -உத்தர த்விகம் -உபாய பரம் -உபாசந பரம் என்றுமாம் —
பலம் உபாய சாத்தியம் ஆகையால் நான்காம் அத்யாயர்த்தமும் உபாய பரம் ஆகுமே –
உபாசனம் -ஆஸ்ரயணம் என்னவுமாம்

பிரபத்தி -வேத குஹ்ய ரஹஸ்ய உபாயம் ஆகையால் அத்தை வெளியிட ஒண்ணாது என்று
பிரபத்ய பர பர்யாயமான ஸாத்ய பத்தியாலே மறைத்துப் போந்தார் என்றபடி –
திண் கழல் சேர்-19 -என்றது பிரபத்தி பரம் என்றதுக்கு ஸூசகம் –
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே-4-என்றும்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே -6-என்றும் –
எண் பெருக்கு அந்நலத்து-10-என்றும் பக்தி விஷய பர ஸூசகம் –
ஸ்ரீ பாஷ்யத்தில் விவேகாதி சாதன சப்தக சம தமாத் யங்கித்தவம் உபாசனத்துக்கே என்று
ஆகார ஸூத்தவ் சத்வ ஸூ த்தி–ஆத்மன்யே ஆத்மாநாம் பஸ்யேத்-இத்யாதி வாக்யங்களை இட்டு நிர்ணயிக்கையாலே
பிரபத்திக்கு தத் அங்கத்துவம் திரு உள்ளம் அல்ல இறே-
ஆகையால் வீடு செய்து வீடு செய்ம்மின் -1-என்கிற வாக்கியத்தில் ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே அங்க அங்கி பாவம் தோற்றுகையாலும் –
ஆறு எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் -அடிக்கீழ் அமர்ந்து என்கையாலே ப்ரபந்ந ஜன கூடஸ்தராக அத்யவசிதரான இவர்
பிரபன்னரோ பக்தரோ -என்று சம்சயிக்கும் படி விஷயாந்தர வைத்ருஷ்ண்யா பரிஷ்க்ருதையான பக்தியை
மயர்வற மதி நலம் அருளினன் என்கையாலே அவன் கிருபையால் உடையராய் இருக்கையாலே
இவருடைய பிரபத்தி வைராக்ய சஹசரிதை யாகையாலும் இவருடைய யுக்தி அனுஷ்டானங்களாலே இவர் பக்தி
சம தமாத் அங்கியாய் இருக்கும் என்று சங்கிக்க வரும் என்று திரு உள்ளம் பற்றி ப்ராப்ய பக்தி பரமாக நிர்வகித்து அருளினார் -என்றபடி —
பித்த உபஹதனுக்கு நாக்கில் திக்தத்தைப் போக்கிப் பணம் பண்ணுவிக்கில் இறே ஷீரம் ரசிப்பது –
ஆகையால் வீடு செய்து வீடு செய்ம்மின் என்கிறது என்றும் –
இவருடைய வைராக்யம் விஷய தோஷ தரிசனத்தால் வந்த இத்தனை என்று கருத்து என்று திரு உள்ளம் –

இவருடைய பக்தி பிரபத்திகள் விகல்பிக்கலாம் படி இருப்பது எங்கனே என்னில் –
இவருடைய பிரபத்தி ஆர்த்த பிரபத்தி ஆகையால் ப்ராவண்யம் மிக்கு இருக்குமே –
இவருடைய பிரபத்தி பக்தி பாரவசயத்தாலே வந்தது ஆகையால் கார்ய காரணங்களை அபேதேந வியவஹரிக்கலாம் என்று கருத்து –
இவருடைய பக்தி பிரபத்திகள் இரண்டும் கட்டளைப் பட்டன வாகையாலே இவருக்கு பக்தி
மோக்ஷ சாதனமோ பிரபத்தி மோக்ஷ சாதனமோ என்று விகல்பிக்கலாய் -துல்யம் என்னலாய் -இருக்கும் –
யத்வா ப்ராப்ய பிராப்பகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கையாலே இரண்டும் இவருக்கு
பல சாதனத்வே துல்யம் என்னலாய் இருக்கும் –
எல்லாமாகக் குறைவற்ற பக்தி பிரபத்திகள் இரண்டும் இவ்வாழ்வாருக்கு உண்டே
நிரபாயமாய் அவிலம்பிதமாகத் தாம் கண்டா உபாயத்தை விட்டு பின்னை சாதன பக்தியை உபதேசிக்கில் விப்ரலம்பம் வரும் –
கர்ம ஞானங்கள் இரண்டாலும் பரிகர்மிதமாய்-அலங்கரிக்கப் பட்டு இருக்கிற ஸ்வான்தஸ்ய அந்தக்கரணத்தை யுடையவனுக்கு –
ஒன்றிலே -ஒரு விஷயத்திலே நியதமாய் இருப்பதாய்-
ஆத்யந்திக நித்தியமாய் இருக்கிற பக்தி யோகம் ஒன்றினாலும் லப்யன் – என்றபடி –

அப ஸூத்ராதிகரணம் ஆவது -ஞான ஸ்ருதி ராஜா -பள்ள பல்லாஷர் இரண்டு ஹம்சா ரூபிகளாய் –
ரைக்வனாகப் போகிறானோ-ப்ரஹ்ம ஞானம் -சூத்ரன் என்றது சோகமுடையவன்-சோஸனாச் சூத்ர –
பல்லாஷாருடைய அநாதாரத்தாலும்-ப்ரஹ்ம வித்யா ராஹித்யத்தாலும் உண்டான சோகம்
சாதன பக்தி என்றால் பாதக த்வயம் வருகையால் ஸாத்ய பக்தியே என்று கருத்து –

இப்பத்து பாட்டிலும் ஸங்க்ரஹேன பிரபத்தி சரீரமும் தத் யுபயுக்தார்த்தங்களையும் சொல்லி
ப்ரபத்தியிலே தாத்பர்யத்தை பர்யவசிக்கிறது என்று ஸ்ரீ பரமாச்சாரியார் நிர்வாகம் –
ப்ராப்ய ருசிக்கு உபையுக்தமான அர்த்தங்களை சொல்லி ப்ராப்ய ருசியில் பர்யவாசிக்கிறது என்று ஸ்ரீ பாஷ்யகாரர் நிர்வாகம் –
இந்த அர்த்தத்தில் வீடு செய்ம்மினாவது புத்தியை அவன் பக்கலிலே வையுங்கோள் என்றபடி
ஆதவா பாஷ்யம் தலைக்கட்டின பின்பு -சாதன உபாசனை பாரமாக நிர்வகித்தார் -என்று பொருள் –
தத்வ ஹிதங்கள் இ றே சாஸ்திரங்களில் ப்ரதிபாதிக்கிறது –
ஹிதமாவது அலவ்கிக புருஷார்த்த சாதனம் என்பதால் புருஷார்த்தம் ஹித்துக்குள்ளே சொருகி இறே இருப்பது
பூர்வ த்விகம் -தத்வம் நிரூபணம் -உத்தர த்விகம் -ஹித நிரூபணம் –
அந்த சாயையிலே முதல் திருவாய் மொழி தத்வ நிரூபணம் -இரண்டாம் திருவாய் மொழி ஹித நிரூபணம்
வீடுமின் முற்றவும் -1-சம தமாத் யுபேத ஸ்யாத் -ஸூ த்ரார்த்தம்
மின்னின் நிலை 2– வைராக்ய பாத அர்த்தம்
புல்கு-4 -என்று பகவத் அனுசந்தானத்துக்கு ப்ரீதி ரூபத்வம்
அற்றது பற்று எனில் –உற்றது வீடு உயிர் -ஞான யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டினால் அங்கே தாழாமல் இருக்க உபதேசம்

யோஜனா த்வயம் -பக்தி பிரபத்தி உபதேசங்கள் –இவருக்கு சம்சாரத்தில் அடிக்கொதிப்பு உன்மஸ்தம் ஆகையால்
பிரபத்தி உபதேசம் பண்ணும் போதும் வைராக்யத்தை பஹுவாக உபதேசிக்கிறார்
ஸ்ரீ பாஷ்யம் தலைக்கட்டின பின்பு என்றதுக்குக் கால விசேஷ பிரதர்சனமே பலமாகவுமாம்
ஆச்சார்ய பதம் நிர்வகிக்கைக்காக பர உபதேசம் பண்ணுகிறார் அன்றே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்பவர் அன்றோ
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக என்று சம்பத்து தனக்கு அநர்த்தகரமாக நினைப்பவர்
ஓத வல்ல பிராக்கள் –தமக்கு சேஷிகளாக நினைப்பவர்
ஆகவே க்யாதி லாப பூஜைகள் இல்லையே
ப்ரோவாச தாம் தத்துவதோ ப்ரஹ்ம வித்யாம் -முண்டோபநிஷத் -என்ற சாஸ்த்ரா மரியாதையில் உபதேசிக்கிறார் என்ன ஒண்ணாது –
தம்முடைய தயா அதிசயத்தாலே -ஸூஹ் ருதம் சர்வ பூதா நாம் என்று அவன் இருந்தால் யச்சீல ஸ்வாமீ தச்சீலோ தாச –

எல்லையில் அந்நலம் -4-சர்வேஸ்வரனுடைய நன்மையையும்
மின்னின் நிலை -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டம்
அந்தராய பரிஹாரம் -அது செற்ற -7-
அடங்குக உள்ளே -7-சம்பந்தத்தை உணர அமையும்
வண் புகழ் நாரணன் -10-மந்த்ரம் இன்னது என்றும்
இறை சேர்மினே -3-இத்யாதி பதங்களைக் கடாக்ஷித்து பஜனீயதையையும்
வீடுமின் முற்றவும் -1-இதர விஷய வைராக்ய பூர்வகம்
புல்கு பற்று அற்றே -4-/ பற்றிலையாய் -6-இத்யாதியைப் பற்ற பக்தியைப் பண்ணி என்று அருளிச்செய்கிறார்

————————-

இதர விஷயங்களை விட்டு உங்களுக்கு வகுத்த விஷயத்தைப் பற்றப் பாருங்கள்,’ என்கிறார்.

————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வீடுமின் உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்னும் அளவும் கடாக்ஷித்து அவதாரிகை –
வகுத்த விஷயத்தை என்றது உடையான் என்றத்தைப் பற்ற —

——————–

வீடு மின் முற்றவும், வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை, வீடு செய் மி(ன்)னே–1-2-1-

வீடுமின்
‘வீடுமின்’ என்றதனை ஒரு சொல்லாகக் கோடலுமாம்;
அன்றி, நீட்டல் விகாரமாகக் கோடலுமாம். ‘முதலிலே ‘வீடுமின்’ என்கிறது என்னை?’
சிறுகுழந்தை கையிலே சர்ப்பத்தைப் பிடித்துக்கொண்டு கிடந்தால், பொகட்டுக் கொடு நிற்கச் சொல்லி,
பின்னர், சர்ப்பம்  என்பாரைப் போலேயும்,
ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்காநிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘புறப்பட்டுக் கொள் கிடாய் ,’
என்று சொல்லி, பின்னர், நெருப்பு’ என்பாரைப் போலேயும் முந்துற ‘விடுங்கோள்’ என்கிறார்.,
பிறப்பு இறப்புகட்கு நடுவேயன்றே இவைதாம் நோவுபடுகின்றன? 
த்யக்த்வா புத்ராம்ச் ச தாராம்ச் ச (‘புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ )என்றும், 
பரித்யக்தா மயா லங்கா (‘என்னால் விடப்பட்டது இலங்கை’ )என்றும்
விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும் பற்றினார்கள்? ‘

ஆயின்,‘வீடுமின்’ என்ற பன்மைக்குக் கருத்து யாது?’ எனின்,
பொறிவாயில் ஐந்தையும் அவித்த ஒருவன் வந்து முன்னே நின்று கேட்க, அவனுக்கு உபதேசிக்கிறார் அல்லர்;
சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து
பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.
எத்தை விடுவது என்னில்

முற்றவும் –
சண்டாளர் இருப்பிடத்தை அந்தணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும்
சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று,-அகங்கார மமகாரங்களால் – யான் எனது என்னுஞ் செருக்கால்
கெடுக்கப்பட்டு இருப்பனவற்றில்- சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே!
ஆகையால், ‘முழுவதும் விடுங்கோள்,’ என்கிறார்.

வீடு செய்து-
‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில்,
அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும்
சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று,
மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே
விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி.

உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ )
என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்
4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்

உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’  என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’
உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார்.
உடையானிடை
பொதுவில் உடையான் என்கிறார்  என்கிறார்;–
சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.

வீடு செய்மின் –
அவன் உடையவனாய் உங்கள் ஆத்துமாவை நோக்கிக் கொண்டிருக்கிறான்;
ஆதலின், நீங்களும் ‘நான்’ ‘எனது’ என்று அகலப் பாராமல், உங்களை அவன் பக்கல் சமர்ப்பிக்கப் பாருங்கள்;

யம-ப்ராதேசிகமான (குறித்த ஒரு சிலரை மட்டும்) நியமிக்கின்ற யமனை அன்று சொல்லுகிறது
பிரபவதி சம்ய மநே மமாபி விஷ்ணு -என்று அவன் தன்னையும் நியமிப்பவனாயிற்று இவன்
வை வஸ்வத -விவஸ்வானுடைய குலத்திலே பிறந்தவன் என்னுதல் -ஆதித்ய அந்தர வஸ்திதன் என்னுதல்
ராஜா -அவனைப் போலே தஹ பச-என்கை அன்றிக்கே எல்லாருக்கும் இனியனாய் இருக்குமவன் யாயிற்று இவன்
யா -அந்தர் ப்ராஹ்மணாதிகளில் பிரசித்தி
தவைஷ ஹ்ருதி ஹ்ருதி – அவன் எங்குற்றான் என்ன -கண்டிலையோ –
உன்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று இருக்கிறான் –
ஆனால் செய்ய வேண்டுவது என் என்னில் –
தேந சேத விவாதஸ்தே -உடையவனாய் இருக்கிறவன் உடன் உனக்கு அவிவாதம் உண்டாகில் -இத்தால் பேறு என் என்பாயோ –
மா கங்காம் மா குரூன் கம-ஒரு தீர்த்தம் தேடித் போதல் -புண்ய க்ஷேத்ரம் தேடித் போதல் செய்ய வேண்டா

அதாவது, அவன் உடையவனான பின்பு அவ் விறைவனோடு விவாதம் இல்லாமையே உங்களுக்கு வேண்டுவது என்பதாம்.
அவ் விவாதம் இல்லாமையையே ஈண்டு வீடு செய்மின்’ என்கிறார்.
‘இதனால் பேறு என்?’ என்னில், வேறு பிராயச்சித்தம் செய்ய வேண்டுவது இன்றாம்.
‘அதற்குக் காரணம் என்ன?’ எனின், யான் எனது என்னுஞ் செருக்குக் கிடக்கப் பிராயச்சித்தம் செய்தல் என்பது,
மிகத் தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கு ஊட்டினதைப் போன்றது ஓன்றாம்.
மேலும், உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
உடையவன் சர்வேஸ்வரன்; இவன் ‘என்னது’ என்று கொண்ட பொருள், பொருள்களுள் மிகச் சிறந்ததான உயிர்ப்பொருள்.
மற்றும், பொகடுகிற பொருள்தான் ஆகையாலே பிராயச்சித்தம் செய்வதற்கு வேறு அதிகாரியும் இல்லையே?
ஆகையால், நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வீடுமின் -ஒரு சொல்லாய் -என்றது என்று ஒரு சப்தம் உண்டாய் என்றபடி –
விடுமின் என்றத்தை நீட்டி –நச்சராவணைக் கிடந்த திருச்சந்த -85–
தூங்கு தண் பலவின் கனி–பெரிய திருமொழி -9-10-8–இதை ச உதாஹரணம்
தியாகத்தை முற்படச் சொல்லுகிறது த்யாஜ்ய வஸ்துக்களின் க்ரவ்ய அதிசயத்தைப் பற்ற–
ராவணனுடைய ப்ராதிகூல்யம் நிலை நின்றமை கண்ட பின்பு அகம் அளவும் சென்று புத்ர தாராதிகளைக்
கூட்டிக் கொண்டு செல்லவும் கூடப் பெறாத படியில் லங்கை அடிக் கொதித்த படி
உபதேசம் அஷட்கர்ணமாய் இருக்க பஹு வசனத்தால் சொல்லிற்று -சிலர் தாந்தராய் அர்த்திக்கச் சொல்லாமையாலும் –
அனர்த்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் எல்லாரையும் குறித்துச் சொல்கிறார் என்னுமத்தை
சங்கா பரிகார முகேன அருளிச் செய்கிறார் –
அஹம் மமேதி சண்டாள -அஹங்காரஸ்து சண்டாள -அஹங்கார தூஷிதம் சரீரம் –
பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த சாத்யாந்தர சாத்தனாந்த த்யாகத்தைச் சொன்னபடி –
விடுகை தானே பலம் என்கைக்காக வீடு செய்து என்று அனுவதிக்கிறது என்றபடி-
பரம பாதத்திலும் இதுவே அன்றோ பலமாய் இருப்பது என்னுமத்தை லவ்கிக த்ருஷ்டாந்தத்தால் –
ராஜ புத்ரன் இத்யாதியால் தர்சிப்பிக்கிறார்

அழகு சிறை -அழுகியே போம்படியான சிறை -நாச ஏக பர்யவசாயி காராக்ருஹ நிகலபந்த-இதி யாவத்-
உம்முயிர் வீடுடையானிடை -இதுக்கு சதுர்விதமாக அருளிச் செய்கிறார் –
நஞ்சீயர் இதி சேஷ பிருதிவீ கார்யம் ஹி சரீரம் என்னும் அபிப்ராயத்தால் –
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -உடையவன் என்றது சரீரமாக உடையவன் என்றபடி-
துரீய யோஜனையில் -உம் உயிரை வீடாக உடையவன் -உம்முயிர் வீடு செய்மின் என்று அன்வயம்
த்வா விமவ் புருஷவ் மூடவ்-துரியோதன தசானனவ் -கோக்ரஹம் வன பங்கனஞ்ச த்ருஷ்ட்வா
யுத்தம் புன புன –என்று சாகாங்க்ஷமாகச் சொல்ல
ருசி பிறந்த பின்பு அடி தொடங்கி பாரதம் எல்லாம் வைசம்பாயனர் ஜனமேஜனுக்கு அருளிச் செய்தது போலே
பொதுவாக கீழ் எல்லாம் சொல்லி வண் புகழ் நாரணன் என்பாராக -என்று அருளிச் செய்கிறார் –
உங்கள் சத்தையை நோக்கிக் கொண்டு-என்றது உம்முயிர் வீடாக உடையவன் -என்றதைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார்
அவன் உடையவனாக பின்பு அவனோடு அவ்விவாதமே வேண்டுவது –
அதஸ் சர்வம் தச் சேஷம் இதி பலிதம் -புனராத்ம சமர்ப்பணம் நாம கிம் -கஸ்ய பதார்த்தம் கஸ் சமர்ப்பயதி –
கிஞ்ச -ஏதாவன் மாத்ரேண-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்திர் பவிஷ்யதி கிம் –
மணிவர இவ-அன்றோ-என்றபடி -சர்வேஸ்வரன் இடம் இருந்து அபஹரித்த த்ரவ்யம்-
அவன் பக்கலிலே பொகடுகையாவது அவனது என்று இசைகையே
வீடு செய்ம்மினே-சமர்ப்பியுங்கோள் -இசைமினே-பாட பேதம் -இருபத்து நாலாயிரப்படி

இத்திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்
முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித-தேந சேத விவாதஸ்தே மா கங்காம்
மா குரூன் கம -ஸ்ரீ மாநவ தர்ம சாஸ்திரம்
விவாதம் உடையவன் கங்கா தீரங்களிலே போனாலும் நிஷ் பிரயோஜனம் –
அஹமமர வரார்ச்சிதேந தாத்ரா சம இதை லோக ஹிதாதே நியுக்த -ஹரி குருவாசகோ அஸ்மி ந ஸ்வ தந்த்ர பிரபவதி
சம்யமநே மாமாபி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3–அம்சம் -எம கிங்கர சம்வாதம்-என்பதுவும் இவ்விடத்தில் அனுசந்தேயம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –