ஸ்ரீ இராமாயண தர்மம்-ஸ்ரீ அகர இராமாயணம்!-

ஸ்ரீ இராமாயண தர்மம்– ராமாயணம். என்ற சொல் “ராமஸ்ய அயனம்’ எனப் பிரிந்து இராம சரிதமெனவும்-ராம : அய்யதே அனேன இதி – ராமாயணம் எனப் பிரிந்து இதனால் இராமன் அடையப்படுகிறான் எனவும் பொருள்படும்.-இன்னும் ‘ரமாய இதம் சரிதம் – ராமம், தஸ்யாயன மிதி,ராமாயணம்’ எனப் பிரித்து, சீதாப் பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.-‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்-“மேன்மையான ஸீதா சரித்திரமாயும், மஹா காவ்யமுமான இராமாயணத்தை” என்பது இதை வலியுறுத்தும்.

தருமம்: உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத : ஸ்மருதி: ஸதாசார : ஸ்வஸ்யச ப்ரிய மாத்மான :
ஏதத் சதுர் விதம் பராஹு : ஸாஷாத் தர்மஸ்ய லக்ஷணம்’-
என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன-அதாவது,ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது
(1) வேதோக்தமாக இருக்க வேண்டும் அல்லது
(2) ஸ்மிருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது
(3) அது ஸத் புருஷர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அல்லது
(4 )அது மனதிற்கு இனிப்பாகவும் ஆனந்த கரமாகவும் இருக்க வேண்டும்.

இந்த நான்கு பிரமாணங்களுக்கு, ஸ்ரீராமாயணம் பொருத்தமா யிருக்கிறதோ வென்னில் –
முதலாவது:- வேதம். “வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன்.“” என்றும் –கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிருதி யாவார்.”(கம்பர்)-என்றபடி,வேதத்தினால் அறியும் படியான பரம் புருஷன்,ஸ்ரீராமனாக அவதரித்த போது,–வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா--அவரை அறிவிக்கிற வேமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.–இதம் பவித்ரம் பாபாக்னம், புண்ணியம் வேதைச் ச சம்மிதம் !இந்த ஸ்ரீ ராம சரிதமானது,பரிசுத்தம் செய்யத் தக்கதும்,பாபங்களை நாசஞ் செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்கு பொருத்தமாகிறது.

இரண்டாவது:- ஸ்ம்ருதி.
தர்ம சாஸ்த்ர ரதா ரூடா வேதகட்கதரா த்விஜா : கரீடார்த்த மபி யத் ப்ரூயு: ஸ தர்ம; பரம ஸ்மருத || (
போதாயனாச்சாரியார்)-வேதத்தை நன்றாய் அப்யசித்தவர்கள் ஸத் புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டவைகளே ஸ்மருதிகளாம்.
“ஸ்ரீ ராமாயணம் (2 வது சர்க்கம்.)
‘மச் சந்தா தேவ தே ப்ரஹ்மந் பிரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷி ஸத்தம
ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி “-

நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக் கடவீர். நீர்செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம், வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டத்தினால்,இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றவது:- ஸதாசாரம்= (ஸத் புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)
பால காண்டம் முதலாவது சருக்கத்தில் 2- முதல் 4-சுலோகங்களினால், வான்மீக முனிவர் நாரத மகரிஷியைநோக்கி சுவாமி! இவ் வுலகத்தில், இக் காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசில்ய குணமும் மற்றும் அநேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத் புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.-அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்ய வேண்டும் என்று வினாவின் பொழுது நாரத மகரிஷி, மிகுந்த களிப்புடன் “ஒய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்–இசுவாகுவம்ஸ் ப்ரபவோ ராமோ நாம ஜநை : ஸ்ருத-‘இக்ஷவாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராம பிரான் என்பவர் தான்”என விடை யளித்திருக்கிறார்.-இதனால் ஸ்ரீராம பிரான் ஸத் புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதா சாரம் என்றும்,ஏற்படுவதால், மூன்றாவது ப்ரமாணமும் பொருத்த மாகிறது.

நான்காவது:- ஆத்ம ஸந்துஷ்டி.
“பாட்யே கேயே ச மதுரம் –
” ஹ்லாதயத் ஸர்வ காத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச
“–இந்த ராமாயணம், மனதிற்கும், இருதயத்திற்கும், மிகக் களிப்பாக இருக்கின்றது என்று 4 வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கின்றது.-இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தி யாகின்றது

“ராமோ விக்ரகவான் தர்ம ஸாது: ஸத்ய பராக்ரம :-ஆரண்ய-37- 13.-ஸ்ரீ ராமன் உருவங்கொண்ட தருமம் போலும்,நற் குண முடையோனும், உண்மையான தோள் வலியுற்ற வனுமாகின்றனன். ” என இராவணனுக்கு,ராம த்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.
யஸ்மின் ந சலதே தர்மோன யோ தர்மம் நாதி வர்த்ததே ஸ ஏஷ ராம;-யுத்த-. 28-19.
எவரிடமிருந்து தருமம் சலிக்க வில்லையோ எவர் தருமத்தை விட்டு விலக வில்லையோ, அவரே இந்த இராம பிரான்.”என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

தர்மாத்மா சாத்ய சந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி
பெளருஷே சா ப்ரதி த்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்
| ”(யுத்த- 91. 69.) ” ஸ்ரீராம பிரான் தர்ம ஸ்வரூபி என்பதும்,சொன்ன சொல் தவறாதவர் என்பதும், இணை யற்ற பராக்கிரம முடையவரென்பதும் உண்மை யாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும்.” என சபத பூர்வமா யுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்
‘ஏக பத்நீ ரததரோ ராஜர்ஷி சரித சுசி:]
ஸ்வதர்மம் க்ரு மேதியம் சிசுப ஸ்வய மாசரந்
“(ஸ்ரீமத் பாகவதம் – 9 -10- 55.)ஸ்ரீ இராம பிரான் ஏக பத்நீ விரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவர் அவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரிக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப் பிரம்ம ரிஷியின் வசனம்

தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” அயோத்தி நகர் -நீங்கு 163
நல்லற நிறுத்த நணுகித், தாமராவணை துறந்து தரை நின்றவரை “‘ ஆரணி – விராத-30.-இராம பிரான் உலகத்தில் தருமத்தை நிலை நிறுத்தவே அவதரித்திருப்பதாக கவிக் கூற்று.

”சூரறுந்தவனுஞ் சுடர் நேமியு மூரறுத்த வொருவ மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்
.”-(ஆரணி-அகத்தி 22)
“வெம்பு கண்டகர் விண் புக வோறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற் கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லு நம் மாணையே
.”(கிட்கிந்தை 4)
உலகத்தில், துஷ்ட நிக்கிரகமும்,தர்ம ஸம் ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்”
பின்னை யேது முதவுந் துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடை நுடங்கிட விரைந்து தொடர்வா
ளன்னையே யனையவன் பினாவோர் கடமை விட்
டென்னையே நுகர்தி யென்றன ளெழந்து விழவாள்.
“( ஆரணி- விராத-39)
இராம, லெட்சுமணர் உலகத்துக்கெல்லாந் தாயைப் போன்ற அன்பினை யுடைய தரும் ஸ்வரூபிகள், என சீதா பிராட்டியின் வசனம்,
ஓயாத மலரயனே முதலாக வுளராகி மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீ யாகின் முதற் றாதை நெறி முறையா லீன்றெடுத்து
தாயாவார் யாவரே தருமத்தின் றனி மூர்த்தி
.”(ஆரணி – விராத 52)
பிரம்ம தேவன் முதலான சகல தேவர்களுக்கும்,உலகத்திலுள்ளஉயிர்களக்கும், இராம பிரான் முதல் தந்தை யெனவும், தரும ஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.
” இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரி வில் வாட் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருத்ரைத் தேடுவார்.
ஒன்று நோக்கலருந் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்று துணர் கொள்கையார்
‘ (ஆரணி- கா.4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை யுடையவர்கள், சிறந்த தரும வழியிலே தாங்கள் நினறு ஆராய்ந்து அத் தருமத்தை உலகமெங்கும் நிலை பெறச் செய்யுங் கருத்துடையவர்கள், என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.
சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற் றாளி லெங்கு மித்தனை யிலக்கணம் யாவர்க்கு மில்லை -செங்கண் விற் கரத்தி ராமனத் திரு நெடுமாலே யிங்குதித்தன னீண்டற நிறுத்துதற் கின்னும் “(கிட்கி- மராமர – 117)
கோதண்ட பாணியான இராமன், தர்ம ஸம் ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீ மஹா விஷ்ணு வென்பதாக சுக்ரீவ மகாராஜனிடம், தெரிவித்த நவ வ்யாகரண பண்டிதரான திருவடியின் வசனம்.
உழைத்த வல் லிருவினைக் கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்த வற் கியல் பல வியம்பி யென் செய்தாய்
பிழைத்தனை பாவியுந் பெண்மையா லென்றான்
“‘(கிட்கி. வாலி வதை. 22)
பல பிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங்களை யெல்லாம்.தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தமனான இராம பிரான்,என்பதாக, தாரையிடம் கூறிய வாலியின் வசனம்.
“அற மன்னானுட னெம்பி யன்பினோ
டுற வுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெற வொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிற வென்னா மிதினின்ப மியாவதோ.
“(கிட்கி. சம்பாதி45)
தர்ம ஸ்வரூபியான இராம பிரான் திறத்தில் ஜடாயு வுயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.-இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரித்த்தினாலே தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குப் போதிய சான்றாகும்,

இராமாவதார காலம்.
” பயம் த்யஜ்த பத்ரம் வோ ஹிதார்ததம் யுதி ராவணம்
ஸ புத்ர பெளத்ரம் ஸமாதயம் ஸமித்ராஜ்ஞாதி பரந்தவம் | “”ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவ ரிஷிணாம் பயாவஹம் தச வருஷ ஸஹஸ்ராணி தச வருஷ சதாநிச
வத்ஸயாமி மாநுஷே லோகே பாலயன் ப்ருத்வீ மிமாம்
.”-பாலகாண்டம்- 15- 28, 29.
“ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்; உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்து கொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன்” என்று தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச் செய்தனர்.
”க்ருதே யுகே வயதீ தேவை முகே திரேதா யுகஸ்யது ஹிதார்த்தம் தேவ மர்த்யானாம் பவிதா ருப விக்ரஹ இஷ் வாஹு ணாம் ச யோ ராஜா பாவ்யோ தசரதோ புவி
தஸ்ய ஸூநுர் மஹா தேஜா ராமோ நாம பவிஷ்யதி
.–உத்-கர் 37 – க்குப்பின் ப்ரக்ஷிப்த சரு-18,19.ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி சொன்னது – ” க்ருத யுகம் கழிந்த பின்னர் த்ரேதா யுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் ஹிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசரதனென ஒரு ராஜன் ஜனிப்பான்; அந்தத் தசரத மஹா ராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒருமாஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் என உரைத்தனர்.
த்ரேதா முகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய :
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரக்ஷயஸி மாம் தத
–3.அத்யாத்ம ராமா . பால-7-255, 263- அழிவற்ற நான் த்ரேதா யுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப் போகிறேன். அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய் ” என்பதாக ஸ்ரீ மஹாவிஷ்ணு தனக்கு வரமருளி யிருப்பதாக பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ்செய்தனர்.
த்ரேதா யுகே தாசரதிர்பூத் நாராயண: ஸ்வயம் | ஆகமிஷ்யதி தே பாஹுச் சித்யேதே யோஜனாயதெள் தேனசாபாத் வினிர் முக்தோ பவிஷ்யஸி யதா புரா!–அத்யாத்ம -ராமா -ஆரண்ய -9-19-ஸ்ரீமந் நாமாயண மூர்த்தி த்ரேதா யுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து, ஸ்ரீ ராமனென்னும் திரு நாமத்துடன் வரப் போகிறார். அவர் திருக் கரத்தால் உன் கரங்கள் சேதிக்கப் படுங்காலம், உன் சாப விமோசன காலமாகும். ” என்பதாக அஷ்டவக்ர முனிவர் தனக்கு உரைத்திருப்பதாய் கபந்தாசுரன்ஸ்ரீ ராம பிரானை நோக்கிக் கூறினன்.

புராஹம் ப்ரஹ்மண ப்ரோக்தா ஹ்யஷ்டா விம்சதி பர்யயே |த்ரேதா யுகே தாசதீராமோ நாராயணோ அவ்யய: -சுந்தர-1-48.”இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதா யுகத்தில் சாஷாத் நாராயணன் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவதரிக்கப் போவதாய் ப்ரஹ்ம தேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார் ‘ என்பதாக இலங்கணி என்பவள் திருவடி யிடம் உரைத்தனள்.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு க்ரஹேஷ. கர்க்கடெ லக்நே வாக் பதா விந்தூ நாஸஹ ப்ரோத்ய மாநெ ஜகன்னாதம் ஸர்வ லோக நமஸ்கிருதம் கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம் விஷ்ணொ சர்த்தம் மஹா பாகம் புத்ர மைஷாவாக வர்த்தகம் —பால -9-10-11–பின்பு பன்னிரண்டாவது மானமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர் வஸு நக்ஷத்திரம் கூடின தினத்தில் ஐந்து க்ரமங்கள் உச்சமாயிருந்த வளவில்,கர்கட லக்நத்தில், குரு சந்திரனோடு கூடியிருந்த வளவில், கௌஸல்யா தேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய், சாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷ லக்ஷ்ணங்களோடு கூடினவராய், விஷ்ணுவினுடைய பேர் பாதி பாகத்தினாலுண்டானவராய், மஹா பாக்யவானாய், பித்ருக்களை நரகத்தில் நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹா ராஜனுடைய மனோல்லாசத்தை வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராம பிரானைப் பெற்றனள்.

ஒரு பகலுலகெலா முதரத்துட் பொதிந்
தரு மறைக் குணர் வரு மவனை யஞ்சனக்
கரு முகிற் கொழுந் தெழில் காட்டுஞ் சோதியைக்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை. “‘
” மேட மா மதி திதி நவமி மீன் கழை நீடுறு மாலை கற்கடக நீதி சேர்
ஓடை மா களிறனானு தயராசி கோள் நாடினே காதசர் நால்வருச்சரே.”-பால-கா. திரு அவதாரப் படலம்-104, 110.

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28- வது சதுர் யுகமான த்ரேதா யுகத்தில் சித்திரை மாஸத்தில் சுக்ல பக்ஷ நவமி திதி, புனர்வசு நஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீமந் நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக் குமாரராக ஸ்ரீராமனென்னும் திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

தச வர்ஷ ஸஹஸ்ராணி கதாநி மஹாத்மனோ-உத்-42-26-பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென்றன.அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸூர ஸுதோபமாம் அபத்ய லாபோ வைதேஹி தவய்யயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி வராரோஹேகாம : கிம் க்ரியதாம் தவ – உத்-42-31, 82 ஒரு நாள் ஸ்ரீராம பிரான் ஜானகியை நோக்கி ஹே.வைதேஹி! நீ கர்ப்பந் தரித்திருப்பது எனக்கு மிகவும் களிப்பைத் தருகிறது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை? நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன் ” எனக் கூறினார். அதற்குப் பிராட்டி, கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோ வனங்களுக்குச் சென்று, அங்கு, மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சிலநாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற ஆசை யிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப் பற்றி சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதி யிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,அவளை யழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத் தருகே விட்டு விடுமாறு,இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.-சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷி குமாரர்களால் கேள்வி யுற்ற வான்மீக முனிவர் உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள ரிஷி பத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருந்துடனே காத்து வருமாறு கட்டளை யிட்டனர்.-யமுனாதீர வாசிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாஸூரனது வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராம பிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயே யிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர். லவணாசுரனுடன் போர் புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள், சத்ருக்னர்,வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

” யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத் தாமேவ ராத்ரிம் ஸ்தாபி ப்ரஸூதா தாரகத்வயம் ”( உத்-6-1.) சத்ருக்ன ஆழ்வார், என்றையத் தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ண சாலையில் படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாப் பிராட்டியார் இரண்டு திருக் குமாரர்களைப் பெற்றனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராம பிரானுடைய பட்டாபிஷேகானந்தரம், பதினாயிரம். வர்ஷங்கள் கழிந்த பினனரே, குச லவர் ஜநநம் என ஏற்படுகிறது.

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான்| சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநா முக்தவான் ரிஷி :
ததா ஸர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்
–பால-4-1-2-
ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டி ருக்கும காலத்தில், வான்மீகமுனிவர் இருபத்தினாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ரகாண்டமும் செய்தருளினார்.
“மானிஷாத என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை, (தமஸா நதிக் கரையில்)ப்ரம தேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர் கதானமான பின்பு
தத: ஸ சிஷ்யோ வால்மீகிர் முநிர் விஸ்மய மாயயௌ தஸ்ய சிஷ்யாஸ் தத: ஸர்வே ஐகு ஸ்லோகமிம்ம் புன: “முஹர் முஹு : ப்ரீயமாணா: ப்ராஹுஸ்ச ப்ருச விஸ்மிதா–பால்-2-39- வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தை யடைந்தார். அந்த ஸ்லோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும் ஆச்சரியத்துடனும்,அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக் களித்தனர்.சிஷ்யா – என்று பஹு வசனமாகக் கண்டிருப்பதற்கு, கோவிந்த ராஜர் வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று வ்யாகயானம் செய்யப்பட்டிருக்கிறது.-இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்ன்ரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சதருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுரா புரியை ஸ்தாபித்த பின்
“ததோ த்வா தசமே வர்ஷே சத்ருகனோ ராம பாலி தாம் அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக –உத்-7- 1 )
பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப் புறப்பட்டனர்-வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிர மமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாதியாதி அதிதி பூஜைகளைப் பெற்று,அன்று ராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

ஸ புத்தவாந் நர ஸ்ரேஷ்டோ கீத மாதுர்ய முத்தமம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே யதா க்ருதம்
தம் த்ரீலய ஸமா யுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம்
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸம தால ஸமந்விதம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே புராக்ருதம்
–உத்தர –71-14-15-16
சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதி மதுரமான ஸங்கீதமொன்று கேட்டது.ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில் இசை யொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு,சு லஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவி யுற்ற வளவில், சத்ருகனாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீ ராம சரித்திரம் மறுபடி தமது கண்ணெதிரில் நடப்பது போல தோன்றியது.வான்மீக முளிவர் தாமுண்டு பண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குச லவருக்கு உபதேசித்தருளின போது, அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது

ஸ்ரீராம பிரான் அச்வமேத யாகஞ் செய்யத் தீர்மானித்து கோமதீ நதீ தீரத்தில் யாக சாலை நிருமித்து வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப் படுத்தவும்,வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ் வேள்விக்கு வர வாழைக்கும்படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
மம மாத்ரூஸ் ததா ஸர்வா: குமாராம் : புராணி ச
காம்சநீம் மம பத்ம்ச தீக்ஷா யாம்ஜ்ஞாம் ஸ்ச கர்மணி
அக்ரதோ பரத: க்ருத்வாகச் சாத்வக்ரே மஹா யசா
: | “உத்தர -91-24-25-
நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும், ஸீதைக்குப் பிரதியாக நிருமித்து வைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ் செய்யும்
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக் கொண்டு, பரதன் முன்னாலே செல்லக் கடவன் ” எனவும்nநியமித்தருளினர்.-இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்தி லிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வர்தமானே ததா பூதே யஜ்ஞேச பரமாத்புதே
ஸ சிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி
:-உத்தர -93-1-இவ்வாறு மகா வைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு வான்மீக முனிவரும் தமது சிஷ்யர்களுடனே எழுந்தருளினர்.”வான்மீக முனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும், பிராம்மணர்கள் இறங்கி யிருக்கு மிடங்களிலும், ராஜ மார்க்கங்களிலும், அச்வமேத யாகம் நடக்குமிடத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதியிலும் பாடிக் கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளை யிட்டனர். அவ் விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

தாம் ஸசுச்ராவ காகுஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் அபூர்வாம் பாட்ய ஜாதிம்ச கேயேன ஸமலம க்ருதாம் ப்ரமாணைர் பகுபி பத்தாம் கந்த்ரீலய ஸமந்விதாம் பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கெளதூகல பரோபவத் .”–உத்தர -94-2- இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக் கொண்டு ஓத்த குரலினராய் சு லக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச் செவி சார்த்தி இஃது அபூர்வமாயும்,அற்புதமாயு மிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”‘அனந்தரம் அந்தக் காவியத்தின் வாலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும் அச் சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்–.ராமோ பஹுன் யஹான்யேவ தத் கீதம் பரமம் சுபம் சுச்ராவ முனிபி ஸார்த்தம் பார்த்தி வை: ஸஹ வானரை: “-உத்தர -95-1- ஸ்ரீராகவன் நாள் தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடை சூழச் சபையினடுவே முனி குமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவி சார்ததிக் களி கூர்ந்தனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யா புரிக்கு ராஜவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,பதினாயிரம் வருஷங்கள் தரும நெறி தவறாது அரசாட்சி செய்து வந்த பின் சீதாப் பிராட்டி கர்ப்பமடைந்து வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,அக் குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது,வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால் ஸ்ரீராம சரிதம் சங்கரஹமாக உபதேசிக்கப்பட்டு பிரம தேவரின் ஆக்ஞா ப்ரகாரம் அம் முனி புங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய ஸ்ரீஇராமாயண மென்னும் ஆதி காவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குச லவர்களுக்கு உபதேசிக்க, அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகா மண்டபத்தில் முனிவர்,அரசர், வானார் முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சனனதியில் தாளலயத்துக் கிணங்க கானம் செய்து அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

—————

குருசிஷ்ய தருமம்.

குரு சிஷ்ய லக்ஷணம்:-
“தப: ஸ்வாத்யா நிரதம் தபஸ்வி வாக் விதாம் வாம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்

தபஸ் வேத வேதாந்தங்கள் இவைகளைப் பூர்ணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும், முனி ஸ்ரேஷ்டருமான நாரத மஹ ரிஷியை, தவத்தோடு கூடிய வான்மீக முனிவர் தெண்டம் ஸமர்ப்பித்து வினாவினார்.”
இது இராமாயணத்தின் முதல் சுலோகம். இதனால் குரு சிஷ்யன் லஷணம் சொல்லப் பட்டதாகிறது.-எவ்விதமெனில்- ஆசார்ய லஷணம்
1- தபோ நிரதம்: தவத்தைப் பூரணமாக அடைந்தவர்,என்றதினால் அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பது ஸுசகம்.
” யத் துஸ்தரம் யத் துராபம் யத் துர்கம் யச் சதுஷ்கரம்
தத் ஸர்வம் தபஸா ஸாத்யம் தபோஹி தூரதிக்ரமம் “

எது கடக்க முடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்ய முடியாததோ அவை எல்லாம் தவத்தால் சாதிக்க முடியும். ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவமீண்டு முயலப்படும்.”
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற் றவினாற்ற தலைப் பட்டவர்க்கு ‘
என்ற ஆகாரங்கள் நோக்கத் தக்கன.

(2) ஸ்வாத்யாய நிரதம்:- வேத வேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால் நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய ஸத்திய வசனம் என்பது ஸூசகம்.

(3) வாக் விதாம் வரம் :உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர்,என்றதினால் சிறந்த போதனா சக்தி வாய்ந்தவரெனவும்,வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாயறிந்தரெனவும் பொருள்படும்.
(4)முனி புங்கவம் :- முனி ஸ்ரேஷ்டர், என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும், பகவ த்யானத்தோடு கூடிய வரென்பதும்,திரி கால வர்த்தமானங்களை அறியக் கூடியவரென்பதும், ஸதா ஜப பரரென்பதும், ஸுசகம்.
(5) நாரதம் -நாரத மஹரிஷியை,என்றதினால் நாரம்-ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும், நாரம்- அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக் கூடியவரென்பதும், த்ரி லோக சஞ்சாரியான படியால்,மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை யறிபவரென்பதும்,பிரம்ம புத்திரரான படியால், உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.

ஆகவே இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும், வேத வேதாந்தங்களையும் வியாகரணம் முதலான ஸகல சாஸ்திரங்களை யுமுணர்ந்தவராகவும், பகவத் பக்தியுடன் அநவரத ஜப பரராகவும்,சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி,ஜ்ஞானத்தைக் கொடுத்துப் பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லவராகவும், ஜிதேந்த்ரியராகவும்,உத்தம குலத்தவ ராகவுமிருக்க வேணுமென்று ஆசார்ய லஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ருகாரஸ் தந் நிவர்தக :
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபிதீயதே

கு , என்பது அஜ்ஞானத்தையும், ரு -என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால் மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற விருளை நீக்கி மெய்ஞ் ஞானமாகிற பிரகாசததைத் தருவதால் குருவெனச் சாற்றப் படுகின்றனர்.
“குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வண்மை
நில மலை நிறை கோல் மலர் நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர் குண மினையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.”
என்ற நன்னூல் இங்கு நோக்கத்தக்கது.

சிஷ்ய லக்ஷணம:-
(1) தபஸ்
:- என்றதினால் பகவத் சொரூபத்தை யறிய ஆவல் கொண்டரென்பதும், பல விரதங்களை யனுஷ்டித்தவரென்பதும், சம தமாதி ஸம்பத்திகளை யடைந்தரென்பதும் ஜீவ காருண்ய முடையவரென்பதும் களங்கமற்ற இருதயமுடையவ ரென்பதும் ஸூசகம்-உற்ற நோய் நோன்ற லுயிர்க்குறு கண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.”

2-பரிபப்ரச் ச :- என்றதினால், விதிவதுபஸந்ந: என்பது பொருள்.-அதாவது,உபதேசம் பெற்றுக் கொள்ள,குருவைத் தேடிப் போய்,தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரம் கேட்க வேண்டு மென்பது.
தத்வித்தி ப்ரணிபாதே பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஞாநம் ஞாநிநஸ் தத்வ தர்ஸிந
”–அந்த ஆத்ம ஜ்ஞானத்தை. குருவைத் தேடிப் போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரமான கேள்வியினாலும், ஸூஸ்ரூஷையினாலும் அறிந்து கொள்ளக் கடவாய். தத்வ மறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.” என்று அர்ஜூனனை நோக்கி யருளிச் செய்தஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிபப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத் போதாபிலாஷி
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர : பிரஸ்ந கால ப்ரதீஷ :
ஸாந்தோ தாந்தோ ந ஸூயுஸ் ஸரண முபகதஸ் ஸாஸ்தா விஸ்வாஸ ஸாலி
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாங் க்ருத விதபி மதம் தத்வதஸ் ஸிஷணீய

நற் புத்தியுடன் ஸாது ஸேவை யுடையவனாகி நன்னடக்கை யுடையவனும்,உண்மை ஞானத்தை அறிவதில் அபிலாஷை யுடையவனும்,பணிவிடைக் காரனும்,மான அவமான மென்பதற்றவனும், ப்ரஸ்ன காலத்தை எதிர் பார்ப்பவனும், சாந்தனும் அஸூயை யில்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஸ்வாஸ முடையவனுமே சிஷ்யனாக அங்கீ கரிக்கத் தகுந்தவன் ” என்பது நோக்கத் தக்கது.
வால்மீகி பகவான் பருகு வம்சத்தி லவதரித்தவர். இவர் (வல்மீகம்- புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால் வால்மீகி என்று பெயர். இவர்க்கு”ப்ராசேதஸர்’ ( அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.

உபதேசக் கிரமம் :- .
(1) வான்மீக முனிவர் நாரத மஹரிஷியை நோக்கி-“கோந்வஸ்மிந் ஸாம் ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந் ”என ஆரம்பித்து,”ஏததிச் சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கெளதூஹலம் ஹி மே-என்றபடி ஒ ஸ்வாமி! இவ்வுலகிலிக் காலத்தில், அனந்த கல்யாண குணங்களும், சவ்ஸீல்யாதி குணங்களுமுடைய உத்தம புருஷன் யார்? என்பதை அடியேன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தேவரீர் அடியேனுக்குக் கிருபை செய்தருள வேண்டும்.” என்று பாலகாண்டம் – 1-2 முதல் ஐந்து ஸ்லோகங்கள் மூலமாக ப்ரஸ்நம் பண்ணினர். அதைக் கேட்டு நாரத மஹரிஷி மிகுந்த சந்தோஷ மடைந்தவராய்(பால – 1 -8 முதல் 96-ஸ்லோகங்க ளடங்கிய ஸ்ரீராம சரிதத்தைப் பூராவாகவும், சம்ஷேபமாகவும் வான்மீக முனிவருக்கு உபதேசித்தருளினார்.-இதனால்- ” தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் “ என்றபடி வேதாந்தார்த்தங்களை ஒரு குருவினிடத்தில் போய்க் கேட்டே அறிய வேண்டு மென்ற தருமமும், ” நா ப்ருஷ்ட: கஸ்யசித் ப்ருயாத் ” என்றபடி ஸிஷ்யன் கேட்காமலிருக்கும் போது குரு உபதேசஞ் செய்யலாகாதென்ற தருமமும் ஸூ சிதம்.

(2) விஸ்வாமித்ர மஹரிஷி யாக ஸம் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீராம லக்ஷமணர்களை அழைத்துக் கொண்டு, சரயூ நதியின் தென் கரையில் சேர்ந்தவுடன மகரிஷி ஸ்ரீராமபிரானை நோக்கி- “ மந்திர க்ரமம் க்ருஹாணத்வம் பலாமதிபலாம் ததா
த்ரிஷு லோகேஷ வா ராம ந பவேத் ஸத்ருஸஸ் தவ
பிதாமஹ ஸு-தே யேதே வித்யே தேஜஸ் ஸமந்விதே
ததாமி தவ காகுத்ஸ்த ஸ்த்ரு ஸஸ் த்வம் ஹி தார்மிக ”’

ஸ்ரீராமா பலை, அதிபலை யென்னும் மந்திரங்களை உபதேசிக்கின்றேன் பெற்றுக் கொள்க.மூன்று லோகங்களிலும் உனக்குச் சரியாக ஒருவனுமாக மாட்டான். மிகுந்த, பிரகாசம் பொருந்திய ப்ரஹ்ம புத்திரிகளான இம் மந்திரங்களை கிரஹிப்பதற்குத் தார்மிகனான நீயே தகுந்தவன். ஆகையால் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் ” என்றுரைத்து உபதேசஞ் செய்தருளினர்.-நோக்கின்னவர் முக நோக்க நோக்குடைக்
கோக்கு மரருமடி குறுக நான்முகன் ஆக்கிய விஞ்ஞைகளிரண்டு மவ்வழி
ஊக்கினனவையவ ருகள்ளத் துள்ளினார்.”
என்ற கம்ப ராமாயணம் நோக்கத் தக்கது.

பின்னும் விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி
“பரிதுஷ்டோஸ்மி பத்ரம் தெ ராஜ புத்ர மஹாயஸ :
ப்ரீத்யா பாமயா யுக்தோ ததாம் யஸ்த்ராணி ஸர்வஸ
தேவாஸூர கணாந்வாபி ஸ கந்தர்வோர காநபி
யைர மித்ராந் ப்ரஸஹ்யாஜௌ வஸீக்ருத்ய ஜயின்யஸி
ஸ்திதஸ்து ப்ராங்முகோ பூத்வா ஸூசிர் முநிவரஸ் ததா
ததெள ராமாய ஸுப்ரீதேர மந்திர க்ரம மனுத்தமம்”–பால -27-2-3-21-
சக்கரவர்த்தி திருக் குமாரரான ஸ்ரீராம உன்னிடத்தில் யான் மிகுதியும் சந்தோஷ முடையவனானேன். உனக்கு மங்களமுண்டாகட்டும். யான் அறிந்ததான எல்லா அஸ்த்திர ஸஸ்த்திர மந்திரங்களையும் உனக்கு உபதேசிக்கின்றேன். அதனால் தேவாஸூர கந்தருவாதி கணங்களை யுத்தத்தில் வஸ்பம் செய்து ஜெயிப்பாய்.” என அருளிச் செய்து முனிவர் கிழக்கு முகமாயிருந்து மிக்கப் பிரீதியுடன் கூடி அஸ்த்திர ஸஸ்த்திரங்களின் மந்திரங்கள் யாவற்றையும் ஸ்ரீராமபிரானுக்கு உபதேசஞ் செய்தருளினர்.-மறுபடியும் விவாமித்திர முனிவர் ஸ்ரீராமரானை நோக்கி”க்ருஸாஸ் வதந யாந் ராம பாஸ்வராந் காம ரூபிண :ப்ரதீச்ச மம பத்ரம் தெ பாத்ர பூதோஸி ராகவ-பால –28-10-

ஸ்ரீராமா க்ருஸாஸ்வ புத்திரர்களும் பிரகாசத்தோடு கூடியவர்களும் காம ரூபிகளுமான உப ஸம்ஹார மந்திரங்களை யெல்லாம் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் பெற்றுக் கொள். உனக்கு சேமமுண்டாகும். இவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நீயே தகுதி யுடையவன் என அருளி செய்து அம் மந்திரங்களையும் உபதேசஞ் செய்தருளினர்.
இதனால் ஆசார்யன் தகுந்த சீடனுக்கே உபதேசம் செய்யவேண்டு மென்பது ஸுசிதம்.
சொல்லொக்குங் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சிற்றங் காதப் புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே.

தாடகையின் பேரில் பிரயோகித்த ராம பாணமானது கல்லைப் போன்ற கடினமான அவள் மார்பில் தைத்துத் தங்கி யிராமல்,ஊடுருவிப் பின்புறஞ் சென்று, கல்வி யறிவடையாத மூடர்களுக்கு ஞானவான்கள் உபதேசித்த தத்துவம் போலப் போயிற்று ‘ அறிவிலாதவற் கறிவன சொல்லுவாரவரால் இறுதி யெய்து வாரென்னு மதின்றுகை கண்டோம்.“என,குபேரன் தனது பரிஜனங்களின் முன்னிலையில் கூறி யிருப்பதாலும்,மூடர்களுக்கு (அபக்குவருக்கு) உபதேசஞ் செய்யலாகா தென்பது ஸூசிதம்.
ஸ்ரீராமபிரான் கேட்காமலிருக்கும் பொழுது விஸ்வாமித்திர முனிவர் தாமாகவே முதலில் மந்திரம் உபதேசித்தது உசிதமோ வெனில் –தன்மக னாசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழி படுவோனே உரை கோளாளற்கு உரைப்பது நூலே “-நன்னூல் –என்றபடி,ஸ்ரீ ராமபிரான், சக்கரவர்த்தி திருமகனாகவும்,வழிபாடு செய்பவனாகவும், சிறந்த மேதாவியாகவும் இருந்ததனால். முனிவர் உபதேசித்தது உசிதமேயாம்.

——————————–

ஊந ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந : -எனது மைந்தன் இராமன் பதினாறு வயதுக்கும் குறைவான பாலனன்றோ -என்ற தசரதர் வாக்கியத்தினாலும்;
ஊந த்வாதச வர்ஷோயம் அக்ருதாஸ்த்ரச்ச ராகவ: -தாடகாவதம் செய்யும் பொழுது இராம பிரானுக்கு வயது பன்னிரண்டு நிரம்பவில்லை யென்று இராவணனிடம் கூறிய மாரீச வசனத்தினாலும் ;
இராவண ஸந்நியாஸியை நோக்கி ஸீதா தேவி –
“உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூணாம் நிவேசநே –
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநி –
தத்ர த்ரயோதச வர்ஷே ராஜா மந்த்ரயத ப்ரபு:
அபிஷேச யிதும் ராமம் ஸமேதோ ராஜ மந்த்ரிபி:

” யான் ஸ்ரீராம பிரானைத் திருமணஞ் செய்து கொண்ட பின்னர், திருவயோத்தியில் பன்னிரண்டாண்டு பதியுடன் கூடிச் சகல போகங்களையும் குறைவின்றி யனுபவித்துக் கொண்டு வாழ்ந்திருந்தேன். பதின்மூன்றாவது வருஷத்தில் என் மாமனார் என் பர்த்தாவுக்கு இராஜ்யாபிஷேகஞ் செய்வதற்கு ஆலோசனை செய்தனர்.
ஸீதாப் பிராட்டியாருக்கு விவாஹமாகும் பொழுது வயது ஆறு எனவும், ஸ்ரீராமபிரானுக்கு வயது பன்னிரண்டு எனவும், ஸித்திக்கின்றது.

அயோநி ஜாம் ஹி மாம் ஜ்ஞாத்வா நாத்ய கச்சத் ஸசிந்தயந் -ஸத்ருசம் சா நுருபம் ச மஹீ பால: பதிம் மம –ஸீதாப் பிராட்டியார் அநஸூயா தேவியை நோக்கி-யான் அயோநிஜை யானதால் எனக்கு ஏற்றவனும் அநுரூபமான கணவனை எனது பிதா தெரிந்து கொள்ள முடிய வில்லை.” என உரைத்தனள்.

வஸிஷ்ட விஸ்வாமித்திரர்களிருவரும் ஜனக மஹா ராஜனை நோக்கி
“ஸத்ருசோ தர்ம ஸம்பம்த: ஸத்ருசோ ரூப ஸம்பதா
ராம லக்ஷமணயோ ராஜந் ரீதா ச ஊர்மிலயா ஸஹ

“ஸ்ரீ ராமபிரானுக்கு ஸீதாப் பிராட்டியும்,இளைய பெருமாளுக்கு ஊர்மிளா தேவியும் குல ரூபாதிகளில் தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.” என்று அருளிச் செய்தனர்.

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம் -ராகவோர்ஹதி வைதேஹிம் தம் சேய மஸி தேக்ஷணா

பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணா மதாபிவா
கார்யம் காருண்ய மார்யேன ந கச்சித் நாபராத்யதி

சூடக வரவுறழ் சூலக் கையினள்
காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்
தாடகை யென்பதச் சழக்கி நாமமே.

சந்த்ர காந்தா நநாம் ராம மதீவ ப்ரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னா னுருவு கண்டாரை யொத்தார்.”

எண்ணரு நலத்தினா ளினைய நின்றுழி கண்ணொடு கண்ணினை கௌவி யொன்றை யொன் றுண்ணுவு நிலை பெறாதுணர்வு மொன்றிட அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்க ளென்ன பயனு மில-
குறள்

ஜனக மஹாராஜர் வசிஷ்ட லிச்வாமித்திரர்களை நோக்கி:-“உத்தரேதிவஸே ப்ரஹ்மந் பல்கு நீப்யாம் மநீஷிண: வைவாஹிகம் ப்ரசம் ஸந்தி பகோ யுத்ர ப்ரஜாபதி :
நாளை நின்று விவாஹத்திற்கு ஸ்லாக்கியமான உத்தர பல்குனி நக்ஷத்திர மாகையால் அன்று விவாஹம் நடத்தப்பட வேண்டும். ” என்றுரைத்தனர்.
பங்குனி யுத்தரமான பகற்போதங்க ணிருக்கினி லாயிர நாமச்
சிங்க மணத் தொழில் செய்த திறத்தால் மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான்.
“என்றபடி ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் பகற் காலத்தில் உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் நடந்திருப்பதால், விவாஹத்திற்கு பகற் பொழுதும் உத்தர பல்குனி நக்ஷத்திரமும் சிறந்ததென்பது ஸூசிதம்.

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தெ பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பதி வ்ருதா மஹா பாகா சாயேவாநுகதா ஸ்தா
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத் ராஜா மந்த்ர பூதம் ஜலம் ததா “

லக்ஷ்மணாகச்ச பத்ரம் தெ ஊர்மீளா முத்யதாம் மயா
பரதீச்ச பாணிம் க்ருஹ்ணீஷ்வ மாபூத் காலஸ்ய பரிய :
தமேவ முக்த்வா ஐநநோ பரதம் சாப்ய பாஷத
க்ரஹாண பாணிம் மாண்டயா: பாணிநா ரகு நந்தன
சத்ரூக்நம் சாபி தர்மாத்மா அப்ரவீஜ் ஜநகேஸ்வர :
ஸ்ருத கீர்த்யா மஹா பாஹோ பாணிம் க்ருஷ்ணீஷ்வ பாணிநா
ஸர்வே பவந்த: சவ்ம்யாச்ச ஸர்வே ஸு சரித வ்ரதா :
பத்நீபி : ஸந்து காகுத்ஸ்தா மாபூத் காலஸ்ய பர்யய:
ஐநகஸ்ய வச: ஸ்ருத்வா பாணீந் பாணி பிரஸ் ப்ருசந்
சத்வாரஸ்தே சதஸ் ருணாம் வஸிஷ்டஸ்ய மதே ஸ்திதா :
அக்நிம் ப்ரதக்ஷிணீ க்ருத்ய வேதிம் ராஜாநமேவச
ருஷிம்ஸ்சைவ மஹாத்மாந : ஸபார்யா ரகு ஸத்தமா:
யதோக்தேந தாசக்ருர் விவாஹம் விதி பூர்வகம்
த்ரீ ரக்நிம் தே பரிக்ரம்ய ஊஹுர் பார்யா மஹோஜஸ :
அதோபகாயாம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகு நந்தநா :

ராஜாப் யநு யயெள பஸ்யந் ஸ ருஷி ஸங்க : ஸ பாந்தவ: ‘

ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் அத்யாத்ம ராமாயணத்திலுள்ளபடி:-
வஸிஷ்டம் கௌசிகம் சைவ சதாநந்த புரோஹித:
யதா க்ரமம் பூஜ யித்வா ராமஸ்யோபுய பார்ஸ்வயோ
ஸ்தாபயித்வா ஸ தத்ராக்நிம் ஜ்வால யித்வா யதாவிதி
ஸீதாமாநீய சோபாட்யாம் நாநா ரத்ந விபூஷிதாம்
ஸ்பார்யோ ஜநக : ப்ராயாத்ராமம் ராஜீவ லோசநம்
பாதெள ப்ரஷால்ய விதிவத் ததபோ மூர்த்ந்யத் தாரயத்
தத: ஸ்தாம் கரே த்ருத்வா ஸாக்ஷத் உதக பூர்வகம்
ராமாய ப்ரததெள ப்ரீத்யா பாணி க்ரஹ விதாநத:
ஸீதா கமல பத்ராக்ஷி ஸ்வர்ண முக்தாதி பூஷிதா
தீயதே மே ஸுதா துப்யம் ப்ரீதோ பவ ரகூத்தம
இதி ப்ரீதேந மநஸா மீதாம் ராம கரே அர்பயந்
ஊர்மிளாம் செளரஸீம் கந் யாம் லக்ஷ்மணாய ததெள முதா
ததைவ ஸ்ருத கீர்திம் ச மாண்டவீம் ப்ராத்ரு கந்யகே
பரதாய ததா வேகாம் சத்ருக்நாயா பராம் ததெவ்

ஸ்ரீராம பிரானுக்கு இரு பக்கத்திலும், வஸிஷ்டர் விஸ்வாமித்திரர், ஸதாநந்தர் இவர்கள் இருந்து கொண்டு அக்நியை ஸ்தாபனஞ் செய்து விதிப்படி பூஜித்து ஜ்வாலை பண்ணி பாணி க்ரஹண முஹுர்த்தக் காரியங்களை ஆரம்பித்தனர். ஜனக மஹாராஜனும் தன் பத்தினியுடன், நவ ரத்னங்களுடன் கூடிய பலவித ஆபரணங்களை யணிந்தவளும் மிகுந்த தேஜஸ்ஸோடு கூடி யவளுமான ஸீதா தேவியை அழைத்துக் கொண்டு வந்து, செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை ஜலத்தால் அலம்பி அந்தத் தீர்த்தத்தை ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஸீதாதேவியின் கையை பிடித்துக் கொண்டு என் புத்திரியாகிய இந்த ஸீதா தேவியை உமக்குக் கொடுக்கிறேன். நீர் ப்ரீ தியுடன் அங்கீகரிக்கக் கடவீர் என்றுறைத்து மிகுந்த பிரீதியுடன்

ஸ்ரீராம பிரானது கையில் கொடுத்து உதக பூர்வமாகக் கன்னிகாதானஞ் செய்தனர். இந்தப் பிரகாரமே தன் குமாரியாகிய ஊர்மிளையை இளைய பெருமாளுக்கும், தன் ப்ராதாவின் புத்திரிகளான மாண்டவி,ஸ்ருத கீர்த்தி என்னும் கன்னிகைகளை பரத சத்ருக்கனர்களுக்கும் பாணி க்ரஹணம் செய்து கொடுத்தனர்.

(விவாஹங்கள் எட்டு விதங்களென ஸ்மிருதிகளில் கூறப் பட்டுள்ளன.
” ப்ரஹ்மோ தைவஸ்த தைவார்ஷ : ப்ராஜபத்யஸ் ததாஸ்ர :
கந்தர்வோ ராஷஸச் சைவ பைராசஸ் ச அஷ்டமோ தம: “
” பிரம நற்றெய்வ மாரிடம் பிரசா பத்திய மாசுரம் பெட்பின்
மருவுகாந்திருவ மிராக்கதம் பசாச மென மணமெட்டுள.”
” இருவருமிணங்கு களவு கந்தருவ மனந்தலிலிணங்கல் பைசாசம்
பெரு வலியதனான் மருவுதலரக்கம் பெரிலக் கெய்தலே யசுரம்
பொருளுகந்தளித்தலாரிடம் பிரசாபத்தியம் பொருள் கொளாதளித்த லருமகந்தனை வேட்பித்தலே தெய்வ மழைத்தெதிர் கொடுத்தலே பிரமம் “

1 ) பிரம்மம். (2)தைவம் (3) ஆர்ஷம். (4)ப்ராஜா பத்யம். (5)ஆரம். (6)காந்தர்வம்,(7)ராக்ஷஸம். (8)பைசாசம். என்ற எட்டு வித விவாஹங்களுள் ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் “ஸஹ தர்மம் சரத இதி ப்ராஜா பத்ய ; ” என்ற ஆச்வலாயனார் வசனப் பிரகாரம் ப்ராஜா பத்தியத்தைச் சேர்ந்ததாக ஏற்படுகின்றது.

யதா யதா ஹி கௌஸல்யா தாஸிவச் ச ஸகீவ ச
பார்யாவத் பகிநீவச் ச மாத்ருவச் சோபதிஷ்டதே-
அயோத்யா -12-69-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யா மடவீம் வித்தி கச்சதா தயதா ஸுகம் -அயோத்யா -40-9-
ஆகாத தன்றா லுனக்கவ்வன மிவ்வயோத்தி
மாகாதலிராமனம் மன்னவன் வையமீந்தும்
போகா வுயிர்த் தாயர் நம்பூங்குழற் சீதை யென்றே
ஏகா யினியிவ் வயினிற்றலு மேதமென்றாள். “
“பின்னும் பகர்வாண் மகனே யிவன் பின்செறம்பி
என்னும் படியன் றடியா ரினி லேவல் செய்தி
மன்னும் நகர்க்கே யிவன் வந்திடின் வாவதன்றேல்
முன்னம் முடி யென்றனள் பான் முலைசோர நின்றாள்.”

————-

அகர இராமாயணம்!

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.

அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?

அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.

அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே!!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading