திருக் கண்ணபுரத்து அம்மானுக்கு அன்றி அடியேன் வேறு ஒருவர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார் இத் திரு மொழியில் –
கைம்மான மத யானை யிடர் தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள் மரகதத்தை
எம்மானை யெம்பிரானை ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே-8-9-1-
கைம்மானம் -கையில் பெருமை யுடையது -முன்கை மிடுக்கு உடைமையாலே அஞ்சாமல்
மேல் விளைவது அறியாதே பொய்கையிலே இழிந்து ஆபத்துக்கு ஆளாயிற்று
யானை இடர் தீர்த்த -நாஹம் களபரஸ் யாச்ய த்ரணார்த்தம் மது ஸூதன -கரச்த கமலான் ஏவ பாதயோர் அர்ப்பிதம் ஹரே –
இடர் தீர்த்த கரு முகிலை -அடியார் துயர் தீர்த்த ஹர்ஷம் -திரு மேனியில் புகர்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராஷசேந்த்ரம் விபீஷணம்-க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பரமு மோத ஹ
கைம்மா மணி -ரத்னத்துக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளால் சாம்யம்
1-ஸ்வயம் போக்யம்-உபாயமாக்கி வேறு புருஷார்த்தம் பெறலாம்
2-செம்படவன் -வியாபாரி -அரசன்
3-இழந்தவன் கதறி அழுவான்
4- பெற்றவன் மார்பு நெறிப்பான்
5-உள்ளவனை உலகம் எல்லாம் அனுவர்த்திக்கும்
6-இடையில் புருஷனைக் கொண்டே ரத்னம் வாங்கப் படும் -வேதம் வல்லார்களை —
7-சில ஆஸ்ரயங்களில் மதிப்பு யுண்டே
8 ஒளியை விட்டு இராது
9-ஒளியால் மகிமை
10-ஸ்வ தந்த்ரத்துக்கு மகிமை உண்டே
11-கடல் மலையில் உள்ளன -திருப் பாற் கடல் திரு மலை
12 -தலைப்பில் முடிந்து ஆளலாம் -சௌலப்யம்
13-இரவும் பகலும் கண் உறங்க மாட்டார்கள்
இப்படி பல ஒற்றுமைகள் உண்டே
அணி கொள் மரகதத்தை -காள மேகத் திரு உருவம் -மரகதப் பச்சை -பச்சை மா மலை போல் மேனி
காணப் புக்கவர்கள் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து சம்சார தாபங்களை போக்குவிப்பான் –
————————-
தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2-
தருமான மழை முகிலைப்-தருவை -கல்ப வ்ருஷம் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
அதில் மட்டும் திருப்தி பெறாமல் காள மேகத்தை -என்கிறார்
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து நன்நீர்கள் சுமந்து -திரு விருத்தம்-32
நீரைச் சுமந்து நாடு எங்கும் சென்று வர்ஷிக்கும்
விண் மீது இருப்பாய் -கடல் சேர்ப்பாய் -மண் மீது உழல்வாய் -திருவாய் -6-9-5-பொருத்தமான உவமை –
தன் அடியார் அவமானம் தவிர்ப்பான் -இவன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை தானே
அம்பரீஷன் -துர்வாசர் –
————————————–
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-
திருமந்த்ரார்த்த அனன்யார்ஹ சேஷத்வத்தை வெளியிட்டு அருளுகிறார் –
விலங்கல் உற படையால் ஆழி தட்ட பிரான் -திரிகூட பர்வதத்தில் சென்று சேரும் படி
வானர சேனைகளைக் கொண்டு சமுத்ரத்தை அடைத்தவன்-
ஆழி விலங்கல் உற -படையால் தட்ட -சூர்யன் அஸ்தமன பர்வதத்தில் சேர சக்கரப் படையால் மறைத்த -என்றுமாம்
கண்ணபுரம் யுடையானுக்கு -என்னாமல் -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு -என்றது
இவனுக்கு வாசஸ் ஸ்தானம் பல இருந்தாலும் இது அத்விதீயம் என்று காட்டி அருளுகிறார்
திருமந்த்ரார்த்தம் இங்கே தானே அருளினான் –
———————————————-
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே –8-9-4-
மிக்கான் -சர்வ ஸ்மாத் பரன்
மறையாய் விரிந்த விளக்கை- வேறு ஒன்றால் காண வேண்டாதே தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –
பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –
ஆசார்ய ஹிருதயம் -மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் –
மறையால் விரிந்த விளக்கு -என்று அகாரத்தைச் சொல்லுகிறது -அகாரம் தானே மறைகளாய் பரம்பிற்று
வாச்ய வாசக பாவ சம்பந்தத்தால் அவனையே குறிக்கும் –
பொலிகின்ற பொன்மலையை -கணபுரத்து பொன் மலை போல் நின்றவன் -பெரிய திருமடல்
தக்கான் –அக்காராகக் கனி – இவை திருக்கடிகைப் பதி எம்பெருமான் திரு நாமங்கள் -பரம தயாளு –
வெல்லக் கட்டி போலேயும் கனி போலேயும் இனிமையானவன்
அக்காரத்தை கொம்பு ஸ்தானத்தில் -அதில் உண்டான கனி -விலஷணமான கனி
சௌரி பெருமாளையே -கரு முகில் வண்ணனை கண்ணபுரத்தானை -என்று -நிகமப் பாசுரத்தில், அருளுவதால் –
தக்கான் ஆகவும் -அக்காரக் கனி ஆகவும் -திருக் குடந்தை ஆராவமுதன் -ஆகவும் வயலாலி மைந்தனாகவும் பேசி அனுபவிக்கிறார் –
கீழே ஏழாம் பத்தில் திரு நறையூர் பதிகங்கள் -கறவா மட நாகு -சினவில் செங்கண்-திருமொழி களும் இத்தகையதே-
——————————————-
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-
தாம் பெற்ற பேற்றை வாயாரப் பேசி மகிழ்கிறார் –
என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போயறியாய்
தன்னுடைய ஆனந்தம் விளங்க -எந்தாய் என் மனத்தே வந்தாய் –நீ வந்து புகுந்த பின்னைப் போயறியாய் -என்று
தனித் தனி வாக்யமாக நீட்டி நீட்டி அருளிச் செய்கின்றார்
வந்தாய் -பரமபதம் -திருப் பாற் கடல் போன்ற ஸ்தலங்களை விட்டு வந்தாயே
என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை -வந்த இடத்திலும் யோகிகள் மனம் போலே இன்றி
அடி நாயேன் மனத்தைத் தேடித் பிடிந்து வந்து புகுந்தாய்
போய் அறியாய் -அழுக்கு உடம்பு என்று வெறுக்காதே உகந்து இதுவே சிறந்த வாசஸ் ஸ்தானம் என்று
ஸ்திரப் ப்ரதிஷ்டையாக இருக்கின்றாய் -என்று விரித்து உரைக்கலாம்
நீர் உம்முடைய பேறாக என் நெஞ்சிலே வந்து புகுந்தாலும் பாவியேன் மறந்து ஒழியலாமே-
அப்படி மறந்து ஒழிகை அன்றிக்கே -எந்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றால் போலே
நன்றி பாராட்டப் பெற்றேனே -நீர் வந்து புகுந்த பேற்றுக்கு மேற்பட்ட பேறு அன்றோ -இது -என்றவாறு –
——————————————————–
எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6-
எம்பெருமான் செய்து அருளின பேற்றுக்கு மறவாமை ஈடல்லவே -உபகாரத்தின் பெருமையையும் தம்முடைய நினைவையும்
ஒப்பிட்டு பார்த்து தம்முடைய மறவாமை அசத் கல்பமாகத் தோற்றிற்றுப் போலும்
வெந்நரகம்-சம்சாரம்
நடுங்குகின்றேற்கு அடியேனை —இங்கே -நடுங்குகின்றேற்கு என்றது நடுங்குகின்ற எனக்கு பொருள் இல்லை
-நடுங்குகின்ற விசேஷணம் மாத்ரமே
திருமாலை -மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் -பாசுரத்தில் -உழைக்கின்றேற்கு என்னை -போலே பிரயோகம்
இருத்தி -முன்னிலை ஒருமை நிகழ கால வினை முற்று
கண்டாய் -முன்னிலை அசை-
———————————————
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே -8-9-7-
மாதா பிதாக்கள் சரீர பிண்டத்தை மாத்ரம் உத்பத்தி பண்ணி பெற்றுப் போட்டு போய் விட்டார்கள்
எல்லா உறவு முறையுமாய் நீ இருந்து ஞான பக்த்யாதிகளை வளர்த்து என்னுள் மன்னி நின்றாய்
என்ன காரணத்தால் உன்னை மறக்க முடியும்
உற்றானாய் வளர்த்தி -பிதா ச ரஷகச் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி –ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –
திரு மந்த்ரத்தில் காட்டி அருளும் ஒன்பது உறவு முறைகளும்
பாலசந்த்ரன் ஷயம் தீர்த்து அருளி -தன்னுடைய ரஷகத்வத்தைக் காட்டி என்னை ஆட்கொண்டு அருளிய பின்பு
எங்கனம் உன்னை மறப்பேன் -எத்தால் நான் மறக்கேன் –
————————————————–
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே -4-8-8-
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே இன்று இவை ஒழியக் கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டலே –
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் –
சம்சாரம் நேராத பேறு பெற்றேன்
திருவாலிப் பதிக்கு வயல் சூழ் விசேஷணம்
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே
ஒரு நாளும் நீர் மாறாத வயல் சூழ்ந்த திருவாலியிலே நிற்கிற சர்வேஸ்வரனைப் பெற்றேன் பெற்றதுவும்
அந்த பெற்ற பேறு தானும் – பிறவாமை பெற்றேன் – இப் பேற்றுக்கு விச்சேதத்தை பண்ணக் கடவ
ஜன்மம் மறுவல் இடாதபடி பெற்றேன் -என்னுதல் –
அன்றிக்கே
இப் பேற்றுக்கு அடியாக என் பக்கல் ஒரு நன்மை பிறவாது இருக்கச் செய்தே பெற்றேன் -என்னுதல்
அங்கன் இன்றிக்கே
பெற்றேன் என்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாத படி பெற்றேன் -என்னுதல்
உபகார் ஸ்ம்ருதி அனுவர்த்தித்த அன்று பிரத்யுபகாரம் தேடிநெஞ்சாறல் பட வேண்டும்படி இருக்கும் இறே
அது வேண்டாத படி பிராப்தம் இது என்று இருக்கும் படி உபகரித்தான் ஆயிற்று –
பிறவி இல்லாமை பெற்றேன் -முதல் அர்த்தம்
நிர்ஹேதுகமாக பிறவாமை பேறு பெற்றேன் -இரண்டாம் அர்த்தம்
நன்றி அறிவும் பிறவாமலே இப்பேறு பெற்றேன் -மூன்றாவது அர்த்தம் -என்றவாறு –
—————————————–
கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9-
கண்ணார் கண்ணபுரம் -வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கும் படியான அழகு
அன்றிக்கே விசாலமான -கண் -இடம் –
தலைச் சங்க மேல் திசையுள் விண்ணோர் நாண் மதியை –
நாண் மதியப் பெருமாள் -தலைச் சங்க நாண் மதியம் -திருப்பதி
தலைச் சங்காடு -தலைச் சங்க நாடு -மருவி
கைப்பால் அலைச் சங்கம் ஏந்தும் அணி யரங்கத்து அம்மான் தலைச் சங்க நாண் மதியத்தான் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை -பெரிய திரு மடல் -இரண்டு மங்களா சாசன பாசுரங்கள் இத் திவ்ய தேசத்துக்கு
நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை-கதிர் மதியம் போல் முகத்தான் -என்றும்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
உதய பருப்பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே -என்றும் -போலே –
————————————————
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே -8-9-10-
இத் திரு மொழியில்
திருவாலி
திருக் குடந்தை
திருக் கடிகை
திருச் சங்க நாண் மதியம்
முதலிய பல திருப் பதிகளை அனுசந்தித்து இருந்தாலும் இவர் கவி பாடுகிறது திருக் கண்ணபுரத்தையே -என்கிறார்
பகவத் பக்தி மிகுந்து தொண்டர்கள் என்று பெயர் பெற்றவர்களை விளித்து இத் திரு மொழியை பாடி ஆடுமின் –
உலகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும்
வரு நீர் வையம் -கடல் சூழ்ந்த பூமியிலே -உய்ய -இவை பாடி ஆடுமின் –
——————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .