Archive for August, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 13, 2013

குறுகா நீளா இறுதி கூடா எனைஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறுகா லத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.

பொ-ரை :- மாயோனே! இயல்பாகக் குறைவதும் பெருகுவதும் இல்லாததும், முடிவு இல்லாததும், எத்துணைக் கற்பங்கள் சென்றாலும் கால வேறுபாட்டினால் குறைவதும் பெருகுவதும் இல்லாததும் அளவு இல்லாததுமான சிற்றின்பமாகிய ஆத்ம அநுபவம் சேர்ந்தாலும், தெளிந்து பார்க்குமிடத்து மறுபடியும் ஒருகாலம் இல்லாமல் உனக்கே கைங்கரியத்தைச் செய்கின்ற சிறிய காலத்தை அது ஒக்குமோ?

வி-கு :- முதல் இரண்டு அடிகளில் கைவல்யம் கூறப்படுகிறது. குறுகா, நீளா, கூடா, சிறுகா என்பன; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்; குறுகா இன்பம் எனத் தனித்தனியே கூட்டுக. அந்தோ: இரக்கத்தின்கண் வந்த இடைச்சொல்

   ஈடு :- பத்தாம் பாட்டு. 1‘செல்வம் முதலானவை அல்பமானவை, நிலைஅற்றவை’ என்று ‘வேண்டா’ என்றீராகில், அவ்வளவினது அன்றே; முடிவில்லாததுமாய் நிலைத்திருப்பதுமாய் இருக்குமன்றோ ஆத்மாநுபவம்; அதனை அநுபவித்தாலோ? என்ன, ‘நீ சொன்னது பொருத்தமுள்ளதாயின் செய்யலாயிற்று; ‘அவை அல்பம், நிலையற்றவை’ என்ற இடம் சொரூபத்தைச் சொன்னேனத்தனை: உன்னுடைய இனிமையைச் சொன்னதும் சுவாபம் இருந்தபடி சொன்னேனத்தனை; ‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்; உன்னைப் பற்றிற்றும் நீ ஆகையாலே, அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே’ என்கிறார். வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.

குறுகா நீளா – 2தன் இயல்பிலே குறுகுதலும் நீளுதலும் இன்றிக்கே இருக்கை. இறுதிகூடா – 3முற்றும் அழிவு இன்றிக்கே இருக்கை. 4எனை ஊழி சிறுகா பெறுகா – கால வேறுபாடுபற்றிக் குறைதலும் விரிதலும் இன்றிக்கே இருக்கை. அளவில் இன்பம் சேர்ந்தாலும் – 5இங்ஙனே இருக்கையாலே முடிவின்றிக்கே இருக்கிறஆத்ம அநுபவ சுகத்தை அடைந்தாலும். மறுகால் இன்றி – 1பகவானுடைய அநுபவமானது ஒரு கால் அநுபவித்தால் மற்றைப்போது இன்றிக்கே இருப்பது. மாயோன் – மீண்டு இன்றிக்கே ஒழிந்தாலும் விடொண்ணாத கல்யாணகுணயோகம் சொல்லுகிது. உனக்கே ஆள் ஆகும் சிறு காலத்தை உறுமோ – ‘உன்திருவடிகளில் அடிமையே புருஷார்த்தம்’ என்று இருக்குமது, 2மறுத்து இன்றியிலே இருப்பது, அதுதான் கணநேரமாவது; இங்ஙனே இருந்தாலும் அளவில் இன்பம் சேருகை உறுமோ? இதனைப் பார்க்க. அந்தோ – பர்த்தத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே! தெரியிலே – தோற்றிற்றுச் சொல்லின் செய்யலாவது இல்லை; ஆராய்ந்து சொல்லுமன்று இங்ஙன் அல்லது இல்லை. 3இந்தப் பொருளை உபதேசிக்கவேண்டுவது ஆவதே!

ஐஸ்வர் யார்திகள் அல்பம் அஸ்தரம் என்றால்
ஆத்ம அனுபவம் கைவல்யம் உண்டே என்ன
நீ சொன்னது உபபத்தி ஆகில் செய்யலாயிற்று
உனக்கு இது நியாயம் என்றால் அருள்
ஸ்வரூப கதனம் –
தோஷங்களால் வேண்டாம் இல்லை
அவை நீ அல்ல என்பதால் வேண்டாம் என்றேன்
எனக்கு நீ கை கொள்ள வேண்டும்
உன்னை அனுபவிப்பது அல்பம் அஸ்தரம் ஆக இருந்தாலும் நீயே வேண்டும்
குண கருத தாஸ்யம் வேண்டாம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் ஒன்றே வேண்டும்
வேம்பின் புழு  வேம்பு அன்றி உண்ணாதே
வகுத்த விஷயம் -அனுசூயைக்கு பிராட்டி வார்த்தை –
அது இது உது என்னாலாவது இல்லை உனது செய்கையே நைவிக்கும் போலே –

அந்தோ இதை சொல்லி புரிய வைக்க வேண்டி இருக்கிறதே
குருகியோ நீண்டோ இருந்தாலும் சரி
சிறியதாகவோ பெரியதாகவோ
உனக்கே ஆளாகும்
கால உபாதி
முடிவும் இல்லாத கைவல்யம் -அளவில் இன்பம் இருந்தாலும் –
இது நிரந்தர இன்பமாக இருந்தாலும்
பகவத் விஷயம் -ஒரு கால் மட்டும் இருந்தாலும்
விட ஒண்ணாத கல்யாண குண யோகம்
உனக்கே ஆளாகும் சிறு காலத்துக்கு சமம் ஆகாதே

உனது திருவடிகளிலே அடிமையே புருஷார்த்தம்
இத்தைப் பார்க்கில் அது தகுமோ
லோகத்தர் சொல்லும் வார்த்தை
புலிக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக
மாற்றியும் சொல்வார்கள்
அந்தோ –
ஈடாகாது சொல்லி புரிய வைக்க வேண்டுமா
10 மூட்டை உமிஒரு மூட்டை நெல்
10 இருந்தாலும் ஒன்றே சிறந்தது போலே
சைதன்யமா கண்ணனா போலே
அளவு பெரியதாக இருப்பதால் துரியோதனன் கொண்டான்
ஆராய்ந்து சொல்லில் இதுவே உசந்தது
இதை உபதேசிக்க வேண்டி இருப்பது தலை எழுத்து

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 13, 2013

  ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.

பொ-ரை :- மனம் கலங்கும்படியாக ஐந்து இந்திரியங்களும் வருத்துகின்ற பலவகையான சிற்றின்பத்தை எனக்கு நீ காட்டிப் பாவியேனை அழிக்க நினைக்கின்றாயோ? பூலோகத்தை அளந்துகொண்ட தாமரை போன்ற திருவடிகட்கு அழைத்துக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? என்கிறார்.

வி-கு :- ஐவர் ஆவி திகைக்கக் குமைக்கும் சிற்றின்பம் என்க. ஐவர்: இகழ்ச்சிக் குறிப்பு. ஆவி – மனம். சிற்றின்பம் பல நீ காட்டி என்க. வையம் தாவிக் கொண்ட தாமரை என்க. தாமரை – உருவகம்.

ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 3உம்மை இங்குக் கெடுத்தது என்? என்ன, கண்ட காட்சியிலே இழுத்துக் கொள்ளக்கடவனவான விஷயங்கள் பரிமாறுகிற இடத்தே வைத்தாயாகில், இனி, கெடுக்கைஎன்று ஒன்று உண்டோ என்கிறார். 1என்னை இங்கே வைத்தபோதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார். 2“என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான் பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்” என்னும்படியே.“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19

ஆவி திகைக்க – இந்திரியங்களுக்கு மூலமான மனம் கலங்க. ஐவர் குமைக்கும் – ‘ஐவர்’ என்று உயர்திணையாகச் சொல்லுகிறார் நலிவின் மிகுதியாலே. பல மில்லாத 3ஒருவனைப்பற்றி ஐந்துபடர் நலியுமாறுபோலே ‘என் விஷயத்தைக் காட்டு காட்டு’ என்று தனித்தனியே நலிகிறபடி. 4இப்படி நலிந்தாலும் சுவை உண்டாகில் ஆம் அன்றோ. சிற்றின்பம் – 5முள்ளிப்பூவில் தேன்போலே. அற்பசாரங்கள் அன்றோ. சிற்றின்பம் – 5முள்ளிப்பூவில் தேன்போலே. அற்பசாரங்கள் அன்றோ.- திருவாய். 3. 2 : 6.
-என்றது, தேவரை அகற்ற வேண்டுவதுண்டாய், அநுபவிக்கலாவது ஒன்று இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி. பாவியேனை – 6அந்த மில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த நான் சிற்றின்பத்தில் சேரும்படியாவதே! 7“வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்”-திருவாய். 4. 5 : 3.- என்றவரன்றோ இங்ஙனே சொல்லுகிறார். பல – ஒன்றிலே கால் தாழப்பண்ணவல்ல விஷயமில்லையே. நீ காட்டிப் படுப்பாயோ – ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப்பார்க்கிறாயோ?நாட்டார் ‘காணாவிடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார். 2அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடிகொடா ஒன்றுக்கும்; அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அதுகேட்டு நெஞ்சுநெகிழும்; பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம். அதுபோலே, இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி. இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்

.“மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போலைவ ராற்கெடும் பாதகரே”-என்பது, திருவேங்கடத்தந்தாதி, 28.

3நெடுநாள் அநுபவித்துப் போந்தாலும் கணக்க இருந்த அன்று ‘நாம் இன்னது அநுபவித்தோம்’ என்று நினைப்பதற்கு ஒன்று இன்றிக்கே இருக்கும் அன்றோ; 4இங்ஙனே இருக்கச் செய்தேயும் அவற்றில் ஆசைசெலுத்துவது பாவத்தின் மிகுதி அன்றோ.

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ – 5வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார். ‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக்கட்டவல்லன்என்னும் சத்தியோகம் கூறியபடி. பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி. இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது. ‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது. ‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது. 1இதர விஷயங்களின் கான்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து விடமாட்டாத அளவு பிறந்து பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ? 2பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, ‘கூவிக்கொள்ளும்காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பலகால் சொல்ல, இதனைக்கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

உம்மைக் கெடுத்தது என்ன
கண்ட காட்சியில் இழுத்துக் கொள்ளும் இடத்தில் வைத்தாயே
இந்த்ரியங்கள் படுத்திக் கொண்டு –
விண்ணுளார் மக்களையும் படுத்துமே
சம்சாரம் படு  குழி -விஷயம் ஆக்கினையே
ஆவி திகைத்த ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பல காட்டி நீ படுப்பாயோ
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
ஆவி திகைக்க
மனஸ் கலங்க -இந்த்ரியங்களுக்கு கந்தம் மூலம் மனஸ்
ஆவி -மனஸ்
ஐவர் சேதன சமாதியால் சொல்லுகிறது படுத்தும் பாட்டால் இவை அசேதனம் இல்லை என்கிறார்
ஒரு துர் பலரை ஐவர் சேர்ந்து எனதுவிஷயத்தை காட்டு தனித் தனியே படுத்த -ஹிம்சை பெருத்து
ஆஸ்வாசம்-இவற்றில் இல்லாமல் சிற்றின்பம்-

நாய் எலும்பை கடித்து தனது வாயில் வரும் ரத்தத்தை விரும்பி உண்பது போலே
முள்ளிப்பூவில் -கள்ளிச் செடி
தேவரீரே அகற்ற வேண்டுவது தான் உள்ளது-

அனுபவிக்க ஒன்றுமே இல்லாதவை
அல்பம் அஸ்தரம் ஷணிகம்
நாக்கில் பட்டால் ஷணம் மாத்ரம் சுவை காட்டும்
அந்தமில் பேர் இன்பம் அனுபவிக்க இட்டுப் பிறந்த நான்
பாவியேன் –
வீவில் இன்பம் மிக -அழியாத இன்பம் எல்லை இல்லாமல் அனுபவித்தேன் என்றவர் சொல்லுகிறார் இப்படி –
பல நீ -ரஷகனான நீ
காட்டுவதே துக்கம்
நாட்டார் காணாமல் துடிக்கும் விஷயம் ஆழ்வாருக்கு இப்படி தோற்ற –
சஹவாசம்-கூடாதே
தேவதாந்திர பஜனம்-மற்று ஓர் தெய்வம் இருப்பாரோடு இருப்பாரோடு உற்றிலேன்  –
அத்தை பாட்டி ஆண்டாள் அம்மாள்
27 பட்டம் –
ஸ்ரீனிவாச  ஐயங்கார் தாத்தா
ஆண்டாள் அம்மாள் தம்பி
26 பட்டம் வானமா மலை ஸ்வாமி இடன் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டாராம் இந்த ஸ்வாமி-

மூன்று நாள் சந்தை சொல்ல வில்லையாம் சஹவாசம் கொண்டதால்
பாவியெனை பல நீ காட்டி கெடுப்பாயொ
தர்சன மாத்ரத்திலே மோகிக்கும் படி இருக்கிறது -ஆழ்வாருக்கு
அசுண மா பஷி -பிடிக்க கஷ்டம்
கவரி மான் போலே திருஷ்டாந்தம்
மயிர் ஓன்று விழுந்தாலும் சாகுமாம்
அசுண மா இனிமையான சங்கீதம் மட்டும் கேட்கும்
விபரீதமான சப்தம் கேட்டால் சாகுமாம்
வேடர் இத்தை பிடிக்க இனிய சங்கீதம் பாடி வந்த பின் பறை அடித்து -அவை பிராணன் விட்டதும்
அது போலே நீ பல காட்டி படுப்பாயோ

இவர் பகவத் விஷயத்தில் நைந்து இருக்க –
நெடு நாள் அனுபவித்து போனாலும் லோக விஷயங்கள் இன்னது என்று நினைத்து இனிக்க இல்லையே –
முன்னுரையில் இது வரை பேசி
நீ -காட்டி
இனி உன்னுடைய திருவடிகள் சொல்லாமல்
அந்ய
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே  ஸு  போக்யதா புத்தி வரும் என்று முகம்மாற்றி படர்க்கையில்
தாவி வையம் கொண்ட –
பூமிப்பரப்பு அடங்கலும் -வேண்டாம் சொல்லும் முன்பு சட்டு என்று தாவி
போக்யதை மிக்கு தாமரை -திருவடி
திரு பவளம் அதரம்
முத்து பற்கள்
உபமானம் உபமேயம் அப்படி ஒன்றாக இருக்க அத்தையே சொல்லி
இத்தால் பிராப்யம் சொல்லுகிறது
கூவிக் கொள்ளும் காலம் என்பதால் பிராபகம் சொல்லுகிறது
குறுகாதோ ருசி வேஷம் சொல்லுகிறது -அதிகாரி வேஷம்
இச்சை அதிகாரம்
இரக்கம் உபாயம்
இனிமை உபேயம்

பிள்ளான் சரம திசை
சீயர்  அழ
நீ கிடந்தது அழ வேண்டுமா
அங்கு கிடைக்கும் பேறு குறைந்ததோ கேட்டாராம் திரு குருகை பிரான் பிள்ளான் அருளி
பராசார பட்டர் -ஸ்ரீ ராம பிள்ளை அழ
பெரு வீடு கிடைத்ததா வயிறு எரிகிறதா ஆண்டாள் கேட்டு அருளி
பிரமேய –
அங்கு போனாலும் கைங்கர்யம் –
இங்கும் கைங்கர்யம்
இங்கு பண்ணினால் முதுகு கடுக்கும்
அங்கு இல்லையே இந்த்ரியங்கள் படுத்தாதே
கூவி கொள்ளும் காலம் குறுகாதோ பிள்ளான் அருளிக் கொண்டு இருப்பாராம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 12, 2013

பிரவேசம்-

அஹம் அஸ்ம்ய  அபராதா நாம் ஆலய அகிஞ்சன அகதி த்வமேவ மே உபாய பூதோ மே பவ
பிரார்த்தனா மதி சரணாகதி -என்றும்
சாதே தேஸ்மின் பிரத்யுஜ்யதாம் –
என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்
தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –

அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்
அது தன்னை அனுபாஷித்தார் -( விளக்கி அருளிச் செய்தார் )

ஆனுகூலஸ்ய சங்கல்ப
பிரதிகூலஸ்ய வர்ஜனம்
(ப்ரதிஷ்யஸ்தி விஸ்வாசம்
கோப் த்ருத்வ வரணம்
ஆத்ம நிஷேபம் )-என்று
அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –

அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் –
கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய
நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –

(ஷட் வித அங்கங்கள் என்று சொல்ல முடியாதே -த்வமேவ உபாய பூத -அங்கங்களை எதிர் பார்க்க மாட்டாரே
சரணாகதி லக்ஷணம் சொல்லும் பிரமாணம் இருப்பதால் -பொருந்த விட இவை சம்பாவித ஸ்வ பாவங்கள் என்றதாயிற்று
நெல் குத்த வியர்வை தானே வருமா போல் )

அடுத்து இரண்டாவது விஷயமாக பிரவேசம்

பசுர் மனுஷ்ய பஷீரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-
மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே

இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-

(இருப்பிடம் வேங்கடம் –பாகவதர்களைப் பற்ற அவனும் இதற்குள் அடங்குமே-
இவர்களே உபாயம் –கீழில் சரணாகதி-இவர்களைப் புருஷகாரமாகப் பற்றுதல்
இவர்களையே உபாயமாக புருஷார்த்த சித்திக்கு இதில் )

மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –

இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார் போல்வார் –

மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஆண்டாள் போல்வார் –

இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது
உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –

ஆனுகூலஸ்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
ப்ராதி கூலஸ்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதி கூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே
ஆனுகூல்யம் பிற்பட்டது இறே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –

இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை  தவிரும் இத்தனை வேண்டுவது –

(பூர்வ விருத்தாந்தம் அனுசந்தித்து திருமந்திரம்
நைமிசாரண்யம் திருவேங்கடம் -சரண் புக்கு -நின்று இருந்து கிடந்தது பல திவ்ய தேசம் அனுபவித்து
இதில் உள் பொருளான பாகவத சேஷத்வம் -மஹா சங்கதி இதுவே
பிராதி கூல்ய வர்ஜனம் அனுகூல்ய சங்கல்பம் -அபாகவதர்களை நிந்தித்து
பாகவதர்களைக் கொண்டாடி
கண்டு கொண்டேன் -சித்த உபாயம் பற்றியதைச் சொன்னபடி
அனு பாஷணம் -நமக்கு உபதேசிக்கிறார்
உபாயமாக வரிப்பது உபாயம் ஆகாதே -அங்கங்கள் ஒன்றுமே விதிக்க மாட்டாதே –
பலமான அவனுக்கு அங்கங்கள் என்னும் அளவில் சர்வ சக்தனாக இருப்பதால் அங்க அபேக்ஷை இல்லாமல்
நிரபேஷ உபாயம் அன்றோ

அவனை அங்கமாகக் கொண்டு இவற்றை உபாயமாகக் கொண்டால் -த்வமேவ உபாய பூத பவ
இயற்கையாக வரும் என்று சொல்லலாமோ
சஅங்க பிரபன்னனுக்கு -உபாயான்தர சூன்யத்தை வராது அவனே உபாயம் புத்தி வராதே
அதிகாரி பேதத்தால் இரண்டும் என்று சொன்னாலும் பொருந்தாது
இரண்டையும் பொருந்த இடம் இருக்க அதிகப்படி கற்பனையாக அதிகாரி பேதம் சொல்ல வேண்டாமே
பகவத் -ஏக இருக்க பாகவதர்களை சேஷிகளாக்ஸவும் அவர்களை ஆஸ்ரயிக்க சொல்லுவான் என்னில்
பகவத் ப்ரபன்னனுக்கு பாகவத சேஷத்வம் தன்னடையே வரும்
இரண்டும் விரோதிக்காதே
பிரகார பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை

அவனே உபாயம் -இவர்கள் புருஷகாரம்
அவர்களைப் பற்றினால் அவர்கள் திரு உள்ளத்தில் இவன் இருப்பதால் அவனே உபாயம் ஆவான்
நிரங்குச ஸ்வ தந்த்ரத்துக்கு அஞ்ச வேண்டாமே
இதுவே பெற்றுக் கொடுக்கும்
இதுக்கு பிரமாணம் -ஆண்டாள் ஏற்றம் காட்டி அருளுகிறார்
தங்களைப் பேணாதே பகவத் ஸம்ருத்திக்கு மங்களா சாசனம் -வேறாக ஏத்தி இருப்பாரே –
தனது பேற்றுக்கு உபாயம் என்று இருந்தால் அவன் ஸ் வா தந்தர்யம் வேலை செய்யாதே
பேறு கை இலங்கு நெல்லிக்கனி போல் சித்தம் இவர்களுக்கு
ப்ராதிகூல்ய வர்ஜனம் வந்தால் தானே அனுகூல்ய சங்கல்பம் வரும்
அங்கு ப்ராதிகூல்யர்களே இல்லையே

இரண்டாம் பாசுரம் பின்பு பிரவேசம் வேறாக அருளி மீண்டும் வியாக்யானம் அருளிச் செய்கிறார்
பாகவத வைபவத்தின் ஏற்றம் நம் நெஞ்சில் பட பரம காருண்யராக அருளிச் செய்கிறார்
ப்ராப்ய தமர்கள் -பாகவதர்கள் -ஆனந்த அனுபவம் உஸாத் துணை –
அவனோ பிராட்டியோ போதயந்த பரஸ்பரம் பண்ணி அருளுவார்
வடுக நம்பி மதுர கவி ஆழ்வார் சத்ருக்னன் நிஷ்டை )

———

(மொய் மா பூம் பொழில்–துள்ளாதாரை நிந்தித்தும் -பிராதி கூல்ய வர்ஜனம் –
அடுத்த பாசுரம் அனுகூல்ய சங்கல்பம் போல் இவரும் இங்கு
பிரமாணம் -அனுகூல்ய சங்கல்பம்
அன்பால் ஆள் செய்வாரை ஆதரித்தும் அன்பிலாதவரை நிந்தித்தும் -மா முனிகள் அதே பிராமண வரிசையில் )

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-

பெருமானார்-பெருமை உடையவர் –
எண்ணாதே இருப்பாரை-அவனை எண்ணாதே அந்த ஷேத்ரத்திலே இருப்பாரே
எண்ணோமே–நினைக்க மாட்டேன் -ஆளாகவே எண்ண மாட்டேன்

————————

பிரயோஜனாந்த பரராய் –
தன்னை உகவாது இருப்பாருக்கும்  கூட
அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று
அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற
இந் நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை
ஒரு வஸ்துவாக நினைத்து இரோம்
என்கிறார்-

வியாக்யானம் –

நண்ணாத-
ஸ்ரீ விதுரர் பட்டது படுகிறார் ஆயிற்று –
(நடுவே இவர் -அவன் அவர்கள் நடுவே போவதை எண்ணி படுகிறார்-
ஞானம் முற்றி கலங்கின மஹா மதிகள் )
சம்ஸ்புரு சந்நாசனம் சௌரேர் மஹா மதி ருபா விசத் –
என்றது இறே-
கடல் கலங்கினால் போலே கலங்கும் போலே காணும்
மஹா மதிகள் என்று துர்யோதன க்ரஹத்தில் எழுந்து
அருளின போது பொய் ஆசனமும் வஞ்சனமுமாய்ப் புகுந்த
பிரமாதத்தை நினைத்து நெஞ்சு அஞ்சினபடியால்
நாமும் ஒரு குலையில் காய் அன்றோ –
நாமும் சம்சாரிகளில்  ஒருவரான பின்பு
நம்மைத் தான் விஸ்வசிக்க வேணுமோ என்று
தம்மை அதிசங்கை பண்ணின படியால்
தாம் படுத்த படுக்கையையும் தடவிப் பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் பெருமாள் எழுந்து அருளப் புக்கால்
சொட்டை முட்டியில் கையை வைத்துக் கொடு சேவிப்பாராம்-
ஒருவர் இடறுதல் -பேர்தல் -செய்தது ஆகில் தம்மை முடித்துக் கொள்வாராக –
அத்தை அனுசந்தித்து நம் முதலிகள் இவரை மஹா மதிகள் என்றாம் அழைப்பது –

கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அஸ்தாநே
பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்
மஹா மதிகள் என்று –

(நடுவில் திருமங்கை ஆழ்வார் படும் பாட்டுக்கு விதுரர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் விருத்தாந்தங்கள் –
இவரும் இவர்களுக்கு நடுவில் உள்ளவர் தானே)

நண்ணாத –
பகவத் விஷயத்தில் த்வேஷம் பிரக்ருதியாயிற்று  இருப்பது –
மனுஷ்ய ஜென்மமாய் இருக்கச் செய்தே
அசுர ஆவேசத்தாலே பொருந்தாதே இருப்பாருண்டு
அங்கன் இன்றிக்கே பிறப்பே ஆசூர பிரக்ருதிகளாய் இருக்குமவர்கள்
அதுக்கு மேலே சாயுதருமாய் இருக்கும் அவர்கள் நடுவே போய் புக்கு

இப்படிப் போய் புகுவது ஒரு ப்ரஹ்லாதலன் போல்வாருக்கோ என்னில் –
வானவரை –
அமிர்தம் கொண்ட அநந்தரம்
உன்னோ பாதி நாங்களும் நித்யர் என்று ஒக்க அபிமானித்து இருக்கும்படியான தேவர்களுக்காக ஆயிற்று –

பெண்ணாகி –
புருஷோத்தமான தன் படிக்கு சேராத ஸ்திரீ வேஷத்தை ஏறிட்டு கொண்டு –

அமுதூட்டும் –
அவன் தன்னை உகந்து (அவனையே என்று காட்டவே அவன் தன்னை ) நீ எங்களுக்கு வேணும் -என்கை அன்றிக்கே
உப்புச் சாறு அமையும் என்று இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்குமவன் ஆயிற்று –
அமிர்த பானத்திலே ஆயிற்று அவர்களுக்கு அந்வயம்-
கடல் கடைகை துடக்கமான வியாபாரங்களை அடைய
தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு –
(மற்றவையில் அவர்களுக்கு அன்வயம் இல்லையே -உப்புச் சாறு ஒன்றிலே நோக்கு )

பெருமானார் –
உறங்குகிற பிரஜையை எழுப்பி ஊட்டி தாயைப் போலே இது என்ன நிருபாதிக சம்பந்தம் தான் –

மருவினிய – ( மருவ இனிய -கடைக்குறை )
ரச வஸ்துவை ஆதரிப்பாரைப் பெற்றது –
சர்வ ரச என்கிற நம்மையும் ஆதரிப்பாரை கிடைக்குமோ
என்று படுகாடு கிடந்தான் ஆயிற்று –

மருவினிய -இத்யாதி –
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –
சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய்
இருக்கிற திருக் கடல் மல்லையிலே-
ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-

எண்ணாதே –
நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து
இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம்
பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு
செய்ய அடுப்பது –

இது செய்யாதே இருப்பாரை –
அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –

இறைப் பொழுதும் எண்ணோமே-
எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –
(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )
அ வஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே
அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .
(அ வஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 12, 2013

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.

பொ-ரை :- ஞானிகளுக்கு உயிராக இருப்பவனே! வாசனையைக் கொண்டிருக்கிற ஒளிபொருந்திய விக்கிரஹத்தையுடையவனே! அடியேனுடைய நெடிய மாலே! விரகு அறியாத எனக்குக் கிருபைசெய்தருள்வாய்; வேறு ஒன்றனையும் அறியாத அடியேனுடைய உயிரானது திகைக்கும்படியாக வேறு உபாயங்களைச்செய்து என்னைப் புறத்திலே தள்ளி இன்னம் கெடுப்பாயோ? என்கிறார்.

வி-கு :- வெறி – வாசனை. கிறி – விரகு. ஆவி திகைக்கக் கெடுப்பாயோ என்க.

ஈடு :- எட்டாம் பாட்டு. 4“அருளாய்” என்ற வாயோடே வந்து அருளக் கண்டிலர்; தன் பக்கல் நின்றும் பிரித்து என்னைக் கைவிடப் பார்த்தானாகாதே என்கிறார்.

  அறிவிலேனுக்கு அருளாய் – 1“நின்னருளே புரிந்திருந்தேன்” –பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 1.
-என்னுமாறுபோலே உன்னருள் ஒழிய வேறு ஒன்றை அறியாத எனக்கு அருளவேணும். 2“அவ்வருள் அல்லன அருளும் அல்ல” –முதல் திருவந். 15.
-என்றேயன்றோ இவர் இருப்பது. வையகத்துப் பல்லார் அருளும் பழுதே அன்றோ. அறிவார் உயிரானாய் – அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்; அறிவாரை உயிராகவுடையவனே என்னுதல். 3“ஞானியானவன் எனக்கு உயிர் போன்றவன் என்பது என்னுடைய மதம்” என்கிறபடியே; “என்னுடைய இரண்டாவது ஆத்மாவாக இருக்கிற உன்னை” என்கிறபடியே.“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” என்பது ஸ்ரீ கீதை, 5 : 18.
“த்விதீயம் மே அந்தராத்மாநம் த்வாம் இயம்ஸ்ரீ: உபஸ்திதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 43.

வெறி கொள் சோதி மூர்த்தி – 4அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வகந்த:” என்னுமதன்றோ. பரிமளத்தையுடைத்தாய், எல்லையற்ற தேஜசையுடைத்தான வடிவழகையுடையவனே! அடியேன் நெடுமாலே – எனக்கு இப்போது 5எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ; வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல். கிறிசெய்து – 6நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவையெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றாநின்றது காண்? என்னைப் புறத்திட்டு – பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற்போலே,பகவத்குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ? 1“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத்குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ? 2“நினைவு கெடுவதனால் புத்தி கெடுகிறது, புத்தி கெடுவதனால் நாசத்தை அடைகிறான்” என்பது ஸ்ரீகீதை.“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் க்ரோத: அபிஜாயதே”
“ஸ்மிருதி ப்ரம்சாத் புத்திநாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி”-என்பன, ஸ்ரீ கீதை. 2. 62 : 63.

பிறிது ஒன்று அறியா அடியேன் – வேறு கதியில்லாதவனாய் வேறு ஒருவர்க்கு உரியன் அல்லாதவனாய் இருக்கிற என்னுடைய, ஆவி திகைக்க – மனம் கலங்கும்படி. கிறிசெய்து என்னைப்புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே?

அருளாய் சொன்ன உடன் வர வில்லை
பிரித்து கைவிட பார்த்தாயா கதறுகிறார்
கிறி- உபாயம் புறத்து இட்டு இன்னம் கேடுப்பாயா
தரியேன்
திருவடிகள் கொடுத்து
அருளே புரிந்து இருந்தேன்
உன்னை ஓன்று வேறு இல்லை
வையத்து பல்லார்  அருளும் அருள் எல்லாம் இருள் பழுது

தேவதைகளே அழியும்
நின் அருளே புரிந்து இருந்தேன்
ஞான பிரான் நீ கிருபை பண்ணி அருளாய்
அறிவாருக்கு உயிர் ஆனாய்
அறிவாரை  உயிர் ஆக உடையவன்
ஞானிகள் எனக்கு உயிர் நீ அருளி
அவனுக்கு ஆத்மா இல்லை திவ்ய ஆத்மா ஸ்வரூபம் வேதாந்தம் சொல்ல
மே மதம் -என்னுடைய சித்தாந்தம்
விசாரமே பண்ண வேண்டாம்

ஞானிகள் இல்லை என்றால் அவனும் இல்லை
அந்யோந்ய ஆஸ்ரமம்
கண்ணன் நம் ஆழ்வார்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஆசை இரண்டு பக்கமும் உண்டே
அறிவார் உயிர் ஆனாய்
அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத
சர்வ கந்த தேஜஸ் உடைய வடிவு அழகு
அடியேன் -நெடு மாலே எட்டாமல் இருக்க
வடிவு அழகை காட்டு வ்யாமொஹம் விளைத்த நெடுமால்
கிறி செய்து முன்பு செய்தவை எல்லாம் வீணாக போகுமே

இவ்வளவு செய்தாலும் இப்பொழுது உதவாமல்
புறத்திட்டு
பிராட்டியை  அசோகா வனம் வைத்தாப் போலே
சம்சாரத்தில் பொகட்டி வைத்து
இன்னம் கெடுப்பாயொ
மயர்வற மதி நலம் அருளின பின்பும்
சம்சாரம் த்யாஜ்யம் அறிந்த பின்பும்
மனஸ் கலங்கும் படி கிறி செய்து இன்னம் கெடுப்பாயொ-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 12, 2013

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே.

பொ-ரை :- உலகத்திலே சஞ்சரிக்கின்ற கருமங்களாகிற உபாயங்களாய், அந்த உபாயங்களைச் செய்கின்றவர்களுமாய், உலகத்திலேயுள்ள எல்லாப்பொருள்கட்கும் ஓர் உயிர் ஆனவனே! அண்டத்துக்கு மேலே உள்ள கணக்கு இல்லாதவர்களாய் விளங்குகின்ற பத்துத் திக்குக்களிலும் பரந்திருக்கின்ற முக்தர்களைப் பிரகாரமாகவுடையவனே! எண்ணிறந்து விளங்குகின்ற அறிவில்லாத எனக்குத் திருவருள்புரிய வேண்டும்,

வி-கு :- கதிஉபாயம்; கருமமாகிய உபாயம். உலகம்-உயர்ந்தோர். உலகு – சராசரங்கள். அரு – முக்தாத்மாக்கள்.

ஈடு :- ஏழாம்பாட்டு. 1‘“உலகில் திரிவேனோ?” என்ற உறைப்பால் உண்டான சுவாதந்திரியம் உம்முடைய தலையிலே கிடந்ததே!’ என்ன, ‘சாதனங்களும் அவற்றைச் செய்கின்றவர்களும் உனக்கு அதீனமான பின்பு, இவ் ஆற்றாமை எனக்குச் சொரூபமாய்ச் சேருமித்தனை அன்றோ?’ என்கிறார். அன்றியே, ‘பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சிசெய்யவேணும் காணும்’ என்ன, ‘எல்லாமும் உனக்கு அதீனமாயிருக்க, அவற்றிற்குப் புறம்போ நான் என்காரியம் செய்கைக்கு?’ என்கிறார் என்னலுமாம்.

உலகில் திரியும் கரும கதியாய் – உலகத்தில் பரிமாறுகிற கர்மமாகிற சாதனமாய். 2உன்னை ஒழியப் பலத்தைக் கொடுக்கக் கூடியது ஒன்று உண்டோ? உலகமாய் – அவற்றைச் செய்கின்றவர்கள் தாம் சுவதந்திரர்களாய் இருக்கிறார்கள்? 1உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டு அன்றோ; உலகத்திலுள்ளார்க்கு என்றும் வரும் அன்றோ. உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் – 2ஒரு தேகத்தை ஒரு சேதனன் ஆத்மாவாய் அபிமானித்திருக்குமாறுபோலே, எல்லாப் பொருள்களுக்கும் ஒரே ஆத்மா ஆனவனே! “சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் இராநின்றான்” என்பது உபநிடதம். அந்த: பிரவிஷ்ட: ஸாஸ்தா”
என்பது உபநிடதம்.
-பலமாக இருக்கிற தானே கர்த்தாவும் கர்மமும் உபகரணங்களுமாயிருக்கை. 3இரண்டும் உன் தலையிலே கிடந்தால் உன்னை ஒழிய எங்ஙனே நான் ஜீவிக்கும்படி.

புற அண்டத்து – அண்டத்துக்கு வெளியிலே என்றபடி. அலகு இல் பொலிந்த 4திசை பத்தாய அருவேயோ – கணக்கு இல்லாதவர்களாய், எம்பெருமான் சொரூபத்தாலே வியாபிக்குமாறுபோலே ஞானத்தாலே பத்துத் திக்குக்களிலும் வியாபித்திருப்பாராய், உருவப் பொருள் போன்று கண்களுக்கு விஷயம் அன்றிக்கே அருவாக இருக்கிற ஆத்மாக்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே! இதனால், முக்தரோ தாம் சுவதந்திரராய் இருக்கிறார்கள் என்றபடி. பரமபதத்திலும் பத்துத் திக்குக்களாய் இருக்குமோ? என்னில், இங்கே இருந்து நினைக்கிற இவர்க்குச் சொல்லத் தட்டில்லையே. அங்ஙன் அன்றிக்கே,

முக்தர் லீலாவிபூதியை நினைக்கும்போது 1இங்குள்ளபடியே நினைப்பார்கள் அன்றோ. அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு – பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அளவிடினும் தம் அறிவு கேடு எண்ணப் போகாது என்கிறார். 2மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் வார்த்தை அன்றோ. அருளாயே – 3பரிகரம் உண்டானபின் அருளக்குறை என்? “பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது இப்போது உனக்குக் கிடைத்தது” என்னுமாறுபோலே.“பகவந் இதாநீம் அனுத்தமம் பாத்ரம் இதம் தயாயா:”-என்பது, தோத்திர ரத்நம். 24.

சாதனம் ஆற்றாமை இல்லை
பற்றும் பற்றும் சாதனம் ஆகாதே
ஸ்வரூபத்தில் அந்தர்கதம் ஆகும்
மாம் ஏகம் அர்த்தம்
கர்மம் சாதனம்
கதி -அடையப்படும் போய் சேரும் உடம் சாத்தியம்

உனது பேற்றுக்கு நீ தானே சாதனம் பண்ண வேண்டும்
யாகம் செய்தாலும் நீ  தான் கொடுக்கிறாய்
பலம் தருபவன் சேதனம் தானே

எம்பெருமானே பலம் தர வேண்டும்
அனுஷ்டாக்காளும் பரதந்த்ரர் தான்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு இறே
சாதனம் செய்பவர் –
ஓர் உயிர் போலே சகல பதார்த்தங்களுக்கும் ஏக ஆத்மா நீ தானே –
தேகம் நாம் தானே அவனுக்கு –
பலம் தருபவனும் -கர்த்தாவும்-கர்மமும் -உபகரணங்களும் அவனே
எப்படி நான் ஜீவிப்பது
பிரத்யனமும் என்னைக் கொண்டு நீ பண்ணிக்கோ
ஞானத்தால் வியாபித்து ஆத்மகளுக்கு நிர்வாஹகன் அவனே
திசை பத்தாயா -ஸ்வரூபத்தால் -அசன்கேய ஆத்மாக்கள்

தர்ம பூத ஞானம் பரவுமே
முக்தர் -ஸ்வதந்த்ரர் –
திக்குகளே இல்லையே பரம பதத்தில்
இங்கே இருப்பதால்  சொல்லுகிறார்
திக்கு தனியான தத்வம் இல்லையே
மாறிக் கொண்டே இருக்குமே
தத்வ த்ரயம் விசாரம் உண்டு இது பற்றி
பகவத்  ஸ்வரூப ரூப குணங்கள் பரிசெதிக்கிலும்
அறிவு கேட்டுக்கு எல்லை இல்லை என்கிறார்
அருளாயே
பரிகரம் உண்டான பின்பு
அருள் தயை உண்டான பின்பு
மகா பாபி தேடி போக என்னை விட யாரும் இல்லையே
அனைத்தாலும் குறை மிக்கு
அனுத்தமம் பாத்திரம் நான் தான் ஆளவந்தார்
எனக்கு உன்னை அன்ற இலேன் உனக்கும் என்னை அன்றி இலேன்
புகல் ஒன்றும் இல்லை அருளுக்கு இதுவே புகல் பலன் இருவருக்கும் ஆன பின்பு அமுதனார்-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 12, 2013

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?

பொ-ரை :- ஒரு திருவடியைப் பரப்பிக் கடலால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாம் அத் திருவடியின் கீழே ஆம்படி தாவி அளந்து, மற்றொரு திருவடியால் மேல் உலகங்கள் எல்லாவற்றையும் தடவின மாயோனே! உன்னைக் காணும்பொருட்டு வருந்தி எல்லாக் காலத்திலும் தீயின் அருகில் சேர்ந்த மெழுகைப் போன்று உலகத்தில் திரியக் கடவேனோ?

  வி-கு :- ஓர் அடி பாய் வைத்து என்க. பாய் – பரப்பி. பாய், தாய் என்பன : வினையெச்சங்கள். தீயோடு – தீயின் ; வேற்றுமை மயக்கம்.

ஈடு :- ஆறாம்பாட்டு. 1‘உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவோம்; அதில் ஒரு குறை இல்லை; ஆனாலும், பிரயோஜனம் உம்மதானபின்பு நீரும் சில முயற்சிகளைச் செய்யவேணும் காணும்’ என்ன, இந்த மரியாதை என்று தொடங்கிக் கட்டிற்று என்கிறார். அன்றியே, காண்கைக்குத் தாம் தக்கவரல்லர் என்று உபேக்ஷித்தானாக நினைத்து, தகுதி தகுதிஇன்மைகளைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உன்னாலே இழக்கப்படுவோர் உளரோ? என்கிறார் ஆகவுமாம்.

ஓர் அடி பாய் வைத்து – 2சேதனர்தலைகளிலே திருவடியை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? 3வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன்கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ. ஓர் அடியைப் பரப்பிவைத்து. அதன் கீழ் – அத் திருவடியின் கீழே. பரவை நிலம் எல்லாம் தாய் – கடல் சூழ்ந்த பூமிப்பரப்படங்கலும் அளந்து. 4சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்துகொண்டது. 5பரக்கவைத்து அளந்துகொண்ட பற்பபாதன் அன்றோ-திருச்சந்தவிருத். 32.-. ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – மற்றைத் திருவடியால் பிரமலோகத்தளவும் சென்று தீண்டிய. ‘எல்லா உலகும்’ என்றது, நடுவே உள்ள உலகங்களை. தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார். மாயோன் – தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான்வியாமோகம் செய்யுமவன். உன்னைக் காண்பான் வருந்தி – 1என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? எனைநாளும் – அநேக காலம். 2மயர்வற மதிநலம் அருளியபின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர்சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி. தீயோடு உடன்சேர் மெழுகாய்-3நெருப்பிலேபட்டுக் கரிந்துபோகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே, உருகுவது வலிப்பது ஆகிறபடி. மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி. 4நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப்பண்ணச் சொல்லுகிறபடி. உலகில் திரிவேனோ – ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப்பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே 5யாதநாசரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!

உம்முடைய அபேஷிதம் செய்யக் கடவோம் –
நீரும் சில யத்னம் பண்ண வேண்டும் -என்பானாய்
இப்படி என்று தொடக்கி இப்படி வைத்து இருந்தாய்
வாமனன் திரி விக்ரமனாக வந்து தீண்டினாயே
தகுதி இப்பொழுது எதற்கு பார்க்கிறாய்

சித்தாந்தம் -உன்னுடைய கிருபையாலே வரையாதே தீண்டி –
அன்றிகே
காண்கைக்கு தான் அயோக்யர் என்று கேட்பதாக
தகுதி பார்க்காமல் தீண்டிய பின்பு
இழக்கப் படுவார் உண்டோ
பிரத்யனமும் யோக்யதையும் வேண்டாமே –
நெருப்பில் விழுந்த மெழுகு போலே துடிக்க
தாய்ந்து -ஓர் அடி வைத்து உலகு எல்லாம் பரவி அளந்து கொண்ட
திருவடியால் தடவி வந்த மாயன்
உருகி திரிவேனோ
எவ்வளவு வருத்தப் பட்டு பிரயத்னம் செய்தார்கள் -உனது திருவடி வைக்க –
வசிஷ்ட சண்டாள விபாகம் பார்க்காமல் உன்னுடைய விருப்பத்தால்
தாவி வைத்து
வைக்க போகிறேன் சொல்லாமல் வைத்து
பாய்ந்து ஓர் அடி வைத்து
கடல் சூழ்ந்த பூமி பரவை அனைத்தும்
சங்கல்ப்பத்தால் செய்யாமல் திருவடியால்
பரக்க வைத்து அளந்து கொண்டான்
பரப்பிய பின்பு அளந்தான்

தடவி வந்த
தென்றல் உலாவினது போலே சுகம்
மாயோன் தன்னுடைய உடைமை ஸ்பர்சிக்கும் ஆச்சர்ய பூதன்
உன்னைக் காண்பான் நான் வருந்தி
என்னை இரபபாளன் ஆக்கி
அங்கு நீ இரபபாளன் ஆனாய்
இரந்ததால் தான் கட்சி கொடுக்க வில்லையே
அநேக காலம்
பிராப்தி அடையும் வரை
அருளின நாள் தொடங்கிஇது வரை
அவன் எதிர் சூழல் புக்கு திரிந்த நாள்கள் விட இது பெரிதாக தோன்றுகிறது

தீயோடு உடன் சேர்ந்த மெழுகு
உருகியும் போகாமல் இருக்கவும் முடியாமல்
சுகம் துக்கம் மாறி
மானச அனுபவத்தால் உருகி வலிப்பது
நசை நப்பாசை
ஆசை –
நைப்பாச்சை நப்பாசை ஏக்கம் உடன் ஆசை உருக பண்ணுகிறது
ஜீவித்தல் முடியல் செய்யப் பெறாதே
யாதனா சரீரம் போலே –
நரகம் துக்கம் அனுபவிக்க கொடுக்கும் சரீரம் –
முடிந்து பிழைக்கலாம் இந்த சரீரம்
அங்கெ அப்படி இல்லை
இப்படி இங்கனே திரிவதே
உலகில் -நரகம் போலே அவனை அனுபவிக்காமல் இருக்க -ஆழ்வாருக்கு தோற்ற
அன்று நான் எங்கே புக்கு இழந்தேனோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 12, 2013

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!

பொ-ரை :- பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல் நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கின்றவனே! பூவுலகத்தில் பல அவதாரங்களைச் செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே! எண்ணுக்கும் அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே! என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?

வி-கு :- முதல் இரண்டு அடிகளில் இறைவனுடைய 1ஐவகை வடிவுகள் கூறப்பட்டுள்ளமை காண்க.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 2எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய் என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து, என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.

விண்மீது இருப்பாய் – 3எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி. 4இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரமபதத்தில் இருப்புக்காணும் முற்படத்தோற்றுகிறது. மலைமேல் நிற்பாய் – 5நித்திய சூரிகளையும் நித்தியசம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது, இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி. வேங்கடத்து ஆடுகூத்தன் அல்லனோபெரிய திருமொழி, 2. 1 : 9.-கடல்சேர்ப்பாய்-கால் நடை தந்து போகவல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தபடி. 1‘விண்மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார், ‘மலைமேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார். ‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப்பெற்றது. மண்மீது உழல்வாய்-அவ்வளவு போகமாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண்வட்டத்தில் திரியுமவனே! 2“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்புதான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும்பெரிய திருவந். 18.– என்கிறபடியே, அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதிகூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – 3கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே! சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால், தான் மறைய நின்று அவன் உகந்தாரைக்கொண்டு ரக்ஷிக்கும் தாயைப்போலே. 4“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகுமுறுகு என்றால், அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி. எண்மீது இயன்ற புற அண்டத்தாய் – எண்ணுக்குமேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் 1இப்படி வசிக்கின்றவனே! 2“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.

. எனது ஆவியுள் மீது ஆடி – 3என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து. அன்றிக்கே, என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல். உருக்காட்டாதே ஒளிப்பாயோ – வடிவுகாணப்பெறாவிட்டால், 4மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே. 5குணஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவுகாணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?

சர்வத்ர சந்நி ஹிதனாய்-
பஞ்ச நிலையும் அருளி –
எனது உள்ளத்திலும் இருந்து
உருக் காட்டாதே ஒழிக்க லாமா –
விண் மீது இருப்பாய் -நித்யர் போலே
மலை  மேல் நிற்பாய்-இருவரும் ஒக்க அனுபவிக்க
பரமபதம் மென்மையும் அறியாதே
திருமலை நீர்மையும் அறியாத ப்ரஹ்மாதிகளுக்கு
கடல் சேர்ப்பாய்
மண் மேல் உழல்வாய் -சம்சாரிகளுக்கு
இவற்றுள் எங்கும் மறைந்து -கான்கையும் அசஹ்யமாய் உள்ளாருக்கு
சத்தியை நோக்குகிறான்
சதா தர்சனம் பண்ண -பக்தி முதிர்ந்த நித்யர்
முற்பட இவருக்கு இதுவே தோற்றுகிறது
அனைவரும் நீர் உண்ணப் பண்ண இடம் திரு மலை
இங்கு உள்ளாறும்
திரு நறையூர் தேனே முன்பே வந்து திரு நறையூர் 100 பாசுரங்கள்
ஆற்றிலே வெள்ளம் வரபுக்கால் பொசித்து காட்டுமே
சினை ஆறு படுகிறது
திருமலை அனுபவம் அப்புறம் வருமே
ருசி ஜனகம் -ஆடு கூத்தன் -வேங்கடத்தில் –

 

நிலையில் வாசி திருமலையில்
கிடை அழகு
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் அனுபவித்த பின்பு
இனி நடந்தவாறு
அவ்வளவு போக மாட்டாதே
சம்சாரிகள் கண் மட்டத்தில் திரிந்து உழல்வாய்
தாம்பால் ஆப்புண்டவாறும்-
காழியன் -தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு எங்கும் பாடு உற்றாலும்
சோம்பாது-
அனுகூலராக கட்டுவாரும் பிரதி கூலராய் கட்டுவாரும் இருக்க
சம்சாரத்தில் உழன்று
கண்ணாலே கானில் சிவக்கு -ஆணை இட்டு  விலக்கு வாறும் உண்டே -மூட
காண ஒண்ணாத படி அந்தர்யாமித்வம்
இரா மடம் ஊட்டுவாரைப் போலே
மறைந்து நின்று அவன் உகந்தார் மூலம் உண்பிக்கும் தாய்

இருப்பில் பெரு வாசி அங்கு போலே
சிசுபாலாதிகள் நல்கு முல்கு சிடு சிடு சொன்னாலும்
அவர்களையும் நோக்கும்படி
அண்டங்கள் கோடி கோடி
எண்ணில் அடங்காத எண் மீது இயன்ற

ஹிருதயத்துள்
ஆவி உள் மீது ஆடி
உள்ளும் புறமும் சஞ்சரித்து
உருக் காட்டாதே
மறக்கவும் முடியவில்லை
குண ஞானம் வடிவை சேவிக்க ஆசை அதிகரிக்க
ஒழிக்க இருக்கிறாயே
தரிக்க முடியாதே ஞானம் மட்டும் கொண்டு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 12, 2013

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.

பொ-ரை :- சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம்கொண்ட பெருமானே! பிரமன் சிவன் இந்திரன் மற்றைத்தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மைதோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.

வி-கு :- அசுரர்: இகழ்ச்சியின்கண் வந்தது. வீய ஆண்ட பெருமான் என்க. வீய – இறக்க. கிளர்ந்து சூழ விளங்க விண்மீதே காண ஒருநாள் வாராய் என்க. வாராய்: விதிவினை; வரவேண்டும் என்பது பொருள்.

ஈடு :- நான்காம் பாட்டு. 1தளரக்கடவீர் அல்லீர்; உம்முடைய தளர்த்தியை நீக்கக்கடவோம்; ஆனாலும், தடைகள் கனத்திராநின்றன காணும்’ என்ன, ‘ஓம், அப்படியே; சகடாசுரனைக் காட்டிலும் வலிய தன்றோ என்னுடைய விரோதி?’ என்கிறார். ‘உன்கால் கண்டபோதே போகாதோ?’ என்கிறார். ‘அடிபடின் செய்வது என்?’ என்று சும்மெனாதே கைவிட்டோடும் –  பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 3.
-அன்றோ.

சகட அசுரர் உடல் தளர்ந்தும் முறிந்தும் வேறா பிளந்து வீய – சகடாசுரன் கட்டுக் குலையா, முறியா, உடல்வேறாகப் பிளந்து வீய; 2“ஸ்ரீராமபிரானால், அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-

சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-

கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்” என்கிறபடியே, 1பின்பு, துகளும் காணஒண்ணாத படியாகை. சகடாசுரனைக் கொன்றான் என்று திரளச்சொல்ல அமைந்திருக்க, ‘தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ, பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே. திருக் கால் ஆண்ட – 2அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ 3இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார். 4“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலைவரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்; அவ்வளவிலே பொடி பட்டானித்தனை; 5“உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்” –பெரிய திரு.
10. 8 : 3.
-என்று இவனும் அறிந்துசெய்தானல்லன். 6தன்னை உணர்ந்து பரிமாறும்போது திவ்விய ஆயுதமும், அவை உதவாதபோது கையும், அதுவும் உதவாத போது திருவடிகளுமாய் இருக்கிறபடி. 7நம்முடைய ஆபத்துக்களுக்கே அன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவன; 8திருமேனிதான் அடியார்களுக்காக ஆகையாலே, அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே உறுப்பாயிருக்கை.பெருமானே – 1அன்று சேஷியை உண்டாக்கின உனக்கு, இன்று சேஷவஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ? 2அவன் பிரகாரியானால், பிரகாரமாயுண்டாவது அன்றோ இது. பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் கிளர்ந்து சூழ விளங்க ஒருநாள் காண விண்மீதே வாராய் – 3“கும்பிடு நட்டமிட்டாடி” –திருவாய். 3. 5 : 4.-என்கிறபடியே, வேறு பிரயோஜனத்தைக் கருதாதவரைப் போலே, தம் வசம் அற்றவர்களாய்க்கொண்டு பிரமன் சிவன் முதலானோர்களால், பிரதாநரோடு பிரதான மில்லாதாரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு, 4இருட்டில் விளக்குப்போலே 5“ஒளிகளின் திரள்” “தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா 1. 9 : 67.-என்கிறபடியே தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு வந்து தோற்றினாற்போலே, ஆகாச மடங்கலும் இடம் அடைக்கும்படி வந்து தோற்றவேணும் என்கிறார். இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார். ‘நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார். 6நீள்நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காணவாராய்’ என்கிறார். இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண்மீதே’ என்கிறார்.

தளர கடவீர் அல்லீர்
பிரதி பந்தகங்கள் போன பின்பே அனுக்ரகிக்க முடியும் என்பான் என்னில்
சகடாசுரன் காட்டில் வலிடதா என்னுடைய விரோதி
உன்னுடைய கால் கண்ட போதே போகாதோ
துயர் அடி தொழுது எழுந்தேனே
சும்மனாதே கை விட்டு ஓடாதோ –
சும் சொல்லும் முன்பே போகுமே
தூறுகள் சம்சாரிகள் -இடம் போய் சேரும்
தூஷிகள் இடம் பாபம் போகுமே -புண்யம் பாகவதர்கள் இடம் போகுமே-

தேவர் சூழ விளங்க ஒரு நாள் காண வாராய்
விரோதி நிரசன சீலன்
திருக்காலை ஆண்ட பெருமான்
கட்டு குலைந்து முறிந்து உடல் வேறாக பிளந்து விழுந்தான்
சின்னம் பின்னம் சரித்து தத்தம் சாம்பலாகும் ராம பாணத்தால்
துகள் கூட காண ஒண்ணாத படி
தளர்ந்தும் முறிந்தும் தனித் தனியாக சொல்லி
ஒவ் ஒன்றும் தனக்கு இனிதாய் இருக்க
திருக்கால் ஆண்டான் –
அடியாரை ஆண்டால் ஆபத்துகளுக்கு  உதவுவார்களே -அது போலே –
சிறு பாலகனாய் ஒன்றும் அறியாமல் இருக்க -திருவடிகள்
கிடீர் நம்மை நோக்கிற்று -அவனை ரஷித்தது இவரை ரஷிப்பது போல் தான்
முலைப்பால் உண்ண-ஏழு திங்களில் எமுனை நீராடப் போனாள் யசோதை –

காலை உதைத்து அழ அவ்வளவிலே பொடி பட்டது
உருள சகடம் -இவன் அறிந்து செய்ய வில்லை
திவ்ய ஆயுதம் –
உணர்ந்து அழிக்க-திவ்ய ஆயுதம் -கை -அதுவும் உதவாத தசையில் திருவடிகள் உதவ
தூக்கத்தில் காலைத் தூக்க
அவன் ஆபத்திலும் திருவடிகளே உதவ-

திருமேனி ஆஸ்ரிதர் அனுபவிக்கவும் விரோதி போக்கவும் தானே
துகளாக போக
அன்று சேஷியான உன்னையே உண்டாக்கிக் கொண்டாயே
இன்று செஷபூதாணன் எனது விரோதி போக்க பெரிய பணியோ
அவன் பிரகாரி -பிரகாரம் -நாம் -நீ இருக்க எனக்கு என்ன ஆபத்து –
விளங்கு -கும்மிடு  நட்டமிட்டு ஆடி -ஸ்தோத்ரம் பண்ண –
பிரமன் சிவன் இந்த்ரன்  என்று இவர்கள் சேர்ந்து  சூழ -கூத்தாடி –
அநந்ய பிரயோஜனர் போலே தங்கள் வசம் இல்லாமல் –
கலாப காலத்தில் ஸ்ரீ பெரும்பூதூர் உத்சவர் திருவல்லிக்கேணி
எழுந்து அருளி -கூத்தாடி சாத்துமுறை இன்றும் பண்ண –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே சூழ்ந்து
விளங்க -இருட்டறையில் விளக்கு போலே ஆனைக்கு
தோற்றினது போலே
இவன் சந்நிதியில் அவர்கள் தமஸ்  போலே இருப்பார்
ஒரு நல
100 ஆண்டு 11000 ஆண்டு வேண்டாம்
கண் முன்னால் காணும் படி வந்தால் போதும்
அசுரர் வதம் பண்ண அவர்கள் அனுப்ப –

பிரயோஜனாந்த பரர் போலே இல்லையே
விண் மேலே ஆகாசத்தில் இருந்தவாறே தொற்றினால் போரும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 12, 2013

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10–

தீவினையை முதலறிய வல்லார் தாமே
தொல்லை பழ வினையை முதலறிய வல்லார் தாமே-திரு நெடும் தாண்டகம்
முதலறிய-வாசனை உடன் போக்க -அறிந்து -அரிந்து கொள்ளலாம்

———————————————–

வியாக்யானம் –

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை பட வெகுண்டு –
தன்னோட்டை  சேர்த்தியாலே
விகசிதமான பணங்களை உடைய
திருவனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி –
அப் படுக்கையும் விட்டுப் போய் அழியச் செய்யும்
ஆஸ்ரித விரோதிகள் உண்டானால் –

மருதிடை போய்ப் –
ஓன்று என்னலாம் படி பொருந்து நின்ற மருது
முறிந்து விழும்படி நடை கற்று –
(மருதங்கள் பன்மை இல்லாமல் மருது என்றது ஒன்றாக பொருந்தி )

பழன வேலி தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத் –
நீர் நிலங்களால் சூழப் பட்டு
அழகிய தடாகங்கள் உடைத்தான
திருக் கடல் மல்லை தல சயனத்திலே –

தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை –
யஞ்ஞே சோயஞ்ஞ புருஷ -என்கிறபடியே
சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி
கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று –
(ஸ்ரீ விஷ்ணு தர்மம் யஜ்ஜ ஈசன் யஜ்ஜ பிரபு புண்டரீ காஷன் விஷ்ணு மோக்ஷ ப் ரதன் )

கடமாரும் கருங்களிறு வல்லான் -வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த
வின்பப் பாடல்-திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்-
மத்த கஜத்தை தம் நினைவாலே நடத்த வல்லவராயும்
யுத்தத்திலே வெற்றி கொண்டு அல்லது மீளாத ஆழ்வார்
ஒலி உடைத்ததாக அருளிச் செய்த
இப் பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –

( அபிஜன வித்யா விருத்தம் இத்யாதி மதங்கள் உள்ளாரை அடக்கி ஆள வல்ல சம்சாரிகளையும் திருத்தி
புத்தாதிகளையும் வென்றார் ஐஸ்வர்யம் கால் கடைக் கொண்டவர் அன்றோ )

தீவினையை முதலறிய வல்லார் தாமே –
ப்ராக்தமான கர்மங்களை
தாங்களே வாசனையோடு போக்க வல்லார் ஆவார்கள்
பாபங்களை  கூடு பூரித்துக் கொள்ளும் இத்தனை போக்கி
எலி எலும்பனான இவனால் இது போக்கிக் கொள்ளலாம்
என்றால் -இது கூடுமோ என்னில் –
அதில் ஒரு தட்டு இல்லை இது த்ருடம் –

(சேர்க்க வல்லார் என்பதை அறிவோம் -கலியன் ஒலி வல்லார் அரிய வல்லவர் ஆவார் )

—–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பாரமாய தூறு பாற்றிப் பத்தர்க்கு எளியனாம்
பார மல்லை ஞானத்து ஒளி யுருவை ஆறு பேறாக்
கொள்ள கள்ள நூல் தள்ளச் சொல் நீலன் சொல் வல்லார்
அள்ளல் அருவினை நண்ணார் -15-

ஞானத்து ஒளி யுருவன் -ஏனத்துருவாய் நிலமங்கை எழில் கொண்டவன் அன்றோ
அள்ளல் -கள்ள நூலே அள்ளல் -/ அள்ளல் நரகம் என்றுமாம் -விடியா வெந்நரகம் சம்சாரம்
ஆறு பேறு-உபாய உபேயம் தவ தத்வம் நது குணவ்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
பார மல்லை -புகழையுடைய மல்லை -தேசாந்திர தேகாந்தர காலாந்தரம் இல்லாமல்
இங்கேயே இப்பொழுதே இத்தேகத்துடனே -சேவை அன்றோ
தூறு பற்றி -குதிரையோட்டி-போலே பெயர்ச் சொல்லாகவுமாம் –
பக்தர் வினைகளை போக்குவதே ஸ்வ பாவமாகக் கொண்டவன் அன்றோ-

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 12, 2013

ப்ரஹ்ம வாதிகள் பிரமாணங்கள் பலவும் உண்டே இவனே புருஷோத்தமன் என்று நிரூபிக்க –

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே-2-5-9-

கண்டானை-வேதாதிகளைப் ப்ரவர்த்திப்பித்து நாம் உஜ்ஜீவிக்க-சாஸ்த்ர வழியில் ஆஸ்ரயிக்க வைத்தானை

———————————————

வியாக்யானம் –

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருப்பாரைச் சொன்னபடி –
ஆயார் என்றது ஆனார் என்றபடி –
அவர்கள் ஜாமதக் ந்யஸ்ய ஜல்பத-என்கிறபடி
அடைவு கெட்டு ஏத்தும்படியான திருவடிகளை உடையவனை –
(ஜமதக்கினி-பரசுராமர் -நாரதர்- கிருஷ்ண த்வைபாயனர்-இத்யாதிகள் சொல்லக் கேட்டுள்ளோமே )

படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்-
நம்முடைமை ஒன்றும் தவர ஒண்ணாது என்று
தான் கொடு வந்து திருவடிகளை தலையிலே
வைத்த ஸ்வபாவத்தை உடைய நீர்மையில் தோற்று –
இனி நாமும் அவன் உகந்த அடிமை செய்து உளோம் ஆவோம் –
என்கிற இவ்வர்த்தத்தில் விண்டவன் உண்டு –
விண்டானை -தென்னிலங்கை யரக்கர் வேந்தை-
ந நமேயம் -என்று இருக்கிறவனை –
ஆளாய் உய்தல் விண்டார்க்கு எல்லாம் பிரபுவாய் இருக்கிறவனை-( யரக்கர் வேந்தை )

விலங்குண்ண –
அவனை நாயும் நரியும் கழுகும் பருந்தும்
பற்றி யிசிக்கும்படியாக –

வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –
பிரதிகூல நிரசனத்துக்கும்
அனுகூலருக்கு தர்ச நீயமாய் இருக்கைக்கும்
கையும் வில்லுமான  இருப்பே அமையும் –

பண்டாய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும் –
அபௌருஷேயமாகையாலே நித்தியமாய் –
நிர்தோஷமாய் பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற
உத்தர உத்தர உச்சார்யமாணமான வேத அஷர ராசியும்
தன்னுடைய சமாதாரான ரூபமான வைதிக கர்மங்களுக்கு
உப லஷணங்களான பஞ்ச மஹா யஞ்ஞங்களும் –
இந்த வைதிக கிரியைகள் தன்னை சமாராதான ரூபம்
என்னும் இடத்தை சொல்லுகிற அங்கங்கள் ஆறும் –
கேள்வியாலே அனுசந்திக்கப் படுவதான-

கண்டானை –
சாஸ்த்ரீய ஜ்ஞானத்தாலே தன்னை ப்ராபிக்கைக்கு ஈடான
வழியைக் கண்டு வைத்தவனை –

தொண்டனேன் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே –
அப் பெரு வழியான சாஸ்திர ஜ்ஞானத்தாலே அன்றிக்கே
இக் கண்ணாலே காணப் பெற்றேன் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்