பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-2-புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட-

திரு நறையூர் திருப்பதி ஒன்பதாம் மங்களா சாசன திருப்பதிகம் —

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும்  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-

உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -பசு பஷி யோனிகளிலும் பிறக்க வேணுமோ
என்று  சிந்தித்து நெஞ்சு உருகி கண்கள் பனி மல்கவும் பெற்றேன் –

மனம் உவந்து பிறந்து அருளும் திருக் கல்யாண குணங்களை பிரகாசித்து கொண்டு இங்கே சேவை சாதித்து அருளும்
இருப்பிலே என்னை அடிமை கொண்டாயே -என் நெஞ்சை எனக்குத் தெரியாமல் அபஹரித்து கொண்டாயே
வாய் விட்டுச் சொல்லி ஆனந்த பாஷ்பம் அருவி சோரத் தொடங்கிற்று-

——————————————————

ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-5-

பனுவல் கவிதை கொண்டு -சாஸ்திர உக்தமான இலக்கணம் வழுவாத கவிகள்
தொண்டர் தம்மை -நீசர்களை -கூழாட்பட்டு இருப்பவர்கள்-

ஓடா வாளரியின் உருவாய் –
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –
தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ –
நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –

அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா-கல் நெஞ்சனான என்னுடைய நெஞ்சையும்
கொள்ளை கொண்டதே உனக்கு பெரிய மிடுக்கு காண் –

————————————————————

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3-

சகல வித பந்துவும் நீயே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி  யாவாரே –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை —-
எத்தால் யான் மறக்கேன் இது சொல்லேன் ஏழை நெஞ்சே -என்பர் மேல் எட்டாம் பத்தில்-

நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ-இப்படி விலஷணமான அளவிறந்த ஒள்ளிய சுடரே –
பரமபதத்தில் இருக்கும் இருப்பை இங்கே காட்டி அருளுபவனே –

————————————————–

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

ஆலிலை போலே என் நெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய்-
ஆலிலையை இகழ்ந்திட்டு என் நெஞ்சில் இடமாக கொண்டாய் என்றுமாம்
இதை அறிந்து -இந்த பெரிய அருளை சிந்தியாமல் இல்லை
பரம போக்யமான திரு நறையூர் இருப்பிடமாக இருக்க இப்படி என் நெஞ்சில் நித்ய வாஸம் செய்து அருளி –
சால க்ருதஜ்ஞனனாய் இரா நின்றேன் –

———————————————————————————————-

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண்தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

நீண்டாய் -நெடுமாலே -உனது ஸ்வரூபாதிகளை யாவராலும் அறிய முடியாதே
ப்ரஹ்மாதிகள் ஆண்டாய் ஸ்வாமின் என்று மட்டும் சொல்லிப் போவார்கள்
இப்படிப் பட்ட உனக்கு நித்ய கைங்கர்யம் செய்ய ஒருப்பட்டேன்
அத்தை அறிந்து என் நெஞ்சில் புகுந்தாய்
இனி நீயே பெயர்ந்து போகப் பார்த்தாலும் திரு வாணை நின் ஆணை கண்டாய் என்னுமா போலே ஆணை இட்டாகிலும் தடுப்பேன்
இப்படி அருளிய ஆழ்வாரை -அடியேன் என்கிறீர் ஆண்டான் சொல் படி நடக்க வேண்டாவோ- நிர்பந்திக்கலாமோ என்ன
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் –
மடல் எடுக்கப் பார்ப்பார் இது ஆம் இது ஆகாது என்று பார்த்தோ கார்யம் செய்வது
நம்பி நறை யூரர் என் நிலைமை கண்டு இரங்காரரே  யாமாகில் மன்னு மடலூர்வன் வந்து -பெரிய திருமடல் தனியன்
நாண் என்ன அடைவிலே நிற்க முடியும் என்றவாறே –

——————————————

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே  அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-6-

எம் தாதை தாதை அப்பால் எழுவர் -நானும் -என் தகப்பனும் -அவன் தகப்பனும் –
அவனுக்கு முன்புண்டான சப்த புருஷர்களும் -ஆக பத்து தலை முறையாக
ஏழாட்  காலும் பழிப்பிலோம் நாங்கள் –
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் –
அடிமைச் சுவடு நன்கு ஆரியப் பெற்ற நான்-என் நெஞ்சுள்ளே வந்து சேர்ந்த தேவரீரை போகல் விடுவேனோ
இப்படி சொன்ன பின்பும் போக பார்த்தானாம் அந்தோ -என்கிறார்-
உனது கிடைக்கப் பெறாப் பேறான சொத்தை இழக்கப் பார்க்கிறாய்
என் ஆருயிரே -உன்னை ஒழிய ஜீவியாதபடி என்னுடைய சத்தையை நிர்வஹித்துக்  கொண்டு  போகிறவனே-

——————————————————–

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-7-

நெஞ்சை விட்டு போக உறுப்பாக மிடுக்கைக் காட்ட -அந்த மிடுக்கை நான் அறிவேன் -என்கிறார்
அந்த மிடுக்கை விதேயனான அடியேன் இடத்திலே உபயோகிக்க வேண்டா-

பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்-ஆழ்வார் மற்றவர்கள் நெஞ்சு எல்லாம் வல் நெஞ்சு என்று இருக்கிறார்
இவர் போன்ற மென்மை இல்லையே -பரத ஆழ்வான் சித்ர கூடம் ஏற போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டால் போலே
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் -அன்ன நடைய அணங்காய பெரிய பிராட்டியார்
ந கச்சின் ந அபராதயாதி என்பவள் நித்ய வாஸம் செய்து இருக்க
பெரிய திரு மடலில் –
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா ம மலை போல் பொன்னியலும் மாடக்
கவாடம் கடந்து புக்கு –என்னுடைய கண் களிப்ப நோக்கினேன்  –
என்ற பின் நாச்சியாரைப் பற்றி பேசும் கால்
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் –அன்ன திரு யுருவம் நின்றது
என்று பிராட்டியை அன்னமாய் அருளிச் செய்தது காண்க –

———————————————–

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல  ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

இமையோர்களையும் விட்டு என் நெஞ்சிலே புகுந்து அருளிற்று -இனி நான் போகல் ஒட்டேன்
பொன் மலர் -பொன் போலே விரும்பத் தக்க மலர்
தொழுது இறைஞ்சி வணங்க -ஒரு பொருள் பன்மொழிகள்
மனம் மொழி மெய்கள் ஆகிற த்ரி கரணங்களின் வ்ருத்தியை சொல்லுகின்றன
கைப்போது கொள்ளுதல் -புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்சலி செய்தல்-

————————————————-

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-

யான் ஆய் -எனக்கு அந்தராத்மாவாய்
என் தனக்கு ஆய் -எனக்கு விதேயனாகக் கொண்டு
கீழ் கழிந்த காலம் எல்லாம் பாழே கழிந்தன -இந்த உடலைக் கொண்டு ஒரு பயனும் பெறாது ஒழிந்தேன் முன்பு எல்லாம்
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் -என்று அந்வயம்
சரீரமாத்யம் கலு தர்ம சாதனம் -என்கிறபடியே தர்ம அனுஷ்டானத்துக்கு இன்றியமையாத சரீரத்தை போஷிக்க வேண்டியது அவசியமே-

———————————————-

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து   நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

கல் நீர் மால் வரைத் தோள் -ஒலிக்கின்ற அருவி நீரை யுடைய பெரிய மலை போன்ற திருத் தோள்கள்
சொல் நீர சொல் மாலை -கொண்டாடிச் சொல்ல வேண்டியதையே ஸ்வ பாவமாக யுடைய இச் சொல் மாலைகளை
இத்தை அனுசந்தித்தாருக்கு இது ஒரு சப்தமே என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையை –
நல் நீர்மையால் -நித்ய கைங்கர்யம் ஆகிற சிறந்த ஸ்வ பாவத்தோடு
நித்ய விபூதியில் சென்று நித்ய கைங்கர்யம் செய்து நித்ய ஆனந்த அனுபவம் பெறுவார்கள் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading