அவதாரிகை –
ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா
அவ் வழியே துர்யோதன கோஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் –
அதாவது
பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல்
அன்றிக்கே
பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால்
செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும்
கீழில் பாட்டுக்கு சேஷமாக்கி நிர்வஹித்தல்
அன்றிக்கே
இப்பாட்டு தனக்கு உடலாக்குதல் –
—————————————–
செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-
பதவுரை
எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெரு முயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தி யுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது
——————————————
வியாக்யானம் –
செற்று எழுந்து தீ விழித்துச் –
பீஷ்மாதிகளுக்கு ஆக்கின போது மேல் முடிக்கக் கடவ
படியை யடங்க ரூப தர்சனத்தாலே
தெரிவித்த படியைச் சொல்லிற்று ஆகிறது –
தூது போனதாகில் இனியொரு தூது வேண்டா வென்று
துரியோநாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –
அன்றிக்கே
ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்குக் காட்டின போது
அந்த சம்ஹார சமயத்தில் கொண்ட வடிவாகிறது –
சென்ற விந்த வேழ் உலகும் –
தன் பக்கலிலே சேர்ந்து கிடக்கிறதான
ஏழு உலகங்களையும் –
மற்றிவையா வென்று வாய் அங்காந்து –
அவையாகிறன இவை தான் என்று வாயை
அங்காந்து காட்டினான் ஆய்த்து
தத பஸ்ய மஹம் சர்வம் தஸ்ய குஷு மகாத்மான -பார ஆரண்ய காண்டம் -191-123 -என்னும்படியே
அன்றிக்கே
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை -திருவாய்மொழி -8-7-9-என்னக் கடவது இறே-
முற்றும் மறையவர்க்குக் காட்டிய-
தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –
மறையவர்க்கு
ரேபாந்தனான போது ஸ்ரீ பீஷ்மாதிகள் ஆகிறது
மறையவற்க்கு
என்று னகர ஓற்றான போது ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு ஆகிறது –
மாயவனை யல்லால் –
ஆச்சர்ய பூதனை அல்லால்
ஒருக்கால் சாமான்ய ரஷணத்திலே
ஒருக்கால் ஆஸ்ரித அர்த்தமாக –
இறையேனும் ஏத்தாது என் நா –
என் நாவானது ஷண காலமும் ஸ்தோத்ரம் பண்ணாது –
இறையேனும் –
பர வ்யூஹாதிகளில் போகாது –
ஏத்தாது என் நா –
எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –
———————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –