Archive for the ‘Poyhai Aazlvaar’ Category

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -94 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

ஒரு வயிறு எரித்தலை அனுசந்தியா
அவ் வழியே துர்யோதன கோஷ்டியாலே பிறந்த அபாயத்தை அனுசந்திக்கிறார் –

அதாவது
பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்ரூபயம் காட்டின படி யாதல்

அன்றிக்கே
பிரளய காலத்தில் ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு திரு வயிற்றிலே புக்கவற்றைக் காட்டின படியாததால்

செற்று எழுந்து தீ விழித்து-என்கிற வித்தனையும்
கீழில் பாட்டுக்கு சேஷமாக்கி நிர்வஹித்தல்
அன்றிக்கே
இப்பாட்டு தனக்கு உடலாக்குதல்    –

—————————————–

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெரு முயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தி யுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

——————————————

வியாக்யானம் –

செற்று எழுந்து தீ விழித்துச் –
பீஷ்மாதிகளுக்கு ஆக்கின போது மேல் முடிக்கக் கடவ
படியை யடங்க ரூப தர்சனத்தாலே
தெரிவித்த படியைச் சொல்லிற்று ஆகிறது –

தூது போனதாகில் இனியொரு தூது வேண்டா வென்று
துரியோநாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –

அன்றிக்கே
ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்குக் காட்டின போது
அந்த சம்ஹார சமயத்தில் கொண்ட வடிவாகிறது –

சென்ற  விந்த வேழ் உலகும் –
தன் பக்கலிலே சேர்ந்து கிடக்கிறதான
ஏழு உலகங்களையும் –

மற்றிவையா வென்று வாய் அங்காந்து –
அவையாகிறன இவை தான் என்று வாயை
அங்காந்து காட்டினான் ஆய்த்து
தத பஸ்ய மஹம் சர்வம் தஸ்ய குஷு மகாத்மான -பார ஆரண்ய காண்டம் -191-123  -என்னும்படியே

அன்றிக்கே
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை -திருவாய்மொழி -8-7-9-என்னக் கடவது இறே-

முற்றும் மறையவர்க்குக் காட்டிய-
தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –

மறையவர்க்கு
ரேபாந்தனான போது ஸ்ரீ பீஷ்மாதிகள் ஆகிறது

மறையவற்க்கு
என்று னகர ஓற்றான போது ஸ்ரீ மார்கண்டேய பகவானுக்கு ஆகிறது –

மாயவனை யல்லால் –
ஆச்சர்ய பூதனை அல்லால்
ஒருக்கால் சாமான்ய ரஷணத்திலே
ஒருக்கால் ஆஸ்ரித அர்த்தமாக –

இறையேனும் ஏத்தாது என் நா –
என் நாவானது ஷண  காலமும் ஸ்தோத்ரம் பண்ணாது –

இறையேனும் –
பர வ்யூஹாதிகளில் போகாது –

ஏத்தாது என் நா –
எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -93 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

கீழே ஆஸ்ரித விஷயத்திலே ஒரு பஷ பாதம் சொல்லிற்றே நின்றது
நீர் சொல்லுகிற பஷ பாதம் நாம் அறிகிறிலோமீ -என்ன

இல்லையாகில் நீ வெருமனேயோ ஹிரண்யன்  மேலே சீறினாயோ
அவனுக்கு எதிரியாகப் போரும்படியாய்ச் சீறினாயோ-என்கிறார்-

கீழில் பாட்டில்-வாத்சல்யமாய்
வாத்சல்ய கார்யமான சீற்றத்தை அனுபவிக்கிறார்  –

——————————

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று -93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக் கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

————————————

வியாக்யானம் –

வயிறு அழல வாளுருவி வந்தானை –
கண்ட அனுகூல வர்க்கம் அடங்கலும் வயிறு எரியும்படியாக வாளை உருவிப்
பிடித்துக் கொண்டு வந்தான் ஆயிற்று

எங்கனே யுய்வர்  தானவர் நினைந்தால் -பெரிய திரு மொழி -5-7-5-என்று
நரசிம்ஹத்தைக் கண்டால்
அசூர ராஷச ஜாதியாகப் படும் பாட்டை
இவனைக் கண்டு அனுகூல ஜாதி படும்படி

வயிறு அழல –
வயிறு அழலுகிறது ஆர்க்கு என்னில் -ஆழ்வார்க்கு –
முன்பு ஒரு நாள் ஹிரண்யன் பகையாகச் செய்தானாய் இராதே
தம் எதிரே வாள் உருவிக் கொண்டு புறப்பட்டாப் போலே இருந்தபடி

என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-என்றபடியே

அஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்தத் -17-5-

யஞ்ச எயிறிலக  வாய் மடுத்த தென் நீ –
அவன் வெறுவும்படிக்கு ஈடாக எயிறுகள் ஆனவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்
நாய்ச்சிமார்க்கும் ஸ்ப்ருஹணீயமாம்படி இருக்கிறது காணும்
இப்போதைய அட்டஹாசம்
போக்கற்ற விடத்தில் செய்யும் செயல் இறே இது
பிராட்டிமார்க்கு சம்போதகத்தில் திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும் படிக்கு ஈடாக ஹாசமே அமையும் படியாய் இருக்கிறது –

பொறி யுகிரால் -இத்யாதி –
நாநா வர்ணமாய்
தர்ஸநீயமான உகிராலே-
சம்போகத்துக்கு ஏகாந்தமான அழகை உடைய உகிராலே –

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா –
சௌகுமர்யத்தாலும் அழகாலும் பூவினுடைய அழகு தான்
தள்ளுண்டு போம்படி இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை தரிப்பதான கையை உடையவனே
அறு காழியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

நின் சேவடிமே லீடழியச் செற்று –
நாய்ச்சிமார் சாய்ந்து அருளும் படியான திருவடிகளின் மேலே அவனை ஏறிட்டு -என்னுதல்
என்றும் நாங்கள் ஆசைப் பட்டுப் பெறுகிற திருவடிகளிலே என்னுதல் –

மறுமூட்டுப் பொறாமல் சிந்திப் போம்படிக்கு ஈடாக முடித்துப் பின்னையும்
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
சங்கல்பம் தவிர்ந்து
திருவாழி தவிர்ந்து
திரு உகிராலே பிளந்து
பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வது என்

அவன் முடிந்த போன பின்பும் சீற்றம் மாறாதே இருந்ததுக்கடி
சிறுக்கன் பக்கல் உண்டான வ்யாமோஹாதிசயம் இறே –
முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு-

மரணாந்தானி வைராணி -யுத்தம் -114-101-இறே அது

த்வயி கிஞ்சித் சமா பன்னே -கிம் கார்யம் சீதயா மம -யுத்த 41-4-என்னும் விஷயத்தில் இப்படியே

கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இறே வாத்சல்யம்
முன்னணை  கன்றைக் கொம்பிலே சூடுகை இறே –

கொண்ட சீற்றம் உண்டு என்று
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்

ததோ ராமோ மகா தேஜா யுத்தத் -59-136
கண்டு கொண்டு இருக்கும் விஷயம் எதிர் விழுக்க ஒண்ணாத படி யாவதே
பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும் நெருப்பானால் விலக்காவது உண்டோ –

ராவனேன க்ருத  வ்ரணம்
கொசுகாலே சிம்ஹத்துக்குப் பரிபவம் வந்தவோபாதி
தன் செலவிலே ஆதித்ய மண்டலத்தைப் பழம் என்று பாஞ்சு வந்த  வ்ரணம் போலேயோ இது

த்ருஷ்ட்வா கோபச்ய வசமேயிவான் –
கண்ட பின்பு பெருமாளைக் கண்டதில்லை
தம்மை மறந்தார்
திருவடியை மறந்தார்
ந ராவண சஹச்ரம் மே -என்னுமவன் இறே

அவன் அப்போது ப்லாவக சார்த்தூலன் ஆனான்
கோபஸ்ய வசமே இவான்
அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்

கருத் யத்யபி சப்தோபி க்ரோத நீயானி வர்ஜயன்
ச ச நித்யம் ப்ரசாந்தாத்மா -என்னும் படி இறே அது –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -92 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

கீழே
ஆஸ்ரிதரை ரஷிக்கும் படி சொல்லிற்று
இங்கு
அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக நினைத்து இருக்கும் ஸ்வ பாவன்
என்கிறது –

அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –

ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்

இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் –

———————————————————–

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

பதவுரை

வான் ஆகி–ஆகாசமாகியும்
தீ ஆய்–அக்நியாகியும்
மறி கடல் ஆய்–அலை யெறிகிற கடலாகியும்
மாருதம் ஆய்–காற்றாகியும்
தேன் ஆகி–தேன் போன்றும்
பால் ஆம்–பால் போன்றும் பரம போக்யனான
திருமாலே–எம்பெருமானே!
முன் ஒரு நாள்–பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை–(பிரளய காலத்தில் உட் கொண்டிருந்த) இவ் வண்டத்தை
உமிழ்ந்த-(உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு–உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய்–இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதை யென்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
விழுங்க–அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே–நிறைந்து விடுமோ? [நிறைய மாட்டாது]

——————————————————–

வியாக்யானம் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் –
பூத பஞ்சகங்களாலும்
ஆரப்தமான அண்டாந்தர வர்த்தி புருஷர்களுக்கு நிர்வாஹகனாய் –

தேனாகிப் பாலாம் திருமாலே –
சர்வ ரச-என்கிறபடியே
நித்ய விபூதியிலே உள்ளார்க்கு போக்யனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறது –

தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்

ஆக
இவ்விரண்டாலும்
உபய விபூதி யுக்தன் -என்றபடி –

உபய விபூதி யோகத்துக்கும் மேலாய்
ஒரு ஐஸ்வர்யம் போலே காணும்  ஸ்ரீயப்தித்வமும் –
ஆகைத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கும்
காமிநிக்கைக்கும்
ஒரு விஷயம் உண்டாவது என்றபடி

அவள் திரு முலைத் தடத்திலும் வெண்ணெய் போக்யமான படி
அது போக்யம் –
இது தாரகம் -என்றபடி

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் உரலினோடு இணைந்து இருந்து
ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய்மொழி -1-3-1-என்னக் கடவது இறே –

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ  நீ செய்தது –

ஆனாய்ச்சி வெண்ணெய் –
வெண்ணெயிலே அல்பம் முடை நாற்றம் குறையில் புஜியான் யாய்த்து

நிறையுமே –
குறைக்கும் இட்டு அடைக்க வேணும்

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

—————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -91 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும்
இதர விஷயங்களிலே ருசி யற்று
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது –
என்கிறார் –

ஹேயத்திலே ஹேயதா புத்தியும்
உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும்
வேண்டாவோ -பேற்றுக்கும்

கீழில் பாட்டில்
ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று –

இதில் –
ருசி தான் வேண்டுவது –
என்கிறது –

—————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–தத்வ ஜ்ஞாநமாகிற
சுடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

——————————————-

வியாக்யானம் –

ஊனக் குரம்பையினுள் புக்கு –
தோஷமே யான தேஹத்திலே தோஷம் உள்ள எல்லை யளவும் செல்ல அவகாஹித்து –
மாம்ஸ மயமான தேஹம் என்னக் கடவது இறே

ஹேயமாய் அல்பமாய் அஸ்திரமாய் அனர்த்தமாய் பீபத்சமாய் அகவாய்
தெரியாதபடி மேலே தோலை வைத்து மினுக்கி
ஆபாத ப்ரதீதியில் நன்று என்று தோற்றும் படி இறே இருப்பது

குரம்பை என்கிறது
ஆத்மாவுக்கு ஒரு குடிலோபாதி ஆகையாலே –

இருள் நீக்கி –
அத்தை போக்யம் என்று இருக்கிற
அஞ்ஞானத்தைப் போக்கி –

ஞானச் சுடர் கொளீஇ –
ஞானம் ஆகிற தேஜஸ் சைக் கொளுத்துவது –

விளக்கை ஏற்றுவது –
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக ஈஸ்வர ஜ்ஞானத்தையும் உண்டாம்படி பண்ணி
பிரகாரமான தன்னையும் விட்டு
பிரகாரியான தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கி
ஸ்வ ரூபம் உண்டாய்
ஒருகால் இல்லையாமதல்ல –
அத்தை மறைக்கில் ப்ரயோஜ நாந்த்ரங்களும்
உபாயாந்தரங்களும் தலை எடுக்கும் –

நாடோறும் ஏனத் துருவா யுலகிடந்த -ஊழியான் பாதம்  மருவதார்க்கு உண்டாமோ வான்
தன் விபூதி  அழிய
தன்னைப் பேணி இருக்கை அன்றிக்கே
தன்னை அழிவுக்கு இட்டு நோக்கும் ஸ்வ பாவனானவன்
திருவடிகளிலே நாடோறும் வாசனை பண்ணாதார்க்கு
நித்ய விபூதி உண்டாமோ –

நாடோறும் –
நாடோறும் ஏக சிந்தையனாய்
ஏனத்து உருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –

ஊழியான் –
நாம் இல்லாத காலத்து உளனாய்
நம்மை ரஷிக்குமவன்

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார்  பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு  உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

கரணம் பிழைக்கில் மரணமாம் படியான பிரமாதத்தால் வருமவற்றுக்குப் பரிஹாரம் சொன்ன இத்தனை போக்கி
ப்ராப்ய ருசி இல்லாதார்க்கு ப்ராப்ய சித்தி உண்டாகச் சொல்லிற்றோ –

ஒருக்கால் அவனே கடவன் என்று சொல்லி
பின் பழைய வலையையே வர்த்திப்பித்துத் திரிய பேறு உண்டாமோ

முன்பு இது நெடும் காலம் இழந்தது இவ்வஸ்துவுக்கு யோக்யதை இல்லாமை யன்றே
ருசி இல்லாமை இறே

அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும்
அப்பெரிய பேற்றை பெரும் போது
தனக்கு ருசி வேண்டாவோ –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திருவந்தாதி-பாசுரம் -90 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு
அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு
அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித்
தன்னைக் கொடுத்த படி
சொல்லுகிறார் –

நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய
ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும்
வாத்சல்யத்தையும்
அனுசந்திக்கிறார் –

——————————————

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

———————————————-

வியாக்யானம் –

வரத்தால் வலி நினைந்து –
சர்வேஸ்வரன் கொடுக்கப் பெற்ற தேவதைகள் பக்கலிலே
வரத்தைப் பெற்று
அத்தால் வந்த பலத்தை அனுசந்தித்து
இருந்தான் ஆய்த்து-
மெல்லியத்தை உறவிதாகக் கொண்டு  பிரமித்து இருந்தான் ஆய்த்து –

வர பலத்தை அனுசந்தித்து ஈச்வரனிலும் தன்னைப் பெரியானாக அபிமானித்து இருந்தான்
அத்தனை அல்லது
வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி
பகவத் அதீனம் என்று அறிந்திலன் –

மாதவ –
சர்வராலும் சமாஸ்ரயணீயன் ஸ்ரீ யபதி போலே
இவனும்
இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே –
தேவர் திருவடிகளை ஆதரித்துக் கொண்டு ஆஸ்ரயித்திலன்-என்றே

அதாகிறது –
உன் பக்கலிலே ஒரு சாத்ரவம் பண்ணினான் என்னுமது கொண்டு அன்று இறே
சிறுக்கன் பக்கலிலே ப்ராதிகூல்யம்  பண்ணித் தப்ப நின்றான் -என்னும் அத்தாலே இறே -என்னுதல்

அன்றிக்கே
அவன் தேவர்க்குப் பண்ணுவதொரு அபகாரம் உண்டோ –
தன் பேறு தான் இழந்தான் என்னுமது கொண்டு இறே -என்னுதல்

தப்பச் செய்தோம் என்னாமை -என்னுதல்

உன் வஸ்து அழியாமைக்கு -என்றுமாம் –

உரத்தினால் –
வரத்தினால் வந்த வலியை-
நினைத்து இருந்தவன் கூட
பிற்காலிக்கும் படியான
பலத்தை உடையானாய்க் கொண்டு –

ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை –
ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய இரணியனை –
கீழே வர பலம் சொல்லிற்று
இங்கே புஜ பலம் சொல்லுகிறது  –

உரத்தினால் ஈர் அரியாய் –
மிடுக்காலே ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்

அன்றிக்கே
பெரிய சத்ரு -என்னுதல்

அன்றிக்கே
உரத்தினால் ஈர் அரியாய்  நீ இடந்தது ஊன் -என்று மேலே கூட்டவுமாம் –

ஒரரியாய் –
நாட்டில் நடையாடாத அத்விதீயமான நரசிம்ஹம் -என்னுதல்

அன்றிக்கே
இச் செயலை அனுசந்திக்க ஆஸ்ரிதர்க்கு எப்போதும் கிட்டும்படியான நரசிம்ஹமுமாய்
அதாகிறது
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு இவ்வருகு உள்ளார் அடங்க இச் செயலை அனுசந்தித்து
அச்சம் கெட்டு இருக்கும்படியாய் இருக்கை-

ஓர் அரியாய்
காமத்வ ஜாயதே -என்று
தன்னுடைய இச்சையாலே பிறந்த நரசிம்ஹம் -என்றுமாம்  –

நீ யிடந்த தூன் –
வணங்காமையாலே அவனுக்கு ஹிதமாக இடந்தான்
ஆத்மாவுக்கு ஸ்வபாவம் வணக்கமே இறே

தொழும் இவள் -திருவாய்மொழி -6-5-1-
ப்ரஹ்வாஞ்ஜலி புடஸ்த்தித்த
நம இத்யேவ வாதின  –
கைகேயி தோற்றினாப் போலே இறே உடம்பு –

நீ அவனுடைய மார்பைப் பிளந்தது
நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே அன்று இறே -என்றபடி –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -89 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

கீழ்ப் பிறந்த லாபமானது திரியட்டும்
பின்னாட்டும்படி சொல்லுகிறார் –

நாட்டார்க்கு நினைக்கையில் உள்ள அருமை போரும்
இவர்க்கு இவ்விஷயத்தை மறைக்கைக்கு –

——————————-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேச்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

——————————-

வியாக்யானம் –

எனக்காவார் ஆரோருவரே –
எனக்கு ஒப்பாக வல்லார் ஒருவர் உண்டோ
என் தான்
ஈஸ்வரன் உமக்கு ஒப்பாக மாட்டானோ -என்னில்

எம்பெருமான் தனக்காவான் தானே மற்றல்லால் –
சர்வேஸ்வரன் தான் தனக்கு ஒப்பாம் இத்தனை போக்கி
எனக்கு ஒப்பாக வல்லனோ –

அதாகிறது
சேஷ பூதனாய் இப் பேறு பெற்றான் ஒருவன் அல்லனே
என்னைப் போலே ஒருவன் பிரசாதத்தால் வந்த ஏற்றம் உண்டோ அவனுக்கு

நீர் இங்கனே குறைவற்றாரைப் போலே சொல்லுகிறது என்
சாஷாத் கரிக்கப் பெறாத குறை உமக்கு இல்லையோ -என்னில்
அக்குறை போலியைக் கண்டு தீரப் பெற்றேன் என்கிறார்

அவனோடு சத்ருச பதார்த்தங்கள் வர்த்திக்கிற தேசத்திலே நின்றேன்
ஓர் அடி அன்றோ குறைய நின்றது –

புனக்காயாம் பூ மேனி –
புனத்திலே நின்ற
செவ்வியை உடைத்தான
காயாம் பூவினுடைய நிறம் –

காணப் பொதியவிழும் பூவைப் பூ –
காணக் காண
அலருகிற பூவைப் பூவினுடைய நிறம்

இவை –
மா மேனி காட்டும் வரம் –
அந்த ப்ரார்த்திதமான வடிவைக் காட்டா நின்றன  -என்னுதல்

அன்றிக்கே –
வரிஷ்டமாகக் காட்டா நின்றன -என்றுமாம்
அதாகிறது –
அழகிதாக காட்டா நின்றது -என்கை –

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும்
காண்டோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் –
அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி -73-என்னக் கடவது இறே –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -87/ 88 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆன பின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேஸ்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம்
(அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பது தானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனி மேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யம கிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்க முடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்

இனியார் புகுவார் எழு நரக வாசல் –
எழு நரக வாசல் –இனியார் புகுவார் –
எழு வகைப் பட்டிருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார் –
இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் யுண்டோ —
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே –

அன்றிக்கே
எழுகிற நரக வாசல் யுண்டு -எல்லோரும் போய்ப் புகுகிற நரக வாசல் என்னுதல்-
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று என்கை-

முனியாது-
யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை -என்கிறது –
எங்கள் பதத்துக்கு அழிவு சொல்லுவதே என்று பொடியாதே –
முனிந்தார்கள் ஆகில்
யம படர் கன்றும் விளாவும் பட்டது படும் அத்தனை –

மூரித்தாள் கோமின் –
பெரும் தாளைப் பூட்டுங்கோள்-
அதுக்கடி இன்னம் ஒருகால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே
எளிதாகக் கோர்க்க வேண்டுவது –

கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –
கனிகள் உதிரும்படிக்கு ஈடாகக் கன்றை எறிந்த தோளை உடையவனானவனுடைய
ஆபரணத்தால் வந்த த்வனியை
யுடைத்தான திருவடிகளைக் காண்பதற்கு –
அதாகிறது –
இலக்கைக் குறித்து எறிகிற போது மாறியிட்ட திருவடிகளில்
வீரக் கழல் த்வநிக்கிற படி –

நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —
நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –
திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின-
திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –

நாவலம் சூழ் நாடு –
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

—————————-

அவதாரிகை –

கீழே -நன்கறிந்த நாவலம் சூழ் நாடு -என்றாரே
அதாகிறது –
திருக் கோவலூருக்கு உட்பட்ட பூமிக்கு உள்ளே கிடந்தமையைக் கொண்டு இறே

அத்தை நாடும் அறிந்து பற்றப் பெற்றது இல்லை
அவன் படிக்கு இஸ் சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கும் அவகாசம் உண்டாய் இருந்தது

தேன மைத்ரீ பவது தே -சுந்தர -21-20-
அனந்தரம்
தம்மைப் பார்த்து
நாடு செய்தபடி செய்ய
நாம் முந்துற முன்னம்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் -திருவாய்மொழி -1-2-8-என்கிறபடியே
என்னுடைய கரணங்கள் மூன்றையும் கொண்டு இங்கே
ப்ரவணனாகப் பெற்றேனே -என்கிறார்

வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப்  பெற்றேனே
என்கிறார் –

——————————————

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவது தொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

————————————

வியாக்யானம் –

நாடிலும் நின்னடியே நாடுவன் –
நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும்
உன் திருவடிகளையே தேடுவன் –

நாடோறும் பாடிலும்  நின் புகழே பாடுவன் –
நித்யமாக ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும்
தேவருடைய புகழே ஸ்தோத்ரம் பண்ணா நிற்பன் –

இவை தானே பிரயோஜனமாக -என்கிறது –
ஏவ காரத்தாலே –

சூடிலும்  பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு –
நான் என் தலையாலே தரிக்குமவையும்
தர்ச நீயமான திருவாழியை ஏந்தின சர்வேஸ்வரனான
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளையே தரிக்கக் கடவேனான -எனக்கு –

என்னாகில் என்னே எனக்கு –
இங்கே தாகில் என்
பரம பதத்திலே போனாலும் மநோ வாக் காயங்கள் அங்கே
ப்ரவணமாகை இறே செய்வது

அது இங்கே பெற்றேனாகில்
எனக்கு எங்கே இருக்க நல்லது -என்றதாகவுமாம் –

அன்றிக்கே
நாட்டார்க்காக இருந்து வ்யசனப் பட்டால் பிரயோஜனம் உண்டோ
அறிந்தார்கள் ஆகில் இந்த லாபத்தைப் பெறுகிறார்கள்
அறிந்திலர்கள் ஆகில் இந்தப் பேற்றை இழக்கிறார்கள்

பேறு அவனாலே ஆனவோபாதி
இழவும் தம்மாலே யாவும் கடவது இறே

நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம்
கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்

நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ
நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே என்னும்
லாபத்தோடு தலைக் கட்டுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -86 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 2, 2014

அவதாரிகை –

இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து
அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு
இவர் இருந்த இடத்திலே
பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –

இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன
தரியான் இறே அவன்   –

——————————————-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திரு வாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கி யிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

——————————————

வியாக்யானம் –

நீயும் திருமகளும் நின்றாயால் –
என்னடியார் அது செய்யார் என்னும் நீயும்
நினைவறிந்து கார்யம் செய்வாரை
ந கச்சின் ந அபராத்யாதி -என்னும் அவளும் கூட நின்றாயால் –

ஆஸ்ரித ரஷணத்தில் முறபாடனான நீயும்
ராகவஞ்ச மகா வ்ரதம் -அயோத்யா -31-2-என்று வ்ரதம் கொண்டு இறே புறப்பட்டது
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -அயோத்யா -27-6- என்று உனக்கு முற்பட்ட பிராட்டியும்

நின்றாயால் –
நிற்கக் கண்ட அத்தனை
நிர்ஹேதுகம் -என்றபடி

அன்றிக்கே
இவர்களைப் பெற்று நிலை நின்ற படி -ஆகவுமாம் –

குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
ஒரு மலையை எடுத்து
உடம்பிலே வந்து படுகிற மழையை பரிஹரித்த நீர்மையை உடையவனே  –

அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இறே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத படி -என்றுமாம்
குஹேன சஹி தோ ராம -பால -1-28- என்னக் கடவது இறே  –

வாசல் கடை கழியா யுள் புகாக் –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்
புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம்  விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு
பஸ்ம தத் குருதாம் ஸிகீ-அயோத்யா -97-8-என்றான் இறே

கீழே இருவரையும் கூறி-
நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –

காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —
ஸ்ப்ருஹணீயமாய்
அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி
இப்போது இப்படி நின்றான் -என்னுதல்
இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்

இனி -என்கையாலே
அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –
இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-

திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது –
தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –

ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -85 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்ட அபரிச்சின்ன விஷயமான வைபவத்தை எல்லாம்
கண்டு அனுபவித்தாயாய்
ஏறிமறிந்து இருக்கிற நீ
இன்னும் பேராது கண்டு அனுபவியாய் -என்ன

என் செய
நாம் எல்லாம் செய்தோமாய் அன்றோ இருக்கிறது என்ன

இந்த்ரிய ஜெயம் பண்ணி
ஆஸ்ரயணத்திலே  இழிந்த வித்தனை யல்லது
நீ அவன் படிகளிலே என் கண்டாய்
என்கிறார் –

—————————————-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு-

————————————

வியாக்யானம் –

படி கண்டு அறிதியே –
அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே

அன்றிக்கே
அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்

படி -என்று
திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –

பாம்பணையினான் புட்கொடி கண்டு அறிதியே-
பாம்பணையினான் கண்டு அறிதியே-
புட்கொடி கண்டு அறிதியே-

பாம்பணையினான் கண்டு அறிதியே-
அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும்
படி கண்டு அறிதியே

புட்கொடி கண்டு அறிதியே-
த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

கூறாய் –
எல்லாம் கண்டாயாய் இருக்கிற நீ
இன்னது கண்டேன் என்று சொல்லிக் காணாய் –

வடிவில்  பொறி யைந்து முள்ளடக்கிப்  –
ஸ்ரோத்ராதிகள்  ஐந்தையும் புறம் போகாத படி
உடம்புக்கு உள்ளே நியமித்து -என்னுதல்

அன்றிக்கே
வடிவில்லாத பொறி ஐந்தும் உள்ளடக்கி -என்னுதல்

இத்தால்
ஒரு வழிப்பட்டு இருக்கை அன்றிக்கே
பல அபி சந்திகளை -பெரிய திருமொழி -1-6-3-என்னுமா போலே –

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி 1-6-3-

போதொடு நீரேந்தி நெறி நின்ற நெஞ்சமே நீ –
இப்படி இந்த்ரியங்களை நியமித்து
புஷ்பாத் யுபகரணங்களை தரித்துக் கொண்டு
வழிப்பட நின்று
உபாசித்தானாய் இருக்கிற நீ
அவ் உபாசன பலமாக இவற்றில் நீ எவ் வம்சம் கண்டாய்

சாஷாத் கரிப்பதுக்கு முன்னே ஜ்ஞான லாபத்தைக் கொண்டு ஆறி இருக்கக் கடவதோ

ப்ராப்தி சமயத்திலும் கூட அபர்யாப்தி வேண்டி இருக்க
ஜ்ஞான லாபத் தளவிலே திருப்தி பிறந்து இருக்கவோ

இனி அவ்வளவு அமையும் என்னும் படி இருக்குமாகில்
அது பிராப்யமாக மாட்டாதே

பிறந்த ஞான லாபத் தளவிலே பர்யவசித்து   ஆறி இருக்குமது
அஞ்ஞான கார்யமேயாம் அத்தனை இறே

மயர்வற மதி நலம் அருளினன் என்ற
அனந்தரத்திலே இறே மடல் எடுத்தது –

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -84 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 1, 2014

அவதாரிகை –

உன்னுடைய ரஷகத்வத்தைச் சிலராலே
பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –

ரஷ்யத்தின் அளவேயோ
ரஷகனான உன்னுடைய பாரிப்பு
என்கிறார் –

————————————

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

——————————-
வியாக்யானம் –

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று
சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர்
அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ

ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-

உரா யுலகளந்த நான்று –
உராய் -என்கிறத்தை
உலாய்-என்றாக்கித்
திருவடிகள் எங்கும் சஞ்சரித்துக் கொண்டு -என்னுதல்

அன்றிக்கே
தன்னுடைய தைவத்வம் தோற்றும்படி
பூமியில் கால் தட்டாத படி கடக்க நிற்கை அன்றிக்கே
எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு என்றுமாம்

பட்டர் -அநாயாசேன அளந்த வன்று  -என்று அருளிச் செய்வர் –

எந்தை அடிக்களவு போந்த படி -வராகத் தெயிற்று அளவு போதாவா றென்கொலோ-
இப்படித் திரு உலகு அளந்து அருளின் அன்று
என் ஸ்வாமி யான உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது
இன்று
வராகத்து
எயிற்று அளவு போதாதவாறு என் கொலோ

இப்போது திரு எயிற்றுக்கு ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ

ஒரு நாள் போந்த பூமியானது
ஒரு நாள்  போராது ஒழிவான் என்
இது என்ன பாரிப்பு தான் -என்கிறார்

நான் ஒருவனுமே உன் குணங்களிலே குமிழ் நீருண்ணா நின்றேன்
என்கிறார் –

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –