அவன் (நம்முடைய)குற்றம் பொறுக்கைக்காக திருமலையிலே வந்து நின்றான் -ஆபிமுக்யத்தைப் பண்ணினாலும்
தோஷாம்சத்தைப் பாராதே குணாம்சத்தைக் கொள்ளும் -அவன் உள்ள அன்றே இவ் வாத்மா யுண்டு என்கிறார் –
இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாகிலும் -தோஷமே வேஷமான நமக்கு அவனைச் சென்று
அணுகப் போமோ -என்று திரு உள்ளம் பயப்பட –
உனக்கு ஆபிமுக்யம் மாத்திரமே யுண்டாக
அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும் அஞ்ச வேண்டா -என்கிறார் –
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு –41-
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ர பாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;(மித்ர பாவேந -அவன் திறன் உரையே சிந்தித்து இரு என்றுமாம் )
(எம்பெருமானைப் பற்றிய என்றும் அவனுடைய பேச்சு என்றும் -புறன் உரை பொய்யான பேச்சு திறன் உரை -அவனதான சரம ஸ்லோகம்)
(அப்படி யிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்
(செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே
குணத்தை குணமாக பார்க்கும் நல்லோர்
குணத்தையே குற்றமாகக் கொள்ளும் ஸம்ஸாரிகள்
குற்றங்களையே குணமாகக் கொள்வதே அவன் ஸ்வ பாவம் )
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்–அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும்
அஞ்ச வேண்டா -என்கிறார் –
இத்தனை நாளும் இத்தை செய்யாது ஒழிவான் என்னில் –
இன்று முதலாக -இவனுக்கு ஸ்வ பாவம் என்று அறிந்த இன்று தொடக்கமாக
வென்னெஞ்சே -என்றும்-எனக்கு ஹிதம் பார்க்கும் நெஞ்சே -ச ஹ்ருதயமாக அவன் குணங்களை பேசப் போமோ என்னில் –
புறனுரையே யாயினும் -அ ஹ்ருதயமான பேச்சே யாகிலும் -பிரயோஜனம் இன்றிக்கே அனர்த்தம் ஆயிற்றே ஆகிலும் என்றுமாம் –
பொன்னாழிக் கையான்-திறனுரையே சிந்தித் திரு –சர்வேஸ்வரன் திறத்தில் சப்தங்களையே அறிந்து -க்ருதார்த்தமாய் இரு –
அவனோடே சம்பந்தம் யுண்டாகிலும் முன்பு அங்கனம் செய்து அருளாது விடுவான் என் என்ன
குற்றம் குணம் (ஆகக் கொள்ளும் ஸ்வ பாவன் அவன் என்று நீ )என்று நினையாமை-பொன்னாழி –தானே ச ஹ்ருதயமாக்கும்
(மேகமே உப்பு நீரை நல்ல மழையாக ஆக்குவது போல்
கையார் சக்கரத்து பாசுரம் -அங்கும் இதே போல் உண்டே)
———–
இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாகிலும் -தோஷமே வேஷமான நமக்கு அவனைச் சென்று
அணுகப் போமோ -என்று திரு உள்ளம் பயப்பட –
உனக்கு ஆபிமுக்யம் மாத்திரமே யுண்டாக
அவன் நம் குற்றத்தை யடைய நற்றமாகக் கொள்ளும் அஞ்ச வேண்டா -என்கிறார் –
என் வழியே ஒழுகும் படி எனக்கு பாங்கான நெஞ்சே -சர்வ காலத்திலும் ச ஹ்ருதயமாக அன்றிக்கே –
கேவலம் வாங்மாத்ர சித்தமான புறப் பேச்சே யாகிலும் -அஹ்ருத யுக்தியை ச ஹ்ருதயாம் படி பண்ண வற்றான
அழகிய திருவாழியும் கையுமான சேர்த்தி அழகை யுடைய சர்வேஸ்வரன் இடையாட்டமாய் (விஷயமாக )-
மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் படியான சொல்லையே அனுசந்தித்திக் கொண்டு ஸ்திதோ அஸ்மி -என்னும்படி
நிர்ப்பரனாய் கொண்டு இரு –
இவ் வானுகூல்ய லேசம் யுண்டான இன்று முதலாக -மலை போலே ஸ்வ யத்னத்தாலே
சலிக்க ஒண்ணாத படி பெருத்து உறைத்து இருக்கிற குற்றங்களை பத்தும் பத்துமாகச் செய்தாலும்
அதி மாத்ர வத்சலனானவன் -செய்தாரேல் நன்றே செய்தார் -என்னும் படி குணமாகக் கொள்ளும் –
———————————————————————
பாராதே பொறுக்கைக்கு அடி பிராட்டிமார் அருகே இருக்கை -என்கிறார்
இப்படி குற்றத்தை ஸ்வ தந்த்ரனானவன் -குணமாகக் கொள்ளக் கூடுமோ -என்னில்
ந கச்சின் நாபராத்யதி -என்னும் பிராட்டிமார் மூவரும் அங்கே கூடி இருக்கையாலே கூடும் -என்கிறார் –
திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-
பதவுரை
பால் ஓதம் சிந்த–திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்து ஸுகப்படுத்த,
படம் நாக அணை கிடந்த–படமெடுத்த பாம்பினணையிற் பள்ளி கொண்ட
மால் ஓதம் வண்ணர்–பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம்–பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என் கொல்–பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னோ?
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்-திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல் –
அனந்தாழ்வான் -திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல் -மண் மகட்கே தீர்ந்தவாறு என் கொல் –
ஆய் மகட்கே தீர்ந்தவாறு என் கொல் -என்று பணிக்கும் -(ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம் -சவ்பரி போல் ஒவ்வொருவருக்கும் பூர்ண அனுபவம் )
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த–திருப் பாற் கடலின் திவலை திரு முகத்தில் படும் படிக்கு ஈடாக
திரு வனந்த ஆழ்வான் மேல் கிடந்த
மாலோத வண்ணர் மனம் —-மாலோத வண்ணருடைய—திருமகள் மேல் வைத்த திரு உள்ளம்
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்–திரு மகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்று -அருளிச் செய்வார் பட்டர்-
பிராட்டியோடு கலந்த போது -புஷபாங்க ராகைஸ் சமம்-(ஸ்ரீ குண ரத்ன கோசம் -26-)என்கிறபடியே அல்லாத பிராட்டிமார் உபகரண கோடியிலே நிற்பார்கள்
அல்லாத பிராட்டிமாரோடு பரிமாறும் போது –இவள் தன் இடையிலும் முலையிலும் கலந்தால் போலே இருக்கும் போகம் தான்
உன்மஸ்தகம் ஆனால் வ்ருத்த கீர்த்த நாதிகளுக்கு கூட்டாய் நிற்பார்கள் -(அவயவங்கள் போலும் -சாயா இவ -நிழல் போல்வன )
(போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோஸம்–26
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?
இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.)
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இதர விஷயங்கள் இருவருக்கும் போரா மையாலே சீறு பாறு என்கைக்கு உடலாம் –
இங்கு போக்யதா அதிசயத்தாலே
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரண்டு அவகாஹிக்க வேண்டும் என்றதாயிற்று —
————-
இப்படி குற்றத்தை ஸ்வ தந்த்ரனானவன் -குணமாகக் கொள்ளக் கூடுமோ -என்னில்
ந கச்சின் நாபராத்யதி -என்னும் பிராட்டிமார் மூவரும் அங்கே கூடி இருக்கையாலே (பாராதே இருக்கக் )கூடும் -என்கிறார் –
திருப் பாற் கடலில் சிறு திவலைகளானவை ஸ்ரமஹரமாம் படி துடை குத்துவாரைப் போலே நாலு பாடும் சிதறி விழ
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு
அருளுகிற பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வேஸ்வரனுடைய பெரிய பிராட்டியார் மேலே
அத்யபி நிஷ்டமாய்ச் செல்லுகிற திரு உள்ளமானது –
குற்றத்தை பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
பொறை விளையும் தரையான ஸ்ரீ பூமி பிராட்டியாரும் -குற்றம் கிளராத படி திரு உள்ளத்தை திரை கொள்ளும்
கோப குல அவதீரணையான நப்பின்னை பிராட்டியாரும் சதாரமாக சம்ஸ்லேஷித்தால்
புஷபாங்க ராகாதிகளோ பாதி
போக உபகரண கோடியில் நின்று பிராட்டியோடே கலக்கும் இடத்தில் சாபத்ந்ய கந்தம் அற அல்லாத பிராட்டிமார் எடுத்து
கை நீட்டுகையாலும் -அவர்களோடு கலக்கும் இடத்தில் தன் முலையிலும் இடையிலும் கலந்தால் போலே
பிராட்டி நினைத்து இருக்கையாலும் -பெரிய பிராட்டியார்க்கே அற்றுத் தீர்ந்ததாய் இருக்கிற படி எங்கனே தான்
இத்தால் மூவர்க்கும் உண்டான ஐக ரஸ்யம் சொன்னபடி –
————————————————————————————
(கைங்கர்யம் பண்ணப் பண்ண
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
சுமந்து –சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
பெரும் பலன்களைப் பட்டியல் இடுகிறார்
மனம் மாசு அஞ்ஞானம் -காம க்ரிதாதிகள் போகும்
தீரா வினைகள் கிட்டாவே
பக்திச் செல்வம் தானாகவே வந்து சேரும்
கைங்கர்ய ரூபம் -சாதனமாக அல்ல )
பிராட்டிமார் அடியாக அவனைப் பற்றினார்க்கு போகத்தில் பிரதிபந்தகங்கள் போக வேணும் என்றும்
பக்த்யாதிகள் உண்டாக வேணும் என்றும் இவர்களுக்கு கரைய வேண்டா -என்கிறது –
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–
பதவுரை
புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்
மனமாசு தீரும் –மனஸ்ஸூ க்கு மாசாகிறது -ருசி வாசனைகள் -(வாசனை விட ருசி பிரபலம் )
அரு வினையும் சாரா–அவித்யாதி கர்மங்கள் (பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் )அணையா
தனமாய தானே கை கூடும் -இப்படியான அதிகாரிக்கு தனமான கைங்கர்ய பூர்வ பாவியான பக்த்யாதிகள் தானே யுண்டாம்
(குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் பண்ண ருசி பக்தி வேண்டுமே -அது தானே உண்டாகும்)
புனமேய-பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி-
தாம் தொழா நிற்பார் தமர் —தமரானவர்கள் சர்வேஸ்வரன் திருவடிகளிலே தாங்களே தொழா நிற்பர்கள் –
இவர்களுக்கு அவனுடைய திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு தொழுவது அவனை அனுபவிக்கையிலே அந்வயம் –
(இவை சாதனம் அல்லவே
சூட்டு நன் மாலைகள் -அங்கு போல் இங்கும்
சாதனம் ஆக்குவது உபாயாந்தர பரர்கள் )
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் -அவித்யாதிகள் போனார்க்கு வரும் தனம்-(பரபக்த்யாதிகள் -போஜனத்துக்கு சுத்தி போல் இவை )
அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –பூந்துழாயான் அடிக்கே–குடிக்கிற வேப்பங்குடி நீர் -போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் –இவன் வகுத்தது செய்ய அவன் வகுத்தது செய்யாது ஒழியுமோ –
(செல்வச் சிறுமீர்காள் -அந்தரிக்ஷத கத ஸ்ரீ மான் –நாகவர ஸ்ரீ மான் -ஈஸ்வரனே ரக்ஷகன் என்ற நினைவே -லஷ்மணோ லஷ்மீ சம்பந்தம்)
(நீ செய்ய வேண்டியத்தைச் செய்தால் -ஸ்வ தந்த்ரனாக நினைத்த்தால் சாதனம் ஆகுமே
நீ -அத்யந்த பரதந்த்ரனாக அறிந்து -ப்ராப்யத்தில் அன்வயித்து கைங்கர்யம்
ஸ்வாமி தனது கார்யம் உடைமைக்குச் செய்ய சொல்ல வேண்டுமோ)
(சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திரு விருத்தம் -20-
அதை இங்கேயே இவ்வு டம்புடனே இக்காலத்திலேயே
செய்யுமவர்கள் -விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -70-
ஸ்வரூப அனுரூபமான தனமாவது பரபக்தி பரஞானம் பரமபக்திகள் –
அந்தரிக்ஷகத ஸ்ரீ மான் யுத்த -16-17-
ச து நாக வர ஸ்ரீ மான்
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால-18-20-)
———————-
திறனுரையே சிந்தித்து இருக்க ஒட்டுமோ இவனுடைய அவித்யாதிகள் என்னில் –
பிராட்டிமார் நித்ய சந்நிஹிதராய் இருக்கையாலே தங்கள் குற்றத்தை நினைத்து பிற்காலிக்க வேண்டியது இல்லை
இனி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயிக்கவே விரோதி வர்க்கம் தன்னடையே விட்டு நீங்கும் -என்கிறார் –
திரு மேனியின் ஸ்பர்சத்தாலே தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று பூத்த திருத் துழாயாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனுடைய திருவடிகளுக்கே அடிமைக்குக் கை தொடுமானமான சூட்டு நன் மாலைகளோடே நீராட்டுகைக்கு
உப கரணமான நன்னீரையும் சாதரமாக தரித்துக் கொண்டு நின்று தங்கள் அபி நிவேசம் அனுரூபமாக
ஆஸ்ரிதரான தாங்கள் அடிமை செய்யா நிற்பர்கள் –
இவர்கள் இப்படி வகுத்த அடிமை செய்யவே அனுசந்தான
பரிகரமான மனசைப் பற்றிக் கிடக்கிற அஞ்ஞானம் விஷய ராகம் முதலான தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழலும்-
அவற்றுக்கு அடியாக ஸ்வ யத்னத்தாலே போக்க அரியதாய் துஷ் கர்மங்களும் கிட்ட வாராது –
கைங்கர்ய உபகரணமாய்-
ஸ்வரூப அனுரூபமான தனமாய் இருக்கிற பர பக்த்யாதிகளும் தனக்குத் தானே வந்து கை புகுரும்-
———————————————————————————————————-
(சட்ட நூல் ஸ்ரீ கீதை -கண்ணனின் உபதேசமும்
பெருமாள் அனுஷ்டானமும் நமக்கு அனைத்துமே காட்டி அருளும்
யார் எப்படி சேவிக்க ஆசைப்படுகிறானோ அவனுக்கு அப்டியே சேவை சாதிக்கிறேன் -கீதை
அவன் இவன் –அவனாகும் நீள் கடல் வண்ணன்
அவன் விரும்பிய ஒன்றையே நீ விரும்ப வேண்டும்
ஆழியான் -ஸாஸ்த்ர கம்யமாக இருக்க வேண்டுமே )
தமர் என்று சிலவரும் -அவர்களுக்கு பிரதி பந்தகம் போக்க வேண்டா -(போக்க வேண்டிய தேவை இல்லாமலேயே )-போகத்திலே அந்வயம் சொல்லுகிற படி -எங்கனே என்னில்
அவனுடைய ஸ்வரூபம் ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகையால் சொல்லுகிறது -(அவன் தானே தன்னை சேவை சாதிக்க -இவை அனைத்தும் தன்னடையே போகுமே )
ஆஸ்ரிதர் இப்படி அடிமை செய்யும் அளவில் இவர்கள் உகந்த ரூப நாமாதிகளை உடையனாய்க் கொண்டு
தன்னை யமைத்து -அர்ச்சாவதார ரூபேண இங்கேயே அடிமை கொள்ளும் என்கிறார் –
தமருகந்த தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர் தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் -44–
பதவுரை
ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாக வுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ் வுருவம்–ஆஸ்ரிதர்களால் உகக்கப் பட்ட உருவம் எதுவோ,
அவ் வுருவம் தானே ஆம்–அவ் வுருவமாகத் தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்த்து எப்பேர்–ஆஸ்ரிதர்களால் உகக்கப் பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆஸ்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை -த்யானம்-பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே–எவ்விதமாக நினைத்து இடைவிடாமல் தியானம் செய்து கொண்டு இருப்பாரோ –
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே–யே யதா மாம் பிரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்(என்று -யார் எப்படி என்னை சேவிக்க ஆசைப்படுகிறானோ )
நமக்கு நல்லவர்கள் இன்னார் என்றும் இல்லை -இன்னபடி பஜிப்பார் ஒன்றும் இல்லை –அவர்கள் நின்ற நிலையிலே
அவர்கள் பஜித்த படியே அவர்களை பற்றுவேன் என்கிறது —
தமரானவர்கள் பிராகிருத த்ரவ்யங்களிலே ஒன்றை
உனக்குத் திரு மேனியாகக் கொள்ள வேணும் -என்றால் அத்தைத் திருமேனியாகக் கொள்ளும் –
ஸூவர்ண ரஜாதாதிபி –(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
(அழகிய உருவம் -ஸ்வர்ணம் வெள்ளி செப்பு பஞ்ச லோகத்தால் -செய்து வணங்கி ஆராதித்து தியானிக்க
தோஷங்கள் நீங்கப் பெற்று பர வாஸூ தேவனையே அடைகிறான்
மாத்ரு யோனி பரீஷை யோடே ஒக்கும்
வீட்டு இன்ப இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் –இன்ப மாரியில் ஆராய்ச்சி -நாயனார் -ஆச்சார்ய ஹ்ருதயம் -75-)
எம்பெருமானார் மாது கரத்துக்கு எழுந்து அருளா நிற்க -சில பிள்ளைகள் காலாலே கீறி
உம்முடைய எம்பெருமான் திரு மேனி -என்று காட்ட -பாத்திரத்தை வைத்து தண்டனை இட்டு அருளினார்
இவ் வர்த்தத்திலே -கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திரு வீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து பெரும் திருப்பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையிலே முகந்து எடுக்க
தத் காலத்திலே மாது கரத்துக்கு எழுந்து அருளுகிற உடையவர் -அவ்விடத்திலே அது கேட்டருளி தண்டனிட்டு
அவர்கள் எடுத்த பிரசாதத்தைப் பாத்ரத்திலே ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் -நல்லவர் -சதங்கை அழகியார் -என்று திரு நாமம் சாத்தினார் ஆகில்
நாராயணாதி நாமங்களைக் காட்டிலும் அத்தை விரும்பும் –(விஷ்ணு சித்தர் எங்கள் ஆழ்வான் -விஷ்ணு புராணம் வியாக்யானம் அருளியவர் -அவரது ஸ்வப்னத்தில் நாகப்பழம் கேட்டு உணர்த்தினார் -மதுரையார் மன்னன் இதே போல் ஐதிக்யம் உண்டே )
தமருகந்து-எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே-அவ் வண்ணம் ஆழியானாம் —நல்லவர் உகந்து -யே யதா -என்னும் படி யாதொரு பிரகாரத்தில் உகந்து
சாவதாநராய் இருப்பார்கள் -அந்த பிரகாரத்தாலே அத்தை யுடையனாம் –
ஆழியானாம்-அப்ராக்ருதமாய் இருந்துள்ள சகல பரிகரத்துக்கும் உப லக்ஷணம் -அவை எல்லாம் கிடக்க
இவர்கள் நினைத்த படியாகத் தன்னை அமைத்துக் கொடுக்கும் –
தமர் இத்யாதி -இவன் கண்டு தொழ வேண்டாவோ -எங்கே காண்பது என்னில் -அவ் வுருவத்தானே
ஆத்மாநாம் மானுஷம் மன்யே–யே யதா –எப்பேர் மற்றப் பேர் –எங்கள் ஆழ்வார் ( விஷ்ணு சித்தர் இவரே ) பாடே
ஆயர் தேவு சென்று நாவல் பழம் வேண்ட நீ யார் -என்று அவர் கேட்க -ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக் குடி இருக்க ஓட்டுகிறீலன்-என்றார்
ஆழியானாம்–சிரேஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன் -ஸ்ருஜ்யனுமாய் ந்யாம்யனுமாம் –
(ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸன்ன வதந ஈஷாணாம்
க்ருத்வா ஆத்மன ப்ரீதி கரம் ஸ்வர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சியேத் தாம் பிரணமேத் தாம் யஜேத் தாம் விசிந்தயேத்
விஸத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணாம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –102-18-
யே யதா மாம் பிரபத் யந்தே தாம்ஸ் ததைவ பஜாம் யஹம் மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த்த ஸர்வஸ—-ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை எவ் வண்ணம் நினைத்துப் பற்றுகின்றார்களோ அவ் வண்ணமாகவே என்னை ஆக்கிக் கொண்டு அவர்களை அடைகிறேன் –
பார்த்தனே -என் தன்மைகளை -அவர்கள் தாம் விரும்பும் எல்லாப் படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்
நெஞ்சினால் நினைப்பான் அவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -திருவாய்)
————–
ஆஸ்ரிதர் இப்படி அடிமை செய்யும் அளவில் இவர்கள் உகந்த ரூப நாமாதிகளை உடையனாய்க் கொண்டு
தன்னை யமைத்து -அர்ச்சாவதார ரூபேண இங்கேயே அடிமை கொள்ளும் என்கிறார் –
தன் கருத்து அறிந்து எடுத்துக் கை நீட்டும் திருவாழி முதலான திவ்ய பரிகரங்களை யுடையனான சர்வேஸ்வரன்
அவர்களைக் கால் கடைக் கொண்டு இன்று சம்சாரத்திலே தன்னைப் பற்றி இருக்கும் ஆஸ்ரிதரானவர்கள்
ஸூவர்ண ரஜாதாதி களான த்ரவ்யங்களாலே உகந்து ஏறி அருள பண்ணினது யாதொரு விக்ரஹம்
அந்த விக்ரஹத்தை அசாதாரண விக்ரஹத்தோ பாதி தானே ஆதரித்து பரிக்ரஹியா நிற்கும்
(அவன் இவன் என்று கூழேல் மின் -அர்ச்சைக்கு ஏற்றம் அவனைப் போல் பூர்வர்கள் –
எம்பெருமானார் இவன் அவன் என்று கூழேல் மின் -இதன் பெருமை அங்கும் இல்லையே)
இப்படி அவர்கள் உகந்த திரு மேனியை விரும்புகிற அளவன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்து சாத்தின திரு நாமம் யாதொன்று
அந்தத் திரு நாமத்தை நாராயணாதி நாமங்களோபாதி தனக்கு நாமமாக விரும்பா நிற்கும்
ஆஸ்ரிதரானார்கள் உகந்து கொண்டு குண சேஷ்டிதாதிகளான யாதொரு பிரகாரத்தை அனுசந்தித்து
அனவ்ரத பாவனை பண்ணி இருப்பார்கள் -அந்த பிரகாரத்தை உடையனாகா நிற்கும் –
இப்படி தன் பெருமை பாராதே ஆஸ்ரிதர் உகந்த ரூப நாம குண சேஷ்டிதாதிகளை தான் உடையானாய்க் கொண்டு
ஆஸ்ரிதரை அடிமை கொள்ளும் அர்ச்சாவதாரத்தின் நீர்மையின் ஏற்றத்தை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் –
—————————————————————————————————————–
(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)
இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –
இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –
ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-
பதவுரை
நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.
ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )
பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –
(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)
இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —
(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-
தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி
அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)
——————————————————–
இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –
என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே
ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –
அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )
—————————————————–
ருத்ரனுடைய லஜ்ஜைக் கேடு சொல்கிறது –
ப்ரஹ்மாவால் ஒரு ருத்ரன் அலைந்து கொடு கிடக்க அது தீர்த்தார் ஆர் —
ப்ரஹ்மாவுக்கு வந்த அநர்த்தத்தைப் பரிஹரித்து ரஷித்த அளவன்றிக்கே
லோக குருவுமாய் பிதாவுமான அந்த ப்ரஹ்மாவின் தலையை அறுத்து சாப உபஹதனாய் கையும் கபாலமுமாய் இரந்து உண்டு திரிந்த ருத்ரன் அனர்த்தத்தை
பரிஹரித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –
பண் புரிந்த நான் மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் —46-
பதவுரை
பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை (ஓதுவிக்கப்பட்ட )நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோபவீ தத்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய(வெளுத்த -பிராயச்சித்தம் செய்தவன் -சாதனாந்தர பரன் )
வினை–ப்ரஹ்ம ஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண் படித்திக் கொண்டவனுடை எம்பெருமானுடைய(திரு உள்ளத்தில் புண் பேரன் -திரு மேனியில் புண் நக கீறலால் )
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆச்ரயிக்குமவர்கள்
அமரர் தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.
பண்புரிந்த நான்மறையோன் –ஸ்வர யுக்தமாய் சர்வேஸ்வரனால் ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவின்
சென்னிப் பலியேற்ற–வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸீரோ மாயா -என்கிறபடியே (தத்ர ஸ்ரீ மான் இந்த ஸ்லோகத்தில் -திருவாளன் கலியன் )ப்ரஹ்மாவின் தலையை அறுக்க
அவன் கபாலி ஆவாய் -என்று சபிக்க -அவனுடைய தலை ஒட்டிலே பிக்ஷை ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர –விநீத வேஷனாய் -பிராயச்சித்தியான படி -இவனோடு சம்பந்தித்தார்க்கு எல்லாம் இதுவே இறே பணி
அகமுடையவளும் (பார்வதி தக்ஷ பிரஜாபதி )தகப்பனாரைக் கொன்றாள்–இவனை ஆஸ்ரயித்தவனும் தகப்பனைக் கொன்றான்(இவன் மகனே இவனுக்கு உபதேசித்தான் )
வினை தீர -என்கிற இத்தால் -இவனுடைய கர்ம வச்யத்வமும்-தான் பண்ணின கர்மம் தன்னால் பரிஹரிக்க போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை என்றபடி –
புண் புரிந்த-ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்——ஈஸ்வர அபிமானியாய் ஒருத்தனாயத் திரிந்தவன் வாசல் தோறும்
இடறித் திரிவதே-என்று திரு உள்ளத்திலே புண்பட்ட சர்வேஸ்வரனுடைய தாள் பணிவார் கிடீர் -(வியர்வை கொடுத்தான் என்றும் ரக்தம் கொடுத்தான் என்றும் உண்டே )
அமரர் தம்-போகத்தால் பூமி யாள்வார் -பூமியும் ஆண்டு பரம பதத்தில் போகமும் அனுபவிப்பார்கள் –
அன்றியும் போக பூமியிலே இருக்கச் செய்தே பரமபதத்தில் போகம் எல்லாம் அனுபவிப்பார்கள் என்றுமாம் –
ப்ரஹ்மாவால் ஒரு ருத்ரன் அலைந்து கொடு கிடக்க அது தீர்த்தார் ஆர் –
பண்-இத்யாதி -ஒத்துச் சொல்லா நிற்க தலை அறுத்த படி -மூலை படியே திரிந்தார் பாதகி யானவாறே முழுகித் திரியும் படி —
அமரர் தம்-போகத்தால் பூமி யாள்வார் -விண்ணுளாரிலும் சீரியர் என்றுமாம் –
(யே வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -எவன் பிரமனுக்கு வேதம் ஓதுவிக்கிறானோ –
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாமங்குஷ்ட்ட நகாக் க்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாத நபராத்ஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாபம் ஆவிஷ்ட கபாலித்தவம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாத குலிதோ பூத்வா சரம் தீர்த்தாநி பூதலே
ததோஹம் கதவான் தேவீ ஹிமவந்தம் சிலோச்சயம்
தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் ப்ராயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகா க்ரேண விதாரிதம்
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா
விஷ்ணு ப்ரஸாதாத் ஸூஸ் ரோணி கபாலம் தத ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –மத்ஸ்ய புராணம் -182-
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் -திருச்சந்த -113-)
——————————————————————–
ப்ரஹ்மாவுக்கு வந்த அநர்த்தத்தைப் பரிஹரித்து ரஷித்த அளவன்றிக்கே
லோக குருவுமாய் பிதாவுமான அந்த ப்ரஹ்மாவின் தலையை அறுத்து சாப உபஹதனாய் கையும் கபாலமுமாய் இரந்து உண்டு திரிந்த ருத்ரன் அனர்த்தத்தை(உலகு ஏழும் சென்று திரியும் பெரியன் -பிஷாண்டார் கோயில் )
பரிஹரித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –
ஸ்வரத்திலே நோக்காய் ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருக்கிற வேதத்தை தரித்து இருந்துள்ள ப்ரஹ்மாவினுடைய
தலையை -வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸீரோ மாயா -என்கிறபடியே -அறுக்க -அவன் கபாலீ தவம் பவிஷ்யஸி -என்று
அநந்தரம் சபிக்க -தத் சாப உபஹதனாய்க் கொண்டு அவன் தலை ஒட்டாலே நெடும் காலம் இரந்து திரிந்தவனாய் –
ப்ராயச்சித்தி என்னும் இடம் தோற்ற வெளுத்த பூணூலையும் மார்விலே இட்டு விநீத வேஷனுமாய் இருக்கிற ருத்ரனுடைய
ப்ரஹ்மஹத்தி ரூபமான பாபம் விட்டு நீங்கும் படியாக -நகாக்ரேண விதாரிதம் -என்கிறபடியே திரு யுகிராலே கீறி
மாம்சளமான ரக்த ஜலத்தை அபகரித்த திருமேனியை யுடைய சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நித்ய ஸூரி போகமான பரம பத ஐஸ்வர்யத்தோடே கூட பூமி உப லஷித்தமான லீலா விபூதியையும் ஸ்வ அதீனமாக நிர்வஹிக்குமவர்கள்–
———————————————————————————-
(இந்திரிய ஜெயம் -ஜீவ பர ஆத்ம ஞானம் -இரண்டும் துர்லபம் -இவையும் கிட்டும் )
இந்த்ரியங்களினுடைய போகத்தைச் செறுத்து–விஷயத்தினுடைய சந்நிதியில் நில்லாது பரிஹரித்து
மெய்யான பக்தியை யுடையவர்கள் அவனைக் காண்பர் என்கிறார் –
விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தே ஹிந–ரஸ வர்ஜம் ரஸோப் யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -ஸ்ரீ கீதை -2-59-
(விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷-நான்கு சம்ஹிதைகள் சொல்லிய பின்பு அருளிச் செய்த ஸ்லோகம்
நிராஹாரஸ்ய -நிர் ஆஹாரஸ்ய -விஷயங்களில் நின்றும்
தேஹிந–இந்திரியங்களை இழுத்த -தேஹம் உடைய -ஜீவனுக்கு
விஷயா -விஷயங்கள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் -நிறம் ரசம் சுவை கந்தம் மணம் –
ரஸவர்ஜம் -அவற்றில் ஆசை தவிர –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
விநிவர்தந்தே -நீங்கு கின்றன-ஆசை மாத்ரம் நீங்குகிறது இல்லை
அஸ்ய -இந்த ஞான யோக நிஷ்டனுக்கு
ரஸ அபி -இவ் வாசையும்
பரம் -விஷயங்களைக் காட்டிலும் ஸூகமாய் இருக்கையாலே மேலான ஆத்ம ஸ்வரூபத்தை
த்ருஷ்ட்வா நிவர்ததே–கண்டவுடனே நீங்குகிறது)
இந்திரியங்களை ஜெயித்து சம்யக் ஞானத்தை யுடையவர்களாய் -அவனை ஆஸ்ரயிக்கப் பார்க்கல்
அல்லது அவன் திருவடிகளைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ் ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந் நாகம் காத்தான் கழல் —–47–
பதவுரை
மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ள படி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–தும்பிக்கை யுடன் கூடிய கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்-மதித்த யானைகளை தண்ணீரிலே செறுக்குமா போலே இந்த்ரியங்களினுடைய போகத்தை குறுக்கி
சேரி திரியாமல் -தெருவில் திரியில் கொள்ளும் இறே யானை -அப்படி விஷயத்தின் யுடைய சந்நிதியில் திரியாமல் –
செந்நிறீஇ –செவ்விதாக நிறுத்தி -பதார்த்தங்களில் போகாமல் ப்ரத்யக் (ஆத்ம)வஸ்து விஷயம் ஆக்கி –
கூரிய-மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே–விஹித கர்மங்களைப் பாலாபி சந்தி ரஹிதமாக அனுஷ்ட்டித்து-
ஷீண பாபராய் -ஆத்ம யாதாம்ய ஞானம் யுண்டாய் -ஈஸ்வர பாரதந்தர்யம் என்னும் இடம்
உபாசனம் த்ருவா ஸ்ம்ருதி-தரிசன சாமானாகாரதா ப்ரத்யக்ஷதா பத்தி –விஸதே தத் அநந்தரம்-18-55- –என்று சொல்லுகிற பக்தியால் காண்பர்கள்-
(1-வர்ணாஸ்ரம கர்மங்களை பழத்தில் விருப்பம் இல்லாமல் அனுஷ்ட்டிக்க
2-பாபங்கள் போய் -தொலைந்து
3-மனத் தெளிவு ஏற்பட்டு இது இங்கே இல்லை –
4-பக்தி ஏற்பட்டு
5-ஆத்ம யாதாத்ம்ய ஞானம் -தேஹ விலக்ஷணன் அறிந்து
6-அத்யந்த பரதந்த்ர ஞானம்
அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆக வேண்டுமே
ஆறு படிகள் )
(பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷
ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் நான் எத்தகையவனோ -குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ
அத்தகைய என்னை முன் கூறிய பரபக்தியாலே உள்ளபடி அறிகிறான் –
என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பிறகு பரம பக்தியால் என்னைப் பரிபூர்ணமாக அடைகிறான் –
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும்
பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும்
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் –
ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு
என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை –
மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –)
மேலொரு நாள்-கைந்நாகம் காத்தான் கழல் —–பண்டு ஒரு நாள் ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பண்ணினவனுடைய திருவடிகளை
இத்தால் விரோதியான முதலையைப் போக்கி தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே இவர்களுடைய
பிரதிபந்தகங்களைப் போக்கிக் காட்டிக் கொடுக்கும் என்கிறது –
சேரி திரியாமல் -ஆள் நடையாடாத இடத்தே கொண்டு போய் —
கூரிய இத்யாதி –ஸூ பாஸ்ராயமாகவும் -நாதனாகவும்-உபாயமாகவும் –உபேயமாகவும் அனுசந்திக்கை –
கைந் நாகம்–பரமா பதம் ஆபன்ன(பெரிய ஆபத்தில் ஹரியை நினைத்தது )
(விஷயா வி நிவர்த்தந்தே நிரா ஹாரஸ்ய தேஹி ந
ரஸ வர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -ஸ்ரீ கீதை -2-59-
பக்த்யா மாம் அபி ஜா நாதி யாவான் யஸ் சா அஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்த்வதோ ஞாத்வா விஸதே தத் அனந்தரம் -ஸ்ரீ கீதை -18-55-
பரமாபதம் ஆபன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ச து நாக வர ஸ்ரீ மான் நாராயண பாராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –69-47-)
———————————————————————
இந்திரியங்களை ஜெயித்து சம்யக் ஞானத்தை யுடையவர்களாய் -அவனை ஆஸ்ரயிக்கப் பார்க்கல்
அல்லது அவன் திருவடிகளைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –
போக்யங்களான சப் தாதிகளான ஜலத்தைக் கண்டு கடுக மாற்றுதல் -நெடுக விடுதல் செய்யாதே நடுத்தரமான க்ரமத்திலே
சங்கோசிப்பித்து -களித்து கண்ட கண்ட விஷயங்களில் காடு பாய்ந்து திரிகிற ஸ்ரோத்ராதிகளான மத்த கஜங்கள் ஐந்தையும்
விஷயங்கள் ஆகிற குடி இருப்புகளில் பண்டு போலே கயிறு உருவி விட்டு சஞ்சரியாத படியாக ப்ரதக் விஷய ப்ரவணமாம் படி
செவ்வே நிறுத்தி அநபி சம்ஹித பலமாக அனுஷ்டித்த சத் கர்மத்தால் தெளிந்த மனஸ் ஸூ தளமாக முளைத்து
ஸ்வரூப யாதாம்யாத்தை யதாவாக தரிசிக்கும் படி அதி ஸூஷ்மமாக த்யேய விஷயத்தை ப்ரத்யக்ஷமாக(தர்சன சாமானாதி காரம் -பக்தி ரூபா பன்ன ஞானத்தால் )
க்ரஹிக்கையாலே பரமார்த்தமாய் இருக்கிற பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவனை உள்ளபடி உணர
ஷமரானவர்கள் பண்டு ஒரு நாளிலே அடிமை செய்ய வேண்டும் -என்னும் அபி நிவேசத்தாலே புஷ்பாசயார்த்தமாக
ஒரு பொய்கை யிலே புக்குத் துதிக்கை முழுத்தும் படி முதலையாலே இடர் பட்ட ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
விரோதியைப் போக்கி அடிமை கொண்டு ரஷித்த சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கண்ட அனுபவிக்கப் பெறுவார்கள் –
(யானைக்கும் இந்திரியங்களுக்கும் ஒப்பிட்டு வியாக்யானம்)
————————————————————————————————————
இப்படி இந்திரிய ஜெயம் பண்ணி நாம் பெறுகை யாவது என் -என்று தம்முடைய திரு உள்ளம் பயப்பட
எளிதாகப் பற்றலாம் -நீ பயப்பட வேண்டாம் -என்கிறார் -( மகிழ்ந்து மருவு -உகந்து அனுபவிப்பாய் -சாதனம் அவதனதே -அவனே திருவடியை தலையிலே வைக்க வர தட்டி விடாமல் அனுபவிக்க வேண்டும் – -அக்கார அடிசிலை அனுபவிப்பதே நம் கர்தவ்யம் )
நமக்கு இவ் வரும் தொழில்களிலே இழிய வேண்டா -தானே வந்து தன்னைத் தரும் ஸ்வபாவன் அன்றோ என்று
அவன் படியை அனுசந்தித்து -நெஞ்சே நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார்–என்கிறார் —
கழலொன்று எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–
பதவுரை
ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து(நமுசி யுடைய ஒரு காலை கையால் எடுத்து சுழற்றி என்றுமாம் )
ஓர் கை மேல்–மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலை யுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.
கழலொன்று-நமுசியினுடைய காலை –
கழலொன்று எடுத்தொரு கை சுற்றி–நமுசியுடைய ஒரு காலை எடுத்து கையாலே சுற்றி என்னவுமாம் –
அன்றியே பூமி அளக்க என்று தன்னுடைய ஒரு திருவடி மலரை எடுத்த அவசரத்திலே (வேகமாக அர்த்தம் இல்லை -சந்தர்ப்பத்திலே என்றவாறு )நமுசியை ஒரு கையாலே சுற்றி என்னவுமாம்
யோர் கை மேல்-சுழலும் -சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான்–ஒரு திருக் கை மலரில் அனுகூல பிரதிகூலரோடு வாசியற அழலா நின்ற செரு உடைத்தான
திரு வாழியை ஏந்தினவனுடைய சேவடிக்கே செல்ல-ஆழி நெஞ்சே மகிழ்ந்து —மருவு —-உகந்து உகந்து அனுபவி -(வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பகவத் பிராப்தி மூன்றையும் சொல்லுவது போல் இங்கும் )
கழல் இத்யாதி -அளந்தபடி
ஆழி நெஞ்சே -உனக்கு உபதேசிக்க வேண்டா விறே-
சேவடி தானே இருந்த இடத்தில் வந்தால் -இறாவாமையே வேண்டுவது –(திருக் கமல பாதம் வந்து -வந்த பின்பு தடுக்காமல் இருப்பதே வேண்டுவது )
(என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டுஅள வாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ வச்சோ வேங்கட வாணனே அச்சோ வச்சோ–-பெரியாழ்வார் திருமொழி —1-8-8-
அத்வேஷமே -விலக்காமையே -சேவடிக்குச் செல்லுகை யாகும் -அவனே நம்மை தீண்டி வரும் பொழுது உகந்து உகந்து அனுபவிப்பாயாக)
————————————————————————-
நமக்கு (இந்திரிய ஜய )இவ் வரும் தொழில்களிலே இழிய வேண்டா -தானே வந்து தன்னைத் தரும் ஸ்வபாவன் அன்றோ என்று
அவன் படியை அனுசந்தித்து -நெஞ்சே நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார்–என்கிறார் —
ஒரு திருவடியை ஊர்த்வ லோகங்களில் செல்ல வளர்த்து -ஒரு திருக் கையாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகளைச் சுற்றி எறிந்து
மற்று ஒரு திருக் கையின் மேலே -வயிறு மறுகிப் பரி பிரமிக்கிற அனுகூலரான தேவர்களும் பிரதிகூலரான அஸூரர்களும்
நடுங்கும் படிக்கு ஈடாக பிரதி பக்ஷத்தின் மேலே அழலையும் உமிழ்கிற யுத்த சாதனமான திருவாழியைத் தரித்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரிதர் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகளிலே கிட்டும் படி அளவு–
அளவுடைய நெஞ்சே -அது தேவை யாகாத படி -(அது உபாய கோஷ்ட்டியில் சேர்க்காமல் ப்ராப்ய கோஷ்டியாக செய்ய வேண்டுமே )மகிழ்வதும் செய் –
(ஆழி எழ சங்கும் வில்லும் எழ –உலகம் கொண்டவாறே -முன்னாலே பரிகரங்கள் மேலே வந்தனவே -ஆகவே இங்கும் ஆழி )
ப்ரீதி பூர்வகமாக வாசனை பண்ணு -என்றபடி -(பஜதாம் புத்தி பூர்வகம் -அனுபவிக்க ருசி -போஜனத்துக்கு ஷூத்து பசி போல் )
சேவடி -சிவந்த அடி -என்றுமாம் –
—————————————————————————————————–
(யஸ்ய அனுக்ரஹம் இச்சாமி -அவன் சொத்தைப் பிடுங்கி -வைராக்யம் வர வர தானே அவனை அனுபவிக்கலாம்
கருட கதி-தை மாத உத்சவம் காலையிலே -வலிமையான சிறகு -ஒய் சாவதான -மஸ்தக கதி இவை இரண்டும்
மற்ற ஐந்து -சர்ப்ப -ரிஷப ஸிம்ஹ இத்யாதி கதிகள் -நம்பெருமாள் நடை அழகிலே காணலாமே )
(ஆத்மா எடுத்த சரீரத்துக்குத் தக்க தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர யோனிகள்-இது அறிந்தால் தானே வைராக்யம் வரும் )
இப்படி இராதார்க்கு அவனைக் கிடையாது என்றும் பின்னையும் அதனுடைய (அவனை அடைவதிலும் வைராக்யம் வருவதிலும் )அருமை சொல்லுகிறது –
பிரகிருதி ப்ராக்ருதங்களிலே அருசியும் -எம்பெருமானைக் காண்கையிலே ருசியும் யுடையார்க்கு
எளிதாகக் காணலாம் என்கிறது -பொய்ந்நின்ற –இத்யாதி —
எல்லாம் செய்தாலும் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே விரக்தி பிறந்து அவனை
ஆஸ்ரயிக்கப் பார்க்க அல்லது அவனைக் காண முடியாது -என்கிறார்
மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–
பதவுரை
மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸை யுடைய அழகிய பெரிய திரு வபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.
மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை-நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் –அலகானது(-விதையானது )-
கோடி ஸ்தானத்திலும் நின்று காணி ஸ்தானத்திலும் நிற்குமா போலே இவ் வாத்மாவானது
தேவ சரீரத்தில் புகுவது திர்யக் சரீரத்தில் புகுவதாய் மாறி மாறி வருகிற பல யாக்கையை நெகிழ்ந்து போம் படியாகப் பண்ணுவார்க்கு அல்லால்
முகிழ் விரிந்த-சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்-ஆதி காண்பார்க்கும் அரிது —
விகசிதமாய் இருந்த தேஜஸைப் போலே தோன்றுமதாய் -ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேகத்தை யுடையனாய் –
(கிரீட சூட ரத்ன –ஆதி ராஜ்ய ஜல்பிதா -ரெங்கராஜ ஸ்தவம் )எனக்கு காரணமாய் இருக்கிறவனை காணுமவர்களுக்கு அரிது –
பிரகிருதி ப்ராக்ருதங்களிலே அருசியும் -எம்பெருமானைக் காண்கையிலே ருசியும் யுடையார்க்கு எளிதாகக் காணலாம் என்கிறது -பொய்ந்நின்ற –இத்யாதி –(இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்பதே வைராக்யம் )
மகிழ் இத்யாதி -கர்ம அனுகுணமாக சரீரங்கள் தோறும் நுழைகை -யாதானும் ஓர் ஆக்கை –(திரு விருத்தம் -95)
முகிழ் விரிந்த சோதி -செவ்விப் படிக் கோலம் (இரண்டாம் திருவந்தாதி )-
எம்மாதி –(காரணமாக இருப்பதாலே ரக்ஷகன் )ப்ராபகனை – காண்பார்க்கும் -கேட்ப்பார்க்கும் அரிது(கேட்கவும் புத்தி போகாதே வைராக்யம் இல்லாமல் இருந்தால் )
இப்படி ஆஸ்ரயிப் பார்க்கில் அல்லது ப்ரக்ருதியை உகப்பார்க்கு முகம் கொடுக்கும் இதர புருஷன் அல்லன் -(புல்கு பற்று அற்றே -பற்று அற்றே புல்க வேண்டும் -பரித்யஜ்ய -விட்டே -வ்ரஜ பற்ற வேண்டும் )
ஸ்ரீமத்பகவத்கீதா ஸாரம்:கீதாஸாரம்:ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-1)
ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாராயண: பரம் ப்ரஹ்ம கீதாஶாஸ்த்ரே ஸமீரித:
ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும்,
இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதாஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப்பட்டுள்ளான-
(படு நா ஏக வராடிகா இவ க்ல்ப்தா ஸ்தலயோ கா கணி கா ஸூ வர்ண கோட்யோ
பவ மோக்ஷ ணயோ த்வயா ஏவ ஐந்து க்ரியதே ரெங்க நிதே த்வம் ஏவ பாஹி –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–88-
எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகில் சர்வ முக்தி பிரசங்கமாய் லீலா விபூதி விச்சேதம் வாராதோ என்கிற
சங்கையில் நிராங்குச ஸ்வா தந்தர்யத்தாலே வாராது என்று பரிஹாரம் என்று திரு உள்ளம் பற்றி
சமர்த்தனாய் ஸ்வ தந்திரனாய் இருக்கும் ஒரு ராஜா தன் ராஜ்யத்தில் ஒரு பலகறையை ஸ்வல்ப பரிமாணமான
ஸூவர்ண ஸ்தானத்தில் யாக்கி அத்தாலே சில நாள் கிரய விக்ரய ரூப கார்யம் செல்லா நிற்க –
பின்பு ஒரு காலத்திலேயே அத்தையே ஸூவர்ண கோடி ஸ்தானத்தில் ஆக்கிச் செலுத்துமா போலே
ஒரு சேதனனை தேவரும் ஸ்வ தந்தரராய் சில நாள் சம்ஸ்பரிப்பித்து-
பின்பு ஒரு கால் கர்ம ஞான பக்தி பிரபத்தி இத்யாதி வியாஜங்களை உண்டாக்கி முக்தனாம் படி பண்ணுகிறது
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி ––ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –25-
திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –)
—————————————————————-
எல்லாம் செய்தாலும் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே விரக்தி பிறந்து அவனை
ஆஸ்ரயிக்கப் பார்க்க அல்லது அவனைக் காண முடியாது -என்கிறார்
கணிதத்தில் நிபுணனாலே வைக்கப் பட்டதொரு மகிழ் அலகு காணி ஸ்தானத்திலும் கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்குமா போலே -பகவத் சங்கல்பத்தாலே -கர்ம அனுகுணமாக உச்சாவச ரூபேண (உயர்ந்த தாழ்ந்த சரீரங்கள் )மாறி மாறி
வரக் கடவ ப்ரஹ்மாதி பீபிலி காந்தமாக பலவகைப் பட்ட சரீரங்கள் தன்னடையே விட்டு நீங்கும் படியாக
ஞான பக்தி வைராக்ய சம்பாதன முகேன யத்னம் பண்ணுமவர்களுக்கு அல்லது விகசித ஸ்வரூபமான
தேஜஸைப் போலே தோற்றுகிற தேஜஸை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகத்தை யுடையனாய் -எல்லார்க்கும் என்னுடையவன் என்று முறை சொல்லிப் பற்றலாம் படி
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் -கேவலம் காண வேணும் என்று இருப்பார்க்கும் அரியனாய் இருக்கும் –
———————————————————————–
(உலகு எல்லாம் ஆசை வளர்க்க -தப்பாக -எண்ணுகிறோம் இவை வைராக்யம் வளர்க்கவே அல்பமாகவும் அஸ்திரமாகவும் உள்ளன
இவற்றுக்கு மாற்று பகவத் அனுபவம் -ஸ்திர அநந்தம் அன்றோ
வாமன த்ரிவிக்ரமன் -அபேஷா நிரபேஷமாக அளந்தானே
ஆசா லேசம் இருந்தாலே கிட்டலாம்
தோஷம் இருந்தாலும் விலக்காமை -அத்வேஷம் இருந்தால் ரக்ஷிப்பான்
மஹா பலியே பெற்றானே -கைமுதிக நியாயம் )
இந்திரியங்களை விஷயங்களில் போகாமல் காத்து அவன் பக்கலிலே ஸ்நேஹிக்கில் காண எளிது -என்கிறார் –
இதர விஷய சங்கம் அற்று ஸ்நேஹ புரஸ் சரமாக ஆஸ்ரயிக்குமவர்களுக்கு அவனைக் காணச் சால எளிது -என்கிறார் –
அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது -50-
பதவுரை
அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட(ஆய்ந்து ஆராய்ந்து -காய் கறிகளை ஆய்வது ஆராய்ந்தே பண்ண வேண்டும் )
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.
அரிய புலன் ஐந்தடக்கி –ஒரு செய்யிலே பாயும் நீர் இரண்டு செய்யிலே பாய்ந்தால் இரண்டு செய்க்கும் போராது ஒழியும் இறே –
சர்வேஸ்வரனை இச்சிக்கக் கடவவான இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி -அரிய-என்றது-
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –பிராதி கூல்யமான வாயுவை நியமிக்க அரிது ஆனால்
போலே மனசை நியமிக்க அரிது என்று அர்ஜுனன் சொன்னபடியே இருக்கை –
சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷
மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் -அர்ஜுனன்-நினைக்கிறேன்
ஆய்மலர் கொண்டு –செவ்விப் பூக்களைக் கொண்டு
ஆர்வம்-புரிய பரிசினால் –ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே
புல்கில் -அணையில் –
பெரியனாய்-மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்-ஏற்றானைக் காண்பது எளிது —
உதாரமான கையைக் கொண்டு நீர் ஏற்றவனைக் காண்கை எளிது –புல்கப் பெறில்-பெரியனாய் -ஐஸ்வர்யமும் உதார குணமும் –
வண கை -கொடுத்து வளர்ந்த கை – நீர் ஏற்றானைக் காண்பது எளிது -அப்ரதி ஷேதம் யுடையார்க்கு அர்த்தியாய் வரும் என்றவாறு –
(சஞ்சலம் ஹி மனஸ் க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யார்ஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ் கரம் –ஸ்ரீ கீதை -6-34-
விலக்காமையே பற்றாசாகக் கொண்டு மஹாபலியிடம் யாசகனாய் வந்தவன்
அரிய புலன் ஐந்து அடக்கி
ஆய் மலர் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால் புல்கில் எளியனாவான் என்பதைச் சொல்லவும் வேணுமோ -)
————————————————————————
இதர விஷய சங்கம் அற்று ஸ்நேஹ புரஸ் சரமாக ஆஸ்ரயிக்குமவர்களுக்கு அவனைக் காணச் சால எளிது -என்கிறார் –
நியமிக்க அரிதான ஸ்ரோத்ராதி ஞான இந்திரியாதிகள் ஐந்தையும் இதர விஷயங்களில் போகாத படி நியமித்து
அங்குத்தைக்கு யோக்யமாம் படி மயிர் புழு அறச் சோதித்த செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு
ஸ்நேஹ உத்தரமான பிரகாரத்தாலே -அபிமத விஷயத்தை அணைக்குமா போலே போக ரூபமாக ஆஸ்ரயிக்கில்-
(ஈஸ்வரோஹம் )ஈஸ்வரனிலும் காட்டில் தன்னைப் பெருக்க நினைத்து இருக்குமவனாய் அர்த்திகளுக்கு கொடுக்கும்
கொடையில் ஒன்றும் மாறாமல் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவன் -என்று தன் வேறுபாடு தோற்ற வீற்று இருந்த
மஹா பலி பக்கல் கொடுக்கக் கொடுக்க பூரிக்கிற அழகிய திருக் கையாலே தான் அர்த்தியாய் சென்று
நீரை ஏற்று மண் கொண்டவனைக் கண்டு அனுபவிக்கை சால எளிதாய் இருக்கும்
————————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –