Archive for November, 2016

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

மண் ஒடுங்கத் தான் அளந்த மன்-  என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

(உலகமாக தீண்டியது கீழ் -ஊராகத் தீண்டியது இது
இந்திரனுக்காக செய்தது -மண் அளந்த மன் அது
அவனே எதிர்க்கும் அன்று ஆ காத்த கோ இதில்
ஸர்வ ஸ்வாமி அன்றோ)

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்   குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

பதவுரை

குன்றம் குடை ஆக–கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆ காத்த கோ–பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமி யானவன்,
அன்று–முன்பொரு காலத்தில்,
மன்னு மணி முடி–பொருந்தின ரத்னங்களை யுடைய கிரீடம்!
நீண்டு–ஓங்கி வளர்ந்து
அண்டம் போய்–அண்ட பித்தையைச் சென்று கிட்ட,
எண் திசையும்–எட்டு திக்குக்களையும்
துன்னு பொழில் அனைத்தும்–(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூ மண்டலம் முழுவதையும்
சூழ்–வியாபித்த
கழலே–திருவடியினாலேயே
மின்னை உடை ஆகக் கொண்டு உலகு அளந்தான்–மின்னலைப் பீதாம்பரமாக அணிந்து கொண்டு உலகங்களை யளந்தான்.

அண்டம் போய் எண்டிசையும்—மன்னு மணி முடி நீண்டு–
அண்டத்தையும் -எட்டுத் திக்குகளையும் ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகம் வியாபிக்கவும் –

துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே —
சேதனராலே செறியப் பட்ட பூமி யடங்கலும் திருவடிகளே யாகவும் –

மின்னை-உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்  –
மேக பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து அருளுகிற போது
மின்னைத் திருப் பீதாம்பரமாகக் கொண்டு உலகு அளந்தான் –

குன்றம்-குடையாக ஆ காத்த கோ ——-
த்ரை லோக்யத்தையும் தன்னுடைய திரு மேனியில் மறைத்தவன்
ஒரு மலையாலே தன்னுடைய திரு மேனியை மறைத்துக் கொண்டான் –

(ஓங்கி உலகு அளந்த உத்தமனே இன்று அஹம் வோ பாந்தவ ஜாதா என்னுமவன்)

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

கிரீட சூட ஆதி ராஜ்ய கல்பித பட்டர் -மூன்று முடிக்கு உரியவன் இவனே சர்வேஸ்வரேஸ்வரன்

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ,
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ,
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய், நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே. கட்டுரையே.–3-1-1-

————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

மண் ஒடுங்கத் தான் அளந்த மன் -என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மலையைக் குடையாக தரித்துக் கொண்டு நின்று வர்ஷத்திலே அழியப் புக்க
பசுக்களை ரக்ஷித்து அருளின நிருபாதிக ஸ்வாமியான கிருஷ்ணன்
உபய விபூதி நாதத்வத்துக்குத் தகுதியாய்க் கொண்டு பொருந்தி அழகிய ரத்னங்களாலே
சமைக்கப் பட்டு இருக்கிற திரு அபிஷேகம் ஆனது முசிவற வளர்ந்து அண்ட பித்தியிலே சென்று கிட்டும் படியாகவும்

(அண்டமும் எட்டு திக்குகளும் திரு அபிஷேகம் வியாபித்ததாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்)

எட்டுத் திக்குகளையும் பிராணிகள் நிறைந்து கிடக்கிற பூமி எல்லாவற்றையும் திருவடிகளே வியாபிக்கும் படியாகவும்
மேக பதத்துக்கு அவ்வருகே செல்ல வளருகையாலே அங்குண்டான மின்னலை திருப் பீதாம்பரமாகக் கொண்டு
மஹா பலி உதகம் பண்ணிக் கொடுத்த வன்று லோகத்தை அளந்து கொண்டான் –

——————————————————————————————————

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

(லோகமாக ரஷித்ததும்
ஊராக ரஷித்ததும்
தமப்பனே பகையானாலும் ரஷித்ததும்-மூன்று பாசுரங்கள்

கிழித்தமை கேசியையும் -ஹிரண்யன் துர்மானத்தையும் -என்பதால் ஸாம்யம் உண்டே

மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -என்று கேசியைக் கீண்ட கிருஷ்ண அனுபவமும்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்ட நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே -)

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரி யுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் —-42–(எரி உருவம் -கோபக்கனலுடன் என்றும் பாட பேதம் )

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள்–பசுக் கூட்டங்களை
மேய்த்து–புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி—லக்ஷம் பசுக்களை ஓன்று சேர்க்கவே -புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா–நாரதர் அஞ்சும்படி மிக்க வடிவுடன் வந்த குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட–ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற வடிவை யுடையனாயும்
மேவி அரி உருவம் ஆகி–பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம்–இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால்–நகங்களினால்
கீண்டான்–கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம்–சீற்றத்தை
தெரி–(நெஞ்சமே!) தெரித்து கொள்.

மிருக மனுஷ்ய -சேர்ந்த அவதாரம் சேவித்த பின்பு
உடனாய் தோன்ற-கொண்ட சீற்றம் ஓன்று உளது -கலியன் -அதுவே நமக்கு தஞ்சம்
வேறே அவதாராந்தரங்களில் நெஞ்சு போகாதே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி–
ப்ராஹ்மணானாய் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடை ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களையும் மேய்த்துக் குழலையும் ஊதி

மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
அப் பருவம் -நிரம்பாமையிலே கேசியினுடைய வாயைக் கிழிக்க வல்லனாய்
விரோதியைப் போக்குகையாலே -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –

மேவி-அரியுருவமாகி இரணியனதாகம்-தெரியுகிரால் கீண்டான் சினம் —
மேவி -நரத்வ சிம்ஹத்வமான இரண்டு வடிவு கொண்டால் பொருந்தாதே இருக்குமோ என்னில் –
ஒரு வடிவு போலே பொருந்தின படி-

அன்றிக்கே –
மேவி என்று ஹிரண்யனுடைய வரத்தைக் கிட்டி -என்றுமாம் –

எரி உருவமாகி —
ஒளி யுண்டான ரூபத்தை யுடையவனாய்ச் சினத்தாலே இரணியன் ஆகத்தைக் கீண்டான்-

அன்றிக்கே
அருள் என்று நமக்கு உத்தேச்யம் –
ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்

அச் சினத்தை தெரி –
(நெஞ்சே)அநுஸந்தி -என்றுமாம் -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

(ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -என்றும் சொல்லுமா போல்
கோபத்தால் கிழித்தான் -நகத்தால் கிழித்தான் என்றும் சொல்லலாம் அன்றோ)

————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

பசு மேய்க்கைக்கு யோக்யதை யுண்டாம் படி இடையனாய் பிறந்து
ஜாதி உசிதமாக பசுக்கள் திரளைப் புல்லும் தண்ணீரும் உள்ள இடம் தேடி வயிறு நிறைய மேய்த்து –
திருக் குழலை ஊதி அந்தப் பருவத்தே தான் பிற்காலியாதே நினைத்தது செய்ய வல்ல சமர்த்தனாய்க் கொண்டு
கேசியினுடைய வாயைக் கிழித்தவனாய் விரோதி போகப் பெற்ற ஹர்ஷத்தாலே —
நீல ரத்னம் போலே -இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய்-

இரண்டு வடிவை ஏக காலத்திலே எடுத்துக் கொண்ட அளவிலே சேராச் சேர்த்தியாய் இராதே –
சேர்ப் பாலும் கண்ட சர்க்கரையும் போலே பொருந்தி இருக்கிற -நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு-
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பைத் திரு உகிராலே கிழித்துப் பொகட்டவனுடைய
ஆஸ்ரித விரோதி விஷயமாகக் கிளர்ந்த பரம ப்ராப்யமான சீற்றத்தை
நெஞ்சே -ஆராய்ந்து அநுஸந்தி -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

அன்றிக்கே
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்டான் என்னவுமாம் –

தெரி யுகிர் —
விசதமாகப் பிரகாசிக்கிற உகிர் என்றபடி –

(மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -என்று கேசியைக் கீண்ட கிருஷ்ண அனுபவமும்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்ட நரஸிம்ஹ அனுபவமும் இதில் உண்டே -)

——————————————————————————————————-

அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் -(சத்தை பெற்று இருக்கிறது என்றவாறு )

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே
தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

(கீழ் எல்லாம் ரக்ஷணம் செய்த சேஷ்டிதங்களை அருளிச் செய்து
இதில் ஸங்கல்ப ரூப ஞானத்தாலேயே அனைத்து ரக்ஷணமும் செய்கிறான் என்கிற வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்
ஓரகலத்துள்ள உலகு-ஸங்கல்ப லேசத்தால் ஸமஸ்த வஸ்துக்களும் இவனே ஆதாரம் -தன்னில் தானே ஆதாரம் – ஆலிலை நீர் உளதோ -இத்யாதியில் கண்டோமே -கீழே அவதரித்து செய்து காட்டியது ஆஸ்ரிதர் தழுவு முழுசி அனுபவிக்கவே -)

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள்  ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

பதவுரை

சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்ப ரூபமான ஜ்ஞானத்தின் ஒரு சிறு பகுதியில்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.

ஓரகலத்துள்ள உலகு–ஓர் அகலத்து உலகு உள்ளது –
சங்கல்ப ஞான ரூபத்தில் ஏக தேசத்தில் உலகம் எல்லாம் நிலை பெற்று உள்ளது –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து–
சினத்தை யுடைத்தாய் -பெருத்து மதித்த குவலயா பீடத்தின் யுடைய
இரண்டு மருப்புகளையும் அநாயாசேன பறித்து –

புனமேய பூமி யதனைத் –
சேதனர்க்கு போக்யங்களை யுடைத்தான பூமியை –

தனமாகப்-பேரகலத்துள்  ஒடுக்கும் —-
தனம் போலே இருக்கத் திரு வயிற்றிலே வைத்துக் காக்கும் –

பேரார மார்வனார்–
தன்னுடைமையானது ரக்ஷிக்கப் பட்டது என்றத்தாலே
ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற படி –

(பேர் ஆரம் -பேர் மார்வன் என்றும் கொள்ளலாம்)

ஓரகலத்துள்ள உலகு —
அம்சமான சங்கல்பத்து உள்ளது லோகம் –
ஓரப்படுகிற சங்கல்பத்து உள்ளது -என்றுமாம் –

(ஓர் -தன்னிகர் அற்ற அத்விதீயம்
ஓர் -அனுசந்திக்கத் தக்க ஓர்தல் -நினைத்தல்
ஓர் -ஏக தேசம்)

(யஸ்ய அயுத அயுத -பத்தாயிர பத்தாயிர -அம்சம் -சுற்றி விஷ்ணு புராணம் -ப்ரஹ்மாண்டம் -)

(மேருவுக்கு அணு போல் பிரபஞ்சம் அவனுக்கு அன்றோ)

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே
தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

(கீழே அவதரித்து செய்து காட்டியது ஆஸ்ரிதர் தழுவு முழுசி அனுபவிக்கவே)

மிக்க கோபத்தையும் முரட்டு வடிவையும் யுடைத்தாய் –
மத முதிதமாய்க் கொண்டு -முன்னாடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தினுடைய திண்ணிதான கொம்புகளை அநாயாசேன முறித்து விழ விட்டு –
சேதனர்க்கு நல்ல போகங்களை விளைத்து கொள்ளுகைக்கு அனுரூபமான பிரதேசங்களோடு கூடின பூமியை
சீரிய நிதியாக நினைத்துக் கொண்டு பெரிய பரப்பை யுடைத்தான திரு வயிற்றுக்கு உள்ளே வைத்து நோக்கும்
ஸ்வபாவனாய் இரு மடியிட்டுச் சாத்த வேண்டு படி பெரிதாய் இருக்கிற திரு ஆரத்தாலே ஒப்பித்து இருக்கிற
திரு மார்வை யுடையவனுடைய -அத்விதீயமாய் அபரிச்சின்னமான சங்கல்ப ரூப ஞானத்தால் உண்டாய் இருக்கும் ஜகத்து

(ஏழு உலகும் உள்ளே வைத்தும் இடம் உடைத்த பேர் அகலம் -அன்றோ
விபரீத லக்ஷணம்  என்றுமாம்-முஃத ஸிஸூ அன்றோ ஆலிலை மேல் துயின்றான்)

அன்றிக்கே –
ஓரப்படுவதாய் –
அனுசந்திக்கப் படுமதான சங்கல்ப ரூப ஞானத்து என்னவுமாம் –

———————————————————————————————————-

நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்-அலர் கதிரும் செந்தீயும் ஆவான் —
லோகமும் -எல்லாம் ஸம்ஹ்ருதமாய்க் காலமே
சேஷித்த காலமும் –கடலும் –அழகியதாய் -அலரா நின்றுள்ள -ஒளியை யுடைத்தான ஆதித்யனும் -அக்னியும்
தனக்கு பிரகாரமாக யுடையவன் –
இத்தால் ஜெகதாகாரதையைச் சொல்கிறது –

பல கதிர்கள்-பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே—-
பரம பதத்திலே எழுந்து அருளி இருக்கும் படி
திவி ஸூர்ய சகஸ்ரஸ்ய பவேத் யுகபுதுத்திதா–(11 அத்யாயம்) -என்னும் படியே
நூறாயிரம் ஆதித்யர்களை ஓட வைத்த ஒளியை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமான
திரு அபிஷேகத்தை யுடையவனுடைய திருவடிகளிலே –

பூரித்து என்னெஞ்சே புரி –
ஸ்நேஹித்து ஆஸ்ரயி

(திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா—
யதி பாஸ் ஸத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷

ஆயிரம் ஸூர்யர்கள் ஒளி ஆகாசத்தில் ஒரே சமயத்தில் தோன்றிற்று ஆகில் அந்த ஒளி
அந்த மஹா புருஷனுடைய ஒளிக்கு ஒத்ததாக இருக்கும்
ஆயிரம் ஸூர்யர்கள் –ஒரே காலத்தில் உதயமானால் –நிகழாதே -ஒரு வேளை நடந்தால் -இந்த விஸ்வரூபம் காட்டும்
தேஜஸ் ஸூக்கு ஒப்பாகுமோ என்ற சங்கை கொள்ளலாம் -அபூத உவமை –

சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளிக்கு ஒவ்வாதே

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–ஸ்ரீ திருவாசிரியம்–5-)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

லோகங்களும் -கால ஷேமமாம் படி சர்வமும் உப ஸம்ஹ்ருதமான சம்ஹார காலமும் -கடல்களும் –
அழகிய நிறத்தை யுடைத்தாய் விஸ்திருதம் ஆகா நின்றுள்ள கிரணங்களை யுடைய சந்த்ர ஸூர்யர்களும்
சிவந்த நிறத்தை யுடைத்தான அக்னியும் ஆகிற பதார்த்தங்களை பிரகாரமாக யுடையனாய் –

இவ்வளவு அன்றிக்கே

பரம பதத்திலே அசங்க்யாதமான கிரணங்களைப் புறப்பட விடா நிற்பதாய் –
அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்குமவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

(மேலைத் தொண்டு உகளித்து செய்ய வேண்டுமே0

————————————————————————————————

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் –என்று
பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் –
நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் என்கிறார் –

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா ஸ்வாமி புஷ்காரணி தடே -வந்து நித்ய வாஸம் செய்கிறான் –

மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் வெற்பு
வானரமும் வேடும் வணங்கும்படி நமக்காக அன்றோ

மஹா வராஹன் க்ருத யுகத்திலே இங்கு வந்தான் -கலியுகத்தில் திருவேங்கடவன்

பரன் சென்று சேர் வேங்கடம் -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் அன்றோ -வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை-என்கிறார்-மஹா வராஹா ஸ்புட பத்ர லோசனன்

யானை தந்தம் நுனியில் முத்து -மஹா வராஹம் கோட்டில் பூமி -இவ்வாறு சாம்யம் -)

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

பதவுரை

மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–வீர ஸ்ரீ யுடைய -சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொரு நாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய-நில மடந்தை கோட்டிடை கொண்ட எந்தை –
மலை–திருமலையாம்.

மதித்து இருந்துள்ள யானை பிடியுடன் ஸம்ஸ்லேஷித்து இருந்ததால் வந்த மதிப்பு
ஊடலால் பிறந்த கோபத்தால் மாணிக்கம் கல்லே பாறை -மணிப்பாறையிலே பொருது மோதி முத்து உதிர்க்கும்

விரிந்த சீர்-வெண் கோட்டு –
வீர ஸ்ரீ யை யுடைய வெளுத்த கொம்புகளினின்று — கோடு-கோரப் பல்லின் மீது –

பொருகையால் வீர ஸ்ரீ யை யுடைத்தான வெள்ளைக் கோட்டிலே யுண்டான முத்தை யுதிரா நின்ற திருமலை –
பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –
திருமலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹ ரூபமான வடிவு –

(கலவி கிடைக்காததால் வந்த கோபத்தால் ரத்ன பாறையால் குத்தி -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
கலவி ஏற்பட்ட செருக்கால் குத்தி என்று ஸ்ரீ அப்பிள்ளை உரை)

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –

மதித்து இருந்துள்ள யானையானது முன்னடி தோற்றாத இருக்கும் இத் தசையிலும்
தன்னைக் ஏவிக் காரியம் கொள்ள பிடியுடன் கூடி
ஒன்றை வியாஜ்யமாக கொண்டு ஊடி
அநந்தரம் உடல் தீர்ந்து கூடி அபிமுகமாய் கூடி
கலவியால் வந்த செருக்கு உந்த-போக்குவீடாக – இதஸ் சதஸ்ஸாக சஞ்சரித்து
அங்கு உள்ள பளிங்கு -மாணிக்கப் பாறையின் நிழலாலே வேறே ஒன்றைக் கண்டதாகப் பிரமித்து

பெரிய சீற்றத்தை யுடைத்தாய் கொண்டு பொருது அத்தாலே விஸ்திருதையான வீர ஸ்ரீ யை யுடைத்தாய்-
வெளுத்த கொம்புகளினின்றும் முத்துக்களைச் சொரியா நிற்கும் வேங்கடமே முன்னொரு நாளிலே
ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

(கலவி கிடைக்காததால் வந்த கோபத்தால் ரத்ன பாறையால் குத்தி -என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
கலவி ஏற்பட்ட செருக்கால் குத்தி என்று ஸ்ரீ அப்பிள்ளை உரை)

———————————————————————————————————

திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும்
அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த அமுதே-ஆராவமுதைக் கொண்டா உப்புச்சாறு கேட்பது -)

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –  ——46–

பதவுரை

பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூல-உபாதான- காரணமாக நின்ற எம்பெருமான்,

அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து-லக்ஷம் யோஜனை கூர்மத்தின் ஓடு இருந்ததாம்
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற் சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.

(பிண்டமாய் நின்ற பிரான் –  -உபாதான காரணமாய் நின்ற எம்பெருமான் –

பிரகிருதி விஸிஷ்ட ப்ரஹ்மமே உபாதான காரணம் -மாற வேண்டுமே
நிமித்த காரணம் ஞானம் ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-பஹுஸ்யாம் பிரஜாயேவ -)

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்–
ஓங்கி இருந்துள்ள மலையைத் தன் முதுகின்
மேலே வைத்து -அதிலே வாசுகியைச் சுற்றி –

(ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2- -இன்றும் கோமதி நதி துவாரகையில் -கடல் நீருடன் கலக்கும் அன்றோ)

தலை முகடு தான் ஒரு கை பற்றி –
கீழ் கடைகிறது குலையாமல் ஆமையாய்த் தாங்கி -மேலே வைத்த சிகரம்
அடிக் கிளர்ந்து போகாத படி ஒரு கையாலே பற்றி –

அலை முகட்டு-அண்டம் போய் நீர் தெறிப்ப —
இத்திறந்த திவலை போய்த் தெறிப்ப –அலை மேல்
நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப-

அன்று கடல் கடைந்தான்–பிண்டமாய் நின்ற பிரான் —
இதுக்கு உபாதான காரணமானவன் —
ஏகோ ஹவை நாராயண ஆ ஸீத்-

(மஹோ உபநிஷத்
ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுச்சொற்கள் கீழே சொல்லி நாராயணன் சொல்லுமே -ந ப்ரம்மா ந ஈஸா -என்றும் சொல்லி
சதேவ ஏக மேவ அத்விதீயம்

ஏகேன ம்ருத் பின்டேண -மண் மயமான -போல் ப்ரஹ்மம் மயமான ஜகாத் –
இதம் ஸர்வம் கலு ப்ரஹ்மம் -தஜ்ஜாலாந் -தஜ்ஜா -தல்ல -தலான்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1- )

(பிரான் -இத்தால் -இரண்டு உபகாரங்கள் -ஸ்ருஷ்டித்ததும் -இந்த்ராதிகளுக்கு உப்புச்சாறு கொடுத்ததும்)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும்
அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

உயர்ந்த சிகரத்தை யுடைத்தான மந்த்ர பர்வதத்தைக் கீழே ஆதார கூர்மமாய் இருக்கிற தன் மேலே வைத்து(கஸ்யமம் ஆதாரம் கூர்ம பீடம் )
வாஸூகியாகிற பாம்பை -அதன் நடுவே கடை கயிறாகச் சுற்றி -அது கொந்தளியாத படியாக அதன் தலையான
சிகரத்தைத் தான் ஒரு கையைக் கொண்டு அமுக்கி -கடைகிற வேகத்தால் அலைகளில் சிறு திவலைகள் ஆனவை
அண்டத்தினுடைய உச்சியிலே சென்று ஜலமானது தெறிக்கும் படியாக இந்த்ராதிகள் திருவடிகளில் வந்து விழுந்த அன்று
மஹத் தத்வமான கடலைக் குளப்படி போலே கலக்கிக் கடைந்து அருளினான் —

கட சராவாதிகளுக்கு காரணமான ம்ருத் பிண்டம் போலே (குடம் மடக்கு மண் உருண்டை )-ஏகமேவ என்னும் படி பிண்டமாய்
(ப்ரஹ்மம் ஓக்கடே )சகல காரியங்களும் தன்னோடு ஒன்றி நாம ரூப விபாக அநர்ஹ
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு
நிகில ஜகத் உபாதான காரண பூதனாய் நின்ற உபகாரகன் கிடீர் —

(சகல எல்லாம் என்றால் -சொல்வதை விட ஓன்று விடாமல் சொல்ல -அகில -நிகில-சொல்லலாம் –

மங்களமாக இருக்கவே அகில என்று தொடங்கி -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா-)

——————————————————————————————

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி
அடிமை கொள்ளுவான் -என்கிறார் -(சேஷன் தோன்றும்படி நிற்பதால் ஆள்கொண்டமையும் தோற்றுமே )

(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மட்டுமே இருந்தாலும் இஷ்ட பிராப்தி கைங்கர்யம் தன்னடையே கிட்டும் அன்றோ)

(நின் அன்னை சாபம் முடித்தனர் என்றதும் சதானந்தர் பதில் சொன்னாரே விச்வாமித்ரருக்கு –

அதே போல் நமக்கும் கார்யம் செய்பவன் என்கிறார் இதில்)

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

பதவுரை

நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி என்னும் அசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழா யணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்—(ஸுகம் பிரமிக்க வைத்து துன்பமே கொடுக்கும் -கொடிய வெந்நரகம் ஸம்ஸாரம் அன்றோ )நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?

நின்ற பெருமானே நீரேற்று–
மஹா பலி பக்கல் நீர் ஏற்று -சேஷித்வம் தோற்றும்படி நின்றவனே

உலகெல்லாம்-சென்ற பெருமானே —
லோகத்தை எல்லாம் அளந்து உடையவன் என்று தோற்றும்படி நின்றவனே –

செங்கண்ணா –
ஸ்நேஹம் தோற்றும்படி நின்றவனே –

(இந்திரன் கார்யம் செய்தோம்-இழந்த சொத்தை மீட்டோம் -குழந்தைகள் தீண்டினோம் -மூன்று காரணங்கள் – மகிழ-செங்கண்)

அன்று-துரக வாய் கீண்ட துழாய் முடியாய்–
வைத்த வளையம் வாடாமல் கேசி வாயைக் கிழித்தவனே –

நங்கள்-நரகவாய் கீண்டாயும் நீ ——–
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

————————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி
அடிமை கொள்ளுவான் -என்கிறார் -(சேஷன் தோன்றும்படி நிற்பதால் ஆள்கொண்டமையும் தோற்றுமே )

(ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மட்டுமே இருந்தாலும் இஷ்ட பிராப்தி கைங்கர்யம் தன்னடையே கிட்டும் அன்றோ)

மஹா பலி பக்கலிலே சென்று உதக ஜலத்துக்குக் கை ஏற்றுக் கொண்டு சேஷித்வம் தோற்ற நின்று அருளின வனாய்
அவன் உதகம் பண்ணின அநந்தரம் சகல லோகங்களிலும் சென்று அளந்து கொண்ட சர்வ ஸ்மாத் பரனாய்(பெருமான் )
இந்திரன் கார்யம் தலைக் கட்டப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
ஜகத்து அஸ்தமிதமாகப் புக்க வன்று (நாரதர் பயந்து ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று அஞ்சினார் அன்றோ )குதிரை வடிவு கொண்டு வந்த கேசியினுடைய வாயை கிழித்துப் பொகட்டவனாய்-
அத்தசையிலும் திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு அவ் ஓப்பனை
குறி அழியாமே நின்றவனே -இப்படி விரோதி நிரசன சீலனாய் இருக்கிற நீயே யாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனரான எங்களுடைய சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டாயும்-

——————————————————————————————————————

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன –
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திருவாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )

(ஐந்து அபதானங்கள் இதில் உண்டே-கீழ் ஒன்றும் -இதில் ஐந்தும் -அடுத்ததில் நான்கும் -அடுத்ததில் இரண்டும் -அருளிச் செய்கிறார் )

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

பதவுரை

நீர் ஏற்று–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீ யன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக் கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீ யன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னு மசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மரங்களின் இடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச்செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்-
உன்னுடைமைக்கு மஹா பலி பக்கலிலே நீர் ஏற்று அத்தை திருவடிகளால் அளந்தாய் –

நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்துப் பசு மேய்த்தாய் –

நீ யன்றே-மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த் தேவாசுரம் பொருதாய் செற்று —
கேசி வாயைப் பிளந்து மருதினிடை போய் –
ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கினதுவேயோ —
சேதனரான விரோதிகளையும் போக்கிற்று இல்லையோ –

—————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமே என்ன –
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் -(இவர் திரு வாயால் சொல்லக் கேட்டு உகக்கும் தாய் அன்றோ )

மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று -ஜகத்தை அடையத் திருவடிகளால் அளந்து கொண்டாய் நீ யன்றோ
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து ரக்ஷணத்திலே ஒருப்பட்டு நின்று -கையும் கோலுமாய்க் கொண்டு பசுக்களை
வயிறு நிறையும் படி மேய்த்தாய் நீ யன்றோ –
உன்னை விழுங்குவதாக வந்த கேசியினுடைய வாய் வலி குலையும் படி
வயிற்றைக் கிழித்துப் பொகட்டு -பெரிய மருதுகளின் நடுவே அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்-
தேவா ஸூர சங்க்ராமத்திலே அஸூர வர்க்கத்தை அழியச் செய்து யுத்தம் பண்ணின நீ யன்றோ

—————————————————————————————————————

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள்
அநேகம் அன்றோ -என்கிறார் –

(இதில் மேல் நான்கு அபதானங்கள்-நீ அன்றே கீழ் பாசுரத்தில் உள்ளதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் )

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பதவுரை

பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக் கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.

செற்றதுவும் சேரா இரணியனைச் –
ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனைக் கொன்றது –அவன் இழவுக்காக என்றவுமாம்

சென்றேற்றுப்-பெற்றதுவும் மா நிலம்-
மஹா பலி பக்கல் நீர் ஏற்றுப் பெற்றது பூமி –

பின்னைக்காய் -முற்றல்-முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்-
நப்பின்னைப் பிராட்டிக்காக திண்ணியதாய்
உலவா நின்ற ஏற்றினுடைய மிடுக்கை அழித்தாய்

மூரிச்-சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —
சூழ்ந்து -இடம் பார்த்து நின்று -கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவனே –

(மூரி-வளைந்த என்றும் கடலில் என்றும் உண்டே)

—————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள்
அநேகம் அன்றோ -என்கிறார்-

(இதில் மேல் நான்கு அபதானங்கள்-நீ அன்றே கீழ் பாசுரத்தில் உள்ளதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் )

நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக-மிடுக்கு யுடைத்தாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள ருஷபங்களின் முன்னே
பயப்படாதே உறைத்து நின்று -கொல்லும் விரகு விசாரித்து -அவற்றின் மிடுக்கைப் போக்கினவனாய் –
இடமுடைத்தாய் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திவாயுதமாக யுடையவனே –
இப்படி இருக்கிற நீ கை கூசாமல் முடித்துப் பொகட்டதுவும் உன்னுடனே பொருந்தோம் என்று இருக்கும்
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை -மஹா பலி பக்கல் சென்று நீர் ஏற்று
அலாப்ய லாபமாகப் பெற்றதுவும் உன்னதான மஹா பிருத்வியை

மூரி என்று -குனிவாய் –
அத்தாலே புடை பெருத்து இருக்கையை நினைக்கிறது

மூரி என்று கடலாய் –
கடலைப் பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -என்னவுமாம் —

————————————————————————————————————-

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி
அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தட வரை வாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணி மயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீல வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேஸ்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருவிகளை யுடைய பெரிய மலையின் கண் உள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்–
ஆக முதலியாய் இட்ட திருத் துழாய் மாலையையும்(முதல் திரு ஆபரணம் பிரதானம் இதுவே என்றவாறு )
ஆதி ராஜ்ய ஸூசகமான மணி முடியையும் யுடையவன் –

தாழ்ந்த வருவித் தடவரைவாய் —
தாழ்ந்த அருவிகளை யுடைத்தாய் இருந்துள்ள தடவரையில்(தட வரை -பெரிய வரை தாழ்வாரை என்றுமாம் )

ஆழ்ந்த-மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்–
ஆழ்ந்து நிர்மலமான நீரை யுடைத்தான சுனையில் வளர்ந்த பெரிய முதலையை
நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –

அணி நீல வண்ணத்தவன் ———–
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்று என்று ஸ்ரமஹரமான வடிவுடையவன் ஆனான் –

(ஸர்வேஸ்வர ஸூசகம் இரண்டுமே இங்கு -ஸ்ரீ அப்பிள்ளை இரண்டுமே ஒன்றாக -திருத்துழாய் சாத்திய திரு அபிஷேகம் -என்று உரை

நீல வண்ணன் செய்த கார்யம் என்கிறார் ஸ்ரீ  அப்பிள்ளை
ஸ்ரீ  பெரியவாச்சான் பிள்ளையோ இப்படி ஆஸ்ரித ரக்ஷணம் செய்ததால் நீல வண்ணன் ஆனான் என்கிறார்

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – -திருமாலை –35–

நீச பாவனை செய்து விலகாமல் சேந்ததால் மகிழ்ந்து செங்கண் மால் ஆனான்

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –2-5-1– —

இவற்றுடன் ஆவி சேர்ந்தான் பிள்ளான் -ஆவி சேர்ந்த பின்பு இவை உளவாயிற்று -இருப்பு பெற்றான் இப்போது தான் -உள -சத்தை

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -1-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -5 – –

(ஆழ்வார் சொல்லக்கேட்டு மகிழ்ந்து நீல மேனியானான் என்னவுமாம்
ஜென்ம கர்ம மே திவ்யம் என்றபடி தனக்கும் திவ்யமான சேஷ்டிதங்களைக் கேட்க்கப் பெற்று நீல மேனி யானான் என்னவுமாம்
சக்ரவர்த்தி பெருமாள் குணங்களை அயோத்யா மக்கள் சொல்லக் கேட்டு பெருமை -மகிழ்ச்சி -எய்தினால் போல் -இங்கும் நீல வண்ணத்தான் ஆனான் -)

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி
அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

வளையச் சாத்தின திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் மிக்க தேஜஸை யுடைத்தான ரத்னங்களோடே கூடின
திரு அபிஷேகத்தை யுடைய சர்வாதிகனாய் -கண்ட போதே சகல சிரமங்களும் போம்படி அழகிய நீல நிறத்தையும்
யுடையனான அந்த சர்வேஸ்வரன் -பூமி அளவும் வரத் தாழ்ந்த அருவிகளும் -தாழ் வரைகளையும் யுடைத்தான மலையிடத்து யுண்டான
ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான மடுவில் மனுஷ்யர் முகம் காணாமல் வளர்ந்த பெரிய முதலையை ஒரு நீர்ப் புழு
என்று பாராதே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கல் வாத்சல்யத்தால் தன் சினம் தீர முடித்துப் பொகட்டான் –

————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 31-40– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்   —–31–

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அவை செய்து–இருபிள வாக்க
அரி உருவம் ஆனான்–நரசிங்கமாகத் தோன்றினவனும்
செவி தெரியா நாகத்தான்–கண்ணையே செவியாக வுடையனாகையாலே தனிப்பட செவி தெரியாமலிருக்கிற ஆதிசேஷனைப் படுக்கையாக வுடையவனும்
நால் வேதத்து உள்ளான்–நான்கு வேதங்களுக்கும் பொருளாயிருப்பனும்
நறவு என்றான் பாகத்தான்–தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனான ருத்ரனைத் திருமேனியின் ஒரு பாகத்திலே உடையவனும்
பாற்கடலுளான்–திருப்பாற்கடலில் பள்ளி கொள்பவனுமான
அவன்–அப்பெருமானுடைய
கோயில் இவை–கோயில் கீழ்ப்பாட்டில் சொன்ன திருப்பதிகளாம்.

செவி தெரியா-நாகத்தான் –
கண்ணையே செவியாக யுடையவன் ஆகையால் தனிப்பட செவி தெரியாமல் இருக்கிற
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனும்

நறவேற்றான்-பாகத்தான் –தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனுடைய /நறவையும் ஏற்றையும் யுடைய-ருத்ரனை
திருமேனியில் ஏக தேசத்திலே கொண்டவன் –

இரணியனதாகம்-அவை செய்தரியுருவமானான் —
உபசயாத்மகமான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பலவாகச் செய்து சிம்ம ரூபியானான் –

உபசயாத்மகமான-வளர்ந்து கொண்டே -பரியனாகி வந்த அவுணன் உடல் அன்றோ –(தேகம் வளர்ந்து -சரீரம் இளைத்து )

செவி தெரியா-நாகத்தான் —
ஒரு இந்த்ரியத்தாலே எல்லாவற்றையும் க்ரஹிக்குமவன் -சஷூஸ் ஸ்ரவா இறே -(ஸங்கல்பத்தாலே அனைத்தும் அறிபவன் )

நால் வேதத்துள்ளான் –
நாலு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்பட்டவன்

நறவேற்றான்-பாகத்தான்–
நறவை ஏற்றவன் –நறவையும் ஏற்றையும் யுடைய ருத்ரனுக்குத் திருமேனியிலே இடம் கொடுத்த சீலவானாவான்-

பாற் கடலுளான்–
திருப் பாற் கடலிலே உள்ளவன்

இவை யவன் கோயில்-கீழ்ச் சொன்னவை -நெஞ்சை வருந்தி அனுவர்த்தித்தபடி –

(ஆகவே நெஞ்சே இவ்வாறு எளியவனாகையாலே அவனை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்றவாறு)

—————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்

அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தலங்களாய் இருக்கும் கீழ்ச் சொன்ன இந்தத் திருப்பதிகள் எல்லாம்
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பை சின்னம் பின்னம் என்னும்படி பல கூறாம் படி பண்ணி அவன் வாரத்துக்கு
உள்ளடங்காத நரசிம்ஹ ரூபியானவன் –
சஷூஸ் ஸ்ரவா யாகையாலே சஷூர் இந்திரியம் கொண்டே ஸ்ரோத்ர இந்திரிய காரியமும்
கொள்ள வல்லவன் ஆகையால் செவியால் தெரியும் தெரிவின்றிக்கே இருக்கிற திருவனந்த ஆழ்வான் உடைய
திரு மேனியில் நிரந்தர சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்குமவனாய்
நிர்தோஷ ப்ரமாணமான நாலு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாய் வர்த்திக்குமவனாய் –
ஹேயமான மதுவையும் ருஷபத்தையும் யுடைய துர்மாணியான ருத்ரனைத் திருமேனியின் பார்ஸ்வத்திலே
யுடையவன் ஆகையால் அத்யந்தம் ஸூ சீலனுமான சர்வேஸ்வரன் ப்ரஹ்மாதிகளுக்கு ஆசிரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினான் –

——————————————————————–

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

பதவுரை

குருந்து–குருந்த மரத்தை
ஒசித்த–முறித்தொழித்த(மருத மரங்கள் சகடத்தால் முறித்தது வேறே சரித்திரம் )
கோபாலகன்–கண்ணபிரான்
பால் கடலும்–திருப்பாற் கடலையும்
வேங்கடமும் திருமலையையும்
பாம்பும்–திருவனந்தாழ்வானையும்–ஸுசீல்யம் சொல்ல வந்த இடம் என்பதால் இப்பத பிரயோகம்
பனி விசும்பும்–(ஸம்ஸார தாபங்கள் தட்டாமல்) குளிர்ந்திருக்கிற பரம பதத்தையும்
நூல் கடலும்–கடல் போன்ற சாஸ்த்ரங்களையும்
துண் நூல தாமரை மேல் பால் பட்டிருந்தார் மனமும்–ஸூஷ்மமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட
ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றி யிருக்கும்படி யோகத்தில் நிலை நின்ற யோகிகளினுடைய நெஞ்சையும்
இடம் ஆக கொண்டான்–வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான்.

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்

நூற் கடலும் —
இதிஹாச புராணங்கள் ஆகிற கடலும் –

நுண்ணூல தாமரை மேல் –
இதிஹாச புராணங்களில் ஹ்ருதய கமலம் என்று

பாற் பட்டு-
சொல்லப் படுகிறதின் மேல் வைக்கப் பட்ட

இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்-
இந்திரியங்களை யுடைய மனஸை தனக்கு இருப்பிடமாகக் கொண்டான்

குருந்து ஒசித்த கோபாலகன் —-
விரோதியைப் போக்கி ஸூலபனானவன்-

இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம் என்கிறது –

(மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால் நெஞ்சம் நாடு குடி கொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில் மன்னு கோயில் கொண் டானே.–8-6-4-

நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும்.– ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத் விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

குருந்தத்தை அநாயாசேன முறித்துப் பொகட்ட கோப குல அவதீர்ணனான கிருஷ்ணன் -திருப் பாற் கடலும் -திரு மலையும்
திருவனந்த ஆழ்வானும் -சம்சார வெக்காயம் தட்டாத படி -குளிர்த்தி மிக்கு நிரதிசய போக்யமான ஸ்ரீ வைகுண்டமும்
ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான (ஆதி -இதிஹாஸ புராணங்கள் )சாஸ்திர சமுத்திரமும் –பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்று
(அதோமுகம் தலை கீழ் வைத்த ஹ்ருதய தாமரை )அதி ஸூ ஷ்மமான வேதாந்த சாஸ்திர ஸித்தமான ஹ்ருதய கமலத்தின் மேலே ஸமஸ்த கரணங்களும்
ப்ரவணமாம் படி யோகத்தில் ஸூ பிரதிஷ்டராய் இருக்கிற பரம யோகிகளுடைய மனஸ்ஸூம் ஆகிற
இவ்விவ ஸ்தலங்களை அபிமதமான இருப்பிடமாகக் கொண்டான் –

——————————————————————-

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

(இப்படி சர்வ ஸூலபனாய் இருந்தால் -நமது அபேக்ஷிதங்களைத் தர வல்லவனோ என்னில்
நாம் விரும்பாமல் இருந்த காலத்தும் தந்தவன் -ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கேட்டதை அளித்தவன் என்று சங்கதி)

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று —33–

பதவுரை

மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாலகன் ஆய்–சிறு குழந்தை வடிவமுடையனாகி
ஆல் இலை மேல்–ஆலந்தளிரிலே
உலகு எல்லாம்–உலகங்களையெல்லாம்
பைய–மெல்ல
மெய்மையே–உண்மையாகவே
உண்டவனே–அமுது செய்து கிடந்தவனே!
மாலவனே–ஸர்வாதிகளே!
நீ–இப்படிப்பட்ட நீ,
அன்று–அன்றொருநாள்
மந்தரத்தால்–மந்தர மலையைக் கொண்டு
மா நீர்க் கடல் கடைந்து–மிக்க நீரை யுடைய கடலைக் கடைந்து
வான் அமுதம்–திவ்யமான அமிருதத்தை
அந்தரத்தார்க்கு–தேவர்களுக்கு
ஈந்தாய்–அளித்தாய்.

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்–
ஒரு பாவனாய் இருபத்தொரு ஆலிலையின் மேலே பருவம் நிரம்பாப் பிள்ளையாய் –

மேலோருநாள் உண்டவனே —
லோகங்களை எல்லாம் நோவு படாமல் மெள்ளத் திரு வயிற்றிலே வைத்தவன் –

(எஞ்சாமல் வயிற்றில் வைத்து –பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம்)

மெய்ம்மையே —
ஐந்த்ர ஜாலகரைப் போலே யன்றிக்கே சத்யமே–

மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று–
பிராணனைக் கொடுக்க வல்ல மிடுக்கை யுடைத்தான அம்ருதத்தை ஆகாசத்தே நிற்கிறவர்களுக்குக் கொடுத்தாய் நீ அன்று –

(வானமுதம்-சிறப்பு மிக்க அமுதம் அன்றோ)

(கீழே வந்ததாக இவர்களுக்கு நினைவே இருக்காதே -எண்ணம் ஸ்வர்க்கத்திலே இருப்பதாகவே உள்ள தேவர்கள்)

(இப்படிப்பட்டவர்களுக்கு அபேக்ஷிதங்களை அளிப்பவன் அவனைக் கேட்டால் நமக்குத் தராமல் இருப்பானோ நெஞ்சே என்றபடி)

———————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

தனக்கு சிலர் பரிய வேண்டும் படி முக்த சிஸூவான விக்ரஹத்தை யுடையவனாய்க் கொண்டு பவனாய் இருபத்தொரு
ஆலந்தளிரின் மேலே பூர்வ காலத்திலே லோகங்கள் எல்லாவற்றையும் நெருக்குப் படாதபடி மெள்ள இந்த்ர ஜாலமாக வன்றிக்கே
பரமார்த்தமாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் -(பிரளய ஆபத்தில் அபேக்ஷியாத காலத்திலேயே ரஷித்தவன் அன்றோ )
இந்த அகடிகடனா சாமர்த்தியத்தால் சர்வாதிகன் என்று தோற்ற இருக்கிறவனே-
ஏவம் விதமான சக்தி மஹாத்ம்யத்தை யுடைய நீ தேவர்கள் -சாகாமைக்கு மருந்து தேடித் தர வேணும் -என்று
அர்த்தித்த அன்று மந்த்ர பர்வதத்தாலே-மிக்க ஜலத்தை யுடைத்தான திருப் பாற் கடலைக் குளப்படி போலே கலக்கி
உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் உரப்பை யுடைத்தான அம்ருதத்தை ஸ்வர்க்க வர்த்திகளான தேவர்களுக்கு கொடுத்து அருளினாய் –

——————————————————————

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

அஞ்சும் குடியில் யுள்ளார் அருளிச் செயல்கள் இதே போல் பலவும் உண்டே
(நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே— திருச்சந்தவிருத்தம்
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும் ,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,
இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே.–8-3-5-

இப்பாட்டில் திருக்கோளூரையும் திருப்புளிங்குடியையும் பிரஸ்தாவித்தது மற்றுமுள்ள சயனத்திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம்.

* நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில் * என்று திருமழிசைப்பிரானும்,

* அரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை * என்று திருமங்கை மன்னனும் தொடுத்தருளின சயனத் திருப்பதிகள் பலவும் இங்கே விலக்ஷிதமாகலாம்.

இத்திருப்பதிகளிலே ஆடாமல் அசையாமல் நீ திருக்கண்வளர்ந்தள்வதற்கு என்ன காரணம்? மஹத்தான சிரம்மோ?

திருவடிகளிலே சரணம் புகுந்த இந்திராதி தேவர்களுக்காக ராவணாதிகளை அழியச்செய்து அவர்களது துக்கங்களைப் போக்கின. விளைப்போ? அன்றியே, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து. ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலகமெல்லாம் தாவியளந்த சிரம்மோ? என்கிறார்.

கொடியார் மாடம் – மாடங்களுக்கு கொடிகட்டியிருப்பதும் ஆழ்வார்க்கு அச்சத்தை விளைக்கிறதென்று நம்பிள்ளை திருவுள்ளம்பற்றி யருளிச் செய்யுமழகு பாரீர் – “சத்ருக்கள், கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி கொடி கட்டிக்கொண்டு கிடக்கவேணுமோ? கொடிக்கு பயப்படவல்லார் இவரைப் போலில்லை, கம்ஸ பயத்தாலே ஒளித்துவளர்ந்தாப்போலே யிருக்கலாகாதோ?“ என்பன ஈட்டு ஸ்ரீஸூக்திகள்

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

பதவுரை

நெஞ்சமே–மனமே!
அன்று–முன்பொரு காலத்தில்
நின்று–நின்று கொண்டே
இவ்வுலகம்–இவ்வுலகங்களை யெல்லாம்
அளந்த–அளந்ததனாலுண்டான
அசவே கொல்–சிரமத்தினாலேயோ
வேளுங்கை–திருவேளுக்கையிலே
இருந்து–வீற்றிருந்து
நீள் நகர் வாய்–(திருவெஃகா வென்கிற) சிறந்த திருப்பதியில்
அன்று–ஒரு காலத்தில்
கிடந்தானை-பள்ளி கொண்டவனும்–
கேடு இல் சீரானை-ஒரு காலு மழிவில்லாத திருக் குணங்களை யுடையவனும்
முன்–முன்னொரு கால் கம்ஸனை
கடந்தானை–கொன்று ஓழித்தவனுமான பெருமானை
காண்–ஸேவி

கேடில் சீரானை —
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையவனை —

முன் கஞ்சனைக் கடந்தானை நெஞ்சமே காண்–
கம்சன் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடு போம்படி முடித்து உபகாரகன் ஆனவனை –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி

(நீள் நகர் என்றதே திரு வெக்கா என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளம்)

————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை –
நினைவற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கிற அன்று
அநாயாசேன நின்று காடு மோடையுமான இஜ் ஜகத்தை அளந்து கொண்ட அலசுதலாலேயோ இருப்பது கிடப்பது ஆகிறது
என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

————————————————————————

நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

(ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணி த்³வந்த்³வ ஸமர்சயாச்யுத கதா:² ஶ்ரோத்ர த்³வய த்வம் ஶ்ருʼணு ।
க்ருʼஷ்ணம் லோக்ய லோசந த்³வய ஹரேர் க³ச்சா²ங்க்⁴ரி யுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துளஸீம் மூர்த⁴ந் நமாதோ⁴க்ஷஜம் ॥–ஸ்ரீ முகுந்த மாலை 16॥)

கண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

பதவுரை

கண்கள்–என்னுடைய கண்களானவை
கதிர் இலகு–ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண்–திவ்ய ஆபரணங்களையும்
தார்–மாலையையும்
அகலத்தான்–திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி–அழகிய திருமேனியை
கண் காண் என விரும்பும்–காணவேணுங் காண வேணுமென்று ஆசைப்படா நின்றன.
வண்டு–வண்டுகளானவை
பாடி–இசைப்பாடிக்கொண்டு
அறையும்–ஒலி செய்யப் பெற்ற
தொங்கலான்–மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில்–சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி–ராகத்திலே அமைத்துப்பாடி
யாம்–நாம்
கை–கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும்–சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு பூண்டார கலத்தான் பொன் மேனி —
காண் காண் என விரும்பும் கண்கள்–ஒளி விடா நின்ற ஹாரத்தையும் தாரையும் யுடைத்தான –
திரு மார்பை யுடையவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக் கண்கள் காண் காண் என விரும்பா நின்றது –

பாண் கண்-தொழில் பாடி —
பாட்டிலே தொழில் யுண்டாக பாடி –பாண் தொழில் உண்டாகப் பாடி என்றுமாம்-
அவனுடைய தொழிலைப் பாட்டிலே வைத்துப் பாடி என்னவுமாம் –

வண்டறையும் தொங்கலான செம்பொற்-கழல் பாடி யாம் தொழுதும் கை —-
வண்டுகள் சப்தியா நின்றுள்ள மாலையை யுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக் கையாலே தொழுவோம் –

(ஸ்வரத்துடன் பாடி -பாணர்கள் தொழில் செய்து -அவன் உடைய அழகிய பாண் -அழகு -சேஷ்டிதங்களைப் பாடி மூன்று அர்த்தங்கள்)

————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு (முன்புற்ற கரணங்கள் ஆயினவே )அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

என்னுடைய கண்களானவை புகர் ஒளி விடா நின்றுள்ள ஆபரணங்களையும் திரு மாலையையும் யுடைத்தான
அகன்ற திரு மார்வை யுடைத்தானவனுடைய பொன்மலை போலே ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக்
காண வேணும் காண வேணும் என்று ஷாம காலத்தில் சிறு பிரஜைகள் சோறு சோறு என்று அலையுமா போலே
மிகவும் ஆசைப்படா நின்றன –

பாட்டினிடத்திலே அவனுடைய சேஷ்டிதங்களை வைத்துப் மதுபான மத்தமாய்க் கொண்டு
வண்டுகள் சப்தியா நின்றுள்ள திரு மாலையாலே அலங்க்ருதனானவனுடைய –சிவந்த பொன் மேலே அதி சிலாக்யமான
திருவடிகளை நாம் வாயாரப் பாடி –கையாலே அத்யபி நிவேசம் அடங்கும் படி -தொழுவோம்

பாண் -என்று பாட்டாய் -கண் என்று இடமாய் -பாட்டின் இடத்திலே தொழிலை வைத்துப் பாடி என்றபடி –

அன்றிக்கே -பாண் என்று அழகாய் அழகிய தொழிலைப் பாடி என்னவுமாம் –

பாணருடைய தொழிலிலே-ரீதியிலே பாடி -என்னுதல்

பாட்டுக்களைத் தொழில் யுடைத்தாம் (ஸ்வரங்களுடன்  )படி பாடி என்னவுமாம் –

—————————————————————————

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

(அவன் தொழிலைப் பாட ஆசைப்பட்டபடியே திவ்ய ஆயுதங்களின் சேர்க்கையும்
திரு அனந்தாழ்வான் மேல் திருப்பாற்கடலில் கண் வளர்ந்து அருளி
அங்கு இருந்தும் உலகு அளந்த சேஷ்டிதங்களைப் பாடி மகிழ்கிறார்-)

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

பதவுரை

பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரை யுடைய கடல் சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்து கொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.

அனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்-வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  –
செய்ய–படை –கைய-
இவை கையில் உள்ளன

செய்ய என்று -ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –

செய்ய என்று-ஆயுதமான போது விதேயமான ஆயுதங்கள் -கருதும் இடம் பொரும் அன்றோ
பரவை பாழி—-திருப் பாற் கடல் படுக்கை —

பனி நீருலகம்-அடியளந்த மாயரவர்க்கு —
கடல் சூழ்ந்த பூமி யளந்த சர்வேஸ்வரனுக்கு –

—————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

குளிர்ந்த நீரை யுடைத்தான கடல் சூழ்ந்த பூமியைத் திருவடிகளாலே அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனான அந்த
சர்வேஸ்வரனுக்கு பிரதி பக்ஷத்தின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு வாழி —
கறுத்த நிறத்தை யுடைத்தான கடல் இடத்தே பிறந்த வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
வெவ்விதான ஸ்ரீ கதை -அப்படி இருந்துள்ள ஸ்ரீ சார்ங்கம் -வெவ்விய தேஜஸ்ஸை யுடைய திருக் குத்துடை வாள் –
இவை யாகிற அழகிய திவ்ய ஆயுதங்கள்- திருக் கையிலே யுளவாய் இரா நின்றன –
திருப் பாற் கடல் படுக்கையாய் இரா நின்றது -என்று வித்தராய் அனுபவிக்கிறார் –

———————————————————————-

நாம் அடிமையில் அந்வயிக்க (35-36 பாசுரங்களில் )ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –

(ஆபாச விருத்திக்கு அங்கு -தர்மபூத வியாப்தி -இவனுக்கோ ஸ்வரூப வியாப்தி ப்ராப்ய விஷயத்தில்)

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணிலென்று
ஆர்வற்ற வென்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தானென்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே.–9-6-10- திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப் பாட்டு உயிரானதென்னலாம்.)

(ஈஸ்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா?  சேதந லாபம் ஈஸ்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு;  சேதந லாபந்தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம்.

எம்பெருமான் ஸ்ருஷ்டி யவதாரதி முகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ.

ஸஹஸ்ர சீர்ஷா -எங்கும் வியாபித்து -அத்யதிஷ்டதி தசாங்குலம்- பொருளைத் தாண்டி பத்து மடங்கு நின்று ரக்ஷணத்தில் பாரிப்பு இருந்தபடி –
அதே போல் என்னுள்ளும் உள்ளும் இருந்து ரக்ஷிக்கிறானே)

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவள வாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

பதவுரை

உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்–உப்புக் கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்–சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண்–பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம்–ஹாரங்களும்
திகழும்–விளங்கப் பெற்ற
திரு மார்வன் தான்–திருமார்பை யுடையனான எம்பிரான்-திரு வார மார்பன் -ஆரமும் திருவும் திகழும் மார்பன் அன்றோ
அகத்தான் புறத்தான்–உள்ளிலும் வெளியிலும் வாசி யறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு–அப்படிப்பட்ட பெருமானுக்கு-கீழ் சொன்னபடி திவ்ய ஆயுதங்கள் தரித்து உலகு அளந்த சர்வேஸ்வரனுக்கு
அடிமை பட்டேன்–ஆட்பட்டவனானேன்.

(அகத்தான் புறத்தான்-அனைத்து வாசகமும் இவனையே சொல்லும் -இந்திரா ஸகல ஐஸ்வர்யம் கொண்டவன் -என்றும் அந்தர்யாமிதயா என்றும் உண்டே)

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் —
திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக உடையனாய்

(இவர் திருமேனி நிழலீட்டால் -நீலக்கடல் கடைந்தாய் உன்னைப் பெற்றும் இனி போக்குவேனோ என்றார்)

துவர்க்கும்-பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் —-
பெரிய பிராட்டியாரையும் அநேகம் மாணிக்கங்களையும் யுடைத்தாய் இருந்துள்ள
பூண் ஆரத்தாலே திகழா நின்றுள்ள திரு மார்பையும் யுடையவன் -அவனுக்கு அடிமைப் பட்டவன்-

குறைவற்ற மேன்மையையும் -வடிவு அழகையும் யுடைய ஸ்ரீயபதியானவன் நான் அடிமையிலே அந்வயித்த
மாத்திரத்திலே உள்ளும் புறமும் விட சக்தன் ஆகிறிலன்-

(உப்புக் கரிக்கும் கடலிலும் உள்ளான் -மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -அதே போல் பாற் கடலிலும் கண் வளர்ந்து அருளுகிறான் என்றவாறு
அனுபவிக்க ஸ்தானம் -அனுபாவ்யம் -அனுபோக்தாக்கள் -குறைவற்ற அவன் அன்றோ இவ்வாறு என்னிடம் உள்ளான்)

(அந்தர் பஹிஸ்ய தத் சர்வம் வியாப்ய நாராயணன் ஸ்தித -எல்லார் இடமும் உண்டே
ஆழ்வார் போல்வாருக்கோ சரோ லஷ்மி விசிஷ்டானாய் சகல திவ்ய மங்கள விக்ரஹத்துடன் வியாபித்து இருப்பானே)

—————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

அப்படிப்பட்ட வைபவத்தை யுடையனானவனுக்கு ஒரு பிரகாரத்தாலே அடிமை புக்கேன் -அநந்தரம் பூமியைச் சூழ்ந்து
லவண உத்தரமாய் -கறுத்து இருந்த கடல் நீரிலே கண் வளர்ந்து அருளுமவனாய் -சிவந்த பவளம் போலே இருந்துள்ள
திரு அதரத்தை யுடையளான பெரிய பிராட்டியாரையும் -பல வகைப்பட்ட ரத்தினங்களை யுடைத்தான ஆபரணங்களையும் –
திரு ஆரத்தையும் யுடைத்தாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள திரு மார்வை யுடையனான அவன் தான் –
அந்த ஒப்பனையையும் குறைவற்ற மேன்மையையும் பிராட்டியுடைய ஆதாரத்தையும் புரிந்து பாராமல் ஸுபரியைப் போலே
பல வடிவு எடுத்துக் கொண்டு உள்ளொடு புறம்போடு வாசி அறக் கலந்து நின்று அனுபவியா நின்றான்-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

(அடியேன் ஒரு பிரகாரத்தாலே மட்டுமே -வாசிக கைங்கர்யத்தில் மட்டுமே அடிமை புக்கேன்-
அவனோ ஸர்வ பிரகாரத்தாலே அபி நிவேசம் மிக்கு இருக்கும் படியை -தானே நீரைப் படைத்து

அதனுள்ளே தானே கண் வளர்ந்து அருளும் இவன் அன்றோ இவ்வாறு உள்ளான் என்று நினைத்து ஈடுபடுகிறார் )

———————————————————————

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

பதவுரை

எவ் உருவும்–எல்லாப் பொருள்களும்
தன் உருவே–அவன் தனக்கு சரீரமாகவே யிருக்கும்,
தவம் உருவும்–தபஸ்ஸு பண்ணிப் புண்ய சரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும்–நக்ஷத்ரங்களும்
தானே–அவன் தன் வடிவாகவே யிருக்கும்,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டு திக்குகளும்
அண்டத்து–மேலுலகிலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
தானே ஆய இறை–தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்-ஸர்வ ஸ்வாமியானவன்
தனக்கு தானே உவமன்–(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.-அத்விதீயம் நம்மது -அத்வைதம் போல் அல்லவே

(நளிர் மதி சடையன் என்கோ -முனியே நான்முகன் முக்கண் அப்பா -அரி யயனை அலற்றி–நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -ஸரீராத்ம பாவத்தால் ஸாமாநாதி கரண்யம்-வியாப்த கத தோஷம் தட்டாதவன் -ஸர்வ ஸ்வாமியானவன் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் )

(சரீரம் பிரகாரம் -அப்ருதக் ஸித்த விசேஷணம் -பூ மணம் மாணிக்கம் ஒளி –
பிரகாரமாக இருப்பவை எல்லாம் சரீரமாக இருக்க வேண்டாமே –
சரீரமாக இருப்பவை எல்லாம் பிரகாரமாகவே இருக்கும்
நம்மது -பிரகாரி அத்வைதம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் போல் இன்னும் ஓன்று இல்லையே -ஆகவே பிரகாரி அத்வைதம்)

தானே தனக்குமவன் –
தனக்கு உபமான ரஹிதன் —

உபமான ராஹித்யத்துக்கு அடி -சகல பதார்த்தங்களும் அவனுக்கு
பிரகாரங்களாய் -தான் பிரகாரியாய் -பிரகாரி யந்த்ரம் இன்றிக்கே இருக்கை –

தன்னுருவே எவ்வுருவும் -எல்லா பதார்த்தங்களும் அவனுக்கு சரீரம் –

(ஜகத் சர்வம் சரீரந்தே -பவான் நாராயணோ தேவ –ஆத்மநாம் மானுஷம் மன்யே)

தானே தவவுருவும் –தபஸ் ஸூ பண்ணி- புண்ய சரீரான -அதிகாரிகளும் அவனுக்குப் பிரகாரம் –

(யுக கோடி ஸ–த்ரை லோகாய ப்ராப்தாவான் -அடைந்தான்
மஹாதேவ்சன் சர்வமேத யாகத்தில் தன்னையே ஆஹுதியாகக் கொடுத்து சிவா பதவி பெற்றான்
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை(

————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தனக்கு சரீரமாய் இருக்கும் -தபஸ்ஸைப் பண்ணின புண்ய சரீரராய் –
ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அதிகரித்த ப்ரஹ்மாதி பதார்த்தங்களும் நக்ஷத்ரங்களும் தான் என்கிற சொல்லுக்குள்ளே
அடங்கும் படி தனக்கு பிரகாரமாயேயாய் இருக்கும் -ஜ்வலன ஸ்வபாவமான அக்னியும் -பெரிய குல பர்வதங்களும் –
எட்டு திக்குகளும் -அண்டாந்தர வர்த்திகளான சந்த்ர ஸூரியர்கள் ஆகிற இரண்டு வகைப்பட்ட தேஜஸ் பதார்த்தங்களும்-
தனக்கு பிரகாரமாய் இருக்கும் -இப்படி கார்ய காரண ரூபமான சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரமாய்-
தான் பிரகாரியாய் -தனக்கு ஒரு பிரகாரி யந்த்ரம் இன்றிக்கே இருக்கக் கடவ சர்வேஸ்வரன் தனக்குத் தானே
உபமானமாய் இருக்கும் –

இன்னமும் இப்படி இருப்பான் ஒரு ஈஸ்வரன் உண்டாகில் இறே ஒப்புக் சொல்லலாவது என்று கருத்து–

(ஜ்யோதி விஷ்ணு புவநாநி விஷ்ணு வனாநி விஷ்ணு ஏவ ஸர்வம் -யத் அஸ்தி நாஸ்தி ச விப்ரவர்யா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸர்வம் கலு ப்ரஹ்மம்–ப்ரஹ்மம் ஒக்கடே -)

——————————————————————–

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

(திருமலை-சாதனம் -உள்ளம் ஸாத்யம் -பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
மூன்று அடிகளால் கோர மா தவம் செய்து
உள்ளத்தின் உள்ளே வருவதற்காகவே)

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய்  மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே  உளன் —–39-

பதவுரை

இறை ஆய்–ஸர்வ ஸ்வாமியாய்
நிலன் ஆகி–பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய்–எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாக வுடையனாய்
மறை ஆய்–வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறை பொருள் ஆய்–அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய்–நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த–சந்திர பதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி–மிக்க ஜலத்தை யுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி–விளங்குகின்ற கோஷத்தை யுடைத்தான்
நீர்–நீரை யுடையதுமான
வேங்கடத்தான்–திரு வேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன்–என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்-மறையாய்
உபய விபூதி உக்தனாய் -பூமியும் எட்டுத் திக்குகளும் வேதங்களும் தான் இட்ட வழக்கு –

(வையம் தகளியாய் –ஆழியான் -என்ற போதே உபய விபூதி நாதத்வம் சொல்லி வருகின்றார்கள் அன்றோ)

மறைப் பொருளாய்
வேத ப்ரதி பாத்யனாய் –

வானாய்-பிறை வாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்-
சந்த்ர பதத்தில் கிட்டின வெள்ளத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையில் நின்று

உள்ளத்தின் உள்ளே  உளன்-
என்னுடைய ஹிருதயத்திலே புகுர அவசர பிரதீஷனாய் இருக்கிறான் –

(குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11-தாவி வையம் கொண்டவன் அன்றோ இன்று இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்)

ஸ்ரீ ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யம்; அவை வருமாறு; “(ஆலினிலை மேல துயின்றான்.) தன்னைக் கொண்டு காரியமுடையார் சிலரைக் கண்டிலன்; எல்லார்க்கும் ஆராய்ச்சிப் படும்படியான செயலைச் செய்வோமென்று பார்த்தான்; வேண்டாவென்பாரைக் கண்டதில்லை. அது ஸாத்மித்தவாறே நித்யஸூரிகளும் தானுமாகவந்து திருமலையிலே நின்றான்; அதுவும் ஸாந்மித்தவாறே இவருடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தான்; இங்கு விலக்குவார்ல்லாமையாலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான்.* பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டோடி வந்து இவருடிடய மனக்கடலிலே வாழப் பு’கான்.’‘

————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

சர்வ ஸ்வாமியாய் -பூமிக்கு அந்தர்யாமியாய் -எட்டுத் திக்கில் யுண்டான ஸமஸ்த சேதனரையும் தனக்கு
பிரகாரமாக யுடையனாய் -சேதனர்க்கு ஹித அஹித ஞாபகமான வேதங்களுக்கு நிர்வாஹகனாய் –
பரம ஆகாச சப்த வாஸியான பரம பதத்தையும் பிரகாரமாக யுடையனாய் -சந்த்ர பதத்தைக் கிட்டி இருப்பதாய்-
மிக்க ஜலத்தை யுடைத்தான திரு அருவிகளினுடைய விளக்கத்தை யுடைத்தாய் த்வனியா நின்றுள்ள
ஜல ஸம்ருத்தியோடே கூடி இருப்பதுமான திருமலையை வாசஸ் ஸ்தானமாக யுடையனான சர்வேஸ்வரன்
திருமலையிலே நிலை இங்கே வந்து புகுருகைக்கு அவசரம் பார்த்து நின்ற நிலை என்று தோற்றும்படி
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

——————————————————

இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

(சத்தை சொல்ல வந்த இடம் இங்கு அல்லவே -தான் உளனாக அவன் திரு உள்ளம் நம்மை ரஷித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அன்று தானே
இசைவித்து இருத்துவான் அன்றோ -நாமோ யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட அதமர்கள்-விலக்காமையே வேண்டுவது
அனைத்தும் செய்தாலும் ருணம் ப்ரவர்த்தனாக நினைத்துக் கொள்ளுபவன் அன்றோ
என்றுமே உத்தமன் உளன் -நாம் இசையாத அன்றும் -அவன் திரு உள்ளம் இப்படியே அன்றோ -தீஷிதம் விரத ஸம்பன்னம்
உள்ளுவார் உள்ளத்து திவ்ய மங்கள ரூபம் காட்டி அருளி அதுவும் தனது பேறாகக் கொள்பவன் அன்றோ)

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!–அவனை உளனாகிய நன்மை
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-

(இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா
நித்யம் பிரியாஸ் தவ து கேசந தே ஹி நித்யா
நித்யம் த்வத் ஏக பரதந்த்ர நிஜ ஸ்வரூபா
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-

எம்பெருமானே சகல பதார்த்தங்களினுடைய சத்தையானது தேவரீருடைய இச்சையினாலேயே யாகும்
தேவரீருடைய நித்ய இச்சைக்கு விஷய பூதங்களான சில வஸ்துக்கள் நித்ய வஸ்துக்கள் ஆகும்
எப்போதும் தேவரீர் ஒருவருக்கே அதீனமான ஸ்வரூபத்தை யுடையவைகளான தேவரீரது
திருக்கல்யாண குணங்களே இவ்விஷயத்தில் நமக்கு உதாஹரணங்கள் ஆகும்)

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திராத அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

(விலக்காமையே வேண்டுவது-விலக்காமல் இருந்தால் தன்னுடைய க்ருஷி பலித்ததே என்று உகக்குமவன் அன்றோ)

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு உயரா நின்ற
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள
திருமலையிலே நின்றவன் பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்

இந்திரன் இழந்தது பெறுகையாலும் -மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே -நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும்
ஸ்வபாவனான சர்வேஸ்வரன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –

நாம் அவனுடைய உண்மைக்கு (சத்தைக்கும் நமது தாரகத்துக்கும் )இசைந்த இன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு உளனாய் இருக்குமவன் கிடாய் -அவன் தானே வந்து புகுரும் இடத்திலே
விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-

ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான -திருமலையை இருப்பிடமாக
உடையனானவன் பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 10, 2016

கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

(ஆ பால கோபாலர் அனைத்தவரையும் தீண்டி ஆஸ்ரித பாரதந்தர்யம் திரு உள்ளத்தில் பட இப்பாசுரம் உதயம் –
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய சேஷ்டிதம் பற்றி அருளிச் செயல்களில் மிகவும் குறைவாகவே உண்டு)

(எவ்வளவு உயரப் பேசினாலும் அவ்வளவுக்கு நிற்பவன் -எவ்வளவு குறைய பேசவே முடிந்தாலும் அதுக்குத் தக்க தன்னை அமைத்துக் கொள்கிறான்
அலங்காரம் -ஆபரண சேர்க்கை -ஆயுத சேர்க்கை -விரோதி நிரஸனம் -போன்றவை பேசி முடிக்க முடியாதே)

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு —21-

பதவுரை

வாசம் மலர் துழாய் மாலையான்–மணம் மிக்க புஷ்பங்களோடு கூடின திருத்துழாய் மாலையை அணிந்தவனும்
தேசு உடைய சக்கரத்தான்–தேஜஸ்ஸை யுடைய திருவாழியை ஏந்தினவனும்
சங்கினான்–ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடையவனும்
சார்ங்கத்தான்–சார்ங்க வில்லை யுடையவனும்
பொங்கு அரவம் வக்கரனை கொன்றான்–மிக்க ஆரவாரமுடையனாய் வந்த
தந்தவக்த்ரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய
வடிவு–ஸ்வரூப ஸ்வபாவங்கள் (எப்படிப்பட்டவை யென்னில்)-படி எடுத்துக் காட்டும் படி அல்லவே -திரு மேனி அழகு என்றுமாம்
பேசுவர்–பேசுகின்றார்களோ
அவ்வளவே–அவ்வளவேயாம்.

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே-
பேசுமவர்களுக்கு யாதொரு அளவுண்டு அவ்வளவு பேசிப் போம் அத்தனை
விஷயத்தைப் பரிச்சேதித்துப் பேசப் போகாது

வாச மலர்த் துழாய் மாலையான் –தேசுடைய-சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்-
பரிச்சேதித்துப் போக ஒண்ணாமைக்கு இவை தனித் தனியே ஹேதுக்கள்

பொங்கரவ-வக்கரனைக் கொன்றான் வடிவு —
விஸ்திருதமான (பரந்து விரிந்த -வி ஸத்ருசமான -பொருந்தாத )சப்தத்தை யுடையனான தந்த வக்தரனைக்
கொன்றவனுடைய வடிவு பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே –

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 8 –

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

——————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

பரிமளம் அலை எறியா நின்றுள்ள பூத்தாரை யுடைத்தாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
நிரவதிக தேஜஸை யுடைத்தான திருவாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்(படை போர் புக்கு முழங்கும் )ஸ்ரீ சார்ங்கம் -இவற்றை யுடையவனாய்
பெரிய கிளர்த்தியோடே எங்கே எங்கே என்று பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு வந்த தந்த வக்ராசூரனை
முடித்துப் பொகட்டவனுடைய பிரகாரம் மாறு பாடுருவப் பேசுகைக்கு சக்தராய் இருக்கும் அவர்கள் தங்கள் ஞான சக்திகளைக்
கொண்டு எவ்வளவு பேச வல்லவர்கள் -அவ்வளவேயாய் இருக்கும் அல்லது -உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது -என்கை —

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே – நம்மாழ்வார் திருவிருத்தத்தில்,

விஷ்ணுவுக்கு துளசி மாலை, தழை, கொம்பு, வேர்
நின்ற மண், ஆகிய ஏதாயினும் ஒன்றால் அர்ச்சிக்க வேண்டும்.)

————————————————————

அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச்   செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு –22-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
வானவர்கள்–நித்ய ஸூரிகள்
வடிவு ஆர்–அழகு பொருந்திய
முடி–கிரீடங்களை
கோட்டி–தாழ்த்தி-வணங்கச் செய்து
கடி ஆர் மலர்–மணம் பொருந்திய புஷ்பங்களை
நாளும்–நாள்தோறும்
தூவி –ஸமர்ப்பித்து–முறை கெட -ந ஸாஸ்த்ரம் ந க்ரம
காணும் படியானை-ஸேவிக்கப் பெற்ற திரு மேனியை யுடையனான எம்பெருமானை
செம்மையால்–முறைப்படியே
உள் உருகி–உருக்கங்கொண்டு
செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மையே–உள்ள படியே
காண–ஸேவிப்பதற்கு
விரும்பு–ஆசைப்படு

(செம்மையால்–முறைப்படியே–உள் உருகி–உருக்கங்கொண்டு–செவ்வனே–ருஜுவான வழியாலே
மெய்ம்மையே–உள்ள படியே–காண–ஸேவிப்பதற்கு–விரும்பு–ஆசைப்படு-நாளும் மலர் தூவி என்றும் நாளும் காணும் என்றுமாம் –
அனைத்தும் முடியாதவற்றுக் காரணம் -ஆசைப்படவே காட்டி -அனைத்தையும் செய்யும் படி அருளுவான் அவன் அன்றோ)

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்–கடியார் மலர் தூவிக் காணும் -படியானை–
தர்ச நீயமாய் இருந்துள்ள முடிகளை வணக்கித் தேவர்கள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்ப்பத்தை கார்ய புத்தி இன்றிக்கே
திருவடிகளிலே பொகட்டுக் காணும் ஸ்வ பாவத்தை யுடையனாய் உள்ளவனை

(ப்ரயோஜனங்களை அபேக்ஷிக்காமல் ஸ்வயம் பிரயோஜனமாக -அத்யந்த பக்தி யுக்தனாய்)

செம்மையால் உள்ளுருகிச்   —-
அவன் சேஷீ -நான் சேஷ பூதன்- என்னும் முறையாலே -ஹிருதயம் சிதிலமாய் –

(ஸ்வாமி அவஸ்துவான எனக்கும் வந்து காட்ட வந்தானே என்று எண்ண உள்ளம் உருகுமே)

செவ்வனே -அவன் காட்டும் வழியாலே

நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு–
பிரயோஜன நிரபேஷமாகக் காண ஆசைப்படு –

(சேஷ சேஷி பாவம் அறிந்த நெஞ்சமே -முன்புற்ற நெஞ்சே -அவன் காட்டக் காணலாம் என்று அறிந்த நெஞ்சமே
மெய்ம்மையே -பூர்ணமாக என்றும் ஸ்வயம் ப்ரயோஜனமாக என்றுமாம்)

———————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே- ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

அழகு மிக்கு இருந்துள்ள அபிஷேகங்களை வணக்கி (கோடி வளைத்து -தாழ்த்தி )நித்ய ஸூரிகள் நாள் தோறும் பரிமளம் மிக்கு இருந்துள்ள
புஷ்பங்களை அக்ரமமாக பணி மாறி -யத்ர பூர்வே சந்தி தேவா சதா பஸ்யந்தி -என்கிறபடியே
இவை விடாமல் கண்டு அனுபவிக்கும் வடிவு அழகை யுடையவனை –
அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் முறையாலே தத் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து ஹிருதயம் சிதிலமாய்
நாம் ஒரு யத்னம் செய்யாது இருக்கத் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் காண்கிற
செவ்வை வழியாலே மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ்கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே
விருப்பத்தைப் பண்ணு –

வானவர்கள் என்று ப்ரஹ்மாதிகள் ஆகவுமாம்
படி -விக்ரஹம் -(ஸ்வ பாவம் பிரகாரம் என்றுமாம்)

———————————————————————-

உபதேசம் பலித்த படி சொல்கிறது –

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு துளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் —23-

பதவுரை

வண் தார்–அழகிய மாலையிலே(பெண் வண்டுகள் இங்கு சுரும்பு மேல் ஆண் வண்டுகள் )
அம் சிறைய சுரும்பு–அழகிய சிறகுகளை யுடைய வண்டுகள்-
துளையில் சென்று ஊத–ரஸ நாடியிலே படிந்து ஊத (அதனால்)
அரும்பும்–அரும்புகள் உண்டாகப் பெற்ற
புனம் துழாய் மாலையான்–நல்ல திருத் துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய
விரும்பி விண் மண் அளந்த பொன் அம்கழற்கே–ஆசைப்பட்டு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள் விஷயத்திலேயே
மனம்–எனது மனமானது
துழாய்–அவகாஹித்து
மால் ஆய் வரும்–மயங்கிக் கிடக்கின்றது.

சுரும்பு -ஆண் வண்டு-

(விரும்பி-உவந்த உள்ளத்தனாய் -பகவான் விரும்பி -சுரும்பு விரும்பி ஊத -மனம் விரும்பி மாலாய் வரும்
வந்து -மனம் -மண் அளந்த -தத்வ த்ரயங்களையும் சொன்னபடி
விரும்பி விண்ணையும் மண்ணையும் அளந்த வண்டார் சுரும்பு என்றும் -பொன் அம் கழல் என்றுமாம்)

விரும்பி விண் மண்ணளந்த —
பொன்னங்கழற்கே விரும்பி என்னவுமாம் –
விருப்பத்தோடு விண்ணும் மண் அளந்த

அஞ்சிறைய வண்டார்-சுரும்புதுளையில்  சென்றூத  –
அழகிய சிறகை யுடைத்தான வண்டார்க்கும் சுரும்பு நரம்பு அறிந்து ஊத

அரும்பும்-புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே மனந்துழாய் மாலாய் வரும் —
அரும்பா நின்றுள்ள புனந்துழாய் மாலையானுடைய விலக்ஷணமான கழலிலே
மனஸ்ஸானது வியாமோகத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –

———————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படியைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

அழகிய சிறகை யுடைத்தான வண்டும் -அத்தை விட்டு நீங்காதே சேர்ந்து வர்த்திக்கக் கடவ சுரும்பும் ஆகிற இவை
ரஸ சிரைகளிலே (நரம்புகளில்)வாய் வைத்தூத –அவற்றால் கணுத் தோறும் அரும்பிச் செல்லா நிற்பதாய்
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றால் போலே செவ்வி பெற்றுச் செல்கிற திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனாவனுடைய -ஆகாசம் பூமி முதலானவற்றை உகந்து அளந்து கொண்டு ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே
மனசானது முன்னடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிக் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மனசோடு சேர்க்கவுமாம் –

————————————————————————

ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

(விரும்பு விரும்பி விடாமல் விரும்பி மூன்று பாசுரங்களும் )

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

பதவுரை

ஆழி நெஞ்சே—பெரியவனை அனுபவிக்க வேண்டிய-கம்பீரமான மனமே!
இரு நிலனும்–விசாலமான பூமியும்
மால் விசும்பும்–அளவிறந்த ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
நெருங்கு தீ–செறிந்த தேஜஸ்ஸும்
நீர் உருவும் ஆனான்–ஜல தத்துவமும் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் அந்தர்யாமியானவனும்
பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான்–பொருந்திய ஒரு சுடர்ச் சக்கரத்தை யுடையவனுமான எம்பெருமானுடைய-உபய விபூதி நாதத்வம்
சூழ் கழலே–அடியாரை அகப்படுத்திக் கொள்ளுகிற திருவடிகளையே
வருங்கால் நாளும்–மேலுள்ள காலமெல்லாம்
தொழுது–வணங்கி
தொடர்–(அவனையே) பின்பற்றி யிரு.

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்-நெருங்கு தீ நீருருவு மானான் —
காரணமான பூத பஞ்சகமும் -லீலா விபூதிக்கும் உப லக்ஷணம் –

பொருந்தும்-சுடராழி ஒன்றுடையான்–
நித்ய விபூதிக்கும் உப லக்ஷணம் –

சூழ் கழலே நாளும்-தொடராழி நெஞ்சே தொழுது —
உபய விபூதி உக்தனுடைய சூழ் கழலே வரும் கால் நாளும்
ஆழி நெஞ்சே தொழுது தொடர் -கீழே விச்சேதித்து அநர்த்தப் பட்டது போரும் -முறையாலே ஆஸ்ரயி –

———————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

பரப்பை யுடைத்தான பூமியும் -அபரிச்சேத்யமான ஆகாசமும் வாயுவும் செறிந்த தேஜஸ்ஸும் ஜலமும் ஆகிற
இவ்வவ பதார்த்தங்களுக்கு அந்தர்யாத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி நிஷ்டனாய் –
திருக் கையிலே பொருந்தி இருக்கும் அத்விதீயமான தேஜோ ரூபமான திரு வாழியை யுடையவன் ஆகையால்
நித்ய விபூதி விசிஷ்டனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய -ஆஸ்ரிதரை ஸ்வ வைலக்ஷண்யத்தாலே
தப்பாத படி சூழ்த்துக் கொள்ளுகிற திருவடிகளையே அளவுடைய நெஞ்சே -ஸ்வரூப அனுரூபமாக தொழுது
மேல் வரும் காலம் எல்லாம் ஆறி இராதே நாள் தோறும் பின்பற்றி ஆஸ்ரயி –

———————————————————–

நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

(ஸம்ஸாரம் இருக்க எவ்வாறு என்றவாறே பிரதிபந்தகங்களைப் போக்கி அருளினவன்-நான்கு விஷயங்களைச் சொல்லி சமாதானம்
வயிற்றிலே வைத்து ரக்ஷகன் -அடியவர்க்கு எளியவன் -விரோதிகளை போக்கி -அடியவர்க்கு எளியவன்-வானவர்க்கு சேயன் நமக்கு அணியன் )

(நெஞ்சே சிறந்து
தூ நீருலகம் முழுதுண்டவனை தொழுதால் பழுதுண்டே
மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை தொழுதால் பழுதுண்டே
மால் விடை ஏழ் செற்றானை தொழுதால் பழுதுண்டே
வானவர்க்கும் சேயானை தொழுதால் பழுதுண்டே)

(விரும்பு விரும்பி விடாமல் விரும்பி மூன்று பாசுரங்களும் சொல்லி இதில் பிரதிபந்தகங்களைப் போக்கி அனுபவிப்பான் என்கிறார்)

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

பதவுரை

தூ நீர் உலகம்–நிர்மலமான நீரை யுடைய கடலோடு கூடின உலகங்களை
முழுது–முழுவதும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்தவனாயும்
மொய் குழலாள் ஆய்ச்சி–அழகிய கூந்தலை யுடையளான யசோதையினுடைய
விழுது–வெண்ணெயை
உண்ட வாயானை–அமுது செய்த வாயை யுடையவனாயும்–வாயிலே வெண்ணெய் நாற்றம் வீசும் என்பதால் வாயன் பத பிரயோகம்
மால் விடை ஏழ் செற்றானை–கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்
வானவர்க்கும் சேயானை–பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானே
நெஞ்சே–நெஞ்சமே!
சிறந்து–சிறப்புற
தொழுதால்–வணங்கினால்
பழுது உண்டே–குற்ற மேதேனுமுண்டோ?

விழுது–semi solid -கடை வெண்ணெய் -நக்கியே உண்ண வேண்டுமே –
லேகியம் லிக்-lick / மாதா -mathar / கொல்-kill

தூ நீருலகம்—வைத்து -முழுதுண்டு–
சூழ்ந்த கடல் அலையாத படிக்கு ஈடாக லோகத்தை எல்லாம் வயிற்றிலே வைத்து –

மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட வாயானை–
அனுகூலருடைய த்ரவ்யத்தால் அல்லது தரியாதவனை

மால் விடை ஏழ் செற்றானை-
நப்பின்னை பிராட்டியுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதியான மதித்த(மதம் பிடித்த )ஏறு ஏழையும் செற்றவனை

வானவர்க்கும்-சேயானை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு மனஸூக்கும் வாக்குக்கும் தூரஸ்தான் ஆனவனை

சிறந்து ——நெஞ்சே–தொழுதால் பழுதுண்டே —
ஆஸ்ரிதற்கு ஸூலபனானவனைக் கிட்டித் தொழுதால் பழுது உண்டோ –

———————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

நிர்மலமான ஜலத்தை யுடைத்தான கடலோடு கூடின பூமியாதி லோகங்களை ஒன்றும் பிரி கதிர் படாத படி
கடலின் நீரும் கலங்காமல் இருந்த கட்டளையிலே எடுத்து -திரு வயிற்றிலே வைத்து -அவ்வளவிலும்
வயிறு நிறையாமையாலே -அழகிய குழலை யுடையளான யசோதை பிராட்டியாருடைய வெண்ணெயை அமுது செய்த
திருப் பவளத்தை யுடையனாய் -நப்பின்னைப் பிராட்டியைக் கைப் பிடிக்கைக்கு இடைச்சுவரான முரட்டு ரிஷபங்கள்
ஏழையும் முடித்துப் பொகட்டவனாய் -மிகை மிடுக்காலே காண ஒருப்படும் ப்ரஹ்மாதிகளுக்கும் சால தூரஸ்தனாய் இருக்கிறவனை
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

—————————————————————————————————————

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

(இசைந்த பின்பு அனைத்து திவ்ய தேச அபிநிவேசங்களும் சிந்தையில் வைப்பான் -ஆகவே அத்தையே முதலில் அருளிச் செய்கிறார்

கடவார் கடமை யுடையவர் -நிர்வாஹகர் -என்றும் கடந்து போக மாட்டார் என்றுமாம் –
வெக்கா வேளுக்கை தனியாகச் சொல்லி -திருக்கச்சி யுள்ளும் –
கடவாமை இவ் விரண்டிலும் -ஆதி சேஷன் இடமும் எனது சிந்தையும் ஒரே அபிநிவேசம்
ஆறு இடங்களில் இருப்பத்தைச் சொல்லி -மற்ற நான்கிலும் உறைவார் -நம் திரு உள்ளத்துக்கு வர ஏணி போல் இவை என்றுமாம்

சிறந்த -ஹ்ருதயம் தானே விஸ்வஸ்ய ஆயத்தனம் மஹத் -நெஞ்சமே நீள் நகராகக் கொள்ளுமவன் அன்றோ –
என் பால் இடவகை கொண்டனையே -என்பார்களே )

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார்  ——–26–

பதவுரை

தண் துழாயார் தாம்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான்
கடவார்–ஒருநாளும் விட்டு நீங்காதவனாய்க் கொண்டு
உறைந்ததுவும்–நித்ய வாஸம் பண்ணுமிடங்கள் (எவை யென்றால்)
சிறந்த என் சிந்தையும்–சிறந்ததான என்னுடைய நெஞ்சமும்
செம் கண் அரவும்–சிவந்த கண்களை யுடைய திருவனந்தாழ்வானும்
நிறைந்த சீர்–நிறைந்த செல்வத்தை யுடைய
நீள்–பெரிய
கச்சி யுள்ளும்–கச்சித் திருப்பதியும்
வேங்கடமும்–திருமலையும்
வெஃகாவும்–திருவெஃகாவும்
வேளுக்கைப் பாடியுமே–திருவேளுக்கைத் திருப்பதியுமாம்.

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
என்னுடைய சிந்தையுள்ளும் -திருவனந்த ஆழ்வான் மேலும்
கச்சியுள்ளும் சாதரமாக யுறைந்தது –

வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே-தாங்கடவார் —
திருமலையிலும் திரு வெஃகாவிலும் வேளுக்கை பாடியிலும் கடவரான மாத்திரம் –
கடவரான மாத்திரம் என்று சொன்ன உரம் எத்தாலே என்னில் –
தண் துழாயார்

நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் -வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே–உறைந்ததுவும்–
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்-தாங்கடவார்–
உகந்த படுக்கையான திருவனந்த ஆழ்வானோபாதி என்னுடைய நெஞ்சை அதிக்ரமியார்-

(மற்ற திவ்ய தேசங்களைக் கடந்து என்னுள்ளத்திலே வந்தானே -இத்தைக் கடக்க மாட்டான் –
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –

பிராட்டியைப் பிரிந்து இருந்தாலும் இளைய பெருமாளை பிரிய இயலாமல் பெருமாள் இருந்தாரே -)

அன்றிக்கே
திரு வனந்த ஆழ்வானையும் என்னுடைய நெஞ்சையும் தம்மதாக அபிமானித்து இருப்பது –
அல்லாத வற்றில் உறைந்த மாத்திரமே என்றும் அருளிச் செய்வார் –

(எனது நெஞ்சத்துக்கு இருந்தமைக்கு சத்ருசமாகச் சொல்லலாவது
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி என்பதால் அத்தையும் இங்கு சேர்த்து அருளுகிறார்)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதனான பெருமையை யுடைய தாம் -திரு உள்ளத்திலே
உகப்புடன் நித்ய வாசம் பண்ணி அருளிற்றும் -தாம் விரும்பி மேல் விழுகைக்குத் தகுதியான என்னுடைய ஹிருதயத்திலும்
மதுபான மத்தரைப் போலே நிரந்தர அனுபவத்தால் சிவந்த கண்களை யுடையனான திருவனந்த ஆழ்வான் பக்கலிலும்
திருப்பதிகளாலே நிறைந்த ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் போக்யதை அளவிறந்த இருந்துள்ள திருக்கச்சியிலுமாய் இருக்கும் —

(எனது நெஞ்சத்துக்கு இருந்தமைக்கு சத்ருசமாகச் சொல்லலாவது
திவ்ய தேசங்கள் நிறைந்த கச்சி என்பதால் அத்தையும் இங்கு சேர்த்து அருளுகிறார்)

திருமலையும் திரு வெக்காவும் திரு வேளுக்கைப் பாடியும் ஆகிற இவ்விடங்களை –
நிர்வாஹகரான நமக்கு விட ஒண்ணாதே என்று பிராப்தி மூலமாக விரும்பி இருப்பர் -(கீழே ப்ரீதி மூலம் )

திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான
திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும் தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

(சென்றால் கு டையாம் –இத்யாதி போல் அனைத்து கைங்கர்யங்களையும் செய்ய ஆசை கொண்டவர் ஆழ்வாரும் என்றதாயிற்று)

——————————————————————-

அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம்
புஜிப்பார் யுண்டோ என்கிறார் –

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

(ஆஸ்ரிதர் மேல் இவ்வாறு அபிநிவேசம் கொண்டவன் என்று அறிந்த பின்பு-உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ )

ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை –  நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27–

பதவுரை

கார் மலிந்த கரு கடலே–மேகங்கள் நிறைந்த பெரிய  கறுத்த  கடலை
நேரே கடைந்தானை–தானே முன்னின்று கடைந்தவனும்(தேவாதிகள் அந்தராத்மா -ஒல்லை நான் கடைவான் ஸாஷாத்தாக )
நாரணனை–ஸகல ஜகத் காரண பூதனும்
நீரணை மேல் பள்ளி அடைந்தானை–திருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின் மேல் பள்ளிக் கொண்டிருப்பவனுமான எம்பெருமானை
நாளும் அடைந்து–நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்)
துயர் உழந்தார்–துக்கங்களுக்கு மூலமான பாபங்களைப் பண்ணினவர்களாயிருந்தாலும்
துன்பு உற்றார் ஆர்–துக்கங்களை அநுபவித்தவர்கள் யார்? (ஒருவருமில்லை) (அப்படிப்பட்டவர்கள்)
ஆண்டையார்–எங்கிருக்கிறார்கள்? (எங்குமில்லை)

காரே மலிந்த கருங்கடலை –  நேரே கடைந்தானைக்–
மேலே படிந்த மேகங்கள் சலியாதபடி அமிர்தம் படும் படிக்கு ஈடாகக் கடலைக் கடைந்தானை

காரணனை–ஜகத் காரண பூதனை -(மாதா நாராயணா பிதா நாராயணா இத்யாதி )

நீரணை மேல் பள்ளி-அடைந்தானை–
ஆஸ்ரிதர் கார்யம் செய்க்கைக்காக திருப் பாற் கடலிலே கிட்ட வந்து கிடந்தவனை

(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதனன் -கூப்பீடு கேட்க்கும் இடம் வந்து ப்ரயோஜனாந்தர பரர்களும் அண்டும்படி அடைந்தான் அன்றோ)

நாளும் அடைந்து –ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்–
தாம் தாம் பண்ணின நிஷித்த கர்மத்தினுடைய பலமான துக்கத்தை அவனை ஆஸ்ரயித்து அனுபவிப்பார் உண்டோ

ஆண்டையார் -என்றது
எங்குள்ளார் என்றபடி

நாளும் -என்றது
எக் காலத்திலும் என்றபடி

எக் காலத்தில் எத் தேசத்தில் யார் அவனைப் பற்றி துஷ் கர்ம பலத்தை அனுபவித்தார் –

(தேவதாந்த்ரங்களைப் பற்றி துன்பம் அடைந்தவர் பலர் உண்டே -பாணாசுரன் போல்வார் -)

(எழுவார் விடை கொள்வார் போல் அன்றிக்கே ப்ரீதியுடன் அநந்யார்ஹ ஸ்வயம் ப்ரயோஜன பரர்கள்
என்றுமே எப்பொழுதுமே வழுவா வகை நினைந்து தொழுவார்கள் அன்றோ)

——————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

மேகங்களால் நிறைந்த பெரிய சமுத்திரத்தை மேற்படிந்த மேகங்கள் சலியாதபடி நேர் கொடு நேரே நின்று கடைந்தவனாய்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான உறவை யுடையவனாய் (மாதா நாராயணா பிதா நாராயணா இத்யாதி )-

இவற்றை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாயக் கொண்டு
கடைந்த கடலின் நீரிலே திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே கண் வளர்ந்து அருளுகிறவனை-
தேவையாக அன்றிக்கே போக ரூபமாக நாள் தோறும் ஆஸ்ரயித்து வைத்து துக்க ஹேதுவான பாபங்கள்
உச்சி வீடு விடாதே பண்ணினவர்களில் யார் தான் அந்த பாப பலமான துக்கத்தை அனுபவித்தார்-
அவர்கள் தான் எக்காலத்தில் உள்ளவர்கள் –

பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகைக்கும் பாப பலம் அனுபவிக்கைக்கும்
அக்னி நாசிஞ்சேத் என்ன சேர்த்தி உண்டு என்றபடி -(நெருப்பால் நனைப்பாய் சொல்லுவார் உண்டோ )

————————————————————————–

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

(தீர்ப்பாரை யாம் இனி எங்கனம் நாடுதும் ? அன்னைமீர்
ஒர்ப்பால் இவ் ஒண் நுதல் உற்ற நல நோய் இது தேறினோம்
போர் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –4-6-1

தேர் பாகன் -போர் பாகு -தேரை முன்னும் பின்னும் நடத்தியே போர் முடித்தவன் இவனே)

(அஹம் மத் ரக்ஷண பரோ மத் ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதே ரேவேத் யாத்மா நம் நிஷி பேத் புத -ஸ்ரீ ந்யாஸ சதகம்–1-

விஷயம் அறிந்தவன் -தனது ஆத்மா-ஆத்மாவைக் காக்கும் பொறுப்பு –
அவ்வாறே ஆத்மாவைக் காப்பதால் ஏற்படும் பிரயோஜனம் -எல்லாம் தன்னுடையது அல்ல –
திருமகள் கேள்வனுக்கே உரியது என்று ஆத்மாவை எம்பெருமான் இடம் சமர்ப்பிப்பான்)

(நான்கு சரித்திரங்கள் இங்கு சொல்லி -இவனது ரக்ஷண பிரகாரம் அருளிச் செய்கிறார்)

அடைந்தது அரவணை  மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால்  உண்ட   பிரான் –28-

பதவுரை

வாள் எயிறு–வாள் போன்ற பற்களை யுடையளான
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–உண்டு அவளை முடித்தவனான
பிரான்–ஸ்வாமியானவன்
அடைந்தது–பள்ளி கொண்டது
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மேலாம்
அன்று–முன்னொரு காலத்தில்
ஐவர்க்கு ஆய்–பஞ்ச பாண்டவர்களுக்காக
மிடைந்தது–நெருங்க நடத்தினது
வெம் பாரதம் போர்–கடுமையான பாரத யுத்தமாம்,
உடைந்ததுவும்–அஞ்சி நின்றதும்
ஆய்ச்சி பால்–இடைச்சியான யசோதைப் பிராட்டியினிடத்துண்டான
மத்துக்கே–மத்துக்காகவாம்,
அம்மனே–அந்தோ!

(அஞ்சிய நோக்கும் அந்நோக்கும் -தொழுத கையும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே)

அடைந்தது அரவணை   மேல் —
உகந்தார்க்கு உடம்பு கொடுப்பது

ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் –
ஆஸ்ரிதர்க்காக தன்னுடம்பை அழிய மாறி அம்பேற்றது –

உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே–
பரிஹாரம் இன்றிக்கே ஒழிந்ததுவும் யசோதை பிராட்டிக்குப் பயப்பட்டு –

(அஞ்சலிக்கு பிரதி அஸ்திரம் இல்லாதவோ பாதி இவளது உடைந்த மத்துக்கும் பிரதி இல்லாமல் இருந்தானே)

வாள் எயிற்றுப்-பேய்ச்சி பால்  உண்ட   பிரான் —
பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடைய பூதனையை முடித்த உபகாரகன்
அனுகூலையாய் இருப்பாள் ஒரு இடைச்சிக்குப் பயப்பட்டு
பரிஹாரம் இன்றிக்கே இருப்பதே –

அம்மனே -எத் திறம் –

———————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

பருவம் நிரம்பாதே இருக்கச் செய்தே வாள் போலே இருந்துள்ள எயிற்றை யுடையளான பூதனையுடைய பாலை
வேற்று முலை என்று வாசி அறிந்து அமுது செய்து -ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்த உபகாரகன் ஆனவன்-
தன்னால் அல்லது செல்லாத திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் யாய்த்து தன் செல்லாமை தோற்றப்
பள்ளி கொண்டு அருளிற்று -ஆஸ்ரிதரான தர்ம புத்திராதிகளுக்காக அவர்கள் வெறுவியரான வன்று
தன்னை அழிய மாறி மேன்மேல் என நெருங்கி ப்ரவர்த்தித்தது பாரதம் ஆகிற கொடிய பூசல் –
யசோதை பிராட்டி பக்கல் யுண்டான மத்துக்கே ஒக்கும் -தனக்கு சத்ருக்கள் அஞ்சுமா போலே தான் அஞ்சி
சிதிலம் ஆயிற்றதும் -அம்மே -இவன் வல்லபடி என் என்று வயிறு பிடிக்கிறார் –

——————————————————————-

அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கு யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –

ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

(அச்சமும் அன்பும் -கீழ் அச்சம் பற்றிய பாசுரம் -இங்கு அன்பு பற்றிய பாசுரம்)

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

பதவுரை

பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப்பாலை
உண்ட–அமுது செய்த
பெருமானை–ஸ்வாமியானவனும்-ஸர்வேஸ்வரனை -விரோதி நிரசன காரியமே பூதனையை முடித்தது
வாய்ந்த இருள் ஆர் திருமேனி–அமைந்த இருள் போன்ற திருமேனியை யுடையவனும்-இருள் அன்ன திரு மேனி -பொருந்திய
இன் பவளம் செம்வாய்–அழகிய பழம் போற் சிவந்த அதரத்தை யுடையவனும்-பவளம் ஒளியே வாசி -மற்றவை எல்லாம் இருள் அவனும் பூதனையும்
தெருளா மொழியானை–உருத் தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை
சேர்ந்து–கிட்டி
ஆய்ச்சி–யசோதை யானவன்
பேர்ந்து எடுத்து–வாரி யெடுத்தணைத்து கொண்டு
அஞ்சாதே–சிறிதும் பயப்படாமல்
முலை கொடுத்தாள்–தன் முலையை உண்ணக் கொடுத்தாள்.

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் –
பூதனையை முடித்தவனை

வாய்த்த-இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்–
பூதனையினுடைய மடியிலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்

பவளம் போன்று இருந்துள்ள அதரத்தை யுடையனாய் தெருளா மொழியானைச் சேர்ந்து —
பேர்ந்து எடுத்து-ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –
பூதனை முகத்தில் முக்த ஜல்பிதம் பண்ணுகிறவனைக் கிட்டிக் கால் நடை தந்து எடுத்து
தாயானவள் அஞ்சாதே முலையைக் கொடுத்தாள்–
ஸ்வ ரூபத்தை அழிய மாறி முலையைக் கொடுத்தாள் -ஸ்த்ரீத்வ ப்ரயுக்தம் இறே அச்சம் –

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

(ஆய்ச்சி மத்துக்கே என்று )ப்ரஸ்துதையான யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பூதனை பக்கல் யுண்டான முலைப் பாலை யுண்டு அவளை முடித்து -ஜகத்துக்கு சேஷியான தன்னை
யுண்டாக்கிக் தந்த உபகாரகனாய் -அவள் மடியிலே இருந்து முலை யுண்கிற போது ஆகர்ஷகமாய்த் தோற்றுகிற
அழகிய இருளோடு ஒத்த திரு மேனியையும் -உகப்புத் தோற்ற ஸ்மிதம் செய்த அழகிய பவளம் போன்ற
சிவந்த திரு வதரத்தையும் யுடையனாய்
அத் தசையில் அவள் முகத்தைப் பார்த்து ஆச்சி ஆச்சி என்றால் போலே சொல்லுகிற அறிவு கலசாத முக்த ஜலப்பிதங்களை
யுடையனுமானவனை -தாய் தன்னிடத்தும் நின்று போந்து கால் நடை தந்து வந்து கிட்டி யதா பூர்வம் சாதரமாக எடுத்துக் கொண்டு
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாயும் ஜென்மம் அடியாகவும் வரக் கடவ யுடையவள் அன்றிக்கே –
உண்ட நச்சுப் பாலுக்கு ப்ரத் ஒளஷதமாக முலை கொடுத்தாள் –
கெட்டேன்–(ஹந்த -இது என்ன ஆச்சர்யம் )ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

————————————————————

அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

(எளியவனாகையாலே அவள் அன்பு காட்டினாள் -நாங்கள் எவ்வாறு அன்பு காட்டுவது என்ற சங்கைக்கு பதில் இப்பாசுரம்)

(பெருமாள் இருக்கும் இடங்கள் எட்டும் என்கிறார்-திருத்துழாய் யத்ர யத்ர திருத்துழாய் தத்ர தத்ர கேசவன் மது ஸூதனன் -இத்துடன் ஒன்பது –

வாய்ந்த -நிறை -அனைத்து இடங்களிலும் அந்வயம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ -அனைத்திலும் பூர்ணம் –

கடலையும் சொல்லி அனந்தனையும் சொல்கிறார் ஆதர அதிசயத்தில்-கடல் -அநந்தன் இரண்டு திவ்ய தேசங்களும் ஒரே இடத்தில் இவருக்கு சேவை –
இறை திருமால் சேர்ந்த பாடி இவைகள் -என்றும் திருமால் சேர்ந்த- இறைபாடிகள் இவை என்றும் கொள்ளலாம் )

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை  —-30–

பதவுரை

கடல்–திருப்பாற் கடலென்ன
குடந்தை–திருக்குடந்தை யென்ன
வேங்கடம்–திருமலை யென்ன
நேர்ந்த என் சிந்தை–நேர்பட்ட எனது ஹ்ருதயமென்ன-அவன் நேர்ந்த -கொடிய மா தவம் செய்தனன் கொல்
நிறை விசும்பும்–பரம்பின பரமபதமென்ன-இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -எங்குமே பூர்ணம்
வாய்ந்த மறை–அமைந்த வேதமென்ன
பாடகம்–திருப்பாடகமென்ன
அனந்தன்–ஆதிசேஷனென்ன
ஆய இவை–ஆகிய இவையெல்லாம்
வண் துழாய் கண்ணி–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
திருமால் சேர்ந்த–எம்பெருமான் நித்யவாஸம் பண்ணப்பெற்ற
இறை பாடி–ராஜதானிகளாம்.

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும்
ஸ்வாமிக்கு படை வீடான இவை —
ஸ்ரீ யபதி சேர்ந்த பாடியாய இவை –
இறையாய திருமால் சேர்ந்த -என்னவுமாம்

சிந்தை என்கையாலே
இத் திருப்பதிகளில் எல்லாம் வந்து இருக்கிறது எல்லாம் என் இருதயத்தில் புகுருகைக்காக என்கிறது

வாய்ந்த மறை -என்றதாலே
ப்ரமாணமான வேதத்திலே நின்றதோடு கண்ணாலே காணப்படுகிற
திருப்பதிகளோடு வாசியற இவர்க்கு பிரகாசமாய் இருக்கிற படி –

———————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

திருப் பாற் கடல் -திருக் குடந்தை –திருமலை -இவற்றிலும் காட்டில் ஆதரிக்கும் படி நேர்பட்ட என்னுடைய ஹிருதயம்-
த்ரிபாத் விபூதி -என்னும் படி பரப்பை யுடைத்தாய் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதம் –
அவனை உள்ளபடி பிரதிபாதிக்க வல்ல அழகிய வேதம் -திருப் பாடகம் -அனந்தாழ்வான் ஆகிற இத்திருப்பதிகள் எல்லாம்
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கிற சர்வ ஸ்வாமியான
ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானியாய் இருக்கும் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 10, 2016

(கீழ் பேர் ஓத என்றாரே )அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

(நுண்ணறிவினான்-அறிய நுட்பமானவன் -ஸூஷ்மமான அறிவு கொண்டே-அறிவதற்கு அப்பால் உள்ளவன் என்று அறிய முடியும்)

நன்கோது நால்  வேதத்துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11–

பதவுரை

நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான்–நன்றாக ஓதப்படுகிற நான்கு வேதங்களாலும் பிரதி பாதிக்கப்படுபவனும்
நறவு இரியும்–தேன் தோற்கும்படியான போக்யதையை யுடையதாய்
பொங்கு ஓதம் அருவி புனல்–கடல் போலவும் அருவி நீர் போலவுமுள்ளதான
வண்ணன்–திருமேனியை யுடையவனும்
சங்கு ஓதம் பால் கடலான்–சங்குகளோடே கூடின அலைகளை யுடைத்தான திருப்பாற்கடலில் கண் வளர்த்தருள்பவனும்
பாம்பு அணையின் மேலான்–சேஷ சயனத்தின் மேல் துயில்பவனும்
பயின்று உரைப்பார் நூல் கடலான்–ஓதி யுணர்த்துகின்ற வைதிகர்களின் கடல் போன்ற சாஸ்த்ரங்களால்
பிரதபாதிக்கப் படுபவனுமான எம்பெருமான்
நுண் அறிவினான்–(தம் முயற்சியாலே அறிவார்க்கு) அறிய முடியாதவன்.

(திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு போக்யத்வத்துக்கு ஒன்றும் வண்ணத்துக்கு இரண்டு த்ருஷ்டாந்தங்கள் சொல்லி -ஸர்வ ரஸ ஸர்வ கந்த வஸ்துவுக்கு ஸத்ருசம் ஆகாதே)

நற விரியும்–நறவு இரியும்-தேன் தோற்கும்படியான இனிமையை யுடைத்தாய் –
நுண்ணறிவினான்-தம் முயற்சியால் அறிவிற்கு அறிய முடியாதவன் –

நன்கோது நால்  வேதத் துள்ளான்–
பிரதி நியத விசேஷங்களோடே கூட -சாங்க அத்யயனம் பண்ணின வேதங்களாலே-
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய-என்கிறபடியே ப்ரதிபாதிக்கப் பட்டவன்–

(ஸ்வரம் தப்பின்னால் எஜமானனை இந்திரனுடைய வஜ்ராயுதம் எதிரிகளை முடிக்குமா போல் முடிக்கும்)

(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷)

(நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –வேதங்களாலேயே நான் அறியப்பட்ட தீருவேன்
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே)

நற விரியும்-தேன் தோற்கும்படியாகக் கிளர்ந்த கடல் போலேயும் –

பொங்கோதருவிப் புனல் வண்ணன்  –
அருவிப் புனல் போலேயும் இருந்துள்ள திருமேனியை யுடையவன்

சங்கோதப்-பாற்கடலோன்–சங்குகளோடு கூடின திரையை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுமவன்

பாம்பணையின் மேலான்-அனந்த சாயி -பயின்று  உரைப்பார்-நூற் கடலான்–
சாதரமாக உரைக்குமவர்களாலே-இதிஹாச புராணங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் –

(அடியார் திருமேனி ஸ்பர்சத்தில் அபி நிவேசம் கொண்டவன் -எளிமையும் இங்கு உண்டே
நம் முயற்சியால் அறிவதற்கு அரியவன் என்றும் அவனால் வரிப்பவருக்கு எளியவன் என்றும் உணரலாம்)

நுண்ணறிவினான் —-
ஸ்வ யத்னத்தாலே அறிவிற்கு துர்ஜ்ஜேயன் —

——————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

ஸ்வர வர்ணாதிகளாலே நழுவுதல் வாராத படி ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே நன்றாக ஒதப்படுமதாய்
ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய்
நன்றாக விஸ்திருதம் ஆகா நிற்பதாய் (இவர் உரையில் தேன் விஷயமே இல்லை -நறவு இரிய )-கிளர்த்தியை யுடைத்தான கடல் போலேயும் –
அறிவிப் புனல் போலேயும் இருக்கிற திருமேனியின் நிறத்தையும் யுடையனாய் –
சங்குகளை கொழித்து ஏறிடா நின்ற திரைகளை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனாய் –
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளுமவன் ஆகையால் –
ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வபாவனாய்-
தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து -தரிசித்து –
லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து —

——————————————————————-

ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி  ——12-

பதவுரை

மறை–வேதத்தை
என்றும்–இடைவிடாது
நன்கு ஓதி–நன்றாக அத்யயநம் பண்ணி
அறிவு என்னும்–ஜ்ஞாநமாகிற
தாள் கொளுவி–(ஆத்ம பரமாத்ம ஞானம் ஆகிற )தாழ்ப்பாளை யிட்டு
ஐம்புலனும்–பஞ்சேந்திரியங்களையும்
தம்மில் செறிவு என்னும்–(வெளிச் சொல்லாமல்-தமக்கு வகுத்த விஷயத்தில் ) உள்ளே அடக்கி வைப்பதாகிற.
திண் கதவம் செம்மி–திடமான கதவை யடைத்து
நன்கு உணர்வார்–நன்றாக தியானிக்குமவர்கள்
பைங்கோதம் வண்ணன் படி–அழகிய கடலின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானது தன்மைகளை
நாள் தோறும்–தினந்தோறும்
காண்பர்–ஸாக்ஷித்தகரிப்பான்

(ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –யதா ஸப்த க்ரமம் வரிசைப்படியே அன்வயித்து  -முதலில் ஞானம் சம்பாதித்து யோகம் வந்தாலும் பிரமாணங்களை விடாமல் வேதங்களையும் ஓத வேண்டும்
ஸ்ரீ அப்பிள்ளை -மறை ஓதி முதலில் சொல்லி பின்பு அடுத்த இரண்டும் -ஸாஸ்த்ர அப்பியாசம் பின்பே யோகம் இவர்)

அறிவென்னும் தாள் கொளுவி–
திண்ணிதான ஸ்ரவண ஞானத்தை மூட்டி –

ஐம்புலனும் தம்மில்-செறிவென்னும் திண் கதவம் செம்மி –
பாஹ்ய இந்திரியங்கள் மனஸ்ஸோடே கூடி –
மனஸ்ஸூ ஆத்மாவோடு கூடி -இருக்கிற இந்த செறிவாகிற திண்ணிய கதவை இந்திரியங்கள்
பாஹ்ய விஷயங்களில் போகாதபடி செம்மி –

மறை யென்றும் நன்கோதி —
யோகாத் ஸ்வாத்யாய மா மநேத் -யோகம் கை வந்தாலும் பிராமண பிரமேயங்களினுடைய சேர்த்தி அனுசந்திக்க வேணும் –

நன்குணர்வார் காண்பரே நாடோறும்-பைங்கோத வண்ணன் படி  ——
உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-(ஸ்ம்ருதி- நினைவு -அநு ஸ்ம்ருதி -தொடரும் நினைவு -த்ருவ அநு ஸ்ம்ருதி –விச்சேதம் இல்லாமல் அதே நினைவு -)
தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக உணர்ந்தவர்கள் நன்கு உணர்ந்தவர்கள் -ஆகிறார்
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி இப்படி யுணர்ந்தவர்கள் நாள் தோறும் காண்பார்கள் -(ஸதா பஸ்யந்தி ஸூரயா )

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற்பாரே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்–18-)

————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

ஸ்வாத்யாயோஸ் அத்யே தவ்ய -என்கிற விதியை அனுசரித்த்திக் கொண்டு –
அசேஷ ஜகத்துக்கும் ஹிதத்தை அநு சாஸிக்கை யாகிற நன்மையை யுடைத்தான வேதத்தை சக்ரமமாக ஓதி -(அங்கங்கள் உப அங்கங்களுடன் ஓதி )
ததர்த்த ஸ்ரவண ஜெனிதமாய்- -ஆத்ம பரமாத்ம விஷய பிரதானம் ஆகிற தாளை
பாஹ்ய விஷயங்களில் மனஸ்ஸூ ஒட்டாத படி உறைக்கக் கோத்து-
ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்திரியங்களும் தம் தாமுக்கு அடைத்த இருப்பிடமான ஸூபாஸ்ரயத்திலே செறிந்து-
நிற்கப் பண்ணுகை யாகிற பலிஷ்டமான கதவை -புகவிட்ட மனஸ்ஸூ புறப்பட இடம் அறும் படி
யோக- அப்யாஸத்திலே செம்மிப் பொகட்டு -இப்படி யோக ஜெனிதமான மனசாலே
த்யேய வஸ்துவை–பச்சை நிறத்தை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான திரு நிறத்தை யுடையனான-
சர்வேஸ்வரனுடைய ரூப குண விபூதி யாதிகளான ஸ்வ பாவங்களை -சதா பஸ்யந்தி -என்கிறபடியே-
இன்று ஒன்றோடு அன்றோடு வாசி அற எப்போதும் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-(இதிலும் காண அரியதே -காண்பரே -பிரிநிலை ஏவகாரம் )

இப் பாட்டிலும் கீழ் அறிய அரியன் என்றத்தை உபபாதித்தார் யாய்த்து –

(தாப்பாள் போட்டு  பின்பு கதவை சாத்த -மனஸ் அடக்கிய பின்பே -இதுவே தாழ்பாள் போடுவது -இது ப்ராதான்யம் என்பதால் இத்தைச் சொல்லி கதவவைச் சாத்துவது புலன்களை அடக்க வேண்டும்
இங்கு தான் ஸூபாஸ்ரய திருமேனி -2-61- பற்றி அருளிச் செய்கிறார்-கீழ் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் இந்திரியங்கள் மனசிலும் மனஸ் ஆத்மாவிலும் என்பதே உள்ளது

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –
எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –
குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் )

——————————————————————

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

(ஸ்ரீ த்ரிவிக்ரமனாய் உலகம் எல்லாம்-இவர்கள் அறியாமல் -பிரார்த்திக்காமல் – தனது பேறாகத் தானே தீண்டினானே)

படி வட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு ——–13-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்தில்,
உலகம் நீர் ஏற்று–பூமி தானம் வாங்கிக் கொண்டு
தாமரை படி வட்டம்–தாமரை மலர்ந்தாற் போலே வட்ட வடிவமாயிருக்கிற பூமியை
அடி வட்டத்தால் அளப்ப–திருவடி வளையத்தினாலே அளப்பதற்காக
மா காயம் ஆய் நின்றமாற்கு–பெரிய திருமேனியாய் (த்ரிவிக்ரமனாய்) வளர்ந்து நின்ற எம்பெருமானுடைய,-மால் -சர்வேஸ்வரன்
நீண்ட முடி வட்டம்–நீண்ட திருவபிஷே வளையமானது
ஆகாயம் ஊடு அறுத்து–மேலுலகங்களின் வழியாகச் சென்று
அண்டம் போய் நீண்டதே–அண்ட கடாஹத்தளவாக வளர்ந்த்தே! இஃது என்ன ஆச்சரியம்!

படிவட்டத் தாமரை –
பூ வலயம் ஆகிற தாமரைப் பூவை

(தாவி வையம் கொண்ட தடம் தாமரை அன்றோ -முற்றுவமை)

பண்டுலகம் நீரேற்று- அடிவட்டத்தால் அளப்ப —
அடி வலயத்தாலே அளப்ப –

நீண்ட -முடிவட்டம்- ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே-மாகாயமாய் நின்ற மாற்கு —
வடிவாலே பாரித்து வியாமோஹத்தை யுடையனானவனுக்கு திரு அபிஷேகமானது ஆகாசத்தை யூடறுத்து
அண்ட பித்திக்கு அவ் வருகே நீண்டது –

(ரஷ்யத்தின் அளவில்லாத ரக்ஷண பாரிப்பால் ஏழு உலகமும் அளந்தான்
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்த –நிவந்த நீள் முடியன் -திருவடியைச் சொல்லி திருமுடியை அங்கும் உண்டே)

———————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

முன்பு ஒரு நாளிலே லோகத்தை மஹா பலி பக்கலிலே சென்று நீர் ஏற்று வாங்கிக் கொண்டு பூ மண்டலம்
ஆகிற தாமரையைப் பாத வலயத்தாலே அளக்க -அண்ட கடாஹம் வெடிக்கும் படி விம்ம வளர்ந்த சர்வேஸ்வரனுக்கு
பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————————————————

அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ
அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –

(இந்திரிய ஜெயம் வேண்டுமானால் யோகம் கைவர வேண்டும் -யோகம் கை வந்தால் இந்திரிய ஜெயம் வரும் -அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வருமே என்ன கண்ணாலே காணலாம் படி அவனே இங்கே வந்து சந்நிஹிதனாய் இருக்க அவனைக் காணவே தானே எல்லாமே அமையும்-உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவுமே -ஸகல மனுஷ நயன விஷய தாங்கதன் -அர்ச்சையிலே ஆஸ்ரயிக்கலாமே என்கிறார் )

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

(பரமாத்மநி ரக்த விரக்த  அபராத்மநி -ஸமஸ்த ஸம்ஸார போகங்கள் போல் இங்கும் உறங்குவான் கைப் பண்டம் போல் நழுவுமே )

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள்  கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து –14-

பதவுரை

நாற்பால வேதத்தான்–நான்கு வகைப்பட்ட வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும்
வேங்கடத்தான்–திருமலையிலே நிற்கும் ஸௌலப்யமுடையவனும்
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளை யுடையவனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
பணிந்து–ஆஸ்ரயித்து
மால் பால்–அந்த ஸர்வேஸ்வரனிடத்திலே
மனம் சுழிப்ப–நெஞ்சு பொருந்த (அதனாலே)
மங்கையர் தோள் கை விட்டு–ஸ்த்ரீகளின் தோளோடே அணைய வேணு மென்கிற காமத்தைக் கை விட்டு
நூல் பால்–(வேதம் முதலிய) சாஸ்திரங்களிலே
மனம் வைக்க–மனம் செலுத்துவதற்கு
நொய்விது ஆம்–எளிதாகும்.

நாற்பால வேதத்தான் –
நாலு வகையான வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் -வேதைக சமைதி கம்யன்
கண்ணாலே காண்கிற சப்தாதிகளை அனுபவிப்பார்க்குக் காண அரிது இறே என்னில்

வேங்கடத்தான்–
கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படி திரு மலையிலே வந்து நின்றவனை -ஆகில்
கண்ணாலே காணப் படுகிற சப்தாதிகளோடு ஒக்குமோ என்னில் –

விண்ணோர் முடி தோயும்-பாதத்தான் –
இப்படி திருமலையில் நிற்கிறவன் -நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன்-

(அங்குள்ளவன் இங்கு வந்துள்ளான் என்கிறார் அல்லர் -இங்கு உள்ளவனைக் காண அங்கு உள்ளவர்களும் வந்து ஆஸ்ரயிக்கும் படி அன்றோ இங்கு உள்ளான்)

பாதம் பணிந்து —
அவன் திருவடிகளிலே பணிந்து –

மாற்பால் மனம் கழிப்ப —
வியாமுக்தனாய் இருக்கிறவன் பக்கலிலே மனஸ்ஸூ சுழிக்க

(நாராயணன் -இத்யாதி -பதங்கள் இல்லாமல்- மால் -பித்தன் -ஏற்கனவே நம்மை அடைய க்ருஷி பண்ணி உள்ளம் புகுந்து -அத்வேஷம் போகும் அவகாசம் எதிர்பார்த்து உள்ளவன்)

மங்கையர் தோள்  கை விட்டு-
நரகத்திலே மூட்டக் கடவதான ஸ்த்ரீகளுடைய தோள்களைக் கை விட்டு (நாசமான பாசம் விட்டு )

நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்–
பிரமாணங்களிலே அல்பம் மனஸை வைக்க எளிதாம் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-42–

——————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

நாலு வகைப்பட்ட வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய் -இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகாதே
கண்டு அனுபவிக்கலாம் படி -திரு மலையிலே வந்து -நிற்கிற ஸுலப்யத்தை யுடையனாய் –
இப்படி ஸூலபனான நிலை தன்னிலே நித்ய ஸூரிகளும் திருவடிகளிலே தலை மடுத்து ஆஸ்ரயிக்கலாம் படி
பெரிய மேன்மையை யுடையனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து சர்வேஸ்வரன் பக்கலிலே மனஸ்ஸூ பிரவணமாக-
போக யோக்கியமான பருவத்தைக் காட்டி துவக்கக் கடவ ஸ்த்ரீகளுடைய தோளோடு அணைந்து அனுபவிக்க வேணும் என்னும்
நசையை சவாசனமாக விட்டு வேதாதி ஸாஸ்திரங்களில் மனஸை வைகைக்கு எளிதாம் –

(இங்கு உள்ளவன் ஸ்ரீ வைகுண்ட விரக்தனாய் வந்தமையை சொல்ல வில்லை -இங்கேயே வந்து அவர்கள் ஸுலப்யம் அனுபவிக்க வந்துள்ளார்கள் அன்றோ -கண்ணாவான் விண்ணோர்க்கும் வெற்பு அன்றோ)

———————————————————

அவனாலே ஸ்வயம் வரிக்கப் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது –

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள்  மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பதவுரை

பணிந்து உயர்ந்த–தாழ்ந்தும் எறியும் வீசுகின்றவையான
பௌவம் படு திரைகள்–கடலிலுண்டான அலைகளானவை
மோத–நாலு பக்கமும் அடிக்க,
பணிந்த–(அத் திவலைகள் திருமேனியில் படாதபடி குடை பிடித்தாற்போலே) கவிந்திருக்கிற
பணம்–படங்களிலுண்டான
மணிகளாலே–மாணிக்கங்களினாலே
அணிந்த–அலங்கரிக்கப்பட்டிருக்கிற
அனந்தன்–திருவனந்தாழ்வானாகிற
அணை–திருப் பள்ளி மெத்தையிலே
கிடக்கும்–திருக் கண் வளர்ந்தருளாகிற
அம்மான்–ஸர்வேஸ்வரன் (அந்தப் படுக்கையிற் பொருந்தாதே)
அங்கு–அங்கு நின்றும்
வந்து –புறப்பட்டு வந்து
அடியேன்–அடியேனுடைய
மனம் அணை–மனமாகிற படுக்கையில்
கிடக்கும்–சயனித்திரா நின்றான்

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத-
(பகவத் தர்சன அபி நிவேசத்தால் )தாழ்வது கிளறுவதான கடல் திரைகளை மோத-

மோத என்கிறது –
குறும் திவலை படிலும் திருமேனியிலே ஒரு மலை விழுந்தால் போலே இருக்கை -(ஸுகுமார்ய அதிசயம் இருந்த படி )

மோத பணிந்த பண மணிகளாலே —
அத் திவலைகள் திரு மேனியில் படாத படி காத்த பணத்தின் மணிகளாலே

அணிந்த -அங்கு-அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் –
அதினாலே அலங்க்ருதனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கிடக்கிற சர்வேஸ்வரன்

(ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலம் கொண்டவன் அன்றோ அநந்தன்)

அடியேன்-மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —-
அப் பெரிய படுக்கையிலே கிடக்குமவன் பரியவும் அறியாதே
அப் படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே இருக்க
வந்து என் மனசிலே தங்கா நின்றான் -எங்கே தங்குமவன் எங்கே தங்கா நின்றான்
கிடக்க ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே –
திரு அயோத்யையில் உள்ளார் அவனைச் சரணம் புக்குக் கிடக்க –ஆவாசந்த்வஹம் இச்சாமி என்று இருந்தால் போலே –

(ரிஷிகள் ஆஸ்ரமம் தேடி பெருமாள் வந்தது போல்)

————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

ஸ்வ சந்நிதானத்தாலே மேலே கிளர்ந்தும்-கீழே விழுந்தும் செல்லுகிற கடலில் உண்டான அலைகள் ஆனவை
நாலு பாடும் கண் பாராமல் அலைக்க-அத் திவலைகள் திரு மேனியில் படாத படி குடை பிடித்தால் போலே
கவிந்து இருக்கிற பணா மண்டத்தில் உண்டான மாணிக்கங்களாலே அழகு பெற அலங்கரித்திக் கொண்டு
இருக்கிற திருவனந்த ஆழ்வான் ஆகிற திருப் பள்ளி மெத்தையில் பள்ளி கொண்டு அருளா நின்றுள்ள
சர்வேஸ்வரன் அந்த படுக்கையில் பொருந்தாதே அங்கு நின்றும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
வந்து அநந்யார்ஹ சேஷ பூதனான என்னுடைய மனஸ்ஸூ ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு அருளா நிற்கும் –

(அநந்யார்ஹ சேஷத்வம் -சம்பந்த சாமான்யம் -அதிகாரி ஸ்வரூபம் -இசைவே வேண்டுவது)

————————————————————-

இப்படி வந்து தங்குகைக்கு அடி பிராட்டியோடே இருக்கை என்கிறார் –

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று   —-16–

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–ஒப்பற்றஅழகிய இதழ்களை யுடைய தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாக ஆகப்பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா –
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

அழகிய அல்லியை யுடைத்தான தாமரையை இருப்பிடமாக யுடையளாய் -நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார்
அமிருத மதன சமயத்திலே நிற்கிற தேவர்களை மதியாமல் சென்று -இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி
வர்த்திக்கும் படியான அழகிய திரு யுடைத்தான திரு வல்லிக் கேணியிலே தங்கினவன் எனக்கு ஸ்வாமி –

(திருக்கண்ண மங்கை அபிஷேக வல்லித்தாயார் -சந்நிதியில் தேன் கூடாக இன்றும் உண்டே)

ஒரு வல்லித் தாமரையாள் -சென்று- ஒன்றிய சீர் மார்வனாய் -வெண் திரைகள்–வந்துதித்த-செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்கான -திருவல்லிக் கேணியான்   –எந்தை-என்று அந்வயம் –

———————————————————————–

அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது
அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

முன்பு உள்ள நாள் இந்த நாள் பலிக்க காரணமானதால் அவையும் நல்ல நாள்

அவள் புருஷகார பலத்தால் அவனே நம்மை ஸ்வீ கரித்த ஒன்றை அறிந்த பின்பு எல்லாமே வாழ் நாளாகுமே
செங்கண் மால் -சர்வேஸ்வரனே -எங்கள் மால்–வ்யாமுக்தன் ஆனபின்பு – என்று அறிந்த பின்பு எல்லாமே வாழும் நாள்களாகும்
அறியாமல் இருந்தால் பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழ வேணுமே

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணை யடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

பதவுரை

என்றும் இறவாத எந்தை–ஒருநாளும் அழிவில்லாதவனான எம்பெருமானுடைய
இணை அடிக்கே–உபய பாதங்களுக்கே
ஆள் அய்–ஆட் பட்டு
மறவாது–மறவாமல்
என் வாய் வாழ்த்துக–என் வாய் வாழ்த்த வேணும், (இங்ஙனேயாகில்)
சென்ற நாள்–கீழ்க் கழிந்த காலங்களும்
செல்லாத–இனி மேல் வரப்போகிற நாள்களும்
செங்கண் மால், எங்கள் மால் என்ற நாள்–‘புண்டரீகாக்ஷன் நம்மிடத்து வியாமோஹ முடையனாயிருக்கிறான்‘
என்று சொல்லப் பெற்ற நிகழ் காலமுமாகிய
எந்நாளும்–எல்லாக் காலங்களும்
நாள் ஆகும்–நல்ல காலமே யாகும்.

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் —
சர்வேஸ்வரன் என் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் என்று அறிந்த நாள்
கழிந்த நாள் -வரக் கடவ நாளான எல்லா நாளும் நல் விடிவாம் -இந் நாள் வரும் படி கழிந்த நாள் ஆகையால்
போன நாளும் அழகிது -மேல் விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பெறுகையாலே வரும் நாளும் அழகிது –

(அத்யமே சபலம் ஜென்ம -அக்ரூரர் மகிழ்ந்தது போல் ஆகுமே)

என்றும்-இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் —-
ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இன்றிக்கே ஒழியும் உறவு இன்றிக்கே
நித்யனான பிதாவினுடைய வாக்கானது விச்சேதம் இன்றிக்கே வாழ்த்துக –

(வாக் -மானஸ காயிக -அனைத்துக்கும் உப லக்ஷணம்)

(ஆகாசம் கங்கை நீர் -மணல் எண்ண முடியாதது போல் பிறவிகளை எண்ண முடியாதே
இவன் தானே இறவாத எந்தை)

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் அந்தக் கண்ணாலே குளிர நோக்கி நம் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் -என்னும்
அறிவு பிறந்ததொரு நாள் யுண்டானால் -இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு கழிந்த நாள்களும்
இப் பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு மேல் வரக் கடவ எல்லா நாள்களும்
அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இல்லையாய் இருக்கை அன்றிக்கே
பூதா நாம் யோ அவ்யய பிதா -என்கிறபடியே
சர்வ காலத்திலும் அழியாத என் பிதாவானவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளுக்கே அடிமையாய்க் கொண்டு
என்னுடைய வாக் இந்த்ரியமானது விஸ்ம்ருதி பிரசங்கம் இன்றிக்கே ஏத்துவதாக –

———————————————————————————————–

உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

(அனுக்ரஹம் இருந்தால் பிறவிக்கும் அஞ்ச வேண்டாமே -பிறந்த இடத்தில் அச்சம் இல்லாமல் தாண்டுவோம் என்கிற நிச்சய புத்தி இருக்குமே

ஸம்ஸாரத்தில் இருக்க கைங்கர்யத்துக்கு விச்சேதம் வருமே என்று அஞ்சி இருக்க -உனது அருள் கிட்டினால் அஞ்ச வேண்டாமே -என்றபடி)

(அடியேன் என்றுமே உடைமை பூமியைப் போலே -இசைவே வேண்டுவது -வஸ்து ஸ்திதிக்கு உள்ளே உறைந்தே இருப்பான் –
இசைந்த அன்று உவந்த உள்ளத்தனாய் கருடா வாஹனுமாயும் பரிஜன பத்னீ மார்கள் உடன் சேவை சாதிப்பானே)

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் —18-

பதவுரை

வாமனன் ஆய்–வாமந ரூபியாகி
மாவலி பால்–மஹாபலியினிடத்தில் (சென்று)
வாய் மொழிந்து–(மதுரமான சில) வாய்மொழிகளைச் சொல்லி
மூ அடி மண்–மூவடி நிலத்தை (இரந்து பெற்று)
அளந்து கொண்ட–அதை அளந்து கொண்ட
நெடு மாலே–ஸர்வேஸ்வரனே!-வ்யாமோஹனே என்றுமாம்
எஞ்சா–சுருங்குதலின்றி
தாவிய–ஸர்வ வ்யாபியான
நின் இணை அடிக்கே–உனது உபய பாதங்களுக்கே-அநந்யார்ஹ சேஷ பூதன் என்று -இணை அடிக்கே -ஏவ காரம் –
ஏழ் பிறப்பும்–எல்லா பிறவிகளிலும்
ஆள் ஆகி–நான் ஆட்பட்டவனாகி
அஞ்சாது இருக்க–பயங்கெட்டிருக்கும் படி
நீ அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

வாய் மொழிந்து வாமனனாய் —
ஸ்ரீ வாமனனாய் -மாவலீ மூவடி மண் தா -என்று அருளிச் செய்து

மாவலி பால்-மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே —
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே

தாவிய நின்-எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க வருள் —
திரு உலகு அளந்து அருளினவனுடைய கல்யாணமான திருவடிகளிலே நிர்ப் பயனாய்
காலம் எல்லாம் அடிமை செய்து இருக்கும் படி அருள்

ஒவ்க்ஷதத்தை சேவித்தான் ஒருவன் தனக்கு பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கை கொடா நின்றான் இறே –
அவனுடைய அருள் பெற்ற வன்றே சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே —

(தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —பெரிய திருமொழி-11-8-3-)

—————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

சர்வாதிகனான நீ ஸ்ரீ வாமனனாகி ஆஸூர பிரக்ருதியான அவன் இரங்கும் படி -கொள்வன் நான் -என்றால் போலே
சில முக்த ஜலப்பிதங்களைப் பண்ணி -மஹா பலி பக்கலிலே சென்று மூன்றடி மண்ணை அபேக்ஷித்து
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே –
வகுத்த சேஷியான உன்னுடைய அநாயாசேன ஜகத்தை அளந்து கொண்டதாய்
அசங்கோசமான அழகை யுடைத்தாய் பரஸ்பர சத்ருசமான திருவடிகளுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும் அடிமை செய்து
இவ்வடிமைக்கு அழிவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே நிர்ப்பரனாய் இருக்கும் படி பண்ணி அருள வேணும்
நெடுமால் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தன் என்னவுமாம் –

(அறிவு இல்லா விட்டால் பிறவி பயங்கரம் -துக்க கரம் ஆகும்
அறிவு வந்தால் பிறவு சுக கரம் என்று இல்லை-பயங்கரமாய் இருக்காது என்பதே அர்த்தம்)

—————————————————-

அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க –
நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து
உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ
என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே –
நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

(தகுதி இன்மை -கர்ம வல் வினைகள் உண்டே -அவனுக்கும் மலை பேர்ப்பது போல் அன்றோ செய்ய வேண்டியது என்று கவலை வேண்டாமே
அவனது அகடிகடநா சாமர்த்தியம் கண்டு -அங்க ஹீந பிள்ளை பக்கல் தாய் முந்துற பரிவாள் அன்றோ
ஆகவே நமக்கே முன் அனுக்ரஹம் அருளுவான் -)

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம் மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

பதவுரை

இருளாத சிந்தையர் ஆய்–அஜ்ஞானவிருள் சேராத நெஞ்சை யுடையாய்க் கொண்டு
சே அடிக்கே–திருவடிகளுக்கு
செம் மலர் தூய்–நல்ல புஷ்பங்களை ஸமர்ப்பித்து
கை தொழுது–அஞ்ஜலி பண்ணி
முந்தையர் ஆய் நிற்பார்க்கு–‘நான் முன்னே நான் முன்னே‘ என்று நிற்கும் பக்தர்களுக்கு,
முன் அன்று–முன்பொரு காலத்தில்
தெருளாத பிள்ளை ஆய்–அறியாத சிறு குழந்தையாய்
ஆல் இலை மேல் சேர்ந்தான்–ஆலந்தளிரில் சயனித்த பெருமான்
அருளாது ஒழியுமே–கிருபை பண்ணாமற் போவனோ?

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று-தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் —
ஆலிலையிலே சேர்ந்து வியாமுக்தனான பிள்ளை நமக்கு அருளாது ஒழியுமோ

இருளாத-சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது-முந்தையராய் நிற்பார்க்கு முன் —
இருளாத சிந்தைகளை யுடையராய் திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு கைகளால் தொழுது
முற்பாடராய் இருக்கிறவர்களுக்கு முன் –

அருளாது ஒழியுமே-
முன்னே அருளானோ –

——————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து
உபேக்ஷித்தல் அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ
என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே –
நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

பகவத் விஷயத்தில் அஞ்ஞான ஏக தேசமும் ஊடு கலசாத ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு சிவந்த திருவடிகளிலே
அழகிய செவ்விப் பூக்களை அடைவு கெடப் பணிமாறி -கைகளால் அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்து
முற்பாடராய் இருக்கிற அதிகாரிகளுக்கு முன்னே -ஜகத்து பிரளயத்தில் அழிய புக்க வன்று  ஒரு பவனாய்
இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே அறிவு கலசாத முக்த சிசுவாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளின
அகடிகடநா சமர்த்தன் அருளாது ஒழியுமோ —
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அகடிகடநா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

(பாலன்  தனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —ஸ்ரீ முதல் திருவந்தாதி–69-)

——————————————————-

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் அன்றோ என்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரருக்கே கார்யம் செய்து அருளியவன் அநந்ய ப்ரயோஜனராய் உள்ள நமக்கு அருளாது ஒழியுமோ
கீழ் தகுதி இல்லாத நமக்கும் அருளியே தீருவான் என்றார்
ஸ்ரத்தை ஒன்றே அதிகாரம் – -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -என்று அன்றோ இவர்களுக்கும் உபகாரம் செய்து அருளினான் அன்றோ

கீழ் பிரார்திக்கத் தெரியாத உலகை உண்டாய் -இங்கு பிரார்த்தித்த இந்திரனுக்கு கார்யம்
இரண்டும் இல்லாத அநந்ய பிரயோஜனான -அநந்யார்ஹ சேஷ பூதனான எனக்கு உதவாமல் போவானோ என்கிறார் )

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

பதவுரை

முன்–முன்பொரு காலத்தில்
உலகம்–உலகங்களை யெல்லாம்
உண்டு–திரு வயிற்றிலே வைத்திருந்து
உமிழ்ந்தாய்க்கு–பிறகு வெளிப்படுத்தின உனக்கு
அவ் வுலகம்–அந்த வுலகங்களை
பின்–பின்பொருகாலத்தில்
ஈர் அடியால்–இரண்டு திருவடிகளாலே
அளந்து கோடல்–அளந்து கொள்வதானது
பெரிது ஒன்றே–பெரியவொரு காரியமாகுமோ?
திருமாலே–திருமகள்  நாதனே!
செம் கண் நெடியானே–சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வாதிகளே!
எங்கள் பெருமானே–எமக்கு ஸ்வாமியானவனே!
நீ இதனை பேசு–நீ இதை (எனக்குத் தெரிய)ச் சொல்ல வேணும்,
என்னே–இஃது என்னோ?

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே —
உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட இந்த லோகம் தன்னையே
பெறாது பெற்றாயாக அளந்து கொள்கை -இது பெரியது ஒன்றே

என்னே-திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ யிதனைப் பேசு —
உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும் -என்னே-எங்கே- சேர்த்தி யுண்டு
நீ இத்தைச் சொல்ல வேணும் என்று -எத்திறம் என்கிறார் –

பருத்தி பன்னிரண்டு படுகை யாவது
1-கொட்டை வாங்கி -2-பன்னிச் சுருட்டி –3-நூலாக்கியும்
4-பாவோடி –5-நெய்து –6-மடித்து –7-விற்று -8-பொகட்டும் படியும்
9-தோய்த்து –10-உலர்த்தி –11-உடுத்து –12-கிழித்து விடும்படியும்-

ஈஸ்வரன் தன்னில்
1-விபக்தமாக்கி
2-பஞ்சீ க்ருதமாக்கி
3-அண்டமாக்கி
4-தேவாதி சரீரங்கள் ஆக்கி
5-லோக வ்யவஸ்த்திதி உண்டாக்கி
6-அவாந்தர ஸ்ருஷ்டியைப் பண்ணி
-ரஷித்து
7-ப்ரஹ்மாதிகளுக்கு ஆக்கி
8-பிரளயத்திலே எடுத்து
9-எயிற்றிலே வைத்து
10-வயிற்றிலே வைத்து
11-உமிழ்ந்து
12-பின்பு சம்ஹ்ருதம் ஆக்கியும்
செய்த படிகளைக் கண்டு கொள்வது-

——————————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் அன்றோ என்கிறார் –

முன்பொரு காலத்தில் ஜகத்தை எல்லாம் திரு உதரத்திலே எடுத்து வைத்து புறப்பட விடுவதாய்ச் செய்த உனக்கு
இப்படி இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமான (உண்டதும் உமிழ்ந்ததும் போல்வன )அந்த லோகத்தை
பின்பு ஒரு நாளிலே இரண்டு திருவடிகளால் அளந்து கொள்கையான இது ஒரு பெரிய செயலாகச் செய்தாயோ –

ஸ்ரீ யபதியாய் அவளோட்டைச் சேர்த்தியாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
ஒருவராலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையையாய்-
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -நீ இத்தை அருளிச் செய்ய வேணும் –

இந்திரன் பல் காட்டினது பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –

(விஷ்ணு பக்தி பரோ தேவா -இதுக்காகவாவது நம்மிடம் வந்தானே -என்ன உதாரன் என்று கொண்டாடினாயே)

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி-தனியன் -அவதாரிகை – பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 10, 2016

ஞான தர்சன பிராப்தி -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -இடை கழி -உள்ளே சாதனாந்தர பரர் மிருகண்டு மஹரிஷிகள்
வெளியில் பிரயோஜனாந்தர பரர்கள்
இரண்டு விளக்கு -இருவரும் ஏற்ற -வருத்தும் புற இருள் -அஞ்ஞானம் – இறைவனைக் காண இதயத்து இருள் வாசனை ருசிகள் அனைத்தும் போக
இவர் -மன்னிய பேர் இருள் மாண்டபின் -மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பாலேய் தமிழர் -பெரும் தமிழன் நல்லேன்
அன்பு ஆர்வம் இன்பு மிக்கு -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இறைவனைக் காண இதயம் -வி ஸூத்தமான மனஸ்
ஞான அனுதயம் -விபரீத ஞானம் -மயர்வு அற -தேஹாத்ம அபிமானம் நீங்கி -ஸ்வ தந்திர தேவதாந்த்ர தேவதாந்த்ர உபாயாந்தர ப்ரயோஜனாந்தர அல் வழக்குகள் போக்கி –
அவிவிவேக துக்க வர்ஷம் போக்கி -ஆதித்ய வத் ஞானம்
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து -நல் தமிழால் நாட்டை உய்வித்த பெற்றிமையோர் முதல் ஆழ்வார்கள் –

மன்னிய பேர் இருள் -வெளி -உள் -அநாதி வாசனை ருசி -மாண்ட பின் –மாயனைக் கண்டமை காட்டி அருளியவர்-

காரண கார்ய பாவம் மூவருக்கும் உண்டே
ஞானம் -மதி காரணமாய் இருக்க- பக்தி நலம் பிறக்கும் -இவை இரண்டுமே காரணமாக – விளை நீராக சாஷாத்காரம் கிட்டும்

உபய விபூதி நாதன் -அவனே நாரணன் -அவனே ஸ்ரீ யபதி -நம் திரு உடை அடிகள் -என்று சாதிக்க வழி -மூவரும் காட்டி அருளி –
ஞான பக்தி சாஷாத்காரங்கள் -ஒண் சங்கு கதை வாள் -மூவரும்
ஸ்ரீ ரெங்கத்தில் முதல் ஆழ்வார் ஸந்நிதியில் கதவில் இவை இன்றும் சேவிக்கலாம்

————–

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த  சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

(ஓரா நெஞ்சு என்னும் உத்கண்ணால் அனுசந்தித்து
சீர்மை -ஸ்ரீ யபதியை சாஷாத்கரித்த சீர்மை
உணர்ந்த நெஞ்சு உகந்து பேச வேண்டுமே -)

பரபக்தி பர ஞான பரம பக்தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –
ஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி-தத் ஏக தாரகராய் -(வாஸூ தேவனே போஷக போக்ய தாரகம் -சர்வமுமாகக் கொண்டவர் )
லோக யாத்திரையில் கண் வையாதே அலௌகிகராய் வர்த்திக்கிற முதல் ஆழ்வார்களில் –
மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் –
அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்

(பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே–பெரிய திரு -2-10-8)

அதனுள் —
ஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படியான மாடங்களை யுடைத்தாய் –
அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற திருக் கோவலூர் என்றபடி –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் — வூர் -தானுகந்த வூர் –
பின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற
நீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி

இப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே
புற இருளும் இதயத்து இருளும் -போனவாறே –

காரார் கரு முகிலைக் காணப் புக்கு –
மழை முகிலே போல்வானான -அவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு —
புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு
உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –

(வாரணங்கொள் இடர்க் கடிந்த மாலை நீல மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக் கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே-பெரிய திருமொழி -2-10-10.)

காணப் புக்கு –
அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு -(அன்பு கூறும் அடியவர் முதல் ஆழ்வாருக்கு கலியன் பெயர் சூட்டுக்குகிறார் )

அதனுள் காரார் கரு முகில்–
குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –
காரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —
காள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு
மூவரை ஒழிய மற்று ஆர் என்று ஆராயும் இடத்து –என்றுமாம் –
ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு

ஓரா –
திரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி
ஓர்ந்து –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ் வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த

சீரான் கழலே –
இப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ஸ்ரீயை யுடையரான ஸ்ரீமானுடைய ஸ்ரீ பாதங்களே
மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –

உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து –
அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்–யத்தி மனஸா த்யாயதி தத் வாசா வததி இறே –

நெஞ்சே உகந்து –
இப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து
உகந்து பணி செய்து -என்னுமா போலே
தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே

(உற்றேன் உகந்து பணி செய்தேன் போல் இங்கும் உகந்தே ததீய வாசிக கைங்கர்யம்)

சீரான் என்று பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –

இத்தால் பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்
அவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –

——————————————————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -அவதாரிகை –

உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்-
திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

(காரண கார்ய பாவம் மூவருக்கும் உண்டே
ஞானம் -மதி காரணமாய் இருக்க- பக்தி நலம் பிறக்கும் -இவை இரண்டுமே காரணமாக – விளை நீராக சாஷாத்காரம் கிட்டும்)

—————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை உரை -அவதாரிகை-

பகவத் பிரசாத லப்தமான பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் –

(அறிந்தால் போதாதே அதுக்கும் மேல் ஆசையும் ஆர்வமும் வர வேண்டும்-ஞான விகாசமான பக்தியாலேயே அடைய முடியும் -முதிர்ந்த நிலையான ஞான விசேஷத்தாலே -பர பக்தி ரூபாபன்ன ஞான விசேஷத்தாலே-பேறு )

ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி –வையம் தகளி கேட்க்கையாலே
பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –

(அறிகை நிலையில் கீழ் -காண்கை இங்கு -அறிவுக்கு விஷயமாக 10 விஷயம் சொத்து -அடுத்து விஸ்வரூபம் காட்டியது போல் –
அங்கும் வெறும் ஞான விசேஷம் இல்லை -பக்தியைப் பற்றியே -அறிவைக் கொண்டு முயற்சிக்கலாம் -பக்தனுக்கே அவன் தன்னைக் காட்டுகிறான்
காட்டவே கண்டார் திருப் பாண் ஆழ்வார் –
பக்தியை வளர்க்கவே ஸ்வரூபாதிகளை அறிவித்து தன்னையும் காட்டி அருளுகிறார்
கண்ணையும் கொடுத்து காட்சியும் அருளுகிறான் அன்றோ)

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே- பகவத் பிரசாதம் அடியாக- தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி

(முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீக்கித்
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம புத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து — -முனியே நான் முகனே -பரம பக்தி நிலை -சேர்ந்த பின்பே )

அத்தாலே கடலைக் கண்டவன் (ஆழி வண்ணனைக் கண்டவர் )-அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தர்யாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

(1-பெரும் புறக்கடலை –2- அடல் ஏற்றினை –3- பெண்ணை ஆணை –4- எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை —
4-முத்தின் திரள் கோவையைப் -5-பத்தராவியை –நித்திலத் தொத்தினை -6-அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–பிருஹத் பஹிர் சிந்து -திருக்கண்ண மங்கை-அரு சுவை-ஆறு சுவைகள் )

உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் –
அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
(மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை
காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

(ஆசை காண்கை அனுபவிக்கை -மூன்றும் மூவர் நிலைகள் -அந்தமில் பேர் இன்பத்து கூடி இருக்கை -பரம பக்தி அறிகை காண்கை அடைகை என்றுமாம்-சஞ்சாயதே வா ஸம் த்ருஷ்யதே வா அதி கம்யதே –பராசரர்-திருவோணத்தில் ஏற்றிய விளக்கு முதல் -வெளி இருள் போக்க
உள் இருள் நீங்க அவிட்ட நக்ஷத்திரத்தில்
மன்னிய பேர் இருள் நீங்கியதால் கண்டமை பேசுகிறார் )

———————————————————————

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

(ஐந்து கண்டேன் -அர்த்த பஞ்சகம் போலும்–தத் த்வம் அஸி ஸ்வேத கேது ஒன்பது தடவை சொல்லி -கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -நம்மை எல்லாம் கூட்டிக் கொண்டு -போல்-இன்று கண்டேன் இன்று உயர்ந்தேன் அமுதனார் -இன்று என்னைப் பொருளாக்கி தன்னுள் வைத்தான் -இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்று யாருக்கு காட்ட திரு உள்ளம் கொண்டானோ அன்று அவருக்குக் காட்டி அருளுகிறான் -திருவிலே உபக்ரமம் உப ஸம்ஹாரம் -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு என்றும் )

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

பதவுரை

இன்று–எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்ற இப்பொது
என் ஆழி வண்ணன் பால்–கடல் வண்ணனான எம்பெருமானிடத்திலே
திரு–பெரிய பிராட்டியாரை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்,
பொன் மேனி–அழகிய திருமேனியையும்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
திகழும்–விளங்குகின்ற
அருக்கன்–பால ஸூர்யன் போன்று
அணி–உஜ்வலமான
நிறமும்–ப்ரகாசத்தையும்–வண்ணத்தைச் சொல்லாமல் ஒளியைச் சொன்னவாறு
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
செரு–யுத்த பூமியிலே
கிளரும்–பராக்ரமங்காட்டுகின்ற
பொன் ஆழி–அழகிய திருவாழியையும்
கை–திருக்கையில்
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
புரி சங்கம்–வலம்புரிச் சங்கையும் (மற்றொரு திருக்கையிலே)-புரிந்து பார்க்கும் -புரிதல் வளைந்து- கூனல் சங்கு
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்.

(திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திரு மங்கை தன்னொடும் -செய்யாள் -ஹிரண்ய வர்ணாம் -பகைத்-தொடை -இணைத் தொடை -ஆழி வண்ணம் அனைத்தும் அவன் திருமேனியில் உண்டே -ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச- மதிப்பால் பொன் மேனி -)

திருக் கண்டேன்–
தர்மம் தன்னைக் கண்டேன் –

(தர்மி அவன் -இவள் ஸ்வரூப நிரூபக தர்மம் -அவன் தன்மையாகவே -இதம் இத்தஞ்ச என்று அறிவிக்கும் தர்மமே இவள் )
அஹம் நான் இவன்-அஹம் த்வம் அஹந்தா -நானாக தன்மை

பொன் மேனி கண்டேன்–
அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –

(இருவர் ஒளி சேர்ந்து -தங்கத்தின் பெருமை தங்க ஒளி கலந்து -லோக விஜாதீயம்-

இது எப்படி என்று தேடிப் பார்க்க பால ஸூர்யன் ஒளி -இருளின் ஒளியும் வெளிச்சமும் சேர்ந்தால் போல் -என்று சொல்லலாம் படி
சமுதாய சோபை பொன் மேனி ஸுந்தர்யம் -நீல மேனி ஐயோ -நீலமாக ஸ்ப்ருஹணீயமாய்
மேல் அவயவ சோபை லாவண்யம்)

செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்–
அஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்கிறபடியே திரு வாழியைக் கண்டேன் –

(இவருடைய திருப்பல்லாண்டு இருக்கிற படி)

புரிசங்கம் கைக் கண்டேன்-
ப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே(ராமாயணத்தில் வளைந்த பணிந்த -இளைய பெருமாளை போல் )

என்னாழி வண்ணன் பால் இன்று —–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்(திரு பிரபா -ஆஸ்ரயம் ப்ரபாவன் -பாஸ்கரேன ப்ரபா இவா -)
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் —
செருக்கிளரும்–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று —-
கடலிலே இறே பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –
இன்று -அவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –

——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை உரை

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

உனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே
ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி
பிரதானையான பெரிய பிராட்டியாரைக் கண்டேன்

(“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ)

(பரத்வாதி பஞ்ச பிரகாரங்களில் இவளே அவனுக்குத் தர்மம்
வடிவுடை மாதவன் வைகுந்தம் –பெரிய பிராட்டியாரும் நிழல் போல்வனர் இருவரும்
திரு மால் திருப்பாற்கடல் -வ்யூஹ நிலையிலும்
மைதிலி தன மணவாளா -விபவத்திலும்
அரவிந்தப்பாவையும் தானும் -மாதவன் கோயில்
திருமாலை சிந்தனையில் -அந்தர்யாமி
திருவாளன் திருப்பதி திருவரங்கம் -அலர் மேல் மங்கை உறை மார்பா – திரு மா மகள் மருவும் சிறு புலியூர் சல சாயனத்து அரு மா கடல் அமுதே –அர்ச்சாவதாரத்திலும்
அவளே ஸ்வரூப நிரூபக தர்மம்)

அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்

மரகத கிரியிலே-(பச்சை மா மலையிலே-)உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பால அர்க்கனைப் போலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி
விளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –

இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
யுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி
பொன் போலே நிறத்தை யுடைத்தான திரு வாழியைக் கண்டேன் –

திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி
வழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –

இன்று நிர்ஹேதுகமாக-என்னவுமாம்
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும்
ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் -(நமஸ் நமு -ப்ரஹ்வீ பாவத்தை- தாது ரத்தத்தால் காட்டும் )

—————————————————————-

கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று -(அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் )

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

(கீழ் ஆழி வண்ணன் என்றவன் திருவைக் கண்டு -ஸ்வீ கருத்து -கொண்டு திருமால் -அன்று அம்ருத மதன காலத்தில்
அவள் இருக்க இன்றே கழல் கண்டேன் -அதன் பலன் மேல் வயலாழி மணவானைப் பெற்றேன் -பெற்றதுவும் பிறவாமை பெற்றேன் -போல்இவரும்-
பேசிற்றெ பேசும் ஏக கண்டர்கள் -கீழ் அனுபவம்-அதுக்குத் தடை வரும் படி அன்றோ ப்ரக்ருதி -திருவடி பாஸ்கரன் இருக்க இருள் இருக்குமோ என்கிறார் )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

பதவுரை

பொன் தோய்–பொன் மயமான பூஷணங்கள் சேரப் பெற்றதும்
வரை–மலை போன்றதுமான
மார்பில்–திருமார்பில் (சாத்தப்பட்டிருந்த)
பூந்துழாய்–திருத்துழாயை
அன்று–கடல் கடைந்த வக்காலத்தில்
திரு–பெரிய பிராட்டியார்
கண்டு கொண்ட–அநுபவிக்கும்படியாக பெற்ற-அமுதினில் வரும் பெண்ணமுதம் கொண்டானே
திருமாலே–லக்ஷமீ நாதனே!
என் மனம்–அடியேனுடைய மனமானது
உன்னை–உன்னிடத்தே
மருக்கண்டு கொண்டு–பொருத்தப் பெற்றதனால்-மருவிக்கண்டு கொண்டு -விடாமல் பிடித்து சேவிக்கப் பெற்றேன்
யான் –அடியேன்
இன்றே–இன்று
கழல்–உனது திருவடிகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்,
ஏழ் பிறப்பும்–ஜந்ம ப்ரம்பரைகளை யெல்லாம்
அறுத்தேன்–(இனி மேல் தொடராதபடி) ஒழித்திட்டேன்

மருக்கண்டு கொண்டு-பொருந்தி உன்னைப் பெற்றது -மருவிக்கண்டு கொண்டு -விடாமல் பிடித்து சேவிக்கப் பெற்றேன்

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்–
பிரதிபந்தகம் போயிற்று என்று தோற்றும்படி யாயிற்று –
(பாத தர்சனம் பாப விமோசனம்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறப்பும்
கைங்கர்யம் செய்யப் பெறுவேன் ஆகில் பெறுவேன் -ஆண்டாள் )

பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே —
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதியை –

(திவ்ய மால்ய அம்பர தராம் பூஷண பூஷிதாம் பஸ்யதாம் சர்வ தேவானாம் -யயவ் வக்ஷஸ்தல ஹரவ் –

பெண்கள் கோஷ்ட்டியில் இவள் மார்பில் ஏறி அமர வெட்கப்பட வேண்டாமே-திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற திருமங்கை )

உன்னை-மருக்கண்டு கொண்டேன் மனம் —–
ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு போகை யன்றிக்கே
உன் பக்கலிலே மருவிற்று என் மனஸ் ஸூ —

(பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் ஆன பின்பு-மனஸ் மருவச் சொல்ல வேணுமோ )

————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

பொன் தோய்ந்த மலை போலே ஒளி பெற்று சிக்கென்று பரந்து ஸ்லாக்யமான திரு மார்பில் சாத்தின அழகிய
திருத் துழாயை யுடையனாய் -அம்ருத மதனம் பண்ணின அக் காலத்தில் –
தரித்ரன் நிதியைக் கண்டால் போலே பெரிய பிராட்டியால்
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே –என்னும்படி கண்டு கொள்ளப் பட்டவனாய் உன்னளவில்
அவளுக்கு உள்ள அபி நிவேசம் குளப்படி என்னும் படி பிராட்டி பக்கலிலே
கடல் போலே பெருகி வருகிற அபி நிவேசத்தை யுடையவனே

(திருவைக் கண்டு கொண்டான் இவன் என்றும் -திரு இவனைக் கண்டு கொண்டாள் என்றுமாம்

மால் -திருவுக்கு இவன் மேல் -இவனுக்கு அவள் மேல் -ஓன்று குளப்படி ஓன்று கடல்படி-க ஸ் ஸ்ரீ ஸ்ரீய -திருவுக்கும் திருவாகிய செல்வன் – )

என்னுடைய மனசானது -ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்துப் பிற்காலியாதே
அவளோட்டை உறவை நினைத்துக் கூசாதே பொருந்திக் கொண்டு கிடந்து -ஆகையால் -அந்தப்புர பரிகரமான நான்
இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அனுபவ விரோதியான ஜென்ம பரம்பரையும் ச வாசனமாகப் போக்கினேன் –

மருக் கண்டு கொண்டு -மருவிக் கண்டு கொண்டு -என்றபடி –

—————————————————————

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –
அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –3–

பதவுரை

மாகடல் நீர் உள்ளான்–பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
மலராள் தனத்து உள்ளான்–பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்
தண் துழாய் மார்பன்–குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,
செருநர்–சத்துருக்கனானவர்கள்
உக–அழியும்படி
சினத்து–சீற்றத்தினாலே
செற்று–த்வம்ஸம்பண்ணி
உகந்த–மகிழ்ந்தவனும்
தேங்கு ஓதம் வண்ணம்–தேங்கின கடல் போன்ற வடிவை யுடையவனும்
வரு நாகம் தீர்க்கும் மருந்து–தப்பாமல் நேரக் கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்
மனத்து உள்ளான்–என் மனத்திலே வந்து சேர்ந்து விட்டான்

(கோர மா தவம் செய்தனன் கொல் எனது மனசில் இருக்க -இருந்தான் கண்டு கொண்டே -அலாப்ய லாபம் பெற்றவனாக –
மாகடல் நீர் உள்ளான்–மலராள் தனத்து உள்ளான்-தண் துழாய் மார்பன்-அலங்கரித்து வந்தான் -ஆதாரம் பெறுக அழகனாக வந்தான்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-ஆஸ்ரித விரோதம் போக்கப் பெற்றதால் உகந்து தேஜஸ் மிக்கு இருந்தான்
பெரிய பெருமாள் பதக்கம் இன்றும் பெரிய பிராட்டியார் திரு மார்பில் காணலாமே
இவை சாதனமாக வந்ததன் பயன் -வரு நரகம் தீர்க்கும் மருந்து ஆவதற்காகவே -)

சினத்து செரு நருகச் செற்று உகந்த—
சீற்றத்தினால் எதிரிகள் ஆனவர்கள் அழியும் படி அழித்து மகிழ்ந்தவன்

மனத்துள்ளான்-
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –

மா கடல் நீருள்ளான் மலராள்-தனத்துள்ளான் தண் துழாய் மார்வன்–
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காகத் திருப் பாற் கடலிலே கிடந்து-
அவ்வோபாதி பெரிய பிராட்டியார் திரு முலைத் தடத்தையும் ஒரு ஸ்தானமாக யுடையனாய் –
தண் துழாய் மார்பனாய் –

சினத்தினாலே செருநரானவர்கள் மங்கும்படி செற்று ஆஸ்ரித விரோதிகள் போகப் பெற்றோம் என்று உகந்து
அத்தாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய் —
சினத்துச்-செரு நருகச் செற்று உகந்த  தேங்கோத வண்ணன்-வரு நரகம் தீர்க்கும் மருந்து —
அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் –

மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

(நிர்வாணம் பேஷஜம் பிஷக் -மோக்ஷ பலம் கொடுக்கும் மருத்துவன் –

பல ப்ரதா -பலத்துக்கு கரணம் கருவி மருந்து -உபேயமாயும் உபாகமாயும் இவனே

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—10-8-1-)

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

பிராட்டி மேல் விழுந்து அனுபவிக்கும் படி ஸ்ரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையனாய்-
தாமரைப் பூவை இருப்பிடமாக யுடையளான பெரிய பிராட்டியாருடைய அவயவாந்தரங்களில் அழகு குமர் இருக்கும் படி
திரு முலைத் தடத்திலே அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு அடங்கி கொண்டு அடங்கி வர்த்திக்குமவனாய்-
என் மனஸ்ஸூ பாங்காகும் அளவும் அவசர ப்ரதீஷினனாய்க் கொண்டு இடமுடைத்தான திருப் பாற் கடலிலே நீரிலே
கண் வளர்ந்து அருளுமவனாய் –

(இசைவித்து உனது தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ –

இதன் பின்பு இளம் கோயில் கைவிடேல் என்று நாம் பிரார்த்திக்க வேண்டுமே)

சத்ரு வர்க்கம் உருத் தெரியாத படி அழிக்கத் தக்கதாய் சீறி அழித்துப் பொகட்டு –
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து (கொண்ட சீற்றம் ஓன்று உண்டே )

அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

(ஆதிசேஷனையும் பாற்கடலையும் ஓருவருக்கு ஓருவர் பழகிக் கொள்ள வைத்து அவற்றை விட்டு அன்றோ இங்கே வந்து பேரேன் என்று புகுந்தான்)

———————————————————–

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி —4—

பதவுரை

திருந்திய–இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான
செம் கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களையுடைய-திருந்திய செம் கண்
மால்–ஸர்வேஸ்வரனாயும்-திருந்திய மால்
ஆங்கே–உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே
நின்று பொருந்திய–நிலை நின்று பொருந்தினவனாயும்
உலகம்–உலகங்களை
உண்டு–பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்
அன்று–முன்பொரு காலத்தில்
நீர் ஏற்று–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்று
மூ அடியால் உலகம் தாயோன்–மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய
அடி தானே–திருவடிகளே
மருந்தும்–மருந்து போலே ஸம்ஸார வியாதியைத் தொலைப்பனவாயும்
பொருளும்–பணம் போலே வேண்டியவற்றைப் பெறுவிப்பனவாயும்
அமுதமும்–அமிருதம் போலே போக்யமாயுமிருக்கின்றன.

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு –
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –

மருந்து என்று உபாயம் ஆக்கி –பொருளும் அமுதமும் தானே என்று உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

(அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் -ஸ்வயம் போக்யமான ப்ராப்யமாயும் இவனே-

ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அங்கு இஷ்ட பிராப்தி தன்னடையே வருமே ஆகவே சொல்ல வேண்டியது இல்லை )

திருந்திய செங்கண் மால் —
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம் படி திருந்தி சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன் —

திருந்திய –
இவ்வாத்மாக்கள் திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே இவற்றுக்கு ஈடாகத் தன்னைத்
திருத்திக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரன் -என்னவுமாம் -(திருந்திய மால்)

(செலக் காண்கிப்பார்  காணும் அளவும் -செல்லும்  கீர்த்தி -ஆர்ஜவம்)

ஆங்கே பொருந்தியும்–
நின்று உலகம் உண்டும்  உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்-அன்று உலகம் தாயோன் அடி –
ஸ்ரீயபதி வந்து நீர் ஏற்கிறான் என்று கூச வேண்டாத படி இரப்பிலே பொருந்தி நின்று -லோகத்தை நீர் ஏற்று
லோகத்தை வயிற்றிலே வைத்துக் காத்து -வெளி நாடு காண உமிழ்ந்து நேர் ஏற்ற லோகத்தை
மூவடியாலே அளந்தவனுடைய திருவடி மருந்தும் பொருளும் அமுதமும் தானே –

—————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

ஸர்வேஸ்வரன் இவன் என்னும் இடத்தை ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பிக்க வல்ல திருத்தத்தை யுடைத்தாய் –
ஐஸ்வர்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனாய் வ்யாமுக்தனானவன்
ஜகத் ரக்ஷணம் ஆகிற அந்தச் செயலில் ப்ரதிஷ்டித்தமான திரு உள்ளத்தை யுடையனாய்க் கொண்டு -லோகத்தை
திரு வயிற்றிலே வைத்துக் காத்து -வெளிநாடு காண புறப்பட விட்டுத்- தன்னது அல்லாததைப் பெறுவாரைப் போலே
அந்நிய அபிமானம் தீர நீர் ஏற்று வாங்கி -உதக ஜலம் கையிலே விழுந்த அப்போதே மூன்று அடியாலே
லோகத்தை அளந்தவனுடைய திருவடிகள் தானே அநிஷ்டமான சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-

திருந்திய என்கிறது –
சர்வேஸ்வரனுக்கு விசேஷணமான போது ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானேயாம் படி
திருந்தி இருக்குமவன் என்றும் –
இவர்கள் திருந்தாக் குறை தீரத் தான் இவர்களுக்குமாகத் திருந்தி இருக்கும் என்றும் பொருளாகக் கடவது –

நமுசி பிரப்ருதிகளை போக்குகையாலே மருந்து-
அர்த்தியாய் வருகையால் பொருள் —
தன் திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அமுதமானான் —

————————————————————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

பதவுரை

அன்று உலகம் தாயோன்–முன்பு உலகங்களைத் தாவி யளந்த பெருமானுடைய
அடி வண்ணம்–திருவடிகளின் நிறம்
தாமரை–தாமரைப்போலே சிவந்திராநின்றது
படி வண்ணம்–திருமேனியின் நிறம்
பார் கடல் நீர் வண்ணம்–பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுதுதுக் குளிர்திராநின்றது.
முடி வண்ணம்–கிரீடத்தினுடைய நிறம்
ஓர் ஆழி வெய்யோன்–ஒற்றைச்சக்கர முடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது,
ஒளியும்–(அப்பெருமானுடைய) தேஜஸ்ஸும்
அஃது அன்றே–அந்த ஸூர்ய ப்ரகாசம் போன்றதே யன்றோ
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு–அழகு பொருந்திய திருவாழியைக் கையில் கொண்டுள்ள பெருமானுடைய அழகு இப்படிப்பட்டதாயிராநின்றது.

(1-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்-அன்றுலகம் தாயோன்-அடி வண்ணம் தாமரை
2-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார் -அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் –
பாற் கடல் என்று வெளுத்த வண்ணம் பிச்சை எடுப்பது கிடைக்குமோ இல்லையோ -என்றும் ஆழ்வாரைப் பிரிந்த கவலையால் வெளுத்தவன் என்றுமாம்

3-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்–அன்றுலகம் தாயோன் ஒளியும்–முடி வண்ணம்–ஓர் ஆழி வெய்யோன்–
4-அன்றுலகம் தாயோன் ஆராழி கொண்டார்–அன்றுலகம் தாயோன் ஒளியும்- தேஜஸ்ஸும் அஃது அன்றே-)

அடி வண்ணம் தாமரை–
திருவடிகளின் நிறம் தாமரை(கை வண்ணம் தாமரை அடியும் அஃதே )

அன்றுலகம் தாயோன்-படி வண்ணம் —
லோகத்தை அடங்கலும் அளந்து கொண்டவனுடைய நிறம்

பார்க்கடல் நீர் வண்ணன்-
பார் சூழ்ந்த கடலின் நிறம் -வெளுப்புப் பேசுகிற இடமாகில் திருப் பாற் கடலினுடைய நிறம் என்னவுமாம் –

முடி வண்ணம்-ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே–
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன்(தீவி ஸூர்ய சஹஸ்ரஸ் ஸ -கதிர் ஆயிரம் கலந்து எறிந்தால்  போல் நீள் முடியன் )

ஒளியும் அக்தே அன்றே

ஆராழி கொண்டார்க்கு அழகு —-
கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது(ஆர்-ஆர்ந்த பொருந்திய )
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை

——————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆகையால் அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

மஹா பலி நீர் வார்த்துக் கொடுத்த அன்று லோகத்தை அநாயாசேன அளந்து கொண்டவனுடைய திருவடிகளின்
நிறமானது தாமரை போலே சிவந்து இரா நின்றது –

(அன்று உலகு அளந்தான் அடி போற்றி -அடி -கறு நீலம் –இத்தையே அப்பொழுது சேவிக்க முடியும்
உள் திருவடி -குஞ்சித பாதம் -கன்று குணிலா எறிந்த கழல் சிவந்து இருக்கும் அன்றோ)

திரு மேனியின் நிறமானது -பூமியைச் சூழ்ந்த கடலின் ஜலம் போலே இருண்டு குளிர்ந்து இரா நின்றது-
திரு அபிஷேகத்தின் யுடைய நிறமானது -ஏக சக்ர ரதா ரூடனாய் ப்ரதாபோத்தரனான ஆதித்யன் போலே இரா நின்றது –
அவனுடைய தேஜஸ்ஸூ அந்த ஆதித்யனுடைய தேஜஸ்ஸூ போலே இரா நின்றது -அழகு பொருந்தின
திருவாழியைத் திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு பொருந்தின திரு வாழியைத்
திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிறவனுக்கு அழகு –பார்த்த அளவில் இப்படி இரா நின்றது என்று
அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

———————————————————-

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்(திரிவிக்ரமன் அனுசந்தானம் பின் தொடர்கிறது )

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்  —–6-

பதவுரை

ஆழியாற்கு–திருவாழியை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு
ஆழி நீர் வண்ணம்–கடல் நீரின் நிறம் போன்ற நிறமானது
அழகு அன்றே–மிகவுமழகிய நிறமன்றோ,
அண்டம் கடத்தல்–மேலுலகங்களை அளந்து கொண்டது
அழகு அன்றே–அழகன்றோ
அங்கை–அழகிய  உள்ளங்கையிலே
நீர் ஏற்றாற்கு–மாவலி தானம் பண்ணின நீரைப் பெற்றுக் கொண்ட பெருமானுக்கு
அலர் மேலான்–பிரமன்
கால் கழுவ–திருவடிகளை விளக்க, (அப்போது)
கங்கை நீர்–கங்கா தீர்த்தத்தை
கான்ற–வெளிப் படுத்திய
கழல்–அத் திருவடி
அழகு அன்றே–அழகன்றோ

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்–
சர்வேஸ்வரனுக்கு கடலின் நீரினுடைய நிறம் வெறும் நிறமாகுமதேயோ-அழகு அன்றோ –

அழகு அன்றோ –
இந் நிறம் யுடையவர்க்கு வேறு ஒரு ஒப்பனை வேணுமோ –

(கரியான் ஒரு காளை -கண்ணன் என்னும் கறும் தெய்வம்)

அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே-
செயலோ அழகியது அன்றோவாய் இருக்கிறது –(செயலும் )அழகு என்றவாறு

அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்  —
திருவடி தான் கங்கைக்கு காரணம் என்று பாவனத்வம் மாத்திரம் ஆகுமதேயோ-
அதுவும் அவனுக்கு அழகு அன்றோ -(சாணிச்சாறு மாத்திரம் அல்லவே )

——————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்(திரிவிக்ரமன் அனுசந்தானம் பின் தொடர்கிறது )

திருக்கையிலே திருவாழியை யுடையவனுக்கு (ஆழி எழ சங்கும் வாழி எழ இத்யாதி )கடலின் நீரினுடைய நிறம் வெறும் மாத்ரமேயாய் -அழகுக்கு உடல் அன்றோ

அந்தரிஷிதகளான லோகங்களை அளந்து கொண்டது வருந்திச் செய்த செயல் மாத்ரமோ(ச பூமிம் அத்யஷ்டித தச அங்குலம் -அளந்த வேகத்தைப் போல் பத்து மடங்கு சென்றதே ரக்ஷணத்தின் பாரிப்பு -இத்தை அனுசந்திக்க அழகு தோன்றுமே )

ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத் துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.-
திருவாய்மொழி–2-2-11-

கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே நீர் ஏற்றவனுக்கு– திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய
ப்ரஹ்மா திருவடிகளை விளக்க -கங்கா ஜலத்தைப் புறப்பட விட்ட திருவடிகள் -கங்கைக்கு உத்பாதகம் என்று
பாவானத்வ மாத்ரமேயோ –

வெண் துகில் கொடி என விரிந்து -என்கிறபடியே கங்கா ஜலத்தின்
வெளுப்பும் திருவடிகளின் சிவப்புமாய் அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ –

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  -பெரிய திருமொழி   -1-4-3-
ஸூ ந்தரம் வனம் அக்ஷரம் மந்த்ரங்கள் வனம் பிராட்டி திருவடி அனைத்துமே ஸூ ந்தரம் போல்

—————————————————————

அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

(திரிவிக்ரமன் அனுபவம் பின்னாட்ட அவனுக்கு -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ ப்ரகார கைங்கர்யங்களை-அவன் ஆனந்தத்துக்காகவே பண்ண வா என்று நெஞ்சை அழைக்கிறார்)

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

பதவுரை

நெஞ்சே-ஓ மனமே!
கார் கடல் நீர்–கறுத்த கடலின் நீரோட கூடின
வேலை–கரையை யுடைத்தான
பொழில்–பூமியை
அளந்த–அளந்து கொண்டவனும்
புள் ஊர்தி–கருடனை வாஹநமாக வுடையவனும்
செல்வன்–ஐஸ்வரிய முடையவனும்
எழில் அளந்து எண்ணற்கு அரியானை–அழகை எல்லை கண்டு நினைப்பதற்கும் முடியாதவனும்
எப்பொருட்கும் சேயானை–எல்லா வஸ்துக்களுக்கும் நெடுந்தூரத்திலிருப்பவனும்
நண்ணற்கு அரியானை–(யார்க்கும் தம் முயற்சியாலே) கிட்ட முடியாதவனாயிருப்பவனுமான எம்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
நாம் தொழுதும்–நாம் வணங்குவோம்,
வா–நீயும் உடன் படுவாயாக.

கார்க்கடல் நீர் வேலை -பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன்–
கடல் சூழ்ந்த பூமியை அளந்து -புள்ளூர்ந்து –அத்தாலே ஸ்ரீ மானாய்

எழில் அளந்தங்கு -எண்ணற்கரியானை —
எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை

(இயத்தா ராஹித்யன் -இன்னவன் என்று சொல்ல முடியாதே -யதோ வாஸோ நிவர்த்தந்தே )

எப்பொருட்க்கும் சேயானை -எல்லாப் பொருள்களுக்கும் தூரஸ்தனாய் உள்ளவனை –

நண்ணற்கரியானை –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு கிட்ட அரியனானவனை

நாம் கழல் தொழுதும் வா நெஞ்சே-அவர் காட்டக் காண இருக்கிற நாம் திருவடிகளைத் தொழுவோம் போரு –

(யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஒரு நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -நாம் அவன் காட்டக் கண்ட பின்பு கைங்கர்யம் செய்வதே அடுக்கும் அன்றோ)

———————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

(திரிவிக்ரமன் அனுபவம் பின்னாட்ட அவனுக்கு -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ ப்ரகார கைங்கர்யங்களை-அவன் ஆனந்தத்துக்காகவே பண்ண வா என்று நெஞ்சை அழைக்கிறார்0

கறுத்த கடலின் நீரோடு கூடின கரையை யுடைத்தான பூமியை அளந்து கொண்ட கருட வாஹனான ஸ்ரீ யபதியாய்
தன்னுடைய அழகை இவ்வளவு என்று பரிச்சேதித்துச் சொல்ல ஒண்ணாத அளவன்றிக்கே மனசாலே நினைக்கைக்கும் கூட
அரியனாய் இருக்குமவனாய் எல்லா பதார்த்தங்களும் அவ்வருகு பட்டு இருக்கிற வைலக்ஷண்யத்தை யுடையனாய்
ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் கிட்டுக்கைக்கு அறியனானவனை அவன் தானே காட்டக் கண்ட நாம்
அடிமை சுவடு அறியும் நெஞ்சே -திருவடிகளைக் கிட்டி அடிமை செய்வோம் போரு –

—————————————————————————————————————-

எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –

(நெஞ்சை கூப்பிட்டார் கீழ் -இதில் எல்லா இந்திரியங்களை அழைக்கிறார்-மானஸ வாசிக காயிக கைங்கர்யங்களைப் பண்ண வேணுமே )

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ———8–

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!-மற்ற இந்திரியங்களை நியமிக்க வல்ல நன்மை -முந்துற்ற நெஞ்சு என்பதால் நன்மை
நாராயணா என்று பல நாமம் சொல்லி–நாராயணன் முதலாகவுள்ள பல திரு நாமங்களைச் சொல்லி-

நாராயணன் ப்ராதான்யம் -ஒன்றைச் சொன்னாலே பலவும் சொன்னதாகுமே -ஒன்றைச் சொல்லி ஆறி இருக்க இயலாதே

அம் கையால்–அழகிய கையினாலே
நாம் தொழுதும்–நாம் தொழுவோம்
மருவி வா–இதற்கு நீயும் உடன்பட்டு வா
மண் உலகம்–பூமி முதலிய லோகங்களை
உண்டு உமிழ்ந்த–ஒரு கால் உள்ளே அடக்கி வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவனும்
வண்டு அறையும் தண் துழாய்–வண்டுகள் படித்து ஒலி செய்யப் பெற்ற குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையவனுமான

ஆலத்தி வைக்குமா போல்-ஸாம கானம் பாடும் நித்ய ஸூரிகள் இவனை விடாமல் இங்கேயே இருந்து அனுபவிப்பார்கள் அன்றோ
கண்ணனையே–கண்ணபிரானையே
நம் கண்–நமது கண்கள்
காண்க–கண்டு களித்திடுக

நாமம் பல சொல்லி–கார்யா புத்தயா சொன்னால் ஆகில் இறே ஒன்றைச் சொல்லுவது –எல்லா திரு நாமங்களையும் சொல்லி –

(திரு நாமம் சொல்வதே இவருக்குக் கார்யம் -இத்தைச் சொல்லி வேறே பலனை எதிர்பார்க்கிறவர் இல்லையே
ஸ்வரூப ரூபம் குணம் சேஷ்டிதங்களை விளக்கும் திரு நாமங்கள் அன்றோ)

நாராயணா வென்று–அசாதாரண நாமத்தைச் சொல்லி -(ரூடியானாலும் யவ்கிகமானாலும் இவனையே குறிக்கும் அன்றோ )

நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே-எல்லா இந்திரியங்களுக்கும் அடி நீ இறே —

வா மருவி-
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ——–பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-
வெளி நாடு காண உமிழ்ந்து -போக்ய பூதனாய் -ஸூ லபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண் –

(ஸர்வ ரக்ஷகன் -ஸர்வ போக்ய பூதன்-வடிவு அழகன் -அவயவ சோபை- ஒப்பனை அழகன் – -ஸூலபன் -பாலைக் குடிக்கக் காலைப் பிடிப்பார் உண்டோ )

—————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

(நெஞ்சை கூப்பிட்டார் கீழ் -இதில் எல்லா இந்திரியங்களை அழைக்கிறார்-மானஸ வாசிக காயிக கைங்கர்யங்களைப் பண்ண வேணுமே )

என்னிலும் இவ்விஷயத்தில் முற்கோலி விழுகிற நல்ல நெஞ்சே -வாக் இந்த்ரியத்தில் நா யுறாவுதல் தீரும் படி
ஒரோ குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி –இவற்றுக்கு எல்லாம்
பிரதானமான ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு எல்லாம் பூர்ண வாசகமான அசாதாரணமான திரு நாமத்தைச் சொல்லி-
அங்குத்தைக்கு எடுத்துக் கை நீட்டக் கடவ அழகிய கையாலே நாம் அஞ்சலி பந்தம் பண்ணுகை முதலான
வ்ருத்தி விசேஷங்களை பண்ணுவோம் -நீ இறாயாதே பொருந்தி வாராய் —

பூமி முதலான லோகங்களை பிரளயம் வருவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி -அங்கிருந்து நெருக்குண்ணாத படி புறப்பட விட்டு ரஷித்தவனாய் – ரஷியா விடிலும் விட ஒண்ணாத படியாய் -மதுபான மத்தமாய்க் கொண்டு வண்டுகள் சப்திக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே
அலங்க்ருதன் ஆகையால் நிரதிசய போக்ய பூதனான கிருஷ்ணனையே காண வேணும் என்று மேல் விழுகிற
நம்முடைய கண்களானவை கண்டு களித்திடுக –

————————————————————————————————————————–

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கண்ணும் கமலம் கமலமே கைத் தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

பதவுரை

கரு மா முகில் வண்ணன்–கரிய பெரிய மேகம் போன்ற வடிவை யுடையவனும்
கார் கடல் நீர் வண்ணன்–கரிய கடல் நீரின் நிறம் போன்ற நிறமுடையவனும்
திரு மா மணி வண்ணன்–அழகிய நீல மணி போன்றவனுமான எம்பெருமானுடைய
தேசு–அழகை
எண்ணில்–ஆராய்ந்து நோக்குமளவில்,
கண்ணும்–திருக் கண்ணும்
கமலம்–தாமரைப் பூப் போன்றவை
கைத் தலமும்–திருக் கைத் தலங்களும்
கமலமே–அத் தாமரைப் பூப் போன்றவையே
மண் அளந்த பாதமும்–உலகளந்த திருவடிகளும்
அவையே–அத் தாமரைப் பூப் போன்றவையே.

(கறுமை பெருமை முகில் -கண்ணால் அளக்க முடியாதே கார் கடல் வண்ணன் -கண்ணுக்கு எட்டாதே -திரு மா மணி வண்ணன் -முந்தானையில் முடிந்து ஆளலாம் படி அன்றோ இவன்)

கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்-திருமா மணி வண்ணன் தேசு –எண்ணில்-
ஸ்ரமஹரமாய -கண்ணுக்கு அடங்காத திரண்டு குளிர்ந்து இருந்தவனுடைய
அழகை எண்ணில்-கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே -காடும் மோடுமாய் உள்ள பூமியை அளந்ததும் பூவையைக் கொண்டே

கறுப்பும் சிகப்பும் கலந்த கலவைக் கட்டி அனுபவம்-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி -–8-1-5-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –திரு நெடும் தாண்டகம்–21-

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாமம் வாள்முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரை தடம் கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம்பொன் திரு வுடம்பே –திருவாய் மொழி-2-5-1–

கரு மா முகில் தாமரைக் காடு பூத்தது போல் ராமன்-கம்பர்

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 73-
——————————————————————–

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கறுத்துப் பெருத்த மேகம் போன்ற ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய் -கறுத்த கடலின் நீர் போலே கண்ணுக்கு
அடங்காமல் அபரிச்சேத்யமான திரு நிறத்தை யுடையவனாய் -அழகு மிக்குப் பெரு நிலையனான நீல ரத்னம் போலே
கண்ணாலே முகந்து அனுபவிக்க லாம் படி இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனுடைய அலகால் வந்த தேஜஸ்ஸூ
குமிழ் நீர் உண்ணாதே வருந்தி அனுசந்திக்கப் புக்கில் -வவ்வலிடும்படி குளிர நோக்குகிற
திருக் கண்களும் -தாமரை போலே குளிர்ந்து மலர்ந்த சிவந்து இரா நின்றது -ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும்
நிலமாய் காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும் அந்தக் கமலம் போலே இரா நின்றன –

————————————————————————————————————-

அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் -நாம்
அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்
பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

பதவுரை

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான்–வலது பக்கத்தில் சுழித்திருக்கிற சிறந்த சங்கை ஏந்தியுள்ள பெருமானுடைய
பேர் ஓத–திரு நாமங்களை அப்யஸிக்க வேணுமென்று
பேசில்–சொன்ன மாத்திரத்தில்
தேசும்–தேஜஸ்ஸும்
திறலும்–பராக்ரமமும்
திருவும்–செல்வமும்
உருவமும்–அழகிய ரூபமும்
மாசு இல் குடி பிறப்பும்–குற்றமற்ற நற்குலமும்
மற்றவையும்–மற்றுமுள்ள நன்மைகளும்
நலம் புரிந்து நன்குசென்று அடையும்–தாமே ஆசைப்பட்டு நன்றாக வந்து சேரும்.

தேசும் திறலும் திருவும் உருவமும்–
மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –

மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும் –
குற்றம் அற்ற பிறப்பும் -அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்கு

(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவியிலும் உனக்கே நாம் ஆட் செய்யும் படி ஆகுமே)

பேசில்-
திரு நாமம் சொன்னதுக்குப் பலம் பேசப் போகாது -பிரயோஜனத்தில் பேசில் –

வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத—-
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்ல –

நலம் புரிந்து சென்றடையும் நன்கு —
இஸ் ஸம்பத்து எல்லாம் தன் பேறாகச் சென்றடையும் –

ரதி மதி சரஸ்வதி திருத்தி ஸம்ருத்தி ஸ்திதி ஸ்ரீ -அஹர் அஹர் வந்து சேருமே-

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-32-

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

வலவருகே புரிந்து இருப்பதாய் -ஸ்யாமளமான திருமேனிக்கு பரபாகமான (பகைத்தொடை )வெளுத்த நிறத்தை யுடைத்தான
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் திருக் கையிலே தரித்து கொண்டு இருக்கிற சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு
வாசகமான திரு நாமங்களை சாதரமாகச் சொல்லி (ஓத என்பதால் ஆதரமாகச் சொல்ல என்றபடி )–தத் பலன்களை சிறிது சொல்லப் பார்க்கில் –
இருந்ததே குடியாகக் கொண்டாடும்படியான மதிப்பால் வந்த தேஜஸ்ஸூம் -பராபிபவன சாமர்த்தியமும் –
நிரவதிகமான சம்பத்தும் -அழகிய ரூப ஸ்ரீயும் -குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–
மற்றும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும்- நாம் இவ்விஷயத்தைக் கிட்டி ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று –
ஸ்நேஹ உன்முகமாய்க் கொண்டு தன் பேறாக வந்து அடையா நிற்கும் —

வான் சங்கம் என்றது வெளுத்த சங்கம் என்றபடி –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –91-100– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

பரம பதம் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றோ என்றவோபாதி-இச்சையும் வேண்டாவோ -என்கிறது-
ஹேயத்தில் ஹேயதா புத்தியும் உபாதேயத்தில் உபேதேயதா புத்தியும் வேண்டாவோ பேற்றுக்கு –

கீழில் பாட்டு ருசி யுடையவனுக்கு உதவின படி –

(சம்சாரத்தில் இந்திர கதியாக சுற்றி சுற்றி வர -தானே அருள நினைப்பார்களை -அவனது விசேஷ அபிமானம் -விலக்காமல் -தக்க வைக்க வேண்டுவதே வேண்டும்
வேற இடங்களில் அருசியும் -பல நீ காட்டிப் படுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ -உபயாந்தரங்களில் அந்வயம் இல்லாமல்
ப்ரயோஜனந்தரங்கள் ஆசை இல்லாமல் -இருக்க வேண்டும்
ஸ்ரீ வராஹா மூர்த்தி திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் ஆகுமே -)

சர்வேஸ்வரன் சர்வ அபேக்ஷித ப்ரதனேயாகிலும் இதர விஷயங்களில் ருசி யற்று அவனை
ஆஸ்ரயித்தார்க்கு அல்லது பரமபத பிராப்தி அரிது -என்கிறார் –

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(சரீரத்தையே இனியதாக ஸ்திரமாக நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–ஆத்ம ஸ்வரூபம் ஆகிய யாதாத்ம்ய  தத்வ ஜ்ஞாநமாகிற
சுடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி-வையம் தகளியில் முதலில் வைய கதிரோன்  விளக்கு -இங்கு நிகமனத்திலும் நேராக வராஹ மூர்த்தி  விளக்கு
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி–சரீரம் கண்டது எல்லாம் பொல்லாதாய் இருக்கச் செய்தேயும்
ஆபாத ப்ரதீதியில் நன்று போலே இருப்பது ஓன்று உண்டு -அந்த இருள் சரீரத்தை -அவகாஹிக்கப் போம் –
ஞானச் சுடர் கொளீஇ –ஞானம் ஆகிற விளக்கை பிரகாசிப்பித்து –இதினுடைய ஹேயதையும்-அந்யதா ஞானமும்
யதார்த்த ஞானத்தால் போம் –ஆக யதார்த்த ஞான பூர்வகமாக பர ஞானம் வேணும் –
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் –நோவு பட்ட போது உதவினவனாய் இவை இல்லாத வன்று -தான் உண்டாய்
ரஷிக்கும் அவனுடைய திருவடிகளிலே ருசி இல்லாதார்க்கும் உண்டோ பரம பதம் –
அவன் ஆபி முக்கியம் பண்ணுகிறபடியை அனுசந்திக்க வைமுக்ய சங்கை யுண்டோ —

(மருவாதார் -முதல் பிரபத்தி உபாயமாக -மேல் ருசி தூண்ட கைங்கர்யம் செய்ய வேண்டுமே)

ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –

கீழில் பாட்டு ருசி யுடையவனுக்கு உதவின படி –

ஊனக் குரம்பை- ஹேயமாய் அல்பமாய் அஸ்திரமாய் அநர்த்தமாய் அகவாய் தெரியாத படி மேலே தோலை வைத்து
மினுக்கி ஆபாத ப்ரதீதியிலே நன்று என்று தோற்றும் படி இத்தை உள்ளபடியே அனுசந்தித்து அபுருஷார்த்தம் என்றும்
புருஷார்த்த விரோதி என்றும் பேசிற்று -பொய் நின்ற இத்யாதி –
ஞானச் சுடர் கொளீஇ–பிரகாரமான தன்னை அனுசந்தித்து பிரகாரியான அவனையே -தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கி –இத்தலை நினையாத போதும் நினைத்திருந்து நோக்குமவன் -விரோதியான இவ் வாகாரத்தை யன்றோ துடைத்தது– ஏனத்துருவாய் இடந்த –ஞானப் பிரான் -(ததாமி புத்தி யோகம் )

(ஆச்சார்யன் த்வயத்தைச் சொல்ல இவன் அத்தைத் திரும்பிச் சொல்லும் அன்று ஒரு தடவையே சொல்ல வேண்டிய பிரபத்தி –
அதற்குப் பின் இவன் ஸ்வரூபத்திலே புகுமே –
இந்நினைவு ஒரு கால் ஏற்பட்டால் பின் அழியக் கூடியது அல்லவே –
பெறப்போகும் பலத்தின் சீர்மையைப் பார்த்தால் இவன் ஆயுள் முழுவதுமே இந்நினைவோடே இருந்தாலும் -ஒரு தடவை என்பதற்கும் போராத படியாய் அன்றோ இருப்பது )

(ப்ரபந்ந நாதக் யேஷாம் ந திஸதி முகுந்ததோ நிஜ பதம் –ப்ரபன்னனைத் தவிர வேறே யாருக்கும் முகுந்தன் பரமபதத்தைத் தர மாட்டான் – தேசிகன் )

(ஊழியான் பாதம் மருவதார்க்கு உண்டாமோ வான் —-நான்ய பந்தா வித்யதே அயநாய -என்கிற வேதாந்ததார்த்தம் )

(நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் -பரிபாடல் -15 -)

—————————————————————-

சர்வேஸ்வரன் சர்வ அபேக்ஷித ப்ரதனேயாகிலும் இதர விஷயங்களில் ருசி யற்று அவனை
ஆஸ்ரயித்தார்க்கு அல்லது பரமபத பிராப்தி அரிது -என்கிறார் –

அக வாயில் தோஷம் தோற்றாத படி மாம்சம் செறிந்து மேல் எழ மினுங்கித் தோற்றுகிற சரீரம் ஆகிற குடிசையிலே-
அதில் தோஷம் உள்ள எல்லை அளவும் செல்ல உள்ளுற அவகாஹித்து அத்தை போக்யம் என்று இருக்கிற அஞ்ஞானம்
ஆகிற இருளைப் போக்கி ஜீவ பர யாதாம்யத்தை விஷயீ கரித்து இருக்கும் ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
தன்னுருக் கெடுத்து நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தை யுடையனாய் கொண்டு
லோகத்தை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனாய் -இவை அழிந்து கிடந்த சம்ஹார காலத்திலும்
தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வ பாவனான வனுடைய திருவடிகளை நாள் தோறும் பொருந்தி
ஆஸ்ரயியாதார்க்கு பரமாகாச சப்த வாஸ்யமான பரமபதம் உண்டாமோ –

——————————————————————-

அவ்வவ ஜாதிகளில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி-
ஸ்ரீ வராஹமானால் கோரைக் கிழங்கு தாரகமாம் -இடையன் ஆனாகில் வெண்ணெய் தாரகமாய் இருக்கிறபடி –

இப்படி ஆஸ்ரிதர் ரஷிக்கும் அளவன்றிக்கே அவாப்த ஸமஸ்த காமனான பூர்த்திக்குப் போராத படி –
ஆஸ்ரிதர் தொட்டு அளைந்த த்ரவ்யத்தைத் தனக்கு தாரகமாக விரும்பி இருக்கும் -என்கிறார் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-

பதவுரை

வான் ஆகி–ஆகாசமாகியும்-ரூபனாகவும்
தீ ஆய்–அக்நியாகியும்-ரூபனாகவும்
மறி கடல் ஆய்–அலை யெறிகிற கடலாகியும்-ரூபனாகவும்
மாருதம் ஆய்–காற்றாகியும்-ரூபனாகவும்
தேன் ஆகி–தேன் போன்றும்
பால் ஆம்–பால் போன்றும் பரம போக்யனான
திருமாலே–எம்பெருமானே!
முன் ஒரு நாள்–பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை–(பிரளய காலத்தில் உட் கொண்டிருந்த) இவ் வண்டத்தை
உமிழ்ந்த-(உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு–உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய்– பசுக்களை மேய்க்கும் இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதை யென்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
விழுங்க–அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே–நிறைந்து விடுமோ? [நிறைய மாட்டாது]

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்-பஞ்ச பூதங்களாலே ஒரு அண்டமாய் அண்டாந்த வர்த்ததிகளான
புருஷர்களுக்கு நிர்வாஹகனாய்
தேனாகிப் பாலாம் திருமாலே –சர்வ ரஸ என்கிறபடியே பிராட்டியோடே கூட பரம பதத்தில் இருக்கிறவன்
ஆனாய்ச்சி-வெண்ணெய் விழுங்க நிறையுமே –உபய விபூதி உக்தனாய் இருக்கிற இருப்புக்குச் சேருமோ
ஓர் இடைச்சி வெண்ணெயை விழுங்குகை –
பிரளயம் கொள்ளாத படி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே உமிழ்ந்து ரஷித்த வயிறு இத்தனை
வெண்ணெயாலே நிறைக்க வேண்டி இருந்ததோ -பின்னை உன் வயிற்றை வண்ணானுக்கு இட மாட்டாயோ -என்கிறார்
ருசி யுடையாரோடு சம்பந்தம் உள்ளது ஓன்று அல்லாத உபய விபூதி யோகம் குறை பட்டு இருக்குமவனுடைய ருசி சொல்கிறது –
ஆனாய்ச்சி வெண்ணெய் -முடை நாறும் வெண்ணெய்  நிறையுமே -குறைக்கும் இட்டு அடைக்க வேணும்
சம்சாரிகளுக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

—————————————————————-

இப்படி ஆஸ்ரிதர் ரஷிக்கும் அளவன்றிக்கே அவாப்த ஸமஸ்த காமனான பூர்த்திக்குப் போராத படி –
ஆஸ்ரிதர் தொட்டு அளைந்த த்ரவ்யத்தைத் தனக்கு தாரகமாக விரும்பி இருக்கும் -என்கிறார் –

ஆகாசம் அக்னி அலை எறிகிற கடல் காற்று முதலான பூதங்களாலே சமைந்த அண்டாந்த வர்த்தி பதார்த்தங்களுக்கு
நிர்வாஹகனாய் பரமபத வாசிகளுக்கு சர்வ ரஸ சமவாயமான தேன்–ஸ்வாபாவிக ரசமான பால் –
இவை போலே நிரதிசய போக்யனாய்க் கொண்டு இருக்குமவனாய் -இந்த உபய விபூதி யோகத்துக்கு மேலே
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த ஐஸ்வர்யத்தையும் யுடையவனே -பண்டு ஒரு நாளிலே பிரளயத்தில் அழியாத படி
பூமியை அடங்க எடுத்து விழுங்கி உள்ளுக் இடந்து தளராத படி வெளிநாடு காண உமிழ்ந்த உன்னுடைய
வயிறானது பசு மேய்க்கும் குடியிலே பிறந்த யசோதை பிராட்டி கடைந்து வைத்த முடை நாற்றம்
குன்றாத வெண்ணெயை அபி நிவேசத்தோடே அமுது செய்து அருள அத்தாலே நிறையுமோ-

(சரீரீ சரீர பாவம் -பிரகார பிரகாரி பாவம்–காரண கார்ய பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம்)

(தேஹோ தேஹிநி -என்றும் -ஸ்தித் யுத் பத்தி -என்றும் தொடங்கும் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வ ஸ்லோகங்களை அனுசந்திக்கவும் -)

தேஹ தேஹினி காரேண விக்ருத்ய ஜாதி குணா கர்ம ச
த்ரவ்யே நிஷ்டித ரூப புத்தி வசநா தாத்ஸ்த்யாத் ததா இதம் ஜகத்
விஸ்வம் த்வயி அபி மந்யஸே ஜகதிஷே தேந அத்விதீய தத
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம ரங்கேஸ்வர –23-

ஹே ரங்கேஸ்வர
தேஹ சரீரமானது
தேஹினி –ஆத்மாவின் இடத்திலும்
காரேண விக்ருத்ய–தங்கள் காரண வஸ்துவின் இடத்திலும் கார்ய ரூபமான விகாரங்களானவை
ஜாதி குண கர்ம ச–ஜாதியும் குணமும் கர்மமும்
த்ரவ்யே -த்ரவ்யத்தின் இடத்தில் இருந்தும்
தாத்ஸ்த்யாத்–ஒரு போதும் விட்டுப் பிரியாது இருக்கும் விசேஷணம் என்கிற காரணத்தினால்
நிஷ்டித ரூப புத்தி வசநா–ரூபத்தில் அனுபவம் வியவஹாரம் என்னும் இவை நிலைத்து இருக்கப் பெற்றுள்ளன
ததா இதம் ஜகத்–அவ்விதமாகவே இந்த எல்லா உலகத்தையும்
விஸ்வம் அபி த்வயி–எல்லா உலகத்தையும் தேவரீர் இடத்தில்
அபி மந்யஸே–நிஷ்டிபுத்தி வசனமாம் படி சங்கல்பித்து உள்ளீர்
த ரூப தேந அத்விதீய ஜகதிஷே –ஆகையால் அத்விதீயாராக சொல்லப்பட்டீர்
தத-அதனால்
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம –மாயை உபாதி விகாரம் என்னும் இவற்றின்
சம்பந்தப் பேச்சானது ஏது-அது பிசகு என்றபடி –

ஆகவே-தேஹத்துக்கும் தேஹிக்கும் காரியத்துக்கும் காரணத்துக்கும் ஜாதி குண கர்மங்களுக்கும் த்ரவ்யத்துக்கும் அப்ருதக் சித்தி நிபந்தனமாக
ஐக்ய நிர்தேசம் கூடுவது போலவே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் உண்டான ஐக்கியமும் என்றவாறு –

மாயா வாத சங்கர மதமும் -உபாதி பேதம் பாஸ்கர மதமும் –
ப்ரஹ்மமே பரிணமிக்கிறது விகார வாதம் யாதவ பிரகாச மதம் -நிரசனம்–
உடல் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் –
மாயா வாதங்கள்
உபாதி வாதங்கள்
விகார வாதங்கள் நிலை நிற்காதே

தேவதாதி சரீரம் சரீரீ இடத்திலும் -கட படாதி விகாரங்கள் காரணத்திலும் –
கோத்வாதி ஜாதியும்–
ஸூக்லாதி குணங்களும் –
கமனாதி கிரியையும் –
த்ரவ்யத்திலும்
அப்ருதக் சித்த சம்பந்தத்தால் பர்யசிக்குமே –

அப்படியே சர்வ ஜகத்தும் அப்ருதக் சித்த விசேஷணமாய் –
பிரகாரமாய் –
தேவரீர் அத்வதீயமாய் இருக்க
சங்கர பக்ஷத்தில் ப்ரஹ்மத்துக்கு மாயா சம்பந்தமும்
பாஸ்கர பக்ஷத்தில் உபாதி சம்பந்தமும்
யாதவ பிரகாச பக்ஷத்தில் விகார சம்பந்தமும் சொல்வது எதற்க்காக என்கிறார் –
அசங்கதை அன்றோ -என்றபடி

ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபநை ஆத்மந தே
சேஷ அசேஷ பிரபஞ்ச வபு இதி பவத தஸ்ய ச அபேத வாதா
சர்வம் கலு ஜெகதாத்ம்யம் சகலம் இதம் அஹம் தத் த்வம் அஸி ஏவம் ஆத்யா
வ்யாக்யாதா ரங்க தாம ப்ரவண விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை –24-

ஹே ரங்க தாம ப்ரவண
ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி -ரஷணத்தாலும் ஸ்ருஷ்டிப்பதாலும் காரியங்களில் பிரவர்த்தனம் செய்வதாலும்
க்ரசன -சமயத்தில் திரு வயிற்றினுள் வைத்து ரக்ஷிப்பதாலும்
நியமன–ஒவ்வொரு வஸ்துக்குள்ளும் உள் புகுந்து நியமிப்பதாலும்
வ்யாபநை –எங்கும் வியாபிப்பதாலும்
ஆத்மந தே–சர்வ ஆத்மாவாய் இருக்கின்ற தேவரீருக்கு
சேஷ –சேஷப்பட்டதான
அசேஷ பிரபஞ்ச–உலகம் முழுவதும்
வபு இதி –தேவரீருக்கு சரீரமாகா நின்றது என்கிற காரணத்தினால்
பவத தஸ்ய ச –தேவரீருக்கு அவ்வுலகத்துக்கும்
அபேத வாதா-அபேதத்தை சொல்லுமவையான
சர்வம் கலு -சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
ஜெகதாத்ம்யம் -ஜெகதாத்ம்யம் சர்வம்
சகலம் இதம் அஹம் -சகலம் இதம் அஹம் ச வாஸூ தேவா
தத் த்வம் அஸி-தத் த்வம் அஸி ஸ்வேத கேதோ
ஏவம் ஆத்யா-என்று இவை முதலான பிரமாணங்கள்
வ்யாக்யாதா விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை -ஜயசாலிகளான வைதிக தலைவர்களினால் பொருத்தம் உடையனவாக வியாக்யானிக்கப் பட்டன –

சாமாநாதி கரண்ய நிர்த்தேசம் உப பன்னம்

(திருமாலே –ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதும் அவளது உகப்புக்காகவே –
தேனாகிப் பாலாம் -எல்லா ரசங்கள் கூட்டரவே -இரண்டைச் சொன்னது ஸர்வ ரசங்களுக்கும் உப லக்ஷணம் -ஸர்வ ரஸ -உபநிஷத் -)

(திருமாலே -உபய விபூதி ஐசுவர்களுக்கும் மேல் அன்றோ ஸ்ரீ யபதித்தவம் -)

(ஆஸ்ரித ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யமே தாரகமாகக் கொள்ளுமவன் -இம் மஹா குணம் இல்லாவிடில் உபய விபூதி நாதத்வமும் பயன் அற்றதாகவே விடுமே -)

——————————————————————————————–

கீழ்ப் பாட்டிலே ஆஸ்ரித வாத்சல்யம் சொல்லிற்று -இதில் ஆஸ்ரித வாத்சல்ய கார்யமான
அவர்கள் விரோதிகள் பக்கல் யுண்டான சீற்றம் சொல்லுகிறது –
எங்கனே உய்வர் தானவர் நினைத்தால் என்று நரசிம்ஹத்தைக் கண்ட அஸூர ராக்ஷஸ
ஜாதியாகப் படும் பாட்டை அவனைக் கண்ட அனுகூலர் படும் படி –

ஓர் அரியாய் நீ இடந்தது என்று நம்மை ஆஸ்ரித பக்ஷ பாதியாகக் கீழே சொன்னீர் –
அது நீர் அறிந்த படி என் என்ன -ஹிரண்யன் மேலே பண்ணின சீற்றம் கொண்டு அறிந்தேன் என்கிறார் –

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக் கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச-வயிறு அழலுகிறது ஆர்க்கு என் என்னில் –ஆழ்வார்க்கு –முன்பு ஒரு நாள்
ஹிரண்யன் செய்ததாய் இராதே தம்முடைய எதிரே வாளும் உருவிக் கொண்டு புறப்பட்டால் போலே இருந்த படி
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே—(பெரியாழ்வார் )என்கிறபடியே –
வந்தானை-தம்முடைய மேலே வந்தால் போலே இருக்கிற படி

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா–ஸுகுமார்யத்தாலும் அழகாலும் பூவைக் கீழ்ப் படுத்துவதான
கையிலே திரு வாழியை யுடையவனே
பொறி யுகிரால்-பார்த்த படியே இருக்க வேண்டி இருக்கிற திரு உகிராலே
நின்-சேவடிமே லீடழியச் செற்று ——என்றும் நாங்கள் ஆசைப்பட்டுப் போகிற திருவடிகளிலே
அவனை ஏறிட்டு இனி முளையாத படி முடித்து

(நின் சேவடி மேல் -பரி ஸ்ரமாத் பரி ஸூப்தாஹம் ராகவாங்கேப் யஹம் சிரம்-களைப்பினால் ராகவன் மடியில் நெடுங்காலம் உறங்கினேன் – -ஸூ ந்தர -38-20-
என்கிறபடி பிராட்டிமார் பள்ளி கொண்டு அருளும் உன்னுடைய சிவந்த திருவடிகளின் மேல் ஏறிட்டுக் கொண்டு)

எயிறிலக  வாய் மடுத்த தென் நீ–பிராட்டிமார்க்கும் சம்போகத்திலே திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும்படிக்கு ஈடாகப் பண்ணின ஹாசத்தைக் கண்டால் அதுவே அமையும் என்னும் படி இருக்கிற வாயை மடுத்தது என் நீ
உனக்கும் சீற்றத்துக்கும் விஷயம் யுண்டோ -முடிந்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே -முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு
த்வயி கிஞ்சித் சமாபன்னே-என்னும் விஷயங்கள் அன்று -அத ராமோ மஹா தேஜோ
கொடியவாய் விலங்கின் இன்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் -என்று சரணாகதர்க்குத் தஞ்சமான தனமாவது
ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனைப் பற்ற பண்ணும் சீற்றம்-நரஸிம்ஹரைக் கண்ட அசுரர் ராக்ஷசர் ஜாதி படும் பாட்டை ஹிரண்யனைக் கண்ட அனுகூலர் படும் படி

வயிறு அழல-அஸ்மான் ஹந்தும் நஸம்சய ராஷசோ அப்யேதி -இத்யாதி
தனித் தனியே சொல்லில் ஒருவர் அல்லா ஒருவர் பிழைக்கிலுமாம் -என்று வேர்ப் பற்றிலே நலிய –
பொறியுகிரால்- பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா-போகத்துக்கு ஏகாந்தமான அழகை யுடைய அறு காழி என்னுதல் –
திரு வாழி பிடிக்கத் தகும் கை என்னுதல் – சென்று வைத்து -வாய் மடுத்த தென் நீ-

சங்கல்பம் தவிர்ந்து-திருவாழி தவிர்ந்து -திரு வுகிராலே பிளந்து பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வதே –

(கோபம் ஆஹாரயத் தீவ்ரம் யதார்த்தம் ஸர்வ ரக்ஷஸாம் எல்லா ராக்கதர்களையும் கொல்ல கடும் கோபத்தை ராமன் வரவழைத்துக் கொண்டான் -ஆரண்யம் -24-34-)

(அத ராமோ மஹா தேஜா ராவணேந க்ருத வ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வஸமே யிவான்-யுத்த -59-136-
மஹா தேஜஸ் வீயான ராமன் ராவணனால் காயப்பட்டவனும் வானர ஸ்ரேஷ்டருமான ஹநுமானைப் பார்த்து கோப வசப்பட்டான் –
பாகவத அபசார க்ரூரத்தால் விரோதியை அளித்த பின்பும் கோபம் தணியாதே -)

(பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையால் நின் சேவடிமே லீடழியச் செற்று —என்ற பாடமாகில் —-
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையால் நின் சேவடி மேல் பொறி யுகிரால் ஈடழிய -என்று கூட்டி
புஷ்ப்பத்திலும் மென்மை மிக்கதாய் -ஆசைப்படத் தக்க திருவாழியை யுடையதான திருக்கையாலே
அன்பர்களை வைத்துக் கொள்ள வேண்டிய திருவடிகளிலே கிடத்தி
அழகிய திரு உகிராலே அவனை அழித்தது -என்ற பொருள் -)

———————————————————

ஓர் அரியாய் நீ இடந்தது என்று நம்மை ஆஸ்ரித பக்ஷ பாதியாகக் கீழே சொன்னீர் –
அது நீர் அறிந்த படி என் என்ன -ஹிரண்யன் மேலே பண்ணின சீற்றம் கொண்டு அறிந்தேன் என்கிறார் –

ஸுகுமார்யம் அழகு முதலான ஸ்வ பாவத்தால் பூவைப் பூவினுடைய வடிவு அழகைத் தலை அழித்து இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை தரித்த திருக் கையை உடையவனே -கண்ட அனுகூலர் என்னாகத் தேடுகிறதோ -என்று
வயிறு எரியும் படி வாளை உருவிப் பிடித்துக் கொண்டு வந்த ஹிரண்யனை உன் உக்ர வேஷம் கொண்டு
அவன் பயப்படும்படியாக பிராட்டிமார் பள்ளி கொண்டு அருளும் உன்னுடைய சிவந்த திருவடிகளின் மேல் ஏறிட்டு
நாநா வர்ணமான அழகிய திரு யுகிர்களாலே கட்டுக் குலைந்து சிதறிப் போம் படி முடித்து-

பின்னையும் சீற்றம் மாறாமையாலே திரு எயிறுகளானவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்-

ஆ என்று வாய் அங்காந்து -இதுவோ பிலவாய–இத்யாதி

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையால் -என்ற பாடமாய்த்தாகில்-புஷ்பத்திலும் காட்டிலும் ஸூ குமாரமாய்
திருக் கைகளால் -திரு உகிராலே–அனுகூலரை வைத்துக் கொள்ளுகைக்கு யோக்கியமான திருவடிகளிலே
அவனை வைத்துக் கொண்டு -என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————

இப் பாட்டு கீழ்ப் பாட்டில் விருத்தாந்தம் ஆகவுமாம் –
ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –

(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு  நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன் படிகள் எல்லாவற்றையும் காட்டும் ஸ்வ பாவனை அல்லது
என் நாவானது வேறு சிலரை ஏத்தாது என்கிறார் –

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

வாய் அங்காந்து முற்றும்-மறையவர்க்குக் காட்டிய மாயவனை–பீஷ்மாதிகளுக்கு காட்டி அருளிய ஸ்ரீ கிருஷ்ணன் –
மார்கண்டேயருக்கு காட்டி அருளிய ஸ்ரீ வாமனன் என்றுமாம் –

செற்று எழுந்து தீ விழித்து-என்றது நீ ஒரு தூது வர விட வேண்டா என்ற துரியோத நாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –
நரகில் பாப கர்மம் போக்குகைக்கு என்று சங்கல்பம் வேண்டா –
சென்றவிந்த வேழ் உலகும்-மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்-மறையவர்க்குக் காட்டிய மாயவனை-நரகில் பாப கர்மம் போக்க சங்கல்பிக்க வேண்டா
தீ விழித்ததே போதும் –
ஸ்ரீ மார்க்கண்டேய பகவானுக்காகவுமாம் – ஸ்ரீ பீஷ்ம துரோணாதிகள் ஆதல் -சாமான்ய லஷியா வயம்
யல்லால்-இறையேனும் ஏத்தாது என் நா –பர வ்யூஹாதிகளில் போகாது -(தேவதாந்த்ர பஜநம் சொல்ல வந்தது அல்ல )

(யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம்
தத் பஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன -பாரதம் -ஆரண்ய -191-123-மார்க்கண்டேயர் வசனம் )

(திருமாலை அல்லது தெய்வம் என்று எத்தேன் -64- என்கிற இடத்திலேயே தேவதாந்தங்களைக் கழித்த பின்பு
மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா என்று இங்கு
பரம புருஷனுடைய ரூபாந்தரங்களையே கழிக்கிறார்)

(பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—-இரண்டாம் திருவந்தாதி -41–

சுகோ முக்தோ வாமதே வோபி முக்த -என்றவர்கள்
-ஸூக வாம தேவாதிகளான பரம வைதிகருக்கு –
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்னும்படி
தன்னுடைய கிருபையால் மோக்ஷத்தை கொடுத்து அருளினவனாய்
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் என்றுமாம்-
மா மறையோர்க்கு -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளையாய் -அவர்களுக்கு –
தத்ரூ ஸூர் விஸ்மிதா காரா –என்னும்படி
தன் விக்ரஹத்தை அனுபவிப்பித்தவன் -என்றுமாம் –
ஸ்ரீ மார்கண்டேயன் என்றுமாம்-
மா மறையோற்கு-என்று றகர ஒற்றான போது
மார்கண்டேயனுக்கு நித்யத்வம் கொடுத்த படியைச் சொல்லுகிறது -)

————————————————————-

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன் படிகள் எல்லாவற்றையும் காட்டும் ஸ்வ பாவனை அல்லது
என் நாவானது வேறு சிலரை ஏத்தாது என்கிறார் –

(ஹிரண்ய கசிபு துரியோதனாதிகள் -செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற -இது மட்டுமே
ஆஸ்ரிதற்கு விந்த வேழ் உலகும் மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்)

அதி பிரவ்ருத்தமான இவற்றை அழிக்கக் கடவதாய் பெரிய உத்யோகத்தோடே கிளர்ந்து -அக வாயில் சீற்றம் தோற்ற
நெருப்பு எழப் பார்த்து அழித்துப் பொகட்டு –

தன் பக்கலிலே உப ஸம்ஹ்ருதமாய் வந்து சேர்ந்து கிடக்கிற
இந்த சப்த லோகங்களையும் அழித்துப் பொகட்டு -அதுக்கு மேலே அழிந்த போன வஸ்துக்கள் இவை காண் -என்று
தன் திருப் பவளத்தைத் திறந்து -தத் பஸ்ய அஹம் சர்வம் -என்று சகல ஜகத்தையும் வைதிகனான மார்க்கண்டேய பகவானுக்கு
முன்பிருந்த கட்டளையிலே காட்டின ஆச்சர்ய சக்தி உக்தனானவனை ஒழிய ஏத்தப் பெறாமல் உறாவிக் கிடக்கிற என் நாவானது

பர வ்யூஹாதிகளான அவஸ்தாந்தரங்களிலே ஏக தேசமும் ஸ்தோத்ரம் பண்ணாது –

அன்றிக்கே பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்வரூப்யம் காட்டின படியை இப்பாட்டில் சொல்லுகிறது ஆகவுமாம் –
அப்போது கிளர்ந்து நெருப்பு எழப் பார்த்து சம்ஹரித்துச் சொல்லுகிற இந்த சகல லோகங்களையும்-
வக்த்ராணி தே த்வரமாணா விசந்தி -என்கிறபடியே தன்னுடைய கோபாக்கினியால் ஜ்வலித்துக் கிளருகிற
திருப் பவளத்திலே விழுந்து நசித்துப் போகிற படியை வைதிகரான பீஷ்மாதிகளுக்குக் காட்டின ஆச்சர்ய பூதனை ஒழிய
என் நா ஏத்தாது என்று பொருளாகக் கடவது –

பீஷ்மாதிகள் விஷயமான போது மறையவர்க்கு என்கிற இது
ரேபாந்தமாகக் கடவது -மார்க்கண்டேய விஷயமான போது னகர ஒற்றாகக் கடவது –

(ரகாரம் கடைசியில் வந்து பன்மை
மறையவன் -னகர ஒற்று ஒருமை )

(அநேக பாஹூதர வக்த்ர நேத்ரம் –பஸ்யாமி த்வாம் ஸர்வதோநந்தரூபம்—
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் -பஸ்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப—৷৷11.16৷৷)

(அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.
பஸ்²யாமி = காண்கிறேன்
த்வாம் = உன்
ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை
நா = இல்லை
அந்தம் = முடிவு
ந = இல்லை
மத்யம் = நடு
ந = இல்லை
புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்
பஸ்யாமி = காணுதல்
விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே
விஸ்வரூப = விஸ்வ + ரூபம் = அனைத்தையும் கொண்ட வடிவமானவனே)

(கணக்கற்ற கைகள் வயிறுகள் வாய்கள் கண்கள் ஆகியவற்றை உடையவனாய் -அளவற்ற உருவங்களை யுடையவனாய் –
உன்னை எல்லாப் புறத்திலும் காண்கிறேன் -அனைத்தையும் நியமிப்பவனே -அனைத்தையும் உடலாகக் கொண்டவனே –
நீ எல்லை அற்றவனாகையாலே உனக்கு முடிவையும் காண்கிறிலேன் -தொடக்கத்தையும் காண்கிறிலேன்
உலகங்களை நியமித்து உலகங்களை சரீரமாக -எண்ணிறந்த கைகள் கண்கள் -அந்தம் அற்ற ரூபங்கள் –
ஆதி முடிவு நடு தெரியாமல் –)

(கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச–தேஜோ ராஸிம் ஸர்வதோ தீப்தி மந்தம்-
பஸ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்க த்யுதிமப்ரமேயம்—৷৷11.17৷৷)

(கிரீடிநம் = கிரீடம்
கதிநம் = கதை
சக்ரிணம் = சக்ராயுதம்
ச = மேலும்
தேஜோராஸிம் = ஒளி வீசும்
ஸர்வதோ = அனைத்து திக்குகளிலும்
தீப்திமந்தம் = ஒளியூட்டும்
பஸ்யாமி = நான் பார்க்கிறேன்
த்வாம் = உன்னை
துர் நிரீக்ஷ்யம் = மனதில் நிறுத்த கடினமான
ஸமந்தா த் = அனைத்துப் பகுதிகளிலும்
தீ³ப்தாநலார்கத்³ = சூரியனைப் போல ஒளி விடும்)

(பேர் ஒளிக் குவியலாய் இருப்பவனாய் -எல்லாப் புறத்திலும் ஒளி யுடையவனாய் -ஒவ் ஒரு அவயவமும்
காண்பதற்கு அரியனாய்-கொழுந்து விட்டு எரியும் அக்னியைப் போலேயும்-ஸூர்யனைப் போலவும்
கிரணங்களை உடையவனாய் -அளவிட்டு அறிய முடியாதவனாக உன்னை
கிரீடத்தை உடையனவாகவும் -கதையை உடையவனாகவும் சக்ரத்தை உடையவனாகவும் காண்கிறேன்
கிரீடங்கள் -கதைகள் சக்ராயுதம் தரித்து -அசாதாரண லக்ஷணங்கள் -திருமாலுக்கு தானே –
ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம் -ஒளி படைத்த பதார்த்தங்கள் சேர்த்த திரு மேனி –)

அமீ ச த்வாம் (ஸர்வே ) த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா–ஸர்வேஸ் ஸஹைவ அவநி பால ஸங்கை–
பீஷ்மோ த்ரோணஸ்- ஸூத புத்ரஸ் ததாஸௌ-ஸஹாஸ் மதீயைரபி யோதமுக்யை—-৷৷11.26৷৷

வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி–தம் ஷ்ட்ராகராலாநி பயாநகாநி.–
கேசித் விலக்நா தஷநாந்தரேஷு-ஸந்த்ருஸ் யந்தே சூர்ணிதைர் உ த்த மாங்கை—-৷৷11.27৷৷

எதிரே காட்சி அளிக்கும் த்ருதராஷ்ட்ரனின் புத்திரர்கள் நூற்றுவரும் பீஷ்ம பிதா மஹரும் ஆச்சார்யரான துரோணரும் –
அவ்வண்ணமே எதிரே காட்சி அளிக்கும் கர்ணனும் -அவர்களைச் சேர்ந்த அரசர் கூட்டங்களோடும்
நம்மைச் சேர்ந்த சில வீரர் தலைவர்களோடும் கூட வளைந்த பற்களை உடையவையாய் மிகவும் பயங்கரமாய் இருப்பவையுமான
உனது வாய்களுக்கு உள்ளே -அழிவின் பொருட்டு விரைவுடன் நுழைகிறார்கள் –
அவர்களில் சிலர் துண்டு துண்டாக்கப்பட்ட தலைகளோடு கூடியவர்களாய் பற்களின் இடைவெளிகளில்
தொங்குகின்றவர்களாய் காணப்படுகிறார்கள்
திரு வாயை திறக்க -த்ருதாஷ்ட்ர புத்திரர்கள் -பூமி பால ராஜாக்கள் கூட்டம் -பீஷ்மர் துரோணர் -கர்ணன் –
முன்னால் நிற்கும் கர்ணன் -நம் பஷத்தவர்களும்-கூட -அடுத்த ஸ்லோகத்தில் புகுகிறார்கள் என்பதை சொல்லி
வளைந்த பற்கள் -பயங்கரமான வாய் -வெகு வேகமாக உள்ளே புகுகிறார்கள் –வாயை மூடுவதற்கு முன்னே புக வேகமாக -போக வேன்டும் –
எஞ்சாமல் வயிற்றில் அடக்கினான் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
சூரணமாக உத்தம அங்கம் தலை- ஆக்கப்பட்டு -பற்களில் சிக்கி -தொங்கும் காட்சி கண்டேன் –

பீஷ்மரும் துரோணரும் ஸம்ஹரிக்கப் படுவதை அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கு காட்டிய ஆச்சார்ய பூதனே -மாயவனை -என்கிறது –

————————————————————————————————————–

இது விடப் போகாததாய் இருந்தது -இது கீழ்ப் போகாததாய் இருந்தது -இதுக்கு எங்கனே விலக்கடி யுண்டான படி –
அபரிகரராய் இருக்கில் செய்யலாவது இல்லை இறே -என்னில் ஈஸ்வரன் ஒரு பரிகரம் தேடும்படி வைத்தானோ என்கிறது –

(ஸ்ரீ வை குண்டம் செல்வது கை பட்டு எளியது என்று ஸம்ஸார சூழலில் சிக்குவதே அரிது என்பதே ஆழ்வார் திரு உள்ளம்-மா கதி -அர்ச்சிராதி கதி என்றும் உபாயங்கள் பக்தி பிரபத்தி என்றும் கொள்ளலாம் -இவை இரண்டும் ஸித்தமாய் உள்ளனவே -ஸ்ருஷ்டத்வ வன வாஸம் -பிரமாணம் )

இப்படி அவனை ஏத்துகைக்கு பரிகரமான நாவைக் கொண்டு அவனை ஏத்தாதே –
சேதனர் அத்தை சம்ஹரிக்கைக்குக் பரிகரமாக்கிக் கொண்ட படி எங்கனே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ஸ்ரமப் பட்டுத் தேட வேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப் பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக் கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத் தன்மை யற்ற [திரும்பி வருதலில்லாத]
மா கதிக்கண்–பரம ப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகை யுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படி யிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக் கதிக் கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று-ஓவாது உரைக்கும் உரை உண்டே–ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாயா -என்கிறபடியே
நாக்கு ஆகில் அவனை ஏத்தக் கடவது -அந் நாக்கு கண்டவோபாதி திரு மந்த்ரமும் இவனுக்கு இளைப்பாறிச் சொல்ல வேண்டாதது உண்டே
ஒரு சஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம் -இது சொல்லுமதில் நரக அனுபவம் அமையும் என்னாத திரு மந்த்ரம் உண்டே –
மூவாத-(மூப்பு அடையாத -அழியாத -திரும்பி வராத-மீளுதலாம் ஏதும் இலா கதி  )மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே –அபுநராவ்ருத்தி லக்ஷணமான ப்ராப்யத்துக்குச் செல்லும் அர்ச்சிராதி மார்க்கம் உண்டே –
என்னொருவர்-தீக் கண் செல்லும் திறம் —-நரகத்துக்கு போக வழி நேராகக் கண்டிலோம் -இதுக்கு விலக்கடி எங்கனே உண்டாயிற்று
சம்சாரி ஹிதம் காண்கிறிலோம்-நாளோ செல்லா நின்றது -என்னொருவர்-தீக் கண் செல்லும் திறம் -வலிய விலக்கடி தேட வேணும்-

நா என்றதும் தாமரையின் பூ என்றதும் –
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது———இரண்டாம் திருவந்தாதி–21–என்றபடி
சென்னியரே-தமக்கும் இந்த்ரியங்களுக்கும் மற்ற ஆஸ்ரயண  உபகரணங்களுக்கும்  உப லக்ஷணம்-

நாராயணேதி ஸப்தோ அஸ்தி வாக் அஸ்தி வச வர்த்தி நீ
ததாபி நரகே கோரே பதந்தீத் யேதத்புதம் –பிராமண கோஸம்
நாராயண என்னும் ஸப்தம் உள்ளது -வாக்கு வசப்பட்டு இருக்கிறது -அப்படி இருந்தும் கோரமான நரகில் விழுகிறார்கள் என்பது ஆச்சர்யமே –

————————————————————

இப்படி அவனை ஏத்துகைக்கு பரிகரமான நாவைக் கொண்டு அவனை ஏத்தாதே –
சேதனர் அத்தை சம்ஹரிக்கைக்குக் பரிகரமாக்கிக் கொண்ட படி எங்கனே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

ஏத்துகைக்கு பரிகரமான நாவானது புறம்பு போய்த் தேட வேண்டாத படி தம் தாம் வாயிலே உண்டே -சஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம்
போலே நெடுக இருந்து சொன்னாலும் முடிவு காண ஒண்ணாத படி இருக்கை அன்றிக்கே -நமோ நாராயணாய என்று ஒரு காலே
சொல்லி இளைப்பாறலாம் படியான திரு மந்த்ரம் உளதாய் இரா நின்றதே -அபுநரா வ்ருத்தி லக்ஷணமாய் பரம ப்ராப்யமான
மோக்ஷத்திலே செல்லுகைக்கு ஈடான உபாயம் உண்டே –இப்படி உஜ்ஜீவனத்துக்கு உடலான நல் வழி போகாமல் விநாசத்துக்கு
ஈடான துர் மார்க்கங்களிலே சென்று ஒருவர் விழுகிற பிரகாரம் என்னாயிருக்கிறதோ என்று விஸ்மயப் படுகிறார் –

——————————————————————————————————

விலக்கடி இல்லை என்று இருக்கலாய் இருக்கிறது இல்லை -இவ்வர்த்தத்தைக் கை விடாதே கொள்-என்று
தம்முடைய திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –

(கடைக்கட்  பிடி –அனைத்துமே அவன் வசப்பட்டவையே-அனைத்தும் அப்ருதக் சித்த விசேஷணங்கள்- சரீரம்- பிரகாரம் -நியாமகம் -இந்த  அர்த்தத்தை இறுதி வரை விடாமல் கொள் -அர்த்தத்தின் இறுதியைக் கொள் என்றுமாம்-ஈஸ்வர ப்ரீதி கோப உபவ் புண்யமும் பாபமும்  )

லௌகிகர் செய்தபடி செய்ய -நெஞ்சே நீ முந்துற முன்னம் நான் சொல்லுகிற இத்தை அழகியதாக புத்தி பண்ணு என்கிறார் –

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இரு வகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம் மண் தான்–இந்தப் பூமியும்
மறி கடல் தான்–அலை யெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலே யாவன்;
கடைக்கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மை யென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக்கொள்.

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்–நான் சொல்லிற்று தப்பாதே போகிற நெஞ்சே –
அர்த்த தத்வம் கண்டு அல்லது கால் வாங்கேன் -என்று இருக்கிற நெஞ்சமே –
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் —
புறம் தான் இம் மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
விஹிதத்தைச் செய்து நிஷிதத்தைப் பரிஹரித்துப் போருகிற நம்மோடு -விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை-
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில் -ஏஷ ஏவ சாது கர்ம கார யதி –தம்முடைய பக்கல் கர்த்ருத்வம் தவிர்த்த பின்பு
ஒரு அசேதன கிரியையைப் பற்றுவர் அன்றே -செங்கண் மால் கண்டாய்-சர்வேஸ்வரன் கண்டாய் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ-(வேதாந்தம் காட்டிய அடையாளம் )

இம்மண் இத்யாதி -பிரதிபந்தகமான -அசித்தோடே கூட சேதனனும் அவனே -அநுக்தமான மஹத்தாதிகளைச் சொல்லுகிறது(ஷேத்ரஞ்ஞனும் அவனே – கீதை -அதே அர்த்தம் இங்கும் -ஷேத்ரமும் அசித்தும் அவனே அர்த்தாத் ஸித்தம் )
அவனை ஒழிய ஸ்வ தந்திரமாய் இருப்பது ஒன்றும் இல்லையே –கண்டாய்  கடைக்கட்   பிடி–இவ்வர்த்தத்தை திரும்பாது
கடைக்கட் பிடி -கடி போகப் பிடி -இவ்வர்த்தத்தின் யுடைய கடைப்பிடி கண்டாயே என்றுமாம்

அறம் இத்யாதி -ஆபாத ப்ரதீதியில் அவனை ஒழிய புண்ய பாபம் என்று தோற்றுவது-நிலை நின்று பார்த்தால் அவனே கடவன் என்று தோற்றும்
திரும்பாது என்று நெஞ்சோடு கூட்டவுமாம் –திரும்பாது -அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் -என்னவுமாம்
திரும்பாது கடிகைக் கடிபிடி -என்னவுமாம் –
நாட்டார்க்கு பல வழி யுண்டாகிலும் நம்முடைய வழியைப் பற்றி இராய நீ -திரும்பாது என் நெஞ்சமே
சொல் என்று அலைகிற நெஞ்சே – செங்கண் மால் – நம்முடைய விஷயத்தில் இருக்கிறபடி கண்டாயே –
அறம் இத்யாதி -பெறுகைக்கும் இழக்கைக்கும் அவனுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஒழியப் போக்கு இல்லை
சர்வமும் பகவத் அதீனம் அன்றோ -கடைக் கட் பிடி –அறுதியாகப் பிடி —

—————————————————————

லௌகிகர் செய்தபடி செய்ய -நெஞ்சே நீ முந்துற முன்னம் நான் சொல்லுகிற இத்தை அழகியதாக புத்தி பண்ணு என்கிறார் –

எனக்கு பவ்யமான நெஞ்சே புண்யம் பாபம் என்று சொல்லப்படுகிற இரண்டுக்கும் நிர்வாஹகனாய்ப் போருகிறவன்
புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் தானே கிடாய் -இந்த பூமியும் அலைகிற கடலும் வாயுவும் ஆகாசமும் இவற்றுக்குப்
புறம்பான மஹதாதிகளுமான இவற்றுக்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிறவன் அந்த புண்டரீகாக்ஷன் தானே கிடாய்
முடிவில் வந்தால் இதுவே அர்த்த தத்வம் என்று இத்தைத் தவறாத படி மனசிலே பிடித்துக் கொள் –

(செங்கண் மால் -அறம் பாவமாவான் -ஒருவனை நோக்கி வாத்சல்யத்தால் கண்கள் சிவக்க கடாக்ஷித்தால் புண்யமாகும்
மற்ற ஒருவனைக் கோபத்தால் பார்க்க அவனுக்குப் பாபத்தை வளரச் செய்கிறான்

ஏஷ ஹ்யேவைநம் ஸாது கர்ம காரயதி அஸாது கர்ம காரயதி
தம் யமேப்யோ லோகேப்ய உன்னி நீஷதி
ஏஷ ஹ்யேவை நம ஸாது கர்ம காரயதி யமதோ திநீஷதி -கௌஷீதகீ -2-64-65-
எந்த ஜீவனை அண்டத்தில் உள் இருக்கும் இந்த லோகங்களில் இருந்து மேலே பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறானோ
அவனை பரமாத்மாவே நல்ல கர்மங்களை பண்ணுவிக்கிறான்
எவனைக் கீழே தள்ள விரும்புகிறானோ அவனை கெட்ட கர்மங்களை பண்ணும்படி செய்கிறான் –

அனைத்துக்கும் பிரகாரீ -சரீரீ -சேஷீ – நியாமகன் -ஸ்வாமி அவனே
புண்யா புண்யா ஈஸ்வர ப்ரீதி கோபவ் -அவனது உகப்பே புண்யம் கோபமே பாபம்
இதுவே அர்த்த தத்வம் என்று தவறாத படி மனஸ்ஸிலே பிடித்துக் கொள்)

————————————————————————————————

அறம் பாவம் என்றும் இரண்டும் ஆவான் -என்றதுக்கு வியாக்யானம் இப் பாட்டு –

பிடி சேர்  பொடி சேர்-என்ற இத்தால் பிராயச் சித்தம் பண்ணி அத்தால் ஸூத்தன் அன்றியிலே இருக்கிறவனையும்
ஸூத்தன் ஆக்கிற்று திருவடிகளில் ஸ்பர்சத்தாலே என்கிறது

அறமும் அவனே என்று பாவனமாகச் சொல்லா நின்றீர் -கங்கை தொடக்கமானவையும் பாவனம் அன்றோ என்ன
அதனுடைய பாவனத்வம் தத் சரண கமல சம்பத்தாயத்தம் என்கிறார் –

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்–ஒளி பொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜல மயமான
கங்கை என்னும் பேர்–கங்கை யென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்—ஸ்ப்ருஹணீய சிறந்த பெண்
உன் தன் அடி சேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்-அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –ஜென்ம ஞான வ்ருத்தங்கள்-
சாந்தோ தாந்தோ உபரதஸ் திதி ஷூ -என்னும் அவன் இறே மோக்ஷத்து விஷய பிரவணம் ஆகையிறே பாபம் ஆவது
தன் பிடி பக்கல் ப்ரவணமாய் தன் பக்கலில் இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது பாபம் தான் இட்ட வழக்காக வேணும் இறே –
பேராளா -பிடி சேர்ந்த களிற்றை ரக்ஷித்தான் என்றால் அவன் செய்தான் ஆகில் கூடும் என்று இருக்கை –

உந்தன்-அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே–இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்கு என்கிறது
பொடி சேர்-அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த-புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் —
பஸ்மச் சந்தனாய் அக்னியைக் கையிலே ஏற்றானாய் இருந்துள்ள ருத்ரனுடைய விளங்கா நின்ற ஜடை மேலே
பாய்ந்த புனலை யுடைத்தான கங்கை என்னும் பேரை யுடைத்தான விலக்ஷணையான ஸ்த்ரீ உன் திருவடிகளிலே
சேர்ந்து அன்றோ நாட்டுக்கு பாவனம் ஆயிற்று -(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடு வினை களையலாமே )

பிடி சேர்  பொடி சேர்-என்ற இத்தால் பிராயச் சித்தம் பண்ணி அத்தால் ஸூத்தன் அன்றியிலே இருக்கிறவனையும்
ஸூத்தன் ஆக்கிற்று திருவடிகளில் ஸ்பர்சத்தாலே என்கிறது-

பிடி சேர் களிறு -அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்திலையோ -ஒரு கால் நினைத்தான் ஆகில்
முன்பு ஸ்வரூபம் இது அன்றோ என்கிறது –ஜென்ம வ்ருத்தங்கள் அன்று பிரயோஜகம் -(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு )
அருள் பெற்றாள் -பிறரை ஸூத்தராக்கும் படி பார்த்து அருளினான் –

(சாந்தோ தாந்தோ உபரதஸ் திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வாத்மானம் பஸ்யேத்-ப்ருஹதாரண்யம் – 6-4-28-
உள்ளும் புறமும் இந்திரியங்களை அடக்கியவனாய் -காம்ய கர்மங்களில் ஆசை அற்றவனாய் -பொறுமையுடன்
கூடினவனாய் கலங்காத மனஸ்ஸை யுடையவனாய் இருந்து கொண்டு தனது ஆத்மாவில் அந்தர்யாமியாய் இருக்கும் பரமாத்மாவைக் காணக் கடவன்
இவனோ பிடி சேர் களிறு -வ்ருத்த தோஷம் தண்ணளி செய்து அருளி ரஷித்த மஹா ப்ரபாவன் –

த்ரவீ பூதஸ் ததா தர்ம -ஈஸ்வர ஸம்ஹிதை -தர்மமே -ஜலமாயிற்று

மத்யம் பீத்வா குரு தாராம்ஸ் ஸ்ச கத்வா ஸ்தேயம் க்ருத்வா ப்ரஹ்ம ஹத்யாஸ் ச க்ருத்வா
பஸ்மச் சந்தோ பஸ்ம ஸய்யா ஸாயாநோ ருத்ராத்யாயீ முச்யதே ஸர்வ பாபை –சாதாதப ஸ்ம்ருதி

பாவநார்த்தம் ஜடா மத்யே ததார சிரஸா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை

கங்கையும் உனது திருவடி ஸ்பர்சத்த்தாலே அன்றோ பாவானத்வம் தரும் சக்தியைப் பெற்றாள்)

————————————————————-

அறமும் அவனே என்று பாவனமாகச் சொல்லா நின்றீர் -கங்கை தொடக்கமானவையும் பாவனம் அன்றோ என்ன
அதனுடைய பாவனத்வம் தத் சரண கமல சம்பத்தாயத்தம் என்கிறார் –

ஸ்வ ஹிதம் அறியாதே பிடியின் பக்கலிலே பிரவணமாய் -அத்தை விட்டு நீங்க மாட்டாமல் கூடி வர்த்திக்கிற ஆனையை-
அதின் வ்ருத்த தோஷம் பார்த்து இகழாதே தண்ணளி பண்ணி ரஷித்த மஹா பிரபாவன் ஆனவனே
பஸ்ம சய்யா சயான -என்கிறபடியே பண்ணின தோஷத்துக்கு பிராயச்சித்தமாக எப்போதும் பஸ்மத்திலே சாயுமவனாய்
அக்னிக்கு அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய ஒளியை யுடைத்தான ஜடையின் மேலே
தச் ஸூத்யர்த்தமாக வந்து குதித்த நீரை யுடையளாய் -கங்கை என்னும் பேரை யுடைய ஸ்லாக்யையான ஸ்த்ரீ யானவள்
பாதகிகளையும் பரிசுத்தனாக்கும் -ஸ்வதஸ் சக்தியை யுடையனான உன் திருவடிகளைக் கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் எல்லாம் பெற்றது –

விஷய பிரவணமான களிற்றை ரஷிக்கையாலே பாபம் இவன் இட்ட வழக்கு என்றும்
கங்கையினுடைய பாவனத்வம் தத் சம்பந்தாயத்தம் என்கையாலே புண்யம் அவன் இட்ட வழக்கு என்றும் சொல்லிற்று யாய்த்து –

——————————————————————————————————————

ஈஸ்வரனாய் அதிகாரியாய் -தானும் சிலர் காரியத்துக்கு கடவனாய் இருக்கிறவனை -இவனுடைய சம்பந்தத்தாலே
ஸூத்தன் ஆனான் என்று சொல்லும் படி எங்கனே என்னில் -ஈஸ்வர அபிமானியாய் இருக்கும் போது சொல்லுமத்தை
பிரமாணிக்க ஒண்ணாது -இவனுடைய ஸ்வரூபத்தை பார்க்கலாகாதோ -என்கிறார் –
ருத்ரனுடைய ஐஸ்வர்யம் பொய்யோ -என்னில் பகவத் அதீனம் -என்கிறார் —

(அரன் அதிகன் -உலகு அளந்த அரி அதிகன் -சமம் என்று பேசும் அறிவிலிகள் கம்பர்-வேறே வேறே வியக்திகள் அன்றோ )

ஜகத் சர்வம் சரீரம் தே –சமஸ்தத்துக்கும் அந்தராத்மா நாராயணனே -சேஷி நியாந்தா வியாபகன் தாரகன் –

ஏறாளும் இறையோனும் திசைமுகனும்–கூறாளும் தனி உடம்பன் –இத்யாதி

உளன் -உள்ளத்தே உறைவதாலேயே சத்தை பெற்று உள்ளதாகும் -பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லையே )

அவன் திருவடியில் பிறந்த கங்கையை ஜடையிலே தரித்தான் என்று ருத்ரனுக்கு குறை சொல்லுகிறது என்
அவனும் ஒரு காரியத்தில் அதிகரித்து ஈஸ்வரனுமாய் அன்றோ போருகிறது-என்ன
அவனுடைய ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் வந்தது அத்தனை போக்கி ஸ்வத இல்லை என்கிறார் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் –98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடை  முடியையுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

இருவரங்கத் தால் திரிவரேலும்–இருவர் அங்கத்தால்-வடிவுடன் திரிந்தார்கள் ஆகிலும்
ஒரு வனங்கத் தென்று முளன்-ஒருவன் -சாதக வேஷம் பூண்ட சிவன் -அங்கத்து என்றும் உளன் -நெடுமாலின்
ஏக தேச சரீரத்தைப் பற்றி எக்காலத்திலும் சத்தை யுடையனாய் இருப்பன் –

பொன் திகழு மேனிப்–சர்வேஸ்வரனாய் இருக்கும் போது மேக ஸ்யாமமாய் இருக்கும் இறே(நீல தோயத மத்யஸ்தா -கருப்பு மேகத்தில் பள பளத்து -ஹிரண்ய மயம் -முகில் -மேக வண்ணன் -கடல் வண்ணன் )
புரி சடை–தாழ் சடையானுக்கும் நீண் முடியானுக்கும் வாசி பார்த்துக் கொள்ளலாம் அத்தனை இறே –
அம் புண்ணியனும்–ஹூத்வாத்மா நம் தேவ தேவோ பபூவ –என்கிற படியே –
நின்றுலகம் தாய நெடுமாலும் –ஸ்வைரமாக அதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும் -அவன் தலையிலும்
பிறர் தலையிலுமாகத் திருவடிகளை வைத்தவனும்(சர்வாதிகத்வமும்-வாத்சல்யம் காட்டும் -தாய் அன்பு காட்டுபவனாயும் )
என்றும்-இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் —–இருவரும் ச பரிகரமாகத் திரிந்தாரே யாகிலும் -ஒருவனுக்கு ஸ்திதி (உளனாகும் தன்மை )ஒருத்தன் சரீரத்தைப் பற்றி
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் என்னும் படியே —
நின்று உலகம் இத்யாதி -ருத்ரன் தலையிலும் நாட்டார் தலையிலும் ஓக்க அடியிட்டவன் –
இரு அங்கத்தால் -இரண்டு வடிவுகளாலே -என்றுமாம் -அங்கத்தில் ஏக தேசத்தில் உளன் என்றுமாம் –

(நீல தோயத மத்யஸ்தா -தைத்ரியம்

ந மாம் கர்மாணி விம்பந்தி -ஸ்ரீ கீதை

மஹா தேவஸ் ஸர்வ மேத மஹாத்மா ஹுத் வாத்மாநம் தேவ தேவோ பபூவ
ஸர்வான் லோகான் வியாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே த்யுதிமான் க்ருத்தி வாஸ -பாரதம் சாந்தி பர்வம் –20-12-
இவனுடைய ஈஸ்வரத்வம் சாதன அனுஷ்டானத்தாலே யுண்டாயிற்று

திருவடியால் துகை யுண்டவன் அன்றோ –

உலகம் தாய நெடுமால் -பேர் அன்புடைய தாய் குழந்தையை அணைப்பது போன்ற செயல்

நாம ரூபா வாஹன லோக க்ருத்ய பரிகாராதிகளில் வாசி யுண்டே
நாரணன் -அரன்
கொண்டல் வண்ணன் -பொன் திகழ் மேனி
வேதாத்மா வாஹனம் -எருது -ரிஷப வாஹனம்
ஸ்ரீ வைகுண்டம் -கைலாச வாஸி
ரக்ஷணம் -ஸம்ஹாரம்
நித்ய ஸூரி கணங்கள் சூழ -பூத ப்ரேத பிசாச கணங்கள்
சூழ
ஸாத்விக ஆகாரம் -தாமஸ ஆகாரம்
வேதத்தால் கோஷிக்கப் படுபவன் -தானே செய்த சிக்க ஆகமத்தால் கோஷிக்கப் படுபவன்

ருத்ரபதவியும் பிரவாஹோ நித்யம் -என்றும் என்னக் குறைவில்லை

ஸ ப்ரஹ்மா ச சிவ -தைத்ரியம்
ப்ரஹ்மா நாராயண சிவஸ் ச நாராயணா சக்ரஸ்ய நாராயண திசஸ் ச நாராயண
யஸ்ய ஆத்மா சரீரம்
திருமேனியில் ஒரு புறம் அடங்கி நின்று சத்தை பெறுபவன்
பஸ்ய ஏகாதச மே ருத்ரான் தக்ஷிணம் பார்ஸ்வமா ஸ்ரீ தரான் -பாரதம் மோக்ஷ தர்மம்
ப்ரஹ்மணாம் ஈசம்  கமலாசனம்-கீதை
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் -திருவாய் -1-3-9-

சாமந்தருக்கு -சிற்று அரசர்க்கு புறம்பே நாடுகள் கனக்க யுண்டானாலும்
மாளிகைக்குள்ளே -அரண்மனைக்குள்ளே -செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்து மகிழவார் போலே
இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரு கலகங்களிலே அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி இருந்து கலகம் தீர்ந்தகு புறம்பே குடி போனாலும்
இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னரும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை -திருவாய் -4-10-3-
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -திருவாய் -4-10-4-)

——————————————————-

அவன் திருவடியில் பிறந்த கங்கையை ஜடையிலே தரித்தான் என்று ருத்ரனுக்கு குறை சொல்லுகிறது என்
அவனும் ஒரு காரியத்தில் அதிகரித்து ஈஸ்வரனுமாய் அன்றோ போருகிறது-என்ன
அவனுடைய ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் வந்தது அத்தனை போக்கி ஸ்வத இல்லை என்கிறார் –

பொன் போலே ஒளி விடுகிற வடிவையும் பின்னின ஜடையையும் யுடையனாய் -இப்படி ஜடை கட்டி அனுஷ்டித்த
அழகிய புண்யத்தை யுடைய ருத்ரனும் ஸ்வைரமாக நின்று ருத்ரனோடு அல்லாதாரோடு வசியற சகல லோகங்களையும்
அநாயாசேன அளந்து கொண்ட சர்வாதிகனான சர்வேஸ்வரனுமாகிற இவர்கள் இருவரும் சர்வ காலத்திலும்
இரண்டு சரீரத்தை உடையவராய் -அறிவு கேடர்க்கு ஓக்க நினைக்கலாம் படி திரிந்தார்கள் யாகிலும்
புண்ணியனான ஒருவன் நெடுமாலான ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு சர்வ காலத்திலும் லப்த சத்தாகனாய் இருக்கும்

அன்றிக்கே ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த சத்தாகனாய் இருக்கும் என்னவுமாம்

இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

——————————————————————————————————————–

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட -நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –

(ஜங்கம ஸ்ரீ விமானம் -நடமாடும் விமானம் நமது உள்ளம்-நின்று இருந்து கிடந்து சாதன அனுஷ்டானம் செய்து பெறாப் பேறு பெற்றது போல் நம் திரு உள்ளமே பரம புருஷார்த்தம் )

புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் —
நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் –99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான-அனுகூலமான- மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்ய வாஸம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற் கடலிலே கண் வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்ய வாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்துகொள்.

உளன் கண்டாய் -இலனானவனை உளன் என்கிறது அன்று -அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும் -நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

( தனக்குத் தான் தேடும் நன்மை தீமையோ பாதி விலக்காயே இருக்கும் -நான் இருக்கிறேன் ஸ்வ ரக்ஷண அந்வயம் கூடாதே)

நன்னெஞ்சே –எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
உத்தமன்  என்றும்-உளன் கண்டாய் –அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்-இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன்
என்று இருக்கும் -தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும் தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –

புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –

உளன் கண்டாய் –பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –
நன்னெஞ்சே –இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே -உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை – உள்ளுவார்–புகுர சம்வத்திப்பார்
உள்ளத்து உளன் -இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் -அணைப்பார் கருத்தானாவான் —

—————————————————————————-

புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் —
நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

அவன் ஒருவன் உளன் -என்று சொன்னால் உகக்கும் நல்ல நெஞ்சே -பிறர்க்கு நன்மை வேணும் -என்று
எப்போதும் சிந்தித்த படியே இருக்கும் உத்தம புருஷன் -நம்முடைய ரஷணத்தாலே தன் சத்தையாம் படி உளனா மவன் கிடீர்
நாம் உளரான அன்றோடு இலரான அன்றோடு வாசி அற சர்வ காலத்திலும் நம்மை ரஷிக்கையிலே தீஷித்து உளனாய் இருக்குமவன் கிடாய்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டு விலக்காதே அத்தை பொருந்தி அநுஸந்திக்குமவர்களுடைய நெஞ்சிலே சாதரமாக
நித்ய வாசம் பண்ணுமவன் கிடாய் -திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனும் -திரு மலையிலே நின்று அருளினவனும்
கிடப்பது நிற்பதாய் அங்கு பண்ணின கிருஷியின் பலமாக (கோர மா தவம் செய்தனன் கொல் )நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
இடவகைகள் இகழ்ந்திட்டு -என்கிறபடியே அவ் விடங்களை அநாதரித்து சாதரமாக நித்ய வாசம் பண்ணுமவன் என்று புத்தி பண்ணு –

(பல பாசுரங்களில் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி பெருமைகளைப் பிறருக்கு உபதேசித்தவர் இப் பாசுரத்தில் ஈஸ்வர ஸத் பாவத்தை உபதேஸிக்கிறார் என்பது பொருந்தாதே –
நம்மை நம்மிடமும் பிறர் இடமும் காட்டிக் கொடுக்காமல் ரக்ஷித்து நமது சத்தையை அருளுவதிலேயே ஊன்றி இருக்கிறான் என்கிறார்
நன்னெஞ்சே -அவனே நமக்கு ரக்ஷகன் என்பதை எனக்கும் உபதேஸிக்க வல்ல முந்துற்ற நெஞ்சு அன்றோ –
நம்மை தனது பேறாக ரக்ஷித்து சத்தை பெறுவான் அவன் என்று சொன்னால் விஸ்வஸிக்கும் நல்ல நெஞ்சே என்றுமாம்)

பிறரை ஹிம்சிப்பதே யாத்திரையாக கொள்பவன் அதம அதமன்
ஸூய நலத்துக்காகப் பிறரை ஹிம்சிப்பவன் அதமன்
ஸூய நலத்தை விட்டு பிறரை ரக்ஷிப்பவன் -மத்யமன்
பிறரை ரக்ஷித்தால் அல்லது தரிக்காமல் -தன்னைத் தாழ விட்டாகிலும் -தனது பேறாகவே ரக்ஷிப்பவன் உத்தமன்
புருஷோத்தமன் ஒருவனே -)

அசன்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது -தைத்ரியம்-

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

பர வ்யூஹ விபவ அர்ச்சா நிலைகள் எல்லாமே அவன் நம்மைப் பெற ஸாதன அனுஷ்டானம் செய்யும் இடங்களே
இளம் கோயில் கை விடேல் என்று பிரார்த்திக்க வேண்டும்படி அன்றோ இருக்கும் –
விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -தைத்ரியம்
நெஞ்சமே நீள் நகர் –திருவாய் -3-8-2-
உள்ளத்திலுக்கப்புடன் புகுந்து நித்ய சத்தை பெறவே நித்ய வாஸம் செய்யும்
அவனை ஆணை இட்டு விலக்காமல் அத்வேஷமும் ஆபி முக்யமுமே வேண்டியது
நம்மைப் பெற அவனது முயற்சிகளுக்குப் பிரமாணம் -வெள்ளத்து உள்ளானும் -இது பரமபத நிலைக்கும் உப லக்ஷணம்
வேங்கடத்து உள்ளானும் -இது நின்று இருந்து கிடந்தது நடந்து ஸேவை சாதித்து அருளும் அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
இத்தைப் பெற்ற பின்பு இகழ்ந்திட்டு -5-4-10- இவற்றை உபேக்ஷித்து இந்நெஞ்சு இல்லையேல் நமக்கு வாழ்வு இல்லை என்று பேர் உகப்போடே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
இப்படி நம்மை ரஷித்தே தான் சத்தை பெறும்படி இருப்பதை அனுசந்திக்கவே நம்மையே பிறரையோ நினைத்து அஞ்ச வேண்டாம் என்கிறார் -)

மற்ற ஆழ்வார்களும் இதே போல் பாசுரம்-உளன் -நல்ல வேளை இவர் இருந்தார் -உளன் -என்னை காப்பாற்றி எனது சத்தைக்கு காரணமாக இருந்தவர்
எங்கும் உளன்-வஸ்து ஸ்திதிக்கு அவன் எங்கும் இருந்தாலும்ந – -பிரகாசம் ஆஸ்திகர் உள்ளத்தில் -புரிந்து கொண்டால் தானே பிரகாசிக்கும்

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————————————————————————————————————–

பேறும் அத்தாலே -பெறுவதும் அவன் திருவடிகளை அவனாலே பெறுவது -என்கிறது –

(புல்லைக் காட்டி புல்லை இடுவாரைப் போல் -திருவடிகளைக் காணலாம் -கண்டு தொழுது கைங்கர்யம் செய்யும் அளவும் -இதுவே புருஷார்த்தம்
அத்தை அடைய ப்ராபகமும் திருவடிகளே-இதனாலே இணை அடிகள் -மனத்து வை -மஹா விஸ்வாஸம்-வேண்டுமே
பெரும் பேர் இன்பத்தை முதலில் சொல்லி பின்பு உபாயம் உபதேச வேளையில் செய்ய வேண்டுமே – இரண்டிலும் ப்ராப்யமே பிரதானம் -கருமுகை மாலையை சும்மாடு ஆக்குவது போல் உபாயமாகவும் பற்றுகிறோம் -)

இப்படி மேல் விழுந்து நம்மை ஆதரிக்கிறவனைப் பெறுகைக்கு உபாயம் ஏது என்ன
அவனே ப்ராப்யம்
அவனைப் பெறுகைக்கு ப்ராபகமும் அவனே என்று அத்யவசி -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-(மண்டல அந்தாதி )

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களை யெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–ஆச்சர்ய சேஷ்டிதங்கள் கொண்ட எம்பெருமானையே-மனசில் வைத்ததும் உபாயம் ஆகாதே மாம் ஏகம் அன்றோ -அதிகாரி ஸ்வரூபம் -பல அனுபவ யோக்யதா ஆபாதம்-உண்ண பசி வேண்டுமா போல் –
மனத்து வை–மனத்தில் உறுதியாகக் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண் மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

ஓரடியும்-லோகத்தை அடங்கலும் தன்னதாக்கின திருவடிகளையும்
சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்–சகடாசூரனை நிரசித்த போக்யமான திருவடியையும்
ஈரடியும் காணலாம் –இவ் விரண்டு திருவடிகளை ப்ராப்யம்
என் நெஞ்சே –காண வேணும் என்று இருக்கிற என்னெஞ்சே -இதுக்கு உபாயம் ஏது என்னில் -அவன் என்கிறது –
ஓரடியில்-தாயவனைக் -ஓர் அடியாலே எல்லாவற்றையும் அளந்த ஸூலபனை
கேசவனைத் -விரோதி நிரசன சீலனானவனை
தண் துழாய் மாலை சேர்-மாயவனையே மனத்து வை —ஸூலபனும் இன்றிக்கே விரோதியைப் போக்குமவனும் இன்றிக்கே
இருக்கிலும் விட ஒண்ணாத போக்யமான மாயவனை (குண க்ருத தாஸ்யத்தை விட ஸ்வரூப க்ருத தாஸ்யமே ஸ்ரேஷ்டம் )-நாம் உன் சஹகாரிகள் என்று இராதே
காண்பதுவும் அவனையே -காட்டுவானும் அவனே –நமக்கு பிரதிபத்தியே உள்ளது -(உறுதியான நம்பிக்கையே மஹா விஸ்வாஸமே வேண்டும் -விடுவித்திப் பற்றுவித்த அவனே உபாயம் -நஞ்சீயர் )

சாடுத்த ஓர் அடியையும் திரு உலகு அளந்த சேவடியையும் காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி-

(தாயவனை -தாய் போலே தடவிக் -கொடுத்து ஸுலப்யம்
ஒரு நீராக உயர்ந்தோர் தாழ்ந்தோர் வாசி இல்லாமல் பரிமாறி –ஸுசீல்யம்
குற்றத்தை நற்றமாகக் கொள்ளும் வாத்சல்யம் -நீர்மை
ப்ரஹ்மாதிகள் தலையிலும் திருவடி வைக்கையாலே சர்வாதிகத்வம் -சர்வஞ்ஞத்வம் ஸர்வ சக்தித்வம்
இப்படி ஆஸ்ரயண ஸுஹர்ய ஆபாத குணங்களும்-ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்களும் நிறைந்தவன்
கேசவனை – விரோதி நிரசன சீலத்தவம்
இதுக்கும் மேலே காணக் கண் குளிரும் துழாய் மாலை அணிந்து இருக்கும் அதி ஸூந்தரன்
ஸஹ காரி நிரபேஷ ஆச்சர்ய பூதன்
நாம் செய்ய வேண்டியது ஒன்றே -மனத்து வை -என்கிறார் –
மாயவனையே மனத்து வைத்து இத்தை உபாயமாகக் கொள்ளாதே
த்வமேவ உபாய பூதவ்
மாமேகம் சரணம் வ்ரஜ
நாராயணனே நமக்கே பறை தருவான்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு
உண்ணுவதும் பசி போல் இதுவும்
ஒண் மலர்ச் சேவடி -பூ விழும் மென்மையான திருவடிகளைக் கொண்டு காடும் மேடும் அளப்பதே
மென்மை -குளிர்த்தி -நாற்றம் செம்மை
விஷ்ணோ பத பரம மத்வ உத்ஸ
தேனே மலரும் திருப்பாதம்
ஈரடி -சேர்த்தி அழகு
காணலாம் -அனுபவத்தைச் சொன்னது கைங்கர்யத்துக்கும் உப லக்ஷணம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற பரம சாராரத்தை அருளிச் செய்து பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார் )

———————————————————————–

இப்படி மேல் விழுந்து நம்மை ஆதரிக்கிறவனைப் பெறுகைக்கு உபாயம் ஏது என்ன
அவனே ப்ராப்யம்
அவனைப் பெறுகைக்கு ப்ராபகமும் அவனே என்று அத்யவசி -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

காண வேணும் என்று அபி நிவேசிக்கிற -என்னுடைய நெஞ்சே -ஒரு திருவடியால் ஜகத்தை எல்லாம் அளந்து கொண்ட
சீல ஸுலப்யாதி குணங்களை யுடையவனாய் -கேசி ஹந்தா வாகையால் விரோதிகளை வேறு அறுக்கைக்கு உறுப்பான
ஞான சக்தியாதிகளை யுடையனாய் -ஸூலபனும் அன்றிக்கே விரோதியை வளர்க்கிலும் விட ஒண்ணாத படி
குளிர்ந்த திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனாயக் கொண்டு நிரதிசய போக்யனாய் ரஷிக்கும் இடத்தில்
சஹாயாந்தரங்களை அபேக்ஷியாத ஆச்சர்ய பூதனு மாயிருக்கிற ஸர்வேஸ்வரனே உபாயம் என்று மனசிலே
அத்யாவசாய புரஸ்சரமாக வைத்துக் கொள்ளு –

இப்படி அவனே உபாயம் என்று அத்யவசித்தால் லோகத்தை அளந்து கொண்ட
ஒரு திருவடியையும் -சகடம் முறிந்து விழும்படி உதைத்துத் தள்ளிப் பொகட்டதாய் -அழகிய பூ போலே அதி ஸூகுமாரமான
சிவந்த ஒரு திருவடியுமான இரண்டு திருவடிகளையும் சாஷாத் கரித்து அனுபவிக்கலாம் –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி–பாசுரங்கள் –81-90– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடலைக் கடைந்து அம்ருதம் கொடுத்து அவர்களை சாவாமல்
காத்தவனுடைய பேர் அன்றோ அநாதியான நரகத்தின் நின்றும் கைப்பிடித்து ஏற விடும் பரிகரம்-என்கிறார் –

(திரு நாம சங்கீர்த்தனம் நேராக உபாயம் ஆகாதே –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -பகவானே உபாயம் என்கிற திருட அத்யாவசிய இல்லாதவனுக்கு இது உபாயம்
ப்ரபன்னனுக்கு கைங்கர்ய ரூபம் ஆகும்)

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
திரு நாமமே கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக் கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.(அல்லேன் என்றாலும் விடாதே தானே பற்றி  கடத்தும் படை)

ஆளமர் வென்றி யடுகளத்துள் –ஆள் நிறைந்து வென்றியை யுடைத்தாய் முடிப்பதான யுத்த ஸ்தலத்திலே
வாளமர் வேண்டி-மதிப்புடைத்தான பூசலை வேண்டி –
வரை நட்டு-மந்திரத்தை நட்டு –
அஞ்ஞான்று-அஸூரர்கள் தேவர்களை முறித்து வாயில் இட்டுச் செல்லுகிற அன்று
வாளமர்-தேவர்களுக்கு மதிப்பும் ஆயுஸ்ஸூம் யுண்டாகும் படி
நீள் அரவைச்-சேதனத்தை
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்-பற்றிக் கடத்தும் படை-அள்ளி எடுத்துக் கொடு போய்
பரம பதத்தில் வைக்கும் -பற்றி -அல்லேன் என்றாலும் விடாது –

(மஹா விஸ்வாசம் மற்றவர்களுக்கும் திருநாம ஸங்கீர்த்தனமே பல பிரதமாகும்
வாஸ்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம்
அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டே நின்று உதவும்
திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது திருநாமம் இறே)

—————————-

பிரயோஜனாந்தர பரர்க்கும் கூட உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
திரு நாமமே கிடி கோள் சம்சாரத்தை கடக்கைக்கு உபாயம் -என்கிறார் –

ஆளோடு ஆள் மிடைந்து கிடப்பதாய்-வென்றியை யுடைத்தாய் -எதிரிகளை முடித்து விழ விடுகிற யுத்த பூமியிலே
அஸூரர்கள் தேவர்களை மேலிட்டு நலிகிற அன்று அனுகூலரான தேவர்களுக்கு ஜெயம் யுண்டாகும் படி
ஒளியை யுடைத்தாய் இருபத்தொரு யுத்தம் வேணும் என்று அபேக்ஷித்து -நீரைக் கண்டால் ஆழக் கடவ
கடைந்து அருளினவனுடைய திரு நாமம் அன்றோ பழையதாய் வருகிற சம்சாரம் ஆகிற
நரகத்தை அள்ளி எடுத்துக் கொடு போய்க் கடத்தி விடும் சாதனம் –

—————————————————————–

இப் பாட்டாலே சர்வ ஸமாஸ்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –

தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வாள்-வேலாயுதம் போன்று ஒளி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசி யன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவே தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

படையாரும் வாள் கண்ணார் -வாள் போன்று ஒளி பொருந்திய கண்களை யுடையார்
பாரசி நாள்-துவாதசி அன்று –

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் –வாள் போன்ற ஒளியை யுடைத்தான கண்களை யுடையரான ஸ்த்ரீகள் -துவாதசி நாள்
பைம்பூம்-தொடையலோ டேந்திய தூபம்-அழகியதாய் தொடுத்த மாலையோடு கூடின தூபம்
இடையிடையில்-மீன் மாய மாசூணும் -பூக்களோடு கூடின புகையானது ஆகாசத்தில் கலக்கத் தோற்றின
நக்ஷத்ரங்களை மாசூணாப் பண்ணா நின்றது –

வேங்கடமே லோருநாள்-மானமாய வெய்தான் வரை –பண்டு ஒரு நாள் ராக்ஷஸன் மாயா மிருகமாய் வர
இத்தைப் பிடித்துத் தர வேணும் என்று பிராட்டி அருளிச் செய்தது மறுக்க மாட்டாமே அத்தை முடித்தவனுடைய மலை

இப் பாட்டாலே சர்வ ஸமாஸ்ரயணீயத்துவமும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் சொல்லுகிறது –
வாள் கண்ணார் -தங்களை சிலர் ஆஸ்ரயிக்க இருக்கும் அவர்கள் –
மீன் மாய -ஆகாசம் தோற்றாத படி பூக்களும் புகையுமாகத் தோற்றுகை
மான் இத்யாதி -பிராட்டிக்கு நியாம்யன் ஆனால் போலே
நியாமியனாய்ப் புக்கு -தன் அனர்த்தம் என்று மீளாது கார்யம் செய்யுமவன் —

(பிராட்டிக்கு வசப்பட்டவனாய் தன் அநர்த்தத்தையும் காணாமல் அவள் கார்யம் செய்ய முற்பட்டால் போலே
அடியார்க்கும் வசப்பட்டு அவர்கள் கார்யம் செய்ய முற்படுவான் என்று கருத்து-)

———————————————————-

தேவர்கள் ஆஸ்ரயிக்கும் படி கடலிலே கிடந்த அளவன்றிக்கே பெண் பிறந்தாரும் ஆஸ்ரயிக்கலாம் படி
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனார் என்கிறார் –

வேலாகிற ஆயுதத்தோடு ஒத்து இருப்பதாய் ஒளியை யுடைத்தான கண்களை யுடைய பெண்களானவர்கள்
துவாதசி நாளிலே அழகிய பூக்களால் தொடுத்த மாலைகளோடு கூட தரித்த தூபமானது நடு நடுவே
ஒரோ நக்ஷத்ரங்களை யுடைத்தான ஆகாசமானது மறையும் படி அத்தைச் சென்று மாசு ஏறும்படி பண்ணா நிற்கும் திரு மலையே-
முன்பு ஒரு நாளிலே பிராட்டி வசன பரதந்த்ரனாகக் கொண்டு மாயா ம்ருகம் முடியும் படி அம்பு எய்து
விழ விட்ட சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திரு மலை —

——————————————————-

ஒரு செயலேயோ –

நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –

(பிராட்டியோ ஆ நிரையோ கோப கோபீ ஜனங்களோ வாசி இல்லாமல் -ஆஸ்ரித ரக்ஷணம் செய்யும் ஸ்வ பாவன் என்பதைக் காட்டவே இப்பாசுரம்)

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக் கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத் தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கள் ஏழையும்
செற்றவாறேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –மலை குடையாகவும் தோள் காம்பாகவும் பசுக்களைக் காக்க
ஆயர் நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே –நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான ஏழு வ்ருஷபத்தையும் முடித்தபடி எங்கனே —
உரவுடைய-நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் -உரவு–என்று மிடுக்குக்குப் பெயர் -சர்ப்பம் என்றுமாம் –
திருப் பாற் கடலிலே கிடந்து-எதிரான மது கைடபர் மேலே திரு வாழியை (வீசிய )வாங்கின உபகாரகன் –

இத்தால் ஆஸ்ரிதற்கு விரோதம் வந்த போது தன் உடம்பு நோவக் கார்யம் செய்யும் என்றபடி –
ஒரு செயலேயோ – வந்ததுக்குத் தக்கது கொண்டு கார்யம் செய்வதே -(கல் மழைக்கு கல் எடுத்தான் -கல் எடுத்து கல் மாரி காத்தான் என்றும் )

உரவுடைய நீர் -முது நீர்
பேராழி இத்யாதி -இந்திரன் நோவாதபடி உன் தோள் நோவ ரஷிப்பதே –

——————————————————————–

நாம் ஆஸ்ரித பரதந்த்ரராய் அவர்கள் கார்யம் செய்வோம் என்னும் இடம் நீர் என் கொண்டு அறிந்தீர் என்ன
மது கைடபர்களைப் பொடி படுத்தும் பரிகரமுடைய நீ அத்தை விட்டு
மலையை எடுப்பது
ஏறு அடர்ப்பது யாய்த்து வெறுமனேயோ -என்கிறார் –

மிடுக்கு யுடைத்தான நீரை யுடைய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து எதிரிட்ட ராக்ஷஸ பிரக்ருதிகளான
மதுகைடபர்கள் மேலே அவர்கள் பொடி படும்படி மிடுக்கால் பெரிய திரு வாழியை எடுத்துக் கொண்ட உபகாரகனே-
இப்படிக் கருதும் இடம் பொருது கை நிற்க வல்ல சக்ரம் யுண்டாய் இருக்க -அத்தை விட்டு –
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத மலை குடையாகவும் திருத் தோள் அதற்குக் காம்பாகவும் பசுத் திரள்களை ரக்ஷித்து-
நப்பின்னை பிராட்டையோட்டை சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகமாக இடையர் முன்னிட்ட திரண்ட ரிஷபங்கள் ஏழையும் முடித்த பிரகாரம் எங்கனே –

இத்தால் ஆஸ்ரித விரோதி உண்டானாலும் உன் சங்கல்பத்தால் அன்றிக்கே உடம்பு நோவக் கார்யம் செய்யும் ஸ்வபாவன் அன்றோ நீ என்றபடி –

——————————————————————————————————–

உபகாரகனான உன்னுடைய பெருமையை வேறு சிலரால் அறியப் போமோ —

உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி -84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது-படிக்கு அளவாக நிமிர்த்த திருவடி –
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?-பெரும் கேழலார் மஹா வராஹ -ஸ்புட பத்ர லோசந –
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்-உரா யுலகளந்த நான்று–உராய் என்று பட்டர்-அநாயாசேன அளந்த அன்று -என்று
அருளிச் செய்தார் -உலாவி -என்றுமாம் (கிடைப்பாரா என்று தடிவிப் பார்த்தானாம் )-பூமியிலே பொருந்த விட்டு என்னலுமாம் –
எந்தை-அடிக்களவு போந்த படி —– வராகத்-தெயிற்று அளவு போதாவா றென்கொலோ –ஒரு நாள் திருவடிக்குள்
அடங்கியது திரு எயிற்றுக்குப் போந்ததில்லை -என்கிறது –ரஷ்யத்தின் அளவன்று ரக்ஷகன் பாரிப்பு
நான் ஒருவனுமே உன் குணங்களில் குமிழ் நீர் உண்ணா நின்றேன்

—————–

உன்னுடைய ரஷ்யத்து அளவு அல்லாத ரக்ஷகத்வ பாரிப்பு ஒருவரால் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்கிறார் –

உபகாரகனே -எங்கும் ஓக்க சஞ்சரித்துக் கொண்டு நீ லோகத்தை அளந்து கொண்ட அன்று என் ஸ்வாமியான
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது வராஹ ரூபியான உன்னுடைய திரு எயிற்றில் ஏக தேசத்து அளவும்
போதாதாய் இருக்கிற பிரகாரம் எங்கனேயோ -ஆன பின்பு ஏவம் விதனான உன்னுடைய பெருமையை
சர்வஞ்ஞனான நீ அறிவுதியோ அறியாயோ என்று ஸந்தேஹிக்கும் அத்தனை போக்கி வேறு சிலர் யார் தான் அறிவார்

உராய் உலகளந்த -உலாவிக் கொண்டு உலகு அளந்த -என்றபடி -ரலயோ ரபேத –என்னக் கடவது இறே –
அன்றிக்கே உரோஸிக் கொண்டு உலகு அளந்த -என்றாக்கி எல்லோரோடும் தீண்டிக் கொண்டு -என்றுமாம் –

(குர மத்ய கதோ யஸ்ய மேரு கண கணாயதே
புள்ளி நிலனும் -பரிபாடல் -2-84–ஸ்ரீ வராஹத் திரு உருவில் புள்ளி போல் பூமி
ஸ்வரூபத்துக்கே ஆபத்து வந்த பூமியை ரஷித்த அவதாரம் -ரஷ்யத்தின் அளவில்லா பாரிப்பு -உண்டே
ரக்ஷண பாரிப்பின் அதிசயத்தை உன்னைத் தவிர வேறே அறிவார்
ஸோ அங்க வேத யதி வா ந வேத -அந்தப்பிரம புருஷன் தனது பெருமையைத் தானே அறிவானோ மாட்டானோ -)

——————————————————————————————————————–

பிறர் யார் அறிவார் -என்பாரைத் தம்முடைய திரு உள்ளம் நான் அறிந்து இருக்கிறேன் என்ன –
நீயும் இந்திரிய ஜெயம் பண்ணி ஆஸ்ரயணத்தில் இழிந்தாய் அல்லது சாஷாத்கரித்தாயோ -என்கிறார் –

இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேய வொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து-வடிவு இல்லாத இந்த்ரியங்களுக்கு என்றுமாம் -வடிவு ஸ்வபாவம் -என்று ஒருபடிப்பட்டவை அல்லவே
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் -திருமேனி கண்டு அறுதியோ -அவனுடைய படுக்கை கண்டு அறுதியோ —
புட் கொடி கண்டு அறிதியே-த்வஜம் கண்டு அறுதியோ
கூறாய் -சொல்லாய் –
வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-சரீரத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் அடக்கி –வடிவில்லாத இந்திரியங்களை
அடக்கி என்றுமாம் -கண்டவா திரிந்த தொண்டனேன்(பெரிய திருமொழி 1-6-)-என்னுமா போலே என்னவுமாம் –
போதொடு நீரேந்தி-நெறி நின்ற நெஞ்சமே நீ -புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயணத்திலே இழிந்தாய் இத்தனை இறே —
நாம் அறியாது இருக்கப் பெற்ற படி என் என்ன -திரு உள்ளத்தைக் குறித்து -வடிவில்-பொறி யைந்து முள்ளடக்கி-
வடிவிலே -உடம்பிலே அடக்கி -வடிவு இல்லாத படி என்றுமாம்-ஒரு படிப் பட்டு இராது -என்றுமாம் —

———————————————————————

இந்திரிய ஜெயம் பண்ணி அவனை ஆஸ்ரயிக்கிற நீ தான் அவன் படிகளில் ஒன்றைக் கண்டு
அனுபவிக்கப் பெற்றாயோ -பெற்றாய் ஆகில் -நெஞ்சே சொல்லிக் காண் -என்கிறார் –

நெஞ்சே யந்த்ர கல்பமான இந்திரியங்கள் ஐந்தையும் பாஹ்ய விஷயங்களில் போகாத படி சரீரத்துக்கு உள்ளே
நியமித்த ஆஸ்ரயண உபகரணங்களான புஷ்ப்பங்களோடே கூட ஜலத்தைத் தரித்துக் கொண்டு ஸமாஸ்ரயண
மார்க்கத்தில் நிலை நின்று ஆஸ்ரயித்தாயாய் இருக்கிற நீ –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான சர்வேஸ்வரனுடைய தூரத்திலே ஆஸ்ரிதர் கண்டு வாழும் படி
எடுத்துக் கொண்டு வருகிற பெரிய திருவடி யாகிற த்வஜத்தைக் கண்டு அனுபவித்து அறிவுதியோ-
அவன் திரு மேனியைக் கண்டு அறிவுதியோ -அவன் திரு வனந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுக்கும் படி –
தான் கண்டு அறிவுதியோ -இவற்றிலே இன்னது கண்டேன் என்று ஒன்றைச் சொல்லிக் காணாய்-
வடிவு இல்லாத பொறி ஐந்தும் என்றுமாம் -ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபிசந்திகளை உடைத்தாய் இருக்கும் என்கை –
வடிவு இல்லாமை யாவது தெரியாத படி இருக்கை என்றுமாம் -கண்டு அனுபவிப்பதற்கு முன்னே
ஞான லாப மாத்திரம் கொண்டு திருப்தி பிறந்து இருக்க ஒண்ணாது காண் -என்றபடி -(ஞான தசை மேலே தர்சன தசையாகவும் பிராப்தி தசைகளாகவும் முற்ற வேண்டுமே )

வடிவில் பொறி ஐந்தும் -வடிவு இல்லாத அதீந்த்ரியங்கள் என்றும் -வடிவு என்று ஸ்வ பாவத்தைச் சொன்னதாகவும் –
ஒரு வழிப் பட்டு இருக்கை அன்றிக்கே பல அபி சந்திகளை யுடைத்தாய் அன்றோ இருக்கும் இவை –
சஞ்சலம் ஹி மனஸா
நின்றவா நில்லா நெஞ்சு –பெரிய திருவந்தாதி -1-
கண்டவா திரிந்த தொண்டனேன் -பெரிய திருமொழி -1-6-3-

———————————————————————————————————–

இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -சாஷாத் கரித்திலை இறே -என்னத் தரியான் இறே -அவன் –

(உயிரான பாசுரம் -புலவர் நெருக்கு உகந்து இன்றும் நமக்காக சேவை சாதிக்கிறான்-நின்றாயால்-அன்று கோப கோபி ஆநிரை நெருக்கி நின்றாயால் -பின்பு மூவருக்கு நடுவில் நின்றாயால் -இனி இன்றும் நமக்காக நின்றாயால் -மூன்றுக்கும் அந்வயம் )

இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-(மறைத்த பாட பேதம் )

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திருவாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பெரிய பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

நீயும் திருமகளும் நின்றாயால் -தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -என்ற நீயும்
உன்னுடைய பரிகரம்- திருவடி – நலியப் புக -நகச்சின் நாபராத்யதி -என்ற அவளுமாய் நின்றாயால் -(இருவரின் பாரிப்பு அதிசயத்துக்கு பிரமாணங்கள் காட்டி அருளி வியாக்யானம் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -தோஷம் இல்லாதவன் யார் தான் என்ற யுக்திகள் )
குன்றேடுத்துப்-பாயும் பனி மறுத்த பண்பாளா–உடம்பில் விழப் புக்க மழையை மலை எடுத்துப் பரிஹரித்து நீர்மை போலே இருந்தது
இப்போது நெருக்கு அபேக்ஷிதமாக நெருங்கின படி -(கல் எடுத்து கல் மாரி காத்த பண்பு நீர்மை -நெருக்கு உகக்கும் ஸ்வ பாவம் )
வாசல்-கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —இடை கழிக்கு உள்ளும் புறமும்
காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -)
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )
இனி -இப்போது -இனி திருக் கோவலூரிலே நிற்கிறது கர்ம பல அனுபவத்துக்கு அன்று இறே –
சம்சாரிகளை நரகத்தில் புகாமல் காக்க விறே

நீயும் இத்யாதி -ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று
உனக்கு முற்படும் பிராட்டியும் – (பகவத் த்ராயா நம -ரிஷிகள் ரக்ஷண த்வரையால் தண்டகாரண்யத்துக்கு முற்பாடாக சென்ற தாயார் -)பண்பாளா -அன்று அங்கனம் உதவினாய -(நீயும் -திரு மகளும் -இரண்டு இடத்திலும் சகாரம்- உம்மை -ஆச்ரித ரக்ஷண ப்ராதான்யத்தைக் காட்டும் )
கடை கழியா யுள் புகா–அங்கு அவர்கள் ஆபத்து தீர்த்தான் -இங்கு தன் ஆபத்து தீர்த்த படி -புறம்பு காட்டுத் தீயோடு ஒக்கும் –

(தர்மம் தர்மி விட்டுப் பிரியாதது போல் பிராட்டியும் அவனும் )

(தேஹலீசன் -இடை கழிப் பெருமாள் -என்றே ப்ரஸித்த திரு நாமம்
நீயும் திருமகளும் -பகவதஸ் த்வராயா நம
கிமேதந் நிர்த்தோஷா க இஹ ஜகதி – ஸ்ரீ குண ரத்ன கோஸம்
ந கச்சின் ந அபராத்யதி
அக்ரதஸ் தே கமிஷ்யாமி
ந ஜீவேயம் க்ஷணம் அபி
அகலகில்லேன் இறையும்
அஹம் அர்த்தம் விநா அஹந்தா நிரா தாரா ந ஸித்த்யதி
அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாத்யோ ந ஸித்த்யதி
அவளுக்கு ஆதாரமான நீயும் உனக்கு ஸ்வரூப நிரூபக பூதையான அவளும்
எங்கள் அடிச்சுவட்டை மோந்து காண்டு இனி வரும் காலம் எல்லாம் நித்ய வாஸம் செய்து அருளப் போகிறாய் அன்றோ -என்கிறார்)

————————————————————————-

இப்படி இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவனை சாஷாத் கரித்து அனுபவிக்க பெற்றிலை இறே என்று சொன்னது
பொறுக்க மாட்டாமல் -இவர் இருந்த இடத்திலேயே பிராட்டியும் தானுமாக வந்து நெருக்க -அத்தைக் கண்டு அனுபவிக்கிறார் –

கண்டதொரு மலையைப் பிடுங்கி எடுத்து மேலே வந்து சொரிகிற மழையைப் பரிஹரித்த நீர்மையை யுடையவனே-
திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய்
திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட
திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி
இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –

(குத்து விளக்கு எரிய -இருவரும் ரக்ஷணம் பாரித்த -பாசுரம் -மலர் மார்பா வாய் திறவாய் -மைத்தடம் கண்ணினாய் -தத்துவம் அன்று தகவும் அன்று)

—————————————————————————————————————————–

இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –

(திரு நாம பலத்தால் நரகம் இல்லை தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இங்கு திவ்ய தேச பார்ஸ்வ வர்த்தியால்

உவந்த உள்ளத்தனாய் நீள் முடியைச் சொல்லி திருக்கமல பாதம் -இங்கு தோள்களைச் சொல்லி திருவடி )

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேஸ்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனிமேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யம கிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்க முடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்-

அம் நாவல் சூழ் நாடு -அழகியதாய் ஜம்பூத்வீபம் என்ற பெயர் பெற்ற பரந்த நாட்டில் உள்ள பிராணிகள் –

இனியார் புகுவார் எழு நரக வாசல்–எழு நரக வாசல்-என்கிறது கிளர்த்தியை யுடைத்தான -நரகம் என்னவுமாம் –
ஏழு வகை நரகம் என்னவுமாம் –
முனியாது மூரித்தாள் கோமின்-இனிப் புகுவார் இல்லை -மிடுக்குடைய தாளைக் கோவுங்கோள்
கனி சாயக்-கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு–கனை கழல் -என்றது இலக்கைக் குறித்து
நடக்கிற போது திருவடிகளின் ஆபரணத் த்வனியை
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —ஐம்பூத வீபமானது நன்றாக அறிந்தது –
நன்றாக அறிகை -சம்சாரத்தினின்றும் -போகோம் என்று இருக்கை –
உகந்து அருளின தேசம் இங்கு உண்டாயிற்றே என்று அஸூயை பண்ணாதே பொறுத்து இருக்கை –

இனி இத்யாதி -எங்கள் பதத்துக்கு அழிவு சொல்வதே என்று பொடியாதே — கனை கழல் -ஆபரண த்வனி –
நா வலம் -ஐம்பூத வீபம் -ஏகம் தரணி மாஸ் நிதவ்–(வால்மிகி )ஒரு படுக்கையில் இருப்பார்க்கு பயம் உண்டோ

———————————————————

இப்படி சர்வேஸ்வரன் வந்து சந்நிஹிதனான பின்பு நரகத்துக்கு ஆள் கிடையாது –
அவ்வவ் விடங்களுக்குக் கடவார் வாசல்களை அடைத்து ஓடிப் போக அமையும் என்கிறார் –

கன்றாயும் விளவாயும் இரண்டு அஸூரர் தன்னை நலிகைக்கு இடம் பார்த்து நிற்க -அத்தை அறிந்து
முள்ளிட்டு முள்ளைக் களைவாரைப் போலே அஸூரா விஷ்டமான விளவின் பழங்கள் உதிர்ந்து விழும்படியாக
அஸூரா விஷ்டமான கன்றை எறி தடியாக எடுத்து எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்ட திருத் தோள்களை
யுடையனான சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை உடைத்தான திருவடிகளைக் கண்டு அனுபவிக்கைக்கு சாதனம்
நாவலோடே கூடிப் பரந்து நிற்கிற நாட்டில் உள்ள பிராணிகள் ஆனவை அவன் உகந்து வர்த்திக்கிற
திருக் கோவலூருக்குத் தோள் தீண்டியான ஸ்தலத்திலே வாசமே என்று நன்கு அறிந்தன-இப்படியான பின்பு
சப்த விதமான நரக த்வாரங்களிலே இனிப் போய்ப் பிரவேசிக்கக் கடவார் யார் -எங்கள் பதத்துக்கு அழிவாம் படி
இப்படி வார்த்தை சொல்லுவதே என்று பொடியாதே இனி ஒரு நாளும் திறக்க ஒண்ணாத படி பெரிய தாளை பூட்டுங்கோள்-

ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடும் இடமே நாடு -அல்லாத இடம் காடு என்று கருத்து

எழு நரகம் -எழுகிற சம்சாரிகள் அடங்கலும் சென்று புகு கிற நரகத்வாரம்-என்றுமாம் -கிளர்த்தியை யுடைத்தான நரகம் என்றுமாம் –

(இவ் வாழ்வாருடைய பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2- இருக்கிற படி இப்பாசுரம்)

——————————————————————————————————————–

இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ் விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

நாடிலும் நின்னடியே நாடுவன்-நினைக்கிலும் உன் திருவடியையே நினைப்பான்
நாடோறும்-எப்போதும் -பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்-பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு-
ஒன்றைச் சூடிலும் திரு வாழி ஏந்தின உன்னுடைய வி லக்ஷணமான திருவடிகளை சூடா நின்ற எனக்கு
என்னாகில் என்னே எனக்கு —பரம பதத்தில் போனாலும் வாக் மனஸ் காயங்கள் அங்கே ப்ரவணமாகையாகவே செய்வது-
அது இங்கேயே பெற்றேனாகில் எனக்கு இங்கே இருக்கையை நல்லது -என்கிறார் -அவன் படிக்கு சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கு என்றும் -யதி வா -என்றும் -சொல்லத் தலை அறுப்புண்டிலனோ-(தேன மைத்ரி பவ -சீதா உபதேசம் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -முன்பே பெருமாள் வார்த்தை )
பொன்னடியே -இதுவே ( பொன்னடியே)பிரயோஜனமாக வாக் காயங்களை ஒழிய நினைக்கிலும்
என்னாகில் என்னே எனக்கு -நாட்டார் நரகம் புகில் என் -தவிரில் என் -ஆர் தான் அழ–

(சிந்தையாலும் -வாயினால் பாடி -முக்கரணங்கள் பாசுரங்கள் உண்டே –
நினைப்பது பிரதானம் என்று தோற்றினாலும் -சூடுவது காயிகம் தானே –
ஆகவே -ஒவ் ஒன்றும் முக்கரணங்களால் என்றே கொள்ள வேண்டும்)

——————————————————————–

இப்படி திருக் கோவலூரோடு தோள் தீண்டியான நாட்டைப் பற்றி இருந்து இவ் விஷயத்தை வீட்டுப் புறம்பே அந்நிய பரராய்த்
திரியக் கண்ட படியால் வழி பறிக்கும் நிலத்திலே தம் கைப் பொருள் கொண்டு தப்பினார் உகக்குமா போலே
என்னுடைய கரண த்ரயத்தையும் கொண்டு நான் முன்னே அங்கே பிரவணனாகப் பெற்றேன்
என்று ஸ்வ லாபத்தைப் பேசி இனியராகிறார் –

நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும் -தேவரீருடைய திருவடிகளையே தேடா நிற்பன் -சர்வ காலத்திலும்
ப்ரீதி பரவசனாய் ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும் -தேவரீருடைய கல்யாண குணங்களையே வாய் விட்டுப் பாடா நிற்பன்
நான் என் தலையால் சாதரமாக தரிக்கும் இடத்திலும் ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை அழகு பெற தரித்த
சர்வாதிகனான உன்னுடைய அழகிய திருவடிகளையே ஸீரோ பூஷணமாக தரிக்கக் கடவனாய் இப்படி கரண த்ரயத்தாலும்
உள்ள பிரயோஜனம் கொள்ளப் பெற்ற எனக்கு ஏதானாலும் நல்லது -நாட்டார் அறிந்து இந்த லாபத்தை பெறில் என்-
இழக்கில் என் -எனக்கு ஏதாகில் நல்லது என்றபடி-
அன்றிக்கே இங்கே இருக்கில் என் அங்கே போகில் என் -ஏதானால் எனக்கு நல்லது என்றுமாம் –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —பெரிய திருவந்தாதி –25-போல் ஸம்ஸாரிகளை வெறுத்து ஸ்வ லாபத்தைப் பேசி மகிழ்கிறார் –

——————————————————————————————————————

கீழ்ப் பிறந்த லாபம் திரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –

(பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த உத்கர்ஷம் -உபா தேய அபிமானம் )

(எம்பார் -எம்பெருமானார் திருவடி சம்பந்தத்தால் வந்த பெருமையால் புகழ ஏற்றுக் கொண்டது போல் இங்கும் –
எனக்கு நிகர் யார் அகல் ஞாலத்திலே -என்பர்களே)

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——-89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேஸ்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம் பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்(பூவைப்பூ வண்ணா )
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை-மா வரம் -பர்யாய சப்தங்கள் -மீமிசை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

எனக்காவார் ஆரோருவரே –என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை இறே என்னவுமாம் —
எனக்கு ஆவார் எவர் என்னவுமாம்
என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை என்று நீர் சொல்லுவான் என் -பரம சேதனன் உண்டே என்னில்
எம்பெருமான்-தனக்காவான் தானே–என்னோடு ஓத்தார் இல்லை என்றேன் அத்தனை அல்லது எம்பெருமானுடைய
உயர்த்தி இல்லை என்றேனோ –நீர் என்னோடே ஒப்பார் இல்லை என்று சொல்லிற்று எத்தாலே என்னில் –
மற்றல்லால் புனக்காயாம்-பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ-மா மேனி காட்டும் வரம் —–
அவனோடு சத்ருசமான பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன் -ஓர் அடி அன்றோ குறைய நின்றது(ஸத்ருச சம்பந்த பதார்த்தங்கள் நினைவுக்கு வருமே -அடுத்த தசை அவனே நேராகப் பார்ப்பது -அதுவே ஓர் அடி குறை )
அவன் என்று சாஷாத் கரிக்கும் அத்தனை அன்றோ வேண்டுவது –
புனக்காயாம்-பூ மேனி-புனத்திலே நிற்கிற காயம் பூ மேனியை – காணப் பொதியவிழும் பூவைப் பூ–காணக் காண அலரா நின்ற பூவைப் பூ
இவை இரண்டும் அவனுடைய வரமான மா மேனியைக் காட்டா நின்றது –நாட்டாருக்கு நினைக்கையில் உள்ள வருத்தம் போரும்
எனக்கு மறக்க -நானும் ஒருவனே –வரமாக -தன்னிலும் விசதமாக -என்றுமாம் -(இவை தங்களை விட கண்ணனை காட்டும் என்றபடி )

(வரம் -மா -பர்யாயம் -மிகச் சிறந்த என்றும் -வ்ரியதே இதி வர -வ்யுத்பத்தியால் வரிக்கப்படும் சிறந்த மேனி என்றுமாம்)

(இதர சேஷத்வமே வடிவான ஸம்ஸாரிகள் -பகவத் விஷயத்திலே பழக்கமே இல்லாதவர்களாய் –
பகவத் சேஷத்வமே வடிவான எனக்கு ஒப்புவார் அல்லரே
வருத்தப்பட்டு பகவத் அனுபவத்தைப் பெற்ற வ்யாஸாதி மகரிஷிகளும் – வரவாறு ஓன்று இல்லையால் -என்றால் போலே
என்னிடம் ஒரு கைம்முதல் இல்லாமல் இருக்க நிர்ஹேதுக கிருபையால் அவனை அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒப்பு அல்லரே
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் நித்ய முக்தர்களும் ஒப்பு அல்லர்
எம்பெருமானும் தான் தோன்றியான சேஷித்வ ரஸத்தை யுடையவனாய் சேஷத்வ ரஸத்துக்கு இட்டுப் பிறவாததால் அவனும் எனக்கு ஒப்பு அல்லனே)

(இவற்றைக் காணும் போது இவற்றைக் காட்டிலும் எம்பெரு திரு மேனியே எனக்குத் தெளிவாகத் தெரிகிறது -அப்படிப்பட்ட எனக்கு ஒப்பாவார் யார் -என்கிறார்-காட்டும் — பகவானை ஞானத்திலே அனுபவித்து கண்ணாலே காணப் பெறாத குறை தீரக் கண்ணுக்குக் காட்டும் )

காயாம்பூ மேனி -என்ற இடத்தில் உள்ள மேனி -காணப் பொதி அவிழும் பூவைப்பூ -மேனி என்றும் கூட்டிக் கொண்டு

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –பெரிய திருவந்தாதி -49-என்றும்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –நாச்சியார் திருமொழி -9-3-என்றும்

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —நாச்சியார் திருமொழி 9-4-என்றும்

உள்ள ஸ்தலங்களில் சொல்லப்பட்ட கார் உருவங்களுக்கு உப லக்ஷணம்

———————————————————————–

கீழ்ப் பிறந்த லாபம் திரியட்டும் பின்னாட்டுகிற படியைச் சொல்லுகிறார் –

நிர்ஹேதுகமாக இப் பேற்றைப் பெற்று சேஷத்வமே வடிவாய் இருக்கிற எனக்கு ஒப்பாக வல்லார் வேறு ஒருவர் உண்டோ
நாட்டில் ஓர் ஒப்பில்லாத அளவன்றிக்கே தான் தோன்றியான பேற்றை யுடையனாய் –
சேஷத்வ ரசத்துக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரன் தானே தனக்கு ஒப்பாம் இத்தனை ஒழிய எனக்கு ஒப்பாக வல்லனோ-
இந்த ஞான லாபம் மாத்திரமே யாய் -சாஷாத் கரிக்கப் பெறாத குறை கிடக்கிறதே என்று சங்கிக்க இடம் அறும் படி
தன்னிலத்திலே நின்று செவ்வி பெற்ற காயாம்பூவின் உடைய நிறமும் -காணாக் காணாக் கட்டு நெகிழ்ந்து வருகிற
பூவைப் பூவினுடைய நிறமும் அவனுடைய ஸ்லாக்யமான வடிவை அழகிதாகக் காட்டா நின்றது –
அன்றிக்கே வ்ரீ யத இத வர –என்றாய் -என்னால் பிரார்த்திக்கப் படுகிற வடிவை அழகிதாகக் காட்டா நிற்கும் என்னுதல் –

———————————————————————————————————

நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும் வாத்சல்யத்தையும் அனுசந்திக்கிறார் –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய -அரி-சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய-பரியனாக வந்தவன் அன்றோ –
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)-வரத்தினால் ஸ்ரத்தை வைத்த -இத்யாதி –
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

வரத்தால் வலி நினைந்து –வரத்தால் தனக்கு மிடுக்கு உண்டாக நினைத்தான் அல்லது
வரம் கொடுத்தவர்கள் சக்தி பகவத் அதீனம் என்று அறிந்திலேன் –
மாதவ– வரம் கொடுத்தவர்களாலும் வணங்கப் படுமவன்

(விராமன் -ஒய்வு -வரங்களும் -வரங்களை பெற்றவனும் கொடுத்தவனும் ஒய்வு கொடுக்கும் பெருமாள்- ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் வந்தாலும் பயன் இல்லை -திருவடி ராவணன் இடம் உபதேசம்)

நின் பாதம்- சிரத்தால் வணங்கானாம் என்றே –அவன் இழவுக்கு வெறுக்கிறார்
உரத்தினால்– ஈரியாய்–மிடுக்காலே ஈரப்படும் அரியானவன்–சத்ருவானவன் –பெரிய சத்ரு என்றுமாம் —
நேர் வலியோனாய இரணியனை-நேரே வலியனான ஹிரண்யனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –நாட்டிலே நடையாடும் ஸிம்ஹம் அன்று -தன்னுடைய இச்சையால் பிறந்த ஸிம்ஹம் என்றுமாம்
ஓரப்படும் அரியாய் –எல்லாரும் த்யானம் பண்ணும்-ஓரப்படும்- ஸிம்ஹம் -என்றுமாம் –

வரத்தால் -தேவர்கள் வரத்தை மிடுக்காக நினைத்தான் -வணங்கு வித்துக் கொள்ளும் விஷயம் இருக்கும் படி –
வணங்கானாம் என்றே -1-பிள்ளை பக்கல் பரிவு -2-தப்பச் செய்தோம் -என்னாம் -என்றுமாம்
3-உன் வஸ்து அழியாமைக்கு என்றுமாம் -(இம் மூன்றுமே ஈர்ந்ததுக்குக் காரணம் – வணங்காமைக்காக அல்லவே )

ஈரரி–பெரிய சத்ரு –

ஓரரி-சிம்ஹங்களில் ஒப்பு பிடிக்க ஒண்ணாது –

————————————————————————–

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தில் ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித்
தன்னைக் காட்டித் தரிப்பித்த படியை அருளிச் செய்கிறார் –

சர்வர்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற ஸ்ரீயபதியானவனே–இரண்டு கூறாகக் கிழித்துப் பொகடப் படும் சத்ருவாய்-
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய ஹிரண்யனை -நாட்டில் கண்டு அறியாத அத்விதீயமான நரசிம்ஹமாய்க் கொண்டு
அவன் மிடுக்கும் கீழ்ப் படும் படியான மிடுக்காலே -மாம்சளமான பெரிய சரீரத்தை ஆஸ்ரித வத்சலனான நீ
இடந்து பொகட்டது ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தால் வந்த தன் மிடுக்கைக் கனத்த நினைத்து சர்வாதிகனான
உன்னுடைய திருவடிகளைத் தலையால் வணங்கி ஆஸ்ரயியாதே இருந்தான் என்றோ -அன்று இறே
சிறுக்கனைப் பல கறுவி நலிந்தான் என்னும் இது கொண்டு இறே -என்றபடி –

இரணியன் தன் சீற்றத்தினால் வணங்கியதால் உனக்கு ஒரு பெருமையோ மகிழ்ச்சியோ வந்து விடப் போவதில்லையே -எதனாலே என்னில்

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு –நான்முகன் திருவந்தாதி–75-

இப் பாசுரத்தை ஒட்டியே -கடும் சீற்றத்துக்குக் காரணத்தை கூரத்தாழ்வான் வரதராஜ சத்வம் -68-இல்-
யத் அபராத சஹஸ்ரம் அஜஸ்ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்
வரத தேந சிரம் த்வம் அவிக்ரிய விக்ருதிம் அர்ப்பக நிர்ப்பஜ் நாத் அகா-68–

ஆஸ்ரித விஷயத்தில் பஷ பாதம் பிரசித்தம் அன்றோ –
த்வயி கிஞ்சித் சமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –என்பவன் அன்றோ-

ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

நரஸிம்மம் -பக்த ப்ரஹ்லாதனுக்காக
ராகவ ஸிம்ஹம் -கோபஸ்ய வசம்
யாதவ ஸிம்ஹம் -அர்ஜுனன் -பீஷ்மர்
ரெங்கேந்திர ஸிம்ஹம் -திருப்பாணாழ்வார் -லோக சாரங்க முனிவர் -தனது கதவை அடைத்து -அவரையும் திருத்திப் பணி கொள்ளும் அர்ச்சை ஏற்றம்

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி பாசுரங்கள் –71-80– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

ஐஸ்வர்ய கைவல்யங்களிலே புகாதே-அவன் தன்னையே ஆசைப்படப் பார் என்கிறார் –

ஒரு நாயகமாய் -ஐஸ்வர்யா கைவாக்யங்கள் த்யாஜ்யங்கள் -போல் இங்கு-பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்றவாறு )

நாட்டாரைக் கொண்டு கார்யம் என் -நெஞ்சே நீ இவ் விஷயத்தைக் கை விடாதே கிடாய் -என்கிறார் –

நன்று பிணி மூப்புக் கை யகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்)  கடல் போல் ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]ஜரா மரண மோஷாயா -கைவல்யம் -இஷ்ட ப்ராப்தியில் ஆசை இல்லாமல் நினிஷ்டம் தொலைய மாத்திரம் -போக்கடிப்பதே பிரதானம் -அடைந்து அனுபவிப்பது இல்லையே -ஆகவே கையகற்றி -பத பிரத்யோகம்
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]-நான்கு ஊழி -உப லக்ஷணம் எண்ணிறந்த -அநந்தம் -என்றும் கொள்ளலாம்
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

நன்று பிணி மூப்புக் கையகற்றி –இத்தால் கைவல்யத்தைச் சொல்கிறது(ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை -7-29-)
நான் கூழி-நின்று நிலமுழுது மாண்டாலும் –ப்ரஹ்மாவினுடைய ஐஸ்வர்யத்தைப் பெற்றாலும்
என்றும்-ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்–அளவுடைய நெஞ்சே –நீயே முற்பட்டு இருக்கிற உன்னை இரக்கிறேன் இறே(குறுகா –அளவில் இன்பம்–திருவாய் 6-9-10-)
அடலாழி கொண்டான் மாட்டன்பு  விடல் –விடாதே கொள் -(விடாமல் பக்தி செய்வாய் )வேண்டினேன் கண்டாய் –பால் குடிக்க இரக்கிறேன் இறே-

ஐஸ்வர்யம் நிலை நில்லாது -கைவல்யம் பகவத் கைங்கர்யத்தைப் பார்க்க அல்பம் என்கை –
அன்றியே இரண்டையும் சேர்த்துத் தரிலும் -விடல் -இவை நன்றான அன்றும் -அவன் அல்லாமையையும்
பற்றுகைக்கு அவனாக அமையும் -வேண்டினேன் -இவ்வர்த்தம் -அடலாழி இத்யாதி -எனக்கு கைக் கூலி தந்து பற்றும் விஷயம் -(அடல் ஆழியும் கையுமாக அழகைக் காட்டி லஞ்சம் கொடுத்து என்னைத் திருத்திக் கைக்கொண்டான் -)

(ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -பெரிய திருவந்தாதி -25
நான்கு ஊழி -அநந்த காலம் என்றபடி)

———————————————————————–

நாட்டாரைக் கொண்டு கார்யம் என் -நெஞ்சே நீ இவ் விஷயத்தைக் கை விடாதே கிடாய் -என்கிறார் –

கேவல ஆத்ம அனுபவத்துக்கு விலக்கான -வியாதி ஜரை தொடக்கமானவற்றை நன்றாகக் கை கழல விட்டு
இப்படி பிரகிருதி விநிர்முகனான ஆத்மாவை அனுபவிக்கை யாகிற கைவல்ய புருஷார்த்தத்தோடே
கால தத்வம் உள்ள தனையும் நெடுகி நின்று பூமி தொடக்கமாக ப்ரஹ்ம லோகம் பர்யந்தமாக உண்டான
இவ்வண்ட ஐஸ்வர்யம் எல்லாவற்றையும் ஸ்வ அதீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும் -அளவுடைய நெஞ்சே
யுத்த உன்முகமான திரு வாழியை திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்தில் உண்டான
ஸ்நேஹத்தை சர்வ காலத்திலும் விடாதே கொள்-
இவ் வேப்பங்குடி நீரைப் பருகைக்கு உன் காலைப் பிடித்து வேண்டிக் கொள்கிறேன் கிடாய் -என்கிறார் –

——————————————————————————-

சிஷ்யர்கள் ஆச்சார்யர்கள் ஆனார்கள் -(நெஞ்சும் புலன்களுமான சிஷ்யர்கள் ஞானமுடைய ஆத்மாவுக்கு உபதேசம் )

இவர் கரணங்கள் இவருக்கு முன்னே அங்கே பிரவணமாய் -குரு சிஷ்ய க்ரமம் மாறாடி எதிரே நின்று –
ஆழ்வீர்-நீர் இவ்விஷயத்தை விடாதே கிடீர் என்று அவை தான் தமக்கு முன்னே உபதேசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

பதவுரை

அன்பு—பகவத் பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது(அன்பு இருக்கும் இடம் என்று சொல்ல வேண்டாத படி -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல் அன்பு என்றே சொல்லலாம் படியான நெஞ்சு நெஞ்சு
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பே போல் )
ஆழியானை–ஸர்வேஸ்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;(பண் ஆழி -அழகும் மிடுக்கும் என்றுமாம் )
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;(ஊழி காணான் திரு நாமம் சாதிக்கிறார் -பழைய காலத்தையே பார்க்காமல் -பழைய காலங்களில் செய்த பாபங்களைக் கணிசியான் )
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப் பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.

அன்பாழி யானை   யணுகு என்னும் –அன்பு -என்று நெஞ்சை சொல்லிற்று (விஞ்ஞாதா என்னாதே விஞ்ஞானம் என்று சொல்லுமா போல் )அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு விடாதே -என்று
திரு உள்ளத்தை இரக்க -அதுவும் நீர் ஆழியானை விடாதே கொள் என்கிறது
நா வவன் தன்-பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் –நாவானது அவனுடைய ஸுந்தர்ய ஸாகரமான தோள்களை
அக்ரமமாக ஏத்து என்னா நின்றது -முடியும் படி யாதொன்று அறியாது காணும் –
முன்பூழி-காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்-பூணாரம் பூண்டான் புகழ் —-
சாபராதராய் இருந்துள்ள நம்மால் அவனைக் கிட்டப் போமோ என்னில்
ஓர் அடி வர நின்றால் குற்றமே அன்றியே குற்றம் கிடக்கும் நாளும் காண வரியான் என்கிறது
முன்பூழி-காணானை-அவனைக் காணும் என்னா நின்றது கண்

செவி இத்யாதி -குற்றம் பார்த்து போகிறான் ஆகிலும்
விடாய் போகாத ஆபரண சோபையை உடையவனுடைய புகழைக் கேள் என்னா நின்றது செவி –

ஆழியானை -ராஜ புத்திரர்கள் இடைச் சேரிக்குள் அகப்படுமா போலே —

பண்பு ஆழித் தோள் -ஸுந்தர்ய ஸாகரமான(பண் பாழி -அழகும் மிடுக்கும் என்றுமாம் )
பரவி ஏத்து -நீ ஏத்தும் க்ரமம் தப்பாமே
முன்பு இத்யாதி -நாம் பண்ணி வைத்த பாபங்களை நினைத்துச் சீறிலோ என்னில் பாபமும் கீழ்க் கிடந்த காலமும் மறக்கும்
கண் கண்டவாறே தெரியும் இ றே -சீறி நோக்கும் நோக்கும் -வாத்சல்யத்தாலே நோக்கும் நோக்கும் -(கோபத்தால் சிவந்தது என்னைக் காண்பதற்கு முன்பு -வாத்சல்யத்தாலே சிவந்தது -என்னைக் கண்ட பின்பு )
செவி கேள் என்னும் -செவிக்கு விக்ருதி சொல்ல அவசரம் இல்லை – பூண் ஆரம்–ஆபரணமாக உடம்புக்கு ஆபரணம் –
சர்வ பூஷண பூஷார்ஹா  பூஷணார்ஹம்–மற்றைய ஆபரண்களுக்கு ஆபரணம் என்றும் -பூண்டான் -பூண வல்ல அழகு – புகழ் ப்ரஹ்ம பூஷணம் -(ஆபரணங்களை அழகூட்டும் பெருமாள் )

(அன்பே வடிவானதால் மனஸை அன்பு என்கிறார்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -அறிவை யுடைய ஆத்மாவையே அறிவு என்று உபநிஷத் சொல்வது போல்
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-29-)

———————————————————–

இவர் கரணங்கள் இவருக்கு முன்னே அங்கே பிரவணமாய் -குரு சிஷ்ய க்ரமம் மாறாடி எதிரே நின்று –
ஆழ்வீர்-நீர் இவ் விஷயத்தை விடாதே கிடீர் என்று அவை தான் தமக்கு முன்னே உபதேசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அன்பு என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தெரியாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
நெஞ்சானது திருவாழி யுடையவனானவனைக் கிட்டி அனுபவி என்று உபதேசியா நிற்கும் –
வாக் இந்த்ரியமானது நீர்மையையும் மிடுக்கையையும் யுடைத்தான அவனுடைய தோளை அடைவு கெடப் பேசிக் கொண்டு
ஸ்தோத்ரம் பண்ணு என்னா நிற்கும் -கண்களானவை -நம் அபராதம் காணாத அளவன்றிக்கே
அபராதம் பண்ணின முன்புள்ள காலத்தையும் காணாதவனைக் கண்டு அனுபவி என்னும்
செவிகள் ஆனவை ஆபரணமாக திரு மேனிக்கு ஆபரணமாகப் பூணப்படும் ஹாரம் முதலான
திவ்ய ஆபரணங்களை அழகு பெறப் பூண்டு இருக்குமவனுடைய கல்யாண குணங்களைக் கேளாய் என்று
தூண்டா நிற்கும் —

பண் பாழித் தோள் -என்று (பண்பு ஆழி )ஸுந்தர்ய ஸாகரமான திருத் தோள் -என்னவுமாம் –

———————————————————————————————————–

கீழ் தம்முடைய இந்திரியங்கள் ப்ரவணமான படி சொல்லிற்று -அவ்விஷயம் தான்
இனி அறிய ப்ராப்தமாய் இருந்தது -நீ அத்தைப் பற்றிலும் பற்று -விடிலும் விடு என்கிறது –

(உடலும் உயிரும் ஏற்றான் ——சேதன அசேதனங்கள் சரீரம் பிரகாரம்-சிறு மயிர்க்காலால் சமஸ்த வற்றையும் தரிக்கிறேன் -கீதை )

அந்தக் கரணங்கள் தானும் கீழ்ப்படும் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படியை அருளிச் செய்கிறார் –

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பதவுரை

நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக் கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜல பூர்த்தியை யுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.

புகழ்வாய் பழிப்பாய்–புகழிலும் புகழ் -பழிக்கிலும் பழி
நீ பூந்துழா  யானை-பழித்தல் இகழ்தல் செய்யப் போமோ -என்கிறது –
இகழ்வாய் கருதுவாய்–இகழிலும் இகழ்-கருதிலும் கருது —
என் நெஞ்சே -நாட்டுக்குச் சொல்கிறேனோ -உனக்கு அன்றோ –
திகழ் நீர்க்-கடலும் மலையும் -இரண்டாலுமாகக் கார்யத்தைச் சொல்லுகிறது –
இரு விசும்பும் காற்றும்-காரண பூதங்களுக்கும் உப லக்ஷணம்
உடலும் உயிரும் -காரணமான சித் அசித்துக்களை சொல்கிறது
உடலும் உயிரும் ஏற்றான் ——-இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்ய தயா சேஷம் -அவன் சேஷி என்கிறது
அவை மத்தியஸ்தம் என்னும் படி தம்முடைய ப்ராவண்யம் –

புகழ் இத்யாதி -வாசகத்துக்கு -இகழ்வாய் கருதுவாய் -மனஸ்ஸூ -என் நெஞ்சே -புகழ்ந்து பழகின நெஞ்சே
பூந்துழாயானை புகழ்ந்து அல்லது நிற்க ஒட்டாது —
ஏற்றான் -ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று -இது இருந்த படி –

(உடலும் -உயிரும் -உடல் என்று தர்ம சாதனமான இந்திரியங்களுக்கு உப லக்ஷணம்
தர்ம சாதகமாய் இருக்கும் பெருமையால் தனித்து எடுத்து அருளுகிறார்
உயிர் என்றது தர்ம பூத ஞானம் -நித்ய விபூதி முதலான அஜடப் பொருள்களுக்கு உப லக்ஷணம் )

——————————————————————–

அந்தக் கரணங்கள் தானும் கீழ்ப்படும் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படியை அருளிச் செய்கிறார் –

நல்லது இன்னது என்று வகை இட்டு அறிய வல்ல நெஞ்சே -இப்படி நல்லது காண வல்ல நீ புகழ்ந்து அல்லது நிற்க
ஒண்ணாத படி அழகிய திருத் துழாயாலே அலங்க்ருதனானவனை வாய் விட்டுப் புகழ்வாய் -அன்றிக்கே பழிப்பாய்–செய்தபடி செய்
இப் பொகடு சரக்கான விஷயத்தை அநாதரிப்பாய் -(பொகடு சரக்கான விஷயம் -விடத் தக்க விஷயத்தை தானே அநாதரிக்க வேண்டும் )அன்றிக்கே ஆதரிப்பாய் -செய்த படி செய்
விளங்கா நின்றுள்ள ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடலும் பர்வதமும் பரப்பை யுடைத்தான
ஆகாசமும் -வாயுவும் -தேவாதி சரீரங்களும் -தத் தத் சரீரஸ்தங்களான ஆத்ம வர்க்கமும் ஆகிற இவ் வஸ்துக்கள் எல்லாம்
தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி (அப்ருதக் ஸித்த விசேஷணம் விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருப்பதே பிரகாரம் )சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –
இப்படி சர்வ பிரகாரியாய் நிற்கிறவனைப் பற்றிலும் பற்று -அன்றிக்கே பிரகாரத்தில் ஒன்றைப் பற்றிலும் பற்று என்றபடி
அன்றிக்கே உடலும் உயிருமான இப் பதார்த்தங்களை ஏற்றான் -தரித்தான் -என்றுமாம் –

(கடல் மலை-ப்ரஹ்மாதி தேவர்கள் — பிரகாரங்கள் இவற்றை முன்னிட்டுப் பற்று- பற்று -பற்றா விட்டாலும் பகவத் ஸ்திதி இதுவே)

———————————————————————————————————

இது இவனுக்கு ஏற்றமாகச் சொல்லுவான் என் -அல்லாத ருத்ரனும் இப்படி சேஷியாய் அன்றோ இருப்பது என்னில்
அவனுடைய பிரகாரங்களை பார்த்தால் ரஷ்யமாகத் தோற்றும் -இவனைப் பார்த்தால் ரக்ஷகனாக இருக்கும் என்கிறது

(ஆகாசாத் பதிதம் தோயம் -கேசவன் கச்சதி கச்சதி-நம் கண்ணன் அல்லது கண் அல்லையே -ந ஹி பாலந சாமர்த்தியம் -பலவற்றையும் பட்டியல் இடுகிறார்

ஏற்றான் -எயில்எரித்தான்-நீற்றான்-கூற்றொரு பால் மங்கையான்-வார் சடையான்-கங்கையான்

புள்ளூர்ந்தான்-மார்விடந்தான்-நிழல் மணி வண்ணத்தான்-பூ மகளான்-நீண் முடியான்-நீள் கழலான்

ஒவ்வொன்றும் இவனே ரக்ஷகன் என்பதை பறை சாற்றுமே )

அவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் -ருத்ரனை ஆஸ்ரயணீயனாகக் கொண்டாலோ என்ன
அவனும் அவனுக்கு சரீர பூதனாகையாலே அவனே ரக்ஷகன் என்கிறார் –

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

பதவுரை

ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துக் கொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச்சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத் திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேஸ்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.

ஏற்றான் புள்ளூர்ந்தான்-வேதாத்மாவான திருவடியைத் தனக்கு வாஹனமாக யுடையனாய் இருக்குமாகில்
அவன் அப்ரஸித்தமாய் இருபத்தொரு எருத்தை வாஹனமாக உடையனாய் இருக்கும் –
எயில் எரித்தான் -ஆஸ்ரிதரை ஒரு வியாஜ்யத்தில் அழிக்குமவன்
மார்விடந்தான்-ஆஸ்ரிதற்காக தன்னை அழிய மாறும் இவன்
நீற்றான்–பஸ்மச்சந்த -என்று பிராயச்சித்தம் பண்ணும் அவன் –
நிழல் மணி வண்ணத்தான் -கண்டால் ஸ்ரமஹரமான வடிவு இவனது –
கூற்றொரு பால்-மங்கையான்–ஒரு ஸ்திரீயை தனக்கே வைத்துக் கொண்டு இருக்குமவன்
பூ மகளான்–அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத் நீ -என்னுமவளைத் தனக்காக யுடையவன் இவன்
வார் சடையான்–சாதக வேஷன் அவன் –
நீண் முடியான்-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு முடியை யுடையவன் இவன் –
கங்கையான்-பாவ நார்த்தமாக கங்கையைத் தரித்து கொண்டு இருக்கும் அவன் -(சிவ பூத் ஆனான் )
நீள் கழலான்   —அந்த தீர்த்த பூதையான கங்கைக்கு உத்பாதகமான திருவடியை யுடையவன் இவன் –

ஏற்றான் –எயில் எரித்தான் –நீற்றான் –கூற்றொரு பால்
மங்கையான் – வார் சடையான் -கங்கையான் ஆன அவன் –
புள்ளூர்ந்தான் –மார்விடந்தான்–நிழல் மணி வண்ணத்தான் -பூ மகளான்–நீண் முடியான்-நீள் கழலான்-இவன்
காப்பு-அவனுடைய ரக்ஷை இவன் –

உடலும் உயிரும் என்றத்தோடு இவனோடு வாசி இல்லை -அவனுக்கு சேஷமாம் இடத்தில் –

(விஷ்ணுர் ஆத்மா பகவத பவஸ்யாமி த தேஜஸ தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம் சர்க்கம் ச விஷேஹே மஹேஸ்வரம் –பாரதம்

மத்யம் பீத்வா குரு தாராம்ஸ் ச கத்வா ஸ்தேயம் க்ருத்வா ப்ரஹ்மஹத்யாஸ் ச க்ருத்வா
பஸ்மச் சன்னோ பஸ்ம ஸய்யா சயா நோ ருத்ரத் யாயீ முச்யதே ஸர்வ பாபை –சாதாதப ஸ்ம்ருதி –பிராகிருத சரீரத்தை யுடையவன்

நீல தோயதா மத்யஸ்தா
புருஷம் கிருஷ்ண பிங்களம்
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி

பாவ நார்த்தம் ஜடா மத்யே ததார சிரஸா ஹர

யச்சவ் ச நிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோ தநேந மூர்த் நி வித்ருதேந சிவ சிவோ அபூத்)

—————————————————————-

அவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் -ருத்ரனை ஆஸ்ரயணீயனாகக் கொண்டாலோ என்ன
அவனும் அவனுக்கு சரீர பூதனாகையாலே அவனே ரக்ஷகன் என்கிறார் –

தமஸ் பிரக்ருதியான தனக்குச் சேரும் படி அஞ்ஞமான ருஷபத்தை வாஹனமாக யுடையனாய்
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் குடியிருப்பான த்ரி புரத்தை மஞ்சாட்டமாக சுட்டுக் பொகட்டவனாய் -ப்ராயச்சித்தி என்று
தோற்றும்படி பஸ்மோத் தூளிக சர்வாங்கனாய் சரீரத்தில் ஒரு பார்ஸ்வ பிரதேசத்தில் பார்வதியைத் தரிக்குமவனாய்
சாதகத்வ ஸூ சகமான தாழ்ந்த ஜடையை யுடையவனாய் -பாவ நார்த்தமாக ஜடா மத்யத்திலே தரிக்கப் பட்ட கங்கையை யுடையனான ருத்ரன் –

த்ரயீ மயனான பெரிய திருவடியை வாஹனமாக யுடையவனாய் -ஆஸ்ரித விரோதியான ஹிரண்யன் மார்வைப் பிளந்து பொகட்டவனாய்
ஸ்ரமஹரமான நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனாய் புஷ்ப நிவாஸினியான பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக யுடையவனாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை யுடையவனாய் கங்கோத் பத்தி ஸ்தானமான நீண்ட
திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய ரக்ஷையாய் இருக்கும் –

(சதுர் முகன் கையில் சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில்

துலாயாம் ஸ்ரவணே ஜாதம் -பாஞ்ச ஜன்ய அம்சம் -ஓங்கார விளக்கம் அருளிச் செய்யவே முதல் திருவந்தாதி
அநந்யார்ஹ சேஷ பூதன் -அவனே ப்ராப்யம் ப்ராபகம் –
ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்தும் ப்ரகார தயா சேஷம் -)

—————————————————————————————————————-

சேஷியாய் இருந்துள்ள உன்னை உணர பிரதிபந்தகம் எல்லாம் போம் என்கிறது –

இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு-உன்னிப்பதுக்கு மேல் த்யானம்
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

அநிஷ்டம் தொலையப் பெற்று இஷ்ட பிராப்தியும் பெறுவார்கள்

காப்புன்னைக்  யுன்னக் கழியும் –உன்னை உணர -காப்பு -காவல் -தேவதைகள் -கழியும் -( ஆதித்ய சந்திரன் பகல் இரவு அபிமான தெய்வங்கள் தர்மம் –14 தேவதைகள் )
காப்பு என்கிறது -ஈஸ்வரனுக்குப் புரவர் போலே இவ் வாத்மாக்கள் செய்த கர்மங்களை ஆராயக் கடவரான
சந்த்ராதித்யர்கள் தொடக்கமான பதினாலு பேருடைய சிறைகள் -கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி -(பெருமானுக்கு வஸ்யமானால் -யம தர்மராஜன் மது ஸூதன ப்ரப்ருதிகளை ப்ரபு என்றே கொள்வான் -இது உப லக்ஷணம் மற்ற தெய்வங்களுக்கு )
அரு வினைகள்-ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் –அக் காப்புக்கு அடியான அவித்யாதிகளால் யுண்டான பந்தம் உன்னை நினைக்க நெகிழும் –
மூப்புன்னைச்-சிந்திப்பார்க்கு இல்லை –காப்பும் அருவினைகளும் போன அதிகாரிகளுக்கு –மூப்பாவது -கைவல்யம் –
அன்றியே -ஷட்பாவ விகாரங்களுக்கும் உப லக்ஷணம் ஆகவுமாம்
திரு மாலே –ஈஸ்வரன் ஸ்வ தந்தர்யத்தாலே ஆராயப் புக்காலும் பிராயச்சித்த சாத்தியம் அல்லாத பாபம்
நாம் பொறுக்கும் அத்தனை அன்றோ என்று உணர்த்துவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாசீ நாம் ராவண ஸ்யாஹம் மர்ஷய மீஹ துர்பலா —-ராஜ சம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞ்ஞயா –என்கிறபடியே
நின்னடியை-வந்திப்பார் காண்பர் வழி  ——–உன் திருவடிகளிலே விழுவார்கள் நல்ல வழி காண்பர் –
வழி -என்று அர்ச்சிராதி கதி என்றுமாம் -பரமபதம் போலே பரமபதத்துக்கு போம் வழி –நரகம் போலே பொல்லாதாய் இருக்கும் நரகத்துக்கு போம் வழி —
பிரபு –அந்யந்ருணாம் நவைஷ்ணவாணாம் தே வர்ஷி –இத்யாதி –(நாராயணனுக்கு அடிமைப் பட்டவன் தேவ ரிஷி பித்ரு கடன்களில் இருந்து மீட்கப்படுகிறான் )
அருவினை -அவித்யாதிகளால் பிறக்கும் புண்ய பாபங்கள் -சாரீரமான மூப்பு –
திருமாலே -யுவா குமாரா -யுவ திஸ்ஸ குமாரிணீ-(ருக் வேதம் )என்கிற உங்களை ஆஸ்ரயித்ததால் உங்களைப் போலே
பரமம் சாம்யம் உபைதி இறே -(திரு மாலைப் போலவே யுவா குமாரராயே இருப்பார் அன்றோ )–வந்தியாதார்க்கு முள்ளும் முடுக்குமான வழி —

(ஆதித்ய சந்த்ர அவநிலோ அநலஸ் ச த்யவ்ர் பூமிர் ஆபோ ஹ்ருதயம் யமஸ் ச
அஹஸ் ச ராத்ரிஸ் ச உபே ச ஸந்த்யே தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம் –14 தேவதைகளும் சாக்ஷி-

ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-

கமல நயன வாஸூ தேவ விஷ்ணோ தரணி தர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரண மிதீர யந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான் –3-7-33-

தேவர் ரிஷி பூதாப்த்த ந்ரூணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மநா யஸ் சரணம் சரண்யம்
நாராயணம் லோக குரும் ப்ரபந்ந -பாகவதம் –11-5-41-)

மூப்பு -ஷட் விகாரங்களுக்கும் உப லக்ஷணம்
அஸ்தி -உளனாவது -ஜாயதே -பிறக்கிறான் -பரிணமதே-மாறுதல் அடைகிறான் -விவர்த்ததே -வளர்ச்சி அடைகிறான் -அபஷீயதே -கிழவன் ஆகிறான் -விநஸ்யதி -மரணம் அடைகிறான்

யுவா குமாரா –யுவதிஸ் ச குமாரிணீ -தங்களை ஓக்க அருள் செய்யும் மிதுனம் –
வழி காண்பர் -இவ்வுலகில் நல் வழி நடத்தை செய்வார் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் சென்று
பரம புருஷார்த்த ரூபமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் பெறுவர்

—————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –

சர்வாதிகனான உன்னை அனுசந்திக்க பாபங்களுக்கு சாக்ஷியாகக் காத்துக் கொண்டு இருக்கும் படி நீ
கற்பித்து வைத்த -யம தர்மாதிகளான பதினாலு வஸ்துக்களும் -சூரியன் சந்திரன் -காற்று அக்னி ஆகாயம் பூமி ஜலம்
மனஸ் யமன் பகல் இரவு ப்ராத ஸந்த்யை சாயம் சாந்த்யை தர்மம் -ஆகிய 14 – நமக்கு இவ்விடம் அடைவில்லை என்று விட்டு நீங்கும்
அந்த காப்புக்கு அடியாய் அவித்யா சஞ்சிதமான கர்ம பந்தங்கள் உன்னை அனுசந்திக்கக் கழன்று போம் –
ஆஸ்ரிதர் குற்றத்தை நற்றமாகக் கொண்டு ஏற்றும் பிராட்டி பக்கல் பெரும் பிச்சனானவனே –உன்னை அனுசந்திப்பார்க்கு
ஜராதிகளான ஷட்பாவ விகாரங்களும் முதலிலே இல்லை -தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் போம் வழி என்னும் படி
நிரதிசய போக்யமான அர்ச்சிராதி மார்க்கத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள் -நல்ல வழியே போகப் பெறுவார்கள் என்றுமாம்

மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை -என்றது காப்பும் அருவினைகளும் கழிந்த அதிகாரிகளுக்கு வரும் மூப்பாவது
கைவல்யமாய் -அது முதலிலே உன்னை அனுசந்திப்பார்க்கு இல்லை -என்றபடி –

———————————————————————————————————————

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தித்த
தேசமே எல்லா நன்மையையும் கொடுப்பதாக இருக்க -என்கிறது -(தேசோஹம் சர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )

(பல கரணம்-பக்தியாகிற வழி – உபாசனம் பல பிரதா பகவான் –உபாசகனுக்கு பிரபன்னனுக்கு இரண்டுமே பகவான்)

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -76-

பதவுரை

வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆஸ்ரயிக்கு மவர்கள்
வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆஸ்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.

(ப்ரபன்னனுக்கு அத்யாவசியம் -மஹா விசுவாசம் வேண்டுமே -அது தொலையாத குறை வாராமல் -திருமலை அசேதனம் கொடுக்குமா என்கிற சங்கை இல்லாத குறை வாராமல் -)

வழி நின்று நின்னைத் தொழுவார்–
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய –(ப்ரஹதாரண்யம்-6-5-6–கேட்கத் தக்கதும் நினைக்காத தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்கத்தக்கது )என்றும்
தமேவ தீரோ  விஞ்ஞாய பிரஞ்ஞாம் குர்வீத ப்ராஹ்மண -(ப்ரஹதாரண்யம்-6-4-21-ஞானமுடையவர்களுள் சிறந்தவனாக ப்ராஹ்மணன் அந்தப் பரமாத்மாவையே ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம் செய்யக் கடவன் ) என்றும்
உபாசனம் த்ருவா ஸ்ம்ருதி தர்சன சாமாநகாரதா ப்ரத்யக்ஷதா பத்தி -(பர்யாய சப்தங்கள் )–என்றும்
விஷதே தத் அநந்தரம் -(ஸ்ரீ கீதை -18-55-) என்றும் சொல்லும் அளவும் சொல்லுகிறது –

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷

ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் நான் எத்தகையவனோ -குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ
அத்தகைய என்னை முன் கூறிய பரபக்தியாலே உள்ளபடி அறிகிறான் –
என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பிறகு பரம பக்தியால் என்னைப் பரிபூர்ணமாக அடைகிறான் –
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும்
பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும்
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் –
ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை –
மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –

(வழி நின்று -கிடைக்கும் பலனுக்கு இவர்கள் பக்தியையே உபாயமாக நினைக்கையாலே இத்தனை ஸ்ரமம் பட வேண்டும் என்று அவன் சங்கல்பித்து இருக்கிறான்
அவனையே உபாயமாக பற்றும் பிரபன்னனுக்கு ஒரு முயற்சியும் இல்லாமல் தானே பலனை அளிக்கிறான்
ஆகையால் பல பிரதனனும் பல உபகரணமும் அவனே
முயற்சியின் பெருமை உபாசகனுக்கு
மஹா விஸ்வாஸ பெருமை பிரபன்னனுக்கு
உபாசகர் வழி நின்று எம்பெருமானைத் தொழ
ப்ரபன்னன் எம்பிரானையே வழியாகவே நினைத்துத் தொழுகிறார்கள் -)

வழுவா-மொழி நின்ற மூர்த்தியரே யாவர் –யதாபூதவாதியான வேதத்தில் சொன்ன வடிவை யுடையவராவார்
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே–என்கிற படியே –

(ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய
பரஞ்சோதி ரூப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -சாந்தோக்யம் -8-12-2-
ஸ்வரூப ஆவிர்பாவமே பரம புருஷார்த்தம்)

(மூர்த்தியரே யாவார் –
மூர்த்தி என்று ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ப்ரக்ருதி சம்பந்தத்தால் மறைந்து கிடந்த ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவதை உணர்த்துகிறார்)

பழுதொன்றும்-வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த-சீரான் திருவேங்கடம் –
ப்ராப்ய ப்ராபகங்கள் ஒன்றும் குறையாத படி பரம பதத்தைக் கொடுக்கும் திரு உலகு அளந்த நீர்மையை யுடையவனுடைய திருமலை

(பழுதொன்றும் வாராத வண்ணமே-ருசியும் நம்பிக்கையும் குறையாத படி
ப்ராப்யம் பகவான்
ப்ராபகம் -திருமலை)

மண்ணளந்த-சீரான்-என்று சம் புத்தியாகவுமாம்

வழுவா மொழி –ஒருவருக்கு ஒருவர் ஓதுவித்துப் போருகை -மூர்த்தியரே யாவர்-அதுக்கு ஈடான ஸ்வரூபத்தை யுடையவர் ஆவார் –
மண்ணளந்த-சீரான்-அந்த ஸ்வபாவம் உண்டு திருமலைக்கு –

(திருவேங்கட மலையே பரம பதத்தைக் கொடுக்கும் என்கிறார்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
தேசோயம் ஸர்வ காம துத் -)

எம்பார் ஓவாதே அநுஸந்திக்கும் பாட்டு –

———————————————————————-

உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –

ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமாய்-ஸ்ரவண மனன த்யான உபாஸன தர்சனாதி அவஸ்த்யா யுக்தமான பக்தி மார்க்கத்தில்
சலியாமல் உறைக்க நின்று சர்வாதிகனான உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள் -யதாபூதவாதி யாகையாலே
ஒரு நழுவுதல் அற்று இருக்கிற உபநிஷத் பாகங்களிலே-ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே–என்று
ப்ராப்யதயா ப்ரதிபாதிக்கப் படா நின்றுள்ள ஸ்வரூப ஆவிர்பாவத்தை யுடையராய்ப் பெறுவார்கள்-
பூமியை அளந்து கொண்ட சீல ஸுலப்யாதி கல்யாண குணங்களை யுடையவன் எழுந்து அருளி நிற்கிற திருமலை –
தன்னை ஆச்ரயித்தார்க்கு ப்ராப்ய ப்ராபகங்களில் ருசி விசுவாசங்களுக்கு ஒரு குறையும் வாராத
படியாகப் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்தைக் கொடா நிற்கும் –

——————————————————————————————————

உகந்து அருளின தேசங்கள் பூமியிலே உண்டாய் இருக்க -சம்சாரம் உண்டோ -என்கிறது –
தம்முடைய இடரானவை திருமலையை ஆஸ்ரயிக்கப் போமோ என்னில்-
அநாதி காலம் நம்மைப் பெறுகைக்கு அவன் படுகிற பாட்டை அநுஸந்தியாய் –

(எதிர் சூழல் புக்கு திரிந்து -ருசி அனுகுணமாக நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் -சாதிக்கிறான் –
நின்று கிடந்தது இருந்து நடந்து செய்த வினைகள் அனைத்துமே போக்கி அருளுகிறார்

திரு விண்ணகர் இருந்த திருக் கோலம் இல்லையே -ஆகவே இங்கு ஸ்ரீ வைகுந்த்தைச் சொன்னவாறு )

திருமலை ஒன்றுமே அல்ல கிடீர் -உகந்து அருளின தேசங்கள் அடங்க இப்படியே கிடி கோள்–என்கிறார் –

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ———77-

பதவுரை

வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் – அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும்–பூ மாறாதே இருந்துள்ள அகழை யுடைத்தான திருக் கோவலூரும்
விண்ணகரம் -என்று பரம பதத்தைச் சொல்லுகிறது
நான்கிடத்தும்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே-
நான்கு இடத்தும் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்த படியையும் சொல்ல
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாப பலம் போம் என்கிறது -(சும்மெனாதே கைவிட்டோடி-இத்யாதி -வானோ மறி கடலோ -இத்யாதி )
என்றால் கெடுமா மிடர் ——–தாய் பேர் சொல்ல கிலேசம் போமா போலே -(குழந்தை -ஸ்வயம் ப்ரயோஜனமாகச் சொல்லுமா போல் -உபாய பாவத்தால் இல்லையே )

இவர்களுக்கு உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி (இங்குள்ள இருந்த திவ்ய தேசமாகச் சொல்லாமல் -ஸ்ரீ வைகுண்டமும் இவையும் ஒரே போகி )
பொன்னகர் –தானே வந்து நோக்கின இடம் –

(என்றால் கெடும் -இந்த திவ்ய தேச வாசம் கூட வேண்டா -அவன் நம்மை அடையவே இங்கு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கோர மா தவம் செய்கிறான்
என்று அனுசந்தித்தாலே போதும்
இடர் என்பது எல்லாமே கெடும் என்கிறார்
நாமே சூழ்த்துக் கொண்ட ஸம்ஸாரிக துக்கங்கள் போன வழி தெரியாதபடி தாமே விட்டு ஓடிப் போகும் என்கிறார் -)

(இத்தை உபாய புத்தியுடன் செய்ய வேண்டாம் -ஸ்வயமன் ப்ரயோஜனமாகவே அனுசந்திக்க அமையும் –
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே –பெரியாழ்வார் -5-4-2-
வானோ மறி கடலோ -பெரிய திருவந்தாதி -54-
அநிஷ்ட நிவ்ருத்தி சொன்னது பகவத் பிராப்தி முதலாகிய இஷ்ட ப்ராப்திக்கும் உப லக்ஷணம்)

————————————————————————-

திருமலை ஒன்றுமே அல்ல கிடீர் -உகந்து அருளின தேசங்கள் அடங்க இப்படியே கிடி கோள்–என்கிறார் –

திருமலையிலே நின்று அருளினான் –வைகுண்ட மா நகரிலே எழுந்து அருளினான் -திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளினான்
ஒன்றோடு ஓன்று விச்சேதியாதே செறிந்து அழகியதாய் (அகழியை யுடைத்தாய் )போக்யதை அளவிறந்துள்ள திருக் கோவலூர் ஆகிற
ஸ்ப்ருஹணீயமான திவ்ய நகரத்திலே நடந்து அருளினான் -என்று இந்த நாலு திருப்பதிகளிலும் ஆஸ்ரித அர்த்தமாக
அவன் நிற்பது இருப்பது கிடப்பது நடப்பதாக வியாபாரங்களை அனுசந்தித்தால் –
தாங்களே சூழ்த்துக் கொண்ட சாம்சாரிக துக்கங்கள் போன வழி தெரியாத படி (தம் தாமே )விட்டு ஓடிப் போம் –

——————————————————————————————————————-

நீ துக்கப் படுகைக்கு சங்கை யுண்டோ என்னில் -போராய் நெஞ்சே –
இனி நம் பக்கல் இடர் வந்ததாகில் முதலை பட்டது படும் அத்தனை -(மாஸூ ச -என்பதும் விதியே )

அவன் நமக்காகச் செய்த செயல்களை அனுசந்தித்தால் -அவன் திருவடிகளில்
அடிமையிலே அன்வயித்து அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் -என்கிறார் –

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-

பதவுரை

நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்-தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த–
ஆனையைத் தொடருவதான கொடிய முதலையை முடித்த –
சூழ்ச்சி என்று வஞ்சித்தலாய் -முடித்த என்றபடி –
படமுடைய-பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்–இத்தால் அநாஸ்ரிதர் வந்தாலும் ஆஸ்ரிதர் வந்தாலும்  அவன் இருக்கும் படி சொல்கிறது

(ரக்ஷணம் -அஸ்தானே பய சங்கை -பொங்கும் பரிவு -ஸ்பரிசத்தால் வந்த பூரிப்பு)

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —–கொய்யப் பட்டுச் செவ்வியை யுடைய நாகப் பூவைக் கொண்டு
பைந்நாகப் பள்ளியான் -பாதமே கை தொழுதும்-இடரார் படுவார் -எழு நெஞ்சே-என்று அந்வயம் –
நாகப் பூ என்கையாலே -அப்ராக்ருத புஷபம் தேடிப் போக வேண்டா -காட்டில் ஒரு பூ அமையும் -என்கிறது
இவர்கள் (முதல் ஆழ்வார்கள் மூவரும் )என்றும் காட்டிலே இறே பழகிற்று–

(அங்கு ஆராவாரமது கேட்டு அழல் உமிழ்க்கும் -நான்முகன் -10-
கொய் நாகப்பூ -காட்டிலே இருக்கும் ஒரு பூவே அமையும்
நாகப் பள்ளியானுக்கு சத்ருசமாக அன்றோ நாகப்பூ
இப்படி தொழுதால் இடர் பட வேண்டாமே
அவை முதலை பட்டது படுமே)

———————————————————————-

அவன் நமக்காகச் செய்த செயல்களை அனுசந்தித்தால் -அவன் திருவடிகளில்
அடிமையிலே அன்வயித்து அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் -என்கிறார் –

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை வடிம்பிட்டு நலியக் கடவதாய் –அதி பிரபலமாய் -நெஞ்சு இரக்கம் இல்லாத படி
அதி குரூரமான முதலையைத் தப்பாத படி சூழ்ந்து அழித்துப் பொகட்டவனாய் -ஸ்வ ஸ்பர்ஸத்தாலே விகசித பணனாய்
இடம் வலம் கொண்டு பரிமாறுகைக்கு தக்க பரப்பை யுடையனான திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை -கொய்து கொள்ள வேண்டும் படி சம்ருத்தமாய் போக்யமான
நாக புஷ்ப்பங்களைக் கொண்டு ஆஸ்ரயிப்போம் –
அவனுக்கு அடிமை செய்யாமல் கிடந்து துக்கப் பட வல்லார் யார் -நெஞ்சே -சடக்கென எழுந்து இரு –

———————————————————————————————————

ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறிக் கார்யம் செய்ய எங்கே கண்டோம் –என்னில்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ -என்கிறார்

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  -79-

பதவுரை

மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை-பெறாப் பேறு பெற்றதாக அவன் திரு உள்ளம் -ஆகவே ஒண் தாரை
அம் கை–(தனது) அழகிய திருக் கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறி வந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

(ஸ்வர்க்காதி லோகத்தில் தோள் -கீழே தாள் -மேலே ஸத்ய லோகத்திலும் தாள்)

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்-குணமே குற்றமாம் –குற்றம் குணமாம் கிடீர் சம்சாரம்
ராவணனோ பாதி வத்யனாய் இருக்க உதார குணம் இவன் பக்கலிலே கிடக்கையாலே தன்னதான பூமியை
அவனுக்காக மேல் எழுத்து இட்டு அவன் கொடுத்தானாக இவன் கொண்டத்தை –தன் கையில் நீர் வார்த்தவனைப்
பாதாளத்திலே தள்ளினான் என்று பழி சொல்லா நிற்பார்கள் -தன்னதல்லாத பூமியை தன்னது என்று கொடுத்தவனை இறே
நெல் வாலிலே வைத்து தெறிக்க வேண்டுவது -அவனைப் பழி சொல்வார் இல்லை -(தனக்கு இத்யாதி -கம்பர் )
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்–ஆரத்தை இரக்கிறானோ இவன்

ஒண்டாரை-நீரங்கை தோய நிமிர்ந்திலையே–அலாப்ய லாபம் பெற்றாரைப் போலே —
வர்ஷேண பீஜம் ப்ரதிஸஞ்ச ஹர்ஷ –(ஸூ ந்தர காண்டம் )என்னுமா போலே அழகிய கையிலே நீர் விழும் காட்டில் வளர்ந்ததில்லையோ –
நீள் விசும்பில்-ஆரங்கை தோய வடுத்து –பரந்த விசும்பில் ஆரமும் கையும் அடுத்து தோயும் படிக்கு ஈடாக -அன்றிக்கே
நீள் விசும்பில் உள்ளார் அழகிய தோளில் அணைய என்றுமாம் -நாம் ஆஸ்ரயிக்க வேணுமோ —
தானே அர்த்தியாம்-நான் அர்த்தியோ என்ன -நிமிர்ந்திலையே –

கொண்டானை அல்லால் -தனக்கு என்று கொடுக்கப் புகுமாகில் நமக்கு இதில் பிராப்தி இல்லை என்று இருந்தால் ஆகாதோ
என்று இருக்க -அது குணமாகை தவிர்ந்து நிற்கைக்கு உடலாவதே -பையலை நெல்லிலே வைத்து தெறிக்க வேணும்
என்பாரும் உண்டாயாயிற்றோ -ஆர் அறியப் பட்டான் –

மண் தா என -தன்னதிலே ஏக தேசத்தை -மா வலியை-அஸூரனைக் கிடீர் – நீர் தோய நிமிர்ந்திலையே
மறு மனஸ் ஸூபடும் என்று அப்போதே -நீள் விசும்பிலார்
அங்கை தோய -அடுத்து ஆஸ்ரயிக்க நிமிர்ந்திலையே -என்றுமாம் –

(குணசாலியிடம் யாசித்துப் பெறா விடிலும் தாழ்வாகாது -மேலானவன் இடம் சிறியதைக் கேட்டு கிடைக்கா விட்டாலும் உயர்ந்ததே
தாழ்ந்தவன் இடம் உயர்ந்ததைக் கேட்டுப் பெற்றாலும் தாழ்ந்ததே)

தனக்கு இயலா வகை தாழ்வது தாழ்வில் கனக்க அரியானது கைத்தலம் என்னில் எனக்கு இதன் மேல் நலம் யாது கொல் -கம்பர்
அஃலம் புரிந்த நெடும் தடக்கை -திருநெடும் தாண்டகம் -6-
வாதா தபக்லான் தமிவ ப்ரணஷ்டம் வர்ஷேண பீஜம் ப்ரதி சஞ்சு ஹர்ஷ -ஸூந்தர -29-6-
வாடி நசித்துப் போன விதை மழையினால் சந்தோஷிப்பது போல் பிராட்டி மகிழ்ந்தாள்
நீர் விழுந்ததும் வாடிய விதை வளருமா [போலே வாமனன் ஓங்கி த்ரிவிக்ரமனானான் –

——————————————————————————-

ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறிக் கார்யம் செய்ய எங்கே கண்டோம் –என்னில்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ -என்கிறார்

உன் விபூதியில் ஏக தேசமான பூமியை எனக்குத் தர வேணும் -என்று மஹா பலியைச் சென்று அர்த்தித்து-
அவன் மறுக்க மாட்டாமல் உனக்குத் தந்தேன் என்று தாரை சாய்க்க -அழகிய அந்த உதக தாரையின் நீரானது
கொடுத்து வளர்ந்த அழகிய திருக் கையிலே வந்து விழும் காட்டில் -அவன் மறு மனஸ்ஸூ படில் செய்வது என்
என்று நினைத்துப் பரப்பை யுடைத்தான அந்தரிஷாதி லோகங்களில் வர்த்திக்கிற ப்ரஹ்மாதிகளுடைய அழகிய கையானது
ஸ்பர்சித்துத் திருவடிகளை விளக்கும் படிக்கு ஈடாகக் கடுகச் சென்று கிட்டி -உதக ஜலமும் திருவடி விளக்கின ஜலமும்
ஏக உதகமாம் படி வளர்ந்திலையோ —

தன்னை அழிய மாறி உதார குணம் பற்றாசாக தன் விபூதியை என்னது என்று
அபிமானித்து இருந்த அவன் குற்றம் பாராதே தானே சென்று இரந்து நீர் ஏற்று வாங்கிக் கொண்ட குணாதிகனானவனை
வஞ்சகன் -சர்வ ஸ்வாபஹாரி -தனக்கு அபேக்ஷிதம் செய்தவனைப் பாதாளத்தில் தள்ளினவன் -என்றால் போலே
பழி சொல்லும் இத்தனை ஒழிய –
கொடுத்த மஹா பலியை-பகவத் விபூதி அபஹாரி -அஹங்கார க்ரஸ்தன்
ஆஸூர ப்ரக்ருதி என்றால் போலே யுண்டான அவன் குற்றங்களை ஆர் தான் சொல்லுவார் –

சம்சாரிகள் ஸ்வ பாவம் குணத்தைக் குற்றம் ஆக்கியும் குற்றத்தைக் குணம் ஆக்கியும் -செய்யும் படி அன்றோ இருப்பது -என்று வெறுக்கிறார்

நீள் விசும்பில் ஆரமும் கையும் சென்று ஸ்பர்சிக்கும் படி கிட்டி என்னுதல்
அன்றிக்கே நீள் விசும்பிலார் அடையக் கை எடுத்து ஆஸ்ரயிக்கும் படியாக என்னவுமாம் —

——————————————————————————————————————-

பரிஹாரம் இல்லாத ஆஸ்ரித விரோதம் பிறக்கிலும்-அவர்களைப் பொறுப்பித்து-
புருஷகாரமாக அவர்களைக் கைக் கொண்டு ரஷிக்கும் -என்கிறது –

அபயம் என்று புகுந்த ஸ்ரீ விபீஷணப் பெருமாளை புகுர ஓட்டோம் என்றவரை பொறுப்பித்து
ஆ நயைநம் ஹரி ஸ்ரேஷ்ட-என்று அவரைக் கொண்டு அழைப்பித்தால் போலே-

பாதாளத்தில் ஸூ முகன் என்ற
ஒரு சர்ப்பத்தை பெரிய திருவடி அமுது செய்ய நினைக்க -அத்தை அறிந்து ஸ்வர்க்கத்திலே உபேந்த்ர மூர்த்தியாய்
எழுந்து அருளி இருக்கிற இடத்திலே திருப் பள்ளிக்கு கட்டிலைக் கட்டிக் கொண்டு கிடக்க -திருவடி பாதாளத்தில் சென்று
தேடிக் காணாமல் திருவடிகளிலே வந்து இவன் கிடக்கிற படியைக் கண்டு சிவிகையார் சொல்லும் வார்த்தையை விண்ணப்பம் செய்ய
திரு வாழியை இவன் கையிலே கொடுத்து பலத்தை ஷயிப்பிக்க-பின்பு திருவடி ஸ்தோத்ரம் பண்ண
கிருபை பண்ணி திருவடி கையிலே அடைக்கலமாகக் காட்டிக் கொடுத்து ரக்ஷித்தான் என்கிற உபாக்யானத்தை அனுசந்தித்து அருளிச் செய்கிறார் –
ந ஷமாமி என்னும் தப்புக்கு போக்கடி காண வல்லன் என்கிறார் –

மஹா பலி பக்கலில் நின்றும் பூமியை மீட்டு நோக்கின அளவன்றிக்கே -அசாதாரண பரிகாரத்தோடே விரோதித்து வந்து
ஒருவன் சரணம் புக்கால் -ந ஷமாமி -என்றத்துக்கும் -நத்யஜேயம் -என்றத்துக்கும் விரோதம் வாராத படி
அவன் கையிலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே நோக்குவான் ஒருவன் என்கிறார் –

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -80-

அடுத்த கடும்பகைஞற்கு

நெருங்கிய கொடிய சத்துருவான கருடனுக்கு-பையுடை நாகப் படைக் கொடியான்
ஆற்றேன் என்று

(நேரே நின்று பிழைத்திருக்கத்தக்க) வல்லமை யுடையேனல்லேன்’ என்று சொல்லிக் கொண்டு
ஓடி

விரைந்து ஓடிப் போய்,
படுத்த பெரு பாழி

(எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு) விரித்த பெருமை பெற்ற படுக்கையாகிய சேஷனை
சூழ்ந்த

சுற்றிக் கொண்ட
விடத்து அரவை

விஷத்தை யுடைய ஸுமுகனென்கிற ஸர்ப்பத்தை
வல்லாளன் கை கொடுத்த

வலிமை யுடைய கருடனது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரக்ஷித்த
மா மேனி மாயவனுக்கு அல்லாதும்

சிறந்த திரு மேனியை யுடைய-ஆச்சார்ய பூதனான -எம்பெருமானுக்குத் தவிர
(மற்ற தேவதாந்தரங்கட்கு)
ஆள் ஆவரோ

அடிமை யாவர்களோ.

அடுத்த –சஹஜ சத்ரு -கடும் பகைஞன்–திருவடியோடே விரோதம் கொண்டால் பிழைக்கப் போகாது -என்கை –
ஆற்றேன் என்றோடி படுத்த பெரும் பாழி–பாழி-என்று படுக்கைக்கு பெயர் –
சூழ்ந்த –சுற்றின -விடத் தரவை–சரண்யனுக்கு க்ருபா விஷயம் என்கிறது –
வல்லாளன் கை கொடுத்த –பிரசன்னனான போது அவனைப் பொறுக்க மாட்டேன் என்னாதே ரக்ஷிக்க வல்லவனானவன் கையிலே காட்டிக் கொடுத்த
மா மேனி -காட்டிக் கொடுத்த பின்பு வடிவில் பிறந்த புஷ்கல்யம்–
மாயவனுக்கு–அல்லாது மாவரோ ஆள் —–எல்லா அவஸ்தையிலும் விட்டுக் கொடாத ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆளாவாரோ –

ந ஷமாமி என்னும் தப்புக்கு போக்கடி காண வல்லன் என்கிறார் -(பாகவத அபசாரத்துக்கும் பரிஹாரம் தேடி ரக்ஷித்து அருளினான் அன்றோ )

நலிய நினைக்கில் அத்தை வெல்ல வல்லாரும் இல்லை -ரக்ஷிக்க நினைக்கில் அத்தை தடுக்க வல்லாரும் இல்லை –
ஆஸ்ரித விரோதி என்று கை விட வேண்டிய விஷயத்தையும் பொருத்தி விட வல்லவனை ஒழிய -கடித்த வாயாலே தீர்க்கை
வத்யதாம்-என்றவரையே -அஸ்மாபிஸ் துல்யோ பவது-என்னப் பண்ணுகை -(அன்று ஈன்ற கன்றின் மேல் வாத்சல்யம் பெருகி இருக்குமே )

அடுத்த – சஹஜ சத்ருவினுடைய சத்தை யுண்டாகில் பகையாயே இருக்கும்
கடும் பகை —பேர் சொல்ல முடியும் படி கொடிதாகையும் –
பெரும் பாழி –இந்த்ர அனுஜன் படுக்கை –திருப் பாற் கடல் ஆகவுமாம் –

(ந ஷமாமி -நத்யஜேயம் -இரண்டுக்கும் விரோதம் வராமல் அவனிடமே ஒப்படைத்து அவனைக் கொண்டே ரக்ஷித்து அருளிய அதி சமர்த்தன்
கடித்த வாயாலே முத்தம் இடச் செய்து அருளினான்
வத்யதாம் -என்ற வானர முதலிகளளையே -அஸ்மாத் அபி துல்யோ பவது என்று கூற வைத்து அருளினால் போலே)

——————————————————

மஹா பலி பக்கலில் நின்றும் பூமியை மீட்டு நோக்கின அளவன்றிக்கே -அசாதாரண பரிகாரத்தோடே விரோதித்து வந்து
ஒருவன் சரணம் புக்கால் -ந ஷமாமி -(கிருத யுக ஸ்ரீ வராஹப் பெருமாள் வார்த்தை)
என்றத்துக்கும் -நத்யஜேயம் -(த்வாபர யுக பெருமாள் சுக்ரீவன் இடம் வார்த்தை )என்றத்துக்கும் விரோதம் வாராத படி
அவன் கையிலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே நோக்குவான் ஒருவன் என்கிறார் –

பிறப்பே பிடித்து உண்டானது ஒன்றாகையாலே -ப்ரத்யாசன்னமாய் -பேர் சொல்லவே முடியும் படி கொடிதான
ஸாத்ரத்வத்தை உடையனான பெரிய திருவடிக்கு நேர் நின்று பொறுக்க மாட்டேன் என்று பெரிய வேகத்தோடு ஓடிச் சென்று
அங்குத்தைக்கு அனுரூபமாம் படி விரித்த திவ்ய சிம்ஹாசனத்தை (பள்ளிக்கட்டு -கோப்புடைய சீரிய சிங்காசனம் )சுற்றிக் கொண்டு கிடந்த பயத்தாலே உமிழுகிற விஷத்தை யுடைய ஸூமுகனாகிற சர்ப்பத்தை
ந ஷமாமி -என்றத்தையும் -நத்யஜேயம் என்றத்தையும் ஓக்க நோக்குகைக்காக
சரணாகத பரித்ராணத்துக்கு அனுகுணமான மிடுக்கை யுடைய பெரிய திருவடி கையில் கடித்த வாயாலே தீரும் படி
காட்டிக் கொடுத்து ரஷித்தவனாய் -ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷம் அடங்கலும்
நிழல் இட்டுத் தோற்றுகிற ஸ்லாக்யமான திரு மேனியை யுடையனாய் -ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு எல்லை
காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுக்கு ஒழியவும் ஸ்வ பர சம் ரக்ஷண ஷமர் அல்லாத வேறு ஷூத்ர தேவதைக்கு அடிமை ஆவர்களோ

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –61-70- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

ஹிதத்தில் அறியாததுக்கு-தம் தாமுடைய உத்பத்தியில் வைத்து அறிவுணர்த்துகிறார் -(உத்பாதாகனே-பெற்றவனே காக்க வேண்டுமே )

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் –
அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவையாவும்-ஐந்த்தைச் சொல்லி அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்-)
திருமால் தன்–லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய(திருமால் -திருவுக்கு ப்ரேரகத்வம் தூண்டும் -ஸ்ருஷ்டிக்கு அவனே )
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

புந்தியிலாய புணர்ப்பு –சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி –

உலகும் உலகிறந்த ஊழியும்-லோகம் அடங்க தானே சேஷித்த காலமும் -(சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் –)
ஒண் கேழ்-விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்–அழகிய நிறத்தை யுடைய அலை எறியா நின்ற கடலும்
லோகத்துக்கு ஆதாரமான மலையும் –
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்-புந்தியிலாய புணர்ப்பு ——-இவ் வோக்கமான கடலிலே லோகம் அலைந்து
நோவு படப் புக்கவாறே -ஐயோ நோவு படா நின்றதே -என்று அதுக்குத் துக்கித்த பிராட்டிக்கு பிரியமாக தன் சங்கல்ப ஞானத்தால் ஸ்ருஷ்டித்து(பஹுஸ்யாம் ப்ரஜாயேய )
தெளிந்து அழகியதாய் சலிக்கின்ற கடலும் –பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கும் வெற்பும் –
திருமால் இத்யாதி -தாய்க்கு பிரியமாக பிரஜைகளை நோக்கும் அத்தனை இறே (தத் இங்கித இத்யாதி )-

இத் தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

————————————————————–

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் –
அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற ஹேது என் என்னில்
பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

பூமியாதிகளான லோகங்களும் -லோகங்கள் எல்லாம் கால சேஷமாம் படி அமிழ்ந்து கிடக்கிற சம்ஹார காலமும்
அழகிய நிறத்தை யுடைத்தாய் அலை எறியா நின்றுள்ள ஸ்ரமஹரமான கடலும் -பூமிக்கு ஆணி அடித்தால் போலே
இருக்கிற குல பர்வதங்களும் -பின்னையும் லோகத்தில் யுண்டான சிவந்த நிறத்தை யுடைய தேஜஸ் பதார்த்தங்களும்
வாயுவும் ஆகாசமும் -இவை எல்லாம் பிராட்டிக்கு உகப்பாக ஜகத் ஸ்ருஷ்டியில் ஒருப்பட்ட
ஸ்ரீ யபதி யுடைய சங்கல்பிதமான வகுப்பை யுடையன —

(சாம்யா பத்தி இருந்தாலும் -ஜகத் வியாபார வர்ஜம் -)

(அவளுக்கும் இது -ஆனால் அவளது உகப்புக்காகவே செய்கிறான் -தோகை விரிக்கும் ஆண் மயில் போல்)

(தத் இங்கித பராதீனன்-ப்ரூ பங்கா பிரமாணம் -உல்லாச -இத்யாதி )

(“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்)

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

(அவளது ஆனந்தத்துக்காகவே ஸ்ருஷ்ட்டி
தூண்டி விடுகிறாள்
இவளது கண் புருவ நெரிப்பே பிரமாணம்)

(திருமால் தன் புந்தியிலாய புணர்ப்பு -ஜகத் ஸ்ருஷ்டியில் பிராட்டிக்கு அந்வயம் உண்டு என்கிறது
திரு -பிராட்டி விசேஷணம் -அப்ராதான்யம்
மால் -விசேஷ்யம் -ப்ரதாநம்
அவனுக்கே பஹுஸ்யாம் -சங்கல்பமும் நிமித்த உபாதாந ஸஹ காரி -த்ரிவித காரணத்வமும் அவனுக்கே
ஸ்ருஷ்டி லீலா ரஸத்தில் அவனைத் -தூண்டுவதும் -லீலா ரஸத்தில் பங்கு பெறுவதும் அவளது)

“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

ஸ்வஸ்தி ஸ்ரீர் தி சதா அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆம வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு நாந்ய தாஸ்ய ரஸதா ஸ்யாதைக ரஸ்யாத் தயா –ஸ்ரீ ஸ் தவம் -1-

அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆம வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-

இவர் அபேக்ஷிக்கும் நன்மையாவது பிராட்டியை நன்றாக ஸ்துதிக்க அனுகூலமான
வாக் ஸம்ருத்தி -பக்தி ஸம்ருத்தி இத்யாதிகள் என்பது மேல் ஸ்லோகத்திலே விசதமாம் —

யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திரசர ரசநா தார தம்ய முராரே -பட்டர்

நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத
ஈசேஸிதவ்ய வைஷம்ய நிம்நோந்நத மிதம் ஜகத் -பட்டர்

ஸ்ரீ யை ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸநம் ஹரே
அங்கீ காரிபிரா லோகைஸ் சார்த்த யந்த்யை க்ருத அஞ்சலி -பட்டர்

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீ ரெங்க ஹர்ம்ய தல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம –பட்டர்

ஜகத் காரணத்தில் இவளுக்கு அந்வயம் உண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான்
இவ்வர்த்தத்தில் ஸந்தேஹம் யுண்டோ –
ஆவாப்யாம் கர்மாணி கார்த்தவ்யாநி பிரஜாஸ் ச உத்பாத யி தவ்யா-என்று
நம் இருவராலும் கர்மங்கள் செய்யப்பட வேண்டும் – குழந்தைகளும் பிறப்பிக்கப் பட வேண்டும் – என்று பிரமாணம் சொல்லுகையாலே
ஸஹ தர்ம சரியான இவளுக்கு அந்வயம் உண்டு என்று அருளிச் செய்தார் – என்கிற ஐதிக்யம் இங்கு அனுசந்திக்கத் தக்கது –

——————————————————————————————————-

உத்பன்னமான பின்பு இவரதோ தம் காரியத்துக்கு கடவராய் இருக்கிறது -என்கிறது -களை பிடுங்கும்படி –

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

(ஸ்ருஷ்டித்து -ததேவா அநு பிரவேசித்து கூடவே இருந்து உடன் இருந்து உடனுக்கு உடன் ரஷித்த இடங்களில் சிலவற்றைக் காட்டுகிறார்
தோள்கள் வியாபாரங்கள் – -ஸூந்த்தர தோளுடையான் )

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவை யென்றால்]
சூழ் அரவம் பொங்கு அணையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாக வுடையனான ஸர்வேச்வரனது திருத் தோள்களேயாம்.

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து-ஓன்று என்னலாம் படி நிர் விவரமாய் இருந்த மருதினிடை போய்
தர்ச நீயமான குருந்தத்தைச் சாய்த்தும்
மண மருவ மால் விடை யேழ்   செற்று–நப்பின்னை பிராட்டி யுடைய பாணி க்ரஹண மங்களமானது தலைக் கட்டும் படிக்கு
ஈடாக பெரிய எருதுகள் ஏழையும் செற்று
கணம் வெருவ–சங்கைஸ் ஸூராணாம்–என்கிறபடியே அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி யற இது என்னாகப் புகுகிறதோ
-என்று வெருவும் படிக்கு ஈடாக
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
—–ஏழு உலகையும் அநாயாசேன கடந்தனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனாவும் –
சூழரவப் பொன்கணையான் தோள் -பரந்து மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைத்தாய் (மெத்தென்ன பஞ்ச சயனம் )இருந்துள்ள திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவன் –

ஆஸ்ரித விரோதி நிரசன களை பிடுங்கிய படி

பூங்குருந்தும் -பூவைக் காட்டி அந்நிய பரதை பண்ணி வஞ்சிக்கப் பார்க்கை – மணம் இத்யாதி -தனக்கு வந்த கர்மத்தைத் தீர்த்த படி(நமது கர்மங்கள் போல் ஏழு ரிஷபங்கள் )
ஏழு உலகு இத்யாதி -பிராட்டிக்கு செய்யும் செயலை இந்த்ரனுக்குச் செய்கை – எண்டிசையும் போயின -திக்குகளை வெளியடக்கை(த்ரிவித பரிச்சேத ரஹிதன் -ரூபத்தாலேயும் -ஸ்வரூபத்தாலும் மட்டும் அன்றிக்கே )
சூழ் அரவு இத்யாதி -இப்படி படுக்கையிலே கண் வளரப் பெறாதே-அலமந்து திரிவதே
பாண்டரஸ் யாத பத் ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா–சிம்ஹாசனத்தில் இருக்க அவசரம் பெற்றிலன்-
-இக் காலத்தில் இறே நிழலிலே முத்துக் குடை இடுவது(கிழவனே ஓடு -அப்பனுக்குத் தப்பாத பிள்ளை -உட்கார நேரம் இல்லாமல் ஓடி -ரக்ஷணம் செய்தார்களே -)

மொய்ம் மாய மருதான அசுரரைப் பொன்று வித்து -பெரியாழ்வார் 3-1-3- அஸூர ஆவேசமும் உண்டே

சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ் தைஸ்
ததா மனுஷ்யைர் ககநே ச கேசரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா
மமாம்ஸ் து மங்கள்ய விருத்தயே ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

————————————————————-

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

இடைவெளி யறப் பொருந்தி நின்ற யாமளார்ஜூநங்கள் நடுவே ஊடறுத்துக் கொண்டு தவழ்ந்து போய் –இலையும் கொம்பும்
தெரியாத படி பூத்துக் கிடந்த குருந்தத்தை தள்ளிப் பொகட்டு –பிராட்டியைக் கைப் பிடிக்கை யாகிற கல்யாணம்
தலைக் கட்டுகைக்காகப் பெரிய வடிவை யுடைய ருஷபங்கள் ஏழையும் முடித்து -சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அனுகூல பிரதிகூல விபாகம் அற சர்வ பிராணி கணமும் என்னாகத் தேடுகிறதோ என்று நடுங்கும் படி சப்த லோகங்களையும்
வருத்தம் அற அளந்து கொண்டனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனவும் -விஸ்திருதனாய்-
மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் ஆகிற ஓங்கிய திருப் படுக்கையிலே கண் வளர்ந்து
அருளின சர்வேஸ்வரனுடைய திருத் தோள்கள் கிடீர் -அந்த படுக்கையும் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களை செய்தான் -அப் படுக்கையில் கண் வளர பெறாமல் இப்படி அலமந்து திரிவதே என்று வயிறு பிடிக்கிறார் –

—————————————————————————————————————-

இப்படி அவன் ஸூலபன் என்று அறிந்து அனுசந்தித்த பின்பு என்னுடைய இந்திரியங்கள் அவனை அல்லது அறிகிறது இல்லை –

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆய்த்து-
நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என் செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன் மொழியே–இனிய பேச்சுக்களையே(அவனைப் பற்றிய அருளிச் செயல்களும் -அவனது இனிய சொற்களும் -என்றபடி )
கேட்டு இருக்கும்–கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;(கேட்டபடியாலே சத்தை )
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள்தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக் கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சம்சாரிகள் விரும்பும் சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்பு வாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

தோளவனை யல்லால் தொழா –நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும் என் தோளானது அவனை அல்லது தொழுகிறது இல்லை –
என் செவி யிரண்டும்-கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –என் செவிகள் உறவானவனுடைய இனிய மொழியைக் கேட்டிரா நின்றது
நா நாளும்-என்னுடைய நாக்கானது எப்போதும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே–கோள்-என்று ஒளிக்கும்-மிடுக்குக்கும் பேர்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைக தாமநி-என்னும் படியே அனந்த சாயியான சர்வேஸ்வரனையே கூறும் அத்தனை
நாணாமை நள்ளேன் நயம்  —–(லௌகீகர்கள் )ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –
ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் –

அவன் ரக்ஷகனாகவுமாம் தவிரவுமாம் –
அவன் தான் தனக்குப் பகை என்னலாம் படி இருந்தாலும் என் செவி தானும் கேட்பது (புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருப்பேனே )-ஆசைப்படும் விஷயங்கள் –
நாணாமை நள்ளேன்-ஆண் பிள்ளை சோற்றான்வியை ஆசைப் பட்டவனைப் போலே உணர்ந்தவனுக்கு லஜ்ஜிக்க வேணும்
கோள் -பிராட்டிக்கும் தனக்கும் கிடைக்கைக்கு யுண்டாகை-

(கேள் அவனது –மாதா பிதா பிராதா நாராயண–ஸூபால உபநிஷத் -கேள் உறவினர் -இன்ன உறவு என்று விசேஷியாமையாலே ஸர்வ வித பந்துவும் அவனே –

இன் மொழியே -ஸம் ஸ்ரவே மதுரம் வாக்யம்

கோள் நாகணை –கோள் -பலம் -அமிதவ் ஜா பர்யங்க-கௌஷீதகி –
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைக தாமநி -ஸ்தோத்ர ரத்னம்

நயம் நாணாமை நள்ளேன் -நயம் -பிறரால் விரும்பப்படும் விஷயாந்தரங்கள் -இவற்றை லஜ்ஜை இல்லாமல் அணுக மாட்டேன்
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு வெட்கத்தோடே மீள வேண்டும்படி அன்றோ பிராக்ருத விஷயங்களின் தீமை -)

———————————————————————-

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆய்த்து-
நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

என்னுடைய தோள்களானவை நான் வேறு சிலரைத் தொழு என்னிலும் அந்த சர்வேஸ்வரனை அல்லது தொழுகிறனவில்லை —
என்னுடைய செவிகள் இரண்டையும் நிருபாதிக பந்துவான அவனுடைய ஸம்ஸரவே மதுரம் -ஆன பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் –நாவானது -சர்வ காலமும் மிடுக்கை யுடைய திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய
சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை யுடைத்தான -திருவடிகளையே சொல்லா நிற்கும் –
நாட்டார் விரும்பி மேல் விழுகிற விஷயங்களை அவர்களில் வியாவ்ருத்தனான நான் நிர்லஜ்ஜனாய்க் கொண்டு செறியேன்-
ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும் படி காணும் விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு இருப்பது –

(எம்பெருமானே இந்திர வேஷம் போட்டு வந்தாலும் அம்பரீஷன் பார்க்க மாட்டானே)

———————————————————————————————————

பிராப்தத்தைச் செய்து அபிராப்தத்தைச் செய்யேன் என்று இருக்கிற என் பக்கல் பாபத்துக்கு வரப் போமோ -என்கிறார் –

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி
ப்ராவண்யம் உரைத்தாலும் துர் வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன –
நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஆத்மா அபஹாரம் பண்ணும் ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உயவேன்–கால க்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது–ஸ்ரீ யபதியான எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வரமாட்டாது]

நயவேன் பிறர் பொருளை -பிறர் பொருளை ஆசைப்படேன் –த்ரவ்யத்துக்கு உத்கர்ஷமாவது-த்ரவ்யம் தன்னுடைய
நன்மையாலும் -உடையவனுடைய நன்மையாலும் —
த்ரவ்யம் பரிணாமியான அசித் அன்றிக்கே ஆத்ம த்ரவ்யமாய் இருந்தது -யஸ் யாத்மா சரீரம் –பதிம் விஸ்வஸ்ய
ஆத்மேஸ்வரீம் –என்று ஓதப்படுகிறவன் உடையவன் —
உத்க்ருஷ்டமான ஆத்மாவை -என்னது -என்று இரேன் -(அந்யதா பிரதிபத்யே –சோரேண -பாரதம் )

நள்ளேன் கீழரோடு–ஆத்மாவை என்னது என்று இருக்குமவர்களோடு -இவர்களே கீழார் ஆகிறார் -அவர்களோடு கிட்டேன்
-தங்கள் படி ஆக்கிக் கொள்வர் என்று

உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் -உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்

வியவேன்-திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்–ஸ்ரீ யபதி யைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் -(வியத்தல் விஸ்மயத்தல் )
அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஸ்துதியேன் – வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்
(பரன் திறம் அன்றி மற்று வேறே தெய்வம் இல்லையே -பிரகாரமாக நாட்டினான் தெய்வம் எங்கும் )

வருமாறு என் என் மேல் வினை  —-அவசியம் அநு போக்தவ்யம்– என்கிற வசனத்தைக் கொண்டு என் பக்கலிலே வரப் போமோ பாபத்துக்கு -என்கிறார் –

(கீழ் விஷய அனுபவம் வாராது
ஆகவே இங்கு பாபம் என்று தத் கார்யமான விஷய அனுபவங்கள்)

க்ருதக்ருத்யன் என்கிறார் –எம்பெருமான் விரும்பும் ஆத்மாவை அபஹரியேன் -ராவணன் செயலைச் செய்யேன்
கீழார் அவனுக்கு கூட்டுப்படும் மாரீச பிரப்ரு த்திகள்- உயர்ந்தவர் விஸ்வாமித்திராதிகள் -மஹா தமாநஸ் து –
பெரியோர் -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய-ப்ரஹ்மாதிகளைக் கண்டால் அடுப்படைக் கல்லாக நினைத்து இருக்கும் அத்தனை –
திரு மாலை யல்லது வியவேன் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  –அவசியம் அநு போக்தவ்யம்–என்கிறவை என்னை நலியவோ –

(யோ அந்யதா சந்த மாத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா –ராவணனை ஒத்ததொரு திருட்டு அன்றோ இது –

உத்தம புருஷஸ் த்வ அந்நிய -என்பதால் பரமபுருஷனை பிறர் என்னலாமே –
ஸ்ரீ கௌஸ்துபம் போல் இனிய வஸ்து அன்றோ -)

————————————————————————-

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி
ப்ராவண்யம் உரைத்தாலும் துர்வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன –
நான் நின்ற நிலை இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

உத்தம புருஷஸ் த்வந்ய–(கீதை -15)என்கிறபடியே சர்வ விசஜாதியனான சர்வேஸ்வரனுடைய ஆத்ம த்ரவ்யத்தை என்னது என்று விரும்பேன் –

(புருஷோத்தமன் -வியாபித்து -தாங்கி -ஸ்வாமித்வம் -மூன்றாலும் –மற்றவை சொத்துக்கள் -ஆளப் படுபவை- தாங்கப்படுபவை இந்த ஸ்லோகம் அடியாகவே ஆளவந்தார்)
பிறரதான ஆத்மாவை என்னது என்று இருக்கும் தாழ்ந்த சம்சாரிகளோடு செறியேன் -உத்துங்கமான ஆத்ம வஸ்து
சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –
சர்வாதிகனான ஸ்ரீ யபதியை ஒழிய புறம்பே சிலரை ஆஸ்ரயணீய தேவதைகள் என்று புத்தி பண்ணி வாய் விட்டுப் புகழேன்
இவ்வாகாரங்கள் நமக்கு உண்டாயத்தே என்று ஆச்சர்யப் பட்டேன் -இப்படியான பின்பு பகவத் அனுக்ரஹ பாத்ரரான நம்முடைய
மேல் தன் நிக்ரஹ ரூபமான பாபம் வந்து மேலிடும் படி எங்கனே –(அனுக்ரஹம் புண்யம் -நிக்ரஹம் தானே பாபம் )திருமாலை அல்லது வியவேன்–
அவனை அல்லது தைவம் அன்று ஏத்தேன்–என்னவுமாம் –

—————————————————————————————————————

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

வினையால் அடர்ப்படார் வெந் நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்-பேர் ஆயிரம் கொண்ட பீடுடையான் -நாமம் ஸஹஸ்ரவான் –
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால் (ஆல் -துர்லபம் )
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

(தென் புலத்தார்க்கும் என்றும் கடவுடையேன் அல்லேன் -அமுதனார்)

வினையால் அடர்ப்படார் -பாபத்தால் அடர்க்கப் படார்
வெந்நரகில் சேரார்-பாப பலமான நரகில் சேரார்
தினையேனும் தீக் கதிக் கண் செல்லார் -தர்ம புத்ரன் நன்றாக தர்சனம் பண்ணினவோ பாதியும் கூடாது இவர்களுக்கு
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே அறியப் போகாதவனை
சேயானை -அதுக்கு அடி தூரஸ்தனாகை(விஷய விலக்ஷணம் )
ஆயிரம் பேர்ச் செங்கட்-கரியானைக் கை தொழுதக்கால்   ——தான் கொடுத்த அறிவை யுடையார்களுக்கு
ஏத்துகைக்கு ஆயிரம் திரு நாமத்தையும் -கண்டு அனுபவிக்கைக்கு ஸ்ரமஹரமான வடிவையும் யுடையவனை அஞ்சலி பண்ணினால்
வினையால் அடர்ப்படார்-என்னைப் போல் விதேய கரணம் இன்றியே பாவனம் என்று ஆஸ்ரயித்ததற்கு பாபம் போம்(கைங்கர்யம் என்று ஆஸ்ரயிக்கும் கோடியில் இவர் )
வினை -இங்கு அனுபவிக்கும் பாப பலம் அனுபவியார் -வெந்நரகு போய் அனுபவிக்கும் பாப பலம்
தினை -அஸத்யாபவத்தாலே(தர்மபுத்ரன் நன்றாக தர்சனம் செய்ய வேண்டிற்றே )
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே நினைப்பதற்கு அரியானை -சேயானை -இவன் குற்றம் அன்று -வஸ்து ஸ்வ பாவம்

ஆயிரம் இத்யாதி -தானே காட்டுவார்க்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகை
கை தொழுதக்கால் -பாலைக் குடிக்க நோய் போம் -வகுத்தது செய்ய அமையும் –

(யாரும் ஒர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-)

——————————————————————–

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

ஸ்வ யத்னத்தாலே அளவிட்டு நினைக்கைக்கு மிகவும் அரியனாய் மநோ ரத பதத்துக்கு மிகவும் எட்டாத படி அதி தூரஸ்த-தன்னாய்
தன் அருளாலே அறிந்து அனுபவிக்க இழிந்தார்க்கு இழிந்த இடம் எங்கும் துறையும் படி குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை யுடையனாய் வாத்சல்ய ஸூ சகமாய்ச் சிவந்த திருக் கண்களையும் –
அதுக்குப் பகைத் தொடையான கறுத்த வடிவையும் யுடையனான சர்வேஸ்வரனை அஞ்சலி பிரணாமாதி அனுவர்த்தனங்களைப் பண்ணி
ஆஸ்ரயித்தால் புண்ய பாப ரூப கர்மங்களாலே நெருக்குப் படார் -அதுக்கு பலமாக வரக் கடவதாய் அதி குரூரமான
சம்சாரம் ஆகிற நரகத்திலே சென்று கிட்டார் –ஏக தேசமும் துர்மார்க்கங்களிலே போகார்-

———————————————————————————————————————————

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்-உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்-கற்க வேண்டிய முறை அறிந்து -ஆச்சார்ய கைங்கர்யம் பண்ணி –
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவை யென்றால்)
வேலைக் கண் ஓர் ஆழியான்–திருப் பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ஸ்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவை யென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

உலகம் -உயர்ந்தோரான முமுஷுக்கள் –

காலை எழுந்து உலகம் கற்பனவும் –ஸத்வ உத்தரமான காலையில் எழுந்து இருந்து -மோக்ஷ இச்சை யுடையவர்கள் –கற்பனவும் –
கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்
வேலைக் கண்–ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்–இவற்றினுடைய ரக்ஷணத்துக்காக திருப் பாற் கடலிலே
கையும் திருவாழியுமாய்க் கிடக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளையே –
பேராழி கொண்டான் பெயர் —-சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களையே இவர்களுடைய ஸ்ரவணத்துக்கும் ஆனந்தத்துக்கும் விஷயமாவது –

காலை -சர்வ உத்தரமான காலம் -வேலைக் கண் ஓர் ஆழியான் அடியே – கரையை யுடைத்தாய் –ஒப்பில்லாத கடல் –
பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்-

(காலை எழுந்து உலகம் கற்பனவும் -உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே
காலை -ஆயுளுக்கு ஆரம்ப நிலை யான இளமை
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் –திருவாய் -2-10-1-

வேலைக்கண் ஓர் ஆழியான் அடியே -வேலை -கரை -கண் -இடம்
திருப்பாற் கடலிலே ஒப்பற்ற திரு வாழியை ஏந்தி நிற்பவன் இணை அடிகள்
ஓர் ஆழி -சக்ரதாரி என்று கொண்டு -பேராழி கொண்டான் -பெரிய கடல் போலே கண்டார் களைப்பை ஆற்றும் வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்று பொருள் கொள்வது -)

——————————————————————–

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

கிளர் ஒளி இளமை (2-10-1 )-என்கிறபடியே பஜன அனுரூபமான கரண பாடவமுள்ள பால்ய அவஸ்தையில் ஆஸ்ரயண
உன்முகராய்க் கொண்டு கிளர்ந்து லோகம் அடங்க அப்யசிக்குமவையும்-ஞாதவ்யர்த்தங்களை(அர்த்த பஞ்சக )ஓர் ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு
அவற்றை அலகலகாக அறிந்து இருப்பார்களாய் -அத்தாலே வந்த மிக்க உயர்த்தியை யுடையரான பரம வைதிகர் அடங்கலும்
அறிவின் பலமாக சாஷாத் கரிக்க ஆசைப் படுவனவும் -கரையோடே கூடி இடமுடைத்தாய் -அத்விதீயமான கடலிலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளே –

அதுக்கு சாதனமாக ஸ்ரவணம் பண்ணுவதும் மனனம் பண்ணுவதும்
ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்கள்

பேர் ஆழி கொண்டான் -பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்னவுமாம் –
அப்போது ஓர் ஆழியான் என்றது அத்விதீயமான திரு வாழியை யுடையவன் என்று கொள்வது –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாஸனம் -தர்சனம் -நான்கையும் இங்கு தமிழ் படுத்தி அருளிச் செய்கிறார் -)

—————————————————————————————————————

மோக்ஷ இச்சை யுடையவர்களுக்கும் அறிவு தலை நின்றவர்களுக்கும் அவனுடைய திருவடிகளை ஏத்துவது-
அவனுடைய திரு நாமங்களையே ஏத்துவது என்று (கீழே )சொல்லிற்று -ஞானத்துக்கு அவனே விஷயம் ஆகையால் என்கிறது (இப் பாட்டில்)-

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–அலை எறிகிற  பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–(அவைஷ்ணவர்களுடைய)பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு –ஆறானது பூர்ணமாய் சலியா நின்ற கடலையே நோக்கா நின்றது
ஆறு கடலை நிறைக்கைக்கு அன்று புகுகிறது -புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமை
ஒண் பூ -உயரும் கதிரவன் நோக்கும்–தாமரைப் பூவானது தூரஸ்தன் ஆகிலும் ஆதித்யனுக்கு அலரும் அத்தனை -அக்னி யாதிகளுக்கு அலராது
உயிரும் -தருமனையே நோக்கும் –யமனைக் கிட்டி யல்லது வேறு ஓர் இடத்திலே புக ஒண்ணாது
ஒண் தாமரையாள் கேள்வன் -ஒருவனையே நோக்கும் உணர்வு –ஞானம் ஆகில் ஸ்ரீ யப்பதியை அறியும் அத்தனை
மற்று ஒன்றை அறியாது –தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்னும் படியே

(செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி -5-6-
ஞானம் -அறிவு திரு வில்லாத தேவரை நோக்காதே –

ஸம் ஞாயதே யேந தத ஸ்த தோஷம்
ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
சந்த்ருஸ்யதே வா அப்யதி கம்யதே வா
தத் ஞானம் அஞ்ஞானம் அதன்யதுக்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-

(நிர்மலமாய் தோஷம் இல்லாததாய் -உயர்ந்த- ஏக ரூபமாய் -அறிவதுக்கும் காண்பதுக்கும் அடைவதற்கும் -ஞான தரிசன பிராப்தி -பர ப்ரஹ்மம் )

தத் கர்ம யன்ன பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே
ஆயாஸா யாபரம் கர்ம வித்யா அந்யா ஸில்ப நை புணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-41-)

————————————————————————-

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

காற்று வளத்திலே கொந்தளித்துக் கிளரக் கடவதாய் -பரப்பை யுடைத்தான கடலை ஆறானது நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது உச்ச ஸ்தல வர்த்தியான ஆதித்யனையே நோக்கா நிற்கும்
பகவத் பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் சரீர விஸ்லேஷ அனந்தரத்திலே தர்ம ராஜாவான யமனையே சென்று கிட்டா நிற்கும்
இவை இவை நியதமானால் போலே ஞானமானது அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய
பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான சர்வேஸ்வரன் ஒருவனையேயுமே சென்று பற்றா நிற்கும்
ஞானம் ஆகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது என்கை -பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம்
எல்லாம் அஸத் கல்பம் -தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இறே-

—————————————————————————————————————–

கீழ் ஞானத்துக்கு விஷயம் அவன் என்றது -உணர அரிது -என்கிறது இப் பாட்டில் –

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–பரத்வமும் ஸுலப்யமும் பொருந்தி நின்ற திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர்–அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

உணர்வாரார் உன் பெருமை -ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்யமீஸம்-என்கிறபடியே குணங்களோடு கூடி இருக்கிற
உன்னை உணர்வார் யார் என்கிறது -(ஜூஷ்டம்-அபரிமிதமான குணங்கள் சேஷ்டிதங்கள் விபவங்கள் திவ்ய மங்கள விக்ரஹங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் )
ஊழி தோறு ஊழி-உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்–காலத்தை எல்லாம் ஒரு போகியாக்கி -உன்னுடைய
ஸ்வரூப ரூப குணங்களை உணரப் புக்கால் உணர அரிது என்கிறது
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் –ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த நீ அவதார ரூபேண பூமியிலே வந்து அவதரித்து
அத்தாலே ஸுலப்யத்தை யுடையவனே -கடல் கிட்டிற்று என்னா பரிச்சேதிக்கப் போகாது இறே –
வேங்கடத்தாய் –சம்சாரிகளுடைய சகல துரிதங்களும் போம்படி திருமலையிலே வந்து நிற்கிறவனே(அவதார ஸுலப்யமே பரத்வம் என்னலாம் படி எளியவனாய் )
நால்  வேதப்-பண்ணகத்தாய் –ஸ்வரத்துக்கு உள்ளீடாய் நின்று ப்ரதிபாதிக்கிற வேதங்களுக்கு பிரவர்த்தகன் ஆனவனே
நீ கிடந்த பால் ——நீ கிடந்த பால் உணர்வார் யார் -(வேதம் அறிந்தேன் அஹம் -வேத புருஷனான நான் -மஹாந்தம் -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று அறிந்தேன் )
உன்னாலும் அறிய ஒண்ணாது உன் ஐஸ்வர்யம் – காலம் எல்லாம் கூடினாலும் ஸுலப்யம் அறிய ஒண்ணாது –
விண்ணகம் அவதாரம் இவை என்கை —

விண்ணகத்தானாய் பாற் கடலானனாய் மண்ணகத்தானாய் வேங்கடத்தானாய் நின்றான்
நால் வேதப் பண்ணாகம் –ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கிறது கண்ணுக்கு விஷயம் இறே –
மற்றையது இங்கு சொல்லிற்று அனுவாதம் காண்கையாலே–தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம்–அவனுடைய பிறப்பு –
உயர்வற உயர் நலம் உடையவன் பிறப்பு இறே –தீரா –தீ மதாம் அக்ரேஸரா –மயர்வற மதி நலம் பெற்றார்
பரிஜாநந்தி –க்ஷணம் தோறும் எத்திறம் என்பர் –

(தஸ்ய தீரா பரிஜாநந்தி -நன்கு அறிகிறார்கள் -அறிய முடியாது என்று –
பத்துடை அடியவர்களுக்கு எளியவன் பிறருக்கு அறிய வித்தகன் -எத்திறம் என்று மோகிக்கும் படி -என்பதையே பாரிஜாநந்தி என்று உபநிஷத்

(யானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தி –ஏத்த ஏத்த என் செய்தோம் -ஆழ்வார்)

யோ அஸ்யாத் யஷ பரமே வ்யோமன் -ஸோ அங்க வேத யதி வா ந வேத -தனக்கும் தன் தன்மை அறிய அரியவன் அன்றோ
தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -க்ஷணம் தோறும் எத்திறம் என்னும்படி அன்றோ –
யஸ்யா மதம் தஸ்ய மதம்
உனது ஸ்வரூப குணங்களை உணர்வது ஒருபுறம் இருக்கட்டும் -உனது விபூதிக் கடலிலே ஒரு துளியாய் வருந்தினார் கூப்பீடு கேட்க கண் வளரும் இடமான திருப்பாற் கடல் ஒன்றையேனும் அளவிட்டு அறிவார் உண்டோ)

——————————————————————-

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

பரம பதத்திலே மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்குமவனாய் -பூமி உபலஷிதையான லீலா விபூதியில் நீர்மை தோற்ற வந்து
அவதரிக்கும் ஸ்வபாவனாய் -இரண்டு இடத்துக்கும் பொதுவாய்க் கொண்டு மேன்மை நீர்மைகள் இரண்டும் கரை புரளும் படி
திருமலையிலே வந்து நின்று அருளினவனாய் -ஸ்வர பிரதானமான நாலு வேதத்தாலும் யுக்த வைபவ யுக்தனாய்(சாம வேதத்துக்கு கானம் பிரதானம் -ஸ்வரம் அனைத்துக்கும் உண்டு )
ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனானவனே -இப்படி இருக்கிற உன்னுடைய குண வைஷண்யத்தாலே வந்த பெருமையை
கால தத்வம் எல்லாம் கூடினாலும் அறிய வல்லார் யார் –

அந்த குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கிற உன்னுடைய
திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை தான் அறிய வல்லார் யார்

நீ ஆர்த்த ரக்ஷணத்துக்காக பள்ளி கொண்டு அருளுகிற திருப் பாற் கடலை அறிய வல்லார் யார் –

—————————————————————————————————————

எல்லாம் (ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் )ஒழிய ஒரோ ஒன்றை அரிய போமோ -என்கிறது(தனக்கும் தன் தன்மை அறியாததும் உதாரணம் )

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் —

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உரு ஆய்–நீ சிறு குழந்தை வடிவு கொண்டு-பாலன் -ரக்ஷிக்க வேண்டிய பருவம்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்-உப லக்ஷணத்தால் அனைத்தையும்
உண்டு–திரு வயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தளிரின் மேல்
அன்று–பிரளய காலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(ஆப்த தமரான வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக் காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக் கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

பாலன்  றனதுருவாய் –ரக்ஷக அபேக்ஷமான வடிவை யுடையையாய்
யேழுலகுண்டு -வியாதிரிக்த சகல பதார்த்தங்களையும் ரக்ஷித்து
ஆலிலையின் மேல் -சர்வர்க்கும் ஆதாரமான சர்வ ரக்ஷகனுக்கு கண் வளரப் போகாத ஆலின் இலை மேலே
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் -அன்று வளர்ந்தத்தை ஆப்த தமரானவர்கள் மெய் என்பர்கள்-
வேத மரியாதை இல்லையாகில் ஸூன்யமாதல்–உண்டாகில் சத்யமாதலே யுள்ளது
ஆலன்று- வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —-ஏழு வயசிலே மலையைக் கீழ் மேலாக எடுத்த நீ அவற்றைச் சொல்ல வேணும் –
அன்று -திக்கு எல்லாம் அழிந்த அன்று –

வேலை இத்யாதி –
நீ கண் வளர்ந்த பாற் கடலில் உள்ளதோ –நிராலம்பமான ஆகாசத்தத்ததோ -கரைந்து போன பூமியிலதோ -சொல்ல வேணும்
பின்பு மழை எடுத்த ஆச்சர்யம் இதுக்கு சத்ருசமோ –இத்தால் அவன் தன் படியை அவன் தானே சொல்லுகையும் அரிது -என்றபடி –

பாலனுடைய ரூபத்தை யுடையையாய் -அப்ராக்ருதமான மஹத்தரமான திரு மேனியைச் சிறுக்கி சஜாதீயம் ஆக்குகை மெய் என்பர் ரிஷிகள்
எத்திறம் -என்ன -பொய் என்ன ஒண்ணாதே -மெய் -நீயே சர்வத்துக்கும் தாரகன் ஆனமையும் மெய் -இருந்த படி என்
சோலை இத்யாதி -ஏழு பிராயத்தில் பெரிய மலையை எடுத்த ஆச்சர்யமும் சொல்ல வேணும் –
இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார் –

(மெய் என்பர்
அப்ராக்ருதமான மகத்தான பெரிய திருமேனியை மிகச் சிறிய குழந்தையின் வடிவாக்குவது
அதற்க்கு உள்ளே எல்லா உலகங்களையும் அடக்குவது
அவ்வடிவைக் கொண்டு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்வது
அனைத்துமே உண்மை -என்று ஈடுபட்டு எத்திறம் என்பர்களே
மெய் -உனது திருமேனி அப்ராக்ருதம் என்பதும் மெய்
அத்தைப் பிராகிருத சஜாதீயம் ஆக்கினாய் என்பதும் மெய்
அது மிக மஹத்தானது என்பதும் மெய் -அத்தைச் சிறியது ஆக்கினாய் என்பதும் மெய்
அது ஸர்வ ஆதாரம் என்பதும் மெய் -அதற்கு ஒரு ஆலந்தளிரை ஆதாரம் ஆக்கினாய் என்பதும் மெய்
இது போன்ற அகடிகடநா ஸாமர்த்யங்கள் இருந்தபடி என்
சொல்லு -ஒவ்வொரு செயலும் உன்னால் சொல்ல முடியாதது அன்றோ)

———————————————————————-

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் –(தனக்கும் தன் தன்மை அறியான் )

ஒரு குறட்டைத் (கன்னத்தை)தெறித்தால் ஒரு குறட்டிலே பால் பெருகும் படி முக்த சிசுவான விக்கிரஹத்தை யுடைய வனாய்
சப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே அந்த பிரளய சமயத்திலே
சர்வ சக்தியான நீ கண் வளர்ந்து அருளின இத்தை பரமார்த்தம் என்று கொண்டு பரம ஆப்தரான ரிஷிகள் அடங்கலும் சொல்லா நின்றார்கள்
அந்த ஆலானது சர்வமும் அழிந்த அன்று வெள்ளம் கோத்துக் கிடக்கிற சமுத்திர ஜலத்தில் உள்ளதோ
அன்றிக்கே -நிராலம்பமான ஆகாசத்தில் உள்ளதோ –இல்லையாகில் பிரளய ஜலத்தில் கரைந்து போன பூமியிலே உள்ளதோ
ஏழு திரு நக்ஷத்திரலே ஏழு நாள் ஒருபடிப் பட சோலைகளாலே சூழப் பட்ட கோவர்த்தன பர்வதத்தை எடுத்துத்
தரித்துக் கொண்டு நின்றவனே -இத்தை அருளிச் செய்ய வேணும் -உன்னாலும் உன் படி சொல்ல முடியாது என்று கருத்து –

——————————————————————————————————————

இப்படி அபரிச்சின்ன சக்தியான பின்பு அவனை எல்லோரும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

சொல்லும் தனையும் தொழுமின் –நாக்கு சொல்லப் பாங்கான போது எல்லாம் சொல்லி ஆஸ்ரயிங்கோள்
விழுமுடம்பு செல்லும் தனையும் -உடம்பு பாங்கான போது எல்லாம் ஆஸ்ரயிங்கோள்
திருமாலை– பாங்கான போது ஆஸ்ரயிக்க -யாவதாத்மபாவி ஆஸ்ரயித்தானாகக் கொள்ளும் பித்தனைச் சொல்லுகிறது –
நல்லிதழ்த்-தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்–நல்ல செவ்விப் பூவை யுடைய மாலையால் –
செவ்வி மாலை கிடையாதாகில் கர்தவ்யமான கர்மத்தால் —

(மாலை கிடைக்கா விடில் யஜ்ஞம் -அது அவ்வளவு உசந்தது பெரியாழ்வார் -ஆண்டாள் -துளஸீ ப்ருத்யர் -மாலா காரர் -சிந்து பூ மகிழும் திருவேங்கடம் )

அது கிடையாதாகில் அதுக்கு அடியான தந்திரத்தால் –
அது அடையப் போகாதாகில் மந்த்ரத்தைக் கொண்டு செய்வது –
க்ரியா ரூபமான தந்திரம் அரிதாளில் வாக் வ்ருத்தியான மந்திரத்தால் செய்வது –

(தந்திரம் மந்த்ரத்திலும் ஸ்ரேஷிடம் -நம்பூதிரிகள் கேரளா)

மந்திரத்துக்கு தேச கால நியதியும் அதிகாரி நியதியும் வேணும் என்று இருந்திகோள் ஆகில்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–திரு நாமத்தால் ஏத்துவது -தாய் பேர் சொல்ல குளித்து வர வேண்டா இறே –
திருமாலே -நியதி உண்டு என்னில் அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –

(பட்டர் நஞ்சீயர் ஸம்வாதம் -மனு பகவான் கங்கை நீராடக் போகிறவன் குளித்துப் போக வேண்டுமோ)

———————————————————————

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புருஷகார பூதையான பிராட்டியோடே நித்ய சம்யுக்தையான சர்வேஸ்வரனை –இப்போது விழும் இப்போது விழும் என்னும் படி
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும் அழகிய பூக்களால் யுண்டான திருமாலையாலும்
யாகாதி ஸத் கர்மங்களாலும்-மந்த்ர விதுரமான(மந்த்ரம் இல்லாத )கேவல கிரியைகளாலும் -க்ரியா விதுரமான மந்த்ரங்களாலும் ஆஸ்ரயிங்கோள் –
இதுக்கும் சக்தம் இன்றிக்கே இருக்கில் உங்கள் வாக்கு யுக்தி சாமர்த்தியத்தை உடைத்தாய் கொண்டு சொல்லும் அளவும்
குணாதிகளுக்கு வாசகமான (ஆதி -ரூபம் ஸ்வரூபம் சேஷ்டிதங்கள் )திரு நாமங்களாலே ஸ்ரீ யபதியைப் புகழ்வுதிகோள் ஆகில் அது மிகவும் நல்லது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி—பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

November 8, 2016

தம்முடைய திரு உள்ளத்தை (என்னுள்ளம்-என்னுள்ளமே )சம்போதித்து -நீர் விஷய காலுஷ்யத்தைத் தவிர்-அவன் ப்ரஸன்னனாம் -என்கிறார் –

(திருநாமம் எண் -கல்யாண குணங்களை அநுஸந்தி -திரு நாமங்களை எண்ணுவது -இரண்டும்)

இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

பதவுரை

என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திரு நாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலபமாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.

களியில்–கர்வத்தினால்-

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்-எளிது இன்றிக்கே இருந்துள்ள இரண்டு திருவடிகளையும் காண்பதற்கு –
எளிதாக என்னவுமாம் –

என் நெஞ்சே -என்று சம்போதிக்கிறார் –

தெளிய–விஷய காலுஷ்யத்தை தவிர – செவ்வே தெளிந்து ஒழியும் –அவன் நேரே ப்ரஸன்னனாம்(தெள்ளிய சிங்கப் பெருமாள் அன்றோ )
களியில் பொருந்தாவனைப் பொரலுற்று -செருக்காலே பொருந்தேன் என்று இருந்த ஹிரண்யனை —
அரியா-யிருந்தான்    திருநாமம் எண்–சிறு பிள்ளைக்காக உதவி ஹிரண்யனை முடித்தவனுடைய திரு நாமத்தை எண்ணு –

உள்ளமே நீ தெளியில் அவன் செவ்வே நம் திறத்து தெளிந்து ஒழியும் -பிரமாணம் என் -பிரஹலாதன் தெளிய
அவன் விஷயத்துத் தெளிந்து நின்று கார்யம் பார்த்த படி கண்டிலையோ–

பொரலுற்று யிருந்தான் –
பொருது சீற்றத்துக்கு இறை பொறாமல் சோம்பி இருந்தான் -வாக்காலே எண்ண ஒட்டாதவன் -பட்டபாடு அறிவுதி இறே-

(திரு நாமம் சொல்லு
திரு நாமம் சொல்லும் குணங்களை நினை
சொல்லாதவன் பட்ட பாடு அறியாயோ -மூன்று அர்த்தங்கள்)

—————————————————————–

(இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் -)

எனக்கு விதேயமான நெஞ்சே -காண வேணும் என்னும் அபி சந்தியை யுடையார்க்கு அதி ஸூலபமான
திரு வடிகள் இரண்டையும் கண்டு அனுபவிக்கைக்கு நீ
அழகிதாக விஷய காலுஷ்யம் அற்று நிர்மலமாக -அவன் -மேல் எழ அன்றிக்கே -திரு உள்ளத்தோடு செவ்விதாக நான்
முன்பு பண்ணின ப்ராதிகூல்ய பரம்பரைகளிலே அதி ப்ரசன்னனாய் விடும் –

(அவன் ஆழமாக நினைக்கிறார் என்றும் -நாமும் அறிந்தே செய்த பிழைகள் என்றுமாம்
திரு உள்ளம் என்பதால் அவனதே-வாத்சல்யம் -குற்றங்களையே குணமாகக் கொள்ளும் ஸ்வ பாவம் அன்றோ –
நாம் முன்பு செய்த பிழைகளை சந்தோஷித்து -குழந்தை பண்ணிய செயல்களைத் தாய் கண்டு மகிழுமா போல் செவ்விதாக அதி ப்ரசன்னனாகும்)

ந நமேயம் -என்று தன்னைக் கிட்டோம் என்று
இருந்த ஹிரண்யனை பொருது முடிக்கையில் ஒருப்பட்டு-அவன் வரத்துக்கு உள்ளடங்காத நரசிம்ஹ வேஷத்தை
யுடையனாய்க் கொண்டு பிரஹ்லாத விரோதியைக் கை தொட்டு அழித்த ஆஹ்லாதத்தாலே ஸூ பிரதிஷ்டனாய் இருந்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ரஸ்யத்தை யாலே
நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி அநுஸந்தி —

பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் விட்டுக் கொடான்-என்று கருத்து –

எளிதில் -எளிதில்லாத -ஸூ லபம் இல்லாத இரண்டு திருவடிகள் என்னுதல் –

என்னுள்ளம் -உள்ளமே என்று சம்புத்தி —

—————————————————————————————————————-

கீழ் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினவனுடைய திரு நாமத்தை எண்ணு
அவன் ப்ரசன்னனாம் என்றது -மற்றும் துர்மானிகளான தேவாதிகளும் அவனை
ஆஸ்ரயிக்கத் தக்க கரணங்களும் அதிகாரம் பெற்றது -என்கிறார் –

நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குப் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

பதவுரை

எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதச ஆதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்-முப்பத்து முக் கோடி தேவர்களுக்கு பிரதி நிதிகள் )
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–ஸ்துதி செய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக் கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்–அஷ்ட வஸூக்கள்–ஏகாதச ருத்ரர்கள் –துவாதச ஆதித்யர்கள் – அஸ்வினிகள் —
வண்ண மலரேந்தி -நாநா வர்ணமான புஷ்பங்களைக் கொண்டு
வைகலும் நண்ணி-ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்–புருஷ ஸூ க்தத்தால்–விச்சேதம் இன்றிக்கே
திரு மாலைக் கை தொழுவர் சென்று–ஸ்ரீ யபதியைச் சென்று ஆஸ்ரயிப்பார்கள் –
தத் உபரியபி பாதராயணஸ் சம்பவாத் -(ப்ரஹ்ம ஸூத்ரம் )-தேவர்களுக்கும் பவிஷ்யத்தில் பெற இருந்துள்ள அதிகார அர்த்தமாக
ஆதித்ய அந்தர்யாமியாய் இருந்துள்ள பரமாத்ம உபாசனம் விதியா நின்றது இறே –

(சம்பவாத்-அர்த்தித்வ சாமர்த்தியம் நம்மைப் போல் அவர்களுக்கும் உண்டே -நித்யருக்கு இல்லையே -அர்த்திக்கை வேண்டாமே அவர்களுக்கு -தேவதை ஆவதற்கு முன்பு -மோக்ஷம் அடைய பவிஷ்ய )
வியாபார யோக்யரான பிரயோஜனாந்தர பரர் ஒரு மாலையால் பரவி ஓவுகை அன்றிக்கே
எல்லாக் காலமும் -எப்போதும் என்றுமாம் –

திருமால் –வேண்டுவது எல்லாம் பெறுகைக்கு அடி —

(முப்பத்து மூன்று தேவர்களை சொன்னது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் உப லக்ஷணம்
ருத்ரேபி வஸூபி ஆதித்யை அஸ்விநோபா -ரிக்வேதம் 10 மண்டலம் 125 ஸூக்தம்
வேதேஷு பவ்ருக்ஷம் ஸூக்தம்
ஹ்ரீஷ் சதே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -புருஷ ஸூக்த மந்த்ரம் சொல்லி
ஈஸ்வரோஹம் என்ற துரபிமானத்தை விட்டு ஸ்ரீயப்பதியை சரண் புகுவார்கள்
தத் உபர்யபி பாதாரயண சம்பவாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-25-
மோக்ஷத்தில் செய்ய யோக்கியதையும் – விருப்பமும்- அர்த்தித்வமும் -மோக்ஷ சாதன அனுஷ்டான சாமர்த்தியமும் இவர்களுக்கும் உண்டே -)

————————————————————–

(நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குத் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் -)

அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் துவாதச ஆதித்யர்களும் அத்விதீயரான அஸ்வினிகள் இருவரும் –
நாநா வர்ணமான புஷ்பங்களை தரித்துக் கொண்டு -சர்வ காலங்களிலும் வந்து கிட்டி அத்விதீயமான
ஸ்ரீ புருஷ ஸூக்தாதி சந்தர்ப்பங்களைக் கொண்டு அடைவு கெடப் புகழ்ந்து எல்லாக் காலத்திலும் உச்சி வீடு விடாதே
அபிமதங்களைக் கடிப்பிக்கும் கடகையான பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிற
சர்வேஸ்வரனை துர்மானத்தை துறந்து சென்று கிட்டி ஆஸ்ரயிப்பார்கள் –

—————————————————————————————————————————–

(நித்யம் மந்த்ர புஷ்ப்பம் சமர்ப்பிக்கும் பொழுது அனுசந்திக்கிறோம்-யுகம் தோறும் –
சேஷி உகப்புக்கு கைங்கர்யம்
மிதுன சேஷி -உபாயத்துக்கும் கைங்கர்யத்துக்கும்
பவாம்ஸூ ஸஹ வைதேஹ்யா –அஹம் சர்வம் கரிஷ்யாமி-அநந்தம் பிரதமம் ரூபம் –கலவ் ராமானுஜர் -)

கீழே எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று-
இதில் தங்களை எல்லாம் அழிய அங்குத்தைக்கு உறுப்பாமவர்களைச் சொல்லுகிறது –

(ஆதி சேஷன் அனைவருக்கும் உப லக்ஷணம் -தாச ஸஹ ஆசனம் வேதாதாத்மா விஹஹேஸ்வரர் உண்டே )

ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக் கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

பதவுரை

திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பாம்பிணை யுடலிலே
(சயனிக்கும் போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

சென்றால் குடையாம்–கைங்கர்யம் ஸ்வ புத்த்ய அதீனம் அன்று என்கிறது –நான் குடையாய் நின்றேன்
நீ இங்கே வா -என்கை யன்றிக்கே-அவன் உலாவப் புக்கால் குடை அபேக்ஷிதம் ஆன போது குடையாகை –(அருளப்பாடு இட்டு கைங்கர்யம் இதனாலேயே )
யிருந்தால் சிங்காசனமாம்–இருக்கை திரு உள்ளமான போது திவ்ய சிம்ஹாசனமாம்
நின்றால் மரவடியாம் –நிற்கை திரு உள்ளமான போது மரவடியாம்
நீள் கடலுள் என்றும் புணையாம்-கண் வளர அபேக்ஷிதமான போது -கடலிலே எல்லா காலத்திலும் படுக்கையும் –
மணி விளக்காம் -ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்ற போது மங்கள தீபமாய் இருக்கும் -(அவனுக்கு கண்ணே வேண்டாமே -ஞான ரூபமான சங்கல்பத்தாலே காண்பார் -ஆகவே இப்படி வியாக்யானம் )
பூம் பட்டாம் -திருப் பரிவட்டம் அபேக்ஷிதமான போது அழகிய பட்டாம்(பவ்வ நீர் ஆடை கடல் ஆடை எப்போதும் உண்டே )
புல்கு-மணையாம் –தழுவு அணை அபேக்ஷிதமான போது தழு வணையாம் –
திருமாற் கரவு  —–ஸ்ரீ யபதிக்கு-கட்டிப் பொன் போலே எல்லா வடிவையும் ஆக்கிக் கொள்ளலாம் படி இருக்கிற படி -(ஆம் -ஆவார் என்றபடி-ஆபாஸ -ஸுபரி -50 வடிவு கொண்டால் போல் கைங்கர்யத்துக்கு )

சென்றால் -குடையானேன் செல் -என்று சேஷியை நியமியாதே- இருந்தால் -அபேக்ஷை உள்ள போது –
நின்றால் -நின்ற பின்பு – புணை–தெப்பம் – மணி விளக்கு -மங்கள தீபம் -பூம் பட்டு -பும்ஸத்வா வஹமான பரிவட்டம் –
புல்கும் அணை –பிராட்டிமார் ஊடினால் விசனம் மறப்பிக்க வற்றாகை–ஊடலுக்கு ஹேது ஆகவுமாம்( அணைய புல்க அதுவே ஊடலுக்கு ஹேதுவாகலாமே )–
திருமாற்கு –இளைய பெருமாளுக்கு அந்தரங்க சேவை (பாவம்ஸூ ஸஹ வைதேஹ்யாம் )-

அரவு –தான் ஒரு சேதனன் என்று கூச வேண்டாத படி
தன்னை அமைத்த படி -ராஜ நிவேசனங்களிலே கூனர் குறளரைப் போலே —

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 39 –

ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||–ஶ்லோகம் 40 –

கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

——————————————————————-

(ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக் கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் – )

பெரிய பிராட்டியாரோடே நித்ய சம்யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு -அவனும் அவளும் கூடக் கண்
அற்றுத் துகைத்துப் பரிமாறுகைக்கு யோக்யமான வடிவையுடைய திருவனந்த ஆழ்வான் –
உகப்புக்கு போக்குவீடாக அவன் உலாவி அருளப் புக்கால் மழை வெய்யில் படாத படி குடையாம்-
தன் இச்சையால் எழுந்து அருளி இருந்தால் திவ்ய சிம்ஹாசனமாம் -ஸ்வ இச்சையால் எழுந்து அருளி நின்றால் திருவடி நிலைகளாம்-
பரப்பை யுடைத்தான கடலிலே கண் வளர்ந்து அருளும் போதைக்கு -சர்வ காலத்திலும் திருப் பள்ளி மெத்தையாம்-
ஏதேனும் ஒன்றை விளக்கு இட்டுக் காண அபேக்ஷிதமான போது மங்கள தீபமாம் –
சாத்தி அருளத் திருப் பரியட்டம் அபேக்ஷிதமான சமயத்திலே பும்ஸத்வா வஹமான அழகிய திரு திருப் பரியட்டமாம் –
சாய்ந்து அருளின போதைக்குப் பிராட்டிமார் -சீறு பாறு -என்னும் படி தழுவணை யாம் —

—————————————————————————————————————-

(பத்து சேஷ்டிதங்கள் -முதலில் உள்ள பெயர் சொற்களுக்கு -பின்னால் வரும் வினைச் சொற்கள் சேர்த்து

நாக பர்யங்கம் கீழே
ஆகதோ மதுராம் புரிம்
எழுந்து போனால் செய்யும் சேஷ்டிதங்கள் இதில்
1-அரவம் -விட்டு
2-அடல் வேழம் -இறுத்து
3-ஆன் -மேய்த்து
4-குருந்தம்  -ஒசித்து
5-புள் வாய்-கீண்டு
6-குரவை கோத்து
7-குட -ஆடி
8-முலை -உண்டு
9-மற்  -அட்டு
10-குன்றம் -எடுத்த-ஸ்ரீ மத் பாகவத தசம கந்த விஷயங்களை எல்லாம் சுருக்கி நமக்காகவே அருளிச் செய்கிறார் )

ஆஸ்ரிதற்கு சில விரோதம் வந்து போக்க வேண்டில் -படுக்கையும் பொருந்தாமல் வந்து நிற்கும் என்கிறது -இப்பாட்டு நிரல் நிரை –

இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் –

அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம்  புள் வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

பதவுரை

செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்த மரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள் வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸ க்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)

காளியனை விட்டு -குவலயா பீடத்தின் கொம்பை முறித்து -ஆனை மேய்த்து -குருந்தம் ஓசித்து–புள் வாய் கீண்டு –
பகாஸூரனைக் கொன்று -குரவை கோத்து–குடமாடி –பேய் முலை யுண்டு –மல்லரை அட்டு –குன்று எடுத்த சர்வேஸ்வரன் –

எடுத்த இச் செயல்கள் எம்பெருமான் சேஷ விஷயத்தில் குறைந்து பரிமாறும் படி அவன் ஸ்வரூபம் —

( ஆதி சேஷன் நித்யர் இடம் பரிமாறும் அவன் சேஷ-நம் விஷயத்தில் -தன்னைக் குறைத்து -கைங்கர்யம் கொள்கிறான் என்றபடி )

செங்கண் அவன் ——-விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு-அட்டு எடுத்தவை-

அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம்  புள்வாய்- குரவை குட முலை மற்  குன்றம்-கரவின்றி-என்று அந்வயம் –

(இங்கு உள்ளார் திரு அனந்தாழ்வானைப் போல் அடிமை செய்வதற்காகவே அவன் கண்ணனாய் திரு அவதரித்து
தாழ நின்று பரிமாறினால் என்கிறார்)

——————————————————————————–

(இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் -)

(தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் அவனை )புண்டரீகாக்ஷனான அந்த சர்வேஸ்வரன் மறைக்கை இன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாம் படி

காளியன் ஆகிற சர்ப்பத்தை விட்டடித்து
யுத்துன்முகமான குவலயா பீடத்தை முறித்து விழ விட்டு -பசுக்களை குறைவற மேய்த்து – குருந்தத்தை இணுங்கிப் பொகட்டு
பகாஸூரனுடைய வாயைக் கிழித்து –இடைப் பெண்களோடு திருக் குரவை கோத்து –ஐஸ்வர்ய செருக்குக்குப் போக்கு விட்டுக் குடமெடுத்தாடி
நலிய வந்த பூதனை முலையை பிராண ஸஹிதமாக உண்டு –கம்சனை ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை முடித்து –
வர்ஷாபத்தை பரிஹரிக்கைக்காக கோவர்த்தன பர்வதத்தை எடுத்தது

முதலான இச் செயல்களானவை-இருந்த படி என் என்று வித்தராய் அனுபவிக்கிறார் –

இது நிரல் நிரை என்று தமிழர் சொல்லும் லக்ஷணம் –

——————————————————————————————————————

இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வரூபனான பின்பு அவனுடைய தமரை யம படன் ஆராய்வது எங்கனே என்கிறார் –

(அஜாமிள உபாக்யானம் உண்டே -பரிகரம் மது ஸூதன ப்ரபந்நாம் -அடியார்கள் எனக்கு பிரபுக்கள் -ஸ்ரீ விஷ்ணு புராணம்

ஆட் பட வேண்டாம் -அவர்கள் பெயரைத் தரித்தாலே போதும் )

அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் –

அவன் தமர் எவ் வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட் பட்டார் பேர் ——-55-

பதவுரை

அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ் வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேஸ்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப் பட்டு அறியார்–ஆராயப் பட்டு இருக்க அறிய மாட்டார்கள்

அவன் தமர் எவ் வினையராகிலும் -அவனுக்கு அனுகூலமான வர்கள் எது தொழிலார் ஆகில் என் -விஹிதத்தை செய்யில் என்
-நிஷித்தத்தை செய்யில் என்
எங்கோன்-அவன் தமரே என்று ஒழிவது அல்லால்–ப்ரபவதி சம்ய மனே மமாபி விஷ்ணு -என்னும் படியே —
நமன் தமரால்-ஆராயப் பட்டு அறியார் கண்டீர்–நமன் தமரால் ஆராயப் படாது ஒழிகிறார்

(1-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் -கர்ண மூலே காதிலே சொல்லி -ராஜாபத்னி மேல் ஆசை சொல்லித் தடுக்க அந்தரங்கமாகச் சொல்வது போல்
2- என்னை ஆட்சி செய்து நியமிக்கும் விஷ்ணு -தெற்கே யமதர்மராஜன் என்று -ஹரிக்கு வசப்பட்டவன் நான் -என்னை அடக்கி ஆள சமர்த்தன் விஷ்ணுவே

நமன் தமர் ஆராயாமல் இருக்க நாம் பார்க்கலாமா )

அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-இவர்கள் தாங்களோ என்னில் -அன்று -(அதுக்கும் மேலே உள்ள நிலை )

ஒரு பாகவதனுடைய பேரை ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

பேர் ஆராயில் குவலயா பீடம் தொடக்கமானவை பட்டது படும் -மது ஸூதன ப்ரபந்நான்-
எங்கோன்-அவன் தமரே–என் நாயகனாவான் அடியார் -எவ்வினையராகில் என் -என்று ஒழிவது அல்லால்-
அவர் புண்யம் பண்ணில் என் -பாபம் பண்ணில் என் -அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடுமது ஒழிய
த்யஜ பட தூர தரேண தாந் அபா பான் -(ஸ்ரீ விஷ்ணு ஸ்லோகம் இதுவும் )- அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் —
படுக்கை பாராட்டில் இறே ஆராய்வது -நன்று செய்தார் என்பர் போலும் -என்று பிராட்டிக்கும் அகப்படாத நிலம்
அல்லாத இடத்தே யமனோ ஆராயப் புகுகிறான் -அவனுடைய ஒரு பேரான சம்சாரி (யமனும் இவன் ஆள் தானே )பேரும் தீட்டி வாட்டான் –

(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவாநாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-

அஹம் அமர வரார்ச்சிதேந தாத்ரா சம இதி லோக ஹிதாஹிதே நியுக்த
ஹரி குரு வசகோ அஸ்மி ந ஸ்வ தந்த்ர ப்ரபவதி ஸம்ய மநே மாமாபி விஷ்ணு –3-7-15-

ஹிதம் அளிக்கவும் அஹிதம் போக்கவும் நியமிக்கப்பட்டுள்ளேன் -நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்

கமல நயன வாஸூ தேவ விஷ்ணு தரணிதர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரணம் இதீர யந்தி யே வை த்யஜ பட தூதரேண தான பாபாத் –3-7-33-

(ஒரு பாகவனுடைய பேரை அபாகவதன் தரித்தாலும் அவனுடைய பெயரையும் யமன் சபையில் வாசிக்க மாட்டான் -என்கிறார்)

—————————————————————

(அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க –ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் -)

அந்த சர்வேஸ்வரனுக்கு அனுகூலராய்ப் போரும் ஆஸ்ரிதர் ஆனவர்கள் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண ரூபமான
எந்த தொழிலை யுடையார் ஆனார்கள் ஆகிலும் -எங்களுக்கு ஸ்வாமியான அந்த சர்வேஸ்வரனை
ஆஸ்ரயித்த மஹா புருஷர்கள் இறே என்று அவர்களைக் கொண்டாடி தங்களைக் கொண்டு கடக்கப் போம் அத்தனை ஒழிய
திரு அரவு அணையில் வர்த்திக்கக் கடவனாய் -இடைத் தனத்தில் தனக்கு ஓத்தார் இல்லை என்னும் படி
அதில் பிரதானனான கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

———————————

பேராயர்க்கு ஆட் படுகையாவது-அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது
இவன் அவனைப் (சம்சாரி சேதனன் பரம சேதனனை )பரிச்சேதித்து அறிகை யாவது என் -என்கிறது –

(அயன் -நா ஜாயதே -கர்ப்பத்தில் பிறவாதவன் என்றும்
அஜ -அகாரத்தில் இருந்து பிறந்தவன் என்றும்)

(பரிஹாஸம் -எதுக்காகவாது திரு நாமம் அடைவு கெடச் சொன்னாலும் தோஷங்களைப் போக்கும்)

அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் –

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

பதவுரை

[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம் பெம்மானது திரு நாமமாகவே
வர–வரும் படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம் பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபி கமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை-பேராலே அவன் வரும் படி -திரு நாமத்தை சொல்லலாம் -என்னவுமாம்
அன்றிக்கே ஏதெனும் சொல்லப் புக்காலும் திரு நாமம் வாயிலே வரும் படி பிதற்றல் அல்லால் -இதுக்கு ஈடாக சொல்லுகை -என்றுமாம் –
ஆரே யறிவார் அது நிற்க –எம் பெம்மானை-என்னுடைய ஸ்வாமியை யாரே அறிவார் -அவ்விடையாட்டம் நிற்க —
நேரே-கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் —–
அறிவார் கிடக்கிடீர் -அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ -சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான
திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற
ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-(கண்ணன் -கண் இடம் முடையவன் சர்வ வியாபி -சர்வேஸ்வரன் )

நம்மால் அறிய ஒண்ணுமோ என்னில் -பேரே வரப் பிதற்றல் -கன்று நின்ற இடத்தே தாய் வருமா போலே வாசிதமாக என்றுமாம் –
எம் பெம்மானை -தமக்கு நேரே காட்டின படி -உள்ளிருந்தும் காண்கிலான்-கடல் கரையிலே குடில் கட்டி கொண்டு
இருக்கும் காட்டில் கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ -அபரிச்சேதயம் என்று அறியில் அறியலாம் –பெரிய கிழாயார் –ப்ரஹ்ம விதாம் வர –(பிரம்மா வித்துக்களில் சிறந்த நான்முகன் பெருமாளைக் கொண்டாடிய இராமாயண ஸ்லோகம் )

(பேரே வர
சாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநம் ஏவ வா
வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷ அநக ஹரம் விது —
பிதற்றல் அல்லால்
அத்யந்த பக்தி யுக் தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை

அஜன் -அகார வாசயனிடம் யுண்டானவன் -ஆத் ஜாயதே இதி அஜ
ந ஜாயதே இத்யஜ -உலோகோரைப் போல் ஸ்த்ரீ புருஷ யோகத்தால் பிறவாதவன்
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3- ப்ரஹ்ம ஞானிகளில் தலை சிறந்தவன்

கண் -இடம் கன்னம் -இடமுடையவன் -ஸர்வ வ்யாபீ -ஸர்வ நிர்வாஹகன்)

—————————————————————-

(அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் -)

ஏதேனும் ஒன்றைச் சொல்லினும் திரு நாமம் வாயிலே வரும் படி அக்ரமமாகச் சொல்லிக் கூப்பிடும் அத்தனை அல்லது
தன் படிகளை எனக்குத் தானே காட்டித் தந்த என் நாயகனானவனை யார் தான் அறிய வல்லார் –

அவ்விடை யாட்டம் கிடக் கிடீர் –பரிமள பிரசுரமான திரு நாபீ கமலத்தில் அவ்யவதானே பிறந்து
அங்கே நிரந்தர வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் அவன் பக்கலிலே ஓதி இவ்வருகு உள்ளார்க்கும் அறிவு கொடுக்கும் படி
அறிவில் தலை நின்ற சதுர்முகனானவன் -சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் திருவடித் தாமரைகளை இவ்வளவு என்று
தர்சிக்கைக்கு சக்தன் அல்லன் –

பேரே வரப் பிதற்றுகை யாவது – அவன் தானே வரும் படி
திரு நாமங்களை அக்ரமாகச் சொல்லும் அத்தனை போக்கி என்றுமாம் –

———————————————————————————————————————-

(அஷ்டாக்ஷரம் விளக்க வந்த முதல் திருவந்தாதி சொல்லி அடைந்த பலன்
யத்ர –வியாதி பஞ்சம் திருட்டு இருக்காதே
முதல் ஆழ்வார் -இவர் தொடங்கி வைக்க
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் கடைசி ஆழ்வார் நிகமித்தார் )

நீர் பகவத் விஷயத்தில் செய்வது என் என்னில் -சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பார் அவனைப் பற்றி என்னும் இடமும் அறிந்தேன் -என்கிறார் –

ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது ——57-

பதவுரை

அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடை விடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய(சாஸ்த்ர ரூபமான திரு அஷ்டாக்ஷரம் )
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன்–நான் இட்ட அடியிலே இட்டு வாரா நின்ற மஹா பாபங்களை -அஞ்சினேன் -(பெருமாள் -இளையபெருமாள் -குகன் -குகன் தமர் -ஒரு நாள் முகத்தில் விழித்தார் படும் பாடு-இதுக்கு எதிர்மறையான சம்சார வர்த்தகம் )
அஞ்சி-உய -அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்காக –
நின் திருவடியே சேர்வான் நய நின்ற-நன்மாலை கொண்டு –நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு
நமோ நாரணா வென்னும்-சொன் மாலை கற்றேன் தொழுது —-சொல் தொடை கற்றேன் -(திரு அஷ்டாக்ஷர அர்த்தம் சொல்ல வந்த என்றும் அன்பும் மகிழ்ச்சியும் சேர்த்துத் தொடுத்த முதல் திருவந்தாதி என்றும்)

தொழுது -வணங்கி –சொல் மாலை கற்றேன் -ஆற்றாமையால் நான் ஆகைக்குப் பேசினேன் -(நான் நானாகைக்காக -ஸ்வரூப சித்திக்காக )
அயல் நின்ற -(தள்ளி நின்றால் வியசனம் -)விஸ்லேஷத்தால் வரும் வியசனத்துக்கு அஞ்சி -திருநாமம் சொல்லும் தனையும் கடக்க -சாபலத்தாலே நின்ற –

(மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –பெரிய திருவந்தாதி –59-

நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்
ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்

நமோ நாரணா எனும் சொல் மாலைக் கற்றேன்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை சங்கோச விஸ்தாரம் அறத் தெரிவிக்கும் திருமந்த்ரமான சொல் மாலையைக் கற்றேன் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் -திருமந்திரம் சொல்லாமல் பகவானை விட்டு கடக்க நின்ற மஹா நினைத்து அஞ்சினேன் என்றுமாம் )

——————————————————————-

(ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் -)

அருகு விட்டுப் பேராதே இடைவிடாமல் நலிந்த படியே நிற்கிற அதி பிரபலமான பாபத்தைக் குறித்து முன்பு போலே
இன்னமும் வந்து மேலிடில் செய்வது என் என்று பயப்பட்டேன் -இப்படிப் பயப்பட்டு -இந்த பாப சம்பந்தம் அற்று
உஜ்ஜீவிக்கைக்கு நிர்பய ஸ்தானமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுக்கைக்காக -நயப்புடைத்தாய் -அதி விலக்ஷணமான
சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய்
திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடையை அப்யசித்தேன் –

அன்றிக்கே -திரு மந்த்ரார்த்தை நயிப்பிக்கையாலே
தத் பரமாய்க் கொண்டு நின்ற விலக்ஷண சந்தர்ப்ப ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு என்னவுமாம் —

அயல் நின்ற என்றது ஞானம் பிறந்த பின் பாபங்கள் தம்மை விட்டுக் கடக்க நின்ற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

அயல் நின்ற வல் வினை யென்று திரு நாமம் சொல்லாத போது தமக்கு உள்ள வியசனம் ஆகவுமாம் —

(மந்த்ரத்தை -அவனை மந்திரத்தால் மறவாது வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே –
ஆத்ம குணம் -ஆச்சார்யன் -மந்த்ரம் -நாரணம் -வைகுந்தம் மற்ற அதுவும் கை யதுவே)

———————————————————————————————————-

ஆன பின்பு நெஞ்சே –இவ் விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.இவை மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம்
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:சொன்னபடி செய்ததால் அதுக்கு மங்களா ஸாஸனம்
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் –ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆன பின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறி யிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை–(அப் பெருமானை) விரைவில் சென்று கிட்டு.

பழுதின்றி–இடைவீடின்றி – அந்தரம் ஒன்றில்லை யடை-கால தாமதம் செய்ய ஹேது எதுவும் இல்லை -அவனை –அணுகு-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி–கையாலே தொழுது –புஷ்பாதி (தூபம் தீபங்கள் )உபகரணங்களைக் கொண்டு தொழுது –
எழுதும் எழு வாழி நெஞ்சே —போவோம் -போகு -நெஞ்சே -உனக்கு நன்மை உண்டாக –
பழுதின்றி–எழுவோம் -மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்–விச்சேதம் இன்றிக்கே எல்லா திரு மந்த்ரங்கள்
கற்கிறதும் கை தொழுகை -ஆன பின்பு -(ஆச்சார்யர் முகேன -கைங்கர்யம் செய்து திரு உள்ளம் உகப்பித்துக் கற்று )

(ச கண்ட-நமஸ் பிரிந்தால் எனக்கு உரியன் அல்லேன் அகண்ட நமஸ் -கை தொழுது -நமோ நம -அகண்ட சகண்ட சேர்த்து)

அந்தரம் ஒன்றில்லை யடை—–ஒரு க்ஷணம் மாத்திரம் போகாதே அவன் திருவடிகளில் அடை –

எழுவோம் –உஜ்ஜீவிப்போம் -எழு –ஒருப்படு- வாழி -ஒருப்பட்ட படிக்கு மங்களா சாசனம் -இது உனக்கு நித்தியமாக உண்டாக –

பழுதின்றி -குருகுல வாசம் பண்ணிப் பழுத்து விழக் காண்கை-முதலிலே சொல் என்னில் உத் பத்தி தோஷமாம் இறே-
கற்பனவும் – கிடந்தானை கண்டு ஏறாதே சந்தையிட்டுக் கற்கை-

(தூபம் கை -ஏந்தி தீபாதிகளுக்கும் உப லக்ஷணம்
தென் ஆனாய் வட வானாய் -ஆச்சார்யன் மூலம் சரண் அடையா விடில் கைக்கொள்ள மாட்டாத யானை
ஆச்சார்ய சிஸூருஷை செய்து ரஹஸ்ய த்ரய ஞானம் பெற வேண்டுமே)

—————————————————————————–

ஆன பின்பு நெஞ்சே –இவ் விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

நெஞ்சே -செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு தூபத்தைக் கையிலே தரித்து -ஸ்வரூப அனுரூபமாக
அவனைத் தொழுது உஜ்ஜீவிப்போம் -கடுக எழுந்து இரு -உனக்கு இந்த ஸம்ருத்தி நித்யமாகச் செல்ல
கிடந்தானை கண்டு ஏறாதே ஆச்சார்யானைப் பழுக்க சேவித்து -திரு அஷ்டாக்ஷரம் முதலான மந்த்ரங்களை
பழுதற நாம் அப்யசிக்கிறவையும் -சர்வேஸ்வரன் திருவடிகளில் இடைவிடாமல் அஞ்சலி பந்தம் முதலான
வ்ருத்தி விசேஷங்களைப் பண்ணுகைக்காக -(சாதனமாக இல்லை கைங்கர்யம் பண்ணவே என்றபடி )

ஆன பின்பு நமக்கு ஆறி இருக்கைக்கு அவகாசம் ஏக தேசமும் இல்லை -கடுகச் சென்று கிட்டு —

——————————————————————————————————————

கால ஷேபம் பண்ணும் படி சொல்கிறது

(இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -அழகிய கையில் வில்லை எடுத்தாலே போதும் அவன் அழிந்து போக)

(ஆத்மாவுக்கு கர்மா வந்தேறி -தெரியவே உஜ்ஜீவிப்போம்)

(இமே தேஹே அந்தவந்த -தேகம் நஸ்வரம் ஆத்மா நித்யம் இங்கு கருத்து இல்லை –
கர்மங்கள் போக தேகமும் அழியும் என்று நிம்மதியாக இருக்கவே இந்த ஸ்லோகம் இங்கு சொல்கிறான்
இத்தையே-வந்தேறி என்பதைக் காட்டவே – அடைந்த -என்ற சொல்லால் ஆரம்பிக்கும் பாசுரம்)

(ஆதி -நோய் -இரண்டாகச் சொல்வது -ஆதி என்று மநோ வியாதியும் -நோய் என்று உடல் வியாதியும்)

போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்கிறோம்
இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு வேணுமாகில்
தரசாரதாத் மஜனை சரணம் புக்கு என்கிறார் –

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

பதவுரை

அடைந்த–அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற
அரு–போக்குவதற்கு அருமையான
வினையோடு–பழவினைகளும்
அல்லல்–(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத் துன்பங்களும்
நோய்–சரீர வியாதிகளும்
பாவம்–இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை–[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில்–வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன்–முன்பொருகால்,
நுடங்கு இடையை–துவளா நின்ற -மெல்லிய இடையை யுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான்–லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய–மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள்–ஸ்ரீராமனாய்ப் பிறந்தவொரு காலத்து
தன் வில்–தன்னுடைய வில்லை
அம்கை–அழகிய திருக் கையிலே
வைத்தான்–எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண்–உபாயமாவான்.

(வில்லிலே கை வைத்தான் என்றும் வில்லைக் கையிலே வைத்தான் -என்றும் சக்கரவர்த்தி திருமகன் சரணே சரண் -என்கிறார் -)

அடைந்த வருவினையோடு –(ஞான ஆனந்த சேஷத்வ பாரதந்த்ரங்களே ஸ்வரூபமான )ஆத்ம ஸ்வரூபத்தில் இன்றியே அசித் பிரத்யாசத்தியால் ( ( தேஹத்தின் அருகாமையாலே )வந்தேறியான அஞ்ஞானாதிகள்
அல்லல் –மானஸ வியாதி
நோய் –சரீர வியாதி -ஆதி -வியாதிகள் என்றபடி –
பாவம்-பரிக்ரஹித்த சரீரத்தாலே பண்ணின நிஷித்த அனுஷ்டானம்(புண்யாபுண்ய ஈஸ்வர ப்ரீதி கோப )
மிடந்தவை-சரீர ஆரம்ப ஹேதுவான பாபங்களுமாக நெருங்கினவை
மீண்டு ஒழிய வேண்டில் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னும் படி ஒரு (யாதவ ராஜ- ராகவ ராஜ )ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில்

நுடங்கிடையை-பிரியத் தகாதவளை -(ஆத்ம குணங்களை பார்த்தாலே பிரிய ஒண்ணாதே -அதுக்கும் மேல் இதுவும் )

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——பண்டு இலங்கையில்
வைத்தவனுடைய மிடுக்கை ஒழிய –தன்னுடைய திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்தவன் உபாயம் –

இத்தால் –

1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –

2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –

3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )

(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )

(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –

இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –

இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –

அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )

(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)

அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே

சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-

தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )

அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள்
இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்
மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை

(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3-
மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி

இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல்
ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்
மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58-என்று சொன்னது எல்லாம்
உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே
மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –
இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம்
இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)

———————————————————————-

(போகத்துக்கு வேணுமாகில் இத்தைச் செய்கிறோம்
இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு வேணுமாகில்
தரசாரதாத் மஜனை சரணம் புகு என்கிறார் -)

ஞான ஆனந்தகளோபாதி ஆத்மாவுக்கு நிரூபகம் -என்றபடி -அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற போக்க அரிதான
ப்ராசிநபாவம் -அது அடியாக வருகிற மானஸ மான துக்கங்கள் -சாரீரமான வியாதி -வர்த்தமான சரீரம் கொண்டு
பண்ணுகிற நிஷித்தாசாரம் என்றால் போலே பஹு விதமாய்க் கொண்டு பரணிக் கூடு வரிந்தால் போலே
ஆத்மாவைத் தெரியாத படி மூடிக் கிடக்கிற இவை வாசனையோடு விட்டுப் போக வேண்டில்

க்ஷண காலமும் விஸ்லேஷிக்கத் தகாத படி நேரிய இடை அழகை யுடைய பிராட்டியை முன்பு ஒரு காலத்தில் லங்கையில் கொண்டு
போய்ச் சிறை வைத்த ராவணனுடைய மிடுக்கு அழியும் படிக்கு ஈடாக பண்டு ஒரு நாளிலே தன்னுடைய
ஸ்ரீ சாரங்கத் திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்த தசாரதாத்மஜனே உபாயம் –

இத்தால்

1-பிராட்டி விஷயத்தில் போலே ஆஸ்ரித விஷயத்தில் ஈஸ்வரன் உகந்து கார்யம் செய்யும் என்னும் இடமும்

2-அவன் ஸ்வ ரக்ஷணத்திலே இரங்கும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம் உள்ளது என்னும் இடமும் -(ஆறி இருக்க வேண்டியதே க்ருத்யாம்சம் )

3-அவன் அபேக்ஷிதம் செய்யும் இடத்தில் இவள் புருஷகாரம் என்னும் இடமும்

4-அவன் வஸ்துவை எனக்கு என்பார் ராவணாதிகள் பட்டது படுவர் என்னும் இடமும் சொல்லிற்று யாய்த்து –

இந்திரிய ஜயத்தைப் பண்ணு -அவனைத் தொழு –
அவன் திரு நாமத்தைச் சொல்லு -அவனை நினை என்றால் போலே (உபாயாந்தரங்களைப் போலே )கீழே படி படியாகச் சொல்லிற்று எல்லாம்
ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே -உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை -என்கை-

————————————————————————————————————

கீழ் அவனையே உபாயம் என்றது -பேறு இவர்களதே யான பின்பு இவ் வாத்மாக்கள் உபாயம் ஆனால் ஆகாதோ என்னில்
(ஜீவர்கள்)கீழ் போக்கு அறியான் -இப்போது தங்கள் படுகிறது இன்னதாலே என்று அறியார்கள் -வரக் கடவது அறியார்கள்
ஈஸ்வரன் இவை எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஞான சக்தியாதிகளை யுடையவன் –
பழகி யான் தானே  (பணிமின் -நான்முகன் )–என்னுமா போலே -ஆகையால் அவனே உபாயமாம் அத்தனை -இத்தை லோகம் அறியாது என்கிறது –

இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான் ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி
அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் –

(தனக்குத் தான் ரக்ஷகன் ஸ்தனந்த்ய பிரஜையை தாய் நின்றும் வாங்கி காதுகன் இடம் கொடுத்தால் போல் –

தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப் பால்)

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

பதவுரை

சரண் ஆம் மறை–(எல்லார்க்கும் -நான்கு வித புருஷார்த்தங்களைப் பெற ) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின(பர ப்ரஹ்மம் நான்முகனுக்கு மறை பயந்த என்றுமாம் )
தாமரை யானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ் வுலகத்திலுள்ளார்.(லக்ஷணை )
அறியாது–அறிய மாட்டார்கள்.

சரணா மறை பயந்த தாமரை யானோடு–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –
சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம்–கல்பாதியிலே யுண்டாய் -கல்பாந்தத்தில் இல்லை யாகிற ப்ரஹ்மாவோடே கூட
ந ஜாயதே ம்ரியதே வா –ஜாயஸ்ய ம்ரியஸ்ய –(விபஸ்ச்சித் உபநிஷத் கதாசித் கீதை )என்று ஜனன மரண தர்மாக்களான உயிர்களுக்கு எல்லாம்
அரணாய-ரக்ஷகமான –
பேராழி கொண்ட பிரான் அன்றி-கீழே பெருமாள் ப்ரஸ்த்ததுர் ஆகையால் -கடலை வெதுப்பித்து
தமக்கு வசமாக்கிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன் -என்றுமாம்(பேராழி கொண்ட -கடலை தனது வசமாகாக கொண்ட பெருமாள் )
கையிலே திரு வாழியை யுடையனாய் உபகாரகனான சர்வேஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவர் —
மற்று அறியாது-ஓராழி சூழ்ந்த வுலகு ———-மற்றாய் இருந்துள்ள கடல் சூழ்ந்த லோகமானது உபாயமாக அறியாது

சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்
ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )
மரணாய -சாவது பிறப்பது ஆகிற சரீர தர்மம் -மன்னுயிர் -ஆத்ம தர்மம் -மரண தர்மங்களுடைய அஞ்ஞனாய் அசக்தனாய் –
அரணானவை –இவற்றை விநாசகன் அறியும் அத்தனை -முடோயம் நாபி ஜாநாதி – வேதாஹம்-

ஆப்பன் நஞ்சீயருக்கு -ஜீயரே இவ் வுலகு எம்பெருமானை அல்லாது (வேறே ஒன்றை அறியாமல் )இருந்ததோ –என்ன -அதுக்குப் பொருள் என்ன
உயர்ந்தோர் எம்பெருமானை அல்லது அறியார் என்ன -இத்தை பட்டரைக் கேட்க -அதுக்கு ஒரு குற்றம் உண்டு
ஓர் ஆழி சூழ்ந்த -என்று விசேஷிக்க ஒண்ணாது -என்ன -இதுக்கு பொருளோ என்ன
ஜீயரே நான் சொல்லும் பொருள் என் என்ன உலகு அறியாது என்ன -அதுவே பொருள் என்றார்
இத்தை பிள்ளையும் ஜீயருக்கு உரைக்க-திருக் கலிகன்றி தாசர் மறந்தத்தை உணர்த்தினார் -என்று அருளிச் செய்தார் –

(மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய பிரான் -என்று அன்வயித்து -உலகு -உயர்ந்தோர் மாட்டே நிகண்டு -சாமான்யர் அறியார் -மற்றவை அறிவார்கள் -)

(இதுக்கு ஒரு குற்றம் உண்டே -ஆழி சூழ்ந்த -என்றாலே எல்லாரையும் காட்டுமே என்னில் –
யாருக்கும் தெரியாது -என்பதே பட்டர் திரு உள்ளம் என்று நஞ்சீயர் காட்டி அருள –
மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய பிரான் என்று கொள்ளாமல்
அரணாய-அரணாக உள்ள பொருள்களை- உபாயத்தை அறியார்கள் -என்றவாறு
பின்பு நம்பிள்ளை இவ்வாறு என்று நஞ்சீயருக்கே காட்டி அருளினாராம்)

(ஆக இப் பாசுரத்தால் -சிறியாரோடு பெரியாரோடு வாசி யற இவ்வுலகில் எவரும் தங்களுக்கு நன்மை ஏது என்று அறியாதாராய் இருக்க
ஸர்வேஸ்வரேஸ்வரன் ஒருவனே இவர்கள் அனைவருக்கும் நன்மையை அறிய வல்லவன் என்கிறார் -)

—————————————————————-

(இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான் ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி
அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் -)

அபிமத சித்திக்கு அனுரூபமான உபாயங்களை அறிகைக்கு(ம் அடைவதற்கும் )சாதனமான வேதத்தை நாட்டுக்கு உபதேச முகேன
உண்டாக்கின ஞான மஹாத்ம்யத்தை யுடையோம் என்று அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மா வோடே கூட
மரண தர்மாக்கள் ஆகையால் அறிவு கேடராய் நித்தியமான ஸ்வரூபத்தை யுடையரான ஆத்மாக்களுக்கு எல்லாம்
ரக்ஷை யான வற்றை (அரணாய வற்றை -ரக்ஷகனான பெருமாளை என்று சொல்லாமல் )ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான உபகாரகனை அல்லது வேறு
அத்விதீயமான கடலாலே சூழப் பட்ட பூ லோகத்தில் உள்ள பிராணி அறியாது –

இத்தால் சிறியாரோடு பெரியாரோடு வாசியற தம் தாமுடைய ரக்ஷணம் தங்கள் அறிய மாட்டார்கள் –

இவனே சர்வர்க்கும் ரக்ஷண பிரகாரம் அறியுமாவான் என்றதாய்த்து –

————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –