Archive for April, 2015

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -201-250—மும்மத விளக்கம் —

April 17, 2015

அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா  சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22
குரூர் குருதாமோ தாம சத்யஸ் சத்ய பராக்ரம
நிமிஷோ அநிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ -23
அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீ மான்   நயாயோ நேதா ச்மரணீ
சஹச்ர மூர்த்தா விச்வாத்மா சஹச்ர ராஷஸ் சஹச்ர பாத் –24
ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25
ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா  விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ்  சாத்தூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26
அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-

————————————————————————————-

நரசிம்ஹ அவதாரம் ——–200-210——11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ————–247–271—–25 திரு நாமங்கள் –

———————————————————————-

201-சர்வத்ருக்-
நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

202-சிம்ஹ –
மஹா நரசிம்ஹ ஸ்வரூபி  -ஸ்ரீ பராசர பட்டர் –

நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————–

203-சந்தாதா –
பிரகலாதன் முதலிய பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்த்து வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளை வினைப் பயங்களுடன் சேர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரஜைகளை நன்றாகத் தரிப்பவர் -போஷிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————-

204-சந்திமான் –
அவர்களுக்குத் தமது சேர்க்கை எக்காலமும் நீங்காமல் இருக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வினைப்பயன்களை அனுபவிப்பவரும் தாமாகவே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸூக்ரீவன் விபீஷணன் -முதலியவர்களுடன் உடன்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

205-ஸ்திர-
கூடியிருக்கையில் அபசாரங்கள் செய்தாலும் அன்பு  மாறாமல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் ஒரே தன்மையுடன் மாறுபாடு இல்லாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எப்பொழுதும் நிலையாக உள்ளவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————–

206-அஜ –
தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

207-துர்மர்ஷண-
பகைவர்களால் தாங்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அசுரர்களால் அடக்குவதற்கு முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எதிர்க்க முடியாதவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

208-சாஸ்தா –
இப்படி விரோதிகளை நன்கு தண்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதம் முதலியவற்றால் கட்டளையிட்டு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————

209- விஸ்ருதாத்மா –
யாவராலும் வியந்து கேட்க்கத்  தக்க ஸ்ரீ நரசிம்ஹ திருவவதார சரித்ரத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதத்தில் விசேஷமாகக் கூறப்பட்ட சத்யம் ஞானம் முதலிய லஷணம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

புகழ் பெற்ற ஸ்வரூபம் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

210-ஸூ ராரிஹா –
தேவர்களுக்கு விரோதியான ஹிரண்யன் மார்பைப் பிளந்து கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கு விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————–

211-குருர் குருதம-
மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால் ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

212-தாம –
பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும் கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

213-சத்ய –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத்   தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

214-சத்ய பராக்ரம-
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்தியவசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

215-நிமிஷ –
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் -அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

216-அநிமிஷ-
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம  ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில் இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

217-ஸ்ரக்வீ-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

218-வாசஸ்பதி –
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

219-உதாரதீ –
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர்  -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் -வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் -உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

220-அக்ரணீ-
பக்தர்களை உயர்பதம் ஆகிய மோஷத்திற்கு அழைத்துச் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முமுஷூக்களை மேலான பதத்துக்கு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

முதலில் நடத்துபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

221- க்ராமணீ-
அந்த பரமபதத்தில் நித்ய ஸூரிகள் கூட்டத்தை நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகள் கூட்டத்தை -சமூஹத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

உயிரினங்களின் கூட்டத்தை நடத்த்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

222-ஸ்ரீ மான் –
பரத்வ சின்னமான தாமரைக் கண்களை மத்ஸ்ய திருவவதாரத்திலும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஒளியுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் ஸ்ரீ லஷ்மியுடன் கூடியிருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

223- நியாய –
பக்தர்களுக்குத் தவறு வாராமல் இருக்கும்படி பொருத்தமாக இருப்பதைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரமாணங்களுக்கு உதவியான தர்க்கமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நிறைந்த லாபம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————-

224-நேதா –
பக்தர்கள் இட்ட வேலையைச் செய்பவர் -நிர்வகிக்கும் குணமுடையவர் –
கடலில் மூழ்கி மஹாத்மாக்களை மீட்பவர் எனபது பொருத்தமே அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக யந்திரத்தை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அவரவர்க்கு உரிய பலன்களைத் தருபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

225-சமீரண-
பக்தர்கள் விரும்பத்தக்க செயல்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வாயு ரூபியாக அனைத்தையும்  அசைவிப்பவர்  –ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு ஸூகத்தைத் தருபவர் -ஸ்ரீ லஷ்மி தேவையைப் போற்றும் சப்தத்திற்கு விஷயமாக இருப்பவர் –
அனைத்தையும் நன்றாகத் தூண்டுபவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

226-சஹஸ்ரமூர்த்தா –
ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் -ஞானத்தின் வடிவமான மத்ஸ்யாவதாரத்தில் வெளிப்படுத்தப் பட்டவையும்
புருஷ ஸூக்தம் முதலிய பர வித்யைகளில் கூறப் பட்டவையுமான சஹஸ்ரமூர்த்தா முதலிய திரு நாமங்கள் கூறப் படுகின்றன –
ஆயிரம் தலைகளை உடையவர் -தலை எனபது கண் பாதம் ஞானம் செயல்கள் உபகரணங்கள் முதலிய வற்றையும் குறிக்கும் –
ஆயிரம் -எண்ணற்றவை என்ற பொருளில் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் தலைகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————-

227-விச்வாத்மா
ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————-

228-சஹஸ்ராஷா-
ஆயிரக் கணக்கான கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கண்களை  உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான கண்கள் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

229-சஹஸ்ரபாத் –
ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கால்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் –

———————————————————————————–

230-ஆவர்த்தன –
ஏற்றச் சாலைப் போல் சாம்சாரத்தைத் திருப்புவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்ரத்தை திருப்பும் இயல்வுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகளில் உள்ள நீரில் சூழல்களை உண்டாக்குபவர் -எல்லா இடத்திலும் இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

231-நிவ்ருத்தாத்மா –
ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

232-சம்வ்ருத –
தாமஸ குணத்தினால் அறிவு மழுங்கிய வர்களுக்கு மறைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவித்யையால் மறைக்கப் பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

நற் குணங்களுடன் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————–

233-சம்ப்ரமர்த்த-
தம்மை உபாசிப்பவர்களுக்கு மாயையை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் சூர்யன் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை நன்கு அழிப்பவர் –  ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

234-அஹஸ் சம்வர்த்தக –
பகல் முதலிய கால சக்ரத்தை உருட்டுபவர் -முக் காலமானது லீலைக்கு உபகரணம் -ஷட்பாவ
விகாரம் -பிரகிருதி புருஷன் சேர்ந்து -உழன்று பிரிந்து -இருக்க காரணம் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் சூர்யன் –ஸ்ரீ சங்கரர் –

நாள்களை நடத்துபவர் -பக்தர்களை கைவிடாதவர் -உலகச் சுழற்சிக்கு முழு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————-

235-வஹ்நி-
தேச வடிவில் உலகத் தாங்குபவர் -பரமபதம் -முதன்மை அதில் -லீலா விபூதி -அடுத்து –
இங்கே இது என்கிற ஞானத்திற்கு காரணம் -இவை பத்தர் முக்தர் நித்யர் மூவகைச் சேதனர்க்கும் அவன் தந்ததே -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹவிஸ் ஸூக்களைத் தாங்கும் அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகை நடத்துபவர் –  ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————-

236-அநில-
இப்படி யாவரையும் உய்விப்பவர் -இதனுடைய காலமாத்ரமே காற்று என்று பிரசித்தமானது -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதி யானவர் -ஒன்றையும் ஆதாரமாகக் கொள்ளாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தனக்கு அடைக்கலம் ஒன்றும் தேவை இல்லாதவர் -தமக்கு பூமி ஆதாரமாக இல்லாமல் தாமே பூமிக்கு ஆதாரமானவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————–

237-தரணீதர-
அனைத்தையும் தாங்கும் பூமியையும் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதிசேஷன் வடிவில் பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் -சிறந்த கோவர்த்தன மலையைத் தாங்குபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

238-ஸூ ப்ரஸாத-
தம்மை அடைந்தவர்களுக்கு அருள் புரிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபகாரம் செய்த சிசுபாலன் முதலியோர்க்கும் மோஷம் அளிப்பவர் -மங்களகரமான அருளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

மங்கள கரமான மோஷத்தை அளிப்பவர் -மங்கள கரமான அருள் புரிவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

239-பிரசன்நாத்மா-
அவாப்த சமஸ்த காமன் -விருப்பு வெறுப்புக்களால் கலக்கம் அற்ற தெளிந்த மனம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குறைவாளராயும்  -கருமி யாவும்  இருப்பவன் தானே ஆராதிப்பதற்கு அரியவன் –
ரஜோகுண தமோ குணங்களினால் கலங்காத மனம் உடையவர் -அருளை ஸ்வபாவமாக உடையவர் -அவாப்த சமஸ்த காமன் – ஸ்ரீ சத்ய சங்கரர்-

தெளிந்த மனம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

240-விஸ்வஸ்ருக்-
குணம் குற்றம் பாராமல் உயிர்கள் உய்வதைக் கருதி உலகைப் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத் தாங்குபவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

உலகில் துணிவுள்ளவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம்- ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

241-விஸ்வபுக்விபு-
உலகங்களை வியாபித்துக் காப்பவர் -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களாய் இருப்பவர் -இரண்டு  திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களைக் கொண்டு -பரவி – இருப்பவர் -இரண்டு  திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————

242-சத்கர்த்தா –
சத் புருஷர்களைப் பூஜிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்காரம் செய்பவர் -பூஜிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகுக்குக் கர்த்தா -துன்பம் முதலியன அற்றவன் -அனைத்து செயல்களையும் செய்பவன் –
அழிவில் விருப்பமுள்ள அசுரர்களை அழிப்பவன்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

243-சத்க்ருத –
ஈடுபாட்டுடன் கிஞ்சித் கரித்த சிறிய  பொருள்களையும் தம் மகிமைக்குத் தக்கவற்றைப் போலே ஏற்று மகிழ்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

பூஜிக்கப் படுபவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான செயல்களை உடையவர் -சத்க்ருதி -என்று பாடம் -பிரத்யும்னனாக கருதி என்பவளை மனைவியாக அடைந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————-

244-சாது –
அடியவர் விரும்பியபடி தூது சென்றும் தேர் ஒட்டியும் போன்ற வற்றைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நியாமமாக நடப்பவர் -எல்லாவற்றையும் சாதிப்பவர் -சாதனம் எதுவும் இல்லாமல் சாதிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மற்றவர்களின் கார்யங்களை சாதித்துக் கொடுப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

245-ஜஹ்நு –
அடியவர் அல்லாதவர்க்கு தம் மகிமையை மறைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர் -பக்தர் அல்லாதவரைக் கை விடுபவர் –
பக்தர்களை உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களைக் கைவிடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————

246- நாராயண –
உபநிஷத்துக்களில் சாகைகள் தோறும் ஒதப்படுகிற பரம்பொருளின் தனித் திரு நாமம் –
மிக ரஹசயமாகையால் விரித்துச் சொல்ல வில்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

நரர் -ஜீவர்களுக்கு பிரளயத்தில் ஆதாரமானவர் -நர -ஆத்மா -அதில் இருந்து உண்டான ஆகாசம் முதலியவை நாரங்கள் -அவற்றில் காரணமாக
வ்யாபிப்பவர் -அதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர் -பிரளய காலத்தில் ஜீவர்கள் சேருமிடமாய் இருப்பவர் -நரன் இடத்தில்
இருந்து யுண்டான தன்னார் -நாரம் -அத்தை இருப்பிடமாகக் கொண்டவர் நாராயணன் -மனு ஸ்ம்ருதி -நாராயணாய நம-
என்ற மந்த்ரமே  கோரமான சம்சார விஷத்தை யுடனே போக்க வல்லது -இதை நான் மிக உயர்ந்த குரலில் கையைத் தூக்கிக்
கூறுகிறேன் -முனிவர்களே பணிவுடன் கேளுங்கள் -என்று ஸ்ரீ நரசிம்ஹ புராணத்தில் கூறப் பட்டுள்ளது – -ஸ்ரீ சங்கரர் –

குணங்களுக்கு இருப்பிடமானவர் -தோஷங்களுக்கு இருப்பிடம் அல்லாதவர் -அழிவற்றவர் -அனுபவிக்கத் தக்கவர் -தோஷங்கள் அற்ற
வேதங்களால் அறியப்படுபவர் -ஞானத்திற்குப் புகளிடமானவர்  -முக்தர்கள் அடையும் இடமானவர்  -நாரங்களின் கூட்டங்களுக்கு
வணங்கத் தக்க புகலிடமானவர் -முக்ய ப்ரானனான வாயு தேவருக்கு புகலிடமானவர்-
நாரம் என்னும் ஜகத்துக்கு ஆச்ரயமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

247-நர –
சேதன அசேதன விபூதிகள் அழியாமல் இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மாறுதல் அற்றவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————-

248-அசங்க்யேய-
எண்ணில் அடங்காத சேதன அசேதனங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிடக் கூடிய நாம ரூப பேதங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

எண்ண முடியாத குணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————

249-அப்ரமேயாத்மா –
எண்ணில் அடங்காப் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் பரவியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூப தேக ஸ்வ பாவங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

250-விசிஷ்ட –
அவை எல்லாவற்றையும் விடத் தனிச் சிறப்பு மிக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேலானவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரமன் முதலியவர்களுக்கும் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -151-200–மும்மத விளக்கம் —

April 16, 2015

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16
உபேந்த்ரோ வாமன ப்ராம் ஸூ ர மோகஸ் ஸூ சி ரூர்ஜித
அதீந்த்ரஸ் சங்க்ரஹச் சர்கோ த்ருதாத்மா நியமோ யம –17
வேத்யோ வைத்யஸ் சதாயோகீ வீரஹா மாதவோ மது
அதீந்த்ரியோ மஹா மாயோ மஹோத் சாஹோ மஹா பல –18
மஹா புத்திர் மஹா வீர்யோ மஹா சக்திர் மஹாத் யுதி
அநிர்தேச்யவபுஸ் ஸ்ரீ மான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்–19
மஹேஷ் வாஸோ மஹீ பர்த்தா ஸ்ரீ நிவாசஸ் சதாம்கதி
அநிருத்தஸ் ஸூராநந்தோ கோவிந்தோ கோவிதாம்பதி–20-
மரீசிர் தமநோ ஹம்சஸ் ஸூ பர்ணோ புஜகோத்தம
ஹிரண்ய நாபஸ் ஸூ தபா பத்ம நாப ப்ரஜாபதி–21
அம்ருத்யுஸ் சர்வத்ருக் சிம்ஹஸ் சந்தாதா  சந்திமான் ஸ்திர
அஜோ துர்மர்ஷண்ஸ் சாஸ்தா விஸ்ருதாத்மா ஸூராரிஹா –22-

———————————————————————

விஷ்ணு —————-147-170——–24 திரு நாமங்கள்
ஷாட்குண்யம் ———–171-187———17 திரு நாமங்கள்
ஹம்சாவதாரம் ———-188-194———-7 திரு நாமங்கள்
பத்ம நாபன் ————195-199———-5 திரு நாமங்கள் –
நரசிம்ஹ அவதாரம் ——200-210———11 திரு நாமங்கள்

———————————————————————-

151-விஸ்வ யோநி –
அந்த இருவரையும் கொண்டு நடத்தப்படும் காரிய உலகு அனைத்துக்கும் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்தை ஆதாரமாக உடையவர் -உலக ரூபியாகவும் காரண ரூபியாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடன் மீது அமர்ந்து சஞ்சரிப்பவர் -காரணம் அற்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————-

152-புநர்வஸூ –
அந்த தேவர்கள் இடத்தில் அந்தர்யாமியாக வசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உடல்களில் மாறி மாறி ஜீவாத்மாவாக வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மீண்டும் மீண்டும் செல்வம் அளிபபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————

153-உபேந்திர –
பன்னிரண்டு ஆத்யர்களில் இந்தரனுக்கு இளையவராக திருவவதரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்தவர் -அல்லது -இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————-

154-வாமன –
இந்த்ரனைக் காக்க மகாபலியின் யாகத்தில் வாமனனாய்ச் சென்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மகாபலியிடம் யாசகனாய்ச் சென்றவர் -நன்கு துதிக்கத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –

பகைவர்களை நரகத்திற்கு அனுப்புவர் -அழகிய  வஸ்துக்களை அருள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————–

155-ப்ராம்ஸூ –
திரிவிக்ரம திருவவதாரம் செய்த போது எங்கும் பரந்தவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

மூ உலகங்களையும் அளந்த பொழுது உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

திருவிக்ரம ரூபத்தில் உயர்ந்தவராக இருப்பவர் -உயர்ந்த பிரகாசம் யுடையவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————–

156-அமோக –
இந்த்ரன் மகாபலி ஆகிய இருவருக்கும் பழுது படாத அனுக்ரஹம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வீண் போகாத செய்கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீணாகாத சங்கல்பத்தை -அல்லது -வார்த்தையை -யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————

157-ஸூசி –
இப்படிப் பட்ட உபகாரங்களுக்கு பிரதி  உபகாரம் எதிர்பாராத சுத்தி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை த்யானிப்பவர் -துதிப்பவர் -அர்ச்சிப்பவர்களை பரிசுத்தர் ஆக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பரிசுத்தமானவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————–

158-ஊர்ஜித-
நமுசி முதலிய பகைவர்களை அடக்கத் தக்க வலிமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிக்க வலிமை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆஹாரம் கொடுப்பவர்களுக்கு அது வியாபிக்க அருள் புரிபவர்  – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————

159-அதீந்திர –
இந்த்ரனுக்குத் தம்பியாக இருந்த போதும் ஆளுமையினாலும் அதற்குரிய செயல்களாலும் அவனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

இயற்கையாகவே ஞான பல ஐஸ்வர்யங்களை உடைமையால் இந்தரனுக்கு மேற்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்திரனைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————

160-சங்க்ரஹ-
பக்தர்களால் எளிதில் அடையப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளய காலத்தில் அனைவரையும் அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை ஏற்றுக் கொள்கிறவர் -சத்பாத்ரங்களை உண்டாக்குபவர்  -சிம்சுமார ரூபத்தில் சூரியன் முதலிய கிரஹங்களுக்கு
அடையும் இடமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————-

161-சர்க்க –
திரிவிக்ரமாவதாரத்தில் தம் திருவடித் தாமரைகளை எளிதில் பற்றும்படி தாமே அளிபபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டிக்கப் பட்ட பிரபஞ்ச ரூபத்தை உடையவர் -அல்லது சிருஷ்டி கர்த்தா –ஸ்ரீ சங்கரர் –

படைப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————–

162-த்ருதாத்மா –
இப்படி தன்னைத் தருவதனால் ஆத்மாக்களை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிறப்பு  முதலிய மாறுபாடு இன்றி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தைர்யமான மனம் உள்ளவர் -ஆத்மாக்களைத் தரிப்பவர் -ரிஷிகளின் மனங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————

163-நியம –
பகைவர்களான பலி முதலியவர்களை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர்க்கு உரிய அதிகாரங்களில் நியமிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நியமிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————-

164-யம –
அந்தர்யாமியாக இருந்து எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உள்ளே இருந்து அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

தனக்குக் கட்டளை இடுபவர் இல்லாதவர் –
அயமா என்று பாடம் கொண்டால் சுபங்களைத் தரும் விதிகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————-

165-வேத்ய –
இப்படி திருவவதரித்து புலன்களுக்கு எட்டாத மகிமைகளை எல்லாரும் எளிதில் அறியும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்களால் அறியத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர் –

அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————–

166-வைத்ய-
தம்மைச் சிந்திப்பவர்க்கு பிறப்பு இறப்பு முதலியவற்றைப் போக்கும் வகை யறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வித்யைகளையும் அறிந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலக வாழ்வு என்னும் நோயைத் தவிர்ப்பவர் –அனைத்து வித்யைகளாலும் அறியப்படுபவர் — ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————-

167-சதா யோகீ-
இப்படி பக்தர்களுடைய பிறப்பு இறப்பு அறுப்பதில் எப்போதும் ஊக்கம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் பிரகாசிக்கும் ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

கபிலர் முதலிய ரூபங்களினால் எப்போதும் யோகத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————

168-வீரஹா –
குதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————

169-மாதவ –
மா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் /த-த்யானம் -வ -யோகம் -இவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

அசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————-

170-மது –
பக்தர்களுக்குத் தேன் போல் இனியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தேன் போல் ப்ரீதியை உண்டாக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சுக வடிவாய் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————————

171-அதீந்த்ரிய –
புலன்களுக்கு எட்டாதவர் -இனி பரம் வ்யூஹம் விபவம் மூன்று வகை நிலைகளுக்கும் முக்யமான
ஆறு குணங்களைக் கூறுவதற்காக தேன் கடல் போன்ற பரமாத்ம ஸ்வரூபம் தெளிவிக்கப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —

சப்தம் முதலிய குணங்கள் இல்லாமையால் புலன்களுக்கு எட்டாதவர் -ஸ்ரீ சங்கரர் –

இந்திரியங்களுக்கு  எட்டாதவர் -பல இந்திரியங்களின் சக்தியுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————-

172- மஹாமாய-
தன்னைச் சரணம் அடையாதவர்களுக்கு திரை போல் ஸ்வரூபத்தை மறைக்கும் மாயையை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மாயை செய்பவர்களுக்கும் மாயையை உண்டாக்குவதால் யாராலும் கடக்க முடியாத மாயை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவளான லஷ்மியின் மணவாளன் -உயர்ந்த ஞானிகளால் பிரார்த்திக்கப் படுபவர் –
கபடம் இல்லாதவர் -உயர்ந்த இச்சை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————————————–

173-மஹோத்சாஹ-
எல்லாவற்றையும் படைப்பதாகிய ஈஸ்வர சக்தி மிகப் பெரிதாக இருப்பவர் -ஞான மயமாக இருந்த போதிலும் செயல் படாதவராய்-
சோம்பலினால் உதாசீனராய் இருப்பவர் என்று சாங்க்ய மதத்தில் கூறப்பட்ட ஈஸ்வரனை நிரசித்து ஐஸ்வர்யம் குணம் கூறப்படுகிறது –
ஸ்வா தந்த்ர்ய ரூபமான இந்த செயலால் -ஒருவரால் ஏவுதல் இல்லாமல் -தடையில்லாத சங்கல்ப்பத்தால் –
அதில் ஏக தேசத்தில் போகமாகவும்  சாதனமாகவும் பலவித உலகங்களை செய்ய வல்ல சக்தனாக இருந்தாலும்
முன் போலவே ஸ்வ பாவ நியமத்தையே மேற் கொள்கிறான் -அவனது இந்த சக்தியின் சிறிது அளவு மாத்ராமான அணிமை முதலிய
ஐஸ்வர்யமே பிரம்மா முதலியவர்களுக்கு அளவற்ற பெருமையை உண்டாக்கிக் கொண்டு விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —

உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலியவற்றில் ஊக்கத்தோடு இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞம் முதலியவைகளில் உத்சாஹம் உள்ளவர் -உலகைப் படைத்தல் முதலிய வற்றில் அதிக மகிழ்ச்சி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————————

174-மஹாபல-
வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும்  காற்றிலும்  மலைகளிலும்  பூமியிலும்  இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————-

175-மஹா புத்தி –
எக்காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக்க நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்ல்க்கனி போலே  தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்

ஞானிகள்  எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————-

176-மஹா வீர்ய –
பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் காரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————————————–

177-மஹா சக்தி –
தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————————

178-மஹாத்யுதி-
படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
சூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது
இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

—————————————————————————

179-அநிர்தேச்யவபு-
மேற் சொன்ன ஆறு குணங்களை உடையவர் ஆதலால் தமது திருமேனிக்கு உவமை இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தனக்குத் தானே பிரகாசிப்பதால் இது இப்படி என்று சுட்டிக் காட்ட முடியாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

இப்படிப்பட்டது என்று வர்ணிக்க முடியாத திருமேனி உடையவர் -பூத சம்பந்தம் இல்லாத திரு மேனி -உபமானம் இல்லாதவர் –
மன்மதனை உண்டாக்கியவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———————————————————————————-

180-ஸ்ரீ மான் –
அந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

———————————————————————————

181-அமேயாத்மா –
இவ்வாறு பல்வகைக் குணங்கள் நிரம்பிக் கடல் போல் இருப்பதால் அளவிட முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எவராலும் அறிய முடியாத ஞானம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -லஷ்மியால் அளவிடப்படும் ஆத்மாவை உடையவர் -என்பதனால் –
ஸ்ரீ மாநமேயாத்மா -என்று ஒரு திரு நாமமாகவும் கூறுவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————————–

182-மஹாத்ரித்ருத்-
பாற் கடல் கடைந்த போது மந்தர மலையைத் தாங்கியவர் -அதற்குத் தகுதியாகத் தம் விருப்பப்படி செயல்படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –

மந்தர கோவர்த்தன மலைகளைத் தாங்கியவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————–

183-மகேஷ்வாச-
சேது பந்தனம் ராவண வதம் போன்றவைகளில் மனம் கவரும் வகையில் பாணங்களை எய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மிகப் பெரிய வில்லை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரிய வில்லை உடையவர் -உயர்ந்த   இச்சையை உடையவர் -எங்கும் நிறைந்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————-

184-மஹீ பர்த்தா-
மிகவும் எளிதாக பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கடலில் முழுகிய பூமி தேவியைத் தாங்கியவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமி தேவிக்குக் கணவர் -விழாக்களுக்குத் தலைவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கும் மன்மதனுக்கும் பிரபு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————————————

185-ஸ்ரீ நிவாச –
பாற் கடல் கடைந்து பெற்ற ஸ்ரீ லஷ்மியை மார்பில் வைத்துச் சிறப்பித்தார் -ஸ்ரீ பராசர பட்டர் –

திரு மார்பில்,லஷ்மி எப்போதும் பிரியாமல் வசிக்கப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்மிடத்தில் ஸ்ரீ லஷ்மி வசிக்கப் பெற்றவர் -லஷ்மியை நடத்துபவர் -எல்லா இடத்திலும் வசிப்பவர் –
அனைத்தையும் மறைப்பவர் -தம் உடையாகக் கொள்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————–

186-சதாம் கதி
தமது விளையாட்டுச் செயல்களாலும் பக்தர்க்கு நன்மையே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வைதிகர்களான சாதுக்களுக்குப் புருஷார்த்த கிடைக்க சாதனம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தோடு கூடிய முக்தர்களுக்கு புகலிடமாக இருப்பவர் -துயரப்படுபவர்களும் ஞானிகளுக்கும்  புகலிடம்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————-

187-அநிருத்த-
அளவற்ற ஜீவ ராசிகளைக் காப்பாற்றுவதில்  தடையற்ற திவ்ய சேஷ்டிதமுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களிலும் எவராலும் தடுக்கப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எவராலும் தடுக்கப்பட முடியாதவர் -ஞானிகளுக்குத் தடையில்லாதவர் -முக்ய பிராணனின் பக்தர்களால் தத்தம் இதயத்தில்
கட்டுப்படுபவர் -வேதத்துக்கு விரோதமான ஆசாரம் உடையவர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————–

188-ஸூராநந்த –
ஆபத்தில் உதவி   செய்து தேவர்களை மகிழ்விப்பவர் -திருவவதாரங்களுக்கு மூலமான அநிருத்தருடைய
ஹம்சாவதாரம் கூறப்படுகிறது  –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நல்ல ஞானத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————–

189-கோவிந்த –
அத் தேவர்களின் துதி ஆகிய வாக்குகளைப் பெறுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மறைந்து போன பூமியை எடுத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமி வில் பசு ஸ்வர்க்கம் வேதம் ஆகியவற்றை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————-

190-கோவிதாம்பதி-
வேதங்களை அறிந்த ஞானிகளால் ஞானம் என்னும் யஜ்ஞத்தினால் ஆராதிக்கப் பெற்று அவர்களைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வாக்குகளை அறிந்தவர்களுக்கு விசேஷமாகத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை அறிந்தவர்களுக்கு பத்தி -நீர் வாழ்வானவற்றுக்குத் தலைவன் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————————

191-மரீசி –
மூடர்களுக்கும் தமது மாசற்ற ரூபத்தைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஒளி உள்ளவர்களுக்கும் ஒளியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

இருளை அழியச் செய்பவர் -நீருள்ள மேகங்களை அசையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

——————————————————————————————

192-தமந-
திவ்ய  தேஹ ஒளியினால் சம்சார தாபத்தை அடக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் கடைமைகளில் தவறுபவர்களை தண்டிக்கும் மனுவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்திரியக் கட்டுப்பாடு உள்ளவர்களை நடத்துபவர் -தமனாசுரனை அழித்தவர்-புலன்களை
அடக்கியவர்களுக்கு இனியவர் -விருப்பத்தை நிறைவேற்றும் மனமுடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————

193-ஹம்ஸ-
அழகாக நடப்பவர் – அழகிய புன்சிரிப்புள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

நானே அவன் என்று பாவிப்பவர்களுக்கு சம்சார பயத்தை அழிப்பவர் -எல்லா உடல்களிலும் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தோஷங்கள் அற்றவன் -சாரமானவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————————————————————————————–

194-ஸூபர்ண-
ஹம்சாவதாரத்தில் அழகிய சிறகுகளை உடையவர் -சம்சாரக் கடலினின்றும் கரை சேர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய சிறகுகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஆனந்தத்தை ஸ்வரூபமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

—————————————————————————-

195-புஜகோத்தம-
ஆதிசேஷனுக்கும் மேற்பட்ட தலைவராய் அவன் மீது சயனித்து இருப்பவர் -பத்மநாப அமரப்ரபு-என்று வ்யூஹத்தில் கடைசி அனிருத்தனான
பத்ம நாபன் கூறப்பட்டார் -இங்கு அவதாரத்தில் முதல்வரான பத்ம நாபர் கூறப்படுகிறார் புஜகோத்தமர் என்று -ஸ்ரீ பராசர பட்டர் –

பாம்புகளில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த பாம்பாகிய ஆதி சேஷனைப் படுக்கையாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————————–

196–ஹிரண்ய நாப –
அவரே அழகான நாபியை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தங்கள் போலே அழகிய நாபியை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹிரண்யாஸூரனை அழித்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———————————————————————————

197-ஸூ தபா –
திவ்ய ஞானம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நர நாராயண ரூபத்துடன் பத்ரிகாஸ்ரமத்தில் சிறந்த தவம் புரிபவர் -ஸ்ரீ சங்கரர் –

நான்முகனாகிய பிள்ளையைக் காப்பவர் -மங்களகரமான ஞானம் உடையவர் –
விருப்பமான சோம ரசத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————–

198-பத்ம நாப –
நாபியில் பத்மத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தாமரை போல் வட்டமான நாபியை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

———————————————————————————–

199-பிரஜாபதி –
நாபிக் கமலத்தில் பிறந்த பிரமன் முதலியவர்களுக்குத் தலைவர் –
இதை நைமித்திக சிருஷ்டி நைமித்திக பிரளயம் இவற்றைக் குறித்ததாகக் கொள்க -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளுக்குத் தந்தையானவர் -ஸ்ரீ சங்கரர் –

தன்னைத் துதிப்பவர்களை மகிழ்விப்பவர் -பிரஜைகளுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

——————————————————————————-

200-அம்ருத்யு-
நரசிம்ஹ அவதாரத்தில் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அழிவோ அதற்குக் காரணமோ இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்

அழிவில்லாதவர்-அழிவைத் தராதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -101-150–மும்மத விளக்கம் —

April 15, 2015

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11
வஸூர் வஸூம நாஸ்  சமாதமா சம்மிதஸ் சம
அமோக புண்டரீகாஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி –12
ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13
சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14
லோகாத்யஷஸ் ஸூ ராத்யஷோ தர்மாத்யஷ  க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுப்புஜ–15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

—————————————————–

பர வாஸூதேவன் —–1-122——–122 திரு நாமங்கள் –
சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்
விஷ்ணு ————-147-170——–24 திரு நாமங்கள்

———————————————————————–

101-அச்யுத –
தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்

தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————————-

102-வ்ருஷாகபி –
தர்மமே வடிவெடுத்த வராஹாவதாரம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்
தர்ம ரூபியாகவும் வராஹ ரூபியாகவும் இருப்பவர் -எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்மம் வ்ருஷம் எனப்படும் –

கம் -நீர் -அதில் இருந்த எடுத்தவர் ஆகையால் கபி -வராஹர் -வ்ருஷாகபி -தர்ம ஸ்வரூபரான வராஹர் -ஸ்ரீ சங்கரர்

தர்மத்தால் துன்பங்களைப் போக்குபவர் -அருளை வருஷிப்பவராய் -சுகத்தைப் பருகுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————————————-

103-அமேயாத்மா –
அடியவர்களுக்கு அருளும் திறத்தில் இவ்வளவு என்று அளவிட முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

இவ்வளவு என்று அளவிடமுடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்

முழுமையாக அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————————————————–

104-சர்வ யோக விநிஸ்ருத –
எல்லா உபாயங்களிளாலும் எளிதில் அடையத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாப் பற்றுக்களில் இருந்தும் வெளிப்பட்டவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும் பல யோகங்களால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லா யோகங்களும் வெளிவரக் காரணமாக இருப்பவர் -சாஸ்த்ரங்களில் சொல்லும்-உபாயங்களாலும்-
அவரவர்களுக்கு தோன்றும் உபாயங்களாலும் அறியப் படுபவர் -எளிதில் அடையக் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————

105- வஸூ –
அடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் -வசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-

எங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————–

106-வஸூமநா-
அடியவர்களை நிதி போல் நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

சிறந்த மனம் உள்ளவர் -விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் போன்றவற்றால் கலக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர்-

அடியவர்கள் அளிக்கும் நீரையும் ஸ்ய மந்தக மணியையும் சமமாக கருதுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————

107-சத்ய –
அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
அசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்

சத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————————-

108-சமாதமா –
அடியவர்களிடம் ஏற்றத் தாழ்வுகள் பாராமல் அனைவரையும் சமமாகக் கருதுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-
விருப்பு வெறுப்பு முதலியவற்றால் மாறாத மனம் உள்ளவர் –

எல்லா பூதங்களிடமும் சமமாக ஒரே ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

ஞானிகளுக்கு ஆத்மாவாக இருப்பவர் -லஷ்மி பிரம்மா யுடன் கூடியவர்
சாரமாய் லஷ்மியிடம் மனம் வைத்து இருப்பவர் -லஷ்மியின் மனத்தை தம்மிடம் வைத்து இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————

109-சம்மித
அடியவர்களுக்கு அடங்கி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாராலும் அளவுபடுத்தப் படுபவர் -அளவிடப் படாதவர் -அசம்மித -என்றும் பாடம் -ஸ்ரீ சங்கரர்-

பிரமாணங்களால் நன்கு அறியப் படுபவர் -மூ உலகங்களையும் அளந்தவர்
அசம்மித -என்ற பாடம் கொண்டு முழுமையாக எவராலும் அளவிட முடியாதவர் என்னவுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————–

110-சம –
அடியவர்களில் பழகினவர் -பழகாதவர் – ஆவல் அதிகம் உள்ளவர் – குறைவாக உள்ளவர்
போன்ற வேறுபாடுகளைப் பாராமல் ஒரே விதமான கௌரவம் வைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாக் காலங்களிலும் விகாரமற்று இருப்பவர் -அல்லது லஷ்மியோடே கூடி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

லஷ்மீ வேதங்கள் பிரமாணங்கள் இவைகளுடன் சேர்ந்து இருப்பவர்
அவர்களுக்குத் தகுதியான பலன்களைத் தருபவர் -எல்லா இடங்களிலும் எல்லா உருவங்களிலும் சமமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————-

111-அமோக –
தமது சம்பந்தம் வீண் போகாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

பூசிப்பவர் துதிப்பவர் நினைப்பவர்க்கு   வீண் போகாமல் எல்லாப் பலன்களையும் தருபவர் -ஸ்ரீ சங்கரர்-

படைப்பு முதலியவை வீண் போகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————-

112- புண்டரீகாஷ-
புண்டரீகம் எனப்படும் பரமபதத்தில் உள்ளவர்களுக்குக் கண் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -ஹ்ருதய புண்டரீகத்தில் பரவியிருப்பவர் -அல்லது அங்கு பார்க்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர்-

நரசிம்ஹ அவதாரத்தில் அக்னியை மூன்றாம் கண்ணாக யுடையவர் -தாமரை போன்ற
இரு கண்களை யுடையவர் -புண்டரீக முனிவருக்கு அருள் புரிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————————

113-வ்ருஷகர்மா –
நம் போன்றவர்களுக்கும் பெரும் பேற்றை அளிப்பதால் தர்ம ரூபமான செய்கையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

தர்ம ரூபமான செய்கையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

புண்ய கர்மங்களை யுடையவர் -ஸ்ரீ கிருஷ்ணனாய் எருதுகளை அடக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————————

114-வ்ருஷாக்ருதி –
தாபத் த்ரயங்களைப் போக்கி அமுதம் பொழிவது போன்ற குளிர்ந்த திவ்ய ரூபம் யுடையவர் –
திரு மேனியும் தர்ம ரூபமாய் இருக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்-

தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் செய்து உருவம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

எருதைப் போலே திடமான உடல் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

115-ருத்ர –
இப்படிப்பட்ட திவ்ய ரூபத்தாலும் செயல்களாலும் பக்தர்களை நெஞ்சுருகி ஆனந்தக் கண்ணீர்
பெருக்கி அழச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சம்ஹார காலத்தில் பிரஜைகளை அழித்து அழச் செய்பவர் -நன்மையைத் தருபவர் –
துன்பங்களையும் அவற்றின் காரணங்களையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

நோய் தீர்ப்பவர் -அழ வைப்பவர் -பறை முதலியவற்றிற்கு ஒலியைக் கொடுப்பவர் –
அடியவர்கள் செய்யும் துதிகளால் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

116-பஹூ ஸிரா-
ஆயிரம் தலையையுடைய ஆதி சேஷனாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பல தலைகளை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்-

எண்ணற்ற நாடிகளில் வசிப்பவர் -பல தலைகளை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————-

117-பப்ரு
ஆதி சேஷனாக இருந்து கொண்டு உலகத்தை தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகங்களைத் தரித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

118-விச்வ யோநி –
அடைந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு ஒன்றாகக் கொள்பவர் -திரு வநந்த ஆழ்வான் திரு மேனியோடு சமமாக
பக்தர்களோடு கூடி இருப்பதற்காக எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் படியைச் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

உலகங்களுக்குக் காரணமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகுக்கு அல்லது வாயு தேவனுக்கு காரணமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————

119-ஸூசி ஸ்ரவா-
அடியார்களின் இன் சொற்களைக் கேட்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

பரிசுத்தமான நாமங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

புனிதமான புகழை யுடையவர் -செவிக்கு இனிய சொற்கள் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

120-அம்ருத –
எக்காலமும் சேவித்தாலும் ஆராவமுதம் -சம்சாரம் கழைந்து நித்ய அனுபவம் அளிப்பவன்  -ஸ்ரீ பராசர பட்டர்-

அழிவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்-

அளவற்ற சாஸ்த்ரங்களுக்கு விஷயமாக இருப்பவர் -அனந்த சயனத்தில் இருபபவர்-அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————-

121-சாச்வதஸ் தாணு –
தேவ அமர்த்தம் போலே அன்றி நித்யமாகவும் அபகரிக்க முடியாதவராகவும் அடியவர்களிடம் நிலையாகவும் இருபபவர் –
இந்த ஆராவமுதம் கொண்டு நீ வேண்டாம் -உப்புச் சாறு அமையும் -ஒரு முறை உண்ணக் கூடியது -அநித்தியம் -ஸ்ரீ பராசர பட்டர்-

அழிவில்லாமல் நிலையாக இருபபவர் -ஸ்ரீ சங்கரர்-

முக்தர்களுக்கு ஸ்வாமியாகவும் சேரும் இடமாகவும் இருபபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

122-வராரோஹா –
தன்னை வந்தடைவதே சிறந்த புருஷார்த்தம் -மற்றவை அனைத்தும் தாழ்ந்த புருஷார்த்தங்கள் –
இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது
கிமேகம் தைவதம் லோகே -என்று கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன
இனி ஸ்துவந்த கம் -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப்  படுகிறது –
அதில் வாசுதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது -இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மிடம் ஏறுவது எல்லாவற்றிலும் சிறந்ததாக இருப்பவர்-அடையும் உயர்ந்த இடம் -அடைந்தவர்களுக்கு மீட்சி இல்லை -ஸ்ரீ சங்கரர்-

சிறந்த வாகனத்தில் ஏறுபவர் -அரங்களை-ஆயுதங்களை உடையவர்களைக் காட்டிலும் உயர்ந்த தீயவர்களை அழிப்பவர்-

——————————————————————————————————

123-மஹா தபா –
சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரை போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————–

124-சர்வக –
சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் –ஸ்ரீ பராசர பட்டர்-

காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -சங்கரர் –

எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

125-சர்வவித் –
சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியாசக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம் கூறபடுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -சங்கரர் –

அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————

126- பாநு-
எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிரகாசிப்பவர்  -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————————-

127-விஷ்வக்சேன –
எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுரசேனை சிதறி ஓடும்படி செய்தவர் -சங்கரர் –

பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————

128-ஜனார்த்தன –
ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-

மக்களால் மோஷம் செல்வம் முதலிய  பயன்கள்  வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –

அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

129-வேத –
தம்மால் உடல்களையும் இந்த்ரியங்களையும் அடைந்து இருப்பவர்கள் -சாஸ்த்ரங்களை தம்மிடம் இருந்தே
அடையும் படி இருப்பவர் -மீண்டும் சங்கர்ஷணன் சாஸ்திரங்கள் அளிப்பதைக் கூறுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர்-

வேத ரூபி -எல்லாவற்றையும் தெரிவிப்பவர் -சங்கரர் –

எல்லாவற்றையும் தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

130-வேதவித் –
ஐயம் திரியின்றி வேதார்த்தங்களை அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

வேதங்களையும் வேதார்த்தங்களையும் உள்ளபடி அறிபவர் –சங்கரர் –

வேதங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————————-

131-அவ்யங்க-
சந்தஸ் -கல்பம் முதலிய ஆறு அங்கங்களும் தம்மிடம் குறைவின்றி நினைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஞானம் முதலிய குணங்கள் நிறைந்தவர் -வ்யக்தமாக இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆதி சேஷனின் மேல் சயனித்துக் கொண்டு இருப்பவர் -சூர்யனைக் கண்ணாக யுடையவர் –
குறையில்லாத அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————–

132-வேதாங்க –
வேதத்தைத் தமது சரீரமாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

வேதங்களை அங்கங்கங்களாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

வேத அபிமானியான லஷ்மி தேவியை உடையவர் -வேதாங்களான பாரதம் போன்றவற்றை வெளியிட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

133- வேதவித் –
வேதங்களை விசாரிப்பவர் –
வேதங்களினால் அறியப்படும் தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்து -அதை ஆராதனமாகப் பெறுபவர் -எனவே இவரை தர்மம் என்றும்
பிரகாசப்படுத்துபவன் என்றும் ப்ரவர்த்திப்பவன் என்றும் கூறுகிறது  -ஸ்ரீ பராசர பட்டர்-

வேதங்களை விசாரிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மத்ச்யாதி ரூபத்துடன் பிரமன் முதலியவர்களுக்கு வேதங்களைக் கிடைக்கச் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

134-கவி –
எல்லாவற்றையும் அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

புகழப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————

135-லோகாத்யஷ-
தர்ம அனுஷ்டானத்துக்கு தகுதி யுள்ளவர்களை ப்ரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
உலகங்களை பிரத்யஷமாகக் காண்பவர் –ஸ்ரீ சங்கரர் –
பிரகாசமான ஸ்வரூபம் உடைய லோகாதிபதி -லோகங்களை விட மேன்மையானவர்-அழியாதவர் –
உலகிற்குத் தலைவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

136- ஸூராத்யஷ-
அவர்களால் ஆராதிக்கப் படும் தேவதைகளைப் பிரத்யஷமாக அறிபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

லோகபாலர்களான தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் –

தேவேந்த்ரனுடைய கண்களுக்கு விஷயமானவர் -நன்கு ஆராதிக்கப் படுபவராய் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

137-தர்மாத்யஷ-
அந்த தர்மத்திற்கு சாதனமாக விதிக்கப் பட்டவைகளை அறிபவர் -ப்ரத்யஷமாக அறிந்து தர்மம் செய்வாருக்கு பலன் கொடுக்கவும்
செய்யாதாருக்கு பலன்  கொடுக்காமல் போகவும் அறிந்து இருப்பவர் அநிருத்தர் -ஆதலால்
தர்மத்தையும் -உபாயத்தையும் அறிந்தவர் -எல்லாவற்றையும் நடத்துபவர் -சொல் தவறாதவர் -ஞானம் அளிப்பவரும் இவரே -ஸ்ரீ பராசர பட்டர்-

தகுந்த பலன்களைக் கொடுப்பதற்காக தர்ம அதர்மங்களை நேராகக் காண்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் அதிபதி -தர்மத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

138-க்ருதாக்ருத –
அநித்திய பலன்களையும் நித்ய பலனையும் கொடுப்பவர் -சம்சாரத்தின் பிரவர்த்தகம் நிவர்த்தகம் ஆகிய
இரண்டு தர்மங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

கார்யமாகவும் காரணமாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கர்மங்களினால் அடையப் படாதவர் -அக்ருதம்   என்னும் மோஷம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

139-சதுராத்மா –
வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————–

140-சதுர்வ்யூஹ-
மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————————-

141-சதுர தம்ஷ்ட்ர –
வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————

142-சதுர்ப்புஜ-
பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

143-ப்ராஜிஷ்ணு –
உபாசிப்பவர்களுக்கு இவ்வடிவைப் புலப்படுத்துபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

144-போஜனம் –
பக்தர்களால் உணவு போலே சுகமாக அனுபவிக்கப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

அனுபவிக்கப் படுவதாகிய மாயை என்னும் பிரகிருதி வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாரும் பிழைக்கும்படி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

145-போக்தா –
பக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

அந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————-

146-சஹிஷ்ணு –
தம்மிடத்திலும் தம் அடியார்கள் இடத்திலும் செய்யும் அபராதங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்பவர் –
போய பிழைகளையும் புகுதருவான் நின்றனவும் க்ருத அக்ருதங்களையும் அக்ருத க்ருதங்களையும்
அவமானங்கள் நிந்தனைகளையும்  பகவத் அபசார பாகவத அபசார அசஹ்யாபசார -எண்ணற்ற
அபராதங்களையும் பொறுப்பவர் —-ஸ்ரீ பராசர பட்டர்-

ஹிரண்யாஷன் முதலிய விரோதிகளை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் —

அடியவர்களின் குற்றங்களைப் பொறுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————

147-ஜககாதிஜ-
உலகங்களுக்கு முதல் பொருளாகிய மும்மூர்த்திகளுள் ஒருவராக திருவவதரித்தவர் –
விபவங்களில் விஷ்ணு திருவவதாரம் கூறப்படுகிறது —ஸ்ரீ பராசர பட்டர்–

உலகம் உண்டாவதற்கு முன் ஹிரண்ய கர்ப்ப ரூபியாகத் தோன்றியவர் –ஸ்ரீ சங்கரர் —

உலகைப் படைக்கும் பிரமனுக்கு காரணம் ஆனவர் -கதன் என்பவனுக்கு முன் பிறந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————————

148-அநக –
அப்படி திருவவதரித்தும் பாபத்தின் தொடர்பு சிறிதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்–

குற்றம் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் —

பாவங்களுக்குக் காரணமான தோஷங்கள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

149-விஜய –
பிரமன் சிவன் இருவரும் சிருஷ்டி சம்ஹாரம் ஆகிய செயல்களை வெற்றி பெறும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்–

ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் முதலிய குணங்களால் எல்லாவற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் —

விசேஷமான வெற்றி  யுடையவர் -கருடனுக்கு வெற்றியைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————

150-ஜேதா-
அவர்களைத் தம் நினைவின்படி நிற்கும்படி வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர்–

எல்லா பிராணிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் —

வெற்றியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -51-100–மும்மத விளக்கம் —

April 14, 2015

அப்ரமேயோ ஹ்ருஷீகேச பத்ம நாபோ அமரப்ரபு
விஸ்வகர்மா மநு ஸ்த்வஷ்டா ச்தவிஷ்டச் ச்தவிரோத்ருவ –6
அக்ராஹ்யச் சாஸ்வத க்ருஷ்னோ லோஹிதாஷா பிரதர்தன
ப்ரபூதஸ் த்ரிக்கு(ப்)த்தாமா பவித்ரம் மங்களம் பரம் –7
ஈசான பிராணத ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட பிரஜாபதி
ஹிரண்ய கர்ப்போ பூ கர்ப்போ மாதவோ மது ஸூ தன–8
ஈஸ்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம க்ரம
அனுத்தமோ துராதர்சா க்ருதஜ்ஞ க்ருதிராத்மவான் –9
ஸூ ரேசஸ்  சரணம் சர்மா விஸ்வரேதா ப்ரஜாபவ
அஹஸ் சம்வத்சரோ  வ்யாள பிரத்யயஸ் சர்வ தர்சன –10-
அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாகபிரமேயாத்மா சர்வயோகவி நிஸ் ஸ்ருத –11

——————————————————–

பர வாஸூ தேவன் -1-122—122 திருநாமங்கள் –

————————————————————–

51-மநு –
உலக வியாபாரங்களையும் தம் சங்கல்ப லேசத்தினாலே செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நினைப்பவர் -மந்திர ரூபி -மனு என்னும் சிருஷ்டிகர்த்தா -ஸ்ரீ சங்கரர் –

ஞான ஸ்வரூபியானவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————

52-த்வஷ்டா –
உலகங்களை தேவர் மனிதர் முதலிய பெயர் உருவங்கள் உள்ளவைகளாக வகுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

ஒளியுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

————————————————————————-

53- ஸ்தவிஷ்டா-
மிக்க ஸ்தூலமாக இருப்பவர் -ஸ்தூல ரூபமாகக் காணும் பொருள்கள் எல்லாம் தாமாயிருப்பவர் –
பஹூச்யாம்-சங்கல்ப்பித்துக் கொண்டு -ஸூ ஷ்மமானஅவயகதம் முதலிய க்ரமத்தாலே தேவாதி யோனிகள் ஸ்பர்சாதி குணங்கள்
ஈரேழு லோகங்கள் உட்கொண்ட பிரம்மாண்டம் அதற்கு ஆவரனமான ஸ்தூல வ்யக்தமான
வியஷ்டி கார்யம் என்று விஸ்தாரமாகப் பரந்தவன்-ஸ்ரீ பராசர பட்டர் –

மிகப் பருத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பருத்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————

54-ஸ்தவிர-
காலத்தை எதிர்பார்ப்பதை லீலையாக மட்டும் கொண்டு நினைத்த போது படைக்கும் ஸ்வ தந்த்ரர் –
சங்கல்ப மூலமாக காரணம் என்றாலும் விலஷணன் -காலமும் இவனுக்கு வசப்பட்டதே -ஸ்ரீ பராசர பட்டர் –

தொன்மையானவர் -நிலையானவர் – த்ருவ-தொன்மையான நிலையானவர் -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

முதியவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————————————

55-த்ருவ
இப்படிப் பலவகை உலகங்களாக மாறியும் ஸ்வரூபம் மாறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிலையானவர்—ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

——————————————————————————–

56-அக்ராஹ்ய –
மண் நூல் போன்ற காரணங்கள் குயவன் சேணியன் போன்றோரால் கையாளப் படுவது போலே
மற்று ஒருவரால் கையாளப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முழுவதுமாக எவராலும் அறியப்பட முடியாதவர் -அவாப்த சமஸ்த காமர் -எவராலும் எளிதில் அடைய முடியாதவர் –
குணங்களால் வியாபித்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————————————

57-சாஸ்வத –
படைத்தல் -காத்தல் -அழித்தல்-இடையறாமல் செய்து ஒய்வில்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாக் காலங்களிலும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் மாறாத ரூபத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————–

58-கிருஷ்ண –
இந்த ஸ்ருஷ்டி முதலிய லீலைகளின்  ரசத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சச்சிதானந்த ரூபமாக இருப்பவர் -கருமை நிறம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது கட்டளையிடும் சாமர்த்தியத்தினால் உலகை ஈர்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

————————————————————————————-

59-லோஹிதாஷா –
இந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாக சிவந்த தாமரைக் கண்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிவந்த கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளிடத்தில் கோபத்தினால் சிவந்த கண்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————————–

60-ப்ரதர்தந-
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளய காலத்தில் பூதங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்ருக்களைத் துன்புறுத்துவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

———————————————————————–

61-ப்ரபூத –
அழியாதவையும் அளவற்றவையுமான போக சாதனங்கள் நிரம்பிய பரமபதத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானம் ஐஸ்வர்யாதி குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மேலான ஆகாசாதி பூதங்களைப் படைத்தவர் -உயர்ந்தவன் -குணங்களால் பரவியிருப்பவன்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————–

62-த்ரிககுத்தாமா –
த்ரிபாத் விபூதி என்னும் பரம பதத்தை உடையவர் -த்ரிககுத் -மூன்று கொண்டைகளுடன் கூடிய வராகமாக அவதரித்தவர்-
–தாம -ஒளியுள்ளவர்-என்று இரண்டு திரு நாமம் ஆகவுமாம் –
இப்படி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எல்லாம் அவனுடைய விபூதியிலே அணு அளவேயான லீலா விபூதியை அன்றோ –
த்ரிககுத்தாமா என்றும் த்ரிககுப்தாமா என்றும் சொல்வர் -இரண்டாலும் அவயவங்கள் குறிக்கப் படுகின்றன –
அன்றிக்கே -த்ரிககுப் -எனபது ஞானம் பலம் -ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -என்று மூவிரண்டுகளாய்-அதற்குத் தர்மியானவன் –
ஆறு குணங்களால் பூரணமானவன் -அதனாகே த்ரி யுகம் என்று கூறப்படுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

மேல் கீழ் நடு ஆகிய மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவர் த்ரிககுப்த்தாம -என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் —

த்ரிககுப்தாம -மூன்று உலகங்களை உடையவர் -த்ரி க்குத் தாம -க்குத் -திமில் –இரு தோள்கள் ஆகியவற்றுடன் கூடிய
வராஹமாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————

63-பவித்ரம் –
குணங்கள் -மகிமைகள் -ரூபம் இவைகளைப் படிகளாகக் கொண்ட பரிசுத்த ஸ்வரூபத்தை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பரிசுத்தப் படுத்துபவர் -பரிசுத்தப் படுத்தும் ரிஷி -தேவதை -வஜ்ராயுதத்திலிருந்து-இடியில் இருந்து – காப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

புனிதமாக்குபவர் -வஜ்ராயுதத்தைப் போலே காப்பவர் -சக்ராயுதத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————-

64-மங்களம் பரம் –
தோஷம் அனைத்திற்கும் எதிர்தட்டாய் எல்லையற்ற கல்யாண குணங்களை யுடையவர் –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கத -அவாப்த சமஸ்த காமன் -பர அவஸ்தை -நித்ய த்ருப்தன்-
ஞான மாத்ர ரசம் வாதம் கண்டனம் –
ஞான ஸ்வரூபம் ஆனந்த ஸ்வரூபம் -ஞானத்தாலும் குணத்தாலும் பிரத்யஷமாகப் பார்க்கிறான் -அபேஷிக்காமல் பிரகாசிக்கிறான் –
அதனால் ஞானம் என்றும் ஞானம் உடையவன் என்றும் சொல்லுகிறது –
அவனது கல்யாண குணங்களில் ஞானம் சாரம் என்பதால் ஞான ஸ்வரூபம் என்னவுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லா பூதங்களைக் காட்டிலும் உயர்ந்த மங்கள ரூபமானவர் -ஸ்ரீ சங்கரர் —

மங்களம் -கல்யாண ரூபம் உடையவர் -பரம் -அனைத்திலும் சிறந்தவர் -என்று இரண்டு திரு நாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————————

65-ஈஸாந –
எல்லாவற்றையும் நிர்வகிப்பதற்குரிய சக்தி ஒரு போதும் குறையாதவர் –
இந்த ஸ்வ பாவம் ஒரு சமயம் பிரகாசிப்பத்தும் மறைந்தும் ஜீவர்களுக்கு இருக்கும்
இவனுக்கு வ்யாவருத்தம் சொல்கிறது –
ஐஸ்வர்யம் சர்வஜ்ஞத்வம் கற்பனையாலோ உபாதியாலோ பரிணாமத்தாலோ என்பார்களைக் கண்டிக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லா பூதங்களையும் நியமிப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

ருத்ரன் முதலியவர்களை இயக்குபவர் -லஷ்மி தேவிக்கு சுகத்தை தருபவர் -முக்ய பிராணனுக்குத் தலைவர் –
முக்தர்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————–

66-பிராணத-
எக்காலமும் தர்சித்து மகிழ்வுடன் நித்ய கைங்கர்யம் செய்யும் சக்தியை நித்ய ஸூ ரிகளுக்கு அளிப்பவர்-
இவனுடைய ஐஸ்வர்யங்களில் முதன்மையானது இது –ஸ்ரீ பராசர பட்டர் —

உயிர்களை நடத்துபவர் -கால ரூபியாக உயிர்களைக் கண்டிப்பவர் -அழிப்பவர்-பிராணன்களை சோதிப்பவர் -கண்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

பிராணங்களைத் தருபவர் -விசேஷமாக சுகத்திற்கு எதிரான துக்கத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————

67-பிராண –
அவர்களுக்கு உயிராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

உயிராக இருப்பவர் -முக்ய பிராணன் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் —

செயல்பாடுகளை நன்கு நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————-

68-ஜ்யேஷ்ட –
தம்மாலும் சூரிகளாலும் எக்காலமும் அனுபவிக்கப் பட்டாலும் கரை காண முடியாத பெரிய ஐஸ்வர்யம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாவற்றிற்கும் முதன்மையானவர் -எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —

குணங்களாலும் காலத்தாலும் தொன்மையானவர் -மிகச் சிறந்த முறையில் போற்றத தக்கவர் –
ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்ட -என்று ஒரு திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————-

69-ஸ்ரேஷ்ட
நித்ய சூரிகள் எப்போதும் செய்யும் துதிகளினால் ஆராதிக்கப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லா வற்றுக்கும் மேம்பட்டவர் -எல்லா வகையாலும் உயர்ந்தவர்–ஸ்ரீ சங்கரர் —

—————————————————————————–

70- பிரஜாபதி –
பக்த முக்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களான நித்ய சூரிகளுக்குத் தலைவர் –
அவர்கள் யார் என்றும் அவர்களுக்கு உள்ள சம்பந்தமும் சொல்லுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் —

ஈஸ்வரர் என்பதனால் பிரஜைகளுக்கும் அதிபதி –ஸ்ரீ சங்கரர் —

பிரஜைகளைக் காப்பவர் -தனக்கு மேம்பட்ட பத்தி இல்லாதவராய் உலகை நன்கு படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————-

71-ஹிரண்யகர்ப்ப –
இதமாகவும் மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளதனால் ஹிரண்யம் எனப்படும் பரம பதத்தில் நித்யமாக வசிப்பவர் –
இப்படி அனுபவிக்கும் தேச விசேஷம் கூறப்படுகிறது –
தோஷம் அற்றதாய் -நித்யமாய் -பரம சத்வ மயமாகத் தங்கம் போலே இருப்பதால் -ஸ்ரீ பராசர பட்டர் —

பொன் மயமான அண்டத்தில் உள்ள பிரமனுக்கு ஆத்மாவானவர் –ஸ்ரீ சங்கரர் —

பொன்னிறம் கொண்ட பிரம்மாண்டத்தை கர்ப்பத்தில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————-

72-பூ கர்ப்ப –
இனி -அவனுக்கு திவ்ய மகிஷிகள் உள்ளமை கூறப்படுகின்றது –
பூமி  தேவியைக் கர்ப்பத்தில் வைப்பது போலே வைத்துக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பூமியைக் கர்ப்பத்தில் வைத்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தேவர்களை யுண்டாக்குபவர்-பூமியை கர்ப்பத்தில் யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————

73-மாதவ –
மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமான் யுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ கதம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம்  முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —

மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -மது வித்யையினால் அறியப்படுபவர் -மௌனம் த்யானம் யோகம் இவற்றால்
மாதவனை அறியாவாக -வியாசர் என்பதால் மாதவன் -ஸ்ரீ சங்கரர் –

லஷ்மிக்கு கணவன் -தனக்கு யஜமானன் இல்லாதவன் -மதுவின் வம்சத்தில் உதித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

74-மது ஸூதந-
மது முதலிய அசுரர்களை அழிப்பதனால் லஷ்மியானவள் தம்மிடம் நிலைத்து இருப்பவர் -நித்ய சூரிகளின் இந்த்ரியங்களைத்
தடைகள் இல்லாமல் தம்மிடம் ஈர்ப்பவர் -மது -எனபது இந்திரியங்களைக் குறித்து அவற்றைத் தம்மிடம் ஈர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மது என்னும் அசுரனை அழித்தவர்-ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ஞானமுடைய ஜீவர்களை சுகம் மிகுந்த இடத்திற்கு அழைத்துச் செல்பவர்   –
மது என்னும் அசுரனைக் கொன்றவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

75-ஈஸ்வர –
அளவில்லாத நித்ய விபூதியிலும் தடையில்லாத சங்கல்பம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் வல்லவர் ஆதலால் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

ஈச எனப்படும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் மேம்பட்டவர் –
லஷ்மீ தேவியையும் வாயுவையும் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————-

76-விக்ரமீ-
நினைத்தது தடைபடும் வாய்ப்பே இல்லாமல் நினைத்ததை முடிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

சௌர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தனது அவதாரங்களில் ஏற்றத் தாழ்வு இல்லாதவர் -பராக்ரமத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————-

77-தன்வீ-
இப்படிப்பட்ட தமக்குத் தகுந்த உயர்ந்த சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் –
எல்லா திவ்ய ஆயுதங்களோடும் கூடியவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வில்லை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வில்லை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————-

78-மேதாவீ-
கால தேச வரையரை யற்ற மகிமைக்கு உதவியாக -ஸ்வா பாவிக சர்வஜ்ஞத்வம் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பல கிரந்தங்களை தரிக்கும் திறமை உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவுடையவள் ஆதலால் மேதாவீ-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————–

79-விக்ரம-
வேத மூர்த்தியான கருடனைக் கொண்டு விரும்பியபடி எழுந்து அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

உலகத்தை அளந்தவர் -கருடனை வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

திரிவிக்கிரம அவதாரத்தில் மென்மையான அடிகளை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————–

80-க்ரம-
இப்படி அளவற்ற நித்ய ஐஸ்வர் யத்தால் எல்லாவற்றையும் வியாபித்து வளர்ந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

வ்யாபித்தவர் -உலகம் வியாப்பிப்பதற்கு காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களில் தேவதையாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————–

81-அநுத்தம-
அதனால் தமக்கு மேம்பட்டவர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

மேம்பட்டார் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் —

மேம்பட்டவர் இல்லாதவர் -தம்மை நியமிப்பவர் இல்லாத மிக உயர்ந்தவர் -நிரந்தரமான செல்வம் ஞானம் யுடையவர் –
துன்பம் அற்ற லஷ்மி தேவியை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————-

82-துராதர்ஷ-
கடல் போலே ஆழ்ந்து இருப்பதால் கலக்க முடியாதவர் -கீழ்ச் சொன்னவைகளில் கோஷிக்கப் பட்டதாய் -காலத்துக்கு அப்பாற்பட்டதாய்
அழியாததாய் -மாறுபாடு இல்லாததாய் -தமஸ்ஸூக்கு அப்பால் பட்டதாய் -நித்தியமாய் -மீண்டு வருதல் இல்லாத ஸ்தானமாய்-
பகவத் ஸ்வரூபம் போலே விளங்கும் பரமபதம் ஓன்று மட்டுமே இரண்டாவது இல்லை –
சத் இல்லை அசத் இல்லை -ஸ்ருதி வாக்யங்களால் ஒன்றே -இரண்டாவது இல்லை என்று கூறப் பட்டதாய் –
நித்தியமான பரம பதத்தில் ஸ்ரீ தேவி பூமி தேவி நீளா தேவி போன்ற மகிஷிமார்களுடன் கூடி
பர்யங்க வித்யையின் படி ரத்ன மயமான திவ்ய ஸ்தானத்திலே திவ்யமான மஞ்சத்தின் மீது எழுந்து அருளி
அநந்தன் விஸ்வக்சேனர் முதலிய நித்ய சூரிகளால் எப்போதும் கைங்கர்யம் செய்யப் பெற்ற
திருவடிகளை யுடையவனாக விளங்கும் சகல வேத ரஹச்யமான சர்வ ஐஸ்வர்யம் விளக்கப்பட்டது-ஸ்ரீ பராசர பட்டர் —

அசுரர் முதலியவர்களால் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —

பிறரால் அவமானப் படுத்த முடியாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————

83-க்ருதஜ்ஞ-
ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம் கைங்கர்யம் என்பதையும்  தனக்கு என்று ஒன்றும் இல்லை எனபதையும் மறந்து
அவித்யையால்  தங்களை ஸ்வதந்த்ரராக நினைத்து பிறப்பு இறப்பு களை யுடைய  உலக வாழ்வில் அகப்பட்டு
உழலும் சம்சாரிகள் செய்யும் சிறிய உபசாரங்களையும் மறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

இலை பூ போன்ற எளியவற்றை அளிப்பவர்களுக்கும் மோஷம் தருபவர் -பிரஜைகள் செய்யும் புண்ய பாப கர்மங்களை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —

தனக்குச் செய்யப்பட்டு வழி பாட்டை நன்றியுடன் நினைப்பவர்  -செய்யும் செயல்களை அறிபவர் –
எல்லா பொருள்களையும் அறிந்தவர் -ஜீவர்களை பிறப்பிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————————

84-க்ருதி-
அதற்குரிய ஸூஹ்ருதத்தையும் தாமே கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் தாமாகவே இருப்பதால் எல்லாச் செய்கைகளுக்கும் ஆதாரமானவர் -புருஷ பிரயத்னமாக -அல்ல செயலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

முயற்சி ரூபம் உள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————————————

85-ஆத்மவான் –
அந்த ஆத்மாக்களின் ஸ்வரூபம் செய்கை முதலியவற்றை எல்லாம் தமது அதீனத்தில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தம்முடைய மகிமையே தமக்கு ஆதாரமாக யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் —

பிரமனை யுடையவர் -அழியாத திருமேனி உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————————————————————————————–

86- ஸூரேஸ-
பிரம்மா முதலிய தேவர்களையும் அவரவர் அதிகாரங்களில் நியமிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

தேவர்களுக்குத் தலைவர் -நன்மையைக் கொடுப்பவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர் —

தேவர்களுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————-

87-சரணம் –
எல்லோருக்கும் அடையும் சரணமாகவும் -தம்மை அடைவதற்கு உபாயமாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

துன்பப் படுபவர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோருக்கும் அடைக்கலமாகவும் காப்பாற்றுவராகவும் இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

——————————————————————————————-

88-ஸர்ம-
ஸூக ரூபமாகவும் பயனாகவும் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பரமானந்த ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுபங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————–

89-விஸ்வரேத-
உலகங்கட்கு எல்லாம் மூல காரணமாய் இருப்பவர் -அவனே உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பவர் –
தானே சர்வ காரணம் என்று அறிந்து தனது திருவடிகளிலே கைங்கர்யம் செய்யவே
ஞான கர்ம இந்த்ரியங்களை கொடுத்து அருளினவன்  -ஸ்ரீ பராசர பட்டர் —

உலகங்கங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகுக்குக் காரணமானவர் -வாயுவிற்கு காரணம் ஆனவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————–

90-பிரஜாபவ –
எல்லா பிரஜைகளும் தாம் கொடுத்த சாதனங்களைக் கொண்டே தம்மைச் சேரும்படி அவைகளுக்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லா பிரஜைகளின் உற்பத்திக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் —

தம்மை நினைப்பூட்டும் ஞானிகளுக்கு ஸ்ரீ வைகுண்டம் முதலிய வற்றைத் தருபவர் -பிரஜைகளைப் படைப்பவர் –
பிரஜைகளையும் நஷத்ரங்களையும் நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

————————————————————————————

91-அஹ-
அநாதி மாயையினால் உறங்கி-அவித்யையில் இருந்து – எழுந்தவனுக்கு முதலில் தம் ஸ்வரூபத்தைக் காட்டுவதால்
பகல் போன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

ஒளிமயமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவர் -விடத் தகாதவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

——————————————————————————-

92-சம்வத்சர –
அப்படி எழுந்தவர்களின் அறிவில் சேர்ந்து வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

கால ரூபியாய் இருத்தலால் வருடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் —

காலத்தை நியமிப்பவராக வருடத்தில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

————————————————————————————

93-வ்யால-
அவர்களை அங்கீ கரித்துத் தமக்கு உட்படுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாம்பைப் போல் யானையைப் போல் எவராலும் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் —

கௌஸ்துபம் முதலிய விசேஷமான அணிகலன்களை   யுடையவர் -பக்தர்களுக்காகவே அனைத்தையும் அளிக்க முயல்பவர் –
ஸ்ருஷ்டியாதிகளுக்கு தாம் ஒருவரே -பகைவர்களை அழிப்பவர்-அனைத்து காரணமானவர் –
விசேஷமாக பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————–

94-ப்ரத்யய –
அவர்களுக்குத் தம்மிடத்தில் நம்பிக்கை யுண்டாக்குபவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானமே வடிவானவர் -ஸ்ரீ சங்கரர் —

அனைத்தையும் அறிந்தவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–

—————————————————————————-

95-சர்வ தர்சன –
அவர்கள் தம்மிடத்தில் உள்ளது எல்லாம் காணும்படி செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் கண்களாக யுடையவர்-எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சங்கரர் —

சம்ஹாரம் செய்யும் ருத்ரனுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் -அனைத்தையும் பிரத்யஷமாக காண்பவர் –
எல்லா தர்ச புண்ய  காலங்களிலும் அமாவாச்யைகளிலும் ஹவிஸ்சை எடுத்துச் செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————————

96-அஜ –
அவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

பிறப்பற்றவர்-ஸ்ரீ சங்கரர் —

பிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்

——————————————————————–

97-சர்வேஸ்வர –
தன்னைச் சரணம் அடைந்தவர்களைத் தாமே விரைவாக அவர்களிடம் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஈஸ்வரர்களுக்கு எல்லாம் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் —

எல்லோருக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————-

98-சித்த –
உபாயாந்தரங்களால் அன்றி தாமே சித்த உபாயமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

என்றைக்கும் உள்ள தன்மையை யுடைய நித்யர் -ஸ்ரீ சங்கரர் —

அடையப் பெறுபவர் -எப்போதும் ஞான வடிவினர் -அடியவர்களில் காக்க சித்தமாக உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

——————————————————————————-

99- சித்தி –
உபாயங்களினால் தேடப்படும் பலனுமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிலும் சிறந்த பயனாய் ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

————————————————————————–

100-சர்வாதி –
உயர்வும் தாழ்வும் ஆகிற எல்லாப் பயங்களுக்கும் தாமே காரணமாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பூதங்களுக்கும் காரணம் ஆனவர் -ஸ்ரீ சங்கரர் —

அனைத்திற்கு காரணம் ஆனவர் -எல்லாராலும் ஏற்கப் பெறுபவர் -எல்லாம் உண்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -1-50–மும்மத விளக்கம் —

April 13, 2015

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவன–1
பூதாத்மா பரமாத்மாச முக்தா  நாம் பரமாகதி
அவ்யய புருஷஸ் சாஷீ ஷேத்ரஜ்ஞோ அஷரயேவச–2-
யோகோ யோகவிதாம் நேதா பிரதான புருஷேச்வர
நாரசிம்ஹவபுஸ் ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம –3
சர்வஸ் சர்வஸ் சிவஸ் ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய
சம்பவோ பாவனோ பர்த்தா ப்ரபவ ப்ரபுரீச்வர –4
ஸ்வயம் பூஸ் சம்புராதித்ய புஷ்கராஷோ மஹாச்வன
அநாதி நிதநோ  தாதா விதாதா தாதுருத்தம –5
அப்ரமேயோ ஹ்ருஷீகேச பத்மநாபோ அமரப்ரபு
விஸ்வகர்மா மநு ஸ்த்வஷ்டா ச்தவிஷ்டச் ச்தவிரோத்ருவ –6

——————————————————————————————–

பர வாஸூதேவன் -1-122—122 திருநாமங்கள் –

———————————————————————————————-

1- விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விச்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதை பின்பற்றி

உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான பிராமத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்

எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

————————————————————————————————–

2- விஷ்ணு –

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எலாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் –விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாக்தியையும் சொல்வதால் கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –

எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்

சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

3- வஷட்கார

எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் –
ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் -the charming inner controller

தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் –
வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் –
ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

4-பூத பவ்ய பவத் ப்ரபு

முக் காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக  இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முக்காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

முக்காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் –
முக்காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

5-பூதக்ருத் –

எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத –

ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் –
தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ரரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

6- பூத ப்ருத்-
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –

சத்வ குனந்த்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

7- பாவ –

எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் –
பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
-உகத வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —

உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

உலகைப் படைப்பவர் -சந்தரன் -நஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

——————————————————————————————————-

8-பூதாத்மா

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்

பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

9-பூத பாவந

எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் —
தாரக போஷாக போகய பிரதானேன வர்த்தயதி-

பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் –
உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————-

10-பூதாத்மா
தாம் ஆத்மாவாக இருந்தாலும் தோஷங்கள் தட்டாதவன் -பரிசுத்த ஸ்வ பாவம் யுடையவன் -ஜீவாத்மா மட்டும்
கர்ம பலன்களை அனுபவிப்பான் -கசை தொடர்பு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் யுண்டே -ஸ்ரீ பராசர பட்டர் —
உப்பில்லா பண்டமும் ஒப்பில்லாமல் ஆக்குமவன் -மட்டமான வஸ்துவையும் பெருமை படுத்துமவன்
ஆத்மீத்யவ சம்சாரித்வாதி அஸ்ய சரீரவத் -சித் அசித் சுத்த ஸ்வபாவ –

பரிசுத்தமான ஆத்மாவை யுடையவர் -நிர்குணர்-பூதக்ருத் போன்ற திரு நாமங்களால் சொன்ன குணங்கள்
இவன் இச்சையினால் கற்ப்பிக்கப் பட்டன -ஸ்ரீ சங்கரர்-

ஜீவாத்மாக்கள் பரிசுத்த  தன்மை எவன்  இடம் இருந்து பெறுகின்றனவோ அவன் பூதாத்மா –
புனிதமானவர்களின்  ஆத்மா -புனித ஆத்மா-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

11-பரமாத்மா –
எல்லாவற்றுக்கும் தாம் ஆத்மாவே இருப்பது போலே தமக்கே மேல் ஓர் ஆத்மா இல்லாதவர் –
மேம்பட்டவர் இல்லாதவராய் ஆத்மாவாகவும் இருப்பவர் -தமக்கு மேம்பட்ட ஈஸ்வரர் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பெருமாள் ஆராதனம் செய்த பெரிய பெருமாள் —
யதா சர்வாணி – பூதான் அந்யேன ஆத்மா பந்தி நைவம் அன்யேன கேன சிது அநகா பரமாத்மா –

உயர்ந்தவராகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிகவும் மேம்பட்டவர் -விரோதிகளை அழிப்பவர்-லஷ்மி பதி-அடியவர்களைக் காப்பவர் –
ஞானம் யுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————–

12-முக்தா நாம் பரமாகதி –
எல்லாருக்கும் தலைவரான தாமே – -அவித்யை கர்மம் சம்ஸ்காரம் ஆசை விபாகம் போன்ற தடைகளை முற்றும் துறந்த
முக்தர்கள் முடிவாக அடையும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் சர்வ சேஷிணமேவ பராமாத்மா பிராப்யத்வம் முக்தாநாம் பரமாத்மா கதி –

முக்தர்களுக்கு உயர்ந்த கதி -அவரைத் தவிர வேறு தேவதைகளை அடைய வேண்டியது இல்லை –
அவரை அடைந்தவர் திரும்புவது இல்லை -ஸ்ரீ சங்கரர்–

மிக உயர்ந்தவர்களான முக்தர்களால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

13-அவ்யய-
தம்மை விட்டு ஒருவரும் அகலாமல் இருப்பவர் -சம்சார பெரும் கடலை கடந்து தன்னை அடைந்தார்
மீளாத படி அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ந ச புன ஆவர்த்ததே -ஸ்ரீ பாஷ்யம்-தன்னைப் போலே ஆக்கி பிரியாமல் வைத்து கொள்பவன் அன்றோ —
ந வீயதே ந வீயகம்யதே அஸ்மாத் இதி –

நாசம் அற்றவர் -விகாரம் அற்றவர் -ஸ்ரீ சங்கரர்–

சூர்யன் ஆகாயத்தில் சஞ்சரிக்க நியமனம் தந்தவர்-ஆட்டைப் போலே எதிரிகளை எதிர்க்கச் செல்பவர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————

14-புருஷ –
மிகுதியாகக் கொடுப்பவர் -முக்தர்களுக்கு தம் குண விபவ அனுபவங்களை கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
தன்னையே தன பக்தர்களுக்கு அர்ப்பநிப்பவன் -தன்னையே எனக்குத் தந்த கற்பகம் -செல்லப்பிள்ளை -வந்தானே –

புரம் என்னும் யுடலில் இருப்பவர் -உயர்ந்த பொருள்களில் இருப்பவர் -முன்பே இருந்தவர் –
பலன்களைக்   கொடுப்பவர் -சர்வ வியாபி -சம்ஹாரம் செய்பவர்  -ஸ்ரீ சங்கரர்–

மோஷ ரூபம் ஆகிய முழுப் பலத்தையும் பூர்ணனான தன்னைத் தருபவன் -முன்பே உள்ளவர் –
பல செயல்களை யுடையவர் -அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

15-சாஷீ-
முக்தர்களை மகிழ்வித்து தாமும் மகிழ்ந்து பார்த்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் தாநு ஆனந்தாயன்னு ஸ்வயம் அபி த்ருப்தாயன்னு சாஷாத் கரோதி –

சஹகாரி இல்லாமல் எல்லாவற்றையும் நேரில் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

நேரில் பார்ப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

—————————————————————————————————-

16- ஷேத்ரஜ்ஞ-
தம்மை முக்தர்கள் அனுபவிக்க ஏகாந்தமான இடத்தை அறிந்தவர் –
போக சம்ருத்தி யுண்டாகும் பரம பதம் -அத்தை சரீரமாக யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்ண புரம் வரச் சொல்லி நடந்து காட்டி அருளி பழையவற்றை ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
நினைவு பட வைத்து அருளி -ஷேத்ரஜ்ஞ்ஞன்
இத்தம் தேப்யாக ஸ்வானுபவம் தாதும் ததேகாந்தம் ஷேத்ரம் ஜாநாதீதி –

ஷேத்ரம் ஆகிய சரீரத்தை அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

ஷேத்ரம் என்று பரமான பிரசித்தமான அவயகதம் முதலிய சரீரத்தை அறிந்தவர்  –
தம் சரீரத்தையும் அனைவருடைய சரீரத்தையும் அறிந்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

—————————————————————————————————–

17-அஷர-
முக்தர்களின் அனுபவ ஆனந்தம் முடிவு பெறாமல் மேலும் மேலும் வளரும்  படி
கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அழியாதவர் -அச் -வினை யடியால் அனுபவிப்பவர் – ஏவகாரம் -அஷரன் ஷேத்ரஜ்ஞன் -பேதம் இல்லை –
ஜ்ஞானத்துக்கு அடி -ஆதாரம் -அஷரம்-
ஜ்ஞானாந்த நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் சர்வ வித்யாநாம் -ஹயக்ரீவர் உபாஸ்மகே அஷரமாக இருப்பவர் –
தத்ர முக்தைஸ் –ததானுபூயமான -அபி மது சத்வ நிச்சீம குண உன்மஜ்ஜன உபரி உபரி போக்யதயா உபசீததய நது ஷரதி அஷர –

தத்த்வமஸி-சகாரம் பேதம் வ்யவஹாரத்தில் மட்டும் உள்ளத்தைக் காட்டுகிறது -ஸ்ரீ சங்கரர்—

அழிவற்ற வைகுண்டம் முதலியவற்றை அருளுபவர் -வைகுண்டம் முதலிய உலகங்களில் ரமிப்பவர் –
அளிவில்லாதவர் -இந்த்ரியங்களில் விளையாடுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

——————————————————————————————————

18-யோக –
சாயுஜ்யமாகிய முக்திக்கு வேறோர் உபாயம் வேண்டாதபடி தானே உபாயமாக இருப்பவர் –
முக்திக்கு உபாயமும் முதர்களுக்கு உபேயமும் அவனே -ஸ்ரீ பராசர பட்டர் —
ததி பாண்டத்துக்கும் கூட முக்தி அளித்தானே –சேவிக்க சாமர்த்தியம் இல்லா இடங்களுக்கும் -தானே காட்டக் கண்டு அனுபவிக்கலாம்
-யுஜ்யதே பிராப்யதே –அநேநேதி சாயுஜ்ய -நான்யாபேஷ -சாஷாத் ஹேது இத்யர்த்த

ஐக்ய சிந்தனை யாகிற யோகத்தினால் அடையத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர்—

யோகிகளால் தம் இதயத்தில் த்யானம் செய்யப்படுபவர் -அனைத்து குணங்களும் சேர்ந்து இருப்பவர் –
பக்தர்களுக்கு உலகைக் கடக்க வழியாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

——————————————————————————————————-

19-யோக விதாம் நேதா
வேறு உபாயம் ஆகிய பக்தி யோகத்தைப் பற்றியவர்களுக்கும் பலன் யுன்டாம்படி நிர்வகிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

ஞானிகளின் யோக ஷேமங்களை  வகுத்து நடத்துபவர் -யோகத்தை விசாரிப்பவர்கள் –
அறிபவர்கள்-அடைபவர்கள் யோக வித்துக்கள் -ஸ்ரீ சங்கரர்—

த்யான யோகம் அறிந்த பக்தர்கள் மோஷ பலத்தை அடையும்படி செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

———————————————————————————————————

20-பிரதான புருஷேச்வர –
ஜீவர்களைக் கட்டுப் படுத்தும் பிரக்ருதியையும் அதில் கட்டுண்ட ஜீவர்களையும் நடத்துபவர் –
தனது மாயையினால் அபராதம் செய்பவர்களை சம்சாரத்தில் கட்டி வைத்தும்  சரணம் அடைந்தவர்களை விடுவித்தும் விளையாடுகிறான்
ஈஸ்வர -வரச் பிரத்யயத்தால் இத் தன்மை இயற்கை என்பதும் -சித் அசித் ஈஸ்வரன் தத்வத்ரய பேதமும் கூறப்படுகிறது
நியமிப்பவன் ஒருவன் -நியமிக்கப்படுபவை இரண்டும் -இயற்கையாக செய்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —

பிரதானம் ஆகிய மாயைக்கும் புருஷனாகிய ஜீவனுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர்—

பிரதானமாகிய பிரக்ருதிக்கும் புருஷர்களாகிய ஜீவர்களுக்கும் ஈஸ்வரர்
எல்லாருக்கும் தாரண போஷணங்களைத் தருபவர் -நான்முகனுக்கு ஹயக்ரீவராக இருந்து வேதங்களை அருளுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————

21-நாரசிம்ஹவபு –
பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய   காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் –
பக்தர்களின் தடைகளைப் போக்கி அருளுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —

மனித சிம்ம லஷணங்களும் ஒரே தேகத்தில் பொருந்தி இருந்தவர் –ஸ்ரீ சங்கரர்—

மனிதன் சிம்கம் இரு உருவங்களையும் சேர்த்து தரித்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————–

22-ஸ்ரீ மான் –
ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை   மட்டுமோ கண்டால் அருவெறுப்பு   யுண்டாகும்  படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப

திருமார்பில் திரு மகள் நித்யமாக பொருந்தி இருக்கப் பெற்றவர் —ஸ்ரீ சங்கரர்—

சாந்த ரூபனான வாயுவினிடம் பற்றுள்ளவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————

23-கேசவ –
கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் –
இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –

க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் –
அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—

பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர்  -அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் –
அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

24- புருஷோத்தம –
பக்தர் முக்தர் நித்யர் ஆகிய மூவகைப் புருஷர்களிலும் உயர்ந்தவர் -லஷணம் கூறத் தொடங்கி
புருஷ -என்று அசேதனத்தை காட்டிலும் சிறப்பு கூறி
உத்  -என்ற சொல்லால் சேதனர்களை விட சிறப்பு கூறி
தர -என்பதால் முக்தர்களைக் காட்டிலும் சிறப்பு சொல்லி
உத்தம -என்று நித்யர்களை விட ஏற்றம் சொல்கிறது
இத்தால் போக்யமான   அசேதனமும் -போக்தாவான   அசேதனனும் -நியமிப்பவன்மான பகவானும் ஒன்றுக்கு ஓன்று வேருபட்டமை தெளிவு
இத்தால் ப்ரஹ்மமே வேறுபாடு அடைகின்றது என்ற கொள்கை மறுக்கப் பட்டு
ப்ரஹ்மம் மாறுபாட்டை அடைகின்றது -ப்ரஹ்மம் சம்சாரத்தை அடைகிறது -நாராயணனைக் காட்டிலும் யாதொரு தன்மையும் இல்லாத
மற்ற ஓன்று ப்ரஹ்மம் என்றும் அவ்யக்தமும் அதில் இருந்து விடுபட்ட முக்தரும் ப்ரஹ்மத்தில் லயித்து
அதில் இருந்து யுண்டாகு கிறார்கள்  என்று இப்படி எல்லாம் கூறப்படும் கொள்கைகள்  அனைத்தும்
இந்த புருஷோத்தமத்வத்தோடும் சகல வேதாந்த சித்தத்தோடும் மறுக்கப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —

புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -ஸ்ரீ சங்கரர்—

புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -புருஷர்களைக் காட்டிலும் -ஐந்தாம்  வேற்றுமையில் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————-

25-சர்வ –
சராசரங்களையும் உடலாக நினைத்து -ஆத்மாகவே வியாபித்து -அவற்றைத் தாமாகவே நினைத்து நடத்துபவர் –
நிர்ஹேதுகமாக -அபிமானித்து இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
சர்வ -சரீரம் தானே சேதன அசேதனங்கள் -அவனுக்கு –ஸ்வரூப ஸ்தித்யாதி பிஹி ஸ்வ நிர்வாஹதய சரீரிவ ஆத்மாநுசந்ததே அதக

அனைத்து உத்பத்தி நாசங்களுக்கும் காரணமே இருப்பதாலும்  -எல்லாவற்றையும் எப்பொழுதும் அறிவதானாலும்
எல்லாமுமாய் இருப்பவன் -ஸ்ரீ சங்கரர்—

வேதத்தில் அனைத்து சொற்களாலும் அறியப்படுபவர் -எங்கும் வியாபித்திருப்பவர் -எல்லாவற்றையும் அடைந்தது –
எல்லோரையும் படைப்பவர்–ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

26-சர்வ –
தமது சரீரங்களாக உள்ளவற்றின் விரோதிகளை சிதறச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்டியூர் -அரன் சாபம் தீர்த்து –ஸ்வ சர்வ பூதானாம் அஸூபவதி ஸ்ருணாதீதி

சம்ஹார காலத்தில் எல்லா பிராணிகளையும் அழிப்பவர் -அழிப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—

அனைவரையும் -அயோக்யருக்கு சுகம் கிட்டாமல் செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————

27-சிவ-
நன்மைகளைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –சுபாவஹா தத் சிவா –

முக் குணங்கள் இல்லாமையால் பரிசுத்தர் -சிவன் முதலிய  நாமங்களாலும் விஷ்ணுவே ஸ்துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்—

மங்களமாக இருப்பவர் -மங்களைத்தையும்  செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————–

28-ஸ்தாணு –
நிலைத்து நிற்ப்பர் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி செய்து அருளி மேன்மேலும் அருளுபவர் –
பகவத் சம்ச்லேஷம் குறிப்பிட்ட பாவங்களைப் போக்குவிக்கும்   பிரயாச்சித்தம் போலே இல்லை
காரீரீ சித்ரம் தார்ச பூர்ண மாசம் போன்ற யாகங்கள் போலேயோ தேவ தாந்த்ரங்களைப் போலேயோ
குறிப்பிட்ட பலன்களை மட்டும் கொடுத்து நிற்பது இல்லை –
பலமான தடைகளால் தடுக்கப் படுவது இல்லை -அழிவதில்லை -மாறாக மேன்மேலும் அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திஷ்டதே -அசேஷமவ சிவம் சம்ஷமய்ய -அகிலம் அகில பஹூ முகம் விஸ்ரான்யபி -ந ஜாது சிதது – விஸ்ராம்யதி –ஸ்திரமாக அருளுபவன்
-யாதவ பிரகாசர் திருந்தி எம்பெருமானார் திருவடி சேர்ந்து -கோவிந்த நாதர் -திரு நாமம் பெற்று எதி தர்ம சமுச்சயம் கிரந்தம் -அருளி உள்ளார் –

ஸ்திரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

எங்கும் பரவி இருப்பவர் -அணு அளவுள்ளவர் -சிவனுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –
சிவ ஸ்தாணு -ஒரே பதமாக கொண்டு-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

———————————————————————————————————–

29-பூதாதி
மிகவும் விரும்பப்படும் தன்மை உள்ளவராதளால் பிராணிகளால் அடையப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
பிரஹனீயது -மத்வாது —பூதைகி உபாதீயது –

எல்லா பொருள்களுக்கும் காரணமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்—

எல்லா பூதங்களுக்கும் காரணமானவர் -சம்ஹார காலத்தில் யுண்பவர்-பூதங்களால் ஏற்க அடையப் படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—

————————————————————————————————————-

30-நிதிரவ்யய-
எல்லா காலமும் எல்லா வகைகளாலும் அனுபவித்தாலும் குறையாத ஆபத்துக்கு உதவும் வைத்த மா நிதி –
நிதி எனபது அவ்யய என்பதற்கு விசேஷணம்-தனித் திரு நாமம் அல்ல –
இல்லா விடில் அவ்யய புருஷ -சொல்லப் பட்டதே மீண்டும் சொன்ன குற்றம் வரும் -ஸ்ரீ பராசர பட்டர் —-
மகா லோபேன ஆபத்வத் நிதியேத்வாத் சர்வதா சர்வதோப ஜீவா மானத் அபிகலயாபி அனுபஷயாதி

பிரளய காலத்தில் எல்லாம் தம்மிடம் வைப்பதால் நிதியாக இருப்பவர் -அவ்யய நிதி -அழியாத நிதி –ஸ்ரீ சங்கரர்—-

நல்லோர்களால் இதயத்தில் வைக்கப் படுபவர் -நிதி /ஞானிகளால் அன்புடன் நோக்கிச் செல்லப்படுபவர் –
அவ்யய -இரண்டு திருநாமங்கள்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

————————————————————————————————————–

31-சம்பவ –
அப்படி மறைத்து வைத்து இருந்த போதும் தம்மை அனுபவிக்க ஆவல் கொண்டு பிரார்த்திக்க்குமவர்களுக்கு அவதாரங்களினால் வெளிப்படுத்துபவர் –
சம்பவாமி யுகே யுகே -மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன ராம கிருஷ்ணாதி அவதாரங்களால் பல முறையால்
எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் லிகிதமபி ஆத்மானம் தம் சம்ச்லேஷத் தவரையா அர்தித்த்வய கதாசயத் சம்பவ

தமது இச்சையின் படி பிறக்கும் வல்லமை உடையவர் -ஸ்ரீ சங்கரர்—-

நஷத்ரங்களை நடத்துபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————-

32-பாவன-
திருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –

எல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-

மனங்களைச் செலுத்துபவர்  -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர்  –
சூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————–

33-பர்த்தா-
தம்மைத் தருவதன் மூலம் அவர்களைப் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்—-

எல்லோரையும் போஷிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

—————————————————————————————————————-

34-பிரபவ –
மிகவும் சிறந்த பிறப்பு உடையவர் -தோஷத்தின் தொடர்பு இல்லாத மேன்மை -அவதார ரகஸ்யம் அறிந்த மாதரத்தில்
விலங்கு போன்ற வலிய அனைத்து பிறவிகளும் நிர்மூலமாகுமே –ஸ்ரீ பராசர பட்டர் —-

தேவாதி பிறவிகளைக் காட்டிலும் வேறுபட்ட மேன்மை யுண்டே அவதாரங்களுக்கு எல்லா பூதங்களுக்கும்
விசேஷ காரணமானவர் -உயர்ந்த பிறப்புகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர்—-

சிறந்த ஒளியுள்ள சூர்ய சந்த்ரர்களை நடத்துபவர் -உயர்ந்த பிறப்புள்ளவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

——————————————————————————————————————-

35-பிரபு –
மனிதன் போன்ற அவதாரங்களிலும் தேவர்களுக்கும் கிடைக்க அரிய போகம் மோஷம் முதலிய் சிறந்த பலன்களை அளிக்கும் ஆற்றல் பெற்றவர் –
சிந்தயந்தீ சிசுபாலன்  முதலியவர்களுக்கு சாயுஜ்ய மோஷம் அளித்த விருத்தாந்தங்களில் இது மிகவும் ஸ்பஷ்டம் —ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் மனுஷ்யாதி சாமான்ய அவதாராதி அபி பிரபு பவதி -தேவாதி சுகர போக அபவர்க்காதி பல சமர்ப்பண சமர்த்த-

எல்லா செய்கைகளிலும் மிக்க சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—–

——————————————————————————————————–

36-ஈஸ்வர –
சுத்த ஸ்வரூபத்தில் இருப்பதைக் காட்டிலும் அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை முகவும் பயன்படும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அதக ஜன்மசூ அதிகதம பிரயோஜன ஐஸ்வர் யாதி –

இயற்கையான ஐஸ்வர்யம்  உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-

கட்டளை இடுபவர் -ஈசர்களில் சிறந்தவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

———————————————————————————————————

37-ஸ்வயம்பூ –
தம் மகிழ்ச்சிக்காக தம் இச்சையினால் தமக்கே சிறப்பாக உள்ள சத்வ திருமேனியை தேவாதி யோனிகளில் அமைத்துக் கொண்டு அவதரிப்பவர் –
ப்ரஹ்மாதிகள் இவரது வசம் -பிரகிருதி ஜீவன் இவரது யுடைமையாக இருந்தாலும் சுத்த சத்வம் அசாதாரணம் –
அனைத்தும் அவனுடைய போகத்திற்காக இருப்பதால் என்னுடைய பிரகிருதி -என்று அவனால் கூறப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்வ லீலாபரம –பிரயோஜனாதி ஸ்வேச்சாயா ஸ்வ சாதாரணீம் பரம சத்வ மயம் பிரக்ருதிமீவ
ஸூ ர நர ஜாதீய சந்நிவேசாம் அதிஷ்டாய ஸ்வயமேவ பவதி –

தாமே யுண்டானவர் -எல்லாவற்றுக்கும் மேலாக தாமே இருப்பவர் -ஸ்வ தந்த்ரர் -பரதந்த்ரர் அல்ல -எல்லாவுமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—-

தாமே யுண்டாகுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

38-சம்பு –
அழகு எளிமை குணங்களை வெளிப்படுத்தி பேரின்பத்தை விளைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் ஸ்வ சௌந்தர்யாதி சௌசீல்யாதி குணாவிஷ்காரேண் ஸூ கம் பாவயதியாதி –

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—

சிகத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

39-ஆதித்ய –
சூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக சூர்ய மண்டலத்தில் உள்ள புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரேசூர்யன் பிரதிபலிப்பது போலே  பரமாத்மா ஒருவரே பல உடல்களில் தோற்றுவதால் சூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய  பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்-
உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————————-

40-புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
-சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி

தாமரையை ஒத்த திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் –
புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர்  -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

41- மஹாஸ்வந-
மிகவும் உயர்ந்த சப்தங்களை திரு நாமமாக யுடையவர் -வேத சப்தத்தை யுடையவன் -பூஜ்யமான சாவித்ரி
மந்தரத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —-மஹா பூஜ்யான ஸ்வ நக சப்த யச்யேதி-மஹாஸ்வந-

மிகவும் உயர்ந்த சப்தமாகிய வேதத்தை லஷணமாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

ஆதரவற்ற நல்லோரை தம்மிடத்துக்கு அழைத்துச் செல்லும் மேன்மை யுடையவர் -மேன்மை கொண்ட வாயுவைத் தூண்டுபவர் –
கம்பீரமான குரலுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

42-அநாதி நிதந –
நித்ய யுவா -ஷட்பாவம் இல்லாத திருமேனி யுடையவர் -ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுவது அல்ல -சகல ஆத்மாக்களும் நித்யம் ஆகையாலே –
திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தை சொல்கிறது -தோஷமற்ற -நீலக் கடலில் உள்ள மின்னல் போன்ற
அழகிய இளமை பொருந்திய -எல்லாக் காலத்திலும் காரணமாக  இருப்பதாலும்
ஞானத்தைப் போலே அவன் ஸ்வரூபத்தை காட்டும் அடையாளமாக இருப்பதாலும்
தமஸ் ஸூக்கு அப்பால் -அஷரம் -கால அதீதம் அப்பால் பட்டு -உபாசிப்பவர் பெரும் நித்யமான சாரூப்யம் -நித்யமாக விளங்கும் திரு மேனி –
உருவம் இல்லை என்கிற சுருதி வாக்யங்கள் உலகோர் போல தாழ்ந்த உருவம் இல்லை -என்பதைச் சொல்ல வந்ததே –
ப்ரஹ்ம  ஸூத்ரகாரர் வாக்யகாரர் பாஷ்யகாரர்கள் நித்தியமான சரீரம் காட்டி அருளி யுள்ளார்கள் –
அவதாரங்களிலும் தோற்றம் முடிவு இல்லை -திரைக்குள் இருந்து வெளியே வந்து உள்ளே போவதைப் போலே
பரம பதத்தில் இருந்து வந்து மீண்டும் தன்னுடைச் சோதி எழுந்து அருளுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் —-

பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்—
பிறப்பு இறப்பு அற்றவர் -முக்ய பிராணனைத் தூண்டுபவர்-ருத்ரனின் அந்தர்யாமி நருசிம்மனாக இருந்து மன்மதனை எரித்தவர்

தம்மைப் பற்றிய கானத்தைக் செய்பவர்களை அழிக்காதவர் -வாழ்விப்பவர் -கானத்தில் பிரியம் யுடையவர் ஆதலால் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————————

43- தாதா-
எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில் சேதனர்களின் தொகுதியாகிய
பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம் பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –

ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————–

44-விதாதா –
அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –

ஆதி சேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் -பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள்  இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————-

45-தாதுருத்தம –
உயர்ந்த படைப்பாளி -நான்முகனில் காட்டிலும் முகச் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஸ்ரஷ்டு உத்க்ருஷ்ட தம தண்டா பூபிகா தத் ஸ்ருஷ்டப்ய க பிரஜாபதி
பூமி முதலிய தாதுக்களைக் காட்டிலும் சிறந்த ஞான வஸ்து -விசேஷணத்துடன் கூடிய ஒரே நாமம் -சாமாநாதிகரண்யத்தால் -பிரமன்
முதலியவர்களில் காட்டிலும் மேம்பட்டவர்
அல்லது -வையதிகரண்யத்தால் இரண்டு நாமமாகவும் கொள்ளலாம் -கார்யம் காரணம் இரண்டுமாக இருக்கின்ற பிரபஞ்சத்தை தாங்கும்

சித்த ஸ்வரூபி -ஸ்ரீ சங்கரர்—
நான்முகனை விட மிக உயர்ந்தவர் -வினையடியை யுடைய சொற்களுக்கு பொருளாக உள்ளவர்களில் மிக உயர்ந்தவர் –

வினைச் சொற்கள் பெயர்ச் சொற்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவரான
ஸ்ரீ ஹனுமானால் விரும்பப் படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

———————————————————————————————————–

46-அப்ரமேய
ப்ரஹ்மாதிகளாலும் இந்த்ரியங்க ளால்  அறிய முடியாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
சாஸ்திரம் முதலிய எந்தப் பிரமாணங்களுக்கும் எட்டாதவர் -சப்தம் முதலிய எந்த குணங்களும் இல்லாதவர் ஆகையால் பிரத்யஷ
பிரமாணத்துக்கு விஷயமல்லர் –
அடையாளங்கள் இல்லாதவர் ஆகையால் அனுமானத்துக்கும் விஷயம் அல்லர்
பாகங்கள் இல்லாமை பற்றி சாத்ருச்யம் இல்லாமையாலே உபமானத்தாலும் அறிய முடியாதவர்
ஒன்றும் சம்பவிக்க மாட்டாதாகையாலே அர்த்தா பத்திக்கும் விஷயம் அல்லர்
பாவ ரூபமாக இருப்பதால் அபாவத்துக்கும் விஷயம் அல்லர்
பிரமாண அதிசயம் ஒன்றும் இல்லாதவர் ஆகையாலே சாஸ்திர பிரமாணத்துகும் விஷயம் அல்லர்
பின் சாஸ்திர யோநித்வம் எப்படிக் கூடும் என்னில் பிரமாண பிரமேயங்களுக்கு சாஷியாக இருப்பதால்

பிரமாணத்திற்கு விஷயம் ஆகாமல் இருக்கச் செய்தேயும்
பிரமாணத்திற்கு விஷயமாக நினைக்கும் பிரமத்தை நிவர்த்தி பண்ணுகிற விஷயத்தில் சாஸ்திரம் பிரமாணம் ஆகின்ற படியால்
சாஸ்திரம் பிரம்மத்தில் பிரமாணம் என்கிறது -ஸ்ரீ சங்கரர்—

அறிந்து கொள்ள முடியாத அளவற்ற குணங்களை யுடையவர் –
சர்வஞ்ஞன் ஆதலால் தாம் தெரிந்து கொள்ள வேண்டியவை எவையும் இல்லாதவர்
பக்தர்களால் அறிய வேண்டிய பொருத்தமான குணங்கள் உள்ளவர்-
உயர்ந்தவளான லஷ்மி தேவிக்கு ஆச்சர்யத்தை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

47-ஹ்ருஷிகேச –
இந்த்ரியங்களையும் நியமிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-

இந்த்ரியங்களுக்குத் தலைவரான ஜீவா ஸ்வரூபர்-உலகு அனைத்துக்கும் மகிழ்ச்சியை யுண்டாக்கும்
கேசங்கள் என்கிற கிரணங்களை யுடைய சூரிய சந்திர ரூபர் -ஸ்ரீ சங்கரர்—

திரு மகளுக்கும் நான்முகனுக்கும் தலைவர்  -லஷ்மீ ப்ரஹ்ம ருத்ராதிகளை   யுண்டாக்கியவர் –
இந்த்ரியங்களுக்கு ஈஸ்வரர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

48- பத்ம நாப –
நான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

உலக்குக்கு எல்லாம் காரணமான தாமரைய்த் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரையை அலர்த்துகின்ற சூர்யனைப் போன்ற  ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் –
திருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

49-அமரப்ரபு –
அந்த நான்முகன் முதலிய தேவர்களுக்கும் படைத்தல் முதலிய அதிகாரங்களைக் கொடுத்து நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

அமரர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்—

ஞானத்தை மிகக் கொடுக்கும்  பிரபு -அளவில்லா மகிழ்ச்சியை யுடையவர் –
தன்னை அறிந்த மேதைகளைப் பிரகாசிக்கச் செய்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————–

50-விஸ்வ கர்மா –
பிரமனைப் படைப்பதற்கு முன்னும் பின்னும் உள்ள உலக வியாபாரங்கள் எல்லாம் தமது செய்கைகளாகவே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

உலகங்களைப் படைக்கும் செயலை யுடையவர் -படைக்கப் படுவதால் உலகம் கர்மம் உலகமாகிய கர்மத்தை யுடையவர் –
விசித்தரமாக நிர்மாணிக்கும் சக்தியை உடைய விச்வகர்மாவைப் போன்றவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடன் மீது அமர்ந்து செல்பருமாய் -கர்மங்களால் கட்டுப் படாதவருமாய் இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –

April 13, 2015

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-

வாழி உலகாசிரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னும் மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு –

———————————————————————————

சம்சாரியான சேதனனுக்கு தத்வ ஜ்ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது அர்த்த பஞ்சக ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
அர்த்த பஞ்சக ஜ்ஞானம் ஆவது –1- ஸ்வ ஸ்வரூப /2- பர ஸ்வரூப /3- புருஷார்த்த ஸ்வரூப /
4- உபாய ஸ்வரூப /5- விரோதி ஸ்வரூபங்களை -உள்ளபடி அறிக்கை –
இவற்றில் ஒரொரு விஷயம் தான் அஞ்சு படிப் பட்டு இருக்கும் –
1- ஸ்வ ஸ்வரூபம் -என்கிறது -ஆத்ம ஸ்வரூபத்தை –ஆத்ம ஸ்வரூபம் தான் நித்யர் -முக்தர் -பத்தர் -கேவலர் – -முமுஷூக்கள் -என்று ஐந்து
2-பர ஸ்வரூபம் -என்கிறது ஈஸ்வர ஸ்வரூபத்தை -ஈஸ்வர ஸ்வரூபம் தான் -பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம் என்று ஐந்து –
3- புருஷார்த்த ஸ்வரூபம் -என்கிறது புருஷனாலே அர்த்திக்கிப்படுமது புருஷார்த்தம் –
அந்தப் புருஷார்த்தம் தான் -தர்ம -அர்த்த -காம -ஆத்மானுபவம் -பகவத் அனுபவம் -என்று ஐந்து
4- உபாய ஸ்வரூபம் என்கிறது கர்ம ஜ்ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபிமானம் என்று ஐந்து –
5-விரோதி ஸ்வரூபம் என்கிறது -ஸ்வரூப விரோதி பரதவ விரோதி -புருஷார்த்த விரோதி -உபாய விரோதி -ப்ராப்தி விரோதி என்று ஐந்து –

—————————————————————————————

1-இவற்றில் நித்யராவார் -ஒரு நாளும் சம்சார சம்பந்தம் ஆகிற அவத்யம் இன்றிக்கே நிரவத்யராய் -பகவத் அனுபவ -அனுகூல்யைக போகராய்
வானிளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் -பெரியாழ்வார் -3-6-3-என்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு
விண்ணாட்டவர் மூதுவர் -திரு விருத்தம் -2-என்கிறபடி பட்டம் கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரி களாய்
ஈஸ்வர நியோகாத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களைப் பண்ணவும் சக்தராய்
பர வ்யூஹாதி சர்வ அவச்தைகளிலும் தொடர்ந்து அடிமை செய்யக் கடவராய்
கோயில் கொண்டான் தன் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே   -திருவாய் -8-6-5-என்றபடி
கோயில் கொள் தெய்வங்களான -சேனை முதலியார் தொடக்கமான அமரர்கள்-

2-முக்தராவார் -பகவத் பிரசாதத்தாலே பிரகிருதி சம்பந்தத்தால் வந்த க்லேசங்கள் எல்லாம் கழிந்து
பகவத் ஸ்வரூப ரூப குண விபவங்களை அனுபவித்து அவ் வநுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமையாலே வாயாரப் புகழ்ந்து
மீட்சியின்றி வைகுண்ட மா நகரத்திலே -திருவாய் -4-10-11-களித்து ஆனந்திக்கிற முனிவர்கள் –

3-பத்தராவார் -பாஞ்ச பௌதிகமாய்-அநித்யமாய்-ஸூக துக்க அநுபவ பரிகரமாய் -ஆத்ம விச்லேஷத்தில் தர்சன ஸ்பர்சன யோக்யம் அல்லாதபடி
அஸூத்தாஸ்பதமாய்- அஜ்ஞான அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜநகமான ஸ்வ தேஹமே ஆத்மாவாகவும் -சப்தாதி விஷய அநுபவ ஜனிதமான
ஸ்வ தேக போஷணமே புருஷார்த்தமாகவும்-சப்தாதி விஷய அனுபவத்துக்கு உறுப்பாக வர்ணாஸ்ரம தர்மங்களை அழிய மாறியும்
-அசேவ்ய சேவை பண்ணியும்  -பூத ஹிம்சை பண்ணியும் -பர தார பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியும் -சம்சார வர்த்தகராய்-பகவத் விமுகரான சேதனர்-

4-கேவலன் ஆவான் -தனியிடத்திலே மிகவும் ஷூத்பிபாசைகளால் நலிவு பட்டவன் –
பஷ்ய அபஷ்ய விவேகம் பண்ண மாட்டாதே தன்னுடம்பைத் தானே ஜீவித்து பிரசன்னனாமா போலே சம்சார தாப அக்நியாலே தப்தனானவன்
சம்சார துக்க நிவ்ருத்திக்கு உறுப்பாக சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தாலே பிரக்ருதியாத்ம விவேகம் பண்ணி
பிரகிருதி -துக்காஸ்ரயமாய் -ஹேய பதார்த்த சமுதமாய் இருக்கிற ஆகாரத்தையும்
ஆத்மா ப்ரக்ருதே பரனாய் -பஞ்ச விம்சகனாய் -ஸ்வயம் பிரகாசனாய் -ஸ்வதஸ் ஸூகியாய்-நித்யனாய் அப்ராக்ருதனாய் இருக்கிற ஆகாரத்தையும் அனுசந்தித்து
முன்பு தான் பட்ட துக்கத்தின் கனத்தாலே இவ்வல்ப ரசத்திலே கால் தாழ்ந்து
உணர் முழு நலமான-திருவாய் -1-1-2-பரமாத்மா விவேகம் பண்ண மாட்டாதே அமுத வெள்ளத்தானாம்-திருவாசிரியம் -2- சிறப்பு விட்டு
அவ்வாதம பிராப்திக்கு சாதனமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டனாய் -யோக பலமான ஆத்ம அநுபவ மாத்ரத்தையே புருஷார்த்தமாக அனுபவித்து
பின்பு சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று யாவதாத்மபாவி அசரீரியாகக் கொண்டு திரிவான் ஒருவன் –

5-மோஷத்தில் இச்சை யுடையவர்களுக்கு முமுஷூக்கள் என்று பேராகக் கடவது –
இது தான் முமுஷூக்களாய்-உபாசகராயிருப்பாரும் -முமுஷூக்களாய் பிரபன்னராய் இருப்பாருமாய்-இரண்டு படியாய் இருக்கும்-

———————————————————————————-

1-ஈஸ்வர விஷயத்தில் பரத்வமாவது -பரம பதத்திலே -அவாக்ய அநாதர-என்று எழுந்தி அருளி இருக்கிற
ஆதி யஞ்சோதி யுருவான-திருவாய் -3-5-5-பர வாஸூ தேவர் –

2-வியூகம் ஆவது -சிருஷ்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாக்களான சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்கள் –

3- விபவமாவது -ராம க்ருஷ்ணாத் யவதாரங்கள்

4- அந்தர்யாமித்வம் இரண்டு படிப்பட்டு இருக்கும் -அதாவது –
4-1–அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2–என்றும்
எனதாவி -திருவாய் -2-3-4- என்றும் -என்னுயிர் -திருவாய் -9-5-1-என்றும் -சொல்லுகிறபடியே ஆத்மாவுக்கும் உள்ளும்
4-2–போதில் கமல் வன்னெஞ்சம் புகுந்து -பெரியாழ்வார் -5-2-8-என்றும் -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -பெரியாள் -5-2-10- என்றும்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -திரு மாலை -16- என்றும் சொல்லுகிறபடியே
லஷ்மீ சஹிதனாய்-விலஷண  விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு  ஹ்ருதயக் கமலத்துக்கு உள்ளே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
சதா அவலோகனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு

5- அர்ச்சாவதாரமாவது தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமருகந்ததெப்பேர் மற்றப்பேர் -முதல் திரு -44-என்கிறபடியே
தனக்கு என ஒரு உருவும் ஓர் பெயரும்  இன்றிக்கே ஆஸ்ரிதர் உகந்த வடிவே வடிவாகவும் -அவர்கள் இட்ட பெயரே பெயராகவும்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தேயும் அஜ்ஞனைப் போலேயும் -சர்வ சக்தனாய் இருக்கச் செய்தேயும் அசக்தனைப் போலேயும்
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கச் செய்தேயும் சாபேஷனைப் போலேயும் -ரஷகனாய் இருக்கச் செய்தேயும் ரஷ்யம் போலேயும்
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு கண்ணுக்கு விஷயமாம்படி சர்வ ஸூ லபனாய்க் கொண்டு கோயில்களிலும் கிருஹங்களிலும்
தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் நிலை –

————————————————————————————–

1-புருஷார்த்தங்களில் தர்மம் ஆவது -பிராணி ரஷணத்துக்கு உறுப்பாகப் பண்ணும் வ்ருத்தி விசேஷங்கள் –

2- அர்த்தம் ஆவது -வர்ணாஸ்ரம அநுரூபமாக தந தாஞாதிகளை சங்க்ரஹித்து -தேவதா விஷயங்களிலும் -பைத்ருகமான கர்மங்களிலும்
பிராணிகள் விஷயமாகவும் உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை யறிந்து தர்ம புத்த்யா வ்யயிக்கை –

3- காமமாவது -ஐஹ லௌகிகமாயும்-பார லௌகிகமாயும் த்விவிதமாய் இருக்கும்
3-A-இஹ லோகத்தில் காமமாவது -பித்ரு மாத்ரு ரத்ன தந தான்யா வஸ்த்ர அன்ன பான புத்திர  மித்ர களத்ர பஸூ
க்ருஹ ஷேத்ர சந்தன குஸூம  தாம்பூலாதி பதார்த்தங்களில் சப்தாதி விஷய அனுபவத்தால் வந்த ஸூக விஷயங்கள் –
3-B -பர லோகத்தில் காமமாவது -இதில் விலஷணமாய் தேஜோ ரூபமான ஸ்வர்க்காதி லோகங்களிலே சென்று
பசி தாக சோக மோஹ  ஜரா மரணாதிகள் இன்றிக்கே ஆர்ஜித்த புண்யத்துக்கு ஈடாக அம்ருத பானம் பண்ணி
அப்சரஸ் ஸூக்களோடு சப்தாதி விஷய அனுபவம் பண்ணுகை-

4-ஆத்ம அனுபவம் ஆவது துக்க நிவ்ருத்தி மாத்ரமான கேவல ஆத்ம அநு பவ மாத்ரத்தையும் மோஷம் என்று சொல்லுவர்கள்-

5-இனி பகவத் அநு பவ ரூபமான பரம புருஷார்த்த லஷண மோஷமாவது-பிராரப்த கர்ம சேஷமாய் அவஸ்யம்  அநு பாவ்யமான புண்ய பாபங்கள் நசித்து –
அஸ்தி -ஜாயதே -பரிணமதே-விவர்த்ததே -அபஷீயதே -விநச்யதி-என்கிறபடியே ஷட்பாவ விகாராஸ்பதமாய்-தாபத்ராஸ்ரயமாய் –
பகவத் ஸ்வரூபத்தை மறைப்பித்து விபரீத ஜ்ஞானத்தை ஜநிப்பிக்கக் கடவதாய் -சம்சார வர்த்தகமான ஸ்தூல சரீரத்தை உபேஷையோடே பொகட்டு
ஸூஷூம்நா நாடியாலே  சிரகபாலத்தைப் பேதித்துப் புறப்பட்டு ஸூஷ்ம சரீரத்தோடு வானேற வழி பெற்று
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின்  நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய்-பெரிய திருமடல் -ஸூஷ்ம சரீரத்தையும் -வாஸநா ரேணுவையும் விரஜா ஸ்நானத்தாலே கழித்து
சகல தாபங்களும் ஆறும்படி  அமாநவ கர ஸ்பர்சமும் பெற்று
ஸூத்த சத்வாத்மகமாய் பஞ்ச உபநிஷண்மயமாய் -ஜ்ஞானானந்த ஜனகமாய் -பகவத அநு பவைக பரிகரமாய்
ஒளிக் கொண்ட சோதியுமாய் -திருவாய் -2-3-10-இருக்கிற அப்ராக்ருத விக்ரஹத்தைப் பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -திருவாய் -10-9-8- நிரதிசய ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்தை ப்ராபித்து
லஷ்மீ சஹிதனாய் பூமி நீளா நாயகனாய் -விலஷண விக்ரஹ உக்தனாய் -குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
-எழுவதோர் உருவான ஸ்ரீ வைகுண்ட நாதனை திருவாய் -5-5-10-  -நித்ய அநு பவம் பண்ணி -நித்ய கிங்கரர் ஸ்வபாவனாகை-

————————————————————————-

1-உபாயங்களில் கர்ம யோகமாவது -யஜ்ஞ தான தபோ சந்த்யாவந்தன பஞ்ச மகா யஜ்ஞ அக்னி ஹோத்ர தீர்த்த யாத்ரா புண்ய ஷேத்ர வாஸ
க்ருச்சர சாந்த்ராயண புண்ய நாத ஸ்நான  வ்ரத சாதுர்மாஸ்ய   ஜப தர்ப்பணாதி தர்ம அனுஷ்டா நத்தாலே வந்த காயஸோ ஷணத்தாலே பாப நாசம் பிறந்து –
அத்தாலே இந்த்ரியத்வாரா பிரசரிக்கிற தர்மபூத ஜ்ஞானத்துக்கு சப்தாதிகள் விஷயம் அல்லாமையாலே விஷய சாபேஷை பிறந்து
யம நியம ஆசன ப்ராணாயாம ப்ரத்யாஹார தான தாரண சமாதி ரூபமான அஷ்டாங்க யோக க்ரமத்தாலே
யோக அப்யாச காலத்தளவும் ஜ்ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை-இது தான் ஜ்ஞான யோகத்துக்கு சஹகாரியுமாய்
ஐஸ்வர்யத்துக்கு பிரதான சாதனமுமாய் இருக்கும் –

2- ஜ்ஞான யோகமாவது இப்படி யோக ஜன்யமான ஜ்ஞானத்துக்கு -ஹ்ருதய கமலம் -ஆதித்ய மண்டலம் தொடக்கமான ஸ்தல விசேஷங்களில்
எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனை விஷயமாக்கி
அவ்விஷயம் தன்னை சங்க சக்ர கதா தரமாய் -பீதாம்பர யுக்தமாய் -க்ரீடாதி நூபுராந்த திவ்ய பூஷண அலங்க்ருதமாய்
லஷ்மீ சஹிதமாகவும் அனுசந்தித்து யோகாப்யாச க்ரமத்தாலே அனுபவ காலத்தைப் பெருக்கி அநவரத பாவநா ரூபமாக்குகை –
இது தான் பக்தி யோகத்துக்கு சஹகாரியமாய் கைவல்ய மோஷத்துக்கும் பிரதான சாதனமுமாய் இருக்கும் –

3- பக்தி யோகமாவது -இப்படி தைலதாராவாத விச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான அனுபவம் ப்ரீதி ரூபா பன்னமாகையும்
அது தன்னை அறியப் பார்த்தால் பிராரப்த கர்மம் கழிகையும் சாதன சாத்யங்களை அனுசந்தித்து அதினுடைய சங்கோச விகாசமாமாம்படி  பரிணமிப்பைக்கையும்-

4-பிரபத்த்யுபாயம் ஆவது -இப்படி கர்ம ஜ்ஞான சஹாக்ருதையான பக்தி யோகத்தில் அசக்தர்க்கும் அப்ராப்தர்க்கும் ஸூ கரமுமாய்
சீகர பலப்ரதமுமாய் -உபாயம் சக்ருத்தாகையாலே உபாய அனுஷ்டான சமநந்தரம் யுண்டாகக் கடவதான பகவத் விஷய அனுபவங்கள்
எல்லாம் ப்ராப்ய கோடி கடிதங்கள் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும் –
இது தான் 4-A -ஆர்த்த ரூப பிரபத்தி என்றும் -4-B -த்ருப்த ரூப பிரபத்தி என்றும் இரண்டு படிப் பட்டு இருக்கும் –
4-A -ஆர்த்த ரூப் பிரபத்தி யாவது -நிர்ஹேதுக பகவத் கடாஷம் அடியாக சாஸ்திர அப்யாசத்தாலும் சதாசார்யா உபதேசத்தாலும்
யதாஜ்ஞானம் பிறந்தவாறே பகவத் அனுபவத்துக்கு விபரீதமான தேக சம்பந்தமும் -தேச சம்பந்தமும் -தேசிகருடைய சஹவாசமும் -துஸ் சஹமாய்
பகவத் அனுபவத்துக்கு ஏகாந்த மாம்படி விலஷணமான தேஹத்தையும் தேசத்தையும் தேசிகரையும் ப்ராபிக்கையில் த்வரை விஞ்சி
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்தாயன் -திருவாய் மொழி -3-3-9-என்றும்
திருவேங்கடத்தானே புகலொன்றில்லா அடியேன்-திருவாய்  -6-10-10-என்றும்
வேங்கடதுறைவார்க்கு நம-திருவாய் -3-3-6-என்று பூர்ண பிரபத்தி பண்ணி
பல நீ காட்டிப் படுப்பாயோ -திருவாய் -6-9-9-என்றும் -இன்னம் கெடுப்பாயோ -6-9-8- என்றும் –
இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -பெரியாழ்வார் -5-3-7-என்றும் -அடைய  -பெரிய திருமொழி -11-8-6- என்றும்
திருவாணை நின்னாணை கண்டாய் -திருவாய் -10-10-2-என்றும் -இனி நான் போகல ஒட்டேன் -திருவாய் -10-10-1- என்று தடுத்தும் வளைத்தும் பெறுகை-

4-B -த்ருப்த ரூப பிரபத்தியாவது-சரீராந்தர ப்ராப்தியிலும் ஸ்வர்க்க நரக அனுபவங்களிலும் விரக்தியும் பீதியும் பிறந்து
அதினுடைய நிவ்ருத்திக்கும் பகவத் ப்ராப்திக்கும் உறுப்பாக சதாசார்யா உபதேச க்ரமத்தாலே  உபாய ச்வீகாரம் பண்ணி –
-விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தராய் வேத விஹிதமான வர்ணாஸ்ரம அனுஷ்டானமும் -பகவத் பாகவத கைங்கர்யமும் –
மானஸ வாசிக காயிகங்களாலே யதா பலம் அனுஷ்டித்து -ஈஸ்வரன் -சேஷியாய்-நியந்தாவாய் -ஸ்வாமியாய் -சரீரியாய் -வ்யாபகனாய்
தாரகனாய் -ரஷகனாய் -போக்தாவாய் -சர்வஜ்ஞனாய் சர்வ சக்தியாய் -சர்வ சம்பூர்ணனாய் -அவாப்த சமஸ்த காமனாய் -இருக்கிற ஆகாரத்தையும்
தான் அவனுக்கு -சேஷமாய் -நியாம்யமாய் -ஸ்வம்மாய் -சரீரமாய்-வ்யாப்யமாய் -தார்யமாய் -ரஷ்யமாய் -போக்யமாய் -அஜ்ஞனாய் –
அசக்தனாய் -அபூர்ணனாய் -சாபேஷனாய்-இருக்கிற ஆகாரத்தையும்
அனுசந்தித்திக் கொண்டு -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்று
உபாயத்தில் சர்வ பாரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு நிர்பரனாய் இருக்கை –

5-ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து -இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால்
ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே -சகல ப்ரவ்ருத்தி  நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும் எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் –

—————————————————————————–

1-விரோதி வர்க்கத்தில் ஸ்வரூப விரோதி யாவது -தேஹாத்மா அபிமானமும் -அந்ய சேஷத்வமும் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யமும் –

2-பரத்வ விரோதியாவது -தேவதாந்திர பரத்வ பிரதிபத்தியும் -சமத்வ பிரதிபத்தியும் -ஷூதர தேவதா விஷயத்தில் சக்தி யோக பிரதிபத்தியும்
அவதார விஷயத்தில் மானுஷ பிரதிபத்தியும்-அர்ச்சாவதார விஷயத்தில் அசக்தியோக பிரதிபத்தியும்

3- புருஷார்த்த விரோதியாவது -புருஷார்த் தாந்த்ரங்களில் இச்சையும் தானுகந்த பகவத் கைங்கர்யங்களில் இச்சையும் –

4-உபாய விரோதியாவது -உபாயாந்தர வைலஷண்ய பிரதிபத்தியும் உபாய லாகவமும் உபேய கௌரவமும் விரோதி பாஹூ ள்யமும்-

5-ப்ராப்தி விரோதியாவது -பிராரப்த சரீர சம்பந்தமும் -அனுதாப ஸூநயமாய் குருவாய் ஸ்திரமாய் இருந்துள்ள பகவத பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களும் –

இவை எல்லாவற்றுக்கும் விரோதி என்று பேராகக் கடவது –
அன்ன தோஷம் -ஜ்ஞான விரோதியாகக் கடவது
சஹவாச தோஷம் போக விரோதியாகக் கடவது
அபிமானம் -ஸ்வரூப விரோதியாகக் கடவது –

—————————————————————————

இப்படி அர்த்த பஞ்சக ஜ்ஞானம் பிறந்து முமுஷூவாய் சம்சாரத்திலே வர்த்திக்கிற சேதனனுக்கு மோஷ சித்தி அளவும்
சம்சாரம் மேலிடாத படி கால ஷேபம் பண்ணும் க்ரமம்-வர்ணாஸ்ரம அனுரூபமாகவும் -வைஷ்ணத்வ அனுரூபமாகவும் –
அசநாச்சாதநங்களை சம்பாதித்து -யதன்ன புருஷோ பவதி ததான் நாஸ் தஸ்ய தேவதா -என்கிறபடியே சகல பதார்த்தங்களையும் பகவத் விஷயத்திலே
நிவேதித்து யதாபலம் பாகவத கிஞ்சித் காரம் பண்ணி தேக தாரண மாத்ரத்தை பிரசாத பிரதிபத்தியோடே ஜீவிக்கையும் –
வருந்தியும் தத்வ ஜ்ஞானம் பிறப்பித்த ஆச்சார்யன் சந்நிதியிலே கிஞ்சித் காரத்தோடு அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கையும்
ஈஸ்வரன் சந்நிதியிலே தன்னுடைய நீசத்வத்தை அனுசந்திக்கையும் –
ஆச்சார்யன் சந்நிதியில் தன்னுடைய அஜ்ஞதையை அனுசந்திக்கையும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்கையும் –
சம்சாரிகள் முன்னில் தன்னுடைய வ்யாவ்ருத்தியை அனுசந்திக்கையும்
ப்ராப்யத்தில் த்வரையும்-
பிராபகத்தில் அத்யவசாயமும் –
விரோதியில் பயமும் –
தேஹத்தில் அருசியும் -ஆர்த்தியும்
ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் –
உத்தேச விஷயத்தில் கௌரவமும் –
உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞதையும் -உத்தாரகப் பிரதிபத்தியும்
அனுவர்த்திக்கையும் வேணும் –

இப்படி ஜ்ஞான அனுஷ்டானங்களோடு கூடி வர்த்திக்குமவன் -ஈஸ்வரனுக்கு பிராட்டிமாரிலும் -நித்ய முக்தரிலும் -அத்யந்த அபிமத விஷயமாகக் கடவன் –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம் / ஸ்ரீ யதிராஜ மங்களம் ஸ்லோகம் —

April 11, 2015

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம்–

ஸ்ரீ ராமானுஜ புஷ்கராஷோ யதீந்திர கருணாகர
காந்திமத்யாத்மஜா ஸ்ரீ மான் லீலா மானுஷ விக்ரஹ –1
சர்வ சாஸ்திர தத்வஜ்ஞ சர்வஜ்ஞ சஜ்ஜனப்ரிய
நாராயண க்ருபா பாத்ர ஸ்ரீ பூத புர நாயக –2
அநகோ   பக்த மனதார கேசவா நந்த வர்த்தன
காஞ்சி பூர்ணப்ரிய சக ப்ரணரார்த்தி விநாசன –3
புண்ய சங்கீர்த்தன புண்யோ ப்ரஹ்ம ராஷச மோசக
யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேதகுடாரக –4
அமோகோ லஷ்மண முனி சாரதா சோக நாசன
நிரந்தர மநாஜ்ஞான நிர்மோசன விசஷண–5
வேதாந்த த்வய சாரஜ்ஞோ  வரதாம்புப்ர தாயக
பராபிப்ராய தத்வஜ்ஞ யாமு நாங்குலி   மோசக  –6
தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்த  சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பத –7
த்ரிதண்ட தாரி ப்ரஹ்மஜ்ஞோ ப்ரஹ்ம ஜ்ஞான பராயண
ரங்கேச கைங்கர்யயுத விபூதித்வ்ய நாயக –8
கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசக
வர ரங்காநுகம்பாத்த  த்ரவிடாம் நாய பாரக –9
மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீ
சதுஸ் சப்ததி சிஷ்ட்யாபஞ்சாசார்யா பதாச்ரய–10
பிரபீத விஷதீர்த்தாம்ப ப்ரகடீ க்ருதவைபவ
பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜன –11
பவீத்ரா கருத கூரேசோ பாகி நேயத்ரி தண்டக
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயக –12
ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவ
தேவ ராஜார்ச்ச நர்த மூக முக்தி ப்ரதாயக –13
யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதோ தரணீதர
வரதாசார்ய சத்பக்தோ யஜ்ஞே சார்த்தி  விநாசக -14
அனந்தாபீஷ்ட பலதோ விடலேந்திர ப்ரபூஜீத
ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தக  –15
வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசன –16
அத்வைத மத விச்சேத்தா விசிஷ்டாத்வைத பாரக
குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசக –17
விநா சிதாகிலமத சேஷீ க்ருத ரமாபதி
புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசக  18-
பாஷா தத்த ஹயக்ரீவோ பாஷ்யகாரோ மகாயச
பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசக –19-
ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர  ப்ரதாயக
ஸ்ரீ வெங்கடேச ச்வசுர ஸ்ரீ ராமசக தேசிக –20
க்ருபாமாத்ர ப்ரசன்னார்யோ கோபிகா மோஷ தாயக
சமீசீ நார்ய சச்சிஷ்ய சத்க்ருதோ வைஷ்ணவ ப்ரிய–21
க்ருமிகண்ட  ந்ருபத்வம்சீ  சர்வமந்திர மஹோததி
அங்கீ க்ருதாந்திர பூர்ணாய சாலக்ராம ப்ரதிஷ்டித –22
ஸ்ரீ பக்தக்ராம பூர்ணேச விஷ்ணு வர்த்தன ரஷக
பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூபப்ரதர்சக -23
நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த
நாராயண ப்ரடிஷ்டாதா சம்பத்புத்ர விமோசக–24
சனத்குமார ஜனக சாது லோக சிகாமணி
ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜ பூர்ண மநோரத–25
கோதாக்ரஜோ திகவிஜேதா கோதா பீஷ்டப்ரபூராக
சர்வ சம்சய விச்சேத்தா விஷ்ணு லோக ப்ரதாயக –26
அவ்யாஹத மஹத்வர்த்மா யதிராஜோ ஜகத்குரு
ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் –27
யா படத் ச்ருணுயாத்வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந  மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ்ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

—————————————————————————————————————————————–

 

ஸ்ரீ யதிராஜ மங்களம் -ஸ்லோகம் —

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-
நாத பன்மாஷ ராமார்ய பாத பங்கஜ சேவிநே
சேவ்யாய சர்வ யமி நாம் யதிராஜாய மங்களம் –2
பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ராயாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-
சம்சேவ்ய யாமு நாசார்யமே கலவ்யோசம் யஹம் குரோ
அன்யன்னேதி பதே நித்யம் யதிராஜாய மங்களம் –4
ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிச்ரோக்த ரஹச்யார்த்தவிதே சதா
தேவராஜா ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் -6
ஸ்ரீ மத் கோஷ்டீபுரீ பூர்ண திவ்யாஜ்ஞாம் குர்வதே முதா
ச்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் –6
கூரேச குருகா நாத தாசரத்யாதி தேக்கா
யச்சிஷ்யா பாந்தி தே தஸ்மை யதிராஜாய மங்களம் -7
சரமச்லோக தத்வார்த்தம் ஞ்யாத்வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தத்தே தம் ஸ்வ கீயோப்யோ யதிராஜாய மங்களம் -8
ஸ்ரீ சைல  பூர்ணக்ருபயா ஸ்ரீ ராமாயண மர்த்ததா
பக்த்யா யேன ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம் –9
சங்கராதி குத்ருஷ்டீ  நாம் பாஹ்யா நாம் நித நாய்ச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் -10-
குர்வந்துப நிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தயா பரதந்த்ராய பாஷ்யகராய மங்களம் -11
த்ரமிடோப நிஷத்வ்யாக்யாம் வதேதி மத நுஜ்ஞயா
சாசதே குருகேசம்தம் பாஷ்யகராய மங்களம் –12
கத்வாது சாரதா பீடம் வ்ருத்திம் போதைய நச்யச
அவலோக்யா கதா யாஸ்து பாஷ்யகராய மங்களம் -13
பரமாணும்ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத் பாஷ்யகராய மங்களம் –14
ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத்  தஸ்யாபி பாஷ்யகராய மங்களம் -15
தத்வா வ்ருஷகிரி சாஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரமப்ரீதி யுக்தாய பாஷ்யகராய மங்களம் –16
ஸ்ந்யாசம் குருதே காஞ்ச்யாம் அநந்த சரஸீ தடே
வரதே விசத பாராய பாஷ்யகாராய மங்களம் -17-
ஸ்ரீ மத் மகா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூ தாயா யதிராஜாய மங்களம் -18
சேஷதிவா சைன்யநாதோவா ஸ்ரீபதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மகா ப்ராஜ்ஞை எதிராஜாயா மங்களம் –19
ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிதாம்
ப்ரபன்ன சார்த்தவாஹாய யதிராஜாய மங்களம் -20-
வேதாத்மக  ப்ரமாணே  சத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயண சஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதிசேகர–21

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழியில் -சரணாகதி செய்த திவ்ய தேசங்கள் /திருப்பதிகங்கள் பெற்ற திவ்ய தேசங்கள்/ஒரு நல சுற்றம் -மங்களா சாசன திருப்பதிகள்-

April 11, 2015

1-திரு பிரிதி சென்று அடை நெஞ்சே
2-திரு சாளக்ராமம் அடை நெஞ்சே
3-உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள்  எந்தாய்
4-திருவேங்கடம் அடை நெஞ்சே -நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே –
அண்ணா அடியேன் இடரைக் களையாயே-வேங்கடத்து அறவனாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாய்
5-வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
6-அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
7-திருக் காவளம் பாடி மேய கண்ணனே களைகண் நீயே
8-திரு வெள்ளக் குளத்துக்குள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
9- ஆழி வண்ண நின்னடியிணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
10-திரு நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே
11-நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
12-திரு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
13-நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே
14-திருக் கண்ணபுரம் நாம் தொழுதுமே /திருக் கண்ணபுரமொன்று உடையேனுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ
15-திரு மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

——————————————————————————————————————————————————————————————————————————————-

திருப்பதிகங்கள் பெற்ற திவ்ய தேசங்கள் -50
ஒரு பதிகம் பெற்றவை–37
திருப்பிரிதி /திரு சாளக்ராமம் /திரு நைமி சாரண்யம் /திரு சிங்க வேள் குன்றம் /திரு எவ்வுள் /
திருவல்லிக்கேணி /திருநீர்மலை /திருவிடவெந்தை /திரு அட்டபுககரத்தான் /திரு பரமேஸ்வர விண்ணகரம் /
திருக்கோவலூர் /திருவயிந்திரபுரம் /திருக் காழிச் சீராம விண்ணகரம் /திரு நாங்கூர் மணி மாடக் கோயில் /திரு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் /
திரு நாங்கூர் அரிமேய விண்ணகரம் /திரு நாங்கூர் திருத் தேவனார் தொகை /திரு நாங்கூர் வண் புருடோத்தமம் /திரு நாங்கூர் செம் பொன் செய் கோயில் /
திரு நாங்கூர் திருத் தெற்றி யம்பலம் /
திரு நாங்கூர் திரு மணிக் கூடம் /திரு நாங்கை காவளம் பாடி  /திரு வெள்ளக் குளம் /திருப் பார்த்தன் பள்ளி /திரு இந்தளூர் /
திரு வெள்ளியங்குடி /திருப் புள்ளம் பூதங்குடி /திருக் கூடலூர் /திரு வெள்ளறை/தென் திருப்பேர் /
திரு நந்திபுர விண்ணகரம் /திருச் சேறை/ திரு சிறு புலியூர் /திருக் கண்ண மங்கை /திருக் கண்ணங்குடி /திரு நாகை/
திருவல்ல வாழ் /திருக் கோட்டியூர் /

இரண்டு பதிகங்கள் பெற்றவை -6
திரு வதரியாச்சிரமம் /திருக் கடல் மலை /தில்லைத் திருச்சித்திர கூடம் /திருப்புல்லாணி /திருக் குறுங்குடி/திருமாலிரும் சோலை /

மூன்று பதிகங்கள் பெற்றவை-2
திருவாலி /திரு விண்ணகர்

நான்கு பதிகங்கள் பெற்றவை-2
திருவேங்கடம்/திரு அழுந்தூர்

ஐந்து பதிகங்கள் பெற்றவை -1
திருவரங்கம்

பத்து பதிகங்கள் பெற்றவை-2
திரு நறையூர் /திருக் கண்ணபுரம்

——————————————————————————————————————————————————————————————————————————————-

ஒரு நல சுற்றம் -மங்களா சாசன திருப்பதிகள்
1-திரு நீர்மலை
2-திருக் கண்ணமங்கை
3-திருவேங்கடம்
4-திருத் தண்கா
5-திருவாலி
6-திரு நாங்கூர்
7-திருப்பேர் நகர்
8-திரு வெள்ளறை
9-திரு நறையூர்
10-திரு மெய்யம்
11-திருச்சேறை
12-திருக்குடந்தை
13-திரு அழுந்தூர்
14–திரு வெக்கா
15-திருமாலிரும் சோலை
16-திரு விண்ணகர்
17-திருக் கோட்டியூர்
18-திரு நாவாய்

——————————————————————————————————————————————————————————————————————————-

திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-8-மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்-

April 10, 2015

இத் திரு மொழியில் தனது தேக சம்பந்தத்தை அடியேனுக்கு போக்கி அருள வேணும் என்று
அவன் திருவடிகளிலே விழுந்து வேண்டுகிறார் –
பயிர் செய்பவன் பயிர் தலையிலே குடிசை கட்டிக் கொண்டு அதிலே இருந்து அப் பயிரைப் பாது காப்பது போலே
இந்நில யுலகத்திலே நித்ய சந்நிதி பண்ணி அருளி யுள்ள திவ்ய தேசங்களில்
தலைமை பெற்ற திருவரங்கமும் திருவாலியும் இத் திருமொழியிலே   எடுத்து ஆள்கிறார் –

————————————-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

ஜீவாத்மாவுக்கும்  பரமாத்மாவுக்கும் சம்வாதம்
ஜீவாத்மா -அநேக ஜீவகோடிகள் உம்மை இழந்து பிரபஞ்சத்தில் இழிவடைய வேண்டுவது எதனால்
பரமாத்மா -விஷயங்களில் இழிந்து புண்ய பாப கர்மங்களால் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து வருந்தும் இடத்தும்
அவற்றுக்கு அஞ்சி என்னை சரண் அடையவில்லையே -இதில் என் குற்றம் ஒன்றும் இல்லையே
ஜீவாத்மா -மனமே உனது ஆதீனம் -புண்ய பாபங்கள் உனது அனுஹ்ரஹ நிக்ரஹம் அடியாகத் தானே
நிரந்குச ஸ்வாதந்த்ரன் நீ பொறுத்து அருளினால் கேட்பார் யுண்டோ -சொத்தை காப்பது ஸ்வாமி கடமை அன்றோ
பரமாத்மா -ஞானம் சக்த்யாதிகளை கொடுத்து சேதனராக ஆக்கி அருளினேனே -வீணாக என் மேல் பழி சொல்வான் என்
வாத பிரதிவாதங்களுக்கு எல்லை இல்லையே –
மாற்றம் உளவாகிலும் சொல்லுவேன் -என்கிறார்
ஆற்றங்கரை மரம் விலகி நிற்கவோ -பிறரைக் கூப்பிடவோ -எப்போதும் அபாயத்துக்கு இடமாகுமே
ஆற்றம் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே
மரத்துக்கு அபாயம் உள்ளது என்றாலும் அஞ்சுவதற்கு சேதனம் இல்லையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
சப்தாதி விஷயங்கள் உனது ஆதீனம் ஆனபின்பு புலன் வழியே சென்றேன் என்று குறை சொல்லக் காரணம் இல்லையே
பயக்ருத் பய நாசன -பயத்துக்கு காரணமும் பரிகாரமும் நீயே
சப்தாதி விஷயங்களுக்கு நீயே நியாமகன் –

————————————–

சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா -11-8-2-

சீற்றம்  கொள்ளும்படி அநேக பகவத் பாகவத அபசாரங்கள் யுண்டே
ஆத்மாபஹாரம் -அவதாரங்கள் கர்ம வச்யதையால் பிறக்கும் பிறப்புடன் ஒக்கும் என்ற எண்ணம்
அர்ச்சாவதாரங்களில் -கல் பொன் வெள்ளி செம்பு –  உபாதான புத்தியும்
சாஸ்த்ரங்களில் சொல்லும் செயல்களை செய்யாமையும் நிஷித்த செயல்களை செய்தும்
அன்றிக்கே
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று உன் மேல் நான் சொல்லும் குறையினாலும் -கோபம் உண்டாகுமே
ஆனாலும் செப்புவன் –
உன்னுடைய கிருபையும்
சம்சாரம் ஆர்த்தியையும்
வேறு புகல் இல்லாத அநந்ய கதித்வத்தையும் -கொண்டு விண்ணப்பம் செய்கிறேன்
ஆக -கீழ்ப் பண்ணின அபதாரங்களாலே சீற்றம் யுண்டானாலும்
இப்போது அடியேன் சொல்லப் புகுகிற வார்த்தைகளால் சீற்றம் யுண்டானாலும்
சீற்றம் உள-என்ற அனந்தரத்திலே இவ்வர்த்தத்தைத் தாமே அருளிச் செய்தார் இறே-
சீற்றம் உள என்று அறிந்தால் சொல்லும்  படி என் என்னில்
அருளும் ஆர்த்தியும் அநந்ய கதித்வமும் சொல்லப் பண்ணும்
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம்படி இருப்பான் ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள்-

தடுத்து என்னை மீட்காமல் அனுமதி பண்ணி உதாசீனர் போலே இருந்து விடுகிறாயோ –
விலக்காமையே தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது
கிணற்றில் விழும் குழந்தையை தாய் எடாது இருந்தால் தாயே தள்ளினாள் என்கைக்குத்  தட்டில்லை
மரக்கலத்தில் யுள்ளாருக்கு அச்சம் வரும் –தீர்க்க சக்தி இல்லையே
பலருக்கும் யுண்டான அச்சம் இவர் ஒருவருக்கும் யுண்டானதே-தோன்ற -கலவர் -என்று பன்மையில் கூறுகிறார்
அவர்கள்  கவலை யுடம்பு அழிதல்-இவருக்கு
கலவர் மனத்திலும் மிக்கதே இவருக்கு
ஆழி வலவா -கலக்கம் தீர்க்க பரிகரம் உள்ளவனே -ஆற்றலும் யுள்ளவனே
வலவன்-வல்லவன் -வலது திருக்கையில் யுள்ளவன் என்றுமாம்-

———————————————-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —11-8-3-

உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -என் உள்ளம் தடுமாறாதபடி கடாஷித்து அருள வேணும்
தூங்கார் பிறவிகள் -தூங்குதல் அசைத்தல் சலித்தல் -மனம் சஞ்சலப்  படுவதற்கு ஹேதுவான சம்சாரம்
அன்றிக்கே தூங்குதல் -உறங்குதல் -தமோ குண வசத்தால் அஞ்ஞானம் மிக்க பிறப்புக்கள் என்னவுமாம்
பிறவிக்கண்-பழைமையான பாடம்-

—————————————

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

பிரளய ஆபத்தில் ரஷித்து அருளியவனே தம்மை சம்சார பிரளயத்தில் நின்றும் ரஷிக்க தக்கவன் என்பதால் –ஊழி முதல்வா -என்கிறார்
உரு ஆர் பிறவி -உடம்பும் உயிரும் கூடினதாயினும் உடம்பின் குணமான பேதமையே மிக்கு உயிரின் குணமான உணர்வு குன்றி
தேஹாத்மா அபிமானமே மிகுந்து ஆத்ம உஜ்ஜீவன வகையில் புகாத பிறப்பு -அச்சத்துக்கு காரணமாய் அமைந்த பிறப்பு
திரிதல் -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து இறந்து உழல்தல் -ஜன்ம மரணங்களுக்கும் நடுவே அகப்பட்டு நோவு பட்டு
எங்கும் புகலிடம் இன்றி பொறுக்கவும் மாட்டாதே படுகிற பாட்டுக்கு -இரு  பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போலே -என்கிறார்
இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என்னுள்ளம் -திரு நாவுக்கரசு நாயனார்-

—————————————-

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-

பெரு நீரில் அகப்பட்ட நரியினம் போலே ஒன்றும் தோன்றாது நிலை தளும்பிக் கிடக்கின்றேன்
பிறப்பதிலே புகுவதற்கு காரணம் ஊழ்  வினையே யாயினும் -அதனை எம்பெருமான் ஒழித்திட சமர்த்தனாய் இருந்தும்
ஒழித்திடாது இருத்தலே காரணமாக -தள்ளிப் புகப்பெய்தி   கொல் -அவன் மேல் ஏறிட்டுக் கூறுகின்றார் –
தள்ளிப் புகப்பெய்தி-எல்லாவற்றுக்கும் அவனை இன்னாதாகலாம் படி இறே பிராப்தி இருப்பது
கிணற்றிலே விழுகிற பிரஜையை வாங்காத தாயை தானே தள்ளினாள்-என்னக் கடவது இறே –
அடியிலே நீ பரிஹரியாமை அன்றோ இது அகல வேண்டிற்று –
தள்ளிப் புகப்பெய்தி   கொல் –நெருப்பிலே அகப்பட்டு-எரிகிறவனை-திரிய அதுக்குள்ளே தள்ளி ஒன்றை இட்டு அமுக்குவாரைப் போலே
நரிகள் பலவற்றுக்கும் யுண்டான பயம் இவர் ஒருவருக்கே யுண்டாயிற்றே -நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் –
ஊழி முதல்வா – நீ முன்பு  பரிஹரித்த பிரளயத்தின் அளவு அல்ல சம்சாரத்தின் பிரளயம் –
அங்கு ஒருவரும் அபேஷியாது இருக்கப் பரிஹரித்தாய் –
இங்கே நான் அபேஷிக்கச் செய்தேயும் பராமுகமாய் இருக்கிறாயே –

—————————————–

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே  -11-8-6-

அதி சமீபஸ்தனான வயலாலி மணவாளனை
அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன்
பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே -என்றும்
அணியாலி கை தொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணம் பொன்னம் சேர்
சேவடி மேல் போதணியப் பெற்றோமே -என்றும்
ஈடுபட்டுக் கூறினவர் ஆகையாலே -எனக்கு உன் தன் அருள் அருளாய் -என்கிறார்
கலப்பை கொண்டு உழும் பொழுது இரு புறத்தும் உழு  படி செல்ல அதற்கு அறாமல்
இடை இடையே கிடக்கும் இடமும் படை எனப்படும்
தாமரைக் கொடிகள்  நீலோத்பல கொடிகள் கலைகள் -நீர் நில வளம் சொல்லும்
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி -அன்றோ
மணி கெழு நீர் மருங்கு அலரும் வயலாலி -வம்பார் பூ வயலாலி –
மணாளன் -மணவாளன் -மணம் ஆளன்-அமிருத கடவல்லி நாச்சியார் -வயலாலி எம்பெருமான் –
வலிய ஆட்கொண்டு மந்திர உபதேசம் செய்து அருளினான்
ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் -பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே
வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும்
நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே
இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில்  நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –

——————————————

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-

நான் என்ற மாத்ரம் சொன்னால் அகங்காரம்  என்பதால் அடியேன் நான் -என்கிறார்
இயற்கையாக கரும்பாய் உள்ள  நீ வேம்பாய் ஆனாலும் விட மாட்டேன் என்றால் போலே
இயற்கையான அடியேன் அடிமை மாறப் பெற்றாலும் உன்னை விடேன் என்பதாக
பின்னும் என்ற சொல்லுக்கு கருத்து உரைப்பர்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ  என்ற தொடர்
அடுத்த பாசுரத்தில் வருகிற அரங்க நகர் அப்பனைக் குறித்ததாம்
துண்ட வெண் பிறையன்-பிறையின் -துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
சந்திரனது உட்குறையைப்  போக்கி அருளின நீ என் மனக் குறையும் போக்கி அருள்வாய் -என்றவாறு
ஐ வாய்ப்பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ  -என்றது உன்னை எப்பொழுதும் சேர்ந்து இருக்க விரும்பும்
அடியவர்க்கு நிரந்தர சம்ச்லேஷத்தைத் தந்து அருள்வாய்
திரு வநந்த ஆழ்வானைப் போலே என்னையும் -அடைய அருளாய் எனக்கு உன் தன அருளே –
அவனுடைய திவ்ய தேஜஸ் ஸிலே ஈடுபட்டு பரஞ்சோதி என்கிறார் –
சூர்யன் சந்தரன் அக்னி -முச் சுடர்களிலும் மேபட்ட ஒளி என்றவாறு –

————————————————–

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி –11-8-8-

அரங்க நகர் அப்பா உனது அருள் அல்லது வேறு ஒன்றைப் பற்றுக் கோட்டாகக் கொள்ளேன்
அப்பன் -சேதனர்களுக்கு ஹிதம் சொல்லும் தந்தை அன்றோ நீ
மணியே -காண்பவர் இளைப்பைத் தீர்க்கும் வடிவு
மணி மாணிக்கமே -இயற்கையிலே மேன்மை உள்ளவனே
மது சூதா -விரோதி நிரசன சீலன்
நீ பின்பே பேறு தந்து அருளுவாய் என்றாலும் -தருவேன் -மாஸூச -என்றாவது வார்த்தை
சொல்லி அருளாய் -எனக்கு உய்யும் வகை பணியாய்-
பிரார்த்தனைக்கு இரங்கி அவன் சோதி வாய் திறந்து அருளும் பொழுது திரு முக மண்டலத்திலும் திரு மேனியிலும்
அருளுவதால் யுண்டான புகர் தோன்ற  பரஞ்சோதி -என்கிறார்
பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

—————————————

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —————————–11-8-9-

அவித்யாதிகளுக்கு ஒழிவு இல்லாமையாலே பிறவித் துயரம் மாறாமல் இருப்பது பற்றி நந்தா நரகம் -சம்சாரம்
இதற்கு அழிவு செய்வது எம்பெருமான் அருள் தவிர வேறு இல்லையே அழுந்தா வகை நாளும் இன்னருள் செய்வாய்
அவன் அருளைப் பெற்று வீடு பெற வேண்டுவார்க்கு அவன் திருவடிகளில் வழிபாடு அவசியம் -என்பது
தோன்ற தொண்டர் ஆனவருக்கு -என்கிறார்
கருணை மழை பொழிய மலர விழித்த திருக் கண்களில் ஈடுபட்டு -தாமரைக் கண்ணா
எந்தாய் -தந்தையாய் நீ இருக்க தரித்ரனாய் நான் இங்கே இருக்கவோ
சந்தோகன் -சந்தஸ் -வேதம் அத்தால் கானம் பண்ணப் படுபவன் -சாந்தோக்ய  உபநிஷத்துக்கு விஷயமானவன்-

—————————–

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

எல்லா வினையும் நீங்கப் பெற்று இன்புறுவர்
மன்றில் புகழ்-பழைமையான சரியான பாடம்
மன்றில் மலி புகழ் -சேராது
ஓன்று நின்ற ஒன்பது -ஒன்றோடு கூடி நின்ற ஒன்பது -ஒன்றும் நின்ற ஒன்பதும் என்னவுமாம்
மங்கை மன்னன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்
அரசாண்ட செருக்கு அற்று தமது குற்றம் குறைகளையும் உலகோர் கலி தோஷத்தையும் கடியுமாறு  
அருளிச் செய்த திரு மொழி
நல்வினையும் பிறப்புக்குக் காரணம் என்பதால் -வினையாயின சார கில்லா –
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
எம்பெருமான் பேர் அருளால் பரம பதம் அடைவார்கள் -வல்லவர் தம் மேல் என்றும்
வினையாயின சார  கில்லா என்று எதிர் மறையாக அருளுகிறார்
விளக்கின் முன் இருள் போலே
காட்டுத் தீயின் முன் பஞ்சுத்துப் போலேயும்
இத் திருமொழி ஒதுகையாகிய ஞானத்துக்கு முன் வினைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் —

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும் ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆகையாலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று 
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டி அருளினான்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்  வாசனையோடு  கழியும் படி 
அஹம் -என்று  ரஷகனான தன்னைக் காட்டி அருளினான் –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-7-நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்-

April 10, 2015

இத் திருமொழியால் கரணங்கள் பகவத் விஷயம் அவஹாகித்து உஜ்ஜீவனம் பெறவே என்று உபதேசித்து
அப்படி அவஹாகிக்காதவர்களை நிந்தித்தும் அருளுகிறார்-

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே –11-7-1-

சேவிக்கப் பெறாதவர்கள் கண்கள் கண்கள் அல்ல புண்களே ஆகும் –
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே -கண்ணிமைத்துக் கண்டார் தம் கண் என்ன கண்ணே
படுக்கைத்தலம் என்று பேணாதே பிரயோஜநாந்த   பரர்களுக்காக  -பேணான் கடைந்து
அமுதம் கொண்டு உகந்த -பிரயோஜநாந்தரம்-என்றாலும் இதைப் பெற தன்னை அண்டினான் என்று உகந்த
புள்ளூரும் பொன் மலையை -நீலமேகத் திரு வுருவனை ஹிரண்ய வர்ணாம் -நித்ய சம்ச்லேஷத்தால் பொன் மலை ஆனான்
காய்ச்சின பறவை மீதூர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் –
பொன் போலே விரும்பத் தக்க மலை என்னவுமாம்
கண்டாம் -கண்டோம் –

—————————————————-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

எம்பெருமானுடைய திருப் புகழை -ஸ்வரூப ரூப குண விபூதி விஸ்தாரங்களை இதிஹாச புராண முகேன கேட்பதற்கே செவிகள் –
கேட்கப் பெறாத செவிகள் நிலத்தில் உள்ள பாழிகளோடு அவற்றோடு ஒரு வாசி இல்லை –
நீள் வான் குறளுருவாய் -நீள்வதற்கு என்றே  ஸ்ரீ வாமன மூர்த்தியானான் -பதுங்கி நின்று பாயும் புலி சிங்கம் போலே
சுருங்க நின்றதனையும் பெருக்க வளருகைக்கு உறுப்பாக –
தக்கணைக்கு மிக்கான் -தஷிணைக்கு மிக சிறந்தவன் -பரம பூஜ்யன் -ராஜஸூய யோகத்திலே தெளிவே
தோளாத மா மணியே -துளை இட்டு அனுபவித்து ஒளி குன்றும் மணி போலே இல்லாமல்
கேட்டாம் -கேட்டோம் –

—————————————-

தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது  உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3-

தூயான் -அந்தர்யாமியாக இருக்கச் செய்தும் தானும் பரிசுத்தன் -நம்மையும் பரிசுத்தன் ஆக்குபவன்
தூய மறையோன் -வேதைக சமைதி கம்யன் -வேதங்களுக்கு தூய்மை அபௌருஷயத்வம் -அவனை சொல்லி அல்லாமல் நிற்கை
தென்னாலி மேயான் -பிரமாணங்களால் கேட்டுப் போகை மட்டும் இன்றி பிரத்யஷமாக கண்ணாரக் காணலாய் இருக்கை
இவன் பேச்சுக்களை பேசுவதே பேச்சு மற்றவை கடலோசை போலே-

———————————————-

கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய்  மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ -11-7-4-

ஓடா அடலரி -விலஷணமான ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாய்
ப்ரஹ்மாதிகளுக்கு குடியிருப்புக் கொடுத்து அருளி சர்வ ஸ்வாமித்வத்தை நிலை நிறுத்தி அருளியவனும்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு விரோதியைப் போக்கி ரஷணத்துக்கு தனி மாலை இட்டுக் கொண்டு யுள்ளவனை
பிரேம பரவசராய்க் கொண்டு பாடுபவர்களின் பாட்டுக்களே பாடலாம்
அல்லாத பாட்டுக்கள் நரியூளை இடுதலோடே ஒக்கும்-

———————————————-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே –11-7-5-

கடல் போலே எல்லை காண ஒண்ணாததாய்
மணி மலை போலே நெஞ்சுக்கு ஆகர்ஷகமாய்
காளமேகம் போலே குளிர்ந்து விடாயைத் தீர்ப்பதாய்
குவளைப் பூவும் காயம் பூவும் போலே வைத்த கண் வாங்காதே பார்த்துக் கொண்டே இருக்கும் படியான திரு மேனியை யுடையவன்
இப்படிப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹத்தை திரு மெய்ய மலையிலே  ஆஸ்ரிதற்கு முற்றூட்டாக கொடுத்துக் கொண்டு அருள்பவன்
திருச் சங்கேந்தும் திருக் கையனைத் தொழும் கைகளே கைகள்
தொழாத கைகள் உலக்கை -கை தொழாக் கையல்ல -என்றது -தொழாக்கை கை யல்ல -என்று அந்வயிப்பது-

—————————————————

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்-தேன் பொருந்திய திருத் துழாயும்-அலரியும் -பில்வபத்திரத்தையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் -முட்கள் நிறைந்த தாமரைப் பூவையும் -ஆம்பல் மலரையும் –
முன் கண்டக்கால்-இவை எம்பெருமானுக்கே சாத்த உரியன என்ற அத்யவசாயம் கொள்ளாதார் நெஞ்சு நெஞ்சு அல்ல -நஞ்சே தான்
திருத் துழாய் யுடன் விஜாதீய வஸ்துக்களையும் எடுத்தது-
செண்பக மல்லிகையோடு இருவாட்சி -என்று சிறப்பித்து சொல்லும் புஷ்பங்கள் வேண்டா
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகையின்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
பட்டர் -புரிவதுவும் புகை பூவே-சப்த ச்வாரச்யத்தையைத் திரு உள்ளம் கொண்டு ஏதேனும் ஒரு புகையும் பூவும் அமையும்
கண்டகாலிப் பூவும் சூட்டலாம்
ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்-சாஸ்திரம் விதித்து கையிலே முள் பாயுமே என்பதால் –
இவனது த்ரவ்யம் -பிரதானம் அன்று -சிநேக பிரதான்யம் –
ஸ்நேஹம் இல்லாதவன் இடில் திருத் துழாயும் ஆகாது -ஸ்நேஹத்தோடு இடில் அலரியும் ஆம் –
ஸ்ரீ ஜகன்னாத பெருமாள் -நீ இட்ட பூ கனத்து சுமக்க ஒண்ணாதே உள்ளது என்றாரே –

புள்ளாய்- ஏதேனும் ஒரு பஷியாகவும்
ஓர் ஏனமாய் -மிருகமாகவும்
தன்னை அமைத்துக் கொண்டவனுக்கு ஆகாதது எதுவும் இல்லை –
அவன் அவதார யோநியில் நியமம் கொள்ளாதாப் போலே உகந்து கொள்ளுகிற பதார்த்தங்களிலும் நியமம் இல்லை -என்றவாறு
உள்ளாதார் உள்ளத்தை என்றது -இவற்றை சமர்ப்பிக்க கூட வேண்டாம் மனத்தால் நினைத்தாலே போதுமே
நினைவே அமையும் செயல் மிகை -என்பர் பெரியவாச்சான் பிள்ளை-

————————————-

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே –11-7-7-

கடல் கருவிளைப் பூ காயம் பூ -என்னும் இவற்றை ஒரு புடை ஒப்பாகச் சொல்லலாம் படியான திருமேனி
படைத்த எம்பெருமான் பக்கலிலே சுனைகளிலே யுள்ள புஷ்பங்களை கொணர்ந்து சமர்ப்பித்து
அடிமைத் தொழிலுக்கு இசைந்து அவனையே சிந்தித்து இருக்க மாட்டாத நெஞ்சு நெஞ்சே அன்று –
அன்பினால் ஆர்வத்தால் -அன்பாவது ஸ்நேஹம் -ஆர்வமாவது பெறாவிடில் முடியும் நிலை
சுனை ஆர் மலர் -புதிதாக புஷ்பங்களை சிருஷ்டிக்க வேண்டியது இல்லையே -இசைவு தானே வேண்டுவது
தாம் உளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது யுண்டே  -பொய்கையார்-

———————————————

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச்   செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார்  கண்டாமோ  -11-7-8-

ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யம் பெற்று பெறாப் பேறு பெற்றவனாய் வாரி அமுது செய்து அருளிய சிறு பிள்ளையை
செந்தாமரைக் கண்ணனை  -சர்வேஸ்வரனை -நினைத்து அறியாதவர்கள் –
சாஸ்திர ஞானத்தாலே சீரியர்களே யாயினும் அறிவில்லாதவர்களே ஆவார்
ஒண் தாமரையாள்  கேள்வன் ஒருவனையே நோக்கும் யுணர்வு என்பதால்
செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார்  – ஆவார் –

———————————————–

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ்  அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர்  என்று    என் மனத்தே வைத்தேனே –11-7-9-

திருமால் இரும் சோலையிலே  நித்ய வாஸம் செய்து அருளும் எம்பெருமானுக்கு ஆட்படாதவர்கள் மனுஷ்ய யோநியிலே
பிறந்து வைத்தும் உணர்வின் பயன் பெறாதவர்கள் ஆகையாலே மானிடர் அல்லர் என்று சித்தாந்தம் செய்து கொண்டேன்
உண்டு உறங்கி விஷய போகங்களை அனுபவிக்கை மிருகங்களுக்கும் யுண்டே
என் மனத்தே வைத்தேனே -என்றதால் இது எவ்வித்ததாலும் மாற்ற முடியாத சித்தாந்தம் -என்கிறார் –

——————————————————-

மெய்நின்ற  பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும்  ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

மெய் நின்ற பாவம் -பிரக்ருதியிலே அனுபவிக்க வேண்டி நின்ற பாவங்கள்
திருமாலை சூழும் கழல் சூடி -திருமகள் கொழுநன் யுடைய -சர்வ வியாபியான திருவடிகளை -முடி மேல் கொள்ளுமவராய்
கை கழலா நேமியானாய் இருந்து  அடியார்கள் வினைகளை அகற்றி அருளும் எம்பெருமான் யுடைய
திருவடிகளைத் தலை மேல் புனைந்து பாவங்கள் தொலையப் பெற்ற கொற்ற வேல் பரகாலன் கலியன் அருளிச் செய்த
இத் திரு மொழியைப் பாடி ஆடுமின் -பாடினால் வாக்கு சபலமாகும் -ஆடினால் சரீரம் சபலமாகும் –
பாடுதலும் ஆடுதலும் மனப் பூர்வகமாகவே உண்டாக வேண்டுதலால் அர்த்தாத் அந்த கரணமும் சபலமாகும் என்று
நாட்டாருக்கு வழி காட்டி அருளினார்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .