சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2
-மூன்று முதல் ஆழ்வார்கள் இந்த மூன்றையும்-காட்ட-பிராப்ய அந்தர்கதி–ஆனந்தமே பயன்-தத் விஷய பக்தியே அமையும்
-திரு மேனி குண அனுபவமே பக்தி கொடுத்ததே–கர்ம ஞான ஸ்தானம் போல் இவை நிற்க–உபாயம்-அவன் திரு மேனி குண அனுபவம் தான் என்கிறார்
ஒளி விடும் பூ மென்மை திரு அடிகள்-
ஆசை வளர்த்து காதல் ஆகி அன்பாகி இன்பம் கொடுக்க தேன் வழிய கடல் போல் இருந்து மூழ்கி இருப்பவன் அமுத வெள்ளத்தான் —
-திரு மலை நம்பி வரவேற்க-நீசன் வேற யாரும் இல்லை என்ற ஐதீகம்-
ஹே-திருவிக்கிரம தும் சரணாரவிந்தம் ..பரதன் இருப்பையே பெறுவான் பாதுகை பெற்றதும்-
-ரச சாகரம்–தடால் என்று ஆசை உடன் விழுந்து அனுபவிக்க ––
திருமேனி வைஷண்யம் அனுபவித்து
அவன் திருவடிகளை சென்னியில் சூட வேணும் என்று இருப்பதே புருஷார்த்தம்
இத்தை விட்டு
உண்டியே உடையே உகந்து திரியும் இந்த மண்டலதவரோடு கூடாமல்
சாத்விகர்கள் -பரம பக்தர்களின் -அந்தரங்க உறுதியை பேசி மகிழ்கிறார்
இப்பாட்டில் –
திருச் சந்த விருத்தத்தில் -108-பாசுரம்
கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யள்ளதொன்று கொள்வனோ குறிப்பிலே –
அவனை கிட்டி அனுபவிப்பதை விட
எம்பெருமான் உடன் கூட வேண்டும் என்கிற
அனுபவிக்க மநோ ரதமே நித்யமாகச் செல்லுமாகில்
அதுவே சிறக்கும்-
அனுபவ நிலையில் காட்டிலும்
அனுபவ பாரிப்பு நிலையே சிறந்தது என்றதாய்த்து –
ஆதியிலே உலகங்களைப் படைத்தும்
பிரளயம் வந்தவாறே அவற்றை வயிற்றிலே வைத்து ரஷித்து அருளியும்
வருகிற எம்பெருமான் திருவடிகளை நாம் சிரம் மேல் வைத்துக் கொள்ள ஆசை கொண்டு
அந்த ஆவலினால் நெஞ்சு நீர்ப்பண்டமாகி உருகி
மேன்மேலும் பர பக்தி பரம பக்திகள் தலை எடுத்து இருக்கும்
நிலைமையே தலை சிறந்தது
இந்த ஆவல் தான் அமுத வெள்ளம்
அப்படிப் பட்ட ஆவல் பூண்டு
என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்றும்
மாயோனை மனத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்து நாளே -என்றும்
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே -என்றும்
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கு நாளே -என்றும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு
பெரும் குழுவு கண்டு
யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே -என்றும்
போன்ற பாசுரங்களை வாய் வெருவிக் கொண்டு
இதுவே ஆனந்தமாக போது போக்க பிராப்தமாக இருக்க
இத்தை விட்டு
கூரை சோறு முதலிய அல்ப பலங்களை அபேஷித்து
அங்கும் இங்கும்
அலைந்து உழல்கின்ற பாமரர்கள் அப்படியே அலையட்டும்
ஒரு பொருட்கு அசைவோர் அசைக-
தெளிந்த ஞானம் உடையவர்கள் கீழ்ச் சொன்ன அமுத வெள்ளத்திலே ஊன்றி இருப்பார்கள்
திருவோடு மருவிய இயற்க்கை பெறினும்
மாயாப் பெரு விறல் பெறினும்
உலகம் மூன்று பெறினும்
நல்வீடு பெறினும்
தெள்ளியோர் குறிப்பு
இவற்றைக் கொள்வது எண்ணாது
கூடும் ஆசை அல்லது ஓன்று கொள்வனோ குறிப்பிலே -என்றபடி
எம்பெருமான் உடன் கூட வேணும் என்கிற ஆசை ஒன்றையே தெள்ளியார் குறிக் கொண்டு இருப்பார் -என்றவாறு
தெள்ளியார் -என்றது திரு மழிசைப் பிரான் போல்வாரை –
நேரிய காதல் அன்பில் ஈன் தேறல்
அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு -என்ற வரையில்
அவா காதல் அன்பு இன்பு தேறல் அமுதம் –
ஒரு பொருள் பன்மொழிகளை இணைத்து தொடுத்து
ஆதாரம் அளவற்று இருப்பதை காட்டி அருளுகிறார்
அவா ஆர் –-என்றும் பிரித்து –அவா நிரம்பிய -என்ற அர்த்தம் -ஒரு பொருட்கு அசைவோர் அசைக
வாக்காலே சொல்லவும் கூசி – ஒரு பொருட்கு -என்கிறார் ஆழ்வார்திருவோடு மருவிய இயற்க்கை
அஸ்த்ரமான ஐஸ்வர்யம் போலே இல்லாமல்
எப்போதும் ஸ்திரமாய் இருக்கக் கூடிய ஐஸ்வர்யம் பெற்றாலும் -என்கை
இத்தையும் தெள்ளியோர் விரும்பார் -மாயாப் பெரு விறல்
ஐஸ்வர்யம் அனுபவிக்க சக்தி வேண்டுமே
அதுவும் கிடைக்கப் பெற்றாலும் அதுவும் வேண்டா
மாயா -மாய்தலாவது -அழிதல் -அழியாத -என்றபடிஎம்மா வீட்டும் திறமும் செப்பம் -என்றும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி – என்றும்
வைகுண்ட வாஸோபி ந மேயிலாஷா -என்றும்
அந்த மோஷத்தையும் ஒரு பொருளாக மதியார்கள் இ றே-பகவத் விஷயத்தில் அனுராகம் மிகு இருப்பதே பிராப்தம்=தெள்ளியார் அனுபவம் இங்கேயே தானே
விண்ணுளாரிலும் சீரியர் இ றே
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .