வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இதுவாகில்,
கொந்தார்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்! யான்உனை எங்குவந்து அணுகிற்பனே?
பொ-ரை : ‘பிரஹலாதன், கஜேந்திரன் இவர்களுக்கு உதவி செய்வதற்கு
வந்தது போன்று வந்தாகிலும் எனது மனத்தினை நீ சிதறுண்டு போகாதபடி செய்கிறாயில்லை; இங்ஙனம் அருள் செய்யாமையாகிய இதுவே உன்னுடைய தன்மையாகில், பூங்கொத்துகள் நிறைந்த காயாவினுடைய சிறந்த மலர் போன்ற அழகிய நிறத்தையுடைய என் தந்தையே! யான் உன்னை எங்ஙனம் வந்து சேர்வேன்?’ என்கிறார்.
வி-கு : ‘வந்தும் செய்யாய்’ என்க. ‘செய்யாய்’ என்பது எதிர்மறை வினைமுற்று.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘நீர் ‘வந்தே அருளவேண்டும்’ என்கிறீர்; இது நமக்குத் தட்டுப்படும்; ஒரு முறை பதினாயிரம் ஆண்டு இருந்தோம்; ஒரு முறை நூறு ஆண்டு இருந்தோம்; வருகை நமக்குப் பணியுண்டுகாணும்’ என்ன, ‘எனக்கும் அவ்வவதாரங்கள்போன்று சிலநாள் இருந்து உதவப்பெறில் அழகியது; அது செய்யத் திருவுள்ளமின்றாகில், யானைக்குத் தோன்றியது போலேயும், பிரஹலாதனுக்குத் தோன்றியது போலேயும் எனக்கும் ஒரு தோற்றரவு தோன்றியேயாகிலும் உதவவேண்டும்,’ என்கிறார்.
வந்தாய் போலே வந்து – வந்து சில நாள் இருந்த இராம கிருஷ்ண அவதாரங்களைப் போன்று அன்றிக்கே,
யானைக்குத் தோன்றியது போலேயாதல், தூணிலே தோன்றியது போலேயாதல் வந்தும். என் மனத்தினை – உன்னையொழியத் தரியாதபடியான என் மனத்தை. நீ – நிலைமையறிந்து தரிப்பிக்கும் நீ. இனி, இதற்கு ‘உருவழிந்தவற்றை உண்டாக்க வல்ல நீ’ என்னுதல். சிந்தாமல் செய்யாய் – மனம் நீராய் மங்கிப் போகாதபடி செய்கின்றிலை. ‘இதுவே இதுவாகில், எங்கு வந்து அணுகிற்பன்?’ என்கிறார். இதுவே இதுவாகில் – உன்னையொழிய மங்கிப்போகையும் இதற்குத் தன்மையாய், இது மங்கக் கொடுத்துப் பார்த்திருக்குமது உனக்குத் தன்மையாய்விட்டதாகில்.
கொந்தார் காயாவின் கொழுமலர்த் திரு நிறத்த எந்தாய் – கொந்து ஆர்ந்து தழைத்திருந்துள்ள காயாவினுடைய கொழுவிய மலர் போலே குளிர்ந்திருந்துள்ள திருநிறத்தைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே! என்றது, 1‘சிறியதுக்கு இனியது இடேன்,’ என்று இப்படிச் செய்வதாக இருந்த நீ இவ்வடிவில் சுவட்டை எனக்கு அறிவித்தது என்?’ என்கிறார் என்றபடி. யான் – உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான். இனி, இதற்கு, ‘இவ்வடிவின் இனிமையையறிந்த யான்’ என்னுதல். உன்னை – பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை. இனி, 2‘அந்தப் பரமாத்துமா எவனை வரிக்கிறானோ, அவனால் அடையத்தக்கவன்; பரமாத்துமா அவனுக்கே தன் சொரூபத்தைக் காட்டுகிறான்,’ என்கிறபடியே, ‘நீயே அனுபவிப்பிக்கும் உன்னை’ என்னுதல். எங்கு வந்து அணுகிற்பன் – என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்? ‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்னுதல்.
11000 வருஷம் இருந்தோம் ஒரு முறை
100 வருஷம் இருந்தோம் –
வர சொல்கிறீர் பெரிய கார்யம்
சில நாள் இருந்து -நல்லது -முடிந்தால் இரு இல்லையானால்
யானைக்கு தோற்றினால் போலேயும்
பிரகலாதனுக்கு தோற்றினால் போலேயும்
தோன்றி அருளுவாய்
வந்தாய் போலே வந்தும் -இதை வைத்து அவதாரிகை –
இருந்தவை போலே அன்றிக்கே
என் மனதினை உன்னை தவிர வேறு ஒன்றி அறியாத மனஸ்
உரு அழிந்தவற்றை உருவாக்க வல்ல நீ சிருஷ்டி செய்தாயே
உருகி மங்கி போகாமல்
இதுவே இது வாகில் -உன்னை ஒழிய மங்கி போக ஸ்வாபம் உபகாரம் செய்ய -சிறியது ஆத்மா -வடிவின் அழகை எதற்கு காட்டினாய்
கொந்தார் -காயம் பூ போலே நீலோத புஷ்பம் –
மலர் போலே குளிர்ந்த திரு நிறம் காட்டி எழுதிக் கொண்ட
சுவடு தெரிவித்த பின்பு
நான் சேரும் வகை -கை முதல் இல்லாத நான்
தேனைவ லப்யம் -நீயே காட்டி தான் அடிய
நீயே தந்தாள் ஒழிய
சாதனா அனுஷ்டானம் செய்து கிட்ட முடியாதே நிராசர் ஆகிறார் –
தாழ்வை பார்த்தல் கிட் டவிரகு இல்லை
உன்னை பார்த்தால் விட விரகு இல்லை
சாஸ்திரம் விதி நிஷேதம் மீறி -கிடந்தேன் -இதர விஷய பிரவணன்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply