Archive for June, 2014

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -51 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

நெஞ்சே –
அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நமக்கு இனிதாக நாம்
இவ்வாயாலே திரு நாமத்தைச் சொல்லவே
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் விரோதியைப் போக்கித்
தன்னை அவனுக்குக் கொடுத்தாப் போலே
நம் விரோதியையையும் போக்கி நமக்குத்
தன்னைக் கொடு வந்து தரும் கிடாய்
என்கிறார் –

————————

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்—51–

பதவுரை

என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திருநாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.

—————————————————————————

வியாக்யானம் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு –
எளிதில்லாத இரண்டடியும் காண்கைக்காக- என்னுதல்
அன்றிக்கே
எளிதாகக் காணலான வருத்தம் அறக் காணலான
இரண்டு திருவடிகளையும் -என்னுதல் –

என்னுள்ளம் தெளியத்-
உள்ளமே நெஞ்சமே
நீ அழகிதாகத் தெளிய அவனும் தெளியும்
நீ அவனைக் காணாமைக்கு அநாதி காலம் பண்ணிப் போந்த ப்ராதிகூல்யம் பரம்பரைகளில்
அவன் பிரசன்னனாய் இருக்கும்
உனக்கு இங்கனே ஓர் அறிவு பிறந்தவாறே அவன் நம் குற்றங்களைக் காண –

தெளிந்து ஒழியும் செவ்வே –

செவ்வே தெளிந்து ஒழியும் –
அகவாயிலும் ஒன்று கிடக்க மனிச்சுக்கு ஒன்றைக் செய்தானாகை அன்றிக்கே
திரு உள்ளத்தோடு பிரசன்னனாய் இருக்கும் –

இனி –
பண்டு தெளிந்து தன் பேரைச் சொன்னான் ஒருவனுக்கு
அவன் வந்து உதவின படியைச் சொல்லுகிறது

கனியில் பொருந்தாவனைப் பொரலுற்று –
செருக்கோடு கிட்டோம் என்று இருந்த ஹிரண்யனைப் பொருது முடிக்கையிலே ஒருப்பட்டு –
ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்குப் பொருத்தம் இல்லையே
பின்னை அவனுக்கு ஹித ரூபமாக பிரகிருதியை அழிக்கும்-

அரியா யிருந்தான்    திருநாமம் எண்-
ஆஸ்ரிதன் விரோதியைப் போக்குவதற்காகக் கொண்ட வடிவு என்று
அத்தை யுகந்து
அது தன்னோடு இருந்தான் ஆய்த்து-

அன்றிக்கே
சீற்றத்துக்கு இறை போராமையாலே சோம்பி இருந்தான் ஆகவுமாம்

அவனுடைய திரு நாமத்தை அனுசந்தி
நமக்கு வேண்டுவது அச் சிறுக்கனோபாதி திரு நாமத்தை எண்ணுகை –
பின்னை
நம் கையிலும்
பிறர் கையிலும் நம்மை விட்டுக் கொடான்

எண்ண வொட்டாதவன் பாடு   அறிதியிறே-

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -50 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே
சிநேக யுக்தராய்க் கொண்டு
அவனைக் காண்கை சால எளிது
என்கிறார் –

————————–

அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-

பதவுரை

அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.

—————————–

வியாக்யானம் –

அரிய புலன் ஐந்தடக்கி –
விஷயங்களில் போகாதபடி அடக்க அரிதான
ஸ்ரோத்ராதி  இந்த்ரியங்களை
வருந்தி நியமிப்பது
ஒரு செய்யில் பாயும் நீர் இரண்டு செய்யில் பாய்ந்தால் இரண்டுக்கும் போராது
ஒழியும் இத்தனை இறே
சர்வேஸ்வரனை பஜிக்கக் கடவதான இந்த்ரியங்கள்
விஷயங்களில் போகாத படி அடக்கி –

அரிய -என்றது –
தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -கீதை -6-34-என்று
மனசை நியமிக்க வரிது என்று அர்ஜுனன் சொன்ன படியே இருக்கை-

சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்–கீதை -6-34

ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா!
மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது,
ப்ரமாதி-தவறும் இயல்பினது,
பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது,
தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்,
ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

கண்ணா, மனம் சஞ்சலமுடையது;
தவறும் இயல்பினது,
வலியது;
உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல்
காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

ஆய் மலர் கொண்டு –
புஷ்பாத் யுபகரணங்களை அங்குத்தைக்கு ஈடாக கொண்டு
ஸ்நேஹத்தைப் பண்ணும் பிரகாரத்திலே பண்ணி
ஆஸ்ரயிக்கில்

ஆய் மலர் –
செவ்விப் பூக்களைக் கொண்டு –

ஆர்வம் புரிய பரிசினால் –
ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே

புல்கில் –
அணையில் –
ஆஸ்ரயணம் தானே போக்ய்மாய் இருக்கிறபடியாலே
நல்லது கண்டால் ஆசைப் படுமோபாதி
இவ் விஷயத்திலும் ஆசை பிறக்க அமையும்
சடங்கு வேண்டா –

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்-
தன்னை ஈஸ்வரனுக்கு மேலாக அபிமானித்து
அர்த்திகளுக்கு எல்லாம் மாறாதே கொடுக்கக் கடவேன் என்று
அதுக்கு ஈடாக இருந்த மகா பலி பக்கலிலே –

வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது –
கொடுத்து வளர்ந்த கையிலே தானே சென்று நீர் ஏற்றவனை
காண்கை எளிது

ஏதேனுமாக ஒன்றைக் கொடுக்கக் கடவோம் என்று இருக்குமவன்
பக்கலிலே தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து –
ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது
என்கிறார் –

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -49 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

எல்லாம் செய்தாலும் இவ்வருகு உண்டான
பிரகிருதி பிராக்ருதங்களில் விரக்தி பிறந்து
அவனை ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
ஒரு படி கண்டதாய்த் தலைக் கட்ட முடியாது
என்கிறார் –

—————————————

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

பதவுரை

மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸை யுடைய அழகிய பெரிய திரு வபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.

———————————————————-

வியாக்யானம் –

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை –
ஒரு மகிழ அலகு -விதை-தானே
காணித் தானத்தாலும் -சிறிய ஸ்தானம்
கோடித் தானத்தாலும் -பெரிய ஸ்தானம் –
நிற்குமா போலே

ஓர் ஆத்மா தானே
கர்மம் அடியாக
யாதானும் ஓர் ஆக்கை யில் புக்கு -திருவிருத்தம் -95-
ப்ரஹ்ம சரீரத்தோடு
பீபீலிகா சரீரத்தோடு வாசியற
எங்கும் புக்கு  மாறி மாறி வரக் கடவதான
பல்வகைப் பட்ட சரீரங்கள் உண்டு -அவற்றை –

நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் –
அது தானே தன்னை விட்டுப் போம்படிக்கு ஈடாக
யத்னம் பண்ணுமவர்களுக்கு அல்லது
அது தனக்கு இங்கனேயும் ஒரு ஸ்வ பாவம் உண்டு
அதாகிறது
தன்னையே வேண்டுவாரை வேண்டி
வேண்டாதாரை வேண்டாத படியாய் இருக்கும்   யாய்த்து –

உன் கண் இதினத்தனை சௌகுமார்யம் உடையது ஒன்றும் இல்லை யாய்த்து
பிரகிருதி ப்ராக்ருதங்களில் அருசியும்
எம்பெருமானைக் காண்கையில் ருசியும் உடையார்க்கு எளிதாகக் காணலாம் -என்றபடி –

முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் -ஆதி காண்பார்க்கும் அரிது –
விகசித ஸ்வ ரூபமான தேஜஸ் ஸூ ப்போலதோன்றும் தேஜஸ் சை உடைத்தாய்
ஸ்ப்ருஹணீயமுமாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமுமான திரு வபிஷேகத்தையும் உடையனான
எம் ஆதி உண்டு
இதுக்கு அடங்க காரண பூதனானவன்
அவனைக் காண்பார்க்கும்
அத்தை நெகிழ முயல்கிற்ப்பார்க்கு  அல்லது அரிது
நமக்குக் கடவன் அன்றோ
இவனைக் காண்கையில் அருமை உண்டோ -என்று இருந்தாலும்
சொன்னபடி இல்லாதார்க்குச் சால அரிதாம் –

ஆதி –
கரண களேபரத்தைக் கொடுத்து
இவன் இசைவு கொண்டு
சம்சார சம்பந்தம் அறுத்து
அடிமை கொள்ளுகைக்கு இடம் பார்த்து
நிற்கிறவனை –
பிரக்ருதியே யுகப்பார்க்கு முகம் காட்டும் பர புருஷன் அல்லன்  –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -48 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

நெஞ்சே -நமக்கு இத் தேவைகள் எல்லாம் வேண்டா கிடாய்
அவன் தானே தாம் இருந்த விடத்தே தன்னைக் கொடு வந்து தரும் ஸ்வ பாவனாய் இருந்தான்
ஆன பின்பு நீ அவனை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பார் கிடாய்
என்கிறார் –

———————–

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து
ஓர் கை மேல்–மற்றொரு திருக் கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலை யுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.

————————————–

வியாக்யானம் –

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றி  –
ஒரு திருவடிகளை மேலே எடுத்து
ஒரு கையாலே சத்ருக்களைச் சுழற்றினான் ஆய்த்து –

அன்றிக்கே
ஒரு திருக் கையாலே நமுசியினுடைய காலைச் சென்று பற்றிச்
சுழற்றி எறிந்தபடி யாகவுமாம் –

யோர் கை மேல்  சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் –
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
ஒரு திருக் கையிலே மறுகிக் கொடு வருகிற
தேவர்களோடு அசுரர்களோடு வாசியற
வெருவும்படிக்கு ஈடாக பிரதி பஷத்தின் மேலே நெருப்பைத் தூவும் ஸ்வ பாவத்தை யுடைத்தாய்
யுத்தத்துக்கு பரிகரமான திரு வாழியை தரித்தான் ஆய்த்து-

அநுகூல பிரதிகூல விபாகம் அற அஞ்சும் படி இறே
அப்போதைய வியாபாரம் தான் இருந்தபடி

அவன் சிவந்த திருவடிகளிலே கிட்டும்படி வாசனை பண்ணு
சேவடி தானே  இருந்த இடத்திலே வந்தால்
இறாயாமையே வேண்டுவது  –

மருவாழி நெஞ்சே மகிழ்ந்து –
அளவுடைய நெஞ்சே
அது செய்யும் இடத்தில் தேவைக்கு ஒரு கால் செய்ததாக ஒண்ணாது
ப்ரீதி பூர்வகமாய்க் கிட்டும்படி வாசனை பண்ணு –

விரோதிகளைப் போக்குவானும்
திருவடிகளைத் தருவானும்
ப்ரீதன் ஆவானும்
அவன் ஆனால்
அனுபவித்து மகிழ மாட்டாயோ –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -47 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

விஷயங்களில் இந்த்ரியங்கள் போகாதபடி நியமித்து
சமயக் ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு
ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
அவன் திருவடிகளைக் கிட்டித்தாய் விட ஒண்ணாது
என்கிறார் –

————————————–

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

பதவுரை

மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

——————————————————————————-

வியாக்யானம் –

வாரி சுருக்கி-
ஆனைக்கு பலம் குறைக்கைக்காக தண்ணீரைக் குறைப்பார் ஆய்த்து –
அதுக்குத் தண்ணீர் உடைய ஸ்தானே
இவற்றுக்கு விஷயங்கள் அத்தனை இறே

போகாதிகளைக் கொடு போய் க்ரமத்தாலே  குறைப்பது –
கடுக மாற்றில் அது தானே குதறு காட்டுகைக்கு உடலாய்  இருக்குமதாய்த்து –

அன்றியிலே
முடிய வதிலே விட்டு வைத்தான் ஆகில்
செருக்காலே அவை தாம் தமக்கு உரியன அல்லாத படி கொண்டு கிளரும்
அது புத்தி நாஸாத் ப்ரணஸ்யதி -யாய் விடும்
ஆன பின்பு இரண்டுக்கும் நடுவாக
சத்தா மாதரத்துக்கு வேண்டுவது செய்து கொண்டு போருகை –

மதக் களிறு ஐந்தினையும்-
மத்த கஜம் போலே தாம் கண்டபடி காடு பாய்கிற ஸ்ரோத்ராதிகளை –

சேரி திரியாமல் செந்நிறீஇ –
பின்னையும் கண்ணுக்கு இலக்காம் இடத்திலே திரியுமாகில்
விழ விட்டுக் கொள்ளக் கடவதாய் இருக்கும் இறே-யானை
அப்படியே இவற்றை ஜெயித்தாலும் விஷயங்களுக்கு ஏகாந்த ஸ்தலங்களிலே
இவை போகாத படி ஒக்க நிறுத்தினால்
பின்னைப் பிறக்குமது கூரிய மெய் ஞானமாய் இருக்குமாய்த்து –

கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே-
அதாவது ஸூஷ்மார்த்தத்தை க்ரஹிக்கவும் வற்றாய்
தர்மி க்ராஹகமுமாய் இருக்கும் யாய்த்து –

அது தான் விஹித கர்மங்களை பலாபிசந்தி ரஹிதமாக அனுஷ்டித்து
ஷீண பாபனாய்    –
ஆத்மா யாதாம்ய ஞானம் உண்டாய்
ஈஸ்வர பாரதந்த்ர்யமும் உண்டாம் என்னும் இடத்தையும் அறிந்து
உபாசனம்  த்ருவாஸ்ம்ருதி -தர்சன சாமாநாகாரதா பிரத்யஷதாபத்தி என்றும்
விசதே தத நந்தரம்-கீதை -18-55-என்று
சொல்லுகிறபடியே
அப்படிப் பட்ட ஜ்ஞானத்தை உடையவர்கள் அவனைக் காண்பார்கள்  –

பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்–கீதை -18-55-

மாம் ய: ச-என்னை யார் எனவும்,
யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும்,
பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்,
தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர்,
ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான்.
என்னை உள்ளபடி அறிந்து கொண்ட பின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்-
இவர்கள் காண்பார்கள் என்னும் இடத்துக்கு திருஷ்டாந்தம் மேல்

பண்டு ஒரு நாள் ஓர் யானையானது புறம்புத்தை அந்ய பரதைகள் அடைய அற்று
அவன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணுவோம் என்று ஸ்ரத்தை பண்ணி
ஒரு பொய்கையிலே புக்கு இடர்ப்பட்ட அதற்காகத்
தன் திருவடிகளிலே அடிமை கொண்டவனுடைய
திருவடிகளைக் காணப் பெறுவார்கள் –

இத்தால் –
விரோதியான முதலையைப் போக்கி
தன்னைக் காட்டிக் கொடுத்தால் போலே
இவர்கள் உடைய பிரதிபந்தகங்களைப் போக்கித்
தன்னைக் காட்டிக் கொடுக்கும் -என்கிறது  –

சேரி திரியாமல் செந்நிறீ –
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே—கீதை -2-59-

நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம் பொருளைக் கண்டதும்,
ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்து விடும்.

தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன.
எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை.
பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

கூரிய மெய்ஞ்ஞானம் –
ஸூபாஸ்ரயமாயும்
உபாய உபேயமாயும் அனுசந்திக்கை –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -46 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

இவர்களுக்குத் தான் முற்கோலி நின்று ஹித பரனாகை அன்றிக்கே
இவர்கள் தாங்கள் உகந்தபடி கடக்கப் போய்
அனர்த்தங்களைச் சூழ்த்துக் கொண்டு நிற்கும் அன்றும்
பாபத்தைப் போக்கி ரஷிப்பான் அவன் கிடீர் –
என்கிறார் –

கீழே ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லிற்று –
இதில் ருத்ரனுடைய அறிவு கேடு சொல்லுகிறது  –

—————–

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோ பவீதத்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய
வினை–ப்ரஹ்ம ஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆஸ்ரயிக்குமவர்கள்
அமரர் தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.

————————————————

வியாக்யானம் –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற –
அழகிய ஸ்வரத்தை யுடைத்தான
வேதத்தைத் தரித்துள்ள
ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-

லோக குருவுமாய்
தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது   –

வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே –
அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்க
ப்ரஹ்ம ஹத்யையாலே
அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –

வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –

வெண் புரி நூல் மார்வன் –
விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி –
மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே
இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே

வினை தீர -என்கிற இத்தால்
இவனுடைய கர்ம வஸ்யத்வமும்
தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

இவனுடைய பாபம் போம்படிக்கு ஈடாக
புண் புரிந்த ஆகத்தான் –
ஐயோ அருமருந்தானான் ஒருவன் இங்கனே படுவதே என்று
திரு உள்ளம் புண் பட்டது ஆய்த்து

அன்றிக்கே
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் -திருச் சந்த விருத்தம் 113-
ஸ்வேதத்தை வாங்கிக் கொடுத்த படி யாகவுமாம்-

அவன் தலை அறுப்புண்டு ஆற்றாமைப் பட்டு நின்றான்
இவன் தலை அறுத்துப் பாதகியாய் திரிந்தான்
அவர்கள் இவருடைய வ்யசனத்தையும் போக்கினான் ஆய்த்து சர்வேஸ்வரன் –

ஆக
இப்படி இருந்துள்ள சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை
ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் கிடீர்
தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் போகத்தால் பூமி யாள்வார்

ருத்ராதிகள் படும் எளிவரவு படாதே
நித்ய ஸூரிகள் உடைய அனுபவத்தோடு கூட
சம்சாரத்தில் போகமும் புஜிக்கப் பெறுவார்
விண்ணுளாரிலும் சீரியர் –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – ஸ்ரீ திரு விருத்தம் -79

உய்வுபாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் யாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வார் மண்னூடே –திருவாய்மொழி -4-3-11-என்கிறபடியே

அன்றிக்கே
பூமியும் ஆண்டு
பரம பதத்தில் போகமும் அனுபவிப்பார்கள் -என்றுமாம் –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -45 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி
தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
ஈ விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு 
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -44 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 29, 2014

அவதாரிகை –

இவர்கள் தங்கள் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சமையவே
அவனும் இவர்களுக்கு ஈடாகத் தன்னைச் சமைத்துக் கொடுக்கும்
என்கிறார் –

———————————————————————-

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ——44–

பதவுரை

ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ்வுருவம்–ஆஸ்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ,
அவ்வுருவம் தானே ஆம்–அவ் வுருவமாகத் தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்தது எப் பேர்–ஆஸ்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆஸ்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்

————————————————————————-

வியாக்யானம் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே –
ஆஸ்ரிதர் ஆனவர்கள் எதேனுமாக ஒரு திரு மேனியை விரும்பி
இருந்தால் அவனும் அத்தை தனக்கு அசாதாரணமான திரு மேனியாகக் கொண்டு
விரும்பக் கடவனாய் இருக்கும் –

இவர்கள் யாதொரு த்ரவ்யத்திலே வாசனை யுடையராய்
அதிலே ருசி பண்ணிக் கிடந்தார்கள்
அவனும் அத்தையே தனக்குத் திரு மேனியாக ஆதரியா நிற்கும்
ஆஸ்ரித அர்த்தமாக இறே விக்ரஹங்களைக் கொடு வந்து காட்டுவது

ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்த -120-11-

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யயம் -கீதை -4-11-

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:—கீதை -4-11-

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

நமக்கு நல்லார்கள் இன்னார் என்று இல்லை
இன்னபடி பஜிப்பார் என்றும் இல்லை –
அவர்கள் நின்ற நிலையிலே -அவர்கள் பஜித்த படியிலே-அவர்களைப் பற்றுவேன் -என்கிறது –

ஸூ வர்ண ரஜதாதிபி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-16-
அதொரு காலத்திலே உள்ளார் பெற்றுப் போய் பிற்பாடர் இழைக்கை  யாலே
அவர்கள் இழவே திரு உள்ளத்திலே பட்டு   –
அவர்களுக்கு கண்ணுக்கு இலக்காகாக் கொள்ளுமதிலே யாய்த்து திரு உள்ளம் பொருந்தி இருப்பது –

எம்பெருமானார் பிஷைக்கு எழுந்து அருளா நிற்க
சில சிறு பிள்ளைகள் கையாலே ஒரு விக்ரஹமாக கீறி
உம்முடைய எம்பெருமான் திரு மேனி என்று காட்ட
பாத்ரத்தை வைத்து தண்டன் இட்டு அருளினார் –

தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் –
ரூபத்துக்கு மேலே மற்றும்
திரு நாமங்களும் அவர்கள் உகந்ததாய் இருக்கும்

தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய
இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திரு நாமமாக நினைத்து இருக்கும்

கஞ்சனூரிலே வண் துவரைப் பெருமாள் என்று ஒருத்தன் தன் நாயனாரை
சதங்கை யழகியார்  -என்று திரு நாமம் சாத்தினான் –
அந் நாயனார் ஸ்வபனத்திலே சதங்கையும் தானுமாய் அவன் முன்னே நின்றாடினார்
நாயனை -நீர் ஆர் -என்று கேட்க –
நான் சதங்கை யழகியார் -என்றாராம்

எங்கள் ஆழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற் பழம் வேண்ட -நீ யார் -என்ன
நான் ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை குடி இருக்க  வொட்டுகிறிலன் -என்றார் –

தமருகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே அவ் வண்ணம்-
ஆஸ்ரிதர் ஆனவர்கள் உகந்து கொண்டு யாதொரு பிரகாரம் அனுசந்தித்து
அனந்தரத்திலே
அநவரத பாவனை பண்ணி  இருப்பார்கள் –
சர்வேஸ்வரன் அந்த பிரகாரத்தை உடையனாம் –

ஸ்ரஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன்
ஸ்ருஜ்யனுமாய் நியாம்யனுமாய்
இவர்கள் சத்தாதிகளும் நாம ரூபங்களும் தன் அதீனமானாப் போலே
தனக்கு சர்வமும் ஆஸ்ரித ஆதீனம்

சென்றால் குடையாம் -என்று
இவன் அவனுக்கு இருக்குமா போலே அவன் இவனுக்கு இருக்கும்
அவனது பிரணயித்வம்-
இவனது ஸ்வரூபம் –

ஆழியானாம்-
அப்ராக்ருதமான சகல பரிகாரங்களுக்கும் உப லஷணம்
அவை எல்லாம் கிடக்க
இவர்கள் நினைத்த படியாகத் தன்னை அமைத்துக் கொடுக்கும்
அவனாகும் நீள் கடல் வண்ணனே -திருவாய்மொழி -3-7-6-

இத்தால் நாம ரூபாதிகள் அன்றிக்கே
குண சேஷ்டிதாதிகளும் அவன் இட்ட வழக்காய் இருக்கும்
என்கிறது –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -43 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

பிராட்டிமார் சந்நிதி
எப்போதும் உண்டாகையாலே இனி விரோதியைப்
போக்குகை என்று ஒரு பணி இல்லை –

தம் தாமுடைய ருசிக்கு அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்கவே –
விரோதிகள் அடங்கலும் தன்னடையே விட்டோடிப் போம்
என்கிறார்

———————————————————————–

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் ——-43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அரு வினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கை கூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

—————————————————————————

வியாக்யானம் –

மனமாசு  தீரும் –
மானச தோஷங்கள் விட்டு ஓடிப் போம்
பகவத அநு சந்தானத்துக்கு விரோதியான ஹ்ருதய காலுஷ்யங்கள் உண்டு
அவித்யாதிகள்
அவை அடையப் போம் -என்றபடி

அருவினையும் சாரா –
இவற்றை இடையிலே முறித்தாலும் பிரயோஜனம் இல்லை
அடி கிடக்கும் அன்று கிளைக்கக் கடவதாய் இருக்குமே
அடியான புண்ய பாப ரூப  கர்மங்கள் வாசனையோடு விட்டுப் போம் –

தனமாய தானே கை கூடும் –
மானச தோஷங்களும் போய்
சம்சரிக்கைக்கு அடியான புண்ய பாபங்களும் போன இவ்வதிகாரிக்கு தனமாவது
கைங்கர்யத்துக்குப் பூர்வ காலீ நமான ஜ்ஞான பக்திகள் இறே
அவை வருத்தமற வந்து  கை புகுரும்

அந்தரிஷகத ஸ்ரீ மான் -என்னுமா போலே
பக்திக்கு உறுப்பான சம தமாதிகளும் உண்டாம் –

குடிக்கிற வேப்பங்குடி நீர் இருக்கிற படி

புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி தாம் தொழா நிற்பார் தமர் –
தன் நிலத்திலே நின்றாப் போலே யாய்த்துத்
திருக் குழலிலே வைத்தாலும் வளையம் இருக்கும் படி –

சர்வேஸ்வரன் உடைய திருவடிகளிலே புஷ்பாத் யுபகரணங்களைத் தரித்துக் கொண்டு நின்று
சேஷ பூதரானவர்கள் தங்களுக்கு இனிதாக ஆஸ்ரயியா நிற்பார்க்கு
இவை யடங்க விட்டோடிப் போம்

இவன் தனக்கு வகுத்த இது செய்யா நின்றால்
அவன் தனக்கு வகுத்தது செய்யானோ

இவனுக்கு அடிமை செய்கை ஸ்வரூபம் ஆனாப் போலே
அவனுக்கு அடிமை கொள்ளுகை ஸ்வரூபமாய் இருக்கும் –

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -42 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

June 28, 2014

அவதாரிகை –

இப்படிக் குற்றம் பொறுக்க வேண்டுகிற ஹேது என் என்னில்
அங்கே பிராட்டிமார் நித்ய வாசம் பண்ணுகையாலே -என்கிறார்

குற்றத்தைப் பொறுப்பித்து குணத்தை குவாலாக்குவார்கள் –
அவள் -பாபா நாம் வா ஸூ பா நாம் வா -யுத்த -116-44-என்றால்
இவன் -தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத்  -யுத்த -18-3-என்னத் தட்டு உண்டோ –

————————————————————————

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் ——–42-

பதவுரை

பால் ஓதம் சிந்த–திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்து ஸுகப்படுத்த,
படம் நாக அணை கிடந்த–படமெடுத்த பாம்பினணையிற் பள்ளி கொண்ட
மால் ஓதம் வண்ணர்–பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம்–பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என் கொல்–பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னோ?

———————————————————

வியாக்யானம் –

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த  மாலோத வண்ணர் மனம் –

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் –
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-
மண் மகட்கே தீர்ந்தவாறு என் கொல்
ஆய்மகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்று
மூவர் பக்கலிலும்  ஏறிட்டு அனந்தாழ்வான் நிர்வஹிக்கும் படி

நாய்ச்சிமார் மூவரும் சேர இருந்தால்
இவர்கள் மூவருக்கும் ஒக்க ஸ்நேஹிதனாய் இருக்கிற இந்த ஆச்சர்யம் இருந்த படி என் என்று –
இதுக்கு பட்டர் அருளிச் செய்யும் படி

கடலானது திருவடிகளில் வந்து ஸ்பர்சித்து
ஸ்ரமஹரமான திவலை தொடை குத்தத்
தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமாகா நின்ற பணங்களை யுடைய
திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற
நீர்க் கிளர்த்தி யுடைத்தான ஓதம் போலே இருக்கிற வடிவழகை உடைய
சர்வேஸ்வரன் உடைய திருமகள் மேல் மனமானது
இவர்கள் மூவரும் சேர்ந்தாலும் 
பெரிய பிராட்டியாருக்கே -என்றதாய் இருக்கும்

அதாகிறது –
அவளோட்டை புணரும் போது
புஷ்பாங்க ராகைஸ் சமம்  -என்று
ஒரு நிலா சந்தனம் பூ தென்றல் இவை போலே உபகரண கோடியாய்ப் புக்கு
அன்வயிப்பார்கள் அவர்கள் –

இவர்களோடு கலக்கும் போது அவளுக்குத் தன திரு முலைத் தடங்களிலே நெருக்கி
அணைத்தாப் போலே இருக்கும்
ஓர் அவயவியையே அனுபவித்தானாய் இருக்கை

இதர விஷயம் இருவருக்கும் போராமையாலே சீறு பாறு
என்கைக்கு உடலாம்

இங்கு போக்யாதி சயத்தாலே
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரண்டு அனுபவிக்க வேணும் -என்கை-

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –