பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-3-சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்-

திரு நறையூர் திருப்பதி  பத்தாவது மங்களா சாசன திருப்பதிகம்-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1-

சினவில் செங்கண் அரக்கர்-சினம் இல் -கோபத்துக்கு இருப்பிடமாய் -செங்கண் அரக்கர் என்றபடி
ராவணாதி ராஷசர்களை அழியச் செய்து
ஆஸ்ரிதர்க்கு ஒன்றும் செய்ய வில்லையே இன்னும் என்ன செய்வோம் என்று மனனம் செய்யும் மா முனி
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி
அரியன செய்தும் ஆஸ்ரிதர்கள் நம்பிக்கையை வளரச் செய்பவன் -மரம் ஏழும் எய்த மைந்தன் -மிடுக்கன்
நனவு -கனவுக்கு எதிர்தட்டு -தெளிவைச் சொன்னபடி
தெளிந்த சனகாதிகளுக்கும் ஸ்வ யத்னத்தால் காண முடியாதவன்
கனவில் கண்டேன்-ஸ்வப்னத்தை சொன்னது அன்று -தெளிவற்ற மன நிலைமை
தெளிந்தவர்களாலும் காண முடியாத அவனை தெளிவற்ற இவர் அவன் காட்டக் கண்டார்
முந்துற நெஞ்சு கண்டது –பின்னைக் கண்களும் கண்டன -அதனால் களிப்படைந்தேன் –

———————————————————

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை  மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே —7-3-2-

உலகுக்கு எல்லாம் தாயான உன்னையே நினைத்து இருக்கும் படி அருள் செய்தாய்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக
நீ நினைக்க வேண்டும் -திருச் சந்த விருத்தம்  -101-
என்னையும் தன்னையே நினைக்கச் செய்து அருளினார் என்கிறார்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -நம்மை நினைத்து இருந்து அருள் செய்வன் –
தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
எங்கே கண்டோம் -அபேஷா நிரபேஷமாக ரஷித்து அருளிய -அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை –
அருளாமல் உபேஷித்தாலும் விட ஒண்ணாத அழகன் – மகரக் குழைக் காதன் –
மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச நிற்கும் அழகுக்குத் தோற்றுப் பேசுகிறபடி
பிரளயத்தில் தள்ளிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
மைந்தன் -எப்போதும் யௌவனமாகவே இருப்பவன் –
மதிள் கோவல் இடை கழி யாயனை –
பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின் மூவரு நெருக்கி மொழி
விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறுத்த பண்பாளா
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூம் கோவல் இடை கழியே பற்றி இனி -முதல் திரு -86-
உகந்தார் நடுவே புகுந்து நெருக்குமவன்
தேஹளீ -வடமொழி – ரேழி -தேஹளீசன்

—————————————————-

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

தானாகவே தன் பேறாகவே வந்து சேரக் கண்டவர் ஆதலால் -வந்த நாள் வந்து  -என்கிறார்
பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது –
அங்கன் ஓன்று இல்லாமையாலே
பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும்
இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –
நிர்ஹேதுகமாக திருவருள் அடியாக கிடைத்தது ஆகையால் விச்சேதம் இல்லை
எத்தால் மறக்கேன் -உபகாரம் ஸ்வல்பம் இல்லை -பெற்ற உபகாரத்துக்கு கைம்மாறு செய்து இருந்தாலும் மறக்கலாம்
ஒன்றும் இல்லையாய் இருக்க எங்கனே மறப்பது

———————————————————

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச்   சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

சரங்கள் ஆண்ட -வில்லாண்ட போலே -சத்ருக்களை காட்டு காட்டு என்று விம்மிக் கிளம்பும் அம்புகள்
சரங்களாண்ட தண் தாமரைக் கண்ணன் -சேர்க்கையாலே கடாஷத்துக்கு இலக்கு ஆகாமல் அம்புக்கு இலக்காகி மாண்டனர்
-ந நமேயம்  -என்று மார்பு நெரித்து மாண்டு ஒழிந்தனர்
என் மனம் அங்கனம் இன்றி தாழ்ந்து போய் உய்ந்து போம்-

————————————————————–

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே  —7-3-5-

உம்பர் மேல் உலகங்களுக்கும் உலகத்தாருக்கும்
உரலிடை கட்டுண்டவன் கண்ணன் இல்லை ஒரு தீம் கரும்பு என்கிறார்
சௌசீல்ய சௌலப்ய திருக் குணங்களில் ஈடுபட்டமை –

—————————————————————–

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன்சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே -7-3-6-

எள் தனை எட்டனை
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கு
கோங்கு நின்று பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிரும் சோலை யதே -பெரியாழ்வார்
கோங்கு அலரும் பொழில்  மாலிரும் சோலை -நாச்சியார்
கோங்கு மரங்கள் விசேஷமாய் உள்ளதை அருளிச் செய்து
கோங்கு பொன் போன்ற நிறம் உடையது -மலர்ந்தால் பொன் தட்டு போலே இருக்கும்-

மறை நான்கும் முன் ஓதிய பட்டனை -பிரமனுக்கு ஓதுவித்த என்றபடி
பரவைத் துயில் ஏற்றை  -பரந்து இருப்பது பரவை- கடல் திருப் பாற் கடல் –

———————————————

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே -7-3-7-

பாலை ஆகி -பாலை ஆகிய இனிய பான் போலே இனியனாய்-
யாழ் பயில் நாத ரூபியை பாலை யாக்கி என்று விசேஷிக்கையாலே -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி
என் கண்ணையும் நெஞ்சையும் வாயையும் இடம் கொண்டான் ஆதலால் என் வாயானது -கொண்ட பின் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி மற்று ஒன்றை சுவையாது –
மனம் தன்னுள் -மனம் -வைதிகர் திரு உள்ளத்தை – -தனக்கு உரிய -உள்-உள்ளாக கொண்டவன் –

வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் -லாவண்யம் நிரம்பப் பெற்றவன் -மீன் போன்று திருக் கண்கள் திகழப் பெற்றவன் -என்றவாறு

———————————–

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

பெற வேண்டிய பேறு இம்மையே பெற்றேன் -இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் –
கம்பீரமாக தொடங்கும் மிடுக்கு
அடும் துனியைத் தீர்த்து -துனி -துன்பம் -இங்கே மூல காரணம் -கருமம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி –
தன்னை அடைய தானே நெறி-

——————————-

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை  யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

செய்து அருளிய உபகாரத்துக்கு கைம்மாறு செய்யலாவது ஒன்றும் இல்லையே –
என் செய்கேன் அடியேன் உரையீர்
கைம்முதல் இல்லாமல் ஸ்வரூபமே பிடித்து பரதந்த்ரனான நான் எத்தைச் செய்வேன் என்கிறார்
சம்சாரியான நான் நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன்-

———————————————-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10-

நாச்சியார் கோயில் என்பதால் ஆழ்வார் தம்முடைய திருப் புகழை முற்கொண்டு பேசி –
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்-என்று தொடங்கி
பலன் சொல்லி நிகமிக்கிறார்
பக்தர்களுக்கு அமிருதமாக அருளிச் செய்யப் பட்ட இத் திரு மொழி கற்பவர்கள் பக்கலில் பாவம் ஒன்றும் நில்லாது –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading