திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உயிர்கள் எல்லா
உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத்
தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை
ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை
ஊனிடை ஒழிவிக்குமே.

    பொ-ரை எல்லா உயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனைக் குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த குற்றமில்லாத சொற்களையுடைய இசையுடன் கூடின மாலையாகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப்பாசுரங்களும் உயிருக்கு வந்தேறியாக உள்ள ஊன் பொருந்திய சரீரத்திலுண்டான சம்பந்தத்தைப் போக்குவிக்கும்.

    வி-கு : செயிர் – குற்றம். யாக்கை – எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது; சரீரம். ஊன் – தசை.

    ஈடு : முடிவில், 2தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட, ‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்; அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது. எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை – ‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லாவுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;

இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது; அங்கு 1ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி. இனி, 2‘உறுப்புகளில் ஒன்று குறையினும் உறுப்புக்குறைவு உண்டு அன்றோ? அப்படியின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈசுவரனாந்தன்மை நிறைவுற்றது,’ என்னுதல். குயில் கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் – 3‘பிரகாரியானவன் தரித்து, பிரகாரரான இவரும் தரித்து, இவர்தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து, அங்கு உண்டான சோலைகளும் தரித்து, அங்கு உண்டான பறவைகளுடைய மகிழ்ச்சிக்கு அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம். 4‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களையுடையனவாயும், தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படியாயிற்று என்றபடி.

    செயிர் இல் சொல் இசை மாலை – குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை; ஈண்டுக்குற்றமாவது, சரீர சம்பந்தத்தோடே பொருத்தம் உண்டாயிருக்கச் சொல்லுதல்; அது இல்லாத மாலை எனவே, பகவல்லாபம் ஒழியச் செல்லும்படியாயிருத்தல் செய்யச்சொன்ன மாலையன்று என்பதனைத் தெரிவித்தபடி. 5‘எங்கு இனித்தலைப்பெய்வனே’ என்ற வார்த்தைக்கு நினைவு தப்பியிருக்குமாகில், அது குற்றமேயன்றோ?

    ‘இப்பத்தும் செய்வது என்?’ என்னில் உயிரின்மேல் ஊனிடை ஆக்கை ஒழிவிக்கும் – அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று, நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈசுவரனுக்கு அடிமையாயிருக்கிற ஆத்துமாவையும், வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே கட்டுவித்துக்கிடக்கிற அவித்தியை முதலானவைகளை

வாசனையோடே போக்குவிக்கும். இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று; ‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஈசுவரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான். ‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், 1பாதிதா நுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார். ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே? இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

(11)

    முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக்கொண்டு கேட்டினை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்; இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் ‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து, உன் திருவடிகளிலே வாழ்ச்சியேயாம்படி செய்யவேணும்,’ என்கிறார்; ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன் இனிமையை எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்; ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தற்கு?’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதனத்தைச் செய்தேனோ, நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், 2‘திரைவிக்ரம

அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்; பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

முன்னம் அழகர்எழில் மூழ்குங் குருகையர்கோன்
இன்னஅளவு என்ன எனக்கரிதாய்த்து – என்னக்
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து.

ஆசை எல்லாம் போகும் படி முகம் காட்ட
ஆழ்வார் தரிக்க
அவனும் தரித்தானாம் இவரை அடைந்த பின்பு
உயிர் உடையவனாக ஆனானாம்
இவர் ஒருவரையும் இ றே
லோகம் அத்தனையும் அழியும் –
ஆழ்வாரை அடைந்த பின்பு
உபய விபூதி உடைய எம்பெருமான்
ஏக அங்கம்
போனாலும் சரீரம் இருக்கும்
ஆத்மா போனால் சரீரம் இருந்து என்ன பயன்
இவரை பெற்ற பின்பு ஈஸ்வரன் பூரணன் ஆனான்
பிரகாரம் பிரகார பூதன்
குயில்களும் தரித்து -சோலைகளும் தரித்து -திருக் குருகூர் தரிக்க
சந்தொஷத்தால்தொனி
அபி வருஷ -சக்கரவர்த்தி திருமகன்
பூத்து குலுங்க
குற்றம் அற்ற இசை உள்ள மாலை
பகவத் லாபம் -ஒன்றே-
நினைவு தப்பி இருக்குமாகில் குற்றம் தரிப்பேன் சொல்லி அடைந்து
ஆக்கை ஒளிவிக்கும்
ராஜ புத்திரன் வேடன் -சேர்ந்தால் போலே
ஆத்மாவையும் சரீரம் சேர்த்து -நித்தியமாய் ஞானாதிக்க சேஷத்வம்
அவித்யை வாசனை உடன் போக்குவிக்கும்
பொல்லாத ஆக்கை -இந் நின்ற நீர்மை -இவருக்கு அன்றே உண்டாக்கி
இப் பொழுது பாவனை -பாவிகா அனுவ்ருதி தோற்றம் -இருக்குமே –
கூப்பீடுக்குபலம் -இவர் சம்பந்தம் உடையாருக்கு பலன் -அருளுகிறான் பத்து பாட்டு அர்த்தங்களை தொகுத்து அருளி –
கிட்டி முகம் காட்ட தரித்தார் –
அழகர் எழில் முழுகி –
அரிதாகி
எம்பெருமான் ஒருமை படுத்தினான் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

(22)

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading