மண் ஒடுங்கத் தான் அளந்த மன்- என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –
(உலகமாக தீண்டியது கீழ் -ஊராகத் தீண்டியது இது
இந்திரனுக்காக செய்தது -மண் அளந்த மன் அது
அவனே எதிர்க்கும் அன்று ஆ காத்த கோ இதில்
ஸர்வ ஸ்வாமி அன்றோ)
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-
பதவுரை
குன்றம் குடை ஆக–கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆ காத்த கோ–பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமி யானவன்,
அன்று–முன்பொரு காலத்தில்,
மன்னு மணி முடி–பொருந்தின ரத்னங்களை யுடைய கிரீடம்!
நீண்டு–ஓங்கி வளர்ந்து
அண்டம் போய்–அண்ட பித்தையைச் சென்று கிட்ட,
எண் திசையும்–எட்டு திக்குக்களையும்
துன்னு பொழில் அனைத்தும்–(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூ மண்டலம் முழுவதையும்
சூழ்–வியாபித்த
கழலே–திருவடியினாலேயே
மின்னை உடை ஆகக் கொண்டு உலகு அளந்தான்–மின்னலைப் பீதாம்பரமாக அணிந்து கொண்டு உலகங்களை யளந்தான்.
அண்டம் போய் எண்டிசையும்—மன்னு மணி முடி நீண்டு–
அண்டத்தையும் -எட்டுத் திக்குகளையும் ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகம் வியாபிக்கவும் –
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே —
சேதனராலே செறியப் பட்ட பூமி யடங்கலும் திருவடிகளே யாகவும் –
மின்னை-உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் –
மேக பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து அருளுகிற போது
மின்னைத் திருப் பீதாம்பரமாகக் கொண்டு உலகு அளந்தான் –
குன்றம்-குடையாக ஆ காத்த கோ ——-
த்ரை லோக்யத்தையும் தன்னுடைய திரு மேனியில் மறைத்தவன்
ஒரு மலையாலே தன்னுடைய திரு மேனியை மறைத்துக் கொண்டான் –
(ஓங்கி உலகு அளந்த உத்தமனே இன்று அஹம் வோ பாந்தவ ஜாதா என்னுமவன்)
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –25-
ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ
திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –
கிரீட சூட ஆதி ராஜ்ய கல்பித பட்டர் -மூன்று முடிக்கு உரியவன் இவனே சர்வேஸ்வரேஸ்வரன்
முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.–3-1-1-
————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் -என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –
மலையைக் குடையாக தரித்துக் கொண்டு நின்று வர்ஷத்திலே அழியப் புக்க
பசுக்களை ரக்ஷித்து அருளின நிருபாதிக ஸ்வாமியான கிருஷ்ணன்
உபய விபூதி நாதத்வத்துக்குத் தகுதியாய்க் கொண்டு பொருந்தி அழகிய ரத்னங்களாலே
சமைக்கப் பட்டு இருக்கிற திரு அபிஷேகம் ஆனது முசிவற வளர்ந்து அண்ட பித்தியிலே சென்று கிட்டும் படியாகவும்
(அண்டமும் எட்டு திக்குகளும் திரு அபிஷேகம் வியாபித்ததாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்)
எட்டுத் திக்குகளையும் பிராணிகள் நிறைந்து கிடக்கிற பூமி எல்லாவற்றையும் திருவடிகளே வியாபிக்கும் படியாகவும்
மேக பதத்துக்கு அவ்வருகே செல்ல வளருகையாலே அங்குண்டான மின்னலை திருப் பீதாம்பரமாகக் கொண்டு
மஹா பலி உதகம் பண்ணிக் கொடுத்த வன்று லோகத்தை அளந்து கொண்டான் –
——————————————————————————————————
ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –
(லோகமாக ரஷித்ததும்
ஊராக ரஷித்ததும்
தமப்பனே பகையானாலும் ரஷித்ததும்-மூன்று பாசுரங்கள்
கிழித்தமை கேசியையும் -ஹிரண்யன் துர்மானத்தையும் -என்பதால் ஸாம்யம் உண்டே
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -என்று கேசியைக் கீண்ட கிருஷ்ண அனுபவமும்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்ட நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே -)
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரி யுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் —-42–(எரி உருவம் -கோபக்கனலுடன் என்றும் பாட பேதம் )
பதவுரை
கோவலன் ஆய்–இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள்–பசுக் கூட்டங்களை
மேய்த்து–புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி—லக்ஷம் பசுக்களை ஓன்று சேர்க்கவே -புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா–நாரதர் அஞ்சும்படி மிக்க வடிவுடன் வந்த குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட–ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற வடிவை யுடையனாயும்
மேவி அரி உருவம் ஆகி–பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம்–இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால்–நகங்களினால்
கீண்டான்–கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம்–சீற்றத்தை
தெரி–(நெஞ்சமே!) தெரித்து கொள்.
மிருக மனுஷ்ய -சேர்ந்த அவதாரம் சேவித்த பின்பு
உடனாய் தோன்ற-கொண்ட சீற்றம் ஓன்று உளது -கலியன் -அதுவே நமக்கு தஞ்சம்
வேறே அவதாராந்தரங்களில் நெஞ்சு போகாதே
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி–
ப்ராஹ்மணானாய் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடை ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களையும் மேய்த்துக் குழலையும் ஊதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அப் பருவம் -நிரம்பாமையிலே கேசியினுடைய வாயைக் கிழிக்க வல்லனாய்
விரோதியைப் போக்குகையாலே -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
மேவி-அரியுருவமாகி இரணியனதாகம்-தெரியுகிரால் கீண்டான் சினம் —
மேவி -நரத்வ சிம்ஹத்வமான இரண்டு வடிவு கொண்டால் பொருந்தாதே இருக்குமோ என்னில் –
ஒரு வடிவு போலே பொருந்தின படி-
அன்றிக்கே –
மேவி என்று ஹிரண்யனுடைய வரத்தைக் கிட்டி -என்றுமாம் –
எரி உருவமாகி —
ஒளி யுண்டான ரூபத்தை யுடையவனாய்ச் சினத்தாலே இரணியன் ஆகத்தைக் கீண்டான்-
அன்றிக்கே
அருள் என்று நமக்கு உத்தேச்யம் –
ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்
அச் சினத்தை தெரி –
(நெஞ்சே)அநுஸந்தி -என்றுமாம் -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )
(ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -என்றும் சொல்லுமா போல்
கோபத்தால் கிழித்தான் -நகத்தால் கிழித்தான் என்றும் சொல்லலாம் அன்றோ)
————————————————————————-
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –
பசு மேய்க்கைக்கு யோக்யதை யுண்டாம் படி இடையனாய் பிறந்து
ஜாதி உசிதமாக பசுக்கள் திரளைப் புல்லும் தண்ணீரும் உள்ள இடம் தேடி வயிறு நிறைய மேய்த்து –
திருக் குழலை ஊதி அந்தப் பருவத்தே தான் பிற்காலியாதே நினைத்தது செய்ய வல்ல சமர்த்தனாய்க் கொண்டு
கேசியினுடைய வாயைக் கிழித்தவனாய் விரோதி போகப் பெற்ற ஹர்ஷத்தாலே —
நீல ரத்னம் போலே -இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய்-
இரண்டு வடிவை ஏக காலத்திலே எடுத்துக் கொண்ட அளவிலே சேராச் சேர்த்தியாய் இராதே –
சேர்ப் பாலும் கண்ட சர்க்கரையும் போலே பொருந்தி இருக்கிற -நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு-
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பைத் திரு உகிராலே கிழித்துப் பொகட்டவனுடைய
ஆஸ்ரித விரோதி விஷயமாகக் கிளர்ந்த பரம ப்ராப்யமான சீற்றத்தை
நெஞ்சே -ஆராய்ந்து அநுஸந்தி -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )
அன்றிக்கே
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்டான் என்னவுமாம் –
தெரி யுகிர் —
விசதமாகப் பிரகாசிக்கிற உகிர் என்றபடி –
(மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -என்று கேசியைக் கீண்ட கிருஷ்ண அனுபவமும்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்ட நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே -)
——————————————————————————————————-
அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் -(சத்தை பெற்று இருக்கிறது என்றவாறு )
இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே
தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –
(கீழ் எல்லாம் ரக்ஷணம் செய்த சேஷ்டிதங்களை அருளிச் செய்து
இதில் ஸங்கல்ப ரூப ஞானத்தாலேயே அனைத்து ரக்ஷணமும் செய்கிறான் என்கிற வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்
ஓரகலத்துள்ள உலகு-ஸங்கல்ப லேசத்தால் ஸமஸ்த வஸ்துக்களும் இவனே ஆதாரம் -தன்னில் தானே ஆதாரம் – ஆலிலை நீர் உளதோ -இத்யாதியில் கண்டோமே -கீழே அவதரித்து செய்து காட்டியது ஆஸ்ரிதர் தழுவு முழுசி அனுபவிக்கவே -)
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-
பதவுரை
சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்ப ரூபமான ஜ்ஞானத்தின் ஒரு சிறு பகுதியில்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.
ஓரகலத்துள்ள உலகு–ஓர் அகலத்து உலகு உள்ளது –
சங்கல்ப ஞான ரூபத்தில் ஏக தேசத்தில் உலகம் எல்லாம் நிலை பெற்று உள்ளது –
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து–
சினத்தை யுடைத்தாய் -பெருத்து மதித்த குவலயா பீடத்தின் யுடைய
இரண்டு மருப்புகளையும் அநாயாசேன பறித்து –
புனமேய பூமி யதனைத் –
சேதனர்க்கு போக்யங்களை யுடைத்தான பூமியை –
தனமாகப்-பேரகலத்துள் ஒடுக்கும் —-
தனம் போலே இருக்கத் திரு வயிற்றிலே வைத்துக் காக்கும் –
பேரார மார்வனார்–
தன்னுடைமையானது ரக்ஷிக்கப் பட்டது என்றத்தாலே
ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற படி –
(பேர் ஆரம் -பேர் மார்வன் என்றும் கொள்ளலாம்)
ஓரகலத்துள்ள உலகு —
அம்சமான சங்கல்பத்து உள்ளது லோகம் –
ஓரப்படுகிற சங்கல்பத்து உள்ளது -என்றுமாம் –
(ஓர் -தன்னிகர் அற்ற அத்விதீயம்
ஓர் -அனுசந்திக்கத் தக்க ஓர்தல் -நினைத்தல்
ஓர் -ஏக தேசம்)
(யஸ்ய அயுத அயுத -பத்தாயிர பத்தாயிர -அம்சம் -சுற்றி விஷ்ணு புராணம் -ப்ரஹ்மாண்டம் -)
(மேருவுக்கு அணு போல் பிரபஞ்சம் அவனுக்கு அன்றோ)
——————————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே
தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –
(கீழே அவதரித்து செய்து காட்டியது ஆஸ்ரிதர் தழுவு முழுசி அனுபவிக்கவே)
மிக்க கோபத்தையும் முரட்டு வடிவையும் யுடைத்தாய் –
மத முதிதமாய்க் கொண்டு -முன்னாடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தினுடைய திண்ணிதான கொம்புகளை அநாயாசேன முறித்து விழ விட்டு –
சேதனர்க்கு நல்ல போகங்களை விளைத்து கொள்ளுகைக்கு அனுரூபமான பிரதேசங்களோடு கூடின பூமியை
சீரிய நிதியாக நினைத்துக் கொண்டு பெரிய பரப்பை யுடைத்தான திரு வயிற்றுக்கு உள்ளே வைத்து நோக்கும்
ஸ்வபாவனாய் இரு மடியிட்டுச் சாத்த வேண்டு படி பெரிதாய் இருக்கிற திரு ஆரத்தாலே ஒப்பித்து இருக்கிற
திரு மார்வை யுடையவனுடைய -அத்விதீயமாய் அபரிச்சின்னமான சங்கல்ப ரூப ஞானத்தால் உண்டாய் இருக்கும் ஜகத்து
(ஏழு உலகும் உள்ளே வைத்தும் இடம் உடைத்த பேர் அகலம் -அன்றோ
விபரீத லக்ஷணம் என்றுமாம்-முஃத ஸிஸூ அன்றோ ஆலிலை மேல் துயின்றான்)
அன்றிக்கே –
ஓரப்படுவதாய் –
அனுசந்திக்கப் படுமதான சங்கல்ப ரூப ஞானத்து என்னவுமாம் –
———————————————————————————————————-
நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –
உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.
உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்-அலர் கதிரும் செந்தீயும் ஆவான் —
லோகமும் -எல்லாம் ஸம்ஹ்ருதமாய்க் காலமே
சேஷித்த காலமும் –கடலும் –அழகியதாய் -அலரா நின்றுள்ள -ஒளியை யுடைத்தான ஆதித்யனும் -அக்னியும்
தனக்கு பிரகாரமாக யுடையவன் –
இத்தால் ஜெகதாகாரதையைச் சொல்கிறது –
பல கதிர்கள்-பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே—-
பரம பதத்திலே எழுந்து அருளி இருக்கும் படி
திவி ஸூர்ய சகஸ்ரஸ்ய பவேத் யுகபுதுத்திதா–(11 அத்யாயம்) -என்னும் படியே
நூறாயிரம் ஆதித்யர்களை ஓட வைத்த ஒளியை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமான
திரு அபிஷேகத்தை யுடையவனுடைய திருவடிகளிலே –
பூரித்து என்னெஞ்சே புரி –
ஸ்நேஹித்து ஆஸ்ரயி
(திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா—
யதி பாஸ் ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷
ஆயிரம் ஸூர்யர்கள் ஒளி ஆகாசத்தில் ஒரே சமயத்தில் தோன்றிற்று ஆகில் அந்த ஒளி
அந்த மஹா புருஷனுடைய ஒளிக்கு ஒத்ததாக இருக்கும்
ஆயிரம் ஸூர்யர்கள் –ஒரே காலத்தில் உதயமானால் –நிகழாதே -ஒரு வேளை நடந்தால் -இந்த விஸ்வரூபம் காட்டும்
தேஜஸ் ஸூக்கு ஒப்பாகுமோ என்ற சங்கை கொள்ளலாம் -அபூத உவமை –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளிக்கு ஒவ்வாதே
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–ஸ்ரீ திருவாசிரியம்–5-)
——————————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –
லோகங்களும் -கால ஷேமமாம் படி சர்வமும் உப ஸம்ஹ்ருதமான சம்ஹார காலமும் -கடல்களும் –
அழகிய நிறத்தை யுடைத்தாய் விஸ்திருதம் ஆகா நின்றுள்ள கிரணங்களை யுடைய சந்த்ர ஸூர்யர்களும்
சிவந்த நிறத்தை யுடைத்தான அக்னியும் ஆகிற பதார்த்தங்களை பிரகாரமாக யுடையனாய் –
இவ்வளவு அன்றிக்கே
பரம பதத்திலே அசங்க்யாதமான கிரணங்களைப் புறப்பட விடா நிற்பதாய் –
அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்குமவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –
(மேலைத் தொண்டு உகளித்து செய்ய வேண்டுமே0
————————————————————————————————
பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் –என்று
பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் –
நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –
இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் என்கிறார் –
(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி புஷ்காரணி தடே -வந்து நித்ய வாஸம் செய்கிறான் –
மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் வெற்பு
வானரமும் வேடும் வணங்கும்படி நமக்காக அன்றோ
மஹா வராஹன் க்ருத யுகத்திலே இங்கு வந்தான் -கலியுகத்தில் திருவேங்கடவன்
பரன் சென்று சேர் வேங்கடம் -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் அன்றோ -வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை-என்கிறார்-மஹா வராஹா ஸ்புட பத்ர லோசனன்
யானை தந்தம் நுனியில் முத்து -மஹா வராஹம் கோட்டில் பூமி -இவ்வாறு சாம்யம் -)
புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-
பதவுரை
மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–வீர ஸ்ரீ யுடைய -சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொரு நாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய-நில மடந்தை கோட்டிடை கொண்ட எந்தை –
மலை–திருமலையாம்.
மதித்து இருந்துள்ள யானை பிடியுடன் ஸம்ஸ்லேஷித்து இருந்ததால் வந்த மதிப்பு
ஊடலால் பிறந்த கோபத்தால் மாணிக்கம் கல்லே பாறை -மணிப்பாறையிலே பொருது மோதி முத்து உதிர்க்கும்
விரிந்த சீர்-வெண் கோட்டு –
வீர ஸ்ரீ யை யுடைய வெளுத்த கொம்புகளினின்று — கோடு-கோரப் பல்லின் மீது –
பொருகையால் வீர ஸ்ரீ யை யுடைத்தான வெள்ளைக் கோட்டிலே யுண்டான முத்தை யுதிரா நின்ற திருமலை –
பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –
திருமலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹ ரூபமான வடிவு –
(கலவி கிடைக்காததால் வந்த கோபத்தால் ரத்ன பாறையால் குத்தி -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
கலவி ஏற்பட்ட செருக்கால் குத்தி என்று ஸ்ரீ அப்பிள்ளை உரை)
——————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –
மதித்து இருந்துள்ள யானையானது முன்னடி தோற்றாத இருக்கும் இத் தசையிலும்
தன்னைக் ஏவிக் காரியம் கொள்ள பிடியுடன் கூடி
ஒன்றை வியாஜ்யமாக கொண்டு ஊடி
அநந்தரம் உடல் தீர்ந்து கூடி அபிமுகமாய் கூடி
கலவியால் வந்த செருக்கு உந்த-போக்குவீடாக – இதஸ் சதஸ்ஸாக சஞ்சரித்து
அங்கு உள்ள பளிங்கு -மாணிக்கப் பாறையின் நிழலாலே வேறே ஒன்றைக் கண்டதாகப் பிரமித்து
பெரிய சீற்றத்தை யுடைத்தாய் கொண்டு பொருது அத்தாலே விஸ்திருதையான வீர ஸ்ரீ யை யுடைத்தாய்-
வெளுத்த கொம்புகளினின்றும் முத்துக்களைச் சொரியா நிற்கும் வேங்கடமே முன்னொரு நாளிலே
ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –
(கலவி கிடைக்காததால் வந்த கோபத்தால் ரத்ன பாறையால் குத்தி -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
கலவி ஏற்பட்ட செருக்கால் குத்தி என்று ஸ்ரீ அப்பிள்ளை உரை)
———————————————————————————————————
திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும்
அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –
(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த அமுதே-ஆராவமுதைக் கொண்டா உப்புச்சாறு கேட்பது -)
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–
பதவுரை
பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூல-உபாதான- காரணமாக நின்ற எம்பெருமான்,
அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து-லக்ஷம் யோஜனை கூர்மத்தின் ஓடு இருந்ததாம்
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற் சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.
(பிண்டமாய் நின்ற பிரான் – -உபாதான காரணமாய் நின்ற எம்பெருமான் –
பிரகிருதி விஸிஷ்ட ப்ரஹ்மமே உபாதான காரணம் -மாற வேண்டுமே
நிமித்த காரணம் ஞானம் ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-பஹுஸ்யாம் பிரஜாயேவ -)
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்–
ஓங்கி இருந்துள்ள மலையைத் தன் முதுகின்
மேலே வைத்து -அதிலே வாசுகியைச் சுற்றி –
(ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2- -இன்றும் கோமதி நதி துவாரகையில் -கடல் நீருடன் கலக்கும் அன்றோ)
தலை முகடு தான் ஒரு கை பற்றி –
கீழ் கடைகிறது குலையாமல் ஆமையாய்த் தாங்கி -மேலே வைத்த சிகரம்
அடிக் கிளர்ந்து போகாத படி ஒரு கையாலே பற்றி –
அலை முகட்டு-அண்டம் போய் நீர் தெறிப்ப —
இத்திறந்த திவலை போய்த் தெறிப்ப –அலை மேல்
நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப-
அன்று கடல் கடைந்தான்–பிண்டமாய் நின்ற பிரான் —
இதுக்கு உபாதான காரணமானவன் —
ஏகோ ஹவை நாராயண ஆ ஸீத்-
(மஹோ உபநிஷத்
ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுச்சொற்கள் கீழே சொல்லி நாராயணன் சொல்லுமே -ந ப்ரம்மா ந ஈஸா -என்றும் சொல்லி
சதேவ ஏக மேவ அத்விதீயம்
ஏகேன ம்ருத் பின்டேண -மண் மயமான -போல் ப்ரஹ்மம் மயமான ஜகாத் –
இதம் ஸர்வம் கலு ப்ரஹ்மம் -தஜ்ஜாலாந் -தஜ்ஜா -தல்ல -தலான்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1- )
(பிரான் -இத்தால் -இரண்டு உபகாரங்கள் -ஸ்ருஷ்டித்ததும் -இந்த்ராதிகளுக்கு உப்புச்சாறு கொடுத்ததும்)
——————————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும்
அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –
உயர்ந்த சிகரத்தை யுடைத்தான மந்த்ர பர்வதத்தைக் கீழே ஆதார கூர்மமாய் இருக்கிற தன் மேலே வைத்து(கஸ்யமம் ஆதாரம் கூர்ம பீடம் )
வாஸூகியாகிற பாம்பை -அதன் நடுவே கடை கயிறாகச் சுற்றி -அது கொந்தளியாத படியாக அதன் தலையான
சிகரத்தைத் தான் ஒரு கையைக் கொண்டு அமுக்கி -கடைகிற வேகத்தால் அலைகளில் சிறு திவலைகள் ஆனவை
அண்டத்தினுடைய உச்சியிலே சென்று ஜலமானது தெறிக்கும் படியாக இந்த்ராதிகள் திருவடிகளில் வந்து விழுந்த அன்று
மஹத் தத்வமான கடலைக் குளப்படி போலே கலக்கிக் கடைந்து அருளினான் —
கட சராவாதிகளுக்கு காரணமான ம்ருத் பிண்டம் போலே (குடம் மடக்கு மண் உருண்டை )-ஏகமேவ என்னும் படி பிண்டமாய்
(ப்ரஹ்மம் ஓக்கடே )சகல காரியங்களும் தன்னோடு ஒன்றி நாம ரூப விபாக அநர்ஹ
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு
நிகில ஜகத் உபாதான காரண பூதனாய் நின்ற உபகாரகன் கிடீர் —
(சகல எல்லாம் என்றால் -சொல்வதை விட ஓன்று விடாமல் சொல்ல -அகில -நிகில-சொல்லலாம் –
மங்களமாக இருக்கவே அகில என்று தொடங்கி -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா-)
——————————————————————————————
தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி
அடிமை கொள்ளுவான் -என்கிறார் -(சேஷன் தோன்றும்படி நிற்பதால் ஆள்கொண்டமையும் தோற்றுமே )
(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மட்டுமே இருந்தாலும் இஷ்ட பிராப்தி கைங்கர்யம் தன்னடையே கிட்டும் அன்றோ)
(நின் அன்னை சாபம் முடித்தனர் என்றதும் சதானந்தர் பதில் சொன்னாரே விச்வாமித்ரருக்கு –
அதே போல் நமக்கும் கார்யம் செய்பவன் என்கிறார் இதில்)
நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-
பதவுரை
நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி என்னும் அசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழா யணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்—(ஸுகம் பிரமிக்க வைத்து துன்பமே கொடுக்கும் -கொடிய வெந்நரகம் ஸம்ஸாரம் அன்றோ )நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?
நின்ற பெருமானே நீரேற்று–
மஹா பலி பக்கல் நீர் ஏற்று -சேஷித்வம் தோற்றும்படி நின்றவனே
உலகெல்லாம்-சென்ற பெருமானே —
லோகத்தை எல்லாம் அளந்து உடையவன் என்று தோற்றும்படி நின்றவனே –
செங்கண்ணா –
ஸ்நேஹம் தோற்றும்படி நின்றவனே –
(இந்திரன் கார்யம் செய்தோம்-இழந்த சொத்தை மீட்டோம் -குழந்தைகள் தீண்டினோம் -மூன்று காரணங்கள் – மகிழ-செங்கண்)
அன்று-துரக வாய் கீண்ட துழாய் முடியாய்–
வைத்த வளையம் வாடாமல் கேசி வாயைக் கிழித்தவனே –
நங்கள்-நரகவாய் கீண்டாயும் நீ ——–
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –
————————————————————————–
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி
அடிமை கொள்ளுவான் -என்கிறார் -(சேஷன் தோன்றும்படி நிற்பதால் ஆள்கொண்டமையும் தோற்றுமே )
(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மட்டுமே இருந்தாலும் இஷ்ட பிராப்தி கைங்கர்யம் தன்னடையே கிட்டும் அன்றோ)
மஹா பலி பக்கலிலே சென்று உதக ஜலத்துக்குக் கை ஏற்றுக் கொண்டு சேஷித்வம் தோற்ற நின்று அருளின வனாய்
அவன் உதகம் பண்ணின அநந்தரம் சகல லோகங்களிலும் சென்று அளந்து கொண்ட சர்வ ஸ்மாத் பரனாய்(பெருமான் )
இந்திரன் கார்யம் தலைக் கட்டப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
ஜகத்து அஸ்தமிதமாகப் புக்க வன்று (நாரதர் பயந்து ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று அஞ்சினார் அன்றோ )குதிரை வடிவு கொண்டு வந்த கேசியினுடைய வாயை கிழித்துப் பொகட்டவனாய்-
அத்தசையிலும் திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு அவ் ஓப்பனை
குறி அழியாமே நின்றவனே -இப்படி விரோதி நிரசன சீலனாய் இருக்கிற நீயே யாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனரான எங்களுடைய சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டாயும்-
——————————————————————————————————————
நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன –
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திருவாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )
(ஐந்து அபதானங்கள் இதில் உண்டே-கீழ் ஒன்றும் -இதில் ஐந்தும் -அடுத்ததில் நான்கும் -அடுத்ததில் இரண்டும் -அருளிச் செய்கிறார் )
நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-
பதவுரை
நீர் ஏற்று–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீ யன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக் கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீ யன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மரங்களின் இடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?
நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்-
உன்னுடைமைக்கு மஹா பலி பக்கலிலே நீர் ஏற்று அத்தை திருவடிகளால் அளந்தாய் –
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்துப் பசு மேய்த்தாய் –
நீ யன்றே-மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த் தேவாசுரம் பொருதாய் செற்று —
கேசி வாயைப் பிளந்து மருதினிடை போய் –
ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கினதுவேயோ —
சேதனரான விரோதிகளையும் போக்கிற்று இல்லையோ –
—————————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன –
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திரு வாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )
மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று -ஜகத்தை அடையத் திருவடிகளால் அளந்து கொண்டாய் நீ யன்றோ
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து ரக்ஷணத்திலே ஒருப்பட்டு நின்று -கையும் கோலுமாய்க் கொண்டு பசுக்களை
வயிறு நிறையும் படி மேய்த்தாய் நீ யன்றோ –
உன்னை விழுங்குவதாக வந்த கேசியினுடைய வாய் வலி குலையும் படி
வயிற்றைக் கிழித்துப் பொகட்டு -பெரிய மருதுகளின் நடுவே அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்-
தேவா ஸூர சங்க்ராமத்திலே அஸூர வர்க்கத்தை அழியச் செய்து யுத்தம் பண்ணின நீ யன்றோ
—————————————————————————————————————
இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள்
அநேகம் அன்றோ -என்கிறார் –
(இதில் மேல் நான்கு அபதானங்கள்-நீ அன்றே கீழ் பாசுரத்தில் உள்ளதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் )
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-
பதவுரை
பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக் கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.
செற்றதுவும் சேரா இரணியனைச் –
ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனைக் கொன்றது –அவன் இழவுக்காக என்றவுமாம்
சென்றேற்றுப்-பெற்றதுவும் மா நிலம்-
மஹா பலி பக்கல் நீர் ஏற்றுப் பெற்றது பூமி –
பின்னைக்காய் -முற்றல்-முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்-
நப்பின்னைப் பிராட்டிக்காக திண்ணியதாய்
உலவா நின்ற ஏற்றினுடைய மிடுக்கை அழித்தாய்
மூரிச்-சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —
சூழ்ந்து -இடம் பார்த்து நின்று -கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவனே –
(மூரி-வளைந்த என்றும் கடலில் என்றும் உண்டே)
—————————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள்
அநேகம் அன்றோ -என்கிறார்-
(இதில் மேல் நான்கு அபதானங்கள்-நீ அன்றே கீழ் பாசுரத்தில் உள்ளதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் )
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக-மிடுக்கு யுடைத்தாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள ருஷபங்களின் முன்னே
பயப்படாதே உறைத்து நின்று -கொல்லும் விரகு விசாரித்து -அவற்றின் மிடுக்கைப் போக்கினவனாய் –
இடமுடைத்தாய் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திவாயுதமாக யுடையவனே –
இப்படி இருக்கிற நீ கை கூசாமல் முடித்துப் பொகட்டதுவும் உன்னுடனே பொருந்தோம் என்று இருக்கும்
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை -மஹா பலி பக்கல் சென்று நீர் ஏற்று
அலாப்ய லாபமாகப் பெற்றதுவும் உன்னதான மஹா பிருத்வியை
மூரி என்று -குனிவாய் –
அத்தாலே புடை பெருத்து இருக்கையை நினைக்கிறது
மூரி என்று கடலாய் –
கடலைப் பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -என்னவுமாம் —
————————————————————————————————————-
ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி
அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தட வரை வாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-
பதவுரை
சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணி மயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீல வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேஸ்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருவிகளை யுடைய பெரிய மலையின் கண் உள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்–
ஆக முதலியாய் இட்ட திருத் துழாய் மாலையையும்(முதல் திரு ஆபரணம் பிரதானம் இதுவே என்றவாறு )
ஆதி ராஜ்ய ஸூசகமான மணி முடியையும் யுடையவன் –
தாழ்ந்த வருவித் தடவரைவாய் —
தாழ்ந்த அருவிகளை யுடைத்தாய் இருந்துள்ள தடவரையில்(தட வரை -பெரிய வரை தாழ்வாரை என்றுமாம் )
ஆழ்ந்த-மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்–
ஆழ்ந்து நிர்மலமான நீரை யுடைத்தான சுனையில் வளர்ந்த பெரிய முதலையை
நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –
அணி நீல வண்ணத்தவன் ———–
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்று என்று ஸ்ரமஹரமான வடிவுடையவன் ஆனான் –
(ஸர்வேஸ்வர ஸூசகம் இரண்டுமே இங்கு -ஸ்ரீ அப்பிள்ளை இரண்டுமே ஒன்றாக -திருத்துழாய் சாத்திய திரு அபிஷேகம் -என்று உரை
நீல வண்ணன் செய்த கார்யம் என்கிறார் ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையோ இப்படி ஆஸ்ரித ரக்ஷணம் செய்ததால் நீல வண்ணன் ஆனான் என்கிறார்
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – -திருமாலை –35–
நீச பாவனை செய்து விலகாமல் சேந்ததால் மகிழ்ந்து செங்கண் மால் ஆனான்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –2-5-1– —
இவற்றுடன் ஆவி சேர்ந்தான் பிள்ளான் -ஆவி சேர்ந்த பின்பு இவை உளவாயிற்று -இருப்பு பெற்றான் இப்போது தான் -உள -சத்தை
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -1-
ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -5 – –
(ஆழ்வார் சொல்லக்கேட்டு மகிழ்ந்து நீல மேனியானான் என்னவுமாம்
ஜென்ம கர்ம மே திவ்யம் என்றபடி தனக்கும் திவ்யமான சேஷ்டிதங்களைக் கேட்க்கப் பெற்று நீல மேனி யானான் என்னவுமாம்
சக்ரவர்த்தி பெருமாள் குணங்களை அயோத்யா மக்கள் சொல்லக் கேட்டு பெருமை -மகிழ்ச்சி -எய்தினால் போல் -இங்கும் நீல வண்ணத்தான் ஆனான் -)
——————————————————————————
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி
அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –
வளையச் சாத்தின திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் மிக்க தேஜஸை யுடைத்தான ரத்னங்களோடே கூடின
திரு அபிஷேகத்தை யுடைய சர்வாதிகனாய் -கண்ட போதே சகல சிரமங்களும் போம்படி அழகிய நீல நிறத்தையும்
யுடையனான அந்த சர்வேஸ்வரன் -பூமி அளவும் வரத் தாழ்ந்த அருவிகளும் -தாழ் வரைகளையும் யுடைத்தான மலையிடத்து யுண்டான
ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான மடுவில் மனுஷ்யர் முகம் காணாமல் வளர்ந்த பெரிய முதலையை ஒரு நீர்ப் புழு
என்று பாராதே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கல் வாத்சல்யத்தால் தன் சினம் தீர முடித்துப் பொகட்டான் –
————————————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –