திருத் தாயார் பாசுரமாகச் செல்கிறது இத் திரு மொழி –
பரத்வம் மேல் எல்லையில் இருந்து எனது பெண் பிள்ளையை உபேஷித்து இருப்பது முறையோ –
ஒவ் ஒரு பாசுரத்திலும் ஒரு பழ மொழியை எடுத்து உரைத்து சொல்லும் முகத்தாலே
ஆழ்வாருடைய காதலின் மிகுதியையும் உபேஷியாமல் கடுகக் கைப் பற்றி ஆக வேணும் என்னுமத்தையும்
விண்ணப்பம் செய்கிறார்-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதீர்
ஈங்கோர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே -திரு விருத்தம் -33-பாசுரம் ஒப்பு நோக்கத் தக்கது –
——————————————
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1-
சிறுபிள்ளை கவர்ந்த கிண்ணத்தை வாங்குவதில் ஸ்ரமம் இல்லையே -இவளை அப்படியே அலஷியம் செய்து உள்ளாய் என்கிறாள்
கள்ளவிழ் கோதை காதலும்-இவள் காதலை நோக்கி நீ பதறி ஓடி வந்து இவளைக் கைப் பற்ற வேணும்
எங்கள் காரிகை மாதர் கருத்தும்-வகுத்த விஷயத்தில் காதல் கொண்ட இது நன்றே என்று உகக்காமல்
பழி சொல்லை நோக்கி யாகிலும் வந்து இவளைக் கைக் கொண்டு
பழிப்பவர்களின் முகத்தை பங்கம் செய்திட வேணும் –
இரண்டையும் அலஷியம் செய்து இருக்கிறாய்
நல்ல என் தோழீ நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வது என் -நாச்சியார் -10-10- என்னும்படி
உன்னுடைய பெருமைகளைப் பாராட்டியோ இப்படி அலஷியம் செய்து இருக்கிறது
பூதனையை முடித்த பெரு மிடுக்கன் – இராவாணனை முடித்த மகா வீரன் -ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராமாவதார பராக்ரமங்களை
நினைத்து செருக்கி இருக்கிறாய் போலும்
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள என்றது மேலே சஞ்சரித்து குழந்தைகளை அனுங்கப் பண்ணும்
பறவைகள் யுண்டே -அப்படிப் பட்டவளாய் வந்தாள்
அன்றிக்கே புள்ளுருவாகி -ஹம்சமாகி செய்து அருளின செருக்கோ -என்றும் கொள்ளலாம்
ஊக்கம் -பரத்வம் -அஹங்காரம் -மிடுக்கு –
—————————-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ வறியேன் நான்
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ யிவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே -10-9-2-
நின்ற பிரானே -திருமலையில் நின்று அருளும் பிரானே –
குடக்கூத்தாடி ஸ்திரீ ரத்னங்களை மயக்கி அருளிய செருக்கோ
ஏழு ரிஷபங்களின் வலிமையை அடக்கி நப்பின்னை பிராட்டியை திரு மணம் புரிந்து அருளிய செருக்கோ
கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து ஆ நிரைகளை காத்த நமக்கு இவளை உபேஷித்தால் என்ன
குண ஹாநி வந்து விடும் என்ற எண்ணமோ
கையிலே வளைகள் நிற்க மாட்டாதபடி துரும்பு போலே இளைக்கப் பண்ணி யுள்ளாயே
கோயில் வாசலிலே உள்ள மரத்திலே தேனை கவருவது போலே இவள் வளைகளைக் கவர்ந்து அருளினாயே –
————————————————————–
ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3-
இவளை ஒரு சரக்காக மதிக்காதே -உள்ளம் கையில் உள்ள கருப்பம் கட்டி போன்றவள் -என்ற எண்ணமோ –
கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இ றே –
அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும் –
கைப்பட்ட பொருள்களிலே உபேஷை பிறக்குமே அது போலே என்றவாறே
ஆர் மலி யாழி-ஆர் -கூர்மை -ஆர் -அரங்கங்கள் –
ஆற்றலை ஆற்றல் மிகுத்து -பராக்ர்மத்தை ஆறுதல் மிகும் படி செய்தருளி –
யாற்றல் மிகுத்து -ஒரு ஜகது உபசம்ஹாரத்துக்கு போந்து இருக்கச் செய்தே கம்சன் அளவிலே யாம் படி யமைத்து –
கார் முகில் வண்ணா -ஆர் எழில் வண்ணா -இரண்டு விசேஷணங்கள் அவனுக்கு –
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-மூன்று விசேஷணங்கள் இவளுக்கு
உன்னைக் காட்டிலும் வீறு பெற்றவள் -அஸி தேஷிணா-போலே
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிர நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஆகையால் உபேஷித்தல் தகாது -என்கிறாள் –
————————————
மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த கரதலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங்கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லியென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4-
அணி நிறம் கொண்டு -விலஷணமான மேனி நிறத்தை அபஹரித்ததும் அன்றி
முன்னே வந்து நின்று போகே -உரு வெளிப்பாட்டாலே எப்போதும் கண் எதிரே தோற்றி புறம்பு போகிறாய் இல்லை
வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி நாம்பரம் -மாரீசனுக்கு தோற்றினாப் போலே
எங்கனே நீர் முனிவது காண்–அங்கன் உருவெளிப்பாடா யுரைத்த தமிழ் மாறன் –
அஹங்காரியான ருத்ரனுக்கும் உடம்பு கொடுத்து அருளிய சீலத்தை நினைத்தோ –
இவளை உபேஷிப்பது ஒரு அபகீர்த்தி யாகுமோ
நரகாசுரனை முடித்த மிடுக்குடைய திருக் கையை நினைத்தோ -பல்லாயிரம் தேவிமார் இருக்க இவள் ஒரு பொருளோ –
இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே – சாபமாநய சௌமித்ரே-என்று நினைத்த போதே
வாங்கிக் கார்யம் கொள்ளலாம் படி உரிய அடியார் கையில் ஆயுதத்தோபாதியாக நினைத்திரா நின்றாய் –
————————————————
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே -10-9-5-
பார்த்தன் தன் சிலை வளைய திண் தேர் மேல் முன்னின்று மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய
நூற்றுவரும் பட்டழியச் செய்த மிடுக்கை நினைத்தோ –
தேர் வலம் கொண்டு -தேர் காலாலே பிரதிபஷங்களை உழக்கினான் அன்றோ –
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என-எட்டா நிலத்தில் இருந்தால் அபேஷை இருக்கும்
சர்வ சாதாரண வழியில் வீழ்ந்து கிடந்தால் பொருளாகத் தோற்றாது -இறே-
குனிந்து எடுக்கவுமாம் தவிரவுமாம்-
பேசுகின்றாயே என்றது கருதுகின்றாயே என்றபடி –
—————————————————————
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனை
செருக்கழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய்
எறிக்கிலைக்காக வெறி மழு வோச்சல் என் செய்வது எந்தை பிரானே –10-9-6-
கை வளையை கழலச் செய்தாய்
மறந்து பிழைக்க ஒட்டாமல் உரு வெளிப்பாட்டாலே நலிகின்றாய்
தன்னடியே பழுத்து நெகிழ்ந்து விழக் கடவதான எருக்கிலையை உதிர்க்க மழுப்படை வேண்டுமோ
இவளை நலிய இத்தனை பிரயாசப் பட வேண்டுமோ
இராவணனை வென்ற வீரச் செயலை அபலை இவள் இடம் காட்ட வேண்டுமோ
அரக்கியர் ஆகம் புல்லென ராஷச மாதர்கள் தாலி இழக்கும் படி –
செருக்கழித்து-செருக்கு அழித்து என்றும் செரு கழித்து போர் களத்திலே நிரசித்து –
அமரர் பணிய முன்னின்ற-
ராவண வத அநந்தரம்-பிராட்டி எழுந்து அருளி வர
பெருமாள் முகம் கொடாதே ஒழிய
தேவ ஜாதி வந்து -பவான் நாராயணோ தேவ -என்றும்
சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -என்றும் உணர்த்த –
சேவகமோ செய்ததின்று –
முகம் கொடாதே நின்ற அச்சேவகம் போலே இருந்ததி-இச் சேவகமும் –
————————————————————————
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ
மாழை மென்னோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா –10-9-7-
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடலுலக முன்னாண்ட
பாழி யம் தோள் ஆயிரம்-யுடைய -கார்த்த வீர்யார்ஜுனனை -நிரசித்த வீரத்தை இவள் இடம் காட்ட வேண்டுமோ
இவளை மாய்ப்பதற்கு இத்தனை பிரயாசம் வேண்டுமோ
தன்னடையே உடைந்து போகக் கூடிய கோழி முட்டையைத் தகர்க்க தடி வேண்டுமோ –
———————————————————
பொருந்தலன் ஆகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ செய்ததின்று
பெரும் தடங்கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்
கருங்கடல் வண்ணா கவுள் கொண்ட நீராம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-8-
பெரும் தடம் கண்ணி -தோள்கள் ஆயிரத்தாய்-விஸ்வரூபம் கொண்டு அனுபவிக்கப் புக்காலும்
திரு மேனிப் பரப்பை எல்லாம் தனது கடைக்கண் நோக்கத்தில் ஒரு மூலையில் ஆழம் கால் படுத்த வல்லவள் –
ஆஸ்ரித வத்சலன் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஸ்ரீ ஸூக்ரீவ மகா ராஜர் திறத்தில் காட்டி அருளினாய் –
இவள் திறத்தில் இங்கனேயோ பலிக்க வேண்டும்
கபோலம் -கவுள்-என்று சிதைத்து யுள்ளது -நீரை உள்ளே இழுச்சிக்கைக்கும் கொப்பளிக்கவும் யுரித்தாய் இருக்கும் அன்றோ
பொருந்தலன் -மனம் பொருத்தம் அற்றவன் -பிரகாரன பலத்தால் இரணியனைச் சொன்னவாறு
பெரும் தகை -கம்பீர ஸ்வ பாவம் யுள்ள ஸூ க்ரீவன்-
—————————————————–
நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ
பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9-
ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக –
அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே –
நின் மனத்து வைத்தாயே –
வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய் –
அலஷ்யதா புத்தி இருக்குமா போலே என்றவாறு
பஞ்ச பூதங்களும் நாம் இட்ட வழக்காக இருக்கும் பொழுது இவள் ஒரு சரக்கா என்ற நினைவோ
வேறு புகலாவார் இல்லாமையாலே நம் கையையே எதிர்பார்த்துக் கதறித் துடிக்கட்டும் என்ற நினைவோ-
———————————————————–
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மை நின்று எம்பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே—10-9-10-
பரம பக்தி தலை எடுக்கப் பெற்று -நித்ய கைங்கர்ய சாம்ராஜ்ய லஷ்மியையும் பெறுவார்கள் –
திருவோடு மிகும் -கைங்கர்ய விருப்பமே திரு –
லஷ்மண லஷ்மி சம்பன்ன -அந்தரிஷிகத ஸ்ரீ மான் -ஸ து நாகவர ஸ்ரீ மான் –
வேட்டம் -ஆசைப் பெருக்கம்
-ஸ்வயம் பிரயோஜனமாக திருவடி பணியுமவர்கள்
மெய்ம்மை நிற்றல் -சாஸ்த்வதமான நித்ய விபூதியில் நித்ய கைங்கர்யம் ஆகிய பரம புருஷார்த்தம்-
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .