அவதாரிகை –
உன்னுடைய ரஷகத்வத்தைச் சிலராலே
பரிச்சேதிக்கலாய் இருந்ததோ –
ரஷ்யத்தின் அளவேயோ
ரஷகனான உன்னுடைய பாரிப்பு
என்கிறார் –
————————————
பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-
பதவுரை
பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை
——————————-
வியாக்யானம் –
பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று
சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர்
அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ
ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-
உரா யுலகளந்த நான்று –
உராய் -என்கிறத்தை
உலாய்-என்றாக்கித்
திருவடிகள் எங்கும் சஞ்சரித்துக் கொண்டு -என்னுதல்
அன்றிக்கே
தன்னுடைய தைவத்வம் தோற்றும்படி
பூமியில் கால் தட்டாத படி கடக்க நிற்கை அன்றிக்கே
எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு என்றுமாம்
பட்டர் -அநாயாசேன அளந்த வன்று -என்று அருளிச் செய்வர் –
எந்தை அடிக்களவு போந்த படி -வராகத் தெயிற்று அளவு போதாவா றென்கொலோ-
இப்படித் திரு உலகு அளந்து அருளின் அன்று
என் ஸ்வாமி யான உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது
இன்று
வராகத்து
எயிற்று அளவு போதாதவாறு என் கொலோ
இப்போது திரு எயிற்றுக்கு ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ
ஒரு நாள் போந்த பூமியானது
ஒரு நாள் போராது ஒழிவான் என்
இது என்ன பாரிப்பு தான் -என்கிறார்
நான் ஒருவனுமே உன் குணங்களிலே குமிழ் நீருண்ணா நின்றேன்
என்கிறார் –
——————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply