பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-4-கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை-

ஸ்ரீ சார நாத பெருமாள் -திருச்சேறை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை —
பாகவத சேஷத்வம் -பகவத் சேஷத்வத்தின் காஷ்டை -எம்பெருமான் இடம் அளவிறந்த பக்திப் பெரும் காதலை வெளியிட்டு அருளுகிறார்   –
கீழே -நண்ணாத வாளவுணர் -திருப்பதிகம் போலே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு   அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

—————————————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

பூதனையை முடித்த அமரர்கள் அதிபதியே -என்று பரத்வ  சௌலப்யங்களை போற்றி உருகும்
பாகவதர்கள் என் தலைமேலே  வீற்று இருக்க உரியார்-என்கிறார் –

வெந்தழல் போல் கூந்தலாளை-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த  கரு நிறச் செம்மயிர் பேயை -பெரியாழ்வார்
அரக்கி யாதலால் செம்பட்ட மயிரை யுடையவள்
மா மதலாய் -பிள்ளைத் தனத்தில் குறை அற்றவன்
பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப்  பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

——————————————-

அம்புருவ வரி நெடுங்கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்யப் பெற்ற திரு மார்பன் –
ஸ்ரீ கிருஷ்ணன் போல விரோதி நிரசனம் செய்யும் திருச் சேறை எம்பெருமான் திருவடிகளை
சேவிப்பார்கள் என்நெஞ்சை விட்டு பிரியார்
நிதித்யாசிதவ்ய -என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்   –
சிந்தைக்கு இனியானுக்கும் அங்கு இடம் இல்லையாம் -வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகளின் போக்யம்
அம்புருவ வரி  நெடுங்கண் -அம்பு உருவம் -கண்ணுக்கு விசேஷணம் –
அம் புருவம் -அம்பன்ன கண்ணாள் அசோதை –

———————————————

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-

பாற் கடல் பாம்பணி மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம்
முன் விலகும் உருவினாள்-முன்னே சஞ்சரிக்கிற -என்றும் விட்டு
விலக வேண்டும்படி பயங்கர ரூபத்தை உடையவள் என்றுமாம் –

———————————————

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

திருச்சேறை எம்பெருமானுடைய திரு நாமங்களை வாயாரப் பாடும் பெருமை யுடைய பாகவதர்களைப் பிரிந்து
ஒரு நொடிப் பொழுதும் தரித்து இருக்க கில்லேன்
ஸ்ரீ கீதையில் -ஸ மகாத்மா -மகாத்மானா -என்று சொல்பவர்கள்-

——————————————–

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

பாகவத பக்தி தமக்கு இருப்பதால் பகவத் பக்தியிலும் குறை அற்று இருக்கிறேன் என்கிறார்
முழு முதல் கடவுளான எம்பெருமானுக்கே அனன்யார்ஹ சேஷ பூதன் ஆவேன் என்கிறார்
பாகவதர்களை நினைத்த மாத்ரத்திலே உள்ளத்திலே தேனூருகிறதே
வந்திக்கும் மற்றவர் -பௌத்தர்கள் ஸ்தோத்ரம் -வந்தே வந்தே -மிகையாக இருப்பதால் வந்திக்குமவர் என்று பௌத்தர்கள் –
மாசுடம்பின் வல்லமணர் -உடம்பில் அழுக்கை கழற்றல் ஆகாது என்று இருக்கும் ஜைனர்கள் –

——————————————-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நீர்மையிலே தோற்று உன் திருவடிக்கே அடிமை யானேன்
உன் திருவடிகளே எனக்குத் தஞ்சம் -வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் -ஆணை இட்டுச் சொல்லுவேன்
இப்படி திண்ணமாக சொல்லுவது எதனால் என்றால்
அடியார்களை சேவித்த மாத்ரத்திலே கண்ணும் நெஞ்சும் களிக்கின்றனவே –
இவ்வளவு பரிபாகம் பெற்றேன்- ஆன பின்பு அந்த அத்யவசாயம் திடமாக இருக்கத் தட்டுண்டோ –

—————————————-

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7-

பகவத் அடியார்கள் என்பதால் பாகவதர்கள் உத்தேச்யம்
பாகவதர்கள் பற்றும் தெய்வம் என்பதால் எம்பெருமானும் உத்தேச்யம்
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பான் நான்
பெரிய வண்  குருகூர் நகர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
சிந்தித்தேற்கு -சிந்தித்த எனக்கு என்ற பொருள் இல்லை -சிந்தித்த என்ற விசேஷணம் மாத்ரம்
திருமாலை -மழைக்கு அன்று  வரை முனேந்தும் பாசுரத்தில் -உழைக்கின்றேற்கு என்னை-என்ற  பிரயோகம் போலே-

——————————————

உண்ணாது வெங்கூற்றம்  ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8-

எம்பெருமானைக் கண்ணாரக் கண்டும் கையாரத் தொழும் பரவசப் படும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
நெஞ்சால் நினைத்த மாத்ரத்திலே
மிருத்யு பயத்துக்கும் பாப பயத்துக்கு பிரசக்தி இல்லை யாகும்
உண்ணாது  வெங்கூற்றம்–சாவு இல்லை என்ற பொருளில் இல்லை -யம தண்டனைக்கு ஆளாக மாட்டார்கள்
அன்றிக்கே
பாகவதர்கள் மரணத்தை பற்றிய வருத்தத்தினால் கரைய மாட்டார்கள் என்றபடி
மரண துக்கம் பெரிய துக்கம் -சரீரம் புத்து இந்திரியங்கள் சுவாதீனத்தில்   இல்லாமல் போகலாம்
பகவத் பாகவதர்கள் ஆத்மாபற்றிய சிந்தனையே கொண்டு ஆத்மானந்ததிலே ஆழ்ந்து
மரணத்தை உத்சவமாகவே கொண்டு இருப்பார்கள்
ஈஸ்வரன் நியமனத்தால் பிராப்த போகம் முடிந்து பிதாவான ஈஸ்வரன் சந்நிதானத்துக்கு
மீண்டு போவதால் மகத்தான ஆனந்தத்தை அடைகிறான் –

அந்த பேர் ஆனந்தத்தை எதற்கும் ஒப்பாக சொல்ல முடியாதே-

——————————————

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

ஆத்மா அபஹாரனான எனக்கும் இப்படி பாகவதர்களைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் எப்படி உண்டானதோ
வஞ்சக் கள்வன் மா மாயன் எம்பெருமானையும் வஞ்சித்தேன்
எனக்கு பாகவதர்களைக் கண்டால் நீர்ப்பண்டமாக உருகும் நெஞ்சம் ஏற்பட்டதே-

யோன்யதா சந்த மாத்மானம் அன்யதா ப்ரதிபத்யதே கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா-
போதொருகால் -தப்பான பாடம் -போதருகால் -நுகளும் காலம் என்ற படி -சரியான பாடம் –

———————————————————-

பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

மேல் ஒன்பது பாசுரங்களிலும் பாகவத நிஷ்டையை பேசினாலும் -நிகம பாசுரத்தில் –
தண் சேறை அம்மான் தன்னை -என்றது பாகவதர்களுக்கு உத்தேச்யன் என்பதால் –
இத் திருமொழியை திருச் சேறை எம்பெருமானுடைய திருவடிகளில் உங்கள் கையால் சூட்டுமின் –
ஸ்வயம் போக்யம் இதுவே பலன் என்கிறார்
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி போன்றவை தேட வேண்டா
இத்தையே பூ இட்டதுக்கும் மேலாக எம்பெருமான் திரு உள்ளம் உகக்கும் —

வா மான் தேர் பரகாலன்-வாம் -வாவும் என்றபடி -தாவுதல் -மான் -குதிரைக்கும் பெயர் –
ஆடல் மா -குதிரை யுடைய ஆழ்வார் என்றபடி —

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading