பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-1-கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்–

திரு நறையூர் திருப்பதி எட்டாவது மங்களா சாசன திருப்பதிகம்-

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

நாகின் ஸ்தானத்திலே ஆழ்வாரான தம்மையும் கன்றின் ஸ்தானத்திலே எம்பெருமானையும் கொள்ள முடியாமல்
பிள்ளை அமுதனார் மிடி பட
பட்டர் -நாகை தன் கன்று உள்ளினால் போலே என்று கொண்டு
நாகுதன் -நாகினுடைய
கன்றானது
தாயையே நினைத்து கத்துமா போலே
பால் சுரவாத பசுவின் ஸ்தானத்திலே -அருள் புரியாத எம்பெருமான்
கத்துகின்ற கன்றின் ஸ்தானத்திலே தம்மை வைத்துக் கொண்டு -பட்டர் நிர்வாஹம் –
உன்னை மறப்பதற்கு ஹேதுவான இந்நிலத்திலே பிறந்து வைத்தும் மறவாதே இயற்கையான
அடிமையை உணர்ந்து உன்னையே அழைக்கின்றேன்
நறவு -தேனுக்கும் வாசனைக்கும் பெயர்
பிறவாமை என்னைப் பணி-பிறப்பது -என்பதும் எம்பெருமானை மறப்பதும் என்பதும் பர்யாயம்
இனி ஒரு காலும் உன் திருவடிகளை மறவாமல் இருக்கும்படி அருள் புரிய வேணும் –

————————————————————

வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2-

துற்றாக -ஒரு கபளமாக-
அண்டம் எல்லாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கவை நீ
உண்டு அருளும் காலத்தில் ஒரு துற்றுக்கு ஆற்றாவால் -திருவரங்கக் கலம்பகம்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் என்பதும் மிகை அன்றோ
பிரளய காலத்தில் ஆர் கூப்பிட்டு ரஷித்து அருளினாய்
பிரஜைகளின் நோயை அறிந்து பரிஹரிக்கும் மாதாவைப் போலே அன்றோ நீயே ரஷித்தாய்
உன் பேறாகக் காத்து அருள வேண்டி இருந்தும் நான் உன்னை நோக்கி கூப்பாடு போடுவதைக் கேட்டாகிலும் இரங்கி  அருளல் ஆகாதோ
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் விண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வாயிற்று அடக்கி ஆலின் மேலோர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன்-

தொல் புகழோனே-இப்படி பல காலும் ஆஸ்ரித ரஷணம் பண்ணிப் படைத்த புகழ் எல்லை அற்றது என்கை
ஆற்றேன் -வேறு ஒருவருக்கும் உரியேன் ஆகாதபடி உனக்கே அற்றுத் தீர்ந்தவன் –

—————————————————-

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3-

உன்னையே கூப்பிடும்படி அருள் புரிந்து வைத்து இருக்கிறாயே
உன்னுடைய கிருபையையே அனுபவித்து பர்யாப்தி பிறவாமல் அபி நிவேசம் உடையேனாய்
அதையே அனுபவித்து செருக்குற்று யமாதிகள் தலையிலே அடி இட்டுத் திரியும்படி ஆனேன் –
சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு அவ்வோ இடங்கள் தோறும்
இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான்  –
அஸ்மாதாதிகளை அனுபவிப்பதற்காக பல திவ்ய தேசங்களில் திவ்ய மங்கள விக்ரஹங்களை பரிஹரித்து சந்நிதி பண்ணி அருளுகிறான்
தாரேன் -என்றது -தர ஒட்டேன் -என்றபடி-

——————————————————

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே–7-1-4-

புள் வாய் பிளந்த புனிதா என்றதும் என் உள்ளத்திலே வந்து ஸ்தாவர பிரதிஷ்டியாக நிலைத்து
சகல தாபங்களையும் ஆற்றி குளிர்ச்சியை உண்டாக்கினாய்
தானே கை தொட்டு விரோதிகளை களைந்த பரி சுத்தி -புனிதா
கள்வா -இராமடம் ஊட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்து சத்தையையே பிடித்து  நோக்கிக் கொண்டு
போருமவன் என்கையால் கள்வா
உலகம் ஏத்தும் காரகத்தாய் கார் வானத்துள்ளாய் கள்வா -திரு நெடும் தாண்டகம்
பண்டே உன் தொண்டாம் பழ வுயிரை என்னது என்று கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டலத்தோர் புள் வாய்ந்த பிளந்த புயலே உன்னைக் கச்சிக் கள்வா என்று
ஓதுவது என் கொண்டு -திருப்பதி அந்தாதி -85-

கடல் மல்லைக் கிடந்த கரும்பே -இப்படி ஸ்ரீ ஸூக்திகள் ஆழ்வார் திருவாக்கிலே நின்று தான் வெளி வரும்
கரும்பே -கை தொட்டு நெருக்குதலால் வரும் செவ்வி அழிகை இன்றிக்கே இருக்கை
வள்ளால் -வள்ளல் -ஆஸ்ரிதர்க்கு தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்குமவனே
மகா உபாகாரகனான உன்னை -உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான் -ஒருபடியாலும் மறக்க முடியாது –

——————————————————

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

உனக்கு ஆகர்ஷகமான சௌகுமார்யத்தை யுடைய சீதா பிராட்டியும்
அவளும் கூட துணுக் துணுக் என்னும்படியான சௌகுமார்யத்தை யுடைய நீயும்
துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த காட்டிலே ஒரு மத யானை பிடியோடு கூடக் களித்து உலாவுமா போலே  உலாவினவனே
அவனுடைய வள்ளல்தனத்தை விவரித்த படி -நித்ய சூரிகள் மட்டும் அனுபவிக்கும் தங்கள் திரு மேனியை
எல்லா பிராணிகளும் கண்டு அனுபவிக்க சர்வ ஸ்வ தானம் பண்ணிணவனே -என்றவாறு
நல்லாய் -ஆஸ்ரித வத்சலனே
நர நாரணனே -நர நாராயணனாய் யுலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -என்பர் மேல் பத்தாம் பத்தில்
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து
இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட
சர்வேஸ்வரன் தன கிருபையாலே இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி
தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –
சிஷ்யனாய் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக -முமுஷுப்படி
சொல்லாய் -தேர் தட்டில் சோதி வாய் திறந்து அருளினால் போலே அடியேனுக்கும் ஓன்று அருளிச் செய்ய வேண்டும் —

————————————————————

பனியேய் பரங்குன்றின்   பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

திருப் பிரிதியில் எல்லாரும் விரும்பும் படி நித்ய  சந்நிதி பண்ணி அருளி –
ஆஸ்ரிதர் ஹிதத்தை   அநவரதம் சிந்தனை பண்ணி அருளும் முனியே –
திரு மூழிக் களத்திலே உன்னுடைய ஸ்வரூபாதிகளை பிரகாசிப்படுத்துக் கொண்டு நித்ய சந்நிதி பண்ணி அருளுபவனே
இனியாய்  -சரியான பாடம்- இனியாய தொண்டரோம்-பாட பேதம் -வ்யாக்யானத்துச் சேராது-

———————————————————————-

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-

எனக்கு வைத்த மா நிதியும் நீயே
திவ்ய தேசங்களே யாத்ரையாக போது போக்கித் திரியும் என்னோடு ஒத்த பக்தர்களுக்கு கதியும் நீயே
உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
எல்லா திவ்ய தேச எம்பெருமான்களும் இவனுக்கு தங்களைக் காட்டித் தந்து ஆஸ்வாசப் படுத்தி  அருளுகிறார்கள்
நித்திலம் -நிஸ்தலம் வடமொழி சொல் -முத்து பொருளில் –
அதிவித்ரும மஸ்த நிஸ்தலா ளீருசம்-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
திரு நீர் மலை நித்திலத்தொத்தே –
திரு நீர் மலையிலே வந்து
முத்து மாலையை உடம்பிலே அள்ளி ஏறிட்டுக் கொள்ளுமா போலே -நித்திலம் -பனி ஸ்தலம் -முத்து
தொத்து -மாலை –
குளிர உடம்பிலே எறட்டு அணைத்துக்  கொள்ளலாம் படி இருக்கிறவனே –
பதியே –பதியே பரவித் தொழும் என்று சேர்க்காமல் -தனியாகவும் கொண்டு
ஆஸ்ரிதற்கு வாசஸ் ஸ்தானமாய் உள்ளவனே என்னும் விளிச் சொல் -என்றுமாம்-

——————————————————–

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

உண்டியே உடையே என்னாமல் அத்தா ஸ்வாமியே அரியே விரோதி நிரசன சீலனே-
முளைக்கின்ற வித்தே -ஜகத் காரண பூதனே – என்று சொல்லிக் கொண்டு கால ஷேபம் செய்கின்றேன்
திகம்பர ஜனே க்ராமே ஹாஸ்யே கௌபீ ந வான் நர -போலே
பரிகாசத்துக்கு அஞ்சி -விட முடியாமல் அன்றோ உன்னுடைய போக்யதையில் ஈடுபட்டு
பேயரே எனக்கி யாவரும் யானும் ஓர் பேயனே –அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -பெருமாள் திரு மொழி-

————————————————–

தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ -7-1-9-

தூயா -எல்லார் திறத்திலும் நன்மையே சிந்திக்கும் உள்ளத் தூய்மை
விளக்கில் விட்டில் பூச்சிகள் போலே அசுரர்கள் விழுந்து முடிவர் –
அவர்களையும் நல் வழிப் படுத்த பழ கிருஷிகளை பண்ணி அருளுவான் இவன்
சுடர் மா மதி போல் -திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம்  இழிந்தேலோர் எம்பாவாய்
ஆயா -உன்னுடைய  விபூதியில் ஒருவர் இவன் நம் பிள்ளை என்று அபிமாநிக்கலாம் படி இடைப்பிள்ளையாய் வந்து அவதரித்து அருளினவனே
அலை நீர்-ஆபத் பந்துவான உன்னை அடியேன் எங்கனம் மறக்க வல்லேன் —

——————————————————-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10-

சமஸ்த கல்யாண பரிபூர்ணனான பெருமானுக்கு அடிமைப் பட்ட திரு மங்கை ஆழ்வார்
திருவாய் மலர்ந்து அருளின இத் திரு மொழியை தொண்டர்களே வாயாரப் பாடுங்கோள்-பாடி ஆடுங்கோள் –
இங்கனே யாகில் சகல சம்சார தாபங்கள் தொலைந்து பரமபத பிராப்தி யுண்டாகும் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading