ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-பத்தாம்‌ பகுதி-(228) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

பத்தாம் பத்தில் –இப்படி ஆபத் சகன் ஆகையாலே –அவ் ஆபத் ரஷண அனுரூபமாக -பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு எல்லாம் மூல பூதமாய் –நிரதிசய வைலஷ்ணய யுக்தமான –திவ்ய விக்ரகத்தோடே வந்து தோன்றி -தன் பக்கல் ந்யஸ்த பரரானவர்கள் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –தன் திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலும் படும் ஆர்த்தியை ஹரிக்கும் ஸ்வாபம் ஆனவன் –கீழில் பத்தில் –தம்முடைய த்வரை அனுகுணமாக நாள் இட்டுக் கொடுத்ததுக்குப் பலம் –அர்ச்சிராதி கதியாலே-தேச விசேஷத்தில் ஏறப் போகையாலே –அதுக்கு ஆப்த தமனானவன் தன்னை வழித் துணையாக பற்றி –இனி பிராப்தியில் கண் அழிவு இல்லை என்று தமக்கு ஏற நிச்சயித்த இவர் –மறைத்து வைத்த அர்த்தம் உள்ளதும் வெளி இட வேண்டும் தசை யானவாறே –பிரதம உபதேச பாத்ரமான தம் திரு உள்ளத்துக்கு கிருத்திய அக்ருத்யங்களை விதித்து –அப்படி பவ்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கர்தவ்யாதிகளை வெளி இட்டு –முதலிலே உபக்ரமித்த பக்தி யோகத்தையும் நியமித்து –(முதலில் –பிணக்கற அறுவகைச் சமயமும் -என்ற திருப்பாசுரத்தில் தொடங்கின பக்தி யோகத்தை –சார்வே தவ நெறி -திருவாய்மொழியிலே முடித்தார் -என்றவாறு ) சம்சாரிகளுக்கு ஸூகரமான ஆஸ்ரயணத்தை உபதேசித்து –அனுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு சீல குணமாகிற ஆழம் காலையும் காட்டி –தம் பக்கல் விருப்பத்தாலே -தம் திரு மேனியிலே -அதி வியாமோகம் பண்ணுகிற ஈஸ்வரனுக்கு-அதின் தோஷத்தை உணர்த்தி –இப்போது தமக்கு பரதந்தரனாய் -தம்மை பரம பதத்தில் கொண்டு போவதாக அத்யாதரம் பண்ணுகிறவனை அநாதி காலம் தம்மை சம்சரிக்க விட்டு -உபேஷித்து இருந்ததற்கு ஹேது என்ன என்று கேட்க –அவனும் இந்திரிய அவஸ்தை முதலான ஹேது பரம்பரையை எண்ணி –அதுவும் மதா யத்தம் என்று அறியும் சர்வஜ்ஞ்ஞரான இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று நிருத்தரனாய் –அர்ச்சிராதி மார்க்கத்தையும் அங்கு உள்ளாருடைய சத்காரத்தையும் அவ் வழியாலே போய் பெரும் -ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமாகக் காட்டிக் கொடுக்க அத்தை சாஷாத் கரித்து-அது மானச அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே அத்தை எதாவாகப் பிராபிக்க வேணும் என்று பதறி அவனுக்கு மறுக்க ஒண்ணாத திரு ஆணை இட்டுத் தடுத்து அது பெறா ஆணை அல்லாமைக்கு ஹேதுகளையும் சொல்லும் படியான தம்முடைய பரம பக்தியெல்லாம் –குளப் படியாம் படியான -அபிநிவேசத்தோடே-வந்து தம்முடைய தாபங்களைப் போக்கின பிரகாரத்தை வெளி இடுகிறார் என்கிறார்–

ஆபத் ஸகனாகையாலே ப்ரபந்நரானவர்களுடைய ஆபத்துக்களிலே ஸூபாஸ்ரயமாய்‌ அஸாதாரணமான திருமேனியோடே வந்துதவி அவர்களுடைய தாபங்களைப்‌ போக்கும்‌ ஆர்த்த ஹரனானவன்‌ கீழில்‌ பத்தில்‌ இவர் த்வரைக்கீடாக அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததற்குப்‌ பலம்‌ அர்ச்சிராதி, கதியாலே துணை பெற்றுப்‌ போகை யாகையாலே அதுக்கு ஆப்தனானவன்‌ தன்னையே துணையாகப்‌ பற்றி ப்ராப்தி நிஸ்சிதமென்ற போக்கிலே ஒருப்பட்ட இவர்‌ தாம்‌ தஞ்சமாக நினைத்திருந்த வர்த்தமும்‌ பேசியிடும்படியான தஸையானவாறே முற்பட்ட உபதேஸ விஷயமான திருவுள்ளத்துக்கு க்ருத்யாக்ருத்யங்களை விதித்து-அப்படி பவ்யரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கர்த்வ்யாதிகளை வெளியிட்டு முதலிலே உபக்ரமித்த பக்தி ப்ரபத்திகளையும்‌ நிகமித்து ஸம்ஸாரிகளுக்கு ஸுகரமாக ஆஸ்ரயணத்தை உபதேஸித்து அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு பல் குணமாகிற ஆழங்காலையும்‌ காட்டித்‌ தம் பக்கல்‌ வ்யாமுக்‌தனான ஈஸ்வரனுக்குத்‌ தம்முடைய திருமேனியில்‌ தமக்குண்டான உபேக்ஷையை வெளியிட்டு இப்போது தமக்குப்‌ பரதந்த்ரனாய்‌ நிற்கிறவவனை அநாதி காலம்‌ தம்மைக்‌ கைவிட்டதுக்கு ஹேதுவென் னென்று கேட்க அவனும்‌ இந்த்‌ரிய வஸ்யதை தொடக்கமான ஹேது பரம்பரைகளை யெண்ணி அதுவும்‌ ததாயத்தமென்றறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்குப்‌ போக்கிடம்‌ சொல்லுகை யரிதென்று நிருத்தரனாய்‌ அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ அங்குள்ளாருடைய ஸத்காரத்தையும்‌ காட்டிக் கொடுக்க அத்தை ஸாக்ஷாத்கரித்தவிவர்‌ அதுவும்‌ மாநஸாநுபவமாய்‌ பாஹ்யகரண யோக்‌ய மல்லாமையாலே அவனுக்கு மறுக்க வொண்ணாத வாணையிட்டுத்‌ தடுத்து அது பெறாவாணை யல்லாமைக்கு ஹேதுக்களைச்‌ சொல்லும்படியான தம்முடைய பரமபக்தி யெல்லாம்‌ குளப்படியாம்படியான அபி நிவேஸத்தோடே வந்து தம்முடைய தாபத்தைப்‌ போக்கிப்‌ பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடுத்தபடியை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌ பத்தாம் பத்தில்‌.

1-சுரிகுழல்‌ அஞ்சனப்‌ புனல் மைந்நீன்ற பொல்லாப் புனக்‌ காயாவென்னும்‌ ஆபத்திற் கொள்ளும்‌ காம ரூப கந்த, ரூபத்தாலே ப்ரபந்நார்த்தி ஹரனானவன்‌ –2-அருள் பெறும்‌ போதணுக விட்டதுக்குப்‌ பலமான வானேறும்‌ ௧திக்கு அண்ட மூவுலகும்‌ முன்னோடிக்‌ கால்‌ விழுந்திடத்தே நிழல்‌ தடங்களாக்கி அமுதமளித்த தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே வேடன்‌, வேடுவிச்சி, பஷி , குரங்கு, சராசரம்‌, இடைச்சி, இடையர்‌, தயிர்த் தாழி, கூனி, மாலாகாரர்‌, பிணவிருந்து, வேண்டடிசில்‌ இட்டவர்‌, அவன் மகன்‌, அவன் தம்பி, ஆனை, அரவம்‌, மறையாளன்‌, பெற்ற மைந்தனாகிற பதினெட்டு நாடன்‌ பெருங்கூட்டம்‌ நடத்தும்‌ ஆத்தனை வழித் துணையாக்கி –3–அறியச் சொன்ன ஸுப்ரபாதத்தே துணை பிரியாமல்‌ போக்கொழித்து மீள்கின்றதில்லை யென்று நிச்சித்திருந்தவர்‌ ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தஸையானவாறே –4-முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேலென்று க்ருத்யாக்ருத்யங்களை விதித்து நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து, –5-வலம்‌ செய்து எண்ணுமின்‌ பேசுமின்‌ கேண்மின்‌ காண்மின்‌ நடமின்‌ புகுதுமென்று கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டுப்‌ –6-பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்து –7-எண்பெருக்கிலெண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி மாதவனென்று த்‌வயமாக்கி, கரண த்ரய ப்ரயோக வ்ருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்துச்‌ செஞ்சொற் கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு –8-மனம்‌ திருத்தி வீடு திருத்தப்‌ போய்‌ நாடு திருந்தின வாறே வந்து விண்ணுலகம்‌ தர விரைந்து அத்தை மறந்து குடிகொண்டு தாம்‌ புறப்பட்ட வாக்கையிலே புக்குத்‌ தான நகர்களை அதிலே வகுத்துக்‌ குரவை துவரைகளில்‌ வடிவு கொண்ட சபலனுக்கு தேஹ தோஷம்‌ அறிவித்து –9-மாயையை மடித்து வானே தரக்‌ கருதிக்‌ கருத்தின் கண்‌ பெரியனானவனை இன்று ௮ஹேதுகமாக ஆதரித்த நீ அநாத்‌ யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க –10-இந்த்‌ரிய கிங்கரராய்க்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌, அவை யாவரையும்‌ அகற்ற நீ வைத்தவை யென்பர்‌; அது தேஹ யோகத்தாலே யென்னில்‌ அந் நாள்‌ நீதந்த சுமடென்பர்‌: முன் செய்த முழு வினையாலே என்னில்‌, அது துயரமே உற்ற விருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌ ; –11-ஈவிலாத மதியிலேன்‌ என்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களென்னில்‌, ஆங்காரமாய்ப்‌ புக்குச்‌ செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌; –12-யானே எஞ்ஞான்றும்‌ என்றத்தாலே யென்னில்‌; அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழிலென்பர்‌: ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது; அகமேனியி லழுக்கறுக்கை அபிமாநி க்ருத்யம்‌; –13-தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌; ஸெளஹார்தம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌; பிணக்கிப்‌ பேதியாத ஜஞாநாதி வைகல்யமில்லை; ஏகமூர்த்தியில்‌ அல்லல் மாய்த்த யத்ந பலித்வங்கள்‌ நம்மது; –14-நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவன அறிந்தனமே யென்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌; -15-நெறி காட்டி அருகும்‌ சுவடும்‌ போலே இதுவும்‌ நிருத்தரமென்று கவிழ்ந்து நிற்க, –16-அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம்‌ போலே ஏறப்‌ பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்குத்‌ –17-தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு போகாமல்‌ தடுத்துத்‌ திருவாணை யிட்டுக்‌ கூசம்‌ செய்யாத செய்திப்‌ பிழை –18-பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும்பழி; –19-புறம் போனால்‌ வருமிழவு, –20-உண்டிட்ட முற்றீம்பு, அன்பு வளர்ந்த அடியுரம்‌, உயிருறவு –21-முதலளவு துரக்கைகளாலே பெறா வாணை அல்லவாக்கின பேரவா குளப்படியாம்படி கடல்‌ போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌.

1- சுரி குழல் அஞ்சனப் புனல் மைந் நின்ற பொல்லாக் புனக்காயா வென்னும் ஆபத்திற் கொள்ளும் காம ரூப கந்த ரூபத்தாலே பிரபன்ன ஆர்த்தி ஹரனானவன்-அதாவது –சுரி குழல் கமலக் கண் கனி வாய் –10-1-1-அஞ்சன மேனி-10-3-3-புனல் நின்ற வரை போலும் திரு உருவம் –10-6-8-பொல்லாக் கனி வாய் தாமரைக் கண் கரு மாணிக்கம்-10-10-1-புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய் -10-10-6–என்று அந்யோந்ய விலஷணமாய்–அதி மனோகரமாய் -அனுபவித்தாக்களைத் தனித் தனியே ஆழம் கால் படுத்த வல்ல அவயவ சோபையும் – –அதுக்கு பரபாகமாய் -அத் உஜ்ஜ்வலமாய் –விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தை திறந்து விட்டாப் போல் -சகல ஸ்ரமங்களும் மாறும் படி இருக்கும் திரு நிறத்தை உடைத்தாய் சொல்லப் படுமதாய் –காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -10-1-10–என்று ஆஸ்ரிதருடைய ஆபத் ரஷண அனுரூபமாக வேண்டினபடி பரிக்ரஹிக்கும் விக்கிரகங்களுக்கு எல்லாம் கந்தமாய் இருக்கும் திவ்ய விக்ரகத்தை கொண்டு -தன் பக்கல் -நிஷிப்த பரர் ஆனவர்கள் அநிஷ்டமான சம்சாரத்தில் இருப்பாலும் –அபீஷ்டமான தன் திருவடிகளை கிட்டாமையாலும் படும் ஆர்த்தியை தீர்க்கும் ஸ்வபாவனானவன்–

(சுரிகுழலஞ்சனப்புனலித்யாதி, ப்ரபந்நார்த்த்ஹரனான ஸர்வேஸ்வரன்‌) “சுரிகுழல்‌ கமலக்‌ கண்கனிவாய்‌” (திருவாய்மொழி 10-1-1) “அணிக்கொள்‌ நால்தடந்தோள்‌” (திருவாய்மொழி 10-1-9) “மணிமிகு மார்பு அணிமிகு தாமரைக்‌ கை” (திருவாய்மொழி 10-3-5) “கைகளும்‌ பீதகவாடையும்‌” (திருவாய்மொழி 10-3-8) “செங்கமலவண்ண மென்மலரடி” (திருவாய்மொழி 10-3-7) “மணிநின்ற சோதி” (திருவாய்மொழி 10-4-7) “அஞ்சன மேனி” (திருவாய்மொழி 10-3-3) “புனல்‌ மைநின்றவரை போலும்‌ திருவுருவம்‌” (திருவாய்மொழி 10-6-8) “பொல்லாத்‌ தாமரைக்கண்‌ கருமாணிக்கம்‌” (திருவாய்மொழி 10-10-1 “புனக்காயா நிறத்த” (திருவாய்மொழி 10-10-6) “நீரார்‌ முகில்‌ வண்ணன்‌” (திருவாய்மொழி 10-5-8) “கார்‌ மேகவண்ணன்‌” (திருவாய்மொழி 10-4-1 “மெய்ந்நின்று கமழ்‌ துளப விரையேறு திருமுடியன்‌” (திருவாய்மொழி 10-6-8) “திகழ்கின்ற திருமார்பில்‌ திருமங்கை” (திருவாய்மொழி 10-6-9) “அணிநின்ற செம்பொன்‌ அடலாழி” (திருவாய்மொழி 10-4-7) “காமனைப்‌ பயந்த காளை” (திருவாய்மொழி 10-2-8) என்று அவயவங்களோடும்‌ ஒளதார்யம்‌ முதலான குணங்களோடும்‌ ஸ்ரக்‌ வஸ்த்ர ஆபரண ஆயுதங்களோடும்‌ கூடி “காம ரூபங்கொண்டு எழுந்தளிப்பான்‌” (திருவாய்மொழி 10-1-10) என்று ஆஸ்ரிதருடைய ஆபத்‌ ரக்ஷணத்துக்கு அநுரூபமாகக்‌ கொள்ளும்‌ விக்‌ரஹங்களுக்கெல்லாம்‌ கந்த மாய்‌ ஸூபாஸ்ரயமான அந்த விக்‌ரஹத்தை யுடையனாய்க்‌ கொண்டு தன் பக்கல்‌ ந்யஸ்த பரரானவர்களுடைய ஆர்த்தியைத்‌ தீர்க்கையாலே ப்ரபந்நார்த்த ஹரனான ஸர்வேஸ்வரன்‌

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே
-10-1-1—இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது –கேசவ கிலேச நாசனகமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இறே இருப்பது –கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –காளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் 

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம்
அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9–தெளிந்த தொரு தடாகம் போலே யாய்த்து திருவடிகள் இருப்பது –ஸ்ரமஹரமான திருவடிகள் -என்கை-மலர்க் கண்கள்-அந்த தடாகம் பூத்தால் போலே யாய்த்து திருக் கண்கள் இருப்பது-பவளச் செவ்வாய்-பவளம் போலே சிவந்த திரு வதரத்தை யுடையவனாய்-அணிக் கொள் நால் தடம் தோள் –தனக்குத் தானே ஆபரணமாய் பெரிய நாலு திருத் தோள்களை யுடைய தெய்வம் -அவன் வழித் துணையாம் போது -ஸ்ரமஹரமான வடிவும் தன் உகப்பு தோற்றின ஸ்மித வீக்ஷணமும் யுடையவன் -ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமா போலே அச்சம் கெடும் படி யாய்த்து கொடு போவது –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5—ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்வு என்னுதல் -திரு மார்வு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தில் புகரே யாம் படி இருக்கும் என்னுதல் -கலவியில் கழற்ற ஒண்ணாத படி இறே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது -ஸ்த்ரீக்கு ஸ்தனம் போலே ஸ்ரீ கௌஸ்துபம் புருஷோத்தம சிஹ்னம் இறே —அணி மிகு தாமரைக் கையை யந்தோ-ஆபரண பிரசுரமாய் -அது தான் மிகையாம் படி தனக்குத் தானே ஆபரணமான கையை – அந்தோ -சேர்ந்து குளிர்ந்து விடாயார்க்கு சமைத்து வைத்த தண்ணீரை வார்க்கச் சொல்ல வேண்டுவதே -என் ஆற்றாமையை நான் உனக்கு அறிவிக்க வேண்டும்படி யாவதே –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8–கைகளும்-அந்நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்ற அளவில் அனுவர்த்தித்து அணைக்கிற கைகளும்-பீதக வுடையும்-அவற்றுக்குத் தோற்று விழும் போது நடுவே தொகையும் திருப் பீதாம்பரமும் –பீதாம்பர தர ஸ்ரக்வீ –-காட்டி--உனக்கு அவர்களை அழைக்கைக்கு பணி யுண்டோ -வடிவைக் காட்ட அமையாதோ-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத் துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றத்துக்கு தாமரையை ஒப்பாகச் சொல்லும் -ஸுகுமார்யத்துக்கு சொல்லலாவது இல்லை –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7–நீல மணியின் ஒளியை வடிவை வகுத்தால் போலே இருந்துள்ள வடிவை யுடையவன் –அடிமை கொள்ளும் வடிவு இருக்கிறபடி –

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய் பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-இருந்தால் ஜீவிக்கும் ஜீவனமும் பெறேன்-ஸ்ரமஹரமான வடிவைக் கொண்டு என் முன்னே சஞ்சரிக்கக் காணேன் -உன்னைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியாயோ -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று இருக்க வேண்டாவோ -காமினி யாகையாலே ஸ்வரூபத்திலும் குணத்திலும் இழியாள் இறே -வடிவை இறே ஆசைப் படுவது

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ
வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-புனல் போலேயும் மை போலேயும் நின்ற வரை போலேயும் என்னுதல் –மைந்நின்ற வரை— மை மாறாத வரை –அஞ்சன கிரி -என்னுதல்

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண்
கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-பொல்லா -அழகு இது என்னில் நாட்டார் அழகோ பாதியாம் என்று விஜாதீயம் என்று தோற்றுகைக்காக -என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாக என்னுதல் –கனி வாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6–முன்பு நீ மேல் விழுந்தது உனக்கு ஒரு குறை உண்டாயோ -ஸ்ரீ யானவள் தான் மேல் விழும் வடிவை யுடையையாய் வைத்து அன்றோ என் பக்கலிலே அபி நிவேசித்தது —புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இறே இவை –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இறே உபதேசிக்க வேண்டுவது –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1–விலக்ஷண விக்ரஹத்தை யுடையனாய் -உபய விபூதியுக்தனானவன் என்கிறார் -கார்மேக வண்ணன் — நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –அடியிலே இவனுக்கு ருசியைப் பிறப்பித்து -பக்திபர்யந்தமாக வளர்த்து –அது பக்வமானால் பின்னைத் தானே ப்ராப்யமாய் இருக்கிற வடிவு -கறுத்த மேகம் என்னுதல் -கார் காலத்து மேகம் என்னுதல் -புயல் கரு நிறத்தனன் -என்றத்தை நினைக்கிறது

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-திரு மேனியில் கமழா நின்றுள்ள திருத் துழாயின் பரிமளம் –-ஏறு திரு முடியன்--அப் பரிமளம் மிகா நின்றுள்ள திரு முடியை யுடையனாய் -கடலில் நீர் ஸஹ்யத்திலே ஏறுமா போலே திரு முடியில் வெள்ளம் இடா நின்றது –

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9–வெறும் புறத்திலே விளங்கா நிற்கிற திரு மார்விலே இருக்கிற பிராட்டி யோட்டை சேர்த்தி அழகாலும் விளங்கா நின்றுள்ள ஸ்ரீயபதியானவன் சேரும் ஸ்தானம் ஸ்ரமஹரமான வாட்டாறு –ஸ்ரீ யபதியான ஏற்றத்தோ பாதி போருமாய்த்து திருவாட்டாற்றை கலவிருக்கையாக யுடையவனாகையும் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7–தன் கைக்குத் தானே ஆபரணமாய் அனுபவிப்பார்க்கு ஸ்ப்ருஹணீயமான வடிவை யுடைய யுத்த உன்முகனான திரு வாழி யைக் கையிலே யுடையவன் -அனுபவத்துக்கு தானே விஷயமாய் -விரோதியைப் போக்குகைக்கு தானே ஆபரணமாக பரிகரத்தை யுடையவன் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8–இது நான் உபதேசிக்க வேண்டுவது அவனை ப்ரத்யஷிக்கும் தனையும் இ றே –நாட்டை அடங்கத் தன் அழகாலே பிச்சேற்றித் திரியும் காமனுக்கும் உத்பாதகனானவன் –காளை–யவ்வனம் பிரஸவாந்தமாய் இருக்க பருவத்தால் அவனிலும் இளகிப் பதித்து இருக்கும்

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-ரக்ஷண ரூபமான வடிவை கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர் –காம ரூபம் –நாஸ்யார்த்த தா நூம் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்த தா நூம் ததா -என்கிற படியே

2-அருள் பெரும் போது அணுக விட்டதுக்கு பலமான வானேறும் கதிக்கு அண்ட மூ உலகும் முன்னோடி கால் விழுந்திடத்தே நிழல் தடங்களாக்கி அமுதம் அளித்த தயரதன் பெற்ற கோவலன் ஆகையாலே வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாழி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டடிசில் இட்டவர் அவன் மகன் அவன்தம்பி ஆணை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழி துணையாக்கி-அதாவது —அவனுடைய அருள் பெரும் போது அரிதால்–9-9-6–என்றும் அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது -9-9-6–என்றும் -கீழில் பத்தில் ஷண காலம் விளம்பம் பொறாத படி ஆர்த்தரான தமக்கு –மரணமானால்–9-10-5-என்று ஆரப்த சரீர அவசானத்திலே மோஷம் தருகிறோம் என்று அணித்தாக நாள் இட்டு கொடுத்ததுக்கு பலம் –வானேற வழி தந்த வாட்டாற்றான் –10-6-5–என்று பிராப்ய பூமியான பரம பதத்தில் சென்று புகுருகைக்கு வழியாக அவன் காட்டிக் கொடுத்த அர்ச்சிராதி கதியில் போகப் பெறுகையாலே –

(அருள்பெறும்போதணுக விட்டதித்யாதி, தயரதன்‌ பெற்ற கோவலனாகையாலே) “அவனுடையருள்பெறும்‌ போதரிதால்‌ அவனருள்‌ பெருமளவாவி நில்லாது” (திருவாய்மொழி 9-9-6) என்று கீழில்‌ பத்திலே க்ஷண கால விஸ்லேஷம்‌ பொறாமை ஆர்த்தரான இவ்வாழ்வார்க்கு “மரணமானால்‌’” (திருவாய்மொழி 9-10-5) என்று ஆரப்‌த ஸரீராவஸாநத்திலே உமக்கு மோக்ஷம்‌ தருகிறோம்‌ என்று அணித்தாக நாளிட்டுக்‌ கொடுத்ததுக்குப்‌ பலம்‌ வானேற வழிதந்த” (திருவாய்மொழி 10-6-5) என்று அவன்‌ காட்டிக்‌ கொடுத்த அர்ச்சிராதி மார்க்கத்துக்குத்‌ துணை பெற்றுப்‌ போகையாலே 

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாகா நின்றது –கொள்வார் தேட்டமான அருள் நமக்குத் தேட்டமாவதே -சர்வ சாதாரணமான ஜலம் அது ஒழியச் செல்லாத தத்துவங்களுக்கு அரிதாப் போலே அவன் அருள் கிடைக்கும் அளவும் பந்துக்களுடைய இன் சொல்லாலே தரித்தாலோ என்ன –
அவ்வருள் அல்லன வருளும் அல்ல–தாபார்த்தர் அக்னியைக் கொண்டு விடாய் தீருமா போலே தாயமாருடைய ஹித வசனத்தாலே தரிக்கவோ –விடாய் தீராத அளவல்ல –விடாயை விளைப்பதும் செய்யும் 

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே -இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-அபு நராவ்ருத்த லக்ஷணமான பரமபதத்தில் ஏறுகைக்கு அர்ச்சிராதி கதியைத் தந்த -பரம பாத லாபத்தாலும் -அவ்வருகே ஒரு லாபம் என்னலாம் படி இறே அர்ச்சிராதி கத்தி ஸித்தி –வாட்டாற்றான் -இப்பேற்றுக்கு கிருஷி பண்ணின தேசம் –

அவ் அர்ச்சிராதி கதிக்கு -ராஜ குமாரன் வழி போம் போது வழிக்கு கடவார் – முன்னோடி நிலம் சோதித்து -நிழலும் தடாகமும் பண்ணி -பின்னைக் கொண்டு போம் போலே அண்ட மூ உலகு அளந்தவன் -10-1-5–என்று திரு உலகு அளக்க என்ற ஒரு வியாஜத்தாலே முன்னோடி நிலம் சோதித்து – அவனடி நிழல் தடம்-10-1-2- -என்று காள மேகமான தன் கால் விழுந்த இடத்தே -நிழலும் தடாகுமாம் படி பண்ணி –

இவரை இவ் வழியாலே கொடு போவதாக ராஜ குமாரன்‌ போம் போது நிலவரானார்‌ முன்னே போய்‌ நிலம்‌ சோதித்து நிழலாம்படி சோலை செய்து தடாகங்கள்‌ சமைத்து வைத்துப்‌ பின்‌ கொண்டு போவரைப்‌ போலே “அண்டமூவுலகளந்தவன்‌” (திருவாய்மொழி 10-1-5) என்று திருவுலகளக்க என்றொரு வ்யாஜத்தாலே முன்னோடி நிலம்‌ ஸோதித்து “அவனடி நிழல்‌ தடமன்றி யாமே” திருவாய்மொழி 10-1-2) என்று காளமேகமான தன் கால்‌ விழுந்த விடத்தே நிழலும்‌ தடாகமுமாம்படி பண்ணி

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5–நிரவதிக தேஜோ ரூபியாய் த்ரிவித காரணமும் தானே யானவன் –நம் -என்று பிராமண பிரசித்தியை சொல்லுதல் –தன் வடிவு அழகையும் ஜனகனான தன்னோட்டை பிராப்தியையும் நமக்கு அறிவித்தவன் என்னுதல் -அண்ட மூவுலகளந்தவன் அணி திரு மோகூர்-அவன் தனக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2–நலம் கழல் -ஆஸ்ரிதருடைய குண தோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள் -அவர்கள் ப்ரேமாந்தராய் -வத்யதாம் -என்றாலும் -நத்யஜேயம் -என்னுமவன் –அவனடி நிழல் தடம் அன்றி யாமே–அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –

அமுதம் அளித்த பெருமான் ஆகையாலே –-அதாவது- பாதேயம் புண்டரீகாஷர் நாம சங்கீர்த்தன அமிர்தம்-காருடம்–என்கிறபடியே பாதேயமாக தன் திவ்ய குண அம்ருதத்தை வர்ஷிக்குமவனாய் —
தயரதன் பெற்றவன் ஆகையாலே- அதாவது- தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
கோவலன் ஆகையாலே அதாவது-கூத்தன் கோவலன் -என்றும் – சக்கரவர்த்தி திருமகனாயும் கிருஷ்ணனாயும் வந்து அவதரித்தவன் ஆகையாலே –

அமுதமளித்த பெருமானாகையாலே “பாதேயம்‌ புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்‌” (காருடம்‌) என்றிவர்க்கு பாதேயமாகத்‌ தன்‌ திவ்ய குணாம்ருதத்தை வர்ஷிக்குமவனாய்‌ “தயரதன்‌ பெற்ற மரதக மணித்தடம்‌” (திருவாய்மொழி 10-1-8) என்றும்‌ “கூத்தன்‌ கோவலன்‌” (திருவாய்மொழி 10-1-6 என்றும்‌ சக்ரவர்த்தி திருமகனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ வந்தவதரித்தவனாகையாலே.

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை –அடைந்து வந்து அடியவர் தொழுமின்—வழித் துணை இல்லை என்று கிலேசப்படுகிற நீங்கள் ஆஸ்ரயிங்கோள்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6—நடக்கப் புக்கால்-வல்லார் ஆடினால் போலே இருக்கை –புத்ர ப்ராதரி கச்சதி -வழித் துணையாய் -அவன் முன்னே போக பின்னே போம் இடத்து நடை அழகு தானே பிரயோஜனமாய் இருக்கை -ஆடல் பாடல் அவை மாறினார் தாமே -என்னக் கடவது இறே -இவன் திருக் குழல் வாய் வைத்த போது அப்சரஸ் ஸூ க்கள் குழல் ஓசையைக் கேட்டு பாட்டுத் தவிர்ந்தார்கள்–இவன் நடை கண்டு ஆடல் தவிர்ந்தார்கள் –-கோவலன்-ஆச்ரயித்தாரை ரக்ஷிக்கும் இடத்து தாழ வந்து அவதரித்து ரக்ஷிக்குமவன் -பிசாசுக்கு மோக்ஷ ப்ரதனாய் வழி நடத்தியவன் இறே –ஆஸ்ரிதர் சிறுமை பாராதவன் இறே –

வேடன்-அதாவது குஹமாசாத்ய தர்மாத்மா நிஷாதாதிபதிம் ப்ரியம் -பால-1-29–என்னும்படி
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி–பெரிய திருமொழி-5-8-1- -என்று பிராட்டியையும் இளைய பெருமாளையும் முன்னிட்டு – உகந்த தோழன் நீ -என்று விஷயீ கரிக்க பெற்ற -ஸ்ரீ குகப் பெருமாள் —

(வேடன்‌ வேடு வச்சி என்று தொடங்கி – ஆத்தனை வழித்துணையாக்கி) “உகந்த தோழன்‌ நீ” (பெரிய திருமொழி 5-8-1) என்று பெருமாளுடைய ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனான ஸ்ரீகுஹப்‌ பெருமாள்‌

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு
இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-உகந்து –
உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்-உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )-தோழன் நீ எனக்கு – ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி புருஷகாரத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது –(நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

வேடுவிச்சி--அதாவது–சோப்ய கச்சன் மகா தேஜஸ் சபரீம்–பால-1-58–என்கிறபடி-தானே சென்று -கிட்டி -விருந்துண்டு – சஷூஷா தவ ஸௌ மயேன பூதாஸ்மி ரகுநந்தன-ஆரண்ய -74-14 -என்னும்படி தன் விசேஷ கடாஷத்தாலே பூதை ஆக்கின சபரி —

சஷுஷா தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகு நந்தந” (ரா. ஆ. 74-14) என்று அவன்‌ கடாக்ஷ லஷ்ய பூதையான ஸபரீ,

பஷி--அதாவது- ஸ்ரீ கார்யார்த்தமாக தேஹத்தை அழிய மாறினவர் என்னும் உகப்பாலே –
யா கதிர் யஜ்ஞ சீலானாம் ஆஹிதாக் நேஸ்ச யா கதி -என்றும் அபாரவர்த்தினாம் யாச யாச பூமி பிரதாயினாம் மயா த்வம் சமநுஞ்சாதோ கச்ச லோகன் அனுத்தமான்-ஆரண்ய-68-29/30 -என்று விஷயீகரிக்க பட்ட ஸ்ரீ ஜடாயு மகா ராஜர்

யா கதிர்‌ யஜ்ஞ ஸீலாநாம்‌ ஆஹிதாக்‌ நேசயா க,தி: அபரா வர்த்திநாம்‌ யாச யாச பூமி ப்ரதாயிநாம்‌ மயா த்வம்‌ ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாதநநுத்தமாந்‌” (ரா.ஆ. 68-29, 30) என்று விஷயீ கரிக்கும்படியான ஸ்ரீஜடாயு மஹாராஜர்‌, 

குரங்கு--அதாவது–குரங்கு என்ற இது –ஜாத்ய ஏக வசனம் ஆகையாலே -சுக்ரீவம் நாதமிச்சதி-கிஷ்கிந்தா-4-18 -என்று-அத்தலை இத்தலையாய் சென்று அங்கீகரிக்கப் பெற்ற வானர அதிபதியான மகா ராஜரும் – பரிகரமான வானர வர்க்கமும் –

ராமபாணாஸந ஷிப்தமாவஹத்‌ பரமாங்கதிம்‌” (ரா. ஸு. 17-8) என்னும்படியான வாலி ஸுக்ரீவ மஹாராஜர்‌ தொடக்கமான வாநர ஸேநைகள்‌

சராசரம் – அதாவது–ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன்–7-5-1- -என்று ஒரு ஹேதுவும் இன்றிக்கே இருக்க செய்தே – ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்க ராம்படியாக விஷயீ கரிக்க பெற்ற –அயோத்தியில் வாழும் -சராசரம்-(ஆவும் பயமும் அமுதும் ஒப்பான அரங்கருக்கு மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ அவர் மெய் அருளால் தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சராசரங்கள் யாவும் கிளையுடன் வைகுண்ட லோகத்தில் ஆர்ந்திட்டவே –திருவரங்கத்து மாலை- )

அயோத்தியில்‌ வாழும்‌ சராசரம்‌,

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.
–7-5-1-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் -திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் -ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன-நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக் கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –

இடைச்சி- அதாவது–சிந்தயந்தி ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்ச்வாசதயா முக்திம்
கதான்யா கோப கன்யகா
-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-10-22-– என்று விக்ரக வைலஷண்யமே உபாயமாக வீடு கொடுக்கப் பெற்ற சிந்தயந்தி –(உபேயத்துக்கு இளைய பெருமாளையும் -பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-சிந்தையந்தியும் போலே இருக்க வேண்டும்- பெரிய வுடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேக்ஷித்தார்கள் -சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போய்த்து- மதியிலேன் வல்வினையே மாளாதோ
-1-4-3-என்பதால் மதியினை யுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டதே —-அதாவது சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினை யுடையாளாய் மாமியார் முதலாயினருடைய முன்னிலையிலேயே இரு வினைகளையும் நீக்கி மோக்ஷம் அடைந்தாள்-ஈட்டு ஸ்ரீ ஸூக்தி )

சிந்தயந்தீ ஜகத் ஸூதிம்‌ பரப்‌ரஹ்ம ஸ்வரூபிணம்‌ நிருச்வாஸ தயா முக்திம்‌ க.தாந்யா கோப கந்யகா” என்னும்படி இடைச்சியான சிந்தயந்தி 

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3–வல்வினையே மாளாதோ வென்றுபாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி – நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது-தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இறே நம் முதலிகள் சொல்வது –

இடையர்-அதாவது- வெண்ணெய் களவு காண புக்க விடத்தே தொடுப்புண்டு வந்து தம்மகத்தே புகப் படலைத் திருகி வைத்து மோஷம் தராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோஷம் பெற்ற ததிபாண்டர்தயிர்த் தாழி-அதாவது- நாம ரூபங்கள் உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே இதுக்கு மோஷம் கொடுக்க வேண்டும் என்கிறவன் நிர்பந்தத்துக்காக மோஷம் கொடுக்கப் பெற்ற- தயிர்த் தாழி –(சிந்திக்க நெஞ்சு இல்லை நா இல்லை நாமங்கள் செப்ப நின்னை வாதிக்க மெய்யில்லை வந்திருபோதும் மொய்ம் மா மலர்ப் பூம் பந்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச் சந்தித்த நாள் முக்தி பெற்றது என்னோ தயிர்த் தாழியுமே–திருவரங்கத்து மாலை )

ததி பாண்டன்‌, அவனுடைய தயிர்த்தாழி

கூனி-அதாவது–ஸுகந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர் காத்ர சத்ரு சம் தீயதா மனுலேபனம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-20-6–என்று பூசும் சாந்து அபேஷிக்க-அநந்ய பிரயோஜனமமாக கொடுத்த ப்ரீதியாலே விசேஷ கடாஷ விஷய பூதையான கூனி

ஸுகந்த மேதத்‌ ராஜார்ஹம்‌ ரசம்‌ ருசிராநநே ஆவயோர்காத்ர ஸத்‌ருஸம்‌ தீ,யதா மநுலேபநம்‌”  (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-20-6) என்று விஷயீகரிக்கும்படியான கூனி,

மாலாகாரர்–அதாவது–பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்ச இஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21- -என்று அநந்ய பிரயோஜனமாக பூவைக் கொடுத்த உகப்பாலே தர்மே மனச்ச தே பதரே சர்வ காலம் பவிஷ்யதி -யுஷ்மத் சந்ததி ஜாதானாம்
தீர்க்க மாயுர்ப்பவிஷ்யதி
–ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-9-26-என்று விசேஷ கடாஷம் பெற்ற ஸ்ரீ மாலா காரர்-

தர்மே மநஸ் ச தே பத்ர ஸர்வ காலம்‌ பவிஷ்யதி யுஷ்மத்‌ ஸந்ததி ஜாதாநாம்‌ தீர்க்க மாயுர்‌ பவிஷ்யதி” ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ 5-9-26) என்று விஷயீகரிக்கும்படியான ஸ்ரீமாலாகாரர்‌

பிணவிருந்து இட்டவர்- அதாவது–நவம் சவமிதம் புண்யம் வேத பார கமச்யுத -யஜ்ச சீல மகா பிராஞ்ஜா ப்ரஹ்மானம் ஸ்வ உத்தமம் -ஹரி வம்சம் -என்று எதன்ன புருஷ பவதிப்படியே-அயோத்யா-102-30- பிண விருந்திட்ட கண்டா கர்ணன்-(ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை– நஞ்சிருக்கும் தானக் கண்டா கனற்ஜோதி என்று ஏத்தும் வன் தாலமுடன் வானக் கண் தா கன வண்ணா என்று ஒது வலி வந்தடையா
ஈனக் கண்டா கனற்கும் ஈந்தான் பரகதி என்னப்பனே
–திரு வேங்கடத்தந்தாதி )

“நவம்‌ ஸவமிதம்‌ புண்யம்‌ வேத பாரக மச்யுத யஜ்ஞ ஸீல மஹா ப்ராஜ்ஞ ப்‌ராஹ்மணம்‌ ஸவமுத்தமம்‌” (ஹரிவம்சம்‌) என்று பிணவிருந்திட்ட கண்டாகர்ணன்‌,

வேண்டடிசில் இட்டவர்–அதாவது–வேண்டு அடிசில் உண்ணும்போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனத்தில் பக்தி புரசஸ்சரமாக அடிசில் கொண்டு வந்து இட்ட ருஷி பத்னிகள் –நாச்சியார்-12-6-

வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்‌ கொள்ளும்‌” (நாச்சியார்‌ திருமொழி 12-6) பத்த விலோசநத்தில்‌ ருஷி பத்நிகள்‌,

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6–வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு-அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்-அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –

அவன் மகன்–அதாவது–மீள அவன் மகனை -பெரியாழ்வார்-1-5-2–என்று ஹிரண்ய புத்ரனாய் வைத்து –
தன் அருளுக்கு விஷயமாம் படி பக்தனான ஸ்ரீ பிரகலாதன்

மீளவவன்மகனை” (பெரியாழ்வார்‌ திருமொழி 1-5-2) என்று ஹிரண்ய புத்ரனான ஸ்ரீப்ரஹ்லாதன்‌,

கோளரி அரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி மேலை அமரர் பதி மிக்கு வெகுண்டு வர
காள நல் மேகமவை கல்லோடு கார் பொழிய கருதி வரை குடையாக காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால்  ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே –1-5-2–பாபிஷ்டனான ஹிரண்யாசுரனுடைய-வர பல புஜ பலங்களால் உண்டான செருக்காலே – மிடியற வளர்ந்த சரீரம் ஆனது ரத்தம் குழம்பிக் கிளரும்படியாகவும் – (எங்கும் உளன் கண்ணன் -)சர்வத்ஸ்ர அஸ்தி -என்று சொன்ன வார்த்தையை பொய் என்று – இங்கு இல்லை என்று தான் – அளந்திட்ட தூணை தட்டின அவன் –மனசு புரிந்து – ஸ்வ புத்ரனானவனை -சத்தியவாதி -என்று கொள்ளும்படியாகவும் -திரு உள்ளம் பற்றி –ஆயுதம் எடுக்க ஒண்ணாதது கொண்டு -முழு கூர்மையான திரு உகிர்களாலே – ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிக் குடைந்தவனே  –மீள என்ற இது –-இல்லை -என்ற மனசு புரிந்தபடி –

அவன்தம்பி--அதாவது –அவன் தம்பிக்கு -என்னும்படி ராவண அனுஜனாய் – அனுஜோ ராவணஸ்யாஹம் தேனஸா அஸ்மி அவமானித–யுத்த-19-4- -இத்யாதிபடியே ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு –ராகவம் சரணம் கத -யுத்த-17-14–என்று திரு அடிகளை அடைந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –

“அவன்‌ தம்பிக்கு” (பெருமாள்‌ திருமொழி 10-7) என்று ராவணாநுஜனான ஸ்ரீவிபீஷணப் பெருமாள்‌,

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8–லங்காதிபதியான ராவணனை அவன் உகந்த பிராணனை ஹரித்து -அவன் தம்பிக்கு ராஜ்யத்தையும் கொடுத்து

ஆனை-அதாவது-பரமாபதமா பன்னோ மனசா சிந்த யத்தரிம் -சது நாகவர -ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்று ஸ்வ யத்னத்தை விட்டு -பிரபன்னனாய் -ஸ்வாபிலஷித கைங்கர்யம் பெற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்

ஸ்ரீகஜேந்த்‌ராழ்வான்‌, 

அரவம்-அதாவது நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெறுவி வந்து நின் சரண் என-பெரிய திருமொழி-5-8-4- -என்கிறபடியே பெரிய திருவடிக்கு அஞ்சி வந்து திருவடிகளை சரணாக அடைந்த சுமுகன் –

நஞ்சு சோர்வதோர்‌ வெஞ்சினவரவம்‌” (பெரிய திரு மொழி 5-8-4) எனகிற ஸுமுகன்‌,

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-தன்னை பஷிக்க வந்த திருவடியை எதிரிடுவதும் செய்யாதே-வேறு ஓர் இடத்தில் போவதும் செய்யாதே
தன்னைச் சரணம் புக்க ஸூமுகன் பண்ணிற்று-ஏதேனும் அபராதம் உண்டோ-ந ஷமாமி யாவது என் என்னில்-ஈஸ்வர ஹிருதயம் என்று ஓன்று உண்டு என்று ஆராய்ந்து பார்த்தால்-ஜகத்தை அடைய ஆஸ்ரிதார்த்தம் என்று ஆய்த்து இருப்பது-அப்படி இருக்க-பெரிய திருவடிக்கு தான் நியதாஹாரனாய் இருக்கச் செய்தே அது தலைக் கட்டாதே போருவதே -என்று திரு உள்ளம் சிவிக் என்று இருக்கும் இறே

மறையாளன்-அதாவது-மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன் -பெரிய திருமொழி-5-8-5-என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் பால்ய சேஷ்டாதிகளை சாஷாத் கரித்து காமனாய் தபஸூ பண்ணி-அப்படியே காட்டி அருளக் கண்டு -அனுபவித்த அநந்தரம் -நித்ய
அனுபவத்தை அபேஷித்த கோவிந்த ஸ்வாமி-

மலரடி கண்ட மாமறையாளனான (பெரிய திருமொழி 58-5] கோவிந்த ஸ்வாமி,

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற  பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே—5-8-5–மலரடி
நிரதிசயமான போக்யமான திருவடிகள்-பசுக்களின் பின்னே போவது-தேர்த் தட்டிலே நிற்பது
தூது நடப்பது ஆகிற அளவிலே கிடீர் சர்வ சமாஸ்ரயணீயன் ஆய்த்து-கண்ட –-எல்லாரும் ஒக்க இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டும்படியான திருவடிகளை யாய்த்து தானே வர இவன் கண்டது –மா மறையாளன் –சாஸ்த்ரத்தாலே யாதல்-உபதேசத்தால்  யாதல்-அன்றிக்கே-கண்ணால் காணப் பெற்ற வைதிக அக்ரேசரன்  –

பெற்ற மைந்தன்--அதாவது-மா முனி பெற்ற மைந்தன் -பெரிய திருமொழி-5-8-6-என்று மிருகண்டு புத்ரனாய் -மோஷார்தமாக தன்னை வந்து அடைந்த மார்கண்டேயன் –

மாமுனி பெற்ற மைந்தன்‌” (பெரிய திருமொழி 5-8-6) என்று ம்ருகண்டு புத்ரனான மார்க்கண்டே,யன்‌

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய்  தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-மஹத்தை யாவது –பிரயோஜனாந்தர விதுரமாக-வாசுதேவஸ் சர்வம் என்கிறபடியேஎல்லாம் அவனே -என்று உபாசிக்கை –முனி பெற்ற – ஜ்ஞான விபாக தசையிலே பிறந்தவன் –

ஆகிற பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் நடத்தும் ஆத்தனை வழித் துணையாக்கி-அதாவது-
இவர்கள் ஆகிற நானா ஜாதிதையாலும் -இப்படி பதினெட்டாக எண்ணலாம் படி இருக்கையாலும் –
பதினெட்டு நாடன் பெரும் கூட்டம் போலே இருந்துள்ள இத் திரளை -அர்ச்சிராதி மார்க்கத்தாலே –
தானே துணையாகக் கொண்டு நடத்துமவனாய் –திருமோகூர் ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரண்-10-1-6–என்றும் –காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதி -10-1-1–என்னும்படி
திரு மோகூரிலே நின்று அருளின பரம ஆப்தனான காள மேகத்தை வழித் துணையாக கொண்டு –

இவர்கள்‌ தொடக்கமான பதினெட்டு நாட்டிலுள்ள அநுகூல வர்க்கமான பெருங்கூட்டத்தை அர்ச்சிராதி மார்க்கத்தாலே தானே துணையாய்க்‌ கொண்டு நடத்துகிறவனாய்‌ “திருமோகூராத்தன்‌ தாமரையடியன்றி மற்றொன்றிலம்‌ அரணே” (திருவாய்மொழி 10-1-6) “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1) என்று பரமாப்தனான காளமேகத்தை வழித் துணையாகப்‌ பெற்று 

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே
–10-1-6–திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

3-அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல் போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று நிச்சித்திருந்தவர்- அதாவது–நாமுமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான -10-2-9–என்றும் –
நாளேல் அறியேன் -9-8-4–என்றும் –-மரணமானால்-9-10-5- என்றும் –நான் உங்களுக்குச் சொன்ன நாள் ஆசன்னமாய்த்து என்று பிறர்க்கும் பேசும்படியாய் – ஸூப்ரபாதாச மே நிசா-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-17-3- -என்றும் – ஸூப்ரபாதாத்ய ராஜநீ மதுரவாசா யோஷிதாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-18-24 -என்றும் சொல்லுகிறபடியே பகவத் பிராப்தி அணித்தான வாறே நல் விடிவான நாளிலே –

(அறியச்‌ சொன்ன ஸூப்ரபாதத்தே) “நாமுமக்கறியச்‌ சொன்ன நாள்களும்‌ நணியவான” (திருவாய்மொழி 10-2-9) “மரணமானால்‌” (திருவாய்மொழி 9-10-35) என்று அவனறுதி யிட்டுத்‌ தந்தானாய்‌ நான்‌ உங்களுக்குச்‌ சொன்ன நாள்‌ கிட்டிற்றென்று பிறர்க்கும்‌ பேசும்படியாய்‌ “ஸுப்ரபாதா ச மே நிஸா ” (ஸ்ரீவிஷ்ணுபுரானம்‌ 5-17-3) “ஸுப்ரபா தாத்‌ய ரஜநீ மது,ராவாஸ யோஷிதாம்‌” (ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ 5-18-24) என்று பகவத் ப்ராப்தி அணித்தான நல்விடிவான நாளிலே-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9–நாளேல் அறியேன் –என்றும் –மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து –தஸ்மிந் நஸ்தமிதே பீஷ் மே-என்று அவன் தான் சொன்ன வார்த்தையை இவர் சொல்லுகிறார் –

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5–-மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை-10-3-4–பசு மேய்க்க போகல் –10-3-9–என் கை கழி யேல் –10-3-8-
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன –10-3-11-என்று தமக்கு துணையான அவனை பசு மேய்க்கையாகிற அபிமதத்தை பற்றவும் போகாதபடி பண்ணி –

(துணை பிரியாமல்‌ போக்கொழிந்து மீள்கின்றதில்லை என்று நிச்சித்திருந்தவிவர்‌) “துணை பிரிந்தார்‌ துயரமும்‌ நினைகிலை பசுமேய்க்கப் போகேல்‌” (திருவாய்மொழி 10-3-4) “என்‌ கை கழியேல்‌” (திருவாய்மொழி 10-3-8) “பசுநிரை மேய்ப்பொழிப்பானுரைத்தன (திருவாய்மொழி 10-3-11) என்று தமக்குத்‌ துணையாக அவனை பசு மேய்க்கப்‌ போகையாகிற அபிமதத்தில்‌ நின்றும்‌ தவிர்த்து-

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்- துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4–துணை பிரிந்தார் என்று உன்னைப் பிரிந்தார் என்றபடி -துணை என்றால் த்விஷ்டமாய் என்று காண் இருப்பது -என்னும் ஆச்சான் -அவனே துணை –அல்லாதார் எல்லாம் கழுத்துக் கட்டி -தொழுத்தையோம் தனிமையும் அறிகிறிலை–துணை பிரிந்தார் துயரமும் அறிகிறிலை –பிரிகிறோம் நாங்கள் என்றும் அறிகிறிலை –பிரிகிறது உன்னை என்றும் அறிகிறிலை —

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9–உனக்கு எழுத்து வாங்குகிறோம் -நீ பசு மேய்க்கப் போகாது ஒழிய வல்லையே -நீங்கள் இங்கனே நிர்பந்திக்க நான் போகா நின்றேனோ -ஸ்வ தர்மத்தைச் செய்யப் போனால் தான் வருவது என் என்ன –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8–பிரிவில் தரிக்கலாம் படியோ நீ கலவியில் பரிமாறிற்று என்கிறாள் -அபிமத விஷயத்தோடு இருக்கச் செய்தே-சந்த்யா வந்தனம் பண்ண நினைப்பார் யுண்டோ -ஸ்வ ஜனத்தை விட்டோ ஸ்வ ஜனத்தை ரஷிப்பது-என் கை கழியேல்--நான் அணைத்த கைக்கு உள்ளே இருக்கப் பார்-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-அவனோட்டை பிரிவு பொறுக்க மாட்டாத படியால் -ஒரு பருவத்தில் இடைப் பெண்கள் அனுசந்தித்த -தொடையாய் -அவர்களில் ஒருத்தி பசு நிரை மேய்க்க வேண்டா -என்று உரைத்தாள் -எல்லாரும் திரளச் சொன்னால் அவன் செவிப்படாது என்னுமத்தாலே -நப்பின்னைப் பிராட்டியைப் போலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத தரம் யுடையாள் ஒருத்தியை வார்த்தை சொல்ல விட்டார்கள் -இப்படி யாகில் இறே -அடிச்சியோம் -என்றும் –தொழுத்தையோம் -என்றும் -ஆழும் என்னாருயிர் -என்றும் -என் சொற் கொள் என்றும் -சொன்ன பன்மைகளும் ஒருமைகளும் -சேரக் கிடப்பது –இவையும் பத்து அவற்றின் சார்வே-–கீழ்ச் சொன்ன திருவாய் மொழிகள் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே -என்றாய்த்து நிர்வகித்துப் போருவது –அங்கன் அன்றிக்கே கீழில் திருவாய் மொழிகளுக்குச் சொன்ன பலமே இதுக்கும் பலம் என்னுதல் –மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலையால் பலித்த பலமே இதுக்கும் பலம் என்னுதல் -அவர்களுக்கு அவன் போகாமல் மீண்டான் ஆகில் இவர்களுக்கும் அதுவே பலமாய் -அவனோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்–என்கிறார் –

மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்–10-4-3–நிலை பேர்க்கலாகாமை நிச்சித்து இருந்தேன்-10-4-4- –என்று-சம்சார துரிதம் மருவல் இடாது என்று –நபிபேதி குதச்சன -என்கிற படி-ஒன்றுக்கும் அஞ்சாதபடி நிச்சயித்து இருந்தவர் சஞ்சிதம் காட்டும் தசை யானவாறே மரண தசையான அளவிலே சஞ்சிதமாக புதைத்து கிடக்கும் மகா நிதிகளை புத்ராதிகளுக்குக் காட்டுவாரைப் போலே –தமக்கு பகவத் பிராப்தி அணித்தானவாறே – ஒருவரும் இழக்க ஒண்ணாது -எல்லாருக்கும் ஹித அஹிதங்கள் அறிவிக்க வேணும் என்று பார்த்து-

மீள்கின்றதில்லை பிறவித்துயர்‌ கடிந்தோம்‌” (திருவாய்மொழி 10-4-3 “நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேன்‌’ (திருவாய்மொழி 10-4-4) என்று ஸம்ஸார துரிதம்‌ மறுவலிடா தென்று “நபி, பேதி குதஸ்சந’ (தைத்திர்யோபநிஷத்‌ என்கிறபடியே ஒன்றுக்கும்‌ அஞ்சாதபடி நிஸ்சித்திருந்த விவர்‌ -(ஸஞ்சிதம்‌ காட்டும்‌ தமையானவாறே) மரணாவஸ்தைகளிலே ஸஞ்சிதமாய்ப்‌ புதைத்துக்‌ இடந்த நிதிகளைப்‌ புத்ராதிகளுக்குக்‌ காட்டுவாரைப்‌ போலே தமக்கு ப்ராப்தி யணித்தானவாறே ஒருவரும்‌ இழக்க வொண்ணாது இவ்வளவிலே எல்லார்க்கும்‌ ஹிதாஹிதங்களை அறிவிக்க வேணுமென்று பார்த்து,

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-இனி மறுவல் இடுகிறது இல்லை –
பிறவித் துயர் கடிந்தோம்–துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய் தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை என்கை 

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4–அவ்விருப்பை என்னால் போக்க ஒண்ணாமையை நிச்சயித்து –அவன் போகைக்கு உறுப்பாக என்னால் செய்யலாவது ப்ராதிகூல்யம் இறே -நெஞ்சைக் கொண்டு இருக்கையாலே அத்தை செய்ய ஒண்ணாது இறே –இருந்தேனே— இனி ஒரு பயம் இல்லை என்று நிர்ப்பயனாய் இருந்தேன் –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி -என்று அவனுடைய ரக்ஷகத்வத்தை அறிந்தாலும் போக்யத்தை அறிந்தாலும் -ஒன்றாலும் சலியான் இறே —

4 -முந்துற்ற நெஞ்சுக்கு பணி மறவாதே மருள் ஒழி நகு கைவிடேல் என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து-அதாவது-தொழுது எழு என் மனனே-1-1-1- -என்று பிரதமத்தில் உபதேசிக்கும் படி –முந்துற்ற நெஞ்சே –பெரிய திருவந்தாதி-1–என்கிற படி தம்மிலும் பகவத் விஷயத்தில் முற்பட்டு நிற்கும் தம் திரு உள்ளத்துக்கு –பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை–10-4-7–என்றும் –வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8- -என்றும் –மருள் ஒழி நீ மட நெஞ்சே-10-6-1- -என்றும் –நரகத்தை நகு நெஞ்சே-10-6-5- -என்றும் –வாழி மனமே கை விடேல்-10-7-9- -என்று நம் பிரதி பந்தங்களை எல்லாம் தானே போக்கி அடிமை கொள்ளும் சர்வ ஸ்மாத் பரனை அனுபவிக்க பார் –உனக்கு இஸ் சம்ருதி மாறாதே சென்றிடுக –கை புகுந்தது என்னா இதர விஷயங்களில் செய்யும் அத்தை இவ் விஷயத்திலும் செய்யாதே கொள் –திரு வாறன் விளை யதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்–7-10-9- -என்று –பிராப்ய வஸ்து கிட்டிற்று ஆகில் -இங்கு அடிமை செய்ய அமையாதோ என்று -உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமிப்பது ஓன்று உண்டு உனக்கு -அத்தை தவிரப் பார் –உத்தேச்ய வஸ்து சந்நிஹிதமாய்த்து என்று இத்தையே – பார்க்கும் இத்தனையோ –நம்மையும் பார்க்க வேண்டாவோ –நான் பரமபதத்து ஏறப் போகா நின்றேன் –நெடு நாள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின சம்சாரத்தை புரிந்து பார்த்து சிரித்துப் போரு கிடாய் –நமக்கு இச் சம்பத்து எல்லாம் திரு மலையால் வந்தது ஆய்த்து -அத் திரு மலையை கை விடாதே கொள் –என்று கிருத்தய அக்ருத்யங்களை அவஸ்ய கரணியமாம்படி விதித்து நெஞ்சு போல்வாரை தொண்டீர் என்று அழைத்து தம் திரு உள்ளம் போலே அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை தொண்டீர் வம்மின்-10-1-4- -என்று பகவத் விஷயத்தில் சபலரானார் வாருங்கோள் என்று அழைத்து –

(முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணியித்யாதி க்ருத்யாக்ருத்யங்‌களை விதித்து) “தொழுதெழென்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) என்று ப்ரதமத்திலே உபதேஸிக்கும்படி பகவத்‌ விஷயத்திலே தம்மிலும்‌ முந்துற்று நிற்கிற தம்முடைய திருவுள்ளத்தைப்‌ பார்த்து, “பணிநெஞ்சே நாளும்‌ பரம பரம் பரனை  (திருவாய்மொழி 10-4-7) “வாழியென்‌ நெஞ்சே மறவாது வாழ்கண்டாய்‌” (திருவாய்மொழி 10-4-8) “மருளொழி நீ மடநெஞ்சே” (திருவாய்மொழி 10-6-1 “நரகத்தை நகு நெஞ்சே” (திருவாய்மொழி 10-6-5 “வாழி மனமே கைவிடேல்‌” (திருவாய்மொழி 10-7-9 என்று நம்‌ ப்ரதிபந்தகங்களை யெல்லாம்‌ தானே போக்கி அடிமை கொள்ளும்‌ ஸர்வஸ்மாத்‌ பரனை அநுபவிக்கப்பார்‌. உனக்கிந்த ஸம்ருத்‌தி மாறாதே சென்றிடுக கைபுகுந்ததென்னா இதர விஷயங்களிலே செய்யுமத்தை இவ் விஷயத்திலும்‌ செய்யாதே கிடாய்‌. இன்பம்‌ பயக்கவிலே ‘ திருவாறன்விளையதனை மேவி வலஞ்செய்து கை தொழக்கூடுங்கொலோ” (திருவாய்மொழி 7-10-9)என்று ப்ராப்ய வஸ்து கிட்டிற்றாகில்‌ இங்கே யடிமை செய்ய வமையாதோ வென்று ப்‌ரமிப்பதொன்றுண்டு; உனக்கு அத்தைத்‌ தவிரப் பார்‌. உத்தேஸ்ய வஸ்து ஸந்நிஹிதமாய்த்தென்று அத்தையே பார்க்குமத்தனையோ, நம்மைப்‌ பார்க்க வேண்டாவோ நான்‌ பரமபதத்தேறப்‌ போகா நின்றேன்‌. நெடுநாள்‌ நம்மைக்‌ குடிமக்களாக்கி எளிவரவு படுத்தின ஸம்ஸாரத்தைப்‌ புரிந்து பார்த்து சிரித்துப்‌ போரு கிடாய்‌; நமக்கு இந்த ஸம்பத்தெல்லாம்‌ திருமலையாழ்வாராலே வந்ததாய்த்து. அத்திருமலையைக்‌ கைவிடாதேகொள்‌ என்று க்ருத்யாக்ருத்யங்களை அவஸ்ய கரணீயமாம்‌ படி விதித்து (நெஞ்சு போல்வாரைத் தொண்டீரென்றழைத்து) திருவுள்ளம்‌ போலே அந்தரங்கரான ஸ்ரீவைஷ்ணவர்களை “தொண்டீர்‌ வம்மின்‌” (திருவாய்மொழி 10-1-4) என்று அழைத்து –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-தொழுது-சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்-எழு-உஜ்ஜீவி-தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது
என் மனனே-பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-நெஞ்சே நாள் தோறும் அனுபவிக்கப் பார் –
பரம பரம்பரனை-சம்சாரிகளுக்கு அவ்வருகான-ப்ரஹ்மாதிகளுக்கும் பரரான நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாஹகானானவனை –

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்
–10-4-8-ஆபத்சகனுடைய திருவடிகளை –வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து –ஆயுஷ்மன் -என்னுமா போலே -உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –-என் நெஞ்சே -புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –-மறவாது -இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் –சா ஹானி –என்னக் கடவது இறே –-வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இறே நான் கால் பிடிக்கிறது –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1–மருள் ஒழி நீ –நீயும் என் வழியே போரப் பார் –திரு வாறன் விளையதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடுங்கொல் –என்று உகந்து அருளின நிலங்களில் நசையாலே பிரமித்து ஓன்று உண்டு –அத்தைத் தவிர் –இங்கே உகந்து அருளின இதுக்கு பிரயோஜனம் அங்கே கொடு போகை யன்றோ –-மட நெஞ்சே–சாது நெஞ்சே –பவ்யமான நெஞ்சே —மடமை -அறிவின்மை-வாட்டாற்றான் அடி வணங்கே–திரு வாட்டாற்றிலே வந்து நிற்கிறவன் நினைவிலே போகப் பார் –அடி வணங்குகை யாவது -ஈரரசு தவிருகை –அவன் கருத்தில் போகை –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5–சம்சாரத்தைப் பார்த்து உன்னை வென்றேன் -என்று சிரித்து போகப் பார் -உன்னை நெடுநாள் குடிமை கொண்டது என்று பார்த்து உன் வெற்றி தோன்ற போ -விஸ்லேஷம் ஆகிற நரகத்தை நகு என்றுமாம்-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-வாழி–நான் சொல்லுகிற கார்யம் -உனக்கு நித்தியமாகச் சென்றிடுக —மனமே கை விடேல் -நமக்கு இஸ் சம்பந்தத்துக்கு எல்லாம் அடி திருமலையான பின்பு அத்தைக்கு கை விடாதே கொள் என்று என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்ய –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து ஆழ்வார் திருமேனியை கை விடாதே கொள் -என்று அருளிச் செய்ய -இந்நிரபந்தத்தைத் தவிர்ந்து அருள வேணும் என்கிறார் 

தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’
என்னுமென் சிந்தனையே.–7-10-9-மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை –தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை-மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ்ஸூ –பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ் ஸூ –

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-தேவாதிகளுக்கு ஸூ லபன் ஆனால் போலே -நமக்கும் ஸூ லபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினான் – இடர் கெட வடி பரவுதும் -நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படி அவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிப்போம்
தொண்டீர் வம்மினே–என்னோடு சகோத்ரிகளாய் இருப்பார் திரளுங்கோள்–

5-வலம் செய்து எண்ணுமின் பேசுமின் கேண்மின் காண்மின் நடமின் புகுதும் என்று கர்த்தவ்யம்
ஸ்மர்தவ்யம் வக்தவ்யம் த்ரஷ்டவ்யம் கந்தவ்யம் வஸ்தவ்யம் எல்லாம் வெளி இட்டு-

அதாவது–கொண்ட கோவிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே -10-1-5–என்று அவன் எழுந்து அருளி நிற்கும் தேசத்தை குறித்து அனுகூல வ்ருத்தியை பண்ணி – ஹ்ருஷ்டராவோம் வாருங்கோள் என்கையாலே கர்த்தவ்யமும் –எண்ணுமின் எந்தை நாமம் 10-2-5–என்று ஸ்வாமி உடைய திரு நாமத்தை
அனுசந்தியுங்கோள் என்கையாலே –ஸ்மர்த்தவ்யமும் –பேசுமின் கூசமின்றி -10-2-4–என்று உங்கள் யோக்யதை பார்த்து கூசாதே திருவனந்த புரத்திலே சிநேகத்தை பண்ணி வர்த்திக்கிறவனை பேசுங்கோள் என்கையாலே –வக்தவ்யமும் –நமர்களோ சொல்லக் கேண்மின் -10-2-8–என்று நம்மோடு சம்பந்தம் உடையீர் நாம் சொல்லுகிறதை கேளுங்கோள் என்கையாலே – ஸ்ரோதவ்யமும் –படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ -10-2-1–என்று திரு வனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளை காணப் போருங்கோள் என்கையாலே –த்ரஷ்டவ்ய கந்தவ்யங்களும்அனந்த புர நகர் புகுதும் இன்றே -என்று இச்சை பிறந்த இன்றே திருவனந்த புரத்திலே போய்ப் புக வாருங்கோள் என்கையாலே –வஸ்தவ்யமும் – ஆகிய இவைகள் எல்லாம் அவர்களுக்கு வெளி இட்டு–

(வலஞ்செய்தித்யாதி நடமின்‌ புகுதுமின்‌ என்று) கொண்ட “கோயிலை வலஞ்செய்திங்காடுதும்‌ கூத்தே” (திருவாய்மொழி 101-5) “எண்ணுமின்‌ எந்தை நாமம்‌” (திருவாய்மொழி 10-2-5) “பேசுமின்‌ கூசமின்றி” (திருவாய்மொழி 10-2-4) “நமர்களோ சொல்லக் கேண்மின்‌” (திருவாய்மொழி 10-2-8)பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் (திருவாய்மொழி 10-2-1)அனந்தநகர் புகுதுமின் (திருவாய்மொழி 10-2-1) என்றும் அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே அனுகூல வ்ருத்திகளைப் பண்ணுங்கோள் -ஸ்வாமியுடைய திரு நாமங்களை அநுஸந்தியுங்கோள்‌; உங்கள்‌ அயோக்‌யதை பார்த்துக்‌ கூசாதே திருவனந்தபுரத்திலே ஸ்நேஹத்தைப் பண்ணி வர்த்திக்கதிறவனைப்‌ பேசுங்கோள்‌; என்னோடு ஸம்பந்த முடையரானார்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேளுங்கோள்‌: திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளைக்‌ காணப்‌ போருங்கோள்‌; இச்சை பிறந்த இன்றே அங்கே போய்ப் புகப்‌ பாருங்கோள்‌ என்று அவர்களுக்குக்‌ கர்த்தவ்யம்‌ ஸ்மர்த்தவ்யம்‌ வக்தவ்யம்‌ ஸ்ரோதவ்யம்‌ த்‌ரஷ்டவ்யம்‌ கந்தவ்யம்‌ வஸ்தவ்யமெல்லாம்‌ வெளியிட்டு

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணி
இங்கு ஆடுதும் கூத்தே–பந்தம் இது –வடிவு அழகு அது -ஆனபின்பு ஆடாதே இருக்கப் போமோ -அங்குப் போனால் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கேயே களிப்போம்-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5–என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்த யந்தே–என்னக் கடவது இறே

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-உங்கள் அயோக்யதை பார்த்து கூசாதே -அத்தலையில் நீர்மையையும் ப்ராப்தியையும் பார்த்து பேசுங்கோள் -வளவேழ் உலகில் தமக்குப் பிறந்த இறாய்ப்பு இவர்களுக்கும் ஒக்கும் என்று இருப்பவர் இறே

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6—நம்மோடு குடல் துவக்கு உள்ள நீங்கள் சொல்லக் கேளுங்கோள் –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற நம் நினைவே நினைவாய் யுள்ளார் கேளுங்கோள் –

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ
நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8—ஸ்வ ஸ்பர்சத்தாலே விஸ்திருத பணனான திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைக் காண -/பயின்ற-என்று வீசு வில்லிட்டு எழுப்பிலும் எழுப்ப ஒண்ணாத படி இறே படுக்கை வாய்ப்பு இருப்பது-நடமினோ நமர்கள் உள்ளீர்-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-நாமும் உமக்கு அறியச் சொன்னோம்வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம் –ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –

6-பிணக்கறவை சார்வாக நிகமித்து-அதாவது-உபக்ரமித்த அர்த்தத்தை -உப சம்ஹரிக்கை-சாஸ்திர க்ரமம் ஆகையால் –பிணக்கற -1-3-1–என்ற பாட்டில்-வணக்குடை தவ நெறி -என்று உபக்ரமித்த பக்தி யோகத்தை –சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்-10-4-1- -என்ற ஸ்வ சாத்யத்தோடே பொருந்தின படியை சொல்லி நிகமித்து –இதின் பட்டோலையான க்ரந்தத்தில் –வீடுமுன் முற்றவும் -பத்துடை அடியவரிலே உபதேசிக்கத் தொடங்கின -சாத்திய ஸித்த ரூபமான சாதன த்வயதையும் –தவ நெறிக்கு பரமன் பணித்த -என்று நிகமித்து என்றவர் இதில் இப்படி அருளிச் செய்வான் என் என்னில் –அது வீடுமுன் முற்றவும் -பிரபத்தி பரமாகவும் பத்துடை அடியவர் -பக்தி பரமாகவும் – பூர்வர்கள் நிர்வகித்த கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார் –இது -வீடுமுன் முற்றத்தையும் பக்தி பரமாக்கி யோசித்து அருளின எம்பெருமானார் நிர்வாக கட்டளையைப் பிடித்து அருளிச் செய்தார்-இதிறே சகல வியாக்யான சித்தமுமாய் -ஈட்டிலும்-பிரதான யோஜனையுமாய் -இருக்குமது –இந்த க்ரமத்திலே இறே இவர் தாம் முதல் பத்தில் பக்தியை உபதேசிக்கிறார் என்று அருளிச் செய்ததும் –ஆகையால் அது முன்புள்ளார் அருளிச் செய்த படியை பற்றி அருளிச் செய்தார்–இது எம்பெருமானார் யோஜனையாய் பின்பு உள்ளார் எல்லாரும் அருளிச் செய்து கொண்டு போந்த மரியாதையை பற்ற அருளிச் செய்தார் என்று கொள்ளும் இத்தனை –வணக்குடை தவ நெறி -என்கிற இது பிரபத்தி பரமாகவும் ஈட்டில் ஒரு யோஜனை தோன்றி இருக்கையாலே பிணக்கறவை-என்கிற இதிலே –பக்தி பிரபத்தி -இரண்டையும் கூட்டிக் கொண்டு –சார்வே தவ நெறியிலே –சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும் –பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் -என்றும் இரண்டையும் நியமிக்கிறார் என்றாலோ என்னில் -அதுக்கும் அனுபபத்தி உண்டு –பிணக்கற -என்ற பாட்டிலே -பிரபத்தி பரமான யோஜனை உண்டானாலும் -விகல்பம் ஒழிய –சமுச்சயம் கூடாமையாலே –ஆகையால் சகல வியாக்யானங்களும் சேர -பிணக்கற வில் -உபக்ரமித்த பக்தியை நியமிக்கிறார் -என்ன அமையும் –ஆனால் பக்தி உபதேச உபக்கிரமம் -வீடுமின் முற்றத்திலே -யாயிருக்க -பிணக்கறவை-என்பான் என் என்னில் –வீடுமின் -என்று த்யாஜ்ய உபாதேய -தோஷ குண -பரித்யாக -சமர்பண க்ரமத்தை-சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து –அத்தையும் இதுக்கு சேஷமாக ஒருங்க விட்டுக் கொண்டு வந்து –அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலம் செய்வது -என்று தாம் யோஜித்த க்ரமத்தை பிடித்து முதல் பத்திலே தொடங்கின பக்தி யோகத்தை என்றபடி —பிணக்கற தொடங்கி வேத புனித இறுதி சொன்ன -என்று இறே கீழும் அருளிச் செய்தது –ஆக இப்படி முதல் பத்தில் உபக்ரமித்த பக்தியை நிகமித்துக் கொண்டு –

(பிணக்கறவைச்‌ சார்வாக நிகமித்துக்‌ கொண்டு) உக்த நிகமநம்‌ பண்ணுகை ஸாஸ்த்ரமாகையாலே முதலிலே “பிணக்கற” என்கிற பாட்டில்‌ “வணக்குடைத்‌ தவநெறி” (திருவாய்மொழி 1-3-5) என்று உபக்ரமித்த ஸாத்‌ய ஸித்‌த ரூபமான பக்தி ப்ரபத்திகளாகிற உபாயத்தையும்‌ சார்வே தவநெறியிலே “சார்வே தவ நெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌” (திருவாய்மொழி 10-4-1 என்றும்‌ “பண்டே பரமன்‌ பணித்த பணி வகையே கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌” (திருவாய்மொழி 10-4-9) “இருமை வினைகடிந்து இங்கென்னை யாள்கின்றான்‌” (திருவாய்மொழி 10-4-2) என்று நிகமித்துக்‌ கொண்டு 

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-வணக்குடைத் தவ நெறி வழி நின்று – வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –
பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்
இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்
புற நெறிகளை கட்டு-இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யற பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே -அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்-அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே-தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –-அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்- அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம் –தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1—தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்–சார்வே –தவ நெறிக்குத் -பக்தி மார்க்கத்துக்கு –வணக்குடை தவ நெறி என்றத்தைச் சொல்லுகிறது –மாம் நமஸ் குரு–என்று வணக்கத்தை கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இறே பக்தி –அன்றிக்கே –யஸ்ய ஞான மாயம் தப -என்று ஞான விசேஷமான பக்தியை தபஸ் -என்று சொல்லுகிறது -இவன் ஒரு கால் தலை வணங்க -பெரு வருத்தமான காய கிலேசமாக நினைத்து இருக்கும் ஈஸ்வர அபிப்பிராயத்தாலே சொல்லவுமாம் —தாமோதரன் தாள்கள்–தாமோதரன் —உரலினோடு இணைந்து இருந்து -என்றத்தை சொல்லுகிறது -சர்வாதிகனாய் வைத்து ஓர் இடைச்சி கட்டவும் அடிக்கவும் -தன்னைக் கொடுத்து -அத்தாலே வந்த தழும்பாலே–அது தானே தனக்குத் திரு நாமமாம் படி இருக்கிறவன் –தாள்கள் – தன்னை உகப்பாருக்கு இவன் இப்படி எளியன் ஆனால் -அவனை உகப்பார் அவன் ஸுலப்யத்தத்துக்கு தோற்று அவன் திருவடிகளை பெறும் அத்தனை இறே —சார்வு -ப்ராப்யம்-பத்துடை அடியவர்க்கு எளியவன் என்றும் –எளிவரும் இயல்வினன் என்றும் –அவன் சார்வு -என்றார் -இங்கே சார்வே -என்று அவதரிக்கிறார் 

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9—கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே –தொண்டே செய்து –பர பக்தியாதிகளை யுடையவனாய்
என்றும் தொழுது வழி ஒழுக-நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–
பண்டே பரமன் பணித்த பணி வகையே–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே –மாமேகம் சரணம் வ்ரஜ –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இறே பாசுரம் –

பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-இருமை வினை கடிந்து -நாளும்- இங்கு என்னை ஆள்கின்றானே–புண்ய பாப ரூப கர்மங்களை போக்கி -ஒரு தேச விசேஷத்தில் அன்றிக்கே-இங்கு -இஹ லோகத்திலேயே -நாள் தோறும் -என்னை அடிமை கொள்ளா நின்றான் -அங்கே குண அனுபவம் –இங்கே குண ஞானத்தால் தரிக்கை–

7-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி-அதாவது- எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10–என்று முதல் பத்தில் பஜன ஆலம்பனமாக சொல்லப் பட்டதாய்- எண்ணும் திரு நாமம் -10-6-1–என்று பஜன தசையில் அனுசந்திக்க படும் திருநாமமான திரு மந்த்ரத்தினுடைய சப்தத்தையும் -அர்த்தத்தையும் – நாரணம் -என்றும் – நாரணன் எம்மான் -10-5-2–என்றும் -இத்யாதியாலும் ஸூக்ரஹமாம் படி சுருங்க உபதேசித்தும்-

எண் பெருக்கில்‌ எண்ணும்‌ திருநாமத்தின்‌ ஸப்‌தார்த்தங்களைச்‌ சுருக்கி) “எண்பெருக்கந்நலத்து ஒண்பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ “திண்ணம்‌ நாரணமே” (திருவாய்மொழி 10-5-1) என்றும்‌ பக்திக்காலம்பநமாக உபதேஸித்த திருமந்தரத்திலர்த்தத்தையும்‌ ஸப்‌தத்தையும்‌ பரவாதபடி சுருக்கிக்‌ கொண்டு

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-எண் பெருக்கு-இத்தால் -ஜீவ அனந்யத்வத்தைச் சொல்கிறது-அந் நலத்து –கல்யாணமான ஜ்ஞானாதி குணங்களை யுடைத்தாகை-ஒண் பொருள்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-ஈறில-நித்தியமாய் இருக்கை –இப்படிப் பட்ட ஆத்மா வர்க்கத்தையும்
வண் புகழ் –கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை-ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்-நாரணன் –-நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்-திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–
10-5-1-கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்-எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது -அது தான் ஏது என்னில்-நாரணமே–-அவதாரணத்தாலே இவ்வளவே பூர்ணம் என்கை -ப்ரணவத்தையும் நமஸ்ஸையும் சதுர்த்தியும் ஒழியவே பூர்ணம் -என்கை –அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று -நீ ப்ரஹ்ம ராக்ஷசனாய்ப் பிற -என்னுமதில் வியாவ்ருத்தி சொல்லிற்று-திண்ணம் –பெறுகிற பேற்றின் கணத்துக்கு போருமோ-என்ன வேண்டா -நிச்சிதம் –சத்யம் சத்யம் —

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-நாரணன்-சப்த உபாதானம் –எம்மான் –எனக்கு ஸ்வாமி யானவன் –பாரணங்கு ஆளன்–பூமிக்கு அபிமானிநியான நாயகன் ஆனவன் – வாரணம் தொலைத்த காரணன் தானே–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் –சர்வ காரணமாய் இருக்கிறான் கிருஷ்ணன் தான் —-எம்மான் -என்கிறது சம்சார விபூதிக்கு உப லக்ஷணம் –பாரணங்கு ஆளன்-என்கிறது நித்ய விபூதிக்கு உப லக்ஷணம் -வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

மாதவன் என்று த்வயமாக்கி–அதாவது- பூர்வ உத்தர வாக்யங்களில் -ஸ்ரீ மத் -பத அர்த்தங்களை திரு உள்ளத்தில் கொண்டு – மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -10-5-7–என்று கீழ்ச் சொன்ன நாராயண சப்தத்தோடு -மாதவன் -என்கிற இத்தை இரண்டு பர்யாயம் சேர்த்து சொல்லீர்கள் என்கையாலே –
அந்த திரு மந்த்ரத்தை அதனுடைய விசத அனுசந்தானமான த்வய ரூபேண வெளி இட்டு –

மாதவனென்றென்று ஓத வல்லீரேல்‌” (திருவாய்மொழி 10-5-7) என்று அந்தத் திருநாமத்தினுடைய விதாநுஸந்தாநமான த்‌வயத்தையும்‌ வெளியிட்டு

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே
-10-5-7–ஸ்ரீ வல்லபன் என்னும் திரு நாமத்தை உங்களுக்கு ருசி இல்லையே யாகிலும் -பர பிரேரி தராய்க் கொண்டாகிலும் நிரந்தரமாகச் சொல்ல வல்லி கோளாகில் பூர்வாகங்கள் நசிக்கும் -உத்தராகங்கள் ஸ்லேஷியா – முன்புள்ள வற்றை மறக்கும் -பின்புள்ள வற்றில் நெஞ்சு செல்லாது –கீழ்ச் சொன்ன திரு மந்த்ரமும் -இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும் தனித் தனியே பேற்றுக்கு பர்யாப்த்தமான பின்பு -இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்கு பேற்றுக்குச் சொல்ல வேண்டா இறே –

கரண த்ரய பிரயோக வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்து-அதாவது-
ஈஸ்வரன் தம்மைக் கொண்டு போகையிலே த்வரிக்கிற படியாலும் – கேட்கிறவர்களுக்கு பிரபத்தி விஷயமாம்படி யாகவும் சுருங்கக் கொண்டு –-தாள் வாய் மலரிட்டு நாள் வாய் நாடீர் -10-5-4–என்றும்
பாடீர் அவன்நாமம்–10-5-5- -என்றும் –சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே-10-5-10-–என்று
இப்படி கரண த்ரயத்தாலும் பிரயோகிக்கப் படும் பகவத் ஆச்ரயண வ்ருத்தியை – பரந்த சடங்குகளை சுருங்க அனுஷ்டேயார்த்த பிரகாசமான பிரயோக வ்ருத்தியாக்கி கையோலை செய்து கொடுக்குமா போலே –சம்சாரிகளுக்கு தர்சிப்பித்து-

(கரண த்ரயமித்யாதி, கையோலை செய்து கொடுத்து )ஈஸ்வரன் தம்மைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிறபடியாலும்‌ கேட்கிறவர்களுக்கு ப்ரதிபத்திக்கு விஷயமாம்படியாகவும் சுருங்கக் கொண்டு அநுஷ்டாநார்த்த ப்ரகாஸகமான ப்ரயோக விருத்தி போலே பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே” நெடியானே” (திருவாய்மொழி 10-5-5) “சுனைநன்‌ மலரிட்டு நினைமின்‌ (திருவாய்மொழி 10-5-10) என்று கரண த்ரயத்தாலுமுண்டான ஆஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து 

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-ஆஸ்ரித ஸூலபன் ஆகையால் ஸ்வாராதனுடைய திருவடிகளிலே செவ்வித் பூவை பணிமாறி நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் -இப்படிச் செய்ய ஸ்வரூப அனுரூபமான பேறு நிச்சிதம் -என்கிறார் –

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-ப்ரீதி பூர்வகமான வ்ருத்திக்கு கால நியதி இல்லை -உங்கள் அபி நிவேசத்துக்கு அனுரூபமான விலக்ஷண புஷ்பத்தைக் கொண்டு அவன் திரு நாமத்தை ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சொல்லுங்கோள் -இப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -அங்கு சூட்டு நன் மாலைகளைக் கொண்டு ஆராதிக்கையும் -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னும் பாட்டுமாய் இறே இருப்பது –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10–அழகிய செவ்விப்பூவை திருவடிகளிலே பரிமாற நினையுங்கோள் –நெடியானே-எல்லாம் செய்தாலும் –ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே–என்று இருக்குமவன் –ஸ்மர்த்தா என்கிறபடியே -இவன் ஒரு கால் நினைக்க –அஹம் ஸ்மராமி-என்று என்றும் ஓக்க நினைக்குமவன் –

செஞ் சொல் கவிகளுக்கு கள்ள விழி காவல் இட்டு--அதாவது–செஞ் சொற் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின்-10-7-1- -என்று-அவனுக்கு அடிமை செய்வீர் ! அவனுடைய சீலாதிகளிலே அகப்பட்டு அழுந்திப் போகாமல் உங்கள் உயிரை நோக்கி கொண்டு அடிமை செய்யப் பாருங்கோள் என்று -உபதேசிக்கையாலே – அனுபவ கைங்கர்யங்களோடு நடக்கிற ச கோத்ரிகளுக்கு-அரண் அழியாமல் -கள்ள வழி காவல் இடுவாரைப் போலே – சீல குணமாகிற ஆழம் காலில் இழியாதே கொள்ளுங்கோள் என்று – வஞ்சக் கள்வன் உள் கலந்து அழிக்கும் வழிக்குக் காவல் இட்டு

(செஞ்சொற்கவிகளுக்குக்‌ கள்ள வழி காவலிட்டு) “செஞ்சொற்கவிகாள்‌ உயிர்காத்தாட்செய்மின்‌” (திருவாய்மொழி 10-7-1) என்று அவனுக்கு அடிமை செய்வார்‌ ஸீலாதிகளிலே அகப்படாதே கொள்ளுங்கோள்‌, அநுபவ கைங்கர்யங்களிலே நிற்கிறவர்களுக்கு அரணழியாமல்‌ கள்ள வழி காவலிடுவாரைப்‌ போலே ஸீல குணமாகிற ஆழங்காலிலே இழியாதே கொள்ளுங்கோள்‌ என்று உபதேஸித்து

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1—செஞ்சொற் கவிகாள்--செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர் –உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே –ஆட் செய்ம்மின் -என்கிறார் –ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் –ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக் கால் நாட்டுமாப் போலே -வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இறே ப்ரீதி பிரகரஷத்தாலே –

8-மனம் திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்தினவாறே வந்து விண்ணுலகம் தர விரைந்து அத்தை மறந்து குடி கொண்டு தாம் புறப் பட்ட வாக்கையிலே புக்கு தான நகர்களை அதிலே வகுத்து குரவை துவரைகளிலே வடிவு கொண்ட சபலனுக்கு தேக தோஷம் அறிவித்து அதாவது தன் பால் மனம் வைக்கத் திருத்தி –1-5-10–என்று வள ஏழ் உலகிலே -1-5-1–அயோக்யர் என்று அகன்ற தம்மை தன் சீலவத்யைக் காட்டி மனசைத் திருத்தி சேர்த்துக் கொண்டு -இன்னமும் இவர் இங்கே இருக்கில் அயோக்யர் என்று அகல்வர் –அகல ஒண்ணாத தேசத்து ஏறக் கொண்டு போக வேணும் -என்று –வீடு திருத்துவான் -1-5-10–என்கிறபடியே -பரமபதத்தை கோடிப்பதாய் போய் -அது செய்து மீளுவதற்கு முன்பே –ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-6-7-2- -என்கிறபடியே தன் உபதேசத்தாலே நாடெல்லாம் திருந்தி –தான் இங்கே தம்மை வைத்துக் கொள்ள நினைத்த காரியமும் தலைக் கட்டின வாறே –இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்-10-6-3- -என்று மீள வந்து பரம பதத்தில் ஏறக் கொண்டு போகையிலே -த்வரித்து-சரம சரீரம் ஆகையாலே தம்முடைய திருமேனியில் தனக்கு உண்டான வ்யாமோகத்தாலே கொண்டு போக விரைந்து -அத்தையும் கூட மறந்து –கோவிந்தன் குடி கொண்டான் -10-6-7–என்கிறபடியே சபரிகரனாய் கொண்டு –எண் மாய ஆக்கை இதனுள் புக்கு -10-7-3–என்று த்யாஜ்யம் என்று குந்தி யடி இட்டு தாம் சரக்கு கட்டிப் புறப் பட்டு நிற்கிற தேஹத்துக்கு உள்ளே தான் புகுந்து-திரு மால் இரும் சோலை மலையே -10-7-8–என்கிற பாட்டின் படியே –தான நகர்கள் -என்று தனக்கு வாசஸ்தானமான திவ்ய நகரங்களில் பண்ணும் விருப்பத்தை எல்லாம் -ஓரோர் அவயவங்களிலே பண்ணி எல்லாம் இதுக்கு உள்ளே யாக வகுத்து –அங்கனாம் அங்கனாம் அந்த்தரே மாதவோ மாதரம் சாந்தரேன் அங்கனா–கர்ணாம்ருதம்-என்கிறபடியே திருக் குரவையிலே பெண்களொடே அநேக விக்ரக பரிக்ரஹம் பண்ணி அனுபவித்தாப் போலேயும் –ஏகஸ்மின்னேவ கோவிந்த காலே தாசாம் மகா முனே ஜக்ரகா விதிவத் பாணீன் ப்ருதக் கேஹெஷூ தர்மத–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-என்றும்–உவாச விப்ர சர்வாசாம் விச்வரூப தரோ ஹரி-ஸ்ரீ விஷ்ணு புராணம்-3-31-20- -என்கிறபடியே ஸ்ரீமத் த்வாரகையில் தேவிமாருடனே பதினாறாயிரம் விக்ரகம் கொண்டு அனுபவித்தாப் போலேயும் –அநேக விக்ரகம் கொண்டு தம்முடைய அவயவங்கள் தோறும் அனுபவிக்கும் படி தம் திருமேனியிலே அதி சபலன் ஆனவனுக்கு –பொங் ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம் இங்கு இவ் உயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களான உன் மா மாயை மங்க ஒட்டு-10-8-10–என்று ஸ்வ தேக தோஷத்தை அறிவித்து -இத்தை விடுவிக்க வேணும் என்று கால் கட்டி –

(மனந்திருந்தி யென்று தொடங்கி தேஹதோஷமறிவித்து) “தன்பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி வீடு தருத்துவான்‌’ (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே பரமபதத்தைக்‌ கொடுப்பதாகப்‌ போய்‌ அலங்கரித்து அவன்‌ வரக் கொள்ள “ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்று இவருபதேஸத்தாலே லோகமாகத்‌ திருந்த இவரை வைத்த கார்யம்‌ தலைக் கட்டினவாறே “விண்ணுலகம்‌ தருவானாய்‌ விரைகின்றான்‌’ (திருவாய்மொழி 10-6-3) என்று இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரித்து இவருடைய ஸரீரம்‌ சரம ஸரீரமாகையாலே அதில்‌ தனக்குண்டான வ்யாமோஹத்தாலே இவரைக்‌ கொண்டு போகையையும்‌ மறந்து “கோவிந்தன்‌ குடி கொண்டான்‌’ (திருவாய்மொழி 10-6-7) என்று ஸபரிகரனாய்க்‌ கொண்டு “என்‌ மாய வாக்கை இதனுள்‌ புக்கு” (திருவாய்மொழி 10-7-3) இன்றிவர் தாம்‌ குந்தியடியிட்டு த்யாஜ்யமென்று சரக்குக்‌ கட்டிப்‌ புறப்பட்டு நிற்கிற இவருடைய தேஹத்திலே தான்‌ புகுந்து “திருமாலிருஞ்சோலை மலையே” (திருவாய்மொழி 10-7-8) என்கிற பாட்டின்படியே ஷீராப்‌தி தொடக்கமாகத்‌ தனக்கு வாஸஸ்தாந திவ்ய நகரங்களில்‌ பண்ணும்‌ விருப்பத்தை யெல்லாம்‌ ஒரோ அவயவங்களிலே பண்ணி “அங்க நாமங்க நாமந்தரே மாத வவோ மாதவம்‌ மாதவஞ்சாந்தரேணாங்க நா இத்தமா கல்பிதே மண்டலே ஸஞ்சரந்‌ ஸஞ்ஜகெள, வேணுநா தேவகீ நந்த ந: (கர்ணாம்ருதம்‌ என்று திருக் குரவையில்‌ பெண்களோடே அநேக விக்‌ரஹ பரிக்ரஹம்‌ பண்ணி அநுபவித்தாப்‌ போலவும்‌ ஸ்ரீமத்‌ த்‌வாரகையிலே தேவிமார்களோடே பதினாறாயிரம்‌ விக்‌ரஹம்‌ கொண்டு அநுபவித்தாப் போலவும்‌ அநேக விக்‌ரஹ பரிக்‌ரஹம்‌ பண்ணி இவருடைய அவயவங்கள் தோறும்‌ அநுபவிக்கும்படி இவருடைய விக்‌ரஹத்திலே சபலனானவனுக்கு “பொங்கைம்புலனும்‌ பொறியைந்தும்‌ கருமேந்திரியம்‌ ஐம்பூதம்‌ இங்கிவ்வுயிரேய்‌ பிரகிருதி மானாங்கார மனங்களே உன்‌ மாமாயை மங்கவொட்டு” (திருவாய்மொழி 10-8-10) என்று தம்முடைய தேஹத்தில்‌ தோஷத்தை அவனுக்கறிவித்து அத்தை விடுவிக்க வேணுமென்று 

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10–தன்பால் மனம் வைக்கத் திருத்தி
விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ்ஸூக்குத் தானே விஷயமாம் படி அண்ணி-வீடு திருத்துவான்-பரமபதத்தை கோடிக்கத் தொடங்குவான்-அதாகிறது -ஆழ்வார் எழுந்து அருளி இருக்கிற மகோத்சவத்தாலே ஒரு புதுமை தோற்றி இருக்கை

வள ஏழ் உலகிலே -1-5-இவர் அகலப் புக –அவனும் உம்மோட்டை சம்ச்லேஷம் அவத்யாவஹம் அன்று -சௌசீல்ய வர்த்தகம் -என்ற பின்பும் என்னுடைய சம்ச்லேஷத்தால் அங்குத்தைக்கு வரும் சௌசீல்யமும் வேண்டா என்று இவர் அகல-மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே தன் பிரக்ருதியைக் காட்டி -நீர் சம்ச்லேஷியாத அன்று நம்முடைய சத்தையே இல்லை -என்று-யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலே-தன்னோடு சேர்த்துக் கொண்டான் என்கிறார் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான்
விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3–விண்ணுலகம் தருவானாய்–பரம பதத்திலே செல்லப் பெறுகை யன்றிக்கே –ஆண்மின்கள் வணக்கம் -என்ற பொதுவும் இன்றிக்கே த்ரிபாத் விபூதியையும் நமக்கே தருவானாய் இரா நின்றான் –விரைகின்றான் –சா பேஷாரான நாம் ஆறி இருக்க -நிரபேஷனானவன்-பதறா நின்றான் –முன்பு இவர் விரைந்த போது ஒரு கார்யார்த்தமாக வைத்தானாய் -அது தலைக் கட்டின வாறே -விசத்ருசமான விபூதி இவருக்குத் தரம் அன்று என்று பதறா நின்றான் –தொடங்கின அப்போதே தலைக் கட்ட வல்ல சர்வ சக்திக்கு பதற வேண்டுகிறது என் என்னில்-விதி வகையே--நாம் விதிக்கத் தருவானாக வேண்டி இரா நின்றான் –

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-குரை கழல்கள் குறுகினம் –ஆபரண த்வனியோடே அவன் வந்து மேல் விழக் கிட்டப் பெற்றோம்-நம் கோவிந்தன் குடி கொண்டான்–ஆஸ்ரித வத்சலனான கிருஷ்ணன் அகம்படி வந்து புகுந்து -என்கிற படி வந்து புகுந்தான்

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் –-இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இறே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இறே மேல் விழா நின்றான் –
என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8—திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே-பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –திருமால் வைகுந்தம் –ஸ்ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –
இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே
–10-7-10-இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ்ஸூக்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு-ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மமமாயா துரத்யயா –என்றிலையோ–

9-மாயையை மடித்து–அதாவது – அவனும் இத்தை விடுவிப்பதாக அனுமதி பண்ண -ப்ரீதராய் –
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை -10-8-3–என்று சம்சாரத்தில் நிற்கைக்கு
அடியான மாயை யுண்டு மூலப் பிரகிருதி -அத்தை திரிய விடுவித்தேன் என்று செருக்கி

(மாயையை மடித்து வானே தரக் கருதி கருத்தின் கண்‌ பெரியனானவனை) ‘”மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை” (திருவாய்மொழி 10-8-3) ஸம்ஸாரத்தில்‌ நிற்கைக்கடியான மாயை ப்ரக்ருதி அத்தைத்‌ திரிய விடுத்தேன்‌ என்று இவர் தாமே பேசும்படி அசித் ஸம்பந்தத்தை யறுத்து

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3–அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் –மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –

வானே தரக் கருதி கருத்தின் கண் பெரியனாவனை–அதாவது –-வானே தருவான் எனக்காய்-10-8-5- -என்று தனக்குப் பரம பதத்தைத் தருவானாய் ஒருப்பட்டு – கருத்தின் கண் பெரியவன்-10-8-8–என்று
உபய விபூதி யோகத்தால் வரும் அந்ய பரதையை அடையத் தீர்ந்து -தம்மை அவ் அருகே கொடு போகையாலும்– ஆதி வாஹிகரை நியமிக்கையாலும் -தான் முற்பாடனாகக் கொண்டு போகையாலும் –
பெருக்க பாரியா நிற்கிறவனை –-அன்றிக்கே -மாயையை மடித்து-என்கிறதை மேலோடு சேர்த்து –
மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை மடித்தேன் -என்று தாம் பேசும் படி அசித் சம்பத்ததை அறுத்து – வானே தருவான் -என்று தமக்கு பரம பதத்தைத் தருவானாக உத்யோகித்த –கருத்தின் கண் பெரியன் -என்று தம்மால் எண்ணி முடிக்க ஒண்ணாதபடி -தம் கார்யத்தில் த்வரிகிறவனை என்றுமாம் –

வானே தருவான்‌” (திருவாய்மொழி 10-8-5) என்று பரமபதத்தை இவர்க்குக்‌ கொடுப்பதாக “கருத்தின் கண்‌ பெரியன்‌” (திருவாய்மொழி 10-8-8 என்று இவருடைய மநோரதத்தினளவல்லா படி இவரைக்‌ கொண்டு போகையிலே த்வரிக்கிற பற்று கண்டு

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5–எனக்கு வானே தருவானாய் -சம்சாரியான எனக்கு நித்ய ஸூரிகள் இருப்பை தருவானாக –ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து -என்னோடே பூணித்து -நான் அர்த்தியாய் இருக்கச் செய்தேயும் –அராவணம ராமம் வா -என்கிறபடியே -என்னோடே சமயத்தைப் பண்ணி மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே தானே புகுந்து -நிர்ஹேதுகமாக வந்து புகுந்து-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-கண்ணுள் நின்று அகலான்-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

ஆக இப்படி தாம் சொன்னபடி செய்யக் கடவனாய் -தம்மை கொண்டு போகையிலே மிகவும் பாரிக்கிறவனை-இன்று அஹேதுகமாக வாதரித்த நீ அநாதய நாதார ஹேது சொல் என்று மடியைப் பிடிக்க-அதாவது –-இன்று என்னை பொருளாக்கி-10-8-9- -என்று தொடங்கி இன்று இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த நீ அநாதி காலம் என்னை உபேஷித்து இருந்ததற்கு ஹேதுவை அருளிச் செய்ய வேணும் என்று-மடியைப் பிடித்து கேட்க -இதுக்கு சொல்லலாம் உத்தரம் என்ன என்று தன்னிலே நிரூபித்து – இவை ஒன்றும் இவர்க்கு சொல்லத் தகாதன என்று அவன் நிருத்தரனாய் நின்றமையை நெடுக உபபாதிகிறார் மேல் – ஈஸ்வரன் நிரூபித்த க்ரமம்தான் இருக்கும் படி–

(அநாத்‌யநாதர ஹேது சொல்லென்று மடியைப்‌ பிடிக்க) “இன்றென்னை’ (திருவாய்மொழி 10-8-9) இத்யாதி, இன்றிப்படி நிர்ஹேதுகமாக விஷயிகரித்த நீ அநாதி காலம்‌ உபேக்ஷித்து வைத்ததுக்கு ஹேதுவை அருளிச்‌ செய்யவேணுமென்று அவன்‌ மடியைப்‌ பிடிக்க-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்

குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9–இன்று என்னைப் பொருள் ஆக்கி -அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –
தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை-என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்–பர தந்த்ரனான என்னை புறம்போகப் பண்ணிற்று என் செயகைக்காக -பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை -புறம் போக விட்டானும் அவனே என்று இருக்கிறார் -ஸ்வ சத்தை பர அதீனமாய் இருக்கை -இவ் வஸ்துவுக்கு போக்கு வரவு ஆவது என் -இரண்டுக்கும் காரணம் சொல்ல வேணும் –குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மலைகள் போன்று விளங்கா நின்றுள்ள மாடங்களாலே சூழப் பட்ட திருப் பேர் நகரான் –ஓன்று எனக்கு அருள் செய்ய -இன்று விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்ல வேணும் –முன்பு உபாசித்தத்துக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே–அறிவிக்க வேண்டி இரா நின்றேன் –இதுக்கு ஈஸ்வரன் இவருக்கு சொன்ன உத்தரம் ஏது என்று சீயர் பட்டரைக் கேட்க -இவர் தலையிலே ஒரு பழி ஏறிட்டு நெடு நாள் இழந்த நாம் சொல்லுவது என் -என்று லஜ்ஜா விஷ்டனாய் நின்றான் -என்று அருளிச் செய்தார் –

10-இந்திரிய கிங்கரராய் குழி தூர்த்து சுவைத்து அகன்றீர் என்னில் –அவை யாவரையும் அகற்ற நீவைத்தவை என்பர் –அதாவது –யூயம் இந்திரிய கிங்கரா -வில்லிபுத்தூர் பகவர் வார்த்தை–என்கிறபடி -அநாதி காலம் இந்திரிய வச்யராய் –தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்-5-8-6- -என்றும் –அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-3-2-6- -என்று துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை இட்டு எத்தனை காலம் உன்னை அகன்று இருக்கக் கடவேன் -அல்ப ரசங்களாய் -அநேக விதங்களாய் இருக்கிற –சப்தாதி விஷயங்களைப் பசை உண்டதாக பிரமித்து -எதிர் பசை கொடுத்து புசித்து -சர்வ சக்தியான உனக்கு எட்டாதபடி –சம்சாரத்தில் கை கழியப் போனேன் என்று நீர் தானே பேசும்படியான சப்தாதி விஷய பிராவண்யம் அன்றோ -நீர் அநேக காலம் சம்சரிக்கைக்கு ஹேது என்னில் –ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -7-1-8–என்றும்–அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள்-5-7-8- -என்று -விஷயங்களும்–அவற்றில் பிராவண்ய ஹேதுவான இந்திரியங்களும் -எத்தனை ஏலும் அளவுடையாரே ஆகிலும் -கலங்கப் பண்ணி நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை அன்றோ என்பர்-

(இந்த்‌ரிய கிங்கரராய்‌ குழி தூர்த்துச்‌ சுவைத்தகன்றீர்‌ என்னில்‌ அவை யாவரையுமகற்ற நீ வைத்தவை என்பர்‌) “வயந்து கிங்கரா விஷ்ணோ: யூயமிந்த்‌ரிய இங்கரா:” (வில்லிபுத்தூர்‌ பகவர்‌ வார்த்தை) என்கிறபடியே அநாதி காலம்‌ இந்த்‌ரிய வஸ்யராய்‌ “தூராக்குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்‌” (திருவாய்மொழி 5-8-6) “அற்ப சாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்‌” (திருவாய்மொழி 3-2-6) என்று துஷ்பூரமான இந்த்‌ரியங்களுக்கு இரையிட்டு எத்தனை காலம்‌ உன்னை அகன்றிருக்கக்‌ கடவேன்‌ அற்ப சாரமானது அது நமக்குமெட்டாதபடி ஸம்ஸாரத்திலே கைகழிப்‌ போந்தேன்‌ என்று நீர் தாமே பேசும்படியான ஸப்‌தாதி விஷய ப்ராவண்ய மன்றோ நீர்‌ அநாதி காலம்‌ இழக்கைக்கு ஹேது என்னில்‌, “ஓரைவர்‌ யாவரையும்‌ மயக்க நீ வைத்த” (திருவாய்மொழி 7-1-8) என்றும்‌ “அகற்ற நீ வைத்த மாயவல்லைம்புலன்கள்‌” (திருவாய்மொழி 5-7-8) என்றும்‌ நீ வேண்டாதாரை அகற்றுகைக்கு வைத்தவை என்று நன்றாக அறிந்தேன்‌ என்பர்‌. 

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6-உன் திருவடிகளை சேரும் முறைமை கண்டு வைத்தே துஷ்பூரமான இந்திரியங்களுக்கு இரை தேடியிட்டு எத்தனை நாள் அகன்று இருக்கக் கடவேன் இப்படி ஆறி இருக்கப் பார்த்தால் முறையை அறிவித்தது என் –மயர்வற மதி நலம் அருளிற்றிலை யாகில் நானும் ஆறி இருக்கலாயிறே-பூர்ணே சதுர்த்தசே-வர்ஷே -என்று ஓர் அவதி பெறினும் பெற்றதோடு ஒக்கும்

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்

பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-நீ விசேஷ கடாக்ஷம் பண்ணுவதற்கு முன்பு எல்லாம் –இந்த நெடு நாள் எல்லாம் நம்மை அகன்றது எத்தாலே என்ன-அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை-இப்படி இருப்பன அநேகம்-சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –-இத்தால் பெற்றது ஏது என்ன
அகன்று ஒழிந்தேன்-சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து
என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர்தம் குலமுதலே!–7-1-8-இன்னமு தெனத் தோன்றி -முகப்பிலே நிரதிசய போக்யம் போலே தோன்றி –அக்ரே அமிருதம் இவ -என்னும்படியே -விபாகத்தில் இருக்கும் இருப்பு உபக்ரமத்தில் தோன்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாயிற்று -வாயில் இட்டால் ரசித்து அநந்தரம் முடிப்பன சில விஷங்கள் உண்டு அது போலே ஆயிற்று-ஓர் ஐவர் -தனித் தனியே பிரபலமாய் அத்விதீயமான சப் தாதிகள் ஐந்தும் யாவரையும் மயக்க-எத்தனையேனும் அதிசயித ஞானரையும் கலங்கப் பண்ணும் படியாக-நீ வைத்த-சர்வ சக்தியான நீ வைத்த முன்னம் மாயமெல்லாம் -அநாதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை காரியத்தோடு கூட முழு வேர் அரிந்து -சவாசனமாக போக்கி

அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்

பகர்க் கதிர் மணிமாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8–அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன் -யுகாவாதாரை யன்றோ யகற்றுவது -உமக்கு என் என்ன –-அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
அவை அபுருஷார்த்தம் என்று அறிந்த என்னையும் -புக்கால் கால் வாங்க ஒண்ணாத சப்தாதி விஷயங்களில் தள்ளுகிறாய் என்று அஞ்சா நின்றேன் -உன்பக்கல் ந்யஸ்த பரனான என்னையும்-என்றுமாம் -நீர் அஞ்சக் கடவீரோ என்ன -விளம்ப ஹேது இன்றிக்கே இருக்க விரோதி கிடைக்கையாலே அஞ்சா நின்றேன்

அது தேக யோகத்தாலே என்னில் –அந்நாள் நீ தந்த சுமடு என்பர் — அதாவது – அந்த இந்திரிய வஸ்தைக்கு அடி -குண த்ரையாத் மகமான சரீர சம்பந்தம் அன்றோ என்னில்–அந்நாள் நீ தந்த ஆக்கை –3-2-1- அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10–என்று அதுவும் தந்தாய் நீ என்பர்-

(அது தேஹ யோகத்தாலே என்னில்‌ அந்நாள்‌ நீ தந்த சுமடென்பர்‌) அந்த இந்த்‌ரிய வஸ்யதைக்கடி ஸரீர ஸம்பந்த மன்றோ என்னில்‌ “அந்நாள்‌ நீ தந்த ஆக்கை” (திருவாய்மொழி 3-2-1) “அது நிற்கச்‌ சுமடு தந்தாய்‌” (திருவாய்மொழி 7-1-10) என்று அதுவும்‌ உன்னாலே உண்டான (தென்பர்‌).

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-அந்நாள் –-அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்-நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த –-திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –-துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய –தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்-விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –-உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-சுமடு தந்தாய்-இந்திரியங்கள் சுமத்தின சுமை எல்லாம் சுமைக்கைக்கு ஈடான சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -ராஜபுத்ரன் தலையில் முடியை வாங்கி சும்மாட்டைக் கொடுத்து வழிக்கரையிலே நிறுத்தினால் கண்டார் எல்லாரும் சுமை ஏற்றுமா போலே இறே இந்திரியங்கள் -இந்திரிய உபாதைக்கு ஈடான பிரகிருதி சம்பந்தம்

முன் செய்த முழு வினை யாலே-என்னில் அது துயரமே உற்ற விருவினை உன் கோவமும் அருளும் என்பர்-அதாவது- அந்த தேக சம்பந்தத்துக்கு அடி –முன் செய்த முழு வினை-1-4-2- -என்று நீர் சொன்ன அநாதிகால ஆர்ஜித புண்ய பாப ரூப கர்மம் அன்றோ -என்று சொல்லுவோம் ஆகில்-துயரமே தரு துன்ப இன்ப விளைகளாய்–3-6-8-என்றும்–உற்ற விறு வினையாய் –10-10-8- என்று அசேதனுமாய் -அசக்தமுமாய் – நச்வரமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -உன்னுடைய நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண பலிக்கும் அவை ஆகையாலே கர்மமும் நீ இட்ட வழக்கு என்பர்

(முன்‌ செய்த முழு வினையாலே என்னில்‌ அது துயரமே யுற்ற இருவினை உன்‌ கோவமும்‌ அருளுமென்பர்‌) “முன்செய்த முழு வினையால்‌ திருவடிக்கீழ்‌ குற்றேவல்‌ முன் செய்ய முயலாதே அகல்வதுவோ (திருவாய்மொழி 1-4-2) என்று அந்த தேஹ ஸம்பந்தத்துக்கடி நீர்‌ அநாதியாகச்‌ செய்து போந்த கர்மமன்றோ என்னில்‌ “துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்‌” (திருவாய்மொழி 3-6-8) “உற்ற விரு வினையாய்‌” (திருவாய்மொழி 10-10-8) என்று புண்ய பாப ரூபமான கர்மங்களை அசேதநமுமாய்‌ நஸ்வரமுமாய்‌ இருபசை மலமுமாய்க்‌ கொண்டு உன்‌ கோபமும்‌ அருளுமென்று உன்னுடைய நிக்‌ரஹாநுக்‌ரஹ ரூபேண பலிக்குமவை யாகையாலே அந்த கர்மம்‌ நீயிட்ட வழக்கென்பர்‌.

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-முன் செய்த முழு வினையால் –-அநாதி கால சஞ்சிதமான பாபத்தாலே -பாபம் சாவதியாதல் -பாபம் பண்ணின காலம் சாவதி யாதனால் அன்றோ என் கையில் என்னைக் காட்டித் தருவது-இதிகாசம் -பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -தெற்கு ஆழ்வானும்-கோளரி ஆழ்வானும் என்று இருண்டு திருப்பதியார் உண்டு கோளரி ஆழ்வான் சதாசார பரனாய் இருக்கும் -தெற்கு ஆழ்வான் மேல் எழத் திரியும்
ஒரு விசேஷ திவசத்திலே இருவரும் சேர்ந்த அளவிலே கோளரி ஆழ்வான் தெற்கு ஆழ்வானை
இன்று ஆகிலும் ஒரு முழுக்கு இட மாட்டாயோ -என்ன -என்னுடைய பாபம் தெற்கு ஆழ்வார் கையில்
திரு ஆழி யாலே போக்கப் போமது ஒழிய ஓர் இரண்டு முழுக்கால் போம் அதன்று காண் என்ன
அத்தைக் கேட்டு இவனை மேல் எழ விசாரித்தோமே-என்று வித்தராய் அருளினார் பட்டர் –திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ--திருவடியின் கீழ் அந்தரங்க வ்ருத்தி பண்ணுகைக்கு ஏற்கவே ப்ரவர்த்திக்க பெறாத நான் அகன்றே போம் அத்தனையோ –-முன் செய்ய முயலுகை யாவது -அதுக்கு ஈடான பாக்யத்தைப் பண்ணுகை-க்ரியதாமித மாம்வத -என்றும் – முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றும் சொல்லுகிறபடியே கண் வட்டத்தில் நின்று பண்ணுகைக்கு ஈடாக முயலாத நான் அகன்றே போம் இத்தனையோ என்றுமாம்-தந்தாமுக்கு என்ன ஓன்று இல்லாதார் தய நீயர் அன்றோ என்று கருத்து-த்வத்க்ருபா சங்கு சந்தீ-என்னக் கடவது இறே –

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-துக்க ஏக ஹேது வான புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நியாமகனாய்

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி கலந்து -இருவகைப் பட்ட புண்ய பாபங்களுக்கு நியாமகனாய் –

11-ஈவிலாத மதியிலேன் என்னும் உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் என்னில்-ஆங்காரமாய் புக்கு செய்கைப் பயன் உண்பேனும் கருமமும் கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்-அதாவது-ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-4-7-3- -என்று முடிவு இன்றிக்கே இருக்கிற கொடிய பாபங்களிலே எத்தனை பண்ணினேன் என்றும் –மதியிலேன் வல்வினையே மாளாதோ –1-4-3- என்று நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாது என்றும் -நீரே சொல்லுகையாலே –கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் உம்மதன்றோ என்று சொல்லுவோம் ஆகில் –தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானான் -10-7-11-என்று தான் அபிமானியாய்ப் புக்கு ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து தானே அபிமானி ஆனான் என்றும் –செய்கை பயன் உண்பேனும் யானே -5-6-4–என்று நம்முடைய படியை அனுகரித்து சொல்லுகிற இடத்தில் –சகல கர்மங்களுடைய பல போக்தாவும் நானே என்றும் –கருமமும் கரும பலனுமாகிய-3-5-10- என்று புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் கர்ம பலன்களுக்கும் நியாமகனாய் -என்றும் சொன்னவர் ஆகையாலே –கர்ம கர்த்தாவும் -தத் பல போக்தாவும் -நீ இட்ட வழக்கு ஆகையாலே- கர்த்தாவும் போக்தாவும் நீயே என்பர்-கருமமும் கரும பலனுமாகிய -இத்தால் – கர்ம கர்த்தரு -தத் பல போக்த்ரு -ததநீயம் விவஷிதம் ஆகையாலே யாய்த்து இவ் இடத்தில் இவர் இச் சந்தையை எடுத்தது–

(ஈவிலாத மதியிலே னென்னும்‌ உம்மதன்றோ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்‌ என்னில்‌ ஆங்காரமாய்ப்‌ புக்கு செய்கைப்‌ பயனுண்பேனும்‌ கர்த்ருத்வமும்‌ தத்‌ பலமான போக்த்ருவத்வமும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய நீ கர்த்தா போக்தா என்பர்‌) “ஈவிலாத வினைகள்‌ எத்தனை செய்தனன்‌ கொல்‌” (திருவாய்மொழி 4-7-3) என்றும்‌ “மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ” (திருவாய்மொழி 1-4-3) என்றும்‌ அநுபவித்தாலும்‌ மாளாத பாபத்தை எத்தனை பண்ணினேன்‌, நான்‌ பண்ணின பாபமேயோ அநுபவித்தாலும்‌ மாளாதே யிருப்பது என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்த்ருத்வமும்‌ போக்த்ருத்வமும்‌ உம்மதன்றோ என்று நாம்‌ சொல்லில்‌ தானாங்காரமாய்ப்‌ புக்கு தானே தானே யானான்‌’ (திருவாய்மொழி 10-7-11 என்று தானபிமாநியாய்ப்‌ புக்கு ஆத்மாத்மீயங்களில்‌ எனக்குண்டான அபிமானத்தைத்‌ தவிர்த்துத்‌ தானே அபிமாநியானானென்று, அந்த கர்த்ருத்வமும்‌ “செய்கைப்‌ பயன்‌ உண்பேனும்‌ யானே” (திருவாய்மொழி 5-6-4) என்றும்‌ கருமமும்‌ கரும பலனுமாகிய காரணன்‌ தன்னை (திருவாய்மொழி 3-5-10) என்று பல போக்தாவும்‌ நாமிட்டவழக்காகையாலே கர்த்தாவும்‌ போக்தாவும்‌ நீயே என்பர்‌

ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-பெரிதால்-என்று பெரிதான அளவும் அன்றிக்கே-அனுபவ விநாசியம் அல்லாத பாபத்தையோ பண்ணிற்று-நா புக்தம் ஷீயதே கர்ம-என்கிறதுவும் விபரீத பலமாயிற்று-புக்தமாக புக்தமாக வர்த்தியா நின்றதீ-எத்தனை செய்தனன் கொல்?
செய்வினை என்று ஓன்று அன்றிக்கே அநேகம் –எத்தனை பாபங்களை பண்ணினேன்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-மதியிலேன்-பிரிவை பிரசங்கித்த அளவிலே போகாதே கொள்ளும் என்று ஓர் உக்தியால் விலங்கிட்டு வைக்கலாய் இருக்க-அதுவும் கலவியில் ஒரு வகையோ என்று இருந்த மதி கேடியான என்னுடைய –-வல்வினையே மாளாதோ வென்று-பாக்யவதி யாகையாலே அனுபவ விநாச்யமான பாபத்தைப் பண்ணினாள் சிந்தயந்தி –-நான் பண்ணின பாபத்துக்கேயோ முடிவு காணாது ஒழிகிறது-தத் சித்த விமலாஹ்லத-இத்யாதி -இவர் தம்மை தீர்க்க சிந்தயந்தி என்று இறே நம் முதலிகள் சொல்வது –

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-தான் ஆங்கார மாயப் புக்கு -எனக்கு அபிமானியாய்ப் புகுந்து என்னுதல் /பெரிய செருக்கை யுடையனாய்க் கொண்டு புகுந்து என்னுதல் –தானே தானே ஆனானைத்–ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து தானே அபிமானியானவனை –

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-4-சகல கர்மங்களினுடையவும் பல போக்தாவும் –அஹம் ஹி சர்வ யஞ்ஞா நாம் போக்தா –என்னா நின்றாள்

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-புண்ய பாப ரூபமான கர்மங்களுக்கும் நியந்தாவாய் -கர்ம பலன்களும் நியந்தாவாய்-காரணன் தன்னைத்-காரணந்து த்யேய-என்கிறபடியே ஸமாச்ரயணீயன் ஆனவனை

12-யானே எஞ்ஞான்றும் என்றத்தாலே என்னில்-அயர்ப்பாய் சமய மதி கொடுத்து உள்ளம் பேதஞ் செய்கை உன் தொழில் என்பர்-அதாவது–யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன்-2-9-9- -என்றும் – எஞ்ஞான்று நாம் -என்று தொடங்கி-மெய் ஞானமின்றி வினை இயல் பிறப்பு அழுந்தி -3-2-7–என்றும் நீர் சொன்ன – அஞ்ஞான அந்யதா ஞானாதிகளாலே காணும் உமக்கு அந்த கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் உண்டாய்த்து என்று சொன்னோம் ஆகில் –அயர்ப்பாய் தேற்றமுமாய் –7-8-6-மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் –3-1-4- உள்ளம் பேதம் செய்திட்டு ஒர் உண்ட உபாயங்களும் -5-10-4–என்று ஞான அஞ்ஞானங்கள் இரண்டும் நீ இட்ட வழக்கு ஆகையாலே –
அஞ்ஞான அந்யதா ஞானாதிகளை விளைக்கையும் உன் கிருத்யம் என்பர்

(யானே எஞ்ஞான்றுமென்றத்தாலே என்னில்‌ அயர்ப்பாய்ச்‌ சமய மதி கொடுத்து உள்ளம்‌ பேதம்‌ செய்கை உன்‌ தொழில்‌ என்பர்‌) “யானே என்னை அறியகிலாதே யானே என்றனதே என்றிருந்தேன்‌” (திருவாய்மொழி 2-9-9 “எஞ்ஞான்றும்‌ மெய்ஞ்ஞான மின்றி வினையியல்‌ பிறப்பழுந்தி’ (திருவாய்மொழி 3-2-7) என்று நீர்‌ சொல்லுகையாலே அந்த கர்ம கர்த்ருத்வ பல போக்த்ருத்வங்களுக்கடி உம்முடைய அஜ்ஞானமன்றோ என்னில்‌, ‘அயர்ப்பாய்த்‌ தேற்றமுமாய்‌” (திருவாய்மொழி 7-8-6) “மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்‌” (திருவாய்மொழி 3-1-4) “உள்ளம்‌ பேதம்‌ செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்‌” (திருவாய்மொழி 5-10-4) என்று ஜ்ஞாநாஜ்ஞானங்களிரண்டும்‌ நீயிட்ட வழக்காகையாலே அத்தால்‌ வந்த புத்தி பேதங்களும்‌ உனக்குக்‌ காரியமென்று சொல்லுவர்‌.

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-யானே என் தனதே என்று இருந்தேன் -ஸ்வ தந்த்ரன் -என்னை ஒழிந்தவை என்னுடைமை என்றும்-அடியேன் உனக்கு -இவை எல்லாம் உனது என்று இல்லாமல்-இருந்தேன் -முடிந்தேன் -சொல்லாமல் -இன்னும் இருக்கிறேன் -ஆத்மா அழியாதே -ஆத்மா நித்யத்வமும் -அனர்த்தமாம் படி ஆனதே

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-மெய்ஞ்ஞானம் இன்றி – புருஷார்த்த உபயோகியான சம்யக்ஞ்ஞானம் இன்றிக்கே-வினையியல் பிறப்பு அழுந்தி-அவித்யாதிகளை பிறப்பிக்கும் சம்சாரத்தில் மூழ்கி இருக்கிற நாம் –அவித்யாதிகள் அடியான பிறப்பில் அழுந்தி இருக்கிற நாம் என்றுமாம் –

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6–அயர்ப்பாய்த் தேற்றமுமாய் -விஸ்ம்ருதியும் தெளிவுமாய் –மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞான மபோஹஞ்ச -என்கிறபடியே-

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்

மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-திரு உருவம் மனம் வைக்க மாட்டாதவையாய் ஒன்றோடு ஓன்று சேராதே பாஹ்ய சமய மதி பேதங்களை உண்டாக்கினாய்-பண்டே உன்னை அறிய மாட்டாதே சம்சாரிகளுக்கு இம் மதி பேதங்களை உண்டாக்கினாய் –

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-அஸூரர்களோடு சேர்ந்து வைதிக சிரத்தை போம்படி புத்திகளை பேதித்து அவர்களை பிராண ஹானி பண்ணி பிணமாக்கி -இன்னார் கொன்றார் என்று விருது பிடிக்கும் படி நின்ற விரகுகளும்-

–ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம் அதாவது —யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு -திருவிருத்தம்-95–இத்யாதிபடியே –சூஷ்ம பிரகிருதி விசிஷ்டனாய்க் கொண்டு ஸ்வ கர்ம அனுகுணமாக நானா வித சரீரங்களிலே ஒன்றுபட்டு ஒன்றைப் பற்றி தடுமாறி திரியும் -ஜீவனுக்கு -தேக இந்த்ரியத்வேன-போக்யத்வேன -அவஸ்தையான பிரக்ருதியைப் பற்றி கிடக்கிற சைதன்யம் –யாதேனும் பற்றி நீங்கும் விரதம்-திருவிருத்தம்-95 -என்கிறபடியே பிரகிருதி பிராக்ருதங்களிலே-ஏதேனும் ஒன்றை அவலம்பித்து -நம்மை விட்டு அகலும் விரதத்துக்கு ஹேதுவாய் இருப்பது ஓன்று –அகமேனி ஒழியாமே -9-7-10–என்று நமக்கு அந்தரங்க சரீரமான -இவ் ஆத்மாவை பற்றிக் கிடக்கிற பிரகிருதி சம்பந்த ரூப மாலின்யத்தைப் போக்குகை –இவ் ஆத்மாவுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாய் இருந்தது ..அன்றிக்கே –-ஜீவ பிரகிருதி சைதன்யம் நீங்கும் வ்ரத ஹேது அக மேனியில் அழுக்கை அறுக்கை அபிமானி க்ருத்யம்-அதாவது-
இதஸ் த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவ பூதாம்-ஸ்ரீ கீதை-7-5-என்று சொல்லப் பட்ட
ஜீவனாகிய பிரக்ருதியில் கிடக்கிற சைதன்யம் -ஏதேனும் பற்றி நீங்கும் -என்கிறபடியே –
பிரகிருதி பிராக்ருதங்களில் ஏதேனும் ஒன்றை பற்றி -நம்மை விட்டு அகலும் விரத ஹேதுவாய் இருப்ப தொன்று – அசித் சரீரமாய் இருக்க செய்தே – அப்படி அன்றிக்கே -அக மேனி -என்று நமக்கு அந்தரங்க சரீரமாய் இருக்கிற இவ் ஆத்ம வஸ்துவில் கிடக்கிற பிரகிருதி சம்பந்தமான மாலின்யத்தை போக்குகை இதுக்கு அபிமானியான நம்முடைய க்ருத்யமாய் இருந்தது என்னவுமாம்–

(ஜீவ ப்ரக்ருதி சைதந்யம்‌ நீங்கும்‌ வ்ரத ஹேது அக மேனியில்‌ அழுக்கறுக்கை அபி மாநி க்ருத்யம்‌) “மூதாவியில்‌ தடுமாறு முயிர்‌ முன்னமே யாதானும்‌ பற்றி நீங்கும்‌ வ்ரதம்‌” (திருவிருத்தம்‌ 95) என்று ஸுஷ்ம ப்ரக்ருதி விஸிஷ்டனான ஆத்மாவில்‌ இடக்கிற சைதந்யம்‌ ப்ரக்ருதி ப்ராக்ருதங்களைப்‌ பற்றி நம்மை விட்டகலுகை நங்கார்யம்‌. “அகமேனி ஒழியாமே’ (திருவாய்மொழி 9-7-10) என்று நமக்கந்தரங்க ஸரீரமான இவ் வாத்மாவைப்‌ பற்றிக்‌ கிடக்கிற ப்ரக்ருதி ரூபமான மாலிந்யத்தை அறுக்கை அவ்வாத்மாவுக்கு அபிமாநியான நம்முடைய க்ருத்யமாயிருந்ததீ.

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – 
-95 –யாதானும் பற்றி –பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் –அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும்-பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுகைக்கு விரதத்தை –நீ பற்றுகிற விஷயங்கள் அடைய ஸ தோஷமாய் இருக்கும் – பகவத் விஷயமே கிடாய் நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் –அது நன்றே ஆகிலும் –நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே இரண்டாகப் பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது 

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்-7-5
-இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே
திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-பரியட்டமும் கட்டு அழிந்து -மேகலை தொங்கும் போது ஆஸ்ரயம் வேணுமே –என்-அகமேனி ஒழியாமே–புறம்பு கழலுமவை கழன்றது -அகவாயில் ஸ்வரூபம் கழலுவதற்கு முன்பே -நான் முடிவதற்கு முன்னே -என்கை –

13-தான் நல்கும் பந்தம் நிருபாதிகம்--அதாவது நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினை யேற்கே நல்கத்தான் ஆகாதோ நாரணனை கண்டக்கால் -1-4-5- -என்னும்படி (நல்கும் -ரஷிக்கும்)
நாம் ஸ்நேஹ பூர்வகமாக ரஷிக்கைக்கு அடியான நாராயணத்வ பிரயுக்தமான சம்பந்தம் நிருபாதிகமாய் இருந்தது-

(தான்‌ நல்கும்‌ பந்தம்‌ நிருபாதிகம்‌) “நல்கித்தான்‌ காத்தளிக்கும்‌ பொழிலேழும்‌ வினையேற்கே நல்கத் தானாகாதோ நாரணனைக்‌ கண்டக்கால்‌” (திருவாய்மொழி 1-4-5) என்று நாம்‌ ஸ்நேஹ பூர்வமாக ரக்ஷிக்கைக் கடியான நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தம்‌ நிருபாதிகமாகையால்‌ 

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே 
–1-4-5-என்னை உபேஷித்தால் -சர்வ ரஷகத்வத்தால் பூர்ணனான தன்னுடைய நாராயணத்வம் விகலம் ஆகாதோ என்று அறிவி என்று-(அறிவிக்கச் சொல்லி) ஒரு குருகை அபேஷிக்கிறாள்-நாரணனைக் கண்டக்கால் குணங்களில் ஞானானந்த அமலத்வங்கள் நிரூபகம் ஆனால் போலே யன்றோ சப்தங்களில் இத் திருநாமம்
இத்தாலே நிரூபிதமான வஸ்து வுக்கு சில விசேஷங்களைச் சொல்லுகிறது அத்தனை அன்றோ மற்றைத் திரு நாமங்கள்-நாரங்களில் ஓன்று குறைந்தாலும் தன் கார்யம் ஒறுவாம் அன்றோ
என் சத்தையில் அபேஷை இல்லையாகிலும் தன் சத்தையில் அபேஷை இல்லையோ என்று சொன்னேன் என்று சொல்லுங்கோள் –

ஸௌஹார்தம் எஞ்ஞான்றும் நிற்கும்--அதாவது-தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாகத் தான் தோன்றி-8-10-7- -என்று நாம ரூபங்களை இழந்து -தமோ பூதமான சமயத்திலே -இவற்றை உண்டாக்க நினைத்த அத்வீதியமான மகா குணம் என்கிற சௌஹார்த்தம்-கால தத்வம் உள்ளதனையும் ஒருவன்
பண்ணும் உபகாரமே என்று -அத்தையே அனுசந்திப்பார் -ஹ்ருதயத்தில் நிற்கும் படியாக –
என்கையாலே அந்த சம்பந்தம் அடியாக – சர்வருக்கும் நன்மையை -ஆசாசிக்கைக்கு அடியான –
சௌஹார்த்த குணத்திலும் கண் அழிவு சொல்லப் போகாது-

(ஸெளஹார்த்த,ம்‌ எஞ்ஞான்றும்‌ நிற்கும்‌) “தனிமாப்‌ புகழே எஞ்ஞான்றும்‌ நிற்கும்படியாய்த்‌ தான்தோன்றி” (திருவாய்மொழி 8-10-7) என்று அந்த பந்த மடியாக எல்லாருடைய நன்மையை ஆஸாஸிக்கைக்கடியான ஸெளஹார்த்த குணம்‌ ஸர்வாத்மாக்கள்‌ பக்கலிலும்‌ ஸர்வ காலமும்‌ நடக்கையாலே இந்த ஸம்பந்த மடியான ஸ்நேஹமும்‌ இவனுக்குக்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யிருந்தது.

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-உபமான ரஹிதமாய் -அழகிதான புகழே -நாம ரூபங்கள் அழிந்து தமோ பூதமான சமயத்திலே இவற்றை யுண்டாக்க நினைத்த மஹா குணம் –
எஞ்ஞான்றும்நிற்கும் படியாத் -கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே -என்று அத்தையே அநுஸந்திக்கும் படியாக-தான் தோன்றி-அர்த்திப்பாரும் இன்றிக்கே இருக்க -பூர்ணனாய் இருக்கிற -தான் -தன் பேறாக -பஹுஸ்யாம் -என்று தோன்றி –

பிணக்கிப் பேதியாதே ஜ்ஞானாதி வைகல்யமில்லை-(வைகல்யம் -வேறுபாடு )-அதாவது
பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -6-2-8- -என்னும்படி சம்ஹ்ருதி சமயத்திலே -சகல சேதன அசேதனங்களையும் நாம ரூப விவேக ரஹிதமாம்படி கலசி–சிருஷ்டி தசையிலே ஒருவர் கர்மம் ஒருவருக்கு தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டித்தும் -தனக்கு ஒரு பேதம் இன்றிக்கே இருக்கும் ஜ்ஞானாதிகளை உடைய நமக்கு ஞானாதி சக்திகளில் குறைவு சொல்ல இடம் இல்லை-

(பிணக்கிப்‌ பேதியாத ஜ்ஞாந வைகல்யம்‌ இல்லை) “பிணக்கி யாவையும்‌ யாவரும்‌ பிழையாமல்‌ பேதித்தும்‌ பேதியாததோர் கணக்கில்‌ கீர்த்தி வெள்ளக்‌ கதிர் ஞான மூர்த்தியினாய்‌” (திருவாய்மொழி 6-2-8) என்று ஸம்ஹார காலத்தில்‌ மண்ணும்‌ நீரும்‌ கலசுமாப் போலே நன்றாகக்‌ கலசி ஸ்ருஷ்டி காலத்திலே ஒருவருடைய கர்மம்‌ ஒருவருக்குத்‌ தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கும்படியான நமக்கு ஞான சக்த்யாதிகளிலே குறை சொல்லி கண்ணழிக்க வொண்ணாதாயிருந்தது.

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!

இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?–6-2-8-சேதன அசேதனங்களை தேவாதி விபாகம் அற்று-தம ஏகி பவதி-என்று தன்னோடே அவி பக்தமாம் படி கலசி -ஸ்ருஷ்ட்டி காலத்தில் ஒருத்தன் கர்மம் வேறு ஒருத்தன் அனுபவியாத படி -பேதித்தும் -ஸ்ருஷ்ட்டித்தும் என்றபடி
பேதியாதது ஓர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!– சம்ஹார காலத்தில் அசித்கதமான சூஷ்ம பரிணாகம் – சேதனகதமான அஞ்ஞானம் –ஸ்ருஷ்ட்டி காலத்தில் அசித் கதமான ஸ்வரூப அந்யதா பாவம் -சேதனகதமான ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஆக இப்பேதங்கள் ஒன்றும் இன்றிக்கே ஏக ரூபமாய் ஏக ரூபமாய் அத்விதீயமாய் அனவதியான ஏக ரூபத்வம் ஆகிற கீர்த்தி சமுத்திரத்தை யுடையையாய் பிரபா ரூபமான சங்கல்ப ஞானத்துக்கு ஆஸ்ரயமானவனே-இத்தால் விஸ்லேஷ தசையில் கலக்கமும் சம்ச்லேஷ தசையில் போக ரூப விக்ருதியும் இன்றிக்கே ஏக ரூபன் என்கை

ஏக மூர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள் நம்மது–அதாவது ஏக மூர்த்தி-4-3-3- -என்கிற பாட்டில் காரணங்களோடு கார்யங்களோடு வாசியற சகலத்தையும் சிருஷ்டித்து -அவற்றினுடைய தாரண அர்த்தமாக அந்தராத்மாவாய் ஸ்ருஷ்டமான பதார்தங்களுடைய ரஷணத்துக்காக ஸ்ரீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளி -இப்படி சர்வ காலமும் ஒருபடிப் பட்ட அனுக்ரஹ சீலனாகைக்கு அடியான பிராப்தியை உடையையான நீ உன் திருமேனிக்கு வேண்டும்
போக உபகரணங்கள் எல்லாம் –பூசும் சாந்திர் -படியே -என்பக்கலிலே உண்டாக்கி -நிர் துக்கனானாய்
என்று -இவர் பேசினபடியே இவரைப் பெருகைக்கு எத்தனம் பண்ணுகையும் – பெற்றால் உகக்கும் பலித்வமும் – நமக்கே உள்ளது ஒன்றாய் இருந்தது —

[எகமுர்த்தியில் அல்லல் மாய்த்த யத்ன பலித்வங்கள்‌ நம்மது) “ஏகமூர்த்தி யிருமூர்த்தி’  (திருவாய்மொழி-4-3-3) என்கிற பாட்டின்படியே காரணங்களோடு கார்யங்களோடு வாசியற எல்லாவற்றையும் உண்டாக்கி அவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு ப்ரஸித்து ஸுஷ்மரான சேதநர்க்கு ருசி பிறந்த போது ஆஸ்ரயிக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்தருளுகிற ஸர்வ ஸரீரியான நீ உன்னுடைய திருமேனிக்கு வேண்டும்‌ போகோபகரணங்களை பூசும்‌ சாந்தில்‌ படியே என் பக்கலாக்கி நிர்துக்கனானாயே என்று இவர்‌ பேசும்படி இவரைப்‌ பெறுகைக்கு யத்நம்‌ பண்ணுகையும்‌ பெற்றால்‌ உகக்கைக்கீடாந அறிவுள்ளதொன்றாயிருந்து அத்தாலும்‌ கண்ணழிவு சொல்ல வொண்ணாதா யொழிந்தது. 

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3–தம்மோட்டை ஏவம் வித ப்ரணயத்தால் அவன் க்ருதார்த்தன் ஆனபடி சொல்லுகிறார் –உன் ஆக முற்றும் அகத்து அடக்கி –-இதுக்கு பிரயோஜனம் உன் திருமேனிக்கு வேண்டும் போக உபகரணம் எல்லாம் என்னுள்ளே யாம் படி பண்ணுகை-அத்தைச் செய்து சாந்து பூ மாலை பரிவட்டம் ஆபரணம் இவை எல்லாம் என்னுள்ளே யாம்படி பண்ணி-ஆவி அல்லல் மாய்த்ததே -உன் திரு உள்ளம் நிர்த் துக்கம் யாயிற்றே -ஒரு படி கரை மரம் சேர்க்க வல்லேன் என்று இருந்த உன் திரு உள்ளத்தில் பரகு பரகு கெட்டு க்ருதார்த்தன் ஆனாயே -என்கிறார் என்னுடைய நெஞ்சில் துக்கம் ஒருபடி போயிற்றே என்றுமாம்-அவன் பிரணயித்தவம் சொல்லுகிற பிரகரணம் ஆகையால் அவனுடைய துக்க நிவ்ருத்தியே பொருளாக அமையும் –
இத்தை பர வ்யூஹ விபவங்களை சொல்லிற்றாக நிர்வஹிப்பாரும் உண்டு

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.
–4-3-2--கோவை வாயாள் பொருட்டு-ஈஸ்வரனுடைய –பாலனாய் ஏழ் உலகு -இது திருவாய் மொழி –விடாய்த்த என்னுடைய கரண கார்யமான ஸ்ம்ருதியாதிகளை பூர்ணனாவனுக்கு போக உபகரணங்கள் எல்லாமாய் விடுவதே என்கிறார் –
அசேதனமான கரணத்தை போக்யமாக விரும்பின படியை கண்டு அந்த ப்ரீதியாலே பின்னாட்டிப் பின்னையும் -பூசும் சாந்து என்நெஞ்சமே-என்கிறார் –

14-நாம் தனி நிற்ற ஸ்வதந்த்ரர் என்று அவனே அறிந்தனமே என்னும் சர்வஜ்ஞர் இவர்-அதாவது-தனி நின்ற சார்விலா மூர்த்தி -என்று கார்ய வர்க்கம் அழிந்த அன்று -சச் சப்த வாச்யனாய் -நின்று-ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித ப்ரஹ்மா மமாஸ்ரிதோ ராஜன் நாஹம் கம்சிது பாஸ்ரித -பாரதம்
இத்யாதி பிரக்ரியையாலே -உனக்கோர் அபாஸ்ரயமில்லாதபடி இருக்கிறவனே -என்கையாலே
நாம் வேண்டிற்றை செய்யும் படி நிரந்குச ஸ்வதந்த்ரன் என்று அறுதி இட்டு – அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-9-3-2- -என்று தொடங்கி – அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்று சகல கார்யங்களிலும் சஹகாரி நிரபேஷனாய் -ஸ்வாதீன சகல சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதிகனாய் இருக்கும் அவன் என்று அறிந்தோம் என்று சொல்லும்படியான சர்வஞராய் இருப்பார் ஒருவர் இவர்

(நாம்‌ தனி நின்ற ஸ்வதந்த்ரரென்று அவனே அறிந்தனமே என்னும்‌ ஸர்வஜ்ஞரிவர்‌) “தனி நின்ற சார்விலா மூர்த்தி” (பெரிய திருவந்தாதி 71 என்று தான்‌ வேண்டிற்றுச்‌ செய்யும்படி நிரங்குஸ ஸ்வதந்த்ரனும்‌ நீயே. “அவனே அகல் ஞாலம்‌ படைத்திடந்தான்‌ (திருவாய்மொழி 9-3-2) இத்யாதி. “அவனே மற்றெல்லாமுமறிந்தனமே” (திருவாய்மொழி 9-3-2) என்று ஸ்ருஷ்டி முதலான ஸகல ப்ரவ்ருத்திகளையும்‌ ஸஹஜமாகத்‌ தானே செய்ய வல்லனென்று இப்படி நம்மை உள்ளபடி அறியும்‌ ஸர்வஜ்ஞரான இவர்க்கு உத்தரம்‌ சொல்லுகை யறிந்து

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71—கார்ய ஜாதம் எல்லாம் அழிந்து காரண அவஸ்த்தமாய்
நாம ரூப விபாக அநர்ஹமாய் தான் என்ற சொல்லிலே அடங்கித் தனக்கு வேறே ஒரு அபாஸ்ரயம் இன்றிக்கே நின்றவனே-சார்வு -ஆச்சர்யம் ஆதல் -ஒப்பு ஆதல் –

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–
9-3-2-நாராயண சப்தத்துக்கு அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –விஸ்திருதமான பூமியை ஸ்ருஷ்டித்து –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்தானும் அவனே –அவதாரணத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளில் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்— பிரளயம் கொள்ளாத பூமியை வயிற்றிலே வைத்து வெளிநாடு காண உமிழ்ந்து -அபஹ்ருதமான பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் அவனே –இந்த அவதாரணத்தாலே ஆபத் சகத்வாதி ரக்ஷகத்வத்திலும் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
அவனே யவனும் அவனுமவனும்–ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –அவனே மற்று எல்லாமும் -பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் அதீனமே-அறிந்தனமே–ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –

15-நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும் நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க-அதாவது-
நெறிகாட்டி நீக்குதியோ –பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் – அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும் உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் – இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் – உம்முடைய அருகு வருதல்- உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க -உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க –

(நெறி காட்டி அருகும்‌ சுவடும் போலே இதுவும்‌ நிருத்தரம்‌ என்ற கவிழ்ந்து நிற்க) “நெறிகாட்டி நீக்குதியோ” (பெரிய திருவந்தாதி 6) என்கிற பாட்டிலும்‌ “அருகும்‌ சுவடும்‌ தெரிவுணரோம்‌” (பெரிய திருவந்தாதி 8) என்கிற பாட்டிலும்‌ உபாயாந்தரங்களைக்‌ காட்டி அகற்றப்‌ பார்த்தாயோ -விலக்ஷணமான திருமேனியைக்‌ காட்டி சேர்த்துக்‌ கொள்ளப்‌ பார்த்தாயோ அஜ்ஞரான எங்களை என் செய்வதாக நினைத்தாய்‌ இத்தை அருளிச்செய்ய வேணும் என்றும் கேட்ட விடங்களில்‌ ஒரு ஹேது இல்லாமையாலே இதுக்கும்‌ சொல்லலாவ தொரு ஹேது இல்லாமையாலே நிருத்தரமென்‌று தரையைக் கீறிக்கவிழ்ந்து நிற்க

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி என்னை கை விடப் பார்க்கிறாயோ —நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு –உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-அருகும்-கிட்டுவதையும் சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் –
தெரி யுணரோம்- நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை –அப்படி இருக்கச் செய்தேயும் ––நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக- உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —-பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று-ஸ்ரீ நஞ்சீயர்-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-நும்மை அருகும் சுவடும் –நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

16-அமந்த்ரஜ்ஞா உத்சவ கோஷம் ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிகிற மேக சமுத்திர பேரீ கீத
காஹள சங்கா சீச்ஸ்துதி கோலாகலம் செவிப் பட்டவாறே சாஷாத்க்ருத பர பிராப்திக்கு
உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயர் மந்த்ரம் தோன்றாவிடில் – கொட்டச் சொல்லி வாத்திய கோஷத்தாலே -அத்தை மறைத்து விடுமா போலே
–அதாவது-தான் நிருத்தரானமை தோற்றாதபடி மறைக்கைக்காக -இவனாலே பிரவ்ர்த்திதமாய் –நான் ஏறப் பெறுகின்றேன் -10-6-5–என்று தாம் கீழே சொன்னபடியே பரம பதத்தில் ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பியா நின்றுள்ள –சூழ் விசும்பு பணி முகில் தூரியம் முழக்கின ஆழ கடல் அலை திரை கை எடுத்து ஆடின-10-9-1- -என்று ராஜ குமாரர் போம் போது -தூர்யாதி மங்கள கோஷம் பண்ணுவாரைப் போலே –பரம பதத்துக்கு போமவர்களைக் கண்ட ப்ரீதியால் முழங்குவது -கோஷிப்பதாக நிற்கும் –மேக சமுத்ரங்கள் ஆகிற பேரிகள் உடையவும் –கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்–10-9-5–என்கிற கீதங்களினுடையவும் –காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் -10-9-6–என்கிற காஹள சங்கங்களினுடையவும் –வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர்–10-9-6-என்கிற ஆசீசினுடையவும் –தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்-10-9-7- -என்று ஸ்தோத்ரிதனுடைய சம்மிசர கோஷமாகிற கோலாகலம் செவிப் பட்டவாறே –அர்ச்சிராதி கதியையும் – ஆதி வாஹிக சத்காரத்தையும் -திவ்ய தேச பிராப்தியையும் –அங்கு உள்ளாருடைய பஹுமானத்தையும் -ஆனந்த மயமான ஆஸ்த்தானத்தில் இருப்பையும் –ஸ்வ சரண கமல பிராப்தியையும் –பெற்றாராகப் பேசும்படி சாஷாத் கரித்த பர பிராப்திக்கு –

(அமந்த்ரோத்ஸவ கோஷம் போலே )உத்சவங்களில் சடங்கு காட்டும் உபாத்யாயன் மந்த்ரம் தோன்றாவிட்டால் கொட்டச் சொல்லுமா போலே இவனும் ( ஏறப்போகிற எழுச்சியை ஸூ சிப்பிக்கிற வென்று )அது கிடக்க உம்மைக் கொண்டு போகிற வழியைப் பாரீர் என்று –நான் ஏறப் பெறுகின்றேன் (திருவாய் மொழி -10-6-5)என்றும் இவர் கீழ்ச் சொன்னபடியே -பரமபதத்திற்குப் போகிற மார்க்கத்தையும் -மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் காட்டிக் கொடுக்க (மேக ஸ்முத்‌ர பேரீ கீத காஹள ஸங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலம்‌ செவிப்‌ பட்டவாறே )சூழ் விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கின ஆழ்கடல்‌ அலை திரை கையெடுத்தாடின (திருவாய்மொழி 10-9-1)கீதங்கள்‌ பாடினர்‌ கின்னரர்‌ கெருடர்கள்(திருவாய்மொழி 10-9-5) “காளங்கள்‌ வலம்புரி கலந்தெங்கு மிசைத்தனர் வாளொண்‌ கண்‌ மடந்தையர்‌ வாழ்த்தினர்‌” (திருவாய்மொழி 10-9-6) “தொடர்ந்தெங்கும்‌ தோத்திரம்‌ சொல்லினர்‌” (திருவாய்மொழி 10-9-7) என்று ராஜாக்கள்‌ போகிற போது தூர்யாதி, மங்கல கோஷம்‌ பண்ணுவாரைப்‌ போலே போகிறவர்களைக்‌ கண்ட ப்ரீதியாலே உண்டான மேக ஸமுத்‌ரங்களினுடைய கோஷங்களாகிற தூர்யாதி பேரிகளையும்‌ அங்குள்ளாருடைய கீத காஹள ஸங்கா ஸீஸ்துதி கோலாஹலங்களையும்‌ இவர்‌ செவிப்படுத்த அத்தைக்‌ கேட்டவாறே (ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்திக்கு) 

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன்
நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5—அவன் பரம பதத்துக்கு போக ஆஸ்ரிதற்கு வைத்த அர்ச்சிராதி கதியாலே போகப் பெறா நின்றேன் -நித்ய ஆஸ்ரிதரைப் போலே என்னை விஷயீ கரிக்கவும் பெற்றேன் -என்கிறார் –வான் ஏற வழி தந்த -அபு நராவ்ருத்த லக்ஷணமான பரமபதத்தில் ஏறுகைக்கு அர்ச்சிராதி கதியைத் தந்த -பரம பாத லாபத்தாலும் -அவ்வருகே ஒரு லாபம் என்னலாம் படி இறே அர்ச்சிராதி கத்தி ஸித்தி –-வாட்டாற்றான் -இப்பேற்றுக்கு கிருஷி பண்ணின தேசம் – பணி வகையே-சொன்ன படியே -மாமேகம் சரணம் வ்ரஜ -என்னும் படி -பண்டே பரமன் பணித்த பணி வகை -என்றார் இ றே -மரணமானால் -என்று சொன்ன படியே என்னவுமாம் –நான் ஏறப் பெறுகின்றேன் -நான் செல்லப் பெறா நின்றேன் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின

ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-பூமியை சூழும் படி இடமுடைத்தான ஆகாசத்தில் –அணி முகில்-ஆபரணமான முகில் என்னுதல் -ஆகாசப் பரப்பு அடங்கலும் அணியப் பட்ட முகில் என்னுதல் -அழகிய முகில் என்னுதல் –-தூரியம் முழக்கின–தூர்ய கோஷத்தை பண்ணிற்றன – அணி முகில் தூரியம் முழக்கின-ஒப்பித்து நின்று கொட்டுவரைப் போலே -மந்தம் ஜகரஜ்ஜூர் ஜலதா -இவன் போக்குக்கு அடியான அவன் வரவில் பிறந்த விக்ருதி இ றே இது –இவன் தானே போகப் புக்கால் சொல்ல வேண்டா இறே -அவற்றுக்கு அபிமானிகளான இந்திர வருண பார்ஜ்ஜனியரைச் சொல்லிற்று ஆகவுமாம் –-ஆழ் கடல்-அலை திரைக் கை எடுத்து ஆடின–தன்னுள்ளே அடக்க வற்றான அளவுடைய கடல் தைர்ய பங்கம் பிறந்து -அலையா நின்று இருந்து உள்ள  திரை யாகிற கையை எடுத்துக் கொண்டு -கூத்தாடிற்றன –

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-இங்கனே எழுந்து அருள வேணும் -எங்கள் அதிகாரங்களைக் கைக் கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிற அளவிலே -கின்னர்களும் கருடர்களும் கீதங்கள் பாடினர் –

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–
10-9-6-அவர்கள் கொடுக்கிறவற்றை இவர்கள் கைக் கொள்ளுகிற அளவிலே – வேறே சிலர் காளான்களையும்-வலம் புரிகளையும் -கலந்து த்வநிப்பித்தார்கள் –கலந்து எங்கும் இசைத்தனர்–மாறி மாறி எங்கும் ஓக்க த்வனித்தன –
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –ஆழியான் தமர் —ஆண்மின்கள் வானகம்-என்று–சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள் இவ்விடத்தை யாளி கோளோ–என்றாய்த்து ஸ்தோத்ர பிரகாரம் -அவன் தானும் தன் விபூதியை -பக்தாநாம் என்று அன்றோ இருப்பது -ஆளக் குறை என் -என்பார்கள் –வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–ஆதி வாஹிக கர்த்தாக்கள் யுடைய மஹிஷிகள் வாழ்த்தினார்கள் -ஒளியை யுடைத்தாய் ஆகர்ஷகமான கண்களை யுடையவர்கள் -இது ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று -இவர்களை கண்டத்தாலே கண்களுக்கு உண்டான ஒளியையும் அழகையும் சொல்லுகிறது –மகிழ்ந்தே -பார்த்தாக்கள் அனுவர்த்திகையாலே விஹிதம் என்று செய்கிறார்கள் அன்று -ப்ரீதியாலே செய்கிறார்கள் -இங்கே பகவத் சம்பந்தமே ஹேதுவாக நீசராலே பரிபூதனாய்ப் போந்தவன் -சரீர வியோக சமானந்தரத்திலே தங்களுக்கு அவ்வருகு இல்லாதவர் கொண்டாடும் படி இறே இவன் பேறு –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்
தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7—-தங்கள் எல்லைக்கு அப்பால் செல்லலாம் இடம் எல்லாம் சென்று புகழ்ந்தார்கள் -ஒரு நிமேஷ மாத்திரத்தில் ஒரு லோகத்தில் நின்றும் லோகாந்தரம் ஏறப் போமவர்கள் ஆகையால் தங்கள் எல்லைக்கு உள்ளுப் புகுந்த அளவால் பர்யாப்தி பிறவாமையாலே தொடர்ந்து புகழ்ந்தார்கள் -அவர்கள் தாங்கள் சடக்கென போகிறதுக்கு அடி என் என்னில் –காண்பது எஞ்ஞான்று கொலோ-என்று இருக்குமவர்கள் ஆகையாலும் –நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள் ஆகையாலும் –

17-தலை மிசையாய் வந்த தாள்களை பூண்டு போகாமல் தடுத்து திருவாணை இட்டு-அதாவது-அப்படி சாஷாத் கரித்த பர பிராப்தி -மானச அனுபவ மாத்ரமாய் -பாக்ய சம்ச்லேஷ யோக்யை அல்லாமையாலே -அத்தைப் பெறுகைக்காக –தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன்-10-10-1- -என்றும் –தலை மேல் புனைந்தேன் சரணங்கள் 10-4-4-– என்றும் –தலை மேல் தாள் இணைகள்-10-6-6–என்றும் –என்கிறபடி மானச அனுபவ வைசத்யத்தாலே -தம் தலை மேல் ஆகும்படி வந்த திரு வடிகளைக் கட்டிக் கொண்டு -போகாமல் தடுத்து –திரு ஆணை நின் ஆணை கண்டாய் -10-10-2–என்று அவனுக்கு மறுக்க ஒண்ணாதபடி ஆணை இட்டு -இப்படி ஆணை இட்டவாறே சேஷ பூதரான நீர் சேஷியான நாம் செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை ஒழிய –நம்மை ஆணை இட்டுத் தடுக்கை உம்முடைய ஸ்வரூபத்தோடு விருத்த மாகையால் இது பெறா ஆணை காணும் என கூசம் செய்யாதே செய்திப் பிழை கூசும் செய்யாது கொண்டாய் -என்று சர்வஜ்ஞ்ஞானான நீ என் பூர்வ விருத்தத்தால் வந்த அயோக்யதை பார்த்து கூசி வாசி வையாதே –உன்னோடு ஆத்ம பேதம் இல்லாதபடி -என்னை பரிகிரஹித்தாய் -ஆன பின்பு உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்

அந்த அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ மார்க்கஸ்தரான ஆதி வாஹிக ஸத்காரத்தையும்‌ திவ்ய தேஸ ப்ராப்தியையும்‌ அங்குள்ளாருடைய பஹுமாநத்தையும்‌ பெற்று ஆநந்த மயமான ஆஸ்தாநத்தில்‌ இருப்பையும்‌ ஸாக்ஷாத்கரித்து, இப்படி ஸாக்ஷாத்கரித்த பர ப்ராப்தி மாநஸாநுபவ மாத்ரமாய்‌ யதா, மநோரத மநுபவமல்லாமையாலே (தலை மிசையாய்‌ வந்த தாள்களைப்‌ பூண்டு) “தலைமிசையாய்‌ வந்திட்டினி நான்‌ போகலொட்டேன்‌” (திருவாய்மொழி 10-10-1 என்றும்‌ “தலைமேல்‌ புனைந்தேன்‌” (திருவாய்மொழி 10-4-4) “தலைமேல தாளிணைகள்‌‘ (திருவாய்மொழி 10-6-6 என்றும்‌ இப்படி பூர்ணமாக வந்து தோன்றின திருவடிகளைக்‌ கட்டிக்‌ கொண்டு போகாமல்‌ தடுத்து (திருவாணையிட்டு) “திருவாணை நின்னாணை கண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று அவனுக்கு மறுக்க வொண்ணாத ஆணை யிட்டுத்‌ தடுக்க நீர்‌ ஸேஷ பூதரான பின்பு ஸேஷியான நான்‌ செய்தது கண்டிருக்குமத்தனையொழிய நீர்‌ ஆணை யிட்டுத்‌ தடுக்கை உமக்கு ஸ்வரூபமன்று; ஆன பின்பு அது பெறாவாணை காணும்‌” என்ன, (கூசஞ்செய்யாத செய்திப்பிழை) ‘கூசம்‌ செய்யாது கொண்டாய்‌” (திருவாய்மொழி 10-10-2) என்று ஸர்வஜ்ஞனான நீ என்‌ பூர்வ வ்ருத்தத்தால்‌ வந்த அயோக்‌யதையைப்‌ பார்த்துக்‌ கூசி வாசி வையாதே உன்னோடு ஆத்ம பேதமில்லாதபடி என்னைப்‌ பரிக்‌ரஹித்த உன்னதன்றோ செய்திப் பிழை என்றும்‌.

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-என் தலையிலே  திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து –செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இறே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை -இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு – நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு –ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இறே –-ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் – என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –

18-பற்றுக் கொம்பற்ற கதி கேடு-அதாவது-ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் -என்று கொடி கொள் கொம்பை ஒழிய தரிக்க மாட்டாதாப் போலே -என் ஆத்மாவுக்கு ஜீவன
ஹேதுவாய் இருப்பது -உன்னை ஒழிய வேறு காண் கிறிலேன் -ஆதலால் நான்-அநந்ய கதி -என்றும் –-போர விட்ட பெரும் பழி-அதாவது எம் பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாய் -என்று
என் கார்யம் நீ செய்ததாக ஏறிட்டுக் கொண்டு-உன் பக்கல் நின்றும் பிரித்து – உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே தள்ளி உபேஷித்தாய் –இது உனக்கு பரிகிரஹிக்க ஒண்ணாத பெரும் பழி அன்றோ என்றும் –

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்றும் –கோலமாம் என் சென்னிக்கு என்றும் ஆசைப்பட்ட படி என் தலை மேலே சூடாய் பெற்றேன் -என்கிறார் –

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-அமரர் சென்னிப் பூவான திருவடிகளை சூடாய் பெற்றேன் -பிரார்த்தித்துப் போகை அன்றிக்கே கிட்டப் பெற்றேன் –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-
10-6-5-இவனோட்டை சம்ச்லேஷத்தாலே தர்ச நீயமான வடிவை யுடையவன் –-தான் ஏறித் திரிவான தாளிணை -அவனுக்காகவும் அன்றிக்கே -அவனுடைய ஸூக ஸ்பர்சத்துக்காக தான் ஏறி சஞ்சரிக்குமவனுடைய திருவடிகள் –-என் தலை மேலே-–அவன் தோளில் இருக்கை தவிர்ந்து என் தலை மேலே இரா நின்றான் –

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-திருவினுடைய ஆணை கிடாய் -என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர இட ஒண்ணாத படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் போய்க் காண் என்று கருத்து -புறம்பு உள்ளார்க்கு எல்லாம் இடும் ஆணை உன் ஆணை –உனக்கு இடும் ஆணை அவள் ஆணை —-அங்கன் இன்றியே –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் –மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –கூசம் செய்யாது கொண்டாய்-என் பக்கல் உள்ள அயோக்யதையை பாராதே பரிக்ரஹித்தாய் -முதலிலே என் பூர்வ வ்ருத்தம் பாராதே மயர்வற மதி நலம் அருளினாய் -பின்பு வளவேழ் உலகிலே நான் அயோக்கியன் என்று அகலப் புக -என் வழியே விடாதே உன் செல்லாமையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டாய் -இப்படி செய்திலை யாகில் நான் இன்று கிலேசப்படாதே போகலாய்த்தே–என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய் -சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது -குண ஆவிஷ் காரம் மாத்ரம் போராது -உன்னை நான் கிட்டி அனுபவிக்கும் படி பண்ண வேணும் –அந்தோ -தன்னை ஒழியச் செல்லாமையை தானே விளைத்து -நான் கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

(பற்றுக்‌ கொம்பற்ற கதி கேடு) “ஆவிக்கோர்‌ பற்றுக்‌ கொம்பு நின்னலாலறிகின்றிலேன்‌ நான்‌” (திருவாய்மொழி 10-10-3 என்று கொடி கொழு கொம்பை ஒழிய நிற்க மாட்டாதாப்‌ போலே என்‌ உஜ்ஜீவந ஹேதுவாயிருப்ப தொன்று உன்னை யொழிய வேறு காண்கிறிலேன்‌ என்னும்படியான அநந்யகதித்வம்‌ என்றும்‌ (போரவிட்ட பெரும்பழி) “எம்பரஞ்சாதிக்கலுற்று என்னைப்‌ போரவிட்டிட்டாயே” (திருவாய்மொழி 10-10-4) என்று என்‌ கார்யம்‌ நீ செய்யக் கடவதாக ஏறிட்டுக்‌ கொண்டு உன் பக்கல்‌ நின்றும்‌ பிரித்து உன்‌ குணங்கள்‌ கால் நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்‌; இது உனக்கும்‌ பரிஹரிக்க வொண்ணாத பெரும்பழியன்றோ வென்றும்‌ 

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-என் கார்யம் நீயே செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு -அத்தையும் உபேக்ஷித்து அசேதனத்தைப் பொகடுமா போல பொகட்டாய் என்னுதல் –சகலத்தையும் நிர்வஹிக்கிற நீ என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கலில் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாய் என்னுதல் —என்னை -உன்னை ஒழியச் செல்லாத என்னை —

19-புறம் போனால் வரும் இழவு-அதாவது-போர விட்டு இட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின் யான் யாரைக் கொண்டு எத்தை எந்தோ எனது என்பது என் யான் எனபது என் -என்று உன் பக்கல் நின்றும் பிரித்து -அநந்ய கதி யான என்னை -சிருஷ்டியே தொடங்கி – இவ்வளவும் புகுர நிறுத்தின நீ என் கார்யம் நான் செய்வானாகப் பார்த்து என்னை உபேஷித்தால்- சர்வ சக்தியான நீ அநாதாரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –
எனக்கு பரிகிரமாய் இருப்பது உண்டு என்பதோர் அர்த்தமுண்டோ – பிருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதொரு நானுண்டோ -ஐயோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால் இழவே அன்றோ உள்ளது என்றும்-

(புறம்போனால்‌ வருமிழவு) “போரவிட்டிட்டென்னை நீ புறம்போக்கலுற்றால்‌ பின்னை யான்‌ ஆரைக்‌ கொண்டெத்தை யந்தோ எனதென்பதென்‌ யானென்பதென்‌” (திருவாய்மொழி 10-10-5)என்று உன் பக்கல்‌ நின்றும் பிரித்து அநந்ய கதியாய்‌ அஜ்ஞனாய்‌ அஸக்தனான என்னை ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவு புகுர நிறுத்தி ஸர்வ ரக்ஷகனான நீ என்‌ கார்யம்‌ நான்‌ செய்வேனாகப்‌ பார்த்து என்னை உபேஷித்தால்‌ நான்‌ எந்த உபாயத்தைக்‌ கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஸாதிப்பது? எனக்கொரு புருஷார்த்தமென்றும்‌ நானென்றும்‌ உண்டா? முடிந்தேன்‌ என்கிற இழவாலும்‌.

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என்
யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5—உன் பக்கலில் நின்று அகற்றி உபேக்ஷித்து -என்னை-அநந்ய கதியான என்னை —நீ -ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் வர என்னைப் புகுர நிறுத்தின நீ என்னுதல் -சர்வ ரக்ஷகனான நீ என்னுதல் – புறம் போக்கல் உற்றால்-புறம்பு போக்குகையில் அத்யவசித்தால் -என் கார்யம் நானே செய்வானாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் –-பின்னை யான்-ஆரைக் கொண்டு எத்தை -சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -ஆரைக் கொண்டு என்கிறது புருஷார்த்தம் பெறுவது ஒரு பரம சேதனனாலே -அசேதன க்ரியாகலாபங்களால் அல்ல என்னும் இடம் தோற்றுகைக்காக -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் – அந்தோமா மேகம் சரணம் வ்ரஜ என்ற உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே-எனது என்பன் என் யான் எனபது என்-பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -எனக்கு பரிகரமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் அர்த்தம் உண்டோ –ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதோர் அர்த்தம் உண்டோ -சரீர ரக்ஷணம் சரீரியை ஒழியச் செய்வார் உண்டோ –

20-உண்டிட்ட முற்றீம்பு-அதாவது-எனது ஆவியை இன் உயிரை மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – என்னுடைய ஹேயமான சரீரத்தையும் ஆத்மாவையும் மனசுக்கு பர்யாப்தி பிறவாமல் நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கினதை குறை கிடக்க விடாதே -விஷயீ கரித்து விடாய் – புக்த சேஷமான உன்னதன்றோ முதல் தீம்பு என்றும்

(உண்டிட்ட முற்றீம்பு] மனக்காராமை மன்ன உண்டிட்டாய்‌ இனி உண்டொழியாய்‌” (திருவாய்மொழி 10-10-6 )என்று மநஸ்ஸூக்கு பர்யாப்தி பிறவாமல்‌ நிரந்தரமாக புஜித்த நீ தொடங்கின கார்யத்தை குறை கிடவாதே விஷயீகரித்து விடாய்‌- புக்த ஸேஷமாக்கின உன்னதன்றோ முதல்‌ தீம்பு என்றும்‌

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-மனஸ்ஸூ க்கு ஆராமை –மனக்கு -மனஸ்ஸூக்கு —-மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு

அன்பு வளர்ந்த அடி வுரம்-அதாவது கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்று
பெரிய பிராட்டியார் பக்கல் -ஸ்நேஹ அதிசயத்தால் -அவள் பரிக்ரமான – என் பக்கல் அதி பிரவணன் ஆனவனே -நான் அந்தப் புர பரிக்ரம் அன்றோ – என் பக்கல் உனக்கு உண்டான அன்புக்கு அடி இல்லையோ -ஆகையால் அவள் பரிக்ரகம் என்கிற -அடி உரம்-என்றும்

(அன்பு வளர்ந்த அடியுரம்‌) கோல மலர்ப்‌ பாவைக்கன்பாகிய என்‌ அன்பேயோ” (திருவாய்மொழி 10-10-7) நான்‌ அந்த:புர பரிகரமன்றோ! என்பக்கலுண்டான அன்புக்கடி மில்லையோ! அந்த புருஷகார பலத்தால்‌ வந்த அடியுரமென்றும்‌, –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே –சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –

உயிர் உறவு-அதாவது-பெற்று இனிப் போக்குவனோ -உன்னை என் தனி பேர் உயிரை -என்று
அத்யந்த விசஜாதீயனாய் இருந்து வைத்து -எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ -உயிரை விட்டு உடல் தரிக்க வற்றோ என்கிற சரீர சரீர பாவ சம்பந்தம் என்றும்

(உயிருறவு) “பெற்றினிப் போக்குவனோ உன்னை என்‌ தனிப்பேருயிரை” (திருவாய்மொழி 10-10-8) என்று அத்யந்த விஸஜாதீயனாயிருந்து வைத்து எனக்கு தாரகனான உன்னை விட்டுத் தரிக்கப்‌ போமோ? ப்ராணனை விட்டு ப்ரக்ருதி தரிக்கவற்றோ என்னும்படியான ஸரீர ஸரிர ஸம்பந்தம்‌ என்றிப்படி.

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8––ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே –இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
என் தனிப் பேர் உயிரை–உன்னை -என்றதின் வியாக்யானம் -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –

21-முதல் அளவு துரக் கைகளாலே பெறா வாணை யல்ல வாக்கின பேரவா குளப் படியாம் படி
அதாவது-இப்படி -முதல் தனி வித்து –என்கிற பாட்டு அளவாக உத்தரோத்தரம் புகலற – துரக் கைகளினால் தாம் இட்ட ஆணை பெறா ஆணை அல்லாமையை சாதித்த – அதனில் பெரிய என் அவா –என்ற தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு – அவை குளப் படியாம் படி பெரிதான தம்முடைய பரம பக்தி குளப் படி யாம் படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளி இடுகிறார் பத்தாம் பத்தில் ..-அதாவது –-என் அவா அறச் சூழ்ந்தாயே –என்று கீழ் சொன்ன அபரிசேத்யமான தம்முடைய அபிநிவேசத்தையும் தன் அபிநிவேசத்தையும் பார்த்தால் இது ஒரு குளப் படியும் -அது ஒரு சமுத்ரம் என்னும் படியான அபிநிவேவேசத்தோடே வந்து சம்ச்லேஷித்து –
அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -யுத்த-134-39-என்று மீண்டு எழுந்து அருளி ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து அணைத்து உச்சி மோந்து முகந்தாப் போலே தம்முடைய விடாய் கெடும் படி அனுபவித்து -அலாப நிபந்தன பரிதாபத்தாலே கூப்ப்பிட்ட வாயாலே –-அவா அற்று வீடு பெற்ற  குருகூர் சடகோபன் -10-10-11-என்று பேசும்படி –அவா அற சூழ் அரியை -10-10-10–என்று ஹரி என்கிற திரு நாமத்துக்கு அனுகுணமாக தம்முடைய சகல தாபங்களையும் ஹரித்தமையை சர்வரும் அறியும்படி
பிரகாசிப்பிக்கிறார்  பத்தாம் பத்தில் என்கை

(முதலளவு துரக் கைகளாலே) முதலிலே பிடித்து முடியுமளவாக புகலறத் துரந்து பெறாவாணை யல்லாமையை பலிப்பித்துக்‌ கொள்ளும்படியான பேரவா குளப்படியாம்படி யென்னும்படி “அதனில்‌ பெரியவென் னவா வறச்‌ சூழ்ந்தாயே” (திருவாய்மொழி 10-10-10) என்று தத்வ த்ரயங்களையும்‌ விளாக்குலை கொண்டு அவை குளப்படியாம்படியான பரம பக்தியையும்‌ குளப்படியாக்க வற்றான ஸமுத்‌ரம்‌ போன்றிருக்கிற தன்னபிநிவேஸத்தைக்‌ காட்டி வந்து ஸம்ஸ்லேஷித்து இவருடைய ஸகல தாபத்தையும்‌ வாஸநையோடே போக்கி இவருடைய கூப்பீட்டையும்‌ ஓயப்‌ பண்ணி “அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே” (ராயு. 134-39) என்கிறபடியே மீண்டெழுந்தருளிப்‌ பெருமாள்‌ ஸ்ரீபரதாழ்வானை மடியிலே வைத்தணைத்துக்‌ கொண்டாப் போலே இவர்‌ விடாய்‌ கெடும்படி கலந்து ‘அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்‌” என்று தாமே பேசும்படி இவருடைய ஸகல தாபங்களையும்‌ போக்குகையாலே நிர்துக்கராய்‌ நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய்‌ பேற்றோடே தலைக் கட்டின படியை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே –என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading