ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -85 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்ட அபரிச்சின்ன விஷயமான வைபவத்தை எல்லாம்
கண்டு அனுபவித்தாயாய்
ஏறிமறிந்து இருக்கிற நீ
இன்னும் பேராது கண்டு அனுபவியாய் -என்ன

என் செய
நாம் எல்லாம் செய்தோமாய் அன்றோ இருக்கிறது என்ன

இந்த்ரிய ஜெயம் பண்ணி
ஆஸ்ரயணத்திலே  இழிந்த வித்தனை யல்லது
நீ அவன் படிகளிலே என் கண்டாய்
என்கிறார் –

—————————————-

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு-

————————————

வியாக்யானம் –

படி கண்டு அறிதியே –
அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே

அன்றிக்கே
அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்

படி -என்று
திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –

பாம்பணையினான் புட்கொடி கண்டு அறிதியே-
பாம்பணையினான் கண்டு அறிதியே-
புட்கொடி கண்டு அறிதியே-

பாம்பணையினான் கண்டு அறிதியே-
அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும்
படி கண்டு அறிதியே

புட்கொடி கண்டு அறிதியே-
த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

கூறாய் –
எல்லாம் கண்டாயாய் இருக்கிற நீ
இன்னது கண்டேன் என்று சொல்லிக் காணாய் –

வடிவில்  பொறி யைந்து முள்ளடக்கிப்  –
ஸ்ரோத்ராதிகள்  ஐந்தையும் புறம் போகாத படி
உடம்புக்கு உள்ளே நியமித்து -என்னுதல்

அன்றிக்கே
வடிவில்லாத பொறி ஐந்தும் உள்ளடக்கி -என்னுதல்

இத்தால்
ஒரு வழிப்பட்டு இருக்கை அன்றிக்கே
பல அபி சந்திகளை -பெரிய திருமொழி -1-6-3-என்னுமா போலே –

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி 1-6-3-

போதொடு நீரேந்தி நெறி நின்ற நெஞ்சமே நீ –
இப்படி இந்த்ரியங்களை நியமித்து
புஷ்பாத் யுபகரணங்களை தரித்துக் கொண்டு
வழிப்பட நின்று
உபாசித்தானாய் இருக்கிற நீ
அவ் உபாசன பலமாக இவற்றில் நீ எவ் வம்சம் கண்டாய்

சாஷாத் கரிப்பதுக்கு முன்னே ஜ்ஞான லாபத்தைக் கொண்டு ஆறி இருக்கக் கடவதோ

ப்ராப்தி சமயத்திலும் கூட அபர்யாப்தி வேண்டி இருக்க
ஜ்ஞான லாபத் தளவிலே திருப்தி பிறந்து இருக்கவோ

இனி அவ்வளவு அமையும் என்னும் படி இருக்குமாகில்
அது பிராப்யமாக மாட்டாதே

பிறந்த ஞான லாபத் தளவிலே பர்யவசித்து   ஆறி இருக்குமது
அஞ்ஞான கார்யமேயாம் அத்தனை இறே

மயர்வற மதி நலம் அருளினன் என்ற
அனந்தரத்திலே இறே மடல் எடுத்தது –

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading