ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —
ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி
ஸ்ரீ தப ஸ்வாத்யாய நிரதாம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வாலமீகி முனி புங்கவம் — 1-1-1
கோன் வஸ்மின் ஸம்ப்ரதம் லோகே குணவான் கா ச வீர்யவான் தர்மஞ்சந ச க்ருதஞ்ஞந ச ஸத்ய வாக்யோ த்ரிட வ்ரத–1-1-2–
சாரித்ரேண ச கோ யுக்த சர்வ பூதேஷு கோ ஹிதா -வித்வான் கா சமர்த்த ச கா ச ஏக பிரிய தர்சன -1-1-3–
ஆத்மவான் கா ஜித க்ரோத த்ருதிமான் கா அநஸூயகா -கஸ்ய பிப்யதி தேவா ச ஜாத ரோசயா சம்யுகே-1-1-4–
1-குணவான் -சம்யக் போஜனம் -உடனே உண்பன் என்றானே
இன்று போய் நாளை போருக்கு வா -சரணாகதி இன்றே பண்ணலாம் –
2-வீர்யவான் -மீண்டும் வந்தாலும் வெல்வேன் -ரஞ்சனீயஸ்ய விக்ரம் அன்றோ
3-தர்மஞ்ஞன் -அறிந்து அனுஷ்ட்டித்து -கீழ் சொன்னவை இதுக்கு -சரணாகத வத்சன் -விரதம் கொண்டவன் அன்றோ
4-க்ருதஜ்ஜயன் -செய் நன்றி மறவாமை
5-சத்ய வாக்யன் -13-த்ரேதா யுகம் கண்ட சூர்ப்பணகை-37-வயசு ராமன் காட்டிய ஆர்ஜவம் -சத்யான் லோகான் ஜயதி-
6-திருட விரதன் –புறா கதை -குரங்கு புலி மனுஷ்யன் கதை –
அனைத்து குணங்களும் சரணாகதன் ரக்ஷணம்
7-ஸாரித்ரன்-நல்ல அனுஷ்டானம் -ஒரே வில் ஒரு சொல் ஒரே இல்
8-சர்வ பூதேஷு ஸூஹ் ருதம் –காகுத்தன் பாத தூளி – ரஜா
கழல் துகள் கதுவ -பாதுகையாலும் தீண்டாதவன் -அன்னை என்று பொன்னடி வணங்கினான் அகலிகையைப் பார்த்து –
கௌதமர் சாபம் -12- மாதங்கள் கருவில் சுமந்தாள் இவளோ கருத்தில் சுமந்தாள் பல யுகமாகங்களில்
மை வண்ணம் –நான்கு வண்ணங்கள் –
இவ்வண்ணம் மை வண்ணம் -கம்பர் எட்டு வண்ணங்கள் -கால் வண்ணம் கண்டேன்
9-வித்வான் -ஆய கலைகள் -64-
10-சமர்த்தன் -கல்லைப் பெண்ணாக்கி புல்லை அம்பாக்கி -வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
11-சதா சர்வ பிரிய தரிசன-ராமா -ரம யிதி-மனத்துக்கு இனியான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –
லஷ்மணன் லஷ்மீ சம்பன்னன் -நற் செல்வன்
12–ஆத்மவான்–துணிச்சல் மிக்கு –காரா தூஷணாதிகள் அசகாய ஸூரன்
13-ஜித க்ரோதன் -கோபத்தை தன் வசம் -கோப வசம் ஆனான் திருவடியைத் தாக்கிய பின்பு
14-த்யுதி மான் –தேஜோ மாயம் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்தா அபகாரம் –
தோள் கண்டார் தோளே கண்டார்-தாள் கண்டார் தாளே கண்டார் –தடக்கை கண்டாரும் அஃதே –
யாவருக்கும் கண்ணன் -என்று -கண்ணில் இருக்கும் ராமனே கண்ணன்
15-அநஸூயா -பொறாமை படைத்தவன் -வியாச நேஷு மனுஷ்யானாம்
16-ஜாத ரோஷ -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் அஞ்சும் படி
வைத்ய வீர ராகவன் -ராகவன் வீரம் -ராவணன் கொடுத்த பெயர் -சாது மிரண்டால் காடு கொள்ளாதே
ஸ்ரீ ராம சந்த்ரன் -பூர்ண சந்த்ரன்
———————
கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி ஒருத்தி பரிபவப் பட்டமையை பாட திரு உள்ளம் கொண்டவர்கள் அல்லர்
ஸ்ரீ பெருமாள் காலால் தீண்டவில்லை –அடித் துகள் கதுவாமுன்னம்.
திருவடி துகள்கள் பட்டே அகலிகை விமோசனம்
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்
அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*
அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்
கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்
இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…
“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.
அ + ஹல்யா = மாசு அற்றவள்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!
வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை
————-
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (10) முதல் அடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே !
குட்டிப் பெண் கதை செல்ல ஆரம்பித்தாள். கௌதம முனிவரின் மனைவி அகல்யை. அகல்யா என்றால் அழகியவள் என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போலப் பேரழகியாக இருந்தாள். முனிவரும் அகல்யையும் கங்கைக் கரையில் சந்தோஷமாக ஆசிரமத்தில் வசித்து வந்தார்கள்.
இந்திரனுக்கு அகல்யையின் அழகில் மயங்கினான். கெட்டது பற்றி யோசித்தால் கெட்ட எண்ணம் தான் வரும். அவனுக்கும் வந்தது. முனிவரை ஆசிரமத்தை விட்டு அனுப்பிவிட்டு, உள்ளே போகத் திட்டம் போட்டான். யோசித்தான். ஆசிரம வாசலில் காலைப் பொழுது விடுவதற்குள் கோழிபோலக் கூவினான். உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த முனிவர் விடிந்துவிட்டது என்று எழுந்து நீராடச் சென்றார். இது தான் தக்க சமயம் என்று இந்திரன் முனிவர் வேஷத்தில் உள்ளே புகுந்தான். திருட்டுத்தனமாக வந்த இந்திரன் அகல்யையை பார்த்து ‘அழகியே! எனக்கு உன்மீது மிகுந்த ஆசை” என்றான். வந்திருப்பது இந்திரன் என்று தெரிந்தாலும் இந்திரனே என்னை அழகி என்று சொல்லிவிட்டான் என்ற கர்வத்தால் மனநிலை மாறி அவனிடம் அன்பு செலுத்தினாள் அகல்யை.
நீராடிவிட்டு முனிவர் திரும்பி வந்த விட்டார். தன் மனைவி தன்னை மாதிரி ஒருவனிடம் ஆசை வைத்துள்ளார் என்று கோபப்பட்டு “இனி நீ என் மனைவி இல்லை யார் கண்ணிலும் படாமல் சாம்பலாகப் போவாயாக” என்று சபித்துவிட்டார். அகல்யை ஆசிரமத்தின் கல்மீது சாம்பலாகக் கிடந்தாள். அகல்யைக்கு அப்போது தான் தான் செய்த தவறு புரிந்தது. மன்னிக்க வேண்டும் என்று முறையிட்டாள். முனிவர் நாராயணன் ராமராக அவதாரம் செய்வார் அப்போது விஸ்வாமித்திரர் ராமரை அழைத்துக்கொண்டு இங்கே வருவார். ராமர் கால் உன்மீது பட்டவுடன் நீ தூய்மை பெற்று என்னுடன் மீண்டும் வாழ்வாயாக என்றார். அகல்யை ஆயிரம் ஆண்டுகள் தூசியாக அந்த ஆசிரமத்தில் யார் கண்ணிலும் படாமல் கிடந்தாள்.
ராமர் அவதாரம் செய்தார். விஸ்வாமித்திரர் தமது யாகத்தைக் காக்க ராம, லக்ஷ்மணர்களை அழைத்து வரும்போது கௌதம முனிவரின் ஆசிரமம் வந்தது. ஆசிரமத்துக்குள் சென்ற போது ராமரின் திருவடி பட்டதால் அகல்யை சாபம் தொலைந்து தூயவளானாள். மீண்டும் அழகிய பெண்ணாக மாறினாள். கௌதமரும் அகல்யையைத் திரும்பத் தன் மனைவியாக ஏற்றார்.
கௌதம முனிவரும் அகல்யையும் பெருமகிழ்ச்சியுடன் ராமரை வணங்கிப் பூஜித்தார்கள் என்று கதையை நிறுத்தினாள் பெண் பிள்ளை.
ராமானுஜர் ஆழ்ந்த யோசனையிலிருந்தார்.“சாமி எந்த ஆழ்வார் பற்றி யோசிக்கிறீர்கள்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் அவளின் புத்திக் கூர்மையை வியந்து ”பெரியாழ்வார் பற்றித் தான் பெண்ணே!” என்றார்.
“சொல்லுங்க சாமி” என்று அந்தப் பெண் ஆவலாகக் கேட்கத் தயாரானாள்.
ராமானுஜர் “பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே என்கிறார் ஆழ்வார். பெருமாளின் பாத தூளிக்கு அவ்வளவு ஏற்றம்” என்றார்.
”அருமை! சாமி, எங்க ஊர் மதுரகவி ஆழ்வார் அவருடைய குருவான நம்மாழ்வாரை தன் தலையால் தாங்கினார். அவரோ பெருமாளின் திருவடியைத் தாங்கிச் சடாரியாகக் கோயிலில் இருக்கிறார்!” என்றாள்
ராமானுஜர் கண்கலங்கினார்.
“ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா ?” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
“இல்லை பெண்ணே! என் மானசீக ஆசாரியன் ஆளவந்தார் நினைவு வந்தது” என்றார்
“நாங்கள் தெரிந்துகொள்ளலாமா ?” என்று சிஷ்யர் ஒருவர் கேட்க அதற்கு ராமானுஜர் ”உன் திருவடி எப்போது தலையால் தாங்குவேன் என்று நம் ஆசாரியன் ஆளவந்தார் தன் ஸ்லோகத்தில் சொல்லியுள்ளார். இந்த பெண் சொன்னதைக் கேட்டபோது நினைவுக்கு வந்தது” உடையவர் மேலும் “பெண்ணே பெருமாள் பாதம் பட்டால் நல்லவையே நடக்கும். ராமாவதாரம் மட்டும் இல்லை, கிருஷ்ணாவதாரத்திலும் இது போலச் சம்பவம் ஒன்று இருக்கு” என்றார்.
கூடியிருந்த சிஷ்யர்களும், பெண் பிள்ளையும் என்ன என்று யோசிக்க ராமானுஜர் தொடர்ந்தார் “உத்திரையின் மகன் பரிட்சித் கருவிலேயே இறந்து இருந்தான். கிருஷ்ணர் தன் பாதத்தால் உயிர்ப்பித்தான் அல்லவா ?” என்றார்
”ஆகா ! ” என்று எல்லோரும் வியந்தார்கள் “நீங்களே சொல்லுங்கள் சாமி காடு நடந்த சேவ்வடி, கல்லைப் பெண்ணாக்கிய திருவடி. அகல்யை மாதிரி ராமருடைய திருவடி என் மீது பட நான் பாக்கியம் செய்யாதவள், அதனால் ஊரை விட்டுப் போகிறேன்”
“பிள்ளாய் ! பிஞ்சாய் இருந்தாலும், உன் பேச்சுப் பழம்போல இனிக்கிறது, வா ஊருக்குள் போகலாம்!”
“பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே!” என்று சொன்னபோது
ஆண்டாள் கதைக்கு எல்லோரும் தயாரானார்கள்.
வாமன அவதாரத்தில் உலகளந்த பாதங்கள் ராமஅவதாரத்தில் கானகத்தில் மெய்ந்நோக நடந்தனவே என இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைப் பாடலில் உருகி உருகிப் பாடுகிறார். ‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து சோஅரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!`
அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-
தேவானு குலவா, தேவி கௌசலை பாலா
தசரத ராமனே எழுந்திரும்.
ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை
அன்புடன் காத்தவனே எழுந்திரும்.
கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே
கல்யாண ராகவா எழுந்திரும்.
வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை
விவாஹம் செய்தோனே எழிந்திரும்.
அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து
அயோத்தி வந்த துரையே எழுந்திரும்.
தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன்
தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும்.
சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு
சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும்.
பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
பாதுகை அளித்தோனே எழுந்திரும்.
மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை
மூக்கை அறுத்தவரே எழுந்திரும்.
ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு
அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும்.
சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த
கோதண்ட ராமரே எழுந்திரும்.
வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட
காருண்ய ராகவா எழுந்திரும்.
அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல்
துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும்.
வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன்
வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும்.
தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும்.
திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை
அயோத்தி வந்தவரே எழுந்திரும்.
உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட
மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும்.
உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி
அருளவேணும் எழுந்திரும்.
சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே
ஜனகரின் மருகரே எழுந்திரும்.
ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண
அருள வேண்டும் எழுந்திரும்.
கல்லைப் பெண்ணாக்கும் கழலினைப் போற்றுவோம்!
முல்லை நிலத்தில் பாதம் பதித்தாய் போற்றி!
எல்லையில்லா வனப்புடை எந்தாய் அணைக்கும் பாதம்!
சொல்லை மாலையாக்கி அளித்த கோதைக்கு வேதம்!”
—————–———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply