எஞ்ஞான்றும் நாம்இருந்
திருந்துஇரங்கி, நெஞ்சே!
மெய்ஞ்ஞானம் இன்றி
வினைஇயல் பிறப்புஅழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும்
ஒழிவுஅற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக்
கண்ணனை மேவுதுமே.
பொ-ரை : ‘மனமே! எப்பொழுதும் இருந்து இருந்து வருந்தி உண்மை ஞானமில்லாமல் வினைகளால் உண்டாகின்ற பிறவிகளிலே மூழ்கி அலைகின்ற நாம், எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து நின்ற உண்மை ஞானத்தின் உருவமான ஒளியையுடைய கண்ணபிரானை அடைவதற்கு முடியுமோ?’ என்கிறார்.
வி-கு : ‘அழுந்தி அலைகின்ற நாம்’ என்று ‘அலைகின்ற’ என்னும் வினையை வருவித்து ‘அழுந்தி’ என்ற எச்சத்துடன் கூட்டி முடிக்க. இரண்டாமடியும் நான்காமடியும் ஆசிடையிட்ட எதுகை.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘நின் நன் பொன் சோதித்தாள்’ என்று திருவடிகளின் போக்யதையை நினைத்தவாறே திருவுள்ளம் பதறத் தொடங்கிற்று; கெடுவாய்! உன் படி ஆராயாமல் நல்லதை ஆசைப்பட்டால் கிடைக்குமோ?’ என்கிறார்.
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி – காலமெல்லாம் நாம் இருந்து 2சீழ்கிச் சீழ்கி அழுதால் என்ன பயனுண்டுநெஞ்சே – ‘உன்னை நீ அறியாயோ? இதற்கு முன்னரெல்லாம் நல்வினை தீவினைகட்குக் காரணமாய்ப் போந்தாய் அல்லையோ? ஏன்தான்! அற்ப ஆநுகூல்யம் உண்டானால் அடையக்கூடிய பொருளை நாம் பெறுகைக்குக் குறை என்?’ என்ன, ‘இதுவன்றோ நம்முடைய முன்னைய செய்கை?’ என்கிறார் மேல்: 1மெய்ஞ்ஞானம் இன்றி – 2பரம்பொருளையறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்; மற்றை ஞானமெல்லாம் அஞ்ஞானமென்று சொல்லப்படும்’, 3மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய வித்யையே வித்யை; மற்றையவை தொழில் திறமையைக் காட்டக் கூடியவை,’ என்கிறபடியே, புறம்பே சில ஞானம் உண்டு அத்தனையல்லது சம்யக் (உண்மை) ஞானமில்லை கண்டாயே. 4ஆமாறு அறிவிலோமே! உண்மை ஞானமில்லாத அளவேயோ! வினையியல் பிறப்பு அழுந்தி – ‘பாபங்களிலே கொண்டுபோய் மூட்டக் கூடியவான பிறவிகளிலே அழுந்திச் செல்லும்படியாயன்றோ நம் நிலை இருக்கிறது?’ என்கிறார்.
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற – எல்லாக் காலத்திலும் எல்லாப்பொருள்களிலும் ஒன்றும் 5பிரிகதிர்ப்படாமல் குறைவறப் பரந்து நிறைந்து நின்ற. மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை – மெய்யான ஞானச்சோதியையுடைய கிருஷ்ணனை. ஆத்துமாக்கள் நித்தியப் பொருள்களாய் இருந்தும், ஞானம் வளர்தல் குறைதல்கட்குத் தகுதியுடையனவாய் இருக்கின்றன; இறைவன் அங்ஙனம் அல்லன் ஆதலின், ‘மெய்ஞ்ஞானச் சோதி’ என்கிறது. இதனால், ‘நம் நிலையறியாதான் ஒருவனாக நினைத்துக் கிட்டப் பார்க்கிறோமோ?’ என்கிறார் என்றபடி. 6‘நீ, நான்
ஒருவன்தான் இருக்கிறேன் என்று எண்ணுகிறாய்; மனத்தில் நித்தியவாசம் செய்கிற ஆதிபுருஷனாகிய பகவானை நீ அறியவில்லை; எவர் பாப காரியங்களை அறிகின்றவரோ, அவருடைய அண்மையில் நீ பாவத்தைச் செய்கிறாய்,’ என்றாள் (துஷ்யந்த மகாராசனை நோக்கிச்) சகுந்தலை. கண்ணனை மேவுதுமே – 1சுலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.
‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள் கோடலுமாம். இப்பொருளுக்கு ஏகாரம் அசைநிலை. முன்னைய பொருளில் ஏகாரம் எதிர்மறை.
போக்யதையை அனுசந்தித்த வாறே
திரு உள்ளம் பதற தொடங்கிற்று
கெடுவாய் உனது தண்மை அறியாமல் நெஞ்சே இதற்க்கு ஆசைப் படலாமா
பொருமி பொருமி அழுதால் என்ன பிரயோஜனம்
நெஞ்சே உன்னை அறியாமல் பந்த ஹேதுவாக போன நீ
இச்சை ஒன்றே போதுமே
பூர்வ வருத்தம் இது அன்றோ
மெய் ஞானம் இன்றி -வேற ஞானம் உண்டே
பகவானை பற்றியது தான் ஞானம்
மற்றவை செருப்பு குத்த கற்றவோபாதி அஞ்ஞானம்
ஆமாறு அறிகிலோம்
மெய் ஞானம் இல்லாத அளவேயோ
பாபங்களை பெருக்கும் ஜன்மங்களில் அழுந்தி
எங்கும் எல்லா காலத்திலும் பிரி கதிர் படாமல் இருந்து குறைவற வியாபித்து
மெய் ஞான ஜோதி கண்ணன்
நித்ய வஸ்து ஞான சங்கோச விகாசம் ஆத்மாவுக்கு
பரமாத்மா அப்படி இல்லையே
அவனை பற்றி அறியாமல் -எகேகோ வஸ்து -சகுந்தலை வார்த்தை –
துஷ்யந்தன் -அவன் என்ன செய்வான் அறியான் -செய்வதை –
நெஞ்சே -பார்த்து கொண்டு இருக்கும் கண்ணன் –
சுலபன் நிர்வாகன் கிட்டப் போமோ
என்று போய் அடையபோகிறோம் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply