ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -86 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவருக்கு இப்படி நம்மால் அபேஷிதம் ஏது என்று பார்த்து
அபேஷிதமான அவாவைத் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு
இவர் இருந்த இடத்திலே
பிராட்டியும் தானுமாக நெருக்கப் புக்கார்கள் –

இவர் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து சாஷாத்கரித்ததது இல்லை இறே என்ன
தரியான் இறே அவன்   –

——————————————-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திரு வாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கி யிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

——————————————

வியாக்யானம் –

நீயும் திருமகளும் நின்றாயால் –
என்னடியார் அது செய்யார் என்னும் நீயும்
நினைவறிந்து கார்யம் செய்வாரை
ந கச்சின் ந அபராத்யாதி -என்னும் அவளும் கூட நின்றாயால் –

ஆஸ்ரித ரஷணத்தில் முறபாடனான நீயும்
ராகவஞ்ச மகா வ்ரதம் -அயோத்யா -31-2-என்று வ்ரதம் கொண்டு இறே புறப்பட்டது
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -அயோத்யா -27-6- என்று உனக்கு முற்பட்ட பிராட்டியும்

நின்றாயால் –
நிற்கக் கண்ட அத்தனை
நிர்ஹேதுகம் -என்றபடி

அன்றிக்கே
இவர்களைப் பெற்று நிலை நின்ற படி -ஆகவுமாம் –

குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
ஒரு மலையை எடுத்து
உடம்பிலே வந்து படுகிற மழையை பரிஹரித்த நீர்மையை உடையவனே  –

அவை நோவு படாத படி ஏற்கவே மலையை எடுத்து பரிஹரித்து நோக்கினால் போலே இறே
தன் ஆபத்து இவர்களோடு கூடித் தீர்ந்தத படி -என்றுமாம்
குஹேன சஹி தோ ராம -பால -1-28- என்னக் கடவது இறே  –

வாசல் கடை கழியா யுள் புகாக் –
உள்ளுப் புக மாட்டுகிறிலன்
புறம்பு போக மாட்டுகிறிலன்
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் உடைய கண் வட்டம்  விட்டுப் போக மாட்டாதாப் போலே
இரண்டிடமும் காட்டுத் தீ போலே யாய்த்து தோற்றா நின்றது ஆய்த்து அவனுக்கு
பஸ்ம தத் குருதாம் ஸிகீ-அயோத்யா -97-8-என்றான் இறே

கீழே இருவரையும் கூறி-
நின்றாய் -ஆள -என்று  சொல்லுகிறது
சாயையைத் தனித்து பேச வேண்டாமை  –

காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி —
ஸ்ப்ருஹணீயமாய்
அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி
இப்போது இப்படி நின்றான் -என்னுதல்
இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்

இனி -என்கையாலே
அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –
இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-

திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது –
தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே –
சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –

ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப்
பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading