Archive for the ‘Thirumangai Aazlvaar’ Category

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-9-மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து-

April 5, 2015

திருமால்  இரும் சோலை அழகர் அழகிலே -மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -என்று
ஒரு கால் சொன்னாப் போலே ஒன்பதின் கால் சொல்லி
நெஞ்சு பறியுண்டு -தாமான தன்மை இழந்து -தாய் பாசுரமாக —
என் பெண்பிள்ளை  ஸூந்தரத் தோளுடையான் திருத் தோள்களை அணைந்தால் அல்லது தரிக்க மாட்டாள் –
அவனை அணைந்து ஆனந்திக்கும் பாக்கியம் பெறுவாளோ-அன்றி இங்கனே நோவு  பட்டே இருப்பாளோ -என்று
ஒன்பது பாட்டாலே சங்கை பண்ணி
நிகமத்தில் -அவனைக் காணப் பெறுவாள் என்று அறுதிட்டு தரிக்கிற படியை
வெளியிடுவதாகச் செல்லுகிறது இத் திருமொழி-

—————————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள்  புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை   நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

ரஷணமே தொழிலாக கொண்ட எம்பெருமான் -நித்ய ஸூரிகள் நாதனாய் இருக்கும் இருப்பை விட்டு
இங்கே ஸ்ரீ கிருஷ்ணாவதார சௌலப்ய காஷ்டையை வெளியிட்டுக்  கொண்டு அருளி நிற்கிறான் –
அவனுடன் கூடப் பாரிக்கின்றாள் என்மகள் -நிறைவேறுமோ -அன்று ஆசைப்பட்டு இருக்கும் அத்தனையோ –
ஆழ்வார் அழகர் உடன் கூடும் கிட்டுமோ கிட்டாதோ என்று கவலைப் படுவதே இத் திரு மொழியின் தாத்பர்யம்
இந்த்ரனைக் கூட்டி மூவருள் முதல்வன்
பூ அலருந்தி -பாட பேதம்-

—————————

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை   நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே  -9-9-2-

புனை வளர் -புன்னை மரங்கள் வளரப் பெற்ற
திரு வரங்கம் பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருள்பவனும்
மூவுலகுக்கும் ஆதிகாரண பூதனனுமான சர்வேஸ்வரன் இங்கே வந்து நிற்கும் நிலையிலே காணப் பெறுவாளோ
பொன்னி -பொன்களைக் கொழிக்கையாலே காவேரிக்கு பெயர்
முனைவன் -முன்னையவன் -புராதனன் –
சினை -கருப்பம் -அரும்பு -மரக் கொம்பு

—————————-

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை  இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-

பிரளயத்தில் ரஷித்து ஆலிலை கண் வளைந்து அருளிய தேவாதி தேவன்
சம்சார பிரளயத்தை இருந்து நம்மை ரஷிக்க இங்கே நின்று அருளும் நிலையிலே
அனுபவிக்க ஆவல் கொண்டு இயற்க்கை அழகுடன் செயற்கையாக ஆபரணங்கள் அணிந்துள்ள
என் மகள் அணுகப் பெறுவாளோ
கரு மாணிக்கம் மா மலையை -இல் பொருள் உவமை -அபூத உவமை
அண்டர் -இடையர் தேவர்
ஆயிழை -ஆய்தல் -ஆராய்தல் –

———————

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என்  நன்னுதலே –9-9-4-

தூணிலே தோன்றி  ஆஸ்ரித விரோதியைத் தொலைக்கப் பெற்றோம் என்று உகந்து -அந்த உகப்பு தோன்ற புண்டரீகாஷனாக –
அத்தைக் கொண்டே சர்வ ஸ்மாத் பரன் என்று நிச்சயிக்கும் படியும் பரஞ்சோதி ஸ்வரூபி யானவனும்
ஓங்கிய திரு மால் இரும்  சோலை மலையிலே நமக்கு எளியனாய் நிற்பவனை என்று கிட்டப் பெறுவாளோ-

——————————————–

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

ஆசூர பிரக்ருதிகளின் நடுவே ஸ்ரீ வாமன வேஷத்தைப் பூண்டு எழுந்து அருளி ஓங்கி உலகு அளந்து அருளினவன்
தேன் மிக்க பூம் பொழில் களாலே சூழப் பட்ட திரு மால் இரும் சோலையில் எழுந்து அருளி நிற்கும் எம்பெருமானை –
தேவாதி தேவனை -என்று கிட்டி வணங்கப் பெறுவாளோ-

எழுவாய் வருவித்துக் கொள்ள வேண்டும் இப்பாசுரத்தில்-

—————————————————

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண்  கண்ணி காணும் கொலோ –9-9-6-

பரபக்தி இல்லாதவர்க்கும் -நாஸ்திக வாதம் சொல்லக் கூட நெஞ்சால் நினையாதவர்க்கும் -கிட்டக் கூடாதவன் –
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன்
திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -நம்மாழ்வார் –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே
தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –
அவனது ஸ்வா தந்த்ர்யம் வெளிப்பட்டதாயிற்று
மடிமாங்காய் இட்டு கைக் கொள்வான்
இத் திருக் குணத்தை ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து வெளியிட்டு  அருளி –
அத்தை ஏட்டுப் புறத்தில் கேட்டுப் போக வேண்டாதபடி இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருள்பவனை
பரகால நாயகி காணப் பெறுவாளோ-

——————————————

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ–9-9-7-

ஸ்ரீ கிருஷ்ணனாய் விரோதி நிரசனம் பண்ணி அருளினவன் நமது பிரதி பந்தங்களைப்  போக்கி  அருள
நித்ய சந்நிதி பண்ணி அருளும் பரம உதாரரான பெருமாளை இவள்
வணங்கித் தொழும் படியான பாக்கியம் பெறுவாளோ-

————————————

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு  தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம்  பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8-

ஸ்ரீ பார்த்த சாரதியாய் உடம்புகுக் கவசம் இடாதே வெறும் கையோடு நின்று அவனை நோக்கினவனும்
விண்ணாட்டிலே நித்ய சூரிகளுக்கு பரம போக்யனானவனும்
அந்த அழகை இங்கு உள்ளாறும் அனுபவிக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளி
பெருமானை என் மகள் கை தொழப் பெறுவாளோ-

————————-

வலம்புரி யாழியானை வரையார்  திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ்  நாரணனை   நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-

ஆஸ்ரித ரஷணத்துக்கு விளம்பம் இல்லாத படி திவ்ய ஆயுதங்கள் தரித்து –
அவை இன்றிக்கே ரஷிக்க வல்ல தோள் வலிமை படைத்த சுந்தர தோளுடையான் –
ரஷித்து அருளாவிடினும்   விட ஒண்ணாத யஞ்ஞோபாவீதம் அணிந்த அழகன் –
ரஷ்ய வர்க்கம் தேடி வந்து திரு வேங்கடமலையிலே நின்று அருளுபவன்
அது தான் பரத்வம் என்று தோன்றும்படி எளிதாக மிக நீசனார்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு
இங்கே எழுந்து அருளி இருக்கும்
நீர்மையில் ஏற்றத்தை யுடைய ஸ்ரீ மன் நாராயணனை என் மகள் நண்ணப் பெருவளோ –
சிலம்பியலாறு -நூபுர கங்கை
சிலம்பு –கால் அணி -குன்றுக்கும் பெயர் -த்ருஷதபி பரசக்த காநா ஸூ -ஸூந்தர பாஹுஸ்த்வம் –
மரங்களும் இரங்கும் வகை  மணி வண்ணாவோ என்று கூவின
ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டு குன்றும் உருகி ஆராயிற்று -சமத்காரமாகவும் பொருள் உரைப்பர்
-சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய திருமலையிலே வந்து நிற்கிற-

————————–

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே  -9-9-10-

ஸ்வ பிரயத்தனத்தால் காண அரியன்
சர்வ ஸூ லபன் -பெரிய திருவடி மேல் ஏறி கருடாரூடனாக தானே காட்டக் காணும் அத்தனை -காட்டவே கண்ட ஆழ்வார் –
காணப் பெறுவாள் என்று நிச்சயித்து பேசின இத் திரு மொழியை பயில்வார்கள் பாவம் தொலையப் பெறுவார்கள்
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே இங்கனே நோவு  படும் இத்தனையோ -என்று பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –
அணியாயிழை  காணும் என்று -நிச்சய பரம்  -காணும் கொலோ என்று நிகமத்தில் இல்லையே –

பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே  –
பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடே யாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு –
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை  –

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-8–முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்–

April 4, 2015

திருமால் இரும் சோலை மங்களா சாசன திருப்பதிகங்கள் இதும் அடுத்ததும்-

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல்  ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-1-

முந்துற முன்னம் விஷயாந்தர சங்கத்தை தவிர்ப்பாய் என்கிறார்
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை
எண்ணாத போது எல்லாம் இனியவாறே -11 பத்தில் அருளிச் செய்வர்
விட்டு ஒழிக்க வேண்டியவர்களை விரைக் குழல் மடவார் -என்று சிறப்பித்துக் கூறுவான் என் –
உலகோர் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லி ஷேபிக்கிறார்-ஆழ்வாருடைய நா வீறு இருந்தபடி
தடுமாறல்   -தடுமாறாதே -என்றபடி
இவற்றை விட்டு சகல கார்யப் பொருளாக விரிந்து அருளும் பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம்
சந்தன மரங்களையும் -சிறந்த ரத்னங்களையும் -மயில் தழைகளையும் உருட்டிக் கொண்டு
அருவிகள் பிரவஹிக்கப் பெற்றாதாயுமாய்
உள்ள திரு மால் இரும் சோலையை வணங்குவோம் வா
கோயில் திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமலை
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர்
மால் பெருமை -உயர்ச்சி என்றுமாம்
இருமை பெருமை  -பரப்பு என்றுமாம்
உயர்ந்து பரந்த சோலைகளைக் கொண்ட திரு மலை –

————————————

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-2-

மேல் உலகத்தில் உள்ளார் தங்களைப் போன்ற பக்தர்களை நோக்கி -நல்ல பூ மாலைகளையும் –
அர்க்க்ய  பாத்ய ஆசமநீயங்களுக்கு யுரிய தீர்த்தைத்தையும்
சேகரித்துக் கொண்டு புறப்ப்படுமின் -என்று கூட்டி வந்து ஆஸ்ரயிக்க
ஷீராப்தி நாதன் இதுவே பாங்கான இடம் என்று போந்தருளி திரு அபிஷேகம் அணிந்து நித்ய வாஸம் செய்து அருளும் இடம்
விண்டு விரிகின்ற மூங்கில்கள் -நறு மணம் மிக்க குறிஞ்சிப் பூக்களில் செவ்வித் தேனிலே படிந்த வண்டுகள்
யடைய பர்யந்தங்களை யுடைய திவ்ய தேசம் –

——————————–

பிணி வளராக்கை நீங்க நின்று  ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில்   குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-3-

கணி வளர் -கணி என்று சோதிடனுக்குப் பெயர் -கணிப்பவன் காரணப் பெயர்
வேங்கை முதலிய மரங்களே காலத்தை கணிசிக்குமாம் அக்காலத்திலே
அன்றிக்கே
கண்ணி என்பதே கணி யாகி -பூம் கொத்துக்கள் வளரப் பெற்ற வேங்கை மரம்
கவண் -கற்களை எறியும் கயிறு -ரத்னங்கள் எளிதாகக் கிடைக்கும் ஸ்தலம்
இரந்து நீர்  ஏற்றுப் பெற்று நிமிர்ந்து  அருளினவனே- இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –

————————————–

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-4-

சூர்மையில் ஆய -கொடுமையுடன் கூடிய -சூரத் தனம் –
சூரும் அணங்கும் தெய்வப் பெண்ணே -நிகண்டு -யசோதைப் பிராட்டி யுடைய வடிவு கொண்டு வந்தவள்
பூதனை நிரசித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணனும்
தாடகை மிரசித்து அருளின ஸ்ரீ ராமபிரானும் இவனே -பாங்கான இடம் என்று விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம் –
வணங்குவோம் வா மட நெஞ்சமே
கார் மலி வேங்கை -நீல வேங்கை மரம் -மேக மண்டலம் வரை ஓங்கி வளர்ந்த வேங்கை மரங்கள்-

————————————-

வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன்   தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ்  சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-5-

த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்-முடிகள் பத்தும் புற்று மறிந்தால் போலே புவி மேல் சிந்திப் புரள
வீர வாசி தோற்ற பூசல் பொருத பெருமான் உறையும் இடம்
தேன் மணம் நாறப் பெற்ற சாரல்
பிரசம் -தேனுக்கும் தேனீக்கும் பெயர் –

————————–

விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-6-

ப்ரதிகூலர் மேலே உமிழ விஷத்தோடு கூட
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
அங்கநாம் அங்கநாம் அந்தரே மாதவ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்கநா
திவ்ய சேஷ்டிதனான ஸ்ரீ கிருஷ்ணனே நித்ய சந்நிதி பண்ணி அருளும் இடம்
ஆகாசம் கம்பீரமாக முழங்க அத்தைக் கேட்ட சிங்கம் யானை என்று மயங்கி அச்சம் கெட்டு கர்ஜிக்கும் –
நாம் வாழும் இடத்தில் யானையும் இப்படி செருக்குக் கொள்ளக் கடவதோ என்று சீறி
பிரதிகர்ஜனை செய்யப் பெற்றதாம் திரு மலை –
மடங்கல் -சிங்கம் –

————————————-

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-

கழுதை வடிவு கொண்ட தேனுகன் -சுழற்றி பனை மேல் எறிந்து அழித்தனன்
விரோதி நிரசன சீலன் -அத்தாலே புகர் பெற்ற பெருமான் விரும்பி நித்ய வாஸம் செய்து அருளும் ஸ்தலம் –
ஆகாசம் வரை ஓங்கி இருந்துள்ள சோலையின் உள்ளில் நீலப் பாறை வழியே போய்ப் புக்கு
மான்கள் தேனைப் பருகா நின்றுள்ளதாம் –

————————————————-

புதமிகு  விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-

திருப் பாற் கடலில் அலைகள் ஆகாசத்து அளவும் கிளர்ந்து கொந்தளிக்கின்றனவாம்
அங்கு நின்றும் திரு ஆய்ப்பாடிப் போந்து கேசி என்னும் குதிரை உதட்டைப் பிளந்து உடம்பையும் இரு பிளவாக வகிர்ந்து
விரோதி நிரசனமே ஹேதுவாக புகர் பெற்ற திருமேனி கொண்ட பெருமான் யுறையும் இடம்
மத ஜலத்தை வண்டுகள் பெருக பின்னையும் வெள்ளம் இடா நிற்கிறதாம் -களி வண்டு பருக மதமிகு  சாரல்
புதமிகு விசும்பு -அம்புதம் வடமொழியில் மேகம் -முதல் குறைவாக புதம்
கபோலம் -கவுள் என சிதைந்து உள்ளது-

————————————————–

புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை  மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-

புந்தி இல்லாத -விவேகம் அற்ற சமணர் -பௌத்தர் -வேத பாஹ்யர்கள்
தம்மையே உகந்து இருக்கும் அன்பர்கட்கு உதவப்பெற்றோமே என்று மகிழ்ந்து நித்ய வாஸம் செய்து அருளும்
எங்கள் குல நாதர் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -நித்ய ஸூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும்
ஒக்க திரு முகம் கொடுத்து அருளும் அழகர்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை  மகளிர்கள் நாளும் மந்திரத் திறைஞ்சும்-
சந்தனச் சோலையில் உண்டான
தாழ்ந்த பணைகளில் உண்டான நிழலின் கீழே போய்
வரை மகளிர்கள் ஆனவர்கள் நாள் தோறும் தங்கள் வர பலத்துக்கு ஈடான
மந்த்ரத்தைக் கொண்டு ஆஸ்ரயா நின்றுள்ள – மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
வரை மகளிர் -குறத்திகள் -வர மகளிர் -சிறந்த ஸ்திரீகள் என்றுமாம் -அப்சரஸ் ஸ்திரீகள்

————————————————

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே -9-8-10-

அழகரை அவர் வடிவு அழகிலே ஈடுபட்டு ஆஸ்ரயிக்கும் அவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் துதிக்கும்
பாகவ சேஷத்வ நிஷ்டையிலே ஊன்றிய திரு மங்கை ஆழ்வார் அருளிய இத் திரு மொழியை
ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடும் பாக்கியம் யுடையவர்கள் பூமிக்கு நிர்வாஹகராய் ஆகப் பெறுவார்கள்-

————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-7-தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற-

April 4, 2015

திரு வல்ல வாழ் திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
ஆழ்வார் திரு உள்ளம் -பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் அனுபவம் தலைக் கட்டாமல்
இருக்கச் செய்தேயும் அங்கே போனது –
இவர் திரு வல்ல வாழ் -திரு மூழிக் களம் -திரு நாவாய் -மூன்று மலை நாட்டு  திவ்ய தேசங்களை
மங்களா சாசனம் செய்து உள்ளார்
மலை நாட்டு திவ்ய தேசங்கள் நான்கு இட வகுப்பு –
திரு வித்துவக் கோடு-திரு நாவாய் -ஒரு வகுப்பு –
திருக் காட்கரை திரு மூழிக் களம் -இரண்டாவது வகுப்பு –
திருச் சிற்றாறு-குட்ட நாட்டுத் திருப் புலியூர் -திரு வாறன் விளை -திரு வண்  வண்டூர் -திரு வல்ல  வாழ் –
திருக் கடித்தானம் -ஆகிய இவை மூன்றாவது வகுப்பு –
திரு வண் பரிசாரம் -திரு வாட்டாறு -திரு வனந்த புரம் -இவை நான்காம் வகுப்பு –
இந்த நான்கு வகுப்புகளையும் மங்களா சாசனம் செய்து அருளி உள்ளார் நம்மாழ்வார்
மூன்று வகுப்புகளை மங்களா சாசனம் செய்து அருளி உள்ளார் இவர்-
குலசேகர ஆழ்வார் ஒரு வகுப்பு மட்டும்  மங்களா சாசனம் செய்து அருளி உள்ளார் –

திரு வல்லா -என்பர் -சந்நிதிக்குள் ஸ்திரீகளை முன் புகு இடுவதில்லை என்பர் –
கீழ் வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் -என்று
பர உபதேசத்துக்கு உறுப்பாக விஷயாந்தரங்களின் தண்மையை ஸ்மரித்தார்-
தாம் இதில் நின்ற நிலையைப் பார்த்தார் –
இன்னமும் சம்சார வாசனை கழிந்தது இல்லை யாயிற்று -போக்யமான விஷயங்கள் சமீபத்திலே உள்ளன –
இப்படு குழிகளை  எப்படித் தப்பப் போகிறோம் -கவலை கொண்டு -திரு வல்ல வாழ் திருப்பதியை
வாயாலே சொல்லி நெஞ்சு மருவப் பெற்றால் நல்லது என்று தோன்றிற்று –
வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –என்று தமது உள்ளத்துக்கு உரைக்கிறார் –

———————————

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-7-1-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே -திருவாய் -5-1-8-
திருமாகள் கொழுநனே-என்று அத்யவசாயம் கொண்டு இருக்க பிராப்தமாய் இருக்க -அதற்கு மாறாக –
அன்னை அத்தன் என் புத்திரன்  பூமி வாசவர் குழலாள் என்று மயங்கி –
ஆபாச பந்துக்கள் -சம்சார பந்தத்துக்கு ஆட்பட்டு இருக்கும்
வாழ்வு போதும் என்று ஆத்ம ஸ்வரூபத்தை ஒரு அவத்யம் விளையாதே நோக்கிக் கொள்ள
திரு வல்ல வாழ் என்று வாயாலே சொல்ல வாகிலும் இசைந்திடுக
இங்கே ஆசை கொண்டு -தொழுவது செருப்பு வைத்து திருவடி தொழுவத்துக்கு ஒக்கும்
வன் சேற்றிலே அழுந்திக் கிடக்க வேண்டாமாகில் வாயாலே சொல்ல வாகிலும் இசை
அந்தமாய் -அவன் இடம் அனைத்தும் லயிக்குமே
ஆதியாய் -சிருஷ்டிக்கும் உத்பத்தி ஸ்தானம் தானே
ஆதிக்கும் ஆதியாய் -காரண அவஸ்தையான சித் அசித் அனைத்துக்கும் நிர்வாஹகனாய்
மூவகைக் காரணமும் தானே
சங்கல்ப விசிஷ்டன் -நிமித்த காரணம்
ஸூஷ்ம சித அசித் விசிஷ்ட ப்ரஹ்மம்-உபாதான காரணம்
ஞான சக்த்யாதி குணா விசிஷ்ட ப்ரஹ்மம் -சஹ காரி காரணம் –

————————————-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து   அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -9-7-2-

பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போலே அஞ்சி உஜ்ஜீவிக்க வழி தேடுவாய் ஆகில் ஆஸ்ரித பஷபாதியாய்
குன்றில் இட்ட விளக்கு போலே சௌசீல்யம் காட்டி அருளிய பார்த்த சாரதியை –
தூது எழுந்து அருளின தேவாதி தேவன்  நித்ய வாசம் செய்யும் திரு வல்ல வாழ் -திவ்ய தேசத்திலே பொருந்தப் பார்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு -முடி இழந்து இருந்தாலும் முடி புனைந்து அரசாள உரியார் –
பகவத் அபிப்ராயத்தால் அருளிச்செய்கிறார்-

————————

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

மாவலி பக்கல் குறள் பிரமசாரிப் பெருமானாய் தனது உடைமை பெற இரந்து சென்றவனே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
பூண் -பூணப்படுவது -முத்தாஹாரம் போல்வன
பொய்யினை -சரீரத்தை என்றபடி
பேணுவார் பேசுமப்பேச்சை-விஷய பிரவணர்கள் பேசும் பேச்சுக்களை –

————————————————–

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

அயர்வறும் அமரர்கள் அதிபதியே
பரம பதத்துடன் போலியான ஒக்கத்தை யுடைய திரு மலையிலே நிற்பவரே
இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறார் -இங்கே பொருந்தப் பார்
யணைதும் -தன்மை பன்மை வினைமுற்று

—————————————————

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேலங்கை  வாய் வைத்து அவள் நாளையுண்ட
மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-5-

இஹ லோகத்து ஐஸ்வர்யம் நிலை அற்றதே
பூதனையை முடித்து அருளிய பெருமாள் இன்னும் நம்முடைய பிரதிபந்தகங்களை  போக்கி அருள
இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
துஞ்சினார் -நீண்ட உறக்கம் -மரணம் -வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை
அங்கை -அகம் கை
அங்கை வாய் -உம்மைத் தொகை

———————————————

உருவினார் பிறவி சேரூன் பொதி  நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும்
மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-6-

தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமும் மிகு உடல் –
பஞ்ச இந்த்ரியங்கள் புகுந்து என் விஷயத்தை காட்டு காட்டு என்று அருவித் தின்றிடுமே
இதற்கு அஞ்சினாய் ஆகில் வைதிகர் வாழும் திரு வல்ல வாழ் பொருந்தப் பார் –
உரு -ஸூஷ்ம சரீரம்
குரம்பை -ஸ்தூல சரீரம்
நித்தியமான ஆத்மவஸ்துவுக்கு பிறப்பாவது -ஸூஷ்ம சரீரத்தோடு கூட ஸ்தூல சரீரத்திலே பிரவேசிக்கை-

—————————————

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7-

நோய்களுக்கு எல்லாம் உபாதான காரணம் இந்த உடல்
மெய் என்று விபரீத லஷணையால் சொல்லப் படும்
சரீரத்துக்கே   கரைந்து நைய வேண்டும் என்னும் பேயர்களில் பேச்சிலே விஸ்வாசம் ஒழிந்து
ஆத்ம உஜ்ஜீவனத்து வழி தேடுவாய் ஆகில்
ஜகத் ஸ்வரூபியாய் பரந்து நிற்கும் ஆச்சர்ய பூதனான எம்பெருமான் நித்ய வாஸம் பண்ணி அருளும்
திரு வல்ல வாழ் திவ்ய தேசத்திலே பொருந்தப் பார்
யாக்கை -உயிரைக் கட்டுப் படுத்துவது -காரணப் பொருள்-

—————————————————–

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே—9-7-8-

பாஞ்ச பௌதிக பிண்டமான சரீரம் ரஷகம் அன்று
பெரிய பிராட்டியாரும் தானுமாக எம்பெருமான் நித்ய சந்நிதி பண்ணி அருளும் திரு வல்ல வாழிலே பொருந்தப் பார்-

சந்து -சந்தனம்

———————————————————-

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-

வெள்ளியார் –சுக்ரன் -லோகாயுத மதத்துக்கு அவன் பிரவர்த்தகன்
கைலாச கிரியை சொல்லி பசுபதியை சொல்லி பாசுபத மதம் என்னவுமாம்
பிண்டியார்-அசோக மரம் -இருப்பிடமாக யுடைய ஜைனர்
ஜைன மதத்தினரான பவணந்தி முனிவர் நன்னூலில் -பூ மலிய சோகின் புனை நிழல் அமர்ந்த –
போதியார் -அரச மரம் -போதி வேந்தன் புத்தன்
வேத பாஹ்ய மதங்களில் அன்வயிக்கப் பெறாமல் ஸ்வரூப ஞானிகளால் சேவிக்கப் படுபவரும்
பிரயோஜனாந்திர பரர்களுக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அம்ருதம் அருளினவருமான
பெருமாள் நித்ய வாஸம் செய்யும் திவ்ய தேசம்
தெள்ளியார்  அவனே உபாயமும் உபேயமும் என்று தெளிந்தவர்கள்
கலக்கமிலா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கமிலா வானவர் -என்றபடி
சனகாதி மகரிஷிகளும் -முக்தர்களும் -நித்யர்களும்
முநீர் -தொகுத்தல் –

————————————-

மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம்  காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10-

வேதம் வல்லார் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழும் இடம்
இத் திருமொழியை ஒதுமவர்கள் இவ் விபூதியிலே தலைவராய் இருந்து நித்ய விபூதியிலே புக்கு நித்ய ஆனந்தம் பெறுவார்-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-6-அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்-

April 4, 2015

இதுவும் திருக் குறுங்குடி திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம்
திரு மா மகளைப் பெற்றும் -என்று கீழே ஸ்மரித்ததால் தரிப்பு பெற்று தாமே நடந்து செல்லலாம் படியான தன்மை பெற்றார்
அங்குள்ள பெருமானுடைய சீல குணத்தையும் அனுசந்தித்தார்
அக்கும் புலியின தளும் உடையாரவர் ஒரு பக்கம் நிற்க நின்ற பண்பர் -நமக்கு குறை என் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு தாமே திருக் குறுங்குடி சென்று அனுபவிப்பதாக அமைந்துள்ளத்து இத் திரு மொழி-

——————————————————————————————————————————————————————————————————————-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும் குறுங்குடியே   ———————–9-6-1-

கொக்கின் பிள்ளை தக்க மரத்தின் தாழ் சினை ஏறி -கொக்கின் குட்டியானது தனக்கு ஏறத் தக்க ஒரு மரத்தினுடைய தாழ்ந்த கிளைகளிலே ஏறி
தாய் வாயில் வெள்ளி ற வு -தாய் கொக்கின் வாயில் இருக்கும் வெள்ளிறா  என்னும் சாதி மீனை
அக்கும் புலியின்  அதளும் -எலும்பையும் புலியின்  தோலையையும்
உடையான் ஒருவன் என்னாமல் பன்மையாக சொன்னது அவனது அஹங்காரம் தோற்றுகைக்காக-
அவர் ஒருவர் –
அவன் தவிர ஒண்ணாமை யாலே முகம் கொடுத்தாலும்
தமக்கு இதில் ஓர் ஆதாரம் இல்லாமையாலே-முகத்தை மாற வைத்து சொல்லுகிறார் –
வலத்தனன் திரிபுரம் எறித்தனன் -திருவாய் -1-3-9-
ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனி யுடம்பன் –
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து –
பண்பர்   -மகா தர்மிஷ்டர் -சீல குணத்தை நினைக்கிறது
தக்க மரம் -அவன் போலே சௌசீல்யம் உள்ள மரம் -சிறுவரும் தவழ;ந்து ஏறலாம் படி -சாம்யாபத்தி அருளுவானே -பட்டர் நிர்வாஹம்
கொக்கு தன்னோடு சமமான மரம் -மா மரம் கொக்கு என்பார்கள்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ் கூடலூரே-என்றார் கீழே
தாய் பறவை நீர் நிலங்களில் இருந்து உணவு தேடிக் கொடுக்க குட்டிப் பறவை மரக் கிளையிலே இருந்து கொண்டே வாய் அலகினாலே வாங்கி உண்ணும் இடம் -இத் திவ்ய தேசம் –

——————————————————————————————————————————————————————————————————————————————————————-

துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே——————————-9-6-2-

கீழே  நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம் –

எல்லாரும் கூப்பிட்டு துன்பம் போக்கிக் கொள்ள எளியனாய் கிடக்கிறான்
துங்கார் -உன்னதம்
பொங்கார் அரவம் -நித்ய ஸ்பர்சத்தால் வந்த ஹர்ஷம் பொங்கும் திரு அநந்த ஆழ்வான்
பொங்குகின்ற விசாலமான என்றுமாம்
புனிதர் -ஸ்வ பிரயோஜனதுக்காக இல்லாமல் ஆஸ்ரிதர் ரஷணத்துக்காக  கிடந்த பரிசுத்தம் உண்டே-

—————————————————————————————————————————————————————————————————————————————————————-

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே ————————-9-6-3-

வாழக் கண்டோம் -என்று தொடங்கி  தமது ஹர்ஷத்தை ஆழ்வார் வெளியிடுகிறார்
கீழ்த் திரு மொழியில் -என் நெஞ்சகம்  சோர ஈரும் -ஓர் உறவும் உறங்காது இருப்பேன் -பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் -என்கிற அலமாப்புகள் எல்லாம் தீரப் பெற்று
பகலவனைக் கண்ட பனி போலே அகன்று ஒழிய -கழித்து -ஒழிவில் காலம்  எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று பாரித்து இருக்கும் தொண்டீர்காள் வம்மின்
பிரளய வெள்ளத்தில் அழுந்தி பாசி தூரத்துக் கிடந்த பாற் மகடக்காக ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் திரு அவதரித்து அருளியவரே
சம்சார பிரளயத்தில் இருந்து அழுந்திக் கிடந்த நம்மை கரை சேர்க்க கண்ட கொந்தளிப்பு கண்ணிலே தோற்றும்படி
கண்ட மாத்ரத்திலே தாபங்கள் எல்லாம் தீரும்படி குளிர்ந்த முகில் போன்ற வடிவை யுடையவராய்
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போகாமல் நித்ய சந்நிஹிதராய் இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
ஸூகுமாரமாய் சிவந்த காலை யுடைய -சம்ச்லேஷத்தாலே போது போக்க வேண்டியதான இன் துணைச் சேவலுக்கு உணவு தேடிக் கொண்டே
கள்ளப் பார்வை பார்க்குமதானா நாரைப் பேடை கருவடைந்த பயிர்களிலே போய் மேயா  நிற்கும்  தேசம் –

——————————————————————————————————————————————————————————————————————————————

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துணித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே ————————–9-6-4-

ராவணன் போன்ற விரோதி வர்க்கங்களை தொலைக்க இங்கே நித்ய வாஸம் பண்ணி அருளுகிறான்
இத்தலம் செவிக்கும் மூக்குக்கும்  இன்பம் தரும் -மது பான மயக்கத்தாலே வண்டுகள் ஆளத்தி வைத்துப் பாடுமது செவிக்கு இன்பம்
குரவம் பூக்களின் மணமே வெளி நிலம் முழுவதும் வியாபிக்க  மூக்குக்கு இன்பம்
மற்ற  இந்த்ரியங்களுக்க்ம் உப லஷணம்
உரவோன் -வலிமை யுடையவன் -மன்று -நாற்சந்து-

—————————————————————————————————————————————————————————————————————————-

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர் க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு  கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே———————9-6-5-

ஆஸ்ரித பஷபாதியாய் தேரை நடத்தி அருளிய பார்த்த சாரதியே உண்ணும் அத் திருக் கல்யாணம் குணம் விளங்க இங்கு கோயில் கொண்டு அருளுகிறான்
இங்கே கிளிகள் பெண்களைப் போலே பேசும் அழகு
கவ்வை -இரைச்சல் -பெரிய கோஷம் செய்ய வல்ல யானைகள் என்றபடி
கொவ்வைக் கனி வாய்க் கிள்ளை -கோவைப்பழம் இனிய உணவு -கொவ்வைக் கனியை வாயிலே யுடைய கிளி என்னவு மாம் –

————————————————————————————————————————————————————————————————————————————

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர் காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே ———————————9-6-6-

தூப தீபங்கள்
செண்பக மல்லிகை செங்கழுநீர் இருவாட்சி போன்ற பூக்களையும் கொண்டு
ஏலக்காய் சாதிக்காய் இலவங்கம் போன்ற பரிமள வஸ்துக்களையும் சம்பாதித்திக் கொண்டு சென்று தொழுது உஜ்ஜீவிக்கப் பாருமின்
இங்கு கடல் வண்ணன் நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
மாட மாளிகைகள் சந்திர மண்டலம் வரை ஓங்கியவை
கூநீர் -மதி -வளைந்து இருப்பதை இயற்கையாக யுடைய சந்தரன் -என்றபடி நீர்மை ஸ்வ பாவாம் -பண்பு ஈறு போய் நீர் என்றதாயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————————-

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே  ——————————9-6-7-

விஷயாந்தரத்தில்  துக்க கரமான சிந்தையைத் தவிர்ந்து இத் திவ்ய தேசம் அடையப் பாருமின்
பெண்கள் பல்லை போன்ற முல்லை அரும்புகள்
வல்லிச் சிறு நுண் இடையார் -வருணித்துப் பேசுவது எதனால் -நா வீறு லோக லி லஷணம்-பெருக்காறு பெருகுமா போலே -விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடி சிறுத்து இராது
வாணிலா முறுவல்  சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை-
சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புனர் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தேன் –
அல்லல் சிந்தை -விஷய போகங்கள் துன்பங்கலாகவே தலைக் கட்டும்-

——————————————————————————————————————————————————————————————————————————————————————

நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே    —————————–9-6-8-

நார் ஆர் இண்டை -நார்களால் நெருங்கக் கோக்கப் பட்ட மாலைகள்
நாள் மலர் -அப்போது அலர்ந்த பூக்கள்
ஆரா அன்போடு -பரம பக்த உக்தராய்க் கொண்டு
தாரா -சாரஸ பஷிகள்-நீரில் வாழும் பறவை
என்னைப் போலே பரவிப் பதித் தொழும் தொண்டீர்காள்
நல்ல புஷ்பங்களையும் தொடுத்த மாலைகளையும் கொண்டு பரிபூர்ண பக்தி யுடனே இங்கே சென்று சேருமின்
இங்கே அசேதனப் பொருள்களும் தமது அபிமதம் பெற்று களித்து வாழுகின்றன
நீங்களும் கிஞ்சித் கரித்து களித்து வாழலாம்-

——————————————————————————————————————————————————————————————————————————

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —————————–9-6-9-

நின்ற வினை -சஞ்சித கருமங்களும்
துயரும் -பிராரப்த கருமங்களும் -துக்கத்துக்கு காரணமான கர்மங்கள் என்றபடி
குன்றின் முல்லை -மலையில் உள்ள முல்லைப் பூக்கள்
நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி
பூர்வ பாப விநாசமும் உத்தர பாப அச்லேஷமும்
அக்னிக்கு தாப சாமர்த்தியமும் ஜலத்துக்கு தாப நிவாரண சாமர்த்யமும்போலே ப்ரஹ்ம வித்யைக்கு போக்கும் தன்மை யுண்டே
எம்பெருமான் திரு உள்ளத்தில் பிறக்கும் அப்ரீதியே பாபம் பரிதியே புண்யம்

————————————————————————————————————————————————————————————————————————–

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –9-6-10-

ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திரு அவதாரங்கள் செய்து அருளி விரோதிகளை நிரசித்து அருளினவனே இவன்
இத் திரு மொழியை கற்று ஓத வல்லவர்கள் பாவங்கள் தொளையைப் பெறுவார்கள்-

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-5-தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்-

April 4, 2015

திருக் குறுங்குடி திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம்
இதிலும் நாயகி  அவஸ்தை தொடருகிறது
திருப் புல்லாணியில் இருந்து நெஞ்சை மீட்டு திருக்குறுங்குடியில் செலுத்தினாள் –
நெஞ்சு சென்றதே அன்றி உடல் அங்குச் செல்ல வில்லை -ஆற்றாமை மிகுதியால்
பாதக  பதார்த்தங்களும் கண் உறங்காதே துடிக்கும் படி யாயிற்று
தோழி மார்களை தன்னை அங்கே கொண்டு போய் சேர்த்து விட வேண்டிக் கொள்கிறாள் –

———————————————

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1-

உய்த்திடுமின் -முன்னிலை ஏவல் பன்மை வினை முற்றுக்கு ஏற்ப –
அன்னைமீர் -தோழி மீர் -வருவித்துக் கொள்க
நாலு  வாசலையும் பற்றிக் குறும்பு செய்வாரைப் போலே நான்கு பதார்த்தங்களும் சேர்ந்து –
பால சந்தரன் -கடல் -தென்றல் -அன்றில் பறவைகள் –
காலமும் பனிக்காலம்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறைக் கோலி தழுவு நள்ளிருள்
அணைத்த நாயகன் யுடைய கைக்குள்ளே அடங்கும் இக் காலத்திலே அவனைப் பிரிந்து
பதாக வஸ்துக்களின் கையிலே அகப்பட்டு கண் உறங்காதே துடிக்கின்றேன்
தம்மைப் பிரிந்த சீதைப் பிராட்டி போலே எண்ணி இருந்தாரோ
தவளம் -பால் போலே வெளுத்து இருக்கை
என் நலம் ஐந்தும் கொண்டு போனே-பஞ்ச இந்த்ரியங்களையும் பகவத் விஷயத்தில் ஈடு படுத்தி
அன்றிக்கே
திரு நெடும் தாண்டகம் -25- என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு -இவை ஐந்தும் என்று அமுதனார் நிர்வஹிப்பராம்
கொள்ளை கொள்பவன் மயக்கி அன்றோ கொள்ளை கொள்வான் இவனும் வடிவு அழகைக் காட்டி மயக்கினான் –
குவளை மலர் நிற வண்ணர்
நாயகன் உள்ள இடத்தில் இவை பாதகம் ஆகாதே-குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —என்கிறாள்-
வைஷ்ணவ வாமன ஷேத்ரம் -நம்மாழ்வார் திருவவதாரத்துக்கு காரணமாய் இருந்த நம்பி
வைஷ்ணவ நம்பி -ஸ்ரீ பாஷ்ய காரர் பக்கல் திரு மண் காப்பு சாத்திக் கொண்டு வேதார்த்தம் கேட்ட சிஷ்யனாய் –
நாமும் நம் இராமானுசனை யுடையோம் -என்கையாலே –

————————————————-

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண   ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

ஊதை -குளிர்  காற்று
உழறி உண்ண -துகைத்து முடிக்க
சோதை -கூந்தலிலே
குளிர் காற்று மல்லிகை மானம் முகந்து வந்து வீசி நலிகின்றது
இன்னே -வாய் விட்டு சொல்ல முடியாமல் நலிவதால் இன்னே என்னும் அத்தனை
நம்முடைய பிராவண்யத்தை குற்றமாகக் கொள்ளாமல் நாற்றமாக கொள்பவன் அங்கே 
நித்ய வாஸம் செய்கின்றான் -அங்கு கொண்டு போய் விடுமின்
உறங்கும் பேதையர் -பகவத் விஷயத்தில் காதல் கொண்டார் உறங்க வகை இல்லையே
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்  உண்டோ கண்கள் துஞ்சுதலே -காணும் முன்பும் உறக்கம் இல்லை
சதா பஸ்யந்தி -கண்ட பின்பும் உறக்கம் இல்லை
வாடையையும் நிலாவையும் தேடி வெளியிலே படுப்பார்கள் இந்த அறிவு கேடர்கள்
அவர்கள் பழி சொல்லிலும் சொல்லட்டும் -பெய் வளையர் இவர்கள் -விரஹ வேதனை அறியாத அறிவு கேடர்கள்
நம்மை பழிக்கும் இந்த பேதையர்கள் போல்  இல்லாமல்  நம் குற்றங்களையே குணமாக உப பாதித்து
புருஷகாரம் செய்து அருளி சேர்ப்பிக்கும்
பெரிய பிராட்டியார் உள்ள இடத்தே கொண்டு போய் சேருமின் —
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்-

——————————————-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

காலை மாலை இரண்டும் வாசி அற்று நலிகின்றன -இவளோ உறங்கவே இல்லையே
காலைக்கு செய்த நன்றி என் கொல் எவன் கொல் யான் மாலைக்கு செய்த பகை -திருக்குறள்
காலை அரும்பி பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்  -காதல் நோய்
பல பல ஊழி கள்  ஆயிடும் அன்றியோ நாழிகையை பல் பல கூறிட்ட கூறாயிடும்–
அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்   -திரு விருத்தம்
நம்மை மாய்ப்பதற்கு பல பல மாயங்கள் செய்து உள்ளான் –
இராப் பொழுது -வாடை-அன்றில் -தென்றல் -கடலோசை -குழலோசை -திங்கள் இளம்  பிள்ளை போல்வன
இவை எல்லாம் அனுகூலமாம் படியான இடத்தே என்னை கொண்டு சேர்மின்-

———————

கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து  காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி  வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்–9-5-4-

சேக்களும் நாகுகளும் கூட்டமாய் கலந்து வரும் பொழுது
சேக்கள் நாகுகளோடே அணைந்து மேல் விழ -நாகுகள் இறாய்க்க –
அது கண்டு நாயகி நாயகன் உடன் சம்ஸ்லேஷித்த காலம் நினைந்து வருந்த -கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து –
அணார்-அணர்-இரண்டும் ஒக்கும் -கழுத்திலே
இடவணரை யிடத்  தோளோடு  -பெரியாழ்வார் -3-6-2-
இருந்தார் நடுவே சென்றணார் சொறிய -பெரியாழ்வார் -3-5-8-
பேசி -பேச பாட பேதங்கள்-பேர் அருளாளன் பெருமை பேசி ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்று கீழோடு அன்வயிக்க்கவுமாம்
பேர் அருளாளன் பெருமை பேசிக் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்  -என்று மேலோடு அன்வயிக்க்கவுமாம் –

——————————————-

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-5-

கொண்டல் மணி நிற வண்ணனைக் கண்டவாறே என் வாட்டம் எல்லாம் தீரும்
மாட்டின் மணி ஓசை -தென்றல் காற்று -மாலைப் பொழுது -இளம் பிறை -தனித் தனியே
என்னை முடிக்க வல்ல இவை சேர்ந்து நலிகின்றன
கொண்டதோர் மாலைப் பொழுது -இவளை முடித்தே தீருவேன் என்ற வ்ரதம் கொண்ட-

———————————————–

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

இவர்கள்  பழிக்கிலும் பழிக்கட்டும் -நம்முடன் சேர்த்தி இல்லாத ஏந்திழையார் -இவர்கள்
அவனுடைய மா மணி வண்ண நிறம் மறக்கப் பண்ணுமோ
இவர்கள் ஏச்சு எருவிட்டதாகும்
இள முல்லை புல்கு – கொடிகள் தரைக் கிடக்க வேண்டாத படி கொம்பிலே படரும் -அப்படியே எனக்கும் தரிப்பு கிடைக்கும் அங்கு
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம்-

———————————-

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

திருக் கண்கள் அழகும் பரப்பையும் என் சொல்வேன் -வாத்சல்யம் எல்லாம் கண்ணிலே தோற்றும் –
கண்களுக்குத் தப்பினாலும் குளிர்ச்சிக்கு தப்ப ஒண்ணாதே
தேவர் -மேன்மை பேச்சுக்கு நிலம் அன்று
ஒருவர் -அவர் ஒருவரே என்று வாய் வெருவும்படி அத்விதீயமானவர் –
எளிமையைக் கட்டி இங்கே வந்து கலந்து  சொன்ன வார்த்தை அனுவாதமும் செய்ய முடிய வில்லையே
ஆது கொலோ என்று -அது -ஆது என்று நீட்டி -என்று சொல்லும் அத்தனை
தாய் என்றும் பாராமல் -அவன் அது சொல்லி பிரிந்து போனது முதலாக மன்மதன் காட்டும்
பராக்ரமங்களை நெஞ்சால் நினைக்கவும் முடிய வில்லை
ஐங்கணை வில்லி மதனன் பஞ்ச பாணமாவன முல்லை யசோகு முழு நீலம் சூதப் பூ அல்லி முளரியோடு ஐந்து என மொழிப -நிகண்டு –
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்   –
அவன் கையிலே அம்பு தானே தாரகமான தேசத்திலே
கொடு போய் பொகடப் பாருங்கோள் –
அவனோடு கூடின வாறே பூக்கொய்கையும் ஜல க்ரீடை பண்ணுவததுமாய் -தாரகமாம் இறே-
விஹரதி ஹரௌ லஷ்ம்யா லீலாதபத்ர பரிஷ்க்ரியா விநிமய விதா ஸூ நா ஸூ நிக்ரியா சபலோத்பலம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
பனை -பண்ணை -நீர் நிலை -என்றவாறு

—————————————–

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8-

கேவலம்  அன்று கடலோசை -பெருமாளை அண்டை கொண்ட சுக்ரீவன் பலம் போலே இவையும் –
கேண்மின்கள் -உங்களுக்கும் பாதகமாய் இருக்குமே
அதற்கு மேலே இடையன் ஊதும் குழல் ஓசையும்
ஏ வலம் -எய்வதில் வல்லமை
இவன் ஒருவன் -பெண்களை நலியும்  ஆள் எண்ணத் தொடங்கினால் அத்விதீயன் இவன்
இப்படியே புகுந்து எய்திடா முன் –
இதுக்கு இட்டுச் சொல்லலாவது ஒரு பாசுரம் இல்லை –
புண்ணறைகளைக்   காட்டும் இத்தனை  –
ஒரு மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ -திரு ஆலி பதிகத்திலும் -காமனுடைய ஹிம்சை
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து -முரட்டு ஆண்களையும் வசப்படுத்தக் கூடிய கூத்து
அவன் திரு உள்ளக் கருத்தை அறிந்து -வேண்டும் என்று இருந்தான் ஆகில் கூட்டிச் செல்மின் –
இல்லை யாகில் இங்கேயே என்னை முடித்து விடுமின்-

———————–

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற்   படம் தந்து போனான் போயின ஊர் அறியேன்     என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே   என்னை யுய்த்திடுமின் —————————-9-5-9-

பொன்படம் -பீதாம்பரம் -பசலை நிறம் தந்து போனான் -கொடுத்து விட்டு தான் அகன்று போனான்
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்-திரு விடந்தை பதிகம் –
இன்று தாறும் -இன்று வரைக்கும்
இங்கேயே அவனை பிரிந்து விழுந்து கிடந்தால் முலைகள் படுத்துகிற பாடு பார்த்தீர்களே
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலைத் தீர்வேனே  -நாச்சியார்
உண்மையாக பெண்ணாகப் பிறந்தவள்  என்பதால் முலை படைத்து படுகிற வருத்தம் எல்லாம் தோற்ற அப்படி அருளிச் செய்கிறாள்
இவர் பாவனா பிரகர்ஷத்தால் பெண்மையை ஏறிட்டுக் கொண்டவர் ஆகையால்
அவ்வளவு ரோஷம் கொண்டு சொல்ல மாட்டாமல் இங்கனம் அருளிச் செய்கிறார் –

——————————-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

திருக் குறுங்குடி சேருவதே பயன்
இலங்கை பாழாளாகப் படை பொருதவன் -பெரிய பிராட்டியாரை இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்
என் பக்கல் விருப்பம் செய்து என்னுடன் சேர்ந்து கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இலக்காக்கி அருளி
ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் இங்கே நித்ய வாசம் செய்து அருளும் திருக் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காமரு சீர் கலியன் -என்னை -என்று சொல்வதால் -பரகால நாயகி – வேறே வ்யக்தி போலே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-4-காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்-

April 3, 2015

திருப்புல்லாணி ஏறப் புக்கால்-கால் நடை தாராத படி தளர்ச்சி யுற்றது
ஆகவே கண்ணில் கண்ட பறவைகளை தூது விடுவது –
முன்புள்ளார் நோவு பட எம்பெருமான் அவர்களுக்கு உதவின படிகளைச் சொல்லுவது
உறவினர்களுடைய ஹித வார்த்தைகளை கேளாத படியான நிலைமை பிறந்தமையை
சொல்லுவதாகச் செல்லுகிறது இத் திரு மொழி –

———————————————————-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும்  எக்கில்  கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1-

தார்மிகராய் இருப்பார் வைத்த தண்ணீர் பந்தலிலே
வழியடிக்காரர் ஒதுங்குமா போலே
மடல் எடுத்தாகிலும் பிழைக்க நட்ட பனையிலே அன்றில் வந்து குடி புகுந்தது –
மடல் எடுக்க பனை மரம் அருகில் செல்ல அன்றில் -க்ரௌஞ்சம் -த்வனி காம உத்தீபகமாய் பிரிவாற்றாமை துயரை வளர்ந்து –
பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பேடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய
நெஞ்சக்கு ஓர் ஈர்வாளாம் என் செய்கேன் -பெரிய திரு மடல்
மடல் பெண்ணைக் கா ஆர் அன்றில் -இலங்கை முழுதும் ராஷச மயம் என்னுமா போலே
கானம் முழுதும்  அன்றில்
அரி குரல் -அரித்தல் -ஹரித்தல்
ஏவாய் -ஏ -அம்பு -அம்பு விட்ட இடம் -அங்கே சூலத்தை கொண்டு குத்தினால் போலே அன்றிலின் அரு குரல்
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்  புண்புரை வேல் கொடு குத்தால்
ஒக்கும் நும்மின் குரல் -திருவாய்மொழி  -9-5-9-
எக்கு -வேல்படை ஈட்டி எக்கின் -அதை விட கொடிதாம் -மின்னின் நிலையிலே -காற்றில் கடியனாய் போலே
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பரிமளம் அசஹ்யம் ஆகாத தேசம் தேடித் புக அழகிதாக ஆசைப் பட்டேன்
விரோதியான இந்நிலத்தை விட்டு
பிராப்ய தேசத்திலே போய்ப் புக அழகியதாக கோலினேன் -என்கிறாள் –
அழகாக உண்டோம் என்று சொல்லுவாரைப் போலே பரிதாபம் தோற்ற சொல்லுகிறாள்
இது நமக்கோர் பான்மையே யாகாதே –
மாறாடி வருமது இன்றிக்கே இது ஸ்வ பாவமாய் விட்டதே
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றார்கள்
இவ்வருகு உள்ளார் விஷயங்களில் அந்ய பரராகா நின்றார்கள்
மூன்றாம் விபூதியாகா பண்ணி விட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மை -என்கிறாள்  –

————————————–

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

பிரயோஜனாந்தர பரனான இந்த்ரனுக்குக்கா தன்னை அழிய மாறி –
மாசூணாச்   சுடருடம்பாய் மலராது குவியாது -உள்ள தன்னை
அலம் புரிந்த நெடும் தடக்கையைக் கொண்டு தானம் பெற்றானே
நமக்கு அப்படி அரும் பெரும் செயல்கள் செய்ய வேண்டாம் திரு முகம் காட்டி அருளால் ஆகாதோ
பொன்னம் கழி கானல் -இங்கு உள்ள நீரோடு காலுக்கு பெயர்
ஸ்ரீ வான மா மலையில் -சேற்றுத் தாமரை தடாகமும் -தேனமாம் பொழில் -தோப்பும் –
திரு மோகூரில் தாள தாமரை -தடாகம் போலே
அன்னமாய் -பிரமன் இழந்த வேதம் கொடுத்து அருளினான் –
நான் இழந்து இருக்கும் மேனி நிறம் மீட்டுக் கொடுப்பான்
அன்றிக்கே
இனத்தார் சஜாதீயன் பக்கல் போக நீங்கள் அஞ்ச வேண்டாமே
ஆங்கு இதனைச் செப்புமினே   —
ஒருத்தி நிறம் மீட்கைக்காக வந்து இருக்கிற இடத்தே அறிவியுங்கோள்-
ஒருத்திக்கே கார்யம் செய்யக் கடவோம் என்னும் நியதி உண்டோ –
சீதாப் பிராட்டிக்காக இங்கே தர்ப்ப சயனம் கிடந்தாயே
செப்புமின் -அறிவிப்பே அமையும் -அவனைக் கொண்டு வர முயல வேண்டா-

—————————–

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே-9-4-3-

புள்ளினங்காள் -விளியை இங்கும் கொண்டு -அவற்றை தனது சிந்தை நோயை
அவ்விடம் சென்று அறிவிக்க தூது விடுகிறாள்
திருத் துழாய் மாலையிலே பிடித்துக் கொண்டு என்னை தனியே விட்டு என் நெஞ்சு அவனுடன் போந்ததே
திருப் புல்லாணியை தொழ ஆசைப் பட்டேன் -அழகிதாக -அதற்குக் கிடைத்த பலன் இந்த நெஞ்சு நோய் –
சீதா பிராட்டி யுடைய சிந்தை நோயைத் தீர்க்க கையும் வில்லுமாக நிற்கும் அவரிடம் சென்று செல்லுமின்
திருத் துழாய் மாலை யணிந்த திரு மார்பிலே அணைய பெற வேணும் என்கிற ஆசையை தமக்கு அதிகரித்து இருக்கின்றமை –
நிற்கும் கொல்-வீணான ஆசை எனக்கு –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலதோர் உடன் ஆசை உண்டாகில் தரித்து இருக்கலாமே
நித்திலம் நிஸ்தலம் -முத்துக்களை கரையிலே கொண்டு தள்ளும் அலைகள் –

——————————

பரிய விரணியதாக மணி  யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான்  அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப  வந்துகிலும் நில்லாவே –9-4-4-

ஆத்மகதமாகச் செல்லும் பாசுரம் –
சிறுக்கனுக்கு அருளிய நீ நம்மளவில் அது செய்யாமை தகுதியோ –
திருப் புல்லாணியைத் தொழ ஆசை பட்டு அழகாக பேறு பெற்றேன் என்கிறார் மீண்டும்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப  வந்துகிலும் நில்லாவே –
கடல் திரைகள் வந்து சஞ்சரியா நிற்க -கடலும் திரையும் கண்டு கூட அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம்
இது வாகில் இவளுக்கு தேடித் போக வேணுமோ -என்று
என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –
கண்ண நீரை பெருக்கி விட்டான் சமத்காரமாக அருளுகிறார்
அம் துகிலும் நில்லா -விரஹ வ்யசனத்தாலே உடல் இளைத்துப் போகவே துகில் தரிப்பற்றதாயிற்று-

——————————

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே–9-4-5-

பெண்களை பரிசு அழிப்பதே அவன் தொழில் –
மெய் போலும் பொய் சொல்ல வல்லவன் போன்ற வார்த்தைகளை பலகாலும் சொல்ல
அவன் பின்னே போன நெஞ்சு திரும்பட்டும் -உங்கள் வார்த்தைகளைக் கேட்கிறேன் -என்கிறாள்
பெண்களுக்கு உதபுவன் அல்லன் என்பதை மறுத்து -வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் -என்கிறாள்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து இலங்கை நீறு எழச் செற்றது எல்லாம் ஒரு பிராட்டிக்காக அன்றோ
என் நெஞ்சு மீண்டு வரும் அளவும் நீங்கள் ஒரு மிடறாக திரண்டு என்னைப் பரிஹசித்தாலும் பழித்தாலும்
அப்பெருமானை பொய்யன் என்றாலும் அந்த  பொய்யுரைகளையே ஜீவன ஆதாரமாக கொண்டு தரித்து இருப்பேன் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் மெய்யும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பெய்யுமே நமக்குத் தஞ்சம் -ரசோக்தியாக பட்டர் அருளிச் செய்வர்
எம்பெருமானுடையது -என்னும் அத்தனையே கொண்டு தரித்து இருப்பார் ஆஸ்திகர் –
எல்லாரும் -தோழி மாரும்   தாய்மாரும்-

—————————————-

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே–9-4-6-

ஆதித்யன் அஸ்தமித்தான் -சீத க்ரணன் -நளிர்மதி -நெருப்புப் போலே எரிப்பவனாகி என்னையே முடித்திடா  நின்றான்
திருப் புல்லாணியை ஆசைப்பட்டு நல்ல பலன் பெற்றேன் -கை வளையல்கள் கழன்று ஒழிந்தன  -மேனி நிறமும் போயிற்று
அஞ்சுடரில் -அம் சுடர் இல் -பிரித்து அழகிய சுடருக்கு இருப்பிடமான சந்தரன்
தான் அடுமால் -ஸூர்யன் தான் முடிந்து போனான் -சந்தரன் தான் முடியாமல் என்னை முடிக்கப் பார்க்கிறான் –
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே-அவனோடு கலந்து மேலும் மேனி நிறம்
வளம் கொள்ளவும் ஆபரணங்கள் அணியப் பெறவும்
ஆசைப் பட்ட எனக்கு உள்ளவற்றையும் இழந்தேனே -வட்டிக்கு ஆசைப் பட்ட நான் முதலையும் இழந்தேன் -போலே –

—————————————

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7-

மணிகளின் ஓசை நெருப்புக் கதவுமா போலே
கடல் தானும் வெப்பத்தை ஏறிட்டுக் கொண்டு அலைகள் வ்யாஜ்யத்தாலே நெருப்பை வீசுகின்றன –
அந்த நாகுகளை சேக்கள் தொடருகிற போது அவை ஓடுகிறது
தலைமகன் மேல் விழத் தான் இறாய்க்கும் படிக்கு
ஸ்மாரகமாய் நலியா நின்றதாயிற்று –
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த கோல
நன்னாகுகள் உகளுமாலோ–திருவாய் மொழி –
தினையேனும் -அல்ப அளவு -எட்டனைப் பொது போலே -தினையும் எள்ளும் அல்பத்துக்கு உவமை சொல்வர்
புனையார் மணி மாடம் -மணி மாடங்கள் தோறும் நானும் அவனுமாய் இருந்து
அனுபவிக்க ஆசைப் பட்டது அழகாக சமைந்ததே-

—————————————–

தூம்புடைக் கை  வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப்  பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர்  வெந்தழலே–9-4-8-

தூம்புடைக்கை வேழம் -துளை
பாம்பின் அணையான்–சேஷ சாயி –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
தன் திரு மேனியை அன்பருக்கு பூர்ண அனுபவ யோக்யமாய்த் தந்து அருளின அவனே
நம் திறத்தில் விபரீதமாக அருள் செய்தபடி என்னே
இளம் பிறையும் நெருப்பாக கதுவும் படி அன்றோ அவன் செய்து அருளிய திரு வருள்-

—————————-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9-

வேதங்களை யுண்டாக்கி -அவற்றின் பிரதிபாத்யமான தன்னை கிட்டுகைக்கு சாதனமாக யாகங்களையும் ஏற்படுத்தி
அவற்றின் பலனாக ஸ்வர்க்காதி லோகங்களையும் -சங்கல்பத்தாலே யுண்டாக்கி அருளி
உலகுக்கு விளக்காக சந்திர ஸூர்யர்களையும் யுண்டாக்கி அருளி
அனைத்துக்கும் தானே வேர் பற்றாய் இருந்து அருளி
இப்படிகள் எல்லாம் அருள் செய்வதையே விரதமாகக் கொண்டவன்
நமக்கு மாத்ரம் விபரீதமாக இருப்பது என்னே –
அருள் தந்த வா -எதிர் மறை இலக்கணை யால் அருள் தாராமையைக் காட்டும் –

வேதங்களை உபகரித்தவன் -வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவன்
யஞ்ஞங்களை அமைத்தவன் -யஞ்ஞங்களால் ஆராதிக்கப் படுபவன்
மேல் உலகங்களை நாட்டினவன் -மேல் உலகங்களை அடைவிப்பவன் -என்றுமாம் –

அவனும் நானும் கலந்து உறங்காமல் இருக்க ஆசைப் பட்டத்துக்கு நானும் ஒதமும் உறங்காமல் உள்ளோம்
தனக்கு பிரதிநிதியாக ஓதத்தை ஆளாக்கி வைத்தான் போலும்
என்னை நலிய ஒதமும் -அதனால் நலிவு பட நானும் -ஆக இரண்டு வ்யக்திகள் தவிர வையம் எல்லாம் உறங்கிற்று

——————————————————

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே–9-4-10-

எப்போதும் வசந்த ருதுவாய்- சோலை சூழ்ந்த திருப் புல்லாணியிலே-பெண் பிறந்தவர்கள்
ஆசை நோய் மிகும்படி எழுந்து அருளி இருக்கிறவன்
ஆண்களும் பெண்ணுடை உடுத்து கதறும் படியான விலஷண அழகு வாய்ந்த பெருமாளை
அன்றோ ஆழ்வார் கவி பாடிற்று
இத் திரு மொழியை கற்றவர்கள் இவ் உலகில் வாழும்  தனையும்  குறை ஒன்றும் இல்லாத
கோமான்களாய் வீற்று இருந்து வாழப் பெற்று
பின்பும் மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் வாழப் பெறுவார்
கூர்தல் -மிகுதல்
உன்னுதல்-விரைந்து எழும்பல்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-3-தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு-

April 3, 2015

திருப் புல்லாணி திருப்பதி மங்களா சாசன திருமொழிகள் இதுவும் மேல் திரு மொழியும்
நாயகி பாவனை இவற்றிலும்  தொடருகிறது –
பிரிந்தவர்கள் இரங்குவது கடல் கரையிலே –
அவனே வந்து கூடுவான் என்று ஆறி இருக்க மாட்டாமல் அவன் மன்னிய திருப் புல்லாணியே போய்த் தொழுவோம்
என்று நெஞ்சை அழைப்பதும் தோழியை அழைப்பதுமாக செல்லுகிறது இத் திரு மொழி –

————————————–

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப்   பூஞ்செருந்தி  மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன்-
நைவிக்கிலேன்-அழித்துக் கொள்ள மாட்டுகின்றிலன்
தன்னை -அவன் தன்னை -என் தன்னை -என்று இரண்டு
அவனை வருத்தப் படுதுக்கை தன்னைத் தான் மாய்த்து கொள்ளுகையே  -ஆக இரண்டும் ஓன்று
பெருமாளுக்காக தனது  உயிரைக் காத்துக் கொண்டு இருந்த சீதா பிராட்டி போலே
பரகால நாயகியும் -தன்னை முடித்துக் கொண்டால் அவரும் முடிந்தவர் ஆவாரே– அநீச்வரமாய் ஆகுமே –
தன்னை நைவிக்கிலேன்-
நான் ஜகத் உப சம்ஹாரம் பண்ணுகிறிலேன் -என்னை நைவித்தான் என்று தன்னை நைவித்தால் பின்னை ஆர் உண்டு
இவள் அவனை நைவிக்கை யாகிறது -தான் முடிகை இறே
நீருக்குப் போக குடம் உடைந்தாரைப் போலே
அவர் வரக் கொள்ள இத்தலை வெறும் தரையாக கிடக்கும் அன்று அவரைக் கிடையாதே –
முடிந்து பிழைப்போம் என்றால் முடியப் பெறு கின்றிலோம்-உயிரை நோக்கிக் கொள்ள பற்றாசு வேண்டுமே –
அதற்காக திருப் புல்லாணி தொழுவோம் என்கிறாள் மேல்-

செருந்தி -ஸூர புன்னை -அதன் மலர்களும் தாதுக்களும் பொன்னிறமாய் இருக்கும்
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி -பொன்னை நைவித்தல் -நிறத்தினால் தோற்பித்தல்
பூம் செருந்தி மண நீழல் வாய் –
பரப்பு மாறப் பூத்து இருப்பது -பரிமளம் மிக்கு இருப்பது -நிழல் செய்து இருப்பதாய் இருக்கிறபடி
நிறமும் மணமும் நிழலும் -இவை எல்லாம் உண்டாய் இருக்கிறபடி –
ஓர் இந்த்ரியம் கொண்டு ஒதுங்க நிழல் இல்லை-
சஷூர் இந்த்ரியத்துக்கு   நிறம் -க்ராண  இந்த்ரியத்துக்கு மணம்-ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு நிழல் –
மணி நீழல் வாய் -தவறான பாடம்
அழகிய நிறமும் மனமும் உடைத்தான புன்னை மர நிழலிலே சம்ச்லேஷித்து
என் மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டு -என்னை வெறும் தரை யாக்கி விட்டு –
அகன்று போன பெருமான் உறையும் இடம் திருப் புல்லாணி
வஞ்சக் கள்வன் மாயன் ஆகையால் தன காரித்தைச் செய்தான் –
நாம் சேஷ பூதர் ஆகையாலே நம் காரித்தைச் செய்வோம் –

————————————————

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே -9-3-2-

இங்கேயே இருந்து சிந்தித்து உருகுவதனால் என்ன பயன் -திருப் புல்லாணி செல்வோம் -அங்கு வண்டு முதலிய
திர்யக் ஜந்துக்களும் தங்கள் அபிமதம் பெற்று கழித்து வாழ்கின்றன ஆதலால் நாமும் நம் அபிமதம் பெற்று வாழ்வும்
தொழுதும் எழு-ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷனாம் -என்றவன் உள்ள இடம் அன்றோ –
அவனது ஆற்றாமை விஞ்சி இருக்குமே –
அவனைக் கண்டால் நம் உருக்கமும் சிந்தனையும் தீருமே
பொருது முந்நீர் கரைக்கே மணி யுந்து -பொருள் திரட்டிக் கொள்ள பிரிய வேண்டாத படி மணியும் முத்தும் மலியும் –
ஆத்மானம் மானுஷம் மன்யே -தேவ பித்ரு கார்யம் ஸ்வ ஆர்ஜிதமான பொருள் கொண்டு செய்தால் தானே பலன்
ஆக பொருள் ஈட்டும் கடமை பரம புருஷனான பரி பூரணன் ஆனாலும் உண்டே –

——————————————-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

நாட்டாரைப் போலே இல்லாமல் ஆழ்வார்கள் மறக்க வழி தெரியாமல் பிரிவில் வாடி படாத பாடு படுவார்களே
எது செய்தால் மறக்கேன் மனமே -மறந்து பிழைக்க மருந்து தருவார் உண்டோ –
மறக்க வழி தேடுமவள்  புல்லாணியே தொழுதும் எழு -என்பான் என்
எம்பெருமானை கிட்டியாகிலும் மறக்கலாமோ -நாட்டார் படிக்கு எதிர் தட்டு அன்றோ இவர்கள் படி
எதைப் பெற வேண்டுமானாலும் அவன் இடமே தான் பெற வேண்டும் -என்றுமாம்
கம்பீர வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
ஏது செய்தால் மறக்கேன் மனமே –
நாட்டார் தம்தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால் கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் –
இங்கன் அன்றிக்கே பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –
இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் -போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  –

பிரியக் கூடாத நிலத்திலே பிரிந்து வஞ்சித்த பெருமான் உறையும் இடம் என்று இத்தையே அத்தலததுக்கு நிரூபகமாய் –
ஒரு நாளும் பிரியேன் என்று சொல்லி பிரிந்தானே
நித்ய வசந்தமான திருப் புல்லாணியைச் சென்று தொழுவோம் நெஞ்சே-

——————————————————-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே —9-3-4-

நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே  -என்ன பாக்கியம்
ஒரு நாளும்  தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்
பிரியேன் பிரிந்தால் தரியேன் -என்று சொல்லி பிரிந்தான்
மங்கை நல்லாய் போய்த் தொழுதும்  எழு -நிர்பந்திக்கிறாள்
அவன் போய் மன்னும் புல்லாணியே தொழுதும் என்றும்
அவன் மன்னும் புல்லாணியே போய்த் தொழுதும் -என்றுமாம்-

———————————————

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே –9-3-5-

மூன்றாம் பாட்டில் மறக்க முடிய வில்லை என்றால் -இங்கே நினைக்க முடிய வில்லை என்கிறாள்
இரண்டும் அருமை போலும் இவளுக்கு
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே –புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காமா சம்ருத்தி நீ –
அவள் அத்தனை பாக்கியம் பண்ணினேன் இல்லையே -வினையேன் –
நடந்தவற்றை நினைத்த மாத்ரத்திலே நெஞ்சு சுடும்படியான பாவத்தைப் பண்ணினேன் -என்கிறாள்
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
கலவி செய்யும் பொழுது அவன் செய்து அருளிய ஸ்ருங்கார விலாசங்கள்
பூக் கொத்துகளை யுடைய நாழலின் யுடைய செவ்விப் பூக்களை பறித்து என் குழலிலே சூட்டினான்
ஒரு நொடி பிரிந்தாலும் பிராணன் பாறிப் பறந்து போய் விடும் படி அன்பை பொழிந்தான்
பிரியேன் சொல்லி வாய் மூடுவதற்கு முன்பே பிரிந்தானே
அத்ரோப விச்ய வை தேன காசித் புஷ்பை ரலங்க்ருதா –அந்ய ஜன்மனி சர்வாத்மா
விஷ்ணு ரப்யர்ச்சிதஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–13-35-
துணர் இன் நாழல்–துணர் -பூங்கொத்து -நாழல் -கொங்கு மரமும் குங்கும  மரமுமாம்
புணரி -கடல்
பணிலம் -சங்கு
பணிலம் மணி -சங்குகளின் நின்றும் யுண்டான முத்து -உம்மைத் தொகையாகவும் கொள்ளலாம் –

——————————

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6-

சம்ஸ்லேஷிக்கும் போது தனது திரு மேனியை பூர்வ அனுபவ யோக்யமாக சர்வ ஸ்வதானம் பண்ணின -வள்ளல்
கலந்து பரிமாறினவன் பிரிந்து -நான் பதறி கதறி ஓடி வரும்படி  எட்டாதவனாய் வஞ்சகம் செய்யும் மாயன் –
உபேஷித்தாலும் அபேஷித்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு உடையவன் -மணி வண்ணன்
அந்த வடிவு  அழகைக் காட்டி என்னை அனந்யார்ஹை யாக்கி எழுதிக் கொண்டவன் -எம்மான்
இப்படிப்பட்டவன் நித்ய வாஸம் செய்து அருளும்  திருப் புல்லாணியை  தொழுது எழு நெஞ்சே
ஏகாந்த ஸ்தலம் -கள்ளவிழும் மலர்க்காவியும் -திவ்ய தம்பதிகள் ஜலக்ரீடை பண்ண-
செங்கழு நீர் புஷ்பங்களை பறிக்க ஒருவருக்கு ஒருவர் முற்பட ஒருவர் பறித்து ஒருவர் மேல் எறிய-அது மேல் பட்டு மது ஒழுக
தூ மடல் கைதையும் தலை மகன் தோள் கொடுக்க ஏறிப் பறிக்கலாம் படியான வெள்ளை மடலை யுடைய தாழையும்
புள்ளும்-இதன் பேர் என்ன என்று தலைமகள் கேட்டு தலைமகன் சொல்ல பஷி வகைகளும்
அள்ளல் பழனங்களும்-அல்லல் அறியாத செல்வப் பிள்ளையாக வளர்ந்த தலைமகள் நீர் நிலங்களிலே புக்கு
அங்கே சேறுகளிலே அழுந்தி நின்றாள் தலைமகன் கை பிடித்து தூக்கி எடுக்க வேண்டும்படியான நிலங்களும்
உள்ள திருப் புல்லாணியை தொழுது எழுவோம் -என்கிறாள் –

—————————————

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே–9-3-7-

முத்தோடு கூட வெளுத்த மனற்களை கலந்து கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி வெளுத்த திரைகளானவை
குதிரை தாவுமா போலே தாவி வந்து தள்ளா நின்றுள்ள திருப் புல்லாணியை   தொழுவோம்
போய் அவன் பாலமாய் -என்றும் -போயவன் பாலமாய் -என்றும் -ஈடு பட்டோமாய்ச் சென்று
புதம் செய்தல் -தாவிப் பாய்தல் -புரவி -குதிரை-

———————————————

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே–9-3-8-

கலப்பையும் சக்கரப் படையும் கொண்ட இவரே நமக்கு பிராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர்
அன்புடையார் போலே கலந்து கபடமாக தலைக் கட்டிற்று
ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோமே-என்ற இரக்கமும் இல்லாமல் இருந்தாலும்
நம்மால்   ஆறி இருக்கப் போமோ –
உலவு கானல் கழி-உலவு கால் நல் கழி என்று பிரித்து -கால் -காற்று என்றும் –
நீர்க்கால் -என்றும் பொருள் கொள்ளலாம் –

——————————————

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9-

வழி அல்லா வழியில் சென்றாகிலும் பெற்றுத் தீர வேண்டிய அபிநிவேசம் கிளர்ந்ததான பின்பு
ஸ்வயம் போக்யமாகச் செய்ய வேண்டிய கார்யங்களையும் உபாயமாகச் செய்வோம்
இடைவிடாது திரு நாம சங்கீர்த்தனம்  பண்ணக் கடவோம் –
சத்தம் கீர்த்த யந்தோ மாம் யதந்தச் ச த்ருடவ்ர்தா –நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாசதே -ஸ்ரீ கீதை -9-14-
குளித்து -சாதனா அனுஷ்டானத்துக்கு ஸ்நானம் -இருந்த படியே அதிகாரி யாவதற்கு உரிய நாம் –
நியம நிர்பந்தம் உள்ள வழியில் சென்று
உச்சி தன்னால  ஓளி மா மலர்ப் பாத நாளும் பணிவோம்- ஸ்வயம் பிரயோஜனமாக ஒளி மலர் பாதத்தை
சிரமேல் கொள்ளும் நாம் யோனி உபாயமாக அனுஷ்டிப்போம்
நமக்கே நலம் ஆதலில் -இத்தால் -இவை நம்மை அழிக்காது
நிரபேஷ ரஷகத்வம் ஸ்வரூபம் அழிக்கும் அவனை மட்டும் அழிக்கும்
தஸ் தஸ்ய  சத்ருசம் பவேத் -என்று இருந்து நாம்வாழ்ந்த வாழ்வு போதும்
சாதனாந்தர்களுக்கும் பலன் தர வேண்டியது அவன் அன்றோ -உனக்கு ஒன்றும் கொடுப்பது இல்லை என்று
சங்கல்பித்தவன் இடம் இவை பலிக்குமோ -என்ன
ஆது தாரான் எனிலும் தரும் -அவன் கொடுக்க மாட்டேன் என்று முஷ்டி பிடித்தாலும்
என்னுடைய பிரம்மாஸ்திரம் -பலன் கொடுத்தது அன்றி நில்லாது
அன்றியும் அன்பராய் அவன் மன்னு புல்லாணியே தொழுதும் -பலன் கிடைக்குவுமாம்–கிடைக்காமவுமாம் –
நாம் பக்தி உக்தராய்க் கொண்டு தொழுவோம்
இத்தைக் கேட்ட தோழி மயங்கி நின்று போது மாதே -வலியப் பிடித்து தோழியை இழுக்கிற படி
அநந்ய உபாயத்வம் குலைந்தபடியும் -ஓதி நாமம் –குளித்து –பாதம் பணிவோம்
அநந்ய உபேயத்வம் குலைந்த படியும் -நமக்கே நலம்
பிரேமபரவஸ்ர்க்கு இவை அவத்யம் அன்று
பிரேம பாரவஸ்யதை-யாலே விளைந்தவை ஆகிலும் கலக்கத்தாலே வந்தவை தானே
ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெரும்
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது   உபாய பிரதிபந்தகம் ஆகாது –

————————————

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

இத் திரு மொழியில் ஏதேனும் ஒரு விதமாக அன்வயம் உள்ள பக்தர்களுக்கு துன்பம் இல்லா திரு நாடே வாழ்ச்சியாகும்
கலங்கல் இல்லாப் புகழான் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
தன் தலையாலே முயற்சி செய்ய நினைப்பது அவத்யம் என்ற
தெளிவுற்ற குடியிலே பிறந்த இவருக்கு தெளிவிக்கு மாறாக அருளிச் செய்த திரு மொழி இவர் புகழ்ச்சிக்கு கலக்கமோ என்றால்
இல்லை -பகவத் விஷயத்தில் இவருக்கு இத்தனை பிராவண்யம் உண்டாவதே என்று கொண்டாடும் படி இருக்குமே –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-2-பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்-

April 3, 2015

திரு நாகை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மங்களா சாசன திருப்பதிகம் –
அவனது வடிவு அழகு வாசோ மகோசரம்-
வராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவராக வவதாரம் செய்வான் –
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர் –
தருனௌ ரூப சம்பனௌ-என்னப் பண்ணும் வயிர உருக்கான அழகன் அன்றோ
அவதாரத் திரு மேனிகளிலே திரு நாகை எம்பெருமானுடைய வடிவு அழகு பேச்சுக்கு நிலம் அன்றே –

அவ் வழகிலே   நெஞ்சைப் பறி கொடுத்த ஆழ்வார் ஆண்மை இழந்து பெண்மை எய்தி
பரகால நாயகியாக தோழிமார்கள் உடன் சொல்லும் பதிகம்
ஒன்பது பாசுரங்களிலும் திவ்ய தேச திரு நாம இலச்சினை இல்லை -நிகமனப் பாசுரத்திலே -திரு நாகை அழகியாரை –
அச்சோ ஒருவர் அழகிய வா -என்றே பாசுரம் தோறும் உள்ளது –
ஆழ்வார் தம்மை மறந்தது போலே திவ்ய தேச திரு நாமத்தையும் மறந்தார்
இவர் மறந்தார் அல்லர் -எதிர் தலையின் வடிவு அழகு மறக்கப் பண்ணிற்று-

ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் –
முகத்தை நேரே பார்த்து முன்னிலை யாக்கி வார்த்தை சொல்ல முடியாத படி சோதி வெள்ளம் அலை எறிந்து தள்ளுகின்றது –
அதனால் அப் பெருமானுடைய
ஒப்புயர் வற்ற வடிவு அழகையும்
திவ்ய பூஷண
திவ்ய ஆயுத பொருத்தங்களையும்
ஸ்ருங்கார விலாசங்களையும்
மற்றும் கண்ட அதிசயங்களையும்
தோழி யோடே  சொல்லி வியக்கின்றாள் —

ஒரு பிராட்டி பாசுரத்தாலே தாம் மநோ ரதித்த  கைங்கர்யம் பெறாதே இருந்து நோவு படுகிற படியைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

————————————–

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி  ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-1-

வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிறாள் –
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் திருக் குணங்கள் எல்லாம் கிடக்க முந்துற முன்னம் திவ்ய மங்கள விக்ரஹத்திலே
தன் நெஞ்சு பறி யுண்டமை தோற்ற -பொன்னிவர் மேனி -என்கிறாள்
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -திருவாய்-3-1-2-
நீலமேகத் திரு உருவை பொன்னிறமாகச் சொல்லுவான் என் என்னில் –
ஹிரண்ய வர்ணாம் -பிராட்டியுடைய நித்ய சம்ச்லேஷத்தால் கரிய கோலத் திரு மேனியும் பொன் நிறமாயிற்று –
பொன் போலே விரும்பத்   தக்க திருமேனி என்பர்
நாகை அழகியார் சமுதாய சோபை பற்றி பொன்னிவர் மேனி என்கிறாள்
மரகதப் பச்சையின் சோதி போன்ற சோதி யுடைய திரு மார்பில் அணிந்த ஹாரம் மின்னல் போன்று இரா நின்றது என்கை
எம்பெருமானுடைய காள மேகத் திரு உருவத்துக்கு மரகத பச்சை உவமை பொருத்தமே –
காணப் புக்கவர்கள் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து சம்சார தாபங்களை எல்லாம் போக்குவிக்குமே
இவர் மேனி பொன் –
மரகதத்தின் பொங்கிளம்  சோதி அகலத்து ஆரம்மின்
என்று இரண்டு வாக்யமாக கொள்ளாமல்
பிள்ளை அமுதனார் மூன்று வாக்யமாக
இவர் பொன்
மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி
அகலத்து ஆரம் மின் –
என்றாம்
இங்கு இவர் பொன் -என்றது எண்ணும் பொன்னுருவாய் -திரு நெடும் தாண்டகம் 1–என்னுமா போலே
ஸ்வரூப பரமாய் சொன்னவாராம்-

இவர் வாயில் நால்வேதம் ஓதும் வேதியர் -அன்னே இவரை யறிவன் மறை நான்கும்
முன்னே யுரைத்த முனிவர் -பெரிய திருமொழி -11-3-3-
பரம வைதிகர் -விஷயாந்தரங்களில் நசை அற்றவர் -நல்வேதம் -சாம வேதம் என்றுமாம் –
வானவராவர் தோழீ-
ராஷர்ஷி தேவ ப்ரதிமௌ–என்றும் வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் -என்னுமா போலே
வடிவு அழகைப் பார்த்தவாறே ராஜக்களோடே ஒக்கச் சொல்லலாய்   இரா நின்றார் –
சாமாசரத்தை பார்த்தவாறே பிராமணரோடு ஒக்கச் சொல்லலாய்   இரா நின்றார் –
மேன்மையைப் பார்த்தவாறே தேவர்களோடு ஒக்கச் சொல்லலாய்   இரா நின்றார் –
விஷயம் குறைவற்று இருந்தது –
நீ அப்போது நிற்கப் பெறாதது காண் குறை  –

என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி  ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்-
மர்மங்களிலே கடாஷியா நின்றார் -பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –
நம்மை பாங்காக அனுபவிப்பதற்கு உறுப்பான பக்தி இவ் வாழ்வாருக்கு முதிர்ந்ததோ
போகத்துக்கு கொங்கை -இன்றியமையாதது போலே -பகவத் அனுபவத்துக்கு  பர பக்தி பர ஞான பரம பக்திகள்
நான் பதறி மேல் விழுந்தேன் -இதனைத் தாய் நோக்கினாள் ஆகில் என்னாகுமோ என்று அஞ்சி ஒழிந்தேன் –
உபாய அத்யாவசியம் ஆகிய பிரஜஞா  அவஸ்தை தாய் –
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றது உபாயத்யவாசத்திலே ஊற்றத்தாலே பதறுதல் தவிர்ந்தேன் -என்றவாறு-

அச்சோ ஒருவர் அழகிய வா -கீழ் சொன்ன சௌந்தர்யம் -வைதிகத்வம் -பரத்வம் மூன்றதனுள்
சௌந்தர்யமே தம் நெஞ்சை கொள்ளை கொண்டது-

—————————————

தோடவிழ்   நீலம்  மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழி யுஞ்சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-

திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளும் யுவா இவர்
திரு ஆழி திருச் சங்குகளை திருக்கையிலே ஏந்தி திவ்ய ஆபரணங்கள் பூண்டு உவந்து தழுவ 
நான்கு திருத் தோள்கள்  யுடையவராய் இருக்கின்றார்
சேடர்-இளம் பருவம் உள்ளவர் -யுவா -திருக்குடந்தை எம்பெருமானோ  திரு நாகை எம்பெருமானோ தெரிக்க மாட்டேன் –
அசாதாராண லஷணங்களால் ஸ்ரீ மன் நாராயணன் போலேயும் பாவிகளான நமக்கு சேவை
சாதிப்பதால் இல்லை போலேயும் -என்றவாறு
பாடக மெல்லடியார் -பாடகம் -பாடக என்று திரிந்து -ஹாடகம் -ஆடகம் -பொன் என்றவாறு –
ஸ்ரீ தேவி பூ தேவி மார்கள் சூழ -வணங்க-கண்டேன்-

—————————————

வேயிரும்   சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு  இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3-

புண்டரீகாஷர் இவர்
திரு மெய்யத்து எம்பெருமானோ உலகு அளந்த பிரானோ
கீழே ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள்  என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் என்றால் போலே அழகு விஞ்சின திருத் தோள்கள்-

—————————————————–

வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம்  புகுந்து நின்றார்   நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம்   இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா—9-2-4-

திருக்கைகளிலே பூ  ஏந்துவாரைப் போலே திரு ஆழி திரு சங்கு ஏந்தி -பரத்வம் பொலிய இருந்தும்
எட்டாதவராய் இல்லாமல் நாம் இருக்கு
யுவா குமாரா -திரு அதரமோ சிவந்த பவளம் போலே -திரு உருவமோ பவளத் திரள் போலே
உபமானம் இல்லாதபடி விலஷணமான அழகர்
இந்த விபூதியில் வந்து தோன்றினது கொண்டு நம் இல்லம் புகுந்து நின்றார்
மானச அனுபவம் ஆகவுமாம் -நம்பர் -நம்பத் தக்கவர்-

———————————————-

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழி  யொன்றேந்தியோர்   சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-5-

திரு உறையூரிலும் தென் மதுரையிலும் கோயில் கொண்டவரோ இவர்
மலை போன்ற திருத் தோள்கள்
கரும் கடலை ஒத்த திருமேனி
திருக் கைகளில் திரு ஆழியும் திருச் சங்கும் ஏந்திக் கொண்டு
எங்கும் காணாத வடிவு அழகு
கோவலர் -கோபால கிருஷ்ணன்
கோ அரசர்களில்—வலர் வல்லவர் என்றுமாம் -ராஜாதி ராஜர்
திரு முக மண்டலத்தில் தண்ணளி பார்த்தால் முன்பே கண்டவர்  போலே தோற்றும்
எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதம் -அபூர்வமாயே தோன்றும் பகவத் விஷயம்
கண் எச்சில் வாராமைக்கு வாழியரோ -என்கிறாள் இடையில்-

————————————————

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன்  தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும்  ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-

குவலயா பீடம் அழித்த ஸ்ரீ கிருஷ்ணன் தானோ
அஞ்சன மலையோ
ந நமேயம் என்று இருக்கும் ராவணன் போல்வாரையும் வணங்கப் பண்ணும் திரு அபிஷேகம் பூண்டவர்
வெஞ்சின வேழம் மருப்பு ஒசித்த வேந்தர் கொல் என்ற உடனே -ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்
வடமதுரைப் பெண்கள் நெஞ்சு இழந்து சொன்ன சொலவுகள் –
ஆவரிவர் செய்தறிவார் அஞ்சன மா மலை போலே மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து
அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் -பெரிய திருமொழி -3-3-7-
அப் பெண்களால் அனுபவித்த திரு மேனி அழகை இங்கே பரகால நாயகி அனுபவிக்கிறாள்
ஏந்திழையார் -பெண்களுக்கு நிரூபக நாமம் —
இழை -ஆபரணம்-

————————————–

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி  பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-7-

பிணி -வியாதி -அதற்கு மூலமான பாபங்கள் -அவை நீங்கின மகான்கள் ஹ்ருதய கமலத்தை விகசிக்க வல்ல பேர் அருளாளன்
தாமரை மொட்டை விகசிக்க வல்ல பரம கிருபாளான ஆதித்யன்
இவருடைய ஸ்ருங்கார சேஷ்டைகளைப் பார்த்தால் நெடு நாள் பழகினவர் செய்யுமவை போலே இருக்க –
ஆயினும் முன்பு கண்டாதாக தெரிய வில்லை –
உற்று நோக்குகிற திருக் கண்களும் அணைக்க முற்படுகிற திருக் கைகளும் திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாய் இருந்தன
லோக விலஷணமான அழகு-

——————————

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-

ஓங்கிய திருமால் இரும் சோலை மலை அழகரோ இவர் -என்னுடைய அவயவங்களை விரும்பி நீங்காமல் உள்ளாரே
திரு நீர்மலை அரங்கனோ இவர்
பொன்மலை மேல் காள மேகம் படிந்து வருமா போலே பெரிய திருவடி மேல் வீற்று இருந்து எழுந்து அருளி வரும் கோலம் காண்மின்
பெரிய திருவடி -பொன்மலை -எம்பெருமான் -மா முகில்
காய்ச்சின பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போலே –திருவாய் மொழி
ஆழ்வார் இங்கே கருட உத்சவம் சேவிக்கப் பெற்றார் -அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் என்றது
அருளாழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் -நம் ஆழ்வார் பிரார்த்தித்தது இவருக்கு பலித்ததே  –
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை -என்றது -மதி தவழ குடுமி மாலிரும் சோலை   -திருவாய்மொழி போலே –
என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் என்றது எல்லா அவயவங்களுக்கும் உப லஷணம்-இவையும் அவையும் உவையும் -திருவாய்மொழி போலே-

—————————————————

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-9-

பிரளயத்தில் அனைத்தையும் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளிய ஆலிலைத் துயின்று அருளிய மாயனோ இவர்
அகடிகடநா சமர்த்தர் போலே தோன்றுகிறதே
திரு வடிவைப் பார்த்தால் மேகம் போலேயும் மலை போலையும் சொல்லலாய் இரா நின்றார்
திரு அவயவங்கள் பரிமளம் கமழா நிற்கும் தாமரை போலே இருந்தன
மேன்மையைப் பார்த்தால் நித்ய  சூரிகள் மட்டுமே வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்
மேன்மைக்குத் தக்க மேன்மை யுள்ளவர்களே இவரைக் கிட்டலாய் இருக்க அழகு விட ஒண்ணாமல் மேல் விழப் பண்ணுகிறதே-

——————————————————

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே  –9-2-10-

இன்னிசை பொலிய அருளிச் செய்த இத் திருமொழியை கற்று ஓத வல்லார் சார்வ பௌமர்களாய் ஆண்டு
மீட்சி இல்லா வைகுண்ட மா நகர் புக்கு நித்ய கைங்கர்யம் பெறுவார்கள்-

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-1-வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்-

April 2, 2015

திருக்கண்ணங்குடி திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –

நாம் உகந்த நிலங்கள் எங்கும்  புக்கு கவி பாடும் -என்று தான் திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க கண்டு
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல்  -என்கிறபடியே நம்முடைய ரஷணத்திலே  உத்யுக்தராய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே திருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –

——————————————–

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை  மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி  நால் வேத  மருங்கலை  பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-1-

வ்யூஹ மூர்த்தியான ஷீராப்தி நாதனே இங்கே நித்ய சந்நிதி பண்ணி அர்ச்சா ரூபியாய் சேவை சாதித்து அருளுகிறான் –
மேவி -வினை எச்சம் அன்றி -மேவியவன் என்னும் பொருளதான பெயர்ச் சொல் –
அருங்கலை -வேத உப ப்ரும்ஹணமாக உள்ள ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாக யுடைய மகான்கள் வாழும் திவ்ய தேசம்
துளக்கம் -கலக்கம்
எம்பெருமான் யுடைய நிர்ஹேதுக கிருபையே நமக்கு உஜ்ஜீவன உபாயம் என்னும் அத்யாவசாயத்தில் குலைதல் யற்றவர்கள் -என்றபடி –

———————————————-

கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச்   சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-2-

காரம் -முதலையினாலே
வேத தாத்பர்யமான கைங்கர்யங்களுக்கு பிரதி பந்தகங்களை போக்கி  அருளுபவனும் அவனே
கவளம் -யானை உணவுக்கு பெயர் -மாகதத்த -சாதிக்கு உரிய விசேஷணம்-கதம் -கோபம்
நீர்ப் பூ  வளமும் நகர் வளமும் பின்னடிகள் காட்டும்-

——————————–

வாதை வந்து அடர வானமும்நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரியகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே -9-1-3-

மத்ஸ்ய ரூபியான பெருமான் ஒற்றைக் கொம்பிலே வஹித்த ரஷித்து அருளியதால் -மீது கொண்டு உகளும் மீனுருவாகி –
விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்-கடல் நீரை முழுவதும் ஒரு செலுவினுள் அடக்கி கடலை வெறும் தரையாக்கி
அதிலே சில காலம் விளையாடுவதும் -மறுபடியும் செலுவில் நின்று கடல் நீரை வெளிப்படுத்தி
கடலிலே சில காலம் விளையாடுவதுமாய் நிகழ்ந்த லீலை –
முடங்கு தெண்டிரைய பௌவம் முற்றுமோர் செலுவுட்சென்று
மடங்கிய துணரகில்லார் மயர்ந்தனர் நேடியன்னோர்
ஒடுங்கினர் ஏத்தி நின்றார் உயர் ஒப்பிலாத மேலோன்
தடங்கொள் சேலுருவின் மாண்பு யாவரே சாற்று நீரார் -ஸ்ரீ பாகவதம் –
புன்னை மல்லிகை முல்லை முதலியவற்றின் மலர்களிலே படிந்து நறு மணத்தை முகந்து கொண்டு
வருகிற குளிர்ந்த தென்றல் காற்று எங்கும் வீசப் பெறுமிடமாம் இது –

————————————————–

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல்காலத் துயர் கொடி  யொளிவளர் மதியம்
சென்று சேர்  சென்னிச் சிகர நன்மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே -9-1-4-

தறு கண் -வட்டணித்த கண்களையும் யுடையதுமான
மகா வராஹமாய் பூமிப் பிராட்டி துயர் தீர்த்தவனும்
பார்த்த சாரதியாய் த்ரௌபதி துயர் தீர்த்தவனும் இவனே
பசலை -தொடு உழி தொடு உழி -விடு உழி விடு உழி -பரத்தலான் -வியாபிக்கிற படியால் -பசலை நிற வேறுபாடு
பாசி தூரத்துக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியார்
தேசுடைய தேவர் -என்கிறபடியே
பூமியை கோட்டால் குத்தி மீட்டுக் கொணர்ந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணி –
என்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -நல் நிறத்தை கொடுத்து அருளினவன்
பஞ்சவர் -தொகைக் குறிப்பு அர்ஜுனனே இங்கே விவஷிதம்
ஓன்று அலா உருவத்து -உலப்பில் பல் காலத்து -சாஸ்வதமான நல் மாடத்துக்கு -திரு மாளிகைகளுக்கு இட்ட அடை மொழிகள்-

—————————————————–

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே -9-1-5-

ஓங்கி உலகு அளந்த உத்தமனே இங்கு சந்நிஹிதனான்
ஓர் அரசன் ராஜ சிஹ்னம் ஆகிய வெண் சாமரம் வீசக் கொற்றக் குடை நிழலிலே சிங்கா சனத்தின் மேலே வீற்று இருப்பது போலே இங்கே
அன்னப்பறவைகள் செந்நெற் கதிர்கள் ஆகிற சாமரை வீச இலைக் குடையின் கீழ்ச் செந்தாமரை மலர்களில் ஏறி வீற்று இருக்குமாம்-

———————————————————-

மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள்    தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-6-

ஸ்ரீ பரசுராமனாக திருவவதரித்து விரோதி நிரசனம் பண்ணி அருளினவனும் இவனே-

————————————————————-

வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை  யார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-

பானு நேர் சரத்தால் -சூர்யனோடே ஒத்த தீஷணமான அம்புகளாலே
பனங்கனி போலே உவமை -முடி யுதிர்த்த எளிமையைக் காட்டும்
மயில்கள் நாட்டியம் ஆட
மேகங்கள் வாத்யம் முழங்க
வண்டுகள் களித்து இன்னிசை பாடவுமாய் இருக்கை-

———————————————————-

அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-8-

துரியோதனன் -அரவு நீள் கொடியோன்
சர்வஞனுக்கு பொய்யாசனம்  அஞ்சாமல் இட்ட  சாஹாச செயல் -அஞ்சி இடாதே இட –

பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்-திருப்பாடகம்
பாடு -பெருமை -அகம் -பெருமை தோன்ற வீற்று இருந்து அருளும் திவ்ய தேசம்
சஹ்ய பர்வதத்தில் இருந்து -ரத்னங்கள் -மரகத திரள்கள் -வயிரம் -மூங்கில் உதிர்த்த முத்துக்கள் ஆகிய
இவற்றைத் திரைகள் ஆனவை தம்மில் அடங்காமையாலே கொண்டு வந்து தள்ளி வயல்களிலே குவிக்கும்
வெதிர் -மூங்கில் –

—————————————————–

பன்னியபாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன  வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே-9-1-9-

பன்னிய பாரம் -விஞ்சின பாரமானது
பூமி -சர்வம் சஹா வடமொழியில் பெயர் உண்டே -துர்யோனாதிகளால் வந்த பாரம் பூக்கி அருளினவன்
மைத்துனற்கு தேர் உய்த்த -மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து -பெரியாழ்வார்
பெண் கொடுத்துக் கொள்ளுவதற்கு உரிய முறைமை யுடையார் மைத்துனன் எனபது தமிழ் மரபு-

—————————————–

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடி யுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை   யொன்பதொடு ஒன்றும்  வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10-

ஸ்ரீ சீதா பிராட்டி யுடைய விச்லேஷம் பொறாமல் இராவணாதிகளை நிரசித்து அருளியவனே
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை கிழங்கு எடுத்து அருள இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
அவன் விஷயமான இத் திருமொழியை கற்று ஓத வல்லார்கள் நித்ய ஸ்ரீ மான்களாகப் பெறுவார்கள்
காரிகை -அழகு -அஃது உடையவளுக்கு ஆகு பெயர் -ஸ்ரீ சீதா பிராட்டி என்றவாறு
கடல் பெரும் படையொடும் சென்று -கடலில் காட்டிலும் பெரிய சேனை -பெரும் படையோடு கடலிலே சென்று -என்றுமாம்
நல்குரவு -தரித்ரனாய் இருத்தல் -எம்பெருமானை இழந்து இருத்தலே தாரித்ர்யம் –
பகவத் கைங்கர்ய லஷ்மி இடையறாமல் இருக்கும் –
லௌகிகருடைய ஆசைக்கு ஏற்ப பொருள் உரைக்கவுமாம் –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-10-வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்-

April 2, 2015

இது திருக்கண்ண புரத் திருப்பதிக மங்களா சாசன பத்தாவது   திருமொழி-

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே –8-10-1-

என் செய்கின்றாய் சொல்லு -சகல சாஸ்தரார்த்தம்-அவன் திரு உள்ளத்தில் இரக்கமே பேற்றைப் பெருவிக்க வல்லது
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக இருந்து இரக்கம் அருள வைக்கிறாள் –
வண்டார் பூ மலர்மேல் மங்கை மண நோக்கம் யுண்டானே –
அவனுக்கு இவள் நோக்கமே ஜீவனார்த்தம் -கடாஷ வீஷணத்தை உணவாகக் கொள்ளுபவன்
யஸா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீ நோ விதத்தேகிலம் –
மிதுனத்தில் அடிமை செய்வதே சாஸ்தராத்ரம் என்பதையும் வெளியிடுகிறார் -உன் தனக்கே தொண்டனேற்கு
உன்னை உகந்து உகந்து -பிராட்டியும் அவனுமான சேர்த்தியால் யுண்டான உகப்பாலே இரட்டித்து
தொண்டனேற்கு -கைங்கர்ய விருப்பம் கொண்ட எனக்கு -தேஷாம் -சத்தா யுக்தாநாம் போலே –
சத்த யோகத்தை விரும்புகின்றவர்கள் என்றே அங்கும் பொருள்
நால்  வேதம் கண்டானே -பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி -இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –
கண்டவனே -கர்த்தரித் பொருள்
காணப் பட்டவனே -கர்மணி பொருள்
நால் வேதங்களாலும் உபாயமும் உபேயமமுமாக காணப் பட்டவனே -நிஷ்கரிஷிக்கப் பட்டவனே என்றபடி-

——————————————————-

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும்
கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே -8-10-2-

நீ உண்டு உமிழ்ந்த எச்சிலான தேவர்களை ஒரு பொருளாகவும் நெஞ்சிலே கொள்வேன் அல்லேன் –
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ -பிள்ளை பெருமாள் ஐயங்கார் தனிப்பாடல் –
வருதேவர் மற்றுளர் என்று என் மனத்து –
பிரளயம் வந்த போதாக உன் வயிற்றிலே போய்ப் புக்கு
நீ வெளிநாடு காணப் புறப்பட விட்டவாறே
நான் ஆஸ்ரயநீயன் என்று வருவதொரு தேவதை உண்டாக நான் அறியேன் –
ஒரு தாரா -விளியாகவும் கொண்டு -ஆஸ்ரித ரஷணத்துக்கு தனி மாலை இட்டவனே என்றுமாம்
சம்சார பிரளயம் போக்கி அருள இங்கே நித்ய சந்நிதி பண்ணி நீ அருளா நிற்க
மற்ற தெய்வ ஆபாசங்களை பூர்வ பஷமாகவும் நெஞ்சிலிட்டு நினையேன்-

——————————————————–

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

தேவதாந்திர பாசம் இல்லாதது அவ்வளவேயோ -தாமச புருஷர்களோடு சேர்க்கையும் இல்லை –
சாத்விக புருஷர்கள் ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன்
பாகவத சேஷத்வமே திருமந்த்ரார்த்த தாத்பர்யம் –
மிக்க இறை நிலையும் இத்யாதி அர்த்த பஞ்சகமும் திருமந்த்ரத்தில் யுண்டே
பிரணவத்தாலே -சேதன ஸ்வரூபமும்
நமஸ்  ஸாலே விரோதி -உபாய ஸ்வரூபங்களையும்
நாராயண -பதத்தாலே பரம புருஷனது ஸ்வரூபத்தையும்
ஆய -சதுர்த்தியாலே-புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
பிரதிபாதிக்கையாலே -மற்று எல்லாம் பேசிலும் -என்கிறார்
முமுஷூப்படி -மற்று எல்லாம் பேசிலும் என்கிறபடியே அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இதுக்கு உள்ளே உண்டி -அதாவது அஞ்சர்த்தம் –
பேசிலும் -உம்மைத் தொகையால் -அவற்றில் தமக்கு ஊற்றம் இல்லை   என்றும்
தமக்கு ஊற்றம் இருப்பது -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறார்-

நமஸ் -பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் பாகவத சேஷத்வம் காட்டும் -என்பதே ஆழ்வார் ஆச்சார்யர்கள் திரு உள்ளம்
சிலர் -அகாரம் ஏறிக் களைந்த சதுர்த்தியிலும்– உகாரத்தில் அனந்யார்க்க  சேஷத்வம் சொல்லும் இடத்திலும்
எல்லை நிலமாக இது உண்டு என்பர்
அர்த்தாத் சித்தமாக இவையும் அனுசந்திக்கக் குறை இல்லை என்றாலும்
அஹங்கார மமகாரங்கள் கழிவதைக் காட்டும் நமஸ்ஸில் அனுசந்திப்பதே மிகப் பொருந்தும்
கற்று நான் வல்லது  கண்ணபுரத்தானே-பாட பேதமும் யுண்டு -ரீதி பேதம் பிறவாமைக்காக-

—————————————-

பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர்அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே -8-10-4-

பூதனை விஷமே உனக்கு விரும்பத் தக்கவதானதால் நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத அடி நாயேனும் உனக்கு உகந்த விஷயம் தானே –
கொடியவனே யாயினும் புருஷகாரம் பண்ணி செர்ப்புத்து அருள பிராட்டி நித்ய வாசம் செய்து இருக்கவும் நான் இழக்கவோ
பொறுமை   தானே வடிவு கொண்ட பூமிப் பிராட்டியும் உசிதமான உபாயங்களால் பொறுப்பிக்க வல்ல பெரிய பிராட்டியாரும்
கூடி இங்கே சந்நிதி செய்து இருக்கவும் இழக்கவோ
பெண் ஆனாள் பேரிளம் கொங்கை -யசோதை உருவம் ஏறிட்டுக் கொண்டாள் –

———————————————-

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால்  நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே –8-10-5-

பரி பூர்ணனான அநந்ய கதித்வம் யுடையவன் –
உற்றான் -படாத பாடுகள் பட்டவன் என்றுமாம்
எங்கும் திரிந்து உழன்று அலைந்து வருந்தி வந்து சேர்ந்த இவனை பரீஷிக்க தேவை இல்லை –
கடுக கிருபை செய்து அருள வேணும்
உற்றான் -அனர்த்தப் பட்டான் -என்னும் பொருளில்
மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மாநிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் -திருமாலை
நீ இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருள பயன் வேண்டுமே அருளாய்
இங்கே கற்றார் பலர் இருக்கவும் நீ கைவிடலாமோ-

——————————————

ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதம் என்று  தொடாமை நீ
காத்தி   போல் கண்ண புரத்துறை யம்மானே –8-10-6-

யமன் முதலானோரும் அருகே வாராத படிநோக்கி அருள வேண்டும்
மதுசூன பிரபன்னான் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம்
திறம்பேன்மின்— சாதுவராய் போதுமின் –தூதுவரைச் செவிக்கு -திருமழிசை ஆழ்வார்
நமன் தமரால் ஆராயப்படார் -பொய்கையார்
கூற்றின் தமர்களும் குறுககில்லார் -நம்மாழ்வார்
நாவலிட்டு  உழி தருகின்றேன் நமன் தமர் தலைகள் மீதே
சோத்தம் -ஸ்தோத்ரம் -அஞ்சலி -சோத்தம்பிரான் இங்கே வாராய் -பெரியாழ்வார்
அஞ்சுதும் –தன்மை பன்மை வினை முற்று
காத்தி போல் –போலே உவமை பொருளது அன்று -ரஷித்து அருளுகிறாய் அன்றோ என்கிறது -வாக்ய அலங்காரம் –

————————————–

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே–8-10-7-

திருப் பாற் கடலில் கூக்குரல் -கூப்பீடு இடத்தில் யோகு செய்து அருளுபவனே
யமபடர்கள் பாகவதர்களை கிட்ட மாட்டார்கள் என்று மட்டும் இல்லை
அவர்கள் கள்ளர் போலே மறைந்து ஒளிந்து கிடக்கும் படியாய் அன்றோ உனது பிரபாவம்
சித்ரகுத்தன் எழுத்தால்  தென் புலக்கொன் பொறி ஒற்றி வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடு ஒளித்தார்-பெரியாழ்வார் –

——————————————-

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-8-

அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாபங்கள் பல செய்து இருந்தாலும் அவை
வானோ மறி கடலே மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -போன இடம் தெரியாமல் போயினவே
ஸ்ரீ வராஹ ஸ்ரீ நரசிம்ஹ  மூர்த்தியாய் திரு வவதரித்து செய்து அருளிய சேஷ்டிதங்களை
நெஞ்சார நினைக்கவே இவை போகக் கண்டேன்
பேணாத -தேக வ்யதிரிக்த ஆத்மா உண்டு என்று அறிந்து அதற்கு உரிய நன்மைகளை
நாடாதவனாய் இருந்தவன் நான் -என்றபடி-

———————————

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே –8-10-9-

பாபங்கள் அகன்று போன படியையும் தாம் பெற்ற பேற்றையும் பேசித் தலைக் கட்டுகிறார்
நிர்ஹேதுக கிருபையாலே விஷயாந்தரங்களிலே  மண்டிக் கை கழிந்து போன என்னை
திருமந்த்ரார்த்தம் உணர்த்தி தொண்டர்கள் திரளிலே நிலை நிறுத்தினாய்
இப்படிப் பட்ட சேஷத்வ ஞானம் ஆகிற ராஜ குல மகாத்ம்யத்தாலே என்னுடைய பாபங்கள் அறுத்து ஒழிக்கப் பெற்றேன்
அவ்வளவேயோ
என் நாவினுள்ளே நீ வந்து புகுந்து இனிய பாசுரங்களைப் பாடுவிக்கையாலே என் ஹ்ருதயத்தின் யுள்ளே நீ
நித்ய வாஸம் செய்து அருளுகிறாய் என்று நிச்சயித்து கொண்டேன்
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இருந்தபடி
மலையாள தேசத்தில் முக்கோட்டை -என்று ஒரு இடமாம் -நில மிகுதியால் ஊமைகள் கூட மிதித்த உடனே அழகாக கவி பாடுவார்களாம்-

——————————————————-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே -8-10-10-

கண்ட சீர் -கண்ணாலே ப்ரத்யஷமாக காணக் கூடிய செல்வம்
இத் திருமொழியை பா மாலையை நிதியாகக் கொண்டு பாடி ஆடும் அடியவர்கட்கு திரு நாட்டுச் செல்வத்தை ஆளப் பெறுவதே பேறாகும்-
கொண்ட சீர்த் தொண்டன் -சீர் கொண்ட தொண்டன் -சீர் -ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மி ஸ்ரீ
அந்திரிஷத   கத ஸ்ரீ மான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -ச து நாகவர ஸ்ரீ மான் —

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .