சூரணை-181-
சரண்ய முகுந்தத்வம்
உத்பலாவதகத்திலே
பிரசித்தம் ..
(உத்பலாவதகம் –உத்பல -அவத்-அகம் / அவத் -காப்பாற்றுதல் -முமுஷுக்களைக் காப்பாற்றும் இடம் )
சரண்ய முகுந்தத்வம்
அதாவது
சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருவாய்-9-10-5-என்று
கீழ் சொன்ன விசேஷத்தாலே எல்லார்க்கும் சரண வர்ண அர்ஹனாய் இருக்கும் அவனுடைய மோஷ ப்ரதத்வம்
உத்பலாவதகே திவ்யே விமாநே புஷ்கரேஷணம்
சௌரி ராஜம்மஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம் –என்கிற படியே
திருக் கண்ண புரத்தில் – உத்பலாவதகம் என்கிற பேரை உடைத்தான திவ்ய விமாநத்தில்
நிற்கிற நிலையில் எல்லாரும் அறியலாம் படி பிரசித்தம் என்கை ..
முகுந்தத்வம் ஆவது முக்தி பூமி ப்ரதத்வம்
வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்கையாலே -ஆய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது ..
பலம் என்று மாம்சமாய் -உத்பலர் என்று மாம்சல தேகராய் இருக்கை அன்றிக்கே
சரீர சோஷணத்தாலே உத்கத மாம்சராய் கொண்டு -உபேஷித தேகராய் இருக்கும்
முமுஷுக்களாய் -தேஷாம் மமாவதோ வாஸம் உத்பலாவதகம்விது –என்கிறபடியே
அவர்களுக்கு ரஷகன் எழுந்து அருளி நிற்க்கையாலே -உத்பலாவதகம் -என்று அங்குத்தை
திவ்ய விமானத்துக்கு பேர் ஆகையாலே -ஆய்த்து -மோஷ ப்ரதத்வம் அந்த ஸ்தலத்திலே பிரசித்தம் என்றது ..
——————————————
சூரணை-182-
மார்க்க பந்து சைத்யம்
மோகனத்தே
மடு விடும்–
அதாவது
இப்படி மோஷ பிரதனனான தன்னுடைய பிரசாதத்தாலே -மோஷ பூமிக்கு போவார்க்கு –
காள மேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதி–திருவாய்-10-1-1 –என்றும் –
ஆப்தன் (ஆத்தன்)- தாமரை அடி இன்றி மற்றிலம் அரணே–திருவாய்-10-1-6-–என்னும் படி
ஆப்தனாய் கூடக் கொண்டு போம் மார்க்க பந்து வானவனுடைய
சுரி குழல் கமலக் கண் கனி வாய் காள மேகம்–திருவாய்-10-1-1 -என்றும் –
அவனடி நிழல் தடம்–திருவாய்-10-1-2 -என்றும்
மரகத மணித் தடம்—திருவாய்-10-1-8 -என்றும்
சொல்லும் படி இருந்துள்ள சம்சாரிக சகல தாப ஹராமான சைத்யம் —
(சைத்யம் -குளிர்ச்சி -காளமேகம்-தடம்-என்பதால் )
அம்ருத பிரதான சமயத்திலே அசுரர்களை மோஹித்த இடம் ஆகையாலே
மோகன ஷேத்ரமான திரு மோகூரிலே நிறைந்து நிலை பெற்று இருக்கும் என்கை ..
மடுவிடும் -என்றது மரகத மணித் தடம்-என்கிற சமாதியாலே ..
——————————————-
சூரணை -183-
ச சைந்ய புத்ர சிஷ்ய
சாத்ய ஸித்த பூ சுர
அர்ச்சனத்துக்கு
முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்
அநந்த சயநத்திலே வ்யக்தம்-
(ச சைந்ய சாத்ய அர்ச்சனத்துக்கு முகத்தையும்- – ச புத்ர -ஸித்த அர்ச்சனத்துக்கு நாபியையும் –
ச சிஷ்ய பூ சுர அர்ச்சனத்துக்கு பாதங்களையும் த்வார த்ரயத்தாலே காட்டும் – சாம்யம் அநந்த சயநத்திலே வ்யக்தம் )
அதாவது
அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் -திருவாய்-10-2-6-– என்கிற
சேநாசகிதரான சேனை முதலியார் ஆகிற -யத்ர பூர்வே சாத்யா-புருஷ ஸூக்தம் –என்கிற
நித்ய ஸூரிகளின் தலைவரான சாத்யர் உடையவும் —
அமரார் திரிகின்றார் கட்கு ஆதி—திருவாய்-10-2-6- -என்கையாலே
புத்ரர்களான ப்ரமாதிகளான சித்தர் உடையவும் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்–திருவாய்-10-2-8- -என்று
இவர் உபதேசம் கேட்ட சிஷ்யர்களான பூ சூரர் உடையவும் –
அர்ச்சனதுக்கு திரு முகமும் திரு நாபியும் திரு அடிகளும் ஆகிய இவற்றை திரு வாசல் மூன்றாலும்
தர்சிப்பிக்கிற நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்று விசேஷம் பாராத சாம்ய குணம்
திரு வநந்த புரத்திலே கண் வளருகிற பிரகாரத்தாலே வ்யக்தமாய் இருக்கும் என்கை —
————————————–
சூரணை -184-
மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்
வளம் மிக்க நதியிலே கரை புரளும்
மோஷ தாநத்திலே பிரணத பாரதந்த்ர்யம்
அதாவது
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -திருவாய்-10-6-1-என்றும் –
விண்ணுலகு தருவானாய் விரைகின்றான் விதி வகையே-திருவாய்-10-6-3- -என்றும்
இப்படி சர்வ சமனானவன் ஆஸ்ரிதர்க்கு மோஷ பிரதானம் பண்ணும் அளவில்
அவர்கள் விதித்த படி செய்வானாய் நிற்கிற ஆஸ்ரித பாரதந்த்ர்யம் –
வளம் மிக்க வாட்டாற்றான்–திருவாய்-10-6-3- -என்று ரஷ்ய வர்க்கம் குறைவற்ற தேசம் ஆகையாலே
அவனுக்கு சம்பத்து மிக்கு இருக்கிற திரு வாட்டாற்றிலே அமர்யாதமாக பிரவகிக்கும் என்கை ..
கரை புரளும் என்றது ஆறு என்கிற சமாதியாலே —
————————————–
சூரணை -185-
த்யாஜ்ய தேக வியாமோகம்
மருள்கள் கடியும்
மயல் மிகு பொழிலிலே
தலைக்கும் ..
த்யாஜ்ய தேக வியாமோகம்
அதாவது
முமுஷுக்களுக்கு த்யாஜ்யமான தேகத்திலே –சரம தேகம் ஆகையாலே –
மகிஷி யினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜ புத்ரனைப் போலே –
வஞ்சக் கள்வனாய் நெஞ்சும் உயிரும் உள் கலந்து–திருவாய்-10-7-1 –என்றும் –
மாய வாக்கை இதனுள் புக்கு -திருவாய்-10-7-3–என்கிறபடியே-
இதன் தோஷம் பாராமல் உள் புகுந்து –
திரு மால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருவாய்-10-7-8–இத்யாதிப் படி
உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இதில் ஏக தேசத்தில் பண்ணி
மங்க ஒட்டு -உன் மா மாயை -திருவாய்-10-7-10- -என்று கால் கட்டி விடுவிக்க வேண்டும் படி அவனுக்கு உண்டான வியாமோகம்
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே -திருவாய்-10-7-7-என்று
சர்வருடைய அஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்குவதாய் –
மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை–திருவாய்–2-10-3 -என்று
போக்யதா பிரகர்ஷத்தாலே போக்தாக்களை பிச்சேற்ற வற்றான சோலையை உடைய
தெற்கு திருமலையிலே சம்ருதமாய் செல்லும் என்கை ..
பொழில் -என்கிற சமாதியாலே ஆய்த்து -தழைக்கும் -என்றது ..
———————————–
சூரணை -186-
அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும்
ஸ்வாமித்வம்
பெரு நகரிலே
பேர் பெற்றது ..
அதாவது
திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-திருவாய்-10-8-1-என்று
ஸ்வ அங்கீகாரத்துக்கு உடலான ஸூஹ்ருத லவ லேஸம் இல்லாதவரையும் –
மடி மாங்காய் இடும் போலே -என்னூரைச் சொன்னாய் -இத்யாதியான
அஞ்ஞான ஸூஹ்ருதங்களை ஆரோபித்தும் அங்கீகரிக்க இடம் பார்க்கும்
அவனுடைய ஸ்வாமித்வம் –
பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவணை மேல்–பெரிய திருமொழி-5-9-3–என்று
கண் வளர்ந்து அருளுகிற திருப்பேர் நகரில் பிரசித்தம் என்கை …
ஆக திருப் பதிகள் தோறும் ,ஒரோ குணம் பிரத்யேன பிரகாசிக்கும் என்னும் இடம்
இவர் அனுசந்தித்த திருப்பதிகள் எல்லாவற்றிலும் தர்சிப்பித்தார் ஆய்த்து- –
————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-