திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கிற்பன், கில்லேன் என்றிலன்
முனம்நாளால்;
அற்ப சாரங்கள் அவைசுவைத்து
அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம் உயிர்செய்த
பரமா! நின்
நற்பொன் சோதித்தாள் நணுகுவது
எஞ்ஞான்றே?

    பொ-ரை : முற்காலமெல்லாம் நன்மை செய்ய அடுக்கும் என்றால் வல்லேன் என்றிசைந்திலேன்; தீமை செய்யலாகாதெனின் மாட்டேன் என்று தவிர்ந்திலேன்; மிகச்சிறிய சாரங்களையுடைய பொருள்களைப் புசித்து உன்னை நீங்கினேன்; பல வகையான எல்லையில்லாத உயிர்களைப் படைத்த மேலானவனே! நினது சிறந்த பொன் மயமான ஒளியையுடைய திருவடிகளைச் சேர்வது எப்பொழுது?

    வி-கு : கிற்றல் – செய்யுந்திறம்கொள்ளுகை. கில்லேன் – எதிர்மறை. ஆயிரம் என்பது எல்லையின்மையைக் குறிக்க வந்தது; நணுகுவது – தொழிற்பெயர்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை; உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை; ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார் என்றபடி.

    கிற்பன் என்றிலன் கில்லேன் என்றிலன் – ‘ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட வேறோர் முயற்சி வேண்டுவதின்று, பேற்றில் வந்தால் மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷமாயிருக்கும்; அதற்கு ஈடாக

1ஒன்றைச்செய்ய வல்லீரே!’ என்றால், 2‘ஓம்; அப்படிச் செய்கிறேன்,’ என்றேன் இலன். ‘இதர விஷயப் பிராவண்யமானது, முயற்சி கனத்துப் பேற்றில் ஒன்றின்றிக்கே இருப்பதொன்று; அதனைத் தவிர வல்லீரே!’ என்றால், ‘ஓம்; தவிருகிறேன்’ என்றேன் இலன். ‘இப்படி விதித்ததைச் செய்யாமையும், விலக்கியதைச் செய்கையும் என்று தொடங்கி?’ என்ன, முன நாளால் – காலமெல்லாம் எனக்கு இதுவே தொழில். ‘இப்படி நெடுநாட்பட நம்மையொழியப் புறம்பே துவக்க வல்லபடி அனுபவிக்கத் தக்க இனியவையான பொருள்களும் உளவோ?’ என்னில், உன்பக்கல் வாராதபடி தகையத்தக்கன உண்டு; ஆனால், அவற்றின் பக்கல் ஒன்று இல்லை’ என்கிறார் மேல்:

    அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், 3தன் நாவில் பசை கொடுத்துப் புசிக்க வேண்டும்படி இருக்கிற பொருள்கள்தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை 4‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன். ‘நெடுநாள் இப்படி நம்மைக் கைகழிந்தீராகில் நம்மை இனிச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன, பல் பல் ஆயிரம் உயிர் செய்த பரமா – எண்ணிறந்த பொருள்களையுண்டாக்கின சர்வாதிகனே! என்றது, ‘இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள பொருளுக்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?’ என்கிறார் என்றபடி. உயிர் செய்கையாவது – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி சரீரத்தோடே சேர்ப்பித்தல். நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று – உன்னுடைய நன்றாய் விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக்கடவேன்?

கிற்பன் செய்தேன்
இச்சைக்கு மேல்பட வேறு ஒன்றும் வேண்டாமே
ஆயாசம் இன்றிகே -இலகுவான உபாயம்
பேற்றில் வந்தால் ஆனந்தமயமான மோஷம்
ஈடாக இச்சை மட்டுமே -இது கூட செய்கிறேன் சொல்ல மாட்டேன்
இதர விஷய சாதனங்கள் அதிகம் பலன் சொல்பம்
அதை தவிர வல்லேன் என்கிறார்
முன நாள் -விகிதம் செய்யாததும் செய கூடாததை செய்ததும் இதுவே யாத்ரை காலம் எல்லாம்
புறம்பே துவக்க வல்ல படி போக்கியம் இருந்ததா -கேட்டானாம் பகவான்
அல்ப சாரங்கள் -அது தன பக்கல் ஒன்றும் இல்லை
முள்ளில் பூவில் ரசம் போலே அல்பம் பலவாய் -தவ பாத பங்கஜம் விட்டு -அங்கெ விரும்பி சென்று இழந்தோம்
தன் நாவில் பசை கொடுத்து புஜிக்க வேண்டும் படி –
நாய் எலும்பை கடித்து தனது வாய் ரத்தம் நக்கி குடிப்பது போலே
கால் தாழ்ந்து
கை களியபோனேன் -ஓடினேன் ஓடி கலியன் -சிருஷ்டித நீ
உயிர் செய்து சரீரம் உடன் சேர்த்து ஜீவாத்மா நித்யம்
பல் பலாயிரம்
ஸ்திதி யோக்யதை உண்டாகும் படி
இல் லாத வஸ்துவை உண்டாக்கின நீ இருக்கும் வஸ்துவுக்கு குணம் கொடுப்பது கஷ்டமா
நின் நல் பொன் சோதி திருவடி கிட்ட

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading