அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –திருக் குறும் தாண்டகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

453-
நிதியினை -1
மணி வண்ணா -திருப்பாவை -26-

வைத்த மா நிதி-
புதைத்து வைத்து ஆள வேண்டாம்
மனத்தில் வைத்து ஆளலாம் -நினைத்த இடத்தே பரிமாறிக் கொள்ளலாம்

கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கும் –
பறிக்க ஒண்ணாது -பிறர்ககேயாய் இருக்கும் –
வேறு ஒன்றில் கண் வைக்க வேண்டாம் –

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –
எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –
நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து
தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே
விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை
பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்–
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந்நீர்மை இன்றிக்கே–காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு —

மணி வண்ணா வெண்ணெய் உண்ட வாயன்
முந்தானையில் முடிந்து ஆளலாம் சௌலப்யம் –
மணி ஸ்வாபம்
உண்டு என்றால் உயிர் இருக்கும் –
ஆழ்வார் படி விச்லேஷம் துடிப்பார்-உடையவர் காலில் சர்வரும் விழ
இழந்தார் பிழையார்–கைப்பட்டாருக்கு பூணலாம்–அழித்து உண்ணலாம் படி–
கிளிச் சீரையில் அடக்கலாம்
பிறர்க்கே இருக்கும்–கொடுத்தோம் என்று நினைக்காமல்–வேறு ஒன்றில் கண் வைக்காமல் இருக்க வைக்கும்
செம்படவன் -மாணிக்கம் -வியாபாரி -அரசன் -கதை–

————————————————–

454-
நிதியினை கதியினை நினைய வல்லார் -1-
பொன்னானாய் -திரு நெடும் தாண்டகம் -10
மார்கழி திங்கள் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நிதியினை -பிராப்ய ஸ்வரூபம் –கதியினை பிராபக ஸ்வரூபம் -நினைய வல்லார் -அதிகாரி விசேஷம்

பொன்னானாய் -பிராப்யம் -இதே பாசுரத்தில் முதலானாய் -பிராபகம் -இகழ்வாய தொண்டனேன் -அதிகாரி விசேஷம்

நாராயணனே தருவான் -உபாய ஸ்வரூபம் -பறை -உபேய ஸ்வரூபம் -நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் –

கண்ணே -பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபங்கள் இங்கும் ஆழ்வார் அருளி-

நிதியினை கதியினை நினைய வல்லார் -நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –

கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று-பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன்
ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –
அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

——————————————————————————————

455-
கஞ்சன் மாளக் கண்டு –மதியினை -1
கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே -திருப்பாவை -25

கஞ்சனைக் கொன்று நாட்டுக்கு களை பிடிங்கின பின்பு ஐயரும் ஆய்ச்சியும் என் செய்தார்கள்
என்று ருணம் ப்ரவ்ருதமிவ -என்று படுகிற படி -நெடுமாலே -கஞ்சனை கொன்ற கண்ணன்
திரு உள்ளம் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ தேவகி இடம் மண்டின படி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

——————————————————————————————-

456-
விதியினை -1
விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய்மொழி -5-1-1-
விதி சூழ்ந்ததால் -திருவாய்மொழி -2-7-6-
நன்று சூட்டும் விதி எய்தினம்-திருவாய்மொழி -4-5-7-

விதி -அவன் ஸ்வா தந்த்ர்த்தாலும் என் கர்மத்தாலும் தீர்க்க ஒண்ணாத படி கிருபை

விதி சூழ்ந்ததால்-இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கேசவன் தமர்க்கு இப்பால் எல்லாம் விதி என்கிறார் பகவத் கிருபையை

வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்பட கண் அழிவு பண்ணுமவர் இறே
நன்று சொல் மாலைகள் சூட்டும் படியான பாக்கியம்
காகுஸ்த கிருபையா பர்ய பால்யத் -குடிப் பிறப்பு காகுஸ்த -கிருபை விளையும் பூகதன் ஆனான்
அதுக்கு மேலே கிருபை விளைந்தது –

——————————————————————————–

457-
இன்ப வாற்றினை -2
மதுர வாறே -திருமாலை 36

ஆனந்த பிரவாஹம் -விடாய்தவருக்கு புக்கு முழுகலாய் இருக்கும்
வேண்டிய இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்து கொள்ளலாம்

பேரமர் காதல் கடல் புரைய விளைய -கடல் என்று சொல்லாமல் ஆறு -விநியோக அர்ஹ்யமாய் -விடாய்தார்க்கு குளித்தல்
முகத்தில் இறட்டிக் கொள்ளுதல்– பானம் பண்ணுதல் -விடாய் இல்லாத போதும் அழுக்கை போக்கிக் கொள்ளலாய் இருக்கும் –

இவன் இருந்த இடத்தே வருகை -கடல் வாராதே -கிண்ணகம்  எடுத்தால்

அணைகளை இடித்துக் கொண்டு வருமா போலே அயோக்யா அனுசந்தானத்தால் இட்ட அணைகளை
முறித்து கொண்டு -நின்றார் நின்ற இடங்களில் உப ஜீவிக்கலாம் படி இருக்கும் –

எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.

———————————————————————————————–

458-
அப்பனை -3
மைந்தனை -3

மைந்தன் அடிமை கொண்ட பருவம் -அடிமை கொள்வதாக திருமலையில் எழுந்து அருளிய பின்பு இளகிப் பதித்த படி –
அப்பன் -உபகாரகன் -பிரயோஜன பரர்க்கும் தன்னை அழிய மாறி பல படிகளால் உபகரிக்குமவன்

அப்பனை
என்று கீழே ஒரு முதுமை சொல்லி
இப்போது மைந்தனை -என்கிறார் – இறே –

அப்பனை -மைந்தனை என்றது அரும்பினை அலரை-என்னுமா போலே  –

————————————————————————————

459-
அடிமை பூண்டு -5-

தொண்டு பூண்டு -திருமாலை -5

பகவத் தாஸ்யம் ஆபரணம் –உறும் என்று வகுத்த சேஷ வ்ருத்தியை உகந்து ஏறிட்டுக் கொண்டு –

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே-வழு விலா அடிமையிலே அந்வயித்து –
நம் பெருமாளுக்கு சேர சுந்தர பாண்டியன் தம்பிரான் பதக்கம் போலே -இதுவும் நெஞ்சிலே இருக்கும் ஆபரணம் –

இடும்பை பூண்டு -கழுத்தில் புக்க வாயோடு போலே தன்னாலே கழற்ற ஒண்ணாது இருக்கும்
மகா துக்கங்களை ஏறிட்டு கொண்டு -அது போலே அன்று இறே இது என்றபடி-

“ஹஸ்த்ய கிரிநாத! தவ தாஸ்ய மஹா ரஸஜ்ஞ;” என்று அறிவுடையார் எம்பெருமானுடைய அடிமையையே
ஆராவமுதமாக பூண்டு-

———————————————————————–

460-
இரும்பனன்று உண்ட நீர் போலே -5
தீர இரும்புண்ட நீரது போலே -திருவாய்மொழி -10-10-5-
இரும்பனன்று உண்ட நீரும் போதரும் கொள்க -13

எம்பெருமானுக்கு என் தன்  அரும் பெறல் அன்பு -ஆத்ம வஸ்துவை சமைய புஜிக்கைகாக
உன்னுடைய போக்யதையை காட்டி என்னை அகப்படுதினாய் -என் ஆர் உயிரை ஆரப் பருக –
என் விடாய் தீர என்று இருந்தேன் -உன் விடாய் தீரவாய் இருந்தது இறே
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக என்றுமாம் -என் சந்தாபம் எல்லாம் தீர உன்னை புஜிக்க
எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -ஜீவ பர பரஸ்பர போக்யம் -அஹம் அன்னம் அஹம் அந்நாத
13-பாசுரத்தில் தம்மை விட்டு தமது பாபங்கள்  ஒழிந்தமைக்கு திருஷ்டாந்தம்
பகவத் கிருபா வைபவத்தை ஆழ்வார் அனுபவித்த படி –

————————————————————————–

461-
மூவரில் முதலானாய -6
மூவரில் முன் முதல்வன் -பெரிய திருமொழி -9-9-1-
இந்திரனை கூட்டுதல்-தன்னைக் கூட்டுதல் -தானே பிரதாநன்-

————————————————————
462
ஒருவனை -6
ஒன்றாம் சோதி -திரு நெடும் தாண்டகம் -2
மூ உருவம் கண்ட போது ஒன்றாம் சோதி -இவனே காரண பூதன் -இருவர் கார்ய கோடி நிஷ்டராய்
பரம் ஜோதி சப்த வாச்யம் இவனே -ஆம் சோதி ஓன்று -என்கிறார் –

———————————————————

463-
இன்பப் பாவினை -6
இன்பப் பாவினை -பெருமாள் திருமொழி -1-4-
இன் கவி பாடும் பரம கவிகள் -முதல் ஆழ்வார்கள் கவி போலே இனியவனாய் –
தம்முடைய கவி போலே தித்தித்து இருக்குமவன் –

———————————————————————
464-
புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் -6
அறிந்தன வேதம் –அரும் பொருள் ஆதல் -திருவாய்மொழி -9-3-3-
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே -அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டு புகழ முடியாதே –

——————————————————————–

465-
உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே -9-
அரங்கதுறையும் இன் துணை -பெரிய திருமொழி -3-7-6-
நாங்களும் தஞ்சம் அல்ல -பிறரும் தஞ்சம் அல்ல -நீயே தஞ்சம் –

————————————————————————

466-
பத்திமைக்கன்பு உடையேன் ஆவதே பணியாய் -9-
என் தன் அளவல்லால் யானுடைய வன்பு -இரண்டாம் திருவந்தாதி -100

நூல் பிடித்த பக்தியை அளவாகக வேணும் –
எந்தாய் -பக்தியை உண்டாக்கிய நீயே அளவு படுத்த வேணும் –

———————————————————————

467-
என் கண்ணுள்ளே தோன்றினாரே -12
திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன -அமலனாதி -1

இவ் வடிவு அழகை நோக்க ஒண்ணாது என்று கண்ணை செம்பளித்தேன் -உள்ளே தோன்றினார் –
இந்த தருணம் எதிர்பார்த்து இருந்தான் போலும் -செம்பளித்த கண்ணை உறுத்து உள்ளே புகுந்து
அன்றிக்கே -தன் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளிக்க உள்ளே பிரகாசித்தார்

——————————————————————-

468-
அன்பினால் அனுமன் வந்து -15
வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -15
அன்பினால்-காலால் அன்று போலே -அநசனம் தீஷித்தும் -கடல் கடந்தும் -யுத்தம் பண்ணியும் –
இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டியை திருவடி தொழுது த்ருஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதியோடே வந்தது –

வில்லால் -நாலிரண்டு அம்பு விட்டவாறே வந்து முகம் காட்டி முது எடுத்துக் கொடுத்தவாறே
அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று -ஆகையால் கல்லால் அன்று அடைத்தது -வில்லால் என்கை –

இங்கன் அன்று ஆகில்  இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்தாய் தலைக் கட்டாது-
அன்பினால் -வில்லால் இரண்டும் ஸாபிப்ராயம்-

———————————————————————–

469-
வானவர் தங்கள் கோனும் –செங்கண் மாலை -20

இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81-
இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்

கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திரு வெள்ளறையான் என்கிறார்
அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –

——————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading