கூவிக் கூவிக் கொடுவினைத்
தூற்றுள்நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத்து,
அலமருகின்றேன்;
மேவிஅன்று ஆநிரை காத்தவன்,
உலகம்எல்லாம்
தாவிய அம்மானை எங்குஇனித்
தலைபெய்வனே?
பொ-ரை : கொடிய பாவங்கட்கு இருப்பிடமான சமுசாரமான புதரில் நின்றுகொண்டு பல காலம் வழியறியாமல் கூவிக்கூவிச் சுழலுகின்ற பாவியேனாகிய யான், அக்காலத்தில் பொருந்திப் பசுக் கூட்டங்களைக் காத்தவனும் உலகங்களையெல்லாம் தாவி அளந்த தலைவனுமான இறைவனை இனி எங்கே கிட்டுவேன்?வி-கு : தூறு – புதர். அலமருகின்றேன் – வினையாலணையும் பெயர். ‘தலைப்பெய்வன்’ என்பது ஒரு சொல்.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘வரையாமல் எல்லார்க்கும் ஒக்க முகங்கொடுத்த அவதாரங்களுக்குத் தப்பின நான், இனி உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார்.
கொடுவினைத் தூற்றுள் நின்று கூவி – 2சொரூப ஞானத்தால் ஆறியிருக்கமாட்டாமல் சமுசாரத்திலேயிருந்து கூப்பிடாநிற்பர். கூப்பீடு கேட்டு இரங்கி எடுப்பதாக ஈசுவரன் கைநீட்டினால், நீட்டின கை வாங்கவொண்ணாத நிலத்திலேயிருந்து கூப்பிடுகிறாராதலின், ‘கொடுவினைத் தூற்றுள் நின்று’ என்கிறார். கூவி – ஒருகால் கூப்பிட்டு 3அநுதபித்து மீளுமதன்றிக்கே மேன்மேலெனக் கூப்பிடநிற்பர். பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன் பாவியேன் – காலமெல்லாம் 4அறிவு கெட்டுத் தடுமாறுகிற நான். 5ஸ்ரீ வால்மீகி பகவான் ஆஸ்ரமத்தின் பக்கத்திலே
இருந்துதான் கூப்பிடப்பெற்றேனோ!’ என்பார், ‘பாவியேன்’ என்கிறார்.
அன்று மேவி ஆ நிரை காத்தவன் – 1இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அந்த ஆயர்பாடியைப் பார்த்துச் சிந்தித்தான் கிருஷ்ணன்,’ என்கிறபடியே, நோவு பட்டவன்று ஒரு பசுவின்மேலே ஓர் ஆயன் மேலே ஒரு துளி விழாதபடி, தோன்றியதொரு மலையை எடுத்து உதவி செய்தவனை. இனி, 2மேவி அன்று ஆநிரை காத்தவன்’ என்பதற்கு ‘நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையிலே கோலைத் தந்து ‘பசு மேய்’, என்றால், ‘ரக்ஷகனான எனக்கு இது தக்கதேயன்றோ?’ என்றிருத்தலேயல்லாமல் பெறாப்பேறு பெற்றதாக விரும்பி அன்று பசுக்களை மேய்த்தவன்,’ என்று பொருள் கூறலுமாம். அன்று – அதுவும் ஒரு காலமே!’ என்கிறார். வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால், ‘காட்டிலே வழி திகைத்தார்க்கு அங்கேயுள்ள ஆயர்கள் போலேகாணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும். ‘என்னொருவனையே சரணமாகப் பற்று’ என்று வழிகாட்டினவன் அன்றோ? ‘வழி காட்டினவர்கள் வேறு இலரே?’ என்றது, ‘திருத்தேர்த்தட்டிலே நின்று எல்லா ஆத்துமாக்களும் உய்வு பெறும்படி சரம சுலோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனேயன்றோ?’ என்றபடி. இதனால், ‘ஆபத்துக்கு உதவாதவனாய்த்தான் படுகிறேனோ!’ என்கிறார். உலகமெல்லாம் தாவிய அம்மானை – ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தனை. எங்கு இனித் தலைப்பெய்வன் – எங்ஙனம் கிட்டப் போகிறேன்? ‘அந்தத் 1தூளி தானத்துக்கும் தப்பின நான், 2பரீட்சை சொல்லிப் பெறப் போகின்றேனோ?’ என்கிறார் என்றபடி. இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான், ஒரு சாதன விசேடத்தைப்பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்
. ‘பரஞ்சுடர்’ என்பதறகு ‘எல்லா வகையாலும் உண்டான ஏற்றத்தையுடையவன்’
என்றும், ‘வடிவழகினையுடையவன்’ என்றும் இரண்டு பொருள்
அருளிச்செய்கிறார்.
‘கண்ணா!’ என்றதனால் தாழ நிற்றலும், ‘பரஞ்சுடரே!’ என்றதனால்
வடிவழகும், ‘என்’ என்றதனால் தமக்கு முற்றூட்டாக்குதலும் போதரும். மூற்று
ஊட்டு ஆக்குதல் – பூர்ணாநுபவம் உள்ளதாகச் செய்தல்.
இப்பாசுரத்தில், மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால்
கர்மயோகம் இன்மையையும், ‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’
என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று. உபலக்ஷணத்தால்
ஞானயோகம் இன்மையையும் கொள்க.
அவதாரங்கள் தப்பி
கூவி கூவி நெஞ்சு உருகி
பாவியேன் அழுது
உலகம் எல்லாம்தாவிய எம்மான்
ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே
கூவி கூவி கொண்டே இருக்கிறேன்
கொடு வினை பலத்தில் கூப்பீடு கேட்டு றங்கி வந்தாலும்
எம்பெருமான் கை நீட்டினாலும் கை எட்டாத கொடு வினை தூறு
பாவியேன் -வால்மீகி பரிசரமின்றி கூவிநேனோ
மேவி அன்று ஆநிரை காத்தான்
ஆபத்துக்கு உதவுபவன்
அவன் இருந்தும் இப்படியா
தானே விரும்பிவந்து கோ கோபி ஜனங்களை காத்து
பசி இடையன் மேலே துளி ஒன்றும் வராதபடி -முன் ஏந்தும்
தொற்றிற்று ஒரு மலை எடுத்து மேவி விரும்பி
நித்ய சூரிகள் நிர்வாகன் கோலை எடுத்து பசு மேய என்றால்
பொருந்தி ஈடுபாடு அலாப்ய லாபம் -அன்று -அதுவும் ஒரு காலம்
வழி திகைத்து அளமருகின்றேன்
காட்டிலே வழி திகைத்தாள் இடையர் காட்டுவான்
அப்படி இடையன் இங்கே இருந்தும்
மாம் ஏகம் -வழி காட்டினான்
வேறு வழி காட்டினார் இல்லையே -இவனும் வேற வழி காட்டினான் இல்லை
தேர்த்தட்டில்
உஊருக்கு உதவி
உலகம் எல்லாம் தாவி ஒன்றும் பிரி கதிர் படாதபடி
அம்மான் -ஸ்வாமி தலைகளை தீண்டு
தூளி தானம் -திருவடி தூளிக்கு தப்பினேன் –
சாதனமனுஷ்டித்து எங்கே கிட்டே புகுகிறேன் நசை அறுக்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply