தலைப்பெய் காலம்
நமன்தமர் பாசம்விட்டால்
அலைப்பூண் உண்ணும்அவ்
வல்லல்எல் லாம்அகலக்
கலைப்பல்ஞா னத்துஎன்
கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம்
பெற்றது நீடுஉயிரே.
பொ-ரை : யமனுடைய தூதுவர்கள் தலைப்படுகின்ற காலத்தில் பாசத்தை வீசினால், இங்கும் அங்கும் அலைக்கப்படுகின்ற அத்துன்பங்களெல்லாம் நீங்கும்படி, பல வகைப்பட்ட சாஸ்திரங்களின் ஞானத்தாலே அறியப்படுகின்ற என் கண்ணபிரானைக் கண்டுகொண்டு என் நெஞ்சம் நிலைபெற உயிரும் நிலைத்தது.
வி-கு : பாசம் – கயிற்று வடிவமான ஓர் ஆயுத விசேடம். ‘அகலக் கண்டுகொண்டு நெஞ்சம் நிலைபெற உயிர் நீடுபெற்றது’ எனக் கூட்டுக. ‘நிலைப்பெற்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு. ‘பெற்றது நீடு உயிர்’ என்பதனை, ‘உயிர் நீடு பெற்றது’ என மாறுக.ஈடு : பத்தாம் பாட்டு. 1இவர் ஆசையற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப்பிராப்தி பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெருவிடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத்திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந்நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.
நமன் தமர் தலைப்பெய் காலம் – யமபடர் வந்து கிட்டுங் காலம். இவன் வாழ்கின்ற நாளில் செய்த குற்றங்களைப் 2பட்டோலை யெழுதிப் பலத்தை அனுபவிக்கும் சமயத்தில் வந்து முகங்காட்டுவார்களாதலின், ‘நமன் தமர் தலைப்பெய் காலம்’ என்கிறார். பாசம் விட்டால் – அவர்கள் தங்கள் கையிலுள்ள பாசத்தை வீசினால். அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல – இவனுக்கு இவ்வருகே நசை கிடைக்கையாலே அது இங்கே இசிக்க, யமபடர்கள் அங்கே இசிக்கப்படும் துக்கத்துக்கு ஓரெல்லையில்லையாதலின், ‘அல்லல் எல்லாம்’ என்கிறார். அத்துன்பங்களை உவமை முகத்தால் விளக்குதற்கு ஒண்ணாதாதலின், ‘அவ்வல்லல்’ எனச் சுட்டுகிறார். இனி, இதற்கு, 3‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால் உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி. இனி,
1‘பகவான் கைவிட்ட பின்னர் யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ? அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு – 2’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும், வேதங்களையறிந்தவனும் நானே,’ என்கிறபடியே, பல கலைகளாலும் அறியப்பட்ட ஏற்றத்தையுடையனாயிருந்து, 3நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டுகொண்டு. என் நெஞ்சம் நிலைப்பெற்று – ‘சிந்தாமற் செய்யாய்’ என்ற நெஞ்சும் ஒரு படி தரிக்கப்பெற்றது. உயிர் நீடு பெற்றது – 4‘வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்துமாவும்’ அழியப்புக்கது; அங்ஙனம் அழியப்புக்க ஆத்துமாவும் இப்போதாயிற்று அழிவின்மையைப் பெற்றது. ‘ஆயின், ஆத்துமாவிற்கு அழிவு உண்டோ?’ எனின், ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினையுடையது’ என்ற இத்துணையேயல்லது, தன்னில் சூக்ஷ்மமாய்ப் புக்கு எங்கும் பரந்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை என்க. இனி நித்தியமான ஆத்துமாவிற்கு நாசமாவது, 1தாஸ்யாசித்தி; ‘சேஷமானமான ஆத்துமாவிற்கு நாசமாவது, 1தாஸ்யாசித்தி; ‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தையொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.
3. ‘’திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’
(நான்முகன் திரு. 68.)
என்று பிரமாணம் இருக்கின்றதே? ஆதலின், ஸ்ரீவைஷ்ணவர்கட்கு யமபாதை
உண்டாகக் கூடுமோ?’ என்ற வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு
விடையாக, ‘அவையெல்லாம் காணக்காண’ என்று தொடங்கி அருளிச்
செய்கிறார்.
. முதலியாண்டான் நிர்வாஹத்துக் கருத்து, ‘ஸ்வதந்திரனான சர்வேஸ்வரன்
உபேக்ஷித்தால் யமபாதை உண்டாம்,’ என்பது. இதனை, நித்திய சூரிகளைப்
போன்ற நித்தியானுபவ யோக்கியதை இவருக்கு உண்டாயிருக்கவும், பிரிவு
இடையிடையே வருதலைப் போன்று கொள்க. இதனை ஸ்ரீ பரதாழ்வான்
பக்கலிலே கண்டோம்.
‘கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்
படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி
நடுங்கிநான் வந்துன் திருவடி யடைந்தேன்
நைமிசா ரணியத்துள் எந்தாய்!’
என்பது, திருமங்கைமன்னன் திருவாக்கு.
தாஸ்யாசித்தி – தாஸ்யம் இல்லாமை. என்றது, ‘சேஷத்துவம் இல்லாமை’
என்றபடி. சேஷமான பொருளுக்கு – ஆத்துமாவுக்கு. சேஷத்துவம்
நிரூபகமானால் – சேஷத்துவத்தைக்கொண்டே
நிரூபிக்கப்படவேண்டியிருந்தால். நிரூபகத்தை ஒழிய – அந்த சேஷத்துவத்தை
ஒழிய. நிரூப்ய சித்தி இல்லை – நிரூபிக்கப்படுகின்ற ஆத்துமா இல்லை.
என்றது, ‘சேஷத்துவம் இல்லையாம்போது ஆத்துமாவும் இல்லையாம்,’
என்பது கருத்து.நசை அற்ற வாறே -பரம விடாயர்
சாய் கரகம் போலே -அர்ச்சை –
அந் நிலையை காட்டித் தரிப்பிக்க
கண்ணனை கண்டு கொண்டு
யம படர் வந்து கிட்டும் காலம்
ஜீவிக்கும் காலம் வேண்டிற்று செய்து திரியும்
குற்றங்கள் பட்டோலை செய்து -முகம் காட்ட
பாசம் வீசினால் -நசை இங்கே இருப்பதால்
அவர்கள் அங்கெ இழுக்க -கிலேசம் –
அலை போலே -ஹிம்சைக்கு த்ருஷ்டந்தம் இல்லை
அல்லல் -சஜாதீயமான அல்லல் எம்பெருமானை பிரிந்து படும் அல்லல் -எம்பார் வார்த்தை –
முதலியாண்டான் -பகவத் அலாபம் -சம்சாரத்தில் இருந்தால்-போகும் படி -அவன் கரை ஏற்ற வேண்டும் –
வேதம் கலைகளால் அறியப் பட்ட கண்ணன்
கண்டு -நெடும் கை நீட்டாக இன்றி கண்ணுக்கு விஷயமாக கண்ணன் அவதரித்து
உயிர் வாழ்ச்சி
அழிய புக்கு நித்யத்வம் இப்பொழுது அடைந்தது
நிராசராய் முடிய போனவர் -உயிர் க்கு உயிர் வந்தது என்கிறார் –
நாசம் -தாஸ்யம் தன்மை இழந்தால் அழிந்தால் போலே தானே –
இருந்து என்ன பிரயோஜனம் –
இல்லாதது போலே தானே
தாஸ்யம் அந்தரங்க நிரூபகம்
கண்ணனை கண்டு கொண்டு உருகி போனதே
அழிய கூடிய வஸ்து விட வேறு பட்டது ஆத்மா சோழ வந்தது –
திருக் கல்யாண குணங்கள் கண்டால் உருகாமல் இருந்தால் அழிந்தது போலே
சேஷத்வம் சேஷ வச்துவ்வுக்கு நிரூபகம் –
அடிமை தன்மை பெறுவதே உயிர் பெற்றது போல்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply