சூரணை -157-
இப்படி பல இடங்களிலும் தூது விட்டால் ப்ராப்ய வஸ்த்வைக்யம் குலையாதோ
என்கிற சங்கையிலே -பரத்வாதிகளில் ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லை
என்னும் அத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் —
பகல் ஓலக்கம் இருந்து –
கறுப்பு உடுத்து –
சோதித்து –
காரியம் மந்த்ரித்து
வேட்டை ஆடி
ஆராமங்களிலே விளையாடும்
ராஜ நீதி யாதும் சோராமல்
செங்கோல் நடாவுகிற
பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய
இளவரசுக்கு
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்–
(பகல் ஓலக்கம் இருக்கும் ராஜ நீதி-
கறுப்பு உடுத்து சோதிக்கும் ராஜ நீதி –
காரியம் மந்த்ரிக்கும் ராஜ நீதி –
வேட்டை ஆடும் ராஜ நீதி
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -என்று கொண்டு -ராஜ நீதி -முறை பிரகாரம் -என்றபடி
வேறு வேறு காலங்களிலே-செங்கோல் நடாவுகிற- ஒரே அரசன் செய்வது போலே
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம்-என்றபடி )
அதாவது
பகல் ஓலக்கம் இருந்து
சகல பரிஜன சேவ்யனாய்க் கொண்டு தம் வீறு தோற்ற பகல் ஓலக்கம் இருக்கையும்
கறுப்பு உடுத்துச் சோதித்து
ராஜ்யத்தில் உள்ளோர் தோஷ குணங்கள் அறிகைக்காக -ராத்ரியிலே
பிறர் அறியாத படி கறுப்பு உடுத்தி நகர சோதனம் பண்ணுகையும் –
கார்யம் மந்த்ரித்து –
ராஜ்யத்தில் சிஷை ரஷைகளுக்காக கார்ய விசாரம் செய்கையும்
வேட்டை யாடி
பின் துஷ்ட சத்வ நிரசன அர்த்தமாக வேட்டை ஆடுகையும் –
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி –
அந்த ஸ்ரமம் தீர பூம் தோப்புகளிலே அபிமத விஷயங்களோடு விளையாடுகிற ராஜ நீதியானது –
ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த என்னும் மூன்று முடிக்கு உரிய இளவரசுக்கு –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திரு அரங்கச் செல்வனார் –நாச்சியார் –11-3-என்றும் –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர்–திருவிருத்தம்-33- -என்றும்
சொல்லுகிறபடி உபய விபூதியிலும் ஏக தேசமும் சேஷியாத படி -தன்னுடைய திவ்ய ஆக்ஜையை நடத்துபவனாய் –
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–திருவிருத்தம்-80- -என்று
சொல்லப்பட்ட -சௌலப்ய -பரத்வ -பிரணயித்வங்களாலே -வந்த மூன்று முடிக்கு-
(பாரளந்த பேரரசே-என்பதால் சௌலப்யம் / எம் விசும்பரசே என்பதால் பரத்வம் /
எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே–என்பதால் -பிரணயித்வம் -என்றவாறு )
உரிய வான் இளவரசனான சர்வேஸ்வரனுக்கு விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் –
விண் மீது இருப்பாய் –திருவாய் -6-9-5–என்று
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத் பத்தி
ஆஸ்தே விஷ்ணு ரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ-என்கிற படியே
பகல் கண்டேன்–இரண்டாம் திருவந்தாதி-81–என்கிற ஒரு பகலான பரமபதத்திலே –
ஒண்டொடியாள் திரு மகளும் தானுமாய்–திருவாய்-4-9-10- நித்ய முக்தர் சேவிக்க ஓலக்கம் இருக்கையும் –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -என்று
யமாத்மா ந வேத -என்கிறபடியே –
வ்யாப்த பதார்த்தங்களுக்கு தெரியாத படி அந்தர்யாமியாய் –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் அறிகையும்-திருமாலை-34 —
கடல் சேர்ப்பாய் -என்று
பாற்கடல் யோக நித்தரை செய்து சேதன ரஷோ உபாயங்களை சிந்திக்கையும் –
(மந்த்ர ஆலோசனையைச் சொன்னபடி ),
அனந்தரம்
மண் மீது உழல்வாய் -என்று ரக்ஷண அர்த்தமாக வந்து அவதரித்து
களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவான்–நாச்சியார்–14-9–என்கிறபடியே
ஆஸ்ரித விரோதி துஷ்ட சத்வ நிரசனமாகிற வேட்டை யாடுகையும் -(விபவத்தைச் சொன்னபடி)
மலை மேல் நிற்பாய் -என்று –
விரோதி நிரசன ஸ்ரமம் ஆர நிரதிசய போக்யங்களான –
ஆராமம் சூழ்ந்த கோவில்-சிறிய திருமடல் -71- என்றபடி -திரு மலை முதலான தேசங்களிலே ரசோத்தரமாக வசிக்கையும்
ஆகிய இவை ஐந்திலும் காணலாம் என்கை–
இத்தால் பரத்வாதிகளிலே ஸ்தல பேதம் ஒழிய வஸ்து பேதம் இல்லாமை காட்டப் பட்டது–
———————————————
சூரணை -158-
ஆனால் ஐந்திலும் ஒத்து இருக்கை அன்றிக்கே
இவர் அர்ச்சாவதாரத்தில் மண்டி இருப்பான் என் என்னும் ஆ காங்ஷையிலே
இதன் குண பூர்த்தியை அருளிச் செய்கிறார் மேல்–
தமர் உகந்த
அடியோமுக்கே
என்னும்
பின்னானார் வணங்கும் இடத்திலே
எல்லாம் பூர்ணம் —
அதாவது
தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த எப் பேர் மற்று அப் பேர்-முதல் திருவந்தாதி -44 -என்று
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யங்களே தனக்கு திரு மேனியாகவும் –
அவர்கள் உகந்த திரு நாமங்களே தனக்கு திரு நாமமாகவும் -கொண்டு இருக்கும் என்றும் –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -பெரிய திருமொழி-4-9-5 -என்று
தேச கால கரண விப்ரக்ருஷ்டதைகளால் பரத்வாதிகளில் அணுகைக்கு
ஆள் அன்றிக்கே அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு –
ருசி பிறந்த போதே – நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்காக அன்றோ திரு இந்தளூரில் வந்து
நிற்கின்றது என்று சொல்லப்பட்ட- பின்னானார் வணங்கும் சோதிதிரு மூழிக் களத்தனாய் –திரு நெடும் தாண்டகம் -10–என்று
அவதாரங்களுக்கு பிற்பாடர் ஆனவர்களுக்கு அனுபாவ்யமான அர்ச்சா அவதாரத்திலே –
சர்வம் பூர்ணம் சஹோம்-உபநிஷத் -என்கையாலே –
பரத்வாதிகளில் அனுபாவ்யமான குணங்கள் எல்லாம் பூர்ணம் என்கை —
ஆக இப்படி ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்தித்யாதிகமாய்-அடியோமுக்கே-என்னும் படி –
கறை விழுந்த இடமான – அர்ச்சா அவதாரத்தில் முற்பட்டவற்றில் உள்ளவையும் காணலாம் ஆகையாலே –
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்–7-10-10-
என்னும் படி மண்டி இருப்பார் என்று கருத்து–
———————————————————
சூரணை-159-
இப்படி அர்ச்சாவதாரத்தில் எல்லாம் பூர்ணம் ஆகில்
எல்லா திருப் பதிகளிலும் எல்லா குணங்களும் ஒக்க பிரகாசிக்குமோ என்னும் ஆ காங்க்ஷையிலே
பரத்வாதிகளுக்கு அசாதாரணாமாயும் -சாதாரணாமாயும் இருக்கும் குணங்களில்
ஓர் ஒரோ குணம் ஒரோ திருப் பதியிலே பிரதான்யேந பிரகாசிக்கும் படியை –
இவ் ஆழ்வார் அனுபவித்த திருப்பதிகள்-(30 ) தோறும் தர்சிப்பிக்கிறார் மேல்–
அதில் பிரதமத்தில் பரத்வாதிகளுக்கு அசாதாரானாமான ஒரோ குணம் பிரதான்யேந பிரகாசிக்கும்
திருப்பதிகளை அருளிச் செய்யக் கோலி
அகில திவ்ய தேச பிரதானமான கோயிலில் பிரகாசிக்கிற குணத்தை ஆதியிலே அருளிச் செய்கிறார் —
வன் பெரு வானகம் முதல் உய்ய
இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற
திருவாளன் திருப்பதி
வடிவுடை கடலிடம் கட்கிலீ (காகுத்தா)
என்னும் அவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற
வியூஹ சௌஹார்தம் பிரதானம் —
அதாவது
வன் பெரு வானகம் முதல் உய்ய –
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய –பெருமாள் திருமொழி-1-10-என்று
முதலில் ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளி– பின்பு பூ லோகத்தில் எழுந்து அருளிய கட்டளையிலே –
நைத்திக பிரளயத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக இவ் அருகு உண்டான உபரிதன லோகங்களும்
அங்குள்ள ப்ரஹ்மாதிகளும் பூமியும் இங்குள்ள மனுஷ்யரும் உஜ்ஜீவிக்கும் படியாக —
(பிணி யரங்க வினையகலப் பெரும் காலம் தவம் பேணி
மணி யரங்க நெடு முடியாய் மலர் யயனை வழி பட்டுப்
பணி யரங்கப் பெரும் பாயல் பரஞ்சுடரை யாம் காண
அணி யரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் –ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்
கொடியாடு மணிமாட அயோத்தி மூதூர் குடி துறந்து திருவரங்கம் கோயில் கொண்ட நெடியோனே–திருவரங்கக் கலம்பகம் -)
இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திரு வாளன் திருப்பதி –
திரு வாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திரு அரங்கம் -பெரியாழ்வார் -4-9-10-என்றும்
திருவாளன் திருப்பதி-பெரியாழ்வார் -4-8-10 -என்றும் சொல்லுகிற படி
திரு உள்ளம் உகந்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ யபதி உடைய திருப் பதியான கோயிலானது-
வடிவுடை கடலிடம் கட்கிலி ( காகுத்தா ) என்னும் அவற்றில் –
வடிவுடை வானோர் தலைவனே (பரத்வ அனுபவமும் ) -என்றும் –
கடலிடம் கொண்ட கடல் வண்ணா (வ்யூஹ அனுபவமும் )-என்றும் –
கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் (அந்தர்யாம்ய அனுபவமும்)-என்றும்
காகுத்தா கண்ணனே ( அவதார விபவ அனுபவம் ) -என்றும்
சொல்லுகிற படி தோன்றும் பரத்வாதிகளில் வைத்துக் கொண்டு-
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்த்த பிரதானம் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் -என்றும் –
என் கொலோ முடிகின்றது இவட்கே -என்றும் –
இவளுடை ஆட்டத்தில் தேவரீர் சிந்தித்தது என் ?
இவள் கார்யம் என்னாய் முடிய கடவது ?-என்று சொல்லும்படி பண்ணுகிற
பாற் கடல் யோக நித்தரை சிந்தை செய்யும் வியூஹ குணமான சௌஹார்த்தத்தை
பிரதானமாக உடைத்தாய் இருக்கும் என்கை —
இஸ் ஸ்தலத்திலே வியூஹ சௌஹார்த்தமே பிரதான்யேன பிரகாசிக்கும் என்ற படி –
————————————————
சூரணை -160-
இனி கோவிலுக்கு அனந்தரம் சொல்லப் படுவதான திருமலையில் பிரகாசிக்கிற
குணத்தை அருளிச் செய்கிறார் —
மண்ணோர் விண்ணோர் வைப்பில்
போகின்ற ஏழு உலகுக்கு
உயிர் பாசம் வைத்த
நிகரில் வாத்சல்யம்
உஜ்ஜ்வலம்-
( வைப்பு -திருமலை / போகின்ற எழு உலகுக்கு உயிர் -அந்தர்யாமி -அதன் குணம் வாத்சல்யம் –
வாத்சல்யத்துக்கு விசேஷணங்கள் -பாசம் வைத்த என்பதும் நிகரில் என்பதும் –
ஒழிவில் காலம் -உலகமுண்ட பெருவாயா திருவாய்மொழிகளில் இருந்து அருளிய ஸ்ரீ ஸூக்திகள்
வைப்பில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம் என்று அன்வயம் )
அதாவது
மண்ணோர் விண்ணோர் வைப்பில் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு–திருவாய்-1-8-3 -என்றும் –
தண்ணருவி வேம்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன்-45–என்றும் –
உபய விபூதி உள்ளோர்க்கும் சேமித்து வைத்த நிதி போல் பிராப்யமாய் இருக்கிற திரு மலையில் –
போகின்ற ஏழு உலகுக்கு உயிர்ப் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்
போகின்ற காலங்கள் -போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய்–திருவாய்-2-6-10 -என்றும் –
கண்ணா ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை–பெரிய திருமொழி-1-9-10- -என்றும் –
சொல்லுகிறபடி -சர்வ காலமும் சர்வ ஆத்மாக்களுக்கும் சர்வ வித பந்துமாய்க் கொண்டு –
சர்வருக்கும் ஆத்மாவாய் இருக்கிற அந்தர்யாமி உடைய குணமாய் இருப்பதாய் –
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி—திருவாய்-3-3-4-என்றும் –
நிகரில் புகழாய் -திருவாய்-6-10-10- -என்றும் –
மிகவும் தண்ணியனாய் இருக்கிற என் பக்கலிலே சங்கத்தை பண்ணினான் என்றும் –
ஒப்பில்லா புகழை உடையவனே என்றும் சொல்லப்பட்ட -வாத்சல்யம் –
பரம் சுடர் ஜோதி -என்று வடிவிலே தொடை கொள்ளலாம் படி உஜ்ஜ்வலமாய் இருக்கும் என்கை —
பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் -என்கையாலே
ஒழிவில் காலம் எல்லாம் –
உலகம் உண்ட பெரு மாயன்-
இரண்டையும் சேர்த்துப் பிடித்து அருளிச் செய்தமை தோற்றுகிறது–
கோவிலுக்கு அனந்தரம் திரு மலையை சொல்லுகை தேட்டமாகில் ,இரண்டு திரு மலையையும் ஒவ்வாதோ ?-
தெற்குத் திரு மலை விஷயமான கிளர் ஒளி இளமை-கீழே கிடக்க –
ஒழிவில் காலத்தில் -சொன்ன வடக்குத் திருமலையை அருளிச் செய்வான் என் என்னில் –
பரத்வாதிகளுக்கு அசாதாரணமான குண பிரகாசமான ஸ்தலங்களை அருளிச் செய்கிற பிரகரணமாகையாலே
தெற்கு திரு மலையில் பிரகாசிக்கிற குணம் இதற்குச் சேர்த்தி இல்லாதது கொண்டு –
கிளர் ஒளி இளமை யை -செஞ்சொல் கவியோடு சேர்த்து அருளுவதாக விட்டு வைத்து –
இது முதலாக அருளிச் செய்தார் இத்தனை —
————————————————–
சூரணை -161-
இனி -ஒழிவில் காலத்துக்கு -பின்பு திருப்பதி விஷயமான திரு வாய் மொழி –
ஒன்றும் தேவு -ஆகையாலே ,திரு நகரியிலே பிரகாசிக்கிற குணத்தை அருளி செய்கிறார் .–
உபய பிரதான
பிரணவமான
உறை கோவிலிலே
எத் தேவும் என்னும்
பரே சத்வம் பொலியும்-
(பர ஈசத்துவம் -பரேசத்வம்/பொலியும் என்றது பொலிந்து நின்ற பிரான் உத்சவர் திரு நாமம் என்பதால் )
அதாவது
உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே —
ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத (ஓம் என்று சொல்லி ஆத்மாவைத் தியானம் செய்யக் கடவன் )-என்றும் –
ஒம் காரோ பகவான் விஷ்ணு (ஓம் என்பது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணு)-என்றும் -சொல்லுகிறபடியே
சப்தார்தங்களில் உடைய பிரதான்யத்தாலே ஜீவ ஈஸ்வரர்கள் இருவருக்கும் வாசகமாய் கொண்டு
இருவருடையவும் பிரதானம் தோன்றுவிக்கிற பிரணவம் போலே
ஆழ்வாருடையவும் -பொலிந்து நின்ற பிரான் உடையவும் ஆக்ஜை இரு புரிந்து நடக்கையாலே –
உபயர் உடையவும் பிரதானம் தோற்றுவிக்கும் படி இருப்பதாய் –
அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று
பரம பதத்தில் சம்சாரிகள் இழவை நினைத்து உள் வெதுப்போடே இருக்குமா போலே அன்றி –
அவர்களுக்கு அணித்தாக வந்து நிற்கப் பெறுகையாலே
உள் வெதுப்பு அற்று வர்த்திக்கிற ஸ்தலமான திரு நகரியிலே —
எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும் –
எத் தேவும் எவ் உலகங்களும் மற்றும் தன்பால் மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நிற்கும் வண்ணம் நிற்கவே –
திரு குருகூர் அதனுள் குரிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தன்–திருவாய்-4-10-10- -என்று
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும்– ஸ்வ அசாதரண விக்ரகத்தோபாதி தனக்கே பிரகாராம் படி
இருக்கிற ஐஸ் வர்யத்தோடு கூட திருக் குருகூரில் சுலபனாய் வந்து நின்றான் என்று சொல்லப்பட்ட
திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,
திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்-
சுலபனான நிலையில் -பிரகாசிக்கிற பரத்வ லஷணமான ஈஸ்வரத்வம் –
பொலிந்து நின்ற பிரான்-என்கையாலே அவிருத்தம் ஆகா (விளங்கா) நிற்கும் என்கை–
————————————————-
சூரணை -162-
இதுக்கு பின் திருப்பதி விஷயமான திருவாய்மொழி -எங்கனயோ -ஆகையாலே –
திருக் குருங்குடியில் பிரகாசிக்கிற குணத்தை அநந்தரம் அருளிச் செய்கிறார் —
வைஷ்ணவ வாமநத்தில்
நிறைந்த நீல மேனியின்
ருசி ஜனக விபவ
லாவண்யம் பூர்ணம் —
அதாவது
திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநத்திலே என்றது ஸாபிப்ராயம்
அதாவது வாமன அவதாரத்திலே தன்னுடைமை பெறுகுகைக்கு அர்த்தி ஆனாப் போலே –
அர்த்தியாய் நின்று ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய் –
நாமும் நம் இராமானுசனை உடையோம் – என்கையாலே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய்-
வாமன அவதார அம்சமாக -புராண சித்தராய் இருக்கிற நம்பி உடைய திருப்தி என்கை —
அன்றிக்கே –
அறியக் கற்று வல்லவர் வைட்டணவர்-என்று இத் தேச விஷயமான திருவாய் மொழியை
கற்றவர்கள் வைஷ்ணவர் என்கையாலே வைஷ்ணவர்கள் உடையதாய் -வாமன ஷேத்ரமாய்
இருக்கும் தேசத்தில் என்னுமாம்-
வாமன அவதார பிரசங்கத்துக்கு பிரயோஜனம் -விபவ லாவண்யம் பூர்ணம் -என்கிறதுக்கு
உடலாக விபவ அன்வயத்தை உணர்த்துகையும் –
குறியவன் குடி குறும்குடி – என்னும் அர்த்தத்தை தெரிவிக்கையும் –
ஆக இப்படி இருந்துள்ள திருக் குறும்குடியுள் –
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும்
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய்-5-5-7-என்றும் ,
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே -திருவாய்-5-5-6-என்றும்
சொல்லுகிறபடியே -இவர் உள்ளத்தில் வேறு ஒன்றுக்கும் இடம் அறும் படி -பிரகாசிக்கிற –
காள மேக நிபச்ஸ்யமமான விஹ்ரஹத்தின் உடைய –
செல்கின்றது என் நெஞ்சம்–திருவாய்-5-5-1-என்கிறபடி –
மேன் மேலும் அனுபவ ருசி ஜனகமாய்
ரூபவான் ஸூபக ஸ்ரீ மான்–ஸூ ந்தர-34-30- -என்றும்
ரூப சம்ஹனனம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூவேஷதாம் தத்ருஸூ விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸின-ஆரண்ய-1-13-என்றும் –
விபவத்தில் பிரகாசிக்குமதாய் சொன்ன -சமுதாய சோபையான -லாவண்யம்-
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த திருவாய்-5-5-7-என்கையாலே பூரணமாய் இருக்கும் என்கை –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply