பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-10-கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை-

திருநறையூர் திருப்பதி ஏழாவது மங்களா சாசன திருப்பதிகம் –

திரு நாமப் பாட்டு ஒழிய ஒன்பது பாசுரங்களும் நமோ நாராயணமே-என்ற மகுடத்தாலே முடியும்
இவ்வாழ்வார் திரு நறையூர் நம்பி பக்கல் திரு இலச்சினை  பெற்றார் என்று பிரசித்தம் இறே
இம்முகத்தாலே நம்பி இவருக்கு ஆச்சார்யர் ஆகிறார்
ஆச்சார்யர் திரு நாமமே அனுசந்தேயம் ஆதலால் பெரிய திருமந்தரம் ஆகிற அத் திரு நாமத்தை
தாமும் அனுசந்தித்து பிறருக்கும் கற்பிக்கிறார் இத் திரு மொழியில்
இதில் பெரிய திரு மந்த்ரத்தில் ஆதி அந்தங்களை விட்டு இருந்தாலும் அவையும் சேர்ந்த திரு அஷ்டாஷரமே இங்கே விவஷிதம்
கீழே -பேசுமின் -திரு நாமம் எட்டு எழுத்தும் -1-8-9-பாசுரத்திலும் இவ்விஷயத்தின் விவரணங்கள் பார்த்தோம் –

—————————————–

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

எறிஞர் -சத்ருக்கள்
இவனே ஸ்ரீ வராஹ மூர்த்தி -சக்ரவர்த்தி திருமகன் -ஓங்கு உலகளந்த  அளந்த உத்தமன்
தாளால் உலகளந்த ஆயாசம் தீர திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனும் இவனே
இந்த நம்பியுடைய திரு நாமத்தை அனுசந்தித்து வாழ்வோம்
ஒன்பது பாசுரங்களிலும் திருநறையூர் பிரஸ்தாபமே இல்லை யாயினும்
மேல் திரு நாமப் பாட்டில் -நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை -என்று
தலைக் கட்டி அருளுவதால்
எல்லா பாசுரங்களுக்கும் திரு நறையூர் நம்பியே இலக்கு எனபது விளங்கும் –

————————————-

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

விடம் தான் உடைய அரவம் வெருவ -விடம் உடைய அரவம் தான் வெருவ -என்று அந்வயம்
மிக்க தாளாளன் -காளியன் தலையிலே திருவடிகளை இட்டு நர்த்தனம் ஆடினவன்
பொய்கையிலே போய்ப் புக்கு அவனைத் துரத்தின ஏற்றத்தை யுடையவன் –
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ வராஹன் -ஸ்ரீ திரிவிக்ரமன்  -திரு நாமம் திரு அஷ்டாஷரம்-

———————————————————————-

பூணாது அனலும் தறு கண் வேழம்  மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா  வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

ஸ்ரீ கிருஷ்ணனும்
அமுதினில் வரும் பெண்ணமுது தனக்காக்கிக் கொண்டவனும்
திரு நாமம் திரு அஷ்டாஷரம்
தறு கண் வேழம் -ஜாதி பிரயுக்தமான வட்டணித்த கண்ணை யுடைத்த குவலயாபீடம் –
தறுகண்மை -அஞ்சாது இருக்கும் தன்மை
அமுதம் கொண்ட பெருமான் –
கடலைக் கடைந்து அமுதம் வாங்கி அது புஜித்தார்க்கு வரக் கடவ ப்ரீதிதனக்கு உண்டாம்படி இருந்தான் -வியாக்யானம் கொண்டு
அமுதம் கொண்டு உகந்த பெருமான் என்று சிலர் பாடம் கொள்வார் -யாப்பு இலக்கணத்துக்கு ஒவ்வாது
நீணாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்  கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானை -11-7-1- என்பார் மேல்
பாணா வண்டு முரலும் கூந்தல் யாய்ச்சி -பூ மாலை சூடிய கூந்தலாள்
நாணாது உண்டான் -பரிபவங்களை போக்யமாகக் கொண்டு உண்டான்-

————————————————————————–

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை  விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-

ஸ்ரீ  ராமபிரான் -ஸ்ரீ பாடகத்து எம்பெருமான் திரு நாமமும் திரு அஷ்டாஷரம்
பாடு அகம் -பெருமை உள்ள சந்நிதி பாடகம்
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவ
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-

———————————————————————————

குடையா வரையால் நிரை முன் காத்த  பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி  வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-

ஸ்ரீ கிருஷ்ணனாகவும் ஸ்ரீ ராம பிரானாகவும் திருவவதரித்து சேஷ்டிதங்கள் செய்து அருளிய பெருமைகள் எல்லாம் தோன்றும்படி
திருக் கோவலூரிலே உலகளந்த பெருமானாக சேவை சாதித்து அருளும் பெருமான் திரு நாமம் திரு அஷ்டாஷரம்-

———————————————————————

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-

கானம் எண்கும் -காட்டுக் கரடிகளையும்
ராவணாதி ராஷசர்களை அடக்கி வெற்றி பெற்ற பெருமான் திரு நாமம்
தேனும் பாலும் அமுதமும் போலே பரம போக்யமானது
நான் அத்தை அனுசந்தித்து ஆனந்திப்பது போலே ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் உள்ளீர் எல்லாரும்
அனுசந்தித்து ஆனந்திக்க வேண்டுகிறேன் –
இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன்  –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொல்லத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப்  போருங்கோள் –
நமோ நாராயணமே –
நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள-
ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் –
தேவோ நாம சஹஸ்ரவான் –
பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து
இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு
காரண வாக்யங்களோடு–
இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே
ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –

—————————————————

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

சங்கல்பத்தாலே மேன் மேலும் சிருஷ்டித்து அருளும் பெருமான் திரு நாமம் திருஷ்டாஷரம்
நான் சொல்லி ஆனந்தித்தேன் நீங்களும் சொலி ஆனந்திப்பீர்

——————————————-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

நெடுகால் குன்றம் ஓன்று -சுற்று மலைகளை யுடைத்தான ஒரு கோவர்த்தன மலையை
பயத்துக்கு அவகாசம் இன்றி உடனே மலையை குடையாகத் தரித்து காத்து அருளின பெருமான் திரு நாமம் திரு அஷ்டாஷரம்
தான் அறிந்த ஆபத்தும்
விலக்காமையும்- இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே –

——————————————

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா  மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

உபய விபூதி நாதனின் திரு நாமம் திரு அஷ்டாஷரம்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் என்று
முதல் திருமொழியில் அருளிச் செய்ததது போலே நங்கள் வினைகள் தவிர யுரைமின் நமோ நாராயனமே -என்கிறார்-

—————————————————–

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே —-6-10-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை –
முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது –
இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே-
இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும்
இதுவும் விஷயமான படி கண்டி கோளே –

ஓத வல்லவர்கள் சர்வ பாப விநிர்முக்தராய் நித்ய அனுபவம் பெறப் பெறுவார்கள்-

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading