Archive for the ‘Poyhai Aazlvaar’ Category

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-31-40–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
அரியுருபும் ஆளுருவுமாகி –எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை –31-

——————————————————————————————————–

புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
வலம்புரி -சங்கு ஒரு கை
சத்தியபாமை -பாமை போலே
எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டே
சில அவதாரங்களில் மறைந்தும்
சில அவதாரங்களில் வெளித் தோன்றியும்
காரணார்த்த மாகவாம்

அரியுருபும் ஆளுருவுமாகி —
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த
நெருப்பு நிறமாய் இருக்கும் ஆதலால் ஹிரண்யன் –
மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை
இதை ஆராய்ந்து பார் நெஞ்சே –
பிரஹ்லாதன் இடத்தில் உள்ள வாத்சல்யத்தாலே
செய்து அருளின செயல்
இத்தை அனுசந்தித்தால் இவனை விட்டு வேறு ஒரு விஷயத்தை
ஒரு நொடிப் பொழுதாகிலும் நினைக்க வழி உண்டோ-

———————————————————————————————————————————

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிரவாய்
நாகத்தணையான் நகர்–32-

—————————————————————————————

இமையாத கண்ணால்
ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்
உட் கண்ணாலே

இருள் அகல
அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நீங்கும் படியாக

நோக்கி
தன் ஸ்வரூபத்தையும்
பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்
உள்ளபடி கண்டு

அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
அமையா -திருப்தி பெற்று அடங்கி இராதே
பொறிகள் ஐந்தும் புலன் ஐந்தும்
செவி வாய் கண் மூக்கு உடல் பஞ்ச இந்த்ரியங்களையும்
சப்தம் ரூபம் ரசம் கந்தம் ஸ்பர்சம் பஞ்ச விஷயங்களுக்கும்
பட்டி மேய்க்க விடாமல் அடக்கி ஆளாதே
நமையாமல் -அடக்காமல்

ஆகத்து அணைப்பார்
மாதர்கள் தேகத்தை அனைத்துக் கொண்டு
கண்டபடி திரிபவர்கள்

ஆயிரவாய் நாகத்தணையான் நகர்
எம்பெருமானது ஸ்ரீ வைகுண்டம்

அணைவரே
அணைவர் அணைவரா-இரண்டு வகையிலும் பொருள்
எம்பெருமான் தானாகவே கடாஷிக்கும் பொழுது
அவனை விலக்காதவர்களுக்கு
உஜ்ஜீவிக்க வழி உண்டு
இதில் ஆகத்து அணைப்பார் -எம்பெருமானாலே அந்தரங்கமாக விஷயீ கரிப்பப் பெற்றால்
கிருபா வைபவ உக்தி -இதுவே ஆழ்வார்களுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அபிமதமாய் இருக்கும் –

————————————————————————————————————————————————————-

நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறைப்பயந்த பண்பன் -பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

———————————————————————

நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
திரு நாபி கமலத்திலே
பிரமனுக்கு இருப்பிடத்தை ஏற்படுத்தி அருளையும்
அந்தரங்கருக்கு அருகிலே மாளிகை அமைக்குமா போலே

பகர மறைப்பயந்த பண்பன் –
யோக்யர்கள் எல்லாம் ஓதும்படி
வேதத்தை உபகரித்த குணசாலியான எம்பெருமானுடைய
மத்ஸ்ய ஹம்ச அவதார முகேன

-பெயரினையே
திரு நாமங்களையே

புந்தியால் சிந்தியாது
மனத்தினால் எண்ணாமல்

ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –
ஜபம் செய்வதும்
உரு சொல்வதும் மான
சந்தா வந்தனம் போன்ற கர்மானுஷ்டன்களால்
உண்டாக போகிற பிரயோஜனம் என்ன –
ஒன்றும் இல்லையே
எம்பெருமானை உள்ளீடகக் கொள்ளாத இவற்றால் –
அந்தரங்க பகவத் பக்தியே முக்கியம் –

—————————————————————————————————————————————————————–

என்னொருவர் மெய்யன்பர் ஏழு உலகுண்டு ஆலிலையில்
முன்னொருவனாகிய முகில் வண்ணா -நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறு–34-

————————————————-

என்னொருவர் மெய்யன்பர்
ஏழு உலகுண்டு ஆலிலையில் முன்னொருவனாகிய முகில் வண்ணா –
நின்னுருகிப்பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால்
ஒருத்தி வந்து முலை தந்து
பட்ட பாடு கண் எதிரே காணா நிற்கச் செய்தே

பேரமர்க்கண்-
கண்ணபிரானை கொள்ளக் கருதி அதற்கு முயன்ற இடம்

பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
ஒன்றுடன் சண்டை செய்யும் பெரிய கண்களை உடைய யசோதை என்றுமாம்
இன்னும் ஒருத்தி கிட்ட தான் வர முடியுமா
அஞ்சாமல் கிட்டி வந்து முலை கொடுக்கத் தான் முடியுமோ
இதை எங்கனே மெய் என்னக் கொள்ளலாம்
விஷத்துக்கு மாற்றாக அமுதம் போன்ற ஸ்தநயம் கொடுத்தவள்
அவள் போன்ற மெய்யான பக்தர்களுக்கு விஸ்வாசம் இருக்கும்-

———————————————————————————————————————————————————–

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ -தேறி
நெடியோய் அடியடைதற்கு அன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண்–35-

————————————————————————

ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
நிரம்பின பக்தி இல்லாதவர்களாய்
சேஷத்வ ஞானத்தை மாத்ரம் உடையவராய்
தங்கள் உடைய ச்நேஹத்தால்

கூறிய குற்றமாக் கொள்ளல் நீ –
சொல்லும் வார்த்தைகளை
நீ குற்றமாக கொள்ளாதே

-தேறி -நெடியோய் அடியடைதற்கு அன்றே-
பெருமை பொருந்திய உன்னுடைய திருவடிகளை
தேறி -தெளிந்து வந்து –
சிசுபாலனுக்கு
கிட்டுகைக்கு காரணமாக விட்டதன்றோ

ஈரைந்து முடியான் படைத்த முரண்
இராவணன் புத்தி பூர்வகமாக
பண்ணிய தப்புக் கார்யம்
நம் போல்வாரின் போலியான ஆனுகூல்யமே
அவன் திருவடி அடைய தடை உண்டோ -என்றவாறு
ஹிரண்யன் ஹிரண்யாஷன்
இராவணன் சிசுபாலன்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த
சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன்

ஆறிய அன்பு இல் அடியார் -தம்மை சொல்லிக் கொள்கிறார் நைச்சாயனுசந்தானம்
தன்மையில் வந்த படர்க்கை-

—————————————————————————————————————————————————–

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே -இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை–35-

—————————————————————————–

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே
சம்சாரிகளின் மிடுக்கை தொலைக்கலாம்
என்று அல்லவோ

முன்னம் தரணி தனதாகத் தானே -இரணியனைப்
முற்காலத்தில்
பூமி எல்லாம் தன்னுடையது என்று
அஹங்காரம் கொண்டு இருந்த ஹிரண்யா ஸூரனை

புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
புண்படுத்திப் பிளந்த
கூர்மையான நகங்கள் பொருந்திய
அழகிய திருவாழியைக் கொண்ட
திருக்கையினால் நீ

மண்ணிரந்து கொண்ட வகை
மாவலியிடத்தில்
பூமியை யாசித்து பெற்றதானது –
கொல்லாமல் -விட்டு பங்கமும் படுத்தாமல் -யாசித்து பெற்றது
தன்னுடைய இந்த -சௌலப்யம் உணர்ந்து
சம்சாரிகள் அஹங்காரம் விட்டு ஒழிந்து ஆட்படக் கூடும் எண்ணும் திரு உள்ளத்தாலோ –

——————————————————————————————————————————————————————-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மாலுகந்த ஊர்–37-

——————————————————————————————-

மூன்று பாசுரங்களாலே திரு மலையை அனுபவிக்கிறார்
வகையறு –
அல்ப பலன்களையும்
பரம புருஷார்த்தத்தையும்
உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறிதி இடுவதற்கு உறுப்பான –

நுண் கேள்வி வாய்வார்கள்-
ஸூ ஷ்மார்த்த
ஸ்ரவணம்
உடையவர்களான

நாளும்
நித்யமும்

புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-
தூப தீபங்களையும்
புஷ்பங்களையும்
தீரத்தையும்
தரித்துக் கொண்டு –

திசை திசையின்
பல திக்குகளில் நின்றும்

வேதியர்கள்
வைதிகர்கள்

சென்று இறைஞ்சும்
வந்து சேர்ந்து வணங்கும் இடமான

வேங்கடமே
திரு வேங்கட மலையானது

வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர்
பாரத போரிலே
வெளுத்த பாஞ்ச ஜன்யம் ஊதிய
வயாமோகமே வடிவு கொண்டவனே
உகந்து அருளின திவ்ய தேசமாம்-

——————————————————————————————————————————-

ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியை -காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம் என்னும் மாலதிடம்–38-

————————————————————————————–

திருவேங்கட மலையே அமரர்கள் அதிபதி
திரு உள்ளம் உகந்து எழுந்து அருளி இருக்கும் இடம் என்கிறார் –
ஊரும் வரி அரவம்
மலைப்பாம்புகள்
இயற்கையாக திரிகின்ற பாம்புகள் என்றும்
யானைகளை விழுங்கும் பாம்புகள்
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -திருமங்கை ஆழ்வார்
நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் அனுசந்தேயம்
இடி கொள் வேழத்தை எயிற்றோடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என வடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாமித்து ஏற
படிகடாமெனப் தாழ்வரை கிடப்பான பாராய் -கம்பர் சித்ரகூடபடலம் -34-
ஒண் குறவர் மால் யானை
ஒண் குறவர் -இவைகள் உடைய பாட்டன் பாட்டனில்
ஒருத்தன் பூமியில் இறங்கினான் என்னும்
பழி இன்றிக்கே இருக்கை-வம்ச பரம்பரையாக திருமலையிலே நித்ய வாசம் பண்ணுபவர்கள்
பட்டி மேயும் யானைகளின் மீது

பேர எறிந்த பெரு மணியை –
பெரிய மாணிக்கக் கட்டியை எறிய
நமக்கு கல் போலே அங்கு குறவர்களுக்கு மாணிக்கங்கள்
காருடைய மின்னென்று புற்றடையும்
யானையை மேகமாகவும்
ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து
பின்னால் வரப் போகும் இடிக்கு அஞ்சி
புற்றினுள்ளே புகா நிற்கும்
பாம்புகள் மேகம் கண்டு யானையாக பிரமித்தது மேலே திருமொழி பாசுரத்தில்

வேங்கடமே
மேலசுரர் -மேல் சுரர் -நித்ய சூரிகள்
எம் என்னும் மாலதிடம்
எம்மது என்று மேல் விழுந்து ஆஸ்ரியத் தக்க பெருமையான இடம்
ஆஸ்ரியத் தக்கவனான அவன் இடம் என்றுமாம்

திவ்ய தேசத்தில் உள்ள சராசரங்கள் எல்லாம் மெய்யன்பருக்கு உத்தேச்யமாய் இருக்குமே
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –
வேங்கடக் கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே –
செண்பகமாய் பிறக்கும் திரு உடையேன் ஆவேனே
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே
பொற்குடவாம் அரும் தவத்தேன் ஆவேனே
கானாறாய்ப் பாயும் கருத்துடையன் ஆவேனே
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே –

பாம்பாகவும்
குறவராகவும்
யானையாகவும்
புற்றாகவும் -இருக்கலாமே-

—————————————————————————————————————————————————————————————

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச -கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39-

—————————————————————————-

எம்பெருமான் உடைய பல
சேஷ்டிதங்களை அனுசந்தித்து இனியராகிறார்

இடந்தது பூமி –
மகா வராஹமாக உத்தரித்து

எடுத்தது குன்றம்
கோவர்த்தன மலையை குடையாக எடுத்து

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச
கஞ்சனை கொன்று ஒழித்து

-கிடந்ததுவும் நீரோத மா கடலே
திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து அருளி

நின்றதுவும் வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது –
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாக
தனது பெருமை பொலிய நின்றான்
பிறர் கார்யமே பொழுது போக்காக செய்து அருளுபவன் நீர்மைவருணிக்க முடியாதே
நாமோ
பெருமாளை உகந்தோம் என்று சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்று நாளும் பத்தும் பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சூது சதுரங்கம் பொருதல் உறங்குதல் செய்வுதோம்
ஒன்றிலும் ச்நேஹம் இல்லை
பல பல கார்யங்களில் நெஞ்சு செலுத்திக் கிடக்கிறோம் -என்றபடி

மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
அது தன்னிலே தோள் கீழ் இறங்கார்-கொக்குக்கு ஒன்றே மதி போல் –

———————————————————————————————————————————————————————————–

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று–40-

————————————————————————————-

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
பெரிய வில்லையும்
அம்புகளையும் உடையரான
குறவர்களின் உடைய கையில் பிடித்து இருந்த
சிவந்த நெருப்புக்கு

வெருவிப் புனம் துறந்த வேழம்
பயப்பட்டு கொல்லையை விட்டு
நீங்கின யானையானது

இரு விசும்பில் மீன் வீழக்
பரந்த ஆகாசத்தில் நின்றும்
நஷத்ரம் விழ

கண்டு அஞ்சும்
அதனைப் பார்த்து
நாம் அப்பால் போக முடியாதபடி கைக் கொள்ளியை
குரவர்கள் எறிந்தார்கள் என்று பிரமித்து
பயப்படும்படியான

வேங்கடமே
திருவேங்கடமானது

மேலசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று
முன்பு ஒரு கால் ஹிரண்யா ஸூ ரனை முடித்து
ப்ரஹ்லாதன் விரோதி ஒழிந்தான் என்று உகந்த
பெருமாள் உடைய திருமலையாம்

அஸ்தானே பய சங்கை பண்ணி
எம்பெருமானுக்கு மங்களா சாசனம்
பண்ணும் மகான்களின் இருப்பை நினைவுஊட்டும் செயல் —

———————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-21-30–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு -என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே யறி–21-

——————————————————————-

தம்முடைய திரு உள்ளத்தை நோக்கி
எம்பெருமான் உடைய சௌசீல்ய திருக் குணத்தை
அருளிச் செய்கிறார்
உலகளந்த சரித்ரம் சொல்லி
இப்படிப்பட்ட அவனுடைய மேன்மையைப் பார்த்து
நெஞ்சே நீ பின் வாங்க வேண்டா என்கிறார்
நம்முடைய விரோதிகளை போக்கி அருள
திருக்கையிலே திரு ஆழி உண்டே
நம் கூக்குரல் கேட்டு சடக்கென ஓடி வந்து காத்தருள
வாகனமும் உண்டே -என்கிறார்-

—————————————————————————————————————–

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -வெறி கமழும்
காம்பேய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயை
தாம்பே கொண்டார்த்த தழும்பு -22-

————————————————————————————–

அறியும் உலகெல்லாம் யானேயு மல்லேன்
உனது சௌலப்ய திருக் குணத்தை அறியாதார் யார்

பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் –
பல நிறங்களையும் கொண்ட
சிறகுகளை உடைய
கருடாழ்வானை
ஏறி நடத்தும் பெருமானே

காம்பேய் மென்தோளி
மூங்கிலை ஒத்த -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் –
மெல்லிய தோள்களை உடைய யசோதையினாலே

வெறி கமழும் கடை வெண்ணெய் உண்டாயை
கடையப் பட்டு
பரிமளம் வீசப் பெற்ற வெண்ணெயை
களவிலே அமுது செய்து அருளிய உன்னை

சீரார் கலை யல்குல் சீரடிச் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
எராரிடை நோவ எத்தனையோர் போதுமே
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாராருறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கி யறிவுற்று
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும்
வாராத்தான் வைத்தது காணாள் வயிறடித்து இங்கு
ஆரார புகுத்துவார் ஐயர் இவரல்லால்
நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண வுரலோடே
தீரா வெகுளியாய்ச் சிக்கென வார்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -சிறிய திருமடல்

தாம்பே கொண்டார்த்த தழும்பு
கையிலே கிடைத்த தொரு தாம்பைக் கொண்டு

சௌலப்யம் பரத்வம் உள்ள இடத்தில் தான் பாராட்டத் தகும்
மேரு பரத்வம் உண்டு இங்கு  சௌலப்யம் இல்லையே
இரண்டும் அவன் இடம் ஸ்வா தினம் என்று காட்டி அருள பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் -என்கிறார்
செந்தாமரைக் கண் பரதவ லஷணம் இதுவும்

வெறி கமழும் -விசேஷணம் -வெண்ணெய்க்கும்- காம்பேய் மென்தோளி யசோதைக்கும்-

———————————————————————————————————————————————————————————–

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடித் -தழும்பிருந்த
பூங்கோதை யாள்வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

—————————————————————————————–

ஒரு தழும்பு இருந்தால்
மறைக்க முடியும்
கையிலும்
காலிலும்
விரலிலும் ஆக உடம்பு முழுவதும்
ஆஸ்ரியர்க்காக செய்து அருளிய சேஷ்டிதங்கள்
ஸ்ரீ ராம
ஸ்ரீ கிருஷ்ண
ஸ்ரீ நரசிம்ஹ
அவதாரங்களில் ஏற்பட்ட தழும்புகள் உண்டே –
சகாதசம் ஜ்யாகிண கர்க்கசைச் சபை சதுர்ப்பி ராஜா நுவிலம்பி பிர்ப்பிஜை –ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம்

தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
ஸ்ரீ ராமபிரான் -தர்மோ விக்ரஹவான் அதர்ம விதரம் தன்வீ ஸ தந்வீத ந -தசாவதார ஸ்தோத்ரம் தேசிகன்
புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலைவா –
நாண் தழும்பு ஸ்ரீ ராமாவதாரம்

தழும்பிருந்த தாள் சகடம் சாடித் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தழும்பு

தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த
பெரிய பிராட்டியார் அகலகில்லே இறையும்என்று உறையுமவள்
ஜகத்துக்கு பிரளயமோ என்று அஞ்சி நடுங்கும்படி

வீங்கோத வண்ணர் விரல்
கை தாள் விரல் மூன்றினோடும்
அன்வயிக்கத் தக்கது
கடல் வண்ணன் உடைய கை
கடல் வண்ணன் உடைய தாள்
கடல் வண்ணன் உடைய விரல்
கை தாள் விரல் இவற்றை எழுவாயாகக் கொண்டு
தழும்பை சுமந்து இருக்கின்றன என்றுமாம்-

———————————————————————————————————————————————————————————

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே
ஒண்கோத வண்ணா வுரை –24-

———————————————————————————

மூன்று தழும்புகள் -சாரங்க நாண்
சகடம் உதைத்த -இரணியன் மார்பிடந்த -வீரச் செயல்களை விளக்கும்
தாம்பால் உண்டான தழும்போ பரிஹாசாஸ்பதமாய் இருக்கும் இ றே
வெண்ணெய் திருடினதும் இல்லை
ஆய்ச்சி பிடித்ததும் இல்லை கட்டினதும் இல்லை அடித்ததும் இல்லை
தழும்பு உண்டானதும் இல்லை என்று
முழு பூசணியை மறைக்கப் பார்த்தான்
அவாப்த சமஸ்த காமனாய்
சர்வஞ்ஞனாய்
சர்வசக்தனாய்
உள்ள நீ குறையாளன் போலே களவு செய்து தண்டிக்கப் பட்டு
கட்டை அவிழ்க்க உபாயம் அறியாதவனாய் இருந்தாயே
என்ன ஆச்சர்யம்
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று –
குரல் ஓவாது ஏங்கி நினைந்து
அயலார் காண விருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை
இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலை தேக்கி வைத்தால் போலே காணும்-

————————————————————————————————————————————

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலத்– திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
யிடந்தானை ஏத்தி எழும்–25-

——————————————————————————-

கிருஷ்ணன் ஓயாமல் ஏங்கி அழுதது போலே
தாமும் கிருஷ்ணன் உடைய சீலகுணத்தை
ஓயாமல் பேச உத்சாகம் கொண்டு அருளிச் செய்கிறார் இதில்

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்ஏத்தி எழும்
நெஞ்சு சிந்தனை உடன் நில்லாமல்
வாக்கின் தொழிலையும் ஏற்றுக் கொண்டதே
முடியானே மூ வுலகும் தொழுது ஏத்த -திருவாய்மொழி -3-8-1-

மேல் உரை கொண்டு -மேலான சொற்களைக் கொண்டு என்றுமாம்
வரை மேல் மரகதமே போல திரை மேல்கிடந்தானை-
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு இருப்பது
வெண் நிறமான தொரு மலையிலே
மரகதக் கல்லைப் பதித்தால் போலே
அபூத உவமை

கீண்டானைக் –
இரணியன் மார்பையும்
கேசியின் வாயையும் கீண்டானே
அன்றிக்கே
கேழலாய் கீண்டானை இடந்தானை
அண்டபித்தியில் ஒட்டின பூமி கீண்டு இடந்தவன் என்றுமாம்

திரை மேல் கிடந்தானை கீண்டானை
உறங்குவான் போல் யோகு செய்து
ரஷிப்பதில் நோக்கு
அப்படி ரஷிப்பவனை நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கிறது-

———————————————————————————————————————————————————————————–

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் -தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை–26-

———————————————————————————–

விபவம் அனுபவித்தார் இதுவரை
பின்னானார் வணங்கும் சோதியாக
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையாக வடிவமைந்த -என்று
சொல்லப் படுகிற திருவேங்கட மலை யை அனுபவிக்கிறார்
அவனை விட அவன் சம்பந்தம் பெற்ற திருமலையே உத்தேச்யம்
பிரயோஜனாந்தர பரர்களையும் அநந்ய பிரயஜோனரையும் வாசி அற வினைகளைப் போக்கி
பலனைப் பெறுவிக்குமது என்கிறார் –

எழுவார்-
எழுந்து போவாரையும்
மேன்மேலும் ஆசைப் பெருக்கம் உடையவர்களையும் சொல்லும்
ஐஸ்வர் யத்தை தர வேணும் பிரார்த்தித்து பெற்று போவாரையும்
மேலும் ஐஸ்வர்யம் கேட்பாரையும்
வினைச் சுடரை நந்துகை -ஐஸ்வர்ய பிராப்திக்கு விரோதியான பாபங்களைத் தொலைத்து
ஐஸ்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை

விடை கொள்வார்-
விட்டு நீங்குகிறவர்கள்
ஆத்மானுபவதுக்கு விரோதியான பாவங்களை தொலைத்து
கைவல்ய அனுபவத்தை நிறைவேற்றுகை –

ஈன் துழாயானைவழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
பரமைகாந்திகளான பகவத் பக்தர்கள்
இவர்கள் வினைச் சுடரை நந்துவிக்கையாவது
மாறி மாறி பல பிறப்பும் பிறக்கும்படியான தீ வினைகள் தொலைத்து முக்தராக்கை

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே-
வேண்டுவார் வேண்டிய படி
அநிஷ்ட நிவ்ருதிக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
செய்விக்க வல்ல திருவேங்கடம்
பாவங்களை நெருப்பாக ரூபிவித்து -நந்துவிக்கும் -நெருப்பை அணைக்கும் என்கிறார்

வானோர் மனச் சுடரை தூண்டும் மலை –
ஒரு நெருப்பை அணிவிக்கும்
ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்கிறார்
மனச் சுடரை –
நித்யர்களை இங்கே வந்து சௌலப்ய குணம் அனுபவிக்க தூண்டும் -என்றவாறு-

——————————————————————————————————————————————————————————————-

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று-கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-

கார்க்கோடு -கம்பீரமாக முழங்குவதில் மேகத்தை ஒத்த சங்கு

————————————————————————————–

திருமலையை அனுசந்திதவர்
திருவேம்கடமுடையானையும்
அவன் விபவத்தில் செய்து அருளின வீரச் செயல்களையும் அனுபவிக்கிறார்
மலையால் குடை கவித்து
மாவாய் பிளந்து -கேசி குதிரை வாயை பிளந்ததுவும்
சிலையால் மராமரம் ஏழ் செற்று
கொலையானைப்போர்க்கோடு ஒசித்தனவும்
பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை
இந்த திருக்கைகளே பழைய வீரச் செயல்களை செய்து அருளின என்கிறார்-

———————————————————————————————————————————————————————————————–

கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின்னாகத்தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை–28-

——————————————————————————-

திருவேங்கடமுடையானை குறித்து
உனது திருமேனியில்
அழகும்
ஐஸ்வர் யமும்
சீலமும்
நிழல் இட்டுத் தோன்றுகின்றன -என்கிறார்

கைய வலம்புரியும் நேமியும் –
இத்தால் ஈச்வரத்வம்

கார் வண்ணத்து ஐய
இத்தால் அழகையும்

மலர்மகள் நின்னாகத்தாள்-
இத்தாலும் ஈச்வரத்வம்
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் இ றே

செய்ய மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத்து இறை
இத்தால் சீலாதி குணங்கள்
வேதங்களே தனக்கு சிறந்த செல்வமாக கொண்டதால் செய்ய மறையான்
தாரகாசுரன் புத்ரர்கள் வித்யுன்மாலி -தாரகாஷன் -கமலாஷன் –
பிரம்ம வரத்தால் வானில் பறந்து -துன்புறுத்த சிவன்
பூமியை தேராக கொண்டு
சந்திர சூர்யர் தேர் சக்கரம்
நான்கு வேதங்கள் நான்கு குதிரைகள்
பிரமன் சாரதி
மகா மேரு வில்
ஆதி சேஷன் வில் நாண்
திரிபுரம் எரித்த விருத்தாந்தம்

நின்னாகத்து இறை –
அல்பம் -அல்ப பாகம் என்றவாறு
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -திருவாய்மொழி -4-8-1-
ஸ்வ பார்ஸ்வே தஷினே சம்போ நிவாஸ பரிகல்பித –
சிவன் தாபத்தால் திரு உள்ளம் உகந்து வலப்பக்கம் இடம் கற்பித்து தந்து அருளினான் –

———————————————————————————————————————————————————————————————————

நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயுமாவான் -பிறை மருப்பின்
பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி–29-

—————————————————————————–

எம்பெருமான் மேன்மையும் நீர்மையையும்
வெளியிடுகிறார்
இறையும் –
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் –
சர்வ ஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ வைகுண்ட நாதத்வம் இங்கே விவஷிதம்
இறை என்று நித்ய விபூதி நாதத்வம் சொல்லும்

நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான்-
லீலா விபூதி நாதத்வம் சொல்லிற்று
பஞ்ச பூதங்களினால் ஆகிய பதார்த்தங்கள் நிறைந்த இடம்
இறையும் போலே ஆவானும் -சேர்த்துக் கொள்ள வேண்டும்

மேலே இவற்றுக்கு அடியான நீர்மை அருளிச் செய்கிறார்
பிறை மருப்பின் பைங்கண் மால் யானைப் படுந்துயரம் காத்தளித்த செங்கண் மால் கண்டாய் தெளி
யானைக்கு வெளுத்த தந்தம்
பசுமை தாங்கிய கண்கள்
சாதாரணம் தானே
குழந்தை கிணற்றில் விழ
இது ஒரு கால் அழகும்
கை அழகும்
தலை அழகும்
முக அழகும்
என்னே -சொல்லி மாய்ந்து போவது போலே
எம்பெருமான் யானை அவயவ அழகில் கரைந்தமை தோற்ற
அந்த பகவத் சமாதியாலே ஆழ்வார் அருளிச் செய்கிறார்
நெஞ்சமே -விளி  வருவித்துக் கொள்ள வேண்டும்

————————————————————————————————————————————————————————————————-

தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை -எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து —30-

—————————————————————————-

ஆழ்வார் திரு உள்ளம் போலே நமது உள்ளம் ஈடுபட
அருளுகிறார்
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை –
பட்டிமேய ஒண்ணாத படி மனத்தை அடக்கி
எம்பெருமானோடு தமக்கு உள்ள உறவை
அறிந்து இருப்பவர்களின் மனமானது
மற்று எவரையும் பற்றாமல்
ஐம் புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே
பதறிக் கொண்டே மிக்க ஆவலுடன் சென்று கிட்டும் –

எளிதாகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய்நாடிக் கொள்ளும் புரிந்து
ஒரு கன்றுக் குட்டியானது பல்லாயிரம்
பசுக்களின் பசுக்களின் திரளின் உள்ளே
தனது தாயை கண்டு பிடித்துக் கொள்வது எப்படியோ அப்படியே இதுவும்
இதற்கு சம்பந்த உணர்ச்சியே காரணம்
சம்பந்த ஞானம் இல்லாதவர்களுக்கு ஒரு நாளும் எம்பெருமானைக் கிட்டுதல் சாத்தியம் அன்று
அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸூ லபம் என்றார் ஆயிற்று
அடிக்கே -அடியே- இரண்டும் பாட பேதம்-

——————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-11-20–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தான் தொழா -பேய்முலை நஞ்சு
ஊணாக வுண்டான் உருவோடு பேரல்லால்
காணா கண் கேளா செவி–11-

——————————————————————————————-

உலகம் தாயவன் -ஆஸ்ரித ரஷிப்பதில் தீஷை
முலை நஞ்சு உண்டது -துஷ்ட நிரசன தீஷை
ஜிஹ்வே கீர்த்தய கேசவம்
தம்முடைய இந்த்ரியங்கள் அவன் இடம் அவஹாஹித்த படிகளை பேசி ஹ்ருஷ்டர் ஆகிறார்-

—————————————————————————————————————————————————

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு–12

——————————————————————————————

தானே வந்து ரஷிக்குமவன் அன்றோ
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலாப் பன்றி யாய் திருவவதரித்து –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே செய்து அருளுபவன்
விலக்காமை ஒன்றே வேண்டும்
அத்தையே பற்றாசக் கொண்டு
என் ஊரைச் சொன்னாய்
பேரைச் சொன்னாய்
அடியாரை நோக்கினாய்
அவர்கள் விடாயைத் தீர்த்தாய்
ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்
மடி மாங்காய் இட்டு
பொன் வாணியன் பொன்னை உரைகல்லிலே உரைத்து மெழுகாலே எடுத்து
கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று போலே
யாத்ருச்சிகம்
ப்ராசங்கிகம்
ஆநு ஷங்கிகம்
ஸூ க்ருத விசேஷங்களை கற்பித்துக் கொண்டு
ஒன்றை பத்தாக்கி நடத்திக் கொண்டு நன்மைகளை அருளுபவன்
வேறு ஒரு உபாயாதையும் அறியாதே
ஆறேனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
இது அறியாமல்
தைலதாரை போலே இடைவிடாத த்யான பக்தி செய்து அடையலாம்
என்றும் சொல்கிறார்களே என்று நிந்திக்கிறார்
ரத்னம் ஸ்வல்ப விலைக்கு மாற்றும் செம்பட்டவன்
உள்ள விலைக்கு மாற்றும் வியாபாரி
ஸ்வயம் போக்யமாக கொள்ளும் அரசன்
செம்படவன் -பக்தி கொண்டு அல்ப அஸ்த்ர பலன்கள் பெற்று போருமவர்கள்
வியாபாரி -பக்தியை மோஷ சாதனமாக கொள்பவர்கள்
அரசன் -பக்தியை ஸ்வயம் போக்யமாக கொள்ளுமவர்கள்
அதையே பலமாகக் கொள்ளாமல் அந்த பக்தியை உபாயமாக கொண்டு
கீழ் வகுப்பில் புகுவாரை ஆர் கொல் விலக்குவார்
வானத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றுமது அல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று -இரண்டாம் திருவந்தாதி
அருள் வெள்ளம் புகப் புக்கால் தாங்கிக் கொள்ளவே
நமது நற்கிரிசைகள் உறுப்பு -என்றபடி
இந்த்ரியங்களையும்
பஞ்ச பூதங்களாலான சரீரத்தையும் சொல்லி
பக்தி உபாயத்வம் கழிக்கப் படுகிறது
என்பரே
ஏகாரத்தை அசையாகக் கொண்டு
பகவத் பிராப்திக்கு பக்தியை உபாயம் என்பர்
என்பாரும் உண்டு
இயல்வு -உபாயம்-

——————————————————————————————————————————————————————————————————

இயல்வாக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வாக
நீதியாலோதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றாரவர்–13-

————————————————————-

நித்யர்கள் அன்றோ நித்ய கைங்கர்யம் செய்ய யோக்யதை படைத்தவர்கள்
நம் போல்வார் பணிந்து உய்ய விரகு உண்டோ
வேதங்களை ஓதி
படிப்படியாக திருந்தி கிட்டும்படி
அவனே மூல ஸூ க்ருதமாக இரா நின்றான்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் எம்மான் திரிவிக்ரமனையே –
ஆதியாய் நின்றார் அவர் -இப்படி கிருஷிகள் பண்ணிக் கொண்டு
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுணா -ரகஸ்ய த்ரய சாரம்-

——————————————————————————————————————————————————————-

அவரவர் தாம்தாம் அறிந்த வாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி உருவே முதல் —14-

—————————————————————–

ஆதியாய் நின்றார் அவர் -என்றத்தை
விவரித்து அருளுகிறார்
ஸ்ரீ மன் நாராயண மூர்த்தியே பிரதானம்
உலகளந்த மூர்த்தி என்றது
சம்சாரிகளோடு
சூத்திர தேவதைகளோடு
வாசி அற எல்லாரும் தன்னுடைய
திருவடிகளின் கீழே துகை உண்ணுமாறு
வ்யாபித்தவன் –
இவனே முழு முதல் கடவுள் என்று மூதலித்தார் ஆய்த்து

அவரவர் -செய்து குணக்குறைவைக் காட்டும்

தாம்தாம் அறிந்த வாறு-
சாஸ்திரங்களையும்
சிஷ்டாசாரமும் அறியாமல்
ராஜச தாமஸபுத்திகளுக்கு எட்டியவாறு-

———————————————————————————————————————————————————————————

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி வண்ணன் முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது –15-

———————————————

முதலாவார் மூவர் -பாட பேதம்
தளை தட்டும்
மூவரே சரியான பாடம்
மூவர் -அம்மூவரினுள்ளும் -என்று மாற்றுவர்
ஆழ்வார் பாசுரங்களை நம்முடைய ஸ்வாதந்த்ர்யம் கொண்டு மாற்றுதல் கூடாதே

மூரி -பெருமையும் வலிமையையும்

நாமநீர் –பெரிய நீர் -கடல் சூழ்ந்த
சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்
முதலாய நல்லான் அருளே நன்று
பல்லார் அருளும் பழுது-

——————————————————————————————————————————————————————————————

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி–16-

———————————————————————–

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி
அரவணை மேல் கண்டு
இன்று தொழுதேன் -நிகழ கால பகவத் சேவை கிடைக்க பெற்ற ஹர்ஷம்

பழுதே பலபகலும் போயினவென்று அழுதேன்
என்கையால் இறந்த கால இழவை அனுசந்திக்கிறார்

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே
கண்டு தொழுதேன் என்ற பின்பு அஞ்ச வேண்டுவது என் என்னில்
இருப்பது இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா –
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்

கீழ் ஆறாம்பாட்டில்
ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான் -என்றும்
அன்று கருவரங்கத்துட் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் -என்றும்
அருளினவர்
பழுதே பலகாலும் போயின வென்று அழுவதாக சொல்லுவான் என் என்னில்
இப்பிறவிக்கு முன்பே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போந்த காலங்களின் நாள்கள்

பேயாழ்வார் -சென்ற நாள் செல்லாத செங்கண் மால் –எந்நாளும் நாளாகும்
எல்லா காலமும் நல்ல காலம் இறந்த எதிர் காலம் நினைவு இன்று நிகழ கால ஆனந்தத்தால்
அஃது ஒரு சொல் சமத்காரம்

அடலோத வண்ணர் ஓதம்
திருமேனியில் பரவுகின்ற லாவண்யா தரங்கங்கள்
அனுபவிக்க வருமவர்களை அடர்த்து தள்ளக் கூடியது

அஞ்சி அழுதேன் -என்கையாலே
எதிர்கால மும் கழிந்த காலம் போலே வீணாகுமோ என்ற அச்சம் தெரியுமே

————————————————————————————————————————————————————————————————————————————————

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் -வடிவுகிரால்
ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்
ஊர்ந்தான் உலகளந்த நான்று–16

—————————————————————————

பழுதே பலபகலும் போயின -என்றத்தை விவரிக்கிறார்
உலகு அளந்த திவ்ய சரித்ரத்தில் ஈடுபட்டு இருந்தேன் ஆகில்
முக்தனாய் இருப்பேனே
என்பர் -என்பதால் பிறர் சொல்லிக் கேள்விப் பட்டேனே ஒழிய
நேரிலே சேவிக்கப் பெற்றேன் இல்லையே என்கிறார்

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே –
அடியவர்களுக்கு சிரோ பூஷணமாக அமைய வேண்டிய திருவடிகளைக் கொண்டு
கல்லும் காடும் மேடுமான உலகங்களை அளப்பதே -என்கிற வருத்தம் தோன்ற

முடியும் விசும்பு அளந்தது என்பர்
எங்கள் கண் முன்னே விளங்கி
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று
பாசுரம் பேசும்படியான திரு முடியை
அஹங்காரிகளும் பகவத் விஷய சுவடு அறியாதவர்களுமான தேவதைகள் உள்ள இடத்தில் நிமிர்ப்பதே

-வடிவுகிரால்ஈரந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள்  ஊர்ந்தான் உலகளந்த நான்று –
ஹிரண்யனைப் பிளந்துஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு அருள் செய்த காலத்திலும்
ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானைக் காத்தருள பெரிய திருவடி மீது
அரை குலைய தலை குலைய விரைந்தோடி வந்த காலத்திலும்
நேரில் சேவித்து வாழாது ஒழிந்தேனே -என்கிற அனுதாபம் தோன்ற அருளிச் செய்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால்–17

———————————————————————-

இங்கும்
இழந்த நாளைக்கு அனுதாபம் பட அருளிச் செய்கிறார்
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி
இடைக்குலத்தில் வந்து பிறந்த இடத்திலும்
இழந்தேன் இ றே என்று சோகிக்கிறார்

கிருஷ்ணாவதார சரிதங்களை பேசி
ஆனந்தமாக கால ஷேபம் செய்கிறார் என்னவுமாம்

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு
உறி வெண்ணெய்தோன்ற வுண்டான்
வென்றி சூழ் களிற்றை -ஊன்றிப் பொருதுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும்
மருதிடை போய்
மண்ணளந்த மால்
மருதிடை போனது ஒரு காலத்திலும்
மண் அளந்தது ஒரு காலத்திலும் ஆகிலும்
ஆழ்வார் உடைய ஞான வைச்யத்தாலே அனுசந்தான தோரணியில்
முன் பின் என்கிற வாசி இன்றியே
எல்லாம் ஓன்று சேர விளங்குகிற படியே
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய –
பொய்ம்மாயமருதான வசுரரை-

புள்ளின் வாய் கீண்டானும் -வெண்டளை பிறழும் பாடம்-

———————————————————————————————————————————————————————————

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
ஆலினிலைத் துயின்ற வாழியான்-கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று–19-

——————————————————————————–

தம்மைப் போலே இழவாமல்
நொடிப் பொழுதும் விடாது அனுபவிக்கப் அனுபவிக்கப் பெற்றவர்கள் உண்டோ
என்று ஆராய்ந்து பார்க்க
மா கடல் நீருள்ளான்-சமுத்திர ராஜனுடைய பாக்யமே பாக்கியம்
நீ நோற்ற நோன்பைச் சொல்லி அருள்
நானும் நோற்று அந்த பேறு பெற்று உஜ்ஜீவிக்க -என்கிறார்
உறங்குவான் போலே யோகு செய்து அருளுகின்றானே

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -ஸ்ரீ ரெங்க விமானம்
அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்தச் சயாயோ மாகத ஸூ குமாரை ரங்க பர்த்துர் மயூகை
சகல ஜகதிபா நச்யா மஜீ மூத ஜைத்ரம் புளகயதி விமானம் பாவனம் லோசநே ந

மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையம் உண்டு
திருப்பாற்கடல் வெள்ளை நிறமாயினும்
எம்பெருமான் உடைய நிழலீட்டாலே கரும் கடல் ஆயிற்று
நான் விரஹத்தால் வெளுத்து இருக்க நீ நித்ய ஹர்ஷா பீடு தோற்ற மாமை பெற்று விளங்குகிறாயே
உவர்க்கும் கரும்கடல் நீருள்ளான் -உப்புக் கடலிலும் உள்ளவன் ஆகியே அத்தை விளித்ததாகவுமாம்

ஆலினிலைத் துயின்ற வாழியான்
-கோலக் கருமேனிச் செங்கண் மால்
கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
கண்படை -கண் வளர்ந்து அருளுகிற நிலை -யோகத் துயில் நிலை-

—————————————————————————————————————————————————————————————————

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் -நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20-

———————————————————————-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலும்
ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரத்திலும்
எம்பெருமான் திருவடிகளை ஏத்தி இறைஞ்சப் பெற்ற பாக்ய சாலிகள் இருந்தனரே
அடியேன் இழந்தேனே

பெற்றார் தழை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
வசு தேவ தேவகிகள் கால் விலங்கு கழன்ற
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -திருமங்கை
வாமனன் என்று கொண்டால்
பெற்றார் -தன்னை ஆஸ்ரயிக்க்க பெற்றவர்கள் என்னுமாம்
தழை -கரும பந்தம்
அது நீங்கும்படி பரம பதத்தில் நின்றும் வந்ததைச் சொல்லிற்று ஆகவுமாம்

செற்றார் படி கடந்த செங்கண் மால்
செற்றார் -சத்ருக்கள்
படி -பூமி
மகாபலி போல்வார் தங்களது என்று அபிமானித்து இருந்த பூமி –

நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று
ஏத்துவராம் நின்று -ஏத்துவரால் நின்று -பாட பேதங்கள்
பிரயோஜனாந்த பரர்களும்
ஏத்தி இறைஞ்சும் படி ஆச்சர்யம் தொனிக்க அருளிச் செய்கிறார்-

———————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-1-10–திவ்யார்த்த தீபிகை —

September 23, 2014

ஸ்ரீ யதோத்த காரி சந்நிதியில் -திரு வெக்கா திவ்ய தேசத்தின்
வலப்புறத்தில்
பொற்றாமரைப் பொய்கையிலே
ஐப்பசி திருவோணம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சமாக திருவவதரித்து அருளினார்
திரு பொய்கை ஆழ்வார்
தெண்ணீர் வயல் தொண்டை நாடு சான்றோர் உடைத்து
முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் காஞ்சி
காசி முதலிய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சிக்கு ஒவ்வாது
ஆரோடு ஈரெட்டு தொண்டை -22 திருப்பதிகள் கொண்டது தொண்டை நாடு
வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் பிரணமேத் புவி –
ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம் தேஹளீசன்
யோக பலத்தால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்து இருந்து வையகத்தை வாழ்வித்து அருளினார்-

இன்கவி பாடும் பரம கவிகள்
செஞ்சொல் கவிகாள்
செந்தமிழ் பாடுவார்

—————————————————

எண் வகை வனப்பு சொல்லும்
தொல்காப்பியம் செய்யுளில்
அம்மை அழகு தொன்மை தோல்
விருந்து இயைபு புலன் இழைபு –
விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே -என்ற தொல்காப்பிய சூத்திர உரையில்
விருந்து தானும் பழங்கதை மேலதன்றி புதிதாக தாம் வேண்டியவாற்றால்
பல செய்யுளும் தொடர்ந்து வரத் தொடுத்துச் செய்யப்படும் தொடர் நிலை மேலது -என்றும்
அது முத் தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க
கலம்பகம் முதலாயினவும் சொல்லுப -என்று உரைத்துள்ளமை காண்க
திரு அந்தாதி மேன்கையாகிய அந்தாதி மேன்மையை உடைய அந்தாதி-

————————————————————-

முதலி ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு -வையத்
தடியவர்கள் வாழ வருந்தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து-

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப்பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி -உபமானத்துக்கும் திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து -எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு -புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

—————————————————————————————————————————————————————————————–

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று–1-

——————————

வையம் தகளியா
தகளியாவது நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாய் இருக்கும் அகல்
வார் கடலே நெய்யாக

பிரபஞ்சத்தை நிருமிக்க வல்ல ஞான சக்தியாதிகளை உடையவன்
திவ்ய மங்கள விக்ராஹத்தோடு கூடியவன்
சர்வேஸ்வரன் என்றும்
அவனுக்கே அடிமை செய்வது புருஷார்த்தம் என்றும் விளக்கப்பட்டது
வாசிக கைங்கர்யம் இவர் செய்து அருளுகிறார்
இடையூறாக இருந்த சம்சார துன்பத் திரள்கள் இன்றோடு ஒழிந்திடுக என்கிறார்

அனுமானத்தால் சாதிக்கிறார் இல்லை
சாஸ்திர யோநித்வாத்
வேதத்துக்கு விருத்தம் இல்லாத அனுமானம் சாஸ்திர சம்மதம்

இடராழி நீங்குகவே யென்று
எம்பெருமானை துதியாமல் இருந்த வருத்தம் தீர
துதிக்க ஒட்டாமல் பிரதிபந்தகமாக இருந்த பாபங்கள் தொலைய
இப்பிரபந்தம் கற்று சம்சாரிகளும் துயர் தீர்ந்து வாழ
மூன்று படியாக உரைக்கலாம்

———————————————————————————————————————————————————————

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை உணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –2-

———————————–

அனுமானம் கொண்டுஅவனை சாதிக்க வேண்டிய வருத்தம் இல்லை
எல்லை அற்ற அதி மானுஷங்களான செயல்களே சாதித்துக் கொடுக்கக் கூடியவை என்கிறார் இதில்

த்வாம் சீலரூப சரிதை -ஆளவந்தார்
சித்ரைச்ச கைச்சிது சிதை பவதச் சரித்ரை -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
கேள்வி கேட்பதில் நோக்குடையது அல்ல
கடல் கடையும் போது திரையும் நுரையும் மாறாமல் இப்பொழுது தான் கடல் கடைந்தால் போலே தோற்றுகிறதே
உலகு அளக்கும் போது வைத்த அடி சுவடு மாறாமல்
வாமனன் மண் இது -என்னும்படி
இதோ தோன்றுகிறதே -என்று
பிரத்யஷமாக காட்டி அருளுகிறார்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமையால் ஸ்பஷ்டமாக தோற்றக் குறை இல்லையே ஆழ்வாருக்கு-

நேரிலே கண்டு மங்களா சாசனம் செய்யப் பெற்றிலோமே
திருவடிகளின் கீழே தலையை மடுக்கப் பெற்றிலோமே
இழவு விளங்க
ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
நம் ஆழ்வார்
மத்துறு கடை வெண்ணெய்அற களவினில் உரலிடை ஆப்புண்ட
சரிதையை
அனுசந்தித்ததும் –
எத்திறம் என்று மோஹித்தால் போலே
இவரும் -ஒன்றும் அதனை உணரேன் நான்-என்கிறார்
கடலை கடைந்ததும் உலகை அளந்ததும் அனுசந்திக்க
எம்பெருமான் கடல் உலக சம்பந்தம் நினைவுக்கு வர
அன்று அது அடைத்து உடைத்து கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் -என்கிறார்
மறிகடல் நெறிபட மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-
சேது பந்தனம் பண்ணி அருளி
பிராட்டியை கைக் கொண்டு மீண்ட பொழுது உடைத்தருளி
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்தரை கொள்ளுகின்ற -என்றபடி
தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி பள்ளி கொண்டு அருளிய கார்யங்கள்
உலகுக்காக செய்த செயல்கள்
ஆதியில் படைத்தருளி
ஸ்ரீ வராஹமாய் இடந்தருளி
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்தருளி
பின்பு வெளிப்பட உமிழ்ந்தருளி
செய்த செயல்கள் அனுசந்திக்கப் பட்டன
இப்படி அதிமாநுஷ சேஷ்டிதங்களை செய்து அருளினவன் ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ‘
இந்த செயல்களே அவனுடைய உண்மையை சாதித்து தர வல்லன -என்கிறார்-

——————————————————————————————————————————————————————————————————-

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ யளவு கண்ட நெறி –3

———————————

பாரளவும் ஓரடியை வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –
உலகளந்த சரிதையில் ஈடுபட்டு அருளுகிறார்

அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி
அளப்பது -மாறி காலிடுதல்
ஓர் இடத்திலே நின்று கொண்டு இருப்பது அளத்தல் ஆகாதே
மாறி இடுவதற்கு அவகாசம் இல்லையே
சமத்காரமாக
நீ யளவு கண்ட நெறிஅறிகிலேன்-என்கிறார்

கழல் தலம் ஒன்றே நிலம் முழுதாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்கு அளக்கின்றதே -திரு விருத்தம் -58

அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையில் நின்றாரை அளந்தார் என்ன ஒண்ணாது இ றே
அடி மாறிலிடில் அன்றே அளந்ததாவது
இவன் இங்கே அளந்தானாக ஒன்றும் காண்கிறி லோமீ-பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் அவ்விடத்தில்

சூருருவின் பேயளவு கண்ட பெருமான்
சம்போதனம் -விளி
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் நிகண்டு
தெய்வ நங்கை -யசோதை உருவில் வந்தவள்
அவள் ஆயுளின் அளவைக் கண்டுவிடுதல் முடித்தல்
தனது வல்லமையால் அளவிட்டு காண நினைப்பவர்கள் பூதனை பட்ட பாடு படுவார்கள்-

——————————————————————————————————————————————————————————-

நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி -அறிவானாம்
ஆலமர நீழலறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமமர் கண்டத் தரன் –4-

—————————————————————–
அகஸ்த்யர்
புலஸ்தியர்
தஷர்
மார்கண்டேயர் -நான்கு சிஷ்யர்களுக்கும்
தர்மோபதேசம் செய்த சிவன்
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞால
மளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு -நான் முகன் திருவந்தாதி -17-

அறிவானாம்
அறிந்து விட்டதாக செருக்கு உற்று இருக்கிறானே
இது என்ன அறிவு கேடு -என்கிறார்
அரன் -நெறி வாசல் தானேயாய் நின்றானை-அறிவானாம் -என்று அந்வயம்

நெறி -உபாயம்
வாசல் -உபேயம்
அன்றிக்கே நெறி வாசல் -ஸ்வரூபத்துக்கு ஏற்ற உபாயம் என்றுமாம்

ஆலமமர் கண்டத் தரன்
தமோ குணத்துக்கு தக்க செயலைச் செய்பவன் அன்றி
சாத்விகர் செய்யும் செயலை செய்ய வல்லவன் அன்றே-

———————————————————————————————————————————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று –5-

—————————————————

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி
உரைநூல் மறை யுறையும் கோயில் -வரைநீர்
கருமம் அழிப்பு அழிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி யொன்று
இருவர் உடைய
நாமம்
ரூபம்
வாஹனம்
தொழில்
முதலியவற்றால் நன்கு விளங்கும்

சர்வ ரஷகன் இவன் சர்வ பஷன் அவன்

அட மாடே நிந்திக்கும் ரிஷபம் அவனுக்கு வாஹனம்
இவனுக்கு ஸூ பர்ணோசி கருத்மான் -வேதாத்மா விஹகேச்வர –
வேத ஸ்வரூபி பெரிய திருவடி

வேதம் இவனை பிரதிபாதிக்கும் ஆகம நூல் அவனுக்கு

அருளார் திருச் சக்கரம் இவன் திருக்கையில் சூலம் அவனது கையில்

ரூபமேவாச்ய ஏதன் மஹிமா நம் வ்யாசஷ்டே
உருவம் எரி கார் மேனி ஓன்று
காலாக்னி போலே அவன் உருவம்
காளமேகம் போல் செல்வ நாரணன் திரு உருவம்
ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் -திரு நெடும் தாண்டகம்

உபநிஷத் -அங்கான் யன்யா தேவதா -நாராயணன் அங்கி அரன் -அங்கம் -அதனால் மேனி ஓன்று என்கிறார்
ஓன்று சரீரம் என்றால் மற்று ஓன்று சரீரி தானே
அந்தர்யாமி ப்ராஹ்மணம்-ஸ்ரீ மன் நாராயணனே சர்வ சரீரி-

———————————————————————————————————————————————————————————-

ஓன்று மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருவரங்கமே யான் திசை–6-

திசை -தன்மை பொருளில் இங்கே

——————————————

அரன் அறிவானாம் என்றீர்
நீர் பிரபந்தம் அருளிச் செய்து சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது எங்கனே என்ன
எம்பெருமான் திருவருளால் -அவனே காட்டக் கண்டு
ஜாயமானம் ஹி புருஷம்யம் பச்யேத் மது ஸூ தன
சாத்விகஸ் ஸ து விஜ்ஞேய ஸ வை மோஷார்த்த சிந்தக –

ஓத நீர் வண்ணனை -வடிவு அழகு நெஞ்சிலே ஊறப் பெற்றவர்
மறக்க சம்பாவிதம் அல்ல –
எப்போதும் கடாஷித்து விஷயீ கரிக்க அவனே திருவரங்கம் மேயான் -என்கிறார்-

கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுதேன்-
அயோ நிஜார் கர்ப்ப வாசம் உண்டோ என்றால்
சீயும் நரம்பும் –நாற்றமும் மிக்கு இருக்கிற
கர்ப்பத் தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறக்க வில்லை
எங்கு நின்றும் ஆவிர்பவித்தாரோ அதுவே கர்ப்ப ஸ்தானம்
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே-என்னக் கடவது இ றே
இருள் தரும் மா ஞாலதுக்குள் வரும் முன்பே அவன் கடாஷித்தான்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-

————————————————————————————————————————————————————————–

திசையும் திசை யுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு–7-

—————————————————————–

பரம விலஷணமான அவனை அனுபவிக்க மாட்டாத
சூத்திர ஜனங்களை மயக்க
இவை எல்லாம் ஏற்படுத்தப் பட்டன -என்கிறார்
ஒவ்வொரு ஸ்தானத்திலும் ஒவ்வொரு தேவதையை ஏற்படுத்தி
தெய்வத்துக்கு இசையும் கருமங்களையும் ஏற்படுத்தி
நான் முகன் -படைக்க
சிவன் -சம்ஹாரம் -காம தஹனம் -திரிபுரம் மூன்று எரித்தல்
இந்த்ரன் -மெய் காட்டிக் கொள்ளும் தொழில்
யமன் -உயிர் நீக்கும் தொழில்
மோகினி உருவம் கொண்டு மயக்கினால் போலே
அமுதம் விஷம் யானை சந்தரன் கல்பவ்ருஷம் அப்சரஸ் போன்ற
விசித்திர பொருள்களை படைத்தருள வல்லவன்
இவற்றையும் உண்டாக்கி மயக்கி -என்றவாறு-

————————————————————————————————————————————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும்  எரி கதிரோன் தன்னை -முயங்கு அமருள்
தேராழியால் மறைத்தது என் நீ திருமால்
போராழி க் கையால் பொருது –8-

———————————————

ஆஸ்ரித பஷ பாதி -என்கிறார்
நாழிகை கூறிட்டுக் காத்து -அரசர்கள் தம் முகப்பே நாழிகை போக படை பொருத–தேவகி தன் சிறுவன் -பெரியாழ்வார்
திருவாழி பிரகாசம் மழுங்கிப் போக கடவ ஒரு சாபம் ஏற்பட்டு இருந்தது என்றும்
அதனால் மறைத்தான் என்பர்

போராழி க் கையால் பொருது
பீஷ்மரை தேரில் இருந்து இறங்கி துரத்திக் கொன்ற

முயங்கு அமர் -பலர் திரண்டு நெருங்கி-

——————————————————————————————————————————————————————————————

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவில் நீ யளந்த மண்–9-

——————————————–
விரிதோட்ட-ஒளி விரிகின்ற திருக் குண்டலங்கள் அணிந்து இருந்தவனே

மகர நெடும் குழைக் காதனே விரி தோட -விகாரம் பெற்று விரி தோட்ட –
மலர்ந்த இதழ்களை உடைய தாமரை போன்ற சேவடி என்றுமாம்-
பாராருலகம் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏராருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -திருமங்கை ஆழ்வார்-பெரிய திருமொழி -8-8-3-
தன்னை அழிய மாறியும் ரஷித்து அருளுபவன்
ஆபத்து வந்தால் தலையாலே சுமந்து நோக்குதல்
தலையிலே காலை வைத்து நோக்குதல் செய்யுமவன் அன்றோ நீ
ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ
என்று உகந்து அனுபவிக்கிறார்
உதாரனாய் இருப்பான் ஒருவன் நாலு பேருக்கு சோறிட நினைத்து
நாற்பது பேருக்கும் இட்டு
மிகும்படி சோறு உண்டாக்குவான் போலே
ரஷ்யத்தின் அளவன்று இ றே ரஷகனின் பாரிப்பு
இந்த பிரபந்தத்தில்
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் உலகளந்த ஞான்று வராகத்
தெயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்தபடி –84

——————————————————————————————————————————————————————————————–

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் -எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்கு அன்று இவ்
வுலகளவும் உண்டோ உன் வாய்-10-

—————————————————–

சிறிய வாயினால் பெரிய உலகங்களை எல்லாம் விழுங்க வல்ல
அகடிகடநா சாமர்தம் உள்ளவன் நீ

அலகு அளவு கண்ட சீர்
அலகு -நூறு ஆயிரம் பதினாறாயிரம் லஷம் கோடி சங்கம் மகா சங்கம் பத்மம்
அளவு காண்கை எண்களின் எல்லைக்கு மேல் பட்டு போதல்
அசங்க்யேய கல்யாண குணகனௌ மகார்ணவ -ஸ்ரீ பாஷ்யகாரர்
சீர் ஆழியாய்க்கு ஆழியான்
சமுத்ரம் போன்ற கல்யாண குணங்கள்
கல்யாண குணக்கடலும் சக்ராயுதத்தையும் உடையவன் –

————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -100 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு
நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்

பெறுவதும் அவனையே
பெறுகைக்கு சாதனமும்
அவனே என்று –
அத்யவசித்துப்   போவாய் –
என்கிறார் –

—————————————

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–எம்பெருமானையே
மனத்து வை–மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

—————————————

வியாக்யானம் –

ஓரடியும்-
எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட
ஒரு திருவடிகளும் –

சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும்
ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –

ஈரடியும் காணலாம் என்நெஞ்சே-
அவ்விரண்டு திருவடிகளும்
நமக்குக் காணலாம்
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் –

என் நெஞ்சே –
காண வேணும் என்று இருக்கிற நெஞ்சே
இதுக்கு உபாயம் ஏது என்னில் –

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி  –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம்
பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி
வாழும் அத்தனை
என்கிறார்  –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -99 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –
ஆன பின்பு  -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட
நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –
என்கிறார் –

——————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்ய வாளம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்ய வாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்து கொள்.

—————————————–

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே -நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –

நீயும்  உளையாய்   இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க்  காண் –

பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-

அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-

நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச்  சொல்லி வைக்குமா போலே –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன்  –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது ஹ்ருத்தாய்க் கொண்டு –
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய்  –
நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –

என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ வித்து -என்றவனோடு
வாசி இல்லை –

உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்

பின்னிவன்  என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத்  தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே

அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு
அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -4-5-10-என்னுமா போலே –

—————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -98 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

அவிர் சடை மேல் பாய்ந்த -என்று கொண்டு
அவன் திருவடிகளிலே ஒரு சம்பந்தம் உடைய கங்கையை இவன் ஜடையிலே தரித்தான் என்று
இவனைக் குறையச் சொல்லுகிறது என்-
அவனைத் தனியே ஈஸ்வரனாகவும்
அவன் ஒரு கார்யத்துக்குக் கடவனாகவும் அன்றோ சொல்லுகிறது
என்னில்
அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது
அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –

—————————————

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடைமுடியை யுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

—————————–

வியாக்யானம் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும் –
பொன் போலே உஜ்ஜ்வலம் ஆகா நின்றுள்ள
வடிவையும் பின்னின சடையையும் உடைய

அம் புண்ணியனும்
அழகியதாக சாதனத்தை அனுஷ்டித்து உள்ளவனும் –

பொன் திகழும் மேனி –
சர்வேஸ்வரன் மேக ஸ்யாமனாய் இருக்கும் இறே –
அதுக்கு எதிர் தட்டு

புரி சடை –
தாழ் சடையானுக்கும் நீண்  முடியானுக்கும்
வாசி பார்த்துக் கொள்ளும் இத்தனை இறே

அம் புண்ணியனும் –
ஹூத்வாத்மா நம் தேவதேவோ பபூவ -என்னும்படியே
பாபம் ப்ராமாதிகம்
இப் பததுக்கு அடியாகப் பண்ணின புண்யம் –

நின்றுலகம் தாய நெடுமாலும்
ஸ்வைரமாக ஆதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும்
ருத்ரன் தன்னோடு பிறரோடு வாசி அற
எல்லார் தலைகளிலும் திருவடிகளை
நின்ற இடத்தே நின்று வைக்கப் பிறந்த சர்வேஸ்வரனும்-

என்றும் இருவரங்கத்தால் திரிவரேலும் –
எப்போதும் இரண்டு தேஹத்தைப் பரிஹரித்துக் கொடு
திரிந்தார்களே யாகிலும் –

ஒருவன் ஒரு வனங்கத் தென்று முளன் –
ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்

அன்றிக்கே
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி
லப்த ஸ்வரூபனாய் இருக்கும் என்னுதல்-
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – திருவாய்மொழி -1-3-9-என்னும்படியே –

ஆக
இத்தால்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்  தெய்வம் மற்றில்லை -திருவாய்மொழி -4-10-3-என்றபடி –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -97 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று
அவனையே பாவனத்வமாகச் சொன்னீர்
புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ
என்னில்
அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம்
என்கிறார் –

பிடிசேர்
கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  –

——————————————–

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடை மேல்–ஒளி பொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜலமயமான
கங்கை என்னும் பேர்–கங்கை யென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்–சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

———————————–

வியாக்யானம் –

பிடிசேர் களிறளித்த பேராளா –
பிடியோடு சேர்ந்த களிறு ஆயிற்று

அதாகிறது
அத்தோடு சேரத் திரியுமதுக்கு மேல் பட
ஸ்வ ஹிதத்தில் ஒரு சிந்தை பண்ணி அறியாதாய்த்து –
சாந்தோ தாந்த உபரத ஸ்திதி ஷூ -என்னுமவன் இறே மோஷத்துக்கு அதிகாரி

அன்றிக்கே
தன் பக்கல் பிரவணம் ஆகாதே
விஷய ப்ரவணமாகை இறே பாபம் ஆவது –

பிடியின் பக்கலிலே ப்ரவணமாய் –
தன் பக்கலிலே இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது
தான் இட்ட வழக்காக வேண்டாவோ

அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்து இருந்திலையோ  –
ஒருக்கால் நினைத்தானே என்னில் முன்புத்தை ஸ்வரூபம் இது வன்றோ என்கிறது
இத்தால் ஜன்ம வ்ருத்தங்கள் பிரயோஜகம் அன்று -என்கிறார்

அளித்த பேராளா –
அத்தை நோக்கின பெரியோனே
இப்படி அதிகாரி சம்பத்தி இல்லாதவனையே ரஷித்தான் என்றால்
அவன் செய்தானாகில் கூடும் என்று இருக்கை-

பேராளா  –
அவ்வளவேயோ உன் கிருபை
எல்லா வுலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ -திருவாய்மொழி -3-3-3-

உந்தன் அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –
உன் திருவடிகளை கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் பெற்றது

இத்தால்
தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது

க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
கங்கை தனக்கே தர்மத்வம் சொல்லா நின்றது இறே என்னில்

அதினுடைய பாவனத்வத்துக்கும் அடி அவன் என்கிறது –
பிறரையும் சுத்தமாக்கும்படி பார்த்து அருளினான் –

பொடி சேர் –
பஸ்மத்தை தரித்து இருக்கும் என்னுதல்
அதிலே போய்ச் சாயும் என்னுதல்-

அனற்கு அங்கை ஏற்றான் –
அக்னிக்கு அழகிய கையை ஏற்றான்
பஸ்மத் சந்தன் இறே
இது ஒழிந்த பிராயச் சிந்தங்களால்  பாபம் போகாது ஒழிந்த படி
இவனுடைய ஈஸ்வர அபிமானத்தை வந்தேறி யன்றே என்று இருந்தான் –

ஸ்வா பாவிக சம்பந்தத்தையே நினைத்து ரஷித்தான்-

அவனுடைய
அவிர்சடை  மேல் பாய்ந்த-
ஒளியை யுடைய சிவந்த சடையின் மேலே வந்து குதித்த நீரை
உடையளாய் கங்கை என்னும் பேரையும் உடையளாய்
ஸ்லாக்யையான ஸ்த்ரீயானவளும் –

உந்தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது

நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்-பெரியாழ்வார் திருமொழி -4-7-2-
பாதோதகேன ச சிவா
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை
உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை
யத் த்வத் ப்ரியம் ததி ஹ புண்யம் அபுண்ய மன்யத் -அதிமாநுஷ ஸ்தவம் -53-

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -96 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

சேதனர் செய்தபடி செய்ய
நெஞ்சே
நீ முன்பு நான் சொல்லுகிற இத்தை அழகிதாக புத்தி பண்ணு
என்கிறார் –

————————-

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான்–இந்தப் பூமியும்
மறி கடல் தான்–அலையெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலே யாவன்;
கடைக் கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மை யென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக் கொள்.

——————————

வியாக்யானம் –

திறம்பாது கடைக்கட் பிடி -என்று
மேலே கூட்டவுமாம் –

திறம்பாது அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்-என்று
எம்பெருமானோடே கூட்டவுமாம்

அன்றிக்கே
திறம்பாது என் நெஞ்சமே-என்று கிடந்தபடியே என்னவுமாம்

நான் சொல்லிற்று தப்பாதே செய்து போருகிற நெஞ்சே
அர்த்த தத்வம் கண்டு அல்லது கால் வாங்கேன் என்று இருக்கிற நெஞ்சே

என் நெஞ்சமே –
சொல்லு சொல்லு என்று அலைக்கிற நெஞ்சே –

செங்கண் மால் கண்டாய்-
புண்டரீகாஷனான  சர்வேஸ்வரன் கண்டாயே
யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் -திருவாய்மொழி -6-7-10-

அன்றிக்கே
செங்கண் மால்
நம் விஷயத்தில் அவன் இருக்கிறபடி கண்டாயே –

அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் –
புண்ய பாப ரூப கர்மங்கள் ஆகிறான் அவன் கிடாய்
அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்களுக்கு புறம்பாய் நின்று
பல பிரதமாக வல்லது ஓன்று இல்லை கிடாய்

விஹிதத்தைச் செய்து
நிஷிதத்தைப் பரிஹரித்து போருகிற  நம்மோடு
விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில்

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி –
தம்முடைய பக்கல் கர்த்ருத்வம் தவிர்ந்த பின்பு ஓர் அசேதன கிரியையைப் பற்றுமவர் அன்றே

செங்கண் மால் கண்டாய் –
சர்வ நியந்தா கிடாய் அவன் -என்கிறார் –
திறம்பாது அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்
அவனை ஒழியப் புண்ய பாபம் என்று தோற்றுவது
ஆபாத ப்ரதீதியில்
நிலை நின்று பார்த்தால் அவனே கடவும் என்று தோற்றும்
எங்கனே என்னில்  –

புறம் தான் இம் மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே-
சர்வமும் பகவததீனம் அன்றோ
இம் மண்ணும் மறி கடலும் மாருதமும் புறம் தான்
இவற்றுக்கும் அவ்வருகான மகாதாதிகளும் இவை எல்லாம் ஆகிறான் அவன் கிடாய் என்கிறார்
பிரதிபந்தகமான அசித்தோடு கூடிய சேதனமும் அவனே –

கண்டாய்  கடைக்கட்   பிடி-
இத்தைக் கடைப்பிடி -என்றபடி –
அன்றிக்கே
கடைக்கண் என்றாக்கி முடிவில் வந்தால் இருக்கும்படி அது கிடாய்
இத்தை திறம்பாது பிடி –
தவிராமல் புத்தி பண்ணு

மண் தான் இத்யாதி –
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிருமானாய் -திருவாய்மொழி -6-9-7-
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமே நிரங்குசமாகச் சொல்லா நிற்க
இங்கே தன் ஸ்வா தந்த்ர்யம் சொல்லுகிறபடி எங்கனே என்னில்

கார்யத்தில் ஒன்றும் இல்லை
பிரதிபத்தி மாத்ரமே இவனுக்கு உள்ளது
அன்யதா ப்ரதிபத்யதே
அவன் கிருபையாலே இவன் சத்தை அழியாதே கிடக்கிற இத்தனை –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -95 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 3, 2014

அவதாரிகை –

என் நா அவனை ஒழிய ஷண காலமும் ஏத்தாது என்றாரே
பாவியேன் இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு
சேதனர் சம்சாரத்துக்குப்
பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என் என்று
விஸ்மிதர் ஆகிறார் –

————————–

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ஸ்ரமப்படுத் தேட வேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப் பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம் போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக் கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத்தன்மை யற்ற [திரும்பி வருதலில்லாத]
மா கதிக்கண்–பரம ப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகை யுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படி யிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக்கதிக் கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

———————————

வியாக்யானம் –

நா வாயில் உண்டே –
இது முன்னம் புறம்பு போய்த் தேட வேண்டாவே
இத்தை ஈஸ்வரன் பண்டே தந்து வைத்தானே
நாவாகில் அவனை ஏத்தக் கண்டது இறே
ஸ்ருஷ்டத்வம் வன வாசாய -அயோத்யா -40-5-என்னுமா போலே –

நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சகஸ்ராஷரீ மாலா மந்த்ரம் என்கிறவை போலே
நீள  நீள ஒரு நாள் எல்லாம் சொல்லா நின்றாலும் முடிவு கொண்டு வர
ஒண்ணாத படி இருக்கை அன்றிக்கே
பத்து உருச் சொல்லி ஒரு கால் இளைப்பாறும் படியான
திருமந்த்ரத்தைத் தந்து வைத்தானே

அந் நாக்குக் கண்டவோபாதி திரு நாமும் இவனுக்கு -அவனே அருளி தந்ததே
கிம் தாத்ரா பஹூபிர் மந்த்ரை-
மற்றை பகவத் மந்த்ரங்களைச் சொல்லுகிறது  –

மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை  உண்டே –
சில நாள் இருந்து
பின்னை த்வம்ஸ என்று முகம் கீழ்ப் படத் தள்ளுகை அன்றிக்கே
அபுநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை
ப்ராபிக்கும் மரியாதையை உண்டாக்கி வைத்தானே –

என்னொருவர் தீக்கண் செல்லும் திறம் –
இவை இங்கனே குறைவற்று இருக்க
சம்சாரத்தைச் சென்று
ப்ராபிக்கிற பிரகாரம் இருந்தபடி என்

உஜ்ஜீவிக்கைக்கு நேர் வழி கிடக்க
விநாசத்துக்கு ஈடான விலக்கடி தேடி
அனர்த்தப் படுவதே

அநாத்மன் யாத்மா புத்திர்யா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11 –

ஸ்ரீ ஈட்டில்(-1-2-8) ஸ்ரீ ஸூக்திகள்
நா வாயில் உண்டே -இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே –
நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -சஹஸ்ர அக்ஷரமாலா மந்த்ரம் போல் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தாய் நடுவே விச்சியாதே சொல்லலாம் திரு நாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதி கண் செல்லும் வகை உண்டே -புநரா வ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை யுண்டாக்கி வைத்தானே
என் ஒருவர் தீக்கதி கண் செல்லும் திறம் -இங்கனே இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிறது எங்கனேயோ –

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –