புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
அரியுருபும் ஆளுருவுமாகி –எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை –31-
——————————————————————————————————–
புரியொரு கை பற்றி யோர் பொன்னாழி யேந்தி
வலம்புரி -சங்கு ஒரு கை
சத்தியபாமை -பாமை போலே
எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டே
சில அவதாரங்களில் மறைந்தும்
சில அவதாரங்களில் வெளித் தோன்றியும்
காரணார்த்த மாகவாம்
அரியுருபும் ஆளுருவுமாகி —
எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த
நெருப்பு நிறமாய் இருக்கும் ஆதலால் ஹிரண்யன் –
மாலடியை யல்லால் மற்று
எண்ணதான் ஆமோ இமை
இதை ஆராய்ந்து பார் நெஞ்சே –
பிரஹ்லாதன் இடத்தில் உள்ள வாத்சல்யத்தாலே
செய்து அருளின செயல்
இத்தை அனுசந்தித்தால் இவனை விட்டு வேறு ஒரு விஷயத்தை
ஒரு நொடிப் பொழுதாகிலும் நினைக்க வழி உண்டோ-
———————————————————————————————————————————
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிரவாய்
நாகத்தணையான் நகர்–32-
—————————————————————————————
இமையாத கண்ணால்
ஞானத்தில் குறைவில்லாத நெஞ்சு என்னும்
உட் கண்ணாலே
இருள் அகல
அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நீங்கும் படியாக
நோக்கி
தன் ஸ்வரூபத்தையும்
பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்
உள்ளபடி கண்டு
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் -நமையாமல்
அமையா -திருப்தி பெற்று அடங்கி இராதே
பொறிகள் ஐந்தும் புலன் ஐந்தும்
செவி வாய் கண் மூக்கு உடல் பஞ்ச இந்த்ரியங்களையும்
சப்தம் ரூபம் ரசம் கந்தம் ஸ்பர்சம் பஞ்ச விஷயங்களுக்கும்
பட்டி மேய்க்க விடாமல் அடக்கி ஆளாதே
நமையாமல் -அடக்காமல்
ஆகத்து அணைப்பார்
மாதர்கள் தேகத்தை அனைத்துக் கொண்டு
கண்டபடி திரிபவர்கள்
ஆயிரவாய் நாகத்தணையான் நகர்
எம்பெருமானது ஸ்ரீ வைகுண்டம்
அணைவரே
அணைவர் அணைவரா-இரண்டு வகையிலும் பொருள்
எம்பெருமான் தானாகவே கடாஷிக்கும் பொழுது
அவனை விலக்காதவர்களுக்கு
உஜ்ஜீவிக்க வழி உண்டு
இதில் ஆகத்து அணைப்பார் -எம்பெருமானாலே அந்தரங்கமாக விஷயீ கரிப்பப் பெற்றால்
கிருபா வைபவ உக்தி -இதுவே ஆழ்வார்களுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அபிமதமாய் இருக்கும் –
————————————————————————————————————————————————————-
நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறைப்பயந்த பண்பன் -பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியாலாம் பயன் அங்கு என் –33-
———————————————————————
நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
திரு நாபி கமலத்திலே
பிரமனுக்கு இருப்பிடத்தை ஏற்படுத்தி அருளையும்
அந்தரங்கருக்கு அருகிலே மாளிகை அமைக்குமா போலே
பகர மறைப்பயந்த பண்பன் –
யோக்யர்கள் எல்லாம் ஓதும்படி
வேதத்தை உபகரித்த குணசாலியான எம்பெருமானுடைய
மத்ஸ்ய ஹம்ச அவதார முகேன
-பெயரினையே
திரு நாமங்களையே
புந்தியால் சிந்தியாது
மனத்தினால் எண்ணாமல்
ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –
ஜபம் செய்வதும்
உரு சொல்வதும் மான
சந்தா வந்தனம் போன்ற கர்மானுஷ்டன்களால்
உண்டாக போகிற பிரயோஜனம் என்ன –
ஒன்றும் இல்லையே
எம்பெருமானை உள்ளீடகக் கொள்ளாத இவற்றால் –
அந்தரங்க பகவத் பக்தியே முக்கியம் –
—————————————————————————————————————————————————————–
என்னொருவர் மெய்யன்பர் ஏழு உலகுண்டு ஆலிலையில்
முன்னொருவனாகிய முகில் வண்ணா -நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறு–34-
————————————————-
என்னொருவர் மெய்யன்பர்
ஏழு உலகுண்டு ஆலிலையில் முன்னொருவனாகிய முகில் வண்ணா –
நின்னுருகிப்பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால்
ஒருத்தி வந்து முலை தந்து
பட்ட பாடு கண் எதிரே காணா நிற்கச் செய்தே
பேரமர்க்கண்-
கண்ணபிரானை கொள்ளக் கருதி அதற்கு முயன்ற இடம்
பேரமர்க்கண் ஆய்த்தாய் முலை தந்தவாறு –
ஒன்றுடன் சண்டை செய்யும் பெரிய கண்களை உடைய யசோதை என்றுமாம்
இன்னும் ஒருத்தி கிட்ட தான் வர முடியுமா
அஞ்சாமல் கிட்டி வந்து முலை கொடுக்கத் தான் முடியுமோ
இதை எங்கனே மெய் என்னக் கொள்ளலாம்
விஷத்துக்கு மாற்றாக அமுதம் போன்ற ஸ்தநயம் கொடுத்தவள்
அவள் போன்ற மெய்யான பக்தர்களுக்கு விஸ்வாசம் இருக்கும்-
———————————————————————————————————————————————————–
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ -தேறி
நெடியோய் அடியடைதற்கு அன்றே ஈரைந்து
முடியான் படைத்த முரண்–35-
————————————————————————
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
நிரம்பின பக்தி இல்லாதவர்களாய்
சேஷத்வ ஞானத்தை மாத்ரம் உடையவராய்
தங்கள் உடைய ச்நேஹத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ –
சொல்லும் வார்த்தைகளை
நீ குற்றமாக கொள்ளாதே
-தேறி -நெடியோய் அடியடைதற்கு அன்றே-
பெருமை பொருந்திய உன்னுடைய திருவடிகளை
தேறி -தெளிந்து வந்து –
சிசுபாலனுக்கு
கிட்டுகைக்கு காரணமாக விட்டதன்றோ
ஈரைந்து முடியான் படைத்த முரண்
இராவணன் புத்தி பூர்வகமாக
பண்ணிய தப்புக் கார்யம்
நம் போல்வாரின் போலியான ஆனுகூல்யமே
அவன் திருவடி அடைய தடை உண்டோ -என்றவாறு
ஹிரண்யன் ஹிரண்யாஷன்
இராவணன் சிசுபாலன்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த
சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன்
ஆறிய அன்பு இல் அடியார் -தம்மை சொல்லிக் கொள்கிறார் நைச்சாயனுசந்தானம்
தன்மையில் வந்த படர்க்கை-
—————————————————————————————————————————————————–
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே -இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை–35-
—————————————————————————–
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே
சம்சாரிகளின் மிடுக்கை தொலைக்கலாம்
என்று அல்லவோ
முன்னம் தரணி தனதாகத் தானே -இரணியனைப்
முற்காலத்தில்
பூமி எல்லாம் தன்னுடையது என்று
அஹங்காரம் கொண்டு இருந்த ஹிரண்யா ஸூரனை
புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக் கையால் நீ
புண்படுத்திப் பிளந்த
கூர்மையான நகங்கள் பொருந்திய
அழகிய திருவாழியைக் கொண்ட
திருக்கையினால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை
மாவலியிடத்தில்
பூமியை யாசித்து பெற்றதானது –
கொல்லாமல் -விட்டு பங்கமும் படுத்தாமல் -யாசித்து பெற்றது
தன்னுடைய இந்த -சௌலப்யம் உணர்ந்து
சம்சாரிகள் அஹங்காரம் விட்டு ஒழிந்து ஆட்படக் கூடும் எண்ணும் திரு உள்ளத்தாலோ –
——————————————————————————————————————————————————————-
வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மாலுகந்த ஊர்–37-
——————————————————————————————-
மூன்று பாசுரங்களாலே திரு மலையை அனுபவிக்கிறார்
வகையறு –
அல்ப பலன்களையும்
பரம புருஷார்த்தத்தையும்
உட்புகுந்து இன்னவகை இன்னவகை என்று அறிதி இடுவதற்கு உறுப்பான –
நுண் கேள்வி வாய்வார்கள்-
ஸூ ஷ்மார்த்த
ஸ்ரவணம்
உடையவர்களான
நாளும்
நித்யமும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி-
தூப தீபங்களையும்
புஷ்பங்களையும்
தீரத்தையும்
தரித்துக் கொண்டு –
திசை திசையின்
பல திக்குகளில் நின்றும்
வேதியர்கள்
வைதிகர்கள்
சென்று இறைஞ்சும்
வந்து சேர்ந்து வணங்கும் இடமான
வேங்கடமே
திரு வேங்கட மலையானது
வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர்
பாரத போரிலே
வெளுத்த பாஞ்ச ஜன்யம் ஊதிய
வயாமோகமே வடிவு கொண்டவனே
உகந்து அருளின திவ்ய தேசமாம்-
——————————————————————————————————————————-
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியை -காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம் என்னும் மாலதிடம்–38-
————————————————————————————–
திருவேங்கட மலையே அமரர்கள் அதிபதி
திரு உள்ளம் உகந்து எழுந்து அருளி இருக்கும் இடம் என்கிறார் –
ஊரும் வரி அரவம்
மலைப்பாம்புகள்
இயற்கையாக திரிகின்ற பாம்புகள் என்றும்
யானைகளை விழுங்கும் பாம்புகள்
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -திருமங்கை ஆழ்வார்
நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் அனுசந்தேயம்
இடி கொள் வேழத்தை எயிற்றோடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என வடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாமித்து ஏற
படிகடாமெனப் தாழ்வரை கிடப்பான பாராய் -கம்பர் சித்ரகூடபடலம் -34-
ஒண் குறவர் மால் யானை
ஒண் குறவர் -இவைகள் உடைய பாட்டன் பாட்டனில்
ஒருத்தன் பூமியில் இறங்கினான் என்னும்
பழி இன்றிக்கே இருக்கை-வம்ச பரம்பரையாக திருமலையிலே நித்ய வாசம் பண்ணுபவர்கள்
பட்டி மேயும் யானைகளின் மீது
பேர எறிந்த பெரு மணியை –
பெரிய மாணிக்கக் கட்டியை எறிய
நமக்கு கல் போலே அங்கு குறவர்களுக்கு மாணிக்கங்கள்
காருடைய மின்னென்று புற்றடையும்
யானையை மேகமாகவும்
ரத்னத்தை மின்னலாகவும் பிரமித்து
பின்னால் வரப் போகும் இடிக்கு அஞ்சி
புற்றினுள்ளே புகா நிற்கும்
பாம்புகள் மேகம் கண்டு யானையாக பிரமித்தது மேலே திருமொழி பாசுரத்தில்
வேங்கடமே
மேலசுரர் -மேல் சுரர் -நித்ய சூரிகள்
எம் என்னும் மாலதிடம்
எம்மது என்று மேல் விழுந்து ஆஸ்ரியத் தக்க பெருமையான இடம்
ஆஸ்ரியத் தக்கவனான அவன் இடம் என்றுமாம்
திவ்ய தேசத்தில் உள்ள சராசரங்கள் எல்லாம் மெய்யன்பருக்கு உத்தேச்யமாய் இருக்குமே
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –
வேங்கடக் கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே –
செண்பகமாய் பிறக்கும் திரு உடையேன் ஆவேனே
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே
பொற்குடவாம் அரும் தவத்தேன் ஆவேனே
கானாறாய்ப் பாயும் கருத்துடையன் ஆவேனே
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே –
பாம்பாகவும்
குறவராகவும்
யானையாகவும்
புற்றாகவும் -இருக்கலாமே-
—————————————————————————————————————————————————————————————
இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச -கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39-
—————————————————————————-
எம்பெருமான் உடைய பல
சேஷ்டிதங்களை அனுசந்தித்து இனியராகிறார்
இடந்தது பூமி –
மகா வராஹமாக உத்தரித்து
எடுத்தது குன்றம்
கோவர்த்தன மலையை குடையாக எடுத்து
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச
கஞ்சனை கொன்று ஒழித்து
-கிடந்ததுவும் நீரோத மா கடலே
திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து அருளி
நின்றதுவும் வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது –
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாக
தனது பெருமை பொலிய நின்றான்
பிறர் கார்யமே பொழுது போக்காக செய்து அருளுபவன் நீர்மைவருணிக்க முடியாதே
நாமோ
பெருமாளை உகந்தோம் என்று சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்று நாளும் பத்தும் பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சூது சதுரங்கம் பொருதல் உறங்குதல் செய்வுதோம்
ஒன்றிலும் ச்நேஹம் இல்லை
பல பல கார்யங்களில் நெஞ்சு செலுத்திக் கிடக்கிறோம் -என்றபடி
மெய்யடியார்கள் பகவத் விஷயத்தில் ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
அது தன்னிலே தோள் கீழ் இறங்கார்-கொக்குக்கு ஒன்றே மதி போல் –
———————————————————————————————————————————————————————————–
பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று–40-
————————————————————————————-
பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
பெரிய வில்லையும்
அம்புகளையும் உடையரான
குறவர்களின் உடைய கையில் பிடித்து இருந்த
சிவந்த நெருப்புக்கு
வெருவிப் புனம் துறந்த வேழம்
பயப்பட்டு கொல்லையை விட்டு
நீங்கின யானையானது
இரு விசும்பில் மீன் வீழக்
பரந்த ஆகாசத்தில் நின்றும்
நஷத்ரம் விழ
கண்டு அஞ்சும்
அதனைப் பார்த்து
நாம் அப்பால் போக முடியாதபடி கைக் கொள்ளியை
குரவர்கள் எறிந்தார்கள் என்று பிரமித்து
பயப்படும்படியான
வேங்கடமே
திருவேங்கடமானது
மேலசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று
முன்பு ஒரு கால் ஹிரண்யா ஸூ ரனை முடித்து
ப்ரஹ்லாதன் விரோதி ஒழிந்தான் என்று உகந்த
பெருமாள் உடைய திருமலையாம்
அஸ்தானே பய சங்கை பண்ணி
எம்பெருமானுக்கு மங்களா சாசனம்
பண்ணும் மகான்களின் இருப்பை நினைவுஊட்டும் செயல் —
———————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்