314
உய்வதோர் பொருளால் -1-1-1-
ஆழியான் அருளே -1-1-4-
மயர்வற மதி நலம் அருளினான் -திருவாய் மொழி -1-1-1-
பகவத் கிருபையை -நல்ல அர்த்தம் -கௌரவ பெருமையால் முதலில் மறைத்து சொல்லி பின்பு
நான்காவது பாசுரத்தில் வ்யக்தமாக அருளியதை
நம் ஆழ்வார் அவ்வளவு போகப் பொறாமை நடுவே அருளுகிறார் முதல் பாசுரத்திலே –
——————————————————————————–
315
வாடினேன் -1-1-1-
பொய் நின்ற ஞானமும் –இந்நின்ற நீர்மை -திரு விருத்தம் -1-
பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பும் கீழில் பிரிவை அனுசந்தித்து வாடினேன் -என்கிறார் –
நம் ஆழ்வார் அவனை சாஷாத் கரித்து அநந்தரம் பெற்ற பேறு அறியாதே கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தது போலே –
————————————————————————————-
316
நாராயணா -1-1-1-
மணியே மணி மாணிக்கமே மது சூதா -11-8-8-
நாராயண உபநிஷத் -அத புருஷோ ஹைவே நாராயண என்று தொடங்கி
பிராமண்யோ மது சூதனோம சர்வ பூதஸ்தமேகமே நாராயணம் காரண ரூபமகாரம்
பரப்ரஹ்மோம் -என்று நாராயணன் மது சூதனன் என்று கூறுகிறது –
மது சூதனன் ஸ்ரீ ஹயக்ரீவன் எனபது நிர்விவாதம்
ஜாயமான கால கடாஷம் ஸ்ரீ மது சூதன கடாஷம்
தீர்த்தகர -ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம -691-ஹயக்ரீவ ரூபத்தை தரித்து மது கைடபரை
அழித்து பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்தவன் -சங்கர பாஷ்யம் -இதுவே குரு தம -210
திரு நாம வ்யாக்யானதிலும் கூறப் படுகிறது
இது போலே திரு மங்கை ஆழ்வாரும் நாராயண என்று அருளி
இறுதியில் அவனே மது சூதனன் என்று காட்டி அருளுகிறார்-
—————————————————————————————-
317-
அவரவர் பணை முலை துணையா -1-1-2
தான் உகந்த ஊர் எல்லாம் -திரு நெடும் தாண்டகம் -6
ஞானம் பிறப்பதற்கு முன்பும் பின்பும் -உத்தேஸ்யமானவை-
—————————————————————————————
318
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2-
தண் குடந்தை கிடந்த மாலை -திரு எடும் தாண்டகம் -29-
அதிகமான ஈடுபாடு திருக் குடந்தையில் ப்ரீதி விசேஷத்தாலே அடிகடி ஈடுபட்டு அருளி –
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் அருளி –
பெரிய திருமொழியிலும் நான்காம் பத்து ஓன்று ஒழிய அனைத்து பத்துக்களிலும் மங்களா சாசனம் உண்டு
தமது ஆதி மத்ய அவசானங்களிலும் மங்களா சாசனம் அருளி
குடந்தை கிடந்த மால் இங்கே போதும் கொலோ -என்று அருளிச் செய்தார் இ றே
——————————————————————————————
319
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன நாள்கள 1-1-3-
பழுதே பல பகலும் போயின -முதல் -திருவந்தாதி -16-
ஊமை வாய் விட மாட்டானே –இருந்தாலும் அவன் நினைத்து இருக்கலாமே –
நாமோ அனுபவித்து போந்த விஷயங்களில் போய் இருந்து நினைத்து இருக்கும் ஒன்றும் இன்றிகே இருக்கை –
போன காலம் அநாதி – காலம் அநந்தம் -இழவுக்கு அழுதார் ஆகில் அச்சமாவது என்
வருமத்தை குறித்தன்றோ அஞ்சுவது என்னில் – நான் ஆகில் போன காலம் போலே ஆகிறதோ வரும் என்கிறார் –
————————————————————————————————-
320
நஞ்சு தான் கண்டீர் நாராயணா – 1-1-10-
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு -10-2-4-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் -பாபத்துக்கு நஞ்சு-பாபங்களை நசிப்பிக்கும் –
கல்யாண குணங்களால் பூரணை யாகிய சீதை பிராட்டியை
ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய்-விபீஷணன் வார்த்தையாக அருளுகிறார் –
ஆக அமுதமான பகவன் நாமம் நஞ்சு -பாப நாசகம்
சீதக் கடலில் உள்ள அமுதான சீதை பிராட்டியும் ஒரு விதத்தில் நஞ்சு -ராஷச நாசகம்
——————————————————————————————————–
321
வேழம் பிடியினோடு –துயில் கொளும் -1-2-3-
குழா வரி வண்டிசை தீங்கரும்பு கண் வளரும் -2-10-4-
விரோதியான ரிஷபங்களைப் போக்கி நப்பின்னை பிராட்டி உடன் பரம ரசிகன் வர்த்திக்கும் தேசம்
என்பதால் அங்குத்தை திர்யக்குகளும் பரம ஸ்ருங்கார ரச பிரதானமாய் இருக்கும்
வண்டுகள் பாட அவை துடைக்குத்தாக துயிலும் திவ்ய தேசம் திருப் பிரிதி -அது போலே
திருக் கோவலூரில் வண்டிசை கேட்டு தீங்கரும்பு பணைக்கிறது
தீங்கரும்பு -திருக் கோவலூர் ஆயன்
குழா வரி வண்டு -அன்பு கூறும் அடியவரான முதல் ஆழ்வார்கள் -எனபது ஆசார்ய ஹிருதய சாரம்-
—————– ————————————————————————————-
322
பெரிய மாசுணம் -1-2-10
யானை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி -39
மலைப் பாம்புகள் ஆனைகளுக்கு அஞ்சி -மலை போலே போந்து போய் புற்றிலே புகா நிற்கும் என்று ஜீயர் அருளிச் செய்ய –
நம்பிள்ளை -பெயருகை யாவது தான்-போக்குவரத்து இரண்டுக்கும் சாதரணமாய்த்து இருப்பது –
மலைக்கு சிறப்பு சொல்பவர்கள் மலை பாம்பு ஆனையை விழுங்கும் என்பார்கள் –
ஆகையால் கரிய மா முகில் படலங்கள் கிடந்தது முழங்கு வற்றை -பெரிய மாசுணமானது
ஆனையாக புத்தி பண்ணி -ஆமிஷார்தமாக மலை பேர்ந்தால் போலே கால் வாங்கி கிட்டா நிற்க்குமாய்த்து
என்றாமே -என்ன அதுவே இறே பொருள் என்று போராக கொண்டாடி அருளினார்
ஆகையால் பெரிய மாசுணம் என்றது ஆனையை விழுங்கும்படி யாய்த்து இதனுடைய பெருமை
இருப்பது -யானை வெருவி அரவு ஒடுங்கும்-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –
இடி கொள் வேழத்தை எயிற்றோடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் -என்று
கம்பரும் பாடினார் –
———————————————————————————————————-
323
பெரிய மாசுணம் -1-2-10
மா மழை மொக்குளின் -திருவாய் மொழி -4-1-6-
பெரிய மாசுணம் தாத்பர்யத்தை கீழே அனுபவித்தோம்
பெரு மழைக் குமுழி போலே -அநந்தரம் விழுந்த துளியோடே நசிக்கும் -என்கைகாக
——————————————————————————————————-
324
முன்னடி நோக்கி வளைந்து -1-3-1-
வல் வினை மோத மலைந்தே -திருவாய் மொழி -3-5-2-
முன்னடி -முன்பு இறுமாப்பாலே தறை பாராதே இ றே திரிவது
த்விதா பஜ யேயம் ந நமேயம்
முதுமையிலே தன்னடையே வளையும் இ றே
பகவத் குண அனுபவம் பண்ணும் இதே போதும் இ றே
பகவானை நாமே வணங்க அமையும் -பகவத் குண அனுபவத்தாலே
நாமே விக்ருதராக வமையும் என்று இ றே ஆழ்வார்கள் திரு உள்ளம்-
————————————————————————————————-
325
பாவீ –மொழிவதற்கு அஞ்சி -1-6-4-
பாவி நீ என்று சொல்லாய் -திருவாய்மொழி -4-7-3-
ஸ்திரீகள் ஒழிச்சின வன்றாகிலும் அனுதாபம் பிறந்து உகந்து அருளிற்று ஒரு திரு வாசலிலே
ஒதுங்கினாய் ஆகில் இன்று எங்களுக்கு கை சலியாது ஒழியல் ஆய்த்து -என்பார்கள் ஆய்த்து
யமபடர்கள் -மொழிவதற்கு அஞ்சி -அவர்கள் பண்ணும் நலிவை பொறுக்கலாம் ஆகாதே
க்ரூரமான பேச்சாய்த்து பொறுக்கப் போகாதது -யமபடன் பாவீ என்னுமது அசஹ்யம் என்றபடி
பாவி நீ -நான் நிராசனாய் தரிக்கும் படியாக -இந்தரனுக்கு உதவினோம் -யசோதாதிகளுக்கு உதவினோம்
என்றதை நினைத்து நசை பண்ணுகிறது என் -அவன் சத்வ நிஷ்டன் -அவள் தாய் -நீ பாவி -என்று
ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ –
ஓன்று சொல்லாய் -நீ பாக்யவான் என்னவுமாம் பாவி என்னவுமாம் -உனது மிடற்று ஓசை கேட்கும்
இத்தனையே எனக்கு வேண்டுவது -பகவான் பாவி என்னுமதுவும் உத்தேச்யம் என்றபடி –
———————————————————————————-
326
நாம் தொழுதும் -1-7-9
தொழுது எழு -திருவாய் மொழி -1-1-1-
கிரியா பதம் பதிகம் முழுவதும் அந்வயிக்கும் -இரண்டிலும் –
—————————————————————————————–
327
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் -1-7-9-
தோள்கள் ஆயிரத்தாய் -திருவாய்மொழி -8-1-10-
பெரிய பிராட்டியார் ஆலிங்கனத்தினால் பெருமாள் திரு மேனி விகாசம் அடைந்ததை அருளுகிறார்
சம்சாரி ஜீவனை பெற்றதும் பகவான் திரு மேனி விகாசம் அடைந்ததை அருளுகிறார் –
——————————————————————————————–
328
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் -1-8-9
வெற்பு என்று வேங்கடம் பாடும் -மூன்றாம் திருவந்தாதி -69
பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் -ஸ்வ கதமாக தமது திரு உள்ளத்தை பார்த்து அருளி செய்கிறார்
பேசும் இன் பேச இனிதாக
அன்றிக்கே பர உபதேசமாய் -இப்படி நிர்வாஹ த்வயம்
வெற்பு என்று -ஆழ்வாரான அவஸ்தை போய் -ஒரு பிராட்டி அவஸ்தையை பஜித்து இருக்கும் அவர்
தசையை தாயார் அருளிச் செய்வதாக -பாடும் சூடும் பாடுகிறாள் சூடுகிறாள்
கீழும் மேலும் அந்யா பதேசம் இன்றிக்கே இருக்க -இதனையும் பாடும் கோள் -சூடும் கோள்
என்றபடி -இதிலும் நிர்வாஹ த்வயம்
—————————————————————————————————-
329
வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற -2-2-1-
இன்னார் தூதன் என நின்றான் -2-2-3-
இன்னான் சோற்றாலே தரித்தான்-சுவர் மண்ணால் நின்றது – என்னுமா போலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை இட்டு -ஆஸ்ரித பாரதந்தர்யமே ஸ்வரூப நிரூபகம் இவனுக்கும் –
——————————————————————————————————–
330
மூர்த்தி மூவராகி -2-2-8-
கழல் சூடி -11-7-10-
நல் வேய் ஊதி -பெரியாழ்வார் திருமொழி -2-1-1-
உலகமாக்கி -திருவாய்மொழி -1-9-9-
அரனுக்கு நீக்கியை -திரு விருத்தம் -86
இங்கே மூவரானான் -சூடியவன் -ஊதியவன் -ஆக்கினவன் -என்றபடி சோறாக்கி என்றது போலே
அரனுக்கு நீக்கியை -இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாக்கி அருளுகிறார் –
————————————————————————————————-
331-
விற் பெரு விழவும் –செற்றவன் -2-3-1-
தற்கச் சமணரும் –மாண்டனர் -இராமானுச நூற்றந்தாதி -99
கீதாசார்யன் சேஷி ராமானுசன் -கீதா பாஷ்யகார சேஷ ராமானுசன்
இருவர் க்ருத்யமும் இருக்கிற படி
—————————————————————————————————-
332-
தாயுருவாகி வந்த பேய் -2-3-3-
பெண்ணுருவாகி யஞ்சுவை யமுதம் அன்று அளித்தான் -2-3-3-
பேய்க்கு சேராத தாய் உருவம்
புருஷோத்தமனுக்கு சேராத பெண் உருவம்
அழிய மாறி யாகிலும் அனுகூலருக்கு அமுதம் ஈந்து தரிப்பித்தான்
அழிக்கைக்கும் அளிக்கைக்கும் தங்களை அழிய மாறினார்கள் பூதனையும் பகவானும் -என்றபடி –
——————————————————————————————————-
333-
பெண்ணாகி -2-6-1
அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி –
ஆஸ்ரித அர்த்தமாக தன்னை அழித்துக் கொண்டு பெண் ஆனான் புருஷோத்தமன் -ஸ்வ சங்கல்பாதீனம்
உபய விபூதி நாயகன் -அவனை ஐஸ்வர் யார்தி ப்ரஹ்மாண்ட அதிபதியாக உபாசிக்கிறான்
இவனுக்காக இவன் அனுசந்தித்த அளவிலேயாய் இருக்கை -பாவ அனுகுணம்
பரனுடைய நிருபாதிக சோபாதிகங்கள் இருக்கும்படி நிரூபிதம் –
————————————————————————————————————
334-
நண்ணாத –எண்ணாதே இருப்பாரை -எண்ணோமே -2-6-1
ஆர்–எண்ணும் நெஞ்சு உடையார்— எம்மை யாள்வாரே -2-6-2
இருளிரிய -தேட்டரும் -மெய்யில் வாழ்க்கை -குலசேகரர் 1-2-3-
ஆநு கூலச்ய சங்கல்ப –ப்ராதி கூல்யச்ய வர்ஜனம் -சரணாகத ஸ்ரீ வைஷ்ணவனுக்கு சம்பாவித ஸ்வபாவங்கள்
ஆநு கூலச்ய சங்கல்பம் பகவத் விஷயத்திலும் பாகவத விஷயத்திலும்
குலசேகரர் முதல் பதிகத்தில் பகவத் விஷய ஆநு கூல்ய சங்கல்பதையும்
அடுத்து பாகவத விஷய ஆநு கூல்ய சங்கல்பதையும்
அடுத்து பிராதி கூலியா வர்ஜனதையும் அருளுகிறார்
கலியன் பாகவத விஷயகமான நண்ணாத பதிகத்திலே -தல சயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -என்று பிரதி கூல்ய வர்ஜனத்தை
முதலில் அருளிச் செய்து -பிறகு தல சயனம் ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே
என்று ஆநு கூல்ய சங்கல்பத்தை கூறி அருளினார்
எப்படிக் கூறப்பட்டாலும் இவ்விரண்டும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் எனபது நிர்விவாதம் –
——————————————————————————————-
335
நண்ணாத வாளவுணர் -2-6
கண் சோர வெங்குருதி -7-4
பயிலும் சுடர் ஒளி -திருவாய்மொழி -3-7-
நெடுமாற்கு அடிமை -திருவாய்மொழி -8-10
தேட்டறும் திறல் தேனினை -பெருமாள் திருமொழி -2
அடிமையில் குடிமை யில்லா திரு மாலை -39
ஸ்ரீ வைஷ்ணவர்களே சேஷிகள் சரண்யர்கள் பிராப்ய பூதர்கள் என்று அருளும் பதிகங்கள்/பாசுரம்
————————————————————————————–
336-
நல்லரன் நான் முகன் நாரணன் -2-9-1-
நல்ல வேதியர் -4-7-8-
நல் வேதம் 9-2-1-திருவாய் மொழி- 5-4-3-
நல்ல மறை நாச்சியார் திருமொழி -6-7-
நல் வீடு -திரு வாசிரியம் -2
நன்று எழில் நாரணன் -திருவாய் -மொழி -1-3-7-
நல்லுலகம் -திருவாய் மொழி -1-3-9-
நல் வார்த்தை -திருவாய் மொழி -7-5-9-
நல்ல வருள் -திருவாய் மொழி -8-6-1-
நல்ல பதம் -திருவாய்மொழி -8-10-11-
நல்ல அமரர் -திருவாய் மொழி -10-1-10-
நல்ல அரன் -ஹித ரூபமாக உப சம்ஹாரத்தை பண்ணும் ருத்ரன் -ஷடாத்த நயன ஸ்ரீ மான் –
ராவண வதத்துக்கு ஸ்ரீ ராமன் இங்கு தங்க வாய்த்த நன்மையை பற்றி ஸ்ரீ மானாக கூறப்பட்ட நல்லவன்
நல்ல வேதியர் ஆசார பரதாரரான பிராமணர்
நல் வேதம் -வேதானாம் சாம வேதோச்மி
நல்ல மறை -ஆராதன விஷயமாக பரந்தவை -ஆராத்யனான அவன் ஸ்வரூபத்தில் பரந்தவை -புருஷ ஸூக்தாதிகள்
நல் வீடு -உத்தம புருஷார்த்தம் -ஐஸ்வர்யம் கைவல்யம் போல் அன்றிக்கே
நன்று எழில் நாரணன் -அபஹத பாப்மா திவ்ய தேவ ஏக நாராயண -கண்ட வற்றால் தனதே உலகு என்று நின்றான் –
தனது ஒழிந்த வற்றை பிரகாரமாய் தான் பிரகாரியாய் -அத்வதீயமான
நல்லுலகம் -ஈஸ்வரன் விரும்பி வந்து அவதரிக்கையாலே
நல் வார்த்தை மகா பாரதம் என்றபடி
நல்ல வருள் -என் குற்றமாதல் -தான் சர்வஞ்ஞன் ஆதல் பாராதே தன் பேறாக பண்ணின அருள்-நிர்ஹேதுக பிரசாதம்
நல்ல பதம் -பாகவத சேஷத்வம் -மூல மந்திர சாரார்தம்
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்து கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
தொண்டைமான் சக்கரவர்த்தி குறும்பு அறுத்த நம்பியை அனுவர்த்தனம் பண்ணினான் இ றே
சரவண அனுஷ்டானங்கள் இருந்த படி
நல்ல அமரர் -ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனே ரஷகன் என்று இருப்பதால்
ஜீவர்கள் மூவகை -நித்ய சம்சாரிகள் நித்ய ஸூரிகள் -தேவர்கள் -காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்
ஆபத்து வந்தவாறே அடியேன் என்றும் ஆபத்து நீன்கியவாறே ஈச்வரோஹம் என்று இருப்பவர்–இவர்களை -மந்தி -வானவர்-அயன்
————————————————————————————-
337-
நெய் இலங்கு சுடர் ஆழிப் -படையானை கை இலங்கு வேல் கலியன் -3-6-10-
உறை கொள் புகர் ஆழி உடையானை கறை வளரும் வேல் வல்ல கலியன் -5-10-10-
அவுணன் உடல் உகந்த சக்கரச் செல்வன் -திருவாய்மொழி -7-6-11-
சத்ரு நிரசனத்தாலே கறை கழுவ அவசரம் இன்றிக்கே -சேஷத்வ ஸூசகமாக திரு வேலைப் பிடித்து
அவன் சேஷித்வ ஸூசகமாக திரு ஆழி -அழகுக்கு உடலாக ஒப்பித்து இருக்கும் அத்தனை
உறை கொள் புகர் ஆழி -இவர் கையில் வேல் உண்டான பின்பு திரு ஆழிக்கு உறை இது இருக்கும் காண்-
சக்கர செல்வன் ஹிரண்யனும் திரு உகிருக்கு அரை வயிறாய்ப் போருகை யாலே -அழகுக்கும்
ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பான திரு ஆழி
——————————————————————————————————–
338
அணி யாலி புகுவர் கொலோ -3-7-1-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே -திருவாய்மொழி -6-7-1-
இலங்கை த்வாரத்தில் புகுவார் கொலோ -மாய மான் இருவரும் ஒருவர் மேல் ஆழங்கால் பட்டு
திண்ணம் -பிள்ளைகளை கானா திருக் கோயிலுக்கு உள்ளே தேடும் இ றே
உண்ணும் சோறு பிராட்டிக்கு அஞ்ச வேண்டுமா -இருவராக போனவர்கள்
கள்வன் கொல்லில் பிராட்டிக்கு அஞ்ச வேண்டுமா -தனியாக போனவள்
ஆளவந்தார் -இருவருக்கும் அஞ்ச வேண்டும் -தனியே போனவளுக்கு பயம் உண்டோ
இருவரும் இருவருக்கும் ஊமத்தங்காயாய் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாமல் –
இவள் அங்கே புக்கு அல்லது தரியாள்-
—————————————————————————————————–
339-
சிலம்பினிடைச் சிறு பரல் போல் -4-4-8-
தீதறு திங்கள்–குளம்பினகம் -11-4-3-
ஸ்ரீ வராஹத்தின் குளம்பில் மகா மேரு அகப்பட்டது என்று நான்காம் பத்திலும் –
சந்திர சூர்யர்கள் -தேவர்கள் தேவ லோகங்கள் திக்குகள் மலைகள் சப்த சமுத்ரங்கள் அடங்கின
நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹக வஸ்து அவனே
——————————————————————————————————-
340
கருத்துடைத் தம்பிக்கு -4-6-3
அவன் தம்பிக்கு -பெருமாள் திரு மொழி -10-7-
அவன் தம்பிக்கே நீள் அரசு தந்த -பெரியாழ்வார் திருமொழி -3-9-10-
இளையவர்கட்கு அருள் உடையாய் –குகனோடு ஐவர் ஆனோம் –குன்று சூழ்வான
மகனொடும் அருவரானோம் நின்னோடும் எழுவர் ஆனோம் –
ராமானுசர்கள் இடத்தில் ராமனுக்கு உள்ள ப்ரீதி -அனைவரும் அனுஜர்களே-
—————————————————————————————————–
341
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா -4-7-9
அகலகில்லேன் இறையும் என்று மங்கை உறை மார்பா -திருவாய்மொழி -6-10-10-
பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்பு படைத்தவன்
நாம் செய்த குறை காணாக் கண் இட்டு இருக்கை -புருஷகார பூதை-
—————————————————————————————————
342-
செம் சொலாளர் -4-8-2
வெம் சொலாளர் -5-8-4-
செவ்விய சொல்லை உடைய பிராமணர் வர்த்திக்கும் திரு நாங்கூர்
யமபடர் செய்யும் செயல்களை பொறுத்தாலும் அவர்கள் பாசுரம் கிடீர் பொறுக்க அரிது-
————————————————————————————————
343
நும்மைத் தொழுதோம் -4-9-1
உம்மைத் தஞ்சம் என்று -திருவாய் மொழி -2-4-8-
தாமான தன்மையில் ஊடி படு குலைப் பட்டோம் என்கிறார் கலியன்
பகவானை வெறுத்து சொன்ன தாய் பேச்சு நம் ஆழ்வார் அருளுகிறார்
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய -என்னும் சர்வ ரஷகனை காதுகரைச் சொல்லுமா போலே
பகவத் அலாபத்தாலே வாடின காலத்தில் வெறுத்துச் சொல்லும் படி –
———————————————————————————————–
344
தீ எம்பெருமான் –அடியோமுக்கே எம்பெருமான் -4-9-5-
கரு மா முகில் உருவா கனலுருவா -7-9-9-
மணி உருவில் பூதமைந்தாய் -திரு நெடும் தாண்டகம் -1
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -திருவாய் மொழி -2-5-4-
திரியும் காற்றோடு கரிய மேனியன் -திருவாய் மொழி -3-6-5-
நீராய் நிலனாய் கூராழி வெண் சங்கு ஏந்தி -திருவாய்மொழி -6-9-1-
அவன் ஸ்வரூபமும் ரூபமும் சத்யம் -ஜகத் சர்வம் சரீரம் தே -யஸ்ய ஆத்மா சரீரம்
யஸ்ய பிருதிவி சரீரம் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா நாராயணா –
பரம் சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் -திருவாய்மொழி -6-3- –
சுத்த சத்வ மயமான அசாதாரண திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்
குண த்ரய வசமான ஜகத் சரீரனாய் –
அவனது ஜகத் ஆகாரத்வத்தை அனுசந்தித்து -க்ருஹ ஷேத்ராதிகள் என் சொத்து என்கிற
விபரீத ஞானம் தொலைந்து -இவை மற்று ஒருவனுக்கு சொத்து என்கிற விபரீத ஞானமும் தொலைந்து –
சர்வ ஸ்வாமி பகவான் -சர்வம் பகவத் ஸ்வம் -என்ற யாதார்த்த ஞானாகாரம் பிறந்து
இப்படி ஜகத் ஆகாரமான வடிவுகள் ஒழிய அசாதாராண வடிவும் கொண்டவனே –
அர்ஜுனனும் விஸ்வ ரூபம் கண்டு தேனைவ ரூபேண சதுர் புஜேன -என்றான்
பலவகையும் கண்டு வெண் சங்கு ஏந்தின ரூப பரனான ச்வேதன் படியும் காணலாம் –
ஆழ்வார்கள் ஈடுபாடு திவ்ய மங்கள விக்ரகத்திலே என்று அறியலாம்-
——————————————————————————————————
345
அடியோமுக்கே எம்பெருமான் -4-9-5-
நங்கள் பெருமான் உறையும் -5-10-9-
நங்கள் பிரான் -திருவாய் மொழி -7-3-3-
மண்ணவர் தாம்தொழ -திருவாய் மொழி -8-6-7-
பின்னானார் வணங்கும் சோதி -அர்ச்சை -நங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் –
பரத்வம் நித்ய முக்தர்களுக்கு
வ்யூஹம் முக்த ப்ராயருக்கு -பிரம்மாதிகள் கூக்குரல் கேட்க்கைக்கு
விபவம் தசரத வசுதேவாதிகளுக்கு -புண்ணியம் பண்ணினார்க்கு
இவ்விருப்பு -சம்சாரிகள் -தங்களுக்கு ஹிதம் என்னது என்று அறியாதே –
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே –
சர்வேஸ்வரன் பிராப்யம் என்று அறியாதே –
பாபம் பண்ணின சம்சாரிகளுக்கு இடக்கை வலக்கை அறியாத நமக்கே –
பரம பதம் நித்யர்க்கே போலே- மேன்மை அனுபவிக்கு அது
நீர்மை அனுபவிக்க இது -நித்ய சூரிகளும் வந்து சீல குணம் அனுபவிக்கும் தேசம் –
—————————————————————————————
346
ஈதே அறியீர் -4-9-6
எம்பெருமான் தன்மையை யார் அறிவார் -திருவாய் மொழி -8-3-9-
நல்லார் அறிவீர் தேவரீரை ஒழிய செல்லாதவர் பிரகிருதியும் அறிவீர்
தீயோர் அறிவீர் -தேவரீரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்
ஈதே அறியீர் -சர்வஞ்ஞனையும் அஞ்ஞனாக்க வேண்டும்படி -இவருடைய பிரகிருதி மார்தவம்
உண்ணவும் பொறாது பட்டினி விடவும் பொறாது -ஸூ குமாராரை போலே சௌ குமார்யம்
தூது விடப் புக்கால் அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்தது கூப்பிடுகிறார் இ றே
தூவிரிய மலர் உழக்கி -தம்முடைய சௌ குமார்யத்தை பகவானுக்கு அறிவித்தபடி –
எம்பெருமான் சௌ குமார்யம் ப்ரமாதிகளும் அறியார்
திருமாலுக்கு இங்கே பரிவர் இல்லை என்று அஞ்ச -மணவாள மா முனி திருவாய் மொழி நூற்றந்தாதி –
———————————————————————————————
347
எமர் ஏழ் ஏழ் அளவும் -4-9-9-
குடி குடி வழி வந்து -திருவாய்மொழி -9-2-1-
என்னுடைய குல நாதன்
புத்திர பௌ தராதி சஹிதராய் கொண்டு கைங்கர்யம்-
————————————————————————————————-
348
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் –திருமேனி காட்டீர் -4-9-9-
நிற்கும் முன்னே வந்து –என் கைக்கும் எய்தான் -திருவாய்மொழி -7-3-6-
அணைக்கைக்கு ஈடாக கைக்கு எட்டாத இருக்கிற நீர் பேராசை போர வளர்கிறது என்
அணைக்கைக்கு எட்டாதாப் போலே ஹிருதயத்திலே பிரகாசியாமல் இருக்க பெற்றிலோமே
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே
என் கண்களிலே வந்து தோற்றா நிற்கும் என் கைகளுக்கு எய்தான் -பிள்ளான்
உரு வெளிப்பாட்டாலே நலிகிறபடியை சொல்லுகிறது -நஞ்சீயர்
உரு வெளிப்பாடு அன்றிக்கே கையினால் அணைக்க எட்டினால் அன்றோ அழகிது -பெரிய வாச்சான் பிள்ளை
எட்டாதபடி மேகம் போலே தூரஸ்தன் ஆகா நிற்கும் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
கண்கள் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியன் –
——————————————————————————————–
349
கற்றுத் திரிவார் -4-9-10
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -திருமாலை-1
திரு இந்தளூர் பதிகத்தை அப்யசிது அதனால் யமாதிகள் தலைமேலே அடி இட்டு திரியுமவர்-
————————————————————————————————
350-
வெற்பால் மாரி பழுதாக்கி -5-1-4
ஆய்ச்சி மறைய வாய்த்த தயிர் –அமுது செய்த -5-1-5-
தேவதாந்தரதுக்கு ஆக்க ஒண்ணாதே ஆஸ்ரித கர ஸ்பர்சம் உள்ள அடிசிலை
இவன் அறியாத ஓர் இடம் சாந்து பரணி யிலே தயிரை வைக்கும் ஆய்த்து-
———————————————————————————————–
351
சடையான் ஓட -5-1-7
நேர் செரிந்தான் முக்கண் மூர்த்தி -திருவாய்மொழி -7-4-8-
முண்டன் நீறன் -திருச் சந்த விருத்தம் -71
ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே அச்சுதன் -நழுவ விடாதவன் -திண் கழல் இறே
எம்பெருமானார் அச்யுத பதத்வய வ்யாமோஹத்தால் இறே -விஷயாந்தர விரக்தராய் திகழ்ந்தார்
அத்திகிரி பச்சை நிற அச்யுதனுடைய பதாம் புஜங்களிலும்
திருவேங்கடத்து அச்யுதனுடைய தாங்கு தாமரை யன்ன பொன்னாரடியிலும்
அரங்கமா நகர் அச்யுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்யுதனுடைய துளங்கு சோதி திருப் பாதத்திலும்
தயரதற்க்கு மகனான அச்யுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்யுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாக கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்யுதன் அனந்தசயனன் செம் பொன் திருவடியிலும்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடியிலும் ஆயிற்று– இவர் மையல் கொண்டு இருப்பது –
பூவார் கழல்கள் -கண்ணன் கழலினை -ககுத்தன் தன்னடி -பாற்கடலுள் பையத் துயன்ற பரமன் அடி –
வைகுண்ட செல்வனார் சேவடி –
——————————————————————————————————–
352-
அன்னமாகி அரு மறைகள் அருளிச் செய்த அமலன் -5-1-9-
அன்னமாகி அன்று அரு மறை பயந்தவனே -5-3-8-
அன்னமாய் – அரு மறையை வெளிப்படுத்த அம்மான் -திரு நெடும் தாண்டகம் -30
பரி முகமாய் -வேத நூல் பயந்தவனே -5-3-2-
ஆசார்ய அனுவர்தனம் பண்ணிக் கேட்கைக்கு அனதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷம் கொண்டான் ஆய்த்து -சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
வேத சஷுசை இழந்த பிரம்மாவுக்கு -ஸ்ருஷ்டியாதி வியாபாரத்துக்கு
வேதத்தினுடைய அபௌருஷேயத்வம் தோன்ற ஸ்ரீ ஹம்ஸ அவதாரம் –
——————————————————————————————————
353
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை –5-2-8-
சுவையன் திருவின் மணாளன் -திருவாய்மொழி -1-9-1-
ஒரு நீராக சம்சாரிகளோடு கலக்க குருகுல வாசம் செய்ய திரு நீர்மலையில் எழுந்து அருளி
பரம ரசிகன் -ரசிகத்வதுக்கு ஸ்ரமம் செய்த இடம் –
———————————————————————————————–
354
தானுமாய தரணித் தலைவன் -5-4-8-
தானாய் -8-8-10-
தானுமாய -முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் –
நஹிநிந்தா நியாயேன ராம அவதாரத்தின் ஏற்றம் சொன்னபடி-
————————————————————————————————–
355
நெய் பருக நந்த பெற்ற ஆனாயன் -5-5-3-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -அமலானாதி பிரான்-10-
மஹதா தபஸா என்று சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் -என்று
நோன்பு நோற்றுப் பெற்றால் போலே -கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது -இவற்றை
புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் -என்று இதுக்கு அன்றோ இவற்றைப் பெற்றது –
—————————————————————————————————–
356
இந்திரன் பிரமன் ஈசன் –5-7-2-
இந்திரனோடு பிரமன் ஈசன் -பெரியாழ்வார் திருமொழி -2-8-1-
சர்வேஸ்வரத்வம் வேற ஒருவருக்கும் இல்லை
தொட்டில் பருவத்தே கிஞ்சித் கரித்து போவார்கள் இவர்கள் இ றே
எழில் உடை கிண்கிணி தந்துவனாய் நின்றான் இந்த்ரன்
சிறுத் தொட்டில் வரவிட்டான் பிரமன்
உடையார் கனமணி வரவிட்டான் ருத்ரன்-
—————————————————————————————————–
357
கோதில் வாய்மையினாயொடும் -5-8-2
கோதில் வாய்மையினான் -5-8-7-
வாகிந்திரிய வியாபாரம் வாய்மை -அதாவது வசனம் -அதில் கோது இல்லாமையாவது
சம்ச்ரவே மதுரம் வாக்கியம் -என்ற பிராட்டி உடைய திரு உள்ளத்தததே மெய்யென்று பட்டு
அவள் தரிக்கும்படி சொல்லுகையும் -த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும் படி சொல்லுகையும்
காதல் என் மகன் -என்று இவனை இ றே கோதில் வாய்மையினான் என்கிறது -குரு வசனம் அலங்க நீயம் –
என்று கிருஷ்ண அபிப்ராயத்தாலே –
——————————————————————————————————-
358
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -5-8-3
கடியனாய் -திருவாய்மொழி -9-6-1-
ஆளராய்-திருவாய்மொழி -9-3-10-
நித்யம் பிரசன்னாத்மா என்று ஆஸ்ரயித்தில் அன்றிக்கே கார்ய காலத்தில் ஏறிட்டு கொண்ட சீற்றம்
தரித்தரன் தநிகனை அடையுமா போலே -சீற்றம் உண்டு -என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –
விரோதி நிரசனதுக்கு பரிகரம் இ றே சீற்றம் -கடியனாய -வந்தேறி என்கிறார் -ஆளராய் நித்ய ஸூரிகள் போலே
ஆஸ்ரயிக்கும் தேவர்கள் -பகவத் சேஷத்வ ஞானம் காதாசித்கம் -நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8 பாசுர வ்யாக்யானதிலும்
மந்தி பாய் -வானவர்-அயன் -பதத்துக்கு பாவ வர்ணநம் பண்ணி அருளினார் தேசிகன்
பகவானுக்கு கோபம் வந்தேறி போலே இவர்களுக்கு சேஷத்வ ஞானம் வந்தேறி
நளிர்ந்த சீலன் -குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அதுக்கடி -வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தன் -ஆளராய் தொழுவாரும் அமரர்கள் –
அக்கும் புலியின தளுமுடையார் அவரொருவர் பக்கம் நிற்க பண்பர் –
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் –
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -இப்படி இன்றியே
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்தியார் -என்று இவர் -நம்பி -இருப்பது –
——————————————————————————————————-
359
மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி -5-8-5
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி -7-4-8-
உபய விபூதியில் உள்ளார் அனைவரும் வந்து ஆஸ்ரயிக்கும் ஸு குமாரமான திருவடிகள் –
கிருஷ்ண அவதார பிரயுக்தம் -விநதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை –
திவ்யாயுதங்களும் கற்ப வாசம் பண்ணி இ றே பிறந்தது –
மா நிலம் -இடையரோடு -அவர்கள் தான் வசிஷ்டாதிகள் என்னும்படி பசுக்களோடு கன்றுகளோடு
பீஷ்மாதிகளோடு வாசி யற ஆஸ்ரயித்தது இ றே –
முழுதும் -இந்த்ரனுக்கு நரக வதம் செய்து அருளினான் இ றே-
——————————————————————————————————–
360
துளங்கு நீண் முடி -5-8-9-
பிறந்தவாறும் -திருவாய்மொழி -5-10-1-
கீழ் இரண்டு பாட்டாலே சக்தி யோகத்தை சொல்லி -உபாய பூர்த்தியையும் சொல்லி அருளி –
தொண்டை மான் சகரவர்திக்கு ஸ்வரூப ஞானம் உண்டாக்கினதுபோலே -எனக்கும் உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் –
ஏழை எதலன் பதிகத்தில் மோஷார்த்த ப்ரபத்தியிலே இழிந்தவர் -துளங்கு பாசுரத்தில் ஸ்வரூப ஞானம் நழுவாமைக்கு சரணம் புகுகிறார் –
பிறந்தவாறும் -திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்க -சைதில்யதைப் போக்கி அனுசந்திக்க
வல்லனாம் படியாக பண்ணி அருள வேணும் -உருகாமல் வரித்ததும் -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்தி
சகல பல சாதனம் இ றே சரணாகதி
————————————————————————————————-
361
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-
வேங்கட மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதி பிரான் -3
உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –
திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இ றே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இ றே-
கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் -இ றே- நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –
திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி- யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –
திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –
————————————————————————————————–
362
ஓத்தொலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் -5-9-6-
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு -நான்முகன் திருவந்தாதி -10
விடங்காலும் தீவாய் அரவணை -இரண்டாம் திருவந்தாதி -71
பிராமணர் ஓதும் வேத ஒலி கேட்டு -மலங்குகள் -மீன்கள் பாயா நின்று உள்ள வயல்கள்
ஆங்கு -திசை வாழி எழ -திரு உலகு அளந்து அருளின பொது -ஆரவாரம் கேட்டு அழல் உமிழும்
பொரு மா நீள் படை -திருவாய்மொழி -1-10-1-ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி –
விரோதி பூயிஷ்டமான இத்தேசத்தில் இவன் இப்படி செய்ய சொல்ல வேணுமோ –
அங்கே -பரம பதத்தில் உட்பட இப்படி செய்யக் கடவன் -ஆங்கு -தேசமது -ஆரவாரமது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற நித்ய முக்தர்களின் ஆரவாரம் -அங்கே அது கேட்டு
அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படி சொல்ல வேணுமோ –
இப்படி திருப்பேர் நகர் மீன்கள் உடையவும்
நித்ய ஸூ ரிகள் உடையவும்
ப்ராந்தியை அனுபவித்தோம் –
—————————————————————————————————
363
பொறுத்தேன் -6-2
திருவுக்கும் திரு -7-7-
உண்ணிலாய -திருவாய் மொழி -7-1-
கலியன் இந்திரிய பலம் தலை எடுத்து அது தீர திரு நறையூரிலும்
தேரழுந்தூரிலும் -பிராட்டி முன்னாக தன்னுடைய அநந்ய கதித்வம் சொல்லி சரண் புகுகிறார் –
நம் ஆழ்வார் சரண் அடைந்த பின் இந்திரியங்களை கண்டு நடுங்கி கூப்பிடுகிறார் உண்ணிலாய பதிகத்தில்-
————————————————————————————————-
364
வெகுளாது -6-2-7-
சீற்றமுள -11-8-2-
யான் இரந்தேன் -அத்தலை இத்தலையான படி
நீ எதிர் சூழல் புக்கு இரந்து திரிய -நான் அதை மறுத்து வைமுக்யம் பண்ணி திரிந்த கால நீட்சி
அப்படி திரிந்த நான் இன்று இரக்க -இது கேட்டு தேவர் திரு உள்ளம் சீரும்
சர்வ தோஷ யுக்தனாய் அநாதி காலம் இருந்தேன் -நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆன பின்பு நம்மையும் தன்னையும் பாராதே இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே –
சீற்றமுள-திரு உள்ளத்துக்கு சீர வேண்டுவன குவாலை செய்து வைத்து -அநு கூலரைப் போலே திரு முன்பு நின்று -சில சொல்லப் புக்கவாறே –
உன்னைப் போலே ஞான சங்கோசம் உடையவன் இல்லையே அவன் -பழகியான் தாள் பணிமினே –
பரிகரஹித்த சரீரம் தோறும் புதியனாய் இறே இவன் போவது -முன்பு நின்ற நிலை அறியான்
நடு நிற்கிற நிலை அறியான் -மேல் போக்கடியும் அறியான் இவன் –
முன்பு நின்ற நிலையம் அறிந்து -இவனுக்கு சாத்மிக்கும் அதுவும் அறிந்து மேல் போக்கடியும் அறிவான் அவன் இறே
பகவத் அபசாரம் ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கை –
அவனுடைய அனுக்ரஹ ஜென்மத்தை கர்ம நிபந்தனமான ஜன்மத்தோடு சமானமாக புத்தி பண்ணுகை
அவன் கிருபையாலே இவன் கோலிற்று ஒன்றை திரு மேனியாக பரிக்ரஹித்தால்-
அதை இதர சஜாதீயமாக பிரதி பத்தி பண்ணுதல் செய்கை பாகவத அபசாரம் –
அர்த்த காம நிபந்தனமாக பொறாமை கொண்டாடுகை அசஹ்யாபசாரம் –
இவை இரண்டு விஷயங்களிலும் பிரயோஜன நிரபேஷமாக செய்கை
இப்படி தேவரீர் திரு உள்ளத்துக்கு சீர வேண்டும்படியான குவாலுள –
——————————————————————–
365-
மூவா வானவர் தம் முதல்வா -6-2-8-
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய்மொழி -7-1-5-
அகர்ம வச்யராய் உன்னை அனுபவிக்கும்படி பண்ணி வைத்தாயே
உன்னை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து அவர்கள் சத்தையை நிர்வஹித்திக் கொண்டு போரா நின்றாய் –
ப்ராதாக்களிலே ஒருவன் முடி சூடி வாழா நிற்க ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோன்றா நின்றது ஆய்த்து
அங்கே கேட்கும் படி கிடந்தது கூப்பிடுகிறார்-
——————————————————————————–
366-
முளிந்தீந்த வெங்கடத்து விளிந்தீந்த மா மரம் போல-6-3-8-
ஒண் சங்கதை வாள் -திருவாய் மொழி -8-8-1-
முளிந்து தீந்த -உலர்ந்து தீஞ்சு போன
வெங்கடம் -வெவ்விய பாலை வனம்
விளிந்து ஈந்த -தள்ளப் பட்டு கெட்டுப் போன பெரிய மரம்
சங்கு கதை -கடை குறைத்தல்-
—————————————————————————————–
367-
திரு மார்பா –நம்பீ -6-3-9-
தாமரையாள் யாகிலும் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
லஷ்மீ சம்பந்தமும் மிகையாகும் படி அன்றோ தேவரீரின் பூர்த்தி –
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூரணன் –
———————————————————————————————-
368
இருக்கிலங்கு –சோழன் சேர்ந்த கோயில் -6-6-8-
மார்கண்டேயன் அவனை நக்க பிரானும் –நாராயணன் அருளே -திருவாய்மொழி -4-5-8-
புருஷ சூக்தம் உச்சரியா நின்று உள்ள தேவர் சிவனுக்கு தர்சநீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தன்னுடைய அபிமதம் கிடையாமையாலே அவ்வபிமத சித்த்யர்தமாக அந்த
சோழன் வந்து ஆஸ்ரயிக்கிற திரு நறையூர்
ஸ்வ கோஷ்டிக்கு உபகாரன் என்பதால் பிரான்
மார்கண்டேயனுக்கு சர்வேஸ்வரனை காட்டிக் கொடுத்த உபகாரம்
சகல பல பிரதோ ஹி விஷ்ணு–சர்வ லாபாய கேசவ -மோஷமிச்சேத் ஜனார்த்தனாத -என்னா நின்றது இ றே-
————————————————————————————————–
369
ஆய்ச்சி ஒண் கயிற்றால் ஆர்க்க -6-7-4-
எழில் கொள் தாம்பு -பெருமாள் திரு மொழி -7-8-
திரு மேனியிலே அழுந்தும் படியாக கயிற்றால் நெருக்கிக் கட்ட -திரு மேனியை ஸ்பர்சிக்க பெற்றதால்
ஒண் கயிறு -ராஜ ஜன்மமும் வேண்டா -அசேதனமாகவும் அமையும் -அங்குத்தை ஸ்பர்சம் பெறில் என்றிருப்பவர்கள் இ றே-
———————————————————————————————————
370-
பள்ளி கமலத்திடைப் பட்ட –அலவன் –நள்ளி ஊடும் -6-7-6-
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-திருப்பாவை -3
கேள்வி இல்லாதபடி பெண்ணரசு நாடாய்த்து -பட்டர்
புஷ்பத்திலே ஸ்பர்ச சௌக்யத்தாலே நஞ்சுண்டாரைப் போலே கிடந்தது உறங்கி
உணர்ந்து எழுந்து இருக்கும் பொழுது -என்னை நீ எழுப்பிற்று இல்லை -என்னை நீ எழுப்பிற்று இல்லை
-என்று ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு -என்னா நிற்கும் –
——————————————————————————————–
371
கள்வா -7-1-4
கள்வா -7-2-1-
கள்வா -திரு நெடும் தாண்டகம் -8
கள்வா -திருவாய்மொழி -2-2-10
ஆஸ்ரித விஷயத்தில் இவன் செய்யுமவை பரிசேதிக்கப் போகாது
விலக்க ஒண்ணாதபடி தெரியாதபடி நெஞ்சில் புகுந்தபடி
ஒருவனுக்காக இருக்கும் அத்தை மறைப்பது -தனது வடிவு அழகை காட்டாது ஒழிகை –
இதுவே ஈஸ்வரனுக்கு அபஹாரம் -என்னுடைய ஆத்ம அபஹாரத்தை தவிர்த்தது –
உன்னுடைய ஆத்மாவை அபஹரிக்கைகாகவோ
ருத்ரன் பகவானை குறித்து அருளிய சப்தம் -நமோ கண்டாய கர்ணாய நம -கட கடாய ச –
கருப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலை செய்தால் நாட்டார் மெய் என்று இருப்பார்களோ
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்டெனை கள்வன் என்று கூறாதே
மண்டலத்தோர் புள் வாய் பிளந்த புயலே உன்னை கச்சி கள்வா என்று ஓதுவது என கண்டு -என்றார்
இ றே பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் –
—————————————————————————————————-
372-
பனியேய் பரங்குன்று -7-1-6-
பனி வரையின் உச்சியாய் -திரு நெடும் தாண்டகம் -9-
பனி மிகு இருந்துள்ள ஹிமாவானில் திருப் பிரிதி
பனி வரை -கானமும் வாநரமும் வேடுமுடை வேங்கடம் -நிஹீன ஜாதிக்கும் அகப்பட முகம் கொடுக்க திருமலையிலே வந்து நிற்கிறவன் –
சப்தம் இரு இடங்களிலும் ஒத்து இருக்க சந்தர்ப்ப அநு குணமாக
திருப் பிரிதி திரு வேங்கடம் என்று அர்த்த பேதம் காட்டும் அழகு
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் இருக்கும் அழகு அனுபவிக்கத் தக்கது –
———————————————————————————————————-
373-
நறையூர் நின்ற நம்பீ –உன்னை அல்லால் –ஏத்த மாட்டேன் -7-2-3-
திருவேங்கடத்து என்னானை உளனாகவே ஒருவருக்கும் என் –கவி கொடுக்கிலேன் -திருவாய்மொழி -3-9-1-
புறம்பாக நினைப்பது விஷயாந்தரங்களையோ தேவாந்தரங்களையோ அன்று -பறம்புற்ற திருப்பதிகளை –
பார் எல்லாம் அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர் மன்றோங்க ஊர்வன் மடல் -என்றும் –
உலகு அளந்த நம்பி மேல் குறையை வைத்து மடல் எடுத்த குறையலாளி -என்னா நின்றது இ றே –
எனது வாயாலே ஒரு சொல் கேட்டு தான் உளனாக நிற்க -நான் வேறு ஒருவரை கவி பாடுவேனோ
அசந்நேவ என்று தன்னைக் கிட்டாத வன்று சம்சார சேதனருடைய சத்தை இல்லாதாப் போலே
தான் என்னை கிட்டாத அன்று -தனது சத்தை இல்லாதபடி அவன் வந்து நிற்க –
அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகைகாக இங்கே வந்து நிற்கிற நிலை
என்னாவது -நான் புறம்பே போய் கவி பாடினால் -மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து
அண்ணலை வாரி மாறாத குருகூர் நகர் காரி மாறன் சடகோபன் சொல்லாயிரம் –
கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை
கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்னக் கடவது இ றே
இப்படி அருள் மாரியான கலியனும்
இன்ப மாரியான நம் ஆழ்வாரும்
திரு நறையூரிலும் திரு வேங்கடத்திலும் ஈடுபட்டபடி –
——————————————————————————–
374-
என் நெஞ்சத்துள் இருந்து இனிப் போய் பிறர் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் -7-2-7-
மழு வலங்கை கொண்ட இராம நம்பீ –இனி எங்குப் போகின்றதே -பெரியாழ்வார் திருமொழி -5-4-6-
அவன் புகுந்து போக்கை நினைக்க போக ஒட்டேன் என்கிறார்
மலைந்து விலக்கப் போமோ -ஷத்ரிய வம்சத்தை அறுத்துப் பொகட்டிய மிடுக்கர் அன்றோ
உன்னுடைய மிடுக்கை இசையாதவன் அல்லன் -உன்னை ஒழிய வேறு ஒன்றை அறியாத படி
அன்றோ அடியேன் இருப்பது -போகவுமாய் இருப்பார் வன்னெஞ்சர் -அவர்கள் நெஞ்சில் போக இருக்க ஒட்டேன் –
நன்னெஞ்ச வன்ன மன்னும் நறையூர் நின்ற நம்பீ -நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும் –
ந கச்சித நா பராதயாதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்
ஆழ்வார்கள் இப்படி அவன் வந்து புகுந்த பிரகாரத்தையும்
அவன் தங்களை பிரிந்து போனால் தாங்கள் முடியும் படியையும் –
அவனுக்கு போக்கு அன்றிகே நிற்கிற நிலையையும் –
விஷயீ காரத்தையும்
அனுசந்தித்து அருளினார்கள் ஆயிற்று –
—————————————————————————————
375-
யானாய் –அடியேன் மனம் புகுந்த -7-2-9-
யானாய் தானும் ஒழிந்தானே -திருவாய்மொழி -8-8-3-
இவரும் இவராய இவரோடு கலக்கும் இடத்தில் இவர் ஆணை இட்டு விலக்குவார் –
ஆகையால் இவர் என்ற சொல்லுக்குள் நம்மை அடக்கிக் கலப்போம் என்று பார்த்து
நானாகிய சொல்லுக்கு உள்ளே தன்னை அடக்கி கொடு வந்து புகுந்தான் -இது கலியன் அனுபவம்
யானும் தானாய் -என்னை சொல்லும் சொல்லாலே தன்னை சொல்லலாம் படி
தனக்கு பிரகாரதயா சேஷம் என்னும் இடத்தையும் காட்டித் தந்தான் -ஆழ்வீர் என்றால்
ஏன் என்பான் ஈஸ்வரன் போலே காணும் -அஹம் சப்தமும் அஹம் புத்தியும்
தன்னளவும் செல்லும்படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் –
இப்படி இ றே கலியனையும் நம் ஆழ்வாரையும் விஷயீ கரித்த படி –
————————————————————————————-
376
நான் அடியேன் -7-3-1-
அடியேன் நான் -11-8-7
அனந்யார்ஹ சேஷத்வமே ஜீவ ஸ்வரூபம் -பிறர் நன் பொருள் –
ஞாத்ருத்வம் -அசித் வ்யாவ்ருதி -சேஷத்வம் -ஈஸ்வர வ்யாவர்த்தி
த்வயம் பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லி -பகவத் கிருபைக்கு வர்த்தகம் -அசித் வ்யாவ்ருதி –
உத்தர கண்டம் -அநந்ய பிரயோஜனத்வம் சொல்லி -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம் -ஈஸ்வர வ்யாவ்ருதி
அநிஷ்ட நிவ்ருதியும் இஷ்ட பிராப்தியும் இருவருக்கும் ஓன்று போலே காணும் –
நான் அடியேன் அடியேன் நான் என்றே ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்து இருக்கிறார்கள் –
———————————————————————————–
377
வந்த நாள் வந்து -7-3-3-
நடுவே வந்து -திருவாய் மொழி -1-7-5-
என் ஆழி வண்ணன் பால் இன்று -மூன்றாம் திருவந்தாதி
அடியேன் சதிர்தேன் இன்றே -கண்ணி நுண் சிறு தாம்பு -5
பிரதம ஸ்வீகாரதுக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சையாய் -அதுக்கு உபகரித்தான் ஆகில் இ றே- இந்நாள் என்னால் ஆவது –
அங்கன் ஒன்றும் இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை வந்த நாள் என்னும் இத்தனை யாய்த்து சொல்லலாம் –
இது நிர்ஹே துக விஷயீ காரம் என்றபடி -நிர்ஹேதுகமாக வந்து -விஷய பிரவணனாய் நிற்க -நடுவே வந்து மீட்ட இத்தனை –
——————————————————————————————————-
378
மற்றோர் நெஞ்சு அறியான் -7-3-3-
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-8-
மற்று -திருவடி திருவனந்தாழ்வான் தொடக்கமான பக்கலிலும் போவானாய் இருக்கிறான் அல்லன் –
இட வகைகள் இகழ்ந்திட்டு
கல்லும் கனை கடலும் -என்றும்
சொல்லுகிற படியே இவருடைய திரு உள்ளம் தவிர வேறு ஒரு இடமுண்டாவதாக நினைக்க மாட்டான்-
——————————————————————————————————–
379
விளங்கனி மேல் இளம் கன்று எறிந்த கூத்தர் -7-4-2
கோட்டங்கை வாமனனாய் –கூத்துகள் -திருவாய்மொழி -7-5-6-
கோட்டிடை யாடினை கூத்து -திரு விருத்தம் -21
வல்லார் ஆடினது போலே இட்ட நாலடியும் -அவன் நின்றபடியும் உத்தேச்யம்-
——————————————————————————————————–
380-
கள்ளத்தேன் பொய்யாகத்தேன் -7-4-9
பொய்யே கைம்மை சொல்லி -திருவாய்மொழி -7-1-1-
உன்னையும் வஞ்சிக்கும் -திருவாய்மொழி -5-1-3-
சோரேண ஆத்ம அபஹாரிணா -அநாதி காலம் ஆத்ம அபஹாரம் பண்ணிப் போந்த நான்
உன்னையும் வஞ்சிக்கும் -எனது அந்தராத்மா அறிகிறது என்று மறைத்துப் போந்தேன்
பொய் கைம்மை இரண்டும் பரியயமான சொல் -பிறரை பகட்டுகை அன்றிக்கே சர்வஞ்ஞனும்
மெய் என்று பிரமிக்கும் படி பொய்யை அன்றோ சொல்லிற்று-
——————————————————————————————————-
381-
கனவகத்து -7-5-8-
கனவிடத்தில் -திரு நெடும் தாண்டகம் -23
ஸ்வப்ன கல்பமான சம்ச்லேஷத்தில் -இந்த்ரஜாலம் கனவு அஸ்திரமான தேசம்
தேசமும் தேகமும் அஸ்திரம் -என் நீலக் கண்கள் பனி மல்க -மெலி வெய்தப் -போன
கீழும் மேலும் பிரிவு ஸூசகம் உள்ளது-
—————————————————————————————————–
382
கை கூப்பி -7-4-8-
நயங்கள்… செய்வளவில் –திரு நெடும் தாண்டகம் -22-
இடை நோவ சம்ச்லேஷித்த குற்றம் தீரக் கை கூப்பினானாம் -சேவ்யன் சேவகன் ஆனான்
நயங்கள் -நீச பாஷணங்கள் -சர்வேஸ்வரன் சர்வ லோக நாயகன் -அடியேன் -என்றவாறு –
இப்படி வாசிகமாயும் காயிகமாயும் அத்தலை இத்தலை யானபடி –
——————————————————————————————————-
383-
என்னை உகந்தானை நிலமகள் தன் வித்தகன் -7-6-8
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -திருவாய்மொழி -4-5-8-
பூமிப் பிராட்டியைக் காட்டிலும் தம்மை -முற்பட உகந்தான் -கலியன்
பெரிய பிராட்டியைக் காட்டிலும் தம்மை -முற்பட உகந்தான் –நம் ஆழ்வார்-
——————————————————————————————————-
384-
கூறை சோறு இவை தந்து அருளி -7-7-8-
தோட்டம் இவை எல்லாம் –உன் பொன்னடி -பெரியாழ்வார் திருமொழி -5-1-5-
உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1-
கூறை சோறும் ஆகிய திருவடி தந்து அருளி -எல்லாம் அவன் பொன்னடி என்றே
உன் பொற்றாமரை அடியே போற்றும் –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் –
பொன்னும் பூவும் புறம்பே தேட வேண்டுமோ –
எல்லாம் வகுத்த இடமே -அவிதித விஷயாந்தரர்
வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்றம் முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம் மருளாம் இருளோடே
மத்தகத்துத்தன தாள் அருளாலே வைத்தவர் -ஞான சாரம்
———————————————————————————————
385-
ஏழு உலகும் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை -7-8-6-
பொரு மா நீள் படை யாழி –குறளாகி நிமிர்ந்த –திருவாய்மொழி -1-10-1-
ஆழி எழ அப்பன் உலகம் கொண்டவாறே -திருவாய்மொழி -7-4-1-
———————————————————————————————
386-
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரம் -8-1-1-
வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லி புத்தூர் -நாச்சியார் திரு மொழி -2-10-
செய்வது அடங்கலும் வைதிக கிரியை-
————————————————————————————————
387-
கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ -8-2-1-
ஆளன்றே பட்டது -திருவாய்மொழி -9-6-8-
ஒ படு கொலை -தாயார் -வார்த்தை -பர அவஸ்தையை தொழுதாளோ
வியூகங்களை தொழுதாளோ-அவதாரங்களை தொழுதாளோ-
அர்ச்சையில் நீர் நின்ற ஊரை அன்றோ தொழுதாள்
தொழுகை ஆத்ம அபஹார க்ருத்யமா
ந நமேயம் என்று இருக்கை அன்றிக்கே யசயாஸ்மி என்று அன்றோ இவள் இருப்பது
ஆளன்றே பட்டது ராவணாதிகள் போலே எதிர் அம்பு கோத்தேனோ
ஒ ஓர் ஆத்ம வஸ்து படும் பாடு ஈதே
————————————————————————————————
388-
வடவரை நின்றும் –வந்து யாம் -8-2-6-
கடல் ஞாலம் செய்தேனும் யானே -திருவாய்மொழி -5-6-1-
பரகால நாயகி திருகண்ணபுரம் திரு ஆய்ப்பாடியாகவும் -கிருஷ்ணன் ஸ்ரீ சௌரி ராஜ
பெருமாளாகவும் -அப்பெருமாளும் தானேயாகவும் அநு கரித்து பேசுகிறாள்
பராங்குச நாயகி போலே ஜகத் காரண ரூபியை பற்றும் அவள் இன்று இ றே இவள் –
அர்ச்சை அனுபவமே ஒழிய அவதார அனுபவம் நாய்க்கு இட என்று இருக்குமவள்
ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து
இப்பட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -மகள் அனுகாரத்தை தாய் அனுபாஷிக்கிறாள்
ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால் நீர் யார் வந்தது எங்கு நின்றும் வந்த காரணம் எது என்ன –
கேட்குமா போலே கேட்க
வந்தது வடவரை -வடக்கில் திரு மலையில் நின்றும் -திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே
என்று அத்தலையை பற்றி வருமவள் அன்று இ றே இவள் -அர்ச்சை அவதாரத்துக்கு கொண்டைக் கால்
நாட்டின தேசம் இ றே
செஞ்சொல் கவிகாள் -ஆழம் கால் படாதீர் என்று நித்ய ஸூரிகளுக்கு அருளும் பொழுதும்
தெற்கு திருமலையில் சௌசீல்யத்தை ஆழம் காலாக அருளிச்செய்தது -அப்படியே
வடமலையும் கானமும் வானரமான வற்றுக்கும் முகம் கொடுக்கும் இடம் ஆகையாலே
அச் சீலத்தில் ஈடுபட்டு மற்று ஒன்றைச் சொல்லாள்
வந்த கார்யம் ஆவது -கண்ணபுரம் இன்று இடவகை கொள்வது யாம்
திருக்கண்ணபுரத்தில் நித்ய வாசம் பண்ணுகைக்கு–
—————————————————————————————–
389-
கரை எடுத்த சுரி சங்கும் — இழந்தேன் -8-3-1-
மாலுக்கு இழந்தது -சங்கே -திருவாய்மொழி -6-6-1-
கீழில் திரு மொழியில் திருத் தாயார் கை வளை கொள்வது தக்கதே -என்று சொன்னாள்
பலகாலும் சொல்லக் கேட்கையாலும் -இவள் அது தன்னை வாய் வெருவுகையாலும் –
கீழ் பிறந்த மோஹம் போய் -அல்பம் அறிவு பிறந்து -அது தான் ஆசுவாசதுக்கு உடலாகை தவிர்ந்து –
தான் படுகிற விசனத்தை அனுபாஷிகைக்கு உடலாக -அத்தாலே இரவல் வாயாலே தனது இழவை
சொல்லாமல் தானே -இழந்தேன் என் வரி வளையே -என் கன வளையே -என் செறி வளையே –
என் பொன் வளையே -என் வரி வளையே-என் ஒளி வளையே -என் ஓளி வளையே -என் செறி வளையே –
என் பெய் வளையே -என்னா நின்றது இ றே
மாலுக்கு -இவளுக்கு பிறந்த தசை முற்றி -அது கண்டு தோழியும் மோஹிக்க –
இவளை ஜீவிப்பிக்க விரகுகளை மநோ ரதிக்கையாலே தரித்து இருந்த திருத் தாயார்
சிதிலமாகிற படியை தனித் தனியே -இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே –
இழந்தது பண்பே -இழந்தது கற்பே -தோற்றது மெய்யே -இழந்தது தன்னுடைச் சாயே –
இழந்தது மாண்பே -தோற்றது பொற்பே -இழந்தது கட்டே -என்னா நின்றது இ றே
கரை எடுத்த பதிகத்தில் வளை இழந்தது மட்டும் கூறப் பட்டது -இது மகள் பாசுரம்
மாலுக்கு பதிகத்தில் வளை தொடக்கமான வற்றை இழந்தது கூறப் பட்டது -இது தாய் பாசுரம்
இவற்றால் சொல்லப்பட்டது பிராப்ய ப்ராபக ஆபாச பரித்யாகம் –
பிராப்ய பிராபக ஆபாசங்களை கை வலிந்து கை கழலக் கண்டும் -எல்லாம் கிடக்க நினையாது அகன்றும் –
என்றும் -கை முதல் இழந்தார் -என்றும் நாயனார் ஆசார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தார்
இவ்வர்த்தம் புராண சித்தம் -புராதன புருஷ அனுஷ்டானம் -புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின –
கை வலிந்து -என்றது துவளில் பதிகத்தின் சாரம்
கை கழலக் கண்டது மாலுக்கு பதிகத்தின் சாரம்
எல்லாம் கிடக்க நினையாது அகன்று -என்றது உண்ணும் சோறு பதிகத்தின் சாரம்
சித் அசித் வர்க்கமான இவற்றை கை விட்டார்
உறங்குவான் கைப் பண்டம் போலே கையில் நின்றும் நெகிழ்ந்து போகக் கண்டார்
சர்வான் போகான் பரித்யஜ்ய -இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்தார்
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன் -மாலுக்கு பதிக சாரம் மணவாள மா முனி அருளி காட்டுகிறார் –
———————————————————————————————–
390
கனம் செய் மா மதிள் கண புரத்தவனொடும் -8-5-9-
நாகை அழகியாரை -9-2-10-
தந்தை கால் -8-5-பதிகத்தில் ஒன்பதாவது பாசுரத்தில் மட்டுமே திவ்ய தேச நாமம்
அது போல் -பொன்னிவர் மேனி -9-2-பதிகத்திலும் பத்தாவது பாசுரத்தில் மட்டுமே திவ்ய தேச நாமம்
நிர்தேசித்து அருளி இருக்கிறார் –
————————————————————————————————
391-
கல்லால் கடலை அடைத்தான் -8-6-4-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -11-
கல்லால் நீரில் இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்தான்
சக்கரவத்தி திரு மகன் –
கைக்கு எட்டிய ஒரு வில்லால் இ றே கடலை அடைத்தது –
கையும் வில்லுமாய் கண்ட வீர உறைப்பைக் கண்டு -கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து
கொந்தளிக்கும் படியை சொல்லுகிறது ஓங்கு முந்நீர் என்று –
ஆர்த்திக்கு இரங்காமல் அம்புக்கு இரங்கினபடி –
உபாத்யாயர் கையில் கசை கண்டு பிரஜைகள் காலிலே விழுமா போலே
திருவடிகள் அளவும் வந்து வெள்ளம் கோத்தது ஆய்த்து –
அடைத்து -நாலிரண்டு அம்பு விட்ட வாறே வந்து முகம் காட்டி முதுகு எடுத்துக் கொடுத்தவாறே அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று –
ஆகையால் கல்லால் அன்று அடைத்தது வில்லால் என்கை –
இங்கன் அன்றாகில் இட்ட இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்ததாய் தலைக் கட்டாது –
ஆகையால் முதல் கண் நடந்த விஷயத்தை வில்லால் என்று தொண்டர் அடி பொடி ஆழ்வாரும்
பின்னே நடந்த விஷயத்தை கல்லால் என்று கலியனும் அருளிச் செய்தார்கள் -இருவரும் ஏக கண்டர்கள் இ றே –
—————————————————————————————————
392-
பின்னை மணாளனாகி முன் கரும் தாள் களிறு ஒசித்தான் -8-6-6-
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே -திருவாய் மொழி -2-7-2-
பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த -திருவாய்மொழி -10-5-2-
பிரதான மகிஷிகள் மூவரும் இவ் வபதானத்துக்கு இ றே தோற்றுக் கிடப்பது –
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று -என்று குணமாக அருளிச் செய்தார் திரு மழிசை ஆழ்வாரும் –
———————————————————————————————————-
393-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் -8-9-3
தயரதற்கு மகன் -திருவாய் மொழி -3-6-8-
இத்தால் தமது ஸ்வரூபம் சொல்கிறார் கலியன் -அசாதாராண விபூதி யுக்தன் ஒருவனுக்கே
வானவர் நாடு பரம பதமும் அன்றிக்கே
நான்முகனார் பெற்ற நாடான லீலா விபூதியும் அன்றிக்கே
தான் உகந்த திருப்பதிகள் ஆகையாலே -திருக் கண்ணபுரமே அவனுக்கு அசாதாராண விபூதி என்றபடி –
அனன்யார்ஹ சேஷ பூதராய் இருக்கும் படி இப்படி அருளுகிறார்
தயரதன் மகன் என்னாதே தயரதற்கு மகன் -வெற்றிலை செருக்கிலே ராஜ்யத்தை தந்தேன் என்ன-
ஸ்திரீ பர தந்த்ரனாய் தந்திலேன் என்ன காடேறப் போ என்று சொல்லலாம்படி -இஷ்ட விநியோஹ அர்ஹனான பகவான் –
சேஷி உடைய சேஷத்வம் இருந்தபடி –
கோதை பொருட்டு -திருவாய்மொழி -3-5-4–என்றும் உண்டும் இ றே
பவான் நாராயண என்று வந்து சொன்னால் ஆத்மானம் –மன்யே –தசரதாத்மஜம் -என்னும் அவன் இ றே
இப்படி கலியனும் நம் ஆழ்வாரும் சேஷ சேஷிகளை அனுபவித்தபடி –
—————————————————————————————————-
394-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் -8-9-3-
எனக்கே ஆட் செய் -திருவாய்மொழி -2-9-4-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு என்று அகாரார்தத்தையும்
அடியேன் என்று மகாரார்த்தையும்
ஒருவருக்கு உரியேனோ என்று உகாரார்த்தையும்
சொல்லா நின்று கொண்டு பிரணவ அர்த்தத்தை அருளி –
எனக்கே -முதலில் ஆட் செய்ய வேணும் -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது
எனக்கு ஆட் செய் -அப்ராப்த விஷயங்களை வ்யவர்த்திக்கிறது
எனக்கே -தனக்கும் எனக்கும் என்ற பொதுவான நிலை தவிர்ந்து பரார்த்த கைங்கர்யம் பரம
புருஷார்த்தம் -ஆய -விபக்தியின் அர்த்தம் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
பிரணவத்தில் லுப்த சதுர்த்தி சேஷ தர்மமான சேஷத்வத்தை காட்டும்
இந்த வ்யக்த சதுர்த்தி சேஷ வ்ருதியானசேஷத்வத்தைக் காட்டும் -இது இல்லையேல் சேஷத்வம் இல்லை
குருஷ்வமாம் அநுசரம் -குருஷ்வ நம பதார்த்தம்
மாம் பிரணவார்தம்
அநுசரம் நாராயண பதார்த்தம்
இருவகை சேஷத்வங்களும் நிரூப்ய நிருபக பாவம் உண்டு
இப்படி இரு ஆழ்வார்களின் அனுபவம் –
————————————————————————————————–
395
நின்னை அல்லால் வருதேவர் மற்றுளர் என்று –கருதேன் -8-10-2-
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -8-10-3-
சம்சார பிரளயத்தில் நின்று எடுக்க நீ கண்ணபுரத்தில் நிற்க
தேவதாந்திர சம்பந்தம் த்யாஜ்யம் என்றார் முதலில் –
அடுத்து தேவதாந்திர சம்பந்தம் உடையாரும் த்யாஜ்யர் என்கிறார்
சாத்விகர் ஒழிய யாருடன் காலம் செலுத்த மாட்டேன்
எண்ணாத மானிடத்தை எண்ணுபவனும் அல்லேன்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு போதும் பிரிவேனும் அல்லேன் –
இப்படி அந்வய வ்யதிரேக உக்திகள்
தேவதந்த்ரங்களும் தத் சம்பந்திகளும் த்யாஜ்யர்
பரதத்வமும் தத் சம்பந்திகளும் உத்தேச்யர்
விஷய சதுஷ்டயம் உக்தம் –
———————————————————————–
396-
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -8-10-3-
அல்லிக் கமலக் கண்ணனை -திருவாய் -மொழி 8-10-11-
உன் அளவில் நின்றவன் அல்லேன் என்றதும் சௌரி ராஜ பெருமாள் அல்லிக் கமலக் கண்ணன் ஆனானாம் -நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் –
நீக்கமிலா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்களே -என்று பாகவத சேஷத்வதின் எல்லையில் நின்றதும்
அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் போலே திருக் கண்கள் சிவந்து புதுக் கணித்தது-
—————————————————————————-
397-
பெண்ணானாள் -8-10-4-
பெண்ணாகி -2-6-1-
பேயாகி இருந்து வைத்து பெண் ஆனாள் -தாயாக தன்னைப் பாவித்து வந்தாள்
யசோதை நிருபாதிக ஸ்த்ரீத்வம் கொண்டவள் –
புருஷோத்தமன் ஆஸ்ரித ரஷணார்தமாக அவதரிதத்தான் –
—————————————————————-
398-
பாட்டினால் உன்னை என் நெஞ்சினில் இருந்தமை -காட்டினாய் -8-10-9-
ஏத்தி உள்ளப் பெற்றேன் -திருவாய்மொழி -4-5-2-
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது திருக்கண்ண புரம் இவரைப் பாடுவித்த முக்கோட்டை
ஏத்தி -மன பூர்வ வாகுத்தர என்கிற நியதி இவருக்கு இல்லை
நினைத்தன்று போலே காணும் ஏத்திற்று
நா முதல் வந்து புகுந்து நல இன் கவி தூ முதல் பத்தாக தான் தன்னை சொன்னான்
கரணங்கள் விடாய்த்தது போலே தாமும் தனித் தனியே அனுபவிக்க
நாட்டினை உனக்கு என்னை உன் தொண்டாக -அடிமை சுவடு அறியாத என்னை
இவன் நம்முடையான் என்று நாட்டினாய் -உன் அங்கீகாரம் பெற்று கர்மங்களை வாசனையோடு போக்கிக் கொண்டேன் –
பாடின கவி வழியாலே உன்னை சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஆக இருக்கிற நீ
எனது ஹிருதயத்தில் இருந்தமை காட்டி அருளினாய் –
இவர் வாக்கு கவிபாட இவர் தாம் நம்மோபாதி அனுசந்தித்தார்-
—————————————————————————-
399-
நாகை அழகியாரை -9-2-10
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -திருவாய்மொழி -3-3-11-
பகவத் திவ்ய மங்கள விக்ரகத்தின் சௌந்தர்யத்தில் ஈடுபட்டு திவ்ய தேச பேரையும் மறந்து
அச்சோ ஒருவர் அழகிய வா -என்று விஸ்மிதர் ஆனார் -இந்த ஒரு பாசுரத்தில் தான் நாகை அழகியார் என்று திவ்ய தேச நாமம் –
தாள் பரப்பி -இந்த பதிகத்தில் நம் ஆழ்வார் திருவேங்கடத்தையும் திருவேங்கடத்தானையும் அனுபவித்து
நிகமத்தில் -அது தன்னையும் விட்டு திரி விக்ரமனாகவே அனுபவிக்கிறார்
மருக நபீம குசர கிரிஷ்டா -வேதம் சொன்னதை தமிழ் செய்த மாறன் அருளி காட்டுகிறார் –
—————————————————————————————-
400
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் -9-2-10-
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் -7-8-10
ஒன்பதோடு ஒன்றும் 4-3-10
ஓன்று நின்ற ஒன்பதும் -11-2-10-
ஓன்று நின்ற ஒன்பதும் -11-8-10-
உயிர் தோழியும் தானுமாய் -ஸ்வ அனுபவம் -ஏழு பாட்டும் -எல்லாரையும் குறித்து பர உபதேசம் இரண்டு பாட்டும்
பல ஸ்ருதி ஒரு பாட்டுமாய்
-ஒன்றி -அவதார கந்தமான ஷீரார்ணவ வாசியை ஒரு பாட்டாலும் – நின்று திர்யக்காய் அவதரித்த
படியை முன்னிவ் உலகு -என்கிற இரண்டாம் பாட்டிலும் -சிலம்பு முதல் -என்கிற நாலாம் பாட்டிலும் –
சினமேவும் என்கிற ஐஞ்சாம் பாட்டிலும் -பன்றியாய் -என்கிற பத்தாம் பாட்டிலும் -ஆக நாலு பாட்டிலும்
ஒரு பிரகாரமாகவும் -மற்றைய ஐஞ்சு பாட்டிலும் கஜேந்திர ரஷன அர்த்தம் வாமன ராம கிருஷ்ண
ரூபேண மாகவும் வந்த அவற்றின் சேர்த் திக்கு திரு உள்ளம் பற்றி இப்படி அருளிச் செய்கிறார் –
ஒன்பதோடு ஓன்று -முதல் பாட்டில் பேரருளான எம்பெருமானை என்று உபக்ரமித்து
நிகமத்தில் வானவர் கோனை -என்று உப சம்கரிகையாலே தேவ ராஜா அபிதானம் உடைய
தேவப் பெருமாளை தாம் செம் பொன் செய் கோயிலிலே கண்டவராக அருளிச் செய்தார் –
போக மண்டபத்தை நலம் உடையவன் -என்றும் அருள் கொடுக்கும் படி கேழில்லா பெருமானை
அருளினன் என்றும் -கோயில் திருமலைகளில் அனுபவித்த அநந்தரம் -பெருமாள் கோயிலிலே தேவராஜனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று அருளிச் செய்தார் இ றே நம் ஆழ்வாரும் ஆழ்வாரும் –
வானவர் கோனை என்று பரம பத நாதனை சொல்லிற்றாக ஒண்ணாது -கண்டமை யாய்த்து
சொல்லிற்று இ றே என்று வ்யாக்யாதா பரம பத நாதனை கண்ணால் காணவும் இயலாது
தொழுது என்னவும் கூடாது இ றே -தேச விப்ரக்ருஷ்டம் இ றே பரத்வம் -உய்ந்து ஒழிந்தேனே -வாழ்ந்து
ஒழிந்தேனே -அல்லல் தீர்ந்தேனே என்கையாலே இங்கனே நிர்வகிக்க வடுக்கும் -இப்படி
தன்னுடைய ஆனந்தத்தை ஒன்பது பாட்டிலும் அருளிச் செய்து பல ஸ்ருதியாக பத்தாம் பாட்டை
அருளிச் செய்தார் கலியன் -என்றபடி
ஓன்று நின்ற ஒன்பதும் -திருவாய் மொழி -கீழ் ஒன்பது பாட்டிலே பட்ட நலிவும் இது ஒரு பாட்டிலே
நலிவுமானால் இதுவே மிக்கு வாசாம் அகோசரமாய் இருக்கும் -என்றபடி –
கீழ் எல்லாம் அவனை பெறாமையாலே பாதக பதார்த்தங்கள் கையில் நோவு பட்ட வ்யசனத்தை
சொல்லிக் கூப்பிட்டார் -கண்ணன் மர்மஞ்ஞன் ஆகையாலே நப்பின்னைகாக தான் கருமாரி பாய
ஒருப்பட்டதை நினைவுஊட்ட -திடுக்கிட்டு -வாளேறு காணத் தேளேறு மாயுமா போலே
ஆழ்வார் மிகவும் வருந்துகிறார் -கீழே தாம் பட்ட விசனம் இவருக்கு மற்றவற்றால் வந்தது –
இதிலே தாம் பட்ட விசனம் ஜகத் சத்தா ஹேதுவான பகவானுக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து
அவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கை இ றே ஸ்ரீ வைஷ்ணத்வம் -அது உடையவர் கலியன்
11-8-10-ஓன்று நின்ற ஒன்பதும் கீழே நோவு பட ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் -அவன் இ றே குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் –
ஆங்கு ஜல வர்ஷமிங்கு பகுதா சந்தத துக்க வர்ஷம் -ஆபத் ரஷகன் -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -பிரப்தன் -பூரணன்
ஸ்ரீ கிருஷ்ணன் -இவை எல்லாம் அஹம் சப்தார்தம்-
———————————————————————————–
401-
தொழுதும் எழு -9-3-1-
தொழுது எழு -திருவாய்மொழி -1-1-1-
இதை பாசுரம் தோறும் அன்வயித்து அனுபவிப்பது போலே
கலியன் பாசுரம் தோறும் அருளிச் செய்து இருப்பது அனுபவிக்கற் பாலது –
———————————————————————————-
402-
ஏது செய்தால் மறக்கேன் –தொழுதும் எழு -9-3-3-
என்னுடைய பந்து –திருவாய்மொழி -6-2-1-
நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது என்கிறார் –
நாட்டார் அபிமதர் பிரிந்தால் -கூடின போது மறக்க மாட்டாராய் -பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பார்கள் –
இங்கன் அங்கன் அன்றிக்கே -பிரியில் மறக்க ஒண்ணாதபடி யாய் இரா நின்றது –
இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய இருந்த பின்பு கிட்டினால்
தான் மறக்க்கலாமாகில் பார்ப்போம் -போந்து காணாய் என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இ றே இருப்பது –
தொழுதும் ஏழு -மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் -எதேனுமாக
அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது -மனமே தொழுதும் எழு புல்லாணியே
ஏது செய்தால் மறக்கேன் -என்கிறார் இ றே
என்னுடைய பந்து -பிறந்தவாற்றில் சரணாகதி செய்த ஆழ்வார் -பெரிய ஆர்த்தி உடன் தூது விட்டார்
ஆனைக்கு அருளியது போலே அவன் பதறி அடித்து வாரா நிற்க -முடிந்து பிழைபதுக்கு மேல் பட்ட
பரிகாரம் இல்லை -போகத்துக்கு அவன் வேண்டியது போலே முடிவுக்கும் அவன் வேண்டுமே
என்னுடைய பந்து -அவன் சன்னதியில் என்னது எனபது மேற்பட்ட முடிவு இல்லை இ றே
ஆழ்வார் தாம் முடியவும் பகவத் சன்னதி வேணும் என்கிறார் கலியன் பகவானை மறக்க பகவத் சன்னதி வேணும்
எனபது போலே -மறதியும் முடிகையும் பர்யாயம் இ றே-
————————————————————————————-
403-
ஏது செய்தால் மறக்கேன் -9-3-3
உணரில் உள்ளம் சுடுமால் -9-3-5-
கீழில் மறக்க ஒண்ணாது என்றதே -இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது
பகவானை மறக்கவும் ஒண்ணாது நினைக்கவும் ஒண்ணாது என்றபடி-
———————————————————————————-
404-
ஓதி நாமம் -9-3-9-
நாம் தொழுது ஏத்தினால் -11-2-9-
ஆம் கோணைகள் செய்து -திருவாய்மொழி -5-3-9-
புருஷார்த்தம் ஸுய யதன லாபம் என்றிருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –
ப்ராப்யம் என்று இருக்கை தவிர்ந்து பிராபக புத்தி பண்ணக் கடவோம்
ஸ்வகத ஸ்வீகார பிரபத்தி -அல்லது பக்தி பரமாகவும் ஒரு யோஜனை உண்டு
ஏதேனும் ஒரு கிரியா மாதரத்தை பண்ணக் கடவோம் -ஸ்வரூபத்தை அழித்து ஆகிலும்
பெறக் கடவோம் ஞான விபாக கார்யமான அஞ்ஞானம் -அடிக் கழஞ்சு பெரும்
ஸ்வரூப அநுரூபம் புருஷார்த்தம் என்னும் அதில் காட்டிலும் பிராப்ய அனுகுணம் ஸ்வரூபம் –
——————————————————————————-
405-
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட -9-5-10-
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -திருவாய்மொழி -4-5-8-
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
நம் கட்கும் அமரர்க்கும் இன்பன் -திருவாய்மொழி -10-1-6
இன்பு முற்படுவது -நாயனார்
அவர்கள் சத்தை பெற அவர்கள் உடன் கலந்து
தான் சத்தை பெற என்னுடன் –நீசன் நிறை ஒன்றும் இல்லாத -என்னுடன் -கலந்தான்
ஜீவனம் அங்கு -நெஞ்சும் உடம்பும் இங்கே –
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வத்சல்யத்தாலே முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தாரையும்
கொம்பாலும் குளம்பாலும் குத்தித் தள்ளும் தேனு போலே-
———————————————————————————–
406-
அரவில் துயிலும் புனிதர் -9-6-2
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -திருப்பாவை -2-
ஜகத் ரக்ஷண சிந்தை -ஆஸ்ரித அர்த்தமாக -செய்யும் தூய்மை -வடிவில் பிறந்த புகர்
தகட்டில் அழுந்திய மாணிக்கம் போலே -குணத்தை ஏற்றதை சொல்லிற்றாகவுமாம் –
கிடந்ததோர் கிடக்கை -கோலத் திகழக் கிடந்தாய் -மேன்மை சுத்தி சௌந்தர்யம் -தோற்ற –
—————————————————————————————-
407-
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் -9-6-3-
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் -திருப்பல்லாண்டு -3-
அக்கும் பதிகத்தில் -நின்ற பண்பர் -நின்ற நம்பியை முதல் பாட்டிலும் -துயிலும் புனிதர் -கிடந்த நம்பியை
இரண்டாம் பாட்டிலும் -அனுபவித்த கலியன் இதில் -வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்-என்கிறார் –
நம்பி மேல் ஆழம் கால் பட்டு மங்களா சாசனம் செய்து வாழும் ஸ்ரீவைஷ்ணவர்களை கண்டு
அனுகூலரை அழைக்கிறார் -பெரியாழ்வார் போலே –
————————————————————————
408-
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்காகி முன் தூது சென்ற -9-7-2
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகி -2-2-3-
-ராஜ்ஜியம் இழந்தவர் -பாண்டவர்கள் –மா மணி முடிப் பஞ்சவர்ஆதி மன்னர் -ஈஸ்வர அபிப்ராயத்தாலே –
——————————————————————————————
409
விடம் கலந்து அமர்ந்த அரவணை -9-8-6-
விடத் தேள் எறிந்தால் போல் -நாச்சியார் திருமொழி -36-
உகவாதார் மேலே விஷத்தை உமிழ -விஷம் இல்லாத தேளும் உண்டு போலே காணும் –
————————————————————————————–
410-
நேசம் இல்லாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் -9-9-6-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் -திருவாய்மொழி -1-10-2-
பரம பக்தி இல்லாதவர்க்கும் -அவனை இல்லை என்கைகாகவது நினையாதவர்க்கும் அரியவன்
பரம பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி அறியாதே தன்னைக் கொடுப்பவன்
அன்வய வ்யதிரேக உக்திகள்-
————————————————————————————–
411-
நினையாதவர்க்கும் -9-9-6
கடல் மலை தல சயனது உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -2-6-1-
நித்ய ஸூரிகள் இடையே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரிகள் புகுந்து தரைப் பட்டு கிடப்பதே
இது ஒரு நீர்மை இருக்கும் படியே –
இப்படி எண்ணாத கேவல தேக போஷண பரராய் இருப்போரை எண்ணோமே -என்கிறார் –
அவர்களைக் கண்டு நடுங்கைக்கும் பரிஹரிகைக்கும் கூட நினைக்க மாட்டேன் –
நாஸ்திகர் பகவானை நினையாமை -ஸ்ரீ வைஷ்ணவர்கள் நீசர்களை நினையாமை இரண்டும் கூறப் பட்டது –
————————————————————————————–
412
அரிமாச் செகுத்து -9-10-8-
அரிமாத தொலைய -10-6-9-
அரிமாச் செகுத்து -11-2-2-
கோளரிமாத் தான் சுமந்த -பெரிய திரு மடல் -20
அரிமா -குதிரை சிங்கம் இரண்டு பொருளிலும்
மா -மிருகம் -கைம்மா -யானை -பரிமா -குதிரை அரிமா -சிங்கம் –
அரிமா -குதிரையான கேசி -வேகம் உள்ள குதிரை -பச்சை குதிரை -சத்ருவான குதிரை -கோளரிமா -சிங்கம் –
—————————————————————————————–
413-
குடமாடுவார் –விளங்கு புரி நூலர் -9-10-10-
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் -பெரியாழ்வார் திருமொழி -1-1-
ஐஸ்வர்யம் மிக்கு செருக்கு போக்கு வீடாக குடமாடுவார் இடையர்
கூத்தர் குடம் எடுத்தாடில் கோவிந்தனாம் என ஓடும் –
இங்கே ப்ராஹ்மண க்ருத்யமாக அருளியது பக்தி காரிதமான நர்த்தனம் -அன்றிக்கே
திருக் கோட்டி யூரே திரு ஆய்ப்பாடி என்ற சமாதியில் அருளினார் -என்னவுமாம்
கன்று கொண்டு விளம் கனி எரிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை நின்றுகாத்து
உகந்தான் -திருக் கோட்டி ஊரானே -என்று இவரே அருளிச் செய்கிறார் –
————————————————————————————-
414
இன் தமிழ் பாடுவார் -9-10-10-
இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -திருவாய்மொழி -10-6-4-
தாம் பாடியவற்றை இன் தமிழ் இரும் தமிழ் என்று அவனடியாக வந்தததால் கொண்டாடுகிறார்கள் –
சதுர்முகன் சந்தசும் சஜாதீய பிரசாதமும் ஆஷா மூலம்
திருமால் அருள் கொண்டு இவர் பாடினார் -என்னைத் தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து
தப்புதல் அற தன்னை வைகுந்தனாக தன் சொல்லால் தானே துதித்து -மலைக்கு நாவியல் மொய்ய
சொலால் சொல்ல வல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கை எடுக்கும் படி என் சொல்லால்
யான் சொன்ன இன் கவி என்பித்தான் -என்றார் இ றே -ஆசார்ய ஹ்ருதயத்தில் –
——————————————————————————
415-
எம்பிராக்கள் 10-5-2
அரும் பெறல் அடிகள் -திருவாய்மொழி -1-3-1-
பன்மை ஒருமை பொருளில் வந்தது -பூஜாயாம் பஹு வசனம் -என் ஸ்வாமி யானவனே என்ற பொருளில்-
————————————————————————————
416
நான் அவல் அப்பம் தருவான் -10-5-6-
உண்ணக் கனிகள் தருவன் -பெரியாழ்வார் திருமொழி -2-3-11-
உண்ணக் கனிகள் தருவன் -பெரியாழ்வார் திருமொழி -2-4-4-
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் -திரு நெடும் தாண்டகம் -27
பகவத் பாகவத விஷயத்தில் கிஞ்சித் கரிக்கும் முறை அருளுகிறார்கள்
வர்ண ஆஸ்ரம அனுகுணமான -பகவானுக்கு -ஆசார்யனுக்கு அவன் உகந்தவை இட வேணும்
சாந்தீபன் காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் -கண்ணனும் சிறுவனைக்
கொடுத்து குறை முடித்தான் -பஷிக்கு பஷங்கள் போலே ஆசார்யனுக்கு ஞான அனுஷ்டானங்கள் சிறகு இ றே –
————————————————————————–
417
மாய வலவைப் பெண் வந்து முலை தர –உயிரை உண்ட -10-5-8-
சகடத்தை தள்ளி –தாயாய் வருவாளை உயிர் உண்ட -10-5-9-
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற -திருப்பாவை 12
புள்ளின் வாய் கீண்டானை –அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
பூதனை -சகடம் பூதனை அடுத்து அடுத்து அருளி கலியன்
பூதனை பின்பு சொல்லி மாறாட்டம்
ஆண்டாளும் ராம -அவதார சேஷ்டிதம் முதலில் அருளி -பின்பு ராம கிருஷ்ண -ராம சரித்ரம்
பின்னே அருளி மாறாட்டம்
————————————————————————————
418
தனக்காக்க வல்ல பெருமான் -10-6-6-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -திருவாய்மொழி -2-9-4-
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை-29
ஸ்ரீ ய பதித்வத்தல் -மிதுனமாய் பரிமாறும் தன்மை -நித்ய கிங்கர பரஹர்ஷயாமி –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
ஈஸ்வரன் தனக்கே யாய் இருக்கும் –
அசித் பிறர்க்கே யாய் இருக்கும் –
ஆத்மா தனக்கும் பிறர்க்குமாய் பொதுவாய் இருக்கும் என்ற முற்பட்ட நினைவு -அங்கன் அன்றிக்கே
அசித்தை போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டும் என்கிறது நமஸ்ஸாலே -முமுஷுப்படி –
—————————————————————————————
419-
மானமுடைத்து -10-7
வெண்ணெய் விழுங்கி –பெரியாழ்வார் திருமொழி -2-9
ஆற்றிலிருந்து -பெரியாழ்வார் திருமொழி -2-10
ஆய்ச்சியர் பாவனையில் கிருஷ்ண லீலைகள் அனுபவம் இந்த பதிகங்களில் –
———————————————————————————–
420
மானமுடைத்து -10-7
கேசவன்தமர் -திருவாய்மொழி -2-7
கலியன் 14 பாசுரங்களும் நம் ஆழ்வார் 12 பாசுரங்களும் அருளி இருக்கும் பதிகங்கள்
இதனால் 1084 பெரிய திருமொழி பாசுரங்கள்/1102 திருவாய்மொழி பாசுரங்கள்-
————————————————————————————
421-
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் -10-7-2-
கீழை யகத்து தயிர் கடைய -பெருமாள் திருமொழி -6-2-
வடக்கில் அகம் புக்கிருந்து –கன்னியை வேற்று உருவம் செய்து -பெரியாழ்வார் திருமொழி -3-1-2-
கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள்ள அசல் -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்தி
மா முனிகள் -வியாக்யானம்
கீழை யகத்து தயிர் கடைய -கிரியையும் -கர்ம யோகம்
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் –தர்சனமும் -ஞான யோகம்
வடக்கில் அகம் புக்கிருந்து –கன்னியை வேற்று உருவம் செய்து -அனுபவமும் -பக்தி யோகம்-
————————————————————————————-
422-
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணையை வாரி விழுங்கி -10-7-3
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -முதல் திருவந்தாதி -24
திருடின வெண்ணெயை புஜித்தான் -புஜிப்பதற்க்கு முன்னமே பிடி பட்டான் –
பிழை திரு நறையூர் அரையர் பட்டரை கேட்க -இவனுக்கு என்றும் திருப் பணி இது அன்றோ –
ஒருநாள் அங்கனுமாகிறது-இங்கனுமாகிறது -வைகலும் வெண்ணெய் கலந்து உண்டான் –
கால பேதம் ஒழிய சௌர்ய பேதத்தால் வந்த விரோதம் இல்லை –
——————————————————————————————
423
இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் -10-7-9-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே -பெரியாழ்வார் திருமொழி -1-2-11-
பொங்கும் பரிவால் சகடாசுர பங்கம் பற்றி பெரியாழ்வார் மறைத்து அருளுகிறார் –
————————————————————————————–
424-
மங்கை நல்லீர் வந்து கொண்மின் -10-7-11
கோழி அழைப்பதன் முன்னம் -நாச்சியார் திருமொழி -3-1-
வஸ்த்ர அபஹரண வ்ருத்தாந்தம் -போன்றவை
கோபியரும் கண்ணனும் பேசுவதாக ஆண்டாளும்
யசோதையும் கண்ணனும் பேசுவதாக கலியனும் அனுபவித்து உள்ளனர்-
————————————————————————————
425-
ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச –களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை -10-7-14-
வற்புடைய -திரு நெடும் தாண்டகம் -7
வார் கடா வருவி -திருவாய்மொழி -8-4-1-
ஆய்ச்சி-கீழ் சௌகுமார்யத்துக்கு அஞ்சினபடி சொல்லி -இதில் வயிறு பிடித்தபடி சொல்கிறது
குவலயாபீடம் கொன்ற மிடுக்கை காட்டத் தெளிந்த அநந்தரம் இந்த திருமொழிக்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வற்புடைய -திருக் கோவலூர் ஆயனுடைய சௌ குமார்யத்தை அனுசந்தித்து வயிறு பிடித்த
கலியன் அச்சம் தீர ஸ்ரீ ராம கிருஷ்ண வீர சரித்ரங்கள் காட்ட கலியன் அச்சம் தீர்ந்தார் –
வார் கடா வருவி-அங்கும் இங்கும் பதிகத்தில் ஈஸ்வர சௌ குமார்ய அனுசந்தானத்தில்
அஞ்சிய ஆழ்வார் அச்சம் தீர திருச் செங்குன்றூர் திருச் சிற்றாங்கரையில் வீர்ய பராக்ரங்கள் காட்டி அருளினான் –
வாராமல் அச்சம் இனி மால் தன் வலி யினையும் –பாரும் என தான் உகந்த மாறன் –
மா முனிகள் தெளிய வைக்கிறார் –
——————————————————————————-
426-
ஈரேழும் வல்லவர் -10-7-14
ஐந்தும் ஐந்தும் -10-4-10-
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும்-10-3-10-
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் -9-10-10-
தீம்புகளை சொலி பழி இடுகிற பாட்டுகள் ஏழும் -சேவகத்தை பேசி பாரதந்த்ர்யம் தோற்ற ஏழும்
ஒன்பது பாட்டுக்களில் ஆய்ச்சியரை குறித்து யசோதை கூறுவதும் நான்கு பாட்டுக்களில்
கண்ணனை குறித்து யசோதை கூருவாதாகவும் விபாகம் தொடருமே யாயினும் ஆழ்வார் திரு உள்ளம் ஈரேழு – என்பதே -யாகும்
ஐந்தும் ஐந்தும்-2/3/5/6/9பாசுரங்கள் முலைக் கடுப்பாலே அவசாதம் தோற்ற சொன்னவை
மற்றவை அப்படி இன்றி சொன்னவை
ஒன்றும் ஒன்றும்-இப்பதிகத்தில் முதல் பாட்டும் ஆறாம் பாட்டும் மகராஜரை பார்த்தும்
2/3/4/5/9 பாசுரங்கள் வானர முதலிகள் பார்த்தும்
7/8/10 பர உபதேச பாசுரங்கள்
நாலும் ஆறும்-விபவ அவதார பரம் நான்கும் அங்கன் இன்றி ஆறும்
ஐந்தினோடு ஐந்தும் -ஒன்பதினோடு ஒன்றும் இப்படியே நம் ஆழ்வாரும் அருளிச் செய்து இருக்கிறார்
ஐந்தினோடு ஒன்பதோடு ஒரு பத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு
ஓர் ஆயிரம் என்றதும் ஸாபிப்ராயம் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்தி-
——————————————————————————————-
427-
காதில் கடிப்பிட்டு 10-8-
தெள்ளியார் பலர் -நாச்சியார் திருமொழி -4
மானமுடைத்து பதிகம் முடிந்த உடன் ஆய்ச்சியர் உடன் கண்ணன் கூடினான்
பிறகு பிரிந்தான் -பிறகு ஆய்ச்சியர் ஊடினார்கள் பிரணய ரோஷம் தலை எடுத்து
அவனும் வருந்தி கால் கையை பிடித்து சம்ச்லேஷித்தான் காதில் கடிப்பு திருமொழி
தெள்ளியார் -பரியட்டங்கள் கொண்டு குருந்தின் மேல் நிற்க -இவர்கள் அனுவர்த்தித்தும் வைதும்
சிலவற்றை செய்ய -அவனும் கொடுக்க -சம்சாரத்தில் போகங்கள் நிலை நிற்காதே
அவன் பேர நிற்க இன்னம் பரியட்டங்கள் உரிய வல்லனே என்று கூடல் இழைக்கிறார்கள்
இங்குத்தை பரிமாற்றம் பேறும் இழவுமாக போகுமே
கோழி அழைப்பதன் முன்னம் பதிகம் -முடிந்த உடன் கூடினான் -பிறகு பிரிந்தான் -இவர்கள்
கூடல் இழைக்கிறார்கள்
ஊடலும் கூடலும் இப்படி அனுபவம் –
—————————————————————————–
428-
தேடித் திருமா மகள் மண் மகள் நிற்ப -10–8-9-
பெண்ணுலாம் சடையினானும் –வெல்கி நிற்ப -திருமாலை -44-
அகலகில்லேன் இறையும் என்று இவர்கள் ஆசைப் பட்டு நிற்க -இடக்கையும் வலக்கையும் அறியாத
ஆய்ப் பெண்கள் உடன் குரவை கூத்தாடி நின்றான்
பிரியதம ஏவ ஹி வரணீ யோ பவதி -ஸ்ரீ பாஷ்ய காரர்-
——————————————————————————–
429-
ஏடீ -10-8-9
இணக்கி -திருவாய்மொழி -6-2-8-
குரவை பிணைந்த கோமளப் பிள்ளாய் -என்று சொல்லி மேல் ஒரு வார்த்தையும் சொல்லாதே தோழியை
பார்த்து ஏடீ-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிகே இருப்பார்க்கு அன்றோ நீ உதவுவது என்று சொல்லப்
புக்காள் -வார்த்தை சொல்லி தலைக் கட்டும் முன் காலைப் பிடித்தானாம்
இணக்கி -இசையும் படி வார்த்தை சொல்லி
உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாத எங்களை அவ்விடம் கிருஷ்ணன் வாராத இடம்
என்று சொல்லி கூட்டிப் போந்தது
இப்படி நாயிகா பாவத்தில் ஊடும் போது தமது தோழிகளை வெறுத்து கூறுகிறார்கள் –
—————————————————————————
430-
அல்லிக் கமலக் கண்ணனை -10-8-10-
அல்லிக் கமலக் கண்ணனை –திருவாய்மொழி -8-10-11-
ஏதுக்கு இது என் -இவரார் இது என் -ஏ டீ இது என் -என்றாலும் அத்தனையும் கேட்ட கண்ணன்
அல்லிக் கமல கண்ணனாய் இருக்கிறான் -கண்ணனை நூறு பட்டினி கொள்ளும் அவள் –
வெறுத்து பேசினாலும் அகவாயில் ஓடும் ப்ரேமத்தை கண்டான்
பகவத் ப்ராவண்ய கார்யமான ஏச்சும்
பாகவத ப்ராவண்ய கார்யமான பேச்சும்
அவனை அல்லிக் கமலக் கண்ணனாக ஆக்குமே –
————————————————————————
431
புள் …இலங்கை ஒள்ளெரி மண்டி உண்ணப் பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ -10-9-1-
அருளார் செங்கோல் நாடா வுதிர் ஈங்கோர் பெண் பால் பொருளோ என்னும் இகழ்வோ -திரு விருத்தம் -33
திருத் தாயார் அழகிய மணவாளனை வெருப்பதாகவும் -கலியன்
தோழி பகவானை வெறுப்பதாகவும் -நம் ஆழ்வார்
உம்முடைய பெருமையை நினைந்து இப் பெண்ணை இகழ்வது உசிதமா -எனபது இரண்டு இடங்களிலும் துல்யம் –
————————————————————————————
432
மாவாய் கீண்ட -10-10-3
கொக்கின் பழம் -5-2-6-
மா -பகாசுரன் -கொக்குக்கு வாசகம்
———————————————————————
433-
காமற்கு என் கடவேன் -10-10-7-
யான் வளர்த்த நீ யலையே -திருவாய்மொழி -1-5-7-
கரு முகில் வண்ணன் செய்யும் நலிவை பொறுக்கலாம்
அவன் பெற்ற காமனும் இப்படி நலிய வேணுமோ
தான் தோன்றியாய் இருப்பவர் செய்வதை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ
கலந்து பிரிந்தார் செய்வதை நான் வளர்த்த வர்களும் செய்வார்களோ
அவன் இப்படி செய்ய வேண்டி செய்தானா
என்னோட்டை சம்பந்தம் அன்றோ அவனை அப்படி செய்ய வைத்தது
அது போலே என்னோட்டை சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு நலிவதை சொல்ல வேணுமோ-
———————————————————————————————-
434-
இன்னார் என்று அறியேன் -10-10-9-
அன்னே இவரை அறிவன் -11-3-3
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் -8-1-9-
பண்டிவர் தம்மையும் கண்டறியோம் -9-2-7-
அடையாளம் சொல்லியும் இன்னார் அறியாத படி அவன் வை லஷண்யம் இருக்கும்படி –
ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலும் அறிவேன்
எவ்வூரில் கண்டது என்னும்படியாய் இருக்கும்
நித்ய அபூர்வமான விஷயம் -அபரிச்சின்ன விஷயம் –
——————————————————————————–
435
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி -11-1
புள் உருவாகி நள்ளிருள் வந்த -10-9-
இரண்டு பதிகங்களிலும் கூறப் படும் விஷயம் ஒன்றே
ஆற்றாமையின் கனம் -புள் பதிகம் தாய் -பாசுரம் குன்றம் பதிகம் மகள் பாசுரம் என்ற வாசி உண்டு –
—————————————————————————————-
436-
புள்ளின் மேல் வர –நன் கண்ட தண்டமோ -11-1-7-
கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ -8-2-1-
சிதிலையகாதே நின்று கண்டதுக்கு தண்டனையா-தலைமகள்
பர அவஸ்தை -வியூகம் -அவதாரங்கள் -தொழுதாளா தொழுகை ஆத்ம அபகார கிருத்யமோ
இவள் கைவளை கொள்வது தக்கதோ -வெறுக்கிறாள் தாயார்-
—————————————————————————————
437-
மாலினம் துழாய் -மாலினம் துழாய் –11-1-8-
வைகுந்தம் –வைகுந்தம் -பெரிய திருவந்தாதி -53
மால இனம் துழாய் -மாலுக்கு இனமாக அநு ரூபமாக
மாலின் அம் துழாய் -திரு மேனி ஸ்பர்சம் உடைய துழாய்
வைகும் தம் சிந்தை -உனது புகழிலே தங்குகிற சிந்தை
வைகுந்தம் -விட பெரியது
————————————————————————-
438
என் நிறம் -11-1-9
என் செய்ய வாயும் -திருவாய்மொழி -5-3-2-
அவன் வந்து கலந்த பொது அவன் சொன்ன வார்த்தை கேட்டு திரும்பி சொல்கிறார்கள் இருவரும்
அவன் தனக்கு இவை எல்லாம் ர்வ சவமுமாக நினைத்து
அவன் மதீயம் என்று ஆழ்வார்கள் அவயவங்களில் ஈடுபட்டு பேசும் சகஸ்ர நாமங்கள் இவை
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே –
பொய் கலவாது என் மெய் கலந்தானே –
————————————————————————-
439-
அவ்வாயன் நிற்க இவ்வாயன் -11-2-2-
அம்மானைப் பின் தொடர்ந்த அம்மான் -பெரிய திருவந்தாதி -82
பேய் முலை வாங்கி உண்ட அவ்வாயன் இவ் இடையன்
மாயமானை தொடர்ந்த காகுத்தன் –
———————————————————————————-
440-
மராமரம் ஏழும் எய்த புனிதனார் -11-2-4
வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -1-7-1-
ஆஸ்ரித பஷ பாதி புனிதா -ஜகத் ஸ்ருஷ்டாதிகளை ப்ரமாதிகளை ஏவி தான் கடக்க இருக்கும்
தானே கை தொட்டு வ்யாபரிகையால் வந்த சுத்தி -ஆஸ்ரித பஷ பாதமும் ஆஸ்ரித விரோதி
நிரசனத்வமும் சுத்தி என்கிறார்-
—————————————————————————-
441-
மறை நான்கும் முன்னே உரைத்த -11-3-3-
மறை நான்கும் முன் ஓதிய -7-3-6-
பிரளய காலத்திலும் இவ் அனுபூவியை ஸ்மரித்துக் கொண்டு பின்னை அத்தை உபதேசித்தவன்
இது வாயிற்று இவற்றின் நித்ய அபௌ ருஷ்யத்வங்கள்
உரைத்த முனிவன் -முனிவனாய உரைத்தான் -இவன் தான் மறை நான்கும் முன் ஓதியது சாந்தீபன் பக்கல்
இது விபவ அவதார சௌலப்யம்-
————————————————————————————-
442-
நிலையிடம் எங்கும் இன்றி -11-4
வானோர் அளவும் -8-8-
இரண்டு பதிகங்களிலும் தசாதவதார அனுபவம் –
அங்கு பலராமனை அடக்கியும் இங்கே ஹம்சாவதாரத்தை அடைக்கியும் அருளி –
இரண்டிலும் ஒன்பது அவதாரங்கள் அனுபவம் –
அதில் கல்கி நிர்தேசித்து இங்கே ராமகிருஷ்ண அவதாரங்கள் –
———————————————————————-
443-
மானமருமென்னோக்கி வைதேவி -11-5-
பட்டி மேய்ந்தோர் காரேறு -நாச்சியார் திருமொழி -14
இரண்டு ஆய்ச்சி மார் பேச்சாக -மேன்மை -சௌலப்யம் அனுபவம் -இரண்டும் ஏக காலத்தில் –
தேச விசேஷத்தில் அநேக சரீரம் பரிகிரகம் ஏக காலத்தில் கூடும் அது
போலே இரண்டு பிராட்டிமார் தசை கலியனுக்கு இங்கே -பட்டர்
ப்ரீதி பிரகர்ஷம் இரண்டு வடிவை எடுக்கப் பண்ணிற்று
நிரந்குச ஸ்வா -தந்த்ர்யம் ஸ்வரூபம் -பிரணதய பாரதந்த்ர்யம் ஸ்வரூப யாதாம்யம்
அந்தரங்க பரிகாரமாய் -இரண்டு தோழிகள் பேச்சு –
ஆண்டாளும் இப்படி இருவர் பேச்சாக அனுபவித்து அருளுகிறாள்-
—————————————————————————-
445-
மன்றில் மரக்கால் கூத்தாடினான் -11-5-6-
மன்றாரக் குடமாடி -6-9-4-
மரத்தை காலிலே கட்டி ஆடும் கூத்து மரக்கால் கூத்து
குடங்களை தோள்களிலும் தலையில் வைத்து ஆடும் கூத்து குடக் கூத்து –
இடையர் தனம் விஞ்சினால் ஆடும் கூத்து -கிருஷ்ண லீலைகள் இருந்த படி –
—————————————————————
446-
தேர் ஊர்ந்தான் –தார்மன்னன் தங்கள் தலை மேலான் -11-5-8-
கண்ணன் கழல்கள் -திருவாய்மொழி -4-1-3-
பனைத் தாள் களிறு அட்டவன் -திருவாய்மொழி -4-1-4-
மாம் -அஹம் என்று சௌலப்யம் பரத்வம் -சரம ஸ்லோகம் -ஆஸ்ரைய சௌகர்ய ஆபாதக /ஆஸ்ரய கார்ய ஆபாதக குணங்கள்
கீதை -4 அத்யாயம் அவதார சௌலப்யம் -15 அத்யாயம் புருஷோதமத்வம்
இதையே தேர் ஊர்ந்தான் –தார்மன்னன் தங்கள் தலை மேலான் -என்று கலியன் அருளிச் செய்கிறார்
மாம் -கோலை கையில் கொண்டு -தேவாராம் கட்டி அவிழ்க்கிற அர்ஜுனன் கால்பொடி தன் முடியிலே
உதிர ரத்யங்களை விடுவித்துக் கொண்டு சொலவுக்கு சோராத படி நிற்கிற சௌலப்யம்
அஹம் -நித்ய சம்சாரி சரணம் என்ற சொல்லே ஹேதுவாக நித்ய ஸூரி கோஷ்டியில் சேர்க்கும் பரத்வம்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயன் பெருமை
-கண்ணன் -சௌலப்யம் -அது மாமின் அர்த்தம்
மத களிறு அட்டவன் -பரத்வம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -இது அஹமின் அர்த்தம் –
————————————————————–
447-
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர்ஆட்டுதிரோ -11-6-6-
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -திருவாசிரியம் -6
தேவதாந்திர பஜனம் பற்றி அருளியவை-
————————————————————–
448-
மையார் கடலும் மணி வரையும் -11-7-5-
புனல் மை நின்ற வரை -திருவாய்மொழி -10-6-8
உபமானங்களுக்கு விசேஷணங்கள் இட்டே -உபமேயம் அருளுவது
காமினிக்கு கந்தனுடைய தேகமும் தேக குணம் வாய் வெருவது
புனல் போலவும் மை போலவும் நின்ற வரை போலவும் -மை மாறாத வரை போன்ற திரு உருவம்-
———————————————————————–
449-
கள்ளார் துழாயும் கணவலரும் -11-7-6-
போதான இட்டிறைஞ்சி -நான் முகன் திருவந்தாதி -64-
புரிவதுவும் புகை பூவே -திருவாய்மொழி -1-6-1-
த்ரவ்யம் பிரதானம் இல்லை -சிநேகமே ப்ரதான்யம்
செதுகை இட்டு புகைக்க அமையும் -கண்ட காலி இடவும் அமையும்
விஸ ஜாதீயங்களை சேர எடுத்து காட்டி த்ரவ்ய தாரதம்யம் பார்ப்பது இல்லை சிநேகமே வேண்டுவது –
——————————————————————-
450-
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -11-8-2-
என்னைப் போர வைத்தாய் புறமே -திருவாய்மொழி -5-1-5-
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-
பிராப்தி இருப்பது -பிரஜை கிணற்றிலே விழா நின்றால் வாங்காத தாய் போலே
கர்மமும் அவனைக் குறித்து பரதந்த்ரம் -என்பர் பரம வைதிகர்
தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் செய்து போக்க கடவன் என்று
பழி இட்டு தள்ள நினைத்தான் ஆகில் -நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் -நான் செய்யும்
கர்மமும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் -நான் பண்ணும் சாதன அனுஷ்டானதுக்கு பல பரதன்
தான் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் -ஆகையால் தரு துயரம் -என்கிறார்
நிருபாதிக பந்து சக்தன் -விலக்காது ஒழிந்தால் இப்படி சொல்லலாம் இ றே-
—————————————————————————
451-
வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -11-8-7-
ஆகிலும் கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே -கிடக்கும் -திருவாய்மொழி -5-3-5-
அனசூயை பிராட்டி சம்வாதம்
கடல் மல்லைக் கிடந்த கரும்பு -கரும்பின் புழு என்னாமல் ஸ்வரூப க்ருப தாஸ்யம்
கடியன் கொடியன் -ஆகிலும் கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே -கிடக்கும் –
குண க்ருத தாஸ்யம் காட்டிலும் இதுவே பிரதானம் –
—————————————————————————-
452
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் -11-8-7-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் -வண்ணன் திரு விருத்தம் -62
மேல் பாசுரத்தில் அரங்க நகர் அப்பா என்று விளிக்கிறாள் –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம்
திருவாய் மொழியும் -திரு மொழியும் –
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -என்னக் கடவது இ றே
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்